Archive for February, 2017

ஸ்ரீ உ வே காஞ்சி ஸ்வாமிகள் தொகுத்து அருளிய -ஆழ்வார்கள் உகந்த ஸ்ரீ ராமன் –

February 25, 2017

-திருப்பல்லாண்டு –
1-இராக்கதர் வாழ் இலங்கை பாழ் ஆளாகப் படை பொருதான்–3 –
பெரியாழ்வார் திருமொழி –
2-பரந்திட்டு நின்ற படுகடல் தன்னை இரந்திட்ட கைம்மேல் எறி திரை மோதக் கரந்திட்டு நின்ற கடலைக் கலங்கச் சரம் தொட்ட கையான் -1–6–7-
3-குரக்கினத்தாலே குரை கடல் தன்னை நெருக்கி அணை கட்டி நீள் நீர் இலங்கை அரக்கர் அவிய அடு கணையாலே நெருக்கிய கையான் -1-6–8-
4-கொங்கை வன் கூனி சொல் கொண்டு குவலயத் துங்கக் கரியும் புரியும் இராச்சியமும் எங்கும் பரதற்கு அருளி வான் கானடை அம் கண்ணன் –2 –1–8-
5-வல்லாள் இலங்கை மலங்க சரம் துரந்த வில்லாளன் -2-1-10-
6-சிலை ஓன்று இறுத்தான்-2-3-7-
7-நின்ற மராமரம் சாய்த்தான் -2–4–2-
8-பொன் திகழ் சித்ர கூடப் பொருப்பினில் உற்ற வடிவில் ஒரு கண்ணும் கொண்ட அக்கற்றைக் குழலன் -2-6–7-
9-மின்னிடைச் சீதை பொருட்டா இலங்கையர் மன்னன் மணி முடி பத்துமுடன் வீழத் தன்னிகர் ஓன்று இல்லாச் சிலை கால் வளைத்திட்ட மின்னு முடியன்-2-6–8-
10-தென்னிலங்கை மன்னன் சிரம் தோள் துணி செய்து மின்னிலங்கு பூண் விபீடண நம்பிக்கு என்னிலங்கு நாமத்து அளவு மரசென்ற மின் அலங்காரன் -2-6-9-
11-கள்ள வரக்கியை மூக்கொடு காவலனைத் தலை கொண்டான் -2–7–5-
12-என் வில் வலி கண்டு போ என்று எதிர் வந்தான் தன் வில்லினோடும் தவத்தை எதிர் வாங்கி முன் வில் வலித்து முது பெண் உயிர் உண்டான் -3–9–2-
13-மாற்றுத் தாய் சென்று வானம் போகே என்றிட யீற்றுக் தாய் பின் தொடர்ந்து எம்பிரான் என்று அழக்
கூற்றுத் தாய் சொல்லக் கொடிய வனம் போன சீற்றமிலாத சீதை மணாளன் -3-9-4-
14-முடி ஒன்றி மூ உலகங்களும் ஆண்டு உன் அடியேற்கு அருள் என்று அவன் பின் தொடர்ந்த படியில் குணத்துப் பரத நம்பிக்கு அன்று அடி நிலை ஈந்தான் -3-9-6-
15-தார்க் கிளம் தம்பிக்கு அரசீந்து தண்டகம் நூற்றவள் சொல் கொண்டு போகி நுடங்கிடைச் சூர்ப்பணாகாவைச் செவியொடு மூக்கு அவள் ஆர்க்க ஆர்ந்தான்-3- 9-8-
16-காரார் கடலை யடைத்திட்டு இலங்கை புக்கு ஓராதான் பொன் முடி ஒன்பதோடு ஒன்றையும் நேரா அவன் தம்பிக்கே நீள் அரசு ஈந்த ஆராவமுதன் -3-9-10-
17-செறிந்த மணி முடிச்சசனகன் சிலை இறுத்துச் சீதையை கொணர்ந்தது அறிந்து அரசு களைகட்ட
அரும் தவத்தோன் இடை விலங்கச் செறிந்த சிலை கொடு தவத்தைச் சிதைத்தான் -3-10-1-
18-எல்லியம் போது இனிது இருத்தல் இருந்ததோர் இட வகையில் மல்லிகை மா மாலை கொண்டு அங்கார்க்க இருந்தான் -3-10-2 –
19-குலக்குமரா காடுறையப் போ என்று விடை கொடுப்ப இலக்குமணன் தன்னொடும் அங்கு ஏகினான் — 3-10-3-
20-கூரணிந்த வேல் வலவன் குகனோடும் கங்கை தன்னில் சீரணிந்த தோழமை கொண்டான் -3- 10–4-
21-தேன் அமரும் பொழில் சாரல் சித்திர கூடத்து இருப்பப் பரத நம்பி பணிய நின்றான் -3–10–5-
22-அனைத்து உலகும் திரிந்தோடி வித்தகனே இராமா ஓ நின் அபயம் என்று அழைப்ப அத்திரமே அதன் கண்ணை அறுத்தான் -3-10-6-
23-பொன்னொத்த மான் ஓன்று புகுந்து இனிது விளையாடச் சிலை பிடித்து எம்பிரான் ஏகப் பின்னே இலக்குமணன் பிரிய நின்றான் -3–10–7-
24-அடையாளம் மொழிந்த அத்தகு சீர் அயோத்தியார் கோன்-3-10-8-
25-திக்கு நிறை புகழாளன் தீ வேள்விச் சென்ற நாள் மிக்க பெரும் சபை நடுவே வில்லிறுத்தான்-3-10–9-
26-கதிர் ஆயிரம் இரவி கலந்து எரித்தால் ஒத்த நீண் முடியன் எதிரில் பெருமை இராமன் -4-1-1 –
27- நாந்தகம் சங்கு தண்டு நாண் ஒலிச் சார்ங்கம் திருச் சக்கரம் எனது பெருமை இராமன் காந்தள் முகிழ் விரல் சீதைக்காக
கடும் சிலை நின்று இறுக்க வேந்தர் தலைவன் சனகராசன் தன் வேள்வியில் காண நின்றான் -4- 1-2-
28-சிலையால் மராமரம் எய்த தேவன் –தலையால் குரக்கினம் தங்கிச் சென்று தடவரை கொண்டு அடைப்ப அலையார் கடற்கரை வீற்று இருந்தான் -4-1-3-
29-அலம்பா வெருட்டாக் கொன்று திரியும் அரக்கரைக் குலம் பாழ் படுத்துக் குல விளக்காய் நின்ற கோன் -4–2–1-
30-வல்லாளன் தோளும் வாள் அரக்கன் முடியும் தங்கை பொல்லாத மூக்கும் போக்குவித்தான் -4–2–2-
31-கனம் குழையாள் பொருட்டாக் கணை பாரித்து அரக்கர் தங்கள் இனம் கழு ஏற்றுவித்த எழில் தோள் எம்மிராமன் -4-3-7-
32-எரி சிதறும் சரத்தால் இலங்கையனைத் தன்னுடைய வரி சிலை வாயில் பெய்து வாய்க்கோட்டம் தவிர்த்துகந்த அரையன் -4-3-8-
33-தங்கையை மூக்கும் தமையனைத் தலையும் தடித்த எம் தாசரதி-4-7-1-
34-ஈன்று எடுத்த தாயாரையும் இராச்சியமும் அங்கு ஒழியக் கான் தொடுத்த நெறி போகிக் கண்ட கரைக் களைந்தான் –4-8-4-
35-பெரு வரங்கள் அவை பற்றிப் பிழக்குடைய இராவணனை உருவரங்கப் பொருது அழித்து இவ்வுலகினைக் கண் பெறுத்தான் -4- 8–5-
36-கீழ் உலகில் அசுரர்களைக் கிழங்கிருந்து கிளராமே ஆழி விடுத்தவருடைய கரு அழித்த அழிப்பன்-4-8-6-
37-அசுரர்களை பிணம் படுத்த பெருமான் -4-8-7-
38-பருவரங்களவை பற்றிப் படையாலித்து எழுந்தானைச் செருவரங்கப் பொருது அழித்த திருவாளன்–4- 8-10-
39-மரவடியைத் தம்பிக்கு வான் பணயம் வைத்துப் போய் வானோர் வாழச் செருவுடைய திசைக் கருமம் திருத்தி வந்து உலகாண்ட திரு மால் -4-9-1-
40-மன்னுடைய விபீடணற்காய் மதிள் இலங்கைத் திசை நோக்கி மலர் கண் வைத்தான் -4–9–2-

———————-

திருப்பாவை –
41-சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச் செற்ற மனத்துக்கு இனியான் –12-
42-பொல்லா அரக்கனைக் கிள்ளிக் களைந்தான் –13-
43-சென்று அங்குத் தென்னிலங்கை செற்றான் -24-
நாச்சியார் திருமொழி
44-கடலை அடைத்து அரக்கர் குலங்களை முற்றவும் செற்று இலங்கையை பூசலாக்கிய சேவகன் -2-6-
45-சேது பந்தம் திருத்தினான் -2-7-
46-சீதை வாய் அமுதம் உண்டான் -2-10-
47-வில்லால் இலங்கை அழித்தான் –3-3-
48-இலங்கை அழித்த பிரான் -3-4-
49-மாதலி தேர் முன்பு கோல் கொள்ள மாயன் இராவணன் மேல் சரமாரி தாய் தலை அற்று அற்று வீழத் தொடுத்த தலைவன் -3-3-
50-கொல்லை அரக்கியை மூக்கு அரிந்திட்ட குமரனார் -10–4-

——————————-

பெருமாள் திருமொழி –
51-சுடர் வாளியால் நீடு மா மரம் செற்றவன் -2–2 –
52-முன்னிராமனாய் மாறடர்த்தான்-2–3-
53-மன்னு புகழ் கௌசலை தன் மணி வயிறு வாய்த்தவன் தென்னிலங்கைக் கோன் முடிகள் சிந்துவித்தான் -8-1-
54-திண் திறளால் தாடகை தன் உரமுருவச் சிரம் வளைத்தான் -8-2-
55-கொங்கு மலி கரும் குழலாள் கௌசலை தன் குல மதலை தனக்கு பெரும் புகழ்ச் சனகன் திரு மருகன் தாசாரதி -8-2-
56-தயரதன் தன் மா மதலை மைதிலி தன் மணவாளன் ஏமரு வெஞ்சிலை வலவன் -8–4-
57-பாராளும் படர் செல்வம் பரத நம்பிக்கே அருளி ஆராவன்பு இளையவனோடு அரும் கானம் அடைந்தவன் -8–5-
58-சுற்றம் எல்லாம் பின் தொடரத் தொல் கானம் அடைந்தவன் அயோத்தி நகருக்கு அதிபதி சிற்றவை தன் சொல் கொண்ட சீராமன் -8–6-
59-வாலியைக் கொன்று அரசு இளைய வானரத்துக்கு அளித்தவன் -8–7-
60-மலையதனால் அணை கட்டி மதிள் இலங்கை அழித்தவன் சிலை வலவன் சேவகன் சீராமன் -8- 8-
61-தளையவிழு நறுங்குஞ்சித் தயரதன் தன் குல மதலை வளைய ஒரு சிலை யதனால் மதிள் இலங்கை அழித்தவன் இளையவர்கட்க்கு அருளுடையான் -8-9-
62-ஏவரி வெஞ்சிலை வலவன் இராகவன் -8-10-
63-வன் தாள் இணை வணங்கி வள நகரம் தொழுது ஏத்த மன்னனாவான் நின்றான் –அரியணை மேல் இருந்தானாய் நெடும் கானம் படரப் போக நின்றான் -9-1-
64-இரு நிலத்தை வேண்டாதே விரைந்து வென்றிமைவாய களிறு ஒழிந்து தேர் ஒழிந்து மா ஒழிந்து வனமே மேவி
நெய்வாய வேல் நெடும் கண் நேரிழையும் இளங்கோவும் பின்பு போக நடந்தான் -9-2-
65-கொல்லணை வேல் வரி நெடும் கண் கௌசலை தன் குல மதலை குனி வில் ஏந்தும் மால் அணைந்த வரைத் தோழன்
வியன் கான மரத்தின் நீழல் கல்லணை மேல் கண் துயிலா கற்ற காகுத்தன் -9—3-
66-வேய் போலும் எழில் தோளி தன் பொருட்டா விடையோன் தன் வில்லைச் செற்றான் -9-4-
67-பொருந்தார் கை வேல் நிதி போலே பரல் பாய மெல்லடிக்கள் குருதி சோர விரும்பாத கான் விரும்பி வெயில் உறைப்ப வெம்பசி நோய் கூரப் போனவன் -9–5-
68-பூ மருவு நறுங்குஞ்சி புன் சடையாய் புனைந்து பூந்துகில் சேர் அல்குல் காமர் எழில் விழல் உடுத்துக் கலன் அணியாது
அங்கங்கள் அழகு மாறி ஏமரு தோள் புதல்வன் வனம் சென்றான் -9-7-
69/70-பொன் பெற்றார் எழில் வேதப் புதல்வன் முன் ஒரு நாள் மழு வாளி சிலை வாங்கி அவன் தவத்தை முற்றும் செற்றான் -9- 8-
71-தேனகுமா மலர்க கூந்தல் கௌசல்யையும் சுமித்ரையும் சிந்தை நோவக் கூனுருவில் கொடுந்தொழுத்தை சொல் கேட்ட
கொடியவள் தன் சொல் கொண்டு கானகமே மிக விரும்பி வன நகரைத் துறந்தான் -9–10-
72-ஏரார்ந்த கரு நெடுமால் இராமன் -9–11-
73-அங்கண் நெடு மதிள் புடை சூழ் அயோத்தி என்னும் அணி நகரத்து உலகு அனைத்தும் விளக்கும் சோதி வெங்கதிரோன்
குலத்துக்கோர் விளக்காய்த் தோன்றி விண் முழுதும் உய்யக் கொண்ட வீரன் செங்கண் நெடும் கரு முகில் இராமன் -10-1-
74-வந்து எதிர்ந்த தாடகை தன் உரத்தைக் கீறி வரு குருதி பொழி தர வன் கணை ஓன்று ஏவ
மந்திரம் கொள் மறை முனிவன் வேள்வி காத்து வல்லரக்கர் உயிர் உண்ட மைந்தன் -10- 2-
75-வெவ்வரி நல் கரு நெடும் கண் சீதைக்காகிச் சின விடையோன் சிலை இறுத்து மழு வாள் ஏந்தி வெவ்வரி நல் சிலை வாங்கி
வென்றி கொண்டு வேல் வேந்தர் பகை தடிந்த வீரன் எவ்வரி வெஞ்சிலை தடக்கை இராமன் -10–3-
76-தொத்தலர் பூஞ்சுரி குழல் கைகேசி சொல்லால் தொல் நகரம் துறந்து துறைக் கங்கை தன்னைப் பக்தியுடை குகன் கடத்த
வனம் போய் புக்குப் பரதனுக்கு பாதுகமும் அரசும் ஈந்து சித்ர கூடத்து இருந்தான் -10-4-
77-வலி வணக்கு வரை நெடும் தோள் விராதைக் கொன்று வண் தமிழ் மா முனி கொடுத்த வரி வில் வாங்கிக் கலை வணக்கு நோக்கு
அரக்கி மூக்கை நீக்கிக் கரனோடு தூடணன் தன் உயிரை வாங்கிச் சிலை வணக்கி மான் மரியா எய்தான் -10–5-
78-தனமருவு வைதேகி பிரியல் உற்றுத் தளர்வு எய்திச் சடாயுவை வைகுந்தத்து ஏற்றி வனமருவு கவியரசன் காதல் கொண்டு
வாலியைக் கொன்று இலங்கை நகர் அரக்கர் கோமான் சினம் அடங்க மாருதியால் சுடுவித்தான் -10–6-
79-குரை கடலை அடல் அம்பால் மறுக எய்து குலை கட்டி மறு கரையை அதனாலே ஏறி எரி நெடு வேல் அரக்கரோடும்
இலங்கை வேந்தன் இன்னுயிர் கொண்டு அவன் தம்பிக்கு அரசும் ஈந்து திரு மகளோடு இனிது அமர்ந்த செல்வன் -10–7-
80-அம்பொனெடு மணி மாட அயோத்தி எய்து அரசு எய்து அகத்தியன் வாய்த் தான் முன் கொன்றான் தன் பெரும் தொல் கதை கேட்டு
மிதிலைச் செல்வி உலகு உய்யத் திரு வயிறு வாய்த்த மக்கள் செம்பவளத் திரள் வாய்த் தன் சரிதை கேட்டான் -10- 8-
81-செறி தவச் சம்புகன் தன்னைச் சென்று கொன்று செழு மறையோன் உயிர் மீட்டுத் தவத்தோன் ஈந்த நிறை மணிப் பூண்
அணியும் கொண்டு இலவணன் தன்னைத் தம்பியால் வான் ஏற்றி முனிவன் வேண்டத் திறல் விளங்கும் இலக்குமனைப் பிரிந்தான் -10-9-
82-அன்று சராசரங்களை வைகுந்தத்து ஏற்றி அடல் அரவப் பகை ஏறி அசுரர் தம்மை வென்று இலங்கு மணி நெடும் தோள் நான்கும்
தோன்ற விண் முழுதும் எதிர் வரத் தன் தாமம் மேவிச் சென்று இனிது வீற்று இருந்த அம்மான் -10–10-
83-தில்லை நகர்த் திருச் சித்ர கூடம் தன்னுள் திறல் விளங்கு மருதியோடு அமர்ந்தான் எல்லையில் சீர்த் தயரதன் தன் மகன் -10–11-

—————————————————————-

திருச்சந்த விருத்தம்
84-குரங்கை ஆள் உகந்த வெந்தை -21-
85-கூனகம் புகத்து எறித்த கொற்ற வில்லி -30-
86-வேலை வேவ வில் வளைத்த வெல் சினத்தை வீரன் -31-
87-குரக்கினப் படை கொடு குரை கடலின் மீது போய் அரக்கர் அங்கரங்க வெஞ்சரம் துரந்த வாதி -32-
88-மின்னிறத்து எயிற்று அரக்கன் வீழ வெஞ்சரம் துரந்து பின்னவற்கு அருள் புரிந்து அரசளித்த பெற்றியோன் -33-
89-வெற்பு எடுத்து வேலை நீர் வரம்பு கட்டினான் -39-
90-வெற்பு எடுத்த விஞ்சி சூழ் இலங்கை கட்டு அழித்தான் -39-
91-கொண்டை கொண்ட கோதை மீது தேனுலாவு கூனி கூன் உண்டை கொண்டரங்க வோட்டி உள் மகிழ்ந்த நாதன் -49-
92-வெண் திரைக் கருங்கடல் சிவந்து வேவ முன்னோர் நாள் திண் திறல் சிலைக்கை வாளி விட்ட வீரர் -50-
93-சரங்களைத் துரந்து வில் வளைத்து இலங்கை மன்னன் சிரங்கள் பத்து அறுத்து உதிர்த்த செல்வர் -51-
94-இலைத் தலைச் சரம் துரந்து இலங்கை கட்டு அழித்தவன் –54-
95-இலங்கை மன்னன் ஐந்தொடு ஐந்து பைந்தலை நிலத்து உகக் கலங்க வன்று சென்று கொன்று வென்றி கொண்ட வீரன் -56-
96-மரம் பொதச் சரந்துரந்து வாலி வீழ முன்னோர் நாள் உரம் பொதச் சரந்துரந்த உம்பராளி எம்பிரான் -73-
97-உடைந்த வாலி தந்தனுக்கு உதவ வந்து இராமனாய் மிடைந்த வேழ் மரங்களும் அடங்க எய்தான் -81-
98-பண்ணுலாவு மென் மொழிப் படைத் தடங்காணாள் பொருட்டு எண்ணிலா வரக்கரை நெருப்பினால் நெருங்கினான் -91-
99-இரும்பரங்க வெஞ்சரம் துரந்த வில்லி ராமன் -93-
100-குன்றினால் துள்ளு நீர் வரம்பு செய்த தோன்றல் -102 —
101-கடுங்கவந்தன் வக்கரன் கரன் முரன் சிரமவை இடந்து கூறு செய்த பல் படைத் தடக்கை மாயன் -104-
102-மாறு செய்த வாள் அரக்கன் நாள் உலப்ப அன்று இலங்கை நீறு செய்து சென்று கொன்று வென்றி கொண்ட வீரனார் -116-

———————————————

திருமாலை –
103-சிலையினை இலங்கை செற்ற தேவன் -7-
104-ஒரு வில்லால் ஓங்கு முந்நீர் அடைத்து உலகங்கள் உய்யச் செருவிலே அரக்கர் கோனைச் செற்ற நம் சேவகனார் –11 –
திருப்பள்ளி எழுச்சி –
105-இலங்கையர் குலத்தை வாட்டிய வரிசிலை வானவர் ஏறு மா முனி வேள்வியைக் காத்து அவபிரதமாட்டிய அடு திறல் அயோத்தி எம்மரசு -4-

———————————–

அமலனாதி பிரான் –
106-அன்று நேர்ந்த நிசாராரைக் கவர்ந்த வெங்கணைக் காகுத்தன் -2-
107-சதுரமா மதிள் சூழ் இலங்கைக்கு இறைவன் தலை பத்து உத்திர வோட்டி ஓர் வெங்கணை உய்த்தவன் -4-

——————————————

பெரிய திருமொழி –
108-வாலி மா வலத்து ஒருவனது உடல் கெட வரிசிலை வளைவித்தான் -1–2–1-
109-கலங்க மாக் கடல் அரி குலம் பணி செய்ய அருவரை அணை கட்டி இலங்கை மா நகர் பொடி செய்த அடிகள் -1-2–2–
110-தானவனாகம் தரணியில் புரளத் தடம் சிலை குனித்த என் தலைவன் -1–4–1-
111-கானிடை உருவைச் சுடு சரம் துரந்து கண்டு முன் கொடும் தொழில் உரவோன் ஊனுடை யகலத்து
அடு கணை குளிப்ப உயிர் கவர்ந்து உகந்த எம் ஒருவன் -1-4-2-
112-இலங்கையும் கடலும் –அரக்கர் குலங்களும் கெட முன் கொடும் தொழில் புரிந்த கொற்றவன் -1-4-3-
113-மான் முனிந்து ஒரு கால் வரி சிலை வளைத்த மன்னவன் -1–4-8-
114-கலையும் கரியும் பரிமாவும் திரியும் கானம் கடந்து போய்ச் சிலையும் கணையும் துணையாக சென்றான்
-மலை கொண்டு அலை நீர் அணை கட்டி மதிள் நீர் இலங்கை வாள் அரக்கர் தலைவன் தலை பத்து அறுத்து உகந்தான் -1–5–1-
115-கடம் சூழ் கரியும் பரிமாவும் ஒலி மாந்தேரும் காலாளும் உடன் சூழ்ந்து எழுந்த கடி இலங்கை பொடியா வடிவாய்ச் சரந்துரந்தான்-1–5-2-
116-ஒரு கால் இரு கால் சிலை வளையத் தேரா வரக்கர் தேர் வெள்ளம் செற்றான் -1–5–4-
117-அடுத்து ஆர்த்து எழுந்தாள் பில வாய் விட்டு அலற அவள் மூக்கு வாயில் விடுத்தான் -1–5–5-
118-மராமரம் ஏழும் எய்த வலத்தினான்-1-8–5-
119-கண்ணார் கடல் சூழ் இலங்கைக்கு இறைவன் தன் திண்ணாகம் பிளக்கச் சரம் செல உய்த்தான் -1-10–1-
120-இலங்கைப் பதிக்கு அன்று இறையாக அரக்கர் குலம் கெட்டு அவர் மாளக் கொடிப் புள் தெரித்தான் -1-10-2-
121-காசை யாடை மூடி யோடிக் காதல் செய்தானாவனூர் நாசமாக நம்ப வல்ல நம்பி நம் பெருமான் –2–2–1-
122-தையலாள் மேல் காதல் செய்த தானவன் வாள் அரக்கன் பொய்யில்லாத பொன் முடிகள் ஒன்பதோடு ஒன்றும்
அன்று செய்த வெம்போர் தன்னில் இங்கோர் செஞ்சரத்தால் உருள எய்த வெந்தை எம்பெருமான் -2–2–2-
123-முன்னோர் தூது வானரத்தின் வாயில் மொழிந்து அரக்கன் மன்னூர் தன்னை வாளியினால் மாள முனைந்தான் -2–2–3–
124-சிற்றவை பணியால் முடி துறந்தான் -2–3–1-
125-பரதனும் தம்பி சத்ருக்கனனும் இலக்குமனோடு மைதிலியும் இரவு நன் பகலும் துதி செய்ய நின்ற இராவணாந்தகன் -2–3–7-
126-அயன் வாளியினால் கதிர் நீண் முடி பத்தும் அறுத்து அமரும் நீல முகில் வண்ணன் -2- 4–5-
127-கிளர் பொறிய மறி அதனின் பின்னே படர்ந்தான் -2-5-6-
128-தென்னிலங்கை யரக்கர் வெந்தை விலங்குண்ண வலங்கை வாய்ச் சரங்கள் யாண்டான் -2-5-9-
129-விண்டாரை வென்று ஆவி விலங்குண்ண மெல்லியலார் கொண்டாடும் மல்லகலம் அழல் ஏற வெஞ்சமத்துக் கண்டார் -2-6-4-
130-தடங்கடல் நுடங்கெயில் இலங்கை வன் குடி மடங்க வாள் அமர் தொலைத்தான் -2–7–6-
131-குடைத்திறல் மன்னவனாய் ஒரு கால் குரங்கைப் படையா மலையால் கடலை படைத்தவன் எந்தை பிரான் -2–9–8-
132-தாங்கரும் போர் மாலி படப் பறவை யூர்நது தராதலத்தோர் குறை முடித்த தன்மையான்–2–10–4-
133-கறை வளர் வேல் கரன் முதலாக் கவந்தன் மாலி கணை ஒன்றினால் மடிய இலங்கை தன்னுள்
பிறை எயிற்று வாள் அரக்கர் சேனை எல்லாம் பெரும் தகையோடு உடன் துணித்த பெம்மான் -2–10–5-
134-கூனுலாவிய மடந்தை தன் கொடும் சொலின் திறத்து இளங்கொடி யோடும் கானுலாவிய கருமுகில் திரு நிறத்தவன் -3-1–6-
135-மின்னின் நுண்ணிடை மடக் கொடி காரணம் விலங்கலின் மிசை யிலங்கை மன்னன் நீண் முடி பொடி செய்த மைந்தன் -3–1–7-
136-நெய் வாய் அழல் அம்பு துரந்து முந்நீர் துணியப் பணி கொண்டு அணி யார்நது இலங்குமையார் மணி வண்ணன் -3-2-6-
பைங்கண் விறல் செம்முகத்து வாலி மாளப் படர் வனத்துக் கவந்தனொடும் படையார்
137-திண் கை வெங்கண் விறல் விராதன் உக வில் குனித்த விண்ணவர் கோன் -3–4–6-
138-பொருவில் வலம்புரி யரக்கன் முடிகள் பத்தும் புற்றும் அறிந்த போலேப் புவி மேல் சிந்தச் செருவில் வலம்புரி சிலைக்கை மலைத் தோள் வேந்தன் -3–4–7-
139-மரம் எய்த மா முனிவன் -3-5–5-
140-அரக்கர் குலப்பாவை தன்னை வெஞ்சின மூக்கரிந்த விறலோன்– 3-7-3-
141-சிறையார் அவணப் புள் ஓன்று ஏறி அன்று திசை நான்கு நான்கும் இரியச் செருவில்
கறையார் நெடு வேல் அரக்கர் மடியக் கடல் சூழ் இலங்கை கடந்தான் -3–8–4-
142-கலையிலங்கு மகலல்குல் அரக்கர் குலக் கொடியை காதோடு மூக்குடன் அரியக் கதறி அவள் ஓடித்
தலையில் அங்கை வைத்து மலையிலங்கு புகச் செய்த தடம் தோளான் -3-9-4-
143-மின்னனைய நுண் மருங்குல் மெல்லியற்கா இலங்கை வேந்தன் முடி ஒருபதும் தோள் இருபதும் போயுதிரத்
தன்னிகரில் சிலை வளைத்து அன்று இலங்கை பொடி செய்த தடம் தோளான் -3-9-5-
144-வாள் நெடும் கண் மலர்க் கூந்தல் மைதிலிக்கா இலங்கை மன்னன் முடி ஒருபதும்
தோள் இருபதும் போய் உதிரத் தாள் நெடும் திண் சிலை வளைத்த தயரதன் சேய்-3-10-6-
145-வாராரும் இளம் கொங்கை மைதிலியை மணம் புணர்வான் காரார் திண் சிலை இறுத்த தனிக் காளை -4-1-8-
146-கம்பமா கடல் அடைத்து இலங்கை மன் கதிர் முடி அவை பத்தும் அம்பினால் அறுத்து அரசு அவன் தம்பிக்கு அளித்தவன்-4-2-1-
147-தீ மனத்து அரக்கர் திறல் அழித்தவனே என்று சென்று அடைந்தவர் தமக்குத் தாய் மனத்து இரங்கி அருளினைக் கொடுக்கும் தயரதன் மதலை -4-3-5-
148-மல்லை மா முந்நீர் அதர் பட மலையால் அணை செய்து மகிழ்ந்தவன் கல்லின் மீதியன்ற கடி மதிள் இலங்கை கலங்க ஓர் வாளி தொட்டான் -4-3-6-
149-தான் போலும் என்று எழுந்தான் தரணியாளன் அது கண்டு தரித்து இருப்பான் அரக்கர் தங்கள்
கோன் போலும் என்று எழுந்தான் குன்றம் அன்ன இருப்பது தோளுடன் துணித்த ஒருவன் –4 -4 -6 –
150-இலங்கை வவ்விய விடும்படி தீரக் கடும் கணை துரந்த வெந்தை -4-5-2-
151-கருமகள் இலங்கையாட்டி பிலங்கொள் வாய் திறந்து தன் மேல் வருமவள் செவியும் மூக்கும் வாளியினால் தடித்த வெந்தை -4-5-5-
152-உருத்தெழு வாலி மார்பில் ஒரு கணை உருவ ஒட்டிக் கருத்துடைத் தம்பிக்கு இன்பக் கதிர் முடி அரசு அழித்தான் -4–6–3-
153-முனை முகத்து அரக்கன் மாள முடிகள் பத்து அறுத்து வீழ்த்து அங்கு அனையவர்க்கு இளையவர்க்கே அரசு அளித்து அருளினான் -4-6-4-
154-கல்லால் கடலை அணை கட்டி உகந்தான் -4-7-6-
155-மல்லை முந்நீர் தட்டிலங்கை கட்டழித்த மாயன் -4- 8-4-
156-அரக்கர் ஆவி மாள அன்று ஆழ் கடல் சூழ் இலங்கை செற்ற குரக்கரசன் கோல வில்லி -4-8-5-
157-அலை கடல் அடைத்திட்டு அரக்கர் தஞ்சிரங்களை உருட்டினான் -4-10-2-
158-காற்றிடைப் பீளை கரந்தன வரந்தை யுறக் கடல் அரக்கர் தம் சேனை கூற்றிடை செல்லக் கொடும் கணை துரந்த கோல வில்லி ராமன் -4–10–6-
159-மேவா வரக்கர் தென்னிலங்கை வேந்தன் வீயச் சரம் துரந்தான் -5-1-3-
160-விறல் வாள் அரக்கர் தலைவன் தன் வற்பார் திரள் தோள் ஐ நான்கும் துணித்த வல் விலி ராமன் -5-1-4-
161-ஆறினோடு ஒரு நான்குடை நெடு முடி அரக்கன் தன் சிரம் எல்லாம் வேறு வேறாக வில்லது வளைத்தவன் -5-3-7-
162-விளைத்த வெம்போர் விறல் வாள் அரக்கன் நகர் பாழ் பட வளைத்த வல் வில் தடக்கையவன் – 5-4-4-
163-வம்புலாம் கூந்தல் மண்டோதரி காதலன் வான் புக அம்பு தன்னால் முனிந்த அழகன் -5- 4-5-
164-மராமரம் ஏழு எய்த வென்றிச் சிலை யாளன் -5-5-2-
165-சுரி குழல் கனிவாய்த் திருவினைப் பிரித்த கொடுமையில் கடு விசை அரக்கன் எரி விழித்து இலங்கு மணி முடி பொடி செய்து இலங்கை பாழ்
படுப்பதற்கு எண்ணி வரி சிலை விளைய வடு சரம் துரந்து மறி கடல் நெறி பட மலையால் அரிகுலம் பணி கொண்டலை கடலை அடைத்தான் -5-7-7-
166-இலங்கை மலங்க வன்றடு சரம் துரந்தான் -5- 7-8-
167-ஏழை ஏதலன் கீழ் மகன் என்னாது இரங்கி மற்று அவர்க்கு இன்னருள் சுரந்து மாழை மான் மட நோக்கி
யுன் தோழி உம்பி எம்பி என்று உகந்து தோழன் நீ எனக்கு இங்கு ஒழி என்றான் -5-8-1-
168-வாத மா மகன் மற்கடம் விலங்கு மற்றோர் சாதி என்று ஒழியாது உகந்து காதல் ஆதாரம் கடலினும் பெருகச் செய்த
தகவினுக்கு இல்லை கைம்மாறு என்று கோதில் வாய்மையினோடும் உடனே உண்பான் நான் என்றான் -5-8-2-
169-விலங்கலால் கடல் அடைத்து விளங்கு இழை பொருட்டு வில்லால் இலங்கை மா நகருக்கு இறைவன் இருபது புயம் துணித்தான்-5- 9-6-
170-பிறையின் ஒளி எயிறு இலக முறுகி எதிர் பொருதும் என வந்த அசுரர் இறைகள் அவை நெறு நெறு என வெறியவர் வயிறு அழல நின்ற பெருமான் -5-10-4-
171-மூள எரி சிந்தி முனிவு எய்தி அமர் செய்தும் என வந்த வசுரர் தோளும் அவர் தாளும் முடி யோடு பொடியாக நொடியாம் அளவு எய்தான் -5–10-5-
172-தம்பியொடு தாம் ஒருவர் தன் துணைவி காதல் துணையாக முன்ன நாள் வெம்பி எரி கானகம் உலாவுமவர் -5-10-6-
173-வற்றா நீள் கடல் சூழ் இலங்கை இராவணனைச் செற்றான் -6–3–5-
174-தொன்னீர் இலங்கை மலங்க விலங்கு எரி யூட்டினான் -6-4-6-
175-ஆனைப் புரவி தேரொடு கால் ஆள் அணி கொண்ட சேனைத் தொகையைச் சாடி இலங்கை செற்றான் -6–5–3-
176-விண்ட நிசாசரரைத் தோளும் தலையும் துணி வெய்தச் சுடு வெஞ்சிலை வாய்ச் சரம் துரந்தான் -6–7–1-
177-துள்ளா வருமான் விழ வாளி துரந்தான் -6-7-3-
178-கல்லார் மதிள் சூழ் கடி இலங்கைக் கார் அரக்கன் வல்லாகம் கீள வரி வெஞ்சரம் துரந்த வில்லன் –செல்வ விபீடணற்கு வேறாக நல்லான் -6-8-5-
179-பழியாரும் விறல் அரக்கன் பரு முடிகளவை சிதற அழலாரும் சரம் துரந்தான் -6-9-2-
180-எறிஞர் அரண் அழியக் கடியார் இலங்கை கடந்த நம்பி -6-10-11-
181-இலங்கைக் கோன் வல்லாள் ஆகம் வில்லால் முனிந்த வெந்தை விபீடணற்கு நல்லான் -6-10-4-
182-தென்னிலங்கை அடையா வரக்கர் வீயப் பொருது மேவி வெங்கூற்றம் நடையா உண்ணக் கண்டான் -6-10-5-
183-கான வெண்கும் குரங்கும் முசுவும் படையா அடல் அரக்கர் மானம் அழித்து நின்ற வென்றி யம்மான் -6-10-6-
184-வில்லேர் நுதல் வேல் நெடும் கண்ணியுடன் கல்லார் கடும் கானம் திரிந்த களிறு -7- 1-5-
185-சினவில் செங்கண் அரக்கர் உயிர் மாளச் செற்ற வில்லி –மரம் ஏழு எய்த மைந்தன் -7–3–1-
186-ஆழி சூழ் இலங்கை மலங்கச் சென்று சரங்கள் ஆண்ட தண் தாமரைக் கண்ணன் -7-3-4-
187-தழலே புரை மின் செய் வாள் அரக்கன் நகர் பாழ் படச் சூழ் கடல் சிறை வைத்தான் -7-3-9-
188-மீதோடி வாள் எயிறு மின்னிலக முன் விலகும் உருவினாளைக் காதோடு கொடி மூக்கு அன்று உடன் அறுத்த கைத் தலத்தனன் -7-4-3-
189-தேராளும் வாள் அரக்கன் தென்னிலங்கை வெஞ்சமத்துப் பொன்றி வீழப் போராளும் சிலையதனால் பொரு கணைகள் போக்குவித்தான் -7-4-4-
190-செம்பொன் மதிள் சூழ் தென் இலங்கைக்கு இறைவன் சிரங்கள் ஐ இரண்டும் உம்பர் வாளிக்கு இலக்காக உதிர்த்த உரவோன் -7-5-3-
191-அடையார் தென்னிலங்கை அழித்தான் -7-6-3-
192-பந்து அணைந்த மெல் விரலாள் சீதைக்காகிப் பகலவன் மீது இயங்காத இலங்கை வேந்தன் அந்தமில்
திண் கரம் சிரங்கள் புரண்டு வீழ அடு கணையால் எய்து உகந்த அம்மான் -7-8-7-
193-தார் மன்னு தாசாரதி –வாள் அரக்கர் காலன் -8-4-7-
194-ஏழு மா மரம் துளை படச் சிலை வளைத்து இலங்கையை மலங்குவித்த ஆழியான் -8-5-5-
195-முரியும் வெண் திரை முது கயம் தீப்பட்ட முழங்கு அழல் எரி அம்பின் வரி கொள் வெஞ்சிலை வளைவித்த மைந்தன் -8-5-6-
196-கலங்க மாக்கடல் கடைந்து அடைத்து இலங்கையர் கோனது வரையாகம் மலங்க வெஞ்சமத்து அடு சரம் துரந்த எம்மடிகள் -8-5-7-
197-துளங்கா வரக்கர் துளங்க முன் திண் தோள் நிமிரச் சிலை வளையச் சிறிதே முனிந்த திரு மார்பன் -8-6-1-
198-பொருந்தா வரக்கர் வெஞ்சமத்து பொன்ற வன்று புள்ளூர்ந்து பெரும் தோள் மாலி தலை புரளப் போந்த வரக்கர்
தென்னிலங்கை இருந்தார் தம்மை யுடன் கொண்டு அங்கு எழிலார் பிலத்துப் புக்கு ஒலிப்ப கரும் தாள் சிலைக் கைக் கொண்டான் -8- 6-2-
199-வல்லியிடையாள் பொருட்டாக மதிள் நீர் இலங்கையார் கோவை அல்லல் செய்து வெஞ்சமத்துள் ஆற்றல் மிகுத்த
ஆற்றலான் வல்லாள் அரக்கர் குலப் பாவை வாட முனி தன் வேள்வியைக் கல்விச் சிலையால் காத்தான் -8-6-3-
200-மல்லை முந்நீர் அதர் பட வரி வெஞ்சிலை கால் வளைவித்துக் கொல்லை விலங்கு பணி செய்யக் கொடியோன் இலங்கை புகலுற்றுத்
தொல்லை மரங்கள் புகப் பெய்து துவலை நிமிர்ந்து வான் அணவக் கல்லால் கடலை அடைத்தான் -8-6-4-
201-சேம மதிள் சூழ் இலங்கைக் கோன் சிரமும் கரமும் துணித்தான் -8-6-5-
202-திருந்தா வரக்கர் தென்னிலங்கை செந்தீ உண்ணச் சிவந்தான்-8- 6-6-
203-அலை நீர் இலங்கைத் தசக் க்ரீவற்கு இளையோருக்கு அரசை அருளி முன் கலை மாச் சிலையால் எய்தான் -8-6-7-
204-விண்டவர் பட மதிள் இலங்கை முன் எரி எழக் கண்டவர் -8-7-5-
205-வையம் எல்லாம் உடன் வணங்க வணங்கா மன்னனாய் தோன்றி வெய்ய சீற்றக் கடி இலங்கை குடி கொண்டோட
வெஞ்சமத்துச் செய்த வெம்போர் நம் பரன் -8-8-7-
206-வானுளாரவரை வலிமையால் நலியும் மறி கடல் இலங்கையார் கோனைப் பானு நேர்
சரத்தால் பனங்கனி போலே பரு முடி யுத்திர வில் வளைத்தோன் -9-1-7-
207-கலையுலா வல்குல் காரிகை திறத்துக் கடல் பெரும் படை யோடும் சென்று சிலையினால் இலங்கை தீ எழச் செற்றான் -9-1-10-
208-வில்லால் இலங்கை மலங்கச் சரந்துரந்த வல்லாளன் -9-4-5-
209-தென்னிலங்கை மலங்கச் செற்றான் -9-5-10-
210-சிரமுனைந்தும் ஐந்தும் சிந்தச் சென்று அரக்கன் உரமும் கரமும் துணித்த உரவோன் -9–6–4-
211-சிலையால் இலங்கை செற்றான் -9-6-10-
212-சுடு சரமடு சிலைத் துரந்து நீர்மையிலாத தாடகை மாள நினைத்தவர் -9- 8-4-
213-வணங்கலில் அரக்கன் செருக்களத்து அவிய மணி முடி ஒருபதும் புரள அணங்கு எழுந்து அவன் தன் கவந்தம் நின்றாட அமர் செய்த அடிகள் -9–8–5-
214-காவலன் இலங்கைக்கு இறை கலங்கச் சரம் செல உய்த்து மற்றவன் ஏவலம் தவிர்த்தான் -9-10-6-
215-அங்கு வானவர்க்கு ஆகுலம் தீர அணி இலங்கை அழித்தவன் -10-2-10-
216-இராவணற்கு காலன் -10–3–3-
217-மணங்கள் நாறும் வார் குழலார் மாதர்கள் ஆதரத்தைப் புணர்ந்த சிந்தைப் புன்மையாளன் பொன்ற
வரி சிலையால் கணங்கள் உண்ண வாளி யாண்ட காவலன் -10-3–4-
218-கல்லின் முந்நீர் மாற்றி வந்து காவல் கடந்து இலங்கை அல்லல் செய்தான் -10–3–6-
219-கவள யானைப் பாய் புரவித் தேரொடு அரக்கர் எல்லாம் துவள நின்ற வென்றி யாளன் தவள மாட நீடு அயோத்திக் காவலன் தன் சிறுவன் -10–3–8-
220-ஏடொத்து ஏந்தும் நீள் இலை வேல் இறைவனார் ஓடிப் போகா நின்றார் -10–3–9-
221-தெளியா வரக்கர் திரள் போய் அவிய மிடைத்திட்டு எழுந்த குரங்கைப் படையா விலங்கல் புகப் பாய்ச்சி விம்மக் கடலை அடைத்திட்டவன் -10–6–7-
222-நெறித்திட்ட மென்குழை நல் நேரிழையோடு உடனாய வில்லென்ன வல்லேயதனை இறுத்திட்டு அவள் இன்பம் அன்போடு அணைந்திட்டு
இளம் கொற்றவனாய் துளங்காத முந்நீர் செறித்திட்டு இலங்கை மலங்க அரக்கன் செழு நீண் முடி தோளோடு தாள் துணிய வறுத்திட்டவன்-10–6–8-
223-வரிந்திட்ட வில்லால் மரம் ஏழும் எய்து மலை போல் உருவத் தோர் இராக்கதி மூக்கு அரிந்திட்டவன்-10-6-9-
224-இலங்கை ஒள் எரி மண்டு யுண்ணப் பணித்த ஊக்கம் உடையான் -10–9–1-
225-அரக்கியர் ஆகம் புல்லென வில்லால் அணி மதிள் இலங்கையார் கோனைச் செருக்கு அழித்து அமரர் பணிய முன்னின்ற சேவகன் -10-9-6-
226-பெரும் தொகைக்கு இரங்கி வாலியை முனிந்த பெருமையான்-10-9-8-
227-அரக்கரை வென்ற வில்லியார் -11-1-1-
228-வென்று வார் சிலை வளைத்து இலங்கையை வென்ற வில்லியார் -11-1–6-
229-பொருந்து மா மரம் ஏழும் எய்த புனிதனார் -11–2–4-
230-இலை மலி பள்ளி எய்தி இது மாயம் என்ன இனமாய மான்பின் எழில் சேர் அலை மலி வேல் கணாளை யகல்விப்பதற்கு ஓர் உருவாய் மானை யமையாக்
கொலை மலி வெய்துவித்த கொடியோன் இலங்கை பொடியாக வென்றி அமருள் சிலை மலி வெஞ்சரங்கள் செல உய்த்த நங்கள் திருமால் -11- 4-7-
231-கொடியோன் இலங்கை பொடியாச் சிலை கெழு செஞ்சரங்கள் செல உய்த்த நாங்கள் திருமால் -11-4-10-
232-மானமரு மென் நோக்கி வைதேவி இன் துணையாக் கானமரும் கல்லதர் போய்க் காடுறைந்தான் -11-5-1-

————————————

திருக் குறும் தாண்டகம்
233-கடி மதிள் இலங்கை செற்ற ஏறு -2-
234-முன்பொலா இராவணன் தன் முது மதிள் இலங்கை வேவித்து அன்பினால் அனுமன் வந்து அங்கு அங்கு அடி இணை பணிய நின்றான் -15-
235-மாயமான் மாயச் செற்றான் -16-

—————————

திரு நெடும் தாண்டகம் –
236-வில்லிறுத்து மெல்லியல் தோள் தோய்ந்தான் -13-
237-வென்று அசுரர் குலம் களைந்த வேந்தன் -16-
238-தேராளும் வாள் அரக்கன் செல்வமாளத் தென்னிலங்கை முன் மலங்கச் செந்தீ ஒல்கிப் போராளன் -20-
239-தென்னிலங்கை அரண் சிதறி அவுணன் மாளச் சென்றான் -28-
240-அலை கடலைக் கடந்து அடைத்த அம்மான் குன்றாத வலி யரக்கர் கோனை மாளக் கொடும் சிலை வாய்ச் சரந்துரந்து குலம் களைந்து வென்றான் -29-

———————————–

முதல் திருவந்தாதி –
241-சிலையால் மராமரம் ஏழ் செற்றான் -27-
242-பூ மேய மாதவத்தோன் தாள் பணிந்த வாள் அரக்கன் நீள் முடியைப் பாதமத்தால் எண்ணினான் -45-
243-நுடங்கிடையை முன்னிலங்கை வைத்தான் முரண் அழிய முன்னொரு நாள் தன் வில் அங்கை வைத்தான் -59-
244-மேலொரு நாள் மான்மாய வெய்தான் -82-

————————–

இரண்டாம் திருவந்தாதி —
245-சீதையை மான்பின் போய் அன்று பிரிந்தான் -15-
246-இலங்கை மேல் வெவ்வே தன் சீற்றத்தால் சென்று இராவணனைக் கொன்றான் -25-
247-தென்னிலங்கை நீறாக எய்து அழித்தான் -29-
248-அன்று காரோதம் பின்னடைந்தான் -30-
249-தோள் இரண்டு எட்டு ஏழும் மூன்றும் முடி அனைத்தும் தாள் இரண்டும் வீழச் சரம் துணிந்தான் -43-

——————————

மூன்றாம் திருவந்தாதி –
250-இலங்கா புரம் எய்து எரித்தான் -51-
251-எய்தான் மரா மரம் ஏழும் இராமனாய் எய்தான் அம் மான் மறியை ஏந்திழைக்காய் தென்னிலங்கைக் கோன் வீழ எய்தான் -52-
252-வாள் அரக்கன் ஏய்ந்த முடிப் போது மூன்று ஏழு என்று எண்ணினான் -77-

——————————

நான்முகன் திருவந்தாதி –
253-ஈசனை வென்ற சிலை கொண்ட செங்கண் மால் சேராக் குலை கொண்ட ஈரைந்து தலையான் இலங்கையை ஈடு அழித்த கூரம்பன் -8-
254-தண் தார் இராவணனை ஊன் ஒடுங்க எய்தான் -28-
255-மிகப் புருவம் ஒன்றுக்கு ஓன்று ஓசனையான் வீழ ஒரு கணை எய்தான் -29-
256-தண்ட வரக்கன் தலை தாளால் பண்டு எண்ணிப் போங்குமரன்-44-
257-கல்லாதவர் இலங்கை கட்டழித்த காகுத்தன் -53-
258-தடம் கடலைக் கல் கொண்டு தூரத்தை கடல் வண்ணன் -77-
259-கழி சினத்த வல்லாளன் வானரக் கோன் வாளி மதன் அழித்த வில்லாளன் -85-

———————————–

திரு விருத்தம் –
260-இலங்கைக் குழாம் நெடு மாடம் இடித்த பிரானார் -36-
261-தென்பால் இலங்கை வெங்களம் செய்த நம் விண்ணோர் பிரானார் -77-
262-பேணலம் இல்லா வரக்கர் முந்நீர் பெரும்பதி வாய் நீள் நகர் நீள் எரி வைத்து அருளாய் என்று விண்ணோர் தாள் நிலம் தோய்ந்து தொழு மூர்த்தி -92-

————————–

பெரிய திருவந்தாதி –
263-சூழ்ந்து எங்கும் வாள் வரைகள் போல் அரக்கன் வன் தலைகள் தாம் இடியத் தாள் வரை வில் ஏந்தினார் -17-
264-அன்று திருச் செய்ய நேமியான் தீ யரக்கி மூக்கும் பருச் செவியும் ஈர்த்த பரன் -63-
265-மரம் ஏழு அன்று எய்தான் -64-
266-சூட்டாய நேமியான் தொல்லரக்கன் இன்னுயிரை மாட்டே துயர் இழைத்த மாயவன் -66-
267-கணை நாணில் ஓவாத் தொழில் சார்ங்கன் –78-

——————————-

திரு எழு கூற்று இருக்கை
268-ஒரு முறை இரு சுடர் மீதினில் இயங்கா மும் மதிள் இலங்கை இருகால் வளைய ஒரு சிலை ஒன்றிய வீர் எயிற்று அழல் வாய் வாளியில் அட்டான் -268-

—————————————-

சிறிய திருமடல்
269-இலங்கை பொடி பொடியா வீழ்த்தவன் —
270-தன் சீதைக்கு நேராவன் என்று ஓர் நிசாசரி தான் வந்தாளைக் கூரார்ந்த வாளால் கொடு மூக்கும் காது இரண்டும் ஈரா விடுத்து அவட்கு மூத்தோனை
வெந்நகரம் சேரா வகையே சிலை குனித்தான் -செந்துவர் வாய் வாரார் வன முலையாள் வைதேவி காரணமா ஏரார்
தடம் தோள் இராவணனை ஈரைந்து சீரார் சிரம் அறுத்து செற்று உகந்த செங்கண் மால் –

———————————-

பெரிய திரு மடல் –
271-போர் வேந்தன் தன்னுடைய தாதை பணியால் அரசு ஒழிந்து பொன்னகரம் பின்னே புலம்ப வலம் கொண்டு மன்னும் வளநாடு கை விட்டுக்
கொன்னவிலும் வெங்கானத்தூடு கொடும் கதிரோன் துன்னு வெயில் வறுத்த வெம் பரல் மேல் பஞ்சடியால் வைதேவி
என்று உரைக்கும் அன்னம் நடைய வணங்குடன் நடந்த மன்னன் இராமன் —
272-வண்ணம் போல் அன்ன கடலை மலை இட்டு அணை கட்டி மன்னன் இராவணனை மா மண்டு வெஞ்சமத்துப்
பொன் முடிகள் பத்தும் புரளச் சரம் துரந்து தென்னுலகம் ஏற்றுவித்த சேவகன் –
273-தென்னிலங்கை யாட்டி வராகர் குலப்பாவை மன்னன் இராவணன் தன் நல் தங்கை வாள் எயிற்றுத் துன்னு சுடு சினத்துச் சூர்ப்பணகாச்
சோர்வு எய்திப் பொன்னிறம் கொண்டு புலர்ந்து எழுந்த காமத்தால் தன்னை நயந்தாளைத் தான் முனிந்து மூக்கு அரிந்தான்
வாய்த்த மலை போலும் தன்னிகர் ஓன்று இல்லாத தாடகையை மா முனிக்காகத் தென்னுலகம் ஏற்றுவித்த திண் திறலோன் —

——————–

திருவாய் மொழி
274-கூனி சிதைய உண்டை வில் நிறத்தில் தெரித்தான் -1-5-5-
275-சினையேய் தழைய மரா மரங்கள் ஏழும் எய்த சிரீதரன் -1- -5–6-
276-நீள் கடல் சூழ் இலங்கைக கோன் தோள்கள் தலை துணி செய்தான் -1–6–7-
277-மராமரம் எய்த மாயவன் -1-7-6-
278-தீ முற்றத் தென்னிலங்கை யூட்டினான் -2–1–3-
279-அரக்கியை மூக்கீர்ந்தான் -2–3–6-
280-குழாங்கொள் பேர் அரக்கன் குலம் வீய முனிந்தவன் -2-3-11-
281-அரக்கன் இலங்கை செற்றான் -2–4–3-/-2–4–4-
282-கிளர் வாழ்வை வேவ விலங்கை செற்றான் -2–4–10-
283-தேம் பணைய சோலை மராமரம் ஏழும் எய்தான் -2–5–7-
284-பாறிப் பாறி அசுரர் தம் பல் குழாங்கள் நீர் எழப் பாய் பறவை ஓன்று ஏறி வீற்று இருந்தான் -2–6–8-
285-இலங்கை செற்றான் மரா மரம் பைந்தாள் ஏழ் உருவ ஒரு வாளி கோத்த வில்லான்-2- 6-9-
286-இலங்கை அரக்கர் குலம் முருடு தீர்த்த பிரான் -2-9-10-
287-ஏர் கொள் இலங்கை நீரே செய்த நெடும் சுடர் ஜோதி -2-7-10-
288-தென்னிலங்கை எரி எழச் செற்ற வில்லி -3-6-2-
289-தயரதற்கு மகன் -3-6-8-
290-தண் இலங்கைக்கு இறையைச் செற்ற நஞ்சன்-3–8–2-
291-சன்மம் பல பல செய்து வெளிப்பட்டுச் சாங்கோடு சக்கரம் வில் உண்மை யுடைய யுலக்கை ஒள் வாள் தண்டு கொண்டு
புள்ளூர்ந்து உலகில் வன்மையுடைய வரக்கர் வசுரரை மாளப் படை பொருத நன்மை யுடையவன் -3–10-1-
292-கொம்பு போல் சீதை பொருட்டு இலங்கை நகர் அம்பு எரி உய்த்தவர் -4–2–8-
293-மதிள் இலங்கைக கோவை வீயச் சிலை குனித்தான் -4-3-1-
294-கிடந்து நின்றும் கொண்ட கோலத்தோடு வீற்று இருந்த மணம் கூடியும் கண்ட வாற்றால் தனதே யுலகு என நின்றான் -4–5–10-
295-குலங்குலமா வசுரர்களை நீறாகும் படி நிருமித்திப் படை தொட்ட மாறாளன் -4- 8-1-
296-தளிர் நிறத்தால் குறைவில்லாத் தனிச் சிறையில் விளப்புற்ற கிளி மொழியாள் காரணமாக்
கிளர் அரக்கன் நகர் எரித்த களி மலர்த் துழாய் அலங்கல் கமழ் முடியன் -4- 8-5-
297–காயும் கடும் சிலை என் காகுத்தன் -5-4–3-
298–கொடியான் இலங்கை செற்றான் -5–6–9-
299–இலங்கை செற்ற வம்மான் -5–7–3-
300–மாறில போர் அரக்கன் மதிள் நீர் எழச் செற்று உகந்த ஏறு சேவகனார் –6–1–10-
301–மன்னுடை இலங்கை யரண் காய்ந்த மாயவன் –6–2–1-
302 — காண் பெரும் தோற்றத்துக் காகுத்த நம்பி –6–6–9-
303–ஆவா வென்னாது உலகத்தை யலைக்கும் யசுரர் வாழ் நாள் மேல் தீவாய் வாளி மழை பொழிந்த சிலையான் -6–10–4-
304–புணரா நின்ற மரம் ஏழு அன்று எய்த ஒரு வில் வலவன்-6–10–5-
305–அடல் ஆழி ஏந்தி அசுரர் வன் குலம் வேர் மருங்கு அறுத்தான் -7–1–5-
306–காகுத்தன் -7–2–3-
307–பேர் எயில் சூழ் கடல் தென்னிலங்கை செற்ற பிரான்
308–மாறு நிரைத்து இறைக்கும் சரங்கள் இன நூறு பிணம் மலை போல் புரளக் கடல் ஆறு மடுத்து உதிரப் புனலா நீறு பட இலங்கை செற்ற வப்பன்-7–4–7-
309—புற்பா முதலாப் புல் எறும்பாதி ஓன்று இன்றியே நற் பால் அயோத்தியில் வாழும் சராசரம் முற்றவும் நற் பாலுக்கு உய்த்த விராம பிரான் –7–5–1-
310–நாட்டை நலியும் அரக்கரை நாடித் தடிந்திட்டு நாட்டை அளித்து உய்யச் செய்தான் -7–5–2-
311— ஆளியைக் காண் பரியாய் அரி காண் நரியாய் அரக்கரூளை இட்டு அன்று இலங்கை கடந்து புலம்புக்கு ஒளிப்ப
மீளி யம் புள்ளைக் கடாய் விறல் மாலியைக் கொன்று பின்னும் ஆளுயர் குன்றங்கள் செய்து அடர்த்தான் -7–6–8-
312–ஆண் திறல் மீளி மொய்ம்பின் அரக்கன் குலத்தைத் தடித்து மீண்டும் அவன் தம்பிக்கே விரி நீர்
இலங்கை அருளி ஆண்டு தன் சோதி புக்க வரர் அரி ஏறு -7–6–9-
313–அமரது பண்ணி அகலிடம் புடை சூழ் அடு படை அவித்த வம்மான்
314– செருக்கடுத்து அன்று திகைத்த அரக்கரை யுருக்கெட வாளி பொழிந்த ஒருவன் -8–6–2-
315—-புகழும் பொரு படை ஏந்திப் போர் புக்கு அசுரரைப் பொன்றுவித்தான் -8–9–3-
316–கணை ஒன்றாலே ஏழ் மரமும் எய்த எம் கார் முகில் -9–1–2-
317—காய்ச்சின பறவை யூர்நது பொன் மலையின் மீமிசைக் கார் முகில் போல் மாசின மாலி மாலி மான் என்று
அங்கு அவர் படக் கனன்று முன்னின்ற காய் சின்ன வேந்தன் -9–2–6-
318—கூற்றமாய் வசுரர் குல முதல் அரிந்த கொடு வினைப் படைகள் வல்லான் -9- 2–9-
319—என் ஆர் உயிர்க் காகுத்தன் -9–5–6-
320—பெயர்கள் ஆயிரம் யுடைய வல்லரக்கர் புக்கு அழுந்தத் தயரதன் பெற்ற மரகத மணித் தடம் -10- 1-8-

———————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ அதிகார சங்கிரகம் – -ஸ்ரீ வேதாந்த தேசிகாசார்யர் ஸ்வாமிகள்-

February 25, 2017

ஸ்ரீ மான் வேங்கட நாதார்ய கவி தார்க்கிக கேசரீ
வேதாந்தா சார்ய வர்யோ மே சந்நிதத்தாம் சதா ஹ்ருதி –

கவி தார்க்கிக சிம்ஹாய கல்யாண குண சாலினே
ஸ்ரீ மதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம –

சீர் ஓன்று தூப்புல் திரு வேங்கடமுடையான்
பார் ஒன்றச் சொன்ன பழ மொழியுள் ஓர் ஓன்று
தானே யமையாதோ தாரணியில் வாழ்வார்க்கு
வான் ஏறப் போம் அளவும் வாழ்வு

———————————-

பொய்கை முனி பூதத்தார் பேயாழ்வார் தண்
பொருநல் வரும் குருகேசன் விட்டு சித்தன்
துய்ய குல சேகர நம் பாண நாதன்
தொண்டர் அடிப்பொடி மழிசை வந்த சோதி
வையம் எலா மறை விளங்க வாள் வேல் ஏந்து
மங்கையர் கோன் என்று இவர் கண் மகிழ்ந்து பாடும்
செய்ய தமிழ் மாலைகள் நாம் தெளிய ஓதித்
தெளியாத மறை நிலங்கள் தெளிகின்றோமே –1-

——————————————

இன்பத்தில் இறைஞ்சுதலில் இசையும் பேற்றில்
இகழாத பல்லுறவில் இராகம் மாற்றில்
தன் பற்றில் வினை விலக்கில் தகவு ஒக்கத்தில்
தத்துவத்தை உணர்த்துதலில் தன்மை யாக்கில்
அன்பர்க்கே யாவதரிக்கும் ஆயன் நிற்க
வருமறைகள் தமிழ் செய்தான் தாளே கொண்டு
துன்பற்ற மதுரகவி தோன்றக் காட்டும்
தொல் வழியே நல் வழிகள் துணிவார்கட்கே–2-

———————————————

என்னுயிர் தந்து அளித்தவரைச் சரணம் புக்கு
யான் அடைவே யவர் குருக்கள் நிரை வணங்கிப்
பின்னருளால் பெரும் பூதூர் வந்த வள்ளல்
பெரிய நம்பி யாளவந்தார் மணக்கால் நம்பி
நன்னெறியை யவர்க்கு உரைத்த வுய்யக் கொண்டார்
நாத முனி சடகோபன் சேனை நாதன்
இன்னமுதத் திருமகள் என்று இவரை முன்னிட்டு
எம்பெருமான் திருவடிகள் அடைகின்றேனே –3-

———————————————-

ஆரண நூல் வழிச் செவ்வை அழித்திடும் ஹைதுகர்க்கு ஓர்
வாரணமாய் அவர் வாதக் கதலிகள் மாய்த்த பிரான்
ஏர் அணி கீர்த்தி இராமானுச முனி இன்னுரை சேர்
சீர் அணி சிந்தையினோம் சிந்தியோம் இனித் தீ வினையே –4-

ஹைதுகர்கள் -வேத பிரமாணம் கொள்ளாமல் ஹேதுவையே -காரணத்தையே கேட்பவர்கள் –

—————————————————————

நீள வந்து இன்று விதிவகையால் நினைவு ஒன்றிய நாம்
மீள வந்து இன்னும் வினை உடம்பு ஒன்றி விழுந்து உழலாது
ஆளவந்தார் என வென்று அருள் தந்து விளங்கிய சீர்
ஆளவந்தார் அடியோம் படியோம் இனி யல் வழக்கே –5–

—————————————————–

காளம் வலம் புரி யன்ன நற்காதல் அடியவர்க்குத்
தாளம் வழங்கித் தமிழ் மறை யின்னிசைதந்த வள்ளன்
மூளும் தவ நெறி மூட்டிய நாத முனி கழலே
நாளும் தொழுது எழுவோம் நமக்கு யார் நிகர் நானிலத்தே –6-

——————————————————————-

ஆளும் அடைக்கலம் என்று எமை யம்புயத்தாள் கணவன்
தாளிணை சேர்ந்து எமக்கும் அவை தந்த தகவுடையார்
மூளும் இருள்கள் விள்ள முயன்று ஓதிய மூன்றின் உள்ளம்
நாளும் உகக்க விங்கே நமக்கோர் விதி வாய்க்கின்றதே –7–

மூன்றின் உள்ளம்-ரகஸ்ய த்ரய தாத்பர்யம் –

———————————————————————

திருவுடன் வந்த செழுமணி போல் திருமால் இதயம்
மருவு இடம் என்ன மலர் அடி சூடும் வகை பெறும் நாம்
கருவுடன் வந்த கடு வினை யாற்றில் விழுந்து ஒழுகாது
அருவுடன் ஐந்து அறிவார் அருள் செய்ய அமைந்தனரே –8–

அருவுடன் ஐந்து அறிவார்–ஸூஷ்ம அர்த்தங்களுடன் அர்த்த பஞ்சகத்தை அறிந்த நம் ஆச்சார்யர்கள் –

——————————————————————————-

அமையா விவை எனும் ஆசையினால் அரு மூன்று உலகில்
சுமையான கல்விகள் சூழ வந்தாலும் தொகை இவை என்று
இமையா இமையவர் எத்திய எட்டு இரண்டு எண்ணிய நம்
சமய ஆசிரியர் சதிர்க்கும் தனி நிலை தந்தனரே –9–

18 வித்யா ஸ்தானங்கள் ஆகிய கல்விகள் கற்றாலும் அவை வீண் சுமையே -ரகஸ்ய த்ரயங்களே உஜ்ஜீவிக்க
சாரமான சாதனம் -என்பதை தாமும் அனுசந்தித்து நாமும் அந்த சாரத்தை ஏற்குமாறு செய்து அருளினார் –

———————————————————————————————

நிலை தந்த தாரகனாய் நியமிக்கும் இறைவனுமாய்
இலது ஓன்று எனா வகை எல்லாம் தனது எனும் எந்தையுமாய்த்
துலை ஓன்று இல்லை என நின்ற துழாய் முடியான் உடம்பாய்
விலையின்றி நாம் அடியோம் எனும் வேதியர் மெய்பப் பொருளே –10-

துலை ஓன்று இல்லை என-ஒப்பார் இலையா மா மாயன்
விலையின்றி-தனக்கு ஒரு காரணமின்றி
சரீராத்மா பாவம் என்னும் சம்பந்தமே பிரதான பிரதிதந்த்ரம் –
நம் விசிஷ்டாத்வைத சித்தாந்ததுக்கே முக்கியமான விஷயம் –

————————————————

பொருள் ஓன்று என நின்ற பூமகள் நாதன் அவனடி சேர்ந்து
அருள் ஒன்றும் அன்பன் அவன் கொள் உபாயம் அமைந்த பயன்
மருள் ஒன்றிய வினை வல் விலங்கு என்று இவை ஐந்து அறிவார்
இருள் ஓன்று இலா வகை எம் மனம் தேற வியம்பினரே –11–

——————————————————-

தேற வியம்பினர் சித்தும் அசித்தும் இறையும் என
வேறுபடும் வியன் தத்துவம் மூன்றும் வினை யுடம்பில்
கூறுபடும் கொடு மோகமும் தாம் இறையம் குறிப்பும்
மாற நினைந்து அருளால் மறை நூல் தந்த ஆதியரே –12–

மறை நூல் தந்த ஆதியரே-வேத சாஸ்த்ரத்தை உபதேசித்த நம் முன்னோர் -ஆச்சார்யர்கள்
வினை யுடம்பில் கூறுபடும்-கர்மத்தினால் ஏற்பட்ட இச் சரீரத்தில் பங்கிட்டுக் கொண்டு வளர்கின்ற
கொடு மோகமும் -சரீராத்மா பாவம் ஆகிய கொடிய பிரமமும்
தாம் இறையம் குறிப்பும் -ஸ்வ தந்திர பிரமமும்
மாற நினைந்து -நமக்கு ஒழிய வேண்டும் என்று
சித்தும் அசித்தும் இறையும் என வேறுபடும் வியன் தத்துவம் மூன்றும் அருளால் -தேற வியம்பினர்

——————————————————–

வாதியர் மன்னும் தருக்கச் செருக்கின் மறை குலையச்
சாது சனங்கள் அடங்க நடுங்கத் தனித் தனியே
யாதி எனா வகை யாரண தேசிகர் சாற்றினர் நம்
போது அமரும் திரு மாதுடன் நின்ற புராணனையே–13–

——————————————————–

நின்ற புராணன் அடியினை ஏந்து நெடும் பயனும்
பொன்றுதலே நிலை என்றிடப் பொங்கும் பவக் கடலும்
நன்று இது தீயது இது என்று நவீன்ற்றவர் நல்லருளால்
வென்று புலன்களை வீடினை வேண்டும் பெரும் பயனே –14–

———————————————————————-

வேண்டும் பெரும் பயன் வீடு என்று அறிந்து விதி வகையால்
நீண்டும் குறுகியும் நிற்கும் நிலைகளுக்கு ஏற்கும் அன்பர்
மூண்டு ஒன்றில் மூல வினை மாற்றுதலில் முகுந்தன் அடி
பூண்டு அன்றி மற்றோர் புகல் ஓன்று இல்லை என நின்றனரே –15-

நீண்டும் குறுகியும் நிற்கும் நிலைகளுக்கு -வெகு காலம் அனுஷ்டிக்க வேண்டிய பக்தி –
ஷண காலம் அனுஷ்டிக்க வேண்டிய பிரபத்தி உபாயங்களுக்கு
மூண்டு ஒன்றில் -இரண்டு உபாயங்களில் ஒன்றில் முயன்று
பக்தி யோக நிஷ்டனுக்கும் பக்தி ஆரம்ப விரோதிகளை போக்க பிரபத்தியே உபாயம் என்றவாறு –

————————————————————————–

நின்ற நிலைக்கு உற நிற்கும் கர்மமும் நேர் மதியால்
நன்று என நாடிய ஞானமும் நல்கும் உட்கண் உடையார்
ஒன்றிய பத்தியும் ஒன்றுமிலா விரைவார்க்கு அருளால்
அன்று பயன் தருமாறும் அறிந்தவர் அந்தணரே –16-

———————————————————————————

அந்தணர் அன்னியர் எல்லையில் நின்ற அனைத்து உலகும்
நொந்தவரே முதலாக நுடங்கி அனந்யரராய்
வந்து அடையும் வகை வன் தகவு ஏந்தி வருந்திய நம்
அந்தமில் யாதியை யன்பர் அறிந்து அறிவித்தனரே –17-

——————————————————————————–

அறிவித்தனர் அன்பர் ஐயம் பறையும் உபாயம் இல்லாத்
துறவித் துனியில் துணையாம் பரனை வரிக்கும் வகை
யுறவு இத்தனை இன்றி ஒத்தார் என நின்ற யும்பரை நாம்
பிறவித் துயர் செகுப்பீர் என்று இரக்கும் பிழை யறவே –18-

யுறவு இத்தனை இன்றி ஒத்தார் என நின்ற யும்பரை-தேவதாந்தரங்களை
ஐயம் பறையும் -நம்மால் அனுஷ்டிக்க முடியுமா என்ற சந்தேகத்தை வெளியிடக் கூடியதான
உபாயம் இல்லாத் -பக்தி யோகம் முதலிய உபாயாந்தரங்களை அனுஷ்டிக்க முடியாமை யாகிய
துறவித் துனியில் -வறுமையால் உண்டான துர்த்தசையில்
துணையாம் பரனை வரிக்கும் வகை -சகாயமாக நிற்கும் சர்வேஸ்வரனை சரணம் அடையும் பிரகாரத்தை
அன்பர் அறிவித்தனர் -அன்புள்ள ஆச்சார்யர்கள் உபதேசித்து அருளினார்கள் –

————————————————————————–

அறவே பரம் என்று அடைக்கலம் வைத்தனர் அன்று நம்மைப்
பெறவே கருதிப் பெரும் தகவுற்ற பிரான் அடிக்கீழ்
உறவு ஏய் இவனுயிர் காக்கின்ற ஓர் உயிர் உண்மையை நீ
மறவேல் என நம் மறை முடி சூடிய மன்னவரே –19–

மன்னவர் பிரான் அடிக்கீழ் அடைக்கலம் வைத்தனர் என்று அந்வயம் –

———————————————————————

மன்னவர் விண்ணவர் வானோர் இறை ஒன்றும் வான் கருத்தோர்
அன்னவர் வேள்வி யனைத்தும் முடித்தனர் அன்புடையார்க்கு
என்ன வரம் தர வென்ற நம் அத்திகிரித் திருமால்
முன்னம் வருந்தி யடைக்கலம் கொண்ட நம் முக்கியரே –20–

அன்புடையார்க்கு என்ன வரம் தர வென்ற நம் அத்திகிரித் திருமால் –
தம்மிடம் பக்தி உடையவர்க்கு அவர்களைச் சேர்ந்தவர்களுக்கும்
மோஷம் அருளி மேலும் என்ன வரம் கொடுப்பது என்ற திரு உள்ளம் கொண்ட பேர் அருளாளனால்
முன்னம் வருந்தி யடைக்கலம் கொண்ட நம் முக்கியரே –முன்பே முயன்று ரஷிக்கப்பட வேண்டிய வஸ்துவாக
ஏற்றுக் கொள்ளப் பட்ட நமக்கு முக்கியரான பிரபன்னர்கள்
மன்னவர்
விண்ணவர்
வானோர் இறை ஒன்றும் வான் கருத்தோர் -பரம பதத்தில் கருத்தை செலுத்துபவர்
அன்னவர்-பரம ஹம்சர்
வேள்வி யனைத்தும் முடித்தனர்

——————————————————————–

முக்கிய மந்திரம் காட்டிய மூன்றில் நிலையுடையார்
தக்கவை யன்றித் தகாதவை ஒன்றும் தமக்கு இசையார்
இக்கருமங்கள் எமக்கு உள வென்னும் இலக்கணத்தான்
மிக்க வுணர்த்தியர் மேதினி மேவிய விண்ணவரே–21–

முக்கிய மந்திரம் காட்டிய மூன்றில் நிலையுடையார் -திருமந்தரம் வெளியிடும்
ஸ்வரூபம் உபாயம் புருஷார்த்தம் -மூன்றிலும் நிஷ்டை யுடையவர்கள்
தக்கவை யன்றித் தகாதவை ஒன்றும் தமக்கு இசையார் -உசிதமான நல்ல கர்மங்களைத் தவிர தகாதவற்றை இசையார்
இக்கருமங்கள் -ஸ்வ நிஷ்டையின் அடையாளம் ஆகிய இச் செய்கைகள்
எமக்கு உள வென்னும் இலக்கணத்தான் மிக்க வுணர்த்தியர் -சிறந்த நிச்சய ஜ்ஞானத்தை உடைய அந்த அதிகாரிகள்
மேதினி மேவிய விண்ணவரே–பூமியிலே அவதரித்த நித்ய ஸூரிகளே யாவார் –

———————————————————————————–

விண்ணவர் வேண்டி விலக்கின்றி மேவும் அடிமை யெல்லாம்
மண்ணுலகத்தின் மகிழ்ந்து அடைகின்றனர் வண் துவரைக்
கண்ணன் அடைக்கலம் கொள்ளக் கடன்கள் கழற்றிய நம்
பண் அமரும் தமிழ் வேதம் அறிந்த பகவர்களே–22-

———————————————————————————————-

வேதம் அறிந்த பகவர் வியக்க விளங்கிய சீர்
நாதன் வகுத்த வகை பெறும் நாம் அவன் நல் அடியார்க்கு
ஆதரம் மிக்க வடிமை இசைந்து அழியா மறை நூல்
நீதி நிறுத்த நிலை குலையா வகை நின்றனமே –23–

———————————————————————

நின்றனம் அன்புடை வானோர் நிலையில் நிலம் அளந்தான்
நன்று இது தீயது இது என்று நடத்திய நான்மறையால்
இன்று நமக்கு இரவு ஆதலின் இம்மதியின் நிலவே
யன்றி யடிக்கடி ஆர் இருள் தீர்க்க அடி உளதே –24–

——————————————————————-

உளதான வல்வினைக்கு உள்ளம் வெருவி யுலகளந்த
வளர் தாமரையிணை வன் சரணாக வரித்தவர் தாம்
களை தான் என எழும் கன்மம் துறப்பர் துறந்திடிலும்
இளைதாம் நிலை செக வெங்கள் பிரான் அருள் தேன் எழும் –25-

——————————————————————–

தேனார் கமலத் திரு மகள் நாதன் திகழ்ந்து உறையும்
வான் நாடு உகந்தவர் வையத்து இருப்பிடம் வன் தருமக்
கான் ஆர் இமயமும் கங்கையும் காவிரியும் கடலும்
நானா நகரமும் நாகமும் கூடிய நன்னிலமே –26-

————————————————————————–

நன்னிலமாம் அது நல் பகலாம் அது நல் நிமித்தம்
என்னலுமாம் அது யாதானுமாம் அங்கு அடியவர்க்கு
மின்னிலை மேனி விடும் பயணத்து விலக்கிலது ஓர்
நன்னிலயாம் நடு நாடி வழிக்கு நடை பெறவே –27–

நன்னிலயாம் -பரம பதத்துக்கு கொண்டு சேர்ப்பதால் நல்ல ஸ்வ பாவத்தை உடையதான
ஓர் -தனியாகச் செல்லுகிற
நடு நாடி வழிக்கு -நடுவில் உள்ள ப்ரஹ்ம நாடியாகிய வழியில்
நடை பெறவே -சஞ்சாரம் பெற –

——————————————————————————-

நடை பெற அங்கி பகல் ஒளி ஒளி நாள் உத்தராயணம் ஆண்டு
இடை வரு காற்று இரவி இரவின் பத்தி மின் வருணன்
குடையுடை வானவர் கோன் பிரசாபதி என்று இவரால்
இடையிடை போகங்கள் எய்தி எழில் பதம் ஏறுவரே –28–

——————————————————————–

ஏறி எழில் பதம் எல்லா வுயிர்க்கும் இதம் உகக்கும்
நாறு துழாய் முடி நாதனை நண்ணி யடிமை இனம்
கூறு கவர்ந்த குருக்கள் குழாங்களை குரை கழல் கீழ்
மாறுதல் இன்றி மகிழ்ந்து எழும் போகத்து மன்னுவமே –29-

——————————————————————-

மன்னும் அனைத்து உறவாய் மருள் மாற்று அருள் ஆழியுமாய்த்
தன் நினைவால் அனைத்தும் தரித்து ஓங்கும் தனி இறையாய்
இன்னமுதத்து அமுதால் இரங்கும் திரு நாரணனே
மன்னிய வன் சரண் மற்றோர் பற்று இன்றி வரிப்பவர்க்கே –30-

———————————————————————-

வரிக்கின்றனன் பரன் யாவரை என்று மறையதனில்
விரிக்கின்றதும் குறி ஒன்றால் வினையரை யாதலின் நாம்
உரைக்கின்ற நன்னெறி ஒரும் படிகளில் ஓர்ந்து உலகம்
தரிக்கின்ற தாரகனார் தகவால் தரிக்கின்றனமே –31-

—————————————————————————–

தகவால் தரிக்கின்ற தன்னடியார்களைத் தன் திறத்தில்
மிகவாதரம் செயும் மெய்யருள் வித்தகன் மெய்யுரையின்
அகவாய் அறிந்தவர் ஆரண நீதி நெறி குலைதல்
உகவார் என வெங்கள் தேசிகர் உண்மை யுரைத்தனரே –32-

—————————————————————

உண்மை உரைக்கும் மறைகளில் உத்தமனார் ஓங்கிய உத்தமனார்
வண்மை அளப்பரிதாதலின் வந்து கழல் பணிவார்
தண்மை கிடக்கத் தரம் அளவென்ற வியாப்பில தாம்
உண்மை உரைத்தனர் ஓரம் தவிர உயர்ந்தனரே -33-

—————————————————–

உயர்ந்தனன் காவலன் அல்லார்க்கு உரிமை துறந்து உயிராய்
மயர்ந்தமை தீர்ந்து மற்றோர் வழியின்றி அடைக்கலமாய்ப்
பயந்தவன் நாரணன் பாதங்கள் சேர்ந்து பழ வடியார்
நயந்த குற்றேவல் எல்லாம் நாடு நன் மன்வோதினமே -34-

———————————————–

ஓதும் இரண்டை இசைந்து அருளால் உதவும் திருமால்
பாதம் இரண்டும் சரண் எனப் பற்றி நம் பங்கயத்தாள்
நாதனை நண்ணி நலம் திகழ் நாட்டில் அடிமை எல்லாம்
கோதில் உணர்த்தியுடன் கொள்ளுமாறு குறித்தினமே -35-

———————————————-

குறிப்புடன் மேவும் தருமங்கள் இன்றி அக் கோவலனார்
வெறித் துளவக் கழல் மெய்யரண் என்று விரைந்து அடைந்து
பிரித்த வினைத்திரள் பின் தொடரா வகை அப்பெரியோர்
மறிப்புடை மன்னருள் வாசகத்தால் மருள் அற்றனமே –36-

——————————————–

மருள் அற்ற தேசிகர் வான் உகப்பால் இந்த வையம் எல்லாம்
இருள் அற்று இறையவன் இணையடி பூண்டு உய எண்ணுதலால்
தெருள் அற்ற செந்தொழில் செல்வம் பெருகிச் சிறந்தவர்பால்
அருள் உற்ற சிந்தையினால் அழியா விளக்கு ஏற்றினரே–37-

—————————————————

ஏற்றி மனத்து எழில் ஞான விளக்கை இருள் அனைத்தும்
மாற்றினவர்க்கு ஒரு கைம்மாறு மாயனும் கண கில்லான்
போற்றி உகப்பதும் புந்தியில் கொள்வதும் பொங்கு புகழ்
சாற்றி வளர்ப்பதும் சற்று அல்லவோ முன்னம் பெற்றதற்கே–38-

———————————————-

முன் பெற்ற ஞானமும் மோகம் துறக்கலும் மூன்று உரையில்
தன் பற்ற தன்மையும் தாழ்ந்தவர்க்கு ஈயும் தனித் தகவும்
மன் பற்றி நின்ற வகை உரைக்கின்ற மறையவர் பால்
சின்பற்றி என் பயன் சீர் அறிவோர்க்கு இவை செப்பினமே –39-

————————————–

செப்பச் செவிக்கு அமுது என்னத் திகழும் செழும் குணத்துத்
தப்பு அற்றவருக்குத் தாமே உகந்து தரும் தகவால்
ஒப்பற்ற நான் மறை உள்ளக் கருத்தில் உறைத்து உரைத்த
முப்பத்து இரண்டு இவை முத்தமிழ் சேர்ந்த மொழித் திருவே –40-

திருவுடன் வந்த செழு மணி போல் திருமால் இதயம்
மருவிடம் என்ன மலரடி சூடும் வகை பெறு நாம்
கருவுடன் வந்த கடு வினை யாற்றில் விழுந்து ஒழுகாது
அருவுடன் ஐந்து அறிவார் அருள் செய்ய அமைந்தனரே-

————————————————

புருடன் மணி வரமாகப் பொன்றா மூலப் பிரகிருதி மறுவாக மான் தண்டாகத்
தெருள் மருள் வாள் உறையாக ஆங்கு அரங்கள் சார்ங்கம் சங்காக மனம் திகிரியாக
இருடிகங்கள் ஈரைந்தும் சரங்களாக இரு பூத மாலை வன மாலையாகக்
கருடன் உருவாம் மறையின் பொருளாம் கண்ணன் கரிகிரி மேல் நின்று அனைத்தும் காக்கின்றானே–41-

————————————————

ஆராத அருள் அமுதம் பொதிந்த கோயில் –
அம்புயத்தோன் அயோத்தி மன்னற்கு அளித்த கோயில்
தோலாத தனி வீரன் தொழுத கோயில்
துணையான விபீடணற்குத் துணையாம் கோயில்
சேராத பயன் எல்லாம் சேர்க்கும் கோயில்
செழு மறையின் முதல் எழுத்துச் சேர்ந்த கோயில்
தீராத வினை யனைத்தும் தீர்க்கும் கோயில்
திருவரங்கம் எனத் திகழும் கோயில் தானே –42-

————————————————-

கண்ணன் அடியிணை எமக்கு காட்டும் வெற்பு
கடு வினையர் இரு வினையும் கடியும் வெற்பு
திண்ணம் இது வீடு எனத் திகழும் வெற்பு
தெளிந்த பெரும் தீர்த்தங்கள் செறிந்த வெற்பு
புண்ணியத்தின் புகல் இது எனப் புகழும் வெற்பு
பொன் உலகில் போகம் எல்லாம் புணர்க்கும் வெற்பு
விண்ணவரும் மண்ணவரும் விரும்பும் வெற்பு
வேங்கட வெற்பு என விளங்கும் வேத வெற்பே — 43-

———————————————–

உத்தம வமர்த்தலம் அமைத்ததோர் எழில் தனு உய்த்த கணையால்
அத்திர வரக்கன் முடி பத்தும் ஒரு கொத்து என உதிர்த்த திறலோன்
மத்துறு மிகுத்த தயிர் மொய்த்த வெண்ணெய் வைத்தது உண்ணும் அத்தனிடமாம்
அத்திகிரி பத்தர் வினை தொத்தற அறுக்கும் அணி அத்திகிரியே –44-

————————————————–

எட்டுமா மூர்த்தி எண் கணன் எண் திக்கு எட்டு இறை எண் பிரகிருதி
எட்டு மா வரைகள் ஈன்ற எண் குணத்தோன் எட்டு எணும் எண் குண மதியோர்க்கு
எட்டு மா மலர் எண் சித்தி எண் பக்தி எட்டு யோகாங்கம் எண் செல்வம்
எட்டு மா குணம் எட்டு எட்டு எணும் கலை எட்டு இரதம் மேல் அதுவும் எட்டினவே -45-

—————————————————–

ஒண் டொடியாள் திரு மகளும் தானுமாகி ஒரு நினைவால் ஈன்ற உயிர் எல்லாம் உய்ய
வண் துவரை நகர் வாழ வசுதேவர்க்காய் மன்னர்க்கு தேர்ப் பாகனாகி நின்ற
தண் துளவ மலர் மார்பன் தானே சொன்ன தனித் தருமம் தான் எமக்காய்த் தன்னை என்றும்
கண்டு களித்தடி சூட விலக்காய் நின்ற கண் புதையல் விளையாட்டைக் கழிக்கின்றானே –46-

———————————————–

மூண்டாலும் அரியதலில் முயல வேண்டா முன்னம் அதில் ஆசை தன்னை விடுகை திண்மை
வேண்டாது சரண நெறி வேறோர் கூட்டு வேண்டில் அயன் அத்திரம் போல் வெள்கி நிற்கும்
நீண்டாகு நிறை மதியோர் நெறியில் கூடா நின் தனிமை துணையாக என் தன பாதம்
பூண்டால் உன் பிழைகள் எல்லாம் பொறுப்பன் என்ற புண்ணியனார் புகழ் அனைத்தும் புகழுவோமே –47-

—————————————————-

சாதனமும் நற் பயனும் நானே யாவன் சாதகனும் என் வசமாய் என்னைப் பற்றும்
சாதனமும் சரண நெறி யன்று உமக்குச் சாதனங்கள் இந்நிலைக்கோர் இடையில் நில்லா
வேதனை சேர் வேறு அங்கம் இதனில் வேண்டா வேறு எல்லாம் நிற்கு நிலை நானே நிற்பன்
தூதனுமாம் நாதனுமாம் என்னைப் பற்றிச் சோகம் தீர் என உரைத்தான் சூழ்கின்றானே–48-

—————————————————

தன் நினைவில் விலக்கின்றித் தன்னை நண்ணார் நினைவு அனைத்தும் தான் விளைத்தும் விலக்கு நாதன்
என் நினைவை இப்பவத்தில் இன்று மாற்றி இணையடிக் கீழ் அடைக்கலம் என்று எம்மை வைத்து
முன் நினைவால் யாம் முயன்ற வினையால் வந்த முனிவயர்ந்து முத்தி தர முன்னே தோன்றி
நன் நினைவால் நாம் இசையும் காலம் இன்றோ நாளையோ என்று நகை செய்கின்றானே–49-

————————————————–

பாட்டுக்கு உரிய பழையவர் மூவரைபி பண்டு ஒரு கால்
மாட்டுக்கு அருள் தரு மாயன் மலிந்து வருத்துதலால்
நாட்டுக்கு இருள் செக நான் மறை அந்தி நடை விளங்க
வீட்டுக் கிடை கழிக்கே வெளிக் காட்டும் அம் மெய் விளக்கே –50-

—————————————

உறு சகடம் உடைய வொரு கால் உற்று உணர்ந்தன –
உடன் மருதம் ஓடிய ஒரு போதில் தவழ்ந்தன
உறி தடவும் அளவில் உரலோடு உற்று நின்றன
உறு நெறியோர் தருமன் விடு தூதுக்கு உகந்தன
மற நெறியர் முறிய பிருந்தாவனத்து வந்தன
மலர் மகள் கை வருட மலர் போதில் சிவந்தன
மறு பிறவி அறு முனிவர் மாலுக்கு இசைந்தன
மனு முறையில் வருவதோர் விமானத்து உறைந்தன
அறமுடைய விசயன் அமர் தேரில் திகழ்ந்தன
அடல் உரக படமடிய ஆடிக் கடிந்தன
அறு சமயம் அறிவரிய தானத்து அமர்ந்தன
அணி குருகை நகர் முனிவர் நாவுக்கு அமைந்தன
வெறியுடைய துளவ மலர் வீறுக்கு அணிந்தன
விழு கரியோர் குமரன் என மேவிச் சிறந்தன
விறல் அசுரர் படையடைய வீயத் துரந்தன
விடல் அரிய பெரிய பெருமாள் மெய்ப் பதங்களே–51-

——————————————————

மறை உரைக்கும் பொருள் எல்லாம் மெய் என்று ஓர்வார் மன்னிய கூர் மதி உடையார் வண் குணத்தில்
குறை உரைக்க நினைவில்லார் குருக்கள் தம் பால் கோதற்ற மனம் பெற்றார் கொள்வார் நன்மை
சிறை வளர்க்கும் சில மாந்தர் சங்கேதத்தால் சிதையாத திண் மதியோர் தெரிந்து ஓரார்
பொறை நிலத்தின் மிகும் புனிதர் காட்டும் எங்கள் பொன்றாத நன்னெறியில் புகுத்துவாரே –52-

———————————————-

இது வழியின் அமுது என்றவர் இன் புலன் வேறிடுவார்
இது வழியாம் அலவென்று அறிவார் எங்கள் தேசிகரே
இது வழி எய்துக என்று உகப்பால் எம் பிழை பொறுப்பார்
இது வழியா மறையோர் அருளால் யாம் இசைந்தனமே -53-

—————————————

எட்டும் இரண்டும் அறியாத எம்மை இவை அறிவித்து
எட்ட ஒண்ணாத இடம் தரும் எங்கள் அம்மாதவனார்
முட்ட வினைத்திரள் மாள முயன்றிடும் அஞ்சல் என்றார்
கட்டெழில் வாசகத்தால் கலங்கா நிலை பெற்றனமே –54-

———————————-

வானுள் அமர்ந்தவர்க்கும் வருந்த வரு நிலைகள்
தான் உளனாய உகக்கும் தரம் இங்கு நமக்கு உள்ளதே
கூனுள நெஞ்சுகளால் குற்றம் எண்ணி இகழ்ந்திடினும்
தேனுள பாத மலர்த் திருமாலுக்குத் தித்திக்குமே–55-

————————————–

வெள்ளைப் பரிமுகர் தேசிகராய் விரகால் அடியோம்
உள்ளத்து எழுதியது ஓலையில் இட்டனம் யாம் இதற்கு என்
கொள்ளத் துணியினும் கோது என்று இகழினும் கூர் மதியீர்
எள்ளத்தனை யுகவாது இகழாது எம் எழில் மதியே –56–

—————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேதாந்த தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ வேதார்த்த ஸங்க்ரஹ சாரம் —

February 24, 2017

யோ நித்ய அச்யுத பதாம் புஜ யுக்ம ருக்ம வ்யாஹாமோஹதஸ் ததிராணி த்ருணாய மேனே
அஸ்மத் குரோர் பகவதோஸ்ய தயைக சிந்தோ ராமானுஜஸ்ய சரனௌ சரணம் ப்ரபத்யே

அசேஷ சித் அசித் வஸ்து சேஷினே –சேஷ ஸாயினே-நிர்மல ஆனந்த கல்யாணைதயே -விஷ்ணவே நம –

பரம் ப்ரம்ஹைவாஞம் ப்ரம பரிகதம் ஸம் ஸ ரதி தத்
பரோபாத்ய லீடம் விவசம் அசுபஸ் யாஸ் பதமிதி
சுருதி ந்யாயா பேதம் ஜகதி வித்தம் மோஹனமிதம்
தமோ யே நா பாஸ்தம் சஹி விஜயதே யாமுன முனி —

ஸ்ரீ பாஷ்யம் அறிய முதல் படி இது

ஸ்ருதிக்கு விருத்தமான அந்தகாரம்-சங்கர பாஸ்கர யாதவ பிரகாச மத கண்டனம் –
யாதொரு ஸ்ரீ யமுனாச்சார்யரால் தூரத்தில் தள்ளப்பட்டதோ-
அவர் ஜயசாலியாக உள்ளார் -என்றவாறு

ஸ்ரீ போதாயனர் வ்ருத்தி கிரந்தம் –
ஸ்ரீ பாதாராயணர் வேதாந்த சூத்ரம் –
இருவரும் ஒரே காலத்தவர்
ஸ்ரீ டங்கர் -வாக்யகாரர் -வ்ருத்தி கிரந்தத்துக்கு வியாக்யானம் -இவரையே ஸ்ரீ ப்ரஹ்மாநநதி
ஸ்ரீ த்ராமிடாச்சார்யார் வியாக்யானமும் உண்டு
ஸ்ரீவத்சாங்கர் ஸ்ரீ குஹ தேவர் ஸ்ரீ கபாததி ஸ்ரீ பாருசி -போன்றோர் அருளிச் செய்த வியாக்கியானங்கள் லுப்தம்
நம் சித்தாந்தம் ப்ராசீனம் -ஸ்ரீ பாஞ்சராத்ரம் அடிப்படையாக கொண்டது
ஸ்ரீ உபநிஷத் வாக்கியங்கள் இவற்றையே போதிப்பிக்கின்றன என்றும்
ஸமஸ்த கல்யாண குண கணங்களுடன் கூடி நிகில ஹேயபிரத்ய நீகனாயும் – ஹேய குணங்களால் தீண்டப்படாதவனாகவும்
இருக்கும் ஸ்ரீ மன் நாராயணனே பரம காரண வஸ்து-
சேதன அசேதன ஸமஸ்த வஸ்துக்களிலும் அத்யந்த விலக்ஷணன்-இவற்றை சரீரமாகக் கொண்டவன் –
அவனே பிராப்யமும் பிராபகமும் -கிருபையே முக்கிய காரணம் -பக்தி பிரபத்திகள் வ்யாஜங்கள்
திவ்ய மங்கள விக்ரஹமும் திவ்ய ஸ்வரூபம் போலவே பரம ப்ராப்யம் -ஆனந்தாவாஹம்

—————-—————–

ஸ்வாமி ஸ்ரீ ஸ்ரீநிவாசன் முன் நிலையில் அருளியது
பிற மத கண்டனம்/சுவ மத விஸ்தாரம் ஆகிய இரண்டு பகுதிகள்
ஸ்ரீ ஸுதர்சன சூரி வியாக்யானம்-தாத்பர்ய தீபிகா -ஸ்ருத பிரதீபிகா

மங்கள ச்லோஹம்
அசேஷ சித் அசித் வஸ்து சேஷினே சேஷ சாயினே
நிர்மல ஆனந்த கல்யாண நிலயே விஷ்ணவே நமக —

தத்வ ஹித புருஷார்த்தம் மூன்றும் சொல்லும்
உபய விபூதிநாதன் – திவ்ய மங்கள விக்ரகன் – சரீர ஆத்மா பாவம் மற்ற இரண்டு தத்வங்கள்-
உபய லிங்க விசிஷ்டம்-நிர்மல ஆனந்த கல்யாண நிலயே-
நிர்மல-அகில ஹேய பிரத்யநீக -அனைத்து உள்ளும் வெளியிலும் இருந்து நிரவகித்தும் செலுத்தியும் தோஷம் தட்டாதவன்
அனந்த கல்யாண நிதயே-அனந்த கல்யாண குணா கரத்வம்-பரத்வம் சௌலப்யம் போன்ற அனைத்தும்
விஷ்ணவே -ஸ்ரிய பதி -எங்கும் எதிலும் எப் பொழுதும் வியாபித்து

நமக -புருஷார்த்தம் -அனுபவ ஜனித பிரிதி கார்ய கைங்கர்யம்

மங்கள ஸ்லோஹம்

பரம் ப்ரஹ்மை வாஞ்யம் பிரம பரிகதம் சம்சாரத்தி தத்
பரோபாத் யாலீதம் விவசம் அசுபச்யாச்பதமிதி
சுருதி ந்யாயா பேதம் ஜகதி வித்தம் மோகனமிதம்
தமோ யேனாபச்தம் ஸா ஹி விஜயதே யாமுன முனி

முதல் வாக்கியம் அத்வைத கண்டனம் பிரமம் ஞானம் ஒன்றே -சங்கர மத கண்டனம்
அடுத்து பாஸ்கர மத கண்டனம்-பிரமம் ஜீவாத்மா போல் உபாதி சம்பந்தம்-கர்ம ஞான இந்த்ரியங்கள் சம்பந்தம்
அடுத்து யாதவ பிரகாச மத கண்டனம் –
இவை வேதத்துக்கு புறம்பு சுருதி நியாய பேதம் சின் மாத்திர நிர் குண நிர் விசேஷ –மாயை-பொய்-சங்கரர்

பிரமமே இந்த்ரிய வலையில்- மோஷம் அடைய அதுவும் உபாயமாக எதை பற்றும்-பாஸ்கர மத கண்டனம்
ப்ரஹ்மத்துக்கே தோஷம் உண்டு சித் அசித் போல் யாதவ பிரகாசர்
பரம வைதிக மதம் விசிஷ்ட அத்வைதமே -ஆள வந்தார் அக்ஞானம் போக்கி இந்த ஞானம் தெளிவு படுத்தினார்
அவர் அடி பற்றி மேல் அருளுகிறார்
சந்தோக்ய உபநிஷத் -அருணாவின் பிள்ளை உத்கலா தன பிள்ளை – ஸ்வேத கேது –

யத சோமய ஏகென மிருத் பிண்டேன சர்வம் மிருத்மயம் விக்ஞாதம் இஸ்யாத்–
சத் ஏவ சோமயா யத்மக்ரே அசீத் ஏக மேய அத்வதீயம் –சத்தாகவே இருந்தது ஒன்றாகவே இருந்தது இரண்டாதவது இல்லை-

தத் இக்ஷத பகுச்யாம் பிரயாயேதி-சங்கல்பித்தது பலவாக ஆக–சமஷ்டி சிருஷ்டி
சோயம் தேவாத அக்ஷ்தக ஹந்தாகம் இம திச்ர தேவதா அநேன ஜீவேன ஆத்மானா அனுபிரவச்ய நாம ரூப
இவ் வியாகரவானி- –தேவதை படைத்து அந்தர் ஆத்மா ஆகி -வியஷ்டி சிருஷ்டி-
ஐ தாத்மியம் இதம் சர்வம் தத் சத்யம் ச ஆத்மா தத் த்வம் அஸி ஸ்வேதகேது–
தத் -பிரமம் நியமித்து உள் புகுந்து சிருஷ்டித்து காத்து அழித்து -அந்தர் ஆத்மா அனைத்துக்கும் -அனைவருக்கும் –

விஷயம்-சம்சயம்-பூர்வ பஷம்-சித்தாந்தம்-பிரயோஜனம் -ஐந்தும் அருளுகிறார்
அத்வைதி-நிர் விசேஷம்-
வேதம்-சத்யம் ஞானம் ஆனந்தம்-
நிஷ்கலம்,நிஷ்க்ரியம்,நிர்குணம், நிரஞ்சனம்
ஒன்றை அறிந்தால் சர்வமும் அறியலாம் சர்வ அபாவமும் இல்லை-
அப்ருதக் சித்த விசேஷணம்–பிரிக்க முடியாத –பிரகாரம்

“அயமர்ஹ்த : ச்வேதகேதும் பிரத்யாஹா – “ச்தப்தோசி ; உத தம் ஆதேசம்
அப்ராக்ஷ்ய : இதி ; – பரிபூரணம் இவ லக்ஷ்யசே | தன ஆசார்யன் பிரதி
தமப்யாதேசம் ப்ருஸ்தவானாசி ? இதி | அதிசயதே அநேன இதி ஆதேச : | ஆதேச :
பிரசாசனம் ; “எதச்ய வா அக்ஷரஷ்ய பிரசாசனே கார்கி சூர்யச்சந்த்ரமசொவ்
வித்ருதௌ திஷ்டத : இத்யாதிபீரய்கார்த்யாத் | ததா ச மாணவம் வச்ச:
“பிரசாசிதாரம் சர்வேஷாம் ” இத்தியாதி | அத்ராபி ஏகமேவ இதி
ஜகதுபாதானதாம் ப்ர்திபாத்ய அத்விதீய பதென
அதிஷ்டாற்றந்தரநிவாரநாத் அசைவ அதிஷ்டற்றுத்வமபி பிரதிபாட்யனே |
அத : “தம பிரசாசிடாரம் ஜகடுபாடானபுதமபி ப்ருஷ்டவானாசி ? யேன
ஸ்ருதென மதேன விக்ஞாநென அச்ருடம் அமுதம் அவிஞ்யாதம் ஸ்ருதம் மதம்
விக்ன்யாதம் பவதி ” இத்யுக்தம் இசாத் | “நிகில ஜகடுடைய விபவ லயாதி
காரண பூதம் சர்வஞ்யத்வ – சதயகாமத்வ – சத்யசங்கல்பத்வாடைபரிமித்த
உதார குண சாகரம் கிம் பிரம த்வயா ஸ்ருதம் ?” இதி ஹார்தோ பஅவ : | “

அதிசய அனேன இதி ஆதேச–அனைத்தயும் நியமிக்கும் –அதனால் ஆதேச என்று பிரமத்தை சொல்லும்
பிரசாசேன–பிரசாசித –ஆதேச எல்லாம் இதையே குறிக்கும்-
ஏக மேவ அத்வதீயம் -அனைத்துக்கும் எல்லா வித காரணமும் இவனே புருஷோத்தமன் –
ஒப்பார் மிக்கார் இலையாய மா மாயன் -காரியத்தில் உள்ள தோஷம் இல்லா காரணம்-
லயத்தில் அனைத்தும் சூஷ்ம ரூபத்தில் ஒட்டி கொண்டு இருந்ததால் –
அந்தர்யாமி அந்தர் ஆத்மா -சரீரம் பிரகாரம் -அப்ருதுக் சித்த விசேஷணம்–

தர்மம்-தர்மி-விசேஷணம் -விசேஷ்யம்- பிரகாரம்-பிரகாரி-ரூபம்-ஸ்வரூபம்-சரீரம்-சரீரி ஆத்மா -அம்சம்-அம்சி-
ஆதாரம்-நியமகம்-சேஷி–
சத் ஏவம் சமய இதம் அக்ரே ஆஸீத் ஏக மேவ அத்வதீயம்–பிரமம் ஒன்றே நிமித்த உபாதான காரணம்
சத்-சூஷ்ம சித் அசித் விசிச்ஷ்ட பிரமம்
இதம்-ஸ்தூல சித் அசித் விசிஷ்ட பிரமம்
சத்யம் -சித் விட வாசி உள்ளவன் பிரமம்
ஞானம் -பக்தர் விட வாசி பிரமம்
அனந்தம் -முக்த நித்யர் விட வாசி பிரமம்
ஹந்த ஹமிமா திச்ரோ தேவதா அனேன ஜீவன் ஆத்மா அனுபிரவிச்ய நாம ரூப வியாக்ரவானி
அத்வாரகம்-சமஷ்டி சிருஷ்டி

சத்வாரகம்-வியஷ்டி சிருஷ்டி

எததுக்தம் பவதி – ஜீவாத்மா து பிரமன : சரீரதயா பிரகாரத்வாத்
பிரம்மாதமாக : “யஸ்ய ஆத்மா சரீரம் ” இதி ஸ்ருதியந்தராத் ஏவம் பஹூத் சாயா
ஜீவச்ய சரீரதயா பிரகார ப்ஹூதானி தேவ மனுஷ்யாதி சம்ச்தானானி
வஸ்தூனி இதி ப்ரஹ்மாத்மகாணி தானி சர்வாணி அஹ்த : தேவோ மனுஷ்ய : யக்ஷோ
ராக்ஹச : பசு : மிருக : பக்ஷஈ வ்ருக்ஷோ லதா காஷ்டம் சிலா தருணம் கத :
பத : இத்யாதயச்சர்வே பிரகிருதி பிரத்யயயோகேன அபிதாயகதையா
பிரசித்தா : சபதா: லோகே தத்தத்ட்ரவ்யவாச்யதையா ப்ரடீயமானதத்தட்
சம்ச்தானவஸ்து முகேன தடபிமானி ஜீவ-தடந்தர்யாமி பரமாத்மா
பர்யந்த சம்கஅதசயைவ வாசகா : இதி

“விசேஷணம் பிரகாரம் இரண்டு வகை -ஆபரணம் -சரீரம் -இங்கு ஆபரணம் விசேஷணம் மட்டுமே –
ஆனால் சரீரம் -ஆத்மா -சரீரம் அப்படி இல்லை-
யஸ்ய சேதனச்ய யத் த்ரவ்யம் சர்வாத்மனா ச்வார்த்த நியந்தும் தாரியித்தும் ச சகயம் தத் செஷத்யக ஸ்வரூபம்
ச தத் தஸ்ய சரீரம்—பிருதுக் சித்தி அநர்த்த ஆதார -ஆதேய பாவ நியந்த்று நியாமய பாவ சேஷி சேஷ பாவாஞ்ச

ஐ ததாமியம் எனபது –

யஸ்ய ஆத்மா யஸ்ய தத் ஐ ததாமாகம் ஐ ததாத்மாகம் ஏவ இதாத்மியம் -என்பதன் சுருக்கு
அவன் சங்கல்பித்து சிருஷ்டி –அவன் ஆதாரம் நியமகன் சேஷி –அதனால் ஆத்மா இதுசத்தியம் தத் சத்யம்
சரீர ஆத்மா பாவம் விளக்கி பின்பு
தத் தவம் அஸி ச்வேதகேது எனபது ஸ்வரூப ஐக்கியம் இல்லை-
இதம் சர்வம்-சித் அசித் அனைத்தும் –
சாமாதி கரண்யம்-பின்ன பிவ்ருத்தி நிமித்தானாம் சப்தானாம் ஏகச்மின் ஆர்த்தே விருதிதி சாமாதி கரண்யம்
நீல கடம் போல் –ஒன்றையே வர்ணத்துக்கும் உருவத்துக்கும் குறிக்கும்

அத : சர்வச்ய சித் அசித் வஸ்துனோ பிராமசரிரத்வாத் , சர்வசரிரம் சர்வப்ரகரம்
சர்வைர்சப்தை : ப்ரகுமைவபிதியாத இதி , “தத் ” “தவம் ” இதி சாமாதி கரண் ஏன
ஜிவசரிரதையா ஜிவப்ரகரம் ப்ரகுமைவபிஹிதம் | ஏவமபிஹிதேசதி அயமர்தோ
ஜ்ஞ்யயதே “தவம் ” இதி யா : போர்வம் தேஹச்யதிஷ்டற்றுடாய பிரதித் : ச :
பரமத்மசரிரதய பரமத்மப்ரகரபுத : பரமத்மபர்யந்த : ப்ருதக்
ஸ்திதி பிரவ்ருத்தி அனர்ஹா : அத : “தவம் ” இதி சப்தா: தத்ப்ரகரவிசிஷ்டம்
தத் அந்தர்யாமி நமேவ சச்தே – இதி | அநேன ஜிவேனத்மனனுப்ரவிச்ய நாம ரூப்யே
வ்யகரவனி ” இதி பிராமத்மகதயைவ ஜிவச்ய சரிரின : ச்வனமபாக்த்வத் |
தத் -பிரமத்தையே குறிக்கும்

ஜகத் காரணன் /சர்வ கல்யாண குணகரன் /நிரவத்யம் /நிர்விகாரம் —
துவம் -பரமம் -அந்தர்யாமி அந்தர் ஆத்மா -ஆக உள்ள சித் அசித் –
நிர்குணம் -தோஷம் இல்லாதவனை குறிக்கும்-அகில ஹேய பிரத்யநீகன்
சத்யம்-நிருபாதிகம் – திரி வித -அசித் –பக்த சித் விட வேறு பட்டவன்

ஞானம் -நித்ய அசந்குசித ஞானம் –முகத்தனை விட வேறு பட்டவன்
அநந்தம் -தேச கால வஸ்து -திரி வித பறிசேதணன் -நித்யரை விட வேறு பட்டவன்
நிர்விசேஷ சின் மாத்ர பிரமம் -விளக்கம் சேராது
கண்ட முண்ட பூர்ண கொம்பு கொண்ட பசு போல் மூன்றா –ஒன்றே இவ்வாறாக வெவ்வேறு காலத்தில் இருக்கலாமே

நீல கோமளாங்க யுவ விசாலாட்ஷா பாஸ்கரன்-சாமானாதி கரணம்
“ஸ்வருப நிருபன தர்ம சப்தா ஹி தர்ம முகேன ச்வருபமபி
பிரதிபடயந்தி கவதிசப்தவத் | ததாஹா சுற்றகற: ‘தத் -குண
சரத்வத் தத்வ்யபதேச : பிரக்ஜ்ன்யவத் ‘”

“ஜ்ஞ்யநென தர்மேன ச்வருபமபி நிருபிதம் | ந து ஜ்ஞான மாத்ரம்
ப்ர்ஹமேதி | கதம் இதமாவகம்யாத இதி சேத் ‘யஸ் சர்வஞ்யஸ் சர்வவித் ‘
இதி ஜ்ஞ்யற்றுத்வ ஸ்ருதே : ‘பரஸ்ய சக்திர் -விவிதைவ ஸ்ருயதே, ச்வபாவிகி
ஜ்ஞான -பல -கரிய ச ‘, ‘விஞ்யதமரே கேன விஜநியத் ‘
இத்யாதி -சுருதி -சதா -சமதிகதமிதம் |”

“அத : சத்ய ஜ்ஞ்யநதி பதானி ஸ்வார்த்த பூத ஜ்ஞ்யநதி விசிஸ்தமேவ
பிரம பிரதிபதயந்தி “

நேதி நேதி—திரு வித பரிச்சேதம் இல்லாதவன்

நேக நானா அஸ்தி –அவன் உள்ளே இல்லாமல் ஒன்றும் இல்லை

——————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ சுருதி பிரகாசிகாச்சார்யார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ ஜெகதாச்சார்யர் ஸ்வாமி ஸ்ரீ ராமானுஜர் வைபவம் —

February 22, 2017

ஸ்ரீ பவ்ஜங்கம் வபுர பஹாய சேஷ போகி யத் ரூபம் திரிபுவன வந்திதம் ஜகாம-
வேதாந்த சித்தாந்த சமர்த்த நாய பாஹ்யாந்தர ப்ராந்த மதாப நுத்த்யை சேஷாம் சக கேசவ யஜ்வ தேவ்யாம் தேஜோ நிதி ஸீத் கச்சி திஹா விரா ஸீத் —
அனந்த பிரதம ரூபம் லஷ்மணஸ்து தத் பரம் பல பத்ரஸ் த்ருதீயஸ்து கலவ் ( ராமாநுஜஸ் ஸ்ம் ருத )–கச்சித் பவிஷ்யதி -பாட பேதம் ஆர்ஷ வசனம்
காஷாய ஸோபி காம நீய சிகா வேசம்-தண்ட த்ரய உஜ்ஜ்வல கரம் -விமலோப வீதம் –உதயத்தி நேச நிப முல்லச தூர்த்வ புண்ட்ரம்
ரூபம் தவாஸ்தி யதிராஜ த்ருசோர் மமாக்ரே –
உபவீதிந மூர்த்தவ புண்ட்ர வந்தம் த்ரி ஜகத் புண்யபலம் த்ரி தண்ட ஹஸ்தம் சரணாகத தார்த்தவாஹ மீடே சிகயா சேகரிணம் பதிம் யதீ நாம் –

ஸ்ரீ மத்யாம் பூத புர்யாம் அதி தரணி தலம் சேஷ ஆவிர் பபூவ-ஸ்ரீ அனந்தாழ்வான் -ஸ்ரீ வேங்கடேச இதிஹாச மாலா
சேஷாம் சக கேசவ யஜவ தேவ்யாம் -ஸ்ரீ வடுக நம்பி -ஸ்ரீ யதிராஜ வைபவ கிரந்தம்
பவ்தத்வாந்த சஹஸ்ராம்சு -சேஷ ரூப பிரதர்ஸக -ஸ்ரீ வடுக நம்பி -ஸ்ரீ ராமானுஜ அஷ்டோத்தர சதா நாம ஸ்தோத்ரம் -23-
பவ் ஜங்கம் வபுர பஹாய சேஷ போகீ யத் ரூபம் திரிபுவன வந்திதம் ஜகாம-ஸ்ரீ கருட வாஹந பண்டிதர் -ஸ்ரீ திவ்ய ஸூரி சரிதம் –
சைத்ரார்த்ரா சம்பவம் விஷ்ணோ தர்சன ஸ்தாபன உத் ஸூ கம் துண்டீர மண்டலே சேஷ மூர்த்திம் ராமானுஜம் பஜே –ஸ்ரீ ப்ரஹ்ம தந்த்ர ஸ்வாமி பணித்த திவ்ய ஸூரி ஸ்தோத்ரம்
அனந்த பிரமம் ரூபம் லஷ்மணஸ்து தத பரம் பல பத்ரஸ் த்ருதீ யஸ்து கலவ் ராமானுஜ ஸ்ம்ருத–நல்லார் பரவும் இராமானுசன்

ஸ்ரீ சடரிபு ரேக ஏவ கமலாபதி திவ்ய கவி மதுர கவிர் யதா ச சடஜின் முனி முக்ய கவி
யதி குல புங்க வஸ்ய புவி ரங்க ஸூதாக விராட் வரவர யோகிநோ வரதராஜ கவிச் ச ததா-

திருமா மகள் கொழுநனை கவி பாடியவர்களில் எப்படி ஸ்ரீ நம்மாழ்வார் சிறப்புப் பெற்றவரோ
அந்த ஸ்ரீ நம்மாழ்வாரைக் கவி பாடித் துதித்தவர்களுள் ஸ்ரீ மதுரகவிகள் எப்படி சிறப்புப் பெற்றவரோ –
ஸ்ரீ எம்பெருமானாரைக் கவி பாடித் துதித்தவர்களுள் திருவரங்கத்தமுதனார் எப்படி சிறப்புப் பெற்றவரோ
அப்படியே ஸ்ரீ மணவாள மா முனிகளின் திருவடிகளை பணிந்து உய்ந்தவரான ஸ்ரீ எறும்பி அப்பாவின் பெருமையை சொல்ல வந்த ஸ்லோகம் –

ஸ்ரீ ரெங்காம் ருதக விராஹ ரங்கிப்ருத்ய -தத் சிஷ்யோ யதிபதி வைபவ அநு பந்தம்
அந்தாதி த்ரமிட கிரா மஹா பிரபந்தம் காதா நாம் அம்ருத முசாம் யுதம் சதேக-என்று-

ஸ்ரீ கருட வாகன பண்டிதர் பணித்த திவ்ய ஸூ ரி சரிதம் -18-சர்க்கம் –51-
திருவரங்கத் தமுதனார் உடைய அமுத பெருக்கை புகழ்ந்து அருளி உள்ளார் –

பங்குனி திங்கள் -ஹஸ்த நக்ஷத்ரம் -மூங்கில் குடி -அஷ்ட பிரபந்தம் அருளிச் செய்த பிள்ளை பெருமாள் ஐயங்கார்
-ஸ்ரீ பராசர பட்டர் திருவடி சிஷ்யர் – இவர் திருப் பேரனார் -திரு மகனார் -என்றும் சொல்வர் –
அமுதனார் நம்மையே நம்பி இருந்தவர் உம்முடைய திரு உள்ளம் -என்று சொப்பனத்தில் புறப்பாட்டுக்கு காத்து இருக்க
-மாற்றுவதில் அழகிய மணவாளனுக்கு திரு உள்ளம் இல்லை –
பெருமாள் கோயிலுக்கு போக கூரத் தாழ்வானுக்கு ஸ்டொள்ள -திருத்தி பணி கொள்ள அருளிச் செய்து இருப்பான் ஸ்வாமி திரு உள்ளம் விண்ணப்பிக்க
திருத்தும் பணியை நீயன்றே செய்யும் என்று சாதித்தாராம் – பெரிய பிராட்டியாரும் அமுதனார் தம் பரிகரம் என்று சொப்பனத்தில் சாதித்து அருளினார் –
புராண படலம் புரோகிதம் சாவி மூன்றையும் வாங்கி -அரையர் இடம் -இயற்பா பிச்சையாக கேட்டு வாங்கி அமுதனாருக்கு கொடுக்க –
அடைய வளைந்தான் அருகில் தென்னந்தோப்பில் இருந்து அருளிச் செய்த பிரபந்தம் –
சப்த ஆவரணம் -புறப்பாடு -வீதிகள் கூடும் இடம் தான் வாத்ய கோஷம் -அழகாக திருச் செவி சாத்தி இன்றும் நம் பெருமாள் கேட்டு அருளுகிறார் –
பரவஸ்து பட்டர் பிரான் ஜீயர் மூன்றாவது பரம்பரை ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் –
இயலும் பொருளும் இசையத் தொடுத்து ஈன் கவிகள் அன்பால் மையல் கொண்டு வாழ்த்தும் இராமானுசனை-என்று அருளிச் செய்வதால்
இது போலே பலவும் இருந்தாலும் இது ஒன்றையே ஸ்ரீ ராமானுஜர் அங்கீ கரித்து அருளினார் -என்று தேறும் –

உறு பெரும் செல்வமும் –19-/ கூட்டும் விதி என்று கூடுங்கொலோ–29-/கூறும் சமயங்கள் ஆறும் குலைய -46 -/
நாட்டிய நீசச் சமயங்கள் மாண்டன -54–/ பண்டரு மாறன் பசும் தமிழ் -64-/ கலி மிக்க செந்நெல் கழனிக் குறையல் -88–விசேஷணமான பாடல்கள் –
கோயில் திருமலை பெருமாள் கோயில் -திவ்ய தேச ஆதராதி அதிசயம் —31–/35—/42—/ 47–/ 49–/76–/81–/91–/106—பாசுரங்கள் பேசும் —–
ஸ்வாமி யுடைய சகலகலா வல்லபத்வம் -சொல்லார் தமிழ் ஒரு மூன்றும் சுருதிகள் நான்கும் எல்லை இல்லா அற நெறி யாவும் தெரிந்தவன் -44-
ஞானம் கனிந்த நலம் கொண்டு -66-இன் சுவை மிக்க பாசுரம் –ஸ்வாமி நிர் ஹேதுக்க கிருபையினால் மோக்ஷம் அளிப்பதை குறிக்கும் –
ஞானம் கனிந்த நலம் கொண்டு நாள் தொறும் நைய வேண்டும் -விலை அபரிமிதம் -பேரம் பேச முடியாது -கடனாக அளிக்க மாட்டான் –
மூன்று வித கஷ்டங்களும் இல்லையே உடையவர் இடம்
-எம்பருமானும் -தத்தே ரங்கீ நிஜ மபி பதம் தேசிகா தேச காங்ஷி-ந்யாஸ திலகம் -ஆச்சார்யர் நியமனத்தை எதிர்பார்த்தே அருளுகிறான் –
தேவு மற்று அறியாத தமது பக்தி பெரும் காதலை –செய்த் தலைச் சங்கம் செழு முத்த மீனும் -75-/ நின்ற வண் கீர்த்தியும் நீள் புனலும் -76- /
திருவடித் தாமரைகளை தந்து அருள பிரார்த்திக்கிறார் -நம்மாழ்வார் பாரித்த ஒழிவில் கால கைங்கர்யம் -ஆழ்வார் உகந்தது என்று
தேவரீர் உகந்து இருக்கலாம் –அடியேன் அத்தை -பிரார்த்திக்க வில்லை
மாக வைகுந்தம் காண என் மனம் ஏகம் எண்ணும் இராப் பகல் இன்றியே -இத்தையும் தேவரீர் ஆழ்வார் உகந்து என்று
உகக்கலாம் -அடியேன் இத்தையும் பிரார்த்திக்க வில்லை
பொங்கிய பாற் கடல் பள்ளி கொள்வானை புணர்வதோர் ஆசை -என்று ஆண்டாள் விரும்பியதை தேவரீர் உகக்கலாம்
-அடியேன் இத்தையும் பிரார்த்திக்க வில்லை
எம்பெருமானார் திருவடிகளே சரணம் -உய்ய ஒரே வழி உடையவர் திருவடி -என்பதால் உம் திருவடிகளையே சேம வைப்பாக தந்து அருள வேணும் -என்கிறார் –

முக்தியோ சிலரது சொத்து என இருக்கையில் இது தமிழ் நாடு தன் யரும் தவப் பயனாய் இராமானுஜனை ஈன்றதன்றோ
–பாரதிதாசனும் சொல்லும் படி அன்றோ நம் ஜெகதாச்சார்யர் ஸ்ரீ ராமானுஜர் வைபவம்

ஸ்ரீ யதிராஜம் -ஸ்ரீ -ராமானுஜம் –ஸ்ரீ -லஷ்மண முனிம் -ஸ்ரீ பாஷ்யகாரம் -சதா ஸ்மராமி-ஸ்ரீ யதிராஜம்-
ஸ்ரீ பாஷ்ய காரம்- ஸ்ரீ லஷ்மண முனிம் -ஸ்ரீ யதிராஜம் -ஸ்ரீ ராமானுஜம்
காஷாய ஸோபி யதிராஜம் -யதிராஜம்
யதிராஜம் கம நீய சிகானி வேஷம் ராமானுஜம் ராமானுஜம்
தண்ட த்ரய உஜ்வலா கரம் லஷ்மண முனிம் லஷ்மண முனிம்
விமலோபவீதம் ஸ்ரீ பாஷ்யகாரம் ஸ்ரீ பாஷ்ய காரம்
உதயத்தி நேச நிப பந்தம் யதி சேகரம்
உல்லச ஊர்த்வ புண்டரம் ராமானுஜம்
ரூபம் தவாம்ஸ்து யதிராஜம் லஷ்மண முனிம்
திருஷோர் மாமாத்ரி யதிராஜம் ராமானுஜம்
உபவீதிநம் ஊர்த்வ புண்டரம் வந்தம்
த்ரிஜக புண்ய பலம் த்ரிதண்ட ஹஸ்தம் சரணாகத சார்த்வமாஹம் ஈடே -சதா ஸ்மராமி-ஸ்ரீ யதிராஜம்-

தஸ்மை ராமாநுஜார்யாய நம பரம யோகிநே–யஸ்மை ஸ்ருதி ஸூ த்ராணாம் அந்தர் ஜுரம் அஸீ சமத் —

————————————–

நித்ய விபூதி மங்களா சாசனம் –

தென் திசை நோக்கி திருவரங்கத்தம்மான் மங்களா சாசனம்

எச்சரிக்கை ஸ்வாமி எச்சரிக்கை –
ஆராமம் சூழ்ந்த அரங்க நகர் வாழ அன்போடு தென்திசை நோக்கி அருள வேணும்
உபய விபூதி நாயகா எச்சரிக்கை –
பராக் ஸ்வாமீ பராக் –

துளங்கு நீண்முடி அரசர் தம் குரிசில் தொண்டை மன்னவன் திண் திறல் ஒருவற்கு
உளம் கொள் அன்பினோடு இன்னருள் சுரந்து அங்கோடு நாழிகை ஏழுடன் இருப்ப
வளம் கொள் மந்திரம் மற்று அவர்க்கு அருளிச் செய்தவாறு அடியேன் அறிந்து உலகம்
அளந்த பொன்னடியே அடைந்து உய்ந்தேன் அணி பொழில் திருவரங்கத்து அம்மானே –

பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பல் கோடி நூறாயிரம்
மல்லாந்த திண் தோள் மணி வண்ணா உன் சேவடி செவ்வி திருக் காப்பு
அடியோமோடும் நின்னோடும் பிரிவின்றி யாயிரம் பல்லாண்டு
வடிவாய் நின் வள மார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு
படை போர் புக்கு முழங்கும் அப் பாஞ்ச சன்னியமும் பல்லாண்டு –

ஜய விஜயீ பவ –

—-

அருளப்பாடு திருவரங்கச் செல்வனார் செங்கோல் செலுத்தும் விபூதி த்வய நித்ய அதிகாரிகள் -நாயந்தே நாயந்தே-
ஸ்ரீ வாஸூ தேவ உபநிஷத்

ஸ்ரீ ஹரி ஓம்
ச வா ஏஷ மஹா நஜ ஆத்மா அந் ணாதோ விந்ததே வ ஸூ
யோ ப்ராஹ்மணம் விததாதி பூர்வம்
யோ வை வேதாம்ச்ச ப்ராஹினோதி தசமி
தகும்ஹ தேவ மாத்ம புத்தி பிரகாசம்
முமுஷூர்வை சரணமஹம் ப்ரபத்யே
இத்யதா ஹோ வாச
விஷ்ணு சயனம் ப்ரபத்யே சத் குரூன் ப்ரபத்யே
சாத்விகான் பிரபத்யே ரூசோ வாசம் ப்ரபத்யே
மநோ யஜூ ப்ரபத்யே சாம புராணம் ப்ரபத்யே
சஷூ ஸ்ரோத்ரம் ப்ரபத்யே வாகோஜஸ் ஸஹ ஓஜோ மாம் ப்ரபத்யே
பிராணாயாமம் ப்ரபத்யே பிரணவம் ப்ரபத்யே
சத்யம் ப்ரபத்யே ச்ராத்தம் ப்ரபத்யே
பரமாத்மனே ப்ரபத்யே வா ஸூ தேவம் ப்ரபத்யே
பாகவதாய ப்ரபத்யே பக்தா நாம் ப்ரபத்யே –
ஓம் ப்ரபத்யே ஸ்ரீம் ப்ரபத்யே ஸ் ரியம் ப்ரபத்யே
யத் வேதா திவ்ய காயத்ரீ யாஞ்சேதி
ததேஷாப் யுக்தா ததேவ பூதம் தாதுபாஸி தவ்யம் சத்யந்தத் த்வயம்
ஸ்ரீ மன் நாராயண சரணவ் சரணம் பிரபத்யே
இதம் பூர்ண மத பூர்ணம் பூரணாத் பூர்ண முதச்யதே
பூர்ணஸ்ய பூர்ணமாதாய பூர்ண மேவா வசிஷ்யதே
சர்வம் பூர்ணகும் ஸஹோம்
ஸ்ரீ மாதே நாராயணாய நம
கம் ப்ரஹ்மா கம் வாயு கம் புராணம்
கமிதீஹஸ்மாஹா கௌர வவ்யா ணீ புத்ர
வேதோயம் ப்ராஹ்மணா வித்து
வேதே நாநேந வேதி தவ்யம் –
வாழி எதிராசன் வாழி எதிராசன் வாழி எதிராசன் என வாழ்த்துவர் வாழி என
வாழ்த்துவர் வாழி என வாழ்த்துவர் தாளிணையில் தாளிணையில் தாழ்த்துவார் விண்ணோர் தலை

சாருவாக மதம் நீறு செய்து சமணச் செடிக் கனல் கொளுத்தியே -சாக்கியக் கடலை வற்றுவித்து மிகு சாங்கியக் கிரி முறித்திட
மாறு செய்திடு கணாத வாதியர்கள் வாய் தகர்த்தார் மிகுத்து மேல் வந்த பாசுபதார் சிந்தியோடும் வகை வாத்து செய்த வெதிராசனார்
கூறு மா குரு மதத்தோடு ஓங்கிய குமாரிலன் மதமவற்றின் மேல் கொடிய தர்க்க சாரம் விட்ட பின் குறுகி மாயவாதியரை வென்றிட
மீறி வாதில் வரு பாற்கரன் மத விலக்கடிக் கொடி எறிந்து போய் மிக்க யாதவ மாதத்தை மாய்த்த பெரு வீரர் நாளும் மிக வாழியே –

ஜய விஜயீ பவ –

————————–

லீலா விபூதி மங்களா சாசனம்
வட திசை நோக்கி திருவேங்கடமுடையான் மங்களா சாசனம்
வட திசை மதுரை சாளக்கிராமம் வைகுந்தம் வேங்கடங்கள் வாழ வட திசை நோக்கி அருள வேணும்

உபய விபூதி நாயகா எச்சரிக்கை -பராக் ஸ்வாமீ பராக்

அகலகில்லேன் இறையும் என்று அலர் மேல் மங்கை யுறை மார்பா
நிகரில் புகழாய் உலகம் மூன்று உடையாய் என்னை ஆள்வானே
நிகரில் அமரர் முனிக் கணங்கள் விரும்பும் திருவேங்கடத்தானே
புகல் ஓன்று இல்லா அடியேன் உன்னடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே –

பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பல் கோடி நூறாயிரம்
மல்லாந்த திண் தோள் மணி வண்ணா உன் சேவடி செவ்வி திருக் காப்பு
அடியோமோடும் நின்னோடும் பிரிவின்றி யாயிரம் பல்லாண்டு
வடிவாய் நின் வள மார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு
படை போர் புக்கு முழங்கும் அப் பாஞ்ச சன்னியமும் பல்லாண்டு –

ஜய விஜயீ பவ –

——————————-

அருளப்பாடு பராசர பாரஸர்யாதி ப்ரணீத நிகில சம்ஸ்க்ருத நிகம ரகஸ்யாதிகாரிகள்

நாயந்தே நாயந்தே –

———————-

த்வய உபநிஷத்

ஸஹ நாவவது ஸஹநவ் புநக்து ஸஹ வீர்யம் கரவா வஹை
தேஜஸ் விநாவதீத மஸ்து மாவித் விஸா வஹை ஓம் சாந்தி சாந்தி சாந்தி

அஷ்டா தச பஞ்ச விம்சத்ய ஷராணி
பஞ்சத சா ஷரம் பூர்வம் தசா ஷரம் பரம் நவா ஷரம் பிரதம பதே
த்வதீய த்ருதீய சதுர்த்தே த்ர்ய ஷராணி
பஞ்சா ஷரம் பஞ்சமம் த்வய ஷர ஷஷ்டா
ஏகா ஷரபத பிரதம ஏகாஷரோ த்வதீய சதுர்த்தாஷரஸ் த்ருதீய
சதுர்த்த பஞ்சம ஷஷ்ட சப்தம ஏதே த்ர்யஷராணி
அஷ்டமோக்ஷர சத்திரத்தை த்வயக்ஷரோ நவம
தசமே த்ர்யஷராணி எதன் மந்த்ராஸ் ச பிரபத்தி
பூர்வே நாராயண ப்ரோக்தா நாதி சித்தோ
மந்த்ர ரத்னா சதாசார்ய மூல
ஆச்சார்யோ வேத சம்பன்நோ விஷ்ணு பக்தோ விமத்சர
மந்த்ரஜ்ஜோ மந்த்ர பக்தஸ் ச சதா மந்த்ரார்த்த விஸ்ஸூசி
குரு பக்தி சமா யுக்த புராணஜ்ஜோ விசேஷத
ஏவம் லக்ஷண சம்பன்நோ குரு ரித்யபி தீயதே
யத் ஸக்ருத்ச் சாரணே சம்சார விமோசனம் பவதி
சப்த ஜென்ம க்ருதம் பாபம் தத் க்ஷ
சர்வ வேத பாராயண புண்யம் லபதே
ஸ்ரீ மன் நாராயணஸ்ய ப்ரியோ பவதி
ய ஏவம் வேத இத்யுபநிஷத்

ஸஹ நாவவது ஸஹநவ் புநக்து ஸஹ வீர்யம் கரவா வஹை
தேஜஸ் விநாவதீத மஸ்து மாவித் விஸா வஹை ஓம் சாந்தி சாந்தி சாந்தி –

——————————-

முதல் உத்சவம்
ஸ்ரீ விஷ்ணு புராணே பராசர –

யோ அநந்த பட்யதே சித்தை தேவ தேவர்ஷி பூஜித
யஸ் சஹஸ்ர சிரா வ்யக்த ஸ்வத் சிகாமல பூஷணா

கந்தர்வா பிரசரச சித்தா கிந்ந ரோரக சாரணா
நாந்தம் குணாநாம் கச்சந்தி தேநா நந்தோஸ் யமவ்யய

நாரதீய புராணே ஸ்ரீ யாதவ கிரி மஹாத்ம்யே-

அநந்த பிரதமம் ரூபம் த்ரேதாயும் லஷ்மணஸ் ததா
த்வாபர பல பத்ரஸ்து கலவ் கஸ்சித் பவிஷ்யதி

ஜய விஜயீ பவ –

——————————————————

இரண்டாம் உத்சவம்

ப்ரஹ்ம புராணே

குருகா மஹாத்ம்யே ப்ராஹ்மணம் பிரதி பகவான்

காலாந்தரே து மச் சக்த்யா பூயோ புஜக நாயக
நிர் நித்ர தீந்த்ரிணீ சத்வம் யேஷ்யத் யத்ர மயேரித

ஸ்ரீ வ்ருத்த பாத்மே குருகா மஹாத்ம்யே ஸூ த்ரவதீ பிரதி ஸ்ரீரீ

தத கலி யுகஸ்யாதவ் வைசாக்யாம் விஸ்வ பாவன
விஷ்ணு பக்தி ப்ரதிஷ்டார்த்தம் சேநேசோ அவதரிஷ்யதி
தத காலேந மஹதா விநஷ்டாம் புவி தத்க்ருதிம்
நாத நாமா முனிவரோ யோகஜ்ஜோ தமவாபஸ் யதி
தத காலே பஹுதிதே விநஷ்டாம் விஷ்ணு வர்த்திநீம்
த்ரி தண்ட மண்டிதோ தேவ முனி ப்ரவ்யக்தயிஷ்யதி
ஸ்ரீ மன் மஹா பூத புரே ஸ்ரீ மத் கேசவ யஜ்வன
காந்தி மத்யாம் ப்ரஸூதாய யதி ராஜாய மங்களம்

ஜய விஜயீ பவ –

————————

மூன்றாம் உத்சவம்

ஸ்காந்த புராணே வைஷ்ணவ ஸம்ஹிதாயாம் ஸ்கந்தாகஸ்த்ய சம்வாதே ஹாரீதம் பிரதி பகவான்

ராஜன் கலியுகே ப்ராப்தே தர்மே நஷ்டே ஸ்ருதீரிதே
மத் பக்த சர்வ தர்மஞ்ஞ தவ கோத்ர ஸமுத்பவ
சாரீரக மஹா பாஷ்ய கிரந்த கர்த்தா ஜிதேந்த்ரிய
வேதாந்த வித்தம கஸ்சின் மஸ்கரீ ப்ராஹ்மணோத்தம
அஸ்மின் மஹாபூத புரே பவிஷ்யதி ந சம்சய
தஸ்ய சம்பாவிந சிஷ்யா ஸூராணாமபி துர்கமம்
மாம் ப்ராப்ய ப்ராப்த நிர்வாணா பவிஷ்யந்தி கலவ் யுகே
ஸ்ரீ மன் மஹா பூத புரே ஸ்ரீ மத் கேசவ யஜ்வன
காந்தி மத்யாம் ப்ரஸூதாய யதி ராஜாய மங்களம்

ஜய விஜயீ பவ –

—————————————–

ஸ்ரீ கண்ணபிரானும் ஸ்ரீ ராமானுஜரும்

-1-திருவவதாரம் சிறைக் கூடம் -அமரரோடு உயர்வில் சென்று அறுவர் தம் பிறவி அஞ்சிறையே –திருவாய் -1–3–11-
இருள் நாள் பிறந்த அம்மான் அவன் -வேண்டித் தேவர் இரக்க-வீங்கிருள் வாய் வந்து பிறந்தான் –
-இருள் தரும் மா ஞாலத்தில் இருள் மலிந்த இடத்தே அன்றோ இருவரும் திருவதரித்தார்கள்
-2-அவன் வடமதுரையில் பிறந்து -திருவாய்ப்பாடியிலே வளர்ந்து -ஸ்ரீ துவாரகை நிர்மாணித்து முதுமையில் இருந்தது போலே
ஸ்ரீ பெரும் புதூரில் பிறந்து -ஸ்ரீ காஞ்சிபுரத்தில் வளர்ந்து ஸ்ரீ ரெங்கம் -தென்னரங்கம் கோயிவ் முற்றும் சிறக்க இருந்தார்
திரு மந்திரத்தில் பிறந்து த்வயத்தில் வளர்ந்து -அனுசந்தானமும் அனுஷ்டானமும் செல்வ வாழ்ச்சியாக கொண்டவர்கள் –
-3-மக்கள் அறுவரைக் கல்லிடை மோத இழந்தவள் தன் வயிற்றில் சிக்கன வந்து பிறந்து நின்றாய் –பெரியாழ்வார் -5–3–1-
அதே போல் ஸ்வாமி உடன் பிறந்தவர் பலர் இருந்தாலும் பிறந்ததும் இறந்ததும் தெரியும் -ஒழிய உலகுக்கு வேறு நன்மை இல்லையே
-4-வட மதுரையில் இருந்து திருவாய்ப்பாடிக்கு எழுந்து அருளும் பொழுது -வஸூ தேவோ வஹன் கிருஷ்ணம் ஜானு மாத்ரோ தகோ யயவ்-என்றபடி
பெரு வெள்ளமும் முழம் தாளாக வற்றினது போலே ஸ்வாமி சஞ்சரிக்கத் தொடங்கும் போதே
-பிறவி என்னும் கடலும் வற்றிப் பெரும் பதம் ஆகின்றதால் -போலே வற்றத் தொடங்கிற்றே –
-5-பெருமைகளை மறைத்து இடக்கை வலக்கை அறியாத ஆயர்கள் உடன் கலந்து போலே ஸ்வாமியும் மிக ஞான சிறு குழவியாய்
ஞான சக்தி பெருமைகளை எல்லாம் மறைத்துக் கொண்டு அறிவிலா மனிசரோடு கலந்தார்
தன்னை வதைக்க வழி பார்த்து இருந்த அஸூர ப்ரக்ருதிகளோடும் கலந்தால் போலவே ஸ்வாமியும் தம்மை மாய்க்க எண்ணிய யாதவ பிரகாசர்
போல்வார் இடத்திலும் காலம் கழித்தது உண்டே
-6-கம்ச ப்ரயுக்தா கில காபி மாயா -பூதனை -போலே பிரகிருதி விஷம் போலவே இருந்தும் போக்யதா புத்தி உண்டு பண்ணி
ஈடுபடுத்த வைத்தாலும் ஸ்வாமி யுடைய அளவற்ற பெருமையால் தானே முடிந்து போனதே –
-7-கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி -செய்து அருளினால் போலே ஸ்வாமியும் நரகம் சுவர்க்கம் போகும் வெளி செல்லுமதான கள்ளச் சகடம் ஒழித்து
அர்ச்சிராதி மார்க்கம் ஆகிய நல் வழியில் செல்லும் சாதனமே மேம் பட்டு இருந்ததே –
-8-த்வந்தம் -முறித்த -யாமளார்ஜுன மரங்களை முறித்தது போலே த்வந்தம் -இன்பு துன்பு -அஹங்கார மமகாரம் –காம க்ரோதம்
புண்ய பாபம் -ஸ்வாமி திருவடி சம்பந்தத்தால் இற்று ஒழிந்தன
-9-வையம் ஏழும் கண்டாள் பிள்ளை வாயுளே–வாயுள் வையகம் கண்டா மட நல்லார் -போலே ஸ்வாமி யும்
ஸ்ருதிகள் -ஸ்ம்ருதிகள் -இதிகாசங்கள் -புராணங்கள் – பாஞ்ச ராத்ரங்கள் -அருளிச் செயல்கள் -ஆச்சார்யர் ஸ்ரீ ஸூ க்திகள் -ஏழையும்
தம் திரு வாக்கிலே அன்பர்களுக்கு காட்டி அருளுவார் –
-10-காளியன்-குதர்க்க வாதிகள் / யமுனை -வேதம் /தூய பெரு நீர் யமுனைத் துறைவன் போலே பகவத் சம்பந்தம் மாறாத வேதம் –ஸ்வாமி -ஐந்து துர்வாதங்கள்
ஈஸ்வரனே இல்லை / உண்டு என்பாரும் அனுமானத்தால் என்பர் /சாஸ்திரங்களை கொண்டு நிர்வகித்தாலும் குணங்கள் விக்ரஹம் இல்லை என்பர்
/ஒரு ஈஸ்வரன் இல்லை பலர் என்பர் /பிரபஞ்சமே இல்லை சர்வம் ஸூன்யம்-என்பர் -ஆகிய ஐந்து வகை அபார்த்தங்களையும் போக்கி
காளிய நர்த்தனம் போலே நாவலிட்டு உழி தருகின்றோம் நமன் தமர் தலை கண் மீதே -என்று கூத்தாடப் பெறுதலும் உண்டே
-11-கேசி ஹந்தா போலே இந்திரியாணி ஹயா நா ஹூ -ஜிதேந்த்ரியராய்-காமாதி தோஷ ஹர மாத்ம பாதாச்ரிதா நாம் -என்றும்
மதன கத நைர் ந க்லிஸ்யந்தே யதீஸ்வர ஸம்ஸரையா -என்றும் சொல்லும் படி வாழ்ந்தவர் ஸ்வாமி –
-12-விளவின் காய் கன்றினால் வீழ்த்தவனே -கன்று கொண்டு விளங்கனி எறிந்து -போலே முள்ளைக் கொண்டு முள்ளை களைகின்றபடி
புற மதங்களை பரஸ்பர வ்யாஹதங்களாய் இருக்கும் படியை நன்கு நிரூபித்திக் காட்டி அவைகளைக் கொண்டே அவைகளை மறுத்து ஒழிப்பவர் –
-13-குன்று எடுத்து தேவதாந்த்ர பஜனம் தவிர்த்தால் போலே ஸ்வாமியும் -சாஷாத் நாராயணோ தேவ -க்ருத்வா மர்த்ய மயீம் தநும்
மக்நா நுத்தரதே லோகான் காருண்யாத் சாஸ்த்ர பாணிநா -என்றும் பீதாக வாடைப் பிரானார் பரம குருவாகி வந்து -என்றும்
-குற்றம் செய்தவர்கள் பக்கல் பொறையும் கிருபையும் சிரிப்பும் உகப்பும் உபகார ஸ்ம்ருதியும் நடப்பவர் ஆகையால் தீங்கு இழைப்பார்களையும் காத்து –
அவிவேக கநாந்த திங்முகே பஹுதா சந்தத துக்க வர்ஷிணி–பவ துர்த்திநே -ஸ்தோத்ர ரத்னம் -49-சம்சார பெரு மழையின் நின்றும் காத்து அருளினார் ஸ்வாமி
அவன் ஏழு நாள்கள் இவரோ ஏழு ஏழு பிறவிக்கும் –
-14-நப்பின்னை பிராட்டிக்காக ஏழு எருதுகளை வலி அடக்கினான் அவன் -எட்டு இழையாய் மூன்று சரடாய் இருபத்தொரு மங்கள ஸூ த்ரம் போலே இருக்கும்
திருமாங்கல்யத்தை சேதனர்களுக்கு கட்டி விவாஹம் நடத்த
காமம் -க்ரோதம் -லோபம் -மோஹம் -மதம் – மாத்சர்யம் -அசூயை -ஆகிய ஏழு விரோதிகளை தொலைத்து அருளினார் –
-15-இரண்டு மல்லர்கள் நிரசித்தால் போலே ஸ்வாமி -நீர் நுமது என்ற இவை வேர் முதல் மாய்த்து அருளினார்
16-மதக் களிறு ஐந்தினையும் சேரி திரியாமல் செந்நிறீஇ -இந்திரிய துஷ்டத்த தன்மை தொலைத்தார் அவன் குவலயா பீடம் நிரசித்தால் போலே
-17-மாளாக்காரர் திரு மாளிகைக்கு எழுந்து அருளி அவன் சாத்திய புஷ்ப்பம் சுவீகரித்து மகிழ்ந்தால் போலே -ஸ்வாமியும்
அஹிம்சா பிரமம் புஷ்ப்பம் -புஷ்பம் இந்திரிய -ஞானம் புஷ்ப்பம் தப புஷ்ப்பம் த்யானம் புஷ்ப்பம் ததைவ ச சத்யம்
அஷ்டவிதம் புஷ்ப்பம் விஷ்ணோ ப்ரீதி கரம் பவேத் -என்று சிஷ்யர் பக்கல் செழித்து வளரக் காணப் பெற்று களித்தார்-
-18-நூற்றுவரை முடித்து பஞ்ச பாண்டவர்களை வாழ்வித்தது போலே -தற்க சமணரும் சாக்கிய பேய்களும் தாழ் சடையோன் சொல் கற்ற சோம்பரும்
சூன்ய வாதாரும் நான்மறையும் நிற்க குறும்பு செய் நீசரும் மாண்டனர் என்னும் படியாக நாட்டிய நீசச் சமயங்களை மாள்வித்து
அர்த்த பஞ்சக அர்த்தங்களை நிலை நாட்டி அருளினார் -பஞ்சம உபாயமான ஆச்சார்ய அபிமானம் உத்தாரகம் என்பதை காட்டி அருளினார் –

சாமிதோதய சங்கராதி கர்வ ஸ்வ பலாத் உத்த்ருதயா தவ பிரகாச
அவரோபி தவான் ஸ்ருதேர பார்த்தான் நநு ராமா வரஜஸ் ச ஏஷ பூய
சாமிதோதய சங்கராதி கர்வ–சங்கராதி கர்வம் நிரசித்த ஒற்றுமை
ஸ்வ பலாத் உத்த்ருதயா தவ பிரகாச –கோபாலோ யாதவம் வம்சம் உத்தரிக்க -யாதவ பிரகாசர் திருந்தி வந்தார்
அவரோபி தவான் ஸ்ருதேர பார்த்தான்-அபார்த்தான் ஸ்ருதே-அ பார்த்தான் /அப அர்த்தான்/ ஸ்ருதி கீர்த்திக்கும் வேதத்துக்கும்

—————————-

ஸ்ரீ ரெங்கராஜ சரணம் புஜ ராஜ ஹம்சம் -ஸ்ரீ மத் பராங்குச பதாம் புஜ ப்ருங்க ராஜம் –
ஹம்சம் -அசாரம் அல்ப சாரஞ்ச சாரம் சாரதரம் த்யஜேத் பஜேத் சார தர்மம் சாஸ்த்ரே-பாஹ்ய குத்ருஷ்ட்டி மதங்களை நிரசித்து
பாஹ்ய அர்த்தங்களை தள்ளி ரகஸ்ய த்ரயார்த்தங்களிலே மூழ்கி இருந்தவர் என்றபடி
துயர் அறு சுடர் ஆதி -வ்யஸ நேஷூ மனுஷ்யானாம் பிருஷம் பவதி துக்கித–க்ருதக்ருத்யஸ் ததா ராம விஜ்வர பிரமுமோதக-
அன்னமாய் நூல் பயந்தவனை போலேயும்-அன்னமதாய் இருந்து அங்கு அற நூல் உரைத்தவனைப் போலேயும்
ஸ்வாமியும் சாஸ்த்ரார்த்தங்களை உபதேசித்து அருளினார்
அழுந்தார் பிறப்பாம் பொல்லா வருவினை மாய வான் சேற்று அள்ளல் பொய் நிலத்தே -கால் பொருந்தாமல் இருக்கப் பண்ணினவர்
அன்ன நடை அணங்கான பிராட்டி போலே எம்பெருமான் இடத்தில் மன்றாடி நம் போல்வாருக்கும் பேறு பெருவித்து அருளினார் –

வண்டு-மது விரதம் -உளம் கனிந்து இருக்கும் அடியவர்கள் தங்கள் உள்ளத்துள் ஊறிய தேன்-தேனை நன் பாலை கன்னலை அமுதை
-எனக்குத் தேனே பாலே கன்னலே அமுதே -பகவத் அனுபவத்தையே விரதமாக கொண்டவர் ஸ்வாமி –
வண்டினங்கள் காமரங்கள் இசை பாடும் –யாழினிசை வண்டினங்கள் ஆளம் வைக்கும் -வரி வண்டு தேன தேன என்று இசை பாடும் -போலே
ஸ்வாமியும் யாழினிசை வேதத்து இயல் -பண்ணார் பாடல் ஆயிரம் -கானத்தையே போதுபோக்காக கொண்டு – வளர்த்த இதத்தாய் இராமானுசன் –
பண்டருமாறன் பசும் தமிழ் ஆனந்தம் பாய் மதமாய் விண்டிட எங்கள் இராமானுச முனி வேழம்
வண்டுக்கு சஞ்சரிகம் என்றும் பெயர் -ஸ்வாமியும் -பதியே பரவித் தொழும் தொண்டர்களில் தலைவராய்
ஸ்ரீ ரெங்கம் கரி சைலம் அஞ்சன கிரிம் தார்ஷ்யாத்ரி சிம்ஹாசலவ் ஸ்ரீ கூர்மம் புருஷோத்தமஞ்ச ச பத்ரீ நாராயணம் நிமிஷம்
ஸ்ரீ மத் த்வாரவதீ பிரயாக மதுரா அயோத்யா கயா புஷ்கரம் சாளக்ராமகிரிம் நிஷேவ்யா ரமதே ராமானுஜோயம் முனி –
பின்னிட்ட சடையானும் பிரமனும் இந்திரனும் துன்னிட்டுப் புகல் அரிய-திருவாசல்களிலே -மன்னிய தென்னரங்கா புரி மா மலை மற்றும் உவந்திடும்
உடனாய் மன்னி வழுவிலா அடிமை செய்து வாழ்ந்தவர் –
வண்டு சோலைகளில் சுழன்று இருப்பது போலே ஸ்வாமியும் ஆராமம் சூழ்ந்த அரங்கம் -சிந்து பூ மகிழும் திரு வேங்கடம்
-விரையார் பொழில் வேங்கடம் -சோலைகள் உள்ள ஸ்தலங்களில் சுழலும் இட்டவர் –

——————————-

ஆழி மழை கண்ணா –திருக் கண்களிலே மழையை உடையவனே -என்றுமாம் –
ஆஹ்லாத சீத நேத்ராம்பு -வண் பொன்னிப் பேராறு போல் வரும் கண்ண நீர் கொண்டு அரங்கன் கோயில் திரு முற்றம் சேறு செய் தொண்டர் -என்கிறபடி
பகவத் குண சேஷ்டிதங்களை நினைந்து கண்ணும் கண்ண நீருமாய் இருப்பவரே -என்றபடி
அன்றிக்கே-மழை தெய்வமே -குணம் திகழ் கொண்டல் இராமானுசன் -விண்ணீல மேலாப்பு விரித்தால் போல் மேகங்கள் -இவரையே தூதாக ஆண்டாள் -என்றுமாம்
ஆழி மழைக்கு அண்ணா நீ ஒன்றும் காய் கரவேல்
ஆளவந்தார் -அவிவேக கநாந்த திங்முகே பஹுதா சந்தத துக்க வர்ஷிணி பகவன் பவ துர்த்திநே -சம்சார வர்ஷம் -பிரதி கூல மழை
திருக் கச்சி நம்பிகள் -தேவராஜா தயா ஸிந்தோ தேவ தேவ ஜகத் பதே த்வதீ ஷண ஸூதா சிந்து வீசி விஷே பசீ கரை
காருண்ய மாருதா நீதை சீதலைரபி ஷிஞ்ச மாம் -பகவத் கடாக்ஷ அம்ருத தாரை -அருளியது போலே
ஸ்ரீ கூரத் ஆழ்வானும் ஹஸ்தீஸ த்ருஷ்ட்யம்ருத வருஷ்டி பிராபஜேதா –
இப்படி அனுகூல பகவத் கடாக்ஷ அம்ருத வ்ருஷடியைப் பெறுவிக்கும் விஷயத்தில் எம் அண்ணரான உடையவரே
ஒன்றும் கை கரவேல் -சம்சாரிகளுக்கும் சர்வேஸ்வரனுக்கும்
ஞானக் கை தா -மக்நான் உத்தரதே லோகான் காருண்யாத் சாஸ்த்ர பாணிநா –
சர்வேஸ்வரனுக்கு -குத்ருஷ்ட்டி குஹ நாமுகே நிபததே பர ப்ரஹ்மண கரக்ரஹ விசேஷனோ ஜயதி லஷ்மனோயம் முனி -என்றபடி
ஆசை உடையார்க்கு எல்லாம் பேசி வரம்பு அறுத்தார் -உதார குணம் நாடும் நகரமும் நன்கு அறியும் படி விளங்கச்
செய்யக் கடவீர் என்று ஆண்டாள் ஆசீர்வாதம் -ஓன்று நீ கை கரவேல்
ஆழியுள் புக்கு முகந்து கொடு -நிர்மத்த்ய ஸ்ருதி சாகராத் -என்னப்பட்ட வடமொழி வேதக் கடல் என்ன
-நமாம் யஹம் திராவிட வேத சாகரம் –என்ன பட்ட தமிழ் வேதக் கடல் என்ன
இவற்றுக்குள் புகுந்து அர்த்த விசேஷங்களை கொள்ளை கொண்டு -உள் புக்கு என்றதால் மணி மாணிக்கங்கள் சீரிய பொருள்கள் கொணர்ந்து வர்ஷித்தவர்
பராசர்ய வசஸ் ஸூ தாம் உபநிஷத் துக்தாப்தி மத்யோத் த்ருதாம்–பவ்ம பிபந்து அன்வஹம்
ஆர்த்து -சிம்மம் போலே கர்ஜித்து
ஏறி -பஜதி யதி பதவ் பத்ர வேதீம் த்ரி வேதீம் -சீரிய சிங்காசனத்தில் மேல் ஏறி -திருக் கோஷ்டியூர்
மேல் தளத்தில் ஏறி எம்பெருமானார் ஆனாரே-அது ஸூ சகம்
ஊழி முதல்வன் உருவம் போல் மெய் கறுத்து-அவதார ரகஸ்யம் ஸூ சகம் –
துக்தோ தன்வத் தவளை மதுரம் சுத்த ஸாத்விக ரூபம் யஸ்ய ஸ்புடயதி தராம் யாம் பணீந்திரவதாரம் -பால் அன்ன திருமேனி யாய் இருந்தும்
தேவபிரானுடை கரிய கோலத் திரு உருவை திரு உள்ளத்திலே அடக்கி இருப்பதாலே நிழலீட்டாலே ஸ்வாமி திரு மேனியும்
முடிவு இல்லாதோர் எழில் நீல மேனியாகவே சேவை சாதிக்க வேணும் என்று சொல்கிறது –
முந்நீர் ஞாலம் படைத்த முகில் வண்ணன் -ஊழி முதல்வன் -திரு உருவை திரு உள்ளத்தில் அடக்கி -தத் சாதரம்யம் பெற்று இருப்பீர் என்றபடி –
ஆழி போல் மின்னி வலம் புரி போல் நின்று அதிர்ந்து -இதுவும் திரு அவதார ஸூ சகம் -அடையார் கமலத்து அலர் மகள் கேழ்வன்
கை யாழி என்னும் படையோடு –புடையார் புரி சங்கமும் -என்றது போலே பஞ்சாயுத அம்சம் அன்றோ ஸ்வாமி
-பாஹ்ய குத்ருஷ்ட்டி விரோதி நிரசனம் செய்து அருளி -அருளார் திருகி சக்கரத்தால் அகல் விசும்பும் நிலனும்
இருளார் வினை கெடச் செங்கோல் நாடாவுத்தீர் -உடையவர் ஆவீர் –
வலம் புரி போல் நின்று அதிர்ந்து -தற்கச் சமணரும் –மாயும் படி -என்றும் -அமுதம் உண்டு கழிக்கும் சங்கரய்யா போலே
த்வயம் அர்த்த அனுஸந்தாநேந ஸஹ சதா ஏவம் வக்தா யாவச் சரீர பாதம் அதிரைவ ஸ்ரீ ரெங்க ஸூகமாஸ்வ
-இணை பிரியாது இருந்து தூய அமுதை பருகி பருகி மகிழ்ந்தவர் ஸ்வாமி –
தம் த்ருஷ்ட்வா சத்ரு ஹந்தாரம்-மஹரிஷீணாம் ஸூகாவஹம் -தீயோர் ஒழியவும் நல்லார் வாழவும் சார்ங்கம் உத்தரித்த சர மழை போலே –
ஒண் சாரங்க வில்லும் -ஸ்வாமியே -தன் கைச் சார்ங்கம் அதுவே போல் புருவ வட்டம் அழகிய -போலே ஸ்வாமி புருவ நெறிப்பை கொண்டே
ஆழ்வான் ஆண்டான் எம்பார் சர மழை போலே வாதங்கள் செய்வார்கள் என்றுமாம்
கொண்டல் அனைய வண்மை ஏரார் குணத்து எம் இராமானுசன்
நானும் பிறந்தமை பொய் அன்றே -ஆண்டாளும் ஸ்வாமி திரு முடி சம்பந்தம் உண்டே -என்று மகிழ்வதே -நாங்களும் மார்கழி நீராட -மார்க்க சீர்ஷம் –

—————————————————-

1-ஸ்ரீ நம்மாழ்வார் -திருமுடி -மஸ்தகம் -ஸ்ரீ சடாரி -ஸ்ரீ கிருஷ்ண பக்தி கிட்டும்-ஸ்ரீ சடகோபர் பொன்னடி அன்றோ ஸ்ரீ ராமானுஜர்
-2–நாத முனிகள் – ஸ்ரீ மன்-நாத முனிகள் -கீர்த்தனம் -இசை -பக்தி அனுபவிக்க -கும்பிடு நாட்டமிட்டு ஆட -மெய்யடியார்கள் கூட்டம்
3— ஸ்ரீ புண்டரீகாக்ஷர் -உய்யக் கொண்டார் -திருக் கண்கள் -காரேய கருணை –
திவ்ய பிரபந்தம் வேத சாம்யம் ஞானம் வரும் -பிணம் கிடைக்க மனம் புணர்வார் உண்டோ
-4–ஸ்ரீ மணக்கால் நம்பி ராம மிஸர் -கபாலம் -இரண்டு கன்னம் -வெண்ணெய் உண்ட வாயன் போலே –
அனுபவ ப்ரீதி உந்த கைங்கர்யம் செய்து பருத்த கன்னங்கள் – ஆச்சார்ய கைங்கர்யம் கிட்டும் இவரை த்யானம் பண்ண
-5–ஆளவந்தார் -வஷஸ்தல -திரு மார்பு -அகன்ற திரு மார்பு -கனக மயம் கவாடம் போலே -திரு உள்ளம் திறக்க -இருப்பிடம் வைகுந்தம் இத்யாதி –
தியானிக்க ஆச்சார்ய கடாக்ஷம் கிட்டும் -ஆ முதல்வன் என்று வஸ்துவாக்கி அருளினார் -யாமுநேயம்
முக்கண்ணன் எண் கண்ணான் சகஸ்ர கண்கள் -சேர்ந்தாலும் ஆச்சார்ய கடாக்ஷத்துக்கு ஈடு இல்லையே
-6–பெரிய நம்பி – கண்டம் -திருக் கழுத்து -த்வயம் -கழுத்து ஸ்தானம் -தியானிக்க நமக்கு த்வயார்த்தம் காட்டும் ஷேம கரணம்
7-திருக் கோஷ்டியூர் நம்பி -திருக் கைகள் -எம்பெருமானார் திரு நாமம் சாத்தி -பர ஸம்ருத்தியே ஏக பிரயோஜனம்
-திருமந்திரம் சரம ஸ்லோக அர்த்தம் கிட்டும் -ஸர்வார்த்த சாதகம் -இரண்டு திருக் கைகள் இரண்டுக்கும்
-8-திருமலை நம்பி -இரண்டு மார்புகள் சைல பூர்ணர் -பிதா மஹர் –தீர்த்த கைங்கர்யம் -ஆகாச கங்கை -சாலை கிணறு -மாமா பண்ணின கைங்கர்யம் –
தேவகி தேரோட்டி கம்சன் -கண்ணன் பார்த்த சாரதி -கல்யாணம் மாமான் சீர் முக்கியம் -பகவத் கைங்கர்யம் கிட்டும் இவரை தியானிக்க
9-ஆழ்வார் திருவரங்கப் பெருமாள் அரையர்- -திரு வயிறு –ஆளவந்தார் திருக் குமாரர் -மடித்து உள்ள -வைராக்யம் –
ஆச்சார்யர் பரகத ஸ்வீகாரம் செய்வார் -தேவ பெருமாள் இடம் பாடி பெற்றார் ராமானுஜரை அரங்கன் -கொண்டாடி -ஸ்ரீ நிதிம்
-10–திருமாலை ஆண்டான் -திரு முதுகு மாலா காரர் திருமாலை ஆண்டான் திருவாய்மொழி அர்த்தம் கிட்டும் -வளர்த்த இதத் தாய் –
11–திருக்கச்சி நம்பி-கடிகி இடை -அம்சம் -ஆச்சார்ய உச்சிஷ்டம் கிடைக்கும் -ராமானுஜருக்கே கிடைக்காதது நமக்கு கிட்டும் -இப்படி தியானித்தால் –
12- எம்பார் –13-பட்டர்–14- நஞ்சீயர் –15-நம்பிள்ளை –16–வடக்கு திரு வீதிப் பிள்ளை -17–பிள்ளை லோகாச்சார்யார்
-18 -திருவாய் மொழிப பிள்ளை 19–மணவாள மா முனிகள் –20-ஸ்ரீ சேனை முதலியார் -புண்டரம் ஸ்தானம் -கார்ய சித்தி –
கூரத் ஆழ்வான்–பூணூல் அம்சம் -ப்ரஹ்ம ஸூ தரம் ப்ரமாதரு ரக்ஷணம் -ஸ்ரீ பாஷ்யகாரரையே ரஷித்தாரே-
22-த்ரிதண்டம் -மருமகன் -முதலி ஆண்டான் -திவ்ய தேச கைங்கர்யம் -தென் அரங்கம் செல்வம் முற்றும் திருத்த வந்தான் வாழியே
தத்வ த்ரயம் ரகஸ்ய த்ரயம் மண்டல த்ரயம் ஞானம் கிட்டும்
23-வடுக நம்பி ஆந்திர பூர்ணர் காஷாயம் -உன்னை ஒழிய ஒரு தெய்வம் அறியாத -ஆச்சார்ய அபிமானம் கிட்டும்
-நம் பையல்-அளியல் நம் பையல் அம்மாவோ கொடியவாறே -வடுகா கூப்பிட -வைஷ்ணவ நம்பி -வைஷ்ணவ வாமனன் –
24-திரு குருகைப் பிரான் பிள்ளான் — மணி மாலை -துளசி மாலை -குருகேசர் -நாமும் பிள்ளையாக -அபிமான புத்திரர் ஆவோம்
-வாரிசு சான்று பஞ்ச சம்ஸ்காரம் விஷ்ணு லோக மணி மண்டப மார்க்க தாயீ —
25-பிள்ளை உறங்கா வல்லி தாசர் -சாயை -பரார்த்த கைங்கர்யம் உடை வாள் கொண்டு புறப்பாடு -அவன் ஆனந்துக்காகவே –
அங்கி –ஸ்ரீ ராமானுஜர் -26-பரமாத்மா -எம்பெருமானார் அன்றோ -தேவு மாற்று அறியேன் –
திருவடிகளை பற்ற பகவான் முக விலாசம் -களை அற்ற கைங்கர்யம்–தியானிக்க வழி –26 -அங்கங்கள் உடன் கூடிய அங்கியையே த்யானம்
-சர்வான் காமான் -லீலைக்கு விவ்ஷயம் இல்லை போகத்துக்கு விஷயம் -சதா ஸ்மராமி யதிராஜம்-

உபதேச முத்திரை திருமலையில் -சேவை -அஞ்சலி ஹஸ்தம் மற்ற திவ்ய தேசங்களில் –
திருமேனியில் அனைவரும் உண்டே -என்ற உணர்வுடன் -தியானிக்க-
சம்பிரதாய பலன்கள் எல்லாம் கிட்டும் இப்படி தியானித்தால் -பஞ்சாயுத சக்தி அம்சம் -ரஜஸ் தமஸ் போக்கும்-
மனஸ் சுத்திக்கு த்யானம் / சரீர சுத்திக்கு ஆகார நியமம் -உய்ய ஒரே வழி உடையவர் திருவடி –சதா ஸ்மராமி-ஸ்ரீ யதிராஜம்-

—————————————-

இதுக்கு பிரயோஜனம் கேவல லீலை
லோகவந்து லீலா கைவல்யம் -ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ரம்–ஜகத் சர்க்கே லீலைவ கேவலா பிரயோஜனம் –பரஸ்ய ப்ரஹ்மணோ லீலைவ பிரயோஜனம்
லீலை -பின் வரும் விளைவை கனிசியாமல் அப்பொழுது பெரும் மநோ வினோதம் -லீலை வியாபாரம் என்றவாறு –
ஸ்ருஷ்டியும் வியாபாரம் -ஸ்ருஷ்ட்டி தான் லீலை என்று அருளிச் செய்யாமல் பிரயோஜனம் லீலை என்பான் என் சங்கைக்கு
மா முனிகள் பரிகாரமாக அருளிச் செய்யும் அமுத மொழி –
லீலையாவது தாதாத்விக ரசம் ஒழிய காலாந்தரத்தில் வரும் பலத்தைக் கணிசியாமல் பண்ணும் வியாபாரமே யாகிலும்
-இதுக்கு பிரயோஜனம் -என்று ஸ்ருஷ்ட்டி ரூப வியாபாரத்துக்கு பிரயோஜனமாக சொல்லுகையாலே தாதாத் விக ரஸ மாத்ரத்தைச் சொல்லிற்றாகக் கடவது
அகில புவன ஜன்ம ஸ்தேம பங்காதி லீலே-என்றும் -ஜகாத் உத்பத்தி ஸ்திதி சம்ஹார அந்த பிரவேச நியமனாதி லீலா -என்றும்
சாமா நாதி கரண்யமாக அருளிச் செய்து இருந்தும் ஜகத் ஸ்ருஷ்டவ் லீலைவ பிரயோஜனம் என்று வ்யதிகரணமாக
-மா முனிகள் தத் காலத்தில் தோன்றும் ரசத்துக்கு ஹேதுவான வியாபாரம் என்று அருளிச் செய்யாமல் ரசம் மாத்திரம் என்று காட்டி அருளுகிறார் –

சேஷ ஸ்ரீ மான் நிகம மகுடீ யுக்ம ரஷர ப்ரவ்ருத்த
ஸ்ரீ மத் ராமா வரஜ முனிதாம் சவ்ம்ய ஜாமாத்ரு தாஞ்ச
விந்தன் த்ருப்யத் விமத படலீ பாட நோத்தாம ஸூக்தி
பூயாத் பவ்ய பிரதித மஹிமா ஸ்ரேயஸே பூயேச ந–என்று
உபய வேதாந்த ரக்ஷணத்துக்கு ஸ்ரீ எம்பெருமானாராக திருவவதரித்து வேதாந்தங்களை ஸ்ரீ மா முனிகளாக திருவவதரித்து
திராவிட அருளிச் செயல்களையும் குத்ருஷ்டிகளை நிரசித்து பிரதிஷ்டானம் ஆதி சேஷனே செய்து அருளினான் என்றவாறு –
-அந்த திருவனந்த ஆழ்வானே நமக்கு சகல வித நன்மைகளையும் அருளட்டும் –

——————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ வேதார்த்த சங்க்ரஹம் -மூன்றாம் பகுதி –

February 22, 2017

யோ நித்ய அச்யுத பதாம் புஜ யுக்ம ருக்ம வ்யாஹாமோஹதஸ் ததிராணி த்ருணாய மேனே
அஸ்மத் குரோர் பகவதோஸ்ய தயைக சிந்தோ ராமானுஜஸ்ய சரனௌ சரணம் ப்ரபத்யே —

அசேஷ சித் அசித் வஸ்து சேஷினே –சேஷ ஸாயினே-நிர்மல ஆனந்த கல்யாணைதயே -விஷ்ணவே நம –

பரம் ப்ரம்ஹைவாஞம் ப்ரம பரிகதம் ஸம் ஸ ரதி தத்
பரோபாத்ய லீடம் விவசம் அசுபஸ் யாஸ் பதமிதி
சுருதி ந்யாயா பேதம் ஜகதி வித்தம் மோஹனமிதம்
தமோ யே நா பாஸ்தம் சஹி விஜயதே யாமுன முனி —

————————————

காரீர்யா வ்ருஷ்டி காமோ யஜேத -பலமே பிரபதனம் -சுகம் -அபூர்வம் புருஷ அநு கூலம் ஆக முடியாதே
க்ருதி உத்தேச்யத்வம்-க்ருதம் பிரதி சேஷித்வம்
கார்யம் பிரதி சம்பந்தி சேஷக -தத் பிரதி சம்பந்த்வம் சேஷித்வம் -கார்யம் சேஷி -அதன் பிரதி சம்பந்தி சேஷம்
-கார்யம் பிரதிசம்பந்தியின் பிரதி சம்பந்தி என்பது கார்யத்வமே கார்யத்வம் என்பது போலே ஆத்மாஸ்ரய தோஷம் சம்பவிக்கும்
பர உத்தேச ப்ரவ்ருத்த க்ருதி வியாப்தி அர்ஹத்வம் சேஷத்வம்
க்ருதி பிரயோஜனத்வம் -பலம் தானே
தாத்பர்ய தீபிகை -உபய அனுப ஐக்கைக ஜூஷா சவ் சேஷ சேஷி நவ் இச்சையா யது பாதேயம் யஸ்ய அதிசய ஸித்தயே
பரகத அதிசய ஆதாய கத்வம் சேஷத்வம் /ஆஹித அதிசய பாக்த்வம் சேஷித்வம் –
ஸர்வஸ்ய வஷீ ஸர்வஸ்ய ஈசானாக –பதிம் விஸ்வஸ்ய
சேஷகத இச்சா ப்ரயுக்த சேஷத்வம் -யாகம் எஜமான் / சேஷிகத இச்சா ப்ரயுக்த சேஷத்வம் -ஜீவன் நாற்காலி கொண்டு தனக்கு அதிசயம்
உபயகத இச்சா ப்ரயுக்த சேஷத்வம் -எஜமான் அனுபவிக்க வேலைக்காரன் அதிசயம் தர -இருவருக்கும் ஆசை
உபய பின்ன கத இச்சா ப்ரயுக்த சேஷத்வம் -சுவரும் வண்ண மேல் பூச்சும் போலே -இரண்டுக்கும் ஆசை இல்லாமல் -சுவருக்கு -அதிசயம்
சேஷப் பரா அரத்தத்தவாத்-ஜைமினி ஸூ த்ரம் -யத அத்யந்தம் பரார்த்தக தம் வயம் சேஷ இதி ப்ரூமக –
இத்தை ஸ்ரீ ராமானுஜர் -பர கத அதிசய ஆதான இச்சையா உபாதே யாத்வமேவ யஸ்ய ஸ்வரூபம் ச சேஷக பர சேஷி
பாரார்த்யம் ஸ்வம் ஸ்ருதி சத சிரஸ் சித்திம்–சேஷத்வமே ஆத்மாவுக்கு ஸ்வரூபம் –
ஆத்மாவுக்கு ஞான ஆனந்தங்கள் தடஸ்தம் என்னும் படி தாஸ்யம் இ றே அந்தரங்க நிரூபகம்
கேவல அத்வாரக பிரகாரதா ப்ரயுக்த சேஷத்வம் -அசேதனம் அத்வாரக சத்வாரக இரண்டும் உண்டே –
ஆழ்வான் ஆழ்வார் அடியேன் உள்ளான் என்றபடி கண்டாயே -என்று திருக் கோஷ்ட்டியூர் நம்பி அருளிச் செய்தார் இறே
ஞானம் ஆனந்தம் -அசித் வியாவருத்தி -சேஷத்வமே சத்தை கொடுக்கும் ஜீவாத்மாவுக்கு என்றபடி
ஜாதி போலே ப்ருதக் சத் பாவம் இல்லை -குண்டலம் போலே இல்லை -குண்டலம் பஹிரங்க லக்ஷணம்
அபூர்வம் சேஷியாக இருக்க முடியாது என்றபடி –
யஜதா -கர்த்ரு சாமான்யம் -ஸ்வர்க்க காமக -கர்த்ரு விசஷ்யம்-வியாகரண சாஸ்திரம்
மீமாம்சிகர் -யஜதா -நியோஜ சாமான்யம் / ஸ்வர்க்க காமக நியோஜ்ய சாமான்யம்
யாக ஜன்ய அபூர்வ ஸ்வ கீயத்தவ புத்திமான் பவ –
சாத ஸ்வர்க்க விசிஷ்டஸ்ய ஸ்வர்க்க அசாதானே கர்த்ருத்வ அந்வயோ ந கதாதி-
யாகம் ஸ்வர்க்க சாதனம் இல்லை என்பதால் கர்த்ருத்வ அன்வயம் இல்லை அதனால் அபூர்வம் நியோகம் கல்பிக்க வேண்டும் என்பர்
நியோஜ்யத்வா அந்வயோபி ந கதத இதி ஹி ஸ்வர்க்க சாதனத்தவ நிச்சயக -அபூர்வம் என்று கல்பித்து -மேல் ஸ்வர்க்க சாதன பாவத்தையும் கல்பிக்கிறீர்கள்
யதார்த்த ஞானம் இல்லாமல் வியாகரண சாஸ்திர விருத்தமாக செய்கிறீர்களே -சாமான்ய சத்யா வசன பரிபாலன தர்மத்தை காப்பவன் என்று
சாஷாத் தர்மம் பெருமாளை பார்க்காமல் சக்கரவர்த்தி பிரிந்தால் போலே அன்றோ –
தர்ம புத்திரனும் ஷத்ரியனாய் இருந்து மனைவி தம்பிகளை ரஷிக்காமல் சூத்தில் பணையம் வைத்து இழந்தால் போலவும் அன்றோ –
போக்து காமக தேவதத்தக கிருஹம் கச்சேத் -தேவதத்தன் வீட்டுக்கு போகும் கிரியை போஜன சாதனத்வத்துக்காக-என்ற அறிவை உணர்த்த அன்றோ இந்த வார்த்தை
அதே போலே யாகம் யாக கரணஸ்ய ஸ்வர்க்க சாதனத்வம் -யஜதே என்றது யாக கர்த்தா -யாக கிரியை -காட்டும் என்னால் நீங்கள் ஸ்வகீய புத்தி கொடுத்து
அபூர்வம் உண்டாக்க என்கிறீர்கள்
நியோஜ்யக ச சா கார்யம் யக ஸ்வ கீயத் வேந புத்தயதே-என்று சொல்லி ஸ்வர்க்க காமோ யஜத என்பது நியோஜ்யனுக்கு சொல்கிறது
-யாக கர்த்தாக்கு இல்லை என்கிறீர்கள் -போத்ருத்வம் யஷ்ட்ருத்வ அநு குணம் -புத்தி கிரியையாக கிரியைக்கு அநு குணம் என்கிறீர்கள் –
ஆனால் வாக்யார்த்தமோ யாக கிரியை அன்றோ -அனுகிரக கார்யம் -எல்லா யாகங்களும் பர ப்ரஹ்மத்துக்கு ஆராதன ரூபம்
-அவன் ப்ரீதி அடைந்து அதனால் அன்றோ பலன் அளித்து அருள்கிறான்
பல சம்பிபதசயா கர்மா அபிராத்மானம் பிபிரீஷந்தி ச ப்ரீதோலம் பலாயா இதி சாஸ்திர மரியாதா-
வசதி இதி வாசுதேவக -அந்தர்யாமியாக இருந்து அளித்து அருள்கிறான் என்றபடி
சுருதி பிரமாணம் -இஷ்ட பூர்தம் பஹுதா ஜாயமானம் விஸ்வம் பிபர்த்தி புவனஸ்ய நாபிஹி –
ததேவ அக்னிஸ் தத் வாயுஸ் தத் ஸூ ர்யஸ் தாது சந்த்ரமாஹாஸ் –
சதுர் ஹோதாரோ யத்ர சம்பதம் கச்சந்தி தேவைஹி -ஸ்ருதி]
யோ யோ யாம் யாம் தனும் பக்தக ஸ்ரத்தயா அர்ச்சித்தும் இச்சதி தஸ்ய தஸ்ய அசலாம் ஸ்ராத்தம்
தாம் ஏவ வித்ததாமி அஹம்-என்றும் -போக்தாரம் யஜ்ஜ தபஸாம் சர்வ லோக மகேஸ்வரம்-என்றும் –
ச தயா ஸ்ரத்தயா யுக்தக தஸ்ய ஆராதனமீ ஹதே லபதே ச தத் காமம் மையைவ விஹிதான் ஹி தான் -என்றும் -ஸ்ரீ கீதை
யஜ்ஜைஸ் த்வம் இஜியஸே பைத்தியம் சர்வ தேவமய அச்யுத யைஸ் ஸ்வ தர்ம பரைர் நாத நரைர் ஆராதிதோ பவான்
யஹே தரந்தி அகிலம் ஏதாம் மாயாம் ஆத்ம விமுக்தயே -ஸ்ரீ விஷ்ணு புராணம் –
யஜேத–யஜி திப் -யஜ தேவ பூஜாயாம் -கர்த்ரு வியாபார சத்யாதாம்
பூர்வ பாக்க விதி வாக்யம் -வாயவ்யம் ஷ்வேதம் ஆலாபேத பூதி காமக வாயுர் வை ஷேபிஷ்டா தேவதா வாயும் ஏவ ஸ்வேந பாகதேயேந உபதாவதி ச ஏவ ஏனம் பூதிம் கமயதி
பரமாத்மா வாயு தேவனின் அந்தராத்மாவாக பலன் அளிக்கிறான் -அபூர்வம் கல்பிக்க வேண்டாமே
யாகம் பண்ணின உடனே ஸ்வர்க்கம் கிட்ட வில்லையே -அதனால் அபூர்வம் கல்பித்து -யாகம் பண்ணினதும் அது உருவாக்கி பின்பு ஸ்வர்க்கம் பலமாக தரும் என்பார்கள்
யாகம் செய் என்றாலும் அபூர்வம் உருவாக்கு என்றே சொல்கிறது என்பார்கள்
உபாதானம் -வாச்யத்வேந அதிரிக்தார்த்தோ அநேந இதி அயம் சப்த உபாதானம் -யஜேத என்பது உபாதானம் என்பர் -அபூர்வம் தான் சாதனம் என்பர்
ஆனால் ஸ்ருதி -ச ஏவ ஏனம் பூதிம் கம்யதி -என்று யோகத்தால் ப்ரீதி அடைந்து தேவதை பலம் அளிக்கிறது –

பர ப்ரஹ்ம அனுக்கிரகமும் நிக்ரகமும் சுகமும் துக்கமும் -என்பதற்கு பல ஸ்ருதி பிரமாணங்கள் உண்டே
ஏஷ ஹி ஏவ ஆனந்தயாதி /அத சோ அபயம் காதோ பவதி / அத தஸ்ய பயம் பவதி /
தா ஹானிஹி தன மகச்சித்ரம் தா பிராந்திகி தச்ச விக்ரியா யன் முஹூர்த்தம் க்ஷணம் வபி வாஸூ தேவோ ந சிஞ்சயதே-ஸ்ரீ விஷ்ணு புராணம்
பீஷாஸ்மாத் வாதப் பவதே பீஷோ தேதி ஸூ ர்யக பீஷாஸ் மாத் அக்னிச்ச இந்த்ரச்ச ம்ருத்யுர் தாவதி பஞ்சம இதி
ஏதேஸ்ய வா அக்ஷரஸ்ய ப்ரஷாசனே கார்கி ஸூ ர்யச் சந்த்ரமா சவ் வித்ருதோவ் த்ருஷ்டக
ஏதேஸ்ய வா அக்ஷரஸ்ய ப்ரஷாசனே கார்கி தததோ மனுஷ்யா ப்ரஷம்சந்தி யஜமானம் தேவாகா தர்வீம் பிதரோ அன்வாயத்தாகா
பரமாத்மா கர்மா சம்பவித்தானாம் த்வை வித்யம்-சத் கர்மம் -துஷ் கர்மம் –
அச்சனாநுப பத்தி அதிகரணம் -ஏதானி கர்மாணி சமீச்ச யானி ஏதானி அசமீச்சயானி இதி கர்மா த்வை வித்யம் சம்விதாயா-
தஸ்ய ஆஞ்ஜை யா தாவதி வாயுகு நதியக ஸ்ராவந்தி தேன ச க்ருதா சமானோ ஐலாஷ்யாஹா சமதா இவ மேஷ விஸர்பிதம் குருவந்தி
தத் சங்கல்ப நிபந்தனா ஹி இமே லோகாகா ந சவந்தே ந ஸ்புதந்தே
ஸ்வ ஷாசன அநு வர்தினம் ஞானயத்வா காருண்யாத் ச பகவான் வர்த்த யேத வித்வான் கர்ம தக்ஷக
இப்படி யதார்த்த ஞானம் கொண்டு உபாசனம் அனுஷ்டானம் பண்ணி பகவத் ப்ரீதியால் ஸ்வர்க்கம் முதல்
-பகவத் பிராப்தி பர்யந்தம் -அபயம்- அபய ஸ்தான மோக்ஷம் -பெறுவார் –
நியதம் குரு கர்ம த்வம் கர்ம ஜ்யாயோ ஹி அகர்மணக-என்றும் -மயி சர்வாணி கர்மாணி சந்யாச
ஏ மே மதம் இதம் நித்யம் அநு திஷ்டந்தி மான வாஹா ஷ்ரத்தா வந்தோ அந ஸூயந்தோ மச்சயந்தே தேபி கர்மபிஹி -என்றும் –
ஏ த்வே ததபி அ ஸூ யந்தோ ந அநு திஷ்டந்தி மே மதம் சர்வஞ்ஞாந விமூதாம்ஸ்தான் வித்தி நஷ்டான் அசேதஸஹ -என்றும்
தான் அஹம் த்விஷதாஹ் க்ரூரான் சம்ஸாரேஷூ நர அதமான் ஷிபாம் யஜஸ்ரம் அஷுபான் அசுரேஷ் வேவ யோநிஷு
ஆஸுக்ரீம் யோநிம் ஆபன்ன மூடா ஜன்மனி மாம் அப்ராப் யைவ கௌந்தேய ததோ யாந்தி அதமாம் கதிம் –
சர்வ கர்மன்யபி சதா குர்வானோ மத் வியபாஷ்ரயக மத் ப்ரஸாதாத் அவாப் நோதி சாஸ்வதம் பதம் அவ்யயம் -என்றும் ஸ்ரீ கீதா ஸ்லோகங்கள் –
ஜைமினி -தேவதா அதிகரணம் -கர்மங்கள் உடைய முக்யத்வம் காட்ட தேவதைகள் இல்லை என்று நினைப்பவர்களுக்கும் கர்மங்களை செய்ய வேண்டும்
என்று வேத பிரமாண்யம் காட்டவும் கர்ம ஸ்ரத்தை உண்டாக்குவதற்கும் -என்று தாத்பர்யம் –
அதிவாதத்துக்காக அபூர்வம் கல்பித்து அது பலம் தரும் என்பர் -ஜீவாத்மா மேல் கருணையால் அதிவாதம் செய்து அர்த்த போதனம் செய்கிறார்
இது வரை மீமாம் சிகர் நிரசனம் செய்து அருளி -மேலே நித்ய விபூதி விவரணம் செய்கிறார் –
வேதாகமேதம் புருஷன் மஹாந்தம் ஆதித்ய வர்ணம் தமஸப் பரஸ்தாத் -என்றும்
ய ஏஷோ அந்தராதித்ய ஹிரண்மயப் புருஷோ த்ருஷ்யதே –தஸ்ய யதா கப்யாசம் புண்டரீகம் ஏவம் அக்ஷணீ -என்றும்
ச ய ஏஷோ அந்தர் ஹ்ருதய ஆகாசகா தஸ்மின் அயம் புருஷோ மநோ மயக அம்ருதோ ஹிரண்மயஹ
சர்வே நிமேஷா ஜக்ன்யிரே வித்யுத்ப் புருஷாததீ ச யா ஏஷோ -என்றும்
நீல தோயத மத்யஸ்தா வித்யுல் லேகஏவ பாஸ்வர –என்றும்
மநோ மயப் பிராண சரீரஹ பாரூபஸ் சத்யகாமஸ் ஸத்யஸங்கல்ப ஆகாஷாத்மா சர்வகர்மா சர்வகாமஹா சர்வ கந்தக
சர்வ ரஸ சர்வம் இதம் அப் யாத்தோ அவாகி அநாதரஹா –என்றும்
மஹாராஜாதான் வாசக –என்றும்
அஸ்ய ஈசானா ஜகதோ விஷ்ணோ பத்னீ –என்றும்
ஹ்ரீஸ்ச்ச தே லஷ்மீச்ச புத்ன்யவ்–என்றும்
தத் விஷ்ணோ பரம் பதம் சதா பஸ்யந்தி ஸூரயஹ–என்றும்
ஷயந்தம் அஸ்ய ராஜசஹ பராகே-ஷீ கதி நிவாசயோஹோ –என்றும்-த்ரிகுணாத்மக பிரக்ருதிக்கு அப்பால் –
யாதேகம் அவ்யக்தம் அனந்த ரூபம் விஸ்வம் புராணம் தாமசப் பரஸ்தாத் -என்றும்
யோ வேத நிஹிதம் குஹாயம் பரமே வியோமன் –என்றும்
யோ அஸ்ய அத்யக்ஷக பரமே வியோமன் –என்றும்
ததேவ பூதம் தது பவ்யம் அஐதம் தத அக்ஷரம் பரமே வியோமன் –என்றும்-
தத் விஷ்ணோ பரமம் பதம் சதா பஸ்யந்தி ஸூரயஹா –யா ஸூரயஹா தே சதா பஸ்யந்தி –யே சதா பஸ்யந்தி தே ஸூரயஹா- அநேக விதானங்கள் –
யத் ஆஜ்ஞநேயக அஷ்டா கபாலகா -பூர்வ பாக வாக்கியம் -தர்மி தர்மம் இரண்டையும் காட்டும்
தத் குணாஸ்த்து விதி யேரன் அவி பாகாத் விதானார்த்தே நசேத் அனேயேந ஷிஷ்டகா –1-4–7–8-பூர்வ மீமாம்சை
தத் குணாஸ்த்து -யாகத்தையும் குணத்தையும் சொல்லும் -இரண்டையும் பிரிக்க முடியாதே –
யம் ப்ரவரஜந்தம் அநு பேதம் அபேத க்ருத்யம் த்வை பயனோ விரஹகாகர ஆஜுஹாவ புத் ரேதி தன்மயாதயா தரவோ
அபிநேதுஹு தம் சர்வ பூத ஹ்ருதயம் முனிம் ஆனதோஸ்மி -ஸ்ரீ சுகாச்சார்யரை வணங்கும் ஸ்லோகம்
வில்லிபுத்தூர் பகவர்–அர்த்த காம பரா யூயம் நாராயண பரா வயம் யூயம் யூயம் வயம் வயம் விஷ்ணுதாச வயம் யூயம் ப்ராஹ்மணா வர்ண தர்மினஹா-
நிஷ்க்ருஷ்ட ஆத்ம ஸ்வரூபம் -பிரியா வாக்யா பிரதாநேந சர்வே த்ருஷ்யந்தி ஜந்தவஹ தஸ்மாத் ததேயேவ வக்தவ்யம்
வசநே கா தரித்ரதா ருதாசா வயம் யூயம் ப்ராம்ஹணா வாம தர்மினக –
இரவில் காட்டில் ததீயாராதன பணம் கொண்டு போகும் பொழுதும் புலி துரத்தினாலும் தன்னைக் காத்துக் கொள்ள
திரு நாம உச்சாரணம் பண்ணாது இருக்கை ஸ்ரீ வைஷ்ணவ லக்ஷணம் -பட்டர் –
அபுருஷ தந்த்ரம் ஞானம் கர்த்தும் அகர்தும் அந்யதா கர்த்தும் ந சக்யம் -ஞானம் நம் வசம் இல்லை பக்தியும் வைராக்கியமும் அப்படி இல்லை –
சகாதேவன் பீஷ்மரை விட தேவரால் உயர்ந்து மதித்து மலரால் சொரிய பட்டானே-

காரண மந்த்ரங்கள் -கிரியைக்கு -அனுவாதம் -பர்ஹிர் தேவ சாதனம் தாமி -தர்பங்களை ஆசனமாக வெட்டி / ஸ்தோத்ரம் -சாஸ்திரம் -இரண்டு விதம்
குண ரூபேண குண நிஷ்ட குண அபிதானம் -பிரகீத மந்த்ரம் -அபிரகீத மந்த்ரம்
ஸமஸ்த ஹேய ரஹிதம் விஷ்ண வாக்யம் பரமம் பதம் -ஸ்ரீ -விஷ்ணு புராணம் -இங்கு பரம பதம் ப்ராப்யம் -விஷ்ணு அர்த்தமாகவே உள்ளதே என்னில்
ஷயம் தமஸ்ய ரஜஸ்ப் பராகே -என்றும்
ததஷரே பரமே வ்யோமன் -என்றும்
யோஸ்யாத்யக்க்ஷ பரமே வியோமன் -என்றும்
யோ வேத நிஹிதம் குஹாயாம் பரமே வியோமன் -என்றும்
வியோம சப்தத்தால் ஸ்தானம் -என்பதை காட்டி
தத் விஷ்ணோ பரமம் பதம் -என்று வியதிரிக்தம்-விஷ்ணுவுடைய ஸ்தானம் என்று காட்டிற்றே –
பரமம் பதம் சப்தம் மூன்று இடங்களில் உண்டே -மூன்றும் சாம்யம் என்பதால்
-1-தத் விஷ்ணோ பரமம் பதம் -பரம ஸ்தானம் நித்ய விபூதி –காட்டும்
-2-சர்கஸ்த்ய அந்த காலேஷு த்ரிதா ஏவம் ஸம்ப்ரவர்த்ததே குண ப்ரவ்ருத்ய பரமம் பதம் தஸ்ய அகுணம் மஹத் -என்று பிரக்ருத வியுக்த ஆத்ம ஸ்வரூபம் காட்டும்
-3-ஸமஸ்த ஹேய ரஹிதம் விஷ்ணு வாக்யம் பரமம் பதம் –பகவத் ஸ்வரூபம் காட்டும்
ஹா இமே சத்யா காமாஹா அந்ருத அபிதானஹா-கர்மம் திரோதானம் -அந்ருத்த சப்தம் –
அவித்யா கர்மா சன்குன்யா த்ருதீயா சக்திரிஷ்யதே யயா ஷேத்ரஞ்ஞய சக்திகி ச வேஷ்டிதா ந்ருப சர்வகா —
சம்சார தாபன் அகிலான் அவாப் நோதி அதி சந்ததான்-ஸ்ரீ விஷ்ணு புராணம்
ஷேத்ரஞ்ஞா சக்தி ஜீவாத்மா / கர்மம் -அவித்யை ஒரு சக்தி / மாயா ப்ரக்ருதி மூன்றாவது -சக்தி –
-திரோதானத்தால் -பிரக்ருதியில் பந்தப் படுகிறான் -சம்சார தாபங்கள் மீண்டும் மீண்டும் -என்றபடி –
க்ஷயந்தம் அஸ்ய ரஜஸ்ப் பராகே / வேதாகமேதம் புருஷம் மஹாந்தம் ஆதித்ய வர்ணம் தாமசப் பரஸ்தாத் –பிரகிருதி அப்பால் பட்ட பரம பதம்
சத்யம் ஞானம் ஆனந்தம் ப்ரஹ்ம யோ வேத நிஹிதம் குஹாயாம் பரமே வ்யோமன் –
தத் அக்ஷரே பரமே வியோம -அவிகார ரூபம்
யத்ர பூர்வே சாத்யக சந்தி தேவாக
யத்ர ருஷாயக பிரதமஜா யே புராணகா
தத் விப்ராசோ விபன்யவோ ஜாக்ருவாம்சக சமிந்ததே விஷ்ணோர் யத் பரமம் பதம் –
சதேவ சோம்ய இதம் அக்ர ஆஸீத் –நித்ய விபூதியும் பரமாத்மா ஸ்வரூப அந்தர்பூதம்-பரதந்த்ரர்கள்
பரிஜனங்கள் ஸ்தானம் கல்யாணகுணங்கள் உடன் கூடியே அக்ரே ஆஸீத்
அபஹத பாப்மா – விஜராக – விமிருத்யுகு-விசோகக -விஜிகத்சக-அபிபாசக-சத்யகாமக -சத்யா சங்கல்பக –
போக்யம் போகபகரணங்கள் -காம்யந்தே இது காமக /சத்யக காமக யஸ்ய சத்ய காமக -அவனது ஆசைப்படும் பொருள்களின்
சத்யத்வம் நித்யத்வம் -பரமாத்மா சம்பந்த யோகம் -நிர்விகாரம் –
சத்ய சங்கல்பத்தால்–போக்கிய போக உபகரணங்கள் -நித்ய லீலா விபூதியில் உள்ள சேதன அசேதனங்கள் உடைய
ஸ்வரூபம் ஸ்திதி ப்ரவ்ருத்தி பேதங்கள் அனைத்தும் அவன் சங்கல்பம் –
வியக்தம் ஏஷ மஹா யோகி பரமாத்மா சனாதனாக ஆதி மத்ய நிதானக (-நிதானம் =அந்தம் -) மஹதக பரமோ மஹான்
தமசப் பரமோ தாதா சங்க சக்ர கதாதரக ஸ்ரீ வத்ச வஷக நித்ய ஸ்ரீஹி அஜயகா ஸாஸ்வதோ த்ருவக
ஸநாதனன்-ஸ்வரூப நித்யத்வம் /சாஸ்வத -குண விசிஷ்ட ஆகாரேண நித்யன் /த்ருவக -விக்ரக விபூதி விசிஷ்ட ஆகாரேண நித்யன் –
ச ஏஷோ அந்தராதித்யே ஹிரண்மயப் புருஷோ த்ருஷ்யதே ஹிரண்ய மஷ்ருகு ஹிரண்ய கேஸக ஆ ப்ரணகாத் சர்வ ஏவ
சுவமஹா தஸ்ய யதா கப்யாசம் புண்டரீகம் ஏவம் அக்ஷிணீ தஸ்ய உதிதி நாம-சுருதி வாக்கியங்களை உப ப்ரும்ஹணங்கள் -விஷதீ கரணம் -செய்யும்
-அதாவது -நாம அனாதீத சாகாரத்தைஸ் சக அதீத சாகார்த்த கதனம் செய்யும் என்றபடி –
ஷரா நாநா விதாஸ் ச்சாபி தனுர் ஆயுத விக்ரஹம் அன்வகச்சந்த காகுத்ஸதம் சர்வே புருஷ விக்ரஹ–
விவேஷ வைஷ்ணவம் தாம ச சஷரீரஹ ஸஹ அனுகக உத்தர ஸ்ரீ ராமாயணம் -இவற்றால் நித்ய விபூதி விளக்கப் பட்டது –
ஸ்ரீ விஷ்ணு புராண பிரமாணங்கள்
சமஸ்தாஹா சக்த யச்சைதாஹா ந்ரூப யத்ர ப்ரதிஷ்டித்தாஹா தத் விஸ்வ ரூப வை ரூப்யம் ரூபம் அந்யத் ஹரேர் மஹத் –
மூர்த்தம் ப்ரம்ஹ மஹா பாக சர்வ ப்ரஹ்ம மயோர் ஹரிகி –
நித்யை வைஷா ஜெகன் மாதா விஷ்ணோ ஸ்ரீர் அ நபாயினீ-
தேவத்வே தேவ தேவேயம் மனுஷ்யத்வே ச மனுஷீ விஷ்ணோ ஹோ தேஹ அநு ரூபம் வை கரோதி ஏஷ ஆத்மனஸ் தநூம்
ஏ காந்தினக சதா ப்ரஹ்ம த்யாயினோ யோகிநோ ஹி ஏ தேஷாம் தத் பரமம் ஸ்தானம் யத்வை பஸ்யந்தி ஸூரயஹ
கலா முஹுர்த்தாதி மயச்ச காலக ந யத்வி பூதே பரிணாம ஹேதுஹு –
மஹாபாரத பிரமாணங்கள்
திவ்யம் ஸ்தானம் அஜரம் சாப்ரமேயம் துர்வி ஜ்ஜேயம் ச ஆகமைர் ஆத்யம் கச்ச பிரபோ ரக்ஷ ச அஸ்மான் ப்ரபன்னன் கல்பே கல்பே ஜாயமானஹா ஸ்வ மூர்த்யா-
காலாஸ் சம்பச்யதே தத்ர ந காலஸ் தத்ர வை ப்ரபுஹு –
அந்தஸ் தத் உபதேஷாத்-ஸ்ரீ ப்ரஹ்ம ஸூ த்ரம்
ய ஏஷோ அந்தராதித்யே ஹிரண்மயப் புருஷோ த்ருஷ்யதே -அவன் அனந்தன் -பாரா ப்ரஹ்மமே ஏன் என்னில் தர்ம உபதேசம்
-அபஹத பாப்மத்யாதி குண விசிஷ்டன் -தஸ்ய உதேதி ஹா வை பாப்மபியக -பும்ஸாம் த்ருஷ்ட்டி சித்த அபஹாரினாம் –
செய்ய தாமரைக் கண்ணனாய் உலகு எழும் உண்ட அவன் கண்டீர் -வையம் வானம் மனிசர் தெய்வம் மற்றும் மற்றும்
மற்றும் முற்றுமாய்
செய்ய சூழ் சுடர் ஞானமாய் வெளிப்பட்டு இவை படைத்தான் பின்னும் மொய் கொள் சோதியோடு ஆயினான் ஒரு மூவராகிய மூர்த்தியே –
ஜகத் காரண வஸ்து -புண்டரீகாக்ஷன் -ஆசிரயணீயன் -ஜகாத் காரணன் உத்தேச்யம்-பிரசித்தம் –புண்டரீகாக்ஷத்வமும் அவனுக்கு உண்டு
என்று ஆழ்வார் உணர்த்தி அருளுகிறார் -ஐஸ்வர்ய ஸூசகம்
ஸ்ரீ விஷ்ணு தர்மம் -ஷ்ரூயதாம் து நர வியாக்ரஹ வேத வேதாந்த நிச்சயக -யஞ்ஞயேஷூ யஞ்ஞபுருஷஹ சன்னி பாக
ச விஷ்ணுஹு பரமம் ப்ரஹ்ம யதோ ந அனுவர்த்ததே புநக -பர ப்ரஹ்மமே யஞ்ஞ பிரவர்த்தகனும் ஆராத்யனும் –
தத் தர்ம உபதேசாத்
ச ஏஷ ஸர்வேஷாம் லோகாநாம் ஈஸஹ ஸர்வேஷாம் காமாநாம்-ச ஏஷ சர்வேப்யக பாப்மாப்யக உதிதக
ஸர்வஸ்ய வஸீ ஸர்வஸ்ய ஈசானாக
விஸ்வ தப் பரமம் நித்யம் விஸ்வம் நாராயணன் ஹ்ரீம்
பதிம் விஸ்வஸ்ய ஆதமேஸ்வரம்
ஹிரண்மயப் புருஷோ த்ருஷ்யதே –
யாத் ரூபம் க்ருதகம் அநு க்ரஹார்த்தம் தச்சேதஸாம் ஐஸ்வர்யாத் -பூர்வ பஷி-பரமாத்மா ரூபம் ஸ்வ பாவிகம் இல்லை
-அநு கிரஹத்துக்காக கொண்ட ரூபம் க்ருதகம் -அநித்யம் –என்பர்
ரூபம் வா அதீந்த்ரியம் அந்தகரண ப்ரத்யக்ஷ நிர்தேஷாத் –அப்ராக்ருதம் -அதீந்த்ரியம் -நித்யம் -என்று ஸ்வ பக்ஷம் –

அஞ்சச ஏவ -ஸ்வபாவிகமே –ரூபம் தத்து ந சக்ஷுஷா க்ராஹ்யம் மனசா து அகலுஷேன சாத்தனாந்தரவதா க்ருஹ்யதே –
ந சாஷுஸ்ஹா கிருஹ்யதே ந அபி வாசா மனசா து விசுத்தேனா இதை ஸ்ருதேகே -ந ஹி ரூபாயா தேவதாயா ரூபம் உபதிஷ்யதே யதாபூதவாதி ஹி சாஸ்த்ரம்
மஹா ராஜதாம் வாசக -வேதகாமேதம் புருஷம் மஹாந்தம் ஆதித்ய வர்ணம் தமசப் பரஸ்தாத் -இதி
பிரகாரனாந்தர நித்தேஷச்சா சாஷினக –த்ராமிடாச்சார்யார் வியாக்யானம்
திருமேனி நித்யம் -ஸ்வ பாவிகம் -அகல்மிஷம் இல்லாத பரி சுத்த மனசாலே -சாத்தனாந்தர -பக்தி யோகத்தால் –
வேதாந்தம் ஓதுவது உண்மை அல்லது இல்லையே –
ஹிரண்மய இதி ரூப சாமான்யாத்–சந்த்ர முகத்வாத் -இங்கு
ஹிரண்மய இதி ரூப சாமான்யாத்-பூர்வ பஷி ஹிரண்மய விகாரம் -அநித்யம் -உபாசனத்துக்கு கொண்ட வடிவம்
சந்திர முகத்வாத் -என்றால் முகம் ஆகாசத்தில் உள்ளது என்று அல்ல அர்த்தம் -வியாக்யகாரர் சித்தாந்தம்
அதே போலே அழகிய தேஜஸ் என்பது மட்டுமே ஹிரண்ய மய-என்பதால்
ந மயத்தர்த்த விகாரமாதாய ப்ரயுஜ்யதே அநாரப்யத்வாத் ஆத்மனக -விகாரம் அர்த்தம் இல்லை -பல இடங்களிலும் பரமாத்வாவும்
அவன் திரு மேனியும் உண்டாக்கப் பட்டவை அல்ல என்பதால்
சாஸ்திரம் மூலம் தான் பெற மகாத்மாவை அறிகிறோம் -அதே சாஸ்திரம் -பரமாத்மா நித்ய மண்டலம் பிராட்டி நித்ய சூரிகள்
திருமேனி கல்யாண குணங்கள் எல்லாம் நித்யம் ஸ்வ பாவிகம் என்கிறதே –
யதா பூதவாதி ஹி சாஸ்திரம் -யதார்த்த ஞானம் சாஸ்திரம் கொண்டே அறிவோம் -அஸ்ய ஈசானா –ஹரீஷுச்ச தே லஷ்மீச்ச பத்நயோவ்–
சதா பஸ்யந்தி ஸூராய – தாமசப் பரஸ்தாத் –ஷயந்தம் அஸ்ய ரஜஸப் பராகே -சத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்ம –யஸ் சர்வஞ்ஞ சர்வவித் —
பரா அஸ்ய சக்திகி விவிதைவ ஷ்ரூயதே ஸ்வாபாவிகீ ஞான பல கிரியாச்ச -தமேவ பாந்தம் அனுபபத்தி சர்வம் தஸ்ய பாதாம் சர்வம் இதம் விபாதி
மேல் வேத பிரமாண்யம் அருளிச் செய்கிறார் –

சாஸ்த்ர யோநித்வாத் அதிகரணம் –
க்ருத்ஸ்னா ப்ரஸக்தி அதிகரணம் –ஸ்ருதேச்து சப்த மூலத்வாத்-
பர ப்ரஹ்மம் விபு என்று ஒரு ஸ்ருதி சொல்ல –நிர் அவயவம்-என்று வேறே ஸ்ருதி சொல்ல -சர்வாந்தராமி என்று ஓன்று சொல்ல
பூர்வ பஷி -க்ருத்ஸ்னா ப்ரஸக்தி நிர் அவயவத்வ ஸப்தகோபோவா -ப்ரஹ்மம் ஒரு வஸ்துவின் உள்ளே பூர்ணம் என்றால் வேறே வஸ்து வுக்கு இடம் இல்லை
அவயவங்கள் இருந்தாலும் ஒரு அவயவம் ஒன்றில் உள்ளது என்னலாம் -அது நிர் அவயவம் நிஷ்கலம் என்கிறதே -இது விருத்தம் அன்றோ -என்பர்
ஸ்ருதேச்து சப்த மூலத்வாத் -சாஸ்த்ர சித்தம் -லோக சித்த வஸ்துவுக்கு தான் இந்த நியாயங்கள்
சப்தங்களுக்கு அர்த்த போதக சக்தி ஸ்வாபாவிகம் -வாஸ்ய வாசக சம்பந்த ஞானம் கொண்டு அறிகிறோம்
போத்ய போதக சம்பந்தம் கொண்டு அறிகிறோம்
சப்தங்கள் அர்த்த போதக சக்தி ஸ்வபாவிகம் -இதே போலே பத சங்கேதங்களுக்கும் அர்த்த போதக சக்தி உண்டு
உச்சாரண க்ரமம் -பூர்வ பூர்வ உச்சாரண க்ரம ஜெனித ஸம்ஸ்கார பூர்வகம் -அபவ்ருஷேயம் -நித்யம் -வேதம் -விதி அர்த்தவாதம் மந்த்ரம் –

எதஸ்மிந் பிரகரனே விஸ்தாரேண ப்ரதிபாதித்தானாம் அர்த்தானாம் விக்ரகத்வாய யுக்த அர்த்த ஜாதம் சங்க்ரஹேன அநு க்ரமதே ஏவைத்யாதினா
நிகில ஹேயா ப்ரத்ய நீக-சகல இதர விலக்ஷண–அபரிச்சின்ன ஞான ஆனந்தைக ஸ்வரூபம்
ஸ்வாபாவிக அநவதிக அதிசய அசங்க்யேய கல்யாண குணாகரக -ஸ்வ சங்கல்ப அநு விதாயி ஸ்வரூப ஸ்திதி ப்ரவ்ருத்தி பேத சித் அசித் வஸ்து ஜாத
அபரிச்சேதய ஸ்வரூப ஸ் வா பாவிக அனந்த மஹா விபூதிஹி –
நாநா வித அனந்த சேதன அசேதன ஆத்மாக பிரபஞ்ச லீலா உபகரணக-
சர்வம் கல்விதம் ப்ரஹ்ம / ஐ தாத்மியம் இதம் சர்வம் –தத் த்வம் அஸி ஸ்வேதகேதோ /
ஏனமேகே வதந்தி அக்னிக்கு மருதோயேந ப்ரஜாபதிம் இந்த்ரமேக பர் பிராணம் அபரே ப்ரஹ்ம சாஸ்வதம்
ஜ்யோதீம்ஷி சுக்ரானி ச யானி லோகெ த்ரயோ லோக பாலாஹா த்ரயீ சா த்ரயோ அக்னிச்ச ஆகுதியச்ச ச பஞ்ச சர்வே தேவா தேவகி புத்ர ஏவ
த்வம் யஞ்ஞஸ் த்வம் வஷட்காரஸ் த்வம் ஓங்காரப் பரந்தப -ருததாத்மா வசுப் பூர்வக வஸுனாம் த்வம் ப்ரஜாபதிகி –
ஜகத் சர்வம் சரீரம் தே ஸ்தைர்யம் தே வசுதாதலம் அக்னி கோபப் ப்ரஸாதஸ்தே சோமாக ஸ்ரீ வத்ச லக்ஷண-
ஜ்யோதீம்ஷி விஷ்ணுர் புவனானி விஷ்ணுர் வனானி விஷ்ணுர் கிரயோ திசாச்ச நதியஸ் சமுத்ராஸ்ச்ச ச ஏவ சர்வம் யதாஸ்தி யன்னாஸ்தி ச விப்ரவர்யா
பகுப்பிரகாராம் ஸ்யாம்/சோகாமயத பஹு ஸ்யாம் ப்ரஜாயே யேதி–தத் ஸ்ருஷ்ட்வா ததேவ அநு பிரவிவிஷாத் தத் அநு ப்ரவிஷ்ய சச்ச தச்சாபவத்
-ந்ருக்தும் ச அந்ருக்தும் ச நிலயனாம் ச அநிலயனாம் ச விஞ்ஞானம் ச அவிஞ்ஞானம் ச சத்யம் ச அன்ருதம் ச சத்யம் அபாவத்
சத் -தயாத் -விகாரம் இல்லா சித்தும் விகாரம் உள்ள அசித்தும்
நிருக்தம் அநிருக்தம் –ஜாதி குணம் உள்ள அசித்தும் இவை இல்லாத சித்தும்
நிலயநம்-அநிலயநம் — அசித் சித்தை ஆதாரமாக கொண்டதால் அசித் நிலயநம் –
விஞ்ஞானம் அவிஞ்ஞானம் -ஜடம் அசித்தும் சித்தும் -அனைத்தும் சரீரம் என்றபடி –
சேதன அசேதன விசிஷ்ட ப்ரஹ்மம் ஏகம் என்றவாறு –
தத்துவத்தை இவ்வளவும் விரித்து அருளிய பின்பு ஹிதம் புருஷார்த்தம் பற்றி அருளிச் செய்கிறார் மேல்
சாஸ்திரம் மூலம் நிஷ்க்ருஷ்ட தத்வ ஞானம் பெற்று -வர்ணாஸ்ரம கர்மங்களை அங்கமாக கொண்ட உபாசனம் -அப்பியாசம்
பக்தி நிஷ்டையால் பர பக்தி–சாஷாத்கார அபி நிவேசம் – -பர ஞானம்–சாஷாத்காரம் – பரம பக்தி -உத்தர உத்தர சாஷாத்கார அபி நிவேசம்
சுகம் -ஞான விசேஷ சாத்தியம் -பதார்த்தாந்தரம்-ஞானத்தை விட வேறானதே என்றால் -ஞான விசேஷம் -சுகத்தை கொடுப்பதே சுகம் -வேறு அல்ல
விஷய ஞானம் த்ரிவிதம் –சுகம் துக்கம் மத்யஸ்தம் -விஷயாதீனம் -அநு கூல ஞானமே சுகம் -பிரதி கூல ஞானமே துக்கம் –
அன்ன விஷய ஞான சுகம்-அஸ்திரம் -ப்ரஹ்ம ஞானம் அநவதிக அதிசயம் ஸ்திரம் -ப்ரஹ்ம ஞானமே சுகம் என்றவாறு -ஆனந்தோ ப்ரஹ்ம இதி வியஜானாத்
ரஸோ வை ஸஹ ரசம் ஹேயேவாயம் லப்த்வா நந்தீ பவதி -ஜென்ம கர்ம ச மே திவ்யம் -தாவத் ஆர்த்தி தாவத் வாஞ்சா தாவணி மோஹஹா ததா அசுகம் -ஸ்ரீ விஷ்ணு புராணம்
அநவதிக அதிசய ஸுசீல்யம் வாத்சல்யம் ஸுந்தர்யம்-சர்வ சேஷி
சர்வம் பரவசம் துக்கம் சர்வம் ஆத்மவசம் சுகம் அன்றோ –
சேவா ஸ்வவ்ருத்தி ராக்யாதா தஸ்மாத்தாம் பரிவ்ரஜயேத் -சேவா நாய் தொழில் அன்றோ என்னில்
தேஹாத்ம அபிமானத்தால் சொல்கிறீர்கள் -சரீரம் ஜாதி குண ஆஸ்ரய பிண்டம் -ஆத்மா தேக விலக்ஷணன்-ஞானமயன்
அஜட த்ரவ்யம் -சேஷத்வமே ஸ்வரூபம் -பரமாத்மா உடைய சரீரம் -விதேயம் -நியாம்யம் -சேஷம் -நியதி சேஷ சேஷி பாவம் -ஒழிக்க ஒழியாதது -அவனாலும் கூட
கம் ப்ரஹ்ம கம் ப்ரஹ்ம -ஆகாசம் லக்ஷணை-அபரிச்சின்னத்வம் /ஆனந்தோ ப்ரஹ்ம -ஆனந்த ஸ்வரூபன் /
சத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்ம -நிர்விகாரம் -ஞான ஸ்வரூபம்– த்ரிவித பரிச்சேத ரஹிதம் –
நரக ஸ்வர்க்க சாம் ஞானே வை பாபா புண்யே த்விஜோத்தம –வஸ்து ஏகமேவ துக்காயா சுகா ஏர்ஷாய அகமாக்ரே சா கோபாய ச யதஸ் தஸ்மாத் வஸ்து வஸ்துமாத்மகம் குதகா –
ஹத் ஏவ ப்ரீதயே பூத்வா புநக துக்காயா ஜீயதே -ததேவ கோபாய யதக ப்ரஸாதயா ச ஜாயதே தஸ்மாத் துக்காத்மகம் நாஸ்தி ந ச கிஞ்சித் சுகாத்மகம் –
ரிபு னோதான் சம்வாதம் -தேஹாத்ம ஞானம்
பர கத அதிசய ஆதேன இச்சயா உபாதயத்வம் ஏவ யஸ்ய ஸ்வரூபம் ச சேஷக பரஹ சேஷி
அஹம் அர்த்தத்துக்கு ஞான ஆனந்தங்கள் தடஸ்தம் என்னும் படி தாஸ்யம் இ ரே அந்தரங்க நிரூபகம்
கேவல அத்வாரகா ப்ரகாரதா ப்ரயுக்த சேஷத்வம் -அநேந ஜீவேன ஆத்மனா -அசித்துக்கு அத்வாரகமும் சத்வாரகமும் -ஸூஷ்ம அசித்துக்கு பிரக்ருதிக்கு அத்வாரகம்
-ஜீவாத்மாவுக்கு மட்டுமே கேவல அத்வாரக பிரகாரத்வ ப்ரயுக்த சேஷத்வம் -கௌஸ்துப ஸ்தானீயம்
மாம்ச யவ்யபிசாரேண பக்தி யோகேன சேவதே ச குணான் சமதீத் யைதான் ப்ரஹ்ம பூயாய கல்பதே–ஸ்ரீ கீதை -குண அஷ்டக சாம்யம் அடைகிறான் –
ப்ரஹ்ம விதாப்நோதி பரம் -/ தமேவம் வித்வான் அம்ருத இஹ பவதி / ப்ரஹ்ம வேத ப்ரஹ்மைவ பவதி
பக்தி ரூப சேவை என்பதே வேதனம் -த்யானம் -துருவம் -உபாசனம் இத்யாதி
நாயமாத்மா ப்ரவசநேந லப்யஹா நாமேதயா பஹுனா யமேவைஷ வ்ருணுதே தேன லப்யஹ தஸ்யைஷ ஆத்மா விவ்ருணுதே தநூம் ஸ்வாம்
ப்ரியதமர்களை நிர் ஹேதுகமாக கிருபையுடன் -ஸ்வ தந்திரமாக -தானே ஸ் வீ கரிக்கிறான்
ப்ரியோ ஹி ஞானி நோத் யர்த்தம் அஹம் ச ச மாம் பிரியஹ-
ந சந்த்ருஷே திஷ்டதி ரூபம் அஸ்ய ந சஷுஷா பஸ்யதி கஸ்ச்சநைநம் பக்த்யா ச த்ருத்யா ச ஸமாஹிதாத்மா ஞான ஸ்வரூபம் பரிபஷ்யதீக -மோக்ஷ தர்மம் -வியாசர்
இதையே ஸ்ரீ கீதையிலும் -பக்த்யா த்வன் அந்யயா சக்யக-இத்தால் பக்தி -ஞான விசேஷம் என்றதாயிற்று
அசேஷ சித் அசித் வாஸ்து சேஷினே சேஷ ஸாயினே நிர்மல ஆனந்த கல்யாண நிதயே விஷ்ணவே நமஹ -என்று உபக்ரமித்து
நாயமாத்மா ஸ்ருதி -உடன் உபசம்ஹரித்து -பர பக்தி சாஸ்திரமே இது என்று காட்டி அருளுகிறார் –

சார அசார விவேக ஞான யாகா கரீமியாம்சோ விமத் சராஹா-பிரமாண தந்த்ராஹா சந்தி இதி க்ருதோ வேதாந்த சங்க்ரஹஹா
சார அசார விவேக ஞான -சாமர்த்தியம் -கொண்டு உத்க்ருஷ்ட நிஸ்கர்ஷம் -சாரம் விவேகிக்க
யாகா கரீமியாம்சோ -அனைத்து பிரமாணங்களையும் கற்று அறிந்து
விமத் சராஹா-அ ஸூ யை இல்லாமல் -விஷயத்தின் சீர்மையை மட்டுமே நோக்கி -யாரால் சொல்லப் பட்டது என்று பாராமல்
பிரமாண தந்த்ராஹா சந்தி இதி-ஆழ்வார் ஆச்சார்யர் ஸ்ரீ ஸூ க்திகள் வேதம் ஒன்றே லஷ்யமாக கொண்டு
-கியாதி லாப பூஜைக்கு என்று இல்லாமல் பிரமாணங்களை மட்டுமே பிரதானமாக கொண்டு இருப்பவர்களுக்கே
க்ருதோ வேதாந்த சங்க்ரஹஹா -இந்த திவ்ய வேதாந்த சங்க்ரஹம் அனுபவத்துக்கு அருள பட்டது -என்றவாறு –

வேதார்த்த சங்க்ரஹ ஸூதாம் வேதாந்த அப்தேர் யா ஆஹரத்
ராமாநுஜாய முனையே தசமி பகவதே நம

வேதார்த்த சங்க்ரஹ வியாக்யா விஹிதேயம் யதா ஸ்ருதா
வேத வியாசர் பரஹ்வேன ஸ்ரீ சுதர்சன ஸூரினா

தஸ்மை ராமாநுஜார்யாய நமப் பரம யோகிநே
யாஷ் ஸ்ருதிஸ் ஸ்ம்ருதிஸ் ஸூத்ராணாம் அந்தர் ஜ்வரம் அஷீஷமத் –

—————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ சுருதி பிரகாசிகாச்சார்யார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ வேதார்த்த சங்க்ரஹம் -இரண்டாம் பகுதி –

February 20, 2017

யோ நித்ய அச்யுத பதாம் புஜ யுக்ம ருக்ம வ்யாஹாமோஹதஸ் ததிராணி த்ருணாய மேனே
அஸ்மத் குரோர் பகவதோஸ்ய தயைக சிந்தோ ராமானுஜஸ்ய சரனௌ சரணம் ப்ரபத்யே —

அசேஷ சித் அசித் வஸ்து சேஷினே –சேஷ ஸாயினே-நிர்மல ஆனந்த கல்யாணைதயே -விஷ்ணவே நம –

பரம் ப்ரம்ஹைவாஞம் ப்ரம பரிகதம் ஸம் ஸ ரதி தத்
பரோபாத்ய லீடம் விவசம் அசுபஸ் யாஸ் பதமிதி
சுருதி ந்யாயா பேதம் ஜகதி வித்தம் மோஹனமிதம்
தமோ யே நா பாஸ்தம் சஹி விஜயதே யாமுன முனி —

————————————————-

இனி மேல் ஸூவ பக்ஷ ஸ்தாபனம் பண்ணி அருளுகிறார் -புராதான வைதிக மதம் -வியாசர் போதாயனர் டங்கர் தர்மிதர் குஹதேவர்
தத்ர பிரதம பக்ஷே-சங்கர பக்ஷம் -ஸ்ருத்யர்த்த பர்யாலோசனை பராகா துஷ்பரிஹாரம் தோஷம் உதாஹரந்தி –
முன்பே அபேத ஸ்ருதியை பார்த்து நன்றாக ஆலோசனம் பண்ணி அருளினார் –
அதனால் மேல் பேத சுருதிகள் கடக ஸ்ருதிகள்- விசாரரித்து அருளிச் செய்கிறார் –
கடக சுருதிகள்
1-யப்ப்ருதிவியம் திஷ்டன் ப்ருதிவ்யா அந்தரோ யம் ப்ருதேவீ நவேத யஸ்ய ப்ருத்வீ சரீரம் யப்ருதிவீம் அந்தரோ யமயதி தா ஆத்மா அந்தர்யாமி அம்ருதக –ப்ருஹதாரண்யகம்
2-யா ஆத்மனி திஷ்டன் நாத்மனோ அந்தரோ யம் ஆத்மா நவேத யஸ்ய ஆத்மா சரீரம் யா ஆத்மாநாம் அந்தரோ யமயதி ச தா ஆத்மா அந்தர்யாமி அம்ருதக –
3-யப்ப்ருதிவீம் அந்தரே ஸஞ்சரன் யஸ்ய ப்ருதிவீ சரீரம் யாம் ப்ருதிவீ நவேத –
4-யோ அக்ஷரம் அந்தரே ஸஞ்சரன் யஸ்ய அக்ஷரம் சரீரம் யாம் அக்ஷரம் நிவேதா யோ ம்ருத்யும் அந்தரே ஸஞ்சரன் யஸ்ய ம்ருத்யுஷ் சரீரம்
அக்ஷரம் -அழியாத ஜீவ சமஷ்டி என்றவாறு -ம்ருத்யு -அசித் சமஷ்டி/
5-யம் ம்ருத்யு நவேத ஏஷ சர்வ பூத அந்தராத்மா அபஹத பாப்மா திவ்யோ தேவ ஏகோ நாராயணக
6-த்வவ் ஸூபர்ணா சாயுஜா சஹாயா சமானம் வ்ருக்ஷம் பரிஷஸ் வஜாதே தயோர் அந்நிய பிப்பலம் ஸ்வாத்வத்தி அநஸ்நன் அந்நயோ அஹிஸாக ஷீதி
முக்த தசையில் ஜீவாத்மாவும் திவ்ய அப்கராக்ருத சரீரம் திவ்ய குணங்களில் சாம்யம் உண்டே அதனாலே
-ஸூபர்ணா சாயுஜா சஹாயா சமானம்-அபஹத பாப்மா -விஜரோ விம்ருத்யுஹு விஷோஹக விஜகத்சக அபிபாஷாக சத்யகாமக ஸத்யஸங்கல்பக
சஹாயா-சேஷ சேஷி பாவத்தால் –
7- அந்த ப்ரவிஷ்டாஷ் சாஸ்த்தா ஜனா நாம் சர்வாத்மா
பராயத்த அதிகரணம் -சாஸ்த்தா நியாந்தா என்று கொள்ளாமல் -அனுமந்தா -மாத்திரம் என்றபடி -ஜீவ ஸ்வதந்த்ரமும் உண்டே
அத்யக்ஷஸ்ய அனுமந்தா சா –உப த்ரஷ்டா அனுமந்தா சா –
8-தத் ஸ்ருஷ்ட்வா ததேவ அநு ப்ராவிஷத் தத் அநு ப்ரவிஷ்ய சச்சா த்யச்சா பவத் –சத் ஆத்மா -த்யத்-அசித் -என்றவாறு
9-சத்யஞ்சா நிருத்தஞ்சா சத்யம் அபாவத் –
10-அநேந ஜீவேன ஆத்மனா அநு ப்ரவிஷ்ய நாம ரூபே வ்யாகரவாணி –மேலும் பலவும் உண்டே

பேத ஸ்ருதிகள்
1-ப்ருதக் ஆத்மாநம் ப்ரேரிதாரம் ச மத்வா ஜுஷ்டஸ் ததஸ் தேன அம்ருதத்வமேதி -மத்வா -உபாசனம் –
2-போதா போக்யம் ப்ரேரிதாரம் ச மத்வா சர்வம் ப்ரோக்தம் த்ரிவிதம் ப்ரஹ்ம ஆதேத்
3-நித்யோ நித்யா நாம் சேதனஸ் சேதநாநாம் ஏகோ பஹுநாம் யோ விததாதி காமான்
4-பிரதான க்ஷேத்ரஞ்ஞயா பதிதி குணே ஈஷக
5-ஞான அஞ்ஞான தே த்வவ் அஜவ் ஈஷா அநீஷவ்–மேலும் பலவும் உண்டே –

1-ஜகத் சர்வம் சரீரம் தே ஸ்தைர்யம் தே வசுதாதலம்–ஸ்ரீ ராமாயணம் – ஸ்தைர்யம் -உத்பத்தி தாரணம் -ப்ரவ்ருத்தி நிவ்ருத்தி ஸ்திதி -அனைத்தும்
2-யத் கிஞ்சத் ஸ்ருஜ்யதே யேந சத்வ ஜாதேந வை த்விஜ தஸ்ய ஸ்ருஜ்யஸ்ய ஸம்பூதவ் தத் சர்வம் வை ஹார்ஸ் தனு–ஸ்ரீ விஷ்ணு புராணம் –தனு-சரீரம்
3-அஹம் ஆத்மா குடா கேஷா சர்வ பூதாஷாய ஸ்திதக -ஸ்ரீ கீதை
4-ச்ரவஸ் யச்சஹம் ஹ்ருதிஸ் நிவிஷ்டோ மத்தஸ் ஸ்ம்ருதிர் ஞானம் அபோஹனம் ச –ஸ்ரீ கீதை -நினைவு பிராமண ஞானம் மறப்பு-
ஞானம் துவாரம் ஹிருதயம் -நெஞ்சுக்கு அருளிச் செய்வார்கள் மூளைக்கு இல்லையே –
5-ஈச்வரஸ் சர்வ பூதா நாம் ஹ்ருத்தேஷே அர்ஜுனன் திஷ்டாதி –ஸ்ரீ கீதை —இப்படி பலவும் உண்டே –
தத் த்வம் அஸி –தத் -ஜகத் காரண சர்வ கல்யாண குண -ப்ரஹ்மம் / த்வம் -அந்தர்யாமி ப்ரஹ்மம் / ஏகார்த்த நிஷ்டத்வம் -இரண்டு பிரகாரங்கள் -ஒரே பிரகாரி
லோகத்தில் ஜாதி -குணங்கள் தானே பிரகாரங்கள் -த்ரவ்யங்கள் இல்லையே என்றால்
-தண்டம் குண்டலம் இவை உண்டே -தண்டீ குண்டலீ ப்ரத்யயத்துடன் -பிரியலாம் என்பதால் –
லௌகிக விகாரம் தேவ தத்தன் மனுஷ்யனாக இருக்கிறான் புண்யத்தின் பலனாக -யஜ்ஜதத்தன் மாடாக இருக்கிறான் பாபத்தை பலனாக
இங்கு பூத சங்காத்தங்களை சரீரத்தை த்ரவ்யங்களை சொல்கிறோம் -புண்யம் பாபம் ஜீவாத்மாவுக்கு என்று இருந்தாலும் -சரீரம் பிரகாரம் என்பதால் தானே
அதனால் பிரகாரம் வஸ்து -குணம் -ஜாதி -த்ரவ்யம் ஏதுவாகிலும் அப்ருதக் சித்தமாக இருந்தால் போதுமே
சத்தைக்கு பிரகாரியை எதிர் பார்த்து இருக்கும் -பிரிந்தால் ஸத்பாவம் போகும்
ந ஆத்மா ஸ்ருதேர் நித்யத்வாச்ச தாபியக –ஆத்மா உத்பத்தி இல்லை -சரீரத்தில் புகுவது கர்மா அனுகுணமாக
வைஷம்ய நைர்குண்ய ந சாபேக்ஷத்வாத்-
ந கர்மா விபாகத்வாத் இதி சேத் ந அநாதித்வாத் உபபாத் யதே ச அபி உப லப்யத –
கர்மம் ஸ்ருஷ்ட்டி அநாதி -இதே போலே பிரக்ருதியும் அநாதி –
அஜம் ஏக்கம் லோகித சுக்ல க்ருஷ்ணாம் பஹ்வீம் ப்ரஜாம்
ஜநயந்தீம் ச ரூபம் அஜோ ஏகோ ஜுஷமாநோ னுஷேதே
ஜஹாத் யேனாம் புக்த போகம் அஜோண்யக
பிருத்வி அப் தேஜஸ் பஞ்ச பூதங்களாக இருந்து–வாயு ஆகாசம் பிரத்யக்ஷமாக பார்க்காததால் சுருதி சொல்லவில்லை
– பல வஸ்துக்களாகி ஜீவ அனுவர்தனம் பண்ணி போகங்களை உண்டு மீண்டும் –
அக்னி -சிவந்து -லோகிதம்-தேஜஸ் அம்சம் – / அப் சுக்லம் வெண்மை /கிருஷ்ணம் பிரித்வி கறுமை /
அக்னி சிவந்து தேஜஸ் அம்சம் / வெண்மை ஜல அம்சம் /கறுமை அன்னம் அம்சம் என்றவாறு –த்ரிவித் கரணம் -பஞ்சீ கரணம் –

சுகே ஸூ ஹ்ருத சங்க்க்ஷயாக துக்கே துஷ் கரமானாம் நாசாயஹ -பிரகிருதி சம்பந்தத்தால் சுக துக்கங்கள் -கர்மத்தால் இல்லை
-சுகம் அனுபவிக்க அனுபவிக்க புண்ய கர்மங்கள் குறையும் -துக்கம் அனுபவிக்க அனுபவிக்க பாபா கார்மண்ங்கள் குறையும்
கர்மம் சாமான்ய காரணம் பரமாத்மாவை போலே -கர்மம் தேக பிரகிருதி சம்பந்தத்துக்கு காரணம் என்றதாயிற்று –
அஜம் ஏகம்–லோஹித சுக்ல க்ருஷ்ணாம் பாவீம் ப்ரஜாம் ஜநயந்தீம் ச ரூபாம் அஜோ ஹி ஏகோ ஜுஷமானோ
அநு ஷேதே ஜஹாதி என்னும் புக்த போகம் அஜோ அந்நியஹ-தைத்ரிய -ஸ்வேதாஸ்வதர உப நிஷத்
அஜா -பிரகிருதி / ரஜஸ் சத்வ தமஸ் / மஹத் அஹங்காரம் தன்மாத்திரைகள் பஞ்ச பூதம் அண்டம் /முக்தன் புக்த போகன் /
அஸ்மான் மாயீ ஸ்ருஜதே விஸ்வம் ஏதத் தஸ்மிம்ச்ச அந்யோ மாயயா சன்னி ரோத்தா மாயாம் து ப்ரக்ருதிம்
வித்யாத் மாயினாம் து மகேஸ்வரன் –ஸ்ரீ விஷ்ணு புராணம் -மாயா -பிரகிருதி -மாயீ மகேஸ்வரன் –
கவ்ர் ந ஆதிய ந அந்தம் சா ஜநித்ரீ பூதபாவிநீ–ஸ்ரீ விஷ்ணு புராணம் -பிரக்ருதிக்கு ஆதியும் அந்தமும் இல்லை -ஸ்வரூப விகாரமே-
பிரக்ருதிம் புருஷன் சைவ வித் அநாதி உபாவபி–ஸ்ரீ கீதை —
பூமிர் அப் அனலோ வாயுகு காம் மநோ புத்திர் ஏவ ச அகங்கார இதீயம் மே பின்ன பிரக்ருதிர் அஷ்டத –ஸ்ரீ கீதை -இந்த எட்டும் -24- க்கும் உப லக்ஷணம்
அ பரேயம் இதஸ்த்வன்யம் ப்ரக்ருதிம் வித்தி மே பராம் ஜீவ பூதம் மஹா பாஷா யாயேதம் தாராயதே ஜகாத் -ஸ்ரீ கீதை -அபர -பிரகிருதி
ப்ரக்ருதிம் ஸ்வாம் அவஷ்டப்ய விஸ்ருஜாமி புனப்புனஹ-ஸ்ரீ கீதை –
மயா அத்யக்ஷேன ப்ரக்ருதிஹி சூயாதே ச சர அச்சரம் -ஸ்ரீ கீதை -அத்யக்ஷம் நியமனம் –
பிரக்ருதிக்குள்ளும் ஈஸ்வரன் அந்தர்யாமியாக உள்ளான் -அது ஸ்வரூப விகாரம் அடையும் போதும் –
வியக்தம் விஷ்ணுஹு ததா அவ்யக்தம் புருஷகா கால ஏவ ச -ஸ்ரீ விஷ்ணு புராணம்
ச ஏவ ஷோபகோ ப்ரஹ்மம் ஷோப்யாச்ச பரமேஸ்வரஹ -ஸ்ரீ விஷ்ணு புராணம்
பிரதான பும்சோஹோ அஜயோஹோ காரணம் கார்ய பூதயோஹா –ஸ்ரீ பராசரர் –

ப்ருதக் சித்தி அநர்ஹ ஆதார ஆதேய பாவத்துடனும் -நியந்தரு நியாமிய பாவத்துடனும் -சேஷ சேஸீ பாவத்துடனும் -சரீராத்மா பாவம்
சர்வாத்மனா ஆதாரதயா நியந்தருதயா சேஷித்வயா ச ஆப்நோதி -ஆத்மா
சர்வாத்மனா ஆதேயத்தையா நியாம்யதயா சேஷத்வ தயா ச அப்ருதக் சித்தம் பிரகார பூதம் -சரீரம் –
சர்வே வேதா யத் பதம் ஆமனதி / சர்வே வேதா யத்ர ஏகம் பவந்தி/ ஏகோ தேவோ பஹுதா சந்நிவிஷ்டக /சஹைவ சந்தம் ந விஜாநந்தி தேவாகா/
பேரே வரப் பிதற்ற லல்லால் என் பெம்மானை ஆரே அறிவார் அது நிற்க நேரே கடிக் கமலத்துள் இருந்தும் காண்கிலான்
கண்ணன் அடிக் கமலம் தன்னை அயன் –முதல் திருவந்தாதி -56-
நாதாகா ஸ்ம சர்வ வசசாம் பிரதிஷ்டா யத்ர ஸாஸ்வதீ -ஸ்ரீ விஷ்ணு புராணம்
கார்யாணாம் காரணம் பூர்வம் வசசாம் வாச்யமுத்தமம்-ஜிதந்தே –
ஸர்வஸ்ய சாஹம் ஹ்ருதி சன்னிவிஷ்டோ மத்தஸ் ஸ்ம்ருதிர் ஞானம் அபோஹனம் ச வேதைச்ச சர்வைக அஹம் ஏவ
வேத்யோ வேதாந்த க்ருத் வேத வித்தே ஏவ சாஹம் –ஸ்ரீ கீதை —
கலைப் பல் ஞானத்தை என் கண்ணனைக் கண்டு கொண்டு நிலைப்பெய்து என் நெஞ்சம் பேத்தது என் நீடு உயிரே
அந்த அஹம் இமாஹா திஸ்ரோ தேவதா அநேந ஜீவேன ஆத்மனா அநு ப்ரவிஷ்ய நாம ரூபே வ்யாக்ரவாணி –ஸ்ருதி
ப்ரஷாஸித் தாரம் ஸர்வேஷாம் அணீயாம் சாம் அணீயசாம் ருக்மாபம் ஸ்வப்னா தீ கம்யம் வித்யாத் து புருஷம் பரம் –மனு ஸ்ம்ருதி
மாம் ஏவ பிரபத்யந்தே மாயா மேதாம் தரந்ததி -ஸ்ரீ கீதை –
ஏந மேக வதந்தி அக்னிம் மருதோன்யே ப்ரஜாபதிம் இந்த்ரம் ஏக பரே பிராணாம் அபரே ப்ரஹ்ம ஸாஸ்வதாம்-மனு ஸ்ம்ருதி –
ஏ யஜந்தி பித்ரூன் தேவன் ப்ராஹ்மணான் சாஹூதா ஷானான் சர்வ பூத அந்தராத்மநாம் விஷ்ணும் ஏவ யஜந்தி தே
வம்மின் புலவீர் –நும்மின் கவி கொண்டு நும் நிமித்த தெய்வம் ஏத்தினாள் செம்மின் சுடர் முடி என் திரு மாலுக்கே சேரும் –திருவாய் -3–9–6-
தன முகேந தத் அந்தராத்மா பூதஸ்ய விஷ்ணுர் ஏவ வாசகஹா –
அகில ஹேய ப்ரத்ய நீக கல்யாணைகதானம் சகல இதர விஷஜாதீயத்வம் அனவதிக அதிசய அசங்க்யேய- கல்யாண குணாஸ்ரயம் சகல அந்தராத்மா –
ஸ்வ சங்கல்ப ப்ரவ்ருத்த ஸமஸ்த சித் அசித் வஸ்து ஜாத தாத்ய ஸர்வஸ்ய ஆத்ம பூதம் -அங்குஷ்ட மாத்ர புருஷன் –
நிர்வாண மய ஏவ அயம் ஆத்மா ஞான மயோ அமலக துக்க அஞ்ஞான மலா தர்மகா ப்ரக்ருதேஸ்தே ந ச ஆத்மனாக -ஸ்ரீ விஷ்ணு புராணம் –
அனுகூல ஞானமே ஆனந்தம் –
பிரகிருதி சம்சர்க க்ருத கர்ம மூலத்வாத் ந ஆத்ம ஸ்வரூப ப்ரயுக்தஹா தர்மஹா –ஸ்ரீ விஷ்ணுபுராணம்
வித்யா விநாய சம்பந்தனே ப்ராம்ஹனே கவி ஹஸ்தினி ஸுநி சைவ ஸ்வபாகே ச பண்டிதஹ சம தரிசினாஹா –ஸ்ரீ கீதை
தொண்டாமினமும் இமையோரும் துணை நூல் மார்பில் அந்தணர் –பெரிய திருமொழி -1-5-9-
தொண்டாமினம் -வித்யா விநாய சம்பன்னர் / இமையோர் -நித்ய ஸூ ரிகள்/துணை நூல் மார்பில் அந்தணர்-கேவல ப்ராஹ்மணர் –
இஹைவ தைரிஜிஹஹ சர்கோ யேஷாம் சாம்யே ஸ்திதம் மனஹ நிர்தோஷம் ஹி சமம் ப்ரஹ்ம தஸ்மாத் ப்ரஹ்மநி தே ஸ்திதகா –ஸ்ரீ கீதை
பகவத சேஷ தைக ரஸதா-ஸ்வரூபம் -அடியேன் உள்ளான்
தெய்வீ ஹேஷா குண மயீ மம மாயா துரத்யயா மாமேவ யே பிரபத்யந்தே மாயா மேதாம் தரந்தி தே –ஸ்ரீ கீதை
அழும் நீர் துளும்ப கடலும் மலையும் விசும்பும் துலால் திருமால் என்று எங்கே என்னும் இவர் அலமாப்பு -அவர்களுக்கு
புத்ர வியோகத்திலே -ஆச்சார்ய ஹிருதயம் -61-
நான்யப்பந்தா அயனாய வித்யதே -ஸ்ரீ கீதை –
மயா தத்தம் இதம் சர்வம் ஜகத் அவ்யக்த மூர்த்தினா மத்ஸ்தானி சர்வ பூதாநி ந சாஹம் தேஷ் வவஸ்திதா
ந ச மதஸ்தானி பூதாநி பஸ்ய மே யோகம் ஐஸ்வர்யம் -ஸ்ரீ கீதை
எங்கும் உளன் கண்ணன் என்ற மகனைக் காய்ந்து இங்கு இல்லையால் என்று இரணியன் தூண் புடைப்ப
அங்கு அப்பொழுதே அவன் வீயத் தோன்றிய சிங்கப் பிரான் பெருமாள் ஆராயும் சீர்மைத்தே –திருவாய் -2-8-9-
பள்ளியில் ஓதி வந்த தன் சிறுவன் வாயில் ஓர் ஆயிரம் நாமம் ஒள்ளிய வாகிப் போதை அங்கு அதனுக்கு ஒன்றுமோர் பொறுப்பிலனாகி
பிள்ளையைச் சீறி வெகுண்டு தூண் பிடிப்ப பிறை எயிற்று எழில் விழிப் பேழ்வாய்
தெள்ளிய சிங்கமாகிய திருவல்லிக் கேணிக் கண்டேனே -பெரிய திருமொழி -2-3-8-
உருயாம் அஸ்தி உதகேஷு ச அஸ்தி உதிப்பதாவஸ்தி அஸ்தி ச உஷ்ண த்யதவ் வான்ஹவு திக்ஷு விதிக்க்ஷூ வாயு நபாசோஹோ த்ரியக்க்ஷூ
அதிர்யக்ஷூ ச சாரேஷூ ஆஸாரேஷூ வா கிம் பஹுகிரா த்வைஸ்தி மயாஸ்தி ச –பிரகலாதன்
சத்யம் விதானம் நிஜ ப்ருத்ய பாஷிதம் வியாப்திம் ச பூதேஷூ அகிலேஷூ ச ஆத்மனக -ஸ்ரீ மத பாகவதம் –
விஷ்டப்யாஹம் இதம் க்ருத்ஸ்னம் ஏகாம்ஷேந ஸ்திதா ஜகத் -ஸ்ரீ கீதை –

ஏகத்வே சாதி நானாத்வம் நாநாத்வே சாதி சைகதா-அசிந்த்யம் ப்ரஹ்மணோ ரூபம் கஸ்தத் வேதிது மர்ஹதி -ஸ்ரீ விஷ்ணு புராணம் –
அனவதிக அதிசய அசங்க்யேய கல்யாண குணம் / ஈஸ்வரஸேஸ்வரன் /பர பிரம்மன் / புருஷோத்தமன் /நாராயணன் /
நிரதிசய ஆச்சர்ய பூதன் / நீலதோயத சங்காக்ஷன் / புண்டரீக தள அமலாயதா ஈஷணன்/ சகஸ்ராம்சு / சகஸ்ர கிரண/
பரம வ்யோம்னி/-யோ வேத நிஹிதம் குஹாயம் பரம வ்யோமன் – ததக்க்ஷரே பரம வ்யோமன் /சர்வ ஸ்வபாவத்வம் /சர்வ சக்தி யோகம் /
ஷக்த்யஹ சர்வ பாவனாம் அசிந்த்ய ஞான கோசாரஹ/ யதோதோ ப்ரஹ்ம நாஸ்தாஸ்த்து சர்காத்யா பாவ
ஷாக்தயகா பவந்தி தபதாம் சிரேஷ்ட பாவ கஸ்ய யதோஷ்ணதா –ஸ்ரீ விஷ்ணு புராணம்
சர்வ வஸ்து விசஜாதீயம்–அனந்த விசித்திர சக்தி
ஜெகதேதன் மஹாச்சார்யம் ரூபம் யஸ்ய மஹாத்மனாக தேன ஆச்சர்ய வரே நாஹம் பவத கிருஷ்ண சங்கதக-ஸ்ரீ விஷ்ணு புராணம்
-அக்ரூரர் –வார்த்தை கண்ணன் -ஆனந்த ஆச்சர்ய சக்தன் –
நிரவத்யம்–குறை ஒன்றும் இல்லாத கோவிந்தன் -ஆஸ்ரித பரான்முகத்தவம் இல்லாதவன்
நிரஞ்சனன் -பற்றிலன் ஈசன் / ஞான ஆனந்த மாயன் /நிர்விகாரன் /நிஷ்கலம் -கலா ரஹிதம் -/
நிஷ்க்ரியம் /ஷாந்தம் /அகில ஹேய ப்ரத்ய நீகன்/ கல்யாணைக தானன்/

நாநாவத்வ நிஷேத ஸ்ருதிகள்
1-நேஹ நாநாஸ்தி கிஞ்சன -ம்ருத்யோஸ்ஸ ம்ருத்யும் ஆப்நோதி யா இஹ நாநேவ பஸ்யதி
2-அஞ்ஞானாத் சம்சாரஹ-ஞானான் மோக்ஷ -யத்ர த்வஸ்ய சர்வம் ஆத்மைவா பூத் தத் கேன கம் பஸ்யத் தத் கேன கம் விஜா நீயாத்
3-யஸ் சர்வஞ்ஞ சர்வவித் யஸ்ய ஞானான்மயம் தப
4-சர்வாணி ரூபாணி விசித்திர தீராஹா நாமானி க்ருத்வாபிவதன் யதாஸ்த்தே
5-சர்வே நிமேஷாஜங்யிரே வித்யுதப் புருஷாதாதி
6-அபஹத பாப்மா விஜரோ விம்ருத்யுஹு விஷோகா விஜிகதஸோ அபிபாசா சத்யகாமஹ ஸத்யஸங்கல்பஹ

ஐக்கிய ஸ்ருதிகள் –
1-சர்வம் கல்விதம் ப்ரஹ்மம் தஜ்ஜாலாநிதி –தஜ்ஜா தல்ல ததன்-கார்ய காரண பாவம் ஐக்கியம் -மண்குடம் போலே –
2-ஐகதாத்மயம் இதம் சர்வம் -ப்ரஹ்மாத்மகம் அனைத்தும்
3-ஏகஸ்மின் பஹுதா விசசார-

பேத ஸ்ருதிகள்
1-ப்ருதக் ஆத்மாநம் ப்ரேரிதாரம் ச மத்வா
3-பிரஜாபதி அஹமயத ப்ரஜாகா ஸ்ருஜேயேதி
4-பதிம் விஸ்வஸ்ய ஆதமேஸ்வரம் சாஸ்வதம் சிவம் அச்யுதம்
5-தம் ஈஸ்வராணாம் பரமம் மகேஸ்வரம் தம் தேவதானம் பரமம் ச தைவதம்
6-ஸர்வஸ்ய வஸீ ஸர்வஸ்ய ஈஸாநஹ –

சரீராத்மா பாவ ஸ்ருதிகள் –விசிஷ்டாத்வைதம்- பிரதான பிரதிதந்ரார்த்தம் –
1-அந்தப் ப்ரவிஷ்டா சாஸ்தா ஜனானாம் சர்வாத்மா -நியாந்தா அநு மந்தா
2-ஏஷ தா ஆத்மா அந்தர்யாமி அம்ருதக
3-யஸ்ய பிருத்வி சரீரம் யஸ்ய ஆபஸ் சரீரம் யஸ்ய தேஜஸ் சரீரம் -யஸ்ய அவ்யக்தம் சரீரம் யஸ்ய அக்ஷரம் சரீரம் யஸ்ய ம்ருத்யுஸ் சரீரம்
யஸ்ய ஆத்மா சரீரம் -அவ்யக்தம்-பிரகிருதி தசை மஹா சிருஷ்டிக்கு முன்பு -பிரக்ருதிக்கும் மஹானுக்கும் இதைப் பட்ட அவஸ்தை
– அக்ஷரம் -பிரக்ருதியில் ஒட்டிக் கொண்டு இருக்கும் -ஜீவ சமூகம் / மிருத்யு அசித் சமூகம்
ஓதுவார் ஒத்து எல்லாம் இவ்வுலகத்து எவ்வையும் சாதுவாய் நின் புகழின் தகையல்லால் பிரிது இல்லை
போது வாழ் பூனம் துழாய் முடியினாய் பூவின் மேல் மாது வாழ் மார்பினாய் என் சொல்லி யான் வாழ்த்துவனே -திருவாய் -3-1-6-

அவிகார ஸ்ருதிகள் -ப்ரஹ்மத்துக்கு ஸ்வரூப விகாரம் இல்லை என்றும் / நிர்குண ஸ்ருதிகள் ப்ரக்ருத ஹேய குண நிஷேதம் /
நாநாத்வ நிஷேத ஸ்ருதிகள் -சரீர தயா பிரகார பூதங்கள் என்றும் ஸ்வதந்த்ர வஸ்துக்கள் நிஷேதமும் /
சர்வ விலக்ஷணத்வம் -சர்வ சேஷித்வ -சர்வ கல்யாண குண ஆஸ்ரயத்வ–சத்யகாமத்தவ -சத்யசங்கல்பத்வ-
பேத அபேத கடக ஸ்ம்ருதிகள் சர்வம் சமன்வயம் –
பேத ஸ்ருதிகள் -ஆத்ம பரமாத்மா ஸ்வரூப பேதம் சொல்ல வந்தவை –
அப்ருதக் சித்த பிரகார பிரகாரி சரீராத்மா பாவம் சொல்ல வந்தவை அபேத ஸ்ருதிகள் –
மழுங்காத வைந்நுதிய சக்கர நல் வலத்தையாய் தொழும் காதல் களிறு அளிப்பான் புள்ளூர்ந்து தோன்றினையே
மழுங்காத ஞானமே படையாக மலருலகில் தொழும்பாயார்க்கு அளித்தால் உன் சுடர்ச் சோதி மறையாதே –திருவாய் -3-1-9-
தத் த்வம் அஸி–ஸ்வேதகேது –தஸ்ய தாவதே ஏவ சிரம் -ஐக்கிய ஞானமே பரம புருஷார்த்த லக்ஷண மோக்ஷம் என்பர் அத்வைதிகள் -என்றால் –
ப்ருதக் ஆத்மாநம் ப்ரேரி தாரம் ச மத்வா ஜுஷ்டஸ் ததஸ் தேன அம்ருதத் வாமேதி-என்று பேத ஞானம் வந்து உபாசனமே மோக்ஷ சாதனம் -என்கிறதே –
ஸத்வித்யா பிரகரண ஸ்ருதி -தத் த்வம் அ ஆஸி -சத் ப்ரஹ்மம் -ஜகாத் காரணம் -உபாசனம் -யுக்தம் தத் குணக உபாஸனாத் –
யத்யபி ஸச் சித்தாக ந நிர் புகுண தைவதம் குண கணாம் மனசா அநு தாவேத்–ததாபி அந்தர் குணாம் ஏவ தேவதாம் பஜதே இதி தத்ராபி ச குணைவ தேவதா ப்ராப்யதே —
சத்குண உபாசனனுக்கும் குணங்கள் அந்தர்பூத்தம்/ தரவித்யா நிஷ்டன் கல்யாண குணங்களை அனுசந்தித்து உபாசிக்கிறான்
இருவருக்கும் ஒரே ப்ரஹ்மமே ப்ராப்யம் –
வகையால் மனம் ஒன்றி மாதவனை நாளும் புகையால் விளக்கால் புது மலரால் நீரால் -திசை தோறு அமரர்கள் சென்று இறைஞ்ச நின்ற தொகையான சரணம்
அவ்யவஹித உபாயம் பிரபன்னனுக்கு -பரம்பரையா உபாயம் உபயாந்தர நிஷ்டனுக்கு -இருவருமே சகுன ப்ரஹ்மத்தையே உபாயமாக பற்றுகிறார்கள் –
ப்ரஹ்மாவுக்கு நியந்த்ருத்வம் இருக்குமானால் ஆத்மா ஸ்வ வசம் இல்லாத போது சாஸ்திரங்கள் விதி நிஷேதங்கள் சொல்லுவான் என் என்னில்-
ஏஷ ஏவ ஸத் கர்மா காரயதி தம் யமேப்யோ லோகேப்ய உன் நீஷதி -ஏஷ ஏவ அஸத் கர்மா காரயதி தம் யம் அதோ நி நீஷதி
வைஷம்யம் நைர்க்ருண்யம் -தோஷங்கள் வருமே என்றால்
ப்ரேரிதா சாஸ்தா நியாந்தா என்பது -அனுமந்தா -உபேக்ஷகனானாய் இருந்து -அனுமதி பண்ணுகிறார் என்றவாறு -உதாசீனம் என்றவாறு –
ஸ்வயம் ஏவ அதி மாத்திரம் அநு கூல்ய ப்ரவர்த்தகராய் இருந்தால் மகிழ்கிறான் -கல்யாணகுண புத்தி யோகம் அருள்கிறான் –
தேஷாம் சதத யுக்தானாம் பஜதம் ப்ரீதி பூர்வகம் தாதாமி புத்தி யோகம் தம் யேந மாம் உபாயந்தி தே -ஸ்ரீ கீதை
தேஷாம் ஏவ அநு கம்பார்த்தம் அஹம் அஞ்ஞானம் தமஹ நாஷயாமி ஆத்மா பாவஸ்தோ ஞான தீபேந பாஸ்வதா -ஸ்ரீ கீதை
தானஹம் த்விஷதாக க்ரூரன் ஸம்ஸாரேஷூ நராதமான் ஷிபாம்யஜ சிரமஷுபான் அசுரேஷ் ஏவ யோனிஷு -ஸ்ரீ கீதை –
ஆனயேநம் ஹரி சிரேஷ்ட தத்தம் அஸ்ய அபாயம் மயா விபீஷனோவா சுக்ரீவ யதிவா ராவண ஸ்வயம் -என்று அருளிச் செய்தாரே பெருமாள்
உணர்வில் உம்பர் ஒருவனை அவனது அருளால் உறல் பொருட்டு என் உணர்வின் உள்ளே இறுத்தினேன் அதுவும் அவனது இன்னருள் –திருவாய் -8-8-3-
ஸ்ருஷ்ட்டி அவதாராதி முகத்தால் பண்ணின கிருஷி -சாமான்ய கிருபை -ஆழ்வார் தம்மை பிரகாரமாக சுவீகரித்துக் கொண்டது
அவன் செய்து அருளினை உபகார பரம்பரைகளைப் பார்த்தால்–அந்த ஸுஹார்த்த கடலை பார்த்தால் –
ஒன்றும் இல்லாதது போலே அன்றோ என்பதால் -அதுவும் அவனது இன்னருள் என்கிறார்
சுவீகாரம் தானும் அவனாலே வந்தது ஸ்ருஷ்ட்டி அவதாராதி முகத்தால் பண்ணின கிருஷி -பலன் -ஸ்ரீ வசன பூஷணம் –
மா முனிகள் வியாக்யானம் ஆழ்வார் பிரகாரமாக சுவீகாரம் செய்ததால் பெற்ற பேறு நம் அனைவருக்கும் கிட்டும் என்கிறார் நாமும் சுவீகரித்தால் –
பாபாப் பிரஞ்ஞாயாம் நாஷயதி க்ரியமானம் புநப் புனக
புண்யாப் பிரஞ்ஞாயாம் வர்த்தயதி க்ரியமானம் புனப் புனக
கர்மத்தால் செய்கிறோம் என்ற தப்பான உணர்வு –
விலக்ஷணத்வாதி அதிகாரணம் -2-1-3-ஸ்ரீ பாஷ்யம் -தர்க்கோ ஹி நாம அர்த்த ஸ்வபாவ விஷயேந வா ஸாமக்ரி விஷயேந வா
நிரூபநேந அர்த்த விசேஷ பிரமாணம் வியவஸ்தாபயத் தத் இதி கர்த்தவ்யதா ரூபம் ஊகம் அபர பர்யாயம் ஞானம்
ஆகாசம் அசக்க்ஷூ ஷாம் நிரூபத்வாத் –
கர்த்தா சாஸ்திர அர்த்த வத்வாத் -என்பதால் பர ப்ரஹ்மமோ கர்மாவோ கார்யம் செய்ய தூண்டுவது இல்லை -ஜீவ ஸ்வாதந்திரமே -என்றவாறு
சரீரம் அசாதாரண காரணம் இல்லை என்றால் கர்மம் சரீரம் இல்லாமல் பலன் கொடுத்தால் என் என்னில்
அப்ரம் பூத்வா மேகோ பவதி மேகோ பூத்வா ப்ரவர்ஷதி தைஹா வரீஹீய வா ஒளஷதி வனஸ்பதயக தில மாஷா இதி ஜாயந்தே -சாந்தோக்யம்
அக்ஷரத்தில் இருந்து ஜீவன் -மேகம் இல்லா ஆகாசம் -அப்ரம்-அங்கு இருந்து மேகம் உள்ள ஆகாசம் -மழை-நெல் இத்யாதி உடன்
ஜீவன் கலந்து -முக்கிய ஆத்மாவாக இல்லாமல் -சுக துக்கம் அனுபவிக்காமல் -கர்மா மூட்டைகள் உடன் -இவற்றுள் கலந்து –
அதோ வை கலு துஷ் நிர் ப்ரபதாஸ்-உத்பூத இந்திரிய ஆஸ்ரய சரீரத்துக்குள் புகுவது அரிது என்றவாறு
அப்பொழுது தானே போகம் அனுபவிக்க முடியும் –
இத்தை சாந்தோக்யம் -நஹவை ச சரீரஸ்ய சாதக ப்ரிய அப்ரியோர் அபஹதிரஸ்தி அசரீரம் வா வசந்தம் ந ப்ரிய அப்ரியஸ் ஸ்ப்ருஷாதக-என்று
சரீரம் இருக்கும் வரை சுக துக்கம் அனுபவிப்பான் -சரீரம் தொலைந்தால் சுக துக்கம் தொடாது என்கிறதே –
வர்ணாஸ்ரம -நித்ய நைமித்திக கர்மாக்களை பர ப்ரஹ்ம ஆராதனை ரூபத்தால் செய்ய செய்ய-இதுவே கர்மா யோகம்
-மனஸ் சுத்தி பெற்று–விஷயாந்தர ப்ராவண்யங்களை ஒழித்து – பக்தி ஆரம்ப விரோதிகளை போக்கி -இதற்கும் பிரபத்தி -அங்க பிரபத்தி –
ஆத்மாத்மீயங்களை சமர்ப்பித்து–சீலமில்லா சிறியேன் -எறாளும் இறையோன் -திருவாய்மொழி
அவன் விரும்பின வழியாலே காணும் ஆத்ம வஸ்துவை விரும்ப பிராப்தி உள்ளது -இங்கண் விரும்பாத அன்று பழைய தேஹாத்ம அபிமானத்தவ உபாதியாம் இ றே
நதேகம் நபிராணன் நச சுகம் அசேஷ அபிலஸ்திதம் நச ஆத்மாநம் ந அந்யத் கிமபி த்வ சேஷத்வ விபவாத் பஹிர்பூதம் நாத
க்ஷணம் அபி சஹே யாது ஷததா வி நாசம் தத் சத்யம் மது மதன விஞ்ஞாபனம் இதம் -ஸ்தோத்ர ரத்னம் -அவன் உகந்த சேஷத்வமே பிரதானம் –
உபய பரிகர்மித ஸ்வாந்த்தஸ்ய ஐகாந்திக அத்யந்திக பக்தி யோக லப்ய-ஆளவந்தார்
வித்யாம் ச அவித்யாம் ச யஸ் ததா வேத உபாயம் சக அவித்யா ம்ருத்யம் தீர்த்தவா வித்யா அம்ருதம் அஸ்நுதே-
வித்யாம் -ஞான யோகம்-பக்தி ரூபா பன்ன ஞானம் -த்யானம் / அ வித்யா கர்மா யோகம்–வர்ணாஸ்ரம ஆச்சாரம் /அம்ருதம் -மோக்ஷம்
இயாஜா சோபி சுபஹூன் யஜ்ஜான்–வ்யபாஸ்ராயக ப்ரஹ்ம வித்யாம் அதிஷ்டாயா தரத்தும் ம்ருத்யும் அவித்யா -ஸ்ரீ விஷ்ணு புராணம்
தமேவம் வித்வான் அம்ருத இஹ பவதி நான்யப் பந்தா அயனாய வித்யதே
ய ஏநம் விதுர அம்ருதாஸ்தே/ப்ரஹ்ம விதா ஆப்நோதி பரம் /ப்ரஹ்ம வேத ப்ரஹ்மைவ பவதி /வேதனம்- த்யானம்- நிதித்யாசித்வய -உபாசனம் பக்தி என்றவாறு

நாய மாத்மா ப்ரவசநேந லப்யக ந மேதயா ந பஹுனா ஸ்ருதேன-யமே வைஷ வ்ருணுதே தேந லப்யஹ தஸ்யைஷ ஆத்மா விவ்ருணுதே தநூம் ஸ்வான்
நாயமாத்மா -என்று பரமாத்மாவை -ஆத்மா வாரே த்ரஷ்டவ்யோ ஸ்ரோதவ்யோ மாந்தவ்யோ நிதித்யாசிதவ்யோ
த்ரஷ்டாவ்யோ -தரிசன சாமானாகார சாஷாத்காரம்
நாய மாத்மா ப்ரவசநேந லப்யக -இங்கே பிரவசனம் -மனனம் என்றவாறு -மனனத்தால் கிட்ட முடியாது /
ந மேதயா -கேவல தியானத்தால் கிட்ட முடியாது /ந பஹுனா ஸ்ருதேன-சாஸ்த்ரங்களால் அறிய முடியாது /
-யமே வைஷ வ்ருணுதே தேந லப்யஹ-அவனால் சுவீகரிக்கப் பட்டவன் அறிகிறான் -ப்ரியாத்மா ஏவ ஹி வரனியோ பவதி -யஸ்யாயம் நிரதிசய ப்ரியக தே ஏவ வரனியோ பவதி –
தஸ்யைஷ ஆத்மா விவ்ருணுதே தநூம் ஸ்வான் -தானே தனது திவ்ய மங்கள விக்கிரகத்தை அவனுக்கு காட்டி அருளுகிறார் –
பக்தி ரூபா பன்ன அநு த்யாநேநைவ லப்யத -மயர்வற மதி நலம் அருளுவான் /பர பக்தி / பர ஞானம் /பரம பக்தி –
சுமந்து மா மலர் நீர் சுடர் தூபம் கொண்டு அமர்ந்து வானவர் வானவர் கோனோடும் நமன்று எழும் திருவேங்கடம்
நங்கட்கு சமன் கொள் வீடு தரும் தடம் குன்றமே -சாம்யா பத்தி மோக்ஷம் / ஸ்வரூப அநு ரூப புருஷார்த்தம் –
-திருமலை போலவே நாமும் கைங்கர்யம் செய்யப் பெறுவோம்
பிதேயதே ஹ்ருதய கிரந்தி சித் யந்தே சர்வ சம்ஷயக ஷீயந்தே சாஸ்யா கர்மாணி தஸ்மிந் த்ருஷ்டே பராவரே
பரிபூர்ண ஞானம் -ஸ்ருதேஸ் து சப்த மூலத்வாத் –
வாள் நுதல் இம் மாதராள் உம்மைக் காணும் ஆசையால் நைகின்றாள் விறல் வாணன் ஆயிரம் தோள் துணித்தீர் உம்மைக் காண நீ இரக்கம் இலீரே
இரக்கமே உபாயம் -உனக்கு போக்யதை கொடுக்க வேண்டிய இவள் நெற்றி உனக்கு அனாதர ஹேது ஆகிறதே –என்று நைகிறாள்-

புருஷச பரப் பார்த்தா பக்த்யா லப் யஸ்து அந்யயா பக்த்யாது அநந்யயா ஸக்ய அஹம் ஏவம் விதோ அர்ஜுன
ஞாதும் த்ருஷ்டும் ச தத்வேன பிரவேஷ்டும் ச பரந்தப
பக்த்யா மாம் அபி ஜானாதி யாவான் யச்சாஸ்மி தத்வதக ததோ மாம் தத்வதோ ஞானீத்வா விஷதே ததநனந்தரம்
பக்த்யா -பர பக்தி-சாஷாத்கார அபி நிவேசம் -ஆவல் மூலம் -/-அபி ஜானாதி -பர ஞானம்-சாஷாத்காரம் /மேல் பரம பக்தி –
வர்ணாஸ்ரம ஆச்சாரவதா புருஷேண பரப் புமான் விஷ்ணுர் ஆராத்யதே பந்தா நான்யஸ் தத் தோஷ காரகஹ -பராசரர்
ஞான பூர்வக கர்மா அனுஷ்டானங்கள் -ஸூவ கர்மா நிரதஸ் சித்திம் யதா விந்ததி தாச்ச்ருணு –
யதப் ப்ரவ்ருத்திர் பூதானாம் ஏந சர்வம் இதம் ததம் ஸ்வ கர்மணா தமபியர்ச்ச சித்திம் விந்ததி மானவ-ஸ்ரீ கீதை-
போதாயனர் -விருத்தி கிரந்த கர்த்தா / டங்கர் -ப்ரஹ்ம ஸூ த்ர வாக்யகாரர் -சந்தோக்யம் அருளியவர் /
த்ரமிதர்-வியாக்கியான கர்த்தா ப்ரஹ்ம சூத்ரத்துக்கும் சாந்தோக்யத்துக்கும் / காட்டிய ஸச் சம்ப்ரதாயம் –
யா வேத பாஹ்யாஸ் ஸ்ம்ருத்யஹ யச்ச கச்ச குத்ருஷ்டயக ஸர்வாஸ்தா நிஷ் பலப் ப்ரேத்ய தமோ நிஷ்டா ஹி தாஸ் ஸ்ம்ருதாகா–மனு
பாஹ்யா குத்ருஷ்டய இதி த்வித யேபி அபாரம் கோரம் தாமஸ் சமூபயந்தி நிஹேஸாஸேதான் ஜஃகஸ்ய கானன ம்ருகைர்
ம்ருக திருஷ்ணி கேத் சோஹோ காஸார சத்வ நிஹத்ஸ்ய சா கோ விசேஷக -ஸ்ரீ வைகுண்ட ஸ்தவம் –
பாஹ்ய குத்ருஷ்டிகளை -இரண்டு மான் -ஓன்று கானல் நீருக்கும் ஓன்று முதலை உள்ள குளத்துக்கு போவது போலே அன்றோ –
சங்கீர்ணகா சாத்விகாம் சச்சைவ ரஜஸ் தமஸ் ததா –யஸ்மின் கல்பே து யத் ப்ரோக்தம் புராணம் ப்ராம்ஹணா
புரா தஸ்ய து மஹாத்ம்யம் தத்வ ரூபேண வர்ணயதே — மத்ஸ்ய
அக்னேஷ் சிவசிய மஹாத்ம்யம் தாமசேஷு ப்ரகீர்த்யதே-ராஜசேஷூ ச மஹாத்ம்யம் ப்ராம்மணோ விதுஹு
சாத்விகேஷ் வத கல்பேஷூ மஹாத்ம்யம் அதிகம் ஹரேஹே -தேஷ்வ ஏவ யோக சம்சித்தாஹா கமிஷ்யந்தி பராம் கதிம்
சங்கீரணேஷூ சரஸ்வதியாஹா பித்ரூணாம் –இத்யாதி –
-பிரகிருதி மண்டலத்தில் இருப்பதால் -குண சேர்க்கை -பிரமனுக்கு உண்டே -முதல் ஷேத்ரஞ்ஞன்
ந தத் அஸ்தி ப்ருதிவ்யாம் வா திவி தேவேஷு வா புநக சத்வம் ப்ரக்ருதி ஜைர் முக்தம் யதேபிஸ்யாத் த்ரி பிர் குணைஹி -ஸ்ரீ கீதை
யோ ப்ரம்ஹாணம் விதாதாதி பூர்வம் யோவை வேதாம்ச்ச ப்ரஹிநோதி தஸ்மை தம்ஹ தேவம் ஆத்மபுத்தி பிரசாதம்
முமுஷுக்வை சரணம் அஹம் ப்ரபத்யே -ஸ்ருதி -நான்முகன் முதல் ஜீவாத்மா -பூவில் நான் முகனைப் படைத்த தேவன் –
சாத்விக புராணங்கள் பிரபல பிரமாணம்
சத்வாத் சஞ்சாயதே கிஞ்சித் ரஜசோ லோப ஏவ ச பிரமாத மோஹவ் தாமஸஹ பவதோ அஞ்ஞானம் ஏவ ச -ஸ்ரீ கீதை –
ப்ரவ்ருத்திம் ச நிவ்ருத்திம் ச கார்ய அகார்யே பய அபய பந்தம் மோக்ஷம் ச யா வேத்தி புத்திஸ் ச பார்த்த சாத்விகீ-ஸ்ரீ கீதை =
யாதாஹேவைஷ ஏதேஸ்மின் நிருக்குதே நிலயனே அபயம் ப்ரதிஷ்டாம் விந்ததே அதஸஹ அபயம் கதோ பவதி
யாதாஹேவைஷ ஏதேஸ்மின் உதரமந்த்ரம் குருதே அத தஸ்ய பயம் பவதி -ஸ்ருதி
யயா தர்மம் அதர்மம் ச கார்யம் ச அகார்யம் ஏவ ச அயாதாவத் பிரஜா நாதி புத்திஸ் ச பார்த்த ராஜஸீ
அதர்மம் தர்மம் இதி ய மன்யதே தமஸா வ்ருத்தா சார்வார்த்தம் விபரீதாம் ச்ச புத்திஸ் ச பார்த்தா தாமஸீ
கதயாமி யதா பூர்வம் தக்ஷா தைர் முனி சத்தா மைஹி புருஷப் ப்ரோவாச பகவான் அவ்யயோநிப் பிதா மஹா –பராசர மைத்ரேயருக்கு –
உத்பத்திம் ச வி நாசம் ச பூதா நாம் ஆகதிம் கதிம் வேதி வித்யாம் அவித்யாம் ச ச வாசேயோ பகவான் இதி –

நாராயணனே பர ப்ரஹ்மம் -ஸ்தானம் மேலும் – –
ப்ராணம் மனசி சக கரணைஹி நாதாந்தே பராத்மனி சம் பிரதிஷ்டாப்ய த்யாயீத ஈஸானாம் பிரத்யாயீத ஏவம் சர்வம் இதம்
ப்ரஹ்ம விஷ்ணு ருத்ர இந்த்ரஸ்தே சர்வே சம்ப்ரஸூயந்தே –ந காரணம் –காரணம் து த்யேயஹ-
ஈசானா -நியமிக்கிறவன் -இங்கே விஷ்ணு அவதாரம் நாராயணனே என்கிறது ஒழிய உத்பத்தியை சொல்ல வில்லை –
ந காரணம் காரணானாம் தாதா த்யாதா காரணம் து த்யேக -தாதா-நான்முகன் / த்யாதா-ருத்ரன் /-காரணன் யார் என்கிறது மேல் –

சர்வைஷ்வர்ய சம்பன்னஹ சர்வேஸ்வரஹ சம்பூஹு ஆகாஷா மத்யே தேயகா-
யஸ்மாத் பரம் ந அபரம் அஸ்தி கிஞ்சித் -யஸ்மான் நாநீயோ நஜ்யோஷ்தி கஸ்சித் வ்ருக்ஷ ஏவ ஸ்தப்தோ திவி த்ரிஷ்டதி ஏகக-
சர்வைஷ்வர்ய சம்பன்னஹ சம்புஹு -சம்–ஸூ கம் -மோக்ஷ பிரதன்-சிவனுக்கும் மங்களம் அருளினவன் என்றவாறு –

தேநேதாம் பூர்ணம் புருஷேந சர்வம் -ததா யத் உத்தரார்த்தம் தத் அரூபம் அநாம்யம் ஏதத் விதுர்
அம்ருதாஸ்தே பவந்தி -அதேதரே துக்கம் ஏவாபி யந்தி –கர்மக்ருத சரீரம் இல்லாதவன் என்றவாறு -ததான்ய பிரதிஷேதாத் -ஸ்ரீ ப்ரஹ்ம ஸூ தரம் –(3.2.35).

சர்வானன ஸீரோ க்ரீவஹ சர்வ பூத குஹா ஷயக சர்வ வியாபி ச பகவான் தஸ்மாத் சர்வ கதஸ் சிவ
சிவ -மங்களம் -சர்வாந்தராத்மாவாக இருந்தாலும் வியாப்த கத தோஷம் தட்டாதவன் –

யதா தமஹ தத் ந திவா ந ராத்ரிஹி ந சத் ந ச அஸத் சிவ ஏவ கேவலக தத் அக்ஷரம் தத் ஸவிதுர் வரேண்யம்
பிரஞ்யா ச தஸ்மாத் ப்ரஸ்ருதா புராணே –அவன் ஒருவனே மங்களம் -கர்ம வசியன் இல்லை என்கிறது –

வேத வித் ப்ரவர ப்ரோக்த வாக்ய நியாய உப ப்ரும்ஹி தாகா-வேதாஸ் சாங்கா ஹரிம் ப்ராஹூஹூ ஜகத் ஜென்மாதி காரணம்
ஜன்மாத்யஸ்ய யதாக -2-ஸூ த்ரம்-யதாக அஸ்ய ஜெகதக ஜென்மாதி தத் ப்ரஹ்ம -தைத்ரிய உபநிஷத் படியே
யாதோ வா பூதாநி ஜாயந்தே ஏந ஜாதானி ஜீவந்தி யத் பிரயந்தி அபிஷம்விசந்தி தத் விஞ்ஞன்யஸ்வ தத் ப்ரஹ்ம
பிரகரணம் -பரஸ்பர ஆகாங்ஷயுக்த வாக்ய சமுதாயம் –
சதேவ சோம்ய இதம் அக்ர ஆஸீத் ஏக மேவ அத்விதீயம் -என்று உபாதான நிமித்த அந்தர்யாமி சொன்ன அந்த பர ப்ரஹ்மமே -சத் -சப்தத்தால் சொல்லப் பட்டு
ப்ருஹதாரண்யகம் -ப்ரஹ்ம வா இதம் ஏக ஏவ அக்ரே -என்று ப்ரஹ்ம -சப்தத்தால் சொல்லி
ஐத்ரேய உபநிஷத்தில் -ஆத்மா வா இதம் ஏக ஏவ அக்ரே –என்று ஆத்மா சப்தத்தால் சொல்லி
மஹா உபநிஷத்தில் -ஏகோ ஹா வை நாராயண ஆஸீத் ந ப்ரம்ம ந ஈஸாநக ந இமே த்யாவா ப்ருத்வீ என்று ஆகாசம் பிருத்வி உடன் ப்ரம்ம சிவனை சொல்லிற்றே –
மஹா உபநிஷத் -யம் அந்தக சமுத்ரே கவயக அவயந்தி -அவனே பாற்கடலில் இருப்பதை கவிகள் அறிவார்கள் -என்றும் மேலும்
நாணம் ஊர்த்வம் ந திர்யஞ்சம் ந மத்யே பாரிஜக்ரபத் ந தஸ் ஏஷே கஸ்சன தஸ்ய நாம மஹத்யாஷக ந சந்த்ருஷே த்ருஷ்டதி
ரூபம் அஸ்ய ந சக்ஷுஷக பஸ்யதி கஸ்ச நைனம் ஹ்ருதா மனீஷா மனஸாபிக் லுப்தோ யா ஏநம் விதுர் அம்ருதாஸ்தே பவந்தி -என்று
ந தஸ் ஏஷே கஸ்சன -ஒப்பார் மிக்கார் இல்லாத பராத்பரன்
இவனே -அத்பயஸ் சாம் போதோ ஹிரண்ய கர்பா இதி அஸ்டவ் -இத்தையே புருஷ ஸூ க்தியும்-அத்பயஸ் சாம் பூதாப் பிருதிவியை ரஸாச்சா
–ஹிரண்ய கர்பஸ் சம்வர்த்தத அக்ரே -என்று 8-ரிக்குகளிலே சொல்லிற்று
ஹ்ரீச்ச தே லக்ஷ்மீச் ச பத்நயௌ -என்று ஸ்ரீ யபதித்தவம்-அசாதாரண ஸ்வரூப நிரூபக தர்மம் என்றதே -பூ கார்போ மாதவ -இங்கும் பூமிப் பிராட்டி முதலில் –
ராவனோ நாம துர் வ்ருத்தக ராக்ஷசோ ராஷேஸ்வரஹ தஸ்ய அஹம் அவரோ ப்ராதா விபீஷண இதி ஸ்ருதக-
விபீஷணன் தனது ஆகிஞ்சன்யம் அநந்ய கதித்வம் சொல்லிக் கொண்டானே பெருமாள் இடம்
ந சந்த்ருஷே திஷ்டதி ரூபம் அஸ்ய ந சக்ஷுஷா பஸ்யதி கச்ச நைனம் பக்த்யா ச துருத்யா ச ஸமாஹிதாத்மா ஞான ஸ்வரூபம் பரிபாஷ்யதீக -மஹா பாரதம்
ஞாலத்தூடே நடந்து இருந்தும் கிடந்து இருந்தும் சாலப் பல நாள் உகந்தோர் – யுகம் தோர்- -உயிர்கள் காப்பானே
கோலத் திரு மா மகளோடு உன்னைக் கூடாதே
கட்கிலி உன்னை -ந சந்த்ருஷே திஷ்டதி ரூபம் அஸ்ய ந சக்ஷுஷா பஸ்யதி கச்ச நைனம்-
பார் என்னும் மடந்தையை மால் செய்கின்ற மால் -ஹ்ரீச்ச தே லக்ஷ்மீச் ச பத்நயௌ –
அவனே அவனும் அவனும் அவனும் -ச ப்ரம்ம ச சிவ சேந்த்ரஸ் சோக்ஷராப் பரமஸ் ஸ்வராட்-நாராயண அநுவாகம் -சஹஸ்ர ஷீர்ஷம் தேவம் –
நாராயண பரம் ப்ரஹ்ம தத்வம் நாராயணப் பர நாராயண பரஞ்சோதிர் ஆத்மா நாராயண பர — நாராயண அநுவாகம்
யச்ச கிஞ்சித் ஜகத் யஸ்மின் த்ருஷ்யதே ஸ்ரூயதே பி பா அந்தர் பஹிச்ச தத் சர்வம் வியாப்ய நாராயண ஸ்திதஹ
லிங்க பூயத்வாத் தத் -குண விசிஷ்டா நாராயணனே உபாஸ்யம்
பதிம் விஷ்வஸ்ய ஆதமேஸ்வரம் -மிகு நர் இல்லாதவன் -சகஸ்ர ஷீர்ஷம் தேவம் விஷுவாக்க்ஷம் விஷ்வா சம்புவம்
-சர்வ ஐஸ்வர்ய சம் பன்னஹா சம்புர் ஆகாச மத்யே த்யேயக –
புருஷோத்தமன் –புரு சனோதி இதி புருஷஹ-சத்வ குண யுக்தன் -பூர்வ சத் பாவ யுக்தன் – புரீ ஷேதே இதி புருஷ —
யஸ்மாத் பரம் ந அபரம் அஸ்தி கிஞ்சித் -யஸ்மான் நாநீயோ நஜ்யாயோ அஸ்தி கச்சித் –

அரூபம் -கர்மக்ருத ப்ரக்ருதி சம்பந்த ரஹிதம் / அநாமயம்-தத்க்ருத துக்காதி சம்பந்த ரஹிதம்
அவன் வந்து அவதரிக்கிலும் சோக போகங்களை பண்ணும் இவ்விடம் -பர அபேதஸ்ய ஹி கர்மனோ போகாதாதேவ ஷயக
-ப்ராரப்த கர்மம் குறைய சோக துக்கங்கள் அனுபவிக்க வேண்டுமே
யோ ஏதத் விதுகு அம்ருதாஸ்தே பவந்தி -அத இதர துக்கம் ஏவாபி யாந்தி
சர்வானான ஷிரோ க்ரீவக சர்வ பூத குஹா ஷாயக சர்வ வியாபி ச பகவான் தஸ்மாத் சர்வ கதாஷ் சிவ ப்ராரப்தஸ்ய ஹி
கர்மனோ போகாதாத் ஏவ ஷயக -சிவ -மங்களகரன் என்றவாறு –
புருஷோத்தமன் -சர்வ குண பூர்ணத்வம் /புரீ க்ஷயத்வம் /பூர்வ சத் பாவத்வம் /புரு தானத்வம்-சாஸ்வதம் சிவம் அச்யுதம் –
தீர்த்தன் உலகு அளந்த சேவடி மேல் பூந்தாமம் சேர்த்தி அவையே சிவன் முடி மேல் தான் கண்டு பார்த்தன் தெளிந்து ஒழிந்தான் -2-8-6-
சப்த சக்திம் பங்க்த்வா பங்க்த்வா லோக வியாவாரக க்ரியதே –எல்லா சப்தங்களும் அவன் அளவு போக வேண்டி இருக்க
லோக வியாபாரம் போலே சிவனுக்கே சொல்லுகிறார்களே -வேத அபஹார குரு பாதக தைத்ய பீடாதி ஆபாதி விமோசன மஹிஷ்ட
பல பிரதா நைஹி கோன்யப் பிரஜா பசுபதி பரிபாதி கஸ்ய பாதோத கேன ச சிவஸ் ஸ்வ ஷிரோதுரதேந –
பாவ நார்த்தம் ஜடா மத்யே யோக்யோஸ் மேதி அவதாரநாத்–ஈஸ்வர சம்ஹிதையில் தானே சொல்லிக் கொண்டானே –
அத சப்த அநு ஷாசனம் -ஆஸீகி -நமஸ்க்ரியா -வஸ்து நிர்தேசம் -அ -இதி பகவதோ நாராயணஸ்ய பிரதம அபிதானம் -அகார வாச்யன் -ஸ்ரீ மன் நாராயணன்
அஹம் க்ருத்ஸ்நஸ்ய ஜெகதக ப்ரபாவக ப்ரளயகா ததா மத்தாக பரதரம் நான்யத் கிஞ்சித் அஸ்தி தனஞ்சய -ஸ்ரீ கீதை –
அக்ஷராணாம் ஆகாரோ அஸ்மி –அ இதி ப்ரஹ்ம / அகாரோ வை சர்வ வாக் /
சாஸ்திர த்ருஷ்ட்யா து உபதேஷோ வாமதேவாத் –
திவோதாசன் பிள்ளை பிரசர்தனன் -இந்திரன் -மாம் உபாசவ அந்தர்யாமி -போலே –
சகல வித்யா வேதனமும் அவித்யா பிரவர்த்த கத்வாதிகளும் நான் இட்ட வழக்கு -கற்கும் கல்விகள் எல்லாம் நானே என்னும் -5-6-2-
ஆத்மேதி து உபகச்சாந்தி க்ராஹ்யந்தி ச -ஜன்மாந்தர சகஸ்ரேஷு தபோ ஞான சமாதிபிஹி நாரணம் ஷீணபாபா நாம் கிருஷனே பக்தி ப்ரஜாயதே –
பீஷாஸ்மாத் வாதப் பவதே -பீஷோ தேதி ஸூ ர்யக பீஷாஸ் மாத அக்னி ச்ச இந்த்ரச்ச ம்ருத்யுர் தாவதி பஞ்சம இதி –தைத்ரியம்
நாரதர் -ஸநத்குமாருக்கு உபதேசம் -யத்ர நான்யத் பஸ்யதி நான்யத் ஸ்ருனோதி நான்யத் விஜானாதி ச பூமா
-யத்ர அந்யத் பஸ்யதி அந்யத் ஸ்ருனோதி அந்யத் விஜானாதி தத் அல்பம் –
யுவா ஸாத் சாது யுவா அத்யாயகக–ஆ சிஷ்டோ – த்ராதிஷ்டோ -பலிஷ்டக
ஆ சிஷ்டோ — ஆசீர்வாத யுக்தன் -ஆசூதர க்ரியா -ஆசனசீலன் என்றுமாம் –
த்ராதிஷ்டோ-மநோ பல உக்தன் -/ பலிஷ்டக -தேக பல உக்தன் / தஸ்ய ஏவம் பிருத்வீ சர்வ வித்தஸ்ய பூர்ணாஸ் யாத்- ச ஏகோ மனுஷ்ய ஆனந்தோ –
தே ஏ சதா மனுஷ்யம் கந்தர்வானாம் ஆனந்த / பித்ரு தேவன் /ஆஜானஜான தேவன் /தேவன் /இந்திரன் /ப்ருஹஸ்பதி /பிரஜாபதி / ப்ரம்மா
யாதோ வாசோ நிவர்த்தந்தே/ உபரி உபரி அப்ஜே புவோபி பூருஷான் –தயே ஷதம் இதி அநு க்ரமாத் —
மனுஷ்யற்கு தேவர் போலே தேவர்க்கும் தேவாவோ –

வ்யோம அதீதவாதி –சதாசிவ ப்ரஹ்ம வாதம் —
அத யத் இதம் அஸ்மின் ப்ரஹ்ம புரே தஹாரம் புண்டரீகம்
வேஷ்ம தஹரோஸ்மின் அந்தராகாஷக தஸ்மிந் யத் அந்தக தத் அன்வேஷ தவ்யம் தத்வாவ விஞ்ஞானஸ்தவ்யம் –சாந்தோக்யம் -8-1-1-
ஆகாஷோ வை நாம ரூபயோர் நிர்வாஹித தே யத் அந்தரா தத் ப்ரஹ்ம தத் அம்ருதம் ச ஆத்மா –சாந்தோக்யம் -8–14-1-
சர்வாணி ரூபாணி விசித்ய தீரஹ நாமானி க்ருத்வா அபிவாதன் யதாஸ்த்தே-புருஷ ஸூ க்தம்
டங்கர் -ப்ரஹ்மானந்தி-வியாக்யாகரர் –
தரோஸ்மின் அந்தராகாஷக கிம் தத்ர வித்யதே யதான் வேஷ்டவ்யம் யத்வா விஞ்ஞானஸ்தவ்யம் -8-1-2-என்று கேட்டுக் கொண்டு
யாவான்வா அயம் ஆகாஷஹ தவான் ஏஷோ அந்தர் ஹ்ருதய ஆகாஸஹ -8-1-3-என்று ஸ்தூல அருந்ததி நியாயம்
-அனவதிக மஹாத்மம் –சகல ஜகத் ஆதாரம் என்று காட்ட ஆகாச சப்தம்
தஸ்மிந் காமாஹா ஸமாஹிதஹா -8–1–5-அவனுக்குள் கல்யாண குணங்கள் உண்டே -அவற்றோடு கூடிய விசிஷ்ட ப்ரஹ்மமே உபாஸிக்க தக்கவன் என்றதாயிற்று
தஸ்மிந் யதாந்தக காம வியாபதேஷஹா –காமம் -கல்யாண குணம் -ஸர்வஸ்ய ஜகதஹ ஸ்ரேஷ்டருத்வம் ஆதாரத்வம் நியந்த்ருத்வம் சேஷித்வம் -குண அஷ்டகம் –
யத் அந்தக ஒருமையாக உள்ளதே என்னில் -குணி இல்லாமல் குணங்களை எவ்வாறு உபாஸிக்க முடியும் -என்னில்
தத் உபயம் அபி அன்வேஷ்தவ்யம் விஞ்ஞானஸ்தவ்யம் –உயர்வற உயர்நலம் உடையவன் எவன் அவனை உபாஸிக்க
-தெளியாத மறை நிலங்கள் தெளிய பெற்றோமே -ஆழ்வார் கல்யாண குணங்களில் அன்றோ முதலில் ஈடுபட்டு அருளிச் செய்கிறார்
அத யா இஹ ஆத்மாநாம் அநு வித்யா வ்ரஜந்தி ஏதாம்ச்ச சத்யான் காமம் ஸ்தேஷாம் சர்வேஷு லோகேஷு காம சரோ பவதி
-முக்தர் சாம்யா பத்தி -ப்ரஹ்ம வேத ப்ரஹ்மைவ பவதி -யயாதி இந்திரன் -கதை அறிவோம்
ப்ரஹ்ம விஷ்ணு சிவன் -மத்யே விரிஞ்ச கிரிஷாம் பிரதம அவதாரம் –
சக அந்தராதந்தரம் ப்ராவிஷத் –பரமாத்மா ஸூஷ்ம ஜீவாத்மாவுக்குள்ளும் -ருத்ரன் வார்த்தை –
சாஸ்திர த்ருஷ்ட்யா து உபதேஷூ வாம தேவாத்–
சர்வகத்வாத் அநந்தஸ்ய ச ஏவ அஹம் அவஸ்த்திதக-மத்தஸ் சர்வம் அஹம் சர்வம் மயி சர்வம் ஸநாதனே–பிரகலாதன் வார்த்தை
தேச கால வஸ்து பரிச்சேத்ய ரஹிதன் / சர்வ அந்தர்யாமி / சாஸ்வதன் /அஹம் பிரகாரி என்றவாறு
ஆத்மா இதி ஏவ து குருண் ஹீயாத் ஸர்வஸ்ய தன் நிஷ்பத்தேஹே
ஆவிருத்திஅதிகரணம் -4-1-1-அனவரத சிந்தனம் பண்ண வேண்டும் என்று சொல்லி
ஆத்மத்வ உபாசாதி அதிகரணம் -4-1-2-ஆத்ம இதி து உபக்கச்சாந்தி க்ராஹாயந்தி -வாமதேவர் போல்வாரும் இப்படி
அந்தர்யாமியாய் அப்ருக்தக் சித்த ப்ரஹ்மத்தையே உபாசித்தார்கள் –

தவ அந்தராத்மா மம ச ஏ சா அணியே தேஹ சம்ஞநியதியக -பிரமன் ருத்ரனுக்கு மோக்ஷ தர்மம் உபதேசம்
விஷ்ணுர் ஆத்மா பகவதோ பவஸ்யாமித தேஜஸக தஸ்மாத் தநுர்ஜ்யா சம்ஸ்பர்ஷம் ச விசேஷே மகேஸ்வரஹ –ஸ்ரீ விஷ்ணு புராணம் திரிபுரம் தகனம்
வித்யுன்மாலீ–கமலாக்ஷன் -தாரகாஷன் –நான்முகன் கொடுத்த வரத்தால் / பூமி ரதம் –சூர்யா சந்தர் சக்கரம் –வேதங்கள் நான்கு குதிரைகள்
-ப்ரம்மா சாரதி -மேரு தநுஸ்-ஆதி சேஷன் ஆவேச சக்தி நாண் –அக்னி அம்பின் நுனி -வாயு அம்புக்கு சிறகு -மகா விஷ்ணு அம்பு –
யஸ்ய ஆத்மாதாம் திரிபுர பங்க விதாவதாஸ்த்வம் தவச் சக்தி தேஜித ஷரோ விஜயீ ச யோ பூத் -அதிமானுஷ ஸ்தவம்
கடல் ஞானம் செய்தேனும் யானே என்னும் —5-6-
அஹம் க்ருத்ஸ் நஸ்ய ஜகத் ப்ரபவக –
சங்கல்ப விசிஷ்ட ப்ரஹ்மம் -நிமித்த காரணம் / சர்வஞ்ஞா சர்வ சக்திதவ விசிஷ்ட ப்ரஹ்மம் சஹகாரி /ஸூ ஷ்ம சேதன அசேதன விசிஷ்ட ப்ரஹ்மம் -உபாதான காரணம்
வாசகமும் புத்தகமும் பிண்டமும் -இயலும் பொருளும் வஸ்துவும் அவனே
ஸச் சத் அச்சா பவதி -ப்ரஹ்மமே சித்தாகவும் அசித்தாகவும் -என்றது அநு பிரவேசம் மூலம் -ஸ்வரூப ஐக்கியம் அன்று
யானும் நீ தானே ஆவதும் மெய்யே –எனக்கே -8–1–9–பிரகாரம் -ப்ரஹ்ம சப்த வாஸ்யம்
ஏதவ் த்வவ் விபுதாஸ் ஸ்ரேஷ்டவ் பிரசாத க்ரோதாஜவ் ஸ்ம்ருதவ் ததா தர்ஷிதா பந்தா நவ் ஸ்ருஷ்டி ஸம்ஹாரா காரகவ் –
பாஹ்யர் -நிமித்த உபாதேன பேத வாதிகள்
ஜந்மாத் அஸ்ய யதா –அஸ்ய யதா ஜென்மாதி தத் ப்ரஹ்மம் -ஒரே காரணம்
ப்ரக்ருதிச்ச பிரதிஞ்ஞயா த்ருஷ்டாந்த அநு பரோதாத் —
சதேவ சோம்ய இதம் அக்ர ஆஸீத் ஏகம் ஏவ அத்விதீயம்
ப்ரஹ்ம வனம் ப்ரஹ்ம ச வ்ருக்ஷ ஆஸீத் யாதோ த்யாவா ப்ருத்வீ நிஷ்டாதாக்ஷுஹு ப்ரஹ்ம அத்யதிஷ்டாத் புவனானி தாராயன்
சர்வே நிமேஷா ஜக்னி இரே வித்யுதாப் புருஷாதாதி —
ந இஹ நாநா அஸ்தி கிஞ்சன
புருஷ ஏவ இதம் சர்வம் யத் பூதம் யச்ச பவ்யம் –
உத அம்ருதத்வஸ்யா ஈசானாக
நான்ய பந்தா அயனாய வித்யதே
இந்த ஸ்ருதி வாக்கியங்கள் அவனே சர்வ காரணத்வம் -உபாஸ்யத்துக்கு அர்ஹன் என்கிறதே –
கேன ஸ்ருஷ்டம் இதம் சர்வம் ஜகத் ஸ்தாவர ஜங்கமம் பிரளயே ச கம் அபேயேதி தன்மே ப்ரூஹி பிதாமகா-என்று கேட்டதும்
நாராயணக ஜெகன் மூர்த்தி அநந்தாத்ம சனாதனாக -என்றும்
ருஷ்யப் பிதரோ தேவா மஹா பூதாநி தார்த்தவக ஜங்கமா ஜங்கமம் ச இதம் ஜெகன் நாராயண உத்பவம் -என்றும் பீஷ்மரும் அருளிச் செய்தார் –
சர்வ தர்ம சர்வ தத்வ வியவஸ்தை -ஸ்ரீ விஷ்ணு புராணம்
ஜந்மாத் யஸ்ய யதக –தத் விஞ்ஞானஸ் அஸ்வ தத் ப்ரஹ்ம –விஷ்ணோஹோ சகாஷாத் உத்திபூதம்
ப்ரக்ருதிர்யா மயாக் யாதா வியக்த அவ்யக்த ஸ்வரூபேநீ — புருஷாஸ் சபி உபாவேதவ் லீயதே பரமாத்மனி
பரமாத்மா ச ஸர்வேஷாம் ஆதாரக பரமேஸ்வரக விஷ்ணு நாம ச வதேஷூ வேதாந்தேஷூ ச கீயதே –
பெரியாழ்வார் -4-3-11– வேதாந்த விழுப் பொருளின் மேல் இருந்த விளக்கு –நால் இரு மூர்த்தி தன்னை -அஷ்டாக்ஷரம் ஆதார விஷயம்
-நால் வேத கடல் அமுது- பெருமாளுக்கும் திரு ஷ்டாஷரத்துக்கும் -ஏகார்த்த போதகம் -சாமானாதிகரண்யம் –ப்ரதிபாத்ய பிரதிபாதக சம்பந்தம் –
மேல் இருந்த கற்பகம் -ஸ்வர்க்கத்துக்கு மேல் -என்னை ஆக்கிக் கொண்டு எனக்கே தன்னைத் தந்த கற்பகம்
வேதாந்த விழுப் பொருளின் மேல் இருந்த விளக்கு –
சேதன அசேதனங்கள் இரண்டும் பிரகாரமாய் தான் பிரகாரியாய் -ந தத் சமஸ்ய பியதிகஸ்ய த்ருஷ்யதே -என்னும் படி சர்வஸ்மாத் பரனாய் இருக்கை
பெரியாழ்வார் இந்த பதிகம் பலனை ஸ்பஷ்டமாக அருளிச் செய்யாமல் தத்துவார்த்த ஞானமே பலன் என்றவாறு
ஸோஹம் இச்சாமி தர்மஞ்ஞா ஷ்ரோதும் தத்வத்தோ யதா ஜகத் பபூவ பூயஸ்ச்சா யதா மஹா பாக பவிஷ்யதி -என்றும்
யன் மயம் ச ஜகத் ப்ரஹ்மன் யாதாச்ச ஏதத் சராசரம் லீனமாஸீத் யதா யத்ர லய மேஷ்யதி யத்ர ச -என்றும் மைத்ரேயர் கேட்க -பராசரர்
விஷ்ணோஹோ சாஷாத் உத் பூதம் ஜகத் அத்ரைவ ச ஸ்தி தம் ஸ் தி தி சமயமா கர்த்தாசவ் ஜகதோ அஸ்ய ஜகச் சா சக
பரப் பராணம் பரமஹ பரமாத்மா ஆத்ம சம் சித்தக ரூப வர்ணாதி நிர் தேஷ விஷேஷன விவர்ஜிதக
அபக்ஷய விநாசாப்யாம் பரிணாமர்த்தி ஜென்ம அபிஹி வர்ஜிதஷ் ஷகேயதே வக்தும் யக சதாஸ் தீதி கேவலம் சர்வத் ராசவ் சமஸ்தம்
ச வசத்ய தேரதி வை யதக ததஸ்ஸ வாசுதேவாதி வித்வத் பிப் பரி பதேயதே தத் ப்ரஹ்ம பரம் நித்யம் அஜம்
அக்ஷயம் அவ்யயம் ஏக ஸ்வரூபம் ச சதா ஹேய அபாவாச்ச நிர்மலம் ததேவ சர்வம் ஏவைதாத் வியக்த அவ்யக்த ஸ்வரூபவத்
ததா புருஷா ரூபேண கால ரூபேண ச ஸ்திதம் ச சர்வ பூத ப்ரக்ருதிம் விகாரான் குணாதி தோஷம்ச்ச மூனே
வியாதீதக அதீத சர்வா வரணோ அகிலாத்மா தேனாஸ்திருதம் யத் புவநாத்தராலே –
உப ப்ரஹ்மஹனம் நாம அனாதீத வேதஷாகோக்த அர்த்தஸ் சக அதீத சாகார்த்த கதனம்

சர்வம் கல்விதம் ப்ரஹ்ம தஜ்ஜலான் –தஜ்ஜாவத் தல்லாவத் தாதானாவத் இதம் சர்வம் ப்ரஹ்ம கலு
விஷ்ணோ சகாஷாத் உத்பூதம்-தஜ்ஜாத்வம் /ஜகத் அத்ரைவ ஸ்தி தம் -ததனத்வம் /சம்யம கர்த்தா -லய கர்த்தா -தல்லத்வம்-
ஆழ்வார் கலங்கிய நிலையிலும் இதை –ஏறிய பித்தினோடு -4–4–7–கலக்கம் லௌகிக விஷயத்தில் ஒழிய பகவத் விஷயத்தில் இல்லையே
கிருஷ்ண ஏவ ஹி லோகாநாம் உத் பத்தி அபிச்சாப்யக-
ஸ்ரீ விஷ்ணு புராணம்
ஸமஸ்த கல்யாண குணாத்மகோசவ் ஸ்வ சக்தி லேச ஷோத்ருதா பூத வர்க இச்சா கிருஹீத அபிமதோர் தேஹாஹா சம்ஸாதித அசேஷ ஜகதிதோ அசவ் —
தேஜோ பல ஐஸ்வர்ய மஹாவபோதா ஸ்வ வீர்ய சக்த்யாதி குணைக ராஸிஹி பரப் பரானாம் சகல ந யத்ர கிலேஷாதயஸ் சந்தி பராவரேஷே –
ச ஈஸ்வரோ வியஷ்டி சமஷ்டி ரூபக அவ்யக்த ஸ்வரூபோ பறக்காத ஸ்வரூபக ஸர்வேச்வரஸ் ஸர்வதுக் சர்வே வேதா ஸமஸ்த சக்திப் பரமேஸ்வராக்யக –
சம் ஞானாயதே ஏந ததஸ்த தோஷம் சுத்தம் பரம நிர்மலம் ஏக ரூபம் சந்த்ருஷ்ய தேவாபி அதிகம்யதேவா தாஜ் ஞானம் அஞ்ஞானம் அதோ அயன துக்தம் –
தோஷம் -அசித் வியாவருத்தி / சுத்தம் சித் வியாவருத்தி /-பரம நிர்மலம் –முக்த விருத்தி / ஏக ரூபம் -நித்யர் விருத்தி -ஸ்வ தக நிர்மலம்
சந்த்ருஷ்யதே-உபதேச விவேக ஞானம் ஸ்தோத்ரியம் ப்ரஹ்ம நிஷ்டம் –/அதிகம்யதே -ஆகம ஞானம்
இவை ஸ்ரீ விஷ்ணு புராணம் இறுதி -6-அம்சம் இறுதி ஸ்லோகங்கள் –
ஸ்ருஷ்ட்டி ஸ்திதி அந்த காரிணீம் ப்ரஹ்ம விஷ்ணு சிவாத்மிகம் ச சம் ஞானம் யாதி பகவான் ஏக ஏக ஜனார்தனக -பிரகாரம் சரீரம் இவர்கள்
ஸ்ருஷ்டா ஸ்ருஜாதி ச ஆத்மாநம் விஷ்ணுப் பாலயம் ச பத்தி ச உப சம்ஹரியதே சாந்தே சம்ஹ்ரியதே ச ஸ்வயம் ப்ரபுஹு –
ப்ருதிவ்யாபஸ் ததா தேஜக வாயிற் ஆகாச ஏவ ச சர்வ இந்த்ரியர்த்தாத் கரணம் புருஷாக்யம் ஹி யஜகத்
ச ஏவ சர்வ பூதாத்மா விஸ்வ ரூபோ யாதோ அவ்யயக சர்காதிகம் தாதாஸ் யைவ பூதஸ்தம் உபகாரகம்
ச ஏவ ஸ்ருஜ்யஸ் ச ச சர்க கர்த்தா ச ஏவ பாத்யத்தி ச ப்ரளயதே ச ப்ரம்ஹ அத்யாவஸ்தாபிர் அசேஷ மூர்த்திர் விஷ்ணுர் வரிஷ்டோ வரதோ வரேண்யக –
தேவராய் நிற்கும் அத்தேவும் அத்தேவரில் மூவராய் நிற்கும் முது புணர்ப்பும் யாவராய் நிற்கின்றது எல்லாம்
நெடுமால் என்று ஓராதார் கற்கின்றது எல்லாம் கடை —

குமாரிள பட்டர் -வேத ப்ரமாண்யம்-காட்ட -வார்த்த தீபிகை -ஸ்லோக வார்த்திகம் –பட்டர் மீமாம்சை இவரது –
-அவர் சிஷ்யர் பிரபாகரன் -கொஞ்சம் மாற்றி -பிரபாகர் மீமாம்சை
சபரி ஸ்வாமி -ஜைமினி ஸூ த்ர பாஷ்யம் எழுதினர் -அதில்-தத்ர அபி நோக்தம் அத்ரது நோக்தம் விருக்தம் து தத் -என்பதற்கு
அன்வயம் -தத்ர அபி நா யுக்தம் அத்ர துனா யுக்தம் விருக்தம் து தத் -என்று பிரபாகரர் காட்ட குமாரிள பட்டர் அவரை குரு என்றார் -அதனாலே சிஷ்யன் மதம் குருமதம்
பாட வல்லார் தாமும் சாயை போல பாட வல்லார் ஆவார்கள் என்று எம்பார் காட்டி அருளினை ஐ திக்யம் –
பேயாழ்வார் -துண்டு கயிறுகளாலும்-உடைந்த குடத்தாலும் -தலை கீழாக நட்ட செடிக்கு தண்ணீர் விடுவது போலே -அன்றோ
புற மாதங்கள் -என்று அன்றோ திரு மழிசை ஆழ்வாரை ஆளாக்கினார் –
வியாபகத தோஷம் தட்டாதவன் -சரீராத்மா பாவம் –
வரத யதி நபுக் வியாவாதரிஷியக ஸ்ருதி விஹிதகா த்வத் உபாசனாச் ச நாத்யஹா கரண பத விதூரயே சதி த்வயீ அவிஷயதானி க்ருதாஸ்திலா பவிஷ்யன் —
அவதாரங்கள் கல்யாண குணங்களைக் காட்டி அருளவே -இச்சையால் அப்ராக்ருத திவ்ய மங்கள விகிரகத்துடன் அவதரிக்கின்றான் -இச்சையால்
நபூத சங்க சமஸ்தாநோ தேஹாஸ்ய பரமாத்மனக –என்றும் -அஜாயமானோ பஹுதா விஜாயதே தஸ்ய தீராப் பரஞ்சோதி யோனிம்
பிதா புத்ரேந யோனியோநவ் –தானே தன் புத்ரர்களில் ஒருவரை பிதாவாக வரித்துக் கொண்டு அவதரிக்கின்றான்
ஜந்மாத் யஸ்ய யதக –ப்ரஹ்மம் உபாதானம்
ப்ரக்ருதிஷ்ச்ச பிரதி ஞானயா த்ருஷ்டாந்த அநு பரோதாத் -ப்ரஹ்மம் உபாதானமும் நிமித்தமும்
பரமதஸ் சேது உன்மான சம்பந்த பேத வியாபதேஷேப்யக
-என்பதால்
சேது -இவன் என்றால் ப்ராப்யம் சதாசிவ ப்ரஹ்மம் /பாதோஸ்ய விச்வா பூதாநி என்று அளவு பட்டு /என்ற பூர்வ பஷி சங்கைக்கு பரிகாரங்கள் மேல் -5-ஸூத்ரங்கள்
சாமான்யாத் து -சேது என்பது லோகங்களை கலக்காமல் நியமித்து வைப்பது பற்றி -பாலம் என்ற அர்த்தத்தில் இல்லை
புத்த்யர்த்தப் பாதவாத்-4 -கால்களும் –16- கலைகளும் -சொன்னது உபாசனத்துக்கு
ஸ்தான விசேஷாத் ப்ரகாசாதைவத்-இதுவும் உபாசனனுக்கு எளிதாக -ஆகாசம் குடாகாசமாக காட்டுவது போலே தேஜஸ் ஜன்னல் வழி கொஞ்சம் பார்ப்பது போலே
உபபத்தேச்ச–ப்ராப்யசைவ ப்ராபகத்வ உபபத்தேச்ச-அநந்ய உபாயத்வ ஸ்ரவணாத் -இது சித்தாந்தத்துக்கு நிதியான ஸூ த்ரம் –
-அநேந சர்வகதத்வம் ஆயாம சப்தாதிப்யக -தநேதம் பூர்ணம் புருஷேண சர்வம் –
இவ்வாறு வியாசர் சங்கா பரிகாரம் செய்து பராதி கரணம் தலைக் கட்டுகிறார் –
மனு ஸ்ம்ருதி
ப்ராதுர் யஸீத் தமோனுதாக -தமஸ் -பிரகிருதி -பிரதானம் -அதிஷ்டாதா -அனிருத்ரர்
சிச்ருக்ஷுக்கு விவிதாகா ப்ரஜாகா -பிரஜை -சமஷ்டி வியஷ்ட்டி தத்வங்கள்
அப ஏவ சசராஜா தவ் தாசு வீர்யம் அப்பா ஸ்ருஜத் -ஜாலம் முதலில் -அண்டம் ஈறாக
தஸ்மிந் ஜன்யே ஸ்வயம் ப்ரஹ்ம -சதுர்முக பிரமனை படைத்தான்
ஆபோ நாரா இதி ப்ரோக்தா ஆபோ வை நர ஸூ நவக அயனம் தஸ்ய தாகா பூர்வம் தேன நாராயணக ஸ்ம்ருதக
இப்படி ஸ்பஷ்டமாக மனு ஸ்ம்ருதி நாராயணனே பரமாத்மா என்றும் நான்முகன் போன்றார் ஜீவாத்மா ஸ்ருஷ்ட்டிக்கப் பட்டவர்கள் என்றும் காட்டுகிறதே
அநுஷ்டேய விஷய ஆந்தர பிரயத்தன பாவனா –ஸ்ரீ விஷ்ணு புராணம்
ஸநத்குமாராதிகள்-ப்ரஹ்ம பாவனை மட்டும் /
ப்ராதுராஸீத் தமோபித்தாக சிஷ்ருக்ஷுஹு விவிதாக ப்ரஜாகா –என்பதையே ஆழ்வாரும் -1–4–10-
உடல் ஆழிப் பிறப்பு வீடு உயிர் முதலா முற்றுமால் -கடல் ஆழி நீர் தோற்றி அதன் உள்ளே கண் வளரும்
அடல் ஆழி அம்மானைக் கண்டக்கால் இது சொல்லி விடல் ஆழி மட நெஞ்சே வினை ஓய ஒண்ணாம் அளவே
வேத வாதங்கள் -விதி -அர்த்தவாதம் -மந்த்ரம் -விதி -அநுஷ்டேய அர்த்த நியமனம் -அபூர்வார்த்த போதகம் -அப்ரவர்த்தக பிரவர்த்தக விதி
அர்த்தவாதம் -அர்த்தாய வாதகம்-பிரயோஜனத்துக்காக உத்ஸாகம் -ப்ரேரிதம்
-வாயுர்வை ஷேபிஷ்தா தேவதா வாயும் ஏவ ஸ்வேந பாகாதாயேந உபதாவதி ச ஏவைநாம் பூதம் கமயதி-போலே –
மந்த்ரம் – அநுஷ்டேயார்த்த ப்ரகாசகோ மந்த்ரக -பர்ஹிர்ஸ் தேவதாஸ் தானம் தாமி -சொல்லி – பர் ஹிர்ஸ்-தர்பம் எடுக்கும் பொழுது தேவதா ஆசனத்துக்கு –
இந்த மூன்றும் சொல்வதால் வேதம் த்ரயீ –
நிச்சய ஞானம் செயல் சொல்ல சொல்லும் சப்தம் மட்டுமே என்னில் – நான்கு பேர் இருக்கும் இடத்தில் ஒருவன் உணர ஆசை கொண்டான்
-ஒருவன் முனுமுனுக்க-ஒருவன் அபவர்க்கே தண்டக ஸ்திதக -இங்கே தண்டம் உள்ளது என்று செய்கையால் காட்ட
-அத்தை அவனுக்கு சொல் என்று இரண்டாமவன் சைகைகாட்ட சொல்வது போலே -வஸ்து அறை தண்டம் சித்தமாக இருப்பதால்
கிரியை இல்லாமலே அர்த்த போதம் உண்டே –
இதே போலே ததா அயம் -இயம் அம்பா -அயம் மாதுலக -அயம் மனுஷ்யக -அயம் மிருகக -போன்றவற்றால் வாசக வாஸ்ய சம்பந்தம் அறிகிறோம்
அம்பரீஷ சரித்திரம் மூலம் பாகவத பிரபாவம் ஏகாதசி மஹாத்ம்யம் போன்றவற்றை அறிகிறோம்
வேதாந்தம் -உபாசனை விஷய கார்ய அதிக்ருத விசேஷண பூத பலம் –
விஷயக-அவச்சேதக வியாவர்த்தக
உபாசன விஷயக -உபாசனம் விஷயோ யஸ்ய கார்யஸ்ய தத் கார்யம் உபாசன விஷயக
உபாசன விஷயம் -அபூர்வம்
அதிக்ருதக-அதிகாரி -அபூர்வம் விளைவிக்க ஆசை கொண்டு உபாசனம் பண்ண
அதி க்ருத விசேஷண பூத பலம் -அந்த உபாசனம் மூலம் பெரும் பலம் -ப்ரஹ்ம பிராப்தி –
துக்க அசம்பின்ன தேக விசேஷம் -ஸ்வர்க்கமும் சித்தம் -ஜ்யோதிஷ்டோமேந ஸ்வர்ககாமோ யஜதே —
பரம பிராப்தி காம ப்ரஹ்ம வித்யாத் -பரம பிராப்திக்கு
ருணம் ஹி வை ஜாயதே -தேவர்கள் ஹவிஸை புரோடாசம் பெற்று பலனை கொடுக்கிறார்கள்
யத்யபி அவதான ஸ்துதி பரம் வாக்யம் ததபி ந அசதா ஸ்துதிர் உபபத்யதே -த்ராவிடர்
இது அவதான ஸ்துதி மட்டும் இல்லை தேவதா ப்ரீதியும் உண்மை -குண ஸத்பாவம் சொல்லி பிரசாத புத்தியா யாகம் பண்ணுவதை சொன்னவாறு
-விதி அபேக்ஷித அர்த்த சித்தி நியாயம் -வேத வாக்கியங்கள் பர ப்ரஹ்ம போதனத்துக்காகவும் பர ப்ரஹ்ம பிராப்திக்காகவும் என்றவாறு –
அபூர்வம் கார்யம் -பசுவைக் கொண்டு வா என்றதும் பசு கொண்டு வந்த கார்யம் முடிந்ததும் அபூர்வம் போகும் -என்பர்
-கிரியை முடிந்ததும் -அபூர்வம் கிரியை தானே -மீம்சிக்கர் பசு கொண்டு வரும் அபூர்வம் பாவயேத் என்பர் –அபூர்வம் கிரியா ரூபம் லோகத்தில்
-பலம் வரும் வரை அதிருஷ்ட ரூபம் -அபூர்வம் என்று காரியத்துக்கு கற்பனை செய்தால் அதுக்கு -லக்ஷணம் –அசாதாரண தர்மம் -சாசனாவத்வம் -என்ன என்னில்
மீமாம்சகர் -கார்யத்வம் -க்ருதி பாவ பாவிதா வும் -க்ருதி உத்தேஷ்யதாவும்-இரண்டும் -க்ருதியின் ஸத்பாவமும்
-க்ருதி பாவத்துக்கு பின் -க்ருதி பாவ அனந்தர பாவி -கருத்து பாவ பாவிதா என்றவாறு
அபூர்வம் க்ருதி உத்தேச்யம் -பல பிராதா என்பர் -எஜமான் க்ருதிக்கு பின் வருவதால் க்ருதி பாவ பாவிதம் ஆகும்
க்ருதி உத்தேச்யத்வத்துக்கு லக்ஷணம் என் என்னில்-ஸ்வர்க்கம் வேண்டும் என்றால் ஸ்வர்க்கம் கொடுக்கும் அபூர்வம் உண்டாக்குவது லஷ்யம்
-அபூர்வம் க்ருதி உத்தேச்யம் -இதுவே லக்ஷணம்
உன் பக்ஷம் படி இஷ்டத்வமே லக்ஷணமா -ஜீவாத்மா ஸ்வர்க்கம் வேண்டுவான் ஒழிய அதிருஷ்ட அபூர்வம் வேண்ட மாட்டானே
-நடுவில் உள்ளவை லஷ்யம் இல்லையே -நீ சொல்லும் லக்ஷணம் சாதியத்துக்கு தானே ஒழிய சாதனத்துக்கு இல்லையே என்னில் –
க்ருத்ய உத்தேச்யம் இரண்டு ரூபங்களில் -ஸ்வர்க்கம் -அபூர்வம் -இதுவே புருஷனை ஸ்வர்க்க சுகம் பெற ப்ரேரகம் செய்வதால் இதுவும் உத்தேச்யம் -என்பர்
க்ருதியால் பெறுவதாய் க்ருதி அதீன ஆத்ம லாபத்வம் -யாகம் செய்து பலன் பெறுவதால் அபூர்வம் யாகமா-க்ருதி உத்தேச்யத்வம் என்று
ஆரம்பித்து க்ருதி பிரேரிகம் அபூர்வம் என்கிறீர்கள்
மேலும் புருஷ அநு கூலதா என்பர் -அது சுகத்துக்கு தானே லக்ஷணம் -பிரதி கூலத்வம் துக்கம் -அபூர்வத்தில் சுகம் அனுபவித்தார்கள் உண்டோ
-சிகம் த்ருஷ்டம் இந்த்ரியங்களால் அனுபவிப்பது -அபூர்வம் அதீந்தர்யம் அன்றோ -அசம்பாவ தோஷம் உண்டே உங்கள் வாதத்துக்கு –
சுகம் மட்டும் இல்லை -துக்க நிவ்ருத்தியும் அனுகூல லக்ஷணம் அன்றோ -என்பர் மேலும் –
துக்க நிவ்ருத்தி கொஞ்சம் சுகம் போலே தோன்றினாலும் புதிய சுகம் அனுபவித்தாள் தானே சுகாப் படுவான் -அதனால் அது சுகம் போலே பிரம்மமே
பிரக்ருதியில் -அநு கூல சம்யோகம் / பிரதி கூல சம்யோகம் /ஸ்வரூபேண அவஸ்திதை -மூன்றும் உண்டே
ஆத்மா துக்கம் படும் பொழுது -பிரதி கூல சம்யோகம் / துக்க நிவ்ருத்தி அடைந்ததும் ஸ்வரூபேண அவஸ்திதை /மேலே சுகம் பெற்று அநு கூல சம்யோகம் –
எனவே அபூர்வம் -நியோகம் -அநு கூலதா என்பது பொருந்தாதே
ஓட்டைக்குள் கை விட்டு தேள் கடிக்க -சுகமாக இருக்கிறது புண்யசாலி என்பதால் என்றதும் எல்லாரும் கை விட்டு தேளால் கடி பட்டது போலே
அபூர்வம் என்பது சுகம் என்கை என்பர் ஸ்ரீ உ .வே.அண்ணங்காச்சார்யார் ஸ்வாமிகள் –
பல சாதனம் -யாகம் செய்வது சுக ரூபம் இல்லையே துக்க ரூபம் அன்றோ –
நியாஜ்யதே இதி நியோக -ஜீவாத்மாவை பலத்தோடு சேர்ப்பது என்றவாறு -ஸ்திரமாக இருந்தே பலம் தர முடியும் –
அபூர்வதவமும் -முன்பு இல்லாத -பூர்வம் நாஸ்தி அபூர்வம் -எஜமான் ரித்விக் யோகத்தால் சாதிக்கப் பட்டதாக இருக்க வேணும்
அப்படி நியோகத்தவம் -ஸ்திரத்வம் அபூர்வத்வம்-மூன்றும் இருக்க வேண்டுமே -பல சாதனத்தால் பெற்றதாக இருக்க வேண்டுமே
இவை அசேதனமான அபூர்வத்துக்கு உண்டு என்பர் மீமாம்சிகர்
நியோகம் -பல சாதனம் -சம்யோஜ்யதே பலம் எஜமான் அஸ்ய இதி நியோக -அதற்கு ஸ்திரத்வமும் அபூர்வதவமும் இருக்க வேண்டுமே
ஸ்வர்க்க காமோ யஜதா -ஸ்வர்க்க சாதனம் -அபூர்வம் -யாகம் அஸ்திரம் என்பதால் அது சாதனமாக மாட்டாதே -அபூர்வம் க்ரியா விதரிக்தம் என்றதாயிற்று –
யாக ஜன்ய ஸ்வர்க்க சாதன பூத அபூர்வ ப்ரபத்யே ஸ்வர்க்க காமக யாகம் குர்யாத்
சமபி வியாகாரத்தால்-யஜதே -ஸ்வர்க்க காமக -உடன் சேர்ந்ததால் -இந்த அர்த்தம் என்பதால் யஜதா அபூர்வத்தை குறிக்கும்
யாகமும் ஸ்வர்க்கமும் இந்த அபூர்வத்துக்காக -அபூர்வம் விதி வாக்ய பலன் என்றதாகும்
அர்த்தார்த்தே ராஜ க்ரஹம் கச்சேத்-பொருளுக்காக அரண்மனைக்கு போனான் –
வாச்ய அன்வய யோக்யதை இருக்க வேண்டுமே –
சாதனம் எப்பொழுதுமே துக்க ரூபமே -கார்யம் புருஷ அநு கூலத்வம் -ஸ்வ தந்த்ரதாக இருக்காதே –
எலுமிச்சம் பலம் கொடுத்து ராஜ்ஜியம் பெறுவது போலே -பக்தி மோக்ஷ சத்ருச சாதனம் ஆகாதே
பக்தியின் தோஷங்கள் -துஷ் ஷகத்வம் -பல விசத்ருஷத்வம் -ஸ்வரூப விருத்தத்வம்-அபாயத்வம் -பய ஜனகத்வம் -சோக ஜனகத்வம்
-பகவத் விஸ்லேஷத்வம் -போல பல பல –
அகங்கார கர்பத்தவமும் கூட -மாத்ரா பிந்து மிஸ்ரமான ஷாத கும்ப மாயா கும்ப கத தீர்த்த சைலம் போலே அகங்கார மிஸ்ரமான
உபாயாந்தரம் என்று திரு குருகைப் பிரான் பிள்ளான் பணிக்கும் படி –
மோக்ஷ சாதனமே துக்க மயமானால் ஸ்வர்க்க சாதனமும் லோக சாதனங்களும் துக்க மயங்கள் என்று சொல்ல வேண்டா இறே-

———————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ சுருதி பிரகாசிகாச்சார்யார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ வேதார்த்த சங்க்ரஹம் -முதல் பகுதி –

February 14, 2017

யோ நித்ய அச்யுத பதாம் புஜ யுக்ம ருக்ம வ்யாஹாமோஹதஸ் ததிராணி த்ருணாய மேனே
அஸ்மத் குரோர் பகவதோஸ்ய தயைக சிந்தோ ராமானுஜஸ்ய சரனௌ சரணம் ப்ரபத்யே —

அசேஷ சித் அசித் வஸ்து சேஷினே –சேஷ ஸாயினே-நிர்மல ஆனந்த கல்யாணைதயே -விஷ்ணவே நம –

பரம் ப்ரம்ஹைவாஞம் ப்ரம பரிகதம் ஸம் ஸ ரதி தத்
பரோபாத்ய லீடம் விவசம் அசுபஸ் யாஸ் பதமிதி
சுருதி ந்யாயா பேதம் ஜகதி வித்தம் மோஹனமிதம்
தமோ யே நா பாஸ்தம் சஹி விஜயதே யாமுன முனி —

அசேஷ சித் அசித் வஸ்து சேஷினே -தத்வம்
சேஷினே-சேஷ ஸாயினே-நிர்மல ஆனந்த கல்யாணைதயே -விஷ்ணவே -புருஷார்த்தம்
நம -ஹிதம்-
தத்வம் –ஹிதம் –புருஷார்த்தம் / சித் -அசித்- ஈஸ்வரன் /
சித் -ஞான ஆஸ்ரயம் ஞான குணகம் /நித்யம் /அவயவம் இல்லாமை /ஷேத்ரஞ்ஞன்/அவிகாராயா / ப்ரத்யக் /
ஸ்வயம் பிரகாசம் /கர்த்தா அனுமானத்தால் மட்டும் அறிய முடியும்
அசித் -ஆதேயஹம்/ விதேயஹம் /சேஷாஹஹம் -சரீரம் –
ப்ரஹ்மம் -நிர்வாகரஹத்வம் / சர்வ காரணத்வம் -த்ரிவித -நிமித்த -உபாதான -சஹகாரி -/சரீராத்மா பாவம்
ஸூஷ்ம சித் அசித் விசிஷ்டப்ரஹ்மம் / ஸ்தூல சித் அசித் விசிஷ்டப்ரஹ்மம்
பேத ஸ்ருதிகள் / அபேத ஸ்ருதிகள் / கடக ஸ்ருதிகள் –

பரம் ப்ரம்ஹைவாஞம் ப்ரம பரிகதம் ஸம்ஸரதி தத் –பர ப்ரஹ்மம் அஞ்ஞானம் அந்தகாரத்தால் சூழப்பட்டு சம்சாரத்தில்
ஆழ்கின்றது என்கிற சங்கர மத அத்வைதிகளையும்
பரோபாத்ய லீடம் விவசம் -பர ப்ரஹ்மம் அசக்தன் -வேறே ஒருவரால் ஆட்டிப் படைக்கப் படுகிறது என்னும் பாசக்கார மதம்
அசுபஸ் யாஸ் பதமிதி -சித் அசித் போலே அசுபங்களால் வருந்து -யாதவ பிரகாசர் மதம் –
சுருதி ந்யாயா பேதம் ஜகதி வித்தம் மோஹனமிதம் -ஸ்ருதிகளில் இல்லாத வற்றையும் -நியாய சாஸ்திரங்களை ஒவ்வாத படியும்
தமோ யே நா பாஸ்தம் சஹி விஜயதே யாமுன முனி –தமஸ் -குணத்தால் வந்த அஞ்ஞானங்களை போக்கி அருளி
விசிஷ்டாத்வைத ஸ்தாபனம் பண்ணி அருளி வெற்றி கொண்ட ஸ்ரீ யாமுன முனிக்கு மங்களம் –

வேதம் -வேதா யதி இதை வேத -/ ஸ்ருதி -ஸ்ரூயதே இதை ஸ்ருதி /அநாதி -அபவ்ருஷேயம் / நித்யம் / அனந்தாவை வேத /
அசேஷ ஜகத் ஹித அநு ஷாசனம் / மாதா பிதா சகஸ்ரரேப்யோ வத்சல்ய தரம் சாஸ்திரம் /
ஸ்ருதி சிரஸ் -உப நிஷத் -உப நிஷீததி இதி -ப்ரஹ்மத்தின் அருகில் இருப்பதால் / உப நிஷாதி இதி -ப்ரஹ்மத்தின் அருகில் கூட்டிச் செல்லுமது –
அவித்யை அடியாக -கர்மங்கள் -சதுர்வித தேக பிரவேசம் –தேஹாத்ம அபிமானம் -சம்சார பயம் -இத்தை போக்க
தேக வியதிரிக்த ஆத்ம ஸ்வரூபத்தையும் -தத் ஸ்வபாவத்தையும் / தத் அந்தராத்மாவான பரமாத்மா ஸ்வரூபத்தையும் -தத் ஸ்வபாவத்தையும் /
தத் உபாசனத்தையும் -தத் பல பூத ஆத்ம ஸ்வரூப ஆவிர்பாவ பூர்வக அனவதிக அதிசய ஆனந்த ப்ரஹ்ம அனுபவம் –

தத் தவம் அஸி-அபர்யாவஸான விருத்தி -தத் -தவம் இரண்டுமே ப்ரஹ்மம் -ஸ்வேதகேதுவினுடைய அந்தராத்மா –
அயம் ஆத்மா ப்ரஹ்மம் -அந்தர்யாமித்வம்
யம் ஆத்மனி திஷ்டன் –அந்தர்யாத்மாவாக இருந்து நியமித்து -நாம் அறியாமல் வியாபகத தோஷம் தட்டாமல்-
ப்ரஹ்மவித் ஆப் நோதி பரம் / தமேவம் வித்வான் அம்ருத இஹ பவதி நான்யப் பந்தா அயனாய விதாயதே -போன்ற ஸ்ருதி வாக்கியங்கள் கொண்டு
பரமாத்மாவுடைய ஸ்வரூபம் / ஸ்வபாவம் / உபாசனம் / புருஷார்த்தம் /இவற்றை அறிய
ஜீவாத்மாவுடைய ஸ்வரூபம் ஸ்வபாவம் அறிவதே இந்த ஸ்ரீ வேதாந்த சங்க்ரஹத்தின் தாத்பர்யம் -இந்த இரண்டு மங்கள ஸ்லோகங்கள் விரிவே இது –

————————

அசேஷ ஜகத் ஹித அநு சாசனம் -ஸ்ருதி நிகர சிரஸி -சம்யக் அதிகத -மாதா பித்ரு சஹஸ்ரபி வாத்சல்யதர –

பீஜ அங்குர நியாயம் -இரண்டுமே அநாதி -பீஜம் பூர்வம் -காரணம்–. அங்குரம் அப்புறம் -கார்யம் -என்றவாறு -சூழலாக இருந்தாலும் –
இதே போலே அவித்யை பூர்வம் -காரணம் / கர்மம் அப்புறம் -கார்யம் -என்றவாறு -சூழலாக இவை வந்தாலும் -என்றவாறு –
பரமாத்மா –ப்ரஹ்மம் -சத் -பகவான் ஸ்ரீ மன் நாராயணன் -காரணன் –ரக்ஷகன் -நிவர்த்தக ஹேது -மோக்ஷ பிரதன் -உபாயமும் உபேயமும் என்றவாறு /
உபய லிங்கம் -அகில ஹேய ப்ரத்ய நீகத்வம்/கல்யாணைக ஸ்தானத்வம்-இவை இரண்டாலும் ஸ்வ இதர ஸமஸ்த வஸ்து விலக்ஷண ஸ்வரூபகன்
அநவதிக -அதிசய -அசங்க்யேய-கல்யாண குண கணகன் / சர்வாத்ம அந்தர்யாமி /பர ப்ரஹ்மம் -பரஞ்சோதி -பரதத்வ பரமாத்மா –
சர்வ சாகா ப்ரத்யய நியாயம் -சாமானாய விசேஷ நியாயம் –
சத் ஏவ சோம்ய அக்ர ஆஸீத் / ஆத்மா வா இதமேக ஏவாக்ர ஆஸீத். நாந்யத் கிஂசந மிஷத். ஸ ஈக்ஷத லோகாந்நு ஸரிஜா இதி৷৷1.1.1৷৷–ஸ்ரீ ஐத்ரேய உபநிஷத் -/
ஏகோ வை நாராயணா ஆஸீத் நப்ரமா நஈசனாக -/இப்படி அனைத்து சாகைகளையும் சேர்த்து நாராயணனே ஜகத் காரணன் என்றதாயிற்று –

ஸ்வ இதர ஸமஸ்த சித் அசித் வஸ்துஜாத அந்தராத்மாதயா -நிகில நியாமகன்
-சமானம் அதிகரணம் -அசேஷம் சப்தானாம்-தே சப்தாகா-சாமா நாதி கரணாகா-தேஷாம் பாவக சாமா நாதி கரண்யம்-ஸ்ருதி பிரகாசாச்சார்யார் –
தேவதத்த-ஸ்யாமக- யுவா -லோகிதாக்ஷஹ -, சமபரிமாணஹ , தண்டீ , குண்டலீ திஷ்டதி-
ஜகத் அனைத்தும் ப்ரஹ்மாத்மகம் / அந்தராத்மா பாவம் -காரண கார்யம் -என்பதாலும்
ஜகமே ப்ரஹ்மம் -ஜகம் பிரகாரம் -அப்ருதக் சித்த விசேஷணம் –இதுவே முதல் மங்கள ஸ்லோக விவரணம் –

————————-

நிர் விசேஷ சின் மாத்திரை ப்ரஹ்மம் –நிர் குண ப்ரஹ்மம் புரிந்தால் ஜகத் மித்யை மாயை -என்பர் அத்வைதிகள்
-மித்யையான சாஸ்திரத்தை மித்யையான ஆச்சார்யன் மித்யையான சிஷ்யனுக்கு -மித்யா ஞானத்தை கற்பிக்கிறான் என்றபடி
சாஸ்திரங்கள் ப்ரஹ்மத்துக்குணம் விபூதி எல்லாம் சொல்கிறதே -ஆகையால் இவை மித்யை இல்லை ஸ்வபாவிகம் –
அதே சமயம் ஐக்கியமும் சாஸ்திரம் சொல்வதால் பாஸ்கரன் உபாதி ஒன்றை கல்பித்து -அந்த உபாதி என்பது
-ப்ரஹ்மம் ஒரு சரீரமாகி பந்தத்வமும் மோக்ஷத்வமும் அனுபவிக்கிறான் என்பர்

அசித் ப்ரம்ஹனோர் பேத அபேதவ் ஸ்வபாவிக்கவ் -நித்யம் –
சித் ப்ரஹ்மணோஸ்து பேதம் ஒளபாதிகம் –உபாதியால் வந்தது -இவற்றுக்குள் -அபேதம் ஸ்வபாவிகம் –
— உபாதி அநித்தியம் -சரீரத்துக்குள் ப்ரஹ்மம் இருக்கும் வரை மட்டும் இருக்கும் –
சித் ப்ரஹ்ம அபேதம் முக்த தசையில் -இது ஸ்வ பாவிகம் –

சித் ப்ரஹ்மணோர் அபி பேத அபேதவ் ஸ்வ பாவிகதவ்-முக்தவ் பேதஸ் அபி நிர்தேஷாத் –
யாதவ பிரகாசரும் பாஸ்கரர் போலே சித் -ப்ரஹ்மம் / அசித்-ப்ரஹ்மம் -பேதமும் அபேதமும் ஸ்வ பாவிகம் -என்பான் –
சித் ப்ரஹ்மம் -இவற்றுக்கு முக்த திசையிலும் பேதமும் அபேதமும் உண்டு – ஸ்வ பாவிகம் என்பதால் -இது பாஸ்கர மத வாசி –
பேதம் -ஸ்வரூப வாசியால் -அபேதம் -குணங்கள் பொதுவாதலால் –

தத் தவம் அஸி –தத் என்பதும் தவம் என்பதும் ப்ரஹ்மமே முன்பே பார்த்தோம் -சங்கல்பத்தால் ஜகத் உத்பத்தி விபவம் லயம் –
லயம் -ஸத்பாவ விநாசம் இல்லை –காரண தசைக்கு போவதே தானே –
ஸ்ருதி பிரகாசர் -லயம் என்பது விஸாத்ருஷ அவஸ்தா ப்ரகாநேநா காரணத்வ தர்மினா த்ரவ்யேன விபாகஸ்ய அபாதான-பூதேன சம்ச்லேஷஹ

தத் ஐக்க்ஷத பஹுஸ் யாம் பிரஜாயேய —
தத் ஐக்க்ஷத -ப்ரஹ்மம் சங்கல்பித்து முடிவு செய்தது
பஹுஸ் யாம் -பல வகையாக தானே ஆகி -வியஷ்ட்டி ஸ்ருஷ்டி –தத்வங்களாகி
பிரஜாயேய –தானே ஆகி -சமஷடி ஸ்ருஷ்ட்டி தத்வங்களாகி –
சத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்மம் –சத்யம் – விகாராத் வ்யாவ்ருத்தம் )ஞானம் -ஜகத் வ்யாவ்ருத்தம் /அநந்தம் -பரிச்சின்னாத் வ்யாவ்ருத்தம்
அத்வைதி -ப்ரஹ்மம் ஒன்றே சத்யம் -காரணம் -மற்றவை விகாரம் அடையும் -அதனால் அசத்தியம் -விகாரம் நாமதேயம் -வாசா ஆரம்பணங்கள் மட்டுமே
வாசா ஆரம்பணம் விகாரோ நாமதேயம் மிருத்தயேக சத்வம் -மண் ஒன்றே உண்மை என்பர்
அக்ரே ஆஸீத் -/ சத் ஏவ ஆஸீத் / ஏகமேவ ஆஸீத் /அத்விதீயம் ஆஸீத் /
சத் மட்டும் என்பதால் விஜாதீய / ஏகமேவ -என்பதால் சஜாதீய /அத்விதீயம் என்பதா ஸூவ கதபேதம் இல்லை என்பர் –
நிஷ்கலம் -கலா ரஹிதம் -அவயவ ரஹிதம் /நிஷ்க்ரியம் /நிர்குணம் /நிரஞ்சனம் -கர்ம வஸ்யம் இல்லை /
சர்வஞ்ஞான ஸ்வரூபன் /ஆனந்தம் ஸ்வரூபம் /சர்வ விக்ஷேஷ ப்ரத்யநீக ஆகாரத்தம் –
ஏக விஞ்ஞானேன சர்வ விஞ்ஞானேன பிரதிக்ஜ்ஜை -ப்ரஹ்மம் அறிந்தால் அனைத்தையும் அறிந்ததாகும் -பதார்த்தங்கள் மாயை என்றால் -பொருந்தாதே
அனைத்தும் ப்ரஹ்மாத்மகம் ப்ரஹ்மமே அனைத்தையும் ஸ்ருஷ்ட்டித்தான் –
ஏதஸ்யவா அக்ஷராஸ்ய ப்ரஷாசனே /ப்ரஷாசித்தாராம் சர்வேஷாம் -/சதேவ சோம்யே இதம் அக்ரே ஆஸீத் ஏகமேவ அத்விதீயம்
ஜகத் காரண ப்ரஹ்மமே முதலில் இருந்தது -சதேவ ஆஸீத் -ஸத்கார்ய வாதம் /ஏகமேவ ஆஸீத் -அந்த சத் தானே உபாதான காரணம் /அத்விதீயம் ஆஸீத் -அதுவே நிமித்த காரணம்
இத்தால் ப்ரஹ்மம் அபின்ன நிமித்த உபாதாநகத்வம் என்றதாயிற்று –தானோர் உருவே தனி வித்தாய் தன்னில் மூவர் –திருவாய் மொழி -1-5-4-
தான் உருவே வித்து -அழகிய உபாதான காரணம் / ஓர் வித்து -சஹகாரி காரணம் /தனி வித்து -நிமித்த காரணம் –
யதா சோம்ய ஏகேன ம்ருத்பின்டடேன சர்வம் மிருண்மயம் விஞாதம் சயாத் வாச்சாரம்பணம் விகாரோண நாமதயேயம் ம்ருத்தி கேத்யேவ சத்யம் .
அதே போலே ப்ரஹ்மமே ஏக உபாதான காரணம் அகில ஜகத்துக்கும் -இதை சொல்லவே சதேவ சோம்யே இதம் அக்ர ஆஸீத் ஏகமேவ அத்விதீயம் –
ப்ரஹ்மம் -ஞானானந்த ஸ்வரூபம் -அமலம் -அபரிச்சேதய மஹாத்ம்யம் / ஸத்ய சங்கல்ப / அவிகார-/நாமா ரூப விபாக அர்ஹம் ஆக்கி அருளுகிறார்
-அனந்த விசித்திர ஸ்திர அஸ்திர சமஸ்தானங்களையும் -ஸூவ லீலார்த்தமாக /
வாசா ஆரம்பணம் -வாக் பூர்வக தான உபாதானாதி வியாகாரார்த்தம் விகாராக நாமாதியஞ்ச ஸ்ருஷ்யதே –

சதேவா ஆஸீத் -சத்தாகவே ப்ரஹ்மம் இருக்க -இதம் -கண்ணால் பார்க்கும் இந்த ஜகத் -அத்ர இதம் ஜகம் நிர்திஷ்டம்/அக்ரே – -ஜகத்துக்கு முன்பே
ஏக மேவ ஆஸீத் -அந்த ப்ரஹ்மமே ஜகாத்தாக பரிணமித்தது -சரீரம் -என்றவாறு -உபாதானம் –
அத்விதீயம் ஆஸீத் -சங்கல்பத்தாலே -இதுவே நிமித்த காரணம்
வேர் முதல் வித்தாய் –வேர் -சக காரி / முதல் -நிமித்த / வித்து -உபாதான
தத் ஐக்க்ஷத பஹுஸ் யாம் பிரஜாயேய –
ஹந்தாஹம் இமாஸ்திஸ்ரோய தேவதாஹா அநேந ஜீவேன ஆத்மனா அநு ப்ரவிஷ்ய நாமா ரூபேய வியாக்ரவாணி —
அனைத்தும் தத்வ த்ரயாத்மகம் -பர்யாவசான வ்ருத்தி / யஸ்ய ஆத்மா சரீரம் –ஜீவாத்மா பரமாத்மா இரண்டுமே வியாபகன்
-ஜீவாத்மா அணு–தர்ம பூத ஞானம் விபு தன் சரீரம் அளவில் –பரமாத்மா விபு -அனைத்து ஜீவர்களுக்குள்ளும் -அசேதனங்களுக்கு உள்ளும்
அப்ருதக் சித்த விசேஷணங்கள் -பிரகாரம் -நித்யம் /ஒரு மரம் உடைந்தால் முக்கிய ஜீவாத்மா பிரிந்து -உடைந்த பாகங்களில்
ஒவ் ஒன்றிலும் பல தாரண ஜீவாத்மாக்கள் உண்டே -அதே போலே முக்தனாக ஜீவாத்மா போன பின்பும்
வேறு ஒரு தாரண ஜீவாத்மா பிரதேதத்துக்குள் போகும் -அனைத்தும் ப்ரஹ்மாத்மகவாகவே இருக்கும் –

சத் மூலக சோம்ய இமாஹ சார்வாஹ பிரஜாகா சத் ஆயதானக சத் பிரதிஷ்டகா -இமாஹ சர்வகா பிரஜாகா
சத்-மூலம் -என்றது சத் உபாதான சத் நிமித்தம் -சத் உத்பத்தி காரணம்
சத் ஆயதானக -என்றது -சத் தாரண சத் நியாம்ய சத் சேஷி -சத் ஸ்திதி காரணம்
சத் பிரதிஷ்டகா -என்றது சத் லய காரணம்

ஐதத்தாத்மியம் இதம் சர்வம் தத் சத்யம் தத் தவம் அசி ஸ்வேதகேதோ —
ஐதத்தாத்மியம் இதம் சர்வம்-இந்த சத் என்ற ப்ரஹ்மமே ஜகத் அனைத்துக்கும் ஆத்மா
தத் சத்யம் -இது உண்மை -ஜகத் ப்ரஹ்மாத்மாகவே இருக்கிறது -ப்ரஹ்மம் ஆத்மாவாக இருக்கிறது
தத் தவம் அஸி ஸ்வேதகேதோ –நீயும் -ஸ்வேதகேதுவே -உளனாக இருப்பதும் -அந்த ஜகத்துக்கு போலே ப்ரஹ்மம் ஆத்மாவாக இருப்பதால் -என்றவாறு
த்வம் -புரோ வர்த்தி ஸ்வேதகேது வாச்ய ஜீவஅந்தர்யாமி பரமாத்மன் -என்றவாறு -அத்வைதிகள் ஸ்வேதகேது அளவிலே கொண்டார்கள் தப்பாக –
ப்ரஹ்மாத்மகம் -என்றது சரீராத்மா பாவம்-என்பதால் மட்டுமே அன்று ஸ்வரூப -ஐக்கியம் அன்று – சரீராத்மா பாவத்துக்கு பிரமாணங்கள் பல உண்டே –
அந்தர் ப்ரவிஷ்டாஷ் ஷாஸ்தா ஜனா நாம் சர்வாத்மா –
ய ஆத்மனி திஷ்டன் ஆத்மாநாம் அந்தரோ யமயதி-ச தே ஆத்மா அந்தர்யாமி அம்ருதக
அநேந ஜீவேன ஆத்மாநா அநு ப்ரவிஷ்ய நாமா ரூபேயே வ்யாக்ரவாணி
சாமா நாதி கரண்யம் பிரகார பேத விஸிஷ்ட பிரகாரி ஏகத்துவம் -இதுவே தத் -என்பதும் த்வம் என்பதுவும் –

வாக்ய அன்வய அதிகாரணம் — 1.4.6.) –நான்கு ஸூ த்ரங்கள் – ஸ்ருதி வாக்கியம் -ஆத்மா வா அரே த்ரஷ்டவ்யஹ-ஸ்ரோதவ்ய மந்தவ்யோ நிதித்யாசி தவ்யக
பூர்வ பசி -சாங்க்யன்-ஜீவாத்மாவை சொல்லும் ஆத்ம சப்தம் என்பான் –
வேத வியாசர் -இத்தை நிரசித்து பரமாத்மாவையே சொல்லும் என்கிறார் -த்யானம் -பற்றி சொல்வதால் வாக்ய அந்வயம் –
தோஷம் இல்லாத பரமாத்வானியே சொல்லும் -தியானத்துக்கு உரியவன் என்று -:
ஆஷ் மார்த்யர் ரிஷி -கடம் மண்ணாலே ஆனதால் மடக்குடம் என்கிறோம் -அதே போலே ஜீவாத்மா ப்ரஹ்மம் என்னலாம்
வேதாந்தாச்சார்யார் -இத்தை வியக்தி ஐக்கியம் என்று இவர் சொல்கிறார் என்பர்
ஒளதலோமி ரிஷி -உதக்ரமிஷ்யதா ஏவம் பவத் -முக்தன் ப்ரஹ்மம் ஆகிறான் என்பர்
காஷக் ருத்ஸ்னர் -இருவரும் அப்ருதக் சித்தம் என்பதால் இப்படி சொல்லிற்று என்பர் –
இத்தையே வேத வியாசரும் கருதுகிறார்
யானும் தானாய் ஒழிந்தேனே -8-8-3-ஆழ்வாரை கூப்பிட்டால் பெருமாள் திரும்புவான்
-அப்படி ஆழ்ந்த அப்ருதக் சித்தம் -பெருமாள் பிரகாரம் ஆழ்வார் பிரகாரி -ஈடு -ஸ்ரீ ஸூக்தி
இதனாலேயே – புரோவர்த்தி ஸ்வேதகேது -வாச்ய ஜீவ -அந்தர்யாமி பரமாத்மன் த்வம் –, தத் ஜகத் காரண பூத பரமாத்மா அஸி
நனு–அத்வைதியின் ஆஷேபம் –
லோகத்தில் பசு என்றால் பசு பிண்டம் அளவிலே வ்யுத்பத்தி —
பிரதான அம்சம் பரமாத்மா அந்தர்யாத்மாவாக இருந்தாலும் -பிரத்யக்ஷத்தால் காண முடியாததால் -லோகத்தில் இப்படி வ்யுத்பத்தி
அனுமானத்தால் ஜீவாத்மா பஸ்சுக்குள் இருப்பதை உணரலாம் -பரமாத்மா இருப்பதை சப்த பிரமாணம் -வேதாந்த ஸ்ரவணம் -கொண்டே அறிய முடியும் –
சம்ஞானயாயதே யேந தத்தர்த்த தோஷம் சுத்தம் பரம் நிர்மலம் ஏக ரூபம் சந்த்ருஸ்ய தேவாபி அதிகாமயாத
ஏவ தத் ஞானம் அஞ்ஞானம் அதோனியதுக்தம் -ஸ்ரீ விஷ்ணு புராணம் -6-5-87-
கர்மவசயத்தால் பக்த ஜீவர்கள் அசித் தோஷங்களுக்கு ஆளப்பட்டு இருக்க பர ப்ரஹ்மம் மட்டுமே ஏக ரூபமாய் வியாப்ய கத தோஷம் இல்லாமல் இருப்பதால்
அவனை உபாசிக்கும் ஞானம் -அறிந்து -கண்டு அடைய -ஞான தரிசன பிராப்தி -இதுவே ஞானம் -மற்றவை அஞ்ஞானங்கள் –
ததேயபிரலம் அத்யர்த்தம் த்ருஷ்டாரம்போகதி விஸ்தரைகி அவித்யாந்தர்கதைர் யத்னாஹா கர்தவ்யஸ்ததா ஷோபனே–தத் கர்ம யானா பாந்தய
சா வித்யா யா விமுக்தயே ஆயாசாயாபரன் கர்மா வித்யா அந்நிய ஷில்பனைபுனம்–ஸ்ரீ விஷ்ணு புராணம் –1.19.39 / 41):
ப்ரஹ்ம ஞானமே கர்ம பந்தம் விட்டு மோக்ஷம் அழிக்கும் -மற்றவை கர்ம பந்தம் தேக சம்பந்தம் மட்டுமே கொடுக்கும்
தேவராய் நிற்கும் அது தேவும் அத் தேவரில் மூவராய் நிற்கும் முது புணர்ப்பும் யாவராய் நிற்கின்ற தெல்லாம்
நெடுமால் என்று ஓராதார் கற்கின்ற தெல்லாம் கடை –நான்முகன் -54-
சித்த வேண்டா சிந்திப்பே அமையும் -பட்டர் திருவரங்க பெருமாள் அரையர் பிரதக்ஷிணம் கர்ப்பிணி பெண்கள் போலே
-எல்லா கோபுரம் மதிள் பிரகாரங்களை மங்களா சாசனம் செய்து கொண்டே போவார்கள்
வேதாந்த ஸ்ரவணநேந ஹி வ்யுத்புத்தி பூர்யதே – வைதிக சப்தங்கள் மட்டும் இல்லை எல்லாமே அவன் அளவில் பர்யவசிக்கும்
ஐதத்தாத்ம்யம் இதம் சர்வம் தத் சத்யம் -இது ஒன்றே சத்யம் -ப்ரஹ்மாத்மாக மானவையே அனைத்தும் –

சோதக வாக்கியம் –சத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்ம-யோ வேத நிஹிதம் குஹாயம் பரமேவ்யோமன்–
நந்தா விளக்கே அளத்தற்கு அரியாய்–பெரிய திரு -3- 8-1-
நந்தா -சத்யம் –ஒருபடிப் பட்டது /விளக்கு -ஞானம் -ஸ்வயம் பிரகாசம் /அளத்தற்கு அரியாய் -அநந்தம் -த்ரிவித பரிச்சேத ரஹிதன்
நந்தா விளக்கமே -நீயும் அளியத்தாய்–திருவாய் -2-1-9-
ஜ்வாலா அபேத அனுமானம் -‘மத்யம் அக்ஷணா பரம்பரை ஆவர்தினீ ஜவாலா ப்ரதிக்ஷணம் உத்பத்தி விநாசாவதி
இப்படி க்ஷணம் தோறும் அழிந்து உத்பத்தி ஆனாலும் நந்தா விளக்கு என்கிறார் ஆழ்வார் -விளக்கு சுடுவதும் தம்மை போலே
அவனைப் பிரிந்த நிலை என்று காற்றையும் காளியையும் கட்டி ாலும் நிலையில் அன்றோ பராங்குச நாயகி –

-1- சாமான்ய விசேஷ நியாயம் -உபாத்த விஷேஷா சாமான்ய சப்தஸ்ய சங்கோச -பசு என்று சொல்லி -சாக்ஸ்சயா- வெள்ளாடு -என்று போலே
நிர்குணம் -அகில ஹேய ப்ரத்ய நீகம் -சொல்வதால் நிர் குணம் என்பது தோஷ குணங்கள் இல்லாமல் என்றவாறு
2– உத்சர்க்க அபவாத நியாயம் -உபாத்த விஷேஷ வியதிரிக்த விஷயீ சாமான்ய சப்தஸ்ய விரோத பரிஹாராயா சங்கோச –
நஹிம்சாயத் சர்வ பூதாநி -ஒரு இடத்தில் சொல்லி -யாகத்தில் பசும் ஆலபேதா -என்றது -போலே
-நிர்குணம் சொல்லி சத்யகாம இத்யாதி சொல்வதால் -சங்கோசம் கொள்ள வேண்டுமே
இவற்றால் சத்யம் ஞானம் அநந்தம் இவை பர ப்ரஹ்மத்தின் குணங்களையே காட்டும் -என்றவாறு –
அத்வைதிகள் ஆஷேபம் -அப்படி என்றால் மூன்று ப்ரஹ்மம் ஆகுமே -அதனால் இவை
ப்ரஹ்மத்துக்கு வியாவர்த்தி காட்டி -இவை மூன்றும் -விகாராத் –ஜகத் -பரிச்சின்ன வியாவர்த்தி -என்பர்
ப்ரஹ்மம் சர்வ ப்ரத்ய நீக ஆகாரத்வம் இதனால் சொல்லிற்று என்பர்
அப்படி என்றால் ப்ரஹ்மம் குணம் ஆகும் வஸ்து ஆகாதே -தர்மம் இல்லாமல் தர்மி இருக்க முடியாதே -அதனால் இவை விசேஷணங்கள் தான்
ஞானம் என்றது ப்ரஹ்மத்தின் ஸ்வரூப நிரூபக தர்மம் என்றவாறு
தத் குண சாரத்வாத்-து தத் வ்யாபதேஷஹா பிரஞ்ஞானவாத் -ப்ரஹ்ம ஸூ த்ரம்–
ஆனந்தோ ப்ரஹம்மேதி-ஆனந்தம் =அனுகூல ஞானம் /ப்ரஹ்மம் ஞான பிரசுரம் என்றவாறு
நன்மையால் மிக்க நான் மறையாளர்கள் –புன்மையாக கருதுவார் –புன்மை என்றே தம்மை மதுர கவி ஆழ்வார் சொல்லிக் கொள்வது போலே
-இதுவே ஸ்வரூப நிரூபக தர்மம் -இவருக்கு என்றவாறு –
கீதையிலும் பகவத் ஆராதனம் செய்யாத உணவை உண்டவன் பாபமாகவே -பாவிகள் என்று சொல்லாமல் அருளிச் செய்தானே
யாவதாத்மா பாவித்வாச்ச நதோஷகா தத் தர்சநாத் -இப்படி குணம் விட்டுப் பிரியாமல் இருந்தால் குணத்தை வைத்தே சொல்வதில் தோஷம் இல்லையே
யஸ் சர்வஞ்ஞா யஸ் சர்வ வித் –ஸ்வரூபம் ஸ்வபாவம் இரண்டையும் சொல்லி –
பர அஸ்ய சக்திஹி விவிதைவ ஷ்ரூயதே ஸ்வாபாவிக-ஞான பல கிரியா ச -என்றும்
விஞ்ஞான தரம் அரே கேன விஜா நீயாத் -என்றும் பல ஸ்ருதிகள் உண்டே –

தத் த்வம் அஸி-முக்கியார்த்த பரித்யாகம் லக்ஷணை கொண்டு -அத்வைதி –
லக்ஷணை -ஸக்ய வாச்ய சம்பந்தி பதார்த்த போதன சாமர்த்தியம் -மஞ்சா க்ரோசந்தி போலே
அந்த தேவதத்தன் -இந்த தேவதத்தன் -இருவரும் ஒருவரே -என்று அந்த இந்த விட்டு அர்த்தம் கொள்ளுவது போலே -என்பர் அத்வைதி
சாமா நாதி கரண்யம் -பின்ன பிரவ்ருத்தி நிமித்தானாம் சப்தாநாம் ஏகஸ்மின் அர்த்தே வ்ருத்திதி-
ஒவ் ஒரு விசேஷணம் பிரகாரம் வெவேறாக இருந்து -/ஆதேயம் ஆதாரம் -அதிகரணம் ஒன்றாய் /சமண அதிகரணம் -அநேக பிரகாரங்கள் கொண்ட ஒரே வஸ்து
சப்தம் நிர் விசேஷனா வஸ்துவை காட்டாதே –
ப்ரத்யக்ஷம் த்விதம் –நிர்விகல்பிக -நிஷ்பிரகார /ச விகால்பி க -ச பிரகார /
நம் சித்தாந்தத்தில் நிஷ் பிரகார பிரத்யக்ஷத்திலும் விசேஷணங்கள் உடனே நாம் வஸ்துவை அறிகிறோம் -அசாதாரண ஆகாரம் உண்டே
ஜாதி வியக்தி -இரண்டும் வெவ் வேறே -ப்ருதக் சித்த அநர்ஹத்வத்தால் ஒன்றாக பிரமிக்கிறார்கள்
வாச்சா ஆரம்பணம் -வாக் பூர்வக -வாசா விகார நாமதேயம்
சதேவ ஆஸீத் -சத்தாகவே இருந்தது -விஜாதீயம் ஒன்றும் இல்லை /ஏக மேவ ஆஸீத் -ஒன்றே இருந்தது -சஜாதீய வஸ்துக்களும் இல்லை /
அத்விதீயம் ஆஸீத் -அந்த சத்துக்கு வேறே அவயங்களும் இல்லை -ஸூவகத பேதம் இல்லை -என்பர் அத்வைதிகள்
நம் சம்ப்ரதாயம் -சதேவ ஆஸீத் -பிராமண சம்பந்த யோக்யம் சத்தாகவே இருந்தது
இதம் -நாம் கண்ணால் பிறருக்கும் இவை -பிரத்யக்ஷ சித்தம்
அக்ரே –இந்த பார்க்கிற ஜகம் உண்டாவதற்கு முன்பு
ஏகமேவ ஆஸீத் -அந்த சத்தாக்க இருந்ததே ஜகத்தாக மாறி -உபாதான காரணம்
அத்விதீயம் ஆஸீத் -அந்த சத் மட்டுமே இருந்து தன் சங்கல்பத்தால் -நிமித்த காரணம் -அதிஷ்டாந்தரம் நிவர்த்தயாத்தி
உபாதான காரணத்வம் சொல்லி தொடர்ந்து நிமித்த காரணத்வம் சொன்னபடி
கிம்ஸ் வித் வனம் இத்யாதியால் -ப்ரஹ்மம் வனம் / ப்ரஹ்மம் மரம் / ப்ரஹ்மம் அத்தை கொண்டு ஸ்வர்க்கம் பூமி செய்து தரிக்கிறார்-என்று
முதலில் நிமித்த காரணத்வம் சொல்லி தொடர்ந்து உபாதான சஹகாரி காரணத்வமும் சொல்லிற்று
அபின்ன நிமித்த உபாதான காரணத்வம் இவற்றால் சொல்லிற்று ஆயிற்று
அக்ரே -என்று கால விசேஷம் /ஆஸீத் -க்ரியா விசேஷம் /ஏகமேவ -உபாதானத்வ விசேஷம் /அத்விதீயம் -நிமித்தத்வ விசேஷம் -அசத் கார்ய வாதம் நிரசித்து-
தேச பரிச்சேத ரஹிதம் -விபுவான படியால்-பஹிர் வ்யாப்தி /கால பரிச்சேத ரஹித்யம் -நித்யத்வத்தால் /வஸ்து பரிச்சேத ரஹிதம் -அந்தர்யாமித்வத்தால் —
நேதி நேதி -சத்யஸ்ய சத்யம் -ஸ்வரூபத்திலும் ஸ்வ பாவத்திலும் -நிர்விகாரம் -விலக்ஷணம் என்றவாறு
பிரக்ருத ஏதாவத்வம் ஹி பிரதிஷேததி ததோ பிரவீதி ச பூயகா -ஸூ த்ரமும் இத்தையே சொல்லும்
நேஹா நாஸ்தி கிஞ்சன –ஸர்வஸ்ய ஈஷானாக ஸர்வஸ்ய வஷீ -ஸத்ய சங்கல்பத்துவம் -சர்வ ஈச்வரத்வம்
-அப்ரஹ்மாத்வகம் நானாவத்வம் -ஸ்வ தந்த்ர நானாவத்வம் இல்லை என்கிறது -இவற்றால் ஸ்ருத்ய அபேதத்வம் நிரசிக்கப் பட்டது –

மேலே நியாய அபேதத்வம் நிரசிக்கப் படுகிறது
யானும் தானாய் ஒழிந்தானை யாதும் யவர்க்கும் முன்னோனை
தானும் சிவனும் பிரமனும் ஆகிப் பணைத்த தனி முதலை
தேனும் பாலும் கன்னலும் அமுதமுமாகித் தித்தித்தது
என் ஊனில் உயிரில் உணர்வினால் நின்ற ஒன்றால் உணர்ந்தேனே
முன்னோனை -அவ்யவகித்த பூர்வபாவி உபாதான காரணம் / ஸ்தூல அவஸ்தை யாக ஸூஷ்ம அவத்தையில் இருந்து பணைத்த -/ தனி முதல் -நிமித்த காரணம்
நியாயம் -யுக்தி – ரீதி- தர்க்கம் -அர்த்த சாதக ஞானம் -சப்த வித அனுபவத்தி –
-1-திரோதான அனுபவத்தி —அவித்யை ப்ரஹ்மத்துக்கு வந்தால் ஸ்வரூப நாசம் ஆகுமே /
நிமேஷாஸ் த்ரிலாவோ ஞானேய ஆம்நாதஸ்தே த்ரயக க்ஷணக க்ஷணம் பஞ்ச விதுகு காஷிடம் லகு சா தாஷா பஞ்ச சா
நிமேஷம் கண் இமைக்கும் நேரம் /3-நிமிஷம் ஒரு லபம் /3-லாபம் ஒரு க்ஷணம் /5-க்ஷணம் ஒரு காஷ்டை/
15-காஷ்டை -ஒரு லகு /15-லகு ஒரு நாழிகை /2-நாழிகை ஒரு முஹூர்த்தம் /
அவித்யா கர்மா சங்க நியான்யாய த்ரிதீய ஷக்திர்ஷ்யதே -ஸ்ரீ விஷ்ணு புராணம் –பிரகிருதி / ஜீவாத்மா / கர்மா -அவித்யை மூன்று சக்திகள் என்றவாறு
தர்ம பூத ஞானம் -இதனால் சுருக்கம் –
-2- அவித்யா ஸ்வரூப அனுபவத்தி
ப்ரஹ்மம் ஓன்று அவித்யை ஓன்று இரண்டுமே உண்டா இல்லையா -ப்ரஹ்மம் ஒன்றே உண்மை மற்றவை மாயம் என்பீர்கள் ஆனால் அவித்யையும் பொய் மித்யை ஆகுமே
அது மித்யை என்றால் அதுக்கு காரணம் எது -இப்படி அநவஸ்தா தோஷம் வருமே -இதனால் ஏக ஜீவ சரீர வாதம் நிராசனம் ஆயிற்று
3–நிவர்த்தக அனுபவத்தி
ஐக்ய ஞானம் அவித்யா நிவர்த்தகம் என்பர் அத்வைதி -அவித்யா அநிர்வசனீயம் -நிர்விசேஷ சின் மாத்திரை ப்ரஹ்மம் ஒன்றே சத்யம்
-அதனால் அவித்யை அசத்-முன்பு இருப்பதால் சத் -அதனால் அவித்யா சத்தும் இல்லை அசத்தும் இல்லை என்பர்
-சத் அஸத் அநிர்வசனீயம் / நிவ்ருத்தி அநிர்வசனீய ப்ரத்ய நீகம் என்பர் –
நிவ்ருத்தி -சத்தாகவோ -அசத்தாகவோ –இரண்டுமாகவோ -இரண்டும் இல்லாமலோ இருந்தாலும் நிவ்ருத்தி வராதே என்று காட்டுவார் –
4–நிவ்ருத்தி அனுபவத்தி
நிவர்த்தக ஞானம் சாஸ்திரம் -உங்கள் படி அதுவும் மித்யை –அதனால் நிவர்த்தக ஞானமும் மித்யை
5-ஞாத்ருத்வம் -ஞான உதய அனுபவத்தி —ஞானம் ஜேயம் ஞாதா –ஞானம் -ஞானம் உடையவன் -இரண்டையும் அத்வைதிகள் கொள்ளார்கள்
-அவித்யை -நிவர்த்தக ஞானம் -ப்ரஹ்மத்துக்கு -என்றும் ஐக்ய ஞானமே மோக்ஷம் என்பர் -நிவர்த்தக ஞானம் அனைத்தையும் நிவர்த்திக்கும் என்பது
-தேவதத்தன் எல்லாரையும் – பூதலம் தவிர – அழித்தான்-என்றால் சேதனன் கிரியையும் -கர்த்ருத்வமும் அழித்தான் என்றால்
இந்த அழிக்கும் கிரியையும் அழித்தான் என்றது ஆகுமே -தானும் மித்யை ஆகும் இதனால் –
கிரியை த்ரவ்யம் இல்லையே அளிக்க -அதே போலே கர்த்ருத்வம் அளிக்க முடியாதே -நிவர்த்தக ஞானம் ஞாதாவையும் ஞாத்ருத்வத்தையும் அழிக்க முடியாதே
ஞாத்ருத்வம் -ஞானம் உடையவன் என்பதே பொருந்தும் –
6–ஸாமக்ரி அனுபவத்தி –
சாஸ்திரம் -ஸாமக்ரி -கொண்டு ஐக்ய ஞானம் பெற்று மோக்ஷம் என்பீர்கள் ஆகில் -அந்த சாஸ்திரமும் மித்யை என்கிறீர்களே
கயிறு பாம்பு பிராந்தி ஞானம் -துஷ்ட கரண ஜன்யம் -பிராந்தி -ஆகாமி பயம் -பயத்துக்கு முன் நிலை –
பிராந்தி போக சத் கரண ஞானம் வேண்டும் -ஐக்ய ஞானம் -ஞாதா -சாஸ்திரம் எல்லாம் ப்ரஹ்ம அபிமானம் –
ஸ்ரீ ரெங்கராஜ ஸ்தவம் உத்தர சதகம் -11-ஸ்லோகத்தில் நிவ்ருத்தக நிவ்ருத்தி அனுபவத்தி
-ஸ்ரீ ராம அஸ்திரம் -இந்த -வேதம் பிரமீதீ அனைத்தும் மாயை என்பவர்களை ஒழிக்கட்டும்
சாஸ்திரமே மித்யா என்றால் அது பிரமாணம் ஆகாதே -அனைத்தும் சூன்யம் என்பவன் வாதமும் சூன்யம் ஆவது போலே அன்றோ இது –
குமாரிள பட்டர் -ஸர்வதா சத் உபாயானாம் வாதமார்க்காக -பிரவர்த்ததே அதிகாரோ அனுபயத்வாத் நவாதே சூன்ய வாதிநா-என்பர்-
7–சாஸ்திர பிரபல்ய அனுபவத்தி
பிரத்யக்ஷமாக பேதங்களை பார்க்கிறோம் -சாஸ்திரம் மூலம் ஐக்கியம் அறிகிறோம் பிரபல்யம் என்பதால் -இதுவே என்பர் அத்வைதி
ஆனால் பெத்த வாக்கியம் சாஸ்திரத்திலும் உண்டே -சாஸ்திரமும் மித்யை என்கிறீர்களே –
பிரத்யக்ஷம் சப்தாதி -மனுஷ்யத்தவாதி -விஷயங்கள் –
சாஸ்திரம் அவனையும் ஸ்வரூப ரூப குண விபூதி -காட்டும் இரண்டுக்கும் விரோதம் இல்லை
சாஸ்திரம் பிரமாணம் -பிரத்யக்ஷமும் பிரமாணம்
சம்ப்ரதாயம் –தாயம் -கொடுத்தது -பிரதாயம் -முதலில் கொடுத்தது -சம்ப்ரதாயம் -நன்றாக முதலிலே கொடுத்தது என்றவாறு –
நடாதூர் அம்மாள் தத்வ சாரத்தில் -ஸ்லோகங்கள் -49-தொடங்கி-22-ஸ்லோகங்களால் சங்கர மத நிரசனம் காட்டி அருளுகிறார் –
மாயாவாதிகள் இவர்கள் / லஷ்மணாச்சார்யா பக்ஷம் ராமானுஜர் தர்சனம் –
மேகநாதனை இளைய பெருமாள் வென்றால் போலே அன்றோ இது –
சங்கர மத நிரசனத்தாலே சாங்க்யம் புத்த சாருவாக மதங்களும் நிரசிக்கப் பட்டன

————–

இனி பாஸ்கர அத்வைத நிரசனம்
தாத்பர்ய தீபிகை -பாஸ்கர மதத்தை–அசித் ப்ரஹ்ம
ப்ரஹ்மம் உபாதி இரண்டு ஸத்ய பொருள்கள் -உபாதி போனபின்பு ப்ரஹ்மம் ஒன்றே -என்பது பாஸ்கர பக்ஷம்
உபாதி ப்ரஹ்ம வியாதிரிக்த வஸ்துவாந்த்ர அநபிஉபகமாத் -என்பதால் உபாதி -ப்ரஹ்மணேவ உபாதி சம்சர்கஹ-உபாதி உடைய கஷ்டம் தோஷங்கள் ப்ரஹ்மத்துக்கு வருமே
ப்ரஹ்மம் அபஹாதபாபியாதி–அத்யந்த அபாவம் -சுருதி வாக்கியங்கள் விரோதிக்கும் -நிர்தோஷ ஸ்ருதியஹா சர்வம் விஹன்யந்தே –
பர ப்ரஹ்மம் -விபு -மஹா ஆகாசம் போலே -ஜீவாத்மா அணு -குடாகாசாகம் போலே -கடம் தேக இந்திரிய சரீரம் உபாதி -என்பான் பாஸ்கரன் –
ஆகாசம் பிரிக்க முடியாதே என்றால் கட சம்யுக்த ஆகாசம் என்பான் -ப்ரஹ்மம் உபாதி சேர்ந்தால் க்ஷணம் தோறும் பந்தம் மோக்ஷம் ப்ரஹ்மத்துக்கு வருமே
ஸ்ரோத்ர இந்திரியம் ஆகாசத்தில் இருந்தது வந்து என்பான் பாஸ்கரன்
சாத்விக அஹங்காரத்தில் இருந்து வந்தது 11 இந்திரியங்களும் மனசும் -நம் சம்ப்ரதாயம் -சாஸ்திர ஸ்ம்ருதி சித்தம்
உபாதி ஸ்வரூப பரிணாமம் ப்ரஹ்மத்துக்கு -நிர்விகார ஸ்ருதிகளுக்கு விரோதிக்கும் –
மேல் யாதவ பிரகாசர் மத நிரசனம் –
பேதம் அபேதம் ஸ் வ பாவிகம்-சித் ப்ரஹ்மம் /அசித் ப்ரஹ்மம் -என்பான்
சர்வம் கல்விதம் ப்ரஹ்ம -அபேதம் காட்டும்
போக்தா போக்யம் ப்ரேரிதரம் ச மத்வா -பேதம் காட்டும்
சேதனஸ் சேதநா நாம் ஏகோ பஹு நாம் யோ விதா தாதி காமான்
ப்ரஹ்ம வேதா ப்ரஹ்ம்கைவ பவதி
ப்ரஹ்ம வித் ஆப் நோதி பரம்
ஜீவாத்மா அனந்த விபவ அவதாரம் போலே என்பான் -தஸ்யாச்ச தத் பாவாத் -தோஷங்கள் தட்டுமே
-ததாத்மகத்வத்தை -அவன் -ஸ்வரூப ஐக்கியம் என்பான் -நாம் சரீராத்மா பாவம் -அப்ருதக் சித்தம்
மண் குவியியலில் சிறிது கொண்டு பானை பண்ணி -தோஷம் ஒரு சின்ன பகுதிக்கு தான் என்பான் -சத்யம் இத்யாதி ஸ்ருதிக்கு விரோதிக்குமே
சங்கர பக்ஷம் அஞ்ஞானம் ப்ரஹ்மத்துக்கு -இவனோ தோஷமும் ப்ரஹ்மத்துக்கு
பரம புருஷன் -புருஷார்த்தமாய் இருப்பவன் -பாரமார்த்திக்க துக்கம் தோஷம் தட்டுமோ
எண்ணில்லாத ஜீவாத்மா என்பதால் எண்ணிலாத தோஷங்கள் ப்ரஹ்மத்துக்கு உண்டாகும்
ஜாதி வியக்தி-கடம் -படம் வெவ்வேறே ஜாதி -ஒரு கடம் வேறே கடம் வெவ்வேறே வியக்தி
-பின்ன அபின்ன வாதம் -கவ்தவம்-பசு -இரண்டும் அப்ருதக் சித்தம் -ஜாதி என்பது வஸ்துவினுடைய அசாதாரண ஆகாரம்
-பிரகாரம் -பிரகாரி இல்லாமல் இருக்காதே -அதனால் அப்ருதக் சித்தம் பசுவுக்கு
சாமா நாதி காரண்ய பிரத்யயம் -பசு வேறே பசுத்துவம் வேறே
ஏக சப்த அவித்ததா ப்ரத்யயம் -சேர்ந்தே இருப்பதால் ஒரே சப்தத்தால் இரண்டையும் சொல்கிறோம் –
பிரதம பிண்ட கிரஹணம் பேத ஆகார அக்ரஹணாத் அபேத பிரதிபத்தி -முதல் பார்வையில்
-நிர்விகல்பக ப்ரத்யக்ஷம் -பேத ஆகாரத்துடனே பார்க்கிறோம் முன்பே பார்த்தோம் -குறைந்த விசேஷங்களை முதலில் பார்க்கிறோம்
-இதனால் தான் கயிற்றை பாம்பு என்று பிரமிக்கிறோம் -குடத்தை பிரமிக்க மாட்டோம்
-இதனால் ஜாதி வியக்தி இரண்டுக்கும் பேதமே உண்டு அபேதம் இல்லை என்றதாயிற்று –

———————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ சுருதி பிரகாசிகாச்சார்யார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ ஈஷாவாஸ்ய உபநிஷத் —

February 12, 2017

அதனால் அதற்க்கு பின் ப்ரஹ்ம விசாரம் -கர்மா விசாரம் முதலில் -தேகம் கர்மா அல்ப அஸ்திர பலன்கள் /
ப்ரஹ்ம விசாரம் ஆத்மாவுக்கு ஞானம் மோக்ஷம் -இங்க மூன்றும் நித்யம் -அங்கு மூன்றும் அநித்தியம்
இதுக்கு தகுதி அதிகாரி யோக்யதை கர்மம் செய்தெ தானே –
சம்ஹிதை -முதலில் -ஆரண்யகம் -ரிஷிகள் சிஷ்யர் சம்வாதம் -அடுத்து / ப்ரஹ்மண்யம் /
உப நிஷத் குருவின் அருகில் இருந்து கேட்டு ப்ரஹ்மம் அருகில் சேர்க்கும் -அஞ்ஞானம் போக்கி ஞானம் கொடுக்கும்
தச உபநிஷத் -மேலும் சிலவும் முக்கியம் –
ஈஸா வாக்ய உபநிஷத்-முதல் சப்தம் கொண்டே பெயர் -18- மந்த்ரங்கள் -சம்ஹிதையில் -சுக்ல யஜுர்வேத பகுதி இது

சுக்ல யஜுர்வேதம்: வாஜஸனேயி சம்ஹிதை, நாற்பதாம் அத்தியாயம்

——————————————————

பூர்ணமதஃ பூர்ணமிதஂ பூர்ணாத்பூர்ணமுதச்யதே .–பூர்ணஸ்ய பூர்ணமாதாய பூர்ணமேவாவஷிஷ்யதே ৷৷
ஷாந்திஃ ஷாந்திஃ ஷாந்திஃ ৷৷

————————————

ஈஷாவாஸ்யமிதம் சர்வம் யத்கிஞ்ச ஜகத்யாம் ஜகத் .தேந த்யக்தேந புஞ்ஜீதா மா கரிதஃ கஸ்ய ஸ்வித்தநம் ৷৷ 1.1.1 ৷৷

ஈஷாவாஸ்யமிதம் சர்வம் -இதம் வஸ்து நிர்த்தேசம் – ஈஸனுக்கு வஸ்திரம் போலே என்றவாறு
அனைத்தும் -சேதன அசேதனங்கள் -ஈஸா வாஸ்யம் நாராயணனால் பாரா தந்திரமாக தரிக்கப்படுகின்றன
யத்கிஞ்ச ஜகத்யாம் -ஆகையால் -ஜகத்தில் உள்ள அனுபவிக்கும் பொருள்கள் அனைத்தும்
ஜகத் .தேந த்யக்தேந -நம்மது இல்லை -காண் செய்ய வில்லை -நமக்கு பலன் இல்லை -ப்ரஹ்மம் தேடவே லஷ்யம் அத்தில் கண் வைத்து
கர்த்ருத்வ மமதா பல தியாகங்கள் மூன்றும் விட வேண்டுமே -வைத்த நாள்களில் இவை அவாந்தர பலமாக எம்பெருமான் அருள் என்ற எண்ணத்துடன் –
புஞ்ஜீதா -அனுபவிக்க வேண்டும்
மா கரிதஃ கஸ்ய ஸ்வித்தநம் -வேறு ஒருவருடைய தனம் உன்னது என்று ஆசைப்படக் கூடாதே —
அனைத்தும் ப்ரஹ்மாத்மகம் -அன்றோ -பிறர் நன் பொருள் தன்னையும் நம்பி இருக்கக் கொடாதே
ஸ்ரீ கீதை -3-30-மயி சர்வானி கர்மானி ஸன்யஸ்ய/ -18-அத்யாயம் மீண்டும் சன்யாசம் தியாகமே என்று த்ரிவித தியாகம் உண்டே
ஸ்ரீ விஷ்ணு புராணம் -வாசு தேவ பக்தன் இல்லை புருஷ பசு -இப்படி இல்லாதவன்
ப்ரஹ்ம ஆத்மா சரீரம் மனஸ் இந்திரியங்கள் ஐந்தும் சேர்ந்த செயல்

இவையனைத்தும் ஈசனால் நிரம்பியுள்ளது அசையும் உலகனைத்தும் அதைத் துறந்து நீ இன்பம் துய்த்திடுக
பிறர் பொருளை விரும்பற்க.

————————————–

குர்வந்நேவேஹ கர்மாணி ஜிஜீவிஷேச்சதம் சமாதா –
ஏவஂ த்வயி நாந்யதேதோஸ்தி ந கர்ம லிப்யதே நரே ৷৷ 1.1.2 ৷৷

வர்ணாஸ்ரம கர்மங்களை இடைவிடாமல் செய்து நூறு ஆண்டுகள் பூர்ணமாக இருந்து –
பிரவ்ருத்தி நிஷ்டர் -இருக்கும் முறைமை சொல்லிற்று –

குர்வந்நேவேஹ கர்மாணி ஜிஜீவிஷேச்சதம் சமாதா –
வர்ணாஸ்ரம கர்மங்களைச் செய்து கொண்டு இருந்தே -ஏவ காரம் –
ஏவஂ த்வயி நாந்யதேதோஸ்தி ந கர்ம லிப்யதே நரே ৷৷
கர்மங்கள் தீண்டாது -இது தவிர வேறே வழி இல்லை –
பற்று அற்ற வாழ்வை மீண்டும் காட்டும் -ந ரமேத-ஆசை இல்லாமல் இருக்க வேண்டும் என்றபடி
பத்ம பத்ர தாமரை இலை தண்ணீர் போலே –
ப்ரஹ்ம ஞானியாக நீண்ட ஆயூஸூடன் இருந்தால் லோகத்துக்கு தானே நன்மை –
அநேந ம ஜீவன ஹேதுநா நீ நூறு வருஷம் இரு-திரு மாங்கல்ய மந்த்ரம் போலே
வைராக்யம் -கைங்கர்ய புத்தியுடன் செய்ய வேண்டும் -ஸ்ரீ கீதை -18-5-கர்மங்கள் பண்ண வேணும் -கார்யம் ஏவ -பாவங்கள் தொலைய –
புண்யம் சம்பாதிக்க கூடாதே -வைகுண்ட நீள் வாசல் புக-
செய்கின்ற கிரியை எல்லாம் நானே என்னும் இத்யாதி –

இங்கு செயல்கள் புரிந்து நூறாண்டு வாழ இச்சை கொள்க
இது தவிர்த்து வேறுவழி இல்லை
இத்தகைய மானிடரை செயல்கள் பற்றுவதில்லை.

————————————

அஸுர்யா நாம தே லோகா அந்தேந தமஸா வரிதாஃ .
தா் ఁஸ்தே ப்ரேத்யாபிகச்சந்தி யே கே ச ஆத்மஹநோ ஜநாஃ ৷৷ 1.1.3 ৷৷

அஸுர்யா நாம தே லோகா அந்தேந தமஸாவரிதாஃ .-அசூரர்கள்-வாழும் நரக லோகம் -தமஸ் -குணத்தால் -அந்தகாரத்தில் மூழ்கி –
தா் ఁஸ்தே ப்ரேத்யாபிகச்சந்தி யே கே ச ஆத்மஹநோ ஜநாஃ –மரங்களை விட கீழ்ப் பட்டவர்களாக
-அஞ்ஞானத்தாலே தங்களையே அழித்துக் கொண்டு -கர்ம சூழலிலே அகப் பட்டு திண்டாடுகிறார்கள் –

அஸுர்யா நாம தே லோகா அந்தேந தமஸாவரிதாஃ .-இருளால் சூழப்பட்ட
சாத்மஹநோ ஜநாஃ -ஆத்மாவை கொல்பவர்கள்-இருக்கும் நிலையில் இல்லாதது கொன்றதும் சமம் தானே
அஞ்ஞானிகளுக்கு உள்ள அநர்த்தம் இங்கு –ஸ்வர்க்கமும் பகவத் பிராப்தியை ஒப்பிட்டால் நரகம் போலே தானே –
நரகத்தை நகு நெஞ்சே -சம்சாரத்தை சொன்னபடி -அஸ்வத்தாமா -பொய் சொன்னதுக்காக தர்மபுத்ரன் நரகம் பார்த்தது போலே இல்லை ஆழ்வாருக்கு
சீதை ராமர் இடம் புருஷ விக்ரகம் என்று இகழ்ந்து -நின் பிரிவிலும் சுடுமோ காடு -ஸ்வர்க்கம் நரகம் லக்ஷணம் உண்டே
ஆத்ம ஸ்வரூபம் -சேஷத்வ பாரதந்தர்யம் ஞான ஆனந்தமே வடிவு என்று அறியாமல்
தா் ఁஸ்தே ப்ரேத்யாபிகச்சந்தி யே கே- அபி கச்சந்தி -அடைகிறார்கள் -சம்சாரத்தில் மாறி மாறி பிறப்பார் -வெந்நரகம் தானே சம்சாரம்
தங்களையும் மறந்து –சம்சாரம் பெரும் கடலிலே நோவு படுவார்கள் –
சோரேன ஆத்ம அபஹாரி –உயர்ந்த பொருளை உயர்ந்தவர் இடம் திருடியது தானே –

காரிருள் மூடியவை ஒளியற்றவை அவ்வுலகங்கள் ஆன்மாவை அழிப்போர் செத்ததும் அங்கு சென்றடைகின்றனர்

—————————————————-

அநேஜதேகம் மநஸோ ஜவீயோ நைநத்தேவா ஆப்நுவந்பூர்வமர்ஷத் .
தத்தாவதோந்யாநத்யேதி திஷ்டத்தஸ்மிந்நபோ மாதரிஷ்வா ததாதி ৷৷ 1.1.4 ৷৷

அநேஜதேகம் -ஏகம்-ஒப்பற்ற -அநேஜத் -அநேஜத்-அசையாதவர் -பலவானது -அசையாமல் -நமக்காக அவதரித்து
மநஸோ ஜவீயோ நைநத்தேவா -மனசை விட வேகமாக போகக் கூடியவர் -தேவா -ப்ரஹ்மாதிகள்
ஆப்நுவந்பூர்வமர்ஷத் .–பூர்வம் -முன்னாலே இருந்தாலும் -அடைய விவில்லை –
ஆத்மநீ திஷ்டதி ந ஆத்மா வேத -அந்தராத்மாவாகவே இருந்தாலும் அறிய முடியாதவன் அன்றோ
உயர்வற உயர்நலம் உடையவன் அன்றோ -ஆனைக்கு குதிரை வைப்பாரைப் போலே
தத்தாவத அந்யாநத்யேதி திஷ்டதி –அனைத்தையும் தாண்டி வெல்பவர் –சங்கல்ப லேசத்தாலே அனைத்தையும் செய்பவர் அன்றோ
தஸ்மிந் ஆபோ மாதரிஷ்வா ததாதி —மாதரிஷ்வா வாயு தஸ்மிந் -நீர் முதலானவற்றை தரிப்பது இவனால் –
உருவமே இல்லை வாயு -தண்ணீர் சுமந்து -பகவத் வை லக்ஷண்யம் சொல்லும் –

அந்த ஒன்று அசையாதது-மனதினும் விரைவானது
தேவர்களாம் புலன்கள்-அதனை அடைவதில்லை
அவற்றுக்கும் முன்செல்வது அது நின்றுகொண்டு ஓடுபவற்றை முந்துகிறது அது
அதன் இருப்பில் காற்று அனைத்தையும் உயிர்ப்பிக்கிறது.

——————————————–

ததேஜதி தந்நைஜதி தத்தூரே தத்வந்திகே .
ததந்தரஸ்ய ஸர்வஸ்ய தது ஸர்வஸ்யாஸ்ய பாஹ்யதஃ ৷৷ 1.1.5 ৷৷

ததேஜதி தந்நைஜதி தத்தூரே தத்வந்திகே .-அந்த பர ப்ரஹ்மம் -இயக்குவதை ஞானிகள் அறிய –
இயங்காமல் இருப்பதாக அஞ்ஞானிகள் கருதுவார்கள்
ததந்தரஸ்ய ஸர்வஸ்ய தது ஸர்வஸ்யாஸ்ய பாஹ்யதஃ ৷৷ அனைத்துக்குள்ளும் அந்தராத்மாவாக இருந்தாலும்
தூரமாக வெளியிலே எங்கேயோ இருப்பதாக அஞ்ஞானிகள் எண்ணுவார்கள் –

ததேஜதி தந்நைஜதி -நமக்காக அசைகிறார் -வ்யூஹம் -வைபவம் -அந்தர்யாமி -அர்ச்சை ஏகதி –
தந்நைஜதி – அசைவதே இல்லை -ஸ்வரூபத்தால் -விபு அன்றோ –
கருணையால் அசைகிறார் -சால பல நாள் உகந்து ஞாலத்தூடே நடந்தும் உழன்றும் -கோல திரு மா மகளோடு உயிர்கள் காக்க அன்றோ
தத்தூரே தத்வந்திகே .–தூரம் அருகில் இரண்டும் சொல்லும் இங்கும் -தூரே அந்திகே -சேயன் அணியன்-
அன்பு இல்லாவர்களுக்கு தள்ளியும் அன்புள்ளவர்களுக்கு அருகிலும் –
ததந்தரஸ்ய ஸர்வஸ்ய தது ஸர்வஸ்யாஸ்ய பாஹ்யத-அனைத்துக்கும் -உள்ளும் வெளியிலும் இங்கும் இரண்டும் –
அந்த -பாஹ்ய -ஸூஷ்மமான ஜீவனுக்கும் உள்ளே -இதுவே ப்ரஹ்ம தர்சனம் -பண்டிதர் சம தர்சனம்
பாராமுகம் -அபிமுகம் -அவன் இடம் விஷயாந்தரங்கள் இடம்–இரண்டும் உண்டே –

அது அசைகிறது அசைவதில்லை அது தொலைவிலுள்ளது
அருகிலும் அது இவ்வனைத்தின் உள்ளே உள்ளது அனைத்தும் கடந்தும்.

—————————————————

யஸ்து ஸர்வாணி பூதாந்யாத்மந்யேவாநுபஷ்யதி .
ஸர்வபூதேஷு சாத்மாநஂ ததோ ந விஜுகுப்ஸதே ৷৷ 1.1.6 ৷৷

யஸ்து ஸர்வாணி பூதாந்யாத்மந்யேவாநுபஷ்யதி .-முமுஷுவானவன் அந்த ப்ரஹ்மம் – அனைவருள்ளும் இருப்பதை உணர்ந்து
ஸர்வபூதேஷு சாத்மாநஂ ததோ ந விஜுகுப்ஸதே -அனைவரையும் தன்னைப் போலவே நினைத்து
யாரையும் வெறுக்காமல் தன்னிடம் கொண்ட விருப்பத்தை அனைவரிடமும் செலுத்துகிறான் –

யஸ்து ஸர்வாணி பூதாநி -ஆத்மந்யேவாநுபஷ்யதி .—அனைத்தையும் -பரமாத்மா விடமே பார்த்து -அந்தர்யாமியாகவும் பார்த்து –
ஆதாரம் -தங்குகிறான் -உள்ளே புகுந்து நியமிக்கிறார் -என்று அறிய வேண்டும் -நாராயண அர்த்தம் –
ஸர்வபூதேஷு சாத்மாநம் ததோ ந விஜுகுப்ஸதே -எத்தைப் பார்த்தாலும் வெறுப்பு வராதே -ப்ரஹ்மாத்மகமாக அனைத்தையும் பார்ப்பதால் –

அனைத்துயிர்களையும் தன்னிலும் தன்னை அனைத்துயிர்களிலும் காண்போர் எதையும் வெறுப்பதில்லை.

——————————————–

யஸ்மிந்ஸர்வாணி பூதாந்யாத்மைவாபூத்விஜாநதஃ .
தத்ர கோ மோஹஃ கஃ ஷோகஃ ஏகத்வமநுபஷ்யதஃ ৷৷ 1.1.7 –

யஸ்மிந்ஸர்வாணி பூதாந்யாத்மைவாபூத்விஜாநதஃ .
யஸ்மின் விஜாநத–ப்ரஹ்மத்தை அறிய எண்ணுபவன் -முமுஷு –
சர்வாணி பூதாநி ஆத்ம இவ பூத் -அனைத்தும் ப்ரஹ்மாத்மகமே என்ற அறிவு கொண்டு இருப்பதால்
தத்ர கோ மோஹம் கம் ஷோகம்-அந்த முமுஷுக்கு சோகம் மோகம் என்பதே இல்லையே
ஏகத்வமநுபஷ்யதம் -ப்ரஹ்மம் -அனைத்துக்குள்ளும் இருப்பதை உணர்கிறான் -ஏகத்துவம் அநு பஷ்யதம்-

யஸ்மிந்ஸர்வாணி பூதாந்யாத்மைவாபூத்வி-எல்லா ஜீவர்களை சரீரமாக கொண்டு அந்தர்யாமி என்று அறிபவன் அறிவாளி
அத்வைத த்ருஷ்ட்டி -அனைவரும் ப்ரஹ்ம சரீரம் -விசிஷ்டா அத்வைதம் என்ற புத்தி
விஜாநத-அறிவாளி -கையால் தங்கப்படும் ரேகை புத்தகம் கடிகாரம் -இந்த கோணத்தில் ஒன்றே போலே –
தத்ர கோ மோஹஃ கஃ ஷோகஃ –அந்த நிலையில் மோகம் இல்லை வருத்தமும் இல்லை
மோகம் -அஹங்காரம் இல்லை -ஒன்றை மற்றதாக மயங்காமல் இருப்பதே மோகம்
-சோகம் மமகாராம் இல்லை -என்னது என்ற எண்ணம் இல்லை நானே அவனது என்று நினைப்பான் -தேசிகன்
இவரால் எனக்கு துன்பம் சேராதே -என் வலது கை இடது கைக்கு துன்பம் தராதே -இரண்டும் எனக்கு அங்கம் என்று உணருவதால்
மோகம் வந்தாலே சோகம் வருமே –
ஏகத்வமநுபஷ்யதஃ -ஒற்றுமையை பார்ப்பவன் -ஏகத்துவம் அநு பஸ்யத-ஒருவனின் சரீர பூதர்கள்
சர்வம் கல்விதம் ப்ரஹ்ம சாந்தோக்யம் -ச ப்ரஹ்ம இத்யாதி

ஆன்மாவே அனைத்துயிரும் ஆனது என அறிந்து ஒருமை கண்டோனுக்கு ஏது மயக்கம் ஏது கவலை?

——————————————–

ஸ பர்யகாச்சுக்ரமகாயமவ்ரணமஸ்நாவிர ఁ் ஷுத்தமபாபவித்தம் .
கவிர்மநீஷீ பரிபூஃ ஸ்வயஂபூர்யாதாதத்யதோர்தாந்வ்யததாச்சாஷ்வதீப்யஃ ஸமாப்யஃ ৷৷ 1.1.8 ৷৷

ஸ பர்யகாச்சுக்ரமகாயமவ்ரணமஸ்நாவிர ఁ் ஷுத்தமபாபவித்தம் .
ச -அந்த பர ப்ரஹ்மம் / பிரயாகச் -சர்வ வியாபி -/ஸூ க்ரம்-சுத்த சத்வ மாயம் -பரஞ்சோதி /
அ காயம் -கர்ம அனுகுணமான தேகம் இல்லாதவன் / அ வர்ணம் -தோஷம் இல்லாதவன் /அஸ் நவிரம் -தோஷம் தட்டாதவன்
ஷூ த்தம் கல்யாணைக-பவித்ரன் -/ அபாபவித்தம் -அகில ஹேய ப்ரத்ய நீகம்
கவிர்மநீஷீ பரிபூம் –முக்காலத்திலும் பராத்பரன் -ஓத்தார் மிக்கார் இலையாய மா மாயன் -புருஷோத்தமன் –
ஸ்வய பூர்யா-தாதத்யதோர்தாந்வ்யததாச்சாஷ்வதீப்யஃ ஸமாப்யம் –ஸ்வயம்பூ -தனக்கு ஒரு காரணம் இல்லாதவன் /
வியாததாத் அர்த்தான்–யாததாத்யதா -சாஸ்வதிப்பிய சமாத்திய -நாட்டினான் தெய்வங்கள் –
-இன்னார் இன்ன காரியத்துக்கு என்று -எல்லா காலத்துக்கும் -சாஸ்வதமாக –

ஸ பர்யகாத் -அனுபவிக்கிறான்
சுக்ரம் -தோஷம் இல்லாமல்
அகாயம் -சரீரம் அற்று
அவ்ரணம் -வ்ரணங்களே இல்லாமல்
அஸ்நாவிரம் -நரம்பு இல்லாமல் -நரம்பு மண்டலம் இருந்தால் தானே துக்கம் தெரியும்
ஷுத்தம்-சுக துக்கம் அற்று
அபாப வித்தம் .-புண்ய பாபங்களால் தீண்டப்படாமல்
கவிர்மநீஷீ-மனுஷ்யன் -கவி -அனுபவம் பேசி எழுதி வைத்து -தனக்கும் நன்மை பிறருக்கும் நன்மை –
பரிபூஃ -விபரீத அர்த்தம் சொல்வாரே அடக்கி -பராங்குசர் -பராசரர் -வேத-பகவத் விரோதிகளை ஹிம்சிப்பவர்கள் –
ஸ்வயஂபூ-தான் அறிந்து
யா தாதத்யதோர்தாந்வ்யததாச்சா-யதார்த்த விஷயம் உள்ளபடி அறிவித்து
சாஷ்வதீப்யஃ ஸமாப்யஃ –சாஸ்வதமாக -உள்ளவனை சாஸ்வதமான கவிகளால் உலகுக்கு நன்மை பயப்பவர்

அவன் எங்கும் சூழ்ந்தவன் சுடரோன் உடலற்றவன் வடுவற்றவன் தசையற்றவன் தூயோன்
பாவம் துளைக்காதவன் உட்பொருள் உணரும் கவி அறிவோன் சுயம்பு அனைத்தும் கடந்தவன்
முடிவற்ற வருடங்களுக்கு அனைத்தையும் முறையாக வகுத்து வைத்தான்.

——————————————–

அந்தஂ தமஃ ப்ரவிஷந்தி யே஀வித்யாமுபாஸதே .
ததோ பூய இவ தே தமோ ய உ வித்யாயா் ఁரதாஃ ৷৷ 1.1.9 ৷৷

அந்தஂ தமஃ ப்ரவிஷந்தி-அந்தகாரமான தமசில மூழ்கி
யே஀வித்யாமுபாஸதே .—அ வித்யா –வித்யைக்கு வேறுபட்ட கர்மம் -அக்னிஹோத்ராதி கர்மங்களில் ஈடுபட்டு
ததோ பூய இவ தே தமோ -மீண்டும் மீண்டும் தமஸில் ஆழ்ந்து -ததா-அந்த ஆழ்ந்த அந்தகாரத்தில் –
ய உ வித்யாயா்ரதா –ஞான பாகம் மட்டும் உள்ளவர்களும் அப்படியே -ஞான அனுஷ்டானங்கள் இரண்டுமே வேண்டும் என்றவாறு –

பரம புருஷார்த்த சாதனம் அடுத்த மூன்றும் சொல்லும் -பக்தி ரூபாபன்ன ஞானமே —
ஞானான் மோக்ஷம் -பக்தியால் மட்டுமே-இரண்டுமே சொல்லுமே என்னில் -ஞானம் கீழ் படி முதிர்ந்த நிலையே பக்தி –
கர்ம யோகம் ஞான யோகம் இரண்டும் தனி தனியாக சாதனம் ஆகாது -கர்ம யோகம் அங்கம் ஞான யோகம் அங்கி -இருக்க வேண்டுமே
என்பதை இதில் காட்டும்
அந்தஂ தமஃ ப்ரவிஷந்தி –அந்தகாரம் அடைகிறார்கள்
யே஀ அவித்யாம் உபாஸதே .-கர்ம யோகம் மட்டும் உள்ளவர்கள் -அவித்யாம் -கர்ம யோகம் -ஞான யகம் பின்னம்
ததோ பூய இவ தே தமோ ய -அதோ கதி-கீழே கொஞ்சம் கர்மயோகம் செய்து நாளடைவில் ஞானம் வர வாய்ப்பு உண்டே
கர்மா செய்ய செய்ய பாபங்கள் தொலையுமே -வித்யாயம் -ஞான யோகம் மட்டும் உள்ளவர்கள் –
ஓட்டை ஓடம் ஒழுகல் ஓடம் போலே இரண்டும்-
கர்மமும் கைங்கர்யத்தில் புகுருமே -பாஷ்யகாரர் சந்தியாவந்தனம் அர்க்யம் எழுந்து இருந்து இறுதி வரை செய்து அருளினார்

அடர் காரிருள் வழிச் சென்றடைவர் அறியாமையில் ஒழுகுவோர் அதனினும் பெரிய இருளடைவர் அறிவில் ஆழ்ந்தோர்.

————————————-

அந்யதேவாஹுர்வித்யயாந்யதாஹுரவித்யயா .
இதி ஷுஷ்ரும தீராணாஂ யே நஸ்தத்விசசக்ஷிரே ৷৷ 1.1.10 ৷৷

அந்யதேவாஹுர்வித்யயாந்யதாஹுரவித்யயா .-ஞானத்தால் வேறே பலமும் -ப்ரஹ்மம் அடைந்து –என்றும்
கர்மத்தால் வேறே பலமும் -புலன்களை அடக்குதல் -என்றும் -அடைகிறார்கள் -என்று
இதி ஷுஷ்ரும தீராணாஂயே நஸ்தத்விசசக்ஷிரே -தீர்ண புத்தி உள்ள குருக்கள் நினைக்கிறார்கள் என்று தப்பாக அறிகிறார்கள்
ஞானம் அனுஷ்டானம் இரண்டுமே வேண்டும் என்று மீண்டும் சொன்னவாறு –

அந்யதேவாஹுர்வித்ய-பர வித்யை -ஞான யோகம் செய்து பெரும் பலன் -முக்தி
யாந்யதாஹுரவித்யயா .-கர்ம யோகத்தால் கிடைக்கும் பலம்-வேறு பட்டது -குழப்பம் வேண்டாம்
பல பேதம் -சொத்து -சேனை யாகம் விரோதி அழிக்க இத்யாதி
இதி ஷுஷ்ரும தீராணாம் -மிக உயர்ந்தவர் உபதேசம் -வேதாச்சார்யர் -வேத புருஷன் –
யே நஸ்தத்விசசக்ஷிரே –கர்மயோகம் அங்கமாக கொண்ட ஞான யோகம் -ஒன்றே மோக்ஷம் கொடுக்கும் என்றவாறு
கர்மத்துக்கும் அதர்மம் ஞானத்தை பார் -ஞான யோகத்துக்குள் கர்மத்தை பார் –எதற்க்காக செய்கிறோம் அறிவே ஞானம்

அறிவால் அடைவது ஒன்று அறியாமையால் அடைவது வேறொன்று என
எமக்கு அதை விளக்கிய பெரியோர் கூறக் கேட்டோம்.

—————————————————

வித்யாஂ சாவித்யாஂ ச யஸ்தத்வேதோபய ఁ் ஸஹ .
அவித்யயா மரித்யுஂ தீர்த்வா வித்யயாமரிதமஷ்நுதே ৷৷ 1.1.11 ৷৷

வித்யாஂ சாவித்யாஂ ச -இப்படி ஞான பாகம்–வித்யா / கர்ம பாகம் -அ வித்யா –
யஸ்தத்வேதோபய ఁ் ஸஹ .–இரண்டையும் அறிந்தவன் -எஸ் தத் வேத உபயம்
-அவித்யயா மரித்யுஂ தீர்த்வா வித்யயாமரிதமஷ்நுதே –சம்சாரம் சூழலில் இருந்து விடுபட்டு
-கர்ம யோகம் அங்கமாக ஞான யோகம் கைவந்த -என்றபடி -உஜ்ஜீவிக்கிறான் –

வித்யாஂ சாவித்யாஂ ச யஸ்தத்வேதோபய ఁ் ஸஹ .–ஞான யோகம் கர்மயோகம் இரண்டும் சேர்ந்து ஒத்தாசை
நீண்ட படிக்கட்டு –ஞான யோக ஆரம்ப விரோதிகளை போக்க கர்மயோகம் –
ஞானம் பண்ண பண்ண உபாசன மஹாத்ம்யத்தாலே பிராப்தி பிரதிபந்தகங்கள் அப்புறம் போகும் –
அவித்யயா மரித்யுஂ தீர்த்வா -கர்ம யோகத்தால் ஞான யோக உதய விரோதிகளை போக்கி மேலே
வித்யயாமரிதமஷ்நுதே -ஞான யோகத்தால் மோக்ஷ பிராப்தி அடையலாம்
ஞான கப்பல் -சம்சார சாகரம் தாண்ட –/ ஞானம் கப்பல் என்றால் திரும்பலாம் சங்கை –
நெருப்பு பாபங்களை பஸ்மம் ஆக்கும் -திரும்பாதே — இரண்டு த்ருஷ்டாந்தம் கீதையில் காட்டி
கர்ம யோகம் -நித்ய அனுஷ்டானம் -நித்ய ஆராதனம் -நித்ய அனுசந்தானம் மூன்றும்
ஞான யோகம் -அனவ்ரத த்யானம் -இத்யாதி -பக்திஸ்ய நவ லக்ஷணம் ஸ்ரவணம் கீர்த்தனம் -இத்யாதி ப்ரஹ்லாதன்

அறிவு அறியாமை இரண்டும் ஒன்றுசேர அறிந்தோன்
அறியாமையால் மரணம் கடந்து அறிவினால் அமுதநிலை அடைகின்றான்.

———————————————–

அந்தஂ தமஃ ப்ரவிஷந்தி யேஸஂபூதிமுபாஸதே .
ததோ பூய இவ தே தமோ ய உ ஸஂபூத்யா ఁ் ரதாஃ ৷৷ 1.1.12 ৷৷

அந்தஂ தமஃ ப்ரவிஷந்தி யேஸஂபூதிமுபாஸதே .-அந்தகாரம் -தமஸ் -பிரக்ருதியை உபாசனம் செய்து -பிரவிஷந்தி -சம்சாரத்தில் ஆழ்ந்து இருப்பர்
ததோ பூய இவ தே தமோ ய உ ஸஂபூத்யா ரதா -ஹிரண்யகர்ப்பத்தில் உள்ள பர ப்ரஹ்மத்தை உபாசனம் பண்ணி
உஜ்ஜீவிப்பது இருக்க கைவல்யம் மட்டும் பெற்று மீளாத துக்கம் அடைவார்கள் –

அந்தஂ தமஃ ப்ரவிஷந்தி யே-மீண்டும் அந்தகார தமஸ் இவற்றில் சிக்கி -சிற்றின்பம் -அல்பம் அஸ்திரம் -அதோ கதி இருவருக்கும்
அஸம்பூதிம் உபாஸதே -கைவல்யார்த்தி உபாசனம் .-சரீரம் இல்லாமல் ஆத்ம அனுபவம்
–ஸம்பூதி உபாசனம் ஐஸ்வர்யார்த்தி -மீண்டும் மீதும் பிறந்து அனுபவிக்க –
ததோ பூய இவ தே தமோ ய உ ஸஂபூத்யா ப்ரதா -இருள் சூழ்ந்த லோகம் மண்டி

அடர் காரிருள் வழிச் சென்றடைவர்
அருவத்தை வழிபடுவோர்
அதனினும் பெரிய இருளடைவர்
உருவத்தில் ஆழ்ந்தோர்

—————————————————-

அந்யதேவாஹுஃ ஸஂபவாதந்யதாஹுரஸஂபவாத் .
இதி ஷுஷ்ரும தீராணாஂ யே நஸ்தத்விசசக்ஷிரே ৷৷ 1.1.13 ৷৷

அந்யதேவாஹுஃ ஸஂபவாதந்யதாஹுரஸஂபவாத் .–அந்யத் இவ ஆஹூ சம்பவத் -கைவல்ய நிஷ்டர்களும்
-அந்யத் ஆ ஹூ அ சம்பவத் -பிரகிருதி ஐஸ்வர்ய காமரும் -அந்தகாரத்தில் ஆழ்ந்தே போகிறார்கள் என்று
இதி ஷுஷ்ரும தீராணாஂ யே நஸ்தத்விசசக்ஷிரே –ஸூ ஷ்மம் அறிந்த ப்ரஹ்ம நிஷ்டர் நன்றாக உபதேசித்து அருளி இருக்கிறார்கள் –

அந்யதேவாஹுஃ ஸஂம்பவாத-கைவல்யார்த்தி உபாசகர் பெரும் பலன் வேறே
அன்யதா ஹுரஸம்பவாத் .-ஐஸ்வர்யார்த்தி உபாசகர் பெரும் பலன் வேறே
இதி ஷுஷ்ரும தீராணாஂ யே நஸ்தத்விசசக்ஷிரே -இரண்டுமே பகவத் பிராப்தி இல்லை என்றே வேத புருஷன் காட்டி அருளுகிறார்

உருவத்தால் அடைவது ஒன்று
அருவத்தால் அடைவது வேறொன்று என
எமக்கு அதை விளக்கிய பெரியோர்
கூறக் கேட்டோம்.

——————————————————

ஸஂபூதிஂ ச விநாஷஂ ச யஸ்தத்வேதோபய ఁ் ஸஹ .
விநாஷேந மரித்யுஂ தீர்த்வா ஸஂபூத்யாமரிதமஷ்நுதே ৷৷ 1.1.14 ৷৷

ஸஂபூதிஂ ச விநாஷஂ ச யஸ்தத்வேதோபய சஹா .-ஞான யோகம் கர்ம யோகம் இரண்டும் கை வந்த பின்பு பக்தி உபாசனம் செய்து
விநாஷேந மரித்யுஂ தீர்த்வா –விநாசேந -கர்மங்களை ருசி வாசனைகள் உடன் விட்டு –மிருத்யம் தீர்த்தவ -சம்சாரம் கடந்து
ஸஂபூத்யாமரிதமஷ்நுதே -அசம்புத்ய அம்ருதம் அஸ்நுதே -முக்தி அடைகிறார்கள் –

ப்ரஹ்ம பிராப்தி அடைந்து-கைங்கர்யத்துக்கு தக்க சரீரம் எடுத்து -மீண்டு பிறக்காமல் இரண்டு பேர் பெரும் பேற்றை பெறலாமே –
ஸம்பூதிஂ ச விநாஷஂ ச யஸ்தத்வேதோபய -உபயத்தினுடைய -கைவல்ய உபாசகர் விரும்பும் பிறவி இல்லாமல் -விநாசக சரீர பிராப்தியும்
ஐஸ்வர்யார்த்தி விரும்பும் சரீர பிராப்தியும் -ஆனால் அப்ராக்ருத சரீர பிராப்தியும்
ஸஹ . விநாஷேந மரித்யும் தீர்த்வா –பிராகிருத மண்டலம் தாண்டி
ஸம்பூ த்யாமரிதமஷ்நுதே -அப்ராக்ருத சரீர பிராப்தி பெறலாமே

அருவம் உருவம்
இரண்டும் ஒன்றுசேர அறிந்தோன்
உருவத்தால்
மரணம் கடந்து
அருவத்தால்
அமுதநிலை அடைகின்றான்.

———————————————-

ஹிரண்மயேந பாத்ரேண ஸத்யஸ்யாபிஹிதஂ முகம் .
தத்த்வஂ பூஷந்நபாவரிணு ஸத்யதர்மாய தரிஷ்டயே ৷৷ 1.1.15

ஹிரண்மயேந பாத்ரேண ஸத்யஸ்யாபிஹிதஂ முகம் .–அந்த சத்தியமான பர ப்ரஹ்மம் -ஹிரண்ய மயமான -ஆதித்ய மண்டலத்துக்குள்
-கறந்த பாலில் நெய்யே போலே மறைந்து இருக்க
தத்த்வஂ பூஷந்நபாவரிணு ஸத்யதர்மாய தரிஷ்டயே -தத் த்வம் புசன் -அபவ்ருணு-ஆதித்யன் -தானே-த்ருஷ்டயே -காட்டிக் கொடுக்கிறான்
-யாருக்கு என்றால் ஸத்ய தர்மாய-வர்ணாஸ்ரம கர்ம அனுஷ்டானங்களை பண்ணி ஞான யோகம் கைவந்த பக்தி நிஷ்டர்களுக்கு -உபாசகர்களுக்கு –

உபாசகனின் பிரார்த்தனை இது முதல் மேல் ஸ்லோகங்களில்
ஹிரண்மயேந பாத்ரேண ஸத்யஸ்யாபிஹிதம் முகம் .பொன் மயமான -பாத்திரம் -ஐஸ்வர்யம் கைவல்யம் -இவை –
இவை அனுபவிக்க ப்ரஹ்ம ப்ராப்தியில் புத்தி வைக்க முடியாமல் -உபாயம் மறைந்து
போகத்தாலே போகம் அனுபவிக்க முடியாதே -யோகம் வேண்டுமே -மறைந்த அத்தை பிரகாசிக்க வேண்டும்
தத்த்வம் பூஷந்நபாவரிணு ஸத்யதர்மாய தரிஷ்டயே -பூஷன் – போஷிக்கும் ஸூ ர்ய மண்டல வர்த்தி நாராயணா –
உன்னை அடையும் மார்க்கம் காட்டி அருள்

பொன்மயமான மூடிக்குள்
மறைந்துள்ளது
சத்தியத்தின் முகம்
பேணி வளர்ப்போனே
சத்திய இயல்பினர் காண
அதைத் திறந்திடுக

———————————————

பூஷந்நேகர்ஷே யம ஸூர்ய ப்ராஜாபத்ய வ்யூஹ ரஷ்மீந் ஸமூஹ தேஜஃ .
யத்தே ரூபஂ கல்யாணதமஂ தத்தே பஷ்யாமி யோஸாவஸௌ புரூஷஃ ஸோஹமஸ்மி ৷৷ 1.1.16 ৷৷

பூஷந்நேகர்ஷே யம ஸூர்ய –பூஷன் -ஸூர்ய பகவானே -உலகுக்கு போஷணம் அளிப்பதால் / ஏகார்சத்-தனியாக சுழன்று கொண்டு /
யம-அவனே யமன் -சம்யாமனத்-அனைவரையும் நியமிப்பதால் -/ஸூர்ய -சுவீகாரனாத்-கிரணங்களை கொண்டு
ப்ராஜாபத்ய வ்யூஹ ரஷ்மீந் ஸமூஹ தேஜஸ் -பிராஜாபதி பிள்ளை -உன்னுடைய ரஸ்மியில் இருந்து சமூக ஒளியையும் வ்யூஹ எடுத்துக் கொண்டு
யத்தே ரூபஂ கல்யாணதமஂ-கல்யாண தர்மமான ரூபத்தை மட்டும்
தத்தே பஷ்யாமி-அடியேன் பார்க்கும் படி
யோஸாவஸௌ புரூஷஃ ஸோஹமஸ்மி –அருள வேண்டும் -இந்த பரம புருஷனாலேயே உலகம் அனைத்தும் இயங்கப் படுகிறது –

திவ்ய மங்கள விக்ரஹம் காட்டி அருள பிரார்த்தனை -கீழே உபாய பிரார்த்தனை
பூஷந்நேகர்ஷே யம ஸூர்ய ப்ராஜாபத்ய வ்யூஹ ரஷ்மீந் ஸமூஹ தேஜ-கஸ்யப பிரஜாபதி பிள்ளை சூர்யன் – பூஷன் -ஒப்பற்ற சர்வஞ்ஞன்
உன் திருமேனி மறைக்கும் இந்த சூர்ய ஒளிக்கற்றை மறைத்து -அத்தை காட்டி அருள்
யத்தே ரூபஂ கல்யாணதமஂ தத்தே பஷ்யாமி –மங்களமான திவ்ய ரூபம் காணக் கடவன்
யோஸாவஸௌ புரூஷஃ ஸோஹமஸ்மி–தேவரீர் அவயவம் அம்சமாமாவே நான் இருக்கிறேன் –
நிறைந்த சோதி -திவ்யன் தேவன் -பரஞ்சோதி –

பேணி வளர்ப்போனே ஒருதனியரசே
யமனே ஞாயிறே பிரஜாபதியின் புதல்வா
கதிர்பரப்பி ஒளி கூட்டுக
அதோ உன்
நன்மங்கல வடிவை நான் காண்கிறேன்
அதிலுறையும் புருஷன்
நானே அவன்.

—————————————————

வாயுரநிலமமரிதமதேதஂ பஸ்மாந்த் ఁஷரீரம் .
க்ரதோ ஸ்மர கரித ஓம் ஸ்மர க்ரதோ ஸ்மர கரித ஓம் ஸ்மர ৷৷ 1.1.17 ৷৷

வாயுரநிலமமரிதமதேதஂ பஸ்மாந்த் ஷரீரம் .–வாயுர் அமிர்தம் அநிலம்-அடியேன் ஸ்வரூப ஆவிர்பாவம் பெற்று
-பிராணன் எங்கும் நிறைந்த ஆகாசத்துக்குள் போக -சரீரம் பஸ்மமாக போக
க்ரதோ ஸ்மர கரித ஸ்மர க்ரதோ ஸ்மர கரித ஸ்மர –அந்திம ஸ்ம்ருதியில் பர ப்ரஹ்மத்தை நினைத்து
-அடியேனுக்கு பதில் நீயே நினைத்து -மீமிசை இதில் உள்ள ஊற்றத்தால்-

வாயுரநிலமமரிதமதேதம் -பிராண வாயு உடன் சேர்ந்த ஜீவன் -மரணம் அற்ற கைவல்யம்
பஸ்மாந்த் ஷரீரம் .-சரீரம் பஸ்மமான –
-கைவல்ய நிலைமையை அகற்ற இங்கு பிரார்த்தனை-கீழே ஐஸ்வர்யார்த்தி நிஷ்டையை குலைக்க பிரார்த்தனை
க்ரதோ ஸ்மர கரித ஸ்மர ஓம் க்ரதோ ஸ்மர கரித ஸ்மர ஓம் -இரட்டிப்பு -யோகமான பெருமாளே -யாகம் யஜ்ஜம் எல்லாம் அவனே
க்ரதோ -ஓம் -அடிமை சேஷத்வம் அறிந்தேன் -ஸ்மர -நீர் சங்கல்பித்து அருள வேண்டும் –
அப்போதைக்கு இப்பொழுதே சொல்லி வைத்தேன் -நீ ஸ்மரிக்க வேண்டும் பிரார்த்தனை -அஹம் ஸ்மாராமி மத பக்தம்-நயம்மி பரமாம் கதிம்

உயிர்மூச்சு காற்றில் கலந்திடும்
அழிவற்று
உடல் சாம்பலாகும்
ஓம்
மனமே எண்ணுக
செய்ததை எண்ணுக
மனமே எண்ணுக
செய்ததை எண்ணுக

———————————————————

அக்நே நய ஸுபதா ராயே அஸ்மாந்விஷ்வாநி தேவ வயுநாநி வித்வாந் .
யுயோத்யஸ்மஜ்ஜுஹுராணமேநோ பூயிஷ்டாஂ தே நம உக்திஂ விதேம ৷৷ 1.1.18 ৷৷

அக்நே நய ஸுபதா ராயே அஸ்மாந்விஷ்வாநி தேவ வயுநாநி வித்வாந் .–அக்னி பகவானே -ஸூ பதா -நல்ல மார்க்கம் வழியே
அடியேனை அழைத்து செல் -மாறி மாறி பிறந்து உழன்றது போதுமே -வித்வான் -நீயே இத்தை அறிவாய்
யுயோத்யஸ்மஜ்ஜுஹுராண –யுயோதி-அழித்து விடு -அஸ்மாத் ஜூஹூரணம் -ஸமஸ்த வினைகளையும் –
மேநோ பூயிஷ்டாஂ தே நம உக்திஂ விதேம –மீண்டும் மீண்டும் பல்லாண்டு பல்லாண்டு என்று
சூழ்ந்து இருந்து ஏத்தும் படி பண்ணி அருள வேண்டும் –

அக்நே நய ஸுபதா ராயே –அக்னியை சரீரமாக கொண்டு -அக்ரம் நயனே -அர்ச்சிராதி கதி கூட்டி அருளுவாய் -நயாமி பரமாம் கதிம்
அஸ்மாந்விஷ்வாநி தேவ வயுநாநி வித்வாந் .-ஞானவான் அன்றோ நீ -இங்கு விஷயாந்தரங்கள் வலிய திசை திசை இழுக்க
யுயோத்யஸ்மஜ்ஜுஹுராணமேநோ -இவற்றை விலக்கி அருளுவாய்
பூயிஷ்டாஂ தே நம உக்திஂ விதேம -நம நம உனக்காக அஞ்சலி செய்து வைக்க நீயே அருள வேண்டும்
நம என்னலாம் கடமை அது சுமந்தார்கட்கே –
எனக்கு உரியன அல்லேன் -ப்ரீதி காரித கைங்கர்யம் -தேவரீர் ஆனந்தத்துக்காகவே கொடுத்து அருள வேண்டும்

அக்னி
செல்வம்சேர் நல்வழியில்
எம்மை நடத்திடுக
தேவா
அனைத்து வழிகளையும் நீயே அறிவாய்
வளைந்து வரும் தீமையை விலக்கிடுக
உனக்கே எம் போற்றிப் புகழ்ச்சிகள்
மேன்மேலும்!

—————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ ஐத்ரேய உபநிஷத் —

February 11, 2017

ஆத்மா வா இதமேக ஏவாக்ர ஆஸீத். நாந்யத் கிஂசந மிஷத். ஸ ஈக்ஷத லோகாந்நு ஸரிஜா இதி৷৷1.1.1৷৷

பர ப்ரஹ்மம் ஒன்றே இருந்தது -வேறு ஒன்றும் இமை கொட்டக் கூட இல்லை -ஸ்ருஷ்டிக்க சங்கல்பம் கொண்டது –

ஆத்மா என்ற சொல்லின் விசாரம்:
இது நான்கு விதத்தில் விளக்கபடுகிறது. அவைகள்
1. ஆப்னோதி இதி ஆத்மா – அனைத்தையும் வியாபித்திருப்பது, எங்கும் இருப்பது.
ஸத்தா ரூபேன – ஸத் ஸ்வரூபமாக வியாபித்திருக்கிறது. இருத்தல் ஸ்வரூபமாக வியாபித்திருக்கிறது.
2. ஆதந்தே ஆத்மா (ஸர்வாதாரஹ) – எல்லாவற்றிற்கும் ஆதாரமாக இருப்பது, எல்லாவற்றையும் கிரகித்துக் கொள்ளும் தன்மையுடையது.
3. அத்தி(eat) இதி ஆத்மா – அனைத்தையும் அனுபவிப்பதாக இருப்பது; ஞான ஸ்வரூபம்
4. அததி – நித்யஹ – என்றும் இருப்பது., நிலையாக இருப்பது

————

ஸ இமா ఁல்லோகாநஸரிஜத. அம்போ மரீசீர்மரமாபோதோம்பஃ பரேண திவஂ த்யௌஃ
ப்ரதிஷ்டாந்தரிக்ஷஂ மரீசயஃ. பரிதிவீ மரோ யா அதஸ்தாத்தா ஆபஃ৷৷1.1.2৷৷

அம்பஹ – சுவஹ, மஹஹ, ஜனஹ, தபஹ, சத்யஹ என்கின்ற ஏழு மேலுலகங்கள்
மரீஹீ – மரம், புவஹ – பூலோகம்; ஆபஹ என்கின்ற – கீழுள்ள ஏழு உலகங்கள்,
இவ்வாறாக ஈஸ்வரன் பதினான்கு உலகங்களையும் முதலில் படைத்தார்.
இவைகள் கிரமமாக படைக்கப்பட்டது என்று புரிந்து கொள்ள வேண்டும்.
அவைகள் அம்பஹ, மரீஸீ, மரம், ஆபஹ என்ற நான்கு பிரிவாக கூறப்பட்டுள்ளது.
அதோ அம்பஹ பரேண திவம்: சொர்க்கலோகத்திற்கு மேலேயுள்ள உலகங்கள் அம்பஹ என்று கூறுகிறது.
த்யௌ ப்ரதிஷ்டா- சுவர்க்க லோகம் அனைத்திற்கும் ஆதாரமாக இருக்கிறது
அந்தரிக்‌ஷம் மரீஸய – அந்தரக்‌ஷம் என்று அழைக்கப்படும் புவலோகம்
ப்ருத்வீமரோ – இது பூலோகத்தை குறிக்கிறது.
யாஹா அத4ஸ்தா தாஹா ஆபஹ : கீழேயுள்ள ஏழு உலகங்களை அப என்று குறிக்கிறது.

ஸ ஸரிஜத. இமான் லோகான் -அந்த பர ப்ரஹ்மம் இந்த லோகங்களை ஸ்ருஷ்டித்தது
அம்போ மரீசீர்மரமாபோ–அம்பஸ்-மரீசீர் -மரம் -ஆப –
அம்பஃ பரேண திவஂ த்யௌஃ ப்ரதிஷ்டாந்தரிக்ஷஂ மரீசயஃ. –அம்பஸ் –ஸ்வர்க்கத்துக்கும் மேலே -ஸ்வர்க்கம் இத்தை தாங்கி இருக்கும்
மரீசீர் -ஸ்வர்க்கத்துக்கும் கீழ் உள்ள ஆகாசம் -இங்கு தான் ஸூர்ய வெளிச்சம் -மரீசீர் -ஸூ ர்ய கிரணங்களால் வந்த பெயர்
பரிதிவீ மரோ -பிருதிவி அழிந்து மீண்டும் வருவதால் மரம் -மிரியந்தே-என்றவாறு
யா அதஸ்தாத்தா ஆபஃ- பாதாள லோகங்கள் அப -தண்ணீருக்குள் இருப்பதால் –

———–

ஸ ஈக்ஷதேமே நு லோகாஃ லோகபாலாந்நு ஸரிஜா இதி. ஸோத்ப்ய ஏவ புரூஷஂ ஸமுத்தரித்யாமூர்ச்சயத்৷৷1.1.3৷৷

ஸஹ ஈக்‌ஷா – மீண்டும் அவர் சிந்தித்தார்.
இமே லோகஹா – இந்த உலகங்கள் என்னால் படைக்கப்பட்டது.
லோகபாலன் ஸ்ருஜா இதி – இனி உலகை பாதுகாக்கின்ற தேவதைகளை படைக்க வேண்டும்.
ஸ அத்ப்யஹ ஏவ புருஷம் – அவர் பஞ்ச பூதங்களை எடுத்து ஒரு மனித உருவமுடைய
அமூர்சயத் – தேவதையை படைத்தார், அதற்கு பெயர் விராட்.

லோகங்களை ஸ்ருஷ்டித்த பின்பு லோக பாலர்களையும் ஸ்ருஷ்டிக்க சங்கல்பித்தான் –
பஞ்ச பூதங்களை உண்டாக்கி பஞ்சீ கரித்து உண்டாக்கினான் –

—————–

தமப்யதபத்தஸ்யாபிதப்தஸ்ய முகஂ நிரபித்யத யதாண்டம். முகாத்வாக்வாசோக்நிர்நாஸிகே நிரபித்யேதாஂ நாஸிகாப்யாஂ ப்ராணஃ
ப்ராணாத்வாயுரக்ஷிணீ நிரபித்யேதாமக்ஷீப்யாஂ சக்ஷுஷ்சக்ஷுஷ ஆதித்யஃ கர்ணௌ நிரபித்யேதாஂ
கர்ணாப்யாஂ ஷ்ரோத்ரஂ ஷ்ரோத்ராத்திஷஸ்த்வஙநிரபித்யத த்வசோ லோமாநி லோமப்ய ஓஷதி வநஸ்பதயோ ஹரிதயஂ
நிரபித்யத ஹரிதயாந்மநோ மநஸஷ்சந்த்ரமா நாபிர்நிரபித்யத நாப்யா அபாநோபாநாந்மரித்யுஃ
ஷிஷ்நஂ நிரபித்யத ஷிஷ்நாத்ரேதோ ரேதஸ ஆபஃ৷৷1.1.4৷৷

இந்த மந்திரத்தில் மூன்று தத்துவங்கள் கோளகம், இந்திரியம், தேவதா.
தம் அப்யதமத் – விராட் உருவத்தை பார்த்து ஆலோசித்தார்.
முகம் நியபித்யதா – வாய் திறந்தது.
– – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – –
கோளகம் இந்திரியம் தேவதை
– – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – –
முகம் வாக்கு அக்னி
மூக்கு பிராணன்(நுகரும் சக்தி) வாயு
கண்கள் சக்‌ஷூ(பார்க்கும் சக்தி) ஆதித்யன்
காது கேட்கும் சக்தி திசை தெய்வங்கள்
தோல் தொட்டுணரும் சக்தி ஔஷதி வனஸ்பதா
ஹ்ருதயம் மனம் சந்திரன்
தொப்புள் அபாணன் ம்ருத்யு
சிறுநீர் கழிக்கும்
இடம் ரேதஹ ஆபஹ

ஸ்ருஷ்டிக்க சங்கல்பித்து திரு முகம் -திரு வாய் விரிய –
திரு முகத்தில் -திரு வாயில் இருந்து வாக் -அந்த வாக்கை காக்கும் அக்னியும் —
இதே போலே மூக்கில் இருந்து பிராணனும் கந்தமும் வாயும் வர காதுகளில் இருந்து கேட்க்கும் உணர்வும் திக் பாலர்களும்
கண்களில் இருந்து ஸூர்ய -தோலில் இருந்து தொடு உணர்வும் -ஒளஷதங்களும் மரங்களும் -மனஸ்-சந்த்ரர்களும்-போல்வன –

————————–

தா ஏதா தேவதாஃ ஸரிஷ்டா அஸ்மிந்மஹத்யர்ணவே ப்ராபதஂஸ்தமஷநாபிபாஸாப்யாமந்வவார்ஜத்.
தா ஏநமப்ருவந்நாயதநஂ நஃ ப்ரஜாநீஹி யஸ்மிந்ப்ரதிஷ்டிதா அந்நமதாமேதி৷৷1.2.1৷৷

தேவதைகளும் சம்சாரிகள் என்று வர்ணிக்கப்படுகிறது.
தேவதைகளும், ஜீவர்களும் படைக்கப்பட்டு விட்டது.
சம்சாரமே மிகப்பெரிய கடலாக வர்ணிக்கப்படுகிறது. இந்த சம்சாரம் துயரமென்னும் நீரால் நிரம்பியிருக்கிறது.
இந்த பெரிய கடலில் எல்லா தேவதைகளும் வீழ்ந்திருக்கிறார்கள்.
சம்சாரம் என்ற சொல்லின் பொருள் சம்யக் தரதி – நன்கு அங்குமிங்கும் அலைகின்றார்கள்.

பசி-தாகத்துடன் (சம்சாரம்)கொடுத்தார்கள்.
மனதிற்கு ஞானேந்திரியங்கள் வழியாக விஷயங்களை உணவாக கொடுத்து பசியை அடக்குகிறோம்.
வயிற்றுப்பசியை ஸ்தூல உணவை கொடுத்து அடக்குகிறோம். பசி-தாகம் மனதின் நிறைவின்மை.
இதை எந்தப்பொருளினாலும் நீக்க முடியாது. பசி-தாகத்தை கொடுத்தவுடன் ஜீவர்கள் அதை போக்குவதற்கு ஸ்தூல உடலை கேட்கின்றார்கள்.
ஜீவர்கள் ஈஸ்வரனிடம் இவ்விதம் பேசினார்கள்.
எங்களுக்கு ஒரு இருப்பிடம் (சரீரம்) கொடுங்கள்.
எந்த உடலில் இருந்து அன்னத்தை சாப்பிட்டு பசி-தாகத்தை போக்கி கொள்ள முடியுமோ அதை எங்களுக்கு கொடுங்கள்.
ஜீவர்களுக்கு இந்த பசி-தாகம் மூலம் சம்சாரம் வந்து விட்டது.

இப்படி ஸ்ருஷ்டித்த அக்னி தேவதைகள் தங்கள் வசிக்கவும் உணவு உண்ணவும் இடங்களை பிரார்த்தித்தார்கள்-

———–

தாப்யோ காமாநயத்தா அப்ருவந்ந வை நோயமலமிதி. தாப்யோஷ்வமாநயத்தா அப்ருவந்ந வை நோயமலமிதி৷৷1.2.2৷৷

ஜீவர்களுக்கு இருப்பிடமாக சரீரமாக பசுவை கொண்டு வந்து காட்டப்பட்டது
இது எங்களுக்கு போதாது.
இப்பொழுது குதிரையை காட்டப்பட்டது
இதுவும் எங்களுக்கு போதாது என்று கூறினார்கள்.

அவர்களுக்கு மாடு ஒன்றை கொடுக்க -இது போதாது என்ன குதிரையையும் கொடுக்க அதுவும் போதாது என்றார்கள் –

—————–

தாப்யஃ புரூஷமாநயத்தா அப்ருவந் ஸுகரிதஂ பதேதி புரூஷோ வாவ ஸுகரிதம். தா அப்ரவீத்யதாயதநஂ ப்ரவிஷதேதி৷৷1.2.3৷৷

அவர்களுக்காக மனுஷன் ஒருவனை கொடுக்க -சுக்ருத் என்றார்கள் –
அதானால் தான் ஸ்வதந்த்ர எண்ணம் இன்றும் மனிசர்க்கு மிக்கு உள்ளது என்பர் –
பின் தேவர்களை அவர்கள் அவர்கள் இடம் போக சொன்னான் –
அதாவது வாக் முதலியவற்றை பாலனம் பண்ண என்றவாறு –

பிறகு மனித சரீரத்தை காட்டபட்டது..
நன்றாக உருவாக்கப்பட்ட சரீரம் என்று கூறினார்கள்.
மனித சரீரம் உயர்ந்தது என்று சொல்வதற்கு காரணம் இதுதான்
பாவ-புண்ணியங்களை கொடுக்க கூடிய கர்மத்தை செய்வதற்கும், மோட்சத்தை அடைவதற்கும் சரியான கருவியாக இருக்கிறது.
ஈஸ்வரன் அந்த தேவதைகளிடம் உங்களுக்குரிய இருப்பிடத்தில் சென்று வசியுங்கள் என்று கூறினார்.

————–

அக்நிர்வாக்பூத்வா முகஂ ப்ராவிஷத்வாயுஃ ப்ராணோ பூத்வா நாஸிகே ப்ராவிஷதாதித்யஷ்சக்ஷுர்பூத்வாக்ஷிணீ ப்ராவிஷத்திஷஃ
க்ஷோத்ரஂ பூத்வா கர்ணௌ ப்ராவிஷந்நோஷதிவநஸ்பதயோ லோமாநி பூத்வா த்வசஂ ப்ராவிஷஂஷ்சந்த்ரமா மநோ பூத்வா ஹரிதயஂ
ப்ராவிஷந்மரித்யுரபாநோ பூத்வா நாபிஂ ப்ராவிஷதாபோ ரேதோ பூத்வா ஷிஷ்நஂ ப்ராவிஷந்৷৷1.2.4৷৷

அக்னி பகவான் வாய்க்குள்ளும் பேச்சாகவும் -வாயு பகவான் மூக்குக்குள் கந்தமாகவும் -ஸூரியன் கண்ணுக்குள் பார்வையாகவும் –
திக் தேவதைகள் காதுக்குள் கேள்வியாகவும் -மூலிகைகளும் மரங்களும் தோலில் மயிர்களாகவும் ஸ்பர்ச உணர்வாகவும் –
சந்திரன் ஹ்ருதயத்துக்குள் மனஸாகவும் -இத்யாதி -என்றவாறு –

அக்னியானது வாயில் சென்று அமர்ந்து பேசும் சக்தியாக இருக்கிறது.
வாயு மூக்கில் இருந்து கொண்டு நுகரும் சக்தியாக இருக்கிறது.
சூரியன் கண்களில் இருந்து கொண்டு பார்க்கும் சக்தியாக இருக்கிறது.
திசைகள் காதில் இருந்து கொண்டு கேட்கும் சக்தியாக இருக்கிறது.
மூலிகைகளும் தாவரங்களும் தோலில் இருந்து கொண்டு தொட்டுணரும் சக்தியாக இருக்கிறது.
இவ்வாறாக எல்லா இந்திரியங்-களும் அவரவர்களுக்குரிய இருப்பிடத்திற்கு சென்று அமர்ந்து கொள்கிறார்கள்.

—————————–

தமஷநாயாபிபாஸே அப்ரூதாமாவாப்யாமபிப்ரஜாநீஹீதி. தே அப்ரவீதேதாஸ்வேவ வாஂ தேவதாஸ்வாபஜாம்யேதாஸு பாகிந்யௌ கரோமீதி.
தஸ்மாத்யஸ்யை கஸ்யை ச தேவதாயை ஹவிர்கரிஹ்யதே பாகிந்யாவேவாஸ்யாமஷநாயாபிபாஸே பவதஃ৷৷1.2.5৷৷

பசியும் தாகமும் தங்களுக்கும் இடம் கேட்க -உங்களுக்கு தனியாக இல்லாமல் இந்த தேவதைகளை உங்களுக்கும்
இடம் விட்டு கொடுக்க பண்ணுகிறேன் இதனாலே ஹவிஸ் கொடுக்கும் பொழுது இவர்களுக்கும் பங்கு உண்டு –

சம்சாரம் என்பது பசி-தாகம். இது இந்திரியங்களைச் சார்ந்து இருக்கின்றது.
எனவே மித்யா என்று புரிந்து கொள்ள வேண்டும்.
இந்த பசி-தாகம் ஈஸ்வரினிடம் எங்களுக்கும் தங்குவதற்கு இடம் கொடுப்பதற்கு ஆலோசனை செய்யுங்கள் என்று வேண்டின.
உங்களிருவரையும் இந்த தேவதைகளுக்குள்ளேயே இருக்கும்படி செய்கிறேன்.
நீங்கள் இப்படி அங்கமாக இருப்பதால் அவர்களுக்கு கொடுக்கப்படும் உணவுகளை அனுபவிப்பதே நீங்கள் தான்.

—————————–

அத்தியாயம்-3 – ஸ்ருஷ்டியின் தன்மை
இதில் ஐந்து கருத்துக்கள் பேசப்படுகின்றன. அவைகள்
1. போக்ய ஸ்ருஷ்டி
2. விஷய ஸ்ருஷ்டி
3. அபவாதம்
4. பிரவேச ஸ்ருஷ்டி
5. ஆத்ம ஞானம்

———

ஸ ஈக்ஷதேமே நு லோகாஷ்ச லோகபாலாஷ்சாந்நமேப்யஃ ஸரிஜா இதி৷৷1.3.1৷৷

ஈஸ்வரன் ஆலோசித்தார் என்னால் உலகம் படைக்கப்பட்டுவிட்டது.
உலகத்தை பாதுகாப்பதற்கு தேவதைகளும் படைக்கப்பட்டு விட்டது.
இப்பொழுது இவர்கள் உண்பதற்கு உணவை தோற்றுவிக்க வேண்டும்.

—————

ஸோபோப்யதபத்தாப்யோபிதப்தாப்யோ மூர்திரஜாயத. யா வை ஸா மூர்தி-ரஜாயதாந்நஂ வை தத்৷৷1.3.2৷৷

பஞ்ச பூதங்களை வைத்து சிந்தித்த பிறகு அதிலிருந்து விதவிதமான உணவுகள், விதவிதமான ஜீவர்களையும் படைத்துவிட்டார்.

————-

ததேநத்ஸரிஷ்டஂ பராங்த்யஜிகாஂஸத்தத்வாசாஜிகரிக்ஷத்தந்நாஷக்நோத்வாசா க்ரஹீதும்.
ஸ யத்தைநத்வாசாக்ரஹைஷ்யதபிவ்யாஹரித்ய ஹைவாந்நமத்ரப்ஸ்யத்৷৷1.3.3৷৷

நாம் உண்ணும் உணவை முயற்சி செய்துதான் அடைய வேண்டும்.
யாருக்கு எந்த வகையான பசி எடுக்கிறதோ அதற்கு தகுந்த இந்திரியத்தை பயன்படுத்தி அடைய வேண்டும்.
இவ்வாறு உணவு படைக்கப்பட்டது
அதை சாப்பிட போடும்போது அது ஓட ஆரம்பித்தது
பேசி அதை பிடிக்க என்று முயற்சி செய்தான். இப்படி பேச்சினால் அவனால் கிரகிக்க முடிந்து இருந்தால்
இவன் அதை பேசுவதனாலே திருப்தியடைந்து விடுவான். அப்படி முடியாததால் இவனுக்கு திருப்தி வரவில்லை.

————–

தத்ப்ராணேநாஜிகரிக்ஷத் தந்நாஷக்நோத்ப்ராணேந க்ரஹீதும்.
ஸ யத்தைநத்ப்ராணேநாக்ரஹைஷ்யதபிப்ராண்ய ஹைவாந்நமத்ரப்ஸ்யத்৷৷1.3.4৷৷

பிராணன் இது நுகர்வதாலேயே உணவை அடைய முயற்சி செய்து தோல்வி அடைந்தது.

————-

தச்சக்ஷுஷாஜிகரிக்ஷத் தந்நாஷக்நோச்சக்ஷுஷா க்ரஹீதும்.
ஸ யத்தைநச்சக்ஷுஷாக்ரஹைஷ்யத்தரிஷ்ட்வா.ஹைவாந்நமத்ரப்ஸ்யத்৷৷1.3.5৷৷

கண்ணானது பார்வையாலே உணவை அடைய முயற்சி செய்து தோல்வி அடைந்தது.

————

தச்ச்ரோத்ரேணாஜிகரிக்ஷத் தந்நாஷக்நோச்ச்ரோத்ரேண க்ரஹீதும்.
ஸ யத்தைநச்ச்ரோத்ரேணாக்ரஹைஷ்யச்ச்ருத்வா ஹைவாந்நமத்ரப்ஸ்யத்৷৷1.3.6৷৷

காதானது கேட்பதாலேயே உணவை அடைய முயற்சி செய்து தோல்வி அடைந்தது.

—————–

தத்த்வசாஜிகரிக்ஷத் தந்நாஷக்நோத்த்வசா க்ரஹீதும்.
ஸ யத்தைநத்த்வசாக்ரஹைஷ்யத்ஸ்பரிஷ்ட்வா ஹைவாந்நமத்ரப்ஸ்யத்৷৷1.3.7৷৷

தோலானது தொட்டுணர்ந்தே உணவை அடைய முயற்சி செய்து தோல்வி அடைந்தது.

——————-

தந்மநஸாஜிகரிக்ஷத் தந்நாஷக்நோந்மநஸா க்ரஹீதும்.
ஸ யத்தைநந்மநஸாக்ரஹைஷ்யத்தயாத்வா ஹைவாந்நமத்ரப்ஸ்யத்৷৷1.3.8৷৷

மனமானது எண்ணங்களாலே உணவை அடைய முயற்சி செய்து தோல்வி அடைந்தது.

——————

தச்சிஷ்நேநாஜிகரிக்ஷத் தந்நாஷக்நோச்சிஷ்நேந க்ரஹீதும்.
ஸ யத்தைநச்சிஷ்நேநாக்ரஹைஷ்யத்விஸரிஜ்ய ஹைவாந்நமத்ரப்ஸ்யத்৷৷1.3.9৷৷

சிறுநீரகமானது கழிவை அகற்றுவதாலேயே உணவை அடைய முயற்சி செய்து தோல்வி அடைந்தது.

——————-

ததபாநேநாஜிகரிக்ஷத். ததாவயத். ஸைஷோந்நஸ்ய க்ரஹோ யத்வாயுரந்நாயுர்வா ஏஷ யத்வாயுஃ৷৷1.3.10৷৷

கடைசியில் உணவை எடுத்து வாயினுள்ளே போடுகிறார்கள். இப்படி உணவை பிடித்து விட்டார்கள்.
அபான பிராணன் மூலம் உணவை சாப்பிட்டு புரிந்து கொண்டார்கள்.

—————–

ஸ ஈக்ஷத கதஂ ந்விதஂ மதரிதே ஸ்யாதிதி ஸ ஈக்ஷத கதரேண ப்ரபத்யா இதி. ஸ ஈக்ஷத யதி வாசாபிவ்யாஹரிதஂ
யதி ப்ராணேநாபிப்ராணிதஂ யதி சக்ஷுஷா தரிஷ்டஂ யதி ஷ்ரோத்ரேண ஷ்ருதஂ யதி த்வசா ஸ்பரிஷ்டஂ யதி மநஸா த்யாதஂ
யத்யபாநேநாப்யபாநிதஂ யதி ஷிஷ்நேந விஸரிஷ்டமத கோஹமிதி৷৷1.3.11৷৷

இதில் மூன்று கர்த்துக்கள் அடங்கியுள்ளது.
1. பரமாத்மா ஜீவாத்மாவில் பிரவேசம்
2. எந்த வழியாக உள்ளே நுழையலாம் என்று யோசிக்கிறார்.
3. ஜீவனுக்கு அத்மஞானம் வேண்டுமென்றால் எப்படி சிந்திக்க வேண்டும்.

கஹ அஹம் இதி – நான் யார் என்று சிந்திக்க வேண்டும்.
நாம் எப்பொழுதும் வெளி விஷயங்களைத் தான் சிந்தித்து கொண்டிருக்கிறோம்.
ஆனால் நான் யார்? இப்படி சிந்திப்பவன் யார்? என்று யோசிக்க வேண்டும்.
எந்த அறிவை பயன்படுத்தி வெளி விஷயங்களை பார்த்துக் கொண்டிருக்கின்ற நாம் இவ்வாறு பார்ப்பவன் யார் என்று
விசாரம் செய்ய வேண்டும் என்றால் நம் மனதைக் கொண்டேதான் இவ்வாறு நம்மை விசாரிக்க வேண்டும்..
இந்த விசாரத்தை எப்படி செய்ய வேண்டும் என்று உபநிஷத் இங்கே விளக்கியிருக்கிறது.
நம் இந்திரியங்களை யாரோ ஒருவனுடைய கட்டுப்பாட்டுக்குள் இயங்குகிறது.
இந்திரியங்கள் தன்னிச்சையாக செயல்பட்டால் நான் யார் என்ற கேள்வி எழும்.
இந்தக் கேள்வியிலிருந்து நான்தான் இவைகளை கட்டுப்படுத்துகிறேன் என்ற அறிவு கிடைக்கும்
இந்திரியங்களுக்கு நான்தான் தலைவன். நான் வேறு, இந்திரியங்கள் வேறு,
அவைகள் எனக்காக வேலை செய்கிறது என்ற மனப்பான்மையுடன் விவகாரம் செய்தல்
இந்திரியங்களுக்கு இந்திரியமாக இருக்கிறேன்.

ஈஸ்வரன் – ஜீவன் இந்த மாதிரி சிந்திக்க வேண்டும் என்று நினைத்தார்.
ஒருவேளை வாயானது அது இஷ்டத்திற்கு பேசிக்கொண்டிருந்தால், காதானது அது இஷ்டத்திற்கு கேட்டுக் கொண்டிருந்தால்,
தோலானது அது விருப்பத்திற்கு தொடு உணர்வை அனுபவித்துக் கொண்டிருந்தால், மனமானது அதுபாட்டுக்கு சிந்தித்துகொண்டிருந்தால்,
பிறகு நான் யார்? என்ற கேள்விக்கு இவ்வாறு சிந்திக்க வேண்டும். இந்திரியங்கள் மனதின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது,
மனது வேறொருவரின் கட்டுக்குள் இருக்கிறது. அந்த வேறொருவர் நான்தான்,
நான் சேதன ஸ்வரூபமானவன், நித்யமானவன் என்று புரிந்து கொள்ள வேண்டும்.

——————

ஸ ஏதமேவ ஸீமாநஂ விதார்யைதயா த்வாரா ப்ராபத்யத. ஸைஷா விதரிதிர்நாம த்வாஸ்ததேதந்நாந்தநம்.
தஸ்ய த்ரய ஆவஸதாஸ்த்ரயஃ ஸ்வப்நா அயமாவஸதோயமாவஸதோயமாவஸத இதி৷৷1.3.12৷৷

ஈஸ்வரன்,
தலை உச்சியில் ஓட்டையை போட்டு
அந்த துவாரம் வழியாக
நுழைந்தார்.
இந்த கதவுக்கு
விக்ருதி என்ற பெயரும் உண்டு.
நாந்தனம் என்றும் அழைப்பதுண்டு, இது மகிழ்ச்சியை தரும் வழியாகும்.
ஈஸ்வரனுடைய
மூன்று விதமான இருப்பிடங்கள் (வலது கண், மனம், ஹ்ருதயம்)
மூன்று விதமான கனவு நிலைகள் (விழிப்பு நிலை, கனவு நிலை, ஆழ்நிலை உறக்கம்)
இந்த ஒன்றானது (வலது கண் முதலாவது)
இருப்பிடம், மனதானது இரண்டாவது இருப்பிடம், இருதயமானது மூன்றாவது இருப்பிடம்.

ஈஸ்வரன் ஜீவனுக்குள் எப்படி நுழைய வேண்டும் என்று யோசித்தார்,
தலை உச்சி (பிரம்ம அந்திரம்) வழியாக போகலாமா அல்லது அடிப்பாதம் வழியாக போகலாம என்று யோசித்தப் பின்னர்,
தலையுச்சி வழியாகவே பிரவேசிக்கலாம் என்று முடிவெடுத்து அதன் வழியாக உள்ளே நுழைந்தார்.
ஜீவன் உடலில் சிதாபாஸனாக தோன்றினார். ஈஸ்வரன் உள்ளே நுழைந்த கதவுக்கு (வழிக்கு) வித்ருதி என்று பெயர்.
நாந்தனம் என்றும் அழைப்பதுண்டு.

அந்த ஜீவனுக்கு மூன்று இடங்கள் அளித்து மூன்று விதமான அவஸ்தைகள் மூலமாக உலகத்தை அனுபவித்துக் கொண்டிருக்கட்டும்.
ஜாக்ரத் அவஸ்தையில் கண்ணை இருப்பிடமாக கொண்டு விவகாரம் செய்கின்றான்.
கனவு நிலையில் தொண்டையில் உள்ள கண்ட ஸ்தானம், ஆழ்ந்த உறக்கத்தில் இதயத்தில் இருக்கின்றான்.

————–

ஸ ஜாதோ பூதாந்யபிவ்யைக்யத் கிமிஹாந்யஂ வாவதிஷதிதி.
ஸ ஏதமேவ புரூஷஂ ப்ரஹ்ம ததமமபஷ்யதிதமதர்ஷமிதீ 1.3.13৷৷

பரமாத்மா இப்போது ஜீவ ரூபமாக சம்சாரத்தில் இருக்கிறார். ஜீவனாக வெளிப்பட்டிருக்கிறார்.
இந்த அனைத்து ஜீவராசிகளை குறித்து
குரு, சாஸ்திரங்களின் துணைக் கொண்டு ஆராய்ச்சி செய்தார்.
இந்த உலகத்தில் எனக்கு (பிரம்மத்திற்கு) வேறாக எதை சொல்ல முடியும் என்ற கேட்டால், நானே அனைத்துமாக இருக்கிறேன்
என்று அறிந்து கொண்ட பிறகு நான் தெரிந்து கொள்வதற்கு வேறொன்றுமில்லை.
இந்த ஜீவனையே பிரம்மன்
என்று அறிந்தான்.
இந்த பிரம்ம லட்சணமானது.
எல்லாவிடத்திலும் வியாபித்திருக்கின்ற பிரம்மனாகவே அறிந்து கொண்டான்.
இவ்விதமாக பிரம்மத்தை (ஞானியானவன்) அறிந்துக் கொண்டான்

———-

தஸ்மாதிதந்த்ரோ நாமேதந்த்ரோ ஹ வை நாம. தமிதந்த்ரஂ ஸந்தமிந்த்ர இத்யாசக்ஷதே பரோக்ஷேண.
பரோக்ஷப்ரியா இவ ஹி தேவாஃ பரோக்ஷப்ரியா இவ ஹி தேவாஃ৷৷1.3.14৷৷

ஆகவே, ஜீவன் பிரம்மத்தை அபரோக்‌ஷமாக அறிந்த பிறகு,
பிரம்மத்திற்கு இன்னொரு பெயர். இதை அபரோக்‌ஷமாக அறிவதனால்தான் பிரம்மத்திற்கு இந்த பெயர்.
இதை இந்திரன் என்று மறைமுகமாக என்று அழைப்பதுண்டு. ஞானிகளும், தேவர்களும் தங்களை மறைத்துக் கொள்வதில்
தான் விருப்பம் உடையவர்களாக இருக்கிறார்கள்.
எல்லோருக்கும் தெரியக்கூடியதாக இருந்தாலும் ஜீவர்களுக்கு தெரியாமல்தான் இருக்கின்றார்கள்.
ஞானத்தை அடைந்தவனுக்கு அபரோக்‌ஷமாகவும், ஞானத்தை அடையாமல் அறிந்தவனுக்கு பரோக்‌ஷமாகவும் இருக்கிறது இந்த பிரம்மன்.
இது புலன்களால் அறிய முடியாததாக இருக்கிறது. ஞானிகள் தங்களை வெளிக்காட்டிக் கொள்வதில்லை.

—————————-

புரூஷே ஹ வா அயமாதிதோ கர்போ பவதி. யதேதத்ரேதஸ்ததேதத்ஸர்வேப்யோங்கேப்யஸ்தேஜஃ
ஸஂபூதமாத்மந்யேவாத்மாநஂ பிபர்தி தத்யதா ஸ்த்ரியாஂ ஸிஞ்சத்யதைநஜ்ஜநயதி ததஸ்ய ப்ரதமஂ ஜந்ம৷৷1.4.1৷৷

கர்ம பலன் அனுபவித்த பின்பு மீண்டும் மழை-தானியம் -புருஷன் -சம்யோகத்தால் கர்ப்ப வாசம் பற்றி சொல்கிறது –

இந்த ஜீவன் முதலில் தந்தையின் உடலை இருப்பிடமாக கொண்டிருக்கிறது.
தந்தையின் விந்தில் இருக்கிறது. இந்த விந்தானது உடலினுடைய எல்லா அங்கங்களின் ஒட்டு மொத்த சாராம்சமாக இருக்கிறது.
தந்தை தன் குழந்தையைப் பார்க்கும்போது தன்னையே பார்ப்பது போன்ற உணர்வுடன் பார்க்கின்றான்.
நான் இறந்தாலும் தன் குழந்தையின் உடலில் இருப்பேன் என்று நம்பி கொண்டு
தன்னைத் தானே பாதுகாத்துக் கொள்வதைப் போன்று தன் குழந்தையை பாதுகாக்கின்றான்.
ஆணினுடைய விந்திலிருந்து பெண்ணின் கர்ப்பத்திற்குள் செல்கின்றது, இதுதான் அவனுடைய முதல் ஜென்மம்.

————-

தத்ஸ்த்ரியா ஆத்மபூயஂ கச்சதி யதா ஸ்வமங்கஂ ததா. தஸ்மாதேநாஂ ந ஹிநஸ்தி ஸாஸ்யைதமாத்மாநமத்ர கதஂ பாவயதி৷৷1.4.2৷৷

தாயின் கருப்பைக்குள் சென்ற ஜீவனானது அவளது அங்கமாகவே மாறிவிடும்.
அதனால் இந்த தாய்க்கு எந்த தீங்கும் செய்வதில்லை.
தன்னிடத்தில் வந்த அந்த ஜீவனை தாய் மிகவும் போற்றி பாதுகாக்கின்றாள்.

கர்ப்பத்தில் உள்ள சிசுவை தாய் மிகவும் கவனமாக போஷித்து -தானே அதற்காகவும் உண்டும் வளர்க்கிறாள் என்கிறது –

—————-

ஸா பாவயித்ரீ பாவயிதவ்யா பவதி தஂ ஸ்த்ரீ கர்பஂ பிபர்தி ஸோக்ர ஏவ குமாரஂ ஜந்மநோக்ரேதிபாவயதி. ஸ யத்குமாரஂ
ஜந்மநோக்ரேதிபாவயத்யாத்மாநமேவ தத்பாவயத்யேஷாஂ லோகாநாஂ ஸந்தத்யா ஏவஂ ஸந்ததா ஹீமே லோகாஸ்ததஸ்ய த்விதீயஂ ஜந்ம৷৷1.4.3৷৷

அவள் பாதுகாப்பவளாகிறாள்.
தாய் குழந்தையை பாதுகாக்கும்போது அவளை மற்றவர்கள் பாதுகாக்க வேண்டும்.
பிறப்பதற்கு முன் அவள்தான் குழந்தையை பாதுகாக்கின்றாள்.
பிறப்பதற்கு முன் தாயை கவனிக்க வேண்டும். குழந்தை பிறந்ததும் அந்தக் குழந்தையை பாதுகாக்க வேண்டும்.
அவர் தன்னுடைய குழந்தையை பிறப்பதற்கு முன்னும் பின்னும் அதை நன்கு கவனிப்பதற்குக் காரணம்
அவர் தன்னையே அந்த குழந்தையினிடத்தில் பார்ப்பதால் தன்னையே கவனிப்பதற்கு சமமானதாக இருக்கிறது.
இந்த உலகத்தில் தன்னுடைய சந்ததியானது தொடர்ந்திருப்பதற்காக இவ்வாறு தந்தை தன் குழந்தை பாதுகாக்கிறார்.
ஜீவன் தாயின் கர்ப்பதிலிருந்து உலகத்தில் வருவது இரண்டாவது ஜென்மம்.

கர்ப்பத்தில் தாய் ரஷித்து பிறந்த பின்பு தாயும் தந்தையும் ரஷித்து -இத்தால் உலகம் தொடர்ந்து -நடக்கிறது என்றபடி

—————-

ஸோஸ்யாயமாத்மா புண்யேப்யஃ கர்மப்யஃ ப்ரதிதீயதே. அதாஸ்யாயமிதர ஆத்மா கரிதகரித்யோ வயோகதஃ
ப்ரைதி ஸ இதஃ ப்ரயந்நேவ புநர்ஜாயதே ததஸ்ய தரிதீயஂ ஜந்ம৷৷1.4.4৷৷

தன்னுடைய ஸ்வரூபமாக மகனை கருதுகிறார் தந்தை
தார்மீக முறையில் வளர்க்க வேண்டும். தர்மத்தின் படி வாழும் வகையில் வளர்க்க வேண்டும்
அதற்கு பிறகு
இந்த மகனுக்கு தந்தையானவர்
இந்த உலகத்தில் செய்ய வேண்டிய மூன்று கடமைகளிலிருந்து விடுபடுகின்றார்,
அவைகள் கடவுளுக்கு, ரிஷிகளுக்கு, தேவதைகளுக்கு செய்ய வேண்டியது மூன்று கடமைகள்-
பிறகு வயதாகி இறந்து விடுகின்றான்.
இந்த உலகத்தை விட்ட பிறகு மீண்டும் வேறொரு உடலை எடுக்கின்றான்.
இது அவனுக்கு மூன்றாவது பிறப்பு.
தன்னுடைய ஸ்வரூபமாக பாவிக்கும் மகனை புண்ணிய கர்மத்தை அவன் செய்யும் விதத்தில் வளர்க்க வேண்டும்.
தார்மீக முறையில் வளர்க்க வேண்டும். தர்மத்தின்படி வாழும் வகையில் வளர்க்க வேண்டும்.
அவனும் அதே மாதிரி வளரத்-தொடங்கினான், தந்தை சொன்னபடி இந்த உலகில் தர்மப்படி வாழ்ந்து வயதான பிறகு இறந்துவிடுகின்றான்.
இது இவனுக்கு மூன்றாவது ஜென்மம்.

புத்ரனை ஜீவாத்மாவுடைய இரண்டாவது ஜென்மம் என்பர் -வேதங்களில் விதித்தித்த அனுஷ்டானங்களை தொடர்ந்து செய்ய
ஜீவன் சரீரம் விட்ட பின்பு கர்மத்தின் அனுகுணமாக மூன்றாவது ஜென்மம் எடுக்கிறான் என்கிறது –

—————-

ததுக்தமரிஷிணா. கர்பே நு ஸந்நந்வேஷாமவேதமஹஂ தேவாநாஂ ஜநிமாநி விஷ்வா. ஷதஂ மா புர ஆயஸீரரக்ஷந்நதஃ
ஷ்யேநோ ஜவஸா நிரதீயமிதி கர்ப ஏவைதச்சயாநோ வாமதேவ ஏவமுவாச৷৷1.4.5৷৷

ஸ்ரீ வாம தேவர் முந்திய ஜென்ம கர்ம -புண்ணிய கர்ம – பலத்தால் கர்ப்பத்தில் இருந்த பொழுதே -தனது முந்திய ஜென்மங்களை பற்றியும்
பர ப்ரஹ்மத்தின் பல் வேறு ஸ்வரூப ரூபங்களையும் தேவதைகளின் ஜென்ம பரம்பரைகள் விசேஷங்களையும் அறிந்ததாக சொல்கிறார் –

ஆத்ம ஞானத்தை அடைந்த ரிஷி ஒருவரால் இவ்வாறு சொல்லப்பட்டது.
கர்ப்பதிலிருக்கும் போதே நான் என்னை அறிந்து கொண்டேன்.
அனைத்து தேவர்களின் பிறப்பையும், தேவ ரகசியத்தையும் (ஆத்ம ஞானம்) அறிந்து கொண்டேன்.
இதை அடைவதற்கு முன் 100 இரும்புக்கதவுக்குள் அடைப்பட்டுக் கொண்டிருந்தேன்.
பருந்தானது கூண்டிலிருந்து வெளியேறுவது போல நான் மாயை என்ற வலையிலிருந்து வெளியேறிவிட்டேன் என்று
வாமதேவர் என்ற ஞானி தான் கர்ப்பத்திலிருக்கும்போதே இந்த ஞானத்தை அடைந்துவிட்டதை கூறியிருக்கிறார்.

———————

ஸ ஏவஂ வித்வாநஸ்மாச்சரீரபேதாதூர்த்வ உத்க்ரம்யாமுஷ்மிந் ஸ்வர்கே லோகே ஸர்வாந் காமாநாப்த்வாமரிதஃ ஸமபவத் ஸமபவத்৷৷1.4.6৷৷

இப்படி கருவிலே திரு உள்ளவர் மீண்டும் பிறக்காமல்–ஸ்வரூப ஆவிர்பாவம் பெற்று -பர ப்ரஹ்மத்தை அடைந்து அனுபவிக்கிறார் –

யாரொருவன் வாமதேவர் அறிந்தது போல் ஆத்ம ஞானத்தை அடைந்து விட்டால்
இந்த சரீரத்திலிருந்து கொண்டே மனநிறைவைப் பெற்று மரணமற்ற நிலையை அடைவான்.

————————

கோயமாத்மேதி வயமுபாஸ்மஹே கதரஃ ஸ ஆத்மா . யேந வா பஷ்யதி யேந வா ஷரிணோதி யேந வா
கஂதாநாஜிக்ரதி யேந வா வாசஂ வ்யாகரோதி யேந வா ஸ்வாது சாஸ்வாது ச விஜாநாதி৷৷1.5.1৷৷

இப்படி உபாசித்து -கண்ணால் கண்ட -காதால் கேட்ட -மூக்கால் நுகர்ந்த -நாக்கால் சுவைத்த –

யார் இந்த ஆத்மா?
நாம் தினந்தோறும் பயன்படுத்தும் சொல் “நான்”
எப்படிபட்டது இது? நிர்குண சைதன்யமா அல்லது சகுண சைதன்யமா?
ஸ்தூல, சூட்சும சரீரங்களை விசாரம் செய்து இவைகள் ஆத்மா அல்ல என்ற முடிவுக்கு வருகின்றார்கள்.
எந்த இந்திரியத்தால் பேசுகிறோமோ, கேட்கிறோமோ, வாசனையை நுகர்கின்றோமோ
இவைகள் ஆத்மா என்று விசாரம் செய்து இல்லை என்ற முடிவுக்கு வருகிறார்கள்.
இந்த சூட்சும சரீரம் மாற்றத்தை அடைவதால் அது ஆத்மா அல்ல என்று தெளிவடையலாம்.
காலம் செல்ல செல்ல பார்க்கும் சக்தி, கேட்கும் சக்தி போன்ற இந்திரியங்களின் சக்திகள் குறைந்து கொண்டே போவதால்,
இவைகள் மாற்றத்திற்கு உள்ளாகின்றது
இதுவே நமக்கு விஷயமாக உள்ளது. ஏதாவது ஒரு பொருளை காட்டி இது தெரிகிறதா என்று கேட்டால், தெரிகிறது என்று கூறுவோம்.
எனவே பொருளும் தெரிகிறது அதை கண்ணால் அறிந்து கொண்டேன் என்று இந்திரியத்தின் செயலையும் தெரிந்து கொள்கிறோம்.
ஆனால் இந்திரியங்களின் விஷயங்களாகி வேறொருவன் அதைப் கவனிக்கின்றான்.
கரணமாக இருப்பதால், இதை பயன்படுத்தி வேறொருவன் பயனடைகின்றான்.
மேற்கூறிய காரணங்களால் சூட்சும சரீரங்கள் ஆத்மாவல்ல என்று உறுதி செய்யப்படுகிறது.

—————-

யதேதத் ஹரிதயஂ மநஷ்சைதத். ஸஂஜ்ஞாநமாஜ்ஞாநஂ விஜ்ஞாநஂ ப்ரஜ்ஞாநஂ மேதா தரிஷ்டிர்தரிதிர்மதிர்மநீஷா ஜூதிஃ
ஸ்மரிதிஃ ஸஂகல்பஃ க்ரதுரஸுஃ காமோ வஷ இதி. ஸர்வாண்யேவைதாநி ப்ரஜ்ஞாநஸ்ய நாமதேயாநி பவந்தி৷৷1.5.2৷৷

இந்த மனமும் (சித்தம், அகங்காரம், மனம்) புத்தியும் ஆத்மா அல்ல.
ஆத்மா என்பது சேதன ஸ்வரூபம், அறிவு ஸ்வரூபம், உணர்வு ஸ்வரூபம்.
நம்மிடத்தே எழுகின்ற எண்ணங்களுக்கு பின்னால் இந்த சைதன்யம் இருக்கிறது.
எண்ணங்கள் பலவாக இருப்பதற்கு காரணம் அதற்கு விஷயமாக இருக்கும் பொருட்களால் ஆனால்
இதையெல்லாம் அறிந்து கொண்டிருப்பது ஒரே ஒரு சைதன்யம்தான்.
நமது மனதில் வருகின்ற எண்ணங்களுக்கு சைதன்யத்திற்கு கொடுக்கப்படுகின்ற பெயர்கள்.
சம்ஞானம் – சாதாரண மனிதர்களிடத்திலே தோன்றும் எண்ணம், நான் இருக்கிறேன் என்ற அறிவு.
ஆஞானம் – யோகிகளிடத்தில் இருக்கின்ற ஞானம். மனிதர்களிடத்திலே இல்லாத ஞானம்.
விக்ஞானம் கலைஞானம், பிரக்ஞானம், புரிய வேண்டியதை அந்த நேரத்தில் புரிந்து கொள்ளும் திறமை.
மேதா4 – வாஸனைகள்; எண்ணப் பதிவுகள்
த்ருஷ்டி – இந்திரியங்களால் அடையப்படும் ஞானம்
த்ருத்ஹி – துணிவை கொடுக்கின்ற உறுதியான ஞானம்
மதிஹி – யோசிக்கும் திறமை (மனனம்)
மணிஷா – நாம் சுதந்திரமாக இருத்தல்
ஜூதிஹி – மனதினால் வலி வேதனைகளை அனுபவித்தல்
ஸ்மிருதி – எண்ணிப் பார்த்தல்
சங்கல்பஹ – உறுதி செய்தல்
க்ருதஹ – தீர்மானித்தல்
அஷூ – எச்சரித்தல்
காமோ – ஆசை வயப்படுதல்
இப்படி பலவிதமான எண்ணங்கள் நம்மிடத்தே இருக்கின்றது.
இவைகளெல்லம் சைதன்யத்திற்கு கொடுக்கப்பட்ட பெயர்களாகும்.

இது ஹிருதயம் அனைத்துக்கும் திரண்ட ஸ்தானம் -அதுக்கும் விட -மனஸ் -இதுவே அனைத்து இந்த்ரியங்களுக்கும் ஞான துவாரம்
சம் ஞானம் அஞ்ஞானம் விஞ்ஞானம் பிரஞ்ஞானம் -மேதாவிலாசம் -த்ரிஷ்ட்டி -திட புத்தி மதி -ஜூதி
ஸ்ம்ருதி -சங்கல்பம் -கருதி -காமம் -பல தசைகள் உண்டே –

———————

ஏஷ ப்ரஹ்மைஷ இந்த்ர ஏஷ ப்ரஜாபதிரேதே ஸர்வே தேவா இமாநி ச பஞ்ச மஹாபூதாநி ப஀ரிதிவீ வாயுராகாஷ ஆபோ
ஜ்யோதீஂஷீத்யேதாநீமாநி ச க்ஷுத்ரமிஷ்ராணீவ. பீஜாநீதராணி சேதராணி சாண்டஜாநி ச ஜாருஜாநி ச ஸ்வேதஜாநி
சோத்பிஜ்ஜாநி சாஷ்வா காவஃ புரூஷா ஹஸ்திநோ யத்கிஂசேதஂ ப்ராணி ஜங்கமஂ ச பதத்ரி ச யச்ச ஸ்தாவரஂ ஸர்வஂ
தத்ப்ரஜ்ஞாநேத்ரஂ ப்ரஜ்ஞாநே ப்ரதிஷ்டிதஂ ப்ரஜ்ஞாநேத்ரோ லோகஃ ப்ரஜ்ஞா ப்ரதிஷ்டா ப்ரஜ்ஞாநஂ ப்ரஹ்ம৷৷1.5.3৷৷

எல்லா ஜீவராசிகளும் சைதன்ய ஸ்வரூபமாகவே இருக்கின்றது.
பிரக்ஞானே ப்ரதிஷ்டிதம் – ஸ்ருஷ்டி காரணம்
பிரக்ஞானே நேதமா லோகா – ஸ்திதி காரணம்
ப்ரக்ஞா ப்ரதிஷ்டிதா – லய காரணம்
மஹா வாக்கியம் : பிரக்ஞானம் பிரம்ம – ஜீவனுடைய சூட்சும சரீரத்திற்கு ஆதாரமாக இருப்பது பிரக்ஞானம்,
இதுவே பிரம்மனாக இருக்கின்றது.

பிரமன் இந்திரன் பிரஜாபதி -பஞ்ச பூதங்கள் -ஸ்தாவரங்கள் ஜங்கமங்கள்-பீப்பிலி வரை அனைத்துக்கும் -அனைத்து ஜீவனுக்குள்ளும் –
ப்ரஹ்மம் அந்தர்யாத்மா வாக இருந்து நடத்துகிறார் –
இப்படி ஒன்றை சொன்னால் ஜீவன் பர ப்ரஹ்மம் வரை செல்லும் என்று உணர வேண்டும் –

———————-

ஸ ஏதேந ப்ரஜ்ஞேநாத்மநாஸ்மால்லோகாதுத்க்ரம்யாமுஷ்மிந்ஸ்வர்கே லோகே ஸர்வாந்காமாநாப்த்வாமரிதஃ ஸமபவத் ஸமபவத். இத்யோம்৷৷1.5.4৷৷

ஸ்ரீ வாம தேவர் போல்வார் ஆத்ம சாஷாத்காரம் பெற்று அதற்கும் மேலே பர ப்ரஹ்மத்தை உணர்ந்து அந்தமில் பேரின்பம் பெற்றனர் –

இந்த பிரஹ்ம ஞானத்தின் பலன் இந்த மந்திரத்தில் சொல்லப்படுகிறது.
தான் எந்த அறிவை அடைந்தானோ அதிலேயே நிலைபெற்று இருத்தல், பிராரப்தம் முடிந்தவுடன்
இந்த உடலை விட்டு விட்டு எல்லா ஆசைகளையும் அடைந்தவனாக தன்னிடத்திலே இருக்கிறான், மரணமற்றவனாக உயர்ந்து விடுகிறான்.

————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ முண்டக உபநிஷத் —

February 10, 2017

கெடும் இடராய எல்லாம் கேசவா -ப்ரஹ்மம் தன்னையே கொடுத்து -அநிஷ்ட நிவ்ருத்தி அருளுகிறார் -விருந்தே மருந்து -ப்ராப்யம் -பிராப்பகம் -ஐக்யம்
ஆரண்யம் –ப்ரஹ்ம விசாரம் தனியாக காட்டில் -கருத்து ஒருமித்து -ஸூஷ்மம் -அறிய —
பிரதான உபநிஷத் -பத்து -1-ஈஸா-/2- கேனோ -முதல் சொல்லை கொண்டே இவை இரண்டும் /3- கட -காடக பிரஸ்னம் கடர் ரிஷி /4-ப்ரஸ்ன ஆறு கேள்விகள் /
5-முண்டக –6-மாண்டூக -சாகைகள் அதர்வணத்தில் இவற்றின் பெயரால் -இவை இரண்டும் -/
7-தைத்ரியம் -பிரசித்தம் சிஷா வல்லி-இத்யாதி திருமஞ்சனத்துக்கு -இதில் இருந்தே /-தத்ரி பறவை கொத்தி சாப்பிட போனதால் இந்த பெயர்
வைசம்பாயனர் -ஆச்சார்யர் –சிஷ்யர்களை கொண்டு வேத பாராயணம் செய்து -பிராயச்சித்தம் –
யாஜ்ஜ வர்க்யர் -செருக்குடன் பேச -வெளியே போக சொல்லி -கற்ற வேதத்தை உமிழ்ந்து போக சொல்ல
-தித்ர பஷி ரூபத்தால் மற்ற சிஷ்யர்கள்-வேதம்- காத்து
8-ஐதரேயம் -ஐதரா பெண் -மஹீ தாசன் -பூமி பிரார்த்தித்து ஐதரிய மஹீ தாசன் பிள்ளை -அறிந்து ஓதப்பட்டது
9-சாந்தோக்யம் -சந்தோ சாமம் உத்கீதம் –சாமத்தை ஓதுபவர்களால் ஓதப்பட்டது
10-ப்ருஹதாரண்யகம் -ஆரண்யம் -காட்டில் உருவானதால் பெரியதாக இருப்பதால் இந்த பெயர்

ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத் ரத்தத்தில் மேற்கோள் முண்டக உபநிஷத்தில் இருந்து காட்டி அருளுகிறார்
மூன்று முண்டகம் –இரண்டு கண்டங்கள் ஒவ் ஒன்றிலும் -/-64-மந்த்ரங்கள் மொத்தம் /
பார அபார வித்யைகள் -முதல் முண்டகம் விஷயம்-அடிப்படை இது தானே / இத்தை அறிந்த பின்பு ப்ரஹ்ம ஸ்வரூபம் அடுத்து /
அறிந்த ஜீவாத்மா -பரமாத்மா -சம்பந்தம்-நெருக்கம் -ஆனால் -விரோதிகள் இருக்க -அவற்றைப் போக்கி அவனை -அடையும் வழி-மூன்றாவது கண்டத்தில்
குரு பரம்பரை பூர்வகமாக அறிய வேண்டுமே -அத்துடன் தொடங்கும்
நான்முகன் -அதர்வருக்கு அதர்வண வேதம் இதனாலே பெயர் – -அதர்வ சிகை -அங்கிர் -மூலம் இத்தை -கீழே -பிப்ரலாதர் மூலம் ப்ரஸ்ன உபநிஷத் -பார்த்தோம்
அதர்வர் அங்கிருக்கு -அவர் சத்யவாகருக்கு -அவர் அங்கிரஸுக்கு-அவர் ஸூ நகருக்கு

——————————-

ப்ரஹ்மா தேவாநாஂ ப்ரதமஃ ஸஂபபூவ விஷ்வஸ்ய கர்தா புவநஸ்ய கோப்தா.
ஸ ப்ரஹ்மவித்யாஂ ஸர்வவித்யாப்ரதிஷ்டாமதர்வாய ஜ்யேஷ்டபுத்ராய ப்ராஹ৷৷1.1.1৷৷–

ப்3ரஹ்மா தே3வானாம் ப்ரத2ம: ஸம்ப3பூ4வ
விஶ்வஸ்ய கர்தா பு4வனஸ்ய கோ3ப்தா |
ஸப்3ரஹ்மவித்3யாம் ஸர்வவித்3யாப்ரதிஷ்டா2ம்
அத2ர்வாத ஹ்தேஷ்ட2புத்ராய ப்ராஹ || 1 ||

காக்கும் கடவுள் -பர ப்ரஹ்மம் -ஸ்ருஷ்டித்து அருளி -மூத்த புத்ரன் ஸ்ரீ அதர்வ என்பவருக்கு அருளிச் செய்த ப்ரஹ்ம வித்யை –
முதல்வராக நான்முகன்தானே -ப்ரஹ்ம வித்யை உபதேசிக்க -முழு முதல் கடவுள் -பர ப்ரஹ்மம் தானே –
ப்ரஹ்மம் ஒருவரே -நான்முகன் ஒவ் ஒரு அண்டங்களுக்கும் ஒருவர் உண்டே கோடி கோடி உண்டே /
தன்னை உந்தித் தாமரையில் படைத்த பெற ப்ரஹ்மம் பற்றி -ஞாதவ்ய அகிலம் -ப்ரஹ்ம ஞானத்தில் கலக்குமே/
நதிகள் சமுத்திரத்தில் சேருவது போலே ப்ரஹ்மத்தில் சதாப்தி ஆகும் எல்லா ஞானங்களும் -சர்வ வித்யா ப்ரதிஷ்டாயா –
ப்ருஹத்வாத் -தான் மிக பெரிய விபு தானே -ப்ராஹ்மணத்வாத் தன்னை அண்டினவர்களை ப்ரஹ்மம் ஆக்கும் சாம்யா பத்தி

————

அதர்வணே யாஂ ப்ரவதேத ப்ரஹ்மாதர்வா தாஂ புரோவாசாங்கிரே ப்ரஹ்மவித்யாம்.
ஸ பாரத்வாஜாய ஸத்யவஹாய ப்ராஹ பாரத்வாஜோங்கிரஸே பராவராம்৷৷1.1.2৷৷

அத3வணே யாம் ப்ரவதே3த ப்3ரஹ்மா
அத2ர்வா தாம் புரோவாசாங்கி3ரே ப்ரஹ்மவித்3யாம் |
ஸ பா4ரத்3வாஜாய ஸத்யவஹாய ப்ராஹ
பா4ரத்3வாஜோSங்கி3ரஸெ பராவராம் || 2 ||

இந்த ப்ரஹ்ம வித்யை -ஸ்ரீ -அதர்வா மூலம் -ஸ்ரீ அங்கிர் என்பவர் பெற்று -அவர் மூலம் ஸ்ரீ பரத்வாஜர் குலத்தில் வந்த
ஸ்ரீ சத்யவாகர் பெற்று அவர் மூலம் ஸ்ரீ அங்கிரஸ் பெற்றார் –
பராவரா- பராபர வித்யை

————

ஷௌநகோ ஹ வை மஹாஷாலோங்கிரஸஂ விதிவதுபஸந்நஃ பப்ரச்ச.
கஸ்மிந்நு பகவோ விஜ்ஞாதே ஸர்வமிதஂ விஜ்ஞாதஂ பவதீதி৷৷1.1.3৷৷

ஶௌனகோ ஹ வை மஹாஶால: அங்கி3ரஸம் விதி4வது3பஸன்ன: பப்ரச்ச2 |
கஸ்மின்னு ப4க3வோ விக்ஞாதே ஸர்வ்மித3ம் விக்ஞாதம் ப4வதீதி || 3 ||

ஸ்ரீ ஸுநகர் –ஸ்ரீ -அங்கிரஸ் இடம் சென்று -எந்த ஒன்றை அறிந்தால் அனைத்தையும் அறிந்ததாகுமோ
அத்தை அடியேனுக்கு அறிவிக்க வேணும் என்றார் –
மஹாஷாலா – பஹு குடும்பி -க்ருஹஸ்தருக்கும் ப்ரஹ்ம வித்யை உண்டே -விதிப்படி கை கூப்பி விநயத்துடன் -ப்ரஸ்ன காலம் பார்த்து கேட்க வேண்டும்
பகவான் என்று ரிஷியைப் பார்த்து -பரா அபரா வித்யை தெரிந்தவர் ஆதலால் -அங்கிரஸை இப்படி கூப்பிடுகிறார் –
வியாச வால்மீகி ஸூ க பகவான் போலே /கல்யாண குணங்களால் பூர்ணன் -என்றவாறு –
வருமானம் தவிர்க்கும் -திருக் கண்ணபுரம் பாசுரம் -அனுக்ரஹிக்க சொத்தை பிடுங்கி -குந்தி கேட்டாள் துக்கமே தர -உன்னையே நினைக்க –

மஹாஷாலா-இங்கு பெரிய யாகசாலையை உடையவர் என்பது இல்லறத்தில் இருந்து கொண்டு வேத நெறிப்படி வாழ்ந்து,
கர்மயோகப்படி செயல்களை செய்துகொண்டு அதன் மூலம் வேதாந்த உபதேசத்தை பெறும் தகுதியை அடைந்தவர் என்று அறியப்படுகிறது.

———–

தஸ்மை ஸ ஹோவாச. த்வே வித்யே வேதிதவ்யே இதி ஹ ஸ்ம யத்ப்ரஹ்மவிதோ வதந்தி பரா சைவாபரா ச৷৷1.1.4৷৷

தஸ்மை ஸ ஹோவச த்3வே வித்3யே வேதி3தவ்யே இதி ஹ ஸ்ம |
யத்3 ப்3ரஹ்மவிதோ3 வத3ந்தி பரா சைவாபரா ச || 4 ||

தஸ்மை – அவரிடம் (சௌனகரிடம்)
வேதி3தவ்யே – அறியத்தக்கது
த்3வே வித்3யே – இரண்டு விதமான அறிவானது
ப்ரஹ்மவித்3 வதந்தி – வேதத்தை அறிந்தவர்கள் கூறுகிறார்கள்
பரா ச ஏவ அபரா ச – அவைகள் பரா வித்யாவும், அபரா வித்யாவும் ஆகும்.

இரண்டு வித ஞானங்கள் உலகில் உண்டே -ப்ரஹ்மா ஞானமும் கர்மம் பற்றிய ஞானங்களும் -என்பர் வேதாந்தம் அறிந்தவர் –
கேள்வி கேட்ட இவரைக் குறித்து சொல்லி -உபநிஷத் புருஷன் வாக்கில் வந்தவை இல்லை -அநாதி -கேட்டதுக்கு பதில் இல்லை -வேத புருஷன் -முன்பே சொன்னான் –
இந்த ரிஷிகள் பேசப் போகிறார்கள் என்று முன்பே -லவ குசர் ஸ்ரீ ராமாயணம் -பெருமாள் தன்னுடை சோதி எழுந்து அருளியத்தையும் சேர்த்தே அருளிச் செய்தது போலே
பரா அபரா வித்யை இரண்டும் கற்க வேண்டும் –
ஒன்றை அறிந்தால் எல்லாம் -அறிந்தது பற்றி கேள்வி -இரண்டில் ஓன்று தள்ளத் தக்கதோ பூர்வ பக்ஷம் ஆரம்பத்திலே –
கண்கள் இரண்டு என்று சொல்வது போலே -அன்றோ இது –
இரண்டையும் கொண்டு ஒரு ப்ரஹ்மத்தை அறிய என்றபடி -பொது கல்வி விசேஷ கல்வி போலே -அதனால் அதற்க்கு பின்பு -அதாதோ ப்ரஹ்ம வித்யை –
அங்கங்கள் உடன் வேத அத்யயனம் பொது கல்வி -அபரா வித்யை -ப்ரஹ்ம சாஷாத்காரம் -பக்தி ரூபா பன்ன ஞானம் பரா வித்யை –
அடைதல் ப்ரஹ்ம பிராப்தி -முன்பு -காண்கை -சாஷாத்காரம் -அதுக்கு முன்பு ப்ரஹ்ம ஞானம் -மூன்றும் உண்டே
அவன் சங்கல்பத்தால் -அனுக்ரஹத்தால் இப்படி க்ரமேண நடாத்தி அருளுவான் -ஜீவாத்மா ஸ்ரீ கௌஸ்துப ஸ்தானம் தானே –
ஆசையுடன் திரு ஆரமதன்றோ -என்று அருகிலே கொள்ளுவான் -நம் ஒவ் ஒருவரையும் –
ப்ரஹ்ம பிராப்தி லஷ்யம் -புருஷார்த்தம் -இதுக்கு முன் நிலைகள் சாஷாத்காரமும் -ஞானமும் -பரா வித்யையும் அபரா வித்யையும் என்றவாறு –
பக்திக்கு மூன்று நிலைகள் -பர பக்தி-பர ஞானம் -பரம பக்தி -ஞானம் த்ரஷ்டும் பிரவேஷ்டும் -ஞானம் தர்சனம் பிராப்தி -என்பர் –
அறிந்து-ஞானம் வந்து அடைய ஆசைப்பட்டு -தர்சன சமானாகார சாஷாத்காரம் -கண் முன்னாலே எப்பொழுதும் -யோகத்தாலே-
பத்தர் பித்தர் பேதையர் பேசின -கம்பர் -பித்து வளர வளர -உதகடாவஸ்தை-அடைதல் -த்யானம் மூலமே -ஒற்றை நினைவுடன் -வியவசாய புத்தி –
சாப்த ஞானம்-வேதம் மூலம் அபரா வித்யை -சாஷாத்கார ஞானம் பரா வித்யை-
மீமாம்சம் -பூஜ்ய விஷய விசாரம் -கர்ம ப்ரஹ்ம விசாரம் –

—————–

தத்ராபரா றக்வேதோ யஜுர்வேதஃ ஸமாவேதோதர்வவேதஃ ஷிக்ஷா கல்போ வ்யாகரணஂ
நிரூக்தஂ சந்தோ ஜ்யோதிஷமிதி. அத பரா யயா ததக்ஷரமதிகம்யதே৷৷1.1.5৷৷

தத்ராபரா ரிக்3வேதோ3 யஜுர்வேத3: ஸாமவேதோ3Sத2ர்வவேத:
ஶிக்ஷா கல்போ வ்யாகரணம் நிருக்தம் ச2ந்தோ3 ஜ்யோதிஷமிதி |
அத2 பரா யயா தத3க்ஷரமிதி4க3ம்யதே || 5 ||

ரிக் யஜுர் சாம அதர்வண -நான்கு வேதங்களும் ஆறு அங்கங்களும் -சிஷா கல்பம் வியாகரண நிருக்தம் சந்தஸ் ஜ்யோதிஷம் –
கர்ம பாகம் ப்ரஹ்மா பாகம் இரண்டும் உண்டே –
மந்த்ர பிரயோகம் கான மூன்றும்-நான்கு வேதங்கள் -அங்கங்கள் இதிஹாச புராணம் தர்ம சாஸ்திரம் –இத்யாதி -உப அங்கங்கள் –
அக்ஷரம்- ப்ரஹ்மம் அறிய -ப்ரஹ்ம ஸ்வரூபம் கொஞ்சம் இந்த கண்டத்தில் உண்டே அது மேலே

——————

யத்ததத்ரேஷ்யமக்ராஹ்யமகோத்ரமவர்ணமசக்ஷுஃஷ்ரோத்ரஂ ததபாணிபாதம். நித்யஂ விபுஂ
ஸர்வகதஂ ஸுஸூக்ஷ்மஂ ததவ்யயஂ யத்பூதயோநிஂ பரிபஷ்யந்தி தீராஃ৷৷1.1.6৷৷

ப்ரஹ்ம ஞானம் – -யாதும் ஓர் நிலைமையின் என அறிவரிய எம்பெருமான் -ஒப்பார் மிக்கார் இலையாய மா மாயன் –
ஞான இந்திரியங்கள் சஷூஸ் ஸ்ரோத்ர பாணி பாதம் மூலம் இல்லாமல் சங்கல்ப மாத்திரத்தாலே அனைத்தையும் பண்ணி அருளி
சர்வஞ்ஞன் சர்வசக்தன் சர்வ வியாப்தன் சர்வ அந்தர்யாமி நித்யம் சாஸ்வதம் -த்ரிவித காரணன் –
த்ரிவித பரிச்சேதமும் இல்லை தேச கால வஸ்து -அளவுபடாமல் -வசப்படாதவன் உள் படாதவன் –
அக்ஷரம் -அவ்யயம் -ஸ்வரூபம் ஸ்வ பாவம் மாறாமல் –
ஞான கர்ம இந்த்ரியங்களால் அறிய முடியாதே -பரிமித சக்தி இவற்றுக்கு –
மனன் உணர்வு அவை இலன் பொறி உணர்வு அவை இலன் –
வேதம் ஒன்றே வழி -கல்மஷம் இல்லாத மனசுக்கு சேவை சாதிப்பான் –
அவனுக்கும் கண் காது கிடையாது-அடுத்து மேலே – தெளிவாக சங்கல்பத்தால் அனைத்தும் அறிவான் –
தீரர்கள் தான் அறிகிறார்கள் -பூத யோனி -காரணம் -காரணம் அறிந்தால் கார்ய வஸ்துக்களை அறியலாம் -கேள்விக்கு பதில் -அவனையே அறிய முடியாது —
காரணம் கார்யம் பாவம் மூலம் அனைத்தையும் அறிய முடியும் என்று ஆரம்பத்திலே அருளிச் செய்கிறார் –
அப்பா அம்மா போலே இல்லை -ஒரு பிறவியில் -வேறு விதத்தில் -அவர்களுக்கும் காரணம் உண்டே
இப்பிறவியில்- எனக்கு மட்டும்- தாத்தாவும் உண்டே மூன்றும் உண்டே -இவர்களுக்கு –
சகலருக்கும் சகலவித காரணமும்-அத்புத காரணம்-நிஷ் காரணம் அவன் ஒருவனே
-ஸூஷ்மம் -எதிர்மறை ஸ்தூலம்-புலன்களுக்கு எட்டாமலும் எட்டியும் -இவை இரண்டும் –
ஆத்மாவும் பரமாத்மாவும் ஸூஷ்மம் -/ சரீரம் ஸ்தூலம் -விபு இல்லை-
அணு -விபு எதிர்மறை இவை இரண்டும் வேறே -நுண்ணியது ரொம்ப சின்னது -பிடிக்க முடியும் சக்தி வாய்ந்த microscope /
விபு அப்படி இல்லையே -எங்கும் நீக்கமற நிறைந்து -விபு வாக இருந்தே ஸூஷ்மமாக இருப்பார் பர ப்ரஹ்மம் –
துண்டு நனைத்து புழிந்து ஈரம் கண்ணில் படாமல் துண்டு முழுதும் நீர் நிறைந்து இருப்பது போலே சின்ன உதாரணம்
ஒளி பதார்த்தம் எங்கும் நிறையலாம் த்ரவ்யமாக இருந்து முட்டிக்காதே-எவ்வளவு சேர்ந்தாலும் – அதே போலே ஞானமும் —
அகதி கடநா சாமர்த்தியம் -அந்தர் பஹிஸ்த்ய -அணுவுக்குள்ளும் அணு -நர ஸிம்ஹன் -ஆலிலை கண்ணன் -வையம் ஏழும் உண்டானே –
-பார்க்கப்படுபவர் பார்ப்பவரும் பார்வையும் – கேட்க்கப்படுபவரும் கேட்பவரும் கேள்வியும் ப்ரஹ்மம் தானே -த்ரிவித காரணமும் அவனே –
பஹு பவனா ஸ்ருஷ்ட்டி -பஹுஸ்யாம் ப்ராஜாயேத் –ஏக தேச சரீரத்தை -சங்கல்பத்தால் -ஸ்ருஷ்ட்டி-
ஸ்ருஷ்ட்டி ஸ்திதி சம்ஹாரம் -மேலோட்ட த்ரிவித -காரணங்கள் -உபாதான நிமித்த சஹகாரி காரணம் ஆழ்ந்த காரணங்கள்
ஞானம் சக்தி கொண்டே சங்கல்பத்தால் ஸ்ருஷ்டிக்கிறான் –
நிர்விகாரம் -எப்படி மாறலாம் -அஸ்தி ஜெயமதே –பரிணமதே-இத்யாதி -ஷட்ப்பாவ விகாரங்கள் எவ்வாறு -சதைக ரூப ரூபாய அன்றோ –
பிறப்பிலி -பல் பிறவியாய் பிறப்பான் அன்றோ -அதே போலே இங்கும் -விரோதி பரிகாரங்கள் –
படைப்பதுக்கு மேலே மூன்று த்ருஷ்டாந்தங்கள்-

சிக்ஷா – ஒரு சொல்லை உச்சரிக்கும் விதத்தை சொல்லும் சாஸ்திரம்
கல்பஹ – எந்த மந்திரத்தை எங்கு பயன்படுத்த வேண்டும் என்று சொல்லும் சாஸ்திரம்.
எந்த யாகத்தை எந்த சூழ்நிலையில் பயன்படுத்த வேண்டும் என்பதையும் சொல்கின்ற சாஸ்திரம்
வியாகரணம் – இலக்கணம் – அர்த்த நிஶ்சயார்த்தம்
நிருக்தம் – ஒரு சொல் எப்படி உருவெடுக்கிறது என்பதை சொல்வது
சந்தஹ – செய்யுள் அமைப்பு
ஜ்யோதிட3ம் – யாகங்கள் செய்வதற்கான உரிய காலத்தை நிர்ணயம் செய்ய உதவும் சாஸ்திரம்

அக்ஷரம் – அழியாதது, மாற்றமடையாதது, நிலையானது இது பரபிரம்மத்தை குறிக்கிறது.
யயா அதி4க3ம்யதே – எதனால் அறியப்படுகிறதோ அதுவே பராவித்யா
அதி4க3ம்யதே – அறிதல், அடைதல்
யத்3 தத்3 அத்3ரேஶ்யம் – எது நம்முடைய கண்களால் கிரகிக்க முடியாததோ,
எவைகளெல்லாம் அரூபமாக இருக்கிறதோ அவைகளெல்லாம் அதிருஶ்யம் என்று கூறப்படும்.
ஐந்து ஞானேந்திரியங்களால் அறியவும், கிரகிக்கவும் முடியாதவைகளே அதிருஶ்யம் என்றும் புரிந்து கொள்ளலாம்
அக்3ராஹ்யம் – கைகளால் அதைப் பிடிக்கமுடியாது. அனைத்து கர்மேந்திரியங்களின் உதவியாலும் கிரகிக்க முடியாதது
அகோ3த்ரம் – எந்த பரம்பரையும் கிடையாது. இதற்கு காரணம் கிடையாது, பிறப்பற்றது, எதிலிருந்தும் தோன்றாதது.
அவர்ணம் – குணங்களற்றது, நிர்குணமானது, தர்ம-அதர்மங்களற்றது. எந்தவிதமான பிரமாணங்களாலும் அறிய முடியாதது
என்று உணர்த்தப்படுகிறது அனுபவிக்கவும் முடியாது
அசக்ஷு: அஶ்ரோத்ரம் – கண்களுமில்லை, காதுகளுமில்லை. ஞானேந்திரியங்கள் எதுவும் கிடையாது
தத்3 பாணி பாத3ம் – கை, கால்களும் கிடையாது. கர்மேந்திரியங்கள் கிடையாது
நித்யம் – எல்லா காலத்திலும் இருப்பது. தேச,காலங்களாலும் வரையறுக்கப்படாதது.
விபு4ம் – விதவிதமாக காட்சியளித்துக் கொண்டிருக்கிறது.
ஸர்வக3தம் – எல்லா இடங்களிலும் வியாபித்திருப்பது
ஸுஸூக்ஷமம் – மிகவும் நுட்பமானதாக இருக்கிறது. நிர்குணமாக இருப்பதால் மிகவும் சூட்சுமமாக இருக்கிறது.
தத்3 அவ்யயம் – மாற்றமடையாமல் இருப்பது, ஆறுவிதமான விகாரங்களற்றது
யத்3 பூதயோனிம் – இந்த பிரபஞ்சத்திற்கு உபாதான காரணமாக இருக்கிறது
தீ4ரா பரிபஶ்யந்தி – தீரர்கள், ஆத்ம தத்துவமறிந்தவர்கள் இந்த அக்ஷரத்தை எல்லா இடங்களிலும், எல்லாவற்றிலும் பார்க்கிறார்கள்.
தீரர்கள் என்பதற்கு தகுதியை உடையவர்கள் என்றும், ஞானத்தை அடைந்த ஞானியையும் குறிக்கின்றது

—————

யதோர்ணநாபிஃ ஸரிஜதே கரிஹ்ணதே ச யதா பரிதிவ்யாமோஷதயஃ ஸஂபவந்தி.
யதா ஸதஃ புரூஷாத்கேஷலோமாநி ததாக்ஷராத்ஸஂபவதீஹ விஷ்வம்৷৷1.1.7৷৷

யதோ2ர்ணநாபி4: ஸ்ருஜதெ க்3ருஹ்ணதே
ச யதா2 ப்ருதி2வ்யாமோஶத4ய: ஸம்ப4வந்தி |
யதா2 ஸத: புருஷாத்கேஶலோமானி
ததா2க்ஷராத்ஸம்ப4வதீஹ விஶ்வம் || 7 ||

யதா2 ஊர்ணநாபி4: ஸ்ருஜதே – எவ்வாறு சிலந்தி தனது வலையை பின்னுகிறது
க்3ருஹ்ணதே ச – அதையையே விழுங்கியும் விடுகிறது.
யதா2 ப்ர்தி3வ்யாம் – எவ்வாறு பூமியிலிருந்து
ஔஷத4ய: ஸம்ப3வந்தி – தாவரங்கள் வளர்கின்றதோ
யதா2 ஸத: புருஷாத் – எவ்வாறு அறிவுடைய மனிதனிடத்திலிருந்து
கேஶலோமானி – முடிகள் வளர்கின்றனவோ
ததா2 அக்ஷராத் ஸம்ப4வத் இஹ விஶ்வம் – அதுபோல அந்த அக்ஷரத்திலிருந்து நமது அனுபவத்திலிருக்கும் இந்த உலகமானது தோன்றியது

சிலந்தி பூச்சி கூடு கட்டி பின்பு தானே அழிப்பது போலேயும் -பூமியில் மரம் செடி கொடிகள் உண்டாகி அழிந்து போவது போலேயும்
மனிதன் உடம்பிலும் தலையிலும் ரோமங்கள் வளர்ந்து அழிவது போலேயும்
ஸ்ருஷ்டித்து சம்ஹாரம் பண்ணி -அலகிலா விளையாட்டு உடையவன் ப்ரஹ்மம் –

—————–

தபஸா சீயதே ப்ரஹ்ம ததோந்நமபிஜாயதே. அந்நாத்ப்ராணோ மநஃ ஸத்யஂ லோகாஃ கர்மஸு சாமரிதம்৷৷1.1.8৷৷

தபஸா ஜீயதே ப்3ரஹ்ம ததோSன்னமபி4ஜாயதே |
அன்னாத்ப்ராணோ மன: ஸத்யம் லோகா: கர்மஸு சாம்ருதம் || 8 ||

தபஸா ஜீயதே ப்ரஹ்ம – அவ்யக்த மாயையுடன் கூடிய பிரம்மன் ஸ்ருஷ்டி செய்ய தயாராகின்றது. சங்கல்பம் செய்கிறது
ததஹ – அதைத் தொடர்ந்து
அன்னம் அபிஜாயதே – மாயை தயாரான நிலைக்கு வருகின்றது
அன்னாத் பிராணஹ – மாயையின் இந்த நிலையிலிருந்து பிராணன் (ஹிரண்யகர்ப்பன்,
ஸமஷ்டி சூட்சும பிரபஞ்சம்) முதலில் தோன்றுகிறது,
மனஹ – பிறகு ஸமஷ்டி சூட்சும சரீரங்கள் தோன்றுகிறது
ஸத்யம் – பிறகு ஸ்தூல பூதங்கள், உலகங்கள் தோன்றுகிறது
லோகோ: இந்த ஸ்தூல உலகங்கள், சரீரங்கள் தோன்றிய பிறகு
கர்மஸு ச அம்ருதம் – கர்மங்களும், அதனுடைய பலன்களும் தோன்றின

படிப்படியாக-அன்னம் –பிராணன் –ஹிரண்யகர்பன் -மனஸ் —
பிரகிருதி -மஹான் -அஹங்காரம் -பஞ்ச பூதங்கள் -பந்த தன்மாத்ரங்கள்- ஸ்பர்சம் இத்யாதி பஞ்ச குணங்கள் -மனஸ் –
அண்டம் -ஈரேழ் லோகங்கள் -அண்டங்கள் –
வர்ணாஸ்ரம கர்மங்கள் -பொய் நின்ற ஞானம் -அது அடியாக – பொல்லா ஒழுக்கம் -அது அடியாக — அழுக்கு உடம்பும்
மாறி மாறி பல் பிறப்பும் பிறந்து -சம்சார ஆர்ணவம் -விழா ப்ரஹ்மா ஞானம் வேண்டுமே –

—————-

தபயஃ ஸர்வஜ்ஞஃ ஸர்வவித்யஸ்யஜ்ஞாநமயஂ தபஃ. தஸ்மாதேதத்ப்ரஹ்ம நாம ரூபமந்நஂ ச ஜாயதே৷৷1.1.9৷৷

ய: ஸர்வக்ஞ: ஸர்வ்வித்3யஸ்ய ஞானமயம் தப: |
தஸ்மாதே3தத்3ப்3ரஹ்ம நாம ரூபமன்னம் ச ஜாயதே || 9 ||

யஹ ஸர்வக்ஞஹ – அந்த அக்ஷரமானது எல்லாவற்றையும் அறியக்கூடியது
ஸர்வவித்3 – எல்லா காரியங்களையும் அறிந்தது.
யஸ்ய ஞானமய தபஹ – இந்த ஸ்ருஷ்டியை இப்படி செய்யலாம் என்று எண்ணியது
நம்முடைய கனவுகளானது நம்முடைய எண்ணங்களாலே ஸ்ருஷ்டி செய்யப்பட்டது. இவைகள் யாவும் பொய்யானது.
அதேபோல ஈஸ்வரனுடைய சங்கல்பத்தாலே இந்த ஸ்ருஷ்டி தோன்றியுள்ளதால் இவைகள்யாவும் மித்யா.
தஸ்மாத் – அந்த பிரம்மத்திலிருந்து
ஏதத்3 பிரஹ்ம – இந்த சூட்சுமஸ்ருஷ்டி அபிமானி ஹிரண்யகர்ப்பன்
நாம ரூபம் – விதவிதமான பெயர்கள், உருவங்கள் தோன்றின
அன்னம் – உணவு, போக்ய வஸ்துக்கள்
ச ஜாயதே – இவைகளும் தோற்றுவிக்கப்பட்டன.

அந்த பர ப்ரஹ்மம் -சர்வ வியாபியாய் சர்வஞ்ஞனாய் இருந்து பரம காருண்யத்தால்
சர்வ அந்தர்யாமியாய் இருந்து- சத்தை -நாமம் ரூபம் -நிறம் -அன்னம் கொடுத்து அருளுகிறார் –

——————–

ததேதத்ஸத்யஂ மந்த்ரேஷு கர்மாணி கவயோ யாந்யபஷ்யஂஸ்தாநி த்ரேதாயாஂ பஹுதா ஸஂததாநி.
தாந்யாசரத நியதஂ ஸத்யகாமா ஏஷ வஃ பந்தாஃ ஸுகரிதஸ்ய லோகே৷৷1.2.1৷৷

ததே3தத்ஸத்யம் மந்த்ரேஷு கர்மாணி கவயோ
யான்யபஶ்யம்ஸ்தானி த்ரேதாயாம் ப3ஹுதா4 ஸந்ததி |
தான்யாசரத2 நியதம் ஸத்யகாமா ஏஷ வ: பந்தா2:
ஸுக்ருதஸ்ய லோகே || 1 ||

ததே3தத்ஸத்யம் – இனி சொல்லப்படுகின்ற யாகங்கள், கர்மங்கள் கண்டிப்பாக பலனைத் தரும்
கவயஹ – ரிஷிகள்
யானி கர்மாணி மந்த்3ரேஷு – எந்தவிதமான கர்மங்களை மந்திரத்திற்குள்
பஷ்யன் – பார்த்தார்களோ
தானி – அந்த கர்மங்களை
த்ரேதாயாம் – மூன்று வேதங்களில்
பஹுதா ஸந்ததானி – பலவிதமாக பலன்களை கொடுக்கிறது என்று சொல்லப்பட்டு இருக்கிறது.
ஸத்யகாமாஹா – கர்மபலன்களில் ஆசையுள்ளவர்களே
தானி ஆசரத: – அந்தக் கர்மங்களை செய்யுங்கள்
நியதம் – முறையாக தொடர்ந்து செய்யுங்கள்
ஸுக்ருதஸ்ய லோகே – தன்னால் செய்யப்பட்ட கர்மங்களுக்குப் பலனாக
ஏஷஹ பந்தா2ஹா – உங்களுக்கு இவ்விதம் கர்ம மார்க்கம் காட்டபட்டது

கர்ம பாகம் -பஹு விதம் -அக்னிஹோத்ரம் போன்றவை –பல பலன்களுக்காக –கர்மங்களை செய்து
அதன் பலனை அனுபவித்து சம்சாரத்தில் உழல்கிறோம் –

—————–

யதா லேலாயதே ஹ்யர்சிஃ ஸமித்தே ஹவ்யவாஹநே. ததாஜ்யபாகாவந்தரேணாஹுதீஃ ப்ரதிபாதயேத்৷৷1.2.2৷৷

யதா3 லேலாயதே ஹ்யர்சி: ஸாமித்3தே4 ஹவ்யவாஹனே |
ததா3ஜ்யபா4கா3வந்தரேணாஹுதீ: ப்ரதிபாத3யேத் || 2 ||

யதா2 – எப்பொழுது
அர்சிஹி – தீ ஜுவாலை (அக்னியின் தலைப்பகுதி)
ஹவ்யவாஹன – அக்னிஹோத்ர யாகத்தில் இருக்கின்ற அக்னியின் பெயர்
ஸமித்தே – நன்கு தூண்டிவிடப்படும் நெருப்பில்
லேலாயதே – மேல்நோக்கி எரிந்து கொண்டிருக்கும்போது
ததா3 – அப்பொழுது
ஆஜ்யபாகோ அந்தரண – வடதெற்கு பகுதியின் மத்தியில்
ஆஹுதிஹி – அர்ப்பணம் செய்ய விரும்பும் பொருட்களை
ப்ரதிபாத3யேத் – அர்ப்பணிக்க வேண்டும்.

அக்னிஹோத்ரம் காலையிலும் மாலையும் நித்தியமாக செய்து ஆஹுதி கொடுத்து
அக்னி சோம பகவானுக்கு அந்தர்யாமியாய் உள்ள ப்ரஹ்மத்துக்கு சமர்ப்பிக்கிறோம் –

—————-

யஸ்யாக்நிஹோத்ரமதர்ஷமபௌர்ணமாஸமசாதுர்மாஸ்யமநாக்ரயணமதிதிவர்ஜிதஂ ச.
அஹுதமவைஷ்வதேவமவிதிநா ஹுதமாஸப்தமாஂஸ்தஸ்ய லோகாந்ஹிநஸ்தி৷৷1.2.3৷৷

யஸ்யாக்3னிஹோத்ரமத3ர்ஶமபௌர்ணமாஸம்
அசாதுர்மாஸ்யமனாக்3ரயணமதிதி2வர்ஜிதம் ச |
அஹுதமவைத்4வதெ3வமவிதி4னா ஹுதமாஸப்த
ஸாம்ஸ்தஸ்ய லோகான்ஹினஸ்தி || 3 ||

யஸ்ய அக்னியோத்ர – யாருடைய அக்னிஹோத்ர யாகமானது
அதர்ஶம் – தர்ஶம் என்கின்ற யாகம் செய்யாதிருத்தல்
அபௌர்ணமாஸம் – பௌர்ணமி மாதம் என்கின்ற யாகம் செய்யாதிருத்தல்
அசாதுர்மாஸ்யம் – சாதுர்மாஸ்யம் என்கின்ற யாகம் செய்யாதிருத்தல்
அனாக்ரயணம் – ஆக்ரயணம் என்கின்ற யாகம் செய்யாதிருத்தல்
அதிதி2 வர்ஜிதம் – விருந்தினர்களை நன்றாக கவனிக்காதிருத்தல்
அஹூதம் – சரியான காலத்தில் செய்யாதிருத்தல்
அவைத்4வ தேவம் – அவைத்4வ தேவம் செய்யாதிருத்தல்
அவதி4னாஹுதம் – அவிதி4னாஹுதம் செய்யாதிருத்தல்
இவ்வாறு அக்னிஹோத்ரத்தை மட்டும் செய்துவிட்டு மற்ற யாகங்களை செய்யாதிருத்தல்,
ஏழு உயர்ந்த உலகத்தை அடைய உதவும் புண்ணியங்கள் அழிந்து விடும்.

அக்னிஹோத்ரி -மூன்று தலை முறைக்கு பிண்டம் / பிள்ளை பேரன் கொள்ளு பேரன் அன்னம் தந்து தான் உண்டு
மூன்று -அதர்ஷமாசம் -அபவ்ர்ணமாஸ்யாம் அசதுர்மாஸ்யம் –போன்ற தப்பாக செய்யும் கர்மங்களுக்கு பிராய்ச சித்தம் என்றதாயிற்று

———————-

காலீ கராலீ ச மநோஜவா ச ஸுலோஹிதா யா ச ஸுதூம்ரவர்ணா.
ஸ்புலிங்கிநீ விஷ்வரூசீ ச தேவீ லேலாயமாநா இதி ஸப்த ஜிஹ்வாஃ৷৷1.2.4৷৷

காலீ கராலீ ச மனோஜவா ச ஸுலோஹிதா யா ச ஸுதூ4ம்ரவர்ணா |
ஸ்பு2லிங்கி3னீ விஶ்வருசீ ச தேவீ லேலாயமானா இதி ஸப்த ஜிஹ்வா: || 4 ||

இதில் அக்னி ஜுவாலைக்கு ஏழு பெயர்களை கூறுகிறது.
காலி கராலீ – கறுப்பு நிறமாக இருக்கிறது, மிகவும் உஷ்ணமானது
மனோஜவா – மனதின் வேகம்
ஸுலோஹிதா – அடர்த்தியான சிவப்பு
ஸுதூ4ம்ரவர்ணா – பலநிறங்களுடன் கூடிய புகை
ஸ்பு2லிஙினி – தீப்பொறி
தேவீ விஶ்வருசீ – ஒளிமயமான, விதவிதமான வர்ணத்தில் ஒளிக்கற்றைகள்
லேலாயமானஹா ஸப்த ஜிஹ்வா – அக்னியின் ஜுவாலைக்கு ஏழுவிதமான நாக்குகள் இருக்கிறது

அக்னியின் ஏழு நாக்குகள் -காலீ -கருப்பு -/கராலீ -பயங்கரம் /மநோ ஜன -மனக் குதிரை போலே வேகம் /ஸூலோஹிதா -சிகப்பு /
ஸூ தூம்ர வர்ணா -புகை போன்ற நிறம் /ஸ் புலிங்கி நீ -நெருப்பு துகள் /இவற்றால் நெய்யை ஆஹுதி ஸ்வாஹா-செய்யும் என்றதாயிற்று –

——————-

ஏதேஷு யஷ்சரதே ப்ராஜமாநேஷு யதாகாலஂ சாஹுதயோ ஹ்யாததாயந்.
தஂ நயந்த்யேதாஃ ஸூர்யஸ்ய ரஷ்மயோ யத்ர தேவாநாஂ பதிரேகோதிவாஸஃ৷৷1.2.5৷৷

ஏதேஷு யஶ்சரதே ப்4ராஜமானேஷு
யதா2காலம் சாஹுதயோ ஹ்யாத3தா3யன் |
தம் ந்யந்த்யேதா: ஸூர்யஸ்ய ரஶ்மயோ
யத்ர தேவானாம் பதிரேகோSதி4வாஸ: || 5 ||

ஏதேஷு – இதற்கு முன் ஏழு ஜுவாலைகள்
ப்4ராஜமானேஷு – நன்கு ஒளிவிட்டு இருக்கும்போது
யஶ்சரதே – யார் யாகத்தை செய்கிறார்களோ
யதா2 காலம் – குறிப்பிட்ட கால நியமப்படி
தம் ந்யந்தி – அவர்களை அழைத்து செல்கிறது
ஏதே ஆஹுதயஹ – ஆஹுதிகள்
ஆத3தா3யன் – நம்மை அழைத்து செல்கின்றது
சூர்யஸ்ய ரஷ்யே – இந்த ஆஹுதிகள் சூரியனின் கிரணங்களாக மாறி
யத்ர – எந்த இடத்தில்
தேவானாம் பதி – தேவர்களுடைய தலைவன்
ஏகஹ – ஒருவன்
அதி4வாஸ: – வசிக்கின்ற இடத்திற்கு கொண்டு செல்லும்

அக்னி இந்த ஏழு முகம் மூலமாக அக்னிஹோத்ரி அருளும் ஹவிஸை தேவர்களுக்கு ஸூர்ய கிரணங்கள் வழியாக எடுத்து செல்வான் –

—————-

ஏஹ்யேஹீதி தமாஹுதயஃ ஸுவர்சஸஃ ஸூர்யஸ்ய ரஷ்மிபிர்யஜமாநஂ வஹந்தி.
ப்ரியாஂ வாசமபிவதந்த்யோர்சயந்த்ய ஏஷ வஃ புண்யஃ ஸுகரிதோ ப்ரஹ்மலோகஃ৷৷1.2.6৷৷

ஏஹ்யேஹீதி தமாஹுதய: ஸுவர்சஸ:
ஸூர்யஸ்ய ரஶ்மிபி4ர்யஜமானம் வஹந்தி |
ப்ரியாம் வாசமபி4வத3ந்த்யோSர்சயந்த்ய ஏ
வ: புண்ய: ஸுக்ருதோ ப்3ரஹ்மலோக: || 6 ||

இவ்வாறு செய்த புண்ணியத்தின் பலனாக ஸ்வர்க்க ப்ரஹ்மா லோகங்களை ஸூர்ய கிரணங்கள் மூலம் அங்குள்ளார் சத்கரிக்க அடைகிறார்கள்

ஏஹி ஏஹி இதி – வாருங்கள், வாருங்கள்
தம் யஜமானம் – யாகத்தை நன்றாக செய்து முடித்தவன்
ஸுவர்சஸ: ஆஹுதயஹ – ஓளி பொருந்திய ஆஹுதிகள் என்று
ஸூர்யஸ்ய ரஶ்மிபி4 – சூரியகதிராகவும் இருந்துக் கொண்டு
வஹந்தி – அழைத்து செல்கிறது
ப்ரியாம் வாசம் – இனியமான, பிரியமான வார்த்தைகளால் சொல்லிக் கொண்டு
அபி4வத3ந்த்யஹ – அழைத்து செல்கிறார்கள்
அர்சயந்த்ய – அவரை பூஜித்துக் கொண்டு
ஏஹ லோகஹ வஹ – இந்த உலகம் உங்களுடையது
புண்ய: லோகஹ ஸுக்ருதோ – புண்ணியங்களின் பலனாக இந்த மேலான உலகத்திற்கு வந்திருக்கிறீர்கள்
ப்3ரஹ்ம லோகஹ – இதுதான் ஸ்வர்க்க லோகம்.

————————

ப்லவா ஹ்யேதே அதரிடா யஜ்ஞரூபா அஷ்டாதஷோக்தமவரஂ யேஷு கர்ம.
ஏதச்ச்ரேயோ யேபிநந்தந்தி மூடா ஜராமரித்யுஂ தே புநரேவாபியந்தி৷৷1.2.7৷৷

ப்லவா ஹ்யேதே அத்3ருடா4 யக்ஞரூபா அஷ்டாத3ஶோக்தமவரம் யேஷு கர்ம |
ஏதச்ச்3ரேயோ யேSபி4னந்த3ந்தி மூடா4 ஜராம்ருத்யும் தே புனரேவாபி யந்தி || 7 ||

கர்மத்தை பற்றிய நான்கு கருத்துக்கள்.
1. கர்மத்திற்கு வரையறுக்கப்பட்ட பலன் உண்டு.
2. கர்மம் அவித்யா காம காரியம் – அறியாமையினால் உருவானது.
3. கர்ம அசாரம் – இது ஆதாரமற்றது, நிலையற்றது.
4. துக்க மூலம் – நம் அனுபவிக்கும் துயரத்தின் விதையாக இருக்கிறது
1.கர்மத்தை உண்டு செய்யும் காரகங்கள் ஸ்திரமற்றது, அநித்தியமானது.
செயல் செய்ய உதவும் காரகம் ( கர்த்தா, கரணம், போன்றவைகள்) காரகம் அநித்யம்
2.கர்மமும் அநித்யமானது. இது பலமற்ற படகைப் போன்றது
3.இந்தக் கர்மத்தை மோக்ஷ சாதனமாக கொள்கிறார்களோ அவர்கள் மீண்டும் சம்சாரத்தில் வீழ்கிறார்கள்

ஏதோ – இந்த
யக்ஞரூபா – யாகம் என்ற கர்மத்தை பூர்த்தி செய்வதற்கு உதவும் காரணமாக இருக்கின்றது
அஷ்டாதஶ – பதினெட்டு காரகங்கள்
ப்லவாஹா – சிறு படகு போல
ஏஷு கர்ம அவரம் – இந்த யாகம் என்கின்ற கர்மம் கீழானது
ப்ரோக்தம் – என்று சொல்லப்பட்டது
ஏதத் ஶ்ரேயஹ – இந்த கர்மம் மோட்ச சாதனமாக
ஏயே மூடாஹா அபினந்தந்தி – எந்த மூடர்கள் எண்ணுகிறார்களோ
தே – அவர்கள்
ஜராம்ருத்யும் யந்தி – சம்சாரத்திலேயே இருப்பார்கள். பிறப்பு – இறப்பு என்கின்ற சக்கரத்திலேயே சுழன்று கொண்டிருப்பார்கள்
புனஹ ஏவ அபி – மீண்டும், மீண்டும் இந்த நிலையை அடைகிறார்கள்

அஸ்திரமான பலன்களுக்கு அவரமான கர்மாக்கள் -கர்மத்தில் உள்ள ஞான பாகம் அறியாமல் -பால் தயிர் போன்றவை நேரம் செல்ல செல்ல
கெட்டுப் போமா போலே -அளவில்லா சிற்றின்பம் அனுபவித்து சம்சாரத்தில் ஆழ்ந்து சிக்கி அனுபவிக்கிறார்கள்

————–

அவித்யாயாமந்தரே வர்தமாநாஃ ஸ்வயஂ தீராஃ பண்டிதஂ மந்யமாநாஃ.
ஜங்கந்யமாநாஃ பரியந்தி மூடா அந்தேநைவ நீயமாநா யதாந்தாஃ৷৷1.2.8৷৷

அவித்3யாயாமந்தரே வர்தமானா: ஸ்வயம் தீ4ரா: பண்டிதம் மன்யமானா: |
ஜங்க4ன்யமானா: பரியந்தி மூடா4 அந்தே4னைவ நீயமான யதா2ந்தா4: || 8 ||

நாம் அனுபவிக்கின்ற துயரங்களுக்கு காரணம் என்னுடைய அறியாமைதான் என்று அறிந்து கொள்ள வேண்டும்.
பிறகு அதை நீக்குவதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டும்.
தான் அறியாமையிலிருக்கிறேன் என்று உணராமல் இருக்கிறார்கள் மனிதர்கள் என்று உபநிஷத் பரிதாபப்படுகிறது

தெரியாது என்பதை உணராதவர்கள், தெரியாது என்பதை அறிந்தவர்களே மாணவர்கள்,
தெரியும் ஆனால் தெரியம் என்பதை அறியாதவர்கள், தெரியும் என்பதை அறிந்துள்ளவர்கள்,
தெரியாது ஆனால் தெரியும் என்று தவறாக நினைத்துக் கொண்டிருப்பவர்கள் என்று பலவிதமாக இருக்கிறார்கள் மனிதர்கள்

அவித்யா அந்தரே – அறியாமைக்கு உள்ளே, அவித்யாவுக்கு காரணமான மனம், உடல் இவைகளுக்குள்ளே
வர்த்தமானஹ – அவர்கள் இருக்கிறார்கள்
சரீரம், மனம்,புத்திக்குள் இருந்து கொண்டு, இவைகளை நான் என்ற அறியாமையில் இருக்கின்றனர் மனிதர்கள்
ஸ்வயம் – தன்னை
தீரன், பண்டிதன் மன்யமானாஹ – தீரன், அறிவாளி என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்
ஜங்கன்யமானாஹ மூடாஹா – மீண்டும், மீண்டும் துயரத்தால் தாக்கப்பட்ட மூடர்களாக இருக்கிறார்கள்
பரியந்தி – அலைந்து திரிந்து கொண்டிருக்கிறார்கள்
அந்தாஹா அந்தேவ ஏவ – எப்படி குருடர்களுக்கு குருடர்களாலே
நீயமானா யதா2 – வழிக்காட்டபடுவது போல இருக்கிறார்கள்

அவித்தியாதிகள் ஆழ்ந்து குருடர்களை குருடர்கள் கூட்டிச் செல்லுமா போலே மூடர்கள் –
அனைத்தையும் அறிந்த சர்வஞ்ஞர் போலே தம்மை எண்ணிக் கொண்டு கூட்டிச் செல்லுகிறார்கள் –

——————–

அவித்யாயாஂ பஹுதா வர்தமாநா வயஂ கரிதார்தா இத்யபிமந்யந்தி பாலாஃ. யத்கர்மிணோ
ந ப்ரவேதயந்தி ராகாத்தேநாதுராஃ க்ஷீணலோகாஷ்சயவந்தே ৷৷1.2.9৷৷

அவித்3யாயாம் ப3ஹூதா4 வர்தமான வயம்
க்ருதார்தா2 இத்யபி4மன்யந்தி பா3லா: |
யத்கர்மினோ ந ப்ரவேத3யந்தி ராகாத்தேனாதுரா:
க்ஷீணலோகாஶ்சயவந்தே || 9 ||

அவித்யாம் பஹூதா – அறியாமை பலவிதமாக இருக்கிறது
வர்த்தமானாஹ – அந்த நிலையிலே இருக்கிறார்கள்
வயம் – நாங்கள்
க்ருதார்தா2ஹா – வாழ்க்கையில் அடைய வேண்டிய பலனை அடைந்துவிட்டதாக நினைக்கிறார்கள்
இதி அபி3மன்யந்தி – என்று இவ்விதம் எண்ணுகிறார்கள்
பா3லா – சிறு குழந்தைகள் போல
யத் கர்மிண்ணஹ – எந்த காரணத்தினால் கர்மம் செய்பவர்கள்
ந ப்ரவேத3யந்தி – அறியவில்லை
ராகாத் – ஆசையினால்
தேன – இவர்கள்
ஆதுராஹா- துயரப்பட்டவர்களாக
க்ஷீணலோகாஹா – கர்மபலன்கள் தீர்ந்து விட்டவர்களாக
ஸ்வயந்தி – இன்பத்திலிருந்து விழுந்துவிடுகிறார்கள்

பல வித அவித்யைகளிலே ஆழ்ந்து உண்மை அறிவில்லாமல் புருஷார்த்தம் பெற்றதாக நினைத்துக் கொண்டு
கர்ம சூழலிலே சிக்கி தவிக்கின்றார்கள்

————

இஷ்டாபூர்தஂ மந்யமாநா வரிஷ்டஂ நாந்யச்ச்ரேயோ வேதயந்தே ப்ரமூடாஃ.
நாகஸ்ய பரிஷ்டே தே ஸுகரிதேநுபூத்வேமஂ லோகஂ ஹீநதரஂ வா விஷந்தி৷৷1.2.10৷৷

இஷ்டாபூர்தம் மன்யமானா வரிஷ்ட2ம்
நான்யச்ச்2ரேயோ வேத3யந்தி ப்ரமூடா4: |
நாகஸ்ய ப்ருஷ்டே2 தே ஸுக்ருதேSனுபூ4த்வேமம்
லோகம் ஹீந்தரம் வா விஶந்தி || 10 ||

மோட்சம்தான் லட்சியம் என்று அறியாதவர்கள் அதை அடையும் வழியை அறிய மாட்டார்கள்.
வேறெதாவது செய்து கர்ம பலனை அனுபவிப்பார்கள்

இஷ்டா பூர்தம் – வேதத்தில் சொல்லப்பட்ட கர்மங்களை, யாகங்களை, ஸ்ம்ருதிகளில் சொல்லப்பட்ட கர்மங்களான சமுதாய சேவை போன்றவைகளை
வரிஷ்டம் மன்யமானாஹ – இவைகளையே மேலான சாதனங்கள் என்று நினைத்துக் கொண்டு அதையே செய்கிறார்கள்
ந அன்யத் ஶ்ரேயஹ – இவைகளுக்கு வேறான ஆத்மஞானம் என்ற
ந வேதயந்தஹ – தத்துவத்தை அறிவதில்லை
ப்ரமூடாஹா – இவர்கள் அதிமூடர்கள்
நாகஸ்ய ப்ருஷ்டே – சொர்க்கத்தில் மேலான நிலையில்
தே ஸுக்ருதே – அவர்கள் கர்மபலனாக கிடைத்த
அனுபூத்வா – சுகங்களை அனுபவித்து விட்டு
இமம் லோகம் – சொர்க்கலோகத்திலிருந்து இந்த லோகத்திற்கு
ஹீனதரம் வா விஶந்தி – கீழான பிறவியிலே பிறப்பெடுப்பார்கள்

கர்ம பாகங்களில் இழிந்து -விஷயாந்தர ஸூகங்களிலே-ஆழ்ந்து -மோக்ஷ புருஷார்த்தம் இழந்து
மீண்டும் மீண்டும் பிறவி சூழலிலே சிக்கி கர்ம வஸ்யராகவே இருக்கிறார்கள் –

——————–

தபஃஷ்ரத்தே யே ஹ்யுபவஸந்த்யரண்யே ஷாந்தா வித்வாஂஸோ பைக்ஷசர்யாஂ சரந்தஃ.
ஸூர்யத்வாரேண தே விரஜாஃ ப்ரயாந்தி யத்ராமரிதாஃ ஸ புரூஷோ ஹ்யவ்யயாத்மா৷৷1.2.11৷৷

தப:ஶ்ரத்3த4 யே ஹ்யுபவஸந்த்யரண்யே
ஶாந்தா வித்3வாம்ஸோ பை4க்ஷசர்யாம் சரந்த: |
ஸூர்யத்3வாரேண தே விரஜா: ப்ரயாந்தி
யத்ராம்ருத: ஸ புருஷோ ஹ்யவ்யயாத்மா || 11 ||

தப ஶ்ரத்தே யே – வானபிரஸ்தாசிர கர்மங்களான மௌனம், தவம், ஈஸ்வர தியானம்
அரண்ய – காட்டில்
யே உபவஸந்தே – சாதனங்களை செய்கிறார்கள்
ஶாந்தாஹா – எல்லா இந்திரியங்களும் கட்டுக்குள் வைத்துக் கொண்டு அமைதியுடன் இருக்கிறார்கள்
பை4க்ஷசர்யாம் சரந்தஹ – பிக்ஷை எடுத்து வாழ்பவர்களாக இருப்பார்கள்
வித்வாம்ஸஹ – இல்லறத்திலே இருந்து கொண்டு அதிக காலம் தியானம், தவம் ஆகியவற்றில் ஈடுபட்டுக் கொண்டிருப்பவர்கள்
இவ்வாறு விதவிதமான வைதீக சாதனங்களை பின்பற்றி உபாஸனைகளை செய்து கொண்டிருப்பார்கள்
தே விரஜா – பாவங்களைப் போக்கிக் கொண்ட இவர்கள்
சூர்யத்வாரேண – பிரம்ம லோகத்திற்கு சுக்லகதியின் வழியாக
ப்ரயாந்தி – செல்கிறார்கள்
யத்ர – அவர்கள் செல்லுமிடம்
அம்ருதஹ ஸஹ புருஷ – அந்த என்றும் இருக்கின்ற ஹிரண்யகர்ப்பன்
ஹவ்யயாத்மா – முதன் முதலில் தோன்றிய பிரம்ம இருக்குமிடத்திற்கு செல்கிறார்கள்

உபாசனம் – தபஸ் மூலம் ச்ரேஷ்டரான முனிவர்களும் மூன்றாவதான வான பிரஸ்த ஆஸ்ரமவாதிகளும் –
தங்கள் புலன்களைக் கட்டுப் படுத்தி வைத்து -அர்ச்சிராதி மார்க்கம் மூலம் சென்று -விரஜை -ரஜஸ் இல்லாத -நீராடி
பர ப்ரஹ்மம் அடைந்து நித்ய ஸூ ரிகள் உடன் ஒரு கோவையாக அனுபவிக்கிறார்கள் –

————-

பரீக்ஷ்ய லோகாந்கர்மசிதாந்ப்ராஹ்மணோ நிர்வேதமாயாந்நாஸ்த்யகரிதஃ கரிதேந.
தத்விஜ்ஞாநார்தஂ ஸ குரூமேவாபிகச்சேத்ஸமித்பாணிஃ ஷ்ரோத்ரியஂ ப்ரஹ்மநிஷ்டம்৷৷1.2.12৷৷

பரீக்ஷ்ய லோகான்கர்மசிதான்ப்3ராஹ்மணோ
நிர்வேதமாயான்னாஸ்த்யக்ருத: க்ருதேன |
தத்3விக்3ஞானார்த2ம் கு3ருமேவாபி4க3ச்சே2த்
ஸமித்பாணி: ஶ்ரோத்ரியம் ப்3ரஹ்மநிஷ்ட2ம 12 ||

இதில் ஆறு கருத்துக்கள் பேசப்படுகின்றது. அவைகள்
1.பரா வித்யைக்கு தகுதியுடையவர்கள் யார்?
2.எப்படி அந்த தகுதியை ஒருவன் அடைகிறான்?
3.அடையவேண்டிய தகுதிகள் யாவை?
4.தகுதியடைந்தவுடன் பிறகு என்ன செய்ய வேண்டும்
5.எப்படிபட்ட குருவை நாட வேண்டும்? குருவின் லட்சணங்கள் என்ன?
6.எப்படிபட்ட மனநிலையுடன் குருவை நாட வேண்டும்

ப்ராமணஹ – சத்துவகுண பிரதானமான மனதை உடையவன்.
எந்த சூழ்நிலையிலும் விருப்பு-வெறுப்பற்ற நிலையில் இருக்க வைத்து அறிவை கொடுப்பது சத்துவ குணம்.
கர்மயோகத்தினால் விவேகம், வைராக்கியம் போன்றவற்றை வளர்த்துக் கொண்டவன். எதிலேயும் போதும் என்ற மனதை உடையவன்.
இந்த தகுதிகளை உடையவன்தான் பிராமணன் என்று கூறப்படுகிறது.
பரீக்ஷய லோகான் கர்மசிதான் – நம்முடைய செயலினால் அடையப்பட்ட உலகங்களை ஆராய்ந்து பார்த்து,
விசாரம் செய்து தகுதியை அடைய முடியும்.
லோகான் என்பது எது நம்மால் அனுபவிக்கப்படுகின்றதோ அவைகளை லோகம் என்று குறிப்பிடப்படுகிறது.
பொருட்கள், சூழ்நிலைகள், மனிதர்கள் இவைகளை அனுபவிப்பது போன்றவைகள்
கர்மசிதான் – செய்த கர்மத்தால் அடைந்தது. செய்த கர்மத்தின் பலனாகத்தான் அனுபவிக்கும் பொருட்களும்,
சூழ்நிலைகளும், பழகவேண்டிய மனிதர்களும் ஒருவனுக்கு வாய்க்கிறார்கள்.
பரீக்ஷய – ஆராய்ந்து பார்த்தல், ஒருபொருளினுடைய உண்மையான ஸ்வரூபத்தை, தன்மையை நிர்ணயம் செய்வது,
உறுதி செய்வது. நம்முடைய அனுபவத்திலிருக்கும் உலகத்தை மட்டும் விசாரம் செய்தல்.
விசாரம் செய்வதற்கு மூன்று வழிகள் கூறப்பட்டிருக்கிறது. அவைகள்
1.நம் அனுபவத்தையே பாடமாக கொண்டு அறிவை அடைதல். உலகத்திலுள்ள எதுவும் என்னை திருப்திபடுத்த முடியாது
என்ற அறிவை அடைய வேண்டும். நம்மால் அடையப்படும் பொருட்களனைத்தும் நிலையற்றது என்று உறுதியான அறிவை அடைய வேண்டும்.
2.அனுமானம் மூலமாகவும் விசாரம் செய்யலாம். எவையெல்லாம் உருவாக்கப்படுகின்றதோ அவையெல்லாம் அழியக்கூடியவை.
அதேபோல இந்த உலகமும் உருவாக்கப்பட்டுள்ளதால் அழியக்கூடியதே என்ற அறிவை அடைதல்
3.சாஸ்திர அறிவைக் கொண்டும் விசாரம் செய்யலாம். கர்மபலன்கள் தீர்ந்து விட்டால் சொர்க்கத்திலிருந்து இந்த லோகத்திற்கு மீண்டும் வந்துவிடுவோம்.
நிர்வேதம் ஆயாத் – இந்த உலகத்தின் மீது வைராக்கியத்தை அடைகின்றான்.
நிர்வேதம் என்பது வைராக்கியத்தை குறிக்கிறது. இது விவேகத்துடன் கூடிய ஆழ்ந்த விசாரத்தினால்தான் அடைய முடியும்.
விவேகம் காய் என்றால், வைராக்கியம் பழம் என்று புரிந்து கொள்ளவேண்டும்.
காயிலிருந்துதான் பழம் வரும் அதேபோல விவேகத்தில் இருந்துதான் வைராக்கியம் கிடைக்கும்.
வைராக்கியமற்ற விவேகம் பயன் தராது. விவேகம் வைராக்கியமாக மாறவேண்டுமென்றால்
அதையே மீண்டும் மீண்டும் சிந்தித்து பார்த்துக் கொண்டிருக்கவேண்டும்.
வைராக்கியம் எதில் வரவேண்டும் என்று கேட்டால், இந்த உலகத்தின் மீது வரவேண்டும் என்பதுதான் பதில்.
இதை பகவத்கீதையில் (2,52) பகவான் கிருஷ்ணர் விளக்கியுள்ளார்.
எப்பொழுது உன்னுடைய புத்தியானது மோகத்திலிருந்து விடுதலையடைகிறதோ அப்போதுதான் வைராக்கியத்தை
அர்ஜுனா நீ அடைவாய் என்று பகவான் கூறியுள்ளார்.
உன்னால் இதுவரை கேட்டதிலும், இனி கேட்கபோவதிலும் வைராக்கியத்தை அடைய வேண்டும்.
ந அஸ்தி அக்ருதஹ க்ருதஹ – இந்த மோட்சத்தை(அக்ருதஹ) கர்மத்தினால் (க்ருதஹ) அடையமுடியாது ( ந அஸ்தி).
வைராக்கியம் வந்தவுடன் மேலும் சில விஷயங்களை தெரிந்து கொள்ளவேண்டும். கர்மத்தினால் அடைவது சாத்தியம்.
எனவே சாத்தியம் என்பது அடையப்படுவது. எவையெல்லாம் சாத்தியங்களோ அவைகளெல்லாம் நிலையற்றவைகள்.
ஒரு பொருள் ஏற்கனவே இருக்கிறது, அது எதனாலும் உருவாக்கப்பட்டதல்ல, நம்மிடத்திலேயே இருக்கின்றது.
அதை அறியாமையினால் இழந்திருக்கின்றோம். எனவே அதை அடைய வேண்டுமென்றால் அறியாமை நீங்கி அறிவு பெற வேண்டும்.
அந்த ஸித்த வஸ்துவை அடைவதற்கு ஞானத்தை அடைய வேண்டும்.
இந்த ஞானத்தை அடைய அதற்குரிய கருவியை (பிரமாணத்தை) பயன்படுத்த வேண்டும்.
அந்தக் கருவி உபநிஷத் என்று புரிந்து கொள்ள வேண்டும்., இந்த உபநிஷத்தை தகுதியுள்ள குருமுகமாகத்தான் அறிந்து கொள்ள வேண்டும்.
அப்போதுதான் சரியாக புரிந்து கொண்டு அறிவை அடைய முடியும்.
நாமே புத்தகத்தின் மூலம் படித்து சரியான அறிவை அடைய முடியாது. எனவே குருவை அணுகி உபநிஷத் உபதேசத்தை பெறவேண்டும்.

ஸஹ – அந்த முமுக்ஷுவானவன்
தத்3 – அந்த பிரம்மத்தை
விக்ஞானார்தம் – அறிந்து கொள்வதற்காக
குரு ஏவ அபிகச்சேத் – குருவை மட்டும் நாடி செல்ல வேண்டும்
ஸ்ரோத்ரியம், பிரஹ்ம நிஷ்டம் – இவையிரண்டு குருவின் லட்சணங்களாக கூறப்படுகின்றன.
த்ருணாதி – யார் உபதேசம் செய்கிறார்களோ அவர்தான் குரு, அவர் செய்யும் உபதேசம் ஆத்ம தத்துவம்.
எப்படி வாழவேண்டும் என்பதையும் உபதேசிக்கிறார். அவருக்கு இருக்க வேண்டிய தகுதிகளாவது:
ஸ்ரோத்ரியம் – முறைப்படி சாஸ்திரம் படித்தவராக இருக்க வேண்டும். குருபரம்பரையில் வந்த குருவிடம் தொடர்ந்து,
முறையாக சாஸ்திரம் படித்திருக்க வேண்டும்.
சிரவணம், மனனம், நிதித்யாஸனம் என்கின்ற ஞான சாதனங்களை பின்பற்றி ஆத்மவித்யாவை படித்திருக்க வேண்டும்.
பிரம்ம நிஷ்டன் – பிரம்ம ஞானத்தை அடைந்ததுமில்லாமல், அதில் நிலைப்பெற்று இருக்க வேண்டும்.
ஸ்ரோத்ரிய குருவினால்தான் முறையாக சீடனுக்கு புரியும் விதத்தில் சாஸ்திரத்தை உபதேசிக்க முடியும்.
அவருடைய உபதேசம் சீடனால் நன்றாக புரியும் விதத்தில் இருக்கும்.
குருவானவர் ஏன் பிரம்ம நிஷ்டனாக இருக்க வேண்டுமென்றால், நான் சம்சாரி என்ற அறிவுடன் வந்திருக்கும் சீடனிடம்
நீ அசம்சாரி என்று உபதேசம் செய்யும்போது அது எப்படி உண்மையாக இருக்க முடியும் என்று அவன் சந்தேகித்து கொண்டிருப்பான்.
இந்த சந்தேகத்தை பிரம்மநிஷ்டனாக இருக்கின்ற குருவின் வாழும் விதத்தைப் பார்த்துத்தான் நீக்கி கொள்வான்.
யாரையும் துவேஷிக்காமல், காம-க்ரோதங்கள் எதுவும் இல்லாமல் இருக்கின்ற குருவை பார்க்கின்றான்.
இன்ப-துன்பங்களை சமமாக பாவிக்கும் நிலையை பார்க்கும் போது கற்றதில் பெற்ற அறிவில் இருக்கும்
சந்தேகங்கள் எல்லாம் நீங்கப்பெற்று அவனும் குருவைப் போன்ற நிலையை அடைகிறான்.

குருவிடம் இருக்க வேண்டிய இந்த லட்சணங்களை எப்படி கண்டுபிடிப்பது?
1.குருவிடம் சென்று அவரது குருவின் பெயரை அறிந்துக் கொள்ள வேண்டும். அதிலிருந்து அவர் ஸ்ரோத்திரன் என்பதை கண்டு கொள்ளலாம்
2.பிரம்மநிஷ்டன் என்பதை தெரிந்து கொள்வது மிக கடினம். அவரிடம் நற்பண்புகள் சுபாவமாக இருப்பதால்
அவர் பிரம்மநிஷ்டனாகத்தான் இருக்க வேண்டும் என்று யூகித்து அறிந்து கொள்ளலாம்
குருவின் லட்சணங்கள்
· சாஸ்திரத்தை முறைப்படி கற்றவர். அதன்படியே வாழ்பவர் இத்தகையவர் உத்தம குருவாக இருக்க முடியும்
·வெறும் ஸ்ரோத்திரியனாக மட்டும் இருப்பவர் மத்திமமான குரு. இவரிடம் இருந்து சாஸ்திர அறிவை பெறலாம,
ஆனால் இவர் வாழ்க்கை முறையில் இருந்து எதையும் கற்றுக் கொள்ள முடியாது
· கேவல பிரம்ம நிஷ்டனாக இருப்பவர் முறைப்படி சாஸ்திரத்தை படித்து இருக்க மாட்டார்.
பூர்வஜென்ம புண்ணியத்தால் பிரம்ம ஞானத்தையும் அடைந்து அதில் நிஷ்டையும் அடைந்திருப்பார்.
அதனால் இவரால் ஆத்ம உபதேசத்தை புரியும் வகையில் இருக்காது.
எப்படிபட்ட மனநிலையுடன் சிஷ்யன் குருவை நாட வேண்டும்?
சமித்பாணி ஸஹ – அவன் கையில் சமித்பாணியை எடுத்துக் கொண்டு குருவிடம் செல்லவேண்டும்.. இது சிரத்தையை குறிக்கிறது.
அவருக்கு பணிவிடை செய்கின்ற மனநிலையுடன் செல்கின்றான். இது அவனிடத்தில் இருக்கின்ற பக்தியையும்,
சேவை செய்கின்ற மனப்பான்மையையும், பணிவையும் குறிக்கின்றது

குருவினுடைய உபதேசம் ஞானமாக வேண்டுமானால் அவர் மீது சிரத்தை வைத்திருக்க வேண்டும்.
யாரிடம் பக்தியிருக்கிறதோ அவரிடம் நாம் ஒளிவு மறைவின்றி இருப்போம் அவரது உபதேசத்தை ஆர்வத்துடன் கேட்போம்.
நாம் ஏற்கனவே படித்துவைத்திருந்தால் அதை குருவின் உபதேசத்தோடு ஒப்பிட்டு பார்த்து கொண்டிருப்போம்,
புதியதாக அறிவை அடைய வேண்டும். எனவே மனதை தெளிவாக வைத்திருக்க வேண்டும்.
சேவை செய்வதனால் நம்முடைய அகங்காரம், கர்வம் குறைந்துவிடும் பிறகு இல்லாமல் போய்விடும்.
அறிவில் பணிவு இருக்க வேண்டும். பணிவான பாவனையுடன் அணுகவேண்டும். குருவிடம் பணிவான கேள்விகளைக் கேட்க வேண்டும்.

எனவே உலகத்தை விசாரம் செய்து, வைராக்கியம் அடைந்தவுடன் குருவை அணுக வேண்டும்.
இப்படிபட்ட குருவிடம் செல்ல வேண்டும். குருவிடம் மட்டும்தான் செல்ல வேண்டும் வேறு மார்க்கம் எதுவும் இல்லை

ப்ராஹ்மணர்- கர்ம வசம் படாமல் இருப்பதற்காக சாத்விக தியாகத்துடன்-விஷயாந்தர்களில் பற்று இன்றி -நிர்வேதத்துடன்
ப்ரஹ்ம நிஷ்டர்களான -ஸமித் பாணி யாக ஞானம் அனுஷ்டானம் இவை நன்குடைய ஆச்சார்யர்களை பற்றி
அவர்கள் அபிமானத்தாலே பர ப்ரஹ்மத்தை அடைந்து அனுபவிக்கிறார்கள் –

————–

தஸ்மை ஸ வித்வாநுபஸந்நாய ஸம்யக் ப்ரஷாந்தசித்தாய ஷமாந்விதாய.
யேநாக்ஷரஂ புரூஷஂ வேத ஸத்யஂ ப்ரோவாச தாஂ தத்த்வதோ ப்ரஹ்மவித்யாம்৷৷1.2.13৷৷

தஸ்மை ஸ வித்3வானுபஸன்னாய ஸ்ம்யக்
ப்ரஶாந்தசித்தாய ஶமான்விதாய |
யேனாக்ஷரம் புருஷம் வேத3 ஸத்யம் ப்ரோவாச
தாம் தத் த்வதோ ப்ரஹ்மவித்3யாம் || 13 ||

தஸ்மை – இப்படி அணுகிய சீடனுக்கு
ஸஹ வித்3வான் – அந்த குரு
ஸம்யக் உபஸன்னாய – முறைப்படி தகுதியுடைய அணுகிய சீடனுக்கு
ப்ரஶாந்த சித்தாய – அமைதியடைந்த மனதையுடையவன் (ராக-துவேஷங்கள் நீங்கிய அமைதியான மனதையுடைய சீடனுக்கு,
சமஹ என்ற தகுதியை அடைந்தவனுக்கு)
ஶமான்விதாய – ஞானேந்திரியங்களை தன் வசத்தில் கொண்டுள்ள சீடனுக்கு, தமம் என்கின்ற தகுதியை அடைந்த சீடனுக்கு
ப்ரோவாச – உபதேசம் செய்ய வேண்டும்
தாம் ப்ரஹ்மவித்3யாம் – அந்த பிரஹ்ம வித்யாவை
தத்வதஹ – எப்படி அறிந்தாரோ அதேமாதிரி
யேன அக்ஷரம் ஸத்யம் புருஷம் சேத – எந்த ஞானத்தால் இப்படிபட்ட தத்துவத்தை, அறிவாரோ
அழியாததுமான மூன்று காலத்திலும் மாறாதிருக்கின்ற பிரம்மத்தை, எல்லாவிடத்திலும் வியாபித்துள்ளவர்,
உடலில் சாட்சியாக இருந்து கொண்டிருக்கின்ற புருஷனை

———————————

ததேதத்ஸத்யஂ யதா ஸுதீப்தாத்பாவகாத்விஸ்புலிங்காஃ ஸஹஸ்ரஷஃ ப்ரபவந்தே ஸரூபாஃ.
ததாக்ஷராத்விவிதாஃ ஸோம்ய பாவாஃ ப்ரஜாயந்தே தத்ர சைவாபியந்தி৷৷2.1.1৷৷

ததே3தத்ஸத்யம் யதா2 ஸுதீப்தாத்பாவகாத்3
விஸ்புலிங்கா: ஸஹஸ்ரஶ: ப்ரபவந்தே ஸரூபா: |
ததா3க்ஷராத்3விவிதா4: ஸோம்ய பா4வா:
ப்ரஜாயந்தே தத்ர சைவாபி யந்தி || 1 ||

ஸோம்ய – நல்ல மனதையுடைய சீடனே
தத் ஏதத் ஸத்யம் – முன்பு சொன்ன பிரம்மனும் சத்யம், எந்த அக்ஷரத்தைப்பற்றி சொல்லப் போகிறேனோ அதுவும் சத்யம் ( என்றும் இருப்பது)
யதா2 – எப்படி
ஸுதீ3ப்தாத்பாவகாத் – கொழுந்துவிட்டு நன்கு எரிகின்ற நெருப்பிலிருந்து
ப்ரப4வந்தே – தோன்றுகின்ற
சஹஸ்ரஶஹ – ஆயிரக்கணக்கான,
விஸ்புலிந்க்காஹா – தீப்பொறிகள்
ஸரூபா: – அக்னியின் தன்மையை உடையதாக இருக்கிறதோ
ததா4 – அவ்விதமே
அக்ஷராத் – அக்ஷரத்திலிருந்து
விவிதா4: பா4வாஹா – விதவிதமான ஜீவராசிகள்
ப்ரஜாயந்தே – தோன்றுகிறது
தத்ர ச ஏவ அபி யந்தி – இவைகள் அக்ஷரத்திலேயேதான் ஒடுங்குகிறது.
அக்ஷரமே இவைகளுக்கு உபாதான காரணமாக சொல்லப்பட்டிருக்கிறது.

சத்தாக இருந்த அந்த ஒன்றான பெற ப்ரஹ்மத்தின் இடம் இருந்து -நெருப்பு துகள் ஒவ் ஒன்றும் நெருப்பு ஆவது போலேயும்
குடாகாசம் போல ஆகாசம் பல ஆயிரக் கணக்கான ஆகாசம் ஆவது போலேயும் – பலவும் பல்வேறு நாம ரூபங்களுடன்
ப்ரஜாயந்தே – உருவாகி -விவித் பவ -மீண்டும் அதிலே லயிக்கும்-அப்யந்தி-
நேதி நேதி -என்று தான் சொல்ல முடியும் அந்த பர ப்ரஹ்மத்தை –

——————

திவ்யோ ஹ்யமூர்தஃ புரூஷஃ ஸபாஹ்யாப்யந்தரோ ஹ்யஜஃ. அப்ரணோ ஹ்யமநாஃ ஷுப்ரோ ஹ்யக்ஷராத்பரதஃ பரஃ৷৷2.1.2৷৷

தி3வ்யோ ஹ்யமூர்த: புருஷ: ஸபா3ஹ்யாப்4யந்தரோ ஹ்யஜ: |
அப்ரணோ ஹ்யமனா: ஶுப்4ரோ ஹ்யக்ஷராத்பரத: பர: || 2 ||

திவ்யஹ – சைதன்ய ஸ்வரூபமானது, சித் ஸ்வரூபமானது
அமூர்த: – உருவமற்றது, அவயவங்களற்றது
புருஷஹ – எல்லாவிடத்திலும் நிறைந்திருப்பது, பூரணமானது, உடலில் சாட்சியாக இருப்பதாலும் இவ்வாறு கூறப்படுகிறது
ஸ பா3ஹ்யம் – வெளியேயும் உள்ளது
ஸ அப்4யந்தரோ – உள்ளேயும் உள்ளது. எதனாலும் வரையறுக்கப்படாதது
ஹி அஜஹ – உண்மையில் பிறப்பற்றது, எந்தவித மாற்றமும் இல்லாதது
அப்பிராணஹ – பிராணனும் இல்லாதது
அமனாஹ – மனது கிடையாது. அதாவது சூட்சும சரீரமுமற்றது
ஶுப்4ரஹ – தூய்மையானது, காரண சரீரமற்றது. அறியாமையற்றது
மாயை ஸ்தூல சூட்சுமமான ஜகத்தை காட்டிலும் மேலானது. அக்ஷரம் இந்த மாயையை காட்டிலும் மேலானது
அக்ஷராத் ப்ரதஹ பர – ஜகத்தைக் காட்டிலும் மேலான மாயைவிட மேலானது இந்த பிரம்மன்

திவ்ய -அஜன் -பிறப்பிலி பல் பிறவி பெருமான் -கர்ம வஸ்யர் போலே பிறப்பில்லாதவன் -ரூபமும் ரூபங்கள் பலவும் கொண்டவன் –
நித்யன் ஸத்ய ஸங்கல்பன் -பராத் பரன் -ஓத்தார் மிக்கார் இலையாய மா மாயன் -சர்வ அந்தர்யாமி -ஸ்வரூப ஸ்வபாவ விகாரங்கள் அற்றவன் –

—————–

ஏதஸ்மாஜ்ஜாயதே ப்ராணோ மநஃ ஸர்வேந்த்ரியாணி ச. கஂ வாயுர்ஜ்யோதிராபஃ பரிதிவீ விஷ்வஸ்ய தாரிணீ৷৷2.1.3৷৷

ஏதஸ்மாஜ்ஜாயதே ப்ராணோ மன: ஸர்வேந்த்3ரியாணி ச |
க்2ம் வாயுர்ஜோதிராப: ப்ருதி2வீ விஶ்வஸ்ய தா4ரிணீ || 3 ||

இந்த பிரபஞ்சம் நான்கு படிகளாக தோன்றியது. பிரம்மன் மாயையோடு கூடியது முதல் நிலை.
சூட்சுமமான ஐந்து பூதங்கள் தோன்றியது. சூட்சுமமான பிரபஞ்ச, சரீரங்கள் தோன்றியது.
சூட்சும பூதங்களின் கலப்பினால் ஸ்தூல பஞ்சபூதங்கள் தோன்றியது. ஸ்தூல பிரபஞ்சம், ஸ்தூல சரீரங்கள் தோன்றியது,

கம் – ஆகாசம் – மாயையுடன் கூடிய சப்தம்
வாயு – காற்று – ஸ்பர்ஶம், தொடுதல்
ஜோதி – அக்னி – ரூபம்
ஆபஹ – நீர் – சுவை
ப்ருதவி – நிலம் – வாசனை
இவைகளெல்லாம் சூட்சுமமான பூதங்கள்
ஏதஸ்மாத் – இதனிடமிருந்து, மாயையுடன் கூடிய அக்ஷரத்துடன்
பிராணஹ, மனஹ – பிராணன்களும், மனதும்
சர்வ இந்திரியானி ச – எல்லா இந்திரியங்களும்
ஜாயதே – தோன்றியது

அவனே த்ரிவித காரணன் -மனஸ் கர்ம ஞான இந்திரியங்கள் பஞ்ச பூதங்கள் தன்மாத்திரைகள்
ஸ்பர்சாதி குணங்கள் -எல்லாம் அவன் இடம் இருந்தே உருவாகின்றன –

———

அக்நிர்மூர்தா சக்ஷுஷீ சந்த்ரஸூர்யௌ திஷஃ ஷ்ரோத்ரே வாக்விவரிதாஷ்ச வேதாஃ.
வாயுஃ ப்ராணோ ஹரிதயஂ விஷ்வமஸ்ய பத்ப்யாஂ பரிதிவீ ஹ்யேஷ ஸர்வபூதாந்தராத்மா৷৷2.1.4৷৷

அக்னிர்மூர்த4ம் சக்ஷுஷீ சந்த்3ரஸூர்யை
திஶ: ஶ்ரோத்ரே வாக்விவ்ருதாஶ்ச வேதா3: |
வாயு: ப்ராணோ ஹ்ருத3யம் விஶ்வமஸ்ய
பத்த்4யாம் ப்ருதி2வீ ஹ்யேஷ ஸர்வபூ4தாந்தராத்மா ||| 4 ||

இந்த பிரபஞ்சமே ஈஸ்வரனின் ஸ்தூல சரீரம்.
அந்தர்யாமி – மாயையுடன் கூடிய ஈஸ்வரன்
ஹிரண்யகர்ப்பன் – சூட்சுமமான பிரபஞ்சமாக, சரீரங்களாக இருக்கும் உருவம்
விராட் – ஸ்தூலமான பிரபஞ்சமாகவும், ஸ்தூல சரீரங்களாகவும் இருக்கும் உருவம்
அக்னிர்மூர்தா4 – விராட்டின் தலை சொர்க்கம்
சக்ஷுஷீ சந்த்3ரஸூர்யை – சந்திரனும், சூரியனும் இரண்டு கண்கள்
தி3ஶ: ஶ்ரோத்ரே – திசைகளே காதுகளாக இருக்கிறது
வாக்3 வேதா3ஹா – வேதங்களே அவருடைய பேச்சு
விவ்ருதாஹ வேதாஹா – பிரசித்தமான வேதங்கள்
வாயுஹு பிராணஹ – காற்றே அவரது பிராணன்
விஶ்வம் ஹ்ருதயம் – பிரபஞ்சமே இதயமாக
யஸ்ய – அந்த விராட்
பத்3த்4யாம் ப்2ருதிவி – பாதங்கள் இந்த பூமி
ஏஷஹ – இவர்
ஸர்வபூ4த் அந்தராத்மா – எல்லா ஜீவராசிகளின் இதயத்திலும் இருக்கிறார்.

பர ப்ரஹ்மம் -திரு முகத்தில் இருந்து -அக்னி -திருக் கண்கள் சந்த்ர ஸூ ர்யர்கள் -திக்குகள் திருக் காதுகள் –
அவன் ஸ்ரீ ஸூ க்திகளே வேதங்கள்
பிராணனே வாயு -அவன் இருதயமே அனைத்து உலகங்களும் -திருவடிகளில் இருந்து அனைத்து உலகங்களும் -உண்டாகி
அனைத்துக்கும் சர்வ அந்தராத்மாவாக உள்ளான் -அவனே விஷ்ணு -த்ரிவித -தேச கால வஸ்து -பரிச்சேத ரஹிதன் அனந்தன் –

—————–

தஸ்மாதக்நிஃ ஸமிதோ யஸ்ய ஸூர்யஃ ஸோமாத்பர்ஜந்ய ஓஷதயஃ பரிதிவ்யாம்.
புமாந் ரேதஃ ஸிஞ்சதி யோஷிதாயாஂ பஹ்வீ ப்ரஜாஃ புரூஷாத்ஸஂப்ரஸூதாஃ৷৷2.1.5৷৷

தஸ்மாத3க்னி: ஸமிதோ4 யஸ்ய ஸூர்ய:
ஸோமாத்பர்ஜன்ய ஔஷத4ய: ப்ருதி2வ்யாம் |
புமான் ரேத: ஸிஞ்சதி யோஷிதாயாம்
ப3ஹ்வீ ப்ரஜா: புருஷாத்ஸம்ப்ரஸூதா: || 5 ||

தஸ்மாத் – மாயையுடன் கூடிய அந்த பிரம்மத்திடமிருந்து
அக்னி – சொர்க்கலோகம் தோன்றியது
ஸமித4ஹ யஸ்ய ஸூர்ய: – சூரியனால் அது பிரகாசிக்கிறது.
ஸோமஹ – சந்திரன் தோன்றியது
பர்ஜன்ய – அதிலிருந்து மேகங்கள் உருவாகியது, மழையாக பொழிகின்றது
ஔஷதஹ ப்ருதி2வ்யாம் – தாவரங்கள் பூமியில் வளர்கின்றது
புமான் – மனிதன்
ரேதஹ – அவனுடைய விந்து சக்தியை
யோஷிதாயாம் ஸிஞ்சதி – பெண்ணுக்குள் செலுத்துகிறான்
பஹுவிஹி – பலவிதமான
ப்ரஜாஹா – ஜீவராசிகள்
புருஷாதி ஸம்ப்ரஸுதாஹா – பிரம்மத்திடமிருந்து தோன்றியது

இவ்வாறு ஜீவனின் ஸ்தூல சரீரம்தான் உருவாகிறது. அது மனிதனாக இருக்கலாம் அல்லது வேறு ஜீவராசியாகவும் இருக்காலாம்.
அவனது சூட்சும சரீரம் அப்படியேதான் இருக்கும்

அந்த பர ப்ரஹ்மத்தின் இடம் இருந்து -முதலில் -அக்னி -ஸூர்யனுக்கு ஸமித் போலவும் –இரண்டாவதாக –சந்திரனுக்கு பர்ஜன்யனும்
மூன்றும் நான்காவதாக ஒளஷதமும் விதைகளும் பூமிக்கு மேகம் மூலமும்
ஐந்தாவதாக புருஷர்களுக்கு ரேதஸும் -இப்படி பஞ்சாக்னி வித்யை என்பவர் –

—————-

தஸ்மாதரிசஃ ஸாம யஜூ் ఁஷி தீக்ஷா யஜ்ஞாஷ்ச ஸர்வ க்ரதவோ தக்ஷிணாஷ்ச.
ஸஂவத்ஸரஷ்ச யஜமாநஷ்ச லோகாஃ ஸோமோ யத்ர பவதே யத்ர ஸூர்யஃ৷৷2.1.6৷৷

தஸ்மாத்3ருச: ஸாம யஜூம்ஷி தீக்ஷா
யக்3ஞாஶ்ச ஸர்வே க்ரதவோ தக்ஷிணாஶ்ச |
ஸம்வத்ஸரஶ்ச யஜமானஶ்ச லோகா:
ஸோமோ யத்ர பவதே யத்ர ஸூர்ய: || 6 ||

தஸ்மாத்3 – அந்த பிரம்மத்திடமிருந்து
யஹூம்ஷி – வேத மந்திரங்கள்
ரிச: ஸாம, யஜூ – சாம, யஜூர் வேதங்கள்
தீ3க்ஷா – யாகம் செய்வதற்காக எடுத்துக் கொள்ளும் விரதங்கள்
யக்ஞா – யாகங்கள் தோன்றியது
ஸர்வே க்ரதஹ – பல விலங்குகளை பலி கொடுக்கின்ற
த3க்ஷிணாஶ்ச – யாகத்தில் கொடுக்கப்படும் தானங்கள்
ஸம்வத்ஸரஶ்ச – காலங்கள் தோன்றியது
யஜமானஶ்ச – யாகத்தை செய்யும் எஜமானன்
லோகாஹ – விதவிதமான லோகங்கள்
யத்ர ஸோமஹ –சந்திரதேவன் வழிக்காட்டுகின்ற உலகங்கள்
யத்ர சூர்யஹ – சூரியன் வழிகாட்டும் லோகங்கள்
இவைகள் யாவும் பிரம்மத்திடமிருந்து தோன்றியது. ஜீவன் இறந்த பிறகு அடையும் கதிகள்
1.முறையாக கர்மங்களை செய்த மனிதனின் முதல் கதி – கிருஷ்ண கதி – சொர்க்கம்
2.அதிக உபாஸனைகளின் மூலம் சுக்லகதி வழியாக பிரம்ம லோகத்திற்கு செல்கின்றான்
3.அவரவர்கள் விருப்பு-வெறுப்பு வாழ்பவர்களுக்கு அதோ கதி – எந்தக்கதியும் இல்லாதவர்கள் நரகத்தையோ, விலங்குகளாகவோ பிறப்பார்கள்
4.அகதி – எந்தக் கதியும் கிடையாது. மோட்சம் அடைந்தவர்களின் அடையும் கதியானது மீண்டும் பிறவியெடுக்க மாட்டார்கள்
சொர்க்கலோகம், பிரம்ம லோகம் இருக்கிறது என்று நம்புபவர்களுக்கு ஶ்ருதி ஆதாரமாக இருக்கிறது.
இல்லையென்போர்களுக்கு அவர்களது நம்பிக்கைதான் ஆதாரம்.

அந்த பர ப்ரஹ்மத்தின் இடம் இருந்தே ருக் யஜுர் சாமம் -வேத மந்திரங்களும் –சந்தஸ் போன்ற அங்கங்களும் –
சாமம் -ஹிம்கார-பிரஸ்தவ -உத்கீதம் -பிரதிகாரம் -நிதானம் -என்று ஐந்தாகவும் -உபத்ரவ அடி -என்ற இரண்டையும் சேர்த்து ஏழாகவும் பிரிப்பர் –
அந்த ப்ரஹ்மத்தின் இடம் இருந்தே சந்த்ர ஸூரியர் -தஷிணாயணம் உத்தராயணம் -யாகம் யஜ்ஜம் -வர்ணாஸ்ரம கர்மாக்கள் -அனைத்தும் வந்தன –

——————-

தஸ்மாச்ச தேவா பஹுதா ஸஂப்ரஸூதாஃ ஸாத்யா மநுஷ்யாஃ பஷவோ வயாஂஸி.
ப்ராணாபாநௌ வ்ரீஹியவௌ தபஷ்ச க்ஷத்தா ஸத்யஂ ப்ரஹ்மசர்யஂ விதிஷ்ச৷৷2.1.7৷৷

தஸ்மாச்ச தே3வா ப3ஹுதா4 ஸம்ப்ரஸூதா:
ஸாத்4யா மனுஷ்யா பஶவோ வயாம்ஸி |
ப்ராணாபானௌ வ்ரீஹியவௌ தபஶ்ச
ஶ்ரத்3தா4 ஸத்யம் ப்ரஹ்மசர்யம் விதி4ஶ்ச || 7 ||

தஸ்மாத்3 – அந்த பிரம்மத்திடமிருந்து
தேவாஹா – தேவர்கள்
பஹுதா4 ஸ்ம்ப்ரஸூதாஹா – பலவிதமான தேவதைகள்
ஸாத்4யா மனுஷ்யா – விசேஷமான தேவதைகள் மனிதர்கள்
பஶவஹ, வயாம்ஸி – மிருகங்கள், பறவைகள்
ப்ராணா அபானௌ – பிராணனங்கள் தோன்றின
வ்ரீஹி, யவௌ – நெல், பார்லி போன்ற தானியங்கள்
தபஹ, ஸ்ரத்3தா4 – தவங்களும், சிரத்தையும்
ஸத்யம் – உண்மை உரைத்தல்
ப்ரஹ்மசர்யம் – பிரம்மச்சர்ய வாழ்க்கை முறை
விதி4ஶ்ச – நம்முடைய கர்மங்கள், வாழ்க்கை நெறிமுறைகள் தோன்றின

அந்த பர ப்ரஹ்மத்தின் இடம் இருந்தே தேவ-முப்பத்து முக்கோடி -11-ருத்ரர்கள் /-12-ஆதித்யர்கள் /அஷ்ட வசுக்கள் /அஸ்வினி /
மனுஷ்ய திர்யக் ஜங்கமம்-நெல் பார்லி போன்ற தானியங்களும் -சத்யம் -வர்ணாஸ்ரம கர்மங்கள் -சாஸ்த்ர விஹிதங்கள்-அனைத்தும் உண்டாயின –

———————

ஸப்த ப்ராணாஃ ப்ரபவந்தி தஸ்மாத்ஸப்தார்சிஷஃ ஸமிதஃ ஸப்த ஹோமாஃ.
ஸப்த இமே லோகா யேஷு சரந்தி ப்ராணா குஹாஷயா நிஹிதாஃ ஸப்த ஸப்த৷৷৷–৷2.1.8৷৷

ஸப்த ப்ராணா: ப்ரப4வந்தி தஸ்மாத்
ஸப்தார்சிஷ: ஸமித4: ஸப்த ஹோமா: |
ஸப்தே இமே லோகா யேஷு சரந்தி ப்ராணா
கு3ஹாஶயா நிஹிதா: ஸப்த ஸப்த || 8 ||

யாகத்தில் உள்ள அங்கங்கள் ஹோமகுண்டம், அக்னி, அக்னிஜுவாலை, அக்னியில் சமர்ப்பிக்கும் பொருட்கள் (சமீத்),
அக்னியும், சமித்தும் ஒன்றாகின்றது (பஸ்பம்)
ஹோமகுண்டம் – இந்திரியங்கள் இருக்குமிடம்
அக்னி – இந்திரியங்கள்
அக்னி ஜுவாலை – இந்திரியங்களின் வெளிப்பாடு
சமித் – இந்திரியங்களின் விஷயங்கள்; உலகத்திலுள்ள விஷயங்கள்; அனுபவிக்கும் விஷயங்கள்
அக்னி-சமித் சம்பந்தம் – ஞானம்

தஸ்மாத் – அந்த பிரம்மத்திடமிருந்து
ஸப்த ப்ராணா: – ஏழு பிராணன்கள், இந்திரியங்கள் தோன்றியது
ஸப்த அர்சிஹ – இந்திரிய சக்திகளும்
ஸப்த இமே லோகா – இந்த ஐந்து இந்திரியங்கள்
ஸமித4ஹ, ஹோமா – பல விஷயங்களும், அறிவை அடைவதும் சமித்துக்கு ஒப்பிடப்படுகிறது
நாம் அடையும் உலக விஷயங்களினால் அறிவு இவ்வாறு சொல்லப்படுவது
ஏஷு ப்ராணன் சரந்தி – இந்த கோளகத்தில் இந்திரியங்கள், பிராணன்கள் செயல்படுகின்றது.
கு3ஹாஶயா – இந்திரியங்கள் மனதில் ஓய்வெடுக்கின்றது. மனம் இருதயத்தில் ஓய்வெடுக்கின்றது.
நிஹிதா: ஸப்த ஸப்த – இந்த ஏழு ஏழு இந்திரியங்கள் எல்லா ஜீவராசிகளுக்கும் கொடுக்கப்பட்டு இருக்கிறது

அந்த பர ப்ரஹ்மத்தின் இடம் இருந்தே ஏழு -முக்கிய முகத்தில் உள்ள ஞான இந்திரியங்கள்
இரண்டு காதுகள் -இரண்டு கண்கள் -இரண்டு மூக்கு த்வாரங்கள் ஒரு வாய் –
சப்த அக்னிகள் சப்த சமித்துக்கள் -சப்த ஹோமங்கள் –சப்த லோகங்கள் -பிராண அபாண–போன்றவையும் –

——————-

அதஃ ஸமுத்ரா கிரயஷ்ச ஸர்வேஸ்மாத்ஸ்யந்தந்தே ஸிந்தவஃ ஸர்வரூபாஃ.
அதஷ்ச ஸர்வா ஓஷதயோ ரஸஷ்ச யேநைஷ பூதைஸ்திஷ்டதே ஹ்யந்தராத்மா৷৷2.1.9৷৷

அத: ஸமுத்3ரா கி3ரயஶ்ச ஸர்வேSஸ்மாத்ஸ்யந்த3ந்தே
ஸிந்த4வ: ஸர்வரூபா: |
அதஶ்ச ஸர்வா ஓஷத4யோ ரஸ்ஶ்ச யேனைஷ
பூ4தைஸ்திஷ்ட2தே ஹ்யந்தராத்மா || 9 ||

அதஹ – பிரம்மத்திடமிருந்து
ஸர்வே ஸமுத்3ரா, கி3ரய – எல்லா கடல்கள், மலைகள் தோன்றின
அஸ்மாத் – அந்த பிரம்மத்திடமிருந்து
ஸர்வரூபா: ஸிந்த4வ: – நதிகள் பலவிதமாக தோன்றின
ஸர்வா ஓஷத4யஹ – விதவிதமான மரம், செடி, கொடிகள்
ரஸ்ஶ்ச – தாவரங்களில் இருக்கும் சக்திகள்
யேன – இந்த சக்திகள்
ஏஷ அந்தராத்மா – சூட்சும சரீரத்திலிருக்கும் அந்தராத்மா
பூதை திஷ்டதே – ஸ்தூல சரீரத்தில் இருக்க உதவுகிறது.

அந்த பர ப்ரஹ்மத்தின் இடம் இருந்தே சமுத்ரங்களும் மலைகளும் நதிகளும் -ஒளஷதங்கள் தானியங்கள்
சர்வ ரசங்களும்-ஆறு சுவைகளும் -பஞ்ச பூதங்களும் -வந்தன –
அனைத்துக்கும் சர்வ அந்தர்யாமியாகவும் இருந்து நாம ரூப விபாகம் அருளினான் –

————–

புரூஷ ஏவேதஂ விஷ்வஂ கர்ம தபோ ப்ரஹ்ம பராமரிதம். ஏதத்யோ வேத நிஹிதஂ குஹாயாஂ ஸோவித்யாக்ரந்திஂ விகிரதீஹ ஸோம்ய৷৷2.1.10৷৷

புருஷ: ஏவேத3ம் விஶ்வம் கர்ம தபோ ப்ரஹ்ம பராம்ருதம் |
ஏதத்3யோ வேத3 நிஹிதம் கு3ஹாயாம்
ஸோSவித்3யாக்3ரந்தி2ம் விகிரதீஹ ஸோம்ய || 10 ||

இதில் மூன்று கருத்துக்கள் கூறப்பட்டுள்ளது. அவைகள் 1. பிரஹ்ம ஸ்வரூபம், 2. ஜீவ-பிரஹ்ம ஐக்கியம், 3. ஞானபலன்
ஸோம்ய – மிகவும் விருப்பத்திற்குரியவனே!
புருஷஹ ஏவ இத3ம் விஶ்வம் – நம்முடைய அனுபவத்திலிருக்கின்ற உலகத்தில் உள்ள அனைத்தும் பிரஹ்ம ஸ்வரூபமாகவே இருக்கிறது
கர்ம தபஹ – கர்ம பலனாலும், உபாஸனை பலனாலும் கிடைத்த உலகத்தை நாம் அனுபவிக்கிறோம்
ப்ரஹ்ம பராம்ருதம் – புருஷனான பிரம்மன் மேலானது, அழிவற்றது.
யஹ ஏதத் – எவனொருவன் இவ்வாறு வெளியே ஸத் ரூபமாக உள்ள பிரம்மத்தை
குஹாயாம் – மனதில் உள்ள சித் (ஆத்மாவாக) ஸ்வரூபமாக
வேத நிஹிதே – இருப்பதாக அறிகின்றானோ
இது ஜீவ-பிரஹ்ம ஐக்கியத்தை எடுத்துக் காட்டுகிறது. நான் இருக்கின்றேன் என்பதற்கு எந்த இந்திரியங்களின் துணையும் தேவையில்லை
யஹ ஏத ஸஹ – இவ்வாறு யார் அறிகிறார்களோ
அவித்யா க்ரந்தி விக்ரதி – அவர்கள் அறியாமை என்ற முடிச்சிலிருந்து விடுபடுகிறார்கள்.
இஹ – உயிரோடு இருக்கும்போது இங்கேயே இப்போதே நம்முடைய மனதால் உலகத்தோடு கட்டிப்போடப்பட்டிருக்கின்றோம்.
இதுவே அறியாமை என்ற முடிச்சு இது மிக உறுதியாக நம்மை நாம ரூபத்தோடு கட்டி வைத்திருக்கிறது.
இந்த உலகத்திலுள்ள பொருட்கள், விஷயங்கள் எல்லாம் நம் மனதில் வாசனைகளாக இருந்து கொண்டிருக்கிறது.
இதிலிருந்து நம் மனம் விடுபடுகிறது. அதாவது சம்சார பந்தத்திலிருந்து விடுபடுகிறோம்.

விசாரம்:
பாம்பும் கயிறும் ஒரே நேரத்தில் இருவருக்கு வெவ்வேறாக தெரிகிறது.
கயிற்றைப் பார்ப்பவர், பாம்பை பார்ப்பவரிடம், நீ பார்ப்பது பாம்பல்ல,கயிறு என்று சொல்வது போல
இந்த உலகத்தை பார்த்துக் கொண்டிருக்கும் நமக்கு, அது உலகமல்ல பிரஹ்மம் என்று உபநிஷத் உபதேசிக்கிறது.
எனவே நாம் உலகத்தை சத்யமாக நினைத்துக் கொண்டிருக்கும் நிலையை விலக்கி அதில் பிரம்மத்தைத்தான் பார்க்க வேண்டும்.
இந்த பிரபஞ்சத்திற்கு பிரம்மன் உபாதான காரணமாக உபதேசிக்கப்பட்டது. தோற்றம், இருத்தல், அழிதல் காரணமாக இருப்பது உபாதான காரணம்.
இந்த உலகத்தில் எந்த விதத்தில் பிரம்மன் உபாதான காரணமாக இருக்கிறது என்பதை ஆராய்வோம். மூன்று லட்சணங்கள் உபாதான காரணத்திற்கு உண்டு.
1.காரிய முழுவதும் வியாபித்திருக்கும். பானை முழுவதும் களிமண் இருப்பது
2.காரியத்தில் ஏற்படும் மாற்றம் காரணத்தை பாதிக்காது
3.அவினாசி – அழிவற்றது
இந்த லட்சணங்களை வைத்துக் கொண்டு பிரம்மத்தை கண்டுபிடிக்க வேண்டும்.
பிரம்மன் ஸத் ஸ்வரூபமாக இருந்தால் கீழ்கண்ட மூன்றும் பொருந்தி வரும்.
1.ஸத் என்பது எல்லாவிடத்திலும் வியாபித்திருக்கிறது. எதை கேட்டாலும், அது இருக்கின்றது, இது இருக்கின்றது
என்று சொல்வதிலிருந்து இதை புரிந்து கொள்ளலாம்
2.மாற்றமடையாதது – புத்தகம் இருக்கின்றது என்பதில் உள்ள இருத்தல், அது தூள்தூளாக கிழிந்தாலும்,
காகிதங்கள் இருக்கின்றது என்பதிலும் மாற்றமடையாமல் இருக்கின்றது. அது போலவே பிரம்மனும் எங்கும் வியாபித்து இருந்தாலும்,
மாற்றமடையாமல் இருந்து கொண்டிருக்கிறது
3.அழிவற்றது – புத்தகத்திற்கு அழிவிருக்கிறது, ஆனால் இருத்தல் என்பது எல்லா நிலைகளிலும்
அழிவேயில்லாமல் தொடர்ந்து இருந்து கொண்டேயிருக்கிறது
இதிலிருந்து பிரம்மனானது இருத்தல் என்ற ஸ்வரூபமாகவே இருக்கிறது என்று புரிந்து கொள்ள முடிகிறது

இந்த இருத்தலை எப்படி தெரிந்து கொள்ள முடியும் என்றால் கண்ணால் புத்தகம் இருக்கிறது என்று தெரிந்து கொள்கிறோம்.
இதில் புத்தகத்தில் பெயர்-உருவம் இருக்கின்றது என்று அறிகிறோம்.
இந்த ஐம்புலன்களால் நாம் எது இருக்கின்றது என்பதை புரிந்து கொள்கிறோம்.
அதோடு நாம் உருவத்தையும் சேர்த்துதான் புரிந்து கொண்டுள்ளோம். நாம் இதில் அந்த இருத்தலை மட்டும்தான் புரிந்து கொள்ள வேண்டும்.
பெயர், உருவத்தில் கவனத்தை செலுத்தாமல், இருத்தலை மட்டும் பார்க்கவே முடியாது.
இந்திரியங்களால் இரண்டும் சேர்ந்தால்தான் தெரிந்து கொள்ள முடியும்.
புலன்களின் துணையில்லாமல் எந்தப்பொருளையாவது நம்மால் அறிந்து கொள்ள முடியுமா என்று யோசித்தால்
அறிவு ஸ்வரூபமான ஆத்மாவை அவ்வாறு அறிந்து கொள்ள முடியும் என்று தெரிய வரும். இது ஒன்றுதான் நாம-ரூபம் இல்லாமல் இருப்பது.

————————–

ஆவிஃ ஸஂநிஹிதஂ குஹாசரஂ நாம மஹத்பதமத்ரைதத்ஸமர்பிதம். ஏஜத்ப்ராணந்நிமிஷச்ச
யதேதஜ்ஜாநத ஸதஸத்வரேண்யஂ பரஂ விஜ்ஞாநாத்யத்வரிஷ்டஂ ப்ரஜாநாம்৷৷2.2.1৷৷

ஆவி: ஸன்னிஹிதம் கு3ஹாசரன்னாம
மஹதபத3மத்ரைதத்ஸமர்பிதம் |
ஏஜத்ப்ராணன்னிமிஷச்ச யதே3தஜ்ஜானத2
ஸத3ஸத்3வரேண்யம் பரம் விக்ஞானத்3யத்3வரிஷ்ட2ம் || 1 ||

ஆவிஹி – சைதன்ய ஸ்வரூபம், பிரகாச ஸ்வரூபம் பிரம்மன், பிரகாசம் ஞானத்திற்கு காரணமாவதால், இது பிரம்மனை குறிக்கிறது.
ஸன்னிஹிதம் – ஜீவ ஸ்வரூபமாக இருதயத்தில் இருக்கிறது. மிக மிக அருகில் இருக்கிறது.
விழிப்புணர்வில் பார்ப்பவனாகவும், கேட்பவனாகவும் இருக்கிறது
கு3ஹாசரன் – புத்தியில் நகர்வது போல் இருக்கின்றது. நாம் பார்க்கும் பொருள் இந்திரியங்கள் வழியாக
அதை வியாபித்து அதன் உருவமாகவே எண்ணங்களாக மாறுகிறது.
அதில் ஆத்மா சித் ஸ்வரூபமாக இருந்து அதுவும் மாறுவது போல் தோன்றுகிறது.
இது புத்தியின் செயலுக்கேற்ப செயல்படுவது போல் இருக்கின்றது.
நாம – பெயரளவில்தான் அப்படி உணர்கிறோம்.
மஹத்பதம் – மேலான லட்சியம், மேலான குறிக்கோள், எல்லாவற்றையும் தாங்குவது, ஆதாரமாக இருக்கிறது
அத்ர ஏதத் ஸமர்ப்பிதம் – இந்த உலகம் இதை சார்ந்திருக்கின்றது
ஏஜத் – நகர்கின்ற ஜீவராசிகள்
பிராணன் – சுவாசிக்கின்ற ஜீவராசிகள் (மனிதர்கள் போன்றவைகள்)
நிமிஷத ச – கண்ணை சிமிட்டுகின்ற ஜீவராசிகள் மேலும் மற்ற ஜீவராசிகளும் அந்த பிரம்மத்தை சார்ந்திருக்கின்றது
யத்3 ஸதஸத்3 – எந்த பிரம்மன் வெளிதோற்றத்திற்கு வந்ததாகவும் (ஸத்தாகவும்),
வெளித்தோற்றத்திற்கு வராமலும் (அஸத்தாகவும்) இருக்கின்றதோ அதாவது மூர்த்த – அமூர்த்தமாக ஸ்வரூபமாகவும் இருக்கிறதோ
யத் வரிஷ்டம் வரேண்யம் – எது மிகமிக மேலானதாகவும், தேர்ந்தெடுக்கப்பட வேண்டியதாகவும் இருக்கிறதோ
யத் ப்ரஜானாம் விக்ஞானாத் பரம் – ஜீவராசிகளுடைய அறிவுக்கு அப்பாற்பட்டதாக இருக்கின்றதோ,
இந்திரியங்களின் சக்திக்கு அப்பாற்பட்டதாக இருக்கிறதோ.
ஏதத்3 ஜானத4 – சிஷ்யர்களே, நீங்கள் அதை அறிய வேண்டும், அறிய இருக்கிறீர்கள்

அந்தர்யாமியாய் இருந்து நியமித்து புலன்களை இயக்கி -பராத்பரன் —
அவிகாராயா -ஸ்வரூப ஸ்வ பாவ விகாரம் இல்லாமல்
ஸ்வ கத தோஷங்கள் தட்டாமல் –சத்துக்களும் அசத்துக்களும்-ப்ரஹ்மாத்மாவாகவே இருக்கின்றன –
அப்ருதக் சித்த விசேஷங்கள் அனைத்துமே

———–

யதர்சிமத்யதணுப்யோணு ச யஸ்ிம ఁல்லோகா நிஹிதா லோகிநஷ்ச ததேததக்ஷரஂ ப்ரஹ்ம
ஸ ப்ராணஸ்ததுவாங்மநஃ. ததேதத்ஸத்யஂ ததமரிதஂ தத்வேத்தவ்யஂ ஸோம்ய வித்தி৷৷2.2.2৷৷

யத3ர்சிமத்3யத3ணுப்3யோSணு ச யஸ்மில்லோகா நிஹிதா லோகினஶ்ச |
ததே3தத3க்ஷரம் ப்3ரஹ்ம ஸ ப்ராணஸ்தது3 வாங்மன:
ததேதத்ஸத்யம் தத3ம்ருதம் தத்3வேத்3த4வ்யம் ஸோம்ய வித்3தி4 || 2 ||

யத்3 அர்சிமத் – எந்த சூரியகதிர் சைதன்ய ஸ்வரூபமாக இருக்கின்றதோ
யத்3 அணுப்3யஹ அணு – எது மிகமிக சிறியதைக் காட்டிலும் சிறியதாக இருக்கின்றதோ, பெரியதைக் காட்டிலும் பெரியது.
இப்படி சொல்வது காரணம். அது உருவமற்றது, முழுமையானது, நிறைவானது, பூரணமானது,
பெரியது, சிறியது என்பது நாம-ரூபத்தைக் குறிக்கிறது.
யஸ்மின் லோகாஹா – எந்த பிரம்மத்தை இந்த உலகம்
நிஹிதா – சார்ந்திருக்கின்றதோ
லோகினஹ ச – உலகத்தில் வசிக்கின்ற ஜீவராசிகளும் அதையே சார்ந்து இருக்கிறது
தத் ஏதத் அக்ஷரம் பிரம்ம – அதுவேதான் அக்ஷரம் என்றழைக்கப்படுகின்ற பிரம்மன்
ஸஹ பிராணஹ – அதுவே பிராணனாக இருக்கின்றது
தத் வாங் மனஹ – வாக்காகவும், மனதாகவும் இருக்கின்றது
தத்3 ஏதத் ஸத்யம் – அது என்றும் சத்யமாகவும் இருக்கின்றது
தத்3 அம்ருதம் – அதுவே நிலையானதாகவும், மரணமற்றதாகவும் இருக்கிறது
தத்3 வேத்4யம் – அந்த பிரம்மத்தை மனதால் துளைக்க வேண்டும். மனதால் பிரம்மத்தையே ஆழ்ந்து சிந்தித்து கொண்டிருக்க வேண்டும்.
ஸோம்ய – பிரியமானவனே
வித்3தி4: – பிரம்மத்தை அடைய வேண்டும் என்று மனதில் குறி வைக்க வேண்டும்.

பரஞ்சோதி -அனோர் அணீயான்-மஹதோ மஹான் -சத்யம் -அம்ருதம் –அவனே உபாஸ்யத்துக்கு உரியவன்
சோம்ய அவனையே அடைவதையே புருஷார்த்தமாக கொண்டு முயல்வாய் –

————–

தநுர்கரிஹீத்வௌபநிஷதஂ மஹாஸ்த்ரஂ ஷரஂ ஹ்யுபாஸாநிஷிதஂ ஸஂதயீத.
ஆயம்ய தத்பாவகதேந சேதஸா லக்ஷ்யஂ ததேவாக்ஷரஂ ஸோம்ய வித்தி৷৷2.2.3৷৷

தனுர்க்3ருஹீத்வௌபனிஷத3ம் மஹாஸ்த்ரம்
ஶரம் ஹ்யுபாஸானிஶிதம் ஸந்த4யீத |
ஆயம்ய தத3பா4வக3தேன சேதஸா லக்ஷயம்
ததே3வாக்ஷரம் ஸோம்ய வித்3தி4 || 3 ||

தனுர் மஹா அஸ்திரம் – வில் என்ற மிக மேலான ஆயுதம்
ஔபநிஷதம் – உபநிஷத்தில் உள்ள ஓங்கார விசாரம்
ஷரம் நிஷிதம் – கூர்மையாக்கப்பட்ட அம்பு
உபாஸானிஶிதம் – உபாஸனையால் ஒருமுகப்படுத்தப்பட்ட, கூர்மையாக்கப்பட்ட மனதினால்
ஸந்த4யீத – அம்பை வில்லில் பொருத்த வேண்டும்
அயம்ய – பிறகு உள்ளே இழுத்துல், எல்லா இந்திரியங்களையும் உள்ளே இழுத்து
சேதஸா – அறிவினால்
தத3பா4வக4தேன – பிரம்மத்தையே இலக்காக கொண்ட மனதினால்
லக்ஷயம் – இலக்கான
தத்3 ஏவ அக்ஷரம் – ஏற்கனவே விளக்கப்பட்ட இலக்கான பிரம்மத்தை
வித்3தி4 – நோக்கி அடிக்க வேண்டும்.

வில் என்ற வேதாந்த சாஸ்திரத்தில் ஜீவாத்மா என்கின்ற அம்பை பொருத்தி பிரம்மா என்கின்ற இலக்கை நோக்கி செலுத்த வேண்டும்.
இதனால் பரமாத்மாவை அடையலாம். வில்லில் அம்பை தொடுத்து காட்டும் இலக்கில் சரியாக அடிக்க வேண்டும் என்றால்,
அம்பு நேராக இருக்க வேண்டும், வளைந்து நெளிந்து இருக்க கூடாது, அம்பு முனை கூராக இருக்க வேண்டும்,
அம்பை வில்லில் சரியாக பொருத்த வேண்டும், இலக்கை நோக்கி அம்பானது இருக்க வேண்டும்,
வில்லின் நாணை இலக்கின் தூரத்திற்கேற்ப இழுத்து அம்பை விட வேண்டும்.

அம்பு – ஜீவாத்மாவை குறிப்பதால், ஜீவாத்மா மனத்தூய்மை அடைந்தவராக இருக்க வேண்டும். தர்மப்படி வாழ்ந்து கொண்டு இருத்தல்
அம்பின் கூர்மை – மன ஒருமுகப்பாட்டை குறிக்கப்படுகிறது. உபாஸனையினால் மனதை நன்கு தீட்டி கூர்மையாக இருக்க வேண்டும்,
ஒருமுகப்பட்டிருக்க வேண்டும்.
ஜீவர்களாகிய நாம் உபநிஷத்தை சரியாக புரிந்து கொள்ள வேண்டும். இதற்கு உபநிஷத்தின் மீது சிரத்தை இருக்க வேண்டும்.
இது ஞானத்தை கொடுக்கும் கருவி என்று உறுதியாக நம்ப வேண்டும். குருமுகமாக இதை படிக்க வேண்டும்.
முமுக்ஷுத்வம் – நம்முடைய இலக்கு பிரம்மத்தை மட்டும் அறிவதுதான். பிரம்மத்தை அடைவதாக இருக்க வேண்டும்.

வெளிவிஷயங்களிலிருந்து நம்முடைய புலன்களை உள்ளுக்குள் இழுத்துக் கொள்ள வேண்டும்.
இது வைராக்கியம் என்ற சாதனத்தின் மூலம் அடையப்படுகிறது.
இதிலிருந்து எப்படி வில்லானது இலக்கை அழித்து, துளைத்து அதனோடு ஐக்கியமாவது போல, ஜீவாத்மாவுடன் பரமாத்வோடு இணைந்து விடும்.

உபநிஷத்துக்கள் பிரசித்தமாக தியானத்தை மஹா அஸ்திரமாகவும் -ப்ரஹ்மா ஏக சிந்தையராய் புலன்களை
மால் பால் செலுத்தி -மங்கையர் தோள் கை விட்டு -என்கிறபடியே -அவன் இடமே செலுத்தி -சோம்ய அவனை அடைவாய் –

——————–

ப்ரணவோ தநுஃ ஷரோ ஹ்யாத்மா ப்ரஹ்ம தல்லக்ஷ்யமுச்யதே. அப்ரமத்தேந வேத்தவ்யஂ ஷரவத்தந்மயோ பவேத்৷৷2.2.4৷৷

ப்ரணவோ த3னு: ஶரோ ஸ்யாத்மா ப்ரஹ்ம தல்லக்ஷயமுச்யதே |
அப்ரமத்தேன வேத3த4வ்யம் ஶரவத்தன்மயோ ப4வேத் || 4 ||

ப்ரணவஹ தனு: – ஓங்காரமென்கின்ற வில்
ஶரஹ ஹி ஆத்மா – ஜீவாத்மா
ப்ரஹ்ம தத்3 லக்ஷ்யம் உச்யதே – பிரம்மனே அடைய வேண்டிய லட்சியம் என்று சொல்லப்படுகிறது
அப்ரமத்தேன – முழு கவனத்துடன்
வேத்3த4யம் – இலக்கை நோக்கி செலுத்த வேண்டும்
ஷரவத் – அம்பு இலக்கோடு ஒன்றிப் போவதுபோல
தன்மயோ ப4வேத் – லட்சியத்தோடு ஒன்றுபட வேண்டும். பிரம்ம ஸ்வரூபமாக இணைந்து விட வேண்டும்

அம்பை வில்லில் ஏற்றி இலக்கை நோக்கி சரியாக அடிப்பவன் ஒருவன் இருக்க வேண்டும்.
அந்த ஒருவன் குருவாகத்தான் இருக்க முடியும்

பிரணவமே வில் -ஜீவாத்மாவே அம்பு -பர ப்ரஹ்மமே புருஷார்த்தம் -அவனை உபாசித்து அவனுடன் ஒன்றி
அம்பு போலே -அடைந்து பகவத் ப்ரீதி காரித கைங்கர்யமே பரம புருஷார்த்தம் –

—————

யஸ்மிந்த்யௌஃ பரிதிவீ சாந்தரிக்ஷமோதஂ மநஃ ஸஹ ப்ராணைஷ்ச ஸர்வைஃ.
தமேவைகஂ ஜாநத ஆத்மாநமந்யா வாசோ விமுஞ்சதாமரிதஸ்யைஷ ஸேதுஃ৷৷2.2.5৷৷

யஸ்மின்த்யௌ: ப்ருதி2வீ சாந்தரிக்ஷமோதம்
மன: ஸஹ ப்ராணைஶ்ச ஸர்வை: |
தமேவைகம் ஜாரத2 ஆத்மானமன்யா
வாசோ விமுஞ்சதா2ம்ருதஸ்யைஷ ஸேது: || 5 ||

யஸ்மின் – எந்தப் பிரம்மத்திடமிருந்து
த்3யௌ: ப்2ருதிவி – சொர்க்கலோகம், பூலோகம்
அந்தரிக்ஷம் – இரண்டுக்குமிடையே உள்ள லோகங்கள்
ஓதம் – இந்த லோகங்கள் எதனிடத்தில் ஏற்றி வைக்கப்பட்டிருக்கிறது, எதனைச் சார்ந்திருக்கிறது
ஸர்வை: ஹி ப்ராணை ச – எல்லா பிராணன்களும் இந்திரியங்களும்
மனஹ – மனதும் சார்ந்திருக்கிறது
தம் – அதை (அந்த பிரம்மத்தை) மட்டும்
ஏவ ஏகம் ஜாரத2 ஆத்மானம் – ஆத்மாவாக ஒன்றானதாக தெரிந்து கொள்ளுங்கள், நானே ஆத்மா என்று தெரிந்து கொள்ளுங்கள்
அன்யஹ – அபர வித்யா ஸ்வரூபமான அனாத்மாவை, ஆத்மாவை விட்டு வேறாக இருக்கின்ற
வாசஹ – பேச்சுக்களை
விமுஞ்சத – விட்டு விடுங்கள்
அம்ருதஸ்ய ஏஷ: ஸேது: – இந்த மாதிரி இருந்து ஆத்மாவை அறிவதானல் மோட்சத்திற்கு பாலமாக அமையும்.

இதற்கு மௌனம் என்று பொருட்கொள்ளலாம். ஞானத்திலிருந்து அதில் நிஷ்டை அடைய வேண்டுமென்றால்
நிதித்யாஸனத்தின் போது அனாத்மா விஷயங்களை முற்றிலுமாக தவிர்த்துவிட வேண்டும்
சாஸ்திரம் பலன் கொடுக்க வேண்டும் என்றால் பிரம்மத்தைத் தவிர வேறெதையும் பேசுவதில்லை என்று உறுதியாக இருக்க வேண்டும்.:
1.அனாத்மா விஷயங்களை பேசப்பேச அதுவே திடமாகி விடுகிறது
2.இப்படி பேசுவதால் விருப்பு-வெறுப்பு, காம-க்ரோதம்-துவேஷம் உள்ளத்தில் உருவாக்கும்
3.அஸங்கத்தைப் பற்றி சாஸ்திரம் பேசுகிறது. நாம் வைக்கும் சம்சார சம்பந்தமே துன்பத்தைக் கொடுக்கும்
இவைகளை கருத்தில் கொண்டு அனாத்மா விஷயங்களை பேசுவதில் விட்டுவிட்டு மௌனமாக இருக்க வேண்டும்.
பேசினால் ஆத்மா சம்பந்தமானவற்றை பேச வேண்டும்.

அவன் ஒருவனே -ஒப்பார் மிக்கார் இல்லாதவன் -த்ரிவித காரணன் -அனைத்துக்கும் -பிரேரிதன்–
சம்சார ஆர்ணவம் கடந்து தன்னை அடைய தானே – சேது- பாலமாக இருப்பவன் –

——————–

அரா இவ ரதநாபௌ ஸஂஹதா யத்ர நாட்யஃ ஸ ஏஷோந்தஷ்சரதே பஹுதா ஜாயமாநஃ.
ஓமித்யேவஂ த்யாயத ஆத்மாநஂ ஸ்வஸ்தி வஃ பாராய தமஸஃ பரஸ்தாத்৷৷2.2.6৷৷

இந்த மந்திரம் நிதித்யாஸனத்தைப் பற்றி பேசுகிறது

ஸஹ ஏஷஹ அந்தரஹ சரதே – அந்த பிரம்மமும், இந்த ஆத்மாவாக மனதிற்குள் செயல் பட்டுக் கொண்டிருக்கிறது
ப3ஹுதா4 ஜாயமானஹ இவ – விதவிதமாக தோன்றுவது போல

ஜடமான மனதினால் விதவிதமான அறிவை அடைகின்றோம். பல எண்ணங்கள், உணர்ச்சிகள் உண்டாகின்றன.
இதற்கு காரணம் ஆத்மாவின் பிரதிபிம்பத்தால் உண்டாகின்றது. இந்த ஆத்மாவே மனதில் பிரதிபலித்து விதவிதமாக
தோன்றுவது போல காட்சியளித்துக் கொண்டிருக்கின்றது எண்ணங்களில் வருகின்ற மாற்றங்கள்,
அதனால் வருகின்ற உணர்ச்சிகள் இவைகளெல்லாம் வெறும் எண்ணங்கள்.
ஆனால் நான் இவைகளுக்கு அப்பாற்பட்டவன் என்று புரிந்து கொள்ள வேண்டும். மனதுக்கு கோளகம் இதயம்,
அதில் விதவிதமான எண்ணங்கள் தோன்றுகிறது. அறியாமையில் இருக்கும் போது அவைகள் நான் என்று எண்ணுகிறோம்.
அறியாமை நீங்கிய உடன் அவைகள் நானல்ல என்று உணர்வோம்.

யத்ரஹ – எந்த இதயத்திலிருந்து
நாட்3ய: – நாடிகள்
ஸம்ஹதா – சேர்க்கப்பட்டுள்ளது

ஒரு சக்கரத்தில் இருக்கும் ஆரக்கால்கள் அதன் மையப்பகுதியில் சேர்த்து வைக்கப்பட்டிருக்கும்.
அதேபோல ஸ்தூல சரீரத்தில் உள்ள நாடிகள் அனைத்தும் இதயமான மையப்பகுதியோடு இணைக்கப்பட்டிருக்கிறது.
மனதில் எழுகின்ற எண்ணங்கள் நானல்ல என்று நன்கு புரிந்து கொள்ள வேண்டும்

ஓம் இதம் ஏவம் – ஓங்காரத்தின் துணைக் கோண்டு
ஆத்மானாம் த்யாயத் – ஆத்மாவே நான் தான் என்று தியானம் செய்ய வேண்டும்.
வஹ ஸ்வஸ்தி – உங்களுக்கு மங்களம் இருக்கட்டும். ஆசிர்வாதம் செய்கின்றேன்.
தமஸஹ ப்ரஸ்தாத் ப்ராய – அறியாமைக்கு அப்பாலுள்ள கரையை கடக்க எங்களுடைய ஆசிகள் இருக்கட்டும்.
எல்லா தடைகளை எல்லாம் நம்மிடமிரு~ண்து வருவதால் அவைகளை தாண்டி வெற்றிபெற வேண்டும்.

வண்டி சக்கர கம்பிகள் போலே நரம்புகள் -ஹார்த்தா வர்த்தி அவன் -மனஸ் இந்திரியங்கள் குண வஸ்யமாய் கொண்டு பட்டி மேய –
அவற்றை ஒரு நிலை படுத்தி பிரணவத்தில் ஆச்சார்ய முகேன செலுத்தி சம்சார ஆர்ணவம் கடந்து
ஸ்வஸ்தமாக அவனை அடைந்து நித்யர்கள் உடன் கோவை ஆகலாம் –

——————

யஃ ஸர்வஜ்ஞஃ ஸர்வவித்யஸ்யைஷ மஹிமா புவி. திவ்யே ப்ரஹ்மபுரே ஹ்யேஷ வ்யோம்ந்யாத்மா ப்ரதிஷ்டிதஃ. ৷৷2.2.8৷৷

ய: ஸர்வக்ஞ: ஸர்வ்வித்3யஸ்யைஷ மஹிமா பு4வி |
தி3வ்யே ப்ரஹ்மபுரே ஹ்யேஷ வ்யோம்ன்யாத்மா ப்ரதிஷ்டித: ||

யஹ – எந்த பரமாத்மா
ஸர்வக்ஞ – பொதுவாக எல்லாம் அறிந்தவர்
ஸர்வவித்3 – விசேஷமாக எல்லாம் அறிந்தவர்
இரண்டு வார்த்தைகளும் ஒரே அர்த்தம் கொடுத்தாலும் அவற்றுக்குள் விசேஷமான வேறுபாடும் உண்டு.
பானைகள் பொறுத்தமட்டில் காரணத்தை அறிவது பொது அறிவு. முதல் வகை ஸர்வக்ஞன், இரண்டாவது ஸர்வ விதி குறிக்கிறது.
ஸர்வக்ஞன் என்பது காரண ஞானம், ஸர்வ வித் என்பது காரியத்திலுள்ள அறிவு.
இங்கே ப்ரா வித்யா, அபராவித்யா. அபராவித்யாவின் அடிப்படையில் ஸர்வ வித்தாக இருக்கிறார்.
ஈஸ்வரனே எல்லா ஜீவர்களின் மனதாகவும் இருப்பதால் அவர் ஸர்வ வித்
ஸர்வக்ஞர் நிமித்தக்காரணம், ஸர்வ வித் என்பது உபாதான காரணம்.
யஸ்ய பு4வி – யாருக்கு இந்த உலகத்தில்
ஏஷ மஹிமா – இந்த பெருமையை உடையவராக இருப்பது ஈஸ்வரனே
இப்படி புரிந்து கொள்வதால் நாம் நம்மிடம் இருக்கும் பெருமையை குறித்து அகங்காரம் கொள்ளமாட்டோம்.
ஏனென்றால் இவைகள் எல்லாம் ஈஸ்வரனுடையதே.
திவ்யே ப்ரஹ்மபுரே – நம்முடைய ஹ்ருதயத்தில் உள்ள
வ்யோம்ன்ய – மனதிற்குள்
தீ ஏஹ ஆத்மா ப்ரதிஷ்டதஹ – இந்த ஆத்மா அமர்ந்திருக்கிறார், வெளிப்படுகிறார்
இதிலிருந்து நாம் அறிவது கொள்வது மனதிற்குள் ஈஸ்வரனை, ஆத்மாவை நானாக புரிந்து கொள்ள வேண்டும்.

———–

மநோமயஃ ப்ராணஷரீரநேதா ப்ரதிஷ்டிதோந்நே ஹரிதயஂ ஸஂநிதாய. தத்விஜ்ஞாநேந பரிபஷ்யந்தி தீரா ஆநந்தரூபமமரிதஂ யத்விபாதி৷৷2.2.8৷৷

மனோமய: ப்ராணஶரீரனேதா ப்ரதிஷ்டிதோSத்ரே ஹ்ருத3யம் ஸன்னிதா4ய |
தத்3விக்ஞானேன பரிபஶ்யந்தி தீ4ரா ஆனந்தரூபம ம்ருதம் யத்3விபா4த || 8 ||

மனோமய: – மனதிலுள்ள எண்ணங்களினால் அறியப்படுகின்ற வஸ்து பிரம்மத்திற்கு இந்த பெயர்
ப்ராண ஶரீர நேதா – சூட்சும சரீரத்தை ஸ்தூல சரீரத்தை அழைத்துச் செல்வது இந்த ஆத்மா
பிராண சரீரம் – சூட்சும சரீரம், இது ஜடமானது. ஆனால் அதை செயல்படுத்துவது ஆத்மா
அன்னே ஹ்ருதயம் ஸன்னிதா4ய – இந்த ஸ்தூல சரீரத்திலுள்ள சூட்சும சரீரத்தில்
ப்ரதிஷ்டிதஹ – வெளிப்படுகிறார்
தீரர் பரிபஶ்யந்தி – அதிகாரித்துவத்தை உடையவர்கள், இந்த தத்துவத்தை முழுமையாக தெளிவாக அறிகிறார்கள்
தத் அக்ஞானேன – ஆத்ம தத்துவத்தை பூரணமாக அறிந்ததினால், அறிவினால், குருமுகமாக சாஸ்திரத்தை உபதேசத்தினால்
அடைந்த அறிவினால், சம, தம ஆகியவைகளை முதலிய சாதனங்களுடன் கூடிய மனதினால்
ஆனந்த ரூபம் – பூரண ஸ்வரூபம்
அம்ருதம் – மரணமற்றது என்று
விபா4தி – ஸ்வயம் பிரகாசமாக இருக்கிறது. நாம, ரூபங்களுடன் விதவிதமாக காட்சியளித்துக் கொண்டிருக்கிறது

பர ப்ரஹ்மமே சர்வஞ்ஞான் -சர்வசக்தன் -பராத்பரன் -சர்வ நியாமகன் -கால சக்கரத்தன்-ஹ்ருதய புண்டரீகாக்ஷத்தில் இருப்பவன்
சர்வ வியாபகன்-அவனை அறிந்து அவனாலாயே அவனை அடைந்து ஸ்வபாவிக ஆனந்த மாய -ஞான மயனாக ஆவோம் –

—————

பித்யதே ஹரிதயக்ரந்திஷ்சித்யந்தே ஸர்வஸஂஷயாஃ. க்ஷீயந்தே சாஸ்ய கர்மாணி தஸ்மிந்தரிஷ்டே பராவரே৷৷2.2.9৷৷

பி4த்3யதே ஹ்ருதயக்3ரந்தி2ஶ்சி2த்3யந்தே ஸர்வஸம்ஶயா: |
க்ஷீயந்தே சாஸ்ய கர்மாணி தஸ்மின் த்3ருஷ்டே பராவரே || 9 ||

இதில் மூன்று விதத்தில் பலன்கள் கூறப்பட்டுள்ளது.
அவைகள் 1. ஒரு முடிச்சானது வெட்டப்படுகிறது, 2. சந்தேகங்கள் அனைத்தும் தீர்ந்துவிடும், 3. கர்ம பலன்கள் அழிந்து விடுகிறது.

1.பி4த்3யதே ஹ்ருதயக்3ரந்தி – ஹிருதயத்திலுள்ள முடிச்சுக்கள் (அறியாமை, ஆசைகள்) வெட்டப்படுகின்றன.
ஆத்மாவையும், அனாத்மாவையும் ஒன்றாக காட்சியளிக்க வைப்பது அறியாமை. மனதில் ஓடும் ஆசைகளெல்லாம் நீங்கிவிடும்.
ஆசையிருக்கும் வரை மனநிறைவு வராது. வரும் ஆசையை நீக்க வேண்டும்தான் என்று எல்லோரும் முயற்சிக்கிறோம்.
எனவே அதை அடைந்து ஆசையை தற்காலிமாக நீக்குகிறோம். எனவே ஆசைகளை அனுபவிக்காமலே நம்மிடமிருந்து சென்று விடும்.
பொருளையும் மனதையும் கட்டுவதுதான் ஆசை.
2.புத்தியிலே நிறைவின்மை சந்தேகங்கள் இருந்து கொண்டுதான் இதை நீக்குவதுதான், புத்தியில் அமைதி விடுவது,
நிறைவுடன் இருக்கும் நிலை. இந்த ஞானத்தினால் இந்த சந்தேகங்கள் எல்லாம் நீங்கி புத்தி அமைதியடையும், நிறைவை அடையும்
3.நாம் ஏற்கனவே சேர்த்து வைத்திருக்கின்ற சஞ்சித கர்மங்கள், இந்தப் பிறவியில் சேர்ந்துதான் ஆகாம கர்மபலன்கள்.
ஞானம் அடைந்து அதில் நிலைபெற்ற ஜீவன் முக்தன், இறந்த பிறகு கர்மபலன்கள் அழிந்து வேறு பிறவி இருப்பதில்லை, அதுவே விதேஹ முக்தி

தஸ்மின் பராவரே – அந்த பிரம்மத்தை
த்ருஷ்டே – அறிவதன் மூலமாக
பராவரே – பர – நிர்குண பிரம்மன், அவரா – சகுண பிரம்மன்
சகுண – மாயையுடன் இருக்கும் பிரம்மன்
நிர்குணம் – மாயையற்ற பிரம்மன்
பி4த்யதே ஹ்ருதய க்ரந்திஹி – இருதயத்திலுள்ள முடிச்சுகள் அவிழ்ந்து விடுகிறது
சித்3யந்தே ஸர்வஸம்ஹயஹ – புத்தியிலுள்ள சந்தேகங்களும் அழிக்கப்படுகிறது, நீக்கப்படுகிறது
க்ஷீயந்தே ச அஸ்ய கர்மாணி – அவன் சேர்த்து வைத்த கர்ம பலன்கள் அனைத்தும் அழிந்து விடும்.

அந்த பர ப்ரஹ்மத்தை அறியவே கர்ம முடிச்சுக்கள் அவிழ்க்கப் பட்டு -கங்கை பெரு வெள்ளம் போன்ற அஞ்ஞான அந்தகாரம் போகப் பெற்று –
அந்த பராத் பரன் மஹத் பேர் அருளாலே அவர-சம்சார துக்கங்கள் நீங்கப் பெறுவோம் –

——————

ஹிரண்மயே பரே கோஷே விரஜஂ ப்ரஹ்ம நிஷ்கலம். தச்சுப்ரஂ ஜ்யோதிஷாஂ ஜ்யோதிஸ்தத்யதாத்மவிதோ விதுஃ৷৷2.2.10৷৷

ஹிரண்மயே பரே கோஶே விரஜம் ப்3ரஹ்ம நிஷ்கலம் |
தச்சு2ப்4ரம் ஜ்யோதிஷாம் ஜ்யோதிஸ்தத்3யதா3த்மவிதோ3 விது3: ||

ஹிரண்மயே – தங்கத்தைப்போல பிரகாசிக்கின்ற விக்ஞானமயமான புத்தியை
பரே கோஶே – மேலான மறைப்பானது
விரஜம் – எதனாலும் கறைப்படுத்த முடியாதது, பாதிக்கப்படாதது, மனதில், புத்தியில் உள்ள அழுக்குகளாலும் பாதிக்கப்படாதது
நிஷ்கலம் – அவயவங்களற்றது
தத்3 சு2ப்4ரம் – அது தூய்மையானது
ஜ்யோதிஷாம் ஜ்யோதி – ஒளிகளுக்கெல்லாம் ஒளியாகவும், பிரமாணங்கள் உடையவர்களுக்கு பிரமாணமாக இருக்கிறது
யத் – எது எப்படியிருக்கிறதோ
தத்3 ஆத்மவித3ஹ – அதை ஆத்மாவாக அறிந்தவர்கள்
விது3:: – அறிகிறார்கள்

பர ஹிரண்மய கோசம்/ விரஜம் ரஜஸ் தட்டாமல் / நிஷ்கலம் / பரஞ்சோதிஸ் /-ஜோதிஸ் பொருள்களுக்கு ஜோதிஸ் அருளுபவர் –

——————

ந தத்ர ஸூர்யோ பாதி ந சந்த்ரதாரகஂ நேமா வித்யுதோ பாந்தி குதோயமக்நிஃ.
தமேவ பாந்தமநுபாதி ஸர்வஂ தஸ்ய பாஸா ஸர்வமிதஂ விபாதி৷৷2.2.11৷৷

ந தத்ர ஸூர்யோ பா4தி ந சந்த்3ரதாரகம்
நேமா வித்3யுதோ பாந்தி குதோஶ்Sயமக்3னி: |
தமேவ பா4ந்தமனுபா4தி தஸ்ய
பா4ஸா ஸர்வமித3ம் விபா4தி || 11 ||

தத்ர – ஆத்ம ஸ்வரூபமான பிரம்மத்தை
சூர்யஹ ந பா4தி – சூரியனாலும் அதை பிரகாசிக்க முடியாது, விளக்க முடியாது. இங்கே சூரியன் என்பதை
ஞானத்தைக் கொடுக்கின்ற இந்திரியங்களாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
ந சந்த்ர தாரகம் – சந்திரனும், நட்சத்திரங்களும்
இமாஹ வித்யுதஹ – மின்னல்களும், வெளிச்சத்தை தருகின்ற விளக்குகளாலும்
குதஹ அயம் அக்னி பாந்தி – எப்படி இந்த அக்னியை விளக்க முடியாது
இப்படிபட்ட பிரமாணங்களால் ஆத்மாவை விளக்க முடியாது.
தஸ்ய பாஸா – இத்தகைய ஜோதி
ஸர்வம் பா4தி – எல்லாவற்றையும் விளக்குகிறது
தம் பாந்தம் அனு பாதி – ஆத்ம ஸ்வரூபம், சுயபிரகாசமாக இருப்பது தொடர்ந்து அனைத்தும் விளக்கப்படுகிறது
இதம் ஸர்வம் விபாதி – இவ்வாறு எல்லாமும் விளக்கப்படுகிறது
எந்தவொன்று பிரமாணங்களை விளக்குகிறதோ அதை எந்த பிரமாணத்தாலும் விளக்க முடியாது

பர ப்ரஹ்ம ஜோதிஸ் தானே ஸூ ர்யன் ஒளிக்கும் சந்திரன் ஒளிக்கும் அக்னி ஒளிக்கும் நக்ஷத்திரங்கள் ஒளிக்கும் மின்னல் ஒளிக்கும் மூலம்

—————-

ப்ரஹ்மைவேதமமரிதஂ புரஸ்தாத்ப்ரஹ்ம பஷ்சாத்ப்ரஹ்ம தக்ஷிணதஷ்சோத்தரேண.
அதஷ்சோர்த்வஂ ச ப்ரஸரிதஂ ப்ரஹ்மைவேதஂ விஷ்வமிதஂ வரிஷ்டம்৷৷2.2.12৷৷

ப்ரஹ்மைவேத3மம்ருதம் புரஸ்தாத்3ப்ரஹ்ம
ப்ஶ்சாத்ப்ரஹ்ம தக்ஷிணதஶ்சோத்தரேண |
அத4ஶ்சோர்த்4வம் ச ப்ரஸ்ருதம் ப்ரஹ்மைவேத3ம்
விஶ்வமித3ம் வரிஷ்டம் || 11 ||

ப்3ரஹ்மை ஏவ அம்ருதம் – எப்பொழுதும் இருக்கின்ற பிரம்மனே
இதம் புரஸ்தாதி – நமக்கு முன்னாலோ தோன்றுவது அதுவேதான்
பஶ்சாத் – பின்னாடி இருப்பதும் அதுவே
தக்ஷிண, உதஶ்சேத்தரண – வடக்கு, தெற்கு என்ற எல்லா இடங்களிலும் பிரம்மன்தான் இருக்கிறது. வேறெதும் காட்சியளிக்கவில்லை
அதஹ ஊர்த்4வம் ச ப்ரஸ்ருதம் – மேலும், கீழும் அதுவேதான் இருக்கிறது
வரிஷ்டம் பிரஹ்ம ஏவ இதம் விஶ்வம் – சத்ய ஸ்வரூபமான பிரம்மன்தான் இந்த உலகமாக காட்சியளிக்கின்றது

முன்புள்ள அனைத்தும் பின்புள்ள அனைத்தும் இடது வலது பக்கம் உள்ள அனைத்தும் மேல் கீழ் உள்ள
அனைத்தும்–உலகம் அனைத்தும் -ப்ரஹ்மாத்மகமே –

——————————–

த்வா ஸுபர்ணா ஸயுஜா ஸகாயா ஸமாநஂ வரிக்ஷஂ பரிஷஸ்வஜாதே.
தயோரந்யஃ பிப்பலஂ ஸ்வாத்வத்த்யநஷ்நந்நந்யோ அபிசாகஷீதி৷৷3.1.1৷৷

த்3வா ஸுபர்ணா ஸயுஜா ஸகா2யா
ஸமானம் வ்ருக்ஷம் பரிஷஸ்வஜாதே தயோரன்ய: |
பிப்பலம் ஸ்வாத்3வத்த்யனஶ்னன்னன்யோ அபி4சாகஶீதி || 1 ||

ஏற்கனவே ஜீவ-பிரம்ம ஐக்கியம் விளக்கப்பட்டது. அதில் நிலை பெற நிதித்யாஸனம் தேவை என்றும் கூறப்பட்டது. அந்த நிதித்யாஸனத்தை நன்றாக செய்வதற்கு தேவையான சாதனங்கள் என்னென்ன என்பதை இங்கு கூறப்படுகிறது. இவ்வாறு சங்கராச்சாரியர் கூறியிருக்கிறார்

த்3வா ஸுபர்ணா – இரண்டு அழகான இறக்கையை பறவைகள்
ஸயுஜா – என்றும் சேர்ந்திருக்கின்றது
ஜீவாத்மா, பரமாத்வாவின் பிரதிபிம்பம் சிதாபாஸமாக இருக்கிறது. இவையிரண்டும் சேர்ந்தேயிருக்கும்.
ஜீவாத்மா பரமாத்வை சார்ந்திருப்பதால் அதை பரமாத்மாவிடம் இருந்து பிரிக்க முடியாது.
ஸகா2யா – நண்பர்களை போல
ஒரே சரீரத்தில் ஜீவாத்மாவும், பரமாத்மாவும் இருப்பதைப் போல ஒரே மரத்தில் இரண்டு பறவைகள் இருக்கின்றது.
பிம்பம், பிரதிபிம்பம் போன்று சேர்ந்திருக்கின்றது.
ஸமானம் வ்ருக்ஷம் – ஒரே மரத்தில்
பரிஷஸ்வஜாதே – அமர்ந்துள்ளது
தயோ: அன்யஹ – அந்த இரண்டு பறவைகளில் ஒன்று
பிப்பலம் அத்தி – மரத்திலுள்ள பழங்களை
ஸ்வாது – மெய்மறந்து, அந்த சுவையில் மூழ்கி சாப்பிட்டு கொண்டிருக்கிறது
இது ஜீவாத்மா கர்ம பலன்களை சுக-துக்கங்களாக அனுபவித்துக் கொண்டு இருக்கின்றான் என்பதை சுட்டிக் காட்டுகிறது
அன்யஹ அனன்யஹ – வேறொரு பறவை எதையும் சாப்பிடாமல்
அபிசாகஶீதி – பார்த்துக் கொண்டிருக்கிறது, சாட்சியாக மட்டும் இருக்கிறது. இது பரமாத்மாவை சுட்டிக் காட்டுகிறது
சம்சாரத்திற்கு காரணம் கர்த்தாகவும், போக்தாவாகவும் இருப்பதுதான்

இரண்டு பறவைகள் -சயுஜா -இப்படி விட்டு பிரியாமல் உள்ள பர ப்ரஹ்மமும் ஜீவனும் – சகாய -இரண்டும் ஆத்மா என்பதால் –
சமானம் வ்ருக்ஷம் -ஒரு மரத்தை பற்றி -சரீரத்தை பற்றி இருக்க -ஓன்று ஜீவாத்மா -பழங்களை உண்டு -கர்ம பலன்களை அனுபவித்து சம்சாரத்தில் உழல
மற்ற ஓன்று பரமாத்மா -கர்ம வசப்படாமல் -அபிசாகஷீதி-பார்த்து கொண்டு அரசனை போலே –உதாசீனமாக இருக்குமே –

———-

ஸமாநே வரிக்ஷே புரூஷோ நிமக்நோநீஷயா ஷோசதி முஹ்யமாநஃ.
ஜுஷ்டஂ யதா பஷ்யத்யந்யமீஷமஸ்ய மஹிமாநமிதி வீதஷோகஃ৷৷3.1.2৷৷

ஸமானே வ்ருக்ஷே புருஷோ நிமக்3னோSனீஶயா ஶோசதி முஹ்யமான: |
ஜுஷ்டம் யதா3 பஶ்யத்யன்யமீஶமஸ்ய மஹிமானமிதி வீதஶோக: || 2 ||

ஸமானே வ்ருக்ஷே – இந்த சரீரத்தில்
புருஷ: – சம்சாரியான ஜீவாத்மா
நிமிக்3னஹ – சரீரம் நான் என்று எண்ணத்தில் மூழ்கி விட்டான். உடலை மரத்திற்கு ஒப்பிடுவதற்கு காரணம்
இரண்டுமே மாற்றங்களையுடையது. பறவைகள் சாப்பிட ஏதாவது ஒரு மரத்தில் அமர்ந்துதான் சாப்பிட வேண்டும்.
அதேபோல ஜீவன் சம்சாரம் அனுபவிக்க சரீரம் ஆதாரமாக இருக்கிறது
அனீஶயா ஶோசதி – துயரப்படுகிறான்; துயரத்திற்குள்ளாகின்றான்
நாம் அனுபவிக்கும் துயரங்களெல்லாம் வேறு வழியில்லாமல் தவிர்க்க முடியாமல் அனுபவிப்பதுதான். நாம் இதை தேர்ந்தெடுத்து அனுபவிப்பதில்லை
முஹ்யமான: – அவன் மோகத்துக்கு ஆட்பட்டுள்ளான்
மோகம் – எதைக் கொடுத்தாலும் அனுபவிக்க தயாராக இருப்பது.
ஒரு பொருளுக்கு தகுந்த விலைக்கு மேலாக விலைக்கு வாங்க தயாராக இருப்பது,
தூரத்துக்கு பச்சை கண்ணுக்கு அழகு. எனவே இந்த உலகத்தை வேடிக்கை பார்க்க வேண்டும்.
தவிர அதை அனுபவிக்க வேண்டுமென்று விரும்புவது சோகத்தை அனுபவிக்க வேண்டுமென்று விரும்புவது போலாகும்..
யதா – எப்பொழுது
பஶ்யதி – பார்க்கின்றானோ, புரிந்து கொள்கின்றானோ
அன்யம் ஜுஷ்டம் ஈஷம் – வேறொரு பறவையை வணங்குவதற்குரிய மேலான ஈஸ்வரனாக, ஜீவாத்மா எப்பொழுது ஈஸ்வரனை புரிந்து கொள்கின்றானோ
அஸ்ய மஹிமானம் – என்னுடைய தன்மைதான் அந்த ஈஸ்வரன் மற்றொரு பறவையை தான்தான் என்று புரிந்து கொள்கின்றதோ
மஹிமானம் – சம்சாரத்தில் ஒட்டாது இருத்தல்
வீதஶோக இதி – சோகத்திலிருந்து விடுபட்டு விடுவான்

ஜீவாத்மா இதனாலே சம்சார ஆர்ணவதிலே அழுந்தி மாறி மாறி பல ஆக்கைகளிலே புக்கு கர்ம வசப்பட்டு -இருக்க
ஸூ ஹ்ருத விசேஷத்தால் -பச்யதி -பர ப்ரஹ்மத்தை பார்த்து அந்த ராஜாவுக்கு புத்ரனாய் இருந்து வைத்து உழல்வதே என்று வருந்தி
பர ப்ரஹ்மத்தின் மகிமையையும் பெருமையையும் தேஜஸையும் உணர்ந்து
வீதஷோக-சோகத்தில் இருந்தும் மீண்டு பர ப்ரஹ்மத்தின் அருளாலே அவனை அடைந்து ஸ்வரூப ஆவிர்பாவம் அடைகிறான் –

—————

யதா பஷ்யஃ பஷ்யதே ருக்மவர்ணஂ கர்தாரமீஷஂ புரூஷஂ ப்ரஹ்மயோநிம்.
ததா வித்வாந்புண்யபாபே விதூய விரஞ்ஜநஃ பரமஂ ஸாம்யமுபைதி৷৷3.1.3৷৷

யதா3 பஶ்ய: பஶ்யதே ருக்மவர்ணம் கர்தாரமீஶம் புருஷம் ப்ரஹ்மயோனிம் |
ததா3 வித்3வான்புண்யபாபே விதூ4ய நிரஞ்ஜன: பரமம் ஸாம்யமுபைதி || 3 ||

யதா3 பஶ்யஹ – எப்பொழுது பார்ப்பவன் (நித்ய-அநித்ய வஸ்துவை பார்ப்பவன்)
ருக்மவர்ணம் – ஞான ஸ்வரூபம் – தங்கத்தில் வர்ணம் போன்றது, சுய பிரகாசமாக இருக்கும் தன்மை
பஶ்யதே – பார்க்கின்றானோ? அறிகின்றானோ
ஜகத் கர்தாரம் ஈஶம் – ஜகத்தை உருவாக்கியவராக ஈஸ்வரனாக இருக்கின்றார்
ப்ரஹ்ம யோனிம் – அவரே நிர்குணமாகவும், மாயையோடு சேர்ந்து ஜகத்துக்கு காரணமாகவும் இருக்கின்றார்,
நான்முக பிரம்மாவின் தோற்றத்திற்கு காரணம்
ததா3 – அப்பொழுது
வித்வான் – பிரம்ம தத்துவத்தை அறிந்தவனாகின்றான்
புண்யபாபே விதூ4ய – பாவ-புண்ணியத்தை நீக்கிவிட்டு
நிரஞ்ஜனஹ – தூய்மையடைந்தவராக
ஸாம்யம் – சமமான தன்மை, ஒன்றாக இருக்கின்ற தன்மை
உபைதி – அடைகின்றான்
பரமம் – மீண்டும் திரும்ப வராத ஞானநிலை

இப்படி ஜீவாத்மா பர ப்ரஹ்மத்தை உணர்ந்து பஷ்யதே ருக்மவர்ணஂ -ஸ்வாபாவிகமான தேஜஸ் உடன் –
கர்தாரமீஷஂ -அனைத்து உலகையும் ஸ்ருஷ்டித்தவன் –
புரூஷஂ ப்ரஹ்மயோநிம்.-அனைத்து ஆத்மாக்களை கர்ம அனுகுணமாக ஆக்கைக்குள் புகச் செய்பவன்
ததா வித்வான் -இப்படி அறிந்த ஜீவாத்மா /புண்யபாபே விதூய -கர்மங்களை ருசி வாசனைகள் உடன் மாய்த்து
விரஞ்ஜநஃ பரமஂ ஸாம்யமுபைதி-தோஷம் அற்று -அகில ஹேய ப்ரத்ய நீகனாய் -பரம சாம்யம் பெற்று ப்ரீதி காரித கைங்கர்யம் பெறுகிறான் –

————-

ப்ராணோ ஹ்யேஷ யஃ ஸர்வபூதைர்விபாதி விஜாநந்வித்வாந்பவதே நாதிவாதீ.
ஆத்மக்ரீட ஆத்மரதிஃ க்ரியாவாநேஷ ப்ரஹ்மவிதாஂ வரிஷ்டஃ৷৷3.1.4৷৷

ப்ராணோ ஹ்யேஷு ய: ஸர்வபூ4தைர்விபா4தி
விஜான்ன்வித்3வான்ப3வதே நாதிவாதீ3 |
ஆத்மக்ரீட ஆத்மரதி: க்ரியாவனேஷ ப்3ரஹ்மவிதா3ம் வரிஷ்ட: || 4 ||

ப்ராணஹ – பிராணனாக உள்ள பரபிரம்மன்
எஷஹ யஹ – நமக்கு அருகிலிருக்கின்ற இந்த பிரம்மன்
ஸர்வ பூதைஹி விபா4தி – எல்லா ஜீவராசிகளாக காட்சியளிக்கின்றது
விஜானஹ – என்பதை அறிந்து கொண்டவனாக
வித்3வான் – இருக்கின்ற ஞானியானவன்
நாதிவாதீ3 ப4வதி – பேசாதவனாக ஆகின்றான்
பேசுவதற்கு விஷயம் எதுவும் இல்லாததனால் அவன் இவ்வாறு பேசாதவனாக இருக்கின்றான். மௌனமாக இருப்பான், விவாதம் செய்ய மாட்டான்
ஆத்ம க்ரீடஹ – தன்னிடத்திலேயே மகிழ்ச்சியுடன் இருக்கின்றான்
ஆத்மரதி – தன்னிடத்திலேயே நிறைவுடன் இருக்கின்றான்
அவன் சுகத்திற்காக வெளிவிஷயங்களை சார்ந்திருக்க வேண்டிய அவசியமில்லை. வெளிவிஷயங்களை மனதிலும் நினைத்துக் கொண்டிருப்பதுமில்லை
க்ரியவான் – செயலை செய்பவன், தியானம், வைராக்கியமாக இருத்தல் போன்ற செயல்களை செய்பவன்,
ஆத்மரதி என்ற செயலை செய்பவன், உலக நன்மைக்காகவும் செயல்களை செய்து கொண்டிருப்பன்
ஏஷஹ – இந்த ஞானியானவன்
பிரஹ்மவிதா3ம் – பிரம்மத்தை அறிந்தவர்களுக்குள்
வரிஷ்டஹ – மிகமிக மேலானவன், ஞான நிஷ்டையை அடைந்தவன்
ஞானிகளுக்குள்ளே அடைந்த ஞானத்திலே ஏற்றத்தாழ்வு கிடையாது. ஞானம் அடைந்தவுடன் அது பலனைக் கொடுப்பதற்கு
தடையாக இருப்பவைகளெல்லாம் நீங்கப்பெற்று அதில் நிஷ்டை அடைகின்றான்

அந்த பர ப்ரஹ்மமே ப்ராணோ -பிராணன் –ஹ்யேஷ யஃ ஸர்வபூதைர்விபாதி-அனைத்துள்ளும்-ப்ரம்மா முதல் பிபிலி ஈறாக – அந்தர்பவித்து உள்ளான்
விஜாநன் -இத்தை நன்றாக அறிந்து /வித்வாந்பவதே நாதிவாதீ.-பர ப்ரஹ்மத்தை பற்றி உள்ளபடியே அறிவித்து
ஆத்மக்ரீத் -பந்துக்கள் விஷயாந்தரங்கள் பற்றுக்களை விட்டு
ஆத்மரதிஃ-அவனையே எல்லாமாகப் பற்றி -உண்ணும் சோறு -இத்யாதி -நிரதிசய ஆனந்தம் -ரதி -பெற்று / க்ரியாவான் -செய்த வேள்வியர் ஆகி
ஏஷ ப்ரஹ்மவிதாஂ வரிஷ்ட –பர ப்ரஹ்மத்தை அடைந்து ப்ரீதி காரித கைங்கர்யம் பெறுகிறான் –

——————

ஸத்யேந லப்யஸ்தபஸா ஹ்யேஷ ஆத்மா ஸம்யக்ஜ்ஞாநேந ப்ரஹ்மசர்யேண நித்யம்.
அந்தஃஷரீரே ஜ்யோதிர்மயோ ஹி ஷுப்ரோ யஂ பஷ்யந்தி யதயஃ க்ஷீணதோஷாஃ৷৷3.1.5৷৷

ஸத்யேன லப்4யஸ்தபஸா ஹ்யேஷ
ஆத்மா ஸம்யத்4க்3ஞானேன ப்3ரஹ்மசர்யேண நித்யம் |
அந்த:ஶரீரே ஜ்யோதிர்மயோ ஹி ஶுப்4ரோ
யம் பஶ்யந்தி யதய: க்ஷீணதோஷா: || 5 ||

சில செயல்களிலிருந்து விலக்கிக் கொள்ள வேண்டிய சாதனங்களை கூறுகிறது. 1.சத்யம், 2.தவம், 3.ஸம்யக் ஞானம், 4. பிரம்மச்சர்யம்
என்கின்ற நான்கு சாதனங்களால் பிரம்மத்தை அறிந்து கொள்ள முடியும்.
பொய் பேசுவதை விட்டால்தான் ஞானத்தை அடையும் தகுதியுடையவனாக இருக்கின்றான். மனதையும், இந்திரியங்களையும்
ஒருமுகப்படுத்துவதுதான் மிகமேலான தவங்கள், சந்தேகமின்றி ஞானம் அடையும்வரை மனதை தூய்மையுடனும்,
சிரத்தையுடனும், கேட்டது போதும் என்று மனம் திருப்தி அடையும் வரை சிரவணம். பிரம்மச்சர்யம்

ஏஷஹ ஆத்மா – இந்த ஆத்ம ஞானமானது
சத்யேன – சத்யம என்ற சாதனத்தால்
லப்யதே – அடையக்கூடியது
தபஹ – தவத்தினாலும் அடையப்படுதல்
ஸம்யக் ஞானேன – சாஸ்திரத்தை கேட்டல் (சிரவணம்), சிரத்தையுடனும், மனம் ஒருமுகத்தோடு கேட்டல்
பிரம்மச்சர்யம் – ஒழுக்கமான வாழ்தல்
நித்யம் – இவைகள் எப்பொழுதும் கடைப்பிடிக்க வேண்டும். இதன் மூலம் ஆத்ம ஞானத்தை அடைதல்
அந்த: ஶரீரே – சரீரத்தினுள் ( உடலுக்குள்ள மனதிலேயேதான் சிதாபாஸனாக ஆத்மா இருக்கிறது )
ஜ்யோதிர்மயஹ – ஞான ஸ்வரூபமாக இருக்கிறது
ஷூப்3ரஹ – எப்பொழுதும் தூய்மையானது
யதயஹ – இந்த ஞானத்தை அடைய முயற்சி செய்பவர்கள் இங்கு கூறப்பட்ட சாதனங்களை கடைபிடிக்கின்றவர்கள்
யம் பஷ்யந்தி – இந்த ஆத்மஸ்வரூபத்தை அறிகிறார்கள்
க்ஷீண தோ3ஷா – அந்தகரணத்திலுள்ள அசுத்தங்கள் நீங்கப்பெற்றவர்கள், அந்தகரண தூய்மையடைந்தவர்கள்

ஸத்யேந லப்யஸ்தபஸா -சத்யத்தாலும் உபாசனத்தாலும் தபஸ் -அடைய பெற்று
ஹ்யேஷ ஆத்மா ஸம்யக்ஜ்ஞாநேந-தத்வ யாதாம்ய பரி பூர்ண ஞானத்தால்
ப்ரஹ்மசர்யேண நித்யம்.-நித்தியமான சத்யம் -நித்தியமான தபஸ் -வர்ணாஸ்ரம தர்மம் -மூலம் -மத்திய தீப நியாயம் படி நித்யம் எங்கும் கொண்டு
அந்தஃஷரீரே ஜ்யோதிர்மயோ ஹி -ஹ்ருதய புண்டரீகாக்ஷத்தில் உள்ள பரஞ்சோதியை
ஷுப்ரோ யஂ பஷ்யந்தி யதயஃ க்ஷீணதோஷா-அந்த சுபமான பர ப்ரஹ்மத்தைக் கண்டு கர்மங்களை வாசனையோடு
போக்கப் பெற்று ப்ரீதி காரித கைங்கர்யம் பெறுகிறான் –

——————

ஸத்யமேவ ஜயதே நாநரிதஂ ஸத்யேந பந்தா விததோ தேவயாநஃ.
யேநாக்ரமந்த்யரிஷயோ ஹ்யாப்தகாமா யத்ர தத்ஸத்யஸ்ய பரமஂ நிதாநம்৷৷3.1.6৷৷

ஸத்யமேவ ஜயதே நாந்ருதம் ஸத்யேன பந்தா2 விததோ தேவயான: |
யேனாக்ரமந்த்ய்ருஷயோ ஹ்யாப்தகாமா யத்ர தத்ஸத்யஸ்ய பரமம் நிதா4னம் ||6||

ஸத்யம் ஏவ ஜயதே – சத்யம் மட்டும் வெல்கிறது
மூன்று காலத்திலும் மாறாது இருப்பது அதுவே சத்யம். இங்கு குறிப்பிடுவது விவகார ஸத்யம்.
இது ஒருபடியாக குறிப்பிடப்படுகிறது. சத்தியத்தை பின்பற்றுபவன் வெற்றி அடைவான்
ந அந்ருதம் – பொய் என்றும் தோற்றுவிடும், வெற்றி பெறாது
சத்யேன விததஹ – ஸத்யம் என்ற சாதனமானது பிரம்மலோகத்திற்கே அழைத்துக் செல்கின்ற
தேவயானஹ பந்தா4ஹா – சுக்லகதி – பிரம்மலோகத்திற்கு அழைத்து செல்லும் பாதை
ரிஷியஹ – உபாஸனை செய்கின்ற ரிஷிகள்
யேன அக்ரமந்த்ய – செல்லும் பாதையிலேதான்
ஆப்தகாமா – ஓரளவு ஆசையை நீக்கியவர்கள்
யத்ர – எந்த லோகத்தில்
ஸத்யஸ்ய – சத்தியம் என்ற சாதனையால்
பரமம் நிதானம் அஸ்ய – மேலான பிரம்மன் இருக்கின்றான்
லௌகீக வாழ்க்கையிலும், ஆன்மீக வாழ்க்கைக்கும், ஆரோக்கியமான மனதுதான் முக்கியம்

ஸத்யமேவ ஜயதே நாநரிதஂ -சாத்தியமே வெல்லும் -அசத்தியம் அப்படி இல்லையே
ஸத்யேந பந்தா விததோ தேவயாந-உண்மை யான நடத்தையால் -பந்தா -அனுஷ்டானம் -தேவர்களை போலே -.
யேநாக்ரமந்த்யரிஷயோ ஹ்யாப்தகாமா -இப்படி க்யாதி லாப பூஜைக்கு என்று இல்லாமல் –
விஷயாந்தர இன்பங்களில் கண் வைக்காமல் ஆச்சார்யர்கள்
யத்ர தத்ஸத்யஸ்ய பரமஂ நிதாநம்–பர ப்ரஹ்மம் கைங்கர்யம் பெற்று நித்யர்கள் உடன் ஒரு கோவையாகிறார்கள் –

——————

பரிஹச்ச தத்திவ்யமசிந்த்யரூபஂ ஸூக்ஷ்மாச்ச தத்ஸூக்ஷ்மதரஂ விபாதி. தூராத்ஸுதூரே
ததிஹாந்திகே ச பஷ்யத்ஸ்விஹைவ நிஹிதஂ குஹாயாம்৷৷3.1.7৷৷

ப்3ருஹச்ச தத்3த்3வ்யமசிந்த்யரூபம் ஸூக்ஷ்மாச்ச தத்ஸூக்ஷ்மதரம் விபா4தி |
தூராத்ஸுதூ3ரே ததி3ஹாந்திகே ச பஶ்யத்ஸ்விஹைவ நிஹிதம் குஹாயாம் ||7||

ப்3ருஹச்ச – எல்லாவிடத்திலும் வியாபித்திருக்கின்ற ஸ்வரூபம்,பூரண ஸ்வரூபம்
த்வயம் – ஸ்வயம் பிரகாசம், ஸ்வயம் ஜ்யோதி, புலன்களால் அறியப்படாதது.
அசிந்த்யரூபம் – மனதினால் அறியமுடியாது, தர்க்கத்தினாலோ, அனுமானத்தினாலோ அறியமுடியாது, யுக்தியினாலும் அறிய முடியாது
ஸூக்ஷ்மாச்ச தத் ஸூக்ஷ்மதரம் – நுண்ணியத்தைக் காட்டிலும் நுண்ணியமானது
விபாதி – விதவிதமான பிரமாணங்களுடன் காரியமாக இருக்கிறது. சூரிய, சந்திரன் இவைகளை பிரகாசிக்கின்றது.
தூராத்ஸுதூரே – அக்ஞானிகளுக்கு வெகு தொலைவில் இருக்கிறது
தத் இஹ அந்திகே – ஆனால் அதுவே ஞானிகளுக்கு மிக அருகிலும் இருக்கிறது
ஆத்மா தூரத்திலும் இல்லை, அருகிலும் இல்லை. இது நானாக இருப்பதால் இவ்வாறு உபநிஷத் கூறுகிறது.
பஶ்யந்தி – ஜீவர்களிடத்தில்
இவ ஏஹ – இங்கேயே
கு3ஹா – புத்தியிலே ( மனதில் )
நிஹிதம் – வெளிப்படுகிறது. அறியப்படுகிறது.

பரிஹச்ச -அந்த பர ப்ரஹ்மம் பராத்பரன் -பிருஹத் -தானும் பராத் பரனாய் இருந்து தன்னை அடைந்தார்களையும் பெரியவர்களாக ஆக்கும் தன்மையன்
தத்திவ்யமசிந்த்யரூபஂ –திவ்யம் -அப்ராக்ருதம் -அசிந்த்ய ரூபம் –
ஸூக்ஷ்மாச்ச தத்ஸூக்ஷ்மதரஂ -ஸூ ஷ்மங்களிலும் ஸூ சமம் -அனோர் அணீயான் –
விபாதி. -பரஞ்சோதி -ஜோதிஸ் பதார்த்தங்களை ஜோதிஸ் கொடுத்து அருளி -பல விதமாக இருந்து அருளி
தூராத்ஸுதூரே -ஸ்ரீ வைகுண்ட நிலையனாய் அதி தூரஸ்தானாயும் அந்தர்யாமியாய் அருகிலும் இருப்பவன்
ததிஹாந்திகே ச பஷ்யத்ஸ்விஹைவ நிஹிதஂ குஹாயாம்–ஞானிகள் ஹ்ருதய கமலத்தில்-குஹாயம் – இருப்பதை அறிவார்கள் –

—————–

ந சக்ஷுஷா கரிஹ்யதே நாபி வாசா நாந்யைர்தேவைஸ்தபஸா கர்மணா வா.
ஜ்ஞாநப்ரஸாதேந விஷுத்தஸத்த்வஸ்ததஸ்து தஂ பஷ்யதே நிஷ்கலஂ த்யாயமாநஃ৷৷3.1.8৷৷

ந சக்ஷுஷா க்3ருஹ்யதே நாபி வாசா
நான்யைர்தே3வைஸ்தபஸா கர்மணா வா |
ஞானப்ரஸாதே3ன விஶுத்3த4ஸத்த்வஸ்ததஸ்து
தம் பஶ்யதே நிஷ்கலம் த்4யாமான: || 8 ||

ந சக்ஷுஷா க்ருஹ்யதே – கண் என்ற இந்திரியத்தால் ஆத்ம தத்துவத்தை அறிந்து கொள்ள முடியாது
நாபி வாசா – வாக்கினாலும், இந்த பரம்பொருளை அறிந்து கொள்ள முடியாது. கர்மேந்திரியங்களாலும் இதை அறிந்து கொள்ள முடியாது
ந அன்யைஹி தே3வைஹி – மற்ற இந்திரியங்களாலும் அறிய முடியாது. மனதினாலும் அடையமுடியாது
பிரத்யக்ஷ பிரமாணத்தால் அறிய முடியாது. நேரிடையாக இதை விளக்க முடியாது. லட்சணையாகத்தான் விளக்க முடியும்.
அனுமானத்தாலும், சொல்லாலும் விளக்க முடியாது, அடைய முடியாது
ந தபஹ – தவத்தாலும் அடைய முடியாது
கர்மணா வா – கர்மங்களினாலும் அடைய முடியாது, அறிய முடியாது
நான ப்ரஸாதேன – இங்கு ஞானம் என்பதற்கு புத்தி என்று அர்த்தம் கொள்ள வேண்டும், புத்தியுடைய பிரகாசத்தினால்
அமைதியடைவதாலும், கருணையினால் புத்திக்கு ஆத்மாவை தெரிந்து கொள்ளும் சக்தி இயற்கையாக இருந்தாலும்,
வெளி விஷயங்களிலுள்ள ராக-துவேஷ என்ற தோஷத்தினல் பாதிக்கப்பட்டு ஆத்மாவை அறியும் சக்தி இழந்து விடுகிறது.
(கலுமிஷம் – அழுக்கடைந்து விட்டது). புத்தி அசைவற்றதும், தூய்மையானதாகவும் இருந்தால்தான் ஆத்மாவை அறிய முடியும்.
புத்தியினுடைய காரியம் – நிச்சயம் செய்வது
மனதினுடைய செயல்கள் – சந்தேகத்துடன் இருத்தல், அலைபாய்தல், உணர்ச்சிகளை உடையது
புத்தியுடைய தூய்மை புருஷார்த்த நிச்சயம், அப்படி நிச்சயம் செய்த புத்தியானது தூய்மையானதாகிறது.
நிச்சயித்த அந்தப்பாதையில் கவனம் சிதறாமல் லட்சியத்தை நோக்கி இருத்தல், அசைவற்ற இருத்தல்
விசுத்த ஸத்வம் – தூய்மையான மனதை அடைந்து விட்டவனாக சூட்சுமமான புத்தியால்தான் பிரம்மத்தை அறிய முடியும்.
ஏனென்றால் ஆத்ம தத்துவமும் சூட்சுமமாக இருப்பதால்
ததஹ – இந்த தகுதியை அடைந்ததற்கு பிறகு
தம் – அந்த ஆத்மாவை
பஶ்யதே – அறிகின்றான்
நிஷகலம் – பூரணமான, முழுமையான பிரம்ம தத்துவத்தை
த்4யாயமானஹ – விசாரம் செய்தவனாக இருப்பவன் அறிகின்றான்

ந சக்ஷுஷா கரிஹ்யதே -கண்ணாலே காண முடியாது /நாபி வாசா-வாக்காலும் சொல்லி முடிக்க முடியாதே -யாதோ வாசோ நிவர்த்தந்தே-
நாந்யைர்தேவைஸ்தபஸா கர்மணா வா. -வேறு எந்த வழிகளாலும் தபஸ் போன்றவற்றாலும் வேறே வேத கர்மங்களாலும் அடைய முடியாதவன் –
ஜ்ஞாநப்ரஸாதேந விஷுத்தஸத்த்வஸ்ததஸ்து தஂ பஷ்யதே நிஷ்கலஂ த்யாயமாந–அவனாலே அருளப் பெற்ற
ஞான பிரசாதத்தாலே -சுத்த சத்வமயமான நிஷ்கலமான அவனை பார்த்து உணர்ந்து அனுபவிக்க முடியும் –

—————

ஏஷோணுராத்மா சேதஸா வேதிதவ்யோ யஸ்மிந்ப்ராணஃ பஞ்சதா ஸஂவிவேஷ. ப்ராணைஷ்சித்தஂ
ஸர்வமோதஂ ப்ரஜாநாஂ யஸ்மிந்விஷுத்தே விபவத்யேஷ ஆத்மா৷৷3.1.9৷৷

அறிகின்றான்

ஏஷோSணுராத்மா சேதஸா வேதி3தன்யோ
யஸ்மின்ப்ரண: ப்ரஞ்சதா4 ஸம்விவேஶ |
ப்ராணைஶ்சித்தம் ஸர்வமோதம் ப்ரஜானாம்
யஸ்மின்விஶுத்3தே4 விப4வத்யேஷ ஆத்மா || 9 ||

ஏஷஹ – இந்த ஆத்ம ஸ்வரூபம்
அணுஹு ஆத்மா – மிக மிக சூட்சுமமானது, இப்படிபட்ட இந்த ஆத்மா
சேதஹ – புத்தியினால் , மனதினால்
வேதி3தன்யஹ – அறியப்படும் அருகதையை உடையது
யஸ்மின் – இந்த ஸ்தூல சரீரத்தில்
ப்ராணஹ – நம் பிராணனானது
பஞ்சதா – ஐந்துவிதமாக
ஸம்விவேஶ – பிரவேசித்தள்ளதோ
அப்படிபட்ட உடலில் இந்த மனமானது இருக்கின்றது. இந்த சைதன்யத்தினால்தான் அனைத்தும் வியாபிக்கப்பட்டுள்ளது.
பிராணைஹ ஸர்வ ஸித்தம் ப்ரஜானாம் – எல்லா ஜீவராசிகளினுடைய மனங்களும் பிராணனுடன்
ஓதம் – ஆத்மாவால் இணக்கப்பட்டிருக்கிறது
யஸ்மின் விஶுத்தே4 – எந்த தூய்மையான மனதில்
ஏஷ ஆத்மா – இந்த ஆத்மா
விப4வதே – நன்கு தெளிவாக தெரிய வருகிறது

ஏஷோணுராத்மா சேதஸா வேதிதவ்யோ யஸ்மிந்ப்ராண-அப்படி அவனால் அருள பெற்ற ஞானவான்கள் -தங்கள் பிராணன்
பஞ்சதா ஸஂவிவேஷ.–பிராண அபான போன்ற பஞ்ச -பிராணங்களிலும் இருப்பதை உணர்வர்
ப்ராணைஷ்சித்தஂ ஸர்வமோதஂ ப்ரஜாநாஂ -சர்வ சித்தத்திலும் -கர்ம ஞான இந்த்ரியங்களிலும் கரந்து எங்கும் பறந்து -கறந்த பாலில் நெய்யே போல் -இருப்பதை
யஸ்மிந்விஷுத்தே விபவத்யேஷ ஆத்மா–தானே காட்டிக் கொடுக்க சுத்தமான -கர்மங்கள் ருசி வாசனையுடன்
போக்கப் பற்ற -மனசால் உணர்கிறார்கள் -சாஷாத் கரிக்கிறார்கள் –

————-

யஂ யஂ லோகஂ மநஸா ஸஂவிபாதி விஷுத்தஸத்த்வஃ காமயதே யாஂஷ்ச காமாந்.
தஂ தஂ லோகஂ ஜயதே தாஂஷ்ச காமாஂஸ்தஸ்மாதாத்மஜ்ஞஂ ஹ்யர்சயேத்பூதிகாமஃ৷৷3.1.10৷৷

யம் யம் லோகம் மனஸா ஸம்விபா4தி
விஶுத்3த4ஸத்வ: காமயதே யாம்ஶ்ச காமான் |
தம் தம் லோகம் ஜயதே தாஶ்ச
காமாம்ஸ்தஸ்மாதா3த்மக்ஞம் ஹ்யர்சய்த்3 பூ4திகாம: || 10 ||

யம் யம் லோகம் மனஸ ஸம்விபா4தி – எந்தெந்த லோகத்தை மனதினால் அடைய விரும்புகிறோமோ
யாஶ்ச காமயதே – எந்த பொம்மையை விரும்புகின்றோமோ
விசுத்த ஸத்வ – ஞானியானவன்
தம் தம் லோகம் ஜயதே – அந்தந்த லோகங்களை அடைகின்றான்
தஸ்மாத்3 – இந்த பெருமைகள் இருப்பதால்
ஆத்மக்3ஞம் – ஞானியை
பூ4த்காம அர்சயேத்3 – அனாத்மாவை விரும்புவர்கள் வணங்க வேண்டும்
இங்கு ஞானியை ஈஸ்வரனாகவே வர்ணிக்கப்படுகிறது

இப்படி அவனால் அருள பெற்ற சுத்த சத்வ மனசாலே சர்வ லோகங்களையும் வென்று -சர்வ அபேக்ஷிதங்களையும் பெற்று
வா ஸூ தேவ சர்வம் -என்றும் –உண்ணும் சோறு எல்லாம் கண்ணன் என்றே இருப்பார்கள் –

———————————

ஸ வேதைதத்பரமஂ ப்ரஹ்ம தாம யத்ர விஷ்வஂ நிஹிதஂ பாதி ஷுப்ரம். உபாஸதே
புரூஷஂ யே ஹ்யாகாமாஸ்தே ஷுக்ரமேதததிவர்தந்தி தீராஃ৷৷3.2.1৷৷

ஸ வேதைதத்பரமஂ ப்ரஹ்ம -ச வேத இதத் ப்ரஹ்ம -இப்படி அறியப் பெற்ற பர ப்ரஹ்மம் –
தாம யத்ர விஷ்வஂ நிஹிதஂ பாதி . உபாஸதே -பரம தாமம் -பரம பதம் –
யத்ர விஸ்வம் நிஹிதம் -பாதி-அனைத்து உலகும் அவன் தேஜஸ் ஏக தேசத்திலே இருக்குமே
ஷுப்ரம்-புரூஷஂ யே ஹ்யாகாமாஸ்தே –ஷூப்ரம்-புனிதம் -திவ்யம் -அகாமஸ்தே-புறம்பு உண்டான பற்றுக்களில் ஆசை இல்லாமல் –
ஷுக்ரமேதததிவர்தந்தி தீரா–ஏதத் ஷூக்ரம் அதிவர்த்தந்தி-சம்சாரத்தில் மீண்டும் சிக்காமல் பர ப்ரஹ்மத்தை அடைந்து இன்புறுகிறான் –

————–

காமாந்யஃ காமயதே மந்யமாநஃ ஸ காமபிர்ஜாயதே தத்ர தத்ர.
பர்யாப்தகாமஸ்ய கரிதாத்மநஸ்து இஹைவ ஸர்வே ப்ரவிலீயந்தி காமாஃ৷৷3.2.2৷

காமான்ய: காமயதே மன்யமான:
ஸ காமபி4ர்ஜாயதே தத்ர தத்ர |
பர்யாப்தகாமஸ்ய க்ருதாத்மனஸ்து
இஹைவ ஸர்வே ப்ரவிலீயந்தி காமா: || 2 ||

முமுக்ஷூக்கள் ஆசைகளைத் துறக்க வேண்டும். தியாகம் செய்ய வேண்டும்.
யஹ – எவனொருவன்
காமான் மன்யமானஹ காமயதே – பார்த்த விஷயங்களையும், கேட்ட விஷயங்களையும் சிந்தித்துக் கொண்டு
ஆசைப்படுகின்றானோ. விஷயங்களின் கிடைக்கப்போடும் சுகத்தை சிந்தித்துக் கொண்டிருக்கின்றவன்
ஸஹ – அவன்
காமபிஹி – ஆசைகளுடன், அதனோடு சம்பந்தப்பட்ட விஷயங்களோடு
ஜாயதே – பிறக்கின்றான்
தத்ர தத்ர – அந்தந்த இடத்தில்
தர்ம-அதர்ம பிரவிருத்தி ஹேது – தர்மத்தையும், அதர்மத்தையும் செய்வதற்கு காரணமான ஆசையுடனும், விஷயத்துடனும் ஒருவன் பிறக்கின்றான்
பர்யாப்த காமஹ – எல்லா ஆசைகளையும் துறந்தவன், ஆசைகளனைத்தும் நீக்கப்பட்டு விட்ட நிலையிலிருப்பவன்
க்ருதாத்மனஹ – தனக்கு செய்ய வேண்டியதை எல்லாம் செய்து முடித்தவன். தன்னைப்பற்றி அறிய வேண்டியதை அறிந்து கொண்டவன்.
அதை அறிய செய்ய வேண்டியதெல்லாம் செய்தவன்
ஸர்வே காமாஹா – எல்லா ஆசைகளும்
இஹைவ – உயிருடன் இருக்கும்போது, இங்கேயே
ப்ரவிலீயதே – அழிந்து விடுகிறது
ஆசைகளைத் தியாகம் செய்வது சாதனம். ஞானம் அடைந்தவுடன் ஆசைகள் அழிந்து விடுகிறது பலனாகும்.
ஆசைகளை துறந்தாலும் அதன் வேர் இன்னும் இருந்துக் கொண்டு இருக்கும்.
ஆசையை துறந்தாலும் அதை தியாகம் செய்து இருக்கிறோம் என்ற நினைவு இருந்து கொண்டிருக்கும்.

காமாந்யஃ காமயதே மந்யமாநஃ ஸ காமபிர்ஜாயதே -விஷயாந்தரங்களில் பற்று மிக்கு அவற்றிலே ஆழ்ந்து இருப்போர்
மீண்டும் மீண்டும் மாறி மாறி பல பிறவி எடுத்து
தத்ர தத்ர. பர்யாப்தகாமஸ்ய கரிதாத்மநஸ்து இஹைவ ஸர்வே ப்ரவிலீயந்தி காமாஃ–
அந்த அந்த சூழலிலே ஆசை கொண்டு அழிய -புறம்புள்ள விஷயாந்தரங்கள் பற்று அற்றவர்கள் இங்கேயே
சரீரத்துடன் இருக்கச் செய்தே பர ப்ரஹ்மத்தை அறிகிறார்கள் –

————————

நாயமாத்மா ப்ரவசநேந லப்யோ ந மேதயா ந பஹுநா ஷ்ருதேந. யமேவைஷ
வரிணுதே தேந லப்யஸ்தஸ்யைஷ ஆத்மா விவரிணுதே தநூஂ ஸ்வாம்৷৷3.2.3৷৷

நாயமாத்மா ப்ரவசனேன லப்4யோ
மேத4யா ந பஹூனா ஶ்ருதேன |
யமேவைஷ வ்ருஷுதே தேன லப்4யஸ்தஸ்யைஷ
ஆத்மா விவ்ருணுதே தனூம் ஸ்வாம் || 3 ||

ஆத்மாவை அறிந்து கொள்வதை லட்சியமாக கொள்வது ஆத்ம வரணம் என்று குறிப்பிட்டிருக்கிறது.
ஈஸ்வரனின் அனுகிரகத்தைப் பெற முயற்சிக்க வேண்டும்.
ஆத்மவரணம் – ஆத்மாவை தேர்ந்தெடுத்தல்
அயம் ஆத்மா – இந்த ஆத்ம ஞானத்தை
ந லப்யதே – அடைய முடியாது
ப்ரவசனம் – வேதத்தை ஓதுவதனால், பிரவசனத்தினால், வேத சாஸ்திரத்தை ஸ்வரத்துடன் அத்யயனம் செய்தல்
ந மேத4யா – மனதில் ஞாபகம் வைத்துக் கொள்கின்ற சக்தி, கிரந்தத்தின் அர்த்தத்தை மனதில் வைத்துக் கொள்கின்ற சக்தி,
உபநிஷத் மனப்பாடம் செய்தாலும் அடைய முடியாது
ந பஹுனா ஶ்ருதேன – மீண்டும், மீண்டும் கேட்பதனாலும் அறிய முடியாது
முமூக்ஷுத்வம் இல்லாமல் மேற்கூறியவைகள் பயனற்றது. ஆத்ம ஞானத்திற்கு அடைவதற்கு பயன்படாது.
யம் ஏவ ஏஷஹ வ்ருணுதே – யார் இந்த ஆத்மாவை மட்டும் லட்சியமாக கொள்கின்றானோ, தேர்ந்தெடுக்கின்றானோ,
தேன லப்யஹ – அவரால் அடையப்படும்
ஏஷஹ – இந்த ஆத்மா – (இதுதான் புருஷார்த்தமாக தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்)
யம் ஏவ வ்ருணுதே – யாரை தேர்ந்தெடுக்கின்றதோ
தேன லப்யஹ – அவனால் அடையப்படுகிறது
யார் ஆத்மாவை தேர்ந்தெடுக்கிறார்களோ அவர்களைத்தான் ஆத்மாவும் தேர்ந்தெடுக்கிறதோ.
ஆத்மா தேர்ந்தெடுத்ததில் ஈஸ்வரனின் அனுகிரகத்தை பெற்ற
தஸ்ய – அந்த அதிகாரிக்கு, அவனுக்கு
ஏஷஹ ஆத்மா – இந்த ஆத்மாவானது
ஸ்வாம் தனும் – தன்னுடைய ஸ்வரூபத்தை
விவ்ருணுதே – வெளிப்படுத்துகிறது, அறிய வைக்கிறது

நாயமாத்மா ப்ரவசநேந லப்யோ -இப்படி பற்று அற்ற பரிசுத்த மனசு வேதாந்தங்களை படித்து மட்டும் பெற முடியாதே –
ந மேதயா–நல்ல ஞானங்களால் அவற்றை அறிந்தும் பெற முடியாதே
ந பஹுநா ஷ்ருதேந. -மீண்டும் மீண்டும் கேட்டு பெற்ற ஞானத்தாலும் பெற முடியாது –
அப்படியானால் எவ்வாறு அடைவது என்றால்
யமேவைஷ வரிணுதே தேந லப்யஸ்தஸ்யைஷ ஆத்மா விவரிணுதே தநூஂ ஸ்வாம்–அவனே யாரைத் தேர்ந்து எடுத்து
தன்னைக் காட்டி அருளுகிறானோ அவனே அவனை அறிவான் ஆகிறான் –

———————-

நாயமாத்மா பலஹீநேந லப்யோ ந ச ப்ரமாதாத்தபஸோ வாப்யலிங்காத்.
ஏதைருபாயைர்யததே யஸ்து வித்வாஂஸ்தஸ்யைஷ ஆத்மா விஷதே ப்ரஹ்மதாம৷৷3.2.4৷

நாயமாத்மா ப3லஹீனேன லப்4யோ ந ச
ப்ரமாதாத்தபஸோ வாப்யலிங்கா3த் |
ஏதைருபாயைர்யததே யஸ்து வித்3வாம்ஸ்
தஸ்யைஷ ஆத்மா விஶதே ப்ரஹ்மதா4ம || 4 ||

இதில் மூன்று சாதனங்கள் சொல்லப்படுகிறது. இவைகள் ஆத்ம வரணத்துடன் செய்ய வேண்டும்.
1. மனோபலம், 2. அப்பிரமாத (கவனமாக இருத்தல்), 3.வைராக்கியத்துடன் கூடிய ஞானம்
மனோபலம்: இதை இரண்டு விதத்தில் அடையலாம். உடல் சக்தி, நல்ல ஆகாரம் தேவையற்றவைகளை சாப்பிடாமல் இருத்தல்,
அதேபோல மனதிற்கு நல்ல விஷயங்களை கொடுக்க வேண்டும். சத்யம், சம, தம இவைகளை கடைப்பிடித்தால்
மனதில் பலமிருந்து நற்பண்புகளை பின்பற்றுவதாலும் அடையப்படும். காம-க்ரோதம், பேராசை போன்ற
தீய பண்புகளை வைத்துக் கொண்டிருத்தல். அப்படிபட்ட மனிதர்களிடம் கோபப்படாமல் பரிதாபப்பட வேண்டும்.
ஆத்மஞான நிஷ்டை அடைந்ததும், வருகின்ற மனோபலம். இந்த ஜகத் மித்யா என்று துறந்து விடமுடியும்.

அயம் ஆத்மா – இந்த ஆத்மாவானது
பலஹீன – மன பலமற்றவானல்,
ந லப்யஹ – அடைய முடியாது

கவனமாக இருத்தல் விஷய ஸங்க நிமித்தி பிரமாதயா – நம்மை சுற்றியுள்ள பொருட்களில், விஷயங்களில் கவனத்துடன் இருக்க வேண்டும்.
இல்லையென்றால் அதனால் ஈர்க்கப்பட்டு திசைமாறி போய்விடுவோம். புகழ், பொருட்கள் இவைகளை சேர்ப்பதினால் நம் லட்சியத்திலிருந்து விலகிவிடுவோம்.
பிரமாதாத் – கவனக்குறைவு இல்லாமல் இருக்க வேண்டும்
அலிங்காத் தபஸ – சந்நியாஸம் (வைராக்கியம்) இல்லாத ஞானத்தினல் ஆத்மாவை அடைய முடியாது

யஹ வித்வான் – எந்த முமூக்ஷுவானவன்
ஏதைஹி உபாயைஹி – மேலே சொன்ன மூன்று உபாயத்துடன்
யததே – முயற்சி செய்ய வேண்டும்
தஸ்ய ஏஷ ஆத்மா – இந்த அவனுடைய ஆத்மா
ப்ரஹ்ம தாமம் விஷதே – மேலான இருப்பிடமான பிரம்மன் இடத்திற்கு சென்று அடைகிறது

நாயமாத்மா பலஹீநேந லப்யோ-பல ஹீனனால் அடைய முடியாதே –
ந ச ப்ரமாதாத் -விஷயாந்தர பற்றுக்கள் – புத்ர பசு -பற்றுக்கள் – கொண்டவனால் முடியாதே
தபஸோ வாப்யலிங்காத்.–தபஸாலும் அலிங்காத் வெளி அடையாளங்கள் -மட்டும் சன்யாசத்துக்கு போதாது –
ஏதைருபாயைர்யததே யஸ்து வித்வாஂஸ்தஸ்யைஷ ஆத்மா விஷதே ப்ரஹ்மதாம–மால் பால் மனசை வைத்து
அதனாலே மங்கையர் தோள் கை விட்டு -விஷயாந்தர பற்றுக்களை அறுத்து அவனை அனுபவிப்போம் –

———————

ஸஂப்ராப்யைநமரிஷயோ ஜ்ஞாநதரிப்தாஃ கரிதாத்மாநோ வீதராகாஃ ப்ரஷாந்தாஃ.
தே ஸர்வகஂ ஸர்வதஃ ப்ராப்ய தீரா யுக்தாத்மாநஃ ஸர்வமேவாவிஷந்தி৷৷3.2.5৷৷

ஸம்ப்ராப்யைனம்ருஷயோ ஞானத்ருப்தா; க்ருதாத்மானோ வீதராகா3: ப்ரஶாந்தா: |
தே ஸர்வக3ம் ஸர்த: ப்ராப்ய தீ4ரா யுக்தாத்மான: ஸர்வமேவாவிஶந்தி || 5 ||

ஸம்ப்ராப்ய ஏனம் – இந்த ஆத்ம தத்துவத்தை முழுமையாக அடைந்து
ரிஷயஹ – ரிஷிகள், ஞானிகள்
ஞானத்ருப்தாஹா- ஞானத்தினால் மனதிருப்தியை, மன நிறைவை அடைந்தவர்கள். மற்ற விஷயங்களை அறிவதால் ஆசைகள் ஏற்படும்,
ஆசை நிறைவேறாவிட்டால் கோபமும், வெறுப்பும் வரும், ஆத்ம ஞானம் மட்டும் இருக்கின்ற ஆசைகள் ஒழிந்துவிடும். மனதில் திருப்தி வந்துவிடும்.
க்ருதார்மானஹ – ஆத்மாவை பூரணமாக அறிய வேண்டியவற்றை செய்து பரமாத்மாவாக, பிரஹ்ம ஸ்வரூபமாக மாறிவிட்டான்.
வித ராகாஹா – சென்றுவிட்ட ஆசை முதலியவைகள், தீய குணங்கள் அனைத்தும் அவனை விட்டு சென்றுவிட்டன.
ப்ரஶாந்தாஹா – இந்திரியங்களெல்லாம் அமைதியை அடைந்து விட்ட நிலையில் உள்ளவன்
தே – அவர்கள்
ஸர்வகம் – எல்லா இடத்திலும் வியாபித்துள்ள ஆத்மாவை
ஸர்வதஹ ப்ராப்ய – முழுமையாக அடைந்து இருப்பவர்கள்
தீரா – தீரர்கள்
யுக்தாத்மான: – நன்கு பொருந்திய மனதுடையவர்களாக, மனவமைதியுடையவர்களாக
ஸர்வம் ஏவ ஆவிஷந்தி – அனைத்தையும் வியாபிக்கிறார்கள்
மரணத்திற்கு பிறகு பிரம்ம ஸ்வரூபமாக மாறிவிடுகிறார்கள். உயிரோடிருக்கும் போது உலகத்திலுள்ள
அனைத்தும் நானென்று அபிமானத்துடன் இருப்பார்கள்

ஸஂப்ராப்யைநமரிஷயோ-இப்படி பிராப்யம் அருள்ப் பெற்ற ஆச்சார்யர்கள் –
ஜ்ஞாநதரிப்தாஃ -ப்ரஹ்ம ஞானம் ஒன்றாலே தரித்து -கால ஷேபம் செய்து
கரிதாத்மாநோ-அவனது ஸ்வரூப ரூப குண விபூதிகளை நன்றாக அனுபவித்து –
வீதராகாஃ -புற-புலன்கள் அனைத்தும் அவனிடமே அர்ப்பணித்து
தே ஸர்வகஂ ஸர்வதஃ ப்ராப்ய -தேச கால வாஸ்து பரிச்சேத ரஹிதனான பர ப்ரஹ்மத்தை அனுபவித்து
தீரா யுக்தாத்மாநஃ -இப்படி விலக்ஷணமான நித்ய த்யான அனுபவஸ்தர்கள்
ஸர்வமேவாவிஷந்தி–அவனை அடைந்து நித்ய ஆனந்த உக்தர்கள் ஆகிறார்கள் –

——————–

வேதாந்தவிஜ்ஞாநஸுநிஷ்சிதார்தாஃ ஸஂந்யாஸயோகாத்யதயஃ ஷுத்தஸத்த்வாஃ.
தே ப்ரஹ்மலோகேஷு பராந்தகாலே பராமரிதாஃ பரிமுச்யந்தி ஸர்வே৷৷3.2.6৷৷

வேதாந்தவிஞானஸுநிஷ்சிதார்தா2: ஸந்யாஸயோகா3த்3யதய: ஶுத்3த4ஸத்த்வா: |
தே ப்3ரஹ்மலோகேஷு பராந்தகாலே ப்ராம்ருதா: பரிமுச்யந்தி ஸர்வே || 6 ||

யத் யஹ – இவ்வாறு முயற்சி செய்பவர்கள்
ஸந்யாஸ யோக – சந்நியாஸம் என்கின்ற சாதனம், ஞானயோகம் என்ற சாதனத்தை பயன்படுத்துகிறார்கள்.
ஶுத்3த4 ஸத்த்வாஹா – தூய்மையான மனம் அடைகிறார்கள். ராக-துவேஷம் நீங்கிய தூய்மை, எல்லா அசுத்தங்களையும்
நீக்குகின்ற அறியாமை நீங்குதல், அதனால் அடையப்பட்ட ஞானத்தை, பரம்பொருளை
அனிஶ்சித – நிச்சயம் செய்யப்பட்டது
தே பராம்ருதஹ – அவர்கள் முக்தர்களாக மாறினார்கள். உயிரோடிருக்கும் போதே மரணமற்ற நிலையை அடைகிறார்கள்.
மேலான அம்ருதத்தை அடைந்தார்கள்.
பராந்தகாலே – கடைசிகாலத்தில், மரணமடைந்த நேரத்தில்
பிரம்மலோகேஷு – பிரம்மத்திலே
ஸர்வே பரிமுச்யந்தி – எல்லோரும் ஒன்றாகி விடுகிறார்கள், கலந்து விடுகிறார்கள்

வேதாந்தவிஜ்ஞாநஸுநிஷ்சிதார்தாஃ -யாதாம்ய வேதாந்த ஞானம் உடையவர்கள்
ஸஂந்யாஸயோகாத்யதயஃ ஷுத்தஸத்த்வாஃ-சுத்த சத்வ குணமுடையவர்களாய் -சந்யாச யோகம் கைவந்தவர்களாய் -பரமை ஏகாந்திகளாய்
தே ப்ரஹ்மலோகேஷு பராந்தகாலே பராமரிதாஃ பரிமுச்யந்தி ஸர்வே–சரீர அவசானத்திலே-சம்சாரம் தொலையப் பெற்று
பரமபதம் அடைந்து ப்ரீதி கார்ய கைங்கர்யம் பெற்று நிரதிசய ஆனந்த உக்தர்களாக ஆகிறார்கள் –

—————-

கதாஃ கலாஃ பஞ்சதஷ ப்ரதிஷ்டா தேவாஷ்ச ஸர்வே ப்ரதிதேவதாஸு.
கர்மாணி விஜ்ஞாநமயஷ்ச ஆத்மா பரேவ்யயே ஸர்வஂ ஏகீபவந்தி৷৷3.2.7৷৷

க3தா: கலா: பஞ்சதஶ ப்ரதிஷ்டா தே3வாஶ்ச ஸர்வே ப்ரதிதே3வதாஸு |
கர்மாணி விஞானமயஶ்ச ஆத்மா பரேSவ்யயே ஸர்வம் ஏகீப3வந்தி || 7 ||

சஞ்சித கர்மத்திலிருந்து வெளிவந்து செயல்பட்டு கொண்டிருப்பது பிராரப்த கர்மம், புதிதாக சேர்க்கப்பட்ட ஆகாமி கர்மபலனில் சேர்க்கப்படுகிறது..
ஞானி விஷயத்தில் சஞ்சித கர்மமும், ஆகாமி கர்மங்களும் அழிந்துவிடுகின்றன. மரணமடையும்போது ஸ்தூல சரீரம்தான் அழிகிறது.
அக்ஞானியின் சூட்சும சரீரம் வெளிப்படுகின்ற பிராரப்த கர்மத்திற்கேற்றவாறு வேறுடலை எடுக்கின்றது.
ஞானியின் சூட்சும சரீரம் அந்தந்த சூட்சும பூதங்களில் கலந்து விடுகின்றது. அகங்காரம் அழிந்தவுடன் சஞ்சித, ஆகாமி கர்மங்கள் அழிந்து விடுகின்றது.

க3தா பஞ்சத3ஶா கலாம – கலந்து விடுகிறது பதினைந்து அம்சங்கள்
பிரதிஷ்டாஹா – அந்தந்த தேவதைகளை அடைந்து
ஞானியினுடைய அனாத்மாக்கள் மறைந்து விட்டாலும், அவரது பெயர் இருந்துக் கொண்டேயிருக்கும்.
ஸர்வே தேவா: – எல்லா இந்திரியங்களும்
ப்ரதிதேவதா3ஸு – அந்தந்த இந்திரிய தேவதைகளிடம் சென்று விடுகின்றது
கர்மாணி – சஞ்சித, ஆகாமி கர்மங்களும்
விக்ஞானமய ஆத்மா – சிதாபாஸன், பிரதிபிம்ப ஆத்மா
பர அவ்யயே – அழியாத பரம்பொருளிடத்தில்
ஸர்வே ஏகி ப4வந்தி – எல்லாமும் ஒன்றாக கலந்து விடுகின்றது

பஞ்ச தச -இந்திரியங்கள் இத்யாதி -கர்மாக்கள் அந்த அந்த அதிஷ்டான தேவதைகள் உடனும்
சஞ்சித கர்மாக்கள் உடனும் ஆத்மா உடன் பர ப்ரஹ்மத்தில் லயிக்கின்றன –

——————-

யதா நத்யஃ ஸ்யந்தமாநாஃ ஸமுத்ரேஸ்தஂ கச்சந்தி நாமரூபே விஹாய.
ததா வித்வாந்நமரூபாத்விமுக்தஃ பராத்பரஂ புரூஷமுபைதி திவ்யம்৷৷3.2.8৷৷

யதா2 நத்4ய: ஸ்யந்தமானா: ஸமுத்3ரேSஸ்தம் க3ச்ச2ந்தி நாமரூபே விஹாய |
ததா2 வித்3வான் நாமரூபாத்3விமுக்த: ப்ராத்பரம் புருஷமுபைதி தி3வ்யம் || 8 ||

விதவிதமான நதிகள் கடலில் கலந்து விட்டால் தங்களது பெயர்களை இழந்து கடலோடு ஒன்றாகி விடுகிறது
யதா2 நதியா – எப்படி நதிகளானது
ஸ்யந்தமானா: – ஓடிக்கொண்டிருக்கும்
ஸமுத்3ரே அஸ்தம் க3ச்ச2ந்தி – சமுத்திரத்தில் ஒன்றாகி விடுகிறது
நாமரூபே விஹாயே – நாம ரூபத்தை இழந்து விடுகிறது
ததா2 வித்வான் – அவ்விதமே ஞானியானவன்
நாம ரூபாத் விமுக்த: – நாம ரூபத்திலிருந்து விடுதலையடைகிறான். இது ஜீவன் முக்தியை குறிக்கிறது.
உடல் மீதுள்ள அபிமானத்தை தியாகம் செய்தல்
பராத்பரம் – மாயைக் காட்டிலும் மேலான
த்வயம் புருஷம் உபைதி – சுய பிரகாசமான பிரம்மத்தை அடைகின்றான்

பானைகளை நாம ரூபங்களாக பார்க்கும்போது அதில் வேற்றுமைகளை பார்க்கிறோம்.
களிமண்ணை பார்க்கும் போது ஒன்றைத்தான் பார்க்கிறோம். ஒரு நேரத்தில் ஒரு விஷயத்தைத்தான் கவனிப்போம்.
அதனால் நாமரூபத்தை பார்க்கும்போது அதிஷ்டமான களிமண்ணை மறந்து விடுகிறோம்.
பிறகு களிமண் என்ற பார்வையில் நமக்கு எல்லாமே ஒன்றுதான் என்று விளங்குகிறது.
நாம ரூபத்திலிருந்து விடுதலையடையும் போது ப்ராந்த காலத்தில் இதற்கு அதிஷ்டானமான பிரம்மத்தில் கலந்து விடுகின்றான்.

நதிகள் கடலை அடைந்து தங்கள் நாம ரூபங்களை இழப்பது போலே
ஆத்மாக்களும் பர ப்ரஹ்மம் இடம் லயித்து நாம ரூபங்களை இழந்து ஒன்றாகின்றன –

—————-

ஸ யோ ஹ வை தத்பரமஂ ப்ரஹ்ம வேத ப்ரஹ்மைவ பவதி நாஸ்யாப்ரஹ்மவித்குலே பவதி.
தரதி ஷோகஂ தரதி பாப்மாநஂ குஹாக்ரந்திப்யோ விமுக்தோமரிதோ பவதி৷৷3.2.9৷৷

ஸ யோ ஹ வை தத்பரமம் வேத3 ப்ரஹ்மைவ
ப4வதி நாஸ்யாப்ரஹ்மவித்குலே ப4வதி |
தரதி ஶோகம் தரதி பாப்மானம் கு3ஹாக்3ரந்தி4ப்4யோ
விமுக்தோSம்ருதோ ப4வதி || 9 ||

ஸஹ யஹ – எவனொருவன்
தத் பரமம் ப்ரஹ்ம வேத3 – அந்த மேலான பிரம்மத்தை அறிகின்றானோ
ப்ரஹ்ம ஏவ ப4வதி – பிரம்மனாகவே ஆகின்றான்
அறியாமைதான் நமக்கு பிரம்மத்திற்கு உள்ள இடைவெளி எனவே அறியாமை நீங்கினால் நாம் பிரம்மத்தோடு ஐக்கியமாகி விடுவோம்.
நாம் ஏற்கனவே பிரஹ்ம ஸ்வரூபமாக இருப்பதால்தான் இது சாத்தியமாகிறது.
ந அஸ்ய அப்ரஹ்ம வித்குலே ப4வதி – பிரம்மத்தை அறியாதவர்கள் இவன் பரம்பரையில் யாரும் இருக்கமாட்டார்கள்
தரதி ஶோகம் – சோகத்தை கடக்கின்றான், மானஸ சந்நியாஸம், மனவேதனைகள்
தரதி பாப்மானம் – பாவ-புண்ணியங்களை கடந்து செல்கின்றான்
கு3ஹ க்ரந்தி – மனதிலிருக்கின்ற முடிச்சுக்களை
விமுக்தஹ – அறுக்கப்பட்டு விடுதலை அடைகின்றான்
அம்ருதஹ – மரணமற்ற நிலையை அடைகின்றான்

ஸ யோ ஹ வை தத்பரமஂ ப்ரஹ்ம வேத ப்ரஹ்மைவ பவதி –ப்ரஹ்மத்தை அறிந்து அவனை அடைந்து அனுபவிக்கிறான் –
அஸ்யகுல நபவதி -அப்ரஹ்மவித்–ப்ரஹ்மத்தை அறியாதவர்கள் போலே மீண்டும் பிறப்பது இல்லை –
தரதி ஷோகஂ தரதி பாப்மாநஂ குஹாக்ரந்திப்யோ விமுக்தோமரிதோ பவதி–சோகம் பெறுவது இல்லை
கர்மங்கள் வாசனை உடன் கழியப் பெற்றவன் ஆகிறான் -அஞ்ஞான அந்தகார முடிச்சுக்கள் அவிழ்க்கப் பெற்று
பகவத் அமிருதம் அனுபவிக்கப் பெறுகிறான்

——————

ததேததரிசாப்யுக்தஂ , க்ரியாவந்தஃ ஷ்ரோத்ரியா ப்ரஹ்மநிஷ்டாஃ ஸ்வயஂ ஜுஹ்வத ஏகர்ஷி ஷ்ரத்தயந்தஃ.
தேஷாமேவைதாஂ ப்ரஹ்மவித்யாஂ வதேத ஷிரோவ்ரதஂ விதிவத்யைஸ்து சீர்ணம்৷৷3.2.10৷৷

க்ரியாவந்த: ஶ்ரோத்ரியா ப்ரஹ்மநிஷ்டா;
ஸ்வயம் ஜுஹ்வத ஏகர்ஷிம் ஶ்ரத்3த4யந்த: |
தேஷாமேவைதாம் ப்ரஹ்மவித்3யம் வதே3த
ஶிரோவ்ரதம் விதி4வத்3யைஸ்து சீர்ணம் || 10 ||

ததேதத் – கீழ்கண்ட மந்திரம்
அப்3ரூதம் – யாருக்கு சொல்ல வேண்டும்
க்ரியாவந்தஹ – கர்மயோகத்தில் இருப்பவர்கள், தர்மப்படி வாழ்பவர்கள்.
கர்மயோகத்தினால் மனம் தூய்மையடையும், இதனால் மனதிலுள்ள விருப்பு, வெறுப்புக்கள் நீங்கிவிடுகின்றது.
இதன் தொடர்ச்சியாக விவேக, வைராக்கியத்தை அடையச் செய்யும்
ஶ்ரோத்ரியஹ – வேத சாஸ்திரத்தை படித்தவர்கள், சாஸ்திரத்தில் சிரத்தை உடையவர்கள்
பிரஹ்மநிஷ்டா – சகுண பிரம்மத்தில் மனதை நிலைபெற்றிருப்பவர்கள்
ஈஸ்வரனிடம் பக்தியுடையவர்கள், உபாஸனை செய்தவர்கள். இதன் பலனாக சம, தமத்தை அடைந்திருப்பார்கள்
ஏகர்ஷின் ஸ்வயம் ஜுஹ்வத – ஏகர்ஷின் என்ற யாகத்தை செய்தவர்கள்
ஶ்ரத்3த4யந்தஹ – உபநிஷத்தில் உள்ள உபதேசத்தில் நம்பிக்கை வைக்க வேண்டும்
இது நேரிடையாக ஞானத்தை கொடுக்கும் கருத்து என்று முழுமையாக நம்பிக்கை வைத்தல்
விதி4வத் சீர்ணம் – சரியாக செய்துள்ளவர்களுக்கு
ஷிரோவிரதம் – இது ஒருவிதமான விரதம்
தேஷாம் ப்ர்ஹ்ம வித்யாம் – அவர்களுக்கு இந்த பிரம்ம வித்யாவை
வதே3த – உபதேசம் செய்ய வேண்டும்.

ததேததரிசாப்யுக்தஂ , க்ரியாவந்தஃ ஷ்ரோத்ரியா ப்ரஹ்மநிஷ்டாஃ–ப்ரஹ்ம நிஷ்டர்கள் தாங்களும் வேத விஹித சத் கர்மாக்களை அனுஷ்ட்டித்து கற்பித்து
ஸ்வயஂ ஜுஹ்வத ஏகர்ஷி ஷ்ரத்தயந்தஃ. -த்ரிவித தியாகங்கள் உடன்-திட விசுவாசத்துடன் -இருப்பவர்களுக்கு மட்டுமே
தேஷாமேவைதாஂ ப்ரஹ்மவித்யாஂ வதேத ஷிரோவ்ரதஂ விதிவத்யைஸ்து சீர்ணம்–ப்ரஹ்ம வித்யையைக் கற்பித்து
வேத விகிதங்களை தலை மேல் தாங்கி இருக்கச் செய்வார்கள் –

——————-

ததேதத்ஸத்யமரிஷிரங்கிராஃ புரோவாச நைததசீர்ணவ்ரதோதீதே. நமஃ பரமறஷிப்யோ நமஃ பரமறஷிப்யஃ৷৷3.2.11৷৷

ததே3தத்ஸத்யம்ஷிருஷிரங்கிரா: புரோவாச நைதத3சீர்ணவ்ரதேSதீ4தே |
நம: பரமக்ரிஷிப்4யோ நம: பரமக்ருஷிப்4ய: || 11 ||

ததே3தத்ஸத்யம் – இதுவரை சொல்லப்பட்ட உபதேசங்கள் யாவும் உண்மை
அங்கிரஸஹ புரா உவாச – அங்கிரஸ் என்ற ரிஷியால் சொல்லப்பட்டது
ந அதீதஹ – தகுதியில்லாதவர்கள் இதைப்படிக்க வேண்டாம்
நமஹ பரம ரிஷிப்4யஹ – இந்த ஞான பரம்பரையில் வந்தவர்களுக்கு நமஸ்காரம் செய்யப்படுகிறது

அங்கிரஸ் இவ்வாறு முன்பு இந்த வித்யையை அருளிச் செய்தார் -விசுவாசத்துடன் இத்தை அப்யஸிக்க வேண்டும்
பூர்வாச்சார்யர்களுக்கு -பூர்வ பரம ரிஷிகளுக்கு பல்லாண்டு –

——————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –