ஸ்ரீ மான் வேங்கட நாதார்ய கவி தார்க்கிக கேசரீ
வேதாந்தா சார்ய வர்யோ மே சந்நிதத்தாம் சதா ஹ்ருதி –
கவி தார்க்கிக சிம்ஹாய கல்யாண குண சாலினே
ஸ்ரீ மதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம –
சீர் ஓன்று தூப்புல் திரு வேங்கடமுடையான்
பார் ஒன்றச் சொன்ன பழ மொழியுள் ஓர் ஓன்று
தானே யமையாதோ தாரணியில் வாழ்வார்க்கு
வான் ஏறப் போம் அளவும் வாழ்வு
————————————————
சத்யவ்ரத மஹாத்ம்யம் –மெய் விரதம் -சத்ய விரதம் –29-பாசுரங்கள் கொண்ட பிரபந்தம் –
ஒரு பாசுரத்தால் ஸ்ரீ பாஷ்யம் -16-பாதங்கள் அர்த்தங்களையும் அருளிச் செய்கிறார் –
————-
1687 முதல் –22 ஆண்டுகள் –உடையார்பாளையம் –ஒவ்ரங்க சீப் –
போதேந்த்ர சங்கராச்சாரியார் -பங்கார காமாச்சி -செஞ்சி கோட்டை முற்றுகை போராட்டம் –
பழைய சீவரம் கல்லைக் கொண்டு மூலவர் –
தானே காட்டக் கண்டார்கள் பின்பு-
அர்ச்சகர் கனவில் -யாக தீ சுடர் தாபம் -திருவால வட்டம் அருளினார் முன்பு ஸ்ரீ திருக்கச்சி நம்பி –
குளிர்ச்சியாக இருக்க வழி-ஜல நிவாஸம் தானே இருக்க அருளிச் செய்தானாம்
உடையார்பாளையம் -உத்சவ மூர்த்திகள் –1687-சென்று -1710-மீண்டு வந்தது பற்றிய கல் வெட்டு தாயார் சந்நிதியில் உள்ளதே
ஸ்ரீ ஆத்தான் ஜீயர் உதவியால் -1710-காஞ்சிக்கு மீண்டும் உத்சவரை எழுந்து அருள பண்ணி வந்தார் —
பங்குனி உத்திரட்டாதி நக்ஷத்ரம் பிரதிஷ்டை-கல்வெட்டு உண்டு
1781 -ஜூலை 31 -முதலில் எடுக்கப்பட்டதாக கல்வெட்டு
கிருதயுகம் ஹஸ்திகிரி அப்பன்
த்வாபர யுகம் -ஸ்ரீ ரெங்கம்
த்ரேதா யுகம் –புருஷோத்தம க்ஷேத்ரம்
கலியுகம் கலவ் வேங்கடம்
1937–1979–2019-ஏறக்குறைய -40-ஆண்டுகள் -எடுக்கப்பட்டதாக அறிகிறோம்-
கிடந்த கோலத்துடன் முதலிலே ஸ்ரீ ராமானுஜருக்கு விந்தியா பர்வதத்தில் –
வேடன் வேடுவிச்சி -ரூபத்தில் சேவை உண்டே
————————–
யஸ்ய பிரசாத கலயா பதிர ஸ்ருனோதி பங்கு பிரதாவதி ஜலேந ச வக்தி முக
அந்த ப்ரபஸ்யதி ஸூ தம் லபதேச வந்த்யா தம் தேவமேவ வரதம் சரணம் கதோஸ்மி –ஸ்ரீ ஆளவந்தார் அருளிச் செய்த முக்த ஸ்லோகம்
ஸ்ரீ பேர் அருளாளர் அனுக்ரஹத்தினால் -செவிடனும் செவி பெற்று -முடவனும் விரைந்தோடி -ஊமையும் பேசி –
குருடனும் கண்டு மாலதியும் குழந்தை பெறும் படி -அவரைத் தஞ்சமாகப் பற்றினேன் -ப்ரத்யக்ஷம் ஆதி அத்தி வரதர் வைபவத்தில் –
——————————-
ஸ்ரீ மெய் விரத மான்யம் -என்றும் அருளிச் செய்வர் இந்த பிரபந்தத்தையே
———————
இந்திரனுடைய வாஹனமான ஐராவதம் நெடுநாள் தவம் செய்து மலை ரூபமாகவே
எம்பெருமானைத் தரித்துக் கொண்டு இருப்பதாலும்
ஸ்ரீ கஜேந்திர ஆழ்வான் பகவானுடைய திருவடித் தாமரைகளிலே
தாமரை புஷபங்களை ஸமர்ப்பித்து உஜ்ஜீவித்த படியாலும்
திக்கஜங்கள் ஆராதிக்கும் க்ஷேத்ரம் ஆகையாலும்
ஸ்ரீ ஹஸ்திகிரி என்ற திருநாமம்
————————
வாழி யருளாளர் வாழி யணி யத்திகிரி
வாழி எதிராசன் வாசகத்தோர் வாழி
சரணாகதி எனும் சார்வுடன் மாற்று
ஒன்றை யரணாகக் கொள்ளாதார் அன்பு -1-
வாழி யருளாளர் வாழி யணி யத்திகிரி வாழி எதிராசன் வாசகத்தோர் வாழி —
பேர் அருளாளர் வாழ்க -பூமிக்கு அலங்காரமான ஸ்ரீ ஹஸ்திகிரி வாழ்க –
ஸ்ரீ பாஷ்யகாரருடைய ஸ்ரீ ஸூக்திகளில் ஈடுபட்டவர் வாழ்க
சரணாகதி எனும் சார்வுடன் மாற்று ஒன்றை யரணாகக் கொள்ளாதார் அன்பு -பிரபத்தி என்னும்
உபாயத்துடன் வேறு ஒன்றை உபாயமாக
கொள்ளாதவர்களுடைய அன்பும் வாழ்க -என்று மங்களா சாசனம் செய்தவாறு –
பேர் அருளாளர் -மிகுந்த கிருபையாலேயே ஆள்பவர் -ரக்ஷிப்பவர் -இதுவே நிரூபிக்கப் படுபவர்
உயர்வற உயர் நலம் யுடையவன் -என்றவாறு
கிருபையினால் ஆளப்பட்டவர் என்றுமாம் -அதற்க்கு வசப்பட்டவர் –
விதி சூழ்ந்ததால் எனக்கேல் அம்மான் த்ரிவிக்ரமனையே -என்றதும் இங்கே அனுசந்தேயம்
ஸம்ப்ரதாய ரக்ஷகர் அன்றோ
கேழ்த்த சீர் அரன் முதலாக் கிளர் தெய்வமாய்க் கிளர்ந்து
சூழ்த்தமரர் தொழுதால் உன் தொல் புகழ் மாசூணாதோ –
அணி அத்திகிரி -பூமிக்கே அலங்காரம் ஹஸ்திகிரி -அதுக்கும் அலங்காரம் தேவப்பெருமாள் –
யாத்திராசன் வாசகத்தோர் -ஸ்ரீ எம்பெருமானார் ஸ்ரீ ஸூக்திகளே நிரூபகமான நம் பூர்வர்கள்
வாழி ஸரணாகதி – உபாயமும் உபேயமும் தேவப்பெருமாளே என்று இருக்கும் மஹா விஸ்வாசத்துக்கும் பல்லாண்டு
——————————
எண்டிசையும் கடல் ஏழும் மலைகள் ஏழும் ஈர் ஏழு வையகமும் படைத்து இலங்கும்
புண்டரிகத்தயன் புணர்த்த பெரிய வேள்விப் புனித நறும் போக்கியத்தை யுவந்து வந்து
தொண்டை எனும் மண்டலத்தின் நடுவில் பாரில் தூ நிலம் மெய் விரதத்துத் தோன்றி நின்ற
கொண்டல் அருள் குணமே நாம் கூறுகின்றோம் கூர் மதியீர் குறியாகக் கொண்மினீரே–2-இந்நூலை கேட்க்குமாறு அறிவுறுத்தல் –
எண்டிசையும் கடல் ஏழும் மலைகள் ஏழும் ஈர் ஏழு வையகமும் படைத்து இலங்கும் –எட்டுத் திசைகளையும் –
உப்பு பால் தேன் நெய் கருப்பஞ்சாறு தயிர் சுத்த ஜலம் -ஆகிய ஏழு சமுத்ரங்களையும் —
மஹேந்த்ரம் மலயம் ஸஹ்யம் சுக்திமான் ருக்ஷம் விந்த்யம் பாரியாத்ரம் -ஆகிய ஏழு குல பர்வதங்களையும்
அதல விதல ஸூதல தராதலா மஹாதல ரஸாதல பாதாளங்கள் -ஆகிய ஏழு கீழ் உலகங்களையும்
பூ புவ ஸூவ மஹ ஜன தப சத்யம் ஆகிய ஏழு மேல் உலகங்களையும்
ஸ்ருஷ்டித்து பிரகாசிப்பவனும்
புண்டரிகத்தயன் புணர்த்த பெரிய வேள்விப் புனித நறும் போக்கியத்தை யுவந்து வந்து -எம்பெருமானுடைய நாபிக் கமலத்து உதித்த ப்ரஹ்மாவால்
நடத்தப்பட்ட பெரிய அஸ்வமேத யாகத்தின் பரிசுத்தமான வாசனையுள்ள ஹவிஸை பெறுவதற்கு மகிழ்ந்து வந்து
தொண்டை எனும் மண்டலத்தின் நடுவில் பாரில் தூ நிலம் மெய் விரதத்துத் தோன்றி நின்ற –தொண்டை மண்டலம் என்னும் தேசத்தின் நடுவில்
பூமியிலே மிக பரிசுத்தமான ஸ்தலமான சத்யவ்ரதம் என்னும் திவ்ய ஷேத்ரத்திலே திருவவதரித்து சாஸ்வதமாக நிலை பெற்ற
கொண்டல் அருள் குணமே நாம் கூறுகின்றோம் கூர் மதியீர் குறியாகக் கொண்மினீரே-பேர் அருளாளன் என்னும் மேகத்தின் கருணை என்னும் குணத்தையே –
மனத்தில் பாவமும் வாக்கில் ராகமும் கையில் தாளமுமாகிய பொருந்த வேண்டும் என வகுத்த பாரத சாஸ்திரத்தைத் தழுவி பண்ணும் இசையும் அமையுமாறு
பேர் அருளாளன் பெருமையை நாம் இந்த பிரபந்தத்தில் பேசுகின்றோம்-கூர்மையான அறிவு பெற்றோர்களே -நீங்கள் இதனைக் கவனத்துடன் அறிந்து கொள்க –
வேள்வியும் ஹவுஸும் அக்னியை நினைவூட்டிக் காட்ட அந்த தாபத்தை மறக்க
கருணை மழை பொழியும் காளமேகத்தைக் குறித்து அருளிச் செய்யும் சுவையை அனுபவிப்போம் –
———————————————
வம்மின் புலவீர் அருளாளப் பெருமாள் என்றும் அருளாழி
யம்மான் என்றும் திருமகளைப் பெற்றும் என்நெஞ்சம் கோயில் கொண்ட
பேர் அருளாளர் என்றும் வியப்பா விருதூதும்படி கரை புரண்ட
கருணைக் கடலை எவ்வண்ணம் பேசுவார் ஈது என்ன பாங்கே–3-தம்முடன் கூடுமாறு புலவரை அழைத்தல் –
வம்மின் புலவீர் அருளாளப் பெருமாள் என்றும் அருளாழியம்மான் என்றும் —
புலவர்களே வாருங்கோள்—பேர் கருணைக் கடலானதாலே
அருளாளப் பெருமாள் என்றும் அருளாழி அம்மான் என்றும்
திருமகளைப் பெற்றும் என்நெஞ்சம் கோயில் கொண்ட –பிராட்டியைத் தேவியாகக் கொண்டதுமாம் அன்றி
என் மனத்தை வாஸஸ்தலமாகக் கொண்ட
பேர் அருளாளர் என்றும் வியப்பா விருதூதும்படி கரை புரண்ட -பேர் அருளாளர் என்றும் ஆச்சர்யமாய் —
ஆழ்வாராதிகள் பூர்வாச்சார்யர்கள் விருதுகளைக் கூறி முழங்கும் படி நின்ற கரை புரண்டு பெருகும்
கருணைக் கடலை எவ்வண்ணம் பேசுவார் ஈது என்ன பாங்கே-கருணைக் கடலான எம்பெருமானை
எவ்வாறு நீங்கள் பேச வல்லீர் -இவ்வாறு செய்வது என்ன நேர்மை -நாம் ஓன்று கூடி
அவன் பெருமையை ஒருவாறு பேசிப் பார்ப்போம் -என்றவாறு–
அதி நீசனான எனது நெஞ்சத்தையும் கோயில் கண்டு அருளி பேர் அருளாளன்
பேர் அணிந்து உலகத்தவர் தொழுது ஏத்தும் பேர் அருளாளன் எம்பெருமான் –
அருளாழி அம்மான்
திரு மா மகளைப் பெற்றும் என் நெஞ்சகம் கோயில் கொண்ட
பேர் அருளாளன் பெருமை பேசக்கற்றவன் காமரு சீர்க் கலியன்
——————————————————-
பிரபன்னனுக்கு பொறுப்பு நீங்கியமை -அம்ருத ரஞ்சனி 18-பாசுரமும் இதுவே –
ஒன்றே புகல் என்று உணர்ந்தவர் காட்டத் திருவருளால்
அன்றே யடைக்கலம் கொண்ட நம் மத்திகிரித் திருமால்
இன்றே இசையின் இணையடி சேர்ப்பர் இனிப் பிறவோம்
நன்றே வருவது எல்லாம் நமக்குப் பரம் ஓன்று இலதே–4-
ஒன்றே புகல் என்று உணர்ந்தவர் காட்டத்–அர்த்த பஞ்சகத்தையும் சரீராத்மா பாவம் முதலிய சம்பந்தத்தையும்
அறிந்த ஆச்சார்யர்கள் உபதேசித்து அருள –
எம்பெருமானே உபாயம் உபேயம் என்று அறிந்த ஆச்சார்யர்கள் அவன் திருவடிகளில் நம்மை சமர்ப்பித்து அருள
திருவருளால் -பிரதியுபகாரத்தை எதிர்பாராத சிறந்த கிருபையினால் –பிராட்டியுடைய கிருபையினால் என்றுமாம்
அன்றே யடைக்கலம் கொண்ட நம் மத்திகிரித் திருமால் -அப்பொழுதே -ரக்ஷிக்கப்பட வேண்டிய வஸ்துவாக ஏற்றுக் கொண்ட நம்முடைய
திரு ஹஸ்திகிரி நாதரான பேர் அருளாளர் –
இன்றே இசையின் இணையடி சேர்ப்பர் இனிப் பிறவோம் நன்றே வருவது எல்லாம் நமக்குப் பரம் ஓன்று இலதே-இப்பொழுதே
இசையின் -முக்தியைப் பெற நாம் சம்மதித்ததால்
தம்முடைய திருவடித்த தாமரைகளில் சேர்த்து கொண்டு அருளுகிறார்
இனி மறுபடியும் இக்கர்ம பூமியிலே பிறக்க மாட்டோம் -இனி இச்சரீரம் அழியும் அளவும் வரும்
இன்பங்களும் துன்பங்களும் ஆகிய எல்லாம் நமக்கு அநுகூலங்களே-
இனி நாம் உஜ்ஜீவிப்பதற்காகச் செய்ய வேண்டிய பொறுப்பு நமக்கு இல்லை –
இசையில் -அத்வேஷ மாத்ரமே வேண்டுவது –
இச்சைப்படும் காலத்திலேயே -கொடு யுலகம் காட்டாதே –
கொழுஞ்சோதி உயரத்துக் கூட்டரிய திருவடி கூட்டி அருளுவார் அன்றோ
ஒன்றே புகல் என்றது -நாகணை மிசை நம்பிரான் சரணே சரண் நமக்கு -என்று
ஒருவனே ஸித்த உபாயம் என்றபடி
உணர்ந்தவர் -என்றது -ஸாஸ்த்ர சார சம்பந்த விஷயங்களையும்
அர்த்த பஞ்சக விஷயமுமான ஞானத்தை யுடையவர்களாயும்
அவற்றை உபதேசிக்க வல்லவர்களாக ஆச்சார்யர்கள் என்றபடி
உணர்ந்தவர் ஒன்றே புகல் என்று காட்ட -என்று அந்வயம்
இனிப் பிறவோம் -இங்கே திரிந்தேர்க்கு இழுக்குற்று என் என்கிறபடி
த்வரை அற்று இருக்கும் அளவிலும்
சரணமாகும் தன தாள் அடைந்ததற்கு எல்லாம்
மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான் -என்கிறபடியே
அருளுபவர் என்றபடி
—————————————————————–
பிரமன் தனது முயற்சி கர்மத்தால் தடைபட வருந்துதல் —
வம்பவிழ் போதமர் மாதர் உகந்தாம் மா நிதியைத்
தன் பலமே கொண்டு காணக் கருதிய தாமரையோன்
முன் பல குற்றத்து வல்வினை மொய்க்க முகிழ் மதியாம்
அம்புலி வேண்டிய பாலனைப் போலே அழுத்தனனே -5-
முகிழ் மதி -சுருங்கின ஞானம்
வல் வினை -பகவத் நிக்ரஹ சங்கல்பம் –
அம் மா நிதி -ஹிரண்ய நிதி -நித்ய அநபாயினி கொண்ட சம்பந்தம் மாறாத நிதி –
வம்பவிழ் -போக்யத்வம் விவஷிதம்
வம்பவிழ் போதமர் மாதர் உகந்தாம் மா நிதியைத் –வாசனையுள்ள மலர்ந்த புஷபத்திலே வசிக்கின்ற பிராட்டியின்
அன்புக்கு உரியனான பெரிய சேமநிதி போன்ற அவ்வெம்பெருமானை —
ஸ்ரீ யபதி-பராத்பரன் -சர்வ அந்தர்யாமி -சர்வ காரணன் -அகில ஹேய ப்ரத்ய நீகன்-
கல்யாணை குண கணன்–வாத்சல்யாதி குணக் கடல் –
கறந்த பாலுள் மறைந்து நிற்கும் நெய்யே போன்றவன் அன்றோ –
தன் பலமே கொண்டு காணக் கருதிய தாமரையோன்-தன்னுடைய யோக பலத்தைக் கொண்டு
சாஷாத் கரிக்க நினைத்த ப்ரஹ்மா
முன் பல குற்றத்து வல்வினை மொய்க்க முகிழ் மதியாம்–முன்பு பல தவறான செயகைகளாலே
ஏற்பட்ட வழிய கர்மங்கள் சூழ்ந்து கொள்ள மழுங்கிய அறிவுடையனாய்
அம்புலி வேண்டிய பாலனைப் போலே அழுத்தனனே -எட்ட முடியாத சந்திரனைப் படித்துத் தரும்படி விரும்பிய
குழந்தையைப் போலே தனது எண்ணம் நிறைவேறாமையாலே அழுதான் –
——————————————-
பிரமன் தன்னை வெறுத்துக் கொள்ளுதல் —
அடங்காக் கரணங்கள் ஐந்துடன் ஆறும் அடக்கி முனம்
நெடுங்காலம் இந்நிலமே யாப்புண்டு நீடுறைவான்
சடங்கால் பெரிய தவங்கள் செய்தேன் என்ன தன்மையிது என்று
இடம் காத்து இருந்த திசைமுகன் தன்னை இகழ்ந்தனனே –6-
சடங்கால் –அங்கங்களினால் –
ஐந்துடன் -கர்ம இந்த்ரியர்களுடன்
ஆறும் -ஞான இந்திரியங்களும் மனஸ்ஸும்
என்ன தன்மை இது-பழுதே பளப்பாக்களும் போயின என்று அஞ்சி அழும் நிலை
அல்ப அஸ்திர பலன்களுக்காக தவம் செய்து வியர்த்தமே ஆயினவே –
பூண்டு -இந்த துக்க பரம்பரைகள் தானே விளைத்துக் கொண்டமை-
இடம் காத்து இருந்த திசைமுகன் –தன்னுடைய பிரம்மா பதவியை வழுவாது ரஷித்துக் கொண்டு இருந்த ப்ரஹ்மா
நெடுங்காலம் இந்நிலமே யாப்புண்டு நீடுறைவான்-நீண்ட காலம் இந்த பிரம்மா லோகத்தையே ஸ்திரமாய்
இருப்பதாகக் கொண்டு -நெடு நாள் அப்பதவியில் வாழ விரும்பி
அடங்காக் கரணங்கள் ஐந்துடன் ஆறும் அடக்கி முனம் –முன்பே அடங்காத இந்திரியங்கள் ஐந்துடன்
ஞான இந்திரியங்கள் மனஸ் ஆறையும் அடக்கி
சடங்கால் பெரிய தவங்கள் செய்தேன் என்ன தன்மையிது என்று தன்னை இகழ்ந்தனனே -விரதங்களால் பெரிய தபஸ் ஸூக்களைச் செய்தேன் –
நான் செய்த இக்காரியம் எத்தகையது -எவ்வளவு இழிவானது என்று தன்னையே வெறுத்துக் கொண்டான் –
கர்ம விசேஷத்தைக் கழிக்காமல் இந்த பதவியை சாஸ்வதம் என்று தவறாக கருதி பெரிய தவம் புரிந்து
இந்த ப்ரஹ்மாண்டத்திலே ஏறியும் இறங்கியும் அல்லல் பட
நெடும்காலம் வீணே சரீரத்தையும் துன்புறுத்திக் கொண்டேன் என்று நெஞ்சு உருகிக்
கண்ணீர் சோர்ந்து நெடு மூச்சு எறிந்து நிலத்தையே பார்த்து இருந்து
தன்னையே வெறுத்துக் கொண்டான் -என்றவாறு –
திசை முகன் -திகைத்த முகத்தன்-என்ற பொருள் பெற பிரயோகம் –
——————————————————-
பிரமன் தவம் புரியப் பாரத நாட்டை அடைதல் —
விண்ணுலகில் வீற்றிருந்த மேன்மையாலும் வேதங்கள் ஈரிரண்டும் விரித்தலாலும்
கண்ணனை நான் கருத்துறவே காண்பன் என்னக் காணாமல் விலக்கிய தன் வினையைக் காணா
வெண்ணிய நல் புவனங்கள் ஏழும் ஆறும் இரு மூன்று தீவம் எட்டிடமும் விட்டுப்
பண்ணிய நல் விரதம் எலாம் பலிக்கும் என்று பாரதத்தில் பங்கயத்தோன் படிந்திட்டானே -7-
நற் புவனங்கள் ஏழும் ஆறும்–பூமி ஒழிந்த 13 லோகங்களும்
இரு மூன்று தீவமும் -ஜம்பூ த்வீபம் ஒழிந்த பிலக்ஷ -ஸால்மலி -குச -கிரௌஞ்ச -ஸாக -புஷ்கர -த்வீபங்கள்
எட்டு இடமும் -பாரத வர்ஷம் தவிர்ந்த -கிம் புருஷ -ஹரி -இலாவ்ருத -ரம்யக – ஹிரண்யக -குரு –
பத்ராஸ்வ -கேதுமால -என்று சொல்லப்பட்ட எட்டு ஸ்தலங்களும் –
இவற்றை விட்டு -பாரத வர்ஷத்தில் -ஸத்ய விரத ஷேத்ரத்தில் யாகம் பண்ண வந்தான் என்றபடி
பங்கயத்தோன்–பகவானுடைய திரு நாபிக் கமலத்தில் பிறந்த ப்ரஹ்மா
விண்ணுலகில் வீற்றிருந்த மேன்மையாலும் வேதங்கள் ஈரிரண்டும் விரித்தலாலும் —
பிரம்ம லோகத்தில் பிரம்மா பதவி வகித்த பெருமையாலும்
வேதங்கள் நான்கையும் உலகுக்கு வெளியிட்டமையாலும்
கண்ணனை நான் கருத்துறவே காண்பன் என்னக் -எம்பெருமானை மனத்தில் நிலை பெற்று நிற்கும் படி
நான் நேரில் சாஷாத் கரிப்பேன் என்று நினைத்து யத்னம் செய்து
காணாமல் விலக்கிய தன் வினையைக் காணா-அவ்வாறு சாஷாத் கரிக்க முடியாமல் தடை செய்த
தன்னுடைய கர்மத்தைக் கண்டு அதை போக்க நினைத்து
வெண்ணிய நல் புவனங்கள் ஏழும் ஆறும் இரு மூன்று தீவம் எட்டிடமும் விட்டுப் -சாஸ்திரங்களில் கூறப் பட்ட
சிறந்த லோகங்கள் பதின்மூன்றையும்
ஆறு தீவுகளையும் எட்டு வர்ஷங்களையும் விட்டு
பண்ணிய நல் விரதம் எலாம் பலிக்கும் என்று பாரதத்தில் படிந்திட்டானே -செய்யப்பட சிறந்த விரதங்கள் எல்லாம்
பலன் தரும் என்று உறுதி கொண்டு
பாரத தேசத்திலே வந்து தங்கினான் –
ஆயிரம் கோடி யுகங்கள் எம்பெருமானை ஆராதித்து பிரமன் தனது பதவியைப் பெற்றதாக சாஸ்திரம் கூறும்
பூமி ஒழிய மற்ற லோகங்கள் பதின்மூன்றும் -பூமியிலும் ஜம்பூத்வீபம் தவிர மற்ற த்வீபங்கள் ஆறும் –
அதிலும் பாரத வர்ஷம் நீங்க மற்ற வர்ஷங்கள் எட்டும்
கர்ம பலன்களை அனுபவிக்கும் இடம் -என்பதால் தவம் செய்ய உரியன அல்ல என்று புறக்கணித்து
எல்லாவற்றுக்கும் தெற்கே உள்ளதாய் சகல தர்மங்களையும் அனுஷ்ட்டிக்க ஏற்றதான பாரத வர்ஷத்தில் வந்து புகுந்தான் என்றவாறு –
ஒன்பது வர்ஷங்கள்–பாரதம் கிம்புருஷம் ஹரி இலாவ்ருதம் ரம்யம் ஹிரண்யகம் குரு பத்ராசுவம் கேதுமாலம் -என்பன
ஏழு த்வீபங்கள் -ஜம்பூ பிலஷம் சால்மலி குசம் கிரௌஞ்சம் சாகம் புஷ்கரம் என்பன
பதினான்கு லோகங்கள் -அதல விதல ஸூதல தராதலா மஹாதல ரஸாதல பாதாளங்கள் -ஆகிய ஏழு கீழ் உலகங்களையும்
பூ புவ ஸூவ மஹ ஜன தப சத்யம் ஆகிய ஏழு மேல் உலகங்களையும் -சொல்லியவாறு —
—————————————————————————-
எத்திசையும் நிலனும் எய்தி யரும் தவம் செய்த அந்நாள்
சத்திய விரதம் செல்வாய் என்ற வோர் உரையின் சார்வால்
அத்திசைச் சென்று அழைத்து அங்கு அமரரில் எடுப்பான் தன்னை
யுத்தர வேதி செய் என்று உரை யணங்கு இறை யுரைத்தான் -8-
உரை அணங்கு இறை –ஸ்ரீ சரஸ்வதிக்கு நாயகனான ஸ்ரீ நான்முகன்
அமரர் இல் எடுப்பான் தன்னை -ஸ்ரீ விஸ்வகர்மாவை உத்தர வேதியை நிர்மாணம் செய் என்றது
யாகங்களுக்கு அவஸ்ய அபேக்ஷிதமான-ஹவிர்த்தானம் -சதஸ்ஸூ -வாஸஸ் ஸ்தானங்கள்-இவற்றுக்கும் உப லக்ஷணம்
உரை யணங்கு இறை யுரைத்தான் -வாக்கின் தேவதையான சரஸ்வதிக்கு நாயகனான ப்ரஹ்மா
எத்திசையும் நிலனும் எய்தி யரும் தவம் செய்த அந்நாள் –எல்லாத் திக்குகளிலும் உள்ள ஸ்தானங்களுக்கும் சென்று
ஒருவராலும் செய்ய முடியாத தவத்தைச் செய்த அக்காலத்திலே
சத்திய விரதம் செல்வாய் என்ற வோர் உரையின் சார்வால் –சத்யவ்ரத திவ்ய ஷேத்ரத்துக்கு போ என்ற
ஒரு அசரீரி வார்த்தையின் ஆதரத்தால்–
ஆயிரம் அஸ்வமேத யாக பலனை ஒரு அஸ்வமேத யாகம் இங்கே அளிக்கும்
அத்திசைச் சென்று அழைத்து அங்கு அமரரில் எடுப்பான் தன்னை -அந்த திவ்ய ஷேத்ரத்துக்குச் சென்று –
தேவர்களுக்கு வீடு முதலியவற்றை அமைப்பவனாகிய
விஸ்வ கர்மனை அழைத்து யுத்தர வேதி செய் என்று -யாகம் செய்வதற்கு உத்தர வேதியைச் செய்து முடிப்பாயாக என்று கட்டளையிட்டான் —
ஸ்ரீ ஹஸ்திகிரியை நான்கு சதுரமாக வகுத்து அதையே யாக வேதியாக்கி யாகசாலை அமைப்பாயாக –
மேலும் யாகத்துக்கு வரும் தேவர் அசுரர் ராக்ஷசர் கின்னரர் கிம்புருஷர்
சித்தர் வித்யாதரர் மனுஷ்யர் முதலிய பல் திறத்தனாரும் நெருக்கம் இன்றிச் சுகமாய் வசிக்குமாறு
நீண்டு அகன்று உயர்ந்த மிக்கு அழகிய ராஜ தானியை
விரைவில் படைப்பாயாக என்று மிக விரைந்து கட்டளையிட்டான் –
—————————————
காஞ்சியின் பெருமை –அதிகார சங்கிரகம் -44-பாசுரமும் இதுவே —
உத்தம அமர்த்தலம் அமைத்தது ஓர் எழில் தனுவின் உய்த்த கணையால்
யத்திர வரக்கன் முடி பத்தும் ஒரு கொத்து என உதிர்த்த திறலோன்
மத்துறு மிகுத் தயிர் மொய்த்த வெண்ணெய் வைத்தது உண்ணும் அத்தன் இடமாம்
அத்திகிரி பத்தர் வினை தொத்து அற அறுக்கும் அணி அத்திகிரியே –9-
உத்தம அமர்த் தலம் -ருத்ரனுக்கும் பகவானுக்கும் -வில் பரீஷைகைக்காக யுண்டான யுத்த ஸ்தலம்
ஒரு எழில் -அத்விதீயமான -கர்ஜனையாலே ருத்ர வில் பிளந்து போனமையால் –
பகவானைத் தவிர வேறு ஒருவரால் கையாள முடியாத வில் –
சார்ங்கம் என்னும் வில்லாண்டான் தன்னை –
அத்திர அரக்கன் -தபோ பலத்தால் அடையப்பட்ட அஸ்திர பலத்தை யுடைய ராவணன் –
அத்திற -பாட பேதம் –பகவானை எதிர்த்து போர் செய்ய வல்ல -அப்படிப்பட்ட திறல் யுடையவன் என்றபடி
ஒரு கொத்தென –பானு நேர் சரத்தால் பனங்கனி போலேப் பருமுடியும் யுதிர வில் வளைத்தோன் -என்கிறபடியே –
ஒரே பணத்தால் அடித்துத் தள்ளின என்றபடி
உதிர்த்த -கிள்ளிக் களைந்தானை -அநாயாஸேந செய்தமை
அத் திகிரி – அற முயல் ஆழிப்படை
அயோத்யா -வடமதுரை -மாயா -காசி -காஞ்சீ -அவந்தி -துவாரகா-ஏழும் முக்தி தரும் ஷேத்ரங்கள் –
உத்தம அமர்த்தலம் அமைத்தது ஓர் எழில் தனுவின் உய்த்த கணையால் -உயர்ந்த போர் காலத்தில் அமைக்கப் பட்ட
நிகரற்ற அழகிய வில்லினின்றும் செலுத்தப் பட்ட அம்பினால்
யத்திர வரக்கன் முடி பத்தும் ஒரு கொத்து என உதிர்த்த திறலோன் -அஸ்திர பலமுள்ள ராக்ஷசனாகிய ராவணனுடைய தலைகள் பத்தையும்
ஒரு குலை என்று சொல்லும்படி அறுத்துக் கீழே தள்ளின பலமுடைய ஸ்ரீ ராமபிரானும்
மத்துறு மிகுத் தயிர் மொய்த்த வெண்ணெய் வைத்தது உண்ணும் அத்தன் இடமாம் -மத்தினால் கடையத் தகுந்த
அதிகமான தயிரையும் யசோதையால் வைக்கப்பட்ட அதிகமான வெண்ணெயயையும் அமுது செய்து
அருளிய ஸ்ரீ கண்ணபிரானுடைய வாஸஸ் ஸ்தலமாகிய
அத்திகிரி பத்தர் வினை தொத்து அற அறுக்கும் அணி அத்திகிரியே –ஸ்ரீ ஹஸ்திகிரி என்னும் திவ்ய க்ஷேத்ரம்
சம்பந்தம் இல்லாமல் ஒழிக்க வல்ல அழகிய
அந்த திவ்ய சக்ராயுதம் போன்றதே யாகும் -திவ்ய சக்ராயுதம் திவ்ய கைக்கு அழகுக்கு இட்ட திரு ஆபரணம் என்றுமாம் –
————————————————————-
திண் மணிகள் பொன்னுடனே சேர்தலாலும் சிதையாத நூல் வழியில் சேர்த்தியாலும்
வண்மை எழும் ஈரிரண்டு வண்ணத்தாலும் வானவர்க்கும் வியப்பான வகுப்பினாலும்
ஒண்மையுடை வாசி விளி ஓசையாலும் ஒருகாலும் அழியாத அழகினாலும்
மண் மகளார்க்கு அலங்காரம் என்ன மன்னும் மதிள் கச்சி நகர் கண்டு மகிழ்ந்திட்டானே -10-
பூமியாகிய ஸ்த்ரீக்கு அரை நூண் மாலை போல் அன்றோ திருக் காஞ்சீ
காஞ்சீ ஆபரணத்துக்குத் துல்யமான நகர் என்றபடி –
திண் மணிகள் பொன்னுடனே சேர்தலாலும் சிதையாத நூல் வழியில் சேர்த்தியாலும் –
திடமான ரத்தினங்கள் தங்கத்தோடு இழைக்கப் பெற்று இருப்பதாலும்
அழியாத சிற்ப சாஸ்திரத்தின் முறையில் அமைக்கப் பட்டு இருப்பதாலும்
வண்மை எழும் ஈரிரண்டு வண்ணத்தாலும் வானவர்க்கும் வியப்பான வகுப்பினாலும் –
கொடை நிறைந்த நான்கு ஜாதியரும் நிறைந்து இருப்பதாலும்-
அன்றிக்கே வெண்மை கருமை செம்மை பசுமை என்ற நான்கு நிறங்களால் என்றுமாம் –
தேவர்கட்க்கும் வியக்கத்தக்க அமைப்பினாலும்
ஒண்மையுடை வாசி விளி ஓசையாலும் ஒருகாலும் அழியாத அழகினாலும் –
இயற்க்கை அழகு அமைந்த குதிரைகளின் கனைக்கும் குரல் ஓசையினாலும்
ஒரு போதும் அழியாமல் நிலை பெற்ற அழகினாலும்
உண்மையுடை வாசி ஒளி ஓசையாலும் என்று கொண்டு நேர்மையுடைய சிறந்த பிரகாசம் உள்ள
வஸ்துக்களாலும் சிறந்த சப்தங்களாலும் என்றுமாம் –
மண் மகளார்க்கு அலங்காரம் என்ன மன்னும் மதிள் கச்சி நகர் கண்டு மகிழ்ந்திட்டானே -பூமிக்கு ஆபரணம் என்னும் படி பொருந்திய
மதிள்களை யுடைய ஸ்ரீ காஞ்சீபுரத்தைக் கண்டு ப்ரஹ்மா மகிழ்ச்சி யடைந்தான் –
—————————————————————-
பிரமன் வசிட்டனை தன் மனைவியிடம் அனுப்புதல் –
ப்ரஹ்மா வஸிஷ்டரை ஆஜ்ஞா பித்த பிரகாரத்தை இப்பாட்டாலே ஸங்க்ரஹித்து அருளுகிறார் –
காமங்கள் பல கொண்ட வேதம் கொண்டு கைத்தவமே செய்வார்க்கு காண கில்லாப்-
பூ மங்கை கேள்வனை நான் கண்டு போற்றப் புண்ணியத்தில் நிகரில்லா விரதம் பூண்டேன்
சாமங்கள் கழிவதன் முன் சடக்கெனப் போய்த் தன்னாற்றில் தனியிருந்து தவம் செய்கின்ற
நா மங்கை வந்திட நீ அளிப்பாய் என்று நன்மகனை நான்முகன் தான் நவின்றிட்டானே –11-
கைதவமே-கபட காரியமே -ஆஸ்ரயண வேளையிலே கைப்பற்றி போக வேளையிலே கைவிடுபவர்கள்
சாமங்கள் -ஜாமங்கள்
பூ மங்கை கேள்வனை -ராவணனைப் போலே பிரித்துக்காணாமல் –
திருக்கண்டேன் பொன் மேனி கண்டேன்
வடிவாய் நின் வழ மார்போனில் வாழும் மங்கையும் பல்லாண்டு
போற்ற -ஸ்துதிக்கவும் நமஸ்கரிக்கவும் ஆராதனம் செய்யவும் –
தனி இருந்து -ப்ரணய கலகத்தினால் தனியே இருந்து தபஸ்ஸூ செய்யச் சென்றமை ஸூசிதம் -த்யோதிதம்
நன்மகனை நான்முகன் தான்-நான்கு முகங்களையுடைய ப்ரஹ்மா நல்ல புத்திரனான வசிஷ்டனை அழைத்து
காமங்கள் பல கொண்ட வேதம் கொண்டு கைத்தவமே செய்வார்க்கு காண கில்லாப்-காம்ய கர்மங்கள் பலவற்றை வெளியிடுகின்ற வேதத்தைக் கொண்டு –
பகவத் கைங்கர்யத்தைச் செய்யாது கபட காரியங்களையே செய்பவர்களுக்கு ப்ரத்யக்ஷமாகக் காண முடியாத
பூ மங்கை கேள்வனை நான் கண்டு போற்றப் –பூவில் வாழும் பிராட்டியின் நாதனான எம்பெருமானை நான் நேரில் சேவித்து ஸ்தோத்ரம் செய்வதற்காக
புண்ணியத்தில் நிகரில்லா விரதம் பூண்டேன் -புண்ணியங்களுக்குள் ஒப்பற்ற அஸ்வமேத யாகத்தைத் தொடங்கியுள்ளேன் –
மரீசி முதலிய ப்ரஹ்மரிஷிகளை ருத்விக்குகளாக்கிக் கொண்டான்
சாமங்கள் கழிவதன் முன் சடக்கெனப் போய்த் தன்னாற்றில் தனியிருந்து தவம் செய்கின்ற -யாமங்கள் கழிவதற்கு முன்பு -காலம் தாழாது விரைவாக நீ போய்
தன் பெயருள்ள சரஸ்வதி நதிக் கரையில் தனியாக இருந்து தபம் செய்பவளான –பெருமான் திருவடியில் நின்றும் அவதரித்த கங்கையை விட
சிறந்த நதி இல்லை என்ற பிரமனின் மீது கோபம் கொண்டு சரஸ்வதி நதிக் கரையில் சரஸ்வதி தவம் புரிந்தாள்
நா மங்கை வந்திட நீ அளிப்பாய் என்று நவின்றிட்டானே –வாக்கின் தேவதையான சரஸ்வதி இங்கு வந்து சேரும்படி
நீ அழைத்து வருவாயாக என்று கட்டளையிட்டான் –
ஊடல் நீங்காததால் வர மறுத்து விட்டாள் -சாவித்ரி தேவதை கொண்டு யாகம் செய்யத் தொடங்க -அசுரர்கள் இந்த யாகத்தை கலைக்க நினைத்து
சரஸ்வதி தேவியிடம் சொல்லி கலகமூட்ட -வேகவதி என்னும் வேறு ஒரு நதியாக பெருகி யாகசாலையை அழிக்க முற்பட்டாள் –
————————————————————-
சரஸ்வதி தேவி நதி வடிவம் கொண்டு வரும் மிடுக்கு —
எம்பெருமானுடைய வாத்சல்ய பிரகாரம் இப்பாட்டிலும்
அடுத்த பாட்டிலும்
அருளிச் செய்கிறார் –
அன்ன வடிவாள் அசையும் அன்ன நடையாள் உயரும் அன்ன அரசு ஏறி வருவாள்
அத்தன் அயன் அத்தனையன் உத்திதனை அத்து இது என உத்தி புரியாள்
நல்நடை விடா நடம் இது என்ன நடவா நடுவு நண்ணு குவடு ஏறி இழிவாள்
நல் பதிகள் அல் பதிகள் கல் புரள அற்புத மருள் கதியினால்
கல் நடை விடா இடம் இல் உன்னதி சிறா விகடன் மன்னு கிரி கூடம் இடியக்
கட்டு அவ்விடை இற்று விழ விழி முற்றும் உற்று அடைய விட்டு அருகு உற
அன்ன நய சீர் அயன் இது என் என விழா அமரர் மன்னு பத்தி ஏறி மகிழ
அச்சுதன் அணைத் தருவில் அத்திசை வரத் தகைய அற்று அணுகினாள்–12-
அத்தன் அயன் -ஆப்தனான ஸ்ரீ ப்ரம்மா
அத் தநயன் உத்திதனை -ஸ்ரீ வசிஷ்டருடைய வார்த்தையை
யத்து இது என யுத்தி புரியாள்–இப்படியே ஆகட்டும் என்னும் பதில் வார்த்தையை கொடாதவளும் –
அப்படியே ஆகட்டும் என்று சொல்லாதவள் என்றவாறு –
குடகு -கற் கூட்டங்களின் மேல்
மருக்கத்தி-வாயுவுக்கு சமமான வேகத்தினால்
கல் நடை விடாத இடம் இல் -கல்லிலே போவதை விடாத ஸ்தலம் இல்லாத
இரண்டு நகார பிரயோகம் -கல்லின் மேலேயே ப்ரவஹித்தமை
உன்னதி சிறா விகட மன்னு கிரி கூட மிடியக் கட்ட விடை யிற்று விழ முற்றும் விழி யுற்றடைய விட்டருகுற
உன்னதி -உயர்ந்து இருப்பதனால்
சிறா -சிறுமை பெறாத -மற்ற மலைகளை விட உயரத்தில் சிறுமை பெறாத -அதாவ்துன் மிகவும் உயந்ததான
விகட -விசாலமான
மன்னு -மிகவும் உறுதியான
கிரி கூட மிடியக்-மலைச் சிகரங்கள் இடியும்படி
கட்ட விடை -கஷ்டமான -ஒருவராலும் அடக்க முடியாத ரிஷபங்கள்
அன்றிக்கே
வண்டி போன்றவற்றில் கட்டப்பட்ட விருஷபங்கள் என்றுமாம்
யிற்று விழ -சந்திப்பந்தங்கள் கீழே விழ
முற்றும் விழி யுற்று -நாலா பக்கங்களிலும் விழித்து விழித்துப் பார்த்து
அடைய விட்டு அருகுற-அனைத்தையும் பரித்யஜித்து ப்ரஹ்மாவிடம் சென்று ரக்ஷிக்கப் பிரார்த்திக்க
அன்றிக்கே
தங்கள் வண்டிகளில் கட்டப்பட்ட எருதுகள் கீழே விழ
ஆவாரார் துணை என்று சுற்றிலும் பார்த்து -யாவரையும் காணாமல்
எல்லாம் விட்டுத் தனித்தனியே நீஞ்சிக் கரை ஏற என்றுமாம்
அன்ன நய -தனது பத்தினியை சாந்தம் செய்ய முடியாமல்
சாஸ்த்ர விதியை அனுசரித்து வேறே பத்னிகளைக் கொண்டு யஜ்ஜம் செய்து நியாயமாக நடந்து கொண்ட
விழா வமரர் – யஜ்ஜம் ஆகிய மஹா உத்சவத்துக்கு வந்த தேவதைகள்
அணைத் தனுவில் –திருப்பள்ளி யாகிய ஆதிசேஷன் சரீரத்தில்
அன்றிக்கே
அணை போட்டால் போல் நிஸ்ஸலமான திருமேனியுடன் என்றுமாம் –
திருவணை -வேகா சேது -அன்றோ
தகைய வற்றணுகினாள் -தடுக்க பற்றுதலை அடைந்தாள் -அதாவது -பூமிக்குள் அந்தர்தானம் செய்தாள்
அன்றிக்கே
வற்றி -தனது வேகத்தை அடக்கிக் கொண்டு -கோபத்துக்குக்காக வெட்க்கி –
அணுகினாள் -சமீபத்தில் வந்தாள்
அச்சுதன் அணைத் தனுவில் அத்திசை வரத்-ஆஸ்ரிதர்களை நழுவ விடாதவன்
தனக்கு திருப்பள்ளியாகிற ஸ்ரீ ஆதி சேஷனுடைய சரிரத்திலே –
அணை போட்டால் போலே நிச்சலமான திருமேனியுடன் அத்திசை நோக்கி வர –
திரு அணை -வேகா சேது அன்றோ திரு நாமம் –
தகைய வற்று அணுகினாள்–தடுக்க வற்றுதலை அடைந்தாள் -பூமிக்குள் அந்தர்தானம் செய்தாள்-
அன்ன வடிவாள் அசையும் அன்ன நடையாள் உயரும் அன்ன அரசு ஏறி வருவாள் -ஹம்சம் போன்ற அழகை யுடையவளும்
அசைகின்ற ஹம்சம் போன்ற நடையை யுடையவளும் -உயர்ந்த ராஜ ஹம்சத்தின் மீது ஏறிக் கொண்டு வருபவளுமான
சரஸ்வதி தேவி -ஹம்ஸ வாஹனம் அன்றோ –
அத்தன் அயன் அத்தனையன் உத்திதனை அத்து இது என உத்தி புரியாள்-உயர்ந்தவனாகிய ப்ரஹ்மாவின்
அந்தப் புத்திரனான வசிஷ்டனுடைய வேண்டுகோளை இது அது அப்படியே யாகுக என்று சொல்லாதவளாய்
நல்நடை விடா நடம் இது என்ன நடவா நடுவு நண்ணு குவடு ஏறி இழிவாள் –இவ்வாறு ப்ரஹ்மா அழைத்தது
நல்ல ஒழுக்கத்தின் நின்றும் வேறுபடாதது போல்
தோற்றுகின்ற நாடகம் என்று நினைத்து நடந்து வழியிடையே எதிர்படுகின்ற குன்று மீது ஏறி இறங்குபவளாய்
நல் பதிகள் அல் பதிகள் கல் புரள அற்புத மருள் கதியினால் –நல்ல சமமான இடங்களிலும் அப்படியல்லாத மேடு பள்ளமான இடங்களிலும் உள்ள
கற்கள் புரளும் படி ஆச்சர்யமான வாயு வேகத்தால்
கல் நடை விடா இடம் இல் உன்னதி சிறா விகடன் மன்னு கிரி கூடம் இடியக் -பாறைகள் அசைந்து உருளாத இடம் இல்லாததும் உயரம் குறையாததும்
மேடு பள்ளம் பொருந்தியதுமான மலையின் சிகரம் இடிந்து போகவும்
கட்டு அவ்விடை இற்று விழ விழி முற்றும் உற்று அடைய விட்டு அருகு உற-அங்கே மலைப்பக்கம் -தாழ் வரை -ஆதி யற்று இடியவும் கண்களை
நாநா திசையும் சென்று பொருந்தும்படி செலுத்தி யாகவேதியின் சமீபத்துக்கு வர
அன்ன நய சீர் அயன் இது என் என விழா அமரர் மன்னு பத்தி ஏறி மகிழ –அப்படிப்பட்ட நன்மையையும் சிறப்பையும் யுடைய
பிரம்மா தேவன் இது என்ன என்று திகைத்து நிற்க
யாகமாகிய -உத்சவத்துக்கு வந்த மற்றைத் தேவர் ஸ்திரமான தங்கள் ஸ்தானத்துக்குச் சென்று தாம் உயிர் பிழைத்து வந்ததற்கு மகிழ்ந்து நிற்க
அச்சுதன் அணைத் தருவில் அத்திசை வரத் தகைய அற்று அணுகினாள்–பக்தர்களைக் காய் விடாத எம்பெருமான்
அணை யுருவத்தில் அங்கே தடுப்பதற்கு எழுந்து அருள வேகம் கெட்டு நெருங்கினாள் –
—————————————————————-
எம்பெருமான் நதி நடுவே அணையாகக் கிடந்தது அருள் செய்தல்
அன்று நயந்த வயமேத வேள்வி
பொன்ற வுரை யணங்கு பூம் புனலாய்க் கன்றி வர
ஆதி யயனுக்கு அருள்செய்து அணையானான்
தாதை யரவணையான் தான் –13-
நயந்த-அனுஷ்ட்டிக்கப்பட்ட
யுரை யணங்கு-ஸரஸ்வதி யானவள்
பூம்புனலாய்-அழகிய நதியாய் -ஆம்பல் நெய்தல் போன்ற -பூக்கள் கூடிய நதியாய்
கன்றி வர -கோபித்துக் கொண்டு பிரவஹிக்க
அரவணையான் தானே அணை யானானே -ஆச்ரித ரேஷன் த்வராதிசயத்தினாலே
மழுங்காத வை நுதிய இத்யாதி
அன்று நயந்த வயமேத வேள்வி பொன்ற வுரை யணங்கு பூம் புனலாய்க் கன்றி வர -அப்பொழுது ப்ரஹ்மாவினால் விரும்பிச் செய்யப்பட அஸ்வமேதம்
என்னும் பெரிய யாகம் அழிந்து போகும்படி வாக்கின் தேவதையான சரஸ்வதி அழகிய நதியாகயாகி கோபித்துக் கொண்டு பெருகி வர
ஆதி யயனுக்கு அருள்செய்து அணையானான் தாதை யரவணையான் தான் -உலகுக்கு தந்தையும் ஆதிசேஷனைப் பள்ளி கொண்டவனுமான
எம்பெருமான் ஸ்ருஷ்டிகாரணான ப்ரஹ்மாவின் மீது கருணையை வைத்து தானே அணையாகப் பள்ளி கொண்டான் –
———————————————————-
மூ வுலகினரும் அவ்வணையைக் கண்டு மகிழ்ந்து பேசுதல் —
தரணியில் மன்னி யயனார் தனித் தவம் காத்தபிரான்
கருணை எனும் கடலாடித் திருவணை கண்டதற் பின்
நரகுத் திரள் எண்ணிய சித்திர கூத்தன் அன்று தெரித்து வைத்த
சுருணையில் ஏறிய சூழ் வினை முற்றும் துறந்தனமே -14-
திரணகர்–திரள் நரகு -நரகங்களினுடைய
மன்னி-விலக்ஷணமாக நித்ய வாஸம் -தீர்த்தம் பிரசாதியாதே -நிலை நின்ற அர்ச்சாவதார
அயனார் -உபகாரக அதிசயத்தால் பஹு வசனம்
திருவணை கண்டதற்பின் -மூன்று லோகத்தாரும் கண்டு அனுபவித்த விலக்ஷணமான சேது –
அந்த நள சேதுவில் வ்யாவ்ருத்தி
சேவை கிட்டவும் வெஃகாவில் துயில் அமர்ந்த வேந்தனின் கிருபையே காரணமாகும்
தரணியில் மன்னி யயனார் தனித் தவம் காத்தபிரான் -பூமியில் ஸ்திரமாய் இருந்து ப்ரஹ்மாவினுடைய ஒப்பற்ற
தபஸ்ஸாகிய அஸ்வமேத யாகத்தை காப்பாற்றி மஹா உபகாரம் செய்து அருளிய எம்பெருமானுடைய
கருணை எனும் கடலாடித் திருவணை கண்டதற் பின் -கிருபை என்னும் கடலில் நீராடி
அழகிய அந்த அணையை கண்ணார சேவித்த பின்பு
நரகுத் திரள் எண்ணிய சித்திர கூத்தன் அன்று தெரித்து வைத்த -நரகங்களின் கூட்டத்தை கணக்கிட்டுப்
பார்ப்பவனான யமனுடைய கணக்கனான சித்ர குப்தனால் கனக்குப் பார்த்து எழுதி வைக்கப் பட்ட
சுருணையில் ஏறிய சூழ் வினை முற்றும் துறந்தனமே -கணக் கொலையில் குறித்து வைக்கப் பட்ட நம்மைச்
சூழ்ந்து நிற்கின்ற பாபங்கள் முழுவதும் நீங்கப் பெற்றோம்
இப்படி வேகவதி நதியாய் வந்த சரஸ்வதி தேவியின் கோப வேகம் அடங்குமாறு
திரு வெக்கா என்னும் திவ்ய தேசத்திலே பள்ளி கொண்ட எம்பெருமான் கடாக்ஷிக்க
அதனால் அவளும் மனக் கலக்கம் தெளிந்து வர அவளையும் கூட்டிக் கொண்டு ப்ரஹ்மா அஸ்வமேத யாகத்தை நடத்தினான் –
முடிவில் பசுவின் வைபையை அக்னியில் ஹோமம் செய்தான் –
————————————————
புண்ய கோடி விமானத்துடன் பேர் அருளாளன் ஆவிர்பவித்தல் —
சுக லேசம் எண்ணிய சூழ் வினை தீர்க்கத் துணிந்த அயனார்
அகலாத வன்புடன் கொண்ட வயமேத வேதியின் மேல்
புகலோங்கு பொன்மலை யன்னவோர் புண்ணிய கோடியுடன்
பகலோன் பகல் விளக்காகப் பரஞ்சுடர் தோன்றியதே -15-
சுக லேசம் எண்ணிய சூழ் வினை தீர்க்கத் துணிந்த அயனார்–ப்ரஹ்மா அற்பமான லோக ஸூகத்தை
பெரிதாக எண்ணுவதற்குக் காரணமாயுள்ள சூழ்ந்து நிற்கும் தம் பாபங்களை ஒழிக்க உறுதி கொண்டு
அகலாத வன்புடன் கொண்ட வயமேத வேதியின் மேல் -நீங்காத பக்தியுடன் அனுஷ்டித்த அஸ்வமேத யாகவேதியின் மீது
புகலோங்கு பொன்மலை யன்னவோர் புண்ணிய கோடியுடன்-புகழ் நிறைந்துள்ள ஸ்வர்ண பர்வதம் பொன்ற
ஒப்பற்ற புண்ய கோடி என்னும் விமானத்துடன்
பகலோன் பகல் விளக்காகப் பரஞ்சுடர் தோன்றியதே -சூரியனும் பகலில் வைத்த விளக்கு எண்ணலாம் படி
உத்தமமான பேர் அருளாளன்–
சித்திர மாதத்தில் சுக்ல பக்ஷத்தில் -சதுர்த்தசி திதியில் ஞாயிற்றுக் கிழமையுடன் கூடிய ஹஸ்த நக்ஷத்ரம்
காலை நேரத்தில் ஆகிய தேஜஸ் ஆவிர்பவித்தது –
———————————————————
காஹள த்வனி பிரகாரங்களை இரண்டு பாசுரங்களால் அருளிச் செய்கிறார் –
பேர் அருளாளன் திருவவதரித்ததைக் கண்டு நித்ய ஸூரிகள்
காலம் வலம் புரி வாத்தியங்களை உத்தி பெருமையை வெளியிட்டு அருளினர் –
பெருமையுடை யத்திகிரிப் பெருமாள் வந்தார்
பேராத வருள் பொழியும் பெருமாள் வந்தார்
அருமறையின் உச்சிதனில் நின்றார் வந்தார்
அங்கமுடன் அவையாகும் அரியோர் வந்தார்
திருவுரையாய்த் தாம் பொருளாய் நிற்பார் வந்தார்
திருவருளால் செழும் கலைகள் தந்தார் வந்தார்
மருவலர்க்கு மயக்குரைக்கும் மாயோர் வந்தார்
வானேற வழி தந்தார் வந்தார் தாமே –16-
அருளாளப் பெருமாள் -கிருபையே தனக்கு ஸ்வரூப நிரூபகம்
பெருமையுடை யத்திகிரிப் பெருமாள் வந்தார் -மிகப் பெருமையுடையரான ஸ்ரீ ஹஸ்திகிரி நாதர் எழுந்து அருளினர்
பேராத வருள் பொழியும் பெருமாள் வந்தார் -நீங்காத கருணையைப் பொழியும் பெருமாள் வந்தார்
அருமறையின் உச்சிதனில் நின்றார் வந்தார் -அருமையான வேதத்தின் சிகரத்தில் -வேதாந்தங்களில் போற்றப்பட்டு நின்றவர் வந்தார்
அங்கமுடன் அவையாகும் அரியோர் வந்தார் -அங்கங்களுடன் அந்த வேத ஸ்வரூபரான அருமையான ஸ்வாமி வந்தார்
திருவுரையாய்த் தாம் பொருளாய் நிற்பார் வந்தார் -பிராட்டி சப்த ஸ்வரூபமாய் நிற்க தாம் அர்த்த ஸ்வரூபமாய் நிற்பவர் வந்தார்
திருவருளால் செழும் கலைகள் தந்தார் வந்தார் -தம் சிறந்த கிருபையினால் உயர்ந்த சாஸ்திரங்களை உலகுக்குத் தந்தவர் வந்தார்
மருவலர்க்கு மயக்குரைக்கும் மாயோர் வந்தார் -தம்மிடம் அன்பற்ற நாஸ்திகருக்கு மோஹன சாஸ்திரங்களை வெளியிடுகின்ற வஞ்சகர் வந்தார்
வானேற வழி தந்தார் வந்தார் தாமே -பரமபதத்துக்குச் செல்ல உபாயத்தை உபதேசித்து அருளியவர் வந்தார் -என்று
நித்ய ஸூரிகள் மிக மகிழ்ந்து திருச் சின்ன ஒலி செய்தனர் –
—————————————————
நித்ய ஸூரிகள் மேலும் திருச் சின்னம் ஒலித்தல் —
அத்திகிரி யருளாளப் பெருமாள் வந்தார்
ஆனை பரி தேரின் மேல் அழகர் வந்தார்
கச்சி தனில் கண் கொடுக்கும் பெருமாள் வந்தார்
கருத வரம் தரு தெய்வப் பெருமாள் வந்தார்
முத்தி மழை பொழியும் முகில் வண்ணர் வந்தார்
மூலம் என ஓலமிட வல்லார் வந்தார்
உத்தர வேதிக்குள்ளே யுதித்தார் வந்தார்
உம்பர் தொழும் கழலுடையார் வந்தார் தாமே –17-
ஆனை பரி தேரின் மேல் -திரு வாஹனாதிகளின் மேல் –
கண் கொடுக்கும் பெருமாள் -ரஹஸ்யார்த்த ஞானம் அருளியவர் என்றுமாம்
துப்புடையாரை அடைவது எல்லாம் சோர்விடத்துத் துணையாவார் என்றே
ஒப்பிலேன் ஆகிலும் நின்னடைந்தேன் ஆனைக்கு நீ அருள் செய்தமையால் -பெரியாழ்வார்
அத்திகிரி யருளாளப் பெருமாள் வந்தார் –ஸ்ரீ ஹஸ்திகிரியில் எழுந்து அருளிய பேர் அருளாளர் என்னும் பெருமாள் வந்தார்
ஆனை பரி தேரின் மேல் அழகர் வந்தார் -யானை குதிரை தேர் ஆகிய வாகனங்கள் மீது எழுந்து அருளும் அழகர் வந்தார்
கச்சி தனில் கண் கொடுக்கும் பெருமாள் வந்தார் -ஸ்ரீ காஞ்சிபுரத்தில் கண்ணை அளிக்கும் பெருமாள் வந்தார் –
ஹரித வாரண ப்ருத்யர் என்பவருக்கு கண் கொடுத்து அருளிய ஐதிக்யம்
கருத வரம் தரு தெய்வப் பெருமாள் வந்தார் -மனஸினால் அனுசந்தித்தால் வேண்டிய வரங்களைக் கொடுத்து அருளும் தேவச் ஸ்ரேஷ்டர் வந்தார்
முத்தி மழை பொழியும் முகில் வண்ணர் வந்தார் -மோக்ஷமாகிய மழையைப் பொழிகின்றவரும்
மேகம் பொன்ற நிறம் ஸ்வபாவம் யுடையவருமான எம்பெருமான் வந்தார்
மூலம் என ஓலமிட வல்லார் வந்தார் -முதலையால் பீடிக்கப்பட்ட ஸ்ரீ கஜேந்திர ஆழ்வான் ஆதிமூலமே என்று
கூக்குரலிட அதனை காத்து அருள சக்தியுடையவர் வந்தார்
உத்தர வேதிக்குள்ளே யுதித்தார் வந்தார் -ப்ரஹ்மா ஏற்படுத்திய உத்தர வேதிக்குள்ளே ஆவிர்பவித்தவர் வந்தார்
உம்பர் தொழும் கழலுடையார் வந்தார் தாமே -நித்ய ஸூரிகளால் தொழப் படுகின்ற திருவடிகளையுடைய எம்பெருமான் வந்தார் –
———————————————————
தேவர்களும் முனிவர்களும் பரவசமாய் போற்றுதல் —
இரு பரிதி இயைந்த மகுடமும் எழில் மதி திகழ்ந்த வதனமும்
இருவகை இலங்கு குழை களில் எதிர் பொர உகந்த மகரமும்
ஒரு தகவுயர்ந்த திருமகள் ஒளி மருவின் மன்னும் அகலமும்
உரு அரு உமிழ்ந்த உதரமும் உலகு அடைய நின்ற கழல்களும்
மருவினிடை பொங்கு புனல் என மலை குனிய நின்ற மலை என
மருள் அற விளங்கும் ஒளி என மலர் அயனுகந்த பயன் என
வருவில் யுறைகின்ற யுயிர் என வடியவர் உகந்த அமுது என
வரு மறைகள் ஒன்றி யடி தொழ வருள் வரதர் நின்ற பெருமையே -18-
உருவரு உமிழ்ந்த யுதரமும்-சேதன அசேதனங்களை ஸ்ருஷ்ட்டி காலத்தில் உமிழ்ந்த திரு வுதரமும்
வுலகடைய நின்ற கழல்களும்-திரு உலகு அளந்த திருவடிகளை –
லோகங்கள் அடைய ஆஸ்ரயிக்கும்படியான திருவடிகளை என்றுமாம்-
மருவினிடை ஓங்கு புனல் என-நீர் இல்லாத பாலைவனத்தின் நடுவில் -லீலா விபூதியில் ஆவிர்பவித்து அருளிய
மலை குனிய நின்ற மலை -ஹஸ்திகிரி மேல் அஞ்சன கிரி
இரு பரிதி இயைந்த மகுடமும் எழில் மதி திகழ்ந்த வதனமும்–பெரிய சூரியனை ஒத்த கிரீடமும் –
பிரகாசிக்கும் சந்திரன் போலே விளங்குகின்ற திரு முக மண்டலமும்
இருவகை இலங்கு குழை களில் எதிர் பொர உகந்த மகரமும் -இரண்டு வகையாக பிரகாசிக்கின்ற குண்டலங்களில்
எதிரே நின்று சண்டையிடுவதற்கு விரும்பியன போன்ற மீன்களும்
ஒரு தகவுயர்ந்த திருமகள் ஒளி மருவின் மன்னும் அகலமும் -ஒப்பற்ற கருணையினால் உயர்ந்து நிற்கும் பிராட்டி பிரகாசிக்கின்ற
ஸ்ரீ வத்சம் என்னும் திரு மறுவோடு நித்ய வாசம் செய்யும் திரு மார்பும்
உரு அரு உமிழ்ந்த உதரமும் உலகு அடைய நின்ற கழல்களும் -அசேதனத்தையும் சேதனத்தையும் ஸ்ருஷ்டித்த திரு வயிறும்
உலகோர் வந்து சரண் அடையும்படி நிற்கின்ற திருவடிகளும் -ஆகிய இவற்றுடனே
வரு மறைகள் ஒன்றி யடி தொழ வருள் வரதர் நின்ற பெருமையே -அருமையான வேதங்கள் ஒரே முகமாய் நின்று திருவடிகளைத்
தொழுது பேசும்படி அருளே வடிவெடுத்த பேர் அருளாளர் நின்ற பெருமை -எவ்வாறு இருந்தது என்னில்
மருவினிடை பொங்கு புனல் என மலை குனிய நின்ற மலை என -பாலை வனத்தின் நடுவில் எழும்பிய ஜலம் என்னும்படி யாகவும் –
அத்திகிரி என்னும் மலை வளையும் படி நின்ற மலை என்னும்படியாகவும்
மலர் அயன் உகந்த பயன் என வருவில் யுறைகின்ற யுயிர் என வடியவர் உகந்த அமுது என –பகவானுடைய திரு நாபிக் கமலத்தில்
உதித்த ப்ரஹ்மா விரும்பிய பலன் என்னும்படியாகவும்
சேதனப் பொருள்கள் வசிக்கின்ற உயிர் என்னும்படியாகவும் -சகல அந்தர்யாமியாக என்றவாறு —
பாகவதர்கள் விரும்புகின்ற அம்ருதம் என்னும்படியாகவும் இருந்ததே —
ப்ரஹ்மாதிகள் முனிவர்கள் பேர் அருளாளனும் அடியாராகப் பெற்றோமே என்று நினைந்து மகிழ்ந்து போற்றுகிறார்கள் –
————————————————————
ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ரம் முதல் அத்யாய சாரார்த்தம் –
சித்து அசித்து என விரித்து யுரைத்தன அனைத்தும் அமைத்து உறையும் இறைவனார்
சிறிய பெரிய வுருவடைய யுடலம் என நடலம் இலது இலகு நிலையினர்
சித்திரத்து எழிலை யொத்த பத்தரொடு முத்தர் பித்தி எனும் யுணர்வினார்
சிதைவில் மறை நெறியில் எறி அ உரு முறைகள் முறிய சிறை யரிய நிறைவினார்–19-1-
சித்து அசித்து என விரித்து யுரைத்தன அனைத்தும் அமைத்து உறையும் இறைவனார் –சேதனம் அசேதனம் என்று சாஸ்திரங்களில் விளக்கிக்
கூறப்பட்ட சகல வஸ்துக்களையும் படைத்து -அவற்றுள் அந்தர்யாமியாய் வசிக்கின்ற தலைவராய் இருப்பவரும் -முதல்பாதம் சாரார்த்தம்
சிறிய பெரிய வுருவடைய யுடலம் என நடலம் இலது இலகு நிலையினர் –ஸூஷ்மமும் ஸ்தூலமுமான உருவமுள்ள சேதன அசேதனம் என்னும் வஸ்துக்கள்
முழுதும் தமக்குச் சரீரம் என்னும்படி நின்று அவற்றிலுள்ள தோஷம் தட்டாது பிரகாசிக்கும் ஸ்வபாவம் யுடையவரும் -இரண்டாம் பாதம் சாரார்த்தம்
சித்திரத்து எழிலை யொத்த பத்தரொடு முத்தர் பித்தி எனும் யுணர்வினார் -அழகிய சித்ரத்தைப் போன்ற பத்தருக்கும் முக்தருக்கும் நித்ய ஸூரிகளுக்கும் ஆதாரமான
சுவர் என்று கூறப் படுகின்ற சங்கல்பத்தை யுடையவரும் -சித்திரத்தை சுவர் தங்குவது போலே தன் சங்கல்பத்தால் சர்வேஸ்வரன் உலகத்தைத் தாங்குகின்றான் –
வேறு ஒன்றையும் தமக்கு ஆதாரமாகக் கொல்லாமை -மூன்றாவது பாத சாரார்த்தம்
சிதைவில் மறை நெறியில் எறி அ உரு முறைகள் முறிய சிறை யரிய நிறைவினார் –அழிவு இல்லாத வேத மார்க்கத்தில் ஒதுக்கப் பட்ட அந்த அசேதனத்தின்
பிரகாரங்கள் தொலைந்து போக வரம்பு இல்லாத பெருமையை யுடையவரும்
பிற மதத்தினர் அசேதனமே உலகுக்கு காரணம் என்று விருத்தமாய் வழக்காட -சித்தாந்திகள் பல நியாயங்கள் உதவியால் வேதாந்த வாக்கியங்களை ஆராய்ந்து
அசேதனம் ஜகாத் காரணம் ஆகாது என்றும் எல்லையற்ற பெருமையையுடைய சர்வேஸ்வரன் ஜகாத் காரணம் என்றும் ஸ்தாபித்தனர் –
இதனால் நான்காவதை பாத சாரார்த்தம் விளக்கப் பட்டது –
————–
ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ரம் இரண்டாம் அத்யாயம் சாரார்த்தம் –
கத்துவிக்க வல கத்து வித்தை வழி கற்ற வர்க்கு அசைவு இல் மறையினார்
கபிலர் கண சாரணர் சுகதர் சமணர் அரர் வழிகள் அழியும் அருள் மொழியினர்
கத்து இலக்கிலும் அருக் குலத்திலும் அசித்தில் ஒக்கும் ஒரு முதல்வனார்
கரணம் இடு கடிய பதினொரு இருடிகமும் அடைய முடியும் ஆதி இருடியார் –19-2-
கத்துவிக்க வல கத்து வித்தை வழி கற்ற வர்க்கு அசைவு இல் மறையினார் –எடுத்த இடம் எல்லாம் ஹேதுவை ஆரவாரத்தோடு கல்பிக்கும் படி
செய்ய வல்ல ஜல்பம் என்னும் வாத மார்க்கத்தை பரிச்சயம் செயதவரால் அசைக்க முடியாத விசித்திரமான சக்தியாகிய ரஹஸ்யத்தை யுடையவரும்
ப்ரஹ்மம் ஜகாத் காரணம் என்பதை ஸ்தாபித்து பிற மதத்தினர் ஸ்ம்ருதிகள் யுக்திகள் உடன் கல்பித்த விரோதங்கள் நீங்கிய தன்மையாகிய முதல் பாத சாரார்த்தம் –
கபிலர் கண சாரணர் சுகதர் சமணர் அரர் வழிகள் அழியும் அருள் மொழியினர்-கபிலரும் கணாதரும் புத்தரும் ஜைனரும் பாசுபதரும் -சைவரும் -ஆகியவர்கள்
மதங்கள் தொலைவதற்கு காரணமான ஆஸ்ரிதர் இடம் அருளாலே ஸ்ரீ பாஞ்ச ராத்ரம் என்னும் ஸ்ரீ ஸூ க்தியை வெளியிட்டு அருளியவரும் -இரண்டாம் பாதம் சாரார்த்தம்
கத்து இலக்கிலும் அருக் குலத்திலும் அசித்தில் ஒக்கும் ஒரு முதல்வனார் -கம் இந்திரியம் -இந்திரியங்களுக்கு இலக்கண ஐந்து பூதங்களிலும்
ஜீவ வர்க்கத்திலும் மஹான் அஹங்காரம் என்னும் தத்துவங்களின் விஷயத்தில் போல் ஒரே காரணமாய் இருளிப்பவரும்
பஞ்ச பூதங்களையும் ஜீவர்களையும் தக்கவாறு ஸ்ருஷ்டிக்கும் தன்மை யாகிய மூன்றாம் பாத சாரார்த்தம்
கரணம் இடு கடிய பதினொரு இருடிகமும் அடைய முடியும் ஆதி இருடியார் –கூத்தாடுகிற கொடிய ஞான இந்திரியங்கள் கர்மா இந்திரியங்கள் மனஸ் முழுதும்
தோன்றுவதற்கு காரணமான நேரில் எல்லாவற்றையும் காண வல்ல முனிவர் போன்றவரும் —
இந்திரியம் முதலியவற்றுக்கு காரணமாகும் தன்மை –நான்காம் பாத சாரார்த்தம் –
—————
ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ரம் மூன்றாம் அத்யாயம் சாரார்த்தம் –
ஒத்து அனைத்து உலகும் ஒற்றி ஒற்றி வரும் இப்பவத்து இசையும் இசைவினார்
உருவம் அருவம் எனும் உலகின் முடுகு இலகில் உவமை இது இலகு தலைவனார்
உத்தமப் படிவகுத்த வித்தைகளில் உத்தரிக்க உணர் குணவனார்
உரிய கிரிசைகளில் அரியது ஒரு விரகு தெரிய விரையுமவர் பரிவினர் —-19-3–
ஒத்து அனைத்து உலகும் ஒற்றி ஒற்றி வரும் இப்பவத்து இசையும் இசைவினார் -எப்பொழுதும் ஒரே தன்மையதாய் இருந்து சுவர்க்கம் நரகம்
இவற்றுக்குச் செல்லும் சகல ஜீவர்களை தழுவித் தழுவி வருகின்ற இந்த சம்சாரத்தை நடத்துவதற்கு ஏற்ற சங்கல்பத்தை யுடையவரும்
இத்தால் சேதனருக்கு விழிப்பு ஸ்வப்னம் நித்திரை மூர்ச்சை மரணம் ஆகிய நிலைமைகளிலும் நிர்வாஹகராய் இருந்து சம்சாரத்தை
நடத்தி வைத்தலாகிய முதல் பாத சாரார்த்தம் சொல்லிற்று ஆயிற்று
உருவம் அருவம் எனும் உலகின் முடுகு இலகில் உவமை இது இலகு தலைவனார் -அசேதனம் சேதனம் என்னப்படும் லோகத்தின் தோஷம் இல்லை என்னுமதில்
சமமில்லாமல் பிரகாசிக்கின்ற ஸ்வாமியாய் இருப்பவரும் -அந்தர்யாமியாய் இருந்தும் வியாப்த கத தோஷம் தட்டாமை-இரண்டாம் பாத சாரார்த்தம்
உத்தமப் படிவகுத்த வித்தைகளில் உத்தரிக்க உணர் குணவனார் -உயர்ந்த பிரகாரங்களில் பலவகையாகப் பிரிக்கப்பட்ட பக்தி யோகங்களில்
வேறு உபநிஷத்துக்களில் இருந்து எடுத்துக் கொள்ளக் கருதப்பட்ட குணங்களை யுடையவரும் –
பக்தி யோகம் தஹர வித்யை சாண்டில்ய வித்யை பர வித்யை -இப்படி வித்யைகளை அனுஷ்ட்டிக்கும் போதும் வேறு உபநிஷத்துக்களில் கூறப்பட்டுள்ள அதே வித்யையில்
சொல்லிய மற்றைக் குணங்களையும் எடுத்துக் கொண்டு அவற்றுடன் கூடியதாகவும் ப்ரஹ்மத்தை உபாஸிக்க வேண்டும் –மூன்றாவது பாத சாரார்த்தம்
உரிய கிரிசைகளில் அரியது ஒரு விரகு தெரிய விரையுமவர் பரிவினர் –பக்தி யோகத்துக்கு அங்கமாய் தங்களுக்கு தக்கவான வர்ணாஸ்ரம தர்மங்களில்
எளிதில் செய்ய முடியாத ஓர் உபாயத்தை அறிய விரைபவரிடம் அன்புடன் தலைக் கட்டி வைப்பவரும் –
சாத்விக தியாகம் -செய்யும் கர்மமும் அதன் பலனும் செய்யும் தன்மையும் தன்னுடையது என்று நினையாமல் அவற்றை எம்பெருமான் இடம் சமர்ப்பித்தல் –
இதனால் செத்தனர் செய்யும் கர்மங்களால் மகிழ்ந்து அருள் புரியும் தன்மையாகிய நான்காம் பாத சாரார்த்தம் சொல்லிற்று ஆயிற்று –
———–
ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ரம் நான்காம் அத்யாயம் சாரார்த்தம் –
சத்து அசத்து எனும் அணைத்த அனைத்து வினை தொத்து அறுக்க வள துணிவினார்
சரியும் அளவில் உரியவரை அறிவு அரிய தமனி நெறி செருகு விரகினார்
தத்துவத் திரள் உதைத்து உதைத்து அடைவு தத்து விக்குமவர் தலைவனார்
தருகை உணருமவர் சரணம் அணுக விடல் அரிய அருள் வரதர் அடியமே —19-4-
தமனி நெறி–ப்ரஹ்ம நாடி
சத்து அசத்து எனும் அணைத்த அனைத்து வினை தொத்து அறுக்க வள துணிவினார் -புண்ணியம் பாபம் எனப்படுகின்ற உபாசிக்கும் ஜீவனைச்
சேர்ந்துள்ள சகல கர்மங்களும் தொடர்தலை ஒழிக்க வல்ல உறுதியை யுடையவரும் -முதல் பாதம் சாரார்த்தம்
சரியும் அளவில் உரியவரை அறிவு அரிய தமனி நெறி செருகு விரகினார்–சரீரத்தை விடும் காலத்து பரமபதம் செல்லத் தக்க ஜீவர்களை
அறிவதற்கு முடியாத ப்ரஹ்ம நாடி வழியாக பிரவேசிக்கச் செய்ய வல்லமை யுடையவரும் -இரண்டாம் பாதம் சாரார்த்தம்
தத்துவத் திரள் உதைத்து உதைத்து அடைவு தத்து விக்குமவர் தலைவனார் -பிரக்ருதியைச் சேர்ந்த சகல அசேதன தத்துவங்களின் கூட்டத்தையும்
காலால் உதைத்து தள்ளி வரிசையாக -சேதனரை சம்சாரத்தை விட்டுத் தாண்டுவிப்பவரான ஆதிவாகியிருக்கு ஸ்வாமியாய் இருப்பவரும் -மூன்றாம் பாத சாரார்த்தம்
தருகை உணருமவர் சரணம் அணுக விடல் அரிய அருள் வரதர் அடியமே -எம்பெருமான் பாலன் கொடுப்பதை நினைந்து உபாசனம் செய்யும் ஜீவர்
தம் திருவடிகளை நெருங்கி நிற்க அவரை விடாதவருமான கருணையே வடிவெடுத்த பேர் அருளாளருக்கு நாம் சேஷபூதர்களாய் இருக்கின்றோம் -நான்காம் பாத சாரார்த்தம்
பேர் அருளாளருக்கு சேஷபூதராகப் பெற்றோம் என்று மகிழ்ந்து வேதாந்த சாரார்த்தங்களை இவ்வாறு விண்ணப்பம் செய்தார்கள் என்றவாறு –
——————————————————-
திருமகள் மண் மகள் நீளை முதலா எல்லாத் தேவியரும் தன்னுடனே திகழ்ந்து நிற்கத்
தருமம் இரு மூன்று முதல் அனைத்தும் தோன்றத் தன்னனைய சூரியர் தன்னடிக் கீழ் வாழ
அருமறை சேர் அளவில்லா வவனியின் கண் அரவணை மேல் வீற்று இருப்பாள் அனைத்தும் காக்கும்
கருமணியைக் கரி கிரி மேல் கண்டேன் எந்தன் கடுவினைகள் அனைத்தும் நான் கண்டிலேனே–20-
ஆரவாரத்தோடு கல்பிக்கும் படி-செய்ய வல்ல ஜல்பம் என்னும் வாத மார்க்கத்தை-
கத்து வித்தை -இவர்களைக் கத்தும் படி செய்யும் வித்தை
திருமகள் மண் மகள் நீளை முதலா எல்லாத் தேவியரும் தன்னுடனே திகழ்ந்து நிற்கத் –ஸ்ரீ லஷ்மீ ஸ்ரீ பூமிப் பிராட்டி ஸ்ரீ நீளா தேவி முதலிய
எல்லாத் தேவிமாரும் தன்னுடனே பிரகாசித்துக் கொண்டு நிற்க
தருமம் இரு மூன்று முதல் அனைத்தும் தோன்றத் தன்னனைய ஸூரியர் தன்னடிக் கீழ் வாழ -ஞானம் சக்தி பலம் ஐஸ்வர்யம் வீர்யம் தேஜஸ் என்னும்
ஆறு குணங்கள் முதலிய எல்லாக் குணங்களும் பிரகாசிக்க -தன்னைப் பொன்ற நித்ய ஸூரியர் தன் திருவடிகளின் கீழே நித்ய கைங்கர்யம் செய்ய
அருமறை சேர் அளவில்லா வவனியின் கண் அரவணை மேல் வீற்று இருப்பாள் அனைத்தும் காக்கும் -அருமையான வேதங்களால் புகழப் படுகின்ற
அளவிடமுடியாத தேசமாகிய பரமபதத்தில் ஆதிசேஷனாகிய திருப் பள்ளியின் மேலே எழுந்து அருளி இருப்பதாலேயே சகலத்தையும் ரஷித்து அருளுபவனான
கருமணியைக் கரி கிரி மேல் கண்டேன் எந்தன் கடுவினைகள் அனைத்தும் நான் கண்டிலேனே–நீல ரத்னம் போன்ற
பேர் அருளாளனை ஸ்ரீ ஹஸ்திகிரியின் மீது சேவித்தேன் –
என்னுடைய கொடிய கர்மங்கள் முழுதையும் நான் காணவில்லை -கர்மங்கள் தொலைந்தன -என்றவாறு
யாகவேதியில் கண்ணாரக் கண்ட ப்ரஹ்மா மகிழ்ந்து ஆனந்த கடலில் அழுந்தி பித்தனாகி பின்பு சுய நிலை அடைந்து அனுபவிக்கிறான் –
—————————————————-
பேர் அருளாளனை உவமானங்களுடன் பிரமன் அனுபவித்தல் –
பெடை இரண்டை ஓர் அனம் அடைந்து பிரிந்திடா வகை பேசலாம்
பெருகும் அருவிகள் அருகு மருவிய பெரிய மணி வரை பயிலலாம்
பிடி இரண்டோடு களவம் ஓன்று பிணைந்த பேர் அழ கோதலாம்
பிரிவில் ஒளியோடு நிழலும் அருகு உறும் இரவி இலகுதல் பரவலாம்
கொடி இரண்டொடு விடவி ஓன்று குளிர்ந்தவாறு குலாவலாம்
குறைவில் சுருதியும் நினைவும் இளகிய தரும அரு நிலை என்னலாம்
அடி இரண்டையும் அடையும் அன்பர் அறிந்த பேர் அருளாளனார்
அணுகும் மலர் மகள் அவனி மகளொடு கரடிகிரியினில் அவிர்த்தலே -21-
கரடி கிரி -ஸ்ரீ ஹஸ்தி கிரி
நிலை கவர்தல் -நின்று அருளுகை
அடி இரண்டையும் அடையும் அன்பர் அறிந்த பேர் அருளாளனார் -தம் திருவடிகள் இரண்டையும் அடைந்தபவர்களான
பாகவதர்களால் அனுசந்திக்கப்பட்ட பேர் அருளாளர்
அணுகும் மலர் மகள் அவனி மகளொடு கரடிகிரியினில் அவிர்த்தலே -நெருங்கியுள்ள பெரிய பிராட்டியுடனும் பூமிப் பிராட்டியுடனும்
ஸ்ரீ ஹஸ்திகிரியில் பிரகாசித்தல்
பெடை இரண்டை ஓர் அனம் அடைந்து பிரிந்திடா வகை பேசலாம் -ஓர் ஆண் ஹம்ஸம் இரண்டு பெண் ஹம்ஸங்களை
சேர்ந்து பிரியாமல் இருக்கும் பிரகாரத்தைப் போலும் என்று சொல்லலாம்
பெருகும் அருவிகள் அருகு மருவிய பெரிய மணி வரை பயிலலாம் -பெருகுகிற அருவிகளை பக்கத்தே பெற்றுள்ள
பெரிய ரத்ன பர்வதத்தை ஒக்கும் என்று அனுசந்திக்கலாம்
பிடி இரண்டோடு களவம் ஓன்று பிணைந்த பேர் அழ கோதலாம் -ஒரு ஆண் யானை இரண்டு பெண் யானைகளுடன்
சேர்ந்து இருந்த பெரிய அழகை போலும் என்று கூறலாம்
பிரிவில் ஒளியோடு நிழலும் அருகு உறும் இரவி இலகுதல் பரவலாம் -தன்னை விட்டுப் பிரியாத பிரகாசத்தோடு சாயையும்
பக்கத்தே பொருந்தப் பெற்ற சூர்யன் பிரகாசிப்பதை ஒக்கும் என்று புகழலாம்
கொடி இரண்டொடு விடவி ஓன்று குளிர்ந்தவாறு குலாவலாம் -ஒரு மரம் கொடிகள் இரண்டுடன் குளிர்ந்து நிற்பதை போலும் என்று கொண்டாடலாம்
குறைவில் சுருதியும் நினைவும் இளகிய தரும அரு நிலை என்னலாம்–குற்றம் இல்லாத வேதங்களோடு ஸ்ம்ருதிகளோடு
கூடிப் பிரகாசிக்கின்ற தர்மத்தின் ஸூஷ்மம் போலும் என்று கூறலாம் –
————————————————–
வேர் ஒப்பார் விண் முதலாம் காவுக்கு எல்லாம் விழி ஒப்பார் வேதம் எனும் கண் தனக்குக்
கார் ஒப்பார் கருணை மழைபொழியும் நீரால் கடல் ஒப்பார் கண்டிடினும் காணாக் கூத்தால்
நீர் ஒப்பார் நிலம் அளிக்கும் தன்மை தன்னால் நிலம் ஒப்பார் நெடும் பிழைகள் பொறுக்கும் நேரால்
ஆர் ஒப்பார் இவர் குணங்கள் அனைத்தும் கண்டால் அருளாளர் தாம் எனினும் தமக்கு ஒவ்வாரே –22-
தாம் எனினும் தமக்கு ஒவ்வார்–ஸ்ரீ பரமபத நாதனும் ஸ்ரீ தேவப்பெருமாளுக்கு சத்ருசராக மாட்டார் –
ஸுலப்யம் விஞ்சி அன்றோ இருக்கும் இங்கு –
அருளாளர்–பேர் அருளாளர்
வேர் ஒப்பார் விண் முதலாம் காவுக்கு எல்லாம் -ஆகாசம் முதலிய உலகமாகிய சோலைகள் அனைத்துக்கும் வேரைப் போலே ஆதாரமாக ஆவார் –
பிரபஞ்சம் முழுவதும் எம்பெருமானுக்கு லீலைக்காக ஏற்பட்ட நந்தவனம் போன்றதாகும் –
மரங்களை வேர் தரிப்பது போலே பேர் அருளாளன் தரித்து கொண்டு அருளுகிறான்
விழி ஒப்பார் வேதம் எனும் கண் தனக்குக் -வேதம் என்று சொல்லப்படும் உலகின் கண்ணுக்கு நடுவேயுள்ள கரு விழியைப் போன்றவர் ஆவார் –
வேதம் தெய்விக கண் போன்றதாகும் -பேர் அருளாளன் சாரமாய் விளங்குவதால் கரு விழி போன்றவன்
கார் ஒப்பார் கருணை மழைபொழியும் நீரால் –கருணையாகிய மழையைப் பெய்யும் தன்மையால் மேகத்தைப் போன்றவர் ஆவார் –
மேடு பள்ளம் வாசி பாராமல் பொழிவது போலே உயர்ந்தவர் தாழ்ந்தவர் பேதம் பாராது கருணையாகிய மழையைப் பொழிகிறான்
கடல் ஒப்பார் கண்டிடினும் காணாக் கூத்தால் -நேரில் பார்த்த போதிலும் ஸ்வரூபத்தை முழுவதும் காண முடியாமையாகிய அதிசயத்தால் கடலைப் போன்றவர் ஆவார்-
கடலின் ஏக தேசம் கண்டு கடலைக் கண்டோம் என்னுமா போலே அவன் ஸ்வரூபம் திருமேனி குணங்களின்
ஏக தேசத்திலும் முழுவதையும் காண வல்லோம் அல்லோம்
நீர் ஒப்பார் நிலம் அளிக்கும் தன்மை தன்னால் -பூமியைக் காப்பாற்றுகின்ற ஸ்வபாவத்தால் ஜலத்தை ஒத்து இருப்பார் –
நிலம் ஒப்பார் நெடும் பிழைகள் பொறுக்கும் நேரால்–நம்முடைய பெரிய அபராதங்களை பொறுத்துக் கொள்ளும்
ஸ்வபாவத்தால் பூமி தேவியைப் போன்று இருப்பார்
இப்படி ஒவ்வோர் அம்சத்தில் பேர் அருளாளனும் போலி யுவமானத்தைத் தேடி எடுத்தாலும் எல்லாக் குணங்களுடன்
கூடிய நிலையில் அவனுக்கு ஓர் அவமானமும் காண முடியாதே
ஆர் ஒப்பார் இவர் குணங்கள் அனைத்தும் கண்டால் தாம் எனினும் தமக்கு ஒவ்வாரே -இவருடைய குணங்கள்
முழுவதையும் ஆலோசித்தால் இவரை ஒத்தவர் யார் -ஒருவரும் இல்லை -தாமே என்றாலும் தமக்கு ஒத்தவராக மாட்டார் -என்று
பிரமன் அனுபவித்து பேசுகிறான் –
மேல் திசையில் உள்ள முகத்தால் யாகசாலையில் மேற் புறத்தில் அணையாகக் கிடக்கும் திரு வெக்கா எம்பெருமானையும்
கீழ்த் திசையில் யுள்ள முகத்தால் யாகவேதியில் திருவவதரித்து அருளிய பேர் அருளாளனையும் சேர அனுபவித்து
ஸ்வயம் வ்யக்தமாய்ப் பரஞ்சோதி யாய் யுள்ள ஒரே வாஸ்து யாகத்தை காத்ததால்
உபாயமாகவும் யாக வேதியில் யாகத்தின் பலனாக திரு அவதரித்த படியால்
பலனாகவும் காணப் படுகிறது என்று அனுசந்தித்தான்
அதிகார சுமையை மறந்து கைங்கர்யத்தில் ஊன்றி நின்று தொடர்ந்து ஸ்துதித்துக் கொண்டே இருந்தான் –
——————————————
பேர் அருளாளன் பிரமனுக்கு அருள் புரிதல் —
எந்நிலமும் குரத்தால் குறி செய்த எழில் பரி கொண்டு
அன்னம் உயர்த்த செய்யோன் அன்று வேள்வி செய் வேதியின் மேல்
முன்னிலையாகிய மூர்த்தியன் நான்முகன் மற்றும் உனக்கு
என்ன வரம் தருவோம் என்று நாதன் இயம்பினனே -23-
அன்னம் உயர்த்த செய்யோன் -ஹம்சத்தைக் கொடியாக உயர்த்தவனும் -செந்நிறமுடைய ப்ரஹ்மா
எந்நிலமும் குரத்தால் குறி செய்த எழில் பரி கொண்டு -எல்லா நிலத்திலும் கால் குழம்பினால்
அடையாளம் செய்த அழகிய குதிரையைக் கொண்டு
அன்று வேள்வி செய் வேதியின் மேல்-அந்நாளில் யாகம் செய்த வேதிகையின் மீது
நாதன் முன்னிலையாகிய மூர்த்தியன் -ஸ்வாமியான பேர் அருளாளன் எதிரே நின்ற திருமேனி யுடையனாகி
நான்முகன் மற்றும் உனக்கு என்ன வரம் தருவோம் என்று இயம்பினனே –ப்ரஹ்மாவே உனக்கு வேறு
எந்த வரத்தைக் கொடுக்க வேண்டும் கேட்ப்பாயாக என்று அருளிச் செய்தான் –
என்னை நேரில் கண்டவர்கள் சகல பலன்களையும் பெற வல்லவராவார் -என்று அவனை நோக்கிக் கூறினான் –
உன் திருமேனியை கண்டு அனுபவிக்கப் பெற்ற எனக்கு மற்று ஒன்றும் வேண்டாம் -சம்சாரிகள் உஜ்ஜீவிக்கும்படி
மெய்விரதம் என்னும் இந்த திவ்ய ஷேத்ரத்திலே
புண்ய கோடி விமானத்தில் எப்பொழுதும் தேவரீரைக் கண்ணாரக் கண்டு களிக்க அருள் புரிய வேண்டும் என்றான் –
இங்கேயே நித்யவாஸம் செய்கிறேன் என்றதும் ப்ரஹ்மாவும் யாகத்தைத் தலைக் கட்டி கிருதயுகத்தில்
செய்ய வேண்டிய முறைப்படி பேர் அருளாளனைப் பரிபூர்ணமாக ஆராதித்தான்-
—————————————
ப்ரஹ்மா அப்பொழுது அங்குள்ள மஹரிஷிகளுக்கு அபிகமனம் முதலிய
பஞ்ச கால ப்ரக்ரியை ஆராதிக்கும் முறைகளை உபதேசித்தல் –
சென்று மலர் பறித்து என்நாதன் சேவடிப் போது உகந்து
நன்று எனும் நீர் சுடர் நன்முக வாசம் இலை கொடுத்துக்
கன்னல் இலட்டுவத் தோடு அன்னம் சீடை கரி படைத்துப்
பின்னும் சேவித்து அவன் பாதம் பணிமின்கள் என்றனனே -24-
சென்று மலர் பறித்து என்நாதன் சேவடிப் போது உகந்து -எம்பெருமானிடம் சென்று பிரபத்தியைச் செய்து
புஷ்பங்களைப் பறித்து சிவந்த திருவடி மலர்களை விரும்பி
நன்று எனும் நீர் சுடர் நன்முக வாசம் இலை கொடுத்துக் -நல்லது என்று சொல்லப் படுகிற ஜலம் தீபம் நல்லதாய்த் திருமுக மண்டலத்திற்கு
வாசனை தரும் பண்டம் வெற்றிலை ஆகியவற்றை சமர்ப்பித்து
கன்னல் இலட்டுவத் தோடு அன்னம் சீடை கரி படைத்துப் -சருக்கரை லட்டுடன் அன்னம் சீடை கரி ஆகியவற்றை சமர்ப்பித்து
பின்னும் சேவித்து அவன் பாதம் பணிமின்கள் என்றனனே — மறுபடியும் மந்த்ர ஜபம் செய்து அவனுடைய திருவடிகளை
த்யானம் செய்யுங்கோள் என்று உபதேசித்தான் –
அபிகமனம் -உபாதானம் -இஜ்யை -ஸ்வாத் யாயம் -யோகம் -இப்படி பஞ்சகால ப்ரக்ரியை அனுஷ்ட்டிக்க உபதேசம் செய்தான் –
————————————————————–
ஸ்ரீ பிரமன் தன்னுலகம் சென்று யோகத்தில் இருத்தல் –
ஆழி நிலை வினை கடிவான் அயமேதம் முடித்ததற் பின்
வேழ மலை நாயகனார் விடை கொடுக்க விண்ணேறி
நாழிகையில் வானவரை மாற்றியிடு நான்முகன் தான்
ஊழி எலாம் அழியாத வுயோகம் அடைந்து இருந்தானே -25-
நாழிகையில் வானவரை மாற்றியிடு நான்முகன் தான் -அல்ப காலத்தில் இந்திராதி தேவர்களை நீக்கி வேறு ஒருவரை நியமிப்பவனும்
நான்கு முகங்களையும் யுடையவனுமான ப்ரஹ்மா
ஆழி நிலை வினை கடிவான் அயமேதம் முடித்ததற் பின் -கடல் போன்ற கர்மங்களை போக்குவதற்காக அஸ்வமேத யாகத்தை செய்து முடித்த பிறகு
வேழ மலை நாயகனார் விடை கொடுக்க விண்ணேறி -ஸ்ரீ ஹஸ்திகிரி நாதரான பேர் அருளாளர் அனுமதி கொடுக்க ப்ரஹ்ம லோகம் சென்று
ஊழி எலாம் அழியாத வுயோகம் அடைந்து இருந்தானே -கல்ப காலத்திலும் அழியாததான பகவானுடைய த்யானத்தில் அமர்ந்து இருந்தான் –
பேர் அருளாளன் மிக மகிழ்ந்து முன்பு உனக்கு நான் கொடுத்த ப்ரஹ்மபதமாகிய அதிகாரத்தில் குறை தீர்க்கும்படி சரஸ்வதி சாவித்ரி முதலிய
உன் தர்ம பத்னிகளுடன் உன் லோகத்துக்கு சென்று எஞ்சிய அதிகாரத்தை நடத்துவாயாக என்று அருளிச் செய்ய
பேர் அருளாளன் திருவருளையும் மெய் விரத திவ்ய க்ஷேத்ர பெருமையையும் அனுசந்தித்துக் கொண்டு
யோக விசேஷத்தில் மூழ்கிக் கிடந்தது பாக்யசாலியாய் இருந்தான் –
——————————————————–
ஸ்ரீ பேர் அருளாளன் நான்கு யுகங்களிலும் வரம் அளித்தல் –
ஆதி யுகத்து அயன் கண்டிட நின்ற அருள் வரதர்
காதல் உயர்ந்த கயிற்றைத் திரேதையில் காத்து அளித்து
வாதுயர் தேவ குருவுக்கு இரங்கித் துவாபரத்தில்
சோதி யனந்தன் கலியில் தொழுது எழ நின்றனரே–26-
அருளே என்று உபக்ரமித்ததையே -அருள் வரதர் -என்று உபசம்ஹரிக்கிறார்
ஆதி யுகத்து அயன் கண்டிட நின்ற அருள் வரதர் -முதல் யுகமாகிய க்ருத யுகத்தில் ப்ரஹ்மா சாஷாத் கரிக்கும் படி
நின்றவரும் அருளே வடிவு கொண்டவருமான பேர் அருளாளர்
காதல் உயர்ந்த கயிற்றைத் திரேதையில் காத்து அளித்து -த்ரேதா யுகத்தில் தன்னிடம் பக்தி மிகுந்து இருந்த
ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானை முதலை வாயில் நின்றும் காப்பாற்றி அருள் புரிந்து வாதுயர் தேவ குருவுக்கு இரங்கித்
துவாபரத்தில் -த்வாபர யுகத்தில் வாதம் புரிவதில் சிறந்த தேவர்களின் குருவான ப்ருஹஸ்பதிக்கு கருணை புரிந்து
சோதி யனந்தன் கலியில் தொழுது எழ நின்றனரே–காளி யுகத்தில் தேஜஸ் மிகுந்த ஆதிசேஷன் அனந்த சரஸ் என்னும் புஷ்காரிணியின் சமீபத்தில்
அதன் தலைவனாக இருந்து வணங்கி உஜ்ஜீவிக்கும்படி ஸ்ரீ ஹஸ்திகிரியிலேயே நிலை பெற்று நின்றார் –
————————————————–
ஸ்ரீ பேர் அருளாளர் பேர் அருளால் இப்பிரபந்தம் பாடினமை –
வக்த்ரு வைலக்ஷண்யத்தையும் விஷய வைலக்ஷண்யத்தையும் நிரூபித்து அருளிக் கொண்டு
இப் பிரபந்தம் அனைவருக்கும் உபாதேயம்-என்று நிகமித்து அருளிச் செய்கிறார் –
இவை பத்தும் வல்லார்களைத் தேவர் வைகல் தீர்த்தங்கள் என்று பூசித்து நல்கி உரைப்பர் தம் தேவியர்க்கே —
ஸ்ரீ நித்ய ஸூரிகளுக்கும் பரி ஸூத்தியைத் தரக் கூடியவர்கள் என்றவாறு
புண்டரீகம் உயிர்த்த புராணனார் பொய்யின் மா மகா யுத்தர வேதியில்
கொண்டல் ஆர் அருள் மாரி பொழிந்திடக் கொண்டதோர் உயர் கூர் மதி யன்பினால்
பண்டை நான்மறை மௌலி படிந்த யான் பாரின் மெய் விரதக் கவி பாடினேன்
தொண்டை மண்டல வேதியர் வாழவே தூய தென்மறை வல்லவர் வாழவே -27-
பண்டை நான்மறை மௌலி படிந்த யான் பாரின் மெய் விரதக் கவி பாடினேன் -அநாதியான நான்கு வேதங்களின் அந்தத்தில் -வேதாந்தத்தில் ஈடுபட்ட நான்
புண்டரீகம் உயிர்த்த புராணனார் பொய்யின் மா மகா யுத்தர வேதியில் -திரு நாபித் தாமரை பிறப்பிக்கப் பெற்ற அநாதியான ப்ரஹ்மாவினுடைய
கபடம் இல்லாது அனுஷ்ட்டிக்கப் பட்ட பெரிய யாகத்தின் உத்தர வேதியில்
கொண்டல் ஆர் அருள் மாரி பொழிந்திடக் கொண்டதோர் உயர் கூர் மதி யன்பினால்-பேர் அருளானாகிய மேகம் நிறைந்த கிருபையாகிய
மழையைப் பெய்திட்டு நிற்க -அதனால் உண்டான ஒப்பற்ற உயர்ந்த கூர்மையுள்ள அறிவாலும் பக்தியாலும்
தொண்டை மண்டல வேதியர் வாழவே தூய தென்மறை வல்லவர் வாழவே -தொண்டை நாட்டில் உள்ள வேதங்களைக் கற்ற அந்தணர் நீடூழி வாழவும்
பரிசுத்தமான தமிழ் வேதம் வல்லவர் வாழவும் இப்பொமியில் சத்யா விரதம் என்னும் திவ்ய க்ஷேத்ரத்தைப் பற்றிய இப்பாசுரங்களை பாடி முடித்தேன் –
—————————————————–
இப் பிரபந்தம் பாடி வீறு பெற்றமை
உய் விரதம் ஓன்று இன்றி யடைந்தார் உய்ய வொரு விரதம் தான் கொண்ட யுயர்ந்த மாலைச்
செய் விரதம் ஒன்றாலும் தெளியக்கில்லாச் சிந்தையினால் திசை படைத்த திசைமுகன் தான்
பொய் விரத நிலம் எல்லாம் போயே மீண்டு புகல் இதுவே புண்ணியத்து என்று சேர்ந்த
மெய் விரத நன்னிலத்து மேன்மை ஏத்தி வேதாந்த வாசிரியன் விளங்கினானே -28–
இது தான் ஓதும் இருக்காலும் எழில் முனிவர் நினைவினாலும் இசை அறிவார் செயலுடன் என் இசைவினாலும்
நெருக்காத நீள் விரதம்-ஒருகாலத்திலும் ஒருவராலும் ஒருபடியாலும் கலைக்க முடியாத விரதம் என்றபடி –
திசை படைத்த திசைமுகன் தான் -திக்குகளை ஸ்ருஷ்டித்தவனும் நான்கு திசைகளிலும் முகத்தை யுடையவனுமான ப்ரஹ்மா
உய் விரதம் ஓன்று இன்றி யடைந்தார் உய்ய வொரு விரதம் தான் கொண்ட யுயர்ந்த மாலைச் –தாம் உஜ்ஜீவிப்பதற்கு
உபாயம் வேறு ஒன்றும் இன்றிச் சரணம் அடைந்தவர்கள் உஜ்ஜீவிப்பதற்காக -சரணாகத ரக்ஷணம் என்னும்
ஒப்பற்ற விரதத்தை தானே கைக் கொண்டவனும் -அதனால் உயர்ந்து நிற்பவனுமான எம்பெருமானை
செய் விரதம் ஒன்றாலும் தெளியக்கில்லாச் சிந்தையினால்–தன்னால் செய்யப்பட வேறு எந்த விரதத்தாலும் நேரில் ஸாஷாத் கரிக்க முடியாத கவலையினால்
பொய் விரத நிலம் எல்லாம் போயே மீண்டு புகல் இதுவே புண்ணியத்து என்று சேர்ந்த-பலன் கொடுக்க வில்லை யாதலின் வீணாகப் போகும்
விரதங்களை யுடைய ஷேத்ரங்களுக்கு எல்லாம் போய் பயன் அற்றுத் திரும்பி இந்த ஷேத்ரமே புண்ணியத்தைப் பெற சாதனமாகும் என்று வந்து அடைந்த
மெய் விரத நன்னிலத்து மேன்மை ஏத்தி வேதாந்த வாசிரியன் விளங்கினானே -சத்ய விரதம் என்னும் சிறந்த திவ்ய ஷேத்ரத்தின்
வைபவத்தை இப்பிரபந்தத்தால் புகழ்ந்து வேதாந்த தேசிகர் சிறந்து விளங்குகிறார் –
—————————————-
சீராரும் தூப்புல் திருவேங்கடமுடையான்
தாரார் அருளாளர் தாள் நயந்து சீராக
மெய் விரத நன்னிலத்து மேன்மை இது மொழிந்தான்
கையில் கனி போலக் கண்டு –29—
சீராரும் தூப்புல் திருவேங்கடமுடையான் -பெருமை நிறைந்த ஸ்ரீ தூப்பூழில் திரு அவதரித்த ஸ்ரீ வேங்கட நாதன் என்னும் தேசிகர்
தாரார் அருளாளர் தாள் நயந்து -மாலை நிறைந்த பேர் அருளாளருடைய திருவடிகளையே விரும்பி
மெய் விரத நன்னிலத்து மேன்மை சீராக இது மொழிந்தான் -ஸத்ய விரதம் என்னும் சிறந்த திவ்ய ஷேத்ரத்தின் பெருமையை
கையில் கனி போலக் கண்டு –உள்ளங்கையில் உள்ள நெல்லிக் கனியைப் போலே அறிந்து சிறப்புடன் இந்த பிரபந்தத்தை வெளியிட்டார் –
—————————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேதாந்த தேசிகன் சுவாமி திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –