Archive for January, 2017

ஸ்ரீ ந்யாஸ சதகம் –ஸ்ரீ வேதாந்த தேசிகாசார்யர் ஸ்வாமிகள்-

January 31, 2017

ஸ்ரீ மான் வேங்கட நாதார்ய கவி தார்க்கிக கேசரீ
வேதாந்தா சார்ய வர்யோ மே சந்நிதத்தாம் சதா ஹ்ருதி –

ஸ்ரீ மானானவரும் ஸ்ரீ வேங்கட நாதன் என்ற திரு நாமம் உடையவரும் -கவிகளுக்கும் தார்க்கிரர்களுக்கும் ஸிம்ஹம் போன்றவரும்
வேதாந்த ஆச்சார்யர்களில் ச்ரேஷ்டரான ஸ்ரீ தேசிகன் ஸ்வாமிகள் அடியேன் மனசில் நிரந்தரமாக இருந்து அருளட்டும் –

கவி தார்க்கிக சிம்ஹாய கல்யாண குண சாலினே
ஸ்ரீ மதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம –

சீர் ஓன்று தூப்புல் திரு வேங்கடமுடையான்
பார் ஒன்றச் சொன்ன பழ மொழியுள் ஓர் ஓன்று
தானே யமையாதோ தாரணியில் வாழ்வார்க்கு
வான் ஏறப் போம் அளவும் வாழ்வு –

———————————————————————

த்வயத்தின் அர்த்தம் ஸங்க்ரஹிக்கப் படுகிறது பத்து ஸ்லோகங்களால்-முதல் மூன்று -பூர்வ கண்டார்த்தமும்
-மேல் ஒன்றால் உத்தர கண்டார்த்தமும் -மேல் ஐந்தால் உத்தர க்ருத்யார்த்தின் பிரகாரமும்
இறுதியில் சாத்விக தியாகமும் அருளிச் செய்யப் படுகின்றன –

——————————————–

அஹம் மத் ரக்ஷண பரோ மத் ரக்ஷண பலம் ததா
ந மம ஸ்ரீ பதே ரேவேத் யாத்மா நம் நிஷி பேத் புத –1-

விஷயம் அறிந்தவன் -தனது ஆத்மா-ஆத்மாவைக் காக்கும் பொறுப்பு –
அவ்வாறே ஆத்மாவைக் காப்பதால் ஏற்படும் பிரயோஜனம் -எல்லாம் தன்னுடையது அல்ல –
திருமகள் கேள்வனுக்கே உரியது என்று ஆத்மாவை எம்பருமான் இடம் சமர்ப்பிப்பான்

அஹம்-அடியேனும் -ஆத்மஸ்வரூபம்
மத் ரக்ஷண பரோ -அடியேனை ரஷிக்கும் பொறுப்பும் -சுமையும் –
மத் ரக்ஷண பலம் ததா-அப்படியே அடியேனை ரக்ஷிப்பதால் உண்டான பலமும்
ந மம -அடியேனுடையவை அன்று -நான் எனக்கு உரியேன் அல்லேன்
ஸ்ரீ பதே ரேவேத் -ஸ்ரீ மன் நாராயணன் உடையவையே -சர்வ சேஷியான ஸ்ரீ மன் நாராயணனுக்கே சேஷம் -அவனே இவைகட்டிக்கு எல்லாம் கடவன்
யாத்மா நம் நிஷி பேத் புத –என்று பண்டிதன் தன்னை சமர்ப்பிக்க கடவன் –
இத்தால் ஸ்வரூப சமர்ப்பணமும் -யானும் நீயே என்னுடைமையும் நீயே –
ஆச்ரயண வேளையில் -மலர் மக்கள் விரும்பும் நம் அரும் பெறல் அடிகள்
-போக வேளையிலும் -கோல மலர்ப் பாவைக்கு அன்பாகிய என் அன்பேயோ -மிதுனம் உத்தேச்யம் –
புத -ஆச்சார்யர் மூலம் உபதேசிக்கப் பெட்ரா ரகசிய த்ரய ஞானத்தால் -தத்வ ஹித புருஷார்த்த யாதாம்யா ஞானம் பெற்றவன்
சர்வ ரக்ஷகன் -சர்வ சேஷி சர்வேஸ்வரன் —அநந்யார்ஹ அநந்ய அதீன சேஷ பூதர் நாம் –
ஸ்வயம் ம்ருத்பிண்ட பூதஸ்ய பரதந்த்ரஸ்ய தேஹிந-ஸ்வ ரக்ஷணேப்ய சக்தஸ்ய கோஹேது பார ரஷணே-
ஆத்மாராஜ்யம் தநஞ்சைவ களத்திரம் வாஹா நாநிச-ஏதத் பகவதே சர்வ மிதி தத் ப்ரேஷிதம் சதா —
நஹி பாலான சாமர்த்திய ம்ருதே ஸர்வேச்வரம் ஹரிம்
ந மம -மஹா விச்வாஸ பூர்வக கோப்ருத்வ வர்ண கர்ப்பமான சரணம்
-கர்த்ருத்வ தியாக -மமதா தியாக -பல தியாக -பல உபயத்வ தியாக பூர்வகம் -ஆனு கூல்ய சங்கல்பாதி அனுசந்தானங்கள் –
ப்ரவ்ருத்திர் ஆனு கூலேஷூ நிவ்ருத்திச் சான்யதா-பலம் ப்ராப்த ஸூ க்ருதாச் சஸ்யாத் சங்கல்பேச ப்ரபத்தித –
இருக்கும் நாளில் நிரபராதி கைங்கர்யத்தையும் -பிராரப்த சரீர அநந்தரம் மோக்ஷத்தையும் சேர கோலி பிரபத்தி –
அறவே பரம் என்று அடைக்கலம் வைத்தனர் அன்று நம்மைப் பெறவே கருதி பெருந்தக உற்ற பிரான் அடிக் கீழ் உறவே
இவன் உயிர் காக்கின்ற வோர் உயிர் உண்மையை நீ மறவேல் என நம் மறை முடி சூடிய மன்னவரே–ஸாங்க பிரபதன அதிகாரம் -ரகஸ்ய த்ரய சாரம்
எனக்கு உரியன எனது பரம் என் பேறு என்னாதிவை அனைத்தும் இறை இல்லா இறைக்கு அடைத்தோம் -அம்ருத ரஞ்சனி -8-

—————————————————-

ந்யாஸ்யாம்ய கிஞ்சன ஸ்ரீ மன் அநு கூலோ அந்வய வர்ஜித
விஸ்வாஸ ப்ரார்த்தநா பூர்வம் ஆத்மரஷா பரம் த்வயி–2-

திருமகள் நாதனே -என்னிடம் கொல் முதல் ஒன்றும் இல்லாத அகிஞ்சனான நான் –
உனக்கு அனுகூலமாய் -பிரதிகூலங்களை விலக்கி-
உன்னிடம் விச்வாஸம் பூர்வகமாக பிரார்த்தனை மூலம் ஆத்மாவை ரஷிக்கும் பொறுப்பை உன்னுடன் ஒப்படைக்கிறேன்

ந்யாஸ்யாம்ய கிஞ்சன ஸ்ரீ மன் -அகிஞ்சனான அடியேன் திருமால் இடம் சமர்ப்பிக்கின்றேன்
அநு கூலோ அந்வய வர்ஜித-அநு கூல்ய சங்கல்பம் கொண்டும் -அந்நிய -ப்ரதி கூல்ய -வர்ஜனமும் -விட்டு விட்டவனாகவும்
விஸ்வாஸ ப்ரார்த்தநா பூர்வம் -நீ ரஷித்து அருளுவாய் என்ற துணிவும் -ரசிக்க வேண்டும் என்ற பிரார்த்தனையும் முன்னிட்டு
ஆத்மரஷா பரம் த்வயி-அடியேனை ரஷித்து அருளும் பொறுப்பை தேவரீர் இடம் சமர்ப்பிக்கின்றேன் –

ஆனு கூல்ய சங்கல்பம் ./ பிராதி கூல்ய வர்ஜனம் / மஹா விசுவாசம் /கோப்த்ருத்வ வர்ணம் / கார்ப்பண்யம் -அங்கங்கள் –
அநாதி காலம் தேவரீருக்கு அநிஷ்டா சரணம் பண்ணுகையாலே சம்சாரித்துப் போந்தேன்-இன்று முதல் அநு கூலனாக
வர்த்திக்கக் கட வேன்-ப்ரதி கூல அசரணம் பண்ணைக் கட வேன் அல்லேன் –
தேவரீரை பெறுகைக்கு அடியேன் இடம் ஒரு கை முதலும் இல்லை -தேவரீரையே உபாயமாக அறுதி இட்டேன் –
தேவரீரே உபாயமாக வேண்டும் –
அநிஷ்ட நிவ்ருத்தி யாதல் இஷ்ட பிராப்தி யாதல் இனி பரம் உண்டோ -ஸ்ரீ நடாதூர் அம்மாள் அருளிச் செய்யும் சுருக்கு-

நின்னருளாம் கதி அன்றி மற்று ஓன்று இல்லை – நெடும் காலம் பிழை செய்த நிலை கழிந்தேன்
உன் அருளுக்கு இனிதான நிலை யுகந்தேன் உன் சரணே சரண் என்னும் துணிவு பூண்டேன்
மன்னிருளாய் நின்ற நிலை எனக்குத் தீர்த்து வானவர் தம் வாழ்ச்சி தர விரித்தேன் உன்னை
இன்னருளால் இனி எனக்கோர் பரம் ஏற்றாமல் என் திருமால் அடைக்கலம் கொள் என்னை நீயே -அம்ருத சுவாதினி -31-

உகக்குமவை உகந்து உகவா வனைத்தும் ஒழிந்து உறவு குண மிகத் துணிவு பெற உணர்ந்து வியன் காவல் என வரித்துச்
சகத்தில் ஒரு புகல் இல்லாத் தவம் அறியேன் மதிள் கச்சி நகர் கருணை நாதனை நாள் அடைக்கலமாய் அடைந்தேன் –அடைக்களப் பத்து -5-

பரிகர விபாக அதிகாரம் -ஸ்ரீ மத் ரகஸ்ய த்ரய சாரம் -இந்த ந்யாஸ அங்கங்கள் ஐந்தையும் அங்கியையும் விவரித்து அருளுகிறார் –

அருள் தரும் அடியார் பால் மெய்யை வைத்துத்
தெருள் தர நின்ற தெய்வ நாயக நின்
அருள் எனும் சீர் ஓர் அரிவை யானது என
இருள் செக வெமக்கோர் இன்னொளி விளக்காய்
மணி வரை யன்ன நின் திரு வுருவில்
அணி அமர் ஆகத்து அலங்கலாய் இலங்கி
நின் படிக்கு எல்லாம் தன் படி ஏற்க
வன்புடன் நின்னோடு வதரித்து அருளி
வேண்டுரை கேட்டு மிண்டவை கேட்பித்து
ஈண்டிய வினைகள் மாண்டிட முயன்று
தன்னடி சேர்ந்த தமர் உனை அணுக
நின்னுடன் சேர்ந்து நிற்கும் நின் திருவே -மும்மணிக் கோவை –1-

அமலன் அவியாத சுடர் அளவில்லா ஆரமுதம்
அமலவுருக் குணங்கள் அணி யாயுதங்கள் அடியவர்கள்
அமல வழியாத நகர் அழிந்து எழும் கா வுடனே எல்லாம்
கமலை யுடன் அரசாளும் கரிகிரி மேல் காவலனே —அர்த்த பஞ்சகம் -1–

சத்யத்வம் -ஞானத்தவம் -அந்நதத்வம்-ஆனந்தத்வம் -அமலத்வம் -த்வயி -என்பதால் அனைத்து –
குண வர்க்கம் -காருண்ய -ஸுலப்ய ஸுசீல்ய வாத்சல்ய க்ருதஞ்ஞாதிகளும் -சர்வஞ்ஞத்வ சர்வசக்தித்வ
சத்ய சங்கல்பத்வ பரி பூர்ணத்வ பரம உதாரத்வாதிகள்
காருண்யம் -எம்மா பாவியேற்கும் விதி வாய்க்கின்று வாய்க்கும் / மாதவன் என்றதே கொண்டு / திருமால் இரும் சோலை மலை என்றேன்
-எனக்கே தன்னைத் தந்த கற்பகம் -சாரம் அசாரம் -த்வய அதிகாரம் –

———————————————————————

ஸ்வாமீன் -ஸ்வ சேஷம் -ஸ்வ வசம் –ஸ்வ பரத்வேன-நிர் பரம்
ஸ்வ தத்த – ஸ்வதியா – ஸ்வார்த்தம் -ஸ்வஸ் மின் -நியஸ்யதி-மாம் ஸ்வயம் — 3-

ஸ்வாமீ-உமது சேஷ பூதனும் -உமக்கு வசப்பட்டவனும் —
உம்மிடமே பொறுப்பு இருப்பதால் என்னிடம் எந்த பொறுப்பும் இல்லாதவனும் –
உம்மால் கொடுக்கப்பட்ட உமது அறிவாலேயே –
உமக்காகவே நீராகவே அடியேனை உம்மிடமே வைத்துக் கொள்வீராக –

ஸ்வாமீன் -சர்வ சேஷியான ஸ்வாமியே -ஸ்ரீ மன் நாராயணனே –
ஸ்வ சேஷம் -தேவரீருடைய சொத்தாகவும் -தேவரீருக்கு சேஷ பூதனாயும்
ஸ்வ வசம் –தேவரீருக்கு அதீனமாய்-அடியேன் பர தந்த்ரன் அன்றோ -தேவரீருக்கே -உட்பட்டவனானவனுமான
மாம் -அடியேனை –
ஸ்வ தத்த – ஸ்வதியா -தேவரீரால் அருள பட்ட தேவரீரைட் குறித்தான புத்தியினால் -சரீர பிரதானம் முதல்
சதாச்சார்ய ஸமாச்ரயணம் பண்ணி அருளி த்வய உச்சாரண பர்யந்தம் அருளிய உபகார பரம்பரைகளால் –
இத்தால் அஹங்கார நிவ்ருத்தி சொல்லிற்று ஆயிற்று -மமதா தியாகம் சொல்லிற்று ஆயிற்று
ஸ்வார்த்தம் -தேவரீருக்காகவே -தேவரீருடைய லாபத்துக்காகவே
நிர் பரம்-அடியேனுக்கு சுமை இல்லாத படி -பொறுப்பு ஒன்றுமே இல்லாத படி
ஸ்வ பரத்வேன–செய்ய வேண்டியவை தேவரீருடைய பரமாகவே -பொறுப்பாகவே
ஸ்வஸ் மின் -தேவரீர் இடத்தில்
நியஸ்யதி- ஸ்வயம் -தேவரீரே வைத்துக் கொண்டு அருளுகிறீர் -கர்த்ருத்வ தியாகம் சொல்லிற்று ஆயிற்று –

எனக்கே ஆட் செய் எக்காலத்தும் என்று என் மனக்கே வந்து இடைவீடின்றி மன்னி
தனக்கே யாக என்னைக் கொள்ளுமீதே எனக்கே கண்ணனை யான் கொள்ளும் சிறப்பே –

தமக்கேயாய் எமைக் கொள்வார் வந்தார் தாமே -திருச்சின்ன மாலை -4-ஈற்றடி –

ஸ்வ கீயேந ஆத்மநா கர்த்ரா ஸ்வ கீயைஃ ஏவ கரணைஃ ஸ்வாராதநைக ப்ரயோஜநாய பரம புருஷஃ ஸர்வேஷ்வரஃ ஸர்வ ஷேஷீ ஸ்வயம் ஏவ ஸ்வ கர்மாணி காரயதி; இதி அநுஸந்தாய கர்மஸு மமதா ரஹிதஃ ப்ராசீநேந அநாதி கால ப்ரவரித்தாநந்த பாப ஸஞ்சயேந’கதம் அஹஂ பவிஷ்யாமி’ இத்யேவஂ பூதாந்தர் ஜ்வர விநிர் முக்தஃ’பரமபுருஷ ஏவ கர்மபிஃ ஆராதிதோ பந்தாத் மோச யிஷ்யதி’ இதி ஸ்மரந் ஸுகேந கர்ம யோகம் ஏவ குருஷ்வ இத்யர்தஃ.–ஸ்ரீ கீதா பாஷ்யத்தில் ஸ்வாமி ஸ்ரீ ஸூ க்திகள்

——————————————————-

ஸ்ரீ மன் நபீஷ்ட வரத த்வா மஸ்மி சரணம் கத
ஏதத் தேஹா வசாநே மாம் த்வத் பாதம் ப்ராப்ய ஸ்வயம் –4-

ஸ்ரீ யபதியே -வேண்டிய வரங்களை அளிப்பவனே-உன்னை சரன் அடைந்தவனாய் இருக்கிறேன்
என் உயிர் இந்த உடலைப் பிரிந்தவுடன் நீயாகவே என்னை உன் திருவடிகளில் அடைவிப்பாயாக

ஸ்ரீ மன் நபீஷ்ட வரத-அகலகில்லேன் இறையும்- என்று நித்ய வாசம் செய்யும் பெரிய பிராட்டியார் உடன்
ஆஸ்ரிதர்களுக்கு இஷ்டமான பலங்களை அருளும் ஸ்ரீ வரத
த்வா மஸ்மி சரணம் கத -தேவரீரை அடியேன் சரண் அடைந்தேன்
ஏதத் தேஹா வசாநே மாம் த்வத் பாதம் ப்ராப்ய ஸ்வயம் –சரீரத்தின் இறுதி காலத்தில் தேவரீர்
திருவடிகளை தேவரீரே நிர்ஹேதுகமாக தந்து அருள வேண்டும் –
ஏதத் தேஹ அவசானே-/ திருப்த பிரபத்தி -ஆர்த்த பிரபத்தி /

புகல் உலகில் இல்லாது பொன்னருள் கண்டு உற்றவருக்கு
மகலகிலா வன்பர்க்கும் அன்றே தன்னருள் கொடுத்துப்
பகலதனால் பழம் கங்குல் விடிவிக்கும் பங்கயத்தாள்
அகலகிலேன் என்று உறையும் அத்திகிரி அருள் முகிலே –8-

சரணமாகும் தனதாள் அடைந்தார்கட்க்கு எல்லாம் மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான்
பிரபத்தி சர்வாதிகாரம் -சமோஹம் சர்வ பூதேஷூ –

தன் நினைவில் விலக்கின்றித் தன்னை நண்ணார் நினைவு அனைத்தும் தான் விளைத்தும் -விலக்கு நாதன்
என் நினைவை இப்பவத்தில் நின்றும் மாற்றி இணை அடிக் கீழ் அடைக்கலம் என்று எம்மை வைத்து முன்
நினைவால் யாம் முயன்ற வினையால் வந்த முனிவயர்ந்து முத்தி தர முன்னே தோன்றி நன்
நினைவானாம் இசையும் காலம் இன்றோ நாளையோ ஓ வென்று நகை செய்கின்றான் -அதிகார சுருக்கு -௪௯-47-

ஒன்றே புகல் என்று உணர்ந்தவர் காட்டத் திருவருளால்
அன்றே யடைக்கலம் கொண்டனம் அத்திகிரித் திருமால்
இன்றே இசையின் இணை யடி சேர்ப்பர் இனிப் பிறவோம்
நன்றே வருது எல்லாம் நமக்கு பரம் ஒன்றிலதே —அம்ருத ரஞ்சனி -18–

நமஸ்காரம் அளவில் பரம புருஷார்த்தத்தை-அப்போதே கொடு உலகு காட்டாதே கொழுஞ்சோதி உயரத்து
கூட்டரிய திருவடி கூட்டி அருள்வார் -என்றபடி –

————————————————–

த்வத் சேஷத்வே ஸ்திரதியம் த்வத் ப்ராப்த்யேக பிரயோஜனம்
நிஷித்த காம்ய ரஹிதம் குரு மாம் நித்ய கிங்கரம் –5-

உமக்கே சேஷ பூதன் என்பதிலும் -உம்மை அடைந்து கைங்கர்யம் செய்வதே ஒரே புருஷார்த்தம் என்பதிலும் உறுதியான விசுவாசமும்
நிஷித்த அனுஷ்டானங்கள் செய்யாமலும் உமக்கு யாவதாத்ம பாவி சேஷ பூதனாக இருக்கும் படி அடியேனை கொண்டு அருள வேண்டும்

த்வத் சேஷத்வே ஸ்திரதியம் -அடைக்கலமான அடியேனை -தேவரீருக்கு சேஷ பூதனாய் இருப்பதில் உறுதியான புத்தி யுடையேனாக இருக்கிறேன்
த்வத் ப்ராப்த்யேக பிரயோஜனம் -தேவரீர் திருவடிகளை அடைவதே முக்கிய பலம் என்றும்
நிஷித்த காம்ய ரஹிதம் -சாஸ்திரங்களில் விலக்கப் பட்ட -அல்ப அஸ்திர காம்ய கர்மங்களில் ஆசை அற்றவனாகவும் -சம்பந்தம் அற்றவனாகவும்
குரு மாம் நித்ய கிங்கரம் -எப்போதும் தாச விருத்தி செய்பவனாகவும் -இப்படி நிலை நின்ற சேஷ பூதனாக ஆக்கி அடிமை கொள்ள வேண்டும் –
சேஷத்வ அனுசந்தான பூர்வகமாக நித்ய கிங்கரனாக – இஷ்ட பிராப்தியையும் அநிஷ்ட நிவ்ருத்தியையும் -பிரார்த்திக்கிறார்-

———————————————–

தேவீ பூஷண ஹேத்யாதி ஜூஷ் டஸ்ய பகவம்ஸ்தவ
நித்யம் நிரபரா தேஷூ கைங்கர்யேஷூ நியுங்ஷவ மாம் –6-

பகவானே -திவ்ய பிராட்டிமார்கள் -திவ்ய ஆபரணங்கள் -திவ்ய ஆயுதங்கள் -இவற்றுடன் கூடிய உன்னுடைய
குற்றம் அற்ற -வழு இலா -கைங்கர்யங்களிலே -எப்போதும் என்னை நியமித்து அருள வேண்டும்

தேவீ பூஷண ஹேத்யாதி -திவ்ய மஹிஷிகள் -திவ்ய பாஷாணங்கள் -திவ்ய ஆயுதங்கள் -இவை அனைத்தையும்
ஜூஷ் டஸ்ய பகவம்ஸ்தவ –அடைய பெற்று -ஞான பல ஐஸ்வர்ய வீர்ய சக்தி தேஜஸ் நிறைந்த சர்வேஸ்வரன்
சர்வ காரண பூதன்-ரக்ஷணம் சம்ஹாரம் ஸ்ருஷ்ட்டி அனைத்தையும் செய்து அருளி -அனைத்தும் சரீரமாக கொண்டு உள்ளும் புறமும் வியாபித்து –
பிணக்கற அறுவகைச் சமயமும் நெறி யுள்ளி யுரைத்த கணக்கறு நலத்தனன் அந்தமில் ஆதி யம் பகவன் –
நந்தா விளக்கே அளத்தற்கு அரியாய் -/ உணர் முழு நலம் /சூழ்ந்து அதனில் பெரிய சுடர் ஞான இன்பம் /
பரத்வ உபயுக்தங்களாக இந்த ஆறு குணங்களும் உண்டே
ஞானம் ஆவது -எப்போதும் ஸ்வத ஏக காலத்தில் பஞ்ச இந்த்ரியங்களால் அறியக் கூடியவற்றை எல்லாம் சாஷாத்கரிக்கை
அஜடம் ஸ்வாத்ம சம்போதி நித்யம் சர்வா வகாஹநம்
சக்தி யாவது சங்கல்ப மாத்திரத்திலே அனைத்து உலகுகடக்கும் உபாதானம் ஆவது
ஜகத் ப்ரக்ருதி பாவோ யஸ் சக்தி ப்ரகீர்த்தித
பலம் -அனைத்தையும் இளைப்பின்று தாங்கும் தன்மை -தாரண சாமர்த்தியம்
ஐஸ்வர்யம் தடை இல்லாமல் ஸ்வ தந்திரமாக எங்கும் செல்லும் சங்கல்பம் உடைமை
கர்த்ருத்வம் நாமயித்தஸ்ய ஸ்வாதந்தர்ய பரிப் ரும்ஹிதம் ஐஸ்வர்யம் நாம தத் ப்ரோக்தம் குண தத்வார்த்த சிந்தகை
வீர்யம் -ஸ்ருஷ்டித்து உள்ளும் புறமும் வியாபித்து விகாரம் இன்றிக்கே இருக்கை
தஸ்ய உபாதான பாவேபி விகார விரஹோ ஹிய வீர்யம் நாம குணஸ் சோயம் அச்யுதத்வாபரா ஹ்வய -அவிகாராய -என்றவாறு
தேஜஸ் -ஆஸ்ரிதர் தாபங்களை தீர்த்தும் ஆஸ்ரித விரோதிகளை நிரசிக்கும் தேஜஸ் -சகாயத்தை அபேக்ஷியாது இருக்கை –
செழும் குணங்கள் இரு மூன்று உடையார் -திருச்சின்ன மாலை -5-
நித்யம் நிரபரா தேஷூ கைங்கர்யேஷூ நியுங்ஷவ மாம் -ஒழி வில் காலம் எல்லாம் வழு விலா அடிமை அடியேனுக்கு கொடுத்து அருள வேணும்

———————————————–

மாம் மதீயம் ச நிகிலம் சேதன அசேதனாத்மகம்
ஸ்வ கைங்கர்ய உபகரணம் வரத ஸ்வீகுரு ஸ்வயம் –7-

ஸ்ரீ வரதனே -அடியேனையும் -அடியேனுடைய சேதன அசேதன உடைமைகள் அனைத்தையும்
தேவரீருடைய கைங்கர்ய உபகரணமாக தேவரீராகவே ஏற்றுக் கொண்டு அருள வேண்டும் –

—————————————————-

த்வதேக ரஷ்யஸ்ய மம த்வமேவ கருணாகர
ந ப்ரவர்த்தய பாபாநி ப்ரவ்ருத்தாநி நிவர்த்தய –8–

ஸ்ரீ கருணாகரனே-தேவரீர் ஒருவராலேயே ரஷ்ய வர்க்கங்களின் ஒன்றான அடியேன் இடம்
நீயாகவே பிரதிபந்தகங்களை வராமல் தடுத்து அருளி
பிராமாதிகமாக வந்த பிரதிபந்தகங்களையும் விலக்கி அருளுவாயாக

————————————————–

அக்ருத்யா நாம் ச கரணம் க்ருத்யா நாம் வர்ஜனம் ச மே
க்ஷமஸ்வ நிகிலம் தேவ ப்ரணதார்த்தி ஹர ப்ரபோ –9-

பிரபுவே ஆஸ்ரித விரோதி நிரசன சீலனே அடியேன் செய்த-அக்ருத்ய கரணங்களையும் –
அக்ருத்ய செயல்களையும்-க்ருத்ய அகரணங்களையும் – செய்யாத க்ருத்ய செயல்களையும் –
அனைத்தையும் பொறுத்து அருளுவாய்

அக்ருத்யா நாம் ச கரணம் -செய்யத் தகாதவற்றை செய்தும் –
க்ருத்யா நாம் வர்ஜனம் ச மே -செய்ய வேண்டியவைகளை செய்யாமல் விட்டும்
க்ஷமஸ்வ நிகிலம் தேவ ப்ரணதார்த்தி ஹர ப்ரபோ -லீலையாக ஜகாத் ஸ்ருஷ்டியாதி செய்பவனே அடியேனுடைய
இவை அனைத்தையும் பொறுத்து அருள வேணும்
லோகவத்து லீலா கைவல்யம் -அகில புவன ஜென்ம ஸ்தேம பங்காதி லீலே-
துன்பமும் இன்பமுமாகிய செய்வினையாய் உலகங்களுமாய் மன் பல் உயிர்களுமாகி பல பல மாய மயக்குகளால் இன்புறு
இவ் விளையாட்டுடையானைப் பெற்று ஏதும் அல்லல் இலேனே -திருவாய் -3-10-7-
உலகம் யாவையும் தாமுள வாக்காலும் நிலை பெறுத்தலும் நீக்கலும் நீங்கலா அலகிலா விளையாட்டுடையார் அவர் தலைவர் அன்னவர்க்கே சரண் நாங்களே -கம்பர்
மநோ வாக் காயைர் அநாதி கால ப்ரவ்ருத்த அநந்த அக்ருத்ய கரண க்ருத்ய அகரண பகவத் அபசார பாகவத அபசார அஸஹ்யா அபசார ரூப
நானாவித அநந்த அபசாரான் ஆராப்த கார்யான் அநாரப்த கார்யான் க்ருதான் கரிஷ்யமாணாஞ்ச சர்வ அநசேஷத க்ஷமஸ்வ —

———————————————

ஸ்ரீ மான் நியத பஞ்சாங்கம் மத் ரக்ஷண பரார்ப்பணம்
அசீ கரத் ஸ்வயம் ஸ்வஸ் மின் அதோ அஹமிஹ நிர்பர –10-

ஸ்ரீ யபதியே -அவசியம் தேவையான -ஐந்து அங்கங்களை யுடைய என்னைக் காப்பாற்றும் பொறுப்பை
ஒப்படைத்தலை -உம்முடன் நீராகவே செய்து அருளிக் கொண்டீர் –
ஆகையால் அடியேன் இவ்விஷயத்தில் பொறுப்பு ஏதும் இல்லாமல் இருக்கிறேன் –

ஸ்ரீ மான் நியத பஞ்சாங்கம்-திருமாலே -நீங்காத ஐந்து அங்கங்களை யுடையதான
மத் ரக்ஷண பரார்ப்பணம் -அடியேனுடைய ரக்ஷண பர சமர்ப்பணத்தை
அசீ கரத் ஸ்வயம் ஸ்வஸ் மின் -உம்மிடத்தில் நீரே செய்து அருளினீர்
அதோ அஹமிஹ நிர்பர –ஆகையால் அடியேனுடைய ரக்ஷண விஷயத்தில் பொறுப்பு இல்லாதவனாக இருக்கிறேன்
நிஷே பா பர பர்யாயோ ந்யாஸ பஞ்சாங்க சம்யுத ஸந்த்யாசஸ்த்யாக இது யுக்தச் சரணாகத திரித்யபி -ஸ்ரீ லஷ்மி தந்திரம் -17-74-
பயம் கேட்டு மார்பிலே கை வைத்து உறங்க பிராப்தி என்றபடி

—————————————–

இதி ஸ்ரீ ந்யாஸ சதகம் சம்பூர்ணம் –

கவி தார்க்கிக ஸிம்ஹாய கல்யாண குண சாலிநே
ஸ்ரீ மதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம –

கவிகளுக்கும் தார்க்கிகர்களுக்கும் ஸிம்ஹம் போன்றவரும் -மங்களமான கல்யாண குணங்கள் நிறைந்தவரும்
ஸ்ரீ மான் ஆனவரும் ஸ்ரீ வேங்கடேசருமான ஆச்சார்யரை ஆஸ்ரயித்து உஜ்ஜீவிப்போம்

—————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேதாந்த தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ அஷ்ட புஜகாஷ்டகம் –ஸ்ரீ வேதாந்த தேசிகாசார்யர் ஸ்வாமிகள்-

January 31, 2017

ஸ்ரீ மான் வேங்கட நாதார்ய கவி தார்க்கிக கேசரீ
வேதாந்தா சார்ய வர்யோ மே சந்நிதத்தாம் சதா ஹ்ருதி –

கவி தார்க்கிக சிம்ஹாய கல்யாண குண சாலினே
ஸ்ரீ மதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம –

சீர் ஓன்று தூப்புல் திரு வேங்கடமுடையான்
பார் ஒன்றச் சொன்ன பழ மொழியுள் ஓர் ஓன்று
தானே யமையாதோ தாரணியில் வாழ்வார்க்கு
வான் ஏறப் போம் அளவும் வாழ்வு –

——————————————————

ஸ்ரீ பேயாழ்வார் -தொட்ட படை எட்டும் தோலாத வென்றியான் -அட்ட புயகரத்தான் அந்நான்று
குட்டத்துக் கோள் முதலை துஞ்சக் குறித்து எறிந்த சக்கரத்தான் தாள் முதலே நங்க ட்க்கு சார்வு -என்று
ஸ்ரீ கஜேந்திர ரக்ஷகனாக அருளிச் செய்த படி -இவரும்-ஸ்ரீ கஜேந்திர ரஷாத் வரிதம்-என்று உபக்ரமித்து அருளுகிறார்
அஷ்ட புயகரம் -அஷ்ட புயவகரம் -க்ருஹம் -கரம் -அஷ்ட புஜ பெருமாள் எழுந்து அருளி இருக்கும் திவ்ய தேசம் -என்றுமாம் –
அஷ்ட புஜாஸ் பதேச -அஷ்ட புஜாஸ்பதம் -திவ்ய தேச திருநாமம் என்றும் அதற்கு ஈசன் என்றும் இரண்டாம் ஸ்லோகத்தில் அருளிச் செய்கிறார் –

————————–

கஜேந்திர ரஷாத் வரிதம் பவந்தம்
க்ராஹை ரிவாஹம் விஷயைர் விக்ருஷ்ட
அபார விஞ்ஞாத தயா நுபாவம்
ஆப்தம் சதாம் அஷ்ட புஜம் ப்ரபத்யே –1-

எம்பெருமானே முதலைகள் போன்றுள்ள விஷ்யங்களினாலே இழுக்கப் பட்ட நான் -ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானைக் காத்து அருளுவதில் பதற்றம் யுடையவனாய்
அளவற்ற ஞானத்தையும் தயையும் சக்தியும் யுடையவனாய் -நல்லவர்களுக்கு விஸ்வாச நீயானாய் -அஷ்ட புஜனான உன்னை தஞ்சமாகப் போற்றுகிறேன் –
சம்புத்தியை வருவித்திக் கொண்டு -பவந்தம் -என்ற சொல் -ஐந்து முதலைகளால் அடர்ப்புண்டு உள்ளேனே-
அடியேனுடைய ஆர்த்தியை அறிவீரே–அறிந்து வைத்தும் இரங்கி அருள நைர்க்ருண்யமும் உண்டே-ஞானமும் தயையும் இருந்து மேலே அகற்ற வல்ல சக்தியும் உண்டே –
சர்வஞ்ஞ அபி ஹி விஸ்வேசஸ் சதா காருணிகோபி
சன் சம்சார தந்த்ர வாஹித்வாத் ரஷ்ய அபேக்ஷம் பிரதீஷதே
ஆகையால் அடியேனுடைய அபேக்ஷை இல்லை என்று ஒரு கண் அழிவு சொல்ல ஒண்ணாத படி ஆர்த்தனாய் இதோ சரணம் புகுகிறேன் என்கிறார் –

—————————————-

த்வதேக சேஷோஹ மநாத்ம தந்த்ர
த்வத் பாத லிப்சாம் திசதா த்வயைவ
அசத் ஸமோப்யஷ்ட புஜாஸ் பதேச
சத்தா மிதாநீம் பிரதிலம்பி தோஸ்மி –2-

அஷ்ட புயகரத்து அம்மானே -தேவரீருக்கே சேஷ பூதனாய் -ஸ்வ தந்த்ரன் அற்றவனாய் இருக்கிற அடியேன் இது வரையில்
அசத் கல்பனாய் இருந்தேனே யாகிலும் தேவரீருடைய திருவடிகளில் ருசியைத் தந்து அருளா நின்ற தேவரீராலே
இப்போது சத்தை பெறுவிக்கப் பட்டவனாய் இருக்கிறேன் –
மருவித் தொழும் மனமே தந்தாய் -என்றும் -இசைவித்து என்னை யுன் தாளிணைக் கீழ்
இருத்தும் அம்மானே -என்றும் -என் உணர்வின் உள்ளே இருத்தினேன் அதுவும் அவனது இன்னருளே -என்றும்
தெரிந்து உணர்வு ஓன்று இன்மையால் தீ வினையேன் வாளா இருந்து ஒழிந்தேன் கீழ் நாள்கள் எல்லாம் -கண்டவா திரிந்து அசத் கல்பனாக திரிந்தேன்
உன் உடைமையை வீட்டுக் கொடுக்க்காமல் ஸ்வாமியான நீயே மடி மாங்காய் இட்டு பிடிக்குமா போலே
தேவரீர் திருவடிகளில் ருசியைப் பிறப்பித்து இப்போது சத்தை பெறுவித்து அருளினை படியால் உய்ந்து போனேன் என்றவாறு –
அஷ்ட புஜ ஆஸ்பதத்துக்கு ஈசனே -என்று விளிக்கிறார்-அஷ்ட புஜ என்று விளிக்காமல்
திருமங்கை ஆழ்வார் – திரிபுரம் மூன்று எரித்தானும் –பெரிய திருமொழி -2–8-முன்பு திரு விட வெந்தை பதிகத்தில்
திருத் தாயார் திரு வாக்கால் அருளிச் செய்து துடிக்க விட்டதை திரு உள்ளம் கொண்டு
பிற்பட்டோமே என்று திரு உள்ளம் நொந்து -அடியார்களுக்கு உதவின குணங்களையும் வடிவு அழகையும் பிரகாசிக்கப் படுத்தி
செம் பொன் இலங்கு வலங்கை வாளி திண் சிலை தண்டொடு சங்கம் ஒள் வாள் உம்பர் இரு சுடர் கேடக ஓண் மலர் பற்றி
அஷ்ட புஜனாய் பரம போக்யனாய் சேவை சாதித்து அருளினான்
பரகால நாயகி நிலையிலே ஆழ்வாரும் சேவித்து அனுபவிக்கிறார் -ஆழியோடும் பொன்னார் சார்ங்கம் யுடைய அடிகளை இன்னார் என்று அறியேன்
ஸ்வ புத்தியால் அறிய முடியாது -சோதி வெள்ளத்தில் ஆழ்ந்ந்து அன்றோ இருந்தார் -பர்த்தாவாக இருக்கக் கூடும் என்ற
நினைவால் வெட்க்கியும் இருக்க -நீர் யார் என்று கேட்கவும் மாட்டாமல் –
வேறு ஒருவரை கேட்க்கும் பாவனையாக இவர் யார் கொல் –நான் தான் அட்ட புயகரத்தேன் -என்கிறார் -அஷ்ட புஜன் என்று சொல்லாமல் –
அஷ்ட புஜ ஷேத்ரத்துக்கு அதிபதி –சாதாரண பிரஜை என்றுமாம் -இதனாலே அஷ்ட புயகரத்தான் -என்கிறார் –

——————————————-

ஸ்வரூப ரூபாஸ்த்ர விபூஷணாத் யை
பரத்வ சிந்தாம் த்வயி துர் நிவாராம்
போகே ம்ருதூபக்ரம தாம பீப் சன்
சீலாதி பிர் வாரய சீவ பும்ஸாம் –3–

அஷ்ட புஜ பெருமானே -ஸ்வரூபம் -திவ்ய மங்கள விக்ரஹம் -திவ்ய ஆயுதங்கள் -திவ்ய பூஷணங்கள் -இவை முதலான வற்றால்
தேவரீர் இடத்தில் மானிடர்களுக்கு அவசியம் உண்டாக்க கூடிய பரத்வ சிந்தையை சாத்மிக்க சாத்மிக்க
அனுபவிப்பிக்க வேண்டும் விருப்பம் யுடையீர் போலே
ஸுசீல்ய வாத்சல்யாதி குணங்களை காட்டித் தந்து -தடுத்து -அருளினீர் –
பரத்வ ஸுபலங்கள் இரண்டும் பொலிய அஷ்ட புஜன் நின்று சேவை சாதித்து அருளினாலும் பரத்வத்தில் காட்டில் ஸுலபயமே விஞ்சி
இருப்பதற்கு ஒரு ஹேது விசேஷத்தை உல்லேகிக்கிறார்-
திவ்ய மங்கள விக்ரஹமோ -ரூபமே வாஸ்ய ஏதன் மஹிமானம் வியாஸஷ்டே -என்ற கணக்கில் பரத்வத்தை கோள் சொல்லி தருகின்றது –
செம் பொன் இலங்கு வலங்கை வாளி திண் சிலை தண்டொடு சங்கம் ஒள் வாள் உம்பர் இரு சுடர் ஆழியோடு கேடக ஓண் மலர்
-என்னப் பட்ட அஷ்ட திவ்ய ஆயுதங்களும்
கிரீட மகுட சூடாவதாம்ச மகர குண்டல க்ரைவேயக ஹார கேயூர கடக ஸ்ரீ வத்ச கௌஸ்துப முக்தா தாமா உதர பந்தன பீதாம்பர காஞ்சீ குண
நூபுராத்யாதி அபரிமித திவ்ய பூஷணங்களும் –
வக்ஷஸ் ஸ்தல்யாம் துளசி கமலா கௌஸ்துபைர் வைஜயந்தீ சர்வே சத்வம் கதயதிதராம் ரங்க தாம்ந -பட்டர்
இதனால் இவை எல்லாம் பரத்வ பிசுனங்களாய் இரா நின்றன -இவன் பராத்பரன் அல்லனோ
-இவனையே நாம் அணுகுவது என்று கூச வேண்டி இருக்குமே
கூசினவர்கள் -வள வேழ் உலகு தலை எடுத்து பிற் காலிப்பர் -அங்கனே ஆகாயமைக்கு அவன் தனது ஸுசீல்ய வாத்சல்யயாதி குணங்களைக் காட்டி
ஈடு படுத்திக்க கொள்வான் -அவற்றையே முற்றிலும் ஏக காலத்திலேயே காட்டி விட்டால் பரத்வத்தை பூர்ணமாக அனுபவிக்க முடியாதே
-பரத்வத்தை மட்டும் காட்டிப் போந்தால் அதை அனுபவிக்க அதிகாரிகள் இல்லை
-சீலாதி எளிமை குணங்கள் காட்டில் எரிந்த நிலா போலே அனுபவிக்காமேலே ஒழியும்
இவன் பரம சதுரன் ஆகையால் சாத்மிக்க சாத்மிக்க அனுபவிப்பிக்க வேண்டி-எளிமை குணங்களை க்ரமேண காட்டி அருளும் படியை அருளிச் செய்கிறார்
போகே ம்ருதூபக்ரமதாம் அபீப்சன் -பரத்வத்தை பிரகாசிக்க ஒட்டாமல் சீலாதிகளாலே மறைப்பதற்கு காரணம் சொல்லுகிறது
முந்துற முன்னம் பரத்வத்தை அனுபவிக்கப் புக்கால் பெரு வெள்ளத்தில் அமிழ்ந்து போம்படியாம் அத்தனை –

—————————————————

சக்திம் சரண் யாந்தர சப்த பாஜாம்
சாரஞ்ச சந்தோல்ய பலாந்தராணாம்
த்வத் தாஸ்ய ஹேதோஸ் த்வயி நிர்விசங்கம்
நியஸ்தாத் மநாம் நாத பிபர்ஷி பாரம் –4–

எம்பெருமானே ரக்ஷகர்கள் என்று பெயர் சுமந்து இருக்கும் தேவதாந்தரங்களின் சக்தியையும்
இதர ஷூத்ர பலன்களின் சாரத்தையும் நிறுத்துப் பார்த்து
சார தமமான தேவரீருடைய கைங்கர்யத்தை பெறுவதற்காக தேவரீர் இடத்திலே நிஸ்ஸங்கமாக
சரணாகதி செய்தவர்களின் பாரத்தை தேவரீர் ஏற்றுக் கொள்ளுகிறது
ந ஸம்பதாம் சமா ஹாரே விபதாம் விநிவர்த்தனே சமர்த்தோ த்ருச்யதே கச்சித் தம் விநா புருஷோத்தமம் -என்றும்
நஹி பாலன சாமர்த்தியம் ருதே ஸர்வேச்வரம் ஹரீம்
தேவரீர் திருவடிகளில் அத்தாணி சேவகமே ஸ்வரூப அனுரூபம் என்று தெளிந்து தேவரீர் திருவடிகளையே தஞ்சமாகப் பற்றினவர்களுக்கு
தேவரீர் சகல வித ரக்ஷண துரந்தரராக ஆகின்றது என்றார் ஆயிற்று –

————————————————-

அபீதி ஹேதோர நு வர்த்த நீயம்
நாத த்வத் அந்நியம் ந விபாவயாமி
பயம் குதஸ் ஸ்யாத் த்வயி சாநுகம்பே
ரஷா குதஸ் ஸ்யாத் த்வயி ஜாத ரோஷே–5-

அஷ்ட புஜ பெருமாளே -தேவரீரைக் காட்டிலும் வேறு ஒரு வியக்தியை-அபய சித்தியின் பொருட்டு ஆஸ்ரயிக்க தக்கதாக நான் அறிகின்றிலேன் –
தேவரீர் தயாளுவாக இருக்கும் போது-ஆஸ்ரிதர்களுக்கு -எங்கு இருந்து பயம் உண்டாகும்
-தேவரீர் நிக்ரஹிக்கத் தொடங்கினால்-எங்கிருந்து ரக்ஷை பெற முடியும் –
களைவாய் துன்பம் களையாது ஒழிவாய் களை கண் மற்றிலேன் -என்றும்
அபீதி ஸ்தவத்திலும் -தொடக்கத்தில் –அபீதிரிஹ யஜ்ஜூஷாம் யதவதீரிதா நாம் பயம் பயபாய விதாயிநோ ஜகதி யந்நிதேச ஸ்திநா -என்றும்
அருளிச் செய்தது போலே -சம்சார பயம் முதலானவற்றை போக்க வேணும் என்றால் தேவரீர் போக்கலாம் ஒழிய அல்லாதார் போக்க அவகாசம் ஏது –
அவர்கள் தங்களுக்கு ஏற்படும் பயத்தையே போக்கிக் கொள்ள மாட்டாமல் தேவரீரையே தஞ்சமாக பற்ற -எங்கள் பயத்தை போக்க என்ற பிரசக்தியும் உண்டோ
நின் அருளே புரிந்து இருந்தேன் -என்று இருக்கும் எங்களுக்கு பயம் தானும் உண்டாக மாட்டாது
தேவரீர் யார் பக்கல் சீறி அருளுகிறதோ அவர்கள் வேறு யார் இடத்திலும் ரக்ஷை பெற முடியாதே
-ப்ரஹ்மா ஸ்வயம்பூச் சதுரா நநோ வா —த்ராதும் ந ஸக்தா யுத்தி ராம வத்யம் –

————————————————————

த்வத் ஏக தந்திரம் கமலா ஸஹாய
ஸ்வே நைவ மாம் ரஷிதுமர்ஹஸி த்வம்
த்வயி ப்ரவ்ருத்தே மம கிம் பிரயாசை
த்வய அப்ரவ்ருத்தே மம கிம் பிரயாசை -6–

ஸ்ரீ லஷ்மீ பதியான அஷ்ட புஜ பெருமாளே தேவரீருக்கே அடைக்கலமான அடியேனை -தேவரீர் ஸ்வயமாகவே ரஷிக்கக் கடவீர் –
அடியேனைக் காத்து அருள தேவரீர் பிரவர்த்திக்கும் அளவில் என்னுடைய பிரயாசங்கள் அகிஞ்சித் கரங்கள்
-தேவரீர் பிரவர்த்தியாத அளவிலும் அப்படியே –
கீழ் ஸ்லோகத்தில் அநந்ய உபேயத்வம் அனுசந்தித்து இதில் அநந்ய உபாயத்வம் அனுசந்திக்கப் படுகிறது –
ஸ்வ ப்ராப்தவ் ஸ்வயமேவ சாதனதயா ஜோ குஹ்யமாண ஸ்ருத்வ -என்றும்
நிதானம் தத்ராபி ஸ்வயம் அகில நிர்மாண நிபுண -என்றும் சொல்லும் சாஸ்திரார்த்தை நிஷ்கர்ஷித்து அருளி
தம் பக்கலில் கைம்முதல் இல்லாமையையும் -எவ்விதமான கைம்முதலையும் ப்ரதீஷியாமல் ரஷித்து
அருளுகைக்கு ஈடாக அத்தலையில் பூர்த்தியையும் அருளிச் செய்கிறார் யாயிற்று
இந்த அர்த்தத்தை ஸ்ரீ வரதராஜ பஞ்சாசத்தில் -கிம் வா கரீச -க்ருபணே மயி ரக்ஷணீயே தர்மாதி பாஹ்ய சஹகாரி கவேஷணேந
-நந்வஸ்தி விஸ்வ பரிபாலன ஜாகரூகஸ் சங்கல்ப ஏவ பவதோ நிபுணஸ் ஸஹாய -என்கிற ஸ்லோகத்தில் அருளிச் செய்தார் –
கமலா ஸஹாய -தேவரீர் ரஷிக்க ஸஹாய அபேக்ஷை பிரசக்தியே இல்லை -ஒரு கால் உண்டாகில்
பிராட்டியையே ஸஹாயமாகக் கொள்ள அடுக்கும் என்று ஸூசிப்பிக்கிறார்
நீரிலே நெருப்பு கிளருமா போலே குளிர்ந்த திரு உள்ளத்திலே அபராதத்தாலே சீற்றம் பிறந்தால் பொறுப்பிக்குமவள் பிராட்டி ஆகையால்
-அந்த புருஷகார பலத்தால் ரக்ஷணம் தப்பாது என்று இருக்கிறார் –
ஸ்வே நைவ -என்றது என்னுடைய பிரவ்ருத்தி லேசத்தையும் ப்ரதீஷியாதே ஸ்வயமாகவே என்றபடி –
அகதிம் சரணாகதம் ஹரே -க்ருபயா கேவல மாத்மஸாத்குரு-என்று ஸ்ரீ ஆளவந்தார் அனுசந்தித்து அருளியது படி
நாம் கிருபாவாளாகிலும் பேறு உம்மத்தான பின்பு உம்முடைய ப்ரவ்ருத்தியும் வேண்டி இருந்தது காணும் என்ற அவன் திரு உள்ளமாக
தம்முடைய பிரவ்ருத்தி ஸர்வதாத்மந அகிஞ்சித்க்கரம் என்று உத்தரார்த்தத்தில் அருளிச் செய்கிறார் –
வனத்திடை ஏரியாம் வண்ணம் இயற்றும் இது வல்லால் மாறி யார் பெய்கிற்பார் மற்று–ஸ்ரீ பூதத்தாழ்வார்
எம்பெருமான் கை கொடுத்து அருள ப்ரவர்த்திக்கும் அளவில் அவனுடைய பிரயாசங்களுக்கு பலன் ஒன்றும் இல்லை
எம்பெருமான் பிரவர்த்தியாத அளவில் இவன் எத்தனை பிரயாசங்கள் பட்டாலும் பலன் ஒன்றும் இல்லையாம்
த்வயி ரக்ஷதி ரஷகை கிம் அந்யை -என்று காமாஸிகா ஸ்துதி யிலும் அருளிச் செய்தார்
உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன் –

———————————————

சமாதி பங்கேஷ் வபிஸம்பதத் ஸூ
சரண்ய பூதே த்வயி புத்தகஷ்யே
அபத்ரபே ஸோடு மகிஞ்ச நோஹம்
தூராதி ரோஹம் பத நஞ்ச நாத –7-

அஷ்ட புஜ பெருமாளே சர்வ சரண்யரான தேவரீர் -காக்கும் இயல்பினராய் இருக்கையாலே -உபாய அனுஷ்டான விரோதிகளான
பாபங்கள் மிடை தரும் அளவில் -நமக்குத் தகாத பக்தி யோகாதிகளில் ஏறுவதும் சறுக்கி விழுவதும் ஆகிற கஷ்டங்களை சகிக்க வெட்கப் படுகிறேன்
ஸ்வ ப்ரவ்ருத்திகள் சர்வாத்மநா ச அபாயங்கள் ஆகையால் அவற்றுக்கு இடையூறுகளில் விளைந்தே தீரும்
பத நாந்தாஸ் சமுச்ச்ரயா -என்ற கணக்கிலே ஆரூடபதிதனாக ப்ராப்தமாகக் கூடும்
சித்த உபாய பூதரான தேவரை வரித்து -நிர்ப்பரோ நிர்ப்பயோஸ்மி-என்று இருக்கக் கடவனான அடியேன்
ஒரு கால் பக்தி யோகத்தில் ஆரோஹண நிலையையும் அடுத்தபடி பாப பிராஸுர்யத்தாலே கீழ் விழும் நிலைமையையும் ஸஹிக்க கில்லேன்
உன் கை பார்த்து இருக்குமதுக்கு மேற்பட்ட க்ஷேமம் இல்லை என்று கொண்டேன் என்றார் யாயிற்று –

———————————————————–

ப்ராப்தா பிலாஷம் த்வத் அனுக்ரஹாந் மாம்
பத்மா நி ஷேவ்யே தவ பாத பத்மே
ஆ தேஹ பாதாதபராத தூரம்
ஆத்மாந்த கைங்கர்ய ரசம் விதேயா–8-

வாரீர் அஷ்ட புஜ பெருமாளே -பெரிய பிராட்டியார் விரும்பத் தக்க தேவரீருடைய பாதார விந்தத்தில்
தேவரீருடைய அனுக்ரஹம் அடியாகவே ருசி கொண்ட அடியேனை இவ்வுடல் விழும் அளவும்
பகவத் அபசார பாகவத அபசாராதி வைதேசிகனாயும் -யாவதாத்மபாவி கைங்கர்ய சக்தனாயும் செய்து அருளாக கடவீர் –
ஸ்வேவ தேவ வஷட் க்ருதம் த்வாம் ஸ்ரியோர் ஹகாமயே -என்று ஸ்ரீ பட்டர் ஸ்ரீ ரெங்க ராஜ ஸ்த்வத்தில்
நைச்சியம் அனுசந்தித்த கணக்கில் பூர்வார்த்தத்தில் அனுசந்திக்கிறார் –
பத்மா நி ஷேவ்யே தவ பாத பத்மே-தேவர்களுக்கு சேஷமான புரோடாசத்தை நாய் விரும்புமா போலே அன்றோ
பெரிய பிராட்டியார் விரும்பக் கடைவதான தேவரீருடைய பாதார விந்தத்தை அடியேன் விரும்புவது
ஆனால் நானாக விரும்பிற்றிலேன் -தேவரீராக விரும்பச் செய்த்தது அத்தனை –
இம்மஹா உபகாரம் செய்து அருளினது போலவே யாவச் சரிர பாதம் அபசார பிரசக்திகள் ஏற்படாத படியும்
நித்ய கைங்கர்ய குதூகலம் குன்றாத படிக்கும் அனுக்ரஹித்து அருள வேண்டும் என்கிறார் யாயிற்று –

—————————————————

ப்ரபந்ந ஜன பாதேயம் ப்ரபித் ஸூநாம் ரசாய நம்
ஸ்ரேயஸே ஜகதா மேதத் ஸ்ரீ மத் அஷ்டபுஜாஷ்டகம் –9-

இந்த ஸ்ரீ அஷ்ட புஜாஷ்டகமான பிரபந்தம் பிரபன்னர்களுக்கு வழித் துணையாகவும்
பிரபன்னர்களாக விரும்புவர்களுக்கு ரசாயனமாகவும் -ஜகத்துக்கு ஸ்ரேயஸ் கரமாகவும் இருக்கும் –
கச்சதாம் தூரமத்வாநம் த்ருஷ்ணா மூர்ச்சித சேதஸாம் பாதேயம் புண்டரீகாக்ஷ நாம சங்கீர்த்தன அம்ருதம் –
ப்ரபித் ஸூநாம்–பிரபத்தி பண்ண விரும்புவர்களுக்கு என்றபடி -பிரபத்தும் இச்சவ-ப்ரபித் சவ-தேஷாம் -ப்ரபித் ஸூநாம் –
ஆஸ்ரய ஸமாச்ரயணம் பண்ணினவர்களுக்கும் -அது பண்ண ருசி யுடையாருக்கும் மற்றும் உள்ளார்க்கும்
இதமான அர்த்த விசேஷங்கள் இந்த ஸ்துதியில் நிரம்பி உள்ளன -என்றவாறு –

————————————————

சரணாகத சம்த்ராண த்வ ராத்விகுண பாஹு நா
ஹரிணா வேங்கடே சீயா ஸ்துதி ஸ்வீக்ரியதாம் இயம்–10

சரணாகதர்களைக் காத்து அருளுவதில் பதற்றத்தினால் இரட்டித்த திருக் கைகைளை யுடைய திரு அஷ்ட புயகரத்தனால்
ஸ்ரீ மத் வேங்கட நாதருடையதான இந்த ஸ் துதி ஸ்வீகரிக்கப் படட்டும்
இந்த ஸ்தோத்ர ஸ் துதி கிரந்தத்தை ஸ்ரீ மத் அஷ்ட புஜ நாதனுடைய திருவடிகளில் சமர்ப்பிக்கிறார் –
சதுர்ணாம் புருஷார்த்தா நாம் தாத்தா தேவச் சதுர் புஜ -சதுர் புஜனாக பிரசித்தம் –
அஷ்ட புஜங்கள் உடன் சேவை சாதிக்கும் ஹேது உத்பரேஷை பண்ணுகிறார் பூர்வார்த்தத்தில்
த்வரா த்வி குண –த்வர ஏவ த்வி குண -என்று கொள்ளக் கடவது –

———————————————————

கவி தார்க்கிக ஸிம்ஹாய கல்யாண குண சாலிநே
ஸ்ரீ மதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம –

—————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் -ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேதாந்த தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பகவத் த்யான சோபனம் –ஸ்ரீ வேதாந்த தேசிகாசார்யர் ஸ்வாமிகள்-

January 28, 2017

ஸ்ரீ மான் வேங்கட நாதார்ய கவி தார்க்கிக கேசரீ
வேதாந்தா சார்ய வர்யோ மே சந்நிதத்தாம் சதா ஹ்ருதி –

கவி தார்க்கிக சிம்ஹாய கல்யாண குண சாலினே
ஸ்ரீ மதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம –

சீர் ஓன்று தூப்புல் திரு வேங்கடமுடையான்
பார் ஒன்றச் சொன்ன பழ மொழியுள் ஓர் ஓன்று
தானே யமையாதோ தாரணியில் வாழ்வார்க்கு
வான் ஏறப் போம் அளவும் வாழ்வு –

———————————————————————

ஸ்ரீ ரெங்கநாதன் திவ்ய மங்கள விக்ரஹத்தை அமலனாதி பிரான் போலே
திருவடி தொடங்கி திருமுடி வரை அனுபவம் -12-ஸ்லோகங்கள் கொண்ட பிரபந்தம் –

அந்தர் ஜ்யோதி கிமபி யமிநா மஞ்சனம் யோக த்ருஷ்டே
சிந்தா ரத்னம் ஸூலபமிஹ ந சித்தி மோக்ஷ அனுரூபம்
தீநாநாத வியஸன சமனம் தைவதம் தைவதா நாம்
திவ்யம் சஷூ ஸ்ருதி பரிஷிதாம் த்ருஸ்யதே ரங்க மத்யே –1-

யோகிகளின் ஹிருதயத்தில் பிரகாசிப்பவனும் -ஞானக் கண்ணுக்கு அஞ்சனம் போன்றவனும் –
இவ்வுலகில் நமக்கு எளிதான இம்மை போகங்கள் -மோக்ஷம் -இவை அனைத்தையும் தர வல்ல சிந்தா மணி போன்றவனும் –
பலம் மற்றவர்களுக்கும் அனாதைகளுக்கும் கஷ்டத்தை ஒழிப்பவனும்-வேத சாஸ்த்ரங்களுக்கு கண் போன்றவனும் –
எல்லாத் தெய்வங்களுக்கும் மேலான உயர்ந்த தெய்வமுமான ஒரு பர வஸ்து திருவரங்கத்தின் நடுவில் காணப்படுகிறதே

அந்தர் ஜ்யோதி கிமபி யமிநாம் -ஹ்ருதயத்தில் பிரகாசிக்கின்றானே -யோக அப்பியாச அனுபவம் -யாமினாம் -யோகிகள் –
அஞ்சனம் யோக த்ருஷ்டே -வண்டினம் –அண்டர் கோன்-அமரும் சோலை -சகல மனுஷ நயன சேவைக்காக
–பெரும் சோதி அனந்தன் என்னும் –கரு மணி -கோமளம் –
வெள்ளை அணையை மேவி -அரவரச பெரும் சோதி அனந்தன் என்னும் -வாயாரா என்று கொலோ வாழ்த்தும் நாளே –
-மனத்தூணை பற்றி நின்று –அரவணை துயிலுமா கண்டு உடல் எனக்கு உருகுமாலோ என் செய்கேன் உலகத்தீரே —
அத்வேஷா சர்வ பூதானாம் முதல் படிக்கட்டு -சர்வ பூத ஸுஹார்த்தம் உடன் தியானம் -அஷ்டாங்க யோகத்தால்
-மநோ காய வாக் தண்டம் முக்கோல் -அத்த பத்தர் வாழும் அம் தண் அரங்கம் -மூன்று தண்டர் ஒன்றினர் –
ஓளி உளார் தாமே –தந்தையும் தாயும் ஆவார் -நாமம் கற்ற ஆவலிப்பு -மூ உலகுண்ட முதல்வா -ரங்க பிரபு –
மண் தின்ற முகம் போலேயோ என் முகம் –
கிமபி -இவ்வளவு என்று சொல்ல முடியாத ஜோதிஸ்–அக்னி ஸூர்ய சந்திரர் போலே இல்லையே -திவ்யமான ஜோதிஸ் –
-ஆத்ம ஜோதிஸ் விட விலக்ஷணம் -அப்ராக்ருதமான ஜோதிஸ்
கிடந்தவாறும் –முழுவதுமாக அனுபவிக்கிறார் அரங்கனை -அடியரோர்க்கு அகலலாமே —
வாழும் சோம்பரை உகத்தி போலும் -என்று கொலோ புரளும் நாளே –
அஞ்சனம் -உபாயமும் உபேயமும் அரங்கன் –சித்தாஞ்சனம்
கரியான் -கறுப்பை சேவிக்கவே –திருவடி -திரு நாமம் -கறுப்பை நினைத்து கொள்
-மதிக் கண்டாய் –அவன் பேர் தன்னை மதிக் கண்டாய் நீராழி வண்ணன் -நிறம் -இரண்டாம் -51—
கரிய கோல திரு உருக் காண்பான் நான் –
சிந்தா ரத்னம் ஸூலபமிஹ ந சித்தி மோக்ஷ அனுரூபம்
சிந்தா மணி அன்றோ இவன் -காம தேனு கற்பக வ்ருஷம் -அபீஷ்ட வரதன் அன்றோ -கருமணியே கோமளத்தை கண்டு கொண்டு –
ஸூ லபன் இஹ ந -இங்கேயே சேவை சாதிக்கிறான் -/ சித்தியும் மோக்ஷம் -அணிமா மஹிமா இத்யாதிகள் சித்தி ஐஹிக-
-அசேஷ ஜன -சம்சாரம் கிழங்கு எடுத்தால் நல்லதே பேரேன்-
தீநாநாத வியஸன சமனம் தைவதம் தைவதா நாம்
தீனர்கள் -அநாதர்கள் -வியசனங்களை போக்கும் -பின்னானார் வணங்கும் சோதி அன்றோ
-தேவாதி தேவன் -இமையோர் அதிபதி -அமரர்கள் கூட்டங்கள் இவையோ -அமரர்கள் அதிபதி –
-இந்திரன் யானையும் தானும் –அந்தரத்து அமரர்கள் கூட்டங்கள் இவையோ –
திவ்யம் சஷூ ஸ்ருதி பரிஷிதாம் த்ருஸ்யதே ரங்க மத்யே
-வேதம் -ஸ்த்ரீ லிங்கம் -ஸ்ருதி -வேதம் புல்லிங்கம்–ரங்கம் மத்யே -புருஷோத்தமனை பார்க்க ஸ்த்ரீகள் கூட்டம்
-பிராணவாராகாரம் மத்யே -கூடி -வேதக் கூட்டம் -கதா நாயகன் எங்கள் கண் என்று பெண்கள் சொல்வது போலே
-திவ்யம் சஷூஸ் –வேதார்த்தங்கள் அறிய வேண்டிய திவ்ய சஷூஸ் இவனே என்றுமாம்
பகவத் பக்தியால் வேதம் அறியலாம் என்றவாறு -பரஸ்பரம் -வேதைக சமைதி கவ்யம்

———————————————————————–

வேலா தீத ஸ்ருதி பரிமளம் வேதஸாம் மௌலி சேவ்யம்
ப்ராதுர்பூதம் கநக சரித சைகத ஹம்ஸ ஜூஷ்டே
லஷ்மீ பூம்யோ கர ஸரஸி ஜைர் லாலிதம் ரங்க பர்த்து
பாதாம் போஜாம் பிரதிபலத மே பாவநா தீர்க்கிகாயாம் -2-

எல்லையைக் கடந்த வேதங்களின் மணம் வீசுவதும் -ப்ரஹ்மாதிகள் முடிகளால் வணங்கப் படுவதும்
அன்னப் பறவைகள் விரும்பி உறையும் காவேரி ஆற்றின் மணல் திட்டில் தோன்றியதும்
பெரிய பிராட்டியார் -பூமா தேவி இவர்கள் திருக்கை தாமரைகளால் வருடப் படுவதுமான
திருவரங்கப் பெருமானுடைய திருவடித் தாமரை அடியேனுடைய நினைவு என்னும் பொய்கையில் பிரதிபலிக்கிறது

வேலா தீத ஸ்ருதி பரிமளம் வேதஸாம் மௌலி சேவ்யம் -ப்ராதுர்பூதம்-
நான்முகன் போல்வார் சேவிக்கும் திருவடிகள் -வேத கடல்களில் பரிமளிக்கும் –
ஆதி புருஷர்கள் ஸ்ரீ வைஷ்ணவர்கள் -அரங்கன் ஸத்ய லோகத்தில் இருந்து அயோத்தியை வந்து
இங்கு எழுந்து அருளி -ஸஹ பதன்யா விசாலாட்சி –
நாராயணா -ஓ மணி வண்ணா -துவாரகா நிலயா-அழைக்க கூப்பிடத் தானே வருவான் -யார் அழைக்க இங்கே-
-ஆசை உடன் அன்றோ இங்கே வந்து கிடக்கிறாய் -கருணையால் –
கநக சரித சைகத ஹம்ஸ ஜூஷ்டே -பரம ஹம்சர் -அத்த பத்தர் சுற்றி வாழும் அம் தண் ஊர் அரங்கம்
-ஹம்சம் இருக்கும் இடத்தில் வந்த திருவடித்தாமரை அன்றோ இது –
ஆச்சார்யர்கள் அனைவரும் மண்டி நித்ய வாசம் செய்த திவ்ய தேசம் அன்றோ –
அத்ரைவ ஸ்ரீ ரெங்கமே ஸூகமாக வாசம் செய்து இரும் என்று அருளினான் அன்றோ –
லஷ்மீ பூம்யோ கர ஸரஸி ஜைர் லாலிதம் ரங்க பர்த்து-திரு மகளும் மண் மகளும் கூசிப் பிடிக்கும் மெல்லடிகள்
-அடியேனும் பிடிக்க கூவுதல் வருதல் செய்யாயே-கருணை பொறுமை இரண்டாலுமான இரு பிராட்டிகள் —
பாதாம் போஜாம் பிரதிபலத மே பாவநா தீர்க்கிகாயாம்-திரு உள்ளத்தில் பிரதி பலிக்கின்றதே -திருவடிகள் –
தாமரையோனும் தாமரையாளும் ஹம்ஸாதிகளும் வேதமும் கொண்டாடும் தாமரை அன்றோ –
பன்னிரு ஆழ்வார்களால் பாடல் பெற்று துயர் அறுபட்ட -சுடர் அடி திருவடிகள் அன்றோ –
திருநாகை அழகர் -மாலிரும் சோலை மணாளர் -கோழியும் கூடலும் –தேவ பெருமாளும்
அரங்கனும் இவரே -அத்வைதம் போலே அனைவரும் ஒருவரே -என்பர் –
பிம்பமாக -மனசில் சாஷாத் கரிக்கிறார் -பிரதிபலனும் -அத்வைதி பிரதிபலிக்கிறதால் மாயை -அஹம் ப்ரஹ்மாஸ்மி -அது போல் அன்றே –
கண்ணாடியில் பிரதிபலிப்பது நிஜமா பொய்யா -எடுத்து அணைக்க முடியாது -ஆனால் காண்கிறோம் -புரியாததே வேதாந்தம் –
மநோ பாவனை சிந்தனையில் பிரதிபலிக்கிறது -அசேதனத்தில் இல்லை -சேதனத்தில் பரம சேதனன்
-ஹிருதயத்தில் நிஜமாகவே அன்றோ பிரதிஷடையாக உள்ளான் –திருக் கமல பாதம் வந்து என் கண்ணினுள்ளே ஒக்கின்றதே –
வாஸ்தவமான அனுபவம் -சேவை சாதிக்கிறான் -வந்து அருளி என் நெஞ்சு இடம் கொண்ட வானவர் கொழுந்தே
-வந்தாய் என் மனம் புகுந்தாய் புகுந்தத்தின் பின் என் சிந்தனைக்கு இனியாய் -அரவிந்த பாவையும் தானும் –அகம் படி வந்து புகுந்து –

————————————————————————–

சித்ரா காராம் கடக ருசி ஸ் ஸாருவ்ருத்த வ்ருத்த அநுபூர்வாம்
காலே தூத்ய த்ருததர கதிம் காந்தி லீலா கலா சீம்
ஜாநுச்சாயா த்வி குண ஸூபகாம் ரங்க பர்த்துர் மதாத்மா
ஜங்காம் த்ருஷ்ட்வா ஜநந பதவீ ஜாங்கி கத்வம் ஜஹாதி –3-

ரத்னங்களால் இழைக்கப் பட்ட தண்டைகளின் ஒளியால் பல்வகை நிறம் கொண்ட அழகிய வட்டமான முன்னுக்கு ஏற்ற அமைப்புடன்
உரிய காலத்தில் தூது செல்வதற்காக மிக விரைவான நடையை யுடையவனாய்
அழகு சிறப்பை ஏந்தும் பாத்திரனாய் திரு முழங்காலின் அழகால் இரட்டிப்பு அழகை யுடையவனாய்
திரு அரங்கனுடைய கணைக் காலைப் பார்த்து என்னுடைய உயிர் சம்சார மார்க்கத்தில் அலையும் தன்மையை விடுகின்றது –

சித்ரா காராம் கடக ருசி ஸ் ஸாருவ்ருத்த அநுபூர்வாம்
அழகாக உள்ள -நவ ரத்தினங்கள் ஜ்வலிக்க -திருவடியில் கழல் -கடகம் -சாத்திக் கொண்டு -திருமேனிக்கு பொருத்தமாக -சந்நிவேசம்–
திருமேனி சுபாஸ்ரயம் -எந்த அவயவம் எந்த திவ்ய ஆயுதம் சேவித்தாலும் பாபங்கள் தீருமே -பாவானத்வம்
சுபம் -பாவ நிவர்த்தகம் -ஆஸ்ரயம் தியானத்துக்கு –
திவ்யாத்மா ஸ்வரூபம் நினைத்தே பார்க்க முடியாதே -திவ்ய மேனி தான் ஸூபமாயும் ஆஸ்ரயத்வமும் இருக்கும் –
லோகாநாம் பின்ன ருசி -நாநா வித திவ்ய பூஷணங்கள் –
காலே தூத்ய த்ருததர கதிம் காந்தி லீலா கலா சீம்
காலம் வர -ஓடுவார் -தூது சென்றான் குரு பாண்டவருக்காய் -த்ருத கதி இல்லை த்ருத தர கதி -வேகமாக -பாகவதர் கார்யம் செய்ய
-அங்கு ஓர் பொய் சுற்றம் பேசி –பேதம் செய்து –வேறு ஒருவர் போனால் தான் நினைத்த கார்யம் தலைக் கட்ட முடியாதே
-திரௌபதி குழல் முடிக்க -உதங்க பிரஸ்னம் –யானை காத்து யானை கொன்று -ஆஸ்ரித பக்ஷபாதன் –
காலயவனான் ஜராசந்தன் -இவர்களுக்காகவும் ஓடினான் -முசுகுந்தன் சேவை சாதிக்க ஓடினான் —
ஸ்ரீ -த்வாராகா நிர்மாணம் காரியமாக ஓடினான் –
கலா சீம்-பாத்திரம் –லீலா -கணைக் கால் முழம் கால் போலே உருவம் –
உள்ள பாத்திரம் -திருமேனி ஸுந்தர்யம் வழிந்து –காந்தி கலா சீம்
-மொத்த ஸுந்தர்யம் பிடித்து வைத்துக் கொள்ளும் -முழம் கால் -கணைக் கால் –
ஜாநுச்சாயா த்வி குண ஸூபகாம் ரங்க பர்த்துர் மதாத்மா
அதுக்கு மேலே -முட்டிக் கால் அழகு -சோபையும் சேர்ந்து -ஆகர்ஷிக்கிறது –
நாயகி பாவத்தில் அனுபவம் ரங்க பர்த்துர்-மத் ஆத்மா
ஜங்காம் த்ருஷ்ட்வா ஜநந பதவீ ஜாங்கி கத்வம் ஜஹாதி
ஓடி ஓடி பல பிறப்பும் பிறந்து -ஓடு காலி –திருவடி -அனுபவம் -பீதகவாடை பற்றி இழுக்க -ஜிகாதி-விட்டு போயிற்றே
ஜாங்கி கத்வம் கணைக் கால் முழம் கால் -இவரை பற்றி இழுக்க -ஜங்கையை கண்டேன் –
ஓடும் கருவி கண்டு ஓட்டம் விட்டேன் -சமத்காரமாக அருளிச் செய்கிறார் –
நாட்டில் உள்ள பாபம் எல்லாமே சும்மெனாதே-சத்தம் போடாமல் – கை விட்டு போனதே –

————————————————————————-

காமா ராம ஸ்திர கதலிகா ஸ்தம்ப ஸம்பாவ நீயம்
ஷவ்மாஸ் லிஷ்டம் கிமபி கமலா பூமி நீளோபதாநம்
ந்யஞ்சத் காஞ்சீ கிரணம் ருசிரம் நிர் விசத் யூரூ யுக்மம்
லாவண் யவ்க த்வயமிவ மதிர் மாமிகா ரங்க யூந –4-

மன்மதனது தோட்டத்தில் உறுதியாய் இருக்கும் வாழைத்தண்டு போல் நினைக்கக் கூடியதும் பீதாம்பரத்தை அணிந்து இருப்பதும்
பெரிய பிராட்டியார் பூமா நீளா தேவிமார் மூவருக்கும் தலையணை போன்றதும்
கீழ்ப்பக்கம் செல்லும் மேகலையின் ஒளிகளால் அழகு பெற்றதாயும்
இரண்டு அழகு வெள்ளம் போன்றதும் அத்புதமாயும் உள்ள திருவரங்கன் என்னும் நித்ய யுவா குமாரனுடைய
திருத் தொடைகள் இரண்டையும் எனது புத்தி அனுபவிக்கிறது –

காமா ராம ஸ்திர கதலிகா ஸ்தம்ப ஸம்பாவ நீயம்
திருத் தொடை அழகு –அனுபவிக்கிறார் -பத்ரி நாராயணன் -தபஸ் -இந்திரன் -தேவ அப்சரஸ் அனுப்பி –
ஆடி சோர்ந்து போக –வெட்கம் -ஊர்வசி கோயில் அங்கு உண்டு -ஸ்ரீ ரத்ன காரணம் -திருத் தொடை -என்பர் -ப்ராஹ்மணர் முகம் ஆஸீத்
–விராட் புருஷன் –தொடை வைசியன் –திருவடி சம்பந்தம் வேண்டும் என்றே நம்மாழ்வார் நான்காம் வர்ணம்
மன்மதன் தோட்டம் -வாழை தண்டு போலே திருத் தொடைகள் -நாயகி பாவம் முற்றி அனுபவிக்கிறார் -உருண்டு திரண்டு யவ்வனம் தோற்ற –
ஷவ்மாஸ் லிஷ்டம் கிமபி கமலா பூமி நீளோபதாநம்
மேலே சாத்தினதிருப் பட்டு பீதாம்பரம் -பிராட்டிமார் தலை அணையாக வைத்துக் கொள்ளும் திருத் தொடைகள் –
பித்தனைப் பெற்றும் அந்தோ பிறவியுள்–தாயார் பெருமாள் ஒவ் ஒருவர் மேல் பித்து
-ஹிரண்ய வர்ணாம் -வரத விஷ்ணு இடம் கேட்டு அவள் கிருபை -அந்யோன்யம் இருவரும்
-பரம நாரீணாம் -அனுபவித்த திருத் தோள்கள் வால்மீகி -கடல் கரையில் சயனம் செய்த பெருமாள் —
புடவை உடுத்தி தப்பினான் -மூஞ்சியே பார்க்க மாட்டாரே பெருமாள் -பரம பாத நாதன் போலே -வால்மீகி
-ஸ்ரீ பூமி நீளா தேவி -பிடிக்கும் மெல்லடி -தன்னை மறந்து வால்மீகி அருளி -அவயவம் சேவிக்கும் பொழுது
தாயார் சம்பந்தம் உடனே தோன்றுமே -அதே போலே
ந்யஞ்சத் காஞ்சீ கிரணம் ருசிரம் நிர் விசத் யூரூ யுக்மம்
கீழ் நோக்கி பாய -மேகலை -போலே காஞ்சீ -பூமிக்கு அழகு கொடுக்கும் -மண் மகளாருக்கு அலங்காரம் -என்பர் –
லாவண் யவ்க த்வயமிவ மதிர் மாமிகா ரங்க யூந
யூனா -இளமை -படுத்தும் பாடு -கரியான் ஒரு காளை -லாவண்யம் வெள்ளம் இட்டு -இதுவே வடிவாக –
என் புத்தி –மாமிகா -மனஸ் நபுன்சிகா லிங்கம் யஜஸ் -பாணினி -என் நெஞ்சினாரும் அங்கே ஒழிந்தார் –
ரெங்க யுவா வினுடைய
மாதிர் -ஸ்த்ரீ லிங்கம் -தானும் பிராட்டி போலே அங்கே அணைந்ததே -ஷாட் குண சாம்யத்தாலே நாம் பிராட்டி போலே தானே

————————————————————

சம்ப் ரீணாதி ப்ரதி கலமசவ் மாநசம் மே ஸூ ஜாதா
கம்பி ரத்வாத் க்வசன ஸமயே கூட நிஷிப்த விச்வா
நாலீ கேன ஸ்புரித ரஜசா வேதஸோ நிர்மி மாணா
ரம்யா வர்த்த த்யுதி ஸஹ ஸரீ ரங்க நாதஸ்ய நாபி –5-

அழகிய தோற்றம் உடையதும் ஆழமாய் இருப்பதால் ஒரு பிரளய சமயத்தில் உலகத்தை தனக்குள்
மறைத்து வைத்துக் கொண்டதும் தூள்களால் மிளிரும் தாமரைப் பூவால் பல ப்ரம்மாக்களைப் படைத்ததும்
அழகிய சுழல்களின் அழகுடன் கூடி இருப்பதுமான ஸ்ரீ ரெங்க நாதனுடைய
இந்த திரு உந்தி பிரதி க்ஷணமும் என்னுடைய உள்ளத்தை நன்கு மகிழ்விக்கிறது –

சம்ப் ரீணாதி ப்ரதி கலமசவ் மாநசம் மே ஸூ ஜாதா
அழகிய -நல்ல வம்சம் –ஸூ ஜாதா
கம்பி ரத்வாத் க்வசன ஸமயே கூட நிஷிப்த விச்வா
கம்பீரமாக –விச்வா எல்லாமே உள்ளே வைத்து -வெளியில் சொல்லாமல் -எப்பொழுதும் –
நாலீ கேன ஸ்புரித ரஜசா வேதஸோ நிர்மி மாணா
தாமரை உண்டாக்கி -பரதத்வம் அரிய -இங்கே சேவித்தால் போருமே -வேதம் மூலம் தான் அரிய அரியவன் –
நாராயணீ நமஸ்துதே -பார்வதிக்கும் சொல்வார்களே –நாராயணனும் நான் முகனைப் படைத்தான் -காட்டிக் கொடுக்குமே
யமம் நியமம் ஆசனம் பிராணாயாமம் – பிரத்தியாகாரம் -யோகிகள் –அடக்கி -அஹிம்சா சத்யம் —
திருவடியில் -நியமம் போலே கணைக் கால் / ஆசனம் -போலே திருத் தொடைகள் -/
பிராணாயாமம் -உள்ளே சுத்தி பண்ண கப வாத பித்தம் -அதே போலே திரு நாபி –
ரம்யா வர்த்த த்யுதி ஸஹ ஸரீ ரங்க நாதஸ்ய நாபி
திரு நாபி அனுபவம் -தோள் கண்டார் தோளே கண்டார் –

———————————————-

ஸ்ரீ வத்சேன பிரதித விபவம் ஸ்ரீ பத ந்யாஸ தன்யம்
மத்யம் பாஹ்வோர் மணி வர ருசா ரஞ்சிதம் ரங்க தாம்ந
சாந்த்ரச்சாயம் தருண துலஸீ சித்ரயா வைஜயந்த்யா
ஸந்தாபம் மே சமயதி தியஸ் சந்த்ரிகோதார ஹாரம் –6-

ஸ்ரீ வத்ஸம் என்னும் திரு மறுவினால் பெருமை அடைந்ததும் -பெரிய பிராட்டியார் தன் திருவடியை வைப்பதால்
பாக்யம் பெற்றதும் -ஸ்ரீ கௌஸ்துபம் தேஜஸ்ஸால் செந்நிறம் ஆக்கப் பட்டதும்
பசுமையான திருத் துழாயினால்-பல நிறமுடைய வைஜயந்தீ என்னும் வனமாலை இவற்றாலும்
குளிர்ந்த ஒளி மிகுந்த நிலவு போன்ற அழகிய முத்து மாலையை யுமுடைய திருவரங்கன்
இரண்டு திருத் தோள்களின் நடுவே உள்ள திரு மார்பு என்னுடைய உள்ளத்தின் தாபத்தை ஒழிக்கின்றது

ஸ்ரீ வத்சேன பிரதித விபவம் ஸ்ரீ பத ந்யாஸ தன்யம்
ஸ்ரீ வத்ஸம் பிரசித்தம் ஊர் அறிந்த -வைபவம் -ஸர்வேச்வரத்வ லக்ஷணம் -மறு – மயிர் சுழி -தாயார் நித்ய வாஸம்
–பிருகு மகரிஷி -வ்ருத்தாந்தம் -வேதாந்த சிந்தனம்-
தாயார் திருவடி பெற்ற பாக்யம் -தன்யம் -அவன் நினைவாலே –அமுதினில் வந்த பெண்ணமுது அன்றோ –
முழு கண் கடாக்ஷம் -பர ப்ரஹ்மம் -என்னுடைய பந்தும் கழலும் தந்து போகு நம்பீ -தரிக்க பராங்குச நாயகி சம்பந்தம் பெற்றவற்றை அணைத்துக் கொண்டானே –
மத்யம் பாஹ்வோர் மணி வர ருசா ரஞ்சிதம் ரங்க தாம்ந
மத்யம் இருப்பதே பாக்யம் -பெருமாள் திருத் தோள்களை அணைத்து யானை ஸிம்ஹம் கண்டு அஞ்சாத சீதை பிராட்டி போலே –
இரண்டையும் பிடித்து -சரம் விடாமல் யானைகளும் சிங்கங்களும் அஞ்சாமல் இருக்குமே
ஸ்ரீ வர மணி வர ஸ்ரீ கௌஸ்துபம் -ஜீவ தத்வம் அபிமானம் -நமக்கும் பூவின் மீசை நங்கைக்கும் இன்பன்-கோல மலர் பாவைக்கு அன்பன்
-நமக்கு அன்பாகியே -ஸ்ரேஷ்டமான வரம் -ரஞ்சிதம் சிவந்து அழகிய -செய்ய -உடையும் -செய்ய முடியும் –திகழ என் சிந்தை உளானே –
சாந்த்ரச்சாயம் தருண துலஸீ சித்ரயா வைஜயந்த்யா
மேலே -புஷ்ப்பம் துளஸீ விசித்திர வன மாலை -வைஜயந்தி -சர்வேஸ்வரன் அசாதாரண லக்ஷணம் – புருடன் மணி வரமாக —
ஸந்தாபம் மே சமயதி தியஸ் சந்த்ரிகோதார ஹாரம்
முலைக்குவட்டில் பூட்டிக் கொண்டு இருப்பன் நானே -மார்பை அணைத்துக் கொண்டே –
தாபங்கள் எல்லாமே போகுமே -ஸந்தாபம் -பிரகிருதி ஜீவன் பிராட்டி சர்வருக்கு சர்வேஸ்வரன் -புருஷோத்தமன்
சந்திரிகை போலே ஹாரம் சேர்ந்து –
ஸ்ரீ வத்ஸம் / பெரிய பிராட்டியார் திருவடி / ஸ்ரீ கௌஸ்துபம் / வனமாலை / ஹாரம் -முத்தா -முக்தர் -நித்யர் பத்தர் அனைவரும் உண்டே திரு மார்பில் –

———————————————-

ஏகம் லீலோ பஹித மிதரம் பாஹுமாஜாநு லம்பம்
ப்ராப்தா ரங்கே ஸயிது ரகில பிரார்த்தனா பாரிஜாதம்
திருப்தா சேயம் திருட நியமிதா ரஸ்மி பிர் பூஷணா நாம்
சிந்தா ஹஸ்தின்யநுபவதி மே சித்ர மாலான யந்த்ரம் –7-

திருவரங்கத்தில் பள்ளி கொண்ட -சகல சேதனர்களின் சகல அபேக்ஷிதங்களையும் அளித்து அருளும்
கற்பக வ்ருஷம் போன்ற திருவரங்கன் உடைய லீலார்த்தமாக -விளையாட்டாக தலையணை ஆக்கப் பட்ட வலது திருக் கரத்தையும்
முழந்தாள் வரை நீண்ட மற்றோர் இடது திருக் கரத்தையும் பற்றிக் கொண்டு
இதனால் செருக்குக் கொண்ட என் நினைவு என்னும் பெண் யானை திரு ஆபரண தேஜஸ்ஸூ என்னும் கயிற்றால்
இறுக்கமாகப் பிணிக்கப் பட்டு விசித்திரமான கட்டுத் தறியில் கட்டுப் படுவதை அனுபவிக்கிறது –

ஏகம் லீலோ பஹித மிதரம் பாஹுமாஜாநு லம்பம்
திருக்கரங்கள் அனுபவம் -யானை கட்டும் -முளை போலே -சிந்தா -திமிர் போலே ஓடே -சேற்றில் அழுந்தும் –
தலைக்கு அணை போலே திருக் கரங்கள் -லீலைக்காக –
கிடந்த அழகு -கிடைத்ததோர் கிடக்கை -பையத் துயின்ற பரமன் -உறங்குவான் போலே யோக நித்திரை
-லீலோ உபஹிதம் — -அடுத்த திருக் கரம் முட்டி வரை –
ஒன்றால் திரு முகம் -காட்டி -ஒன்றால் திருவடி காட்டி -தன் பால் ஆதாரம் பெறுக வைத்த அழகன் –
ப்ராப்தா ரங்கே ஸயிது ரகில பிரார்த்தனா பாரிஜாதம்
சர்வ அபீஷ்டம் அருளும் பாரி ஜாதம் -ஸூ க்ரீவன் முதலில் கை கொடுத்து -அப்புறம் திருவடியில் விழுந்தான் -அலம் புரிந்த நெடும் தடக்கை
திருப்தா சேயம் திருட நியமிதா ரஸ்மி பிர் பூஷணா நாம்
கொழுத்து போனதே -அனுபவத்தால் -திருவடி தொடங்கி இது வரை -இத்தை நியமிக்க வேண்டும் -போக்த்ருத்வ புத்தி மாற்றி –
ரஸ்மி -பூஷணம் மூலம் வரும் காந்தி கொண்டே காட்டி
சிந்தா ஹஸ்தின்யநுபவதி மே சித்ர மாலான யந்த்ரம்
ஹஸ்தி -பெண் யானை -அனுபவத்தில் கை கட்ட திருக் கரங்கள் -பரம ஆனந்தம் இந்த கட்டு -அனுபவ –
தாரணம் -பிரத்தியாகாரம் அப்புறம் -அந்த நிலைக்கு சேர்த்ததே –

—————————————————–

சாபிப்ராய ஸ்மித விகசிதம் சாரு பிம்பாத ரோஷ்டம்
து காபாய ப்ரணயநி ஜநே தூர தத்தாபி முக்யம்
காந்தம் வக்த்ரம் கநக திலகா லங்க்ருதம் ரங்க பர்த்து
ஸ்வாந்தே காடம் மம விலகதி ஸ்வாக தோதார நேத்ரம் –8–

பொருள் பொதிந்த புன்னகையால் மலர்ந்த அழகிய கோவைக்கனி போன்ற மேல் திரு உதடும் கீழ் திரு உதடும்
உடையவனாய் துன்பம் நீங்குவதை விரும்புகின்ற மக்களிடம் தூரத்தில் இருந்தே அவர்களுக்கு கொடுக்கப்பட்ட
பார்வையை யுடையவனும் -அழகியவனும் -பொன்னாலான திலகத்தால் அலங்கரிக்கப் பட்டவனும்
நல் வரவு கூறும் பெரும் தன்மையை யுடைய திருக் கண்களை யுடைய ஸ்ரீ ரெங்க நாதன் திரு முகம்
என் உள்ளத்தில் ஆழ்ந்து பதிகின்றது

————————————————

மால்யை ரந்த ஸ்திர பரிமளைர் வல்லபா ஸ்பர்ஸ மான்யை
குப்யைச் சோளீ வசன குடிலை குந்தலை ஸ்லிஷ்ட மூலே
ரத்னாபீட த்யுதி சபளிதே ரங்க பர்த்து கிரீடே
ராஜன்வத்ய ஸ்திதி மதிகதா வ்ருத்தயஸ் சேடிஸோ மே –9-

உள்ளே மலர் மாலைகளால் நிலையான மனம் உடையதும் பிராட்டிமார்களின் திருக் கரங்கள் வாரி முடித்து
அலங்கரிக்கும் போது பட்டதால் மதிப்புப் பெற்றதும்
கோபம் கொண்ட சோழ நாட்டுப் பெண்டிர் பேச்சுப் போலே சுருண்டதுமான திருக் குழல்களோடு அடிப்பகுதியான
சம்பந்தம் பெற்றதும் ரத்னங்களாலான முடி மாலைகளின் ஒளியால் பல நிறம் பெற்ற திருவரங்கனுடைய திரு அபிஷேகத்தில் –
இது காரும் அடங்காது திரிந்து கொண்டு இருந்த என்னுடைய உள்ளத்தின் போக்குகள் நல்ல அரசனைப் பெற்றதாய்
நிலையான இருப்பைப் பெற்றுள்ளன -அவனுக்கு அடங்கிக் கிடக்கின்றன –

மால்யை ரந்த ஸ்திர பரிமளைர் வல்லபா ஸ்பர்ஸ மான்யை
கிரீடம் -ரத்ன புஷ்ப்ப மாலை சாத்திய திருக் குழல் -நெற்றி காட்டி சாத்தி -தேவ பெருமாள் –பரிபாக அழகு -பரிமளம் ஸ்திரமாக
-அந்த ஸ்திரம் -புனத்தில் உள்ளது போலே -திருமேனியால் தளிர்த்து -தன்னிலத்தில் போலே –
திருவடியில் வேத பரிமளம் பார்த்தோம் -தாயார் சம்பந்த வாசனை திரு முடியில் -மாலை -சூடிக் கொடுத்த மாலை சாத்திக் கொண்ட பரிமளம்
-இதனாலே ஸுபாக்யம் பெற்றார் -தன்யோஸ்மி சிரஸால் தாங்கிக் கொள்வான் –
-தாமரைப் பூ வாசனை பெரிய பிராட்டியார் ஸ்பரிசத்தால் -செங்கழுநீர் பூமிப் பிராட்டி -நீலோத் புஷ்ப்பம் நீளா தேவி
எல்லாமே சேர்ந்தே இருக்கும் இதில் -அப்ராக்ருதம் வாசனையும் -உள்ளே இருந்து வீசும் -சர்வ கந்த
-நைவளம் -பண்ணில் -பாடி -தமிழ் பண்கள் -நாட்டை -நம்மை நோக்கா நாணினார் போல் –இறையும் நோக்கா —
வாயாலும் கண்ணாலும் கரைக்க பார்ப்பான் –
வெட்க்கி -நயங்கள் பின்னும் செய்து –காலில் விழுந்து -தாயார் திருவடி வாசனையும் இருக்குமே -வல்லபா ஸ்பர்ச மான்யை –
-ஏக ஆசனத்தில் இருந்த போது -கலந்து திரு முடி -வாச நாறும் குழல் -அன்றோ -இதுவும் கலந்து –
மான்யை -கொண்டாடப்படுகிறது -பிராட்டி சம்பந்தத்தால் வந்த ஏற்றம் -திரு வில்லா தேவரை -கஸ் ஸ்ரீ –ஸ்ரீய–
குப்யைச் சோளீ வசன குடிலை குந்தலை ஸ்லிஷ்ட மூலே
மயில் தோகை-குடிலை -குந்தலை –
-மை வண்ண நறும் குஞ்சி –கோள் இருளை சுகர்ந்திட்டு -கொள்ளும் –நீல நன்னூல் அன்று மாயன் குழல்
-சுருண்டு நீண்டு நைத்து–குப்யைச் சோளீ வசன குடிலை–கோபம் கொண்ட -சோழ தேச ஸ்த்ரீகள் பேச்சு போலே —
ரத்னாபீட த்யுதி சபளிதே ரங்க பர்த்து கிரீடே-
நாயகி பாவத்தில் அனுபவிக்கிறார் –
ராஜன்வத்ய ஸ்திதி மதிகதா வ்ருத்தயஸ் சேடிஸோ மே
அராஜகம் தேசம் எப்படி ஆகும் ஸ்ரீ ராமாயணம் சொல்லுமே -வருணாஸ்ரம தர்மம் -அனுஷ்ட்டிக்காமல்
-ரெங்க ராஜனை அடைந்து கைங்கர்யம் பண்ணும் சேடி போலே என் மனஸ் ஆனதே –

————————————————-

பாதாம் போஜம் ஸ்ப்ருசதி பஜதே ரங்க நாதஸ்ய ஜங்காம்
ஊருத் வந்த்வே விலகதி சநை ரூர் த்வமப்யேதி நாபிம்
வக்ஷஸ் யாஸ்தே வலதி புஜயோர்மாமி கேயம் மநீஷா
வக்த்ரா பிக்யாம் பிபதி வஹதே வாசநாம் மௌலி பந்தே –10-

என்னுடைய இந்த புத்தி என்னும் பெண் காதலால் -ஸ்ரீ ரெங்கநாதனுடைய திருவடித் தாமரைகளைத் தொடுகிறது
திருக் கணுக்காலைச் சேவிக்கிறது -இரு திருத் தொடைகளிலும் நன்கு படிக்கிறது
மேலே திரு உத்தியை நெருங்குகிறது -திரு மார்பில் தங்குகிறது -திருக்கைகளில் சுழல்கிறது
திரு முகத்தின் காந்தியை அள்ளிப் பருகுகிறது -திரு கிரீடத்தில் நினைவு கொள்கிறது –
இப்படி என் மனம் அவன் திருமேனியைப் பற்றிக் கொண்டு கிடக்கிறது –
ஒரே ஸ்லோகத்தில் தொகுத்து அனைத்து திவ்ய அவயவங்களில் ஈடுபட்டத்தை அருளிச் செய்கிறார்

பாதாம் போஜம் ஸ்ப்ருசதி பஜதே ரங்க நாதஸ்ய ஜங்காம்
பார்த்து அனுபவிக்கும் ஆசை மிக்கு தொட்டு அனுபவிக்க
பரி பூர்ண அனுபவம் -நாயகி -நாயகன் –
பரம புருஷன் -ஞானானந்த ஸ்வரூபன் -புருஷோத்தமன் -உயர்வற உயர்நலம் உடையவன் –
ஆறு வேகமாக ஓடி கடலிலே புகுமா போலே -ஸ்வரூபம் காணாமல் -வஞ்சி கொடிகள் வளைந்து பிழைத்துப் போகும் -மரங்கள் ஒடிந்து போகுமே –
கைங்கர்யம் செய்தே வாழலாம் -திருவடி தொழுதார் மறந்தும் புறம் தொழா மாந்தர் ஆவார் –
தொட்டாலும் கன்னி போகும் மெல்லடிகள் -உலகம் அளந்த பொன்னடிகள் -சகடம் உதைத்த -திருவடிகள்
பத்துடை அடியவர்க்கு எளியவன் -பிறருக்கு அரிய வித்தகன் -தொட்டு பார்க்க -மேலும் ஆசை மிக்க -கணைக் கால் வரை
-முன் அனுபவித்தவற்றை -விலங்கு இட்டு பிடித்தால் போலே –
ஆனந்த வஸ்து -தொட்டாலே போக்யம்-அத்வேஷம் மாத்திரம் இருந்தாரை மேலே மேலே இழுத்து போவான் –
ஊருத் வந்த்வே விலகதி சநை ரூர் த்வமப்யேதி நாபிம்
திருத் தொடைகள் –அனுபவம் -திரு நாபி அனுபவம் -சுழலில் அகப்பட்டு –
வக்ஷஸ் யாஸ்தே வலதி புஜயோர்மாமி கேயம் மநீஷா
மனீஷா -புத்தி என்னும் பெண் -பஜதே -விலகதி -ஆஸ்தே -வேவேறே எட்டு கிரியா பாதங்கள் –
தனக்கு ஆனந்தம் இல்லை -அவனுக்கு –
திருமார்பில் அணைந்து கொண்டு -திருக் கரங்களில் -கட்டிப் பிடித்து வலதி
மங்களா சாசனம் பண்ணும் மநோ பாவம் -உண்டாகும் –
வக்த்ரா பிக்யாம் பிபதி வஹதே வாசநாம் மௌலி பந்தே
குடிக்க -பிபதி –திரு முகம் -திரு அபிஷேகம் -பூர்ணமாக அனுபவிக்கிறார் –

————————————————-

காந்தோ தாரை ரயமிஹ புஜை கங்கண ஜ்யா கிணாங்கை
லஷ்மீ தாம்ந ப்ருதுள பரிகைர் லஷிதா பீதி ஹிதி
அக்ரே கிஞ்சித் புஜக சயன ஸ்வாத்மநைவாத்மன சன்
மத்யே ரங்கம் மம ச ஹ்ருதயே வர்த்ததே சாவரோத–11-

அழகியதும் கொடையில் சிறந்ததும் -திருக் கை வளை திரு நாண் இவற்றின் –விபவ அவதாரத்தில் உண்டான தழும்புகள்-
உள்ளதும் பெரிய பிராட்டியாரின் உறைவிடமான திரு மார்புக்கு பெரிய தாழ்ப்பாளாயும் உள்ள திருக் கைகளால்
அபயம் அளிக்கும் திவ்ய ஆயுதங்களைக் கட்டி அருளுபவனும் ஆதி சேஷன் மேலே திருக் கண் வளர்ந்து அருளுபவனுமான
இந்த திருவரங்கன் இந்த ஸ்ரீ ரெங்க விமானத்தில் மூலத் திரு மேனி கொண்ட தனக்கு சிறிது முன்பு தானாகவே
உத்சவத் திரு மேனியாய் இருந்து கொண்டு பிராட்டிமார்களோடும் திரு அரங்கத்தின் நடுவிலும்
எனது உள்ளத்திலும் நித்யமாய் நிறைந்து உறைகின்றான்

காந்தோ தாரை ரயமிஹ புஜை கங்கண ஜ்யா கிணாங்கை
நம்பெருமாளை சேர்ந்தே பெரிய பெருமாளை அனுபவிக்கிறார் -காந்தம் போலவே ஈர்க்கும் அழகு அன்றோ
நான்கு திருக் கரங்களாலும் அணைத்து அருள்வான் –
அழகு ஐஸ்வர்யம் அலங்காரம் கொண்டு கௌரவம் காட்ட முடியாதே -வளை துயிலைக் கைக் கொண்டு -காந்தம் போலே இழுப்பான் –
உதாரன்-நான்கு திருக் கரங்கள் -வாங்கிக் கொள்வாரையும் உதாரா என்னும் படி அன்றோ -நான்கு திருக் கரங்கள்
-அடியார் என்று அறிவித்த அத்தா –எத்தினால் இடர் கடல் கிடத்தி ஏழை நெஞ்சமே –
பல் பிறப்பும் ஒழித்து நம்மை ஆள் கொள்வான் -முத்தனார் முகுந்தனார் -அன்னையாய் அத்தனாய் –
கங்கணம் சாத்தி -தழும்பு -ஆஸ்ரித பக்ஷபாதன் -நாண் தழும்பு திருத் தோள்களில் -சார்ங்கம் உதைத்த சர மழை-
சகடம் உதைத்த தழும்பு –தாமோதர தழும்பு திரு வயிற்றில் -திரு உகிரில் தழும்பு -சேஷிக்கு லக்ஷணம்
-நமக்கு சங்கு சக்ர லாஞ்சனம் போலே -ஸ்ரீ வைஷ்ணவ பராதீனன் அவன் –
லஷ்மீ தாம்ந ப்ருதுள பரிகைர் லஷிதா பீதி ஹிதி
அகலகில்லேன் இறையும் என்று அலர் மேல் மங்கை உறையும் திரு மார்பு -கோட்டைக்கு அரண் போலே நான்கு திருக் கரங்கள் –
மேலே திவ்ய ஆயுதங்கள் வேண்டாம் -ஆஸ்ரிதர்களுக்கு சேவை சாதிக்கவே –
மல்லாண்ட திண் தோள்-மணி வண்ணா -சேவடி செவ்வி திருக் காப்பு -அபய ஹஸ்தம் –
அக்ரே கிஞ்சித் புஜக சயன ஸ்வாத்மநைவாத்மன சன்
பெரிய பெருமாள் கிடந்த சேவை -நம் பெருமாள் நின்ற சேவை -பூர்ணஸ்ய –பூர்ணம் குறையாதே –
தானே முன்னே வந்து சேவை சாதிக்கிறான் -என்றவாறு
ஸ்ரீ ரெங்கம் மங்கள நிதிம் கருணா நிவாஸம் -உபய பிரதானம் –காள மேகம் -திருவேங்கடத்தில் மூலவர் –பாரிஜாதம் —
–ஹஸ்திகிரி –யாதவா கிரி -ஸ்ரீ சம் தீபம் -உபய பிரதானம் இங்கும் -ஸ்ரீ பாஷ்யகாரர் சம்பந்தம் இருவருக்கும் உண்டே -சிரஸா –
மத்யே ரங்கம் மம ச ஹ்ருதயே வர்த்ததே சாவரோத–
மனத்துள்ளான் -ஸ்ரீ ரெங்கத்தில் -சாதனம் சாத்தியம் -சமுச்சய சகாரம் -சம பிரதானம் –
கல்லும் கனை கடலும் -வைகுந்த வானாடும் -புல் என்று ஒழிந்தன கொல் -ஏ பாவம் –அம்பாஸ்ய பாரம் உபநிஷத் பொய்யாகலாமோ –
நிறம் கரியான் உள் புகுந்து நீங்கான் -அடியேன் உள்ளத்தகம்–அன்று நான் பிறந்திலேன் பிறந்த பின் மறந்திலேன் –
இளம் கோயில் கை விடேல் என்று பிரார்த்திக்கும் படி -வர்த்ததே -அழ வேண்டாத படி -முகில் வண்ணன் அடியை அடைந்து அருள் சூடி உய்ந்தேன் –
புள்ளைக் காடாகின்ற -புறப்பாடு அழகை பாட வைத்து போனானே -என் சொல்லிச் சொல்லுவேன் –
புனர் அரங்கம் ஊர் என்று போயினார் -பொரு கயல் கண் நீர் அரும்ப புலவி-பிரிவு – தந்து போயினார் -அப்படி அழ விட வில்லையே –
என் நெஞ்சு இடம் கொண்டான் மற்று ஓர் நெஞ்சு அறியான் –வர்த்ததே -சாவரோத –
உள்ளே வந்து ஸ்தாவர பிரதிஷ்டையாக இருக்கின்றான் –
அவரோகம் -அந்தப்புரத்தில் இருப்பது போலே -உத்சவர் -உபய நாச்சியார் உடன் சேர்ந்து அனுபவிக்கிறார் —
அந்தர்ங்கர்களுக்கு மிதுனமாகவே தான் வந்து சேவை சாதித்து அருளுவான் -அரவிந்த பாவையும் தானும் அகம்படி வந்து புகுந்து –

———————————————

ரங்க ஸ்தாநே ரசிக மஹிதே ரஞ்ஜிதா சேஷ சித்தே
வித்வத் சேவா விமல மநஸா வேங்கட சேன க்லுப்தம்
அக்லேசேன ப்ரணிஹித தியாமா ருருஷோர வஸ்தாம்
பக்திம் காடாம் திசது பகவத் த்யான சோபனா மேதத் –12-

பகவத் விஷயத்தில் சுவை உடையவர்களால் போற்றப்படுபவரும் -எல்லாருடைய மனத்தையும் மகிழ்விப்பவரும்
திருவரங்கம் திவ்ய ஷேத்ரத்தில் ப்ரஹ்ம விந்துக்களின் -ஸ்ரீ அப்புள்ளார் போல்வாருக்கு செய்த -பணிவிடையால்
தூய உள்ளம் பெற்றவருமான ஸ்ரீ வேங்கடேசன் என்னும் கவியால் இந்த பகவத் த்யான ஸ்தோத்ரம் என்னும்
திவ்ய பிரபந்தம் உறுதியான பக்தியை உண்டாக்கி -யோகத்தில் ஆழ்ந்த யோகிகளின் நிலையை
கஷ்டம் இல்லாமல் ஏற விரும்புவனுக்கு உறுதியான பக்தியை அளிக்கட்டும் –

ரங்க ஸ்தாநே ரசிக மஹிதே ரஞ்ஜிதா சேஷ சித்தே
ஸ்ரீ ரெங்கத்தில் -ஆஸ்தானம் -நிறைய பேர் வந்து சேவிக்க -அரங்கம் அன்றோ -பெரிய மண்டபம் –
நிறைய கூத்து -நவ ரசம் -மூலம் அனைத்துக்கும் -ரசிக மன்றம் நிறையே –மஹீதே –
பெரிய ஆழ்வார்கள் ஆச்சார்யர்கள் சேரும் இடம்
-பிரசித்தம் அன்றோ -வேர் பற்று -சாஷாத் வைகுந்தம் ரங்க மந்த்ரம் -பதின்மர் பாடும் பெருமாள் அன்றோ –
பொய்கையார் முதலில் -முதல் திவ்ய தேசம் -ஸ்ரீ ரங்கம் -கரு வரங்கத்துள் நின்று கை தொழுதேன் திரு வரங்கம் –
ஆண்டாள் கை பிடித்த பெருமை அரங்கனுக்கே –ரசிக மஹீதே
நாத முனி -ஸ்ரீ ரெங்க நாத முனி என்றே பெயர் -சரணாகதி கத்யம் இங்கே அருளிச் செய்து –
வான் திகழும் சோலை –ஆயிரமும் அரங்கனுக்கே –
வித்வத் சேவா விமல மநஸா வேங்கட சேன க்லுப்தம்
விமல மனசால் –வித்வத் சேவா –வேங்கடேசன்-காஞ்சியில் அவதாரம் -திரு வேங்கடேசன் -கண்டாவதாரம்
-சுத்த மனசால் -அமலன் -விமலன் -நிமலன் நின்மலன் -கைங்கர்யம் பண்ணி பெற்ற அப்புள்ளார் திருவடி பலம் –
பாகவத கைங்கர்யத்தால் பெற்ற மனஸ் அன்றோ
அக்லேசேன ப்ரணிஹித தியாமா ருருஷோர வஸ்தாம்
பக்திம் காடாம் திசது பகவத் த்யான சோபனா மேதத்
படிப் படி த்யானம் பண்ண -பக்தி கொடுக்கும் -வைராக்யம் -ஞானம் மட்டும் போதாதே -ஞான விசேஷம் பக்தி ரூபா பன்ன ஞானம்

————————————-

இதி பகவத் த்யான சோபா நாம் சம்பூர்ணம் –

கவி தார்க்கிக ஸிம்ஹாய கல்யாண குண சாலிநே
ஸ்ரீ மதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம –

—————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேதாந்த தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ அபீத ஸ்தவம் –ஸ்ரீ வேதாந்த தேசிகாசார்யர் ஸ்வாமிகள்-

January 27, 2017

ஸ்ரீ மான் வேங்கட நாதார்ய கவி தார்க்கிக கேசரீ
வேதாந்தா சார்ய வர்யோ மே சந்நிதத்தாம் சதா ஹ்ருதி –

கவி தார்க்கிக சிம்ஹாய கல்யாண குண சாலினே
ஸ்ரீ மதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம –

சீர் ஓன்று தூப்புல் திரு வேங்கடமுடையான்
பார் ஒன்றச் சொன்ன பழ மொழியுள் ஓர் ஓன்று
தானே யமையாதோ தாரணியில் வாழ்வார்க்கு
வான் ஏறப் போம் அளவும் வாழ்வு –

———————————————————————

ஸ்ரீ ராமானுஜ‌ருடைய‌ கால‌த்திற்குப் பிற‌கு விசிஷ்டாத்வைத‌ ஸித்தாந்தத்திற்கு உள்ளும் புற‌ம்பும் தோன்றிய‌ விரோதிக‌ளைப் போக்கி
அதை நிலை நிறுத்த‌ திருவேங்க‌ட‌முடையான் த‌ன் திரும‌ணியை இவ்வுல‌கில் அவ‌த‌ரிப்பித்தான்.
அதுவே தூப்புலில் ஸ்ரீ வேங்க‌ட‌ நாத‌னாக‌ அவ‌த‌ரித்தது.
இந்த‌ க‌விதார்க்கிக‌ சிம்மம் ப‌ல‌ வாத‌க்கிர‌ந்த‌ங்க‌ளைச் செய்தது போல‌வே த‌மிழிலும் ஸ‌ம்ஸ்க்ருதத்திலும் ப‌ல‌ ஸ்தோத்ர‌ங்க‌ளையும் செய்த‌ருளினார்.
ஸ்ரீ தேசிக‌ன் இந்த‌ ஸ்தோத்ர‌ங்க‌ளில் ம‌ந்த்ர‌ங்க‌ளையும் ம‌ந்த்ராக்ஷ‌ர‌ங்க‌ளையும் இசைத்து வைத்திருக்கிற‌ப‌டியால்,
ம‌ந்திர‌த்தை அறியாத‌ ந‌ம்போலிய‌ரும் இந்த‌ ஸ்தோத்திர‌த்தைச் சொல்வ‌தினாலேயே ம‌ந்திர‌ம் கைவ‌ந்தார் பெறும் ப‌ல‌னைய‌டைய‌லாம்.
அத‌னாலேயே ஒவ்வொரு ஸ்தோத்ர‌த்தின் முடிவிலும் “இதைப் ப‌டிப்போர் பெறும் ப‌ய‌ன் இது” என்று ப‌ல‌ ச்ருதியைக் கூறியிருக்கிறார்.
எல்லாம் ப‌க‌வ‌த் பிரீதியின் பொருட்டு என்று செய்வோருக்கு எல்லாப் ப‌ல‌மும் கிடைக்கும்.

இவ‌ற்றுள் “அபீதிஸ்த‌வ‌ம்” என்ற‌ ஸ்தோத்ர‌ம் த‌ன் பெய‌ருக்கேற்ப‌ ஸ‌க‌ல‌ ப‌ய‌த்தையும் போக்கி
ப‌க‌வ‌த‌னுக்ர‌ஹ‌த்தால் ஸ‌க‌ல‌ ஹிதத்தையும் அளிப்ப‌தோடு,
ப‌ய‌ன் கிடைப்ப‌தாக‌ச் சொன்ன‌து பொய்ய‌ன்று என்ப‌தையும் ருஜுப்ப‌டுத்துகிற‌தாயும் இருக்கிற‌து.
ஸ்ரீதேசிக‌ன் ஸ்ரீர‌ங்க‌த்தில் எழுந்த‌ருளியிருந்த‌ கால‌த்தில் மாலிக்காபூர் என்ற‌ ம‌ஹ‌ம்ம‌திய‌த் த‌லைவ‌னின் ஸைன்ய‌ம் ஸ்ரீர‌ங்க‌த்தின்மீது ப‌டையெடுத்து வ‌ந்தது.
அதைக்க‌ண்டு ப‌ய‌ந்த‌ கோவில‌திகாரிக‌ள் க‌த‌வைமூடி ஸ‌ந்நிதிக்கு முன் வேறொரு விக்ர‌ஹ‌த்தைப் பூஜிப்ப‌தாகக் காட்டிவிட்டு,
ஸ்ரீர‌ங்க‌நாத‌னையும் உப‌ய‌நாச்சிமார்க‌ளையும் ப‌ல்ல‌க்கில் எழுந்த‌ருளுவித்துக்கொண்டு ஸ்ரீர‌ங்க‌த்தை விட்டு வெளியேறினார்க‌ள்.
வ‌ய‌து முதிர்ந்த‌வ‌ரான‌ ஸுத‌ர்ச‌னாசார்ய‌ர் என்னும் ஆசார்ய‌ர் தான் செய்த‌ சுருத‌ப்ர‌காசிகையையும் த‌ன் ம‌க்க‌ள் இருவ‌ரையும்
ஸ்ரீ தேசிக‌னிட‌ம் ஒப்பித்து, “உம்மால் ந‌ம் த‌ர்ச‌நத்திற்கு ந‌ன்மை ஏற்ப‌ட‌ப் போகிற‌து, ஆத‌லால் நீர் த‌ப்பிச் செல்லும் ” என்று கூறி அவ‌ரை அனுப்பினார்.
பிற‌கு த‌ங்க‌ள் உயிருள்ள‌வ‌ரையும் விரோதிக‌ள் உட்புகாமைக்காக‌வும் பெருமாளை எடுத்துச் செல்வோரை
அவ‌ர்க‌ள் பின்தொட‌ராமைக்காக‌வும் ம‌ஹ‌ம்ம‌திய‌ ஸைன்ய‌த்தை எதிர்த்துப் போர் புரிந்து ஆயிர‌க்க‌ண‌க்கான‌ ப‌க்த‌ர்க‌ள் உயிர் நீத்த‌ன‌ர்.

ஸ்ரீதேசிக‌னும் ஸ்ரீர‌ங்க‌த்தை விட்ட‌து முத‌ல் ப‌ல‌ இட‌ங்க‌ளில் த‌ங்கி, க‌டைசியாக‌ திருநாராய‌ண‌புர‌ம் வ‌ந்து சேர்ந்தார்.
வ‌ந்ததுமுத‌ல் ஆச்ரித‌ ர‌க்ஷ‌ண‌த்தின் பொருட்டுவ‌ந்த‌ ஸ‌ர்வேச்வ‌ர‌னான‌ ஸ்ரீர‌ங்க‌நாத‌னுக்கும் ஸூர்ய‌னும் பார்த்த‌றியாத‌
நாச்சிமார்க‌ளுக்கும் த‌ங்க‌ள் வாஸஸ்த‌ல‌த்தை விட்டு இட‌ம் தேடித்திரிய‌ வேண்டியிருந்த‌ நிலைமையையும்
ராம‌னைப் பிரிந்த‌ அயோத்யைபோல‌ அர‌ங்க‌ம் த‌ன் நாத‌னைப் பிரிந்து பொலிவ‌ற்று நிற்ப‌தையும்,
த‌ன‌க்கும் த‌ன்னைப்போன‌ற‌ ப‌ர‌மைகாந்திக‌ளுக்கும் ஸ்ரீர‌ங்க‌ வாஸ‌மும் ப‌க‌வ‌த் ஸேவையும் இல்லாததால் உயிரேய‌ற்ற‌து போல்
இருக்கும் நிலைமையையும் எண்ணி எண்ணி ம‌ன‌ம் நொந்து ஏங்கினார்.
முடிவில் த‌ன்னைக் காத்துத் த‌ன்ன‌டியார்க‌ளுக்கு அளிக்கும் பொருட்டு அவ‌னையே துதித்துச் ச‌ர‌ண‌ம‌டைய‌ வேண்டுமே யொழிய‌
வேறு க‌தியில்லை என்று நிச்ச‌யித்து “துருஷ்க‌ய‌வ‌நாதிக‌ளால் அர‌ங்க‌த்திற்கும் அர‌ங்க‌னுக்கும் அர‌ங்க‌ன‌டியார்க‌ளுக்கும்
ஏற்ப‌ட்ட‌ ப‌ய‌த்தைப் போக்கி, ம‌றுப‌டியும் த‌ன்னையும் த‌ங்க‌ளையும் ஸ்ரீர‌ங்க‌த்தில் பிர‌திஷ்டித‌மாக்கி அப‌ய‌ம‌ளிக்க‌ வேண்டும்” என்று
“அபீதிஸ்த‌வ‌ம்” என‌ற‌ இந்த‌ ஸ்தோத்ர‌த்தைச் செய்து, பெருமாள் திருவ‌டிக‌ளைச் ச‌ர‌ண‌ம‌டைந்தார்.

இந்த‌ ஸ்தோத்ர‌த்தின் ப‌ய‌னாக‌வே கொப்ப‌ணார்ய‌ன் என்னும் செஞ்சிக் கோட்டையின் த‌லைவ‌னான‌ ப‌ர‌ம‌ ப‌க்த‌ன்
துருஷ்க‌ர்க‌ளை ஸ்ரீர‌ங்க‌த்திலிருந்து விர‌ட்டி விட்டு ஸ்ரீர‌ங்க‌த்தை நிர்ப்ப‌ய‌மாக்கி ஸ்ரீர‌ங்க‌த்தை விட்ட‌துமுத‌ல் சுற்றித் திரிந்து
க‌டைசியில் திருப்ப‌தியில் எழுந்த‌ருளியிருந்த‌ ஸ்ரீர‌ங்க‌நாத‌னையும் உப‌ய‌ நாச்சிமார்க‌ளையும் த‌ன் ஊரான‌ செஞ்சியில்
கொஞ்ச‌ நாள் எழுந்த‌ருளுவித்து ஆராதித்து ம‌றுப‌டியும் ஸ்ரீர‌ங்க‌த்தில் தானே பிர‌திஷ்டை செய்வித்தான்.
மானிட‌த்தைக் க‌வி பாடாத‌ தேசிக‌ன் இந்த‌ப் பெரிய‌ கைங்க‌ர்ய‌ம் செய்து வைத்த‌ கொப்ப‌ணார்ய‌னைக் கொண்டாடி எழுதின‌
சுலோக‌ங்க‌ள் இர‌ண்டும் ஸ்ரீர‌ங்க‌த்தில் விஷ்வ‌க்ஸேன‌ர் ஸ‌ந்நிதிக்கு முன்பு பெரிய‌பெருமாள் ஸ‌ந்நிதியின்
கீழ்ப்புற‌த்துச் சுவ‌ரில் க‌ல்லில் வெட்ட‌ப்ப‌ட்டு இன்னும் காண‌ப்ப‌டுகின்ற‌ன‌.

முத‌ல் வ‌ரி இந்த‌ ச்லோக‌ங்க‌ள் வெட்ட‌ப்ப‌ட்ட‌ வ‌ருஷ‌மான‌ ச‌காப்த‌ம் 1293 (கி.பி. 1371)ஐக் காட்டுகிற‌து.
ஸ்வ‌ஸ்தி ஸ்ரீ:– (முகில் வ‌ண்ண‌ன் இருப்ப‌) முகில்க‌ள் த‌வ‌ழ‌ க‌றுத்துத் தோன்றும் த‌ன் சிக‌ர‌ங்க‌ளால் உல‌க‌த்தையே
ம‌கிழ்வூட்டும் அஞ்ஜ‌னாத்ரியிலிருந்து ல‌க்ஷ்மி பூமி இருவ‌ருட‌ன் கூடிய‌ ஸ்ரீர‌ங்க‌நாத‌னை செஞ்சிக்கு
எழுந்த‌ருளுவித்துக் கொண்டுவ‌ந்து அங்கு சில‌ கால‌ம் ஆராதித்து, பிற‌கு வில்லாளிக‌ளான‌ துருஷ்க‌ர்க‌ளை வென்று,
பெருமாளையும் பிராட்டிமார்க‌ளையும் அவ‌ர்க‌ளுடைய‌ ந‌க‌ர‌மான‌ ஸ்ரீர‌ங்க‌த்திலேயே பிர‌திஷ்டை செய்து,
கீர்த்திக்கோர் க‌ண்ணாடியான‌ கொப்ப‌ணார்ய‌ன் ம‌றுப‌டியும் சிற‌ப்பாக‌த் திருவாராத‌ன‌த்தைச் செய்தான்.

விருஷ‌ப‌கிரியிலிருந்து ஸ‌ர்வேச்வ‌ர‌னான‌ ஸ்ரீர‌ங்க‌நாத‌னை த‌ன் ராஜ‌தானிக்குக் கொண்டு சென்று,
க‌ர்விக‌ளான‌ துருஷ்க‌ ஸேனா வீரர்க‌ளை த‌ன் ஸைன்ய‌த்தால் கொல்லுவித்து,
அத‌ன்பின் ஸ்ரீர‌ங்க‌த்தை கிருத‌யுக‌த்தோடு கூடிய‌தாக‌ச் செய்து, ஸ்ரீ பூமிக‌ளோடுகூட‌ பெருமாளையும் அதில்
ம‌றுப‌டி பிர‌திஷ்டை செய்வித்து அம்புய‌த்தோனான‌ ச‌துர்முக‌ன்போல‌ ந‌ல்லோர் கொண்டாடும் முறையில்
கொப்ப‌ணார்ய‌ன் என்ற‌ பிராம‌ண‌ன் ந‌ம்பெருமாளை ஆராதித்து வ‌ருகிறான்.

இந்த‌ சுலோக‌ங்க‌ளிலிருந்து திருநாராய‌ண‌புர‌த்திலிருந்து தாயைப் பிரிந்த‌ க‌ன்றைப் போல‌க் க‌த‌றி அநுஸ‌ந்தித்த‌
அபீதிஸ்த‌வ‌த்தின் ப‌ய‌னாக‌ ம‌னோர‌த‌ம் நிறைவேறிவிட்ட‌து என்ப‌தை அறிகிறோம்.

ப‌ய‌நிவிருத்தியைப் பிரார்த்திக்க‌ப் பிற‌ந்த‌ இந்த‌ச் சிறிய‌ ஸ்தோத்ர‌த்திலும் தேசிக‌னுடைய‌ ம‌ற்ற‌ ஸ்தோத்ர‌ங்க‌ளில் போல‌
தத்வ‌ஹித‌ புருஷார்த்த‌ விஷ‌ய‌மான‌ ஸூக்ஷ்மமான‌ வேதாந்தார்த்த‌ங்க‌ள் பொதிந்து கொண்டிருப்ப‌தைக் காண‌லாம்.
கோல‌த்திருமாம‌க‌ளோடு கூடிய‌ நாராய‌ண‌னோ ஸ‌க‌ல‌ ஜ‌க‌த்கார‌ண‌மான‌ ப‌ர‌தத்வ‌ம் என்ப‌தும் (சுலோக‌ம் 1)
ப்ர‌ஹ்மாதி ஸ‌க‌ல‌ தேவ‌தைக‌ளும் அவ‌னுக்குப் ப‌ய‌ந்து த‌ங்க‌ள் தொழில்க‌ளைச் செய்து வ‌ருகிறார்க‌ள் என்ப‌தும் (சுலோக‌ங்க‌ள் 4, 26),
ஸ‌ர்வேச்வ‌ர‌ன் ஒருவ‌னை ர‌க்ஷிக்க‌ விரும்பினால் ம‌ற்ற‌ எந்த‌ப் புதுத் தெய்வ‌மும் எதிராக‌ ஒன்றும் செய்ய‌ முடியாதென்ப‌தும் (7),
பிராட்டியைப் புருஷ‌கார‌மாகக் கொண்டு ப‌ர‌தத்வ‌மான‌ இவ்விருவ‌ரிட‌முமே ச‌ர‌ணாக‌தியை அநுஷ்டிக்க‌ வேண்டுமென்ப‌தும் (2),
ஒரே த‌ட‌வை அனுஷ்டிக்க‌வேண்டிய‌து முத‌லான‌ ச‌ர‌ணாக‌தியின் பெருமைக‌ளும் (2,5,15,21),
நாம‌ஸ‌ங்கீர்த்த‌ன‌த்தின் பெருமைக‌ளும் சுருக்க‌மாக‌வும் அழ‌காக‌வும் காட்ட‌ப்ப‌டுகின்ற‌ன‌.
இருப‌த்தோராவ‌து சுலோக‌த்தில் பிர‌ப‌த்தி அனுஷ்டிக்க‌ப்ப‌டுகிற‌து.
20, 22, 24 முத‌லான‌ சுலோக‌ங்க‌ளில் இந்த‌ ஸ்தோத்திர‌த்திற்குக் கார‌ண‌மான‌ ச‌த்ரு ப‌ய‌த்தைப் போக்க‌ வேண்டுமென்ப‌து
ம‌றுப‌டியும் ம‌றுப‌டியும் “ஶ‌ம‌ய‌” “ப்ர‌ஶ‌ம‌ய‌” என்று ப்ரார்த்திக்க‌ப்ப‌டுகிற‌து.
பிர‌ப‌த்தி ஸ‌க‌ல‌ப‌ல‌ ஸாத‌ந‌ம் என்ப‌து விபீஷ‌ண‌ன் பிர‌ஹ்லாத‌ன் காக‌ம் முத‌லான‌ ப‌ல‌ருடைய‌ அனுஷ்டான‌த்தை எடுப்ப‌தால் குறிப்பிட‌ப் ப‌டுகிற‌து.

இத்துட‌ன் பிர‌ப‌த்தியை அனுஷ்டிப்ப‌த‌ற்கு ப‌ர‌ம் வ்யூஹ‌ம் விப‌வ‌ம் என்று ஒரு இட‌ நிய‌மமில்லை.
அர்ச்சாவ‌தார‌த்திலேயே ச‌ர‌ணாக‌தி செய்ய‌லாம் என்ப‌து ஸ்ரீர‌ங்க‌நாத‌னிட‌த்தில் ச‌ர‌ண‌ம் புகுவ‌தால் காட்ட்ப்ப‌டுகிற‌து.
அர்ச்சாவ‌தார‌த்தில் ஸௌல‌ப்ய‌ம் அதிக‌ம் என்ற‌ ஏற்ற‌மே உண்டு. ம‌ற்ற‌ப்ப‌டி ஸ‌ர்வ‌ஜ்ஞ‌த்வ‌ ஸ‌ர்வ‌ச‌க்தித்வாதி க‌ல்யாண‌ குண‌ங்க‌ள்
எங்கும் துல்ய‌ம் என்ப‌தும் அறிய‌த் த‌க்க‌து. ஆனால் அர்ச்சாவ‌தார‌த்தில் ச‌க்திக்கு ஏற்ற‌த் தாழ்வு இருப்ப‌தாக‌த் தோன்றுவ‌த‌ற்கு
ஆச்ரித‌ர்க‌ளின் புண்ய‌ பாப‌ங்க‌ளே கார‌ண‌ம். ஆகையால் ஸ்ரீவைகுண்ட‌த்தில் பூம‌க‌ளும் ம‌ண்ம‌க‌ளும் இருபாலும் திக‌ழ‌ வீற்றிருக்கும்
ப‌ர‌ந்தாம‌னிட‌த்தில் செய்யும் ப‌க்தியை ந‌ம‌க்காக‌ ந‌ம் நாட்டிலும் இல்ல‌த்திலும் தோன்றி நாம் இட்ட‌தை ஏற்று ம‌கிழும்
அர்ச்சையிட‌ம் செய்வ‌தே விவேக‌முடையார் செய்ய‌த் த‌க்க‌து. அர்ச்சாவ‌தார‌ ஸேவையே ந‌ம‌க்குச் சிற‌ந்த‌ உபாய‌ம்.
ஆல‌ய‌ங்க‌ளுக்கும் எம்பெருமான்க‌ளுக்கும் ம‌ற்றும் தேச‌த்திற்கும் த‌ன‌க்கும் ஏற்ப‌ட்ட‌போது இந்த‌ அபீதிஸ்த‌வ‌த்தை அநுஸ‌ந்தித்தால்,
ஆப‌த்து நீங்கி இது அப‌ய‌த்தை நிச்ச‌ய‌மாய் அளிக்கும் என்ப‌து ஸ்ரீ தேசிக‌ன் ச‌ரித்ர‌த்தால் ப்ர‌த்ய‌க்ஷ‌ஸித்த‌ம்.

கோலத்திரு மா மகள் உடன் கூடிய ஸ்ரீ நாராயணனே சகல ஜகாத் காரண பரத்வம் –
ப்ரஹ்மாதி தேவர்களும் இவன் ஆஜ்ஜைக்கு அஞ்சி கார்யம் செய்வதை முதல் ஸ்லோகத்தாலும் –
சர்வேஸ்வரன் ஒருவரை ரஷிக்க விரும்பினால்
எந்த தெய்வமும் எதிராக ஒன்றும் செய்ய முடியாது
என்று ஸ்லோகங்கள் -4-முதல் -26-
பிராட்டியை புருஷகாரமாகக் கொண்டு மிதுனமான இந்த பரத்வ தத்வம் இடம்
சரணாகதி அனுஷ்ட்டிக்க வேண்டும்
என்று -7-ஸ்லோகத்தாலும்
ஒரே தடவை செய்ய வேண்டிய சரணாகதியின் பெருமைகளை -2-ஸ்லோகத்தாலும்
திரு நாம சங்கீர்த்தனத்தின் பெருமைகளை -2-5–15–21-ஸ்லோகங்களிலும்
பிரபத்தி -21-ஸ்லோகத்தில் சரணாகதி அனுஷ்ட்டித்தும்
சத்ரு பயங்களை போக்கி அருள -20–22–24-ஸ்லோகங்களில் சமய பிரசமய என்றும் மீண்டும் பிரார்த்திக்கிறார்
-பிரபத்தி சகல பல சாதனம் அன்றோ –

———————————————–

அபீதி ரிஹ யஜ்ஜூஷாம் யதவதீ ரிதா நாம் பயம்
பயாபய விதாயிநோ ஜகதி யந்நி தேச ஸ்திதா
ததே தததி லங்கித த்ருஹண சம்பு சக்ராதிகம்
ரமசா கமதீ மஹே கிமபி ரங்க துர்யம் மஹ–1-

ய‌ஜ்ஜுஷாம் — எவ‌ருடைய‌ ப்ரீத்ய‌நுக்ர‌ஹ‌ருடைய‌வ‌ர்க்கு,
இஹ‌ — இங்கேயே,
அபீதி — ப‌ய‌மில்லாமையும்,
ய‌த‌வ‌தீரிதாநாம் — எவ‌ரால் உபேக்ஷிக்க‌ப் ப‌ட்ட‌வ‌ர்க‌ளுக்கு,
ப‌ய‌ம் — ப‌ய‌மும் (உண்டோ),
ஜ‌க‌தி — உல‌க‌த்தில்,
ப‌யாப‌ய‌ விதாயிந‌: — ப‌ய‌த்தையும் அப‌ய‌த்தையும் கொடுப்ப‌வ‌ர்க‌ள்,
ய‌ந்நிதேஶே — எவ‌ருடைய‌ ஆக்ஞையில்,
ஸ்திதா — இருக்கின்றார்க‌ளோ,
அதில‌ங்கித‌ த்ருஹிண‌ ஶ‌ம்பு ஶ‌க்ராதிக‌ம் — ப்ர‌ஹ்மா, ஈச்வ‌ர‌ன், இந்திர‌ன் முத‌லிய‌வ‌ர்க‌ளைத் தாண்டிய‌தும்,
ர‌மாஸ‌க‌ம் — பெரிய‌பிராட்டியாருடைய‌ தோழ‌மை கொண்ட‌தும்,
தத் — அந்த‌,
ஏதத் — இந்த‌,
கிமபி — சொல்லுக்கு அட‌ங்காததையும்,
ர‌ங்க‌துர்ய‌ம் — ர‌ங்க‌துர‌த்தை நிர்வ‌ஹிக்கும்,
ம‌ஹ‌: — தேஜ‌ஸ்ஸை,
அதீம‌ஹே — அத்யய‌ந‌ம் செய்கிறோம் (அநுஸ‌ந்திக்கிறோம்)

அபீதி ரிஹ யஜ்ஜூஷாம்ய-எவருடைய ப்ரீத்தி அனுக்ரஹம் உடையோருக்கு இங்கேயே பயம் இல்லாமையும்
தவதீ ரிதா நாம் பயம் -எவரால் உபேக்ஷிக்கப் பட்டவர்களுக்கு பயம் உண்டோ
பயாபய விதாயிநோ-பயத்தையும் அபயத்தையும் கொடுப்பவர்கள்
ஜகதி யந்நி தேச ஸ்திதா-உலகத்தில் எவருடைய ஆஞ்ஜையில் இருக்கின்றார்களோ
ததே தததி லங்கித த்ருஹண சம்பு சக்ராதிகம் -ப்ரஹ்மா ருத்ரன் இந்திரன் முதலியவர்களைத் தாண்டியதும்
ரமசா கமதீ -பெரிய பிராட்டிக்கு தோழமை கொண்டதும்
தத் ஏதத் -அந்த இந்த
மஹே கிமபி ரங்க துர்யம் மஹ-ரங்க துரத்தை நிர்வஹிக்கும் தேஜஸை அத்யயனம் -செய்கிறோம் -அனுசந்திக்கிறோம் –

பெரிய‌தோர் ப‌ய‌த்திலிருந்து விமோச‌ந‌மாகும்ப‌டி அப‌ய‌ ப்ரார்த்த‌னை செய்வ‌தால் பெருமாளுடைய‌ ர‌க்ஷ‌ண‌த்தை
“ஸ்வாஶ்ரிதாப‌ய‌ப்ர‌த‌ம்” என்று துவ‌க்குகிறார். அந்வ‌ய‌வ்ய‌ திரேக‌ங்க‌ளாக‌ முத‌ல‌டியில் ல‌க்ஷ‌ண‌ங்க‌ள் ஸாதிக்கிறார்.
எங்க‌ளுக்கு அப‌ய‌மே தான் நியாய்ய‌ம். ப‌ய‌த்திற்கு ப்ர‌ஶ‌க்தியே இல்லை.
பெருமாள் க்ருபைக்குப் பாத்திர‌மான‌ எங்க‌ளுக்கு அபீதி நிய‌த‌மாயிருக்க‌ வேண்டுமே.
பெருமாளுடைய‌ உபேக்ஷைக்கு (அவ‌தீர‌ண‌த்திற்கு, திர‌ஸ்கார‌த்திற்கு) விஷ‌ய‌மானோருக்க‌ல்ல‌வா ப‌ய‌ம் வ‌ர‌லாம்.
நாம் அவ‌ரால் அவ‌தீரித‌ர‌ல்ல‌வே. ப‌ய‌ம் வ‌ந்த‌ கார‌ண‌ம் அறிகிலோம். வ‌ந்திருக்கும் ப‌ய‌த்தை உட‌னே போக்க‌வேணும்.
(ய‌த‌நுக்ர‌ஹ‌த‌: ஸ‌ந்தி ந‌ ஸ‌ந்தி ய‌துபேக்ஷ‌யா) என்று நித்மான‌ பொருள்க‌ள்கூட‌ எவ‌ர் அனுக்ர‌ஹ‌த்தால் இருக்கின்ற‌ன‌வோ,
எவ‌ர் உபேக்ஷித்தால் இல்லாம‌ற்போமோ என்று சுக‌ர் ஸாதித்ததை அநுஸ‌ரித்த‌து இந்த‌ முத‌ல‌டி ல‌க்ஷ‌ண‌ம்.
இந்த‌ ல‌க்ஷ‌ண‌த்தை ம‌ன‌திற் கொண்டே இவ‌ரை நாம் ப்ரீதியோடு ஸேவித்தால், ந‌ம்மிட‌ம் இவ‌ருக்கு அநுக்ர‌ஹ‌ம் உண்டாகி
ந‌ம் ப‌ய‌ம் தீரும் என்று தீர்மானித்து, இவ‌ரை ஸேவித்து ம‌ல்லுக்க‌ட்டி அப‌ய‌ம் பெறுவோம் என்று முத‌லிலேயே தேற்றிக் கொள்ளுகிறார்.

அப‌ய‌ஸித்தி என்னும் ப்ர‌யோஜ‌ன‌த்திற்காக‌ அவ‌னை ஸேவித்து, அவ‌னை ஜுஷ்ட‌னாக‌ (ப்ரீத‌னாக‌)ச் செய்வோம்.
பெருமாளுடைய‌ ப்ரீதியுமிருக்க‌ட்டும், அவ‌ர்பேக்ஷையும் இல்லாம‌லிருக்க‌ட்டும். உல‌க‌த்தில் ப‌ய‌முண்டாக்கக்கூடிய‌
அதிகாரிக‌ளான‌ வாயு, ஸூர்ய‌ன் முத‌லிய‌வ‌ர் ப‌ய‌முண்டாக்கினால், என் செய்வோம் என்று கேட்பீரோ?
அவ‌ர்க‌ளிட‌மிருந்து ப‌ய‌த்திற்கு பிர‌ஸ‌க்தி இல்லை.
உல‌க‌த்தில் ப‌யாப‌ய‌ கார‌ண‌ர்க‌ளான‌ அவ‌ர்க‌ள் இவ‌ருடைய‌ ஆக்ஞையில் (ப்ர‌ஶாஸ‌நத்தில்) நிற்ப‌வ‌ர்.
இதுவும் ஒரு ல‌க்ஷ‌ண‌மாக‌ப் ப‌ணிக்க‌ப்ப‌டுகிற‌து. இர‌ண்டாம‌டியைத் திருப்பி மாற்றி அந்வ‌யிப்ப‌தில் மிக‌ ர‌ஸ‌முண்டு.
எவ‌ருடைய‌ க‌ட்ட‌ளைப்ப‌டி ந‌ட‌க்கும் ப‌க்த‌ர்க‌ள் உல‌க‌த்திற்கு ப‌ய‌த்தையும் அப‌ய‌த்தையும் கொடுக்க‌வ‌ல்ல‌ரோ,
ப‌க‌வ‌தாஶ்ரித‌ராய், அவ‌ர் க‌ட்ட‌ளையில் நிற்ப‌வ‌ர் இட்ட‌து ச‌ட்ட‌ம் உல‌க‌த்தில் ப‌யாப‌ய‌ங்க‌ள்.
ப்ர‌ஹ்ம‌நிஷ்ட‌ருக்கு தேவ‌ர்க‌ளும் கெடுத‌ல் செய்ய‌முடியாது.
தேவ‌ர்க‌ள் அவ‌ர்க‌ளுக்கு ப‌லி ஸ‌ம‌ர்ப்பித்துப் பூஜை செய்கிறார்க‌ள் என்று உப‌நிஷ‌த்துக் கூறுகிற‌து.
இத‌னால் வாயு, ஸூர்ய‌ன் முத‌லிய‌ தேவ‌ர்க‌ளிட‌மிருந்து ப‌ய‌ம் வ‌ராதென்று கைமுத்ய‌த்தால் ஸித்த‌ம்..

“எவ‌னுடைய‌, எவ‌னுடைய‌, எவ‌னுடைய‌” என்று மும்முறை ப‌டித்துவிட்டு “அந்த‌ இச்சுட‌ர்” என்கிறார்.
“அதை இதைப்போல் பார்த்தார் ரிஷிவாம‌தேவ‌ர்” என்று உப‌நிஷ‌த்து மூன்று ல‌க்ஷ‌ண‌ங்க‌ளால் குறித்து, “அது ப்ர‌ஹ்மம்” என்ற‌து போல‌,
இங்கு “அது இந்த‌ ர‌ங்க‌ ஜ்யோதிஸ்” என்கிறார். ப்ர‌ஹ்மா, ருத்ர‌ன், இந்திர‌ன் முத‌லான‌வ‌ர்க‌ளால் ப‌ய‌ம் வ‌ந்தாலென்ன‌ செய்கிற‌து என்றும் ப‌ய‌ப்ப‌ட‌ வேண்டாம், அது இதையெல்லாம் மீறிய‌ ம‌ஹ‌ஸ். இது அப்ரமேய‌மான‌ தேஜ‌ஸ். “கிமபி” என்ப‌த‌ற்கு “மாநாதீத‌ம்”, “அப்ர‌மேய‌ம்” என்று க‌ருத்து.

அந்த‌ தேஜ‌ஸ் (ராம‌ன்) அப்ர‌மேய‌மே, ஏனென்றால் ஜான‌கி அத‌னுடைய‌வ‌ள‌ல்ல‌வோ” என்ற‌ மாரீச‌ன் வார்த்தையை நினைத்து,
ர‌மாஸ‌க‌மான‌ ஏதோ ஒரு அப்ர‌மேய‌மான‌ தேஜ‌ஸ் என்கிறார். ச‌ர‌ணாக‌தியான‌ இந்த‌ ஸ்த‌வ‌த்தில் ப்ர‌ண‌வாந்த‌ஸ் ஸ்தித‌மான‌
ப்ர‌ஹ்ம‌ தேஜ‌ஸ்ஸிட‌ம் ப‌ர‌த்தை ஸ‌ம‌ர்ப்பிக்கையில், ல‌க்ஷ்மீ ஸ‌ஹாய‌மான‌ தேஜ‌ஸ் என்கிறார்.
ச‌ர‌ணாக‌தியைப் ப‌ண்ணின‌தாக‌ச் சொல்லும் இருப‌த்தோராவ‌து சுலோக‌த்திலும் ஸ்ரீகாந்த‌னிட‌ம் ப‌ர‌த்தை ஸ‌ம‌ர்ப்பித்தோம் என்கிறார்.
(ம‌கார‌ஸ்து த‌யோர்தாஸ‌:) என்ற‌ ப்ர‌ண‌வ‌ சுருதியை நினைக்கிறார். எந்த‌ ம‌ஹ‌ஸ் என்றால், ர‌ங்க‌ துர‌த்தை (ர‌ங்க‌ பார‌த்தை) வ‌ஹிக்கும் தேஜ‌ஸ்,
ர‌ங்க‌மென்ப‌து ப்ர‌ண‌வ‌ம். ப்ர‌ண‌வ‌துர‌த்தை நிர்வ‌ஹிக்கும் தேஜ‌ஸ். ப்ர‌ண‌வ‌த்திலுள்ள‌ தேஜ‌ஸ்ஸைப் ப‌ணிக்கையில், “அதீம‌ஹே” என்கிறார்.
ப்ர‌ண‌வ‌ தேஜ‌ஸ்்ஸான‌ ர‌ங்க‌ தேஜ‌ஸ் அத்யய‌ன‌ம் செய்ய‌ யோக்ய‌மான‌து. வேத‌ம் முழுவ‌தும் ப்ர‌ண‌வ‌த்திற்குள் உள்ள‌து.
ர‌ங்க‌துர‌த்தை நிர்வ‌ஹிக்கும் தேஜ‌ஸ் என்ப‌தில் வேறு ர‌ஸ‌முண்டு.
ர‌ங்க‌த்தை ர‌க்ஷித்து அத‌ற்கு அபாய‌மில்லாம‌ல் நிர்வ‌ஹிக்க‌ வேண்டும் என்ப‌துதான் இந்த‌ ஸ்த‌வ‌த்திற்குப் ப‌ய‌ன்.
ர‌ங்க‌த்தின் பாரத்தை அவ‌ரை வ‌ஹிக்க‌ ப்ரார்த்திக்கிறோம் என்றும் ஸூச‌க‌ம். ம‌ற்றொன்றும் வேண்டாம்.
ர‌ங்க‌ துர‌ந்த‌ர‌ன் என்னும் திருநாமம் அந்வ‌ர்த்த‌மாக‌ இருக்க‌ வேணும். “துர்ய‌” என்ப‌து அச்வ‌த்தையும் சொல்லும்.
“ஹ‌ய‌ம‌ஹ‌ஸ்” என்று த‌ம‌க்குப் பிரிய‌மான‌ ஹ‌ய‌க்ரீவ‌ தேஜ‌ஸ்ஸையும் சேர்த்து அபிந்ந‌மாக‌ நினைக்கிறார்.

யத் அனுக்ரஹ சந்தி ந சந்தி யத் உபேஷ்யா–ஸ்ரீ சுகர் / ப்ரஹ்ம நிஷ்டர்க்கு தேவர்களாலும் கெடுதல் செய்ய முடியாதே
கிமபி -அப்ரமேய தேஜஸ் என்றபடி / மகாரஸ்து -தயோர் தாஸ-பிரணவ ஸ்ருதி /
ரங்கம் பிரணவம் -துரத்தை வஹிக்கும் –துர்ய-ஹயமவுஸ் -ஹயக்ரீவ தேஜஸ் சேர்த்து என்றுமாம்-

தஞ்சம் என வருவார்க்குத் தந்திடுவான் அஞ்சாமை
தனைச் சேரா தகல்வோர்க்குத் தந்திடுவான் அச்சத்தை
அஞ்சுதலைத் தந்து நம்மை அலைக்கழிப்போர் எல்லாரும்
அஞ்சாமை நமக்கு அளிக்கும் அன்பர்களும் அவன் அடிமை
செஞ்சடையோன் நான்முகத்தோன் தேவர் கோன் முதல்வோரும்
நினைப்பரிய மேலிடத்தோன் திரு மகளார் உடை சேர
விஞ்சுகிற ஒளியாக விரி புகல் சேர் அரங்கத்தில்
விளங்குகிற அத்தேவை விரித்துரைத்து வாழ்த்துவமே –

——————————————————-

தயா சிசிரிதாசயா மனசி மே சதா ஜாக்ருயு
ஸ்ரியா அத்யுதிஷ வக்ஷஸே ஸ்ரித மருத் வ்ருதா சைகதா
ஜகத்துரித கஸ்மரா ஜலதி டிம்ப டம்பஸ் ப்ருச
ஸக்ருத் ப்ரணத ரக்ஷண ப்ரதித சம்வித சம்வித –2-

த‌யா – க்ருபையால்,
ஶிஶிரித‌ – குளிர்ந்த‌,
ஆஶ‌யா – திருவுள்ள‌த்தையுடைய‌வ‌ர் ம‌ய‌மாயும்,
ஶ்ரியா – பிராட்டியால் அத்யுஷித‌ – வாஸ‌ம் செய்ய‌ப்ப‌டும்,
வ‌க்ஷ‌ஸ‌: – திருமார்பு ம‌ய‌மாயும்,
ஶ்ரித‌ ம்ருத்வ்ருதாஸைக‌தா – காவேரி ம‌ண‌லில் ச‌ய‌னித்திருப்ப‌வ‌ர்ம‌ய‌மாயும்,
ஜ‌க‌த் – உல‌க‌த்தின்,
துரித‌ – பாப‌த்தையெல்லாம்,
க‌ஸ்ம‌ரா: – விழுங்கிவிடுப‌வ‌ர் ம‌ய‌மாயும்,
ஜ‌ல‌திடிம்ப‌ ட‌ம்ப‌ ஸ்ப்ருஶ‌: – குட்டி ஸ‌முத்ர‌ம் போன்ற‌வ‌ர் ம‌ய‌மாயும்,
ஸ‌க்ருத் – ஒரு த‌ட‌வை,
ப்ர‌ண‌த‌ – ச‌ர‌ண‌ம‌டைந்த‌வ‌ரையும்,
ர‌க்ஷ‌ண‌ ப்ர‌தித‌ஸ‌ம்வித‌: – ர‌க்ஷிப்ப‌தாக‌ப் பிர‌ஸித்த‌மாக‌ ப்ர‌திக்ஞை செய்த‌வ‌ர் விஷ‌ய‌மாயும்,
ஸ‌ம்வித‌: – புத்திவ்ருத்திக‌ள்,
மே ம‌ந‌ஸி – என்னுடைய‌ ம‌ன‌தில்,
ஸ‌தா – எப்பொழுதும்,
ஜாக்ருயு: – ஜாக‌ரூக‌மாகக் குடி கொண்டிருக்க‌ வேண்டும்.

தயா சிசிரிதாசயா மனசி-கிருபையால் குளிர்ந்த திரு உள்ளத்தை யுடையவராயும்
ஸ்ரியா அத்யுதிஷ வக்ஷஸே -அகலகில்லேன் இறையும் என்று பிராட்டி நித்ய வாசம் செய்யும் திரு மார்பு யுடையவனாய்
ஸ்ரித மருத் வ்ருதா சைகதா-காவேரி மணல் மேட்டுத் திட்டில் சயனித்து இருந்து –
விபீஷணர் சரணாகதி கடல் கரை மணலில் நடந்தது நினைப்பூட்டி இருப்பவராயும்
ஜகத்துரித கஸ்மரா– ஜகத்தில் பாபங்களை எல்லாம் விழுங்கி விடுபராயும் –
ஜலதி டிம்ப டம்பஸ் ப்ருச— குட்டி சமுத்திரம் போன்றவராயும் -பச்சை மா கடல் போல் மேனி
ஸக்ருத் ப்ரணத ரக்ஷண ப்ரதித சம்வித சம்வித-ஒரே தடவை சரணம் அடைந்தவர்களையும் ரக்ஷிப்பதாக ப்ரதிஜ்ஜை செய்து
அருளுபவர் விஷயமாக புத்தி விருத்திகள்
மே சதா ஜாக்ருயு-என்னுடைய மனசில் ஜாக ரூகமாகக் குடி கொண்டு அருள வேணும் –

இந்த‌ ச‌ர‌ணாக‌தியை மிக‌வும் கெட்டியாய்ச் செய்ய‌வேணும். இந்த‌ ச‌ர‌ணாக‌திக்குப் ப‌ல‌ம் உட‌னே த‌ப்பாம‌ல் கிடைக்க‌வேணும்.
ஸ‌முத்ர‌க்க‌ரையில் புளிநத்தில் (ம‌ண‌லில்) ந‌ட‌ந்த‌ விபீஷ‌ண‌ ச‌ர‌ணாக‌தி அவ‌ஸ‌ர‌த்தை நினைத்து,
அத்தொடொக்க‌ப் பெருமாளுடைய‌ ர‌ங்க‌ச‌ய‌நத்திலுள்ள‌ அம்ச‌ங்க‌ளை ம‌ன‌தில் பாவ‌னை செய்கிறார்.
அங்கே க‌ட‌ற்க‌ரை ம‌ண‌ல், இங்கே ஸ‌முத்ர‌ ப‌த்நியாகிய‌ காவேரியின் ம‌ண‌லில் ச‌ய‌ந‌ம்.
ப‌தியாகிய‌ ஸ‌முத்ர‌த்தைக் காட்டிலும் ப‌த்நிக‌ளான‌ ய‌முனை போன்ற‌ புண்ய‌நதிக‌ளுக்கு சுத்தி அதிக‌ம்.
“தூய‌பெருநீர் ய‌முனைத் துறைவ‌னை” “மருத் வ்ருதா” என்று காவேரிக்கு சுருதியில் திருநாமம்.
வேத‌ப் பிர‌ஸித்த‌மான‌ புண்ய‌நதி என்று வ்ய‌ஞ்ஜ‌ந‌ம். ப்ர‌ண‌வ‌ப் பெருமாள் வேத‌ப் பிர‌ஸித்த‌ நதியில் ச‌ய‌னித்தார்.
க‌ட‌ற்க‌ரையில் நீர்க்க‌ட‌லுக்கு எதிரில் ஓர் நீல‌ தேஜோ வெள்ள‌மாய் பெருமாள் ப்ர‌திஶ‌ய‌ன‌ம் செய்ததை நினைக்கிறார்.
இங்கே அர‌ங்க‌ன் ஓர் குட்டிக் க‌ட‌லாக‌ப் பிர‌காசிக்கிறார். “ப‌ச்சைமா க‌ட‌ல்போல் மேனி” என்று இங்கே ஒருவாறு அனுப‌வ‌ம்.
(அர்ண‌வ‌த‌ர்ண‌க‌ம்) என்றார் ஸ்ரீ ப‌ட்ட‌ர். ஆச்ரித‌ர்க‌ளின் பாப‌க்க‌ட‌லை அப்ப‌டியே உறிஞ்சி விடுவ‌தாக‌ ஸ‌ங்க‌ல்ப‌ம்.
உல‌க‌த்தின் பாப‌க்க‌ட‌லுக்கு எதிரியாக‌ இக்குட்டிக் க‌ட‌லின் ச‌ய‌ன‌ம்.

(ஸ‌க்ருதேவ‌ ப்ர‌ப‌ந்நாய‌ ………… அப‌ய‌ம் ஸ‌ர்வ‌பூத‌ப்யோததாமி ஏதத் வ்ர‌த‌ம் மம) என்று ப்ர‌திக்ஞை செய்த‌ அவ‌ஸ‌ர‌த்தையும் காட்டுகிறார்.
க‌ட‌ற்க‌ரையில் எல்லோரும் பார்க்கும்ப‌டி பிராட்டியின் ஸ‌ந்நிதாந‌ம் இல்லை. பிராட்டி அக்க‌ரையிலும் பெருமாள் இக்க‌ரையிலுமாக‌ இருந்த‌ அவ‌ஸ‌ர‌ம்.
ஆனால‌ பிரிந்திருந்த‌ பிராட்டியைச் சேர்த்து வைப்ப‌த‌ற்காக‌வே த‌ம்மை அங்கீக‌ரிக்கும்ப‌டி விபீஷ‌ண‌ன் பிரார்த்தித்தான் என்றும் சொல்லலாம்.
இருவ‌ரையும் சேர்த்துவைத்து இருவ‌ருயிரையும் காப்பாற்றி, தாமும் பிழைக்க‌ அங்கே ஆஶ்ர‌ய‌ண‌ம்.
“ப்ர‌தீய‌தாம் தாஶ‌ர‌தாய‌ மைதிலீ” என்று த‌ம்ப‌திக‌ளைக் கூட்ட‌வே அவ‌ர் ம‌நோர‌த‌ம். இங்கு இருவ‌ர் திருமேனியையும் காப்பாற்ற‌ ச‌ர‌ணாக‌தி.
அங்கும் அது உண்டு. ஸ்ரீ உறையும் திருமார்பை உடைய‌வ‌ர். “பூம‌ன்னும் மாது உறை மார்ப‌ன்”.
பிராட்டி திருமார்பை ஆஶ்ர‌யித்திருப்ப‌தால் தான் ஹ்ருத‌ய‌ம் த‌யையினால் குளிர்ந்திருக்கிற‌து.
பெருமாள் திருவுள்ள‌ம் சீத‌ள‌மான‌துதான். நாம்தான் அத‌ன் பிர‌யோஜ‌னத்தை அடையாம‌ல், அந்த்த் த‌யையைத் த‌கைகிறோம்.
“ஸ‌ம்வித்” என்னும் புத்திக‌ள் என் ம‌ன‌தில் தூங்காம‌ல் விழித்துக்கொண்டே இருக்க‌ வேண்டும் என்று பிரார்த்த‌னை.
பெருமாள் தூங்குவ‌து போலிருந்தாலும் அவ‌ர் விஷ‌ய‌மான‌ என்னுடைய‌ பாவ‌னைக‌ள் தூங்காம‌ல் ஸ‌தா விழித்திருக்க‌ வேண்டும்.
பெருமாளுக்கு விசேஷ‌ண‌ங்க‌ளாகக் கூற‌ப்ப‌ட்ட‌தெல்லாம், ந‌ம்முடைய‌ பாவ‌னையில் ஆகார‌ங்க‌ளாகக் கூடி, ஸ‌மாநாதிக‌ர‌ண‌மாகின்ற‌ன‌.
விஶிஷ்ட‌மான‌ ஸ‌ம்வித்துக‌ளே. நிர்விஶேஷ‌ நிராகார‌ புத்தி ய‌ல்ல‌. இந்த‌ விசேஷ‌ண‌ங்க‌ளையுடைய‌ பெருமாளால் உப‌ர‌க்த‌மான‌ புத்திக‌ள்.
திருக்காவேரியில் ப‌ள்ளிகொண்ட‌ பெருமாள் விஷ‌ய‌மான‌ பாவ‌னை என‌க்கு எப்போதும் இருக்க‌ வேண்டும் என்று ப்ரார்த்திப்ப‌தால்,
பாவ‌னைக்கு விஷ‌ய‌மான‌ பெருமாள் திருமேனியும் விசேஷ‌ண‌ங்க‌ளும் நித்ய‌மாய் நிர‌பாய‌மாயிருக்க‌ வேண்டும் என்று முக்கிய‌க் க‌ருத்து ஸூசித‌மாகிற‌து.
இந்த‌ ம‌நோர‌தத்தைப் பூர்த்தி செய்ய‌ பெருமாள் க்ருபை செய்ய‌வேண்டும் என்று ஆசையை விள‌க்குகிறார்.
காய‌த்ரியில் சுப‌மான‌ புத்தி வ்ருத்திக‌ளின் ப்ர‌சோதநத்தின் ப்ரார்த்த‌னை போல் இங்கும் முன் ச்லோக‌த்தில் “அதீம‌ஹே” என்று பேசி,
அடுத்தாற்போல் அங்கு போல‌ இங்கே **தீக‌ளாகிய‌ ஸ‌ம்வித்துக்க‌ளின் ஜாக‌ர‌ண‌த்தையும் பிரார்த்திக்கிறார்.
காய‌த்ரீ ஜ‌ப‌ம் எப்ப‌டி நித்ய‌மோ, அப்ப‌டியே ஸ்ரீர‌ங்க‌ஸ்ரீயின் வ்ருத்தியின் பிரார்த்த‌னையும் நித்ய‌ம்.
அத‌ற்கு லோப‌ம் வ‌ருவ‌தை ஸ‌ஹிக்க‌ மாட்டோம‌ல்ல‌வா?

கருணை தனின் பெருக்கு எடுப்பால் குளிர்ந்து இருக்கும் உள்ளத்துடன்
திரு மகளே அகலாது திகழ்ந்து உறையும் மார்புடனும்
பிரிந்தோடும் காவேரியின் மணல் திட்டில் கிடந்தது அருளி
பார் வாழும் மக்கள் தனின் பாபங்களை ஒழிப்பவனாய்
ஒரு முறையே அடி பணிய உற்றவரைக் காப்பது என
உலகு அறிய வாக்கதனை உறுதி செய்யும் அரங்கன் தன்
திரு மேனித் தோற்றங்கள் திரளாக எழுந்து எழுந்து
நிறைந்து என் தன் நெஞ்சும் உள்ளே நிலைத்திடட்டும் நித்யமே

——————————————————–

ச‌ர‌ணாக‌தி பூர்ண‌மாயின் ப‌லிக்குமென்ப‌து திண்ண‌ம்.
பெருமாள் திருமேனியின் க்ஷேம‌த்திற்காக‌ச் செய்யும் ச‌ர‌ணாக‌தி ரூப‌மான‌ அர்ச்ச‌னை ஸ்துதி
குறைவில்லாம‌ல் பூர்ண‌மாயிருக்க ‌வேண்டுமே என்று அபார‌மான‌ க‌வ‌லை.
எங்கே குறைவு வ‌ந்து ச‌ர‌ணாக‌தி அபூர்ண‌மாகி, கோரிய‌ ப‌ல‌ம் த‌வ‌றிவிடுமோ என்று ப‌ய‌ம்.
பெருமாளுடைய‌ த‌யாதி க‌ல்யாண‌ குண‌ங்க‌ளைப் பூர்ண‌மாய் நெஞ்சில் த‌ரிக்க‌ வேணும்.
என் அல்ப‌ விஷ‌ய‌மான‌ ம‌தி எங்கே? பெருமாளின் எண்ணிற‌ந்த‌ க‌ல்யாண‌ குண‌ங்க‌ளெங்கே?
பெருமாளுடைய‌ த‌யை என்னும் குண‌ம் என் புத்தியில் நிர‌ம்பியிருக்க‌ வேண்டும் என்கிறார்.
அவ‌ர் த‌யை எல்லைய‌ற்ற‌து. என் புத்தி ப‌ரிமித‌மான‌து. அதுதான் சூந்ய‌மாக‌ இருக்கிற‌தோ?
அவ்வித‌மிருந்தால் அதில் பெருமாள் த‌யை கொஞ்ச‌மேனும் புகுர‌லாம். புத்தி மித‌ம்;
அதில் மோஹ‌த்திற்குக் க‌ண‌க்கில்லை என்கிறார்.
மிக்க‌ மோஹ‌த்தால் நிர‌ம்பின‌ சிறு புத்தியில் பெருமாள் அள‌வ‌ற்ற‌ பெரும் குண‌ம் புகுந்து நிற்க‌ இட‌மில்லையே.
நிர‌ந்த‌ர‌மாக‌ப் பெருமாளைப் ப‌ஜிக்க‌ப் பெற‌வில்லை. மோஹ‌ ப‌ஜ‌நத்திற்குக் குறைவில்லை.
அதிக‌ம் மோஹ‌த்தால் மூட‌ப்ப‌ட்டிருப்ப‌த‌ற்குக் கார‌ண‌ம் என்ன‌? குண‌ம். என்ன‌ குண‌ம்?
ந‌ல்ல‌ குண‌மாயின் பெருமாள் குண‌ம் குடியேற‌ விரோத‌மில்லை. அவ‌ர் குண‌த்திற்கும் என் குண‌த்திற்கும் நாமம் ம‌ட்டும்தான் ஒன்று.
என் தோஷ‌த்திற்கே என் குண‌ம் என்று பெய‌ர். முக்குண‌ப் பிர‌கிருதி என் குண‌ம்.
“தோஷ‌க்ருஹீத‌குணாம்” என்று ச்ருதி கீதை தொட‌க்க‌த்தில் சுக‌ர் “அஜை” என்னும் பிர‌கிருதிக்குத் த்ரிகுண‌ம் என்று பெய‌ர் ம‌ட்டுமே;
தோஷ‌த்திற்கே குண‌ம் என்று பெய‌ர் க்ர‌ஹிக்க‌ப்ப‌டுகிற‌து என்று வேடிக்கையாய்க் காட்டினார்.
குண‌த்தால் என் உட‌ல‌ம், வாக்கு, ம‌ன‌ஸ் எல்லாம் விசித்திர‌மாய்க் க‌ட்ட‌ப்ப‌ட்டு, ஒன்றோடொன்று விசித்திர‌மாய்க் காடு பாய்கிற‌து.

ய தத்ய மித புத்தி நா பஹுள மோஹ பாஜா மயா
குண க்ரதித காய வாங்மனச வ்ருத்தி வை சித்ர்யத
அதர்க்கித ஹிதாஹித க்ரம விசேஷ மார்ப்யதே
தத்ப் யுசிதமர்ச்சனம் பரிக்ருஹாண ரங்கேஸ்வர –3-

ர‌ங்கேஶ்வ‌ர‌ — ஸ்ரீர‌ங்க‌ராஜ‌ரே! ,
அத்ய‌ — இன்று,
குண‌ — முக்குண‌ங்க‌ளால்,
க்ர‌தித‌ –வ‌ரிந்து க‌ட்ட‌ப் ப‌ட்டிருக்கும்,
காய‌ வாங் ம‌ன‌ஸ‌ — தேஹ‌ம், வாக்கு, ம‌ன‌சு,
வ்ருத்தி — இவ‌ற்றின் போக்குக‌ளின்,
வைசித்ர்ய‌த‌: — வைசித்ர்ய‌த்தால்,
ப‌ஹுள‌ ரோஹ‌ பாஜா — எத்த‌னையோ மோஹ‌த்தை அடைந்த‌,
மித‌புத்திநா — சிறிய‌ புத்தியையுடைய‌,
ம‌யா — என்னால்,
அத‌ர்க்கித‌ ஹிதாஹித‌ க்ர‌ம‌ விசேஷ‌ம் — எது ந‌ல்ல‌ வ‌ழி எது த‌வ‌றான‌து என்று ஊஹித்துத் தெரிந்து கொள்ளாம‌ல்,
ய‌த் — எது (எந்த‌ இந்தத் துதி),
ஆர‌ப்ய‌தே — ஆர‌ம்பிக்க‌ப் ப‌டுகிற‌தோ,
தத் அபி — அதையும்,
உசித‌ம் — த‌குதியான‌,
அர்ச்ச‌ன‌ம் –பூஜையாக‌,
ப‌ரிக்ருஹாண‌ .. ஏற்றுக் கொள்ள‌ வேணும்.

மித புத்தி நா பஹுள மோஹ பாஜா மயா -சிறிய புத்தியை யுடைய என்னால் எத்தனையோ மோஹத்தை அடைந்த
குண க்ரதித காய வாங்மனச வ்ருத்தி வை சித்ர்யத-முக்குணங்களால் வரிந்து கட்டப் பட்டு இருக்கும்-தோஷ க்ருஹீத குணம் –
தேஹம் வாக்கு மனஸ் இவற்றின் போக்குகளின் வைசித்ர்யத்தால்
அதர்க்கித ஹிதாஹித க்ரம விசேஷ மார்ப்யதே-எது நல்ல வழி எது தவறானது என்று ஊஹித்து
தெரிந்து கொள்ளாமல் ஆரம்பிக்கப் படுகிறதோ
ய தத்ய– தத்ப் யுசிதமர்ச்சனம் பரிக்ருஹாண ரங்கேஸ்வர–எந்த இந்த ஸ்துதி ஆரம்பிக்கப் படுகிறதோ
அதை தகுதியான பூஜையாக ஏற்றுக் கொண்டு அருள வேணும் -அர்ச்சக பராதீனராக கோயில் கொண்டு அருளும் ஸ்ரீ ரெங்கேஸ்வரா –
எவன் அவன் என்று ஸ்ரீ ரெங்கேஸ்வரனின் பெருமையாலும் –எது அது
என்று பரிஹாஸமாகத் தன் தாழ்மையைக் காட்டி அருளுகிறார் –

முன் ச்லோக‌த்தில் ப்ரார்த்தித்த‌ப‌டி பெருமாள் சுப ‌விக்ர‌ஹ ‌குணாதிக‌ள் புத்தியில் எப்ப‌டிப் புகுந்து நிர‌ம்பும்?
இத்த‌னை விக்ந‌ங்க‌ள் உள‌வே. செய்யும் ச‌ர‌ணாக‌தியை ஓர் பாமாலையால் ஸ‌ம‌ர்ப்பிக்க‌ உத்தேச‌ம்.
பூமாலை போன்ற‌தான‌ பாமாலையாயிருப்ப‌து உசித‌ம். குண‌மென்னும் நாரில் விசித்திர‌மாய்த் தொடுக்க‌ப்ப‌ட்ட‌
புஷ்ப‌ மாலை போன்ற‌ ச‌ப்த‌ குண‌ங்க‌ளாலும் அர்த்த‌ குண‌ங்க‌ளாலும் வைசித்ர்ய‌ம் என்னும் அல‌ங்கார‌ங்க‌ளாலும்
ப‌ல‌ சித்ர‌ங்க‌ளாலும் க்ர‌தித‌மான‌ பாமாலையைக் கொண்டு தேவ‌ரீரை அர்ச்சிப்ப‌து உசித‌ம்.
“குண‌க்ர‌தித‌” என்ப‌தாலும், “வாங் ம‌நோவ்ருத்தி வைசித்ர்ய‌த‌:” என்ற‌தாலும் அர்ச்ச‌ந‌ம் இப்ப‌டி இருப்ப‌த‌ல்ல‌வோ உசித‌ம்
என்று வ்ய‌ஞ்ஜ‌ந‌ம் செய்கிறார். அத‌ற்கு விரோத‌மாக‌ என் ச‌ரீர‌ம், வாக்கு, ம‌ன‌ம் எல்லாம் முக்குண‌ங்க‌ளாலும்
விந்தையாகக் க‌ட்ட‌ப்ப‌ட்டு என‌க்கு ஸ்வாதீன‌மேயில்லாம‌ல் இருக்கிற‌தே என்கிறார்.
தேஹ‌மும் அசுசி, வாக்கும் ம‌ன‌மும் சுத்த‌மல்ல‌, இப்ப‌டி இருந்தும் “எது ஹித‌ம் உசித‌ம், எது அஹித‌ம், அநுசித‌ம்” என்று
ஆலோசிக்காம‌லே ப‌ய‌ஸ‌ம்ப்ர‌ம‌த்தினாலே க்ர‌ம‌ விசேஷ‌மெல்லாம் த‌டுமாறி ஏதோ ப்ரார்த்த‌நா ஸ்துதி பித‌ற்ற‌ ஆர‌ம்பிக்க‌ப் ப‌டுகிற‌து.
அதை உசித‌மான‌ அர்ச்ச‌ன‌மாகக் கொள்ள ‌வேணும்.

“ஆர‌ம்பிக்க‌ப் ப‌டுகிற‌து” என்ப‌தால் ப‌ய‌பார‌வ‌ஶ்ய‌த்தால் ப‌லாத்க‌ரிக்க‌ப்ப‌ட்டு அதிஸ‌ம்ப்ர‌ம‌த்துட‌ன் ஆர‌ம்பிக்க‌ப் ப‌டுவ‌தை வ்ய‌ஞ்ஜ‌ந‌ம் செய்கிறார்.
“ர‌ங்கேஶ்வ‌ர‌” என்ப‌தாலும், “உசித‌ம் அர்ச்ச‌ந‌ம்” என்ப‌தாலும் “அர்ச்ச‌க‌ — ப‌ராதீந‌ராக‌”க் கோயிலில் எழுந்த‌ருளியிருக்கும்
க‌ருணையை அத்துதி விஷ‌ய‌த்திலும் ஆவிஷ்க‌ரிக்க‌ வேண்டும் என்று வ்ய‌ஞ்ஜ‌ன‌ம்.

இங்கே காவ்ய‌க்ர‌த‌நத்திற்கும் ஒட்டும்ப‌டி, “குண‌, க்ர‌தித‌, காய‌, வாக், வ்ருத்தி, வைசித்ர்ய‌ம், உசித‌” ச‌ப்த‌ங்க‌ளின்
பிர‌யோக‌த்தின் அழ‌கை காவ்ய‌ர‌ஸிக‌ர் ர‌ஸிக்க‌வேணும். “ரீதிராத்மா காவ்ய‌ஸ்ய‌” — காய‌ம் என்ப‌து ரீதி.
வ்ருத்தி என்ப‌து “வ்ருத்திபிர் ப‌ஹுவிதாபிராஶ்ரிதா” என்ப‌துபோல‌ காவ்ய‌ வ்ருத்தி.
“எவ‌ன், எவ‌ன், அவ‌ன், அவ‌ன்” என்று பெரிய‌ பெருமாளின் ஏற்ற‌த்திற்கேற்ற‌ ல‌க்ஷ‌ண‌ங்க‌ளைக் காட்டி,
த‌ன் ஸ்தோத்ர‌த்திற்கும், “எது, அது” என்று ப‌ரிஹாஸ‌மாய்த் தாழ்மையைக் காட்ட‌, ல‌க்ஷ‌ண‌ம் அமைக்கிறார்.
அப்பெருமானுக்கு இத்துதி. “ர‌ங்கேஶ்வ‌ர‌” — எத்த‌னையோ அரும்பெரும் காவ்ய‌ங்க‌ள் உம் முன்னிலையில்
அர‌ங்கேற்ற‌ப் ப‌ட்டிருக்கின்ற‌ன‌. இது ஒரு த்ருஷ்டி ப‌ரிஹார‌ம்

அறிவுதனில் குறையுடையேன் அளவில்லா மோகத்தில்
ஆழ்ந்தவனாய் முக்குண வன் கயிற்றினால் கட்டுண்ட
பருவுடலும் வாய்ச சொல்லும் மனம் தனையும் உடையவனாய்
புரிகின்ற செயல் எல்லாம் பல பல வாய் பயனிலவாய்
இருக்கின்ற இந்நிலையில் இது நன்று இது தீது
என்று அறியா அடியேன் இத்துதியைத் தொடங்குகிறேன்
கருணையுடன் இதனையுமே தகுந்ததொரு வழி பாடாய்க்
கொள்வாயே அரங்கத்தில் குடி கொண்ட பெரும் தேவே –

——————————————————

ப‌ய‌ம், ப‌ய‌ம் என்றும், ம‌ஹ‌த்தான‌ ப‌ய‌ம் என்றும், வ‌ஜ்ர‌ம் என்றும், இடி மேல் விழுவ‌தாக‌ ப‌ய‌முறுத்துவ‌து போல‌வும்,
மிக்க‌ ப‌ய‌த்தை ஆங்காங்கு பேசிக்கொண்டு வ‌ருகிறார்.
“என் விக்ர‌ஹ‌த்திற்கு வ‌ரும் அபாய‌த்தை வில‌க்கிக் கொள்ள‌ வேறு யாரையாவ‌து ப்ரார்த்திக்க‌லாகாதா?”
“ஸாத்ய‌மில்லை. நானும் ம‌ற்றொருவ‌ரை யாசிக்க‌ மாட்டேன். உம்மைத்த‌விர‌ வேறு ப‌ய‌நிவ‌ர்த்த‌க‌ருமில்லை.
உல‌க‌மே உம்மிட‌மிருந்து ப‌ய‌ந்து ந‌ட‌க்கிற‌து.
ப‌ய‌த்தைக் கொடுக்கக் கூடிய‌ வாயு முத‌லிய‌ தேவ‌ர்க‌ளும் ம்ருத்யு வென்னும் தேவ‌னும் உம‌க்கு ந‌டுங்கி ந‌ட‌க்கிறார்க‌ள்.
தைத்திரீய‌ சுருதியில் ஆநந்த‌ம‌ய‌ப் பொருளின் ஆநந்தத்தைப் ப‌ற்றி ஆநந்த‌மீமாம்ஸை செய்ய‌ப் போகும் அவ‌ஸ‌ர‌த்தில், அ
த‌ற்கு அடுத்த‌ முன்வாக்ய‌ம் “இவ‌ரிட‌மிருந்து ப‌ய‌த்தால் வாயு வீசுகிறான். (உல‌க‌த்தைப் ப‌ரிசுத்த‌மாக்குகிறான்.)
இவ‌ரிட‌மிருந்து ப‌ய‌த்தால் சூரிய‌ன் உதிக்கிறான். இவ‌ரிட‌மிருந்து ப‌ய‌த்தால் அக்நியும் இந்திர‌னும் ம்ருத்யுவும்
(நால்வ‌ரோடு) ஐந்தாவ‌தாக‌ ஓடுகிறார்க‌ள் ” என்ற‌து.

பெருமாள் ர‌ங்க‌த்தில் “ர‌திம்க‌த‌:” “ஆநந்த‌பூர்ண‌ர்” என்ப‌தால் ர‌ங்க‌த்திற்கு “ர‌ங்க‌ம்” என்று பெய‌ர்.
(ப்ர‌ஹ்ம‌ண‌ கோஶோஸி) என்று ப்ர‌ண‌வ‌ம் ப்ர‌ஹ்ம‌த்திற்குக் கோச‌ம் (பெட்டி) என்ற‌து சுருதி.
ப்ர‌ண‌வ‌ – விமாந‌ – கோச‌த்தில் காண‌ப்ப‌டும் ப்ர‌ஹ்மம் இப்பெருமாள்.
ப‌ய‌விஷ‌ய‌மான‌ தைத்திரீய‌ சுருதியை இப்பெருமாள் விஷ‌ய‌மாகக் கொள்கிறார்.
க‌ட‌சுருதியில் “எந்த‌ ஜ‌க‌த்ப்ராணனிட‌மிருந்து இவ்வுல‌க‌மெல்லாம் ஓங்க‌ப்ப‌ட்ட‌ ப‌ய‌ங்க‌ர‌மான‌ வ‌ஜ்ர‌த்தினிட‌மிருந்து
ப‌ய‌ப்ப‌டுவ‌து போல் ந‌டுங்கி ந‌ட‌க்கிற‌தோ, அந்த‌ இப்பிராண‌னை அறிந்த‌வ‌ர் அமிருத‌ராவர்.
இவ‌ர் ப‌ய‌த்தால் அக்நி த‌ன் வ்யாபார‌மான‌ த‌ப‌நத்தைச் செய்கிறான். ப‌ய‌த்தால் சூரிய‌ன் ஜ்வ‌லிக்கிறான்.
ப‌ய‌த்தால் இந்திர‌னும், வாயுவும், நால்வ‌ரோடு ஐந்தாம‌வ‌னாக‌ ம்ருத்யுவும் ஓடித் திரிகிறார்க‌ள்.” என்று உள்ள‌து.
இந்த‌ சுலோக‌த்தில் முன் பாதியில் தைத்திரீய‌ சுருதியையும்,
பின்பாதியில் க‌ட‌சுருதியின் பின்வாக்ய‌த்தையும்,
முன்பாதியில் க‌ட‌சுருதியின் முன்வாக்ய‌த்தையும் ஸ்வ‌ல்ப‌ வேறுபாட்டோடு அமைக்கிறார்.
சுருதியில் ப‌ய‌ம் ப‌ய‌ம் என்று திருப்பித் திருப்பிப் பேசுவ‌து போல‌, இத்துதியிலும் இம்ம‌ஹ‌த்தான‌ ப‌யாவ‌ஸ‌ர‌த்தில் பேசுகிறார்.
“க‌ம்ப‌நாத்” என்னும் சூத்திர‌த்தில்
“அங்குஷ்ட‌மாத்ர‌மாக‌ ஹ்ருத‌ய‌ குஹையில் இருக்கும் பெருமாளுக்கு உல‌க‌ மெல்லாம் ந‌டுங்கி ந‌ட‌க்கிற‌து” என்று அழ‌காக‌ ஸூசிப்பித்தார்.
அப்ப‌டி உல‌க‌ம் ந‌டுங்கி ந‌ட‌ப்ப‌து ப்ர‌ஹ்ம‌த்திற்கு நிச்ச‌ய‌மான‌ அடையாள‌ம் (லிங்க‌ம்) என்றார்.
“என‌க்க‌ல்ல‌வோ அது அடையாள‌ம்” என்று ப்ர‌ஹ்லாதாழ்வானை ஹிர‌ண்ய‌ன் வெருட்டினான்.
“எவ‌ன் கோபிக்கும்போது மூன்று லோக‌ங்க‌ளும் அவ‌ற்றின் ஈச்வ‌ரர்க‌ளும் ந‌டுங்குகிறார்க‌ளோ (க‌ம்ப‌ந்தே)
அந்த‌ என்னுடைய‌ ஆஜ்ஞையை எந்த‌ ப‌ல‌த்தைக்கொண்டு நீ மீறினாய்?” என்று கோப‌த்தோடு கேட்டான்.
அம்ம‌த‌யானைக்கு நீர் ஸிம்ஹ‌மானீர்.” சுருதியின் பேச்சுத்தான் ஸ‌த்ய‌ம். அஸுர‌ன் பேச்சு ஸ‌த்ய‌மாகுமோ?
சுருதி ஸூத்ர‌ங்க‌ளின் பேச்சை ந்ருஸிம்ஹ‌ப் பெருமாள் ஸ‌த்ய‌மாக்கினார். எம‌க்கு வ‌ந்திடும் ப‌ய‌த்தை நீர்தானே நிவ‌ர்த்திக்க‌ வேணும்!

மருத்தரணி பாவக த்ரிதச நாத காலாதய
ஸ்வ க்ருத்ய மதி குர்வதே த்வத பரா ததோ பிப்யத
மஹத் கிமபி வஜ்ர முத்ய தமி வேத யச்ச்ரூயதே
தரத்யநக தத் பயம் ய இஹ தாவக ஸ்தாவக –4-

அந‌க‌ — மாச‌ற்ற‌ பிர‌புவே!, ம‌ருத், த‌ர‌ணி, பாவ‌க‌, த்ரித‌ஶ‌நாத‌, காலாத‌ய‌: — வாயு, சூர்ய‌ன், அக்னி, இந்திர‌ன், ய‌ம‌ன் முத‌லிய‌வ‌ர்க‌ள், த்வ‌ர‌ப‌ராதத‌: — உம‌க்கு அப‌ராதிக‌ள் ஆகிவிடுவோமோ என்று, பிப்ய‌த‌ — ப‌ய‌ந்து, ஸ்வ‌க்ருத்ய‌ம் — த‌ங்க‌ள் வ்யாபார‌த்தை, அதிகுர்வ‌தே — ந‌ட‌த்துகிறார்க‌ள், உத்ய‌த‌ம் — ஓங்கின‌, ம‌ஹ‌த் — பெரிய‌, கிமபி வ‌ஜ்ர‌மிவ‌ — வ‌ர்ணிக்க‌ முடியாத‌ அத்த‌னை கொடிய‌ வ‌ஜ்ராயுத‌ம் போன்ற‌, ப‌ய‌ம் இதி — ப‌ய‌ம் என்று, ய‌த்ஶ்ரூய‌தே — எது சுருதியில் கேட்க‌ப் ப‌டுகிற‌தோ, தத் ப‌ய‌ம் — அந்த‌ ப‌ய‌த்தை, ய‌: – எவ‌ன், இஹ‌ — இங்கே, தாவ‌க‌: — உன்னைத் துதிப்ப‌வ‌னோ, தாதி — (அவ‌ன்) தாண்டுகிறான்.

மருத்தரணி பாவக த்ரிதச நாத காலாதய –-வாயு சூர்யன் அக்னி இந்திரன் யமன் முதலியவர்கள் –
ஸ்வ க்ருத்ய மதி குர்வதே த்வத பரா ததோ பிப்யத-உமக்கு அபராதிகள் ஆகி விடுமோ என்று பயந்து
தங்கள் வியாபாரத்தை நடத்துகிறார்கள் –
மஹத் கிமபி வஜ்ர முத்ய தமி வேத யச்ச்ரூயதே-பெரிய வர்ணிக்க முடியாத அத்தனை கொடிய
வஜ்ராயுதம் போன்ற பயம் என்று எது சுருதியில் கேட்கப் படுகிறதோ
தரத்யநக தத் பயம் ய இஹ தாவக ஸ்தாவக -அந்த பயத்தை எவன் இங்கு துதிப்பவனோ அவன் தாண்டுகிறான்
உம்மைத் தவிர வேறு பய நிவர்த்தகர் இல்லையே -உம்மை துதிப்பவனே பயத்தை தாண்டுகிறான் –
காலனுக்கு காலனாகிய கால காலன் நீர்

தரதி சோகம் ஆத்மவித் -அதஸோ அபயம் காதோ பவதி
அநக-ஸ்துதிக்கும் நான் குற்றம் உள்ளவனாகவும் என் ஸ்துதியும் குற்றமாய் இருந்தாலும் போக்க வல்லவன் நீ அன்றோ –

காற்றைப்ப‌ற்றி சுருதி எடுத்த‌ “வாத‌:”, “வாயு” என்ற‌ ச‌ப்த‌ங்க‌ளை எடுக்காம‌ல் “ம‌ருத்” என்று முத‌லில் வைத்ததில் ர‌ஸ‌முண்டு.
“ம‌ருத்” என்ப‌து தேவ‌ர்க‌ளைப் பொதுவில் சொல்லும். “தேவ‌ர்” என்று பொதுப் பொருளையும் கொள்ள‌ வேணும்.
தேவ‌ர்க‌ளான‌ இவ‌ர்க‌ளும், நீர் யுத்தத்தில் ஜாத‌ரோஷ‌ரான‌ போது ந‌டுங்குவாரே; விரோதிக‌ளான‌ அஸுரர்க‌ள் ந‌டுங்க‌ வேண்டாவோ ?
(ராமாய‌ண‌ ஸ‌ங்க்ஷேப‌ச் சுலோக‌த்தை நினைக்க‌ வேண்டும்)
ஸூர்ய‌னை “த‌ர‌ணி” என்பார். ஸ‌ம்ஸார‌ ப‌ய‌த்தைத் தாண்ட‌ அவ‌ருக்கு வேறு த‌ர‌ணி ( = ஓட‌ம்) வேண்டும்.
த‌ன் ப‌ய‌த்திற்குத் தான் த‌ர‌ணியாகார். நீர்தான் எல்லோருக்கும் ப‌ய‌த‌ர‌ண‌த்திற்கு (ப‌ய‌த்தைத் தாண்ட‌) த‌ர‌ணி.
உம்மைத் துதிப்ப‌வ‌ன் ப‌ய‌த்தைத் த‌ர‌ண‌ம் செய்வான் என்று இங்கே க‌டைசி அடியில் பேசுகிறார்.

“பாவ‌க‌ன்” என்றால் ப‌ரிசுத்தி செய்ப‌வ‌ன். “பாவ‌ந‌ம்:” ப‌ரிசுத்தி செய்வ‌து.
இவ‌னையும் பெருமாள் பாவ‌ந‌ம் செய்து அப‌ஹ‌த‌பாப்மாவாக்க‌ வேணும். இந்த‌ ர‌ஸ‌ங்க‌ளை வ்ய‌ஞ்ஜிப்பிக்க‌ச் சுருதி ப‌த‌ங்க‌ளை மாற்றின‌து.
“இந்திர‌ன்” என்று சுருதி ப‌த‌ம். எல்லோருக்கும் மேற்ப‌ட்ட‌ ஈச்வ‌ர‌னைச் சொல்லும் ச‌ப்த‌ ச‌க்தியைக் குறைத்து ஒடித்து அவ‌னுக்கு அப்பெய‌ர்.
பெருமாளுக்குத்தான் அப்பெய‌ர் த‌கும். அதுபோல‌வே, இங்கே அவ‌ன் விஷ‌ய‌த்தில் “த்ரித‌ஶ‌நாத‌ன்” என்று பேசுகிறார்.
இதுவும் ச‌ப்த‌ ச‌க்தியைக் குறைத்துப் பேச்சு. “கால‌ன்” என்ப‌தால் “கால‌னுக்கும் கால‌னாகிய‌ கால‌கால‌ன் நீர்” என்ப‌து வ்ய‌ஞ்ஜ‌ந‌ம்.
தாங்க‌ள் செய்ய‌வேண்டிய‌ த‌ங்க‌ள் அதிகார‌க்ருத்ய‌த்தைச் செய்கிறார்க‌ள்.
எங்கே உம் ஆஜ்ஞையை மீறும் அப‌ராத‌ம் வ‌ருமோ என்று ந‌டுங்கிச் செய்கிறார்க‌ள்.

இதில் மிக்க‌ ர‌ஸ‌முண்டு. அத்வைதாசிரிய‌ராகிய‌ ஸுரேச்வ‌ரர் இந்த‌ ர‌ஸ‌த்தை தைத்திரீயோப‌நிஷ‌த்தில் ஸூசிப்பித்தார்.
ஸூரேச்வ‌ரருடைய‌ நைஷ்க‌ர்ம்ய‌ஸித்தியை ஸ்வாமி தத்வ‌டீகையில் உதாஹ‌ரித்தார்.
ஆநந்த ‌ம‌ய‌னுடைய‌ எல்லைய‌ற்ற‌ ஆநந்தத்தைப் பேசுவ‌த‌ற்குமுன் க்ஷ‌ண‌த்தில் வாயு முத‌லிய‌ தேவ‌ர்க‌ள் ப‌ய‌ந்து ந‌டுங்கி
ஸ்வ ‌க்ருத்ய‌த்தைச் செய்கிறார்க‌ள் என்று சொல்லி
ஆநந்த ‌ம‌ய‌னுடைய‌ ஆநந்தத்திற்கு எல்லையில்லை என்று சொல்லி முடிக்கையில், இந்த‌ ப்ர‌ஹ்ம‌த்தின் எல்லைய‌ற்ற‌
ஆநந்தத் த‌ன்மையை அறிந்த‌வ‌ர் ஒன்றுக்கும் ப‌ய‌ப்ப‌டார்க‌ள் என்று முடித்தது.
இப்ப‌டி ஆநந்த‌ம‌ய‌மான‌து ப்ர‌ஹ்மம் என்று அறிந்த‌வ‌ர் ப‌ய‌ப்ப‌டாம‌ல் ஸ‌ந்தோஷ‌மாய், ஆநந்த‌மாய், ஸ்வ‌ய‌ம்ப்ர‌யோஜ‌ந‌மாய்,
த‌ம் கைங்க‌ர்ய‌ங்க‌ளைச் செய்ய‌லாமே என்று சுருதியின் உட்க‌ருத்து. இதை ஸுரேச்வ‌ரர் ஸூசிப்பித்தார்.

ஸ்வாமிக்கும் இந்த‌ ர‌ஸ‌ம் திருவுள்ள‌ம். “ஸ்வ‌க்ருத்ய‌த்தை அதிக‌ரிப்ப‌தை ப‌ய‌ப்ப‌ட்டுக்கொண்டே செய்கிறார்க‌ள்.
ஆநந்த‌ப்ப‌ட்டுக்கொண்டே செய்ய‌லாமே! ப‌ய‌நிவ‌ர்த்த‌மும் ஆநந்த‌ம‌ய‌முமான‌ ப்ர‌ஹ்ம‌த்தினிட‌மிருந்து ஏன் ப‌ய‌ப்ப‌ட‌ வேண்டும்?”
என்று பா(भा)வ‌ம். அடுத்த‌ சுலோக‌த்திலும் உம்முடைய‌ ஆநந்தத் த‌ன்மை என்னும் ஓர் வ‌ர்ணிக்க‌முடியாத‌ குண‌த்தை
அறிந்த‌வ‌னுக்கு ஒரு ப‌ய‌மும் இல்லை என்று இதைக் காட்டுகிறார். “கிமபி” என்ப‌தை ம‌ட்டும் இங்கே மூன்றாம‌டியால் சேர்த்தார்.

இப்போது நேர்ந்திருக்கும் ப‌ய‌ம் வாக்குக்கும் நினைப்புக்கும் ச‌க்ய‌ம‌ல்லாதது என்கிறார். எம் த‌லையில் இடி விழுந்தாலென்ன‌?
அதனால் எம‌க்குத்தானே அபாய‌ம் வ‌ரும்; எம்முயிரான‌ உம‌க்க‌ல்ல‌வோ அபாய‌ம் இப்போது ப்ர‌ஸ‌க்த‌ம்.
எம்மை நீர் ர‌க்ஷிப்பீர். எம‌க்கு எம் ர‌க்ஷ‌ண‌விஷ‌ய‌மான‌ ப‌ய‌மில்லை. உம் திருமேனியை ர‌க்ஷிப்பாரார்?
உம்மைத் த‌விர‌ வேறு ர‌க்ஷ‌க‌ர் இக்காசினியில் இல்லையே? “சுருதி ந‌ம் காதில் ஓதும் ப‌ய‌ம்” என்கிறார்.
சுருதி ஓத‌க் கேட்டிருக்கிறோம். இப்போது ம‌ஹ‌த்தான‌ ப‌ய‌த்தை நேரில் அனுப‌விக்கிறோம்.
உம்மைத் துதிப்ப‌வ‌ன் ப‌ய‌ங்க‌ளைத் தாண்டுவான். கோர‌ ஸ‌ம்ஸார‌ ப‌ய‌த்தைத் தாண்டுவான் என்று வேத‌ம் ஓதுகிற‌து.
“த‌ர‌தி ஶோக‌ம் ஆத்ம‌வித்” “அத‌ ஸோऽப‌ய‌ம் க‌தோ ப‌வ‌தி” —
| – நானும் உம்மைத் துதித்து இப்பெரும் ப‌ய‌த்தைத் தாண்ட‌ விரும்புகிறேன்.
அந‌க‌ — மாச‌று சோதியே! துதிக்கும் நான் தேஹ‌வானாயிருந்தால் என்ன‌?
என் துதி குற்ற‌முடைய‌தானாலென்ன‌? உன் அந‌க‌த்வ‌ம் போதாதோ? என்று திருவுள்ள‌ம்

ஓங்கியதோர் வச்சிரம் போல் உயர்ந்த உன் தன் தண்டனைக்கு
உறும் என்னும் அச்சத்தால் வளியோனும் கதிரவனும்
வீங்கெரியும் இந்திரனும் வான் காலன் முதலாய
தேவர் எலாம் தம் பணியைத் தவறாமல் ஆற்றுவதாய்
பாங்குடனே மறை முடிகள் பகர்கின்ற அச்சமதை
பாரினிலே எவரேனும் பக்தியுடன் பணிந்தவராய்
தீங்கில்லாத அரங்கன் உனைத் துதி செய்து வழி பட்டால்
தாண்டியராய் நல் கதியைத் தாம் அடைவர் உறுதி அன்றோ–

————————————————————-

பயந்த மிஹ ய ஸ்வ தீ நியத சேதன அசேதனம்
பநாயதி நமஸ்யதி ஸ்மரதி வக்தி பர்யேதி வா
குணம் கமபி வேத்தி வா தவ குணேச கோபாயிது
கதாசன குத்ஸசன க்வசன தஸ்ய ந ஸ்யாத் பயம் –5-

குணேஶ — குண‌ங்க‌ளுக்கு ஈச‌னே (உடைய‌வ‌னே),
ஸ்வ‌தீ நிய‌த‌ சேத‌நாசேத‌ந‌ம் –த‌ன்னுடைய‌ ஸ‌ங்க‌ல்ப‌ மாத்ர‌த்தாலே நிய‌மிக்க‌ப்ப‌டும் சேத‌நா சேத‌நாத்ம‌க‌மான‌ உல‌க‌த்தை உடைய‌,
ப‌வ‌ந்த‌ம் — தேவ‌ரீரை,
ய‌: — எவ‌ன்,
ப‌நாய‌தி — துதிக்கிறானோ,
ந‌ம‌ஸ்ய‌தி — ந‌ம‌ஸ்க‌ரிக்கிறானோ,
ஸ்ம‌ர‌தி — ஸ்ம‌ரிக்கிறானோ,
வ‌க்தி — பேர் சொல்லுகிறானோ,
ப‌ர்யேதிவா — ப்ர‌த‌க்ஷிண‌ம் செய்கிறானோ,
கோபாயிது: — ர‌க்ஷ‌க‌ரான‌,
த‌வ‌ — தேவ‌ரீருடைய‌,
க‌மபி — ஒரு, குண‌ம் — குண‌த்தையாவ‌து,
வேத்தி — அறிகிறானோ (உபாஸிக்கிறானோ),
த‌ஸ்ய‌ — அவ‌னுக்கு,
க‌தாச‌ந‌ — எக்கால‌த்திலும்,
குத‌ஶ்ச‌ந‌ — எங்கேயிருந்தும் (எக்கார‌ண‌த்தையிட்டும்),
க்வ‌ச‌ந‌ — எவ்விட‌த்திலும்,
ப‌ய‌ம் — ப‌ய‌மென்ப‌து,
ந‌ ஸ்யாத் — உண்டாக‌ மாட்டாது.

பயந்த மிஹ ய -ஸ்வ தீ நியத சேதன அசேதனம் -தன்னுடைய சங்கல்ப மாத்திரத்தாலே நியமிக்கப்படும்
சேதன அசேதநாத்மகமான உலகம் உடைய தேவரீரை –எவன் –
இஹ -வீற்று இருந்து ஏழு உலகும் தனிக் கோல் செல்ல -அங்கு ஏதும் சோராமல் ஆள்கின்ற எம்பிரான் இங்கேயே இருக்க
பநாயதி நமஸ்யதி ஸ்மரதி வக்தி பர்யேதி வா -ஸ்துதிக்கிறானோ -நமஸ்கரிக்கிறானோ -ஸ்மரிக்கிறானோ
-திரு நாம சங்கீர்த்தனம் பண்ணுகிறானோ -பிரதக்ஷிணம் செய்கிறானோ –
குணம் கமபி வேத்தி வா தவ குணேச கோபாயிது -ரக்ஷகரான தேவரீருடைய ஒரு குணத்தையாவது அறிந்து உபாசிக்கிறானோ
-ஸ்ரீ ரங்கம் என்று உச்சரித்தாலும் போதுமே
கதாசன குத்ஸசன க்வசன தஸ்ய ந ஸ்யாத் பயம் -அவனுக்கு எக்காலத்திலும் -எங்கே இருந்தும் -எக்காரணத்தை இட்டும்
எவ்விடத்திலும் பயம் என்பதே உண்டாகாதே -ஆனந்தம் ப்ரஹ்மணோ வித்வான் நபிபேதி குதஸ்ஸனா–ந பிபேதி கதாசன –

உம்மைத் துதி செய்ப‌வ‌னுக்கு எல்லா ப‌ய‌மும் போய்விடும்.
நீர் நிர‌பாய‌ராக‌ எழுந்த‌ருளியிருக்க‌ உம்மைத் துதி செய்ய‌க்கூட‌ வேண்டிய‌ தில்லை. ந‌ம‌ஸ்கார‌ம் செய்தால் போதும்.
ஸ்ம‌ரித்தாலும் திருநாம‌த்தை உச்ச‌ரித்தாலும் ஒரு ப்ர‌த‌க்ஷிண‌த்தைச் செய்தாலும் கூட‌ப் போதும்.
உம்முடைய‌ திருமேனி குஶ‌ல‌மாய் எழுந்த‌ருளியிருக்க‌ வேண்டும் என்ற‌ ஆசையையும்
“ப‌வ‌ந்”நாக‌ இருக்கும்ப‌டியான‌ உம்மை என்று பொருள் கொள்ளுவ‌தையும் உத்தேசிக்கிறார்.
நீர் “ப‌வ‌ந்”நாக‌ (இருப்ப‌வ‌ராக‌) இருக்க‌ வேண்டும்.
ராம‌கிருஷ்ணாதி விப‌வ‌ங்க‌ள் போலே பூதத‌சையாகாம‌ல் நித்ய‌ — ப‌வ‌ந்நாய் எழுந்த‌ருளியிருக்கும் பாக்கிய‌த்தை உல‌க‌ம் பெற‌வேணும்.
இஹ‌ப‌வ‌ந்த‌ம் — இங்கேயே இருக்கிற‌ உம்மை. வைகுண்ட‌த்திலிருக்கிறோமே போதாதோ என்ன‌வொண்ணாது.,
இப்பூலோக‌ வைகுண்ட‌த்தில் இருக்க‌ வேண்டும்.
“வீற்றிருந்து ஏழுல‌கும் த‌னிக்கோல் செல்ல‌” என்ற‌ப‌டி இங்கே இருந்துகொண்டே சேத‌னாசேத‌னாத்ம‌க‌மான‌
உல‌க‌ங்க‌ளை எல்லாம் உம்முடைய‌ ஸ‌ங்க‌ல்ப‌ மாத்ர‌த்தால் நிய‌மிப்ப‌வ‌ர‌ல்ல‌வோ?
இந்த‌ சுபாஶ்ர‌ய‌த் திருமேனியோடு கூடிய‌ உம்மை, “விப‌ந்ய‌வ‌:” என்று ப‌ர‌மப‌த‌ப் பெருமாளைத் துதிப்ப‌து போல‌ எவ‌ன் ப‌நாய‌தி துதிக்கிறானோ?
பாட‌த் தெரியாதாயினும், துதிபாடும‌த்த‌னை சிர‌மப்ப‌ட‌ ஸௌக‌ர்ய‌மில்லையாயினும்,
(ந‌ம‌ஸ்யதி) ந‌ம‌ஸ்கார‌ம் செய்தாலும் போதுமே.
ஸ்ம‌ர‌தி — தூர‌த்திலிருந்து ஸ்ம‌ரித்தாலும் போதும்,
வ‌க்தி — ஸ்ம‌ரிக்கும் புத்தி சிர‌மம் கூட‌ வேண்டாம்.
“ர‌ங்க‌ம்” என்று வாக்கினால் உச்ச‌ரித்தாலும் போதும்.
ப‌ர்யேதி வா — கோவிலையோ, திருவீதிக‌ளையோ சுற்றி வ‌ந்தால் போதுமே.
அப்ப‌டிச் சுற்றி வ‌ருவ‌து (ஸ‌ தத்ர‌ ப‌ர்யேதி ஜ‌க்ஷ‌த் க்ரீட‌ந் ர‌மமாண‌:) என்ப‌து போல் ஆநந்தாநுப‌வ‌ மாயிருக்குமே.

குண‌ங்க‌ளோடு கூடிய‌ உம்மை இவ்வ‌ள‌வு செய்ய‌வேண்டு மென்ப‌தும் இல்லை.
உம்முடைய‌ ஒரு குண‌த்தை அறிந்தாலும் (உபாஸித்தாலும்) போதும்.
“க‌ம் அபி” என்ப‌தால் “வாய் ம‌ன‌திற்கு எட்டாத‌” என்று கொண்டு, “ஆநந்த‌: குண‌த்தை வாங்குவ‌து உசித‌ம்.
அந்த‌ குண‌த்தை உபாஸிப்ப‌வ‌ரைப் ப‌ற்றி ஸாக்ஷாத்தாக‌
(“ஆநந்த‌ம் ப்ர‌ஹ்ம‌ணோ வித்வான் ந‌ பிபேதி குத‌ஶ்ச‌ந‌”, “ந பிபேதி க‌தாச‌ந‌”) என்று சுருதி பேசிற்று.
“க‌தாச‌ந‌” “குத‌ஶ்ச‌ந‌” என்ப‌தோடு “க்வ‌ச‌ந‌” என்று சேர்த்து இங்கே ப‌ல‌த்தைப் ப‌டிக்கிறார்.

அரும் குணங்கள் நிறைந்த திரு வரங்கம் வாழ் பெருமானே
அறிவுடைய உயிர் எல்லாம் அறிவற்ற பொருள் யாவும்
பெரு மதியால் ஆள்கின்ற பெருமை தனை நீ யுடையாய்
பரு யுலகில் எவனேலும் புகழ்ந்து உன்னைத் துதித்தாலும்
சிறு வணக்கம் செய்தாலும் சிந்தனையில் கொண்டாலும்
நினை வலமே வந்தாலும் நலமுறுமுன் குணங்களிலே
ஒரு குணத்தை அறிந்தாலும் ஒருக்காலும் அவன் தானே
ஒருவிடத்தும் எங்கிருந்தும் உற்றிடானே பயம் தானே

———————————————————-

எல்லா ப‌ய‌ங்க‌ளும் தொலைய‌ “ஸ்ம‌ர‌தி வா” என்று உம்மை நினைத்தால் போதும் என்று முன்பு ஸாதித்தார்.
கோயிலில் வ‌ஸிக்கும் உம்முடைய‌ திருமேனியை ஒருக்கால் ந‌ன்று நினைத்திருந்தால் போதும்
அந்திம‌ ஸ்ம்ருதியை உண்டாக்கி அவ‌னை மோக்ஷ‌ம் சேர்க்க‌.
“க‌லு” என்று இந்த‌ விஷ‌ய‌த்தில் ப்ர‌மாண‌ ப்ர‌ஸித்தியைக் காட்டுகிறார்.
அத‌ற்காக‌ பெருமாள் திருவாக்கிலிருந்து வ‌ந்த‌ ப்ர‌மாண‌ வ‌ச‌ந‌ங்க‌ளின் ப‌த‌ங்க‌ளாலேயே சுலோக‌த்தை அமைத்து,
பெருமாளுக்கு அவ‌ர் உக்தியையே நினைப்பூட்டுகிறார்.
“உம்மை” என்ப‌த‌ற்கு இங்கே, கோயிலில் எழுந்த‌ருளியிருக்கும் அர‌ங்க‌னை என்று க‌ருத்து.
“துப்புடையாரை” என்னும் பாசுர‌த்தில் “எய்ப்பென்னை வ‌ந்து ந‌லியும்போது அங்கேதும் நான் உன்னை நினைக்க ‌மாட்டேன்
அப்போதைக் கிப்போதே சொல்லிவைத்தேன் அர‌ங்க‌த் த‌ர‌வ‌ணைப் ப‌ள்ளியானே” என்று பெரியாழ்வார் அருளிச் செய்ததை இங்கே நினைக்கிறார்.

உம்மை ஸேவித்தாலல்ல‌வோ உம் ஸ்ம‌ர‌ண‌ம் அந்திம‌ கால‌த்தில் நேரும்?
தேவ‌ரீர் எழுந்த‌ருளியிருந்தாலல்ல‌வோ எல்லாரையும் தேஹ ‌வியோக‌ கால‌த்தில் ஸ்ம‌ர‌ண‌த்தை அநுக்ர‌ஹித்துக் காப்பாற்ற‌ முடியும்?
தேவ‌ரீர் இங்கே எழுந்த‌ருளியிருந்தே எம்மை அங்கே அனுப்பிச் சேர்ப்பிக்க‌ வேணும்.

ஸ்திதே மனசி விக்ரஹே குணிநி தாது சாம்யே சதி
ஸ்மரேதகில தேஹிநம் ய இஹ ஜாதுசித் த்வா மஜம்
தயைவ கலு சந்தயா தமத தீர்க்க நித்ரா வசம்
ஸ்வயம் விஹித சம்ஸ்ம்ருதிர் நயசி தாம நை ஸ்ரேயசம்–6-

இஹ‌ — இங்கே (கோயிலில், பூலோக‌த்தில், இவ்வாயுளில்),
ய‌: — எவ‌ன்,
ம‌ன‌ஸி — ம‌ன‌தான‌து,
ஸ்திதே — ஒரு விஷ‌யத்தில் நிலைநிற்க‌ ச‌க்த‌மாயிருக்கும்போது,
விக்ர‌ஹே — ச‌ரீர‌ம்,
குணிணி — ஸ்வ‌ஸ்த‌மாய் ந‌ல்வ‌ழியில் இருக்கும்போது,
தாது ஸாம்யே ஸ‌தி — தாதுக்க‌ள் ஸ‌மமாய் அரோகமாயிருக்கும்போது,
த‌ம் — அவ‌னை,
த‌யைவ‌ ச‌ந்த‌யா — அந்த‌ ஒரு நினைப்பைக் கொண்டே,
ஸ்வ‌ய‌ம் — நீராக‌வே,
விஹித‌ஸ‌ம் ஸ்ம்ருதி — அவ‌னை உம்மை ந‌ன்றாய் நினைக்க‌ச் செய்து,
அகில‌ தேஹிந‌ம் — ஸ‌ர்வ‌ ச‌ரீரியாயும்,
அஜ‌ம் — பிற‌ப்ப‌ற்ற‌வ‌ருமான‌
த்வாம் — உம்மை,
ஜாதுசித் — எப்பொழுதாவ‌து ஒரு த‌ட‌வை,
ஸ்ம‌ரேத் — ஸ்ம‌ரிப்பானோ (ஸ்ம‌ரித்திருப்பானாகில்),
அத‌ — பிற‌கு,
தீர்க்க‌ நித்ராவ‌ச‌ம் — நீண்ட‌ துக்க‌மான‌ ம‌ர‌ண‌த்திற்கு வ‌ச‌மாயிருக்கும்போது,
நைஶ்ரேய‌ஸ‌ம் தாம‌ — த‌ன‌க்கு மேற்ப‌ட்ட‌ ஶ்ரேய‌ஸ்ஸில்லாத‌ மோக்ஷ‌ம் என்னும் ஸ்தாநத்தை,
ந‌ய‌ஸி — சேர்ப்பிக்கிறீர்.

மனசி ஸ்திதே–மனசானது -ஒரு விஷயத்தில் நிலை நிற்க சக்தமாய் இருக்கும் போதே
விக்ரஹே குணிநி
-சரீரம் ஸ்வஸ்தமாய் நல் வழியிலே இருக்கும் போதே
தாது சாம்யே சதி -தாதுக்கள் சமமாய் அரோகமாய் இருக்கும் போதே
தயைவ கலு சந்தயா -அந்த ஒரு நினைவைக் கொண்டே
ஸ்வயம் விஹித சம்ஸ்ம்ருதிர்-நீராகவே உம்மை அவனை நினைக்கச் செய்து
கலு -பிராமண சித்தியை பற்றி அருளிச் செய்கிறார்
ஸ்மரேதகில தேஹிநம் ய இஹ ஜாதுசித் த்வா மஜம்- சர்வ சரீரியாகவும் -பிறப்பு அற்றவருமாக உம்மை எப்பொழுதாவது
ஒரு தடவை ஸ்மரித்து இருப்பான் ஆகில்
தமத தீர்க்க நித்ரா வசம் –பிறகு –நீண்ட துக்கமான மரணத்தின் வசமாய் இருக்கும் போது
எம்பெருமானால் அருள பெற்றவனுக்கு மரணம் என்று சொல்லாமல் தீர்க்கமான நித்திரை என்றே அருளிச் செய்கிறார்
நயசி தாம நை ஸ்ரேயசம்-தனக்கு மேல் பட்ட ஸ்ரேயஸ் இல்லாத மோக்ஷம் என்னும் ஸ்தானத்தை சேர்ப்பித்து அருளுகிறீர்
துப்புடையாரை –எய்ப்பு என்னை வந்து நலியும் போது அப்போதைக்கு இப்பொத்தே சொல்லி வைத்தேன் –
அரங்கத்து அரவணைப் பள்ளியானே –

“ஸ்திதே குணிநி விக்ர‌ஹே” என்று “உம்முடைய‌ திருமேனி நிர‌பாய‌மாய் எழுந்த‌ருளியிருக்கையில்”
என்றும் காட்டுவ‌தில் திருவுள்ள‌மாய் முத‌லில் “ஸ்திதே” என்கிறார்.
முன் சுலோக‌த்தில் “ப‌வ‌ந்த‌ம்” என்று தொட‌ங்கிய‌துபோல்,
இந்த‌க் க‌வ‌லையே நெஞ்சில் ஓடிக்கொண்டிருப்ப‌து ஓரொரு சுலோக‌த்திலும் தெரிகிற‌து.
“அமில‌ தேஹிந‌ம் த்வாம்” — கில‌த்திற்குப் பிர‌ஸ‌க்தியில்லாம‌ல், பூர்ண‌மான‌ திருமேனியுடைய‌ உம்மை.
அகில‌ தேஹியான‌ உம்முடைய‌ திருமேனிக்குக் கில‌ம் ப்ர‌ஸ‌க்த‌மானால் எந்த‌ தேஹியின் தேஹ‌ம் நிற்கும்?
அஷ‌ம் த்வாம் — பிற‌ந்த‌வ‌னுக்க‌ல்ல‌வா அபாய‌ம் த்ருவ‌ம் ! பிற‌வாத‌ தேவ‌ரீர் திருமேனிக்கு அபாய‌ம் வ‌ர‌ ஸ‌ஹிப்போமோ?

உம்மை ஆச்ர‌யித்த‌வ‌னுக்கு ஒருக்கால் தேஹ‌ வியோக‌ம் வ‌ருவ‌தை “ம‌ர‌ண‌ம்” என்று பேசோம்.
“தீர்க்க‌மான‌ நித்ரை” என்போம். ஒரு த‌ர‌ம் எக்கால‌த்திலோ உம்மை ஸ்ம‌ரித்ததை நினைத்துக்கொண்டே இருந்து
அவ‌ன் தேஹ‌த்திற்கு அபாய‌ம் வ‌ருங்கால் அவ‌னுக்கு ஸ்ம‌ர‌ண‌த்தைக் கொடுத்து ர‌க்ஷிக்கும் த‌யாளுவாயிற்றே.
நாங்க‌ள் இப்பொழுது க‌த‌றுவ‌தைத் திருவுள்ள‌த்தில் கொள்ளாம‌ல் திர‌ஸ்க‌ரிக்க‌லாமோ??
“உம் திருவுள்ள‌ம் ம‌ட்டும்தான் வேண்டும் எம் ம‌னோர‌தத்தைப் பூர்த்தி செய்ய‌” என்று ”
ஸ்வ‌தீநிய‌த‌சேத‌நாசேத‌ந‌ம்” என்ப‌தால் வ்ய‌ஞ்ஜ‌ன‌ம் செய்கிறார்.
ஒரு விரோதி த‌ன் கை கால்க‌ளை அசைக்க‌ முடியுமோ?
“நான் அர்ச்சை, நான் ப‌ராதீந‌ன்” என்று நீர் பேச‌வொண்ணாது.
“உம்முடைய‌ அப்பெரிய‌ வீட்டிற்கு எங்க‌ளைக் கொண்டு போய்ச் சேர்க்க‌த் தானே நீர் இங்கே கோயில் கொண்டிருப்ப‌து” என்ப‌தைக் காட்ட‌
“ந‌ய‌ஸி தாம‌” “வீட்டுக்குக் கொண்டு போகிறாய்” என்கிறார்.
உம்மைய‌ல்லால் எம்மை வீடு சேர்ப்பார் ஆர்?

மண்ணுலகில் எவனும் தன் மனம் நல்ல நிலை கொண்டு
மெய்தானும் திடமாக மேன்மையுடன் இருக்கையிலே
நன்னிலையில் உடம்பில் உள்ள நரம்பாதி தாதுக்கள்
நன் முறையில் இயங்கி வரும் நாட்களில் என்றேனும்
எண்ணற்ற பொருள் அனைத்தில் உட் புகுந்த ஆன்மாவாய்
ஏற்றமுடைப் பிறப்பிலியாம் உன் தன்னை ஒரு முறையே
எண்ணுவனேல் அந்நினைவை இறுதியிலே உண்டாக்கி
எட்டரிய முக்தி தனை எய்தி விடச் செய்கின்றாய் –

——————————————-

முன் ஸ்லோக‌த்தில் “துப்புடையாரை” நினைத்தார். அத்திருமொழியில் மேல்பாசுர‌ங்க‌ளில்
“என்னை அநேக‌ த‌ண்ட‌ம் செய்வ‌தா நிற்ப‌ர் ந‌ம‌ன் த‌ம‌ர்க‌ள்”,
“ந‌ம‌ன் த‌ர‌ம் ப‌ற்றும்போது”,
“ந‌ம‌ன்த‌ம‌ர் ப‌ற்ற‌லுற்ற‌ அன்றைக்கு” என்று ய‌ம‌வ‌ச்ய‌தா ப‌ய‌மில்லாம‌ல் காப்ப‌வ‌ராக‌ அர‌ங்க‌த் த‌ர‌வ‌ணைப் ப‌ள்ளியானைத் துதிக்கிறார்.
ப‌ல‌ விஷ‌ய‌ங்க‌ள் சேர்ந்து ஸ்வாமி நெஞ்சில் ஓட‌ இங்கே இந்த‌ சுலோக‌ம் அமைக்க‌ப் ப‌ட்டுள்ள‌து.
ந‌ம்பெருமாள் திவ்ய‌ம‌ங்க‌ள‌ விக்ர‌ஹ‌ம் கோவிலை விட்டு வெளியே எழுந்த‌ருளியிருந்த‌ ஸ‌ம‌ய‌ம், ஸ்ரீர‌ங்க‌நாய்ச்சியாரை விட்டுப் பிரிவு நேர்ந்திருந்தது.
ஸ்ரீர‌ங்க‌ பூமியை விட்டுப் பிரிவு, ஸ்ரீர‌ங்க‌ பூமியிலுள்ள‌ ம‌னுஜ‌ திர்ய‌காதி விஷ‌ய‌ வாஸிக‌ளை விட்டுப் பிரிவு,
ஸ்வாமியைப்போல் ததேக‌நிய‌தாச‌ய‌ராய் ஸ்ரீர‌ங்க‌நாத‌னையே த்யான‌ம் செய்து ர‌மிப்ப‌வ‌ரோடும் பிரிவு.
“உம்மோடு கூட‌ இருப்ப‌தே ஸ்வ‌ர்க்க‌ம். உம்மை விட்டுப் பிரிவே ந‌ர‌க‌ம்” என்று ஸ்வ‌ர்க்க‌ ந‌ர‌க‌ ல‌க்ஷ‌ண‌ம் சீதை ல‌க்ஷ்ம‌ண‌ன் போன்ற‌ சேஷ‌ ஜ‌ன‌ங்க‌ளுக்கு.
ந‌ம் பெருமாளைவிட்டுப் பிரிவு ந‌ர‌க‌பாத‌ துல்ய‌ம்.
“விஷ்ணு ப‌க்த‌ருக்கு, வைஷ்ண‌வ‌ருக்கு, ந‌ம‌ன் த‌ம‌ர் ப‌ய‌மில்லை. ந‌ம‌னுக்கு வ‌ச‌மாவ‌தில்லை.
அவ‌ர்க‌ள் இவ‌ர்க‌ளைக் க‌ண்டு ப‌ய‌ந்து ஓடுவார்க‌ள்” என்று விஷ்ணு புராண‌த்தில்
பீஷ்ம‌ர் ந‌குல‌னிட‌ம் ய‌ம‌னுக்கும் அவ‌ன் ப‌ட‌ர்க‌ளுக்கும் ந‌ட‌ந்த‌ ஸ‌ம்வாதத்தை வ‌ர்ணித்தார்.
அவ‌ர்க‌ள் ஸ‌ம்வாதத்தை ந‌ர‌க‌த்தில் அப்போது அவ‌ஸ்தைப்ப‌ட்டுக்கொண்டிருந்த‌ காளிங்க‌ர் நேரில் கேட்டார்.
அவ‌ர் ஜாதிஸ்ம‌ரர். அதாவ‌து ஒரு ச‌க்தி விசேஷ‌த்தால் பூர்வ‌ ஜ‌ன்ம‌ங்க‌ளில் தாம் அனுப‌வித்ததை யெல்லாம் ஸ்ம‌ரிப்ப‌வ‌ர்.
பூர்வ‌ ஜ‌ன்ம‌த்தில் தாம் ந‌ர‌க‌த்தில் கூட‌ இருந்து கேட்ட‌ பேச்சை அப்ப‌டியே அவ‌ர் த‌ம்முடைய‌ பிராம‌ண‌ ஜ‌ன்ம‌த்தில் பீஷ்ம‌ருக்கு வ‌ர்ணித்தார்.
பீஷ்ம‌ர் ந‌குல‌னுக்கு வ‌ர்ணித்ததைப் ப‌ராச‌ரர் வ‌ர்ணித்தார்.
இந்த‌ ஸ‌ம்வாதத்தில் ஸ்ரீச‌ங்க‌ரர் முத‌லிய‌ அத்வைத‌ப் பெரியார்க‌ளுக்கு விசேஷ‌ ஈடுபாடு.
ய‌ம‌ன் பாடினான் என்று “ஹ‌ரிகுருவ‌ஶ‌கோऽஸ்மி ந‌ ஸ்வ‌த‌ந்த்ர‌: ப்ர‌ப‌வ‌தி ஸ‌ம்ய‌ம‌தே மமாபி விஷ்ணு:” என்ற‌ சுலோக‌த்தை
ப‌ர‌ம‌தீ க்ர‌ந்த‌ம் உதாஹ‌ரித்தது. “ம‌து ஸூத‌ன‌ ப்ர‌ப‌ந்ந‌ரைப் ப‌ரிஹ‌ரிப்பாயாக‌. வைஷ்ண‌வ‌ர்க‌ள் பேரில் என‌க்கு அதிகார‌மில்லை.
வைஷ்ண‌வ‌ர்க‌ள‌ல்லா தாருக்கே நான் ப்ர‌பு” என்ற‌ சுலோக‌த்தை ம‌துஸூத‌ன‌ர் த‌ம் அழ‌கான‌ கீதா வ்யாக்யான‌த்தில் உதாஹ‌ரித்தார்.
ஹ‌ரி, விஷ்ணு, ஜ‌நார்த்த‌னன், ம‌துஸூத‌னன், வாஸுதேவ‌ன் முத‌லிய‌ திருநாம‌ங்க‌ளை த‌ர்ம‌ராஜ‌ர் அங்கே அடிக்க‌டி கீர்த்த‌ன‌ம் செய்கிறார்.
இந்தத் திருநாம‌ங்க‌ளை உச்ச‌ரிப்ப‌வ‌ர்க‌ளைக் க‌ண்டு ய‌மப‌ட‌ர்க‌ள் ந‌டுங்க‌ வேண்டும்.

“ந‌ம‌ன்த‌ம‌ர் த‌லைக‌ள் மீதே ………….. நின் நாமம் க‌ற்ற‌ ஆவ‌லிப்புடைமை க‌ண்டாய் அர‌ங்க‌மா ந‌க‌ருளானே” என்று
அர‌ங்க‌னையே அத்ய‌ந்த‌ம் ஐகாந்த்ய‌த்தோடு ப‌ற்றிய‌ (ததேக‌ நிய‌தாஶ‌ய‌ரான‌) தொண்ட‌ரடிப்பொடிக‌ளும்
ய‌ம‌னுடைய‌ கான‌த்தை அநுகான‌ம் ப‌ண்ணினார்.
காதோடு ர‌ஹ‌ஸ்ய‌மாக‌ச் சொல்லுகிறேன் என்று தொட‌ங்கிய‌ ய‌ம‌ன் போக‌ப்போக‌ ஸ‌ந்தோஷ‌ பார‌வ‌ச்ய‌த்தால் மெய் ம‌ற‌ந்து
உர‌க்க‌ப் பாடினான் என்னும் ர‌ஸ‌த்தை பாம‌தி அநுப‌வித்தது. பீஷ்ம‌ரும் ப‌ராச‌ரரும் அநுப‌வித்தார்க‌ள்.
(சிந்தி, பிந்தி) (கிழி, பிள‌) என்று கொடுமையே பேசுப‌வ‌ர் பாடினார் என்றும் ர‌ஸ‌ம்.
(கீத‌ம் வைவ‌ஸ்வ‌தேந‌ ய‌த்) என்று க‌டைசியில் ய‌ம‌ன் இப்ப‌டிப் பாடினான் என்று பீஷ்ம‌ ப‌ராச‌ரர்க‌ள் ர‌ஸித்தார்க‌ள்.
ய‌ம‌ன் பாட்டுக்க‌ளில் க‌டைசிப் பாட்டு
க‌ம‌ல‌ந‌ய‌ந‌ வாஸுதேவ‌ விஷ்ணோ த‌ர‌ணித‌ர‌ அச்யுத‌ ச‌ங்க‌ச‌க்ர‌பாணே |
பவ ஶ‌ர‌ண‌ம் இதீர‌ய‌ந்தி யே வை த்வ‌ஜ‌ ப‌ட‌ தூர‌த‌ரேண‌ தாந் அபாபாந் ||என்ப‌து.
“இந்தத் திருநாம‌ங்க‌ளைச் சொல்லி நீயே அடைக்க‌ல‌ம் என்று பேசுப‌வ‌ரிட‌மிருந்து, அதி தூர‌ம் வில‌கிச் செல்லுங்க‌ள்”
முன் “வில‌கு” “தூர‌ வில‌கு” என்று பாடிற்று.
இங்கு திருநாம‌த்தைச் சொல்லி “அடைக்க‌லம்” என்று பேசுப‌வ‌ர் விஷ‌ய‌த்தில் “தூர‌த‌ர‌ம் வில‌கு” என்று பாட‌ப்ப‌ட்ட‌து.

முன் பாதியில் திருநாம‌ங்க‌ள் அடுக்காக‌ப் ப‌டிக்க‌ப்ப‌ட்ட‌து.
இந்த‌ சுலோக‌த்திலும் அதே ரீதியாக‌ முன்பாதியில் திருநாம‌ங்க‌ளை ம‌ட்டும் அடுக்கி அமைத்து :
“இதி ஈர‌ய‌ந்தி” என்ற‌துபோல் “இதீவ‌ ப‌ட‌தி நாம‌தேயாநி தே” என்று இங்கும் பின்பாதியின் அமைப்பு.
“இதீவ‌” “இதுபோன்ற‌ நாம‌தேய‌ங்க‌ளை”. ய‌ம‌னுடைய‌ சுலோக‌த்திலும் அதே நாம‌ங்க‌ளையோ ம‌ற்ற‌ நாம‌ங்க‌ளையோ என்று
தாத்ப‌ர்ய‌ம் என்ப‌தை ஸ்வாமி “இவ‌” என்று காட்டிய‌ருளுகிறார்.
ய‌ம‌ன் பாடின‌ப‌டியும் தொண்ட‌ர‌டிப்பொடிக‌ள் பாடின‌ப‌டியும் உம் திருநாம‌ங்க‌ளைச் சொல்லி
நீரே ச‌ர‌ண‌ம் என்று வாயாலேயாவ‌து சொல்லும் எம்போல்வார்க்கு ய‌ம‌வ‌ஶ்ய‌தை என்ப‌தே ஸ‌ம்ப‌விக்க‌ மாட்டாது.

“த்வ‌யா விநா” உம்மைவிட்டுப் பிரிவினால் நாங்க‌ள் ந‌ர‌க‌த்தையே அனுப‌விக்கிறோம்.
ய‌ம‌வ‌ஶ்ய‌தை இல்லாதார்க்கு ந‌ர‌காநுப‌வ‌ம் வ‌ர‌ ந்யாய‌மில்லை.
உம் பிரிவால் ரௌர‌வாதி ஸ‌ப்த‌ ந‌ர‌க‌ங்க‌ளை நாங்க‌ள் இப்போது அனுப‌விப்ப‌து உண்மை.
எங்க‌ளுக்கோ ய‌ம‌வ‌ஶ்ய‌தை கிடையாது என்ப‌து திண்ண‌ம். ய‌ம‌வ‌ஶ்ய‌தை ந‌ர‌காநுப‌வ‌த்திற்குக் கார‌ண‌ம்.
கார‌ண‌மில்லாம‌ல் காரிய‌ம் உண்டாகிற‌தே, இது என்ன‌ அந்யாய‌ம் என்று க‌டைசிப் பாதத்தில் கைமுத்ய‌த்தால் விள‌க்கும் அழ‌கு ர‌ஸிக்க‌த் த‌க்க‌து.

ரமா தயித ரங்கபூ ரமண க்ருஷ்ண விஷ்ணோ ஹரே
த்ரிவிக்ரம ஜனார்த்தன த்ரியுகே நாத நாராயண
இதீவ ஸூபதாநி ய படதி நாமதே யாநி தே
ந தஸ்ய எம வஸ்யதா நரக பாத பீதி குத–7-

ய‌: எவ‌ன்,
ர‌மாத‌யித‌ — ல‌க்ஷ்மீகாந்த‌! ,
ர‌ங்க‌பூர‌ம‌ண‌ –ஸ்ரீர‌ங்க‌த்தில் ர‌மிப்ப‌வ‌னே!,
க்ருஷ்ண‌ — க‌ண்ணா ! (பூர்ணாநந்த‌ பூமியே!,),
விஷ்ணோ — எங்கும் நிறைந்த‌வ‌னே!,
ஹ‌ரே — ஹ‌ரியே (ஆப‌த்தை ஹ‌ரிப்ப‌வ‌னே, சிங்க‌மே ),
த்ரிவிக்ர‌ம‌ — மூவுல‌க‌ள‌ந்த‌ சேவ‌டியோனே!,
ஜ‌நார்த்த‌ன‌ — ஜ‌னார்த்த‌னனே!,
த்ரியுக‌ — ஆறுகுண‌த்தோனே!,
நாத‌ — நாத‌னே!,
நாராய‌ண‌ — நாராய‌ண‌னே!!,
இதீவ‌ — இதுவும், இதுபோலுள்ள‌வுமான‌,
ஶுப‌தாநி — க்ஷேம‌த்தை அளிக்கும்,
தே — உம்முடைய‌,
நாம‌தேயாநி — திருநாம‌ங்க‌ளை ,
ப‌ட‌தி — உச்ச‌ரிக்கிறானோ,
த‌ஸ்ய‌ — அவ‌னுக்கு,
ய‌ம‌வ‌ஶ்ய‌தா — கால‌னுக்கு வ‌ச‌மாவ‌தென்ப‌து,
ந‌: — கிடையாது,
ந‌ர‌க‌ – பாத‌ – பீதி — ந‌ர‌க‌த்தில் வீழ்வ‌தென்னும் ப‌ய‌ம்,
குத‌: — எங்கிருந்து வ‌ரும்.

ரமா தயித ரங்கபூ ரமண க்ருஷ்ண –ஸ்ரீ லஷ்மீ காந்தா -ஸ்ரீ ரங்கத்தில் ரமிப்பவனே –
உம்மை விட்டு பிரிந்து பெரிய பிராட்டியாரும் ஸ்ரீ பூமிப் பிராட்டியும் இருக்கவோ
ரங்க -நடுவில் வைத்து இரண்டு பக்கம் உபய நாச்சியாரை வைத்து அருளிய அழகு நோக்கவும்
–கண்ணனே -பூர்ண ஆனந்த பூமியே –
விஷ்ணோ -சர்வ வியாபியே –ஹரே-ஆபத்துக்களை ஹரித்து அருளும் ஸ்ரீ ஸிம்ஹமே
பிராணாதார்த்தி ஹரன் அல்லவோ
த்ரிவிக்ரம-மூ உலகு அளந்த சேவடியோனே
ஜனார்த்தன-ஜென்மங்களை முடித்து அருளும் ஜனார்த்தனன்
த்ரியுகே -ஷட் குண பரி பூர்ணனே
நாத நாராயண -ஸ்ரீ நாதனே -ஸ்ரீ மன் நாராயணனே
இதீவ ஸூபதாநி ய படதி நாமதே யாநி தே -இதுவும் இது போல் உள்ள க்ஷேமத்தை அளிக்கும் உம்முடைய திரு நாமங்களை உச்சரிக்கிறானோ
ந தஸ்ய எம வஸ்யதா நரக பாத பீதி குத–அவனுக்கு காலன் வசம் கிடையாதே -நரகத்தில் வீழ்வது என்னும் பயம் எங்கிருந்து வரும் –
அரங்கனை விட்டு பிரிந்தால் நரகம் -கூட இருந்து கைங்கர்யம் செய்து கொண்டே இருப்பதே சுவர்க்கம் என்று நினைக்கும் பிராட்டி போல்வார் அன்றோ இவரும்
தேவரீர் செஞ்சிக் கோட்டையிலும் பெரிய பிராட்டியார் ஸ்ரீ ரெங்கத்திலும் இருப்பதோ
அகலகில்லேன் இறையும் என்று இருப்பவளுக்கு சேருமோ –
ஸ்ரீ பூமிப் பிராட்டியும் உம்மை விட்டு பிரிந்து அல்லல் பாடவோ –
நாதன் ஒரு இடமும் ஸ்ரீ ரெங்க நாச்சியார் அரங்கம் பூமா தேவி அரங்க நகர் வாசிகள் இங்கும் இருக்கவோ –

ஸ்வாமி திருவுள்ள‌ப்ப‌டி ஒவ்வொரு ப‌தத்தின் ர‌ஸ‌த்தைக் கொஞ்ச‌ம் காட்டுவோம்.

ர‌மாத‌யித‌ — தேவ‌ரீர் செஞ்சிக்கோட்டையிலும், ஸ்ரீர‌ங்க‌நாச்சியார் கோயிலிலுமாக‌ இருப்ப‌து ந்யாய‌மோ?
“நிர‌யோ ய‌ஸ்-த்வ‌யாவிநா” “விஷ்ணோ: ஸ்ரீ: அந‌பாயிநீ” “அக‌ல‌கில்லேன் இறையும்” என்னும்
உம் பிரிய‌ காந்தைக்காக‌வாவ‌து நீர் கோயிலுக்குத் திரும்பி எழுந்த‌ருள‌ வேண்டாமோ?
(நிவ‌ர்த்ய‌ ராஜா த‌யிதாம் த‌யாளு) என்று ர‌குவ‌ம்ச‌ம். த‌யிதை விஷ‌ய‌த்திலும் த‌யாளுவ‌ல்ல‌வோ ?

ர‌ங்க‌பூர‌ம‌ண‌ — பிராட்டி விபுவாக‌ ந‌ம்மோடு எங்கும் எப்போதும் (காடோப‌கூட‌)மாய் அணைந்தே இருப்ப‌வ‌ள்.
அவ‌ளை விட்டுப் பிரிவு என்ப‌தே இல்லை என்பீரோ, ர‌ங்க‌பூ என்னும் அர‌ங்க‌ந‌க‌ர் (அயோத்யை) நோவு ப‌டுகிற‌தே.
அத‌ற்கு நீர்தானே ர‌ம‌ண‌ன். அத‌ற்குப் பொறுக்காத‌ அர‌தி.
அதில் வ‌ஸிக்கும் ம‌நுஜ‌ – திர்ய‌க் – ஸ்தாவ‌ர‌மெல்லாம் ராம‌ விர‌ஹ‌த்தில் அயோத்தியில் ச‌ராச‌ர‌ம்போல‌க் க‌த‌றுகின்ற‌ன‌வே.
ர‌ம‌ண‌னில்லாம‌ல் ர‌ங்க‌பூமி நாய‌க‌ன‌ற்ற‌ ஸ்திரீபோல் துக்க‌ப்ப‌டுகிற‌தே.
“ர‌ங்க‌ம்” என்னும் ந‌க‌ர், “பூ” என்னும் பூமிதேவி, இருவ‌ருக்கும் “ர‌ம‌ண‌” என்றும் கொள்ள‌லாம்.
ர‌ங்க‌ம் பூமியிலே ஏக‌தேச‌மானாலும், ர‌ங்க‌த்தை ம‌ட்டும் த‌னித்து எடுத்துப் பேசுவ‌து ர‌ஸ‌ம்.
அர‌ங்க‌மும் க‌த‌றுகிற‌து. பூமிப் பிராட்டியும் க‌த‌றுகிறாள்.
(அஶ்ருமுகீ₂ கி₂ந்நா- க்ரந்த₃ந்தி க‌ருண‌ம்) உப‌ய‌நாச்சிமாரும் அவ‌ர்க‌ளிருக்கும் ந‌க‌ர‌மான‌ ர‌ங்க‌மும் க‌த‌றுகிறார்க‌ள் என்ப‌தைக் காட்ட‌,
“ர‌ங்க‌” என்ப‌தை இர‌ண்டு நாச்சிமாருக்கும் ந‌டுவில் வைத்தார்.
தாய்க‌ளும் ப்ர‌ஜைக‌ளும் நோவுப‌டுகின்ற‌ன‌ என்ற‌ப‌டி. அடைக்க‌ல‌ம் கொள்ளுவ‌த‌ற்கு இந்தத் திருநாம‌ங்க‌ள் ஸ‌ப்ர‌யோஜ‌ன‌ம்.

க்ருஷ்ண‌ – “ஹா க்ருஷ்ணா” என்று த்ரௌப‌தி கூப்பிட்ட‌ திருநாமம்.
ப‌த்தொன்ப‌தாவ‌து சுலோக‌த்தில் அவ‌ள் வ்ருத்தாந்தத்தைப் பேச‌ப் போகிறார்.
“க்ருஷ்ண‌” என்ப‌த‌ற்கு “ஆன‌ந்தத் தின் எல்லை பூமி” என்று பொருள். “க்ருஷி” என்று பூமிக்குப் பெய‌ர்.
“ர‌ங்க‌பூ” என்று பேசிய‌தும் “பெருமாளே நிர்வ்ருதிபூமி” “ஆன‌ந்தத்திற்கு எல்லைபூமி” என்று ர‌ஸ‌மாய்ச் சேர்க்கிறார்.
ர‌ங்க‌பூமியில் நிர்வ்ருதிபூமியான‌ நீர் சேர்ந்திருந்தால் ப‌ர‌ஸ்ப‌ர‌ ர‌ஸ‌ம்.
“ர‌ங்க‌ம்” என்ப‌த‌ற்கு “ர‌திம் க‌த‌:” “ர‌தியை அடைந்தார்” என்று பொருள். அதிலிருப்ப‌தால் ர‌தி அடைய‌ப் ப‌டுகிறது‌
(ர‌திம் க‌தோ ய‌த‌ஸ் த‌ஸ்மாத் ர‌ங்க‌ம் இதி அபிதீய‌தே)

விஷ்ணோ! ஹ‌ரே ! — ய‌ம‌ன் பாடிய‌ திருநாம‌ங்க‌ள். ய‌மப‌ட‌ருக்கு ப‌ய‌முண்டாக்குப‌வை.
(ர‌காராதீநி நாமாநி, அகாராதீநி நாமாநி) உல‌க‌த்தின் ஆப‌த்தை யெல்லாம் ஹ‌ரிப்ப‌வ‌ராயிற்றே. ப்ர‌ண‌தார்த்தி ஹ‌ர‌ன‌ல்ல‌வோ?

த்ரிவிக்ர‌ம‌ –(லோக விக்ராந்த‌ ச‌ர‌ணௌ ஶ‌ர‌ண‌ம் தே அவ்ர‌ஜ‌ம் ப்ர‌பு ) —
உல‌க‌ள‌ந்த‌ உம் சேவ‌டிக‌ளைச் ச‌ர‌ண‌ம் புகுந்தேன் என்று ச‌ர‌ண் புகும் வ‌கை. ( விஷ்ணும் க்ராந்த‌ம் வாஸுதேவ‌ம் விஜாநந்) என்ற‌ப‌டி.

ஜ‌நார்த்த‌ன‌ — இதுவும் ய‌ம‌ன் பாட‌ல்க‌ளிலுள்ள‌து.

த்ரியுக‌ — மூவிர‌ண்டான‌ ஆறு குண‌ங்க‌ளை உடைய‌வ‌ரே ! முத‌ல் மூன்று யுக‌ங்க‌ளில் ம‌ட்டும் ம‌த்தியில் அவ‌தார‌ம் செய்ப‌வ‌ர்.
க‌லியில் அத‌ன் முடிவில் தான். விப‌வாவ‌தார‌ம் க‌லி ம‌த்தியில் கூடாதென்று இருக்கிறீரோ?

நாத‌ — “ர‌ங்க‌நாத‌” என்று கூப்பிட‌க் கூடாம‌லிருக்கிற‌தே, இத‌னிலும் எங்க‌ளுக்குக் க‌ஷ்ட‌முண்டோ?

நாராய‌ண‌ — இட‌ராயின‌வெல்லாம் நில‌ம்த‌ர‌ம் செய்யும் நாமம் பெருமாள் ச‌க்ர‌பாணியாய் ஆகாச‌த்தில் எழுந்த‌ருளி
த‌ன்னைக் காட்ட‌க் க‌ண்ட‌ போது, “நாராய‌ண‌! அகில‌குரோ! ப‌க‌வ‌ந் ! ந‌ம‌ஸ்தே ” என்று க‌ஜேந்த்ராழ்வார் முத‌லில் கூப்பிட்ட‌ நாமம்.
திருவ‌ஷ்டாக்ஷ‌ர‌த்திலும் த்வ‌ய‌த்திலும் விள‌ங்கும் திருநாமம்.

இதீவ‌ — இப்ப‌டி, இதுபோன்ற‌. இவ‌ என்ப‌தால் முழுவ‌தும் ச‌ரியாக‌ச் சொல்லாவிடினும், சொல்லுவ‌து போலிருந்தாலும் போதும்.

ப‌ட‌தி இவ‌ — வேறு ஏதோ ப்ர‌ஸ்தாவ‌த்தில் இந்த‌ ஸ‌ப்தத்தை ம‌ட்டும் உச்ச‌ரித்தாலும்.
“நாராய‌ண‌” என்னும் திருநாம‌த்தால் அஜாமிள‌ன் க‌தையை நினைத்து,
“ப‌ட‌தீவ‌” — பாட‌ம் ப‌டிக்கிற‌து போலிருந்தாலும் என்று க‌ருத்து.
(ஆக்ருஶ்ய‌ புத்ர‌ம் அக‌வாந் ய‌த‌ஜாமிளோபி நாராய‌ண‌ இதி ம்ரிய‌மாண‌ அவாப‌ முக்திம்) இந்த‌ நாம‌த்தின் ப்ர‌பாவ‌த்தை
ர‌ஸித்த‌ ஸ்ரீவித்யார‌ண்ய‌ ஸ்வாமி ப‌ஞ்ச‌த‌சியில் இந்த‌ சுலோக‌த்தை உதாஹ‌ரித்தார்.

நாம‌தேயாநி — திருநாம‌ ச‌ப்தத்தை ம‌ட்டும். அர்த்த‌ம்கூட‌ வேண்டிய‌தில்லை.
வாச்ய‌னான‌ உம்முடைய‌ நினைப்பில்லாம‌ல், உம் பேராயிருப்ப‌து மாத்ர‌மே போதும்.
“ப‌வ‌ ஶ‌ர‌ண‌ம்” என்று பேசுவார் என்றான் ய‌ம‌ன்.
“இதி ஈர‌ய‌ந்த‌” (ஶ‌ர‌ணாக‌தி ஶ‌ப்த‌பாஜ‌) என்று ஆழ்வான் “ஸ்வார்த்தே தேய‌ட் ப்ர‌த்யய‌ம்” என்ப‌ர்.

தே — உம் திருநாமமாத‌லால் ச‌ப்தத்தின் ப‌ட‌ந‌ மாத்ர‌த்திற்கு இத்த‌னை ப்ர‌பாவ‌ம்.

ந‌ த‌ஸ்ய‌ ய‌ம‌வ‌ஶ்ய‌தா — அவ‌ர்க‌ள் விஷ‌ய‌த்தில் த‌ன‌க்கும் த‌ன் ப‌ட‌ர்க‌ளுக்கும் அதிகார‌மில்லை என்று
அதிகாரி புருஷ‌னான‌ த‌ர்ம‌ராஜ‌னே சொல்லி இருப்ப‌தால், அதில் ஸ‌ந்தேஹ‌மில்லை.
இதைக் காட்ட‌வே அந்த‌ சுலோக‌த்தின் ரீதி இங்கே அனுஸ‌ரிக்க‌ப் ப‌ட்ட‌து.
ய‌ம‌வ‌ஶ்ய‌தை வ‌ராம‌ல் ந‌ர‌க‌பாத‌ம் ஸ‌ம்ப‌விக்க‌ ந்யாய‌மில்லையே. ஸ‌ப்த‌ ந‌ர‌க‌ங்க‌ளிலும் ய‌ம‌னுடைய‌ அதிகார‌ம் (வ்யாபார‌ம்) தான்
என்று ஸூத்ர‌காரர் தீர்மானித்தார். ஸூத்ர‌ப் பிர‌ஸித்தியைக் கொண்டு இங்கே கைமுதிக‌ ந்யாய‌த்தை வைக்கிறார்.
ந‌ர‌காநுப‌வ‌த்திற்குக் கார‌ண‌மான‌ ய‌ம‌வ‌ஶ்ய‌தை இல்லாம‌லே நாங்க‌ள் ந‌ர‌க‌துல்ய‌மான‌ யாத‌னைக‌ளை உம் பிரிவினால் அனுப‌விக்கிறோம்.
இதையெல்லாம் உட‌னே நிவ‌ர்த்திக்க‌ வேணும்.
ஸ்ரீர‌ங்க‌ நாச்சியார், அர‌ங்க‌ம், பூதேவி, அர‌ங்க‌வாஸிக‌ள் எல்லோரும் நாத‌னுட‌ன் கூடியிருக்க‌ வேணும்.
நாத‌னோரிட‌ம், அர‌ங்க‌மோரிட‌மாக‌ இருக்க‌லாகாது என்கிறார்.

பூ மகளின் நல் துணைவா பொழில் அரங்கக் காதலனே
முகில் வண்ண கண்ணாவே மறைந்து எங்கும் நிற்பவனே
தீமைகளை ஒழிப்பவனே திருவடியால் உலகு அளந்த
திரி விக்ரமா ஸ்ரீ ஜனார்த்தன திரு வாறு குணமுடையோய்
நாம் வணங்கும் பெரும் தலைவா நாராயணா என்று என்று
நலம் எல்லாம் தருமூன்றன் நாமங்களைப் பயில்வோனை
நமன் தனக்கு வயமாக்கும் நிலை என்றும் ஏற்படாதே
நரகத்தில் வீழ்கின்ற நடுக்கம் தான் உண்டோ தான் –

———————————————–

ய‌ம‌வ‌ச்ய‌தை யில்லாம‌லே ந‌ர‌காநுப‌வ‌ம் வ‌ருகிற‌தே என்று காட்டி, நீர் இப்ப‌டி சாஸ்த்ர‌ ம‌ரியாதையைக் குலைக்க‌லாமோ
என்று த்வ‌னிக்கும்ப‌டி முன் சுலோக‌த்தில் பேசினார்.
உம்மிட‌ம் பார‌மைகாந்த்ய‌முடைய‌ ஒரு ப‌க்த‌ர் ஏதோ ஒரு கால‌த்தில் ஒரு தேச‌த்திலிருந்தால்
அந்த‌ தேச‌ம் ப‌க‌வானுக்கு ஸ்திர‌மான‌ ராஜ‌தானியாகும். த‌வ‌ம் செய்வ‌த‌ற்கு இடையூறில்லாத‌ த‌போவ‌ன‌மாகும்.
ந‌ல்லொழுக்க‌த்திற்கு அழிவ‌ற்ற‌ கோட்டையாகும் என்ப‌ரே.
தொண்ட‌ர‌டிப் பொடிக‌ளிலும் உம்மிட‌ம் பார‌மைகாந்த்ய‌ முடைய‌வ‌ருண்டோ?
(அத்ரைவ‌ ஸ்ரீர‌ங்கே ஸுக‌ம் ஆஸ்ஸ்வ‌) என்ற‌ல்ல‌வோ இத்த‌கைய‌ வ‌டியார்க‌ளுக்கு உம்முடைய‌ ஆக்ஞை!
“அச்சுவை பெறினும் வேண்டேன் அர‌ங்க‌மாந‌க‌ருளானே” என்று ப‌ர‌மப‌தத்து வைகுண்ட‌நாத‌னையும் ஒதுக்கி உம்மிட‌ம் நிய‌தாஶ‌ய‌ராய் இருந்த‌ன‌ர்.
“இங்கே ஸ்ரீர‌ங்க‌த்தில் ஸுக‌மாயிரு” என்று எங்க‌ளுக்குக் க‌ட்ட‌ளையிட்டுவிட்டு, நீர் இவ்விட‌மிருந்து வெளியேறுவ‌து த‌குதியோ?
பெரிய‌ பெருமாள் ஓரிட‌மும் நீர் ஓரிட‌முமானால், எங்க‌ளுக்கு ஸ்ரீர‌ங்க‌த்தில் ஸுக‌மான‌ இருப்பு எப்ப‌டி ஏற்ப‌டும்?

கதாசிதாபி ரங்க பூ ரசிக யத்ர தேசே வசீ
த்வ தேக நியதா சயஸ்த்ரிதச வந்திதோ வர்த்ததே
தத ஷத தபோவனம் தவ ச ராஜதா நீ ஸ்திரா
ஸூ கஸ்ய ஸூகமாஸ் பதம் ஸூசரிதஸ்ய துர்க்கம் மஹத் –8-

ர‌ங்க‌பூர‌ஸிக‌ –ஸ்ரீர‌ங்க‌த்தில் வ‌ஸிப்ப‌வ‌ரே!,
வ‌ஶீ – இந்திரிய‌ங்க‌ளை வ‌ச‌ப்ப‌டுத்திய‌ வ‌ரும்,
த்வ‌தேக‌ -நிய‌த‌ – ஆஶ‌ய‌ — (தொண்ட‌ர‌டிப்பொடிக‌ள்போல‌) உம்மிட‌த்திலேயே நிலைநிறுத்திய‌ ப‌க்தியை யுடைய‌வ‌ரும்,
த்ரித‌ஶ‌ வ‌ந்தித‌ — தேவ‌ர்க‌ளால் ந‌ம‌ஸ்க‌ரிக்க‌ப் ப‌டுப‌வ‌ருமான‌ (பெரிய‌வ‌ர்),
ய‌த்ர‌ தேஶே — எந்த‌ தேச‌த்தில்,
க‌தாசித‌பி — ஒரு பொழுதாவ‌து,
வ‌ர்த்ததே — இருக்கிறாரோ,
தத் — அது,
அக்ஷ‌த‌ — இடையூறில்லாத‌,
த‌போவ‌ந‌ம் — த‌போவ‌ந‌ம்,
த‌வ‌ ச‌ — உம‌க்கும்,
ஸ்திரா — ஸ்திர‌மான‌,
ராஜ‌தாநீ — ந‌க‌ர‌ம்,
ஸுக‌ஸ்ய‌ (ச‌) — ஸுக‌த்திற்கும்,
ஸுக‌ம் — ஸுக‌மான‌,
ஆஸ்ப‌த‌ம் — இட‌ம்,
ஸுச‌ரித‌ஸ்ய‌ — ந‌ல்லொழுக்க‌த்திற்கும்,
ம‌ஹ‌த் — பெரிய‌,
துர்க‌ம் — அர‌ண் (கோட்டை)

ரங்க பூ ரசிக –-ஸ்ரீ ரெங்கத்தில் நித்ய வாசம் பண்ணி அருளுபவரே-
பரஸ்பரம் ஸ்ரீ ரெங்க வாசிகளுக்கு உமக்கும் ரசிக்காத தன்மை உண்டே
வசீ ஆயஸ-இந்திரியங்களை வசப்படுத்தியவரும்-இந்திரியங்களை அடைக்கு அருளுவர் நித்ய வாசம் செய்யும் இடமே
குருஷேத்ரம் நைமிசாரண்யம் புஷ்கரம் என்று ஸ்தான விசேஷ அதிகாரத்தில் அருளிச் செய்துள்ளார்
த்வ தேக நியதா-தொண்டர் அடி பொடி ஆழ்வாரை போலே உம்மிடையே நிலை நிறுத்திய பக்தியை யுடையவரும்
த்ரிதச வந்திதோ-தேவர்களால் நமஸ்கரிக்கப் படும் பெரிய பெருமாளை –
நித்ய சூரிகள் ஏதேனுமாக இருக்க ஆசைப்பட்டு இருக்கும் திவ்ய தேசம் அன்றோ
யத்ர தேசே கதாசிதாபி- வர்த்ததே -எந்த தேசத்தில் ஒரு பொழுதாவது இருக்கிறாரோ
தத ஷத தபோவனம்-அது இடையூறு இல்லாத தபோ வனம்
தவ ச ராஜதா நீ ஸ்திரா -உமக்கும் ஸ்திரமான ராஜ தாநீ
ஸூ கஸ்ய ஸூகமாஸ் பதம் -ஸூ கத்துக்கும் ஸூ கமான இருப்பிடம்
ஸூசரிதஸ்ய துர்க்கம் மஹத்-நல்ல நடத்தைக்கும் ஒரு பெரிய அரண் — கோட்டை
பரமை காந்திகள் உள்ள தேசமே நீர் உகந்த திவ்ய தேசம் என்றவாறு -தர்மத்துக்கு இவர்கள் வாசம் செய்யும் இடமே அரண் அன்றோ
அத்ரைவ ஸூ கமாஸ்க்வா என்று எம் உடையவருக்கு அருளிய பின்பு நீர் இத்தை விட்டு செஞ்சி கோட்டையில் இருக்கவோ –

ர‌ங்க‌பூ ர‌ஸிக‌ — பாற்க‌ட‌ல், ஸூர்ய‌ ம‌ண்ட‌ல‌ம், வைகுண்ட‌ம் எல்லாவ‌ற்றைக் காட்டிலும் உம‌க்கு
ஸ்ரீர‌ங்க‌த்திலே (ர‌தி) இன்ப‌ம் இருக்கிற‌து.
“ர‌திம் க‌தோ ய‌த‌ஸ்த‌ஸ்மாத்” என்று ரிஷிக‌ள் பொருள் கூறினார்க‌ள்.
அர‌ங்க‌த்தில் அர‌ங்க‌னாகிய‌ நீர் ஸ‌பாநாய‌க‌ராக‌ வீற்றிருந்து காவ்ய‌ங்க‌ளை ர‌ஸித்து அர‌ங்கேற்றுவ‌து,
(ர‌ங்காஸ்தாநே ர‌ஸிக‌ம‌ஹிதே ர‌ஞ்ஜிதாஶேஷ‌சித்தே).

ர‌ங்க‌பூர‌ஸிக‌ — ர‌ங்க‌பூமிக்கும் ர‌ங்க‌ந‌க‌ர‌வாஸிக‌ளுக்கும் உம்மிட‌ம் ர‌ஸ‌மிருப்ப‌து போல‌, உம‌க்கும் அவ‌ர்க‌ளிட‌ம் ர‌ஸ‌ம்.
இப்ப‌டிப் ப‌ர‌ஸ்ப‌ர‌ ர‌ஸ‌மிருப்ப‌தால் ர‌ஸ‌பூர்த்தி.
ப்ர‌ஹ்மா வினால் ஸ‌த்ய‌ லோக‌த்தில் சில‌கால‌ம் ஆராதிக்க‌ப்ப‌ட்டு, அதை விட்டு அயோத்தி வ‌ந்தீர்.
அங்கு நீண்ட‌ கால‌மிருந்து அதை விட்டு ஸ்ரீர‌ங்க‌த்திற்கு எழுந்த‌ருளினீர்.
இனி ஓரிட‌மும் போக‌மாட்டீராத‌லால் இங்கே உம‌க்கு நிர‌திச‌ய ‌ப்ரீதி என்று பாதுகா ஸ‌ஹ‌ஸ்ர‌த்தில் உம் பாதுகை என்னையிட்டுப் பாடுவித்தது.
‌த்யால்லோகாத் ப‌ர‌மம‌ஹிதாத் ஸ்தாநதோ வா ர‌கூணாம் — என்று கூறின‌து பொய்யாக‌லாமோ?

ய‌த்ர‌ தேஶே — எந்த‌ தேச‌த்தில், “ய‌த்ர‌” என்று ம‌ட்டும் ப்ர‌யோகித்தார். “ய‌த்ரைகாந்த்ய‌” என்ற‌ ஸ்தாந‌ விசேஷாதிகார‌ சுலோக‌த்தில்.
வ‌ஶீ — “இந்த்ரிய‌ங்க‌ளை எல்லாம் அட‌க்கின‌வ‌ர் எங்கே எங்கே வ‌ஸிக்கிறாரோ, அங்க‌ங்கே குருக்ஷேத்ர‌மும் நைமிச‌மும் புஷ்க‌ர‌முமுள‌”
என்ற‌ சுலோக‌ம் ஸ்தாந‌ விசேஷாதி கார‌த்தில் எடுத்துக் காட்ட‌ப்ப‌ட்ட‌து.
த்வ‌த‌தேக‌நிய‌தாஶ‌ய‌ — ‌ வ்ய‌வ‌ஸித‌ திய‌ — என்று அதிகார‌ ச்லோக‌ம்.
க‌தாசித‌பி — ‌ஸ்ய‌ க‌ஸ்யாபி லாப‌ — என்று அங்கு இர‌ண்டிட‌த்திலும் இர‌ண்டையும் அபி என்ப‌தைக் கொண்டு சேர்த்துக் கொள்ள‌ வேணும்.
த்ரித‌ஶ‌வ‌ந்திதோ வ‌ர்த்ததே — தேவ‌ர்க‌ள் இவ‌ருக்குப் ப‌லி ஸ‌ம‌ர்ப்பித்துப் பூஜிக்கிறார்க‌ள்.
த‌ஸ்மை தேவா ப‌லிமா வ‌ஹ‌ந்தி . “நித்ய‌ஸூரிக‌ளும் கோயிலில் வாஸ‌த்தைத் தேடி ம‌னுஷ்ய‌ர்க‌ளோடும் திர்ய‌க்குக‌ளோடும்
சேர்ந்து தொழுகிறார்க‌ள்” என்று ப‌ட்ட‌ர் ஸாதித்தார்.
ப‌ர‌மைகாந்திக‌ளும், அவ‌ர்க‌ளைப் பூஜிக்க‌வும் உம்மை ஸேவிக்க‌வும் வ‌ரும் நித்ய‌ஸூரிக‌ளும் ஏமாறும்ப‌டி செய்ய‌லாமோ?
“த்ரித‌ச‌வ‌ந்தித‌ராக‌ இருக்கிறார் ” என்ப‌தால் அவ‌ர்க‌ளோடு தேவ‌ர்க‌ளும் வ‌ஸிக்கிறார்க‌ள் என்று காட்ட‌ப்ப‌டுகிற‌து.
“த‌ஸ்மை தேவா ப‌லிமாவ‌ஹ‌ந்தி” பெருமாளை அவ‌ர்க‌ள் ஸேவிக்க‌ வ‌ருவ‌து ராக‌ப்ராப்த‌ம்.
இவ‌ர்க‌ளை வ‌ந்த‌ன‌ம் செய்து ப‌லி ஸ‌ம‌ர்ப்பிப்ப‌து வைத‌ம், சுருதி விதித்த‌ ஆக்ஞா கைங்க‌ர்ய‌ம்.

ஸா ச‌ ராஜ‌தாநீ ஸ்திரா — விதேய‌ம் முக்கிய‌மான‌தால் அதை அநுஸ‌ரித்து “ஸா” என்று ஸ்திரீலிங்க‌ம் உப‌யோகிக்க‌ப் ப‌டுகிற‌து.
ராஜ‌தானிக்கே ஆப‌த்துக்க‌ள் அதிக‌ம். ச‌த்ருக்க‌ள் ப‌ல‌ர் இருப்பார்க‌ள். யுத்த‌மும் முற்றுகையும் வ‌ந்து கொண்டேயிருக்கும்.
ப‌ர‌மைகாந்தி வ‌ஸித்த‌ அல்ல‌து வ‌ஸிக்கும் ர‌ங்க‌ராஜ‌தாநீ ஸ்திர‌மாயிருக்க‌ வேண்டும்.
ராஜா வ‌ஸிக்கும் இட‌ம் ராஜ‌தாநியாகையால், ந‌ம்பெருமாள் வேறொரிட‌த்தில் இருந்தால் அதுவும் ராஜ‌தாநியாகிலும், அது ர‌ங்க‌ராஜ‌தானி யாகாத‌ல்ல‌வா?

ஸுக‌ஸ்ய‌ ஸுக‌மாஸ்ப‌த‌ம் — ஸுக‌மென்ப‌த‌ற்கே இது ஸுக‌மான‌ இருப்பிட‌ம்.
ம‌ற்ற‌ இட‌ங்க‌ளில் ஸுக‌மும் இத்த‌னை ஸுக‌மாக‌ இருக்காது.
ஸுச‌ரித‌ஸ்ய‌ துர்க‌ம் ம‌ஹ‌த் — த‌ர்மம் உல‌க‌த்தைக் காக்கும் என்ப‌ர்.
த‌ர்ம‌த்திற்குப் ப‌ர‌மைகாந்தி வ‌ஸிக்கும் க்ஷேத்ர‌ம்தான் பெரிய‌ அர‌ண். இத்த‌னைக்கும் ஹாநி வ‌ர‌லாமோ?

அரங்கத்தில் அன்புடனே அணைந்து உறையும் பெருமாளே
அலை பாயும் புலன்களை அடக்கி யாளும் திறமுடைத்து உன்
ஒருவனையே மனம் வைத்து ஒழுகுவதால் தேவர்களும்
ஓன்று கூடி போற்றுகிற உத்தமமாம் உயர்வுடையோன்
ஒரு பொழுதே வாழ்ந்திட்ட ஓர் இடமே தடை இன்றி
உயர் தவத்தைப் புரிவதற்கு உறும் இடமாம் உன்னுடைய
உறுதியான தலை நகராம் ஒப்பற்ற சுகத் தலமாம்
உற்ற பெரும் நல் வினைக்கோர் உரிய பெரும் அரணாமே

———————————————

ப‌ர‌மைகாந்தி ஒருவ‌ர் ஒருக்கால் வ‌ஸித்தால் ஏற்ப‌டும் ர‌க்ஷையைக் கூறினார்.
அந்த‌ ர‌க்ஷையும் ர‌ங்க‌த்தில் நித்ய ‌வாஸ‌ம் செய்ய‌ விரும்பும் எம‌க்கே ர‌க்ஷை.
எம்மைக்காத்து எம் இஷ்ட‌த்தைப் பூர்த்தி செய்ய‌ உம்முடைய‌ திவ்ய ‌குண‌ங்க‌ளே போதும் என்கிறார்.

த்ரி வர்க்க பத வர்த்தி நாம் த்ரி குண லங்க நோத்யோசி நாம்
த்விஷத் ப்ரமத நார்த்தி நாமபி ச ரங்க த்ருஸ் யோதயா
ஸ்கலத் சமய காதரீ ஹரண ஜாக ரூகா ப்ரபோ
கர கிரஹண தீக்ஷிதா க இவ தே ந திவ்யா குணா –9-

ப்ர‌போ — என் ப்ர‌புவே!,
த்ரிவ‌ர்க்க‌ப‌த‌வ‌ர்த்திநாம் — த‌ர்ம‌ அர்த்த‌ காம‌ங்க‌ளைக் கோருகிற‌வ‌ருக்கும்,
த்ரிகுண‌ ல‌ங்க‌நோத்யோகிநாம் — ப்ர‌கிருதி ம‌ண்ட‌ல‌த்தைத் தாண்ட‌ வேண்டுமென்ற‌ எண்ண‌த்துட‌ன் ப்ர‌ய‌த்த‌ன‌ப்ப‌ட்டு
கைவ‌ல்ய‌த்தையும் மோக்ஷ‌த்தையும் கோருகிற‌வ‌ருக்கும்,
த்விஷ‌த் ப்ர‌ம‌த‌நார்த்திநாம் அபி — (பெருமாளுடைய‌வோ அல்ல‌து த‌ன்னுடைய‌வோ) ச‌த்ருக்க‌ளின் நிர‌ஸ‌க‌த்தைக் கோருகிற‌வ‌ருக்கும்,
ர‌ங்க‌த்ருஶ்யோத‌யா — அர‌ங்க‌த்தில் ப்ர‌த்ய‌க்ஷ‌மாக‌ அனுப‌வ‌த்திற்கு வ‌ரும‌வையும்,
ஸ்க‌ல‌த்ஸ‌ம‌ய‌ காத‌ரீ ஹ‌ர‌ண‌ ஜாக‌ரூக‌ — த‌ட‌ங்க‌ல் வ‌ரும் கால‌த்தில் சேரும் ப‌ய‌த்தை வில‌க்குவ‌தில் தூங்காம‌ல் விழித்து
ஜாக்கிர‌தையாய்க் காத்துக்கொண்டிருப்ப‌துமான‌,
தே திவ்யா: குணா — உம்முடைய‌ திவ்ய‌ குண‌ங்க‌ள்,
இஹ‌ — இங்கே,
க‌ — எவை,
க‌ர‌ க்ர‌ஹ‌ண‌ தீக்ஷிதா — கை கொடுத்து ர‌க்ஷிப்ப‌தையே தீக்ஷையாக‌ (வ்ர‌த‌மாகக்) கொண்ட‌வைய‌ல்ல‌

த்ரி வர்க்க பத வர்த்தி நாம்-தர்ம அர்த்த காமங்களை கோருகிறவர்க்கும்
த்ரி குண லங்க நோத்யோசி நாம் -முக்குண சேர்க்கையான பிரகிருதி மண்டலத்தை தாண்ட நினைத்து பிரயத்தனம் பட்டு
கைவல்யம் -பகவத் புருஷார்த்தம் வேண்டுபவர்க்கும்
த்விஷத் ப்ரமத நார்த்தி நாமபி-பகவத் பாகவத விரோதிகளை நிரசிக்க கோருபவர்களுக்கும்
ச ரங்க த்ருஸ் யோதயா -ஸ்ரீ ரெங்கத்தில் பிரத்யக்ஷமாக சேவிக்க வருபவர்களுக்கும்
ஸ்கலத் சமய காதரீ ஹரண ஜாக ரூகா-தடங்கல் வரும் காலத்தில் சேரும் பயத்தை விளக்க தூங்காமல்
விழித்து ஜாக்ரதையாக ரஷித்துக் கொண்டு இருப்பதுமான
ப்ரபோ -என் ஸ்வாமியே
கர கிரஹண தீக்ஷிதா க இவ தே ந திவ்யா குணா-உம்முடைய திவ்ய குணங்கள் இங்கே எவை கை கொடுத்து ரஷிப்பதையே
தீக்ஷையாக விரதமாக கொண்டவை இல்லாமல் அல்லவே —
உம் கல்யாண குணங்களின் வலிமையால் எங்கள் மநோ ரதம் -விரோதிகள் நிரசிக்கப் பட்டு நீர் மீண்டும்
ஸ்ரீ ரெங்கம் எழுந்து அருளி நித்ய சேவை மீண்டும் சாதித்து அருள வேண்டும் என்றபடி –

“ஆர்த்த‌ன், கைவ‌ல்ய‌த்தை விரும்பும‌வ‌ன், அர்த்தத்தை விரும்பும‌வ‌ன், மோக்ஷ‌த்தில் ஆசையுள்ள‌வ‌ன்,
என்ற‌ நால்வ‌ர் என்னைப் ப‌ஜிக்கிறார்க‌ள்” என்றார் கீதையில்.
இவ்்விட‌த்திற் கேற்ப‌ இங்கே ஒருவ‌கையான‌ விபாக‌ம்.
(1) த‌ர்மம் அர்த்த‌ம் காமம் மூன்றையும் விரும்புகிற‌வ‌ர்க‌ள்
(2) ப்ர‌க்ருதியை வில‌க்கி (ஜ‌யித்து) கேவ‌லாத்மாநுப‌வ‌த்தை ஆசைப் ப‌டுகிற‌வ‌ர்க‌ள்
(3) ப்ர‌க்ருதியைத் தாண்டி மோக்ஷ‌ம் செல்ல‌ இச்சிப்ப‌வ‌ர்க‌ள்
(4) (பெருமாளுக்கு விரோதத்தைச் செய்வ‌தால்) ந‌ம‌க்கு விரோதியான‌வ‌ர்க‌ளை நிர‌ஸிக்கக் கோரும் நாம்.

பெருமாள் திருமேனிக்கு வ‌ரும் கெடுதியே ந‌ம‌க்கு ஆர்த்தி. அவ‌ர் திருமேனிக்குச் ச‌த்ருக்க‌ளே ந‌ம‌க்குச் ச‌த்ருக்க‌ள்.
அவ‌ர் திருமேனி தீங்கின்றி விள‌ங்குவ‌து ந‌ம் காமம்.
பிர‌கிருதி வியுக்த‌மாக‌ப் பிர‌கிருதி ஸ‌ம்ப‌ந்த‌மில்லாம‌ல் கேவ‌லாத்மாநுப‌வ‌ம் இருப்ப‌தால்,
கைவ‌ல்யார்த்தி க‌ளையும் “ப்ர‌க்ருதில‌ங்க‌நார்த்திநாம்” என்ப‌தால் சேர்த்து ஸ‌ங்க்ர‌ஹிக்க‌லாம்.

நீர் தூங்குகிற‌துபோல் பாவ‌னை செய்தாலும், உம் குண‌ங்க‌ள் விழித்துக்கொண்டே இருந்து எங்க‌ளைக் கைதூக்கி ர‌க்ஷிக்கும்.
ர‌க்ஷ‌ணைக‌ தீக்ஷித‌ரான‌ பெருமாள்போல‌, அவ‌ர் திவ்ய‌ குண‌ங்க‌ள் க‌ர‌க்ர‌ஹ‌ண‌ தீக்ஷித‌ங்க‌ள்.
த‌ர்மார்த்த‌ காம‌ங்க‌ளும் கைவ‌ல்ய‌ யோக‌மும் மோக்ஷ‌த‌சையில் அங்குர‌மான‌ அனுப‌வ‌மும் இந்த‌ அர‌ங்க‌த்தில் உம்மை ப‌ஜிப்ப‌தால்
உம் குண‌ங்க‌ள் கொடுக்கக் கிடைக்கின்ற‌ன‌.
அப்ப‌டியே இத‌ற்கு விரோதிக‌ளை நிர‌ஸிக்க‌ வேண்டும் என்ற‌ எங்க‌ள் ம‌னோர‌த‌மும் உம் குண‌ங்க‌ளின் வ‌லிமையினால் நிறைவேறி,
நீர் கோயிலில் நித்ய‌மாக‌ எழுந்த‌ருளியிருந்து ஸேவை ஸாதிக்க‌ வேண்டும்

அறம் முதலாம் மூன்று தனில் அகம் படிந்து துணிவோர்க்கும்
அல்லல் மிகு வாழ்வு என்னும் ஆழ் கடலைக் கடந்து செலும்
பெரு முயற்சி செய்வோர்க்கும் பணிந்து உன்னை வாழ்வார் தம்
பகைவர்கள் ஒழிந்திடவே மனம் கொண்ட அடியார்க்கும்
நெறி தவறும் சமயத்தில் நேருகின்ற அச்சத்தை
நீக்குவதில் கருத்துடனே நீள் கரத்தால் காத்திடவே
பெரு நகராம் அரங்கத்தில் பள்ளி கொண்ட பெருமான் உன்
பல் குணத்துள் எவையே தாம் விரதத்துடன் நிற்க வில்லை

————————————————-

அர‌ங்க‌த்தில் ப‌ஜித்தால் ப‌ல‌ன்க‌ளைக் கொடுத்துக் கை தூக்கி விட‌ ப‌க‌வ‌த் குண‌ங்க‌ள் க‌ங்க‌ண‌ம் க‌ட்டிக் கொண்டிருக்கின்ற‌ன‌ என்றார்.
இதில் நாம் ப‌ஜிப்ப‌த‌ற்குப் பிர‌தியாக‌ ந‌ம‌க்குத் தெரியாம‌லே நாம் ஸுக்ருத‌மென்று புத்தி பூர்வ‌மாக‌
இத‌ற்கென்று செய்யாம‌ லிருக்கையிலேயே ப‌க‌வ‌த் த‌யை தானாக‌ அதிஸ்நேஹ‌த்தால் ந‌ம்மை ஜாய‌மான‌ த‌ஶையில் க‌டாக்ஷித்து,
ஸாத்விக‌னாக்கி, மோக்ஷ‌ப்பொருளைச் சிந்திப்ப‌வ‌னாக‌ச் செய்கிற‌து என்கிறார்.

பிபேதி பவப்ருத ப்ரபோ த்வது பதேச தீவ்ர ஒளஷதாத்
கதத்வ ரஸ துர்வேஷ பளிச பக்ஷவத் ப்ரீயதே
அபத்ய பரிஹார தீ திமுக மித்த மா கஸ்மி கீ
தமப்ய வசரே க்ரமாதவதி வத்சலா த்வத்தயா –10-

ப்ர‌போ — ப்ர‌புவே,
ப‌வ‌ப்ருத் — ஸ‌ம்ஸார‌த்தையுடைய‌ சேத‌னன்,
த்வ‌த் உப‌தேச‌ தீவ்ர‌ ஔஷ‌தாத் — உம்மால் உப‌தேசிக்க‌ப் ப‌டும‌ த‌ர்மம் என்னும் உக்ர‌மான‌ ம‌ருந்திலிருந்து,
பிபேதி — ப‌ய‌ப்ப‌டுகிறான்.
க‌தத்வ‌ ர‌ஸ‌ துர்விஷே — கெட்ட‌ மார்க்க‌த்தில் ர‌ஸ‌ம் என்னும் கொடிய‌ விஷ‌த்தில்,
ப‌டிஶ‌ ப‌க்ஷ‌வ‌த் — தூண்டிமுள்ளை ப‌க்ஷிப்ப‌தில் (மீன் ர‌ஸிப்ப‌து போல‌),
ப்ரீய‌தே — ப்ரீதி ப‌ண்ணுகிறான்.,
இத்த‌ம் — இப்ப‌டி,
அப‌த்ய‌ ப‌ரிஹார‌ தீ விமுக‌ம் — த‌ன‌க்குக‌ கெடுத‌லைப் ப‌ரிஹ‌ரிப்ப‌து என்னும் எண்ண‌த்தையே நோக்காத‌ப‌டி,
த‌மபி — அப்ப‌டிக் கெட்ட‌வ‌னையும்,
அவ‌ஸ‌ரே — ஒரு கால‌ விசேஷ‌த்தில்,
ஆக‌ஸ்மீகி — கார‌ண‌மின்ன‌து என்று அறிய‌க்கூடாத‌ (எங்க‌ளுக்குத் தெரிந்த‌வ‌ரையில் நிர்ஹேதுக‌ம் என்று நினைக்க‌ப்ப‌டும்),
வ‌த்ஸ‌லா — ஸ்நேஹ‌ம‌ய‌மான‌,
த்வ‌த் த‌யா — உம்முடைய‌ த‌யை,
க்ர‌மாத் — ப‌டிப்ப‌டியாக‌ (ச‌ன்ம‌ ச‌ன்மாந்த‌ர‌ம் காத்து),
அவ‌தி — ர‌க்ஷிக்கிற‌து.

பவப்ருத ப்ரபோ த்வது பதேச தீவ்ர ஒளஷதாத் –பிரபுவே -சம்சாரத்தை யுடைய சேதனன்-உம்மால் உபதேசிக்கப் படும் தர்மம் என்னும்
உக்ரமான மருந்தில் இருந்து -உபாயாந்தரங்களின் கடுமையை அனுசந்தித்து –
பவம் -சம்சாரம் -மங்களம் -என்று பிரமிக்க வைக்கும்
பிபேதி -பயப்படுகிறான் –
கதத்வ ரஸ துர்வேஷ பளிச பக்ஷவத் -கெட்ட மார்க்கத்தில் -ரசம் என்னும் கொடிய விஷத்தில் –
தூண்டில் உள்ளவற்றை மீன் ரசித்து மாட்டிக் கொள்வது போலே –
ப்ரீயதே-ப்ரீத்தி பண்ணுகிறான்
அபத்ய பரிஹார தீ திமுக மித்தம் -இப்படி தனக்கு கெடுதலை பரிஹரிப்பது என்னும் எண்ணத்தையே நோக்காத படி
ஆபி முக்யம் இருந்தாலுமே போதுமே -அது கூட இல்லாமல் அன்றோ உள்ளோம்
ஆகஸ்மி கீ -காரணம் இன்னது என்று அறியக் கூடாத -நிர்ஹேதுகமாக –
தமப்ய வசரே -இப்படிக்கு கெட்டவனையும் ஒரு கால விசேஷத்தில்
க்ரமாதவதி வத்சலா த்வத்தயா-உம்முடைய தயை வாத்சல்யம் – என்னும் கல்யாண குணமே படிப் படியாக ஜன்ம சன்மாந்தரம் ரஷித்து அருளி
ஜாயமான கடாக்ஷத்தால் சாத்விகனாக்கி தன்னைப் பற்றி சிந்திக்க அருளுகிறார் -யாதிருச்சிக்க ஸூ ஹ்ருதம் போன்று
மடி மாங்காய் இட்டு நடாத்தி கொண்டு அருளுகிறார் –தயா பிரசாத க்ரமங்களை அருளிச் செய்கிறார் –
சரணாகதி மேலே–20/21- ஸ்லோகங்களில் அருளிச் செய்வார் –

உம்முடைய‌ ஆக்ஞையாகிய‌ சுருதியால் உப‌தேசிக்க‌ப்ப‌டும் த‌ர்ம‌த்தை அநுஷ்டிக்க‌ ந‌டுங்கி,
நிஷேதிக்க‌ப்ப‌டும் கெட்ட‌ மார்க்க‌த்தில் ப்ரீதி ப‌ண்ணுகிறோம்.
செய்த‌ பாப‌த்திற்குப் பிராய‌ச்சித்தத்தைத் தேடும் எண்ண‌த்தையே தூர‌ வில‌க்குகிறோம்.
இப்ப‌டி க்ருத்யாக‌ர‌ண‌ அக்ருத்யாக‌ர‌ண‌ தோஷ‌ங்க‌ளைப் ப‌ரிஹ‌ரிக்கக்கூடிய‌ அநுதாப‌ம் பிராய‌ச்சித்த‌ம் முத‌லிய‌
வ‌ழிக‌ளைக் க‌ண்ணெடுத்தும் பாராம‌லிருக்கிறோம்.

இப்ப‌டியிருந்தும், அஜ்ஞாத‌ ப்ராஸ‌ங்கித‌ யாத்ருச்சிக‌ ஸுக்ருத‌ம் என்று சில‌வ‌ற்றை ஸுக்ருத‌க் க‌ண‌க்கில் வைத்துக் கொண்டு,
எங்க‌ள் தோஷ‌ங்க‌ளைப் பாராட்டாம‌ல் உம் த‌யை எங்க‌ளை ர‌க்ஷிக்கிற‌து.
இப்ப‌டித் தானாக‌ ர‌க்ஷிக்கும் உம்முடைய‌ த‌யை உம் திருமேனியை ர‌க்ஷித்து அர‌ங்க‌த்தில் நித்ய‌மாக‌ நீர் எழுந்த‌ருளியிருக்க‌ வேண்டும்
என்ற‌ எங்க‌ள் ம‌னோ ர‌தத்தைப் பூர்த்தி செய்ய‌ வேண்டாமோ?
கேட்காம‌லே ர‌க்ஷிக்கும் த‌யை க‌த‌றிக் கேட்டும் ர‌க்ஷிக்க‌ வேண்டாமோ?

ப‌வ‌ப்ருத் — ஸ‌ம்ஸார‌த்தை ம‌ங்க‌ள‌மென்று நினைத்து கிடையாதது கிடைத்ததென்று இருக்கிறான்.
“ப‌வ‌ம்” என்ப‌து ஸ‌ம்ஸார‌த்தையும் ம‌ங்க‌ள‌த்தையும் சொல்லும்.

ச‌த்ய‌ ஞான‌ம் உப‌தேஶ‌: என்றார் ஜைமிநி. உப‌தேச‌ ப‌த‌ம் த‌ர்ம‌த்தைச் சொல்லுகிற‌து.
ச்ருத்யுப‌தேச‌ம் — சுருதி என்ப‌து உம்முடைய‌ ஆஜ்ஞை. அதை மீறின‌வ‌ன் உம‌க்குத் துரோஹி.
“செய்யாத‌ன‌வ‌ற்றை” விரும்பிச் செய்கிறோம்.

அப‌த்ய‌ ப‌ரிஹார‌ தீ விமுக‌ம் — அப‌த்ய‌த்தை வில‌க்க‌ வேண்டும் என்று எண்ணுவ‌தில் ஆபிமுக்ய‌ம் இருந்தாலும் போதும்,
எண்ணுவ‌தில் கூட‌ விமுக‌ராயிருக்கிறோம்.

இருப‌தாவ‌து இருப‌த்தொன்றாவ‌து சுலோக‌ங்க‌ளில் ச‌ர‌ணாக‌தி செய்ய‌ப் போகிற‌ப‌டியால்
முன்புள்ள‌ த‌யா ப்ர‌ஸா க்ர‌ம‌ங்க‌ளை ஸூசிப்பிக்கிறார்.

பவக் கடலில் சுழன்று உழலும் மானுடவன் நீ வழங்கும்
பரிந்துரையாம் கசப்பான மருந்துக்கு அஞ்சுகிறான்
சுவை என்னும் கொடு விஷத்தை சுரக்கின்ற கீழ்மையிலே
தூண்டில் புழு நாடும் மீன் தனைப் போலே நச்சுகிறான்
இவை போன்ற தீய்மைகளை ஒழித்திடவும் எண்ணிடாதே
இருக்கின்ற மனிதனையும் இரக்கமுடன் திருவரங்கா
தவறாமல் உன் தயை தான் காரணமே ஹேதும் இன்றி
தருணத்தில் பாய்வதனால் நாளடைவில் காத்திடுமே —

—————————————

அபார்த்த இதி நிஸ்ஸிதா ப்ரஹரணாதி யோகஸ்தவ
ஸ்வயம் வஹஸி நிர்பயஸ்ததபி ரங்க ப்ருத்வீ தர
ஸ்வ ரக்ஷண மிபாபவத் ப்ரணத ரக்ஷணம் தாவகம்
யாதத்த பரமார்த்த விந்நியத மந்தராத் மேதி தே -11-ரங்க₃ப்ருத்₂வீபதே -என்று பாட‌பேத‌ம்

ர‌ங்க‌ப்ருத்வீப‌தே — ர‌ங்க‌ராஜ‌னே!
ப்ர‌ஹ‌ர‌ணாதியோக‌ — ஆயுத‌ம் முத‌லிய‌வை இருப்ப‌து,
அபார்த்த‌: — அநாவ‌ச்ய‌ம் (வீண்),
இதி — என்று,
நிஶ்சித‌ — நிச்ச‌யிக்க‌ப் ப‌ட்டிருக்கிற‌து,
நிர்ப்ப‌ய‌ — ப‌ய‌மில்லாத‌ நீர்,
தத‌பி — ஆயினும் (அவ‌ற்றை),
ஸ்வ‌ய‌ம் வ‌ஹஸி — நீரே த‌ரிக்கிறீர் (சும‌க்கிறீர்),
ப்ர‌ண‌த‌ர‌க்ஷ‌ண‌ம் — ஆச்ரித‌ர‌க்ஷ‌ண‌ம்,
ஸ்வ‌ர‌க்ஷ‌ண‌ம் இவ‌ — உம் ர‌க்ஷ‌ண‌ம் போல‌,
தாவ‌க‌ம் — உம் சொந்த‌ப் ப‌ணியாக‌,
அப‌வ‌த் — ஏற்ப‌ட்ட‌து,
ய‌த் — ஏனெனில்,
ப‌ர‌மாத்ம‌ வித் — ப‌க‌வானே! த‌ன‌க்கும் ம‌ற்ற‌ எல்லா உயிர்க‌ளுக்கும் உயிர் என்று அறிந்த‌ ஞானி,
தே அந்த‌ராத்மா இதி — உம்முடைய‌ அந்த‌ராத்மா ,
உம‌க்கும் ஆந்த‌ர‌மான‌ (உள்ளான‌) உயிர் என்று,
ஆத்த‌ — நீர் (கீதையில்) சொன்னீர‌ல்ல‌வா?

ரங்க ப்ருத்வீ தர -ஸ்ரீ ரெங்க ராஜனே -பூமிக்கு எல்லாம் அதிபதியாய் இருந்தும் பூமியில் ஏக தேசமான ஸ்ரீ ரெங்கம் விட்டு இருக்கலாமோ –
அபார்த்த இதி நிஸ்ஸிதா ப்ரஹரணாதி யோகஸ்தவ -தீய ஆயுதங்கள் உடன் நீ கூடியே இருப்பது வீண் -இது நிச்சயம்
-சதா பஞ்சாயுதம் பிப்ரத் -நீர் ரசிக்காமல் இன்று இருப்பதால் இவை வீண் அன்றோ –
ஸ்வயம் வஹஸி நிர்பயஸ்ததபி–இருந்தாலும் -பயமே இல்லாத நீர் -நீரே இவற்றைத் தரித்து இருக்கின்றீர் –
ஸ்வ ரக்ஷண மிபாபவத் ப்ரணத ரக்ஷணம் தாவகம்-ஆஸ்ரித ரக்ஷணம் -உம் ரக்ஷணம் போலே -உமது சொந்தப பணியாக அன்றோ ஏற்பட்டது –
யாதத்த பரமார்த்த விந்நியத மந்தராத் மேதி தே -ஏன் என்னில்-பகவானே -தனக்கும் மற்ற எல்லா உயிர்களுக்கும் உயிர் என்று அறிந்த ஞானி
உம்முடைய அந்தராத்மா -உமக்கும் உள்ளான உயிர் என்று அன்றோ நீர் ஸ்ரீ கீதையில் அருளிச் செய்தீர் அன்றோ –

(ஆகையால் உம் ர‌க்ஷ‌ண‌த்தைப் போல‌ உம்முடைய‌ உயிரான‌ ஞானியின் ர‌க்ஷ‌ண‌மும் உம் சொந்த‌ ர‌க்ஷ‌ண‌மாய் விட்ட‌து.
உம் ஆத்ம‌ ர‌க்ஷ‌ண‌ம் உம்முயிரின் ர‌க்ஷ‌ண‌ம் இர‌ண்டும் உம் சொந்த‌ ர‌க்ஷ‌ண‌ம்தானே!)

ர‌ங்க‌ப்ருத்வீப‌தே — ர‌ங்க‌ராஜ‌ என்னாம‌ல் ர‌ங்க‌ ப்ருத்வீப‌தே என்ப‌தால் ப்ருத்வீக்கெல்லாம் (பூமிக்கெல்லாம்) ப‌தியாயிருந்தும்,
பூமியில் ஏக‌தேச‌மான‌ ஸ்ரீர‌ங்க‌ந‌க‌ர‌த்திற்கு ம‌ட்டும் ப‌தியாயில்லாம‌ல் இருக்க‌ வேண்டுமோ? என்னும் அர்த்த‌ம் த்வ‌னிக்கிற‌து.

நிர்ப‌ய‌: உம‌க்கு உம் நிமித்த‌ம் ப‌ய‌மில்லை. உம்மைக் காக்க‌ உம‌க்கு ஆயுத‌மும் வேண்டாம்.
ந‌ர‌ஸிம்ஹ‌ த‌சையில் உம‌க்கு ஆயுத‌ங்க‌ளே இல்லையே!

ததபி ஸ்வ‌ய‌ம் வைஸி — ஆயினும் ஆயுத‌ங்க‌ளை நீரே எப்போதும் சும‌க்கிறீர்.
(ஸ‌தா ப‌ஞ்சாயுத‌ம் பிப்ர‌த்) இப்ப‌டிச் சும்ப்ப‌து எங்க‌ளை ர‌க்ஷிக்க‌வ‌ல்ல‌வோ? இல்லாவிடில் நிஷ்ப்ர‌யோஜ‌ன‌மாம்.

ப‌ர‌மாத்ம‌வித் — ஞானி த்வாத்மைவ‌ மே ம‌த‌ம் — ஞானியை ப‌ர‌மாத்மாவான‌ உம‌க்கு அந்த‌ராத்மா என்று நீர் சொல்லுவ‌து
உம்முடைய‌ அபிமான‌ மாத்ர‌ ஸார‌மான‌ நினைப்பு (க்ருஷ்ண‌ ம‌த‌ம்) என்று ச‌ந்த்ரிகை.
ஆகையால் ஞானியை ர‌க்ஷிப்ப‌தும் உம் ர‌க்ஷ‌ண‌ம் போன்ற‌து. ஆச்ரித‌ர் ப‌ய‌ப்ப‌டாம‌லிருக்க‌வே நீர் ஆயுத‌ம் த‌ரிக்கிறீர்

படைக் கலன்கள் தாங்குவதால் பயன் இல்லை உன் தனக்கே
பயமற்று விளங்கும் நீ படைக்கலம் ஏன் தரிக்கின்றாய்
வடிவரங்கத்தலத் தரசே மேம் பொருளை உணர்ந்தவராய்
விளங்கும் நல் ஞானி யுன்தன் யுயிர் என்று விளம்பி யுள்ளாய்
அடியார்கள் அவர் போல் அனைவரையும் காத்திடவே
ஆயுதங்கள் தமைத் தாங்கி ஆயத்தமாய் நிற்கின்றாய்
அடியாரைக் காக்கின்ற அரும் செயல்கள் எல்லாமே
உன்னையே நீ காப்பனவாய் உண்மையிலே ஆயிற்றே –

————————————–

“நான் ஞானிக்கு அத்ய‌ந்த‌ம் ப்ரிய‌ன். அவ‌னும் என‌க்கு அத்ய‌ந்த‌ம் ப்ரிய‌ன்.
ஞானி என‌க்கு அந்த‌ராத்மா என்று நான் அவ‌னை அபிமானிக்கிறேன்” என்ற‌ கீதா ச்லோக‌த்தைக் காட்டி நின்றார் கீழ்.
அப்ப‌டியே நீரே எங்க‌ளுக்கு அத்ய‌ந்த‌ம் ப்ரிய‌மான‌ வ‌ஸ்து. ம‌ற்ற‌வை எதுவும் பிரிய‌மான‌த‌ல்ல‌,
ஸுக‌த்தைக் கொடுப்ப‌தும‌ல்ல‌, அவை மேன்மேலும் ப‌ய‌த்தையே த‌ருவ‌ன‌ என்கிறார்.

அல்ல‌து,
“முன்பே நீர் செய்த‌ ச‌ர‌ணாக‌திக்குப் ப‌ல‌மாக‌ இத்தேஹ‌த்தின் முடிவில் உம‌க்கு மோக்ஷ‌ம் நிச்ச‌ய‌ம்.
ஆகையால் இங்கே உள்ள‌வ‌ரையில் கொண்ட‌பெண்டிர் ம‌க்க‌ள் உற்றார் சுற்ற‌த்த‌வ‌ர் பிற‌ரோடு ஸுக‌மாயிருமே என்றால்,
இவையெல்லாம் துக்க‌மும் ப‌ய‌முமே” என்று விவ‌ரிக்கிறார் என்ன‌வுமாம்.

லசிஷ்ட ஸூ க சங்கதை ஸ்க்ருத கர்ம நிர்வர்த்திதை
களத்ர ஸூத சோதரா அநுசர பந்து சம்பந்திபி
தன ப்ரப்ருதி கைரபி பிரசுர பீதி பேதோத்தரை
ந பிப்ரதீ த்ருதிம் ப்ரபோ த்வத் அநு பூதி போகார்த்தின –12-

ப்ர‌போ –ஸ‌ர்வாந்த‌ர்யாமியான‌ ப்ர‌புவே!
த்வ‌த் அநுபூதி போக‌ அர்த்திந‌: உம்மை அநுப‌விப்ப‌து என்னும் இன்ப‌த்தையே ஆசைப்ப‌டுகிற‌வ‌ர்க‌ள்,
ல‌கிஷ்ட‌ ஸுக‌ ஸ‌ங்க‌தை — மிக‌வும் அற்ப‌மான‌ ஸுக‌த்தின் ஸ்ப‌ர்ச‌த்தைக் (ஸ‌ங்க‌த்தைக்) கொடுப்ப‌தும்,
ப்ர‌சுர‌ பீதி பேதோத்த‌ரை — பெரிதான‌ ப‌ல‌வித‌ ப‌ய‌ங்க‌ளை மேல்மேல் விளைவிப்ப‌தும்,
ஸ்வ‌ க்ருத‌ க‌ர்ம‌ நிர்வ‌ர்த்திதை –தான் சிர‌மப்ப‌ட்டுச் செய்த‌ (புண்ய‌) க‌ர்ம‌ங்க‌ளால் ஸ‌ம்பாதிக்க‌ப்ப‌ட்ட‌துமான‌,
க‌ள‌த்ர‌ ஸுத‌ ஸோத‌ர‌ அநுச‌ர‌ ப‌ந்து ச‌ம்ப‌ந்திபி — கொண்ட‌ பெண்டிர், ம‌க்க‌ள், உட‌ன்பிற‌ந்தார், வேலைக்காரர்,
ப‌ந்துக்க‌ள் என்று ந‌ன்றாய் ந‌ம்மை ப‌ந்த‌ப் ப‌டுத்தும் இவ‌ர்க‌ளாலும்,
த‌ந‌ ப்ர‌ப்ருதிகை: அபி — செல்வ‌ம், ஆயுள், ஆரோக்ய‌ம் முத‌லிய‌வ‌ற்றாலும்,
த்ருதிம் — ச‌ந்தோஷ‌த்தை,
ந‌ பிப்ர‌தி — பெறுகிற‌தில்லை.

ப்ரபோ த்வத் அநு பூதி போகார்த்தின –-சர்வ அந்தர்யாமியான பிரபுவே -உம்மை அனுபவிக்கும் இன்பத்தையே ஆசைப்படுகிறவர்கள் –
நீர் ஞானிகளை ஆத்மாவாக கருதினாலும் -நாங்கள் நீரே சர்வ அந்தர்யாமி பிரபு என்று அறிவோம் –
லசிஷ்ட ஸூ க சங்கதை -மிகவும் அற்பமான ஸூ கத்தின் ஸ்பர்சத்தை-சங்கத்தை கொடுப்பதும் -சம்சார பந்தம் உண்டாக்கும் இவை
பிரசுர பீதி பேதோத்தரை-பெரிதான பலவித பயங்களை மேல் மேல் விளைவிப்பதும்
ஸ்க்ருத கர்ம நிர்வர்த்திதை-தான் சிரமப் பட்டுச் செய்த புண்ய கர்மங்களால் சம்பாதிக்கப் பட்டது மான
களத்ர ஸூத சோதரா அநுசர பந்து சம்பந்திபி -கொண்ட பெண்டிர் -மக்கள் உடன் பிறந்தார் வேலைக்காரர் பந்துக்கள் என்று
நன்றாய் நம்மைப் பந்தப் படுத்தும் இவர்களாலும்
தாரம் -சுழல் / மக்கள் முதலைகள் /சம்சாரம் பயங்கர கடல் -முகுந்த மாலை –
தன ப்ரப்ருதி கைரபி-செல்வம் ஆயுள் ஆரோக்யம் முதலியவற்றாலும்
ந பிப்ரதீ த்ருதிம் -சந்தோஷத்தை பெறுகிறது இல்லை –

ப்ர‌போ — நீர் ஞானியை அந்த‌ராத்மாவாகக் க‌ருதினாலும், நாங்க‌ள் நீரே ஸ‌ர்வாந்த‌ர்யாமி, எங்க‌ள் ப்ர‌பு என்று அறிவோம்.
ல‌கிஷ்ட‌ ஸுக‌ ஸ‌ங்க‌தை — உம்மை அனுப‌விப்ப‌தே பேரின்ப‌ம் ம‌ற்ற‌வை சிற்றின்ப‌ம் என்ப‌ர்.
ஆனால் இவ‌ற்றை — ல‌கிஷ்ட‌ம் — மிக‌வும் அல்ப‌மான‌ (அதைக் காட்டிலும் சிறிய‌தில்லாத‌) இன்ப‌ம் என்ன‌ வேண்டும்.
அதிலும் ஸுக‌த்தையும் கொடுப்ப‌தில்லை. அத்ருப்தியை, மேல் மேல் அனுப‌விக்க‌ ஆசை என்னும் ஸ‌ங்க‌த்தையே கொடுக்கிற‌து.
(ஸுக‌ஸ‌ங்கேன ப‌த்நாதி) என்ற‌ கீதா சுலோக‌த்தை ஸூசிப்பிக்கிறார்.
“ஸுக‌த்தில் ஆசையைக் கொடுத்து (பாச‌ங்க‌ளால்) க‌ட்டுகிற‌து.
இங்கு மேன்மேலும் ப‌ந்த‌ம் உண்டாகிற‌து என்ப‌தைக் காட்ட‌ “ப‌ந்து” “ச‌ம்ப‌ந்தி” என்கிற‌ ப‌த‌ங்க‌ளைச் சேர்க்கிறார்.
ஸ்வ‌க்ருத‌ க‌ர்ம‌ நிர்வ‌ர்த்திதை — இப்ப‌டி அத்ய‌ல்ப‌மான‌ போலி இன்ப‌த்தை அடைய‌ எவ்வ‌ள‌வு பாடுப‌ட்டு புண்ய‌ க‌ர்மம் செய்திருக்க‌ வேண்டும்?
ஓர் அஞ்ஜ‌லிக்குக் கிங்க‌ரரகும் நீர் இருக்கையில், ஓர் ச‌ர‌ண‌ நினைப்புக்கு சாச்வ‌த‌மான‌ பேரின்ப‌த்தை
தாய‌க் கிர‌மமாக‌ அளிக்க‌ நீர் காத்துக் கொண்டிருக்கையில், அல்பால்ப‌ ஸுக‌த்தைத் தேடுகிறோம்.
க‌ள‌த்ர‌ — இது நித‌ம்ப‌த்திற்கும் இல்லாளுக்கும் பெய‌ர். பெரிய‌ நித‌ம்ப‌த்தையிட்டு ஸ்திரீயைக் கூறும்.
ஊன்றிப் பார்த்தால் இந்த‌ப் பெய‌ரே வெறுப்பைக் கொடுக்க‌ வேண்டுமே?
(“ச‌ந்த்ர‌மூர்த்தியைப் போல‌ அழ‌கிய‌ விலாஸ‌த்தால் க‌வ‌ரும் குருக‌ள‌த்ர‌த்தை யுடைய‌வ‌ன்” என்று காத‌ம்ப‌ரியில் வ‌ர்ண‌ன‌ம்.
இங்கு குருக‌ள‌த்ர‌ம் என்ப‌த‌ற்கு பெரும் நித‌ம்ப‌ம் என்றும் குருப‌த்னியான‌ தாரை என்றும் பொருள்.)
ஸுத‌ — க‌ர்ப்ப‌த்திலிருந்து வெளியே ந‌ழுவ‌விட‌ப்ப‌ட்ட‌ சிசு, எத்த‌னை ஸோம‌ ஸுத‌ங்க‌ளான‌ க‌ர்ம‌ங்க‌ள் செய்ய‌வேண்டும் ஒரு ஸுத‌னைப் பெற‌.
“தார‌மென்னும் சுழ‌ல், ம‌க்க‌ள் ஸ‌யுஜ‌ர் என்னும் முத‌லைக‌ள், இவ‌ற்றோடு கூடிய‌ ஸ‌ம்ஸார‌ம் என்னும் ப‌ய‌ங்க‌ர‌மான‌ க‌ட‌ல்” என்று முகுந்த‌மாலை.
ஸோத‌ர‌ — ப‌ங்காளிக‌ள். “ஞாதியிருந்தால் நெருப்பு வேறு வேண்டுமோ?”
அநுச‌ர‌ — உம‌க்கு நாங்க‌ள் அடிமை செய்ய‌ வேண்டியிருக்க‌, அடிமையான‌ எங்க‌ளுக்கு அடிமைக‌ளா?
(குருஷ்வ‌ மாம‌நுச‌ர‌ம்) என்ப‌த‌ன்றோ எங்க‌ள் நிலை?
ப‌ந்து — பாச‌ங்க‌ளால் க‌ட்டுகிற‌வ‌ர்க‌ள். ஸ‌ம்ப‌ந்திக‌ள் என்ப‌தால் இவ‌ர்க‌ள் எல்லாருமே ந‌ன்றாய்க் க‌ட்டுகிற‌வ‌ர்க‌ள்.
த‌ந‌ ப்ர‌ப்ருதிகைர‌பி — த‌ன‌ம் முத‌லிய‌வ‌ற்றாலும், புத்ர‌னைக் காட்டிலும் ப்ரிய‌ம், வித்தத்தைக் காட்டிலும் ப்ரிய‌ம் என்ற‌து உப‌நிஷ‌த்.
புத்ர‌னைக் காட்டிலும் ப‌ண‌த்தில் ப்ரீதி வைப்ப‌ர். அது ஆப‌த்தே.
(மஹ‌த‌பி த‌ந‌ம் பூரி நித‌ந‌ம்) என்று ப்ர‌போத‌ ச‌ந்த்ரோத‌ய‌ம்
(ஐஶ்வ‌ர்ய‌ம் ஶ‌த்ரு ஶாலிதா) என்று பார‌த‌ம்.
ப்ர‌சுர‌ — கொஞ்ச‌ம் ஸுக‌ம் இருப்ப‌தை ம‌றுக்க‌வில்லை. ஆனால் ப‌ய‌மே அதிக‌ம்.
பீதிபேதோத்த‌ரை — ப‌ல‌வ‌கையான‌ ப‌ய‌ங்க‌ளில் மிக‌வும் அதிக‌மான‌ ப‌ய‌ங்க‌ள். மேலும் ப‌ய‌த்தை விளைவிப்ப‌ன‌.
த்வ‌த் அநுபூதி போக‌ அர்த்திந‌ –(அப‌ய‌ம் ப்ர‌திஷ்டாம் விந்ததே) என்று உம்மித‌மே அப‌ய‌த்திற்கு நிஷ்டையை விரும்பும‌வ‌ர்க‌ள்.
த்ருதிம் — ஸ‌ந்தோஷ‌த்தை, அப‌ய‌த்தை, த‌ரிப்பை

நின்னையே அகலாது நுகர்கின்ற போகத்தை
நண்ணுகின்ற மனமுடைய நல்லோர்கள் யாவருமே
மின்னனைய அற்ப சார மகிழ்வினையே தருகின்ற
முன்னாளில் தாம் செய்த கருமத்தினால் விளைந்தனவாய்
எண்ணரிய பல்வகையாம் அச்சத்தையே தருவனவாம்
இல்லாளும் மக்களாலும் உடன் பிறந்தார் பணியாளர்
இன்னம் உள்ள உற்றத்தார் இவராலும் தனத்தாலும்
ஏற்படுமாம் இன்பத்தில் உளம் கொள்ள மாட்டாரே –

——————————————-

ந வக்துமபி சக்யதே நரக கர்ப வாஸாதிகம்
வபுஸ்ச பஹு தாதுகம் நிபுண சிந்தநே தாத்ருசம்
த்ரி விஷ்டப முகம் ததா தவ பதஸ்ய தேதீ பத
கிமத்ர ந பயாஸ் பதம் பவதி ரங்க ப்ருத்வீ பதே -13-

ர‌ங்க‌ப்ருத்வீப‌தே — ர‌ங்க‌பூமிக்கு அர‌ச‌னே!
ந‌ர‌க‌ க‌ர்ப்ப‌ வாஸாதிக‌ம் — ந‌ர‌க‌ம் க‌ர்ப்ப‌வாஸ‌ம் முத‌லிய‌து,
வ‌க்துமபி — (இவ்வ‌ள‌வு க‌ஷ்ட‌மென்று) சொல்வ‌த‌ற்குக்கூட‌,
ந‌ ஶ‌க்ய‌தே — ச‌க்ய‌ம‌ல்லை: (ஸாத்ய‌மில்லை),
வ‌பு:ச‌ — தேஹ‌மும்,
நிபுண‌ சிந்த‌நே — உன்னி ஆலோசித்தால்,
தாத்ருஶ‌ம் — அப்ப‌டியே துஸ்ஸ‌ஹ‌மான‌து,
த்ரிவிஷ்ட‌ப‌முக‌ம் — ஸ்வ‌ர்க்க‌ம் முத‌லிய‌தும்,
தேதீப‌த‌ — ஜ்யோதிர்ம‌ய‌மாய் ப்ர‌காசிக்கும்,
த‌வ‌ ப‌த‌ஸ்ய‌ — உம் ஸ்தாநத்தை (உம் சுட‌ர‌டியை) (யிட்டுப் பார்த்தால்),
ததா — அப்ப‌டியே (ந‌ர‌க‌ துல்ய‌மாகும்),
அத்ர‌ — இங்கே (இப்புவியில்),
கிம் — எதுதான்,
ப‌யாஸ்ப‌த‌ம் ந‌ — ப‌ய‌த்திற்கிட‌மாவ‌தில்லை?

ரங்க ப்ருத்வீ பதே —ஸ்ரீ ரங்க பூமிக்கு அரசனே
ந வக்துமபி சக்யதே நரக கர்ப வாஸாதிகம் -நரக கர்ப்ப வாசம் முதலியது-இவ்வளவு கஷ்டம் என்று சொல்வதற்கு கூட சாத்தியம் இல்லை
வபுஸ்ச பஹு தாதுகம் நிபுண சிந்தநே தாத்ருசம் -தேகமும் அப்படியே உன்னி சிந்தித்தால் துஸ் சஹமாய் இருக்கும்
த்ரி விஷ்டப முகம் ததா தவ பதஸ்ய தேதீ பத -ஸ்வர்க்கம் முதலானதும் ஜ்யோதிர் மயமாய் பிரகாசிக்கும்
-உம் ஸ்தானத்தை -உன் சுடர் அடியை -இட்டுப் பார்த்தால் அப்படியே நரக துல்யமாய் இருக்கும்
கிமத்ர ந பயாஸ் பதம் பவதி -இங்கு இப்புவியில் எது தான் பயத்துக்கு இடமாவது இல்லை
உம்மை விட்டு பிரிந்து இருப்பதே நரகம் என்றவாறு -ஸ்ரீ ரெங்கத்தில் நீர் மீண்டும் எழுந்து அருளி
எங்கள் பயத்தை போக்கி நிரதிசய நித்ய -ஸூ கம் தந்து அருள வேண்டும்-

தேஹ‌ ஸ‌ம்ப‌ந்திக‌ளான‌ சுற்ற‌த்தார் வேண்டாம், தேஹ‌த்தோடாவ‌து ஸுக‌மாயிருக்க‌ லாமோவென்னில், அதுவும் ஸாத்ய‌மில்லை.
(விப‌த் கேஹ‌ம் தேஹ‌ம்) , விப‌த்துக்க‌ளுக் கெல்லாம் இல்லம்‌ ச‌ரீர‌ம் என்று ப்ர‌போத‌ ச‌ந்த்ரோத‌ய‌ம். ந‌ர‌க‌ம் பெருந் துக்க‌ம‌ய‌மான‌து.
அதில் அடைப‌டுவ‌திலும் க‌ர்ப்பப் பைக்குள் அடைப‌டுவ‌து அதிகக் க‌ஷ்ட‌ம் என்ப‌தை அத‌ற்குப் பிற‌கு க‌ர்ப்ப‌வாஸ‌த்தைக் கூறுவ‌தால் ஸூசிப்பிக்கிறார்.

ஆதிக‌ம் — முத‌லிய‌து. உள்ளேயிருக்கும் துன்ப‌ம் ஒரு புற‌மிருக்க‌, வெளியே வ‌ருவ‌த‌ற்கு எவ்வ‌ள‌வு க‌ஷ்ட‌ம்.
(யோநே: ஶ‌ரீர‌ம்) என்று ஸூத்ர‌காரர் வைராக்ய பாதத்தை முடித்தார்.
அத‌ற்கு முன் ஸூத்ர‌த்தில் ரேத‌ஸ் ஸிக் யோக‌த்தைப் பேசினார்.
க‌ர்ப்பப்ப் பையின் யோக‌ம் கிடைக்க‌ ரேதோயோக‌ம் கிடைக்க ‌வேண்டும் என்று ஜுகுப்ஸையைக் காட்டினார்.

வ‌புஶ்ச‌ — ந‌ர‌க‌த்திலும் கொடிய‌து தேஹ‌ம் என்றார் ப்ர‌ஹ்லாதாழ்வான்–
தேஹே சேத் ப்ரீதிமாந் மூட‌: ந‌ர‌கே ப‌விதா ச‌ ஸ‌) தேஹ‌மென்னும் ந‌ர‌கக் குழியில் ப்ரீதி வைப்பானாகில்,
அந்த‌ மூட‌னுக்கு ந‌ர‌க‌த்திலும் ப்ரீதியே ஏற்ப‌டும். தேஹ‌த்திலும் ந‌ர‌க‌ம் கொடிய‌தோ ? அவ‌னுக்கு ந‌ர‌க‌வாஸ‌ம் த‌ண்ட‌னை ஆகாது என்ப‌து க‌ருத்து.
ப‌ஹுதாதுக‌ம் –‌ப்த‌ தாதும‌ய‌ம் த்ரிம‌ல‌ம் என்ப‌ர்
நிபுண‌ சிந்த‌நே — ப்ர‌ஹ்லாத‌ன் நிரூபித்தது போல் ஆழ்ந்து யோசித்தால்,
தாத்ருஶ‌ம் — ந‌ர‌காதிக‌ள் போன்ற‌தே.
த‌வ‌ ப‌த‌ஸ்ய‌ தேதீ ப‌த: அத்ய‌ர்க்காந‌ல‌தீப்த‌மாய் சுட‌ர்ச் சோதியான‌ ப‌ர‌மப‌த‌மென்னும் உம் ஸ்தான‌ம் ப்ர‌காசிக்கையில்,
அதை உத்தேசித்து உம் சுட‌ர‌டியின் இன்ப‌த்தை ஆலோசிக்குங்கால் என்று அர‌ங்க‌ன் விஷ‌ய‌முமாக‌லாம்.
அர‌ங்க‌மென்ப‌து ம‌ற்ற‌ திவ்ய‌தேச‌ங்க‌ளுக்கு உப‌ல‌க்ஷ‌ண‌ம்.
த்ரிவிஷ்ட‌ப‌முக‌ம் ததா ஸ்வ‌ர்க்க‌மும் ம‌ற்ற‌ ஸ‌த்ய‌லோக‌மும் அப்ப‌டியேயாகும்.
(நிர‌யோ ய‌ஸ் த்வ‌யா விநா) உம்மை விட்டுப் பிரிவு ந‌ர‌க‌மே.
அத்ர‌ கிம் ந‌ ப‌யாஸ்ப‌த‌ம் — இந்த‌ப் பூம‌ண்ட‌ல‌த்தில் எதுதான் ப‌ய‌த்திற்கு இட‌மில்லை?
ர‌ங்க‌ப்ருத்வீப‌தே — த‌ப்பிச் சொன்னேன். இந்த‌ப் பூம‌ண்ட‌ல‌த்தில் ர‌ங்க‌மென்னும் ப்ருத்வீ பாக‌ம் ஸுக‌த்தைத் த‌ருவ‌தே, ப‌ய‌ம‌ற்ற‌தே.
இந்த‌ப் பூமியில் இருந்தாலும், அர‌ங்க‌மும் அர‌ங்க‌ம் போன்ற‌ திவ்ய‌ தேச‌ங்க‌ளும் அப‌ய‌த்தையும் ஸுக‌த்தையும் த‌ருப‌வையே.
ஆகையால‌ ப்ருத்வீப‌தியான‌ நீர் அவ‌ற்றை ர‌க்ஷித்துத் த‌ர‌வேண்டும்.

தேதீப‌த‌: என்ற‌ பாட‌ம் சுத்த‌ம்.

————————————————————————–

பவந்தி முக பேததோ பய நிதான மேவ ப்ரபோ
ஸூப அ ஸூப விகல்பிதா ஜகதி தேச காலாதய
இதி பிரசுர ஸாத்வஸே மயி தயிஷ்யஸே த்வம் ந சேத்
க இத்தம நு கம்பிதா த்வதநு கம்ப நீ யஸ்ஸ க –14-

ப்ர‌புவே — என் ப்ர‌புவே!,
ஶுபாஶுப‌ விக‌ல்பிதா — சுப‌ம் அசுப‌ம் என்று பிரித்துப் பேச‌ப்ப‌டும்,
தேஶ‌காலாத‌ய‌ — தேச‌ம் கால‌ம் முத‌லிய‌வை,
முக‌பேதத‌ — ஓரொரு ப‌ர்யாய‌மாக‌,
ப‌ய‌நிதாந‌மேவ‌ — ப‌ய‌த்திற்கே கார‌ண‌மாக‌,
ப‌வ‌ந்தி — ஆகின்ற‌ன‌,
இதி — என்று (இப்ப‌டி),
ப்ர‌தித‌ஸாத்வ‌ஸே — மிக‌வும் ப‌ர‌ந்த‌ ப‌ய‌த்தையுடைய‌,
ம‌யி — என்னிட‌ம்,
த்வ‌ம் — நீர்,
ந‌ த‌யிஷ்ய‌ஸே சேத் — த‌ய‌வு செய்யாது போனால்,
இத்த‌ம் — இப்ப‌டி,
க‌: அனுக‌ம்பிதா — வேறு யார் த‌யை செய்வாருள‌ர்?,
த்வ‌துக‌ம்ப‌நீய‌: ச‌ — உம் த‌யைக்குத் த‌க்க‌ பாத்ர‌ம்,
க‌: — (என்னிலும்) யாருள‌ர்?

ப்ரபோ -என் பிரபுவே
ஸூப அ ஸூப விகல்பிதா ஜகதி தேச காலாதய -ஸூபம் அஸூபம் என்று பிரித்துப் பேசப்படும் -தேசம் காலம் முதலியவை
பவந்தி முக பேததோ பய நிதான மேவ -ஒரு ஒரு பர்யாயமாக -பயத்திற்கே காரணமாக ஆகின்றன
இதி பிரசுர ஸாத்வஸே மயி தயிஷ்யஸே த்வம் ந சேத் -இப்படி மிகவும் பரந்த பயத்தை யுடைய என்னிடம் நீர் தயவு செய்யாது போனால்

20-வ‌து சுலோக‌த்தில் த‌ன் ச‌ர‌ணாக‌திக்குப் ப‌ல‌த்தைக் குறிப்பிட்டு ப்ரார்த்திக்கிறார்.
அத‌ற்கு முன் பெருமாளுக்கு த‌யை உண்டாகி வ‌ள‌ரும்ப‌டி த‌ம் ப‌ய‌த்தையும் கோயில் முத‌லிய‌ திவ்ய‌ தேச‌ங்க‌ளில்
திவ்ய‌ம‌ங்க‌ள‌ விக்ர‌ஹ‌ங்க‌ளை ஸ‌தா ஸேவித்துக் கொண்டிருப்ப‌தே த‌ன‌க்கு ஸுக‌த்தைத் த‌ரும் என்ப‌தையும்,
அதை அளிக்க‌ பெருமாளைத்த‌விர‌ வேறு க‌தி இல்லை என்ப‌தையும் சொல்லி வ‌ருகையில்
இதில் ஆள‌வ‌ந்தாருடைய‌ ஸ்தோத்ர‌ ர‌த்ன‌த்தின் ப‌த‌ங்க‌ளையே அமைத்துப் பிரார்த்திக்கிறார்.
பெரியோர்க‌ள் பாசுர‌த்தை அநுஸ‌ரித்துப் பிரார்த்தித்தால், பெருமாள் திருவுள்ள‌ம் சீக்கிர‌ம் உகக்க‌லாம் என்று ஆசை.

ஆள‌வ‌ந்தார், (ய‌தி மே ந‌ த‌யிஷ்ய‌ஸே ததோ த‌ய‌நீய‌: த‌வ‌ நாத‌ துர்ல‌ப‌:) என் விஷ‌ய‌த்தில் நீர் த‌யை செய்யாவிடில்,
உம‌க்கு த‌யை செய்ய‌த் த‌க்க‌வ‌னே கிடைக்க‌ மாட்டான்.
உம்மலால் நான் நாத ‌சூன்ய‌ன்.
என்ன‌லால் நீர் த‌யாபாத்ர‌ சூன்ய‌ர்,
தைவ‌த்தால் எற்ப‌ட்டிருக்கும் இந்த‌ ஸ‌ம்ப‌ந்தத்தை நீர் காப்பாற்ற‌ வேணும்.
(மா ஸ்ம‌ ஜீஹ‌ப‌:) ந‌ழுவ‌ விட‌க்கூடாது என்றார்.

இவ‌ரும் ப‌தினெட்டாவ‌து சுலோக‌த்தில் மாஸ்ம‌ த‌ஜ்ஜீஹ‌ப‌த் என்று அதையே கூறுகிறார்.

உல‌க‌த்தில் தேச‌ம் கால‌ம் முத‌லிய‌வ‌ற்றில் சில‌வ‌ற்றை சுப‌மென்றும், சில‌வ‌ற்றை அசுப‌மென்றும் பிரிப்ப‌து வீணே.
எல்லாம் ப‌ய‌த்தையும் துக்க‌த்தையும் த‌ருவ‌தால், உண்மையில் எல்லாம் அசுப‌மே.
ஸ்வ‌ர்க்க‌ம் சென்றால் தேவ‌ர்க‌ள் இவ‌னை “ப‌சு” என்று எண்ணுகிறார்க‌ள்.
அங்கு ஏற‌விட்ட‌ க‌ர்மம் விசைய‌ற்ற‌வ‌ள‌விலே கீழே விழுந்து விடுவோம் என்ற‌ ப‌ய‌முமுண்டு.

நல்லவையே தரும் என்றும் தீயவையே தரும் என்றும்
தேசத்தையும் காலத்தையும் திறம்படவே பிரித்தாலும்
எல்லாமே வெவ்வேறு வழிகளிலே தீமையையே
அளிக்கும் படி அமைந்தனவாய் அச்சத்தையே தரும் என்றே
எல்லையில்லா பயம் கொண்ட என் மீதே அரங்கா நீ
இரக்கம் தான் கொள்ளாயேல் இவ்வாறு அருள் புரியும்
நல்லானும் வேறு உளனோ நிலவுலகில் நின்னுடைய
நல்லருளைப் பெறும் தகுதி நிறைந்தவனும் வேறு உளனோ –

—————————————————————

ஸக்ருத் பிரபதன ஸ்ப்ருசாமபய தான நித்ய வ்ரதீ
ந ச த்விர பிபாஷஸே த்வமிதி விஸ்ருத ஸ்வோக்தித
யதோக்த கரணம் விதுஸ்தவ து யாதுதா நாதய
கதம் விதத மஸ்து தத் க்ருபண ஸார்வ பவ்ம மயி –15-

ஸ‌க்ருத் ப்ர‌ப‌தா ஸ்ப்ருஶாம் — ஒரு த‌ர‌ம் ப்ர‌ப‌த்தி என்னும் உபாய‌த்தைத் தொட்ட‌வ‌ர்க்கும்,
த்வ‌ம் — நீர்,
அப‌ய‌தாந‌ நித்ய‌ வ்ர‌தீ — அப‌ய‌ம‌ளிப்ப‌தை நித்ய‌ வ்ர‌த‌மாக‌ உடைய‌வ‌ர் (என்று நீர் உத்கோஷித்திருக்கிறீர்),
த்வி — இர‌ண்டாம் த‌ட‌வை,
க‌ ச‌ அபிபாஷஸே — பேச‌மாட்டீர்,
இதி — என்று,
ஸ்வோக்தித‌ — உம்முடைய‌ உறுதியான‌ பேச்சாலேயே,
விச்ருத‌ — (நீர்) ப்ர‌ஸித்த‌ர்,
யாது தாநாத‌ய‌ — ராக்ஷ‌ஸ‌ர் முத‌லிய‌வ‌ரும்,
த‌வ‌ — உம்முடைய‌,
ய‌தோக்த‌ க‌ர‌ண‌ம் — சொன்ன‌வ‌ண்ண‌ம் செய்வ‌தை,
விது — அனுப‌வித்துள‌ர்,
தத் — அந்த‌ குண‌ம்,
க்ருப‌ண‌ ஸார்வ‌பௌமே — கார்ப்ப‌ண்ய‌ பூர்த்தியுள்ள‌ அகிஞ்ச‌ந‌ரில் முத‌ன்மையான‌,
ம‌யி — என் விஷ‌ய‌த்தில்,
க‌த‌ம் — எப்ப‌டி,
விதத‌ம் அஸ்து — பொய்யாக‌ ஆக‌லாம். ?

ஸக்ருத் பிரபதன ஸ்ப்ருசாம் -ஒரு தரம் பிரபத்தி என்னும் உபாயத்தை தொட்டவர்க்கும் –
ஸக்ருத் ஏவ பிரபன்னாயா -என்பதையே இங்கு அருளிச் செய்கிறார்
விபீஷணன் கூட வந்ததற்கும் பலன் உண்டே -சம்பந்தம் காட்டவே ஸ்ப்ருசாம்-என்று அருளிச் செய்கிறார்
த்வம் அபயதான நித்ய வ்ரதீ -நீர் அபயம் அளிப்பதையே விரதமாக -தீக்ஷையாக -சர்வ பூதேப்ய அபயம் ததாமி–ஏதத் மம விரதம் –
ததாமி நிகழ் காலம் –சர்வ காலிகம் என்றபடி
ந ச த்விர பிபாஷஸே த்வமிதி விஸ்ருத ஸ்வோக்தித –இரண்டாவது வார்த்தை மாற்றி பேச மாட்டீர்
-உம்முடைய உறுதியான பேச்சாலே -நீர் பிரசித்தர் –ராம த்வி ந அபி பாஷதே
யதோக்த கரணம் விதுஸ்தவ து யாதுதா நாதய-ராக்ஷசர் முதலானவர்களை உம்முடைய சொன்ன வண்ணம் செய்வதையே அனுபவித்து உள்ளனர்
யதோத்த காரீ அன்றோ நீர்
கதம் விதத மஸ்து தத் க்ருபண ஸார்வ பவ்ம மயி -அந்த குணம் -கார்ப்பண்ய பூர்த்தி உள்ள -அகிஞ்சனான என் விஷயத்தில் எப்படி பொய்யாகலாம் –
அடியேன் மநோ ரதம் பூர்த்தி யான பின்பு தானே நீர் விஜூரராக இருக்கலாம்
தாசேஷூ சத்யன் -அடியாரவர்க்கு மெய்யன் அன்றோ -உம் பெயர் நிலைத்து இருக்க அருளால் ஒழியக் கூடாதே –

பெருமாளைத் த‌விர‌ த‌ன‌க்கு வேறு க‌தியில்லை என்று கூறிவிட்டு, இதில் த‌ன்னிலும் க்ருப‌ண‌னில்லை என்கிறார்.
த‌ன‌க்கு வேறு க‌தியில்லாதது போல‌வே பெருமாளுடைய‌ த‌யைக்கும் த‌ன்னைத் த‌விர‌ வேறு க‌தியில்லை.
அதாவ‌து த‌யையைக் காட்ட‌ தானே உத்த‌மமான‌ பாத்ர‌ம்.
முலைக் க‌டுப்பாலே க‌ன்றுக்குப் பாலைக் கொடுத்த‌ல்ல‌து ப‌சு நிற்க‌வொண்ணாதாற் போலே
ர‌க்ஷ்ய‌னை ர‌க்ஷித்த‌ல்ல‌து த‌ரிக்க‌முடியாது பெருமாளுடைய‌ த‌யையினால்.உம் அப‌ய‌ப்பிர‌தான‌ வ்ர‌த‌ம் நித்ய‌ம்.
ஒரு த‌ட‌வை உபாய‌ ஸ்ப‌ர்ச‌ம் ஒருவ‌னுக்கு ஏற்ப‌ட்டால் அவ‌னைக் காப்பாற்றும் வ‌ரையில் நீர் க‌ட‌னாளியாய் ஸ‌ஜ்வ‌ரராய் இருக்கிறீர்.
ம‌னோர‌தத்தைப் பூர்த்தி செய்த‌ பிற‌கே விஜ்வ‌ரராய் ப்ர‌மோதத்தை (ஆன‌ந்தத்தை) அடைகிறீர்.

ஸேதுக் க‌ரையில் வ‌ந்து (ஸ‌க்ருதேவ‌ ப்ர‌ப‌ந்நாய‌) “ஒருக்காலே ச‌ர‌ணாக‌ அடைகின்றார்க்கும்” என்று த‌ன் விர‌தத்தை உத்கோஷித்தார்.
அதையே இங்கு ஸ‌க்ருத் — ப்ர‌ப‌த‌ந‌ — ஸ்ப்ருஶாம் என்று அநுவ‌திக்கிறார்.
(ஸ‌ர்வ‌பூதேப்ய‌, அப‌ய‌ம் ததாமி, ஏதத் மம வ்ர‌த‌ம்) என்ற‌தையும் இங்கு அநுஸ‌ரிக்கிறார்.
ததாமி என்ப‌தில் “ல‌ட்” (நிக‌ழ்கால‌த்தைக் குறிப்பது) ஸார்வ‌காலிக‌ம். ஆகையால் மூன்று கால‌ங்க‌ளையும் சொல்லுகிற‌து.
இந்த‌ விர‌தத்தை ஸ்வ‌பாவிக‌மாக‌ உடைய‌வ‌ர். (ராம: த்வி:ந‌ அபிபாஷ‌தே) என்று உம‌து வார்த்தை.
உம்முடைய‌து வெறும் பேச்ச‌ல்ல‌, ராக்ஷ‌ஸ‌ர்க‌ளுக்கும் அவ‌ர்க‌ளுக்குத் த‌லைவ‌னான‌ விபீஷ‌ண‌னுக்கும் மெய்ய‌ரானீர்.
“அவ‌ர் ஸார்வ‌ பௌம‌ன்” என்றால் நானும் அப்ப‌டியே. அடியேன் க்ருப‌ண‌ ஸார்வ‌பௌம‌ன்.
நீர் “ய‌தோக்த‌காரீ” என்று ப்ர‌ஸித்த‌ர‌ல்ல‌வா? “ய‌தோக்த‌கார‌ண‌ம்” என்று ந‌ம்பெருமாள் திருநாம‌த்தையும் நினைப்பூட்டுகிறார்.
என்னை ர‌க்ஷியாவிட்டால் திருநாமமே பொய்யாய்விடும்.
“தாஸேஷு ஸ‌த்ய‌ன்” “அடிய‌வ‌ர்க்கு மெய்ய‌ன்” என்னும் திருநாம‌த்தைத் த‌ரிக்க‌ச் செய்யும் என்று தேவ‌நாய‌க‌ன் துதி.

ஸ்ப்ருஶாம் — ப்ர‌ப‌த்தியில் ஸ‌ம்ப‌ந்த‌ப்ப‌டும் க்ஷ‌ண‌த்திலேயே அப‌ய‌தான‌ம் ஸ‌ங்க‌ல்பிக்க‌ப் ப‌டுகிற‌து.
உபாய‌ ஸ்வ‌ரூப‌ம் க்ஷ‌ண‌ஸ்ப‌ர்ச‌மாயுள்ள‌து. செய்யும் ப்ர‌ப‌த‌நத்தில் தொட்டுக்கொள்ளும் அநுப‌ந்திக‌ளும் ர‌க்ஷிக்க‌ப் ப‌டுகிறார்க‌ள்.
விபீஷ‌ணாழ்வானோடு கூட‌ வ‌ந்த‌ நாலு ராக்ஷ‌ஸ‌ர்க‌ளும் ர‌க்ஷிக்க‌ப் ப‌ட்டார்க‌ள்.
அத‌ற்கு இவ‌ர் செய்த‌ ப்ர‌ப‌த்தியில் அவ‌ர்க‌ளுக்கும் ஸ்ப‌ர்ச‌ம் ஏற்ப‌ட்ட‌தே கார‌ண‌ம்.

ஒரு முறையே சரணம் என உன்னிடமே உற்றவர்க்கு
அபயம் தனை அளிக்கின்ற அரும் செயலை விரதம் என
நிரந்தரமாய் கொண்டுளதாய் நீ தானே வெளியிட்டாய்
நீயே தான் இரு முறைகள் நான் உரையேன் என்று உரைத்துப்
பெறும் புகழைப் பெற்றுள்ளாய் பகர்வதையே செய்பவனாய்
புவியில் உனை அரக்கர்களும் முதலானோர் அறிந்துள்ளார்
ஒரு புகலும் அற்றவரின் ஒப்பற்ற தலைவன் என
உறும் எனக்கு உன் விரதம் வீணாக ஆகிடுமோ

———————————————–

அநு க்ஷண சமுத்திதே துரித வாரிதவ் துஸ்தரே
யதி க்வசன நிஷ்க்ருதிர் பவதி ஸாஅபி தோஷா விலா
ததித்த மகதவ் மயி ப்ரதி விதா நமா தீயதாம்
ஸ்வ புத்தி பரி கல்பிதம் கிமபி ரங்க துர்ய த்வயா –16-

ரங்கதுர்ய — ரங்கநாத!,
அநுக்ஷண ஸமுத்திதே — ப்ரதிக்ஷணமும் பெருகுகிறதும்,
துஸ்தரே — தாண்டுவதற்கு அரிதானதுமான,
துரிதவாரிதௌ — பாபமாகிற கடல் விஷயத்தில்,
க்வசந — (பிராயச்சித்த காண்டங்களில்) எங்காவது,
நிஷ்க்ருதி — பிராயச் சித்த விதி,
யதி — இருந்ததானால்,
ஸா அபி — அந்தப் பிராயச் சித்தமும்,
தோஷாவிலா — (ப்ரதிக்ஷணமும் பயங்கள் உற்பத்தியாகின்றன என்று முன் சொன்ன காரணத்தாலேயே) அசுத்தமாகவே,
பவதி — ஆகிறது,
தத் — ஆகையால் ,
இத்தம் — இப்படி,
அகதௌ — வேறு கதியேயில்லாத,
மயி — என் விஷயத்தில்,
த்வயா — உம்மால்,
ஸ்வபுத்தி பரிகல்பிதம் — உம் புத்தியாலேயே ஆலோசிக்கப்பட்ட,
ப்ரதிவிதாநம் — ப்ராயச் சித்தம்,
ஆதீயதாம் — செய்யப்பட வேண்டும்.

அநு க்ஷண சமுத்திதே–ப்ரதி க்ஷணமும் பெருகுகிறதும்
துரித வாரிதவ் துஸ்தரே -தாண்டுவதற்கு அரிதானதுமான -பாபம் ஆகிற கடல் விஷயத்தில்
யதி க்வசன நிஷ்க்ருதிர் பவதி ஸாஅபி தோஷா விலா –ப்ராயச்சித்த காண்டங்களில் விதித்த விதி இருந்ததனால்
அந்த பிராயச்சித்தமும் -ப்ரதி க்ஷணமும் பயன்கள் உத்பத்தி ஆகின்றன -என்று முன் சொன்ன காரணத்தாலேயே -அசுத்தமாகவே ஆகிறது –
ததித்த மகதவ் மயி-ஆகையால் இப்படி வேறு கதியே இல்லாத என் விஷயத்தில்
ப்ரதி விதா நமா தீயதாம் –ப்ரதி விதாநம் ஆதீயதாம் -பிராயச்சித்தம் செய்யப் பட வேண்டும்
ஸ்வ புத்தி பரி கல்பிதம் கிமபி ரங்க துர்ய த்வயா –ஸ்ரீ ரெங்க நாதா -உம் புத்தியால் ஆலோசிக்கப் பட்ட பிராய்ச சித்தம் செய்யப் பட வேணும்
நீ இன்றி ஒன்றுமே செய்ய முடியாத அகதி அன்றோ அடியேன் என்றபடி -நீயே கர்த்தாவாய் அடியேனை செய்விக்க வேணும் –
ஸ்ரீ ரெங்க பிரபு -இந்த ஸ்ரீ ரெங்க ரக்ஷண பரத்தை நீர் தானே வஹித்துக் கொண்டு எங்கள்
பயத்தை தீர்த்து அருள வேண்டும் என்பதே இப்பொழுது பிரபதனம் –

ப்ரபத்தியை ‘ஒருக்கால் அநுஷ்டித்தவனுக்கு நான் அபயப்ரதானம் செய்கிறேன்’ என்றும்,
‘நீ ஒரு கைமுதலற்றவன்’ என்றும் சொல்லுகிறாய்.
ஆனால் நீ ஸகல பாபங்களுக்கும் பிராயச்சித்தமான பிரபதனமென்னும் ந்யாஸவித்யையை அனுஷ்டித்தா லல்லவோ
நான் உன்னை ரக்ஷிக்கலாம் என்றால்,
இந்த சுலோகத்தால் தான் அவனன்றி ஒன்றும் செய்ய முடியாத அகதி என்கிறார்.

பிரபத்தி என்னும் பிராயச்சித்தத்தை அனுஷ்டிப்பதில் எவ்வளவோ தோஷங்கள் வரக்கூடும்.
உலகத்தில் ஒரு பாபத்துக்காக ஒரு பிராயச்சித்தத்தை ஆரம்பித்தால், இடையில் நேரும் தோஷங்களுக்காக வேறு பிராயச்சித்தங்கள்!
இப்படி பிராயச்சித்தங்களின் தொடர்ச்சி எல்லையில்லாமல் போய்க்கொண்டேயிருக்கும்.
ஸமுத்ரம் ஓய்ந்தவன்றுதான் எங்கள் பாபங்களும் ஓய்வது.
ஆகையால் நான் செய்யப்போகும் ப்ரபத்தி என்னும் உபாயத்தையும் உம்முடைய சுபமான ஸங்கல்பத்தால் நிர்தோஷமாயும்,
பூரணமாகவும் செய்து, நீர் காரயிதாவாய் (செய்விப்பவராய்) என்முகமாய் நடத்தி வைக்க வேணும்.
நாங்கள் செய்வது கிலமாயும் அபூர்ணமாயுமிருக்கும்.
கிலமில்லாமல் பூரணமாகச் செய்வதில் நீர்தான் நிபுணர்.
(நிதானம் தத்ராபி ஸ்வயமகில நிர்மாண நிபுண:) ப்ரபத்தி முதலிய உபாயங்களில் எங்களுக்கு அந்வயம் உம்மால்தான் ஏற்படவேண்டும்.
ஆகையால் அவ்வுபாயத்தைக் குறைவற நீரே செய்து வைக்கவேண்டும்.

ரங்கதுர்ய — ரங்கத்தின் ரக்ஷண பாரத்தை வஹிப்பவர் நீரல்லவா? அந்த ரக்ஷணப் பொறுப்பை நீர் ஏற்றுக்கொண்டு
எங்கள் பயத்தைத் தீர்க்க வேண்டும் என்று தானே இப்போது செய்யும் பிரபதனம்.

கணம் தோறும் பெருகி வரும் கடத்தரிய வினைக் கடலைக்
கடப்பதற்கே நெறி வகுத்த கழுவாயைச் செய்தாலும்
அணை போன்ற குற்றங்கள் அது தனையும் குலைத்திடுமே
ஆதலினால் கதியேதும் அற்றவனாய் நிற்கின்றேன்
கணக்கில்லா என் தீ வினைகள் கழிவதற்கே அரங்கா நின்
கருத்தாலே தக்கதொரு கழி வாயைத் தோற்றுவித்து
எனை அதிலே மூட்டுவித்து எவ்விதமாம் தடையும் அற
எனையதனைச் செய்வித்து ஏற்றம் உறச் செய்வாயே –

————————————————————

விஷாத பஹுளாதகம் விஷய வர்க்கதோ துர் ஜயாத்
பிபேமி வ்ருஜி நோத்தரஸ் த்வதநு பூதி விச்சேததி
மயா நியத நாதவா நயமிதி த்வமர்த்தா பயன்
தயாதன ஜகத் பதே தயித ரங்க சம் ரக்ஷமாம் –17-

வ்ருஜினோத்தர — அதிக பாபமுடைய (நான்),
விஷாத பஹுளாந் — துக்கமே அதிகமாயுள்ளதும்,
துர்ஜயாத் — ஜயிக்க முடியாததுமான,
விஷயவர்கத — (சிற்றின்ப) விஷயங்களின் கூட்டத்தின் வலிமையினால்,
த்வதனுபூதி விச்சேத — உம்மை அநுபவிப்பதற்குத் தடை ஏற்பட்டு விடுமோ என்று,
பிபேமி — பயப்படுகிறேன்,
தயாதந — தயைச் செல்வம் நிறைந்தவரே,
ஜகத்பதே — லோகத்திற்கு ஸ்வாமியே,
தயிதரங்க — ரங்கத்தில் ப்ரீதியை உடையவரே,
மயா — என்னால்,
அயம் — இவன்,
நியத நாதவாந் — கைவிடாத நாதனை உடையவன்,
இதி — என்று,
த்வம் — நீர்,
அர்த்தாபயந் — சொல்லிக்கொண்டு,
மாம் — என்னை,
ஸம்ரக்ஷ: — நன்றாக ரக்ஷித்தருள வேணும்.

விஷாத பஹுளாதகம் –துக்கமே அதிகமாய் உள்ளதும்
விஷய வர்க்கதோ துர் ஜயாத்-ஜெயிக்க முடியாததுமான விஷயாந்தரங்களின் கூட்டத்தின் வலிமையினால்
உண்ணிலாவிய ஐவரால் குமை தீற்றி என்னை உன் பாத பங்கயம் நண்ணிலா வகையே -என்னுடைய சரீரே வர்த்தமானமாய் –
அத ஏவ அவர்ஜ நீயமுமாய் ம்ருத்யு சத்ருசமுமாய் பயங்கரமுமாய் இருந்த
பஞ்ச இந்த்ரியங்களாலும் விஷயங்களில் என்னை ஆகர்ஷிப்பித்து -என்றபடி –
பிபேமி வ்ருஜி நோத்தரஸ் த்வதநு பூதி விச்சேததி-அதிக பாபம் உடைய நான் –
உம்மை அனுபவிக்கத் தடை ஏற்பட்டு விடுமோ என்று பயப்படுகிறேன் –
மயா நியத நாதவா நயமிதி த்வமர்த்தா பயன் -என்னால் இவன் கை விடாத நாதனை யுடையவன் என்று திரு உள்ளம் பற்றி
அருளிச் செய்து -அடியேனை ரஷித்து அருள வேண்டும் –
தயாதன ஜகத் பதே தயித ரங்க சம் ரக்ஷமாம் -தயை செல்வம் நிறைந்தவர் –
சர்வ லோக ஸ்வாமியே -ஸ்ரீ ரெங்கத்தில் பிரியம் யுடையவர் –
நீர் ஜகத் பதியாய் இருக்க உம் சொத்தை கள்ளர் கொண்டு போகலாமா –

இந்த சரீரத்தின் முடிவில் மோக்ஷம் கிடைப்பது நிச்சயமாயிருந்தாலும், இங்கிருந்த நாள் உன் திருவடிகளில் பக்தி விச்சேதமின்றி இருக்க வேணும்.
பக்தியாவது இடைவிடாமல் ப்ரீதியுடன் உன் திவ்யமங்கள விக்ரஹத்தை தியானிப்பது.
‘அப்படி அனுபவிக்கும் பேரின்பம் கிடைக்குமானால் வைகுண்டவாஸத்திலும் ஆசையில்லை’ என்றல்லவோ எங்கள் துணிபு.
ஆனால் அந்த பக்திக்கு விஷயங்கள் என்னும் ரூப ரஸாதிகள் விரோதிகள்.
எங்கள் தியானத்திற்கு விஷயமான (ஆலம்பநமான) உம் திவ்யமங்கள விக்ரஹத்துக்கு ஆபத்து வந்தால் அதுவும் தியானத்திற்கு விரோதி.
ஆகையால் விஷயங்களை அடியோடு விலக்க வேண்டும். இந்த விஷயமான உம் விக்ரஹத்தோடு நித்ய யோகம் வேணும்.
உம்மை தியானிப்பதில் விச்சேதம் வந்தால் அதுவே எங்களுக்கு பயம்.

“உண்ணிலாவிய ஐவரால் குமைதீற்றி என்னை உன் பாதபங்கயம் நண்ணிலாவகையே”.
அநாதி காலமெல்லாம் விஷய ப்ரவணமாய் பகவதனுபவ விரோதியாகையாலும்,
“என்னுடைய சரீரே வர்த்தமானமாய் அத ஏவ அவர்ஜநீயமுமாய் ம்ருத்யு ஸத்ருஶயமுமாய் பயங்கரமுமாயிருந்த
பஞ்சேந்திரியங்களாலும் விஷயங்களிலே என்னை ஆகர்ஷிப்பித்து” என்று பிள்ளான் பணித்தார்.

விஷாத பஹுளாத் — துக்கமயமான; பகவான் ஆனந்தமயமாயிருப்பதற்கு எதிராக இவை துக்கப்ர சுரம்.

துர்ஜயாத் — பெருமாளையும் வசப்படுத்தலாம் போலிருக்கிறது. விஷயங்களை ஜயித்து இந்திரியங்களை வசப்படுத்துவது அரிதாயிருக்கிறது.

வ்ருஜினோத்தர — நான் உத்தரன் (உயர்ந்தவன்) ஆவது வ்ருஜினத்தாலேயே;
‘க்ருபண ஸார்வபௌமன்’, ‘அபராத சக்ரவர்த்தி’ என்றல்லவோ நான் பெருமையடைவது!

ஜகத்பதே! — நீர் ஸ்வாமியாய், எல்லாம் உம்முடையதன்றோ? உம் ஸொத்தைக் கள்ளர் கொண்டுபோக விடலாமோ?

செய்வினையோ மிகப் பெரிதாம் தடையின்றி தொடர்கின்றேன்
சகமிதிலே உறும் சுகங்கள் துயர் தனையே தருவனவாய்
செயிப்பதற்கும் அரியவையாய் திறம் உளதை நான் அறிவேன்
திரு வரங்கத்தை காதல் உற்று தனி இடமாய்க் கொண்டவனே
தயை என்னும் நிதியுடையாய் தரணி தனின் தனித் தலைவா
நின்னுடைய அனுபவத்தில் தடையுறவே அஞ்சுகிறேன்
நயந்து உன்னை அடியேனே நாதன் என வரித்ததனை
நற் பொருளாய்க் கொண்டு என்னை நீ தானே காத்து அருளே –

———————————————————-

நிசர்க்க நிர நிஷ்டதா தவ நிரம்ஹச ஸ்ரூயதே
ததஸ் த்ரியுக ஸ்ருஷ்ட்டிவத் பவதி ஸம்ஹ்ருதி க்ரீடிதம்
ததா அபி சரணா கத ப்ரணய பங்க பீதோ பவான்
மதிஷ்டமிஹ யத் பவேத் கிமபி மா ஸ்ம தஜ்ஜீ ஹபத் –-18-

த்ரியுக — (கலியுகம் தவிர மற்ற) மூன்று யுகங்களில் விபவாவதாரம் செய்பவரே!
ஷாட்குண்யபூர்ணரே!;
நிரம்ஹஸ — பாபமற்றவரான;
தவ — உமக்கு;
நிஸர்க நிரநிஷ்டதா — எப்பொருளும் அநிஷ்டமாகக் கூடாத ஸ்வபாவமானது;
ஶ்ரூயதே — சுருதியில் கூறப்பட்டிருக்கிறது.
தத: — ஆகையால்;
ஸ்ருஷ்டிவத் — ஸ்ருஷ்டியைப் போல;
ஸம்ஹ்ருதி — ஸம்ஹாரமும்;
தவ — உமக்கு;
க்ரீடிதம் — விளையாட்டாக;
பவதி — இருக்கிறது;
ததாபி — அப்படியிருந்தும்;
பவாந் — நீர்;
ஶரணாகத ப்ரணய பங்க பீத — சரணாகதனுடைய உம் விஷயமான பரிவைத் திரஸ்கரிக்க பயப்படுகிறவர்
இஹ — (ஆகையால்) இவ்வுலகில்;
யத் கிமபி — எது ஒன்று;
மதிஷ்டம் — எனக்கு இஷ்டமாகுமோ;
தத் — அதை;
மாஸ்ம ஜீஹபத் — நழுவ விடக்கூடாது..

நிசர்க்க நிர நிஷ்டதா-எப்பொருளும் அநிஷ்டமாகக் கூடாத ஸ்வ பாவமானது உண்டு என்று
தவ நிரம்ஹச ஸ்ரூயதே -பாபம் அற்ற உமக்கு -என்று சுருதியில் கூறப்பட்டு இருக்கிறது –
ததஸ் த்ரியுக ஸ்ருஷ்ட்டிவத் பவதி ஸம்ஹ்ருதி க்ரீடிதம்
-கலி யுகம் தவிர மற்ற மூன்று யுகங்களிலும் விபவாதாரம் செய்து அருளுபவரே
ஸ்ருஷ்டியைப் போலவே சம்ஹாரமும் உமக்கு லீலையாகவே இருக்கிறது –
ததா அபி சரணா கத ப்ரணய பங்க பீதோ பவான் -அப்படி இருந்தும் நீர் சரணாகதனுடைய உம் விஷயமான பரிவை திரஸ்கரிக்கப் பயப்படுகிறவர்
மதிஷ்டமிஹ யத் பவேத் கிமபி மா ஸ்ம தஜ்ஜீ ஹபத் -ஆகையால் இவ்வுலகத்தில் எது ஓன்று எனக்கு இஷ்டம் ஆகுமோ அதை நழுவ விடக் கூடாது
உம்முடைய திரு மேனி ரக்ஷை தானே அடியேன் இஷ்டம் -இஷ்ட பங்கம் வராதபடி உம்மை சதா சேவித்துக் கொண்டே இருக்கும் படி
உம்முடைய திவ்ய மங்கள விக்ரஹத்தை நீரே ரஷித்து அருள வேணும் -என்றபடி –
இந்த ஸ்லோகத்திலும் ஆளவந்தார் ஸ்தோத்ர ரத்ன ஸ்ரீ ஸூக்திகளைக் கொண்டே அருளிச் செய்கிறார் –

‘என் விக்ரஹத்தை ரக்ஷித்துக்கொள்ள வேண்டும் என்று நீர் ப்ரார்த்திக்கிறீர் என்று தெரிகிறது.
ஆனால் என்னுடையதை நான் ரக்ஷித்துக் கொள்ளாமல் விடுவேனா?
வராஹ நாரஸிம்ம ராமாத்யவதாரங்களில் சத்ருக்கள் என் விக்ரஹத்தை ஹிம்ஸிக்கும்படி விட்டேனா?
ஆதலால் நீர் ப்ரார்த்திப்பானேன்?’ என்று பெருமாள் சங்கை ஸூசிதமாக,
அந்த ஆக்ஷேபத்தை அழகாகப் பரிஹரிக்கிறார்.

‘உமக்கு ஸ்ருஷ்டியைப்போல, ஸம்ஹாரமும் விளையாட்டே.
தன்னுடையதைத் தான் அழிப்பானோ என்று உம் விஷயத்தில் கேட்க முடியாது.
நீர் ஸம்ஹாரம் செய்வதும் உம்முடையதைத்தானே! உமக்கு அநிஷ்டத்தை நீர் தடுப்பீர்.
விரோதிகள் உம் விக்ரஹத்தை உதைத்தாலும் அது உமக்கு அநிஷ்டமாகாது.
உம்மைப் பற்றி (நிரநிஷ்டோ நிரவத்ய:) என்று ஏகாயந சுருதி கூறுகிறது.
(நிரநிஷ்டோ நிரம்ஹஸ:) என்றும் சுருதி. ஒரு பொருள் அநிஷ்டமாவதற்கு பாபமே காரணம்;
காரணமான பாபமில்லாத முக்தனுக்கு ஒரு வஸ்துவும் அநிஷ்டமில்லை, எல்லாம் ஸுகரூபமே.
இது முக்தனுக்கு நீர் கொடுக்க வந்தது. உமக்கு இது ஸ்வபாவம்.
உலகத்தில் பயமேயில்லாத உமக்கு ஆச்ரிதனுடைய இஷ்டத்திற்கு பங்கம் வந்துவிடுமோ என்று ஒரு பயமுண்டு.
உம்முடைய திருமேனி ரக்ஷை என் இஷ்டம் (மதிஷ்டம்). உம் திருமேனியின் லயம் எனக்கு அநிஷ்டம்.
உமக்கு ஸ்வயம் இஷ்டாநிஷ்டங்கள் இல்லாது போனாலும், ஆச்ரிதனான எனக்கு இஷ்டபங்கம் வராதபடி
உம்மை ஸதா ஸேவித்துக் கொண்டிருக்கும்படி உம் திருமேனியை ரக்ஷித்தருள வேண்டும்.
அதனால் ஆச்ரிதர்களுடைய ப்ரணயபங்கம் வந்துவிடுமோ என்கிற பயம் உமக்கும் ஏற்படாது.

இங்கும் ஆளவந்தார் ஸ்தோத்ரத்தின் வார்த்தையையே அநுஸரிக்கிறார்.

இழிவேதும் அற்றவன் நீ என்பதனால் துக்கமிலா
இயல்புடையன் என யுன்னை இயம்பிடுமே அரு மறைகள்
செழிப்பான அறு குணங்கள் நிறைந்தனவாம் உன் தனக்கு
ஸ்ருஷ்டியைப் போலே அழித்தலுமோர் திரு விளையாட்டு எனவாகும்
வழி பட்டு உன் அடி அடைந்தோர் விருப்பத்தை மறுப்பதற்கு
மனம் அஞ்சி நீ என் தன் விருப்பத்தில் நல்லவற்றை
ஒழியாமல் மேல் கொண்டு உரியதனைச் செய்வதனால்
உனை யுற்ற எனைக் காத்தே ஊக்கமுடன் அருளிடுவாய் –

———————————————-

கயாது ஸூத வாயச த்வி ரத புங்கவ திரௌபதீ
விபீஷண புஜங்கம வ்ராஜ கணாம் பரீஷாதய
பவத் பத ஸமாச்ரிதா பய விமுக்தி மா புர்யதா
லபே மஹி ததா வயம் சபதி ரங்க நாத த்வயா -19-

ரங்கநாத — ரங்கநாதனே;
யதா — எப்படி;
கயாதுஸுத — கயாதுதேவியின் புத்ரனான ப்ரஹ்லாதன்;
வாயஸ — (ஜயந்தன் என்னும்) காகம்;
த்விரதபுங்கவ — கஜேந்த்ரன், த்ரௌபதி, விபீஷணன்;
புஜங்கம — ஸுமுகன் என்னும் நாகம்;
வ்ரஜகண –கோப ஜனங்கள்;
அம்பரீஷாதய — அம்பரீஷன் முதலியவர்கள்;
பவத்பதஸ்மாஶ்ரிதா — உம் திருவடிகளை நன்றாக ஆச்ரயித்து;
பயவிமுக்திம் — பயத்திலிருந்து விமோசனத்தை;
ஆபு — அடைந்தார்களோ;
ததா — அப்படியே;
வயம் — நாங்களும்;
ஸபதி — உடனே;
த்வயா — உம்மாலே;
லபேமஹி — (பய விமோசனத்தை) அடைவோமாக.

கயாது ஸூத வாயச த்வி ரத புங்கவ திரௌபதீ -கயாது புத்திரனான ப்ரஹ்லாதன் -ஜெயந்தன் என்னும் காகம் -கஜேந்திரன் -திரௌபதி
விபீஷண புஜங்கம வ்ராஜ கணாம் பரீஷாதய-விபீஷணன் -ஸூ முகன் என்னும் நாகம் -கோப ஜனங்கள் -அம்பரீஷன் முதலானவர்கள்
பவத் பத ஸமாச்ரிதா பய விமுக்தி மா புர்யதா-உம் திருவடிகளை நன்றாக ஆஸ்ரயித்து -பயத்தில் இருந்து விமோசனத்தை -அடைந்தார்களோ
லபே மஹி ததா வயம் சபதி ரங்க நாத த்வயா -அப்படியே நாங்களும் உடனே உம்மாலே பாபா விமோசனத்தை அடைவோமாக
பரம ஹம்சர்கள் பலர் இங்கே கதற உதவாமல் இருப்பது என் -பயக்ருத் பய நாசனரான நீரே எங்கள் பயத்தை போக்கி அருள வேணும் –
ஸ்ரீ ரங்கம் ஓர் இடமும் ஸ்ரீ ரெங்க நாதன் ஓர் இடமும் இருக்கலாமோ –

பெருமாள் தன் அபய ப்ரதான வ்ரதத்தை உத்கோஷித்ததைப் பேசினார்.
உத்கோஷணம் இருக்கட்டும். கோடிக்கணக்கான உம் அனுஷ்டானங்களை நீர் அனுஸரிக்க வேண்டாவோ என்கிறார்.
கயாதுஸுத — முதலில் அஸுரசிசுவான ப்ரஹ்லாதாழ்வான்.
கயாது என்ற தாயின் பெயரையிட்டு அவரையே காயாதவர் என்பர்.
அவர் ஸாதுக்களில் தலைவர் வைஷ்ணவர்களுக்கு முதலானவர்.
பகவானுடைய அகடிதகடனாஶக்தியை வெளிப்படுத்துகிறது என்பதற்காக ந்ருஸிம்ஹாவதாரத்தை எடுக்கிறார்.
மஹாஸுரன் வீட்டுத்தூண்தான் வேண்டுமோ?
இங்கோர் மண்டபத்தில் ஆயிரம் தூண்களில் ஒன்றும் நீர் அவதரிக்க உதவாததோ?
அஸுரனின் சிறுவனுக்காகத்தான் அவதரிக்க வேண்டுமோ?
தலை நரைத்த கிழவனானால் அடியேனுக்காக ஆகாதோ என்று திருவுள்ளம்.

வாயஸ — ஜகன்மாதாவான பிராட்டியிடம் அபசாரப்பட்ட இந்த்ர புத்ரனான ஜயந்தன்.
இந்த்ரன் ‘ஹவிர்புக்’; அவன் பிள்ளை ‘பலிபுக்’ (பலியைச் சாப்பிடும் காக) ரூபத்துடன் வந்தான்.
நீர் கிருபை செய்வதற்கு ஒரு வாயஸமாயே இருக்க வேண்டுமோ? (பரம) ஹம்ஸர்கள் இத்தனை பேர் கதறுகிறார்களே?

த்விரத புங்கவ — கஜேந்த்ரன் ஒரு நீர்ப்புழுகல்ல,
(பரமாபதம் ஆபந்ந:) என்று ஆர்த்தியின் காஷ்டையில் இருந்தவன்.
‘நீர் உண்டு; வேக ஸம்ரம்பத்திற்கு கருடனுண்டு; கூர் நேமியுண்டு; ரக்ஷிக்க நானுண்டு.
அத்திகிரியரசே! நீர் எல்லா ஜந்துக்களுக்கும் பொதுவாயிருக்க, யானையென்றும் மனிதன் என்றும் பேதம் கூடுமோ?’ என்று பேரருளாளனைக் கேட்டார்.
(ப்ராஹ்மணே கவி ஹஸ்திநி …. பண்டிதா: ஸமதர்ஶிந:) என்று பாடவில்லையோ?
‘விபஶ்சித்’தான நீர் பண்டிதராய், ப்ராஹ்மணனான உம் வேதாந்தாசிரியனையும் ஒரு பசுவையும் ஒரு யானையையும் ஸமமாகப் பார்க்கவேண்டாமோ?
புங்கவ என்று ச்ரேஷ்டத்தைச் சொல்லும் பதம் மாடு ஜாதியையும் சொல்லுமாதலால் அதையும் எடுப்பது போல் அமைந்திருக்கிறது.

த்ரௌபல — ‘நிர்தீஜ்ஜர் ஸபை நடுவே லஜ்ஜையைத் துறந்து சரணாகதி சாஸ்த்ரத்தை மூதலிப்பித்துப் பெற்ற மஹாபாக்யவதி’
என்று ஸ்ரீலோக தேசிகன் புகழ்ந்தார். ரங்கமத்யத்தில் எங்கள் உயிரான உம் திருமேனியின் நித்யஸேவையைத் தந்தருள வேணும்.

விபீஷண — பாரதத்திற்கு த்ரௌபதியைப் போல ராமாயணத்திற்கு விபீஷணன்.

புஜங்கம — காளியன் என்னும் ஸர்ப்பம், உம் திருவடி அவன் தலை மேலேயிருந்த ஸம்பந்தத்தினால் அவனுக்கும்
உம் பத ஸமாஶ்ரயணம் உண்டு. அவன் பத்னிகள் சரணம் புகுந்தார்கள்.
‘ஸுமுகன்’ என்னும் நாகம் என்றும் சொல்வார்கள். ‘ஒருக்கால் பகவான் பெரிய திருவடிமேல் ஏறியருளி ஸஞ்சரிக்கும்போது
பெரிய திருவடி பசியால் பூமியில் ஸஞ்சரித்த ‘ஸுமுகன்’ என்கிற ஸர்ப்பத்தைப் பக்ஷிக்கவர,
ஸுமுகன் பயாக்ரந்தனாய் பெருமாளை சரணம் புக, அவர் வைந்தேயன் ஸர்ப்பத்தை புஜிக்கவொட்டாமல் மேலே இழுக்க,
அதற்குள் ஸுமுகன் புற்றில் நுழைந்து விட்டான்’ என்று பெரியார் வ்யாக்யானத்திலுள்ளது.
‘புஜங்கம விஹங்கம’ என்று மேலே 25வது சுலோகத்தில் பேசுகிறது வேறு.
இந்த ஸுமுக வ்ருத்தாந்தத்தில் ஒருவாறு இரண்டும் இங்கு சேரும்.

வ்ரஜ கண — கோகுல வாஸிகளான ஆண் பெண் அடங்கலும் (வ்ரஜ ஜநார்த்திஹந்) என்று கோபிகா கீதைக்கு “வ்ரஜ ஜன” என்ற பாடம் பொருந்தும்.
அங்கு கோபர்கள் ஐந்து லக்ஷம்; இங்கு கோடிக்கணக்காக எல்லா ஜாதிகளான ஆண் பெண்கள் ப்ரார்த்திக்கின்றனர்.

அம்பரீஷ — ‘அம்பரீஷ சக்கரவர்த்தியினிடம் துர்வாஸ மஹரிஷி த்வாதசியன்று பிக்ஷைக்கு வருகிறோம் என்று சொல்லி
ஸ்நானத்திற்குச் சென்று விளம்பித்து வர, பாரணாகாலம் கழிவதைக் கண்டு, ஜலபாரணம் பண்ணி
அம்பரீஷன் துர்வாஸருக்காகக் காத்துக் கொண்டிருந்தான். துர்வாஸர் வந்து ஜலபாரணம் பண்ணின ராஜாவைப் பார்த்துக் கோபித்து
அவரை ஸம்ஹரிக்கத் தொடங்க, ஸுதர்னாழ்வானும் பகவதாக்ஞையால் துர்வாஸஸ்ஸைத் துரத்தி
ராஜாவின் காலிலே விழும்படி செய்து அவ்வரசனைக் கொண்டே ரக்ஷித்தார்.
பக்தனுக்கு வந்த பயம் எதிரியான மஹரிஷி பேரிலேயே திரும்பி, அவரை புவனத்ரயமும் ஓட வைத்தது.
ரிஷி பகவானைச் சரணம்புக, ‘நாபாக புத்ரனான அம்பரீஷனையே சரணமடையும்; நான் பக்த பாரதீனன்.
அஸ்வதந்த்ரன்போல இருக்கிறேன்’ என்று நீர் அவரைத் திருப்பி விட்டீர்.
‘பக்த பராதீனன்’ என்பதை எங்கள் ஆசை விஷயத்திலும் உண்மையாக்க வேண்டும்.

பய விமுக்திம் ஆபு — ஸம்ஸார பயத்திலிருந்து விமோசனம் என்னும் மோக்ஷத்தை இப்போது ப்ரார்த்திக்கவில்லை.
எங்கள் உயிரான உம்மைப் பற்றிய பயத்தின் நிச்சேஷ நிவ்ருத்தியையே கோருகிறோம்.
பயநாஶன: என்கிறபடி பயத்தைச் செய்வித்த நீரே எங்கள் பயத்தைப் போக்க வேண்டும்.

ஸபதி — உடனே பயம் நீங்கவேண்டும்.
(த்ருடி யுகாயதே த்வாம் அபஶ்யதம்) என்று கோபீஜனங்களின் விரஹதாகம்(க்ஷணம் யுக ஶதம் இவ யாஸாம் யேந விநா அபவத்) என்றார் சுகர்.
அப்படியே உம் விரஹம் எங்களுக்கு துஸ்ஸஹமாயிருக்கிறது.

ரங்கநாத ரங்கம் ஓரிடம் நாதன் ஓரிடமாயிருப்பது நீங்கி, ரங்கத்தின் நாதன் ரங்கத்திலேயே இருக்க வேண்டும் என்று
அடுத்த சுலோகத்தில் ப்ரார்த்திப்பது இங்கே அழகாக வ்யஞ்ஜிக்கப் படுகிறது.

அரக்கர் மகன் பிரகலாதன் அக்காக்கள் முதலையிடம்
அகப்பட்ட மதக் களிறு ஐ மன்னர் அரும் துணைவி
அரக்கர் கோன் விபீடணன் ஆய்ச்சியர்கள் காளிங்கன்
அம்பரீஷன் முதலானோர் உன் தனது இணை அடியைச்
சரண் அடைந்து பயம் தன்னைத் தவிர்த்தவராய் ஆயினரே
திருவரங்க நாயகனே நாங்களுமே அவ்வாறே
விரைவாக உன் தன்னால் அச்சத்தின் பிடி இருந்து
விடுதலையை அடைந்திடவே வழி காட்டி அருள்வாயே –

——————————————————————–

பயம் சமய ரங்கதாம்ந்ய அநிதர அபிலாஷ ஸ்ப்ருசாம்
ஸ்ரியம் பஹுளய ப்ரபோ ஸ்ரித விபக்ஷ முன்மூலய
ஸ்வயம் சமுதிதம் வபுஸ்தவ நிசா மயந்த சதா
வயம் த்ரி தச நிர்வ்ருதிம் புவி முகுந்த விந்தே மஹி –-20-

ப்ரபோ — ப்ரபுவே;
ரங்கதாம்நி — அரங்கமாநகரில்;
அநிதரபிலாஷ ஸ்புருஶாம் — மற்றொன்றில் ஆசையைத் தொடாத பரமைகாந்திகளுடைய;
பயம் — பயத்தை;
ஶமய – தீரும்படி செய்யவேணும்;
ஶ்ரிதவிபக்ஷம் — ஆச்ரிதருக்கு விரோதிகளை;
உந்மூலய – வேரறுக்க வேண்டும்;
(புவி) முகுந்த – இப்புவியிலுள்ளபோதே; முக்திச்சுவையை அளிப்பவரே;
வயம் — நாங்கள்;
தவ – உம்முடைய;
ஸ்வயம் ஸமுதிதம் — ஸ்வயம் வ்யக்தமான;
வபு — திருமேனியை;
(ரங்கதாம்நி — அரங்கமாநகரிலேயே)
ஸதா — எப்பொழுதும்;
நிஶாமயந்த – ஸாக்ஷாத்தாக அனுபவித்துக் கொண்டு;
புவி — பூலோகத்தில்;
த்ரிதஶநிர்வ்ருதிம் — நித்யஸூரிகளின் அனந்தத்தை ;
விந்தேமஹி — அடைவோமாக.

பயம் சமய ரங்கதாம்ந்ய அநிதர அபிலாஷ ஸ்ப்ருசாம் –-மற்று ஒன்றில் ஆசையைத் தொடாத பரமை காந்திகள் யுடைய பயத்தை தீரும் படி செய்ய வேணும் –
ஸ்ரியம் பஹுளய ப்ரபோ ஸ்ரித விபக்ஷ முன்மூலய-ஆஸ்ரிதர்களுடைய விரோதிகளை வேர் அறுக்க வேண்டும் –
ஸ்ரீ ரெங்க ஸ்ரீ பெறுக வேண்டும் என்று தானே -எங்கு வசிப்பவர்களும் ஆசாசிப்பது –
ஸ்வயம் சமுதிதம் வபுஸ்தவ நிசா மயந்த சதா -நாங்கள் உம்முடைய ஸ்வயம் வ்யக்தமான திரு மேனியை ஸ்ரீ -ரங்க நகரிலேயே எப்பொழுதும்
நிசா மயந்த -என்றோ அரங்கத்தில் அரங்கன் இருந்தார் என்று கேட்டு மட்டும் போக செய்யாமல் நித்யம் சேவை சாதித்து அருள வேணும்
வயம் த்ரி தச நிர்வ்ருதிம் புவி முகுந்த விந்தே மஹி –சாஷாத்தாக அனுபவித்து பூ லோகத்திலேயே
நித்ய ஸூரிகள் யுடைய அனுபவத்தை அனுபவிக்கும் படி பண்ணி அருள வேணும் –

இதுதான் கோரிய பலம். மீமாம்ஸையின் இருபதாவது அத்தியாயத்தில் எல்லையற்ற மோக்ஷானந்தமான
நித்ய ஸூரிகளின் ஆனந்தத்தைக் காட்டியுள்ளது.
இவரும் இருபதாவது சுலோகத்தில் மோக்ஷச் சுவை போன்ற இச்சுவைக்கு அபாயமில்லாமல் நித்யாநுபவத்தை ப்ரார்த்திக்கிறார்.
இந்த பர ஸமர்ப்பணமே இந்த அபீதி ஸ்தவத்தின் விஷயம்.
இதை ‘இதி பரஸமர்ப்பித:’ என்று அடுத்த சுலோகத்தில் அநுவதிப்பதாலும் இது தெரிகிறது.
பயம் ஶமய –
கீழ் ஒவ்வொரு சுலோகத்திலும் ‘பயம்’ ‘பீதி’ என்று பயத்தையே ப்ரஸ்தாவித்தார்.
இதில் அந்த பயத்தின் சாந்தியைச் செய்யும் என்கிறார்.
அநிதர அபிலாஷ ஸ்ப்ருஶாம் —
மற்றொரு பொருளின் ஆசையைக்கூடத் தொடமாட்டார்கள்; வஸ்துவைத் தொடுவது எங்கே?
ஶ்ரியம் பஹுளய —
‘ஸ்ரீரங்கஸ்ரீ பெருகவேண்டும்’ என்றல்லவோ எங்கு வஸிப்பவர்களும் ஆசாஸிப்பது!
ஸ்ரீசங்கரரும் ததநுஸாரிகளும் (இதம் ஸ்ரீரங்கம்) என்று தினமும் த்யானம் செய்கிறார்கள்.
ப்ரபோ —
இந்த ப்ரார்த்தனையை நிறைவேற்ற நீர் ஸமர்த்தரல்லவோ!
ஶ்ரித விபக்ஷம் உந்மூலய –
(ந மே த்வேஷ்யோ அஸ்தி) என்றபடி உமக்கு விபக்ஷமில்லாவிடினும், எங்கள் விபக்ஷத்தை இனிக் கிளம்பாதபடி வேருடன் பிடுங்கி எறியவேணும்.
ஸ்வயம் ஸமுதிதம் வபு —
(யத் யத் தியா த உருகாய விபாவயந்தி தத் தத் வபு : ப்ரணயஸே மதநுக்ரஹாய ) என்ற பாகவத வசனத்தையும்,
‘தமர் உகந்த தெவ்வுருவம் தானாய்’ என்பதையும், நினைக்கிறார்.
இதனால் பராசர சுகாதிகள் ஸம்ப்ரமாயமும் இதுவே என்று காட்டப்படுகிறது.
நிஶாமயந்த: ஸதா —
(ஸதா பஶ்யந்தி ஸூரய) என்பதுபோல அடியோங்களும் உம்மை அரங்கத்தில் ஸதா ஸேவித்து
‘ஜிதம்தே’, ‘பல்லாண்டு’ என்று பாடிக் கொண்டிருக்க வேண்டும்.
‘நிஸமயந்த’ என்றால் கேட்பதைச் சொல்லும்.
“அரங்கத்தில் அரங்கன் எழுந்தருளியிருக்கிறார்” என்று கதை கேட்பது போறாது.
“நிஶாமயந்த” என்றால் பார்ப்பது. நாங்கள் நேரில் பார்த்து ஸேவிக்கும்படி நீர் அநுக்ரஹிக்க வேண்டும்.
த்ரிதஶ நிர்வ்ருதிம் — (இந்த்ர லோகத்தியதான அச் சுவையை) பரமபத சுவையை
புவிமுகுந்த – இங்கேயே எல்லையற்ற வைகுண்ட ஸுகத்தைக் கொடுக்குமவர்.
விந்தே மஹி — அடைவோமாக.

இதை ஆத்மநே பதமாகப் பிரயோகித்திருப்பதால், பெருமாளுக்கு இதனால் வரும் ப்ரயோஜனத்தில் விருப்பமில்லாவிட்டாலும்
அவர் அடியார்களின் ப்ரயோஜனத்தைக் கருதி அவர் செய்யவேண்டும் என்பது ஸூசிப்பிக்கப் படுகிறது.

நினை யன்றி வேறு எதையும் நாடாத அடியார்கள்
தம் நெஞ்சில் தோன்றி யுள்ள தடையாகும் பேர் அச்சம்
தனை ஒழித்து நீ அருள்வாய் திருவரங்க நகரத்தில்
திரு வைணவ செல்வத்தை செழிப்பு அடையச் செய்து அருள்வாய்
உனை வணங்கும் அடியார்க்கு ஏற்பட்ட பகை தன்னை
வேரோடு களைந்து அருள்வாய் தானேயாய் உதித்ததுவாம்
உனதுருவை எப்பொழுதும் உடன் இருந்து வணங்கியராய்
உயர் தேவர் இன்பத்தை உற்றிடுவோம் இங்கேயே

——————————————————–

ஸ்ரிய ப்ரிப்ருடே த்வயி ஸ்ரித ஜநஸ்ய சம்ரக்ஷகே
சதத்புத குணோ ததா விதி சமர்ப்பிதோ அயம் பர
ப்ரதி க்ஷண மத பரம் ப்ரதய ரங்க தாமா திஷூ
ப்ரபுத்வம நு பாதிகம் ப்ரதித ஹேதி பிர்ஹேதிபி–21-

ஶ்ரித ஜநஸ்ய — ஆச்ரித ஜனங்களுடைய;
ஸம் ரக்ஷகே — நன்றாய் ரக்ஷிப்பவனாயும்;
ஸத் — ஸத்யமும் (நல்லதும்);
அத்புத – ஆச்சர்யமுமான;
குணோததௌ — குணக் கடலான;
ஶ்ரிய பரிப்ருடே — ஶ்ரிய:பதியான
த்வயி — உம்மிடம்;
அயம் பர – இந்த (உம் திருமேனியின் ரக்ஷண) பரம்;
இதி — இப்படி;
ஸமர்ப்பித – ஸமர்ப்பிக்கப் பட்டது;
அத:பரம் — இது முதல்;
ப்ரதி க்ஷணம் — ஒவ்வொரு க்ஷணமும்;
ப்ரதித – மேல் மேல் கிளம்புகிற;
ஹேதிபி — ஜ்வாலைகளை உடைய;
ஹேதிபி — திருவாயுதங்களால்;
அநுபாதிகம் — ஸ்வயம் ஸித்தமான;
ப்ரபுத்வம் — வல்லமையை ;
ரங்கதாமாதிமத – ஸ்ரீரங்கம் முதலான திவ்ய தேசங்களில் ;
ப்ரதய – ப்ரகாசப்படுத்தும்.

ஸ்ரிய ப்ரிப்ருடே த்வயி –ஸ்ரீ யபதியான தேவரீர் இடம்
ஸ்ரித ஜநஸ்ய சம்ரக்ஷகே-ஆஸ்ரித ஜனங்களை நன்றாக ரஷித்து அருளுபவனாயும் -உபாய திசையிலும் போக திசையிலும் மிதுனம் உத்தேச்யம்
ஞானம் கனிந்த நலம் கொண்டு லஷ்மயா ஸஹ
சதத்புத குணோ ததா விதி சமர்ப்பிதோ அயம் பர-ஆச்சர்யமான குணக் கடலான தேவரீர் இடமே-
இந்த உம் திவ்விய மேனி ரக்ஷணம் பரம் சமர்ப்பிக்கப் பட்டது -இது முதல்
ப்ரதி க்ஷண மத பரம் ப்ரதய ரங்க தாமா திஷூ-ஒவ் ஒரு க்ஷணமும் மேல் மேல் கிளம்புகிற
ப்ரபுத்வம நு பாதிகம் ப்ரதித ஹேதி பிர்ஹேதிபி-ஜ்வாலைகளை உடைய திவ்ய ஆயுதங்களால் -ஸ்வயம் ஸித்தமான வல்லமையை
ஸ்ரீ ரெங்கம் முதலான திவ்ய தேசங்களில் ப்ரகாசப்படுத்தி அருள வேண்டும் –

இதில் ஆழ்வார், எம்பெருமானார், வடக்குத் திருவீதிப்பிள்ளை லோக தேசிகன் எல்லாரும்
ஏககண்டமாக “உபாய தசையில் ஒரு மிதுனமே உத்தேச்யம்” என்று அறுதியிட்டதை அநுஸரித்து,
‘திருமேனி ரக்ஷணம்’ என்னும் மஹோரதத்தை ஸாதித்துக் கொடுக்கும் பரம் ஶ்ரிய:பதியான உம்மிடமே வைக்கப்படுகிறது’ என்கிறார்.

முதல் சுலோகத்தில் रमासखमधीमहे என்றார்.
இரண்டாவதில் श्रियाध्युषित वक्षस என்று ஆழ்வார் சரணாகதி பண்ணின
‘அகலகில்லேன் இறையும் என்று அலர்மேல்மங்கை உறைமார்பா’ என்னும் பாசுரத்தை ஸூசிப்பித்தார்.
“மிதுநாயநர்” என்றல்லவோ இவர்களுக்கு ப்ரஸித்தி!

ஶ்ரிய: பரப்ருடே — ‘பரிப்ருடம்’ என்பது பதியையும் பெருமையையும் சொல்லும்.
(ப்ரஹ்ம பரிப்ருடம் ஸர்வத:) என்பர். எல்லையற்ற பெருமையுள்ளது என்பதுதான் ப்ரஹ்ம லக்ஷணம்.
‘இந்த ப்ரஹ்மத்வமும் ஸ்ரீயின் அதிகமான கடாக்ஷங்கள் விழுவதால் கிடைப்பது’ என்றார் பட்டர்.
(அபாங்கா பூயாம்ஸோயதுபரி பரம் ப்ரஹ்ம ததபூத்) ‘ஶ்ரிய’ என்று ஐந்தாம் வேற்றுமையாகக் கொண்டு
ஸ்ரீயிடமிருந்து ‘பரிப்ருடத்வம்’ என்றும் ‘ப்ரஹ்மத்வம்’ கிடைத்தது.

ஸம்ரக்ஷகே — லக்ஷ்மீயுடன் சேர்ந்தே ஸஹ ரக்ஷகனான உம்மிடம், ஸர்வ ஸித்தாந்தங்களும் இதை ஏக ரூபமாக உத்கோஷிக்கின்றன.
“ஞானங்கனிந்த நலங்கொண்டு நாடோறும் நைபவர்க்கு வானங்கொடுப்பது மாதவன்” என்ற அந்தாதிப் பாசுரத்தின் உரையில்
ஸ்ரீ பிள்ளை லோகஞ்ஜீயரும்
‘லக்ஷ்ம்யா ஸஹ’ என்ற சுலோகத்தை உதாஹரித்து, ஸர்வேச்வரன் சேதனரைக் கைக் கொள்ளும் போது
பெரிய பிராட்டியாரோடே கூடியிருந்தே கைக்கொள்வது என்று ஸகல வேதாந்த ஸித்தமாகையாலே
அவளுக்கு வல்லபனான ஸர்வேச்வரன்’ என்று ஸாதித்தார்.
அத:பரம் — இது முதல்; இந்த க்ஷணம் முதல் என்றபடி.
ரங்க தாமாதிஷு — எல்லா திவ்ய தேசங்களும் இப்படியே ரக்ஷிக்கப்பட வேணும்.

திருமகளின் மணாளன் நீ சரண் அடைந்த அடியார்க்கு
நல் காப்பை அளிக்கின்றாய் நீச குணம் அற்றவனாய்
அரும் நல்ல திருக் குணங்கள் அனைத்துக்கும் கடலாவாய்
அதனாலே உன்னிடத்தே அர்ப்பணித்தோம் எம் பொறுப்பை
ஒரு செயலே உனக்கு உளது -ஓளி மயமாய் விளங்கும் உன்
ஒப்பற்ற ஆயுதங்கள் உதவியுடன் உனக்கு என்றே
உரித்தான ஆட்சிமையை கணம்தோறும் அரங்கம் போல்
உனக்குற்றத் தலங்களிலே ஊன்றி அருள் பெருமானே –

———————————————————————-

கலி ப்ரணித லக்ஷணை கலித சாக்ய லோகாயதை
துருஷ்கா யவநாதிபிர் ஜகதி ஜ்ரும்ப மாணம் பயம்
ப்ரக்ருஷ்ட நிஜ சக்திபி பிரசபமாயுதை பஞ்சபி
ஷிதி த்ரி தச ரஷகை ஷபய ரங்க நாத ஷணாத்–22–

ரங்கநாத – ரங்கநாதனே!
கலி ப்ரணிதி லக்ஷணை — கலிக்குப் பிரதிநிதி போன்றவர்களால்;
கலித ஶாக்ய லோகாயதை — சாக்கியர், நாஸ்திகர் இவர்கள் கலந்த;
துருஷ்க யவநாதிபி — துருஷ்கர், யவனர் என்ற ஜாதி விசேஷங்களால்,;
ஜகதி — உலகத்தில்;
ஜ்ரும்பமாணம் — பெருகும்;
பயம் — பயத்தை;
ப்ரக்ருஷ்ட நிஜ சக்திபி — உயர்ந்த தங்கள் சக்தியை உடையவையும்;
க்ஷிதி த்ரிதஶ ரக்ஷகை — பூஸுரரை ரக்ஷிப்பவையுமான;
பஞ்சபி ஆயுதை — ஐந்து ஆயுதங்களால்;
க்ஷணாத் — ஓர் க்ஷணத்தில்;
ப்ரஸபம் — பலாத்காரமாக;
க்ஷபய – நீக்க வேணும்..

கலி ப்ரணித லக்ஷணை கலித சாக்ய லோகாயதை--கலிக்கு பிரதிநிதி போன்றவர்களால் -சாக்கியர் நாஸ்திகர் இவர்கள் கலந்த
துருஷ்கா யவநாதிபிர் ஜகதி ஜ்ரும்ப மாணம் பயம் -துருஷ்கர் யவனர் என்ற ஜாதி விசேஷங்களால் உலகில் பெருகும் பயத்தை
ப்ரக்ருஷ்ட நிஜ சக்திபி பிரசபமாயுதை பஞ்சபி -உயர்ந்த தங்கள் சக்தியை யுடையவையாயும் – பஞ்ச ஆயுதங்களால்
ஷிதி த்ரி தச ரஷகை ஷபய ரங்க நாத ஷணாத்-பூ ஸூரர் ரக்ஷிப்பவையுமான ஒரு க்ஷணத்தில் பலாத்காரமாக நீக்கி அருள வேணும் –
எங்கள் பிரபத்தி ஆர்த்த பிரபத்தி -ஒரு க்ஷணம் விளம்பத்தையும் சஹியோம் என்றவாறு

கலிப்ரணிதி லக்ஷணை —
ரங்கராஜனுக்குப் பயமுண்டாக்குகிறவர் யார்?
வேத விப்ரரையும், ஆலயங்களில் திவ்யமங்கள விக்ரஹங்களையும் ஸஹியாத கலி மஹாராஜனுக்குப் பிரதிநிதிகளான சிலர்.
ஜ்ரும்பமாணம் பயம் —
(ஸ்ரீரங்க ஸ்ரீஶ்ச வர்த்ததாம்) என்ற எங்கள் கோரிக்கைக்கு நேர் விரோதமாக
அங்கேயே பயம் வ்ருத்தியடைந்து கொண்டேயிருப்பது உசிதமோ?
க்ஷிதி த்ரிதா —
(பகவத் பக்தி மிகுந்த) ப்ராஹ்மணர்கள். பஞ்சபி: ஆயுதை — சங்கம், சக்கரம், கதை, வில், கத்தி என்ற ஐந்து திவ்யாயுதங்கள்.
பாஞ்சஜன்யம், ஸுதர்ஶநம், கௌமோதகி, ஶார்ங்கம், நந்தகம் என்று முறையே அவைகளின் பெயர்கள்.
க்ஷணாத் —
எங்கள் ப்ரபத்தி, ஆர்த்தப்பிரபத்தி, பலம் உடனே கிடைக்கவேணும். ஒரு க்ஷண விளம்பத்தையும் ஸஹியோம்.

கொடும் கலியின் ஏவலர் போல் கிளர்ந்து எழுந்த சாக்கியர்கள்
கடவுள் தனை மறுக்கின்ற சார்வாகர் இவர்களுக்கு
உடன் பிறப்பாம் துருக்க யவனர் ஆகியரால் விளைகின்ற
ஊறுகளால் மறையவர்கள் உற்ற பெறும் அச்சத்தை
திடம் கொண்ட ஐவகையாம் திரு வாயுத கணம் கொண்டு
திருவரங்கத்தில் எழுந்து அருளி திகழ்ந்திடும் எம்பெருமானே
சடக்கென்று ஒழித்திட்டு சத்துக்கள் தமைக் காப்பாய்
தீங்கு ஒன்றும் விளையாமல் துதித்து உன்னை வணங்கிடவே –

———————————————————

திதி ப்ரபவதே ஹபித் தஹந சோமா ஸூ ர்யாத்மகம்
தம ப்ரமதநம் ப்ரபோ சமிதி தாஸ்த்ர ப்ருந்தம் ஸ்வத
ஸ்வ வ்ருத்தி வச வர்த்தித த்ரிதச வ்ருத்தி சக்ரம் புந
ப்ரவர்த்தயது தாம்நி தே மஹதி தர்ம சக்ர ஸ்திதம்–23-

ப்ரபோ — ப்ரபுவே!
திதி ப்ரபவதே ஹபித் — திதியின் ஸந்ததிகளான அசுரர்கள் தேஹங்களைப் பிளப்பதும்;
தஹந ஸோம ஸூர்யாத்மகம் — அக்னி, சந்த்ரன், சூர்யன் முதலியவற்றைத் தன்னுள்ளடக்கிக் கொண்டு;
ஸ்வத — தானாகவே;
ஸமுதித அஸ்த்ர ப்ருந்தம் — எல்லா அஸ்திரங்களின் ஸமூஹமும் தன்னிடமிருந்து வெளிப்படும் மஹிமையை உடையதும்;
தம: ப்ரமதநம் — தமோ குணத்தை (உள்ளிருட்டை)ப் போக்குவதும்;
ஸ்வ வ்ருத்தி வஶ வ்ருத்தித த்ரிதஶ வ்ருத்தி — தேவர்கள் வ்யாபாரமெல்லாம் தன் வசமாயுள்ளதுமான;
தே சக்ரம் — உம்முடைய சக்ரம்;
தே — உம்முடைய;
மஹதி தாமநி — உயர்ந்த இடமாகிய கோயிலில்;
புந: — மறுபடியும்;
தர்ம சக்ர ஸ்திதிம் — தர்மம் என்னும் உம்முடைய ஆக்ஞா சக்ரத்தின் பரிவ்ருத்தியை;
ப்ரவர்த்தயது — நடத்தி வைக்க வேணும்.

திதி ப்ரபவதே ஹபித்-திதியின் சந்ததிகளான அசுரர்கள் தேஹங்களைப் பிறப்பதும்
தஹந சோமா ஸூ ர்யாத்மகம்-அக்னி சந்திரன் ஸூர்யன் முதலியவற்றை தன்னுள்ளே அடக்கிக் கொண்டு
சமிதித அஸ்த்ர ப்ருந்தம் ஸ்வத -தானாகவே எல்லா அஸ்திரங்கள் சமூகமும் தன்னிடம் இருந்து வெளிப்படும் மஹிமையை யுடையதும்
தம ப்ரமதநம் ப்ரபோ -தமஸ் குணத்தை -உள் இருட்டைப் போக்குவதும் -பிரபுவே –
ஸ்வ வ்ருத்தி வச வர்த்தித த்ரிதச வ்ருத்தி -தேவர்கள் வியாபாரம் எல்லாமே தன் வசமாய் யுள்ளதுமான
சக்ரம் புந -உம்முடைய திருச் சக்கரத் ஆழ்வான் மறுபடியும்
ப்ரவர்த்தயது தாம்நி தே மஹதி தர்ம சக்ர ஸ்திதம்-தர்மம் என்னும் உம்முடைய ஆஞ்ஞா சக்ரத்தின் பரி வ்ருத்தியை நடத்தி வைத்து அருள வேணும்

தேவரீர் உடைய ரக்ஷண சங்கல்பம் தத்துவமே -ஸ்ரீ ஸூ தர்சனம் -சங்கல்ப ஸூர்யோதத்தில் ஸ்ரீ விஷ்ணுவின்
சன்னாஹமும் சங்கல்பமும் முறையே பெரிய திருவடி ஸ்ரீ ஸூ தர்சன ஆழ்வான் என்று பாஞ்சராத்ர ஆகமங்களில் பிரசித்தம் என்று அருளிச் செய்து உள்ளார்
இந்த ஸ்ரீ ஸூதர்சனமே ஷோடச திவ்ய ஆயுதங்கள் -சங்கல்ப ஏவ பவதோ நிபுண ஸஹாய -ஸ்ரீ வரதராஜ பஞ்சசம் –
ஸூதர்சன மஹா ஜ்வாலா கோடி ஸூ ர்ய ஸமப்ரப /-சோமவத் ப்ரிய தர்சன /
மீண்டும் உம்முடைய ஆஞ்ஜை யான தர்ம சக்கரம் நடை பெற வேணும் என்றதாயிற்று –

ஸ்ரீகாந்தனிடம் ப்ரபத்தியைச் செய்து
இப்போது பஞ்சாயுதங்களின் உயர்ந்த சக்தியைக் கொண்டு எதிரிகளை அடக்கி ரக்ஷிக்க வேண்டும் என்கிறீர்;
ஆயுதங்களின் ஸஹாயமில்லாமல் ஶ்ரிய:பதியால் ரக்ஷிக்க முடியாதோ என்று சங்கை வர அதைப் பரிஹரிக்கிறார்.

நாங்கள் செய்யும் ப்ரபத்திக்கு தேவரீர் தத் க்ஷணமே எங்கள் பயத்தை நீக்கி எங்களுக்கு அபயம் அளிக்க ஸங்கல்பிக்க வேணும்.
தேவரீர் ரக்ஷண ஸங்கல்பம் என்னும் தத்வமே ஸ்ரீஸுதர்ஶநம் என்னும் சக்ரம்.
‘விஷ்ணுவின் ஸந்நாஹமும் ஸங்கல்பமும் முறையே பக்ஷீஸ்வரனும் ஸுதர்ஶனமும் என்று பாஞ்சராத்ர ஆகமங்களில் ப்ரஸித்தம்’ என்று
ஸ்ரீ ஸங்கல்ப ஸூர்யோதயத்தில் ஸாதித்தார்.
ஆகையால் ஸுதர்ஶனம் என்பது ஈச்வர ஸங்கல்பம்;
தர்மமென்பதும் ஈஸ்வரனுடைய ஆக்ஞாசக்ரமான ஶ்ருதி ஸ்ம்ருதிகள்.
ஸுதர்ஶனமாகிய உமது சக்ரம் ஆக்ஞையான தர்ம சக்ரத்தை சரியாக சுழன்று சுழன்று வரும்படி செய்ய வேணும்.
இந்த ஸுதர்ஶனமே பதினாறு (ஷோடஶ) ஆயுத ரூபமாகவும் இருக்கிறார் என்பது ஷோடஶாயுத ஸ்தோத்ரத்தில் ஸ்வாமியால் காட்டப் பட்டது.

தம் ஸங்கல்பத்தின் அம்ஶங்களான பதினாறு ஆயுதங்களோடு கூடின ஆயுதேஶ்வரரான
பரம புமான் உங்களை ரக்ஷிக்கட்டும்’ என்று முதல் ஸ்லோகம்.
‘எல்லா அஸ்த்ரங்களும் எந்த ஸுதர்ஶனத்திடமிருந்து கிளம்புகிறதோ அந்த ஷோடஶாயுதமயரான
ஸுதர்ஶனம் நம்மை ரக்ஷிக்கட்டும் என்று பதினேழாவது சுலோகம்.
இப்படி எல்லா ஆயுதங்களும் ஸுதர்ஶனத்தின் ரூபங்களாகையாலும்,
ஸுதர்ஶனமும் உம்முடைய ஸங்கல்பமானதாலும்,
‘ஆயுதங்கள் உமக்கு ஸஹாயம்’ என்றதுவும் ‘உம்முடைய ரக்ஷண ஸங்கல்பமே உமக்கு ஸஹாயம்,
உம்மைவிட வேறான ஒன்றை நாங்கள் உபாயமாக வேண்டவில்லை’ என்று சொன்னதாகும்.
(ஸங்கல்ப ஏவ பவதோ நிபுண: ஸஹாய) என்று வரதராஜ பஞ்சாசத்தில் சொன்னதும் இதை விளக்குகிறது.

திதி ப்ரபவ தேஹபித் — உம் திவ்யமான திருமேனியை பேதிக்க எண்ணும் அசுரர்களின் தேஹத்தைப் பிளப்பது உம் ஸுதர்ஶனம். (உம் ஸங்கல்பம்)
அக்னி ஸோம ஸூர்யாத்மகம் — அக்னி, சந்த்ரன், ஸூர்யன் என்னும் தேஜஸ்ஸுகளெல்லாம் ஸ்ரீஸுதர்ஶன தேஜஸ்ஸில் அடங்கியவை.
(ஸுதர்ஶன மஹாஜ்வால கோடி ஸூர்ய ஸமப்ரப) ஆஸுரத்தைப் கொளுத்துகையிலும்,
அனுகூலர்க்கு சந்த்ரனைப் போல ஸௌம்யராயிருப்பவர்.
(ஸோமவத் ப்ரியதர்ஶன) உள்ளிருட்டை நீக்குவது மற்ற தேஜஸ்ஸுக்களால் இயலாது. ஸுதர்ஶனம் அதையும் நீக்கும்.
‘மறுபடியும் கோயிலில் உம்முடைய ஆக்ஞையான தர்மசக்ரம் நடைபெற வேணும்’ என்பதால்
அப்பொழுது தர்மாநுஷ்டானத்திற்கு விக்னமிருந்தது காட்டப்படுகிறது.

அடியவரைத் துன்புறுத்தும் அரக்கர் தம் உடல் பிளக்கும்
ஆற்றலுடன் கதிர் மதியம் அக்னியாம் மூவருமே
உடன் கூடியது போலே ஓளி மயத்தைக் கொண்டதுமாய்
அகவிருளும் புறவிருளும் அகலும்படி திறலுடைத்தாய்
கொடு வல்ல ஆயுதங்கள் கூட்டத்தின் இருப்பிடமாய்
தேவர்கள் வாழ்வுக்கோர் அரணாகி உன் தனது
திடக் கரத்தை அணி செய்யும் சக்கரமே மறுபடியும்
திருவரங்கத்தில் நல்லறமே தழைத்து ஒங்கச் செய்யட்டும் –

————————————————

மனு ப்ரப்ருதி மா நிதி மஹதி ரங்க தாமாதிகே
தனு ப்ரபவ தாருணைர்த்தர முதீர்ய மாணம் பரை
ப்ரக்ருஷ்ட குணக ஸ்ரியா வஸூதயா ச சந்துஷித
ப்ரயுக்த கருணோததி பிரசமய ஸ்வ சக்த்யா ஸ்வயம் –24-

ப்ரயுக்த கருணா உததே — கருணை நிறைந்தவனே!
ப்ரக்ருஷ்ட குணக — சிறந்த குணங்களை உடையவனே!
மநு பரப்ருதி — மனு முதலியவர்களால்;
மாநிதே — கொண்டாடப்பட்ட;
மஹதி — சிறந்த;
ரங்க தாம ஆதிகே — ஸ்ரீரங்கம் முதலியவற்றில்;
தநு ப்ரபவ –தநுவென்னும் அஸுர குலத்தோரான அஸுரர்களைப் போல்;
தாருணை — குரூரர்களான, கொடியவர்களான,
பரை: — சத்ருக்களால்;
உதீர்யமாணம் — வளர்க்கப்பட்டு வரும், உண்டாகி வளரும்;
தரம் — பயத்தை;
ச்ரியா — பெரிய பிராட்டியாராலும்,
வஸுதயா ச — க்ஷமா தத்வமாகிய பூமிப் பிராட்டியாலும்,
ஸந்துக்ஷித — தூண்டப்பட்டு உத்ஸாகப் படுத்தப் பட்டவனாய்;
ஸ்வ சக்த்யா — தன் சக்தியினால்;
ஸ்வயம் — தானே;
ப்ரசமய — ஒழிப்பாயாக.

மனு ப்ரப்ருதி மா நிதி மஹதி ரங்க தாமாதிகே--மனு முதலியவர்களால் கொண்டாப்பட்ட சிறந்த ஸ்ரீ ரெங்கம் முதலியவற்றில் –
இத்தால் ஆச்சார்ய பரம்பரையை ஸூ சிப்பித்து -ஆழ்வார் நாத முனிகள் -ஆளவந்தார் -பெரிய நம்பிகள் -எம்பெருமான்
ஆழ்வான் -பட்டர் -குரு பரம்பரையே ஸூ சிப்பிக்கிறார் –
தனு ப்ரபவ தாருணைர்த்தர முதீர்ய மாணம் பரை-தனு என்னும் அஸூர குலத்தோரான அஸூரர்களைப் போலே
கொடியவர்களான -குரூர்களான -சத்ருக்களால் -வளர்க்கப்பட்டு வரும் -உண்டாகி வளரும் –
ப்ரக்ருஷ்ட குணக ஸ்ரியா வஸூதயா ச சந்துஷித-ப்ரயுக்த கருணோததி பிரசமய ஸ்வ சக்த்யா ஸ்வயம் –
-கருணா தத்துவமான பெரிய பிராட்டியாராலும் ஷாமா தத்துவமான ஸ்ரீ பூமிப் பிராட்டியாராலும் தூண்டப் பட்டு
உத்ஸாகப் படுத்தப் பட்டவனாய் -தன் சக்தியினால் தானே ஒழிப்பாயாக-

கருணை முதலிய சிறந்த குணங்களுடையோனே!
மனு முதலியவர் கொண்டாடிவரும் ஸ்ரீரங்கம் முதலிய க்ஷேத்ரத்தில் அசுரர் போல் பயங்கரர்களான
சத்ருக்கள் வளர்த்து வரும் பயத்தை ஸ்ரீ, பூமி தேவிகளின் ப்ரேரணத்தைக் கொண்டு, தன் சக்தியினாலே ஒழித்தருள வேணும்.

ப்ரக்ருஷ்ட – குணம் — உம்முடைய உயர்ந்த குணங்களோடு கூடியிருந்து நீர் ரக்ஷகராகிறீர்.
அதனால் உமக்கு எப்படி அத்விதீயத்வத்திற்குக் குறைவில்லையோ, அப்படியே தேவிமாரோடு கூடி ரக்ஷகரானாலும்
பாஹ்ய ஸஹாயாபேக்ஷை அற்றவர் என்று சொல்லக் குறைவில்லை.
ஸ்ரீதேவியே கருணாதத்வம். பூதேவி க்ஷமா தத்வம். இதெல்லாம் தயா சதகத்தில் கூறப்பட்டிருக்கிறது.
உம் தேவிமார் தான் உம்முடைய தயை முதலிய கல்யாண குணங்களை ஸந்துக்ஷணம் செய்பவர்.
(த்வத் கருணா நிரீக்ஷணா ஸுதா ஸந்துக்ஷணாத்) என்பதைக் காட்ட ‘ஸந்துக்ஷித’ என்கிறார்.

‘பிராட்டி உம்முடைய ப்ரபை, உம் ஶக்திபோல் உமக்கு அநந்யை’ என்பதை ஸ்வ ஶக்த்யா என்று காட்டுகிறார்.
இந்த சேர்த்தியைத் தானே மனு முதலானோர் பூஜித்தனர்.
முதலில் மனுவும் பின்பு மைதிலீ ரமணனாக அக் குலத்தில் மனுஷ்யனாகவே அவதரித்து நீரும் உம்மையே பூஜித்தீர்.
ஆகையால் மனுஷ்யராகிய எங்களுக்கு நீர் ஸ்வந்தமான பெருமாள்.
‘மனுவிடமிருந்து பிறந்தவர் மனுஷ்யர், மாநவர்’ என்றார் பாணிணி.
பெருமாள் ஸூர்யனுக்கும், ஸூர்யன் மனுவுக்கும், மனு இக்ஷ்வாகுவுக்கும் உபதேசித்தார்கள் என்று உபதேச பரம்பரை.
இங்கு மனு ப்ரப்ருதி என்பதால் அந்த ஆசார்ய பரம்பரையை ஸூசிப்பித்து,
ஆழ்வார். நாதமுனிகள், ஆளவந்தார், பெரிய நம்பிகள், எம்பெருமானார், ஆழ்வான், பட்டர் முதலிய பெரியோரையும் ஸூசிப்பிக்கிறார்.

உயர்ந்தோங்கும் குணங்களுக்கு உறைவிடமே மனுவாதி
உத்தமர்கள் புகழ்ந்திட்ட உயர்வுடைய அரங்கம் போல்
பெயர் பெற்ற தலங்களிலே பொல்லாத அசுரரையும்
மிஞ்சி நிற்கும் கொடுமை யுள பகைவர்களால் தோன்றி யுள்ள
பயம் தன்னைத் திரு மகளும் மண் மகளும் ஊக்குவிக்க
பெரும் கருணை என விளங்கும் உன் குணமாம் பெரும் கடலை
பயன்படுத்தி நீ தானே பேர் வலிதாம் உன் திறத்தால்
போக்கி யுன் தன் அடியாரைப் பாலித்து அருளிடுவாய் –

————————————-

புஜங்க விஹங்கம ப்ரவர ஸைன்ய நாதா ப்ரபோ
ததைவ குமுதா தயோ நகர கோபுர த்வாரபா
அசிந்த்ய பல விக்ரமா ஸ்தவ மிவ ரங்க சம்ரக்ஷகா
ஜிதம் ந இதி வாதி நோ ஜகத் அநுக்ரஹே ஜாக்ரது -25-

ப்ரபோ — ப்ரபுவே!;
அசிந்த்ய பல விக்ரம — எண்ணுதற்கரிய பல பராக்ரமங்களை உடையவர்களும்;
த்வமிவ — உம்மைப் போல;
ரங்க ஸம் ரக்ஷகா — அரங்கத்தைக் காக்க வேண்டியவர்களும்;
புஜங்கம விஹங்கம ப்ரவர ஸைந்யநாதா — ஸர்ப ச்ரேஷ்டன் ({சேஷன்), பக்ஷிராஜன், ஸேனை நாதன் ஆகியவர்களும்;
ததைவ — அப்படியே;
நகர கோபுர த்வார பா: — நகரம், கோபுரம், த்வாரம் இவற்றைக் காப்பவர்களும்,
ஜிதம்தே — உனக்கு ஜயம் வருக;
இதி வாதிந — என்று சொல்லிக் கொண்டு;
ஜகதநுக்ரஹே — எங்களை அனுக்ரஹிப்பதில்;
ஜாக்ரது — விழித்திருக்க வேணும்.

புஜங்க விஹங்கம ப்ரவர ஸைன்ய நாதா -சர்ப்ப ஸ்ரேஷ்டன் -ஆதி சேஷன் -பெரிய திருவடி -சேனை முதலியார் முதல்வர்களும்
ப்ரபோ -பிரபுவே –
ததைவ குமுதா தயோ நகர கோபுர த்வாரபா -அப்படியே நகரம் கோபுரம் துவாரம் இவற்றைக் காப்பவர்களும் –
அசிந்த்ய பல விக்ரமா -எண்ணுதற்கு அரிய பல பராக்கிரமங்களை யுடையவர்களும்
ஸ்தவ மிவ ரங்க சம்ரக்ஷகா -உம்மைப் போலே ஸ்ரீ ரெங்கத்தைக் காக்க வேண்டியவர்களும்
ஜிதம் ந இதி வாதி நோ ஜகத் அநுக்ரஹே ஜாக்ரது -உனக்கு ஜெயம் வருக என்று சொல்லிக் கொண்டே
எங்களை அனுக்ரஹிப்பதில் விழித்து இருக்க வேணும் –
இதம் ஹி ரங்கம் பாணவ் ரதாங்கம் சயனே புஜங்கம் –அங்கு ஆரவாரம் அது கேட்டு அழல் உமிழும் –
ஜிதந்தே -என்று வாக்கால் சொன்னாலே போது ரஷிக்க –
சனத் குமாரர்களைத் தடுக்க ஜெய விஜயர்கள் இருந்தார்களே –

பள்ளி கொண்டிருக்கும் எம்மை தாஸரான நீங்கள் எழுப்பலாமோ?
‘பயத்தினால் இப்படிச் செய்கிறோம்’ என்றால் உங்களைக் காக்க நம் காவல்காரர்களில்லையோ என்று சங்கை வர,
அவர்கள் விழித்து இருந்து தங்கள் சேஷத்வத்திற்கு ஏற்றபடி
“ஜிதம்தே” என்று மங்களம் பாடினால் போதும். அவர்களும் தூங்குகிறார்களோ என்று தான் கவலை.

புஜங்கம — ஸ்ரீசங்கராசாரியாரும் இவ்வரங்கத்தை (இதம் ஹி ரங்கம்) என்கிற சுலோகத்தையிட்டு தினமும் மங்களாசாஸனம் செய்தார்.
(பாணௌ ரதாங்கம் ஶயநே புஜங்கம்) என்று கையார் சக்கரத்தையும் நாக ஶயனத்தையும் கீர்த்தனம் செய்வர்.
भुजङ्गमाङ्गशायिने विहङ्गमाङ्गगामिने तुरङ्गमाङ्गभेदिने नमो रथाङ्गधअरिणे ॥ என்று ஸர்வஜ்ஞமுனியின் ஸம்க்ஷேப ஶாரீரகத்தின் முடிவு மங்களம்.
அவர் கிரந்தத்தை ஸ்ரீசங்கரர் பார்த்துப் புகழ்ந்தாரென்பர்.
புஜங்கமப்ரவர — “ஆங்கு ஆரவாரமது கேட்டு” என்றபடி சீற்றம் வேண்டாம்.
வாதிந என்பதால் “ஜிதம்தே” என்று நாக்கினால் உச்சரித்தால் போதும்.
ஸைந்யநாத — இவர் விஷ்வக்ஸேநர். இவர் இல்லாத இடமில்லை. ஸேனைத் தலைவரும் ஸேனை வீரரும் தூங்குவரோ?
நகர கோபுர த்வார பா — நகரவாசல், கோபுர வாசல், ஸந்நிதி வாசல் எங்கும் காவல்.
இந்தக் காவலரெல்லாம் தூங்க வேணுமோ?
ஸநத் குமாரர்களைத் தடுத்த காவல்காரர்கள் சத்ருக்களைத் தடுக்க வேண்டாவோ?

புள்ளரையன் சேனை நாதன் தம்மோடு
அணைத் தலைவர் குமுதர் போல் ஆவாரம் நகரத்தின்
திரு வாயில் கோபுரத்தின் திருக் கதவம் காப்போரும்
திருமால் உன் தனைப் போல் திரு வரங்கத்தைக் காப்போரும்
பெரும் வாகை உனக்கு என்று போற்றுகிற வாயினராய்
பேரரவம் இட்டவராய் பரவி எங்கும் செல்பவராய்
திருவரங்கம் மட்டும் இன்றி திரை கடல் சூழ் உலகினையும்
சிந்தையுடன் நற் காத்துச் செயல் படவே வேண்டுகிறோம் –

————————————————

விதி ஸ்த்ரி புரமர்த்தந ஸ்த்ரிதச புங்கவ பாவக
யம ப்ரப்ருதயோ அபி யத் விமத ரக்ஷணே ந ஷமா
நி ரஷிதி ஷதி யத்ர ச பிரதிபயம் ந கிஞ்சித் க்வசித்
ச ந பிரதிபடான் ப்ரபோ சமய ரங்க தாமா திஷூ -26-

விதி — ப்ரஹ்மாவும்;
த்ரிபுர மர்த்தந — மூன்று புரங்களை எரித்தவரும்;
த்ரிதஶபுங்கவ — தேவர்கள் தலைவனான இந்திரனும்;
பாவக — அக்னியும்;
யம பரப்ருதய அபி — யமன் முதலானோரும்;
யத்விமத ரக்ஷண –எந்த உம் விரோதியை ரக்ஷிப்பதில்;
ந க்ஷமா — ஸமர்த்தரல்லவோ ;
யத்ர — எந்த நீர்;
ரிரக்ஷிஷதி — ரக்ஷிக்க இஷ்டப்பட்ட போது;
க்வசித் — ஓரிடத்திலும்;
கிஞ்சித் — ஒன்றும் (எதுவும்);
ப்ரதிபயம் ந — பயங்கரமாக கொஞ்சமேனும் ஆகாதோ;
ஸ: — அந்த நீர்;
ரங்கதாமாதிஷு — அரங்கம் முதலிய திவ்ய தேசங்களில்;
ந: — எங்களுடைய; ப்ரதிபடாந் — எதிர்படரை; ஶமய — அடக்கவேணும்.

விதி ஸ்த்ரி புரமர்த்தந ஸ்த்ரிதச புங்கவ பாவக –ப்ரஹ்மாவும் -மூன்று புரங்களை எரித்தவரும் –
தேவர்கள் தலைவரான இந்திரனும் -அக்னியும்
யம ப்ரப்ருதயோ அபி யத் விமத ரக்ஷணே ந ஷமா -யமன் முதலானோரும் –
எந்த உம் விரோதியை -ரஷிப்பதில்-சமர்த்தர் அல்லவோ
நி ரஷிதி ஷதி யத்ர ச பிரதிபயம் ந கிஞ்சித் க்வசித் -எந்த நீர் ரஷிக்க இஷ்டப் பட்ட போது
ஓர் இடத்திலும் ஒன்றும் எதுவும் பயங்கரமாக கொஞ்சமேனும் ஆகாதோ –
ச ந பிரதிபடான் ப்ரபோ சமய ரங்க தாமா தி ஷூ -அந்த நீர் ஸ்ரீ ரங்கம் முதலிய திவ்ய தேசங்களில்
எங்களுடைய எதிர்படரை அடக்கி அருள வேணும் –
யமனும் யம படர்களும் எங்களைக் கண்டு நடுங்க வேண்டி இருக்க இந்த மனுஷ்ய படர்களைக் கண்டு நாங்கள் நடுங்கும் படி நேரலாமோ –

உம் திருமேனியைக் காட்டிலும் எங்களுக்குப் பிரியமான வஸ்து இல்லை;
அதற்குக் கெடுதலைச் செய்பவர்கள் எங்கள் சத்ருக்கள். எங்களுடைய சத்ருக்கள் உம் சத்ருக்களாக வேணும்.
“என் பஞ்ச ப்ராணரான பாண்டவர்களை நீ த்வேஷிக்கிறாய். ஆகையால் நீ எனக்கு த்வேஷி” என்றார் ஸ்ரீ கிருஷ்ணன்.
இப்படி உமக்கு விரோதியாயிருப்பவனை நீர் கொல்ல நினைத்தால் ப்ரஹ்மா, ருத்ரன், இந்த்ரன், யமன் முதலான
ஒருவரும் அவனை ரக்ஷிக்க முடியாது. ஆகையால் எங்கள் ப்ரதிபடரை அடக்க வேண்டும்.

விதி: — ஊருக்கெல்லாம் விதிப்பவர் ப்ரஹ்மா; அவருக்கும் விதிப்பவர் நீர்;
ஸம்ஹரிப்பவனுக்கும் ஸம்ஹாரகர். ஸுரநாயகனையும் நியமிப்பவர். அக்னியைக் கொளுத்துபவர்.
ஜலரூபியாயிருந்து ஸம்ஹரிப்பவர். யமனுக்கும் யமன் என்று யமனே சொன்னான்.
ராவணனிடம் ब्रह्मा स्वयंभुः என்று திருவடி பாடிய சுலோகமும் இங்கே கொள்ளப்பட்டது.
சிறிய திருவடியும் கோயிலில் காவலிருக்கிறார்.
முன் சுலோகத்தில் பெரிய திருவடியினுடையது போல இங்கு சிறிய திருவடியின் ஜிதந்தே.

ப்ரதிபயம் ந கிஞ்சித் –(கதாசந, குதஶ்சந) பயமில்லையென்றது சுருதி.
க்வசந என்று முன்பு சேர்த்தார். இங்கு கிஞ்சித் என்கிறார்.
ஒன்றும் பயத்தை உண்டாக்க மாட்டாது என்று ஒரு பொருள்.கிஞ்சித்தும் (துளிக்கூட) பயமில்லை என்னவுமாம்.

ந: ப்ரதிபடாந் — யமனும் யமபடர்களும் எங்களைக் கண்டு நடுங்க வேண்டியிருக்க,
இம் மனுஷ்ய படர்களைக் கண்டு நாங்கள் நடுங்கும்படி நேரலாமோ?

உன்னிடத்தே அபசாரம் உறுபவனைக் காத்திடவே
உந்தி மலர் நான்முகனும் உருத்திரனும் இந்திரனும்
வன்னியனும் யமதேவு முதலான தேவர்களும்
வலிமையிலோர் என்றைக்குமே ஒருவனை நீ காத்திடவே
எண்ணினாயேல் அவன் தனக்கு எங்கிருந்தும் எவராலும்
எள்ளளவும் அச்சமேதும் ஏற்படாதே நிச்சயமாய்
அன்னவன் நீ அரங்கத்தும் அதுவனைய தலங்களிலும்
அல்லல் தரும் பகைவர் தமை அழித்து ஒழிப்பாய் பெருமானே –

——————————————-

ச கைடப தமோரவிர் மது பராக ஜஜ்ஜா மருத்
ஹிரண்ய கிரி தாரண ஸ்த்ருடித கால நேமி த்ரும
கிமத்ர பஹுநா பஜத் பவ பயோதி முஷ்டிந்தய
த்ரி விக்ரம பவத் க்ரம ஷிபது மங்ஷூ ரங்கத் விஷ — 27-

த்ரிவிக்ரம — த்ரிவிக்ரமனே!;
கைடப தமோ ரவி — கைடபன் என்னும் இருட்டுக்கு ஸூர்யன் போன்றதும்;
மது பராக ஜஞ்ஜா மருத் — மது என்னும் அஸுரனான தூசிக்குப் பெருங்காற்றுப் போன்றதும்;
ஹிரண்ய கிரி தாரண — ஹிரண்யன் என்னும் மலையைப் பிளப்பதும்;
த்ருடித காலநேமி என்னும் வ்ருக்ஷத்தையுடையதும்;
அத்ர — இவ்விஷயத்தில்;
கிம் பஹுநா — அதிகம் சொல்லுவானேன் (சுருக்கமாக);
பஜத் பவ பயோதி முஷ்டிம்தய — ஆச்ரிதருடைய ஸம்சார ஸமுத்ரத்தை ஒரு சிறங்கை ஜலத்தைப் போல் உறிஞ்சி விடுவதுமான;
ஸ: — அந்த (அவ்விதமான);
பவத் க்ரம — உம் பராக்ரமம்;
மங்க்ஷு — சீக்கிரத்தில்;
ரங்கத்விஷ — ரங்க க்ஷேத்ரத்தின் விரோதிகளை;
க்ஷிபது — நிரஸநம் செய்யட்டும்.

ச கைடப தமோ ரவிர்-கைடபன் என்னும் இருட்டுக்கு ஸூர்யன் போன்றதும்
மது பராக ஜஜ்ஜா மருத் -மது என்னும் அஸூரனான தூசுக்கு பெரும் காற்று போன்றதும்
ஹிரண்ய கிரி தாரண -ஹிரண்யன் என்னும் மலையைப் பிளப்பதும் -மலையை கிழிக்க உம் திரு உகிர் போதுமே
ஸ்த்ருடித கால நேமி த்ரும -திருடித்த கால நேமி என்னும் வ்ருக்ஷத்தை யுடையதும்
கிமத்ர பஹுநா -இவ்விஷயத்தில் அதிகம் சொல்லுவான் என்
பஜத் பவ பயோதி முஷ்டிந்தய–ஆஸ்ரிதருடைய சம்சார சமுத்திரத்தை ஒரு சிறங்கை ஜலத்தை போலே உறிஞ்சி விடுவதுமான
த்ரி விக்ரம பவத் க்ரம ஷிபது மங்ஷூ ரங்கத் விஷ — த்ரி விக்ரமனே-அவ்விதமான உம் பராக்ரமம் சீக்கிரத்தில்
ரங்க ஷேத்ரத்தின் விரோதிகளை நிரசனம் செய்யட்டும் –
லோக விக்ராந்தமான உம் -உலகளந்த பொன்னடியை சரணம் பற்றினோம் –
காற்றுக்கும் சண்ட மாருதமான நீர் தான் பெரும் காற்று -ஜகத்தின் பாபங்களை உண்ணுபவன் என்றார் -5-ஸ்லோகத்தில்
இங்கு பாபக் கடலை உறிஞ்சுபவன் என்கிறார் -திவ்ய ஆயுதங்கள் வேண்டாம் –திண்ணிய திருவடியே ரக்ஷகம்-

ஸங்கல்ப ஸூர்யோதயம் இரண்டாம் அங்கத்திலும் இந்தச் சுலோகம் உளது.

உம் திருவடிகளில் அடைக்கலம் புகுந்தவர் அத் திருவடியாலேயே அபயம் பெறுவது உசிதமாகையால்,
உம் உலகளந்த திருவடி பலத்தால் எங்கள் சத்ருக்கள் அடங்கி நாங்கள் அபயம் பெற வேணும்.
“லோகவிக்ராந்தமான உம் சரணங்களை ஶரணம் பற்றினோம்”

முன்பு மருத் தரணி பாவக என்றார். இங்கு ஸூர்ய ஸூர்யனான நீர்தான் ஸூர்யன்.
காற்றுக்கும் சண்ட மாருதமான நீர் தான் பெருங்காற்று என்கிறார்.

முன் இரண்டாம் சுலோகத்தில் ஜகத்தின் பாபங்களையெல்லாம் உண்ணும் பெருவாயன் என்றார்.
இங்கு பாபக் கடலை உறுஞ்சுபவன் என்கிறார். தொடங்கியது போல முடிக்கிறார்.
எங்கள் பாபக் கடலை உம் திருவடி யல்லால் மற்றொன்று கடக்க வல்லதல்ல.
ஆயுதங்களும் வேண்டாம். யுத்தமும் வேண்டாம். உம் திருவடி பலமே போதும்.
ஹிரண்ய கிரி தாரண — மலையைக் கிழிக்க நகங்களே ஆயுதம்.

இருளன்ன கைடபனை இரவியைப் போல் அழித்திட்டாய்
சுழல் காற்றில் புழுதியைப் போல் சிதைந்து அழிந்தான் மதுவரக்கன்
இரணியனை மலையைப் போல் பிளந்து அழித்தாய் திரு வரங்கா
மரத்தைப் போல் முறித்திட்டாய் கால நேமி அரக்கன் தனை
உரைக்க மேலும் வேண்டாவே உன் தனது வீரம் தனை
உன் தனையே புகலாக உற்றவரின் துயர்க்கடலை
உறிஞ்சி விடும் உன் வலிமை அரங்கத்தை நலிந்திடவே
உற்ற பகை அனைவரையும் ஒழித்திடட்டும் விரைவினிலே-

————————————-

யதி ப்ரவர பாரதீ ரஸ பரேண நீதம் வய
பிரபுல்ல பலிதம் சிர பரமிஹ சமம் பிரார்த்தயே
நிரஸ்த ரிபு சம்பவே க்வசன ரங்க முக்யே விபோ
பரஸ்பர ஹிதை ஷிணாம் பரி சரேஷூ மாம் வர்த்தயே–28-

விபோ — ப்ரபுவே! ;
யதி ப்ரவர பாரதீ ரஸ பரேண — யதிராஜனுடைய ஸார தம ஸரஸ்வதீ ரஸாநுபவ கனமாகவே;
வய: — யௌவன வயதானது;
நீதம் — சென்றது;
சிர — தலை;
ப்ரபுல்ல பலிதம் — மலர்ந்த புஷ்பம் போல் வெளுத்து விட்டது.;
பரம் — இனி;
இஹ — இவ்வுலகில்;
க்ஷமம் — (எனக்குத்) தக்கதை;
ப்ரார்த்தயே — வேண்டுகிறேன்;
நிரஸ்த ரிபு ஸம்பவே — சத்ருக்கள் இருக்கலாம் என்று ஸந்தேஹிக்கக் கூட அவச்யமில்லாமல் நிர்ப் பயமான;
ரங்க முக்யே — அரங்கம் முதலிய க்ஷேத்ரங்களில்;
பரஸ்பர ஹிதைஷிணாம் — ஒருவருக்கொருவர் ஹிதத்தையே விரும்பி ஸ்நேஹித்திருப்பவரின்;
பரிஸரேஷு — அருகில்;
மாம் — அடியேனை;
வர்த்தய — இருக்கச் செய்ய வேணும்.

யதி ப்ரவர பாரதீ ரஸ பரேண -யதி ராஜனுடைய சார தம ஸரஸ்வதீ ரஸ அனுபவ கனமாகவே –
ஸ்ரீ பாஷ்ய கால ஷேபம் எமக்கு நித்யம் –
அரங்கத்துக்கு ஆபத்து வந்தால் இது எப்படி நடக்கும்
யதி ராஜரின் கத்யங்களை அனுபவித்து ரசத்தில் மூழ்கி இருக்க வேண்டாமா
நீதம் வய –யவ்வன வயசானது சென்றது
பிரபுல்ல பலிதம் சிர-தலை மலர்ந்த புஷ்ப்பம் போலே வெளுத்து விட்டது
பரமிஹ சமம் பிரார்த்தயே -இனி இவ் உலகில் எனக்கு தாக்கத்தை வேண்டுகிறேன்
நிரஸ்த ரிபு சம்பவே க்வசன ரங்க முக்யே விபோ–சத்ருக்கள் இருக்கலாம் என்று சந்தேகிக்கக் கூட அவசியம் இல்லாமல்
நிர்ப்பயமான -அரங்கம் முதலிய க்ஷேத்ரங்களில் பரஸ்பர ஹிதை ஷிணாம் பரி சரேஷூ மாம் வர்த்தயே–ஒருவருக்கு ஒருவர்
ஹிதத்தையே விரும்பி ஸ்நேஹித்து இருப்பவரின் அருகில் அடியேனை இருக்கச் செய்து அருள வேணும்
ஸ்ரீ ரெங்கத்தில் ஸூ கமாக வாழ தேவரீர் ஆஞ்ஜை ஸ்ரீ பாஷ்யகாரருக்கு அருளினீரே
அவர் திரு நாமத்தை சொல்லி அவர் ஆஞ்ஜையையும் அபி விருத்தியையும்
செய்ய யதி ராஜர் அரங்கம் வாழ வேண்டும் என்று பிரார்த்தித்தால் பெருமாளால் மறுக்க முடியாமல் அருளி தலைக் கட்டுவார்
ஆழ்வானும் ஸ்ரீ ஸூ ந்தர பாஹு ஸ்தவத்தில் யதி ராஜர் உடன் சேர்ந்து வாழ பிரார்த்தித்தால் போலே இவரும் இங்கே அருளிச் செய்கிறார் –

அரங்கம் மட்டுமல்ல, நம் திவ்ய தேசங்கெல்லாம் சத்ரு ஹிம்ஸை இல்லாமல் இருக்க வேணும்.
கச்சியை விட்டு அரங்கம் வந்த எனக்கு ஸ்ரீபாஷ்யாதி ப்ரவசநம் செய்வதிலேயே நீண்ட காலம் இன்பமாய் வயதெல்லாம் சென்றது.
பரஸ்பர ஹிதைஷிகளும் பரம பாகவதர்களுமான பெரியோர்களுடைய ஸத் ஸங்க ரஸமும் அனுபவிக்கப் பட்டது.
இந்த ரஸங்களுக்கு விச்சேதமில்லாமல் ஆயுளின் மிகுதியும் அரங்கத்திலேயே கழிய வேணும்.

யதி ப்ரவர பாரதீ ரஸ பரேண — ஸ்ரீபாஷ்ய காலக்ஷேபம் எமக்கு நித்யம்.
(ப்ரபத்யே ப்ரணவாமாரம் பாஷ்யம் ரங்கமிவாபரம்)
(த்ருஷ்டம் ஸ்ரீரங்கதாமநி) என்று சொல்லாமல் ஸ்ரீபாஷ்ய காலக்ஷேபம் கூடுமோ?
அரங்கத்திற்கு ஆபத்து வந்தால் பாஷ்ய காலக்ஷேபம் இன்பமாக எப்படி நடக்கும்?
நிர்ப்பரராயினும் பாஷ்யத்தின் ரஸபரம் அளவேயில்லை.
யதிராஜனுடைய கத்யங்களை தினமும் அனுஸந்தித்து ரஸத்தில் முழுகுகிறோம்.
இங்கேயே ஸ்ரீரங்கத்தில் ஸுகமாக வஸிப்பாய் என்று தேவரீர் நியமனத்தைச் சொல்லிக் கொண்டே யிருக்கிறோம்.
யதிராஜன் திருநாமத்தைச் சொல்லி, அவர் ஆக்ஞையை விருத்தியும் அபிவிருத்தியும் செய்ய வேண்டுமென்றும்,
யதிராஜனுடைய அரங்கம் வாழவேண்டுமென்றும் பிரார்த்தித்தால் பெருமாள் மறுக்க மாட்டார் என்று முடிவில் அதைப் பிரார்த்திக்கிறார்.
ஸுந்தரபாஹு ஸ்தவத்தில் முடிவில் ஆழ்வானும் யதிராஜனோடு அரங்கத்தில் வஸிப்பதைப் பிரார்த்தித்தார்.

எதிராசர் சொற் சுவையை அனுபவித்தே இளமை செல
என் தலையும் நரைத்ததுவே முற்றிலும் அப்படியே
எது வொன்று என் தனக்கே இனியும் இங்கே ஏற்றதுவோ
அதனை நீயே அளித்திடுவாய் அரங்க நகர் பெருமானே
எதிரிகளாய் எவருமே இருந்திடாதே நிலை கொண்ட
எழில் அரங்கம் போல் ஏதும் இடம் ஒன்றில் ஓர் ஒருவர்
இதம் தனையே விரும்புவரின் இடையினிலே அடியேனை
இருக்க வைத்து வரும் நாளை இனிதாக்கி அருள்வாயே –

———————————————————————

பிரபுத்த குரு வீக்ஷண பிரதித வேங்கடே சோத்பவாம்
இமாம பய ஸித்தயே படது ரங்க பர்த்து ஸ்துதிம்
பயம் த்யஜத பத்ரமித்ய பிததத் ச ச கேசவ
ஸ்வயம் கன க்ருணா நிதிர்க்குணகணேந கோபாயதி–29-

ப்ரபுத்த — சிறந்த ஞானமுள்ள;
குரு — ஆசார்யனுடைய;
வீக்ஷண — கடாக்ஷத்தால்;
ப்ரதித — யஶஸ்ஸைப் பெற்ற;
வேங்கடேச — வேங்கடேசரிடமிருந்து;
உத்பவாம் — தோன்றிய;
இமாம் — இந்த;
ஸ்துதிம் — ஸ்தோத்ரத்தை;
ரங்கபர்த்து — ரங்கப்பிரபுவின்;
அபயஸித்தயே — அபயம் ஸித்திப்பதற்காக; (கோயில் நிர்பயமாயிருப்பதற்காக);
படத — படியுங்கோள்;
பயம் — பயத்தை;
த்யஜத — விட்டுவிடுங்கள்;
(அஞ்சல் ! அஞ்சல்!);
வ — உங்களுக்கு;
பத்ரம் — சுபம் (உண்டாகட்டும்);
இதி — என்று;
அபிததத் — சொல்லிக் கொண்டு;
கன க்ருணா நிதி — கருணாநிதியான ;
ஸ — அந்த;
கேஶவ — (ப்ரஹ்ம, ஈசாதிகளுக்குக் காரணமான) கேசவன்;
குணகணேன — தம் கல்யாண குணங்களால்;
கோபாயதி — ரக்ஷிப்பான்.

பிரபுத்த குரு வீக்ஷண -சிறந்த ஞானம் உள்ள ஆச்சார்யர் கடாக்ஷத்தினால்
பிரதித வேங்கடே சோத்பவாம் -யசஸைப் பெற்ற வேங்கடேசர் இடம் இருந்து தோன்றிய
இமாம பய ஸித்தயே படது ரங்க பர்த்து ஸ்துதிம்-இந்த ஸ்தோத்ரத்தை -ஸ்ரீ ரெங்க பிரபுவின் அபய சித்திக்காக -ஸ்ரீ ரெங்கம்
திருக் கோயில் நிர்ப்பயமாய் இருப்பதற்காக -படியுங்கோள்
பயம் த்யஜத -பயத்தை விட்டு விடுங்கோள் -அஞ்சேல் அஞ்சேல்
பத்ரமித்ய பிததத் ச ச -சுபம் உண்டாகாட்டும் என்று சொல்லிக் கொண்டு
கேசவ -ஸ்வயம் கன க்ருணா நிதிர்க்குணகணேந கோபாயதி-கருணா நிதியான அந்த கேசவன் –ப்ரஹ்ம ருத்ரர்களுக்கும் ஈசன்
சர்வ காரணத்வன்-ரஷித்து அருள்வான் -கல்யாண குண அனுபவமே -பிரயோஜனம் -சோஸ்னுதே சர்வான் காமான் –

குணகணேன கோபாயதி — அவருடைய கல்யாண குணங்களின் கூட்டங்களின் அனுபவமே உங்களுக்கு ப்ரயோஜனம் .
அந்த குணங்களை அனுபவிக்கத் தருவதே எங்களுக்கும் ரக்ஷணம்.
(ஸோ ஶ்நுதே ஸர்வாந் காமாந்) ஸ்வயம் அபிததத் — யதிராஜனுடைய திருநாமத்தையும் ஸரஸ்வதீரஸத்தையும் பேசவே,
பெருமாளும் வாய்திறந்து பேசுவார்.
‘பேரருளாளர்’ போல் சோதி வாய் திறந்து பேசுவார் என்பதைக் காட்ட கனக்ருணாநிதி — அருள்நிரம்பிய நிதி என்கிறார்.

இந்த ஸ்துதி ஸ்ரீரங்கபர்த்தாவான ரங்கநாதன் விஷயமென்றும்,
இதன் ப்ரயோஜனம் அரங்கத்திற்கும் ரங்க பர்த்தாவுக்கும் அபய ஸித்தியே என்றும்
விஷயம் ப்ரயோஜனம் இரண்டிலும் வரவேண்டும் என்பதற்காக “ரங்கபர்த்து” என்னும் பதம்
‘அபயஸித்தயே’, ‘ஸ்துதிம்’ என்ற இரண்டுக்கும் நடுவில் இருக்கிறது.
அவன் விஷயமான நமது அச்சம் தீருவதும் அவனைத் துதித்தை தான் ஸித்திக்க வேணும்.

அரங்கத்துக்கு ரெங்க பர்த்துக்கும் அபய சித்தியே என்னும் விஷயம் இந்த பிரபந்த தாத்பர்யம் என்று
ரங்க பர்த்து என்ற பதம் -அபய ஸித்தயே -ஸ்துதிம் இரண்டுக்கும் நடுவில் வைத்து அருளிச் செய்கிறார்

பாலகாண்டத்தில் அஶ்வமேதத்தில் ப்ரஹ்மா முதலிய தேவர்கள் துதிக்கையில்,
(பயம் த்யஜத, பத்ரம் வ:) என்று அபயமளித்த வார்த்தையையே இங்கே அமைக்கிறார்.

முதலில் துர்யம் மஹ என்று ஆரம்பித்தது போல்
முடிவில் கைடபதமோரவி மதுபராகஜஞ்ஜாமருத் என்று
மத்ஸ ஹம்ஸ ஹயக்ரீவாவதாரங்களைப் பேசுகிறார்.

(மத்ஸ்ய அஶ்வ கச்சப) என்று சுகரும் மத்ஸ்யாவதாரத்தோடு ‘அஶ்வ”அவதாரத்தையும் அனுஸந்தித்தார்.
“ஹம்ஸ மத்ஸ்ய ஹயக்ரீவ நாராயண கீதாசார்யாத் யவதாரங்களாலே தானே வெளி நின்று
தத்வ ஹிதங்களைப் பிரகாஶிப்பித்தும்” என்று ஸ்ரீரஹஸ்யத்ரயஸாரம் குருபரம்பராதிகாரம்.

கேஶவ — அதிலங்கித த்ருஹிண ஶம்பு ஶக்ராதிகம் என்று முதல் சுலோகத்தில் விஸ்தரித்துக் கூறியதை
இந்த ஒரு பதத்தால் சுருங்கக் காட்டுகிறார்.
(ந தைவம் கேஶவாத் பரம்) என்று மஹரிஷிகளின் ஸபையில்
வேதாசார்யன் தம் கையைத் தூக்கி சபதம் செய்தது ஸூசிப்பிக்கப் படுகிறது.
அப்படியே “க:” என்ற ப்ரஹ்மாவின் பெயர், நான் ஸர்வதேஹீக்களுக்கும் ஈசன்,
நாங்கள் இருவரும் உம் திருமேனியிலிருந்து பிறந்தவர்கள். ஆகையால் உமக்குக் “கேஶவன்” என்று திருநாமம் என்று
எதிரிகையாலே வீடு தீட்டானபடி அவர்கள் சொன்ன பாசுரங்களையே ஸூசிப்பித்து ஸ்திரப் படுத்துகிறார்.

அபீதி: என்று தொடங்கி ஓபாயதி என்று முடிப்பதால்,
அபயத்தை விரும்புவோருக்கு இந்த ஸ்தோத்திரத்தால் த்ருப்தனான ஸர்வேஶ்வரன்
அபய ப்ரதானம் செய்து ரக்ஷிக்கிறான் என்ற ப்ரஸித்தி சொல்லப் படுகிறது.

உயர் ஞான குருக்கள் தம் உளம் குளிரும் நோக்கு தன்னால்
உறும் புகழோன் வேங்கடேசன் உளத்துதித்த அரங்கனது
வியப்பான இத்துதியை விருப்போடு பயிலுங்கள்
விட்டகலும் பயம் எல்லாம் விரைவாக உமை எல்லாமே
பயம் தன்னை ஒழித்திடுவீர் பெரும் நலனே உறுவீர் என
பரிந்து உரைத்த மிகும் கருணை பெரும் நிதியாம் கேசவனே
உயர்ந்த நல்ல பண்புகளின் ஒருங்கு இணைந்த கூட்டத்தால்
உம்மை எலாம் எவ்விதத்தும் காத்து அருள்வான் தானாவே –

——————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேதாந்த தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ யதீந்த்ர மத தீபிகை-1-ஸ்ரீ நிவாஸாச்சார்யார் ஸ்வாமிகள்–ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் —

January 24, 2017

ஸ்ரீ வேங்கடேசம் கரி சைல நாதம் ஸ்ரீ தேவ ராஜம் கடிகாத்ரி ஸிம்ஹம்
கிருஷ்னேன சகம் யதிராஜம் இதே ஸ்வப்னே ச த்ருஷ்டன் மம தேசிகேந்த்ரன் –
யதீஸ்வரம் ப்ராணமாம் யஹம் வேதாந்தர்யம் மஹா குரும் கரோமி
பால போதார்த்தம் யதீந்த்ர மத தீபிகம்

சண்ட மாருதம் -சூறாவளிக்க காற்று -ஸ்வாமி தொட்டாச்சார்யார் –ஸ்ரீ நிவாஸ மகா குரு-சதா தூஷிணி -தேசிகன் -மதி விகற்பத்தால் நூறு –
அனுபவத்தி பொருந்தாமை -உபபத்தி -பொருந்துவது
பஞ்ச மகா விஜயம் -என்ற கிரந்தம் சாதித்தார் –
அப்பையா தீக்ஷிதர் உடன் வாதம் -செய்தவர் –

பராங்குச பரகால யதிவராதிகள் பிரதிஷடை இருந்தால் தான் தீர்த்தம் பிரசாதம் சுவீகரிப்பார்கள் நம் பூர்வர்கள் –
கோவிந்தராஜன் -திருச் சிதம்பரம் –கோயில் பிரதிஷ்டை-மூவாயிரம் -ஆஷேபம் –
சோழ சிம்மபுரம் -யோக நரசிம்மர் -கீழ் கோயில் -இவர் பிரதிஷ்டை -அக்கார கனி -வாதூல ஸ்ரீ நிவாசார்ய -ஸ்ரீ நிவாஸ மஹா குரு –
ஸ்ரீ நிவாஸாச்சார்யார் -திருமலை அடி வாரம் -யோகம்-சிஷ்யர் -1552-1624 / 100 வருஷம் கழித்து –

கிரந்த நிர்மாணம் ஆஞ்ஜை
யதீந்த்ர மத தீபிகை -வைதிக மதம் –பிரகாசப்படுத்தி -சுலபமாக -தெளிவாக –
பின்பு வேதார்த்த தீபம் –ஸ்ரீ பாஷ்யம் —ஸ்ரீ வசன பூஷணம் பர்யந்தம்
ஸ்ரீ வேங்கடேசன் கரி சைல நாதன் கடிகாத்ரி சிம்மம் சுதா வல்லி பரிஷ்வ்ங்க ஸூ ரபி க்ருத வக்ஷஸ் –
கிருஷ்ண -யதிராஜாமீடே -பார்த்தசாரதி தானே ஸ்வாமி –
ஸ்வப்னம் -ஸ்வாமி தொட்டாச்சார்யார்

யதீஸ்வரர் -தேசிகர் -யதீந்த்ர மத தீபிகாம் -பாலருக்கு ஞானம் புகட்ட -த்யான ஸ்லோகம் –
தனியன் போலே -கர்த்தாவே அருளி –
ஸ்ரீமத் நாராயண ஏவ விசிஷ்டதத்வம் -கூடிய சம்ப்ரதாயம் —
சித் அசித் –தத்வம் -இது -விசிஷ்டதத்வம் -விசேஷணங்கள் இவை
-பிரகாரி -பிரகார பாவம் – சரீராத்மா -அப்ருதக் சித்த விசேஷணம் –
பக்தி பிரபத்தி -நாராயணனே உபாயம் -பக்தி பிரபத்தி -அஜீரணம் தொலைய வேண்டுமே அனுபவிக்க –அதிகாரி ஸ்வரூபம்
ச ஏவ உபாயம் -அப்ராக்ருத திவ்ய மண்டலம் தேசத்தில் இருப்பவன் -இதுவே புருஷார்த்தம் –

தத்வம் ஹிதம் புருஷார்த்தம் -வேதாந்தம் இதுவே சொல்லும்
அப்ராக்ருத தேச விசிஷ்டன் -அமரர்கள் அதிபதி -புருஷார்த்தம்
வியாச போதாயன குகை தேவர் —பராங்குச பரகால நாத யமுனா யதீந்த்ராதி -உபய வேதாந்த
மதம் ஸ்தாபித்து –
வேதாந்த அநு சாரிணி
யதா மதி -மகாச்சார்யா கிருபை பற்றி அடியேன் -ஸங்க்ரஹேன பிரகாசிக்கிறேன் -யதீந்த்ர மத தீபிகா
-சா ரீரிகம் பரி பாஷா -20 அத்யாயம் -12 /4 ஜைமினி -பூர்வ மீமாம்சை 12–கர்மம் -4 தேவதா –உத்தர மீமீம்ஸை 4 வேத வியாசர் –
ஜகம் சரீரம் -சரீரமாக கொண்ட ப்ரஹ்ம-விசாரம் –
10 அவதாரங்கள் இதிலும் -பெருமாள் ஆழ்வார் திருவாய் மொழி இதுவும் —

சர்வம் பதார்த்தம் ஜாதம் -பிரமாணம் பிரமேயம்–இரண்டில் அடங்கும்பிரமா
புத்தி ஞானம் -புத்தியால் அறிவது –இதுவோ இதற்குள் உண்டே
நமக்கு பிரமாணம் ஆச்சார்யர் திரு வாக்கு –இதனால்ஞானம் வந்து -ஞானத்துக்கு விஷயம் –
ஒவ் ஒன்றையும் இரண்டாக பிரித்து மேலே
விஸ்வரூபம் பார்த்து தன்னையும் அர்ஜுனன் பார்த்தால் போலே -எல்லாம் பகடைக்காய் -என்று கண்டான்

மூன்று பிரமாணங்கள் —
ப்ரமேயம் இரண்டு வகை -த்ரவ்யம் -அத்ரவ்யம் / கோபம் குணம் ஜாதி த்ரவ்யம்
த்ரவ்யம் -ஜடம் அஜடம் இரண்டு வகை -தனக்கு தான் தெரியாதே -ஸ்வயம் பிரகாசம் -தானே ஒளி விடும் –
விளக்கு – மற்றவற்றை காட்டும் -தனக்கு விளக்கு என்று விளங்காதே -ஆத்மா தான் நான் என்று அறிவான் -ஸ்வைஸ் மை பிரகாசத்வம் –
ஜடம் -பிரகிருதி காலம் -இரண்டு வகை -முக்குணம் சேர்ந்த
பிரகிருதி -சதுர் வித சதுர் விம்சதி தத்வம் -24-கர்மா ஞான இந்திரியங்கள் சப்த தன்மாத்திரைகள் -பூதங்கள்
-மனஸ் -மகான் அஹங்காரம் -மூல பிரகிருதி -23 -பிராகிருதம் -பிரகிருதி இடம் வந்தவை என்றவாறு
தன்னைக் கண்டால்  பாம்பை கண்டால்  போலே -கடித்த பாம்பு கடி உண்ட பாம்பு அனந்தாழ்வான் –
காலம் உபாதி பேதேனே மூன்று -ஸூர்ய கதி -பூத பவிஷ்ய வர்த்தமானம் –
அஜடம் –த்விதம்-வைகுண்டம் தர்ம பூத ஞானம் /பராக்கு ப்ரத்யக்கு -தனக்கு உள் நோக்கி / வெளி நோக்கு –
ஆத்மா பரமாத்மா பிரத்யக் —
வைகுண்டம் தர்ம பூத ஞானம் -பராக் -நித்ய விபூதியும் தர்ம பூத ஞானம் -தானே பிரகாசிக்கும் –
இந்த நான்கும் அஜடம் –

ஜீவன் -பத்த முக்த நித்யர் மூன்று வகை உண்டே
பத்தர் -இரண்டு வகை -புபூஷு முமுஷூ –
புபுஷூ-இரண்டு வகை -அர்த்தக்காம பரர்/ தர்ம பரர்
தசரதர் விசுவாமித்திரர் -அஹம் வேதமி -சொல்லும் பொழுது பிரித்து சொன்னாரே
தர்ம பரர் -தேவதாந்த்ர பரர்கள்/ பகவத் பரர்கள்
முமுஷூ இரண்டு வகை -கைவல்யம் -ஸ்ரீ வைகுண்டம் -பகவத் லாபம்
மோக்ஷ பரர் த்விதம் -பக்தர் பிரபன்னர் –அவலம்பித்து
பிரபன்னர் த்விதம் -ஏகாந்தி பரமை காந்தி
உண்ணும் சோறு இத்யாதி என்று இருப்பார்கள் -பகவத் சாஷாத்காரம் இந்த லீலா விபூதியில் கண்டவர்கள் –
கொடு உலகம் காட்டேல்-இனி இனி என்று துடிப்பார்கள் –பரமை காந்திகள் -த்விதம் -திருப்தன்– ஆர்த்தன்
-தேக அவசனத்தில் திருப்தன் -ஆர்த்தியின் துடித்தாலும் அவன் சங்கல்பத்தால் -இருத்தி வைத்தான் -நின் கண் வேட்க்கை எழுவிப்பான் —
கர்மா சம்பந்தத்தால் இல்லை கிருபா சங்கல்பத்தால் வைத்து அருளினான் —
ஈஸ்வரன் -பர வ்யூஹ விபவ அந்தர்யாமி அர்ச்சை -ஐந்து விதம் –
பற்றி -விட வேண்டும் -மால் பால் மனம் சுழிப்ப மங்கையர் தோள் கை விட்டு -பற்ற வைத்து விடுவிப்பவனும் அவனே
பர -ஏகதா –இது ஒன்றே ஓன்று
வ்யூஹம் நான்கு–வாசு தேவ -ப்ரத்யும்ன -அநிருத்ய -சங்கர்ஷண -கேசவாதி 12 ஆக
வைபவம் -ஜன்மம் பல பல -மத்ஸ்யாதி
அந்தர்யாமி -பிரதி சரீரம் -உண்டே
அர்ச்சா -ஸ்ரீ ரெங்கம் -வேங்கடாத்ரி -ஹஸ்திகிரி கடிகாசலம் –சகல மனுஜ நயன–சதா – விஷய தாங்க சேவை –
அத்ரவ்யம் -சத்வம் ரஜஸ் தமஸ் /சப்த -5-/ சம்யோக சக்தி -10-
சொன்ன க்ரமத்தில்-விவரித்து அருளுகிறார் -அடையாளங்கள் சொல்லி –

——————————————————–

சர்வம் வஸ்து ஜாதம் -த்ரவ்யம் பாகங்கள் முன்பு பார்த்தோம்
அத்ரவ்யம் -10-
பிரகிருதி-24-தத்வங்கள் -பஞ்ச தன்மாத்ரங்கள் இவற்றுள் சேர்த்து -அஹங்காரம் தத்வம் மூன்றாக -பிரிந்து
-சாத்விக கர்மா ஞான இந்திரியங்கள் மனஸ் -தாமச -அடுத்த -10-சப்த ஸ்பர்ச –தன்மாத்ராங்கள் முதலில்
இடைப்பட்ட நிலை பஞ்ச பூதங்கள் வருவதற்கு முன்—ஆகாசம் -சப்தம் / வாயு -ஸ்பர்சம் /ரூபம் ரசம் கந்தம் -இவையும் த்ரவ்யங்கள் –ராஜஸ –
அத்ரவ்யங்கள் -ஸ்பர்சம் ரூபம் இவை இதிலும் -முன்பு த்ரவ்யம் இதில் குணங்கள் குறிக்கும் -ஆகாசம் உருவான பின்பு குணம் இருக்குமே
பூர்ணமாக உத்பூதங்களாக மலர்ந்து இருக்குமே –தன்மாத்ர ஸ்திதி த்ரவ்யம் –என்றவாறு –

இனி மேல் பிரமாணம் –
பிரத்யக்ஷம் அனுமானம் சப்தம் மூன்றும் –
அஷ-கண் முன்னால் -லக்ஷனையால் -காது மூக்கு நாக்கு தோல்-உள்ளதை உள்ளபடி அறிதல் பிரமாணம்
-வியவஹாரம் -இருக்க வேண்டும் -வாசிக காயிக –யதாவஸ்திதமாக வியாவஹாரமாக இருக்க வேண்டும் –
பக்தி பிரபத்தியில் செயல் பட -அடிப்படை பிரமாணம் –
ப்ரத்யக்ஷம் -கரணம் கொண்டு பிரேமா ஏற்படும் -புத்தி -உள்ளதை உள்ளபடி அறிதல் -பிரமேயம் முன்பு பார்த்தோம் –
அயோக விவச்சேதம் அந்யயோக விவச்சேதம் வாதங்கள்

பிரமாணம் லஷ்யம் -பிரேமா-க்கு கருவி -கரணம் லக்ஷணம் -அடையாளம் -ராமனுக்கு தம்பி ராமானுஜம்
யதா வஸ்தித்த விவகார அனுகுணம் ஞானத்தவம் லக்ஷணம் -உள்ளத்தை உள்ளபடி அறிந்து விவாஹரித்து இருப்பது
முத்துச் சிப்பி வெள்ளி -பிரமிக்கும் ஞானமே பிரமாணம் இருக்காதே -யதா வஸ்தித -வியவஹாரம் இரண்டும் சொல்லி –
பிரமித்து விவாஹரிக்கலாம் -வெளிச்சம் இல்லாமல் வெள்ளியாக பிரமித்து -யதாவஸிதம் இல்லையே
அதனால் வெறும் ஞானமே பிரமாணம் இல்லை –

சம்சயம் அந்யதா ஞானம் -விபர்யயம் -மூன்றும் தள்ளி –
கீழ் வானம் –கோபிகள் முகம் சூர்யன் போலே -கிழக்கே பார்க்க கிழக்கில் பட்டு பிரதிபலிக்க -எருமை மாடு -இருள் விலக-
ஒன்றை மாற்று ஒன்றாக -விபரீதம் தர்மி / ஸ்தம்பமா புருஷனா சம்சயம் / தர்மி மாற்றி கிரஹித்தல் விபரீதம் /
தர்மம் சங்கம் வெண்மை மஞ்சள் -தப்பாக நினைத்தால் அந்யதா ஞானம் –
ரகஸ்யம் -தேகம் ஜீவன் வெவேறாக இருக்க ஒன்றாக -விபரீத ஞானம்
சேஷத்வம் புரியாமல் ஸ்வ தந்திரம் நினைப்பது அந்யதா ஞானம்
இது தான் தெரிந்து கொள்ள வேண்டியது

தர்மி -விருத்த அநேக விசேஷங்கள் ஸ்புரிக்க சம்சயம் ஆகும் –
அஞ்ஞானம் -ஞானத்தின் வகை –
தர்மம் மாற்றி -அந்யதா ஞானம் -பிராந்தி உபபாதனம் -கர்த்ருத்வ -ஜீவன் -கர்த்தா பகவான்
-நம் குற்றம் அவன் மேல் பூர்வ பசி குழப்ப -அந்யதா ஞானம் -இதுவும்
விபரீதம் -தர்மியையே மாற்றி -வஸ்துவை வஸ்வந்தர ஞானம் —
உள்ளதை உள்ளபடி அறிந்து வியாவஹரிப்பது -மூலம் இவை போகும் –

பிரேமா -புத்தி பார்த்தோம் இனி கரணம் –
அடையாளம் மூன்று தூஷணங்கள்-லக்ஷணம் -அடையாளம்
அவ்யாப்தி –அதி வியாப்தி -அசம்பவம்
லக்ஷய ஏக தேசம் —பசு மாட்டுக்கு அடையாளம் நீல நிறம் -அவ்யாப்தி வரும் -வேறு நிற மாடு உண்டே
அதி வியாப்தி -கொம்பு உள்ளது பசு -வேறு மான் இவற்றுக்கும் கொம்பு உண்டே –
அசம்பவம் -கண்ணால் காணப் படுபவன் ஜீவாத்மா -இருக்கவே முடியாதே

மூன்று தூஷணங்கள்
ஜீவன் குணத்ரயம் -வஸ்யம்-சொன்னால் அவ்யாப்தி வரும் -முக்தர் நித்யர் இவர்களுக்கு இல்லையே -பத்த ஜீவர் மட்டும் தகும்
ஞான குணகத்வம் -அதி வியாப்தி வரும் -பரமாத்மா இடமும் உண்டே
சஷூர் மூலம் பார்க்கலாம் அசம்பவம்
இந்த ஆறும் இல்லாமல் -கூரிய ஞானம் -வந்து நிறைய அனுபவிக்க முடியுமே –
நல்ல ஞானம் கால விளம்பம் இல்லாமல் சாதித்து கொடுப்பது -பிரமாணம் -சாதக தமம் கரணம் -சாதகம் -சாதக தரம் -சாதக தாமம் -அதிசயம்
-வேறு பிரமாணத்தால் அறிவிக்கப் படாத அபூர்வ -விஷயம் வேதம் சொல்லும் -ஸ்நாத்வா புஞ்சீத -குளிப்பதும் சாப்பிடுவதும் தெரியும் –
ஜகம் அறிவோம் பரமாத்மா அறிவோம் -ஜகத்தை படைத்தவன் பரமாத்மா வேதம் சொல்லும்

சாஷாத் காரி -நேரே உள்ள படி அறியும் கரணம் பிரத்யக்ஷம் –பிரேமா -உள்ளபடி -அறிவதே முன்பே பார்த்தோம் –
நேரே -அனுமானம் சப்தம் இவற்றில் வேறு படுத்த –
துஷ்ட இந்திரிய ஜன்ய வியாவர்த்தம் -பிரேமா -உள்ளபடி அறிதல் –கண் புரை நோய் போலே –
பிரத்யக்ஷம் த்விதம்
முதல் கிரஹணம் பிரதமம் -நிர்விகல்பிக்க -மனுஷர் வருவதை அறிந்து
த்விதீய சவிகல்பம் -முழு அடையாளங்கள் உடன் அறிதல் -எல்லா வேறுபாடுகள் உடன் கிரஹித்து
குண சமஸ்தானாதி விசிஷ்டா – பிரதம பிண்ட கிரஹணம் -நிர்விகல்பிக்க பிரத்யக்ஷம்

வஸ்து ஜாதி பின்பு அறியும் அறிவு -சவிகல்பிக்க
இரண்டுமே விசிஷ்ட கிரஹணம் -தர்மி தர்மம் சேர்ந்தே
தர்மி இல்லாமல் தர்மம் கிரஹிக்கப் படாதே –
அவிசிஷ்டா கிராஹிணி -ஞானஸ்ய – -தர்மி விட்டு தர்மம் மட்டும் காண்பது லோகத்தில் இல்லையே -அனுபபத்தி
வஸ்து கிரஹணம் என்றால் என்ன –
ஆத்மா -மனசில் -அது இந்த்ரியங்களில் -அவை பிராப்பயம் பொருளில் பட்டு -வேகமாக போய் வரும் -இந்த பாதை –
ஞானம் மழுங்கலாம் -ஆத்மாவிலும் மனசிலும் இந்த்ரியங்களிலும்
அயம் கட பட -கடாதி ரூபம் அர்த்தஸ்ய சஷூராதி இந்திரியங்கள் -சந்நிஹர்க்ஷம்-இடத்திலும் நேரத்திலும்
-சந்நிதி இருக்க வேண்டுமே –சஷூஷா பிரத்யக்ஷம் / ஸ்பர்ஸனா போல்வன –

த்ரவ்யம் கிரஹணம் சம்யோகம் -அர்த்த இந்திரிய வஸ்து -சம்பந்தம் –குடம் பார்த்து குடம் என்று அறிந்து
த்ரவ்ய கத குண குண கிரஹணம் -சமவாய அநஅங்கீகராத் –
சமவாயம் ஏற்றுக் கொள்ளாமல் சம்யுக்த ஆஸ்ரியிக்கும் குணம் -குடத்தில் பச்சை வர்ணம் –
பச்சை குடம் -தனியாக குடம் பச்சை கிரஹணம் இல்லையே
ஸ்வரூபத்தால் சம்பந்தம் -சிகப்பும் நூலும் –சமவாயம் தார்க்கீகன் -மூன்றாவது -ஏழு வகை சொன்னான்
த்ரவ்யம் குண –சமவாயம் தனி பதார்த்தமாக கொள்வான்
அர்வாசீனம் -அநர்வாசீனம் பிரத்யக்ஷம் -தாழ்ந்த உயர்ந்த -வெறும் இந்திரிய பலத்தால் அறிவது தாழ்ந்த –

இந்திரியங்கள் இல்லாமல் யோகம் / அதற்கு மேல் பகவத் கிருபையால் -மூன்று வகை –
மயர்வற மதி நலம் அருள பெற்றது போலே
மயர்வு உடன் இருந்தால் தாழ்ந்த பிரத்யக்ஷம் —
அர்வாசீனம்
இந்திரிய சாபேஷம் -அ நபேஷம் -ஸ்வயம் சித்தம் /திவ்யம் தாதாமி -அவன் கிருபையால் -நூற்றுவர் வீய
ஆழ்வார் -தத்வ தர்ச வசனம் ஐ ஐந்து முடிப்பான் -ப்ரீத்தி காரிய கைங்கர்யம் புருஷார்த்தம் காட்ட –
கீதை விட திருவாய்மொழி ஏற்றம் –

அருளின பக்தியால் –மூவாறு மாசம் மோஹித்து-வால்மீகி போல்வாரில் வாசி –

இருத்தும் வியந்து மூன்று தத்துக்கு பிழைத்த ஆழ்வாரை பார்த்துக் கொண்டே இருந்தானே –
இந்திரிய / யோக / பகவத் கிருபையால் லப்த -பர்வதம் பரம அணு–கோதை ஆண்டாள் ஏற்றம்
பிரத்யக்ஷம் படி ப்ரஹ்மம் கண்டவர் ஆழ்வார்கள்
மாறன் அடி -பூ மன்னு மாது பொருந்திய மாறன் அடி பணிந்து உய்ந்தவர் அடி பற்றி –
ஆதாரம் புரிந்து -பண்ணினாலும் புரியாமல் பற்றினாலும் உஜ்ஜீவனம் –
ஆச்சார்யர் குணம் ஞானத்துக்கு இலக்காக்கி தோஷம் இருந்தால் அஞ்ஞானத்துக்கு இலக்காக்கி –
அடிப்படை மாறாமல் பேசிற்றே பேசும் ஏக கண்டர்கள்

இந்திரிய அநபேஷ நித்ய முக்தர்கள் —சங்கல்ப மாத்ரத்தால் -அநர்வாசீனம் -இந்திரியங்கள் உதவி இல்லாமல் –
ப்ராசங்கிக்கமாக சேர்த்து இங்கு அருளி –
இது பிரத்யக்ஷத்தில் சேராது -என்றவாறு –

அனுஷ்டானம் முடித்து வந்தோம் -சுருக்கமாக சொல்லி -விவரித்து சொல்லியும் -ஸ்ம்ருதி தனியாக சொல்லலாமோ
முன்பே பார்த்த -பிரத்யக்ஷ ஞானம் -மனம் பதிவு –காலப் போக்கால் நோய் வாய் பட்டு போகலாம் -மீண்டும் பார்த்தால் நினைவு வரலாமே
உள்ளதை உள்ளபடி அறிய இது உதவுவதால் தனியாக சொன்னால் என்ன -ஸ்ம்ருதிக்கும் —ஸம்ஸ்கார சாபேஷ்த்வாத்
-முன்பே பார்த்த பதிவு இப்பொழுது உத்பூதம்-பிரத்யஷத்துக்கு மூலம் -சம்ஸ்காரம் இதை எதிர் பார்க்கும்
பூர்வ அனுபவ ஜன்ய ஸம்ஸ்கார மாத்ர ஜன்ய ஞானம் –ஸ்ம்ருதி – என்பதால் -அதிலேயே சேர்க்கலாம்
தோன்றி இருக்கும் சமஸ்காரம் காரணம் -ஸ்ம்ருதி -நினைவு கொள்ளுதல் –
சத்ருச பதார்த்தம் பார்த்து சம்ஸ்காரம் நினைவு வரும்
அதிருஷ்ட-பகவத் கிருபையால் -ஸ்ம்ருதி வரலாம்

சிந்தை மூலம் வரலாம்
யஞ்ஞதத்தன் தேவதத்தன் பிரியாமல் வருவதால் -சஹச்சர்யம் நாலாவது காரணம் –ஸ்ம்ருதிக்கு
எங்கேயோ இருந்து ஸ்ரீ ரெங்கம் திவ்ய தேச சிந்தனை வருமே -கமனீய திவ்ய மங்கல விக்ரஹ ஸ்ம்ருதி
அனுபூதி விஷயம் தான் ஸ்ம்ருதி -பிரத்யக்ஷம் அனுமானம் சப்தம் இவற்றுக்குள் சேறும் –
பிரத்யபிஞ்ஞா
-அக்ஷம் மாறி –பார்த்த பதார்த்தம் மீண்டும் கண் முன்னால் வருவது -சோயம் தேவ தத்தன் போலே
-இது ஸ்ம்ருதி இல்லை -அதே -என்ற நினைவு -ஆள் இல்லாமல் இல்லை -அவரே நேரே வர –இதுவும் அந்தர்பாவம் –

—————————————————

குறையல் பிரான் திருவடிக் கீழ் விள்ளாத அன்பன் இராமானுசன் -இன்றும் திருவடியில் சேவை யுண்டே திரு நகரியில் —
வியாசம் நாராயணன் வித்தி -வேதாந்தம் உள்ளபடி சொல்லி -அத்தையே ஸ்ரீ பாஷ்யத்தில் காட்டி அருளி
-அருளிச் செயல்களைக் கொண்டே ஸூ த்ரங்களை ஒருங்க விடுவார் –
சொப்பனமும் பிரம்மமும் உண்மை -தத்வ த்ரயங்களும் சத்யம் நித்யம் -எந்த ஞானமும் ஸத்ய ஞானமாகவே இருக்க வேண்டும் –
பொய் நின்ற ஞானம் -மாயை -ஜகம் மித்யா சொல்வார்கள் நடுவில் –

சாத்ருஸ்யம்-அதிருஷ்டம் -சிந்தா –சாஹசர்யம் -நான்கு காரணங்களால் ஸ்ம்ருதி -சம்ஸ்காரம் ஏற்பட்டு –
பிரத்யக்ஷம் இருந்தால் தான் சம்ஸ்காரம் வரும்
ப்ரத்ய பிஞ்ஜை ஜை –மீண்டும் பார்த்து -அவரே இவர் -ஸ்ம்ருதி விட கொஞ்சம் மாறி-அபாவம்-   –
நையாகிகன்-த்ரவ்யங்கள் -50-பிரித்து
பதார்த்தங்கள் -சொல் பொருள் -பதமும் அர்த்தமும் -ஏழு -த்ரவ்யம் குணம் கர்மம் -இத்யாதி —சமவாயம் -அபாவம்
சமவாயம் நூல் பச்சை வர்ணம் -ஸ்வரூபேண சேர்ந்து இருக்கும் வேதாந்தம்
அபாவம் இல்லாமை தனி பொருள் என்பான்
பிரத்யக்ஷம் கண்ணாலும் காதலும் -இல்லாமை வெறுமை –தனி பதார்த்தம் -உபலப்தி -எதிர்பதம் அநு பலப்தி காணாமை என்பான் –
காணாமை பிரமாணத்தால் இல்லாமை அபாவம் சாதிப்பான் –
அபாயமும் பிரத்யக்ஷத்தில் சேரும் -என் எண்ணில் வாஸ்து இங்கு இருந்து இருந்தால் பார்த்து இருப்பேன் –
நான் பார்க்காததால் இங்கே இந்த பொருள் இல்லை
இல்லாமைக்கும் நான் பார்க்காததற்கும் சம்பந்தம் இல்லை –

கடத்தவம் -பாவம் கட பாவம் -வேஷ்ட்டி படத்துவம்-மாற்று ஒரு வாஸ்துவில் இருந்து வேறு பாடு படுத்த –
பின்னமாக கிரஹிப்போம் -பாவத்துக்கு  பாவாந்தரம் அபாவம் -தனியாக இல்லையே -கடத்துவத்தின் இல்லாமை பூமி -பூதலம் -தனியாக இல்லை –
பிராக பாவம் -கடம் கடத்துக்கும் உன் நிலைமை கடம் இல்லாமை
பிரதவம்ஸா பாவம்
உடைத்து துகள் -ஊகம்–ஊகித்து அறிவது –இதுவும் பிரத்யக்ஷத்தில் சேரும் -பிரத்யக்ஷம் இருப்பதால் தானே ஊகம் -கை
கிரஹணம் -பேதம் வைத்து -இவரை பார்த்து அவர் இல்லை -இவருக்கு உண்டான அசாதாரண அடையாளம் கொண்டே கிரஹிக்கிறோம்

விசேஷணம் வியாவர்த்த அர்த்தம்
உயரம் வெளுப்பு பருமன் -ஒவ் ஒரு விசேஷங்களுக்கும் உதவி உண்டு -மாற்றி உள்ள வஸ்துக்களை விலக்க-
ஆகார பேதங்கள் உடனே குழந்தை கூட செப்புக்களை -கன்று குட்டி தனது தாய் பசுவை நோக்கி போவதும் பேதம் அறிந்தே
தர்சனம் பேத ஏவ ச -தேவ பெருமாள் இத்தையே அருளிச் செய்தார்
பிராக பாவம் மண் தான் -பிரத்யக்ஷத்தால் பார்த்தோம் -பிரதவம்ஸா பாவம் மடக்கு-கபாலம் –
ஆகையால் அபாயமும் பிரத்யக்ஷத்தில் சேரும் -சாஸ்த்ர அநுக்ரஹியத்தமாகவே வாதம் இருக்க வேண்டும் –

ஞானம் பேதத்துடனே -கடத்தில் பட பேதம் -படத்தில் கட பேதம் -கடத்தில் -பல பேதங்கள் -மனுஷ்ய ரத்ன பேதம் –
இவை எல்லாம் கடம் -கடத்தவம் – பேதமும் கடத்வமும் ஓன்று என்பதே சித்தாந்தம் –
பேதத்வமும் கடத்வமும் ஒன்றே -நம் சித்தாந்தம் –
பட பின்னம் சொன்ன உடன் -பிரதி யோகி அபேக்ஷை -எதில் இருந்து –
கடம் சொன்னதும் இந்த எதில் இருந்து அபேக்ஷை வர வில்லை -ஓன்று சொல்ல முடியாதே பூர்வ பஷி
பத ஸ்வபாவம் எதிர்பார்க்கும் -தாசாரதி புத்ரன் -யாருக்கு பிரத்யோகி எதிர் பார்க்கும் -ராமன் சொன்னதும் எதிர் பார்க்காதே –
தசாரதி புத்ரன் பல பொருள்கள் இருக்கலாம் ராமனைக் குறிக்கும்
அடுத்து சம்சயம்
இதுவோ அதுவோ -சங்கை -பிரத்யக்ஷத்தில் சேர்க்கலாம் -மா மரம் தென்னை மரம் ஆகாரம் அறிந்தால் தான் சங்கை வரும்
புண்ய ஆத்மா -காளிதாசர் -ஸ்த்ரீ வர்ணனை -மாற வர்ணனை கவிகளுக்கு பிரதிபா –தனி தத்வம் என்பான் பூர்வ பஷி –

நமக்கு அறியாதவற்றை அறிபவர் -திரு மஞ்சன கட்டியம் -64-மந்த்ர பர்வம் மேகம் போலே நினைத்து –
பிரத்யக்ஷம் இல்லாமல் பிரதீபை வேலை செய்யாதே
புது பிரமாணம் இல்லை -புண்ணியம் ஆச்சர்ய கடாக்ஷத்தால் வந்த சிறப்பு –

அனைத்து அறிவும் யதார்த்தம் நம் சம்ப்ரதாயம் -பொய் -உண்மை கொஞ்சம் மங்கி -மேகம் மூடி
ஸூர்ய பிரகாசம் மறைப்பது போலே -ஸூர்ய பிரகாசம் இல்லாமை பதார்த்தம் இல்லையே
மோக்ஷம் -என்பதே ஆத்மாவின் ஸ்வரூப ஆவிர்பாவம் -கர்மம் மூடி ஞான ஆனந்க்ங்கள் மங்கி
மணி -சேற்றில் மூட –ஒளி ஊட்ட வேண்டாம்
கல் எடுத்து -நீர் வரும் -தடங்கல் நீக்கி தானே இருப்பது மிளிரும் –
பிரமம் போன்ற பிரமிப்பும் யதார்த்தம் -முத்துச் சிப்பி வெள்ளி என்பதும் உண்மை -கயிறு பாம்பு
க்யாதி -அக்யாதி அந்யதா கியாதி ஆத்ம கியாதி அசத் கியாதி – அமிர் வாசனாதி

இவை எல்லாம் பொய் என்றும் -சத் கியாதி உண்மை அறிவு -அறிவும் உண்மை அறிவால் அறியப் படும் பொருள்களும் உண்மை பூர்வ பஷி –
அக்யாதி -முத்துச் சிப்பி வெள்ளி –நத்தை பார்த்து வெள்ளி சொல்ல வில்லை -ஏதோ ஆகாரம் இருக்கவே சொல்கிறான் –
பஞ்சீ கரணம் -மூலம் இவை சாத்தியம் -கலப்பாடு -நீல வானம் சொல்கிறோம் –
ரூபம் அக்னிக்கு -ஆகாசத்துக்கு சப்தம் குணம் -பஞ்சீ  கரணத்தால் ஒவ் ஒன்றின் தன்மை மற்று ஒன்றில் இருக்குமே –
அதனால் கிரஹணம் பொய் இல்லையே –
பிரமம் ஞானம் வந்த பின்பு பிரேமா ஆகும் -வியவகாரம்-பண்ணலாம் -அம்சம் கொஞ்சம் இருப்பதால் தான் பிரமம் உண்டாயிற்று
அக்யாதி –அறிவே ஏற்படாமல் -ராஜதம் -வெள்ளி -முத்துச் சிப்பியில் இல்லை என்று –
ராஜ பேத ஞானம் ஏற்பட வில்லை அக்யாதி என்பான் மீமாம்சை
நாம் சாக்யாதி எல்லாம் என்கிறோம் -தன்மையை குறைவாக கிரஹிப்பதால்
ஜரிகை புடவை –வெள்ளித் தன்மை -உண்டே –
அந்யாத க்யாதி நையாயிகன் -தனியான ஞானம் என்பான் இத்தை –
ஆத்ம க்யாதி -எல்லா பொருளும் இல்லை -ஆத்மா ஒன்றே உண்மை -இதனால் குடம் தொற்றுகிறது என்பார் –
அனிர்வசனிய வாதம் –எது என்று சொல்ல முடியாது -மித்யா ராஜதம் –
பொய்யான வெள்ளி -அவித்யையால் -அது அநிர் வசனீயம் -அசத் க்யாதி என்றும் சொல்வர்

இவற்றை தள்ளி சத் க்யாதி -இது தான் ஞானத்துக்கு விஷயம் எல்லாம் சத்
மருள் என்பது என்ன எல்லாம் சத்
மருள் -பிரமை –தெருள் -பிரேமா -தெளிவான ஞானம் –தெளிவுற்ற ஆழ்வார்கள்
புதுசாக கல்பிக்க வேண்டாம் -விஷய விபாக -வியவஹாரம் பாதம் இருப்பதால் பிரமம் –
பஞ்சீ கரணமே காரணம் அம்சங்கள் கலந்து இருக்கும் -ரஜத  அம்சம் ஸ்வல்பமாக இருப்பதால் விவகாரத்துக்கு வராது –
அந்த வியவஹாரம் பாதிக்கப் படுவதால் பிரமம் மருள் உண்டாகும் -சிப்பி  அம்சம் கூட இருப்பதை அறிந்ததும் பிரமம் போகும் –
வெள்ளி இல்லை என்பது இல்லை -கொஞ்சம் அம்சம் உண்டு –
சிப்பி அம்சம் கூட – வெள்ளி என்கிற வியவஹாரம் எடுத்து வளையல் பண்ணுவது தடுக்கப் படும்
சரீரம் -ஆத்மா -மோக்ஷ சாதனம் புரிந்து அதுவே சாத்தியம் என்று இருக்கக் கூடாது என்பதே -வேண்டும் –

சர்வம் விஞ்ஞானம் யதார்த்தம்
சொப்பனம் முதலிய ஞானங்களும் சத்யம் -கர்மா  அனுகுணமாக ப்ரஹ்மமே படைக்கும் -கருணையால் நடக்கும் -தூங்கும் பொழுதும் கர்மம் தொலைக்க வழி இது
சின்ன பாபத்துக்கு பாம்பு கடிப்பதால் -சொப்பனத்தில் -கொஞ்சம் துக்கம் பட்டு பாபங்கள் கொஞ்சம் போகுமே –
வெளுத்த சங்கம் பார்த்து மஞ்சள் -காமாலை கண்ணால் -இதுவும் உண்மை -உள்ளே பித்தம் தலைக்கு ஏறி –
கண்ணில் ஒளி -தெளிவாக இல்லாமல் -பித்தம் மஞ்சள் உடன் தொடவே இதில் உள்ளவற்றை அதில் ஏற்றி உணர்கிறான் –
விளக்கில் வர்ண காகிதம் ஒட்டி மாறுவது போலே -பித்த கத பீதிமா -மஞ்சள் தன்மை -நிரம்பி -அப்படி பார்க்கிறான் –
செம் பருத்தி பூ -ஜெபா குசும்பன் – படிகம் -சிகப்பில் –பிரதிபலிக்கும் தன்மை
ஸ்படிகத்தில் உள்ளதே -அதுவும் சிகப்பு என்று நினைக்கும் ஞானமும் சத்யம்
ஸூர்யன் நீரில் பிரதி பலித்து -படம் எடுத்து பரிசு வாங்குகிறர்களே இதுவும் உண்மை
கானல் நீரும் உண்மை ம்ருக த்ருஷ்ணிகா –மரீஷிகயா–சூர்யா கிரணம் பட்டு -நீர் இருப்பதாக –
இதுவும் பஞ்சீ கரணத்தால் வந்தது
இதுவும் உண்மை –

திக் மோகம் -காட்டில் தெற்கு வடக்கு தெரியாமல் -இதுவும் உண்மை –
குண திசை –திசைகளை படைத்த பலன் -திக்  மோகம் -தெற்கே வடக்காக்குமே இடம் மாறினால் -திக் அந்தரம் -உண்டே அதனால் திகப்பிரமமும் உண்மை
திக்கு தனி த்ரவ்யம் இல்லை வேதாந்தத்தில் -தனி த்ரவ்யம் இல்லை -வரை அறுத்து சொல்வது ஒரு இடத்தை வைத்து
கொள்ளிக் கட்டை –சக்கரம் சுத்த -இடை வெளி கிரகிக்க முடியாதே -எல்லா இடத்திலும் நெருப்பு இருப்பதாக காட்டும் பிரமும் உண்மை
கண்ணுக்கு கிரஹிக்கும் சக்தி இல்லை வேறு பாட்டை-
கண்ணாடி பிரதிபிம்மமும் உண்மை பொய் இல்லை -பெருமாளுக்கு ஆராதனம் செய்து நம்மையே உயர்த்திக் கொள்வது -போலே
நம் முகம் தயிரில் தண்ணீரில் பார்க்கிறோம் –பிரதிபலிக்கும் சக்தி -பிரதிகதம் தடங்கல் – –
கண்ணாடி கிரஹிக்கும் முன் முகம் –நயன தேஜஸ் பேதம் மாறி இரண்டாக -காட்டும் -ஸாமக்ரி பேதத்தால் -சர்வம் யதார்த்தம் –
பேதம் சொன்னதும் எதில் இருந்து பேதம் பிரதி யோகம் எதிர்பார்க்கும் –தன்னை விட்டு எண்ணி —
தசம் அஸ்து-பிரத்யக்ஷ ஞானம் ஏற்படும் -வாக்ய ஜென்ம ஞானம் இல்லை
– இல்லாத வாஸ்து அறிய தான் வாக்ய ஜன்ய ஞானம் –
நீ தான் பத்தாவது ஆள் -காட்டியது -பிரத்யக்ஷம் -புரியும்
தத்வம் அஸி ஸ்வேதகேது -வாக்ய ஜென்ம ஞானத்தால் மோக்ஷம் என்பர் அத்வைதி
பக்தி ரூபாபன்ன ஞானத்தால் தான் மோக்ஷம்
பிரத்யக்ஷம் –
விஷயம் –

ஆத்மாவில் உள்ள ஞானம் அந்தக்கரணம் -செயல் படும் சைதன்யம் -விஷயத்தில் உள்ள ஞானம் -மூன்றும் ஐக்கியம் ஏற்பட்டால் –
சம்பந்தத்தால் ஞானம் –அபேதமே சித்தாந்தம் என்றபடி –
ஏதோ இது -முதல் ஞானம் இது இது இரண்டாவது ஞானம் என்று இல்லை -வாசி கொண்டே கிரகிக்கிறோம்
கநாதர் -தர்க்க சாஸ்திரம் பாணினி வியாகரண சாஸ்திரம் -உதவும் அம்சம் இவை -யுக்தமான இவை
தடாகம் சேறு –தப்பை விட்டு நல்லது மட்டும் எடுப்பது போலே –பரம அணு காரணம் வேத புருஷனால் சொன்னது
ஈஸ்வரன் அநு மானத்தால் ஸ்தாபனம் -ஜீவன் விபு -சாமான்ய விசேஷ பதார்த்தங்கள் -உவமானம் தனி பிரமாணம் —
இவை போல்வன அவி விருத்தங்கள் என்றவாறு –
பிரத்யக்ஷம் இது வரை பார்த்தோம் மேலே ஒன்பது விஷயங்கள் உண்டே –

———————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ வே வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஸ்ரீனிவாச மஹா குரு ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

அருளிச் செயல்களும் -துவரைக் கோனாய் நின்ற மாயன் அன்று ஓதிய வாக்கும்–

January 24, 2017

பெரியாழ்வார் திருமொழி —
தாரித்து நூற்றுவர் தந்தை சொல் கொள்ளாது போருய்த்து வந்து புகுந்தவர் மண்ணாளப்
பாரித்த மன்னர் படப் பஞ்சவர்க்கு அன்று தேருய்த்த கைகளால் சப்பாணி -தேவகி சிங்கமே சப்பாணி -1-6-6-

பஞ்சவர் தூதனாய்ப் பாரதம் கை செய்து –அஞ்சன வண்ணனே அச்சோ வச்சோ ஆயர் பெருமானே அச்சோ அச்சோ -1-8-3-

கழல் மன்னர் சூழக் கதிர் போல் விளங்கி எழலுற்று மீண்டு இருந்துன்னை நோக்கும்
சுழலைப் பெரிதுடைத் துச்சோதனனை அழல விழித்தானே அச்சோ வச்சோ ஆழி யங்கையனே அச்சோ வச்சோ –1-8-5-

போர் ஓக்கப் பண்ணி இப் பூமிப பொறை தீர்ப்பான் தேர் ஓக்க வூர்ந்தாய் செழும் தார் விசயற்காய்
நாந்தகம் ஏந்திய நம்பி சரண் என்று தாழ்ந்த தனஞ்சயர்க்காகி தரணியில்
வேந்தர்களுட்க விசயன் மணித் திண் தேர் ஊர்ந்தவன் என்னைப் புறம் புல்குவான் –உம்பர் கோன் என்னைப் புறம் புல்குவான் -1-9-4-

மெச்சூது சங்கமிடத்தான் நல்வேயூதி பொய்ச்சூதில் தோற்ற பொறையுடை மன்னார்க்காய்
பத்தூர் பெறாதன்று பாரதம் கை செய்த அத்தூதன் அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான் -2-1-1-

மலை புரை தோள் மன்னவரும் மாரதரும் மற்றும் பலர் குலைய நூற்றுவரும் பட்டழிய பார்த்தன்
சிலை வளையத் திண் தேர் மேல் முன்னின்ற செங்கண் அலவலை வந்தப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான் -2-1-2-

ஒன்றே யுரைப்பான் ஒரு சொல்லே சொல்லுவான் துன்று முடியான் துரியோதனன் பக்கல்
சென்று அங்குப் பாரதம் கை எறிந்தானுக்கு கன்றுகள் மேய்ப்பதோர் கோல் கொண்டு வா கடல் நிற வண்ணற்கோர் கோல் கொண்டு வா -2-6-4-

சீரொன்று தூதாய்த் துரி யோதனன் பக்கல் ஊர் ஓன்று வேண்டிப் பெறாத வுரோடத்தால்
பார் ஒன்றிப் பாரதம் கை செய்து பார்த்ததற்குத் தேர் ஒன்றை யூர்ந்தாற்கோர் கோல் கொண்டு வா
தேவ பிரானுக்கோர் கோல் கொண்டு வா –2-6-5-

பற்றார் நடுங்க முன் பாஞ்ச சன்னியத்தை வாய் வைத்த போரேறே என் சிற்றாயர் சிங்கமே சீதை மணாளா -3-3-5-

பஞ்சவர் தூதனாய்ப் பாரதம் கை செய்து —அஞ்சன வண்ணனைப் பாடிப் பற யசோதை தன் சிங்கத்தைப் பாடிப் பற -3-9-5-

மன்னர் மறுக மைத்துனன்மார்க்கு ஒரு தேரின் மேல் முன்னங்கு நின்று மோழை எழுவித்தவன் மலை –தென் திருமாலிருஞ்சோலையே -4-2-7-

பாண்டவர் தம்முடைய பாஞ்சாலி மறுக்கம் எல்லாம் ஆண்டு அங்கு நூற்றுவர் தம் பெண்டிர் மேல் வைத்த அப்பன் மலை –தொல்லை மாலிருஞ்சோலையதே -4-3-6-

திரை பொரு கடல் சூழ் திண் மதிள் துவரை வேந்து தன் மைத்துனன் மார்க்காய் அரசினை யவிய அரசினை யருளும்–கண்டம் என்னும் கடி நகரே -4-7-8-

மருமகன் தன் சன்னதியை உயிர் மீட்டு மைத்துனன் மார் உருமகத்தே வீழாமே குரு முகமாய்க் காத்தானூர் –புனல் அரங்கம் என்பதுவே –4-8-3-

மைத்துனன் மார் காதலியை மயிர் முடிப்பித்து அவர்களையே மன்னராக்கி உத்தரை தன் சிறுவனையும்
உய்யக் கொண்ட உயிராளன் யுறையும் கோயில் –திருவரங்கமே –4-9-6-

—————————————————

நாச்சியார் திருமொழி
பூங்கொள் திருமுகத்து மடுத்தூதிய சங்கொலியும் சாரங்கவில் நாண் ஒலியும் தலைப்பெய்வது எஞ்ஞான்று கொலோ –9-9-

செம்மையுடைய திருவரங்கர் தாம் பணித்த மெய்ம்மைப் பெரு வார்த்தை விட்டு சித்தர் கேட்டிருப்பர்
தம்மை யுகப்பாரைத் தாமுகப்பார் என்னும் சொல் தம்மிடையே பொய்யானால் சாதிப்பாரினியே —11-10-

—————————————————-

திருச்சந்த விருத்தம்
பார் மிகுத்த பாரம் முன் ஒழிச்சுவான் அருச்சுனன் தேர் மிகுத்து மாயமாகி நின்று கொன்று வென்றி சேர்
மாரதர்க்கு வான் கொடுத்து வையமைவர் பாலதாம் சீர் மிகுத்த நின்னலால் ஓர் தெய்வம் நான் மதிப்பனே –89-

—————————————–

பெரிய திருமொழி
பார்த்தற்காய் அன்று பாரதம் கை செய்திட்டு வென்ற பரஞ்சுடர் கோத்து அங்கு ஆயர் தம் பாடியில் –திருவேங்கடம் அடை நெஞ்சே -1-8-4-

முன் ஓர் தூது வானரத்தின் வாயில் மொழிந்து அரக்கன் மன்னூர் தன்னை வாளியினால் மாள முனிந்து -அவனே
பின் ஓர் தூது ஆதி மன்னார்க்காகி பெரு நிலத்தார் இன்னார் தூதன் என நின்றான் எவ்வுள் கிடந்தானே –2-2-3-

விற் பெரு விழாவும் கஞ்சனும் மல்லும் வேழமும் பாகனும் வீழ
செற்றவன் தன்னை புரமெரி செய்த சிவனுறு துயர் களை தேவை
பற்றலர் வீயக் கோல் கையில் கொண்டு பார்த்தன் தன் தேர் முன் நின்றானை
சிற்றவை பணியால் முடி துறந்தானைத் திரு வல்லிக் கேணிக் கண்டேனே -2-3-1-

இன் துணைப் பதுமத்து அலர் மகள் தனக்கும் இன்பன் நற் புவி தனக்கு இறைவன்
தன் துணை ஆயர் பாவை நப்பின்னை தனக்கு இறை மற்றையோர்க்கு எல்லாம்
வன் துணை பஞ்ச பாண்டவர்க்காகி வாயுரை தூது சென்றியங்கும்
என் துணை எந்தை தந்தை தம்மானைத் திரு வல்லிக் கேணிக் கண்டேனே -2-3-5-

அந்தகன் சிறுவன் அரசர் தம் அரசர்க்கு இளையவன் அணியிழையைச் சென்று
எந்தமக்கு உரிமை செய்யெனைத் தரியாது எம்பெருமான் அருள் என்ன
சந்தமல் குழலாள் அலக்கண் நூற்றுவர் தம் பெண்டிரும் எய்தி நூல் இழப்ப
இந்திரன் சிறுவன் தேர் முன் நின்றானைத் திரு வல்லிக் கேணிக் கண்டேனே -2-3-6-

பாரேறு பெரும் பாரம் தீரப் பண்டு பாரதத்துத் தூதியங்கி பார்த்தன் செல்வத் தேரேறு சாரதியாய் எதிர்ந்தார்
சேனை செருக்களத்துத் திறல் அழிய செற்றான் தன்னை –திருக் கோவலூர் அதனுள் கண்டேன் நானே -2-10-8-

வேல் கொள் கைத் தலத்து அரசர் வெம் போரினால் விசயனுக்காய் மணித் தேர் கொள் கைத் தலத்து எந்தை பெம்மானிடம் –திருவயிந்தரபுரமே -3-1-9-

ஏது அவன் தொல் பிறப்பு இளையவன் வளையூதி மன்னர் தூதுவனாய் அவனூர் சொல்லுவீர்கள் சொலீர் அறியேன் –புனலாலி புகுவர் கொலோ -3-7-4-

மல்லரையட்டு மாளக் கஞ்சனை மலைத்து கொன்று பல்லரசு அவிந்து வீழப் பாரதப் போர் முடித்தாய் –-காவளந்தண் பாடியாய் களை கண் நீயே -4-6-6-

மூத்தவற்கு அரசு வேண்டி முன்பு தூது எழுந்து அருளி மாத்தமர் பாகன் வீழ மத கரி மருப்பு ஓசித்தாய் —காவளந்தண் பாடியாய் களை கண் நீயே -4-6-7-

கரையார் நெடு வேல் மற மன்னர் வீய விசயன் தேர் கடவி–புள்ளம் பூதங்குடி தானே –5-1-8-

வாம்பரியுக மன்னர் தம் உயிர் செய் ஐவர்கட்க்கு அரசளித்த காம்பினார் திரு வேங்கடப் பொருப்ப
நின் காதலை அருள் எனக்கு –திரு வெள்ளறை நின்றானே –5-3-4-

பிறிந்தேன் பெற்ற மக்கள் பெண்டிர் என்று இவர் பின்னுதவாவது
அறிந்தேன் நீ பணித்த வருள் என்னும் ஒள் வாள் உருவி
எறிந்தேன் ஐம்புலன்கள் இடர் தீர வெறிந்து வந்து
செறிந்தேன் நின்னடிக்கே திரு விண்ணகர் மேயவனே -6-2-4-

நீ திருவாய் மலர்ந்து அருளின
சரம ஸ்லோகத்தைப் பற்றினேன் -நீ பணித்த அருள்
ஒள வாளுருவி -சரம ஸ்லோகம் ஒள் வாள்
ஐம்புலன்கள் இடர் -வினைத் தூற்றை வேர் அறுத்தேன்
ஒள் வாளுருவி வினைத் தூற்றை வேர் அறுத்தேன் -ஆச்சார்ய ஹிருதயம்-

வெள்ளைப் புரவித் தேர் விசயற்காய் விறல் வியூகம் விள்ள சிந்துக்கோன் விழ ஊர்ந்த விமலனூர் –நறையூர் –6-5-8-

பாரையூரும் பாரம் தீர பார்த்தன் தன் தேரையூரும் தேவ தேவன் சேருமூர் –நறையூரே –6-5-9-

மிடையா வந்த வேல் மன்னர் வீய விசயன் தேர் கடவி குடையா வரை யொன்று எடுத்து ஆயர் கோவாய் நின்றான் –நறையூர் நின்ற நம்பியே -6-7-7-

பந்தார் விரலாள் பாஞ்சாலி கூந்தல் முடிக்கப் பாரதத்து கந்தார் களிற்றுக் கழல் மன்னர் கலங்கச் சங்கம் வாய் வைத்தான் –நறையூர் நின்ற நம்பியே -6-7-8-

மண்ணின் மீ பாரம் கெடுப்பான் மற மன்னர் பண்ணின் மேல் வந்த படையெல்லாம் பாரதத்து
விண்ணின் மீதேறி விசயன் தேரூர்ந்தானை நண்ணி நான் நாடி நறையூரில் கண்டேனே –6-8-8-

உரங்களால் இயன்ற மன்னர் மாளப் பாரதத்து ஒரு தேரை ஐவரக்காய்ச் சென்று இரங்கி யூர்நது அவர்க்கு இன்னருள் செய்யும் எம்பிரானை -7-3-4-

பாரித்து எழுந்த படை மன்னர் தம்மை மாள பாரதத்துத் தேரில் பாகனா யூர்ந்த தேவ தேவன் ஊர் போலும் –அழுந்தூரே-7-5-2-

கயம் கொள் புண் தலைக் களிறுந்து வெந்திறல் கழல் மன்னர் பெரும் போரில் மயங்க வெண் சங்கம் வாய் வைத்த மைந்தனும் வந்திலன் –8-5-4-

துவரிக்கனி வாய் நில மங்கை துயர் தீர்ந்துய்ய பாரதத்துள் இவரித்தரசர் தடுமாற
இருள் நாள் பிறந்த அம்மானை –கண்ண புரத்து அடியேன் கண்டு கொண்டேனே –8-8-9-

அரவ நீள் கொடியோன் அவையில் ஆசனத்தை அஞ்சிடாதே இட அதற்குப் பெரிய மா மேனி
அண்ட மூடுருவப் பெரும் திசை யடங்கிட நிமிர்ந்தோன் –திருக் கண்ணங்குடியில் நின்றானே –9-1-8-

பன்னிய பாரம் பார்மகட்க்கு ஒழியப் பாரத மா பெரும் போரில் மன்னர்கள் மடிய மணி நெடும் திண் தேர்
மைத்துனருக்கு உய்த்த மா மாயன் —திருக் கண்ணங்குடியில் நின்றானே –9-1-9-

பார்த்தனுக்கு அன்று அருளிப் பாரதத்து ஒரு தேர் முன் நின்று காத்தவன் தன்னை –திரு மால் இருஞ்சோலை நின்ற மூர்த்தியை -9-9-8-

செரு வழியாத மன்னர்கள் மாளத் தேர் வலம் கொண்டு அவர் செல்லும் அரு வழி வானம் அதர் படக் கண்டா ஆண்மை கொலோ -10-9-5-

அன்று பாரதத்து ஐவர் தூதனாய் சென்ற மாயனைச் செங்கண் மாலினை மன்றிலார் புகழ் மங்கை வாட் கலிகன்றி சொல் வல்லார்க்கு அல்லல் இல்லையே –11-1-10-

மன்னிலங்கு பாரதத்து தேரூர்ந்து —தேவர்க்கு இது கண்ணீர் என்னிலங்கு சங்கோடு எழில் தோற்று இருந்தேனே –11-3-1-

கோதை வேல் ஐவர்க்காய் மண்ணகலம் கூறிடுவான் தூதனாய் மன்னவனால் சொல்லுண்டான் காணேடீ
தூதனாய் மன்னவனால் சொல்லுண்டான் ஆகிலும் ஓத நீர் வையகம் முன்னுண்டு உமிழ்ந்தான் சாழலே–11-5-6-

பார் மன்னர் படை தொட்டு வெஞ்சமத்து தேர் மன்னர்க்காய் அன்று தேரூர்ந்தான் காணேடீ
தேர் மன்னர்க்காய் அன்று தேரூர்ந்தான் ஆகிலும் தார் மன்னர் தங்கள் தலை மேலான் சாழலே –11-5-7-

——————————————————-

திரு நெடும் தாண்டகம்
ஓர் தேரால் மன்னிலங்கு பாரதத்தை மாள யூர்ந்த வரை யுருவின் மா களிற்றைத் தோழீ –இன்பம் எய்த எப்பொழுதும் நினைந்து உருகி இருப்பன் நானே -28-

—————————————————–

முதல் திருவந்தாதி
மயங்க வலம் புரி வாய் வைத்து வானத்து இயங்கும் எறி கதிரோன் தன்னை –
முயங்கமருள் தேராழியால் மறைத்தது என் நீ திருமாலே போராழிக் கையால் பொருது –8-

வேதியர்கள் சென்று இறைஞ்சும் வேங்கடமே வெண் சங்கம் ஊதிய வாய் மால் உகந்த வூர் –37-

குன்றனைய குற்றம் செய்யினும் குணம் கொள்ளும்
இன்று முதலாக வென்னெஞ்சே -என்றும்
புறனுரையே யாயினும் பொன்னாழிக் கையான்
திறனுரையே சிந்தித் திரு ——–41-

———————————————

இரண்டாம் திருவந்தாதி
திரிந்தது வெஞ்சமத்து தேர் கடவி அன்று பிரிந்தது சீதையை மான் பின் போய் புரிந்ததுவும்
கண் பள்ளி கொள்ள அழகியதே நாகத்தின் தண் பள்ளி கொள்வான் தனக்கு -15–

————————————————

மூன்றாம் திருவந்தாதி
அடைந்தது அரவணை மேல் ஐவர்க்காய் அன்று மிடைந்தது பாரத வெம்போர் உடைந்ததுவும்
ஆய்ச்சி பால் மத்துக்கே வாள் எயிற்றுப் பீய்ச்சி பாலுண்ட பிரான் –28-

——————————————-

நான்முகன் திருவந்தாதி
நிலை மன்னும் என்நெஞ்சம் அந்நான்று தேவர் தலை மன்னர் தாமே மாற்றாக
பல மன்னர் போர் மாள வெங்கதிரோன் மாயப் பொழில் மறைய தேராழியால் மறைத்தாரால் -16-

நிகழ்ந்தாய் பால் பொன் பசுபுக் கார் வண்ணம் நான்கும் இகழ்ந்தாய் இருவரையும் வீய புகழ்ந்தாய்
சினப் போர்ச்சுசேதனைச் சேனாபதியாய் மனப்போர் முடிக்கும் வகை –24-

கூற்றமும் சாரா கொடு வினையும் சாரா தீ
மாற்றமும் சாரா வகை யறிந்தேன் -ஆற்றங்
கரைக் கிடக்கும் கண்ணன் கடல் கிடக்கும் மாயன்
உரைக் கிடக்கும் உள்ளத்து எனக்கு –50-

சேயன் அணியன் சிறியன் மிகப் பெரியன் ஆயன் துவரைக் கோனாய் நின்ற மாயன்
அன்று ஓதிய வாக்கதனைக் கல்லார் உலகத்தில் ஏதிலராய் மெய்ஞ்ஞானமில் –71–

—————————————————

பெரிய திரு மடல்
மன்னர் பெரும் சவையுள் வாழ் வேந்தர் தூதனாய் தன்னை இகழ்ந்து உரைப்பத் தான் முன நாள் சென்றதுவும் -141/142-

————————————————————————–

திருவாய்மொழி-

பஜியுங்கோள் ‘வழிபாடு செய்மின் என்று பன்முறையுங் கூறுகின்றீர்;
பஜன உபாயம் -வழிபாடு செய்யும் வழியினை அருளிச் செய்யீர்,’ என்ன,
‘இன்று நான் உபதேசிக்க வேண்டுமோ?
அவன் தான் ஸ்ரீ கீதையில் அருளிச் செய்த பத்தி மார்க்கத்தாலே அவனை அடைமின்,’ என்கிறார்.

பிணக்கற அறு வகைச் சமயமும் நெறி உள்ளி உரைத்த
கணக்கறு நலத்தனன் அந்தமில் ஆதி யம் பகவன்
வணக்குடைத் தவ நெறி வழி நின்று புற நெறி களை கட்டு
உணக்குமின் பசை அற அவனுடை யுணர்வு கொண்டு உணர்ந்தே–1-3-5-

அவனுடை உணர்வு கொண்டு உணர்ந்து –
அவன் விஷயமான ஞானத்தைக் கொண்டு உணர்ந்து;
அதாவது, ‘பத்தி மார்க்கத்தைக் கொண்டு உணர்ந்து’ என்றபடி.
இனி,தத் யுக்த – அவன் அருளிச் செய்த ஞானத்தைக் கொண்டு உணர்ந்து;
அதாவது, ‘அவன் அருளிச் செய்த ஸ்ரீ சரம ஸ்லோகத்தின் படியைப் பற்றி நின்று’ என்னுதலுமாம்-

அமரர்கள் தொழுது எழ அலை கடல் கடைந்தவன் தன்னை
அமர் பொழில் வளங் குருகூர்ச் சடகோபன் குற்றேவல்கள்
அமர்சுவை ஆயிரத்து அவற்றினுள் இவை பத்தும் வல்லார்
அமரரோடு உயர்விற் சென்று அறுவர் தம் பிறவி அஞ் சிறையே–1-3-11-

த்யக்த்வா தேகம் புநர் ஜென்ம நைதி மா மேதி-( அருச்சுனா என்னுடைய அவதாரத்தையும் செயல்களையும்
தெய்வத்தன்மை பொருந்தியவை என்று எவன் ஒருவன் உண்மையாக அறிகிறானோ,அவன் இச் சரீரத்தை விட்டால்
பின் வேறு சரீரத்தை அடையான்; என்னையே அடைகிறான்,’ )என்று ஸ்ரீகீதையிற்கூறியது போன்று,
இவரும் அவதாரத்தின் எளிமையினைக் கூறுகின்ற இப் பத்துப் பாசுரங்களையும் கற்றவர்கள்
‘அறுவர் தம் பிறவி அஞ்சிறையே’ என்கிறார்.

தீர்த்தான் உலகளந்த சேவடி மேல் பூந்தாமம் சேர்த்தியவையே சிவன் முடி மேல் தான் கண்டு
பார்த்தன் தெளிந்து ஒழிந்த பைந்துழாயான் பெருமை பேர்த்தும் ஒருவரால் பேசக் கிடந்ததே –1-8-5-

கொல்லா மாக்கோல் கொலை செய்து பாரதப் போர் எல்லாச் சேனையும் இரு நிலத்தவித்த வெந்தாய்
பொல்லா வாக்கையின் புணர் வினை யறுக்கலறா சொல்லாய் யானுன்னைச் சார்வதோர் சூழ்ச்சியே -2-2-3-

நீர்மையில் நூற்றுவர் வீய ஐவருக்கு அருள் செய்து நின்று பார்மல்கு சேனையவித்த பரஞ்சுடரை நினைந்தாடி
நீர்மல்கு கண்ணினாராகி நெஞ்சம் குழைந்து நையாதே ஊன் மல்கி மோடு பருப்பார் உத்தமர்கட்க்கு என் செய்வாரே -2-5-7-

அடியோங்கு நூற்றுவர் வீய அன்று ஐவருக்கு அருள் செய்த நெடியோனை -2-7-11-

ஆற்ற நல்ல வகை காட்டும் அம்மானை அமரர் தம்
ஏற்றை எல்லாப் பொருளும் விரித்தானை எம்மான் தனை
மாற்ற மாலை புனைந்து ஏத்தி நாளும் மகிழ்வு எய்தினேன்;
காற்றின் முன்னம் கடுகி வினை நோய்கள் கரியவே–4-5-5-

போர்ப்பாகு தான் செய்து அன்று ஐவரை வெல்வித்த மாய போர்த் தேர்ப்பாகனார்க்கு இவள் சிந்தை துழாய்த் திசைக்கின்றதே -4-6-1-

மாறு சேர் படை நூற்றுவர் மங்க ஓர் ஐவர்க்காய் அன்று மாயப் போர் பண்ணி நீறு செய்த வெந்தாய் –சிரீ வர மங்கல நகர் ஏறி வீற்று இருந்தாய் –5-7-4-

பிறந்தவாறும் வளர்ந்தவாறும் பெரிய பாரதம் கை செய்து ஐவர்க்குத் திறங்கள் காட்டியிட்டுச் செய்து போன மாயங்களும் -5-10-1-

மண் மிசைப் பெரும் பாரம் நீங்க ஒரு பாரத மா பெரும் போர் பண்ணி மாயங்கள் செய்து சேனையைப் பாழ் பட நூற்றிட்டுப் போய்
விண் மிசைத் தான தாமமே புக மேவிய சோதி தன் தாள் நண்ணி நான் வாங்கப் பெற்றேன் எனக்கார் பிறர் நாயகரே -6-4-10-

மாயம் அறிபவர் மாயவர்க்கு ஆளின்றி யாவரோ -தாயம் செறும் ஒரு நூற்றுவர் மங்க ஓர் ஐவர்க்காய்
தேசம் அறிய வோர் சாரதியாய்ச் சென்று சேனையை நாசம் செய்திட்டு நடந்த நல் வார்த்தை யறிந்துமே –-7-5-10-

வார்த்தை யறிபவர் மாயவர்க்கு ஆளின்றி யாவரோ போர்த்த பிறப்பொடு நோயொடு மூப்பொடு இறப்பிவை
பேர்த்து பெரும் துன்பம் வேரற நீக்கித் தன் தாளின் கீழ்ச் சேர்த்து அவன் செய்யும் சேமத்தை எண்ணித் தெளிவுற்றே -7-5-11-

பிறந்த மாயா பாரதம் பொருத மாயா –உன்னை எங்கே காண்கேனே –8-5-10-

கண்ணன் அல்லால் இல்லை கண்டீர் சரண் அது நிற்க வந்து மண்ணின் பாரம் நீக்குதற்கே வடமதுரைப் பிறந்தான் -9-1-10-

கண்டேன் கமல மலர்ப்பாதம் காண்டலுமே விண்டே ஒழிந்த வினையாயின வெல்லாம்
தொண்டே செய்து என்றும் தொழுது வழி ஒழுக பண்டே பரமன் பணித்த பணி வகையே -10-4-9-

வாட்டாற்றான் மன்னஞ்சப் பாரதத்துப் பாண்டவர்க்காப் படை தொட்டான் நல் நெஞ்சே நம் பெருமான் நமக்கு அருள் தான் செய்வானே-10-6-4-

————————————————————

இராமானுச நூற்றந்தாதி

அடல் கொண்ட நேமியன் ஆருயிர் நாதன் அன்று ஆரணச் சொல்
கடல் கொண்ட ஒண் பொருள் கண்டு அளிப்ப பின்னும் காசினியோர்
இடரின் கண் வீழ்ந்திட தானும் அவ் ஒண் பொருள் கொண்டு அவர் பின்
படரும் குணன் எம் இராமானுசன் தன் படி இதுவே -36 –

அடியைத் தொடர்ந்து எழும் ஐவர்க்காய் அன்று பாரதப் போர் முடிய பரி நெடும் தேர் விடுங்கோனை முழுதுணர்ந்த
அடியர்க்கமுதம் இராமானுசன் என்னை யால வந்து இப்படியில் பிறந்தது மற்றில்லை காரணம் பார்த்திடிலே–51-

சரணம் அடைந்த தருமனுக்கா பண்டு நூற்றுவரை மரணம் அடைவித்த மாயவன் தன்னை வணங்க வைத்த கரணம் இவை யுமக்கு
என்று இராமானுசன் உயிர்கட்க்கு அரண் அங்கு அமைத்திலனேல் அரண் ஆர் மற்று இவ்வார் உயிருக்கே–67-

ஆர் எனக்கு இன்று நிகர் சொல்லில் மாயன் அன்று ஐவர் தெய்வத் தேரினில் செப்பிய கீதையின் செம்மைப் பொருள் தெரியப்
பாரினில் சொன்ன இராமானுசனைப் பணியும் நல்லோர் சீரினில் சென்று பணிந்தது என் ஆவியும் சிந்தையுமே -68-

———————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ கோபால விம்சதி-

January 20, 2017

ஸ்ரீ கிருஷ்ணம் வந்தே ஜகத் குரும் -மம நாத -கிருஷ்ண த்ருஷ்ணா தத்வம் -கண்ணனாம் அமுதக்கடல் திருவாய் மொழி
பும்ஸாம் சித்த அபஹாரிணாம்-ஆடவர் பெண்மையை அவாவும் தோளினாய்-கண்டவர் சிந்தை வழங்கும் கண்ண பிரான் –
சாஷாத் மன்மத மன்மத -கிருஷ்ண –க்-லஷ்மி பதி- ரு ராமன்- ஷாகாரம் –
ஞானாதி ஷட் குணங்கள் -ஸ்வேத தீப வாசி நரசிம்மன் நர நாராயணன் –
நிகம கற்பக தரு -வேதாந்த பழம் -ஸூ க முகமத்– கீழே வந்த பழம் -அம்ருத த்ரவய தாரை -பக்தி ரசம் –

ஸ்ரீ மன் வேங்கட நாதார்ய கவி தார்க்கிக்க கேஸரீ
வேதாந்த சார்யோ வர்யோ மே சந்தி தத்தம் சதா ஹ்ருதி

—————————-

வந்தே பிருந்தாவன சரம் வல்லவீ ஜன வல்லபம்
ஜயந்தீ சம்பவம் தாம வைஜயந்தீ விபூஷணம் —-1–

ஸ்ரீ ஜெயந்தி அன்று திரு அவதரித்தவனும் -ஸிம்ஹ ஸ்ராவண –ஆவணி மாதம் -கிருஷ்ண பக்ஷம் அஷ்டமி -ரோஹிணி நக்ஷத்ரம்
பிருந்தாவனத்தில் சஞ்சரித்தவனும் -இடைப்பெண்களுக்கு ப்ரியதமமானவனும்
ஸ்ரீ வைஜயந்தி என்னும் வனமாலையை அலங்காரமாக தரித்தவனுமான கண்ணன் என்னும் ஜோதியை வணங்குகிறேன்

மங்கள ஸ்லோகம் -யாதவாத்யஹ்ருதயம் -இதே ஸ்லோகம் –வந்த -மங்கள வந்தனம் -கோபாலன்
வேத வாக்குகள் -சொற்கள் -பசுக்கள் -ரக்ஷகன் –
சர்வ உபநிஷத் காவா –கீதாம்ருதம் -பார்த்தோ வத்ஸா-நாம் பருக -அன்றோ –
கர கமல-தோழியும் நாமும் தொழுதோம் -அங்கே வேண்டிப் பெறுவான் —
நாதன் -ஸ்வாமி –
வந்தே
எப்பொழுதும் -பிரபத்யே போலே வர்த்தமானம் –அஹம் வந்தே -சொன்னால் அஹங்காரம் வருமே -தன்னாலே அர்த்தாத் சித்தி –
தாஸோஹம் –தாஸ்யம் முன் வைத்து திருவடி –
பிருந்தாவன சரம்-
ஆரண்யகம் வேதமே -காடு -ப்ருஹதராண்யகம் பெரும் காடு -சாரம் -சஞ்சரிப்பவன் -கூட்டம் கூட்டமாக –
ரஷிப்பவன்–புண்யம் பவித்ரம் -திருவடி பட்டு —
வல்லவீ ஜன வல்லபம்-
ஸ்ரீ வல்லபன் -கோபீ வல்லபன் ஆனான் –ஸ்ரீ மறைத்து வாமனன் ஆனாது போலே —
காடுகளூடு –பின்னை மணாளன் –ஆயர் சிங்கம் -காயாம்பூ வண்ணன் –மழை களோ வருகிறதோ —
மங்கையர் சாலக –யூண் மறந்து –ஒழிந்தனரே-
கோவலனாய் குழலூதி கன்றுகள் மேய்த்து –கலந்து உடன் வருவானை தெருவில் கண்டு -இவனை ஒப்பாரை கண்டு
ஜயந்தீ சம்பவம் –
ஒருத்தி மகனாய் –இவரும் மறைத்து அருளிச் செய்கிறார் —வைகுண்ட பர லோகே –பக்தைர் பாகவத ஸஹ –
ஜெயந்தி -மட்டும் சொல்லும் -பெயரை சொல்லாமல் -ஜெயம் புண்யம் வெற்றி கொடுக்கும் நக்ஷத்ரம் –
ஜெ சப்தம் நிறைய அருளிச் செய்வார் இதில்
அஷ்டமி -ரோஹிணி -தாழ்ந்து பழகும் தன்மை -எட்டை பெருக்கி -கூட்டி பார்த்தால் -8 -7-இப்படி குறைந்தே வரும் –
ஒன்பதை பெருக்கி ஒன்பதே வரும் -ராமர் பரத்வம் நவமி –
பாஞ்ச ஜன்யமே கிண்டி –
அத்புதம் பாலகம் –அம்புஷேணம்-சங்கு சக்ர கதாதரம் ஸ்ரீ வத்சம் -கௌஸ்துபம் -பீதாம்பரம் –
பாலகம் பாலாக க யஸ்ய -பாலனாக நான்முகனும் இருந்தானாம் -அம்புஷேணம்- -ஸ்ரீ லஷ்மியைக் காட்டினானாம் -யசோதைக்கு –
தாம
தேஜஸ் -வன சஞ்சாரி தேஜஸ் -ஆயர் குலத்தில் தோன்றும் மணி விளக்கு அன்றோ —
ஆதி யம் சோதி உருவை அங்கு வைத்து இங்கு பிறந்து -சுடர் அடி-
வைஜயந்தீ விபூஷணம்
மற்றவற்றுக்கும் உப லக்ஷணம் -வன மாலை குலுங்க நின்றவனை ப்ருந்தாவனத்தே கண்டோமே
வைஜயந்திக்கு இவன் ஆபரணம் –
சரக் வஸ்திர ஆபரணம் -ஸ்வ அனுரூபம் -சின்மயம் ஸ்வயம் பிரகாரசம் -நித்ய ஸூரிகள்-
வைஜயந்தி மட்டும் மறைக்க வில்லை -வனம் சஞ்சரிக்க –ஸுலப்யம் -தொடங்கி பரத்வம் சொல்லி -முதல் ஸ்லோகம் —

——————————————-

வாசம் நிஜங்கா ரசிகாம் ப்ரஸா மீஷாமாநோ
வக்த்த்ரார விந்த விநிவேசித பாஞ்ச ஜன்ய
வர்ண த்ரி கோண ருசிரே வர புண்டரீகே
பத்தாசநோ ஜயதி வல்லப சக்கரவர்த்தீ –2-

எழுத்துக்கள் கொண்ட -முக்கோண வடிவு இயந்திரத்தால் -எட்டுத்தளமுடைய அழகிய சிறந்த தாமரை வடிவமான
திவ்ய ஆசனத்தில் அமர்ந்து தன் மடியில் மகிழ்ந்த சரஸ்வதி தேவியை நன்கு கடாக்ஷிப்பவனும் –
தாமரை போன்ற தன் திரு வாயில் பாஞ்ச ஜன்யம் வைத்து இருப்பவனும்
இடைக்குலத்தின் சக்கரவர்த்தியாக கண்ணன் விளங்குகிறான் –
மந்த்ர ஸாஸ்த்ர அடிப்படையில் அமைந்த ஸ்லோகம் –

வாசம் நிஜங்கா ரசிகாம் ப்ரஸா மீஷாமாநோ –
சரஸ்வதி வர -நாட்டுப் பெண் -படைக்கப் பட்டவள் பெண் -நெருங்க
தேவர்கள் -சிறிய உரு கொண்டு -மடியில் உட்க்கார சிறிய உரு கொண்டு
உற்று பார்த்து -ஈஷமான -பிராசாமீஷா காண -நன்றாக
அங்கம் -மடியில் / நாமம் என்றுமாம் -கோ பாலன் -பார்த்தும் மகிழ்கிறான்
தாலேலோ பாட -மாணிக் குறளனோ தாலேலோ -கேட்டு ரசிக்கிறான் என்றுமாம் –
வாசம் -சரஸ்வதி -வாக் தேவி உபாசனம் -பரம ஏக காந்தி -பிரகாரி பாவத்தில் –
கோ -வாக்குக்கும் ரக்ஷகன் –ஹயக்ரீவர் இடம் வேதம் உபதேசம் பெற்றால் போலே சரஸ்வதி கண்ணன் இடம் உபதேசம்
யசோதை பால் போட்டும் பொழுது பாட -தாலாட்டு அனுபவிக்கிறான் -மாணிக்கம் கட்டி –
பிரமன் விடு தந்தான் வையம் அளந்தானே தாலேலோ -என்றுமாம்
தான் சரிதை கேட்டு மகிழ்ந்த பெருமாள் போலே

வக்த்த்ராரவிந்த விநிவேசித பாஞ்ச ஜன்ய –
திரு முக மண்டலம் -சங்குபாலாடை வைத்து புகட்ட
பரிபாகம் -தாமரை மலரில் வந்து தேனை பருகுவது போலே
பிராணவாகாரம் -சப்தம் வைத்து உபதேசம் என்கிறது
வாயில் அழுத்தி வைத்த சங்கு -பால் போட்ட தாய் -கற்பூரம், நாறுமோ -சொல்லாழி வெண் சங்கே –
தானே ஸ்பர்ச ஸூகத்தால் -அழுந்தி –
மது சூதன் வாய் அமுதம் ஸ்திரமாக பருகி –

வர்ண த்ரி கோண ருசிரே வர புண்டரீகே –
தாமரை மலர் -வர -சிறந்த -அஷ்டாக்ஷர தளம் உள்ள -சங்கு ஞானம் பிரதம்-
துருவன் விருத்தாந்தம் –சங்க ஸ்பர்சம் மூலம் –
பத்தாசநோ ஜயதி வல்லப சக்கரவர்த்தீ –ஆசனமாக கொண்டு -பல வர்ணங்கள் -முக்கோணம் –

கோபாலமந்த்ரம் -ரக்ஷணம் -சர்வ ரக்ஷகனுக்கும் -த்ருஷ்டிக்கு —
பார்வை குழந்தை மேலே படாமல் இருக்க ஆசனத்தில் எழுத்து –
புண்டரீகம் -தஹராசாகம்-புரிதத் நாடி –

வல்லப சக்கரவர்த்தீ –சக்கரம் எந்திரம் -ஆகிய சக்கரத்தில் வர்த்திக்கிறவன் –
கோபால மந்த்ரம் -உபாசனம் -ஞான உபதேசம் பெறுவோம் –
நின்றவாறும் இருந்தவரும் கிடந்தவாறும் நினைப்பு அரியன-தொட்டிலிலே மூன்றும் நிலைகள் -எம்பெருமானார் –
ஜயதி -இந்திரியங்களை வென்று -நெஞ்சகம் பால் சுவர் வழி எழுதிக் கொண்டு அனுபவிக்கிறார் இந்த நிலைகளை –

——————————————————–

ஆம்நாய கந்தி ருதித ஸ்புரிதாத ரோஷ்டம்
ஆஸ்ரா விலேஷண மநுஷண மந்த ஹாஸம்
கோபால டிம்ப வபுஷம் குஹநா ஜனன்யா
ப்ராண ஸ்தநந்த்யா மவைமி பரம் புமாம்சம் –3-

வேதத்தின் மணம் வீசிக் கொண்டும் – -அழுகையால் துடிக்கும் திரு உதடுகளையும் கொண்டும் –
அழுகையில் வேத மணம் வீசுகிறதாம் -அவன் மூச்சுக்கு காற்றே வேதம் என்று வேதம் சொல்லுமே –
கண்ணீரால் கலங்கிய திருக் கண்களை உடையவனும்
அடிக்கடி ஸ்மிதம் கொண்டவனும் -தாய் போலே வஞ்சித்து வந்த பூதனையின் பாலையும் உயிரையும் ஓக்க பருகியவனுமான
இடைக்குழந்தை கண்ணனை பரம புருஷனாக அறிகிறேன்

ஆம்நாய கந்தி ருதித ஸ்புரிதாத ரோஷ்டம்

ஆம்நாய கந்தி-
வேத மணம் கமழும் -இவர் வாயில் நல் வேதம் ஓதும் வேதியர் –
பிராணவாராம் ஓதினார் -சரஸ்வதி கீழே பார்த்தோம் –
பசியினால் அழுதாலும் வேதம்

ஆஸ்ரா விலேஷண மநுஷண மந்த ஹாஸம்
கண்கள் கலங்கி -கண்கள் மலர்ந்து –மந்த ஹாஸம் -பூதனை கிட்ட வரவே –

கோபால டிம்ப வபுஷம் குஹநா ஜனன்யா
இடையர் -முடை நாற்றம் -மாயா -பூதனை -இவனும் மாய குழந்தை –
சத்ரு -இராவணன் இலக்குமனை தூக்க முடிய வில்லை -இங்கோ பூதனை குழந்தையை எடுத்து -அநந்ய-காரியாகி வந்ததால்

ப்ராண ஸ்தநந்த்யா மவைமி பரம் புமாம்சம் –
யசோதை போலே வந்த மாயை –ஜகத் குரு விஷத்தை ரசமாக -உயிர் சக்கரை பாலுக்கு சேர்த்து கொண்டான் –
அவதாரத்தில் முதலில் தாடகை -பூதனை –
பால் பருகி பழகாதவன் -கிடைக்காத லாபம் அன்றோ இவனுக்கு –
இந்த அத்புதம் நினைப்பார் பால் குடிக்க வேண்டாமே -அத்புதம் பாலகம் -விசுவாமித்திரர் வந்ததே அத்புதம் என்பர் சக்ரவர்த்தி
ஸ்தம்பே –அத்யத்புதம் -அவதார கார்யம் நடப்பதே அத்புதம்
பேய் முலை –பித்தன் என்றே பிறர் ஏச நின்றான் –
கள்ளத்தினால் வந்த பேச்சி முலை ஈர்த்து உண்ண சுவைத்தான் –

பரம் புமாம்சம் —
பரம புருஷன் என்று அறிந்தேன் –எந்தாய் என்று நினைந்து நைந்தேன்
இருவராய் வந்தார் –என் முன் நின்றார் –அவரை நாம் தேவர் என்று அஞ்சினோமே
பரத்வம் பார்த்து அகலுகை இல்லாமல் -இடைச்சிகளை போலே அணுகுவதே -ஆஸ்ரித லக்ஷணம்

———————————————————-

ஆவிர்பவத்வ நிப்ருத்தாபரணம் புரஸ்தாத்
ஆ குஞ்சி தைக சரணம் நிப்ரு தான்ய பாதம்
தத் நா நிமந்த முகரேண நிபத்த தாளம்
நாதஸ்ய நந்த பவனே நவநீத நாட்யம்–4-

ஒரு திருவடியை மடக்கி -மற்று ஒரு திருவடியை நிலையாக வைத்து -திவ்ய ஆபரணங்களை அசைத்து –
தயிரை நன்கு கடைவதால் ஏற்படும் ஒலியால் அமைந்த தாளத்துக்கு ஏற்ப குலுங்க
நந்தகோபரது இல்லத்தில் வெண்ணெய்க்காக தலைவன் கண்ணன் செய்த நடனம்
என் கண் முன்னால் காட்சி தந்து கொண்டே இருக்க வேண்டும் –
வெண்ணெய்க்கு ஆடும் பிள்ளை நாட்டியம் பிரசித்தம் அன்றோ

ஆவிர்பவத்வ நிப்ருத்தாபரணம் புரஸ்தாத்
மாயை போனவாறே -நிரதிசய அனுபவம் தானே –லீலானுபவம் நேராக பார்க்க ஆசைப்படுகிறார்
காணுமாறு உண்டாகில் அருளே என்றாள் தேவகி அன்றோ –
ஆவிர்பாவம் உண்டாக வேணும் என்கிறார் -நவநீத நாட்யம் அனுபவிக்க வேணும் –
இச்சாம் மோஹம் –ராமம் -சத்ரஜித் -வெண் கொற்றக் கொடையில் மறைந்து தெரியும் திரு முக மண்டலம் சேவிக்க ஆசை

ஆ குஞ்சி தைக சரணம் நிப்ரு தான்ய பாதம் –
திரு ஆபரணங்கள் குலுங்க குலுங்க ஆட -கொலுசு சலங்கை ஒலிக்க-
குஞ்சிதக பாதம் -தூக்கி மடக்கின திருவடி -ஒன்றை ஊன்றிக் கொண்டு

தத் நா நிமந்த முகரேண நிபத்த தாளம் -நாதஸ்ய நந்த பவனே நவநீத நாட்யம்—-
நந்த பவனம் -ஆனந்த பவனத்தில் நவநீத நாட்யம் –
தயிர் கடைவதே தாளம் -நாட்டிய ரெங்கம்
வெண்ணெய் போன்ற ஹ்ருதயம் திருடுவானே –மகா பாலி சக்கரவர்த்தி இடம் யாசகம் பண்ணினவன் இடைச்சிகள்
இடம் யாசகம் பண்ணியோ வெண்ணெய் -உணர்வது -அழகாக திருடி உண்ண வேண்டுமே –
பொத்தை உரலை கவிழ்த்து -அதன் மேல் ஏறி –
அடியேன் -மணி அடிக்க வேண்டியது கர்தவ்யம் -அமுது செய்யும் பொழுது –
மணியை அடிக்காமல் பிடித்து அன்றோ உண்ணுவான் –
கவளம் வெண்ணெய்க்கு –

ஆபீர நாட்டியம் –
தும்புரு நாரதர் ஆடாத நவமான நாட்டியம் -இத்தை சேவிக்க ஆசைப்படுகிறார்

—————————————————————————-

ஹர்த்தும் கும்பே விநிஹித கர ஸ்வாது ஹை யங்க வீனம்
த்ருஷ்ட்வா தாம க்ரஹண சடுலாம் மாதரம் ஜாத ரோஷாம்
பாயா தீஷத் ப்ரச லித பதோ நாப கச்சன் நதிஷ்டன்
மித்யாகோப சபதி நயனே மீலயன் விஸ்வ கோப்தா –5-

இனிய வெண்ணெயை திருடுவதற்கு குடத்தில் தோள் அளவு கை இட்டவனும் -கோபம் அடைந்து கயிற்றை எடுப்பதற்கு
ஆயத்தமான தாயைக் கண்டு அஞ்சி சிறு அடி பெயர்ந்து ஓடி விட நினைத்து ஒரு திருவடியை சிறிது தூக்கி-
செல்லாமலும் நிற்காமலும் -தடுமாறி -உடனே கண்களை மூடிக் கொண்டு –
பெரிய ஆபத்து வர அத்தை பார்க்க அஞ்சி குழந்தை கண்ணை மூடிக் கொள்ளுமே -அதே போலவே இவனும் மூடிக் கொள்ள –
பொய்யான இடைக்கோலம் பூண்ட ஸமஸ்த லோக சர்வ ரக்ஷகன் கண்ணன் நம்மை ரக்ஷிக்கட்டும்

ஹர்த்தும் கும்பே விநிஹித கர ஸ்வாது ஹை யங்க வீனம்-
நாட்டியம் ஆடியும் வெண்ணெய் கிடைக்க வில்லையே -திருடி தானே பெற வேண்டும் —
மாலாகாரர்-உபஜீவனம் -அவன் அன்றோ இவனுக்கு மாலை சாத்தி -சுகர்-இத்தில் ஆழ்ந்து –
திருவடிகளுக்கு கொடுத்த கார்யம் பலன் இல்லை -கைகளுக்கு வேளை திருட -ஸுசீல்யம் அனுபவிக்கிறார் ஸ்வாமி இங்கு –
கும்பத்தில் அன்றோ ஒளித்து வைத்து -தேடி -வேறு ஒரு கலத்திட்டு-விசஜாதீயம்–நிஹித -வி நிஹித –
தடம் தோள்கள் உள் அளவும் கை நீட்டி -அன்றோ –
மோரார் குடம் உருட்டி -அசாரம் தகாத -சாது சங்கமத்தில் கூடாதே –

ஸ்வாது ஹை யங்க வீனம்–
நேற்று கறந்த பாலை காய்ச்சி -கடைந்த புதிய வெண்ணெய் –

த்ருஷ்ட்வா தாம க்ரஹண சடுலாம் மாதரம் ஜாத ரோஷாம்-
தான் கை விட்டு பார்க்க வெண்ணெய் காண வில்லை -பிள்ளைக்கு என்ன ஆகும் –
கயிறு தேடி -யசோதை -சலித்து-தானே சங்கோசித்து–தியானம் -எப்படியோ அப்படியே -கட்டுண்டான் என்றதை
ராஜா எதிரிகளை காட்டுவதும் மஹிஷியால் கட்டுண்ணப் பண்ணிக் கொள்வதும் பும்ஸத்வம் தானே –
நினைக்க கட்டு விடுபட -நியாய சாஸ்திரம் வெட்க்கி -மதுர கவி ஆழ்வார் இத்தை அருளிச் செய்ய
நம்மாழ்வார் ஆறு மாசம் மோஹித்தார் அன்றோ –
எழில் கொம்பு தாம்பு கொண்டு –அழுகையும் அஞ்சு நோக்கும் -அந்நோக்கும் –தொழுகையும்
இவை கண்ட யசோதை தொல்லை இன்பத்து இறுதி கண்டாள்

பாயா தீஷத் ப்ரச லித பதோ –
தாவிக் குதிக்கிறான்

நாப கச்சன் நதிஷ்டன் –
ஓடவும் இல்லை போகவும் இல்லை -தயங்கி –அஞ்சன வண்ண அசல் அகத்தார்
பரிபவம் பேச தரிக்கிலேன் -பாவியேனுக்கு இங்கே போதராயே –

மித்யாகோப சபதி நயனே மீலயன் விஸ்வ கோப்தா –
கோபம் மித்யா -இரு கையால் முகத்தை மூடிக் கொண்டு
தான் காணா விடில் அம்மாவும் பார்க்க முடியாது என்று இருப்பவன் -யார் –
விஷ்வா கோப்தா -சர்வ லோக ரக்ஷகன் அன்றோ –

——————————————————–

வ்ரஜ யோஷி தபாங்க வேத நீயம் மதுரா பாக்ய மநன்ய போக்ய மீடே
வாஸூ தேவ வதூ ஸ்தநந்த்யம் தத் –கிமபி ப்ரஹ்ம சிசோர பாவ த்ருஸ்யம்–6-

கோகுலத்தில் இடைப்பெண்களின் கடைக்கண்களால் பார்க்கப் பட்டவனும் -இப்பார்வை அம்பு போலே
பாய்ந்து இவனை அவர்களுக்கு அடங்கச் செய்கிறதே –
பெரும் தவமே வடிவு எடுத்தால் போலே உள்ள -வடமதுரை நகரின் – புண்ய வடிவானவனும்
வேறு தெய்வத்தை நாடாதவர்க்கு இனிமையானவரும் வஸூ தேவர் மனைவி தேவகியின் பாலைப் பருகியவனும்
குழவிப் பருவத்தால் காண அழகானவனும் அற்புதமான அந்த பரம் பொருளான கண்ணனை ஸ்துதிக்கிறேன் –

வ்ரஜ யோஷி தபாங்க வேத நீயம் –
வ்ரஜை ஸ்திரீகளுக்கு -அனுபாவ்யமான அவன் –கண்ணுக்கு விஷயம் ஆனான் –
ஸ்ரீ முகம் பயத்துடன் நோக்கினானாம் -கடைக்கு கண்ணால் பார்வையால் அடி பட்டானே-
ஊரார்கள் எல்லாரும் காண -அன்றோ கட்டுண்டு அடி பட்டான் -உரலோடு தீராத வெகுளியாய் -ஆய்ச்சியர் –

மதுரா பாக்ய மநன்ய போக்ய மீடே–ஈடே
ஸ்தோத்ரம் பண்ணுகிறேன் -ஏத்தினேன் நான் உய்ய -ஆழ்வார் போலே –
மதுரா பாக்யம் -அநந்ய போக்யம் ஈடே -வடமதுரை அன்றோ பெற்றது -இந்த பாக்யம் –
மதுரா அபாக்யம் என்றுமாம் -திருவாயர்கள் அன்றோ பெற்றார்கள்
ஒருத்தி மகனாய் இத்யாதி –தாண்ட காரண்ய -ரிஷிகள் ஆயர் பெண்கள் –நிரதிசய போக்யம் அனுபவிக்க -பரமை ஏகாந்திகள் –
தன்னைத் தானே அனுபவிக்கும் கண்ணன் -ஜென்ம கர்ம மே திவ்யம் -என்றானே –
சக பதன்யா விசாலாட்சி நாராயணன் -பெருமாள் -ஆராதனம் -மூன்று இடத்தில் வால்மீகி விசாலாட்சி சப்த பிரயோகம்
சுக்ரீவன் இத்யாதி பார்க்கும் பொழுதும் -விசாலாட்சி –
புஷபக விமானம் -இலங்கை கடாக்ஷிக்க பெருமாள் கேட்டதும் -பக்தனை கடாக்ஷிக்க –
அநந்ய போக்யம் -தனக்கும் போக்யம்

வாஸூ தேவ வதூ ஸ்தநந்த்யம் தத் –
வஸூ தேவரையும் தேவகியும் சேர்த்து அருளுகிறார் –இப்படி கோபிகள் கண்ணடி பாடவோ கண்ணனை கொண்டு விட்டார்கள் -என்கிறார் –
தேவகி பால் கொடுத்ததாக சொல்லி -நந்த கோபர் அஷ்ட வசுக்களில் ஒருவன் -யசோதா பாலைப் பருகினான் என்றுமாம் –

கிமபி ப்ரஹ்ம சிசோர பாவ த்ருஸ்யம்–
பர ப்ரஹ்மம் அன்றோ -கண்ணால் சுடும்படியும் -கட்டவும் அடிக்கவும் படி -கிருஷ்ணம் வந்தே ஜகத் குரும்-
பரமாச்சார்யன் அன்றோ இப்படி -தன்னை ஆக்கிக் கொண்டான் -விலக்ஷணம் அன்றோ –

—————————————————–

பரிவர்த்தித கந்தரம் பயேந ஸ்மித புல்லாதர பல்லவம் ஸ்மராமி
விட பித்வ நிரா சகம் கயோஸ் சித் விபுலோ லூகல கர்ஷகம் குமாரம்-7-

பெரிய உரலை இழுத்தவனும் -பின்னே யசோதை தாய் வருகிறாளா என்று அச்சத்தால் கழுத்தை திருப்பியவனும் –
அவள் தொடரவில்லை -ஏமாற்றி மீண்டோம் என்ற திரு உள்ளத்தால் -ஸ்மிதம் பண்ணி – மலர்ந்த தளிர் போன்ற அதரம் உடையவனும்
அச்சமும் உண்மை இல்லையே -அபிநயம் தானே -இத்தை நினைத்து ஸ்மிதம் என்றுமாம் –
உரலை இழுத்து வரும் பொழுது -மருத மரங்களை முறித்து – யக்ஷர்கள்
குபோரன் புதல்வர்கள் நள கூபரன் -மணிக்ரீவன் ஆடை இல்லாமல் பொய்கையில் நீராட நாரதர் சாபத்தால் மரமானார்கள் –
அந்த சாபம் நீங்கப் பெற்று – இருவருக்கும் — மரப் பிறவியை ஒழித்தவனும்-ஆயர் சிறுவனான கண்ணனை த்யானிக்கிறேன்

பரிவர்த்தித கந்தரம் பயேந –
திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டே போனான் -மீண்டும் அடிக்க வருவார்களோ என்று பார்த்து –
திருவடி ப்ரஹ்மாஸ்திரம் கட்டுப் பட்டதாக நடிக்கும் போது அசுரர்கள் தீண்டியது போலே –

ஸ்மித புல்லாதர பல்லவம் ஸ்மராமி –
புன்னகை ஸ்மிதம் உடன் -அர்ஜுன மரங்களை கண்டான் -இளம் தளிர் -பல்லவம் போலே -திரு வதரம்
ஸுசீல்யம் காட்ட வந்த அவதாரம் அன்றோ இது –

விட பித்வ நிரா சகம் கயோஸ் சித் –
மரங்களாக நின்ற நிலைகளை மாற்றி -யவர்கள் அநாதர யுக்தி கயோஸ் சித் -பாகவத அபசாரம் பெற்றவர்கள் அன்றோ

விபுலோ லூகல கர்ஷகம் குமாரம்-
உரலில் கட்டி வைக்க -பெரிய கனமான உரால் -ஆஸ்ரிதர் கட்டினத்தை அவிழ்க்க மாட்டானே -கர்ம பந்தம் முடிப்பவன் –
பக்த பராதீனன் அன்றோ -குமாரன் -பால்ய அவஸ்தையில் -ஸுசீல்யம் நன்றாக காட்டி அருளி -பராகாஷ்டை

————————————————–

நிகடேஷூ நிசாமயாமி நித்யம் நிகமாந்தை ரது நா அபி ம்ருக்யமாணம்
யாமளார் ஜுந த்ருஷ்ட பால கேளிம் யமுநா சாஷிக யுவனம் யுவா நம் -8-

வேதாந்தங்களால் இப்பொழுதும் தேடப் படுபவரும்-யாதோ வாசோ நிவர்த்தந்தே -என்று தொடக்கத்திலே
தடுமாறி பேசவும் முடியாமல் மீண்டதே -இரட்டை மருத மரங்களால் -சாபம் நீங்கிய பின்பு இருந்து சாஷாத்காரித்தார்களே
இவ்வாறு காணப்பட்ட பால லீலைகளை உடையவரும் யமுனா நதி -ப்ரவாகத்திலும் மடுக்களிலும் கரைகளிலும்
மணல் திட்டுக்களிலும் நேராகப் பார்த்த யவ்வனத் திருவிளையாடல்களையும் -இளமை லீலைகளை உடையவருமான
கண்ணன் எனும் வாலிபன் அருகில் எங்கும் எப்பொழுதும் காண்கின்றேன் -மானஸ சாஷாத்காரம் -என்றவாறு –

நிகடேஷூ நிசாமயாமி நித்யம் –
கிட்டே பார்க்கிறேன் -இங்கும் எங்கும் எங்கும் பார்க்கிறேன் -சேவை நித்தியமாக சாதிக்கிறான் –

நிகமாந்தை ரது நா அபி ம்ருக்யமாணம்-
யாதோ வாசோ நிவர்த்தந்தே-வேதம் சொல்ல முடியாமல் -வேதாஸ் சாஸ்திரம் –
ஆரண்யகம் -காட்டிலே திரிகிறான் -பிருந்தாவனம் சரம் –சேவிக்கிறார் -வேதம் பேச முடியாதவனை–

யாமளார் ஜுந த்ருஷ்ட பால கேளிம் –
பால சேஷ்டிதங்களை காட்டி அருளுகிறார் -சாப விமோசனம் -மரமாக இருந்து பால சேஷ்டிதங்களையும் கண்டார்கள் –
நகுல சகாதேவ அர்ஜுனன் நினைவு படுத்த -யாமளா ர்ஜுன-என்கிறார்

யமுநா சாஷிக யுவனம் யுவா நம் –
ராச க்ரீடை சேவை சாதிக்க -யமுனை கரையில் யமுனா தேவி கண்டு அனுபவித்தாள்
கோபிகள் இடம் செய்த க்ரீடை முழுவதும் யமுனா தேவி தானே கண்டாள்
கோபிகள் கண்ணனையே பார்க்க -அடுத்த கோபி யுடன் விளையாடுவதை கண்டார்கள் இல்லையே –
ராச க்ரீடை நிலத்திலும் ஜலத்திலும் பண்ணினான்-யோகேஸ்வரன் -எத்தனை ரூபங்களை கொள்வான் –
சாஷாத் மன்மத மன்மத -மனசை மதனம் பண்ணும் அவன் மனசை மதனம் பண்ணி -நாட்டார் காமன் இடம் படுவதை
காமன் இடம் இடம் படும்படி பண்ணிய திவ்ய மங்கள விக்ரஹன்
நாயகி பாவம் அடைய கோபிகளே காரணம் -மயில் தோகை மகர குண்டலம் அசைய -முக்த அனுபவமே ராச க்ரீடை –
ஜார சோர சிகாமணி இவன் –வேணு கானம் கேட்டு சன்யாசிகளாக வந்தார்கள் -அவ்யபிசார பக்தி யோகம் கொண்ட கோபிமார்கள்-
ராச க்ரீடை தகுமா கேட்க வேண்டாமே-கோபியை முக்தர் துல்யம் ஆக்கும் ஸ்ரீ வேணு கானம் -வேத அபிமான தேவதைகள் -ரிஷிகள் –
காமத்தை ஜெயிப்பதே ராஸ க்ரீடை -ஸ்த்ரீ பிராயர் -பக்தி பெற ராச க்ரீடை ஸ்ரவணம் –

————————————————

பதவீ மதவீ யஸீம் விமுக்தே அடவீ சம்பதமம் புவா ஹயந்தீம்
அருணா தர சாபிலாஷ வம்ஸாம் கருணாம் காரண மாநுஷீம் பஜாமி -9-

மாம் ஏகம் சரணம் வ்ரஜ என்று மோக்ஷத்துக்கு மிக அருகில் உள்ள எளிய வழியும் தானே ஆனவனும் –
பிருந்தாவன செல்வத்துக்கு மேகம் போன்றவனும் –
இவனது கருணா கடாக்ஷத்தால் க்ஷேமகரம் அனைத்துக்கும் அன்றோ –
செந்நிறத்த திரு அதரத்தில் ஆசை கொண்ட திருப் புல்லாங்குழலை உடையவனும்
ஸமஸ்த ஜகத்துக்கும் சகல காரணமானவனும் சகல மனுஷ நயன விஷயமாவதற்காக
சாது ரக்ஷணத்துக்கும் பூ பாரம் நீக்கவும் ஆயர் பிள்ளையாக திரு அவதரித்து அருளிய
கண்ணனின் கருணையை தொழுகிறேன் –

பதவீ மதவீ யஸீம் விமுக்தே
முக்தர்கள் -உபாயமே கருணையே -சித்த உபாயம் –

அடவீ சம்பதமம் புவா ஹயந்தீம்
ஆழி மழை –சர மழை போல் –எம்பெருமானே மேகம் இங்கே -நீருண்ட மேகம் போலே -உள்ளேயே புகுந்து -கிருஷ்ண மேகம்
கருணா வார்ஷூக –காலே காலே -சோபையன் தண்ட காரண்யம் -வனம் ஸ்ரீ மத் ஆனதே -சித்ரா கூடம் பெற்ற ஸுபாக்யம்

அருணா தர சாபிலாஷ வம்ஸாம்
மூங்கில் -அதர அம்ருதம் பானம் பண்ண ஆசை கொண்டு -அசேதனங்களும் ஆசைப்படும் சிவந்த அதரம்-கீழே ராச க்ரீடை பேச
அத்தை அனுசந்தித்து சிவந்த -தாம்பூலம் பரிமாறி சிவந்த அதரம் -இத்தை ஆசைப்பட்ட தாம் புல்லாங்குழல் -பரஸ்பர பாகவத பிரபாவம்
சேஷிகளை சேஷிகள் உகக்க வேண்டுமே -தேசிகனும் ஆசை கொண்டார் இதில் –

கருணாம் காரண மாநுஷீம் பஜாமி –
பிரத்யக்ஷமாக சேவை சாதித்து -தரிசன சாமானாகாரம் -ஆன பின்பு கைங்கர்யம் பண்ண வேண்டுமே –
கருணையும் கண்ணனும் ஒன்றே -பரம காருணிகன்-ஜகத் காரணமே மனுஷனாக வந்து -தன் கருணையால் மோக்ஷம்
ஆஸ்ரித ரக்ஷணமே அவதார பிரயோஜனமும் -சர்வ ரக்ஷகத்வம் -அகாரார்த்தம் -கருணையே மூர்த்தியாக அவதரித்து
ஸ்த்ரீ லிங்க பிரயோகம் -கருணை க்ஷமை -யுவா யுவதி -துல்யம் –

பஜாமி –
ராஸக்ரீடை ஆடி களைத்த கண்ணனுக்கு கைங்கர்யம் செய்ய ஆசை கொள்கிறார் –தேசிகர் –
ஆளும் ஆளார்–ஆழியும் சங்கும் சுமப்பார் தாம் -பின் செல்வார் மற்று இல்லை —
நாளும் நாளும் -கைங்கர்ய பிரார்த்தனை பராங்குச நாயகிக்கு
இங்கே தேசிகர் பெற்று மகிழ்கிறார் பஜாமி என்று

—————————————————–

அநிமேஷ நிஷே வணீய மஷனோ அஜஹத் யவ்வன மாவி ரஸ்து சித்தே
கல ஹாயிதே குந்தளம் கலாபை கரணோன் மாதக விப்ரமம் மஹோ மே -10-

கண்களால் இமை கொட்டாமல் அனுபவிக்க ஏற்றவனும் -நித்ய யுவா குமாரன் ஆனவனும் –
இமைக்கும் பொழுது உண்டாகும் இழவு பொறுக்க ஒண்ணாதே
மயில்தோகைகளோடு போட்டியிடும் திருக் குழல் கற்றையை உடையவனும் இந்திரியங்களை
பித்துக் கொள்ளச் செய்யும் ஆச்சர்யமான சேஷ்டிதங்களை உடையவனுமான கண்ணனின் தேஜஸ் ஸூ –
பும்ஸாம் திருஷ்ட்டி சித்த அபஹாரிணாம் -கண்டவர் தம் மணம் வழங்கும் கண்ணன் அன்றோ
இப்படி அழகு வெள்ளமிடும் ஜோதிஸ்ஸூ – திரு வடிவம் என் உள்ளத்தில் என்றுமே அகலாமல் தோன்ற வேண்டும்

அநிமேஷ நிஷே வணீய மஷனோ-
கண்ணுக்கு சேவிக்க ஆசை மிக்கு -கண்ணாலே பருக -த்வரை மிக்கு -கண் கொட்டாமல் சேவிக்க -ஆசை கொண்டார் –
சாலோக்யம் சாரூப்பியம் சாயுஜ்யம் -நாம் ஆசைப் பட்டது போலே அவனும் நம்மைப் போலே –
அனுபவிக்க ஆசைப் பட்டு வந்தவன் அன்றோ கிருஷ்ணன் –
யாமளார் ஜூனர் யமுனை நதி அனுபவித்தார்கள் -நாம் இழப்பதோ

அஜஹத் யவ்வன மாவி ரஸ்து சித்தே –
யுவா குமாரா அன்றோ -நித்ய யுவா -அனுபவிக்க இவரும் யுவதி யாக மாறி -மயங்கி –

கல ஹாயிதே குந்தளம் கலாபை
முன் உச்சி மயில் தோகை -நெற்றி மயிர் காந்தி -கலந்து -விஞ்சி -சேவை சாதிக்க -அழகில் ஈடுபட்டு

கரணோன் மாதக விப்ரமம் மஹோ மே
மயக்கும் தேஜஸ் -நீ சேவை சாதிக்க வேண்டும் -என் கரணங்கள் உன்மாதகம் அடைந்தன –
காற்றையும் கழியையும் கட்டி அழுத்த பராங்குச நாயகி போலே
விரஹத்தால் தவிக்க -உன் திரு மேனி சேவை ஒன்றாலே போக்க முடியும் –
ஆவிரஸ்து -கோபிகளுக்கு காட்டி அருளினால் போலே -என்கிறார் –
நீ என்னை அன்றி இல்லையே -சேஷ பூதன் கைங்கர்யம் கொள்ள வேண்டுமே –
சேஷிக்கு அதிசயம் விளைக்கவே சேஷ பூதன் கைங்கர்யம் –

—————————————————-

அநுயாயி மநோஜ்ஞ வம்ச நாளை -அவது ஸ்பர்சித வல்லவீ விமோஹை
அநக ஸ்மித சீத ளைரசவ் மாம் அநு கம்பா சரிதம் புஜைரபாங்கை -11-

இனிய திருக் குழலின் ஓசையைப் பின் தொடர்பவனும் இடைப்பெண்களுக்கு மயக்கம் தருபவனும்
கபடம் அற்ற புன்னகையால் குளிர்ந்து இருப்பவனும் கருணா நதியில் மலர்ந்த அரவிந்தம் போலே உள்ள
கடைக்கண் கடாக்ஷ வர்ஷத்தால் இந்தக் கண்ணன் அடியேனை ரக்ஷிக்கட்டும்

அநுயாயி மநோஜ்ஞ வம்ச நாளை
அழகான குழல் -மனஸ் -அறியும் -அவன் நினைவை அறிந்து -கடைக் கண் அனுசரித்து –
அந்த கோபி இடம் வேணு கானம் ஒலியும் செல்லுமாம்
ஊதும் அத் தீம் குழற்க்கே உய்யேன் -நம்மாழ்வார் –அது மொழிந்து –தூது செய் கண்கள்கொண்டு ஓன்று பேசி
பிரணய ரோஷம் போக்க –நீச பாஷாணங்கள் குழல் வழியே -பேசி —

அவது ஸ்பர்சித வல்லவீ விமோஹை
கண் பார்வை மயக்கும் -குளிர்ந்து -கவர்ந்து -கோ பறவைகள் மரங்கள் மான்களையும் மயக்கும் –
அவது-
கடாக்ஷம் என்னை காக்கட்டும் –

அநக ஸ்மித சீத ளைரசவ் மாம்
குற்றம் அற்ற ஸ்மிதம் -மந்தஹாசம் -வல்லப ஜன வல்லபன் -அசவ் மாம் -எதிரே நிற்கிறான் –

அநு கம்பா சரிதம் புஜைரபாங்கை —
தாமரை கண்கள் -கருணை யாகிய நதியில் தோன்ற அம்புஜம் அன்றோ -கம்பீர -இத்யாதி –
அபாங்கை –
கண் பார்வையை பின் செல்லுமாம் வேணு கானம்
வேணு கானம் -கேட்ப்பார்க்கு மோகம் உண்டாக்கும் –
மருண்டு மான் கண்கள் மேய்க்கை மறந்து –எழுது சித்ரங்கள் போல் நின்றனவே
வேணு கானம் இசைத்தோ கடாஷித்தோ அருளட்டும் நேராக சேவை சாதிக்கா விடில் -என்கிறார்
செவி உணாவின் சுவை கொண்டு மகிழ்ந்து கோவிந்தனை தொடர்ந்து எங்கும் விடாரே –

——————————————————–

அத ராஹித சாரு வம்ச நாளா மகுடா லம்பி மயூர பிஞ்ச மாலா
ஹரி நீல சிலா விபங்க லீலா பிரதிபா சந்து ம மாந்திம ப்ரயாணே-12-

அழகிய திருப் புல்லாங்குழலை திரு அதரத்தில் வைத்து உள்ளவனாகவும் திரு முடியில் சரிந்து இருக்கும்
மயில் பீலியை உடையவனாகவும் இந்திர நீல மணி துண்டம் போலே -வேணு கோபாலனது
நீல நிர திவ்ய மங்கள விக்ரஹ ஸ்ம்ருதி எனது அந்திம காலத்திலும் இருக்க அருள் செய்வாய்

அத ராஹித சாரு வம்ச நாளா
நாரதர் பாடும் ஸ்லோகம் இது என்பர் -புத்திரர் லவகுசர் ஸ்ரீ ராமாயணம் அருளியது போல –
பேரன் நாரதர் பாடும் – இது
உதட்டில் பட்டு அதர அமிருதம் பெற்ற மூங்கில் போலே தனக்கும் பெற வேண்டும் –
ஸ்ரீ சங்கு ஆழ்வானும் அனுபவித்தது போலே -தம் புத்திக்கும் இது வேண்டும் என்கிறார் –

மகுடா லம்பி மயூர பிஞ்ச மாலா
கிரீடத்தில் மயில் தோகை சாத்தி கொண்டு -அழகுடன் சேவை சாதிக்க -அனுபவிக்கிறார்

ஹரி நீல சிலா விபங்க லீலா
இந்திரா நீல கல் வண்ணம் -இந்த சேவை நித்தியமாக இருக்க வேண்டும் -திரு முடி சேவித்து திரு மேனி அனுபவம் இதில் –

பிரதிபா சந்து ம மாந்திம ப்ரயாணே
பகவத் த்யானம் மாறாமல் இருக்க வேண்டும் -பிரபன்னருக்கு அந்திம ஸ்ம்ருதி உபாயமாக வேண்டாம் -பல ரூபம் தானே
அனவதிக அதிசய பிரியா -நித்ய கிங்கரோ பவது —
தாக சாந்திக்கு அதர ஸ்பர்சம் வேண்டும் -வேணு கானம் கரண மந்த்ரம் -கண்ட அம்சம் தானே நான் –
புல்லாங்குழல் உடன் சஜாதீயன் என்கிறார் –
எண்ணங்கள் பிரதிபா உன்னை பற்றியே இருக்க வேண்டும் –
நினைத்து அனுபவித்துக் கொண்டே இருக்க பிரார்த்திக்கார்

————————————————————–

அசிலா நவலோக யாமி காலான் மஹிள தீன புஜாந்த ரஸ்ய யூன
அபிலாஷ பதம் வ்ரஜங்கா நாநாம் அபிலா பக்ரம தூரமாபி ரூப்யம் -13-

ஸ்ரீ மஹா லஷ்மிக்கு கோயில் கட்டணமான-அவள் ஏக போகமாக அனுபவிக்கும் – திரு மார்பு –
யுவா குமாரா -கோபிமார்கள் பிராவண்யத்தை வர்த்திப்பவன் -திவ்ய சேர்த்தி ஸுந்தர்யம் வாசா மகோசரம் அன்றோ –
அழகனை சதா சாஷாத்காரித்து ஈடுபட்டு சேவித்துக் கொண்டு இருக்க அருள வேண்டும்

அசிலா நவலோக யாமி காலான்
எல்லா காலமும் -சதா தத் பாவம் –
அகிலன் காலம் அவலோகயாமி –
ஒவ் ஒரு நொடியும் உன்னையே நான் பார்க்க வேண்டும்
அகிலான் காலான் –
பன்மையில் -தைலதாரா -யோ நித்யம் அச்சுத பாதாம் புஜ யுக்ம ருக்ம -போலே -அவலோகயாமி நிகழ் காலம்
மாரீசனுக்கு ரா ஸ்ம்ருதி போலே இருக்க வேண்டும் –
அன்பினால் தரிசன சமானாகாரம் -அவனுக்கு பயத்தினால்

மஹிள தீன புஜாந்த ரஸ்ய யூன
பிராட்டிக்கு அதீனமான திரு மார்பன் -ஸ்ரீ யபதித்தவம் சொல்லி -யுவா -யூன-ஸ்ரீ யா ஆலிங்கனம் செய்த திரு மார்பு
தத்வ சந்தனம் -ப்ரஹ்மணீ ஸ்ரீ நிவாஸே–ஸ்ரீ ரத்னம் -ஸ்ரீ கௌஸ்துபம் உள்ள திரு மார்பு அன்றோ –
பராதீனம் -பிரணத பரதந்த்ரன் அன்றோ நீயும் –
அரவிந்த பாவையும் தானும் உள்ளே புகுந்து -ஸ்தாவர பிரதிஷ்டையாக வந்து இருப்பானே –

அபிலாஷ பதம் வ்ரஜங்கா நாநாம்
கோபிகள் அனுபவிக்கும் அழகன் -கோபாலன் -பாவனையே நித்தியமாக இருக்கும் படி அருள வேணும்
அன்புக்கு பாத்திரமாக இருப்பானே -ஏகாந்த வல்லபன் -கோபிகள் அனுபவிக்கும் மிதுனம் -ஸுசீல்ய பரா காஷ்டை
பிராட்டி திரு ஆணை தன் திரு ஆணை -கொண்டு பிரார்த்திப்பார்கள் –

அபிலா பக்ரம தூரமாபி ரூப்யம் –
அப்படிப்பட்ட அழகை நித்யமும் சேவிக்க ஆசைப்படுகிறார் -ஆபிரூப்யம் -லாவண்யம் -அச்சோ ஒருவர் அழகிய வா
காவி போல் வண்ணர் வந்து என் கண்ணினுள்ளே தோன்றினார் -கரும்பு அன்னவனை
கண்டு கொண்டு என் கண்ணினை களிக்குமாறே –
நீல மேனி ஐயோ என்னை சிந்தை கவர்ந்ததவே
தேசிகர் உடன் சேர்ந்த பின்பு அழகு விஞ்சி -கோபிகள் ஆசைப்பட்டு விரும்பும் படி –
ஆசையினால் ஆவியை ஆகுலம் செய்யும் என்பார்கள் –
பூர்ண சம்ச்லேஷம் -அழகில் ஈடுபட்டு அருளிச் செய்கிறார்

———————————————————————-

ஹ்ருதி முக்த்த சிகண்ட மண்டை நோ -லிகித கேந மமைஷ சில்பி நா
மத நாதுர வல்ல வாங்கநா வத நாம் போஜ திவாகரோ யுவா -14-

அழகிய மயில் தோகையை சூடியவனும் -ப்ரணயத்தால் பீடிக்கப்பட்ட கோபிகளின் முகத்தாமரைக்கு சூர்யன் போன்றவனும்
இந்த யுவா குமாரன் அடியேன் திரு உள்ளத்தில் எந்த சிற்பியால் பிரதிஷ்ட்டிக்கப் பட்டானோ –
தானே அடியேனை இசைவித்து உள்ளம் புகுந்து அத்தாலே பெறாப் பேறு பெற்றால் போலே
ஹ்ருஷ்டனாக சேவை சாதிக்கின்றான்

ஹ்ருதி முக்த்த சிகண்ட மண்டை நோ –
அழகிய -மயில் தோகை -அலங்காரம் கொண்டு

லிகித கேந மமைஷ சில்பி நா
சித்திரம் எழுதப் பட்டதே என் ஹிருதயத்தில் –என்னுடைய நெஞ்சகம் பால் சுவர் வழி எழுதிக் கொண்டேன் –
சஞ்சலம் ஹி மனஸ் –
அறிந்தேன் அவனை நானே –காசி தவள வாஹிந கங்கை- கா சிதள வாஹினி கங்கா -சாடு
ககா கிம் எம்பெருமானை குறிக்கும் -கேன -கண்ணனே தன்னைத் தானே எழுதினான் -பாவனா -எண்ணம் ஆகிய சுவர்
அகண்ட ப்ரஹ்மாண்ட -பிரதம தர சில்பி -மயனோ த்வஷ்டாவோ இல்லை –பத்மா சஹாயா –தத் இங்கித பராதீனன் –
மம ஏஷ சில்பினா -மனசான கண்ணால் சித்திரம் பார்த்தார் –
யோகிகளுக்கு பிரத்யக்ஷம் ஆவான் -தாம் ஆசைப்பட்ட படியே -நித்யம் சேவிக்க –

மத நாதுர வல்ல வாங்கநா
ஆசை கொண்ட கோபிகள் -முகம் தாமரை -மலர –

வத நாம் போஜ திவாகரோ யுவா
நித்ய யுவா -திவாகரன் -அன்றோ இவன் –
இந்த சித்திரம் தான் -வல்லபி ஜன வல்லபன் கோபீ நாதன் -கண்டார் –
மானசீக பாவம் -கோபிகள் ஆசையும் தெரியும் படி அன்றோ கண்டார்
முக விகாசகங்கள் -உதய இளம் சூரியன் -கடாக்ஷங்கள் பட்டு மலரும் முகத்தாமரைகள் –
சமுதாயம் முழுவதையும் கண்டார் –

———————————————————

மஹஸே மஹிதாய மௌலி நா விநதே நாஞ்சலி மஞ்சன த்விஷே
கலயாமி விமுக்த்த வல்லவீ வலயா பாஷித மஞ்ஜு வேணவே -15-

மிகவும் போற்றப்படுபவனும் -மை போன்ற ஒளி உடையவனும் –
மிக அழகிய கோபிமார்களின் கை வளையல்கள் த்வனியுடன் கூடினவனும்
அழகிய திருப் புல்லாங்குழலை உடையவனும் –
இந்த த்வனிக்குத் தக்க தாளம் கோபிகள் கை வளையல்களை ஆட்டி என்றவாறு –
தேஜோ மய ரூபமான கண்ணனை ப்ரணாமத்துடன் அஞ்சலி செய்கிறேன்

மஹஸே மஹிதாய மௌலி நா
ஒளி கொஞ்சம் -ஜோதிஸ்-இவர் ஹிருதயத்தில் -திவ்ய மங்கள விக்ரஹ சேவை –
ராச க்ரீடை நடக்கும் அரங்கமே ஸ்வாமி திரு உள்ளம்

விநதே நாஞ்சலி மஞ்சன த்விஷே
மைப்படி மேனி -தேஜஸ் மிக்கு

கலயாமி விமுக்த்த வல்லவீ
ராச க்ரீடை -கோபிகள் தாளம் -கை வளைகள் குலுங்க -கானத்துக்கு ஏற்ற -கால் ஆட கொலுசு சதங்கை ஒலிக்க-
இதற்கு தக்க வேணு கானம் பண்ணுகிறான் –
குசலப் பிரஸ்னம் -மூங்கில் பெற்ற பாக்யம் என்ன -தாமோதரன் அதர மிருத பானம் பண்ண –
பொறாமை உடன் பேச -தாயாதி போலே -பங்காளிகள் –

வலயா பாஷித மஞ்ஜு வேணவே
வேணு கானம் பண்ணும் சேவை சாதிக்க —
ராச க்ரீடை பங்கு கொள்ள அழைப்பு விடுவதே வேணு கானம் வழியாக தானே
வலையா பாஷிதம் –
மத்தியஸ்தர் வேலை– வளைகள் ஒலி–கோப ஸ்திரீகளுக்கு கொஞ்சம் விட்டு கொடுத்து அமிருத பானம் பெற –

————————————————————-

ஜயதி லளித வ்ருத்திம் சிஷிதோ வல்லவீநாம் –
சிதில வலய சிஞ்ஞா சீதளைர் ஹஸ்த தாளை
அகில புவன ரஷா கோப வேஷஸ்ய விஷ்ணோ —
அதர மணி ஸூதாயா மம்சவான் வம்ச நால-16-

கோபிமார்களின் கை வளையல்கள் த்வனியோடு-குளிர்ந்த கையால் போடும் தாளங்களால்-லளிதம்-என்ற நடனம் கற்பிக்கப் பட்டதும்
ஒரு கோபி ஒரு கண்ணன் -ஒரு கோபி என்று குரவைக் கூத்து ராஸக்ரீடை ஆடி –
ஸமஸ்த லோக ரக்ஷணார்த்தமாக ஆயர் குலத்தினில்-கோவலனாய் கோவலரரோடு – வந்து பிறந்த
ஸ்ரீ மஹா விஷ்ணுவுடைய திருப் பவள அதர ரசத்தில் ஆழ்ந்து அனுபவிக்கும் திருப் புல்லாங்குழல்
மிக பெருமை பெற்று விளங்க -அதற்கு மங்களா சாசனம் -இந்த சேர்த்தி பல்லாண்டு வாழியே -என்றபடி –

ஜயதி லளித வ்ருத்திம் சிஷிதோ வல்லவீநாம்
சிஷை பண்ணும் -வளை ஓசை –வேணுக்கு-லளித்த வ்ருத்தி -அபிநயம் -நாட்டியம் –
புருவ நெறிப்பு-ஸூ குமாரமாக -பரம மோஹனம்

சிதில வலய சிஞ்ஞா சீதளைர் ஹஸ்த தாளை
சிதிலமான வளை ஓசை -குளிர்ந்த -கண்ணாடி வளைகள் -தாளம் –

அகில புவன ரஷா கோப வேஷஸ்ய விஷ்ணோ –
கோப வேஷமே ரஷார்த்தத்துக்கு தானே -கோ பூமி -அரசன் -ஆளும் பொறுப்பும் உண்டே —
விஷ்ணு அன்றோ -அகில புவன ஜென்ம –மங்கள ஸ்லோகம் அடியாக –

அதர மணி ஸூ தாயா மம்சவான் வம்ச நால
ஹஸ்த ஸ்பர்சம் பட்டு மூங்கில் பிரகாசிக்க -ஸ்ரீ தேவிக்கு கிடைக்கும் அதர அமிருதம் -பெற்றதே –
பவளம் -சிவந்த அழகிய திரு அதர அமிர்தம் -குழலுக்கு ஜெயந்தி -பாடுகிறார் –
ஜிதந்தே -என்கிறார் -வேணுக்கு –ராச க்ரீடைக்கு இதுவே முக்கியம் –

கண்ணனும் இடைப் பெண்களும் ராசக் க்ரீடையில் ஈடுபடுகின்றனர் .
அத்தனை கோபிகளுக்கும் ஒவ்வொருத்திக்கு ஒவ்வொரு திருமேனிகளை படைத்துக் கொள்கிறான் கண்ணன்.
ஒரு கோபியும் ஒரு கண்ணனுமாக நின்று ராசக்கிரீடை புரிகின்றனர் .
இடைப் பெண்கள் தங்கள் கைகளில் வளை குலுங்க தாளம் போடுகின்றனர்
அப்போது வளைகள் ஒலிக்கின்றன. இந்த ஒலி அவர்கள் போடும் தாள ஓலி யோடு கலந்து மிக இனியதாகின்றது.
இவர்கள் போடும் கைத் தாளங்கள் புல்லாங்குழலுக்கு அபிநய சாஸ்திரத்தில் உள்ள லளிதம் என்னும் முறையைக் கற்பிக்கின்றது. …)

தத3க்3ர ஹஸ்த க்3ரஹணாத்திந6நாம் ஸ ஸவ்யேதா த3க்ஷிணதஸ்ச திஷ்டந் ப3பா4ர
வித்4யுத் வ்யவதா4ந பா4ஜாம் வாத்யாஜுஷாம் வாரிமுசாம் அபி4க்2யாம்  -ஸ்ரீ யாதவாப்யுதயம்–8- சர்க்கம்-83-

திருக் கரத்தின் முனை பற்றிச் சீர் நடனம் புrந்திடவே விருப்பமுடை ஆய்ச்சியரை வலம் வந்தான்
அவர்களது இரு மருங்கும் உருவம் பல எடுத்தனனே
கண்ணன் தான் கரு முகில்கள் மின்னல்களுக் கிடைப்படுதல் ஒத்ததுவே !
தன்னுைடய திருக் கை முனையைப் பிடித்து ஆட ஆசைப்பட்ட அந்த ஸ்த்ரீகளுக்கு இரு பக்கத்திலும் தான்
பல ரூபமாய் நின்று மண்டலாகாரமாக அவர் களோடு சுற்றுகின்றானாய், இடையிடை
மின்னல்கள் பொருந்தி சுழல் காற்றில் அகப்பட்ட மேகங்கள் போல் விளங்கினான்.

தாவ தேவ க்ருத மண்டநே கலித கஞ்சு லீக குச மண்டலே
கண்ட லோல மணி குண்டலே யுவதி மண்டலே அதி பரி மண்டலே
அந்தரா ஸகல ஸூ ந்தரீ யுகல மிந்திரா ரமண சஞ்சரன்
மஞ் ஜுலாம் தத நு ராஸ கேலி மயி கஞ்ஜ நாப சமு பாததா –-(நாராயணீயம் 69.2)

அப்போதே மார்புக் கச்சையை இறுக்கிக் கட்டிக் கொண்டு தங்களை அணிகலன்களால்
அலங்கரித்துக் கொண்டு கோபியர் உங்களைச் சுற்றி வட்டமாய் நின்றார்கள்
தாங்களும் அப் பெண்களின் இடையே -இரு கோபியர்களுக்கு நடுவில் ஒரு கிருஷ்ணன் –
இரு கிருஷ்ணருக்கு நடுவில் ஒரு கோபிகை -என்னும் படி நின்று கொண்டு
நர்த்தனம் செய்து கொண்டு ராஸ க்ரீடை செய்ய ஆரம்பித்தீர்கள் –

——————————————————

சித்ரா கல்ப ஸ்ரவளி கலயன் லாங்கலீ கர்ண பூரம் –
பர்ஹோத் தம்ச ஸ்புரித சிகுரோ பந்து ஜீவம் ததாந
குஞ்ஞா பத்தா முரசி லளிதாம் தாரயன் ஹார யஷ்டிம்-
கோப ஸ்த்ரீணாம் ஜயதி சிதவ கோ அபி கௌமார ஹாரீ -17-

திருக் காதில்-லங்காலீ-என்னும் தென்னம் பாளைப் பூவை ஆபரணமாக சாத்திக் கொண்டு –
திருக் குழல் கற்றையில் மயில் பீலியையும் சூடி– பந்து ஜீவம் என்னும் செம்பருத்திப் பூவையும் அணிந்து
திரு மார்பிலே குந்துமணி கோக்கப் பெற்ற அழகிய ஹார மாலை அணிந்து
இவ்வாறு பல பல ஆபரணங்களை அழகு கொடுத்து கோபிமார்களை கவர்பவன் -விசித்ரன் –
விஷமக் காரக் குறும்பனான கண்ணன் -வாழ்க

சித்ரா கல்ப ஸ்ரவளி கலயன் லாங்கலீ கர்ண பூரம் –
காது அலங்காரம் –தென்னம் பாளை பூ –

பர்ஹோத் தம்ச ஸ்புரித சிகுரோ பந்து ஜீவம் ததாந
மயில் பீலி தலைக்கு அலங்காரம் –
சிவந்த பூவை செம்பரத்தம் பூவை கையில் கட்டி -பூ செண்டு தங்கி

குஞ்ஞா பத்தா முரசி லளிதாம் தாரயன் ஹார யஷ்டிம்-
குந்துமணி -சிவந்து -மாலை மார்பில் சாத்திக் கொண்டு -வனமாலை விட ப்ரீதியுடன் அணிந்து
குறும்புக்கார கண்ணன் வேஷம்

கோப ஸ்த்ரீணாம் ஜயதி சிதவ கோ அபி கௌமார ஹாரீ
யவ்வனம் -கவரும் படி வேஷம் -பும்ஸாம் சித்த த்ருஷ்ட்டி அபஹாரினாம்–யாவர் ஆற்ற வல்லார் ஒருங்கே கண்டால்-
அழகன் -எப்படி இருந்தாலும் அழகு தானே -தீமை செய்யும் சிரீதரன்–
குறும்பு வேஷம் காட்டி என்னையும் வசீகரித்து தனக்கு ஆக்கிக் கொள்ளட்டுமே

——————————————————————

லீலா யஷ்டிம் கர சிசலயே தஷிணே ந்யஸ்ய தன்யாம்
அம்சே தேவ்யா புளக ருசிரே சந்நிதிஷ்ட அந்நிய பாஹு
மேக ஸ்யாமோ ஜயதி லலிதோ மேகலா தத்த வேணு –
குஞ்ஞா பீட ஸ்புரித கிகுரோ கோப கன்யா புஜங்க -18-

வலது திருக் கரத்தில் பாக்யம் செய்த லீலா ஊன்று கொலை பிடித்தவனும்
நப்பின்னைப் பிராட்டியின் மயிர்க் கூச்சு எறிந்த திருத்த தோள்களில் இடது திருக் கையை வைத்தவனும்
அழகனும் திரு யரை நாணில் திருக் குழலை பொருத்தமாக செருகியவனும்
குன்றிமணி மாலையோடு விளங்கும் திருக் குழல் கற்றையை உடையவனும்
கோபிமார்களிடம் அதி வ்யாமோஹம் கொண்டவனும்
நீல மேக ஸ்யாமள திவ்ய மங்கள விக்ரஹத்தை உடையவனுமான கண்ணனுக்கு பல்லாண்டு

லீலா யஷ்டிம் கர சிசலயே தஷிணே ந்யஸ்ய தன்யாம்
வலது கையில் விளையாட்டு குச்சி -நீருண்ட மேகம் நின்ற திருக் கோலம் -இளம் தளிர் போன்ற
திருக் கைகளில் கரடு முரடான குச்சி
பெரும் பாக்யம் அன்றோ இந்த குச்சிக்கு -இயம் சீதா -சீதா கையைப் பிடித்த கை யன்றோ பிடித்தது –
கோபிகளால் வேண்டப்படும் கை -அக்ரூரர் மாருதி பரதர் போன்றவரை அணைத்த கை -என்ன பாக்யம் –

அம்சே தேவ்யா புளக ருசிரே சந்நிதிஷ்ட அந்நிய பாஹு
நப்பின்னை பிராட்டி திருத் தோள்களில் -தழுவி இறுக -சந்நிவிஷ்ட –சீதா பிராட்டிக்கு அஸி தேக்ஷிணா போலே
நப்பின்னை பிராட்டிக்கு திருத் தோள்கள் அன்றோ -துஷ்கரம் ராமா -என்றாரே திருவடி –
வைதிக வேஷம் சீதா பிராட்டிக்கு வன்னிய வேஷம் நப்பின்னைக்கு –இவளுக்காக அன்றோ கோபால வேஷம் –

மேக ஸ்யாமோ ஜயதி லலிதோ மேகலா தத்த வேணு
நீல மேக ஸ்யாமளன் -மின்னு மா மழை தவழும் மேக வண்ணா
ஒட்டியாணம் -மேகலை -வேணு சொருகி

குஞ்ஞா பீட ஸ்புரித கிகுரோ கோப கன்யா புஜங்க
திரு முடியில் குந்து மணி மாலை அலங்க்ருதம் -கறுப்பும் சிவப்பும் பரிபாகம் –
கோபி கன்யிகளுக்கு ஆசை விஞ்சி -இருக்கும் படியான கோப வேஷம் –
லலிதா ஜெயந்தி –
ஸூந்தரன் அழகன் -புஜங்க சயனம் பள்ளி கொள்பவன் புஜங்கத்துடன் இருப்பானே

———————————————————

பிரத்யா லீட ஸ்திதி மதிகதாம் ப்ராப்த காடாங்க பாலிம்-
பஸ்ஸா தீஷன் மிலித நயனாம் ப்ரேயஸீம் ப்ரேஷமாணா
பஸ்திரா யந்த்ர ப்ரணிஹித கரோ பக்த ஜீவாது ரவ்யாத்-
வாரி கிரீடா நிபிட வசநோ வல்லவீ வல்லபோ ந-19-

பின்பக்கம் கண்ணனது இறுகிய ஆலிங்கனத்தைப் பெற்றவளும் -இந்த ஆனந்த சாகரத்தில் மூழ்கி
முழு நோக்காக அன்றி கடைக் கண்ணால்
கண்ணனது கடாக்ஷம் பெற்றவளுமான கோபியையே பார்த்துக் கொண்டே
நீர் பீச்சும் குழலை திருக் கையிலே வைத்து ஜல க்ரீடை செய்ய இறுக்கிய திரு ஆடை அணிந்தவனும்
திருக் கால்களை வசதியான நிலையில்-ஒரு திருக் காலை முன்னும் மற்றொரு திருக் காலை பின்னும் வைத்து –
பிரத்யா லீடமாக -வைத்து அருளும் -பிரணயியான கண்ணன் –
ஆஸ்ரிதர்களை உஜ்ஜீவனம் செய்யும் பேஷஜம் -நம்மை ரக்ஷிக்கட்டும்

பிரத்யா லீட ஸ்திதி மதிகதாம் ப்ராப்த காடாங்க பாலிம்-
பீச்சாம் குழலில் நீரை வைத்து -அடிக்க -தயாராக இருக்க -பின் சென்று இறுக தழுவ

பஸ்ஸா தீஷன் மிலித நயனாம் ப்ரேயஸீம் ப்ரேஷமாணா
திரும்பி பார்க்க -இரு கண்களும் இணைய -ஈஷமானா ப்ரேஷமானா கூரிய பார்வை –

பஸ்திரா யந்த்ர ப்ரணிஹித கரோ பக்த ஜீவாது ரவ்யாத்-
அழுத்தி பிடித்து -துருத்தி வைத்து நீரை பாய்ச்ச –
கோபியை அணைத்து -தண்ணீரும் அடிக்க -மித்யா கோபன் -அகில புவன ராஷா கோப வேஷம் –
சாஷாத் பர ப்ரஹ்மம் -சதுர் புஜம்
பக்த ஜீவாது-கலந்து பழகி தரிக்க -ஆத்மாவை மே மதம் ஞானி அவன் மதம் -என்றுமாம் –
தன்னை அந்தராத்மா என்று நினைப்பார்க்கு தானும் அந்தராத்மா –
ஆத்மாத்மீயங்கள் சமர்ப்பித்தார்க்கு தானும் சமர்ப்பிப்பவன் அன்றோ இவன் –
தேவர்கள் இவன் சொல்லிற்றைச் செய்வார்கள் இவனும் அவர்கள் சொல்லிற்றைச் செய்வான் –
கிம் கார்யம் மம சீதையா என்பவன் அன்றோ –

வாரி கிரீடா நிபிட வசநோ வல்லவீ வல்லபோ ந
ஹிருதயத்தில் இப்படி சேவை சாதிக்க -இரண்டும் தலையும் வாழும் படி கோபிகள் உடன் கலந்து போலே கலக்க வேணும்
எங்களை காக்கட்டும் -சம்பந்திகளாக நம்மையும் சேர்த்து கொள்கிறார்

—————————————————–

வாசோ ஹ்ருத்வா தி நிகர ஸூ தா சந்நிதவ் வல்ல வீ நாம் –
லீலாஸ் மேரோ ஜயதி லலிதா மாஸ்தித குந்த சாகாம்
சவ்ரீடா பிஸ்ததநு வசநே தாபிரப் யர்த்தமாநே –
காமீ கஸ்சித் கர கமலயோர் அஞ்சலிம் யாசமான -20-

ஸூர்ய புத்ரியான யமுனையின் கரையில் கோபிமார்களின் துகில்களை கவர்ந்து
அழகிய குருக்கத்தி மரக் கிளையில் அமர்ந்து -வெட்க்கிய கோபிமார் ஆடையைத் தரும்படி வேண்டிய போது
ஆடை இல்லாமல் நீராடிய பாபத்துக்கு பிராயச்சித்தமாக –
தாமரை போன்ற இரு கைகளாலும் அஞ்சலி செய்ய வேண்டியவனும்
விளையாட்டாய் ஸ்மிதம் பண்ணி அருளும் ஆஸ்ரித வ்யாமோஹன் பல்லாண்டு வாழ்க

வஸ்திரங்கள் அபகரித்ததை காண ஆசைப்படுகிறார் –
வாசோ
பன்மை -ஜலக்ரீடை -சரீரம் அபஹரித்து முக்தி –
பிராகிருதம் நீக்கி –
விரஜை-அங்கு தூய யமுனை இங்கு -ஞான யஜ்ஜம் -கோபால விம்சதி அறிதல் -அனுசந்தானம் –
அஞ்சலிம்-கெஞ்சி கேட்க்கிறார்ன் இவன் -வஸ்திரம் அவர்கள் கேட்க -இரண்டுமே தன் மானம் காக்க –
நந்த கோபிகளை–பக்தி யோகம் வளர்க்க அவதரித்து -ரிஷிகள் கோபிகள் –
பரமாத்வா இடம் பக்தியும் இதர விஷயத்தில் விரக்தியும் வேண்டுமே
பர ப்ரஹ்மம் இவனே அறிவார்கள் -நந்த கோபன் பிள்ளை -பரத்வம் மறந்தாலும் பரத்வம் பீறிட்டு காட்டும்
சர்வ சாக்ஷி -சர்வ அந்தர்யாமி -கோபால வீக்ஷணம் சம்ச்லேஷம் ஆசைப் பட்டு இருப்பீர்கள் –
சர்வ சரீரி -ஸூ சரீர பரிஷுவங்காத்-
தோஷம் இல்லையே -ப்ரஹ்மசர்யம் போகாது –பரிஷத் -அபாண்டவ அஸ்திரம் -ப்ரதிஜ்ஜை –

நாம் -லீலாஸ் மேரோ ஜயதி லலிதா மாஸ்தித குந்த சாகாம்
லீலைகளை எல்லாம் காட்டி அருளினான் தேசிகருக்கு-நாயகி பாவம் —

——————————————————————–

இத்ய நன்ய மனசா விநிர்மிதாம் வேங்கடேச கவிநா ஸ்துதிம் படன்
திவ்ய வேணு ரசிகம் சமீஷதே தைவதம் கிமபி யவ்வத ப்ரியம்–21-

வேறு ஒன்றையும் நாடாத மனத்துடன்-க்யாதி லாப பூஜை ஒன்றுக்கும் இல்லாமல் –
வேங்கடேச கவியால் அருளிச் செய்யப்பட இந்த ஸ்தோத்ர கிரந்தத்தை அப்யசிப்பார்கள்
திருப் புல்லாங்குழல் ரசம் அறிந்தவனுக்கு கோபிமார்களுக்கு பிரிய தமமுமான
அற்புத கண்ணன் நிரந்தர சாஷாத் காரம் காட்டி அருளுவான்

இத்ய நன்ய மனசா விநிர்மிதாம் வேங்கடேச கவிநா ஸ்துதிம் படன்-
திவ்ய வேணு ரசிகம் சமீஷதே தைவதம் கிமபி யவ்வத ப்ரியம்
அதிகரண சாராவாலி நிகமாந்த்ர முனீந்திரர் -கவி முனி -ஆழ்வாரை போலவே -அநந்ய-
வேங்கடேச- பிருந்தாவன சரர்-திவ்ய வேணு -அப்ராக்ருதம் -அதிலே ராசிக்கியம் -பிரத்யக்ஷமாக பார்ப்பார்கள்-
சமீஷதே –
நிகழ் காலம் -யுவதிகள் கோப ஸ்திரீகளுக்கு பிரியன் -ஆவான் -வ்யாமோஹம் அனைவர் இடம் காட்டியவன் –
அனுபவ பரிவாஹம் -தானே இந்த பிரபந்தம் -அனைத்தையும் அவனே காட்டக் கண்டவர் அன்றோ –

———————————–

இதி கோபால விம்சதி சம்பூர்ணம்

கவி தார்க்கிக ஸிம்ஹாய கல்யாணகுண சாலிநே –
ஸ்ரீமதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம –

———————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேதாந்த தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ நாராயண ஸூ க்தம் —

January 20, 2017

ஸ்ரீ புருஷ ஸூ க்தத்தில் ஸ்ருஷ்ட்டி க்ரமம் சொல்லி -நாராயண ஸூ க்தத்தில் ரக்ஷண க்ரமமும்-உபாஸனா க்ரமமும் –
அவனுடைய மேன்மையும்-அவன் சர்வ -அந்தர்யாமி யாய் இருக்கும் தண்மையையும் சொல்லி
சர்வ பர வித்யைகளிலும் நாராயணனே உபாசிக்கப்படுகிறவன் என்று அருளிச் செய்யப்படுகிறது –

சகஸ்ர சீர்ஷம் தேவம் விஸ்வாஷம் விஸ்வ சம்புவம்
விஸ்வம் நாராயணம் தேவம் அக்ஷரம் பரமம் ப்ரபும் –1-

சகஸ்ர சீர்ஷம்
ஆயிரம் தலை -கால் கை கண் மற்ற எல்லாவற்றுக்கும் உப லக்ஷணம் -ஆனந்தமான ஞான சக்திகளை யுடையவன் -என்றவாறு
புருஷ ஸூ க்தத்தில் சொல்லப் பட்டவன் நாராயணன் என்றவாறு
விச்வாஷம் –
சஹஸ்ராக்ஷயா -அனைத்தையும் அறிபவன் என்றவாறு -உள்ளூர் உள்ளிற்று எல்லாம் உடன் இருந்து அறிதி-
விசுவதஸ் சஷூருத விச்வதோ-சர்வ சக்தன் -சர்வ இந்த்ரியங்களாயும் இருப்பவன் –
சஷூர் தேவா நாமுத மர்த்யா நாம் -கண்ணாவான் என்றும் மண்ணோர் விண்ணோர்க்கு
விஸ்வ சம்புவம்
அனைவருக்கும் எல்லா வித நன்மைகளையும் கொடுப்பவன் -மம மாயா துரத்யயா — அதஸோ பயங்கதோ பவதி –
அபயம் சர்வ பூதேப்யோ ததாம் ஏதத் விரதம் மம —
விஸ்வம்
உலகம் எல்லாம் சரீரமாகக் கொண்டவன் -விஸ்வம் விஷ்ணு என்றதையே விஸ்வம் நாராயண என்கிறது –
நாராயணம்
சரணம் கதி நாராயணம் -நார சப்தேன ஜீவா நாம் ஸமூஹ ப்ரோச்யதே புதை –கதிர் ஆலம்பனம் தஸ்ய தேன நாராயணஸ் ஸ்ம்ருத
ஆபோ நார இதி ப்ரோக்தா ஆபோ வை நர ஸூநவே–தா யதஸ் யாயநம் பூர்வம் தேன நாராயணஸ் ஸ்ம்ருத
தரிப்பவன் –சர்வ வியாபி -சர்வ காரணன் -சர்வ செத்தனர்க்கும் உபாய உபேயன்
தேவம்
புகரை யுடையவன் -அழகன் -அமலன் -நமக்கும் பூவின் மிசை நங்கைக்கும் இன்பன்-அன்பன் -அச்சுதன் –
அக்ஷரம்
அழிவற்றவன் –நித்ய ஸ்வரூபம் குணங்கள்
பரமம்
ஓத்தார் மிக்காரை இலையாய மா மாயன் -மிகுநர் இல்லாதவன்
தமீஸ்வரனாம் பரமம் மஹேஸ்வரம் தம் தேவதா நாம் பரமம் ச தைவதம் –
ப்ரபும்
அனைவரையும் நியமிப்பவன் -ஈஸ்வர சர்வேஸ்வரன் -கர்மாதீனம் இல்லாதவன்
பரமம் ப்ரபும் நாராயணம் -சமாதிக தரித்ரன் -சகாதேவன் வியாதிரேகத்தில் சொல்ல பூ மாரி பொழிந்ததே –
நஹி பாலன சாமர்த்தியம் ருதே ஸர்வேச்வரம் ஹரீம்

——————————–

விச்வத பரமம் நித்யம் விஸ்வம் நாராயணம் ஹரிம்
விஸ்வமே வேதம் புருஷஸ் தத் விஸ்வ முபஜீவதி–2
பதிம் விஸ்வஸ் யாதமேஸ்வரம் சாஸ்வதம் சிவமச்யுதம்
நாராயணாம் மஹாஜ்ஜேயம் விச்வாத்மநாம் பாராயணம் -3

விச்வத பரமம்
அசேதன சேதனங்களில் வேறுபட்ட -மேலானவன் -இல்லத்துக்கு உள்ளதும் அல்லது அவன் உரு –
அந்யச்ச ராஜன் ச பர தத் அந்நிய பஞ்ச விம்சக
உலகு உயிரும் தேவும் மற்றும் படைத்த பரம மூர்த்தி அன்றோ
நித்யம்
அசேதனங்களுக்கு ஸ்வரூபத்திலும் குணங்களிலும் மாறுபாடு உண்டே -சேதனர்கள் கர்ம அனுகுணமாக ஞானாதி குணங்களில் ஏற்றது தாழ்வு உண்டே
விச்வத பரமம் விஸ்வம்
அத்யந்த விலக்ஷணன்-மூவராகிய மூர்த்தியை முதல் மூவர்க்கும் முதல்வன் தன்னை
நாராயணம்
சர்வ வியாபகம் -தாரகன் -சர்வம் ஸமாப் நோஷி ததோசி சர்வ -சத்யம் சத்யம் புனஸ் சத்யம் என்று மீண்டும் மீண்டும் நாராயணம் சப்த பிரயோகம்
கிம் தத்ர பஹுபிர் மந்தரை கிம் தத்ர பஹுபிர் வ்ரதை-
நமோ நாராயணா யேதி மந்த்ரஸ் ஸர்வார்த்த சாதக
திருமந்திர பாராயண மகிமைக்காக மீண்டும் மீண்டும் சொல்லிற்று என்றுமாம்
ஹரிம் நாராயணம்
சர்வ காரணன் -சர்வ ரக்ஷகன் -சர்வ சம்ஹாரகன் –
ப்ராஹ்மணம் இந்த்ரம் ருத்ரம் ச யமம் வருணமேவ ச
நிக்ருஹ்ய ஹரதே யஸ்மாத் தஸ்மாத் ஹரிரி ஹோச்யதே
ஹரிர் ஹரதி பாபாநி ஜன்மாந்தர க்ருதானி ச -குமரனார் தாதை துன்பம் துடைத்த கோவிந்தனாரே –
இவன் உகந்த திரு நாமம் என்பதாலே ஹரி ஓம் முதலிலும் முடிவிலும் வேதம் சொல்லும்
விஸ்வமே வேதம் புருஷஸ்
சர்வ வியாபி -எல்லாம் இவனே -எங்கும் நிறைந்தவன் -பூர்ணத்வாத் புருஷ –
தானேயாகி நிறைந்து எல்லா உலகும் உயிரும் தானேயாய் தானே யான் என்பானாகி
இதம் விஸ்வம் புருஷம் ஏவ -அநேந ஜீவேன ஆத்மனா அநு பிரவிசய
தத் விஸ்வ முபஜீவதி
இவன் அந்தர்யாமியாய் இருப்பதாலே உலகு இவனை அடைந்து ஜீவிக்கும் -விஸ்வம் வா ஸூ தேவன் ஸ்வரூப ஐக்கியம் இல்லை என்றதாயிற்று –
பதிம் விஸ்வஸ்
தேன வினா த்ருணம் அபி நசலதி–அவன் அன்றி ஒரு அணுவும் அசையாது –நான் உன்னை அன்றி இலேன் கண்டாய் நாரணன் நீ என்னை அன்றி இல்லை –
தானே உலகு எல்லாம் தானே படைத்து இடந்து -தானே உண்டு உமிழ்ந்து தானே யாள்வானே —
உண்டும் உமிழ்ந்தும் கடந்தும் இடத்தும் நின்றும் கொண்ட கோலத்தோடு வீற்று இருந்தும் மணம் கூடியும் கண்ட வாற்றால் தனதே உலகு யென நின்றானே –
யாதமேஸ்வரம்
ஸ்வாமி மாத்ரம் இல்லாமல் -நியமித்தும் அருள்பவன் -ஆத்ம சப்தம் அசேதனத்துக்கும் உப லக்ஷணம் –
தனக்குத் தானே ஈஸ்வரனாய் இருப்பவன் என்றுமாம்
சாஸ்வதம்
ஆதியும் அந்தமும் இல்லாதவன் -ப்ரஹ்மாதிகள் போலே அழிவு இல்லையே
சிவம்
மங்கள கரமாய் இருப்பவன்
சாஸ்வதம் சிவம்
எப்பொழுதும் பரிசுத்தன்-ருத்ரன் போலே இல்லையே
பாவனஸ் சர்வ லோகாநாம் த்வமேவ ரகு நந்தன
அச்யுதம்
நழுவ விடாதவன் -வாணன் ஆயிரம் கரம் கழித்த ஆதிமால் –
நாராயணாம் மஹாஜ்ஜேயம்-
அறியத் தக்கவர்களுள் பெரியவன் –
அச்சுதன்-நாராயணாம் மஹாஜ்ஜேயம்-
காரணம் து த்யேய-இவனே அறியத் தக்கவன் -என்றவாறு
யதா சோம்யா ஏகேன மருத் பிண்டேண சர்வம் ம்ருண் மயம்
விஞ்ஞாதம் ஸ்யாத் –ஏவம் சோம்ய ச ஆதே சோ பவதி
விச்வாத்மநாம் பாராயணம் –சாந்தோக்யம் ஸ்வேதா கேதுவுடன்
அறிய முடியாதவன் வேதம் சொல்ல இங்கே –
நாராயணாம் மஹாஜ்ஜேயம்-என்றது -அறிய முடியாதவன் என்று அறிவதே அறிவாகும்
மேலை வானவரும் அறியார் -ப்ரஹ்மாபி நாவேத நாராயணம் ப்ரபும்
ஞாதா –ஞானம் -ஜ்ஜேயம் -மூன்றும் உண்டு என்றதாயிற்று
ஓர் உயிரேயோ உலகங்கட்க்கு எல்லாம் -/ பதிம் விசுவஸ்ய ஆதமேஸ்வரம் -விச்வத பரமம் -பேத சுருதிகள் /
விஸ்வம் -விஸ்வ மே வேதம் புருஷ –அபேத சுருதிகள் / விச்வாத்மநாம் கடக்க சுருதி
நித்யோ நித்யா நாம் சேதனச் சேதநா நாம் / ப்ருதக் ஆத்மாநாம் ப்ரேரிதாரம் -/த்வா ஸூ பர்ணா சயுஜா
சர்வம் கல்விதம் ப்ரஹ்ம /ய ப்ருத்வீம் அந்தரே சஞ்சரந் யஸ்ய ப்ருத்வீ சரீரம் ப்ருத்வீ நவேத
ய ஆத்மனி திஷ்டன் ஆத்மநோ அந்தர யமாத்மா ந வேத யஸ்யாத்மா சரீரம்
பாராயணம்
பரமமான உபாயமும் உபேயமும் -கிம் வாப்யேகம் பாராயணம்– யுதிஷ்ட்ரன் கேட்க -பரமம் யா பாராயணம் ஜகந்நாதன் என்று ஸ்ரீ கிருஷ்ணனை காட்டினார் பீஷ்மர்
புருஷான் ந பரம் கிஞ்சித் ஸா காஷ்டா ஸா பராகதி
நகர்மணா நப்ரஜயா தநேந த்யாகேன ஏகேன அம்ருதத்வமா நசு-
சர்வ லோக சரண்யாய ராகவாய மஹாத்மனே
கோவிந்தேதி யதா க்ரந்தத் கிருஷ்ணா மாம் தூர வாஸினம்
ருணம் ப்ரவ்ருத்தம் இவ மே ஹ்ருதயான் நாபஸர்ப்பதி —
பரமாபதமா பன்ன மனசா சிந்தயத் ஹரிம் -ச து நாக வரச் ஸ்ரீ மான் நாராயண பாராயண
ரஷ்ய அபேக்ஷாம் பிரதீஷதே –
புக்கடிமையினால் தன்னைக் கண்ட மார்க்கண்டேயன் அவனை நக்க பிரானும் அன்று உய்யக் கொண்டது நாராயணன் அருளே –

——————————————————————–

நாராயண பரம் ப்ரஹ்ம தத்துவம் நாராயண பர
நாராயண பரோ ஜ்யோதி ராத்மா நாராயண பர-4
யச்ச கிஞ்சித் ஜகத் யஸ்மின் த்ருச்யதே ஸ்ரூய தேபி வா
அந்தர் பஹிச்ச தத் சர்வம் வ்யாப்ய நாராயணஸ் ஸ்தித-5

இவனே பரஞ்சோதி –பர தத்வம் -பரமாத்மா பர ப்ரஹ்மம் –
கிருஷ்ண கிருஷ்ண மஹா பாஹோ ஜாநே த்வாம் புருஷோத்தமம்-பரேசம் பரமாத்மநாம் அநாதி நிதானம் பரம் –
த்வம் ஹி ப்ரஹ்ம பரம் ஜ்யோதி கூடம் ப்ரஹ்மணி வாங்மயே-

நாராயண பரம் ப்ரஹ்ம
ப்ரஹ்ம வா இதமக்ர ஆஸீத் -முதலில் பர ப்ரஹ்மமாகவே இருந்தது இவனே -த்வம் ப்ரஹ்ம ஹி ப்ருஹதி ப்ரும்ஹயதீதி தஸ்மாத் —
ஆஸ்ரிதர்களை பெரியதாகச் செய்பவனும் நீயே -பரமம் சாம்யம் உபைதி —மம சாதாரம்ய மாகதா-தன்னாகவே கொண்டு -தம்மையே ஓக்க அருள் செய்வார் –
தத்துவம் நாராயண பர
நாராயணனே பர தத்வம் -நித்ய முத்தர்களும் இவனுக்கு பரதந்த்ரர்கள் –

நாராயண பரோ ஜ்யோதிர்
ஏஷ ஸம்ப்ரஸாத அஸ்மாச் சரீராத் சமுத்தாய பரம் ஜ்யோதி ரூப சம்பத்ய ஸ்வேன ரூபேண அபி நிஷ்பத்யதே
என் கண் பாசம் வைத்த பரஞ்சுடர்ச் சோதிக்கே
ந தத்ர ஸூர்யோ பாதி ந சந்த்ர தாரகம்-நேம வித்யுதோ பாந்தி குதோயமக்னி
தமேவ பாந்தமநுபாதி சர்வம் -தஸ்ய பாஸா ஸர்வமிதம் விபாதி —
பரஞ்சோதி நீ பரமாய் நின்னிகழ்ந்து பின் மற்றோர் -பரஞ்சோதி இன்மையின் படியோவி நிகழ்கின்ற
பரஞ்சோதி நின்னுள்ளே படருலகம் படைத்த எம் பரஞ்சோதி கோவிந்தா பண்புரைக்க மாட்டேனே –
மிகும் சோதி மேல் அறிவார் யவரே -ஸ்வ பாவிக அனவதிக அதிசய ஈஸீத்ருத்வம் நாராயண த்வயி ந ம்ருஷ்யதி வைதிக
ஆத்மா நாராயண பர
ஆதமைவேதம் அக்ர ஆஸீத் புருஷவித-
பரமாத்மா ஸர்வேஷாம் ஆதார பரமேஸ்வர -விஷ்ணு நாம ச வேதேஷூ வேதாந்தேஷூ ச கீயதே
அவிகாராய ஸூ த்தாய நித்யாய பரமாத்மனே –அவிகாராய -அசேதன வியாவ்ருத்தி -அக்ஷரம் / தேவம் சேதனம் வியாவ்ருத்தி/
-சுத்தாய -/ நித்யம் முக்தர் வியாவ்ருத்தி -பரமாத்மா நித்யர் வியாவ்ருத்தி –
யச்ச கிஞ்சித் ஜகத் யஸ்மின் த்ருச்யதே ஸ்ரூய தேபி வா -அந்தர் பஹிச்ச தத் சர்வம் வ்யாப்ய நாராயணஸ் ஸ்தித-
உள்ளும் புறமும் வியாபித்து இருக்கிறான் -ஆக்கை உள்ளும் ஆவி உள்ளும் அல்ல புறத்தின் உள்ளும் நீக்கம் இன்றி எங்கும் நின்றாய்
–முற்றக் கரந்து ஒளித்தாய்-விச்வாத்மநாம் -என்று முன்பு சொன்னதை விவரிக்கிறது
நாராயண -அஷ்டாவ்ருத்தி -ஒப்புயர்வற்ற அநந்ய பரமுமான திரு நாமம் அன்றோ இது –

—————————————-

அநந்தம் அவ்யயம் கவிம் சமுத்ரேந்தம் விஸ்வ சம்புவம்–6

எண்ணிறந்த அவதார ரூபங்கள் -குறைவற்ற -அழகாகப் பேசி -பாற் கடலிலே பள்ளி கொண்டு -உலகுக்கு நன்மை செய்பவன்
அமரர் ஏறாய் இருந்து -பகல் விளக்காய் இருந்து -ஆயர் கொழுந்தானவன் அன்றோ –
கண்ணாவான் என்றும் மண்ணோர் விண்ணோர்க்குத் தண்ணார் வேங்கட விண்ணோர் வெற்பனே
அநந்தம்
கணக்கற்ற அவதாரங்களை யுடையவன் -அநந்த ரூபம் என்கிற முதல் அணுவாகம் -விவரணம்
அந்தஸ் சமுத்திர நிலையம் யம நந்த ரூபம் -ஸ்ரீ கூரத் தாழ்வான்-அஜாய மா நோ பஹுதா விஜாயதே
பிறப்பில் பல் பிறவிப் பெருமான் – சன்மம் பல பல செய்து -பஹு நி மே வியதீ தானி ஜன்மானி –
உயிர் அளிப்பான் என்நின்ற யோனியுமாய் பிறந்தவன்
அர்ச்சை -ஹ்ருதா மநீஷா மனஸாபிக் லுப்தா –
யத் ஸ்வரூபோ யத் ரூபோ யத் குணோ யத் விபூதிகோ யத் பிராமணகோ யத் த்ரவ்யோயம் சர்வேஸ்வர கலப்யதே ச ததா பவேதி தி பாவ
யே யதா மாம் -பிரபத்யந்தே தாம் ஸ்ததைவ பஜாம்யஹம்
தமர் உகந்தது எவ்வுருவம் அவ்வுருவம் தானே -நெஞ்சினால் நினைப்பான் யவன் அவனாகும் நீள் கடல் வண்ணனே
அநந்தம்
தேச கால வஸ்து பரிச்சேதய ரஹிதன் என்றுமாம் -நித்யம் -கால பரிச்சேதய ரஹிதன் / விஸ்வம் -வஸ்து பரிச்சேதய ரஹிதன் /
யச்ச கிஞ்சித் ஸ்தித -தேச பரிச்சேதய ரஹிதன் –சத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்ம -என்றவாறு
அவ்யயம்
குறைவற்றவன் -பிறக்கப் பிறக்க பெருமை விஞ்சி -விஜாயதே -விசேஷமாக பிறந்து -ச உ ஸ்ரேயான் பவதி ஜாயமான-
நிலை வரம்பில பல பிறப்பாய் ஒளி வரு முழு நிலம் -ஜென்ம கர்ம ச மே திவ்யம் –
கவிம்
நன்றாக பேசி -அவதரித்து செய்து அருளும் சேஷ்டிதங்கள் அனைத்துக்கும் உப லக்ஷணம் ஹசித்தம் பாஷிதம் சைவ
நின் செங்கனி வாயின் கள்வப் பணி மொழி நினைதொறும் ஆவி வேமால்
அனவதிக தயாசவ் ஹார்த்த அநுராக கர்ப்ப அவலோகநாலாம்பாருதை விஸ்வமாப்யா யயன் -ஸ்ரீ பாஷ்யகாரர்
கவிம்
வேத உபதேசம் -யோ ப்ராஹ்மணம் விததாதி பூர்வம் –யோ வை வேதாம்ச்ச ப்ராஹினோதி தஸ்மை –
பண்ணார் பாடல் இன்கவிகள் யானாய்த் தன்னைத் தான் பாடி –
நும் இன் கவி கொண்டு நும் நும் இட்ட தெய்வம் ஏத்தினால்-செம்மின் சுடர் முடி என் திரு மாலுக்குச் சேருமே
சமுத்ரேந்தம்
ஏஷ நாராயணஸ் ஸ்ரீ மான் ஷீரார்ணவ நிகேதன நாக பர்யங்கம் உத்ஸ்ருஜ்ய ஹ்யாகாதோ மதுராம் புரீம்
நாகம் ஏறி நடுக்கடலுள் துயின்ற நாராயணனே –பாற் கடலுள் பையத் துயின்ற பரமன் –பய் அரவின் அணைப் பாற் கடலுள் பள்ளி கொள்கின்ற பரம மூர்த்தி –
சமுத்ரேந்தம்
குறைவில் தடம் கடல் -யசோதை பிராட்டி போலே மடியில் இட்டுக் கொண்டு உகந்து இருக்குமே
சமுத்ரேந்தம் விஸ்வ சம்புவம்
சாபம் உள்ளன நீக்குவானை தடம் கடல் கிடந்தான் தன்னை -கூப்பீடு கேட்க்கும் இடம் அன்றோ
குறைவில் தடம் கடல் கோள் அரவு ஏறித் கோலச் செந்தாமரைக் கண் உறைபவன் போல் ஒரு யோகு புணர்ந்த ஒளி மணி வண்ணன்
ஆத்மாநாம் வா ஸூ தேவாக்யம் சிந்தையன் -தன்னைத் தானே த்யானிப்பவன் -அவதார சிந்தனை என்றுமாம் –

————————————————————————–

பத்ம கோச பிரதீ காசம் ஹ்ருதயம் சாப்யதோ முகம்
அதோ நிஷ்ட்யா விதஸ் த்யாம் து நாப்யா முபாரி திஷ்ட்ட்தி-7
ஹ்ருதயம் தத் விஜா நீயாத் விஸ்வஸ் யாயதனம் மஹத்
சந்ததம் சிரா பிஸ்து லம்பத்யா கோச ஸந்நிபம்
தஸ் யாந்தே ஸூ ஷிரம் ஸூஷ்மம் தஸ்மிந் சர்வம் ப்ரதிஷ்ட்டிதம்-8
தஸ்ய மத்யே மஹா நக்நிர் விச்வார்ச்சிர் விச்வதோமுக
சோக்ர புக் விப ஜந்திஷ் ட்ட ன் ஆஹார மஜர கவி
சந்தா பயதி ஸ்வம் தேஹ மாபாத தலமஸ்தகம் -9

அந்தர்யாமி அவஸ்தையை அருமறை அனுபவிக்கிறது –பரத்வம் வ்யூஹம் வைபவம் அர்ச்சை அனுபவித்த பின்பு –
மறை முடி தேடிக் காணா மாதவன் மனத்தே அன்றோ மன்னி உறைகின்றான் –ஹ்ருதி திஷ்ட்ட்தி யோகி நாம் —

பத்ம கோச பிரதீ காசம் ஹ்ருதயம்
தாமரை மொக்கைப் போல் இருக்கும் ஹிருதயம் -போதில் கமல வன்னெஞ்சம் –
சாப்யதோ முகம்
தலை கீழாய் இருக்கும் ஹிருதயம்
அதோ நிஷ்ட்யா விதஸ் த்யாம் து நாப்யா முபாரி திஷ்ட்ட்தி
கழுத்தின் மூலத்துக்கு கீழும் நாபிக்கு மேலும் கட்டை விரல் அளவுள்ள இந்த ஹ்ருதயம் இருக்கிறது –
அங்குஷ்ட மாத்ர புருஷ –
கட்டை விரல் பரிமாணம் உள்ள புருஷன்
ஹ்ருதயம் தத் விஜா நீயாத் விஸ்வஸ் யாயதனம் மஹத்
அந்த ஹ்ருதயத்தை உலகுக்கு எல்லாம் ஓர் உயிரான நாராயணனுடைய பெரிய கோயிலாக அறிய வேணும் –
ஆயதனம் மஹத்
நெஞ்சமே நீள் நகராக இருந்த
வடதடமும் வைகுந்தமும் மதிள் துவாராபதியும் இடவகைகள் இகழ்ந்திட்டு என்பால் இடவகை கொண்டனையே
கல்லும் கனை கடலும் வைகுண்ட வானாடும் புல் என்று ஒழிந்தன கோல்-ஏ பாவம்
வெல்ல நெடியான் நிறம் கரியான் உள் புகுந்து நீங்கான் அடியேனது உள்ளத்தகம்
நிற்பதும் இருப்பதும் கிடப்பதும் என் நெஞ்சுள்ளே
அன்ஸனான் அந்யோ அபிசாக சீதி-வாத்சல்ய குணம் பிரகாசிக்கும் அந்தர்யாமியிலே
சந்ததம் சிரா பிஸ்து லம்பத்யா கோச ஸந்நிபம்
சிறிது அலர்ந்த தாமரையை ஒக்கும் அந்த ஹிருதயம் எப்பொழுதும் நரம்புகளோடு தொங்குகிறது
கமல ஆசனி கேள்வன் ஆகையால் ஹிருதய கமலத்தை விரும்புகிறான் போலும்
தஸ் யாந்தே ஸூ ஷிரம் ஸூஷ்மம்
அந்த ஹ்ருதயத்தில் நடுவில் நுட்பமான ஒரு துவாரம் இருக்கிறது
தஸ்மிந் சர்வம் ப்ரதிஷ்ட்டிதம்
அதில் சர்வாத்மாவான நாராயணன் நிலை நிற்கிறான் -சர்வ அந்தர்யாமி அன்றோ
தஸ்ய மத்யே மஹா நக்நிர் விச்வார்ச்சிர்-விச்வதோமுக
அந்த ஹிருதயத்தின் நடுவில் எங்கும் பரவி இருப்பதும் -எங்கும் ஜ்வாலை உள்ளதுமான -ஜாடராக்கினி -என்னும் பெரிய அக்னி உள்ளது
சோக்ர புக் விப ஜந்திஷ் ட்ட ன் ஆஹாரம்
அது ஆகாரத்தை மூன்று விதமாகப் பிரித்துக் கொண்டு முதலில் சாப்பிட -ஜீரணித்து தேகத்துக்கு தருகிறது என்று தாத்பர்யம்
அஜர
எப்பொழுதும் விழித்துக் கொண்டே இருக்கும் இந்த அக்னி
கவி
எப்பொழுதும் சப்தம் இட்டுக் கொண்டே இருக்கும் இந்த அக்னி
சந்தா பயதி ஸ்வம் தேஹ மாபாத தலமஸ்தகம்
உள்ளங்கால் முதல் தலை வரை தேகத்தை சூடுபடுத்தவும் -ஆழ்வார்கள் திருமலையில் மரம் செடி கொடி அருவி அனுபவிப்பது போலே
ஆதார அதிசயத்தாலே அச்சுதன் இருப்பிடமான ஹிருதயத்தில் அக்னியையும் அருமறை அனுபவிக்கிறது –

——————————————————————–

தஸ்ய மத்யே வன்ஹி சிகா அணீ யோர்த்வா வ்யவஸ்தித
நீல தோயதா மத்யஸ்தா வித்யுல்லேகவ பாஸ்வரா
நீவார ஸூகவத் தன்வீ பீதாபா ஸ்யாத் தநூபமா -10

தஸ்ய மத்யே
தஹா புண்டரீக மத்யஸ்தாகாச வர்த்தி நீ -என்று ஸ்ரீ பாஷ்யகாரர் அருளிச் செய்தார்
வன்ஹி சிகா அணீ யோர்த்வா வ்யவஸ்தித
ஹிருதய ஆகாசத்தில் நடுவில் மெல்லியதாகவும் மேல் நோக்கினதாகவும் வஹ்னி சிகை இருக்கிறது
யுக்தம் தத்துவ ஜாதம் ஆத்மதயா ஸ்திதவா வஹதி தாரய தீதி வன்ஹி –பரமாத்மா தஸ்ய சிகா வன்ஹி சிகா
தத்வ ஸமூஹத்தை ஆத்மாவாக நின்று வகிக்கிறவன் ஆகையால் வஹ்னி என்று பரமாத்மாவை சொல்லி -அவனது சிகை வஹ்னி சிகை -என்றவாறு
ஒப்பற்ற பிரகாசம் யுடையதாய் அக்னி சிகை போலே இருப்பதால் –
நீல தோயதா மத்யஸ்தா வித்யுல்லேகவ பாஸ்வரா
நீல மேகத்தை நடுவில் கொண்ட மின்னல் கொடி போன்ற ஒளியுடன்
ஸ்வ அந்தர் நிஹித நீல தோயதாப பரமாத்மா ஸ்வரூபா –ஸ்வ அந்தர் நிஹித நீல தோயதா வித்யுதிவ ஆபா தீத்யர்த்த -ஸ்ரீ பாஷ்யகாரர்
நீலமுண்ட மின்னன்ன மேனிப் பெருமான் –நீல மேகத்தை விழுங்கின மின்னல் போன்ற திருமேனி என்றும் நீல மேகம் விழுங்கின மின்னல் போன்ற திருமேனி
மின்னிலங்கு திரு உரு என்றும் கரு முகில் ஒப்பர் என்றும் சொல்வாரே
சேதனனை பெறாத போது உடம்பு வெளுத்தும் -பெற்ற போது இயற்கையான நீல மேக ஸ்யாமள வர்ணன் -என்றவாறு –
நீவார ஸூகவத் தன்வீ
நெல் நுனி போலே சிறியதாய் இருக்கும் திவ்ய மங்கள விக்ரஹம்
பீதாபா
மஞ்சள் நிறமான ஒளியுடன் கூடியது -உருக்கிய தங்கம் போலே -நிறத்தை காட்டிலும் ஒளியே விஞ்சி இருக்கும்
தேஜஸாம் ராஸிம்–ஹிரண்ய வர்ணாம்
பீதாபா
என்று ஸ்வ தேஜஸ் ஸை விக்ரஹம் தான் பானம் பண்ணிக் கொண்டு இருக்கும் என்றபடி -ஸ்வயம் பிரகாசம் என்றுமாம்
ஸ்யாத் தநூபமா
உவமானம் ஆகலாம் -வாக்குக்கும் மனத்துக்கும் எட்டாத பிரகாசம் அன்றோ -உவமானம் அற்றது என்றுமாம்
கட்டுரைக்கில் தாமரை நின் கண் பாதம் கை ஒவ்வா -சுட்டுரைத்த நன் பொன் உன் திரு மேனி ஒளி ஒவ்வாது –

———————————————-

தஸ்யாச் சிகாயா மத்யே பரமாத்மா வியவஸ்தித
ச ப்ரஹ்மா –ச சிவஸ் சேந்த்ரஸ் சோஷர பரமஸ் ஸ்வராட்–11

தஸ்யாச் சிகாயா மத்யே பரமாத்மா வியவஸ்தித
ஆத்மா நாராயண பர -என்னும் பரமாத்மா -விசேஷண அவஸ்தித -விசேஷமாக எழுந்து அருளி இருக்கிறார்
வாத்சல்யாதி குணங்களால் –
த்வா ஸூ பர்ணா சயுஜா சகாய சமானம் வ்ருக்ஷம் பரிக்ஷஸ்வ ஜாதே
தயோர் அந்நிய பிப்பலம் ஸ்வாத் வத்தி அன்ஸனன் அந்யோ அபிசாக சீதி
ஈச்வரஸ் சர்வ பூதானாம் ஹ்ருத்தேச அர்ஜுன திஷ்ட்ட்தி
பிராமயன் சர்வ பூதாநி யந்த்ர ரூடானி மாயயா–ஸ்ரீ கீதை
ச ப்ரஹ்மா –ச சிவஸ் சேந்த்ரஸ் சோஷர பரமஸ் ஸ்வராட்
அனைவருக்கும் அந்தர்யாமி -அவனே அவனும் அவனும் அவனும் -அவனே மாற்று எல்லாமும் அறிந்தனமே
ப்ரஹ்மா சிவாஸ் சதமக பரமஸ் ஸ்வராட் இத் யேதே அபி யஸ்ய மஹி மார்ணவ விப்ருஷஸ் தே -ஆளவந்தார்
-இவனது ஐஸ்வர்யா கடலில் துளி யாவார்கள்
இவர்கள் ஸ்திதியும் அவனாலே -இருந்து படைக்கும் ஆசனம் போன்றே நான்முகன் -சிவனாய் அயனாய்
சோஷர
-இவர்களும் சிறந்த முக்தாத்மாக்களுக்கும் அவனே அந்தர்யாமி
பரமஸ் ஸ்வராட்
கர்ம வஸ்யன் இல்லாத பரமாத்மா -ச ஸ்வராட் பவதி -ஸ்வ தந்த்ரன் ஆகிறான் அவன் ஒருவனே –
ஏகோ ஹை வை நாராயண ஆஸீத் ந ப்ரஹ்மா நே சான

———————————————————————-

ருதம் சத்யம் பரம் ப்ரஹ்மம் புருஷம் க்ருஷ்ண பிங்களம்
ஊர்த்வ ரேதம் விருபாக்ஷம் விஸ்வ ரூபாய வை நம–12

பரம புருஷார்த்தம் கைங்கர்யம் பிரார்த்திக்கப் படுகிறது –

ருதம்
சர்வகதன்-சர்வ வியாபகத்வத்தை ஆதார அதிசயத்தால் மீண்டும் அனுவதிக்கிறது -சர்வ வியாபி யாகையாலே நாம் இருந்த இடத்திலே கைங்கர்யம் செய்யலாமே
சத்யம்
சத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்ம / ஏக ரூபி / ஆஸ்ரித ரக்ஷணம் தீக்ஷிதன் /
பரம் ப்ரஹ்மம்
பரமமானவன் -தன்னை ஆசிரியத்தாரையும் பெரியவனாக ஆக்குபவன்
புருஷம்
நாம் எல்லாரும் ஸ்த்ரீ பிராயர் -கைங்கர்யம் செய்வதே ஸ்வரூப அனுரூபம்
க்ருஷ்ண பிங்களம்
கறுப்பும் மஞ்சளும் கலந்த திருமேனி -கைங்கர்யத்துக்கு விஷயமான திரு மேனி -காள மேக ஸ்யாமளன் -திரு ஆழி தேஜஸ் வியாபித்து இருப்பதால் –
அதஸீ புஷப ஸங்காசா பீத வாசா ஜனார்த்தன -வ்யப் ராஜத சபா மத்யே ஹேம நீவோ பஹிதோ மணி –
இத்தால் பிராட்டியும் அவனுமான சேர்த்தியிலே கைங்கர்யம் என்றதாயிற்று -ஹரீச்ச் தே லஷ்மீச்ச பத்நயவ்
ஊர்த்வ ரேதம்
ப்ராக்ருதமான ஸ்த்ரீ சங்காதிகள் அற்றவன் -விகாரம் அற்றவன் -உயர்ந்த வீர்யத்தை யுடையவன்
விருபாக்ஷம்
மாறு பட்ட ரூபங்களை யுடைய திருக் கண்களை யுடையவன் -சஷூஷீ சந்த்ர சூர்யவ்
விசேஷமான ரூபமுடைய திருக் கண்கள் என்றுமாம் -யதா கப்யாசம் புண்டரீகம் ஏவம் அக்ஷிணீ
வன் காற்றறைய ஒருங்கே மறிந்து கிடந்து அலர்ந்த மென் கால் கமலத் தடம் போல் பொழிந்தன –எம்பிரான் தடம் கண்களே
விஸ்வ ரூபாய வை நம
உலகத்தை எல்லாம் சரீரமாகக் கொண்டவனுக்கு நமஸ்காரம் -ஆய -கைங்கர்ய பிரார்த்தனை -அவன் முக மலர்த்திக்காகவே –

—————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ மத் ரஹஸ்ய த்ரய சாரம் — -அதிகாரம் -28–ஸ்ரீ த்வயதிகாரம் –ஸ்ரீ வேதாந்த தேசிகன் ஸ்வாமி–

January 19, 2017

ஸ்ரீ மான் வேங்கட நாதார்ய கவிதார்க்கிக கேசரீ
வேதாந்தாசார்ய வர்யோமே சந்நிதத்தாம் சதா ஹ்ருதி —

சீரொன்று தூப்புல் திருவேங்கடமுடையான்
பாரொன்றச் சொன்ன பழ மொழியில் ஓரொன்று
தானே அமையாதோ தாரணியில் வாழ்வார்க்கு
வானேறப் போமளவும் வாழ்வு –

——————————————————————————–

ஆகர்ணிதோ வித நுதே க்ருதக்ருத்ய கஷ் யாம்
ஆம் நே டிதோ திசதி யச்ச க்ருதார்த்த பாவம்
பிரத்யூஷதாம் பஜதி ஸம்ஸ்ருதி காலராத்ரே
பத்மா ஸஹாய சரணாகதி மந்த்ர ஏஷ–

திரு மந்திரத்தில் மத்யம பதத்தில் ஆர்த்தமாகவாதல் -சாப்தமாகவாதல் சொன்ன உபாய விசேஷத்தையும்
இதன் பலமாக த்ருதீய பதத்தில் புருஷார்த்த விசேஷத்தையும் விசதமாக பிரகாசிப்பிக்கிறது த்வயம் –

இது கட வல்லியில் பிரிய ஓதிச் சேர்த்து அனுசந்திக்க விதிக்கையாலும் –
பகவத் சாஸ்திரத்தில்-ஸ்ரீ பாஞ்ச ராத்ர ஆகமத்தில் –
ஸ்ரீ ப்ரஸ்ன ஸம்ஹிதாதிகளிலே வரணோத்தராதிகளும் பண்ணிப் பிரதிபாதிக்கையாலும்
சுருதி மூலமான தாந்த்ரிக மந்த்ரம் –
இத்தை பூர்வாச்சார்ய வாக்கியம் என்று சிலர் சொன்னதும் ஆப்தர் உபதேசித்தார் என்று ஆதரிக்கைக்காக வாதல்
பரமாச்சார்யனான சர்வேஸ்வரன் பகவத் சாஸ்திரத்தில் அருளிச் செய்கையாலே யாதல் ஆமத்தனை
இதுக்கு ருஷ்யாதிகளும் மூல மந்த்ராதிகளில் போலே அபேக்ஷமாணற்கு
மந்த்ர வ்யாகரணாதிகளில் படியே கண்டு கொள்ளலாம் –

இம்மந்திரம் –
ச ப்ராதுச் சரணவ் காடம்-அயோத்யா காண்டம் -2-31-2-
பவாம்ஸ்து சக வைதேஹ்யா—அயோத்யா காண்டம் 2-31-27-
என்கிற ஸ்லோகத்தில் விவஷிதமான உபாய உபேய ரூபமான
அர்த்த த்வ்யத்தை ப்ரதிபாதிக்கையாலே -த்வயம் என்று பேர் பெற்றது -இப்படி இருக்கையாலே
உபாயாந்தரங்களிலும் உபேயாந்தரங்களிலும் துவக்கு அற்றவன் இம் மந்திரத்துக்கு பூர்ண அதிகாரி
இம் மந்திரம் வரண சமர்ப்பணங்களை அடைவே ப்ரதிபாதிக்கையாலே
த்வயம் என்று சொல்லப் படுகிறது என்றும் சிலர் சொல்லுவார்கள்
இப்படி ஸ்ரீ மன் நாராயண ஸ்வாமின் ந அநந்ய சரணஸ் தவ சரணவ் சரணம் யாத -தவ ஏவ அஸ்மி அஹம் அச்யுத
இத்யாதி மந்த்ராந்தரத்திலும் த்வய சப்த பிரயோகத்துக்கு இவையே நிமித்தம் –

மந்த்ர ராஜ இமம் வித்யாத் குரு வந்தன பூர்வகம்
குரு ரேவ பரம் ப்ரஹ்ம குரு ரேவ பரா கதி
குரு ரேவ பரா வித்யா குரு ரேவ பாராயணம்
குரு ரேவ பர காமோ குரு ரேவ பரம் தானம்
யஸ்மாத் தத் உபதேஷ்டா சவ் தஸ்மாத் குரு தாரோ குரு
நாநு கூல்யம் ந நக்ஷத்ரம் ந தீர்த்தாதி நிஷேவணம்
நபுரஸ் ஸ்ரவணம் நித்யம் ஜபம் வா அபேக்ஷதே ஹி அயம்
நமஸ்க்ருத்ய குரும் தீர்க்க ப்ராணாமைஸ் த்ரி பிராதித
தத் பாதவ் க்ருஹ்ய மூர்த்நி ஸ்வே நிதாய வினயான்வித
க்ருஹ்ணீயான் மந்த்ர ராஜாநாம் மாம் கச்சேச் சரணம் நர
அநேநைவ து மந்த்ரேண ஸ்வாத்மானம் மயி நிஷிபேத்
மயி நிஷிப்த கர்தவ்ய க்ருத க்ருத்யோ பவிஷ்யதி –சாத்யகி தந்த்ர ஸ்லோகம்
என்று பிரபத்தி மந்த்ராந்தரத்தில் சொன்ன குரு உபஸத்த்யாதிகள் இங்கும் வர பிராப்தம் –

ஆஸ்திகனுக்கு இம்மந்திரத்தினுடைய சமுதாய ஞான பூர்வக ஸக்ருத் உச்சாரணமே உத்தாரகம் என்னும் இடம் சாஸ்த்ர சித்தம்
இந்த மந்த்ரத்தை யேன கேநாபி பிரகாரேண த்வய வக்தா த்வம்-என்று
மந்த்ராந்தரங்களில் காட்டில் வியாவ்ருத்தி தோற்ற அருளிச் செய்தார் –

அவசே நாபி யந்நாம்நி கீர்த்திதே ஸர்வபாதகை
புமான் விமுச்யதே சத்ய ஸிம்ஹ த்ரஸ் தைர் ம்ருகைரிவ–ஸ்ரீ விஷ்ணு புராணம் -6-8-19-

நாம் நஸ்தே யவதீ சக்தி பாப நிர்ஹரணே ஹரே
ஸ்வபசோபி நர கர்தும் ஷமஸ்தா வன்ன கில்பணம் –ஸ்ரீ விஷ்ணு ஸ்ம்ருதி -6–இத்யாதிகளிலே
திரு நாம சங்கீர்த்த மாத்ரத்தினுடைய பிரபாவம் இருக்கும் படி கண்டால்
சரண்ய சரணாகதி தத் பல விசேஷங்களைப் பூர்ணமாய்
பிரகாசிப்பிக்கிற இம் மந்திர விசேஷத்தினுடைய ஸக்ருத் உச்சாரண மாத்ரத்து அளவிலும் உள்ள பிரபாவம்
ஸ்ருதியாதி பிராமண பலத்தால் ஸூக்ரஹம்
இப்பிரபாவ நிபந்தத்தையும் இங்கே பிராமண ஸம்ப்ரதாயங்களாலே கண்டு கொள்வது
இப்படிப்பட்ட ரகஸ்ய தமார்த்தங்களில் ஹேது நிரூபணம் பண்ணக் கடவது அன்று -சாஸ்திரத்தைக் கொண்டு
விஸ்வஸிக்கும் அத்தனை என்னும் இடம் மஹாபாரதாதிகளிலே
தேவ குஹ்யேஷூ சாந்யேஷூ ஹேதுர் தேவி நிரர்தக
பதி ராந்தவ தேவாத்ர வர்த்தி தவ்யம் ஹிதைஷிணா —அனுசாநிக பர்வம் -228-60–இத்யாதிகளாலே சொல்லப் பட்டது

இம் மந்த்ரத்திலே விவஷிதமான ஆத்ம சமர்ப்பணம்
சர்வோபாதி விநிர்முக்தம் ஷேத்ரஞ்ஞம் ப்ரஹ்மணி ந்யசேத்
ஏதத் த்யானம் ச யோகச்ச சேஷோன்யோ க்ரந்த விஸ்தரித-இத்யாதிகளாலே
பிரகரண அந்தரங்களிலும் ஸ்துதிக்கப் பட்டது
ஏதத் ஞானம் ச ஜ்ஜேயம் ச என்று பாடாந்தரம் –
இஸ் ஸ்லோகம் ஸ்வரூப சமர்ப்பண பரமானாலும் இங்கு சொல்லுகிற பர சமர்ப்பண
நிவேதயீத ஸ்வாத் மானம் விஷ்ணவா மல தேஜஸி
ததாத்மா தன்மனா சாந்த தத் விஷ்ணோ ரிதி மந்த்ரத-என்று
வியாச ஸ்ம்ருதியாதிகளிலும் ஸ்வேதாச்வராதிகளிலும் சொன்ன மந்த்ராந்தங்கள்
இப்படி சரண்ய சரணாகதி தத் பலன்களை விசத்தமாகப் பிரகாசிப்பியாது
யோ ப்ராஹ்மணம் விததாதி பூர்வம் யோ வை வேதாம்ச்ச ப்ரஹினோதி தஸ்மை தை ஹ தேவமாத்ம
புத்தி பிரகாசம் முமுஷூர்வை சரணம் அஹம் ப்ரபத்யே –ஸ்வேதார உபநிஷத் –6-18-
திரு மந்த்ரத்திலும் இவை மூன்றும் ஷங்ஷிப்ப்தங்கள்
ஆகையால் பிராப்ய ப்ராபக விசேஷங்களை சம்பூர்ணமாக பிரகாசிப்பிக்கிற இது
த்வயமே பிரபத்தி மந்த்ரங்கள் எல்லாவற்றிலும் பிரதானம் –

இதன் அர்த்தத்தை -ஸ்ருதி ஸ்ம்ருதி இதிஹாச புராண பகவத் சாஸ்திரங்களில் பிரசித்தமான படியே –
சதாசார்ய சம்பிரதாய க்ரமத்தாலே சரணாகதி கத்யத்திலே விவரித்து அருளினார் -எங்கனே என்னில்
பகவன் நாராயண அபிமத அநு ரூப ஸ்வரூப ரூப -என்று தொடங்கி ஸ்ரீ மச் சப்த அபிப்ரேதத்தை அருளிச் செய்தார் –
அகில ஹேய ப்ரத்ய நீக-இத்யாதியாலே ஸ்வரூப ரூப குண விபூதிகளை பரக்க அருளிச் செய்கையாலே
நாராயண சப்தார்த்தம் வியாக்யாதம் யாயிற்று
முற்படப் பிராட்டியை சொல்லச் செய்தே புருஷகாரத்வ நிர்வாஹ அர்த்தமாக விபூதி மத்யத்திலே நிலை தோற்றுகைக்காக
மீண்டும் நாராயண சப்த வியாக்யானத்திலும் அருளிச் செய்தார்
அனந்தரம் ஸ்ரீ மன் நாராயண என்று பல உபாய வாக்கியங்களில் ப்ரயுக்தமான வியாக்யேய சப்தத்தை உபாதானம் பண்ணி அருளினார்
ப்ரபத்யே என்கிற இடத்தில் உத்தமனாலே விவஷித்தமான அதிகாரி விசேஷம் அநந்ய சரணம் அஹம் -என்று விவ்ருத்தமாயிற்று
த்வத் பாதாரவிந்தம் யுகளம் சரணம் ப்ரபத்யே -என்கையாலே
சரணவ் என்கிற சப்தமும் சரண சப்தமும் க்ரியா பதமும் ப்ரதர்ஸிதமாயிற்று-
அனந்தரம் த்வயம் என்று வியாக்யேயத்தை பூர்ணமாக நிர்தேசித்தார்-

அடியிலே யாதல் முடிவிலே யாதல் த்வயம் என்று நிர்த்தேசியாதே-இவ்வளவில் சொல்ல வேண்டுவான் என் என்னில்
உபாய ப்ராப்யங்களில் இங்கு பிரதான பூதன் ஸ்ரீ மானான நாராயணன் ஆகையால் இரண்டு இடத்திலும் கிடக்கிற
ச விசேஷண நாராயண சப்தம் வ்யாக்யாதமாய் நின்ற அளவிலே இம் மந்திரத்துக்கு பிரதிபாத்யமான சாத்ய உபாயத்தோடே கூட
பிரதான உபாயமும் பிரதான ப்ராப்யமும் வியாக்யாதம் என்று தோற்றுகைக்காக இங்கே த்வயம் என்று அருளிச் செய்தார்

அனந்தரம் பிதரம் மாதரம் என்று தொடங்கி ஜிதந்தா விசேஷ பகவத் கீதாதி ஸ்திதமான சம்வாத வாக்ய முகத்தால்
அநந்ய பிரயோஜனனாய் அநந்ய உபாயனாய்க் கொண்டு உபாய பரிக்ரஹம் பண்ணின படியையும்
சரண்ய ஸ்வபாவ அனுசந்தான பூர்வகமாக அபராத ஷமணம் பண்ணுகிற படியையும்
த்வயத்துக்கு சமுதிதார்த்தமாக அருளிச் செய்தார் –

மேல் அர்த்த க்ரமத்தாலே முற்பட நமஸ்ஸாலே பிரார்த்திக்கிற அநிஷ்ட நிவ்ருத்தியை வியாக்யானம் பண்ணி
பின்பு இங்குள்ள பரபக்த்யாதி புருஷார்த்த பூர்வகமாக சதுர்த்யந்த பதங்களில் விபக்த்யபிப்ரேதமான
பரம புருஷார்த்த லாபத்தை வெளியிட்டு அருளினார்
இப்படி அனுஷ்டித்த உபாயனான அதிகாரி விஷயத்தில் இங்கும் அங்கும் உள்ள சித்தியைப் பற்ற
சரம ஸ்லோகத்தில் உத்தரார்த்தில் படியே
ஸ்வாபாவிக தயார்த்தமான பகவத் அபிப்ராயம் இருக்கும் படியைத் தத் வ்யஞ்ஜக பகவத் வாக்ய ப்ரக்ரியையாலே
அருளிச் செய்து காட்டினார்
ஆகையால் கத்யத்தில் அருளிச் செய்தது எல்லாம் த்வயத்தில் விவஷிதம்
இது த்வயம் அர்த்த அனுசந்தாநேந ஸஹ சதைவம் வக்தா -என்கிற பாசுரத்தாலும் ஸூசிதம் –

பரபக்த்யாதி மூலத்வம் கைங்கர்யஸ்ய யதுச்யதே
கத்யாதி ஷூ தத்ப்யாஹூ அபவர்கதசாஸ்ரயம்

உத்தர உத்தரேயோ ஸ்வாமி சாஷாத் கரண போகயோ
பூர்வ பூர்வ ஷணேஷ் டத்வாத் தன் மூலத்தவ மூதிரிதம்

சரீர பாத காலே து ஹார் தஸ்யா நுக்ரஹ ஸ்வயம்
பரிபாகம் ப்ரபந்நானாம் பிரயச்சத்தி தாதாவிதம்

அங்கோலதைல சிக்தா நாம் பீஜா நாம சிராத்யதா
விபாக பல பர்யந்த ததா அத்ரேதி நிதர்சிதம்

துஷ்டேந்திரிய வசாத்சித்தம் ந்ருணாம் யத்கல்மஷைர் வ்ருதம்
ததந்தகாலே சம்சுத்திம் யாதி நாராயணாலயே
இதி வ்ரத விசேஷ யத் ஸாத்வதா திஷூ சிஷ்யதே
தத் வதத்ரோ பபத்யதே கத்யோக்தாந்த்ய தசாகமே

அனுக்ரஹ விசேஷண கேநசித் பரமாத்மன
குருகாதீச நாதாத்யா பிராகப் யன்வ பவன் ப்ரபும் –

இது த்வயத்தின் அர்த்தத்தை நம்மாழ்வாரும் –
திரு நாரணன் தாள் காலம் பெறச் சிந்தித்து உய்ம்மினோ -என்றும்
முகில் வண்ணன் அடியை அடைந்து அருள் சூடி உய்ந்தவன் -என்றும் –
அகலகில்லேன் -முதலான பிரதேசங்களிலும் அருளிச் செய்தார் –

இதில் முற்பட -ஸ்ரீ மன் நாராயண -என்று சர்வ சரண்யமான பரதத்வத்தைச் சொன்ன படி –
ஸ்ரீ யபதித்தவ லிங்கத்தாலும் நாராயண சப்தத்தாலும் இறே ஸ்ருதிகளிலே பர தத்வ விசேஷ நிர்ணயம் பண்ணப் பட்டது –
நாராயணன் சரண்யனாம் போது லஷ்மீ விசிஷ்டானாய் இருக்கும் என்கைக்காகப் பூர்வ கண்டத்தில் ஸ்ரீ மச் சப்தம் –

ஆகாரிணஸ்து விஞ்ஞானம் ஆகார ஞான பூர்வகம்
தேநாகாரம் ச்ரியம் ஞாத்வா ஞாதவ்யோ பகவான் ஹரி -என்று அருளாள பெருமாள் எம்பெருமானார் அருளிச் செய்தார்
இது உத்தர கண்டத்தில் போலே பூர்வ கண்டத்திலும் விசேஷம் என்னும் இடமும்
உபாய விசேஷணங்களால் உபாயத்வம் வாராது என்னும் இடமும் சித்த உபாய சோதனத்திலே சொன்னோம் –

ஸ்ரீ சப்தம் -ஸ்ரீயதே -ச்ரயதே –ஸ்ருனோதி-ஸ்ராவயதி -ஸ்ருணாதி -ஸ்ரீணாதி-என்று ஆறு படியாக
பகவத் சாஸ்திரங்களில் நிர்வசனம் பண்ணப் பட்டு இருக்கும்

அவற்றில் அபேக்ஷித பதார்த்தங்கள் ஒவ் சித்யத்தாலும்-அவ்வோ பிராமண பலத்தாலும் விசேஷித்து அறிய வேண்டும் –
அவ்விடத்தில் ஸ்வ உஜ்ஜீவ நார்த்திகளாலே ஆச்ரயிக்கப் படும் என்றும் -இவர்களை உஜ்ஜீவிப்பிக்கைக்காக
சர்வேஸ்வரனை ஆஸ்ரயித்து இருக்கும் என்றும் பொருளான போது –

பிதா இவ த்வத் ப்ரேயான் ஜநனி பரி பூர்ணாகசி ஜநே
ஹித ஸ்ரோதா வ்ருத்யா பவதி ச கதாசித் கலுஷ தீ
கிம் ஏதத் நிர்தோஷ க இஹ ஜகதி இது த்வம் உஸிதை
உபாயை விஸ்மார்ய ஸ்வ ஜன யசி மாதா தத் அசி ந —ஸ்ரீ குணரத்னகோசம் -52–என்கிறபடியே

சாபராத்தாரானார்கள் பக்கலில் ஸ்வயம் ஹிதைஷையாய்-தண்ட தரனான சர்வேஸ்வரன் உடைய சீற்றத்தை ஆற்றி –
அவனுடைய சஹஜ காருண்யம்
இவர்களுக்கு உஜ்ஜீவகமாம் படி பண்ணிக் கொடுக்கையாலே மாத்ருத்வ ப்ரயுக்த வாத்சல்ய அதிசயத்தாலே
புருஷகார பூதையாய் நிற்கிற ஏற்றம் சொல்லிற்றாம் –
அவ்விஞ்ஞாதா இத்யாதிகளில் போலே இங்கு விஸ்மார்ய என்றத்துக்கும்
அல்லி மலர் மகள் போக மயக்குகள்-இத்யாதிகளுக்கும்
சதா சர்வஞ்ஞனனா ஈஸ்வர னுடைய நிக்ரஹ அபிசந்தி நிவ்ருத்தியிலே தாத்பர்யம் –

சாபேஷனான புருஷனுக்கு அபேக்ஷிதம் தலைக் கட்டிக் கொடுக்க வல்ல சேதனன் அபிகம்யனாகைக்கு
உபாயமாக வரிக்கப் பட்ட
சேதனாந்தரத்தை புருஷகாரம் என்று வியவஹரிப்பார்கள் -இப் புருஷகாரம் பலத்துக்கு பரம்பரையா காரணம்

அர்த்த ஸ்வாபாவ அனுஷ்டான லோக த்ருஷ்ட்டி குரூக்திபி
ஸ்ருத்யா ஸ்ம்ருத்யா ச சம்சித்தம் கடகார்த்தா வலம்பனம் —என்று இப்புருஷார்த்த பாவத்துக்கு பிரமாணம்
நிஷேப ரஷையிலே சொன்னோம் –

இவற்றில் அர்த்த ஸ்வபாவமாவது –
பிராட்டியின் இயல்பான தன்மை –ஈஸ்வரனைப் போலே பித்ருத்வ அனுரூபமான பிராதாபோஷ் மலத்வம் கலசாதே
மாத்ருத்வ ப்ரயுக்தங்களான வாத்ஸல்யாதிகள் அதிசயித்து –
ந கச்சின் ந பராத்யதி -யுத்த காண்டம் -116-44–
க குப்யேத்வா நரோத்தம -யுத்த காண்டம் –116-38-
மர்ஷயா மீஹ துர்பலா –யுத்த காண்டம் –116-40-என்கையை ஸ்வபாவமாய் இருக்கையும் –
வால்லப்யதி சாயத்தாலே இவளை முன்னிட்டால் அவன் மறுக்க மாட்டாது ஒழிகையும் –
இவ்வர்த்த ஸ்வபாவத்தால் இவளைப் பற்றுவார்க்கு புருஷகாந்தர அபேக்ஷை யுண்டாய் அநவஸ்தை வராது –

அனுஷ்டானம் ஆவது —
ப்ரஹ்லாத விஷயத்தில் பிரேம அதிசயத்தால் பிரதிகூல விஷயத்தில் பிறந்த சீற்றத்தின் கனத்தைக் கண்டு
அணுக அஞ்சின ப்ரஹ்மாதிகள் இவளை சரணமாகப் பற்றி இவள் முன்னிலையாக
ஸ்ரீ நரசிம்ம ரூபனான சர்வேஸ்வரனைக் கிட்டி
ஸ்தோத்ரம் பண்ணினார்கள் என்று புராண பிரசித்தம் —
ஸீதாம் உவாச அதிசயா ராகவும் ச மஹாவ்ரதம்—அயோத்யா -31-2-என்றும்
சீதா சமஷம் காகுத்ஸ்தம் –அயோத்யா -15–6-இத்யாதிகளிலும் கண்டு கொள்வது –

லோக த்ருஷ்டியாவது உலக வழக்கம் —
அந்தப்புர பரிஜனத்தை அபராத பூயாஸ்த்தை யுண்டானாலும் ராஜாக்கள் அல்பங்களான பிரசானங்களாலே க்ஷமிக்க காண்கை
இவ்வர்த்தம் -மாதர் லஷ்மி யதைவ மைதிலி ஜன -ஸ்ரீ குண ரத்னகோசம் -51-என்கிற ஸ்லோகத்திலும் விவஷிதம்

குரூக்தி யாவது –
பூர்வர்கள் அருளிச் செயல்கள் –நம்மாழ்வார் முதலான ஆச்சார்யர்களுடைய அகலகில்லேன் முதலான பாசுரங்கள்
இவற்றுக்கு மூலமான ஸூக்த விசேஷ ரூபைகளான ஸ்ருதிகளையும் கண்டு கொள்வது —
இவை அடியாக வந்த ஸ்ம்ருதிகளான வாச பரம பிரார்த்தயிதா பிரபத்யேன் நியத ஸ்ரியம் –
இத்யாதிகளான ஸுநகாதி வாக்கியங்கள்-

இப்படி இவளுக்கு சர்வேஸ்வரன் திருவடிகளில் கடகத்வம் பஹு பிராமண சித்தம் ஆகையால்
இங்கும் இவ் விவஷை கொள்ள உசிதம் –
இப்படி புருஷகார பூதையுமாய் சித்த உபாய விசேஷணமுமாய்க் கொண்டு ஆஸ்ரயிக்கப் படும்
ஸ்வரூபம் ஸ்வாதந்தர்யம் பகவத இதம் சந்த்ர வதன–ஸ்ரீ குண ரத்னகோசம்-28–
ஸ்வத ஸ்ரீ ஸ்தவம் விஷ்ணோ ஸ்வமஸி -ஸ்ரீ குண ரத்னகோசம்-31-என்கிற ஸ்லோகங்கள் படியே
ஆதித்யாதிகளுக்கு ப்ரபாதிகள் போலே அதிசய காரிணியாய்க் கொண்டு சித்த உபாயத்தை ஆஸ்ரயித்து இருக்கும்
எல்லார்க்கும் சேவ்யையாய்-சர்வேஸ்வரனை சேவித்து இருக்கும் என்ற பொருளான போது எல்லார்க்கும் ஸ்வாமிநீயாய்-
காந்தஸ் தே புருஷோத்தமே –சேஷித்வே பரம புமான் -ஸ்ரீ குண ரத்னகோசம்-22-என்கிறபடியே
அவனுக்கு சேஷமான நிலை சொல்லிற்றாம்
ஜகத் சமஸ்தம் யதபாங்க ஸம்ஸராயம் -இத்யாதிகள் படியே
எல்லா வஸ்துக்களாலும் ஆஸ்ரயிக்கப் பட்டு எல்லாவற்றையும் தான் ஆஸ்ரயித்து இருக்கும் என்று
பொருளான போது நாராயணாதி சப்தங்கள் ஸ்ரீ யபதிக்கு சொல்லும் கட்டளையை விஷ்ணு பத்னிக்கும் சொல்லிற்றாம்
ஸ்ரீ பாஷ்ய காரரும் பகவன் நாராயண என்கிற நேரிலே பகவதீம் ஸ்ரீயம் -என்று அருளிச் செய்தார் –

ஸ்ருனோதி ஸ்ராவயதி -என்கிற வ்யுத்பத்திகளில்
சாபராதரான அடியோங்களை சர்வேஸ்வரன் திருவடிகளில் காட்டிக் கொடுத்து அருள வேணும் என்று
இப் புடைகளிலே ஆஸ்ரிதருடைய ஆர்த்த த்வனியைக் கேட்டு சர்வேஸ்வரனுக்கு விண்ணப்பம் செய்து
இவர்களுடைய ஆர்த்தியை சமிப்பிக்கும் என்றதாம் –
புருஷகார க்ருத்யத்தைச் சொல்லுகிற இதுக்கும் புருஷகார பாவத்தில் நோக்கு –

மத் பத த்வந்த்வமேகம் பிரபத்யந்தே பாராயணம்
உத்தரிஷ்யாம் யஹம் தேவி சம்சாராத் ஸ்வயமேவ தான் -என்றும் –
ஆன்ரு சம்சயம் பரோ தர்ம –என்றும் -இத்யாதிகளை அவன் பக்கலிலே கேட்டு

ச்ருணு சாவஹித காந்த யத்தே வஹ்யாம் யஹம் ஹிதம்
பிராணைரபி த்வயா நித்யம் சமரஷ்ய சரணாகத –என்று
கபோதத்தை கபோதி கேட்பித்தால் போலே அவசரத்தில் கேட் பிக்கும் என்னவுமாம்
சர்வேஸ்வரன் பக்கல் லோக ஹிதத்தைக் கேட்டு மித்ர மவ்பயிகம் கருத்தும் இத்யாதிகளில் படியே
விபரீதரையும் கூடக் கேட்பிக்கும் என்னவுமாம் –

ஸ்ருணாதி நிகிலான் தோஷான் -என்று வ்யுத்புத்தி யானபோது –
லஷ்ம்யா ஸஹ ஹ்ருஷீ கேசா தேவ்யா காருண்ய ரூபயா ரஷக-
சர்வ சித்தாந்தே வேதாந்தேபி ச கீயதே -என்றும் –
வேரி மாறாத பூ மேல் இருப்பாள் வினை தீர்க்குமே-என்றும்
சொல்லுகிறபடியே உபாய அதிகாரிகளுக்கு விரோதிகளான கர்மாதிகளைக் கழிக்கும் என்றதாம் –

ஸ்ரீர்ணாதி ச குணைர் ஜகத் -என்று நிருக்தியில்
தன் காருண்யாதி குணங்களால் -நின் திருவருளும் பங்கயத்தாள் திருவருளும் கொண்டு
இத்யாதிகளில் படியே ஆஸ்ரிதற்கு கைங்கர்ய பர்யந்த குண பரிபாகத்தை உண்டாக்கும் என்றதாம் –

இவ் வ்யுத்பத்திகள் ஆறிலும் உள்ள வைபவத்தை கணிசித்து –
ஸ்ரீ ரித்யேவ ச நாம தே பகவதி ப்ரூம கதம் த்வாம் வயம் -என்று ஸ்ரீ ஆளவந்தார்
ஸ்ரீ சதுஸ் ஸ்லோகியில் அருளிச் செய்தார் –
ஸ்ரீ பட்டரும் நிரூபாதிக மங்களத்தை நினைத்து ஸ்ரீ ரசி யத -ஸ்ரீ குணரத்ன கோசம் -29-என்று அருளிச் செய்தார் –
இவ்வர்த்தங்கள் ஈஸ்வரனுடைய உபாய பாவத்துக்கு உபயுக்தங்கள் ஆனவை பூர்வ கண்டத்திலும்
ப்ராப்யத்தைக்கு உபயுக்தங்கள் ஆனவை உத்தர கண்டத்திலும் அனுசந்தேயங்கள்-

ஸ்வாம் யுபாய உபேயச்ச ஸ்வரூபாதி சமர்ப்பண
பிரதித பிரதி சம்பந்தீ ஸ்ரீ மான் நிக்காம சஷூஷாம் –

ஸ்ரீ மான் என்று பொதுவில் சொன்னாலும் -பிராமண அநு சாரத்தாலே இங்கு ஸ்ரீ யப்பதி என்றபடி –
சாமான்யமாகத் தோற்றின சம்பந்தம் ஸ்ரீ பதி பலத்தாலே விசேஷிதம்-
சர்வருக்கு ஆஸ்ரயணீயையாய்-ஜெகன் மாதாவான இவளுக்கு பதி என்னவே பரத்வமும் ஸுலப்யமும் தோற்றும் –
இங்குப் பிராட்டியை விசேஷித்து எடுக்கையாலே நார சப்தார்த்தங்களான வஸ்த்தாந்தரங்களில் வ்யுத்புத்தியும்
விசேஷணமாக நிர்த்தேசிக்கையாலே யதா பிரமாணம் பதி பாரார்த்தமும் ஸூசிதம் –

பூம நிந்தா பிரசம் சாஸூ நித்ய யோகே அதிசாயநே
சம்ஸர்க்கே அஸ்தி விவஷாயம் பவந்தி மதுபாதயா –என்று
அநேக அர்த்தமாய் இருந்ததே யாகிலும் இங்கே மைத்துப் உபயோக விசேஷத்தாலே
பிராமண ஸித்தமான நித்ய யோகத்தை சொல்லுகிறது –
விக்ரகத்தில் ப்ரஹ்மச்சாரிய அவஸ்தையிலும் உள்பட –
கிருஷ்ணா ஜிநேந சம்வ்ருண்வன் வதூம் வஷ ஸ்தலாலயாம் -என்னும் படி இறே நித்ய யோகம் இருப்பது –

அப்ருதக் சித்த வஸ்துவுக்கு -ஸ்ரீ மான் -என்று
மத் வர்த்தீய ப்ரத்யயம் சா பேஷமாக சாமானாதி கரண்யம் கூடுமோ என்றும்
ப்ருதக் சித்தமாகில் -கீர்த்தி –ஸ்ரீ வாக்ச நாரீணாம்-ஸ்ரீ கீதை -10-34-என்றும்
பூவில் வாழ் மகளாய்-திருவாய் -6-3-6- என்றும் மத் வர்த்தீய ப்ரத்யயம்
நிரபேஷமாக சாமானாதி கரண்யம் கூடுமோ என்றும் சிலர் சொல்லும் சோத்யங்கள் இரண்டும்
மனத்தாங்கல் –எங்கனே என்னில்
தத் குண சாரத்வாத்து தத் வியபதேச ப்ராஞ்ஞவத் -ஸ்ரீ ப்ரஹ்ம ஸூ த்ரம்-2- 3-29-என்கிற நியாயத்தாலே
ஞான குணத்தை இட்டு ஆத்மாவை ஞானம் என்று சொல்லலாம் இருக்கச் செய்தே-
ஞானவான் -என்று மத்வர்தீய ப்ரத்யய அன்விதாமாகவும் சாமானாதி கரண்யம் உண்டாகிறாப் போலே
இங்கும் குறை இல்லை
ஆகையால் மத்வர்த்தீய ப்ரத்யய மாத்ரத்தைக் கொண்டு ப்ருதக் சித்தம் என்று நிச்சயிக்கப் போகாது –

நரபதி ரேவ சர்வே லோகா -இத்யாதிகளில் போலே
விவஷாந்தரம் சம்பாவிதமான இடத்தில் இப் பிரத்யயம் இல்லாத சாமானாதி கரண்யத்தைக் கொண்டு
ப்ருதக் சித்தம் அன்று என்னவும் ஒண்ணாது -ஆன பின்பு விசதமாகப் ப்ரதிபாதிக்கும் பிரமாணந்தரங்களைக் கொண்டு
இவ் வஸ்து ஸ்திதி இருக்கும் படி தெளியப் பிராப்தம் –
இங்கு உபாய தசையிலும் பல தசையில் பிரமாணங்கள் நித்ய யோகத்தை சொல்லுகையாலும் –
இம் மந்த்ரத்தில் இவ் வர்த்தம் பிரகாசிப்பிக்கை
அபேக்ஷிதம் ஆகையால் பூர்வ உத்தர கண்டங்களில் மதுப்பாலே –
ச ப்ராதுச் சரணவ் காடம் –பவாம்ஸ்து ஸஹ வைதேஹ்யா –
என்கிறபடி பிரிவற்ற படி சொல்லிற்று ஆயிற்று –

நம்மாழ்வாரும் –
அகலகில்லேன் இறையும் என்றும் அலர் மேல் மங்கை உறை மார்பா – என்றும்
ஒண் டொடியாள் திரு மகளும் நீயுமே நிலா நிற்ப -என்றும் –
இங்கும் அங்கும் திருமால் அன்றி இன்மை கண்டு -என்றும்
உபாய தசையிலும் பல தசையிலும் ஸ்ரீமத் சப்தத்தில் சொன்ன நித்ய யோகத்தை அனுசந்தித்தார் –
இவ் வநுஸந்தானம்
சாபராதர்க்கு அணி இடாதே நினைத்த போது ஆஸ்ரயிக்கைக்கு உறுப்பாம் –
இப்படி அபேக்ஷிதமான புருஷகாரம் தானும் தன்னேற்றமாம் படி இருக்கின்றன -நாராயண சப்தத்தில்
தோற்றுகிற சம்பந்தமும் குணங்களும் -இது தன்னடியார் -என்கிற பாட்டிலும் காணலாம் –

ஸ்ரீ தர ஸ்ரீ கர ச்ரேய ஸ்ரீ மான் லோகத்ரய ஆஸ்ரய –இத்யாதிகளில்
பகவான் நாமமாக பிரசித்தமான ஸ்ரீ மச் சப்தமே அமையாதா என்னில்
பூர்வ கண்டத்தில்
உபாய பாவத்துக்கு உறுப்பான குண விசேஷ அனுசந்தான அர்த்தமாகவும் –
உத்தர கண்டத்தில்
சர்வ விசிஷ்டனான சேஷி ப்ராப்யனாகத் தோற்றுகைக்காகவும் நாராயண சப்தம் அபேக்ஷிதம் ஆகையால்
இங்கு ஸ்ரீ மச் சப்தம் விசேஷணம் —

இங்குற்ற நாராயண சப்தத்துக்கு மூலமந்த்ர அதிகாரத்தில் வ்யுத்பத்திகளாலே சொன்ன அர்த்தங்கள்
எல்லாம் விவஷிதங்கள் ஆகிலும்
பூர்வ கண்டத்தில் நாராயண சப்தத்துக்கு சரண்யத்தையிலே நோக்கான படியால்-
நிகரில் புகழாய்-இத்யாதிகளிலே சங்க்ருஹீதங்களான
வாத்சல்ய -ஸ்வாமித்வ -ஸுசீல்ய -ஸுலப்ய -சர்வஞ்ஞத்வ-சர்வசக்தித்வ-சத்ய சங்கல்பத்வ-
பரம காருணிக்கத்வ-க்ருதஞ்ஞத்வ-ஸ்திரத்வ-
பரிபூர்ணத்வ -பரம உதாரத்வாதிகள் இங்கு அனுசந்தேயங்களில் பிரதான தமங்கள்–

இவற்றில் –
1-வாத்சல்யமாவது -தோஷயத்யபி தஸ்ய ஸ்யாத் சதா மேதத கர்ஹிதம்-என்கிறபடியே ஆஸ்ரிதருடைய அபராதத்தைப் பாராதே
அங்கீ கரிக்கைக்கு ஈடான இரக்கம் -இது தன் தோஷங்களைப் பார்த்து அகலாமைக்கு உறுப்பாம்

2-ஸ்வாமித்வமாவது -ப்ரணவாதிகளிலே சிஷிதமான சம்பந்த விசேஷம் -இது தன் பேறாக ரஷிக்கும் என்கிற தேற்றத்துக்கு உறுப்பாம்

3-ஸுசீல்யமாவது -தான் சர்வாதிகனாய் வைத்து தண்ணியரான நிஷாத வானர கோபாலாதிகளோடே நிரந்தர சம்ச்லேஷம் பண்ணுகை –
இது அம்மான் ஆழிப் பிரான் அவன் எவ்விடத்தான் யான் யார் என்று அகலாதே-
சாரத்ய தூத்யாதி பர்யந்தமாக அபேக்ஷிக்கும் படி விஸ்வச நீயதைக்கு உறுப்பாம் –

4-ஸுலப்யமாவது-சனக சனந்தாதி மஹா யோகிகளும் கூட கிட்ட நிலம் இல்லாத தன்னை -சகல மனுஜ நயன விஷயதாம் கத —
என்னும் படி பண்ணுகை -இது கிட்ட அரியன் என்கிற நிஸ்ப்ருஹத்தை வாராமைக்கு உறுப்பாம் –

5-சர்வஞ்ஞத்வம் ஆவது -அஞ்ஞாதம் நாஸ்தி தே கிஞ்சித் -யோ வித்தி யுகபத் சர்வம் ப்ரத்யஷேண சதா ஸ்வத -என்கிறபடியே
சர்வத்தையும் சாஷாத் கரிக்கை-இது ஆஸ்ரிதற்கு கொடுக்க வேண்டும் நன்மைகளிலும் கழிக்க வேண்டும்
விரோதிகளிலும் இவன் அறியாதது இல்லை என்னும் அனுசந்தானத்துக்கு உறுப்பாம் –

6-சர்வ சக்தித்வமாவது-அகடிதகடநா சாமர்த்தியம் -இது சம்சாரிகளான நம்மை நினைத்த போது
நித்ய ஸூரி பரிஷத்திலே நிவேசிப்பிக்க வல்லன் என்கிற நிச்சயத்துக்கு உறுப்பாம் –

7-சத்ய சங்கல்பமாவது -தன் சந்தர்ப்பத்துக்கு தன்னாலும் ப்ரதிஹதி இன்றிக்கே ஒழிகை -இது
அஹம் சர்வ பாபேப்யோமோக்ஷயிஷ்யாமி -என்கிற பாசுரம் பழுதாகாது என்கிற விஸ்ரம்பத்துக்கு உறுப்பாம்

8-பரம காருணீகத்வம் ஆவது -ஸ்வார்த்த நிரபேஷையான பர துக்க நிராகரண இச்சை -இது அநந்த அபராதங்களை யுடையவர்களையும் –
மித்ர பாவேந ஸம்ப்ராப்தம் — யதி வா ராவண ஸ்வயம் என்கிறபடியே ஒரு வ்யாஜ மாத்திரத்தாலே ஷமிக்கும் என்கிற தெளிவுக்கு உறுப்பாம் –

9-க்ருதஞ்ஞத்வம் ஆவது -ந ஸ்மரத்யப காரணாம் சதமப்யாத் மாவத்தயா கதஞ்சிதுப காரேண க்ருதே நை கேன துஷ்யதி-என்றும்
ருணம் ப்ரவ்ருத்தமிவ ஹ்ருதயான் நாபஸர்ப்பதி-என்கிறபடியே
அத்யல்ப அனுகூல வியாபாரத்தையும் பரம உபகாரம் -பண்ணினால் போலே மறவாது ஒழிகை
இது தன் பக்கல் ஏதேனும் ஒரு வல்ல குறி கண்டால் இனி நம்மை ஒருக்காலும் கை விடான் என்று இருக்கைக்கு உறுப்பாம் –

10-ஸ்திரத்வம் ஆவது ஆஸ்ரித ரக்ஷணத்தில் நிலையுடைமை -இது அத்யந்த அந்தரங்கர் விலக்கிலும்
நத்யஜேயம் கதஞ்சன -என்கிறபடி நம்மை விடான் என்று நம்புக்கைக்கு உறுப்பாம் –

11-பரிபூர்ணத்வம் ஆவது -அவாப்த ஸமஸ்த காமத்வம்-இது -அண்வப்யுபஹ்ருதம் பக்தை பிரேம்ணா பூர்யேவ மே பவேத் –
பத்ரம் புஷபம் பலம் தோயம் யோ மே பக்த்யா பிரயச்சதி-இத்யாதிகளில் படியே பாவ பந்தம் பார்க்குமது ஒழிய மற்று நாம்
இடும் பச்சையில் வரிசை பாரான் என்று வல்ல கிஞ்சித் காரத்திலே முயற்க்கைக்கு உறுப்பாம் –

12-பரம உதாரத்வம் ஆவது உபாய லாகவமும் உபேய கௌரவமும் மாத்ர அபகர்ஷமும் பாராதே சர்வ ஸ்வதானம் பண்ணியும்
நாம் செய்தது போராது என்று இருக்கும் வதான்யதை -இது ததி பண்டாதிகளைப் போலே ஹடாத் காரம் பண்ணியும்
அனுபந்தி பர்யந்தமாகப் பரம புருஷார்த்தத்தை அபேக்ஷிக்கைக்கு உறுப்பாம்

இப்படி மற்றும் சரண்யத்தைக்கு உபயுக்தமான குணங்களையும் அவற்றின் உபயோக விசேஷங்களையும்
இங்கே அனுசந்தித்திக் கொள்வது –

உபாய அனுஷ்டான தசையில் அவ்வோ வித்யைகளுக்கு அடைத்து கதிபய குண விசிஷ்டன் அனுசந்தேயனாய்
பிராப்தி தசையில் ஸமஸ்த குண விபூதி விசிஷ்டன் அனுபாவ்யனானாலும்-இங்கு உத்தர கண்டத்தில் நாராயண சப்தத்துக்கு
ஸ்வரூப க்ருதமாயும் குண க்ருதமாயும் வரும் கைங்கர்ய பிரதி சம்பந்தித்தவத்திலே நோக்கான படியால் அதுக்கு உபயுக்தங்களான
சேஷித்வ நிரதிசய போக்யத்வாதிகள் பிரதானங்கள்
இங்கே சம்பந்த விசேஷாதி முகத்தாலே ஆனுகூல்ய சங்கல்பமும் பிரதிகூல்ய வர்ஜனமும் ஸூசிதமான படி
அதிகாராந்தரத்திலே பரிகர விபாக அதிகாரத்தில் –11-சொன்னோம் –

இவ்விடத்தில் ஸ்ரீ மன் நாராயண சரணவ் -என்று சமஸ்தமாகவும் யோஜிப்பார்கள் —
கமல நயன வா ஸூ தேவ விஷ்ணோ தரணி தராஸ்யுத சங்க சக்ர பாணே பவ சரணம் –ஸ்ரீ விஷ்ணு புராணம் -3-7-33-
என்கிற பிரயோகத்தையும்
த்வமேவ உபாய பூதோ மே பவ -என்கிற வாக்கியத்தையும் –
அகலகில்லேன் -என்கிற பாட்டையும் –
அகிஞ்சன அநந்ய கதி சரண்ய -என்கிற ஸ்தோத்ர வாக்கியத்தையும் –
இத்யாதி மந்த்ராந்தங்களையும் -த்வய விவரணமான கத்யத்தையும் பார்த்து
ஸ்ரீ மன் நாராயண என்று இரண்டு சம்புத்திகள் ஆக்கி தவ என்ற ஒரு பதத்தை அத்யாஹரித்தும் யோஜிப்பார்கள் –
இப்படி வியஸ்தமானாலும் சமஸ்தமானாலும் விசேஷண விஷேஷ்யங்கள் நிற்கும் நிலைக்கு வைஷம்யம் இல்லை
இந் நிலை பூர்வ உத்தர கண்டங்களிலும் ஒக்கும் –

சரணவ்-என்கிற சப்தம் நித்தியமான திவ்ய மங்கள விக்ரஹத்துக்கு உப லக்ஷணம்
ஸ்ரீ யபதியினுடைய சர்வ ஸ்மாத் பரத்வமும் – நித்ய விக்ரஹ யோகமும் ஞாதவ்யங்களில் பிரதானமாம் என்னும் இடம்
நித்ய சித்தே ததா காரே தத் பரத்வே ச பவ்ஷ்கர
யஸ் யாஸ்தி சத்தா ஹ்ருதயே தஸ்யாசவ் சந்நிதிம் வ்ரஜேத்–இத்யாதிகளிலே பிரசித்தம்
ஆகையால் ஸ்ரீ மன் நாராயண என்கிற இடத்தில் ஸுலப்ய அந்விதமான பரத்வமும்
சரணவ் என்கிற இடத்தில் நித்ய விக்ரஹ யோகமும் அனுசந்தேயம் –

திவ்யாத்மா ஸ்வரூபத்திலும் -கீழ் சொன்ன குணாதிகளிலும் தெளிவு இல்லாதார்க்கும் -சுத்த சத்வ த்ரவ்ய மாயமாய்
ஸ்வ விஷய ஞானத்திலே ஞான சங்கோசத்துக்கு நிவர்த்தகமாய் –
பரத்வ ஸுலப்ய வியஞ்சகமான திவ்ய மங்கள விக்ரஹமே இலக்காம்-
இப் பிரதான்யத்தை பற்றியே கத்யத்திலே குணங்களுக்கு முன்னே திவ்ய மங்கள விக்ரஹத்தை அருளிச் செய்தார்
திவ்யாத்மா ஸ்வரூபத்தில் தெளிவுடையராய் இருக்கச் செய்தேயும் –
மூர்த்தம் ப்ரஹ்ம ததோபி தத் ப்ரியதரம் ரூபம் யதத்தத்புதம்-என்னும் படி
ஈஸ்வரன் தனக்கும் போக்யமான நித்ய விக்ரஹ அனுபவத்தில் ஊற்றத்தாலே
திரு மங்கை ஆழ்வார் தம்மை ஈஸ்வர விஷயத்தில் தேஹாத்மவாதிகளாக அருளிச் செய்வர் –

சர்வேஸ்வரனுடைய திவ்ய மங்கள விக்ரஹத்துக்கு
பாபம் ஹரதி யத் பும்ஸாம் ஸ்ம்ருதம் சங்கல்பம நாமயம்
தத் புண்டரீக நயனம் விஷ்ணோர் த்ரஷ்யாம் யஹம் முகம் -என்றும்
ரூப ஒவ்தார்ய குணை பும்ஸாம் த்ருஷ்ட்டி சித்த அபஹாரிணம்-என்றும் இத்யாதிகளில் படியே
ஸூபத்வமும் ஆஸ்ரயத்வமும் உண்டு –

பத்தருக்கு ஆஸ்ரத்யவம் யுண்டாகிலும் ஸூபத்துவம் இல்லை –
பகவத் ஸ்வரூபத்துக்கு ஸூபத்துவம் யுண்டாகிலும் ஆஸ்ரயத்வம் இல்லை
சம்சார பந்த ரஹிதமான பரிசுத்தாத்ம ஸ்வரூபத்துக்கு சம்சாரிகைக்கு சஹகாரி யோக்யதை இல்லையே யாகிலும்
பரதந்த்ர சேதனன் ஆகையால் சம்சரிக்கைக்கு ஸ்வரூப யோக்ய வஸ்து வாகையாலே
அதுக்கு ஹேய ப்ரத்ய நீகத்வ ரூப ஸூபகத்வமும் இல்லை -ஆஸ்ரயத்வமும் இல்லை
முக்தருடைய விக்ரஹ பரிக்ரஹ தசையிலும் நித்ய விக்ரஹரான நித்யருக்கும் ஆஸ்ரயத்வம் யுண்டே யாகிலும்
சம்சார நிவர்த்தனமான ஷமமான சுபத்துவம் இல்லை
ஆகையால் திவ்ய மங்கள விக்ரஹத்துக்கே முமுஷூ உபயுக்தமான சுபத்வமும் ஆஸ்ரயத்வமும் உள்ளது –
பராவர ஸூ கக்ராஹ்யம் ப்ரமபோத ப்ரசாவகம்
ஸ்வரூபாத் ஸ்வாமிநோ ரூபம் உபாதேயதமம் விது
சரணாகதி விதாயக வாக்யத்திலும் -மாமேகம் சரணம் வ்ரஜ -என்று விக்ரஹ விசிஷ்டன் இலக்காயத் தோற்றினான்
இது திவ்ய விக்ரஹ பர வ்யூஹாதி அவஸ்த்யா பஞ்சகத்திலும் ஸூபாஸ்ரயம் என்னும் இடம் சாஸ்த்ர சித்தம் –

சிதா லம்பன ஸுகர்ய க்ருபோத்தம்ப கதாதிபி
உபாயத்வமிஹ ஸ்வாமி பாத யோர நு சம்ஹிதம்
இங்கு தாஸ புதன் ஓவ்சித்திய அதிசயத்தாலும் –
அநதி க்ரமணீய ஹி சரண க்ரஹணம் -என்கிறபடியே
க்ருபோத்தம்பகத்வ அதிசயத்தாலும்
தவாம்ருதஸ் யந்தின-இத்யாதிகளில் படியே போக்யத்வ அதிசயத்தாலும் திருவடிகளை அவலம்பிக்கிறான்

இவ் வர்த்தம் ஸர்வதா சரண த்வந்த்வம் —
த்வத் பாத கமலா தந்யத்–மம தே பாதயோ -ஸ்திதம் —
லோக விக்ராந்த சரணவ் தேவ்ரஜம் விப
ச ப்ராதுஸ் சரணவ் காடம் -தஸ்ய தாம்ரதலவ் தாத சரணவ் ஸூ ப்ரதிஷ்டித்தவ் –
ஸூ ஜாத ம்ருது ரக்தாபி அங்குலீ பிரலங்குருத்வ் –
பிரயதேன மாயா மூர்த்தனா க்ருஹீத்வா ஹி அபிவந்திதவ் —
சரணவ் சரணம் யத –ப்ரபந்நா கௌக வித்வம்ஸி சரணவ் சரணம் கத -இத்யாதிகளிலும் பிரசித்தம்

இவற்றை அடி ஒற்றினவர்களும் –
உன் அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேன் – என்றும் –
த்வத் பாத மூலம் சரணம் ப்ரபத்யே -என்றும் அருளிச் செய்தார்கள்
ஸுகந்திய ஸுகுமார்யாதி குண விக்ரஹவான் ஹரி -தஸ்ய ஸ்வாத்ம பிரதாநே து சாதனம் ஸ்வபத த்வயம் -என்று
அபியுக்தரும்-ஸ்வாமி பராசர பட்டரும் – பிரதிபாதித்தார்கள்-

சரணவ் என்கிற இடத்தில் –
தமேவ சரணம் கச்ச —
கழல்களையே சரணாக –
நாகணை மிசை நம்பிரான்
சரணே சரண் -இத்யாதிகளில் படியே அவதாரணம் விவஷிதம் –

சரணாவிதி நிர்த்தேச பத்னீ விசிஷ்டய பாதக
இதி மந்தைரிதம் ப்ரோக்தம் ஸ்ரீ மச் சப்த விரோதத

சப்தஸ்வ ரஸத பிராப்தம் வைசிஷ்டயம் பிரதம ஸ்ருதம்
விசேஷிய சரண த்வித்வம் ந ஹி பாதிது மர்ஹதி

சரணா நிதி வக்தவ்ய இதி யச்ச ப்ர சஞ்சிதம்
க்ரந்தஞ்ஜைரபா ஹாஸ்யம் தத் ப்ரதிபாதாந்யத அன்வயாத்

ந சம்ராஜி ஸபத்நீகே சாத்வி தீ யோக்தி சாஹசம்
தத் அத்ரேத்ய பராம்ருச்ய தர்சிதம் குரு சாஹசம் –

சர்வ சக்தியானவன் உபாயமாம் போது
இவ் விசேஷணத்தால் அபேக்ஷை ஏன்-சாபேஷன் ஆகில் சர்வ சக்தன் அன்றிக்கே ஒழியானோ என்னில்
இச் சோத்யம் நாராயண சப்தத்தாலும் சரண சப்தத்தாலும் சொல்லப் பட்ட குண விக்ரஹ யோகத்திலும் பண்ணலாம் –
அவை இவனுக்கு விசேஷணங்கள் ஆகையாலும் அவற்றுக்கு வஸ்து அனுரூபமாக உபயோக விசேஷங்கள் உண்டாகையாலும்
அவற்றில் சர்வ சக்தித்வ விரோதம் இல்லை என்று யதா பிரமாணம் கொள்ளில் இது பஹு பிராமண பிராப்தமாய்
இங்கு ஸ்ரீ மச் சப்தத்திலும் ஸ்வ ரசிக விசேஷண பாவமான பத்னீ சம்பந்தத்திலும் துல்யம் –

இப்படி இருக்க சரணவ் என்கிற த்விவசன மாத்ரத்தைக் கொண்டு ஸ்ரீ சம்பந்தத்தை உப லக்ஷணம் என்னில்
குணாதி சம்பந்தத்தையும் இப்படிச் சொல்லப் பிரசங்கிக்கும்
சரண சப்தத்தில் உபாய வாசி சப்த சமபி வியாஹாரத்தால் உபயுக்த குண விக்ரஹ விசிஷ்டன்
உபாயம் ஆகிறான் என்று விலஷிதம் என்னில் இது இங்கும் துல்யம் –
இப்படி இருக்க இவளை விசேஷணமாகக் கொள்ளில் சர்வ சக்தித்வ விரோதம் வரும் என்பார்க்கு-
இப்புருஷகார அபேக்ஷையிலும் சர்வ சக்தித்வ விரோதம் பிரசங்கிக்கும் –
யுவாத் வாதவ் துல்யே–ஸ்ரீ குணரத்ன கோசம் -14-என்கிற ஸ்லோகத்தில் சொன்ன குண விபாகத்தின் படியே
பும்ஸத்வ பித்ருத்வ ப்ரஸாஸித் ருத்வாதிகளாலே பிராதபோத்தரானாய்-தண்ட கரனாய் நிற்கிற ஈஸ்வரனைப் பற்ற இழிவார்க்கு
ஸ்த்ரீத்வ மாத்ருத்வாதிகளாலே வந்த மார்த்வ வாத்சல்யாதி குணாதிசயத்தாலே இவள் அவனைப் பற்ற நமக்கு
புருஷகாரம் ஆகையும்
ஈஸ்வர ஸ்வாதந்தர்ய நியதம் என்று சொல்லில் இப்படியே ஸஹ தர்ம சாரிணியான இவளாலே
விசிஷ்டானாய்க் கொண்டு சரண்யன் ஆகையும்
ஈஸ்வர ஸ்வா தந்தர்ய நியதம் என்று கொண்டால் ஒரு பிரமாணத்துக்கும் விரோதம் இல்லை –

இவ்விடத்தில் சரண சப்தம்
உபாயே க்ருஹ ரஷித்ரோ சப்த சரணம் இத்யயம்
வர்த்ததே சாம்ப்ரதம் த்வேஷ உபாயர்த்தைக வாசக –என்று விசேஷிக்கையாலே உபாய பரம் –
பர ந்யாஸ பலாதேவ ஸ்வ யத்ன விநிவ்ருத்தயே
அத்ர உபாயாந்தர ஸ்தானே ரக்ஷகோ விநிவேசித –
சர்வாதிகாரிகளுக்கும் அவ்வோ சாஸ்த்ரங்களாலே ஆராதினான சர்வேஸ்வரன் பல உபாயமாய் இருக்க
இங்கே விசேஷித்து உபாயம் என்ன வேண்டிற்று
உபாயாந்தர ஸ்தானத்திலே சஹஜ காருண்யாதி விசிஷ்டனான ஈஸ்வரனை நிறுத்துகிற
பிரபத்தி பிரகாரம் தோற்றுகைக்காக வாம் அத்தனை –
இங்கு பக்தி யோக ஸ்தானத்தில் பிரபத்தி நில்லா நிற்க ஈஸ்வரன் உபாயாந்தர ஸ்தானத்தில் நிற்கையாவது என் என்னில்
அங்கமாக பிரபத்தியும் பண்ணி உபாயமாக உபாசனமும் அனுஷ்ட்டித்துப் பெற வேண்டும் பலத்தை
அவ்வுபாயம் ஒழியவே பிரபத்தி மாத்திரத்திலே பெறுகைக்கு அடி
ஈஸ்வரனுடைய சஹஜ காருண்யாதி ஸ்வ பாவ விசேஷம் ஆகையால்
அகிஞ்சனனுக்கு ஈஸ்வரன் உபாயாந்தர ஸ்தானத்தில் நின்றான் என்கிறது –

அபிமத பலத்துக்கு உபாயமாக விஹிதமான பரம் சுமக்க மாட்டாத அகிஞ்சனன்
கோப்தாவாய் நிற்கிற அவனை நீ எனக்கு உபாயமாக வேணும் என்று
உபாயாந்தர ஸ்தானத்தில் நிவேசிப்பிக்கை யாவது –
என் தலையில் உபாயாந்தரத்தை சுமத்தாதே -அவற்றைச் சுமந்தால்
மேல் வரும் அபிமதம் எல்லாம் தருகை-சமர்த்த காருணிகனான உனக்கே பரமாக ஏறிட்டுக் கொள்ள வேணும் என்கை –
இவ் வம்சத்தை நிஷ்கர்ஷித்து நிக்ஷேபத்தை அங்கி என்று சொல்லுகிறது -இதுஸ்வ நிரபரத்வ பர்யந்தரம் –
இந்த நிஷ் கர்ஷத்தை நினைத்து -சாம்ப்ரதம் த்வேஷ உபாயர்த்தைக வாசக -என்கிறது –
உபாய பிரார்த்தனையும் நிக்ஷேபத்தையும் ஓரிடத்தில் பிரியச் சொல்லும் இடங்களிலே
உபாய சப்தத்தில் இவ் விவஷிதையைத் தவிருதல்
பர சமர்ப்பணாதிகள் ஸூவ்யக்தங்களாகப் பிரியச் சொல்கிறதாதல் –
இங்கு ஸ்வரூபமும் பரமும் பலமும் சமர்ப்பணீயம் ஆகையால்
அநேகாம்ச விசிஷ்டனான சமர்ப்பணத்தில் அம்சாந்தர பரமாதல் ஆகக் கடவது –
இவை மூன்று பிரகாரத்துக்கும் புநக்ருதி தோஷம் இல்லை –
இவ் உபாயத்வம் ந்யாஸ வித்யைக்கு விசேஷித்து வேத்யாகாரம்-இதுக்கு அபேக்ஷிதமாய்க் கொண்டு
ஞான சக்த்யாதிகள் வருகின்றன –

ப்ரபத்யே -என்கிற இடத்தில்
கதி வாசியான தாது கத்யர்த்தங்கள் புத்த்யர்த்தங்கள் ஆகையால் இங்கு அபேக்ஷித புத்தி
விசேஷத்தைச் சொல்கிறது –
புத்தி யாவது இவ்விடத்தில் -ரஷிப்யதீதி விச்வாஸ என்கிற அத்யாவசயாம் –
அங்கங்களில் சாரமான விசுவாசத்தை முன்னிட்டுக் கொண்டு சபரிகரமான சாத்திய உபாயம்
இங்கே தோற்றுகிறது-எங்கனே என்னில்
இங்கு -பர -என்கிற உப சர்க்கம்
விசுவாசத்தினுடைய பிரகர்ஷ ரூபமான மஹத்தையைக் காட்டும்
இவ் விசுவாச பிரகர்ஷம் ஸ்ரீ மச் சப்தத்திலும் நாராயண சப்தத்திலும் உள்ள
புருஷகார ச பந்த குணாதிகளை அனுசந்தித்தவாறே வரும் –
இத்தாலே தன் அபசார ப்ராசுர்யாதிகள் அடியாக வரும் சங்கைகள் எல்லாம் கழியும் –
இவ் விச்வாஸ தாடர்யம் வேணும் என்னும் இடத்தை
ராக்ஷஸா நாம் அவிஸ் ரம்பாத் ஆஞ்சனேயஸ்ய பந்த நே
யதா விகலித்தா தஸ்ய த்வமோகா அப்யஸ்த்ர பந்த நா
ததா பும்ஸாம விஸ்ரம்பாத் பிரபத்தி ப்ரச்யுதா பவேத்
தஸ்மாத் விஸ்ரம்ப யுக்தா நாம் முக்திம் தாஸ்யதி சாஸிராத் –என்று சொல்லிற்று –

இவ் விவசாயத்தினுடைய பிரபாவம்
வியவசாயாத் ருதே ப்ரஹ்ம நாசா தாயாதி தத் பரம் –நிஸ் சம்சயேஷூ சர்வே ஷூ நித்யம் வசதி வை ஹரி
ச சம்சயான் ஹேது பலான் நான்யா வசதி மாதவ -இத்யாதிகளிலும் பிரசித்தம் –
இம் மஹா விசுவாசம் யுண்டானால் பின்பு விமர்ச காலத்தில் ஒரு காலும் சம்சயம் பிறவாது -ஆகையால் பின்பு ஒரு காலும்
இவ்விஷயத்தில் சம்சயம் பிறவாத படியான பிரதம க்ஷணத்தில் மஹா விசுவாசம் பிரபத்திக்கு அங்கம்
இது மந்தமாய் இருந்தாலும் விசேஷித்துக் கடாக்ஷிக்கத் தொடங்கின ஈஸ்வரன் சேஷ பூரணம் பண்ணும்
மித்ர பாவேந ஸம்ப்ராப்தம் நத்யஜேயம் கதஞ்சன -என்று சரண்யன் அருளிச் செய்தான் இறே
அஞ்சலியாதிகளும் அகப்பட நஜாது ஹீயதே -என்னும் படி இறே இருப்பது –
ஆகையால் மந்த விசுவாசமும் மஹா விச்வாஸ பர்யந்தமாம் –

இப்படி உபாயமாக அத்யவசிக்கிறேன் என்று மஹா விசுவாசத்தைச் சொல்ல –
அநந்ய சாத்தியே ஸ்வா பீஷ்டே மஹா விச்வாஸ பூர்வகம்
ததே ஏக உபாயதா யாச்சா பிரபத்தி சரணாகதி -என்றும்
த்வமேவ உபாய பூதோ மே பவதி பிரார்த்தனா மதி சரணாகதி –இத்யுக்தா –பவ சரணம் –இத்யாதி
பிராமண அனுசாரத்தாலே உபாய பிரார்த்தனையும் இங்கே சொல்லிற்று ஆயிற்று –
இவ் உபாய பிரார்த்தனையில் கோப்த்ருத்வ வரணம் அந்தர்கதம்-ப்ருதக்பூதம் அன்று
இஷ்ட பிராப்தி அநிஷ்ட நிவ்ருத்தி ரூபமான பலத்தினுடைய பிரார்த்தனையை உத்தர கண்டத்தில் பண்ணா நிற்க
இங்கும் பல பிரார்த்தனையைப் பண்ணினால் புநருக்தி யுண்டாம் –
பிரபத்திக்கு பலமாக பக்தி ரூப உபாயத்தை பிரார்த்திக்குமா போலே
ஸ்வ தந்த்ர பிரபத்தி நிஷ்டனுக்கு இங்கு சாத்யமாய் பிரார்த்த நீயமாய் இருபத்தொரு உபாயம் இல்லை –

ஆன பின்பு இங்கும் பிரார்த்தனையைச் சொல்லுகிறபடி என் என்னில் –
பல பிரதானம் பண்ணுகிற இடம் சர்வாதிகாரி விஷயத்திலும் பொதுவாய் இருக்க
அகிஞ்சனனாய் சர்வ பர ந்யாஸம் பண்ணுகிறவன் பக்கல் பிரபத்தி வேறோர் உபாயத்துக்கு
அங்கமாக நில்லாத படி சரண்யன் தான்
உபாயாந்தர ஸ்தானத்தில் நின்று பலம் கொடுக்கிற அம்சம் ஏற்றமான படியால்
அவ்வேற்றமான பர ஸ்வீகார அம்சம் இங்குப் பிரார்த்திக்கப் படுகிறது –
ஆனால் இப்படி உபாயமாய் நிற்க வேணும் என்று அபேக்ஷிக்கவே அபிமத பல விசேஷத்தை
உபாயாந்தர வியவதானம் அறத் தர வேணும் என்று
பிரார்த்தித்தது ஆகாதோ -ஆகையால் -உத்தர கண்டத்தில் பிரார்த்தனை மிகுதி அன்றோ என்னில்
உக்த ப்ரகாரத்தாலே பிரார்த்தனா விஷயத்தில் அம்ச பேதம் தோற்றுகைக்காக
பிரிய அபேக்ஷிக்கிறது ஆகையால் மிகுதி இல்லை –
உத்தர கண்டத்தில் அபேக்ஷணீய பல விசேஷ வியஞ்சகமான
வாக்யத்தினுடைய அன்வய மாத்திரத்துக்காக பிரார்த்தனா பதம் அத்யாஹரித்தாலும்
பல ஸ்வரூப மாத்திரத்தில் தாத்பர்யம் என்று பரிஹாரம் ஆகவுமாம் –

பூர்வ உத்தர கண்டங்கள் இரண்டுக்கும் திரண்ட பொருள் நிஷ்கர்ஷிக்கும் இடத்தில்
அகிஞ்சனான எனக்கு நீ உபாயாந்தர
ஸ்தானத்தில் நின்று பல விசேஷத்தைத் தருகைக்காக யதோக்தமான
ஆத்மரஷா பர நிஷேபம் பண்ணுகிறேன் என்று ஒரு விசிஷ்டா பிரார்த்தன அன்வித பர சமர்ப்பணமாம் –
இஸ் சமர்ப்பணமும் அத்யாவசிய சப்தார்த்தமாம்
இப்படி சபரிகரமான பர சமர்ப்பணமே பிரபத்தி சாஸ்த்ரார்த்தம் என்னும் இடம்
பிராமண ஸம்ப்ரதாயங்களாலே பல இடத்திலும் சமர்த்தித்தோம்
அநே நைவ து மந்த்ரேண ஸ்வாத்மாநம் மயி நிஷிபேத்-மயி நி ஷிப்த கர்தவ்ய க்ருதக்ருத்யோ பவிஷ்யதி என்று
பிரபத்தி மந்த்ராந்தரத்தில் சொன்ன கர்தவ்ய நிஷேப ப்ராதான்யம் இங்கும் துல்யம் –
மோக்ஷ பிரதமான சித்த உபாயத்துக்கு முமுஷுவின் பக்கலிலே உள்ளதொரு சாஸ்த்ரீயமான சாத்திய வியாஜம்
வசீகரணம் என்னும் இடம் தன்னைக் கர்த்தாவாகக் காட்டுகிற உத்தமனாலே சித்தம்

இதில் ஒவ்சித்யத்தாலே –
புகல் ஒன்றில்லா அடியேன் –
அஹம் அஸ்மி அபராதா நாம் ஆலயோ அகிஞ்சனோ அகதி –
ந தர்மநிஷ் டோஸ்மி ந சாத்மவேதீ-இத்யாதிகளில் படியே
அதிகாரி விசேஷமும் கார்ப்பண்யம் ஆகிற பரிகரமும் ஸூசிதம்

இது கத்யத்தில்
அநந்ய சரண -என்கிற பாதத்திலும் –
சிறு கத்யத்தில் -ஸ்வாத்ம நித்ய நியாமிய -என்கிற சூர்ணிகையிலும்
ஸ்ரீ வைகுண்ட கத்யத்தில் -தத் ப்ராப்தயே ச தத் பாதாம் புஜ த்வய பிரபத்தேர் அந்யன்ன மே கல்ப கோடி
ஸஹஸ்ரேணாபி சாத நமஸ் தீதி மன் வான -என்கிற சூர்ணிகையிலும் பிரபஞ்சிதமாயிற்று –

அருளாள பெருமாள் எம்பெருமானாரும் -ஸ்வா பீஷ்டே பர சம் பந்தே ஸ்வா சக்தத்யா ஹீன சாதன
தத் ப்ராப்த்யுபாயம் க்ருத்வா விச்வாஸ பூர்வகம் -என்று அருளிச் செய்தார்

இப்படி அகிஞ்சன அதிகாரமாய் பர சமர்ப்பண ரூபமான உபாயத்தைச் சொல்லுகையாலே
சரா சராணி பூதாநி சர்வாணி பகவத் வபு
அதஸ் ததாநுகூல்யம் மே கார்யமித்யேவ நிச்சய –என்றும்
ஸ்வஸ்ய ஸ்வாமிநி வ்ருத்திர்யா பிராதி கூலஸ்ய வர்ஜனம் -என்றும் இத்யாதி பிரமாணங்களின் படியே
ஸ்வாமித்வாதி நிபந்தங்களைச் சொல்லுகிற ச விசேஷணமான நாராயண சப்தத்தில்
ஆனு கூல்ய சங்கல்பமும் பிராதி கூல்ய வர்ஜனமும் ஸூசிதம் என்னும் இடம் முன்பே சொன்னோம்
இப் பரிகரங்களும் உபாயார்த்தமாக ஸக்ருத் கர்தவ்யங்கள் என்னும் இடம்
அதிகாராந்தரத்திலே -பரிகர விபாக -அதிகாரத்தில் -சொன்னோம் –

ப்ரபத்யே -என்கிற க்ரியா பதத்தில்
வர்த்தமான வியபதேசம் பர்ஹிர்வநாதி மந்திரங்களில் போலே அனுஷ்டான கால அபிப்ராயம் –
இங்கன் அன்றிக்கே இவ் வர்த்தமான வியபதேசம் வர்த்தமான தேஹ அவதியாய் பிரபத்ய அனுஷ்டா
பலம் வரும் அளவும் பிரபத்தி பரிகரமான விச்வாஸ அனுவ்ருத்தியை விவஷிக்கிறது என்றும் -பிரபத்தி காலத்தில் தான்
சங்கல்ப்பித்த படியே ஆனுகூல்யாதிகள் பிரபத்தி பரிகரமாகவே மேல் அனுவர்த்திக்க வேண்டும் படியை காட்டுகிறது
என்றும் சொல்லும் பக்ஷங்கள்
இவ் உபாயம் ச பரிகரமாக ஸக்ருத் கர்தவ்யம் என்று காட்டுகிற பிரமாணங்களோடு விரோதிக்கும்
த்வரை அதிசயத்தாலும் போக ரூபதையாலும் வரும் ஆவ்ருத்திக்கும் பூர்வ கண்டத்தில் சொன்ன படியே
அனுஷ்டிதமான உபாய சரீரத்தில் பிரவேசம் இல்லை
ஆகையால் இவ் உபாய வாக்கியத்தில் வர்த்தமான வியபதேசம் –
த்வயம் அர்த்தாநுசந்தேநேன ஸஹ சதைவம் வக்தா -என்கிற
ராக ப்ராப்த போக ரூப அநு விருத்தியை விவஷிக்கிறதும் அன்று –

இப்படி சர்வ சரண்யத்வமும் -சரணாகதி ஸ்வரூபமும் -இதில் பரிகரங்களும் -அதிகாரி விசேஷமும் –
பூர்வ கண்டத்தில் பிரகாசமாயிற்று -இத்தாலே அநந்ய உபாயத்வம் சித்தித்தது —

இப்படி தோற்றின சரணாகதி –
தாவ தார்த்திஸ் ததா வாஞ்சா தாவன் மோஹஸ் ததா அஸூகம் ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-9-73—இத்யாதிகளில் படியே
சகல பல சாதனம் ஆகையாலும் –
தத் அந்நிய கோ மஹோதார -என்கிறபடியே பரம உதாரரான சரண்யன் -அர்த்திதார்த்த பரிதான தீஷிதனாய்
கொள்ளக் குறைவிலன் வேண்டிற்று எல்லாம் தரும்-என்னும் படி நிற்கையாலும்
இங்கு என்ன பலத்துக்காக பிரபத்தி பண்ணுகிறது என்கிற அபேக்ஷையில்
மஹா உதாரனான சரண்யனுக்கும் சர்வ உத்க்ருஷ்ட விஷயமான
இவ் வசீகரண விசேஷத்துக்கும் சேஷதைக ரசனான தன் ஸ்வரூபத்துக்கும் அநு ரூபமான பல விசேஷத்தை உத்தர கண்டம்
தனக்கே யாக என்னைக் கொள்ளுமீதே-என்கிறபடியே
ஸமஸ்த விரோதி நிவ்ருத்தி பர்யந்தமாக பிரார்த்திக்கிறது –
இத்தாலே அநந்ய ப்ரயோஜனத்வம் சித்திக்கிறது –

இவ்விடத்தில் ச விசேஷணமான நாராயண சப்தம்
ப்ராப்யதைக்கு அநு ரூபமான ஸ்வாமி த்வாதிகளும் அநந்த குண விபூதி விசிஷ்டனான
ஸ்வாமியினுடைய சர்வ பிரகார நிரதிசய போக்யத்தையும் ஆகிற ஆகாரங்களை
யதா பிரமாணம் ப்ராதன்யேன காட்டுகிறது –

இப்படி உபய விபூதி விசிஷ்டம் ப்ராப்யமாய் இருக்கச் செய்தேயும்
ஆத்ம ஹவிருத்தேச்ய ரூபமாய் -சேஷத்வ பிரதி சம்பந்திகளுமாய் அது அடியாக வருகிற
கைங்கர்யத்துக்கும் இலக்காகக் கொண்டு பிரதான ப்ராப்யருமாய் இருப்பார்
இவ் விசிஷ்ட தம்பதிகள் என்று தோற்றுகைக்காக இங்கு ஸ்ரீ மச் சப்தம்
இவ்வர்த்தம் –
வைகுண்ட து பரே லோகே ஸ்ரீ யா சார்தம் ஜகத் பதி –தயா சஹாஸீ நம் அநந்த போகி நீ –
ஆத்ம அநு ரூபயா ஸ்ரீ யா சஹாஸீநம் —
ஒண் டொடியாள் திருமகளும் நீயுமே நிலா நிற்ப –
கோலத் திரு மா மகளோடு உன்னை -இத்யாதிகளிலும் விலஷிதம் —

இங்குற்ற ஸ்ரீ சப்தம் —
ஸ்ருணாதி நிகிலான் தோஷான் ஸ்ரீ ணாதி ச குணைர் ஜகத் –
ஸ்ரீ யதே ச அகிலைர் நித்யம் ச்ரயதே ச பரம் பதம் -என்றும் –இத்யாதிகளில் படியே
அநேக அர்த்தங்கள் உண்டே யாகிலும் ஸ்ரீஞ்சேவாயாம் -என்கிற தாதுவிலே
சேவ்யத்வாதிகளைச் சொல்லிக் கொண்டு கைங்கர்ய பிரதிசம்பந்தித்வ பரம் –
ஸ்ரீ மதே என்கிற சப்தம் தன்னாலே
விசிஷ்டமான பிரதி சம்பந்தி தோற்றிற்றே ஆகிலும் சர்வவித கைங்கர்யத்துக்கும் ப்ரயோஜனமான ப்ரீதி
விசேஷத்தைப் பிறப்பிக்கும் சம்பந்த குண விபூத்யாதி பரிபூர்ண அனுபவ சித்திக்காக
இங்கு நாராயண சப்தம் ப்ரயுக்தமாகிறது –

ஆய -இங்கு சதுர்த்தீ
தாத்பர்ய முகத்தாலே கைங்கர்யத்தை கணிசிக்கிறது –
தாதர்த்யம் மாத்ரம் நித்யம் ஆகையால் -தத் சேஷத்வ அநு சந்தான பூர்வ
தச் சேஷ வ்ருத்திக -என்றும் –
அஹம் சர்வம் கரிஷ்யாமி -என்றும் இத்யாதிகளில் படியே
இங்கு பரிபூர்ண அனுபவ பூர்வகமான கைங்கர்யம் பிரார்த்த நீயம்-
சரணாகதனாம் போது சரண்யனை அபிமத பிரார்த்தனை பண்ணுகிறான்
ஆகையால் இங்கே பவேயம் என்று ஒரு பதம் அத்யாஹார்யம்
இப்படி ப்ராதான்யத்தாலே முற்பட இஷ்ட பிராப்தியை அபேக்ஷித்து
இதுக்காக அனந்தரம் நமஸ் ஸாலே அநிஷ்ட நிவ்ருத்தியையும் பிரார்த்திக்கிறது –
அப்ராப்தித பரிஹரன் ஸ்வ பரை ஸ்வ ரஷாம்
தாதார்த்யதீ பரிஹ்ருத ஸ்வ பரார்த்த பாவ
அந்யோ ப போக விரஹா தநக பிரபன்னோ
புங்க்தே ஸ்வ போக மகிலம் பதி போக சேஷம் —

இந்த நமஸ் ஸூ க்கும்
க்ரியா பதம் அத்யாஹரித்துக் கொள்ள வேணும் –
ந மம ஸ்யாம் என்றது -எனக்காவேன் அல்லேன் என்றபடி
ந மம கிஞ்சித் -என்று சர்வ விஷய மமகார நிவ்ருத்தி முகத்தாலே சர்வ அநிஷ்ட நிவ்ருத்தியை பிரார்த்திக்கிறது ஆகவுமாம்
திரு மந்திரத்தில் இஷ்ட பிராப்தி அநிஷ்ட நிவ்ருத்தி சொன்ன சோத்ய பரிஹாரங்கள் இங்கும் அனுசந்தித்துக் கொள்வது –
இந்த நமஸ் சப்தத்தால் அவித்யா கர்ம ததுபய வாஸனா ருசி ப்ரக்ருதி சம்பந்தாதி ரூபங்களான
சர்வ விரோதிகளையும் கழியா நிற்கச் செய்தேயும்
இதுக்கு நிர்வசனம் பண்ணுகிற ஸ்ருதியின் படியே பரிபூர்ண கைங்கர்ய ரூப பல தசையில் பலாந்தர அனுபவ ந்யாயத்தாலே
சங்கிதமான ஸ்வாதீன ஸ்வார்த்த கர்த்ருத்வம் -ஸ்வாதீன ஸ்வார்த்த போக்த்ருத்வம் ஆகிற களைகளைக் கழிக்கையாலே
இங்கு பிரதான தாத்பர்யம் என்று அனுசந்திப்பார்கள்
இத்தால் பலாந்தர அனுபவ தசையில் யுண்டாம் ஸ்வாதீன ஸ்வார்த்த கர்த்ருத்வ போக்த்ருத்வ பிரமங்கள்
முக்த தசையில் கைங்கர்யத்தில் இல்லாத படி கண்டு அக் கட்டளையிலே பிரார்த்திக்கிறான் என்றதாயிற்று –

பரமாத்மனி நாராயணாம் சர்வ பார சமர்ப்பணாத்
சம்ஜாதாம் நைர பேஷ்யம் து நம இத்யுச்யதே புதை -என்று
இங்குத்தை நமஸ்ஸை அருளாள பெருமாள் எம்பெருமானார் வியாக்யானம் பண்ணினார் –
இந்த ஸ்லோகத்தில் சொன்ன நைர பேஷ்யம்
ஸ்வ ரக்ஷணத்தில் நிர்பரத்வம்-இந்த நிர்பரத்வத்தாலே பர சமர்ப்பணம் ஸூசிதமாதல்
ஸ்வ நிர்பரத்வ பர்யந்தமான பர சமர்ப்பணம் இவ்விடத்தில் விவஷிதமாதல் ஆகக் கடவது –
ஹவி சமர்ப்பணத்தில் -இதம் இந்த்ராயா ந மம-என்னுமா போலே
அஹம் ஸ்ரீ மதே நாராயணாய என்று இங்கு பரகர்ப்பமாக சமர்ப்பித்து
ந மம என்று தன்னுடனே துவக்கு அறுக்கிறது என்றால் இஸ் சமர்ப்பண யோஜனைக்கு ஸ்வ ரசம் –
இந்த யோஜனையில்
பூர்வ கண்டம் அங்க பஞ்சக பரம் –
உத்தர கண்டம் அங்கி ப்ரதிபாதகம் –
அஹமத் ஏவ மாயா சமர்ப்பிதா-என்கிறபடியே இவ்விடத்தில் நான் ஸ்ரீ மானான நாராயணனுக்கு என்று சமர்ப்பிக்க
யத் சமரஷ்யத்தயா அர்ப்பயதே –தவை வாஸ்மி ஹி பர -இத்யாதிகளில் படியே ஸ்வ ரக்ஷண பரமும்-
ஸ்வ ரக்ஷண பலமும் அவனது என்று இங்கே அபி பிரேதமாகவுமாம் –

நம -என்கிற இத்தால்
ஆத்ம ஆத்மீயங்களோடும் -ஸ்வ ரக்ஷண -தத் பலங்களோடும் தனக்கு துவக்கு அற்றமை காட்டுகிறது –
பர சம்பந்த விதியிலும்-ஸ்வ சம்பந்த நிஷேதத்திலும் தாத்பர்யம் ஆகையால்
இச் சதுர்த்தீ நமஸ் ஸூ க்கள் இரண்டுக்கும் பலமுண்டு
இஸ் சமர்ப்பணம் தன்னிலும் பர நிரபேஷ கர்த்ருத்வாதிகளை நிஷேதிக்கைக்காக -நம -என்கிறது ஆகவுமாம் –
ஸ்தூல ப்ரக்ரியைக் கொண்டாலும் -நமாமி -என்கிற பதத்தை ஆத்ம சமர்ப்பணார்த்தம் என்று
வியாக்யானம் பண்ணின பாத ஸ்தோத்ர ப்ரக்ரியையாலே
இந்த நம சப்தம் சமர்ப்பண பொருளுக்கு சங்கதம் –
இப்படி உத்தர கண்டத்தை ஆத்ம சமர்ப்பண பரமாக அனுசந்திப்பார்க்கு –
இதுக்கு அநு ரூபமாய் ஸ்வரூப அநு பந்தியான பல விசேஷம் இங்கே ஸ்வத பிராப்தம்
பூர்வ யுக்தமான படியே பல பரமாக உத்தர கண்டத்தை அனுசந்திப்பார்க்கு இவ் வாத்ம ரஷா –

இப்படி த்வயத்தில் பதங்களில் அடைவே சப்த அர்த்த ஸ்வ பாவங்களால் –
புருஷகார யோகமும்
அதின் நித்யத்வமும்
உபாய வைசிஷ்ட்யமும்
சரண்ய குண பூர்ணத்வமும்
சம்பந்த விசேஷமும்
திவ்ய மங்கள விக்ரஹ யோகமும்
அதில் சேஷ பூதன் இழியும் துறை யும்
அதின் உபாயத்வ பிரகாரமும்
வசீகரண விசேஷமும்
தத் பரிகரங்களும்
அதிகாரி விசேஷமும்
ப்ராப்ய வைசிஷ்ட்யமும்
குண விபூதி விசிஷ்ட ப்ராப்யத்வமும்
கைங்கர்ய பிரதிசம்பதித்வமும்
கைங்கர்ய பிரார்த்தனையும்
சர்வ விதி கைங்கர்ய லாபமும்
சர்வ அநிஷ்ட நிவ்ருத்தியும்
அதனுடைய ஆத்யந்த்திக்கத்வமும்
பராதீன பரார்த்த கர்த்ருத்வமும்
ததாவித போக்த்ருத்வமும் —
என்று இவை பிரதானமாய் இவற்றுக்கு அபேக்ஷிதங்களும் எல்லாம்
சித்த சாத்திய விபாகவத்தான உபாயம் என்றும் உபேயம் என்றும்
இரண்டு பிரதான ப்ரதிபாத்யங்களோடே துவக்குண்டு ப்ரகாசித்தங்கள் ஆயிற்று –

இப்படி சாரீரிக சாஸ்திரத்தில் போலவே
தத்வ விசேஷமும்
உபாய விசேஷமும்
பல விசேஷமும்
இம் மந்த்ரத்திலே ப்ரதிபாதிதம் ஆனாலும் -இது ஸ்வேதாஸ்வர மந்த்ரம் போலே
பல அபேக்ஷ பூர்வகமான உபாய அனுஷ்டான பிரதானம் ஆகையால்
உபாய பலங்களுடைய உத்பத்தி க்ரமத்தோடே சேர்ந்த பாட க்ரமத்தாலே பல ப்ரதிபாதக வாக்கியம் பிற்பட்டாலும்
அர்த்த க்ரமத்தாலே இது முற்பட அனுசந்தேயம் என்று பூர்வர்கள் அருளிச் செய்வார்கள்
புருஷன் புருஷார்த்தத்தை விமர்சித்துக் கொண்டு அன்றி உபாய விமர்சமும் உபாய அனுஷ்டானமும் பண்ணான் இறே
இப்படி திரு மந்த்ரத்திலும் உபாய பல ப்ரதிபாதக அம்சங்களில் க்ரம பிரகாரங்களைக் கண்டு கொள்வது
பலார்த்தியாய் அதிகாரி யானால் இறே இவனுக்கு இவ் உபாய அனுஷ்டானம் வருவது –
த்வயேன சரணம் வ்ரஜேத்–த்வயார்த்த சரணாகதி –என்கிற அபியுக்தர் பாசுரங்களாலும்
த்வயம் உபாய அனுஷ்டானத்தை பிரதானமாக பிரகாசிக்கிறது –

இங்கு பூர்வ கண்டமும் -சதுர்த்யந்த பதங்களும்-நமஸ் ஸூ மாக -மூன்று அவாந்தர வாக்கியங்கள் ஆனாலும்
திரள உபாய பிரதானமான ஒரே வாக்யமாகத் தலைக் கட்டக் கடவது -எங்கனே என்னில் –
சர்வ ஸ்வாமியாய் –
சர்வ பிரகார -நிரதிசய போக்யனாய்
பெரிய பிராட்டியாரோடு பிரிவில்லாத நாராயணன் திருவடிகளில்
ஸ்வரூப பிராப்தமான -சர்வ தேச சர்வ கால சர்வ அவஸ்தோசித சர்வ வித கைங்கர்யத்துக்கும்
விரோதியான சர்வமும் கழிந்து பரிபூர்ண கைங்கர்யம் பெறுகைக்கு
அகிஞ்சனான அடியேன்
ஸ்வ ரக்ஷண பராதிகளில் எனக்கு அந்வயம் யறும் படி
ஸ்ரீ மானான நாராயணன் திருவடிகளிலே
அங்க பஞ்சக சம்பந்தமான ஆத்ம ரஷா பர சமர்ப்பணம் பண்ணுகிறேன் என்று த்வயத்தின் திரண்ட பொருள் –

வைராக்ய விஜித ஸ்வாந்தை ப்ரபத்தி விஜி தேச்வரை
அநுக் ரோசைக விஜிதை இத்யுபாதேசி தேசிகை

இதமஷ்ட பதம் வ்யாஸே சமாஸே ஷட்பதம் விது
வாக்யம் பஞ்ச பதைர் யுக்தம் இத்யாக்யாத பிரதாநகம்

ஏகம் த்வயம் த்ரய வயம் ஸூக லப்ய துர்யம்
வ்யக்த அர்த்த பஞ்சகம் உபாத்த ஷடங்க யோகம்
சப்தார்ண வீ மஹிமவத் விவ்ருத அஷ்ட வர்ண
ரங்கே சதாமிஹ ரசம் நவமம் ப்ரஸூத –

ஓதும் இரண்டை இசைத்து அருளால் உதவும் திருமால்
பாதம் இரண்டும் சரண் எனப் பற்றி நம் பங்கயத்தாள்
நாதனை நண்ணி நலம் திகழ் நாட்டில் அடிமை எல்லாம்
கோதில் உணர்த்தி யுடன் கொள்ளுமாறு குறித்தனமே –

————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஆய கலைகள் -64-

January 17, 2017

ஆய கலைகள் -64-
1-கீதம்
2-வாத்யம்
3- ந்ருத்தம்
4-நாட்டியம் -நடித்து காட்டி
5-ஆலேக்யம் -ஓவியம் வரைதல்
6-விசேஷக சேத்யம்-உடலில் வரைதல்
7-தண்டூல -அரிசியில் எழுதுவது -புஷ்ப்பதுக்குள் எழுதுவது –
8-புஷபாதசரணம் மலர் படுக்கை
9-தசை நவ தான அங்க ராக -பல் வைத்தியம்
10-மணி பூமிகா கர்மா -தங்கத்தில் கல் பதிப்பதற்கு முன்னே தயார் பண்ணுவது
11-சயன ரஸனம்-படுக்கை அலங்காரம்
13-உதக சாதகம் -நீர் கண் காட்டி -வித விதமாக நீர் நாட்டியம்
14-சித்ரா யோகம் -வண்ணக் கோலங்கள் அமைத்தல்
15-மால்ய -கசனை விகல்பம் –வித வித -மாலை அலங்காரம்
16-சேகரா பீட -யோஜனம் -தலை அலங்காரம்
17-நேகா பத்ய யோக -ஒப்பனை
18-கர்ண பத்ர பங்கா -காது அலங்காரம்
19-கந்த யுக்தி -வாசனை த்ரவ்யங்கள் கொண்டு உடம்பில் வியாதி போக்க
20-பூதனை யோஜனம் -ஆபரணங்கள் சாத்தி அலங்காரம்
21-ஐந்தர ஜாலம் –
22-கௌதுமாரா யோகா -இளமை ஆக்கும் கலை
23-ஹஸ்த லாகவம்–கை மணிக்கட்டு தனியாக விரல்கள் தனியாக -அசையும்
24-பஹு வித பாஷா அன்னங்கள்
25-வித பான ரஸ
26-சித்ரா அபூர்வராக அவச யோ- தையல் கலைகள்
27-சூத்ர கிரீடா
28-ப்ரெகாளிகா -விடுகதை
29-வீணா -வீணை உடுக்கை
30-துர் வசன -யோகா -பதில் பேச முடியாமல்
31-புத்தக வசனம் -ஒரே தடவை படித்து கிரஹித்தல்
32-நாட்டிகா காயிகா தர்சனம் -நையாண்டி செய்தல்
33-காவ்யா சமுஷ்ட்ய ஆபூர்ணயம் -புரியாத புதிர்களுக்கு விடை -குறுக்கு எழுத்து -சொடுகு
34-பட்டிகா நேத்ர வான விகல்ப்பாயா -கேடயம் -போன்ற வற்றை செய்யும் கலை
35-தக்ஷணம் -மர வேலை
36-தற்பு கர்மாணி -தறி நெசவு செய்தல் -உண்டை பாவு
37-வாக்சு வித்யா -கட்டிட கலை
38-ரூப்பிய ரத்ன பரிஷியா -தங்கம் வெள்ளி காரட் சுத்தம் பார்க்கும் கலை
39-தாது வாதாக -உலோக இயல் –
40-மணி ராக ஞானம் -தங்கத்தில் பாதிக்கும் கலை
41-ஆகர ஞானம் -சுரங்கம் பற்றிய ஞானம் -நீர் உள்ள இடம் -எண்ணெய் உள்ள இடம் -தங்கம் உள்ள இடம்
42-விருக்ஷ ஆயுர்வேத யோகம் நாட்டு சித்த மருத்துவம் மூலிகை
43-மேசா குக்குட லாகவே யுத்த விதிகி -ஆடு கொக்கு கோழி பறவை சண்டைக்கு பழக்குவது –
44-சுக சாரிகா பிரதானம்– பறவைகள் விலங்கு பாஷை புரிந்து கொள்ளும் கலை
45-உத்தாதனனம் -வாசனை த்ரவ்யங்களை பூசிக் கொள்ளும் கலை
46-கேச மார்ஜன கௌதலாம் — தலை வாரி அலங்காரம்
47-வேஷ்ட்டித்தா விகல்பக -வெளி நாட்டு உணவு செய்யும் கலை
48-தேச பாஷா ஞானம் -அனைத்து மொழிகளும் அறிந்து பேசும் கலை
49- புஷப ச கடிகா நிமித்த ஞானம் -ஸூ ப சகுனங்கள் அறியும் கலை
50-யந்த்ர மாத்ருதாகா -இயந்திர இயல் –
51-தாரண மாத்ருதாக -காப்பு இந்த்ரம் -அணிந்து -வைக்கும் கலை
52-சம்பாத்யம் -பேச்சு திறன்
53-மானஸீ காவ்யா க்ரியா -கவி சொல்லும் திறமை -ஆசு கவி
54-க்ரியா விகல்ப்பா-வேலைக்காரர்களை கொண்டு வேலை வாங்கும் திறன்
55-ஸரீதக யோகாகா -ஜலத்தின் நடுவில் பாலம் வீடு கட்டுதல் -அணை போல்வன –
56-அபிதான கோச சந்தோஷ ஞானம் -கவி விதங்களை –
57-அந்தாதி வெண்பா பாசுரங்கள் விருத்தங்கள்
58-வஸ்திர கோபனானி-வஸ்திரங்கள் பாலனங்கள்-கைக்கு அடக்கம் -மடித்து
59-தூதம் -தாயக்கடம்
60-ஆகர்ஷ கிரீடா -சதுரங்கம்
61-பால கிரீட கானி-மரப்பாச்சி பொம்மை போல்வன
62-வைநாயகி வித்யா– ஒழுக்கம் கற்றுக் கொடுக்கும் கலை -அனுஷ்டானம் செய்து காட்டி பழக்கம்
63-வைத்தியகி வித்யா –விளையாட்டில் வெற்றி அடையும் கலை -எல்லா விளையாட்டுக்களிலும் –
64-சுப்ரபாதம் பாடி கைங்கர்யம் செய்யும் கலை

——————————————————————

கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –