Archive for July, 2017

ஸ்ரீ பூ ஸ்துதி —

July 8, 2017

ஸ்ரீ மான் வேங்கட நாதார்ய கவிதார்க்கிக கேஸரீ வேதாந்தா சார்ய வர்யோ மே சந்நிதத்தாம் சதா ஹ்ருதி —

———————————–

அஸ்ய ஈஸாநா ஜகதோ விஷ்ணு பத்நீ / ஸ்ரீ வராஹ நாயனார் இடந்து எடுத்து -பார் என்னும் மடந்தையை தழுவிக் கொண்டு
இடந்து அளந்து உண்டு உமிழ்ந்து பார் என்னும் மடந்தையை மால் செய்யும் மால் அன்றோ /
ஷமையே வடிவு எடுத்த ஸ்ரீ பூ தேவி நம்மை நித்தியமாக அருள்கின்றாளே-

சங்கல்ப கல்ப லதிகாமவதிம் ஷமாயா ஸ்வேச்சா வராஹ மஹிஷீம் ஸூலப அநு கம்பாம்
விஸ்வஸ்ய மாதரம் அகிஞ்சன காமநேநும் விஸ்வம் பராம சரண சரணம் ப்ரபத்யே —1-

த்வாம் வ்யாஹ்ருதி ப்ரதமத ப்ரணவ ப்ரியம் தே சம்வேதயத் அகில மந்த்ர கணஸ்தமேவ
இத்தம் ப்ரதீத விபவாமித ரேஷ்விதா நீம் ஸ்தோதும் யதாவதவ நே கஇவார்ஹதி த்வாம் –2 –

நித்யம் ஹிதாஹித விபர்யய பத்த பாவே த்வத் வீக்ஷணைக விநிவர்த்த்ய பஹு வ்யபாய
முக்த்தாஷரை ரகில தாரிணி மோதமாநா மாத ஸ்தநந்தய தியம் மயி வர்த்தயேதா –3-

சங்கல்ப கிங்கர சராசர சக்ர வாளம் சர்வாதி சாயிந மநந்த சயஸ்ய பும்ஸ
பூமாந மாத்ம விபவை புநருக் தயந்தீ வாசாம பூமிரபி பூமிரசி த்வமேகா –4-

வேதஸ் த்ருணாவதி விஹார பரிச்சதம் தே விஸ்வம் சராசர தயா வ்யதிபித்யமா நம்
அம்ப த்வத ஆஸ்ரிததயா பரிபோஷயந்தீ விஸ்வம் பரஸ்ய தயிதா அசி ததேக நாமா —5-

சர்வம் சஹேத்யவ நிரித்ய சலேதி மாத விஸ்வம் பரேதி விபுலேதி வஸூந்தரேதி
அந்யாநி சான்யவி முகாந் யபிதான வ்ருத்த்யா நாமாந்யமூநி கதயந்தி தவாநு பாவம் –6-

சர்வம் ஸஹ –ஷமையே வடிவு என்னும் படி / ஆவணி -ரக்ஷகத்வம் /அசலா -அவனது கருணையை சேதனர்கள் அனைவருக்கும் பெற்று தர த்ருதி /
விஸ்வம் பர -சர்வ ஆதாரம் /விபுலா -கல்யாண குண கடல் /வசுந்தரா -அனைத்து ஐஸ்வர்யங்களும் கொண்டவள் –

தாபாந் ஷீபந் ப்ரசவிதா ஸூ மநோ கணா நாம் பிரச்சாய ஸீதள தல பிரதிசந் பலாநி
த்வத் சங்கமாத் பவதி மாதவி லப்த போஷ சாகா சதைரதிகதோ ஹரி சந்தநோ அசவ் —7-

ஸ்மேரேண வர்த்தித ரஸஸ்ய முகேந்துநா தே நிஸ் பந்ததாம் விஜஹதோ நிஜயா ப்ரக்ருத்யா
விஸ்ராந்தி பூமிரசி தத்த்வ தரங்க பங்க்தே வேலேவ விஷ்ணு ஜலதேர ப்ருதக் பவந்தீ –8-

பூமிர் பூம்னா தியவுர்வருண அந்தரிக்ஷம் மதிவா உபஸ்தே தே தேவ்யாதிதேத் அக்னிம் அன்னதாம்-தைத்ரிய சம்ஹிதா மந்தரம்
-ஸ்ரீ பூ ஸூக்த மந்தரம் அடி ஒற்றியே இந்த ஸ்லோகம் –

ஸ்வா பாவிகே வஸூமதி ஸ்ருதிபிர்வி பாவ்யே பத்யுர் மஹிம்நி பவதீம் பிரதிபன்ன வாஸாம்
சங்கே விமாந வஹந ப்ரதிமா சமாநா ஸ்தம்பேரம ப்ரப்ருதயோ அபி வஹந்தி சத்த்வா–9-

சம்பாவயன் மதுரிபு ப்ரணய அநு ரோதாத் வஷஸ் ஸ்தலேந வருணாலய ராஜ கன்யாம்
விஸ்வம் பரே பஹூ முக ப்ரதி பன்ன போக சேஷாத்மநா து பவதீம் சிரஸா ததாதி —10-

க்ரீடா வராஹ தயிதே க்ருதிந ஷிதீந்த்ரா ஸங்க்ரந்தந ஸ்ததிதரே அபி திஸாமாதீசா
ஆமோத யந்தி புவநாந் யளிகாஸ்ரிதாநாம் அம்ப த்வத் அங்க்ரி ரஜசாம் பரிணாம பேதை –11-

பூதேஷூ யத் த்வதபிமாந விசேஷ பாத்ரம் போஷம் ததேவ பஜதீதி விபாவ யந்த
பூதம் ப்ரபூத குண பஞ்சக மாத்ய மேதத் பிராயோ நிதர்சந தயா ப்ரதி பாத யந்தி –12-

காந்தஸ்தவைஷ கருணா ஜலதி பிரஜாநாம் ஆஜ்ஞாதிலங்கந வஸாதுபஜாத ரோஷ
ஆஹ்நாய விஸ்வ ஜநநி ஷமயா பவத்யா சர்வா வகாஹந சஹா முபயாத்ய வஸ்தாம்—13-

ஆஸ்வாஸநாய ஜகதாம் புருஷே பரஸ்மின் ஆபந்ந ரக்ஷண தசாமபி நேது காமே
அந்தர்ஹிதேதர குணாதபலா ஸ்வபாவாத் ஓவ்தந்வதே பயசி மஜ்ஜந மப்யநைஷீ —14-

பூர்வம் வராஹ வபுஷா புருஷோத்தமேந ப்ரீதேந போகி சதநே சமுதீஷி தாயா
பாதாஹதா பிரளய வாரிதயஸ்த வாசன் உத்வாஹ மங்கள விதேருசிதா ம்ருதங்கா —15-

வ்யோமாதி லங்கிநி விபோ பிரளயாம்பு ராசவ் வேசந்த லேச இவ மாதுமசக்ய மூர்த்தே
ஸத்ய ஸமுத்ர வசநே சரஸைரகார்ஷி ஆனந்த சாகர மபாரம பங்கா பாதை —16-

தம்ஷ்ட்ரா விதாரித மஹாஸூர சோணிதாங்கை அங்கை பிரியஸ்தவ ததே பரிரம்ப லீலாம் —
சா தே பயோதி ஜல கேளி சமுத்தி தாயா ஸை ரந்தரி கேவ விததே நவ மங்க ராகம் —17-

அந்யோன்ய சம்வலன ஜ்ரும்பித தூர்ய கோஷை சம்வர்த்த சிந்து சலிலைர் விஹிதாபிஷேகா
ஏகாத பத்ர யசி விஸ்வமிதம் குணை ஸ்வை அத்யாஸ்ய பர்த்து ரதி கோந்நத மம்ஸ பீடம் –18-

பர்த்துஸ்தமால ருசிரே புஜ மத்ய பாகே பர்யாய மௌக்திகவதீ ப்ருஷதை பயோதே
தாபாநு பன்ன சமநீ ஜகதாம் த்ரயாணாம் தாரா பதே ஸ்புரசி தாரகிதா நிசேவ –19-

ஆசக்த வாசவ சராசந பல்லவைஸ் த்வாம் சம்வ்ருத்தயே ஸூ ப தடித் குண ஜால ரம்யை
தேவேச திவ்ய மஹிஷீம் த்ருத சிந்து தோயை ஜீமூத ரத்ன கலஸைரபி ஷிஞ்சதி த்யவ்–20-

ஆவிர்மதைரமர தந்தி பிருஹ்ய மாநாம் ரத்நா கரேண ருசிராம் ரஸநா குணேந
மாதஸ் த்ரிலோக ஜநநீம் வன மாலிநீம் த்வாம் மாயா வராஹ மஹிஷீ மவயந்தி சந்த –21-

நிஷ் கண்டக பிரசம யோக நிஷே வணீயாம் சாயா விசேஷ பரிபூத ஸமஸ்த தாபாம்
ஸ்வர்க்க அபவர்க்க சரணிம் பவதீமுசந்தி ஸ்வச் சந்த ஸூ கரவதூமவதூத பங்காம் —22-

கண்ட உஜ்ஜவலாம் கஹந குந்தள தர்ச நீயாம் ஸைலஸ்தநீம் தரள நிர்ஜர லம்ப ஹாராம்
ஸ்யாமாம் ஸ்வதஸ் த்ரியுக ஸூ கர கேஹிநி த்வம் வ்யக்திம் ஸமுத்ர வசநாமுபயீம் பிபர்ஷி –23-

நிஸ் சம்சயைர் நிகம ஸீமநி விஷ்ணு பத்நி பிரக்யாபிதம் ப்ருகு முகைர் முநிபி ப்ரதீதை
பஸ்யந்த்ய நந்ய பர தீ ரஸ ஸம்ஸ்க்ருதேந சந்த சமாதி நயநேந தவாநு பாவம் —24-

சஞ்சோதிதா கருணயா சதுர பூமர்த்தாந் வ்யாதந்வதீ விவித மந்த்ர கனோபகீதா
சஞ்சிந்த்யசே வஸூமதி ஸ்திர பக்தி பந்தை அந்தர்ப் பஹிஸ் ச பஹுதா ப்ரணிதாந தஷை–25-

க்ரீடா க்ருஹீத கமலாதி விசேஷ சிஹ்நாம் விஸ்ராணி தாபயகராம் வஸூதே சபூதிம்
தவ்ர்க் கத்ய துர்விஷ விநாச ஸூதா நதீம் த்வாம் சஞ்சிந்தயன் ஹி லபதே தநாதிகாரம் —26-

உத்வேல கல்மஷ பரம் பரிதாதமர்ஷாத் உத்தம்சி தேந ஹரி மஞ்ஜலிநா அப்யத்ருஷ்யம்
ஆகஸ்மிகோ அயமதி கம்யயதி பிரஜா நாம் அம்ப த்வதீய கருணா பரிணாம ஏவ –27-

ப்ரத்யேகமப்த நியுதை ரபி துர்வ்யபோஹாத் ப்ராப்தே விபாக ஸமயே ஜநிதா நுதாபாத்
நித்ய அபராத நிவஹாச் ஸஹிதஸ்ய ஐந்தோ கந்தும் முகுந்த சரணவ் சரணம் ஷமே த்வம் —-28-

த்ராணாபி சந்தி ஸூபகே அபி சதா முகுந்தே சம்சார தந்த்ர வஹநேந விளம்பமாநே
ரஷா விதவ் தநுப்ருதா மநகா நுகம்பா மாத ஸ்வயம் விதநுஷே மஹதீம பேஷாம் –29-

தர்ம த்ருஹம் சகல துஷ்க்ருதி ஸார்வ பவ்மம் ஆத்மாநபிஜ் ஞமநுதா பலவோஜ்ஜிதம் மாம்
வைதாந ஸூகர பதேஸ் சரணாரவிந்தே சர்வம் சஹே நநு சமர்ப்பயிதும் ஷமா த்வம் —30-

தாப த்ரயீம் நிரவதிம் பவதீ தயார்த்ரா சம்சார கர்ம ஜநிநாம் சபதி ஷிபந்த
மாதர்பஐந்து மதுராம்ருத வர்ஷ மைத்ரீம் மாயா வராஹ தயிதே மயி தே காடாஷா-31-

பத்யுர்த் தக்ஷிண பாணி பங்கஜ புடே விந்யஸ்த பாதாம்புஜா வாமம் பந்நக ஸார்வ பவ்ம சத்ருசம் பர்யங்க யந்தீ புஜம்
போத்ர ஸ்பர்ச லஸத் கபோல பலகா புல்லார விந்தேஷணா சா மே புஷ்யது மங்களாந் யநுதிநம் சர்வாணி சர்வம் சஹா —32-

அஸ்யேசாநா ஜகத இதி யா ஸ்ரூயதே விஷ்ணு பத்நீ தஸ்யா ஸ்தோத்ரம் விரசிதமிதம் வேங்கடசேந பக்த்யா
ஸ்ரத்தா பக்தி பிரசய குருணா சேதஸா சம்ஸ்துவாந யத்யத் காம்யம் சபதி லபதே தத்ர தத்ர ப்ரதிஷ்டாம் –33-

இதி ஸ்ரீ பூ ஸ்துதி சம்பூர்ணம் –

———————————–

கவி தார்க்கிக ஸிம்ஹாய கல்யாண குண சாலிநே ஸ்ரீமதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம —

———————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேதாந்த தேசிகன் சுவாமி திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ ஸ்துதி —

July 8, 2017

ஸ்ரீ மான் வேங்கட நாதார்ய கவிதார்க்கிக கேஸரீ
வேதாந்தா சார்ய வர்யோ மே சந்நிதத்தாம் சதா ஹ்ருதி —

————————–

திவ்ய தம்பதியே தத்வம் /சரண்ய தம்பதியே ஹிதம் /சேஷி தம்பதியே புருஷார்த்தம் –
-7-ஸ்லோகங்களில்–5-6-7-9-13-16-19- -இத்தை காட்டி அருள்கிறார்

ஸிம்ஹாஸ நகத சக்ர ஸம்ப்ராப்ய த்ரிதிவம் புந தேவ ராஜ்யே ஸ்திதோ தேவீம் துஷ்டா வாப்ஜகராம் தத–1-

இந்திர உவாச –
நமஸ்யே சர்வ பூதாநாம் ஜநநீ மப்ஜ சம்பவாம் ஸ்ரியமுந் நித்ர பத்மாஷீம் விஷ்ணு வக்ஷஸ் ஸ்தல ஸ்திதாம் –2-

பத்மாலயாம் பத்மகராம் பத்ம பத்ர நிபேஷணாம் வந்தே பத்ம முகீம் தேவீம் பத்ம நாப ப்ரியாமஹம்—3-

த்வம் சித்திஸ்த்வம் ஸ்வதா ஸ்வாஹா ஸூதா த்வம் லோகபாவநீ
சந்த்யா ராத்ரி ப்ரபா பூதிர் மேதா ஸ்ரத்தா ஸரஸ்வதீ–4-

யஜ்ஞ வித்யா மஹா வித்யா குஹ்ய வித்யா ச சோபநே ஆத்மவித்யா ச தேவி த்வம் வி முக்தி பலதாயி நீ —5-

ஆந்வீஷிகீ த்ரயீ வார்த்தா தண்ட நீதிஸ் த்வமேவ ச சவ்ம்யா சவ்ம்யைர் ஜகத்ரூபை த்வயை தத்தேவி பூரிதம் —6-

கா த்வந்யா த்வாம்ருதே தேவி சர்வ யஜ்ஞமயம் வபு அத்யாஸ்தே தேவ தேவஸ்ய யோகி சிந்த்யம் கதாப்ருத–7-

த்வயா தேவி பரித்யக்தம் சகலம் புவந த்ரயம் விநஷ்ட ப்ராய மபவத் த்வயேதா நீம் சமேதிதம் –8-

தாரா புத்ராஸ் ததா கார ஸூஹ்ருத் தாந்யத நாதிகம் பவத்யேதந் மஹா பாகே நித்யம் த்வத் வீக்ஷணாந் ந்ருணாம் —9-

சரீர ஆரோக்யம் ஐஸ்வர்யம் அரி பஷ ஷயஸ் ஸூகம் தேவி த்வத் த்ருஷ்டி த்ருஷ்டாநாம் புருஷாணாம் ந துர்லபம் –10-

த்வம் மாதா சர்வ லோகா நாம் தேவ தேவோ ஹரி பிதா த்வயை தத் விஷ்ணு நா சாம்ப ஜகத் வ்யாப்தம் சராசரம் –11-

மா ந கோசம் ததா கோஷ்டம் மா க்ருஹம் மா பரிச்சதம் மா சரீரம் களத்ரஞ்ச த்யஜே தாஸ் சர்வ பாவநி —12-

மா புத்ரான் மா ஸூஹ்ருத் வர்க்கான் மா பஸூந் மா விபூஷணம் த்யஜேதா மம தேவஸ்ய விஷ்ணோர் வக்ஷஸ் ஸ்தலாலயே –13-

தேவர்கள் எல்லாம் காண அன்றோ அமுதினில் வரும் பெண்ணமுதை மார்பிலே ஏறி அமர பெற்றான் –
இதனாலே தேவர்கள் இழந்த ஐஸ்வர்யம் பெற்றார்கள் –

சத்த்வேந சவ்ச சத்யாப்யாம் ததா ஸீலாதி பிர்க் குணை-த்யஜ்யந்தே தே நராஸ்சத்ய ஸந்த்யக்தா யே த்வயா அமலே –14-

த்வயா அவலோகிதாஸ் ஸத்ய சீலாத்யைரகிலைர்க் குணை தநஸ்வர்யைஸ் ச யுஜ் யந்தே புருஷா நிர்க்குணா அபி —15-

ரதி மதி சரஸ்வதி அனைத்தும் போட்டி போட்டு கொண்டு அன்றோ இவள் கடாக்ஷத்தின் விளைவாக அடைய பெறுகிறோம் –

ச ஸ்லாக்யஸ் ச குணீ தந்ய ச குலீநஸ் ச புத்திமாந் ச ஸூரஸ் ச விக்ராந்தோ யஸ்த்வயா தேவி வீக்ஷித–16-

சத்யோ வை குண்ய மாயாந்தி சீலாத்யாஸ் சகிலா குணா பராங்முகீ ஜகத் தாத்ரீ யஸ்ய த்வம் விஷ்ணு வல்லபே –17-

ந தே வர்ணயிதும் சக்தா குணாந் ஜிஹ்வாபி வேதச ப்ரஸீத தேவி பத்மாக்ஷி மாஸ்மாம்ஸ் த்யாஷீ கதாசந–18-

ஸ்ரீ பராசர உவாச –
ஏவம் ஸ்ரீஸ் சம்ஸ்துதா சம்யக் ப்ராஹ ஹ்ருஷ்டா சதக்ரதும் ஸ்ருண் வதாம் சர்வ தேவா நாம் சர்வ பூதஸ்திதா த்விஜ –19-

ஸ்ரீருவாச
பரி துஷ்டாஸ்மி தேவேச ஸ்தோத்ரேணா நேந தே ஹரே வரம் வ்ருணீஷ்வ யஸ்த்விஷ்டோ வரதாஹம் தவாகதா -20-

இந்திர உவாச
வரதா யதி மே தேவி வரார்ஹோ யதி சாப்யஹம் த்ரை லோக்யம் ந த்வயா த்யாஜ்யமேஷ மே அஸ்து வர பர —21-

ஸ்தோத்ரேண யஸ்த வைதேந த்வாம் ஸ்தோஷ் யத்யப்தி சம்பவே ச த்வயா ந பரித்யாஜ்யோ த்வதீயோ அஸ்து வரோ மம –22-

ஸ்ரீ ருவாச
த்ரை லோக்யம் த்ரிதச ஸ்ரேஷ்ட ந ஸந்த்யஷ்யாமி வாசவ தத்தோ வரோ மயாயம் தே ஸ்தோத்ராராதந துஷ்டயா –22-

யஸ்ய சாயம் ததா ப்ராத ஸ்தோத்ரேணா நேந மாநவ மாம் ஸ்தோஷ்யதி ந தஸ்யாஹம் பவிஷ்யாமி பராங்முகீ —23-

ஸ்ரீ பராசர உவாச –
ஏவம் வரம் ததவ் தேவீ தேவ ராஜாய வை புரா மைத்ரேய ஸ்ரீர் மஹா பாகா ஸ்தோத்ரா ராதநதோஷிதா –24-

ப்ருகோ க்யாத்யாம் சமுத்பந்நா ஸ்ரீ பூர்வமுததே புந தேவதா நவயத் நேந ப்ரஸூதாம் ருதமந்தநே —25-

ஏவம் யதா ஜகத் ஸ்வாமீ தேவ தேவோ ஜனார்த்தன அவதாரம் கரோத்யேஷா ததா ஸ்ரீஸ் தத் சஹாயி நீ -26-

புநஸ் ச பத்மா துத்பந்நா ஆதித்தியோபூத் யதா ஹரி யதா ச பார்க்கவோ ராமஸ் ததா பூத் தரணீ த்வியம்–27-

ராகவத்வே பவத் சீதா ருக்மிணீ கிருஷ்ண ஜன்மநி அன்யேஷூ சாவதாரேஷூ விஷ்ணோ ரேஷா நபாயிநீ -28-

தேவத்வே தேவ தேஹேயம் மனுஷ்யத்வே ச மாநுஷீ விஷ்ணோர் தேஹ அநு ரூபாம் வை கரோத்யே ஷாத்ம நஸ்தநும் –29-

யஸ்ஸை தத் ச்ருணு யாஜ்ஜன்ம லஷ்ம்யா யஸ்ச படேந் நர ஸ்ரியோ ந விச்யுதிஸ் தஸ்ய க்ருஹே யாவதுகுலத்ரயம் —30-

பட்யதே யேஷூ சைவேயம் க்ருஹேஷூ ஸ்ரீ ஸ்துதிர்முநே அ லஷ்மீ கலஹா தாரா ந தேஷ் வாஸ்தே கதாசனா–31-

ஏதத்தே கதிதம் ப்ரஹ்மந் யந்மாம் த்வம் பரிப்ருச்சசி ஷீராப்தவ் ஸ்ரீர் யதா ஜாதா பூர்வம் ப்ருகு ஸூதா சதி–32-

இதி சகல விபூத்ய வாப்தி ஹேது ஸ்துதிரியம் இந்த்ர முகோத் கதா ஹி லஷ்ம்யா அநு திந மிஹ பட்யதே ந்ருபிர்யை வசதி ந தேஷூ கதாசிதப்ய லஷ்மீ –33-

இதி ஸ்ரீ ஸ்துதி ஸமாப்தம் –

—————————

கவி தார்க்கிக ஸிம்ஹாய கல்யாண குண சாலிநே ஸ்ரீமதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம —

—————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேதாந்த தேசிகன் சுவாமி திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ தேகளீச ஸ்துதி —

July 8, 2017

ஸ்ரீ மான் வேங்கட நாதார்ய கவிதார்க்கிக கேஸரீ வேதாந்தா சார்ய வர்யோ மே சந்நிதத்தாம் சதா ஹ்ருதி —

————————————

திருக் கோவலூர் –திருக் கோப பூரி -திருக் கோப நகர் –
ஸ்லோகங்கள் -8-முதல் -16-வரை ஸ்ரீ வாமன -ஸ்ரீ த்ரி விக்ரம திருவவதார ஸ்தோத்திரங்கள்
மேல் கட்டி விதானம் -ஹாரம் -மாலை -நூபுரம் -போலே–இவன் உயர உயர ஆண்மையை அருளிச் செய்கிறார் –
புலவர் நெருக்கு உகந்த பெருமாள்-தேஹளீசன் -பக்தோ பமர்த்த ஸஹ -திருநாமங்கள் சாத்தி அருளுகிறார் –
மூன்று ஆழ்வார்களும் அருளிச் செய்த திவ்ய பிரபந்தங்கள் கருப்பஞ்சாறு -திருவடிகளில் இருந்து இழிந்த அம்ருதம் -என்று அருளிச் செய்கிறார் –

விக்ரம்ய யேந விஜிதாநி ஜகந்தி பூம்நா விஸ்வஸ்ய யம் பரம காரணமா மனந்தி
விஸ் ராணயந் ப்ரணயிநாம் விவிதாந் புமர்த்தான் கோப்தா ச மே பவது கோபபுராதி ராஜ —-1-

தேகள் யதீஸ்வர தவேத்ருச மீஸ்வரத்வம் துஷ்டூஷதாம் திஸதி கத் கதிகாநுபந்தம்
வாசால யத் யத ச மாம் க்வசந ஷபாயாம் ஷாந்தேந தாந்த கவி முக்ய விமர்த்தநேந —2-

த்வச் சக்ரவத் த்ருதமநே ஹசி கூர்ணமாநே நிம் நோந்தந க்ரம நிதர்சித நேமி வ்ருத்தா
ஆராத்ய கோப நகரே க்ருப யோதிதம் த்வாம் ஸ்வா ராஜ்யம க்ர்யமல பந்த ஸூராஸூரேந்த்ரா–3-

ஆ கல்ப புஷ்ப ஸூபகோந்நத பாஹு சாக பாதே சதா பரிபசேளிம சத்பல ஸ்த்வம்
பண்ணா தட ஸ்புருசி ம்ருகண்டு தபோவநே அஸ்மின் சாயா நிலீந புவநோ அசி தமால ஸாகீ —4-

சக்ரஸ்ய தைத்ய தனுஜாதிஷூ வாம பாவம் சங்கஸ்ய சாஸ்ரித ஜநேஷ்வபி தஷிணத்வம்
வ்யக்தம் பிரதர்சயசி கோபபுராதி ராஜ வ்யத்யஸ்ய நூநமநயோ கர ஸம்ப்ரயோகம் —5-

தீபேந கேநசிதஸீத ருசா நிஸீதே ஸ்நேஹோபபந்ந பரி ஸூத்த குணார்ப்பிதேந
தஹ்ராவகாச நிபிடம் தத்ருஸூர் பவந்தம் ஸ்வாத்யாய யோக நயநா ஸூசய கவீந்த்ரா—6-

காஸார பூர்வ கவி முக்ய விமர்த்த ஜன்மா பண்ணா தடேஷூ ஸூப கஸ்ய ரஸோ பஹுஸ்தே
த்வத் பாதே மதுநி த்வதநந்ய போக்யே நூநம் சமாஸ்ரயிதி நூதந சர்க்கராத்வம் –7-

வைரோசநே சதசி வாமந பூமிகாவாந் விக்ராந்தி தாண்டவ ரசேந விஜ்ரும்பமாண
சக்ரே பவான் மகர குண்டல கர்ண பாச ஸ்யாமைக மேக பரிதாமிவ சப்த லோகீம் -8-

சித்ரம் ந தத் த்ரிஷூ மிதாநி பதேஷூ யத் தே விச்வான்யமூநி புவநாநி விசங்கடேஷூ
பக்தை சமம் க்வசிதசவ் பவநைகதேசே மாதி ஸ்ம மூர்த்திரமிதா ததிஹாத் புதம் ந —9-

பக்த ப்ரிய த்வயி ததா பரிவர்த்தமாநே முக்தா விதாந விததிஸ்தவ பூர்வ மாஸீத்
ஹாரா வளி பரமதோ ரசனா கலாப தாரா கணஸ்ததுநு மௌக்திக நூபுர ஸ்ரீ –10-

பிஷோ சிதம் ப்ரகடயன் பிரதம ஆஸ்ரமம் த்வம் கிருஷ்ணா ஜிநம் யவனிகாம் க்ருதவான் பிரியாயா
வ்யக்தா க்ருதேஸ் தவ சமீஷ்ய புஜாந்தரே தாம் த்வாமேவ கோப நகரீச ஜனா விதுஸ் த்வாம் —11-

சத குர்வதாம் தவ பதம் சதுரா நநத்வம் பாதோ தகம் ச சிரஸா வஹதாம் சிவத்வம்
ஏகாத்ர விக்ரமண கர்மணி தத் த்வயம் தே தேஹல்ய தீச யுகபத் பிரதிதம் ப்ருதிவ்யாம் —12-

பக்தோ பரோதசஹ பாத சரோஜ தஸ்தே மந்தாகிநீ விகளிதா மகரந்த தாரா
சத்யஸ் த்ரி வர்க்கம் அபவர்க்க நபி ஷரந்தீ புண்யா பபூவ புர சாஸந மௌலி மாலா –13-

விக்ராந்தி கேது படிகா பத வாஹிநீ தே ந்யஞ்சந்த் யுபைதி நத ஜீவித சிம்ஸூமாரம்
ஓவ்த்தாந பாதி மம்ருதாம் ஸூம ஸீத பாநும் ஹேமாசலம் பஸூபதிம் ஹிமவந்த முர்வீம்–14-

வேத கமண்டலு ஜலைர் விஹிதார்ச்சனம் தே பாதாம் புஜம் பிரதி தினம் பிரதிபத்யமாநா
ஸ்தோத்ர ப்ரிய த்ரி பாத காதி சரித் வராணாம் பண்ணா பபூவ புவநே பஹுமாந பாத்ரம் –15-

ஸ்வச் சந்த விக்ரம சமுந் நமிதாத முஷ்மாத் ஸ்ரோதஸ் த்ரயம் யதபவத் தவ பாத பத்மாத்
வேதாள பூத சரசா மபதிஸ்ய வாசம் ப்ராயேண தத் பிரசவ பூமிமவாப பூய —16-

கிரீட ஆபரேண பவதா விஹிதோ பரோதாந் ஆராதகா நநுபரோத முதஞ்ச யிஷ்யன்
தாம்ரேண பாத நகரேண ததா அண்ட மத்யே கண்டா பதம் கமபி நூந மவர்த்தயஸ் த்வம் –17-

காமாவிலே அபி கருணார்ணவ பிந்துரேக ஷிப்த ஸ்வ கேளி தரஸா தவ தேஹளீச
தத் சந்ததேரு பயதா விததிம் பஜந்த்யா சம்சார தாவ தஹநம் சமயத்ய சேஷம் —18-

நீடோதரான் நிபதி தஸ்ய ஸூ கார்ப கஸ்ய த்ராணேந நாத விஹரந்நிவ ஸார்வ பவ்ம
ஆதாய கோப நகராதிபதே ஸ்வயம் மாம் கிரீடா தயா வ்யதிகரேண க்ருதார்த்ய த்வம் –19-

லீலா சகுந்தமிவ மாம் ஸ்வ பதோபலப்த்யை ஸ்வைரம் ஷீபந் துரித பஞ்ஜரதோ குணஸ்தம்
தத் தாத்ருசம் கமபி கோப புரீ விஹாரிந் சந்தோஷ முல்லளய சாகர சம்பவாயா –20-

வாதூல கல்ப வ்ருஜிந ப்ரபவைர் மதீயாம் வையா குலீம் விஷய சிந்து தரங்க பங்கை
தாஸோ பமர்த்த ஸஹ துர் நிரசாம் த்வதந்யை அந் வீஷ்ய காடம நு கம்பிது மர்ஹஸி த்வம் –21-

ஏநஸ்வி நீ மிதி சதா மயி ஜாயமாநாம் தேஹள்யதீச த்ருஷதோ அபி விலா பயந்தீம்
நாதே சமக்ர சகநே த்வயி ஜாகரூகே கிம் தே ஸஹேத கருணா கருணா மவஸ்தாம்–22-

ஆத்மோன்நதிம் பர நிகர்ஷ மபீஹா வாஞ்சந் நிம்நே விமோஹ ஜலதவ் நிபதாமி பூய
தந்மா முதஞ்சய தவோந்நத பாத தக்நம் தேகள்யதீச குணிதேந தயா குணேந –23-

அஷீண கல்மஷ ரஸோ அபி தவான்ரு ஸம்ஸ்யாத் லஷ்மீ சமஷமபி விஜ்ஞபயாம்யபீத
பக்தோ பமர்த்த ரசிக ஸ்வயமல்ப புத்தே யந்மந்யசே மம ஹிதம் ததுபாததீதா –24-

மந்யே தயார்த்ர ஹ்ருதயேந மஹா தநம் மே தத்தம் த்வயே தமந பாயமகிஞ்ச நத்வம்
யேந ஸ்தநந்த்யமிவ ஸ்வஹிதாந பிஜ்ஞம் ந்யாஸீ கரோஷி நிஜ பாத சரோருஹே மாம் –25-

துர்வார தீவ்ர துரித ப்ரதிவாவதூகை ஒவ்தார்ய வத்பிரநக ஸ்மித தர்சநீயை
தேஹள் யதீஸ்வர தயா பரிதைரபாங்கை வாசம் விநாபி வதஸீவ மயி பிரசாதம் –26-

அயமநவம ஸூக்தைராதி பக்தைர் யதாவத் விசதித நிஜ தத்த்வோ விஸ்வ மவ்யாத பவ்யாத்
ரத சரண நிரூட வ்யஞ்ஜநாநாம் ஜநாநாம் துரித மதந லீலா தோஹளீ தேஹளீச –27-

இயமவிதத வர்ணா வர்ணநீய ஸ்வபாவாத் விதித நிகம ஸீம்நா வேங்கடேசேந கீதா
பவ மரு புவி த்ருஷ்ணா லோப பர்யாகுலா நாம் திசது பலமபீஷ்டம் தேஹளீச ஸ்துதிர் ந –28-

————————————

இதி ஸ்ரீ ஷோடச ஆயுத ஸ்தோத்ரம் சம்பூர்ணம் –

கவி தார்க்கிக ஸிம்ஹாய கல்யாண குண சாலிநே ஸ்ரீமதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம —

—————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேதாந்த தேசிகன் சுவாமி திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ ஷோடச ஆயுத ஸ்தோத்ரம் —

July 7, 2017

ஸ்ரீ மான் வேங்கட நாதார்ய கவிதார்க்கிக கேஸரீ வேதாந்தா சார்ய வர்யோ மே சந்நிதத்தாம் சதா ஹ்ருதி —

ஸ்ரீ ஸூ தர்சன ஆழ்வான்-நேராக –ஸ்லோகம் 2-/ ஷோடச ஆயுதமாகவே –ஸ்லோகம் -18-/மற்ற திவ்ய ஆயுதங்கள் மீதி ஸ்லோகங்களில்
அருளும் போதும் ஸ்ரீ சுதர்சன ஆழ்வார் கடாக்ஷமும் ரக்ஷகமும் அனைத்திலும் உண்டே-
-16-திவ்ய ஆயுதங்கள் –1 -சக்ரம் /-2- பரசு-கோடாலி /-3-குந்தம் -ஈட்டி /-4-தண்டம் /-5-அங்குசம் /-6-சத முக அக்னி /-7-நந்தகம் -வாள்/-8-சக்தி வேல் /
-9-சங்கு /-10-சார்ங்கம் /-11-பாசம் -கயிறு / -12-கலப்பை /-13-வஜ்ராயுதம் /-14-கதை -15-/முஸலம்/ -16-த்ரி சூலம்
ஸ்ரீ காஞ்சி ஸ்ரீ சக்கரத்தாழ்வார் அர்ச்சா மூர்த்தியில் சேவை உண்டே இந்த -16-திவ்ய ஆயுதங்களும்
முதல் எட்டும் வலது திருக்கரத்தில் -அடுத்த எட்டும் இடது திருக் கரத்திலும் –
இந்த -16-திவ்யாயுதங்களும் ஸ்ரீ பரமார்த்த பங்கம் -ஸ்லோகத்திலும் அருளிச் செய்வார் –
திருப் புட் குழி திவ்ய தேச அடியார்கள் விஜ ஜ்வரத்தால் பீடிக்கப் பட -இந்த ஸ்தோத்ரம் அருளி அதை போக்கி ரஷித்து அருள சாதித்தார் என்பர் –

-19-ஸ்லோகங்கள் –ஹேதி ராஜர் -ஸ்ரீ ஸூ தர்சன-பிரதானம் -சோபனம் தர்சனம் -பார்க்கவே அழகு -அநிஷ்ட நிவ்ருத்தி இஷ்ட பிராப்தி –
ரதாங்கம் -ஸர்வ பிரகரண– க்ருதங்களை செய்வதாலும் ஸூ மார்க்கம் காட்டுவதாலும் –
பரபஷ நிரசனார்த்தம் தர்க்க ஸிம்ஹம் / பொழுது போக்கு அருளிச் செயல்களில் –
திருவஹீந்திர புரத்தில்-என்றும் திரு புட் குழியிலும் -அருளிச் செய்ததாக வும் சொல்வர் -ஜுரம் தீண்ட அத்தை போக்கி கைங்கர்ய ஸ்ரீ வளர்க்க -என்பர்
கை கழலா நேமியான் நம் மேல் வினை கடிவான் /
பரமத பங்கம் -ஸ்ரீ ஸூ தர்சன சதகம் ஸ்ரீ கூர நாராயண ஜீயர்-80 -ஒரே பாசுரத்தில் -16-திவ்யாயுதம் பற்றி உண்டு
கோலார்ந்த நெடும் சார்ங்கம் –கருடனும் சேர்ந்து ரஷிக்க-ஸ்ரீ குலசேகரர் -உறகல் -உறகல்-பள்ளியறைக் குறிக்கொள்மின் -பெரியாழ்வார்

எண் தல அம்புயத்துள் இலங்கும் அறு கோண மிசை
வண் பணிலம் திகிரி வளைவில் வளைவாய் முசலம்
திண் கையில் அங்குசம் சீர் திகழும் கதை செங்கமலம்
எண் படை ஏந்தி நின்றான் எழில் ஆழி இறையவனே–1–

எழில் ஆழி இறையவனே—உஜ்ஜவலமாக நிற்கும் ஸ்ரீ ஸூ தர்சன -ஸ்ரீ ஹேதி ராஜன்
எண் தல அம்புயத்துள் இலங்கும்–எட்டு இதழ்களை உடைய தாமரை புஷபத்திலே பிரகாசிக்கும்
அறு கோண மிசை-ஆறு கோணம் உடைய சக்கரத்தின் மேலே
வண் பணிலம் திகிரி -வெளுத்த ஸூந்தர ஸ்ரீ சங்கம் -சக்கரம் –
வளைவில் வளைவாய் முசலம்-வளைந்ததான -நுனியை யுடைய பரசு -உலக்கை
திண் கையில் அங்குசம் சீர் திகழும் கதை செங்கமலம்-சிலாக்கியமாய் பிரகாசிக்கும் கதை -செந்தாமரை புஷ்பம் பத்மாயுதம் –
எண் படை ஏந்தி நின்றான்-ஆகிய எட்டு ஆயுதங்களை தரித்து சேவை சாதிக்கிறார் –

திகிரி மழு யுயர் குந்தம் தண்டு அங்குசம் பொறி சிதறு சதமுக அங்கி வாள் வேல் அமர்ந்ததும்
தெழி பணிலம் சிலை கண்ணி சீரங்கம் செவ்விடி செழிய கதை முசலம் திசூலம் திகழ்ந்ததும்
அகில வுலகுகள் கண்டையாய் ஓர் அலங்கலில் அடைய அடைவில் இலங்கை ஆசு இன்றி நின்றதும்
அடியும் அரு கணையும் ஆம் அரவு என்ன நின்று அடி அடையும் அடியாரை அன்பினால் அஞ்சல் என்பதும்
மகிழும் அமரர் கணங்கள் வானம் கவர்ந்திட மலியும் அசுரர் புணர்த்த மாயம் துரந்ததும்
வளரும் அணி மணி மின்ன வான் அந்தி கொண்டிட மறை முறை முறை வணங்க மாறு இன்றி வென்றதும்
சிகி இரவி மதியம் உமிழ் தேசு உந்த எண் திசைத் திணி மருள் செக உகந்து சீமான்கள் செய்ததும்
திகழ் அரவு அணை யரங்கர் தேசு என்ன மன்னிய திரி சுதரிசனர் செய்ய ஈர் எண் புயங்களே -54- திருவாழி யாழ்வானுடைய திருக்கைகளின் பெருமை –

பரமதங்களைக் கண்டிக்கும் போது திருவாழி யாழ்வானது திரு வருள் பெறுவதற்காக இப்பிரபந்தத்தில்
உபக்ரமத்திலும் உப சம்ஹாரத்திலும் அவர் பெருமையையே பேசப்படுகிறது –

திகிரி மழு யுயர் குந்தம் தண்டு அங்குசம் பொறி சிதறு சதமுக அங்கி வாள் வேல் அமர்ந்ததும் –திருச் சக்கரமும் மழுவும் மேன்மை பொருந்திய ஈட்டியும்
தண்டாயுதமும் மாவெட்டியும் தீப் பொறிகளை சிதறுகின்ற சத்தமுக அக்னியும் வாளும் வேலும் ஆகிய திவ்ய ஆயுதங்கள் பொருந்திய இடமும்
தெழி பணிலம் சிலை கண்ணி சீரங்கம் செவ்விடி செழிய கதை முசலம் திசூலம் திகழ்ந்ததும்-திரிசூலம் திசூலம் என்று மருவியுள்ளது ஒலிக்கின்ற சங்கமும்
வில்லும் பாசமும் கலப்பையும் சிவந்த வஜ்ராயுதமும் செழுமையான கதையும் உலக்கையும் திரிசூலமும் ஆகிய திவ்ய ஆயுதங்கள் பிரகாசிக்கும் இடமும்
அகில வுலகுகள் கண்டையாய் ஓர் அலங்கலில் அடைய அடைவில் இலங்கை ஆசு இன்றி நின்றதும் –சகல லோகங்களும் ஒரு மாலையில் மணிகளாய்
முழுவதும் வரிசையாக பிரகாசிக்கும்படி குற்றம் இல்லாது நின்ற இடமும்
அடியும் அரு கணையும் ஆம் அரவு என்ன நின்று அடி அடையும் அடியாரை அன்பினால் அஞ்சல் என்பதும் -திருவடிநிலை -திருப் பாதுகையும்
பக்கத்தே சாய்ந்து கொள்ளும் அணையுமாகின்ற ஆதிசேஷன் போல் கைங்கர்யத்தில் ஈடுபட்டவர் என்னும்படி நின்று திருவடிகளை சரணம் அடையும்
பாகவதர்களை அவர்கள் இடம் உள்ள அன்பினால் அஞ்ச வேண்டாம் என்று அபாய பிரதானம் செய்வனவும்
மகிழும் அமரர் கணங்கள் வானம் கவர்ந்திட மலியும் அசுரர் புணர்த்த மாயம் துரந்ததும் -மகிழ்வுள்ள தேவர் கூட்டங்களின் ஸ்வர்க்க லோகத்தைக்
கொள்ளையிடுவதற்காக ஓன்று குடித்த திரண்ட அசுரர்கள் செய்த மாய்ச செய்கைகளை ஒழித்தனவும்
வளரும் அணி மணி மின்ன வான் அந்தி கொண்டிட மறை முறை முறை வணங்க மாறு இன்றி வென்றதும் -நிறைந்துள்ள திவ்ய ஆபரணங்களில் உள்ள
ரத்தினங்கள் பிரகாசிக்க -அந்த பிரகாசத்தால் ஆகாசம் செவ்வானம் கொண்டால் போலேயாக வேதம் வகை வகையாகப் போற்றி வணங்கி நிற்க
பகைவர் மீதமின்றி ஜெயித்தனவும்
சிகி இரவி மதியம் உமிழ் தேசு உந்த எண் திசைத் திணி மருள் செக உகந்து சீமான்கள் செய்ததும் –அக்னியையும் சூரியனையும் சந்திரனையும்
கக்குகின்ற தேஜஸை வீசி எறிதலால் எட்டுத் திக்குகளிலும் அடர்ந்த அஞ்ஞானம் ஒழியும்படி செய்ய மனம் கொண்டு உலகிற்கு ஷேமங்களைச் செய்தனவும்
திகழ் அரவு அணை யரங்கர் தேசு என்ன மன்னிய திரி சுதரிசனர் செய்ய ஈர் எண் புயங்களே–பிரகாசிக்கின்ற ஆதிசேஷனாகிய படுக்கையையுடைய
ஸ்ரீ ரெங்கநாதருடைய தேஜஸ் வடிவு எடுத்து வந்தது என்னும்படி சித்திரமாய் இருந்து சுழல்கின்ற
திருவாழி வாழ்வானுடைய சிவந்த பதினாறு திருக்கைகளும் ஆகும்
அவற்றின் பெருமை பேசற்பாலது அன்று என்றவாறு —

ஜ்வாலை -நேமி –அரங்கள்–நாபி –அக்ஷம்-ஐந்து பாகங்கள் ஸ்ரீ ஸூ தர்சனர்
அஸ்திர பூஷண அதிகாரம் –ஸ்ரீ விஷ்ணு புராணம் முதல் அம்சம் –சங்கல்பத்தாலே ரக்ஷணம் –
சிதறல் -16-திவ்ய ஆயுதங்கள் -சித்த ஆலம்பன ஸுஹர்யத்துக்காக
ஸ்ரீ கௌஸ்துபம் -ஜீவாத்மா / ஸ்ரீ வத்சம் —
புருடன் மணி வரமாக –மறையின் பொருளாம் கண்ணன் –

—————————-

ஸ்வ சங்கல்ப கலா கல் பைராயுதை ராயுதேஸ்வர -ஜுஷ்ட ஷோடச பிர்த்திவ்யைர் ஜூஷதாம் வ பர புமான் –1-

ஸ்வ சங்கல்ப கலா –பெருமாள் சங்கல்ப ரூபமான ஞானமே -இச்சா விசேஷம் -ஸத்யஸங்கல்பம் -மழுங்காத ஞானமே படையாக –
கலா -16-பாகங்களில் ஓன்று –ஸ்ரீ ராமசந்திரன் கல்யாண குணங்கள் -கோன்வஸ்மின்–அமலன் ஆதி பிரான் –
கல் பைராயுதை ராயுதேஸ்வர -திவ்யம் -அப்ராக்ருதம் –
ஜுஷ்ட ஷோடச பிர்த்திவ்யைர் -கூடி இருக்கும் பரமாத்மா -விசிஷ்ட ப்ரஹ்மம்
ஜூஷதாம் வ பர புமான் –பரம புருஷன் -ப்ரீதி விஷயமாகட்டும் -அநிஷ்டம் போக்கி இஷ்டம் அருளட்டும்

——————————-

யதா யத்தம் ஜகச் சக்ரம் கால சக்ரம் ச சாஸ்வதம் பாது வஸ்தத் பரம் சக்ரம் சக்ர ரூபஸ்ய சக்ரிண–2-

யதா யத்தம் ஜகச் சக்ரம் கால சக்ரம் ச சாஸ்வதம் –ஜகத்தின் சுழற்சியும்-பிறந்து உழன்று கர்ம அனுபவம் – கால சுழற்சியும் -யுகங்கள் மாறி வருவதும் –
மாறி மாறி பல பிறவிகள் உண்டு -பிரளயங்கள் ஸ்ருஷ்டிகளும் மாறி மாறி வருமே -சதுர் யுகங்களும் மீண்டும் மீண்டும் சுழன்று –
சாஸ்வதம் -நிலையாக சுற்றிக் கொண்டே இருக்கும் -மாறுதலுக்கு தானே மாற்றம் இல்லாமல் இருக்கும் –
கால சக்கரத்தாய் –நிர்வாஹன் / விட்டு பிரிந்த காலத்தை திரும்பி கொண்டு வர முடியாதே –
பெருமாளாலும் -சீதா பிராட்டி இடம் அருளிச் செய்தார்
பழுதே பல பகலும் போயின என்று அஞ்சி அழுதேன் –
பாது வஸ்தத் பரம் சக்ரம் சக்ர ரூபஸ்ய சக்ரிண–ஹேதி ராஜனையும் பரம புருஷனையும் சொன்னவாறு
நம்மை ரக்ஷிக்கட்டும் -ஆரோக்யம் -ஜுரம் நீங்கி –
கொன்று உயிர் உண்ணும் விசாதி பகை பசி -எல்லாம் நின்று உலகில் கடிவான் நேமிப்படையான் அடியார்கள் வந்தார்கள் –
தொட்ட படை எட்டும் –சென்று நின்று ஆழி தொட்டான் -கை கழலா நேமியான் -கருதும் இடம் பொருது-

—————————————-

யத் ப்ரஸூதி சதை ராசன் ருத்ரா பரஸூலாஞ்ச நா ச திவ்யோ ஹேதி ராஜஸ்ய பரஸூ பரி பாது வ –3-

யத் ப்ரஸூதி சதை ராசன்
ருத்ரா பரஸூலாஞ்ச நா ச –மழு ஆயுதம் ருத்ரன் ஜெனித்தது இந்த திவ்ய ஆயுதத்தில் இருந்து
திவ்யோ ஹேதி ராஜஸ்ய
பரஸூ பரி பாது வ –ஸூ தன்வா கண்ட பர ஸூ உடைந்த பரசு திவ்யாயுதம் -மழு-
விபூதி அத்யாயம்–11- -ருத்ரன் -திரு நாங்கூர் திவ்ய தேசங்களில் உண்டே
வடிவாய மழு ஏந்தி உலகமாண்ட –ராமன் உலகம் ஆண்டு -மழு ஏந்தி பெயர்ச் சொல் /
பற்றின்மை கோடரி கொண்டே சம்சாரம் தொலைக்க முடியும் -திடமான வைராக்யம் -பரசு

———————————————

ஹேலயா ஹேதி ராஜேந யஸ்மின் தைத்யா சமுத்த்ருதே சகுந்தா இவை தாவந்தி ச குந்த பாலயேத வ –4-

சகுந்தா இவ தாவந்தி –அசுரர்கள் இந்த ஈட்டி திவ்ய ஆயுதம் கண்டதுமே பறவைகள் போலே பறந்து ஓடி விடுவார்களே –

ஹேலயா ஹேதி ராஜேந யஸ்மின் -ஹேலம் விளையாட்டாக எடுத்த பாங்கில்
தைத்யா சமுத்த்ருதே சகுந்தா இவை தாவந்தி -தூக்கப்பட்ட காட்ஷியாலே அசூரர்கள் மாய்ந்தே போனார்கள் -தேவ ஜாதி -/
மனுஷ்யர்ஜாதி -அனைத்தும் நான்கு வர்ணங்களில்
ராவணன் ராக்ஷஸன் ப்ராஹ்மண ஜாதி –
ச குந்த பாலயேத வ —அப்படிப்பட்ட ஈட்டி நம்மை ரக்ஷிக்கட்டும்
வேல் காம்பு குட்டியாய் இருக்கும் -ஆனால் – -ஈட்டி -தண்டு நீளம் -குந்தம் திவ்ய ஆயுதம் -சகுந்த பறவை போலே விரோதி போகும்
தாண்டா பூப நியாயம்-அபூபம் வடை – -எடுத்ததுக்கே இப்படி -எறிந்தால்-சொல்ல வேண்டாமே –
பிரயோக சக்கரத்துடன் சில திவ்ய தேசங்களில் சேவை
வைகுந்தா மணி வண்ணா என் பொல்லா குறளா-பசும் கூட்டம் -பரத்வம் ஸுலப்யம் ஸுந்தர்யம் —
அசுரர்களுக்கு தீமைகள் செய் குந்தா உன்னைப் பிடித்தேன் சிக்கெனவே
ஆழ்வார் அவனுக்கு மாஸூ ச அருளிச் செய்கிறார் /
குந்தா -குருந்த -வெண்மை சத்வ குண ஸ்வ பாவம் -இடை குறைத்தல் /முகுந்தா -முதல் குறைத்தல் மோக்ஷ ப்ரதன்/
குந்தம் திவ்யாயுதம் தரித்தவன் என்றுமாம் –
ஆஸ்ரித பக்ஷ பாதி அன்றோ -வைஷம்யம் நைர்க்ருண்யம் இல்லாதவன் -சமோஹம் ஸர்வ பூதா நாம்
காஸ்யப பிரஜாபதி – திதி-அதிதி -பிள்ளைகள் -தேவ அஸூரர்கள்

————————————

தைத்ய தாநவ முக்யாநாம் தண்டயாநாம் யேந தண்டநம் ஹேதி தண்டேச தண்டோ அசவ் பவதாம் தண்டயேத் த்விஷ–5-

தைத்ய தாநவ முக்யாநாம் -தையர்களையும் தானவர்களையும்
தண்டயாநாம் -தண்டிக்கப்பட வேண்டியவர்களை
யேந தண்டநம் ஹேதி தண்டேச -ஹேதி ராஜனே –
தண்டோ அசவ் பவதாம் தண்டயேத் த்விஷ–எதிரிகளை போக்கி கொடுக்கட்டும் -தண்டால்
அனைத்து பிரதிபந்தகங்கள் போக்கி அருளுவான்

—————————————

அநந்ய அந்வய பக்தாநாம் ருந்தந் நாசா மதங்க ஜான் அநங்குச விஹாரோ வ பாது ஹேதீஸ் வராங்குச–6-

அநந்ய அந்வய பக்தாநாம் –வேறு இடங்களில் ஈடுபாடு அற்று இருக்கும் பக்தர்கள்
ருந்தந் நாசா மதங்க ஜான் -ஆசா மதங்கள் -வித்யா தனம் ஆபி ஜாதியம் அழகு –போன்ற குறும்புகள்
திரு மங்கை ஆழ்வார் -நான்கு யானைகள் உலகம் ஏத்தும் தென் ஆனாய் -ஓட முடியாமல் தடுக்க இந்த யானைகள் பற்றி இல்லாமல்
யாதானும் பற்றி நீங்கும் விரதம் –ருந்த ந் -தடுத்து நிறுத்தம் -இவை அனைத்தையும் –
குரங்கு கள் குடித்து தேள் கொட்டி பைத்தியம் பிடித்து -நான்காலும் மதம் பெருக –
வஞ்ச முக்குறும்பாம் குழிகள் -அன்றோ இவை –
அநங்குச விஹாரோ வ –தடுப்பில்லாத அங்குசம்
பாது ஹேதீஸ் வராங்குச–ஹே தீஸ்வரனுடைய அங்குசம் ரக்ஷிக்கட்டும்
ஆசா பெரும் யானைகள் போன்றவற்றுக்கும் அங்குசம் என்றவாறும்-
பராங்குசர் -பிறருக்கு அங்குசம் / அங்கே அறுபத்தே கருமம் கண்டாய் -/ பரனான அவனுக்கும் அங்குசம் கவிகளின் ஓர்
பாதத்துக்கு முன் செல்ல மாட்டானே

—————————————

சம்பூய சலபா யந்தே யத்ர பாபாநி தேஹிநாம் ச பாது சத வக்த்ராக்நி ஹேதிர் ஹேதீஸ் வரஸ்ய வ -7-

விட்டில் பூச்சிகள் விழுந்து மாயுமா போலே சேதனர்கள் உடைய சகல வினைகளும் ஓயுமே இந்த சத முக அக்னி திவ்ய ஆயுதத்தாலே –

சம்பூய சலபா யந்தே யத்ர பாபாநி தேஹிநாம் –அடியார் கூட்டும் இரு வல்வினைகளை / தேகம் யுடையவர்களை வைத்தே சப்தம்
கர்மங்கள் சேர்க்க தேகம் –
பாபாநி -பஹு வசனம் -க்ருதான் கிரியா–கரிஷ்யமான –அக்ருத்ய கரண க்ருத்ய அகரண பகவத் பாகவத அஸஹ்ய அபசாரங்களும்
நா நா வித அபசாரங்களும் உண்டே -ஸ்வரூப உபாய புருஷார்த்த விரோதிகள் -அல் வழக்குகள் பலவும் உண்டே
ச பாது சத வக்த்ராக்நி ஹேதிர் -கூட்டம் கூட்டமாக இருந்தாலும் வீட்டில் பூச்சி விழுந்து அழிவது போலே நாசம் பண்ணும் -நூறு முக அக்னி
ஹேதீஸ் வரஸ்ய வ -நம்மை ரக்ஷிக்கட்டும் பொறி சிதறு சத முக அக்னி –
வெம் கதிரோன் குலத்துக்கு ஓர் விளக்கு -ஆயர் குலத்தில் தோன்றும் அணி விளக்கு தானே
போய பிழையும் புகுதறுவான் நின்றனவும் தீயினில் தூசாகும் -/
சாய்ந்த இரு வல் வினைகளையும் சரித்து -மாயப் பற்று அறுத்து -தன் பால் மனம் வைக்கத் திருத்தி -வீடு நிறுத்துவான் /
நானே நாநா விதம் நரகம் புகும் பாபம் செய்தேன் -அருளைப் பார்த்தால் இருக்கும் வீடு போதாதே –
தொழுமின் -அவனை தொழுதால் -துர்லபம் அன்றோ – வழி நின்ற வல்வினை மாய்வித்து -அழிவின்றி ஆக்கம் தருமே –

—————————————

அவித்யாம் ஸ்வ பிரகாசேந வித்யா ரூபஸ் சிநத்தி ய ச ஸூ தர்சன நிஸ்த்ரிம் ச சவ்து வஸ்தத்த்வ தர்சனம் —8-

ஞான தேவதை -நிஸ்த்ரிம்-வாள் -என்னும் திவ்ய ஆயுதம் -நம் அஞ்ஞானங்களை வாசனை ருசிகள் உடன் போக்கி யாதாம்ய தத்வ த்ரய ஞானம் அளிக்கும் –

அவித்யாம் -பிரகிருதி சம்பந்தம்
ஸ்வ பிரகாசேந -தனது -ஒளியாலாயே
வித்யா ரூபஸ் சிநத்தி ய ச ஸூ தர்சன -அந்தகாரம் போக்கி -சினத்தை வெட்டி விடும் –
நிஸ்த்ரிம் ச சவ்து வஸ்தத்த்வ தர்சனம் —பரதத்வ சாஷாத்காரம் -அஞ்ஞானம் போனதும் இந்த நிலை தானே
இதுவும் அடுத்த இரண்டும் வலது திரு கை திவ்ய ஆயுதங்கள் -கட்கம் -குத்து வாள்-சிறியது – -நந்தகம் -நீண்ட வாள் -வேறே -ஆனந்தம் கொடுக்கும்
ஞானம் வாள் / அஞ்ஞானம் உறை -ஞானக் கை தா – காலக் கழிவு செய்யாமல்
காருணிகனான சர்வேஸ்வரன் வேதம் ஓளி விளக்கு -வேத நான்காய் -சாஸ்திரம் பிடித்த திரு அவதாரம் –
ஞானம் தலை கொண்டு நாரணனுக்கு ஆவோம்-அண்ணல் ராமானுஜன் தோன்றிய அப்பொழுதே -காருண்யன் சாஸ்த்ர பாணினா
அஸீ -கட்கம் – நந்தகம் -கொற்ற ஒள் வாள் –தத்வ த்ரய ரகசிய த்ரய அர்த்த பஞ்சக ஞானம் -தர்சனம் பேத ஏவ ச –

————————————-

க்ரியா சக்தி குணோ விஷ்ணோர்யோ பவத்யதி சக்திமான் அகுண்ட சக்தி சா சக்திர சக்திம் வாரயேத வ –9-

க்ரியா சக்தி கல்யாண குணம் மிக்க வேல் -அகுண்ட சக்தி -குறையாத -சக்தி நம் அசக்திகளை எல்லாம் போக்கும் –

க்ரியா சக்தி குணோ விஷ்ணோர்யோ –படைத்து காத்து அழிக்கும் சக்தி -ஸர்வ வ்யாபி விஷ்ணு -சக்தி வேலாயுதம்
பவத்யதி சக்திமான் அகுண்ட சக்தி -தடையில்லாத -சக்தி -வைகுண்டம் -தடை இல்லா ஞானம் உள்ள திவ்ய தேசம்
சா சக்திர சக்திம் வாரயேத வ –நமது சக்திகளை போக்கி ரக்ஷிக்கட்டும்
நின் கையில் வேல் போற்றி / கூர் வேல் கொடும் தொழிலன்
சேராதவற்றை சேர்க்கும் சக்தி -அவிகாராயா ஸ்வ ரூபமாய் இருந்தே உபாதான காரணமாயும் -இருந்து —

—————————————–

தாரத்வம் யஸ்ய சம்ஸ்தாநே சப்தே ச பரித்ருஸ்யதே –ப்ரபோ – ப்ரஹரணேந்த்ரஸ்ய பாஞ்ச ஜன்ய ச பாது வ –10-

தாரத்வம் யஸ்ய சம்ஸ்தாநே -வடிவத்திலும் –தாரம் -சம்சாரம் தாண்டுவிக்கும் பெருமான் தாரம் –
தாரயதி -பிரணவம் -பர ப்ரஹ்மத்தையும் குறிக்கும்
சப்தே ச பரித்ருஸ்யதே –சப்தத்திலும் -பிரணவம்-நன்றாக காணப்படும் இரண்டாலும் -பேர் அரவம் கேட்டிலையோ –
பொய்கை ஆழ்வார் -பாஞ்ச ஜன்ய அம்சம்
தார்த்தராஷ்ட்ரன் -ஹிருதயம் உலுக்கும் -அனுகூலர் வாழும்படியும் –
ப்ரபோ – ப்ரஹரணேந்த்ரஸ்ய –ஆயுத அதிபதி
பாஞ்ச ஜன்ய ச பாது வ –இடது திருக் கைகள் -திவ்ய ஆயுதங்கள் இது முதல் -நம்மை ரக்ஷிக்கட்டும்
கடலில் பிறந்து -கருதாது பஞ்ச ஜன்யன் உடலில் வளர்ந்து -சாந்தீபன் புத்ரனை ரஷித்து அருளிய பொழுது
கடல் வண்ணன் கைத்தலத்தில் குடி பெயர்ந்தார்

———————————

யாம் சாத்த்விக மஹங்காரம் ஆமனந்த்யஷ சாயகம் அவ்யாத் வஸ் சக்ர ரூபஸ்ய தத்தநு சார்ங்க தன்வன –11-

சாத்விக அகங்கார ஸ்வரூபம் -திரு சார்ங்கம் -இந்திரியங்களை மால் பால் செலுத்தச் செய்து அருளும் –

யாம் சாத்த்விக மஹங்காரம்
ஆமனந்த்யஷ சாயகம் அவ்யாத்–அஷா-இந்திரியங்களுக்கு காரணம் சாத்விக அஹங்காரம்
வஸ் சக்ர ரூபஸ்ய
தத்தநு சார்ங்க தன்வன –11—தன்வீ –கையிலே பிடித்த –நம்மை ரக்ஷிக்கட்டும்
செருவிலே அரக்கர் கோனை செற்ற சேவகனார் -ஒரு வில்லால் /
தாமச அஹங்காரம் பிரதிநிதி -சாத்விக அஹங்காரம் சார்ங்கம் அம்சம் -இறுதி -திருமங்கை ஆழ்வார்
அமோக பானம்-வில்லிறுத்து மெல்லியல் தோள் புணைந்தான்-
சாபம் தநுஸ் வில் சிலை பொது பெயர்கள் – கோதண்டம் சார்ங்கம்
சப்த மராமரங்கள்–ஏழு இலக்காயிற்றோ என்று நடுங்கும்படி -வில்லாண்டான் தன்னை –
ஆனை ஆயிரம் தேர் பதினாராம் –ஆயிரம் கபந்தங்களோட வில் ஒரு மணி ஒழிக்க -ஏழரை நாழிகை ஒலித்தன –

—————————————-

ஆயு தேந்த்ரேண யேநைவ விஸ்வ சர்க்கோ விரச்யதே ச வ சவ்தர்சந குர்யாத் பாச பாச விமோசனம் —12-

சம்சார பாசங்களை போக்கி அவன் இடம் பாசம் மிக்கு இருக்கும் படி அருளும் திருப் பாசம் என்னும் திவ்ய ஆயுதம் –

ஆ யு தேந்த்ரேண யேநைவ விஸ்வ சர்க்கோ -ஜகத்தின் படைப்பு யாதொரு ஆயுதத்தால் –
விமுச்யதே ச வ சவ்தர்சந -ஸூ தர்சன சம்பந்தி -கையில் உள்ள பாசக்கயிறு
குர்யாத் பாச பாச விமோசனம் —ஆசா பாசங்களில் இருந்து விடுவிக்கட்டும் / புற சமய வாசங்களாகிற பாசங்களிலும் அகப்படாமல்
மணி வண்ணன் வாசு தேவன் வலையுள்ளே அகப்பட்டேன் —அரையர் -அபிநயம் –
திருக் கடாக்ஷம் -கமலக் கண் என்னும் நெடும் கயிறு —
உற்ற நல் நோய் இது தேறினோம்
நியாய சாஸ்திரம் தலை குனிவு -பாசம் கொண்டு பாசம் விலகுவது -தந்தை காலில் விலங்கற வந்து தோன்றிய
-கட்டுண்ண பண்ணிய பெரிய மாயன்
பாதம் அடைவதில் பாசத்தால் –மற்ற வன் பாசங்கள் முற்ற விட்டு -கோதில் புகழ் கண்ணன் கழல் மேல் -தீதிலராகி –

————————————————-

விஹாரோ யேந தேவஸ்ய விஸ்வ க்ஷேத்ர க்ருஷீ வல வ்யஜ்யதே தேந ஸீரேண நாஸீர விஜயோ அஸ்து வ –13-

விஹாரோ யேந தேவஸ்ய -இன்புறும் இவ்விளையாட்டுடைய -தேவர் -திருக் கலப்பையால் விஹாரா -ஸ்ருஷ்ட்டி இத்யாதிகள்
விஸ்வ க்ஷேத்ர க்ருஷீ வல –உலகமாகிய கழனி-பக்தி உழவன்-உழுது பயிரிட்டு போகம் அனுபவிப்பவன் – -இதம் சரீரம் கௌந்தேய -விளை நிலம்
கழினியிலே வீடு கட்டி வாசம் செய்யுமா போலே அந்தர்யாமியாக இருந்து -அஹம் அன்னம் அஹம் அந்நாதா பர்யந்தம் -படும் பாடு இவனது –
வ்யஜ்யதே தேந ஸீரேண –காணப்படும் திருக் கலப்பை
நாஸீர விஜயோ அஸ்து வ –படை முகத்தில் வெற்றி கிடைக்கட்டும்-
ஸீரத்தால் நாஸீர-சப்த பிரயோகம் -கவி ஸிம்ஹம் அன்றோ
யமுனை -ராம் காட் -பலராமன் -வளைத்த இடம் கலப்பை கொண்டு
உழவுக்கும் சீதா -கலப்பை -நுனி -சம்பந்தம் உண்டே பிராட்டிக்கு வாசஸ் ஸ்தானம் அன்றோ
உழவன் -விதை -இடம் -களை பறித்து -நாற்று நட்டு –களை எடுத்து -விளைத்து –அனுபவம் –
கரக்ஷகன்-சேதனன் விதை -சேஷத்வம் நிலம் -விதைத்து -புழு பூச்சி கடிக்காமல் -விபரீத ஞானாதிகள் -இல்லாமல் போக்கி -பாகவத அபசாரம் படாமல்
அல்வழக்குகளை போக்கி -மடை -கைங்கர்ய அநுவர்த்தனம்-விவேக ஞானமாகிய நீரைப் பாய்ச்சி -தயாஜ்ஜிய உபாத்தேய ஞானம் பகுத்து அறிவதே நீர்
பகவத் விஷயமாகிற களை கொத்து -அகங்கார மமகாரங்கள் களை போக்கி
கொந்து மாடு உள்ளே வந்து -விபரீத அஹங்காரம் – விஷயாந்தர பேய் காற்று வீசாமல் -சரணாகதி வேலி கொண்டு
ஸ்ரீ வைஷ்ணவத்வம் மழை-மும்மாரி -பெய்து நன்கு வளர்த்து –ஸ்ரீ முதலியாண்டான் அருளிச் செய்தது
பரம ஏகாந்தி மாலையை சாத்திக் கொண்டு மற்றது கையதுவே என்று வீறுடன் எழுந்து அருளி இருப்பானே

—————————————

ஆயுதானாம் அஹம் வஜ்ராயுதம் –இதி யத அத்தீயத -ததீசி அஸ்தி சாயம் ஹேதீஸ்ய வஜ்ரா வாகா அப்யாது -14

ஸ்ரீ கீதையில் தானே ஸ்ரேஷ்ட பதார்த்தம் என்று அருளிச் செய்யும் பொழுது நானே திவ்ய ஆயுதங்களில் வஜ்ராயுதம் என்றானே –

இந்திரன் -பிராகிருதம் -இவனது அப்ராக்ருதம் -வஜ்ர ரேகையும் திருக் கரங்களில்-திருவடிகளில் உண்டே
சங்க -ரங்க -கற்பக -த்வஜ -அரவிந்த -அங்குச -வஜ்ரா ஏழும் லாஞ்சனம் உண்டே-
அதிதி வஜ்ரா பாணியுடன் இந்திரனை பெற்று மகிழ்ந்தது போல கௌசல்யை -அதீந்த்ரன் -என்றே கொள்ள வேண்டும் –
வஜ்ர பாணி திருக் -கையிலே ரேகை உண்டே

———————————————

-விஸ்வ சம்ஹ்ருதி சக்திர்யா விஸ்ருதா புத்தி ரூபிணீ சா வ சவ்தர்சநீ பூயாத் கத பிரசமநீ கதா –15-

ஸ்ரீ கதை -மஹான் தத்வம்சம்-அனைத்தையும் –சம்ஹார சக்தி –

விஸ்வ சம்ஹ்ருதி சக்திர்யா -விஷ்வா ஸம்ஹ்ருதி சக்தியை அருளும்
விஸ்ருதா புத்தி ரூபிணீ –புத்தி ரூபம்
சா வ சவ்தர்சநீ பூயாத் -ஸூ தர்சன சம்பந்தம்
கத பிரசமநீ கதா –மநோ வியாதி தொலைக்கட்டும் -கதை -மான் தண்டாக -மஹான் தத்வம் –
மனசு கரணம் -நினைக்க உறுப்பு -மனத்தால் நினைக்கிறோம் –
நினைத்து உறுதி கொள்வது புத்தி -மனஸ் கடிவாளம் இந்திரியங்கள் புலன்கள் குதிரைகள் –
ராக க்ரோதம் பயம் கோபம் தவிர்ந்து -மனஸ் சாந்தி –சமம் தமம்-

———————————–

யாத்யதி ஷோத சாலித்வம் முஸலோ யேந தேந வ ஹேதீச முஸலேநாஸூ பித்யதாம் மோஹ மவ்லசம் –16-

யாத்யதி ஷோத சாலித்வம் -உலக்கை நெல் தூள் ஆகுமா போலே
முஸலோ யேந தேந வ -விரோதிகள் அனைத்தையும் பொடி பொடியாகும்
ஹேதீச முஸலேநாஸூ —
பித்யதாம் மோஹ மவ்லசம் –மோஹமாகிற மவ்லசம் பர்வதம் யாதவ குலம் அழியும் –
உலக்கை கொண்டு அடித்துக் கொண்ட மயக்கம் -தொலையட்டும்
செருக்கு ஏறி மது குடித்து -அழிந்தார்களே –
சாம்பன் -பெண் கர்ப்பம் என்று போய் சொல்லி விசுவாமித்திரர் அறிந்து சபித்து உலக்கை பிறந்து உங்கள் வம்சம் அழியட்டும்
முஸலம் கிலேசம்- உலக்கை கொழுந்து -வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் -பெரியவாச்சான் பிள்ளை சிஷ்யர்
நம் மூட மயக்கம் -மாயையால் ஆசூரா ஸ்வபாவம் போக்கி அருளும் திவ்யாயுதம் –

————————————–

ஸூலி த்ருஷ்ட மநோர் வாச்யோ யேந ஸூலயதி த்விஷ பவதாம் தேந பவதாத் த்ரி ஸூலேந விஸூலதா –17-

ஸூலி த்ருஷ்ட மநோர் வாச்யோ –சிவனால் காணப்பட்ட மந்த்ர பொருள் திருவாழி ஆழ்வான்
யேந ஸூலயதி த்விஷ –சூல வியாதி விரோதிகளுக்கு
பவதாம் தேந பவதாத்
த்ரி ஸூலேந விஸூலதா –பீடை இல்லாமல் உண்டாகக் கடவது –அஹிர்புத்நா சம்ஹிதையில் ருத்ரன் சக்கரத்தாழ்வார் வைபவம் சொல்லி
ராமநாமம் –ஸ்ரீ ராம வைபவம் சொல்லி -மகேசன் உன் பெயரின் பெருமை அறிந்தான்
அஷ்டா ஷர ஹரியில் ரேபம் -ரகாரம் -சிவ பஞ்சாக்ஷர மகாரம் சேர்த்து ராம /சஹஸ்ர நாம தத் துல்யம்

———————————————–

அஸ்த்ர க்ராமஸ்ய க்ருதஸ் நஸ்ய ப்ரஸூதிம் யம் ப்ரசஷதே சோவ்யாத் ஸூ தர்சநோ விஸ்வம் ஆயுதை ஷோடச ஆயுத –18-

அஸ்த்ர க்ராமஸ்ய க்ருதஸ் நஸ்ய –உலகம் முழுவதும் ஆயுத கூட்டங்களுக்கு ப்ரஸூதிம் யம் ப்ரசஷதே –பிறப்பிடம் ஸ்ரீ ஸூ தர்சனம்
சோவ்யாத் ஸூ தர்சநோ விஸ்வம் ஆயுதை ஷோடச ஆயுத -உலகு அனைத்தையும் ரக்ஷிக்கட்டும்
சர்வ பிரகராணா யுத

————————————————-

ஸ்ரீ மத் வேங்கட நாதேந ச்ரேயஸே பூயசே சதாம் க்ருதேயமாயு தேந்த்ரஸ்ய ஷோடச ஆயுத சம்ஸ்துதி –19-

ஸ்ரீ மத் வேங்கட நாதேந –ஸ்ரீ மானான என்னால் -ஆச்சர்ய சம்பந்தம் -அபிமான துங்கம்- சாத்விக அஹங்காரம் கொள்ளத் தக்கதே –
ச்ரேயஸே பூயசே சதாம் க்ருதேயம்-சத்துக்களை ஸ்ரேயசுக்காகவும் பூயஸூ க்காகவும்
ஆயு தேந்த்ரஸ்ய ஷோடச ஆயுத சம்ஸ்துதி –அருளிச் செய்யப்பட பிரபந்தம்

————————————

இதி ஸ்ரீ ஷோடச ஆயுத ஸ்தோத்ரம் சம்பூர்ணம் –

கவி தார்க்கிக ஸிம்ஹாய கல்யாண குண சாலிநே ஸ்ரீமதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம —

————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேதாந்த தேசிகன் சுவாமி திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ ஹயக்ரீவ ஸ்தோத்ரம் —

July 7, 2017

ஸ்ரீ மான் வேங்கட நாதார்ய கவிதார்க்கிக கேஸரீ
வேதாந்தா சார்ய வர்யோ மே சந்நிதத்தாம் சதா ஹ்ருதி —

———

ஜ்ஞான ஆனந்த மயம் தேவம் நிர்மல ஸ்படிகாக்ருதிம் —
ஆதாரம் சர்வவித்யாநாம் ஹயக்ரீவம் உபாஸ்மஹே– 1-

ஜ்ஞான ஆனந்த மயம் -தேவம் – -தீவு கிரீடா தாது –கல்வியே சிறு விளையாட்டு -ஸூ லபமாக அருளுவான் –
தீவு பிரகாசம் மிக்கு என்றுமாம் –ஒளி எத்தால் ஆக்கப்பட்டது —
ஜ்ஞானம் ஆனந்தம் கூட்டுக் கலவையால் –அறிவும் இன்பமும் –ஞானம் இருந்தால் தான் ஆனந்தம் வரும் –
ஆனந்தம் அனுபவிக்கவும் ஞானம் வேண்டுமே –
வித்யா -விநயம் -பாத்ரதாம் -பெரியவர் ஆசீர்வாதம் அன்பு பெற்று -தனம் -சேரும் ஆப் நோதி -ஸூ கம் -வரும்-என்பர் –
முக்குறும்பு அறுக்க வேண்டுமே –
நிர்மல ஸ்படிகாக்ருதிம் –அழுக்கே இல்லாத ஸ்படிகம் -தெளிவு பிறக்கும் -அறிவால் ஆனந்தம் தெளிவு கிட்டும்
ஆதாரம் சர்வவித்யாநாம் -இருப்பிடம்–இவை அனைத்தையும் -தாங்குபவனே இவன் –
ஹயக்ரீவம் உபாஸ்மஹே– தொழுவோம் -நம்மை தம்மை ஓக்க அருளுபவர்

————-

ஸ்வத சித்தம் ஸூத்த ஸ்படிக மணி பூப்ருத் ப்ரதிபடம்
ஸூதா சத்ரீசீ பிரித்த்யுதி பிரவதா தத்ரி புவநம்
அனந்தைஸ் த்ரய்யன் தைரநு விஹித ஹேஷா ஹல ஹலம்
ஹதா சேஷாவத்யம் ஹயவதந மீடீமஹி மஹ—2-

ஸூத்த ஸ்படிக மணி விளக்கம் -இவனது ஹல ஹல -சப்தமே சாம ரிக் யஜுர் வேதங்களாக மலர்ந்தன —

———-

சமாஹார சாம்நாம் ப்ரதிபதம்ருசாம் தாம யஜுஷாம் –
லய ப்ரத்யூ ஹாநாம் லஹரி வித திர்ப்போத ஜலதே
கதா தர்ப்ப பஷூப் யத்கதககுல கோலா ஹலபவம் ஹரத்
வந்தரத் வாந்தம் ஹய வதன ஹேஷா ஹலஹல –3-

இவனது ஹல ஹல -சப்தமே -அஞ்ஞானங்களை போக்கும் -ஞானக் கடலில் இருந்து வீசும் அலைகள் -இவையே –
தார்க்கிகள் வேத பாஹ்யர்களால் விளையும் அஞ்ஞானங்களை போக்கி அருளுபவர் –

————–

ப்ராஸீ சந்த்யா காசிதந்தர் நிசாயா ப்ரஜ்ஞாத்ருஷ்டே ரஞ்ஜன ஸ்ரீர பூர்வா
வக்த்ரீ வேதான் பாது மே வாஜி வக்த்ரா வாகீ சாக்யா வாஸூ தேவஸ்ய மூர்த்தி –4-

வக்த்ரீ வேதான்- அடியேனுக்கு வேதார்த்தங்களை விளங்க அருளினவன்

————–

விஸூத்த விஜ்ஞாந கந ஸ்வரூபம் விஜ்ஞாந விஸ்ராணந பத்த தீக்ஷம்
தயா நிதிம் தேஹ ப்ருதாம் சரண்யம் தேவம் ஹயக்ரீவம் அஹம் ப்ரபத்யே –5-

———–

அபவ்ருஷேயைரபி வாக் ப்ரபஞ்சை அத்யாபி தே பூதிம த்ருஷ்ட பாராம்
ஸ்துவந் நஹம் முக்த்த இதி த்வயைவ காருண்யதோ நாத கடாக்ஷணீய —6-

அளியல் நம் பையல் -அறியாத சிறுவன் -முக்த்த பிராயன் -என்று திரு உள்ளம் பற்றி –
உனது தயை சாமை கொண்டு அருளுவாய் –

————–

தாக்ஷிண்ய ரம்யா கிரி ஸஸ்ய மூர்த்தி தேவீ சரோஜா ஸந தர்ம பத்நீ
வ்யாசாதயோ அபி வ்யப தேஸ்ய வாச ஸ்புரந்தி சர்வே தவ சக்தி லேஸை—7-

————–

மந்தோஸ் பவிஷ்யன் நியதம் விரிஞ்சோ வாசம் நிதே வஞ்சித பாகதேய
தைத்யாப நீதாந் தயயைவ பூயோ அபி அத்யா பயிஷ்யோ நிகமான் ந சேத் த்வம்—8-

மது கைடபர் அபஹரித்த வேதங்களை மீட்டு நான்முகனுக்கு உனது தயா குணம் அடியாக
அன்றோ மீண்டும் வழங்கினாய் –

————

விதர்க்க டோலாம் வ்யவதூய சத்த்வே ப்ருஹஸ் பதிம் வர்த்தயஸே யதஸ்த்வம்
தேநைவ தேவ த்ரிதஸேஸ் வராணாம் அஸ்ப்ருஷ்ட டோலாயித மாதிராஜ்யம் –9-

————–

அக்நவ் சமித்தார்ச் சிஷி சப்த தந்தோ ஆதஸ்திவாந் மந்த்ர மயம் சரீரம்
அகண்ட சாரைர்ஹவிஷாம் ப்ரதாநை ஆப்யாயநம் வ்யோம சதாம் விதத்ஸே —10-

———–

யந்மூல மீத்ருக் ப்ரதிபாதி தத்த்வம் யா மூலமாம் நாய மஹாத்ரு மாணாம்
தத்த்வேந ஜாநந்தி விஸூத்த சத்த்வா தாமஷரா மக்ஷர மாத்ரு காம் த்வாம் –11-

————–

அவ்யாக்ரு தாத் வ்யாக்ருத வாநசி த்வம் நாமாநி ரூபாணி ஸ யாநி பூர்வம்
சம் சந்தி தேஷாம் சரமாம் ப்ரதிஷ்டாம் வாகீஸ்வர த்வாம் த்வது பஞ்ச வாச —12-

———–

முக்த்தேந்து நிஷ்யந்த விலோப நீயாம் மூர்த்திம் தவா நந்த ஸூதா ப்ரஸூதீம்
விபஸ் சிதஸ் சேதசி பாவ யந்தே வேலா முதாரா மிவ துக்த்த ஸிந்தோ —13-

சுத்த சத்வம் -வெண்மை -உதய சந்திரன் நீராக்கியோ -பாற்கடலோ -என்னும் படி அன்றோ —

————–

மநோ கதம் பஸ்யதி ய சதா த்வாம் மநீஷிணாம் மாநஸ ராஜ ஹம்சம்
ஸ்வயம் புரோபாவ விவாத பாஜ கிங்குர்வதே தஸ்ய கிரோ யதார்ஹம்–14-

—————

அபி க்ஷணார்த்தம் கலயந்தி யே த்வாம் ஆப்லா வயந்தம் விசதைர் மயூகை
வாசம் ப்ரவாஹைர நிவாரிதைஸ்தே மந்தாகி நீம் மந்தயிதும் ஷமந்தே–15-

க்ஷணம் நேரம் கூறு போட்டு சிறிய அளவிலும் த்யானித்தாலும் பேர் அருளை அளிக்கும் தேஜோ மயன் அன்றோ –

————

ஸ்வாமின் பவத் த்யான ஸூதாபிஷேகாத் வஹந்தி தன்யா புலகாநு பந்தம்
அலக்ஷிதே க்வாபி நிரூட மூலம் அங்கேஷ் விவா நந்ததும் அங்கு ரந்தம்–16-

————-

ஸ்வாமின் ப்ரதீச ஹ்ருதயேந தந்யா த்வத் த்யான சந்த்ரோதய வர்த்தமாநம்
அமாந்தமாநந்த பயோதி மந்த பயோபி ரக்ஷணாம் பரிவாஹ யந்தி –17-

————-

ஸ்வைரா நுபாவாஸ் த்வத நீத பாவா சம்ருத்த வீர்யாஸ் த்வத் அநுக்ரஹேண
விபஸ்சிதோ நாத தரந்தி மாயாம் வைஹாரிகீம் மோஹந பிஞ்சிகாம் தே —18-

—————

அடுத்து எட்டு ஸ்லோகங்களால்-19-முதல் -26-வரை திவ்ய மங்கள விக்ரஹ சோபனம் அனுபவம்
32-ஸ்லோகத்தில் இவற்றை தொகுத்து த்யான ஸ்லோகமாக அமைத்து அருள்கிறார் –
திருவடி அனுபவம் -மூன்று ஸ்லோகங்களில் -19-/-20-/-21-ஸ்லோகங்களில் –
திருக் கணைக் கால் அழகு அனுபவம் –22-
ஞான முத்ரா ஜெப மாலை கொண்ட திருக் கைகள் அனுபவம் –23-/-24-
இடது திருக்கையில் புஸ்தகம் -வேதங்கள் -25-ஸ்லோகம்
சுத்த சத்வ வெண்மையான ஆசன பத்மத்தில் அமர்ந்த சுத்த சத்வ ஸ்படிக வெண்மை திருமேனி அனுபவம் -26-ஸ்லோகம்

ப்ராங் நிர்மிதா நாம் தபஸாம் விபாகா ப்ரத்யக்ரநி ச்ரேயஸே சம்பதோ மே
சமேதி ஷீரம்ஸ் தவ பாத பத்மே சங்கல்ப சிந்தாமணய ப்ராணாமா –19-

———–

விலுப்த மூர்த்தந்ய லிபி க்ரா மாணாம் ஸூ ரேந்த்ர சூடா பதே லாலிதா நாம்
த்வத் அங்க்ரி ராஜீவ ரஜஸ் கணாநாம் பூயான் ப்ரசாதோ மயி நாத பூயாத் —20-

————–

பரிஸ் புரந் நூபுர சித்ரா பாநு ப்ரகாச நிர்த் தூத தமோ நுஷங்காம்
பத த்வயீம் தி பரிச்சின்ன மஹேந்த ப்ரபோத ராஜீவ விபாத ஸந்த்யாம் –21-

———–

த்வத் கிங்கரா லங்க ரனோசிதாநாம் த்வ கல் பாந்தர பாலிதா நாம்
மஞ்ஜூ ப்ரணாதம் மணி நூபுரம் தே மஞ்ஜூ ஷிகாம் வேத கிராம் ப்ரதீம —22-

வேத மந்த்ரங்கள் அனைத்தும் உன் நூபுரத்துக்குள் அடங்கி கல்பம் தோறும் அதன் சப்தம் வழியாக வழங்குகிறாய்

————–

சஞ்சிந்தயாமி ப்ரதிபாத சாஸ்தான் சந்துஷயந்தம் சமய ப்ரதீபாந்
விஜ் ஞான கல்ப த்ரும பல்லவாபம் வ்யாக்யான முத்ரா மதுரம் கரம் தே -23-

———————-

சித்தே கரோமி ஸ்புரி தாஷமாலம் சவ்யே தரம் நாத கரம் த்வதீயம்
ஜ்ஞான அம்ருத ஓதஞ்சநலம் படா நாம் லீலா கடீ யந்த்ர மிவாஸ்ரிதாநாம் –24-

—————–

ப்ரபோத ஸிந்தோரருணை ப்ரகாசை ப்ரவாள ஸங்காத மிவோத் வஹந்தம்
விபாவயே தேவ ச புஸ்தகம் தே வாமம் கரம் தக்ஷிண மாஸ்ரிதாநாம் –25-

—————

தமாம்ஸி பித்த்வா விசதைர் மயூகை சம்ப்ரீணயந்தம் விதுஷஸ் சகோரான்
நிசாமயே த்வாம் நவ புண்டரீக சரத்கநே சந்த்ரமிவ ஸ்புரந்தம் –26-

அடியார்கள் அஞ்ஞானங்களை அறவே போக்கி அருளுகின்றாயே–
பாற் கடல் போன்ற வெள்ளை ஆசன பத்மத்தில் அமர்ந்த உனது உனதே தேஜஸ் காந்தியாலேயே

———–

திசந்து மே தேவ சதா த்வதீயா தயா தரங்கா நுசார கடாக்ஷ
ஸ்ரோத்ரேஷூ பும்ஸாம் அம்ருதம் ஷரந்தீம் சரஸ்வதீம் சமஸ்ரித காமதேநும் —27-

————–

விசேஷ வித் பாரிஷதேஷூ நாத விதக்த்த கோஷ்டீ சமாரங்கணேஷூ
ஜிகீஷதோ மே கவி தார்க்கி கேந்த்ராந் ஜிஹ்வாக்ர ஸிம்ஹாஸந மப்யு பேயோ —28-

அடியேன் நா நுனியில் இருந்து அருளி தற்க சமணர் சூது செய்யும் வாதியார்
வாதங்களை வெல்ல அருள் புரிகிறாய் –

—————-

த்வாம் சிந்தயன் த்வன்மயதாம் ப்ரபந்ந த்வா முத்க்ருணந் சப்தமயேந தாம்நா
ஸ்வாமிந் சமா ஜேஷூ சமேதிஷீய ஸ்வச் சந்த வாதாஹவ பத்த ஸூர –29-

புறச்சமயிகள் தர்க்க வாதங்களை வெல்லும் படி அருள்கிறாய் –

————

நாநாவிதா நாமகதி கலா நாம் ந சாபி தீர்த்தேஷூ க்ருதாவதார
த்ருவம் தவா நாத பரிக்ர ஹாயா நவம் நவம் பாத்ரமஹம் தயாயா –30-

அஹம் நாநா விதாநம் அகதி — பல வித கலைகளை கற்றேன் அல்லேன்
தீர்த்தேஷூ ச ந அபி க்ருத அவதாரா —ஆச்சார்யர்களை அடி பணிந்து கற்றேனும் அல்லேன்
அநந்த பரிக்ரஹயா தவ தயயா நவம் நவம் பாத்ரம் த்ருவம் —அடியேன் எனது தயை கருணைக்கு உற்ற பாத்ரம்-
புகல் ஒன்றும் இல்லாத நீசனேன் நிறை ஒன்றும் இல்லாதவன் –

—————-

அகம்பநீ யாந்யப நீதி பேதை அலங்க்ரு ஷீரந் ஹ்ருதயம் மதீயம்
சங்கா களங்காபகமோஜ் ஜ்வலாநி தத்த்வாநி சம்யஞ்சி தவ ப்ரஸாதாத் –31-

உனது பேர் அருளால் அடியேன் மனத்தில் உள்ள துர் ஞானங்கள் -பாஹ்ய குத்ருஷ்டிகள் அள்ளி தெளித்தவை -போக்கி
யாதாம்யா தாத்பர்ய ஞானம் தெளிவு பெரும் படி அருள்வாய் –

————–

வ்யாக்யா முத்ராம் கர சரசிஜை புஸ்தகம் சங்க சக்ரே பிப்ரத் பிந்ந ஸ்படிக ருசிரே புண்டரீக நிஷண்ண
அம்லாந ஸ்ரீரம்ருத விசதை ரம்ஸூபி ப்லாவயந் மாம் ஆவீர் பூயாதநக மஹிமா மாநசே வாகதீச –32-

த்யான ஸ்லோகம் –இது –மனசுக்குள் வைத்து கொள்ள வர்ணனை —
வ்யாக்யா முத்ராம்-வ்யாக்யானம் -உபதேச முத்திரை –அர்த்தங்களை நமக்கு புரிய வைக்க -ஞான முத்திரை —
ரத்ன கல்லை நன்றாக தேர்ந்து தங்கத்துக்குள் பதிக்க –
பூ தொடுப்பார் -போலெ -கல்விக் கடல் அவன் -அவற்றுள் உள்ள ரத்னம் நமக்கு ஏற்றபடி அளிக்க
கர சரசிஜை -தாமரை போன்ற திருக்கரங்கள் -வர்ணம் -நாற்றம் -மென்மை-இத்யாதிகளை சத்ருசம் -சூர்யன் உதிக்க மலரும் –
பால சூர்யர்களை பார்த்து நம் பாக்கள் கேட்டு அறிய வந்தார்கள் என்று மலருவான் அன்றோ —
புஸ்தகம் சங்க சக்ரே–நான்கு திருக்கரங்கள் –ஸூதர்சனர் -அஞ்ஞானம் போக்கி –
சங்க தாழ்வான -வெளுத்த -அறிவுகளை கொடுத்து அளிக்க
வேத கடல் – புஸ்தகம் இடது திருக்கையில் வைத்து –
உரு மீன் வரும் அளவும் காத்து இருக்கும் கொக்கு போலே நமக்கு வேண்டியவற்றை அளிப்பான்
ஞான முத்திரை கொண்டு -புள்ளு பிள்ளைக்கு இறை தேடும் புள்ளம் பூதம் குடி தானே / பிப்ரத் –இவற்றைத் தாங்கி
பிந்ந ஸ்படிக ருசிரே–ஸ்படிகம் உடைத்தால் போல சுத்த சத்வ திரு மேனி
புண்டரீக நிஷண்ண –தாமரைக்கு கண்கள் கடாக்ஷம் ஒன்றாலே –செங்கண் சிறு சிறிதே –விழித்து / தாமரையில் அமர்ந்தும் –
அம்லாந ஸ்ரீரம்ருத விசதை ரம்ஸூபி ப்லாவயந் மாம் –
அம்ருத கடாக்ஷம் -அனுக்ரஹம் தேன்- தோய்த்து -அடியேனை -சருகாய் உள்ள நம்மை –
ஆவீர் பூயாதநக மஹிமா மாநசே வாகதீச –ஞானம் வளர –
அநக மஹிமை குற்றம் இல்லாத மஹிமை –உண்டே -தன் பேறாக-நிர்ஹேதுகமாக –
வித்வான் ஸர்வத்ர பூஜ்யதே/ பிச்சை புகினும் கற்கை நன்றே–ஸ்ரீ ஹயக்ரீவ பெருமாள் இடம்–
ஆதி பகவான் பிச்சை கேட்டு பெற வேண்டுமே
தம்மையே ஓக்க அருள் செய்வான் -கற்க கசடற கற்ற பின் நிற்க அதற்கு தக-
திவ்ய மங்கள விக்ரஹத்துடன் தானே அடியேன் நெஞ்சில் திகழட்டும் —

—————–

வாகர்த்த சித்தி ஹேதோ படத ஹயக்ரீவ சம்ஸ்துதிம் பக்த்யா
கவி தார்க்கிக கேஸரிணா வேங்கட நாதேந விரசிதா மேதாம் –33-

பக்தி பாவத்துடன் இந்த ஸ்தோத்ரம் அப்யசிக்குமவர்கள் வாக் சாதுர்யமும் உள்ளுறை வேதாந்த உள்ளுறை
யாதாம்யா -தத்வ த்ரய ஞானமும் பெறுவார்கள் –
வெள்ளைப் பரிமுகர் தேசிகரை விரகால் அடியோம் –உள்ளத்தெழுதியது ஓலையில் இத்தனம்
யாம் இதர்க்கென்–ஸ்ரீ ரஹஸ்ய த்ரய சாரம் –
என்னைக் கொண்டு தானே இதனை பாடுவித்தான் –

——————

இதி ஹயக்ரீவ ஸ்தோத்ரம் சம்பூர்ணம் –

கவி தார்க்கிக ஸிம்ஹாய கல்யாண குண சாலிநே
ஸ்ரீமதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம –

————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேதாந்த தேசிகன் சுவாமி திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ ந்யாஸ திலகம் —

July 7, 2017

ஸ்ரீ மான் வேங்கட நாதார்ய கவி தார்க்கிக கேஸரீ -வேதாந்தாசார்ய வர்யோ மே சந்நி தத்தாம் சதா ஹ்ருதி —

திலகம் போன்ற அழகான பிரபத்தி-அபய முத்திரை காட்டி அஞ்சேல் -என்று அருளிச் செய்யும் ஸ்ரீ ரெங்க நாதன் திருவடிகளில் சரண் அடைந்து அருளிச் செய்கிறார் –
முதல் -22-ஸ்லோகங்களில் -பிரபத்தி பற்றியும் -அடுத்த -10-ஸ்லோகங்களில் பிரபன்னன் பற்றியும் –
அநந்யார்ஹத்வ ப்ரீதி காரித கைங்கர்யம் -ஒன்றுமே பரம புருஷார்த்தம் என்பதையும் -அருளிச் செய்கிறார் –
ஸ்வாமி திருக் குமாரர் -ஸ்ரீ குமார வரதாச்சார்யர் -இந்த ஸ்தோத்ர கிரந்தம் ஒன்றுக்குமே முழு வியாக்யானம் அருளிச் செய்துள்ளார்

குருப்ய ஸ்தத் குருப்யஸ் ஸ நமோ வாக மதீமஹே –வ்ருணீமஹே ஸ தத் ராத்யவ் தம்பதீ ஜகதாம் பதீ—1-

ஸ்ரீ லஷ்மி நாதன் -குரு பரம்பரை முதல் இடம் விரும்பி அடைந்தான் அன்றோ –

ப்ராய ப்ரபதநே பும்ஸாம் பவ்ந புந்யம் நிவாரயந் –ஹஸ்த ஸ்ரீ ரெங்க பர்த்துர் மாம் அவ்யாத பய முத்ரித–2-

உனது அடிகள் அடைகின்றேன் என்று ஒரு கால் உரைத்த வாறே அமையும் இனி என்பவர் போல் அஞ்சல் எனக் கரம் வைத்து –அடைக்கலப் பத்து
நிரதிசய ஆனந்தம் அளித்த பின்பும் மீண்டும் பிரபத்தி செய்தால் இன்னும் தர ஒன்றும் இல்லையே என்று அன்றோ திரு உள்ளம் மருகுவான் –

அநா நேர்நி ஸீம்நோ துரித ஜலதேர் யந்நிருபமம் –விது பிராயச்சித்தம் யது ரகு துரீணாசய வித
ததாரம்பே தஸ்யா கிரமவததாநேந மனஸா ப்ரபத்யே தாமேகாம் ஸ்ரியமகில நாதஸ்ய மஹிஷீம்—-3-

மஹேந்த்ராக்நா விஷ்ணு ப்ரப்ருதிஷூ மஹத்த்வ ப்ரப்ருதிவத் பிரபத்தவ்யே தத்தவே பரிணமித வைசிஷ்ட்ய விபவாம்
அத்ருஷ்யத்வம் தூத்வா கமிதுரபி கம்யத்வ ஜனநீம் ஸ் ரீயம் சீதா பாங்கா மஹம சரணோ யாமி சரணம் —4-

மஹேந்த்ரனுக்கு யாகம் செய்யும் பொழுது மஹா இந்திரன் சேர்ந்தே செய்கிறோம் -பிராட்டிக்கு பெருமானுக்கும் சேர்ந்தே பிரபத்தி –
குணங்களையும் குணியையும் பிரிக்க முடியாதே -நாம் செய்யும் பாபக் குவியலை போக்க பிரபத்தி ஒன்றே பிராயச்சித்தம்
ஸ்ரீ ராம கிருஷ்ணாதி திரு அவதாரங்கள் மூலமும் பூர்வாச்சார்யார்கள் ஸ்ரீ ஸூ க்திகளாலும் பிராட்டி புருஷாகாரமாக செய்து அருளுவதை உணர்கிறோம்
ஸ்ரீ லஷ்மி தந்திரம் –பிராயச்சித்த பிரசங்கே து சர்வ பாப ஸமுத்பவே மாம் ஏகம் தேவ தேவஸ்ய மஹிஷிம் சரணம் ஸ்ராயத் –
ஸ்வாதந்த்ரனை நேராக பற்றக் கூடாதே -புருஷகார பிரபத்தி செய்த பின்பே அவன் இடம் பிரபத்தி -ஸ்ரீ கத்யத்திலும் அருளிச் செய்தார் அன்றோ –

ஸ்வத ஸித்த ஸ்ரீ மாநமித குண பூமா கருணயா விதாய ப்ரஹ்மாதீந் விதரதி நிஜா தேசமபி ய
பிரபத்த்யா சாஷாத் வா பஜந சிரஸா வா அபி ஸூலபம் முமுஷூர்த்தே வேசம் தமஹமதி கச்சாமி சரணம் –5-

ப்ருந்தாநி ய ஸ்வ வசயன் வ்ரஜ ஸூந்தரீணாம் ப்ருந்தா வநாந்தர புவாம் ஸூலபோ பபூவ
ஸ்ரீ மாந சேஷ ஜன சங்க்ரஹணாய ஸேதே ரங்கே புஜங்க சயநே ஸ மஹா புஜங்க –6-

தயா ஸுலப்யம் அடியாகவே நீர்மையினால் வேதங்களை உபகரித்து-நான்முகனையும் படைத்து நாட்டை படை என்று அருளி
தானே விரும்பி -வேண்டித் தேவர் இரக்க -கோப கோபீ வல்லவனாகவும் -ஸ்ரீ கிருஷ்ணாதி திருவதாரங்களிலும்
பின்னானார் வணங்கும் ஜோதியாக அர்ச்சா மூர்த்திகளாகவும் நின்று அருளுகிறான் –

ரங்காஸ் தீர்ண புஜங்க புங்கவ வபுஸ் பர்யங்க வர்யம் கதவ் சர்க்க ஸ்தித்யவசாந கேளி ரசிகவ் தவ் தம்பதீ ந பதீ
நாபீ பங்கஜ சாயிந ஸ்ருதி ஸூகைரந் யோந்ய பத்த ஸ்மிதவ் டிம்பஸ்யாம் புஜ சம்பவஸ்ய வசநைரோந்தத் சதித்யாதிபி –7-

கந கருணா ரஸவ்க பரிதாம் பரிதாப ஹராம் நயந மஹஸ்சடாம் மயி தரங்கய ரங்க பதே
துரித ஹூதாஸந ஸ்புரித துர்த்தம துக்க மஷீ மலிநித விஸ்வ ஸவ்த துரபஹ் நவ வர்ண ஸூதாம் –8-

அவன் திருக்கண் கடாக்ஷம் ஒன்றாலேயே நாம் அநாதி காலம் சேர்த்த பாப குவியலை போக்கிக் கொள்ள முடியும் –

துர்மோசோத் பட கர்ம கோடி நிபிடோ அப்யாதேச வஸ்ய க்ருத–பாஹ்யைர் நைவ விமோஹிதோ அஸ்மி குத்ருஸாம் பஷைர்ந விஷோபித
யோ மாஹாநஸிகோ மஹாந் யதிபதேர் நீதஸ் ஸ தத் பவ்த்ரஜான் ஆசார்யா நிதி ரங்க துர்ய மயி தே ஸ்வல் பாவ சிஷ்டோ பர –9-

அவன் கிருபை அடியாகவே நாம் ஆச்சார்யர் திருவடி சம்பந்தம் பெறுகிறோம் -மோக்ஷ பிரதத்துக்கு இதுவே அவன் செய்து அருளும் முதல் உபகாரம்
ஆச்சார்யர் லக்ஷணங்கள் நியாஸ விம்சதியில் அருளிச் செய்கிறார் –

ஆர்த்தேஷ் வா ஸூபலா ததந்ய விஷயே அப்யுச்சின்ந தேஹாந்தரா-வஹ்ந் யாதேரந பேஷாணாத் தநுப்ருதாம் சத்யாதிவத் வ்யாபி நீ
ஸ்ரீ ரெங்கேஸ்வர யாவதாத்ம நியத த்வத் பாரதந்தர்ய உஸிதா -த்வய்யேவ த்வதுபாய தீரபிஹித ஸ்வ உபாய பாவா அஸ்து மே —10-

பிரபத்தி சர்வாதிகாரம் -கால விளம்பம் இல்லாமல் சரீர அவசானத்திலே -மரணம் அடைந்தால் வைகுந்தம் அளிக்கும் பிரான் –
அப்ஹித ஸ்வ உபாய பாவம் -ஸித்த உபாயம் அன்றோ –

த்வய்யா சார்யைர் விநிஹித பராஸ்தாவக ரங்க நாத த்வத் கைங்கர்ய ப்ரவண மநஸ ஸ்த்வத் குணாஸ்வாத மத்தா
த்வய்யேக கஸ்மின் நபி விஹஜதோ முக்தவத் சாதநத்வம் த்வச் சேஷத்வ ஸ்வரஸ ரசிகா ஸூரயோ மே ஸ்வதந்தாம் –11-

யானும் நீ என் உடைமையும் நீயே என்று அனைத்தையும் சமர்ப்பித்ததே அவன் குண அனுபவத்துக்காகவும்
ப்ரீதி காரித பகவத் கைங்கர்யத்துக்காகவும் தானே
ஆச்சார்யர் நமக்காக உபாய பாவத்தை எரித்துக் கொண்ட பின்பு ஸ்வாதந்தர்யம் கலசாத ததேக பாரதந்த்ரயமே நமக்கு வேண்டியது

கல்ப ஸ்தோமே அப்ய பாஸ்த த்வதிதர கதயோஸ் சக்தி தீ பக்தி பூம்நா-ரங்கேச பிராதி கூல்ய ஷரண பரிணமந் நிர்விகாத அநு கூல்யா
த்ராதாரம் த்வாம பேத்யாச் சரண வரணதோ நாத நிர்விக்ந யந்த த்வந் நிஷிப் தாத்ம ரஷாம் ப்ரதி ரபச ஜூஷ ஸ்வ ப்ரவ்ருத்திம் த்யஜந்தி–12-

பிரபன்னன் -அகிஞ்சன்யம் -கார்ப்பண்யம் -அநந்ய கதித்வம் -அறிந்து கோப்த்ருத்வ வரணம் செய்து மஹா விச்வாஸத்துடன் –
பிரதிகூல்யங்களில் இழியாமல் -அநு கூல்ய சங்கல்பம் கொண்டு மோக்ஷ பிராப்திக்கு -தன்னால் செய்யலாவது ஒன்றும் இல்லை என்று உணர்ந்து
மார்பிலே கை வைத்து உறங்கி அதிகாரி விசேஷணங்களை மட்டும் காட்டுவான் –

த்யக்த உபாய வ்யபாயாம்ஸ்தத் உபய கரணே சத்ரபான் சாநுதாபாந் -பூயோ அபி த்வத் பிரபத்த்யா ப்ரஸமித கலுஷான் ஹந்த சர்வம் சஹஸ்த்வம்
ரங்கிந் ந்யாஸ அந்தரங்க அகில ஜன ஹிததா கோஸர த்வன் நிதேச-ப்ரீதி ப்ராப்த ஸ்வ வர்ணாஸ்ரம ஸூப சரிதான் பாசி தன்யான் அநந்யாந் —13-

சோகாஸ் பதாம்ச மதன ச்ரயதாம் பவாப்தவ் ராகாஸ் பதாம்ஸ சகஜம் ந ருணத்ஸி துக்கம்
நோ சேதமீ ஜகதி ரங்க துரீண பூய ஜோதிஷ்ட போக ரசிகாஸ்தவ ந ஸ்மரேயு –14-

இவ்வாறு பிராதி கூல்யங்களில் இழியாமல் அநு கூல்யங்களையே செய்வதில் உறுதி கொண்டு இருந்தாலும் இருள் தரும் மா
ஞாலத்தில் இந்த பிராகிருத சரீரத்துடன் இருப்பதால் செய்யும் தவறுகளுக்கு –
பரம காருணிகனை க்ஷமை திருக் குணம் காட்டி அருள -பிராயச்சித்த பிரபத்தி செய்து
சம்சார அழுந்தலில் ஆழ்ந்து அவனை மறந்து இருக்காமல் அவன் இடம் உடனே சேர்ந்து சேஷத்வ அனுரூபமாக கைங்கர்யம் செய்ய த்வரிப்பானே-

ஹேதுர்வைதே விமர்ஸே பஜனவதி தரத் கிம் த்வநுஷ்டாந காலே -வேத்ய த்வத் ரூப பேதோ விவித இஹ ஸ தூபாயதாந் யாநபேஷா
ரங்கிந் பிராரப்த பங்காத் பலமதிகமநா வ்ருத்தி ருக்தேஷ்டிவத் ஸ்யாத் -நாநா சப்தாதி பேதாத் ப்ரபதன பஜநே ஸூஸிதே ஸூத்ர காரை —15-

பக்தி யோக நிஷ்டனுக்கு பல வித்யைகள் –குண அனுபவம் மூலம் காட்டி அருளி -பிரபன்னனுக்கு அவன் ஸ்வயம் ஸித்த உபாயம் என்று உணர்ந்து
திருவடிகளில் அநந்யார்ஹ சரணம் அடைவது ஒன்றாலே மோக்ஷம் அளிக்கும் பிரான் அன்றோ
-வேதன த்யான உபாசன –ஞான தர்சன பிராப்தி அவஸ்தைகள் பக்திக்கு
பிரபன்னனுக்கு -சரணம் ஒன்றே என்பதை சரணாகதி பிரபதனம் தியாகம் ஆத்ம நிஷேபனம் ந்யாஸ -சப்தங்களால் சொல்லுமே
நாநா சப்தாதி பேதாத் –3–3–56-ஸ்ரீ ப்ரஹ்ம ஸூ த்ரம் –

பக்தவ் ரங்க பதே யதா கலு பசச் சாகாதிவத் வேதந த்யான உபாசன தர்சனாதி வசசா மிச்சந்த்ய பிந்நார்த்ததாம்
வ்யக்த்யைக்யாச் சரணா கதி ப்ரபதன த்யாகாத்ம நிக்ஷேபண ந்யாசாத் யேஷூ ததைவ தந்த்ர நிபுணை பர்யாயதா ஸ்மர்யதே— 16-

விச்வாஸாயாசா பூம் நோர்ந் யஸந பஜநயோர் கௌரவே கோ விசேஷ -தத் சத் பாவே அபி தர்மாந்தர இவ கடதே கர்த்ரு பேதாத் விகல்ப
தத்பேதோ ரங்க சாயின் நநிதர கதிதா த்யுத்த சோகாதி ரேகாத் -ஸத்வித்யா தவ் விகல்பஸ் த்வபிமதி பிதயா தேந தத்ரைக ராஸ்யம்—17-

த்ருவ மதிக்ருதி பேதாத் கர்மவத் ரெங்கசாயின் பலதி பலமநேகம் த்வத் பதே பக்தி ரேகா
சரண வரண வாணீ சர்வ ஹேதுஸ் ததா அசவ் க்ருபண பஜன நிஷ்டா புத்தி தவ்ர்ப் பல்ய காஷ்டா –18-

பக்தி யோகத்துக்கு சக்தன் இல்லாதவனுக்கு பிரபத்தி -அது அகங்கார கர்ப்பம் என்பதால் இதுவே பிராப்தி சக்தி உள்ளவனுக்கும்-

கர்த்தவ்யம் சக்ருதேவ ஹந்த கலுஷம் சர்வம் ததோ நஸ்யதி -ப்ரஹமே சாதி ஸூ துர்லபம் பதமபி ப்ராப்யம் மயா த்ராகிதி
விசுவாஸ பிரதிபந்தி சிந்த நமிதம் பர்யஸ்யதி ந்யஸ்ததாம் ரங்கா தீச ரமா பதித்வ ஸூபகம் நாராயணத்வம் தவ –19-

நாம் செய்த பாபக் கூட்டங்களை அனுசந்தித்தாலும் -ப்ரஹ்மாதிகளாலும் அடைய முடியாத பேற்றின் கனத்தை அனுசந்தித்தாலும் மஹா விச்வாஸம்
பெறுவதில் சிரமம் அறிவோம் -அவாப்த ஸமஸ்த காமன் நிராங்குச ஸ்வ தந்த்ரன் அன்றோ அவனும் –
வசிஷ்டர் சண்டாளன் விபாகம் இல்லாமல் அனைத்து சேதனர்களும் பிரபதிக்கு அதிகாரிகள் ஆவது எவ்வாறு என்றும் சங்கை வருமே –
ஸ்ரீமன் நாராயணன் திருநாமம் அனுசந்தித்தாலே இந்த சங்கைகள் எல்லாம் தீருமே —
பிராட்டியுடைய புருஷகாரத்வமும் -/ ஸ்வாமித்வம் -சொத்து -நாம் என்ற அனுசந்தானத்தாலும் /
நான் உன்னை அன்றி இலேன் நீயும் என்னை யன்றி இல்லையே / உன் தன்னோடு உறவேல் நமக்கு இங்கே ஒழிக்க ஒழியாது
எந்த வியாஜத்தால் நம்மை கொள்வோம் என்று எதிர் சூழல் புக்கு திரியும் அவன் அன்றோ / யானைக்கு அன்று அருளை ஈந்த ஆதி மூலம் அன்றோ –
இசைவித்து நம்மை தாளிணை கீழ் இருத்தும் அம்மான் -அவாப்த ஸமஸ்த காமன் -சரணம் என்பதே அதிகாரி விசேஷணம் அன்றோ
அவன் திரு உள்ளம் என்றுமே நம்மை கை கொள்ள -அது கார்ய கரம் ஆவது நம் உள்ளத்தில் நினைவு அவன் பக்கம் விலக்காமல் இருப்பதுவே —
தன் பேறாக அன்றோ -முகில் வண்ணன் -விபாகம் அன்றி அனைவரையும் -சரணாகதர்களைக் கைக் கொள்ளுகிறான்-

தீ கர்ம பக்தி ரஹிதஸ்ய கதாப்ய சக்த்யா ரங்கேச பாவ கலுஷ ப்ரணதி த்வயோக்தே
மன்யே பலம் பிரபல துஷ்க்ருத சாலிநோ மே த்வன் மூல தேசிக கடாக்ஷ நிபாத மாத்யம் —20-

கர்மா குவியலில் எழுந்து உள்ள சேதனனுக்கு கர்மா ஞான பக்தி யோகங்களில் இழிய முடியாத ஆரம்ப விரோதிகளை ஆச்சார்யர்
தம் கடாக்ஷம் ஒன்றாலயே போக்கி அருளி பிரபத்தி மார்க்கமும் காட்டி அருளி மோக்ஷமார்க்கமும் காட்டி அருளுகிறார் –
ஞானம் அனுஷ்டானம் உள்ள குருவை அடைந்தக்கால் திரு மகள் கொழுநன் –தானே வைகுந்தம் தரும் –

அந்தோ அநந்த கிரஹண வசகோ யாதி ரெங்கேச யத்வத் பங்குர் நவ்கா குஹர நிஹிதோ நீயதே நாவிகேந
புங்க்தே போகாநவிதித ந்ருப சேவகஸ்யார் பகாதி த்வத் ஸம்ப்ராப்தவ் ப்ரபவதி ததா தேசிகோ மே தயாளு —21-

ஆச்சார்யர் செய்து அருளும் உபகாரங்களை விளக்கி அருள மூன்று உதாரணங்கள் காட்டி அருளுகிறார்
கண் இல்லாத ஒருவனை கண் உள்ள ஒருவன் நடத்திச் செல்வது போலேயும்-ஞானக் கண் இல்லாத நம்மை ஞானம் உள்ள ஆச்சார்யர்
பிரபத்தி மார்க்கங்களை காட்டி அருளி -முடவன் ஒருவனை- அக்கரை நடாத்தி செல்லும் -நம்மால் முயலவும் முடியாமல் இருக்க –
தானே தூக்கி நாவாயில் அமர்த்தி கூட்டிச் செல்வது போலேயும் ராஜ சேவகன் பெரும் பரிசு பொருள்களை அவன் குடும்பத்தார் அனுபவிப்பது போலேயும் –
இந்த ஸ்லோகத்தை ரஹஸ்ய த்ரய சாரத்திலும் எடுத்துக் காட்டி அருளுகிறார் –

உக்த்யா தனஞ்ஜய விபீஷண லஷ்யயா தே ப்ரத்யாய்ய லஷ்மண முநே பவத விதீர்ணம்
ஸ்ருத்வா வரம் ததநுபந்த மதாவலிப்தே நித்யம் ப்ரஸீத பகவன் மயி ரங்க நாத –22-

பிரபத்தி செய்த அனந்தரம் -பிரக்ருதியில் இருப்பதால் விரக்தியும் அவன் குணங்களை இங்கேயே இருந்து அனுசந்தித்து பேர் ஆனந்தமும்
மாறி மாறி உண்டாகுமே-இந்த எண்ணங்களை தம் திரு உள்ளத்துக்கு அறிவிக்கும் முகமாக நமக்கும் அருளிச் செய்கிறார் மேலே –

சக்ருதபி விநநாநாம் சர்வதே சர்வதேஹிநி உபநிஷதபிதேயே பாகதேயே விதேயே
விரமதி ந கதா சின் மோஹதோ ஹா ஹதோ அஹம் விஷம விஷய சிந்தா மேதுரா மே துராசா —23-

நின்றவா நில்லா நெஞ்சு அன்றோ -சரம ஸ்லோகங்களில் அவன் அருளிச் செய்த வற்றை கேட்டேயும்
இந்திரிய பயன்களால் ஆழ்வார் திருவேங்கடமுடையான் இடம் சரண் அடைந்த உடன் அருளிச் செய்தால் போலேயும்
அஷ்ட புஜ அஷ்டகத்தில் ஸ்வாமி அருளிச் செய்தால் போலேயும் விரக்தியும் பேர் ஆனந்தமும் மாறி மாறி வரும் அன்றோ -இங்கே –

யாவஜ் ஜீவம் ஜகதி நியதம் தேஹ யாத்ரா பவித்ரீ த்யக்தா சர்வே த்ரி சதுர திந க்லாந போகா நபோகா
தத்தே ரங்கீ நிஜமபி பதம் தேசிகா தேச காங்ஷீ கிம் தே சிந்தே பரமபிமதம் கித்யஸே யத் புனஸ்த்வம் —24-

ஆச்சார்யர் மூலம் பெற்ற சரணாகதனை நழுவ விட மாட்டான் அன்றோ -இருக்கும் நாள்களில் அனுபவிக்கும் கர்மா அனுகுணமான ஸூக துக்கங்களால்
கவலை கொள்ளாமல் பகவத் கைங்கரிய ரூபமாகவே இவற்றை அனுபவித்து மோக்ஷ அனுபவம் வரும் நாள் என்றோ என்று இருக்கக் கடவன் –

அபி முஹுரபரா தைரப் ராகம்ப்யா நுகம்பே வஹதி மஹதி யோக ஷேம ப்ருந்தம் முகுந்தே
மத கலுஷ மநீஷா வஜ்ர லேபாவலேபாந் அநுகுணயிதுமீஹே ந ப்ரபூந ப்ரபூதாந் –25-

மாதர்பாரதி முஞ்ச மானுஷ சடூன் ஹே தேஹ லப்தைரலம் லுப்த த்வார துராசிகா பரிபவைச தோஷம் ஜூஷேத மந
வாச ஸீமநி ரங்க தாமநி மஹாநந்தோந் நமத்பூமிநி ஸ்வாமி நியாத்மனி வேங்கடேஸ்வர கவே ஸ்வே நார்ப்பிதோயம் பர –26-

தாஸ்யம் லாஸ்ய வதா அநு மத்ய மனஸா ரங்கேஸ்வர த்வத் பதே நித்யம் கிம் கரவாண்யகம் ந து புன குர்யாம் கதர் யாஸ்ரயாம்
மீலச் சஷூஷி வேல்லித ப்ருணி முஹுர்தத்வா வமாநாஷரே பீமே கஸ்யசி தட்ய கஸ்ய வதநே பிஷாவிலஷாம் த்ருசம் —27-

த்வய்யேகாஞ்ஜலி கிங்கரே தநுப்ருதாம் நிர் வ்யாஜ சர்வம் சஹே கல்யாணத்மநி ரங்க நாத கமலா காந்தே முகுந்தே ஸ்திதே
ஸ்வாமிந் பாஹி தயஸ்வ தேவ குசலின் ஜீவ ப்ரபோ பாவயேதி ஆலாபா நவலேபி ஷூ பிரலபிதும் ஜிஹ்ரேதி ஜிஹ்வா மம–28-

த்வயி சாதி ரங்க துர்ய சரணாகத காமதுகே நிருபதிக ப்ரவாஹ கருணா பரிணாஹவதி
பரிமித தேச கால பலதான் பல தாக்ருதிக்காந் கதமதி குர்மஹே விதி சிவ ப்ரமுகாந முகாந் –29-

ஓமித்யப்பு பகம்ய ரங்க ந்ருபதே அந்நயோஸிதாம் சேஷதாம் -ஸ்வாதந்தர்யாதி மயீமபோஹ்ய மஹதீ மாத்யாம வித்யாஸ்திதாம்
நித்யா சங்க்ய விஸீமாபூதி குண யோர்யாயா மநாயாஸத சேவா சம்பத மிந்திரேச யுவயோரை காந்தி காத் யந்தி கீம் —30-

1–பரம புருஷார்த்தமே ப்ரீதி காரித கைங்கர்யம் -பிராட்டிக்கு அவனுக்கும் செய்வதுவே /2—அப்ருத்க் சித்தம் என்று உணராமல் இருப்பதே பரம அஞ்ஞானம் /
3—திவ்ய தம்பதிகள் ஸமஸ்த கல்யாண குணங்களை கொண்ட வைத்த மா நிதி என்ற உணர்வும் /
4–மிதுனத்தில் திருவடிகளில் -நித்ய கைங்கர்யம் நித்ய விபூதியில் செய்து இருப்பதே குறிக்கோள்

ஆச்சார்யாத் ரங்க துர்ய த்வய சமதிகமே லப்த சத்தம் ததாத்வே விஸ்லிஷ்டாஸ் லிஷ்ட பூர்வோத்தர துரித பரம் யாபிதா ரப்த தேஹம்
நீதம் த்வத்கைஸ் த்வயா வா நிரவதிக தயோத்பூத போதாதிரூபம் த்வத் போகைக ஸ்வபோகம் தயிதமநுசரம் த்வத்க்ருதே மாம் குருஷ்வ –31-

ஆச்சார்யர் மூலம் ஸமாச்ரயணம் செய்யப் பெற்று – ரஹஸ்ய த்ரய ஞானம் பெற்று / சஞ்சித கர்மாக்கள் தொலைய பெற்று
மேலே அறியாமல் செய்யும் கர்ம பலன்களை ஓட்ட விடாமல் பகவான் செய்து அருளி /
பிராரப்த கர்மம் சரீர அவசானத்திலே போக்க்கப் பெற்று -பிரபன்னனை அர்ச்சிராதி மார்க்கம் மூலம்
தன்னுடை சோதிக்கு கூட்டி அருளி -ப்ரீதி காரித கைங்கர்யம் ஏற்றுக் கொண்டு சாயுஜ்யம் அளிக்கிறான் —

விதானம் ரஙகேசா ததிகதவதோ வேங்கட கவே ஸ்புரத் வர்ணம் வக்த்ரே பரிகலயதாம் ந்யாஸ திலகம்
இஹா முத்ராப்யேஷ ப்ரணத ஜன சிந்தாமணி கிரி ஸ்வ பர்யங்கே சேவாம் திசதி பணி பரியங்க ரசிக –32-

இந்த ப்ரீதி காரித கைங்கர்யம் கொண்டு அருளவே ஸ்ரீ ரெங்க நாதன் அர்ச்சா ரூபமாக இங்கும் பல திவ்ய தேசங்களிலும் சேவை சாதித்து அருளுகிறான் –
ஸ்ரீ ரெங்க நாதன் அருளாலேயே பிரபத்தி பற்றி இந்த ந்யாஸ திலகம் தான் அருளிச் செய்ததாக சாதித்து நிகமிக்கிறார் –

இனி ந்யாஸ திலகம் சம்பூர்ணம் —

கவி தார்க்கிக ஸிம்ஹாய கல்யாண குண சாலிநே -ஸ்ரீ மதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம —

——————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேதாந்த தேசிகன் சுவாமி திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ நியாஸ விம்சதி —

July 5, 2017

ஸ்ரீ மான் வேங்கட நாதார்ய கவி தார்க்கிக்க கேஸரீ-வேதாந்தாசார்ய வர்யோ மே சந்நிதத்தாம் சதா ஹ்ருதி —

————

ந்யாஸ தசகம் ந்யாஸ விம்சதி ந்யாஸ திலகம் -ந்யாஸ த்ரய ஸ்தோத்திரங்கள்-

28 -ஸ்லோகங்களுக்குள் இது ஒன்றுக்கும் மட்டும் ஸ்வாமி தேசிகன் வியாக்யானமும் அருளிச் செய்து இதன் முக்யத்வத்தை காட்டி அருளுகிறார் –

தத்வ முக்த கலாபம் இதுக்கும் ஸ்வாமி அருளிச் செய்த வியாக்யானம் உண்டு –

அதிகரண சாராவளி -இதுக்கும் வியாக்யானம் செய்துள்ளார் என்றும் இப்பொழுது இது கிட்ட வில்லை என்றும் சொல்வர்

நிக்ஷேப ரக்ஷை -அடைக்கல பத்து -சரணாகதி தீபிகை
ஸ்தோத்ர பாஷ்யம் -கத்ய பாஷ்யம் -ரஹஸ்ய த்ரய சாரம் -இவற்றிலும்
சரணாகதியைப் பற்றி பலவும் அருளிச் செய்துள்ளார்-

சரணாகதி -தன்னை ப்ரஹ்மத்தின் பொருளாக இருப்பதை நினைத்து அதன் படி நடத்தல்

தத்வம் ஹிதம் புருஷார்த்தங்களை ஆச்சார்யரால் உபதேசிக்கப் பெற்று அடையும் மன நிலையே இது

————-

சித்தம் சத் ஸம்ப்ரதாயே ஸ்திர தியமநகம் ஸ்ரோத்ரியம் ப்ரஹ்ம நிஷ்டம்
சத்வஸ்தம் சத்யவாஸம் சமய நியதயா சாது வ்ருத்த்யா ஸமேதம்
டம்பா ஸூயாதி முக்தம் ஜித விஷயி கணம் தீர்க்க பந்தும் தயாளும்
ஸ்காலித்யே சாஸிதாரம் ஸ்வ பர ஹித பரம் தேசிகம் பூஷ்ணுரீப்சேத் –1-

சத் ஸம்ப்ரதாயே -நல்ல -சத்துக்கள் -ஸ்ம்ப்ரதாயத்திலே
சித்தம் -சித்தி -நிலை பெற்றவனும் -ப்ரஸித்தி வாய்ந்தவனும்
ஸ்திர தியம் -உறுதி கொண்ட மனப்பான்மை கொண்டவனும்
அநகம் –குற்றம் அற்றவனும்
ஸ்ரோத்ரியம் -வேத வேதாந்தங்களைக் கசடறக் கற்று அறிந்தவனும்
ப்ரஹ்ம நிஷ்டம்-பரமாத்மாவிடம் நிலை பெற்றவனும்
சத்வஸ்தம் -ஸத்வ குணத்தில் இருப்பவனும்
சத்யவாஸம் -பேசியத்தைப் பழுது ஆக்காதவனும்
சமய நியதயா -காலம் தவறாத -காலத்துக்கு ஒத்ததான
சாது வ்ருத்த்யா -நல்ல ஒழுக்கத்தோடே -மதக் கொள்கைக்கு ஏற்ற நல்ல நடத்தை யுடையவனும்
ஸமேதம்-கூடியவனும்
டம்பா ஸூ யாதி முக்தம் -டம்பம் அஸூயை போன்ற கெட்ட குணங்கள் இல்லாதவனும்-ஆதி -பிற ஆத்ம கெட்ட குணங்கள் இல்லாதவனும்
ஜித விஷயி கணம் -ஸப் தாதி விஷயங்களில் செல்லும் இயல்புடைய ஐம் புலன்களையும் தனது வசமாக்கிக் கொண்டவனும்
தீர்க்க பந்தும் -மிகப் பெரிய பந்துவாகவும்
தயாளும்-வருந்துவர் இடம் இரக்கம் கொண்டவனும்
ஸ்காலித்யே சாஸிதாரம் -தவறு நேர்ந்தால் கண்டிப்பவனும்
ஸ்வ பர ஹித பரம் -தனக்கும் பிறருக்கும் நன்மையைத் தேடுபவனும்
ஆகிய இந்த 14 குணங்கள் வாய்ந்தவரை
பூஷ்ணுர் –நல்ல நிலையில் இறுக்கப் போகும் சிஷ்யன்
தேசிகம் –ஆச்சார்யனாக
ஈப்சேத் –பெற விரும்ப வேணும்

ஆச்சார்ய லக்ஷணங்கள் -14-அருளிச் செய்கிறார் இதில் –
ஆஸீ நோதி சாஸ்த்ரார்த்தம் -ஸூ யம் ஆச்ரயதே ஆச்சாரயத் -மூன்றும் -ஞானம் ஞானம் அனுஷ்டானம் வாக் சாதுர்யத்தால் சிஷயரை அப்படியே ஆக்கி –
சேர்ப்பார்களை பஷிகளாக்கி ஞான கர்மங்களை சிறகு என்னும் -கடகர்கள்-
கு ரு –கு -இருட்டை தொலைக்கும் – அம் பொன் அரங்கர்க்கும் ஆவிக்கும் அந்தரந்த சம்பந்தம் காட்டி -தடை காட்டி
உம்பர் தெய்வம் என்னும் வாழ்வுக்கு சேர்ந்த நெறி காட்டும்-
சம்சார நிவர்த்தகமான திரு மந்த்ரத்தை நேராக உபதேசிப்பவரே ஆச்சார்யர் –

1–சித்தம் சத் ஸம்ப்ரதாயே–சத் சம்பிரதாய தத்வ த்ரய அர்த்த பஞ்சக -ஞானம் பெற்று
2–ஸ்திரதியம் -அசைக்க முடியாத –புற சமயிகளால் —
3–அநகம் -குற்றம் இல்லாத -க்யாதி லாப பூஜைக்காக இல்லாமல் தம் பேறாக –
ஏற்ற காலங்கள் எதிர் பொங்க மீது அளிக்கும் –பாலை சொரியும் வள்ளல் பெரும் பசுக்கள் -ஆற்றப் படைத்தான் –
கூரத் தாழ்வான போல்வார் இந்த பசுக்களை -கொண்ட நம் ராமானுஜர் – மகன் -யதிராஜ சம்பத்குமாரார் -செல்ல -செல்வப் பிள்ளை /
தாய்க்கும் தம்பிக்கும் மகனுக்கும் இவருக்கும் இவர் அடி பணிந்தார்க்கும் உண்டே இந்த லக்ஷணங்கள் –
4–ஸ்ரோத்ரியம் ப்ரஹ்ம நிஷ்டம்–இது ஒன்றே நிஷ்டை
5–சத்வஸ்தம் –சத்வ குணத்திலே நிலை நின்று
6–சத்யவாஸம்-உண்மையே பேசி -முன்னோர் மொழிந்த முறை தப்பாமல் கேட்டு -பின்னோர்ந்து –தன நெஞ்சில் தோற்றியதை சொல்லி
இது பூர்வர் சொன்னார் என்று உலகை மயக்குவார்கள் பலர் –
ஆச்சார்யர் சிஷ்யனை தன் ஆச்சார்யனுக்கு சிஷ்யன் -என்ற நினைவால் –
ஆச்சார்யர் திருவடிகளே சரணம் சொல்லி -வெள்ளத்தில் தப்பி -ஆச்சார்யர் தன் திருவடிகளே சரணம் என்று ஆழ்ந்த கதை –
7– சமய நியதயா –அனுஷ்டானம் விடாமல்
8—சாது வ்ருத்த்யா ஸமேதம்
9–டம்பா ஸூ யாதி முக்தம் -டாம்பீகம் அ ஸூ யை இத்யாதிகள் இல்லாமல் – சரீரம் அர்த்தம் பிராணன் அனைத்தையும் சிஷ்யன் சமர்ப்பித்து
சிஷ்யன் ஆச்சார்யர் தேக ரக்ஷணம் -சிஷ்யன் ஆத்ம ரக்ஷணம் ஆச்சார்யர் கடமை /சிஷ்யன் ஆசார்யன் சொத்தை வைத்து தன் தேக ரக்ஷணம்
வாங்கிக் கொள்ள கூடாது -கொடுக்க கூடாது -நினைவுடன் கொடுக்காமல் அவர் சொத்தை திரும்பி கொடுக்கிறோம் -தன்னது என்று அபிமானிக்க கூடாதே
கொள்ளில் மிடியனாம் -கொடுக்கில் கள்ளனாம் –
10–ஜித விஷயி கணம்
11 —தீர்க்க பந்தும்-எற்றைக்கும் ஏழு ஏழு பிறவிக்கும்
12–தயாளும் –கிருபை பொழிந்து- கட்டாயம் தரையில் பாட்டம் மழை பொழிந்தால் போலே பகவத் விஷயம் உபதேசித்து -சஜாதீயர் –
அனுஷ்ட்டித்தும் உபதேசித்தும் காட்டி அருளுவார் -மோக்ஷ பந்த இரண்டும் பகவான் ஹேது -ஆச்சார்யர் மோக்ஷ ஏக ஹேது –
13–ஸ்காலித்யே சாஸிதாரம்–சம்சாரத்தில் திருத்தி பணி கொண்டு
14—ஸ்வ பர ஹித பரம்
தேசிகம் பூஷ்ணுரீப்சேத் –மார்க்கம் திசைதி தேசிகம் -கை காட்டும்

14-லக்ஷணங்கள்
ஆச்சார்ய சம்பந்தம் இருப்பில் ஆத்ம குணங்கள் வந்து சேரும் பகவத் சம்பந்தமும் வரும் –
ஆச்சார்யர் பிரியம் சிஷ்யன் செய்ய வேண்டும் –  சிஷ்யன் ஹிதம் ஆச்சார்யர் பார்க்க வேண்டும் – ஈஸ்வரனை கொண்டு ஆசார்யன் நடத்த கடவன்
பெருமாள் நடுவில் இருந்து ஆச்சார்யருக்கு ஹிதமும் சிஷ்யனுக்கு பிரியமும் -நடத்தி அருளுவான் —

ஸத் சம்பிரதாயத்தில் ஸித்தம் -ஸத் சம்பிரதாயத்தில் ஸ்திர தியம் -திட அத்யவசாயம்

அநகம்–
அகம் என்பது பாவம் துக்கம் வியசனம் -ஆபத்து -அஜாக்கிரதை –காம க்ரோதங்களால் வரும் வியசனம்
இவை அனைத்தையும் விலக்கியவன் அநகம் உள்ளவன்

ப்ரஹ்ம நிஷ்டை -உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணனே என்று இருக்கும் நிலை

ஸத்யம் பூத ஹிதம் ப்ரோக்தம் -ஸத்யமும் பிரியமும் கலந்த பேச்சு

தர்மஞ்ஞய ஸமயே ப்ரமாணம் –ஆச்சார்யர் அனுஷ்டானத்தையே தழுவி இருத்தலே ஸமய நியதம்

தீர்க்க பந்து -உலகு எல்லாமே உருவாகக் கொண்டவன்
ஸர்வஸ் தரது துர்காணி ஸர்வோ பத்ராணி பஸ்யது-ஸ்ரீ வியாஸர் -அனைவர் துக்கங்களையும் போக்கி ஸர்வ ஸூஹ்ருத்தாக இருக்க வேண்டும்

பயன் அன்றாகிலும் பாங்கு அல்லராகிலும் திருத்திப் பணி கொள்ள வேண்டுமே

——————

அஞ்ஞான த்வாந்த ரோதா தக பரிஹரணாத் ஆத்ம சாம்யாவஹத்வாத்
ஜென்ம ப்ரத்வம்ஸி ஜென்ம ப்ரத கரிமதயா திவ்ய த்ருஷ்ட்டி பிரபாவாத்
நிஷ் ப்ரத்யூஹா ந்ருசம்ஸ்யான் நியதி ரஸதயா நித்ய சேஷித்வ யோகாத்
ஆச்சார்ய சத் ப்ரப் ரத யுபகரண தியா தேவவத் ஸ்யாது பாஸ்ய–2-

அஞ்ஞான த்வாந்த ரோதாத் -அறிவின்மை என்னும் அருளை அகற்றுவதாலும்
அக பரிஹரணாத் -கீழ் ஸ்லோகத்தில் காட்டிய பாபம் துக்கம் வியசனம் -மூன்றுவிதமான அகத்தை நீக்குவதாலும்
ஆத்ம சாம்யாவஹத்வாத்–பிறரையும் தன்னைப் போலவே ஆக்குவதாலும்
ஜென்ம ப்ரத்வம்ஸி ஜென்ம -மறு பிறவியைத் தீர்க்கும் வித்யா ஜென்மத்தை
ப்ரத -கொடுத்து அருளுபவர் என்கிற
கரிமதயா -பெருமையாலும்
திவ்ய த்ருஷ்ட்டி பிரபாவாத்–ஞானக் கண்ணின் மஹிமையாலும்
நிஷ் ப்ரத்யூஹா ஆந்ருசம்ஸ்யான் -ஆந்ரு சம்ஸ்யம் -பிறருக்குத் தீங்கு செய்யாது இருப்பதையே தடை இன்றி நடத்தப்படுவதாலும்
நியதி ரஸ தயா -என்றும் மாறாத சுவை பொருந்தியதாலும்
நித்ய சேஷித்வ யோகாத்-ஒழிக்க முடியாத சேஷித்வம் கூடி இருப்பதாலும்
ஆச்சார்ய –ஆச்சார்யன்
சத் -ஸத்துக்களால்
அப்ரத் யுபகரண தியா -அவன் செய்து அருளும் உபகாரத்துக்கு சத்ருசமாக செய்ய ப்ரத்யுபகாரம் செய்ய முடியாது என்ற எண்ணம் கொண்டவனும்
தேவவத் -தேவனைப் போல்
ஸ்யாத் உபாஸ்ய-உபாஸிக்கத் தக்கவனாக இருக்க வேணும் -உபாஸிக்க வேணும் என்றபடி –

சிஷ்யன் ஆச்சார்யரையே பகவானாக கொள்ள வேண்டிய -8-காரணங்களை அருளிச் செய்கிறார் இதில் –
பிரதியுபகாரம் செய்ய நான்கு விபூதிகளும் இரண்டு பர ப்ரஹ்மமும் வேண்டுமே

ஆச்சார்ய தேவோ பவ -ஸ்ருதி
மயர்வற மதிநலம் அருளுபவர் -நிர்ஹேதுகமாக அஞ்ஞான கந்தமே இல்லாதபடி -அறியாக் காலத்துள்ளே -அறியாதது அறிவித்த அத்தன்
நாட்டுக்கு இருள் செக நான்மறை அந்தாதி நடை விளங்கவே
வேதம் அரண்மனைக்கு விளக்கு போன்ற அருளிச் செயல்கள்
ஸாஸ்த்ர பாணிநா ஸ்வயமேவ வந்து அவதரிக்கிறான் அன்றோ
பாபம் பிரஞ்ஞாம் நாசயதி -அஞ்ஞானத்துக்கு மூல காரணம் தொல்லைப் பழ வினையே -அவற்றை முதலறித்து
தாபத்ரயங்களைப் போக்கி அருளி -செடியாய வல் வினைகளைத் தீர்க்கும் திருமால் போலவே பண்டை வல்வினை பாற்றி அருளுகிறாரே ஆச்சார்யர்
செயல் நன்றாகத் திருத்திப் பணி கொள்வான் அன்றோ
அருள் கண்டீர் இவ்வுலகினில் மிக்கதே –

—————

சத் புத்தி சாது சேவீ சமுசித சரிதஸ் தத்த்வ போதாபிலாஷீ
ஸூஸ்ருஷூஸ் த்யக்த மான ப்ரணி பதன பர ப்ரஸ்ன கால ப்ரதீஷ
சாந்தோ தாந்தோ அநஸூயு சரணமுபகத சாஸ்த்ர விசுவாஸ சாலீ
சிஷ்ய ப்ராப்த பரீஷாம் க்ருதவி தபிமதம் தத்த்வத சிக்ஷணீய –3-

சத் புத்தி -நல்ல புத்திசாலியாயும்
சாது சேவீ –சாதுக்களை ஸேவை பண்ணும் ஸ்வ பாவம் உள்ளவனாயும்
சமுசித சரிதஸ் -தனது நிலைமைக்கு ஏற்ற நடை யுடையவனாயும்
தத்த்வ போதாபிலாஷீ-தத்வ ஞானங்களை அறிய அபி நிவேசம் கொண்டவனாயும்
ஸூஸ்ருஷூஸ் –ஆச்சார்யனுக்கு ஸூஸ்ருஷை செய்பவனாயும்
த்யக்த மான –கர்வத்தை விட்டவனாயும்
ப்ரணி பதன பர –ஆச்சார்யனைக் கண்ட போது ஸாஷ்டாங்கமாக தண்டன் இடும் பழக்கம் யுடையவனாயும்
ப்ரஸ்ன கால ப்ரதீஷ-ஆச்சார்யன் இடம் தக்க காலம் எதிர்பார்த்து கேள்வி கேட்டு சங்கைகளைப் போக்கிக் கொள்பவனாயும்
சாந்தோ -மனத்தை அடக்கி வைப்பவனாயும்
தாந்தோ -வெளி இந்திரியங்களை அடக்கி வைப்பவனாயும்
அநஸூயு -பொறாமை இல்லாதவனாயும்
சரணமுபகத -ஆனு கூல்ய சங்கல்பாதி ஐந்து அங்கங்களோடே கூடிய விதிப்படி ஆச்சார்யன் இடம் சரணாகதி செய்பவனாயும்
சாஸ்த்ர விசுவாஸ சாலீ–ஸாஸ்த்ரங்களிலே விஸ்வாஸம் கொண்டவனாயும்
ப்ராப்த பரீஷாம் -ஒரு வருஷமா ஆறு மாதங்களோ தக்கபடி ஆச்சார்யனால் பரீக்ஷிக்கப் பட்டவனாயும்
க்ருதவித் -நன்றி யுடையவனாயும்
ஆகிய
சிஷ்ய-சிஷ்யன்
அபிமதம் தத்த்வத –தத்வ அர்த்தங்களில் விரும்பியதை -இஷ்டப்பட்டவற்றை
சிக்ஷணீய -உபதேசிக்கத் தக்கவன்
அல்லது அபிமதமாம்படி இருக்கும் படி தத்வார்த்தங்களைப் போதிக்கத் தகுந்தவன் –

சிஷ்ய லக்ஷணங்கள் –15-இதில் அருளிச் செய்கிறார் —

சிஷ்யஸ் தேஹம் சாதிமாம் த்வாம் ப்ரபந்நம் -அடிபணிந்து போக்கற்ற நிலையை அறிவித்துக் கொண்ட அர்ஜுனன் போன்றவனே நல்ல சீடன்

————————

ஸ்வ அதீந அசேஷா சத்தா ஸ்திதி யத்ன பலம் வித்தி லஷ்மீ சமேகம்
ப்ராப்யம் நாந்யம் ப்ரதீயா ந ச சரணதயா கஞ்சி தந்யம் வ்ருணீயா
ஏதஸ்மா தேவ பும்ஸாம் பயமிதரதபி ப்ரேஷ்யா மோஜ்ஜீஸ் ததாஜ்ஞாம்
இத்யே காந்தோபதேச ப்ரதமமிஹ குரோர் ஏக சித்தேன தார்ய —4-

இஹ -இந்த சந்தர்ப்பத்தில்
ப்ரதமம் -முதன் முதலிலே
ஸ்வ அதீந –தனக்கு அதீனமான
அசேஷ-ஸகல வஸ்துக்களுடையவும்
சத்தா -இருப்பு
ஸ்திதி -அநேக காலம் தொடர்தல்
யத்ன -பிரயத்தனம் செய்தல்
பலம் -இவற்றின் பலன்களையும் யுடையவனாய்
லஷ்மீஸம் -ஸ்ரீமன் நாராயணனை
ஏகம் -முக்யமாகவும் -ஏகமேவம் அத்விதீய ப்ரஹ்மம் -முதல்வன் -ஒப்பில்லா அப்பன் -என்று
வித்தி -அறியக் கடவாய்
அந்யம்-வேறு ஒருவனை
ப்ராப்யம் -நாம் அடையத் தக்கவனாக
ப்ரதீயா ந -கருதாதீர் -நம்பாதீர்
அந்யம் கம்சித் -வேறு ஒருவனையும் ஒரு பொருளையும்
சரணதயா -சரணமாக
ந வ்ருணீயா-வரிக்காதீர் -வேண்டாதீர்
பும்ஸாம்–ஜீவ ராசிகளுக்கு
பயம் -அச்சமும்
இதரதபி-மற்றதும்-அதாவது நற் கதியும்
ஏதஸ்மா தேவ -இவன் இடமிருந்தே ஏற்படுகிறது என்று
ப்ரேஷ்ய–கண்டு அறிந்து
ததாஜ்ஞாம்-அவனது கட்டளையை
மோஜ்ஜீஸ் -கை விடாதீர்
இதி -இவ்விதமான
குரோர்-குருவின்
ஏகாந்தோபதேச –ஏகாந்தத்தில் செய்யப்பட உபதேசம் -ப்ரஹ்மம் ஒருவனே ப்ராப்யம் என்றும் ப்ராபகம் என்ற உபதேசம்
ஏக சித்தேன -ஊற்றமுள்ள -ஊன்றிய மனத்தால்
தார்ய -தரிக்கத் தக்கது

———–

மோஷோ பாயார்ஹ தைவம் பவதி பவ ப்ருதாம் கஸ்யசித் க்வாபி காலே
தத்வத் பக்தி ப்ரபத்யோரதி க்ருதி நியமஸ் தாத்ருஸா ஸ்யாந் நியத்யா
சக்தா சக்தாதி தத்தத் புருஷ விஷயத ஸ்தாப்யதே தத் வ்யவஸ்தா
யச்சாஹூஸ் தத் விகல்ப சம இதி கதிஸித் தத் பல ஸ்யா விசேஷாத் –5-

பவ ப்ருதாம்–ஸம்ஸாரிகளுக்குள்
கஸ்யசித்-ஒருவனுக்கு
க்வாபி காலே-ஒரு காலத்தில்
ஏவம் -கீழ் ஸ்லோக உபதேசம் பெற்ற பலனாக
மோஷோ பாயார்ஹ -மோக்ஷ உபாயத்தில் அதிகாரம்
பவதி-ஏற்படுகிறது
தாத்ருஸா-அப்படிப்பட்ட
நியத்யா-தைவ வசத்தால்
தத்வத் -அதைப் போலவே
அதாவது -அநேக கோடி ஜீவ ராசிகளில் ஒருவனுக்கு ஒரு காலத்தில் மோக்ஷ உபாய அதிகாரம் ஏற்பட்டது போலவே
பக்தி ப்ரபத்யோ-பக்தி ப்ரபத்திகளில்
அதி க்ருதி நியமஸ் -அதிகார வ்யவஸ்தை
அதாவது இன்னானுக்கு இன்னது தான் என்ற ஏற்பாடு உண்டாகக் கூடும்
தத் வ்யவஸ்தா-அந்த வியவஸ்தை -சக்தி உள்ளவன் என்றும் சக்தி அற்றவன் என்றும் இது முதலான அந்த அந்த புருஷர்களின் விஷயமாக
ஸ்தாப்யதே –நிலை நிறுத்தப் படுகிறது
கதிஸித்-சிலர்
தத் விகல்ப-அவ்விரண்டில் ஓன்று என்றது
சம-மேன்மை தாழ்மை இல்லாதது
இதி- என்று
யஹூஸ் யத் -சொல்லுகின்றனர் -என்பது யாது ஓன்று உண்டோ
தத் -அது
பல ஸ்யா விசேஷாத் -பலனில் வித்யாஸம் இல்லாதது கொண்டு என்று அறிய வேண்டும் –

முமுஷு –இச்சை -காயசித் -சிலருக்கு சில வேளைகளில் ஆச்சார்யர் இடம் உபதேசம் பெற -கஸ்யசித் க்வாபி காலே –
பஹு நாம் சன்மானம் –ஞானவான் மாம் ப்ரபத்யே -ஸ்ரீ கீதா

பக்தி பிரபத்தி இரண்டு உபாயங்களை வேறே வேறே அதிகாரிகளுக்கு
மநோ நிக்ரஹம் -ஞான வைராக்யாதி ஸாமக்ரியைகள் நிறைய பெற்ற வ்யாஸாதிகளுக்கு பக்தி
அதி அசக்தர்களான நம் போல்வாருக்கு சரணாகதி -ப்ரபத்தியே உபாயம்
இரண்டு உபாயங்களுக்கும் பலம் துல்யம் ஒன்றே என்றவாறு –

————-

சாநுக்ரோசே சமர்த்தே ப்ரபதநம் ருஷிபி ஸ்மர்த்யே அபீஷ்ட ஸித்த்யை
லோகே அப்யேதத் பிரசித்தம் ந ச விமதிரிஹ ப்ரேஷ்யதே க்வாபி தந்த்ரே
தஸ்மாத் கைமுத்ய சித்தம் பகவதி து பர ந்யாச வித்யா நுபாவம்
தர்ம ஸ்தேயாஸ்ச பூர்வே ஸ்வ க்ருதிஷூ பஹுதா ஸ்தாப யாஞ்சக் ருரேவம் —6-

அபீஷ்ட ஸித்த்யை–இஷ்டம் பெறுவதற்கு
சாநுக்ரோசே -தயை யுள்ள
சமர்த்தே -வல்லவன் இடத்திலே
ப்ரபதநம் -அடைக்கலம் புகுதல்
ருஷிபி ஸ்மர்த்யே -ரிஷிகளால் விதிக்கப்படுகிறது
ஏதத் -இவ்விஷயம்
லோகே பிரசித்தம் -உலக நடத்தைகளிலும் ப்ரஸித்தமானது
இஹ -இவ்விஷயத்தில்
விமதிர் -அபிப்ராய பேதமானது
க்வாபி தந்த்ரே-ஒரு சாஸ்திரத்திலும்
ந ப்ரேஷ்யதே -காணப்படுகிறது இல்லை
தஸ்மாத் –ஆதலால்
கைமுத்ய சித்தம் -கை முத்யம் நியாயத்தால் ஸித்தமான
பர ந்யாச வித்யா நுபாவம்-பர ந்யாஸம் என்னும் வித்யையின் மஹிமையை
தர்ம ஸ்தேயாஸ்–தர்மங்களை நிர்ண யிக்கிறவர்களான
பூர்வே –ஆளவந்தார் முதலான முன்னோர்
ஏவம் -முன் கூறியபடியே
ஸ்வ க்ருதிஷூ -தாங்கள் அருளிச் செய்த நூல்களிலே
ஸ்தாப யாஞ்சக்ருர் -விசாரித்து முடிவு செய்துள்ளனர்

ஸ்ம்ருதிகளும் சரணாகதி மூலம் சுக்ரீவ மஹா ராஜர் ஸ்ரீ விபீஷண ஆழ்வான் காகாசூரன் போன்றோர் பயன் அடைந்ததை சொல்லுமே —
பலரும் பல பலன்களுக்கு சரணாகதி செய்தமை ஸ்ம்ருதிகள் சொல்லும் -கைமுதிக நியாயத்தால் அவனை அடைய சரணாகதி உதவுமே –
பரம காருணிகன் சர்வ சக்தன் தன்னையே ஓக்க அருள் செய்வான் சரணாகதர்களுக்கு என்பதை பூர்வர்கள் பலரும் காட்டி அருளி உள்ளார்கள் –

லகு உபாயமான பிரதிபதிக்கும் அதே உயர்ந்த பலன் கிட்டும் என்பதற்கு பிரமாணங்கள் யுக்திகள் காட்டி அருளுகிறார்
வானரம் புலி மனுஷ்ய வ்ருத்தாந்தம் -காகாசூரன் -விபீஷணன் –திரௌபதி -சுமுகன் -கஜேந்திரன் –திரிசங்கு –
சுனஸ்ஸேபன்-ரிஷி குமாரன் யாக பசுவாக விற்கப்பட விச்வாமித்ரரை சரண் அடைய தபோ மந்த்ர பலத்தால் ரக்ஷித்து அருளினார் –
சாதாரண ஜனங்கள் இடமே சரணாகத ரக்ஷணம் காணும் இடத்தில் கைமுதிக நியாயத்தால் பகவான் விஷயத்திலே ஸித்தம் அன்றோ என்கிறார் –
ஆகவே மஹா விஸ்வாசமே வேண்டியது -என்கிறார் –

————-

சாஸ்த்ர ப்ராமாண்ய வேதீ நநு விதி விஷயே நிர்விசங்கோ அதிகாரீ
விச்வாஸஸ் யாங்க பாவே புநரிஹ விதுஷா கிம் மஹத்வம் ப்ரஸாத்யம்
மைவம் கோராபராதை சபதி குரு பலே ந்யாஸ மாத்ரேண லப்யே
சங்கா பார்ஷ்ணி க்ரஹார்ஹா சமயிதுமுஸிதா ஹேது பிஸ் தத் ததர்ஹை –7-

சாஸ்த்ர ப்ராமாண்ய வேதீ –ஸாஸ்த்ரம் பிரமாணம் ஆகும் முறையை நன்கு அறிந்த
அதிகாரீ-ப்ரபந்ந அதிகாரியானவன்
விதி விஷயே -சரணாகதியை விதித்ததில்
நிர்விசங்கோ நநு–ஸந்தேஹம் இல்லாதவன் அல்லவா
புநரிஹ–புநர் இஹ -பின்னேயும் இந்த சரணாகதியில்
விஸ்வாஸஸ்ய -மஹா விஸ்வாசம்
யங்க பாவே -அங்க பாவமாக இருக்கையிலே
விதுஷா -தெரிந்தவனால்
மஹத்வம் ப்ரஸாத்யம்–மஹத் பெரியது என்ற விசேஷணத்தால் ஸாதிக்கக் கூடியது –
கிம் -எது
மைவம் –அப்படி அல்ல
கோராபராதை -அதிகம் குற்றம் செய்தவர்களால்
ந்யாஸ மாத்ரேண-சரணாகதியை மாத்ரமே கொண்டு
சபதி -தத் க்ஷணத்தில்
குரு பலே -பெரியதொரு பலன்
லப்யே–அடையப்பட இருக்கையிலே
பார்ஷ்ணி க்ரஹார்ஹா –பின் தொடரக் கூடிய
சங்கா -ஸந்தேஹம்
தத் ததர்ஹை -அவ்வவற்றுக்கு ஏற்ற
ஹேது பிஸ் –ஹேதுக்களால்
சமயிதும் உஸிதா -போக்கப் படுவதற்குத் தக்கது

மஹா விஸ்வாஸம்-முக்கிய அங்கம் –செய்ய வேண்டியது ஒன்றும் இல்லாமை – நம் பாபங்கள் தண்மை அதிசயம்
பேற்றின் பலன் -மூன்றையும் பார்த்தால் மஹா விஸ்வாசத்தின் அருமை அறியலாம் –
ஆச்சார்யர் உபதேசம் கடாக்ஷம் மூலமே அடைய முடியும்

பகவத் குணக் கடலிலே ஆழ்ந்து மஹா விஸ்வாஸம் வளர்த்துக் கொள்ள வேண்டுமே
விதித: ஸஹி தர்மஜ்ஞ: ஸரணாகத வத்ஸல: தேந மைத்ரீ பவது தே யதி ஜீவிதும் இச்சஸி.–இத்யாதி ஸ்லோகத்தால் பிராட்டி ராவணனுக்கும் உபதேசம்
ஸக்ருத் ஏவ ப்ரபந்நாய –மித்ர பாவேந ஸம் ப்ராப்தம் -தானே அருளிச் செய்தானே அன்றோ –

—————-

நேஹாபிக் ராந்தி நாஸோ ந ஸ விஹதிரிஹ ப்ரத்யவாயோ பவேதிதி
உக்தம் கைமுத்ய நீத்யா ப்ரபதந விஷயே யோஷிதம் சாஸ்த்ர வித்பி
தஸ்மாத் க்ஷேத்ரே ததர்ஹே ஸூவிதத சமயைர் தேசிகை சம்ய குப்தம்
மந்த்ராக்யம் முக்தி பீஜம் பரிணதி வசத கல்பதே ஸத்பலாய–8-

இஹ –இந்த கர்ம யோகத்தில்
அபி க்ராந்தி –ஆரம்பத்துக்கு
நாஸோ ந -பயன் தராமல் வீணாகப் போவது இல்லை
விஹதி மதி -முடிவதற்கு முன்பு தடை பட்டு நின்று போய் விட்டால்
ப்ரத்யவாயோ -பெரும் குற்றமும்
ந பவேதிதி-உண்டாகாது
இதி -இவ்வாறு
யுக்தம் -கர்ம யோகத்தில் சொன்னது
ஸாஸ்த்ர வித்பி –சாஸ்திரம் அறிந்தவர்களால்
ப்ரபதந விஷயே-சரணாகதியின் விஷயத்தில்
கைமுத்ய நீத்யா –கை முதிதம் நியாயத்தைக் கொண்டு
யோஷிதம் –இணைக்கப் பட்டது
தஸ்மாத் –ஆதலால்
ஸூவிதத சமயைர்–காலம் அறிந்த
தேசிகை–ஆச்சார்யர்களால்
ததர்ஹே–அதற்குத் தகுந்த
க்ஷேத்ரே –பூமியில் இடத்தில் -அதாவது குணம் நிறைந்த சிஷ்யன் இடத்தில்
சம்யக்-நன்றாக
உப்தம்-விதைக்கப்பட்ட
மந்த்ராக்யம் –மந்த்ரம் என்னும்
முக்தி பீஜம் –முக்தியின் விதை
பரிணதி வசத -முதிர்ச்சி அடைவதால்
கல்பதே ஸத் பலாய-நல்ல பழம் கொடுக்க ஏற்படுகிறது

பிரபத்தி அங்கங்களை ஆச்சார்யர் உபதேசம் மூலம் -உணர்ந்து -மஹா விஸ்வாஸம் அடைய வேண்டுமே –
ரஹஸ்யத்ரய ஞானம் -ஆச்சார்யர் மூலம் பெற்று -ஸ்ரீமன் நாராயணனே அசேஷ ஸமஸ்த சேதன அசேதனங்களுக்கும் ஸ்வாமி -நியாம்யன்–
அவனே பரம ப்ராப்யம் –அவனே பிராபகம்-சாஸ்திரங்கள் அவனது ஆஜ்ஞா ரூபம் -விதி நிஷேதங்களை மாறாமல் இருக்க வேண்டுமே –

பகவத் திரு நாம சங்கீர்த்தனம் -பிரபத்தி மந்த்ர உச்சாரணம் –போன்றவை பிரபத்தியிலே மூட்டி அதன் மூலமாக பயன் தர வல்லது
எனவே பிரபத்தி அனுஷ்ட்டிக்க வேண்டியது அவஸ்யமே என்றதாயிற்று –

———–

ந்யாஸ ப்ரோக்தோ அதிரிக்தம் தப இதி கதித ஸ்வத் வரஸ் சாஸ்ய கர்த்தா
அஹிர்புத்ந்யோ அப்யன்வவா தீத கணி திவிஷதாம் உத்தமம் குஹ்ய மேதத்
சாஷான் மோஷாய சாஸவ் ஸ்ருத இஹ து முதா பாத சங்கா குணாட்யே
தன்நிஷ்டோ ஹ்யந்ய நிஷ்டான் ப்ரபுரதி ஸயிதும் கோடி கோட்யம் சதோ அபி –9-

ந்யாஸ –பர ந்யாஸம் சரணாகதி
அதிரிக்தம்-மற்ற எல்லாவற்றாலும் உயர்ந்ததான
தப இதி-தபஸ் இது என்று
ப்ரோக்தோ –கூறப் பட்டது
அஸ்ய கர்த்தா–இத்தைச் செய்தவன்
ஸ்வத் வரஸ் –நல்ல யாகங்களைச் செய்தவன் ஆகிறான்
இதி -என்று
கதித -உரைக்கப் பட்டு இருக்கிறான்
அஹிர்புத்ந்யோ –ருத்ரனும்
யன்வவா தீத் -இதைத் தொடர்ந்து பேசினான்
ஏதத் -இந்த சரணாகதி
திவிஷதாம்–தேவர்களுடைய
உத்தமம் குஹ்யம் –உத்தமமான ரஹஸ்யமாக
அகணி –மதித்து உரைக்கப் பட்டது
அசவ்-இது
ஸாஷாத் –நேராகவே -மற்ற ஒன்றை இடையிடாமலேயே
மோஷாய –மோக்ஷத்துக்குக் காரணமாக
ஸ்ருத –வேதங்களில் கூறப்பட்டது
து -இதுக்கு விபரீதமாக
குணாட்யே-நற் குணம் வாய்ந்த
இஹ –இந்த சரணாகதி விஷயத்தில்
பாத சங்கா -விரோதத்தை சங்கிப்பது
முதா –வீண்
ஹி -ஏன் எனில்
தன்நிஷ்டோ –இந்த சரணாகதியைக் கைப் பற்றினவன்
யந்ய நிஷ்டான் –மற்ற உபாயங்களை ஸ்வீ கரித்தவர்களை
கோடி கோட்யம் சதோ அபி -கோடியிலும் கோடி பங்கைக் கொண்டு
அதி ஸயிதும் –மீறி இருக்க
ப்ரபு -சக்தி யுள்ளவன் ஆகிறான் –

பிரபத்தி சர்வாதிகாரம் -தபஸுக்களில் சிறந்ததாக ஸ்ருதி சொல்லுமே –
பிரபன்னன் சிறந்த யாகம் செய்தவனாக கருதப்படுகிறான் -குஹ்ய தமமான உபாயம்
தஸ்மாத் ந்யாஸம் யேஷாம் தபஸாம் அத்ரிக்தம் ஆஹு–தைத்ரியம்
சமிதி சாதனகா தீனம் யஜ்ஜானாம் .ந்யாஸம் ஆத்மனா நமஸாயோ கரோத் தேவ ஸ சவ்தவாரா –அஹிர்புத்ன்ய சம்ஹிதை
யதாத்வை மஹோபநிஷதம் தேவானாம் குஹ்யம் –தைத்ரியம்

ஓம் இத் யாத்மாநம் யுஞ்ஜீத -என்பதால் இது சர்வாதிகாரம் ஆகாதே
அநாதிகாரிகளுக்கு ப்ரணவ உச்சாரணம் கூடாதாயினும் ஆகமத்தில் விதிக்கப்பட்ட த்வய மந்த்ரத்தைக் கொண்டு
சரணாகதி பிரயோகம் சர்வாதிகாரமே யாகும்
ஸ்வ தந்திரமாக மோக்ஷம் தர வல்லதே-பக்தி யோக நிஷ்டனை விட மிகவும் உயர்ந்து -மிகுந்த கௌரவம் வாய்ந்தவன் என்றதாகும்-

—————–

நாநா சப்தாதி பேதாதிதி து கதயதா ஸூத்ர காரேண சம்யக்
ந்யாஸ உபாஸே விபக்தே யஜந ஹவ நவச் சப்த பேதாத பாக்தாத்
ஆக்யா ரூபாதி பேத ஸ்ருத இதர சம கிம் ஸ பின்ன அதிகார
ஸீக்ர ப்ராப்த்யாதிபி ஸ்யாஜ்ஜ குரிதி ஸ மதூபாச நாசவ் வ்வஸ்தாம் —10-

சப்தாதி பேதாத் -பரமாத்மாவின் விசேஷங்களைக் கூறும் -ஸத் -பூமா -ஜகத் காரணன் -அபஹத பாப்மா -போன்ற சொற்கள் வெவ்வேறாக இருப்பதால்
நாநா –ஸத் வித்யா தஹர வித்யா முதலான ப்ரஹ்ம வித்யைகளும் வெவ்வேறு
இதி -என்று
கதயதா –சொல்லுகின்ற
ஸூத்ர காரேண –ப்ரஹ்ம ஸூத்ர காரரால்
ந்யாஸ உபாஸே–சரணாகதியும் பக்தி யோகமும்
யஜந ஹவந வத் –யாகத்தைக் கூறும் இடத்தில் யஜனம் என்றும் ஹவனம் என்றும் தானம் என்றும் இவை போன்ற
அபாக்தாத்–ஒவபசாரிகம் அல்லாத -அதாவது வெளிப் பொருளைக் காட்டிலும் வேறான உட் பொருளைக் கொள்ளாத
ஸப்த பேதாத் -சொற்களின் வேற்றுமையால்
ஸம்யக் –நன்றாகவே -அதாவது யாதொரு சந்தேகத்துக்கும் இடம் இல்லாமல்
விபக்தே பிரிக்கப் பட்டு இருக்கின்றன
ஆக்யா ரூபாதி பேத –ஆக்யா ந்யாஸ வித்யா எனப் பெயரிலும்
ரூப –பரம காருணிகன் ஆகையாலே நிர்ஹேதுகமாக ரக்ஷிப்பவன் என்ற ரூபத்தாலும்
ஆதி -அங்கங்கள் ப்ரகரணங்கள் இவற்றாலும்
பேத -வேற்றுமையானது
இதர சம-மற்ற வித்யைகளுக்கு ஒப்பாகவே
ஸ்ருத –இங்கும் கூறப்படுகின்றது
கிஞ்ச -இன்னமும்
ஸீக்ர ப்ராப்த்யாதிபி –சீக்கிரம் பயன் அளிக்கும் முதலான வற்றால்
பின்ன அதிகார-அதிகாரம் வேறு பட்டதகாக
ஸ்யாத் –இருக்கலாம்
இதிச–இவ்விதமே
மதூபாச நாதள –மது வித்யை முதலான இடத்திலும்
வ்யவஸ்தாம் —நிபந்தனையை
ஜகு–சொன்னார்கள் –

பக்தி பிரபத்தி -இரண்டும் மோக்ஷ உபாயங்கள் –
பிரபத்திக்கு -பக்திக்கு அங்கமாகவும் -சாஷாத் உபாயமாகவும் -இரண்டு ஆகாரங்கள் உண்டே
பக்திக்கு அங்கங்கள் -வர்ணாஸ்ரம கர்ம ஞான யோகங்கள்
பிரபதிக்கு அங்கமாக ஆநு கூல்ய சங்கல்பம் -கார்ப்பண்யம் -மஹா விசுவாசம் போன்றவைகள் உண்டே –
பக்திக்கும் பிரபத்திக்கும் தேவையானவைகளை வேறே வேறே -மோக்ஷம் அடையும் கால விளம்பத்திலும் வாசி உண்டே –
சர்வ லோக சரண்யன் -ஸர்வஸ்ய சரணம் ஸூஹ்ருத் –
சரணாகதி -ஆறாவது அங்கம் -பக்திக்கு அஷ்டாங்கங்களில் சமாதி எட்டாவது அங்கம் போலவே –
அநு கூல்ய சங்கல்பமே ஒரு அங்கம் -செய்ய உறுதி கொண்டாலே செய்து முடிப்போம் -பிராயச்சித்த பிரபத்தி -என்பது அங்கங்களில் பிரபத்தி
பண்ணிய பின்பு குறைகள் வந்தால் போக்கிக் கொள்ள என்பர் -பிரபத்தி செய்த அதிகாரி குற்றம் தானாகவே செய்ய மாட்டான்
இருள் தரும் மா ஞாலத்தில் இருப்பதால் இவனை அறியாமல் செய்ய நேர்ந்தால் -அதற்காக இந்த பிராயச்சித்த பிரபத்தி –
ப்ரஹ்மாஸ்திரம் போலே -மீண்டும் ஒரே பலனுக்காக பண்ணினால் தான் -குறை வரும் –

ப்ரஹ்ம ஸூத்ரத்தில் -ஸப்தாதி பேத அதிகரணத்தில் –நாநா ஸப்தாதி பேதாத் -ஸூத்ரம் உண்டே
ப்ரஹ்ம வித்யைகள் எல்லாமே சேர்ந்து ஒரே வித்யையா வெவ்வேறா என்கிற சங்கை வர அத்தை நீக்குகிறது –
ஒரே பொருளைக் கூறும் பர்யாய பதங்கள்
வேத உபாஸீத போன்ற பதங்களால் விதிக்கப்பட்ட பொருள் ஒன்றே யாகும்
பர்யாய பதங்களாயினும் உபாசிக்கப்பட வேண்டிய ப்ரஹ்ம குணங்கள் -அபஹத பாப்மத்வாதி குணங்கள் -காரணத்வம்
போன்றவை வெவ்வேறே வானபடியால் வித்யைகளும் வெவ்வேறெவே
விசேஷணம் வேறுபாட்டால் விசேஷ்யமும் வேறுபாடும் என்கிற நியாயத்தால் –
கீதையிலும் பக்தியோகத்தை பஜஸ்வ மாம் என்றும் ப்ரபத்தியை சரணம் வ்ரஜ என்று விதித்து உள்ளானே
பக்திக்கு வர்ணாஸ்ரம தர்மாதிகள் -பிரபதிக்குக்கு ஆனுகூல்ய சங்கல்பாதிகள் அங்கங்கள் என்ற வாசியும் உண்டே
ஆகவே இந்த ஸூத்ரம் பக்தியையும் ப்ரபத்தியையும் கூறுவதாகவும் கொள்ளலாமே
ஸ்ரீ பாஷ்யத்தில் பிரபத்தியை விளக்க வில்லையே –

————-

யத் கிஞ்சித் ரக்ஷணீயம் ததவந நிபுணே ந்யஸ்தோ அகிஞ்ச நஸ்ய
ப்ரஸ்பஷ்டம் லோக த்ருஷ்ட்யா அப்யவகமித இஹ ப்ரார்த்தநாத் யங்க யோக
தஸ்மாத் கர்மாங்க கத்வம் வ்யபநயதி பரா பேஷணாபாவ வாத
சாங்கே த்வஷ்டாங்க யோக வ்வவஹ்ருதி நயத ஷட்விதத் வோபசார–11-

யத் கிஞ்சித் –யாது ஒரு வஸ்து
ரக்ஷணீயம் –ரஷிக்கத் தக்கதோ
தத் -அதை
அவந நிபுணே -ரக்ஷிக்க சக்தி யுள்ளவன் இடத்தில்
ந்யஸ்தோ -அடைக்கலமாய்க் கொடுக்கின்ற
அகிஞ்ச நஸ்ய–ஏழைக்கு
ப்ரார்த்தநாதி -பிரார்த்தனை முதலான
அங்க -அங்கங்களின்
யோக -சேர்க்கை
இஹ–இந்த சரணாகதி விஷயத்தில்
லோக த்ருஷ்ட்யா –உலக வழக்கத்தாலும்
அவகமித–அறிவிக்கப் பட்டது
தஸ்மாத்–ஆதலால்
பரா பேஷணாபாவ வாத-மற்ற ஒன்றை அபேக்ஷிப்பது இல்லை என்று கூறுவது
கர்மாங்க கத்வம் –கர்மங்களை அங்கமாகக் கொண்டு இருப்பதை
வ்யபநயதி –விலக்குகின்றது
து -ஆனால்
சாங்கே-அங்கங்களோடு கூடின ப்ரபத்தியில்
அஷ்டாங்க யோக வ்வவஹ்ருதி நயத –அஷ்டாங்க யோகம் என்று சொல்லுவது போலே
ஷட்விதத் வோபசார–ஆறு விதம் என்று கூறியது
ஒவபசாரிகம் -அதாவது கௌவணப் பொருளாகும் –

தத் ஏக உபாய தாயாஞ்ச பிரபத்தி –
பிரபத்தே க்வசித் அப் யேவம் பர அபேஷா ந வித்யதே
வர்ணாஸ்ரம தர்மங்களை அபேக்ஷிப்பது இல்லை என்றவாறு
ஆனால் ஷட் விதா சரணாகதி -ஆனுகூல்ய சங்கல்பாதிகள் -அங்கங்கள் ஐந்தும் அங்கியான ப்ரபத்தியும் சேர்த்துச் சொன்னவாறு
அஷ்டாங்க யோகத்திலும் யமம் -நியமம் -ஆஸனம் -ப்ராணாயாமம் -ப்ரத்யாஹாரம் -த்யானம் -தாரணா ஆகிய
ஏழு அங்கங்களுடன் சேர்த்து சமாதி என்கிற அங்கியையும் சேர்த்தே சொன்னால் போலவே இங்கும் –
நியாஸ பஞ்சாங்க ஸம் யுத -என்றும் உண்டே
ஐந்து அங்கங்களாவன
1-ஆனுகூல்ய சங்கல்பம்
2-பிரதிகூல்ய வர்ஜனம்
3-ரஷித்தே தீருவான் என்கிற மஹா விச்வாஸம்
4-நீயே ரக்ஷிக்க வேணும் என்கிற பிரார்த்தனை
5-அநந்ய கதித்வம் –

———

பஞ்சாப் யங்காந்யபிஜ்ஞா ப்ரணிஜகுரவிநா பாவ பாஞ்ஜி ப்ரபத்தே
கைஸ்சித் சம்பா விதத்வம் யதிஹ நிகதிதம் தத் ப்ரபத்த் யுத்தரம் ஸ்யாத்
அங்கேஷ் வங்கித்வ வாத பல கதநமிஹ த்வி த்ரி மாத்ரோக்த யஸ்ஸ
ப்ராஸஸ் த்யம் தத்ர தத்ர ப்ரணிதததி தத சர்வ வாக்யைக கண்ட்யம் –12-

யபிஜ்ஞா -வித்வான்கள்
பஞ்சாப் யங்காந்–ஆனுகூல்யாதி ஐந்து அங்கங்களையும்
ப்ரபத்தே–ப்ரபத்திக்கு
அவிநா பாவ பாஞ்ஜி –விட்டுப் பிரியாமல் இருப்பதாக -அவஸ்யம் இருக்க வேண்டியவைகளாக
ப்ரணிஜகுர் -கூறினார்கள்
யதிஹ-யாது ஓன்று இந்த ஐந்து அங்கங்களுக்குள்
கைஸ்சித் –சில அங்கங்களால்
சம்பா விதத்வம் –தன்னடையாகவே நேர்ந்தமை -அதாவது அவஸ்யம் இல்லாமல் தானாகவே நேரக் கூடியவையாய் இருக்கை
நிகதிதம் -சொல்லப் பட்டதோ
தத் –அது
ப்ரபத்த் யுத்தரம் -பிரபத்திக்குப் பின்
ஸ்யாத்-இருக்கக் கூடும்
இஹ -இந்த சரணாகதியில்
அங்கேஷு –அங்கங்களில் சிலவற்றை
வங்கித்வ வாத–அங்கியாகக் கூறியதும்
பல கதநம் -சில அங்கங்களாலே மோக்ஷம் பலம் என்பதையும்
த்வி த்ரி மாத்ரோக்த யஸ்ஸ–ஐந்தில் இரண்டு மூன்று மாத்ரம் கூறியதும்
தத்ர தத்ர-அந்த அந்த அங்கங்களில்
ப்ராஸஸ் த்யம் –மேன்மையை பெருமையை
ப்ரணிதததி –பொருளாகக் கொண்டன
தத –ஆதலால்
சர்வ வாக்ய ஏக கண்ட்யம் –எல்லா வாக்யங்களுக்கும் ஒற்றுமை உண்டு

———

ரஷாபேஷா ஸ்வசாஹ்ய ப்ரணயவதி பர ந்யாஸ ஆஜ்ஞாதி தஷே
த்ருஷ்டா நாத்ர பிரபத்தி வ்யவஹ்ருதிரிஹ தந் மேளநே லக்ஷணம் ஸ்யாத்
கேஹாகத்யாதி மாத்ரே நிபதது சரணா கத்ய பிக்யோ பசாராத்
யத்வா அநேகார்த்த பாவாத் பவதி ஹி விவித பாலநீ யத்வ ஹேது –13-

ரஷாபேஷா
ஸ்வ–தனக்கு
சாஹ்ய –ஸஹாயம் செய்ய வேணும் என்று
ப்ரணயவதி –யாசிப்பவன் இடத்தில்
ரஷா அபேஷா -ரக்ஷிக்க வேணும் என்று வேண்டுவது இருக்கிறது
ஆஜ்ஞாதி தஷே–ஏவல் செய்யும் ஊழியக் காரனிடம்
பர ந்யாஸ -பர ந்யாஸம் என்ற சொல் இருக்கிறது
அத்ர–இவ்விரண்டிலும் தனித்தனியே
பிரபத்தி வ்யவஹ்ருதி–பிரபத்தி என்ற சொல்
ந த்ருஷ்டா –காணப் பட வில்லை
இஹ -இப்பிரபத்தி விஷயத்தில்
தந் மேளநேம் -அந்த ரஷா அபேக்ஷை -பர ந்யாஸம் இவ்விரண்டின் சேர்க்கை
லக்ஷணம் ஸ்யாத்-இலஷணையால் இருக்கலாம்
சரணா கத்ய பிக்யோ -சரணாகதி என்ற பெயர்
கேஹாகத்யாதி மாத்ரே –வீட்டுக்கு வருவது முதலான பொருளில் மாத்ரம்
உபசாராத்-முக்யப்பொருள் அல்லாத இலக்ஷணைப் பொருளாகவே
நிபதது –ஏற்படக் கூடும்
யத்வா –அல்லது
அநேகார்த்த பாவாத் –சரணம் என்ற சொல்லுக்கு அநேகப் பொருள் உண்டு ஆகையாலே
பாலநீ யத்வ ஹேது-ரக்ஷிக்கப்பட வேண்டியதற்குக் காரணம்
பவதி ஹி விவித -பலவிதமாக இருக்கின்றது –

அநந்யார்ஹம் முக்கியம் –ந்யாஸம் -சரணாகதி -மஹா விச்வாஸம்

சரணம் -வீடு ரக்ஷிப்பவன்
சரணாலயம் -பர ந்யாஸம் செய்தவனை ரக்ஷிக்க வேண்டியது போலவே
வீடு என்ற பொருளிலும் வீட்டுக்கு வந்தவரை ரக்ஷிக்க வேண்டும் என்றவாறு

————

ஆத்மாத்மீய ஸ்வரூப ந்யஸநம நுகதம் யாவதர்த்தம் முமுஷோ
தத்வ ஜ்ஞான நாத்மகம் தத் ப்ரதமமத விதே ஸ்யாதுபாயே ஸமேதம்
கைங்கர்யாக்யே புமர்த்தே அப்யநுஷஜதி ததப்யர்த்தநா ஹேது பாவாத்
ஸ்வாபீஷ்டா நந்ய ஸாத்யாவதிரிஹ து பர ந்யாஸ பாகோ அங்கி பூத –14-

முமுஷோ–முமுஷுவுக்கு
ஆத்மாத்மீய ஸ்வரூப ந்யஸநம் -தன்னையும் தன்னைச் சேர்ந்த பொருள்களையும் பரமாத்மாவிடம் ஒப்படைப்பது
யாவதர்த்தம் -எவ்வளவு பொருள்கள் உண்டோ அவ்வளவிலும்
அநுகதம் -தொடர்ந்து நிற்கும்
தத் -இந்த கார்யமானது
ப்ரதமம் -முதன் முதலில்
விதே-உபாயத்தை விதிக்கின்ற வசந ஸ்வ பாவத்தாலே
உபாயே–மோக்ஷ உபாயத்திலே
ஸமேதம்-சேர்ந்ததாக
ஸ்யாத் -இருக்கும்
ததபி -மேலும்
யர்த்தநா ஹேது பாவாத்–முமுஷுவால் செய்யப் பட்ட பிரார்த்தனையின் காரணமாக
கைங்கர்யாக்யே-பகவத் கைங்கர்யம் என்ற
புமர்த்தே அபி -புருஷார்த்தத்திலும் -பலனிலும்
யநுஷஜதி –தொடர்கின்றது
இஹ -இந்த பிரபத்தி விஷயத்தில்
அங்கி பூத –அங்கியாக இருக்கின்ற
பர ந்யாஸ பாகோ -பர ந்யாஸம் என்ற அம்சம்
ஸ்வாபீஷ்டா நந்யஸா த்யாவதி–தன்னால் விரும்பப்பட்டது -மற்ற ஒன்றால் சாதிக்க முடியாதது எவ்வளவோ அவ்வளவில் நிற்கும் –

ஸ்வரூப சமர்ப்பணம் -யானும் நீ என் உடைமையும் நீயே – பர சமர்ப்பணம் பல சமர்ப்பணம் –ப்ரீதி காரித கைங்கர்யமே -பரம புருஷார்த்தம் என்ற நினைவு –
நம் புத்திரர் பார்யையாதிகள் உடன் சேர்ந்தே சமர்ப்பணமோ என்னில் இவர்களும் நம் சொத்து இல்லையே -எல்லாம் அவனது அன்றோ

கீழ் எல்லாம் புபுஷு முமுஷு இருவருக்கும் பொதுவான பிரபத்தி
இதில் முமுஷு -அதிலும் அநந்யார்ஹ சேஷ பூதரானவருக்கு
யானும் நீயே என்னுடைமையும் நீயே என்று இருப்பவர்களுக்கு
தத்வ ஞானம் ஏற்பட்டு அதனாலேயே இந்த எண்ணம் உபாயத்திலும் புருஷார்த்தத்திலும் சேர்ந்தே இருக்குமே
தனக்கேயாக எனைக் கொள்ளும் ஈதே -என்று அவனது ஆனந்தத்துக்காகவே இருப்பார்களே

————-

ந்யாஸா தேசேஷூ தர்ம த்யஜந வசநதோ அகிஞ்ச நாதிக்ரி யோக்தா
கார்ப்பண்யம் வா அங்க முக்தம் பஜநவதிதரா பேஷணம் வா அப்யபோடம்
துஸ் சா தேச் சோத்யமவ் வா க்வசிது பசமிதா வந்ய சம்மேளந வா
ப்ரஹ்மாஸ்த்ர ந்யாய உக்தஸ் ததிஹ ந விஹதோ தர்ம ஆஜ்ஞாதி சித்த –15-

ந்யாஸா தேசேஷூ –சரணாகதியை விதிக்கும் இடங்களில்
தர்ம த்யஜந வசநதோ –ஸர்வ தர்மங்களை விடச் சொல்லி இருப்பதால்
அகிஞ்ச நாதிக்ரியா -வேறு வழி இல்லாதவன் இதுக்கு அதிகாரி என்பது
யுக்தா-சொல்லப்பட்டது
வா -அல்லது
கார்ப்பண்யம் –கார்ப்பண்யம் என்ற அதாவது வேறு போக்கற்று இருக்கும் நிலையை நினைப்பது –
கர்வம் இல்லாமை முதலான பகவத் கிருபை தன் மேல் உண்டாகும் படி செய்கிற கார்யம்
அங்க முக்தம் -அங்கமாகச் சொல்லப்பட்டது
வா -அல்லது
பஜநவத் -பக்தி யோகத்தைப் போலே
இதரா பேஷணம் –வர்ணாஸ்ரம தர்மாதிகளை அங்கமாக அபேக்ஷித்து இருத்தல்
அப்யபோடம்-விலக்கப் பட்டது
வா -அல்லது
க்வசித் -பேராசை கொண்டு -அஸக்யமான விஷயத்தில் முயலுகின்றவன் இடத்தில்
துஸ்சாதேச் சோத்யமவ் –அஸக்யமானத்தில் ஆசையும் முயற்சியும்
உப சமிதவ்–தடுக்கப்பட்டன
வா -அல்லது
அந்ய சம்மேளந –பிரபதிக்கு அங்கம் அல்லாதவற்றை பிரபத்திற்கு கைக்கொண்டால்
ப்ரஹ்மாஸ்த்ர ந்யாய -நம்பிக்கை குறைந்து மற்றவற்றைக் கூட்டினால் தானே விலகிவிடும் என்பது
உக்தஸ் –உரைக்கப் பட்டது
தத் -தர்மங்களை விடுவது பிரபதிக்கு அங்கம் இல்லாததாலும்
தர்மங்களை பிரபதிக்கு அங்கமாகக் கூறாமையாலும்
ஆஜ்ஞாதி சித்த –ஆஜ்ஜையாலும் அநுஜ்ஜை யாலும் ஏற்பட்ட
தர்ம -தர்மம்
இஹ ந விஹதோ –இந்தப் பிரபத்தியில் விலக்கப்பட வில்லை –

சர்வ தர்மான் பரித்யஜ்ய -வர்ணாஸ்ரம தர்மங்களை விடக் கூடாதே -பக்தியில் அசக்தனுக்கு இது -என்றவாறு
இதில் அசக்தனுக்கு ஆச்சார்ய அபிமானம் உத்தாரகம் –

அகிஞ்சனனாய் -வேறு உபாயந்தரங்கள் அனுஷ்ட்டிக்க சக்தன் இல்லாமல் இருக்க வேண்டுமே
பரித்யஜ்ய -கார்ப்பண்யம் சொல்லப்பட்டது
கார்ப்பண்யமாவது -ஆகிஞ்சனயாதிகளுடைய அனுசந்தானமாதல்
அது அடியாக வந்த கர்வ ஹானியாதல்
கிருபா ஜனக க்ருபண வ்ருத்தியாதல்
கைங்கர்ய புத்தியாக வர்ணாஸ்ரம தர்மங்களைச் செய்யவே வேண்டும்

மூண்டாலும் அரியதனில் முயல வேண்டா
முன்னம் அதில் ஆசை தனை விடுகை திண்மை
வேண்டாது சரண நெறி வேறோர் கூட்டு
வேண்டில் அயன் அஸ்திரம் போல் வெள்கி நிற்கும்

நீண்டாகு நிறை மதியோர் நெறியில் கூடா
நின்றனிமை துணையாக என் தன் பாதம்
பூண்டால் யுன் பிழைகள் எல்லாம் பொறுப்பேன் என்ற
புண்ணியனார் புகழ் அனைத்தும் புகழுவோமே

————

ஆதேஷ்டும் ஸ்வப்ரபத்திம் தத் அநு குண குணாத் யந்விதம் ஸ்வம் முகுந்தோ
மாமித் யுகத்வைக சப்தம் வததி ததுசிதம் தத்ர தாத்பர்ய மூஹ்யம்
தத் ப்ராப்ய ப்ராப கைக்யம் சகல பல ததாம் ந்யாஸதோ அந்யாந பேஷாம்
ப்ராதான் யாத்யம் ஸ கிஞ்சித் ப்ரதயதி ஸ பரம் ஸ்ரீ ஸகே முக்த்யுபாயே –16-

முகுந்த-ஸ்ரீ கிருஷ்ணன்
ஸ்வப்ரபத்திம்-தன்னிடம் சரண் அடைவதை
ஆதேஷ்டும் -விதிப்பதற்காக
தத் அநு குண -அதற்கு ஏற்ற
குணாத் யந்விதம் -நற் குணங்கள் முதலியவற்றோடு கூடி இருக்கிற
ஸ்வம் -தன்னை
மாம் இதி -என்னை என்று
யுக்த்வா -சொல்லி
ஏக சப்தம் வததி -ஒருவனை என்ற சொல்லையும் பேசுகிறான்
ததுசிதம் தத்ர தாத்பர்ய மூஹ்யம்
தத் -ஆதலால்
விதிக்குத் தக்க பொருள் கொள்ள வேண்டி இருப்பதால்
தத்ர -அந்த ஏக ஸப்தத்தால்
தாத்பர்யம் -கருத்து
ஊஹ்யம் -ஊஹிக்கத் தக்கது
ஸ -அந்த ஏக ஸப்தமானது
முக்த்யுபாயே -முக்திக்கு உபாயமாக இருக்கிற
ஸ்ரீ ஸகே பரம் -எம்பெருமான் இடத்தில் மாத்ரம்
தத் -அப்படிப்பட்ட வேதாந்த ஸாஸ்த்ரங்களில் -அங்காங்கு ப்ரஸித்தமான என்றபடி
ப்ராப்ய ப்ராப கைக்யம் -உபாய உபேயம் ஒருவனே என்பதையும்
சகல பல ததாம் -ஸமஸ்த பல ப்ரதாதாவும் ஒருவனே என்பதையும்
ந்யாஸதோ அந்யாந பேஷாம்–சரணாகதியைத் தவிர்ந்த வேறே ஒன்றையும் எதிர்பார்க்காத தன்மையையும்
ப்ராதான் யாத்யம் ஸ –முக்கியமாக இருப்பது முதலான
கிஞ்சித் ப்ரதயதி ஸ -சிலவற்றையும் வெளிப்படுத்து கின்றது

ஏகம்-அவன் ஒருவனே சித்த உபாயம் -பிரபத்தியும் அவனே செய்விக்கிறான் என்ற எண்ணம் வேண்டும்
அப்படி இல்லை யாகில் பிரபத்தியும் சாதன உபாயங்களிலே சேரும்

இத்தால் பிரபத்தியும் உபாயம் அன்று என்றதாயிற்று
பகவான் இடம் நம்மிடத்தில் அனுக்ரஹ புத்தி உண்டாக பிரபத்தி தேவை -அதிகாரி விசேஷணம் மாத்ரமே
நிர் விசேஷ ப்ரஹ்மம் அத்வைத மதமும் நிரஸனம்

———-

ஸ்வா பீஷ்ட ப்ராப்தி ஹேது ஸ்வயமிஹ புருஷை ஸ்வீக்ருத ஸ்யாத் உபாய
சாஸ்த்ரே லோகே ஸ சித்த ஸ புநருபயதா சித்த ஸாத்ய ப்ரபேதாத்
சித்த உபாயஸ்து முக்தவ் நிரவதிக தய ஸ்ரீ சக சர்வ சக்தி
ஸாத்ய உபாயஸ்து பக்திர் ந்யஸ நமிதி ப்ருதக் தத்வ ஸீகார ஸித்த்யை–17-

இஹ –இந்தப் பிரபஞ்சத்திலே
சாஸ்த்ரே–ஸாஸ்த்ரத்திலும்
லோகே ஸ-உலக நடப்பிலும்
சித்த -பழக்கத்தில் இருந்து வருகிறதும்
புருஷை-ஜனங்களாலே
ஸ்வயம் -தானாகவே -பிறர் தூண்டுதல் இல்லாமலேயே
ஸ்வீக்ருத-அங்கீ கரிக்கப் பட்டதுமான
ஸ்வா பீஷ்ட –தனது விருப்பத்தை
ப்ராப்தி-பெறுவதற்கு
ஹேது -காரணம் எதுவோ அதுவே
உபாய-உபாயம் என்று பெயர் பெற்றதாக
ஸ்யாத் –இருக்க வேண்டும்
ஸபுந-அவ்வுபாயம் பின்னேயும்
சித்த ஸாத்ய ப்ரபேதாத்-உபயதயா -ஸித்த ஸாத்ய என்னும் இரண்டு பிரிவால் -இரண்டு விதமாக
முக்தவ்-மோக்ஷ விஷயத்தில்
சித்த உபாயஸ்து –ஸித்த உபாயமானவன்
நிரவதிக தய -அளவில்லாக கருணை கொண்ட
ஸ்ரீ சக சர்வ சக்தி–ஸர்வ வல்லமை யுள்ள ஸ்ரீ மன் நாராயணனே
ஸாத்ய உபாயஸ்து –ஸாத்ய உபாயமோ என்னில்
தத் வஸீகார ஸித்த்யை–அந்த எம்பெருமானை வசமாக்குவதன் பொருட்டு ஏற்பட்டவையான
பக்திர் ந்யஸ நமிதி ப்ருதக் -பக்தி என்பதும் சரணாகதி என்பதும் தனிப்பட்டவையே -வெவ்வேறானவையே –

———–

அத்யந்த அகிஞ்சன அஹம் த்வதப சரணத சந்நி வ்ருத்தோத்ய நாத
த்வத் சேவை காந்த தீ ஸ்யாம் த்வமஸி சரணமித் யத்ய வஸ்யாமி காடம்
தவம் மே கோபாயிதா ஸ்யாஸ் த்வயி நிஹிதபரோ அஸ்ம் யேவமித்யர்ப்பி தாத்மா
யஸ்மை ஸ ந்யஸ்த பார சக்ருதத து சதா ந ப்ரயஸ்யேத் ததர்த்தம்–18–

நாத-ஓ நாதனே
அத்ய-இப்போது
அஹம்-நான்
அத்யந்த அகிஞ்சன -மிகவும் புகல் ஒன்றும் இல்லாதவன்
த்வத் அப சரணத -உனக்கு விரோதம் செய்வதில் இருந்து
சந்நிவ்ருத்த-ஒழிந்தவன்
த்வத் சேவை காந்த தீ -உனக்குப் பிரியம் செய்வதிலேயே நோக்கம் உள்ளவனாக
ஸ்யாம் –இருக்கிறேன்
த்வம் சரணம் அஸி -நீயே உபாயமாக இருக்கிறாய்
இதி யத்ய வஸ்யாமி காடம்-என்று தீர்மானமாக அறுதி இடுகிறேன்
தவம் மே கோபாயிதா ஸ்யாஸ் -நீயே அடியேனை ரக்ஷிப்பவனாக இருக்க வேண்டும்
த்வயி நிஹித பரோ –உன்னிடத்திலேயே சுமையை ஒப்படைத்தவனாக
அஸ்மி –இருக்கிறேன்
ஏவம் இதி -இவ்வண்ணமாக
யர்ப்பி தாத்மா-தன்னை ஒப்புக் கொடுத்தவனான
ஸ –அந்த சரணாகதன்
யஸ்மை –எந்தப் பிரயோஜனத்தின் பொருட்டு
ந்யஸ்த பார –தனது பாரத்தைப் ஒப்புவித்தானோ
ததர்த்தம்-அதற்காக
அத -அதற்குப் பின்
சதா –எக் காலத்திலும் -பயன் பெறும் அளவும் என்றபடி
ந ப்ரயஸ்யேத் –பிரயாசப் படக் கூடியவன் அல்லன்-

ஐந்து அங்கங்களையும் சேர பிடித்து அருளிச் செய்கிறார் இதில்
1–கார்ப்பண்யம் –அகிஞ்சன்யன் என்ற எண்ணம் -சரணாகதியை தவிர வேறே உபாயாந்தரங்களில் சக்தன் இல்லாதவன் – பிராப்தி இல்லாதவன்
2–பிரதி கூல்ய வர்ஜனம் -திரு உள்ளம் சேராதவற்றை செய்யாமல் இருக்க வேண்டுமே
3—ஆனுகூல்ய சங்கல்பம் –திரு உள்ளம் உகந்த கைங்கர்யங்களிலே ஆழ்ந்து இருக்க வேண்டுமே
4—மஹா விச்வாஸம் –அவனே ரக்ஷகன் -களை கண் மற்று இலேன் -என்னும் உறுதி வேண்டுமே
5—கோப்த்ருத்வ வர்ணம் –நீயே ரசித்து அருள வேண்டும் என்று ஸ்வீ கரிக்க வேண்டுமே
6—ஆத்ம சமர்ப்பணம் –இதுவே சரணாகதி -மோக்ஷ பலனுக்காக ஒரே தடவை தான் பண்ண வேண்டும் –

பக்தி யோகம் போலே அன்று –

ஸக்ருத் -ஒரு தடவை பர ந்யாஸம் செய்தவன் என்றதால்
பக்தி யோகம் போல் ஆவ்ருத்தி அனுஷ்டானம் இல்லை என்றதாயிற்று
தைத்ரிய உபநிஷத் -தஸ்யை வம் விதுஷ -என்று தொடங்கி புருஷ வித்யையிலே ப்ரபன்னனை யாக ரூபியாகக் காட்டி
யாகத்துக்கு உரிய அங்கங்கள் எல்லாம் இவன் சரீரம் ஜீவன் வாக்கு மார்பு முதலிய அங்கங்களாக நிரூபித்து
ஆயுஷ் காலம் தீக்ஷையாகவும்
மரணம் அவப்ருதம் -யாக பூர்த்தியாகவும் நிரூபித்து உள்ளது –
இந்த ஸ்லோகத்தில் ஆத்ம நிக்ஷேபத்தை அங்கியாகக் கூறி
இனி இவன் நிர்பயன் நிர்பரன்-என்று அருளிச் செய்கிறார்-

———–

த்யக்த்வ உபாய அநபாயா நபி பரம ஜஹன் மத்யமாம் ஸ்வார்ஹ வ்ருத்திம்
ப்ராயச் சித்தம் ஸ யோக்யம் விகத ருணததிர் த்வந்த்வ வாத்யாம் திதிஷூ
பக்தி ஜ்ஞாநாதி வ்ருத்திம் பரிசரண குணான் சத் ஸம்ருத்திம் ஸ யுக்தாம்
நித்யம் யாசேதநந்யஸ் ததபி பகவதஸ் தஸ்ய யத்வாஸ் அப்த வர்க்காத் –19-

உபாயாந் –மோக்ஷ உபாயத்தையும் -நித்ய நைமித்திகங்களையும் ஒழிந்த காம்ய தர்மங்களையும்
அபாயா நபி –பகவத் நிக்ரஹ ஹேதுக்களான அபராதங்களையும்
த்யக்த்வ -விட்டு
பரம் -பிரபத்திக்குப் பின்
மத்யமாம்-முன் சொன்ன உபாயங்களில் சேராத நடுத்தரமான
ஸ்வார்ஹ வ்ருத்திம்-நித்ய கர்ம ரூபமாயும் அதே போல் விட முடியாத நைமித்திக கர்ம ரூபமாயும் இருக்கிற தனது நிலைமைக்கு ஏற்ற செயலையும்
யோக்யம்-ப்ரபன்னனுக்கு உரியதான
ப்ராயச்சித் தம்ஸ புன பிரபத்தி ரூபமான ப்ராயச்சித்தத்யையும்
அஜஹத் -விடாதவனாய்
விகத ருணததிர் -தேவக்கடன் பித்ரு கடன் ரிஷி கடன் -போன்ற கடன்களில் துவக்கு அற்றவனாய்
த்வந்த்வ வாத்யாம் –சீத உஷ்ணம் ஸூக துக்கம் போன்ற த்வந்தங்கள் என்னும் சுழல் காற்றை –
அத்தால் உண்டாகும் பீடையை என்றபடி
திதிஷூ-பொறுத்தவனாய்
அநந்யஸ்-எம்பெருமானை விட்டு மாற்றத்தில் துவக்கு அற்றவனாய்
பரிசரண குணான்-பகவத் கைங்கர்யத்துக்குத் தேவையான கருவிகளை -அதாவது
சந்தனம் -புஷ்பம் முதலிய உப கரணங்களையும்
மற்றும் பல தியாகம் சங்க தியாகம் முதலியவற்றையும்
பக்தி ஜ்ஞாநாதி வ்ருத்திம் –பகவத் பக்தி -அதற்கு ஏற்ற அறிவு இவற்றின் வளருதலையும்
யுக்தாம்-தனது நிலைக்கு அனுகுணமான
சத் ஸம்ருத்திம் ஸ -சான்றோர்களின் சிறப்பையும்
யாசேத் -அபேக்ஷிக்கக் கடவன்
ததபி-அந்த யாசனையும்
பகவதஸ்-பகவானிடம் இருந்தோ
யத்வாஸ்-அல்லது
தஸ்ய -அந்த பகவானுடைய
ஆப்த வர்க்காத்-பக்தர்களிடம் இருந்தோ
ஸ்யாத் –இருக்க வேணும் –

பிரபன்னன் லோக யாத்திரை இருக்கும் விதம் பற்றி அருளிச் செய்கிறார் இதில் –
1—ஸ்வாரத்தமாக எத்தையும் செய்யாமல் இருக்க வேண்டுமே
2—சாஸ்த்ர ஆஜ்ஜை படியே -க்ருத்ய கரணங்கள் -அக்ருத்ய அகரணங்கள் -செய்து வாழ வேண்டும் –
3—நித்ய நைமித்திக வர்ணாஸ்ரம கர்மங்களை செய்தும் காம்ய கர்மாக்களை செய்யாமலும் இருக்க வேண்டுமே
4—பிராமாதிகமாக செய்த தவறுகளுக்கு பிராயச்சித்த பிரபத்தி செய்ய வேண்டும் –
5—சரணாகதனுக்கு தேவ ரிஷி பித்ரு கடன்கள் தீரும் -பிரபத்தி தானே சிறந்த தபஸ் -பகவத் ஆராதனம் ஒன்றே குறிக்கோள்

வேத அத்யயனத்தால் ரிஷிகள் கடன் தீரும்
யாகாதிகளால் தேவக்கடன் தீரும்
சந்ததி வ்ருத்தியால் பித்ரு கடன் தீரும்
இவை தீர்ந்த பின்பே உபாசகன் மோக்ஷ மார்க்கத்தில் ஈடுபட வேண்டும்
ப்ரபன்னனுக்கு இந்த தேவை இல்லை –

———-

ஆஜ்ஞா கைங்கர்ய வ்ருத்திஷ் வநக குருஜந ப்ரக்ரியா நேமி வ்ருத்தி
ஸ்வார்ஹா நுஜ்ஞாத சேவா விதிஷூ ஸ ஸகேந யாவதிஷ்டம் ப்ரவ்ருத்த
கர்ம பிராரப்த கார்யம் ப்ரபதந மஹிம த்வஸ்த சேஷம் த்விரூபம்பு
க்த்வா ஸ்வாபீஷ்ட காலே விசதி பகவத பாத மூலம் ப்ரபந்ந –20-

ப்ரபந்ந–ப்ரபன்னன்
ஆஜ்ஞா கைங்கர்ய வ்ருத்திஷு -ஆஜ்ஞா கைங்கர்யங்களைச் செய்வதில்
அநக-குற்றம் அற்ற
குருஜந ப்ரக்ரியா -பெரியோர்களின் அனுஷ்டானத்தை
நேமி வ்ருத்தி-வண்டி வட்டை போல் தொடர்ந்து செல்லுபவனாய்
ஸ்வார்ஹ-தனக்கு உரிய -ப்ரபந்ந நிலைக்கு ஏற்றதான
அநுஜ்ஞாத சேவா –அநுஜ்ஞா கைங்கர்யங்களுடைய
விதிஷூ -அனுஷ்டானம் செய்யும் முறைகளில்
ஸகேந –சக்தி இருக்குமாகில்
யாவதிஷ்டம் -இஷ்டத்தை அனுசரித்து
ப்ரவ்ருத்த–ஊக்கம் கொண்டவனாய்
த்விரூபம்-புண்யம் பாபம் என்ற இரு வகையான
ப்ரபதந மஹிம-ப்ரபத்தியின் மஹிமையால்
த்வஸ்த சேஷம் -அழிந்தது போக மீதியான
கர்ம பிராரப்த கார்யம் -பயன் கொடுக்காத தொடங்கிய செய் வினையை
புக்த்வா -அனுபவித்து
ஸ்வாபீஷ்ட காலே –தான் விரும்பிய காலத்திலேயே
விசதி பகவத பாத மூலம் -பகவானுடைய திருவடி நிழலில் புகுகிறான்

பிரபன்னன் சுக துக்கங்களை சமமாக கொண்டு -த்ரிவித தியாகங்கள் -நினைவுடன் பகவத் ஆராதனை ரூபமாக கர்மங்களை செய்து கொண்டு இருப்பான்
தனக்கு பக்தி ஞான வைராக்யங்கள் வளருவதற்கு மட்டுமே பிரார்திப்பான் –
விஷ்வக் சேனர் பெரிய திருவடி திரு வந்த ஆழ்வான் -ஆச்சார்ய குரு பரம்பரை இவர்களை மட்டுமே வணங்கக் கடவன்
பாகவதர் ஸம்ருத்திக்கும் பகவத் ஆராதனை உபகரணங்கள் ஸம்ருத்திக்கும் பிரார்த்திக்கக் கடவன்
1-வர்ணாஸ்ரம கர்மங்களை விடாமல் அனுசந்திக்கக் கடவன் –
2–திவ்ய தேசங்களில் சாத்துப்பொடி புஷ்பங்கள் சமர்ப்பித்து -உத்ஸவாதிகளை நடத்திக் கண்டு களிக்கக் கடவன் –

———-

ஸ்ருத்யா ஸ்ம்ருத்யாதி பிஸ்ஸ ஸ்வயமிஹ பகவத் வாக்ய வர்க்கைஸ் ஸ சித்தாம்
ஸ்வாதந்தர்யே பாரதந்தர்யே அப்யநிதர கதிபி சத் பிராஸ்தீய மாநாம்
வேதாந்த சார்ய இத்தம் விவித குரு ஜன க்ரந்த சம்வாத வத்யா
விம்சத்யா ந்யாஸ வித்யாம் வ்யவ் ருணத ஸூதியாம் ஸ்ரேயஸே வேங்கடேச–21-

வேதாந்த சார்ய -வேதாந்த சார்யன் என்ற விருது பெற்ற
வேங்கடேச-வேங்கட நாதன் என்ற கவி
ஸ்ருத்யா –ஸ்ருதியாலும்
ஸ்ம்ருத்யாதி பிஸ்ஸ –ஸ்ம்ருதி இதிஹாச புராண ஆகமாதிகளாலும்
ஸ்வயமிஹ – நேராகவே நின்று சொன்ன இவ்விஷயமான
பகவத் வாக்ய வர்க்கைஸ் ஸ -பகவானே அருளிச் செய்த வாக்யத் தொகுதிகளாலும்
சித்தாம்–தீர்மானிக்கப் பெற்ற
ஸ்வாதந்தர்யே -மோக்ஷத்துக்கு தனியே உபாயமாக இருப்பதிலும்
பாரதந்தர்யே -மற்ற ஒன்றில் உள்ளடங்கி இருப்பதிலும்
அநிதர கதிபி -வேறு கதி இல்லாத
சத் –சத்துக்களால்
பிராஸ்தீய மாநாம்-ப்ரகாசப் படுத்தப் பட்டதுமான
ந்யாஸ வித்யாம் –சரணாகதி வித்யையை
இத்தம் விவித -கீழில் சொன்னபடி நாநா விதமான
குரு ஜன க்ரந்த –ஆச்சார்யர்களுடைய ஸ்தோத்ர ரத்னம் கத்ய த்ரயம் முதலான கிரந்தங்களோடே
சம்வாத வத்யா-ஒற்றுமை வாய்ந்த
விம்சத்யா -இந்த 20 ஸ்லோகம் அடங்கிய ந்யாஸ விம்சதி நூலால்
ஸூதியாம்-நற் புத்திக் காரர்களுக்கு
வ்யவ் ருணத ஸ்ரேயஸே -நன்மை யுண்டாகும் பொருட்டு விளக்கினார் –

———–

சம்சார வர்த்த வேக பிரசமந ஸூ பத்ருக் தேசிக ப்ரேஷிதோ அஹம்
ஸந்த்யக்தோ அந்யை ரூபாயைர நுஸித சரி தேஷ் வத்ய சாந்தாபிஸந்தி
நி சங்கஸ் தத்வ த்ருஷ்ட்யா நிரவதிகதயம் ப்ரார்த்த்ய சம்ரக்ஷகம் த்வாம்
ந்யஸ்த த்வத் பாத பத்மே வரத நிஜ பரம் நிர்பரோ நிர்பயோஸ்மி–22-

ஹே வரத–ஓ வரதனே
அஹம்-அடியேன்
சம்சார ஆவர்த்த வேக –சம்சாரம் என்னும் நீர்ச் சுழலின் வேகத்தை
பிரசமந –அடக்குகின்ற
ஸூ பத்ருக் -ஷேம காரமான கடாக்ஷம் அருளுபவர்களான
நற் கதிக்கு மூல காரணமான கடாக்ஷம் பெற்றவனாய்
தேசிக ப்ரேஷிதோ –ஆச்சார்யர்களால் கடாக்ஷித்து அனுக்ரஹம் பெற்றவனாய்
அந்யைர் உபாயைர் –மற்ற உபாயங்களாலே
ஸந் த்யக்த-நன்றாக விடப்பட்டவனாய்
அநுஸித சரி தேஷு -தகுதி அற்றவைகளான நடத்தைகளால் -அதாவது நிஷித்த காம்ய கர்மங்களில்
சாந்தாபிஸந்தி–கருத்து ஒழிந்தவனாய்
அத்ய –இப்போது -இந்த நிலையில்
தத்வ த்ருஷ்ட்யா–தத்வ ஞானத்தால்
நிஸ் சங்கஸ் -சந்தேகம் அற்றவனாய்
நிரவதிக தயம் –அளவில்லாக் கருணை கொண்ட
த்வாம்-உன்னை
ப்ரார்த்த்ய சம்ரக்ஷகம் -ரக்ஷிப்பவனாக அடைந்து -அதாவது -என்னை ரக்ஷிக்கக் கடவாய் என்று பிரார்த்தித்து
த்வத் பாத பத்மே -உனது திருவடித் தாமரையில்
நிஜ பரம் ந்யஸ்த -எனது பாரத்தை அடைக்கலம் செய்து
நிர்பரோ நிர்பயோஸ்மி–சுமை கழிந்தவனாய் பயம் அற்றவனாகவும் இருக்கிறேன்

தம்முடைய ஆச்சார்யர் கிருபையால் -தாம் பெற்ற ஞானம் -பக்தி யோகத்தில் சக்தன் அல்லன் -பிரபத்தி ஒன்றே உபாயம்
ஒரு தடவை மட்டுமே பண்ண வேண்டும் -என்றும் -பிரபத்தியின் மகிமைகளையும் அறிந்தமையையும் –
பெரிய பிராட்டியார் பேர் அருளாளன் இடம் சரண் அடைந்தமையையும் -நிர்ப்பரராய் கைங்கர்யங்களிலே கால ஷேபம் செய்து
நிரதிசய ஆனந்தம் இங்கேயே இந்த சரீரத்துடன் பெற்றதை அருளிச் செய்து நிகமிக்கிறார் –

தம்முடைய அனுஷ்டானத்தையே த்ருஷ்டாந்தம் ஆக்கி நிகமிக்கிறார்

இங்கு மிகச் சுருக்கமாக அருளிச் செய்து
ரஹஸ்ய த்ர்ய சாரத்தில் -அர்த்த அனுசந்தான பாகம் என்ற முதல் பாதத்தில் உபோத்கார அதிகாரம் முதல்
ப்ரஹ்ம அனுபவ அதிகாரம் வரை -22அதிகாரங்களால் விரிவாக அருளிச் செய்துள்ளார்
அங்கு விலக்கியவற்றையும் ஒரு ஸ்லோகத்தால் சுருக்கி அருளிச் செய்துள்ளார் –

ஏறி எழில் பதம் எல்லா உயிர்க்கும் இதமுகக்கும்
நாறு துழாய் முடி நாதனை நண்ணி அடிமையில் நம்
கூறு கவர்ந்த குருக்கள் குழாங்கள் குரை கழல் கீழ்
மாறுதலின்றி மகிழ்ந்து எழும் போகத்து மன்னுவமே —

அவிஸ்ராந்த ஸ்ரத்தசத கலஹ கல்லோல கலுஷா
மம ஆவிர்பூயா ஸூ மனஸி முனி சித்தாத்தி ஸூ லபா
மது ஷீர நியாய ஸ்வ குண விபவ ஆசஜ்ஜன கநத்
மஹாநந்த ப்ரஹ்ம அனுபவ பரிவாஹா பஹூ விதா —

————-

இதி ந்யாஸ விம்சதி சம்பூர்ணம்

கவி தார்க்கிக ஸிம்ஹாய கல்யாண குண சாலிநே ஸ்ரீமதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம –

————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேதாந்த தேசிகன் சுவாமி திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ வர வர முனி தினசர்யா–ஸ்ரீ எறும்பி அப்பா அருளிச் செய்தது -ஸ்ரீ காஞ்சீ ஸ்வாமிகள் உரை —

July 2, 2017

ஸும்ய ஜாமாத்ரு யோகீந்த்ர சரணாம் புஜ ஷட்பதம் தேவராஜ குரும் வந்தே திவ்ய ஜ்ஞாந பிரதம சுபம் —

மா முனிகள் திருவடித் தாமரை மலரில் வந்து போன்றவர் -அடியார்களுக்கு திவ்யமான ஞானம் அளிப்பவர்
-ஷேமங்கரர் -ஸ்ரீ தேவராஜாசார்யார் -திருநாமம் பூண்ட ஸ்ரீ எறும்பி அப்பாவைத் தொழுகிறேன் -என்றபடி –

மன்னுயிர்காள் இங்கே மணவாள மா முனிவன் பொன்னடியாம் செங்கமலப் போதுகளை உன்னிச் சிரத்தாலே திண்டில் அமானவனும் நம்மைக் கரத்தால் தீண்டல் கடன் —
திருக்கடிகை அருகில் எறும்பி-ஸ்ரீ எறும்பி அப்பா -திரு ஆராதனை பெருமாள் -சக்ரவர்த்தி திருமகன் –திருவனந்த ஆழ்வான் தானே வந்து திருவவதரித்தார் –
என்று திரு உள்ளத்தில் உணர்ந்து -அத்தாணி சேவகத்துக்கு ஆட்படுத்திக் கொண்டு அருள வேண்டும் என்று பிரார்த்தித்து
அனுக்ரஹமும் திரு இலச்சினையும் பெற்று சகல அர்த்தங்களும் சிஷிக்கப் பெற்று -தம்முடைய பரம பக்தி பரிவாக ரூபமாக
மா முனிகள் விஷயமாக பல ஸ்தோத்திரங்கள் பணித்தார் -அவற்றுள் முந்துற முன்னம் பணித்தது இந்த தின சர்யா திவ்ய க்ரந்தமாகும் –
பகலில் நடை பெறக் கண்ட அனுஷ்டான க்ரமங்கள் -பூர்வ தின சரியையினால் பேசி -சாயம் ஸந்த்யைக்கு பிறகு
நடை பெறக் கண்ட அனுஷ்டான க்ரமங்களை உத்தர தின சரியையினால் பேசுகின்றார் -பூர்வ தின சரியையில் -முதல் -13-வரை உபோத்காதம் –

அங்கே கவேர கன்யாயாஸ் துங்கே புவன மங்களே ரங்கே தாம்நி ஸூகா ஸீநம் வந்தே வர வரம் முனிம் –1-

மங்களா சரண ரூபம் -திருக் காவேரியின் பரிசரத்திலே சகல லோக ஷேமங்கரமாயும் -திருவரங்க திருப்பதியில் இனிது வாழ்கின்ற மணவாள மா முனிகளை அடி பணிகின்றேன் –
சகல விபத்துக்களும் நீங்கி சேம வாழ்ச்சி ஸ்வாமிகள் திருவடி இட்டது முதலாக இருந்ததால் ஸூகாஸீநம் -என்கிற விசேஷணம் –

மயி பிரவிசதி ஸ்ரீ மன் மந்திரம் ரங்க சாயிந பத்யு பதாம் புஜம் த்ரஷ்டும் ஆயாந்த மவி தூரத–2-

பெருமாள் நியமித்த படியே இவர் மா முனிகளை சேவிக்க விரும்பி அவர் சந்நிதானத்தை நோக்கி செல்ல -மா முனிகளும் தம் சன்னிதானம் விட்டு
சந்நிதியில் மங்களாசானம் அர்த்தமாக புறப்பட்டு எழுந்து அருளா நின்றது -என்கிறார் இதில்
ஸ்வாமின் தேவரீரை சேவிக்க அடியேன் நெடும் தூரத்தில் நின்று ஆர்த்தி உடன் ஓடி வாரா நிற்க தேவரீர் தாமே நிர்ஹேதுகமாக அடியேனை விஷயீ கரிக்கத்
திரு உள்ளம் பற்றி என்னைத் தேடித் புறப்பட்டு வந்து அருளுவது போலே இருக்கிறதே -என்கிற உகப்பு தோற்ற –
-மயி ப்ரவிசதி- என்றும்- ஆயாந்தம் அவி தூர -என்றும் அருளிச் செய்கிறார் -அவி தூரதா –அதிக சமீபத்தில் இன்றிக்கே அதிக தூரத்திலும் இன்றிக்கே-
நடுத்தரமான இடத்திலே திரு மடத்தின் உள்ளேயே சேவை சாதித்து அருளினமை சொன்ன படி –
இந்த ஸ்லோகம் தொடக்கி -13-ஸ்லோகம் பவேயம் பவது காநாம் அஸஹ்யா நாம் அநாஸ் பதம் – வரை ஏக அன்வயமாய் இருக்கும் –
-12-ஸ்லோகத்தில் பவந்தம்- முநே வர வர ஸ்வாமிந் –4- ஸ்லோகத்தில் -பவத் ப்ரியவ்-சம்போதானம் –ஸ்வாமியை முன்னிலை படுத்தியே பேசுவதாய் இருக்கும் –

ஸூதா நிதி மிவ ஸ்வைரஸ் வீக்ருதோ தக்ர விக்ரஹம் – பிரசந் நார்க்க ப்ரதீகாச பிரகாச பரி வேஷ்டிதம்–3-

அமுதக்கடல் தானே இப்படி ஒரு திவ்ய மங்கள விக்ரஹ பரிக்ரஹம் பண்ண ஆசைப்பட்டு மா முனிகள் -இச்சா க்ருஹீதாபி மதோரு தேஹ -அப்ராக்ருதம் –
கண் கூசாமல் காணத்தக்க ஸூர்யன் ஒருவன் போன்ற ஒளி யுடையவர் -அபூத உவமை -சந்திரன் தண்ணளி யூட்டப் பெற்ற ஸூர்யன் போலே -பிரசன்ன ஆதித்ய வர்ச்சசம் –

பார்ச்வத பாணி பத்மப்யாம் பரிக்ருஹ்ய பவத் ப்ரியவ் விந்யஸ் யந்தம் சநைரங்க்ரீ ம்ருதுலவ் மேதிநீதலே -4-

கீழே ஆயாந்தம் அவி தூரத-என்று மா முனிகள் எழுந்து அருளுகிற சந்நிவேசம்-செந்தாமரை திருக் கைகளால் அந்தரங்க ப்ரீதி பாத்ர சிஷ்யர்கள்
கோயில் அண்ணன்-அவர் திருத் தம்பியார் / கோயில் அண்ணன் வான மா மலை ஜீயர் -என்றுமாம் -பரிக்ருஹ்ய -ஸ்வீகரித்து -என்றுமாம்
பறைவேறு பரம் புருடா நீ என்னைக் கைக் கொண்டபின் /லஷ்மீ ந்ருஸிம்ஹ மம தேஹி கராவலம்பம் /அனுக்ரஹம் என் மீது இருக்க வேணும் -என்றபடி –
மேலே -22-ஸ்லோகத்தில் தத்ஸ சார்த்தம் விநிர் கத்ய ப்ருத்யைர் நித்ய அநபாயிபி ஸ்ரீ ரெங்க மங்களம் த்ரஷ்டும் புருஷம் புஜகேசயம் -என்று
ஸ்ரீ ரெங்க நாதனை மங்களாசானம் செயறகு அருள வெளியே புறப்பட்டு அருளும் படியை அருளிச் செய்கிறார் –
ஸ்தநந்த்ய பிரஜை தாயின் முளையிலே முந்துற முன்னம் வாய் வைக்குமா போலே ஸ்வாமியின் திருவடிகளில் கண் வைத்த படி -அங்க்ரீ ம்ருதுலவ் மேதிநீதலே

ஆம்லாநா கோமலாகாரம் ஆதாம் ரவிமலாம் பரம் -ஆபீ நவி புலோரஸ்கம் ஆஜாநு புஜ பூஷணம் –5-

பரம ஸூந்தர திரு மேனி -திருவரையில் சிவந்த ஆடை -உத்துங்க விசால வக்ஷஸ் ஸ்தலம் -திரு முழம் தாள் அளவும் தொங்கும்
திருக் கைகளையே திவ்ய பூஷணமாக கொண்டு விளங்கா நின்றேர் -என்று முன்னிலையாக அருளிச் செய்கிறார் –

ம்ருணால தந்து சந்தான ஸம்ஸ்தான தவலத்விஷா-சோபிதம் யஜ்ஞ ஸூத்ரேண நாபிபிம்ப சநாபிநா –6-

தாமரைக் கொடியின் உள்ளே யுள்ள நூற்களின் தொகுதி யுடைய சந்நிவேசம் போலே வெளுத்த ஒளியை யுடையதாய் –
திரு நாபி மண்டலத்து அளவும் தொங்குகின்ற திரு யஜ்ஜோபவீதத்துடன் திகழா இருந்தீர் –

அம்போஜ பீஜ மாலாபி ரபிஜாத புஜாந்தரம் ஊர்த்வ புண்ட்ரை ருபச் லிஷ்டம் உசிதஸ்தாண லக்ஷணை–7-

தாமரை மணிகளினால் அமைக்கப்பட்ட மலைகளினால் அழகிய திரு மார்பை யுடையீர்–திரு நெற்றி முதலான ஸ்தான பொருத்தமும் -லக்ஷண சவ்ஷ்டவமும்-
வாய்ந்த துவாதச ஊர்த்வ புண்டரங்கள் திரு மேனியில் இயற்கையாகவே தோன்றினவோ -என்னலாம் படி பொருத்தப் பெற்று இரா இருந்தீர் –

காஸ்மீர கேஸரஸ்தோம கடார ஸ்நிக்தா ரோஸிஷா கௌசேயேந சமிந்தானம் ஸ்கந்த மூலா வலம்பிநா –8-

குங்குமப் பூக்களின் திரட்சி போல் சிவந்தும் பளபளத்தும் விளங்கும் காந்தியை யுடைத்தாய் -திருத் தோள்களில் தொங்க விடப்பட்டிருப்பதான
காஷாய உத்தரீயத்தினால் பரபாக சோபை பெற்று பிரகாசியா இருந்தீர் -என்கை –
உத்தம ஆச்ரமிகளுக்கு உத்தரீய தாரணம் கூடாது என்கிற நிஷேதம் திவ்ய தேச ப்ராவண்யம் இன்றிக்கே வர்ணதர்மைக நிஷ்நாதர்களான யுத்திகளை நோக்கியது அன்று –

மந்த்ர ரத்ன அநு சந்தான சந்ததஸ் புரிதா தரம் -ததர்த்த தத்த்வ நித்யாந சன்னத்த புல கோத்கமம் –9-

த்வய மந்த்ரம் இடைவீடில்லாமல் அநு சந்தித்து துடிக்கும் திருப்பவளாம் -அதன் ஆழ்ந்த பொருளை செவ்வனே சிந்திப்பதால் புளகாங்கிதமான திருமேனி –
ஸர்வேஷாம் ஏவ மந்த்ராணாம் மந்த்ர ரத்னம் த்வயாஹ்வயம் -ஸ்ரீ பாஞ்ச ராத்ர வசனம் –
த்வயம் அர்த்த அநு சந்தாநேந ஸஹ சதா ஏவம் வக்தா –ஸ்ரீ கத்ய ஸ்ரீ ஸூக்தி –ஸ்ரீ பராசரர் வசனம் –
தத் அர்த்த தத்வ நித்யான –அர்த்தம் மட்டும் இல்லாமல் அர்த்த தத்வம் -ஸ்ரீமன் நாராயண சரணவ் -என்று நம்மாழ்வாரும்
-மாறன் அடி பணிந்து உய்ந்த எம்பெருமானாரும் விவஷிதம் –
ஆக ஆழ்வார் எம்பெருமானார் இரண்டு திரு நாமங்களையும் சிந்தனை செய்வதே அர்த்த தத்வ நித்யானம் ஆகும் –

ஸ்மயமாந முகாம் போஜம் தயமாந த்ருகஞ்சலம் மயி பிரசாத ப்ரவணம் மதுரோதார பாஷணம் –11-

புன்முறுவல் பூத்து விளங்குகின்ற முகாரவிந்தம் -திரு உள்ளத்தில் க்ருபாதிசயத்தை கோள் சொல்லும் கடாக்ஷ வீக்ஷணம் –
இன்று அளவும் அடி பணியாத அடியேன் பால் ஆதாரம் பெருக இருந்தீர் –
அநுக்ரஹமே வடிவு எடுத்தால் போன்ற சப்த புஷ்டியும் அர்த்த புஷ்டியும் கொண்ட இனிய திரு வாசகங்கள் –

பவந்த மேவ நீரந்தரம் பஸ்யன் வஸ்யேன சேதஸா மூனே வர வர ஸ்வாமின் முஹுஸ் த்வாமேவ கீர்த்தயன் —12-
த்வத் அந்நிய விஷய ஸ்பர்ச விமுகைரகி லேந்த்ரியை-பவேயம் பாவ துக்கா நாம் அஸஹ்யா நாம நாஸ் பதம் –13-

கீழே -அருளிச் செய்த த்வதீ யாந்த விசேஷணங்கள் எல்லாம் இந்த ஸ்லோகத்தில் உள்ள பவந்தம் என்கிற விசேஷ பதத்தில் அந்வயம்-
கீழ் சொன்ன பெருமைகள் எல்லாம் வாய்ந்த தேவரீரையே இடைவிடாமல் கண்ணாரக் கண்டு கொண்டு இருப்பேனாய் –
தேவரீருடைய கடாக்ஷ விசேஷத்தினாலே எனக்கு ஸ்வ அதீனமாகப் பெற்ற மனத்தைக் கொண்டு -யானும் என்னெஞ்சும் இசைந்து ஒழிந்தோம் -என்றபடி
மற்ற விஷயாந்தரங்களில் சிறிதும் பற்று இல்லாத சகல இந்திரியங்களை கொண்டு -சம்சாரிக தாபங்களுக்கு ஆஸ்ரயம் அல்லேனாய் ப்ரஹ்ம ஆனந்த சாலியாகக் கடவேன்-
இதுவரை உபோத்காத ரூபம் -மேலே தினசர்யா விசேஷ ப்ரதிபாதன பிராரம்பம் –

பரேத்யு பச்சிமே யாமே யாமின்யாஸ் சமுபஸ்திதே-பிரபுத்தீய சரணம் கத்வா பராம் குரு பரம்பராம் —14-
த்யாத்வா ரஹஸ்ய த்ரிதயம் தத்வ யாதாம்ய தர்ப்பணம் -பர வ்யூஹாதி காந் பத்யு பிரகாரான் ப்ரணிதாய ச –15-

இது தொடங்கி தாம் கண்டா நித்ய அனுஷ்டானவை கரிகளைச் சுருக்கமாக அருளிச் செய்கிறார் –
அபரயாமம் அணித்தானவாறே -திருக் கண் விழித்து அருளி -குரு பரம்பரையை தஞ்சமாக நினைத்து அனுசந்தித்து அருளி –
ரஹஸ்ய த்ரயத்தையும் சிந்தனை செய்து -பரத்வாதி பஞ்சகம் -நிலைகளையும் சிந்தனை செய்து அருளி –
மேலே பல ஸ்லோகங்களிலும் அருளிச் செய்து –21-ஸ்லோகத்தில் மந்த்ர ரத்ன பிரயச்சந்த -என்கிறதிலே அன்வயித்து முடிவு பெறும் –

தத் ப்ரத்யுஷசி ஸ்நாத்வா க்ருத்வா பவ்ர்வாஹ்ணிகீ க்ரியா யதீந்த்ர சரண த்வந்த்வ ப்ரவனே நைவ சேதஸா –16-

திரு முத்து விளக்குதல் -அருணோதய காலத்தில் நீராட்டம் -எம்பெருமானார் திருவடிகளில் பரமபக்தி யுக்தமான திரு உள்ளத்துடன்
பெறாத காலத்தில் செய்து அருள வேண்டிய ஆஹ்னிகங்களை எல்லாம் செய்து அருளி –

அத ரங்கநிதிம் சம்யக் அபிகம்ய நிஜம் ப்ரபும் ஸ்ரீ நிதாநம் ச நைஸ் தஸ்ய சோதயித்வா பத த்வயம் –17-

ப்ராத கால க்ருத்யங்களை முடித்துக் கொண்டு மடத்துக்கு எழுந்து அருளி தமக்கு
ஆராத்ய தேவதை ஸ்ரீ அரங்க நகர் அப்பனுக்கு அர்க்க்ய பாத்ய சமநீ யாதிகள் சமர்ப்பித்து –

ததஸ் தத் சந்நிதிஸ் தம்பமூல பூதல பூஷணம் –ப்ராங்முகம் ஸூகமாஸீநம் பிரசாத மதுர ஸ்மிதம் –18-

அரங்க நகர் அப்பன் சந்நிதியில் ஒரு ஸ்தம்பத்தின் அடிக்கு அலங்காரமாகக் கிழக்கு நோக்கி இனிது வீற்று இருந்து
திரு உள்ளம் பிரசன்னமாய் இருப்பது தோன்ற மதுர ஸ்மிதம் கொண்டு அருளி –

ப்ருத்யை ப்ரிய ஹிதை காக்ரை ப்ரேம பூர்வம் உபாஸிதம் தத் ப்ரார்த்தநாநு சாரேண ஸம்ஸ்காரான் ஸம்விதாய மே –19-
அநு கம்பா பரீவாஹை அபிஷேச நபூர்வகம் திவ்யம் பத த்வயம் தத்வா தீர்க்கம் ப்ரணமதோ மம –20-
சாஷாத் பலைக லஷ்யத்வ பிரதிபத்தி பவித்ரிதம் மந்த்ர ரத்னம் பிரயச்சந்தம் வந்தே வர வரம் முனிம் –21-

ஸ்வரூப அனுரூப வ்ருத்தியிலே ஊன்றி இருக்கும் -ஸ்ரீ வானமா மலை ஸ்வாமி -ஸ்ரீ கோயில் அண்ணன் ஸ்ரீ கந்தாடை அண்ணன் போன்ற சிஷ்யர்கள் புடை சூழ
அவர்களுடைய வேண்டுகோளுக்கு இணங்கி அடியேனுக்கு பஞ்ச ஸம்ஸ்கார பிரதானம் பண்ணி அருளி –
க்ருபா ப்ரவாஹ பரிவாக ரூபங்களான கடாக்ஷ வீக்ஷணங்களை அடியேன் மீது செலுத்தி -சாஷ்டாங்க பிராணாயாமம் செய்து நின்ற
அடியேனுக்கு என் சென்னிக்கு அணியாக -தம் திருப் பாதார விந்த யுகளத்தை தந்து அருளி -மங்களா சாசனத்திலேயே ஊன்றி இருக்கும் படி
அனுக்ரஹம் செய்து அருளி மந்த்ர ரத்னத்தை உபதேசித்து அருளிய மா முனிகளை தொழுகின்றேன்
சாஷாத் பலைக லஷ்யத்வ பிரதிபத்தி பவித்ரிதம்-சாஷாத் பலமும் ஆசார்யத்வமும் சித்திக்கிற படி -என் என்னில் -தன நினைவாலும் ஈஸ்வரன் நினைவாலும் சித்திக்கும் –
சாஷாத் பலமாவது உபதேச பாத்திரமான இவன் திருத்தி மங்களா சாசனத்துக்கு ஆளாகை-
இது தன நினைவாலே சித்திக்கை யாவது -உபதேஷடாவான தான் விப்ரதிபதிகள் ஒன்றும் இன்றி இதுவே பலமாக நினைத்து உபதேசிக்கவே
அவன் அப்படி திருந்தி மங்களா சாசன அதிகாரியாகை -வேறு ஒரு எண்ணம் இன்றிக்கே யுபதேசித்து அருளினை படி சொல்லிற்று –

ததஸ் ஸார்த்தம் விநிர்கத்ய ப்ருத்யைர் நித்ய அநபாயிபி-ஸ்ரீ ரங்க மங்களம் த்ரஷ்டும் புருஷம் புஜ கேசயம் –22-
மதி ஸ்ரீ மதி த்வாரே கோபுரம் சதுரா நநம் ப்ரணி பதிய சதை அந்த ப்ரவிஸந்தம் பஜாமி தம் –23-

அதன் பிறகு அரவணை மேல் பள்ளி கொண்டு அருளும் அரங்கனை மங்களா சாசனம் செய்து அருள்வதற்காக தம்மை ஒரு நொடிப் பொழுதும் அகலகில்லாத
சிஷ்ய வர்க்கங்கள் உடன் புறப்பட்டு அருளிப் பெரிய திரு வாசலிலே நான்முகன் கோட்டை வாசல் என்னும் ப்ரஸித்தியை யுடைய
திருக் கோபுர நாயனாரைத் தெண்டன் இட்டு எழுந்து அருளா நின்ற மணவாள மா முனிகளை வணங்குகின்றேன் –
பிரகார கோபுராதிகளின் வைலக்ஷண்ய அநு பாவத்தில் திரு உள்ளம் உன்று அவற்றை தனித்தனியே அனுபவித்துக் கொண்டே
உள்ளுப் புக வேண்டி இருப்பதனால் -சநை ரத்ன ப்ரவிஸந்தம்-என்னப்பட்டது-

தேவி கோதா யதிபதி சடத் வேஷிணவ் ரங்க ஸ்ருங்கம் சேநா நாதோ விஹக வ்ருஷப ஸ்ரீ நிதிஸ் சிந்து கன்யா –
பூமா நீளா குரு ஜந வ்ருத பூருஷஸ் சேத்ய மீஷாம் அக்ரே நித்யம் வர வர முநேரங்க்ரி யுக்மம் ப்ரபத்யே –24-

தேவி கோதா–ஆண்டாள் / யதிபதி சடத் வேஷிணவ் –எம்பெருமானார் நம்மாழ்வார் / ரங்க ஸ்ருங்கம் -ஸ்ரீ ரெங்க விமானம் /
சேநா நாதோ சேனை முதலியார் / விஹக வ்ருஷப -பக்ஷிராஜனான பெரிய திருவடி /ஸ்ரீ நிதிஸ் சிந்து கன்யா –ஸ்ரீ ரெங்க நாச்சியார் ஸ்ரீ ரெங்க நாதன் /
பூமா நீளா குரு ஜந வ்ருத பூருஷஸ் ச -பூ தேவி ஸ்ரீ தேவி நீளா தேவி ஆழ்வார்கள் ஆகிய இவர்களால் சோள பட்ட பரமபத நாதன் –
இதி அமீஷாம் அக்ரே–என்னும் இவர்கள் திரு முன்பே -மங்களாசாசன அர்த்தமாக எழுந்து அருளி இருந்து சேவை சாதிக்கும்
நித்யம் வர வர முநேரங்க்ரி யுக்மம் ப்ரபத்யே-ஸ்ரீ மணவாள மா முனிகளின் திருவடியிணைகளை நித்யமும் தொழுகின்றேன் –
ஸ்வாமி நித்யம் மங்களா சாசனம் செய்து அருளும் கிராமம் -இதே ஸ்லோகம் ஸ்ரீ வர வர முனி சதகத்திலும் உள்ளது –

மங்களா சாசனம் க்ருத்வா தத்ர தத்ர யாதோசிதம் தாம் நஸ் தஸ்மாத் விநிஷ்க்ரம்ய ப்ரவிஸ்ய ஸ்வம் நிகேதனம் –25-

கீழ் ஸ்லோகத்தில் தெரிவித்த முறைப்படியே ஆங்காங்கு தம்முடைய ப்ரேமத்துக்குத் தகுதியாக மங்களா சாசனம் செய்து அருளி
சந்நிதியில் இருந்து புறப்பட்டு மீண்டும் தம்முடைய திரு மடத்து என்ற எழுந்து அருளி -இதற்கு மேல் இரண்டு ஸ்லோகங்களிலும் அந்வயம் –

அத ஸ்ரீ சைல நாதார்ய நாம்நி ஸ்ரீ மதி மண்டபே ததங்கரி பங்கஜ த்வந்த்வச் சாயா மத்ய நிவாஸிந நாம் –26-

திருமலை ஆழ்வார் திரு மண்டபத்தில் சித்ரா ரூபியாக எழுந்து அருளி இருக்கும் ஸ்வாசார்யாரது திருவடித் தாமரை இணையின் நிழலிலே எழுந்து அருளி இருந்து
சிஷ்யாணாம்-விசேஷ பதம் அத்யாஹரித்து கொண்டு -கால ஷேப அர்த்தமாக ஸ்ரோதாக்கள் குழுமி இருந்தபடியே சொல்லிற்றாகக் கொள்வது –

தத்த்வம் திவ்ய பிரபந்தா நாம் சாரம் சம்சார வைரிணாம் சரசம் ச ரஹஸ்யா நாம் வ்யாஸ ஷாணம் நமாமி தம் –27-

வானின் மீது ஏற்றி அருள் செய்து முடிக்கும் பிறவி மா மாயக் கூத்தினையே என்றும் -மீட்சியின்றி வைகுண்ட மா நகர் மற்றது கையதுவே -என்றும்
சொல்லுகிறபடியே ப்ரக்ருதி சம்பந்தத்தை போக்கித் திருநாடு சேர்ப்பிக்க வல்ல அருளிச் செயல்களின் சாரமான தத்வத் பொருளை
ரஹஸ்யார்த்தங்களோடு சேர்த்துப் பரம போக்யமாக வியாக்யானித்து அருளா நின்ற அந்த மணவாள மா முனிகளை வணங்குகின்றேன் –

தத ஸ்வ சரணாம் போஜ ஸ்பர்ச சம்பந்த ஸுரபை பாவநை ரர்த்தி நஸ் தீர்த்தைர் பாவயந்தம் பஜாமி தம் –28-

அத்யாத்ம சாஸ்திரம் பிரவசனம் செய்து அருளி தலைக்கு கட்டின பிறகு சிஷ்யர்களுக்கு ஸ்ரீ பாத தீர்த்தம் -ப்ரசாதித்து அருளா நின்ற ஸ்வாமியை தொழுகின்றேன்

ஆராத்ய ஸ்ரீ நிதிம் பச்சாத் அநு யாகம் விதாய ச பிரசாத பாத்ரம் மாம் க்ருத்வா பஸ்யந்தம் பாவயாமி தம் –29-

அனந்தரம் ஸ்வ ஆராத்ய தேவதையான அரங்க நகர் அப்பனுக்குத் திருவாராதனம் கண்டு அருள பண்ணி பகவத் பிரசாத பிரதிபத்தி ரூபமான பிரசாத
ஸ்வீகாரத்தைச் செய்து அருளி போனகம் செய்த சேடம் தந்து அருளி அடியேனைக் கடாக்ஷித்து அருளின மா முனிகளைச் சிந்தனை செய்கின்றேன் —

ததச் சேதஸ் சமாதாய புருஷே புஷ்கரேஷனே உத்தம்சித கரத்வந்த்வம் உபவிஷ்ட முபஹ்வரே –30-

அமுது செய்து அருளின பிறகு புண்டரீகாக்ஷனான புருஷோத்தமன் பாக்களில் திரு உள்ளத்தை ஊன்ற வைத்து
மத்தகத்திடைக் கூப்பிய கையராய் ஏகாந்தமாக எழுந்து அருளி இருந்து சிந்தனை செய்து அருளா நின்ற
மா முனிகளை சேவிக்கின்றேன் -கிரியா பதம் மேல் ஸ்லோகத்தில் உள்ளது -அனுயாகத்துக்கு பிறகு யோக நிஷ்டை -பரத்வாஜர்
-க்ருத்வா அநு யாகம் குர்வீத ஸ்வாத்யாயம் வைஷ்ணவம் பரம் ததோ யுஞ்ஜீத ச ஆத்மாநாம் புருஷே புஷ்கரேஷனே –என்றபடி -யோகிகளின்
உள்ளத்து உள்ளே எம்பெருமான் விக்ரஹ விசிஷ்டானாய்க் கொண்டு சந்நிதி பண்ணி அருளுகிறார் -சாஸ்த்ரார்த்தம் -புஷ்கரேஷனே -பதத்தால் ஸூசகம் –

அபிஜாஸ நஸ்த மவதாத ஸூஜாதா மூர்த்திம் ஆமீலிதாஷ மனுசம்ஹித மந்த்ர ரத்னம்
ஆநம்ர மௌலி பிருபாசித மந்தரங்கை நித்யம் முனிம் வரவரம் நிப்ருதோ பஜாமி –31-

யோகார்த்தமாக பத்மாசனம் எழுந்து அருளி -பரம பரிசுத்த ஸூந்தர திவ்ய மங்கள விக்ரஹத்தை யுடையராய்
சுபாஸ்ரய வஸ்து தியானத்தினால் சிறிது மூடின திருக் கண்களை யுடையராய் -த்யான அநு சந்தான நிரதராய் -விநயமே வடிவெடுத்த ஸ்ரீ வானமா மலை ஸ்வாமிகள்
முதலான அந்தரங்க சிஷ்யர்களால் அத்தாணிச் சேவகம் செய்யப் பட்டவரான மணவாள மா முனிகளை ஏகாக்ர சித்தனாய் எஞ்ஞான்றும் அனுபவம் செய்யா நின்றேன் –

தத சுபாஸ்ரயே தஸ்மிந் நிமக்நம் நிப்ருதம் மன யதீந்த்ர ப்ரவணம் கர்த்தும் யதமானம் நமாமி தம் –32-

யோக அப்யாஸத்திற்குப் பிறகு அந்த சுபாஸ்ரய வஸ்துவில் லயித்து நிச்சயமாய் இருக்கின்ற திரு உள்ளத்தை மீட்டு
எம்பெருமானார் இடத்தில் ஊன்ற வைப்பதற்கு முயற்சி செய்து அருளா நின்ற அந்த மணவாள மா முனிகளைத் தொழுகின்றேன் –
ஹேய ப்ரத்ய நீகத்வே சதி சித்த ஆகர்ஷகத்வம் சுபாஸ்ரயத்வம் –சுபாஸ்ரய லக்ஷணம் –
யதீந்த்ர சரண த்வந்த்வ ப்ரவனே நைவ சேதஸா –16-என்றாரே கீழே -யதீந்த்ர பிரவணர் என்றே நிரூபகம்
இடையில் – புருஷே புஷ்கரேஷனே சேதஸ் சமாதானம் -30-ப்ராப்தமான படியால் அந்த நிலையில் நின்றும் மீண்டும் பழைய படியே
யதீந்த்ர பிரவண ஹ்ருதயரானமை சொல்லிற்று ஆயிற்று –
எம்பெருமானார் திருவடிகளான ஸ்ரீ வைஷ்ணவர்களோடு கலந்து பரிமாறப்ப புகுந்த படியை மேலே உத்தர தினசரியைக்கு அவதாரிகை போலே அருளிச் செய்தபடி
அபராஹ்நத்தில் ஸ்ரீ வசன பூஷணாதி திவ்யாக்ரந்த காலஷேபம் அடுத்தபடியாக அருளிச் செய்யப்படுகிறது அன்றோ- -அதற்கு இந்த ஸ்லோகம் அவதரணிகை போலும் –

———————————————-

உத்தர தின சர்யா —

இதி யதிகுல துர்ய மேதமாநை சுருதி மதுரை ருதிதை ப்ரஹர்ஷயந்தம் வர வர முனி மேவ சிந்த யந்தீ மதிரிய மேதி நிரத்யயம் பிரசாதம் —

இத்தால் யதிராஜ விம்சதியின் அனுசந்தானம் தெரிவிக்கப் பட்டதாயிற்று –இவ்விதமாக செவிக்கு இனிய சஞ்சொற்கள் நிறைந்த ஸ்துதியினால்
எம்பெருமானாரை ஸ்துதித்து திரு உள்ளம் உகந்து அருளா நின்ற மா முனிகளையே சிந்தனை செய்யும் என் மதியானது நிகரற்ற தெளிவு பெற்று விளங்குகின்றது –

அத கோஷ்டீம் கரிஷ்டா நாம் அதிஷ்டாய ஸூ மேதஸாம் வாக்யா லங்க்ருதி வாக்யாநி வியாக்கியாதாரம் நமாமி தம் —1-

யோக நிலையை விட்டு வெளியே எழுந்து அருளியான பின்பு மேதாவிகள் நிறைந்த திரு வோலக்கத்தில் எழுந்து அருளி இருந்து
ஸ்ரீ வசன பூஷணாதி திவ்ய ஸூ க்திகளை வியாக்யானித்து அருளா நின்ற மா முனிகளைத் தொழுகின்றேன்
-வியாக்கியாதாரம் நமாமி தம் -ப்ரவசனத்தையே சொல்லிற்று ஆகிறது -வாக்யா லங்க்ருதி-என்றது ஸ்ரீ வசன பூஷணம் என்றபடி –

சாயந்தனம் தத க்ருத்வா சமய காரா தனம் ஹரே -ஸ்வைராலாபைச் சுபைச் ஸ்ரோத்ரூன் நந்த யந்தம் நமாமி தம் -2-

சாயம் சந்த்யா அனுஷ்டானங்களைத் தலைக்கு கட்டி அருளி அரங்க நகர் அப்பனுடைய திருவாராதனத்தையும் செய்து அருளி அழகிய
வார்த்தைகளினால் ஸ்ரோத்தாக்களை உகப்பித்து அருளா நின்ற மா முனிகளை வணங்குகின்றேன் –
ஸ்வைராலாபைச்-சொல்லும் அவித்து சுருதியாம் –ஸ்வாமி திருவாய் திறந்து எதை அருளிச் செய்தாலும் அத்தனையும் சாஸ்த்ர அர்த்தமாயேயாய் இருக்குமே –

தத கநக பரவி பர்யங்கே தருண த்யுமணித் யுதவ் விசால விமலச் லஷ்ண தூங்க தூளா ச நோஜ்ஜ் வலே-3-
சமக்ர சவ்ர போத்கார நிரந்தர கந்தரே சோபதானே ஸூகாஸீநம் ஸூகுமாரே வராசனே -4-

அர்த்த பஞ்சக விசேஷ ப்ரகாசகங்களான ஸ்வ யுக்தி விசேஷங்களாலே அந்தே வாசிகளை உகப்பித்து அருளின பிறகு பால ஸூர்யன் போலே
விளங்கும் காந்தியை யுடையதாய் -பரந்து வெளுத்து நிகு நிகு என்ற உயர்ந்த பஞ்சணையினால் அலங்க்ருதமாய் நிரவதிகமான நறு மணக் கிளர்ச்சியினால்
வ்யாப்தமான நான்கு பக்கங்களையும் யுடையதாய் -தலையணையோடு கூடியதாய் ஸ்வர்ண மயமாய் இருந்துள்ள மஞ்சத்தில் யோக யோக்யமாய்
ஸூ குமாரமான உத்தம ஆசனத்தில் இனிதாக எழுந்து அருளி இருக்கின்ற –ஆதாரஅதிசயம் தோற்ற அதிச யுக்தியாகச் சொல்லும் வார்த்தை –
செம் போன் மாடத்தி திருக் குருகூர் -என்றும் -படியிடை மாடத்தி தடியிடைத் தூணில் பதித்த பான் மணிகளின் ஒளியால் விடி பகல் இரவு என்று
அறிவரிதாய திரு வெள்ளி யான்குடி யதுவே -போல அருளிச் செய்த கட்டளை –
விவிக்த தேசே ச ஸூக ஆசனஸ்த -என்று யோக அப்யாஸத்திற்கு சொல்லி இருப்பதை அடி ஒற்றி இவ்வதிசய யுக்தி உத்தமம் யாகும் –

உன்மீலத் பத்மகர்ப்ப த்யுதி தலமுபரி ஷீரா ஸங்காத கௌரம்-ராகா சந்த்ர பிரகாச பிரசுர நக மணி த்யோத வித்யோதமா நம்
அங்குல்யக்ரேஷூ கிஞ்சின் நத மதிம் ருதுலம் ரம்ய ஜாமாத்ருயோகீ திவ்யம் தத பாத யுக்மம் திசது சிரஸி மே தேசிகேந்த்ரோ தயாளு –5-

இது முதல் -11-ஸ்லோகம் வரை அடியார்கள் பரம பரவசர்களாய் ஸ்துதி செய்யும் படிகளைச் சொல்லுகிறது –
பரம காருணிக்கராய் பரமாசார்ய ஸார்வ பவ்மரான ஸ்வாமியுடைய பரம விலக்ஷணமான திவ்ய திருவடித் தாமரை இணையை
அடியேன் முடி மீது வைத்து அருள வேண்டும் என்ற பிரார்த்தனை இதில் –
உன்மீலத் பத்மகர்ப்ப த்யுதி தலம் -அப்போது அலர்ந்த தாமரையின் உள்ளே விளங்குகின்ற காந்தி போன்ற காந்தியை யுடைய
உட்புறம் -புறவடி செந்தாமரை போலே செவ்வியதாயும் -என்றபடி –
உபரி ஷீர ஸங்காத கௌரம்-திருவடியின் மேல் பாகம் பால் திரளை போலே வெண்ணிறம்
முன்னலோர் வெள்ளிப் பெரு மழைக் குட்டன் மொடு மொடு விரைந்தோடப் பின்னைத் தொடர்ந்ததோர் கரு மலைக் குட்டன் பெயர்ந்து அடியிடுவது போல்
பன்னியுலகம் பரவியோவாப் புகழ்ப் பல தேவன் என்னும் தன்னம்பியோடப் பின்கூடச் செல்வான் தளர் நடை நடவானோ –சேஷ அம்சம் –
இங்கும் மா முனிகள் ஆதிசேஷ அவதாரம் -என்பதால் –ஷீர ஸங்காத கௌரம்
இதையே பிரதிவாதி பயங்கர அண்ணா -வர வர முனி சதகத்தில்–துக்தோ தன்வத் தவள மதுரம் சுத்த சாத்விக ரூபம் ரூபம்
யஸ்ய ஸ்புட யதிதராம் யம் பணீந்திர அவதாரம் –என்று அருளிச் செய்கிறார் –
ராகா சந்த்ர பிரகாச பிரசுர நக மணித் யோத வித்யோதமா நம் –பூர்ண சந்திரனுடைய பிரகாசம் போன்ற பிரகாசம் விஞ்சிய திரு நகங்கள் ஆகிற
ரத்னங்களின் ஒளியினால் விளங்கப் பெற்றது -இதுவும் திருப் பாத யுக்மதுக்கு விசேஷணம்
அங்குல்யக்ரேஷூ கிஞ்சின் நதம்–திரு விரல்களின் நுனி சிறிது வணங்கி இருப்பது உத்தம புருஷ லக்ஷணம் -பாதாவராளரங்குளீ -என்பர் மஹா கவிகளும் –
அதிம் ருதுலம்-பரம ஸூ குமாரமான அப்படிப்பட்ட திவ்ய பாதாரவிந்த யுகளத்தை அடியேனுடைய முடி மீது வைத்து அருள வேணும் என்று பக்தர்களின் பிரார்த்தனை –

த்வம் மே பந்துஸ் த்வமஸி ஜனகஸ் த்வம் சகா தேசிகஸ் த்வம் வித்யா வ்ருத்தம் ஸூக்ருத மதுலம் வித்தமப் யுத்தமம் த்வம்
ஆத்மா சேஷீ பவசி பகவன் ஆந்தாச் சாஸீதா த்வம் யத்வா சர்வம் வர வர முநே யத்யதாத்மாநு ரூபம் –6-

ஸ்வாமியே தேவரீர் அடியேனுக்கு உறவினர் ஆகிறீர் – தேவரீர் தந்தை ஆகிறீர் தேவரீர் துணைவர் ஆகிறீர் -தேவரீர் ஆச்சார்யர் ஆகிறீர் –
விதியையோ அனுஷ்டானமோ சிறந்த ஸூக்ருதமோ உத்தமமான செல்வமோ -எல்லாமேமே தேவரீர் ஆகிறீர்
உடலுக்கு உயிராக நிற்பவருக்கு தேவரீரே-
அடியேனுக்கு கைங்கர்ய பிரதிசம்பந்தியும் தேவரீரே-உள்ளே நின்று நியமித்துப் பொருமவரும் தேவரீரே–பல சொல்லி என் –
ஆத்ம ஸ்வரூபத்துக்கு அநு ரூபமான பொருள் எல்லாம் அடியேனுக்கு தேவரீரே -என்று இப்படி சில சிஷ்யர்கள் விண்ணப்பம் செய்யா நின்றார்கள் –

அக்ரே பச்சாதுபரி பரிதோ பூதலம் பார்சவதோ மே மவ்லவ் வக்த்ரே விபூஷி சகல மானஸ அம் போருஹே ச
தர்சம் தர்சம் வர வர முநே திவ்யம் அங்கரி த்வயம் தே நித்யம் மஜ்ஜன் அம்ருத ஜல தவ் நிஸ்த ரேயம் பவாப்திம் –7-

மா முனிகளே -மிக விலக்ஷணமான தேவரீருடைய திருவடி இணையை முன் புறத்திலும் பின் புறத்திலும் மேலேயும் நிலத்தில் நான்கு பக்கங்களிலும்
என்னுடைய பக்கங்களிலும் சிரசிலும் முகத்திலும் எல்லா அவயவங்களிலும் ஹ்ருதய புண்டரீகத்திலும் பாவனா பிரகார்ஷத்தினால்
ப்ரத்யக்ஷ சாமானாகாரமாக ஸ்ம்ருதி விஷயமாகி ஆனந்த அமுதக்கடலில் எஞ்ஞான்றும் ஆழ்ந்தவனாகி சம்சார சாகரத்தை கடக்கக் கடவேன் –

கர்மா தீனே வபுஷி குமதி கல்பயன் ஆத்ம பாவம் துக்கே மக்ந கிமிதி ஸூ சிரம் தூயதே ஜந்துரேஷ –
சர்வம் த்யக்த்வா வர வர முநே சம்பிரதி த்வத் ப்ரஸாதாத் திவ்யம் ப்ராப்தும் தவ பதயுகம் தேஹி மே ஸூப்ரபாதம் –8-

ஸ்வாமியே -அந்யதா அஞ்ஞான யுக்தனான இந்த ஒரு பிராணி -அடியேன் – பூர்வ கர்மாயத்தமான சரீரத்தில் ஆத்ம பிரதிபத்தியை ஏறிட்டுக் கொண்டவனாகி
தேஹாத்ம பிரமசாலியாய்-ஆத்யாத்மீகம் முதலிய தாப த்ரயத்தில் மூழ்கினவனாய் நெடும் காலமாக ஏதுக்குப் பரிதாபிக்கப் கடவேன்
-இந்த பரிதாபத்தை போக்கி அருளத் திரு உள்ளம் பற்ற வேணும் -என்று சேஷ பூரணம் செய்வது –
இப்போதே தேவரீருடைய திருவருளால் புறம்பு உண்டான பற்றுகளை அடைய வாசனையோடு விட்டு தேவரீருடைய திவ்ய பாதார விந்தத்தை
அடையும் படி ஒரு நல் விடிவு தந்து அருள வேணும் என்று சில பக்தர்கள் பிரார்த்தியா நிற்பார்கள் –

யா யா வ்ருத்திர் மனசி மம சா ஜாயதாம் ஸம்ஸ்ம்ருதிஸ் தே யோ யோ ஜல்பஸ் ச பவது விபோ நாம சங்கீர்த்தனம் தே
யா யா சேஷ்டா வபுஷி பகவான் சா பவேத் வந்தனம் தே சர்வம் பூயாத் வர வர முநே சம்யகாரா தனம் தே –9-

ஸ்வாமியே அடியேனுக்கு உண்டாகிற மநோ வ்ருத்தி எல்லாம் தேவரீருடைய சம்ஸ்மரண ரூபமாகவே யாகக் கடவது –
அடியேனுடைய வாக்கில் வருகிற ஜல்ப்பிதங்கள் எல்லாம் தேவரீருடைய திரு நாம சங்கீர்த்தனம் யாகக் கடவது –
அடியேன் பக்கலிலே தோன்றும் சகல வியாபாரங்களும் தேவரீருடைய திருவாராதனம் யாகக் கடவது -என்று சில சிஷ்யர்கள் விஞ்ஞாபனம் செய்யா நின்றார்கள் –

அபகத மத மாநைர் அந்திமோபாய நிஷ்டை-அதி கத பரமார்த்தைர் அர்த்த காமா நபேஷை –
நிகில ஜன ஸூஹ்ருத்பிர் நிர் ஜித க்ரோதா லோபை வர வர முனி ப்ருத்யைர் அஸ்து மே நித்ய யோக –10-

விஷய போகக் களிப்பும் செருக்கும் அற்றவர்களாயும் -ஆச்சார்ய அபிமானம் உத்தாரகம் என்று ஸ்ரீ வசன பூஷணத்தில் சரம உபாயமாக நிஷ்கர்ஷிக்கப் பட்ட
அந்திம உபாயத்தில் ஊற்றம் உடையவர்களாயும் சகல சாஸ்த்ர சாரார்த்தங்களும் கை வந்தவர்களாயும் -தர்ம மோக்ஷங்கள் தவிர அர்த்த காமங்களில்
விருப்பம் அற்றவர்களாயும் -ஒருவர் இடத்திலும் மாத்சர்யம் கொள்ளாதே சர்வ பூத ஸூஹ்ருத்துக்களாயும் க்ரோதம் லோபம் இரண்டையும் வென்றவர்களாயும்
இருக்கின்ற மா முனிகளின் அடியாரோடு அடியேனுக்கு நித்ய சகவாசம் உண்டாகக் கடவது -என்று விஞ்ஞாபனம் செய்வார் சில பக்தர்கள்-

இதி ஸ்துதி நிபந்த்தே ந ஸூசி தஸ்வம நீஷிதான் ப்ருத்யாத் ப்ரேமார்த்ரயா த்ருஷ்ட்யா சிஞ்சந்தம் சிந்தயாமி தம் –11-

கீழே -5-ஸ்லோகம் தொடங்கி-11-ஸ்லோகம் வரை – ஆறு ஸ்லோகங்களால் ஸ்துதி மொழிகளை விஞ்ஞாபனம் செய்து தம் தம் கருத்தை
வெளியிட்டுக் கொண்டு இரா நின்ற அடியார்களைக் குளிர நோக்கி அருளா நின்ற மா முனிகளைச் சிந்தனை செய்யா நின்றேன் –

அத ப்ருத்யாந நுஜ்ஞாப்ய க்ருத்வா சேதச் சுபாஸ்ரயே சய நீயம் பரிஷ்க்ருத்ய சயாநம் ஸம்ஸ்மராமி தம் –12-

இங்கனம் சிஷ்ய அநுக்ரஹமான பிறகு அவரவர்களுக்கு விடை கொடுத்து அருளி தம் திரு உள்ளத்தைச் சிந்தனைக்கு இனிய ஸ்வாராத்ய தேவதையின்
இடத்தே ஊன்ற வைத்து திருப் பள்ளியைப் பரிஷ்கரித்துத் திருக் கண் வளர்ந்து அருளா நின்ற மா முனிகளை ஸ்மரிக்கின்றேன் –

தின சர்யாமிமாம் திவ்யாம் ரம்யா ஸுமய ஜாமாத்ரு யோகிந பக்த்யா நித்யம் அநு த்யாயன் ப்ராப்நோதி பரமம் பதம் –13-

மணவாள மா முனிகள் விஷயமாய் அமைந்த திவ்யமான இந்த தினசர்யா பிரபந்தத்தை அன்போடு நிச்சலும் சிந்தை செய்பவர்
ஸத்கதி ப்ராப்திக்கு உரியவர் ஆவர் என்று பலன் அருளிச் செய்து தலைக்கட்டுகிறார் –

——————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ எறும்பி அப்பா ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ நம்மாழ்வார் விஷயமாக -ஸ்ரீ ஜீயர் நாயனார் -அருளிச் செய்த -ஸ்ரீ நக்ஷத்ர மாலிகை–ஸ்ரீ காஞ்சீ ஸ்வாமிகள் உரையுடன் —

July 1, 2017

அஸ்மா ஸூ வத்சலதயா க்ருபயா ச பூயஸ் ஸ்வேச்சாவ தீர்ணமிவ -ஸும்ய வரம் முநீந்த்ரம் –
ஆச்சார்ய பவ்த்ரம் அபிராமவரர்பிதாநம் அஸ்மத் குரும் பரம காருணிகம் நமாமி -தனியன் –

மா முனிகளே வாத்சல்யம் கிருபை அடியாக நித்ய விபூதியில் இருந்து மீண்டும் திருவாவதரித்தாரோ என்று சங்கிக்க வேண்டும் படி –
அவரோடு ஓக்க ஞான அனுஷ்டானங்கள் உடையவராய் -அவருடைய திருப் பேரனார் -பரம காருணிகராய்-அபிராமவராச்சார்யர் என்று வட மொழியிலும்
ஜீயர் நாயனார் என்று தென் மொழியிலும் -வழங்கப் பெற்ற ஆசிரியரை வணங்குகின்றேன் –

——————————————–

சப்த புஷ்ட்டி -அர்த்த புஷ்ட்டி -நிறைந்த -முத்ரா அலங்கார ரீதியில் ஸ்லோகம் தோறும் -27-நக்ஷத்ரங்களையும் வரிசையாக அமைத்து –
நக்ஷத்ர மாலிகை -அக்ஷர அந்தாதி -முன் நின்ற ஸ்லோக முடிந்த அக்ஷரமே அடுத்த ஸ்லோக ஆரம்ப அக்ஷரம் –
மேலும் முதலில் எட்டு எழுத்து பாதம் கொண்ட அனுஷ்டுப்பில் ஆரம்பித்து -13-ஸ்லோகம் வரை க்ரமேண ஒவ் ஒரு எழுத்தாக கூட்டிக் கொண்டு –
நடுவில் உள்ள -14-ஸ்லோகம் -21-எழுத்துக்கள் கொண்ட பாதம் -ஸ்ரக்தரா -வ்ருத்தத்தில்-அமைத்து –
மேலும் முதல் ஸ்லோகமும் -27-ஸ்லோகமும் ஒரே வ்ருத்தம்/ இரண்டாவதும் –26-ஸ்லோகமும் ஒரே வ்ருத்தம் —
இப்படியே -13-ஸ்லோகமும் -15-ஸ்லோகமும் ஒரே வ்ருத்தம் -மாலையாக சேர்ப்பதற்கு ஏற்ற படி –

—————————–

ஸ்ரீ மான் பராங்குச முநிர் ஜீயாத் யத் ஜ்ஞான முத்ரயா –இந்திரிய அஸ்வ யுஜ்வ் நிரூணாம் நித்யம் விஷய வீதய –1-அஸ்வினி நக்ஷத்ரம் ஸூசகம் –

யாவர் ஒரு நம்மாழ்வாருடைய ஞான முத்திரையினால் விஷயாந்தர க்ராமங்கள் ஆகிற குதிரைகளின் சேர்க்கையைப் பெறுகின்றன இல்லையோ –
அப்படிப்பட்ட பெருமை வாய்ந்த ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ மலிந்த நம்மாழ்வார் பல்லாண்டு வாழ்ந்திடுக –
திரு ஞான மாத்திரையால் சம்சாரிகளையும் ஈடுபடுத்த வல்லரான ஆழ்வாருக்கு மங்களா சாசனம் –

————————-

யதுரசி பரணீயா ஸ்ரக் விகசித வகுலா நத்தா -ச ஜயதி மஹிமா நாதோ முரரிபுபத சக்தோ ந –2–பரணீ நக்ஷத்ர ஸூசகம் –

–யத் உரசி -யாவர் ஒரு நம்மாழ்வாருடைய திரு மார்பிலே அணிந்து கொள்ளத் தக்கமாலை -மலர்ந்த
மகிழம் பூக்களினால் கட்டப்பட்டதோ-
எம்பெருமான் திருவடிகளில் பிரவணராய் -மகிமையே வடிவு எடுத்தவரான -ப்ரபந்ந ஜன கூடஸ்தராய் -சர்வ உத்காரஷராய் வாழ்கின்றார் –
மஹிமவான் -என்று சொல்லாமல் மஹிமா -என்றது -தத் குண சாரத்வாத் து தத் வ்யபதேச பிராஜ்ஞவத் –ஸ்ரீ பிரம்மா ஸூத்ர -கட்டளை படி –

—————————————-

நந்தா அனந்த அங்க்ரி நளின யுக்மே கர்த்தா லோகார்த்தி கபாளாநா நாம் -பத்ராய திராவிட நிகமா நாம் த்ரஷ்டா புஷ்டாய வகுள ப்ருத் ஸ்யாத் —3—

கார்த்திகா நக்ஷத்ரம் ஸூசகம் -திராவிட நிகமா நாம் த்ரஷ்டா புஷ்டாய பத்ராய–ஸ்யாத்-என்று அன்வயம் –
எம்பெருமானுடைய திருவடித் தாமரை இணையில் வணங்குவதே தொழிலாக இருப்பவரும் –துயர் அறு சுடரடி தொழுது ஏழு என் மனனே –
உலகோர்களின் ஆர்த்தியை எல்லாம் கபளீ கரிப்பவரும்
தமிழ் வேதமான திவ்ய பிரபந்தங்களை சாஷாத் கரித்தவரும் -நாதனுக்கு நாலாயிரம் உரைத்தான் வாழியே
மகிழ் மாலை மார்பினருமான நம்மாழ்வார் -நமக்கு மிகுந்த மங்களங்களை அளிப்பவராக ஆக வேணும் –

————————————————————–

ஸ்யாதேவ சா மே பணிதிச் சடாரேர் யயா உதிதா உச்சைஸ் சரணிர் ஜநாநாம் ஆரோஹிணீ நா
அப்யவரோஹிணீ ஹி வேதோதிதா து த்வயம் அப்யுபைதி –4—ரோஹிணீ நக்ஷத்ரம் ஸூ சகம் –

யாதொரு நம்மாழ்வார் ஸ்ரீ ஸூக்தி-பிரபன்ன ஜனங்களுக்கு உஜ்ஜீவனமே அன்றி அவரோகணம் -கீழே தள்ளுவதாக இல்லையோ –
வேதம் -இரண்டுக்கும் -அன்றோ-த்ரை குண்ய விஷயா வேதா -முமுஷூ புபூஷூ சாதாரணமாய் இருக்குமே
-அது போலெ அல்லவே அருளிச் செயல்கள்-மோக்ஷ ஏக ஹேது அன்றோ –இவையே எனக்கு வாசோ விதேயமாக கடவது –

————————————————————–

திலக மஹா ந காசிதபி ச்ருதவ் த்ரிஜகதா ம்ருகசீர்ஷ சமுத்திதா -ஸ்புடதரம் வகுளா பரணீயவாக் புருஷமாதிம சேஷ பதைரபி —-5—ம்ருகசீர்ஷம் ஸூ சகம் –

வேதம் தன்னில் தலையான வேதாந்தத்தில் உள்ளது அன்றிக்கே கர்மா காண்டம் -ஒரு வாக்கியமும் உலகுக்கு திலக பூதனான எம்பெருமானை சொல்லிற்று இல்லையே –
நம்பெருமாள் அருளிச் செய்தவையோ எல்லா பதங்களினாலும் ஆதி புருஷனான எம்பெருமானையே மிக விளக்கமாக தெரிவிக்கும் –
திருமாலவன் கவி யாது கற்றேன் -/மாற்றங்கள் ஆய்ந்து கொண்டு மது சூத்த பிரான் அடி மேல் / உரிய சொல்லால் இசை மாலைகள் ஏத்தி உள்ளப் பெற்றேர்க்கு –
சகல பதங்களாலும் சாஷாத்தாகவும் ஸூ ஸ்பஷ்டமாகவும் எம்பெருமானையே ப்ரதிபாதிக்கை யாகிற ஏற்றம் பெற்றது
சீர்ஷம் -தலை -வேதாந்தத்தை சொன்னபடி –
வேதைஸ் ச சர்வைரஹமேவ வேத்ய–ஸ்ரீ கீதை / வேத்யோ வேதைஸ் ச சர்வைரஹமிதி பகவான் ஸ்வேந ச வ்யாஸகர்த்த –ஸ்ரீ பட்டர் ஸ்ரீ ஸூக்திகள்/
வேதம் ஸ்புடம் / அருளிச் செயல்களோ ஸ்புட தரம் –

—————————————————————

பித்ராதிஸ் சகல விதோபி பந்து வர்க்கோ யஸ்யா ஸீத் சரஸிஜவாசி நீ ஸஹாய ஆவிஸ்ஸ்யுர் கந கருணாரசாவசேகை ரார்த்ரா மே வகுள ப்ருத கடாஷபாதா–6–ஆர்த்ரா நக்ஷத்ரம் ஸூசிதம்

யாவரொரு நம்மாழ்வாருக்கு தந்தை தாய் முதலான சகல வித பந்து வர்க்கமும் திருமகள் கொழுநனான எம்பெருமானே ஆயினானோ –
சேலேய் கன்னியரும் பெரும் செல்வமும் நன் மக்களும் மேலாத் தாய் தந்தையும் அவரே இனி யாவாரே-
அந்த நம்மாழ்வாருடைய இடையறாத கருணா ரஜப் பெருக்கினால் குளிர்ந்த திருகி கண் நோக்கங்களானவை என் பொருட்டு ஆக வேணும்
-ஆழ்வார் -அடியேனை குளிரக் கடாக்ஷித்து அருள வேணும் என்றபடி -அருள் வெள்ளம் நம்மை ஆழ்த்த வேண்டுமே –

——————————————————–

தாமஸ்ரயாமி கருணாம் வகுளாபிராமம் யாசவ் புநர்வஸூ மதீவலயே வதீர்ணா -ப்ரஜ்ஞாத்ருசா
உந்மிஷிதயா ப்ரதித அநுபாவா ஜ்யோதி பரம் யதநித்தம் ததிதம் சகார–7—புநர்வஸூ–நக்ஷத்ரம் ஸூசிதம் –

நம்மாழ்வார் என்கிற கருணா மூர்த்தி -பூ மண்டத்தில் திருவவதரித்து -எங்கும் பிரசித்தி பெற்ற பெருமையையுடைய
நன்றாக மலர்ந்த ஞானக் கண்களால் -ஒருவர் கண்ணுக்கும் எட்டாத பரஞ்சோதியை சாஷாத்காரித்தாரோ –
என்றேனும் கட்கண்ணால் காணாத அவ்வுருவை நெஞ்சு என்னும் உட்கண்ணால் காணும் உணர்ந்து -பெரிய திருவந்தாதி –
கண் காண நிற்கில் ஆணையிட்டு விலக்குவார்கள் என்று கண்ணுக்குத் தோற்றாதபடி நிற்கும் பரஞ்சோதியை கண்ணாரக் கண்டு களித்தவர் அன்றோ ஆழ்வார் –
-மகிழ் மாலையினால் அழகு பெற்ற அந்த கருணா மூர்த்தியை பணிகின்றேன்-அருள் கொண்டாடும் அடியவர் இன்புற அருளினான்
அவ்வருமறையின் பொருள் -அருள் கொண்டு ஆயிரம் இந்த தமிழ் பாடினான் அருள் கண்டீர் இவ்வுலகினில் மிக்கதே –
கருணாம் -அப்ரமேயம்

———————————————————-

ரசிதவதி ரமாயா நாயகஸ் யாங்கிரி புஷ்யத் ப்ரணயரச ஸூதாப்தி ஸ்ரோதசி ஸ்வைரேகாஹம் பிரபவதி கலி
கர்மா ப்ராவ்ருஷேண்ய அம்புவாஹே வகுள தர முநீந்த்ரே தாப வார்த்தா கதம் ந –8—புஷ்ய நக்ஷத்ரம் ஸூசகம்

திருமகள் கொழுநனான எம்பெருமானுடைய திருவடிகளில் வளர்கின்ற அன்பாகிற அமுத வெள்ளத்திலே யதேஷ்டமான
அவகாஹ நத்தை செய்து கலி ஸந்தாபத்தைப் போக்க வல்ல கார் முகிலாய் இரா நின்ற நம்மாழ்வார்
நமக்கு இறைவராய் இருக்கும் பொது நமக்கு தாபம் என்கிற பேச்சுக்கு இடம் உண்டோ —
கண்டவாற்றால் தனதே யுலகு என நின்றான் தன்னை வண் தமிழ் நூற்க நோற்றேன் அடியார்க்கு இன்ப மாரியே–கார்காலத்து எழும் கார் முகில் ஆழ்வார்
ஆழியுள் புக்கு முகந்து கொடு ஆர்த்து ஏறும் முகில் –
ரமாயா நாயகஸ் யாங்கிரி புஷ்யத்–ப்ரணயரச ஸூதாப்தி ஸ்ரோதசி ஸ்வைரேகாஹம் -ரசிதவதி-காதல் கடல் புரிய விளைவித்த காரமார் மேனி
–காதல் கடலில் மிகப் பெரிதால் –திருமால் விஷயமான காதல் கடலில் அவகாஹிக்கப் பெற்றது இந்த காள மேகம் –
உப்பு கடலில் இல்லாமல் அமுத கடலில் படிந்த மேகம் என்பதால் -ஸூதாப்தி ஸ்ரோதசி-
பக்தி ஸ்ருங்கார வ்ருத்தயா பரிணமதி -நாயகி சமாதியாலே அனுபவிக்கவும் அமைந்ததால் -ப்ரணயரச ஸூதாப்தி-என்கிறார்
கலி ஸந்தாபத்தை போக்க வல்ல ஆழ்வார் ஆகிற காள மேகம் -என்பதால் கலி கர்மா ப்ராவ்ருஷேண்ய அம்புவாஹே-என்கிறார் –
வர்ஷா காலத்தில் தோன்றுமது – ப்ராவ்ருஷேண்யம் எனப்படுமே –
இப்படிப்பட்ட ஆழ்வார் நிழலிலே வார்த்தைக்கும் நமக்கு ஒரு நாளும் தாபங்கள் இல்லை என்றதாயிற்று –

—————————————————————————–

நமஜ் ஜநஸ்யா சித்த புத்தி பக்தி சித்ர தூலிகா பவாஹி வீர்ய பஜ்ஜநீ நரேந்திர மந்த்ர யந்த்ரணா
ப்ரபந்ந லோககைரவ பிரசன்ன சாரு சந்திரிகா சடாரி ஹஸ்த முத்ரிகா ஹடாத் துநோது மே தம –9—
பவாஹி -அஹி பதத்தினால் ஆச்ரேஷா நக்ஷத்ரம் ஸூ சிதம் -ஆஸ்ரேஷா நக்ஷத்ரம் சார்பா தேவதா -வேத வாக்கியம் –
தேவதையை சொல்லும் முகத்தால் நக்ஷத்ரத்தை ஸூசிபிக்கிற புடையும் உண்டு -மேலே அனுராதா நக்ஷத்ரத்தையும்-17-ஸ்லோகத்தில் –
அனுராதா நக்ஷத்ரம் மித்ரோ தேவதா -என்றும் வரும் –

ஆழ்வாருடைய ஹஸ்த முத்திரையை வர்ணிக்கிறார் -தம்மை வணங்கும் அடியார்களின் ஹிருதயமாகிற சுவரில் -பக்தியாகிற சித்தரத்தை எழுதும் கருவி –
பக்தியை கூட்ட வல்லதாய் இருக்குமே –
ஆழ்வார் சம்சார போகி சந்தஷ்ட ஜீவ ஜீவாது -ஆகையால் -சம்சாரசர்ப்ப வீர்யம் தணிக்கும் விஷ வைத்யனுடைய மந்த்ர பிரயோக சிட்டிகை போன்றதாயும்
-சம்சார ஸ்ப்ருஹைதையை அறுக்க வல்லதாய் இருக்குமே -ஹடாத்-என்பதால் தமஸ் ஸூ பூக்க அரிதாய் இருக்கும் என்றதாயிற்று –
பிரபன்ன ஜனங்கள் ஆகிற ஆம்பல் மலர்களை விகசிப்பிக்க வல்ல அழகிய நிலா போன்றதாயும் -பிரபன்னர்களை பரவசராக்க வல்லதாயும் இருக்குமே –

—————————————————————–

மநஸ் ஸ்படிக தர்ப்பண ப்ரதிபலத் பர ப்ரஹ்மண -பிரதர்சன மிவாஸரந் ப்ரதித போத முத்ராங்கித
சதாம் அபய ஸம்ஸிதா பவபயா பிதப்தாத் மநா மகாநீ ஸமயேத நச் சடாரி போரவாம கர —10—
மகா நக்ஷத்ரம் ஸூசிதம் -கவர்க்க சதுர்த்தமாகவே வேதத்தில் இந்த நக்ஷத்ரம் உள்ளதே –

கீழே ஹஸ்த முத்திரை வர்ணனை இதில் முத்ராஞ்சிதமான ஸ்ரீ ஹஸ்தத்தை வர்ணிக்கிறார் –
ஹிருதயத்துக்கு நேராக இருப்பதால் -தமது திரு உள்ளம் ஆகிற ஸ்படிக கண்ணாடியிலே பிரதிபலித்து தோன்றுகிற
பர ப்ரஹ்மத்தை காட்டா நின்றது போல் இருப்பதும் -புகழ் பெற்ற ஞான முத்திரையினால் அடையாளம் பெற்றதும்
சம்சார பீதியினால் தப்பிக்கும் நெஞ்சினரான சாத்விகர்களுக்கு அபயம் அளிக்க வல்லதுமான
நம்மாழ்வாருடைய வலது திருக் கையானது நம்முடைய பாவங்களைத் தொலைக்கக் கடவது –
பிரதித்த போத முத்ராங்கித -என்று விசேஷணம் -ஞான முத்ரையததே -அது எங்கனம் -சதாம் அபாய ஸம்ஸிதா -என்னும் அபய முத்திரையை காட்டும்
என்னில் -ஞான முத்திரையின் சன்னிவேசம் தானே அபய முத்திரை போலவும் காணக் கூடியதாகையாலே அப்படி சொல்லக் குறையில்லை –

————————————————————————————–

ரமயது சட சத்ரு அதியுன்னத ஆசார யுக்தைர் ஜனை அவநத பத பத்ம யுக்ம அநுகம்பா அம்ருத அம்போநிதி –
பஹு வித க்ருத பூர்வ பல்குனயகாசார சிந்தா ஆகுலம் ஹ்ருதயம் அஸத்ருச ஆத்ம பாதாரவிந்த அநு ஷங்காத் மம—11—பூர்வ பல்குனி நக்ஷத்ரம் ஸூசகம் —

மிகச் சிறந்த அனுஷ்டானம் உள்ள சாத்விக ஜனங்களால் வாங்கப் பட்ட திருவடித் தாமரையிணையை யுடையவரும் —
அறு தொழில் அந்தணர் வணங்கும் தன்மையன் -/ மேவினேன் அவன் பொன்னடி மெய்ம்மையே -ஸ்ரீ மதுரகவிகள் போல்வார் ஆழ்வார் திருவடிவாரத்தில் படுகாடு கிடப்பரே
கருணை யாகிற அமுதக் கடலாய் இருப்பவருமான நம்மாழ்வார் -அருள் கண்டீர் இவ்வுலகினில் மிக்கதே -முற் பிறவிகளில் செய்த பல வகைப்பட்ட
இழி தொழில்களைப் பற்றிக் கவலையினால் கலங்கி இருக்கின்ற என் மனத்தை ஒப்பற்ற தமது திருவடித் தாமரைகளின் சம்பந்தத்தினால் கலக்கம் நீங்கிக் களிக்கச் செய்திடுக-
பல்கு-அசாரம்/ ந்யகாசார-நீசமான நடத்தை -ந்யக் நீச கர்வ ஹ்ரஸ்வாஸ் ஸ்யு –அமர கோசம்
அஸத்ருச -விசேஷணம் பாதாரவிந்தத்திலும் -அநுஷங்கத்திலும் அன்வயம் -கருத்து ஒன்றே

———————————————————————

மக்நம் மாநச மாஸ்ம பூச் சடரிபோ அவ்யாஜ சித்தா தயா நவ்கா காசந நாவிக அபி ச புநஸ் சந்தாரகக்ராமணீ-
ஏதேந உத்தர பல்குநீரஸ பரிக்லிஷ்ட உபயோக ஊர்மிகம் -துக்க ஆவர்த்த துரந்த பார கமநம் சம்சார வாராகரம் —12—உத்தர பல்குநீ – நக்ஷத்ரம் ஸூ சகம்

கீழ் சிந்த்தாகுலம் மம ஹ்ருதயம் -என்றவர் தாமே தம் ஹ்ருதயத்திற்கு அபாயம் அளிக்கிறார் –
வாராய் மட நெஞ்சே -சம்சார சாகரத்தில் ஆழ்ந்து வருந்திக் கிடவாதே –நல் விரகு சொல்கிறேன் -நம்மாழ்வாருடைய நிர்ஹேதுகமான
தொரு திருவருளானது பிறவிக்கு கடலுக்குப் படகாகும்–அக்கறை சேர்ப்பவர்கள் தலைவராகி அவ்வோடத்தை ஓட்டுபவரும் அவ்வாழ்வாரே ஆவார் –
அல்பங்களாய் சுவை அற்றவைகளாய் பலவகை கிலேசங்கள் பொருந்தியவையாய் இருக்கிற விஷய போகங்கள் ஆகிற அலைகளை யுடையதும்
பலவகை துன்பங்கள் ஆகிற சுழிகளை யுடையதும் கரை என்ற முடியாததுமான பிறவி என்னும் கடலை இவ்வாழ்வார் ஆகிய நாவிகனைக் கொண்டு கடந்து செல்வாயாக –
ஆழ்வார் திருவடிகளை பற்றினவர்களுக்கு சம்சார சாகரம் முழம் தாள் அளவாகும் என்று தெரிவித்தபடி –

——————————————————————————-

ரத்ந தீபிகாயமாந ஹஸ்த முத்ரிகா க்ருத த்ரயீ கிரீந்த்ர கந்தர அந்தராள காட ரூடா ரூடி நிதான ஸூசநேந –
த்ராவிடாகம உபகீதி மூலஸேக சீத வீத நித்ர பத்ர திவ்ய தீந்த்ரிணீ சமீபகேந நாதவான் அஹம் பராங்குசேந –13- ஹஸ்த நக்ஷத்ரம் ஸூசகம் –

மணி விளக்குப் போன்ற ஸ்ரீ ஹஸ்த முத்திரையினால் வேதங்கள் ஆகிற மலை முழஞ்சுகளின் உள்ளே திடமாக அழுந்தி கிடக்கின்ற -பேர்க்கவும் பேராத நிதியான
பரம் பொருளை ஸூசிப்பிக்கின்றவரும் -ஆழ்வார் திருக் கைத்தல முத்திரை ரத்ந தீபம் போன்றது – வேர்ப் பற்றில் திருவாய்மொழியின் இசை பாடுவதாகிய
தீர்த்த அபிஷேகத்தினால்–தீர்த்தங்கள் ஆயிரம் – குளிர்ந்து உறங்காத இலைகளை யுடையதான திருப்புளி அடியிலே வீற்று இருப்பவருமான நம்மாழ்வாரையே
அடியேன் ஸ்வாமியாக யுடையேன் –
-உறங்காப் புளி-ஒரு போதும் இல்லை மூடுவது இல்லை -என்பதால் -வீத நித்ர பத்ர-/ லோக யாத்திரை ஒன்றும் அறியாமல் திருப் புளி ஆழ்வார் அடியிலே
திரு அவதரித்த உடனே போந்து -வீடு பெரும் அளவும் வீற்று இருந்தார் –

—————————————————–

நத்யா நத்யாககாரீ க்ஷணம் அபி சித்த அசித் த்ராயக அமேய காமே ச்சந்தஸ் சந்த ஸ்வரூபே மஹசி கமலயா பாசமாநே அசமாநே –
ஸ்ரேய ஸ்ரேயஸ் விசங்கை பரிசய ஸூரபி கைசராணாம் சராணாம் பாதாத் பாதாத் பவாப்தவ் சடரிபுரிஹா நோ வீக்ஷணேந ஷணேந —14-
சித்ரா நக்ஷத்ரம் ஸூ சகம் -நடுநாயக நக்ஷத்ரம் -அதிக அக்ஷர வ்ருத்தத்தில்–21-அக்ஷரம் ஒவ் ஒரு பாதத்திலும் – – அமைக்கப் பட்ட ஸ்லோகம் –

சேதன அசேதனங்களை எல்லாம் ரஷிக்க வல்ல அப்ரமேயமான சங்கல்பத்தை யுடையதும் -வேதங்களின் தாத்பர்யமே வடிவு எடுத்ததும் -பிராட்டியோடே கூடி
விளங்கா நிற்பதுமான -ஒப்பற்ற எம்பெருமான் என்னும் பரஞ்சோதி -இடம் எப்பொழுதும் இறைப் பொழுதும் நமஸ்காரத்தை விடாமல் இருப்பவரும்
நத்யாககாரீ-விடாதவர்-எத்தை என்றால் -நத்யா-நமஸ்காரத்தை –
குழுமித் தேவர் குழாங்கள் கை தொழச் சோதி வெள்ளத்தின் உள்ளே எழுவதொரு -அப்ரமேயம் ஹி தத் தேஜ-
எம்பெருமானை மஹஸ் -என்று மறைத்து அருளிச் செய்து இருப்பது காண்க
ச்ரேயஸைப் பெற்றுள்ள சாத்விகர்களின் திரள் களினால் ஆச்ரயிக்கத் தகுந்தவரும்-ஸ்ரீ மதுரகவிகள் -ஸ்ரீ மன் -நாதமுனிகள் போல்வார் பணிய நின்றவர் –
-மகிழம் பூ மாலைகள் அணிந்து கொண்டு இருப்பதனால் -பரிமள பிரசுரருமான நம்மாழ்வார் ஒரு நொடிப் பொழுது கடாக்ஷித்து அருளி
இவ்வுலகில் உள்ள நம்மைப் பிறவிக்கு கடலில் விழுந்து போவதில் நின்றும் காத்து அருளக் கடவர்

——————————————————————————-

ந பிரபத்தி வர்த்தமன ப்ரவர்த்தந அபதாந வாஸந அநுசாரி நவ்யபேத சர்வ தாஜலாசய அன்வயம் கதம் சமம் சரோஜம்
ஸ்வ அதிகாமி யோகிப்ருந்த சித்த பத்ம பத்த ஸுஹ்ருத அநு ரக்த ரூபயோச் சடாரி பாதயோர் யுகேந சன்னத ஆர்த்தி பஞ்சநேந–15- –ஸ்வாதி நக்ஷத்ரம் ஸூசகம் –

இது முதல் -26-ஸ்லோகம் அளவும் ஆழ்வாருடைய-திருவடி தொடக்கி திருமுடி ஈறாக — திவ்ய அவயவ ஸுந்தர்ய வர்ணனம் –
அடி பணிந்தாருடைய ஆர்த்தியை எல்லாம் அகற்றுமதான -தம்மை மிகவும் விரும்புகின்ற யோகி சமூகத்தின் ஹ்ருதய புண்டரீகத்தில்
அன்புடையவைகளாய் -அத ஏவ–அநு ராக பரிதமான திரு உள்ளத்தில் அன்புடன் உறைந்து -மிகச் சிவந்து இருக்கின்ற நம்மாழ்வார் திருவடிகளின் இணையோடு
பிரபத்தி மார்க்கத்தை ப்ரவர்த்திப்பித்தல் ஆகிற சரிதையின் வாசனையையும் அறியாததும் ஜலாசய சம்பந்தத்தை ஒரு காலும் விடாமல் எப்போதும்
ஜடாசய சம்பந்தத்தையே கொண்டு இருப்பதுமான தாமரைப் பூவானது எப்படி ஒப்புமை பெற்றதாகும் –
லடயோரபேத–லகாரத்துக்கும் டகாரத்துக்கும் பேதம் இல்லை –தாமரை பக்ஷம் லகாரம் -ஜலம் -நீர் நிலைக்கு வாசகம் -ஆழ்வார் பக்ஷத்தில் மந்த புத்தி நீசர் -அன்வயம் அற்றது என்றபடி
ஆர்த்தியை தொலைக்கும் திருவடிகளுக்கு தாமரை உவமை சொல்ல யுரியது அல்லவே –

——————————————————-

நத்வா யாம் குஸூமாயுத இஷூதி ருசி வ்யாகாதம் ஆதந்வதீம் சேமுஷ்யா மஹதாம் அஹாயி தருணீ ஜங்காஸூ ஜங்காலதா –
விஸ்தீர்ணச் சவி சாகயா சடஜித வ்ருத்த ஆநுபூர்வீ ஜுஷோ ஜங்கா கல்பதரு ச்ரியா ஸூரபிதம் சிந்தாவநம் மா மகம் –16—விசாகா நக்ஷத்ரம் ஸூ சகம் –

ஆழ்வாருடைய திருக் கணைக் கால் அழகில் ஈடுபட்டு பேசுகிறார் –
-ஜங்கை ஆகிற கற்பக வருஷம் அழகினால் -என்னுடை சிந்தை ஆகிற பொழில் நறு மணம் மிக்கு -நாறு நறும் பொழில் ஆயிற்று –
மன்மதனுடைய அம்பறாத் துணியின் அழகையும் வென்று விளங்கும் –
இதில் கண் வைக்கும் மஹான்கள் -விஷயாந்தரங்களில் சங்கத்தை நெஞ்சாலும் நினையாதவர்கள் ஆவார்
வேகமாக ஓடும் தன்மை ஜங்காலதா -அது விடப்பட்டது -ஆழ்வாருடைய ஜங்கைகளை சேவித்த மகான்களின் சேமுஷி -மதி –அவற்றை விட்டு
இதிலே ஆழம் கால் பட்டு இருக்கும் என்றபடி –
அப்படிப்பட்ட பெருமை வாய்ந்ததும் -பரந்த தேஜஸ் புஞ்சங்கள் ஆகிற சாகைகளை யுடையதும் -காந்தி பரம்பரைகள் -சாகையாக உருவகம் –
உருண்டை வடிவு நன்கு அமைந்து இருக்கப் பெற்றதும்–வ்ருத்த அநு பூர்வீ விசிஷ்டம் -நல்ல நடத்தை யுடையது என்றபடி –

———————————————————–

கநத் அவயவ லோல சோபா அவதாத ஆபகா ஸ்ரோதசஸ் சமுதித குரு புத்புத ஆகார ஸந்தேஹ சந்தாயினோ
ககுத் அதிகத மித்ர பாவம் ஸ்வபாவாத் யுகம் ஜானுனோ மம ஹ்ருதி சடரிவைநாம்ந முநீந்த்ரஸ்ய சந்தீவ்யது –17-
மித்ர பாதத்தால் அனுராதா நக்ஷத்ரம் ஸூ சகம் -அனுராதா நக்ஷத்ரம் மித்ரோ தேவதா –கீழே ஆஸ்ரேஷா நக்ஷத்ரம் -9- ஸ்லோகம் போலே இங்கும் –

அழகு மிக்க திவ்ய அவயவங்கள் தள தள என்று சோபையாகிற நிர்மல நதியின் வெள்ளத்தில் நின்றுந் உண்டான பெரிய நீர்க்க குமிழியின் வடிவு தானோ இவை
-என்று சந்தேகிக்கும் படியான ஆழ்வாரது திரு முழம் தாள்களின் இயற்கையாகவே எருதுகளின் முசுப்போடு தோழமை பெற்று இருக்கும்
இணையானது என் உள்ளத்திலே விளங்க வேணும் –

—————————————————-

துலா சரணி ஸீமநி ப்ரதிதரூபயா ஹஸ்தி நாம் கரேண கரபேண வா கதளிகாபிரகாண்டேந வா
ததோபரி ச பச்யதாம் நயன பந்த நஜ்யேஷ்டயா சமத் க்ருதி மதீ மதிச் சடரிபு ஊரு லஷ்மயா மம –18- –ஜ்யேஷ்டா நக்ஷத்ரம் ஸூ சகம் –

திருத் துடைகள் -அடி பருத்து நுனி சிறுத்து மத மத என்று மாம்சளங்களாய் விளங்கும் திருத் துடை அழகில் ஈடுபட்டு அருளிச் செய்கிறார்
யானைகளின் துதிக்கையோடும் -கரபம் என்னும் புறம் கையினோடும்–மணிக்கட்டு தொடக்கி சுண்டு விரல் அளவும் உள்ள புறம்பு பாகம் –
-சிறந்த வாழைத் தண்டினோடும் ஒப்பிடுகையில் பரம காஷ்டையிலே -புகழ் பெற்ற யுருவத்தை யுடையதும் -அதற்கு மேலே பார்ப்பவர்களின்
கண்களைப் பிணிப்புண்ணப் பண்ணுமத்தில் தலைமை பெற்றதுமான திருத் துடைகளின் அழகினால் என்னெஞ்சகம் அழகு பொலியப் பெற்றது –
வீற்று இருந்த அழகில் திருத் துடைகளின் கீழ் அழகு சேவிக்கப் போகாதே -மேல் அழகு சேவித்த மாத்திரத்திலே கண்களை பிணிப்புண்ணச் செய்யுமே –

——————————————————————

மகா ப்ரரோஹ மஞ்ஜரீ மனோஜ்ஞ ரத்ந மேகலா கலாப புஷ்பிதா கடீ தடீ படீ சடத்விஷ-உரஸ்ஸ்ரவத் ப்ரபாஜரீ
நிபாத நிம்ந நாபிகா அவட யுத்த பேத மண்டலீ விதர்க்க மூலம் ஏவ ந –19—மூல நக்ஷத்ரம் ஸூ சகம் –

நம்மாழ்வாருடைய தேஜஸ் புஞ்ஜ மஞ்ஜரிகளாலே மனோஹரமான மணி மேகலாகலாபம் பூத்து இருக்கப் பெற்ற திருவரைப் பீதகவாடையானது
அதில் ஈடுபாடுள்ள நமக்கு திரு மார்பில் நின்றும் பெருகுகின்ற காந்தி வெள்ளம் விழுந்து பள்ளமான
திரு நாபித் தலத்தில் உண்டான நுரையின் திரளோ என்கிற சங்கையைத் தோற்றுவிக்கிறது-
விதர்க்கம் -உத்ப்ரேக்ஷை–பீதகவாடை மெல்லியதாகவும் வெண்ணிறமாகவும் இருப்பதால் நுரையாக உத்ப்ரேஷித்தல் பொருந்தும் –

—————————————————–

நயன ஸூபக நாபீம் உத்தி சந்தீ சடாரே சர இதி பரி பாஷா டவ்கதே சார்த்த கத்வம்-சந்த இதரதா ந ஸம்ஹதா
நேத்ர மீநா கதம் இஹ விஹரேயு கௌதுக உதிர்க்க யுக்தா –20—பூர்வாஷாடா நக்ஷத்ரம் ஸூ சகம்

கண்ணுக்கு அழகிய திருநாபீ -பற்றி உண்டான இது ஒரு குளம் -என்கிற பிரவாதம் உண்மைத் தன்மையை அடைகின்றது –
ஆழ்ந்து இருப்பதால் திரு நாபியை தடாகம் என்பது கவி மரபு -அப்படி இல்லாவிடின் நம்முடைய கண்கள் ஆகிற மீன்கள்
திரண்டு கொண்டு மிக்க குதூஹலத்தோடே கூடினவைகளாய் இந்த திரு நாபியில் எப்படி விளையாடும் –

——————————————-

தாம் மத்ய தேச ஸூஷமாம் அவலோகயாமி ரோமாவலீ த்ரி வளிகா ருசிராம் சடாரே ரேகா உத்தரா யத் உபமாம்
அதிக அபிலாஷாஸ டவ்கேத வா யதி வா ந வடபத்ர சோபா –21—உத்தராஷாடா நக்ஷத்ரம் ஸூ சகம் –

ரேகைகளினால் சிறந்து விளங்குகின்ற ஆலிலையின் அழகானது மிகுந்த விருப்பம் யுடையதாய் யாதொரு இடை அழகோடு ஒப்புமையைப் பெறுமோ
அல்லது பெறாதோ -அப்படிப்பட்ட ஆழ்வாருடைய ரோமாவளியினாலும் மும்மடிப்பினாலும் அழகு பொழிந்த இடையின் அழகை இடைவிடாது சேவிக்கின்றேன் –

——————————————————————–

பாஸா ந வ்யதிபி ரீ பவந்தி ப்ருங்கா ஹாரஸ்தாத் உரசி ஹரிந் மனேச் சடாரே ஆரூடா வகுளமயீம்
ஸ்ரஜம் ஸூகந்திம் சப்தேந ஸ்ரவண ஸூகேந யாந்தி பேதம் –22—ஸ்ரவண நஷ்ரத்ரம் ஸூசகம் –

ஆழ்வாருடைய மகிழம் பூக்களினால் பரிமள பிரசுரமான மாலையில் எறியுள்ள வண்டுகள் தமது ஒளியினால் திரு மார்பில் ஹாரத்தில் இருக்கும்
மரகத பச்சையில் காட்டிலும் வேற்றுமை பெறுகின்றன அல்ல -ஆனாலும் செவிக்கு இனிய இசையினால் வண்டுகள் எண்ணலாம் படி வேற்றுமை எய்துகின்றன –
வண்டின் அழகையும் திருமார்பில் அணிந்து இருக்கும் -ஹரின் மணி -மரகத பச்சை அழகையும் சேர்த்து அனுபவிக்கிறார் -இரண்டுமே மனோஹரமாய் இருக்குமே –

———————————————————–

தமவத குருதே மதந உத்ததான் ஸூகடயதி அபுதான் புத நிஷ்டயா -பிரதித முத்ரம் அநித்ர
சரோருஹ பிரணயி பாணி தலம் சடஜின் முநே –23- –தநிஷ்டா -அவிட்டம் நக்ஷத்ரம் ஸூசகம்

விளக்கமுற்ற திரு முத்திரையை யுடையதும் ஒரு காலும் மூடிக் கொள்ளுதல் இல்லாத தாமரை மலரோடு தோழமை கொண்டதுமான திருக் கைத்தலமானது
காம வெறி கொண்டவர்களை அடக்கமுற்றவர்களாக செய்கின்றது -விவேகமற்றவர்களை விவேக உறுதியோடு நன்கு கூட்டுகின்றது –
ஞான முத்திரையை சேவித்து -அடக்கம் உண்டாக்கி -விவேகத்தையும் உண்டாக்கி -சம தமாதி குண சம்பத்தைப் பெறுவோம் என்பது பரம தாத்பர்யம் –

——————————————————————-

நேஹ சம்சரண ரோக ஸம்ஹ்ருதிர் ஜாயதே சதபிஷக் சிகித்சயா அந்தரேண சடைவைரி கந்தரா லம்பமாந வகுள ஸ்ரஜாம் ரஜ—24- -சதபிக்ஷன் நக்ஷத்ரம் ஸூசகம் –

திருக் கழுத்தில் தொங்கும் வகுள மாலைகள் துகளை -விட்டு நூறு மருத்துவர்கள் சிகித்ஸை பண்ணினாலும் பிரவிபி பிணி தீராதே –
மருத்துவனாய் நின்ற மா மணி வண்ணா -வைத்தியோ நாராயணோ ஹரி -புனரபி ஜனனம் புனரபி மரணம் புனரபி ஜனனீ ஜடரே சயனம் –
வகுள மாலையின் ஏக தேசமே பிறவித துயர் போக்க வல்ல அரு மருந்து –
கவளக் கடாக் களிறு டபிரான் திரு நாமத்தால் தவள பொடிக் கொண்டு நீர் இட்டிடுமின் தணியும் -என்று முந்துறச் சொல்லி -உடனே
மாயன் தமர் அடி நீறு கொண்டு அணி-ஸ்ரீ பாகவத ஸ்ரீ பாத ரேணுவே ஒப்பற்ற மருந்து -என்று அருளிச் செய்தார் –

———————————————————-

ஜன்ம த்வம்சம் திசதி ஜனாநாம் வக்த்ரம் தீப்ரா ஓஷ்டபத மநோஜ்ம் மந்த ஸ்மேரம் மதுர கடாக்ஷம் ஸூப்ரூ ரோகம் ஸூபக கபோலம்–25—ப்ராஓஷ்டபதம் -பூரட்டாதி நாஷ்த்ரம் ஸூ சகம்

ஒளி பெற்று விளங்கும் ஓஷ்ட பிரதேசத்தினால் அழகியதும் புன்முறுவலையுடையதும் இனிமையான கடாக்ஷத்தை யுடையதும்
அழகிய புருவக் கொடியை யுடையதும் -அழகிய திருக் கபோலங்களை யுடையதுமான திருமுக மண்டலம் சம்சாரி ஜனங்களுக்கு சம்சாரம் போக்கி
முக்தி சாம்ராஜ்யம் அளிக்கும் –

————————————————–

லஸதி ஹி பஜதாம் பத்ரோத்தர பத கரண ஆரூடம் சடரிபு மகுடம் பாஸா பரிஹ்ருத துரிதத்வாந்தம் –26—உத்தராபாத்ரா நக்ஷத்ரம் ஸூசகம்

பக்த ஜனங்களுக்கு ஸ்ரேயஸ் கரமான சிறந்த பதவியை அளிப்பதற்காக திருமுடி மீது ஏறி இருப்பதும் –
ஒளியினால் தீவினை இளைத்த தொலைக்க வல்லதுமான திரு அபிஷேகமானது விளங்கா நின்றது –
நிரதிசய தீபத்தை யுக்தமாக மணி மகுடத்தில் ஈடுபட்டுப் பேசுகிறார் –

—————————————

அந்தரேண சடாராதிம் கஸ் சம்சா ரேவதீஹ ந ததஹம் ஹ்ருதயே நித்யம் நிததே தத்வ புச்சரியம் –27—ரேவதி நக்ஷத்ரம் ஸூசகம் –

இவ்விருள் தரும் மா ஞாலத்தில் நம்மாழ்வாரைத் தவிர்த்து வேறு யார் நம்மை ரஷிக்க வல்லவர் -அவரே நமக்கு பரம ரக்ஷகர் –
-வேறு யாரும் இல்லாமையினால் அடியேன் அவரது திரு மேனி அழகையே நெஞ்சினுள் நிச்சலும் உறைய வைக்கின்றேன்
அவருடைய வடிவு அழகையே எஞ்ஞான்றும் உள்ளத்துள் சிந்தனை செய்யா நின்றேன் என்று நிகழித்து அருளினார் ஆயிற்று –

———————————————————————-

தனித் தொங்கல் —
வாசிகீ வரிவஸ்யா மே தாருகா மாலிகாத்மிகா –பராங்குச பதாப்ஜேந பரிஷ்க்காரவதீ பவேத் —

நக்ஷத்ர மாலிகை யாகிற எனது வாசிக கைங்கர்யமானது நம்மாழ்வாரது திருவடித் தாமரையினால் பரிஷ்க்ருதமாகக் கடவது –
ஆழ்வார் திருவடித்தாமரையிலே சாத்தி அழகு பெறுவித்துக் கொண்டேன் –

———————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ காஞ்சீ ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஜீயர் நாயனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –