Archive for August, 2017

அன்போடு அழகிய மணவாளச் சீயர் அருளிச் செய்த பன்னீராயிரப்படி -1-1-

August 31, 2017

அன்போடு அழகிய மணவாளச் சீயர் அருளிச் செய்த பன்னீராயிரப்படி -பிரவேசம் –

அபிவந்த்ய சடார்யார்யம் ஆசார்யாத்ருதமாகதம் த்ரமிட உபநிஷத் பாஷ்யம் தர்சயிஷ்யே யதா ஸ்ருதம் –

ஸாங்க உப ப்ரும்ஹண சகல வேத வேதாந்த சாரார்த்த ப்ரகாசகமாய் -ஸமஸ்த கல்யாண குணாத்மக ஸ விபூதிக பகவத் அனுபவ ப்ரவ்ருத்த பரபக்தி சிந்து பரிவாக ரூபமாய்
சாம்சாரிக சகல தாப தாவாநல நிர்வாபண சரஸ அம்ருத ப்ரவாஹ பூராத்மகமாய் நித்ய ப்ரத்யக்ர நிரவதிக அதிசய பரமானந்த ஸந்தோஹ சம்வர்த்தகமாய்
சகல ஜன உஜ்ஜீவன அர்த்தமாக சர்வேஸ்வரன் தன் பரம காருணிகத்வத்தாலே ஸ்வ ஹ்ருதயத்திலே பிரவர்த்திப்பிக்க
சர்வாதிகாரி யோக்யமான த்ராமிட பாஷா சந்தர்ப்பத்தாலே பிரதம ஆச்சார்யரான நம்மாழ்வார் அருளிச் செய்த
திரு விருத்தம் திருவாசிரியம் பெரிய திருவந்தாதி திருவாய்மொழி ஆகிற ப்ரபந்தங்களில் –
திரு விருத்தத்திலே சம்சார சம்பந்த நிவ்ருத்தியை அபேக்ஷித்து
திருவாசிரியத்திலே நிவ்ருத்த சம்சாரர்க்கு அநுபாவ்யமான ஸுந்தர்யாதிகளை அநுபவித்து
பெரிய திருவந்தாதியிலே அநுபவ ஜனிதமான அபிநிவேச அதிசயத்தைப் பேசி
திருவாய் மொழியிலே அபிநிவேச அநுரூபமாகப் பூரணமான பகவத் விஷயத்தை அநுபாவித்து இவர் க்ருதார்த்தார் ஆகிறார் –

இதில் சரமமான திருவாய் மொழியாகிற திவ்ய பிரபந்தம்
ஸ்ரீ பதிஸ் சேதனஸ் யாஸ்ய ஹேதுத்வேந ஸமாச்ரித அநிஷ்ட ஹானிம் இஷ்டஸ்ய பிராப்திஞ்ச குருதே ஸ்வயம் -என்று
ஸ்ரீ யபதியானவன் சேதனனுக்கு உபாயத்வேந ஆஸ்ரிதனாய்க் கொண்டு அநிஷ்ட நிவ்ருத்தியையும் இஷ்டமான ஸ்வ ப்ராப்தியையும்
தானே பண்ணிக் கொடுக்கும் என்று அநு யாயியான மஹா வாக்யார்த்தத்தை ப்ரதிபாதிக்கிறது –

இப்பிரபந்தம் சர்வ சாஸ்த்ர சார உப ப்ரும்ஹணம் பண்ணுகிறது ஆகையால் -சகல வேத சாஸ்த்ர தாத்பர்யமான
அர்த்த பஞ்சகமும் இப்பிரபந்தத்தினுடைய மஹா வாக்யார்த்தத்திலே அந்தர்பூதம்-
ஸ்ரீ பதி -என்று ப்ராப்யமான ப்ரஹ்மத்தினுடைய ஸ்வரூபமும்
சேதனஸ்ய என்று பிரத்யாகாத்ம ஸ்வரூபமும்
‘ஹேதுத்வேந -என்று உபாய ஸ்வரூபமும்
அநிஷ்ட ஹானிம் -என்று பிராப்தி விரோதி நிவ்ருத்தியும்
இஷ்டஸ்ய ப்ராப்திம் -என்று பிராப்தி பல வாப்தியுமான
அர்த்த பஞ்சகமும் ஸூசிதம் ஆகிறது –

இப்பிரபந்தத்தில் முதலிட்டு நாலு பத்தாலே சித்த ரூபமான பராவராத்ம யாதாம்யத்தை ப்ரதிபாதிக்கிறது –
முடிவிட்டு நாலு பத்தாலே ஸாத்ய ரூபமான அநிஷ்ட நிவ்ருத்தி பூர்வக இஷ்ட பிராப்தியை ப்ரதிபாதிக்கிறது –
நடுவிட்டு இரண்டு பத்தாலே சித்த ஸாத்ய ரூபமான நிர்பய உபாய வரணத்தை ப்ரதிபாதிக்கிறது
-ஸித்தமான உபாயத்தினுடைய வரணம் ஸாத்யம் என்று கருத்து -அதில் சித்த ரூபமான பராவராத்ம யாதாம்யா ப்ரதிபாதிதமான
முதல் நாலு பத்தில் -முதல் பத்தும் இரண்டாம் பத்தும் ப்ராப்யமான பர ஸ்வரூபத்தை பிரதிபாதிக்கிறது –
மூன்றாம் பத்தும் நாலாம் பத்தும் ப்ராப்தாவான பிரத்யாகாத்ம ஸ்வரூபத்தை ப்ரதிபாதிக்கிறது –
அஞ்சாம் பத்தும் ஆறாம் பத்தும் பிராப்தி உபாய ஸ்வரூபத்தை பிரதிபாதிக்கிறது –
ஏழாம் பத்தும் எட்டாம் பத்தும் பிராப்தி விரோதி நிவ்ருத்தியை பிரதிபாதிக்கிறது –
ஒன்பதாம் பத்தும் பத்தாம் பத்தும் பிராப்தி பல சித்தியை பிரதிபாதிக்கிறது —

அதில் முதல் பத்து பேரனான சேஷியினுடைய ரக்ஷகத்வத்தையும் –
இரண்டாம் பத்து போக்யத்தையும் சொல்லுகிறது –
மூன்றாம் பத்து பகவத் ஏக சேஷ பூதனான ஆத்மாவினுடைய தத் ஏக அநுபவத்தையும்
நாலாம் பத்து தத் ஏக பிரியத்வத்தையும் சொல்லுகிறது –
அஞ்சாம் பத்து நிர்பாயமான உபாய விஷத்தையும்
ஆறாம் பத்து தத் வரண பிரகாரத்தையும் சொல்லுகிறது –
ஏழாம் பத்து அநிஷ்டமான விரோதி பிரகாரத்தையும்
எட்டாம் பத்து தன் நிவ்ருத்தி பிரகாரத்தையும் சொல்லுகிறது –
ஒன்பதாம் பத்து பல பிரகாரத்தையும் பத்தாம் பத்து ததவாப்தி பிரகாரத்தையும் சொல்லுகிறது –
ஆக இவ்வர்த்த பஞ்சகத்தினுடைய அவாந்தர அர்த்த பேதத்தாலே இப்பிரபந்தத்திலே பத்துப் பத்துக்கும் வாக்யார்த்தம் சொல்லிற்று ஆயிற்று –

அதில் சேஷியினுடைய ரக்ஷகத்வ பாரமான முதல் பத்தில்
முதல் திருவாய்மொழி ரக்ஷகத்வ உபய யுக்தமான சர்வ ஸ்மாத் பரத்வத்தையும்
இரண்டாம் திருவாய்மொழி சர்வ ஸமாச்ரயணீ யத்வத்தையும்
மூன்றாம் திருவாய்மொழி தத் அனுகுணமான ஸுலப்யத்தையும்-
நாலாம் திருவாய்மொழி ஆஸ்ரித அபராத சஹத்வத்தையும்
அஞ்சாம் திருவாய்மொழி ஸுசீல்ய அதிசயத்தையும்
ஆறாம் திருவாய்மொழி ஸ்வாராததையும்
ஏழாம் திருவாய்மொழி ஆஸ்ரயணத்தில் அத்யந்த சாரஸ்யத்தையும்
எட்டாம் திருவாய்மொழி ஆஸ்ரித விஷயமான ஆர்ஜவ குணத்தையும்
ஒன்பதாம் திருவாய்மொழி சாத்ம்ய போக பிரதத்வத்தையும்
பத்தாம் திருவாய்மொழி நிர்ஹேதுக மஹா உபகாரித்வத்தையும் சொல்லுகையாலே பரம சேஷியினுடைய ரக்ஷகத்வ பூர்த்தியை ப்ரதிபாதித்ததாயிற்று –

அதில் பரதவ பிரகாசகமான முதல் திருவாயமொழியில் தத் உபபாதகமான விலக்ஷண குண விபூதி விக்ரஹ யோகத்தையும்
தத் ஆஸ்ரயமான ஸ்வரூப வைலக்ஷண்யத்தையும் அபரிச்சின்னமான லீலா விபூதி சம்பந்தத்தையும்
அநந்தரம் மூன்று பாட்டாலே விபூதி அந்தர்கத ஸமஸ்த பதார்த்தங்களினுடைய ஸ்வரூப ஸ்திதி பிரவ்ருத்தி யாதிகள் ஸ்வ அதீனங்கள் என்னும் இடத்தையும்
அதில் முதல் பாட்டில் ஸமஸ்த பதார்த்தங்களின் உடைய ஸ்வரூபம் சாமா நாதி கரண்யத்தாலே தத் அதீனம் என்னும் இடத்தையும்
மேலே ரக்ஷண ரூபையான ஸ்திதி வையதி கரண்யத்தாலே தத் அதீனை என்னும் இடத்தையும்
சர்வ ப்ரவ்ருத்தி நிவ்ருத்திகளும் சாமா நாதி கரண்யத்தாலே தத் அதீனங்கள் என்னும் இடத்தையும்
தத் உபபாதகமான சரீராத்ம பாவ சம்பந்தத்தையும்
அநந்ய ஈஸ்வரத்தையும் அவைதிகரால் அப்ரகம்ப்யத்வத்தையும் அகில வியாபகத்வத்தையும் சொல்லி அசேஷ சேஷித்வ ரூபமான பரத்வத்தை ஸ்த்ரீ கரித்து அருளுகிறார் –

—————————–
அவதாரிகை –

இத் திருவாய் மொழிக்கு சங்கக்ரஹமான இப்பாசுரத்தில்
பரத்வ-பிரதான உபபாதகமான நிரவதிக கல்யாண குண யோகத்தையும் -நிர்ஹேதுக உபகாரத்வத்தையும் -நித்ய ஸூ ரி நிர்வாஹகத்வத்தையும்
நித்ய மங்கள விக்ரஹ -யோகத்தையும் உடைய சர்வேஸ்வரன் திருவடிகளில் நிரந்தர சேஷ விருத்தியைப் பண்ணு என்று தன் நெஞ்சை நியோகிக்கிறார் –

உயர்வற யுயர் நலம் உடையவன் யவனவன்
மயர்வற மதி நலம் அருளினன் யவனவன்
அயர்வறும் அமரர்கள் அதிபதி யவனவன்
துயரறு சுடரடி தொழுதெழு என் மனனே —-1-1-1-

உயர்வு –ஆனந்த வழியில் சொல்லுகிற கணக்கிலே -அல்லாத உயர்திகள்
அற -அசத் கல்பமாம் படி
யுயர் -அவாங்க மனஸ கோசரமாய் உயர்ந்த
நலம் -ஆனந்தத்தை
உடையவன்-யுடையனாக
யவனவன்-பிராமண பிரசித்தனானவன் யாவன் ஒருவன்
மயர்வற-சம்சய விபர்யயாதி ரூபமான அஞ்ஞானம் நசிக்கும் படி
மதி நலம்-ஸ்வாபாவிக ஜ்ஞான ப்ரேமான்களை
அருளினன் -தன் அருளினால் தந்து அருளினவனாக
யவனவன்–ப்ரஜ்ஞா ஸ தஸ்மாத் ப்ரஸ்ருதா புராணீ -என்கிற ப்ரஸித்தியை யுடையவன் யாவன் ஒருவன்
அயர்வறும் அமரர்கள் -விஸ்மரண பிரசங்கம் இல்லாத நிரந்தர அநுபவ யுக்தரான நித்ய ஸூரிகளுக்கு
அதிபதி யவனவன்-நிரவதிக சேஷியானவன் யாவன் ஒருவன் -அவனுடைய
துயரறு சுடரடி -ஸமாச்ரித துக்க நிவர்த்தகமாய் நிரந்தர ஒஜ்ஜ்வல்ய விசிஷ்டமான திருவடிகளைக் குறித்து
தொழுது -பத்தாஞ்சலி புடா என்கிறபடியே சேஷத்வ அநு ரூப வ்ருத்தியைப் பண்ணி
என் மனனே எழு-என் மனசே எழு -நித்ய ஆச்ச்ராய ரூபமான உஜ்ஜீவனத்தை பெறு-என்று தம்முடைய திரு உள்ளத்தைக் குறித்து அநு சாதித்து அருளினார் ஆயிற்று-

இதில் முதல் அடியில் -நலம் என்று ஆனந்த குணத்தை யாதல் -ஆனந்த ஹேதுவாக உபநிஷத்து சொன்ன யுவத்வாதி குண விபூதியை யாதல் சொல்லுகிறது –
இரண்டாம் அடியில் நலம் என்று பக்தி ரூப ஸ்நேஹத்தைச் சொல்லுகிறது –
இப்பாட்டில் மூன்று அடியிலும் யவன் என்கிற சப்தத்தோடு அவன் என்று தொடங்கி நாலாம் அடியைத் தனித் தனியே அன்வயித்து மூன்று வாக்யமாகவும் சொல்லுவர்-
முதல் அடியில் யவனோடே அவன் என்று தொடங்கி இரண்டாம் அடியைக் கூட்டி வாக்யமாக்கி -அவ்விரண்டாம் அடி தன்னை ஆவர்த்தித்து யச் சப்தத்தால் நிர்தேசித்து-
அத்தை அவன் என்று தொடங்கி மூன்றாம் அடியோடு கூட்டி -அது தன்னையும் ஆவர்த்தித்து யவன் என்று நிர்தேசித்து அத்தோடே அவன் என்று தொடங்கி
நாலாம் அடியிலே வினை முடித்து வாக்ய ஏக வாக்யமாகவும் சொல்லுவர் –
அங்கன் அன்றியே ஸ யஸ்ஸாயம் புருஷே யஸ்ஸாஸா வதித்யே ஸ ஏக -என்ற கணக்கிலே யவனவன் என்று யஸ் சப்தார்த்தமாய் ப்ரஸித்தியைக் காட்டி
அத்தை அவன் என்று நாலாம் பாதத்தால் பராமர்சித்து முடிக்கையாலே ஏக வாக்யமாகவும் சொல்லுவர் –

இப்பாட்டு சர்வ சாஸ்த்ர உப ப்ரும்ஹணமான இப்பிரபந்த ஸங்க்ரஹம் ஆகையால் சகல சாஸ்த்ர ஸங்க்ரஹ ரூபமான மந்த்ர ரஹஸ்யார்த்த தாத்பர்யத்தை பிராஜ்காசிப்பிக்கிறது –
எங்கனே என்னில்
உயர் நலம் யுடையவன் -என்கிற சர்வாதிக சேஷித்வத்தாலே பிரதம பதார்த்தமான அநந்யார்ஹ சேஷத்வ பிரதி சம்பந்தித்வத்தையும்
மதி நலம் அருளினன்-என்று கிருபா கார்யமாகச் சொன்ன உபகாரகத்வத்தாலே மத்யம பதார்த்தமான உபாய பாவத்தையும்
அமரர்கள் அதிபதி என்று நித்ய ஸூரி ஸேவ்யத்தாலே சரம பதார்த்தமான ப்ராப்யத்வத்தையும்
தொழுதெழுஎன்கையாலே சதுர்த்தி யர்த்தமான கைங்கர்யத்தையும் சொல்லிற்று ஆயிற்று –
———————————————–
அநந்தரம் -யவன் என்று சொன்ன ஸ்வரூபத்தினுடைய ஸ்வேதர ஸமஸ்த வைலக்ஷண்யத்தை அருளிச் செய்கிறார் –

மனனக மலமற மலர் மிசை எழு தரும்
மனன் உணரளவிலன் பொறியுணர் யவையிலன்
இனன் உணர் முழு நலம் எதிர் நிகழ் கழிவினும்
இனன் இலன் எனன் உயிர் மிகு நரையிலனே –1-1-2–

மனனகம் -மனசின் இடத்து
மலமற –மலமான காம க்ரோதாதிகள் கழிய
மலர் மிசை எழு தரும்-அத்தாலே மலர்ந்து மேலே வளர்ந்து வரக் கடவதான
மனன் உணரளவிலன்–மானஸ ஞானத்தாலே அளவிடப்படும் ஆத்மாவின் படி அன்றியே அளவிறந்து இருப்பானாய்
பொறியுணர் யவையிலன்-பாஹ்ய இந்திரிய ஜனிதமான ஞானங்கள் தன் பக்கல் தட்டாத படியால் இந்திரிய கோசாரமான அசித்த்தில் வியாவ்ருத்தனாய்
இனன்-இப்படி சேதன அசேதன விலக்ஷணனானவனாய்
உணர் முழு நலம் -முழு உணர்வும் முழு நலமுமான ஞானானந்த நிரூபணீயனாய்
எதிர் நிகழ் கழிவினும்–எதிரான பவிஷ்யத் காலத்திலும் நிகழான வர்த்தமான காலத்திலும் கழிவான பூத காலத்திலும்
இனன் இலன் எனன் உயிர் மிகு நரையிலனே -இனத்து இருப்பாரையும் மிகுத்து இருப்பாரையும் உடையன் அல்லனாவான் -எனக்கு தாரக பூதன் —

அவன் துயரறு சுடரடி தொழுதெழு என்று கீழில் பாட்டில் வினையோடு அன்வயம் -இப்படிப் பத்துப் பாட்டிலும் அன்வயமாகக் கடவது
இத்தாலே சோதகமான சத்ய ஞானாதி வாக்யத்திலே ஸத்ய சப்தார்த்தமான சேதன அசேதன வைலக்ஷண்யத்தையும்
ஞான சப்தார்த்தமான அஸங்குசித ஞானானந்த ரூபத்துவத்தையும்
அனந்த சப்தார்த்தாலே கால அபரிச்சேத ரூபமான நித்ய சமாப்யதிக ராஹித்யத்தையும் சொல்லிற்று ஆயிற்று –
முதல் -இனன் என்றது இப்படிப்பட்டவன் என்றபடி -அநந்தரம் இனன் இலன் -என்றது ஓத்தார் இல்லாதவன் -என்றபடி-
———————————————-
அநந்தரம் வஸ்து பரிச்சேத ராஹித்யத்துக்கும் தேச பரிச்சேத ராஹித்யத்துக்கும் உப பாதகமான லீலா விபூதி யோகத்தை அருளிச் செய்கிறார் –

இலனது உடையனிது என நினைவரியவன்
நிலனிடை விசும்பிடை யுருவினன் அருவினன்
புலனொடு புலன் அலன் ஒழிவிலன் பரந்த வந்
நலனுடை ஒருவனை நணுகினம் நாமே –1-1-3-

இலனது–விப்ரக்ருஷ்டம் ஆகையாலே அஸந்நிஹிதமான வஸ்துவை உடையன் அல்லன்
உடையனிது -ஆசன்னத்தையாலே சன்னிஹிதமான வஸ்துவை யுடையவன்
என நினைவரியவன்-என்று சில வஸ்துவாலே பரிச்சேதித்து நினைக்க அரியவனாய்
நிலனிடை விசும்பிடை -பூமியிலும் ஊர்த்வ லோகத்திலும்
யுருவினன் அருவினன்-ரூப யோக்யமான அசித்தையும் ரூப ரஹிதமான சித்தையும் பிரகாரமாக யுடையவனாய்
புலனொடு –இப்படி பிராமண பிரசித்த தயா புலப்படும் பதார்த்தங்களோடே கலந்து நிற்கச் செய்தே
புலன் அலன் -அவற்றின் ஸ்வபாவம் தனக்கு யுடையன் அல்லனாய்
ஒழிவிலன் பரந்த -ஒன்றும் ஒழியாமல் பரந்து வியாபித்து இருக்குமவனாய்
வந்நலனுடை ஒருவனை நணுகினம் நாமே-கீழ்ச் சொன்ன உயர்வற உயர் நலத்தை யுடையனான அத்விதீயனை நாம் கிட்டப் பெற்றோம் –

இப்பாட்டில் முதல் கூற்றாலே வஸ்து பரிச்சேத ராஹித்யத்தைச் சொல்லி மேலே வ்யாப்தியால் தேச பரிச்சேத ராஹித்யத்தையும் சொல்லிற்று யாயிற்று –
ஆக இப்பாட்டில் லீலா விபூதி யோகம் சொல்லுகிறது –
————————————
அநந்தரம் மூன்று பாட்டுக்களாலே விபூதி அந்தர்கத ஸமஸ்த வஸ்துக்களினுடைய ஸ்வரூப -ஸ்திதி -ப்ரவ்ருத்த்யாதிகள் பகவத் அதீனங்கள் என்கிறார் –
அதில் முதல் பாட்டில் ஸமஸ்த பதார்த்தங்களினுடைய ஸ்வரூபமும் தத் அதீனம் என்று சாமாநாதி கரண்யத்தால் அருளிச் செய்கிறார் –

நாம் அவன் இவன் உவன் அவள் இவள் உவள் எவள்
தாம் அவர் இவர் உவர் அது விது வுது வெது
வீமவை யிவை வுவை அவை நலம் தீங்கிவை
ஆமவை யாயவை ஆய நின்ற அவரே –1-1-4-

நாம் -மேலே சொல்லுகிற தூரத்வாத் யுபாதிகளுக்கு த்ருவமான தாமும்
அவன் -அதுக்கு தூரஸ்தனும்
இவன் -அந்திகஸ்தனும்
உவன்-ஆத்தூர் விப்ரக்ருஷ்டனும்-என்று புல்லிங்க சப்த நிர்திஷ்ட பதார்த்தமும்
அவள் -ஸ்த்ரீ லிங்க சப்த நிர்திஷ்டையான தூரஸ்த்தையும்
இவள் -சந்நிஹிதையும்
உவள்-ஆத்தூர் விப்ரக்ருஷ்டையும்
எவள் -வினவப் படுமவளும்
தாம் -கௌரவ்யதயா பூஜ்யரும்
அவர் -அவர்களில் விப்ரக்ருஷ்டரும்
இவர் -அந்திகஸ்தரும்
உவர் -அநதி தூர வர்த்திகளும்
அது விது வுது -நபும்சக லிங்க சப்த நிர்திஷ்டமான தூராந்திகா அதிதூரஸ்தமும்
வெது-வினவப்படும் வஸ்துவும்
வீமவை யிவை வுவை அவை–நஸ்வரமாய் அப்ரக்ருஷ்டங்களான ஆசன்ன அநதி தூர -விப்ரக்ருஷ்ட வஸ்துக்களும்
நலம் தீங்கிவை-உத்கர்ஷ அபகர்ஷ ரூப தர்மங்களும்
ஆமவை -ஆகாமிகளாயும்
யாயவை -அதீதங்களாயும் யுள்ள எவம்வித வஸ்துக்களும்
ஆய நின்ற அவரே –தாமேயாய் நின்ற அவர் –

இதாநீந்தநங்களான இவ்வஸ்துக்களும் ஆனார் என்றதாயிற்று -எவன் எவர் என்று இல்லாத இடங்களுக்கு அழைத்துச் சொல்லிக் கொள்வது –
இத்தால் காலத்ரய வர்த்தி சகல பதார்த்தங்களும் தத் அதீனம் என்று கருத்து –
——————————-
அநந்தரம் ரக்ஷண ரூபையான ஸ்திதி தத் அதீனை என்று வையதி கரண்யத்தாலே அருளிச் செய்கிறார் –

அவரவர் தமதமது அறிவறி வகைவகை
அவரவர் இறையவர் எனவடி யடைவார்கள்
அவரவர் இறையவர் குறைவிலர் இறையவர்
அவரவர் விதி வழி யடைய நின்றனரே –1-1-5-

அவரவர் -அவ்வோ புருஷார்த்தங்களுக்காக அதிகாரிகள்
தமதமது அறிவறி வகைவகை-தந்தாமுடைய அறிவின் அறிவின் வகையாலே
அவரவர் இறையவர் எனவடி யடைவார்கள்-ருசிக்கு ஈடான தேவதைகளை பலம் தரும் சேஷிகளாக ஆஸ்ரயிப்பார்கள்
அவரவர் இறையவர் குறைவிலர் அவ்வவ தேவதைகள் பலம் கொடுத்து ஸ்வாமிகளாக குறையில்லை
இறையவர்-சர்வ ஸ்வாமியானவர்
அவரவர் விதி வழி யடைய நின்றனரே –அவ்வோ அதிகாரிகள் விதி மார்க்கத்தாலே பலத்தை அடையும்படி அத்தேவதைகளுக்கு அந்தராத்மாவாய் நின்றார் –
அன்றியே –
அவரவர் விதி வழி யடைய என்று -அவ்வோ தேவதைகள் தந்தாமுடைய பல ப்ரதத்வாதி பத சித்த்யர்த்தமாக வித்யுக்த மார்க்கத்தாலே
ஆஸ்ரயிக்கும்படி இறையவர் ஆஸ்ரயணீயராய் நின்றார் என்றுமாம் –
————————————
அநந்தரம் சர்வ ப்ரவ்ருத்தி நிவ்ருத்திகளும் தத் அதீநைகள் என்று சாமாநாதி கரண்யத்தால் அருளிச் செய்கிறார் –

நின்றனர் இருந்தனர் கிடந்தனர் திரிந்தனர்
நின்றிலர் இருந்திலர் கிடந்திலர் திரிந்திலர்
என்றும் ஓர் இயல்வினர் என நிலனைவரியவர்
என்றும் ஓர் இயல்வொடு நின்ற எம் திடரே –1-1-6-

நின்றனர் இருந்தனர் கிடந்தனர் திரிந்தனர்–நிற்றலும் இருத்தலும் கிடைத்தாலும் திரிதலுமாகிற ப்ரவ்ருத்திக்கு ஆஸ்ரயமான பதார்த்தங்களும்
நின்றிலர் இருந்திலர் கிடந்திலர் திரிந்திலர்–நிவ்ருத்திக்கு ஆஸ்ரயமான பதார்த்தங்களுமாய்
இத்தாலே
என்றும்-என்றும் ஓக்க
ஓர் இயல்வினர் என நிலனைவரியவர்–ஒரு ஸ்வபாவத்தை யுடையவர் என்று நினைக்கைக்கு அரியராய் இருப்பர்
என்றும் ஓர் இயல்வொடு நின்ற எம் திடரே –என்றும் ஓக்க ஸ்வ இதர ஸமஸ்த வ்யாவருத்தமான நம்முடைய த்ருட பிராமண ஸித்தர்–

ப்ரவ்ருத்தி நிவ்ருத்திகளான தர்மங்களினுடைய தத் ஆதீனத்தவம் சொல்லா நிற்க தர்மி பர்யந்தமாகச் சொல்லிற்று -இத்தர்மங்கள் ஆச்ரயத்தை ஒழிய பிரதிபத்தி
பண்ண ஒண்ணாமையாலும் -கீழே தர்மி ஸ்வரூபம் தத் அதீனம் என்று சொல்லுகையாலும் தர்மி பர்யந்த சப்தமே யாகிலும் தர்மத்தில் தாத்பர்யமாகக் கடவது —
இவ்விடத்தில் ப்ரவ்ருத்தி ஈஸ்வர அதீநை யானாலும் ஏறிட்ட கட்டி விழுகைக்கு ப்ரேரகர் வேண்டாதாப் போலே நிவ்ருத்திக்கு தத் அபேக்ஷை யுண்டோ என்னில்
திரிசங்கு நிவ்ருத்திக்கு பிரதிபந்தகம் காண்கையாலே நிவ்ருத்திக்கும் ஈஸ்வர அபேக்ஷை யுண்டு -இப்படி பாபாதிகளில் ப்ரவ்ருத்தருடைய நிவ்ருத்திக்கும்
ஈஸ்வர அபேக்ஷை யுண்டாகையாலே சர்வ ப்ரவ்ருத்தி நிவ்ருத்திகளுக்கும் ஈஸ்வர அபேக்ஷை யுண்டு –
—————————————-
அநந்தரம் இந்த சாமாநாதி கரண்யம் சரீராத்மா பாவ சம்பந்த நிபந்தநம்-என்கிறார் –

திட விசும்பு எரி வளி நீர் நிலம் இவை மிசை
படர் பொருள் முழுவதும் யாயவை யவை தொறும்
உடன் மிசை யுயிர் எனக் கரந்து எங்கும் பரந்துளன்
சுடர்மிகு சுருதியுள் இவை யுண்ட சுரனே –1-1-7-

திட-பூதாந்தரங்களில் காட்டில் சில காலம் நிற்கையாகிற சிக்கனவை உடைத்தான
விசும்பு எரி வளி நீர் நிலம் இவை மிசை-ஆகாசமும் அக்னியும் வாயுவும் ஜலமும் பூமியும் இவை ஆஸ்ரயமாகக் கொண்டு
படர் பொருள் முழுவதும் யாயவை யவை தொறும்-பரந்த பவ்திக பதார்த்தங்களும் எல்லாம் தானாம் படி அவற்றுக்கு உபாதானமாய் அவ்வோ பதார்த்தங்கள் தோறும்
உடன் மிசை யுயிர் எனக் கரந்து எங்கும் பரந்துளன்-சரீரத்தில் ஆத்மா வியாபிக்குமா போலே கரந்து வியாபித்து இப்படி சகல பதார்த்தங்களில் வியாப்தனாய்
சுடர்மிகு சுருதியுள் –ஸ்வத ப்ராமாண்ய ஓவ்ஜ்வல்யத்தாலும் மிக்கு இருப்பதாய் கேள்வியாலே வருவிக்கப் படுவதான
ஸ்ருதியினுடைய உள்ளான பொருளாய்க் கொண்டு தோற்றுமவன்-
இவை யுண்ட சுரனே -இப்பதார்த்தங்களை ஸம்ஹ்ருதி காலத்திலேயே அத்தா சராசர க்ரஹணாத் என்று தன்னுள்ளே விழுங்கின தேவ சப்த வாச்யன் –
தம பரே தேவ ஏகி பவதி -என்னக் கடவது இறே-
விசும்புக்கு அநந்தரம் வளியை எடாதே எரியை எடுத்தது –தைத்ரிய உபநிஷத்திலே ஆத்மந ஆகாஸாஸ் ஸம்பூத என்கிற ஆகாச ப்ராதமயமும்
சாந்தோக்யத்தில் தத் தேஜோ அஸ்ருஜத -என்கிற தேஜஸ் பிரதாம்யமும் தோற்றுகைக்காக
இத்தால் ஸ்ருஷ்ட்டி சம்ஹாரங்களும் அநுபிரவேச நிபந்தனமான அந்தராத்மத்வமும் தத் அதீனம் என்றதாயிற்று –
———————————
அநந்தரம் வ்யஷ்டி ஸ்ரஷ்ட்ரு சம்ஹர்த்தாக்களான ப்ரஹ்ம ருத்ர்களும் தத் அதீனர் என்கிறார் –

சுரர் அறிவரு நிலை விண் முதல் முழுவதும்
வரன் முதலாயவை முழுதுண்ட பரபரன்
புரம் ஒரு மூன்று எரித்து அமரர்க்கும் அறிவியந்து
அரன் அயன் என வுலகு அழித்து அமைத்து உளனே –1-1-8-

சுரர் அறிவரு நிலை -தேவர்களான ப்ரஹ்மாதிகளுக்கும் அறிய ஒண்ணாத நிலையை யுடைத்தான
விண் முதல் முழுவதும்-ஆகாசம் முதலாய் யுள்ள சமஷ்டி ரூப ஸமஸ்த வஸ்துக்களும்
வரன் முதலாயவை முழுதுண்ட பரபரன்-வரிஷ்டமான காரணமாய் அவற்றை நிஸ் சேஷமாக உப சம்ஹரிப்பதும் செய்கையாலே
வ்யஷ்டி ஸ்ருஷ்ட்டி சம்ஹார கர்த்தாக்களாய்க் கொண்டு பரரான ப்ரஹ்ம ருத்ராதிகளுக்கும் பரனானவன்
அரன் அயன் என-ருத்ரனும் -ப்ரஹ்மாவும் என்று பிரசித்தராம்படி
புரம் ஒரு மூன்று எரித்து அமரர்க்கும் அறிவியந்து-அத்விதீயமான புர த்ரயத்தை தஹித்தும் தேவர்களுக்கு ஞானத்தை உபதேசித்தும்
வுலகு அழித்து அமைத்து உளனே –அண்டாந்தர வர்த்தி லோகங்களை சம்ஹரித்து அவற்றை ஸ்ருஷ்ட்டித்தும் அவர்களுக்கு உள்ளே ஆத்மாவாய் நிற்குமவன் –

விண் என்று கஸ்மின்நு கல்வாகாச ஓதஸ் ச ப்ரோதஸ்ச -என்று கார்க்கி வித்யையில் சொல்லுகிற கணக்கிலே மூல பிரகிருதி யாகவுமாம் –
இயத்தல் -கொடுத்தல்
இத்தால் ப்ரஹ்ம ருத்ராதிகள் பக்கலிலே பரத்வ சங்கை பண்ணுகிற குத்ருஷ்டிகளை வ்யாவர்த்திக்கிறது –
——————————————
அநந்தரம் ஈஸ்வர தத்துவத்தை இசையாதே வேத பாஹ்யரில் பிரதம கண்யராய்-சர்வ ஸூந்யவாதிகளான மாத்யமிக புத்தரை நிராகரிக்கிறார் —

உளன் எனில் உளன் அவன் உருவம் இவ்வுருவுகள்
உளன் அலன் எனில் அவன் அருவம் இவ்வருவுகள்
உளன் என இலன் என விவை குணமுடைமையில்
உளன் இரு தகைமையோடு ஒழிவிலன் பரந்தே –1-1-9-

உளன் எனில் –ஸ்வ மதத்தாலே உளன் எனிலும்
உளன் அலன் எனில்-பர மதத்தாலே உளன் அலன் எனிலும்
உளன்-ஸத்பாவ அஸத்பாவ தர்மங்களுக்கு ஆஸ்ரய விதுர ஸ்திதி இல்லாமையால் பிரதிஜ்ஞா வேளையிலும் உளன் என்றாய் சத் பாவம் கொள்ள வேணும் -ஆனபின்பு
உளன் என இலன் என விவை-உளன் என்றும் இலன் என்றும் சொல்லுகிற இவற்றை
குணமுடைமையில்-குணமாக உடையனாகையாலே
இவ்வுருவுகள்-இவ்வருவுகள்-ரூபவத்தாயும் அரூபவத்தாயும் யுள்ள இஜ் ஜகத்தில் வஸ்துக்கள்
அவன் உருவம் அவன் அருவம் -தனக்கு பிரகாச ரூபமாயும் அப்ரகாச ரூபமாயும் யுள்ள பிரகாரமாய் இருக்கிற
இரு தகைமையோடு உளன் பிறந்து ஒழிவிலன் –இரண்டு ஸ்வ பாவத்தோடும் உளநோய் அவற்றை வியாபித்து ஒழிவின்றியே நிற்குமவன்-
————————————–
கீழ்ச் சொன்ன வியாப்தியினுடைய ஸுகர்யத்தை அருளிச் செய்கிறார் –

பரந்த தண் பரவையுள் நீர் தொறும் பரந்துளன்
பரந்த வண்டமிதென நில விசும்பு ஒழிவறக்
கரந்த சிலிடம் தொறும் இடம் திகழ் பொருள் தொறும்
கரந்து எங்கும் பரந்துளன் இவையுண்ட கரனே –1-1-10-

பரந்த தண் பரவையுள் -எங்கும் ஓக்க பரந்த பூதாந்தர கார்யமான விகாரம் இல்லாமையால் ஸ்வ தர்மமான சைத்யத்தை யுடைத்தான காரண ஜல ரூபமான ஏகார்ணவத்தின்
நீர் தொறும்-அதி ஸூஷ்மாமா ஜல பரமாணுக்கள் தோறும்
பரந்த வண்டமிதென-மஹா வகாசமான இவ்வண்டத்தில் இருக்குமா போலே
பரந்துளன்-அசங்குசிதமாக இருக்குமவனாய்
நில விசும்பு ஒழிவறக்-இப்படி பூமியிலும் உஊர்த்வ லோகங்களிலும் ஓன்று ஒழியாமே
கரந்த சிலிடம் தொறும் இடம் திகழ் பொருள் தொறும்–அதி ஸூஷ்மாமாயை அல்பமான ஸ்தலங்கள் தோறும் -அந்த ஸ் தலங்களிலே
ஸ்வயம் பிரகாசமான உஜ்ஜவலமான ஆத்ம வஸ்துக்கள் தோறும்
கரந்து எங்கும் பரந்துளன் வியாப்ய வஸ்துக்களும் அறியாத படி மறைந்து எங்கும் ஓக்க வியாப்தனாய் இருக்கும் –
இவையுண்ட கரனே –-இவ்வஸ்துக்களை சம்ஹார திசையிலும் தனக்குள்ளே அடக்கித் தான் ஸ்திரனாய் நின்றவன்
இத்தால் காரண தசையோடு கார்ய தசையோடு அதி ஸூஷ்மமான சேதன அசேதனங்களிலும் அசங்குசிதமாக வியாபித்து இருக்கும் என்றதாயிற்று –
——————————————
அநந்தரம் கீழ் உப பாதித்த பரத்வத்தை நிகமியா நின்று கொண்டு இத்திருவாய் மொழிக்கு பலம் மோஷமாக அருளிச் செய்கிறார்

கரவிசும்பு எரி வளி நீர் நிலம் இவை மிசை
வரனவில் திறல் வலி யளி பொறையாய் நின்ற
பரனடி மேல் குருகூர்ச் சடகோபன் சொல்
நிரனிறை யாயிரத்து இவை பத்தும் வீடே –1-1-11-

கரவிசும்பு எரி வளி நீர் நிலம் இவை மிசை-ஸூஷ்மாம் ஆகையாலே கரத்தலை யுடைய ஆகாசம் -அக்னி -வாயு -ஜலம் -பூமி -இவற்றை ஆஸ்ரயமாக யுடைத்தாய்
வரனவில் திறல் வலி யளி பொறையாய் நின்ற-ஸ்ரேஷ்டமான -நவில் -சப்தம் /திறல்-தாஹா கத்வம்/பலம் /தண்ணளியான குளிர்த்தி -காரகத்வம் –
இது தர்மிகளோடு தர்மங்களோடு வாசி அறத் தனக்கு பிரகாரமாம் படி நின்ற
பரனடி மேல் குருகூர்ச் சடகோபன் சொல்–சர்வ ஸ்மாத் பிறனுடைய துயரறு சுடரடி விஷயமாக திரு நகரியைப் பிறப்பிடமாக யுடையராய்
சடரான பாஹ்ய குத்ருஷ்டிகளை வெல்லும் ஸ்வ பாவரான ஆழ்வார் அருளிச் செய்ததாய்
நிரனிறை யாயிரத்து இவை பத்தும் வீடே –சொல்லும் பொருளும் இயலும் இசையும் தாளமும் அபி நயமும் ஒன்றுக்கு ஓன்று சேருகையாலே
நிரந்து நிறைந்த ஆயிரத்து பரத்வ ப்ரதிபாதகமான இவை பத்தும் பரனடி மேல் விடப் பட்டன -சமர்ப்பிக்கப் பட்டன -என்றபடி –

இவை பத்தும் வீடான மோக்ஷத்தைகே கொடுடிக்கையாலே -வீடு -என்று காரணத்திலே கார்ய உபசாரம் ஆகவுமாம்-
வால்மீகிர் பகவான் ருஷி –என்று அனுபவத்தாலும் ஞானாதி வைபவத்தாலும் அவனுக்குப் பூர்த்தி சொன்னாப் போலே-
குருகூர்ச் சடகோபன் -என்று பிரபந்த கர்த்தாவான ஆழ்வாருடைய ஆப்தி சொல்லுகிறது –
நிரல் நிறை என்று அடைவே நிறைந்த -என்றுமாம் –
ஆயிரம் என்கிற சங்க்யா நிர்தேசத்தாலே கர்த்தாவான இவருடைய பகவத் அதீனத்வம் ஸூசிதமாகிறது –
இத்திருவாய் மொழி நாற்சீராய் அளவடி நான்கும் ஒத்து இருக்கையாலே கலி விருத்தம் என்பது –
———————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

பரம காருணிகரான திருக் குருகைப் பிரான் பிள்ளான் அருளிச் செய்த ஆறாயிரப்படி –1-1-

August 31, 2017

அவதாரிகை–

அப்ராக்ருத ஸுவ அசாதாரண திவ்ய ரூப பூஷண ஆயுத மகிஷிகள் பரிஜனம் ஸ்தான விசிஷ்டன் –
நிகில ஜகத் உதயம் விபவம் லயம் லீலனாய் -பரம் புருஷனை -உள்ளபடியே ஆழ்வார் தாம் தம்முடைய திரு உள்ளத்தாலே அனுபவித்து –
அவ்வனுபவ ஜனிதமான நிரவதிக ப்ரீதியாலே அவனை அனுபவித்தபடியே பேசுகிறார்-

உயர்வற உயர் நலம் உடையவன் எவன் அவன்
மயர்வற மதி நலம் அருளினன் எவன் அவன்
அயர்வறும் அமரர்கள் அதிபதி எவன் அவன்
துயரறு சுடரடி தொழுது எழு என் மனனே –1-1-1-

அசேஷ தோஷ ப்ரத்ய நீகமாய்–தே யே சதம் – இத்யனுக்ரமத்தினாலே நிரதிசயத ஸாசிரஸ்கமாக அப்யஸ்யமானமாய் இருந்த ஆனந்தாதி அஸங்யேய
கல்யாண குண மஹோததியாய் -இந்த ஆனந்தாதி கல்யாண குணங்களை உடையனான தான் மேலே பொன்னுமாய் நாறினாப் போலே
நிர்ஹேதுகமாக எனக்குத் தன் திறத்தில் அஞ்ஞான கந்தம் இல்லாததொருபடி தன்னை உள்ளபடி அறிவித்துத் தன் திருவடிகளில் நிரவாதிக பக்தியை உண்டாக்கின
இம்மஹா குணத்தை உடையனாய் -இந்தக் கல்யாண குணங்களை யுடையனான தன்னை -ஸ்வபாவத்தை ஏவ நிரஸ்த ஸமஸ்த தோஷராய் அஸ்கலித ஞானராய்
இருந்துள்ள சேஷ சேஷாசன வைநதேய ப்ரப்ருத்யஸங்யேய திவ்ய புருஷர்களுக்குக் கொடுத்துக் கொண்டு இருக்கிற பரம உதார குணத்தை உடையனாய் இருந்த
எம்பெருமானுடைய ஆச்ரித ஜன ஸமஸ்த துக்காப நோதந ஸ்வபாவமான திருவடி மலர்களில் சர்வதேச சர்வகால சர்வ அவஸ்தோசித
சர்வ சேஷ வ்ருத்தியைப் பண்ணி உஜ்ஜீவி என்று தம்முடைய திரு உள்ளத்தைக் குறித்து அருளிச் செய்கிறார் –
——————————
இந்த குணங்களுக்கு ஆச்ரயமான திவ்யாத்மா ஸ்வரூபத்தினுடைய ஹேயப்ரத்ய நீகதயா கல்யாணைகதாநதயா உள்ள விஸஜாதீயத்வம் சொல்லுகிறது —

மனனக மலமற மலர் மிசை எழு தரும்
மனன் உணரளவிலன் பொறியுணர் யவையிலன்
இனன் உணர் முழு நலம் எதிர் நிகழ் கழிவினும்
இனன் இலன் எனன் உயிர் மிகு நரையிலனே –1-1-2–

பாஹ்ய இந்த்ரிய ஜன்ய ஞான விஷயமான அசேதனத்தில் காட்டில் யாதொருபடி விலக்ஷணமாய் இருக்கும் –
அப்படியே யோக அப்யாஸ பரி ஸூத்த அந்தகரண ஜன்ய ஞாநைக விஷயமான பரி ஸூத்தாத்ம ஸ்வரூபத்தில் காட்டிலும் விஸஜாதீயனாய்
கால த்ரயத்திலும் ஒரு படியாலும் ஒப்பில்லாதவனாய் சமாப்யதிக ரஹிதனாய் பரிபூர்ண ஞான ஆனந்த ஸ்வரூபனாய் எனக்கு தாரகனுமாய் இருந்த
எம்பெருமானுடைய துயரறு சுடரடியைத் தொழுது எழு என் மனனே என்கிறார் –
—————————————————————-
இப்படி ஸ்வ இதர ஸமஸ்த வஸ்து விலக்ஷண ஸ்வரூப குண விபூதிகனான எம்பெருமானுடைய ஜகத் ஐஸ்வர்யம் சொல்லுகிறது –
இலனது உடையனிது என நினைவரியவன்
நிலனிடை விசும்பிடை யுருவினன் அருவினன்
புலனொடு புலன் அலன் ஒழிவிலன் பரந்த வந்
நலனுடை ஒருவனை நணுகினம் நாமே –1-1-3-

ப்ருதிவ்யந்தரிஷாதி சர்வ லோக வார்த்தையான சேதன அசேதன ஆத்மக ஸமஸ்த வஸ்துக்களும் சேஷியாய் சர்வ ஜகத் ஆத்மபூதனாய்
தத்கத தோஷைர சம்ஸ்ப்ருஷ்ட னாய்-சர்வ சரீரபூத ஜெகன் நியமன ஐஸ்வர்யத்தை யுடையவனாய்
ஸ்வ இதர ஸமஸ்த விசஜாதியனுமாய் இருந்த எம்பெருமானை நாம் பெற்றோம் -அவன் துயரறு சுடரடி தொழுது எழு என் மனனே என்கிறார் —
————————————-
இனி இத்திருவாய்மொழி குறையும் இப்பாட்டை விஸ்தரிக்கிறது –

நாம் அவன் இவன் உவன் அவள் இவள் உவள் எவள்
தாம் அவர் இவர் உவர் அது விது வுது வெது
வீமவை யிவை வுவை அவை நலம் தீங்கிவை
ஆமவை யாயவை ஆய நின்ற அவரே –1-1-4-

விவித நிர்தேசங்களாலே நிரதிசயமான ஸமஸ்த வஸ்துக்களினுடைய ஸ்வரூபம் பகவத் ஆதீனம் என்று சொல்லுகிறது –
———————————–
கர்மங்களுக்கு ஆராத்ய ஸ்வரூபம் பகவத் அதீனம் என்று சொல்லுகிறது –

அவரவர் தமதமது அறிவறி வகைவகை
அவரவர் இறையவர் எனவடி யடைவார்கள்
அவரவர் இறையவர் குறைவிலர் இறையவர்
அவரவர் விதி வழி யடைய நின்றனரே –1-1-5-

ஸ்வர்க்காதி சாதன பூத ஜ்யோஷிஷ்டோமாதி கர்ம நிஷ்டரான அவ்வவ புருஷர்கள் தந்முதாடைய ஞான அநு குணமாக அவ்வவ இந்த்ராதிகளைத்
தந்முதாடைய கர்மங்களுக்கு ஆராத்யராகவும் ஸ்வ அபி லஷித பல பிரதராகவும் அநு சந்தித்துக் கொண்டு -அந்தக் கர்மங்களாலே ஆஸ்ரயிப்பார்கள் –
ஆஸ்ரயிக்கப் பட்ட அவ்வவ இந்த்ராதி தேவதைகளும் தத் சமாராதாக அபி லஷித பல பிரதானத்திலே குறை யுடையரும் அல்லர் -எத்தாலே என்னில்
சாஸ்த்ரா யுக்த மார்க்கத்தாலே -அந்தவந்தப் புருஷர்கள் இந்த்ராதிகளை ஆஸ்ரயித்து ஸ்வ அபி லஷிதா பலங்களைப் பெறும்படி பரம புருஷன் தானே
அந்த இந்த்ராதி தேவதைகளுக்கு அந்தராத்மதயா நின்று சகல கர்ம பல ப்ரதனாய் சர்வ கர்ம சமாராத்யானாய் இருக்கையாலே —

இவ்வர்த்தத்தில் பிரமாணம் என் என்னில் -இஷ்டாபூர்த்தம் பஹுதா ஜாதம் ஜாய மானம் விஸ்வம் பிபர்த்தி புவ நஸ்ய நாபி -என்றும்
சதுர் ஹோதாரோ யத்ர சம்பதம் கச்சந்தி தேவை -என்றும்
யோ யோ யாம் யாம் தநும் பக்தஸ் ஸ்ரத்தயார்ச் சிதும் இச்சதி -என்றும்
அஹம் ஹி சர்வ யஞ்ஞா நாம் போதா ச பிரபுரேவச -என்றும்
போக்தாரம் யஞ்ஞா தபஸாம் -என்றும்
யே யஜந்தி பித்ரூன் தேவான்-என்றும் தொடக்கமாய் யுள்ள சுருதி ஸ்ம்ருதி யாதிகள் –

ஆக இப்பாட்டாலே சொல்லிற்று யாயிற்று ஏது என்னில் -எம்பெருமான் சர்வ தேவ அந்தராத்ம தயா சர்வ கர்ம சமாராதனாய்
சகல பல ப்ரதனாய் இருக்கையாலே ஜகத் ரக்ஷணமும் தத் அதீனம் என்கிறது —
—————————-
நின்றனர் இருந்தனர் கிடந்தனர் திரிந்தனர்
நின்றிலர் இருந்திலர் கிடந்திலர் திரிந்திலர்
என்றும் ஓர் இயல்வினர் என நிலனைவரியவர்
என்றும் ஓர் இயல்வொடு நின்ற எம் திடரே –1-1-6-

சேதன அசேதனாத்மக ஸமஸ்த வஸ்துக்களினுடைய ஸமஸ்த ப்ரவ்ருத்தி நிவ்ருத்திகளும் பரம புருஷ சங்கல்ப அதீனம் என்று சொல்லுகிறது –
—————————–
கீழ் மூன்று பாட்டாலும் ஜகத்தினுடைய ஸ்வரூப ஸ்திதி ப்ரவ்ருத்திகள் பகவத் அதீனம் என்னும் இடத்தை சாமா நாதி கரண்யத்தாலே சொல்லிற்று –
இனி இந்த சாமா நாதி கரண்யமானது ஜெகதீஸ்வரயோக சரீராத்ம நிபந்தம் என்று சொல்லுகிறது –

திட விசும்பு எரி வளி நீர் நிலம் இவை மிசை
படர் பொருள் முழுவதும் யாயவை யவை தொறும்
உடன் மிசை யுயிர் எனக் கரந்து எங்கும் பரந்துளன்
சுடர்மிகு சுருதியுள் இவை யுண்ட சுரனே –1-1-7-

இந்த சரீரத்தை இவ்வாத்மா நியந்தருதயா வியாபித்து இருந்தால் போலே எம்பெருமானும் அபாதித பிராமண ஸித்தமான ப்ருதிவ்யாதி பூத பஞ்சகங்களையும்
தத் ஆராப்தங்களான ஸமஸ்த வஸ்துக்களையும் நியந்தருதயா வியாபித்து இருக்கும் -இப்படி காரிய காரண உபய அவஸ்திதா சித்தவஸ்துவில் காட்டிலும்
பத்த முக்த நித்ய சித்த த்ரிவித சேதனரில் காட்டிலும் விலக்ஷண ஞான ஆனந்த அமல ஸ்வரூபனாய் ஹேய ப்ரத்ய நீக கல்யாணை கதாந அபரிமித குண விபூதிகனாய்
அகில புவனா நிர்மாண த்ராண ஸம்ஹரணாதி லீலா விநோதனாய் சர்வ ஜகத் ஆத்மாவாய் -சர்வ ஜகச் சரீரனாய் ஸ்வதா ஏவ அகர்ம வச்யனாகையாலே
ஸ்வ சரீர பூத சேதன அசேதன ஆத்மக ஸமஸ்த வஸ்துகத ஸூக துக்க விகாராதி சர்வ தோஷைரா சம்ப்ருஷ்டனாய் இருந்த பரம புருஷன் –

சத்யம் ஞானம் ஆனந்தம் ப்ரஹ்ம/ ஆனந்தோ ப்ரஹ்ம / எஸ் சர்வஞ்ஞஸ் சர்வவித் / பராஸ்ய சக்திர் விவிதைவ ஸ்ரூயதே ஸ்வாபாவிகீ ஞான பல க்ரியா ச /
மநோமய பிராண சரீரோபாரூபஸ் சத்யா சங்கல்ப ஆகாசாத்மா சர்வகர்மா சர்வகாமஸ் சர்வ கந்தஸ் சர்வ ரஸஸ் ஸர்வமித மப்யாத்தோ அவாக்ய அநாதர/
தஸ்ய நாம மஹத் யஸ /அத பரா ஸ்ரோத்ரம் தத் பாணி பாதம் நித்யம் விபும் சர்வகதம் ஸூஷ்மம் தத் ஸ்வயம் யத் பூதயோநிம் பரிபஸ்யந்தி தீரா /
அபஹதபாப்மா விஜரோ விம்ருத்யுர் விசோகோ விஜிகத்சோ அபிபாஸஸ் சத்யகாமஸ் சத்யா சங்கல்ப /
ய ஏஷ அந்த்ராதித்யே ஹிரண்மய புருஷோ த்ருஸ்யதே ஹிரண்யஸ் மஸ்ருர் ஹிரண்ய கேச ஆப்ரணகாத் சர்வ ஏவ ஸூ வர்ண தஸ்ய யதா கப்யாசம் புண்டரீகம் ஏவம் அக்ஷிணீ/
சர்வே நிமேஷா ஐஜ்ஞிரே வித்யுத புருஷாததி/ஆதித்ய வர்ணம் தமஸ பரஸ்தாத் /ஆதித்ய வர்ணம் தமஸஸ்து பாரே /
நீல தோயத மத்யஸ்தா வித்யுலேகே வபாஸ்வாரா /மஹா ரஜநம் வாச /அஸ்யேசாநா ஜகதோ விஷ்ணு பத்னீ /ஈஸ்வரீம் சர்வ பூதா நாம் த்வாமிஹோபஹ்வயே ஸ்ரியம்/
யத்ர பூர்வே ஸாத்யாஸ் சந்தி தேவா /யத்ரர்ஷப பிரதமஜா யே புராணா/தத் விப்ராசோ விபன்யவோ ஜாக்ருவாம்சஸ் சமிந்ததே விஷ்ணோர்யத் பரமம் பதம் /
தத் விஷ்ணோ பரமம் பதம் சதா பஸ்யந்தி ஸூரய/ யோ வேத நிஹிதம் குஹாயம் பரமே வ்யோமன் /பிரதான ஷேத்ரஞ்ஞ பதிர் குணேச /
ஷரம் பிரதானம் அம்ருதாசாரம் ஹாரா ஷராத்மாநாவீசதே தேவ ஏக /ச காரணம் கரணாதி பாதிப
/த்வா ஸூ பர்ணா சாயுஜா சகாயா சமா நம் வ்ருஷம் பர்ஷஸ்வ ஜாதே-தயோர் அந்நிய பிப்பலம் ஸ்வாத் வத்தி அநஸ்நந்யோ அபிசாக சீதி/
சமாநே வ்ருஷே புருஷோ நிமக்நோ அநீசயோ சோசதி முஹ்யமாந ஜுஷ்டம் யதா பஸ்யத் யன்யமீசமஸ்ய மஹிமாநமிதி வீத சோக /
ப்ருதகாத்மாநம் ப்ரேரிதா ரஞ்ச மத்வா/போக்தா போக்யம் ப்ரேரிதா ரஞ்ச மத்வா /
ஏதமாநந்த மயமாத்மா நமுப சங்க்ரம்ய /ரசம் ஹ்யேவாயம் லப்த்வாஸ் ஆனந்தீ பவதி /ததா வித்வான் புண்ய பாபே விதூய நிரஞ்சன பரமம் சாம்யம் உபைதி /
சோஸ்நுதே சர்வான் காமான் சக ப்ரஹ்மணா விபஸ்ஸிதேதி /
ய ப்ருதிவ்யாம் திஷ்டன் ப்ருதிவ்யா அந்தரோயம் ப்ருத்வீ ந வேத யஸ்ய ப்ருத்வீ சரீரம் –ய ஆத்மநி திஷ்டன் ஆத்மநோ அந்த ரோயம் ஆத்மா ந வேத
யஸ்யாத்மா சரீரம் ய ஆத்மா ந மந்தரோ யமயதி ச தா ஆத்மா அந்தர்யாம் யம்ருத/
ஏஷ சர்வ பூதாந்தராத்மா அபஹத பாப்மா திவ்யோ தேவ ஏகோ நாராயண /அந்த ப்ரவிஷ்டஸ் சாஸ்தா ஐநாநாம் சர்வாத்மா /ச தேவ சோம்யேதமக்ர ஆஸீத் /
யதோ வா இமாநி பூதாநி ஜாயந்தே /ப்ரஹ்ம வா இதமேக ஏவாக்ர ஆஸீத் / சர்வானி ஹவா இமாநி பூதாந் யாகாஸா தேவ ஸமுத்பத்யந்தே /
ஆத்மா வா இதமேக ஏவாக்ர ஆஸீத் / ஏகோ ஹவை நாராயண ஆஸீத் ந ப்ரஹ்மா நே சாநோ நேமே த்யாவாப்ருதிவீ ந நக்ஷத்ராணி /
ந தஸ்யேசே கஸ்ஸந /பதிம் விஸ்வஸ் யாத்மேஸ்வரம் / யச்ச கிஞ்சிஜ் ஜக தயஸ்மின் த்ருஸ்யதே ஸ்ரூயதே அபி வா அந்தர் பஹிச்ச தத் சர்வம் வ்யாப்ய நாராயண ஸ்தித/
ச ப்ரஹ்மா ச சிவா சேந்த்ர சோஷர பரம ஸ்வராட் –இத்யாதியாய்
அவிகாரய ஸூத்தாய /ஸூத்தே மஹா விபூதியாக்யே /ச சர்வ பூத ப்ரக்ருதிம் விகாரான் /ருக்மாபம் ஸ்வப்ந தீ கம்யம் /
சமஸ்தா சக்த யஸ் சைநா ந்ருப யத்ர ப்ரதிஷ்டிதா தத் விஸ்வரூப வைரூப்யம் ரூபமந்யத்தரேர் மஹத் /
பூஷணாஸ்த்ரா ஸ்வரூபஸ்தம் /ந பூத சங்க சமஸ்தா நோ தேஹோஸ்ய பரமாத்மன/தமஸ பரமோதாதா சங்க சக்ர கதா தர ஸ்ரீவத்ச வஷா நித்ய ஸ்ரீ ரஜய்ய ஸாஸ்வதோ த்ருவ/
நித்யைவைஷா ஜெகன் மாதா விஷ்ணோ ஸ்ரீர் அநபாயிநீ /தேஷாம் தத் பரமம் ஸ்தாநம் யத்வை பஸ்யந்தி ஸூரய/
திவ்யம் ஸ்தானம் அஐரஞ்சாப்ரமேயம் துர் விஜ்ஜேயஜ் சாகமைர்கம்ய மாத்யம் /
வைகுண்டேது பரே லோகே ஸ்ரியா சார்தம் ஜகத்பதி -ஆஸ்தே விஷ்ணுரா சிந்தயாத்மா பக்தைர் பாகவதைஸ் ஸஹ/
கலா முஹுர்த்தாதி மயஸ்ச கால /காலம் ச பசதே/ பூ பிராணிந சர்வ ஏவ குஹாச யஸ்ய/ சர்வம் ஸமாப்நோஷி ததோ அசி சர்வ /தாநி சர்வானி தத்வபு /
தத் சர்வம் வை ஹரேஸ்தநு /ச ஏவ சர்வ பூதாத்மா விஸ்வரூப யதோ அவ்யய / ஜகத் சர்வம் சரீரம் தே /ஜகாத் வியாபார வர்ஜம் பிரகரணாத சந்நிஹிதத் வாச்ச/
போக மாத்ர ஸாம்ய லிங்காச்ச /ஜகத் வியாபார வர்ஜம் சமாநோ ஜ்யோதிஷா/ இதம் ஞானம் உபாச்ரித்ய மாமா சாதரம்யா மாகதா சரக்கேபி நோப ஜா யந்தே பிரளயே ந வ்யதந்தி ச /விஷ்ணோஸ் ஸகாசா நுத் பூதம் —
இத்யாதி ஸ்ருதி இதிஹாச புராண உப ப்ரும்ஹிதமாய் -அபவ்ருஷேயம் ஆகையால் நிர்தோஷமாய் அபாதித ப்ராமாண்ய ரூப தேஜ பிரசுரமாய் இருந்த ஸ்ருதிகளிலே உளன் என்கிறார் –
ஆதலால் லோகாயத மாயாவாத பாஸ்கரீய யாதவ ப்ரகாசாதி வேத விருத்த சமயங்கள் எல்லாம் நிரஸ்தமாயின —
—————–
இப்படி ஸ்ருதி ப்ரசித்தனாகிற சர்வேஸ்வரன் ஆகிறான் ப்ரஹ்மாவாக அடுக்கும் ஜகத் ஸ்ருஷ்ட்டி ஷமன் ஆகையாலே என்றாதல் –
ருத்ரனாக அடுக்கும் சம்ஹார ஷமன் ஆகையாலே என்றாதல் சொல்லுகிற குத்ருஷ்டிகளை நிராகரிக்கிறது –

சுரர் அறிவரு நிலை விண் முதல் முழுவதும்
வரன் முதலாயவை முழுதுண்ட பரபரன்
புரம் ஒரு மூன்று எரித்து அமரர்க்கும் அறிவியந்து
அரன் அயன் என வுலகு அழித்து அமைத்து உளனே –1-1-8-

எங்கனே எண்ணில் -தஸ்மிந் நண்டே பவத் ப்ரஹ்மா சர்வலோக பிதா மஹ/
கல்பாத வாத்ம நஸ் துல்யம் ஸூதம் ப்ரத்யாய தஸ்தத ப்ராது ராஸீத் ப்ரபோரங்கே குமாரோ நீல லோஹித /
யஸ்ய ப்ரஸாதா தஹமச்யு தஸ்ய பூத பிரஜா ஸ்ருஷ்ட்டி கரோ அந்தகாரீ க்ரோதாச்ச ருத்ர ஸ்திதி ஹேது போதோ யஸ்மாச்ச மத்யே புருஷ பரஸ்மாத்/
ஏதவ் த்வவ் விபூதஸ்ரேஷ்டவ் பிரசாத க்ராதஐவ் ஸ்ம்ருதவ் ததா தர்சித பந்தாநவ் ஸ்ருஷ்ட்டி சம்ஹார காரகவ் /
யம் ந தேவா ந முநயோ ந சாஹம் ந ச சங்கர ஜாநந்தி பரமேசஸ்ய தத் விஷ்ணோ பரமம் பதம் /
அஹம் பாவோ பவந் தஸ்ச சர்வம் நாராயணாத்மகம் /தவாந்த ராத்மா மம ச யே சாந்யே தேஹி சம்ஜி ஞிதா –இத்யாதி வாக்கியங்கள்
அண்டத்துக்கு உள்ளே ப்ரஹ்மா பிறந்தான் என்றும் அந்த ப்ரஹ்மாவின் பாக்களில் ருத்ரன் பிறந்தான் என்றும் சொல்லுகையாலே
அண்டாந்தரகதரான ப்ரஹ்ம ருத்ராதிகள் அண்டாத் பஹிர் பூதமான பிரகிருதி மஹத் அஹங்காராதி பதார்த்தங்களை அறிய மாட்டாமையாலும்
அவற்றினுடைய ஸ்ருஷ்ட்டி சம்ஹாரங்களைப் பண்ண மாட்டாமையாலும் அவற்றினுடைய ஸ்ருஷ்ட்டி சம்ஹாரங்களை எம்பெருமான் பண்ணுகையாலும்
யோ ப்ராஹ்மணம் விததாதி பூர்வம் என்றும் விஷ்ணு ராத்மா பகவதோ பவஸ்யாமித தேஜச-என்றும் இப்படி பிரமாணங்களாலே
சதுர்முக ருத்ர அந்தர்பூதானாய்க் கொண்டு அமர ஜன ஞான பிரதானமும் திரிபுர தஹனமும் பண்ணினாப் போலே
அண்டாந்தர் கதமான பதார்த்தங்களினுடைய ஸ்ருஷ்ட்டி சம்ஹாரங்களையும் முன்பு சொன்ன ந்யாயத்தாலே சதுர்முக ருத்ர அந்தர் பூதனாய்
அத ஏவ தத் வாசக சப்த வாச்யனாய்க் கொண்டு அவர்களுக்கும் தெரியாதபடி நின்ற எம்பெருமான் தானே செய்து அருளுகையாலும்
எம்பெருமானே ப்ரஹ்ம ருத்ராதிகளுக்கும் ஈஸ்வரன் -என்கிறார் –
——————————–
இப்படி வேதாவலம்பி குத்ருஷ்டிகளை நிராகரித்து பிரமாணமும் இல்லை ப்ரமேயமும் இல்லை சர்வமும் ஸூந்யம் –
ஆகையாலே வேதமும் வேத வேத்யனான ஈஸ்வரனும் அவனுடைய ஐஸ்வர்யமான ஜகாத்தும் இல்லை என்கிற ஸூந்யவாதியை நிராகரிக்கிறது –

உளன் எனில் உளன் அவன் உருவம் இவ்வுருவுகள்
உளன் அலன் எனில் அவன் அருவம் இவ்வருவுகள்
உளன் என இலன் என விவை குணமுடைமையில்
உளன் இரு தகைமையோடு ஒழிவிலன் பரந்தே –1-1-9-

ஸூந்யவாதியான உன்னைக் கேட்ப்போம்-ஈஸ்வரனுடைய இல்லாமையை சாதிக்கிற நீ ஈஸ்வரன் உளன் என்றோ இலன் என்றோ ப்ரதிஞ்ஜை பண்ணுவது –
இவை இரண்டு பிரகாரத்தாலும் நீ நினைக்கிற இல்லாமை சம்பவியாது -எத்தாலே என்னில்-லோகத்தில் பாவ அபாவ சப்தங்களும் பாவ அபாவ ப்ரதீதிகளும்
வித்யமாந வஸ்துவினுடைய அவஸ்தா விசேஷ கோசாரமாகக் காண்கையாலே-ஆதலால்
ஈஸ்வரன் உளன் என்னில் அஸ்தித்வ தர்ம விசிஷ்டனாய் இருக்கும் என்று சொல்லிற்றாய் வரும் –
ஈஸ்வரன் உளன் அலன் என்னில் நாஸ்தித்வ தர்ம விசிஷ்டனாய் இருக்கும் என்று சொல்லிற்றாய் வரும் –
இப்படி ஈஸ்வர வ்யதிரிக்த பதார்த்தங்களையும் உளவென்னில் இவையும் அஸ்தித்வ தர்ம விசிஷ்டங்களாய்க் கொண்டு உளவென்று சொல்லிற்றாய் வரும்
தத் வ்யதிரிக்த பதார்த்தங்களை இல்லை என்னிலும் அவை நாஸ்தித்வ தர்ம விசிஷ்டங்கள் என்று சொல்லிற்றாய் வரும்
அந்த அஸ்தித்வ நாஸ்தித்வ ரூப பதார்த்தங்களும் அவனுக்கு ரூபமாய் இருக்கும் -கீழ்ச் சொன்ன பிரமாணங்களாலே –
இப்படி அஸ்தித்வ நாஸ்தித்வங்கள் ஆகிற குணங்களை யுடையவன் என்று சொல்லுகையாலே அஸ்தி என்னிலும் உளன் -நாஸ்தி என்னிலும் உளன்
உளனாம் இடத்து சர்வாந்தராத்மாவாய்க் கொண்டு உளன் என்கிறார் -இப்படி ஸூந் யவாதியை நிரசித்தது –
—————————————
பரந்த தண் பரவையுள் நீர் தொறும் பரந்துளன்
பரந்த வண்டமிதென நில விசும்பு ஒழிவறக்
கரந்த சிலிடம் தொறும் இடம் திகழ் பொருள் தொறும்
கரந்து எங்கும் பரந்துளன் இவையுண்ட கரனே –1-1-10-

சமுத்திர ஜல பரமாணுக்களிலும் ப்ருத்வ்யந்தரிஷாதி லோகாந்தர வர்த்திகளாய் அதி ஸூஷ்மமாய் இருந்த அசித் வஸ்துக்களிலும் வியாபித்து
அவற்றுன் உள்ளே பிரகாசிக்கிற சித் வஸ்துக்களிலும் ஸ்தூலமான அண்டத்தில் வியாபித்தால் போலே அநாயாசத்தாலே அசங்குசிதனாய்
அந்யைரத்ருஷ்டனாய்க் கொண்டு ஜகத் சம்ஹர்த்தாவுமாய்
ஸூ த்ருட பிராமண சித்தனுமாய் இருந்த எம்பெருமானுடைய துயரறு சுடரடி தொழுது ஏழு ஏன் மனனே -என்கிறார் –
—————————-
கரவிசும்பு எரி வளி நீர் நிலம் இவை மிசை
வரனவில் திறல் வலி யளி பொறையாய் நின்ற
பரனடி மேல் குருகூர்ச் சடகோபன் சொல்
நிரனிறை யாயிரத்து இவை பத்தும் வீடே –1-1-11-

லீலா உபகரண போக உபகரண உபாயவித விபூதி விசிஷ்டனான எம்பெருமானை ப்ரதிபாதிக்கிறது
இத்திருவாய் மொழி என்கிற இப்பொருளை -ஒவ்சித் யத்தாலே அவன் திருவடிகளை பிரதிபாதிக்கிறது -என்கிறார் –
இத்திருவாய் மொழியின் சீர்கள் அழகையும் சந்தர்ப்பத்தின் அழகையும் பொருளின் சீர்மையையும் இசையின் அழகையும் இச்சேர்த்திகளினுடைய நிரதிசய
ப்ரேம கர்ப்பத்தவத்தையும் -இவை பொய்யில் பாடலாய் இருக்கிறபடியையும் பார்த்து இப்படியாலே தமிழர் இசைகாரர் பத்தர் பரவும் படி நிரதிசய கல்யாணமாய் இருப்பன
எம்பெருமானுக்கு இப்பர்யந்தமாக வேணும் என்று தம்முடைய அபி நிவேசத்தாலே ஆயிரம் என்று அருளிச் செய்கிறார் –
——————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ நயினாராச்சார்யர் அருளிச் செய்த ஸ்ரீ பிள்ளை யந்தாதி –

August 26, 2017

ஸ்ரீ மான் வேங்கட நாதார்ய கவி தார்க்கிக கேசரீ
வேதாந்தா சார்ய வர்யோ மே சந்நிதத்தாம் சதா ஹ்ருதி –

கவி தார்க்கிக சிம்ஹாய கல்யாண குண சாலினே
ஸ்ரீ மதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம –

சீர் ஓன்று தூப்புல் திரு வேங்கடமுடையான்
பார் ஒன்றச் சொன்ன பழ மொழியுள் ஓர் ஓன்று
தானே யமையாதோ தாரணியில் வாழ்வார்க்கு
வான் ஏறப் போம் அளவும் வாழ்வு

———————————————————————————-

சீரார் தூப்புல் பிள்ளை யந்தாதி என்று செல்லும் தமிழால்
நேராக வேதாந்த தேசிகர் தாளிணைக் கீழ் மொழிந்தேன்
மறைப் பொருள் எல்லாம் எடுத்து இவ்வுலகு உயவே
சீராகிய வரதாரியன் பாதம் துணை நமக்கே –தனியன் –
ஸ்ரீ வரதாச்சார்யர் என்ற திருநாமம் பூண்ட ஸ்ரீ நயினாராச்சார்யர் திருவடிகளே நமக்கு துணை –

சீரார் திரு எழு கூற்று இருக்கை என்னும் செந்தமிழால்
ஆராவமுதன் குடந்தைப் பிரான் தனது அடியிணைக் கீழ்
ஏரார் மறைப்பொருளை எல்லாம் எடுத்து இவ்வுலகு உய்யவே
சோராமல் சொன்ன அருள் மாரி பாதம் துணை நமக்கே -தனியனை அடி ஒற்றி அமைந்த தனியன் –

20-பாசுரங்கள் கொண்டது -ஸ்ரீ இராமானுஜ நூற்றந்தாதி அடி ஒற்றி அமைக்கப்பட்டது –
விசேஷணங்கள் ஸ்ரீ பாஷ்யகாரருக்கும் ஸ்ரீ தேசிகனுக்கும் பொதுவாய் அமைந்து உள்ளன –
திருமந்த்ரார்த்த நிஷ்டையும் பரமைகாந்த பக்தியையும் அருளவேண்டும் என்று பிரார்த்தித்து
தேசிகன் திருவடிகளுக்கு மங்களா சாசனம் செய்கிறார் –
கட்டளைக் கலித்துறை யந்தாதி பாடல்கள் –

————–

மா மலர் மன்னிய மங்கை மகிழ்ந்துறை மார்பினன் தாள்
தூ மலர் சூடிய தொல் அருள் மாறன் துணை யடிக் கீழ்
வாழ்வை யுகக்கும் இராமானுச முனி வண்மை போற்றும்
சீர்மையான் எங்கள் தூப்புல் பிள்ளை பாதம் என் சென்னியதே -1-பூ மன்னு மாது -1-பாசுரச் சாயல் –

அலர்மேல் மங்கை அகலகில்லேன் என்று உறையும் திரு மார்பணிந் துயர் அறு சுடர் அடிகளே தஞ்சம் என்று இருந்த
மாறன் அடி பணி உய்ந்த இராமானுசன் வண்மை போற்றும் தேசிகன் திருவடிகளை நம் தலை-
ஆக மிதுன தெய்வ தம்பதிகள் ஆழ்வார் எம்பெருமானார் தேசிகன் சம்பந்தம் காட்டிய படி –

சென்னி வணங்கச் சிறு பனி சோர எம் கண்ணிணைகள்
வெந்நரகங்களும் வீய வியன்கதி இன்பம் மேவத்
துன்னு புகழுடைத் தூப்புல் துரந்தரன் தூ மலர்த் தாள்
மன்னிய நாள்களும் ஆகும் கொல் மா நிலத்தீர் நமக்கே -2-

தூப்புல் பிள்ளை பாதம் என் சென்னியதே-என்றவர் -அது நித்தியமாக செல்ல பிரார்த்தனை இதில் –
அவர் திருவடி சம்பந்தமே நமக்கு இம்மை மறுமைப் பயன்கள் தர வல்லது என்றவாறு –

மா நிலத்து ஓதிய மா மறை மன்னிய நற்கலைகள்
ஆனவை செப்பும் யாரும் பொருள் அத்தனையே யருளும்
தூ நெறி காட்டும் இராமானுச முனித் தோத்திரம் செய்யும்
ஊனம் தூப்புல் அம்மான் ஓர் புகழன்றி யுய்விலையே -3-

உய்யும் வகையிலை யுத்தர வேதியல் வந்துதித்த
செய்யவள் மேவிய சீர் அருளாளரைச் சிந்தை செயும்
மெய்யவன் எந்தை இராமானுசன் அருள் மேவி வாழும்
ஐயன் இலங்கு தூப்புல் பிள்ளை யாய்நத பொருள் அன்றியே -4-

அன்று இவ்வுலகினை யாக்கி யரும் பொருள் நூல் விரித்து
நின்று தன் நீள் புகழ் வேங்கட மா மலை மேவியும் பின்
வென்றிப் புகழ்த் திரு வேங்கட நாதன் எனும் குருவாய்
நின்றும் நிகழ்ந்து மண் மேல் நின்ற நோய்கள் தவிர்த்தனனே -5-மண் மீசை யோனிகள் தோறும் -41-பாசுரச் சாயல் –

வித்தகன் வேதியன் வேதாந்த தேசிகன் எங்கள் தூப்புல்
மெய்த்தவன் உத்தமன் வேங்கட நாதன் வியன் கலைகள்
மொய்த்திடும் நாவின் முழக்கொடு வாத்தியார் மூலமறக்
கைத்தவன் என்றுரைத்தேன் கண்டிலேன் கடுவினையே -6-சுரக்கும் பெருமை -43-பாசுரச் சாயல் –
என் தன் கடுவினைகள் அனைத்தும் நான் கண்டிலேனே -ஸ்ரீ தேசிகன் ஸ்ரீ ஸூகத்தியும் உண்டே –

வினைகாள் உமக்கு இனி வேறோர் இடம் தேட வேண்டும் எனைச்
சினமேவி முன் போல் சிதைக்கும் வகை இங்கு அரிது கண்டீர்
என் எனில் இராமானுச முனி இந்த உரை சேரும் தூப்புல்
புனிதர் என் புந்தி புகுந்து திகழ்ந்து பொருந்தினரே -7-
இங்கில்லை -பெரிய திருவந்தாதி -நெய்க்குடம் பெரியாழ்வார் பதிகம் -சாயலில் அமைந்தது
கண்டிலேன் கடுவினையே-என்று கீழே –பின்னும் வினைகளை இதில் விளித்து பேசி –
போய பிழையும் புகுதறுவான் நின்றனவும் -என்ற
இருவகைப்பட்ட வினைகளும் விட்டு ஒழிந்தமையை அருளிச் செய்தார் யாயிற்று –

பொருந்திப் புவி தனில் பொய் வாழ்க்கை பூண்கின்ற பூரியர்காள்
இருந்து நரகில் இடர் கெடுமாற்றை யறிகின்றிலீர்
பொருந்தும் பொருள் ஓன்று கேளீர் பொங்கும் இவ்விடர்க் கடற்க்கு
வருந்தாது தூப்புல் மா பூருடன் பாதம் வணங்குமினே–8–

வணக்கம் ஒடுக்கம் வழக்கம் இரக்கம் சேரும்
இணக்கம் உறக்கம் இழுக்கும் அழுக்கும் இகந்து நிற்கும்
குணக் குளம் ஓங்கும் இராமானுசன் குணம் கூறும் தூப்புல்
அணுக்கனைப் பிள்ளைதனை யாரனாக யடைபவர்க்கே -9-பொருந்திய தேசம் -39-பாசுரச் சாயல் –
அங்கு போலே-இம்மைப்பயன்களைக் கூறாமல் பிரபன்னனுக்கு வேண்டிய அம்சங்களைப் பயனாக அருளிச் செய்கிறார் –

அடைபவர் தீ வினை மாற்றி யருள் தரும் தூப்புல் ஐய
விடர்தரும் இப்பிறவிக் கடல் தன்னில் அமிழ்ந்த என்னைக்
கடையறப் பாசம் கழற்றி நின் தாளிணை காணும் வண்ணம்
உடையவனே யருளாய் யுணர்ந்தார் தங்கள் கற்பகமே -10-
கீழ்ப் பாசுரம் வரை ஸ்ரீ தேசிகன் பெருமையை உலோகோருக்கு உபதேசித்து இப்பாசுரம் முதல் -10-பாசுரங்களால் –
அடைக்கலமாய் நிற்பதற்கு வேண்டிய குணபூர்த்தி உள்ள ஸ்ரீ தேசிகனை புகழ்ந்து
அவர் திருவடிகளில் பற்று உண்டாக்கி அருள அவரை நேராக விளித்து விண்ணப்பிக்கிறார் –

கற்பகமே என்று காசினியோரைக் கதிக்க மாட்டேன்
வெற்பிடையே நின்று வெந்தவத் தீயிலும் வேவ மாட்டேன்
பற்பல கலை வல்ல பா வலனே பத்தர் ஏத்தும் தூப்புல்
அற்புதனே யருளாய் யடியேனுக்கு யரும் பொருளே -11-நிதியைப் பொழியும் -21-/ நயவேன்-35-பாசுரங்கள் சாயல் முதலடி /
கதிக்குப் பதறி -14-அடி ஒற்றி இரண்டாம் அடி —
அற்புதன் -சப்த பிரயோகமும் அங்கும் உண்டே -மோக்ஷ உபாயத்தை காட்டித் தந்து அருள விண்ணப்பம் –

பொருளானது ஒன்றும் என்னில் பொருந்தாததும் யன்றி யந்தோ
மருளே மிகுத்து மறையவர் நல்வழி மாற்றி நின்றேன்
தெருளார் மறை முடித் தேசிகன் எங்கள் தூப்புல் தேவே
யருளாய் இனி எனக்கு உன்னருளே யன்றி யாறு இலையே-12- ஆகிஞ்சன்யம் இது முதல் மூன்று பாசுரங்களில் வெளியிட்டு அருளுகிறார் –

ஆறாக எண்ணும் யரும் கருமம் ஞானம் காதல் கொண்டு
வேறாக நிற்கும் விரகு எனக்கு இல்லை விரக்தி இலை
தேறாது திண் மதி சீரார் கதியிலும் செம்பொன் மேனி
மாறாத தூப்புல் மாலே மறவேன் இனி நின் பதமே -13-

நின் பதம் தன்னிலும் நேரே எனக்கில்லை யன்பு கண்டாய்
நின் பதம் ஒன்றிய வன்பரிலும் நேசம் இல்லை யந்தோ
வென்படி கண்டு இனி என் பயன் ஏதம் இல் தூப்புல் எந்தாய்
யுன்படியே யருளாய் யுதவாய் எனக்கு உன்னருளே -14-சித்த உபாயமும் ஸ்ரீ தேசிகன் இவருக்கு –

உன்னருள் அன்றி எனக்கு ஒரு நல் துணை இன்மையினால்
என் இரு வல்வினை நீயே விலக்கி ஹிதம் கருதி
மன்னிய நல் திருமந்தம் ஓதும் பொருள் நிலையே
பொன்னருளால் அருளாய் புகழ் தூப்புல் குல விளக்கே -15-திருமந்த்ரார்த்தம் -ஸ்வரூப உபாய புருஷார்த்த நிஷ்டர்களை அருளுவாய் –
தாய் நினைந்த கன்றே ஓக்க -திருமங்கையாழ்வார் ஸ்ரீ ஸூக்தி சாயல் –

விளக்காகி வேங்கட வெற்பினில் வாழும் விரை மலராள்
வளக் காதல் கொண்டுறை மார்பன் திருத்தும் உனது அடியார்
துளைக்காதல் இல்லவர் தங்கள் நிறத்திலும் தூய்மை எண்ணிக்
களக் காதல் சேட்டும் நிலை கடியாய் தூப்புல் காவலனே -16-பகவத் பாகவத கைங்கர்யங்களை பிரார்திக்கிறார் –
திருமந்த்ரார்த்த புருஷார்த்த காஷ்டை அன்றோ இவை –
துளக்கு ஆதல் இல்லாதவர் -கலக்கமடைதல் இல்லாதவர் /எண்ணி -திரு உள்ளத்தில் சங்கல்பித்து அருளி /
களக் காதல் -கபடமான பக்தி /

காவலர் எங்கள் கடாம்பிக் குலபதி யப்புளார் தம்
தேமலர்ச் சேவடி சேர்ந்து பணிந்து அவர் தம் அருளால்
நா வலரும் தென் வட மொழி நற்பொருள் பெற்ற நம்பி
காவல தூப்புல் குலத்தரசே எமைக் காத்தருளே -17-கீழே -6-பாசுரத்தில் வியன் கலைகள் மொய்த்திடும் -என்றது
ஆச்சார்ய கடாக்ஷத்தின் அடி என்று இங்கே காட்டப்படுகிறது -தேசிகரும் ஆச்சார்ய சிஷ்ய குண பூர்த்தி உள்ளமை காட்டப்பட்டது –

அருள் தரும் ஆரண தேசிகன் எங்கள் தூப்புல் தேவே
வரு கவி தார்க்கிக சிங்கமே வாதியார் வாழ்வு அறுத்தாய்
இரு கையும் கூப்பி யுரைக்கும் இவ்விண்ணப்பம் ஓன்று கேளாய்
உருவ எனக்கு அருளாய் எண்ணும் உள்ளம் உன் தொண்டரையே -18-உன் தொண்டர்கட்கே அன்புற்று இருக்கும்படி
என்னை யாக்கி யங்கு ஆட்படுத்தே போலே இங்கும் –

தொண்டர் உகக்கும் துணையடி வாழி நின் தூ முறுவல்
கொண்ட முகம் வாழி வாழி வியாக்கியா முத்திரைக் கை
வண் திரு நாமமும் வாழி மணி வட முப்புரி நூல்
கொண்ட சீர்த் தூப்புல் குல மணியே வாழி நின் வடிவே -19-
மணிவட முப்புரி நூல் கொண்ட சீர் –துளசி மணிகளாலும் தாமரை மணிகளாலும் ஆகிய மாலைகளையும்
யஜ்ஜோபவீதத்தையும் தரித்து ப்ரஹ்ம தேஜஸ் மிளிர பெற்ற தேவரீருடைய திவ்ய மங்கள விக்ரஹம் –

வடிவு அழகு யாரந்த வண் தூப்புல் வள்ளல் மெல் மலர் அடி மேல்
அடியவர் ஓத வந்தாதி இருபதும் யாய்ந்து யுரைத்தேன்
திடமுடன் ஈதைத் தினம் தோறும் யாதரித்து ஓதும் அன்பர்
முடியிடை நேர் படும் தூப்புல் அம்மான் பத மா மலரே –20-புருஷார்த்த காஷ்டையே பலம் -என்று அருளி நிகமிக்கிறார் –

ஸ்ரீ பிள்ளை யந்தாதி முற்றிற்று –

——————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நயினாராச்சார்யர் சுவாமி திருவடிகளே சரணம்-
ஸ்ரீ வேதாந்த தேசிகன் சுவாமி திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பரமத பங்கம்-ஸ்ரீ வேதாந்த தேசிகாசார்யர் ஸ்வாமிகள்-

August 26, 2017

ஸ்ரீ மான் வேங்கட நாதார்ய கவி தார்க்கிக கேசரீ
வேதாந்தா சார்ய வர்யோ மே சந்நிதத்தாம் சதா ஹ்ருதி –

கவி தார்க்கிக சிம்ஹாய கல்யாண குண சாலினே
ஸ்ரீ மதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம –

சீர் ஓன்று தூப்புல் திரு வேங்கடமுடையான்
பார் ஒன்றச் சொன்ன பழ மொழியுள் ஓர் ஓன்று
தானே யமையாதோ தாரணியில் வாழ்வார்க்கு
வான் ஏறப் போம் அளவும் வாழ்வு

———————————————————————————-

திரு வயிந்திர புரத்தில் ஸ்ரீ ஹயக்ரீவர் அருள் பெற்ற பின்பு ஸ்ரீ தேவ நாயக பஞ்சா சதா முதலியவற்றுடன் அருளிச் செய்த ரஹஸ்ய கிரந்தம் –
முந்தை மறை மொய்ய வழி மொழி நீ என்று முகுந்தன் அருள் தந்த பயன் பெற்றேனே யானே -என்ற நியமனம் பெற்ற பின்பு –
ஸ்ரீ சத தூஷிணிக்கு பின்பு அருளிச் செய்யப் பட்டதாகும்
கருட தண்டகம் -கருட பஞ்சசாத் -ஸ்ரீ ஹயக்ரீவ ஸ்தோத்ரம் அச்யுத சதகம் ரகுவீர கத்யம் போன்ற ஸ்ரீ கிரந்தங்கள் உடன் இத்தை அருளிச் செய்தார் என்பர் –
அஹீ நத்ர நகரே -என்று முதலிலும் -பொன் அயி நதை நகரில் முன்னாள் புணராத பர மத பபேரா பூரித தோமே – என்றும் அனுசந்தித்து உள்ளார் –
இதில் 24 அதிகாரங்கள் -முதல் நான்கால் விசிஷ்டாத்வைத சித்தாந்த படித்த தத்வ நிரூபணமும்
-அடுத்து ஐந்தாவதில் பர மத சமுதாய தோஷங்கள் -மேலே 15 அத்யாயங்களில்
லோகாதியாக –மாத்யாமிக –யோகாசார –சௌததிராநதிக -வைபாஷிக –பிரசன்ன பௌத்த–ஜைன –பாஸ்கரீய -யாதவ ப்ரகாசீய -யையாகரண-வைசேஷிக
– -நையாயிக -கௌமாரில –பரபாகர –காபில -ஹைரண்யகாப்ய பாசுபத –யுக்திகளை பூர்வபஷமாகச் சொல்லி நிராகரணம் செய்து அருளுகிறார்
மேலே பாஞ்ச ராத்ர விஷய சங்கைகளை நிரூபித்து பரிஹாரம் செய்து அருளுகிறார்
மேலே பர மதங்களில் சொல்லும் உபாய பலன்கள் தூஷணமும் அருளி கடைசி அத்யாயத்தில் நிகமித்து அருளுகிறார்
சில விசேஷார்த்தங்கள் —
1- ஆசார்யனே உபய விபூதியிலும் உத்தேச்யர் –
அத்ரபரத்ரசாபி நிதயம யாதிய சரனௌ சரணம் மதியம் -ஆளவந்தார்
தேவவசாய துபாசய-நியாச விம்சதி
சர்வ உபநிஷத சார உபதேஷ்டாரம் –குருகையில் வந்து கொழுப்பு அடக்கிய குலபதி தந்த குறிப்பில் வைத்தனர் –
குலம் திகழும் குறிப்பில் அடி சூடி மன்னும் குற்றேவல் அடியவர் தம் குழாங்கள் கூடி –
நாறு துழாய் முடி நாதனை நண்ணி நம் கூருகவாநத குருக்கள் குழாங்கள் குரை கழல் கீழ் மாறுதல் இன்றி மகிழ்ந்து எழும் போகத்து மன்னுவமே -ரஹச்ய த்ரய சாரம்
2- சர்வேஸ்வரன் பெருமை வாசா மகோசரம் –
நான்மறைகள் தேடிக் காண மாட்டாச் செல்லுமே
ஐவர்க்கு அன்று ஓதி தூதுவனாய ஒரு கோடி மறைகள் எல்லாம் தொடர்ந்து ஓடத் தனியோடி –
உயர்வற உயர்நலம் உடையவன்
3- திருவாழி ஆழ்வார் -இரண்டு ரூபங்கள் -எட்டு திவ்ய ஆயுதங்கள்-முதல் பாட்டிலும் /16 திவ்ய ஆயுதங்கள் தாங்கி சேவை சாதிப்பார் -இறுதி அதிகாரத்திலும் –
4–ஜீவன் பர ப்ரஹ்மத்தை விட வேறுபட்டவன் –
ஐக்கியம் இல்லை நதிகள் கடலில் கலப்பது போலே -இரும்புண்ட நீர் போலே -சூஷ்மமாய்க் கிடக்கும் –

முதலாவது பர சதாவன அதிகாரம்
இதில் இஷ்ட தேவதா நமஸ்காரமும் -மங்கள ஸ்லோகமும் -ஸ்வ பஷ ஸ்தானமும் -பர பஷ ப்ரதிக்ஷேபமும் –
நல்ல சாஸ்திரீய ஞானம் ஆச்சார்யர் மூலம் பெற வேண்டும் என்றும் -நம்மாழ்வார் அருளிச் செய்த உபகார விசேஷமும் அருளிச் செய்யப் படுகின்றன
ஸ்ரீ மன் நாத முனிகள் -நியாத்தை தத்வ கிரந்த மங்கள ஸ்லோகத்தில் -யோ வேததி யுக பத சாவம பரதய ஷேண சதா சவத–பர மத நிரசனம் அருளிச் செய்தது போலே
ஆளவந்தாரும் சித்தி த்ரயத்தில் நாராயண தவயி ந மருஷயதி வைதிக க -என்று நாராயண பரதெய்வம் –
சங்கல்ப சூர்யோதயத்தில் அருளிச் செய்தது போலே எம்பெருமானார் நியமனத்தை தாம் தம் ஆச்சார்யர் மூலம் பெற்று பரமத நிரசனத்தில் இழிகிறார்-

தாவிப் புவனங்கள் தாளிணை சூட்டிய தந்தை உந்திப்
பூவில் பிறக்கினும் பூதங்கள் எல்லாம் புணர்ந்திடினும்
நா வில் பிரிவின்றி நா மங்கை வாழினும் நான் மறையில்
பாவித்தது அன்றி உரைப்பது பாறும் பததா திரளே –
இரண்டாவது ஜீவ தத்வ அதிகாரம் / மூன்றாவது அசித் தத்வ அதிகாரம் /நாலாவது பரதத்வ அதிகாரம்
மாலைப் பெற வழி காட்டிய தேசிக வாசகமே ஓலைப் புறத்தில் எழுதுகின்றோம் உளது எழுது மினே-
வெள்ளைப் பரிமுகா தேசிகராய விரகால் அடியோம் உள்ளது எழுதியது ஓலையில் இட்டணம்-ஒரு எண் தானும் இன்றியே -நிர்ஹேதுகமாக அருளுபவர் அன்றோ
ஐந்தாவது -சமுதாய தோஷ -பங்க அதிகாரம் –
நின் மாட்டாய மலர் புரையும் திரு உருவம் மனம் வைக்க மாட்டாத பல சமயம் மதி கொடுத்தாய் —
கள்ள வேடத்தைக் கொண்டு –பேதம் செய்திட்டு –வெள்ளியார் பிண்டியார் –ஓதுகின்ற கள்ள நூல் -ஆறாவது லோகாயதிக பங்காதி காரம் /
ஏழாவது மாத்யமிக பங்க அதிகாரம் —ஸர்வதா அநு பாபதேசச -உளன் எனில் உளன்-உளன் அலன் எனிலும் உளன் /
எட்டாவது -யோகாசார பங்க அதிகாரம் /ஒன்பதாவது ஸு தரன அதிகார பங்க அதிகாரம் -/ பத்தாவது –வைபாஷிக பங்க அதிகாரம் /
-11-பிரசன்ன புத்த பங்க அதிகாரம் /-12-ஜைன பங்க அதிகாரம் /-13-பாஸ்கர பங்க அதிகாரம் –யானும் தானாய் ஒழிந்தான்/
-14-வையாகரண பங்க அதிகாரம் -சாத்விக புராணங்கள் உபாதேயம்-பிரமாணம் ஆகும் /
-15-வைசேஷிக பங்க அதிகாரம் -மலிந்து வாது செய்வீர்களும் -சமணரும் –சாக்கியரும் / -16-நியாய விஸ்தார விரோத நிசதார அதிகாரம் -/
-17-நிரீஸ்வர மீமாம்சக பங்க அதிகாரம் /-18-நிரீஸ்வர சாங்க்ய பங்க அதிகாரம் /
-19-யோக சித்தாந்த பங்க அதிகாரம் –ஸ்ரீ பாஷ்யத்தில் யோக பரதயுக்தி அதிகாரம் -நான்முகன் பர ப்ரஹ்மம் ஆக மாட்டான் –
/-20-பாசுபத பஹிஷ்கார அதிகாரம் /-21-பகவத் சாஸ்த்ர விரோதி பங்க அதிகாரம் -பாஞ்சராத்மமும் வைகானச ஆகம சாஸ்த்ரங்களும் உபாதேயம் /
–22-பரோகத உபாய பங்க அதிகாரம் /-23-பரோகத பிரயோஜன பங்க அதிகாரம் – இதில் -சங்க்ரஹ பாட்டில்
குலம் திகழும் குருக்கள் அடி சூடி மன்னும் குற்றேவல் அடியவர் தம் குழாங்கள் உடன் கூடி
வலம் திகழும் திரு மகளும் மற்றிடத்தே மன்னிய மன் மகளாறும் நீளையாறும்
நலம் திகழ வீற்று இருந்த நாதன் பாதம் நமக்கு இதுவே முடிவு என நண்ணினமே -என்று அருளிச் செய்கிறார்
-24- நிகமன அதிகாரம் -இதில் ஸ்ரீ ஸூ தர்சன ஆழ்வார் -16-ஆயுதங்கள் உடன் இருக்கும் பிரகாரம் அருளிச் செய்கிறார்

————————————
இஷ்ட தேவதா நமஸ்காரம் –அபாசயது தம புமஸாமநபாய ப்ரபாநவித -அஹீந்த்ர நகரே நிதய முதிதோ யமஹஸகர –1-

அநபாய பரபா -நாசம் -பிரிவு -இல்லாத காந்தி யுடன் -அதாவது பெரிய பிராட்டியார் உடன்
அநவித -சேர்ந்தவராயும்
-அஹீந்த்ர நகரே –நித்யம் உதித -எப்பொழுதும் உதித்தவராய் இருக்கிற
அயம அஹஸகர -இந்த ஸூ ர்யன்
தம புமஸாம –சேதனர்களுடனுய தமஸ் -அஞ்ஞான அந்தகார இருட்டை
அபாசயது–நிவ்ருத்தி செய்து அருளட்டும் –

————————-

எண் தல அம்புயத்துள் இலங்கும் அறு கோண மிசை
வண் பணிலம் திகிரி வளைவில் வளைவாய் முசலம்
திண் கையில் அங்குசம் சீர் திகழும் கதை செங்கமலம்
எண் படை ஏந்தி நின்றான் எழில் ஆழி இறையவனே–1–

எழில் ஆழி இறையவனே—உஜ்ஜவலமாக நிற்கும் ஸ்ரீ ஸூ தர்சன -ஸ்ரீ ஹேதி ராஜன்
எண் தல அம்புயத்துள் இலங்கும்–எட்டு இதழ்களை உடைய தாமரை புஷபத்திலே பிரகாசிக்கும்
அறு கோண மிசை-ஆறு கோணம் உடைய சக்கரத்தின் மேலே
வண் பணிலம் திகிரி -வெளுத்த ஸூந்தர ஸ்ரீ சங்கம் -சக்கரம் –
வளைவில் வளைவாய் முசலம்-வளைந்ததான -நுனியை யுடைய பரசு -உலக்கை
திண் கையில் அங்குசம் சீர் திகழும் கதை செங்கமலம்-சிலாக்கியமாய் பிரகாசிக்கும் கதை -செந்தாமரை புஷ்பம் பத்மாயுதம் –
எண் படை ஏந்தி நின்றான்-ஆகிய எட்டு ஆயுதங்களை தரித்து சேவை சாதிக்கிறார்

———————————–

விடு நெறி யஞ்சி விடத் தொடக்கிய விதியர் அடைந்து தொழ தழைத்து எழு
அருள் விழி தந்து விலக்கு அடிக் களை விரகில் இயம்பி விலக்கி வைத்தனர்
கொடு வினை என்பதனைத் தினைத் தனை கொணர்தல் இகந்த குணத்தனத்தினர்
குருகையில் வந்து கொழுப்பு அடக்கிய குல பதி தந்த குறிப்பில் வைத்தனர்
கடு நரகு அன்பு கழற்றி மற்றொரு கதி பெரும் அன்பில் எம்மைப் பொருத்தினர்
கமலை யுகந்த கடல் கிடைக் கடல் கருணை யுயர்ந்த திடர்க்கு ஒருக்கினர்
படு முதல் இன்றி வளர்த்த நல் கலை பல பல வொன்ற வெமக்கு உரைத்தனர்
பழ மறை யந்தி நடைக்கு இடைச் சுவர் பரமதம் என்று அது இடித்த பத்தரே -2-ஆச்சார்யர்கள் அருளும் மஹா உபகாரம் –

பழ மறை யந்தி நடைக்கு இடைச் சுவர் பரமதம் என்று அது இடித்த பத்தரே–பிற மாதங்கள் பழமையான வேதாந்த மார்க்கத்திற்கு நடுவேயுள்ள
சுவர் போல் தடையாயுள்ளன என்று நினைத்து அந்த மதங்களாகிய சுவரை இடித்து ஒழித்த பகவத் பக்தர்களான எம் ஆச்சார்யர்கள் –
விடு நெறி யஞ்சி விடத் தொடக்கிய விதியர் அடைந்து தொழ தழைத்து எழு -நீக்கத் தக்க தீய வழியில் செல்லப் பயந்து –
அவ்வழியை விட்டு விலகத் தொடங்கிய பாக்யமுள்ள நாம் மேன்மேலும் விருத்தியாகப் பெருகுகின்ற
அருள் விழி தந்து விலக்கு அடிக் களை விரகில் இயம்பி விலக்கி வைத்தனர் -கிருபையுடன் கூடிய திவ்ய கடாக்ஷத்தை அருளி -உயர்ந்த பலன்களை
பெற முடியாமல் விலக்குவதற்குக் காரணமான களை போன்ற பாபங்களை எமக்கு எடுத்து அருளிச் செய்து அப்பாபச் செயல்களில் நின்றும் விலக்கி
எம் சக்திக்குத் தக்க உபாயத்திலே முயல்வித்து நிலை நிறுத்தி அருளினார் –
கொடு வினை என்பதனைத் தினைத் தனை –
கொணர்தல் இகந்த குணத்தனத்தினர் -அவ்வாச்சார்யர்கள் கொடிய கர்மங்கள் என்று சொல்லப்படுமவற்றை சிறுது அளவும்
சேர ஒட்டாது கழித்து அருளிய நாள் குணமாகிய செல்வத்தை யுடையர்
குருகையில் வந்து கொழுப்பு அடக்கிய குல பதி தந்த குறிப்பில் வைத்தனர் –திருக் குருகூர் எனப்படும் ஆழ்வார் திருநகரியில்
திரு வவதரித்து பிற மதஸ்தர்களின் கர்வத்தை தம் சேரி ஸூக்திகளின் மூலம் அடக்கி அருளிய பிரபன்ன குல கூடஸ்தரான
நம்மாழ்வார் அருளிச் செய்த ஸூ ஷ் மாமா கருத்தினில் எம்மை நிலை நாட்டி அருளினார்
கடு நரகு அன்பு கழற்றி மற்றொரு கதி பெரும் அன்பில் எம்மைப் பொருத்தினர் -கொடிய நரகத்தை தரும் கர்மங்களில் நின்றும் எமக்கு இருந்த
அன்பைப் போக்கி அருளி சிறந்த கதியாகிய மோக்ஷத்தைப் பெறுவதில் உள்ள ஆசையில் எம்மை ஓன்று சேர்த்து அருளினர்
கமலை யுகந்த கடல் கிடைக் கடல் கருணை யுயர்ந்த திடர்க்கு ஒருக்கினர்-பிராட்டியின் அன்புக்கு உரிய திருப் பாற் கடலில் திருப் பள்ளி கொண்டு அருளும்
நீலக் கடல் போன்ற எம்பெருமானுடைய உயர்ந்த கருணையாகிய மேட்டில் எம்மை ஓன்று சேர்த்து அருளினர்
படு முதல் இன்றி வளர்த்த நல் கலை பல பல வொன்ற வெமக்கு உரைத்தனர் –அழியும் காரணம் இல்லாமல் சர்வேஸ்வரனாலும் மஹரிஷிகளாலும்
வ்ருத்தி செய்து அருள பெற்ற பற்பல சிறந்த வித்யைகள் எம்மிடம் ஓன்று கூடும்படி எங்களுக்கு உபதேசித்து அருளினர் –

—————————–

போமுரைக்கும் பொருள் யாம் அறியோம் பொருளார் மறையில்
தாம் உரைக்கின்றன தாமே அறியும் தரமுடையார்
ஆம் உரைக்கு என்று இவை யாய்நது எடுத்து ஆரண நூல் வழியே
நாம் உரைக்கும் வகை நல்லருள் ஏந்தி நவின்றனரே -3—ஆச்சார்யர்கள் சாராத்தங்களையே உபதேசித்து அருளுதல் –

போமுரைக்கும் பொருள் யாம் அறியோம் பொருளார் மறையில் –உண்மைக்கு கருத்து நிறைந்துள்ள வேதத்தில் தகாது என்று நீக்கக் கூடியதும்
தக்கது என்று சொல்லக் கூடியதுமான த்யாஜ்ய உபாதேய விஷயங்களை ஆச்சார்ய உபதேசத்துக்கு முன்பு யாம் அறிய மாட்டோம் –
தாம் உரைக்கின்றன தாமே அறியும் தரமுடையார் -தம்மால் உபதேசிக்கப்படும் விஷயங்களை தாமே நேரில் கண்டு அறியும் படியான பெருமையையுடைய நம் பூர்வாச்சார்யர்கள்
ஆம் உரைக்கு என்று இவை யாய்ந்து எடுத்து ஆரண நூல் வழியே -இவ்விஷயங்களை உபதேசிக்கத் தக்கனவாகும் என்று
வேதக் கடலில் இருந்தும் தேர்ந்து எடுத்து -வேத மார்க்கத்தை தழுவியே
நாம் உரைக்கும் வகை நல்லருள் ஏந்தி நவின்றனரே -நாம் இந்த கிரந்தத்தில் விளக்கும் படி நமக்கு உபதேசித்து அருளினர் –

———————————————–

சித்தும் அசித்தும் இறையும் எனத் தெளிவுற்று நின்ற
தத்துவம் மூன்றும் தனித் தனி காட்டும் தனி மறையால்
முத்தி வழிக்கு இது மூலம் எனத் துணிவார்களையும்
கத்தி மயக்கும் கதகரை நாம் கடிக்கின்றனமே -4-விவேகிகளையும் மயக்கும் பிற மதத்தினரைக் கண்டித்தால் -இதுவும் அடுத்த பாசுரமும் ஜீவ தத்வ அதிகாரம் –

சித்தும் அசித்தும் இறையும் எனத் தெளிவுற்று நின்ற –சேதனமும் அசேதனமும் ஈஸ்வரனும் என்று தெளியப் பெற்று நின்ற
தத்துவம் மூன்றும் தனித் தனி காட்டும் தனி மறையால்–தத்வ த்ரயங்கள் மூன்றையும் -அவ்வவற்றின்
ஸ்வரூபத்தையும் ஸ்வபாவத்தையும் தனித் தனியே பிரித்து வெளியிட்டு அருளும் ஒப்பற்ற வேதத்தால்
முத்தி வழிக்கு இது மூலம் எனத் துணிவார்களையும் -இந்த தத்வத்ரய ஞானம் மோக்ஷ மார்க்கத்துக்கு காரணமாகும் என்று நிச்சயித்து அறிபவர்களையும்
கத்தி மயக்கும் கதகரை நாம் கடிக்கின்றனமே –ஆரவாரத்தால் மயக்குகின்ற பிரதிவாதிகளை ஆச்சார்ய உபதேசம் பெற்ற நாம் இவ்வதிகாரத்தில் கண்டிக்கின்றோம் –

—————————————————-

முத்தின் வடங்கள் என முகுந்தன் புனை மூ வகையாம்
சித்தில் யரும் சுருதிச் செவ்வை மாறிய சிந்தைகளால்
பத்தில் இரண்டு மெய்க்க பகட்டும் பர வாதியர் தம்
கத்தில் விழுந்து அடைந்த அழுக்கு இன்று கழற்றினமே -5-மூவகை ஜீவர்களைப் பற்றிய கலக்கம் நீக்குதல் —

முத்தின் வடங்கள் என முகுந்தன் புனை மூ வகையாம் சித்தில் -முத்துக்களின் ஹாரங்கள் என்னும்படி எம்பெருமான் தரித்த
பத்த முக்த நித்ய ஸூரி களாகிய மூன்று வகைப் பட்ட சேதனர் விஷயத்தில்
யரும் சுருதிச் செவ்வை மாறிய சிந்தைகளால் -அறிவதற்கு அருமையான வேதத்தின் நேர்மையை அழித்துப் பேசுகின்ற நினைவுகளால்
பத்தில் இரண்டு மெய்க்க பகட்டும் பர வாதியர் தம் -தாம் கூறும் பத்து விஷயங்களில் இரண்டாவது மெய்யாக மயக்குகின்ற பிரதிவாதிகளுடைய
கத்தில் விழுந்து அடைந்த அழுக்கு இன்று கழற்றினமே–வீண் பிதற்றலில் மயங்கி அதனால் பெற்ற களங்கத்தை -குற்றத்தை –
இவ்வதிகாரத்தை எழுதிய இன்று நீக்கி விட்டோம்

—————————————-

நாக்கு இயலும் வகை நம்மை யளித்தவர் நல்லருளால்
பாக்கியம் ஏந்திப் பரனடியார் திறம் பார்த்ததற் பின்
தாக்கியர் தங்கள் தலை மிசை தாக்கித் தனி மறை தான்
போக்கியம் என்றதனில் பொய்ம் மதங்களைப் போக்குவமே -6-அசேதன தத்வ விளக்கம் -கலக்கத்தை நீக்குதல் இதுவும் அடுத்த பாசுரமும் அசித் தத்வ அதிகாரம் –

நாக்கு இயலும் வகை நம்மை யளித்தவர் நல்லருளால் –அறிவற்று இருந்த நம்மை நாவினால் நன்றாகக் பேசும்படி அருள் புரிந்த பூர்வாச்சார்யர்களுடைய சிறந்த கிருபையினால்
பாக்கியம் ஏந்திப் பரனடியார் திறம் பார்த்ததற் பின் -நல்ல ஞானத்தை பெரும் பாக்யத்தைப் பெற்று சர்வேஸ்வரனுடைய சேஷ பூதங்களான
ஜீவர்களுடைய ஸ்வரூபத்தை முன் அதிகாரத்தில் ஆராய்ந்ததின் பின்
தாக்கியர் தங்கள் தலை மிசை தாக்கித் தனி மறை தான் -ஆபாச யுக்திகளைக் கொண்டே விஷயத்தை சாதிக்க முப்படுகின்ற யுக்திவாதிகளுடைய
தலையிலே மோதி ஒப்பற்ற வேதம்
போக்கியம் என்றதனில் பொய்ம் மதங்களைப் போக்குவமே -ஆத்மாவினால் அனுபவிக்கப்படும் வஸ்து எனக் கூறிய அசேதன தத்துவத்தைப் பற்றி
வருகின்ற விபரீதகி கொள்கைகளை இவ்வதிகாரத்தில் நாம் ஒழித்திடுவோம்
போக்தா போக்யம் ப்ரேரிதா-உபநிஷத் வாக்கியம் –

—————————————–

தீ வகை மாற்றி அன்று ஓர் தேரில் ஆரணம் பாடிய நம்
தேவகி சீர் மகனார் திறம்பா வருள் சூடிய நாம்
மூவகையாம் அறியாத் தத்துவத்தின் முகம் அறிவார்
நா வகையே நடத்துக் நடை பார்த்து நடந்தனமே -7- அசேதனம் -ஆச்சார்யர்கள் உபதேசித்து அருளினை படியே விளக்கம் –

தீ வகை மாற்றி அன்று ஓர் தேரில் ஆரணம் பாடிய –ஜீவர்கள் இடமுள்ள தீய பிரகாரங்களை நீக்கி -ஒழிக்கக் கருதி -அன்று பாரத யுத்த காலத்தில்
ஒப்பற்ற அர்ஜுனனுடைய தேர்பாகனாய் இருந் வேதாரத்தை ஸ்ரீ கீதா வாயிலாக அருளிச் செய்தவரும்
நம் தேவகி சீர் மகனார் திறம்பா வருள் சூடிய நாம் –தேவகியின் சிறந்த புத்ரருமான நம் ஸ்ரீ கண்ணபிரானுடைய நீங்காத கிருபையை பெற்ற நாம்
மூவகையாம் அறியாத் தத்துவத்தின் முகம் அறிவார் -பிரகிருதி காலம் சுத்த சத்வம் என்று மூவகைப் பட்ட அசேதனங்களுடைய பிரகாரங்களை
நன்கு அறிந்த பராசரர் வியாசர் ஆழ்வார் முதலியவர்களுடைய
நா வகையே நடத்துக் நடை பார்த்து நடந்தனமே -உபதேசத்தின் வழியாகவே நம் ஆச்சார்யர்கள் நடத்துகின்ற பிரகாரத்தை
ஆராய்ந்து நடந்தோம் – இவ்வதிகாரத்தில் வெளியிட்டோம் –

————————————————————

வேலைப் புறம் அகம் காண்பது போல் வேத நன்னெறி சேர்
நூலைப் புறம் அகம் காண்டலில் நுண் அறிவு இன்றி நின்றீர்
மாலைப் பெற வழி காட்டிய தேசிகர் வாசகமே
ஓலைப் புறத்தில் எழுதுகின்றோம் உள் எழுதுமினே -8-ஆச்சார்ய உபதேசத்தின் படி ஈஸ்வர தத்வ விளக்கம்-இதுவும் அடுத்த பாசுரமும் -பரதத்வ அதிகாரம் –

வேலைப் புறம் அகம் காண்பது போல் -சமுத்திரத்தின் வெளியிலும் உள்ளும் முழுதும் காண்பதில் போல்
வேத நன்னெறி சேர் நூலைப் புறம் அகம் காண்டலில்-வேதத்தின் சிறந்த மார்க்கங்களைப் போதிக்கும் சாஸ்திரங்களை
மேலே தோன்றும் அர்த்தத்தையும் உட்கருத்தையும் அறிவதில்
நுண் அறிவு இன்றி நின்றீர்-ஸூஷ்ம புத்தி இல்லாம நின்றவர்கள்
மாலைப் பெற வழி காட்டிய தேசிகர் வாசகமே -எம்பெருமானை நாம் அனுபவிப்பதற்கு உபாயத்தை நமக்கு
காட்டிக் கொடுத்து அருளிய பூர்வாச்சார்யர்களின் உபதேசத்தின் சாரத்தையே
ஓலைப் புறத்தில் எழுதுகின்றோம் உள் எழுதுமினே -இவ்வோலையின் மேல் எழுதுகின்றோம் –இதை உங்கள் மனத்துள் பதிவித்துக் கொள்வீர்களாக —

———————————————–

சிறை நிலையாம் பவத்தில் சிறு தேன் இன்பம் உண்டு உழல்வார்
மறை நிலை கண்டறியா மயல் மாற்றிய மன்னருளால்
துறை நிலை பாரம் எனத் துளங்கா அமுதக் கடலாம்
இறை நிலை யாம் உரைத்தோம் எம் குருக்கள் இயம்பினவே -9-ஈஸ்வர தத்வ விளக்கம் கலக்கம் நீங்கல்-

சிறை நிலையாம் பவத்தில் சிறு தேன் இன்பம் உண்டு உழல்வார் -சிறையின் தன்மையுள்ள சம்சாரத்தில் ஒரு துளி தேன் போலே
அல்ப மான சுகத்தை அனுபவித்து அதிலேயே மண்டி இருப்பவர்களுடையதும்
மறை நிலை கண்டறியா மயல் மாற்றிய மன்னருளால் -வேதத்தின் தாத்பர்யத்தை தெளிந்து அறிய முடியாதபடி செய்வதுமான
அஞ்ஞானத்தைப் போக்கி அருளிய வலிய கிருபையினால்
எம் குருக்கள் இயம்பினவே -எங்கள் பூர்வாச்சார்யர்கள் உபதேசித்து அருளினை படி
துறை நிலை பாரம் எனத் துளங்கா அமுதக் கடலாம் –ஆனந்தக் கடலில் இறங்கும் துறையும் நிலையான நிற்கும் இடமும்
-சம்சாரத்தின் அக்கரையும் என்று கூறும் படி நிலை கலங்காத அம்ருத மயமான சமுத்ரமாகிய
இறை நிலை யாம் உரைத்தோம் -எம்பெருமானுடைய பிரகாரத்தை-ஸ்வரூப ஸ்வபாவங்களை யாம் இந்த அதிகாரத்தில் வெளியிட்டோம் –

————————————————————–

வெறியார் துளவுடை வித்தகன் தன்மையின் மெய்யறிவார்
குறியார் நெடியவர் என்று ஒரு குற்றம் பிறர்க்கு உரையார்
அறியார் திறத்தில் அருள் புரிந்து ஆரண நன்னெறியால்
சிறியார் வழிகள் அழிப்பதும் தீங்கு கழிப்பதற்கே -10-பிற மதங்களைக் கண்டிப்பதின் பயன் -இதுவும் அடுத்த பாசுரமும் -சமுதாய தோஷ அதிகாரம் –

வெறியார் துளவுடை வித்தகன் தன்மையின் மெய்யறிவார் –வாசனை மிகுந்த திருத் துழாயை யுடையவனும்
அதிசய சேஷ்டிதங்களை யுடையவனுமான எம்பெருமானுடைய -ஸ்வரூப ஸ்வபாவங்களின் உண்மையை அறிந்த பூர்வாச்சார்யர்கள்
குறியார் நெடியவர் என்று ஒரு குற்றம் பிறர்க்கு உரையார் –பிறர் விஷயத்தில் குள்ளமானவர் உயரமானவர் என்றால் போன்ற
அல்பமான ஒரு தோஷத்தையும் சொல்ல மாட்டார்கள் –
அப்படியாயினும்
ஆரண நன்னெறியால் -வேதத்தை தழுவிய சிறந்த மார்க்கத்தைக் கொண்டு
சிறியார் வழிகள் அழிப்பதும் –பிற மதத்தாருடைய ஸித்தாந்தத்தைக் கண்டிப்பதும்
எதற்க்காக என்றால்
அறியார் திறத்தில் அருள் புரிந்து -நம் சித்தாந்தத்தை அறிந்து கொள்ளாத பாமரர் விஷயத்தில் கிருபையை வைத்து அருளி
தீங்கு கழிப்பதற்கே–பிற மதபங்களின் தோஷம் தெரியாததால் அவர்கள் வலையில் விழுந்து அவர்களுக்கு வரும் கெடுதியை நீக்குவதற்கே அன்றி வேறு இல்லை –

———————————————

மிண்டுரைக்க விரகு தரும் தருக்கம் கொண்டே வேண்டுங்கால் வேண்டுவதே விளம்புகின்றார்
கண்டதற்கு விபரீதம் கத்துகின்றார் காணாத குறை மறையில் காட்ட நிற்பார்
பண்டு ஒருத்தன் கண்டுரைத்தேன் நானே என்னப் பல வகையில் உபாதிகளால் படிந்து வீழ்வார்
கொண்டல் ஒக்கும் திருமேனி மாயக் கூத்தன் குரை கழல் சேர் விதி வகையில் கூடாதாரே -11-பிற மாதங்களில் பொதுப் படத் தோஷம் கூறுதல் –

மிண்டுரைக்க விரகு தரும் தருக்கம் கொண்டே -மேன்மேலும் விதண்டா வாதம் பேசுவதற்கு இடம் கொடுக்கின்ற குயுக்திகளை மாத்திரம் கொண்டு
வேண்டுங்கால் வேண்டுவதே விளம்புகின்றார் -தமக்கு வேண்டிய சமயத்தில் இஷ்டமான விஷயத்தை தோன்றிய படியே கூறுகின்றவரான
கணாத -கௌதம -வையாகரண-மீமாம்சகரும்
கண்டதற்கு விபரீதம் கத்துகின்றார் -தாம் நேரில் கண்டதற்கு மாறுபட்ட விஷயங்களை ஆரவாரமாகப் பேசுகின்றவர்களான பாஸ்கர யாதவ அத்வைதிகளும்
காணாத குறை மறையில் காட்ட நிற்பார் –அபவ்ருஷேயமான வேதத்தில் காண முடியாத பவ்ருஷேயம் என்னும் குற்றத்தை எடுத்துக் கூற நிற்பவரான சார்வாக பவ்த்த ஜைனரும்-
பண்டு ஒருத்தன் கண்டுரைத்தேன் நானே என்னப்–முன்பு கபிலர் ப்ரஹ்மா பசுபதி ஆகியவர்களில் நானே இந்த மதத்தை யோகத்தால்
கண்டு பிடித்து உபதேசித்தேன் என்று கூற பல வகையில் உபாதிகளால் படிந்து வீழ்வார் -பலவகைப் பட்ட -பொருளாசை அகார சவ்கர்யம்-முதலிய
காரணங்களால் அந்த அந்த மதத்தில் ஈடுபட்டு அழிந்து போகின்றவர்களான சாங்க்ய யோக சைவர்களும்
ஆகிய நான்கு வகையினரும்
கொண்டல் ஒக்கும் திருமேனி மாயக் கூத்தன் குரை கழல் சேர் விதி வகையில் கூடாதாரே -மேகத்தை போன்ற திருமேனி ஸ்வபாவம் யுடைய
அதிசய சேஷ்டிதங்களை யுடைய ஒலிக்கின்ற கழல் -பூண்ட திருவடிகள் -சேருவதற்கு யுரிய பாக்ய விசேஷம் கிடைக்கப் பெறாதவர் ஆவர் –

—————————————————–

கண்டது மெய் எனில் காணும் மறையில் அறிவு கண்டோம்
கண்டது அலாதது இலது எனில் கண்டிலம் குற்றம் இதில்
கண்டது போல் மறை காட்டுவதும் கண்டது ஒத்ததனால்
உண்டது கேட்க்கும் உலோகாயதர் என்று மீறுவதே -12-சார்வாக மத கண்டனம் -இதுவும் அடுத்த பாசுரமும் லோகாயதிக பங்க அதிகாரம் –

கண்டது மெய் எனில் காணும் மறையில் அறிவு கண்டோம் –பிரத்யக்ஷத்தால் கண்ட வஸ்து உண்மையானதாகும் என்று கொள்வதாயின்
பிரத்யக்ஷத்தால் அறியப் படுகின்ற வேதத்தால் பிரத்யக்ஷமாக ஞானம் உண்டாவதைக் காண்கிறோம்
கண்டது அலாதது- இலது எனில்- கண்டிலம் குற்றம் இதில் -மேலும் ப்ரத்யக்ஷத்தால் அறியப் படாத வஸ்து உண்மையன்று என்று கூறுவதாயின் –
வேதத்தால் உண்டாகும் இந்த ஞானத்தில் ஒரு தோஷத்தையும் காணவில்லை
கண்டது போல் மறை காட்டுவதும் கண்டது ஒத்ததனால் –பிரத்யக்ஷத்தை பிரமாணமாக ஏற்றுக் கொள்வதை போலே
வேதத்தால் உண்டாகும் ஞானமும் பிரத்யக்ஷம் என்னும் பிரமானத்தையே ஒத்து இருப்பதால்
உண்டது கேட்க்கும் உலோகாயதர் என்று மீறுவதே -தாம் உண்டதையே பிறரைக் கேட்டுத் தெரிந்து கொள்பவரைப் போன்றவர்களான
சார்வாக மதத்தினர் எப்பொழுது இவற்றை மீறிப் பேச முடியும் –

———————————————————–

கண்டதனால் காணாதது அனுமிக்கின்றார் கண்டு ஒருத்தன் உரைத்ததனைக் கவருகின்றார்
உண்டு பசி கெடும் என்றே உணர்ந்து உண்கின்றார் ஒன்றாலே ஒன்றைத் தாம் சாதிக்கின்றார்
பண்டு முலை யுண்டதனால் முலை யுண்கின்றார் பார்க்கின்றார் பல வல்லாத் தம்மை மற்றும்
கண்டு மதி கெட்ட நிலை காணகில்லார் காணாதது இலது என்று கலங்குவாரே -13-சார்வாகரின் கொள்கையும் செய்கையும் முரண் படுதல்-

காணாதது இலது என்று கலங்குவாரே -ப்ரத்யக்ஷத்தால் அறியப் படாத வஸ்து -முயல் கொம்பு போல் சூன்யம் என்று மனக் கலக்கம் உள்ள சார்வாகர்-
கண்டதனால் காணாதது அனுமிக்கின்றார் -பிரத்யக்ஷத்தால் அறிந்த வஸ்துவைக் கொண்டு -பிரத்யக்ஷத்தால் அறியப் படாத வஸ்து
இருப்பதை ஊகித்து அறிகின்றனர் -புகையைக் கண்டு காணாத அக்னி இருப்பதை அறிவது போலே –
ஒருத்தன் கண்டு உரைத்ததனைக் கவருகின்றார் -வேறு ஒருவன் பிரத்யக்ஷத்தால் அறிந்து கூறிய விஷயத்தை ஏற்றுக் கொள்கின்றனர்
இப்படி அனுமானத்தையும் சப்தத்தையும் பிரமாணமாக ஏற்றுக் கொள்கிறார்கள்
உண்டு பசி கெடும் என்றே உணர்ந்து உண்கின்றார் -உண்ட பிறகு பசி தொலைந்து போம் என்றே அறிந்து உண்கின்றனர்
ஒன்றாலே ஒன்றைத் தாம் சாதிக்கின்றார் -ஒரு ஸ்தானத்தாலே ஒரு வஸ்துவை தங்கள் சாதித்துக் கொள்கின்றனர்
பண்டு முலை யுண்டதனால் முலை யுண்கின்றார் -முன் ஜென்மத்தில் தாய்ப் பாலைப் பருகி அந்த வாசனையால் இந்த ஜென்மத்திலும் தாய்ப் பாலைப் பருகுகின்றனர்
பார்க்கின்றார் பல வல்லாத் தம்மை மற்றும் -மேலும் காய் கால் முதலிய பல அவயவங்களைக் காட்டிலும் வேறுபட்டு நிற்கும் ஜீவாத்ம ஸ்வரூபத்தை –
இது ஏன் சரீரம் இது ஏன் காய் என்ற முறையில் பிரத்யக்ஷத்தாலேயே அறிகின்றனர்
கண்டும் மதி கெட்ட நிலை காணகில்லார் -இப்படித் தம் சித்தாந்தத்திற்கு விரோதமான விஷயங்களை அறிந்தும்
புத்தி கெட்டுத் தாம் பிதற்றும் நிலையை தங்கள் அறிந்து கொள்ள வில்லை –

—————————————

காணாதது இலது எனும் கல்வியினாரைக் கடிந்ததற்பின்
கோணார் குதர்க்கங்கள் கொண்டே குழப்பும் பவுத்தர்களில்
நாணாது அனைத்தும் இலது என்று நால்வகை யன்று இது என்றும்
வாழ் நாள் அறுக்கின்ற மத்திமத்தான் வழி மாற்றுவமே -13-மாத்யமிகரைக் கண்டித்தால் -இதுவும் அடுத்த பாசுரமும் மாத்யமிக பங்க அதிகாரம் –

காணாதது இலது எனும் கல்வியினாரைக் கடிந்ததற்பின் -பிரத்யக்ஷத்தால் காணப் படாத வஸ்து கிடையாது என்ற சித்தாந்தமுடைய சார்வாகரை கண்டித்த பின்
கோணார் குதர்க்கங்கள் கொண்டே குழப்பும் பவுத்தர்களில் -வக்ரத் தன்மை நிறைந்த குயுக்திகளை -சாதனமாகக் கொண்டே உலகத்தை கலக்கும் புத்தர்கள் நால்வரில்
நாணாது அனைத்தும் இலது என்று நால்வகை யன்று இது என்றும் -வெட்கமடையாது சகல வஸ்துக்களுக்கும் இல்லை என்றும்
இந்த பிரபஞ்சம் நான்கு வகையிலும் அடங்காது என்றும் கொண்டு -சர்வம் சூன்யம் என்று –
சத்தாகவோ அசத்தாகவோ சத் அசத் என்றும் -சத் அசத் விலக்ஷணம் என்றும் நான்கு வகைகளும் இல்லை
வாழ் நாள் அறுக்கின்ற மத்திமத்தான் வழி மாற்றுவமே-கணவன் வாழும் நாளிலேயே தாலி அறுக்கின்ற ஸ்த்ரீயைப் போன்ற மாத்யமிகனுடைய ஸித்தாந்தத்தை கண்டிப்போம் –
சகல லோக நாத்தனாய் பிரகாசிக்கின்ற சர்வேஸ்வரனையும் அவனுக்கு உரிய பிரபஞ்ச வஸ்துக்களையும் இல்லையாக்கி
அவன் அருளால் பெரும் பலன்களையும் இழந்தவன் அன்றோ இவன் –

——————————————————

மானம் இலை மேயம் இலை என்று மற்றோர் வாத நெறி இலை என்றும் வாது பூண்ட
தானும் இலை தன்னுரையும் பொருளும் இல்லை என்றும் தத்துவத்தின் உணர்த்தி சயம் இல்லை என்றும்
வானவரும் மானவரும் மனமும் வெள்க வளம் பேசு மதிகேடன் மத்திமத்தான்
தேன நெறி கொண்டு அனைத்தும் திருடா வண்ணம் செழு மதி போல் எழும் மதியால் சேமித்தோமே -15-உலகத்தை மாத்யமிகன் கொள்ளையிடாதபடி காத்தல் –

வானவரும் மானவரும் மனமும் வெள்க -தேவர்களும் மநுஷ்யர்களும் தன் மனமும் கூசும்படி -அவன் மனமும் பரிஹஸிக்கும் படி -அன்றோ இவன் கொள்கை –
மானம் இலை மேயம் இலை என்று மற்றோர் வாத நெறி இலை என்றும்-பிரமாணம் ஒன்றும் இல்லை என்றும்-பிரமானத்தால் அறியப் படும் பொருளும் இல்லை என்றும் –
வேறு ஓர் வாத மார்க்கமும் இல்லை என்றும் –
வாது பூண்ட தானும் இலை தன்னுரையும் பொருளும் இல்லை என்றும் –வாதம் புரியும் தானும் இல்லை என்றும் தன வாக்கியமும் அதன் அர்த்தமும் இல்லை என்றும்
தத்துவத்தின் உணர்த்தி சயம் இல்லை என்றும் -தத்துவத்தின் அறிவும் வாதத்தில் ஐயமும் இலை என்றும் -இப்படி சர்வம் சூன்யம் என்று கூறி
வளம் பேசு மதிகேடன் மத்திமத்தான் -தன் மதத்தின் பெருமையைப் பேசுகின்ற அறிவு கெட்டவனாகிய மாத்யமிகன்
தேன நெறி கொண்டு அனைத்தும் திருடா வண்ணம் செழு மதி போல் எழும் மதியால் சேமித்தோமே -திருட்டு வழியைக் கொண்டு சகல தத்துவங்களையும்
இல்லையாக்காத படி பூர்ண சந்திரனைப் போலே வ்ருத்தி யடைகின்ற ஞானத்தால் உலகத்தை அவன் இடம் இருந்து ரஷித்தோம்-

—————————————————————–

முற்றும் சகத்து இலது என்றே புகட்டிய முத்தரை நாம்
சுற்றும் துறந்து துறையில் நின்றே துகளாக்கிய பின்
மற்று ஓன்று இலது மதி பல உண்டு என்று வஞ்சனையால்
சற்றும் துறந்த யோகாசாரனைச் சதிக்கின்றனமே–16-யோகாசார மத கண்டனம் -இதுவும் அடுத்த பாசுரமும் யோகாசார பங்க அதிகாரம் –

முற்றும் சகத்து இலது என்றே புகட்டிய முத்தரை நாம் -உலகம் முழுதும் இல்லையென்றே மயக்கிய மூடரான மாத்யமிகரை நாம்
சுற்றும் துறந்து துறையில் நின்றே துகளாக்கிய பின் -வேதாந்த மார்க்கத்தில் நிலை பெற்று நின்றே முழுதும் ஒழித்து பொடியாக்கிய பிறகு
மற்று ஓன்று இலது மதி பல உண்டு என்று வஞ்சனையால் பலவிதமான ஞானம் உண்டு –ஞானத்தை தவிர வேறு ஒரு வஸ்துவும் இல்லை என்று கூறி–
அறிவு ஒன்றே மெய்யான பொருள் அது பலவகைப்படும் -அதைத் தவிர அறிபவனும் அறியப் படும் பொருள்களும் இல்லை-என்று கூறி – வஞ்சிக்கக் கருதியதால்
சற்றும் துறந்த யோகாசாரனைச் சதிக்கின்றனமே–அறிபவனான தன்னையும் அனுபவிக்கப்படும் வஸ்துக்களையும் இல்லையாக்கியதால்
இம்மையிலும் மறுமையிலும் அல்ப பலனையும் இழந்த யோகாசாரனைக் கண்டிப்போம் –

—————————————-

உளக் கதியை நாம் உள்ளி யுள்ளம் தேறி யுலகத்தார் யுகந்து இசைய யுலகு யுண்டு என்றோம்
இளக்க வரிதாகிய நல் தருக்கம் சேர்ந்த எழில் மறையில் ஈசனுடன் எம்மைக் கண்டோம்
விளக்கு நிரை போல் மதிகள் வேறாய் வேறு ஓன்று அறியாதே விளங்கும் என விளம்புகின்ற
களக் கருத்தன் கண்ணிரண்டும் அழித்தோம் நாணாக் காகம் போல் திரிந்து அவன் கதறுமாறே -17-யோகாசாரன் இல்லையாக்கிய உலகை ஸ்தாபித்தல் –

உளக் கதியை நாம் உள்ளி யுள்ளம் தேறி யுலகத்தார் -நாம் பிரமாணங்களை அனுசரித்து நம் மனம் செல்லுகின்ற முறையை ஆராய்ந்து மனம் தெளிந்து உலகில் உள்ளோர்
யுகந்து இசைய யுலகு யுண்டு என்றோம் -மகிழ்ந்து ஏற்றுக் கொள்ளும் படி உலகத்தை உண்மை என்று விளக்கினோம்
இளக்க வரிதாகிய நல் தருக்கம் சேர்ந்த எழில் மறையில் ஈசனுடன் எம்மைக் கண்டோம் -அசைப்பதற்கு முடியாத -சிறந்த யுக்திகளுடன் கூடிய பெருமையுள்ள வேதத்தில்
ஈஸ்வரனையும் ஜீவர்களாகிய எங்களையும் வகுத்து அறிந்தோம் -தத்வத்ரய ஞானம் பெற்றோம் -என்றவாறு –
விளக்கு நிரை போல் மதிகள் வேறாய் வேறு ஓன்று அறியாதே விளங்கும் என விளம்புகின்ற –ஞானங்கள் தீபத்தின் ஜ்வாலைகளின் வரிசை போலே
வெவ்வேறாக இருந்து தம்மைத் தவிர வேறு ஒரு வஸ்துவையும் அறியாது பிரகாசிக்கும் என்று கூறுகின்ற –
க்ஷணம் தோறும் உண்டாக்கிக் கொண்டு இருக்கும் ஞானங்களின் சந்ததியே ஆத்மா எனப்படுகிறது என்பர் இவர்கள் –
இப்படி யாயின் ஆத்மா அநித்தியம் என்று ஏற்படுமே -அதே ஆத்மா என்று உண்டாகும் ஞானத்தாலோ ஆத்மா ஸ்திரம் என்று தெரிகின்றதே –
இப்படி முரண் படுகிறதே என்ன ஜ்வாலை க்ஷணம் தோறும் வெவ்வேறாக இருந்தும் அதே தீப ஜ்வாலை என்ற அறிவு யுண்டாவது போல்
ஞானமும் ஒரே விதமாய் உண்டாவதால் அதே ஆத்மா என்ற அறிவு யுண்டாகின்றது -உண்மையில் ஆத்மா அநித்யமே என்பதாகும் இவன் சித்தாந்தத்தில்
களக் கருத்தன் கண்ணிரண்டும் அழித்தோம் நாணாக் காகம் போல் திரிந்து அவன் கதறுமாறே -கள்ளக் கருத்தை யுடைய யோகாசாரனுடைய
இரண்டு கண் போல் முக்கியமான அறிபவன் பொய்-அறியப்படும் வஸ்துவும் பொய் என்ற அம்சங்களையும் ஒருவரும் இசையாமல் ஒழித்தோம்-
அந்த யோகாசாரன் வெட்கமற்ற காகனைப் போல் அலைந்து கதறும் விதம் எத்தகையது —

—————————————————————————–

பொருள் ஓன்று இலது என்று போதம் ஒன்றும் கொண்ட பொய்யரை நாம்
தெருள் கொண்டு தீர்த்த பின் காண ஒண்ணாப் பொருள் தேடுகின்ற
மருள் கொண்ட சூது யுரைக்கும் சவ்த்திராந்திகன் வண்ணிக்கை நாம்
இருள் கொண்ட பாழும் கிணறு என்று இகழ்ந்து ஓட வியம்புவமே -18-சவ்த்திராந்திக மத கண்டனம் -இதுவும் அடுத்த பாசுரமும் சவ்த்திராந்திக பங்க அதிகாரம் –

பொருள் ஓன்று இலது என்று போதம் ஒன்றும் கொண்ட பொய்யரை நாம் -வெளிப்படையான வஸ்து ஒன்றும் இல்லக்கை என்று நிச்சயித்து
ஞானம் என்ற ஒரே வஸ்துவைக் கொண்ட பொய்யே பேசும் யோகாசரர்களை நாம்
தெருள் கொண்டு தீர்த்த பின் காண ஒண்ணாப் பொருள் தேடுகின்ற -சிறந்த ஞானத்தைக் கொண்டு கண்டித்த பின் ப்ரத்யக்ஷத்தால் அறிய முடியாத
வஸ்துவை உண்டு என்று அங்கீகரித்து அனுமானத்தாலே சாதிக்க முற்படுகின்றவனும் –
மருள் கொண்ட சூது யுரைக்கும் சவ்த்திராந்திகன் வண்ணிக்கை நாம் -அஞ்ஞானத்தால் கைக் கொண்ட கபட யுக்திகளைப் பேசுகின்றவனுமான
சவ்த்திராந்திகனுடைய மத வர்ண பிரகாரத்தை
இருள் கொண்ட பாழும் கிணறு என்று இகழ்ந்து ஓட வியம்புவமே -இருள் நிறைந்த பாழும் கிணறு என்று ஜனங்கள்
நினைத்து வெறுத்து விலகும்படி நாம் கண்டித்துப் பேசுவோம் —

————————————————

நிலையில்லாப் பொருள் மதியை விளைத்துத் தான் சேர் நிறம் கொடுத்துத் தான் அழியும் தன்னால் வந்த
நிலையில்லா மதி தன்னிறத்தைக் காணும் இது காணும் பொருள் காண்கை என்ற நீசன்
முலையில்லாத் தாய் கொடுத்த முலைப் பால் யுண்ணும் முகமில்லா மொழி எனவே மொழிந்த வார்த்தை
தலையில்லாத் தாள் ஊரும் கணக்காய் நின்ற கட்டளை நாம் கண்டு இன்று காட்டினோமே-19-சவ்த்ராந்திகனின் முரண்பாடு –

நிலையில்லாப் பொருள் மதியை விளைத்துத் தான் சேர் நிறம் கொடுத்துத் தான் அழியும் –நிலையற்ற க்ஷணிகமான வஸ்துவானது ஞானத்தை யுண்டாக்கி
தான் அடைந்த நீலம் மஞ்சள் முதலிய நிறங்களை அந்த ஞானத்தால் கொடுத்து வஸ்துவாகிய தான் அழிந்து போம்
தன்னால் வந்த – நிலையில்லா மதி தன்னிறத்தைக் காணும் –வஸ்துவாகிய தான் அழிந்து போம் அநித்யமான ஞானமானது தன்னிடத்தில் நீலம் மஞ்சள் முதலிய
நிறங்களை சாஷாத்கரிக்கும்
இது காணும் பொருள் காண்கை என்ற நீசன் -இப்படி தன்னிடத்து நிறங்களைக் காண்பதுவே வஸ்து சாஷாத்காரம் ஆகும் என்ற சித்தாந்தம் கொண்டவனும்
முலையில்லாத் தாய் கொடுத்த முலைப் பால் யுண்ணும் -ஸ்தனம் இல்லாத தாயினால் கொடுக்கப் பட்ட ஸ்தன்யத்தைப் பருகுமவன் போன்றவனுமான
அல்பனான சவ்த் ராந்திகனாலே
முகமில்லா மொழி எனவே மொழிந்த வார்த்தை -வாய் இல்லாமல் பேசுகிற வார்த்தை என்று கூறும்படி கூறப்பட்ட தன் சித்தாந்த வாக்யமானது –
வெளிப்படைப் பொருள்கள் பாஹ்ய வஸ்துக்கள் ஞானத்தை உண்டாக்கி அந்த பொருள்களின் நிறங்களை அந்த ஞானத்திடம் கொடுத்து தாம் அழிந்து விடுகின்றன –
ஆதலால் அழிவதே தன்மையாய் யுள்ள அந்த பொருள்களை இந்த்ரியங்களால் அறிய முடியாது -பொருள்கள் அழிந்தாலும் ஞானத்தில் கொடுத்த நிறங்களைக் கொண்டு
அனுமானம் செய்து அப்பொருள்களை அறியலாம் -அந்த பொருள்களால் உண்டாக்கப்பட்ட ஞானமும் ஒரே க்ஷணம் இருந்து நசிக்கின்றது –
இந்த ஞானமே ஆத்மா எனப்படும் -நிறங்களை அனுபவிக்கும் இந்த அனுபவமே வஸ்து சாஷாத்காரம் எனப்படும் என்பதே இவர்கள் சித்தாந்தம் –
தலையில்லாத் தாள் ஊரும் கணக்காய் நின்ற கட்டளை நாம் கண்டு இன்று காட்டினோமே-தலையில்லாத பாதங்கள் நடக்கின்ற ரீதியிலே
நிற்கின்ற பிரகாரத்தை நாம் அறிந்து இன்று வெளியிட்டோம் –

———————————————

காண்கின்றவன் இலை காட்சியும் கண்டதும் யுண்டு அவை தாம்
ஏண் கொண்டன அன்று இவற்றில் குணமும் நிலையும் இலை
சேண் கொண்ட சந்ததியால் சேர்ந்தும் ஓன்று என நிற்கும் என்ற
கோண் கொண்ட கோளுரை வைபாடிகன் குறை கூறுவமே-20-வைபாஷிக மத கண்டனம்-இதுவும் அடுத்த பாசுரமும்-வைபாஷிக பங்க அதிகாரம் –

காண்கின்றவன் இலை காட்சியும் கண்டதும் யுண்டு அவை தாம் -வஸ்துக்களை அறிபவனாகிய ஜீவன் என்பவன் இல்லை -அறிதல் என்னும் செய்கையும்
அறியப் படுகின்ற வஸ்துவும் உண்மையாய் உள்ளவை -அந்த அறிகையும் அறியப்படும் வஸ்துவும்
ஏண் கொண்டன அன்று இவற்றில் குணமும் நிலையும் இலை -எண்ணிக்கைக்கு அடங்கியன வல்ல -இந்த அறிகையிலும் அறியப் படுமவற்றிலும்
ஒரு குணமும் நிலைத்து நிற்கும் தன்மையும் இல்லை -க்ஷணம் காலமே இருந்து அழிபவை-
சேண் கொண்ட சந்ததியால் சேர்ந்தும் ஓன்று என நிற்கும் என்ற -நெடும் காலம் வாழ்வைக் கொண்ட வரிசையினால் பரமாணுக்கள் ஓன்று கூடியும்
ஓன்று என்று கூறும்படி நிற்கும் என்று கூறிய
கோண் கொண்ட கோளுரை வைபாடிகன் குறை கூறுவமே-வக்ரத் தன்மை கொண்ட குறளை மொழி பேசுகின்ற வைபாஷிகனிடம் உள்ள தோஷங்களை விளக்குவோம் –

——————————————

கும்பிடுவார் ஆர் என்று தேடுகின்றார் குணங்களையும் தங்களுக்குக் கூறுகின்றார்
தம் படியைத் தமர்க்கு உரைத்துப் படிவிக்கின்றார் தமக்கு இனி மேல் வீடு என்று சாதிக்கின்றார்
தம் புடவை உணல் குறித்து நெடிது எண்கின்றார் சந்ததிக்குத் தவம் பலிக்கத் தாம் போகின்றார்
செம்படவர் செய்கின்ற சிற்றினிப்பைச் சேவகப் பற்றுடனே நாம் செகுத்துட்டோமே -21-வைபாஷிக மதம்- கொள்கை -செய்கை- முரண்பாடு –

கும்பிடுவார் ஆர் என்று தேடுகின்றார் குணங்களையும் தங்களுக்குக் கூறுகின்றார் -தம்மை வணங்குகின்ற சீடர்கள் யாவர் என்று தேடிக் கொண்டே இருப்பவர்களும்
தங்களுக்கு அஹிம்சை வைராக்யம் முதலிய குணங்கள் இருப்பனவாகவும் கூறிக் கொள்பவர்களும்
தம் படியைத் தமர்க்கு உரைத்துப் படிவிக்கின்றார் தமக்கு இனி மேல் வீடு என்று சாதிக்கின்றார் -தம்முடைய மதக் கொள்கையை தம் சிஷ்யர்களுக்கு உபதேசித்து
அவர்களையும் அதில் ஈடுபடச் செய்பவர்களும் இனி மேல் தங்களுக்கு மோக்ஷம் கிடைப்பது நிச்சயம் என்று உறுதி கூறுபவர்களும்
தம் புடவை உணல் குறித்து நெடிது எண்கின்றார் -தங்களுக்கு வேண்டிய ஆடையையும் ஆஹாரத்தையும் குறித்து அதிகமாகக் கவலை அடைபவர்களும்
சந்ததிக்குத் தவம் பலிக்கத் தாம் போகின்றார் -தம் சந்ததியாருக்குப் பலன் கிடைப்பதற்காக தங்கள் தவம் புரிபவர்களுக்கு
செம்படவர் செய்கின்ற சிற்றினிப்பைச் சேவகப் பற்றுடனே நாம் செகுத்துட்டோமே–வலை போட்டு மீன்களைப் பிடிக்கும் -செம்படவரை ஒத்தவர்களுமான —
குயுக்திகளை வீசி ஜனங்களை கவர்ந்து -காஷாயமும் அணிந்து – வைபாஷிகர்கள் கைக் கொண்ட கேட்க்கும் போது மாத்ரம் இனியனவாகத் தோற்றுகின்ற
அல்பராசமான வாதங்களை அவர்களது வீரச் செருக்குடன் நாம் ஒழித்திட்டோம் –

————————————-

வேதங்கள் மௌலி விளங்க வியாசன் விரித்த நன்னூல்
பாதங்களான பதினாறில் ஈசன் படி மறைத்துப்
பேதங்கள் இல்லை என்று ஓர் பிரமப் பிச்சு இயம்புகின்ற
போதம் கழிந்தவனைப் புத்தர் மாட்டுடன் பூட்டுவமே -22-அத்வைத மத கண்டனம் இதுவும் அடுத்த பாசுரமும்-பிரசன்ன புத்த பங்க அதிகாரம் –

வேதங்கள் மௌலி விளங்க வியாசன் விரித்த நன்னூல் -வேதங்களின் முடியாகிய வேதாந்த சாஸ்திரம் பிரகாசிக்கும் படி
ஸ்ரீ வேத வியாச முனிவரால் விளக்கி அருளப் பட்ட சிறந்த ஸ்ரீ ப்ரஹ்ம சூத்ரங்களின்
பாதங்களான பதினாறில் ஈசன் படி மறைத்துப் -நான்கு அத்தியாயங்களில் உள்ள பதினாறு பாதங்களில் நிச்சயிக்கப்பட்ட
எம்பெருமானுடைய குணம் திருமேனி முதலிய பிரகாரங்களை இல்லையாக்கி
பேதங்கள் இல்லை என்று ஓர் பிரமப் பிச்சு இயம்புகின்ற-பேதங்களே இல்லை என்று கொண்டு நிகரற்ற ப்ரஹ்மத்துக்கு பிரமத்தை- அஞ்ஞானத்தை -கற்பித்து கூறுகின்ற
போதம் கழிந்தவனைப் புத்தர் மாட்டுடன் பூட்டுவமே -தத்துவ ஞானம் நீங்கியவனை புத்த மதத்தினராகிய மாட்டுடன் ஓன்று சேர்த்து விடுவோம் –

—————————————–

பிரிவில்லா இருள் ஓன்று பிணக்கு ஓன்று இல்லாப் பெரு வெயிலை மறைத்து உலகம் காட்டும் என்ன
அறிவு இல்லா அறிவு ஒன்றை அவித்தை மூடி யகம் புறம் என்று இவை யனைத்தும் அமைக்கும் என்பார்
செறிவில்லாப் புத்தருடன் சேர்ந்து கெட்டார் சீவனையும் ஈசனையும் சிதைக்கப் பார்த்தார்
நெறியில்லா நேர் வழியும் தானே ஆனான் நெடுநாளாய் நாம் அடைந்து நிலை பெற்றோமே -23-ப்ரஹ்மத்துக்கு அவித்யையின் சம்பந்த கண்டனம் –

பிரிவில்லா இருள் ஓன்று பிணக்கு ஓன்று இல்லாப் பெரு வெயிலை மறைத்து உலகம் காட்டும் என்ன -வேறுபடுதல் இல்லாத ஓர் இருளானது
விரோதம் ஒன்றும் இல்லாத மறைக்க முடியாத பெரிய வெளிச்சத்தை மறைத்து விட்டு உலகத்தைப் பிரகாசிக்கும் என்று கூறுவது போலே
அறிவு இல்லா அறிவு ஒன்றை அவித்தை மூடி யகம் புறம் என்று இவை யனைத்தும் அமைக்கும் என்பார் -அவித்யையானது ஞானம் என்ற குணம் இல்லாத
ஞான ஸ்வரூபமான ஒரு ப்ரஹ்மத்தை மறைத்து ஆத்மா முதலிய உள்ளேயுள்ள வஸ்துக்கள் -ஐந்து பூதங்களும் அவற்றால் யாகியவனவுமாகிய வெளிப்படையான
வஸ்துக்கள் என்று சொல்லப் படுகின்ற இந்த உலக வஸ்துக்கள் முழுவதையும் ஸ்ருஷ்டிக்கும் என்று கூறும் அத்வைதிகள்
செறிவில்லாப் புத்தருடன் சேர்ந்து கெட்டார் சீவனையும் ஈசனையும் சிதைக்கப் பார்த்தார் –வைதிகருடன் சேரத் தகாத புத்த மதத்தோருடன் மத விஷயங்கள்
சிலவற்றில் ஒத்து இருந்து கெட்டவர்களாகி ஜீவாத்மாவையும் ஈஸ்வரனையும் -அவர்களின் பேதத்தை இசையாது கெடுக்க முற்பட்டார்கள்
நெறியில்லா நேர் வழியும் தானே ஆனான் நெடுநாளாய் நாம் அடைந்து நிலை பெற்றோமே –அம்மாதத்தில் சேராத நாம் தன்னை அடைதற்கு வேறோர்
உபாயம் இல்லாத நேரிய உபாயமாகவும் தானே ஆகி நிற்பவனான எம்பெருமானை சரணமாக அடைந்து நம் ஸ்வரூபம் உஜ்ஜீவிக்கப் பெற்றோம் –

——————————————–

சோதனை விட்டு ஒருத்தன் சொல மெய்யெனச் சோகதரைச்
சேதனை யற்றவர் என்று சிதைத்த பின் சீவர்கட்க்கு ஓர்
வேதனை செய்கை வெறும் மறம் என்று விளம்பி வைத்தே
மா தவம் என்று மயிர் பறிப்பார் மையல் மாற்றுவமே -24-ஜைன மத கண்டனம் இதுவும் அடுத்த பாசுரமும்-ஜைன பங்க அதிகாரம் –

சோதனை விட்டு ஒருத்தன் சொல மெய்யெனச் சோகதரைச் –அபவ்ருஷேயமான வேத விதியைக் கை விட்டு புத்தன் என்னும் ஒருவன் உபதேசிக்க
அவனது உபதேசத்தை சத்யம் என்று கொண்ட புத்தர்களை
சேதனை யற்றவர் என்று சிதைத்த பின் சீவர்கட்க்கு ஓர் -ஞானம் இல்லாதவர் என்று விளக்கி அவர்கள் மதத்தைக் கண்டித்த பின் ஜீவர்க்கு
வேதனை செய்கை வெறும் மறம் என்று விளம்பி வைத்தே -ஒரு துன்பத்தை செய்கை வீணான பாபம் என்று கூறிக் கொண்டே
மா தவம் என்று மயிர் பறிப்பார் மையல் மாற்றுவமே -பெரிய தவம் என்று நினைத்து தங்கள் மயிரைப் பறிப்பவர்களான ஜைனர்களின் அஞ்ஞானத்தைப் போக்குவோம் –

—————————————

சொன்னார் தாம் சொன்னது எலாம் துறவோம் என்றும் சொன்னதுவே சொன்னது அலது ஆகும் என்றும்
தின்னாதும் தின்னுமதும் ஏகம் என்றும் சிறியனுமாம் பெரியனுமாம் சீவன் என்றும்
மன்னாது மன்னுமதும் ஒன்றே என்றும் வையம் எலாம் விழுகின்றது என்றும் என்றும்
தென்னாடும் வடநாடும் சிரிக்கப் பேசும் சின நெறியார் சினம் எல்லாம் சிதைத்திட்டோமே -25-ஜைன மத முரண்பட்ட கொள்கை –

சொன்னார் தாம் சொன்னது எலாம் துறவோம் என்றும் -அந்த அந்த மதத்தை ப்ரவர்த்தித்தவர் சொல்லிய விஷயங்களை எல்லாம் விலக்க மாட்டோம் என்றும்
சொன்னதுவே சொன்னது அலது ஆகும் என்றும் –சொல்லப் பட்ட விஷயமே சொல்லப் படாத விஷயமாக ஆகும் என்றும்
தின்னாதும் தின்னுமதும் ஏகம் என்றும் சிறியனுமாம் பெரியனுமாம் சீவன் என்று -உண்ணக் கூடாத பதார்த்தமும் உண்ணக் கூடிய பதார்த்தமும் ஓன்று தான் என்றும்
ஜீவாத்மா சிறியனாகவும் ஆகும் பெரியனாகவும் ஆகும் என்றும்
மன்னாது மன்னுமதும் ஒன்றே என்றும் வையம் எலாம் விழுகின்றது என்றும் என்றும் -அநித்ய வஸ்துவும் நித்ய வஸ்துவும் ஓன்று தான் என்றும்
பூமி முழுதும் எப்பொழுதும் கீழே விழுகின்றது என்றும் -இப்படி ஒன்றுக்கு ஓன்று விரோதமாக
தென்னாடும் வடநாடும் சிரிக்கப் பேசும் சின நெறியார் சினம் எல்லாம் சிதைத்திட்டோமே -தென் தேசமும் வடதேசமும் பரிகாசம் செய்யும்படி
பேசுகின்ற ஜைன மதத்தினருடைய கோபத்துடன் கூறும் வாதத்தை எல்லாம் ஒழித்திட்டோம் —

———————

ஏகாந்திகம் ஒன்றும் இல்லை என்று ஆசையைத் தாம் உடுப்பார்
சோகாந்தமாக துறப்புண்ட பின் தொழில் வைதிகம் என்று
ஏகாந்திகள் சொன்ன ஈசன் படியில் விகற்பம் எண்ணும்
லோகாந்த வீணர் தம் வேதாந்த வார்த்தை விலக்குவமே-26—பாஸ்கர யாதவ மத கண்டனம் இதுவும் அடுத்த பாசுரமும்-பாஸ்கராதி பங்க அதிகாரம்–

ஏகாந்திகம் ஒன்றும் இல்லை என்று ஆசையைத் தாம் உடுப்பார் -திசையையே ஆடையாக உடுப்பவரான ஜைனர்கள் ஒரு வஸ்துவும் ஒரே விதமான
ஸ்வபாவத்தை யுடையது அன்று என்று கூறிக் கொண்டு இருந்து
சோகாந்தமாக துறப்புண்ட பின் தொழில் வைதிகம் என்று –சோர்வையே முடிவாகப் பெற்று நம்மால் கண்டித்து விலக்கப் பட்ட பின் வேத விசாரமே
தமது தொழில் என்று உறுதி கொண்டு
ஏகாந்திகள் சொன்ன ஈசன் படியில் விகற்பம் எண்ணும்–ப்ரஹ்மத்தை ஏக ரூபமாகக் கண்ட ஸ்ரீ வேத வியாசர் ஸ்ரீ பராசரர் முதலிய வர்களால் விளக்கப் பட்ட
ப்ரஹ்மத்தின் ஸ்வரூபத்தில் பேதம் அபேதம் எண்ணும் முரண்பட்ட அம்சங்களைக் கல்பிக்குமவர்களாய்
லோகாந்த வீணர் தம் வேதாந்த வார்த்தை விலக்குவமே-உலகத்தில் அறிவு அற்றவர்களாய்ப் பயன் அற்றவர்களான பாஸ்கர யாதவர்களுடைய
வேதாந்தத்தைத் தழுவியனவாக அவர்கள் கூறும் வாக்கியங்களைகே கண்டிப்போம் –
பேதமும் அபேதமும் இருளும் ஒளியும் போல் ஒன்றுக்கு ஓன்று முரண்பட்டு நிற்பதை அறியாது குருடர்களாகி
சகல பலன்களையும் இழந்த இவர்கள் லோகாந்த வீணர் எனப்பட்டனர் –

——————————————-

ஓன்று எனவும் பல வெனவும் தோற்றுகின்ற யுலகு எல்லாம் ஒரு பிரமம் தானேயாக்கி
நன்று எனவும் தீ எனவும் பிரிந்த வெல்லாம் நன்று அன்று தீது அன்று என நவின்றார்
கன்றும் அலராகி பசுவும் அலராகி நின்றே கன்றாகிப் பசுவாகி நின்ற வண்ணம்
இன்று மறை மாட்டுக்கு ஓர் இடையனான ஏகாந்தி இசைந்திட நாம் இயம்பினோமே -27-பாஸ்கர -யாதவ மதம் -பேத அபேதத்தைக் கண்டித்தல்-

ஓன்று எனவும் பல வெனவும் தோற்றுகின்ற யுலகு எல்லாம் ஒரு பிரமம் தானேயாக்கி-ஒரே வஸ்து என்னும்படியாகவும் பல வஸ்துக்கள் என்னும்படியாகவும்
பிரகாசிக்கின்ற உலகம் முழுவதையும் ஒரு ப்ரஹ்ம ஸ்வரூபமாகவே கல்பித்து
நன்று எனவும் தீ எனவும் பிரிந்த வெல்லாம் நன்று அன்று தீது அன்று என நவின்றார் -கைக் கொள்ளத் தக்கவை என்றும் விலக்கத் தக்கவை என்றும்
சாஸ்திரங்களில் பிரித்துக் கூறப்பட்ட வஸ்துக்களை எல்லாம் சிறந்தன வல்ல கெட்டனவும் அல்ல என்று தம் மதத்தை பாஸ்கரர்களும் யாதவர்களும் கூறினார்கள்
கன்றும் அலராகி பசுவும் அலராகி நின்றே கன்றாகிப் பசுவாகி நின்ற வண்ணம் -கன்றாகவும் ஆகாமல் பசுவாகவும் ஆகாமல் இருந்தே
கன்றாகவும் பசுவாகவும் ஆகி நின்ற பிரகாரத்தை
இன்று மறை மாட்டுக்கு ஓர் இடையனான ஏகாந்தி இசைந்திட நாம் இயம்பினோமே -வேதமாகிய பசுவுக்கு ஒப்பற்ற இடையனான ஒரே நிலையில் உள்ள
எம்பெருமான் திரு உள்ளம் உகக்கும்படி இன்று நாம் வெளியிட்டோம் –
ஏகாந்தி -ப்ரஹ்ம ஸ்வரூபம் சேதன அசேதனங்களாக மாறுபடும் தன்மை உள்ளதாக கூறுவதை கண்டிக்க ஏகாந்தி என்னும் பிரயோகம் –
அபேதம் இயற்க்கை -பேதம் உபாதியால்-என்பர் பாஸ்கரர் – அசேதனத்துக்கும் ப்ரஹ்மத்துக்கும் ஜீவனுக்கும் ப்ரஹ்மத்துக்கும் உள்ள பேதம் அபேதம் இரண்டுமே
இயற்க்கை என்பர் யாவர் -ஜாதி ஒரே விதம்–கடத்வம் போலே என்றும் வியக்தி ஒவ் ஒரு வஸ்துவையும் குறிக்கும் /
காரணத்வமும் கார்யத்வமும் ஒவ் ஓர் வஸ்துவிலும் உண்டு -ஜாதி காரணம் நிலையில் அபேதமும் வியக்தி கார்யம் நிலையில் பேதமும் ஆகின்றது என்பர் –
இப்படி உலகம் முழுவதும் ப்ரஹ்மமாகவே இருக்கின்றது -என்பர்
நாம் சரீராத்மா பாவத்தால் ப்ர ப்ரஹ்மம் சகல வஸ்து விலக்ஷணம் -என்று கண்ணன் இடையனாய் ஸ்ரீ கீதை என்னும் பால் அமுதை ஈந்து –
அவன் திரு உள்ளம் உகக்குமாறு ஸித்தாந்தம் வேதாந்தம் படி கொண்டுள்ளோம் –

————————————-

சாயா மறைகளில் சத்தம் தெளிந்திடச் சாற்றுதலால்
தூயார் இவர் என்று தோன்ற நின்றே பல சூதுகளால்
மாயா மதமும் மறு சின வாதும் பவுத்தமும் சேர்
வையாகரணர் சொல்லும் மறு மாற்றங்கள் மாற்றுவமே -28-வையா கரண மத கண்டனம் -இதுவும் அடுத்த பாசுரமும் வையா கரண பங்க அதிகாரம் –

சாயா மறைகளில் சத்தம் தெளிந்திடச் சாற்றுதலால் -ஸ்வரமும் அக்ஷரமும் மாத்திரை அளவும் தவறாமல் உச்சரிக்க வேண்டிய வேதங்களில் உள்ள
பதங்கள் நன்கு விளங்கும் படி வியாகரண சாஸ்திரத்தின் உதவியால் ஸ்தாபித்த படியால்
தூயார் இவர் என்று தோன்ற நின்றே பல சூதுகளால்-இந்த வையா கரணர் பரிசுத்தர் என்று உலகுக்குத் தோன்றும்படி இருந்தே பல கபடங்களால்
மாயா மதமும் மறு சின வாதும் பவுத்தமும் சேர் -மாயையைக் கொள்கின்ற அத்வைத மதத்தையும் வேறு ஒரு ஜைன மதம் என்னும்படி யுள்ள
பாஸ்கர யாதவ மதத்தையும் புத்த மதத்தையும் -பிரபஞ்சம் ப்ரஹ்மத்தின் விவர்த்தம் என்பதில் அத்வைதிகள் போலேயும்-பரிணாம விஷயத்தில்
பாஸ்கர யாதவ மதம் போலேயும் பிரதீபை ஞானத்தால் புத்த மதம் போலேயும் வையா கரண வாதம் -உண்டு
வையாகரணர் சொல்லும் மறு மாற்றங்கள் மாற்றுவமே -வையா கரண மதத்தோரால் சொல்லப்படுகின்ற எதிர்வாதங்களை ஒழித்து விடுவோம் —

———————————————————–

கலகத்தில் கலங்கி வரும் காணிக்கு எல்லாம் கண்ணாறு சதிர வழி காட்டுவார் போல்
உலகத்தில் மறை சேர்ந்த யுரைகள் தம்மால் ஒரு பிழையும் சேராமல் உபகரித்தார்
பல கத்தும் பவுத்தர் முதலான பண்டைப் பகற் கள்ளர் பகட்டு அழிக்கப் பரவும் பொய்யாம்
சில கற்றுச் ஸித்தாந்தம் அறிய கில்லாச் சிறுவர் இனி மயங்காமல் சேமித்தோமே -29-வையா கரணர் பிற மதத்தினரால் மயங்கியமை –

கலகத்தில் கலங்கி வரும் காணிக்கு எல்லாம் கண்ணாறு சதிர வழி காட்டுவார் போல் –நில விஷயமான வழக்கில் இன்னாருடையது என்று
நிச்சயிக்க முடியாமல் ஸந்தேஹத்திற்கு இடமான நிலங்களுக்கு எல்லாம்
கண்ணாறு என்று சொல்லப்படுகின்ற எல்லையை ஏற்படுத்தி வழக்கைத் தீர்க்கும் மத்யஸ்தர்களைப் போலே வையா கரணர்
உலகத்தில் மறை சேர்ந்த யுரைகள் தம்மால் ஒரு பிழையும் சேராமல் உபகரித்தார் -வேதத்தில் உள்ள வாக்யங்களால் இவ்வுலகத்தில்
விபரீதமான அர்த்தம் கொடுத்தலாகிய ஒரு தவறும் நேரிடாதவாறு உதவி செய்தனர் –
பல கத்தும் பவுத்தர் முதலான பண்டைப் பகற் கள்ளர் பகட்டு அழிக்கப் பரவும் பொய்யாம் சில கற்றுச்-பல விஷயங்களைப் பிதற்றுகின்ற பவுத்தர் முதலான
பழைமையான பகல் திருடர்களின் ஆடம்பரம் -விவேகத்தை -ஒழிக்க -அதனால் ஆதரிக்கப் படுகின்ற பொய்யான சில விஷயங்களைக் கற்றுக் கொண்டு
வேதாந்தங்கள் தத்துவ அர்த்தங்களை விளக்கிக் கொண்டே இருக்கும் போதே புத்தர் முதலியோர் அவற்றை இல்லை யாக்குவது பற்றிப் பகற் கள்ளர் எனப் பட்டனர் –
ஸித்தாந்தம் அறிய கில்லாச் சிறுவர் இனி மயங்காமல் சேமித்தோமே -வேதாந்திகளான நம் சித்தாந்தத்தை அறிய மாட்டாத அல்ப ஞானம் யுடையவர்களான
வையா கரணர்கள் இனிக் கலக்கமுறாத படி தத்துவ அர்த்தங்களை விளக்கி அவர்களைக் காப்பாற்றினோம் –

———————————————–

கண்டது அலாதன காட்டுதலால் கண்ட விட்டதனால்
பண்டுளதான மறைக்குப் பழைமையை மாற்றுதலால்
கொண்டதும் ஈசனைக் கொள்ளா வகையென்று கூறுதலால்
கண்டகராய் நின்ற கணாதர் வாதம் கழற்றுவமே -30-காணாத மத கண்டனம் -இதுவும் அடுத்த பாசுரமும் வைசேஷிக பங்க அதிகாரம் –

கண்டது அலாதன காட்டுதலால் கண்ட விட்டதனால் -பிரத்யக்ஷம் முதலியவற்றால் காணாத வஸ்துக்களை கல்பிக்கையாலும்-அவயவங்களைக் காட்டிலும்
வேறுபட்ட அவயவி சாமான்யம் விசேஷம் சமவாயம் அபாவம் போன்றவற்றை கலப்பிப்பார்கள்
-வேதத்தில் காணும் அம்சங்களை-பிரகிருதி மஹான் முதலிய தத்துவங்களை – அங்கீ கரியாமல் விட்ட படியாலும்
பண்டுளதான மறைக்குப் பழைமையை மாற்றுதலால் -நெடு நாட்களாய் -நித்தியமாய் -உள்ள வேதத்திற்கு அநாதியாம் தன்மையை மாற்றிக் கூறுவதாலும் –
வேதத்தை ஈஸ்வரனால் இயற்றப் பட்டதாக கொண்டு பவ்ருஷேயம் என்று நா கூசாது பிதற்றுகின்றனர்
கொண்டதும் ஈசனைக் கொள்ளா வகையென்று கூறுதலால் -தங்கள் ஈஸ்வரனை அங்கீ கரித்ததும் நாம் அங்கீ கரிக்கத் தகாத –
அனுமானம் -என்ற வழியிலே -தான் என்று சொல்வ தாலும்
கண்டகராய் நின்ற கணாதர் வாதம் கழற்றுவமே -நல்ல வழிக்கு முள்ளாய் நின்ற வைசேஷிக மதத்தினருடைய வாதத்தை ஒழித்திடுவோம்-

—————————————–

ஆகமத்தை யனுமானம் என்கையாலும் அழியாத மறை யழிக்க நினைத்தலாலும்
போகம் அற்று ஒரு உபலம் போல் கிடக்கை தானே புண்ணியர்க்கு வீடு என்று புணர்த்தலாலும்
மாகம் ஒத்த மணி வண்ணன் படியை மாற்றி மற்றவனுக்கு ஒரு படியை வகுத்தலாலும்
காகம் ஒத்த கணாதன் கண்ணை வாங்கிக் காக்கைக்கு ஆர் என்று அலற்ற காட்டினோமே -31- கணாத மதம் -ஈஸ்வரன் மோக்ஷம் இவற்றில் விபரீதக் கொள்கை –

ஆகமத்தை யனுமானம் என்கையாலும் அழியாத மறை யழிக்க நினைத்தலாலும் -சப்தம் என்னும் பிரமாணத்தை அனுமானம் என்னும் பிரமாணத்தில்
அடங்கியது என்று கூறுவதாலும் -நித்தியமான வேதத்தை அழித்து அநித்யமாக்க எண்ணியதாலும்
போகம் அற்று ஒரு உபலம் போல் கிடக்கை தானே புண்ணியர்க்கு வீடு என்று புணர்த்தலாலும் -எவ்வித அனுபவமும் இல்லாத ஒரு கல்லை போலே
கிடப்பதுவே புண்யசாலிகளுக்கு யுள்ள மோக்ஷம் என்று கற்ப்பித்த படியாலும்
மாகம் ஒத்த மணி வண்ணன் படியை மாற்றி மற்றவனுக்கு ஒரு படியை வகுத்தலாலும் -ஆகாசத்தைப் போல் தோஷம் அற்றவனும் நீல ரத்னத்தின் தன்மை யுள்ளவனுமான சர்வேஸ்வரனுடைய ஸ்வரூபம் குணம் முதலிய பிரகாரத்தை மாற்றி அவ்வீஸ்வரனுக்கு வேத விருத்தமாய் வேறு ஒரு பிரகாரத்தைக் கல்பித்து பிரித்துக் கூறியதாலும்
ஈஸ்வரன் குயவன் போலே நிமித்த காரணமே அன்றி மண்ணைப் போலே உபாதான காரணம் ஆகமாட்டான் என்பர் –
சுத்த சத்வ திவ்ய மங்கள விக்ரஹம் கொண்டவனை சரீரம் இல்லாதவன் சோகம் இல்லாதவன் என்பர் –
காகம் ஒத்த கணாதன் கண்ணை வாங்கிக் காக்கைக்கு ஆர் என்று அலற்ற காட்டினோமே –காகனைப் போன்ற பகவத் அபராதியான கணாதனுடைய
கண்ணைப் பறித்து -என்னை ரஷிக்க எவர் உளர் என்று கதறும்படி அவன் மதத்தைக் கண்டித்து உலகுக்கு காட்டினோம் –

———————————————————–

கோதம நூல்களைக் குற்றமிலா வகை கூட்டலுமாம்
கோது கழித்து ஒரு கூற்றில் குணங்களைக் கொள்ளவுமாம்
யாதும் இகந்து ஒரு நீதியை யாமே வகுக்கவுமாம்
வேதியர் நன்னய வித்தரம் என்பது மெய்யுளதே-32-கௌதம -நியாய -மத கண்டனம் -இதுவும் அடுத்த பாசுரமும் நியாய விஸ்தர விரோத நிஸ்தர அதிகாரம் –

கோதம நூல்களைக் குற்றமிலா வகை கூட்டலுமாம் -கௌதமருடைய நியாய ஸூத்ரங்களை-வேத விரோதம் என்னும் குற்றம் இல்லாதபடி கூட்டவும் முடியும்
கோது கழித்து ஒரு கூற்றில் குணங்களைக் கொள்ளவுமாம்–வேத விரோதம் என்னும் குற்றமுள்ள பாகத்தைக் கழித்து ஒரு பாகத்தில் குணங்களை ஏற்றுக் கொள்வதும் முடியும்
யாதும் இகந்து ஒரு நீதியை யாமே வகுக்கவுமாம் -நியாய ஸூத்ரம் முழுவதையுமே கழித்து விட்டு ஒரு நியாய கிரந்தத்தை நாமே புதிதாய் இயற்றவும் முடியும் -ஆதலின்
வேதியர் நன்னய வித்தரம் என்பது மெய்யுளதே-வேதாந்தங்களை நன்கு அறிந்த மனு முதலிய மஹர்ஷிகளால் சிறந்த நியாய விஸ்தரம்
எனக் கூறப்படும் வித்யா ஸ்தானம் சத்யமாகவே இருக்கின்றது –

—————————————————

நான்மறைக்குத் துணையாக நல்லோர் எண்ணும் நாலிரண்டில் ஒன்றான நயநூல் தன்னில்
கூன் மறைத்தல் கோது உளது கழித்தல் மற்று ஓர் கோணாத கோதில் வழி வகுத்தல் அன்றி
ஊன் மறைத்த யுயிர் ஒளி போல் ஒத்தது ஒவ்வாது உயிர் இல்லாக் காணாதம் உரைத்த எல்லாம்
வான் மறைக்க மடி கோலும் வண்ணம் என்றோம் மற்று இதற்கு ஆர் மறு மாற்றம் பேசுவாரே–32-கௌதம மதம் மூன்று வகைகளால் அனுகூலம் ஆக்குதல் –

நான்மறைக்குத் துணையாக நல்லோர் எண்ணும் -நான்கு
வேதங்களின் அர்த்தத்தை நிச்சயிப்பதற்கு ஸஹாயமாக சிறந்த மனு முதலியவரால் குறிக்கப் பட்ட
நாலிரண்டில் ஒன்றான நயநூல் தன்னில் -எட்டு வித்யா ஸ்தானங்களில் ஒன்றாகிய நியாய விஸ்தரத்தில்
வித்யா ஸ்தானங்கள் -14-அதாவது நான்கு வேதங்கள் -சிஷா வியாகரணம் சந்தஸ் நிருத்தம் ஜ்யோதிஷம் கல்பம் என்னும் ஆறு அங்கங்கள் –
மீமாம்சை நியாய விஸ்தரம் புராணம் தர்ம சாஸ்திரம் -ஆக இந்த -14-/
இவற்றுள் நான்கு வேதங்களில் சொன்னவற்றை மற்ற -10-விளக்கும் -அவற்றுள் புராணமும் தர்ம சாஸ்திரமும் வேத அர்த்தங்களையே
ஒரு வகையில் கூறுவதால் அவை இரண்டையும் விட்டு மீது உள்ள -8-என்பர் –
அல்லது -நியாய சாஸ்திரம் சுருக்கமாகவும் மீமாம்சை விரிவாகவும் பிரமாணங்களை வஸ்துக்களையும் ஆராய்ந்து விளக்கும் -என்பதால் இவை இரண்டையும்
ஒரு வகுப்பாக்கி -கர்ம பாகத்தை தர்ம சாஸ்திரம் விளக்கி ப்ரஹ்ம பாகத்தை புராணங்கள் விளக்கும் -என்று கொண்டு இவை இரண்டையும் ஒரு வகுப்பாக்கி
இவ்வாறு பத்தையும் எட்டு வித்யா ஸ்தானங்கள் என்று முதலடியில் கூறுகிறது என்றும் கொள்வர்
கூன் மறைத்தல் -உள்ள தோஷத்தை மறைத்து உரிய அர்த்தத்தில் பொருந்தச் செய்தல் –வேதம் ஸ்ம்ருதி ப்ரஹ்ம ஸூத்ரம் இவற்றுக்கு
சில இடங்களில் முரண் பட்டனவாய் வெளிக்குத் தோற்றினாலும் அவற்றைக் கொஞ்சம் சிரமத்துடன் வேதம் முதலிய பிரமாணங்களைத் தழுவிப் பொருள் படுத்திக்
கௌதம பஷத்தை ஏற்றுக் கொள்வது -என்றவாறு
கோது உளது கழித்தல்-முழுதும் ஏற்றுக் கொள்ளாமலும் முழுதும் கழித்து விடாமலும் விரோதமுள்ள இடங்களைத் தள்ளி நேரிய விஷயங்களை ஏற்றுக் கொள்ளல் -என்றவாறு –
மற்று ஓர் கோணாத கோதில் வழி வகுத்தல் அன்றி -வேறு ஒரு நேர்மையான குற்றமற்ற வழியை ஏற்படுத்தலாகிய -ப்ரஹ்ம ஸூத்ரகாரர் உதறித் தள்ளியதை அடி ஒற்றி
முழுதையும் கழித்து விட்டு வேதாந்த சாஸ்த்ரங்களுக்கு ஏற்பப் புதிய ஸூத்ரங்களைப் படைத்துக் கொள்ளல் என்றவாறு –
இம்முறைகளைக் கைக் கொண்டால் அன்றி
ஊன் மறைத்த யுயிர் ஒளி போல் –சரீரத்தால் மறைக்கப் பட்ட -பத்த ஜீவனுடைய தர்ம பூத ஞானம் -முக்தர்களும் நித்ய ஸூ ரிகளுமான
இவர்களுடைய தர்ம பூத ஞானத்திற்கு சமமாகாதது போலே
ஒத்தது ஒவ்வாது -வேதத்தின் அர்த்தத்தை விளக்குதற்குத் தகுதி பெற்றுள்ள மற்ற வித்யா ஸ்தானத்தோடு நியாய விஸ்தாரம் சமமாக மாட்டாது
உயிர் இல்லாக் காணாதம் உரைத்த எல்லாம்–உயிர் போன்ற முக்கியமான விஷயங்களைக் கை விட்ட கணாத மதம் வெளியிட்ட விஷயங்கள் எல்லாம்
வான் மறைக்க மடி கோலும் வண்ணம் என்றோம் மற்று இதற்கு ஆர் மறு மாற்றம் பேசுவாரே–ஆகாயத்தை மறைப்பதற்கு துணியை விரிக்கும் முறையை ஒத்தவை
என்று முன்பே விளக்கினோம் -மேலும் நாம் கூறிய இவ்விஷயத்திற்கு எதிர்வார்த்தையை யார் பேச வல்லர்–இவ்வாறு கௌதம மதத்தை மூன்று வகைகளால்
1–கூன் மறைத்தல்/-2- கோது உளது கழித்தல்/-3- மற்று ஓர் கோணாத கோதில் வழி வகுத்தல்-இப்படி மூன்று கதிகளால் அனுகூலமாகவும்
கணாத மதத்தை விபரீதமாகவும் கொண்ட முறைக்கு மாறுபடப் பேசுபவர் யாவர் உளர் -என்றவாறு –

————————-

ஈசனும் மற்று அங்கும் இலது என்று எழில் நான்மறையில்
பேசிய நல்வினையால் பெரும் பாழுக்கு நீர் இறைக்கும்
நீசரை நீதிகளால் நிகமாந்தத்தின் நூல் வழியே
மாசில் மனம் கொடுத்து மறு மாற்றங்கள் மாற்றுவமே -34-மீமாம்சக மதத்தைக் கண்டித்தல் -இதுவும் அடுத்த பாசுரமும் மீமாம்ச பங்க அதிகாரம் –

ஈசனும் மற்று அங்கும் இலது என்று –சர்வேஸ்வரனாகிய பரம் பொருளும் பிற தெய்வமும் இல்லை என்ற கொள்கையைக் கொண்டு –
கர்மங்களால் அபூர்வம் உண்டாகி அதுவே கர்மபலன்களைக் கொடுக்கும் என்பர் இவர் –
எழில் நான்மறையில் பேசிய நல்வினையால் -அழகிய நான்கு வேதங்களில் வெளியிட்ட நல்ல கர்மங்களால்
பெரும் பாழுக்கு நீர் இறைக்கும் -பெரிய பாழ் நிலத்துக்கு ஜலம் பாய்ச்சுவர் போன்ற
நீசரை நீதிகளால் நிகமாந்தத்தின் நூல் வழியே -அற்பர்களான மீமாம்சகரை நியாயங்கள் உதவியால் வேதாந்த சாஸ்திரங்களின் வழியே
மாசில் மனம் கொடுத்து மறு மாற்றங்கள் மாற்றுவமே -குற்றமற்ற மனத்தைக் கொடுத்து எதிர்வாதங்களை கண்டித்திடுவோம் —

—————————————–

கனை கடல் போல் ஒரு நீராம் ஸூத்திரத்தைக் கவந்தனையும் இராகுவையும் போலக் கண்டு
நினைவுடனே நிலைத் தருமம் இகந்து நிற்கும் நீசர் நிலை நிலை நாடா வண்ணம் எண்ணி
வினை பரவு சைமினியார் வேத நூலை வேதாந்த நூலுடனே விரகால் கோத்த
முனையுடைய முழு மதி நம் முனிவர் சொன்ன மொழி வழியே வழி என்று முயன்றிட்டோமே -35-பூர்வ உத்தர மீமாம்ஸைகள் ஒரே சாஸ்திரம் –

கனை கடல் போல் ஒரு நீராம் ஸூத்திரத்தைக் -சப்திக்கின்ற கடலைப் போலே ஒரே நிலையில் யுள்ள மீமாம்ச ஸூத் ரங்களை -கீழ்க் கடல் மேல் கடல் போலே இவை இரண்டும் –
கவந்தனையும் இராகுவையும் போலக் கண்டு –கபந்தனையும் ராகுவையும் போலே இரண்டு வெவ்வேறு சாஸ்திரமாகக் கண்டு
பிரதானமான ஈஸ்வரனை இல்லையாக்கிக் கர்மத்தையே கொள்ளும் பூர்வ மீம்ஸை தலையில்லா முண்டம்
கர்மத்தைப் பேசாது ஈஸ்வரனை மாத்ரம் பேசும் உத்தர மீமாம்சை உடல் இல்லாத தலை -என்பதால் கபந்தனையும் இராகுவையும் போலே -என்னலாயிற்று-
நினைவுடனே நிலைத் தருமம் இகந்து நிற்கும் நீசர் நிலை நிலை நாடா வண்ணம் எண்ணி -அறிவுடனே ஸ்திரமான தர்மமாகிய ஈஸ்வரனை இல்லை என்று
விட்டு நிற்கின்ற நீசரான மீமாம்சகருடைய ஸித்தாந்தம் நிலை பெற்று நிற்காதவாறு நினைந்து
வினை பரவு சைமினியார் வேத நூலை வேதாந்த நூலுடனே விரகால் கோத்த -கர்மங்களையே புகழ்கின்ற ஜைமினி முனிவரால் இயற்றப்பட்ட
வேத வியாக்கியானமான ஸூத்ரத்தை ப்ரஹ்ம ஸூத்ரத்துடனே சாமர்த்தியத்தால் சேர்த்து ஒரே சாஸ்திரமாகச் செய்த
முனையுடைய முழு மதி நம் முனிவர் சொன்ன மொழி வழியே வழி என்று முயன்றிட்டோமே -கூர்மையுள்ள நிறைந்த ஞானத்தையுடைய
நம் போதாயனர் ஸ்ரீ பாஷ்யகாரர் ஆகிய முனிவர்கள் வெளியிட்டு அருளிய ஸ்ரீ ஸூக்தி மார்க்கமே சிறந்த வழி என்று நினைத்து அவ்வழியிலே ப்ரவர்த்தித்தோம் —

————————————————-

முக்குணமாய் நின்ற மூலப் பிரக்ருதிக்கு அழியா
அக்குணம் அற்ற அரு துணை மற்று அதற்கு ஈசன் இலை
இக்கணனைப் படி ஐ ஐந்தும் எண்ணில் முன் முத்தி என்னும்
பக்கண வீணர் பலம் பகட்டைப் பழுதாக்குவமே -36-சாங்க்ய மத கண்டனம் –இதுவும் அடுத்த பாசுரமும் நிரீஸ்வர சாங்க்ய நிராகரண அதிகாரம் –

முக்குணமாய் நின்ற மூலப் பிரக்ருதிக்கு –சத்துவம் ரஜஸ் தாமஸ் என்னும் மூன்று குண ஸ்வரூபமாய் நின்ற மூலப் பிரக்ருதிக்கு
அழியா அக்குணம் அற்ற அரு துணை மற்று அதற்கு ஈசன் இலை –அழியாததும் அந்த மூன்று குணங்கள் இல்லாததுமான ஜீவன் ஸஹாயமாகும் –
அந்த மூல ப்ரக்ருதிக்கு ஈஸ்வரன் என்று ஒருவன் இல்லை
மற்று -அசை நிலை
இக்கணனைப் படி ஐ ஐந்தும் எண்ணில் முன் முத்தி என்னும் -இந்த மதத்தின் கணக்கின் படி இருபத்தைந்து தத்துவங்களையும் -அவற்றின்
ஸ்வரூப ஸ்வபாவங்களோடு நன்கு ஆராய்ந்து அறிந்தால் மோக்ஷம் மரணத்திற்கு முன்பே கிடைப்பதாகும் என்று கூறுகின்ற
பக்கண வீணர் பலம் பகட்டைப் பழுதாக்குவமே -வேடச் சேரியில் யுள்ள வேடர் போலே பாமரர்களாய் வீணே பிதற்றுமவர்களான சாங்க்யர்களின்
நெடு நாளைய ஆடம்பரத்தை வீணாக்கி விடுவோம் —
பிரகிருதி ஜீவன் என்று இரண்டே தத்வங்கள் ஈஸ்வரன் இல்லை என்பர் சாங்க்யர்-மூல பிரக்ருதியே அனைத்துக்கும் முதல் காரணம் –
நொண்டியின் உதவியால் குருடன் நடப்பது போலே ஞான ஸ்வரூபனான ஜீவனுடைய துணையால் செய்யும் சக்தியுள்ள பிரகிருதி தன் காரியத்தைச் செய்கிறது என்பர் —
25-தத்துவங்களை அறிந்தால் மரணத்திற்கு முன்பே மோக்ஷம் என்பர் -இப்படி வீணாக பிதற்றுவார்கள் –

————————————————-

ஈசன் இலன் என்பதால் என்றும் சீவர் எங்கும் உளர் இலர் உணர்வை என்றவத்தால்
பாசம் எனும் பிரகிருதி தன்னால் என்றும் பலமும் இலை வீடும் இலை என்னும் பண்பால்
காசினி நீர் முதலான காரியங்கள் கச்சபத்தின் கால் கை போல் என்னும் கத்தால்
நாசம் அலது இலை காணும் ஞாலத்து உள்ளீர் நாம் இசையாச் சாங்கியத்தை நாடுவார்க்கே -37-சாங்க்ய மதத்தின் முரண்பாடு -அழிதலே பலன் —

ஞாலத்து உள்ளீர் ஈசன் இலன் என்பதால் என்றும் சீவர் எங்கும் உளர் –உலகத்தில் உள்ளோர்களே ஈஸ்வரன் இல்லை என்பதனாலும் ஜீவர் என்றைக்கும் எல்லா இடத்திலும் இருப்பவர்
இலர் உணர்வை என்றவத்தால் -ஞானம் இல்லாதவர் என்று கூறுவதாலும் -இப்படி வேத விரோதமாய் ஜீவனை விபு என்றும் அறிவற்றவன் என்றும் பிதற்றுவர் –
பாசம் எனும் பிரகிருதி தன்னால் என்றும் பலமும் இலை வீடும் இலை என்னும் பண்பால் –பாசம் எனப்படுகின்ற மூல பிரக்ருதியினால் எப்பொழுதும் சம்சாரமாகிய பலனும் இல்லை -மோக்ஷமும் இல்லை என்று சொல்லுகிற முறையினாலும்
காசினி நீர் முதலான காரியங்கள் கச்சபத்தின் கால் கை போல் என்னும் கத்தால்-பூமி ஜலம் முதலிய காரியப் பொருள்கள் உண்டாவதும் அழிவதும்
ஆமையின் கால் கைகள் நீளுவதும் சுருங்குவதும் போல் என்று பிதற்றுவதாலும்
நாசம் அலது இலை காணும் நாம் இசையாச் சாங்கியத்தை நாடுவார்க்கே -இவ்வளவு தோஷம் இருப்பதால் நாம் அங்கீ கரிக்க முடியாத
சாங்க்ய மதத்தை பற்றுமவர்க்கு அழிந்து போவது தவிர வேறு பலன் இல்லை என்று அறிவீர்களாக —

——————————————

தாவிப் புவனங்கள் தாளிணை சூட்டிய தந்தை யுந்திப்
பூவில் பிறக்கினும் பூதங்கள் எல்லாம் புணர்த்திடினும்
நாவில் பிரிவின்றி நா மங்கை வாழினும் நான்மறையில்
பாவித்தது அன்றி யுரைப்பது பாரும் பதர்த் திரளே -38-யோக மத கண்டனம் -இதுவும் அடுத்த பாசுரமும் யோக ஸித்தாந்த பங்க அதிகாரம் –

தாவிப் புவனங்கள் தாளிணை சூட்டிய தந்தை -த்ரிவிக்ரம அவதாரத்தில் சகல லோகங்களையும் கடந்து நின்று திருவடிகள் இரண்டையும்
தலையில் வைத்து அலங்கரித்த தந்தையான எம்பெருமானுடைய
யுந்திப் பூவில் பிறக்கினும் பூதங்கள் எல்லாம் புணர்த்திடினும் -திரு நாபிக் கமலத்தில் பிறந்த பெருமை யுடையவனாயினும் -சகல பூதங்களையும்
படைத்தவனாய் இருப்பினும்
நாவில் பிரிவின்றி நா மங்கை வாழினும் -நாக்கில் சரஸ்வதி தேவி பிரிவின்றி வாழ்ந்து கொண்டு இருப்பினும்
நான்மறையில் பாவித்தது அன்றி யுரைப்பது பாரும் பதர்த் திரளே -நான்கு வேதங்களிலும் அனுசந்திக்கப் பட்ட விஷயத்தைத் தவிர நான்முகனால்
பிரவர்த்திக்கப் பட்ட யோக மாதத்தில் கூறும் விஷயம் அழிந்து போகக் கூடிய பதர்க் கூட்டம் போலே பயன் அற்றதாகும்-

————————————————–

காரணனாய் யுலகு அளிக்கும் கண்ணன் தேசைக் கண்ணாடி நிழல் போலக் காண்கையாலும்
தாரணையின் முடிவான சமாதி தன்னைத் தனக்கேற்றும் விளக்கு என்று தனிக்கையாலும்
காரணமாம் அது தனக்குப் பயனாம் சீவன் கை வலிய நிலை என்று கணிக்கையாலும்
கோரணியின் கோலம் எனக் குறிக்கலாகும் கோகனகத்து அயன் கூறும் சமயக் கூற்றே –39-யோக மதம் -தத்வ ஹித புருஷார்த்தங்களில் மாறுபாடு –

காரணனாய் யுலகு அளிக்கும் கண்ணன் தேசைக் –சகல காரணனாய் உலகங்களைக் காக்கின்ற எம்பெருமானுடைய தேஜஸை
கண்ணாடி நிழல் போலக் காண்கையாலும்-கண்ணாடியில் தெரிகின்ற நிழலைப் போலே கண்டு அறிவித்தாலும்
சகல கல்யாண குணங்கள் இயற்கையாக இருந்தும் கண்ணாடி நிழல் போலே -என்பர்
தாரணையின் முடிவான சமாதி தன்னைத் தனக்கேற்றும் விளக்கு என்று தனிக்கையாலும்-தாரணையின் முடிவு நிலையாகிய சமாதி எனப்படும்
பக்தி யோகத்தை ஜீவாத்மாவாகிய தன்னை அறிவதற்காக யேற்றப் படுகின்ற தீபம் என்று தனித்துக் கூறுவதாலும்
காரணமாம் அது தனக்குப் பயனாம் சீவன் கை வலிய நிலை என்று கணிக்கையாலும் -பலனைப் பெறகாரணமான -பக்தி யோகம் என்னும்
உபாயத்துக்கு ஜீவனுடைய கைவல்ய நிலைமையே பலனாகும் என்று நினைப்பதாலும்
கோரணியின் கோலம் எனக் குறிக்கலாகும் கோகனகத்து அயன் கூறும் சமயக் கூற்றே –எம்பெருமானுடைய திரு நாபிக் கமலத்தில் உதித்த
ப்ரஹ்மா வெளியிட்ட யோக மதத்தின் மொழி கோமாளிக் கூத்து என்றே குறிப்பிடலாம் –

——————————————————

சாது சனங்கள் எலாம் சச்சை என்னும் சலம் புணர்த்தார்
கோதம சாபம் ஒன்றால் கொடும் கோலங்கள் கொண்டு உலகில்
பூத பதிக்கு அடியார் என நின்று அவன் பொய்யுரையால்
வேதம் அகற்றி நிற்பார் விகற்பங்கள் விலக்குவமே–40-பாசுபத -சைவ மத கண்டனம் -இதுவும் அடுத்த இரண்டு பாசுரங்களும் -பாசுபத மத பகிஷ்கார அதிகாரம் –

சாது சனங்கள் எலாம் சச்சை என்னும் சலம் புணர்த்தார் –சாது ஜனங்கள் எல்லோரும் ஆசாரம் என்று கழிக்கின்ற சலம் என்னும் தோஷத்தை கைக் கொண்டவர்களாயும்
சலம் -பிறருடைய உள்ளக கருத்தை உணராது அவர்கள் மீது பொய்க் குற்றம் சுமத்தல் -கௌதமர் மீது அவரால் காக்கப்பட்ட அந்தணர் பசுக்கொலை என்னும்
பொய்க் குற்றம் சுமத்தியது பற்றிச் சலம் புணர்த்தார் என்னலாயிற்று
கோதம சாபம் ஒன்றால் கொடும் கோலங்கள் கொண்டு உலகில் -கௌதம முனிவருடைய ஒரு சாபத்தினால் உலகத்தில் பயங்கரமான வேஷங்களை அணிந்து கொண்டு
பூத பதிக்கு அடியார் என நின்று அவன் பொய்யுரையால் –பூதங்களின் நாயகனான சிவனுக்கு அடியார்கள் என்னும்படி நின்று
அந்தச் சிவனுடைய பொய் மொழியாகிய பாசுபத நூல்களால்
வேதம் அகற்றி நிற்பார் விகற்பங்கள் விலக்குவமே–வேதத்தை ஆதாரமாகக் கொள்ளாமல் விலக்கி வைத்து நிற்பவர்களான
பாசுபதர்களின் பலவகைப்பட்ட மத விஷயங்களை கண்டித்திடுவோம் –

——————————————————

மாதவனே பரன் என்று வையம் காண மழுவேந்தி மயல் தீர்க்க வல்ல தேவன்
கைதவம் ஓன்று உகந்தவரைக் கட்டிய சாபம் கதுவியதால் அதன் பலத்தைக் கருதிப் பண்டை
வேத நெறி யணுகாது விலங்கு தாவி வேறாக விரித்துரைக்க விகற்பம் எல்லாம்
ஓதுவது சூத்திரத்துக்கு என்று உரைத்தான் தான் ஓதாதே ஓதுவிக்கும் ஒருவன் தானே -41-சிவன் கண்ட பாசுபத மதம் -அல்ப பலனுக்கேயானமை –

ஓதாதே ஓதுவிக்கும் ஒருவன் தானே-பிறர் இடம் அத்யயனம் செய்யாமலேயே பிறருக்கு உபதேசிப்பவனான ஒப்பற்ற எம்பெருமான்
மாதவனே பரன் என்று வையம் காண மழுவேந்தி மயல் தீர்க்க வல்ல தேவன் –ஸ்ரீ மன் நாராயணனே சர்வோத்தமன் என்று உலகம் முழுதும் அறியும்படி
மழுவைக் கையிலே ஏந்தி அஞ்ஞானத்தை ஒழிக்க வல்லவனான மஹேஸ்வரன்
கைதவம் ஓன்று உகந்தவரைக் கட்டிய சாபம் கதுவியதால் அதன் பலத்தைக் கருதிப் -ஒரு கபடத்தை மகிழ்ந்து கைக் கொண்டு கௌதமர் இடம் குற்றம் செய்தவர்களாக
ப்ராஹ்மணர்களை கௌதமருடைய கொடிய சாபம் பற்றிக் கொண்டதால் அந்த சாபத்தின் பலனைக் கொடுக்க நினைத்து
பண்டை வேத நெறி யணுகாது விலங்கு தாவி வேறாக விரித்துரைக்க விகற்பம் எல்லாம் -அனாதையான வேத மார்க்கத்தை அனுசரியாமல் குறுக்கு வழியில் குதித்து
புதிதாகக் கண்டு விளக்கி வெளியிட்ட பலவகைப் பட்ட சைவ சித்தாந்தங்களை எல்லாம்
ஓதுவது சூத்திரத்துக்கு என்று உரைத்தான் தான் –கற்பது அற்ப பலனைப் பெறுவதற்கே என்று உபதேசித்தான் -தான் -அசை நிலை –
கௌதமர் கடும் தவத்தை மெச்சி ப்ரஹ்மா குறைவு படாத நிறைந்த தான்யம் இருக்கும் வரம் கொடுக்க –
சதச்ருங்கம் என்னும் இடத்தில் ஓர் ஆஸ்ரமத்தை உண்டாக்கி வசித்து வர
-4000-அந்தணர்களுக்கு உணவு வழங்க -பொறாமை கொண்டு விடை பெறாமல் அவர் மீது பொய்க் குற்றம் சாற்றி –
மாயையினால் ஒரு பசுவைப் படைத்து ஆஸ்ரமத்தில் விட அது தழைத்த பயிர்களை அழிக்க கௌதமர் கமண்டல நீர் தெளிக்க அதனால் பசு விழுந்து இறக்க
பசுஹத்தி தோஷம் நீங்கும் வரை உணவு கொள்ளோம் என்று கூறி அந்தணர்கள் புறப்பட
கௌதமர் கடும் தவம் புரிந்து சிவன் ஜாடையில் உள்ள கங்கா தீர்த்தத்தை தெளிக்க பசு உயிர் பெற்றது
கௌதமர் ஞான த்ருஷ்டியால் அந்தணர்கள் மாயையின் செயல் என்று உணர்ந்து கடும் சினம் கொண்டு அவர்கள் சிவனைப் போலே பயங்கர வேஷம் தரித்து
வேத விரோதிகளாய் வேத விருத்தமான கர்மங்களை செய்துகொண்டு பாஷண்டிகளாய் அழிந்து போக சாபம் இட்டார்
அதை மெய்ப்பிக்க மஹேஸ்வரர் பாசுபதம் ஆகம சாஸ்திரத்தை பிரவர்த்திப்பிக்க அதன் மூலம் விபரீத அனுஷ்டானத்தை விதித்தார்
-அம்மதத்தை கைக் கொண்டவர்கள் பாசுபதார் -சைவர் -எனப்படுவர் –

—————————————-

கந்தமலர் மகள் மின்னும் காரார் மேனிக் கருணை முகில் கண்ட கண்கள் மயிலாய் ஆலும்
அந்தமில் பேர் இன்பத்தில் அடியாரோடே யடிமை எனும் பேர் அமுதம் அருந்தி வாழத்
தந்த மதி இழந்து அரனார் சமயம் புக்குத் தழல் வழி போய்த் தடுமாறித் தளர்ந்து வீழ்ந்தீர்
சந்த நெறி நேர் அறிவார் சரணம் சேர்ந்து சங்கேதத்து அவன் முனிவீர் தவிர்மினீரே-42-பாசுபதர்க்கு உய்யும் வழி கூறுதல் –

கந்தமலர் மகள் மின்னும் காரார் மேனிக் கருணை முகில் கண்ட கண்கள் மயிலாய் ஆலும்-பரிமலமுள்ள மலரில் திருவதரித்த பிராட்டி மின்னல் போல் பிரகாசிக்கும்
இடமாகிய கருமை நிறம் நிறைந்த திருமேனியையுடைய கருணையாகிய நீரைப் பொழியும் பரமபத நாத்தனாகிய மேகத்தை சேவித்த கண்கள் மயிலாய் நின்று ஆடுமிடமாகிய
அந்தமில் பேர் இன்பத்தில் அடியாரோடே யடிமை எனும் பேர் அமுதம் அருந்தி வாழத் -முடிவற்ற பெரிய ஆனந்த ரூபமான ஸ்ரீ வைகுண்டத்தில் நித்ய ஸூரி களும் முக்தர்களுமாகிய பாகவதர்களுடன் கைங்கர்யம் எனப்படும் பெரிய அம்ருதத்தை அனுபவித்து உஜ்ஜீவிக்கும்படி
தந்த மதி இழந்து அரனார் சமயம் புக்குத் தழல் வழி போய்த் தடுமாறித் தளர்ந்து வீழ்ந்தீர் -எம்பெருமான் கொடுத்து அருளிய ஞானத்தை இழந்து சிவனுடைய
பாசுபத மதத்திலே பிரவேசித்து அக்னி போலே தீமையைத் தரும் வழியிலே சென்று சேரும் இடம் அறியாதே மனம் தளர்ந்து வீழ்ந்தவர்களே
சந்த நெறி நேர் அறிவார் சரணம் சேர்ந்து சங்கேதத்து அவன் முனிவீர் தவிர்மினீரே-வேதாந்த மார்க்கத்தை நேர்மையான அறிந்த பூர்வாச்சார்யர்களுடைய
திருவடிகளை சார்ந்து பாசுபத மதக் கட்டுப்பாட்டின் குற்றங்களை வெறுப்பவர்களாகி நீங்கள் மதக் கொள்கைகளை ஒழித்திடுவீராக-

——————————————–

யாதுமிலாத வன்றும் யவர்க்கும் நன்றி எண்ணிய நம்
மாதவனார் வதனத்து அமுது உண்ணும் வலம்புரி போல்
வாதிகளால் அழியா மறை மௌலியின் வான் பொருளே
ஓதிய பஞ்சாத்திரம் உகவாரை ஒழுக்குவமே -43-ஸ்ரீ பாஞ்ச ராத்ர சாஸ்த்ரா விளக்கம் -இதுவும் அடுத்த பாசுரமும் பகவத் சாஸ்த்ர விரோத பங்க அதிகாரம் –

யாதுமிலாத வன்றும் யவர்க்கும் நன்றி எண்ணிய –ஒரு வஸ்துவும் இல்லாது அழிகின்ற மஹா பிரளய காலத்திலும் -தான் அழியாது நின்று
சகல ஜீவர்களுக்கு நன்மையே அருள சங்கல்பித்த
நம் மாதவனார் வதனத்து அமுது உண்ணும் வலம்புரி போல் -நம் பிராட்டியின் நாயகனான எம்பெருமானுடைய திரு முக மண்டலத்தில் உள்ள
அம்ருதத்தைப் பருகுகின்ற ஸ்ரீ வலம்புரி சங்காழ்வானைப் போலே
வாதிகளால் அழியா மறை மௌலியின் வான் பொருளே -பிரதிவாதிகள் வாதங்களால் அழியாத வேதாந்தத்தின் சிறந்த அர்த்தங்களையே
ஓதிய பஞ்சாத்திரம் உகவாரை ஒழுக்குவமே –வெளியிடுகின்ற ஸ்ரீபாஞ்ச ராத்ர சாஸ்திரத்தை பிரமாணமாக ஏற்றுக் கொள்ளாது
வெறுப்பவரை நம் வழியே நடக்குமாறு செய்வோம் —

————————————————-

பூ வலரும் திரு யுந்திப் புனிதன் வையம் பொன்னடியால் அளந்து இருவர் போற்ற நின்ற
நா வலரும் கலைகள் எலாம் தன்னை நாட நாடாத நன்னிதியா நணுகும் நாதன்
கோவலனாய் நிரையளித்த நிறை போல் வேதம் கோவாகக் கோமானாய் அதன்பால் சேர்த்துக்
காவலிது நல்லுயிர்க்கு என்று காட்டும் கார்த்த யுகக் கதி கண்டோம் கரை கண்டோமே –44-ஸ்ரீ பாஞ்ச சாஸ்திரம் -பகவான் நேரில் கண்ட சாஸ்திரம் —

பூ வலரும் திரு யுந்திப் புனிதன் வையம் பொன்னடியால் அளந்து இருவர் போற்ற நின்ற –தாமரைப் பூ மலர்கின்ற எம்பெருமான் திரு நாபியில் தோன்றிய
பரிசுத்தனான லோகமாகிய சத்யலோகம் வரையுள்ள மேல் உலகங்களை திரிவிக்ரம திரு வவதாரத்தில் அழகிய திருவடியால் அளந்து
பிரம்மாவும் சிவனுமாகிய இருவர் ஸ்தோத்ரம் செய்ய–ஒருவன் திருமஞ்சனம் செய்ய அந்த ஸ்ரீ பாத தீர்த்தத்தை ஒருவன் தன் முடியில் தாங்க- உயர்ந்து நின்றவனும்
நா வலரும் கலைகள் எலாம் தன்னை நாட நாடாத நன்னிதியா -நாவினிடத்து விரிகின்ற வேதம் முதலிய சாஸ்திரங்கள் முழுதும்
தன் ஸ்வரூபத்தை அறியத் தேடி நிற்க தேட வேண்டாத எளிதில் அடையத் தக்க சிறந்த சேம நிதியாய் இருந்து –
நணுகும் நாதன் –சேதன அசேதனங்களுள் ஒன்றிக் கலப்பவனுமாகிய எம்பெருமான்
கோவலனாய் நிரையளித்த நிறை போல் வேதம் கோவாகக் கோமானாய் அதன் பால் சேர்த்துக் முன் கோபாலனாய்ப் பசு மந்தையைக் காத்த பெருமை போலே
வேதம் பசுவாய் நிற்க தான் பசுவைக் கறக்கும் இடையனாகி அந்த வேதமாகிய பசுவின் பாலை -சாரத்தைச் சேர்த்து –
காவலிது நல்லுயிர்க்கு என்று காட்டும் கார்த்த யுகக் கதி கண்டோம் கரை கண்டோமே –இந்த சாரம் -சேதனருக்கு சிறந்த ரக்ஷகமாகும் என்று வெளியிட்டு அருளிய
கிருதயுக தர்மங்களை போதிக்கும் பாஞ்ச ராத்ர சாஸ்திரத்தை நன்கு அறிந்தோம் -சம்சார சமுத்திரத்தின் கரையை அடைந்தோம் –

————————————————

நமக்கார் துணை என நாம் என்று அருள் தரும் நாரணார்
உமக்கு ஆறு இவை என்று அடியிணை காட்ட யுணர்ந்து யடையும்
எமக்கோர் பரம் இனி யில்லாது இருவினை மாற்றுதலில்
தமக்கே பரம் என்று தாம் முயலும் தரம் சாற்றுவமே -45-ஸ்ரீ மன் நாராயணன் தன் திருவடிகளை உபாயமாகக் காட்டல் –பாரா யுக்த உபாய பங்க அதிகாரம் -இதுவும் அடுத்த இரண்டு பாசுரங்களால் பிற மதத்தினர் கூறும் உபாயத்தை ஸ்வரூபத்தைக் கண்டித்து தம் சித்தாந்தப்படி உபாயத்தை ஸ்வரூபத்தையும் மேன்மையையும் பேசுகிறார் –

நமக்கார் துணை என நாம் என்று அருள் தரும் நாரணார்-சம்சாரத்தில் கிடைக்கும் நமக்கு சகாயம் யார் என்று கலங்கி நிற்க
நாமே ஸஹாயமாக நிற்போம் என்று கூறி நம்மீது அருள் புரிகின்ற ஸ்ரீ மன் நாராயணனார்
உமக்கு ஆறு இவை என்று அடியிணை காட்ட யுணர்ந்து யடையும் -சம்சாரிகளான உமக்கு இவை உபாயம் என்று தம் திருவடி இணைகளை
நமக்குக் காட்டி அருள -அவ்வாறு அறிந்து அவற்றைச் சரணமாக அடைகின்ற
எமக்கோர் பரம் இனி யில்லாது இருவினை மாற்றுதலில்-எமக்கு இனி ஒரு பொறுப்பும் இல்லாமல் புண்ய பாபங்களாகிய இரண்டு கர்மங்களையும் ஒழிப்பதில்
தமக்கே பரம் என்று தாம் முயலும் தரம் சாற்றுவமே -பொறுப்பு தம்முடையதே என்று நினைந்து மற்ற உபாயங்கள் ஸ்தானத்தில்
தாமே நின்று பலன் கொடுக்கத் தாம் முயல்கின்ற பெருமையை இவ்வதிகாரத்தில் கூறுவோம் —

——————————–

பலத்தில் ஒரு துவக்கு அற்ற பதவி காட்டிப் பல்லுயிரும் தடுமாறப் பண்ணுகின்ற
கலித் திரளின் கடும் கழுதைக் காத்து மாற்றிக் கண்ணுடையார் கண்டுரைத்த கதியைச் சொன்னோம்
வலத்திலகும் மறு ஒன்றால் மறு ஓன்று இல்லா மா மணியாய் மலர் மாதர் ஒளியாம் அந்
நலத்தில் ஒரு நிகரில்லா நாதன் பாத நல் வழியாம் அல் வழக்கார் நடத்துவார் -46-ஸ்ரீ மன் நாராயணன் திருவடியே உபாயம் –

பலத்தில் ஒரு துவக்கு அற்ற பதவி காட்டிப் பல்லுயிரும் தடுமாறப் பண்ணுகின்ற –பலத்தில் ஒரு சம்பந்தமும் இல்லாத -அதாவது ஒரு பலனையும் கொடுக்காத
வீணான உபாயத்தை வெளியிட்டு -அதைக் கைக் கொண்ட பல சேதனர்களையும் பலன் பெறாது தவிக்கும் படி செய்த
கலித் திரளின் கடும் கழுதைக் காத்து மாற்றிக் –பிற மதத்தினராகிய கலி புருஷரது கூட்டத்தின் கொடிய கழுதை கூவிளி போன்ற ஆரவாரக் கூப்பாட்டை ஒழித்து
கண்ணுடையார் கண்டுரைத்த கதியைச் சொன்னோம் –சிறந்த ஞானக் கண்களை யுடையவர்களான பூர்வாச்சார்யர்கள் தாம் கண்டு
நமக்கு உபதேசித்து அருளிய உபாயத்தை ஸ்வரூபத்தை வெளியிட்டோம் -அவ்வுபாயமாவது
வலத்திலகும் மறு ஒன்றால் மறு ஓன்று இல்லா மா மணியாய் மலர் மாதர் ஒளியாம் –திரு மார்பில் வலப் பக்கத்தில் யுள்ள ஸ்ரீ வத்ஸம் என்னும்
ஒரு மறுவினோடு வேறு ஒரு மறு குற்றம் ஒன்றும் இல்லாத பெரிய நீல ரத்னமாகி தாமரை மலரில் யுள்ள பிராட்டி மணியாகிய தனக்கு பிரகாசம் என்னலாம் படி உள்ளவனும் –
மறுவுடைமையும் மறுவற்றாமையும் கூறிய சுவை காண்க –
அந் நலத்தில் ஒரு நிகரில்லா நாதன் பாத நல் வழியாம் அல் வழக்கார் நடத்துவார்–அந்தச் சிறந்த பரிபூர்ண ஆனந்தத்தில் -சமமான ஒரு வஸ்து இல்லாதவனுமான
எம்பெருமானுடைய திருவடியே சிறந்த உபாயமாகும் -இவ்விஷயத்தில் தகாத விஷயங்களை யார் நடத்த முடியும் –

————————————————

எல்லார்க்கும் எளிதான ஏற்றத்தாலும் இனி யுரைக்கை மிகையான விரக்கத்தாலும்
சொல் ஆர்க்கும் அளவாலும் அமைதலாலும் துணிவரிதாய்த் துணை துறக்கும் சுகரத்தாலும்
கல்லார்க்கும் கற்றார் சொல் கவர்தலாலும் கண்ணனுரை முடி சூடி முடித்தலாலும்
நல்லாருக்கும் தீயார்க்கும் இதுவே நன்றாம் நாரணற்கே யடைக்கலமாய் நணுகுவீரே -47-பிரபத்தியில் யுள்ள ஸுகர்யமும் சிறப்பும் –

எல்லார்க்கும் எளிதான ஏற்றத்தாலும் இனி யுரைக்கை மிகையான விரக்கத்தாலும்–சகல சேதனருக்கும் அனுஷ்ட்டிக்க எளிதாய் இருக்கையாகிய பெருமையாலும்
ஒரு முறை அனுஷ்டித்த பின் மறுபடி அதே பலனுக்காக பிரபத்தி வாக்கியத்தை உச்சரிக்கை ப்ரஹ்மாஸ்த்ர நியாயத்தாலே அதிகம் என்னும்படியான கருணையை
எம்பெருமானுக்கு உண்டாக்குவதாலும்
சொல் ஆர்க்கும் அளவாலும் அமைதலாலும் –பிரபத்தி வாக்கியம் -பூர்ணமாக உச்சரிக்கப் பட்ட மாத்திரத்தாலும் -பலன் கொடுக்கப் போதுமாகையாலும்
துணிவரிதாய்த் துணை துறக்கும் சுகரத்தாலும் -மஹா விச்வாஸம் என்னும் பிரபத்தியின் அங்கம் அனுஷ்ட்டிக்கக் கடினமாயினும் அதிலும் கடினமான
ஞான யோகம் கர்ம யோகம் முதலிய அங்கங்களை விட்டு விடுகையாகிய ஸுகர்யத்தாலும்
கல்லார்க்கும் கற்றார் சொல் கவர்தலாலும் கண்ணனுரை முடி சூடி முடித்தலாலும் –ஞானம் இல்லாத சாதாரண அதிகாரிகளுக்கும் விசேஷ ஞானம் உள்ள
பூர்வாச்சார்யர்கள் அநுஸந்திக்கும் பிரபத்தி வாக்கியம் பலனைக் கொண்டு இருத்தலாலும்-ஸ்ரீ கண்ணபிரானுடைய திவ்ய ஸ்ரீ ஸூக்தி யாகிய
ஸ்ரீ கீதையின் சிகரமாய் விளங்கும் சரம ஸ்லோகத்தில் விவரிக்கப் பெற்று ஸ்ரீ கீதையைத் தலைக் கட்டியபடியாலும்
நல்லாருக்கும் தீயார்க்கும் இதுவே நன்றாம் நாரணற்கே யடைக்கலமாய் நணுகுவீரே -புண்ய சாலிகளுக்கும் பாபிகளுக்கும் இந்த பிரபத்தியே சிறந்த உபாயமாகும் –
ஆதலின் -ஸ்ரீ மன் நாராயணனுக்கே ரக்ஷிக்கப் பட வேண்டிய வஸ்துவாக இருந்து அவனைச் சரணமாக அடையுங்கள் —

——————————————————-

பண்டை மறைக்குப் பகை என நின்ற பர மதங்கள்
கொண்டவர் கொள்ளும் பயன் ஓன்று இலது எனும் கூர் மதியால்
வண் துவரைக்கு அரசாணை நம் மாயனை வானுலகில்
கண்டு களிப்பது எனும் காதல் ஒன்றைக் கருதுவமே-48-பிற மதத்தினர் கூறும் பலனுடைய ஸ்வரூபத்தைக் கண்டித்தல்
-இதுவும் அடுத்த பாசுரமும் பர யுக்த ப்ரயோஜன பங்க அதிகாரம் –

பண்டை மறைக்குப் பகை என நின்ற பர மதங்கள் கொண்டவர் கொள்ளும் –அநாதியான வேதத்திற்கு விரோதி என்னும்படி நின்ற பிற மதங்களை
கைக் கொண்டவரால் அடைய படுகின்ற
பயன் ஓன்று இலது எனும் கூர் மதியால் -பலன் ஒன்றும் இல்லை என்று அறிந்து கூறும்படியான ஸூஷ்மமான புத்தியோடு
வண் துவரைக்கு அரசாணை நம் மாயனை வானுலகில் -அழகிய ஸ்ரீ தவறாக நகரத்தின் நாயகனான அதிசய சேஷ்டிதங்களை யுடைய நம் ஸ்ரீ கண்ணபிரானை பரமபதத்தில்
கண்டு களிப்பது எனும் காதல் ஒன்றைக் கருதுவமே-சேவித்து ஆனந்தித்து என்ற ஆவல் ஒன்றையே எண்ணுவோம் —
பகவத் ப்ரீதி காரித்த கைங்கர்யமாகிய பரம புருஷார்த்த சிந்தனையே அமையும் —

—————————————-

கலந்து இகழும் போகங்கள் கண்டு வெள்கிக் காரியமும் காரணமும் கடந்து நாம் போய்க்
குலம் திகழும் குருக்கள் அடி சூடி மன்னும் குற்றேவல் வடியவர் தம் குழாங்கள் கூடி
வலம் திகழும் திருமகளும் மற்றிடத்தே மன்னிய மண்மகளாரும் நீளை யாரும்
நலம் திகழ வீற்று இருந்த நாதன் பாதம் நமக்கு இதுவே முடி என்ன நண்ணினோமே -49-சித்தாந்தத்தின் படி பலனுடைய ஸ்வரூபம் –

கலந்து இகழும் போகங்கள் கண்டு வெள்கிக் விஷம் கலந்த தேன் போல் துக்கத்துடன் கலந்து இருந்து அதனால் இகழப் படுகின்ற
உலக ஸூகங்களைப் பார்த்து வெட்கமடைந்து -உபாயத்தை அனுஷ்ட்டித்து
காரியமும் காரணமும் கடந்து நாம் போய்க் –மஹான் அஹங்காரம் அல்லது சரீரம் இந்திரியம் முதலிய காரியங்களையும் –
காரணமான மூல பிரக்ருதியையும் தாண்டி நாம் ஸ்ரீ வைகுண்டத்திற்குச் சென்று
குலம் திகழும் குருக்கள் அடி சூடி மன்னும் குற்றேவல் வடியவர் தம் குழாங்கள் கூடி -அங்கே கூட்டமாய் பிரகாசிக்கின்ற நமது பூர்வாச்சார்யர்களின்
திருவடியை நம் தலையில் சூடி நிலையான கைங்கர்யத்தைச் செய்கின்ற நித்ய ஸூரிகளும் முக்தர்களுமாகிய பாகவதர்களின் கோஷ்டிகளிலே கூடி இருந்து –
வலம் திகழும் திருமகளும் மற்றிடத்தே மன்னிய மண்மகளாரும் நீளை யாரும் -வலப்பக்கத்தில் பிரகாசிக்கின்ற ஸ்ரீ மஹா லஷ்மியுடனும்
இடப்பக்கத்தில் நித்ய வாசம் செய்கின்ற பூமிப் பிராட்டியுடனும் நீளா தேவியுடனும் -மற்று -அசை
நலம் திகழ வீற்று இருந்த நாதன் பாதம் நமக்கு இதுவே முடி என்ன நண்ணினோமே -ஆனந்தம் மிகும்படி எழுந்து அருளி இருந்த
எம்பெருமானுடைய திருவடியை நமக்கு இதுவே கிரீடமாகும் என்னும்படி பொருந்தி நின்றோம் –

—————————————————–

மானங்கள் இன்றி வகுத்து உரைக்கின்ற மதங்கள் எலாம்
தானங்கள் அன்று தரும நெறிக்கு என்று சாற்றிய பின்
வானம் கவர்ந்து மறை முடி சூடிய மா தவத்தோர்
ஞானங்கள் ஒன்ற நடக்கின்ற நல் வழி நாடுவமே -50-இது முதல் முடிவு-54-பாசுரம் – வரை நிகமன அதிகாரம் –

மானங்கள் இன்றி வகுத்து உரைக்கின்ற மதங்கள் எலாம்–வேதம் முதலிய பிரமாணங்களைக் கொள்ளாமல் தோன்றியவாறு பிரித்து விளக்குகின்ற மதங்கள் அனைத்தும்
தானங்கள் அன்று தரும நெறிக்கு என்று சாற்றிய பின் –தர்ம மார்க்கத்திற்கு இடங்களாக மாட்டா என்று ஸ்தாபித்த பின்பு
வானம் கவர்ந்து மறை முடி சூடிய மா தவத்தோர் -பரமபதத்தை ஆசைப்பட்டு வேதாந்தத்தில் முடி சூடி நிற்பவரும் பெரிய தவமாகிய
பிரபத்தியை அனுஷ்டித்தவருமான நம் பூர்வாச்சார்யர்கள்
ஞானங்கள் ஒன்ற நடக்கின்ற நல் வழி நாடுவமே -சாஸ்திரங்கள் ஒன்றுக்கு ஓன்று விரோதம் இல்லாது ஒரு முகமாய்ச் சேரும்படி நடக்கின்ற சிறந்த மார்க்கத்தைப் பற்றுவோம் –

—————————————–

தன்னடிக் கீழ் உலகு ஏழையும் வைத்த தனித் திருமால்
பொன்னடிக்கு ஏற்கின்ற புண்ணியர் கேண்மின் புகலறிவார்
முன்னடி பார்த்து முயலுதலால் அவர் சாயை எனப்
பின்னடி பார்த்து நடந்து பெரும் பதம் ஏறுவமே-51-முன்னோர்களின் அடிச்சுவட்டைப் பின்பற்றுதல் –

தன்னடிக் கீழ் உலகு ஏழையும் வைத்த தனித் திருமால் –தனது திருவடியின் கீழ் ஏழு உலகத்தையும் நிறுத்தி ஆள்கின்ற ஒப்பற்ற எம்பெருமானுடைய
பொன்னடிக்கு ஏற்கின்ற புண்ணியர் கேண்மின் -அழகிய திருவடிகளை பெற்று அனுபவிப்பதற்கு தகுதியுள்ள புண்ணியசாலிகளே
நமக்கு நன்மையானது ஒன்றைக் கூறுகின்றேன் -கேட்பீராக –
புகலறிவார் முன்னடி பார்த்து முயலுதலால் அவர் சாயை எனப் -உபாயங்களின் ஸ்வரூபத்தை அறிந்த நம் பூர்வாச்சார்யர்கள்
தங்கள் பெரியோர் அடிச்சுவட்டைக் கவனித்து அதன்படியே நடக்க முயலுதலால் –
அவர் பின் சாயை என அடி பார்த்து நடந்து பெரும் பதம் ஏறுவமே-நாமும் அவர் பின் நிழல் என்னும்படி அவர்கள் அடிச்சுவட்டை கவனித்து
அவ்வாறே நடந்து மிக உயர்ந்த ஸ்தானமாகிய பரமபதத்தை அடைவோம் –

————————————-

வையம் எலாம் இருள் நீக்கும் மணி விளக்காய் மன்னிய நான்மறை மௌலி மதியே கொண்டு
மெய்யலது விளம்பாத வியாசன் காட்டும் விலக்கில்லா நல் வழியே விரைந்து செல்வீர்
ஐயமற அறுசமயக் குறும்பு அறுத்தோம் அணி யரங்கர் அடியவர்க்கே அடிமை செய்தோம்
மைய கடல் வட்டத்துள் மற்றும் தோற்றும் வாதியர் தம் வாய்ப்பகட்டை மாற்றினோமே-52-ஸ்ரீ வியாச பகவான் காட்டியதே நல்வழி –

ஐயமற அறுசமயக் குறும்பு அறுத்தோம் அணி யரங்கர் அடியவர்க்கே அடிமை செய்தோம் -சந்தேகம் இல்லாமல் ஆறு மதங்களின் வலிமையை ஒழித்து விட்டோம் –
அழகிய ஸ்ரீ ரெங்கநாதனுடைய சேஷ பூதர்களுக்கே கைங்கர்யம் செய்யப் பெற்றோம்
மைய கடல் வட்டத்துள் மற்றும் தோற்றும் வாதியர் தம் வாய்ப்பகட்டை மாற்றினோமே-கருமையான கடல் சூழ்ந்த பூமியுள் இன்னும் ஏற்பட்டுள்ள
வாதிகளுடைய வாய்ப்பேச்சின் ஆடம்பரத்தை ஒழித்தோம்-
ஆதலால் இனி
வையம் எலாம் இருள் நீக்கும் மணி விளக்காய் மன்னிய நான்மறை மௌலி மதியே கொண்டு -உலகம் முழுதும் உள்ள அஞ்ஞானமாகிய
இருளைப் போக்குகின்ற ரத்ன தீபமாய் -பொருந்திய நான்கு வேதாந்தங்களின்ஞானத்தையே சாதனமாகக் கொண்டு
மெய்யலது விளம்பாத வியாசன் காட்டும் விலக்கில்லா நல் வழியே விரைந்து செல்வீர் -சாத்தியமான விஷயம் தவிர வேறு பேசாத ஸ்ரீ வியாச பகவான் –
ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ரத்தின் வழியாக காட்டி அருளிய வேத விரோதம் இல்லாத சிறந்த மார்க்கத்திலேயே வேகத்துடன் செல்வீர்களாக –
ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத் ரத்தத்தில் பக்தியும் பிரபத்தியும் இரண்டு வகை உபாயங்களாக கூறப் பட்டுள்ளன –
விளம்பித்து சிலருக்கே பலன் தரக் கூடிய பக்தி யோகத்தை விட்டு அனைவருக்கும் உரிய -விலக்கு இல்லாத பிரபத்தி மார்க்கத்தைக் கைக் கொண்டு
விரைவில் பலன் பெறுவீர் –என்ற கருத்தையே விலக்கில்லா -என்றும் விரைந்து -என்றும் பாதங்கள் பிரயோகம் –

———————————————–

கோது அவம் ஓன்று இல்லாத தகவே கொண்ட கொண்டல் என வந்து உலகில் ஐவருக்கு அன்று ஓர்
தூதுவனாய் ஒரு கோடி மறைகள் எல்லாம் தொடர்ந்து ஓடத் தனி ஓடித் துயரம் தீர்த்த
மாதவனார் வட கொங்கில் வாணி யாற்றில் வண்ணிகை நன்னடம் கண்டு மகிழ்ந்து வாழும்
போதிவை நாம் பொன்னயிந்தை நகரில் முன்னாள் புணராத பர மதப் போர் பூரித்தோமே -53-இப்பிரபந்தத்தைத் தலைக் கட்டிய வகை கூறுதல் –

கோது அவம் ஓன்று இல்லாத தகவே கொண்ட கொண்டல் என வந்து உலகில் ஐவருக்கு அன்று ஓர் தூதுவனாய்-குற்றமும் கேடும் ஒன்றும் இல்லாத
கருணையே நீராகக் கொண்ட மேகம் என்னும்படி இவ்வுலகிலே திருவவதரித்து அக்காலத்தில் பஞ்ச பாண்டவர்க்கு நிகரற்ற தூதுவனாய்
ஒரு கோடி மறைகள் எல்லாம் தொடர்ந்து ஓடத் தனி ஓடித் துயரம் தீர்த்த மாதவனார் -ஒப்பற்ற கோடிக் கணக்கான வேதங்கள் எல்லாம்
தன் பெருமையைப் புகழ்ந்து தொடர்ந்து ஓடி வர அதற்கு அகப்படாமல் தானே தனியாகச் சென்று உலகினுடைய துக்கத்தைப் போக்கிய எம்பெருமான்
இவை நாம் பொன்னயிந்தை நகரில் -இந்த பர மத பங்கை ஸூக்தியை-அழகிய திருவயிந்த்ர புரத்தில் ஸ்ரீ தெய்வ நாயகனாக திருவவதரித்து
வட கொங்கில் வாணி யாற்றில் வண்ணிகை நன்னடம் கண்டு மகிழ்ந்து வாழும் போது –வட புறத்தில் பெருகுகிற கருட நதியின்
புகழத் தகுந்த சிறந்த நடனத்தைக் கண்டு சந்தோஷித்து எழுந்து அருளி இருந்த போது
முன்னாள் புணராத பர மதப் போர் பூரித்தோமே-முன்பு செய்யப் படாத இந்தப் பரமத பங்கை ஸூக்தியை நாம் தலைக் கட்டினோம்
அவனைக் கண்ணாரக் கண்டு களித்து இந்த பிரபந்தம் அருளிச் செய்தொம் என்றவாறு –
அன்றிக்கே
கொங்கு நாட்டின் வட புரத்தில் பவானி நதிக் கரையின் கண் ஸ்ரீ கிருஷ்ணருடைய சிறந்த நடனத்தை சேவித்துக் கொண்டு நாம் மகிழ்ச்சியுடன் வசிக்கும் காலத்தில்
அழகிய திருவயிந்த்ர புரம் என்னும் நகரத்தில் முன்பு ஆரம்பிக்கப் பட்டுக் கூடி வரப் பெறாத இந்த பிரபந்தத்தை தலைக் கட்டினோம் என்றுமாம் –
கலாபம் முதலிய இடையூறுகளால் பூர்த்தி செய்யாமல் பின்பு கொங்கு நாட்டில் பூர்த்தி செய்யப்பட்டு இருக்கும் என்றும் சொல்வர்
அன்றிக்கே
வடக்கே யுள்ளதும் பரிமளம் மிகுந்ததுமான சிறந்த யமுனா நதிக்கரையில் கண் ஸ்ரீ கண்ணபிரான் செய்து அருளிய ராசக்க்ரீடை முதலிய திரு விளையாடல்களை
அழகிய திருவயிந்த்ர புரத்தில் நாம் சேவித்துக் கொண்டு மகிழ்ந்து வசிக்கும் காலத்தில் இதற்கு முன்பு அமையாத இந்த கிரந்தத்தை முற்றுவித்தோம் -என்றுமாம்
அன்றிக்கே
அழகிய திருவயிந்த்ர புரத்தில் அடியவர்க்கு மெய்யன் –கொங்கு நாட்டின் வடபுறத்தில் உற்பத்தியாகின்ற பெண்ணையாற்றின் லயத்தோடு கூடிய
அழகிய நாட்டியத்தைக் கண்டு மகிழ்ந்து விலக்ஷணமான இந்த ஸ்ரீ ஸூ க்திகளை நாம் பூர்த்தி செய்தோம் என்றுமாம் –
தாய் மாத ஐந்தாம் நாள் உத்சவத்தில் ஜைனர்களை வாதத்தில் தோற்பித்து இந்த பிரபந்தம் அமைத்து அருளினார் என்றும் சொல்வர் –

——————————–

திகிரி மழு யுயர் குந்தம் தண்டு அங்குசம் பொறி சிதறு சதமுக அங்கி வாள் வேல் அமர்ந்ததும்
தெழி பணிலம் சிலை கண்ணி சீரங்கம் செவ்விடி செழிய கதை முசலம் திசூலம் திகழ்ந்ததும்
அகில வுலகுகள் கண்டையாய் ஓர் அலங்கலில் அடைய அடைவில் இலங்கை ஆசு இன்றி நின்றதும்
அடியும் அரு கணையும் ஆம் அரவு என்ன நின்று அடி அடையும் அடியாரை அன்பினால் அஞ்சல் என்பதும்
மகிழும் அமரர் கணங்கள் வானம் கவர்ந்திட மலியும் அசுரர் புணர்த்த மாயம் துரந்ததும்
வளரும் அணி மணி மின்ன வான் அந்தி கொண்டிட மறை முறை முறை வணங்க மாறு இன்றி வென்றதும்
சிகி இரவி மதியம் உமிழ் தேசு உந்த எண் திசைத் திணி மருள் செக உகந்து சீமான்கள் செய்ததும்
திகழ் அரவு அணை யரங்கர் தேசு என்ன மன்னிய திரி சுதரிசனர் செய்ய ஈர் எண் புயங்களே -54- திருவாழி யாழ்வானுடைய திருக்கைகளின் பெருமை –

பரமதங்களைக் கண்டிக்கும் போது திருவாழி யாழ்வானது திரு வருள் பெறுவதற்காக
இப்பிரபந்தத்தில் உபக்ரமத்திலும் உப சம்ஹாரத்திலும் அவர் பெருமையையே பேசப்படுகிறது –

திகிரி மழு யுயர் குந்தம் தண்டு அங்குசம் பொறி சிதறு சதமுக அங்கி வாள் வேல் அமர்ந்ததும் –திருச் சக்கரமும் மழுவும் மேன்மை பொருந்திய ஈட்டியும்
தண்டாயுதமும் மாவெட்டியும் தீப் பொறிகளை சிதறுகின்ற சத்தமுக அக்னியும் வாளும் வேலும் ஆகிய திவ்ய ஆயுதங்கள் பொருந்திய இடமும்
தெழி பணிலம் சிலை கண்ணி சீரங்கம் செவ்விடி செழிய கதை முசலம் திசூலம் திகழ்ந்ததும்-திரிசூலம் திசூலம் என்று மருவியுள்ளது ஒலிக்கின்ற சங்கமும்
வில்லும் பாசமும் கலப்பையும் சிவந்த வஜ்ராயுதமும் செழுமையான கதையும் உலக்கையும் திரிசூலமும் ஆகிய திவ்ய ஆயுதங்கள் பிரகாசிக்கும் இடமும்
அகில வுலகுகள் கண்டையாய் ஓர் அலங்கலில் அடைய அடைவில் இலங்கை ஆசு இன்றி நின்றதும் –சகல லோகங்களும் ஒரு மாலையில் மணிகளாய்
முழுவதும் வரிசையாக பிரகாசிக்கும்படி குற்றம் இல்லாது நின்ற இடமும்
அடியும் அரு கணையும் ஆம் அரவு என்ன நின்று அடி அடையும் அடியாரை அன்பினால் அஞ்சல் என்பதும் -திருவடிநிலை -திருப் பாதுகையும்
பக்கத்தே சாய்ந்து கொள்ளும் அணையுமாகின்ற ஆதிசேஷன் போல் கைங்கர்யத்தில் ஈடுபட்டவர் என்னும்படி நின்று திருவடிகளை சரணம் அடையும்
பாகவதர்களை அவர்கள் இடம் உள்ள அன்பினால் அஞ்ச வேண்டாம் என்று அபாய பிரதானம் செய்வனவும்
மகிழும் அமரர் கணங்கள் வானம் கவர்ந்திட மலியும் அசுரர் புணர்த்த மாயம் துரந்ததும் -மகிழ்வுள்ள தேவர் கூட்டங்களின் ஸ்வர்க்க லோகத்தைக்
கொள்ளையிடுவதற்காக ஓன்று குடித்த திரண்ட அசுரர்கள் செய்த மாய்ச செய்கைகளை ஒழித்தனவும்
வளரும் அணி மணி மின்ன வான் அந்தி கொண்டிட மறை முறை முறை வணங்க மாறு இன்றி வென்றதும் -நிறைந்துள்ள திவ்ய ஆபரணங்களில் உள்ள
ரத்தினங்கள் பிரகாசிக்க -அந்த பிரகாசத்தால் ஆகாசம் செவ்வானம் கொண்டால் போலேயாக வேதம் வகை வகையாகப் போற்றி வணங்கி நிற்க
பகைவர் மீதமின்றி ஜெயித்தனவும்
சிகி இரவி மதியம் உமிழ் தேசு உந்த எண் திசைத் திணி மருள் செக உகந்து சீமான்கள் செய்ததும் –அக்னியையும் சூரியனையும் சந்திரனையும்
கக்குகின்ற தேஜஸை வீசி எறிதலால் எட்டுத் திக்குகளிலும் அடர்ந்த அஞ்ஞானம் ஒழியும்படி செய்ய மனம் கொண்டு உலகிற்கு ஷேமங்களைச் செய்தனவும்
திகழ் அரவு அணை யரங்கர் தேசு என்ன மன்னிய திரி சுதரிசனர் செய்ய ஈர் எண் புயங்களே–பிரகாசிக்கின்ற ஆதிசேஷனாகிய படுக்கையையுடைய
ஸ்ரீ ரெங்கநாதருடைய தேஜஸ் வடிவு எடுத்து வந்தது என்னும்படி சித்திரமாய் இருந்து சுழல்கின்ற
திருவாழி வாழ்வானுடைய சிவந்த பதினாறு திருக்கைகளும் ஆகும்
அவற்றின் பெருமை பேசற்பாலது அன்று என்றவாறு —

ஸ்ரீ பரமத பங்க பிரபந்தம் முற்றிற்று –

————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேதாந்த தேசிகன் சுவாமி திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பன்னிரு நாமம் -ஸ்ரீ வேதாந்த தேசிகாசார்யர் ஸ்வாமிகள்-

August 13, 2017

ஸ்ரீ மான் வேங்கட நாதார்ய கவி தார்க்கிக கேசரீ
வேதாந்தா சார்ய வர்யோ மே சந்நிதத்தாம் சதா ஹ்ருதி –

கவி தார்க்கிக சிம்ஹாய கல்யாண குண சாலினே
ஸ்ரீ மதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம –

சீர் ஓன்று தூப்புல் திரு வேங்கடமுடையான்
பார் ஒன்றச் சொன்ன பழ மொழியுள் ஓர் ஓன்று
தானே யமையாதோ தாரணியில் வாழ்வார்க்கு
வான் ஏறப் போம் அளவும் வாழ்வு

———————————————————————————-

இந்த திவ்ய பிரபந்தமும் பேர் அருளாளன் விஷயமே -ஸ்ரீ கேசவாதி திரு நாமங்களை சொல்லி பன்னிரு திருமண் காப்புகளில்
அவ்வவ் வெம்பெருமான்களை ஆவாஹனம் செய்ய வேண்டும் -இந்த பிரபந்தத்தில் அவ்வெம்பெருமான்களின் திருமேனி நிறம் –
அவர்கள் அணிந்து இருக்கும் திவ்ய ஆயுதங்கள் -அவர்கள் தலைவராய் வீற்று இருக்கும் திசை –
நம் சரீரத்தில் புண்ட்ர ரூபமாய் அவர்கள் வகிக்கும் பாகம் ஆகியவற்றை ஸ்ரீ தேசிகன் வெளியிட்டு அருளுகிறார் –

———————————

பன்னிரு நாமம் திருவத்தியூர்ப் பரன் பாதம் என்று
நன்னிற நாமம் படை திக்கு இவை யாவையும் நாம் அறியத்
தென்னம் தமிழ்த் தொடைச் சீரார் கலித்துறை யோதி ஈந்தான்
மின்னிரு நூலார் வேங்கட நாதன் நம் தேசிகன் —சிறப்புத் தனியன் –

மின்னிரு நூலார் வேங்கட நாதன் நம் தேசிகன் —பிரகாசம் பொருந்திய திரு யஞ்ஜோபவீதம் அமைந்த திரு தூப்பூல் திருவேங்கடமுடையான் ஆகிய நம் தேசிகர்
பன்னிரு நாமம் திருவத்தியூர்ப் பரன் பாதம் என்று -பன்னிரண்டு ஊர்த்வ புண்டரங்களும் பெருமை பொருந்திய ஸ்ரீ ஹஸ்திகிரி நாதனான
பேர் அருளாளனுடைய திருவடி வடிவம் கொண்டன என்று நினைத்து
நன்னிற நாமம் படை திக்கு இவை யாவையும் நாம் அறியத் -அந்த புறங்களின் தேவதையாகிய எம்பெருமானுடைய
சிறந்த நிறம் திரு நாமம் திவ்ய ஆயுதம் வசிக்கும் திசை ஆகிய அனைத்தையும் நாம் அறியும் படி
தென்னம் தமிழ்த் தொடைச் சீரார் கலித்துறை யோதி ஈந்தான்-தெற்கே வழங்கும் அழகிய தமிழினால் ஆகிய பாட்டுக்களுக்குள் சிறப்புப் பொருந்திய
கட்டளை கலித் துறை என்னும் பாவினத்தால் அருளிச் செய்து நாம் அனுசந்திக்கத் தந்து அருளினார் –

——————————-

கார் கொண்ட மேனியன் பாதாம் புயத்தைக் கருத்திருத்தி
ஏர் கொண்ட கீர்த்தி இராமானுசன் தன் இணை அடி சேர்
சீர் கொண்ட தூப்பூல் திருவெண்காடாரியன் சீர் மொழியை
யார் கொண்டு போற்றிடினும் அம்மாள் பாதத்தை அடைவிக்குமே —சிறப்புத் தனியன் –

கார் கொண்ட மேனியன் பாதாம் புயத்தைக் கருத்திருத்தி –மேகத்தை ஒத்த திருமேனியையுடைய பேர் அருளானுடைய
திருவடித் தாமரையை மனத்தில் உறுதியாகத் தியானித்து
ஏர் கொண்ட கீர்த்தி இராமானுசன் தன் இணை அடி சேர் –அழகிய புகழையுடைய ஸ்ரீ பாஷ்யகாரருடைய இரண்டு திருவடித் தாமரைகளை சேர்ந்த
சீர் கொண்ட தூப்பூல் திருவேங்கடாரியன் சீர் மொழியை-பெருமை பெற்ற ஸ்ரீ தூப்பூல் திருவேங்கடமுடையானுடைய சிறந்த ஸ்ரீ ஸூக்தீயை
யார் கொண்டு போற்றிடினும் அம்மாள் பாதத்தை அடைவிக்குமே —மனத்தில் கொண்டு யார் ஸ்துதித்தாலும்
அவ்வெம்பெருமானுடைய திருவடிகளை அந்த ஸ்ரீ ஸூக்திகளே பெறுவிக்கும் –

—————————————————–

கேசவனாய் நின்று கீழைத் திசையிலும் நெற்றியிலும்
தேசுடை ஆழிகள் நான்குடன் செம் பசும் பொன் மலை போல்
வாசி மிகுத்து என்னை மங்காமல் காக்கும் மறையதனால்
ஆசை மிகுத்த யயன் மக வேதியில் அற்புதனே –1- ஸ்ரீ கேசவன் -பொன் நிறம் -நான்கு திருச் சக்ராயுதங்கள்- கிழக்கு -புண்டர ஸ்தானம் நெற்றி –

மறையதனால் ஆசை மிகுத்த யயன் மக வேதியில் அற்புதனே –வேதாந்தார்த்த நிச்சயத்தால் பேர் அருளானனே பரன் என்று தேறி
அவனிடம் அன்பு மிகுதியாகப் பெற்ற ப்ரஹ்மாவினுடைய யாக வேதியிலே திரு அவதரித்த அதிசய சேஷ்டிதங்களை யுடைய பேர் அருளாளன்
கேசவனாய் நின்று கீழைத் திசையிலும் நெற்றியிலும் -கேசவன் என்னும் திரு நாமத்தை யுடையனாய் கிழக்குத் திசையிலும் பாகவதர்கள் நெற்றியிலும்
தேசுடை ஆழிகள் நான்குடன் செம் பசும் பொன் மலை போல்
வாசி மிகுத்து என்னை மங்காமல் காக்கும்–பிரகாசமுள்ள திருச் சக்ராயுதங்கள் நான்குடன் சிவந்த மாற்று உயர்ந்த பொன்னினால் அமைந்த
மலை போல் நிலை பெற்று சிறப்பு மிகுந்து என்னைக் கெட்டுப் போகாமல் ரஷித்து அருளுகிறார் –

————————————–

நாரணனாய் நல் வலம் புரி நாலும் உகந்து எடுத்தும்
ஊர் அணி மேகம் எனவே உதரமும் மேற்கும் நின்றும்
ஆரண நூல் தந்து அருளால் அடைக்கலம் கொண்டு அருளும்
வாரண வெற்பின் மழை முகில் போல் நின்ற மாயவனே–2-ஸ்ரீ நாராயணன் -நீல நிறம் -நான்கு திவ்ய சங்காயுதங்கள் -மேற்கு -புண்ட்ர ஸ்தானம் வயிறு –

நாரணனாய் நல் வலம் பூரி நாளும் உகந்து எடுத்தும்
ஊர் அணி மேகம் எனவே உதரமும் மேற்கும் நின்றும்
ஆரண நூல் தந்து அருளால் அடைக்கலம் கொண்டு அருளும்
வாரண வெற்பின் மழை முகில் போல் நின்ற மாயவனே–நாராயணன் –ஸ்ரீ ஹஸ்த கிரியிலே குளிர்ந்த மேகம் போலே நிற்கின்ற அதிசய சேஷ்டிதங்களையுடைய பேர் அருளாளன்
நாரணனாய் நல் வலம் புரி நாலும் உகந்து எடுத்தும் -நாராயணனாய் இருந்து சிறந்த வலம் புரிச் சங்கங்கள் நான்கையும் மகிழ்ந்து திரு க் கையில் ஏந்தியும்
ஊர் அணி மேகம் எனவே உதரமும் மேற்கும் நின்றும் -நிலத்தில் சஞ்சரிக்கும் அழகிய மேகம் என்னும்படியாகவும் வயிற்றிலும் மேற்குத் திசையிலும் நின்றும்
ஆரண நூல் தந்து அருளால் அடைக்கலம் கொண்டு அருளும் -வேதமாகிய சாஸ்திரத்தைப் பிரவர்த்திப்பித்து கிருபையால்
அடியேனை ரஷிக்கப் பட வேண்டிய வஸ்துவாக ஏற்றுக் கொண்டு அருள்கிறான் –

————————————————————-

மாதவ நாமமும் வான் கதை நான்கும் மணி நிறமும்
ஓதும் முறைப் படி ஏந்தி யுரத்திலும் மேலும் அல்கிப்
போதலர் மாதுடன் புந்தியில் அன்பால் புகுந்து அளிக்கும்
தூதனும் நாதனுமாய தொல் அத்தி கிரிச் சுடரே –3-ஸ்ரீ மாதவன் –இந்த்ர நீல நிறம் -நான்கு திவ்ய கதைகள் –ஊர்த்வ திசை -புண்ட்ர ஸ்தானம் -மார்பு —

தூதனும் நாதனுமாய தொல் அத்தி கிரிச் சுடரே -பாண்டவர்களுக்குத் தூதனாயும் அனைவருக்கும் ஸ்வாமியாயும் உள்ள அநாதியான
ஸ்ரீ ஹஸ்திகிரியில் உள்ள தேஜஸ்ஸாகிய பேர் அருளாளன்
மாதவ நாமமும் வான் கதை நான்கும் மணி நிறமும் -மாதவன் என்கிற திரு நாமத்தையும் -வலிய திவ்ய கதை நான்கையும் -இந்த்ர நீல ரத்னத்தின் நிறத்தையும்
ஓதும் முறைப் படி ஏந்தி யுரத்திலும் மேலும் அல்கிப் -சாஸ்திரங்களில் கூறும் முறைப்படி தரித்து -மார்பிலும் மேல் நோக்கும் திசையிலும் இருந்து
போதலர் மாதுடன் புந்தியில் அன்பால் புகுந்து அளிக்கும் -அடியேன் இடம் அன்பினால் என் மனசில் தாமரை மலரில் விளங்கும் பிராட்டியுடன் பிரவேசித்து ரஷித்து அருள்கிறான் –

——————————————-

கோவிந்தன் என்றும் குளிர் மதியாகிக் கொடியவரை
ஏவும் தனுக்களுடன் தெற்கிலும் உட் கழுத்திலும் நின்று
மேவும் திருவருளால் வினை தீர்த்து எனை யாண்டு யருளும்
பூவன் தொழ வத்தி மா மலை மேல் நின்ற புண்ணியனே -4-ஸ்ரீ கோவிந்தன் –சந்த்ரநிறம் -நான்கு திவ்ய வில்கள்௦புன்ற ஸ்தானம் உட் கழுத்து –

பூவன் தொழ வத்தி மா மலை மேல் நின்ற புண்ணியனே –கமலத்தில் அவதரித்த ப்ரஹ்மா சேவித்து அனுபவிக்கும் படி
ஸ்ரீ ஹஸ்த மஹா கிரியின் மேல் நிலை பெற்று நின்றவனுமான புண்ய ஸ்வரூபனான பேர் அருளாளன்
கோவிந்தன் என்றும் குளிர் மதியாகிக் கொடியவரை -கோவிந்தனாகவும் நிறத்தில் எப்பொழுதும் குளிர்ந்த சந்த்ரனாகவும் இருந்து துஷ்டர்களை
ஏவும் தனுக்களுடன் தெற்கிலும் உட் கழுத்திலும் நின்று -போக்குகின்ற நான்கு திவ்ய விற்களுடன் தெற்குத் திசையிலும் கழுத்தின் உட் புறத்திலும் நிலை பெற்று நின்று
மேவும் திருவருளால் வினை தீர்த்து எனை யாண்டு யருளும்–பொருந்திய சிறந்த கருணையால் பாபங்களை போக்கி அடியேனை அடிமையும் கொண்டு அருள்கிறான் –

———————————————————-

விட்டு வல வயிற்றின் கண் வடக்கும் விடாது நின்று
மட்டவிழ்த் தாமரைத் தாது நிறம் கொண்ட மேனியனாய்த்
தொட்ட கலப்பைகள் ஈர் இரண்டாலும் துயர் அறுக்கும்
கட்டு எழில் சோலைக் கரிகிரி மேல் நின்ற கற்பகமே -5-
ஸ்ரீ விஷ்ணு -தாமரைத் தாதுவின் பொன்நிறம்–நான்கு திவ்ய கலப்பைகள் -வடக்கு திசை -புண்ட்ர ஸ்தானம் -வயிற்றின் வலப் புறம் –

கட்டு எழில் சோலைக் கரிகிரி மேல் நின்ற கற்பகமே -மிக்க அழகுள்ள சோலைகள் சூழ்ந்த ஸ்ரீ ஹஸ்தி கிரியின்
மேலே எழுந்து அருளி யுள்ள கல்பவ்ருக்ஷம் போன்ற பேர் அருளாளன்
விட்டு வல வயிற்றின் கண் வடக்கும் விடாது நின்று –விஷ்ணுவாக இருந்து வயிற்றின் வலப் புறத்திலும் வடதிசையிலும்நீங்காது தங்கி
மட்டவிழ்த் தாமரைத் தாது நிறம் கொண்ட மேனியனாய்த் -தேன் ஒழுகுகின்ற தாமரையின் மகரந்தத்தை நிறத்தைக் கொண்ட திருமேனியுடையனாய்
தொட்ட கலப்பைகள் ஈர் இரண்டாலும் துயர் அறுக்கும் –கையில் ஏந்திய கலப்பைகள் நான்கினாலும் அடியேன் துன்பத்தை போக்கி அருள்கிறான் –

——————————————————————-

மதுசூதனன் என் வலப் புயம் தென் கிழக்கு என்று இவற்றில்
பதியாய் இருந்து பொன் மாது யுறை பங்கய வண்ணனுமாய்
முது மா வினைகள் அறுக்கும் முயலங்கள் ஈர் இரண்டால்
மதுவார் இளம் பொழில் வாரண வெற்பின் மழை முகிலே -6-
ஸ்ரீ மது ஸூ தனன் -தாமரை நிறம் –நான்கு திவ்ய உலக்கைகள் –தென் கிழக்கு –புண்ட்ர ஸ்தானம் –வலது புஜம் —

மதுவார் இளம் பொழில் வாரண வெற்பின் மழை முகிலே –தேன் நிறைந்த இளம் சோலை சூழ்ந்த ஸ்ரீ ஹஸ்திகிரியில்
எழுந்து அருளியுள்ள வர்ஷா கால மேகம் போன்ற பேர் அருளாளன்
மதுசூதனன் என் வலப் புயம் தென் கிழக்கு என்று இவற்றில் -மது ஸூ தனனாக இருந்து எனது வலது புஜமும் தேன் கிழக்கும் ஆகிய இந்த ஸ்தானங்களில்
பதியாய் இருந்து பொன் மாது யுறை பங்கய வண்ணனுமாய் -ஸ்திரமாய் இருந்து ஸ்ரீ லஷ்மீ பிராட்டி நித்ய வாசம் செய்கின்ற தாமரையின் நிறம் யுடையவனாய்
முது மா வினைகள் அறுக்கும் முயலங்கள் ஈர் இரண்டால் -திவ்ய உலக்கைகள் நான்கினால் என்னுடைய அநாதியான பெரிய கர்மங்களை ஒழித்து அருள்கிறான் –

————————————————

திரிவிக்ரமன் திகழ் தீ நிறத்தன் தெளிவுடை வாள்
உருவிக் கரங்களில் ஈரிரண்டு ஏந்தி வலக் கழுத்தும்
செரு விக்கிரமத்து அரக்கர் திக்கும் சிறந்து ஆளும் இறை
மருவிக் கரிகிரி மேல் வரம் தந்திடும் மன்னவனே -7-
ஸ்ரீ திரிவிக்ரமன் –அக்னி நிறம் -நான்கு திவ்ய வாள் –தென் மேற்கு திசை -புண்ட்ர ஸ்தானம் –கழுத்தின் வலப்புறம் –

மருவிக் கரிகிரி மேல் வரம் தந்திடும் மன்னவன் இறை –ஸ்ரீ ஹஸ்திகிரியின் மீது பொருந்தி வேண்டிய வரத்தைக் கொடுத்து அருள்கின்ற சக்கரவர்தியாகிய பேர் அருளாளன்
திரிவிக்ரமன் திகழ் தீ நிறத்தன் தெளிவுடை வாள்-உருவிக் கரங்களில் ஈரிரண்டு ஏந்தி -ஸ்ரீ திரிவிக்ரமனாய் இருந்து ஜ்வலிக்கின்ற அக்னி போன்ற நிறம் உடையவனாய் –
திருக் கைகளிலே பிரகாசம் பொருந்திய திரு வாள்கள் நான்கையும் உருவித் தாங்கி
வலக் கழுத்தும் -செரு விக்கிரமத்து அரக்கர் திக்கும் சிறந்து ஆளும் -கழுத்தின் வலப் புறத்திலும் போரில் வலிமையைக் காட்டுகின்ற
ராக்ஷஸர்களுடைய திசையாகிய நைருதி-தென் மேற்கு திக்கிலும் சிறந்து நின்று ரஷித்து அருள்கிறான் –

—————————————

வாமனன் என் தன் வாமோதரமும் வாயுவின் திசையும்
தாமம் அடைந்து தருண அருக்கன் நிறத்தனுமாய்ச்
சேம மரக்கலம் செம் பாவி ஈர் இரண்டால் திகழும்
நா மங்கை மேவிய நான்முகன் வேதியில் நம் பரனே -8-
ஸ்ரீ வாமனன் –நான்கு திவ்ய வஜ்ரம் –வட மேற்கு திசை –புண்ட்ர ஸ்தானம் -வயிற்றின் இடது புறம் –

நா மங்கை மேவிய நான்முகன் வேதியில் நம் பரனே –சரஸ்வதி உடன் பொருந்திய ப்ரஹ்மாவின் யாக வேதியில் திரு அவதரித்த நம் சர்வேஸ்வரனான பேர் அருளாளன்
வாமனன் என் தன் வாமோதரமும் வாயுவின் திசையும் –வாமனனாய் என் இட வயிற்றையும் வாயுவின் திசையான வட மேற்கையும்
தாமம் அடைந்து தருண அருக்கன் நிறத்தனுமாய்ச் –ஸ்தானமாகக் கொண்டு உதித்த ஸூர்யன் யுடைய நிறமுடையவனாய்
சேம மரக்கலம் செம் பாவி ஈர் இரண்டால் திகழும் –அடியார்களை சம்சார சமுத்திரத்தில் இருந்து கரை சேர்த்து க்ஷேமத்தைக் கொடுக்கும்
ஓடமாக இருந்து சிவந்த திவ்ய வஜ்ராயுதம் நான்கினோடு பிரகாசித்து அருள்கிறான் –

———————————-

சீரார் சிரீதரனாய்ச் சிவன் திக்கும் இடப் புயமும்
ஏரார் இடம் கொண்டு இலங்கு வெண் தாமரை மேனியனாய்ப்
பாராய பட்டயம் ஈர் இரண்டாலும் பயம் அறுக்கும்
ஆரா வமுது அத்தி மா மலை மேல் நின்ற அச்சுதனே-9-
ஸ்ரீ தரன் –வெண் தாமரை நிறம் –நான்கு திவ்ய பட்டாக் கத்தி -வட கிழக்கு திசை –புண்ட்ர ஸ்தானம் -இடது புஜம் –

ஆரா வமுது அத்தி மா மலை மேல் நின்ற அச்சுதனே—எவ்வளவு அனுபவித்தாலும் தெவிட்டாத அமுதமாய் உள்ளவனும்
ஸ்ரீ ஹஸ்தி மஹா கிரியின் மேல் நிலை பெற்றவனும் அடியவர்களைக் காய் விடாதவனுமான பேர் அருளாளன்
சீரார் சிரீதரனாய்ச் சிவன் திக்கும் இடப் புயமும் –சிறப்பு நிறைந்த ஸ்ரீ தரனாய் சிவனுடைய திசையாகிய வட கிழக்கையும் இடது புஜத்தையும்
ஏரார் இடம் கொண்டு இலங்கு வெண் தாமரை மேனியனாய்ப் -அழகு பொருந்திய ஸ்தானமாகக் கொண்டு பிரகாசிக்கின்ற வெண்மையான தாமரையின் நிறமுடையவனாய்
பாராய பட்டயம் ஈர் இரண்டாலும் பயம் அறுக்கும் -பருத்த பட்டயம் என்னும் ஒருவகையான திவ்ய வாள்கள் நான்கினாலும் என் பயத்தைப் போக்கி அருள்கிறான் –

———————————————

என்னிடிகேஷன் என் இறை கீழ் இடக் கழுத்து என்று இவற்றில்
நல் நிலை மின் உருவாய் நாலு முற்கரம் கொண்டு அளிக்கும்
பொன் அகில் சேர்ந்து அலைக்கும் புனல் வேகை வட கரையில்
தென்னன் உகந்து தொழும் தேனை வேதியர் தெய்வம் ஒன்றே -10-
ஸ்ரீ ஹ்ருஷீ கேசன் –மின்னல் நிறம் -நான்கு திவ்ய சம்மட்டி –கீழ்ப் பாகம் –புண்ட்ர ஸ்தானம் –கழுத்தின் இடப் புறம் —

பொன் அகில் சேர்ந்து அலைக்கும் புனல் வேகை வட கரையில் -பொன்னையும் அகில் கட்டையையும் கொண்டு
அலை மோதுகின்ற ஜலத்தை யுடைய வேகவதி நதியின் வடகரையில்
தென்னன் உகந்து தொழும் தேனை வேதியர் தெய்வம் ஒன்றே -புண்ய ராஜன் மகிழ்ந்து வணங்குகின்ற தேனம் பாக்கத்தில் உள்ள
வைதிகப் பெரியோர்களின் ஒரே தெய்வமாகிய பேர் அருளாளன்
பெருமாள் கோயிலுக்கு மிகச் சமீபத்தில் தேனம் பாக்கம் என்னும் ஸ்ரீ கிராமம் –இத்தை ஸ்ரீ காஞ்சீ புரத்து ஒரு வீதியாகவும் கொள்ளலாம் –
அங்கு ஸ்ரீ பாஞ்ச ராத்ர சாஸ்திரங்களில் கரைகண்ட பரம பாகவதர்கள் எழுந்து அருளி இருந்து பேர் அருளாளனை குல தெய்வமாகக் கொண்டு
வழுவாது திரு வாராதானம் செய்து வந்தனர்
அவர்களுடைய ஆத்மகுணங்களைக் கண்ட ஆஸ்திக சிகாமணியான பாண்டிய ராஜன் ஒருவன் அவர்களுக்கு ஸம்மானம் அளித்து
அவர்களை வணங்கி வந்தான் என்னும் வரலாறு கர்ண பரம்பரையாக அறியக் கிடக்கின்றது –
மேலும் பெருமாள் கோயில் பாண்டிய நாட்டில் அடங்கியதாகச் சில காலம் இருந்ததாகவும் அப்பொழுது பாண்டிய ராஜன் பேர் அருளாளன் யுடைய அருளாலே
பெருமை பெற்று வாழ்ந்து வந்தது பற்றியும் அவ்வரசன் பேர் அருளாளனைத் தொழுது வந்ததாகவும் சிலா சாசனம் உளது என்றும் சிலர் பணிப்பர்
என்னிடிகேஷன் என் இறை கீழ் இடக் கழுத்து என்று இவற்றில் -ஹிருஷீகேசன் என்னும் என் ஸ்வாமியாய் இருந்து கீழ்ப் பாகமும் கழுத்தின் இடப் புறமும்
ஆகிய இந்த இடங்களில்
நல் நிலை மின் உருவாய் நாலு முற்கரம் கொண்டு அளிக்கும் -நன்கு நிலை பெற்ற மின்னைப் போன்ற நிறமுடையவனாய் இருந்து
நான்கு திவ்ய சம்மட்டிகளை திவ்ய ஆயுதமாகக் கொண்டு ரஷித்து அருள்கிறான் –

————————————————

எம் பற்பநாபனும் என் பின்மனம் பற்றி மன்னி நின்று
வெம் பொன் கதிரவன் ஆயிரம் மேவிய மெய் உருவாய்
அம் பொன் கரங்களில் ஐம் படை கொண்டு அஞ்சல் என்று அளிக்கும்
செம் பொன் திரு மதிள் சூழ் சிந்துரா சலச் சேவகனே -11-
ஸ்ரீ பத்ம நாபன் –ஸூர்யன் நிறம் –திவ்ய சக்கரம் சங்கு வாள் வில் தண்டு என்னும் பஞ்ச திவ்ய ஆயுதங்கள் -ஸ்தானம் -மனாஸ் -புண்ட்ர ஸ்தானம் -பின்புறம்

செம் பொன் திரு மதிள் சூழ் சிந்துரா சலச் சேவகனே –சிவந்த பொன்னாலாகிய அழகிய மதிள் சூழ்ந்த ஸ்ரீ ஹதிகிரியில் உள்ள மஹா வீரனான பேர் அருளாளன்
எம் பற்பநாபனும் என் பின்மனம் பற்றி மன்னி நின்று -எம்முடைய பத்ம நாபனுமாகி என்னுடைய பின் பாகத்தையும் மனசையும் பற்றிக் கொண்டு ஸ்திரமாய் நின்று
வெம் பொன் கதிரவன் ஆயிரம் மேவிய மெய் உருவாய் -உஷ்ணமான சிவந்த ஆயிரம் ஸூர்யனோடு ஒப்பான திரு மேனி நிறமுடையவனாய்
அம் பொன் கரங்களில் ஐம் படை கொண்டு அஞ்சல் என்று அளிக்கும் -அழகிய சிவந்த திருக்கைகளில்
திவ்ய பஞ்ச ஆயுதங்களைத் தரித்து அஞ்சாதே என்று கூறி ரஷித்து அருள்கிறான் –

——————————

தாமோதரன் என் தன் தாமங்கள் நாலு கரங்களில் கொண்டு
ஆமோ தரம் என ஆக்கத்தின் உட் புறம் பிற் கழுத்தும்
தாம் ஓர் இளம் கதிரோன் என என் உள் இருள் அறுக்கும்
மா மோகம் மாற்றும் மதிள் அத்தியூரில் மரகதமே-12-
ஸ்ரீ தாமோதரன் –உதிக்கின்ற ஸூர்யன் நிறம் -நான்கு திவ்ய பாசங்கள் -சரீரத்தின் உட் புறமும் வெளிப் புறமும் –புண்ட்ர ஸ்தானம் –கழுத்தின் பின் புறம்

மா மோகம் மாற்றும் மதிள் அத்தியூரில் மரகதமே–பெரிய அஞ்ஞானத்தைப் போக்குகின்ற திரு மதிள்கள் சூழ்ந்த
ஸ்ரீ ஹஸ்திகிரியில் உள்ள மரகத ரத்னம் போன்ற பேர் அருளாளன்
தாமோதரன் என் தன் தாமங்கள் நாலு கரங்களில் கொண்டு -என் தாமோதரனாகி நான்கு திவ்ய பாசங்களை திருக் கைகளிலே ஏந்திக் கொண்டு
ஆமோ தரம் என ஆக்கத்தின் உட் புறம் பிற் கழுத்தும் -இந்தப் பெருமை மற்றவருக்கு உண்டோ என்னும் படி சரீரத்தின் உள்ளேயும் வெளியிலும் கழுத்தின் பின் புறத்தும் நின்று
தாம் ஓர் இளம் கதிரோன் என என் உள் இருள் அறுக்கும் -தான் ஓர் உதிக்கின்ற ஸூர்யன் என்னும்படி நிறமுடையவனாய் இருந்து
எனது மனத்துள் இருக்கும் அஞ்ஞானம் ஆகிய இருளை போக்கி அருள்கிறான் –

————————————–

கத்தித் திரியும் கலைகளை வெல்லும் கருத்தில் வைத்துப்
பத்திக்கு உரு துணை பன்னிரு நாமம் பயில்பவர்க்கு
முக்திக்கு மூலம் எனவே மொழிந்த இம்மூன்றும் நான்கும்
தித்திக்கும் எங்கள் திருவத்தி யூரரைச் சேர்பவர்க்கே -13-

கத்தித் திரியும் கலைகளை வெல்லும் கருத்தில் வைத்துப் -சாரம் இல்லாமல் ஆடம்பரத்தோடு கத்திக் கொண்டே திரிகின்ற
பயன் அற்ற வித்யைகளை வாதத்தில் ஜெயிக்க கூடிய உறுதியை யுடைய மனசில்
பத்திக்கு உரு துணை பன்னிரு நாமம் பயில்பவர்க்கு –பக்திக்குத் தக்க சாதனமான கேசவாதி பன்னிரண்டு திரு நாமங்களையும் ஊன்றி அனுசந்தித்து பரிச்சயம் செய்பவர்க்கு
முக்திக்கு மூலம் எனவே மொழிந்த இம்மூன்றும் நான்கும் -மோக்ஷம் அளிக்க காரணமாகும் என்னும்படி அருளிச் செய்த இந்த பன்னிரண்டு பாசுரங்களும்
தித்திக்கும் எங்கள் திருவத்தி யூரரைச் சேர்பவர்க்கே -எங்கள் பேர் அருளாளரை ஆஸ்ரயித்த பாகவதர்களுக்கே பரம போக்யமாய் இன்பம் கொடுப்பனவாகும் –

———————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேதாந்த தேசிகன் சுவாமி திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ மெய் விரத மான்யம்-ஸ்ரீ ஹஸ்திகிரி மஹாத்ம்யம் -ஸ்ரீ வேதாந்த தேசிகாசார்யர் ஸ்வாமிகள்-

August 8, 2017

ஸ்ரீ மான் வேங்கட நாதார்ய கவி தார்க்கிக கேசரீ
வேதாந்தா சார்ய வர்யோ மே சந்நிதத்தாம் சதா ஹ்ருதி –

கவி தார்க்கிக சிம்ஹாய கல்யாண குண சாலினே
ஸ்ரீ மதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம –

சீர் ஓன்று தூப்புல் திரு வேங்கடமுடையான்
பார் ஒன்றச் சொன்ன பழ மொழியுள் ஓர் ஓன்று
தானே யமையாதோ தாரணியில் வாழ்வார்க்கு
வான் ஏறப் போம் அளவும் வாழ்வு

————————————————

சத்யவ்ரத மஹாத்ம்யம் –மெய் விரதம் -சத்ய விரதம் –29-பாசுரங்கள் கொண்ட பிரபந்தம் –
ஒரு பாசுரத்தால் ஸ்ரீ பாஷ்யம் -16-பாதங்கள் அர்த்தங்களையும் அருளிச் செய்கிறார் –

————-

1687 முதல் –22 ஆண்டுகள் –உடையார்பாளையம் –ஒவ்ரங்க சீப் –
போதேந்த்ர சங்கராச்சாரியார் -பங்கார காமாச்சி -செஞ்சி கோட்டை முற்றுகை போராட்டம் –
பழைய சீவரம் கல்லைக் கொண்டு மூலவர் –
தானே காட்டக் கண்டார்கள் பின்பு-
அர்ச்சகர் கனவில் -யாக தீ சுடர் தாபம் -திருவால வட்டம் அருளினார் முன்பு ஸ்ரீ திருக்கச்சி நம்பி –
குளிர்ச்சியாக இருக்க வழி-ஜல நிவாஸம் தானே இருக்க அருளிச் செய்தானாம்
உடையார்பாளையம் -உத்சவ மூர்த்திகள் –1687-சென்று -1710-மீண்டு வந்தது பற்றிய கல் வெட்டு தாயார் சந்நிதியில் உள்ளதே
ஸ்ரீ ஆத்தான் ஜீயர் உதவியால் -1710-காஞ்சிக்கு மீண்டும் உத்சவரை எழுந்து அருள பண்ணி வந்தார் —
பங்குனி உத்திரட்டாதி நக்ஷத்ரம் பிரதிஷ்டை-கல்வெட்டு உண்டு

1781 -ஜூலை 31 -முதலில் எடுக்கப்பட்டதாக கல்வெட்டு
கிருதயுகம் ஹஸ்திகிரி அப்பன்
த்வாபர யுகம் -ஸ்ரீ ரெங்கம்
த்ரேதா யுகம் –புருஷோத்தம க்ஷேத்ரம்
கலியுகம் கலவ் வேங்கடம்
1937–1979–2019-ஏறக்குறைய -40-ஆண்டுகள் -எடுக்கப்பட்டதாக அறிகிறோம்-

கிடந்த கோலத்துடன் முதலிலே ஸ்ரீ ராமானுஜருக்கு விந்தியா பர்வதத்தில் –
வேடன் வேடுவிச்சி -ரூபத்தில் சேவை உண்டே

————————–

யஸ்ய பிரசாத கலயா பதிர ஸ்ருனோதி பங்கு பிரதாவதி ஜலேந ச வக்தி முக
அந்த ப்ரபஸ்யதி ஸூ தம் லபதேச வந்த்யா தம் தேவமேவ வரதம் சரணம் கதோஸ்மி –ஸ்ரீ ஆளவந்தார் அருளிச் செய்த முக்த ஸ்லோகம்

ஸ்ரீ பேர் அருளாளர் அனுக்ரஹத்தினால் -செவிடனும் செவி பெற்று -முடவனும் விரைந்தோடி -ஊமையும் பேசி –
குருடனும் கண்டு மாலதியும் குழந்தை பெறும் படி -அவரைத் தஞ்சமாகப் பற்றினேன் -ப்ரத்யக்ஷம் ஆதி அத்தி வரதர் வைபவத்தில் –

——————————-

ஸ்ரீ மெய் விரத மான்யம் -என்றும் அருளிச் செய்வர் இந்த பிரபந்தத்தையே

———————

இந்திரனுடைய வாஹனமான ஐராவதம் நெடுநாள் தவம் செய்து மலை ரூபமாகவே
எம்பெருமானைத் தரித்துக் கொண்டு இருப்பதாலும்
ஸ்ரீ கஜேந்திர ஆழ்வான் பகவானுடைய திருவடித் தாமரைகளிலே
தாமரை புஷபங்களை ஸமர்ப்பித்து உஜ்ஜீவித்த படியாலும்
திக்கஜங்கள் ஆராதிக்கும் க்ஷேத்ரம் ஆகையாலும்
ஸ்ரீ ஹஸ்திகிரி என்ற திருநாமம்

————————

வாழி யருளாளர் வாழி யணி யத்திகிரி
வாழி எதிராசன் வாசகத்தோர் வாழி
சரணாகதி எனும் சார்வுடன் மாற்று
ஒன்றை யரணாகக் கொள்ளாதார் அன்பு -1-

வாழி யருளாளர் வாழி யணி யத்திகிரி வாழி எதிராசன் வாசகத்தோர் வாழி —
பேர் அருளாளர் வாழ்க -பூமிக்கு அலங்காரமான ஸ்ரீ ஹஸ்திகிரி வாழ்க –
ஸ்ரீ பாஷ்யகாரருடைய ஸ்ரீ ஸூக்திகளில் ஈடுபட்டவர் வாழ்க
சரணாகதி எனும் சார்வுடன் மாற்று ஒன்றை யரணாகக் கொள்ளாதார் அன்பு -பிரபத்தி என்னும்
உபாயத்துடன் வேறு ஒன்றை உபாயமாக
கொள்ளாதவர்களுடைய அன்பும் வாழ்க -என்று மங்களா சாசனம் செய்தவாறு –

பேர் அருளாளர் -மிகுந்த கிருபையாலேயே ஆள்பவர் -ரக்ஷிப்பவர் -இதுவே நிரூபிக்கப் படுபவர்
உயர்வற உயர் நலம் யுடையவன் -என்றவாறு
கிருபையினால் ஆளப்பட்டவர் என்றுமாம் -அதற்க்கு வசப்பட்டவர் –
விதி சூழ்ந்ததால் எனக்கேல் அம்மான் த்ரிவிக்ரமனையே -என்றதும் இங்கே அனுசந்தேயம்
ஸம்ப்ரதாய ரக்ஷகர் அன்றோ
கேழ்த்த சீர் அரன் முதலாக் கிளர் தெய்வமாய்க் கிளர்ந்து
சூழ்த்தமரர் தொழுதால் உன் தொல் புகழ் மாசூணாதோ –
அணி அத்திகிரி -பூமிக்கே அலங்காரம் ஹஸ்திகிரி -அதுக்கும் அலங்காரம் தேவப்பெருமாள் –
யாத்திராசன் வாசகத்தோர் -ஸ்ரீ எம்பெருமானார் ஸ்ரீ ஸூக்திகளே நிரூபகமான நம் பூர்வர்கள்
வாழி ஸரணாகதி – உபாயமும் உபேயமும் தேவப்பெருமாளே என்று இருக்கும் மஹா விஸ்வாசத்துக்கும் பல்லாண்டு

——————————

எண்டிசையும் கடல் ஏழும் மலைகள் ஏழும் ஈர் ஏழு வையகமும் படைத்து இலங்கும்
புண்டரிகத்தயன் புணர்த்த பெரிய வேள்விப் புனித நறும் போக்கியத்தை யுவந்து வந்து
தொண்டை எனும் மண்டலத்தின் நடுவில் பாரில் தூ நிலம் மெய் விரதத்துத் தோன்றி நின்ற
கொண்டல் அருள் குணமே நாம் கூறுகின்றோம் கூர் மதியீர் குறியாகக் கொண்மினீரே–2-இந்நூலை கேட்க்குமாறு அறிவுறுத்தல் –

எண்டிசையும் கடல் ஏழும் மலைகள் ஏழும் ஈர் ஏழு வையகமும் படைத்து இலங்கும் –எட்டுத் திசைகளையும் –
உப்பு பால் தேன் நெய் கருப்பஞ்சாறு தயிர் சுத்த ஜலம் -ஆகிய ஏழு சமுத்ரங்களையும் —
மஹேந்த்ரம் மலயம் ஸஹ்யம் சுக்திமான் ருக்ஷம் விந்த்யம் பாரியாத்ரம் -ஆகிய ஏழு குல பர்வதங்களையும்
அதல விதல ஸூதல தராதலா மஹாதல ரஸாதல பாதாளங்கள் -ஆகிய ஏழு கீழ் உலகங்களையும்
பூ புவ ஸூவ மஹ ஜன தப சத்யம் ஆகிய ஏழு மேல் உலகங்களையும்
ஸ்ருஷ்டித்து பிரகாசிப்பவனும்

புண்டரிகத்தயன் புணர்த்த பெரிய வேள்விப் புனித நறும் போக்கியத்தை யுவந்து வந்து -எம்பெருமானுடைய நாபிக் கமலத்து உதித்த ப்ரஹ்மாவால்
நடத்தப்பட்ட பெரிய அஸ்வமேத யாகத்தின் பரிசுத்தமான வாசனையுள்ள ஹவிஸை பெறுவதற்கு மகிழ்ந்து வந்து

தொண்டை எனும் மண்டலத்தின் நடுவில் பாரில் தூ நிலம் மெய் விரதத்துத் தோன்றி நின்ற –தொண்டை மண்டலம் என்னும் தேசத்தின் நடுவில்
பூமியிலே மிக பரிசுத்தமான ஸ்தலமான சத்யவ்ரதம் என்னும் திவ்ய ஷேத்ரத்திலே திருவவதரித்து சாஸ்வதமாக நிலை பெற்ற

கொண்டல் அருள் குணமே நாம் கூறுகின்றோம் கூர் மதியீர் குறியாகக் கொண்மினீரே-பேர் அருளாளன் என்னும் மேகத்தின் கருணை என்னும் குணத்தையே –

மனத்தில் பாவமும் வாக்கில் ராகமும் கையில் தாளமுமாகிய பொருந்த வேண்டும் என வகுத்த பாரத சாஸ்திரத்தைத் தழுவி பண்ணும் இசையும் அமையுமாறு

பேர் அருளாளன் பெருமையை நாம் இந்த பிரபந்தத்தில் பேசுகின்றோம்-கூர்மையான அறிவு பெற்றோர்களே -நீங்கள் இதனைக் கவனத்துடன் அறிந்து கொள்க –

வேள்வியும் ஹவுஸும் அக்னியை நினைவூட்டிக் காட்ட அந்த தாபத்தை மறக்க
கருணை மழை பொழியும் காளமேகத்தைக் குறித்து அருளிச் செய்யும் சுவையை அனுபவிப்போம் –

———————————————

வம்மின் புலவீர் அருளாளப் பெருமாள் என்றும் அருளாழி
யம்மான் என்றும் திருமகளைப் பெற்றும் என்நெஞ்சம் கோயில் கொண்ட
பேர் அருளாளர் என்றும் வியப்பா விருதூதும்படி கரை புரண்ட
கருணைக் கடலை எவ்வண்ணம் பேசுவார் ஈது என்ன பாங்கே–3-தம்முடன் கூடுமாறு புலவரை அழைத்தல் –

வம்மின் புலவீர் அருளாளப் பெருமாள் என்றும் அருளாழியம்மான் என்றும் —
புலவர்களே வாருங்கோள்—பேர் கருணைக் கடலானதாலே
அருளாளப் பெருமாள் என்றும் அருளாழி அம்மான் என்றும்
திருமகளைப் பெற்றும் என்நெஞ்சம் கோயில் கொண்ட –பிராட்டியைத் தேவியாகக் கொண்டதுமாம் அன்றி
என் மனத்தை வாஸஸ்தலமாகக் கொண்ட
பேர் அருளாளர் என்றும் வியப்பா விருதூதும்படி கரை புரண்ட -பேர் அருளாளர் என்றும் ஆச்சர்யமாய் —
ஆழ்வாராதிகள் பூர்வாச்சார்யர்கள் விருதுகளைக் கூறி முழங்கும் படி நின்ற கரை புரண்டு பெருகும்
கருணைக் கடலை எவ்வண்ணம் பேசுவார் ஈது என்ன பாங்கே-கருணைக் கடலான எம்பெருமானை
எவ்வாறு நீங்கள் பேச வல்லீர் -இவ்வாறு செய்வது என்ன நேர்மை -நாம் ஓன்று கூடி
அவன் பெருமையை ஒருவாறு பேசிப் பார்ப்போம் -என்றவாறு–

அதி நீசனான எனது நெஞ்சத்தையும் கோயில் கண்டு அருளி பேர் அருளாளன்
பேர் அணிந்து உலகத்தவர் தொழுது ஏத்தும் பேர் அருளாளன் எம்பெருமான் –
அருளாழி அம்மான்
திரு மா மகளைப் பெற்றும் என் நெஞ்சகம் கோயில் கொண்ட
பேர் அருளாளன் பெருமை பேசக்கற்றவன் காமரு சீர்க் கலியன்

——————————————————-

பிரபன்னனுக்கு பொறுப்பு நீங்கியமை -அம்ருத ரஞ்சனி 18-பாசுரமும் இதுவே –

ஒன்றே புகல் என்று உணர்ந்தவர் காட்டத் திருவருளால்
அன்றே யடைக்கலம் கொண்ட நம் மத்திகிரித் திருமால்
இன்றே இசையின் இணையடி சேர்ப்பர் இனிப் பிறவோம்
நன்றே வருவது எல்லாம் நமக்குப் பரம் ஓன்று இலதே–4-

ஒன்றே புகல் என்று உணர்ந்தவர் காட்டத்–அர்த்த பஞ்சகத்தையும் சரீராத்மா பாவம் முதலிய சம்பந்தத்தையும்
அறிந்த ஆச்சார்யர்கள் உபதேசித்து அருள –
எம்பெருமானே உபாயம் உபேயம் என்று அறிந்த ஆச்சார்யர்கள் அவன் திருவடிகளில் நம்மை சமர்ப்பித்து அருள
திருவருளால் -பிரதியுபகாரத்தை எதிர்பாராத சிறந்த கிருபையினால் –பிராட்டியுடைய கிருபையினால் என்றுமாம்

அன்றே யடைக்கலம் கொண்ட நம் மத்திகிரித் திருமால் -அப்பொழுதே -ரக்ஷிக்கப்பட வேண்டிய வஸ்துவாக ஏற்றுக் கொண்ட நம்முடைய
திரு ஹஸ்திகிரி நாதரான பேர் அருளாளர் –

இன்றே இசையின் இணையடி சேர்ப்பர் இனிப் பிறவோம் நன்றே வருவது எல்லாம் நமக்குப் பரம் ஓன்று இலதே-இப்பொழுதே
இசையின் -முக்தியைப் பெற நாம் சம்மதித்ததால்
தம்முடைய திருவடித்த தாமரைகளில் சேர்த்து கொண்டு அருளுகிறார்
இனி மறுபடியும் இக்கர்ம பூமியிலே பிறக்க மாட்டோம் -இனி இச்சரீரம் அழியும் அளவும் வரும்
இன்பங்களும் துன்பங்களும் ஆகிய எல்லாம் நமக்கு அநுகூலங்களே-
இனி நாம் உஜ்ஜீவிப்பதற்காகச் செய்ய வேண்டிய பொறுப்பு நமக்கு இல்லை –

இசையில் -அத்வேஷ மாத்ரமே வேண்டுவது –
இச்சைப்படும் காலத்திலேயே -கொடு யுலகம் காட்டாதே –
கொழுஞ்சோதி உயரத்துக் கூட்டரிய திருவடி கூட்டி அருளுவார் அன்றோ

ஒன்றே புகல் என்றது -நாகணை மிசை நம்பிரான் சரணே சரண் நமக்கு -என்று
ஒருவனே ஸித்த உபாயம் என்றபடி

உணர்ந்தவர் -என்றது -ஸாஸ்த்ர சார சம்பந்த விஷயங்களையும்
அர்த்த பஞ்சக விஷயமுமான ஞானத்தை யுடையவர்களாயும்
அவற்றை உபதேசிக்க வல்லவர்களாக ஆச்சார்யர்கள் என்றபடி

உணர்ந்தவர் ஒன்றே புகல் என்று காட்ட -என்று அந்வயம்

இனிப் பிறவோம் -இங்கே திரிந்தேர்க்கு இழுக்குற்று என் என்கிறபடி
த்வரை அற்று இருக்கும் அளவிலும்
சரணமாகும் தன தாள் அடைந்ததற்கு எல்லாம்
மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான் -என்கிறபடியே
அருளுபவர் என்றபடி

—————————————————————–

பிரமன் தனது முயற்சி கர்மத்தால் தடைபட வருந்துதல் —

வம்பவிழ் போதமர் மாதர் உகந்தாம் மா நிதியைத்
தன் பலமே கொண்டு காணக் கருதிய தாமரையோன்
முன் பல குற்றத்து வல்வினை மொய்க்க முகிழ் மதியாம்
அம்புலி வேண்டிய பாலனைப் போலே அழுத்தனனே -5-

முகிழ் மதி -சுருங்கின ஞானம்
வல் வினை -பகவத் நிக்ரஹ சங்கல்பம் –
அம் மா நிதி -ஹிரண்ய நிதி -நித்ய அநபாயினி கொண்ட சம்பந்தம் மாறாத நிதி –
வம்பவிழ் -போக்யத்வம் விவஷிதம்

வம்பவிழ் போதமர் மாதர் உகந்தாம் மா நிதியைத் –வாசனையுள்ள மலர்ந்த புஷபத்திலே வசிக்கின்ற பிராட்டியின்
அன்புக்கு உரியனான பெரிய சேமநிதி போன்ற அவ்வெம்பெருமானை —
ஸ்ரீ யபதி-பராத்பரன் -சர்வ அந்தர்யாமி -சர்வ காரணன் -அகில ஹேய ப்ரத்ய நீகன்-
கல்யாணை குண கணன்–வாத்சல்யாதி குணக் கடல் –
கறந்த பாலுள் மறைந்து நிற்கும் நெய்யே போன்றவன் அன்றோ –

தன் பலமே கொண்டு காணக் கருதிய தாமரையோன்-தன்னுடைய யோக பலத்தைக் கொண்டு
சாஷாத் கரிக்க நினைத்த ப்ரஹ்மா
முன் பல குற்றத்து வல்வினை மொய்க்க முகிழ் மதியாம்–முன்பு பல தவறான செயகைகளாலே
ஏற்பட்ட வழிய கர்மங்கள் சூழ்ந்து கொள்ள மழுங்கிய அறிவுடையனாய்
அம்புலி வேண்டிய பாலனைப் போலே அழுத்தனனே -எட்ட முடியாத சந்திரனைப் படித்துத் தரும்படி விரும்பிய
குழந்தையைப் போலே தனது எண்ணம் நிறைவேறாமையாலே அழுதான் –

——————————————-

பிரமன் தன்னை வெறுத்துக் கொள்ளுதல் —

அடங்காக் கரணங்கள் ஐந்துடன் ஆறும் அடக்கி முனம்
நெடுங்காலம் இந்நிலமே யாப்புண்டு நீடுறைவான்
சடங்கால் பெரிய தவங்கள் செய்தேன் என்ன தன்மையிது என்று
இடம் காத்து இருந்த திசைமுகன் தன்னை இகழ்ந்தனனே –6-

சடங்கால் –அங்கங்களினால் –

ஐந்துடன் -கர்ம இந்த்ரியர்களுடன்
ஆறும் -ஞான இந்திரியங்களும் மனஸ்ஸும்
என்ன தன்மை இது-பழுதே பளப்பாக்களும் போயின என்று அஞ்சி அழும் நிலை
அல்ப அஸ்திர பலன்களுக்காக தவம் செய்து வியர்த்தமே ஆயினவே –
பூண்டு -இந்த துக்க பரம்பரைகள் தானே விளைத்துக் கொண்டமை-

இடம் காத்து இருந்த திசைமுகன் –தன்னுடைய பிரம்மா பதவியை வழுவாது ரஷித்துக் கொண்டு இருந்த ப்ரஹ்மா
நெடுங்காலம் இந்நிலமே யாப்புண்டு நீடுறைவான்-நீண்ட காலம் இந்த பிரம்மா லோகத்தையே ஸ்திரமாய்
இருப்பதாகக் கொண்டு -நெடு நாள் அப்பதவியில் வாழ விரும்பி

அடங்காக் கரணங்கள் ஐந்துடன் ஆறும் அடக்கி முனம் –முன்பே அடங்காத இந்திரியங்கள் ஐந்துடன்
ஞான இந்திரியங்கள் மனஸ் ஆறையும் அடக்கி

சடங்கால் பெரிய தவங்கள் செய்தேன் என்ன தன்மையிது என்று தன்னை இகழ்ந்தனனே -விரதங்களால் பெரிய தபஸ் ஸூக்களைச் செய்தேன் –
நான் செய்த இக்காரியம் எத்தகையது -எவ்வளவு இழிவானது என்று தன்னையே வெறுத்துக் கொண்டான் –
கர்ம விசேஷத்தைக் கழிக்காமல் இந்த பதவியை சாஸ்வதம் என்று தவறாக கருதி பெரிய தவம் புரிந்து
இந்த ப்ரஹ்மாண்டத்திலே ஏறியும் இறங்கியும் அல்லல் பட
நெடும்காலம் வீணே சரீரத்தையும் துன்புறுத்திக் கொண்டேன் என்று நெஞ்சு உருகிக்
கண்ணீர் சோர்ந்து நெடு மூச்சு எறிந்து நிலத்தையே பார்த்து இருந்து
தன்னையே வெறுத்துக் கொண்டான் -என்றவாறு –

திசை முகன் -திகைத்த முகத்தன்-என்ற பொருள் பெற பிரயோகம் –

——————————————————-

பிரமன் தவம் புரியப் பாரத நாட்டை அடைதல் —

விண்ணுலகில் வீற்றிருந்த மேன்மையாலும் வேதங்கள் ஈரிரண்டும் விரித்தலாலும்
கண்ணனை நான் கருத்துறவே காண்பன் என்னக் காணாமல் விலக்கிய தன் வினையைக் காணா
வெண்ணிய நல் புவனங்கள் ஏழும் ஆறும் இரு மூன்று தீவம் எட்டிடமும் விட்டுப்
பண்ணிய நல் விரதம் எலாம் பலிக்கும் என்று பாரதத்தில் பங்கயத்தோன் படிந்திட்டானே -7-

நற் புவனங்கள் ஏழும் ஆறும்–பூமி ஒழிந்த 13 லோகங்களும்
இரு மூன்று தீவமும் -ஜம்பூ த்வீபம் ஒழிந்த பிலக்ஷ -ஸால்மலி -குச -கிரௌஞ்ச -ஸாக -புஷ்கர -த்வீபங்கள்
எட்டு இடமும் -பாரத வர்ஷம் தவிர்ந்த -கிம் புருஷ -ஹரி -இலாவ்ருத -ரம்யக – ஹிரண்யக -குரு –
பத்ராஸ்வ -கேதுமால -என்று சொல்லப்பட்ட எட்டு ஸ்தலங்களும் –
இவற்றை விட்டு -பாரத வர்ஷத்தில் -ஸத்ய விரத ஷேத்ரத்தில் யாகம் பண்ண வந்தான் என்றபடி

பங்கயத்தோன்–பகவானுடைய திரு நாபிக் கமலத்தில் பிறந்த ப்ரஹ்மா
விண்ணுலகில் வீற்றிருந்த மேன்மையாலும் வேதங்கள் ஈரிரண்டும் விரித்தலாலும் —
பிரம்ம லோகத்தில் பிரம்மா பதவி வகித்த பெருமையாலும்
வேதங்கள் நான்கையும் உலகுக்கு வெளியிட்டமையாலும்

கண்ணனை நான் கருத்துறவே காண்பன் என்னக் -எம்பெருமானை மனத்தில் நிலை பெற்று நிற்கும் படி
நான் நேரில் சாஷாத் கரிப்பேன் என்று நினைத்து யத்னம் செய்து

காணாமல் விலக்கிய தன் வினையைக் காணா-அவ்வாறு சாஷாத் கரிக்க முடியாமல் தடை செய்த
தன்னுடைய கர்மத்தைக் கண்டு அதை போக்க நினைத்து

வெண்ணிய நல் புவனங்கள் ஏழும் ஆறும் இரு மூன்று தீவம் எட்டிடமும் விட்டுப் -சாஸ்திரங்களில் கூறப் பட்ட
சிறந்த லோகங்கள் பதின்மூன்றையும்
ஆறு தீவுகளையும் எட்டு வர்ஷங்களையும் விட்டு

பண்ணிய நல் விரதம் எலாம் பலிக்கும் என்று பாரதத்தில் படிந்திட்டானே -செய்யப்பட சிறந்த விரதங்கள் எல்லாம்
பலன் தரும் என்று உறுதி கொண்டு
பாரத தேசத்திலே வந்து தங்கினான் –

ஆயிரம் கோடி யுகங்கள் எம்பெருமானை ஆராதித்து பிரமன் தனது பதவியைப் பெற்றதாக சாஸ்திரம் கூறும்
பூமி ஒழிய மற்ற லோகங்கள் பதின்மூன்றும் -பூமியிலும் ஜம்பூத்வீபம் தவிர மற்ற த்வீபங்கள் ஆறும் –
அதிலும் பாரத வர்ஷம் நீங்க மற்ற வர்ஷங்கள் எட்டும்
கர்ம பலன்களை அனுபவிக்கும் இடம் -என்பதால் தவம் செய்ய உரியன அல்ல என்று புறக்கணித்து
எல்லாவற்றுக்கும் தெற்கே உள்ளதாய் சகல தர்மங்களையும் அனுஷ்ட்டிக்க ஏற்றதான பாரத வர்ஷத்தில் வந்து புகுந்தான் என்றவாறு –

ஒன்பது வர்ஷங்கள்–பாரதம் கிம்புருஷம் ஹரி இலாவ்ருதம் ரம்யம் ஹிரண்யகம் குரு பத்ராசுவம் கேதுமாலம் -என்பன

ஏழு த்வீபங்கள் -ஜம்பூ பிலஷம் சால்மலி குசம் கிரௌஞ்சம் சாகம் புஷ்கரம் என்பன

பதினான்கு லோகங்கள் -அதல விதல ஸூதல தராதலா மஹாதல ரஸாதல பாதாளங்கள் -ஆகிய ஏழு கீழ் உலகங்களையும்
பூ புவ ஸூவ மஹ ஜன தப சத்யம் ஆகிய ஏழு மேல் உலகங்களையும் -சொல்லியவாறு —

—————————————————————————-

எத்திசையும் நிலனும் எய்தி யரும் தவம் செய்த அந்நாள்
சத்திய விரதம் செல்வாய் என்ற வோர் உரையின் சார்வால்
அத்திசைச் சென்று அழைத்து அங்கு அமரரில் எடுப்பான் தன்னை
யுத்தர வேதி செய் என்று உரை யணங்கு இறை யுரைத்தான் -8-

உரை அணங்கு இறை –ஸ்ரீ சரஸ்வதிக்கு நாயகனான ஸ்ரீ நான்முகன்
அமரர் இல் எடுப்பான் தன்னை -ஸ்ரீ விஸ்வகர்மாவை உத்தர வேதியை நிர்மாணம் செய் என்றது
யாகங்களுக்கு அவஸ்ய அபேக்ஷிதமான-ஹவிர்த்தானம் -சதஸ்ஸூ -வாஸஸ் ஸ்தானங்கள்-இவற்றுக்கும் உப லக்ஷணம்

உரை யணங்கு இறை யுரைத்தான் -வாக்கின் தேவதையான சரஸ்வதிக்கு நாயகனான ப்ரஹ்மா
எத்திசையும் நிலனும் எய்தி யரும் தவம் செய்த அந்நாள் –எல்லாத் திக்குகளிலும் உள்ள ஸ்தானங்களுக்கும் சென்று
ஒருவராலும் செய்ய முடியாத தவத்தைச் செய்த அக்காலத்திலே

சத்திய விரதம் செல்வாய் என்ற வோர் உரையின் சார்வால் –சத்யவ்ரத திவ்ய ஷேத்ரத்துக்கு போ என்ற
ஒரு அசரீரி வார்த்தையின் ஆதரத்தால்–
ஆயிரம் அஸ்வமேத யாக பலனை ஒரு அஸ்வமேத யாகம் இங்கே அளிக்கும்

அத்திசைச் சென்று அழைத்து அங்கு அமரரில் எடுப்பான் தன்னை -அந்த திவ்ய ஷேத்ரத்துக்குச் சென்று –
தேவர்களுக்கு வீடு முதலியவற்றை அமைப்பவனாகிய
விஸ்வ கர்மனை அழைத்து யுத்தர வேதி செய் என்று -யாகம் செய்வதற்கு உத்தர வேதியைச் செய்து முடிப்பாயாக என்று கட்டளையிட்டான் —

ஸ்ரீ ஹஸ்திகிரியை நான்கு சதுரமாக வகுத்து அதையே யாக வேதியாக்கி யாகசாலை அமைப்பாயாக –
மேலும் யாகத்துக்கு வரும் தேவர் அசுரர் ராக்ஷசர் கின்னரர் கிம்புருஷர்
சித்தர் வித்யாதரர் மனுஷ்யர் முதலிய பல் திறத்தனாரும் நெருக்கம் இன்றிச் சுகமாய் வசிக்குமாறு
நீண்டு அகன்று உயர்ந்த மிக்கு அழகிய ராஜ தானியை
விரைவில் படைப்பாயாக என்று மிக விரைந்து கட்டளையிட்டான் –

—————————————

காஞ்சியின் பெருமை –அதிகார சங்கிரகம் -44-பாசுரமும் இதுவே —

உத்தம அமர்த்தலம் அமைத்தது ஓர் எழில் தனுவின் உய்த்த கணையால்
யத்திர வரக்கன் முடி பத்தும் ஒரு கொத்து என உதிர்த்த திறலோன்
மத்துறு மிகுத் தயிர் மொய்த்த வெண்ணெய் வைத்தது உண்ணும் அத்தன் இடமாம்
அத்திகிரி பத்தர் வினை தொத்து அற அறுக்கும் அணி அத்திகிரியே –9-

உத்தம அமர்த் தலம் -ருத்ரனுக்கும் பகவானுக்கும் -வில் பரீஷைகைக்காக யுண்டான யுத்த ஸ்தலம்
ஒரு எழில் -அத்விதீயமான -கர்ஜனையாலே ருத்ர வில் பிளந்து போனமையால் –
பகவானைத் தவிர வேறு ஒருவரால் கையாள முடியாத வில் –
சார்ங்கம் என்னும் வில்லாண்டான் தன்னை –

அத்திர அரக்கன் -தபோ பலத்தால் அடையப்பட்ட அஸ்திர பலத்தை யுடைய ராவணன் –
அத்திற -பாட பேதம் –பகவானை எதிர்த்து போர் செய்ய வல்ல -அப்படிப்பட்ட திறல் யுடையவன் என்றபடி
ஒரு கொத்தென –பானு நேர் சரத்தால் பனங்கனி போலேப் பருமுடியும் யுதிர வில் வளைத்தோன் -என்கிறபடியே –
ஒரே பணத்தால் அடித்துத் தள்ளின என்றபடி
உதிர்த்த -கிள்ளிக் களைந்தானை -அநாயாஸேந செய்தமை

அத் திகிரி – அற முயல் ஆழிப்படை

அயோத்யா -வடமதுரை -மாயா -காசி -காஞ்சீ -அவந்தி -துவாரகா-ஏழும் முக்தி தரும் ஷேத்ரங்கள் –

உத்தம அமர்த்தலம் அமைத்தது ஓர் எழில் தனுவின் உய்த்த கணையால் -உயர்ந்த போர் காலத்தில் அமைக்கப் பட்ட
நிகரற்ற அழகிய வில்லினின்றும் செலுத்தப் பட்ட அம்பினால்

யத்திர வரக்கன் முடி பத்தும் ஒரு கொத்து என உதிர்த்த திறலோன் -அஸ்திர பலமுள்ள ராக்ஷசனாகிய ராவணனுடைய தலைகள் பத்தையும்
ஒரு குலை என்று சொல்லும்படி அறுத்துக் கீழே தள்ளின பலமுடைய ஸ்ரீ ராமபிரானும்

மத்துறு மிகுத் தயிர் மொய்த்த வெண்ணெய் வைத்தது உண்ணும் அத்தன் இடமாம் -மத்தினால் கடையத் தகுந்த
அதிகமான தயிரையும் யசோதையால் வைக்கப்பட்ட அதிகமான வெண்ணெயயையும் அமுது செய்து
அருளிய ஸ்ரீ கண்ணபிரானுடைய வாஸஸ் ஸ்தலமாகிய

அத்திகிரி பத்தர் வினை தொத்து அற அறுக்கும் அணி அத்திகிரியே –ஸ்ரீ ஹஸ்திகிரி என்னும் திவ்ய க்ஷேத்ரம்
சம்பந்தம் இல்லாமல் ஒழிக்க வல்ல அழகிய
அந்த திவ்ய சக்ராயுதம் போன்றதே யாகும் -திவ்ய சக்ராயுதம் திவ்ய கைக்கு அழகுக்கு இட்ட திரு ஆபரணம் என்றுமாம் –

————————————————————-

திண் மணிகள் பொன்னுடனே சேர்தலாலும் சிதையாத நூல் வழியில் சேர்த்தியாலும்
வண்மை எழும் ஈரிரண்டு வண்ணத்தாலும் வானவர்க்கும் வியப்பான வகுப்பினாலும்
ஒண்மையுடை வாசி விளி ஓசையாலும் ஒருகாலும் அழியாத அழகினாலும்
மண் மகளார்க்கு அலங்காரம் என்ன மன்னும் மதிள் கச்சி நகர் கண்டு மகிழ்ந்திட்டானே -10-

பூமியாகிய ஸ்த்ரீக்கு அரை நூண் மாலை போல் அன்றோ திருக் காஞ்சீ
காஞ்சீ ஆபரணத்துக்குத் துல்யமான நகர் என்றபடி –

திண் மணிகள் பொன்னுடனே சேர்தலாலும் சிதையாத நூல் வழியில் சேர்த்தியாலும் –
திடமான ரத்தினங்கள் தங்கத்தோடு இழைக்கப் பெற்று இருப்பதாலும்
அழியாத சிற்ப சாஸ்திரத்தின் முறையில் அமைக்கப் பட்டு இருப்பதாலும்

வண்மை எழும் ஈரிரண்டு வண்ணத்தாலும் வானவர்க்கும் வியப்பான வகுப்பினாலும் –
கொடை நிறைந்த நான்கு ஜாதியரும் நிறைந்து இருப்பதாலும்-
அன்றிக்கே வெண்மை கருமை செம்மை பசுமை என்ற நான்கு நிறங்களால் என்றுமாம் –
தேவர்கட்க்கும் வியக்கத்தக்க அமைப்பினாலும்

ஒண்மையுடை வாசி விளி ஓசையாலும் ஒருகாலும் அழியாத அழகினாலும் –
இயற்க்கை அழகு அமைந்த குதிரைகளின் கனைக்கும் குரல் ஓசையினாலும்
ஒரு போதும் அழியாமல் நிலை பெற்ற அழகினாலும்

உண்மையுடை வாசி ஒளி ஓசையாலும் என்று கொண்டு நேர்மையுடைய சிறந்த பிரகாசம் உள்ள
வஸ்துக்களாலும் சிறந்த சப்தங்களாலும் என்றுமாம் –

மண் மகளார்க்கு அலங்காரம் என்ன மன்னும் மதிள் கச்சி நகர் கண்டு மகிழ்ந்திட்டானே -பூமிக்கு ஆபரணம் என்னும் படி பொருந்திய
மதிள்களை யுடைய ஸ்ரீ காஞ்சீபுரத்தைக் கண்டு ப்ரஹ்மா மகிழ்ச்சி யடைந்தான் –

—————————————————————-

பிரமன் வசிட்டனை தன் மனைவியிடம் அனுப்புதல் –
ப்ரஹ்மா வஸிஷ்டரை ஆஜ்ஞா பித்த பிரகாரத்தை இப்பாட்டாலே ஸங்க்ரஹித்து அருளுகிறார் –

காமங்கள் பல கொண்ட வேதம் கொண்டு கைத்தவமே செய்வார்க்கு காண கில்லாப்-
பூ மங்கை கேள்வனை நான் கண்டு போற்றப் புண்ணியத்தில் நிகரில்லா விரதம் பூண்டேன்
சாமங்கள் கழிவதன் முன் சடக்கெனப் போய்த் தன்னாற்றில் தனியிருந்து தவம் செய்கின்ற
நா மங்கை வந்திட நீ அளிப்பாய் என்று நன்மகனை நான்முகன் தான் நவின்றிட்டானே –11-

கைதவமே-கபட காரியமே -ஆஸ்ரயண வேளையிலே கைப்பற்றி போக வேளையிலே கைவிடுபவர்கள்
சாமங்கள் -ஜாமங்கள்
பூ மங்கை கேள்வனை -ராவணனைப் போலே பிரித்துக்காணாமல் –
திருக்கண்டேன் பொன் மேனி கண்டேன்
வடிவாய் நின் வழ மார்போனில் வாழும் மங்கையும் பல்லாண்டு
போற்ற -ஸ்துதிக்கவும் நமஸ்கரிக்கவும் ஆராதனம் செய்யவும் –
தனி இருந்து -ப்ரணய கலகத்தினால் தனியே இருந்து தபஸ்ஸூ செய்யச் சென்றமை ஸூசிதம் -த்யோதிதம்

நன்மகனை நான்முகன் தான்-நான்கு முகங்களையுடைய ப்ரஹ்மா நல்ல புத்திரனான வசிஷ்டனை அழைத்து
காமங்கள் பல கொண்ட வேதம் கொண்டு கைத்தவமே செய்வார்க்கு காண கில்லாப்-காம்ய கர்மங்கள் பலவற்றை வெளியிடுகின்ற வேதத்தைக் கொண்டு –
பகவத் கைங்கர்யத்தைச் செய்யாது கபட காரியங்களையே செய்பவர்களுக்கு ப்ரத்யக்ஷமாகக் காண முடியாத

பூ மங்கை கேள்வனை நான் கண்டு போற்றப் –பூவில் வாழும் பிராட்டியின் நாதனான எம்பெருமானை நான் நேரில் சேவித்து ஸ்தோத்ரம் செய்வதற்காக
புண்ணியத்தில் நிகரில்லா விரதம் பூண்டேன் -புண்ணியங்களுக்குள் ஒப்பற்ற அஸ்வமேத யாகத்தைத் தொடங்கியுள்ளேன் –
மரீசி முதலிய ப்ரஹ்மரிஷிகளை ருத்விக்குகளாக்கிக் கொண்டான்

சாமங்கள் கழிவதன் முன் சடக்கெனப் போய்த் தன்னாற்றில் தனியிருந்து தவம் செய்கின்ற -யாமங்கள் கழிவதற்கு முன்பு -காலம் தாழாது விரைவாக நீ போய்
தன் பெயருள்ள சரஸ்வதி நதிக் கரையில் தனியாக இருந்து தபம் செய்பவளான –பெருமான் திருவடியில் நின்றும் அவதரித்த கங்கையை விட
சிறந்த நதி இல்லை என்ற பிரமனின் மீது கோபம் கொண்டு சரஸ்வதி நதிக் கரையில் சரஸ்வதி தவம் புரிந்தாள்

நா மங்கை வந்திட நீ அளிப்பாய் என்று நவின்றிட்டானே –வாக்கின் தேவதையான சரஸ்வதி இங்கு வந்து சேரும்படி
நீ அழைத்து வருவாயாக என்று கட்டளையிட்டான் –
ஊடல் நீங்காததால் வர மறுத்து விட்டாள் -சாவித்ரி தேவதை கொண்டு யாகம் செய்யத் தொடங்க -அசுரர்கள் இந்த யாகத்தை கலைக்க நினைத்து
சரஸ்வதி தேவியிடம் சொல்லி கலகமூட்ட -வேகவதி என்னும் வேறு ஒரு நதியாக பெருகி யாகசாலையை அழிக்க முற்பட்டாள் –

————————————————————-

சரஸ்வதி தேவி நதி வடிவம் கொண்டு வரும் மிடுக்கு —

எம்பெருமானுடைய வாத்சல்ய பிரகாரம் இப்பாட்டிலும்
அடுத்த பாட்டிலும்
அருளிச் செய்கிறார் –

அன்ன வடிவாள் அசையும் அன்ன நடையாள் உயரும் அன்ன அரசு ஏறி வருவாள்
அத்தன் அயன் அத்தனையன் உத்திதனை அத்து இது என உத்தி புரியாள்
நல்நடை விடா நடம் இது என்ன நடவா நடுவு நண்ணு குவடு ஏறி இழிவாள்
நல் பதிகள் அல் பதிகள் கல் புரள அற்புத மருள் கதியினால்
கல் நடை விடா இடம் இல் உன்னதி சிறா விகடன் மன்னு கிரி கூடம் இடியக்
கட்டு அவ்விடை இற்று விழ விழி முற்றும் உற்று அடைய விட்டு அருகு உற
அன்ன நய சீர் அயன் இது என் என விழா அமரர் மன்னு பத்தி ஏறி மகிழ
அச்சுதன் அணைத் தருவில் அத்திசை வரத் தகைய அற்று அணுகினாள்–12-

அத்தன் அயன் -ஆப்தனான ஸ்ரீ ப்ரம்மா
அத் தநயன் உத்திதனை -ஸ்ரீ வசிஷ்டருடைய வார்த்தையை
யத்து இது என யுத்தி புரியாள்–இப்படியே ஆகட்டும் என்னும் பதில் வார்த்தையை கொடாதவளும் –
அப்படியே ஆகட்டும் என்று சொல்லாதவள் என்றவாறு –

குடகு -கற் கூட்டங்களின் மேல்
மருக்கத்தி-வாயுவுக்கு சமமான வேகத்தினால்
கல் நடை விடாத இடம் இல் -கல்லிலே போவதை விடாத ஸ்தலம் இல்லாத
இரண்டு நகார பிரயோகம் -கல்லின் மேலேயே ப்ரவஹித்தமை

உன்னதி சிறா விகட மன்னு கிரி கூட மிடியக் கட்ட விடை யிற்று விழ முற்றும் விழி யுற்றடைய விட்டருகுற
உன்னதி -உயர்ந்து இருப்பதனால்
சிறா -சிறுமை பெறாத -மற்ற மலைகளை விட உயரத்தில் சிறுமை பெறாத -அதாவ்துன் மிகவும் உயந்ததான
விகட -விசாலமான
மன்னு -மிகவும் உறுதியான
கிரி கூட மிடியக்-மலைச் சிகரங்கள் இடியும்படி

கட்ட விடை -கஷ்டமான -ஒருவராலும் அடக்க முடியாத ரிஷபங்கள்
அன்றிக்கே
வண்டி போன்றவற்றில் கட்டப்பட்ட விருஷபங்கள் என்றுமாம்

யிற்று விழ -சந்திப்பந்தங்கள் கீழே விழ
முற்றும் விழி யுற்று -நாலா பக்கங்களிலும் விழித்து விழித்துப் பார்த்து
அடைய விட்டு அருகுற-அனைத்தையும் பரித்யஜித்து ப்ரஹ்மாவிடம் சென்று ரக்ஷிக்கப் பிரார்த்திக்க
அன்றிக்கே
தங்கள் வண்டிகளில் கட்டப்பட்ட எருதுகள் கீழே விழ
ஆவாரார் துணை என்று சுற்றிலும் பார்த்து -யாவரையும் காணாமல்
எல்லாம் விட்டுத் தனித்தனியே நீஞ்சிக் கரை ஏற என்றுமாம்

அன்ன நய -தனது பத்தினியை சாந்தம் செய்ய முடியாமல்
சாஸ்த்ர விதியை அனுசரித்து வேறே பத்னிகளைக் கொண்டு யஜ்ஜம் செய்து நியாயமாக நடந்து கொண்ட
விழா வமரர் – யஜ்ஜம் ஆகிய மஹா உத்சவத்துக்கு வந்த தேவதைகள்

அணைத் தனுவில் –திருப்பள்ளி யாகிய ஆதிசேஷன் சரீரத்தில்
அன்றிக்கே
அணை போட்டால் போல் நிஸ்ஸலமான திருமேனியுடன் என்றுமாம் –
திருவணை -வேகா சேது -அன்றோ
தகைய வற்றணுகினாள் -தடுக்க பற்றுதலை அடைந்தாள் -அதாவது -பூமிக்குள் அந்தர்தானம் செய்தாள்
அன்றிக்கே
வற்றி -தனது வேகத்தை அடக்கிக் கொண்டு -கோபத்துக்குக்காக வெட்க்கி –
அணுகினாள் -சமீபத்தில் வந்தாள்

அச்சுதன் அணைத் தனுவில் அத்திசை வரத்-ஆஸ்ரிதர்களை நழுவ விடாதவன்
தனக்கு திருப்பள்ளியாகிற ஸ்ரீ ஆதி சேஷனுடைய சரிரத்திலே –
அணை போட்டால் போலே நிச்சலமான திருமேனியுடன் அத்திசை நோக்கி வர –
திரு அணை -வேகா சேது அன்றோ திரு நாமம் –
தகைய வற்று அணுகினாள்–தடுக்க வற்றுதலை அடைந்தாள் -பூமிக்குள் அந்தர்தானம் செய்தாள்-

அன்ன வடிவாள் அசையும் அன்ன நடையாள் உயரும் அன்ன அரசு ஏறி வருவாள் -ஹம்சம் போன்ற அழகை யுடையவளும்
அசைகின்ற ஹம்சம் போன்ற நடையை யுடையவளும் -உயர்ந்த ராஜ ஹம்சத்தின் மீது ஏறிக் கொண்டு வருபவளுமான
சரஸ்வதி தேவி -ஹம்ஸ வாஹனம் அன்றோ –

அத்தன் அயன் அத்தனையன் உத்திதனை அத்து இது என உத்தி புரியாள்-உயர்ந்தவனாகிய ப்ரஹ்மாவின்
அந்தப் புத்திரனான வசிஷ்டனுடைய வேண்டுகோளை இது அது அப்படியே யாகுக என்று சொல்லாதவளாய்

நல்நடை விடா நடம் இது என்ன நடவா நடுவு நண்ணு குவடு ஏறி இழிவாள் –இவ்வாறு ப்ரஹ்மா அழைத்தது
நல்ல ஒழுக்கத்தின் நின்றும் வேறுபடாதது போல்
தோற்றுகின்ற நாடகம் என்று நினைத்து நடந்து வழியிடையே எதிர்படுகின்ற குன்று மீது ஏறி இறங்குபவளாய்

நல் பதிகள் அல் பதிகள் கல் புரள அற்புத மருள் கதியினால் –நல்ல சமமான இடங்களிலும் அப்படியல்லாத மேடு பள்ளமான இடங்களிலும் உள்ள
கற்கள் புரளும் படி ஆச்சர்யமான வாயு வேகத்தால்

கல் நடை விடா இடம் இல் உன்னதி சிறா விகடன் மன்னு கிரி கூடம் இடியக் -பாறைகள் அசைந்து உருளாத இடம் இல்லாததும் உயரம் குறையாததும்
மேடு பள்ளம் பொருந்தியதுமான மலையின் சிகரம் இடிந்து போகவும்

கட்டு அவ்விடை இற்று விழ விழி முற்றும் உற்று அடைய விட்டு அருகு உற-அங்கே மலைப்பக்கம் -தாழ் வரை -ஆதி யற்று இடியவும் கண்களை
நாநா திசையும் சென்று பொருந்தும்படி செலுத்தி யாகவேதியின் சமீபத்துக்கு வர

அன்ன நய சீர் அயன் இது என் என விழா அமரர் மன்னு பத்தி ஏறி மகிழ –அப்படிப்பட்ட நன்மையையும் சிறப்பையும் யுடைய
பிரம்மா தேவன் இது என்ன என்று திகைத்து நிற்க
யாகமாகிய -உத்சவத்துக்கு வந்த மற்றைத் தேவர் ஸ்திரமான தங்கள் ஸ்தானத்துக்குச் சென்று தாம் உயிர் பிழைத்து வந்ததற்கு மகிழ்ந்து நிற்க

அச்சுதன் அணைத் தருவில் அத்திசை வரத் தகைய அற்று அணுகினாள்–பக்தர்களைக் காய் விடாத எம்பெருமான்
அணை யுருவத்தில் அங்கே தடுப்பதற்கு எழுந்து அருள வேகம் கெட்டு நெருங்கினாள் –

—————————————————————-

எம்பெருமான் நதி நடுவே அணையாகக் கிடந்தது அருள் செய்தல்

அன்று நயந்த வயமேத வேள்வி
பொன்ற வுரை யணங்கு பூம் புனலாய்க் கன்றி வர
ஆதி யயனுக்கு அருள்செய்து அணையானான்
தாதை யரவணையான் தான் –13-

நயந்த-அனுஷ்ட்டிக்கப்பட்ட
யுரை யணங்கு-ஸரஸ்வதி யானவள்
பூம்புனலாய்-அழகிய நதியாய் -ஆம்பல் நெய்தல் போன்ற -பூக்கள் கூடிய நதியாய்
கன்றி வர -கோபித்துக் கொண்டு பிரவஹிக்க
அரவணையான் தானே அணை யானானே -ஆச்ரித ரேஷன் த்வராதிசயத்தினாலே
மழுங்காத வை நுதிய இத்யாதி

அன்று நயந்த வயமேத வேள்வி பொன்ற வுரை யணங்கு பூம் புனலாய்க் கன்றி வர -அப்பொழுது ப்ரஹ்மாவினால் விரும்பிச் செய்யப்பட அஸ்வமேதம்
என்னும் பெரிய யாகம் அழிந்து போகும்படி வாக்கின் தேவதையான சரஸ்வதி அழகிய நதியாகயாகி கோபித்துக் கொண்டு பெருகி வர

ஆதி யயனுக்கு அருள்செய்து அணையானான் தாதை யரவணையான் தான் -உலகுக்கு தந்தையும் ஆதிசேஷனைப் பள்ளி கொண்டவனுமான
எம்பெருமான் ஸ்ருஷ்டிகாரணான ப்ரஹ்மாவின் மீது கருணையை வைத்து தானே அணையாகப் பள்ளி கொண்டான் –

———————————————————-

மூ வுலகினரும் அவ்வணையைக் கண்டு மகிழ்ந்து பேசுதல் —

தரணியில் மன்னி யயனார் தனித் தவம் காத்தபிரான்
கருணை எனும் கடலாடித் திருவணை கண்டதற் பின்
நரகுத் திரள் எண்ணிய சித்திர கூத்தன் அன்று தெரித்து வைத்த
சுருணையில் ஏறிய சூழ் வினை முற்றும் துறந்தனமே -14-

திரணகர்–திரள் நரகு -நரகங்களினுடைய
மன்னி-விலக்ஷணமாக நித்ய வாஸம் -தீர்த்தம் பிரசாதியாதே -நிலை நின்ற அர்ச்சாவதார
அயனார் -உபகாரக அதிசயத்தால் பஹு வசனம்
திருவணை கண்டதற்பின் -மூன்று லோகத்தாரும் கண்டு அனுபவித்த விலக்ஷணமான சேது –
அந்த நள சேதுவில் வ்யாவ்ருத்தி
சேவை கிட்டவும் வெஃகாவில் துயில் அமர்ந்த வேந்தனின் கிருபையே காரணமாகும்

தரணியில் மன்னி யயனார் தனித் தவம் காத்தபிரான் -பூமியில் ஸ்திரமாய் இருந்து ப்ரஹ்மாவினுடைய ஒப்பற்ற
தபஸ்ஸாகிய அஸ்வமேத யாகத்தை காப்பாற்றி மஹா உபகாரம் செய்து அருளிய எம்பெருமானுடைய

கருணை எனும் கடலாடித் திருவணை கண்டதற் பின் -கிருபை என்னும் கடலில் நீராடி
அழகிய அந்த அணையை கண்ணார சேவித்த பின்பு

நரகுத் திரள் எண்ணிய சித்திர கூத்தன் அன்று தெரித்து வைத்த -நரகங்களின் கூட்டத்தை கணக்கிட்டுப்
பார்ப்பவனான யமனுடைய கணக்கனான சித்ர குப்தனால் கனக்குப் பார்த்து எழுதி வைக்கப் பட்ட

சுருணையில் ஏறிய சூழ் வினை முற்றும் துறந்தனமே -கணக் கொலையில் குறித்து வைக்கப் பட்ட நம்மைச்
சூழ்ந்து நிற்கின்ற பாபங்கள் முழுவதும் நீங்கப் பெற்றோம்

இப்படி வேகவதி நதியாய் வந்த சரஸ்வதி தேவியின் கோப வேகம் அடங்குமாறு
திரு வெக்கா என்னும் திவ்ய தேசத்திலே பள்ளி கொண்ட எம்பெருமான் கடாக்ஷிக்க
அதனால் அவளும் மனக் கலக்கம் தெளிந்து வர அவளையும் கூட்டிக் கொண்டு ப்ரஹ்மா அஸ்வமேத யாகத்தை நடத்தினான் –
முடிவில் பசுவின் வைபையை அக்னியில் ஹோமம் செய்தான் –

————————————————

புண்ய கோடி விமானத்துடன் பேர் அருளாளன் ஆவிர்பவித்தல் —

சுக லேசம் எண்ணிய சூழ் வினை தீர்க்கத் துணிந்த அயனார்
அகலாத வன்புடன் கொண்ட வயமேத வேதியின் மேல்
புகலோங்கு பொன்மலை யன்னவோர் புண்ணிய கோடியுடன்
பகலோன் பகல் விளக்காகப் பரஞ்சுடர் தோன்றியதே -15-

சுக லேசம் எண்ணிய சூழ் வினை தீர்க்கத் துணிந்த அயனார்–ப்ரஹ்மா அற்பமான லோக ஸூகத்தை
பெரிதாக எண்ணுவதற்குக் காரணமாயுள்ள சூழ்ந்து நிற்கும் தம் பாபங்களை ஒழிக்க உறுதி கொண்டு

அகலாத வன்புடன் கொண்ட வயமேத வேதியின் மேல் -நீங்காத பக்தியுடன் அனுஷ்டித்த அஸ்வமேத யாகவேதியின் மீது

புகலோங்கு பொன்மலை யன்னவோர் புண்ணிய கோடியுடன்-புகழ் நிறைந்துள்ள ஸ்வர்ண பர்வதம் பொன்ற
ஒப்பற்ற புண்ய கோடி என்னும் விமானத்துடன்

பகலோன் பகல் விளக்காகப் பரஞ்சுடர் தோன்றியதே -சூரியனும் பகலில் வைத்த விளக்கு எண்ணலாம் படி
உத்தமமான பேர் அருளாளன்–
சித்திர மாதத்தில் சுக்ல பக்ஷத்தில் -சதுர்த்தசி திதியில் ஞாயிற்றுக் கிழமையுடன் கூடிய ஹஸ்த நக்ஷத்ரம்
காலை நேரத்தில் ஆகிய தேஜஸ் ஆவிர்பவித்தது –

———————————————————

காஹள த்வனி பிரகாரங்களை இரண்டு பாசுரங்களால் அருளிச் செய்கிறார் –
பேர் அருளாளன் திருவவதரித்ததைக் கண்டு நித்ய ஸூரிகள்
காலம் வலம் புரி வாத்தியங்களை உத்தி பெருமையை வெளியிட்டு அருளினர் –

பெருமையுடை யத்திகிரிப் பெருமாள் வந்தார்
பேராத வருள் பொழியும் பெருமாள் வந்தார்
அருமறையின் உச்சிதனில் நின்றார் வந்தார்
அங்கமுடன் அவையாகும் அரியோர் வந்தார்
திருவுரையாய்த் தாம் பொருளாய் நிற்பார் வந்தார்
திருவருளால் செழும் கலைகள் தந்தார் வந்தார்
மருவலர்க்கு மயக்குரைக்கும் மாயோர் வந்தார்
வானேற வழி தந்தார் வந்தார் தாமே –16-

அருளாளப் பெருமாள் -கிருபையே தனக்கு ஸ்வரூப நிரூபகம்

பெருமையுடை யத்திகிரிப் பெருமாள் வந்தார் -மிகப் பெருமையுடையரான ஸ்ரீ ஹஸ்திகிரி நாதர் எழுந்து அருளினர்
பேராத வருள் பொழியும் பெருமாள் வந்தார் -நீங்காத கருணையைப் பொழியும் பெருமாள் வந்தார்
அருமறையின் உச்சிதனில் நின்றார் வந்தார் -அருமையான வேதத்தின் சிகரத்தில் -வேதாந்தங்களில் போற்றப்பட்டு நின்றவர் வந்தார்
அங்கமுடன் அவையாகும் அரியோர் வந்தார் -அங்கங்களுடன் அந்த வேத ஸ்வரூபரான அருமையான ஸ்வாமி வந்தார்
திருவுரையாய்த் தாம் பொருளாய் நிற்பார் வந்தார் -பிராட்டி சப்த ஸ்வரூபமாய் நிற்க தாம் அர்த்த ஸ்வரூபமாய் நிற்பவர் வந்தார்
திருவருளால் செழும் கலைகள் தந்தார் வந்தார் -தம் சிறந்த கிருபையினால் உயர்ந்த சாஸ்திரங்களை உலகுக்குத் தந்தவர் வந்தார்
மருவலர்க்கு மயக்குரைக்கும் மாயோர் வந்தார் -தம்மிடம் அன்பற்ற நாஸ்திகருக்கு மோஹன சாஸ்திரங்களை வெளியிடுகின்ற வஞ்சகர் வந்தார்
வானேற வழி தந்தார் வந்தார் தாமே -பரமபதத்துக்குச் செல்ல உபாயத்தை உபதேசித்து அருளியவர் வந்தார் -என்று
நித்ய ஸூரிகள் மிக மகிழ்ந்து திருச் சின்ன ஒலி செய்தனர் –

—————————————————

நித்ய ஸூரிகள் மேலும் திருச் சின்னம் ஒலித்தல் —

அத்திகிரி யருளாளப் பெருமாள் வந்தார்
ஆனை பரி தேரின் மேல் அழகர் வந்தார்
கச்சி தனில் கண் கொடுக்கும் பெருமாள் வந்தார்
கருத வரம் தரு தெய்வப் பெருமாள் வந்தார்
முத்தி மழை பொழியும் முகில் வண்ணர் வந்தார்
மூலம் என ஓலமிட வல்லார் வந்தார்
உத்தர வேதிக்குள்ளே யுதித்தார் வந்தார்
உம்பர் தொழும் கழலுடையார் வந்தார் தாமே –17-

ஆனை பரி தேரின் மேல் -திரு வாஹனாதிகளின் மேல் –
கண் கொடுக்கும் பெருமாள் -ரஹஸ்யார்த்த ஞானம் அருளியவர் என்றுமாம்

துப்புடையாரை அடைவது எல்லாம் சோர்விடத்துத் துணையாவார் என்றே
ஒப்பிலேன் ஆகிலும் நின்னடைந்தேன் ஆனைக்கு நீ அருள் செய்தமையால் -பெரியாழ்வார்

அத்திகிரி யருளாளப் பெருமாள் வந்தார் –ஸ்ரீ ஹஸ்திகிரியில் எழுந்து அருளிய பேர் அருளாளர் என்னும் பெருமாள் வந்தார்
ஆனை பரி தேரின் மேல் அழகர் வந்தார் -யானை குதிரை தேர் ஆகிய வாகனங்கள் மீது எழுந்து அருளும் அழகர் வந்தார்
கச்சி தனில் கண் கொடுக்கும் பெருமாள் வந்தார் -ஸ்ரீ காஞ்சிபுரத்தில் கண்ணை அளிக்கும் பெருமாள் வந்தார் –
ஹரித வாரண ப்ருத்யர் என்பவருக்கு கண் கொடுத்து அருளிய ஐதிக்யம்
கருத வரம் தரு தெய்வப் பெருமாள் வந்தார் -மனஸினால் அனுசந்தித்தால் வேண்டிய வரங்களைக் கொடுத்து அருளும் தேவச் ஸ்ரேஷ்டர் வந்தார்
முத்தி மழை பொழியும் முகில் வண்ணர் வந்தார் -மோக்ஷமாகிய மழையைப் பொழிகின்றவரும்
மேகம் பொன்ற நிறம் ஸ்வபாவம் யுடையவருமான எம்பெருமான் வந்தார்
மூலம் என ஓலமிட வல்லார் வந்தார் -முதலையால் பீடிக்கப்பட்ட ஸ்ரீ கஜேந்திர ஆழ்வான் ஆதிமூலமே என்று
கூக்குரலிட அதனை காத்து அருள சக்தியுடையவர் வந்தார்
உத்தர வேதிக்குள்ளே யுதித்தார் வந்தார் -ப்ரஹ்மா ஏற்படுத்திய உத்தர வேதிக்குள்ளே ஆவிர்பவித்தவர் வந்தார்
உம்பர் தொழும் கழலுடையார் வந்தார் தாமே -நித்ய ஸூரிகளால் தொழப் படுகின்ற திருவடிகளையுடைய எம்பெருமான் வந்தார் –

———————————————————

தேவர்களும் முனிவர்களும் பரவசமாய் போற்றுதல் —

இரு பரிதி இயைந்த மகுடமும் எழில் மதி திகழ்ந்த வதனமும்
இருவகை இலங்கு குழை களில் எதிர் பொர உகந்த மகரமும்
ஒரு தகவுயர்ந்த திருமகள் ஒளி மருவின் மன்னும் அகலமும்
உரு அரு உமிழ்ந்த உதரமும் உலகு அடைய நின்ற கழல்களும்
மருவினிடை பொங்கு புனல் என மலை குனிய நின்ற மலை என
மருள் அற விளங்கும் ஒளி என மலர் அயனுகந்த பயன் என
வருவில் யுறைகின்ற யுயிர் என வடியவர் உகந்த அமுது என
வரு மறைகள் ஒன்றி யடி தொழ வருள் வரதர் நின்ற பெருமையே -18-

உருவரு உமிழ்ந்த யுதரமும்-சேதன அசேதனங்களை ஸ்ருஷ்ட்டி காலத்தில் உமிழ்ந்த திரு வுதரமும்
வுலகடைய நின்ற கழல்களும்-திரு உலகு அளந்த திருவடிகளை –
லோகங்கள் அடைய ஆஸ்ரயிக்கும்படியான திருவடிகளை என்றுமாம்-

மருவினிடை ஓங்கு புனல் என-நீர் இல்லாத பாலைவனத்தின் நடுவில் -லீலா விபூதியில் ஆவிர்பவித்து அருளிய
மலை குனிய நின்ற மலை -ஹஸ்திகிரி மேல் அஞ்சன கிரி

இரு பரிதி இயைந்த மகுடமும் எழில் மதி திகழ்ந்த வதனமும்–பெரிய சூரியனை ஒத்த கிரீடமும் –
பிரகாசிக்கும் சந்திரன் போலே விளங்குகின்ற திரு முக மண்டலமும்

இருவகை இலங்கு குழை களில் எதிர் பொர உகந்த மகரமும் -இரண்டு வகையாக பிரகாசிக்கின்ற குண்டலங்களில்
எதிரே நின்று சண்டையிடுவதற்கு விரும்பியன போன்ற மீன்களும்

ஒரு தகவுயர்ந்த திருமகள் ஒளி மருவின் மன்னும் அகலமும் -ஒப்பற்ற கருணையினால் உயர்ந்து நிற்கும் பிராட்டி பிரகாசிக்கின்ற
ஸ்ரீ வத்சம் என்னும் திரு மறுவோடு நித்ய வாசம் செய்யும் திரு மார்பும்

உரு அரு உமிழ்ந்த உதரமும் உலகு அடைய நின்ற கழல்களும் -அசேதனத்தையும் சேதனத்தையும் ஸ்ருஷ்டித்த திரு வயிறும்
உலகோர் வந்து சரண் அடையும்படி நிற்கின்ற திருவடிகளும் -ஆகிய இவற்றுடனே
வரு மறைகள் ஒன்றி யடி தொழ வருள் வரதர் நின்ற பெருமையே -அருமையான வேதங்கள் ஒரே முகமாய் நின்று திருவடிகளைத்
தொழுது பேசும்படி அருளே வடிவெடுத்த பேர் அருளாளர் நின்ற பெருமை -எவ்வாறு இருந்தது என்னில்
மருவினிடை பொங்கு புனல் என மலை குனிய நின்ற மலை என -பாலை வனத்தின் நடுவில் எழும்பிய ஜலம் என்னும்படி யாகவும் –
அத்திகிரி என்னும் மலை வளையும் படி நின்ற மலை என்னும்படியாகவும்
மலர் அயன் உகந்த பயன் என வருவில் யுறைகின்ற யுயிர் என வடியவர் உகந்த அமுது என –பகவானுடைய திரு நாபிக் கமலத்தில்
உதித்த ப்ரஹ்மா விரும்பிய பலன் என்னும்படியாகவும்
சேதனப் பொருள்கள் வசிக்கின்ற உயிர் என்னும்படியாகவும் -சகல அந்தர்யாமியாக என்றவாறு —
பாகவதர்கள் விரும்புகின்ற அம்ருதம் என்னும்படியாகவும் இருந்ததே —
ப்ரஹ்மாதிகள் முனிவர்கள் பேர் அருளாளனும் அடியாராகப் பெற்றோமே என்று நினைந்து மகிழ்ந்து போற்றுகிறார்கள் –

————————————————————

ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ரம் முதல் அத்யாய சாரார்த்தம் –

சித்து அசித்து என விரித்து யுரைத்தன அனைத்தும் அமைத்து உறையும் இறைவனார்
சிறிய பெரிய வுருவடைய யுடலம் என நடலம் இலது இலகு நிலையினர்
சித்திரத்து எழிலை யொத்த பத்தரொடு முத்தர் பித்தி எனும் யுணர்வினார்
சிதைவில் மறை நெறியில் எறி அ உரு முறைகள் முறிய சிறை யரிய நிறைவினார்–19-1-

சித்து அசித்து என விரித்து யுரைத்தன அனைத்தும் அமைத்து உறையும் இறைவனார் –சேதனம் அசேதனம் என்று சாஸ்திரங்களில் விளக்கிக்
கூறப்பட்ட சகல வஸ்துக்களையும் படைத்து -அவற்றுள் அந்தர்யாமியாய் வசிக்கின்ற தலைவராய் இருப்பவரும் -முதல்பாதம் சாரார்த்தம்

சிறிய பெரிய வுருவடைய யுடலம் என நடலம் இலது இலகு நிலையினர் –ஸூஷ்மமும் ஸ்தூலமுமான உருவமுள்ள சேதன அசேதனம் என்னும் வஸ்துக்கள்
முழுதும் தமக்குச் சரீரம் என்னும்படி நின்று அவற்றிலுள்ள தோஷம் தட்டாது பிரகாசிக்கும் ஸ்வபாவம் யுடையவரும் -இரண்டாம் பாதம் சாரார்த்தம்

சித்திரத்து எழிலை யொத்த பத்தரொடு முத்தர் பித்தி எனும் யுணர்வினார் -அழகிய சித்ரத்தைப் போன்ற பத்தருக்கும் முக்தருக்கும் நித்ய ஸூரிகளுக்கும் ஆதாரமான
சுவர் என்று கூறப் படுகின்ற சங்கல்பத்தை யுடையவரும் -சித்திரத்தை சுவர் தங்குவது போலே தன் சங்கல்பத்தால் சர்வேஸ்வரன் உலகத்தைத் தாங்குகின்றான் –
வேறு ஒன்றையும் தமக்கு ஆதாரமாகக் கொல்லாமை -மூன்றாவது பாத சாரார்த்தம்

சிதைவில் மறை நெறியில் எறி அ உரு முறைகள் முறிய சிறை யரிய நிறைவினார் –அழிவு இல்லாத வேத மார்க்கத்தில் ஒதுக்கப் பட்ட அந்த அசேதனத்தின்
பிரகாரங்கள் தொலைந்து போக வரம்பு இல்லாத பெருமையை யுடையவரும்
பிற மதத்தினர் அசேதனமே உலகுக்கு காரணம் என்று விருத்தமாய் வழக்காட -சித்தாந்திகள் பல நியாயங்கள் உதவியால் வேதாந்த வாக்கியங்களை ஆராய்ந்து
அசேதனம் ஜகாத் காரணம் ஆகாது என்றும் எல்லையற்ற பெருமையையுடைய சர்வேஸ்வரன் ஜகாத் காரணம் என்றும் ஸ்தாபித்தனர் –
இதனால் நான்காவதை பாத சாரார்த்தம் விளக்கப் பட்டது –

————–

ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ரம் இரண்டாம் அத்யாயம் சாரார்த்தம் –

கத்துவிக்க வல கத்து வித்தை வழி கற்ற வர்க்கு அசைவு இல் மறையினார்
கபிலர் கண சாரணர் சுகதர் சமணர் அரர் வழிகள் அழியும் அருள் மொழியினர்
கத்து இலக்கிலும் அருக் குலத்திலும் அசித்தில் ஒக்கும் ஒரு முதல்வனார்
கரணம் இடு கடிய பதினொரு இருடிகமும் அடைய முடியும் ஆதி இருடியார் –19-2-

கத்துவிக்க வல கத்து வித்தை வழி கற்ற வர்க்கு அசைவு இல் மறையினார் –எடுத்த இடம் எல்லாம் ஹேதுவை ஆரவாரத்தோடு கல்பிக்கும் படி
செய்ய வல்ல ஜல்பம் என்னும் வாத மார்க்கத்தை பரிச்சயம் செயதவரால் அசைக்க முடியாத விசித்திரமான சக்தியாகிய ரஹஸ்யத்தை யுடையவரும்
ப்ரஹ்மம் ஜகாத் காரணம் என்பதை ஸ்தாபித்து பிற மதத்தினர் ஸ்ம்ருதிகள் யுக்திகள் உடன் கல்பித்த விரோதங்கள் நீங்கிய தன்மையாகிய முதல் பாத சாரார்த்தம் –

கபிலர் கண சாரணர் சுகதர் சமணர் அரர் வழிகள் அழியும் அருள் மொழியினர்-கபிலரும் கணாதரும் புத்தரும் ஜைனரும் பாசுபதரும் -சைவரும் -ஆகியவர்கள்
மதங்கள் தொலைவதற்கு காரணமான ஆஸ்ரிதர் இடம் அருளாலே ஸ்ரீ பாஞ்ச ராத்ரம் என்னும் ஸ்ரீ ஸூ க்தியை வெளியிட்டு அருளியவரும் -இரண்டாம் பாதம் சாரார்த்தம்

கத்து இலக்கிலும் அருக் குலத்திலும் அசித்தில் ஒக்கும் ஒரு முதல்வனார் -கம் இந்திரியம் -இந்திரியங்களுக்கு இலக்கண ஐந்து பூதங்களிலும்
ஜீவ வர்க்கத்திலும் மஹான் அஹங்காரம் என்னும் தத்துவங்களின் விஷயத்தில் போல் ஒரே காரணமாய் இருளிப்பவரும்
பஞ்ச பூதங்களையும் ஜீவர்களையும் தக்கவாறு ஸ்ருஷ்டிக்கும் தன்மை யாகிய மூன்றாம் பாத சாரார்த்தம்

கரணம் இடு கடிய பதினொரு இருடிகமும் அடைய முடியும் ஆதி இருடியார் –கூத்தாடுகிற கொடிய ஞான இந்திரியங்கள் கர்மா இந்திரியங்கள் மனஸ் முழுதும்
தோன்றுவதற்கு காரணமான நேரில் எல்லாவற்றையும் காண வல்ல முனிவர் போன்றவரும் —
இந்திரியம் முதலியவற்றுக்கு காரணமாகும் தன்மை –நான்காம் பாத சாரார்த்தம் –

—————

ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ரம் மூன்றாம் அத்யாயம் சாரார்த்தம் –

ஒத்து அனைத்து உலகும் ஒற்றி ஒற்றி வரும் இப்பவத்து இசையும் இசைவினார்
உருவம் அருவம் எனும் உலகின் முடுகு இலகில் உவமை இது இலகு தலைவனார்
உத்தமப் படிவகுத்த வித்தைகளில் உத்தரிக்க உணர் குணவனார்
உரிய கிரிசைகளில் அரியது ஒரு விரகு தெரிய விரையுமவர் பரிவினர் —-19-3–

ஒத்து அனைத்து உலகும் ஒற்றி ஒற்றி வரும் இப்பவத்து இசையும் இசைவினார் -எப்பொழுதும் ஒரே தன்மையதாய் இருந்து சுவர்க்கம் நரகம்
இவற்றுக்குச் செல்லும் சகல ஜீவர்களை தழுவித் தழுவி வருகின்ற இந்த சம்சாரத்தை நடத்துவதற்கு ஏற்ற சங்கல்பத்தை யுடையவரும்
இத்தால் சேதனருக்கு விழிப்பு ஸ்வப்னம் நித்திரை மூர்ச்சை மரணம் ஆகிய நிலைமைகளிலும் நிர்வாஹகராய் இருந்து சம்சாரத்தை
நடத்தி வைத்தலாகிய முதல் பாத சாரார்த்தம் சொல்லிற்று ஆயிற்று

உருவம் அருவம் எனும் உலகின் முடுகு இலகில் உவமை இது இலகு தலைவனார் -அசேதனம் சேதனம் என்னப்படும் லோகத்தின் தோஷம் இல்லை என்னுமதில்
சமமில்லாமல் பிரகாசிக்கின்ற ஸ்வாமியாய் இருப்பவரும் -அந்தர்யாமியாய் இருந்தும் வியாப்த கத தோஷம் தட்டாமை-இரண்டாம் பாத சாரார்த்தம்

உத்தமப் படிவகுத்த வித்தைகளில் உத்தரிக்க உணர் குணவனார் -உயர்ந்த பிரகாரங்களில் பலவகையாகப் பிரிக்கப்பட்ட பக்தி யோகங்களில்
வேறு உபநிஷத்துக்களில் இருந்து எடுத்துக் கொள்ளக் கருதப்பட்ட குணங்களை யுடையவரும் –
பக்தி யோகம் தஹர வித்யை சாண்டில்ய வித்யை பர வித்யை -இப்படி வித்யைகளை அனுஷ்ட்டிக்கும் போதும் வேறு உபநிஷத்துக்களில் கூறப்பட்டுள்ள அதே வித்யையில்
சொல்லிய மற்றைக் குணங்களையும் எடுத்துக் கொண்டு அவற்றுடன் கூடியதாகவும் ப்ரஹ்மத்தை உபாஸிக்க வேண்டும் –மூன்றாவது பாத சாரார்த்தம்

உரிய கிரிசைகளில் அரியது ஒரு விரகு தெரிய விரையுமவர் பரிவினர் –பக்தி யோகத்துக்கு அங்கமாய் தங்களுக்கு தக்கவான வர்ணாஸ்ரம தர்மங்களில்
எளிதில் செய்ய முடியாத ஓர் உபாயத்தை அறிய விரைபவரிடம் அன்புடன் தலைக் கட்டி வைப்பவரும் –
சாத்விக தியாகம் -செய்யும் கர்மமும் அதன் பலனும் செய்யும் தன்மையும் தன்னுடையது என்று நினையாமல் அவற்றை எம்பெருமான் இடம் சமர்ப்பித்தல் –
இதனால் செத்தனர் செய்யும் கர்மங்களால் மகிழ்ந்து அருள் புரியும் தன்மையாகிய நான்காம் பாத சாரார்த்தம் சொல்லிற்று ஆயிற்று –

———–

ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ரம் நான்காம் அத்யாயம் சாரார்த்தம் –

சத்து அசத்து எனும் அணைத்த அனைத்து வினை தொத்து அறுக்க வள துணிவினார்
சரியும் அளவில் உரியவரை அறிவு அரிய தமனி நெறி செருகு விரகினார்
தத்துவத் திரள் உதைத்து உதைத்து அடைவு தத்து விக்குமவர் தலைவனார்
தருகை உணருமவர் சரணம் அணுக விடல் அரிய அருள் வரதர் அடியமே —19-4-

தமனி நெறி–ப்ரஹ்ம நாடி

சத்து அசத்து எனும் அணைத்த அனைத்து வினை தொத்து அறுக்க வள துணிவினார் -புண்ணியம் பாபம் எனப்படுகின்ற உபாசிக்கும் ஜீவனைச்
சேர்ந்துள்ள சகல கர்மங்களும் தொடர்தலை ஒழிக்க வல்ல உறுதியை யுடையவரும் -முதல் பாதம் சாரார்த்தம்

சரியும் அளவில் உரியவரை அறிவு அரிய தமனி நெறி செருகு விரகினார்–சரீரத்தை விடும் காலத்து பரமபதம் செல்லத் தக்க ஜீவர்களை
அறிவதற்கு முடியாத ப்ரஹ்ம நாடி வழியாக பிரவேசிக்கச் செய்ய வல்லமை யுடையவரும் -இரண்டாம் பாதம் சாரார்த்தம்

தத்துவத் திரள் உதைத்து உதைத்து அடைவு தத்து விக்குமவர் தலைவனார் -பிரக்ருதியைச் சேர்ந்த சகல அசேதன தத்துவங்களின் கூட்டத்தையும்
காலால் உதைத்து தள்ளி வரிசையாக -சேதனரை சம்சாரத்தை விட்டுத் தாண்டுவிப்பவரான ஆதிவாகியிருக்கு ஸ்வாமியாய் இருப்பவரும் -மூன்றாம் பாத சாரார்த்தம்

தருகை உணருமவர் சரணம் அணுக விடல் அரிய அருள் வரதர் அடியமே -எம்பெருமான் பாலன் கொடுப்பதை நினைந்து உபாசனம் செய்யும் ஜீவர்
தம் திருவடிகளை நெருங்கி நிற்க அவரை விடாதவருமான கருணையே வடிவெடுத்த பேர் அருளாளருக்கு நாம் சேஷபூதர்களாய் இருக்கின்றோம் -நான்காம் பாத சாரார்த்தம்

பேர் அருளாளருக்கு சேஷபூதராகப் பெற்றோம் என்று மகிழ்ந்து வேதாந்த சாரார்த்தங்களை இவ்வாறு விண்ணப்பம் செய்தார்கள் என்றவாறு –

——————————————————-

திருமகள் மண் மகள் நீளை முதலா எல்லாத் தேவியரும் தன்னுடனே திகழ்ந்து நிற்கத்
தருமம் இரு மூன்று முதல் அனைத்தும் தோன்றத் தன்னனைய சூரியர் தன்னடிக் கீழ் வாழ
அருமறை சேர் அளவில்லா வவனியின் கண் அரவணை மேல் வீற்று இருப்பாள் அனைத்தும் காக்கும்
கருமணியைக் கரி கிரி மேல் கண்டேன் எந்தன் கடுவினைகள் அனைத்தும் நான் கண்டிலேனே–20-

ஆரவாரத்தோடு கல்பிக்கும் படி-செய்ய வல்ல ஜல்பம் என்னும் வாத மார்க்கத்தை-
கத்து வித்தை -இவர்களைக் கத்தும் படி செய்யும் வித்தை

திருமகள் மண் மகள் நீளை முதலா எல்லாத் தேவியரும் தன்னுடனே திகழ்ந்து நிற்கத் –ஸ்ரீ லஷ்மீ ஸ்ரீ பூமிப் பிராட்டி ஸ்ரீ நீளா தேவி முதலிய
எல்லாத் தேவிமாரும் தன்னுடனே பிரகாசித்துக் கொண்டு நிற்க

தருமம் இரு மூன்று முதல் அனைத்தும் தோன்றத் தன்னனைய ஸூரியர் தன்னடிக் கீழ் வாழ -ஞானம் சக்தி பலம் ஐஸ்வர்யம் வீர்யம் தேஜஸ் என்னும்
ஆறு குணங்கள் முதலிய எல்லாக் குணங்களும் பிரகாசிக்க -தன்னைப் பொன்ற நித்ய ஸூரியர் தன் திருவடிகளின் கீழே நித்ய கைங்கர்யம் செய்ய

அருமறை சேர் அளவில்லா வவனியின் கண் அரவணை மேல் வீற்று இருப்பாள் அனைத்தும் காக்கும் -அருமையான வேதங்களால் புகழப் படுகின்ற
அளவிடமுடியாத தேசமாகிய பரமபதத்தில் ஆதிசேஷனாகிய திருப் பள்ளியின் மேலே எழுந்து அருளி இருப்பதாலேயே சகலத்தையும் ரஷித்து அருளுபவனான

கருமணியைக் கரி கிரி மேல் கண்டேன் எந்தன் கடுவினைகள் அனைத்தும் நான் கண்டிலேனே–நீல ரத்னம் போன்ற
பேர் அருளாளனை ஸ்ரீ ஹஸ்திகிரியின் மீது சேவித்தேன் –
என்னுடைய கொடிய கர்மங்கள் முழுதையும் நான் காணவில்லை -கர்மங்கள் தொலைந்தன -என்றவாறு
யாகவேதியில் கண்ணாரக் கண்ட ப்ரஹ்மா மகிழ்ந்து ஆனந்த கடலில் அழுந்தி பித்தனாகி பின்பு சுய நிலை அடைந்து அனுபவிக்கிறான் –

—————————————————-

பேர் அருளாளனை உவமானங்களுடன் பிரமன் அனுபவித்தல் –

பெடை இரண்டை ஓர் அனம் அடைந்து பிரிந்திடா வகை பேசலாம்
பெருகும் அருவிகள் அருகு மருவிய பெரிய மணி வரை பயிலலாம்
பிடி இரண்டோடு களவம் ஓன்று பிணைந்த பேர் அழ கோதலாம்
பிரிவில் ஒளியோடு நிழலும் அருகு உறும் இரவி இலகுதல் பரவலாம்
கொடி இரண்டொடு விடவி ஓன்று குளிர்ந்தவாறு குலாவலாம்
குறைவில் சுருதியும் நினைவும் இளகிய தரும அரு நிலை என்னலாம்
அடி இரண்டையும் அடையும் அன்பர் அறிந்த பேர் அருளாளனார்
அணுகும் மலர் மகள் அவனி மகளொடு கரடிகிரியினில் அவிர்த்தலே -21-

கரடி கிரி -ஸ்ரீ ஹஸ்தி கிரி
நிலை கவர்தல் -நின்று அருளுகை

அடி இரண்டையும் அடையும் அன்பர் அறிந்த பேர் அருளாளனார் -தம் திருவடிகள் இரண்டையும் அடைந்தபவர்களான
பாகவதர்களால் அனுசந்திக்கப்பட்ட பேர் அருளாளர்
அணுகும் மலர் மகள் அவனி மகளொடு கரடிகிரியினில் அவிர்த்தலே -நெருங்கியுள்ள பெரிய பிராட்டியுடனும் பூமிப் பிராட்டியுடனும்
ஸ்ரீ ஹஸ்திகிரியில் பிரகாசித்தல்

பெடை இரண்டை ஓர் அனம் அடைந்து பிரிந்திடா வகை பேசலாம் -ஓர் ஆண் ஹம்ஸம் இரண்டு பெண் ஹம்ஸங்களை
சேர்ந்து பிரியாமல் இருக்கும் பிரகாரத்தைப் போலும் என்று சொல்லலாம்

பெருகும் அருவிகள் அருகு மருவிய பெரிய மணி வரை பயிலலாம் -பெருகுகிற அருவிகளை பக்கத்தே பெற்றுள்ள
பெரிய ரத்ன பர்வதத்தை ஒக்கும் என்று அனுசந்திக்கலாம்
பிடி இரண்டோடு களவம் ஓன்று பிணைந்த பேர் அழ கோதலாம் -ஒரு ஆண் யானை இரண்டு பெண் யானைகளுடன்
சேர்ந்து இருந்த பெரிய அழகை போலும் என்று கூறலாம்
பிரிவில் ஒளியோடு நிழலும் அருகு உறும் இரவி இலகுதல் பரவலாம் -தன்னை விட்டுப் பிரியாத பிரகாசத்தோடு சாயையும்
பக்கத்தே பொருந்தப் பெற்ற சூர்யன் பிரகாசிப்பதை ஒக்கும் என்று புகழலாம்

கொடி இரண்டொடு விடவி ஓன்று குளிர்ந்தவாறு குலாவலாம் -ஒரு மரம் கொடிகள் இரண்டுடன் குளிர்ந்து நிற்பதை போலும் என்று கொண்டாடலாம்
குறைவில் சுருதியும் நினைவும் இளகிய தரும அரு நிலை என்னலாம்–குற்றம் இல்லாத வேதங்களோடு ஸ்ம்ருதிகளோடு
கூடிப் பிரகாசிக்கின்ற தர்மத்தின் ஸூஷ்மம் போலும் என்று கூறலாம் –

————————————————–

வேர் ஒப்பார் விண் முதலாம் காவுக்கு எல்லாம் விழி ஒப்பார் வேதம் எனும் கண் தனக்குக்
கார் ஒப்பார் கருணை மழைபொழியும் நீரால் கடல் ஒப்பார் கண்டிடினும் காணாக் கூத்தால்
நீர் ஒப்பார் நிலம் அளிக்கும் தன்மை தன்னால் நிலம் ஒப்பார் நெடும் பிழைகள் பொறுக்கும் நேரால்
ஆர் ஒப்பார் இவர் குணங்கள் அனைத்தும் கண்டால் அருளாளர் தாம் எனினும் தமக்கு ஒவ்வாரே –22-

தாம் எனினும் தமக்கு ஒவ்வார்–ஸ்ரீ பரமபத நாதனும் ஸ்ரீ தேவப்பெருமாளுக்கு சத்ருசராக மாட்டார் –
ஸுலப்யம் விஞ்சி அன்றோ இருக்கும் இங்கு –

அருளாளர்–பேர் அருளாளர்
வேர் ஒப்பார் விண் முதலாம் காவுக்கு எல்லாம் -ஆகாசம் முதலிய உலகமாகிய சோலைகள் அனைத்துக்கும் வேரைப் போலே ஆதாரமாக ஆவார் –
பிரபஞ்சம் முழுவதும் எம்பெருமானுக்கு லீலைக்காக ஏற்பட்ட நந்தவனம் போன்றதாகும் –
மரங்களை வேர் தரிப்பது போலே பேர் அருளாளன் தரித்து கொண்டு அருளுகிறான்

விழி ஒப்பார் வேதம் எனும் கண் தனக்குக் -வேதம் என்று சொல்லப்படும் உலகின் கண்ணுக்கு நடுவேயுள்ள கரு விழியைப் போன்றவர் ஆவார் –
வேதம் தெய்விக கண் போன்றதாகும் -பேர் அருளாளன் சாரமாய் விளங்குவதால் கரு விழி போன்றவன்

கார் ஒப்பார் கருணை மழைபொழியும் நீரால் –கருணையாகிய மழையைப் பெய்யும் தன்மையால் மேகத்தைப் போன்றவர் ஆவார் –
மேடு பள்ளம் வாசி பாராமல் பொழிவது போலே உயர்ந்தவர் தாழ்ந்தவர் பேதம் பாராது கருணையாகிய மழையைப் பொழிகிறான்
கடல் ஒப்பார் கண்டிடினும் காணாக் கூத்தால் -நேரில் பார்த்த போதிலும் ஸ்வரூபத்தை முழுவதும் காண முடியாமையாகிய அதிசயத்தால் கடலைப் போன்றவர் ஆவார்-

கடலின் ஏக தேசம் கண்டு கடலைக் கண்டோம் என்னுமா போலே அவன் ஸ்வரூபம் திருமேனி குணங்களின்
ஏக தேசத்திலும் முழுவதையும் காண வல்லோம் அல்லோம்

நீர் ஒப்பார் நிலம் அளிக்கும் தன்மை தன்னால் -பூமியைக் காப்பாற்றுகின்ற ஸ்வபாவத்தால் ஜலத்தை ஒத்து இருப்பார் –

நிலம் ஒப்பார் நெடும் பிழைகள் பொறுக்கும் நேரால்–நம்முடைய பெரிய அபராதங்களை பொறுத்துக் கொள்ளும்
ஸ்வபாவத்தால் பூமி தேவியைப் போன்று இருப்பார்

இப்படி ஒவ்வோர் அம்சத்தில் பேர் அருளாளனும் போலி யுவமானத்தைத் தேடி எடுத்தாலும் எல்லாக் குணங்களுடன்
கூடிய நிலையில் அவனுக்கு ஓர் அவமானமும் காண முடியாதே

ஆர் ஒப்பார் இவர் குணங்கள் அனைத்தும் கண்டால் தாம் எனினும் தமக்கு ஒவ்வாரே -இவருடைய குணங்கள்
முழுவதையும் ஆலோசித்தால் இவரை ஒத்தவர் யார் -ஒருவரும் இல்லை -தாமே என்றாலும் தமக்கு ஒத்தவராக மாட்டார் -என்று
பிரமன் அனுபவித்து பேசுகிறான் –

மேல் திசையில் உள்ள முகத்தால் யாகசாலையில் மேற் புறத்தில் அணையாகக் கிடக்கும் திரு வெக்கா எம்பெருமானையும்
கீழ்த் திசையில் யுள்ள முகத்தால் யாகவேதியில் திருவவதரித்து அருளிய பேர் அருளாளனையும் சேர அனுபவித்து
ஸ்வயம் வ்யக்தமாய்ப் பரஞ்சோதி யாய் யுள்ள ஒரே வாஸ்து யாகத்தை காத்ததால்
உபாயமாகவும் யாக வேதியில் யாகத்தின் பலனாக திரு அவதரித்த படியால்
பலனாகவும் காணப் படுகிறது என்று அனுசந்தித்தான்
அதிகார சுமையை மறந்து கைங்கர்யத்தில் ஊன்றி நின்று தொடர்ந்து ஸ்துதித்துக் கொண்டே இருந்தான் –

——————————————

பேர் அருளாளன் பிரமனுக்கு அருள் புரிதல் —

எந்நிலமும் குரத்தால் குறி செய்த எழில் பரி கொண்டு
அன்னம் உயர்த்த செய்யோன் அன்று வேள்வி செய் வேதியின் மேல்
முன்னிலையாகிய மூர்த்தியன் நான்முகன் மற்றும் உனக்கு
என்ன வரம் தருவோம் என்று நாதன் இயம்பினனே -23-

அன்னம் உயர்த்த செய்யோன் -ஹம்சத்தைக் கொடியாக உயர்த்தவனும் -செந்நிறமுடைய ப்ரஹ்மா
எந்நிலமும் குரத்தால் குறி செய்த எழில் பரி கொண்டு -எல்லா நிலத்திலும் கால் குழம்பினால்
அடையாளம் செய்த அழகிய குதிரையைக் கொண்டு
அன்று வேள்வி செய் வேதியின் மேல்-அந்நாளில் யாகம் செய்த வேதிகையின் மீது

நாதன் முன்னிலையாகிய மூர்த்தியன் -ஸ்வாமியான பேர் அருளாளன் எதிரே நின்ற திருமேனி யுடையனாகி
நான்முகன் மற்றும் உனக்கு என்ன வரம் தருவோம் என்று இயம்பினனே –ப்ரஹ்மாவே உனக்கு வேறு
எந்த வரத்தைக் கொடுக்க வேண்டும் கேட்ப்பாயாக என்று அருளிச் செய்தான் –
என்னை நேரில் கண்டவர்கள் சகல பலன்களையும் பெற வல்லவராவார் -என்று அவனை நோக்கிக் கூறினான் –

உன் திருமேனியை கண்டு அனுபவிக்கப் பெற்ற எனக்கு மற்று ஒன்றும் வேண்டாம் -சம்சாரிகள் உஜ்ஜீவிக்கும்படி
மெய்விரதம் என்னும் இந்த திவ்ய ஷேத்ரத்திலே
புண்ய கோடி விமானத்தில் எப்பொழுதும் தேவரீரைக் கண்ணாரக் கண்டு களிக்க அருள் புரிய வேண்டும் என்றான் –
இங்கேயே நித்யவாஸம் செய்கிறேன் என்றதும் ப்ரஹ்மாவும் யாகத்தைத் தலைக் கட்டி கிருதயுகத்தில்
செய்ய வேண்டிய முறைப்படி பேர் அருளாளனைப் பரிபூர்ணமாக ஆராதித்தான்-

—————————————

ப்ரஹ்மா அப்பொழுது அங்குள்ள மஹரிஷிகளுக்கு அபிகமனம் முதலிய
பஞ்ச கால ப்ரக்ரியை ஆராதிக்கும் முறைகளை உபதேசித்தல் –

சென்று மலர் பறித்து என்நாதன் சேவடிப் போது உகந்து
நன்று எனும் நீர் சுடர் நன்முக வாசம் இலை கொடுத்துக்
கன்னல் இலட்டுவத் தோடு அன்னம் சீடை கரி படைத்துப்
பின்னும் சேவித்து அவன் பாதம் பணிமின்கள் என்றனனே -24-

சென்று மலர் பறித்து என்நாதன் சேவடிப் போது உகந்து -எம்பெருமானிடம் சென்று பிரபத்தியைச் செய்து
புஷ்பங்களைப் பறித்து சிவந்த திருவடி மலர்களை விரும்பி
நன்று எனும் நீர் சுடர் நன்முக வாசம் இலை கொடுத்துக் -நல்லது என்று சொல்லப் படுகிற ஜலம் தீபம் நல்லதாய்த் திருமுக மண்டலத்திற்கு
வாசனை தரும் பண்டம் வெற்றிலை ஆகியவற்றை சமர்ப்பித்து
கன்னல் இலட்டுவத் தோடு அன்னம் சீடை கரி படைத்துப் -சருக்கரை லட்டுடன் அன்னம் சீடை கரி ஆகியவற்றை சமர்ப்பித்து
பின்னும் சேவித்து அவன் பாதம் பணிமின்கள் என்றனனே — மறுபடியும் மந்த்ர ஜபம் செய்து அவனுடைய திருவடிகளை
த்யானம் செய்யுங்கோள் என்று உபதேசித்தான் –

அபிகமனம் -உபாதானம் -இஜ்யை -ஸ்வாத் யாயம் -யோகம் -இப்படி பஞ்சகால ப்ரக்ரியை அனுஷ்ட்டிக்க உபதேசம் செய்தான் –

————————————————————–

ஸ்ரீ பிரமன் தன்னுலகம் சென்று யோகத்தில் இருத்தல் –

ஆழி நிலை வினை கடிவான் அயமேதம் முடித்ததற் பின்
வேழ மலை நாயகனார் விடை கொடுக்க விண்ணேறி
நாழிகையில் வானவரை மாற்றியிடு நான்முகன் தான்
ஊழி எலாம் அழியாத வுயோகம் அடைந்து இருந்தானே -25-

நாழிகையில் வானவரை மாற்றியிடு நான்முகன் தான் -அல்ப காலத்தில் இந்திராதி தேவர்களை நீக்கி வேறு ஒருவரை நியமிப்பவனும்
நான்கு முகங்களையும் யுடையவனுமான ப்ரஹ்மா
ஆழி நிலை வினை கடிவான் அயமேதம் முடித்ததற் பின் -கடல் போன்ற கர்மங்களை போக்குவதற்காக அஸ்வமேத யாகத்தை செய்து முடித்த பிறகு
வேழ மலை நாயகனார் விடை கொடுக்க விண்ணேறி -ஸ்ரீ ஹஸ்திகிரி நாதரான பேர் அருளாளர் அனுமதி கொடுக்க ப்ரஹ்ம லோகம் சென்று
ஊழி எலாம் அழியாத வுயோகம் அடைந்து இருந்தானே -கல்ப காலத்திலும் அழியாததான பகவானுடைய த்யானத்தில் அமர்ந்து இருந்தான் –

பேர் அருளாளன் மிக மகிழ்ந்து முன்பு உனக்கு நான் கொடுத்த ப்ரஹ்மபதமாகிய அதிகாரத்தில் குறை தீர்க்கும்படி சரஸ்வதி சாவித்ரி முதலிய
உன் தர்ம பத்னிகளுடன் உன் லோகத்துக்கு சென்று எஞ்சிய அதிகாரத்தை நடத்துவாயாக என்று அருளிச் செய்ய
பேர் அருளாளன் திருவருளையும் மெய் விரத திவ்ய க்ஷேத்ர பெருமையையும் அனுசந்தித்துக் கொண்டு
யோக விசேஷத்தில் மூழ்கிக் கிடந்தது பாக்யசாலியாய் இருந்தான் –

——————————————————–

ஸ்ரீ பேர் அருளாளன் நான்கு யுகங்களிலும் வரம் அளித்தல் –

ஆதி யுகத்து அயன் கண்டிட நின்ற அருள் வரதர்
காதல் உயர்ந்த கயிற்றைத் திரேதையில் காத்து அளித்து
வாதுயர் தேவ குருவுக்கு இரங்கித் துவாபரத்தில்
சோதி யனந்தன் கலியில் தொழுது எழ நின்றனரே–26-

அருளே என்று உபக்ரமித்ததையே -அருள் வரதர் -என்று உபசம்ஹரிக்கிறார்

ஆதி யுகத்து அயன் கண்டிட நின்ற அருள் வரதர் -முதல் யுகமாகிய க்ருத யுகத்தில் ப்ரஹ்மா சாஷாத் கரிக்கும் படி
நின்றவரும் அருளே வடிவு கொண்டவருமான பேர் அருளாளர்
காதல் உயர்ந்த கயிற்றைத் திரேதையில் காத்து அளித்து -த்ரேதா யுகத்தில் தன்னிடம் பக்தி மிகுந்து இருந்த
ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானை முதலை வாயில் நின்றும் காப்பாற்றி அருள் புரிந்து வாதுயர் தேவ குருவுக்கு இரங்கித்
துவாபரத்தில் -த்வாபர யுகத்தில் வாதம் புரிவதில் சிறந்த தேவர்களின் குருவான ப்ருஹஸ்பதிக்கு கருணை புரிந்து
சோதி யனந்தன் கலியில் தொழுது எழ நின்றனரே–காளி யுகத்தில் தேஜஸ் மிகுந்த ஆதிசேஷன் அனந்த சரஸ் என்னும் புஷ்காரிணியின் சமீபத்தில்
அதன் தலைவனாக இருந்து வணங்கி உஜ்ஜீவிக்கும்படி ஸ்ரீ ஹஸ்திகிரியிலேயே நிலை பெற்று நின்றார் –

————————————————–

ஸ்ரீ பேர் அருளாளர் பேர் அருளால் இப்பிரபந்தம் பாடினமை –

வக்த்ரு வைலக்ஷண்யத்தையும் விஷய வைலக்ஷண்யத்தையும் நிரூபித்து அருளிக் கொண்டு
இப் பிரபந்தம் அனைவருக்கும் உபாதேயம்-என்று நிகமித்து அருளிச் செய்கிறார் –
இவை பத்தும் வல்லார்களைத் தேவர் வைகல் தீர்த்தங்கள் என்று பூசித்து நல்கி உரைப்பர் தம் தேவியர்க்கே —
ஸ்ரீ நித்ய ஸூரிகளுக்கும் பரி ஸூத்தியைத் தரக் கூடியவர்கள் என்றவாறு

புண்டரீகம் உயிர்த்த புராணனார் பொய்யின் மா மகா யுத்தர வேதியில்
கொண்டல் ஆர் அருள் மாரி பொழிந்திடக் கொண்டதோர் உயர் கூர் மதி யன்பினால்
பண்டை நான்மறை மௌலி படிந்த யான் பாரின் மெய் விரதக் கவி பாடினேன்
தொண்டை மண்டல வேதியர் வாழவே தூய தென்மறை வல்லவர் வாழவே -27-

பண்டை நான்மறை மௌலி படிந்த யான் பாரின் மெய் விரதக் கவி பாடினேன் -அநாதியான நான்கு வேதங்களின் அந்தத்தில் -வேதாந்தத்தில் ஈடுபட்ட நான்
புண்டரீகம் உயிர்த்த புராணனார் பொய்யின் மா மகா யுத்தர வேதியில் -திரு நாபித் தாமரை பிறப்பிக்கப் பெற்ற அநாதியான ப்ரஹ்மாவினுடைய
கபடம் இல்லாது அனுஷ்ட்டிக்கப் பட்ட பெரிய யாகத்தின் உத்தர வேதியில்
கொண்டல் ஆர் அருள் மாரி பொழிந்திடக் கொண்டதோர் உயர் கூர் மதி யன்பினால்-பேர் அருளானாகிய மேகம் நிறைந்த கிருபையாகிய
மழையைப் பெய்திட்டு நிற்க -அதனால் உண்டான ஒப்பற்ற உயர்ந்த கூர்மையுள்ள அறிவாலும் பக்தியாலும்
தொண்டை மண்டல வேதியர் வாழவே தூய தென்மறை வல்லவர் வாழவே -தொண்டை நாட்டில் உள்ள வேதங்களைக் கற்ற அந்தணர் நீடூழி வாழவும்
பரிசுத்தமான தமிழ் வேதம் வல்லவர் வாழவும் இப்பொமியில் சத்யா விரதம் என்னும் திவ்ய க்ஷேத்ரத்தைப் பற்றிய இப்பாசுரங்களை பாடி முடித்தேன் –

—————————————————–

இப் பிரபந்தம் பாடி வீறு பெற்றமை

உய் விரதம் ஓன்று இன்றி யடைந்தார் உய்ய வொரு விரதம் தான் கொண்ட யுயர்ந்த மாலைச்
செய் விரதம் ஒன்றாலும் தெளியக்கில்லாச் சிந்தையினால் திசை படைத்த திசைமுகன் தான்
பொய் விரத நிலம் எல்லாம் போயே மீண்டு புகல் இதுவே புண்ணியத்து என்று சேர்ந்த
மெய் விரத நன்னிலத்து மேன்மை ஏத்தி வேதாந்த வாசிரியன் விளங்கினானே -28–

இது தான் ஓதும் இருக்காலும் எழில் முனிவர் நினைவினாலும் இசை அறிவார் செயலுடன் என் இசைவினாலும்
நெருக்காத நீள் விரதம்-ஒருகாலத்திலும் ஒருவராலும் ஒருபடியாலும் கலைக்க முடியாத விரதம் என்றபடி –

திசை படைத்த திசைமுகன் தான் -திக்குகளை ஸ்ருஷ்டித்தவனும் நான்கு திசைகளிலும் முகத்தை யுடையவனுமான ப்ரஹ்மா
உய் விரதம் ஓன்று இன்றி யடைந்தார் உய்ய வொரு விரதம் தான் கொண்ட யுயர்ந்த மாலைச் –தாம் உஜ்ஜீவிப்பதற்கு
உபாயம் வேறு ஒன்றும் இன்றிச் சரணம் அடைந்தவர்கள் உஜ்ஜீவிப்பதற்காக -சரணாகத ரக்ஷணம் என்னும்
ஒப்பற்ற விரதத்தை தானே கைக் கொண்டவனும் -அதனால் உயர்ந்து நிற்பவனுமான எம்பெருமானை
செய் விரதம் ஒன்றாலும் தெளியக்கில்லாச் சிந்தையினால்–தன்னால் செய்யப்பட வேறு எந்த விரதத்தாலும் நேரில் ஸாஷாத் கரிக்க முடியாத கவலையினால்
பொய் விரத நிலம் எல்லாம் போயே மீண்டு புகல் இதுவே புண்ணியத்து என்று சேர்ந்த-பலன் கொடுக்க வில்லை யாதலின் வீணாகப் போகும்
விரதங்களை யுடைய ஷேத்ரங்களுக்கு எல்லாம் போய் பயன் அற்றுத் திரும்பி இந்த ஷேத்ரமே புண்ணியத்தைப் பெற சாதனமாகும் என்று வந்து அடைந்த
மெய் விரத நன்னிலத்து மேன்மை ஏத்தி வேதாந்த வாசிரியன் விளங்கினானே -சத்ய விரதம் என்னும் சிறந்த திவ்ய ஷேத்ரத்தின்
வைபவத்தை இப்பிரபந்தத்தால் புகழ்ந்து வேதாந்த தேசிகர் சிறந்து விளங்குகிறார் –

—————————————-

சீராரும் தூப்புல் திருவேங்கடமுடையான்
தாரார் அருளாளர் தாள் நயந்து சீராக
மெய் விரத நன்னிலத்து மேன்மை இது மொழிந்தான்
கையில் கனி போலக் கண்டு –29—

சீராரும் தூப்புல் திருவேங்கடமுடையான் -பெருமை நிறைந்த ஸ்ரீ தூப்பூழில் திரு அவதரித்த ஸ்ரீ வேங்கட நாதன் என்னும் தேசிகர்
தாரார் அருளாளர் தாள் நயந்து -மாலை நிறைந்த பேர் அருளாளருடைய திருவடிகளையே விரும்பி
மெய் விரத நன்னிலத்து மேன்மை சீராக இது மொழிந்தான் -ஸத்ய விரதம் என்னும் சிறந்த திவ்ய ஷேத்ரத்தின் பெருமையை
கையில் கனி போலக் கண்டு –உள்ளங்கையில் உள்ள நெல்லிக் கனியைப் போலே அறிந்து சிறப்புடன் இந்த பிரபந்தத்தை வெளியிட்டார் –

—————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேதாந்த தேசிகன் சுவாமி திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ அமிருதாசுவாதினி -ஸ்ரீ வேதாந்த தேசிகாசார்யர் ஸ்வாமிகள்-

August 2, 2017

ஸ்ரீ மான் வேங்கட நாதார்ய கவி தார்க்கிக கேசரீ
வேதாந்தா சார்ய வர்யோ மே சந்நிதத்தாம் சதா ஹ்ருதி –

கவி தார்க்கிக சிம்ஹாய கல்யாண குண சாலினே
ஸ்ரீ மதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம –

சீர் ஓன்று தூப்புல் திரு வேங்கடமுடையான்
பார் ஒன்றச் சொன்ன பழ மொழியுள் ஓர் ஓன்று
தானே யமையாதோ தாரணியில் வாழ்வார்க்கு
வான் ஏறப் போம் அளவும் வாழ்வு

———————————————————————————-

திருமந்திரம் முதலிய மூன்று ரஹஸ்யங்களின் தாத்பர்யம் -ஸ்ரீ மத் ராமாயணம் சாரமான காகாசுரன் சரணாகதி ஸ்ரீ விபீஷண சரணாகதி முதலியனவும் பிரஸ்தாவிக்கப் படுகின்றன –
ஸ்ரீ வராஹ சரம ஸ்லோகம் பொருளும் அஞ்சலி உடைய பெருமையையும் ரஹஸ்யார்த்த விஷயங்களும் சுருக்கி அருள படுகின்றன –
சம்பாஷணையாக அமைந்த ஒரு பாசுரத்தால் ஸ்ரீ பாஷ்யகாரர் கீர்த்தியையும் அமலனாதி பிரான் சாரார்த்தத்துடன் நிகமிக்கிறார் –
37–பாசுரங்கள் -அமுதம் போன்ற விஷயங்கள் தன்னுள் அடங்கப் பெற்று நம்மை அனுபவிக்கச் செய்வதால் இந்த பிரபந்தம் அம்ருதாசு வாதினி -என்று வழங்கப் படுகிறது –

————————–

முதல் ஆறு பாசுரங்கள் சாரசாரம் திருமந்த்ராதிகாரம்

மூலம் கிளையென ஓன்று இரண்டான மொழி இரண்டும்
மேல் ஓன்று நிலை என நின்ற அவ்வித்தகன் உரையும்
காலம் கழிவதன் முன்னம் கருத்துறக் கண்டிடவே
ஞாலம் புகழும் நம் தேசிகர் தான் நம்மை வைத்தனர் —1-

மூலம் கிளையென ஓன்று இரண்டான மொழி இரண்டும் -வேரும் கிளையும் என்று சொல்லும் படி முறையே ஒரு வாக்யமாகவும் இரண்டு பகுதியாகவும்
உள்ள திருமந்திரம் த்வயம் -மந்த்ரங்கள் இரண்டையும்
மேல் ஓன்று நிலை என நின்ற அவ்வித்தகன் உரையும்-அந்த கண்ணனுடைய சரம ஸ்லோகத்தையும்
காலம் கழிவதன் முன்னம் கருத்துறக் கண்டிடவே -ஞாலம் புகழும் நம் தேசிகர் தான் நம்மை வைத்தனர் -நம்முடைய வாழ் நாள் கழிவதற்கு முன்பு –
-உள்ளத்தில் பதிந்து அனுபவிக்கும் படி உலகோர் புகழும் நம் ஆச்சார்யர்கள் நம்மை நிறுத்தி அருளினார்கள் –

திருமந்த்ரத்தால் ஸ்வரூபம் அறிந்து -அதனால் வேர் -த்வயத்தால் பிரபத்தியை அனுஷ்ட்டித்து -அதனால் கிளை
-சரம ஸ்லோகத்தால் வேறு ஒன்றையும் தேட வேண்டாதபடி உபாயத்தை விளக்கி விதிப்பதால் நிகரற்றது -என்னலாயிற்று-

————————————–

காரணமும் காவலனுமாகி என்றும் கமலையுடன் பிரியாத நாதனான
நாரணனுக்கு அடியேனாய் அடிமை பூண்ட நல்லடியார்க்கு அல்லால் மற்று ஒருவருக்கு அல்லேன்
ஆரணங்கள் கொண்டு அகமும் புறமும் கண்டால் அறிவாகி அறிவதுமாய் அறு நான்கு அன்றிச்
சீரணிந்த சுடர் போலத் திகழ்ந்து நின்றேன் சிலை விசயன் தேர் அனைய சிறு வேதத்தே –2-திருமந்திரம் -பிராணவார்த்தம் –

காரணமும் காவலனுமாகி என்றும் கமலையுடன் பிரியாத நாதனான -மூல காரணன் -சர்வ ரக்ஷகன் -ஸ்ரீ யபதி
நாரணனுக்கு அடியேனாய் அடிமை பூண்ட நல்லடியார்க்கு அல்லால் மற்று ஒருவருக்கு அல்லேன்-ஸ்வாமிக்கு தாசன் -பாகவதர்களுக்கு தாசன் -வேறு ஒருவருக்கும் அல்லேன்
ஆரணங்கள் கொண்டு அகமும் புறமும் கண்டால் -வேதங்களினால் ஜீவாத்மா ஸ்வரூபத்தை ஆராய்ந்து பார்த்தால்
அறிவாகி அறிவதுமாய் -ஞானமே வடிவாய் தர்ம பூத ஞானத்தால் மற்ற பொருள்களை அறிபவனாய்
அறு நான்கு அன்றிச் -24-தத்வங்களாகிய அசேதனங்களில் வேறு பட்டு
சீரணிந்த சுடர் போலத் திகழ்ந்து நின்றேன் -தேஜஸ் போலே பிரகாசித்து நின்றேன்
சிலை விசயன் தேர் அனைய சிறு வேதத்தே –அர்ஜுனன் தேர் -போன்ற சிறிய வேதம் ஆகிய பிரணவத்தில்-
கிருஷ்ணன் முன்பும் அர்ஜுனன் பின்பும் வீற்று இருந்தது போலே அகாரம் முன்பும் மகாரம் பின்பும் இருப்பதால் ஒப்புமை –

—————————————————————

யான் எனது என்பது ஓன்று இல்லை என் செய்வது அவனை அல்லால்
ஆனது அறிந்திடும் தன்னடியார்க்கு எனை யாட்படுத்தித்
தான் எனை நல்கி நடத்துகின்றான் தன் அருள் வழியே
நான் உனை வீடு செய்வேன் என்ற நம் திரு நாரணனே-3-திருமந்திரம் -நம சப்தார்த்தம் –

நான் உனை வீடு செய்வேன் என்ற நம் திரு நாரணனே–நான் உனக்கு சம்சார பந்தத்தை நீக்கி முக்தி கொடுப்பேன் என்று உறுதி கூறிய
நம்முடைய ஸ்ரீ மன் நாராயணன் -சரம ஸ்லோகத்தில் அருளிச் செய்த படியே –
தான் எனை நல்கி நடத்துகின்றான் தன் அருள் வழியே -தானும் என்னிடம் அன்பு வைத்து -தன்னுடைய கருணை செல்லும் வழியிலே என்னை நல் வழிப் படுத்துகின்றான் –
தனது அருளினால் பிரபத்தி உபாயத்தில் மூட்டி அனுஷ்ட்டிக்கச் செய்கின்றான் –
யான் எனது என்பது ஓன்று இல்லை-நான் என்றும் என்னுடையது என்றும் கூறுவதற்குத் தகுந்த பொருள் ஒன்றும் இல்லை –
என்னுடைய அகங்கார மமகாரங்களைப் போக்கி அருளி -அடியேனை பரதந்த்ரனாக்கி அருளி -அநந்யார்ஹமாகவும் அருளிச் செய்தான்
என் செய்வது அவனை அல்லால் -அவ்வெம்பெருமானை அன்றி செய்யத் தக்கது என்ன இருக்கின்றது –
ஆனது அறிந்திடும் தன்னடியார்க்கு எனை யாட்படுத்தித் –தகுந்த நல்ல விஷயத்தை அறிந்தவர்களான பாகவதர்களுக்கும் என்னை தாசனாகச் செய்து –

சரணாகதி உபாயம் அனுஷ்ட்டித்து அகங்கார மமகாரங்கள் கழிந்து -ஸ்வாதந்திரமும் கழிந்து ததீய சேஷத்வமும் பெற்று -இருப்பதே நம சப்தார்த்தம் –
——————————————————–

யாதாம் இவை அனைத்தும் படைத்து ஏந்தும் இறைவனுமாய்க்
கோதாம் குணங்களுடன் குறுகாத குணத்தனுமாய்
மாதா பிதா என மன்னுற வாய்க்கதி என்ன நின்றான்
போதார் திருவுடன் பொன்னருள் பூத்த நம் புண்ணியனே –4–திருமந்திரம் –நாராயண சப்தார்த்தம் –

போதார் திருவுடன் பொன்னருள் பூத்த நம் புண்ணியனே–புஷ்ப்பத்தில் வசிக்கும் பிராட்டியுடன் சிறந்த கருணை மிகுந்தவனும்
நம் புண்ணியமே வடிவு எடுத்தால் போன்றவனுமான எம்பெருமான்
யாதாம் இவை அனைத்தும் படைத்து ஏந்தும் இறைவனுமாய்க்-எவ்வகைப்பட்ட பொருளுமான இந்தச் சேதன அசேதனங்கள்
எல்லாவற்றையும் ஸ்ருஷ்டித்து காப்பாற்றும் ஸ்வாமியாக இருந்து
கோதாம் குணங்களுடன் குறுகாத குணத்தனுமாய் –குற்றம் எனப்படும் இழி குணங்களுடன் சேராத குணம் உடையனுமாக இருந்து
மாதா பிதா என –தாயும் தந்தையும் என்னலாம் படி –
மன்னுறவாய்க் கதி என்ன நின்றான்–திடமான பந்துவுமாக இருந்து அவனே கத்தி என்னும்படி நிற்கின்றான் –

———————————-

இரு விலங்கு கழித்து இடராம் உடலம் தன்னில் இலங்கு நடு நாடியினால் எம்மை வாங்கி
ஒரு விலங்கு நெறி யல்லா வழி யான் மன்னும் உயர் வானில் ஏற்றி யுயிர் நிலையும் தந்து
பெரு விலங்காம் அருள் தன் அடிக்கீழ் பிரியாத வமரருடன் பிணைத்துத் தன்னார்
உருவில் இலங்கு மிசைவிக்கும் உம்பர் போகமும் உக்காந்து தரும் திருமாலை யுகந்தோம் நாமே –5–திருமந்திரம் -நாராயணாய -சதுர்த்தியின் அர்த்தம் –

இரு விலங்கு கழித்து –புண்ய பாபா கர்மங்கள் ஆகிய இரண்டு விலங்குகளையும் ஒழித்து
இடராம் உடலம் தன்னில்-முக்திக்கு தடையாய் உள்ள இந்த சரீரத்தில்
இலங்கு நடு நாடியினால் -பிரகாசிக்கின்ற நடு நாடியாகிய பிரம்மா நாடியினால்
எம்மை வாங்கி -ஜீவாத்மா வாகிய எம்மை -இச் சரீரத்தின் நின்றும் பிரித்து எடுத்து
ஒரு விலங்கு நெறி யல்லா வழி யால்-தூமாதி மார்க்கத்தைப் போலே சம்சாரத்திலேயே மறுபடி பிணைக்கும் வழியாக இல்லாத அர்ச்சிராதி மார்க்கத்தால்
மன்னும் உயர் வானில் ஏற்றி-சாசுவதமான உயர்ந்த பரமபதத்தில் ஏற்றி வைத்து
யுயிர் நிலையும் தந்து -ஜீவனுக்கு கர்மா சம்பந்தத்தால் இதுவரை மறைந்து இருந்த குணங்களையும் கொடுத்து
பெரு விலங்காம் அருள் தன்னால் -பக்தர்களை விடாமல் கட்டிப் பிடித்துக் காப்பதால் பெரிய விலங்கு போன்ற கிருபையினால்
அடிக்கீழ் பிரியாத வமரருடன் பிணைத்துத் -தன் திரு வடிக் கீழ் க்ஷணமும் பிரியாது இருந்து கைங்கர்யம் செய்யும் நித்ய சூரிகளுடன் ஓன்று கூட்டி
அங்கு -பரமபதத்தில்
தன்னார் உருவில் -தன்னுடைய பரிபூர்ணமான ஸ்வரூபத்தில்
இலங்கு மிசைவிக்கும் உம்பர் போகமும்–ஊட்டும் நித்ய சூரிகளின் அனுபவத்தை
உகந்து தரும் திருமாலை யுகந்தோம் நாமே-நம்மிடம் மகிழ்ந்து கொடுக்கும் எம்பெருமானைப் பற்றி நாம் அறிந்து மகிழ்ந்தோம் –

——————————————–

உறவை இசைந்து இறையில்லா ஒருவற்கு என்றும் ஒண் சுடராய் ஓர் எழுத்தில் ஓங்கி நின்றோம்
துறவறமும் தூ மதியும் துயரம் தீர்வும் தூயவர்கட்க்கு ஆனமையும் இரண்டில் உற்றோம்
அறம் முயலும் அனைத்து உறவாய் அனைத்தும் ஏந்தும் அம்புயத்தாள் கணவனை நாம் அணுகப் பெற்றோம்
பிறவி அறுத்து அடி சூடி அடிமை எல்லாம் பிரியாத அமரருடன் பெற்றோம் நாமே –6-திருமந்திரத்தின் திரண்ட பொருள் –

ஓர் எழுத்தில் -ஓர் எழுத்தாகிய பிரணவத்தில்
இறையில்லா ஒருவற்கு-தனக்கு ஒரு நாயகன் இல்லாத எம்பெருமானோடு
உறவை இசைந்து என்றும்-எப்போதும் நமக்கு உள்ள சேஷத்வம் என்னும் சம்பந்தத்தை ஏற்றுக் கொண்டு
ஒண் சுடராய் -அழகிய பிரகாச ஸ்வரூபமாய்
ஓங்கி நின்றோம் -உயர்ந்து நின்றோம்
இரண்டில்–இரண்டு அக்ஷரமாய் யுள்ள நமஸ் சப்தத்தில்
துறவறமும் -அகங்கார மமகாரங்களை விடுகையாகிய முக்கிய தர்மமும்
தூ மதியும்-பரிசுத்தமான ஞானம் ஆகிய சரணாகதியும்
துயரம் தீர்வும்-தன்னை ஸ்வதந்திரனாய் நினைத்தால் ஆகிய துன்பம் நீங்குதலும்
தூயவர்கட்க்கு ஆனமையும் -பரிசுத்தரான பாகவதருக்கு அடியன் ஆனமையும் –
ஆகிய அர்த்தங்களை –
உற்றோம் -அடைந்தோம் –
மேல் நாராயண சப்தத்தில்
அறம் முயலும் -சரணம் அடைந்தவனைக் காப்பதால் ஆகிய தர்மத்தில் ரத்னம் உள்ளவனும்
அனைத்து உறவாய் அனைத்தும் ஏந்தும் -சகல வித பந்துவாய் சகல வஸ்துக்களையும் ரக்ஷிப்பவனான
அம்புயத்தாள் கணவனை -தாமரையில் வசிக்கும் பிராட்டியின் கணவனான எம்பெருமானை
நாம் அணுகப் பெற்றோம் -நாம் நெருங்கி அனுபவிக்கும் பாக்யத்தைப் பெற்றோம்
மேல் நான்காம் வேற்றுமையில்
பிறவி அறுத்து -மறு பிறவி ஒழியப் பெற்று
அடி சூடி -திருவடிகளை நம் முடியில் சூடி
அடிமை எல்லாம் -கைங்கர்யங்கள் முழுவதையும்
பிரியாத அமரருடன் பெற்றோம் நாமே –பகவானை க்ஷணமும் பிரியாத நித்ய சூரிகளுடன் சேர்ந்து நாம் செய்யப் பெற்றோம் –

————————————————-

பாசுரங்கள் -7-8-9-சாரசாரம் த்வயதிகாரம்
கருமம் என ஞானம் என வதனால் கண்ட யுயிர் கவரும் காதல் எனக் கானில் ஓங்கும்
அரு மறையால் தரும் நிலையில் இந்நாள் எல்லாம் அடியேனை அலையாத வண்ணம் எண்ணி
தருமம் உடையார் உரைக்க யான் அறிந்து தனக்கு என்னா அடிமைக்காம் வாழ்ச்சி வேண்டித்
திருமகளோடு ஒரு காலும் பிரியா நாதன் திண் கழலே சேது எனச் சேர்க்கின்றேனே –7-த்வயம் சரணாகதியைப் பற்றுதல் –

கருமம் என ஞானம் என-கருமை யோகமும் ஞான யோகமும்
வதனால் கண்ட -ஆகிய இரண்டால் சாஷாத் கரித்த
யுயிர் -ஜீவாத்மாவை
கவரும் -வசப்படுத்தித் தன்னிடத்தில் ஈடுபடச் செய்கின்ற
காதல் எனக் -பக்தி யோகம் என்னும் உபாயமும் ஆகிய
கானில் ஓங்கும் -அனுஷ்டிக்க அரியனவாய் இருப்பதால் காடு போன்ற உயர்ந்து நிற்பதாயும்
அரு மறையால் தரும் நிலையில் -அருமையான வேதத்தால் உபதேசிக்கப் படுவதுமான நிஷ்டையில்
இந்நாள் எல்லாம் -இந்த நாள் முழுவதும்
அடியேனை அலையாத வண்ணம் எண்ணி -சேஷ பூதனான யான் அனுஷ்டிக்க முயன்று துன்பம் அறாத படி திரு உள்ளம் கொண்டு
தருமம் உடையார் உரைக்க -தர்மம் அறிந்த ஆச்சார்யர்கள் அடியேனுக்கு சரணாகதியை உபதேசிக்க
யான் அறிந்து -அடியேன் அதை அறிந்து கொண்டு
தனக்கு என்னா அடிமைக்காம் -மமகாராம் இல்லாமல்
வாழ்ச்சி வேண்டித் -வாழ்க்கையை விரும்பி
திருமகளோடு ஒரு காலும் பிரியா நாதன் –பிராட்டியை விட்டு எப்பொழுதும் பிரியாத எம்பெருமானுடைய
திண் கழலே சேது எனச் சேர்க்கின்றேனே –வலிய திருவடிகளே சம்சாரத்தைக் கடக்கும் அணை என்று உறுதி கொண்டு -அவற்றை உபாயமாக அடைகின்றேன் –

————————————————————–

வினை விடுத்து வியன் குணத்தால் எம்மை யாக்கி வெருவுரை கேட்டு அவை கேட்க விளம்பி நாளும்
தனை யனைத்தும் அடைந்திடத் தான் அடைந்து நின்ற தன் திரு மாதுடன் இறையும் தனியா நாதன்
நினைவு அழிக்கும் வினை வழிக்கு விலக்காய் நிற்கும் நிகர் இல்லா நெடும் குணங்கள் நிலை பெறத் தன்
கனை கழல் கீழ் அடைக்கலமாக் காட்சி தந்து காரணனாம் தன் காவல் கவர்கின்றானே-8-த்வயம் -ஸ்ரீ சப்தார்த்தத்தின் ஆறு பொருள்கள் –

வினை விடுத்து –தன்னை அடைந்தவர்களின் கர்மங்களை போக்கி
வியன் குணத்தால் எம்மை யாக்கி –அதிசயிக்கத் தக்க தன் சிறந்த கருணை முதலிய குணத்தால் எம்மைப் பக்குவப்படுத்தி
வெருவுரை கேட்டு -பாபிகளான எங்களை எம்பெருமான் ஏற்றுக் கொள்ளச் செய்ய வேண்டும் என்று தாசர்கள் அச்சத்துடன் புலம்பும் குரலைக் கேட்டு
அவை கேட்க விளம்பி -அந்த புலம்பல்களை எம்பெருமான் கேட்க விண்ணப்பித்து
நாளும் தனை யனைத்தும் அடைந்திடத் –எப்பொழுதும் தன்னை எல்லாம் சரணம் அடைய
தான் அடைந்து நின்ற -அவர்களை உஜ்ஜீவிப்பைக்காக தாம் எம்பருமானை அடைந்து நின்றவளான
தன் திரு மாதுடன் இறையும் தனியா நாதன் -தனக்கே உரியலான பிராட்டியுடன் க்ஷணமும் பிரியாது இருக்கும் எம்பெருமான்
நினைவு அழிக்கும் வினை வழிக்கு -நல்ல அறிவைப் போக்குகின்ற பாபா மார்க்கத்துக்கு
விலக்காய் நிற்கும் -தடையாய் நிற்பவையும்
நிகர் இல்லா நெடும் குணங்கள் நிலை பெறத் -ஒப்பற்றவையான அளவற்ற தன்னுடைய குணங்கள் நிலை பெற்று நிற்பதற்காக
தன் கனை கழல் கீழ் அடைக்கலமாக் காட்சி தந்து -நம்மை ரக்ஷிக்கப் பட வேண்டிய வஸ்துவாகக் கொண்டு சேவையைக் கொடுத்து
காரணனாம் தன் காவல் கவர்கின்றானே-சர்வ காரகனான தன்னுடைய ரேஷன் ஸ்வபாவத்தை நிலை நாட்டிக் கொள்ள விரும்புகின்றான்
ஸ்ரீ யதே–ஸ் ராயதே -/ஸ்ருனோதி ஸ்ராவ்யாதி / இத்யாதி ஆறு வியுத்பத்திகளின் அர்த்தங்களையும் அருளிச் செய்தார் ஆயிற்று –

————————————————-

என்னது யான் செய்கின்றேன் என்னாதாருக்கு இன்னடிமை தந்து அளிப்பான் இமையோர் வாழும்
பொன்னுலகில் திருவுடனே யமர்ந்த நாதன் புனலாரும் பொழில் அரங்கம் திகழ மன்னித்
தன்னகலம் அகலாத தகவால் ஓங்கும் தகவுடனே தன் கருமம் தானே எண்ணி
யன்னை என அடைக்கலம் கொண்டு அஞ்சல் தந்து என் அழல் ஆற நிழல் ஆற அளிக்கின்றானே–9-ஸ்ரீ ரெங்கநாதன் சாஸ்வதமாக நின்று அருள் புரிதல் –

என்னது யான் செய்கின்றேன் என்னாதாருக்கு –இப்பொருள் என்னுடையது -இதை யான் செய்கின்றேன் -என்னும் மமக அஹங்காரங்கள் இல்லாதவர்களுக்கு
இன்னடிமை தந்து அளிப்பான்–இனிய கைங்கர்யத்தை அருளி ரஷித்து அருளுவதற்காக
இமையோர் வாழும் பொன்னுலகில் -நித்ய சூரிகள் நித்ய கைங்கர்யம் செய்யும் ஸ்ரீ பரம பதத்தில்
திருவுடனே யமர்ந்த நாதன் -பெரிய பிராட்டியார் உடன் எழுந்து அருளி உள்ள எம்பெருமான் –
புனலாரும் பொழில் அரங்கம் திகழ மன்னித் -நீர் வளம் மிகுந்த சோலை சூழ்ந்த திருவரங்கம் திவ்ய க்ஷேத்ரம் விளங்கும் படி
தன்னகலம் அகலாத தகவால் ஓங்கும் -தன்னுடைய திரு மார்பை விட்டுப் பிரியாத கருணை வடிவமான பிராட்டியின் சம்பந்தத்தால் விருத்தி அடைகின்ற
தகவுடனே தன் கருமம் தானே எண்ணி -கருணையுடன் என்னைக் காப்பதாகிய தன் கடைமையை தான் நினைத்து
யன்னை என அடைக்கலம் கொண்டு அஞ்சல் தந்து -பெற்ற தாய் என்னும்படி என்னைக் காக்க வேண்டிய வஸ்துவாகக் கொண்டு அபய பிரதானம் செய்து
என் அழல் ஆற நிழல் ஆற அளிக்கின்றானே–என் சம்சார தாபம் எல்லாம் தீர்க்கும்படி தன் திருவடி நிழலை நிறையத் தந்து ரஷித்து அளிக்கின்றான் –
தன் கைங்கர்யத்தை இங்கேயே அளிக்க நினைத்து ஸ்ரீ ரெங்கத்தில் திருப் பள்ளி கொண்டு நித்ய வாசம் செய்து அருள்கின்றான் –
ஸ்வாபாவிக கருணை பெரிய பிராட்டியின் சம்பந்தத்தால் மேன்மேலும் வளர்ந்து அநிஷ்ட நிவ்ருத்தியும் இஷ்ட பிராப்தியும் செய்து அருள்கின்றான் –

—————————————————-

ஒண்டொடியாள் திரு மகளும் தானுமாகி ஒரு நினைவால் ஈன்ற வுயிர் எல்லாம் உய்ய
வண்டுவரை நகர் வாழ வசுதேவர்காய் மன்னவற்குத் தேர்ப் பாகனாகி நின்ற
தண் துளவ மலர் மார்பன் தானே சொன்ன தனித் தருமம் தான் எமக்காய்த் தன்னை என்றும்
கண்டு களித்து அடி சூட விலக்காய் நின்ற கண் புதையல் விளையாட்டைக் கழிக்கின்றானே –10–ஸ்ரீ கண்ணன் அருளிச் செய்த சரம ஸ்லோகார்த்தம் –
அதிகார சங்கிரகம் -46-பாசுரமும் இதுவே –

வண்டுவரை நகர் வாழ-அழகிய ஸ்ரீ மத் த்வாரகா நகரத்தில் உள்ளவர் உஜ்ஜீவிப்பதற்கு
வசுதேவர்காய் மன்னவற்குத் தேர்ப் பாகனாகி நின்ற -ஸ்ரீ வாசு தேவர்க்கு திருக் குமாரனாய் திரு அவதரித்து அர்ஜுனனுக்கு தேர் ஓட்டும் பாகனாகி நின்றவனும்
தண் துளவ மலர் மார்பன் -குளிர்ந்த திருத் துழாயுடன் பூவைத் திரு மார்பில் அணிந்தவனுமான ஸ்ரீ கண்ணபிரான்
ஒண்டொடியாள் திரு மகளும் தானுமாகி -அழகிய கை வளையல்களை யுடைய பிராட்டியும் தானும் ஓன்று கூடி
ஒரு நினைவால் ஈன்ற -ஒரே விதமான சங்கல்பத்தால் படைத்த
வுயிர் எல்லாம் உய்ய –ஜீவாத்மாக்கள் எல்லாம் உஜ்ஜீவிப்பதற்காக
தானே சொன்ன தனித் தருமம் தான் எமக்காய்த் -தானே சரம ஸ்லோகத்தில் வெளியிட்டு அருளிய நிகரற்ற உபாயமாக
எமக்குத் தானேயாகி நின்று -யாம் பரந்யாசம் செய்ய அவன் தானே உபாயமாய் நின்று
தன்னை என்றும் கண்டு களித்து அடி சூட -தன்னைப் பரமபதத்தில் எப்பொழுதும் சேவித்து மகிழ்ந்து திருவடிகளை நம் முடியில் தரித்துக் கைங்கர்யம் செய்வதற்கு
விலக்காய் நின்ற கண் புதையல் விளையாட்டைக் கழிக்கின்றானே –தடையாய் இருந்த பிரக்ருதியைக் கொண்டு தத்வ ஞானத்தை ஒழிப்பதாகிய
கண் பொத்தும் விளையாட்டை நீக்குகின்றான் -இனி விரைவில் மோக்ஷம் பெறலாம் –

—————————————————–

துய்ய மனத்தர் துறை யணுகாத துணையிலியேன்
ஐயம் அறுத்து உனது ஆணை கடத்தல் அகற்றினை நீ
கையமர் சக்கரக் காவலர் காக்கும் திருவருளால்
வையம் அளந்த வடிக் கீழ் அடைக்கலம் வைத்து அருளே –11-சரமஸ்லோகார்த்தம் -பிரபத்தியில் மூட்டுதல் —

கையமர் சக்கரக் காவலர் –திருக் கையில் அமர்ந்துள்ள சக்கரத்தால் -அடியார்களை ரஷிப்பதில் வல்லவனே
துய்ய மனத்தர் துறை யணுகாத-பரிசுத்தமான மனத்தை யுடைய -விசேஷ ஞானம் சக்தியும் யுடைய – உயர்ந்த அதிகாரிகளால்-
அனுஷ்ட்டிக்கப் படுகிற பக்தி யோகம் முதலிய உபாயத்தில் நெருங்குவதற்கு சக்தியற்ற வனும்
துணை யிலியேன் -வேறு கதி அற்றவனுமான எனக்கு
ஐயம் அறுத்து -பலன் பெறுவதில் உள்ள சங்கைகளைப் போக்கி
உனது ஆணை கடத்தல் அகற்றினை நீ -உன்னுடைய ஆஞ்ஜை யை மீறி நடப்பதாகிய அபராதத்தை நீயே போக்கி அருளி விட்டாய் –
இனிச் செய்ய வேண்டியது யாது என்னில்
காக்கும் திருவருளால் –உலகம் முழுவதையும் காக்க வல்ல உனது சிறந்த கிருபையால்
வையம் அளந்த வடிக் கீழ் அடைக்கலம் வைத்து அருளே –முன் திரிவிக்ரமனாய் உலகத்தை தன் நிழலில் ஒதுங்குமாறு அளந்த
திருவடிகளின் கீழே என்னை -உபாயத்தை அனுஷ்டித்த என்னை ரஷித்து அருள வேண்டிய பெருளாக அருள வேண்டும் –

——————————————-

அறியாத இடைச்சியரும் அறியும் வண்ணம் அம்புயத்தாளுடன் அந்நாள் அவதரித்த
குறையாதும் இல்லாத கோவிந்தா நின் குரை கழல் கீழ் அடைக்கலமாம் குறிப்புத் தந்தாய்
வெறியாரும் மலர்மகளும் நீயும் விண்ணில் விண்ணவர் அடி சோபித இருக்கும் மேன்மை
குறையாத வினை யகற்றி யடிமை கொள்ளக் குறுக வொரு நன்னாள் நீ குறித்திடாயே -12-சரமஸ்லோகார்த்தம் -முக்தி பெறத் துடித்தல்-

அறியாத இடைச்சியரும் அறியும் வண்ணம் -விசேஷ -ஞானம் இல்லாத இடைப்பெண்களும் தன்னை அறிந்து அனுபவிக்கும்படி
அம்புயத்தாளுடன் அந்நாள் அவதரித்த -மலர்மகளுடன் முன்பு திருவதரித்தவனும்
குறையாதும் இல்லாத கோவிந்தா –குறை ஒன்றும் இல்லாத பரிபூர்ணனான எம்பெருமானே
நின் குரை கழல் கீழ் அடைக்கலமாம் குறிப்புத் தந்தாய் -உன்னுடைய கழல் ஒலிக்கின்ற திருவடிகளின் கீழே ரக்ஷிக்கப்பட வேண்டிய
வஸ்துவாக ஆகும்படி உள்ளக்கருத்தை எனக்கு கொடுத்து அருளினாய்
வெறியாரும் மலர்மகளும் நீயும் விண்ணில் விண்ணவர் அடி சூட இருக்கும் மேன்மை -பரிமளமே உபாதானமாக உள்ள பெரிய பிராட்டியும் நீயுமாக
நித்ய முக்தர்கள் உன் திருவடிகளின் கீழ் முடி சூடிக் கைங்கர்யம் செய்ய ஸ்ரீ வைகுண்டத்தில் எழுந்து அருளி யுள்ள நிலையில் நின்றும்
குறையாத வினை யகற்றி யடிமை கொள்ளக் குறுக வொரு நன்னாள் நீ குறித்திடாயே -எங்கள் இடம் குறையாது நிறைந்துள்ள கர்மங்களை ஒழித்து
எங்கள் கைங்கர்யத்தையும் நீ ஏற்பதற்கு விரைவில் கிட்டும்படி ஒரு நல்ல காலத்தை நீ குறிப்பிட்டு அருள வேண்டும் –

————————————————————

தத்துவமும் சாதனமும் பயனும் காட்டும் தாரம் முதல் இரு நான்கும் தன் கருத்தால்
முக்தி வழி நாம் முயலும் வகையே காண முகுந்தன் இசைத்து அருள் அருள் செய்த ஐ நாலைந்தும்
பக்தி தனில் படிவில்லார் பரம் சுமத்தப் பார்த்தன் தன் தேர் முன்னே தான் தாழ நின்ற
வுத்தமனார் உத்தம நல்லுரை நாலெட்டும் உணர்ந்தவர் தாம் உகந்து எம்மை யுணர்வித்தாரே —13–ரஹஸ்ய த்ரயங்கள் காட்டும் அர்த்தங்கள் —

தத்துவமும் சாதனமும் பயனும் காட்டும் –தத்துவத்தையும் உபாயத்தையும் பலனையும் வெளியிடுகின்ற
தாரம் முதல் இரு நான்கும் -பிரணவத்தை முதலாகக் கொண்ட எட்டு அக்ஷரங்கள் அமையப் பெற்ற திரு மந்திரத்தையும்
முக்தி வழி நாம் முயலும் வகையே காண –மோக்ஷத்தின் உபாயத்தில் நாம் அனுஷ்ட்டிக்கும் பிரகாரத்தைக் காண்பதற்காக
முகுந்தன் தன் கருத்தால்-எம்பெருமான் தன் திரு உள்ளத்தால்
இசைத்து அருள் அருள் செய்த ஐ நாலைந்தும் -வேதத்தில் பிரிந்து இருந்த இரு பாகங்களை ஓன்று கூட்டி உலகுக்கு அருள் புரிந்த
இருபத்தைந்து அக்ஷரங்கள் அமைந்த த்வயத்தையும்
பக்தி தனில் படிவில்லார் பரம் சுமத்தப் -பக்தி யோகத்தில் ஈடுபட முடியாதவர்கள் தம்மைக் காக்கும் பொறுப்பை அவன் மீது சுமத்த
பார்த்தன் தன் தேர் முன்னே தான் தாழ நின்ற -அர்ஜுனனுடைய தேரின் முன்னே பாகனாகத் தாழ்ந்து நின்றவனான
வுத்தமனார் உத்தம நல்லுரை நாலெட்டும் உணர்ந்தவர் தாம் உகந்து எம்மை யுணர்வித்தாரே —தாம்-அசை சொல் -சர்வேஸ்வரனுடைய
உயர்ந்த நல்லுபதேசம் ஆகிய முப்பத்திரண்டு அக்ஷரங்கள் பொருந்திய சரம ஸ்லோகத்தையும்
அர்த்தத்துடன் அறிந்த ஆச்சார்யர்கள் நம்மை விரும்பி உபதேசித்து அருளினர்-

————————————————–

பரக்கும் புகழ் வரும் பைம் பொருள் வாய்த்திடும் பத்தர்களாய்
இரக்கின்றவர்க்கு இவை ஈந்தால் அறம் உளது என்று இயம்பார்
கரக்கும் கருத்துடைத் தேசிகர் கன்று என நம்மை எண்ணிச்
சுரக்கும் சுரவிகள் போல் சொரிகின்றனர் சொல்லமுதே –14-ஆச்சார்யர்கள் பலன்களை எதிர்பாராமல் உபதேசித்து அருளும் தன்மை –

கரக்கும் கருத்துடைத் தேசிகர் -ரஹஸ்யார்த்தங்களை ரஹஸ்யமாக வைத்துக் கொள்ளத் திரு உள்ளம் கொண்ட நம் ஆச்சார்யர்கள் –
பத்தர்களாய் -இரக்கின்றவர்க்கு -பக்தி உள்ளவர்களாய் வந்து பிரார்த்திக்கும் அதிகாரிகளுக்கு
இவை ஈந்தால் -இந்த ரஹஸ்யார்த்தங்களை உபதேசத்தால்
பரக்கும் புகழ் வரும் -நாட்டில் பரவுகின்ற கீர்த்தி உண்டாகும்
பைம் பொருள் வாய்த்திடும் -மிகுந்த செல்வம் கிடைக்கும்
அறம் உளது என்று இயம்பார் -புண்ணியம் உண்டாகும் என்று நினைத்து உபதேசிக்க மாட்டார்கள்
கன்று என நம்மை எண்ணிச் -நம்மைக் கன்று போலே நினைத்து
சுரக்கும் சுரவிகள் போல் சொரிகின்றனர் சொல்லமுதே -தம் கன்றுக்கு பாலைப் பெருக்கும் காமதேனுக்கள் போலே உபதேசமாகிய அமுதத்தை பொழிகின்றனர்-

—————————————————-

சோகம் தவிர்க்கும் சுருதிப் பொருள் ஓன்று சொல்லுகின்றோம்
நாகம் தனக்கும் இராக்கத்திற்கும் நமக்கும் சரணம்
ஆகண்டவன் மகனாகிய வா வலிப்பேறிய வோர்
காகம் பிழைத்திடக் கண்ணழிவே செய்த காகுத்தனே -15-ஸ்ரீ மன் நாராயணனே உபாயம் -15-முதல் -19-வரை அபய பிரதான சாரம் –

சோகம் தவிர்க்கும் சுருதிப் பொருள் ஓன்று சொல்லுகின்றோம் -சகல துக்கங்களையும் ஒழிக்கக் கூடிய வேதத்தின் சாரார்த்தம் ஒன்றை வெளியிடுகின்றோம்
அதாவது
ஆகண்டவன் மகனாகிய வா வலிப்பேறிய வோர் -இந்திரனுடைய புத்தரானாகிய கர்வம் கொண்ட ஒரு காகம் குற்றம் செய்ய அவன் உயிர் வாழுமாறு
காகம் பிழைத்திடக் கண்ணழிவே செய்த காகுத்தனே -ஒரு கண்ணை மாத்திரம் அளித்த ஸ்ரீ ராம பிரான் ஒருவனே
நாகம் தனக்கும் இராக்கத்திற்கும் நமக்கும் சரணம் -ஸ்வர்க்க லோகத்தில் உள்ள தேவர்களுக்கும் ராக்ஷஸர்களுக்கும்
முக்தியை விரும்பும் நமக்கும் உபாயமாக ஆவான் -நாகம் -இட ஆகு பெயர் –

———————————————————-

ஒருக்காலே சரணாக அடைகின்றாற்கும் உனக்கு அடிமை யாகின்றேன் என்கின்றார்க்கும்
அருக்காதே யனைவர்க்கும் அனைவராலும் அஞ்சேல் என்று அருள் கொடுப்பன் இது தான் ஓதும்
இருக்காலும் எழில் முனிவர் நினைவினாலும் இவை அறிவார் செயலுடன் என் இசைவினாலும்
நெருக்காத நீள் விரதம் எனக்கு ஓன்று என்னும் நெறி யுரைத்தார் நிலை யுணர்ந்து நிலை பெற்றோமே –16-ஸ்ரீ ராம பிரான் அருளிச் செய்த அபய பிரதானம் –

ஒருக்காலே சரணாக அடைகின்றாற்கும் உனக்கு அடிமை யாகின்றேன் என்கின்றார்க்கும் -ஒரு முறையே என்னைச் சரணமாக அடைந்தவனுக்கும்
உனக்கு சேஷபூதனாக இருக்கின்றேன் என்று அனுசந்திக்கின்றவனுக்கும்
அருக்காதே யனைவர்க்கும் அனைவராலும் அஞ்சேல் என்று அருள் கொடுப்பன் -சிறிதும் குறைவின்றி சகல பிராணிகளுக்கும் சகல பிராணிகளால்
பயம் அடையாமல் இருக்கும் படி அபாய பிரதானம் செய்வேன்
இது தான் ஓதும் இருக்காலும் எழில் முனிவர் நினைவினாலும் இவை அறிவார் செயலுடன் என் இசைவினாலும் -இவ்வாறு செய்வது தான்
அத்யயனம் செய்யப்படும் வேதத்தாலும் பெருமை பொருந்திய முனிவர்களால் செய்யப்பட ஸ்ம்ருதியினாலும் வேதத்தையும் ஸ்ம்ருதியையும் அறிந்த
பெரியோர்களின் அனுஷ்டானத்தாலும் என் உடன்பாட்டாலும்
நெருக்காத நீள் விரதம் எனக்கு ஓன்று என்னும் நெறி யுரைத்தார் நிலை யுணர்ந்து நிலை பெற்றோமே –எனக்கு நீக்க முடியாத ஒரு பெறிய விரதம் ஆகும் என்று
சரணாகதி மார்க்கத்தை உபதேசித்து அருளிய ஸ்ரீ ராமபிரானுடைய உறுதியை நினைந்து நாம் அமைதி பெற்றோம் –

——————————————-

பொன்னை யிகழ்ந்து விருகங்கள் புல்லிய புல்லுகந்தால்
மன்னர் எடுப்பதப் பொன்னலதே மன் உலகம் அனைத்தும்
தன்னை அடைந்திடத் தான் அருள் செய்யும் தனிச் சிலையோன்
பொன்னடி நாம் அடைந்தோம் புறம் ஆர் என் கொல் செய்திடினே—17 –இழிவான பலனைப் பற்றாமை –

பொன்னை யிகழ்ந்து விருகங்கள் புல்லிய புல்லுகந்தால் -மிருகங்கள் பொன்னின் பெருமை யறியாது வெறுத்துவிட்டு அற்பமான புல்லையே ப்ரியமாகக் கொண்டாலும்
மன்னர் எடுப்பதப் பொன்னலதே -அரசர்கள் விரும்பி எடுத்துக் கொள்வது அப்பொன்னைத் தவிர வேறு உண்டோ
அது போலே
மன் உலகம் அனைத்தும் -நிலை பெற்ற உலகம் முழுவதும்
தன்னை அடைந்திடத் தான் அருள் செய்யும் தனிச் சிலையோன் -தன்னைச் சரணமாக அடைய தான் கிருபை செய்பவனும் நிகரற்ற வில்லை யுடையவனான
ஸ்ரீ ராமாபின்னானுடைய பொன்னடி நாம் அடைந்தோம் புறம் ஆர் என் கொல் செய்திடினே—அழகிய திருவடிகளை நாம் சரணமாகப் பற்றினோம் –
இதற்கு மாறாக யார் வேறு எந்தக் கார்யத்தைச் செய்தாலும் நமக்கு என்ன நஷ்டம் –

————————————————————–

வேதத் திரளின் விதி யுணர்ந்தோர்கள் விரித்துரைத்த
காதல் கதியையும் ஞானத்தையும் கருமங்களை
சாதிக்க வல்ல சரணாகதி தனி நின்ற நிலை
யோதத் தொடங்கும் எழுத்தின் திறத்தில் உணர்மின்களே –18-மற்ற யோகங்களுக்கும் பிரபத்தியின் உதவி –

வேதத் திரளின் விதி யுணர்ந்தோர்கள் விரித்துரைத்த -வேத வேதாந்தங்கள் கட்டளையை அறிந்த பூர்வாச்சார்யர்கள் தெளிவாக வெளியிட்டு அருளிய
காதல் கதியையும் ஞானத்தையும் கருமங்களை -பக்தியாகிய உபாயத்தையும் ஞான யோகத்தையும் கர்ம யோகத்தையும்
சாதிக்க வல்ல சரணாகதி தனி நின்ற நிலை -முடித்துக் கொடுக்கச் சக்தியுள்ள பிரபத்தியானது தானே சகல பலத்தையும் கொடுப்பதாய்த்
தனித்த உபாயமாகவும் நின்ற பெருமையை
யோதத் தொடங்கும் எழுத்தின் திறத்தில் உணர்மின்களே –வேதத்தை அத்யயனம் செய்யும் பொழுது முதலில் அனுசந்திக்கப்படுகின்ற
முதல் எழுத்தாகிய பிரணவத்தினுடைய ஸ்வபாவத்தால் அறிவீர்களாக –

——————————————————

மூ உலகும் தன் பிழையைத் தானே சாற்ற முனிவர்களும் தேவர்களும் முனிந்த அந்நாள்
தாவு அரிதாய் எங்கும் போய்த் தளர்ந்து வீழ்ந்த தனிகே காகம் தான் இரந்த உயிர் வழங்கிக்
காவல் இனி எமக்கு எங்கும் கடன் என்று எண்ணிக் காண நிலை இலச்சினை அன்று யிட்ட வள்ளல்
ஏவல் பயன் இரக்கம் இதற்கு ஆறு என்று ஓதும் எழில் யுடையார் இணை அடிக்கீழ் இருப்போம் நாமே -18-ஸ்ரீ ராமபிரான் காகாசுரன் பிழை பொறுத்தல் –

மூ உலகும் தன் பிழையைத் தானே சாற்ற-மூன்று உலகங்களிலும் அலைந்து தான் செய்த அபராதத்தை தானே வெளியிட்டு பேசித் தன்னைக் காக்கும் படி வேண்ட
முனிவர்களும் தேவர்களும் முனிந்த அந்நாள் -ரிஷிகளும் தேவதைகளும் அவன் மீது கோபித்து துரத்திய அக்காலத்திலே
தாவு அரிதாய் எங்கும் போய்த் தளர்ந்து வீழ்ந்த தனிக் காகம் தான் இரந்த உயிர் வழங்கிக்-வேறு புகலிடம் கிடைக்காமல் நாடு எங்கும் சுற்றி சோர்ந்து
ஸ்ரீ ராமபிரானுடைய திருவடிகளில் வந்து வீழ்ந்த உதவியற்ற காகம் யாசித்த உயிர்ப் பிச்சை அளித்து
காவல் இனி எமக்கு எங்கும் கடன் என்று எண்ணிக் காண நிலை இலச்சினை அன்று யிட்ட வள்ளல் -இனி மேல்
எவ்விடத்திலும் யாரையும் ரஷித்தலே எம்முடைய கடைமை என்று திரு உள்ளம் கொண்டு
ஒற்றைக் கண் குருடாகும் சாசுவதமான அடையாளத்தை அப்பொழுது காகனுக்குச் செய்த பெரும் கொடையாளனான ஸ்ரீ ராமபிரானுடைய
ஏவல் பயன் இரக்கம் இதற்கு ஆறு என்று ஓதும் எழில் யுடையார் இணை அடிக்கீழ் இருப்போம் நாமே-கைங்கர்யமே நமக்குச் சிறந்த புருஷார்த்தம் ஆகும்
இந்தப் பலனைப் பெறுவதற்கு உபாயம் நாம் செய்யும் பிரபத்தியால் அவனுக்கு நம்மிடம் உண்டாகும் தயை தான் என்று
உபதேசித்து அருளிய தேஜஸ் பொருந்தியவர்களாக ஆச்சார்யர்களின் திருவடிகளின் கீழே நாம் நிலை பெறுவோம் –

———————————————————————

திருத்தம் பெரியவர் சேரும் துறையில் செறிவிலர்க்கு
வருத்தம் கழிந்த வழி யாரும் என்ற நம் மண் மகளார்
கருத்து ஒன்ற ஆதிவராகம் யுரைத்த கதி யறிவார்
பொருத்தம் தெளிந்து உரைக்கப் பொய்யிலா மதி பெற்றனமே –20 –ஸ்ரீ பூமி தேவிக்கு ஸ்ரீ வராஹ நயினார் உபதேசம் /-20 –முதல் –23 -வரை ரஹஸ்ய சிகாமணி –

திருத்தம் பெரியவர் சேரும் துறையில் -திருந்திய ஞானம் அனுஷ்டானம் இவற்றால் பெரிய மஹரிஷிகளால் அனுஷ்ட்டிக்கப்படும்
பக்தியோகம் முதலிய உபாயத்தில்
செறிவிலர்க்கு -முயல்வதற்கு வேண்டிய அதிகாரம் இல்லாதவர்க்கு
வருத்தம் கழிந்த வழி யாரும் என்ற நம் மண் மகளார் -சிரமம் இல்லாமல் எளிதில் அனுஷ்ட்டிக்கக் கூடிய உபாயத்தைத் தேவரீர் அருள் புரிய வேண்டும்
என்று பிரார்த்திக்க நம் ஸ்ரீ பூமி தேவியினுடைய
கருத்து ஒன்ற ஆதிவராகம் யுரைத்த கதி யறிவார்-திரு உள்ளத்துக்கு ஏற்ப ஆதி வராஹப் பிரானாய் திருவதரித்த எம்பெருமான் வெளியிட்டு
பிரபத்தி என்னும் உபாயத்தை ஸ்வரூபத்தை அறிந்த நம் ஆச்சார்யர்கள்
பொருத்தம் தெளிந்து உரைக்கப் பொய்யிலா மதி பெற்றனமே –நம் தகுதியைக் கண்டு அவ்வுபாயத்தையே உபதேசித்து அருள அழிவு இல்லாத ஞானத்தைப் பெற்றோம் –

—————————————–

இடம் பெற்றார் எல்லாம் என்னுடலாய் நிற்ப இடர் பிறப்பு என்று இவை இல்லா வென்னை யன்பால்
அடம் பற்று அவன் என்று நினைத்தான் யாவன் அவன் ஆவி சரியும் போது அறிவு மாறி
உடம்பில் தாரு உபலம் போல் கிடக்க நானே உய்யும் வகை நினைந்து உயர்ந்த கதியால் என்தன்
இடம் பெற்று என்னுடன் வாழ எடுப்பன் என்ற வெம்பெருமான் அருள் பெற்று மருள் செற்றோமே –21 –ஸ்ரீ வராஹ சரம ஸ்லோகார்த்தம் –

இடம் பெற்றார் எல்லாம் என்னுடலாய் நிற்ப -உலகில் இடம் பெற்றுள்ள யாவரும் -சகல வஸ்துக்களும் எனக்குச் சரீரமாய் நிற்க
இடர் பிறப்பு என்று இவை இல்லா வென்னை யன்பால்-நாசமும் பிறப்பும் ஆகிய இந்த தோஷங்கள் இல்லாத சர்வேஸ்வரனான என்னை ப்ரீதியுடன்
அடம் பற்று அவன் என்று நினைத்தான் யாவன் -அவன் ஒருநாளும் கைவிடாத திடமான கதியாக ஆவான் என்று எவன் நினைந்தவனாகச் சரணம் அடைகின்றானோ
அவன் ஆவி சரியும் போது அறிவு மாறி -அவனுடைய உயிர் நீங்கும் காலத்தில் தன் நினைவு இழந்து
உடம்பில் தாரு உபலம் போல் கிடக்க –கட்டை போலும் கல் போலும் தன் சரீரத்தில் கிடக்கும் போது
நானே உய்யும் வகை நினைந்து உயர்ந்த கதியால் என்தன்-அந்த சேதனன் உஜ்ஜீவிக்க வேண்டிய பிரகாரத்தை நானே செய்ய நினைந்து சிறந்த அர்ச்சிராதி கதியால்
இடம் பெற்று என்னுடன் வாழ எடுப்பன் என்ற -என்னுடைய ஸ்தானம் ஆகிய பரமபதத்தைப் பெற்று என்னோடே இருந்து
சகல கைங்கர்யங்களையும் செய்து வாழும்படி உயர்த்தி வைப்பன் என்று அருளிச் செய்த
வெம்பெருமான் அருள் பெற்று மருள் செற்றோமே –ஸ்ரீ வராஹப் பிரானுடைய கிருபையைப் பெற்று அஞ்ஞானம் ஒழியப் பெற்றோம் —

—————————————————-

இரண்டு உரையாத நம் ஏனம் உரைத்த யுரை இரண்டின்
திரண்ட பொருள்கள் தெளிந்து அடி சூடினம் திண் அருளால்
சுருண்ட நம் ஞானச் சுடர் ஒளி சுற்றும் பார்ப்பதன் முன்
புரண்டது நம் வினை போம் இடம் பார்த்து இனிப் போம் அளவே –22 –பிரபன்னனுக்கு முத்தி நிலையில் கர்மங்கள் வெளியேறுதல் –

இரண்டு உரையாத நம் ஏனம் உரைத்த யுரை இரண்டின் -இரண்டு வார்த்தை சொல்லாத நம்முடைய ஸ்ரீ வராஹ நாயனார் அருளிச் செய்த சரம ஸ்லோகம் இரண்டின்
திரண்ட பொருள்கள் தெளிந்து அடி சூடினம் திண் அருளால் -சாரமான அர்த்தங்களை நாம் அறிந்து அவனுடைய வலிய கிருபையினால்
அவன் திருவடிகளை உபாயமாகவும் பலனாகவும் கொண்டோம்
சுருண்ட நம் ஞானச் சுடர் ஒளி சுற்றும் பார்ப்பதன் முன் -கர்மா சம்பந்தத்தால் எல்லா விஷயங்களையும் அறிய முடியாது சுருங்கி உள்ள நம் ஞானம் ஆகிய
தேஜஸின் பிரகாசம் எல்லா இடத்திலும் பரவுதற்கு முன் -எல்லாவற்றையும் அறியும் சக்தியைப் பெறுவதற்கு முன்
புரண்டது நம் வினை போம் இடம் பார்த்து இனிப் போம் அளவே –நம்முடைய கர்மம் அகன்று விட்டது -இனித் தாம் போகத் தக்க
இடத்தைப் பார்த்து அவை போக வேண்டிய அளவே உள்ளது –புண்ய கர்மம் நண்பர்கள் இடமும் பாப கர்மம் விரோதிகள் இடமும் போய்ச் சேரும் என்று உபநிஷத் கூறுகின்றது –

—————————————————

மலையும் குலையும் என்று எண்ணியும் வன் பெரும் புண் திரங்கித்
தலையும் வெளுத்த பின் தானே யழிய விசைகின்றிலீர்
அலையும் கடல் கொண்ட வையம் அளித்தவன் மெய்யருளே
நிலை என்று நாடி நிலை நின்ற பொய்ம்மதி நீக்குமினே –23 –மரணத்திற்கு அஞ்சுபவர்க்கு நல்லுரை கூறுதல் –

மலையும் குலையும் என்று எண்ணியும் -ஸ்திரம் என்று நாம் நினைக்கும் மலையும் ஒரு காலத்தில் சிதறிப் போம் என்று அறிந்து இருந்தும்
வன் பெரும் புண் திரங்கித் -வலிய பெரிய புண்ணாய் யுள்ள சரீரம் மடிப்பு விழுந்து
தலையும் வெளுத்த பின் தானே யழிய விசைகின்றிலீர் -தலையும் நரைத்துப் போன பின்பும் மரணம் அடைய மனம் இல்லாது இருக்கும் சேதனர்களே
அலையும் கடல் கொண்ட வையம் அளித்தவன் மெய்யருளே -அலை நிறைந்த பிரளய சமுத்ரத்தால் கொள்ளப் பட்ட உலகத்தை அக்கடலில் இருந்து
எடுத்து ரசித்து அருளிய ஸ்ரீ வராஹப் பிரானுடைய சாத்தியமான கிருபையால் திருவதரித்த பிரபத்தியே
நிலை என்று நாடி நிலை நின்ற பொய்ம்மதி நீக்குமினே –ஸ்திரமான உபாயம் என்று அறிந்து உங்கள் இடம் வெகு காலமாக
வேரூன்றி நிற்கின்ற அஞ்ஞானத்தை ஒழித்துகே கொள்வீர்களாக —

———————————————–

கண்ணன் கழல் தொழக் கூப்பிய கையின் பெருமை தனை
எண்ணம் கடக்க யமுனைத் துறைவர் இயம்புதலால்
திண்ணம் இதுவென்று தேறித் தெளிந்த பின் சின் மதியோர்
பண்ணும் பணிதிகள் பாற்றிப் பழம் தொழில் பற்றினமே –25 –அஞ்சலி வைபவம் –

கண்ணன் கழல் தொழக் கூப்பிய கையின் பெருமை தனை-எம்பெருமானுடைய திருவடிகளை வணங்குவதற்காக கூப்ப்ப் பட்ட கைகளின் -அஞ்சலியின் பெருமை தனை
எண்ணம் கடக்க யமுனைத் துறைவர் இயம்புதலால் -ஸ்ரீ ஆளவந்தார் நம் நினைவின் எல்லையை மீறியதாக ஒரு ஸ்லோகத்தால் அருளிச் செய்தபடியால்
திண்ணம் இதுவென்று தேறித் தெளிந்த பின் சின் மதியோர் -இதுவே திடமான சித்தாந்தம் என்று நாம் நிச்சயித்துத் தெளிந்த பிறகு அல்ப புத்தியை யுடையவர்கள்
பண்ணும் பணிதிகள் பாற்றிப் பழம் தொழில் பற்றினமே -செய்கின்ற வாதங்களை ஒழித்து பழைமையாய் வந்த செய்கையாகிய பிரபத்தியை உபாயமாகக் கொண்டோம் —
அம் ஜலயதி-எம்பெருமானை நீர்ப் பண்டமாக உருக்கச் செய்வதால் அஞ்சலி -வேறு ஒன்றையும் செய்ய வேண்டாதபடி நிற்கும் நிலையையும் காட்டும் அஞ்சலி –

——————————————————–

பொங்கு புனல் ஆறுகளில் புவனம் எல்லாம் பொன் கழலால் அளந்தவன் தன் தாளால் வந்த
கங்கை எனும் நதி போலக் கடல்கள் ஏழில் கமலை பிறந்தவன் உகந்த கடலே போலச்
சங்குகளில் அவன் ஏந்தும் சங்கே போலத் தாரிலவன் தண் துளவத் தாரே போலே
எங்கள் குலபதிகள் இவை மேலாம் என்றே எண்ணிய நல் வார்த்தை கணம் இசைக்கின்றோமே –25 –முக்கிய பொருள்களையே கைக் கொள்ளல்
-25 –முதல் –27-வரை பிரதான சதகம் –

பொங்கு புனல் ஆறுகளில் புவனம் எல்லாம் -பெருகி வருகின்ற ஜலத்தை யுடைய உலகில் உள்ள ஆறுகளுக்குள் உலகம் முழுவதும்
பொன் கழலால் அளந்தவன் தன் தாளால் வந்த -த்ரிவிக்ரம திரு அவதாரத்தில் தன்னுடைய அழகிய திருவடிகளால் அளந்த எம்பெருமானுடைய திருவடிகளில் இருந்து வந்த
கங்கை எனும் நதி போலக் -கங்கை என்னும் நதி சிறப்புற்றது போலவும்
கடல்கள் ஏழில் கமலை பிறந்தவன் உகந்த கடலே போலச் -ஏழு சமுத்ரங்களுக்குள் -உப்பு பால் தேன் நெய் கருப்பஞ்சாறு தயிர் சுத்த ஜலம் –
இவற்றுள் பிராட்டி திரு அவதரித்தனால் அவ்வெம்பெருமானுக்கு பிரியமான திருப் பாற் கடல் சிறப்புற்றது போலவும்
சங்குகளில் அவன் ஏந்தும் சங்கே போலத் -சங்குகளுக்குள் அவன் திருக்கையில் ஏந்தும் பாஞ்சஜன்யம் உயர்ந்தது போலேயும்
தாரிலவன் தண் துளவத் தாரே போலே-புஷப மாலைகளுக்குள் அந்த பகவான் அணியும் குளிர்ந்த திருத் துழாய் மாலை சிறப்புற்றது போலேயும்
எங்கள் குலபதிகள் இவை மேலாம் என்றே எண்ணிய நல் வார்த்தை கணம் இசைக்கின்றோமே -எங்கள் பிரபன்ன குலத்துக்கு தலைவர்களான ஆழ்வார்
முதலியவர்கள் அருளிச் செய்த ஸ்ரீ ஸூ க்திகள் சிறந்தவை ஆகும் என்று நிச்சயித்து அனுசந்தித்த நல்ல உபதேசங்களை நாம் அங்கீ கரித்து நடத்துகின்றோம் –

———————————————————

சீர்க் கடலின் திரை என்னத் தகவால் மிக்க தேசிகராய்த் திண் இருளாம் கடலை நீக்கிப்
பாற் கடலோன் திரு வணையாய் நின்று பாரம் காணாத பவக் கடலைக் கடத்து கின்றான்
ஈர்க்கும் மரக் கலம் அன்ன இறைவர் இன்பம் எழுந்து அழியும் குமிழி என விகந்து ஒழிந்தோம்
ஆர்க்கு இனி நாம் என் காட்டுவோம் நமக்கும் ஆர் என் காட்டுவார் என்று அடைந்தவர்கட்க்கு அறிவித்தோமே—26 —
சரண்யனே ஆச்சார்யனாக திரு வவதரித்து ரஷித்து அருளுகிறார் –

பாற் கடலோன் சீர்க் கடலின் திரை என்னத் தகவால் மிக்க தேசிகராய்த் -திருப் பாற் கடலில் பள்ளி கொண்ட எம்பெருமானே சிறப்புற்ற சமுத்திரத்தின்
அலை என்னும் படி மேல் மேல் வருகின்ற கருணை மிகுந்த ஆச்சார்யராக திரு அவதரித்து
திண் இருளாம் கடலை நீக்கிப் -நம்மை அஞ்ஞானம் ஆகிய வழிய இருள் என்னும் கடலில் நின்றும் நீக்கி
திரு வணையாய் நின்று பாரம் காணாத பவக் கடலைக் கடத்து கின்றான் -சிறந்த அணையாய் தானே நின்று கரை காண முடியாத சம்சாரம் ஆகிய
சமுத்திரத்தின் நின்றும் நம்மைக் கரை ஏற்றுகின்றான்
ஈர்க்கும் மரக் கலம் அன்ன இறைவர் இன்பம்-மனிதரை இழுத்துச் செல்லுகின்ற ஓடம் என்னப் படுமவரான ப்ரஹ்மாதிகள் தேவர்களின் ஸூ கமும் –
அல்ப சுகங்களை தர வல்லவர் என்ற கருத்து –
எழுந்து அழியும் குமிழி என விகந்து ஒழிந்தோம்-நீரில் கிளம்பி அமிழும் நீர்க் குமிழி போல் நிலையாதது என்று நினைத்து அதில் விருப்பத்தை விட்டு ஒழிந்தோம்
ஆர்க்கு இனி நாம் என் காட்டுவோம் நமக்கும் ஆர் என் காட்டுவார் என்று அடைந்தவர்கட்க்கு அறிவித்தோமே— நம்மை வந்து அடைந்தவர்களுக்கு பிரபன்னரான நாம் இனி யாருக்கு இவ்விஷயத்தில் கடைமைப் பட்டுள்ளோம் -நமக்கும் யார் எவ்வகையில் கடமைப் பட்டுள்ளார் -எம்பெருமானும் நாமும் ஒருவருக்கு ஒருவர் கடமைப் பட்டுள்ளோம் என்று உபதேசித்தோம் –

————————————————–

காசினியில் மணி யனைத்தும் காயா வண்ணன் கடைந்து எடுத்த கவித்துவத்தை சீர்மைக்கு ஒவ்வா
காசி முதலாகிய நன்னகரி எல்லாம் கார் மேனி யருளாளர் கச்சிக்கு ஒவ்வா
மாசில் மனம் தெளி முனிவர் வகுத்த வெல்லாம் மால் உகந்த வாசிரியர் வார்த்தைக்கு ஒவ்வா
வாசி அறிந்து இவை யுரைத்தோம் வையத்து உள்ளீர் வைப்பாக விவை கொண்டு மகிழ்மினீரே—-27 –வஸ்துக்களின் ஏற்றத் தாழ்வை அறிவித்தல் –

காசினியில் மணி யனைத்தும் காயா வண்ணன் கடைந்து எடுத்த கவித்துவத்தை சீர்மைக்கு ஒவ்வா -பூமியில் உள்ள ரத்தினங்கள் முழுவதும்
காயம் பூவைப் போன்ற நிறமுடைய எம்பெருமான் கடலைக்கடைந்து தனக்காக எடுத்த கௌஸ்துபம் என்னும் ரத்னத்தின் சிறப்புக்கு ஒப்பாகா
காசி முதலாகிய நன்னகரி எல்லாம் கார் மேனி யருளாளர் கச்சிக்கு ஒவ்வா -காசி முதலிய புண்ய ஸ்தலம் எல்லாம் மேகம் போன்ற
திருமேனியை யுடைய பேர் அருளாளன் எழுந்து அருளி இருக்கும் திருகாஞ்சீ புரத்துக்கு ஈடாகாது
அவை போலே
மாசில் மனம் தெளி முனிவர் வகுத்த வெல்லாம் மால் உகந்த வாசிரியர் வார்த்தைக்கு ஒவ்வா -குற்றம் அற்ற மனத்தெளிவை யுடைய
மகரிஷிகள் வெளியிட்டு அருளிய -வேதம் ஸ்ம்ருதி புராணங்கள் -எல்லாம் எம்பெருமானுடைய கிருபைக்கு உரியரான நம்மாழ்வார் முதலிய
ஆச்சார்யர்களின் ஸ்ரீ ஸூ க்திகளுக்கு சமம் ஆகா
வாசி அறிந்து இவை யுரைத்தோம் வையத்து உள்ளீர் வைப்பாக விவை கொண்டு மகிழ்மினீரே—-பொருள்களின் தாரதம்யம் அறிந்து இவ்விஷயங்களை –
ஏற்றத் தாழ்வுகளைக் கூறினோம் -உலகத்தில் உள்ளோர்களே நீங்கள் இவ்விஷயங்களை சேம நிதியாக ஏற்று மகிழ்வீர்களாக –

———————————————–

அந்தமிலாப் பேரின்பம் அருந்த ஏற்கும் அடியோமை யறிவுடனே என்றும் காத்து
முந்தை வினை நிரை வழியில் ஒழுகாது எம்மை முன்னிலையாம் தேசிகர் தம் முன்னே சேர்த்து
மந்திரமும் மந்திரத்தின் வழியும் காட்டி வழிப் படுத்தி வானேற்றி யடிமை கொள்ளத்
தந்தையென நின்ற தனித் திருமால் தாளில் தலை வைத்தோம் சடகோபன் அருளினாலே–28 –எம்பெருமான் அருளும் உபகாரங்கள் -உபகார சங்க்ரஹம் -28 –முதல் –30 -வரை –

அந்தமிலாப் பேரின்பம் அருந்த ஏற்கும் அடியோமை -அளவற்ற பெரிய மோக்ஷ ஆனந்தத்தை அனுபவிப்பதற்குத் தகுதியுள்ள சேஷபூதர்களான எங்களை
யறிவுடனே என்றும் காத்து –எப்பொழுதும் நித்தியமான தர்ம பூத ஞானத்துடன் ரஷித்து அருளி
அடியோமை என்றும் காத்து -அடியோமை என்றும் அறிவுடனே காத்து -என்று இரண்டு தொடராக்கி கொள்க –
நித்ய சங்கல்பத்தாலே ஜீவனை நித்யமாக்கி ஜீவா ஸ்வரூபத்தையும் தர்ம பூத ஞானத்தை நித்ய குணமாக்கி ஜீவ ஸ்வபாவத்தையும் ரஷித்து அருளுகின்றான் என்று தாத்பர்யம் –
முந்தை வினை நிரை வழியில் ஒழுகாது எம்மை -எங்களை அநாதியாய்த் தொடர்ந்து வரும் கர்மப் பெருக்கில் -கரை ஏறாமல் ஆழ்ந்து செல்லாதவாறு
முன்னிலையாம் தேசிகர் தம் முன்னே சேர்த்து -நமக்கு அருள் புரிய முதல் ஸ்தானத்தில் நிற்கின்ற ஆச்சார்யர்கள் பாக்கள் கொண்டு சேர்த்து
மந்திரமும் மந்திரத்தின் வழியும் காட்டி வழிப் படுத்தி -திருமந்திரம் முதலிய மந்திரத்தையும் -அந்த மந்திரத்தில் சொல்லப் படும் பிரபத்தி என்னும் உபாயத்தையும் உபதேசித்து
-அவ்வுபாயத்தை அனுஷ்டிக்கும்படியும் செய்து
வானேற்றி யடிமை கொள்ளத் -பரம பதத்தில் சேர்த்து நாம் செய்யும் கைங்கர்யத்தை ஏற்றுக் கொள்வதற்கு
தந்தையென நின்ற தனித் திருமால் தாளில் தலை வைத்தோம் சடகோபன் அருளினாலே-இவ்வளவு மஹா உபகாரங்கள் செய்ய முற்பட்டதால்
தகப்பன் என்னும் படி நின்ற நிகரற்ற எம்பெருமான் திருவடிகளில் நம்மாழ்வாருடைய கிருபையாலே தலை வணங்கப் பெற்றோம்

———————————————-

தான் தனக்குத் தன்னாலே தோன்றித் தான் ஓர் ஒளி யணைக்கும் குணத்தாலும் தன்னைக் கண்டு
தான் தனக்கு என்று அறியாத தன் குணத்தைத் தன் குணத்தால் தான் இறையில் தானே கூட்டி
யூன் மருத்துப் புலன் மனம் மான் ஆங்காரங்கள் ஓரு மூலப் பிரகிருதி யன்றி நின்ற
நான் தனக்குத் தான் தனக்கு என்று இசைவு தந்த நாரணனை நான் மறையால் நான் கண்டேனே –29 –ஜீவ ஸ்வரூபத்தை அறிதல் –

தான் தனக்குத் தன்னாலே தோன்றித் -ஜீவாத்மா வாகிய தான் தனக்குத் தானே நான் என்று தோன்றி
தான் ஓர் ஒளி யணைக்கும் குணத்தாலும் தன்னைக் கண்டு -தன்னுடைய ஒரு பிரகாசம் போன்ற தர்ம பூத ஞானத்தாலும் ஜீவாத்மாவாகிய தன்னை அறிந்து
தான் தனக்கு என்று அறியாத தன் குணத்தைத் -தன் குணத்தால்– அசேதனம் ஆதலால் தான் என்றும் தனக்கு என்றும் அறிவில்லாத
தர்ம பூத ஞானத்தை -தனக்குக் கிடைத்துள்ள தத்துவ ஞானத்தால்
தான் இறையில் தானே கூட்டி -தானே சர்வ ஸ்வாமியான எம்பெருமான் விஷயத்திலே செலுத்தி
யூன் மருத்துப் புலன் மனம் மான் ஆங்காரங்கள் ஓரு மூலப் பிரகிருதி யன்றி நின்ற -மாம்ச மயமான சரீரம் பிராண வாயுக்கள் இந்திரியங்கள்
மனது மஹான் என்னும் தத்துவம் அஹங்காரம் என்னும் தத்துவம் தனியான மூலப் பிரகிருதி ஆகிய அசேதனங்களைக் காட்டிலும் வேறுபட்டு நிற்கின்ற
நான் தனக்குத் தான் தனக்கு என்று இசைவு தந்த -ஜீவாத்மாவாகிய நான்-சர்வேஸ்வரனாகிய தனக்கு சேஷபூதன்-பகவானாக தானே தனக்கு ஸ்வாமி என்று
நான் அங்கீ கரிக்கும் படி செய்து அருளிய நாரணனை நான் மறையால் நான் கண்டேனே -நாராயணனை நான்கு வேதத்தால் ஒருவாறு நான் அறிந்தேன் –

———————————————

கழியாத கரு வினையில் படிந்த நம்மைக் காலம் இது என்று ஒரு கால் காவல் செய்து
பழியாத நல் வினையில் படித்தார் தாளில் பணிவித்துப் பாசங்கள் அடைய நீக்கிச்
சுழியாத செவ்வாழையில் துணைவரோடே தொலையாத பேர் இன்பம் தரமேல் ஏற்றி
யழியாத வருள் ஆழிப் பெருமான் செய்யும் அந்தமிலா உதவி எலாம் அளப்பார் ஆரே-30–எம்பெருமான் உபகார பெருமையை அளவிட முடியாமை

கழியாத கரு வினையில் படிந்த நம்மைக் -நீங்காத கர்ப்ப வாசத்தைத் தரும் கர்மங்களில் அழுந்திக் கிடக்கின்ற நம்மை
காலம் இது என்று ஒரு கால் காவல் செய்து -இதுவே தக்க சமயம் என்று நினைத்து நம்முடைய பாக்யம் பக்வமான ஒரு சமயத்தில் ரஷிக்க முற்பட்டு
பழியாத நல் வினையில் படித்தார் தாளில் பணிவித்துப் –
பழிக்கப் படாத குற்றம் அற்ற நல்ல கார்யம் ஆகிய பிரபத்தி மார்க்கத்தில் ஈடுபட்டுள்ள ஆச்சார்யர்களின் திருவடிகளில் நம்மை வணங்கச் செய்து
பாசங்கள் அடைய நீக்கிச் -கர்மா பாசங்கள் முழுவதையும் போக்கி
சுழியாத செவ்வாழையில் துணைவரோடே தொலையாத பேர் இன்பம் தரமேல் ஏற்றி –அழிவில்லாத பெரிய மோக்ஷ ஸூகத்தை தந்து அருள –
திரும்புதல் இல்லாத சிறந்த அர்ச்சிராதி மார்க்கத்தால் ஆதி வாஹ்யகர்கள் ஆகிய துணைவரோடே ஸ்ரீ வைகுண்டத்துக்கு ஏற்றி
யழியாத வருள் ஆழிப் பெருமான் செய்யும் அந்தமிலா உதவி எலாம் அளப்பார் ஆரே—அழியாத சாஸ்வதமான கருணைக் கடலான எம்பெருமான்
சேதனனுக்கு செய்கின்ற எல்லை இல்லாத உபகாரங்களை எல்லாம் அளவிட்டு அறிபவர் யார் -ஒருவரும் இல்லையே -என்றபடி
அருள் ஆழிப் பெருமான் -பேர் அருளாளனை காட்டி அருளுகிறார் –

—————————————————-

நின்னருளாம் கதியன்றி மற்று ஓன்று இல்லேன் நெடும் காலம் பிழை செய்த நிலை கழிந்தேன்
உன்னருளுக்கு இனிதான நிலை யுகந்தேன் உன் சரணே சரண் என்னும் துணிவு பூண்டேன்
மன்னிருளாய் நின்ற நிலை எனக்குத் தீர்த்து வானவர்தம் வாழ்ச்சி தர வரித்தேன் உன்னை
இன்னருளால் இனி எனக்கோர் பரம் ஏற்றாமல் என் திருமால் அடைக்கலம் கோல் என்னை நீயே -31-எம்பெருமானை ஐந்து அங்கங்களுடன் சரண் அடைதல் -சார சங்க்ரஹம் –

நின்னருளாம் கதியன்றி மற்று ஓன்று இல்லேன் -உன்னுடைய கிருபையாகிய கதியைத் தவிர வேறு ஒரு கதி இல்லாதவனாக இருக்கின்றேன் -அநந்யகதித்வம்-கார்ப்பண்யம் –
நெடும் காலம் பிழை செய்த நிலை கழிந்தேன்-அநாதிகாலமாக அபராதம் செய்து வந்த நிலைமை இப்பொழுது கழியப் பெற்றேன் -ப்ராதிகூல்ய வர்ஜனம்
உன்னருளுக்கு இனிதான நிலை யுகந்தேன் -உன் கிருபையை பெறுவதற்குத் தக்க நல்ல பிரபத்தி மார்க்கத்தை விரும்பினேன் -ஆனுகூல்ய சங்கல்பம்
உன் சரணே சரண் என்னும் துணிவு பூண்டேன் -உன் திருவடியே உபாயம் என்னும் உறுதியைப் பெற்றேன் -மஹா விசுவாசம்
மன்னிருளாய் நின்ற நிலை எனக்குத் தீர்த்து வானவர்தம் வாழ்ச்சி தர வரித்தேன் உன்னை -திடமான அஞ்ஞான மயமாய் இருந்த நிலைமையை
எனக்குப் போக்கி வைத்து நித்ய ஸூ ரிகளின் வாழ்வை எனக்குத் தரும்படி உன்னைப் பிரார்த்தித்துக் கொண்டேன் -கோப்த்ருத்வ வர்ணம்
இன்னருளால் இனி எனக்கோர் பரம் ஏற்றாமல் என் திருமால் அடைக்கலம் கோல் என்னை நீயே -உன் இனிய கிருபையால் இனிமேல் எனக்கு ஒரு பொறுப்பும் வைக்காமல்
நீ என்னை ரஷித்து அருள வேண்டிய வஸ்துவாக கைக் கொண்டு அருள வேண்டும் -ஆத்ம சமர்ப்பணம் –

———————————————-

பரவும் மறைகள் எல்லாம் பதம் சேர்ந்து ஒன்ற நின்ற பிரான்
இரவு அன்று இரவியின் காலத்து அழைத்த எழில் படையோன்
அரவும் கருடனும் அன்புடன் ஏந்தும் அடி இரண்டும்
தர வெம்தமக்கு அருளால் தளரா மனம் தந்தானே –32-பகவத் கைங்கர்யத்தில் மனா உறுதி -32-/-33-/-34-பாசுரங்கள் விரோதி பரிஹாரம் –

பரவும் மறைகள் எல்லாம் பதம் சேர்ந்து ஒன்ற நின்ற பிரான்-ஸ்தோத்ரம் செய்யும் தன்மையுள்ள வேதங்கள் முழுவதும் தன திருவடிகளில்
ஈடுபட்டுப் பேசி நிற்க அதனால் உயர்ந்து நிற்கும் ஸ்வாமியும்
இரவு அன்று இரவியின் காலத்து அழைத்த எழில் படையோன்-அந்நாள் -பாரத போரில் ஸூரியன் பிரகாசிக்கும் பகல் பொழுதிலே
ராத்ரியை வருவிக்க பிரகாசமான சக்கராயுதத்தை யுடையவனுமான எம்பெருமான்
அரவும் கருடனும் அன்புடன் ஏந்தும் அடி இரண்டும் -தர வெம்தமக்கு அருளால் தளரா மனம் தந்தானே –ஆதிசேஷனும் பெரிய திருவடியும் பக்தியுடன் ஏந்திக்
கைங்கர்யம் செய்கின்ற திருவடிகள் இரண்டையும் யாமும் கைங்கர்யம் செய்யும் படி திரு உள்ளம் கொண்டு கிருபையால் சோர்வடையாத மனத்தைக் கொடுத்து அருளினான் —
சேராச் சேர்த்தி –சேஷனும் கருடனும் -பகலும் இரவும் -இதன் ரஹஸ்யம் விரோதி பரிஹாரம் –

———————————————————

அலர்ந்த வம்புயத்து இருந்து தேன் அருந்தி இன் அகல் அல்குலார் அசைந்து அடைந்த நடை கொளாதது என் மெனோ
நலம் தவிர்த்ததால் என் கொல் நாவின் வீறு இழந்ததால் நா அணங்கு நாதர் தந்த நாவின் வீறு இழந்தது என்
சலம் தவிர்ந்து வாது செய்து சாடி மூண்ட மிண்டரைச் சரிவிலேன் எனக் கனத்து உரைத்த வேதிராசர் தம்
வலம் தரு கை நாயனார் வளைக்கு இசைந்த கீர்த்தியால் வாரி பாலது ஆம் அது என்றும் மாசில் வாழி வாழியே -33- எம்பெருமானார் புகழ் -இருவர் வினா விடை –

அலர்ந்த வம்புயத்து இருந்து தேன் அருந்தி -ஹம்சம் மலர்ந்த தாமரைப் பூவில் உட்க்கார்ந்து அதில் உள்ள தேனைப் பருகி
இன் அகல் அல்குலார் அசைந்து அடைந்த நடை கொளாதது என் மெனோ-அழகிய அகன்ற அல்குலையுடைய ஸ்த்ரீகள் அசைந்து நடக்கும் நடையை
கொள்ளாமல் வருந்தி வாடிக் கிடைப்பதால் காரணம் என்ன
என்று கேட்க -மற்றவர்
நலம் தவிர்த்ததால் -தன பெருமையை அது இழந்து விட்டதால் -என்று சொல்ல
ஒருவர் அது என் கொல் என்று கேட்க-மற்றவர்
நாவின் வீறு இழந்ததால் -தன் நாவிற்கு உள்ள பாலையும் நீரையும் பிரிக்கும் சக்தியை இழந்து விட்டதால் -என்ன
நா அணங்கு நாதர் தந்த நாவின் வீறு இழந்தது என் –வாக்குக்குத் தேவதையாகிய சரஸ்வதியின் கணவனான ப்ரஹ்மாவால் கொடுக்கப்பட்ட
நாவின் அந்த சக்தியை ஏன் இழந்தது -என்ன -மற்றவர்
சலம் தவிர்ந்து வாது செய்து சாடி மூண்ட மிண்டரைச் சரிவிலேன் எனக் கனத்து உரைத்த –குற்றம் இல்லாது வாது செய்து ஜெயித்து
இன்னம் யாவர் வாதம் புரிய வந்தாலும் தளர மாட்டேன் என்று கர்ஜித்துக் கூறிய
வேதிராசர் தம் வலம் தரு கை நாயனார் வளைக்கு இசைந்த கீர்த்தியால் –ஸ்ரீ பாஷ்யகாரருடையதும் அடைந்தவர்களுக்குப் பலத்தை தரும்
திருக் கையையும் யுடைய எம்பெருமானுடைய சங்கம் போன்றதுமான கீர்த்தி உலகம் எங்கும் பரவியதால்
வாரி பாலது ஆம் அது என்றும் மாசில் வாழி வாழியே -ஜலம் முழுவதும் பாலாகி விட்டதாம் –எல்லாப் பொருள்களும் வெண்மையான படியால் —
எக்காலத்திலும் குறைவு படாத அந்த புகழ் வாழக் கடவது —

————————————————————————-

சடையன் திறலவர்கள் பெரு ஞானக் கடல் அதனை
இடை அமிழாது கடக்கினும் ஈது அளவு என்று அறியார்
விடையுடன் ஏழு அன்று அடர்த்தவன் மெய்யருள் பெற்ற நல்லோர்
அடைய அறிந்து உரைக்க அவ்வடியோமும் அறிந்தனமே –34-தேவதாந்த்ரங்களின் பால் சாரார்த்தங்களை அறிய முடியாமை —

சடையன் திறலவர்கள் பெரு ஞானக் கடல் அதனை –சடையைத் தரிக்கும் சிவனுடைய பலத்தால் ஞானத்தைப் பெற்றவர்கள் பெரிய ஞானம் ஆகிய சமுத்திரத்தை
இடை அமிழாது கடக்கினும் ஈது அளவு என்று அறியார் –நடுவில் அமிழ்ந்து போகாது தாண்டினாலும் -எவ்வளவு ஞானம் பெற்றாலும்
இது தான் அந்த ஞான சமுத்திரத்தின் அளவு என்று அறிய மாட்டார்கள்
விடையுடன் ஏழு அன்று அடர்த்தவன் மெய்யருள் பெற்ற நல்லோர் -முன் ஒரு நாள் ஏழு காளைகளையும் ஒரே சமயத்தில் ஒரு சேர அடக்கிய
ஸ்ரீ கண்ணபிரானுடைய நிலையான கிருபையைப் பெற்ற சிறந்த ஆச்சார்யர்கள்
அடைய அறிந்து உரைக்க அவ்வடியோமும் அறிந்தனமே –முழுதும் சாரார்த்தங்களை தங்கள் அறிந்து நமக்கு உபதேசிக்க சேஷ பூதர்களான நாமும் ஞானத்தைப் பெற்றோமே —

————————————————–

பா வளரும் தமிழ் மறையின் பயனே கொண்ட பாண் பெருமாள் பாடியதோர் பாடல் பத்தில்
காவலனுக்கு கணவனுமாய்க் கலந்து நின்ற காரணனைக் கருத்துற நாம் கண்ட பின்பு
கோவலனும் கோமானுமான வன்னாள் குரவை பிணை கோவியர் தம் குறிப்பே கொண்டு
சேவலுடன் பிரியாத பெடை போல் சேர்ந்து தீ வினையோர் தனிமை ஏழாம் தீர்ந்தோம் நாமே –35-எம்பெருமானை பிரியாத நிலை பெறுதல் -35-/-36–/-37-முனி வாஹந போகார்த்தங்கள் –

பா வளரும் தமிழ் மறையின் பயனே கொண்ட பாண் பெருமாள் பாடியதோர் பாடல் பத்தில் –பாசுரங்கள் நிறைந்துள்ள தமிழ் வேதமாகிய திவ்ய பிரபந்தத்தில்
சாரார்த்தங்கள் அடங்கப் பெற்றவையும் திருப் பாண் ஆழ்வாரால் பாடப் பெற்றவையுமான அமலனாதி பிரான் என்னும் நிகரற்ற பத்துப் பாசுரங்களால்
காவலனுக்கு கணவனுமாய்க் கலந்து நின்ற காரணனைக் கருத்துற நாம் கண்ட பின்பு -அனைத்தையும் காப்பவனும் நாயகனுமாய் -எல்லா வஸ்துக்களிலும்
அந்தர்யாமியாய் கலந்து நிற்கின்ற சர்வ காரணான எம்பெருமானை -நாம் மனத்தில் பதியுமாறு அறிந்த பின்பு
கோவலனும் கோமானுமான வன்னாள் குரவை பிணை கோவியர் தம் குறிப்பே கொண்டு -கோபாலனும் யதுவம்சத்து அரசனுமாய் திரு வவதரித்து இருந்த
அக்காலத்திலே ராஸக்ரீடை புரிந்தவர்களான இடைபி பெண்களின் உள்ளக் கருத்தையே நாமும் கொண்டு
சேவலுடன் பிரியாத பெடை போல் சேர்ந்து தீ வினையோர் தனிமை ஏழாம் தீர்ந்தோம் நாமே –ஆண் பறவையை விட்டு நீங்காத பெண் அன்றில்
பஷி போலே நாமும் எம்பெருமானைச் சேர்ந்து பாபிகளுக்கு உள்ள உதவி அற்ற நிலை எல்லாம் நாம் நீங்கப் பெற்றோம் –

———————————————————–

ஆதி மறை என ஓங்கும் அரங்கத்துள்ளே அருள் ஆரும் கடலைக் கண்டவன் நம் பாணன்
ஓதியது ஓர் இரு நான்கும் இரண்டுமான வொரு பத்தும் பற்றாக உணர்ந்து யுரைத்தோம்
நீதி அறியாத நிலை அறிவார்க்கு எல்லாம் நிலை இதுவே என்று நிலை நாடி நின்றோம்
வேதியர் தாம் விரித்து உரைக்கும் விளைவுக்கு எல்லாம் விதையாகும் இது வென்று விளம்பினோமே -36-அமலனாதி பிரான் அருளிச் செய்யும் நிஷ்டை –

ஆதி மறை என ஓங்கும் அரங்கத்துள்ளே அருள் ஆரும் கடலைக் கண்டவன் நம் பாணன் –உருவத்தில் வேதத்தின் முதல் அக்ஷரமாகிய பிரணவம் என்னும்படி
உயர்ந்து நிற்கின்ற ஸ்ரீ ரெங்க விமானத்துக்குள் பிரகாசிக்கின்ற கிருபையாகிய நீர் நிறைந்த ஸ்ரீ அரங்கனாகிய கடலை கண்டு அனுபவித்தராகிய நம் திருப் பாண் ஆழ்வாரால்
ஓதியது ஓர் இரு நான்கும் இரண்டுமான வொரு பத்தும் பற்றாக உணர்ந்து யுரைத்தோம் -அருளிச் செய்யப் பட்டவனாய் -நித்யம் அனுசந்திக்கத் தக்கனவாய் எட்டும் இரண்டுமான
நிகரற்ற அமலனாதிபிரான் பத்துப் பாசுரங்களையும் கதியாக அறிந்து அனுசந்தித்தோம்
நீதி அறியாத நிலை அறிவார்க்கு எல்லாம் நிலை இதுவே என்று நிலை நாடி நின்றோம் -பிற மதங்களைக் கண்டிப்பதற்காக வேண்டிய யுக்திகளை அறியாதவர்களாய் –
தத்துவங்களின் ஸ்வரூபத்தை மாத்திரம் அறிந்தவர்களுக்கு எல்லாம் இந்த பிரபந்தம் உறுதி தர வல்லது என்று நினைத்து இதில் அருளிச் செய்த நிலைமையை –
அனுபவத்தை -அடைய விரும்பி நின்றோம்
வேதியர் தாம் விரித்து உரைக்கும் விளைவுக்கு எல்லாம் விதையாகும் இது வென்று விளம்பினோமே -வேதாந்திகள் தங்கள் விரிவாக வெளியிடுகின்ற
பலன்களுக்கு எல்லாம் இந்த பிரபந்தம் காரணமான விதை போன்றதாகும் என்று இந்த ரஹஸ்யத்திலே அருளிச் செய்தோம் –

———————————–

காண்பனவும் உரைப்பனவும் மாற்று ஓன்று இன்றிக் கண்ணனையே கண்டுரைத்த கடிய காதல்
பாண் பெருமாள் அருள் செய்த பாடல் பத்தும் பழ மறையின் பொருள் என்று பரவுகின்றோம்
வேண் பெரிய விரி திரை நீர் வையத்துள்ளே வேதாந்த வாரியன் என்று இயம்ப நின்றோம்
நாண் பெரியோன் அல்லோம் நா நன்றும் தீதும் நமக்கு யுரைப்பார் உளர் என்று நாடுவோமே –37-விசேஷ ஞானம் பெற்ற ஆசார்யனை நாடுதல் –

காண்பனவும் உரைப்பனவும் மாற்று ஓன்று இன்றிக் கண்ணனையே கண்டுரைத்த கடிய காதல் –தம் கண்ணால் காணப் படுவதும் பேசப் படுவதும்
வேறு ஒரு வஸ்துவாக இல்லாமல் எம்பெருமானையே கண்டு அவனைப் பற்றியே பேசியவரும் -எம்பெருமானிடம் அதிகமான பக்தியை யுடையவருமான
பாண் பெருமாள் அருள் செய்த பாடல் பத்தும் பழ மறையின் பொருள் என்று பரவுகின்றோம் -திருப் பாண் ஆழ்வார் அருளிச் செய்த அமலனாதி பிரான்
என்னும் பத்துப் பாசுரங்களையும் அநாதியான வேதத்தின் சாரம் என்று நினைத்துக் கொண்டாடுகின்றோம்
வேண் பெரிய விரி திரை நீர் வையத்துள்ளே வேதாந்த வாரியன் என்று இயம்ப நின்றோம் -விருப்பத்தால் பெரியதும் -எல்லாராலும் மிக விரும்பப் படுகின்றதும் –
அகன்ற அலை நிறைந்த கடல் நீரால் சூழப் பட்டதுமான இவ்வுலகத்தில் வேதாந்தாசார்யன் என்று புகழும் படி நிலை பெற்றோம்
நாண் பெரியோன் அல்லோம் நா நன்றும் தீதும் நமக்கு யுரைப்பார் உளர் என்று நாடுவோமே –நாம் அஹங்காரம் நிறைந்தவர்களாக ஆக மாட்டோம் –
நல்ல விஷயங்களையும் தீய விஷயங்களையும் நமக்கு உபதேசித்து அருளும் ஆச்சார்யர்கள் இருந்தே தீர்வார்கள் என்று துணிந்து அவர்களைத் தேடியே நிற்போம் –

—————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேதாந்த தேசிகன் சுவாமி திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –