Archive for December, 2016

திருப்பாவை -மார்கழி திங்கள் -ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் வியாக்யானம் – ஆறாயிரப்படி –

December 31, 2016

ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் (மார்கழி அவிட்டம்)
த்ராவிடாம்நாய ஹ்ருதயம் குருபர்வக்ரமாகதம் |
ரம்யஜாமாத்ருதேவேந தர்சிதம் க்ருஷ்ணஸூநுநா ||

குரு பரம்பரா கதமான த்ராவிட வேதம் ஸ்ரீ திருவாய்மொழியின் பொருளை நமக்கு நன்கு உரைத்தருளியவர்
ஸ்ரீ கிருஷ்ணர் எனும் ஸ்ரீ வடக்குத் திருவீதி பிள்ளையின் குமாரர் ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார்.

————-

மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்
சீர்மல்கு ஆய்ப்பாடி செல்வச் சிறுமீர்காள்
கூர் வேல் கொடும் தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ் சிங்கம்
கார்மேனிச் செங்கண் கதிர் மதியம் போல் முகத்தான்
நாராயணனே நமக்கே பறை தருவான்
பாரோர் புகழப் படிந்தேலோர எம்பாவாய்-1-

பதவுரை

சீர் மல்கும்–செல்வம் நிறைந்துள்ள
ஆய்ப்பாடி–திருவாய்ப்பாடியில்
செல்வம் சிறுமீர்காள்–கைங்கர்ய ஸம்பத்தையும் இளம் பருவத்தையுமுடைய பெண்காள் !
நேர் இழையீர்–விலக்ஷணமான பூஷணங்களை அணிந்துள்ளவர்களே !
மார்கழி திங்கள்–(மாதங்களிற் சிறந்த) மார்கழி மாஸமும்
மதி நிறைந்த நல் நாள்–பூர்ண சந்திரோதயத்தை யுடைய (சுக்கில பக்ஷத்திய) நல்ல நாளும் (நமக்கு வாய்த்திரா நின்றன.)
கூர் வேல்–கூர்மை பொருந்திய வேலாயுதத்தை யுடையவனும்
கொடு தொழிலன்–(கண்ண பிரானுக்குத் தீங்கு செய்யவரும் க்ஷுத்ர ஜந்துக்கள் பக்கலிலுஞ் சீறிக் கொடுமைத் தொழிலைப் புரியுமவனுமான
நந்தகோபன்–நந்தகோபனுக்கு
குமரன்–பிள்ளையாய்ப் பிறந்தவனும்,
ஏர் ஆர்ந்த கண்ணி–அழகு நிறைந்த கண்களை யுடையளான
அசோதை-யசோதைப் பிராட்டிக்கு
இள சிங்கம்–சிங்கக் குட்டி போலிருப்பவனும்,
கார் மேனி–காளமேகத்தோடொத்த திருமேனியையும்
செம் கண்–செந்தாமரைப் பூப்போன்ற திருக் கண்களையும்
கதிர் மதியம் போல் முகத்தான்–ஸூர்யனையும் சந்திரனையும் போன்ற திரு முகத்தையுமுடையனுமான
நாராயணணே–ஸ்ரீமந் நாராயணன் தானே
நமக்கே-(‘அவனால் பேறு’ என்றிருக்கிற) நமக்கே
பறை–பறையை
தருவான்–கொடுக்குமவனாயிற் நின்றான்,
ஆல்–ஆதலால்,
பாரோர்-இவ் வுலகத்தவர்கள்
புகழ-கொண்டாடும்படி
படிந்து–(இந் நோன்பிலே)ஊன்றி
நீர் ஆட போதுவீர்–நீராட வர விருப்பமுடையீர்களே !
போதுமின்–வாருங்கள்
ஏல் ஓர் எம்பாவாய் !.-

மார்கழித் திங்கள்
ஓழிவில் காலம் எல்லாம் -என்றும்
அநாதிர் பகவான் கால -என்றும் சொல்லுகிறபடியே
பகவத் விஷயத்தில் இவனுக்கு ஆபிமுக்யம் பிறந்தால்
பின்னை அவன் தன்னை அல்ல காணும் கொண்டாட அடுத்து –
அக் காலத்தை யாய்த்து-

சைத்ர ஸ்ரீ மான் அயம் மாச -என்று ஒரு ஸம்ருத்தியைப் பார்த்து கொண்டாடிற்று இறே
சைத்ர-
அல்லாரில் காட்டில் பெருமாளுக்கு உள்ள பிராதான்யம் போலே
மாசங்களுக்கு எல்லா வற்றுக்கும் முதலான மாசம்-

ஸ்ரீ மான் —
அவர் எல்லாருக்கும் ராஜாவாக பிராப்தர் ஆனாப் போலே
சைத்ர மாசம் சர்வருக்கும் ஸுகககரம் ஆகையாலே மாசங்களுக்கு எல்லாம் ராஜா என்கிறது

அயம் மாச –
அபிஷேக மனோரத சமயத்திலே சந்நிஹிதமான தன்னேற்றம் அங்கு

சேஷியை சேஷ பூதர் லபிக்கைக்கு கொண்டாடுகிற கொண்டாட்டம் இங்கு-
சேஷி பூதரை சேஷி லபிக்கைக்கு கொண்டாடுகிற கொண்டாட்டம்-

புண்ய புஷ்பிதகாநந-
பாவநஸ்சர்வ லோகாநாம்த்வமேவ -என்றும்
பும்ஸாம் திருஷ்டி சித்தாபஹாரிண்ம் -என்றும்-
அவருக்கு இரண்டு ஆகாரம் உண்டானாப் போலே-
இக்காலமும் பாவனமாயும் போக்யமுமாயும் இருக்கை

புஷ்பித காநந –
படை வீடு போலே நாம் அலங்கரிக்க வேண்டாதே தானே அலங்கரிக்கை-

புஷ்பித காநந —
பெருமாள் பொன் முடி சூட காடு பூ முடி சூடிற்று

மார்கழி திங்கள் –
நாதி சீதா ந கர்மதா-என்கிற ந்யாயத்தாலே
அதி உஷ்ணமாதல் அதி சீதளமாதல் அன்றிக்கே இருக்கும் மாசம்

மார்கழி திங்கள்-
தேவர்களுக்கு விடிகிற காலம் ஆகையால் விரதங்கள் அனுஷிப்பார் தொடங்கும் காலமாய் இருக்கை –

மார்கழி திங்கள்-
இம் மலட்டு மாசங்களில் இதுவும் ஒரு மாசமே -என்கிறார்கள் –

இம் மாசத்துக்கு விசேஷம் என் என்னில்
சர்வேஸ்வரன் இவ் விபூதியில் பருப் பருத்தவற்றை எல்லாம் நான் – என்கிற போது –
மாசா நாம் மார்க்க சீர் ஷோஹம் -என்று
மாசங்களில் வைத்துக் கொண்டு மார்கழி மாசம் ஆகிறேன் என்று அருளிச் செய்தான் –

மார்கழி திங்கள்-
குளிருக்கு அஞ்சி கோப வ்ருத்தர்கள் புறப்படாத காலமும் –
நாளுக்கு ப்ரஹ்ம முகூர்த்தம் போலே சம்வத்சரத்துக்கு இம் மாஸம் ஆகையால் சர்வ உத்தர காலம் இறே
சாத்விக பலம் இறே தாங்களும் கணிசிக்கிறது –
கால க்ருத பரிணாமம் இல்லாமையைக் கொண்டாடும் போலே பரிணாமத்தைக் கொண்டாடுகிறார்கள் இறே
பரிணாமம் உண்டாகவுமாம்-இல்லை யாகவுமாம் –
பகவத் அனுபவத்துக்கு புறம்பானது த்யாஜ்யமாம் அத்தனை இறே

இனித் தான் பர்வத பரிசரத்திலே கிடந்ததொரு பீஜத்தோடு
கடலின் அருகே கிடந்ததொரு பீஜத்தோடு வாசி அற
பருவம் செய்யும் காலமாய்த்து –

கைங்கர்யத்துக்கு ஏகாந்தமான காலம் ஆகையால் ஒழிவில் காலம் என்னுமா போலே கொண்டாடுகிறார்கள்
அசாதாரணமான மாசத்தில் அசாதாரணமான பலத்தைப் பெறுவோம் –
சர்வோத்தரமான காலத்திலே சாத்விக பலம் பெறுவோம் –
எல்லாரும் அபி மதம் பெரும் காலத்திலே நாமும் அபிமதம் பெறுவோம் என்கிறார்கள் –

மதி நிறைந்த –
மாசம் நேர் பட்டால் போலே இருந்ததீ -பக்ஷமும் நேர் பட்ட படி –
ஆபூர்ய மாணே பக்ஷே புண்யே நக்ஷத்ரே —என்று
மங்கள கார்யம் செய்வார்க்கு விதிக்கிற விதியும் இவர்களுக்குக் கோல் விழுக்காட்டாலே சேர விழுந்தது-
பகவத் பிரவணராய் இருப்பார் உடைய தேக யாத்ரையை-விதி தான் பின் செல்லக் கடவதாய் இறே இருப்பது
த்வதீய கம்பீர மநோநுசாரிணா -என்னக் கடவது இறே

முன்பு இருள் தேட்டமானால் போலே இப்பொழுது நிலா தேட்டமாய்த்து –
காமுகர்க்கும் கோபர்க்கும் இருள் திட்டமாய் இருக்கும் இறே
நள் இருள் கண் என்னை உய்த்திடுமின் -என்று இறே முன்பு இருப்பது –
தாய்க்கும் தகப்பனுக்கும் அஞ்ச வேண்டா
இருளிலே புறப்பட்டு அணைக்கலாம் என்கிறாள் –

இருள் அன்ன மா மேனி எம்மிறை –
இருளோடு சேர்ந்து இறே வடிவு தான் இருப்பது
பிஷக்குக்கள் வாசலில் ஆர்த்தர் கட்டணமாகக் கிடைக்குமா போலே
ஸ்ரீ நந்தகோபர் வாசலில் கிருஷ்ணனால் புண் பட்ட பெண்கள்
கட்டணமாய் கிடக்குமாய்க் கொள்ளீர் -என்று பட்டர் –
(வைத்யோ நாராயண ஹரி அன்றோ )

அப்படி நிலாவுக்கு இறாய்க்க வேண்டாதே ஊர் இசைந்து மேல் எழுத்து இட்ட நாள் இறே –
ஒருவரை ஒருவர் எழுப்புகைக்கும் கிருஷ்ண முக அவலோகநத்துக்கும் நிலா உண்டாகப் பெற்றது என்கை
ஷயாதிகள் போய் பூர்ணன் ஆகிறான் இறே அவனும் –
இவர்களும் நாமும் உளோமாய் பூர்ணைகளாக வாரிகோள் என்கிறாள் –

நன்னாள் ஆல்-
மாசத்துக்கும் பஷத்துக்கும் நாயகக் கல் போலே
இருப்பதொரு நாள் நேர்பட்ட படி என்

நன்னாள் ஆல் –
முன்பு கழிந்தவை தீய நாள் போலே- –
நம்மை கிருஷ்ணனோடு கிட்ட ஒட்டாதவர்கள் தாங்களே
கிருஷணனோடு சேருகைக்கு பிரமாணம் பண்ணிக் கொடுத்த நாளாக பெற்றதே

பகவத் விமுகனான போன இவனுக்கு பகவல் லாபம் உண்டான நாள் இறே நல் நாள் ஆகிறது –
அவன் எதிர் சூழல் புக்கு திரிய –
இவன் வைமுக்யம் பண்ணுகை தவிர்ந்து
அவன் கிருஷி பலித்த நாள் என்கை –

தா நஹம் த்விஷத க்ரூரான் சம்ஸாரேஷூ நராதமான் ஷிபாமி (ஸ்ரீ கீதை )-என்று
நானே இவற்றைக் குழியைக் கல்லி மணலை இடுவேன் என்று
என்று ஸர்வேஸ்வரன் தானே
ததாமி புத்தி யோகந்தம்-(ஸ்ரீ கீதை )என்னும் நாள் இறே

அத்யமே ச பலம் ஜென்ம ஸூப்ரபாத சமே நிசா –என்னுமா போலே
கம்சன் சோறுண்டு வளர்ந்த எனக்கு விடியும் நாள் உண்டாவதே என்றான் இறே

ஸூப்ர பாதாத்ய ரஜநீ மதுரா வாஸ யோஷிதாம் -என்று
ஸ்ரீ மதுரையில் உள்ளார்க்கு வெளிச் செறித்தால் -விளங்கினது- போலேயும் –
ஸூ ப்ரபாதாச -திருவாய்ப்பாடியினின்றும் எழுந்து அருளின போது அங்குள்ளார்க்கு அஸ்தமித்து
ஸ்ரீ மதுரையில் உள்ளார்க்கு விடிந்தது இறே

அஸூர்யமிவ ஸூர்யேண நிவாதமிவ வாயு நா -(பாரதம் )
அப் படை வீட்டில் கண் இல்லாதார்க்கு கண் உண்டானால் போலேயும்
பிராணன் இல்லாதார்க்கு பிராணன் உண்டானால் போலேயும் யாய்த்து இவர்களுக்கும்

நன்னாளால்
திரு அயோத்யையில் உள்ளார் பெருமாளை முடி சூட்டி அனுபவிக்க பாரித்துக் கொண்டு இருக்க
வெறும் தறையான நாள் போல் அன்றிக்கே
மீண்டு வந்து திருமுடி சூடி அருளின நாள் போலே –

நன்னாள்
பகல் கண்டேன் –

உதிப்பது அஸ்தமிப்பதாக நிற்கச் செய்தே இறே –
பகல் கண்டேன் -என்கிறது -அதாகிறது
நாரணனைக் கண்டேன் -(இரண்டாம் திருவந்தாதி -82-)என்கை –

அஸ்தமியாத ஆதித்யனைக் கண்டேன் –
ப்ராதேசிகன் அல்லாத ஆதித்யனைக் கண்டேன் –
ப்ராப்த அப்ராப்த விவேகம் பண்ணினால் ஓர் இரவும் ஓர் பகலுமே உள்ளது –
பகவத் ப்ரத்யாசத்திக்கு முன்பு எல்லாம் பகல் விரவாத இரவாய் –
பின்பு எல்லாம் இரவு விரவாத பகலாய் யாய்த்து இருப்பது –
சென்ற நாள் செல்லாத (மூன்றாம் திருவந்தாதி )இத்யாதி –
கையார் சக்கரத்தின் (5-1)முன்னாள் போலே இறே முன்பு கழிந்த நாள்
(காருணிகத்தவம் அறிந்த பின்பே-கீழே எல்லாம் காரணத்வம் பஜனீயத்வம் வியாகத்வம் நியாமகத்வம்
இவை எல்லாம் கார்யகரம் ஆவது காருணிகத்தவம் இருந்தால் தானே )

(ஆல் –நினைத்து நினைத்து ஈடுபட்டு இப்பதம் )
மாசத்தைக் கொண்டாடுவது –
பக்ஷத்தைக் கொண்டாடுவது
நாளைக் கொண்டாடுவதாய் -இதிலே
இவர்களுக்கு கிடக்கிற த்வரை வெள்ளம் என் தான் -இவர்கள் ப்ராப்ய ருசி இருந்தபடி –

நீராட –
தோழிமார் ஒருவருக்கு ஒருவர் பவ்யயைகளாய் இருந்தார்களே யாகிலும் –
பகவத் சம்பந்தத்தைப் பார்த்தவாறே கௌரவைகளாய் இருப்பார்கள் இறே –
வயிற்றில் பிறந்தவர்கள் என்று பாராதே
கணபுரம் கை தொழும் பிள்ளையை பிள்ளை என்று எண்ணப் பெறுவாரே-(8-2-9 )என்றும்
பெரும் தவத்தனள் -(திரு நெடுந்தாண்டகம் )என்றும்
நேர் இழை நடந்தாள்-(6-7-திருக் கோளூருக்கு நடந்த தனது மகளை )என்றும் -சொல்லா நின்றார்கள் இறே

இப்படியாகை இறே ஸ்ரீ வைஷ்ணவர்களை -நீராட -என்கிறது –
ஆச்சார்யர்களை நம்பி என்கிறதும் -ஸ்ரீ மதுரகவிகள் நம்பி என்கையாலே –

பட்டர் ஸ்ரீ பாதத்தை கழுவி தீர்த்தம் கொள்ளும் ஆண்டாள் -என்பார்கள் இறே

எம்பெருமானார் ஸ்ரீ வைஷ்ணவர்களும் எழுந்து அருளா நிற்க பெரிய நம்பி தெண்டன் இட்டுக் கிடந்தார் –
நம்மை இங்கனம் செய்து அருளிற்று ஏன் என்று கேட்க –
ஆளவந்தார் எழுந்து அருளுகிறார் என்று இருந்தேன் -என்று அருளிச் செய்தார்
இவை இறே பகவத் சம்பந்தத்தை இட்டு கௌரவிக்கும் படி –

நீராட –
இவர்கள் தங்களுக்கு நீராட -என்று நோயாசை இறே –
யமுனா ஜலம் ஒருத்தியுடைய விரஹ அக்னியாலே சுவறுமே-

நீராட –
தமிழர் கலவியை -சுனையாடல் -என்று யாய்த்து சொல்வது –
கிருஷ்ண சம்ஸ்லேஷத்தை யாய்த்து இவர்கள் நீராட என்கிறது –
ஏஷ ப்ரஹ்ம ப்ரவிஷ்டோ ஸ்மி க்ரீஷ்மே ஸீதே மிவ ஹ்ருதம்-என்னுமா போலே –

அல்ப பலமான ஸ்வர்க்க அனுபவத்துக்கு அதிகாரார்த்தமாக பண்ண வேண்டும் தேவைகளுக்கு ஓர் எல்லை இல்லை –
இந்த நிரவதிக சம்பத்தை பெறுகைக்கு எவ்வளவு யோக்யதை வேணும் என்னில் –
போதுவீர் போதுமினோ –

நாலு நாள் ஊர்வசி கடாக்ஷம் பெற்று ஸ்வர்க்க அனுபவம் பண்ணி
பின்பு -த்வம்ச -என்று தள்ளுகிற இதுக்கு
கூச்மாண்ட கண-பூசணிக்காய் போன்ற மிக பெரிய – ஹோமாதிகள் பண்ண வேண்டா நின்றது –

ந ச புனராவர்த்ததே என்று
அபு நராவர்த்தி லக்ஷண மோக்ஷத்துக்கு இச்சா மாத்திரமே அமைவான் என் என்னில்
பெறுகிற பேற்றுக்கு சத்ருசாதனம் இல்லாமையால்
இங்கு அபிமத சித்திக்கு இச்சையே வேண்டுவது என்கை –

இச்சை சர்வ உபாய சாதாரணமாய் இருக்குமே –
அல்லோம் -என்னாதார் எல்லாரும் அதிகாரிகள் –
(அல்லோம் என்னாதார் -ஆம் என்பார் -இரண்டுக்கும் நெடு வாசி உண்டே )
இவ் விச்சை சாதனத்தில் புகாது –
சைதன்ய கார்யமாம் அத்தனை –

கூடும் மனமுடையீர் -இறே
போதுவீர் போதுமினோ
(பெரியாழ்வார் வார்த்தை அங்கு
இது ஆண்டாள் வார்த்தை )

அதிகாரி சம்பத்தி உண்டாக்கி இழிய வேணும் –
இது வகுத்ததாகையாலே இச்சைக்கு மேற்பட்ட வேண்டியது இல்லையே

நெடும் காலம் இழந்ததும் இவன் பக்கல் இச்சை இல்லாமை யாகையாலே –
இவன் இச்சையே வேண்டுவது –
சக்தியும் பிராப்தியும் அத்தலையிலே பூர்ணம் ஆகையால்
இனி இவன் சேதனன் ஆனதுக்கு வாசி இச்சை இறே வேண்டுவது –
இது இல்லையாகில் இது இவனுக்கு புருஷார்த்தம் ஆக மாட்டாது இறே

சூத்திர விஷயத்துக்கு தனித் தேட்டம் ஆனால் போலே
அபரிச்சின்ன விஷயத்துக்கு துணைத் தேட்டம் ஆகையாலே சஹ காரிகளை சேர்க்கிறார்கள் –

போதுமினோ –
பிரதி கூலரையும் அகப்பட -தேன மைத்ரீ பவதுதே யதி ஜீவிது மிச்சசி -என்னுமவர்கள்
அபிமுகரைப் பெற்றால் விடுவார்களோ

போதுமினோ-
போவான் போகின்றார் என்று வழிப் போக்கே இறே ஸ்வயம் பேறு ஆகுமே –

போதுமினோ –
இசைந்தவர்கள் காலில் விழுகிறார்கள் -தங்கள் பேறாய் இருந்தபடி –
எங்களை வாழ்வியுங்கோள் என்கிறார்கள் –
அவர்கள் முன்னே போக-அந் நடை அழகு கண்டு
நாங்கள் பின்னே போக இறே நினைக்கிறது —

நேர் இழையீர்-
இவர்கள் வடிவு தான் ருசிக்கு பிரகாசமாய் இருக்கும் படி –
ஸும்ய ரூபம் என்கிறபடியே –

நீராடப் போதுவீர் -என்ற பிரசங்கத்தாலே
ஒரு படி ஆபரணம் பூண்டால் போலேயான படி –
புனை இழைகள் அணியும் ஆடையுடையும் புதுக் கணிப்பும் நினையும் நீர்மையதன்று -என்னுமா போலே
ஆபரணங்களை மாறாடிப் பூண்டு இருந்த படியாலும்
பரியட்ட மாறாட்டத்தாலும் வடிவில் வேறு பட்டாலும் (குட்ட நாட்டுத்திரு புலியூர் )
இவள் சர்வேஸ்வரனுக்கு பிரசாத பாத்திரம் ஆனாள் என்று தோற்றா நின்றது என்றால் போலே –

கிருஷ்ணன் எப்போது அணைக்கும் என்று அறியாமையால் ஒப்பித்த படி இறே இருப்பது
நேர்மையால் -நினைக்கிறது -வை லக்ஷண்யத்தை
இழை -என்று ஆபரணம் –

சீர் மல்கும் ஆய்ப்பாடி –
பண்டே பாலாலும் வெண்ணையாலும் சம்ருதமாய் இருக்கச் செய்தே-
உபய விபூதி உக்தன் பிறந்த ஐஸ்வர்யம் உண்டு இறே –
பஞ்ச லக்ஷம் குடியை யுடைத்தாய் -அவர்களுக்கு தனமான பசு முதலான சம்பத்தாலே சம்ருத்தமாய் –
அது தான் பிள்ளைகள் கால் நலத்தால் ஓன்று இரட்டியாய் –
ப்ரீதிரோதம் அசஹிஷ்ட சாபுரீ -என்னும் படி இறே
சம்பத்து மிகுத்து இருக்கும் படி –

சீர் மல்கும் ஆய்ப்பாடி –
இங்குத்தை ஐஸ்வர்யத்தை யுடைய வாய்க்கால் காணும் நித்ய விபூதியில் ஐஸ்வர்யம் –
குணாதிக்யத்தாலே இறே வஸ்துவுக்கு ஏற்றம் –
அது உள்ளது இங்கேயே இறே –
தர்மி அதுவாகையாலே மேன்மையும் இங்கே உண்டே -நீர்மை தன்னேற்றமாம்

அங்கு தான் கும்பீடு கொண்டு இருக்கும் –
இங்கு தான் கும்பிடுகிற இடம் இறே –
தொழுகையும் இவை கண்ட யசோதை தொல்லை இன்பத்து இறுதி கண்டாளே -என்னக் கடவது இறே

இது காண்கைக்காக இறே வைதிக புத்திரர்கள் வியாஜ்ஜியத்தாலே
நாய்ச்சிமார் அழைத்துக் கண்டது –

இங்குத்தைக்கும் அடி அவ்விருப்பு என்னும் இடம்
பிரமாணம் சொல்லக் கேட்க்கும் அத்தனை இறே

இவ் விடத்தில் ஐஸ்வர்யம் அதிலும் விஞ்சி இருக்கும் என்னும் இடம் கண்களால் காணலாகிறது இறே
மனுஷ்யத்தவே பரத்வம் இறே இங்கு –

ஆய்ப்பாடி –
இடக்கையும் வலக்கையும் அறியாத வூர் –
யுக்தி ஆபாசம் கொண்டு பதகம் -யுக்தி ப்ரத்யுத்தரம் -பேசுவார் இல்லை –
தம்பி தீம்புக்குத் தமையன் பெரு நிலை நிற்குமூர்
ந ராம பர தாரா நவை சஷூர் ப்யாமபி பச்யதி-என்கிற குணம் கண்டு பின் தொடருவார் அன்றிக்கே
தீம்பு கண்டு மேல் விழுவார் இருக்கிற வூர் –
இந்திரனுக்கு இடும் சோற்றை மலைக்கு இடுங்கோள் அதுக்கு இசையுமூர் இறே –
(ஸ்வரூப க்ருத தாஸ்யராகவே இங்குள்ளார் -அங்கு போல் குண க்ருத தாஸ்யர் அல்லவே )

ஆய்ப்பாடி –
க்ருதவத்ய ஷீர வத்ய பபூவு புத்ர ஜன்மத யதாச க்ருஷ்ண உத்பூத-ததா ப்ரப்ருதி மே வ்ரஜே–
யாவத் துக்தம் சமுத் பூதம் தாவ தேவ க்ருதம் பவேத் -(நாழிப்பாலுக்கு நாழி நெய் கிடைக்குமோர் )
நாஸ்திகராய் இருப்பார் அநு மானத்தைக் கொண்டு ப்ரத்யக்ஷத்தை விதிக்கப் புக்கால் சம்சயம் வர்த்தியாதே
கண்டத்தை இல்லை யாவது என் என்று
கண்டத்துக்கு மேற்பட்ட அறியாமையால் நாஸ்திகர் இல்லாத வூர் –
கிருஷ்ணன் தீம்பு செய்து மூலை படியே நடக்கிலும்-
அதுவே அமையும் என்று இருக்குமூர் –

செல்வச் சிறுமீர்காள் –
ஆத்மாவுக்கு ஸ்ரீ மத்தாகிறது -பகவத் ஸ்பர்சம் இறே –
அந்தரிக்ஷ கதச் ஸ்ரீ மான் -என்னக் கடவது இறே –
ராவண பவனத்தின் நின்றும் நாலடி இட்ட வாறே ஸ்ரீ வைஷ்ண ஸ்ரீ மாலை இட்ட படி –
வலி பாதி -வழக்குப் பாதி -தர்மம் பாதியாக -கிருஷ்ணனால் ஸ்பர்சிக்கப் பட்டு இறே
பஞ்ச லக்ஷம் குடியில் உள்ளாறும் இருப்பது –
(வலி பாதி -வழக்குப் பாதி -தர்மம் பாதியாக- வலிமை -பலாத்காரம் -நீதி -தர்மம் )

சிறுமீர்காள் –
பருவம் கழிந்து இருத்தல் -முரட்டு ஆண்களாய் இருத்தல் -செய்யாதே இருக்கை –
அஹங்கார ஸ்பர்சமாதல் –
தேவதாந்த்ர ஸ்பர்சமாதல் அன்றிக்கே இருக்கை –
இத்தால் சொல்லிற்று ஆயத்து-
அந்நிய சேஷத்வ ஸ்வ ஸ்வா தந்தர்யங்கள் இன்றிக்கே இருக்கை –

கூர் வேல் கொடும் தொழிலன்-
நமக்கு அவனை நோக்கித் தருமவனைச் சொல்லுங்கோள்-என்கிறார்கள் –
சிறியாத்தானைப் போலே-பசும் புல் சாவ மிதியாதவர் –
பிள்ளை பிறந்தவாறே வேலை புகர் எழ கடைய விட்டாராய்த்து –

கொடும் தொழிலன் –
தொட்டில் கால் கடையிலே எறும்பு ஊரிலும் வேலைக் கொண்டு தொடரா நிற்பராய்த்து –
பெரியாழ்வார் பெண் பிள்ளை யாகையாலே அங்குத்தைக்கு காவல் உண்டு என்று தரிக்கிறார்கள்-

நந்தகோபன் குமரன் –
ஸ்ரீ நந்தகோபர் சந்நிதியில் கோல் கீழ் கன்றாய் நிற்கும் படி -நாலிரண்டு மாசம் காடு பாய்ந்து
பெண்களோடு இட்டீடு கொண்டு -ஒன்றை சொல்லி ஒன்றை கேட்டுக் கொள்கை

ஆற்றிலிருந்து –
பிள்ளாய் சிலர் எங்களது என்று அபிமானித்து இருக்கும் நிலத்திலே இருந்தோமோ –
சர்வ சாதாரண ஸ்தலம் காணும் –

விளையாடுவோங்களை-
தன்னை ஒழிய நாங்கள் அந்நிய பரைகள் அன்றோ –
தன்னிடை யாட்டம் பட்டோமோ –
நாங்கள் முன் தீமை செய்தோம் ஆகிலுமாம் இறே –
தன்னைக் கடைக் கண்ணால் கணிசித்தோமோ –
தன்னை இங்கு இட்டு எண்ணினார் இல்லை கிடீர்-

சேற்றால் எறிந்து –
பிறர் அறியாத படி கைகளால் ஸ்பர்சித்தல் ஆகாதோ

வளை துகில் கைக் கொண்டு –
இடைப் பெண்கள் ஆகையால் ஆபரணமும் பரியட்டமும் களைந்து இட்டு வைத்து இறே குளிப்பது –
இவற்றைக் கைக் கொள்ளுமாய்த்து

காற்றில் கடியனாய் ஓடி –
தொடர அகப்படாதே ஓடும் படி –
தன் ஜீவனத்திலும் ஒன்றும் குறையாதே கொண்டான் –
எங்கள் ஜீவனமும் ஒன்றும் குறையுமே கொண்டான்

அகம் புக்கு
வழி பறிப்பது –
அசாதாரண ஸ்தலத்தில் இருப்பது –

மாற்றமும் தாரானால் இன்று முற்றும் –
வார்த்தை ஏதேனும் வளையும் துகிலுமோ –
வளையும் பரியட்டமும் தரப் பார்த்திலோம் என்றால் ஆகாதோ

இப்படி இறே தீம்பிலே கை வளர்ந்து திரியும் படி –
அவர்கள் வந்து முறைப் பட்டால்
இவனையோ இவர்கள் இப்படி சொல்வது என்னும் படி விநயம் பாவித்து நிற்கும் –

ஏரார்ந்த கண்ணி யசோதை-இளஞ் சிங்கம்–
கிருஷ்ண அனுபவத்தால் பிறந்த ஹர்ஷம் அடைய கண்ணிலே காணலாய் இருக்கை –
நாட்டார்க்கு புண்ய பாபங்கள் கலசி இருக்கையாலே ஒரு வைரூப்பியம் உண்டே கண்ணில் –
இவளுக்கு சர்வேஸ்வரனை பிள்ளையாகப் பெற்ற பாக்யம் அடைய கண்ணிலே தோற்றி இருக்கும் –

அம்பன்ன கண்ணாள் யசோதை தன் சிங்கம்( 6-8) -என்னக் கடவது இறே
பிள்ளைக்கு தாய் வழி யாகாதே கண் -என்று பிள்ளை உறங்கா வல்லி தாசர் வார்த்தை –
ஒரு நாடாக சதா பஸ்யந்தி பண்ணி அனுபவிக்கிற விஷயத்தை தானே ஒரு மடை செய்து அனுபவிக்கிறவளுடைய கண் இறே

இளஞ் சிங்கம்—
சிங்கக் குருகு -என்று ஆழ்வான் வார்த்தை –
நந்த கோபன் குமரன் -என்று தமப்பனார்க்கு பவ்யனாய் இருக்கும் படி சொல்லிற்று –
இளஞ் சிங்கம்—என்று தாயாருக்கு அடங்காத படி சொல்கிறது -தன் களவுக்கு பெரு நிலை நின்று அன்றி
அவளுக்கு பிழைக்க ஒண்ணாது இருக்கை-

அஞ்ச உரப்பாள் யசோதை (நாச்சியார் )இறே —
கருத்து அறிந்து தீம்பிலே கை வளரும் படி காணும் அவள் நியமிக்கும் படி –
இவள் பார்வை அறிந்து பரிமாறும் பாவஞ்ஞன் இறே அவனும் –
இவளும் அவன் ஆணாட்டம் கண்டு ஆனந்த நிர்ப்பரையாய் இருக்குமாய்த்து –
அவ்விடம் புக்கு அவ்வாயர் பெண்டிர்க்கு அணுக்கனாய் –என்று ஒளிக்க வேண்டுவார் புகுந்தால் ஏதேனும்
ஒரு பதார்த்தாலே மறைத்து வைக்கலாம் படி இருக்குமாய்த்து –

இங்கு ஆண்டாள் மந்த்ர லிங்கம் தோற்றாமே சொல்லுகிறாள் காண் -என்றுமாம் –
(கண்ணன் பெயரே இல்லாமல் )

நில வறையிலே அடையுண்ட பெண்கள் பக்கலிலே புக்கு அவர்கள் புத்யதீனமாக தன்னைச் சமைத்து வைக்குமாய்த்து –
இவற்றை எல்லாம் முன்னிட்டு -இளஞ்சிங்கம் -என்கிறார்கள் –

சிறுமீர்காள் என்றால்
இளஞ்சிங்கம் என்ன வேண்டாவோ –

நந்த கோபாலா எழுந்திராய் -என்கைக்கும்-
யசோதா அறிவுறாய்  -என்கைக்கும் அடி இருக்கிற படி

கார் மேனி –
தாயும் தமப்பனும் ஒளித்து வைத்தாலும் விட ஒண்ணாத வடிவு அழகு –
இவர்கள் விடாய் தீரும் படி யான வடிவு –
மேகஸ்யாமம் மஹா பாஹும் -என்கிறபடியே –
வ்ரத கர்சிதைகளான பெண்கள் விடாய் தீர்க்கும் குளிர்ந்த வடிவு அழகு இருக்கிற படி

செங்கண் –
வாத்சல்யத்தை தெரிவிக்கிற கண்கள் –
ஒரு மேகத்திலே இரண்டு தாமரை பூத்தால் போலே இருக்கை –
இராத் திரு நாள் சேவித்தார் கண் போலே இருக்கை –
இவர்களிலும் இழவு தன்னது என்னும் இடம் கண்ணிலே தோற்ற இருக்கும் –

ஊர்த்வம் மாஸான் நஜீவிஷ்யே -என்னில் –
இத்தலை -நஜீவேயம் க்ஷணம் அபி -என்று இருக்குமவன் இறே

கதிர் மதியம் போல் முகத்தான் –
தத்ர கோவிந்த மாசீம் பிரசன்ன ஆதித்ய வர்ச்சசம்-
சந்த்ரனைத் தண்ணளியிலே ஆதித்யன் புகரை யூட்டினால் போலே இருக்கை –

முகத்தான் -என்று உபமேயம் தன்னையே சொல்லுகிறார்கள் –
உபமேயத்தை காணும் அளவும் இறே அது நிற்பது –
ஆனாலும் அனுபவிப்பார்க்கு ஒரு துறை இட்டுக் கொண்டு இழிய வேணுமே –

நாராயணனே –
வடிவு அழகைக் கண்டு -வேறு ஒரு விஷயத்தை பற்றிற்றாக வேண்டாதே ப்ராப்த விஷயமாய் இருக்கை –
அவனாலும் தன்னை அனுபவிக்கத் தாரேன் என்ன ஒண்ணாது காணும் –
இத்தலை வைமுக்யம் பண்ணின வன்றும் தான் ஆபிமுக்யம் பண்ணிப் போருமவன்-
(நாரங்களை அயனமாகக் கொண்டவன் உள்ளேயே இருந்து பதி கிடக்கிறான் அன்றோ )
நாராயண அணுவாக ஸித்தமான வஸ்து இடைச்சிகளுக்கும் கூட ஸூலபனான படி –

இந் நோன்பிலே அதிகரிப்பார்க்கு மந்த்ரம் இது என்கிறது –
இவ்வளவுமே யன்று-
தமப்பன்மார் சொல்லக் கேட்டிருப்பர்களே-
நன்மை தீமைகள் ஒன்றும் அறியேன் நாரணா என்னும் இத்தனை அல்லால் (பெரியாழ்வார் )-என்றும்
நாராயண சப்த மாத்திரம் என்றும் –
நாராயண பர ப்ரஹ்மம் -என்றும் –

நமக்கே –
அத் திரு நாமத்தில் சொல்லுகிறபடியே சர்வ விஷயமாக அன்று –
சம்பந்த ஞானம் உடைய நமக்கே –
ஸ்வ ரக்ஷணத்திலே அன்வயம் இல்லாத நமக்கே (தருவான் )

நாராயணனே -என்கிற இடத்தில் அவதாரணம் –
உபாய நைரபேஷ்யத்தை சொல்லுகிறது –

இதில் (நமக்கே )அவதாரணம்
ப்ராப்தாவினுடைய ஆகிஞ்சன்யத்தை அறிவிக்கிறது

அவனுக்கு உபாய பாவம் ஸ்வரூப அந்தர்கதம்-
அத்தலையில் நிறைவாலும் அவனே உபாயம் –
இத்தலையில் குறைவாலும் அவனே உபாயம் –

பலி புஜி சிசுபாலே தாத்ருகாகஸ் கரேவா குண லவ ஸஹஸாசா தத்வ ஷமா சம்குசந்தீ -(ஸ்ரீ ரெங்கராஜஸ்தவம் )
போக்கற்றவனுக்கு திறந்து கிடந்த வாசலிலே புக வேணும் –
வைக்கிறவனுக்கும் பேர் சொல்லி வைய வேணும்
இத்தனை இறே காகமும் சிசுபாலனும் செய்தது –
இத்தனை யாகிலும் விஷயீ கரித்தான் இறே இருவரையும் –
இக் கைம் முதலும் இல்லை என்கிறார்கள் -நமக்கே -என்கிற இத்தால் –

பறை தருவான் –
உக்கமும் தட்டொளியும் -என்று நாட்டுக்கு ஒரு பேர் சொல்லிக் கிட்டின வாறே
உன் தன்னோடு உற்றோமே யாவோம் உனக்கே நாம் ஆட் செய்வோம் -என்னா நின்றார்கள் இறே –
இற்றைப் பறை கொள்வான் அன்று காண் -என்கையாலே
யாவதாத்மா பாவியான அடிமையை நினைக்கிறது

பாடிப் பறை கொண்டு -என்றதையும் நிஷேதித்திக் கொண்டு
இற்றைப் பறை கொள்வான் அன்று காண் -என்றதையும் நினைக்கிறது –

பாரோர் புகழ –
இசையாதவர்களும் கொண்டாடும்படி –
ஸ்வரூப ஞானம் உடையாருடைய யாத்திரையை ஸ்வரூப ஞானம் இல்லாதார் நிந்திப்பார்கள் –
அது வேண்டா இறே இவர்களுக்கு -வர்ஷம் உண்டாகையாலே

படிந்து நீராடப் போதுவீர் போதுமினோ -என்று ஏலோரெம்பாவாய்
ஏல்-இப்படி யாகில் -என்றபடி –
ஏல் -என்றது சம்போதனை
ஓர் -புத்தி பண்ணு
எம்பாவாய் -என்றது
எங்கள் சந்தஸைப் பின் செல் என்றபடி

அன்றிக்கே –
பாத பூர்ணமான அவ்யயமாக வுமாம் –

எம்பாவாய் -என்றது –
மேல் காம ஸமாச்ரயணம் ஆகையால் பாவாய் -என்று ரதியைச் சொல்லிற்று ஆகவுமாம்
எங்கள் சந்தஸ் அனுவ்ருத்தியைப் பண்ணு என்றுமாம் –

ச -வை -து -ஹிக்கள் போலே
பாதத்தைப் பூரித்துக் கிடக்கிறது என்று சொல்லுகிறது –

1-காலத்தைக் கொண்டாடி —
2-பலத்தைச் சொல்லி —
3-அதிகாரிகளை சொல்லி–
4-இது கேட்ட பின்பு-அவர்களுக்கு பிறந்த புஷ்கல்யத்தை சொல்லி –
5-கிருஷ்ண சம்ச்லேஷத்துக்கு ஏகாந்தமான ஊரிலே பிறக்கப் பெற்ற நீங்களும் சிலரே என்று-
ஸ்ரீ நந்த கோபர்க்கும் யசோதை பிராட்டிக்கு பவ்யனாகையாலே இழக்க வேண்டா என்று-
அவர்கள் ஒளித்தாலும் விட ஒண்ணாத படியான வடிவு அழகாய்ச் சொல்லி–
6-விரூபனானாலும் விட ஒண்ணாத படியான ப்ராப்தியைச் சொல்லி–
7-உபாய நைரபேஷ்யம் சொல்லி–
8-ஆகிஞ்சன்யத்தில் நைரபேஷ்யம் சொல்லி–
9-உகவாதாரும் உகந்து கொண்டாடும் படி சொல்லித் தலைக் கட்டுகிறார் —

——————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ திருப்பாவை ஸ்வாபதேசம் -ஸ்ரீ ஒண்ணான ஸ்ரீ வானமா மா மலை ஸ்ரீ ராமாநுஜ ஜீயர் ஸ்வாமிகள் –

December 31, 2016

ஸூம்ய ஜமாத்ரு யோகீந்த்ர பாத ரேகாமயம் சதா
ததாயத் தாத்ம சத்தாதிம் ராமானுஜ முனிம் பஜே —

———

ஸ்ரீ திருப்பாவை முதலிட்டு ஐஞ்சு பாட்டுக்களாலும் –
பிரபன்ன நிஷ்டா க்ரமங்களையும் –
பிரபத்தி வாசகமான திரு நாம வைபவத்தையும் பேசுகிறது –

மேல் பத்து பட்டாலும்
பிரபத்வயனுடைய திருநாம சங்கீர்த்தனம் ப்ரபன்னனுக்கு கால ஷேபம் ஆகையால்
அந்த சங்கீர்த்தனத்துக்கு அதிகாரிகள் ஆனவர்களை எழுப்பிக் கூட்டிக் கொள்ளும் படியை சொல்லுகிறது –
அது எங்கனே என்னில் –

முதல் பாட்டாலே
பரிசுத்தரராய் வ்ருத்ய அப்யாஸத்தை யுடையவர்கள் உடைய சத்வ பிரமாணத்தை முன்னிட்டு –
சத்வ குண நிஷ்டரை சாத்விக சமாசார நிதர்சன பூர்வக
பகவன் நாம சங்கீர்த்தனத்திலே ஸமாஹிதர் ஆக்கும் படி சொல்கிறது –

இரண்டாம் பாட்டில் –
பகவத் அபிமத க்ரியா கலாபங்களாலே பகவத் போக்யமான வஸ்துவை
விவேகித்து தரிப்பார் படியைக் காட்டி சத்வ பிரதானரை விரோதி நிரசன சமர்த்தனுடைய
திரு நாம சங்கீர்த்தனத்திலே ஸமாஹிதர் ஆக்கும் படி சொல்கிறது –

மூன்றாம் பாட்டில் –
சங்கீர்த்தனத்துக்கு அடுத்த சத்வ உத்தர காலத்தை முன்னிட்டு சத்துக்களால் குதூகலிக்கப் படும் விஷயரானவர்களை
சகல விரோதி நிவாரகனுடைய சங்கீர்த்தனத்திலே சங்கதராக்கி ஸமாஹிதர் ஆகும் படி சொல்கிறது

நாலாம் பாட்டில்
ஞான தீப பிரகாசராய் அத்தாலே உத்துங்கமான பதத்தில் இருக்கும்படியான சம்பந்தம் உடையவர்களையும்
அவனுடைய சர்வ நாம சங்கீர்த்தனத்திலே சங்கதரானார் படி சம்பவித்தானாம் பண்ணும் படி சொல்கிறது

அஞ்சாம் பாட்டில்
பகவத் குண வித்தரான பாசுரம் கேட்க்கையிலே அபேக்ஷிக்கும் படி சொல்கிறது –

ஆறாம் பாட்டில் –
அபிஜாதமும் ஆஹ்வாத கரமுமான திரு நாம சங்கீர்த்தனத்திலே அந்வயிக்கும் படி சொல்கிறது –

ஏழாம் பாட்டில் –
பகவத் ப்ரத்யாஸன்னரோடு ஆசத்தி யுடையாரையும் மநோ ராபிமான திரு நாம சங்கீர்த்தனத்திலே
சமர்த்தராய் ததுக்கி பரராம் படி சொல்லுகிறது

எட்டாம் பாட்டில்
பகவத் குண ஞான நிஷ்டரையும் இதிஹாச யுக்தமான குண நாம சங்கீர்த்தனத்திலே
பிரவணர் ஆக்கும் படி சொல்லுகிறது –

ஒன்பதாம் பாட்டில் –
ஸுகந்திய சாரஸ்ய யுக்தர் விகாசத்தையும் சத்வ உத்ரிக்த்தர் சமாராதன சம்விதான தத் பரர் ஆகிற படியையும் காட்டி
பரிபூர்ண ஞானரையும் புண்டரீகாக்ஷ நாம சங்கீர்த்தன தத் பரராக்கிச் சேர்த்துக் கொள்ளும் படி சொல்லுகிறது –

பத்தாம் பாட்டில் –
வாக் பணிதி யுடையாராயும் ஸமஸ்த பிரதிபந்தக நிவர்த்தகமான சர்வேஸ்வர திரு நாம சங்கீர்த்தனத்திலே
சஹகாரிகள் ஆக்கிக் கொண்ட படியைச் சொல்லுகிறது –

ஏவம் வித திரு நாம சங்கீர்த்தனத்தாலே அவனுக்கு அறுதியாகையும் –
அவனையும் எழுப்பி ஸ்வ அபேக்ஷிதங்களையும் விண்ணப்பம் செய்து
அடிமை செய்யும் படியையும் -அவன் அடிமை கொள்ளும் படியையும் அவனுக்கு அறிவித்து
தலைக் கட்டுகிறது

மற்று எல்லா பாசுரங்களாலும் –
திருப்பாவை அடியிட்ட அஞ்சு பட்டாலும் –
பிரபன்ன நிஷ்டா க்ரமமும்-
பிரபத்தவ்யன் அதி ஸூலபனாமாம் படிக்கு அடியான –
அவனுடைய அவதாரத்தின் அடிப்பாடும் சொல்லுகிறது –

————

அஸ்மத் குருப்யோ நம:
எனக்கு பஞ்சஸம்ஸ்காரங்களைச் செய்து வைஷ்ணவனாக்கிய எனது ஆசார்யனை வணங்குகிறேன்

அஸ்மத் பரமகுருப்யோ நம:
எனது ஆச்சார்யனின் ஆசார்யனையும் அவர் சமகாலத்து ஆச்சார்யர்களையும் வணங்குகிறேன்

அஸ்மத் ஸர்வ குருப்யோ நம:
எனது எல்லா ஆச்சார்யர்களையும் வணங்குகிறேன்

ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீவைஷ்ணவஸ்ரீயையும் திருவரங்கச் செல்வத்தையுமுடைய எம்பெருமானாரை வணங்குகிறேன்

ஸ்ரீ பராங்குச தாஸாய நம:
ஆச்சார்ய அபிமானம் ஆகிற செல்வமுடைய பெரியநம்பியை வணங்குகிறேன்

ஸ்ரீமத் யாமுந முநயே நம:
வேதாந்த சித்தாந்தமாகிற செல்வமுடைய ஆளவந்தாரை வணங்குகிறேன்

ஸ்ரீ ராமமிஸ்ராய நம:
ஆச்சார்ய கைங்கர்யம் ஆகிற செல்வரான மணக்கால் நம்பியை வணங்குகிறேன்

ஸ்ரீ புண்டரீகாக்ஷாய நம:
ஆச்சார்ய அனுக்ரஹம் ஆகிற செல்வமுடைய உய்யக்கொண்டாரை வணங்குகிறேன்

ஸ்ரீமந் நாதமுநயே நம:
ஸ்ரீவைஷ்ணவ குலபதியும், ப்ரபந்ந குலத்துக்கு முதல்வரும், பரமாச்சார்யரான நம்மாழ்வாரிடம்
அருளிச் செயல் செல்வம் பெற்றவரான ஸ்ரீமந் நாதமுநிகளை வணங்குகிறேன்

ஸ்ரீமதே சடகோபாய நம:
மயர்வற மதிநலம் அருளப்பெற்ற ஸ்ரீவைஷ்ணவஸ்ரீயை உடையவரான நம்மாழ்வாரை வணங்குகிறேன்

ஸ்ரீமதே விஷ்வக்ஸேநாய நம:
பெரிய பிராட்டியாரிடம் ரஹஸ்யத்ரய உபதேசம் பெற்ற மிக்க செல்வரான சேனை முதலியாரை(முதல்வர்) வணங்குகிறேன்

ஸ்ரீயை நம:
தேவதேவ திவ்ய மஹிஷியாய் எம்பெருமானுக்கு வல்லபையாய் புருஷகாரம் மிக்க செல்வமுடையவளை வணங்குகிறேன்

ஸ்ரீதராய நம:
திருவுக்கும் திருவாகிய செல்வனான எம்பெருமானை வணங்குகிறேன்.

வாக்ய குரு பரம்பரையில் முதல் மூன்று வாக்யங்கள் வேத வாக்யங்கள்
மற்றவை ஸ்ரீ கூரத்தாழ்வான் அருளிச் செய்தது ஆகும்

—————

மேலிட்டுப் பத்துப் பாட்டும் ப்ரபத்திக்கும் பூர்வ பாவியான
வாக்ய குரு பரம்பரையினுடைய க்ரமம் சொல்லி
பகவத் விஷயத்தில் உத்யுக்தரானவர்களோடு போர அவகாஹித்தரோடு வாசி அற
உத்தேச்யர் என்னும் இடம் சொல்லுகிறது –

அது எங்கனே என்னில் –
பிள்ளாய் எழுந்திராய் -என்கையாலே
அபி நவமாக மூட்டும் அஸ்மத் குருப்யோ நம -என்னும் படி சொல்லுகிறது –

அனந்தரம் -நாயகப் பெண் பிள்ளாய் -என்கையாலே
ஸ்வ ஆச்சார்யனுக்கும் கௌரவன் ஆகையால் அஸ்மத் பரம குருப்யோ -என்னும் படியைச் சொல்லுகிறது –

கோதுகலமுடைய பாவாய் -என்று
சர்வராலும் கொண்டாடும்படியாய் இருக்கையாலே -அஸ்மத் சர்வ குருப்யோ என்கிற அர்த்தத்தைச் சொல்லுகிறது –

மாமான் மகளே-என்கையாலே
ஓளி புதுவை நகர் வாழும் பேர்கள் தாயான ஆண்டாளுக்கு அண்ணரான
ஸ்ரீ மத் ராமாநுஜாயா-என்னும் அர்த்தம் சொல்லுகிறது –
இதுவும் ஆழ்வான் அளவும் அனுசந்தேயம் –

நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய் என்கையாலே
சித்த உபாயத்தாலே ப்ராப்ய வைலஷ்ண்ய ஞானத்தை யுடையராய் –
அத்தாலே உடையவருக்கு கௌரவராய் இருக்கும் ஸ்ரீ பராங்குச தாசாய நம -என்னும் அர்த்தம் சொல்லுகிறது –

கோவலர் தம் பொற் கொடி -என்கையாலே –
ஸ்ரீ கிருஷ்ண ப்ரீதி உக்தரான -ஸ்ரீ நாதமுனி வம்ச உக்தராய் –
ஸ்ரீ மத் யாமுன முனயே நம -என்னும் அர்த்தம் சொல்லுகிறது –

நற் செல்வன் தங்காய்-என்கையாலே
திருக் குமாரத்தியார் திருவடிகளில் சேறு படாமல் சேற்றில் படியாய் கிடந்து அனுசரணம் பண்ணியும்
மனத்துக்கு இனியானைப் பாடவும் -என்கையாலும் -ஸ்ரீ ராம மிஸ்ராய நம என்னும் அர்த்தம் சொல்லுகிறது –

போதரிக் கண்ணினாய் -பங்கயக் கண்ணானைப் பாட -என்கையாலே –
ஸ்ரீ புண்டரீகாஷா நம -என்னும் அர்த்தம் சொல்லுகிறது –

நா உடையாய் என்கையாலே
தமிழ் மறையை இயலிசை யாக்கின நா வீறு உடைமையாலே
ஸ்ரீ மன் நாத முனயே -என்னும் அர்த்தம் சொல்லுகிறது –

எல்லே இளங்கிளியே -என்கையாலே –
சுக முகாத் அம்ருதத்ரவ ஸம்யுத்தம் -என்னும் படி
திருவருள் கமுகு ஒண் பழத்ததான ஆழ்வார் திருப்பவளத்தில்-
நின் கீர்த்திக் கனி என்னும் கவிகள் மொழி பாட்டோடும் கவி யமுதமாய் திருவாய் மொழி பிரவஹிக்க -அத்தாலே
அணி மழலைக் கிளி மொழியானை -அநு சரிக்கையாலே –
ஸ்ரீ மதே சடகோபாய நம -என்னும் அர்த்தம் சொல்லுகிறது –

நாயகனாய் என்று தொடங்கி –
மேல் ஐந்து பாட்டாலே –
ஸ்ரீ மத் விஷ்வக் சேனாயா நம —
ஸ்ரீ யை நம —
ஸ்ரீ தராய நம -என்னும் அர்த்தங்களையும்
அச் சேர்த்தியிலே
இருவர் புருஷகார பூர்வகமாக ஆஸ்ரயிக்கச் செய்த பெருமை ஏற்றங்களை சொல்லுகிறது –

—————————————————

எட்டு எழுத்தின் இணைப் பொருளும்
இரண்டு தனில் பொருளும்
இயல் வலித்தோர் அருச்சுனனுக்கு இறைவன் தம்மை தொட்டுரைத்த முறை யறுதிப் பொருளை
எல்லாம் தோன்றும் வகை –இத்யாதி படியே
இப்பிரபந்தம் ரகஸ்யார்த்தத்தை ப்ரதிபாதிக்கக் கடவதாய் இருக்கும் –

அதில் த்வய யோஜனையும் மேலே யோஜிக்கப்பட்டது –

———–

அநந்தரம்
பாட்டுக்கள் எல்லாவற்றாலும் ப்ரதிபாதிக்கிற படியே விசேஷ கடாக்ஷ லஷ்யமாம் படியை அபேக்ஷிக்கிற படியையும் –
வீற்று இருந்து ஏழ் உலகில் படியே திவ்ய சிம்ஹாசனத்திலே பேர் ஓலக்கமாய் இருக்கிறபடியையும்
போற்றி என்று சேர்த்திக்கு மங்களா சாசனம் பண்ணும் படியையும்
தங்கள் ஆர்த்தித்தவத்தையும் -கைங்கர்ய உபகரணங்களை அதிர்த்து இருக்கும் படியையும்
எல்லாரும் அவனோடே கூடி இருந்து குளிரும் படியையும்
பலத்துக்கு அநு குணமாக சாதனங்கள் தங்கள் கையது அன்றிக்கே அவன் கையதாய் இருக்கும் படியையும்
கைங்கர்ய வேஷத்தையும் –
மாதர்களை எழுப்பும் படியையும்
கைங்கர்ய பிரதிசம்பந்தியான ஸ்ரீ யபதி கடாக்ஷத்தாலே அந்த கைங்கர்யத்தை பெற்று
வாழும் படியையும் சொல்லித் தலைக் கட்டுகிறது –

—–

ஆகையால் குரு பரம்பரா விவரண பூர்வகமாக த்வய விவரணமான இப்பிரபந்தமே
பிரபன்னனுக்கு அநு வரதம் அநு சந்தேயம் என்றதாயிற்று –
ஞாதவ்யம் குரு பரம்பரையும் த்வயமும் என்னக் கடவது இறே –
இது குரு பரம்பரா விவரணம் –

—————-

த்வயத்துக்கு சங்க்ரஹமான திருமந்திர யோஜனை காட்டப் படுகிறது –
இப்பிரபந்தத்தாலே —
நமோ நாராயணா என்பாரே-என்று இறே இவர் தாமே அருளிச் செய்தது –

இப் பிரபந்தத்திலே –
ஊழி முதல்வன் -பற்ப நாபன் -என்று -சேஷத்வ பிரதிசம்பந்தியான சேஷித்வத்தையும் –
உனக்கே -என்கையாலே -உகாரத்தில் அநந்யார்ஹ சேஷத்வத்தையும் –
நாம்-என்றும் –
யாம் -என்றும் –
மகார வாச்யனான ப்ரக்ருதே பரனாய் பகவத் சேஷ பூதனாய் இருக்கிற
ஆத்மாவின் ஸ்வரூபத்தையும் சொல்லுகையாலே
ப்ரணவார்த்தம் சங்க்ரஹீதம் ஆயிற்று –

தூயோமாய் வந்து நாம் –
தூயோமாய் வந்தோம் –
அபிமான பங்கமாய் –
மற்றை நம் காமங்கள் மாற்று -என்கையாலே நமஸ்ஸில் அர்த்தமும் –

கதிர் மதியம் போல் முகத்தான் நாராயணன் -என்றும் –
நாராயணன் மூர்த்தி -என்றும்
ஓங்கி உலகு அளந்த உத்தமன் பேர் -என்றும் -சொல்லுகையாலே நாராயண சப்தார்த்தமும்-
உலகை ஈரடியால் நடந்த நம்பி நாமம் சொல்லில் நமோ நாராயணமே -என்னக் கடவது இறே

உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது -என்கையாலே
அதிலே சர்வ வித பந்துத்வமும்

எற்றைக்கும் ஏழ் ஏழ் பிறவிக்கும் உன் தன்னோடு உற்றோமே யாவோம் உனக்கே நாம் ஆட் செய்வோம் -என்கையாலே
சதுர்த்யர்த்தமும் சங்க்ரஹீதம் ஆயிற்று –

ஆக இது திருமந்திர விவரணம் என்றதாயிற்று –

————————–

கறவைகள் பின் சென்று -இத்யாதிகளாலும் –
செய்யாதன செய்யோம் –
உன்னை அருத்தித்து வந்தோம் –
சிற்றம் சிறு காலை வந்து உன்னைத் சேவித்து -என்றும் –
நாராயணன் -என்றும் –
புண்ணியம் நாமுடையோம் என்றும் –
மாயனை மன்னு வடமதுரை மைந்தனை -என்று தொடங்கி -தீயினில் தூசாகும் என்றும்
எங்கள் மேல் சாபம் இழிந்து என்றும் –
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்து -என்றும் சொல்லுகையாலே
சரம ஸ்லோகார்த்தம் சங்க்ரஹீதம் ஆயிற்று –

ஐந்து தீயோடு நின்று தவம் செய்ய வேண்டா
திருமார்பனைச் சிந்தையுள் வைத்தும் என்றீர் –
ஐந்து நெருப்பிடையே நிற்கவும் நீர் வேண்டா –
நகரமருள் புரிந்து இத்யாதி-
பெயரினையே புந்தியால் சிந்தியாது ஓதி உரு வெண்ணும் காந்தியால் ஆம் பயன் அங்கு என் -என்னச் சொல்லக் கடவது இறே –

திருப்பாவையால் –
நாராயணன் -என்றும் –
பாற் கடலுள் பையத் துயின்ற பரமன் -என்றும் –
ஓங்கி உலகு அளந்த உத்தமன் -என்றும் –
ஏஷ நாராயண ஸ்ரீ மான் ஷீரார்ணவ நிகேதன நாக பர்யங்கம் உத்ஸ்ருஜ்ய ஹயாகதோ மதுராம் புரீம் -என்கிறபடியே
ஸ்ரீ கிருஷ்ண அவதாரத்துக்கு அடியான அடிப்பாட்டை அடைவே சொல்லி –

ஏவம் விதமானவன்
மாயனை மன்னு இத்யாதிப்படியே ஸ்ரீ கிருஷ்ணனாய் வந்து திருவவதரித்து –
ஒருத்தி மகனாய் பிறந்து ஓர் இரவில் ஒருத்தி மகனாய் ஒளித்து வளருகிற இடத்தே
பேய் முலை நஞ்சுண்டு -கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி -என்று பூதனை சகட நிராகரணம் சொல்லி –
அதுக்கு மேலே
தாமோதரன் -என்று வெண்ணெய் களவு காண்கையாலே கட்டவும் அடிக்கவும் எளியனாம் இருந்தபடி சொல்லி
மதுரையிலே மல்லரை மாட்டி வல்லானை கொன்றபடியைச் சொல்லி
அநந்தரம் தான் தீங்கு நினைத்த கருத்தைப் பிழைப்பித்து
கஞ்சன் வயிற்றில் நெருப்பாய்-அவனைப் போக்கின அளவும் அருளிச் செய்தார் இறே –

இது சரம ஸ்லோக விவரணம் –

———————————

திருப்பாவையில் -அத்யந்த பக்தி உக்தரானவர்கள் –
பகவத் விரஹ பரிதாபஹரமாக ஸஹ காரிகளுடன் பகவத் விஷய அவகாஹனம் பண்ண ஒருப்பட்டு –
ஸ்வ அபேக்ஷிதங்களை அத்தலையால் பெற்று வாழும் படியையும் சொல்லுகிறது-

தாம் தாம் ப்ரீதி விஷயங்களைப் பிரிந்தார்களுக்கு எல்லாம் இப்படி இறே பிரேம ஸ்வபாவம் இருப்பது –

ஸ்ரீ யபதியாய்-ஸ்ரீ வைகுண்ட நிகேதனாய் -சர்வ ஸ்மாத் பரனாய் -இருந்துள்ள சர்வேஸ்வரன் –
ஆஸ்ரித ரக்ஷண அர்த்தமாக –
ஸ்வ விபூதியில் சக்கரவர்த்தி திருமகனாய் வந்து அவதரித்துப் போந்து –
பிராட்டியைப் பிரிந்து-மெல்லியல் தோள் தோய்ந்து –

அநந்தரம் இப்படி அதி விலக்ஷணையாய்-
அத்யந்த அபிமதையான தத் விஷயத்தை லோக ரக்ஷண அர்த்தமாக விஸ்லேஷித்து-
உண்ணாது உறங்காது ஒலி கடலை ஊடறுத்து -என்னும்படி
பரி தப்த்தனாய-அந்த விரஹ தாபம் மாற்றலாமோ என்கிற அலமாப்பாலே
அரணவத்திலே அவகாஹிக்க நினைப்பது ஆனால் போலேயும் –

அவனைப் பின் தொடர்ந்து போந்த பரிவரான தம்பி பரதனும்
தயரதன் பெற்ற மரகத மணித் தடத்தைப் பிரிந்து –
கூடேக் நிரிவபாதபம் -என்னும் படி பரிதபித்து
சரயு ஆற்றிலே அவகாஹித்து ஒருப்பட்டு இருந்தால் போலேயும்

பின்னையும் மா மாயன் மாதவன் வைகுந்தன் வான் இளவரசு வைகுந்தக் குட்டன்
வா ஸூ தேவன் மதுரை மன்னன் நந்த கோபன் இளவரசு
கோவலர் குட்டன் -சூட்டு நன் மாலை தொடக்கமான -அங்குத்தை போகத்தை அநாதரித்து
அடலாயர் தம் கொம்பினுக்காக இங்கே போந்தால் போலே –

ஆண்டாளும் அந்த வைகுண்ட போகம் தன்னை இகழ்ந்து இங்கே ஏற
வேயர் தங்கள் குலத்திலே விஷ்ணு சித்தன் வியன் கோதையாய் வந்து அவதரித்து –
ஆயர் சிறுமியர் படியை அடைந்து –
ஆயர் குலத்தில் தோன்றினவனை மனதுக்கு இனிதாகப் பாடி கூடி இருந்த படியை
செய்ய வெண்ணப் போந்தவளாய் –
அப்பால் முதலாய் நின்ற அளப்பரிய ஆரமுது தொடக்கமான விஷயங்களை பிரிந்த தளர்த்தியாலே
இனவேல் நெடும் கண்கள் இமை பொருந்தாதே –
அவனில் எண் மடங்கான காமத் தீயுள் புகுந்து கதுவ-

அந்த விரஹ தாபம் ஆகிற பெரு நெருப்பை ஆற்றுகைக்கு ஆதரம் பெருத்து பெரும் புறக் கடல்
இப்புறத்திலே திருப் பாற் கடலாய் பொங்கி எங்கும் பரந்து
வெள்ளக் கால்களாய் பரந்து சுழித்துப் பெரு நீராக மதுர ஆறாகப் பெருகுகிற அம்ருதத்திலே
குள்ளக் குளிர குடைந்து நீராட ஒருப்பட்டு
பெருக்காற்றிலே இழிவார் துறை தப்பாமே துறை அறிந்த நிலவரோடே கூட இறங்க நிலைக்குமா போலே
இறங்க நினைக்கதாய் இருக்கும் இங்கும் –
அது எங்கனே என்னில் –

ஸ்ரீயபதியாய்-ஸ்ரீ வைகுண்ட நிகேதனாய் -நித்ய முக்த அநு பாவ்யனாய்-
சர்வ ஸ்மாத் பரனாய் இருந்துள்ள -சர்வேஸ்வரன் –
நாராயணனே -என்று அவன் பெரும் புறக் கடலாய் இருக்கிறபடியும் –

அநந்தரம் –
பாற் கடலுள் பையத் துயின்ற பரமன் -என்று பாற் கடல் போலேயான வ்யூஹத்தையும் –

ஓங்கி உலகு அளந்த உத்தமன் -என்று அது கால்களாய்ப் புறப்பட்டுப் பரந்து
பற்ப நாபன் -என்று சுழித்து –
தூய பெரு நீர் யமுனைத் துறைவன் -என்று பெருக்காறு போல விபவத்தையும் –

நாற்றத் துழாய் முடி நாராயணன் என்று
உள்ளே ஊற்று ஜலம் போலே அந்தர்யாமியாய் இருக்கும் படியையும்

புள்ளரையன் கோயில் -என்று நித்தியமான நீர்மையால் –
அதிலே தேங்கின மடுக்கள் -என்னலாம் படி ருசி ஜனக விபவ லாவண்யத்தோடே
எப்போதும் ஆஸ்ரயிக்கலாம் படி அர்ச்சாவதாரத்தையும் –

அத்யபி நிவேசத்தோடே இங்கே காண இப்பிறப்பே அநு பவிக்கக் கோலி-
அது அப்போதே அனுபவிக்கப் பெறாமையாலே –
வைகுந்தன் என்பதோர் தோனி பெறாதே உழல்கின்றேன் -என்றும்

பொங்கிய பாற் கடல் பள்ளி கொள்வானைப் புணர்வதோர் ஆசையினால் என் கொங்கை கிளர்ந்து
குமைந்து குதூகலித்து ஆவியை ஆகுலம் செய்யும் -என்றும்

விண்ணுற நீண்டு அடி தாவிய மைந்தனை வேல் கண் மடந்தை விரும்பி -என்றும்

பாஞ்ச சன்னியத்தை பற்ப நாபனோடு வாய்ந்த பெரும் சுற்றமாக்கிய -என்றும்

கொம்மை முலைகள் இடர் தீரக் கோவிந்தற்கோர் குற்றேவல் இம்மைப் பிறவி செய்யாதே இனிப்பு போய்ச் செய்யும் தவம் தான் என் -என்றும்

ஆவல் அன்புடையார் தம் மனத்து அன்றி மேவலன் -என்றும்

உலங்குண்ட விளங்கனி போல் உள் மெலியப் புகுந்து என்னை நலம் கொண்ட நாரணன் -என்றும்

பெண் கொடியை வதம் செய்தான் -என்றும் –

காமத் தீயுள் புகுந்து கதுவ -என்றும்

தீ முகத்து நாகணை மேல் சேரும் திருவரங்கர் ஆ முகத்தை நோக்காரேல்-என்றும் சொல்லுகிறபடியே
பரத்வாதி பஞ்ச அவஸ்தா வஸ்திதனாய்-
பஹு குணனாய் -தேச கால விப்ரகர்ஷ்யாதி உபாதியாலே
ஆஸ்ரயிப்பார்க்கு அசன்னிஹிதத் வாதிகளாலும்
ஆலோக ஆலபாத்ய அநனுபாவிகத்வத்தாலும்
எம்பெருமான் அரியனாய் இருக்கிற படியை தர்சித்து-

முற் காலத்தில் ஸ்ரீ கோபிமார் -கோபீ பரி வ்ருதோ ராத்ரிம் -என்று பூர்வ பக்ஷத்தில் பூர்வ ராத்திரியில்
அணி யாய்ச்சியர் சிந்தையுள் குழகனான கிருஷ்ணனோடு கழகமாக கூடி இருந்து –
ஒரு கார்யப் பாட்டிலே பிரிந்து போந்து அவனை விட்டு அகன்று
உயிர் ஆற்ற கில்லாதாப் போலே

யமுனை ஆற்றிலே மார்கழி நீராட -என்ற ஒரு வியாஜத்தாலே
ஸ்ரீ கிருஷ்ண அனுபவ குதூஹலத்தை யுடையராய்
அபர ராத்திரியிலே உணர்ந்து முற்பட்டார் பிற்பட்டாரை எழுப்பி –
எல்லாரும் திரண்டு நப்பின்னை பிராட்டி புருஷகாரமாக
கிருஷ்ணனை எழுப்பி
ஸ்வ லாபங்களை அர்த்தித்துப் பெற்று அனுபவித்தால் போலேயும்

சீர் மல்கும் ஆய்ப்பாடிக்கு சத்ருசமான ஸ்ரீ வில்லி புத்தூரிலும் –
ஸ்ரீ வைஷ்ணவ சந்தான ப்ரஸூதையான-ஆழ்வார் திரு மகளாரான ஆண்டாள்
ஸ்ரீ கிருஷ்ண அநு காரிகளான அவர்களை அநு கரித்து –

வேதம் வல்லார்களைக் கொண்டு விண்ணோர் பெருமான் திருப் பாதம் பணிந்து என்கிறபடியே –
வேதப் பயன் கொள்ள வல்ல விஷ்ணு சித்தன் சம்பந்தத்தாலே-
வேதம் அனைத்தைக்கும் வித்தான அர்த்தத்தைக் கொண்டு
பகவத் ருசி யுடையாரைக் கொண்டு –

பத்துப் பெண்களை எழுப்புகிற முகேன -பிரபன்ன ஜன கூடஸ்தரான பதின்மரை முன்னிட்டு
வேதப்  பொருளாய் – யமுனைத் துறைவன் -என்று
பேர் பெற்ற எம்பெருமான் திருவடிகளை பற்றும் அளவும் சொல்லுகிறார்கள் –
புள்ளும் தொடங்கி -எல்லே அளவும் –
தசமாந்த மாயே -என்றார் இறே தேசிகரும் –

இவர்கள் கிருஷ்ண அனுபவத்துக்கு தேசிகர் ஆகையாலும்-
பிராட்டியோடே சாம்ய குண ஷட்கத்தை யுடையவர் ஆகையாலும்
இவ் வனுபவத்துக்கு இவர்களைக் கூட்டிக் கொள்ளுகிறது –

இன்னமும் பகவத் விஷயத்தில் முற்பட்டார் பிற்பட்டாரையும் கூட்டிக் கொண்டு போக வேண்டும் –
பர ஸம்ருத்தியாலும் எழுப்புகிறார்கள் –

புஷ்ப்ப ராத்ரிஸ்து தத்ரைவ கங்கா கூலே ச ராகவ-ப்ராத காலயமுதாய சத்ருக்நமித மப்ரவீத் –
சத்ருக்நோத்திஷ்ட கிம் சேஷ நிஷாதாதிபதி மகுஹம் சீக்ரமா நயபத்ரந்தே தாரயிஷ்யதி வாஹி நீம் –
ஜாகர்மி நாஹம் ஸ்வபி மிதமேவார்யம் விசிந்தயன்-என்னக் கடவது இறே –

இங்கும் அப்படியே யாயிற்று –
ப்ரத்யக்ஷ அனுபவத்தால் அல்லது தரியாதார்
குண அனுபவத்தால் தரித்து இருப்பாரை த்வரித்து எழுப்புகிற படி

———————————

இதில் முதல் பாட்டில்
பிள்ளாய் எழுந்திராய் -என்று பிள்ளைப் பெண் என்கிறது பொய்கை ஆழ்வாரை –
அது எங்கனே என்னில் –

அரவம் அடல் வேழம்-இத்யாதியாலே
ஸ்ரீ கிருஷ்ண அனுபவத்துக்கு தேசிகர் ஆகையாலும்
சூடிக் கொடுத்த வடிவுக்கு –
வையம் தக்ளி இத்யாதி –
சுடர் ஆழியான் அடிக்கே சூட்டினேன் சொல் மாலை -என்றும்
மாலும் கரும் கடலே என்நோற்றாய் இத்யாதியாலே –
அவனுடைய அங்க சங்கத்தை ஆதரித்துப் பேசியும்

மணமருவ மால் விடை ஏழ் செற்று-என்று
நப்பின்னை பிராட்டியை பெறுகைக்கு எருதுகளின் மேல் வியாபாரித்த படியைப் பேசுகையாலும்

இதில்
பேய் முலை நஞ்சுண்டு -என்றத்தை –
பேய் முலை நஞ்சூணாக யுண்டான் -என்றும்

கள்ளச் சகடம் கலக்கழிய காலோச்சி -என்று
கன்னிப் போரான சிறுச் சேவகத்தை -ஓரடியும் சாடுதைத்த -என்றும் –

வெள்ளத் தரவில் துயில் அமர்ந்த வித்தினை -என்றத்தை
வெள்ளத்தில் உள்ளானும் இத்யாதியால் பேசியும்

ஒன்றும் அதனை உணரேன் நான் -என்றும் –
முந்துற முன்னம் பகவத் விஷயத்திலே இழிந்தவர் ஆகையாலும்
பிள்ளைப் பெண் என்கிறது -பொய்கை ஆழ்வாரை —

பிள்ளை -மௌக்த்யம்-என்றவாறு

————————————–

இரண்டாம் பாட்டில் –
பேய்ப் பெண் -என்கிறது –
பேயாழ்வாரை -அது எங்கனே என்னில்
திருக் கண்டேன் இத்யாதியாலே நாயகனுடைய வைபவத்தை தர்சிப்பிக்கையாலும்

மற்றும் ஸ்த்ரீத்வாபத்தியால் -வெற்பு என்று வேங்கடம் என்று தொடங்கி
நீண்ட தோள் மால் கிடந்த நீள் கடல் நீராடுவான் பூண்ட நாள் எல்லாம் புகும் என்கையாலும்

கோவலனாய் ஆ நிரைகள் மேய்த்துக் குழலூதி -என்று கிருஷ்ண சேஷ்டிதங்களைப் பேசுகையாலும்

பின்னைக்காய் எற்று உயிரை அட்டான்-என்று நப்பின்னைப் பிராட்டிக்காக
அவன் எருதுகளின் மேல் வியாபாரித்த படியை பேசுகையாலும்

பேய்ப் பெண்ணே -என்றது பேய் ஆழ்வாரை -என்றபடி –

—————————————————————-

மூன்றாம் பாட்டில் –
கோதுகலமுடைய பாவாய் -என்கிறது பூதத் தாழ்வாரை –
அது எங்கனே என்னில் –
ஸ்த்ரீத்வாபத்திக்கு உடலாக -அன்பே தகளியாக -இத்யாதியாலே பக்தியைப் பேசி –

பெரும் தமிழன் அல்லேன் பெரிது என்ற
அநந்தரம்

பெருகு மத வேழம் -என்று
அவனுடைய அதி மானுஷ சேஷ்டிதத்தையும் ஜாதி யுசித தர்மத்தையும் பேசியும்

ஏறின் பெருத்த எருத்தம் கோடு ஓசியப் பெண் நசையின் பின் போய் எறுத்து இருத்த நல்லாயர் ஏறு – என்று
நப்பின்னைப் பிராட்டியைப் பெறுகைக்கு எருதுகளின் மேலே அவன் வியாபாரித்த வியாபாரத்தைப் பேசியும்

இதில் தேவாதி தேவன் என்னப்படுவான்
முன்னொரு நாள் மாவாய் பிளந்த மகன் –என்றும்

மாலே நெடியோனே கண்ணனே விண்ணவர்க்கு மேலா வியான் துழாய்க் கண்ணியனே மேலா விளவின் காய் கன்றினால்
வீழ்த்தவனே என் தன் அளவன்றால் யானுடைய அன்பு என்று அருளிச் செய்கையாலும்

கோதுகலமுடையாய் பாவாய் என்றது பூதத் ஆழ்வாரை -என்றபடி –

மாதவன் பூதம் என்கிறது -கோதுகலமிறே –
ஆகையாலும் மாதவன் பேர் சொல்லுவதே ஒத்தின் சுருக்கு -என்றவர் இறே –

ஆக மூவரும் –
ஞான -தர்சன-ப்ராப்த்திய அவஸ்தைகளோடே கூடி யாயிற்று இருப்பது –

———————————————

நாலாம் பாட்டில் –
இவர்களுக்கு அநந்தரத்திலானவரை-திரு மழிசை ஆழ்வாரை
மாமன் மகளே -என்கிறது -அது எங்கனே என்னில் –

தாத்ரா துலிதா லகுர் மஹீ -என்றும் –
உலகு தன்னை வைத்து எடுத்த பக்கத்தும் மா நீர் மழிசையே வைத்து எடுத்த பக்கம் வலிது-என்னும்படி
மஹீ சார க்ஷேத்ரமான திரு மழிசையில் –

பார்க்கவோ தீர்க்க சத்ரேண வா ஸூ தேவம் ஸநாதனம் அபி பூஜ்ய யதா நியாயம் –என்கிறபடியே
ஸ்ரீ ஜெகந்நாதனை உத்தேசித்து யஜித்துக் கொண்டு இருக்கிற காலத்தில் –
பார்க்கவனுடைய பத்னி கர்ப்பிணியாய்
திரு மழிசைப் பிரானை திரு வயிறு வாய்த்ததாலே –
பார்க்க விலோக ஜநநீ-என்னும்படியான பிராட்டியோடே உடன் பிறந்த பார்க்க புத்திரர் ஆகையாலும்

காட்டில் வேங்கடம் இத்யாதி கூடுமாகில் நீ கூடிடு கூடிலே-என்கிறபடியே –
அழைப்பன் திரு வேங்கடத்தானைக் காண இழைப்பன்
திருக் கூடல் கூட -என்று ஸ்த்ரீத்வ பாவனையாகப் பேசுகையாலும் –

தூ மணி மாடத்து சுற்றும் விளக்கு எரிய-என்கிற ஞான தீப பிரகாசத்தை –
என் மதிக்கு விண் எல்லாம் உண்டோ விலை-என்றும்
ஞானமாகி நாயிறாகி-என்று பேசுகையாலும் —

ஆயன் துவரைக் கோனாய் நின்ற மாயன் -என்றும்
அடிச்சகடம் சாடி இத்யாதி வடிப்ப வளவாய்ப் பின்னை தோளிக்காய் வல் ஏற்று எருத்து இறுத்து -என்றும் –
ஆயனாகி ஆயர் மங்கை வேயர் தோள் விரும்பினாய் -என்றும்
பின்னை கேள்வ நின்னோடும் பூட்டி வைத்த வென்னை நின்னுள் நீக்கேல் என்றும்
ஸ்ரீ கிருஷ்ண சேஷ்டிதங்களையும் நப்பின்னை பிராட்டி புருஷகார வைபவத்தையும் சொல்லி

இதில் மா மாயன் மாதவன் வைகுந்தன் -என்றதை –
மாதவனை -என்றும் -வைகுந்தச் செல்வனார் என்றும் -பேசுகையாலே –

மாமன் மகளே என்கிறது திரு மழிசை பிரானை -என்றபடி –

பார்க்கவனும் பார்க்கவியும் பிருகுவுக்கு கியாதீயின் இடத்திலே ஸஹோதரராக சம்பவிக்கையாலும் –
லோக மாதாவுடன் பிறந்தவன் லோகத்துக்கு மாமனாக தட்டில்லை இறே-
அந்த பார்க்கவ புத்ரன் ஆகையால் இவரை மாமன் மகள் என்னைக் குறை இல்லை –

அன்றிக்கே
யசோதைப் பிராட்டிக்கு பின் பிறந்த ஸ்ரீ கும்பர் குமாரத்தியான நப்பின்னை பிராட்டி தரத்தை யுடையார்
ஒருவர் ஆகையால் மாமன் மகள் என்று சொல்லுகிறது ஆகவுமாம்

—————————————————–

அஞ்சாம் பாட்டில்
அம்மனாய் என்கிறது -குலசேகர பெருமாளை-அது எங்கனே என்னில் –
குலசேகரன் ஆகையாலும்

எல்லையில் அடிமைத் திறத்தினில் என்றும் மேவும் மனத்தனன் ஆகையாலும் –

அல்லிமலர் திரு மங்கை கேள்வன் தன்னை நயந்து
இள யாய்ச்சியார்கள் எல்லிப் பொழுதினில் ஏமத்தூடி எள்கி யுரைத்த யுரையதனை ஸ்த்ரீத்வ பாவனயா பேசுகையாலும்

ஏறு அடர்த்ததும் -என்றும்
ஆன் ஏறு ஏழ் வென்றான் அடிமைத் திறம் அல்லால் -என்று நப்பின்னை விஷயமாக வியாபாரித்த
வியாபாரத்தில் தோற்று-அடிமை அல்லது -என்கையாலும் –

ஆலை நீர் கரும்பன்னவன் -என்று தொடங்கி –
மல்லை மா நகருக்கு இறையவன் தன்னை வான் செலுத்தி என்னும் அளவும்
கிருஷ்ண சேஷ்டிதங்களைப் பேசி அனுபவிக்கையாலும் –

இதிலே நாற்றத் துழாய் முடி நாராயணன் என்றதை –
வண்டு கிண்டு நாறும் துழாய் மாலை உற்றவரை பெரும் திரு மார்வனை என்றும் –

அந் நாரணனை-நலம் திகழ் நாரணன் என்று பேசுகையாலும்

இவருக்கு அசல் உணர்த்தி அனுபவம் போலே
ஸ்ரீ ரெங்க யாத்திரையில் அனுபவம் நடந்து செல்லுகையாலே

பிரபன்ன குல சேகரரான குலசேகர பெருமாளை –
நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய் -என்கிறது என்கை –

————————————————————————–

ஆறாம் பாட்டில் –
கோவலர் தம் பொற் கொடியே-என்கிறது
பெரியாழ்வாரை -எங்கனே என்னில் –

சூடிக் கொடுத்த சுடர்க் கொடியான இவளை போல கோவலப் பட்டம் தவிக்கும் படி
கோப ஜென்மத்தை ஆஸ்தானம் பண்ணினவர் ஆகையாலும்

கன்னியரோடு எங்கள் நம்பி கரிய பிரான் விளையாட்டை -என்னும் படி –
கண்ணன் கேசவன் நம்பி பிறந்தினில் என்று தொடங்கி –
பண்டு அவன் செய்த க்ரீடை எல்லாம் என்கிறபடி
ஸ்ரீ கிருஷ்ண குண சேஷ்டிதம் பேசி அனுபவிக்கையாலும்

நப்பின்னை தன் திறமா நல் விடை ஏழு அவிய நல்ல திறலுடைய நாதனும் ஆனவனே -என்றும்
ஐய புழுதி -நல்லதோர் தாமரை -இவைகளில் திருத் தாயார் பேச்சாக பேசுகையாலும்

தழை களும் இத்யாதி அளவாய் கன்னிமார்கள் காமுற்ற மாற்றத்தைப் பேசுகையாலும்

இதிலே முகில் வண்ணன் -என்றத்தை —
விட்டு சித்தன் மனத்தைக் கோயில் கொண்ட கோவலனை கொழும் குளிர் முகில் வண்ணனை -என்கையாலும்

கோவலர் தம் பொற் கொடியே -என்கிறது பெரியாழ்வாரை –

————————————————————————–

ஏழாம் பாட்டில் –
நற் செல்வன் தங்காய் -என்கிறது
தொண்டர் அடிப் பொடி ஆழ்வாரை -அது எங்கனே என்னில் –

ஸ்த்ரீத்வத்வ அநு குணமாக -தம் பால் ஆதரம் பெருக வைத்த அழகன் -என்றும் –
உடல் எனக்கு உருகுமாலோ -என்றும் –
கண்ணனைக் கண்ட கண்கள் பனி யரும்பு உதிருமாலோ -என்றும் -தம்முடைய பக்தியைப் பேசுகையாலும் –

கற்றினம் மேய்த்த கழல் இணைக் கீழ் உற்ற திரு மாலைப் பாடுகையாலும் –

மலைக்கு அன்று வரை முன் ஏந்தும் மைந்தனே -என்று குன்று குடையாக எடுத்த படியைப் பேசுகையாலும்

கவள மால் யானை கொன்ற கண்ணனை என்கையாலும்

ஸ்ரீ மாலாகாரரைப் போலே செண்பக மல்லிகையோடு செங்கழு நீர் இருவாட்சி எண்பகர் பூவும் கொணர்ந்து சாற்ற-
அத்தால் வந்த கைங்கர்ய ஸ்ரீ யை யுடைய -பெரியாழ்வாருக்கு பிற்பாடராய்
அவர் கைங்கர்ய ஸ்ரீ யை அநு விதானம் பண்ணுகையாலே
அவருக்கு அநுஜர் என்னும் படியாய் –
திருப் பள்ளி உணர்த்துவதிலும் வந்தால் விஷ்ணு சித்த துளஸீ ப்ருத்யர் -என்று ஸஹ படிதர் ஆகையாலும்

நற் செல்வன் தங்காய் என்கிறது ஸ்ரீ தொண்டர் அடிப் பொடி ஆழ்வாரை -என்கை –

இவரும்-இதிலே -சினத்தினால் தென்னிலங்கை கோமானைச் செற்ற மனத்துக்கு இனியானை -என்றத்தை –
இலங்கையர் குலத்தை வாட்டிய வரி சிலை வானவர் ஏறே-என்றும்
செருவிலே அரக்கர் கோனைச் செற்ற நம் சேவகனார் -என்றும் -அருளிச் செய்தார் இறே –

——————————————————————

எட்டாம் பாட்டிலே –
போதரிக் கண்ணினாய் -என்கிறது
திருப் பாண் ஆழ்வாரை -அது எங்கனே என்னில் –

தொண்டர் அடிப் பொடியாரோபாதி –
அடியார்க்கு என்னை ஆட்படுத்த விமலன் -என்றும் –
எண் கண்ணின் உள்ளன -என்றும் –
கொண்டல் வண்ணன் கோவலனாய் என்று தொடங்கி -எண் அமுதினைக் கண்ட கண்கள் என்கையாலே
போதரிக் கண்ணினாய் -என்கிறது திருப் பாண் ஆழ்வாரை –

மெய்ம்மையை மிக உணர்ந்து -என்று ததீய சேஷத்வ பர்யந்தமான ஞானம் இறே ஞானமாவது

ததீயருக்கு உகப்பாகப் பண்ணும் பகவத் அனுபவம் இறே இவரது –

ஸ்த்ரீத்வ பாவனையில் யுண்டான பக்தி பத்தும் பத்தாக
அடி தொடங்கி முடி அளவுமாய் மேலாய் இருக்கும் –

இப் பாட்டில்
பொல்லா அரக்கனைக் கிள்ளிக் களைந்தானை -என்றத்தை –
இவரும் -சதிர மா மதிள் சூழ் இலங்கைக்கு இறைவன்
தலை பத்து உத்திர ஓட்டியோர் வெங்கணை உய்த்தவன் -என்றார் இறே –

————————————————————————–

ஒன்பதாம் பாட்டில் –
எங்களை முன்னம் எழுப்புவான் வாய் பேசும் நங்காய் -என்கிறது
நம்மாழ்வாரை -அது எங்கனே என்னில் –

திருமாலுக்கு உரிய தொண்டர் தொண்டர் தொண்டன் சடகோபன் என்னும் படியான சேஷத்வ பூர்த்தியை யுடையவராய் –
அவன் அடியராய் நனிமாக் கலவி இன்பமே நாளும் வாய்க்க நங்கட்கே -என்னும்படி
பாகவத ஸம்ருத்தியைக் காண்கையிலே-அபிவ்ருத்த மநோ ரதத்தை யுடையராய் –
அனயாப தேசத்திலும் -அடிச்சியோம் என்கையாலும் –

பின்னை கொல்-என்கிற ஒப்பனையாலும் –

சூட்டு நன் மாலைகள் -என்று தொடங்கி –
அடலாயர் தம் கொம்பினுக்கே -என்று நப்பின்னைப் பிராட்டிக்காக அவன் விடை யடர்த்த வியாபாரத்தை பேசியும் –

பின்னை நெடும் பணைத் தோள் மகிழ் பீடுடை முன்னை யமரர் முழு முதலான -என்றும்
என்னை நெகிழ்கிலும் என்னுடை நன்னெஞ்சம் தன்னை அகல்விக்கத் தானும் கில்லான் -என்றும் –
வேயின் மலி யுரை தோளி பின்னைக்கு மணாளனை -இத்யாதியாலும் –
வாள் கெண்டை ஒண் கண் மடப்பின்னை தன் கேள்வன் தாள் கண்டு கொண்டு என் தலை மேல் புனைந்தேன் –
ஆள்கின்றான் ஆழியான் ஆரால் குறைவுடையம் -என்றும் –
எருது ஏழ் தழி -என்றும் -சடையினார் -என்றும் -இத்யாதியாலே
பல படியாக அவள் புருஷகார வைபவத்தை ஆதரித்து –

மற்றும் எத்திறம் என்று பிறந்த வாற்றிலே கிருஷ்ண சேஷ்டிதங்களிலே ஈடுபட்டு

குரவை ஆய்ச்சியரிலே நண்ணி வணங்கி அனுபவித்தும்

எல்லாம் கண்ணன் -என்றும் –

நீராடப் போதுவீர்-என்றத்தை -கண்ணன் கழலிணை நண்ணும் மனமுடையீர் -என்கையாலும் –

மந்தாதிகாரிகளை -என் நெஞ்சால் நோக்கிக் காணீர்-என்று உணர்த்தியும் –

சகோதரிகளை உயிராகத் தேடி -இசைமின் என்று போதிக்கையாலும்-

நீராட -என்றத்தை -காலை நன் ஞானத் துறை படிந்தாடி -என்றும் –
அப்பன் திருவருள் மூழ்கினன் -என்கையாலும் –

இதில் நாணாதாய் என்றத்தை -நாணும் நிறைவும் எனக்கு இங்கு இல்லை -என்றும்

நா உடையாய் என்றத்தை -என் நா -என்றும் –
வலக்கை ஆழி இடக்கை சங்கம் இவை யுடை மால் வண்ணனை மலக்குடை நாவுடையேன் -என்கையாலே
எங்களை முன்னம் எழுப்புவான் வாய் பேசும் -என்கிறது நம்மாழ்வாரை –

இப்பாட்டில் –
சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக் கையன் பங்கயக் கண்ணானைப் பாட -என்றதையே
பங்கயக் கண்ணனையே -என்றும்-பங்கயக் கண்ணன் என்கோ-என்றும்
வீவில் சீரன் மலர்க கண்ணன் விண்ணோர் பெருமான் தன்னை வீவில் காலம் இசை மாலைகள் ஏத்தி -என்றும் பேசினார் இறே –

—————————————————–

பத்தாம் பாட்டில் –
எல்லே இளங்கிளியே என்கிறது –
திரு மங்கை ஆழ்வாரை-அது எங்கனே என்னில் –

அடிகள் அடியே நினையும் அடியவர்கள் தாம் அடியான் -என்று சேஷத்வத்தின் எல்லை நிலத்தில் நிற்கையாலும்

ஸ்த்ரீத்வத்வ அநு குணமாக பேராளன் பேரோதும் பெண்ணை என்றும்–
கடி மா மலர்ப் பாவை ஒப்பாள் என்றும்
லஷ்மீ சாம்யத்தை யுடையராய் இருக்கும் இருப்பை பேசுகையாலும்

பேராளன் பேரோதும் பெரியோரை ஒரு காலும் பிரிகிலேனே -என்றும் –
வண் சேறை எம்பெருமான் அடியார் தம்மைக் கண்டேனுக்கு–இது காணீர் என் நெஞ்சும் கண் இணையும் களிக்குமாறே -என்றும்
தத் அனுபவ தத் பரராய் தத் ப்ரீதி ஹேதுவாக –

ஆயர் பூம் கொடிக்கு இனவிடை பொருதவன் -என்றும் –
பின்னை பெறும் தம் கோலம் பெற்றார் -என்றும் –
பின்னை மணாளர் தம் திறத்தும் என்றும் –
அன்றாயர் குல மகளுக்கு அரையன் தன்னை -என்றும் –
நப்பின்னை பிராட்டி புருஷகாரத்தை அடியே தொடங்கி முடிய நடத்தியும் –

நீராடப் போதுவீர் -என்றத்தை –
பொற்றாமரைக் கயம் நீராடப் போனாள் என்றும் –

சந்த மலர்க குழல் –பூம் கோதை –
எங்கானும் -மானமுடைத்து-இத்யாதிகளிலே -கிருஷ்ண குண சேஷ்டிதங்களை மண்டி அநு பவித்து –

பண்டிவண் ஆயன் நங்காய் -என்று தொடங்கி –
அவன் பின் கெண்டை ஒண் கண் மிளிரக் கிளி போல் மிழற்றி நடந்து -என்றும்

மென் கிளி போல் மிக மிழற்றும் -என்கையாலும் –
இளம் கிளியே -என்கிறது திரு மங்கை ஆழ்வாரை –

வல்லே யுன் கட்டுரைகள் பண்டே உன் வாய் அறிதும் -என்னும் அது உண்டு இவருக்கும் –

இப் பாட்டில்
வல்லானை கொன்றானை என்கிற வித்தை
ஆவரிவை செய்து அறிவார் -இத்யாதியாலும்
கரி முனைந்த கைத்தலமும்-என்றும் அருளிச் செய்தார் –

—————————————————-

இப்படி யாயிற்று இப் பத்து பாட்டுக்கும்
குண சாம்யத்தாலும்-கௌரவ்யதையாலும்-பத்துப் பெண்களை எழுப்புகிற முகத்தால்
ஆழ்வார்கள் பதின்மரையும் கூட்டிக் கொண்டு
ஆழ்வார் திரு மகளார் அனுசந்திக்கிறதாக அறுதி இட்டார்கள் –

இப்படி பக்தராய் முக்தராய் இருப்பார் ஆழ்வார்கள் –
அநந்தரம்
நித்ய கைங்கர்ய நிரதரான நித்யரையும் –
நித்ய அநபாயினியான பிராட்டியையும் உணர்த்தி
இவர்களை முன்னிட்டு
நித்ய முக்த அநு பாவ்யானான எம்பெருமானைப் பற்றும் படி சொல்லுகிறது –
நாயகன் -தொடங்கி -அஞ்சு பாட்டாலே –

ஜன பத சரி தந்த ரீப புஷ்யத்புர பரிபாலன நித்யஜா கருகான் ப்ரஹரண பரவார வாஹனாட்யான்
குமுதா முகான் சுண் நாய கான்னமாமி -என்றும்

ஸ்மேரா நநாஷீ கமலைர் நமத-புனா நாந்தம் ஷ்ட்ராகதா ப்ருகுடீ பிர்த்விஷ தோது நாநான் சண்டை ப்ரசண்ட
முகத ப்ரணமாமி ரங்கத்வாரா வளீஷூ சத ந்ருஷ்வதிகார பாஜ -என்றும் –

சே நான்ய மன்ய விமுகாஸ் தம சிஸ்ரயாம -என்றும் –

ஸைன்ய துரீண பிராண ஸஹாயம் ஸூத்ரவதீ மாஸிஸ்ர யமம்பாம் -என்றும்

நம ஸ்ரீ ரெங்கே நாயக்யை யத் ப்ருவிப்ரம பேதத ஈசேசிதவ்ய வைஷமய நிம்னோன்னதமிதம் ஜகத் என்றும்

ஸ்ரீ ஸ்தநாபரணம் தேஜஸ் ஸ்ரீ ரெங்கேசயம் ஆஸ்ரயே சிந்தாமணி மிவோத் பாந்தமுத் சங்கே நந்த போகின -என்றும் சொல்லுகிறபடி

வைகுந்தத்து அமரரான கோயில் கொள் தெய்வங்களையும்
வானவர்களையும்
தேவியர்களையும்
அயர்வறும் அமரர்கள் அதிபதியை
ஆயிரம் முகத்தினால் காப்பாருடை தயா வதாரமானவரையும் –
அவர்களையும் அதி சங்கை பண்ணி நெருங்க அனைத்துக் கொண்டு
கிடக்குமவர்களையும் எழுப்பி
அவர்களுடனே எம்பெருமான் திருவடிகளில் சென்று கிட்டி அபேக்ஷிதங்களை ஆர்த்திக்கும் படி சொல்லுகிறது

ஸ்ரீ யை நம –
ஸ்ரீ தராய நம -என்று இறே க்ரமம் இருப்பது –

உள்ளத்துக்கு கொண்டு முனிவர்களும் யோகிகளும் -என்றதிலே
முமுஷுக்களாய் முக்தரோடு சாம்யம் பெற்ற
நாத முனிகள்
யாமுன யோகி
யதி வராதிகளும் ஸூசித்தர் –
இது குரு பரம்பரையின் அடைவு –

ஆறாயிரப்படியில் -நாயனார் –
பெறுகைக்குப் புறப்படுகிற திரளை
பெற்று அனுபவிக்கிற ஸ்ரீ நந்தகோபர் தொடக்கமானவரை எழுப்புகிறார்கள் –
அவர்கள் முன்னாக கிருஷ்ணனைப் பெற வேண்டுகையாலே –
அதாவது
வேதம் வல்லார்களைக் கொண்டு விண்ணோர் பெருமானை திருப் பாதம் பணிகை இறே –

நல் ஞானத் துறை படிந்தாடி -என்னுமா போலே –

நல் ஞானம் ஆகிறது -ப்ராப்ய ப்ராபகங்கள் இரண்டும் அவனே என்று இருக்கை-
விஞ்ஞானம் யதீதம் பிராப்தம் –என்னுமா போலே —

துறையாவது முறை தப்பாமல் குரு பரம்பரை வழியே பற்றுகை –

த்வய நிஷ்டருக்கு குரு பரம்பரையே பிரதானமாகக் கடவது –
துறை தப்பாதார் ஸ்ரீ விபீஷண ஆழ்வான் போல்வார் –

வேதம் வல்லார்கள் என்றவிடத்து
குரு பரம்பரையை நினைத்து –
கீழ் பத்துப் பட்டாலும் அனுஷ்ட்டித்தார்கள் –

விண்ணோர் பெருமானில்-விண்ணோர் என்கிறது –
த்வார பாலர்கள் தொடக்கமான திவ்ய மஹிஷிகளாய் உள்ளவர்கள் -என்றபடி –

இந்த யோஜனைகள் எல்லாம் –
விஷ்ணு சித்தர் தங்கள் தேவரை வல்ல பரிசு வருவிப்பரேல் அது காண்டுமே -என்று அருளிச் செய்யும்
ஆச்சார்ய அபிமான நிஷ்டையான ஆழ்வார் திரு மகளார் படிக்கு சேரும் இறே –

பாலேய் தமிழர் இசைகாரர் பத்தர் என்கிற இடத்து
குண சமயத்தாலே யோஜித்த படியாகக் கடவது இங்கும் –

———————————————————————

இனி த்வய யோஜகையில்-
அர்த்த விஷயமாக மெய்ப்பொருளை இறே விசதம் ஆக்கிற்று –

இரண்டு அர்த்தத்தையும் புலம் ஐந்தும் மேயும் -என்று உபதேசிக்கக் கேட்டவர்கள்-
அனுஷ்டானமாக திருப்பாவையில் –
தாயே தந்தையிலும் –
ஸ்தோத்ர கத்யங்களிலும் த்வயத்தின் அடைவு காணும் படி எங்கனே என்னில் –

முதல் பாட்டில் –
நாராயணனே நமக்கே பறை தருவான் -என்ற
ப்ராப்ய ப்ராபகங்கள் இரண்டையும்-
கறவைகள் பின் சென்றிலும்-
சிற்றம் சிறு காலையிலும் க்ரமத்திலே வெளியிடுகிறது –

நடுவடைய யுண்டானவை இரண்டு அர்த்தத்துக்கும் உபபாதங்களாய் இருக்கும் ஆகையால்
த்வயத்தின் அடைவு க்ரமமாகக் காணலாம் என்றபடி –

நாராயணனே நமக்கே பறை தருவான் -என்று
திரு மந்திரத்தில் பத த்ரயத்திலும் ப்ரதிபாதிக்கிற
ஸ்வரூப
உபாய
புருஷார்த்தங்கள் மூன்றும்
ஒவ் ஒன்றே பத்துப் பாட்டாய் பரவும் படி திருப்பாவை முப்பது பாட்டாக பாடி அருளிற்று –

திருமந்திரத்தில் ஸ்வரூப அனுரூபமாக நிஷ் கர்ஷித்த
ப்ராப்ய ப்ராபகங்கள் இறே த்வயத்தில் விசதமாக அனுசந்திக்கிறது –
அந்த க்ரமத்திலே யாயிற்று இங்கும் அனுசந்திக்கிறது –

இனி மேல் குரு பரம்பரா பூர்வகமாக த்வயத்தின் அடைவு சொல்லுகிறது –

நப்பின்னை நங்காய் திருவே -என்கையாலே -ஸ்ரீ சப்தார்த்தமும் –

உன் மணாளனை என்கையாலே -ஸ்ரிங் சேவாயாம் -என்கிற தாத்வர்த்தமும்-

நப்பின்னை கொங்கை மேல் வைத்துக் கிடந்த மலர்மார்பா -என்றும் –

நீ உன் மணாளனை எத்தனை போதும் துயில் எழ ஒட்டாய் காண் எத்தனையேலும் பிரிவாற்ற கில்லாயால் -என்கையால் –
வாத்சல்யாதி குண பிரகாசகமான நாராயண பதத்தில் அர்த்தமும் –

பாற் கடலுள் பையத் துயின்ற பரமன் அடி என்றும் –
ஓங்கி உலகளந்த -அம்பரம் ஊடறுத்து ஓங்கி உலகு அளந்த -அன்று இவ்வுலகம் அளந்தாய் -என்றும் –
லோக விக்ராந்த சரணங்களாய்
நாராயணன் த்ரிவிக்ரமன் அடியான உலகு அளந்த மெல்லடியை -உன் பொற்றாமரை அடி -என்றும் –
சரண -சப்தார்த்தமும் –

கார் மேனிச் செங்கண் கதிர் மதியம் போல் முகத்தான் –
ஊழி முதல்வன் உருவம் போல் –முகில் வண்ணன் -சங்கோடு சக்கரம் ஏந்தும்
தடக் கையன் பங்கயக் கண்ணன் -என்றதில் விக்ரஹ யோகத்தையும்

முத்துத் திரைக் கடல் சேர்ப்பன் -என்னும் படி சம்சாரி திரிந்த இடத்தில் வந்து கிடக்கிற
பாற் கடல் பையத் துயின்ற பரமன் என்கையாலே ஸ்வாமித்வமும்

ஓங்கி உலகு அளந்த உத்தமன் -என்கையாலே எல்லார் தலையிலும் திருவடிகளை வைத்த ஸுலப்யமும்-

மாயனை என்று தொடங்கி தாமோதரன் அளவும் -கட்டவும் அடிக்கவும் ஆம்படியான ஸுசீல்யமும் –

குறை ஒன்றும் இல்லா கோவிந்தா என்று கல்யாண குண விசிஷ்ட வஸ்துவான உபாய பூர்த்தியையும்

அறிவு ஒன்றும் இல்லா ஆய்க்குலம் -அறியாத பிள்ளைகளோம்-என்கையாலே அதிகாரி ஸ்வரூபமான ஆகிஞ்சன்யமும் –

தூயோமாய் வந்து நாம் தூய் மலர்கள் தூவித் தொழுது வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கப் போய பிழையும்
புகு தருவான் நின்றனவும் தீயினில் தூசாகும் -என்றும் –

வந்து தலைப் பெய்தோம் -என்றும் –
உன்னை அருத்தித்து வந்தோம் -என்றும் -அநிஷ்ட நிவ்ருத்திக்கும் இஷ்ட ப்ராப்திக்கும்
தப்பாத உபாயமாக ஸ்வீகரிக்கும் உபாய வரணத்தையும் –

ஆவாவென்று ஆராய்ந்து அருள் –
அங்கண் இரண்டும் கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல் –
இறைவா நீ தாராய் பறை -என்று
அவனுடைய பரகத ஸ்வீகாரத்தின் ஏற்றத்தையும் –

குத்து விளக்கு எரியக் கோட்டுக்கு கால் காட்டில் மேல் -இத்யாதியிலே பர்யங்க வித்யையில் படியே இருவருமாய்
எழுந்து அருளி இருக்கிற சேர்த்தியான வேஷத்தை –
நாற்றத் துழாய் முடி நாராயணன் -என்கையாலும் –
தேவாதி தேவன் என்கையாலும் -உம்பர் கோமானே -என்கையாலும்
இறைவா நீ என்கையாலும் -உத்தர வாக்ய நாராயண பதத்தில் ப்ரதிபாதிக்கிற சேஷித்வமும் –

தட்டொளியும் தந்து உன் மணாளனை -என்கையாலும் –
இப்போதே எம்மை நீராட்டு -என்கையாலும் –
பூ வளரும் திருமகளால் அருள் பெற்று வரும் படியும் –

போற்றி யாம் வந்தோம் புகழ்ந்து -என்றும் –
பள்ளிக் கட்டில் கீழே -என்றும்
சீரிய சிங்காசனத்து இருந்து -என்றும் –
அன்று இவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி -என்றும் –
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்து -என்றும்
மாலே ஆலினிலையாய் அருளாய் -என்றும் –
கூடி இருந்து குளிர்ந்து என்றும் –
நீ தாராய் பறை -என்றும்

சிற்றம் சிறு காலே வந்துன்னைச் சேவித்து -என்று தொடங்கி –
உனக்கே நாம் ஆட் செய்வோம் மற்றை நம் காமங்கள் மாற்று -என்கையாலே
உத்தர சதுர்த்தியில்
கைங்கர்ய உபகரண ஸஹிதமான பல அனுபவ கைங்கர்ய பரம்பரைகளையும் –
கைங்கர்ய பிரார்த்தனையும் –
அவற்றில் களை அறுப்பையையும் –
செல்வத் திருமாலால் எங்கும் திருவருள் பெற்று -என்கையால்
த்வயத்தில் பெரிய பிராட்டியாராலே என்றமதும் சொல்லித் தலைக் கட்டிற்று –

மாதவன் என்று த்வயம் ஆக்கினால் போலே –
மாதவனே என்றும் –
மாதவனை என்றும் இறே -இங்கு இரட்டித்து இருப்பது –

செல்வத் திருமாலால் -என்றும் –
பட்டர் பிரான் கோதை சொன்ன -என்கையாலே இவ்வர்த்தம்
ஆச்சார்ய ருசி பரிக்ருஹீதம் -என்னும் இடம் சொல்லிற்று –

இப்படி குரு பரம்பரா பூர்வகமான த்வயத்தாலே
பேறாக ப்ரதிபாதிக்கிறதாய் இறே திருப்பாவை தான் இருப்பது –

ஆக விறே இதுக்கு வர்த்தகரான உடையவரும்
இத்தை நாள் தோறும் ஆதரித்திக் கொண்டு போந்து அருளிற்று –

ஆகையால் இது ஆண்டாள் அடியாராக யாவர்க்கும் நித்ய அனுசந்தேயமாக நடந்து போருகிறது-

கோப ஸ்த்ரீ குலமதி கோதாய உபதிஷ்ட்டம் க்ருஷ்ணாக்யம் பிரணவம் இவ அதிகாரி ஜப்யம்
தத்ரிம்சத் பரி மித பத்ய மார்க்க சீர்ஷ ப்ராப்தோத் சவ சமயோசிதம் பிரசித்தம் –

எட்டு எழுத்தின் இணைப் பொருளும் இரண்டதனில் பொருளும் இயல் வலித் தேர் அர்ச்சுனனுக்கு இறைவர் தம்மை
தொட்டு உரைத்த மறை அறுதிப் பொருளை எல்லாம் தோன்றும் வகைப் புகழ் வரை துடர் வளைந்து பாட
மட்டவிழும் பொழில் புடை சூழ் முடும்பை வேந்தன் மணாளன் தணவாத மாயன்
கட்டுரையே புதுவையர் கோன் கோதை சொன்ன கவி பாடல் பொருள் தெரியக் காட்டினானே

———————————————————————

திருப்பாவை முப்பது பாட்டுக்கும் முதல் பாட்டு சங்க்ரஹமாய் இருக்கும் –
எங்கனே என்னில் –

ஸ்ரீ பாஷ்யம் ஒன்பதினாயிரம் கிரந்தத்துக்கும் முதல் ஸ்லோகம் சங்க்ரஹமானால் போலேயும்
ஸ்ரீ மஹா பாராதம் -125000–கிரந்தத்துக்கும் முதல் அத்யாயம் சங்க்ரஹமானால் போலேயும்
திருவாய் மொழிக்கு முதல் திருவாய்மொழி சங்க்ரஹமானால் போலேயும்
முதல் திருவாய் மொழிக்கு முதல் பாட்டு சங்க்ரஹமானால் போலேயும்
மந்த்ர சேஷத்துக்கு பிரணவம் சங்க்ரஹமானால் போலேயும்
முப்பது பாட்டுக்கும் முதல் பாட்டு சங்க்ரஹமாயே இருக்கும் –

சங்க்ரஹமான படி எங்கனே என்னில்

மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால் -என்ற இடத்தால்
முதல் ஐஞ்சு பாட்டுக்கள் சங்க்ரஹம் சொல்லிற்று –

நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர் சீர் மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள் -என்கிற இடத்தில்
பத்துப் பெண்களை எழுப்புகிற இடத்துக்கு சங்க்ரஹம் சொல்லிற்று –

கூர் வேல் கொடும் தொழிலன் -என்று –
கோயில் காப்பானே -என்கிற இடத்துக்கு சங்க்ரஹம் சொல்லிற்று –

நந்த கோபன் என்று –
நாயகனாய் நின்ற நந்தகோபன் -என்றும் –
ஓடாத தோள் வலியன் நந்த கோபாலன் என்கிற இடங்களுக்கு சங்க்ரஹம் சொல்லிற்று –

குமரன் -என்றதால் –
மாற்றாதே பால் சொரியும் வள்ளல் பெறும் பசுக்கள் ஆற்றப் படைத்தான் மகனே -என்கிற
இடத்துக்கு சங்க்ரஹம் சொல்லிற்று –

கார் மேனி -என்று
முகில் வண்ணன் -என்றும் –
பூவைப் பூ வண்ணா -என்றும் –
மாயன் மணி வண்ணன் -என்றும்
மாலே மணி வண்ணா -என்றும் இடங்களுக்கு சங்க்ரஹம் சொல்லிற்று –

செங்கண் -என்று
கிண்கிணி வாய்ச செய்த தாமரைப் பூ போலே செங்கண் சிறிச் சிறிதே எம்மேல் விழியாவோ என்றும்
அங்கண் இரண்டும் கொண்டு -என்றும் –
பங்கயக் கண்ணன் -என்றும்
செங்கண் திருமுகம் -என்கிற இடங்களுக்கு சங்க்ரஹம் சொல்லிற்று –

கதிர் மதியம் போல் முகத்தான் -என்று –
திங்களும் ஆதித்யனும் சேர்ந்தால் போல் என்றும் –
உலகினில் தோற்றமாய் நின்ற சுடரே -என்னும் இடங்களுக்கு சங்க்ரஹமாகச் சொல்லிற்று –

நாராயணன் -என்று –
நாராயணன் மூர்த்தி கேசவன் -என்றும் –
நாற்றத் துழாய் முடி நாராயணன் -என்றும்
ஓங்கி உலகு அளந்த உத்தமன் -என்றும் –
மா மாயன் மாதவன் வைகுந்தன் -என்றும் –
முகில் வண்ணன் பேர் பாட -என்றும்
சிறு பேர் அழைத்தனவும் சீறி அருளாதே -என்றும் –
வங்கக் கடல் கடைந்த மாதவன் -என்னும் இடங்களுக்கு சங்க்ரஹம்

நமக்கே பறை தருவான் -என்பதால் –
பாடிப் பறை கொண்டு -என்றும் –
நம்மால் போற்றப் பறை தரும் என்றும் –
இற்றைப் பறை கொள்வான் என்றும் –
அறை பறை -என்றும் –
சாலப் பெரும் பறை -என்றும் –
அருத்தித்து வந்தோம் பறை தருதியாகில் -என்றும் –
இறைவா நீ தாராய் பறை என்றும் –
அங்கு அப்பறை கொண்ட வாற்றை என்னும் இடங்களுக்கு சங்க்ரஹம்

பாரோர் புகழ -என்று –
நாடு புகழும் -எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் என்னும் இடங்களுக்கு சங்க்ரஹம் –

ஏலோர் எம்பாவாய் -என்று
முப்பது பாட்டிலும் சொல்லும் ஏலோர் எம்பாவாய்க்கு சங்க்ரஹம் –

————————————————————————–

இப்பாட்டில் காலத்தைக் கொண்டாட நின்று கொண்டு பிரபந்த தாத்பர்யமான
ப்ராப்ய ப்ராபகங்களை சொல்லுகிறது –

அதிகாரி ஸ்வாபதேசம் –

இந்த ஸ்வாபதேசத்தில் –
முதல் ஐஞ்சு பட்டாலும் –
பிரபந்த நிஷ்டா க்ரமங்களையும் –
பிரபத்தி வாசகமான திரு நாம வைபவத்தையும் பேசுகிறது –

அதில் முதல் பாட்டில்
பிரபன்ன அதிகாரிக்கு -ச ஏஷ தேச கால -என்கிறபடியே
தேச காலம் எல்லாம் அவனுடைய கடாக்ஷத்தாலே ப்ராப்யம் என்னுமத்தையும் –

கரமாந்தர பரித்யாகத்தையும் –

பகவத் விஷயங்களில் ருசி விசுவாசங்களினுடைய பிரதான்யத்தையும் –

ப்ராப்ய ப்ராபகங்கள் இரண்டும் சர்வ ஸ்வாமியான நாராயணனே என்றத்தையும்

ஏவ காரத்தால் தேவதாந்த்ர ராஹித்யத்தையும் –

பிரயோஜனாந்தர ராஹித்யத்தையும் –

அநந்ய பிரயோஜனத்தையும் –
த்ரிபாத் விபூதி நாயகனான சர்வேஸ்வரன் தங்களுக்கு அபேக்ஷிதா விதானம் பண்ணுவான் என்று
நிரபரத்வ அனுசந்தானத்தையும்

சர்வ ஜன ஸூ ஹ்ருதத்வத்தையும் –

இப்படி நிஷ்டா க்ரமங்களையும் பிரபத்தி வாசகமான திரு நாமத்தையும் சொல்லுகையாலே
அதிகாரி ஸ்வரூபம் சொல்லிற்று யாயிற்று –

நாராயணனே நமக்கே பறை தருவான் -என்கையாலே
திருமந்திரத்தில் பத த்ரயத்தாலும் பிரதிபாதிக்கிற –
ஸ்வரூப
உபாய
புருஷார்த்தங்கள் மூன்றும் சொல்லுகிறது –

ஆகையால் இப்பாட்டு
திருமந்த்ரத்துக்கு சங்க்ரஹம் என்றதாயிற்று –
இப்பாட்டில் பரத்வம் ஸூசிப்பிக்கிறது –

———

இரண்டாம் பாட்டில்
நோன்புக்கு பெண்கள் தங்கள் செய்யக் கடவ க்ருத்யத்தை நியமிக்கிற முகத்தாலே-
இவ்விஷயத்தில் இழிவாருடைய விரக்தியையும்
சம்பாவித ஸ்வபாவத்தையும் சொல்லுகிறது
என்ற ஒரு ஸ்வாபதேசம் –

இப் பாட்டில்
இந்த பிரபன்ன அதிகாரிக்கு சம்பாவிதமான நிஷ்டா க்ரமங்களையும்
பிரபத்தி வாசகமான திரு நாம வைபவத்தையும் சொல்லுகிறது —
எங்கனே என்னில் –

ஸ்ரீ வைகுண்ட நிகேதனனாய் இருக்கிற சர்வேஸ்வரன் –
தேயே சதம் இத்யனுக்ரமாத் -என்று
யாதோ வாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மனஸா ஸஹ -என்கிறபடியே –
ஆஸ்ரிதர்கள் வந்து ஒரு விண்ணப்பம் செய்வதற்கு அங்கு அவசரம் இல்லாமையால் –

ஒரு பயணம் எடுத்து ஷீர சாகரத்தில் திரு வனந்த ஆழ்வான் மேலே
ஜகத் ரக்ஷண சிந்தனையாலே சாய்ந்து அருளி –
ஆஸ்ரிதற்கு யாராலே யாருக்கு என்ன தீங்கு வருகிறதோ என்று அந்த யுரைக்கு செவி கொடுத்து
கண் வளருகிறதாக நினைத்து இருக்கையும் –

சகல சேதன உஜ்ஜீவனமான த்வயத்தை பெரிய பிராட்டியாருக்கு உபதேசம் பண்ணுகிற
ஷீராப்தி நாதனுடைய திருவடிகளை வாயாலே சங்கீர்த்தனம் சதா பண்ணுகையும் –
ஆகையால் பிரபன்னனுக்கு த்வய அனுசந்தானம் சதா பண்ண வேணும் என்று தாத்பர்யம் –

அந்த ரசானுபவம் பண்ணுகிறவரைக்கும் இதர விஷயங்களில்
தவாம்ருதஸ் யந்தினிபாத பங்கஜே நிவேசி தாத்மாக தமன்யதிச்சதி-என்கிறபடி –
போக்யமான மது சக்கர ஷீரா ததி க்ருதாதிகளிலும் நைரபேஷயத்தையும்-

த்ரிவிக்ரமத் வச்சரணாம் புஜ த்வயம் மதீய மூர்த்தாந மலங்கரிஷ்யதி–என்கிறபடியே
அவன் திருவடிகளை சர்வ அலங்காரமாகப் பற்றுகையும்

அது ஒழிய ஸ்ரக் சந்தன வஸ்த்ராத்யா பரணங்களை நிஷேதித்தமையும்-
அவனுக்கு சேஷமாய் இருக்கிற சகல வஸ்து விஷயங்களில்
ஜாதி பேதத்தாலே அபோக்யமாய் இருக்கச் செய்தேயும் பரம போக்யத்தால் ஸ்வீகரிக்கையும்-

யதா சக்தி பாகவதருக்கு நித்ய ததீயாராதனம் பண்ணி பகவத் அனுபவம் பண்ணுவித்து –
ஒன்றும் செய்யப் பெற்றிலோம் -என்று இருக்கையும்

இப்படி அதிகாரி நிஷ்டா க்ரமம் சொல்லுகிறது –
இரண்டாம் பாட்டில் வ்யூஹம் சொல்லுகிறது –

———

மூன்றாம் பாட்டில்
நோன்பில் இழியவே-தாத் பலமான சம்ருதிகள் அடைய உண்டாம் -என்கிறார்கள் –
இத்தால்
பகவத் ஸமாச்ரயண பலமான கைங்கர்யம் ஒழிய
வேறே -ஆயுராசாஸ்தே -என்கிறபடியே
ஐஹிக பலங்களும் ஆனு ஷங்கிக சித்தமாய்க் கொண்டு சித்திக்கும் என்கிறது –

—————

நாலாம் பாட்டில் –
வர்ஷ தேவதையைக் குறித்து வர்ஷிக்கும் படியை நியமிக்கிறார்கள்-
இத்தால்
அநந்ய பிரயோஜனராய் பகவத் ஸமாச்ரயணம் பண்ணுமவர்க்கு
இந்திராதி தேவதைகளும் நியாமியர் ஆவார்கள் என்று இவ்வதிகாரியினுடைய உத்கர்ஷம் சொல்லுகிறது –
சர்வேஸ்மை தேவா பலிமா வஹந்தி-என்னக் கடவது இறே

————-

அஞ்சாம் பாட்டில் –
ஸ்ரேயாம் சிபஹூவிக்நானி -என்கிறபடி
நோன்புக்கு விக்னங்கள் சம்பவியாதோ என்னில் –
மநோ வாக் காயங்களாலே கிருஷ்ணனையே அனுசந்திக்க அவை போம் -என்கிறார்கள் –

இத்தால்
பகவத் குண அனுபவம் பண்ணுமவனுக்கு
உத்தர பூர்வாக யோரச் லேக்ஷவிநாசவ்-என்கிறபடியே
பகவத் அனுபவ மஹாத்ம்யத்தாலே சகல துரிதங்களும் போம் என்கிறது –

————–

ஆக இவ் வைந்து பட்டாலும் –
நாராயணனே -என்றும் –
பாற் கடலுள் பையத் துயின்ற பரமன் -என்றும் –
ஓங்கி உலகு அளந்த உத்தமன் -என்றும்
மாயனை வடமதுரை மைந்தனை -என்றும் சொல்லுகையாலே கிருஷ்ணனுடைய அடிப்பாடு சொல்லுகிறது –

இதுக்கு மேல் பத்துப் பாட்டும்
முற்பட்டவர்கள் பிற்பட்டவர்களை எழுப்பிச் செல்லுகிறது –

இத்தால்
பகவத் விஷயம் அபரிச்சின்னமாய் –
தனி அனுபவிக்க ஒண்ணாமையாலே பெருக்காற்றிலே இழிவார் துணை கொண்டு இழியுமா போலேயும்
ஏக ஸ்வாது நபுஞ்சீத-என்று தனி அனுபவிக்க மாட்டாத சாபல்யத்தாலும் பகவத் அனுபவம் பண்ணுவார்க்கு
தொண்டீர் எல்லீரும் வாரீர் -என்கிறபடி
துணை தேட்டமாய் இருக்கும் என்னும் இவ்வர்த்தத்தைச் சொல்லுகிறது –

————-

இதில் முதல் பாட்டில் –
கிருஷ்ண அனுபவத்தில் புதியளாய் இருப்பாள் ஒருத்தியை எழுப்புகிறாள் –
இத்தால்
பகவத் ஏக போக்யரான ஸ்ரீ வைஷ்ணவர்கள் அநந்ய பிரயோஜனராய்
இவ்விஷயத்தில் தேசிகர் அன்றிக்கே இருப்பாரை அவர்கள் பக்கல்
பரிவாலே தேசிகர் ஆக்குகைக்கு தங்களுக்கு கிருத்யம் என்று இருக்கை ஸ்ரீ வைஷ்ணத்வம்
என்கிற ஸ்வபாவத்தைச் சொல்லுகிறது –

———

இரண்டாம் பாட்டில் –
கிருஷ்ண அனுபவத்தை தேசிகையாய் -இவ்வனுபவத்தை ஸ்மரித்துக் கிடக்கிறாள் ஒருத்தி எழுப்புகிறார்கள் –
இத்தால்
பகவத் விஷயத்தில் ஞாதமான அர்த்தம் ஒருவனுக்கு விஸ்ம்ருதமானால் தங்கள் பரிவாலே
போதயந்த பரஸ்பரம் -என்கிறபடி அறிவிக்கை
ஸ்ரீ வைஷ்ணவர் ஆனார்க்கு ஸ்வரூபம் என்கிறது –

————-

மூன்றாம் பாட்டில் –
கிருஷ்ணனால் கொண்டாடப்படும் ஏற்றம் உடையவளை எழுப்புகிறார்கள் –
இத்தால்
பகவத் அனுபவத்தில் ப்ரத்யாசன்னராய் இருப்பார் இடத்தில் சா பேஷாராய் இருக்கையும் –
அவர்களை முன்னிட்டு ஈஸ்வரனை கிட்டுக்கையும்
ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு ஸ்வரூபம் என்கிறது –

———-

நாலாம் பாட்டில் –
கிருஷ்ணன் வந்த போது வருகிறான் -என்று நிர்ப்பரரையாய்க் கொண்டு கிடக்கும் அவளை எழுப்புகிறார்கள் –
இத்தால்
தத் தஸ்ய சத்ருசம் பவேத் – என்று
பூர்வார்த்த நிஷ்டராய் இருப்பாரை பகவத் பிரேமாதிசயத்தாலே
தத் ஏக போகராய் இருக்குமவர்கள் போகார்த்தமாக ப்ரேரிக்கை
ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு ஸ்வரூபம் என்கிற அர்த்தம் சொல்லுகிறது –

————–

அஞ்சாம் பாட்டில் –
பெண்கள் எல்லாம் -கிருஷ்ணன் -என்றால் படும் பாட்டை –
அவன் தான் தண்ணீர் தண்ணீர் என்னும் படியாய் இருப்பாள் ஒருத்தியை எழுப்புகிறார்கள் –
இத்தால்
ஞானீத் வாத்மைவ மே மதம் –
அஹம் ச சம ப்ரிய -என்றும் அவன் பக்ஷத்தில் இருப்பார் திறத்தில்
ஸ்ரீ வைஷ்ணவர்கள் நித்ய சா பேஷராய் இருக்கை ஸ்வரூபம் என்னும் இவ்வர்த்தம் சொல்லுகிறது –

————-

ஆறாம் பாட்டில் –
அபிஜாதையாய் இருப்பாள் ஒருத்தியை எழுப்புகிறார்கள் –
இத்தால்
பகவத் சம்பந்தம் விச்சேதியாதே போந்த ஆச்சார்ய சந்தான ப்ரஸூதர் நமக்கு உத்தேச்யர் என்றும் –
அவர்கள் அடியாக பகவத் ஸமாச்ரயணம் பண்ணுகையும் ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு ஸ்வபாவம் என்கிறது –

———–

ஏழாம் பாட்டில் –
இளைய பெருமாளை போலே கிருஷ்ணனைப் பிரியாதே இருப்பான் ஒருவன் தங்கையை எழுப்புகிறார்கள்
இத்தால்
பகவத் விஸ்லேஷம் அஸஹ்யமாம் படி அவகாஹித்தார் தங்கள் ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு
உத்தேச்யராம் அளவன்றிக்கே-
தத் சம்பந்த சம்பந்திகளும் உத்தேச்யர் என்று இருக்கை ஸ்வரூபம் என்கிறது –

—————-

எட்டாம் பாட்டில் –
நம் கண் அழகு உண்டாகில் தானே வருகிறான் -என்று அவயவ சோபையை மதித்து கிடக்கிறாள்
ஒருத்தியை எழுப்புகிறார்கள் –
இத்தால்
பகவத் அனுபவ பரிகரமான ஞான பக்தி வைராக்யங்களால் பூர்ணராய் இருக்குமவர் நிறத்திலும்
ததர்தமாக ஸ்ரீ வைஷ்ணவர்கள் சா பேஷராய் இருக்கை ஸ்வரூபம் என்கிறது –

————–

ஒன்பதாம் பாட்டில்
எல்லார்க்கும் தானே நிர்வாஹகையாய் -எல்லாரையும் தானே எழுப்பக் கடவளாய் சொல்லி விஸ்மரித்து
கிடக்கிறாள் ஒருத்தியை எழுப்புகிறார்கள் –
இத்தால்
பகவத் விஷயத்தில் மூட்டுகையாலே அதிகரித்த
நிர்வாஹகர் முன்னாக பகவத் அனுபவம் பண்ணுகை ஸ்வரூபம் என்கிறது –

—————

பத்தாம் பாட்டில் –
எல்லாருடைய திரட்சியும் காண வேண்டி இருப்பாள் ஒருத்தியை எழுப்புகிறார்கள் –
இத்தால் ஸ்ரீ வைஷ்ணவ சமாஜ தர்சனம்
அபிமதமாய் இருக்குமவர்களைக் கண்டால் அந்த ஸமூஹமாக அவர்களை உதகை ஸ்வரூபம் என்கிறது –

———–

ஆக இப்பதினைந்து பட்டாலும் எழுப்பப் பட்டவர்கள் எல்லாரும் கூட வந்து –
மேல் பதினாறாம் பாட்டால்
ஸ்ரீ நந்தகோபர் திரு மாளிகையில் சென்று
கோயில் காப்பானையும் ஸ்ரீ வாசல் காப்பானையும் எழுப்புகிறார்கள் –

———–

பதினேழாம் பாட்டில் –
இவர்கள் திருக் காப்பு நீக்கி -உள்ளே புக விட
ஸ்ரீ நந்தகோபர் தொடக்கமான உள் உள்ளாரை அடைய எழுப்புகிறார்கள் –
இவ் விரண்டு பாட்டிலும்
பகவத் விஷயத்தை கிட்டுவார் தாத் ப்ரத்யாஸன்னரை புருஷகாரமாகக் கொண்டு புகுறுக்கை ஸ்வரூபம் என்கிறது –

—————

பதினெட்டாம் பாட்டில் –
இப்படி எழுப்பின இடத்திலும் எழுந்து இராமையாலே தங்களுக்கு புருஷகாரமாக நப்பின்னையை எழுப்புகிறார்கள் –
இத்தால்
பகவத் விஷயீ காரம் பிராட்டி புருஷகார சாபேஷை என்கிறது –

————–

பத்தொன்பதாம் பாட்டில் –
இவள் திறக்கப் புக -நம்முடையாருக்கு இவள் முற்பட்டாளாக ஒண்ணாது -என்று இவளைத் திறக்க ஒட்டாதே
கட்டிக் கொண்டு கிடக்கிற கிருஷ்ணனை எழுப்பி –
மறுமாற்றம் கொள்ளாமையாலே மீளவும் அவனை உணர்த்துகைக்காக அவளை எழுப்புகிறார்கள் –
இத்தால்
பிராட்டியை புருஷகாரமாக வரித்தால் அவனும் இவளும் இசலி இசலிப் பரியும் பரிவைச் சொல்லுகிறது –

————–

இருபதாம் பாட்டில் –
அவனுக்கும் எங்களுக்கும் அடியான நீ எங்களை நீராட்டுவீ -என்று
கிருஷ்ணனையும் நப்பின்னை பிராட்டியும் கூட எழுப்புகிறார்கள்
இத்தால்
அடிமை செய்யும் இடத்தில் இருவரும் சேர்ந்த சேர்த்தியிலே அடிமை செய்வதே முறை என்கிறது –

—————-

இருபத்தோராம் பாட்டில் –
நப்பின்னைப் பிராட்டியும் -நானும் உங்களில் ஒருத்தி அன்றோ –
நாம் எல்லாரும் கூட கிருஷ்ணனை அர்த்திக்க வாருங்கோள்-என்ன
அவன் குணங்களில் தோற்றார் தோற்றபடி சொல்லி எழுப்புகிறார்கள் –
இத்தால்
பிரபுத்தனாய் தங்கள் கார்யம் செய்கைக்கு
ஏத்த ஏழு உலகம் கொண்ட -என்கிறபடியே
ஆஸ்ரிதரானவர் களுக்கு நிர்மமராய்க் கொண்டு அவன் குண கீர்த்தனம் பண்ணுகை கர்த்தவ்யம் என்கிறது –

—————-

இருபத்து இரண்டாம் பாட்டில்
கீழ்ப் பாட்டில் தங்கள் அபிமான ஸூ ன்யத்தையைச் சொல்லி
இப்பாட்டில் அநந்யார்ஹ சேஷத்வம் சொல்லுகிறது –
இத்தால்
அவனுடைய விசேஷ கடாக்ஷத்துக்கு தங்கள் அநந்யார்ஹ சேஷத்வம் அனுசந்தேயம் என்கிறது –

—————-

இருபத்து மூன்றாம் பாட்டில் –
உபஸ்தேயை ருபஸ்தித -என்று
ஸ்ரீ தண்ட காரண்யத்தில் ரிஷிகளினுடைய துக்க நிவ்ருத்திக்கு
நாம் முற்பாடராக பெற்றிலோம் என்று வெறுத்தால் போலே
இவர்கள் நோவு படைப்பு பார்த்து இருந்தோம் ஆகாதே -என்று இன்னாதாய் –
அவர்களை அழைத்து செய்ய வேண்டுவது என் என்ன –

இங்கனே சொல்ல ஒண்ணாது -பேர் ஓலக்கமாக இருந்து கேட்டருள வேணும் என்கிறார்கள் –
இத்தால் –
கர்ம பரதந்த்ரராய் இருந்துள்ள பிரயோஜனாந்தர பரரைக் காட்டிலும்
அநந்ய பிரயோஜனராய் சா
தனாந்தர நிஷ்டராய் இருக்குமவர்களைக் காட்டிலும் -சித்த சாதனம் பண்ணினார்க்கு
தம் தாம் கையில் கைம்முதல் இல்லாமையால் ஈஸ்வரனே பிரபுத்தனாய்க் கொண்டு அபேக்ஷித சம்விதானம் பண்ண வேணும்
என்று இவ்வதிகாரத்தில் வியாவ்ருத்தி சொல்லுகிறது –

————-

இருபத்து நாலாம் பாட்டில் –
அப்படியே செய்கிறோம் என்று பிரதிஞ்ஜை பண்ணின படியைக் கண்டு –
தங்கள் வந்த காரியத்தை மறந்து
தற் காலீகமான அழகிலே ஈடுபட்டு மங்களா சாசனம் பண்ணுகிறார்கள் –
இத்தால்
அர்த்திகளாகச் சென்றால் தம் தாமுடைய
புருஷார்த்தத்தை விஸ்மரித்து மங்களா சாசனம் பண்ண வேண்டும்படியான விஷய வை லக்ஷண்யம் சொல்லுகிறது –

————-

இருபத்தஞ்சாம் பாட்டில் –
ஏதேனும் இப்பிரவ்ருத்திக்கு ஒரு பிரதிபந்தகம் உண்டே யாகிலும் நீயே போக்கி எங்கள் துக்கம் எல்லாம் கெட
விஷயீ கரிக்க வேணும் -என்கிறார்கள் –
இத்தால்
ஸ்வரூப லாபம் அத் தலைக்கே கூறானவோபாதி-துக்க நிவ்ருத்தியும்
அத் தலைக்கே பரம் என்னும் இவ் வர்த்தம் சொல்லுகிறது –

———

இருபத்து ஆறாம் பாட்டில் –
மற்ற அபேக்ஷிதம் என் என்ன நோன்புக்கு வேண்டும் உபகரணங்களை தர வேணும் என்கிறார்கள் –
இத்தால்
துக்க நிவ்ருத்தியோபாதி போக உபகரண சித்தியும் அவனாலே என்கிறது –

—————

இருபத்து ஏழாம் பாட்டில் –
நோற்றால் பெறக் கடவ பேறு சொல்கிறது –
இத்தால்
ப்ரஹ்ம அலங்கார ரேனோலங்குர்வந்தி-
என்று அலங்காராதிகளும் பகவத் பிரசாதாயத்தாம் என்கிறது

————-

இருபத்து எட்டாம் பாட்டில் –
நாட்டார் இசைகைக்காக நோன்பு என்று ஒரு வியாஜத்தை இட்டு புகுந்தோம் அத்தனை
எங்களுக்கு அது உத்தேச்யம் அன்று –
உன் திருவடிகளில் கைங்கர்யம் என்று தங்களுக்கு உத்தேசியமான புருஷார்த்த சித்திக்கு
தங்கள் ஆகிஞ்சன்யத்தையும் ப்ராப்தியையும் முன்னிட்டு –
அவனே உபாயமாக வேணும் என்று அபேக்ஷித்து ஷாமணம் பண்ணிக் கொண்டு
ப்ராப்ய பிரார்த்தனம் பண்ணித் தலைக் கட்டுகிறது –

இதுக்கு கீழ் அடங்க ஒரு அதிகாரிக்கு சம்பவிக்கும் ஸ்வபாவங்களை சொல்லிற்று யாயிற்று
இப்பாட்டில்
அதிகாரி ஸ்வரூபமான உபாய ஸ்வீகாரத்தை ஸப்ரகாரமாகச் சொல்லுகிறது

—————

இருபத்து ஒன்பதாம் பாட்டில் –
தங்களுக்கு உத்தேச்யமானது கைங்கர்யம் -என்று பிரபந்த தாத்பர்யம் சொல்லி முடிக்கிறார்கள்
இத்தால்
ஸ்வீக்ருத உபாயத்துக்கு பலமான புருஷார்த்த ஸ்வரூபம் சொல்லுகிறது –

————

முப்பதாம் பாட்டில் –
இப் பிரபந்தம் கற்றார் -நாய்ச்சியாராலும் ஈஸ்வரனாலும் சர்வ காலமும் உண்டான விசேஷ கடாக்ஷத்தைப் பெற்று
நித்ய ஸூகிகளாகப் பெறுவர் –
இத்தால்
யுக்தமான அனுஷ்டானம் இல்லாதார்க்கும் அவர்களுடைய பாசுரமே அவர்கள்
பெற்ற பேற்றைத் தரும் -என்று
இப் பாசுரத்தில் ஏற்றத்தைச் சொல்லித் தலைக் கட்டுகிறது –

———–

ஆக
திருப்பாவையால் சொல்லிற்று யாயிற்று வேதார்த்தம் –
அதாவது
அவதாரமே சர்வ ஸமாச்ரயணீயம் என்றும்
அவதீர்ணனாவனுடைய வடிவு அழகே ருசி ஜனகன் என்றும்
ருசியுடையார் ப்ராப்ய த்வரையாலே-அவனை மேல் விழுந்து அபேக்ஷிக்கை பிராப்தம் -என்றும்
இவ்விஷயத்தில் இழிவார்க்கு ருசியுடையார் அடங்க உத்தேச்யர் என்றும்
ப்ராப்யம் ஆகிறது -அனுபவ ஜனித ப்ரீதி காரியமாய் யாவதாத்மா பாவியான கைங்கர்யம் என்றும்
தத் சாதனமும் அவன் திருவருளே என்றும் சொல்லிற்று யாயிற்று –

————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ ஒண்னான வானமா மா மலை ராமாநுஜ ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ தொட்டாசார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆயி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பூர்வாசார்யர்கள் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஆச்சார்ய ஹிருதயம் -சூர்ணிகை- 201-234—தாத்பர்ய சாரம் -ஸ்ரீ உ வே காஞ்சி ஸ்வாமிகள் —

December 30, 2016

201-என்னதுன்னதாவியிலே அறிவார் ஆத்மா என்று அவன் மதம் தோன்றும் -அவன் நினைவாலே ஆழ்வார் அவன்
உயிர் அன்றோ -தீங்கு வர பொறுக்கார்உ-ன்னதென்ன தாவியும் என்ன உன்னதாவியும் –என்று அருளிச் செய்கையாலே
–என் ஸ்வரூபம் நீ இட்ட வழக்கு -உன் ஸ்வரூபம் நான் இட்ட வழக்கு –
அறிவிலேனுக்கு அருளாய் அறிவார் உயிரானாய் -என்றும் அருளிச் செய்கிறார் -அறிவாரை உயிராக யுடையவன் என்றபடி-
-ஞானீ து ஆத்மைவ மே மதம் -என்றான் இ றே -இதனாலும் அவனுக்குத் துக்கம் வர பொறுக்க மாட்டார் என்றபடி –

202-இருத்தும் எண் தானாய் –எம்பெருமானுக்கே சிஷ்ய லக்ஷண பூர்த்தி யுண்டு -என்கிறார் -ஆச்சார்யனை அபிமதமான ஸ்தலத்தில் வைத்து
-இஷ்டப்படி நடந்து -அவன் திருமேனியில் விருப்பம் கொண்டு -சகல ஸ்நேஹத்தையும் அவன் இடம் பண்ணி -இதர விஷயங்களில் பற்று அற்று
-தரித்ரன் செல்வம் பெற்றால் போலேயும்-பசியால் சோறு பெற்றால் போலேயும் -விடாய்த்தவன் தண்ணீர் பெற்றால் போலேயும்
மிக்க அபி நிவேசத்துடன் அனுபவித்து ஆத்மாத்மீயங்களை ஆச்சார்யனுக்கு சமர்ப்பித்து -எல்லாம் செய்தாலும் ஆச்சார்யன் செய்து அருளிய மஹா உபகாரத்துக்கு
பிரதியுபகாரம் செய்ய முடியாமல் தடுமாறி குறைவாளனாய் இருந்து ஆச்சார்யர் உடைய தேஹ யாத்ர பாரம் எல்லாம் சுமந்து
அல்லும் பகலும் அவனைப் பிரியாமே இருந்து ஆச்சார்யன் நிக்ரஹத்து தள்ளினாலும் போகாதே இருந்து
அவனுக்கு அநிஷ்டமானால் உகப்பானவற்றையும் கை விட்டு ஆச்சார்யன் நியமனப்படியே நடந்து -இருக்க வேண்டுமே சிஷ்யன்
-எம்பெருமான் ஆழ்வார் விஷயத்தில் நடப்பதும் இப்படியே –

203-நண்ணாதார் மெய்யில் -ஆழ்வார் அறிவிலிகளான சம்சாரிகளுக்கு உபதேசிக்கும் ஹேதுக்கள்-விரக்தர்களாய் -ஆத்மகுணங்கள்
நிரம்பியவராய் அணுகி வந்து ஆதாரத்தோடு அபேக்ஷிக்குமவர்களுக்கு உபதேசிக்க வேண்டிய அர்த்தங்களை -பகவத் விமுகர்களாய்
பிரயோஜனாந்தர பரர்களாய் அனுவர்த்திப்பதும் இல்லாதவர்களான சம்சாரிகளுக்கு வழியாய் பிடித்து உபதேசித்து அருள மூன்று காரணங்கள் –
ஞாலத்தார் தமக்கும் வானத்தவர்க்கும் பெருமான் -நித்ய சூரிகள் போலே நித்ய சம்சாரிகளுக்கும் சம்பந்தம் ஒத்து இருக்க
இழந்து கிடக்க ஒண்ணாது என்கிற சம்பந்த உணர்ச்சி ஒரு காரணம் –
கண்டு ஆற்றேன் உலகு இயற்க்கை -என்று அநர்த்தம் கண்டு பொறாமை இரண்டாவது காரணம்
அருள் கண்டீர் இவ்வுலகினில் மிக்கதே -என்கிறபடி எம்பெருமான் கை விட்டவர்களையும் திருத்தி அல்லது
நிற்க மாட்டாத கரை புரண்ட காருண்யம் மற்று ஒரு காரணம் –

204-தாய்க்கும் மகனுக்கும் –தாய் –சர்வ லோக ஜனனியான சீதா பிராட்டி / மகன் -பிள்ளையான ப்ரஹ்லாதன் -/ தம்பியான விபீஷண ஆழ்வான்-
பிரக்ருதரான நம்மாழ்வார் / மாறன் அடி பணிந்து உயந்த இராமானுசன் -ஆகிய இவர்களுக்கே கீழ் சொன்ன மூன்றும் உண்டு –
அபேக்ஷை இன்றிக்கே காருண்யமே கொண்டு உபதேசித்து அருளுபவர் இந்த ஐவரே —

205-க்யாதி லாப –தமக்கு ஒரு பிரசித்தி உண்டாக வேணும் என்றாவது -லாபம் உண்டாக வேணும் என்றாவது
-பூஜிக்கப் பெற வேணும் என்றாவது அபேக்ஷை இல்லாத ஆழ்வார் சேஷத்வ பரிமள யுக்தமான ஆத்ம புஷபங்களைத் தேடி –
ஆட் செய்து ஆழிப் பிரானைச் சேர்ந்தவன் -என்கிறபடியே கைங்கர்ய ரூபமாக உபதேசிக்கையாலே-உலகம் எல்லாம் திருந்திற்று
-அதனால் ஆழ்வாருடைய மூன்று இழவுகள் தீர்ந்தனவாயின – எங்கனே என்னில்
திருக் குருகூர் அதனை உளம் கொள் ஞானத்து வைம்மின் உம்மை உய்யக் கொண்டு போகுறிலே -சம்சாரிகள் உஜ்ஜீவிக்கப் பெறாத இழவு தீரப் பெற்றது –
இழந்த வெம்மாமைத் திறத்துப் போன என் நெஞ்சினாரும் அங்கே ஒழிந்தார் -உழந்து இனி யாரைக் கொண்டு என் உசாகோ -உசாத் துணை இல்லாத இழவும் தீர்ந்தது –
வாளும் வில்லும் கொண்டு பின் செல்வார் மற்று இல்லை -பரிகைக்கு யாரும் இல்லை என்கிற இழவும் தீர்ந்தது –
தம்முடைய உத்தேச்ய பலமாக -எல்லாரும் உஜ்ஜீவித்தும் –தமக்கு உசாத் துணையுமாயும் இருந்தும் -அவனுக்கு
மங்களா சாசனமும் பண்ணுகையாலே மூன்று இழவுகளும் தீர்ந்தன -என்னக் குறை இல்லையே –

206-ப்ரஹ்ம நிஷ்டரும் -ஆழ்வாருடைய நிர்ஹேதுக கருணையை நிலை நாட்டுதல் -ஆழ்வாருடைய உபதேசம் சபலமாயிற்று என்று கொள்ளும் அளவில் –
இவர் இடத்தில் உபதேசம் கேட்ட சம்சாரி சிஷ்யர்கள் -சாஸ்த்ர முறையின் படியே உபசத்தி பண்ணினார்கள் என்றும்
-இவரும் அந்த உபசத்திகளினால் பிரசன்னராகி சாஸ்திரம் விதித்த கட்டளையில் நின்று உபதேசித்தார் என்றும் கொள்ளலாமே –
ஞாலத்தார் பந்த புத்தியும் -அநர்த்தம் கண்டு ஆற்றாமையும் மிக்க கிருபையும் அடியாகவே உபதேசித்தார் என்றும் சம்சாரிகள் விமுகர்களாகவே
இருந்தார்கள் என்றும் ஏன் கொள்ள வேணும் என்னில் -இங்கனம் கொள்ள வேண்டிய ஆவசியக்கதைக்கு நிதானம் சொல்லுகிறது
ஆழ்வார் ப்ரஹ்ம நிஷ்டர் ஆகில் –ஏ பாவம் பரமே -என்கிற பாசுரம் சேராது –
ஆழ்வார் பக்கல் உபதேசம் கேட்டவர்கள்-சம்வத்சர வாசிகள் ஆகில் -பயன் அன்றாகிலும் பங்கலர் ஆகிலும்
செயல் நன்றாகத் திருத்திப் பணி கொள்வான் -என்ற பாசுரம் சேராது -என்று இங்கனமே யோஜித்துக் கொள்வது –

207-மெய்ந்நின்று மங்க வொட்டுக்கு–பர உபதேச திசையிலும் பகவத் அனுபவம் இடையறாது என்னல்-ஆழ்வார் பர உபதேச
பரராம் அளவில் இவர்க்கு அக்காலத்தில் -பகவத் அனுபவம் இடையற்றது ஆகாதோ என்னில் -ஆகாது
-மெய்ந்நின்று கேட்டு அருளாய் அடியேன் செய்யும் விண்ணப்பமே-என்றது முதல் -மங்க வொட்டு உன் மா மாயை -என்கிறது அளவாக
நடுவுள்ள-நான்கு திவ்ய பிரபந்தங்களும் -அனுபவம் உள்ளே செல்லா நிற்கச் செய்தே யுண்டான பர உபதேசம் –
ஆழ்வார் தமக்கு அனுபவ கர்ப்பமான உபதேசமும் -உபதேச கர்ப்பமான அனுபவமுமாகவே செல்லும் என்று இ றே
நம் முதலிகள் அருளிச் செய்வது -ஆகையால் இவருக்கு அனுபவ விச்சேதம் ஒரு காலும் இல்லை –

208-இவற்றுக்கு மந்த்ர விதி அனுசந்தான ரஹஸ்யங்களோடே சேர்த்தி -இவருடைய நான்கு திவ்ய பிரபந்தங்களும் ரகஸ்ய த்ரயத்தோடே சேர்த்தி –
ரகஸ்ய த்ரயத்தில் சங்க்ரஹமாயும் நுட்பமாயும் -காட்டப் படும் பொருள்களே இவற்றில் விரித்து அருளிச் செய்கிறார் –
மந்த்ர ரகஸ்யம் -திரு மந்த்ரம் / விதி ரகஸ்யம் -சித்த உபாய வரணத்தை சாங்கமாக விதிக்கும் சரம ஸ்லோகம் –
அனுசந்தான ரகஸ்யம் உபாய வரணத்தையும் -உபேயே பிரார்த்தனையையும் சக்ரமமாக பிரகாசிப்பியா நின்று கொண்ட
கால ஷேபத்துக்கும் போகத்துக்கும் சாரஞ்ஞரால் சதா அனுசந்தானம் செய்யப் படும் திவ்ய ரகஸ்யம் –

209-அளிப்பான் அடியேன் -திரு விருத்தமும் திருவாசிரியமும் சேர்ந்து திருமந்த்ரார்த்த விவரணம் –
பிரணவம் நமஸ் பதார்த்த விவரணம் திரு விருத்தம் –
நாராயணாயா பதார்த்த விவரணம் திருவாசிரியம்
சரம ஸ்லோக விவரணம் பெரிய திருவந்தாதி –

210-த்வயார்த்தம் -சரம பிரபந்தமான திருவாய் மொழி -த்வயார்த்தம் தீர்க்க சரணாகதி என்றது சாரா சங்க்ரஹத்திலே -அதிலே கண்டு கொள்வது –

211-மூன்றில் சுருக்கிய -திருமந்திரம் சரம ஸ்லோகம் -இரண்டிலும் சங்க்ரஹமாக அருளிச் செய்ததை த்வயம் விவரித்தால் போலே
திரு விருத்தம் திருவாசிரியம் பெரிய திருவந்தாதி -ஆகிற மூன்று பிரபந்தங்களிலும் சுருக்கமாகச் சொல்லப் பட்ட அர்த்த பஞ்சகத்தை
இருபது பதிகங்களில் விசதமாக உரைத்து -மற்ற எண்பது பதிகங்களாலும் அது தன்னையே விஸ்தரிக்கும் படி -அர்த்த பஞ்சகமே திருவாய் மொழிக்கு பிரமேயம்
அந்த ஐந்து அர்த்தங்களிலும் பிரதானமான உபாய உபேயங்கள் இரண்டும் பிரமேயம் என்றும்
அவ்விரண்டிலும் உபேயம் ஒன்றையுமே பிரமேயமாக நிர்வஹிக்கும் புடையும் உண்டு –

212-ரகஸ்யத்துக்கு ஓர் எழுத்தும் –நான்கு பிரபந்தங்களிலும் -முதல் பாட்டுக்களில் ப்ரதிபாதிக்கப் பட்டுள்ள அர்த்த விசேஷங்கள் பலவும் நிரூபிக்கப் படுகின்றன –
ரகஸ்யம் -திருமந்திரம் ஓர் எழுத்து -ஓமித்யேகாக்ஷரம் -ஓர் எழுத்தாகிற பிரணவம் சங்க்ரஹமாய் இருப்பது போலே
அதுக்கு ஓர் உருவும் போலே -ஓர் அவயவமாய் இருக்கிற அகாரம் சங்க்ரஹமாய் இருப்பது போலே
ஆனவற்றிலே -நூறு பாட்டுக்களுக்கு சங்க்ரஹமாய் இருக்கின்ற போய் நின்ற ஞானத்திலும்
ஆயிரம் பாட்டுக்களுக்கு சங்க்ரஹமாய் இருக்கின்ற உயர்வற உயர் நலம் -பாட்டிலும்
அர்த்த பஞ்சகமும் –அவித்யாதி ஸ்வரூப ஸ்வபாவம் -ஆதமேஸ்வர பந்தம் -ரக்ஷண க்ரமம்-குண யோகம் -விக்ரஹ யோகம் –
விபூதி யோகம் -ததீய அபிமானம் -உபதேச விஷயம் -அந்யாபதேச ஹேது -இவை போல்வன சங்க்ரஹங்கமாக இருக்கின்றனவே –

213-அடி தொழுது எழ -ஆசீர் நமஸ்கார வாஸ்து நீர்த்தேசங்கள் -மங்களாசரணமும் உண்டு என்கிறார் –
ஆழ்வார் தாம் திவ்ய பிரபந்தம் பண்ண வேணும் என்று கருதி இருந்து நிருமித்தது அன்றிக்கே-நிரம்பின ஏரி நெளிக்குமா போலே
நிமிகிற வாய்க்கரை மிடைந்து புறப்பட்ட சொற்கள் -இவர் பாசுரத்தாலே லோகத்தை திருத்த திரு உள்ளம் பற்றிய எம்பெருமான் நினைவாலே
சகல லக்ஷண சம்பன்னமாய் தலைக் கட்டின பிரபந்தம் ஆகையால் இந்த மங்களாசரணமும் கோல் விழுக்காட்டாலே பலித்தது -எங்கனே என்னில்
துயர் அறு சுடர் அடி -என்பதால் வஸ்து நிர்தேச ரூபமான மங்களம்
தொழுது என்பதால் நமஸ்கார ரூப மங்களம்
ஏழு -என்பதால் ஆஸீஸ் எனப்படும் மங்களம் –

214-சாது சனம் நண்ணா-பத்து திருவாய்மொழிகளும் தசாவதாரங்கள் போலே -அவதார பிரயோஜனங்கள்
எல்லாமே திருவாய் மொழியின் ப்ராதுர்பாவத்துக்கும் உள்ளன –

215- ஐந்தினோடு ஒன்பதினோடு –நிகமன பாசுரங்களில் -ஐந்தினோடு ஐந்தும் வல்லார் -ஒன்பதோடு ஒன்றுக்கும் -இவையும் ஓர் பத்தும் –
நூறே சொன்ன ஓர் ஆயிரம் -தெரியச் சொன்ன ஓர் ஆயிரம் -மிக்க ஓர் ஆயிரம் -அவாவில் அந்தாதிகள் இவை ஆயிரம் –
என்பதற்கு அபிப்ராய விசேஷம் உண்டே -அவை ஆழ்ந்து ஆராயாது தக்கன –

216-பாட்டுக்கு கிரியையும் -பாட்டுக்கள் தோறும் கிரியா பதம் வினைச் சொல்லும் -ஒவ்வொரு திருவாய் மொழிக்கும் ஒரு உயிர் பாசுரமும் –
அஞ்சிறைய மட நாராய் -என் பிழைத்தாள் திருவடியின் தகவினுக்கு -பாசுரம் போலே-நூறு பாட்டுக்கும் உபதேச பதிகம் –
செய்யுளுக்கு வினை முற்றில் நோக்கு போலே -பாதிக்கத்துக்கு நிதானப் பாசுரம் போலே -நூறு பாட்டுக்கு பர உபதேச பதிகம் என்றவாறு –
முதல் பத்தில் -வீடுமின் முற்றவும் / இரண்டாம் பத்தில் கிளர் ஒளி இளமை / மூன்றாம் பத்தில் சொன்னால் விரோதம் / நான்காம் பத்தில் -ஒன்றும் தேவும்
ஐந்தாம் பத்தில் -பொலிக பொலிக / ஆறாம் பத்தில் -நல்குரவும் செல்வமும் / ஏழாம் பத்தில் -இன்பம் பயக்க
எட்டாம் பத்தில் -எல்லியும் காலையும் / ஒன்பதாம் பத்தில் -மாலை நண்ணி / பத்தாம் பத்தில் கண்ணன் கழலிணை –

217-பகவத் பக்த பரங்கள்-பயிலும் சுடர் ஒளி -போன்ற பாகவத பரங்களான திருவாய் மொழிகள் -பகவத் ஆஸ்ரயண விதிக்கு சேஷ பூதங்கள் –
திரு நாரணன் தாள் காலம் பெறச் சிந்தித்து உய்ம்மினோ -என்ற விதி -பகவத் ஆஸ்ரயணம்-பாகவதர்களை அடி பணிந்தால் அல்லது சித்திக்காது
எனவே பகவத் ஆஸ்ரயண விதிக்கு பாகவத சேஷத்வம் சேஷ பூதங்கள் -என்கை –

218-பரத்வ காரணத்வ -ஒவ்வொரு பத்திலும் எம்பெருமானுக்கு இன்ன இன்ன குணம் ப்ரதிபாதிக்கப் படுகின்றது என்றும்
அந்த குணத்தோடு கூடியவனாக அனுசந்திக்கப்பட்ட எம்பெருமான் ஆழ்வாருக்கு உண்டாக்கி அருளிய பேறு இன்னது என்றும் காட்டப்படுகிறது –

மூன்றாம் பிரகரணம் முற்றிற்று –

———————————————-

219-பரபரனாய் நின்ற -முதல் பத்தின் கருத்து -பராத்பரனான எம்பெருமான் தன்னுடைய நிர்ஹேதுக கிருபையினால் ஆழ்வாருக்கு அகவிருளைப் போக்கி
பக்தியாக வடிவு எடுத்த ஞானத்தைக் கொடுத்து -இன்னமும் இவர் நம்மை மறந்து போய் விடும் என்று எண்ணி அங்கனம் மறவாமைக்காக
இடைவிடாதே தம்முடைய ஹிருதயத்திலே நிரந்தர வாஸம் பண்ணினான் -அத்தாலே நிஷ் களங்கமான தத்வ ஞானத்தை யுடையரான ஆழ்வார்
அவனுடைய திருக் கல்யாண குணங்களை தமது திரு உள்ளத்தோடு அனுபவிக்கிறார் -அவ்விஷயம் தனி இருந்து அனுபவிக்க ஒண்ணாமையாலே
சம்சாரிகளையும் கூட்டிக் கொண்டு பெரும் திரளாய் இருந்து அனுபவிக்க விரும்பினார் ஆகையால் அவர்களை நோக்கி த்யாஜ்யமான சம்சாரத்தின் தோஷத்தையும் –
உபாதேயமான பகவத் விஷயத்தின் குணத்தையும் -அவனை பஜிக்க வேண்டிய பிரகாரத்தையும் -பஜனத்துக்குப் பற்றுக் கோடான திரு மந்திரத்தையும் உபதேசித்து
பாஜ நீயானான அவனுடைய ஸுலப்ய குணம் என்ன -அபராத சஹத்வம் என்ன -நீசர்கள் உடனும் கலக்கும் ஸுசீல்யம் என்ன
எளிதாக ஆஸ்ரயணம் பண்ணும் குணம் என்ன -ஆஸ்ரயணம் போக்யமாய் இருக்கும் தன்மை என்ன -கோணல் வடிவெடுத்த
சம்சாரிகள் இடமும் செவ்வியனாய் பரிமாறும் ஆர்ஜவ குணம் என்ன -போகங்களை பொறுக்க பொறுக்க ஸாத்மிக்கும் படி அருளும் குணம் என்ன
பரமபக்திக்கும் பரிகண னைக்கும் ஓக்க முகம் காட்டும் சாம்ய குணம் என்ன – ஆகியவற்றை ஒவ்வொரு திருவாய் மொழியாலும் காட்டி அருளி
அவ்வழியாலே பஜனத்தினுடைய ஸுகர்ய போக்யதைகளையும் காட்டி
பஜிக்கவே சகல பலன்களும் கை கூடும் என்றும் பஜ்ஜிக்கத் தொடங்கின போதே பஜனை விரோதிகள் எல்லாம் தொலைந்து ஒழியும்
என்பதையும் அறிவித்து -ஸ்ரீ கீதையில் அருளிச் செய்த பக்தி மார்க்கத்தையும் -தேவதாந்த்ரங்களில் பரத்வ சங்கை தவிர்ந்து அவன் விஷய
ஞானம் கைக்கொண்டு அநந்ய பிரயோஜன பக்தியை பண்ண -அவன் தமக்கு மயர்வற மதி நலம் அருளினது போலே தாமும் சம்சாரிகளுக்கு
அஞ்ஞான நிவ்ருத்தி பூர்வகமாக ஞான பக்திகளை உபதேசத்தால் உண்டாக்கி பஜனத்திலே மூட்டுகிறார் –

220-சோராத மூவா –இரண்டாம் பாத்தாள் -அனைத்தைக்கும் காரண பூதனான எம்பெருமான்
தமக்கு அறியாதவற்றை அறிவித்து அருள -அதனாலே அறிவு பெற்ற ஆழ்வார்
அந்த அறிவுக்கு பலனாக மோக்ஷத்தை அப்போதே பெற வேணும் என்று ஆசைப்பட்டு பெறாமையாலே விஷண்ணரானார்-
அந்த விஷாதம் எல்லாம் தீரும்படி எம்பெருமான் வந்து சம்ச்லேஷித்து ப்ரீதனானான் -அந்த ப்ரீதி இவர் ஓர் அளவிலே நில்லாதே
இவரோடு சம்பந்த சம்பந்தம் உடையார் அளவும் வெள்ளமிட்டு-அந்த ப்ரீதியாலே இவருக்கு அவன் மோக்ஷத்தைக் கொடுக்கப் புகுந்தான்
ஆழ்வார் அந்த மோக்ஷத்தை அவனுடைய சேஷித்வத்துக்கும் தம்முடைய சேஷத்வத்தைக்கும் தகுதியாம் படி நிஷ்கர்ஷித்தார்-
அதன் பிறகு ஆசிரணீயனான அவனுக்கு கீழ்ப் பத்தில் சொன்ன பரத்வத்தை நிலை பெறுத்துவனான லக்ஷணங்களை வெளியிட்டு
அவற்றுக்கு பொருத்தமான வசன ப்ரத்யக்ஷங்களையும் காட்டினார் -ஆஸ்ரயிப்பார்க்கு ருசி பிறக்கைக்காக த்யாஜ்யமான சம்சாரத்தின் உடைய
துக்க பாஹுள்யத்தையும் ப்ராப்யமான மோக்ஷத்தினுடைய ஆனந்த பிராசுர்யத்தையும் -சம்சார நிவ்ருத்தி பூர்வக மோக்ஷ ப்ராப்திக்கு உறுப்பான
சாதனத்தினுடைய சாரஸ்யத்தையும் முன்னிட்டுக் கொண்டு -ச குண ப்ரஹ்ம உபாசனத்தை விதித்து அதுக்கு அங்கமாக
நிஷித்த அனுஷ்டான தியாகமும் க்ஷேத்ர வாஸம் முதலானவையும் செய்ய வேணும் என்று அருளிச் செய்தார் –

221-முழுதுமாய் எங்கணும் மூன்றாம் பத்தில் -கார்ய வர்க்கங்களான சகல சேதன அசேதனங்களையும் வியாபித்து அவற்றில் உள்ள
தோஷங்கள் அணு அளவும் தன்னை ஸ்பர்சிக்கப் பெறாத படி சர்வ வியாபகனாய் இருக்கின்ற எம்பெருமான் -கீழ்ப் பத்தில்
இருவருடையவும் ஸ்வரூபத்துக்கு தகுதியாக ஆழ்வார் நிஷ்கர்ஷித்த மோக்ஷத்துக்கு பலனாக தன்னுடைய திவ்ய மங்கள விக்ரஹ அனுபவத்தை
இவர்தாம் பெற்றாராம் படி செய்த அளவில் -இவரும் அவ்வனுபவத்தை பெற்று தரித்து -அதனால் உண்டான உகப்பின் மிகுதியால்
எல்லா அடிமைகளும் செய்ய வேண்டும்படியான ஆவல் கிளர்ந்தவராய் -அந்த ஆவலுக்குத் தகுதியாக அப்பெருமான் காட்டிக் கொடுத்த
தன்னுடைய விபூதி விஸ்தாரத்தைப் பேசி -அத்தாலே கரை புரண்ட ப்ரேமம் யுடையவராய் -அந்த ப்ரேமம் அவ்வெம்பெருமான் அளவிலே
அடங்கி நில்லாமல் எல்லையான பாகவத சேஷத்து அளவும் சென்று -அந்த பாகவதர்களுக்கு நிரூபகம் பகவானுடைய வை லக்ஷண்யம் ஆகையால்
அத்தை அனுசந்திக்கவே ஒரு கரணத்தினுடைய செயலை மற்றொரு கரணம் ஆசைப்பட வேண்டும்படியான பேறு விடாய் படைத்தவராய்
எம்பெருமானை அன்றி மாற்று எவரையும் துதிக்க மாட்டாத தம்முடைய வை லக்ஷண்யத்தை வெளியிட்டவராய்
எம்பெருமானை அனுபவிப்பதற்கு ஒரு வகையான இடையூறும் இன்றிக்கே அபரிமிதமான ஆனந்தத்தை அடைந்தவராய்
சம்சாரிகள் எம்பெருமானுடைய பரத்வத்தை கண்டு அஞ்சிப் பின் வாங்காமல் மேல் விழுந்து ஆஸ்ரயிக்கும் படி அர்ச்சாவதார ஸுலப்யத்தை
அவர்களுக்கு உபதேசித்து அர்ச்சிராதி கதியாலே திரு நாட்டைப் பெறுவிக்குமவனான எம்பெருமானை ஒழிய பிறருடைய
ஸ்தோத்ரத்திலே கை வைப்பது பயன் அற்றது என்றும் எம்பெருமான் விஷயத்திலே வாக்கு சபலமாம் படி அடிமை செய்வதே உரியது என்றும்
உபதேசித்து அவர்களைத் தம்மைப் போலவே கைங்கர்ய பரராம் படி செய்து அருளுகிறார் –

222-ஈசனை ஈசனை –மூன்றாம் பத்தாலேவ்யாபகத்வம் சொல்லி -அது நிறம் பெறும் படி -அந்த ப்ரவிஷ்டஸ் சாஸ்தா ஜனா நாம் -என்கிறபடி
சகல வஸ்துக்களின் பிரவ்ருத்தி நிவ்ருத்திகள் தன் அதீனமாம் படி சர்வ நியாந்தாவான எம்பெருமான் –
ஆழ்வார் ஒழி வில் காலம் எல்லாம்
வழு விலா அடிமை செய்யப் பாரித்து -கால உபாதியைக் கழித்து சமகாலம் ஆக்கி அனுபவிப்பித்து இவர் இழவைத் தீர்த்து
இவருடைய த்ரிகரண வியாபாரங்களை போக்யமாகக் கொள்ள ஆழ்வார் அவனுடைய பிரணயித்தவ குணத்திலே தோற்று
விரஹ அவஸ்தையில் எம்பெருமானுக்கு போலியான பொருள்களையும் அவனோடு சம்பந்தம் உண்டான பொருள்களையும் அவனாகவே கருதும் படி பித்தேறி
திரு நாட்டில் அனுபவத்தையும் ஆசைப்பட்டுக் கூப்பிட
அந்த இழவும் தீரும்படி பெரிய பிராட்டியாரும் தானுமான -போக்தாக்களாக -இருக்கும் இருப்பை தர்சிப்பித்து பிரத்யக்ஷமாம் படி அனுபவிப்பிக்க –
இப்படி முக்த போகத்தை மாநஸமாக பிறப்பித்து அதற்குப் பலனாக தேவதாந்த்ர விரக்தியை யுடைய ஆழ்வார் ஐஸ்வர்ய
கைவல்யங்களின் அல்ப அஸ்திரத்தவாதி சாவாதிகத்வ தோஷங்களை யும்
ஆடு கள் இறைச்சி போன்ற நிந்தித்த பதார்த்தங்களால் ஸூத்ர தெய்வங்களை பஜிப்பதன் நிஹீனத்வத்தையும்
ப்ரஹ்மாதி தேவதைகள் உடைய அஞ்ஞனாதிகளையும் பாஹ்ய குத்ருஷ்ட்டி மதங்களின் தாமஸத்வத்தையும் வெளியிட்டு –
சர்வேஸ்வரன் ரக்ஷகன் அல்லாதார் ரஷ்ய பூதர்கள் என்று கண்டு வைத்தும் தெளியாமல்-இருப்பதற்கு பிரகிருதி சம்பந்தமே காரணம் –
இத்தை அறுக்க உபாயமும் அவன் திருவடிகளே -இவற்றை ஆஸ்ரயித்து சீரிய புருஷார்த்தம் திருவடிகளில் கைங்கர்யம் –
என்று உபதேசித்து பகவத் ஸமாச்ரயணத்தை ருசிப்பிக்கிறார் –

223-ஆவா வென்று -பரத்வம் -காரணத்வம்-வியாபகத்வம் -நியாமகத்வம் -குணங்களால் வந்த ஏற்றத்தையும் தங்கள் தாழ்வையும் அனுசந்தித்து
அகன்று போக நினைப்பவர்களும் மேல் விழுந்து விஷயீ கரிக்கும் பரம காருணிகனான எம்பெருமான் கீழே இவருக்கு
தேவதாந்த்ர-லோக யாத்திரை ஐஸ்வர்ய -அக்ஷரங்களிலும் ஆத்மாத்மீயங்களிலும் வைராக்யம் பிறப்பித்த பலனாக
ஸ்வவிஷயமான பக்தியை பரம்பரையா வளர்ச்சி செய்ய -அந்த பக்தியையும் பாகவத சமாகத்தையும் உடைய ஆழ்வார்
தாம் திருத்த திருந்தின ஸ்ரீ வைஷ்ணவர்களையும் நிறுத்தின தம்மையும் காண வந்த நித்ய ஸூரிகளையும்
ஸ்வேத தீபவாசிகளான சித்தரையும் கண்டு மங்களா சாசனம் பண்ணி -திருந்தாத அஸூர ராக்ஷஸ ப்ரப்ருதிகளையும் உபதேச முகத்தால் திருத்தி
-பாகவத சமாஜ தர்சனம் இனிதாம்படியான ஞானம் பிறந்தவர்களுக்கு ப்ராப்ய த்வரைக்கு அடியான பக்தியையும் உபதேசித்து தலைக் கட்டினார் –

224-என்னையும் யாவர்க்கும் -பரம கிருபையால் அனைவரும் ஆஸ்ரயிக்கும் படி இருக்கிற சர்வ சரண்யன் -பக்தி பாரவசியத்தாலே-
அநந்யகதியான ஆழ்வாருக்கு தன் திருவடிகளை நிரபேஷ உபாயமாக காட்டிக் கொடுக்க -அந்த சித்த -உபாயத்தில் விச்சேதம் இல்லாதபடி
வியவசாயம் கொண்ட ஆழ்வார் -தம்முடைய விவசாயத்தை தூது செய்யும் திருவாய் மொழி மூலம் அவனுக்கு அறிவிக்க
-அறிவித்தும் அவன் கால தாமதித்து எழுந்து அருள பிரணய ரோஷம்
கொண்ட ஆழ்வார் உடைய பிரணய ரோஷத்தை பரிஹரித்த அவன் சாமர்த்தியம் அனுசந்தித்தார் -பிறந்தவாற்றில் குண அனுசந்தானம்
தரித்து நின்று அனுபவிக்க செய்த பிரதிபத்தியும் -குரவை ஆய்ச்சியரிலே பலித்தது -அது பலித்தவாறே பிராப்திக்கு பிரபத்தி பண்ணுவதாக கோலினார்
சித்த உபாய வரணம் பண்ணும் போது இதரங்களை பரித்யஜித்தே வேண்டுகையாலே உபாய விரோதிகளான த்யாஜ்ய அம்ஸங்களை சவாசனமாக விட்டார் –
விட்டதை எல்லாம் தமக்கு போற்றுகிற விஷயமாகவே நினைத்து தமக்கு உபாயமாக நினைத்து இருக்கும் சர்வ ஸூலபனான உலகு அளந்தவன்
திருவடிகளை நித்ய ஸூ ரிகளும் வந்து அனுபவிக்கும் படி நிற்கிற திரு மலையிலே கண்டு த்வய பூர்வ வாக்ய ப்ரக்ரியையாலே
சரணம் புகுந்தார் -பத்துடை அடியவர் தொடங்கி உபதேசித்த பக்தி உபாயத்தின் துஷ் கரத்வாதி தோஷ யுணர்ச்சி காரணமாக
சோகிக்கும் படியான நிலைமை பிறந்தவர்களுக்கு தம்முடைய பிரபத்தி நிஷ்டையை பிரகாசிப்பிக்கிறார் –

225-எண்ணிலாக் குணங்கள் -விசித்திர சக்தி உக்தனான சர்வேஸ்வரன் -க்ஷண காலமும் பிரிய மாட்டாமே பிரபத்தி பண்ணிய தம்மை
இந்திரியங்கள் -விஷயாந்தரங்கள் நடமாடும் சம்சாரத்திலே வைத்து இருக்கக் கண்டு வருந்திக் கூப்பிட்டு தளர்ந்து பிறரால் மீட்க ஒண்ணாத படி
நெஞ்சு பறி யுண்டவராக அவன் தன் விஜய பரம்பரைகளைக் காட்டி இவரைத் தரிப்பிக்க அந்த தரிப்பும் சம்சாரிகள் இழவை நினைத்து சுவறிப் போய்
பழைய ஆர்த்தியே தலை எடுத்து -அவனுடைய அவயவங்கள் எல்லாம் ஸ்ம்ருதி விஷயமாகி ஒரு முகம் செய்து நலிய நோவு பட்டு
இப்படி எடுப்பும் சாய்ப்புமாக வருத்தம் செல்லச் செய்தே-நீயோ சர்வஞ்ஞன் சர்வ சக்தன் – நானோ ஆகிஞ்சன்யன் அநந்ய கதி -ஆற்றாமையும் மிக்கு இருக்க
சம்சாரத்தில் வைக்கும் காரணம் என்ன –நமக்கும் நம்முடையாருக்கும் திருவாய் மொழி பாடுவிக்க என்ன
வியாசாதிகள் முதல் ஆழ்வார்கள் போல்வார் இருக்க நம்மைக் கொண்டு கவி பாடுவித்துக் கொள்வதே -என்று உபகாரத்தை அனுசந்தித்து
-பிரதியுபகாரம் பண்ணாத தேடி ஒன்றும் காணாமையாலே
திருவாறன் விளையிலே பெரிய பிராட்டியார் உடன் பேர் ஓலக்கத்தில் திருவாய் மொழி கேடப்பித்து அடிமை செய்வது தவிர வேறு கைம்மாறு இல்லை
என்று துணிந்து அங்கனம் செய்ய திரு உள்ளம் திருவாறன் விளையே ப்ராப்யம் -அங்கே எழுந்து அருளி நிற்கிறவனே உபாயம் -என்று அறுதி யிட்டு
தம் ப்ராப்ய பிராப்பகங்களின் முடிவை உகந்து வெளியிட்டு அருளுகிறார் –

226-தேவிமார் பணியா –கீழ் பத்தில் –குணம்-சர்வ சக்தி யோகத்தால் -நித்யமாகக் கல்பிக்கப் பட்ட போக்ய போக உபகரண போக ஸ்தானங்களை யுடையவன் –
சத்ய காமன் -சர்வேஸ்வரன் ஆழ்வாரை தரிப்பிக்க நினைத்து -உபகார பரம்பரையை நினைவூட்டினான்
ஆழ்வாரும் க்ருதஞ்ஞராய் ஆத்ம சமர்ப்பணம் பண்ண -அதனால் பெறாத பேறு பெற்றவனாய் இவர்க்கு உண்டான ஆத்மகுணங்களால்
அவன் மிக மகிழ்ந்து ஆழ்வார் திரு உள்ளத்தே இருந்து அனுபவித்து -அயோக்யதா அனுசந்தானம் பண்ணி அகலாமைக்காக
ஆத்மாவின் வை லக்ஷண்யம் காட்டி அருள -யாதாம்யா ஞானம் அனுசந்தித்த ஆழ்வார்
தம்முடைய ப்ராப்ய ப்ராபகங்கள் கேட்டு உகந்தவர்கள் ப்ராப்யம் ஒன்றும் ப்ராபகம் ஒன்றுமாய் இரு கரையராய் அலையாத படி
ப்ராப்யமாகச் சொன்ன ஒன்றிலேயே அவர்களை ஊன்றச் செய்து அருளுகிறார் –

227-எண் திசையும் அகல் ஞாலம் -அவாப்த ஸமஸ்த காமனாகையாலே ஒன்றையும் உபேஷியாமல் நிர்ஹேதுகமாக ரஷித்து அருளும் ஆபத் சகனான
சர்வேஸ்வரன் கீழ் பிரகாசிப்பித்த ஆத்ம ஸ்வரூப யாதாம்யத்தைக் கண்டதற்கு பலன் ஸ்வரூப அனுரூபமான
ப்ராப்யத்தை அனுபவிக்கையாலே -அவ்வனுபவத்தால் உண்டான த்வரையாலே-விளம்பம் பொறுக்க மாட்டாமல் துடிக்க
சரீர அவசனத்தில் பேறு தப்பாது என்று நாள் அவதி இட்டுக் கொடுக்க -அங்கனம் நாள் இடப பெற்ற ஆழ்வார் கீழ் தம் உபதேசத்தால்
திருந்தினவர்களை ஒழிய அல்லாதாராய்யும் விட மாட்டாத பரம கிருபையால் அதிகார அனுகுணமாக எல்லா உபாயங்களையும் அருளிச் செய்கிறார் –

228-சுரி குழல் அஞ்சனப் புனல் -இப்படி ஆபத்சகன் -ஆபத்தை தவிருக்கைக்கு தகுதியாக சிறந்த வை லக்ஷண்யம் உடைய
திவ்ய மங்கள விக்ரஹத்துடன் வந்து தோன்றி தன் அடியார்கள் சம்சார அடிக் கொதிப்பாலும் -திருவடிகளைக் கிட்டி அனுபவிக்கப் பெறாத தாலும்
ஆர்த்தியை தீர்க்க வல்லவன் -தம்முடைய த்வரைக்குத் தக்கபடி நாள் இட்டுக் கொடுத்ததுக்கு பலன்
அர்ச்சிராதி கதியாலே தேச விசேஷத்துக்கு ஏறப் போகையாலே-அதுக்கு ஆப்த தமனான அவன் தன்னை வழித் துணையாகப் பற்றி
இனி பிராப்தியில் தடை இல்லை என்று தமக்குள் நிச்சயித்தவர் மறைத்து வைத்த அர்த்தம் உள்ளதும் வெளியிட வேண்டும்படியான தசையானவாறே
பிரதம உபதேச பாத்திரமான தம் திரு உள்ளத்துக்கு க்ருத்ய அக்ருத்யங்களை விதித்து -அந்த திரு உள்ளம் போலே விதேயரான
ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு கர்த்தவ்யம் முதலியவற்றை வெளியிட்டு
முதல் பத்தில் பிணக்கற அறு வகை பாசுரத்தில் உபக்ரமித்த பக்தி யோகத்தை -சார்வே தவ நெறி யோடே உப சம்ஹரித்து –
சம்சாரிகளுக்கு ஸூ கரமாக ஆச்ரயணத்தை உபதேசித்து அனுபவ கைங்கர்யங்களில் நிற்கிறவர்களுக்கு சீல குணம் ஆகிற ஆழங்காலைக் காட்டி
ஜாக ரூகதையை விதித்து தம் பக்கல் விருப்பத்தால் திருமேனியில் அதி வ்யாமோஹம் பண்ணுமவனுக்கு அதன் தோஷத்தை உணர்த்தி –
தமக்கு பரதந்த்ரனாய் தம்மை பரமபதத்தில் கொண்டு போக ஆதரம் பண்ணுமவனை அநாதி காலம் தம்மை சம்ஹரிக்கப் பண்ணி உபேக்ஷித்தத்துக்கு ஹேது என் என்று கேட்க
அவன் இந்திரிய வஸ்யத்தை முதலான ஹேது பரம்பரையை எண்ணி அதுவும் நம் அதீனம் என்று அறியும் சர்வஞ்ஞரான இவர்க்கு போக்கடி சொல்லுகை அரிது என்று
நிருத்தரனாய் அர்ச்சிராதி மார்க்கத்தையும் அங்குள்ளவருடைய ஸத்காரத்தையும் அவ்வழி யாலே போய்ப் பெறும்
ஸ்வ சரண கமல பிராப்தி அளவாகக் காட்டிக் கொடுக்க அத்தை சாஷாத் கரித்து-அது மானஸ அனுபவ மாத்ரமாய்
பாஹ்ய கரண யோக்யம் அல்லாமையாலே
அத்தை உள்ளபடி பிராபிக்க வேணும் என்று பதறி அவனுக்கு மறுக்க ஒண்ணாத படி திரு வாணை இட்டு தடுத்து
அது பெறா வாணை இல்லாமைக்கு ஹேதுக்களையும் சொல்லும்படியான
தம்முடைய பரம பக்தி எல்லாம் மிகச் சிறிது என்னும் படி கரை புரண்ட அபி நிவேசத்தோடே
வந்து தம்முடைய தாபங்களை போக்கினை படியை வெளியிட்டு அருளுகிறார் –

229-உறாமையோடே -இந்நின்ற நீர்மை இனி யாம் உறாமை -என்று ஆர்த்தராய் சரணம் புகுந்த போதே பிராப்தி விரோதிகளைக் கழித்து
உற்றேன் உகந்து பணி செய்து உனபாதம் பெற்றேன் -என்னும் படியாய் திருவடித் தாமரைகளில் சேர்த்துக் கொள்ளாமல்
அவனுடைய சர்வ சக்தாதிகளும் இருக்கச் செய்தே -இவர் ஆர்த்தியிலும் குறை இல்லாமல் இருக்கச் செய்தேயும் இருள் தரும் மா ஞாலத்தில் வைத்து
துடிக்கப் பண்ணினது -நாடு திருத்த -தன்னுடைய ஸ்ருஷ்ட்டி அவதாராதிகளாலும் திருந்தாத உலகத்தை
-நாடும் ஊரும் தன்னைப் போலே பேரும் தாரும் பிதற்றும் படியாக திருந்த தான் வைத்தான் என்பர் –
நச்சுப் பொய்கை ஆகாமைக்காக என்பாரும் உண்டு -ஆள் கொல்லி பிரபத்தி என்று இழிய மாட்டார்களே
திவ்ய பிரபந்தம் தலைக் கட்டுகைக்காக என்பர் –
வேர் சூடுபவர்கள் பரிமளத்தின் ஆசையினால் மண் உடன் பற்றுவாரை போலே ஞான பிரேம பரிமளம் நிறைந்த ஆழ்வார் திருமேனியில்
தனக்கு உண்டான அபி நிவேசத்தால் வைத்தான் என்பாரும் உண்டு
இனி இனி என்று இருப்பதின் காள் கூப்பிட்டு ஆர்த்தி பரம்பரையை விளைவித்து
பரமபக்தி பர்யந்தமான அதிகாரி பூர்த்தி உண்டாக்குகைக்காகவே கால தாமதம் –

230-கமலக் கண்ணன் என் கண்ணின் உள்ளான் என்று தொடங்கி -கண்ணுள் நின்று அகலான்-என்னுமது அளவாக
பத்துச் சந்தையாலும் சொன்ன சாஷாத் காரம்
நெஞ்சு என்னும் உட் கண் என்கிற ஆந்தர சஷூஸ் சான மனசாலே யுண்டானதாய்
பாஹ்ய சஷூஸ் சாலே அவனைக் காண ஆசைப்பட்டு கூப்பிட்ட சந்தைகள் இருபது உண்டாகையாலே
கண்டு களிப்பக் கண்ணுள் நின்று அகலான் -என்கிற பாசுரம் வரையில் பர ஞானத்தை உள்ளே கொண்டு இருக்கிற பரபக்தி
அதாவது உள்ளே அனுபவம் செல்லா நிற்க பெற்று அல்லது தரியாத பாஹ்ய அனுபவ
அபேக்ஷை நடக்கையாலே பர ஞான கர்ப்பமான பர பக்தி என்கை –

231-இருந்தமை என்றது -அடியார்கள் குழாங்களை உடன் கூடுவது என்று கொலோ -என்று ஆழ்வார் முதலிலே ஆசைப்பட்ட படியே
அர்ச்சிராதிகதியாலே தேச விசேஷத்திலே சென்று பகவத் ஸ்வரூபம் முதலானவற்றை பறி பூர்ண அனுபவம் பண்ணுகிற
நித்ய ஸூரிகள் திரளில் கூடி இருந்தாராகக் கண்டு பேசின -அந்தமில் பேர் இன்பத்து அடியாரோடு இருந்தமை
என்கிற பாசுரத்தை உட் கொண்டதான சூழ் விசும்பு அணி முகில் திருவாய் மொழி பூர்ணமான பர ஞானம் –

232-அந்தமில் பேர் இன்பத்து அடியாரோடு இருந்தமையாகக் கண்டது தான் மானஸ அனுபவமே
மாத்ரமாய் பாஹ்ய அனுபவ யோக்யம் இல்லாமையால்
பெரு விடாய் பிறந்து கூப்பிட்டு தரிக்க மாட்டாமல் திரு வாணை இட்டுத் தடுத்து பெற்றோடே தலைக் கட்டின –
முடிந்த அவாவில் அந்தாதி இப்பத்து என்கிற முனியே நான் முகன் திருவாய்மொழி பக்தியினுடைய சரம அவதியான பரம பக்தி –

233-பர பக்தி பர ஞான பரம பக்திகள் -பக்த்யா த்வன் அந்யயா சக்ய அஹமேவம் விதோர்ஜுன ஞாதும் த்ரஸ்டுஞ்ச ச
தத்வேன பிரவேஷ்டுஞ்ச ச பரந்தப-என்று அர்ஜுனனைக் குறித்து திருத் தேர் தட்டிலும் –
பரபக்தி பர ஞான பரம பத்தி ஏக ஸ்வபாவம் மாம் குருஷ்வ -என்று பிராரத்த எம்பெருமானாரைக் குறித்து
மத் ஞான தரிசன பிராப்தி ஷூ நிஸ் சம்சயஸ் ஸூகமாஸ்வ -என்று சேர பாண்டியன் எனும் சீரிய சிங்காசனத்தில்
அவன் அருளிச் செய்த ஞான தரிசன பிராப்தி அவஸ்தைகள்
எம்பெருமானுடன் கூடுவதும் பிரிவதும் இன்ப துன்பங்களாம் படியான பர பக்தி -ஞான அவஸ்தை
அவனுடைய ஸ்வரூப ரூப குண விபூதியை மிகவும் விசதமாக சாஷாத் கரிக்கும் பர ஞானம் தர்சன அவஸ்தை –
அப்படி சாஷாத் கரித்த வஸ்துவை அப்போதே கிட்டி அனுபவிக்கப் பெறா விடில் முடியும்படியான பக்தி யானது பிராப்தி அவஸ்தை –

224-கீழே நூறே சொன்ன பத்து ஓர் ஆயிரம் என்றதும் சா அபிப்ராயம் -என்ற சூரணையில்ஓ
ர் ஆயிரம் என்றதின் கருத்தை அருளிச் செய்து நிகமிக்கிறார்
மயர்வற மதி நலம் அருளினான் என்று தொடங்கி -அவா வெற்று வீடு பெற்ற -என்று தலைக் கட்டி அருளி
சம்சார காரணமான அஞ்ஞானத்தை போக்கும் ஞான பூர்த்தியை அபகரித்த பகவான் நிர்ஹேதுக கிருபையால்
சம்சார நிவ்ருத்தி பூர்வகமான பகவத் பிராப்தி ரூப மோக்ஷ லாபம் என்று தெளித்தல் ஒரே தாத்பர்யம் இந்த திவ்ய பிரபந்தத்துக்கு –
எந்த பகவத் பிரசாதம் ஞானத்தை அருள்கின்றதோ அதுவே மோக்ஷத்தையும் அருள வல்லது என்பதே திருவாய் மொழியின் திரண்ட பொருள் –

———————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ உ .வே. காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஆச்சார்ய ஹிருதயம் -சூர்ணிகை- 150-200—தாத்பர்ய சாரம் -ஸ்ரீ உ வே காஞ்சி ஸ்வாமிகள் —

December 29, 2016

150-சேர்ப்பாரை -எம்பெருமானிடம் தூது விடப் படுகிற பக்ஷிகளுக்கு ஸ்வா பதேசம் -இனி வருவது –
விண்ணோர் பிரானார் மாசில் மலரடிக் கீழ் எம்மைச் சேர்விக்கும் வண்டுகளே-திரு விருத்தம் -என்று ஆழ்வார் தாமே அருளிச் செய்கையாலே
பகவத் விஷயத்திலே கொண்டு சேர்க்குமவர்கள் பஷிகளாகக் கொள்ளப் படுவர்கள் –
சிறகாகச் சொல்லப் படுபவை ஞானமும் அனுஷ்டானமுமாம் -ஆங்கு ஆங்கு உள்ள பதச் சேர்த்திகளுக்குத் தகுதியாக
ஆச்சார்யர்களையோ ச ப்ரஹ்மச்சாரிகளையோ புத்ரர்களையோ சிஷ்யர்களையோ ஸ்வாபதேசமாகக் கொள்க –

151-விவேகமுகராய்–இனி பஷிகளான உட் பிரிவான அன்னம் கிளி பூவை குயில் மயில் முதலானவற்றுக்கு ஸ்வாபதேசம்
க்ரமேண கூறப்படுகிறது –
செல்வ நம்பி பெரியாழ்வார் நாதமுனிகள் ஆளவந்தார் போல்வாரை அன்னம் என்று கொள்ளலாம் –
நீரையும் பாலையும் கலந்து வைத்தால் அவற்றை பிரிக்க வல்லது அன்னம் -அது போலே ஆச்சார்யர்கள் சார அசார விவேக குசலர்கள்-
வேத சாஸ்திரங்களை வெளியிட்டது பகவத் அவதாரமான ஹம்சம் -அது போல் சிஷ்யர்களைக் குறித்து சாஸ்திர உபதேசம் பண்ணுவார்கள் –
ஹம்சம் சேற்றில் பொருந்தாது -அது போலே மாய வன் சேற்று அள்ளல் பொய்ந்நிலத்து அழுந்தார்கள்-
அன்னம் மாதர் நடை அழகைக் கண்டு அப்படியே தானும் நடை பயிலும் -அது போலே அன்ன நடைய அணங்கான
பிராட்டியின் புருஷகாரத்வம் ஆகிற நடத்தையை அநுசரிப்பர்கள் –
அன்னமானது மேலே எழுந்த தாமரை இலையைக் குடையாகவும் பக்குவமான செந்நெல் பயிர் அசைந்து ஆடுவதை சாமரம் வீசுதலாகவும்
சங்குகளின் முழக்கத்தை விஜய கோஷமாகவும் வண்டுகளின் மிடற்று ஓசையைப் பாட்டாகவும் கொண்டு
மானஸ சரஸ் சிலே உள்ள தாமரையை ஆசனமாகக் கொண்டு வீற்று இருக்குமே
அப்படியே தாமரை இலை போலே சாமளமான பகவானது திரு மேனியை தமக்கு சம்சார தாப ஹரமாகவும்
செந்நெல் பயிர் போலே அஹம் அன்னம் அஹம் அன்னம் அஹம் அன்னம் என்னும்படி பரிபக்குவ ஞானம் உடையவர்கள்
அநு கூல வ்ருத்தி செய்யவும் -சங்கு போல் சுத்த ஸ்வபாவம் யுடையவர்கள் ஸ்தோத்ரம் செய்யவும் –
வண்டு போலே சார க்ராஹிகளாய் இருப்பார் போற்றவும் செய்து -குரு பாதாம் புஜம் த்யாயேத் -என்கிறபடியே ஆச்சார்யர் திருவடி இணையை
எப்பொழுதும் நெஞ்சுக்குள்ளே கொண்டு இருக்கும் சிஷ்யர்கள் யுடையதாயும் பிரம்மகுருவுக்கு இருப்பிடதாயுமான
போதில் கமல வன்னெஞ்சம் -என்கிற மானஸ பத்மத்தை வாசஸ் ஸ்தானமாக யுடையராய் இருப்பார்கள்
விதியினால் பெடை மணக்கும் மென்னடைய அன்னங்காள் என்கையால் சாஸ்திர முறைப்படி க்ருஹஸ்த ஆஸ்ரமத்தில் இருப்பவர்கள் ஆகவுமாம் –
அந்தரம் ஓன்றும் இன்றி அலர் மேல் அசையும் அன்னங்காள் என்கையாலே சம்சார பற்று அற்ற யுத்திகள் ஆகவுமாம் –

152-என் பெறுதி என்ன –வண்டுகளாகவும் தும்பிகளாகவும் சொல்லுகிறது -நாரத முனிவர் -திருப் பாணாழ்வார் -தம்பிரான்மார் -அரையர்கள்-போல்வாரை –
வண்டுகள் அலைந்து கொண்டே இருக்கும் -ஆச்சார்யர்கள் அப்படி அன்றியே ஒரே பொருளில் ஊன்றி இருப்பர்கள் என்கிற இது ஒன்றே வியாவ்ருத்தி –
மற்ற அம்சங்களில் சாம்யம் நிரூபிக்கப் படுகிறது -மதுவிரதம் என்ற பேர் பெற்ற வண்டு தேன் தவிர மற்று ஒன்றை உணவாகக் கொள்ளாதது போலே
உளம் கனிந்து இருக்கும் அடியவர் தங்கள் உள்ளத்துள் ஊறிய தேனான பகவத் விஷய அனுபவத்தையே விரதமாக கொண்டவர்களாய்
பரிசுத்தமான வாயைக் கொண்டு மகிழ் மாலை மார்பினனுடைய சொல் மாலையின் சாரத்தை க்ரஹிக்கும் அவர்களாய்
வண்டுகள் தென தென என்று ஆலாபனை பண்ணுமா போலே -தே தே என்று -உனக்கே நாம் -என்ற மமகாரம் ஒழிந்து –
இதையே வாய் வெருவுகின்றவர்களாய் காலோசிதமான பண்களை பாடுகிறவர்களாய் -திரு வாசல்களில் பிரமன் சிவன் இந்திரன் முதலான சேவகர்கள்
நிறைந்து தலை நுழைக்க ஒண்ணாத படி நெருக்க திரு வாசல் காப்பானை கதவு திறக்க வேணும் என்று அபேக்ஷித்து
சிரமப்பட்டு உள்ளே புக வேண்டாதபடி தகை ஒன்றும் இன்றிக்கே தாராளமாக உள்ள புகும் அந்தரங்கராய் எம்பெருமானது
தலை மேலும் ஏற வல்லவர்களாய் அவனோடே சேர்ப்பிக்குமவர்களாய் -நாரதாதிகள் வண்டாகவும் தும்பியாகவும் கொள்வது தக்கவர்கள் –

153-கண் வலைப்படாதே –கிளி பூவை முதலானவை யாகச் சொல்வது –
-ஸ்ரீ மதுர கவிகள் -தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் -ஆழ்வான் ஆண்டான் எம்பார் அருளாள பெருமாள் எம்பெருமானார் போல்வாரை –
கிளிகள் வலையில் அகப்படுமா போலே இவர்கள் எம்பெருமானது தாமரைத் தடம் கண் விழிகள் ஆகிற வலையில் ஆகப்படுவார்கள்-
மாதரார் கயல் கண் என்னும் வலையில் அகப்பட மாட்டார்கள் -வளர்த்து எடுப்பார் கையில் விதேயராய் இருப்பார்கள் –
தயிர்ப் பழம் சோற்றோடு பால் அடிசில் நெய்யமர் இன்னடிசில் பாலமுது இவை போலே பரம போக்யமான பகவத் குணங்களை அனுபவிக்க
அனுபவிக்குமவர்களாய் -சொன்னதைச் சொல்லும் கிளிப் பிள்ளை என்னுமா போலே
-முன்னோர் மொழிந்த முறை தப்பாமல் கேட்டுப் பின்னோர்ந்து தாமதனைப் பேசுமவர்களாய்
ஆச்சார்யனுடைய நிக்ரஹ அனுக்ரஹங்கள் இரண்டையும் சமமாகப் பாவிக்குமவர்களாய் -கற்பித்தவர்கள் தளர்ந்து இருக்கும் போது
அவர்களுக்கு செவிக்கு இனிதாகச் சொல்லி அவர்களும் கை கூப்பி வணங்கும்படி இருப்பவராய்
மயில்கள் ஆலிப்பதும் அழைப்பதும் செய்யுமா போலே எம்மானை சொல்லிப் பாடி எழுந்தும் பறந்தும் துள்ளுமவர்களாய்
குயில்கள் பரப்ருதம் என்கிற பேருக்குத் தக்கபடி பிறரால் வளர்க்கப் படுவது போலே
பர அபிமானத்திலே ஒதுங்கி இருப்பாரான மதுர கவிகள் போல்வாரை சொல்லுவது பொருந்தும் –

154-ஆசறு தூவி என்னும் -நாரை கொக்கு குருகு என்று சொல்கிறது -ஸ்ரீ குலசேகர பெருமாள் போல்வாரை –
உள்ளும் புறமும் ஒக்கப் பரிசுத்தர்களாய் -நாரையானது திரைகள் வந்து கிட்டி மேலே தாவிப் போகா நிற்கிற கானலிலே அசையாமல் இருக்குமா போலே
சம்சார சமுத்திர தரங்களான தாபத்ரய ரூப வியசனங்கள் வந்து மிடைந்து மேலிடா நின்றாலும் எம்பெருமான் பக்கலிலே சிந்தை ஊன்றி இருக்கப் பெறுகையாலே
அந்த வியசனங்களுக்கு கலங்காதே இருப்பவர்களாய் கொக்கானது தன் வாயாலே எடுத்துக் கொடுக்க ஜீவித்து இருக்கும் தன் பிள்ளைக்கு
வாய்க்கு அடங்கும் இரை தேடி இடுமா போலே தங்கள் வாக்காலே உதவும் பகவத் விஷயத்தை கொள்ளும் இளைய சிஷ்யர்களுக்கு
அதிகார அநு குணமாக சாத்மிக்கப் கூடிய பகவத் விஷயார்த்தங்களை சாஸ்திரங்களில் ஆராய்ந்து உபகரிக்கும் அவர்களாய்
இடைவீடின்றி கால ஷேப கூடங்களில் தாங்களே சென்று தங்களை பிரிவில் தரியாத ப்ரேமம் உடைய சிஷ்யர்களுடன் பகவத் குண அனுபவம்
பண்ணுமவர்களாய் தங்களால் உஜ்ஜீவித்த சிஷ்யர்கள் உபகார ஸ்ம்ருதியாலே சிரஸா வஹிக்கை யாகிற ப்ரஹ்ம ரதம் பண்ணி
யதா சக்தி சமர்ப்பித்தவற்றை அங்கீ கரிக்குமவர்களாய் நல்ல பதத்தால் மனை வாழ்வர் என்று பாகவத கைங்கர்யத்துக்கு உறுப்பான
க்ருஹஸ்த தர்மத்தையும் சம்சார வெக்காயம் அடியான பயத்தால் இன்ப மருஞ்செல்வமும் இவ்வரசும் யான் வேண்டேன் என்று
உபேக்ஷிக்குமவர்களாய் உள்ள ஸ்ரீ குலசேகர பெருமாள் போல்வார் இங்கு கொள்ளப் படுவது பொருத்தம் –

155-பூண்ட நாள் சீர்க் கடலை –மேகமாகச் சொல்லுகிறது முதல் ஆழ்வார்கள் திரு மழிசைப் பிரான் கலியன் ஸ்ரீ பாஷ்யகாரர் போல்வாரை -என்கை –
பெய்ய வேண்டிய காலங்களில் கடலிலே புக்கு அதில் நீரைப் பருகிக் கொள்ளும் மேகம் போலே பகவத் குண சாகரத்தை
உள்ளே அடக்கிக் கொண்டு இருப்பவர்களாய் -மேகமானது அவன் திருமேனியோடு ஒத்த நிறத்தை யுடைத்தாய் இருக்குமா போலே
உள்ளுறையும் பெருமாளுடைய நிழலீட்டாலே அவனோடே சாம்யம் பெற்றவர்களாய் -மேகமானது பிராணிகளை ரஷிக்க ஆகாசப் பரப்பு எங்கும் சஞ்சரிக்குமா போலே
சம்சாரி சேதனர்களை ரஷிக்கைக்காக உலகம் எங்கும் சஞ்சாரம் பண்ணுபவர்களாய்
மேகம் வர்ஷத்தாலே தடாகம் முதலியவற்றை நிறைக்குமா போலே ஞானம் ஆகிற தடாகத்தை தாங்கள் வர்ஷிக்கிற பகவத் குண தீர்த்தங்களாலே நிறைக்குமவர்களாய்
மேகமானது தீங்கின்றி நாடு எல்லாம் திங்கள் மும்மாரி பெய்து வாழ உலகினில் பெய்து மா முத்த நிதி சொரியுமா போலே
அநர்த்த லேசமும் இன்றிக்கே அனைவரும் உஜ்ஜீவிக்கும் படி பகவத் குண ரத்தினங்களை வர்ஷிக்குமவர்களாய்
மேகமானது எவ்வளவு வர்ஷித்தாலும் வர்ஷித்தோம் என்று நினையாதாப் போலே தங்களுடைய உதார குண அதிசயத்தை நினையாதவர்களாய்
அவ்வளவும் அன்றிக்கே இன்னமும் உபகரிக்கப் பெற்றிலோமே -நாம் செய்தது போருமோ என்று வெள்கி இருப்பாராய்
உபகரிக்கப் பெறாத போது உடம்பு வெளுத்து ஒளித்து இருப்பாராய் எதிர்த்தலை வாழ்வதே தங்களுக்கு பேறாக நினைத்து
இருப்பவர்களான தன்மையினால் அன்னவர்களுக்கு மேக சாம்யம் பொருந்தும் –

ஆக இது வரையில் தூது விடப் படுகிற அன்னம் முதலானவற்றுக்கு ஸ்வாபதேசம் அருளிச் செய்யப் பட்டதாயிற்று –
இனி பல கால் தூது விட வேண்டும்படி முகம் காட்டாமைக்கு ஹேதுவும் -தூது விடுகைக்கு பற்றாசும் –
-அதுக்கு விஷயமும் வகையிட்டு அருளிச் செய்யப்படுகிறது –
156-தம் பிழையும் –அஞ்சிறைய மட நாராய் –வைகல் பூங்கழிவாய் -பொன்னுலகு ஆளீரோ-எங்கானல் அகம் கழிவாய் –
-நான்கும் தூது விடும் திருவாய் மொழிகள் –
அஞ்சிறைய மட நாரையில் -கடலாழி நீர் தோற்றி அதனுள்ளே கண் வளரும் அடல் ஆழி யம்மானைக் கண்டக்கால் இது சொல்லி -என்று
அருளிச் செய்கையாலே -வ்யூஹ ஷீராப்தி நாதனுக்கு தூது –
–வைகல் பூங்கழிவாய் –மாறில் போர் அரக்கன் மதிள் நீர் எழச் செற்று உகந்த ஏறு சேவகனார்க்கு –என்பதால் அது வைபவத்தில் தூது –
பொன்னுலகு ஆளீரோ–வானவர் கோனைக் கண்டு யாம் இதுவோ தக்கவாறு என்ன வேண்டும் -என்கையாலே
-அது பரமபத நிலைய பர வாஸூதேவனுக்கு தூது அதிலேயே -எங்குச் சென்றாகிலும் கண்டு -என்று அருளிச் செய்வதால் அந்தர்யாமித்வத்திலும் தூது
-எங்கானல் அகம் கழிவாய் –திரு மூழிக் களத்து உறையும் -குடக் கூத்தர்க்கு என் தூதாய் –என்று அருளிச் செய்கையாலே அர்ச்சையிலே தூது –

இப்படி தூது விட வேண்டும்படி முகம் காட்டாமைக்கு ஹேதுக்கள் –
தம் பிழையும் -என் பிழையே நினைந்து அருளி அருளாத திரு மாலார்க்கு -என்பதால்
சிறந்த செல்வம் -சிறந்த செல்வம் மல்கு திரு வண் வண்டுறையும் என்னும் படி ஆர்த்த ரக்ஷணத்தில் எம்பெருமானை தடை செய்து
கால் தாழப் பண்ணின திரு வண் வண்டூரின் சிறந்த செல்வமும்
படைத்த பரப்பும் -முன் உலகங்கள் எல்லாம் படைத்த முகில் வண்ணன் கண்ணன் என்னலம் கொண்ட பிரான் தனக்கு -என்றபடி
படைத்த ஜகத்தின் பரப்பை ரஷிக்கிற பராக்கும்-
தமரோட்டை வாசமும் -தமரோடு அங்கு உறைவார்க்கு தக்கிலமே கேளீரே-என்னும் படி உகந்த பாகவதர்கள் உடன்
கூடி வாழ்க்கையால் -தம்மை மறந்தான் -என்கிறார் –

தூது விடுகைக்கு பற்றாசு அடைவே –
என் பிழைத்தால் திருவடியின் தகவினுக்கு -அபராத சஹத்வமும்
புணர்த்த பூம் தண் துழாய் முடி நம் பெருமானைக் கண்டு -ஆர்த்த ரக்ஷண தீஷித்வம்
தம் மன்னு நீள் கழல் மேல் தண் துழாய் நமக்கு அன்றி நல்கான் -அடியார்கள் உடன் ஏக ரசனாய் இருக்கும் தன்மையும்
செக்கமலத் தலர் போலும் கண் கை கால் செங்கனிவாய் அக்கமலத் திலை போலும் திருமேனி அடிகளுக்கு தக்கிலமே கேளீர்கள்–வடிவழகும்-

ஆக தம் பிழை மறப்பித்த ஷமா குணத்தை உணர்த்தப் பெற்ற வ்யூஹம் முதல் தூதுக்கு விஷயம்
சிறந்த செல்வம் மறப்பித்த ரஷா தீஷா குணத்தை உணர்த்தப் பெற்ற விபவ அவதாரம் இரண்டாம் தூதுக்கு விஷயம்
தாம் படைத்த பரப்பில் பராக்கு மறப்பித்த சாரஸ்ய குணத்தை உணர்த்தப் பெற்ற பரத்வமும் அதற்குத்
தோள் தீண்டியான அர்ச்சாவதாரமும் மூன்றாம் தூதுக்கு விஷயம்
தமரோட்டை வாசம் மறப்பித்த ஸுந்தர்யத்தை யுணர்த்தப் பெற்ற அர்ச்சாவதார நான்காம் தூதுக்கு விஷயம் –

பகல் ஓலக்கம் இருந்து -இப்படி பல இடங்களிலும் தூது விட்டாலும் இடங்களிலே பேதமே அன்றி வாஸ்துவில் பேதம் இல்லை என்று த்ருஷ்டாந்ததுடன் நிரூபிக்கிறார் –
சகல பரிஜனங்களும் சேவிக்க தன் வீறு தோற்ற பகல் ஓலக்கம் இருக்கையும் –
ராஜ்யத்தில் உள்ளாருடைய குண தோஷங்களை அறிகைக்காக இரவிலே பிறர் அறியாத படி கறுப்பு உடுத்து நகர சோதனம் பண்ணுகையும்
ராஜ்யத்தில் சிஷை ரஷைகளுக்காக ஏகாந்தமாக இருந்து கார்ய விசாரம் செய்கையும்
துஷ்ட ஜந்துக்களை வதைக்க வேட்டையாடுகையும்
அந்த சிரமம் தீர பூம் தோப்புகளில் அபிமத விஷயங்களோடு விளையாடுகையும் –
ஆகிற இந்து ஐந்து பிரகாரங்கள் அரசனுக்கு இருக்குமா போலே
பொங்கோதம் சூழ்ந்த புவனியும் விண்ணுலகும் அங்காதும் சோராமே ஆள்கின்ற எம்பெருமான் செங்கோலுடைய
திருவரங்கச் செல்வனார் -என்றே ராஜாதி ராஜாவான சர்வேஸ்வரனுக்கும் -விண் மீது இருப்பாய் மலை மேல் நிற்பாய்
கடல் சேர்ப்பாய் மண் மீது உழல்வாய் இவற்றுள் எங்கும் மறைந்து உறைவாய்-என்றபடி
பர வ்யூஹ விபவ அந்தர்யாமி அர்ச்சவதாரங்கள் ஆகிற ஐந்து நிலைகளிலும் இவ்வைந்து பிரகாரங்களை காணலாம் –
பகல் ஓலக்கம் இருக்கும் பிரகாரம் -பரத்வத்திலும்
கறுப்பு உடுத்து சோதிக்கும் பிரகாரம் அந்தர்யாமித்வத்திலே
கார்யம் மந்திரிக்கும் பிரகாரம் வ்யூஹத்திலே
வேட்டையாடும் பிரகாரம் விபவத்திலே
ஆராமங்களிலே விளையாடும் பிரகாரம் அர்ச்சாவதாரங்களிலே
இத்தால் பரத்வாதிகளிலே ஸ்தல பேதமே ஒழிய வஸ்து பேதம் இல்லை என்றதாயிற்று –

158-தமர் உகந்த அடியோமுக்கே -ஆழ்வார் அர்ச்சாவதாரத்தில் மண்டி இருப்பது குண பூர்த்தியாலே என்கிறது –
தமர் உகந்தது எவ்வுருவம் அவ்வுருவம் தானே தமர் உகந்தது எப்பேர் அப்பேர் மாற்றப் பேர் -என்கிறபடியே
அடியோமுக்கே எம்பெருமான் அல்லீரோ நீர் இந்தளூரீரே -அநந்யகதிகள்-ருசி பிறந்த போதே நினைத்த வகைகளில
அனுபவம் செய்ய நித்ய சந்நிதி -பின்னானார் வணங்கும் சோதி –எல்லாக் குளங்களிலும் பூர்ணன் இங்கே தானே –

159-வன் பெரு -எல்லா குணங்களிலும் பூர்ணன் -எல்லா அர்ச்சா திவ்ய தேசங்கள் என்றாலும் ஆழ்வாருக்கு ஒவ்வொரு குணம் பிரகாசமாக காட்டி அருள –
அவற்றை அடைவே சகல திவ்ய தேச பிரதானமான கோயிலில் தொடங்கி அருளிச் செய்கிறார் –
பாற் கடல் யோக நித்திரை செய்யும் வ்யூஹ குணமான ஸுஹார்த்தம் கோயிலிலே பிரதானமாகப் பிரகாசிக்கும் –
யோக நித்திரை செய்பவன் -திருவரங்கத்தாய் இவள் திறத்து என் சிந்தித்தாயே –என் கொலோ முடிகின்றது இவட்கே -என்கிறார் அன்றோ –
வன் பெரு வானக முதலுய்ய இனிதாகத் திருக் கண்கள் வளர்கின்ற திருவாளன் திருப்பதி -வடிவுடை வானோர் தலைவனே -என்பதால்
பர வாஸூதேவன் அனுபவமும் -கடல் இடம் கொண்ட கடல் வண்ணா -வ்யூஹ அனுபவமும் -கட் கிலீ உன்னைக் காணுமாறு அருளாய்
-அந்தர்யாமி அனுபவமும் -காகுத்தா கண்ணனே -விபவ அனுபவமும் -உண்டே -இருந்தாலும்
ஆழ்வாருக்கு வ்யூஹ ஸுஹார்த்தம் பிரதானம் – இங்கே உறைக்கும் படி பிரகாசிப்படுத்தி அருளினான் –

160-மண்ணோர் விண்ணோர் வைப்பில் -உபய விபூதியில் உள்ளார்க்கும் சேமித்து வைத்த நிதி போலே ப்ராப்யமாய் இருக்கும்
-திருமலையில் நிகரில் வாத்சல்யம் உஜ்வலம் – வாத்சல்யம் குணம் விளங்கும் –
போகின்ற காலங்கள் –தாய் தந்தை உயிராகின்றாய் –தண் வேங்கடம் மேகின்றாய் —
கண்ணாய் ஏழ் உலகுக்கும் உயிராய எம் கார் வண்ணனை –வேங்கட வேதியனை –என் கண் பாசம் வைத்த பரஞ்சுடர்ச் சோதிக்கே —
நிகரில் புகழாய்–திருவேங்கடத்து எம்பெருமானே –என்கையாலே –

161-உபய பிரதான –ஜீவன் என்ன ஈஸ்வரன் என்ன ஆக இருவருக்கும் வாசகமாய்க் கொண்டு இருவருடையவும் ப்ராதான்யத்தை தோற்றுவிக்கிற
பிரணவம் போலே ஆழ்வாருடையவும் -பொலிந்து நின்ற பிரானுடையவும் ப்ராதான்யம் தோற்ற நின்ற திருக் குருகூரிலே –
உறுவதாவது எத்தேவும் எவ்வுலகங்களும் மற்றும் தன்பால் மறுவில் மூர்த்தியோடு ஒத்து இத்தனையும்
நின்ற வண்ணம் நிற்கவே -என்கிறபடி பரே சத்வம் பொலியும் — பரத்வ லக்ஷணம் விளங்கும் –

162-வைஷ்ணவ வாமனத்தில் –நிறைந்த நீல மேனியின் ருசி ஜனக விபவ லாவண்யம் பூர்ணம் –
திருக் குறுங்குடியிலே ஆழ்வார் திரு உள்ளத்தில் வேறு ஒன்றுக்கும் இடம் அறும் படி விளங்கா நின்ற காளமேக நிபஸ்யாமமான
திவ்ய மங்கள விக்ரஹ அனுபவ ருசியை மேன்மேலும் விளைவிக்குமதாய்-ஸ்ரீ வாமன ராம கிருஷ்ணாதி விபவதாரங்களில்
பிரகாசிக்கும் சமுதாய சோபையான லாவண்யம் பரி பூரணமாய் இருக்கும் -எங்கனேயோ அன்னைமீரில் பாசுரம் தோறும் இதுவே அருளப் பட்டது

163-ருசி விவசர்க்குப் பாதமே சரணாக்கும் உதார குணம் வானமா மலையிலே கொழுந்து விடும் –
கீழ்ச சொன்ன லாவண்யத்தாலே ஒருவராலும் நிவர்த்திப்பிக்க ஒண்ணாத படி பிறந்த ருசியாலே பரவசராய் அநந்ய கதியானவர்களுக்கு
திருவடிகளையே உபாயமாகக் கொடுக்கும் -ஆறு எனக்கு நின் பாதமே சரணாகதி தந்து ஒழிந்தாய் உனக்கொரு கைம்மாறு
நான் ஒன்றிலேன் -எனதாவியும் உனதே -வந்து அருளி என்னெஞ்சு இடம் கொண்ட வானவர் கொழுந்தே –

164-களை கண் அற்றாரை யுருக்கும் மாதுர்யம் குடமூக்கிலே ப்ரவஹிக்கும் -வேறு ஒரு ரக்ஷகனை யுடையோம் அல்லோம் என்று இருப்பாரை –
ஆராவமுதே அடியேன் உடலம் நின்பால் அன்பாயே நீராய் அலைந்து கரைய உருக்குகின்ற நெடுமாலே -சிதிலராம் படி மாதுர்யம் பெருகா நிற்கும்
ஆராவமுதம் -திருவாய் மொழிக்கும் எம்பருமானுக்கும் பெயர் அன்றோ –

165-மெலிவிலும் சேமம் கோள்விக்கும் க்ருபை தென்னகரிலே நித்யம் —கீழ்ச சொன்ன பரம போக்யமான விஷயத்தை விரைவில் கிட்டி
அனுபவிக்கப் பெறாமையாலே நாள் தோறும் மெலியும் அளவிலும் அவனே ரக்ஷகன் என்று அத்யவசித்து இருக்கும் படி
பண்ணுமதான கிருபை திருவல்ல வாழிலே நித்தியமாய் இருக்கும் -வைகலும் வினையேன் மெலிய –திருவல்ல வாழ் சூழலின்
மலி சக்கர பெருமானது தொல்லருளே –திருவல்ல வாழ் சேமம் கொள் தென்னகர் மேல் செப்புவார் சிறந்தார் பிறந்தே –பாசுரங்களில் நோக்கு-

166-வியவசாயஜ்ஞர் ரக்ஷண ஸ்தைர்யம் பம்போத்தர தேசஸ்த்தம்-ஆர்த்தர்களை ரஷிப்பதில் தன்னுடைய ஊற்றத்தை உள்ளபடி
அறிந்து இருக்குமவர்களுடைய ரக்ஷணத்தில் அனுகூலராலும் சலிப்பிக்க ஒண்ணாத படி இருப்பதான அவனுடைய ஸ்தைரிய குணம்
திரு வண் வண்டூரில் நிலை பெற்று நிற்கும் -வைகல் பூங்கழி வாயில் -ஏறு சேவகனார்க்கு -என்றதில் நோக்கு –

167-விளம்ப விரோதம் அழிக்கும் விருத்த கடநா சாமர்த்தியம் நன்னகரிலே விஸ்தீரணம் –
வைகல் பூங்கழி வாயில் தூது விட்ட இடத்தும் கடுக வந்து முகம் காட்டாமல் -தாமதித்து வருகையால் -போகு நம்பீ -கழகம் ஏறேல் நம்பீ -என்ற
பிரணய ரோஷ விரோதத்தை -அழித்தாய் உன் திருவடியால்-
விருத்த விபூதித்வம் பரப்ப பிரகாசித்த திரு விண்ணகர் -விருத்த கடநா சாமர்த்தியம் -காட்டி அருளினான் –

168-கடிதகடகவிகட நா பாந்த்வம் அவ்வூரிலே த்வி குணம் -குலையும் வாண் முகத்து ஏழையைத் துலை வில்லி மங்கலம் கொண்டு புக்கு
இழை கொள் சோதிச் செந்தாமரைகே கண் பிரான் இருந்தமை காட்டினீர் -என்னும் பாசுரத்தில் சொல்லப் பட்ட கடகராலே
தன் பக்கலிலே கடிதரானார்க்கும் கடகரானார்க்கும் -துவளில் மா மணி மாடம் ஓங்கு துலை வில்லி மங்கலம் தொழும் இவளை நீர் இனி அன்னைமீர்
உமக்கு ஆசையில்லை விடுமினோ என்னும்படி விகடனையைப் பண்ணுமதான பந்துத்வ குணம் துலை வில்லி மங்கலத்திலே விளங்கும் –
கடிதர் -ஆழ்வார் –கடகர் -தோழிமார் -இவர்களுக்கு பரஸ்பரம் பொருந்தாமை விலைத்திட்டது பகவத் பந்துத்வம் –
இவளை நீர் இனி அன்னைமீர் உமக்கு ஆசையில்லை விடுமினோ -என்கிற பாசுரத்தினால் இந்த பொருந்தாமை ஸ்ப்ஷ்டம் –

169-கைம்முதல் இழந்தார் உண்ணும் நிதியின் ஆபத் ஸகத்வம் புகுமூரிலே சம்ருத்தம் -திருக் கோளூர் எம்பெருமான் – வைத்த மா நிதி பெருமாள் –
உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலை -ஆபத் ஸகத்வம் -எல்லாம் கண்ணன் –

170-சென்று சேர்வார்க்கு –உசாத் துணை யறுக்கும் ஸுந்தர்யம் மா நகரிலே கோஷிக்கும் -நெஞ்சை கொள்ளை கொள்ளும் -தென் திருப் பேரை –
வெள்ளைச் சுரி சங்கு –ஏன் நெஞ்சினாரும் அங்கே ஒழிந்தார் –இனி யாரைக் கொண்டு என் உசாகோ
-செங்கனி வாயின் திறத்ததாயும் -கண்டு உகந்து அற்று தீர்ந்து -பாசுரங்களில் நோக்கு –

171-ப்ரவண சித்தம் பரத்வ விமுகமாக்கும் ஆனந்த வ்ருத்தி நீணகரிலே-தன் பக்கல் பிரவணர் ஆனவர்களுடைய சித்தத்தை –
சிந்தை மற்று ஒன்றின் திறத்தல்லாத் தன்மை -என்றபடி பரமபதத்தில் பேர் சொல்லுவதும் அஸஹ்யமாம் படி
பரத்வத்தில் விமுகமாகப் பண்ணும் ஆனந்தப் பெருக்கம் திரு வாறன் விளையில் வியக்தம் –

172-சாதரரைப் பரிசு அழிக்கும் சேஷ்டித ஆச்சர்யம் குளத்தே கொடி விடும் -பல் வளையார் முன் பரிசு அழிந்தேன் என்னும் படி ஸ்த்ரீத்வ பிரகாரமான
லஜ்ஜை முதலியவற்றை அழிக்கும் மாயக் கூத்தன் என்கிற சேஷ்டித ஆச்சர்யம் பெரும் குளம் என்கிற திருக் குளந்தையிலே விளங்கும் –

173-சிரம மனம் சூழும் ஸுகுமார்ய பிரகாசம் ஆய்ச்சேரியிலே –எம்பெருமானுடைய சிரமத்தை அனுசந்தித்த ஆழ்வாருடைய திரு உள்ளமானது
சுழற்சி அடைவதற்கு உறுப்பான பகவத் ஸுகுமார்ய பிரகாசம் திரு வண் பரிசாரத்திலே விளங்கும் -கொடியார் மாட –ஆளுமாளார் -பாசுரங்களில் நோக்கு –

174-மஹா மதிகள் அச்சம் கேட்டு அமரும் ஸுர்யாதிகள் சிற்றாற்றிலே கொழிக்கும் -வார் கடா வருவி -பாசுரப்படி
-திருச் செங்குன்றூர் திருச் சிற்றாற்றிலே எம்பெருமானுடைய ஸுர்ய வீர்ய பராக்ரமங்கள் விளங்கும் –

175-ஸாத்ய ஹ்ருதிஸ்த்தனாயும் சாதனம் ஒருக்கடுக்கும் க்ருதஜ்ஜநாத கந்தம் தாயப் பதியிலே –
தனக்குத் தாயப் ப்ராப்தமான ஸ்தானமாக நினைத்து இருக்கும் திருக் கடித்தானத்திலே எம்பெருமானுடைய க்ருதஞ்ஞத்வம் பரிமளிக்கும் –
திருக் கடித்தானமும் என்னுடைச் சிந்தையும் ஒருக்கடுத்துள்ளே யுறையும் பிரான் -ஆழ்வார் திரு உள்ள வாசமே பரம ப்ராப்யம் –
ஸாத்ய ஹ்ருதிஸ்த்தனாயும்-சாத்தியமான -பலமான -ஹ்ருதய வாசம் லபித்து இருக்கச் செய் தேயும் –
சாதனம் ஒருக்கடுக்கும் க்ருதஜ்ஜநாத-திருக் கடித்த தானது திருப்பதியில் -அநு ராகம் கொண்டு வர்த்திக்கும் படி
கந்தம் என்றது –கடி திரு மணம் என்பதால் –

176-அவகாஹித்தரை அநந்யார்ஹமாக்கும் நாயக லக்ஷணம் வளம் புகழுமூரிலே குட்டமிடும்-தன் பிரசாதத்திலே மூழ்கினவர்களை
மற்றொருவர்க்கு ஆகாத படி ஈடுபடுத்துமதான அவயவ சோபை ஆபரண சோபை போன்ற நாயக லக்ஷணம் குட்ட நாட்டு திருப் புலியூரில் பூர்ணம் –
கரு மாணிக்க மலை மேல் மணித் தடம் தாமரைக் காடுகள் போல் –குட்ட நாட்டுத் திருப் புலியூர் அரு மாயன் பேர் அன்றிப் பேச்சிலள் –

177-போக்ய பாக த்வரை–தெளிந்த சந்தைக்கு முன்னிலை மூன்றிலும் ப்ரகடம்-கனத்த பசியை யுடையவன் அன்னம் பக்குவம் ஆவதற்கு முன்னே
பதற்றித்தினால் அதன் அருகே வந்து கிடப்பது இருப்பது நிற்பதாமா போலே-போக்ய பூதரான ஆழ்வாருக்கு பரமபக்தியாகிற பாகம் பிறக்கும் அளவும்
அநு போக்தாவான எம்பெருமானுக்கு உண்டான பதற்றம் திருப் புளிங்குடியிலும் ஸ்ரீ வர குண மங்கையிலும் ஸ்ரீ வைகுண்டத்திலும் விளங்கும் –
இம்மூன்று திருப்பதிகளில் நின்றும் இருந்தும் கிடந்தும் போருவதற்கு இதுவே கருத்து –

178-போகத்தில் தட்டு மாறும் சீலம் காட் கரையிலே கரை அழிக்கும் -இப்படி போக்ய பூதரான ஆழ்வாருடன் கலந்து பரிமாறும் இடத்தில்
ஆட் கொள்வான் ஒத்து என்னாருயிர் உண்ட மாயன் –வாரிக் கொண்டு என்னை விழுங்குவன் காணில் என்று ஆர்வுற்ற என்னை ஒழிய
என்னில் முன்னம் பாரித்து தான் என்னை முற்றப் பருகினான் கார் ஒக்கும் காட் கரையப்பன் கடியனே –
அத்தலை இத்தலையாய் சேஷி சேஷ பாவம் மாறாடிப் பரிமாறும் சீல குணம் திருக் காட் கரையிலே கரை அழிய பெருகும் –

179-மகாத்மாக்கள் விரஹம் சஹியாத மார்த்த்வம் வளத்தின் களத்தே கூடு பூரிக்கும் -பாகவதர்களை விட்டுப் பிரிந்து இருக்க மாட்டாத ஸுகுமார்யம்
திரு மூழிக் களத்தில்–அணி மூழிக் காலத்து உறையும் –தமரோடு அங்கு உறைவார்க்குத் தக்கிலமே கேளீரே-பாசுரம் உயிரானது –

180-பிரிந்த துன்பக் கடல் கடத்தும் விஷ்ணு போத ஆன்ரு சம்சயம் நாவாயிலே நிழல் எழும் -மேன்மேல் தூது விட வேண்டும் படியான
விரஹ துக்க சாகரம் கடத்தும் விஷ்ணு போதமான அவனுடைய பரம கிருபை திரு நாவாயிலே நிழல் எழும் –

181-சரண்ய முகுந்தத்வம் -உத்பலா வதகத்திலே பிரசித்தம் -திருக்கண்ண புரத்திலே-சரண்யனுடைய முக்தி பூமி பிரதத்வம் –
நன்றாக விளங்கும் – மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான் -அன்றோ –

182-மார்க்க பந்து சைத்யம் மோஹனத்தே மடுவிடும் -திரு மோகூரிலே வழித்துணைவன் -எம்பெருமானுடைய சீதளத்வம் -குணம் விளங்கும் –
தயரதன் பெற்ற மரகத மணித்தடம் –திரு மோகூர் நலம் கழல் அவன் அடி நிழல் தடம் அன்றி யாமே -உயிரான பாசுரங்கள் –

183-சைஸன்ய புத்ர சிஷ்ய ஸாத்ய சித்த பூ ஸூ ரார்ச்ச நத்துக்கு முக நாபி பாதங்களை த்வார த்ரயத்தாலே காட்டும் சாம்யம் அனந்த சயனத்தில் வ்யக்தம் –
அனந்தபுரத்து அமரர் கோன் அர்ச்சிக்கின்று அங்கு அப்பணி செய்வர் விண்ணோர் -நித்ய சூரிகளுக்கு -திரு முக மண்டல திரு வாசல் –
அமரராய்த் திரிகின்றார்க்கு ஆதி -ப்ரஹ்மாதி தேவர்களுக்காக திரு நாபி கமல திரு வாசல்
படமுடை இரவில் பள்ளி பயின்றவன் பாதம் காண நடமினோ நமர்கள் உள்ளீர் -நாமும் உமக்கு அறியச் சொன்னோம் -நமக்கு பிராப்யமான திருவடி திரு வாசல் –
பாதம் காண நடப்பார்க்கு பாத வாசல் –உந்தி மேல் வந்து உதித்த நான்முகனுக்கு நாபி வாசல் -முகம் நோக்கி பேசும் சேனாபதி ஆழ்வானுக்கு திரு முக வாசல் என்றபடி –

184-மோக்ஷ தாநத்தில் ப்ரணத பாரதந்தர்யம் வளம் மிக்க நதியிலே கரை புரளும் -திரு வாட்டாற்றிலே எம்பெருமான் ஆஸ்ரித பரதந்த்ரனாய்
மோக்ஷம் தரும் அளவில் அவர்கள் விதித்த படி செய்வானாய் -ஆழியான் அருள் தருவான் அமைகின்றான் அது நமது விதி வகையே –
இன்று விண்ணுலகம் தருவானாய் விரைகின்றான் –விதி வகையே -பாசுரங்களின் படியே –

185-த்யாஜ்ய தேஹ வ்யாமோஹம் மருள்கள் கடியும் மயல் மிகு பொழிலிலே தழைக்கும்-மஹிஷியின் உச்சிஷ்டத்தை விரும்பும்
ராஜகுமாரனைப் போலே முமுஷுக்களுக்கு த்யாஜ்யமான தேஹத்திலே எம்பெருமானுக்கு உண்டான வியாமோஹ சாலித்தவம்
-திரு மாலிருஞ்சோலை வஞ்சக் கள்வ–மாய வாக்கை இதனுள் புக்கு –
திருமாலிருஞ்சோலை மலையே திருப் பாற் கடலே என் தலையே -உகந்து அருளினை தேசங்களில் காட்டும் விருப்பத்தை
இதில் ஏக தேசத்தில் பண்ணி -மங்க வொட்டு உன் மா மாயை -என்று கால் கட்டி விடுவிக்க வேண்டும் படி
அவனுக்கு உண்டான வியாமோஹத்தை -த்யாஜ்ய தேஹ வியாமோஹம் -என்கிறார் –

186-அங்கீ கரிக்க அவகாசம் பார்க்கும் ஸ்வாமித்வம் பெரு நகரிலே பேர் பெற்றது -அப்பக்குடத்தான் -திருப் பேர் நகர் -ஸூ ஹ்ருத லேசம்
இல்லாதாரையும் மடி மாங்காய் இடுமா போலே என் பேரைச் சொன்னாய் -என்னூரைச் சொன்னாய் -அஞ்ஞாத ஸூ ஹ்ருதங்களை ஆரோபித்தும்
இதற்காகவே திருப் பேர் நகர் -என்ற திரு நாமம் -பேர் சொல்வார்களே எதற்க்காகவாவது -அஞ்ஞாத ஸூஹ்ருதங்களை ஆரோபித்து
அங்கீ கரிக்க இடம் பார்க்கும் ஸ்வாமித்வம் -திருமாலிருஞ்சோலை மலை என்றேன் என்னத் திருமால் வந்து என் நெஞ்சம் நிறையப் புகுந்தான் –

187-இவற்றில் ப்ராவண்யம் -இத்திருப்பதிகளில் ஆழ்வாருக்கு ப்ராவண்யம் உண்டானது எப்போது -இவர் ஸ்ரீ ஸூ கத்தி
அருளிச் செய்யத் தொடங்கினது எத்தனை பிராயத்தில் –
இவர் ஸ்ரீ ஸூ க்திகளுக்கு போக்தாக்கள் யார் -போக்யதை இருக்கும் படி யாது என்னில்
அர்ச்சாவதார திவ்ய தேசங்களில் ஊற்றம் மிக்க இளம் பிராயத்திலே-பிரபந்தம் அருளிச் செய்யத் தொடங்கினது
பதினாறு கலைகளாலும் பரி பூரணமான சந்த்ர மண்டலம் போலே பதினாறு திரு நக்ஷத்ரம் நிரம்பியதும் –
அந்த சந்த்ர மண்டல அம்ருதம் தேவர்களுக்கு மாத்திரம் போக்யம்-ஆனால் இவற்றுக்கோ அருளிச் செய்யும் தாமும் -கற்பவர்களான
சம்சாரிகளும் -கேட்பவர்களான நித்ய ஸூ ரிகளும் -பாட்டு உண்பவனான சர்வேஸ்வரனும் -உபய விபூதியும் -உபய விபூதி நாதனும் -என்றவாறு
முகம் செய்தது -முகத்தில் நின்றும் வெளிவந்தது என்றபடி –

188-நீர் பால் –திருவாய் மொழி அவதரித்த கிராமம் -நீர் பாலாய் -பால் நெய்யாய் -ணெய் அமிருதமாய் -பாத்தாலே நிரம்பின ஒரு ஏரியாக ஆழ்வார் –
மயர்வற மதி நலம் அருளினன் -கர்ம ஞான அனுக்ருஹீதையான பக்தியின் ஸ்தானத்தில் பகவத் பிரசாதமாய் -அது அடியாக
பர பக்தி தொடக்கி பிறக்கையாலே -ஞானம் முதலிலே பர பக்தி ரூபமாய் -பர பக்தி பர ஞானமாய் -பர ஞானம் பரம பக்தியாய் முதிர்ந்த படியை நோக்கும் கால்
நீர் –பால் –நெய் -அமுது -நிரம்பின ஏரியாகவே ஆழ்வார் -நீரின் ஸ்தானம் ஞானம் / பால் -பர பக்தி / நெய் பர ஞானம் / அமுது பரம பக்தி
-ஆஸ்ரயம் அழியாமைக்காக பரிவாஹ அபேக்ஷை பிறந்து வாய் கரை நெளியத் தொடங்கி-வாய் கரையாலே அருளிச் செயல் அவதாரம்
சொற்கள் கிஞ்சித் கரிக்க என்னைக் கொள் என்று மேல் விழ -மிடைந்த சொல் தொடை யாயிரம் -தேங்கி இருக்கும் அமுத வெள்ளமே ஸ்ரீ ஸூ க்திகள்
-அவாவில் அந்தாதிகளால் இவை யாயிரமும் -பக்தி பலாத்காரத்தாலே பிறந்த ஆயிரம் என்று நிரூபகமாம் படி யாயிற்று –

189-மனம் செய் -பகவத் தத்துவத்தை கை இலங்கு நெல்லிக் கனியாக சாஷாத் கரித்த ஆழ்வார் -சம்சாரிகளுக்கு உஜ்ஜீவன அர்த்த விசேஷங்களை
உபதேசம் பண்ணி அருளினது கீதா உபநிஷத்துக்கு சமம் -ஜீவா பரமாத்மா பேதம் -ஜீவர்களுக்குள் பரஸ்பர பேதம் –
அசித்தில் காட்டில் சித்துக்கு உண்டான வாசி -ஆத்மாக்களின் நித்யத்வம் -தேஹங்களின் அநித்யத்வம் -சர்வேஸ்வரனுடைய நியாமகத்வம்
அவனது ஸுலப்யம் -சர்வ ஆசிரயணீத்வம் -அஹங்கார தோஷம் -இந்த்ரியங்களின் ப்ராபல்யம் -மனசின் ப்ராதான்யம் –
மநோ வாக் காயங்களை அடக்க வேண்டிய அவசியம் -ஸூ கருத்துக்களின் பேதம் -தேவா ஸூர விபாகம் -விபூதி யோகம் -விஸ்வரூப தர்சனம்
சங்க பக்தி அங்க பிரபத்தி ஸ்வதந்த்ர பிரபத்தி -போன்றவை கீதா ஸ்லோகங்களில் அருளிச் செய்தது போலவே திருவாய்மொழி அருளிச் செயல்களும் என்றவாறு

190-அது தத்வ உபதேசம் -வக்த்ரு வை லக்ஷண்யத்தால் உண்டான ஏற்றம் உண்டே இதற்கு -சாஷாத் தத்வம் எம்பெருமான்
-தத் வித்தி ப்ரணிபாதேன-என்று தத்வ தர்சிகள் உபதேசத்தை எம்பெருமான் தானே ஸ்ரீ கீதையில் புகழ்ந்து அருளுகிறானே –

191-அது ஐவரை வெல்வித்தது-அர்ஜுனனை யுத்தத்தில் மூட்டி ஐவரை வெல்வித்து நூற்றுவரை பொடி படுத்த கீதை அவதாரம்
தோற்றோம் மட நெஞ்சம் எம்பெருமான் நாரணற்கு -நெஞ்சு பறியுண்டு போம்படி முடிப்பான் சொன்ன ஆயிரம் –
-ஸ்வரூப விரோதி சங்கம் முடிக்க திருவாய்மொழி அவதாரம்
இரண்டுமே மோக்ஷ சாஸ்திரமே யாகிலும் அன்யார்த்த மாக அவதாரம் இல்லாத ஏற்றமும் உண்டு –

192-அங்கு நம்பி சரண் என்று -உபக்ரம உபஸம்ஹார என்றங்களும் உண்டே -கீதை தொடங்கும் போது-நாந்தகம் ஏந்திய நம்பி சரண்
என்று தாழ்ந்த தனஞ்சயருக்காக-சிஷ்யஸ்தே ஹம் சாதி மாம் த்வாம் ப்ரபன்னம் -அர்ஜுனனுடைய அனுவர்தனம் கண்டு ப்ரீதி யுடன் ஆரம்பம்
நஸூ மச்ரத்ததா நோ சி துர்மேதாச் சாசி பாண்டவ அப்புத்தயா என்ன ஜா நீ ஷே தன்மே ஸூ மஹத்பரியம் -என்று அப்ரீதிரோடே தலைக் கட்டிற்று
திருவாய் மொழி பரம கிருபையால் -ஏ பாவமே பரமே என்று தொடங்கி பொலிக பொலிக பொலிக என்று மங்களா சாசனம் பண்ணி
உற்றேன் உகந்து பனி செய்து என்று ப்ரீதியுடன் தலைக் கட்டிற்று -உபதேசம் பலித்தது இங்கு தானே -என்ற ஏற்றம் இதுக்கு உண்டு என்றவாறு –

193-அதில் சித்த தர்ம விதி -அர்த்த கௌரவத்தால் வந்த ஏற்றம் இதற்கு -மாம் ஏகம் சரணம் வ்ரஜ -சித்த தர்மம் பற்ற விதித்தமையே அங்கு
இங்கு -திரு நாரணன் தாள் காலம் பெறச் சிந்தித்து உய்மினோ -என்ற விதியும் –
அடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே -என்ற அனுஷ்டானமும் இரண்டும் உண்டே இங்கு –

194-பகவன் ஞான விதி -கீதைக்கும் உதகர்ஷம் ஆழ்வார் அங்கீ காரத்தாலே-அந்தமில் ஆதியம் பகவன் வணக்குடை தவ நெறி வழி நின்று -என்றும்
ஞான விதி பிழையாமே -என்றும் -பண்டே பரமன் பணித்த பணி வகையே -கண்டேன் கமல மலர்ப்பாதம் -போன்று ஆழ்வார்
பிரமானமாகக் கொள்ளுகையாலே கீதைக்கு உதகர்ஷம் -புத்த முனி கபில முனி -பவுத்த சாஸ்திரம் சாங்கிய சாஸ்திரம் அவன் தானே அருளிச் செய்தமை என்றாலும்
வைதிகர்கள் பரிக்ரஹிக்காமையால் அவை அப்ரமாணங்கள் ஆயின –

195-வேத வேத்ய வைதிக –ஹித அநு சான பரமான வேதம் உபதேசிப்பதும் -வேத வேத்யனான எம்பெருமான் உபதேசிப்பதும் –
வைதிக மகரிஷிகள் உபதேசிப்பதும் தத்வ ஹித புருஷார்த்தங்களில் அறிவு இல்லாத சம்சாரிகளுக்கு மாத்திரத்திலே யாம்
அறிவிலியான சம்சாரிகளுக்கும் -எம்பெருமானே உபாயம் என்று இருக்கும் ஞானிகளுக்கும் -எம்பெரு
அவன் அனுபவமே போது போக்காய் இருக்கும் ஞான விசேஷ உக்தர்களுக்கும் சர்வஞ்ஞனான சர்வேஸ்வரனுக்கும்
ஆக அனைவருக்கும் வேண்டிய அம்சங்களை உபதேசித்து அன்றோ ஆழ்வார் அருளிச் செய்கிறார் –

196-அறியாதார்க்கு–எம்பெருமானை பற்றிய ஞானமே இல்லாத சம்சாரிகளுக்கு -அஃதே உய்யப் புகுமாறு -என்று
திரு நாரணன் தாள்களே சம்சார நிஸ்தரண உஜ்ஜீவன உபாயம் என்றும் -அக்கரை என்னும் மனத்தகக் கடஇருந்தேனே -என்று
எம்பெருமானே உபாயம் என்று ஸ்வ ப்ரவ்ருத்தியில் நிவ்ருத்தராய் இருப்பவர்களுக்கு அந்த விவசாயம் குலைந்து பதற்றம் உண்டாம் படி
-முகில் வண்ண வானத்து இமையவர் சூழ இருப்பர் பேர் இன்ப வெள்ளத்தே -என்னும்படியான ப்ராப்ய வை லக்ஷண்யம் உபதேசிக்கிறார்
செஞ்சொல் கவிகாள் உயிர் காத்து ஆட் செய்மின் -என்று சீல குணமாகிய ஆழங்கால் அறிவித்தும்
மங்க வொட்டு உன் மா மாயை -என்று எம்பெருமானுக்கும் உபதேசித்து –
ஆக அறிவு கேடரை உபாயத்திலே மூட்டி -உபாயத்தில் ஊன்றுவாரை உபேய பரராக்கி -உபேயத்தில் அவகாஹிப்பார்களுக்கு
ஆழங்கால் அறிவித்து -ப்ராப்தியை உபண்டாக்குமவனுக்கும் த்யாஜ்யத்தை அறிவிப்பவர் ஆயிற்று –

197-அவன் முனிந்தார்க்கு -எம்பெருமானுடைய முனிவுக்கு -நிக்ரஹத்துக்கு -இலக்கான சம்சாரிகளுக்கு –
ஞானப் பிரானை அல்லால் இல்லை நான் கண்ட நல்லதுவே -என்று தாம் கண்டதைக் காட்டி –
எங்கனேயோ அன்னைமீர்காள் என்னை முனைவது நீர் -என்கிற தாய்மாற்கு என் நெஞ்சினால் நோக்கிக் கண்ணீர் –
என்று ப்ராப்ய வைலக்ஷண அவகாஹியான நெஞ்சை காட்டி ஞானத்தை உண்டு பண்ணுவார் –
செஞ்சொல் கவி காள் உயிர் காத்து ஆட் செய்மின் -என்று புறம்பு ஒருவர் காணாததையும் காண
வல்லார்களுக்கு அவன் சீல குணத்தில் கண் வையாமல் கண் மாறி வைக்கவும்
தம்மிடம் அநு ராகத்தாலே தேஹ தோஷம் காண மாட்டாத எம்பெருமானுக்கு மங்க வொட்டு உன் மா மாயை -என்று பிரகிருதி தோஷம் காட்டுவார்
சம்சாரிகளுக்கு நிக்ரஹம் மாற்றும் வழியையும் -தாய்மார்கள் அவன் வை லக்ஷண்யம் அறியாமல் இருக்க அவர்களுக்கும் உபதேசித்தும்
செஞ்சொல் கவிகளுக்கு சீல குணம் அறியாமல் இழிந்தால் வரும் பேராபத்தை உபதேசித்து -சர்வஞ்ஞனுக்கும் தேஹ தோஷம் உபதேசித்தார் அன்றோ –

198-சாதன சாத்யஸ்த -அதிகமாக உபதேசிப்பது சம்சாரிகளுக்கும் எம்பெருமானுக்கும் என்றபடி -உபாயம் உபேயம் கை புகுந்தவர்களுக்கு சிறிதே உபதேசம் –
கர்மா பரவசரான சம்சாரிகளுக்கும் -பிரேம பரவசனான எம்பெருமானுக்குமே அதிக உபதேசம் –
அஞ்ஞர் ஞானிகள் ஞான விசேஷ யுக்தர் சர்வஞ்ஞன் -நால்வருள்ளும் சாதனஸ்தரும் சாத்தியஸ்தர் -ஆகிய இரண்டு மத்ஸ்யர்களை விட்டு
அஞ்ஞர் -சர்வஞ்ஞன் -இருவருக்கும் பல காலம் ஹித அஹிதங்களை சொல்லுவார் -என்றபடி
தாய்மார் உபாய அத்யாவஸ்யர் என்பதால் -அதி பிராவண்யம் ஆகாது என்று ஹிதம் சொல்பவர்கள் ஆதலால் இவர்களே சாதனஸ்தர் –
செஞ்சொற் கவிகள் அனுபவத்தில் இழிந்து கால ஷேபம் செய்வதால் சாத்தியஸ்தர் ஆவார் –

199-கதிர் ஞான மூர்த்திக்கு -கணக்கில் கீர்த்தி வெள்ளக் கதிர் ஞான மூர்த்தியினாய் -என்கிற சர்வஞ்ஞனுக்கு
திண் சக்கர நிழறு தொல் படையாய் உனக்கு ஓன்று உணர்த்துவன் நான் -என்று உபதேசிப்பது ப்ரேமத்தால்-
கொள் என்று கிளர்ந்து எழுந்த பெரும் செல்வம் நெருப்பாகக் கொள் என்று தமமூடும்-தமஸ் மேலிட்ட சம்சாரிகளுக்கு
நின் கண் வேட்கை எழுவிப்பேன்-என்று திருத்தி பகவத் அனுபவ பரராக்க வேணும் என்ற ஞானத்தால் –

200-உயிர் மாய்தல்-ஆளும் என்னாருயிர் என்னும் பர துக்கம் சஹியாமை இரண்டிலும் உண்டு –பர துக்க அஸஹிஷ்ணுத்வமே ஹேது-என்கிறது –
சர்வேஸ்வரனைக் குறித்து ப்ரேமத்தாலும்-சம்சாரிகளைக் குறித்து ஞானத்தாலும் உபதேசித்தார் -என்பதற்கு பின்
இரண்டுமே பர துக்க அஸஹிஷ்ணுத்வம் ஒழிந்து இராதே –
கொண்டாட்டம் குலம் புனையும் தமர் உற்றார் விழு நிதியும் வண்டார் பூங்குழளாலும் மனை ஒழிய உயிர் மாய்தல் கண்டு ஆற்றேன் -என்பதால்
சம்சாரிகளைக் குறித்து உபதேசிக்காய்க்கு பர துக்க அஸஹிஷ்ணுத்வம் ஹேது என்றும் –
அசுரர்கள் தலைப் பெய்யில் யவம் கொலாம் என்று ஆழும் என்னுயிர் -அவனை குறித்து உபேதசிக்கைக்கும் இது ஹேது என்று அருளிச் செய்கிறார் –

———————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ உ .வே. காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஆச்சார்ய ஹிருதயம் -சூர்ணிகை- 121-149—தாத்பர்ய சாரம் -ஸ்ரீ உ வே காஞ்சி ஸ்வாமிகள் —

December 28, 2016

121-வித்யை தாயாகப் பெற்று -ஆனால் இவர்க்குத் தம் பேச்சு அன்றோ ஸ்வாபாவிகம்-பிராட்டிமார் தசையை அடைந்து
பேசும் பேச்சு வந்தேறி யன்றோ என்னில் -அன்று -ஆச்சார்யன் திரு மந்த்ர முகத்தாலே ஸ்வரூப ஞானத்தை உண்டாக்கின போது
இவ்வாத்ம ஸத்பாவம் ஆகையால் -வித்யையை மாதாவாகக் கொண்டு இவ்வாத்ம வஸ்துவை ஜெநிப்பித்து
தேனும் பாலும் அமுதுமாய திருமால் திரு நாமம் என்கிற போக்ய பதார்த்தமான திருமந்திரத்தாலே -அநந்யார்ஹ சேக்ஷத்வாதிகளாலே-
லஷ்மீ சத்ருசமாக வளர்த்துக் கொண்டு போந்த ஆப்த ரக்ஷகனான ஆச்சார்யன் ஆகிற பிதா அந்நிய சேஷத்வ பிரசங்கம் வாராத படி
சர்வ லோக நாயகனாகச் சொல்லப்படுகிற பணமாடு அரவணைப் பற்பல காலமும் பள்ளி கொள் மணவாளரை
எட்டு இழையாய் மூன்று சரடாய் இருபத்தொரு மங்கள ஸூத்ரம் போலே
எட்டு அக்ஷரமாய் மூன்று பதமாய் ஈஸ்வர சம்பந்த பிரகாசகமான திருமந்திரம் ஆகிற மங்கள ஸூ த்ர பந்தத்தோடே வரிக்கும் படி பண்ண
பரம புருஷரான மணவாளர் பரிக்ரஹித்த அநந்தரம் கைங்கர்ய பிரார்தனையோடே செல்லும் சரம சதுர்த்தியில் உள் புகுந்து
பகவத் அனுபவ விரோதியாய் இடையீடான சரீரம் நடுவே கிடக்கிற நாலு நாளையும் கழித்து ஒருவராலும் விட முடியாத ஜென்ம பூமியான
இவ்விபூதியை முன்பு ஆதரணீயமாய்ப் போந்த வஸ்துக்களோடே கூட விட்டு நீங்கி சூழ் விசும்பு அணி முகில் -என்கிற
திருவாய் மொழியில் சொல்லுகிறபடியே அர்ச்சிராதி மார்க்கத்தாலே வழியில் உள்ளார் எல்லாரும் ஸத்கரிக்க நயாமி பரமாம் கதிம்-என்கிற
நாயகன் முன்னே போகப் பின்னே போய் பார்த்திரு கிருஹத்துக்குப் போகிற பெண் அவ் வூர் எல்லையில் சென்றவாறே
அவர்கள் குளிப்பாட்டக் குளிக்குமா போலே அம்ருத வாஹினியான விரஜையிலே இப்பால் உள்ள அழுக்கு அறும் படி நீராடி
குளித்து ஏறின பெண்ணை பர்த்ரு பந்துக்களான ஸ்த்ரீகள் வந்து அலங்கரிக்குமா போலே அலங்கார உபகரணங்களான
திவ்ய மால்ய திவ்ய அஞ்சன திவ்ய சூர்ண திவ்ய வஸ்திர திவ்ய ஆபரணங்களை ஏந்திக் கொண்டு திவ்ய அப்சரஸ்ஸூக்கள் எதிரே வந்து
போக்தாவான ஈஸ்வரனுக்கு போக்யமாம் படி அலங்கரித்து இவ்விஷயத்தில் கிஞ்சித் கரிக்கையில் உண்டான சாபலம் தோற்ற
திரள நின்று மங்களா சாசனம் பண்ணி சாமரம் பரிமாற-அலங்க்ருதையாய் உபாலால நத்தோடே செல்லுகிற பெண் பர்த்ரு கிருஹத்தை
அணுகச் சென்றவாறே அங்குள்ள ஸ்த்ரீகள் மங்கள தீபாதிகளை ஏந்திக் கொண்டு எதிரே வந்து சத்கரிக்குமா போலே
பூர்ண கும்ப தீபாதிகளைத் தரித்துக் கொண்டு நித்ய நவ யவ்வநை களான வேறே சில ஸ்த்ரீகள் எதிர் கொள்ள
உபாலால நத்தோடே சென்ற பெண் பர்த்ரு கிருஹத்திலே புக்கு இருக்குமா போலே
ஸ்ரீ யபதி யானவனுக்கு போக ஸ்தானமான ஸ்ரீ வைகுண்டத்தை பிராபித்து அவனோடே கூடி இருந்து பர்த்ரு கிருஹத்திலே பெண் வந்த பின்பு
தம்பதிகளும் மற்றும் உள்ள பந்துக்களும் கூடி இருந்து பெரும் களிச்சி உண்ணுமா போலே -அடியார் குழாங்களும் அவனுமாக இருக்கிற சேர்த்தியிலே
பெரும் களிச்சியாகப் பூர்ண அனுபவம் பண்ணி நித்ய ஸூ ரிகள் புஜிக்கிற போகத்தை – ஸோஸ்நுதே சர்வான் காமான் ஸஹ ப்ரஹ்மண விபச்சிதா
-என்கிறபடியே புஜித்து பர்த்ரு சம்ச்லேஷத்துக்கு படுக்கையில் ஏறுமா போலே உபய விபூதி யாதிபத்ய பிரகாசமாய்
சர்வ ஆச்சார்ய மயமான திவ்ய பீடத்திலே பாத பீடத்திலே அடி இட்டு ஏறி ஸ்ரீ பரதாழ்வானையும் அக்ரூரனையும் திருவடியையும்
ஆதரித்து அணைத்துக் கொண்ட ஸ்ரீ கௌஸ்துப உஜ்ஜவலமான திரு மார்பிலே ஸ்ரீ கௌஸ்துபம் போலே போக்யமாய் அணைகிற
ஆத்மவஸ்துவுக்கு நாயகிப் பேச்சு ஸ்வாபாவிகமே ஒழிய வந்தேறி யன்று-

122-இன்பும் அன்பும் -நமக்கும் பூவின் மிசை நங்கைக்கும் இன்பனை -என்னும் படி பிராட்டிக்கு முன்னே இவர் பக்கல் இன்பனாவது –
கோல மலர்ப் பாவைக்கு அன்பாகிய என் அன்பேயோ -என்னும் படி அவள் பக்கல் பண்ணின ஸ்நேஹம் இவர் அளவும் வர வளருவதாய்
இப்படி இன்பம் முற்படுவது -அன்பு கொழுந்து விடுவது ஆகிறது -பிராட்டியோடு இத்தலைக்கு உள்ள சாம்யத்துக்கு உடலான ஆறு பிரகாரத்தாலே யாய்த்து –
அநந்யார்ஹ சேஷத்வம் -அநந்ய சரண்யத்வம் -அநந்ய போக்யத்வம் -சம்ச்லேஷத்தில் தரிக்கை-விஸ்லேஷத்தில் தரியாமை
-ததேக நிர்வாஹயத்த்வம் ஆகிற இவை யாய்த்து பிரகார ஷட்கம் –

123- கீழ்ச் சொன்ன ஆகாரத்தாலே பெரிய பிராட்டியார் உடன் உள்ள சாம்யம் அன்றிக்கே -தம்முடைய பாவ விசேஷங்களாலே
பகவத் அபிமத திவ்ய மஹிஷிகளான பிராட்டிமார் மூவரோடும் இவர்க்கு உண்டான சாம்யம் இவர் பாசுரங்களில் தோற்றும் -எங்கனே என்னில்
உண்ணாது உறங்காது ஒலி கடலை ஊடறுத்து –கிடந்து இருந்து நின்று அளந்து –சூட்டு நன் மாலைகள் -இத்யாதி படியே
பிரதிபாதிக்கப் பட்ட வைலக்ஷண்யாதி அதிசய சாலிநிகளாய்-சர்வேஸ்வர சாம்ராஜ்யத்திலே அவனோடு ஓக்க முடி சூடுகையாலே
முடிக்கு உரியரான சீதா பிராட்டி பூமிப பிராட்டி நப்பின்னைப் பிராட்டி என்னும் இவர்களோடு மாயோன் திறத்தினளே இத்திருவே -என்றும்
-மண்ணேர் அன்ன ஒண் நுதலே -என்றும் -பின்னை கொல் நிலா மா மகள் கொல் திரு மகள் கொல் -என்றும் சொல்லுகிறபடியே
இவ்வாழ்வாருக்கு உண்டான சாம்யமாவது -தென்பால் இலங்கை வெங்காயம் செய்த -என்றும்
-இலங்கை குழாம் நெடு மாடம் இடித்த பிரானார் கொடுமைகளே-என்றும்
காயும் கடுஞ்சிலை என் காகுத்தன் வாரானால் -என்றும் –
இலங்கை நகர் அம்பெரி யுத்தவர் தாளிணை மேலணி-என்றும் -தீ முற்றத் தென்னிலங்கை யூட்டினான் தாள் நயந்த -என்றும்
-மாறில் பொற் அரக்கன் மதிள் நீர் எழச் செற்று உகந்த -என்றும் கிளர் அரக்கன் நகர் எரித்த -என்றும் –
காண் பெரும் தோற்றத்து என் காகுத்த நம்பிக்கு -என்றும் -என்னாருயிர் காகுத்தன் நின் செய்யவாய் ஒக்கும் வாயன் -என்றும் பாசுரங்களிலும்
ஆதி யம் காலத்து அகலிடம் கீண்டவர் -என்றும் மண் புரை வையம் கிடந்த வராகர்க்கு -என்றும் ஞாலப் பொன் மாதின் மணாளன் துழாய் -என்றும்
-ஏனம் ஒன்றாய் மண் துகள் ஆடி -இத்யாதி பாசுரங்களிலும்
எருது ஏழ் தழி இக்கோளியார்-சறையினார் கவராத -இத்யாதி பாசுரங்களாலும் தோற்றும் –
இத்தால் திவ்ய மகிஷிகள் மூவரிடம் இவருக்கும் உண்டான சாம்யம் சீதா பிராட்டிக்கு அசாதாரணமான ராமாவதார தத் அபதானங்களிலும்
ஸ்ரீ பூமிப் பிராட்டிக்கு அசாதாரணமான வராஹாவதார தத் அபதானங்களிலும்
நப்பின்னை பிராட்டிக்கு அசாதாரணமான கிருஷ்ணாவதார தத் அபதானங்களிலும் அந்தப் பிராட்டிமார் தங்களை போலே
மிகவும் பிரவணராய் அருளிச் செய்த அவ்வவ திவ்ய ஸூக்திகளிலே அபிவியக்தம் என்றதாயிற்று –

124-இவர்கள் தேடி நிற்க -இப்படி பிரதான மஹிஷிகளான இவர்களோடு உள்ள சாம்யம் அன்றிக்கே அவனுக்கு இவர்களில் காட்டிலும்
அபிமதைகளான கோபிமார்களுடையவும் மதுரா நகர ஸ்த்ரீகளுடையவும் -நரக வதத்துக்கு பிறகு பரிக்ரஹித்த பதினாறாயிரம் தேவிமாருடையவும்
பாவங்கள் இவருக்கு உண்டு என்னும் இடம் இவர் தம் பேச்சில் தோன்றும் –
தேடித் திரு மா மகள் மண் மகள் நிற்ப -என்கிறபடியே பிரதான மஹிஷிகளான ஸ்ரீ பூமியாதிகள் தன்னை தேடி நிற்க வேண்டும் படி
இவர்களை உபேக்ஷித்து -பொய்கை மணல் குன்று முல்லைப் பந்தல் திரு முற்றம் மச்சு மாளிகை முதலான அவ்வவ ஏகாந்த ஸ்தலங்களில் சென்று புக்கு
துகில்களை வாரியும்-சிற்றிலை அழித்தும்-பந்தைப் பறித்தும் -கச்சோடு பட்டைக் கிழித்தும் -இப்படி நியாமகர் அற்ற ஸ்வதந்த்ரர் செய்யுமவற்றையும்
-நியாமாகர் கீழ் அடங்காமல் மூலை படியே நடத்துவார் செய்யுமவற்றையும் செய்து பேர் ஆரவாரம் விளைத்து விரும்பி அனுபவிக்கப் பெற்ற
பரம விலக்ஷணைகளான திருவாய்ப்பாடியில் பெண்களுடைய பாவனை இவர்க்கு உண்டு என்னும் இடம்
மின்னிடை மடவார்கள் நின்னருள் சூடுவார் -மல்லிகை கமழ் தென்றல் ஈருமாலோ -என்கிற திருவாய் மொழிகளிலும்
பேய் முலை யுண்டு சகடம் பாய்ந்து -முனிந்து சகடம் உதைத்து -என்கிற பாட்டுக்களிலும் தோன்றும் –
ஸ்ரீ மாலா காரரும் கூனியும் கொடுத்த திருமாலையையும் சாந்தையும் சாத்திக் கொண்டு ராஜ மார்க்கத்தால் எழுந்து அருளி
குவலயா பீட நிரசனம் பண்ணி நிற்கிற போது
முழுசி வண்டாடிய தண் துழாயின் –ஆவரிவை செய்து அறிவார் -என்கிற பாட்டுக்களில் சொல்லுகிறபடியே
ரூப ஸுந்த்ராய சேஷ்டிதாதி களில் தோற்று தங்கள் பேசுகிற இனிய பேச்சுக்களாலே அவர் கோகுலத்தை மறக்கும் படி பண்ண வல்ல
ஸ்ரீ மதுரையில் பெண்களுடைய பாவனை இவர்க்கு உண்டு என்னும் இடம் -மல் பொரு தோளுடை மாய பிரானுக்கு
-விறல் கஞ்சனை வஞ்சனை செய்தீர் -என்னும் பாசுரங்களில் தோன்றும் –
நரகாசூரன் கன்யைகளாய்க் கொண்டு வந்து திரட்டி வைக்க அவனை நிரசித்து ஒழித்து பரிக்ரஹிக்கப் பட்ட பதினாறாயிரம் தேவிமார்
பாவனை இவர்க்கு உண்டு என்னும் இடம் -நூற்றுவரை யன்று மங்க நூற்ற நிகரில் முகில் வண்ணன் நேமியான் -என்ற பாசுரத்திலும்-
வாயும் திரை யுகளும்-என்ற திருவாய் மொழியிலும் தீர்ப்பாரை யாமினியிலும் தோற்றும் –

125-இரான் எனில் -இப்படி பிரதான மஹிஷிகளோடு மற்றும் பகவத் பரிக்ரஹம் யுடையாரோடும் இவருக்கு சாம்யம் உண்டே யாகிலும்
அல்லாதார் எல்லாம் இவருக்கு ஒரு வகைக்கு ஒப்பாம் அத்தனை ஆகையால் -ஸர்வதா சாம்யம் சீதா பிராட்டியோடே என்கிறது –
ந ச சீதா த்வயா ஹீ நா -இத்யாதி ஸ்லோகத்தில் படியே நீரில் நின்றும் எடுக்கப் பட்ட மீன் போலே விஸ்லேஷத்தில் சத்தா ஹானி பிறக்கும்படி யானாள் பிராட்டி –
ஆழ்வாரும் மராமரம் எய்த மாயவன் என்னுள் இரான் எனில் -பின்னை யான் ஓட்டுவனோ –என்று அவனைப் பிரிந்தால் தான் உளராகாதபடி யானார்
இலங்கை செற்றாய் உன்னை என்னுள்ளே குழைத்த எம் மைந்தா -என்று இவரோடு ஏக தத்வம் என்னலாம் படி சம்ச்லேஷித்த பெருமாள் –
லங்காத்வாரத்தளவும் அவளைத் தேடி பின் தொடர்ந்தால் போலே -எதிர் சூழல் புக்கு எனத்தோர் பிறப்பும் -என்று
இவர் பிறந்த ஜென்மங்கள் தோறும் தானும் பின் தொடரும் படி –
அவள் ராவண பாவனத்திலே சிறை இருந்தால் போலே இவரும் வன் சிறையில் அவன் வைக்கில் -என்று சம்சாரத்திலே சிறை இருந்தார் –
அப்போது பிரதிகூலனான ராவணனுக்கு -விதிதஸ் ச ஹி தர்மஞ்ஞஸ் சரணாகத வத்ஸல-தேன மைத்ரீ பவது தே யதி ஜீவிது மிச்சசி -என்று
ஹிதம் சொன்னால் போலே இவரும் பிரதிகூலரான சம்சாரிகளுக்கு -புணைவன் பிறவிக் கடல் நீந்துவார்க்கே -என்று ஹிதம் அருளிச் செய்தார் –
நஹி மே ஜீவிதே நார்த்தோ நைவார்த்தைர் நச பூஷணை-வசந்த்யா ராக்ஷஸீ மத்யே விநா ராமம் மஹா ரதம் -என்று சக்கரவர்த்தி திருமகனை
ஒழிய ராக்ஷஸிகள் நடுவே இருக்கிற எனக்கு பிராணாதிகளால் என்ன பிரயோஜனம் என்று பிராட்டி அவற்றை உபேக்ஷித்தால் போலே இவரும் –
ஏறாளும் இறையோனும் -என்கிற திருவாய்மொழியில்-மணிமாமை குறைவிலமே-மட நெஞ்சால் குறைவிலமே -உடம்பினால் குறைவிலமே
உயிரினால் குறைவிலமே -என்று அவனுக்கு உறுப்பு அல்லாத நானும் என் உடைமையும் வேண்டா என்று ஆத்மாத்மீயங்களை உபேக்ஷித்தார் –
விஷஸ்ய தாதா நஹி மேஸ்தி கஸ்ச்சித் சஸ்த்ரஸ்ய வா வேசமநி ராக்ஷஸ்ய -என்று ராவண பவனத்திலே பிராட்டி மரண உபாயங்களை
சிந்தித்தால் போலே இவரும் மாயும் வகை அறியேன் வல் வினையேன் பெண் பிறந்தே -என்று முடியும் வகை தேடினார் –
ஹா ராம ஸத்ய வ்ரத தீர்க்க பாஹோ ஹா பூர்ண சந்த்ர ப்ரதிமா நவக்த்ர –என்று பிராட்டி பெருமாளுடைய ஸுர்யாதிகளை சொல்லிக் கூப்பிட்டால் போலே இவரும்
புணரா நின்ற மரம் ஏழ் அன்று எய்த ஒரு வில் வலவா ஓ-என்று அவனுடைய வீரப்பாட்டைச் சொல்லிக் கூப்பிட்டார்
க்யாத ப்ராஜ்ஞ க்ருதஞ்ஞஸ் நிர நுக்ரோசஸ் ச சங்கே மத் பாக்யே சம்ஷயாத் –என்று பெருமாளை பிராட்டி நிர்த்தயராக சங்கித்தால் போலே இவரும்
இரக்கம் எழீர் இதற்கு என் செய்கேன் -என்றும் -இலங்கை குழாம் நெடு மாடம் இடித்த பிரானார் கொடுமைகளே -என்றும்
அறிவு ஒன்றும் சங்கிப்பன் வினையேன் -என்றும் அவனை நிர்க்க்ருணனாக சங்கித்தார் –
ஜீவந்தீம் மாம் யதா ராமஸ் சம்பாவயதி கீர்த்திமான் தத் த்வயா ஹநுமன் வாஸ்யோ வாசா தர்மமவாப்நஹி -என்று தம்முடைய
ரஷ்ய வர்க்கத்திலே நானும் ஒருத்தி இருப்பதாகப் பெருமாளுக்கு விண்ணப்பம் செய் என்று பிராட்டி ஆள் விட்டால் போலே -இவரும்
மாறில் போரரக்கன் மதிள் நீர் எழச் செற்று உகந்த ஏறு சேவகனாருக்கு என்னையும் உளன் என்மின்களே-என்று தூது விட்டார் –
அநந்யா ராகவேணாஹம் பாஸ்கரேண பிரபா யதா –என்று ஆதித்யனோடு பிரபை போலேவே நான் பெருமாளோடு அநன்யயையாய் இருப்பேன்
என்று பிராட்டி சொன்னால் போலே இவரும் -சோர்ந்தே போகல் கோடாச் சுடரை யரக்கியை மூக்கீர்ந்தாயை அடியேன் அடைந்தேன் முதல் முன்னமே -என்று
சேஷத்வத்தாலே அவனோடே தாம் நித்ய சம்யுக்தராய் பேசினார் -அவள் அகலகில்லேன் இறையும் என்று அலர் மேல் மங்கை உறை மார்பா -என்கிறபடி
உன்னை க்ஷண காலமும் பிரிந்து இருக்க வல்லேன் அல்லேன் என்னுமா போலே இவரும் அந்தோ அடியேன் உன பாதம் அகலகில்லேன் இறையுமே -என்று பேசினார் –
ஆகையால் இவருக்கு ஸர்வதா சாத்ருஸ்யம் பெரிய பிராட்டியாரோடே யாய்த்து –

126-பிரியில் இலேனுக்கு-இப்படி பிராட்டியைப் போலே பிரியில் தரியாதார் இவர் ஒருவரேயோ-பின்னையும் யுண்டோ வென்னில்-
அவனைப் பிரியும் அளவில் -நின் அல்லால் இலேன் காண்-என்னும் இவரைப் போலே சத்தை அழிகைக்கு-நஸாஹம் அபி ராகவ -என்று
சொன்ன இளைய பெருமாளும் -கீழ் ப்ரஸ்துதமான ஜலாதுத்ருத மத்ஸ்யம் இ றே-
இத்தால் பிராட்டியைப் போலே பிரியில் முடிகைக்கு இளைய பெருமாளும் இவரும் ஒக்கும் என்றதாய்த்து –

127-அழும் தொழும் -இனி மேல் லஷ்மண பரத சத்ருக்ந தசரத யசோதா பிரகலாத விபீஷண ஹனுமத்
அர்ஜுனர்களுடைய படிகளும் ஆழ்வார் பக்கலிலே உண்டு என்கிறது –

இளைய பெருமாள் -பால்யாத் ப்ரப்ருதி ஸூஸ் நிக்த-என்கிறபடியே பால்யமே தொடங்கிப் பிரியில் தரியாத ஸ்நேஹத்தால்-
பாஷபபர்யா குலமுக -என்றும் -ப்ரஹவாஞ்சலி புடம் ஸ்திதம்-என்றும் சொல்லுகிறபடியே விஸ்லேஷ பிரசங்கத்தால் உண்டான சோக வேகத்தால்
சொரிகிற பாஷ்பத்தோடே அஞ்சலியும் கையுமாகக் கொண்டு -ஸ்வயம் து ருசிரே தேசே க்ரியதாமிதி மாம் வத-என்றும்
-பாவாம்ஸ்து ஸஹ வைதேஹ்யா கிரிசா நுஷூ ரம்ஸ்யதே அஹம் சர்வம் கரிஷ்யாமி -ஜாக்ரதஸ் ஸ்வபதஸ் ச தே -என்றும் சொல்லுகிறபடியே
திருச் சித்ர கூட கிரித் தாழ் வரை முதலான ருசிர தேசங்களிலே இருவருமான சேர்த்தியிலே சர்வவித கைங்கர்யங்களும் அடியேன் செய்யும் படி
ஏவிக் கொண்டு அருள வேணும் என்று பிரார்த்தித்து -அப்படிப்பட்ட அவிச்சின்ன கைங்கர்யத்தை பெறுகைக்காக-
ச ப்ராதுஸ் சரணவ் காடம் நிபீடிய ராகு நந்தன ஸீதாம் உவாசாதியசா ராகவம் ச மஹாவ்ரதம் -என்கிறபடியே புருஷகார பூர்வகமாக திருவடிகளைக் கட்டி கொண்டு
அக்ரத ப்ரயயவ் ராமஸ் சீதா மத்யே ஸூ மத்யமா ப்ருஷ்டதஸ் து தனுஷ் பாணீர் லஷ்மனோ து ஜகாம ஹா -என்கிறபடியே
ஆயுத பாணியாய்க் கொண்டு பெருமாளைப் பின் சென்று -பிராதா பர்த்தா ச பந்துஸ் ச பிதா ச மம ராகவ -என்று
தமக்கு சர்வ வித பந்துவும் பெருமாளே என்றால் போலே -இவரும்
அரியாக் காலத்துள்ளே அடிமைக்கு கண் அன்பு செய்வித்து -என்கிறபடியே பருவம் நிரப்புவதற்கு முன்னே பிரியில் தரியாதபடி
பிறந்த ஸ்நேஹத்தாலே விஸ்லேஷம் பொறாமல் -அழும் தொழும் ஆவி அனல் வெவ்வுயிர்க்கும் -என்று கண்ணும் கண்ணநீரும் -கையும் அஞ்சலியுமாய்
திருவேங்கடத்து எழில் கொள் சோதி எந்தை தந்தை தந்தைக்கு –ஒளியில் காலம் எல்லாம் உடனாய் மன்னி வழுவிலா வடிமை செய்ய வேண்டும் நாம் -என்று
மொய்த்த சோலையும் மொய் பூம் தடம் தாழ்வரையுமான போக ஸ்தலங்களை யுடைய திருமலையில் -அலர் மேல் மங்கை யுறை மார்பன் ஆகையால்
பிராட்டியோடே கூடே இருக்கிற பரம சேஷியானவனுக்கு ஸர்வதா சகல சேஷ வ்ருத்திகளும் பண்ண வேணும்
-அது தன்னிலும் முகப்பே கூவிப் பணி கொள்ளாய் -என்று சந்நிதியில்
ஏவிக் கொள்ளவும் வேணும் என்று பிரார்த்தித்தபடி தாத் கைங்கர்யத்தை பெறுகைக்கு உபாயமாக -நாகணை மிசை நம்பிரான் சரணே சரண் நமக்கு -என்று
புருஷகாரம் முன்னாக அவன் திருவடிகளைப் பற்றி -வாளும் வில்லும் கொண்டு பின் செல்வார் மற்று இல்லை என்று
திவ்யாயுதங்களைக் கொண்டு தாம் பின்னே திரிய ஆசைப்பட்டு
சேலேய் கண்ணியரும் பெரும் செல்வமும் நன்மக்களும் மேலாயத் தாய் தந்தையரும் அவரே என்று
சர்வேஸ்வரன் தமக்கு சர்வ வித பந்துவும் என்கையாலே இளைய பெருமாளோடே ஒப்பர் –

ஸ்ரீ பரதாழ்வான் -பெருமாள் முடி சூடி இருக்க தாம் அடிமை செய்து வாழப் பெறாத படி -கைகேயி அவரைக் காட்டிலே துரத்தித் தம் மேலே
ஸ்வா தந்தர்யத்தை ஆரோபித்த கொடுமையாலே-ஹந்யாம் அஹம் இமாம் பாபாம் கைகேயீம் துஷ்ட ஸாரிணீம்-என்று
மாதாவானவளை சீறி உபேக்ஷித்து தமக்கு ஸ்வாதந்தர்யம் அஸஹ்யம் என்னும் இடம் தோற்ற -ராஜ்ஜியம் சாஹம் ச ராமஸ்ய –என்று சொல்லி
-வசிஷ்டாதி புரோகிதர் நீ ராஜாவாக வேணும் என்று நியமியா நிற்க மகத்தான ஐஸ்வர்யத்தையும் விரும்பாமல் பெருமாளை மீட்டுக் கொண்டு
வந்து பட்டாபிஷேகம் பண்ணுவிக்க விரும்பி அவர் திருவடிகளாலே சென்று மீண்டு எழுந்து அருள வேணும் என்று அபேக்ஷித்த இடத்தில்
-அவர் அது செய்யாமல் திருவடி நிலைகளைக் கொடுத்து விட அந்தப் பாதுகைகளை சிரஸா வஹித்துக் கொண்டு மகிழ்ந்து
மீண்டு வந்து பெருமாள் வனவாசம் முடிந்து த்வரையோடு திரும்பி வரும் அளவும் -பங்கதிக் தஸ் து ஜடிலோ பரத -என்கிறபடியே
கண்ணநீரால் உண்டான சேற்றிலே அழுந்தி -மூத்தார் இருக்க இளையோர் முடி சூடலாகாது என்ற இஷ்வாகு குல மரியாதை தப்பாமல்
நோக்கிக் கொண்டு தம்முடைய மநோ ரதம் தலைக் கட்டப் பெறாத இழவோடே இருந்தாப் போலே -இவ்வாழ்வாரும் –
பகவத் ப்ராவண்ய அதிசயத்தாலே வழி அல்லா வழியே யாகிலும் கிட்டும் அத்தனை என்கிற த்வரைக்கு இசையாமல் விலக்கும் மாதாவை
சத்ரு பஷமாய் காண்பவராய் -அன்னை என் செய்யில் என் -என்று சீறி உபேக்ஷித்து -யானே என் தனதே -என்கிற ஸ்வா தந்தர்யத்தை சஹியாதே
யானே நீ என்னுடைமையும் நீயே -என்று ஆத்மாத்மீயங்கள் இரண்டும் அங்குத்தைக்கு சேஷம் என்று
-கொள் என்று கிளர்ந்து எழுந்த பெரும் செல்வம் நெருப்பு -என்று நிரவதிக ஐஸ்வர்யத்தையும் அக்னி சமமாகக் கொண்டு
-வேங்கட வாணனை வேண்டிச் சென்று என்று திருச்சித்ர கூடத்தில் இருந்தால் போலே திருமலையில் இருக்கிற அவனை
அனுபவிக்க விரும்பிச் சென்று தம் அபேக்ஷிதம் அவன் அப்போது செய்யாமல் ஒரு வைஸத்ய முகத்தால் -உன் திருவடியே சுமந்து
உழலக் கூட்டரிய திருவடிக் கண் கூட்டினை -என்று திருவடிகளைத் தந்தாய் என்று ஹ்ருஷ்டராம் படி பண்ணி விட
அப்படி அவன் கொடுத்த திருவடிகளை சிரஸா வகித்து -வீடு திருத்தப் போனவன் விண்ணுலகம் தர விரைந்து வரும் அளவும்
-கண்ண நீர் கைகளால் இறைக்கும் -இரு நிலம் கை துழா விருக்கும் -என்கிறபடியே கண்ண நீர் வெள்ளத்தால் உண்டான சேற்றிலே
இருந்து ஆற்றாமையாலே தரையைத் துழாவி -குடிக்கிடந்து ஆக்கம் செய்து -என்கிறபடியே பிரபன்ன குல மரியாதை தப்பாமே இருந்து
காமுற்ற கையறவோடு-என்கிறபடியே தாம் ஆசைப்பட்ட பொருள் கை புகுராத இழவோடே இருக்கையாலும் பரத ஆழ்வானோடு ஒப்பர் –

ஸ்ரீ சத்ருக்ந ஆழ்வான் பாகவத சேஷத்வமே பரம புருஷார்த்தம் என்று ஸ்ரீ பரத ஆழ்வானுக்கே சேஷ பூதராய்-அவனுடைய
பாவனத்வ போக்யத்வங்களிலே கால் தாழ்ந்து -பெருமாளுடைய வடிவு அழகிலும் துவக்கு ஒண்ணாதே தம்முடைய நிஷ்டைக்கு
அது நித்ய சத்ரு என்று நிஷ்கர்ஷித்து இருக்கச் செய்தே ஸ்ரீ பரத ஆழ்வானுக்கு உகப்பாகையாலே
உத்தேச்ய ப்ரீதி என்று புரிந்து பெருமாள் வடிவிலே நெஞ்சு சென்று –
நாஹம் ஸ்வ பிமி ஜாகர்மி தமே வார்யம் விசிந்தயன் இத்யேவ மப்ரவீத் ப்ராதா சத்ருக்நோ பரதபிரிய-என்கிறபடியே எப்போதும்
அத்தை மனசிலே கொண்டு இருக்குமா போலே -இவ்வாழ்வாரும்
ஸ்வரூபத்தினுடைய எல்லை நிலமாகையாலே -கோதில் அடிமை -என்று சொல்லப் படுகிற பாகவத சேஷத்தினுடைய ரசம்
-அவன் அடியார் சிறு மா மானிடராய் என்னை ஆண்டார் இங்கே திரியவே-அவர்களைத் தவிர்ந்து -செந்தாமரைக் கண் திருக் குறளன்
-நறு மா விரை நாண் மலர் அடிக் கீழ் புகுதல் பாவியேனுக்கு உறுமோ -என்று சொல்லுவிக்கப் பட்டதாய்
அந்த பாகவத நிஷ்டா விரோதியான பகவத் விக்ரஹத்தை உத்தேச்ய ப்ரீதி என்னுமத்தைப் பற்ற -திரி தந்தாகில் -படியே மீண்டு -புலன் கொள் வடிவு
என் மனத்ததாய் என்று எப்போதும் மனஸ்ஸூ க்கு விஷயமாகக் கொண்டு இருக்கையாலே சத்ருக்ந ஆழ்வானோடு ஒப்பர் –

தசரத சக்கரவர்த்தி -ந ததர்ப்ப சமாயாந்தம் பஸ்யமா நோ நராதிப -என்கிறபடியே -வைத்த கண் வாங்காதே மேன்மேலும் அனுபவியா
நிற்கச் செய்தேயும் ஒரு காலே திருப்தி பெறாமல் இன்னமும் அனுபவிக்க வேணும் என்கிற விருப்பத்துடன் செல்லுமா போலே -இவ்வாழ்வாரும்
எப்போதும் நாள் திங்கள் ஆண்டூழி யூழி தோறும் அப்பொழுதைக்கு அப்பொழுது என்னாராவமுதமே -என்று அநு க்ஷணம் எனக்கு
ஆசையைப் பெருக்குமதான போக்யவஸ்து என்று மேன்மேலும் அபிநிவிஷ்டராகையாலே சக்கரவர்த்தியோடு ஒப்பர் –

க்ருத சங்கேதமாய் நலிய வந்து நின்ற யாமளார்ஜுனங்களின் நடுவே கிருஷ்ணன் போனபோது யசோதை பிராட்டி ஓடிச் சென்று
எடுத்துக் கொள்ளா நிற்க -மருத மரங்களின் பெருமையையும் இவனது இளமையையும் கண்டு வயிறு எரிந்து முகத்தைப் பார்த்து-
இப்பெரிய மரங்களின் நடுவே போனாயே -என்று வெறுத்தால் போலே இவரும்
அதீத காலஸ்தமாய் இருக்கவும் சமகாலத்தில் போலே பிரகாசிகையாலே அப்படி வயிறு எரிந்து கொண்டு -போனாய் மா மருதின் நடுவே
என் பொல்லா மணியே -என்கையாலே யசோதை பிராட்டியோடே ஒப்பர் –

ஸ்ரீ ப்ரஹ்லாதன் -நாக்நிர் தஹதி நைவாயம் சாஸ்த்ரைஸ் சின்னோ மஹோரகை-இத்யாதிப்படியே அக்னி முதலானவை பாதகம் ஆகாதபடி
சர்வமும் பகவத் ஆத்மகதயா அநு கூலமாக அநு சந்தித்து -உர்வ்யா மஸ்தி –சர்வத்ராஸ்தி–என்று பிறருக்கும் உபதேசத்தால் போலே -இவரும்
அறியும் செந்தீயைத் தழுவி அச்சுதன் என்னும் -மெய்வே வாள் எறியும் தண் காற்றைத் தழுவி என்னுடைக் கோவிந்தன் என்னும் —
போம் இள நாகத்தின் பின் போயவன் கிடக்கை ஈது என்னும் -என்று அக்னி முதலான பாதக பதார்த்தங்கள் பகவத் ஆத்மகத்வேன-
அநு கூலமாம் படி அவனை இடையறாது அநு சந்தித்து -பரந்த தண் பரவையுள் என்கிற பாட்டாலே எங்கும் உளனான அவனது
தன்மையைப் பலரும் அறியப் பேசுகையாலே -பள்ளியில் ஓதி வந்த சிறுவனான அந்த ப்ரஹ்லாதனோடு ஒப்பர் –

ஸ்ரீ விபீஷண ஆழ்வான் லங்கையோடே கூட புத்ர தாராதிகளான சர்வத்தையும் விட்டு சக்கரவர்த்தி திருமகனைத்
தமக்கு எல்லாமாகப் பற்றினால் போலே இவரும்
பாதம் அடைவதன் பாசத்தாலே மற்ற வன் பாசங்கள் முற்ற விட்டு -என்று சாம்சாரிக சகல சங்கங்களையும் சவாசனமாக விட்டு
தயரதற்கு மகன் தன்னை யன்றி மற்றிலேன் தஞ்சமாகவே -என்று சக்கரவர்த்தி திருமகனையே தமக்கு
சர்வ பிரகார ரக்ஷகனாகப் பற்றுகையாலே தர்மாத்மாவான விபீஷணனோடு ஒப்பர் –

திருவடி -சக்கரவர்த்தி திருமகனை தன்னுள்ளே யுடையவனாய் -அவனுடைய வீர சரிதத்தையே போக்யமாக யுடையவனாய் –
ஸ்நேஹத்தாலும் பக்தியாலும் இவ்விஷயத்தை விட்டு பரத்வத்தில் தன் நெஞ்சு போகாமை சொல்லுகிற இடத்தில் பரத்வத்தின் பேர் சொல்லுகையும்
அஸஹ்யமாய் -அந்யத்ர-பாவோ நான்யத்ர கச்சதி -என்னும்படி -சக்கரவர்த்தி திருமகனை அல்லது அறியேன் என்று இருந்தால் போலே -இவரும்
செருக்கடுத்தன்று திகைத்த வரக்கரை உருக்கெட வாளி பொழிந்த ஒருவன் -திருக்கடித் தானமும் என்னுடைச் சிந்தையும் ஒருக்கடுத்து உள்ளே
யுறையும் பிரான் கண்டீர் -என்று ஏக வீரனான சக்கரவர்த்தி திருமகனை தம் உள்ளே உடையராய்
-கணை நாணில் ஓவாத் தொழில் சார்ங்கன் தொல் சீரை நன்னெஞ்சே –ஓவாத வூணாக வூண்-என்கிறபடியே அவன் வீர சரித்திரத்தையே
போக்யமாக யுடையராய் -கற்பார் ராமபிரானை அல்லால் மற்றும் கற்பரோ -என்று தமக்கு இவ்விஷயத்தில் உண்டான ப்ராவண்ய அதிசயத்தாலே
பரத்வாதிகளைக் கழிக்கிற இடத்தில் அவற்றின் பேர் சொல்லுகையும் அஸஹ்யமாய் மற்று என்னும் படி
-தயரதன் மகன் தன்னை அன்றி மற்று இலராய் இருக்கையாலே ராமதாசரான திருவடியோடே ஒப்பர் –

அர்ஜுனன் -பஸ்யாமி தேவாம்ஸ் தவ தேவ தே ஹே -என்று விஸ்வரூபம் கண்ட பிறகு திவ்ய சஷூஸ் ஸாலே இப்போது கண்ட விஸ்வரூபம்
முன்பு ஒரு காலும் கண்டது அல்லாமையாலே ஹர்ஷ பயங்கள் இரண்டையும் விளைக்கையாலே பூர்வ பரிசிதமான
சவ்ம்ய ரூபத்தை காண விரும்பி சதுர் புஜமாய் சங்க சக்ர கதா தரனான திவ்ய விக்ரஹத்தைக் காட்ட வேணும் என்று வேண்டினால் போலே -இவரும் –
நல் குரவும் செல்வமும் -என்று தொடங்கி -பல்வகையும் பரந்த பெருமானை –திரு விண்ணகர் கண்டேனே என்று விருத்த விபூதி உக்தனாய் கொண்டு
விபூதி முகத்தாலே பல படியாக விஸ்திருதனாய் இருக்கிறவனைக் கண்டு -நீராய் நிலனாய் -என்று தொடங்கி –சிவனாய் அயனாய் -என்று
-காரண காரியங்கள் இரண்டையும் சரீரமாகக் கொண்டு
நீ ஜெகதாகாரகனாய் இருக்கும் இருப்பை எனக்கு காட்டித் தந்தாய் ஆகிலும் இது எனக்கு ஆகர்ஷகமாய் அநு பாவ்யமாய் இருக்கிறது இல்லை
ஆனபின்பு கூராழி வெண் சங்கு ஏந்தி –வாராய் என்று அசாதாரண விக்ரஹத்தை அநு பவிக்கக் கடவாய் என்று அபேக்ஷிக்கையாலே அர்ஜுனனோடு ஒப்பர்

இங்கனே மற்றும் பல ஞானிகளின் படியும் இவர் பக்கலிலே காண அடுக்கும் –

128-குழலில் நெஞ்சும் -கீழ் சொன்னவர்களோடு இவருக்கு சாம்யம் மாத்திரமே அன்று ஆதிக்யமும் உண்டு –
குழல் கோவலர் -என்கிற பாட்டின் படியே பிராட்டிமாரும் நித்ய ஸூ ரிகளும் அவனுமான திரளில் பற்றின நெஞ்சை யுடையராய்
அருகலிலாய பெரும் சீர் -என்ற பாட்டின் படியே -பிராட்டிமாரோடும் நித்ய ஸூ ரிகளோடும் ஒரோ வகையில் பரிமாறுபவன்
அவர்களோடு பரிமாறுமா போலே ஒரு வழியால் வந்த ரசத்தை தந்துவிட்டு என்னளவில் அவ்வளவோடு ஒழிகிறான் இல்லை –
அவர்கள் எல்லார் பக்கலிலும் பண்ணும் ஆதாரத்தை என்னளவில் பண்ணா நின்றான் என்னும் படி எல்லா வழிகளாலும் உள்ள சம்ச்லேஷ ரசத்தை
அவன் தமக்கு விளைக்கையாலே போக ரசமும் விசேஷிக்கப் பெற்றவரான இவ்வாழ்வார் கீழ் சொன்ன லஷ்மணாதி களில் அத்யந்த வ்யாவ்ருத்தர்-

129-எற்றைக்கும் என்றது தோற்ற -ஸ்ரீ பூமிப் பிராட்டி அவதாரமான ஆண்டாளுடைய பிரார்த்தனை மூவருக்கும் ஒக்கும் ஆகையால் –
எற்றைக்கும் ஏழ் ஏழ் பிறவிக்கும் உன் தன்னோடு உற்றோமே ஆவோம் உனக்கே நாம் ஆட் செய்வோம் -என்று அபேக்ஷித்தது
தோன்றும் படி எம்பெருமானுடைய அவ்வவ அவதாரங்களுக்கு அநு குணமாக ஸ்ரீ பூமியாதி ரூபேண அவதரிப்பாள் என்றபடியே –

அவன் சக்கரவர்த்தி திரு மகனாய் அவதரித்த போது தானும் சீதா பிராட்டியாக அவதரித்து பெருமாளை திரு அபிஷேக அர்த்தமாக அலங்கரித்து
-அருகே சேவித்து நின்று திரு வெண் சாமரம் பரிமாறி பின்பு சக்கரவர்த்தி திரு மாளிகைக்கு எழுந்து அருளுகிற போது பெருமாள் வடிவு அழகைக் கண்டு
இது நமக்குத் தொங்கப் போகிறதோ என்னும் வயிறு பிடியால் அந்தபுரத்துவாரத்தளவும் பின் சென்று மங்களா சாசனம் பண்ணி
அதன் பின் காட்டுக்கு எழுந்து அருளிகிற போது அக்ரதஸ் தே கமிஷ்யாமி-என்று தான் முற்பட்டு -ஸ்ரீ தாண்ட காரண்யத்தில் எழுந்து
அருளுகிற போது அவர் ஆயுதங்களைத் தரித்துக் கொண்டு நிற்கிற நிலையைக் கண்டு இவர் சாயுதராய் நின்றால்
யாரேனும் மேல் விழுந்து பிரமாதம் விளையக் கூடும் என்று பயப்பட்டு
எல்லாவற்றுக்கும் தர்மமே மூலம் என்னும் இடத்தை ஸ்மரிப்பித்து ஆயுதத்தை வைத்து தாபஸ வேஷத்தோடே தர்மத்தை
அனுஷ்ட்டிக்க அமையும் என்று தர்ம உபதேசத்தையும் பண்ணின பெரிய பிராட்டியாரையும் –

ஸ்ரீ வராஹ நாயனார் பக்கலிலே பரம தர்மம் கேட்டு அதற்காக சிஷ்யையும் தாசியும் பக்தையுமாய் -உன் தன்னைப் பாடி -என்கிறபடியே -கவி பாடி –
செங்கமலத் திரு மகளும் புவியும் செம் பொன் திருவடி இணை வருட -என்கிறபடியே பெரிய பிராட்டியாரைப் போலே அவன் திருவடிகளை பிடித்து –
இன்று வந்து இத்தனையும் அமுது செய்திடப் பெறில் நாண் ஓன்று நூறாயிரமாக கொடுத்து பின்னும் ஆளும் செய்வன் -என்று
தன்னை அடிமை கொண்டால்-அதுக்கு பிரதியுபகாரம் பண்ணுவேன் என்று சொன்ன ஸ்ரீ பூமிப் பிராட்டியாரையும்-

சென்றால் குடையாம்-என்கிற பாட்டிலும் – நிவாஸ சய்யா ஆசன -இத்யாதி ஸ்லோகத்திலும் சொல்லுகிறபடியே பகவத் விநியோகத்துக்குத்
தகுதியாக சத்ர ஸிம்ஹாஸன பாதுகாதி சரீர பேதங்களைக் கொண்டு சகல வித கைங்கர்யங்களையும் செய்யும் திருவனந்த ஆழ்வானையும்-

ஊரும் புட் கொடியும் அஃதே -என்கிற சந்தையிலும் -தாஸஸ் சஹா இத்யாதி ஸ்லோகத்திலும் சொல்லுகிறபடியே
வாகன த்வஜ விதாநவ்யஜநாதி தேஹ பேதங்களைக் கொண்டு அநேக கைங்கர்யங்களை செய்யும் பெரிய திருவடியையும் போலே

இவரும் பிறந்து பிராட்டிமார் தசையில் நின்று -பேசும்படியான பல பாவ வ்ருத்திகளையும் -ஒழி வில் காலம் எல்லாம் உடனாய் மன்னி வழு விலா
அடிமை செய்ய வேண்டும் நாம் என்னும் அபி நிவேச அதிசயத்தையும் யுடையவர் ஆகையால்
பிராட்டிமாரையும் அனந்தாதி ஸூ ரிகளையும் அவர்களுக்கும் தமக்கும் ஒரு விசேஷம் அற அவர்கள் தாமாகவே பாவிப்பர் –

130-எழுவதோர் உரு வழிக்க–சோதி வெள்ளத்தின் உள்ளே எழுவதோர் உரு -என்று தேஜஸ் புஞ்ச மத்யத்திலே உன் நேயமாம் படி இருப்பதாய்
ஆண்களையும் பெண் உடை உடுத்துமதான அவனுடைய அப்ராக்ருத விக்ரஹம் இவ்வாழ்வாருடைய பும்ஸவத்தை அழித்து
ஸ்த்ரீத்வ பாவனையை விளைத்ததற்கும் அவன் விஷயத்தில் ப்ரீதியாலே வழு விலா வடிமை செய்ய வேணும் நாம் என்கிற தம்முடைய பாவ
விசேஷங்களால் இவர் செய்கிற நாநா வித அனுவ்ருத்திகளுக்கும் -திரௌபதியானவள் -ஸ்வ தேஹ ஸுந்தரியத்தாலே புருஷ பாவத்தை அடைவித்ததையும்
கௌசல்யை யானவள் ஓவ்பாதிக பர்த்ரு விசேஷத்தில் பண்ணின சீல அநு வ்ருத்திகளையும் ஒரு புடை ஒப்புச் சொல்வோம் என்றாலும் இதுக்கு அது பற்றாது –

131-பெருக்காறு பல தலைத்து–பெரு வெள்ளம் கொண்ட ஆறு பல தலையாக பரந்து செல்லா நிற்க -தனக்கு ஒரு குறை இல்லாமல் –
தனக்கு புகலான கடலை நோக்கிச் சென்று சேருமா போலே சிதிலராய் த்ரவீ பூதராய் நிலை கலங்கி நெஞ்சு கட்டழிந்து உருக்குலைந்து
போம்படி அபாரமாகப் பெருகும் ஆழ்வாருடைய காதலானது ஷீராப்தி சாயியான எம்பெருமான் ஆகிற கடலை
தாமான தன்மையிலும் அவஸ்தாந்த்ரா பத்தியாலும் யுண்டான பேதத்தாலே பல முகமாக சென்று சேரும் –
அவஸ்தாந்த்ரத்தை அடைந்தாலும் தாமான தன்மையால் செல்லும் அபி நிவேசமும் இவருக்கு குறையாது என்றபடி –

132-அச்சேத்யோயம் என்னுமது -அச்சேத்யோயம் அதாஹ்யோயம் அக்லேத்ய அசோஷ்ய-ஏவ ச -வெட்டுதல் கொளுத்துதல் -நனைத்தல்-உலர்த்துதல்-ஆகிற
இக்காரியங்களுக்கு அநர்ஹமாகச் சொல்லப் படுகிற ஆத்மவஸ்து –
சிவனோடு பிரமன் வண் திரு மடந்தை சேர் திருவாகம் எம்மாவி ஈரும்-வேம் எமது உயிர் அழல் மெழுகில் உக்கு-
காரியம் நல்லன களவை காணில் என் கண்ணனுக்கு என்று ஈரியாய் இருப்பாள் -வேட்கை நோய் மேலாய் உள்ளுலர்த்த-என்னும் பாசுரங்களில்
ஈரும் வேம் ஈரியாய் உலர்த்த -என்று சேதனார்ஹமாகவும்-தாஹநார்ஹமாகவும் -க்லேத நார்ஹமாகவும் -சோஷணார்ஹமாகவும்-ஆயிற்று என்று
தாம் சொல்லும் படியாக அதுக்கு மேலே அசேதனமான மனசானது சேதன சமாதியை அடைந்து -என்னெஞ்சு என்னை நின்னடையேன் அல்லேன்
என்று நீங்கி -என்கிறபடியே -உறவு அறுத்துக் கொண்டு தம்மை விட்டு நீங்க -அதுக்கு மேலே சஷூஸ் ஸ்ரோத்யாதி பாஹ்ய கரணங்கள்
முடியானே -படியே சேதன சமாதியாலே ஒரு கரணத்தினுடைய விருத்தியை மற்று ஒரு கரணத்தின் விருத்தியை ஆசைப்படும் படி விடாய்க்க
-அதுக்கு மேலே சரீரமானது ஆராவமுதே அடியேன் உடலம் நின்பால் அன்பாயே நீராய் அலைந்து கரைய -என்று அன்பு தான்
ஒரு வடிவு கொண்டால் போலே யாய் மேன்மேலும் ஸைதில்யம் அடைந்து ஆத்மதர்மத்தை ஏறிட்டுக் கொள்ள
வாயும் திரை யுகளும் -திருவாய் மொழியில் -கடலும் மலையும் விசும்பும் –இருளின் திணி வண்ணம் -இத்யாதிகளின் படியே
அசேதனமான காற்று முதலானவற்றை தமக்கு சக துக்கிகளாகக் கொண்டு தாம் அவற்றைக் கட்டிக் கொண்டு கிடந்து கதறும் படியாக
விளைந்த அபரிமித பக்திக்கு நூல் பிடித்து பரிமாறும் படி வரம்பு கட்ட ஒண்ணாது –
அத்யந்த பக்தி யுக்தாநாம் ந சாஸ்த்ரம் நைவசக்ரம -என்னக் கடவது இ றே —

133-சம்பந்த உபாய பலன்கள் -இப்படிப்பட்ட பக்தி தசையில் இவர் பெண் பேச்சாக பேசும் இடத்தில் -தோழி-தாய் -மகள் -என்று
-மூவகையாகப் பேசுகிற இதுக்கு கருத்து ஏது என்னில்
அநந்யார்ஹ சேக்ஷத்வாதி சம்பந்தத்தில் ஞானமும் -சித்த உபாயத்தில் திருட அத்யவசாயமும் -பலத்தில் த்வரையும் ஆகிற பிரஞ்ஞா அவஸ்தைகளுக்கு
முறையே-தோழி என்றும் –தாய் என்றும் -மகள் என்றும் பேர் -அதாவது –
தோழி யாவாள் -நாயக நாயகிகளை இணக்கிச் சேர்ப்பவள் ஆகையால் -திரு மந்திரத்தில் முதல் பதமான ப்ரணவத்தால் ஈஸ்வரனோடு ஆத்மாவுக்கு
சொல்லப்பட்ட அநந்யார்ஹ சேக்ஷத்வாதி சம்பந்த ஞானமே அவனோடே இவ்வாத்மா சேருகைக்கு ஹேதுவாகையாலே
அந்த சம்பந்த ஞானம் ஆகிற பிரஞ்ஞா அவஸ்தை தோழி என்கிறது –
தாயானவள் -பெற்று வளர்த்து பெண் பிள்ளை யவ்வனப் பருவம் அடைந்து கணவன் இடத்தில் மிக்க ப்ராவண்யத்தால் அவன் இருந்த இடத்து ஏறப்
போக வேணும் என்று பதறும் அளவிலும் அவன் தானே வந்து கைப்பற்றும் படி நிற்கை ஒழிய மரியாதை தப்பி புறப்படுகை தகாது என்று தடுப்பவள்
ஆகையால் சித்த உபாயத்தை பற்றினவர்கள் ப்ராப்யத்துக்கு பதறும் அளவில் இது பிரபன்ன குல மரியாதைக்கு சேராது என்று தடுத்து இவளது
துடிப்பை அடக்கப் பார்க்கிற நமஸ் பாதத்தால் பிரதிபாதிக்கப் பட்ட உபாய அத்யாவசியம் ஆகிற பிரஞ்ஞா அவஸ்தையை தாயார் என்கிறது –
தலைமகள் ஆவாள் இயற்கையில் புணர்ந்து நாயகனுடைய வை லக்ஷண்யத்தில் ஈடுபட்டு குல மரியாதைகளையும் பாராமல் அவனைக்
கிட்டி அல்லது தரிக்க மாட்டேன் என்னும் பதற்றத்தை யுடையவன் ஆகையால் பிரணவ நமஸ் பதங்களால் அறியப்பட்ட
சேஷித்வ சரண்யத்வங்களை யுடையவனுக்கு சரமமான நாராயண பதத்தால் சொல்லப்பட்ட ஸ்வரூப ரூப குண விபூதிகளால் வந்த
வை லக்ஷண்யத்தை அனுசந்தித்து அவனை அனுபவிப்பதில் விளம்பம் பொறுக்க மாட்டாமையால் தத் ஏக உபாயத்வ அத்யவசாயத்தையும்
அதிக்ரமித்து கிட்டி அனுபவித்து அல்லது தரிக்க முடியாத படி நடக்கிற ப்ராப்ய த்வரை யாகிற பிரஞ்ஞா அவஸ்தையை மகள் -என்கிறது –

134-சகி வெறி விலக்கு –இவ்வவஸ்த்தைகள் மூன்றும் இவர் பேச்சிலே தோன்றுமோ என்னில் -தோழியானவள் –
1-தீர்ப்பாரை யாமினி -என்ற திருவாய் மொழியில் வெறி விலக்கியும்–2-துவளில் மா மணி மாடம் -என்ற திருவாய் மொழியில் ஆசை அறுத்தும்
3–கரு மாணிக்க மலை மேல் -என்ற திருவாய்மொழியில் அறத்தொடு நின்றும் -ஈவஸ்து அந்நிய சேஷமும் அன்று -ஸ்வ சேஷமும் அன்று –
பகவத் ஏக சேஷம் -என்று சொன்ன படியால் சம்பந்த ஞான தசையில் வரும் பேச்சாகிய இம்மூன்று திருவாய் மொழிகளிலும் அநந்யார்ஹ சேஷத்வம் தெரியும்-

அடியார்கள் குழாங்களை உடன் கூடப் பெறாமையாலே வந்த கிலேசத்தால் ஆஸ்ரயத்தை இழந்த தளிர் போலே வாடுகிற படியைப் பேசின -1-ஆடியாடி -யும்
அதீதங்களை ஆசைப்பட்டு மெலிந்த படியைப் பேசின -2-பாலனாய் ஏழ் உலகும் –
சத்ருச பதார்த்தங்களையும் அவனாக நினைத்து கிட்டும்படி பிச்சேறின படியைச் சொன்ன -3-மண்ணை இருந்து துழாவியும் –
ஆற்றாமையாலே அணுகரிக்கிறபடியே அறியாமல் ஈஸ்வரன் ஆவேசித்தானோ என்னும்படி அவன் தானாகப் பேசியபடியைச் சொன்ன-4- கடல் ஞாலமும் –
எம்பெருமானைப் பெறாத இழவாலே சகலத்தையும் இழந்தமையைச் சொன்ன 5-மாலுக்கு வையமமும்
என் மகள் எனக்கு உதவாமல் போனாள்-என்னும் படி தன்னை விட்டுப் பிரிந்து போந்த படியைச் சொன்ன 6-உண்ணும் சோறும் –
சந்தித்து உன் சரணம் சார்வதே வலித்த தையல் –என்னும் படி அவனைக் கிட்டி அவன் சந்நிதியில் முடிய வேணும் என்று கொண்ட விவசாயம் சாதன கோடியிலே
புகுகிறதோ என்று மாதாவானவள் பயப்பட்டு அவனைக் குறித்தும் வினவ வந்தவர்களைக் குறித்தும் -என் பெண் வாடா நின்றாள் மெலியா நின்றாள்
என்றால் போலே முறைப்பட்டுக் கூப்பிடுகிற-7- கங்குலும் பகலுமாகிய -தாய் பேச்சான ஏழு திருவாய் மொழிகளிலும் உபாய அத்யாவசிய தோற்றும் –

தலைமகள் தூது விடும் திருவாய்மொழிகளான-1-அஞ்சிறை மட நாராய்-2 -வைகல் பூங்கழிவாய்-3–பொன்னுலகாளீரோ
-4–எங்கானல் அகம் கழிவாய்-என்கிற திருவாயமொழிகளிலும்
தன் ஆற்றாமையைச் சொன்ன-5- வாயும் திரை யுகளும்
அவன் விரும்பாவதவற்றை உபேக்ஷித்த -6- ஏறாளும் இறையோனும்
ஜகத் ஷோபம் பிறக்கும் படி மடல் எடுத்த -7- மாசறு சோதியும்
பிரேம வியாதியும் காள ராத்திரியும் கண்ணை மூடுகையாலே வேறு கதி இல்லாமையைச் சொன்ன -8-ஊரெல்லாம் துஞ்சியும்
அப்ராக்ருத விக்ரஹம் நெஞ்சின் உள்ளே பிரகாசிக்கும் படியைச் சொன்ன —9-எங்கனேயோ அன்னைமீரும்
அவனோடு கூடி வாளும் நாளைத்தேடின -10-மானேய் நோக்கும் —
அவன் விளம்பித்து வந்ததற்கு ஊடின -11–மின்னிடை மடவாரும்-
உசாத் துணை அற்று வருந்தின -12-வெள்ளைச் சரி சங்கும்
அவனுடைய உரு வெளித் தோற்றத்தில் பாதைப்படுவதை பேசின –13–ஏழையர் ஆவியும்
ஹிதம் சொல்லுகிற தாய்மார் தோழிமாரை அதிக்ரமித்த-14-நங்கள் வரிவளையும்
ஸ்மாரக பதார்த்த தர்சனத்தாலே தளர்ந்த —15-இன்னுயிர்ச் சேவலும்
மாலைப் பூசல் என்று பிரசித்தமான -16-மல்லிகை மருமறு தோளிணையும்
ஆகிற மகள் பேச்சான பதினேழு திருவாய் மொழிகளிலும் ப்ராப்ய த்வரை தெரியும் –

135-தோழிமார் அன்னையர் -தோழி என்றும் தாய் என்றும் சொல்கிறது -சம்பந்த ஞானத்தையும் உபாய அத்யவசாயத்தையும் ஆகில்
தோழிமார் அன்னையர் என்கிற பஹு வசனத்துக்கு கருத்து என் என்னில் -திருமந்திரத்தில் சொல்லுகிறபடியே இவ்வாத்மாவோடு ஈஸ்வரனுக்கு
ரக்ஷகத்வ சேஷித்வ காரணத்வ சரீரத்வாதி சம்பந்தங்கள் பலவும் உண்டாகையாலே அந்த சம்பந்தங்களை
விஷயீ கரித்த ஞானத்தினுடைய பேதத்தாலே -தோழிமார் என்கிற பஹு வசனம் உபபன்னம் –
உபாயபூதனான அவனுடைய வாத்சல்ய ஸ்வாமித்வ ஸுசீல்ய ஸுலப்ய ஞான சக்தி கிருபாதிகளைப் பற்றி வரும்
வியவசாய ரூபமானா ஞானத்தினுடைய பேதத்தாலே அன்னையர் என்கிற பஹு வசனம் உபபன்னம் –

136-அபிலாஷா சிந்தனாநு –தலைமகள் என்கிறது ப்ராப்ய த்வரை யாகில் -பேதை பெதும்பை மங்கை மடந்தை அரிவை தெரிவை பேரிளம் பெண் -என்கிற
பருவம் ஏழும் இங்கே கொள்ளும் படி என் என்னில் -அநு பாவ்யமான விஷயத்தை முதலில் காணும் போது பிறக்கும் ஆசை யாகிற -1-அபிலாஷையும்
கண்ட பின்பு அவ்விஷயத்தில் உண்டான -2-ஸ்மரணம் ஆகிற சிந்தனையும் –
அந்த ஸ்மரணத்தின் அனவரத பிரசாரம் ஆகிற -3-அநு ஸ்ம்ருதியும்
அவ்விஷயத்தை அவசியம் அனுபவித்தே நிற்க வேணும் என்னும் ஆசை யாகிற -4-இச்சையும் –
அவ்வாசை தான் வேறு ஒரு ரசத்தில் மாற்றாத படி முதிருகை யாகிற -5-ருசியும்
அவ்விஷயத்தில் சம்ச்லேஷ விஸ்லேஷன்களே ஸூ க துக்கங்கள் ஆகிற-6- பரபக்தியும்
அவ்விஷயத்தை பிரிந்தால் சத்தை அழிகை யாகிற -7-பரமபக்தியும் ஆகிற ஏழு அவஸ்தையிலும்
பேதை முதலான ஏழு பருவமும் தலை மகளான ப்ராப்ய த்வரைக்குக் கொள்ளலாம் –
பக்தி ரூபமான ப்ராப்ய த்வரைக்கு பக்தியினுடைய ஒவ்வொரு தசையும் ஒவ்வொரு பர்வமாகக் கொள்ளலாம் என்கை —

137-மயில் பிறை வில் அம்பு -இனி தலைமகளான அவஸ்தையில் வருணிக்கும் அவயவ விசேஷங்கள் எவை என்னில் -தோகை மா மயிலார்கள் -என்று
ஸ்திரீகளை மயிலாகச் சொல்லுகிறது -கூந்தலின் விஸ்தாரத்தைப் பற்றி யாகையாலே -அத்தால் இவ்வாத்மாவினுடைய ஞான விகாசம் சொல்லுகிறது –
பிறையுடை வாண் நுதல் -என்று நெற்றியைப் பிறையாகச் சொல்லுகையாலே அதில் வெண்மையை இட்டு ஸ்வாதந்தர்ய சேஷத்வங்கள் ஆகிற
தோஷ ஸ்பர்சம் அற்று இருக்கும் சுத்தியைச் சொல்லுகிறது
வில் புருவக் கொடி -என்று புருவத்தை வில்லாகச் சொல்லுகிறது வளைவைப் பற்றியாகையாலே பாஹ்ய அந்தகரணங்களை அடக்குகிற தாந்தியைச் சொல்லுகிறது –
அம்பன்ன கண்ணாள் -என்கையால் -கண்ணை லஷ்யத்தில் விழுகிற அம்பாகச் சொல்லுகையாலே -தாமரையாள் கேள்வன் ஒருவனையே
நோக்கும் உணர்வு என்று தனக்கு வகுத்த விஷயத்தைப் பற்றின ஞானத்தைச் சொல்லுகிறது –

-பவள வாயாள் -என்று அதரத்தை ப்ரவாளமாகச் சொல்லுகிறது சிவப்பை இட்டு
ஆகையால் அவ்விஷயத்தில் உண்டான அநு ராகத்தைச் சொல்லுகிறது –
செப்பன்ன மென் முலை -என்று பரிபக்குவமான முலையை செப்பாகச் சொல்லுகையாலே சேஷியானவன்
விரும்பி மேல் விழும்படி முதிர்ந்த பக்தியை சொல்லுகிறது
மின்னனைய நுண் மருங்குல் -என்று இடையை மின்னலாகச் சொல்லுகிறது -ஸூ ஷ்மத்தைப் பற்றி யாகையாலே கீழ் சொன்ன
ஞான அவஸ்தா விசேஷங்களுக்கு எல்லாம் ஆதாரமான ஆத்ம ஸ்வரூபத்தின் அணுத்துவத்தைச் சொல்லுகிறது –
தேர் அணங்கு அல்குல் -என்கிற நிதம்ப வை லக்ஷண்யத்தையும் போக்தாவுக்கு போக்யமாய் இருக்குமதாகையால்
சேஷிக்கு மிகவும் ரசாவஹமாம் படி இருக்கிற ஆத்மவஸ்துவின் போக்யதையைச் சொல்லுகிறது
அன்ன மென்னடையாள் என்று -ஹம்சத்தை ஒப்பிடுகிறது -நடை அழகுக்கு ஆகையால் சேஷியும் ததீயரும்
சிலாகிக்கும் படி ஸ்வரூப அநு ரூபமாக நடக்கையைச் சொல்லுகிறது
ஆக இப்படி மயில் பிறை இத்யாதி வர்ணனத்துக்கு உரிய அவயவ விசேஷங்களோடு கூடி அப்ராக்ருதமாக சொல்லப் பட்ட ரூபமாவது
ஞான விகாச சுத்தியாதிகளுக்கு ஆஸ்ரயமாய் ஆந்தரமாய் இருக்கிற ஆத்ம ஸ்வரூபத்தின் வகுப்பு –

138-சூழ்ச்சி அகற்றினீர் என்னும் -தோழிமார் பலர் கொண்டு போய் செய்த சூழ்ச்சியை யார்க்கு உரைக்கேன் -என்று தாயானவள் தோழிமார் மேல் பழி இடுவது –
துலை வில்லி மங்கலம் கொண்டு புக்கு அமுத மென் மொழியாளை நீர் உமக்கு ஆசையின்றி அகற்றினீர் -என்று தோழியானவள் -தாய்மார் மேலே பழி இடுவதாகிற இதுவும் –
இணைக்கி எம்மை எம் தோழிமார் விளையாடப் போதுமின் என்னப் போந்தோமை -என்று எம்பிரானே உன்னை
வெறுப்பான என் -என்னை உன் பக்கலில் அகப்படுத்தின தோழிமாராலே வந்தது அன்றோ இது என்பது –
எங்கனேயோ அன்னைமீர்காள் என்னை முனைவது நீர் என்று -என்று எனக்கு அவ்விஷயத்தைக் காட்டி இந்த ப்ராவண்யத்தை விளைத்த
தாய்மாரான நீங்கள் இப்போது என்னை வெறுப்பான என் என்பதாய் -கீழ்ச் சொன்ன பழி –
தோழி தாய்மார் ஆகிற இரண்டு தலைக்கும் ஒக்கும் என்று தலைமகள் மேல் எழுத்து இடுகையும்
முன்னின்றாய் என்று தோழிமார்களும் அன்னையரும் முனிதிர் என்னும் படி தோழி தாயமாரோடு கூடி நின்று தலைமகளை சீறுவது
இவளை இனி நீர் அன்னைமீர் உமக்கு ஆசை இல்லை விடுமினோ என்று தாயமார்க்கு கார்ய உபதேசம் பண்ணுவாராய்ப் போலே
தோழி தலைமைகளுக்கு துணை செய்வதாய்க் கொண்டு இரண்டு தலைக்கும் ஒவ்வ்வொரு சமயத்திலே உதவி செய்கை யாகிற இருப்பதை மெய்க்காட்டும்
அன்னையரும் தோழியரும் நீர் என்னே என்னாதே நீள் இரவும் துஞ்சுவரால் –
என்று தாயமாரோடும் தோழிமாரோடும் தலைமைகளுக்கு உண்டான உடன்பாடும் -அதாவது -உறவு கொண்டாடுதல் –
உங்களோடு எங்கள் இடையில்லையே என்று தோழிமார் அன்னையர் என்ற இரண்டுதலையையும் உதறி விடுகையும்
இருந்து இருந்து அரவிந்த லோசனன் என்று என்றே நைந்து இரங்கும்-என்று தோழி கொண்டாடுவது
திருக் கோளூருக்கே நேர் இழை நடந்தாள்-என்று தாயார் கொண்டாடுகிற இதுவும் தோழி தாய் மகள் என்கிற அவஸ்த்யா த்ரயத்தின் யுடைய வியாபாரம் –

139-தாய் ஏதலர் -இந்த அவஸ்தத்ரயத்தில் தாய் என்றும் மகள் என்றும் சொல்லுகிற அவஸ்தைகளில்
ஸ்வ ஸ்வ சத்ருக்களும் பந்துக்களுமாக சொல்லுகிறது ஆரை என்னில் -தாயாரான உபாய அத்யவஸாய தசையில்
-ஏதலர் முன்னா என் நினைந்து இருந்தாய் -என்று சத்ருக்களாகச் சொல்லுகிறது -சித்த உபாய நிஷ்டைக்கு பிரதிகூலரான சாத்திய உபாய நிஷ்டரை –
உற்றீர்கட்க்கு என் சொல்லிச் சொல்லுகேன் யான் என்று பந்துக்களாகச் சொல்லுகிறது -அநு கூலரான சித்த உபாய நிஷ்டரை –
மகளான ப்ராப்ய த்வார தசையில் -நம்முடை ஏதலர் முன்பு நாணி -என்று அந்தரங்க சத்ருக்களாகச் சொல்லுகிறது –
பகவத் ஏக பரராய் இருக்கச் செய்தே அவனுடைய உபாயத்வத்திலே ஊன்றி நின்று பதறுதல்
பாரதந்த்ரத்துக்கு சேராது என்று நிஷேதிக்கிற சித்த சாதன பரரை-
யாமுடைத்துணை என்னும் தோழிமார் என்று தன்னோடு ஒத்த ஸூ க துக்கங்களை யுடையவர்களாகச் சொல்லுகிறது
தன்னைப் போலே அவனுடைய உபேயத்வத்திலே உடன் பட்டு இருக்கிற சாத்திய பரரை –

140-நால் அயலார் அயல் சேரியார்–நாணி இனி யோர் கருமம் இல்லை நால் அயலாரும் அறிந்து ஒழிந்தார் -என்கிற நால் அயலார் என்கிறார்
கர்ம ஞான பக்தி பிரபதிக்கள் ஆகிற நாலு உபாயங்களிலும் ஊன்றி இருப்பவர் –
நானக் கரும் குழல் தோழிமீர்காள் அன்னையர்காள் அயல் சேரியீர்காள் -என்கிற அயல் சேரியார் ஆகிறார்
அர்ச்சாவதாரங்களில் ஊற்றம் அற்று தேவதாந்தர்யாமித்வத்தில் ஊன்றி இருப்பவர் –

141-கீழை மேலை வடக்கிலவை-பிரபத்தி பரரையும் அசலாகச் சொல்லலாமோ என்னில் -கீழை யகத்து தயிர் கடைய -என்கிற
பாசுரத்தில் சொல்லுகிற தயிர் கடைதல் என்கிற கிரியையாகிற கர்ம யோகமும் –
மேலையகத்து நங்காய் வந்து காண்மின்கள் -என்ற பாசுரத்தில் சொல்லுகிற காணுதல் என்னும் தர்சனம் ஆகிற ஞான யோகமும்
வடக்கில் அகம் புக்கிருந்து மின் போல் நுண் இடையாள் ஒரு கன்னியை வேற்றுருவம் செய்து வைத்த -என்கிற பாசுரத்தில் சொல்லுகிற
ஒரு கன்னிகையை விகாரப் படுத்துகை என்னும் அனுபவம் ஆகிற பக்தி யோகமும்
சித்த உபாய பரர்க்கு பாஹ்ய சத்ருவாய் -அவ்விஷயத்தில் ஸ்வ கத ஸ்வீகாரமானது அந்தரங்க சத்ருவாய் இருக்கும் –
ஆகையால் ஸ்வகத ஸ்வீகார ரூப பிரபத்தி பரரை அசலாகச் சொல்லக் குறை இல்லை என்கை –

142-ஊரார் நாட்டார் உலகர் —ஊரார் இகழிலும் –ஊரவர் கவ்வை -நாட்டாரோடு இயல் ஒழிந்து -எங்கள் கண் முதல்லே உலகர்கள் எல்லாம் –
இம்மட உலகர் -ஊரும் நாடும் உலகமும் -என்னும் இடங்களில் ஊரார் என்பது ஆத்மபிராப்தி காமரான கேவலரை –
-நாட்டார் என்பது -புத்ர பஸ்வ அன்னாதி ரூப இஹ லோக ஐஸ்வர்ய காமரை –
உலகர் என்பது ஸ்வர்க்காதி பரலோக ஐஸ்வர்ய காமரான ஸ்வ தந்த்ரரை –

143-இறுகல் இறப்புக்கும் -கைவல்ய நிஷ்டரை ஒரூராகச் சொல்லுவான் என் என்னில் -அபரிச்சின்னமான ஸ்வரூப ரூப குண விபூதிகளை யுடைய
எம்பெருமானுடைய அனுபவம் போல் அல்லாமல் அணுவான ஆத்மாவின் அனுபவ மாத்திரமே யாகையாலே -இறுகல் இறப்பு -என்கிற
சங்கோச ரூபமான அந்த கைவல்ய மோக்ஷத்துக்கும் -ஜரா மரணாதிகளில் அந்வயம் ஒழிந்து அனுபவிக்கும் போது
ஸ்ருஷ்ட்டி சம்ஹாரங்களுக்கு ஆளாகிற பிரகிருதி மண்டலத்துக்கு மேற்பட்ட பரம ஆகாசத்தில் இருந்து அனுபவிக்க வேண்டுகையாலே
-யோகி நாம் அமிர்தம் ஸ் தானம் ஸ்வாதமா சந்தோஷ காரிணாம்-எகண்டு கொள்மின் என்கிறபடியே
பிரகிருதி சம்பந்தம் அற்றால் பின்பு போய் வசிக்கும் தேசம் சமானம் இ றே –

144-சிறு சீரார் சுளகுகள் -சிறு சுளகு மணலும் கொண்டு -என்றும் சீரார் சுளகில் நெல் பிடித்து எறியா-என்றும் சொல்லுகிற இடங்களில்
சிறு சுளகாவது-பெரிய மணலையும் சிறிய மணலையும் பிரிப்பதொரு வஸ்துவாகையாலே தேஹாத்ம விவேகத்துக்கு பரிகரமான பிரமாணத்தை சுளகு என்கிறது
சீரார் சுளகு ஆனது -இவனுக்கு இந்த வியாமோஹத்தை விளைவித்தவன் ஆர் என்று ஆராயும் அளவில் -சில நெல் பிடித்து எறியா -என்று தொடங்கி
பேர் ஆயிரம் உடையான் என்றாள்-என்று தேவதாந்த்ரங்கள் அன்று சர்வேஸ்வரன் என்று விவேகிக்கிற போதைக்கு உபகரணம் ஆகையால்
ஆத்மபரமாத்மா விவேகத்துக்கு பரிகரமான பிரமாணத்தை சீரார் சுளகு என்கிறது –

145-மாலை கங்குல் காலை –செங்களம் பற்றி நின்று எள்கு புன்மாலை -என்றும் செல்கதிர் மாலை -என்றும் -இத்யாதிகளில்
மாலை யாவது பதார்த்தங்களை உள்ளபடி விசதமாக பிரகாசிப்பியாமல் மாறாகத் தோற்றுவிக்கும் சந்த்யா காலம் ஆகையால்
அந்யதா பிரதிபத்திக்கு உறுப்பான ராஜஸ ஞானத்தை -மாலை என்கிறது –
சூழ்கின்ற கங்குல் இத்யாதிகளில் -கங்குல் என்றது பதார்த்தங்களில் ஒன்றும் தோற்றாதபடியாய்
ஏதேனும் தோற்றினாலும் விபரீத மாக தொடரும்படி இருக்கும் இருள் மூடின காலம் -விபரீத பிரதிபத்தி -தாமச ஞானத்தை கங்குல் என்கிறது
காலை எழுந்து இருந்து -இத்யாதிகளில் காலை யாவது -ப்ரஹ்ம முஹூர்த்தம் -சாத்விக ஞானத்தை சொல்லும்
பகல் கண்டேன் இத்யாதியில் -பகல் என்றது -பதார்த்தங்களை சம்சய விபர்யயம் இன்றியே விசதமாக பிரகாசிப்பிக்கும்
பகல் கண்டேன் -நாரணனைக் கண்டேன் -என்கிறபடி ஸமஸ்த குண விக்ரஹ விபூதிகளோடே கூடின எம்பெருமானை
நன்றாக சாஷாத் கரிக்கும் சுத்த சத்வ ஞானத்தை பகல் என்கிறது –

146-நிலா முற்றம் -நீணிலா முற்றத்து நின்று இவள் நோக்கினாள்-என்கிற நிலா முற்றமாவது -பிரஞ்ஞா பிரசாதம் ஆருஹ்ய
அசோஸிய சோசகான் ஜனான் பூமி ஸ்தாநிவ சைலஸ்தோ ஹ்யஞ்ஞான் ப்ராஞ்ஞா பிரபஸ்யதி
என்கிறபடி உயர நின்று எல்லாவற்றையும் காண்கைக்கு உறுப்பாக சொல்லப் படுவதாய் அதிலே நின்று பார்த்த அளவிலே
காணுமோ கண்ணபுரம் என்று காட்டினாள் -என்கையாலே
ததீய விஷயமே பரமப்ராப்யம் என்று பிறர்க்கும் விளங்கும்படி சரமாவதியான புருஷார்த்த ஞானம் –

147-கலை வளை அஹம் மம -கை வளையும் மேகலையும் காணேன் -கலையாளா வகலல்குல் கனவளையும் கையாளா-
இத்யாதிகளில் சொல்லுகிற -கலையும் வளை யுமாவன -பகவத் அனுபவத்துக்கு விரோதியான அகங்காரமும் மமகாரமும் –
கழல் வளை பூரிப்ப யாம் கண்டு -இத்யாதிகளில் த்யாஜ்யமான அஹங்கார மமகாரங்கள் அல்லாமல்
-சேஷோஹம்–என்னுடைய திருவரங்கர் -என்றால் போன்ற உத்தேச்ய சாத்விக அஹங்கார மமதைகளைச்
சொல்லுவதாக கொள்ளலாம் ஆகையால் அவ்விடத்துக்கு இதுவே ஸ்வாபதேசமாகக் குறையில்லை-

148-பட்டம் சூடகம் ஆவன -பட்டம் கட்டிப் பொற்றோடு பெய்து இவள் பாடகமும் சிலம்பும் -என்றும் -சூடகமே தோள் வளையே தோடே செவிப் பூவே –
இத்யாதியாகச் சொல்லுகிற ஆபரணங்கள் ஆவன -கிருஷ்ண அங்க்ரி துலஸீ மௌலி பட்டம் கிருஷ்ண அபிவந்தனம்-குண்டலே கிருஷ்ண சரித
ஸ்ரவணம் கங்கண அஞ்சலி -என்கிறபடியே
இவ்வாத்மாவை அங்கீ கரித்த ஆச்சார்யன் உண்டாக்குகிற சேஷத்வ ஞானாதிகள் ஆகிற ஆத்ம அலங்காரங்கள் –

149-பந்து கழல் பாவை –என்னுடைய பந்தும் கழலும் தந்து போகு நம்பீ -இத்யாதி பாசுரங்களில் சொல்லப்படுகிற
-பந்து கழல் பாவை -குழ மணன்-மரப்பாச்சி -யாழ் -மதியம் -அடிசில் சாந்தம் -பூண் அகில் சிற்றில் தூதை முதலான
விளையாட்டு கருவிகளாயும்-போக்யங்களாயும் -போக உபகரணங்களாயும்-எவை என்னில் –
அஜாமேகாம் லோஹித சுக்ல கிருஷ்ணம் -என்கிறபடியே செந்நூல் வெண்ணூல் கருநூல்-என்னலாம் படியான சத்வ ரஜஸ் தமஸ் குணங்களோடு
விசித்திரமான கர்ம ஸூ த்ரத்தாலே கட்டி ஈஸ்வரன் தன்னுடைய விளையாட்டுக்காக அஞ்ஞனாய் அசக்தனான இவன்
கர்ம அனுகுணமாக மேல் உலகங்களும் போவது மீளுவதாம் படி தன் சங்கல்பத்தால் ப்ரேரிக்க-தாழ விழுந்தும் உயர எழுந்தும் சக்ர
பிரமம் போலே சுழன்றும் -ஒரு கால் போனதில் பல தடவை போவது வருவதாய் உழன்றும் போருகிற ஆத்மாவோடு உண்டான
சம்பந்தத்தாலே விழுந்து எழுகை முதலான ஸ்வபாவங்களோடு கூடியதாய் -ஈஸ்வரன் தன்னுடைய போக விரோதி என்று விடுவிக்கும் அளவில் விடுபட்டும்
அல்ப ரசங்களுமாய் மதியம் என்று ஸ்வசம்பந்தத்தை இட்டுப் பார்க்கும் போது -சிற்றில் மென் பூவையும் விட்டகன்ற -என்கிறபடி த்யாஜ்யங்களாய் –
ததீயம் என்று தத் சம்பந்தத்தை த்தை காணும் போது -இகழ்வில் இவ்வனைத்தும் என்கோ -என்கிறபடி முழுவதும் உபாதேயமாமாவையாய்-
அன்னை முனைவதும் அன்றிலின் குரல் ஈர்வதும் -என்றும் பனிப்பியல்வாக யுடைய தண் வாடை
இக்காலம் இவ்வூர் பனிப்பியல்வு எல்லாம் தீர்ந்து எரி வீசும் -என்னும்
இப்பாசுரங்களில் படியே அவன் இல்லாமல் கண்ட போது பிரதிகூலங்களாகவும்
அவ்வாடை ஈதோ வந்து தண் என்றதே -என்று அவனோடே சேர்த்துக் கண்ட போது அனுகூலங்களாயும் சொல்லப் படுமவையான
பொங்கைம்புலனும் பொறி ஐந்தும் -என்கிற பாட்டில் சொல்லப்பட்ட போக்ய போக உபகரண போக ஸ்தான ஸமூஹம்-
மூன்றுவகை நூல்களாலே செய்யப் பட்ட பத்தாவது -குண த்ரய மயமாய் போக ஸ்தானமான தேஹம் –
அம்மானை என்கிற கழலாவது ஐந்தாய் இருப்பதால் போக உபகரணமான பஞ்ச இந்திரியங்கள் –
பாவை குழமன்கள்-லீலா உபகரண விசேஷங்கள்
யாழ் முதலிய ஏழும் போக்யங்களான சப்தாதி விஷயங்கள்
சிற்றிலாவது போக ஸ்தானம்
சிறு சோறு சமைப்பதற்கு உபகரணமான தூதை -இந்திரியங்கள் தவிர மற்ற போக உபகரணங்களுக்கு உப லக்ஷணம் -என்று கண்டு கொள்வது –

இரண்டாம் பிரகரணம் முற்றிற்று –

—————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ உ .வே. காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஆச்சார்ய ஹிருதயம் -சூர்ணிகை- 100-120—தாத்பர்ய சாரம் -ஸ்ரீ உ வே காஞ்சி ஸ்வாமிகள் —

December 26, 2016

87-அணைய வூரப் புனைய –ஆத்மாவுக்கு நிரூபகமான சேஷத்வத்துக்கு பாங்கான பிறவியே உத்க்ருஷ்ட ஜென்மம் என்பது விளக்கப் படுகிறது –
நித்ய விபூதியில் எம்பெருமான் -அணைவதற்கு -கண் வளர்ந்து அருளுகைக்குப் பாங்காய் இருக்கும் அரவணையாயும் –
அவன் பல காலும் மேல் கொண்டு ஊர -நடத்துகைக்கு வாஹனமான கருத்மானாயும்-
அவன் புனைந்து கொள்ள -ஆதரித்து சாத்துகைக்கு அர்ஹமான திருத் துழாயுமாய் இரா நின்றுள்ள –
திர்யக் ஸ்தாவர ஜென்மங்களை மஹாத்மாக்களான நித்ய ஸூ ரிகள் பகவத் கைங்கர்ய இச்சையால் பரிக்ரஹித்தார்கள் –
யமுனைக் கரையில் அவன் திருவடிகளால் மிதித்து ஏறின கடம்ப மரமாக ஆதல் -குருந்த மரமாக வாதல் ஆக வேணும் –
பிருந்தா வனத்தில் கண்ண பிரான் போன வழியை பின் தொடர்ந்த பெண்களுடைய பாத தூளியை வஹியா நின்றுள்ள
சிறு செடிகள் கொடிகள் ஒளஷதிகளில் ஏதேனும் ஒன்றாக வேணும் என்றும்
வேங்கடத்து கோனேரி வாழும் குருகாய்-மீனாய் -செண்பகமாய் -தம்பகமாய்–அன்னனைய பொற் குடவாம் —
-எம்பெருமான் பொன் மலை மேல் ஏதேனும் ஆவேனே -என்று திருமலையோடு சம்பந்தம் உடைய
திர்யக் ஸ்தாவர ஜென்மங்களில் ஏதேனும் ஒன்றாக வேணும் என்றும் –
ஸ்ரீ சுக ப்ரஹ்ம மகரிஷி -உத்தவர் -ஸ்ரீ குலசேகர பெருமாள் ஆளவந்தார் முதலான முமுஷுக்கள் பிரார்த்தித்தார்கள் –
திர்யக் ஸ்தாவர ஜென்மங்களை வாசிக காயிக பாப பலமாக சாஸ்திரம் சொல்லா நின்ற போதிலும் இந்த ஜென்மங்களை
நித்ய ஸூ ரிகள் பகவத் விநியோக அர்ஹமாக ஸ்வ இச்சையால் ஏறிட்டுக் கொள்ளுவார்கள் என்றும்
அடிமைச் சுவடு அறிந்தவர்களான முமுஷுக்கள் தத் சம்பந்த ததீய சம்பந்தம் உள்ள திர்யக் ஸ்தாவர ஜென்மங்களை
பிரார்த்திப்பார்கள் என்றும் சொல்லுகையாலே அடிமைக்கு உரிய ஜென்மமே உத்க்ருஷ்டம் என்றது யாய்த்து-

88-சேஷத்வ பஹிர்ப்பூத -முமுஷுக்களான இவர்கள் பகவத் பாகவத சேஷத்வத்தில் விருப்பத்தால் திர்யக் ஸ்தாவர ஜென்மங்களை
பிரார்த்தித்தார்கள் ஆகிலும் உத்க்ருஷ்டமாக சாஸ்திர ஸித்தமான வர்ணத்தை இப்படி கழிப்பான் என் என்னில் –
ந தேஹம் ந பிராணான்-இத்யாதி ஸ்லோகத்தில் படியே சேஷத்வத்துக்கு புறம்பான போது ஞானானந்த மயத்வத்தாலே
சிலாக்யனான ஆத்மாவையும் சஹியாதவர்கள் -சேஷத்வத்துக்கு விரோதியான அஹங்காரத்துக்கு ஹேது என்னும் இடத்தால் த்யாஜ்யமாயும்
-கர்ம நிபந்தனம் ஆகையால் ஒவ்பாதிகமாயும் இருக்கிற வர்ணத்தை ஆதரிக்க மாட்டார்கள் இ றே-

89-இதில் ஒவ்பாதிகத்வம்-வர்ணம் ஒவ்பாதிகம் என்னும் இடம் எங்கனே தெரியும் என்னில் -ஷத்ரியனான விச்வாமித்ரன் தன்னை
ப்ரஹ்ம ரிஷியாக்கின வசிஷ்டனாலே யஜ்ஜோப வீதமே வாராம் படி சண்டாளன் ஆக்கப் பட்ட திரிசங்கு ராஜாவை அந்த வார் தானே
யாகத்துக்கு அங்கமான உறுப்புத் தோலாகக் கொண்டு தன்னுடைய தபோ பலத்தால் யாகம் செய்வித்து ஸ்வர்க்கம்
ஏற்றுவித்தான் என்கிற கதையால் வர்ணம் ஒவ்பாதிகம் என்பது தெரியும் –
இது ஒவ்பாதிகம் அன்றாகில் ஒரு ஷத்ரியன் ப்ரஹ்ம ரிஷியாவதும் மற்று ஒரு ஷத்ரியன் சண்டாளன் ஆவதும் கூடாது அன்றோ –

90-மா உருவில் கள்ள வேடம் -ப்ரமேயம் பிரமாணம் பிரமாதா
என்னும் வகுப்புக்களில் த்யாஜ்யங்கள் உண்டு -உபாதேயங்கள் உண்டு என்று நிரூபிக்கப் படுகிறது –
அப்ராக்ருதமாய் சிலாக்யமாய் இருந்துள்ள பகவத் அவதார விக்ரஹங்களுள் வைதிக ருசியைக் குலைப்பதற்காக
பரிக்ரஹித்த புத்த முனி ரூபமான விக்ரஹம் த்யாஜ்யம் –
பகவத் ஸ்வரூபாதிகளை உள்ளபடி பிரதிபாதிக்கையாலே கட்டளைப் பட்டு இருந்துள்ள வேதத்தில்
மலாம்சமான மனுஷ்ய ப்ரஸம்ஸா வாக்கியங்கள் த்யாஜ்யம்
எல்லா வர்ணங்களிலும் பகவத் பக்தர் அல்லாதார் எவரோ அவர்கள் ஸூத்ரர்கள் என்கையாலே அன்னவர்கள் த்யாஜ்யர்கள்
ஆக பிரமேய பிராமண பிரமாதாக்கள் யுடைய த்யாஜ்ய அம்சங்களை இங்கனே அறிவது
பசுக்களுக்கு புல்லும் தண்ணீரும் உள்ள காடுகளில் வசிக்கும் இடைச் சாதியிலே கிருஷ்ணனுடைய பசு மேய்த்து வருகிற
போதுள்ள அலங்காரம் யுடைய விக்ரஹம் உபாதேயம் –
திராவிட பாஷா மயமான கிரந்தங்களில் பகவத் ப்ரதிபாதகமானவை உபாதேயம் –
ஸ்வபாகரில்–கீழ் ஜாதிகளில் -பகவத் பாத கமல பக்தி யாகிற தனம் உடையவர்கள் உபாதேயர்கள்-
ஆக ப்ரமேய பிராமண பிரமாதாக்களில் உபாதிய அம்சங்களை இங்கனே அறிவது -இவ்விபாகம் அறியுமவர்கள் ஏதேனும்
ஜென்ம விருத்தங்களை யுடையரே யாகிலும் நித்ய ஸூ ரி சமானர் என்னும் படி ஸ்லாகியராய் பரகதியை அடைவார்கள்
-கீழ் சொன்ன ப்ரமேயம் முதலிய மூன்றிலும் வாசி அறியாதவர்கள் உத்க்ருஷ்ட ஜன்மாக்களுமாய் சகல யோக்யதா பரி பூர்ணராய்
இருந்தார்களே யாகிலும் ஸ்ரீ வைஷ்ணவர்களை ஜென்மாதிகளை இட்டு நிந்திப்பார்கள் ஆகில்
ஒரு காலும் கரை ஏற யோக்யதை இல்லாத கர்ம சண்டாளராய் கீழே விழுவார்கள் –

91-தமிழ் மா முனி திக்கு -ஆழ்வாருடைய வைபவ ஸூ சகமாக பிரமாணம் காட்டப் படுகிறது –
தக்ஷிணா திக் க்ருதா யேன சரண்யா புண்ய கர்மணா -என்று திராவிட சாஸ்திர பிரவர்த்தகரான அகஸ்தியன் இருக்கிற திக்கு எல்லார்க்கும் புகலிடம்
என்று சொன்ன ரிஷிகள் –
கலவ் கலு பவிஷ்யந்தி நாராயண பராயணா க்வசித் க்வசித் மஹா பாக திராவிடேஷூ ச பூரீச -தாம்ர பர்ணீ நதீ யத்ர க்ருதமாலா பயஸ்விநீ
காவேரீ ச மஹா பாகா ப்ரதீஸீ ச மஹா நதீ யே பிபந்தி ஜலம் தாஸாம் மநுஜா மனு ஜேஸ்வர தேஷாம் நாராயணே பக்திர் பூயஸீ நிருபத்ரவா
-என்று ஞாதாக்கள் வந்து ஆவிர்பவிக்கும் ஸ்தல விசேஷங்களைச் சொல்லுகிற அளவில் முதன் முதலாக
-தாம்ர பர்ணீ நதீ யத்ர என்று இவர் ஆவிர்பாவ ஸ்தலத்தை சொல்லுகையாலே இவ்வாழ்வாருடைய ஆவிர்பாவமானது
த்ரிகாலஞ்ஞரான ஸ்ரீ சுகாதிகளாலே ஸூ சிப்பிக்கப் பட்டது -இவ்வாழ்வார் தாம் மயர்வற மதிநலம் அருள பெற்றவர் ஆகையால்
-கலியும் கெடும் கண்டு கொண்மின் -என்று கலியன் உடையவர் போல்வார் அவதரித்து கலியுக ஸ்வபாவமும் கழியும் என்று
மேல் வருமதை நோக்கிச் சொன்னால் போலே யாய்த்து இதுவும் –

92-அத்ரி ஜமதக்கினி -ஆழ்வாருடைய அவதாரத்தில் பல வகையான உல்லே கங்கள் உண்டு என்கிறது -க்ருத யுகத்தில் அத்திரியும் ஜமதக்கினியுமாகிற
ப்ராஹ்மண உத்தமர்களுக்கு பிள்ளையாய்க் கொண்டு தத்தாத்ரேயனும் பரசுராமனுமாய் த்ரேதா யுகத்தில் ஷத்ரியனான தசரத சக்கரவர்த்திக்கு பிள்ளையாய்
-த்வாபர யுகத்தில் ராஜ்ய பிராப்தி இல்லாத யது குலத்தில் பிறந்து ஷத்ரியரில் தண்ணியரும் வைஸ்யப்ராயருமான வஸூ தேவர்க்கும்
பசு ரஷணத்தாலே சாஷாத் வைஸ்யரான ஸ்ரீ நந்த கோபருக்கும் பிள்ளையாய்
இப்படி க்ருதாதி யுக க்ரமத்தாலே ப்ராஹ்மணேதி வர்ண க்ரமேண அவதரித்து வந்த சர்வேஸ்வரன் நான்காவதான கலி யுகத்திலே
நான்காவது வருணத்திலே ஆழ்வாராக வந்து அவதரித்த படியோ என்றும்
வேதங்களை பரிஷ்கரிப்பது முதலான காரியங்களுக்காக வியாசாதிகள் பக்கல் ஆவேசித்தால் போலே திராவிட வேத ப்ரவர்த்த நார்த்தமாக
இவர் பக்கல் ஆவேசித்த படியோ -என்றும்
இவ்விபூதியை திருத்துக்கைக்காக ஈஸ்வர நியமனத்தாலே நித்ய ஸூ ரிகளிலே ஒருவர் வந்து அவதரித்த படியோ -அன்றிக்கே
முக்தரில் ஒருவர் வந்து அவதரித்த படியோ –
அல்லது ஸ்வேத த்வீப வாசிகளில் ஒருவர் வந்து அவதரித்த படியோ என்றும்
அல்லது கீழ் சொன்னவர்கள் ஒருவரும் அல்லாமல் சம்சாரிகளுக்குள் ஜன்மாந்தர சஹஸ்ர சஞ்சிதமான தம்முடைய ஸூ க்ருத பலமாகக் கொண்டு
இப்படி திருந்தினார் ஒருவரோ என்றும் –
அன்றிக்கே நிர்ஹேதுக கடாக்ஷ விசேஷத்தாலே நித்ய சம்சாரியை நித்ய ஸூ ரி சமமாக்க வல்ல அநந்த சாயியான சனாதன புண்யம்
முழு நோக்காக பலித்த படி திருந்தினார் ஒருவரோ என்றும் இப்படிப்பட்ட வகைகளால்
இவரை இன்னார் என்று நிச்சயிக்க மாட்டாமல் ஞானிகள் சங்கிப்பார்கள் –

93-அதுக்கு மூலம் யான் நீ –இவரை இப்படி எல்லாம் சங்கிக்கைக்கு ஹேது என் என்னில் புவியும் இரு விசும்பும் என்கிற பாட்டாலே –
விபூதிமானை யுடைய நான் பெரியவனே யன்றி விபூதியை யுடைய நீ பெரியவன் அல்ல -என்று ஈஸ்வரனோடே மறுதலிக்கும் படியான
வைபவத்தை யுடையராய் ஒன்றுக்கும் விகாரப் பட மாட்டாத சர்வேஸ்வரனும் தெகுடாடும் படி திருவாய் மொழி பாடுகிற நா வீறு யுடைமையாலே
உபய விபூதியிலும் உபமான ரஹிதராய் -சம்ச்லேஷ விஸ்லேஷன்கள் மாறி மாறி நடக்கையாலே சம்ச்லேஷக ரசராய் செல்லும் அங்குள்ளார் படியும் அல்லாமல்
உண்ணும் சோறு பேருக்கு நீர் தின்னும் வெற்றிலை யும் எல்லாம் கண்ணன் என்று இருக்கையாலே அன்ன பானாதிகளாலே தரிக்கும் இங்குள்ளார் படியும் அல்லாமல்
இப்படி உபய விபூதியிலும் அடங்காமல் அடியார் நிலாகின்ற வைகுந்தமோ வையமோ நும் நிலையிடமே -என்று வாசஸ் ஸ்தலம் தெரியாத படியால்
-தெய்வத்தினமோர் அனையீர்களாய்-என்னும் படி நித்ய ஸூ ரிகள் எல்லாம் கூடினாலும் தமக்கு ஒரு வகைக்கு ஒப்பு ஆகும் படியாய்
நித்ய ஸூரி பரிஷன் நிர்வாஹகனான எம்பெருமான் பரமபதத்தில் பண்ணும் வ்யாமோஹத்தை தம்மிடத்தில் ஒரு மடை செய்ய
மேன்மேலும் அவனது விஷயீ காரங்களை பெற்றமைக்கு கலவிக் குறிகள் உண்டாய்ச் செல்ல அவன் ஸுந்தர்ய சீலாதிகளை அனுசந்தித்து
உத்தரோத்தம் விளைகிற பாஹ்யாப்யந்த்ர ஹர்ஷத்தாலே சிதிலராவது -பர ப்ரஹ்ம சாஷாத்காரம் பிறந்தாரைப் போலே ஸ்திமிதராவதாய்
உண்டியே உடையே உகந்தோடி யானே என் தனதே என்ற அகங்கார மமக வஸ்யராய் இருக்கிற லௌகீகருடைய சம்பந்தம் அற்று
சடகோபர் ஆகையால் பாஹ்ய குத்ருஷ்டிகள் ஆகிற சடரை ஸ்வ ஸூக்தி விசேஷங்களாலே துரத்தி
பராங்குசர் ஆகையால் அபிஜன வித்யாதன மதமத்தராய் திரியுமவர்களுக்கு மதம் ஒழிந்து தலை வணங்கும் படி உபதேச ரூபமான அங்குசம் இட்டு
சர்வேஸ்வரன் விஷயத்தில் எல்லார்க்கும் பக்தியும் யுண்டாக்கி நடத்தா நின்று கொண்டு தம் கடாக்ஷத்தில் அகப்பட்டவர்களின் சம்சாரத்துக்கு மிருத்யுவாய்
சாம்சாரிக துக்க ஹேதுவான பாபம் முதலியவை அருகிலும் வாராத படியாய் -பகவத் ருசி விரோதியான கலியுகம் போய் கேவல வைஷ்ணவ தர்மமே
நடக்குமதான கிருதயுகம் பிரவேசிக்கும் படியாய் இராப்பகல் வாசியும் அறியாமல் அகால கால்யமான தேசத்தில் போலே
பகவத் அனுபவ ஏக பரராய் இருந்த பிரபாவம் யாய்த்து கீழ் ச் சொன்ன சங்கைக்குக் காரணம் –

94-அதுக்கு ஹேது -கீழே விரிவாக விளக்கிய பிரபாவம் இவர்க்கு உண்டானமைக்கு அடி ஏது என்னில் -உலகில் கிருஷி செய்பவன் தான் பண்ணின க்ருஷிகள்
நிஷ்பலமாய் ஒழிந்தாலும் சோம்பிக் கை வாங்காமல் பின்னையும் க்ருஷியையே பண்ணுமா போலே –
எம்பெருமான் கல்பம் தோறும் ஸ்ருஷ்டிக்கச் செய்தே சபலமாகாது இருக்க அவ்வளவோடே கை வாங்காமல் மிகவும் ஒருப்பட்டு என்றேனும்
ஒரு நாள் பலிக்கும் என்று கிருஷியை உகந்து ஜகத் ஸ்ருஷ்டியைப் பண்ணி படைத்த அந்த ஜகத்திலே அநு பிரவேசித்து -அவற்றைச் சொல்லும்
வாசக சப்தம் தன்னளவில் பர்யவசிக்கும் படி பிரகாரியாய் நின்று அறிய வேண்டும் அர்த்தங்களை எல்லாம் அறிவிக்குமதான சாஸ்திரத்தை உபதேசித்து
திருப் பாற் கடலிலே திரு வனந்த ஆழ்வான் மேலே ஏறிப் படுக்கை வாய்ப்பாலே கண் வளர்ந்து அருளுகிறாப் போலே ஜகத் ரக்ஷண சிந்தை பண்ணி
-சிந்தித்த உபாயத்துக்குத் தகுதியாக என்றேனும் கட் கண்ணால் காணக் கூடாத தான் துக்க மயமான மனுஷ்ய பிறவியிலே ஆவிர்ப்பவித்து அருளி
அவர்களுடைய மாம்ச சஷூஸ்ஸூக்கு விஷயமாம் படி வந்து இப்படி அவதாராதிகளாலே எனக்கு
அடிமை யாவார் யுண்டோ என்று இதுவே கார்யமாகத் தேடித் திரிகிறவன்-சப் தாதி விஷயங்களில் துக்கப் பட்டு அழுந்துகிற
லோக ஸ்வபாவத்தை சவாசனமாகப் போக்குகைக்காக-
மிருக பஷிக்கள் பிடிப்பார் சஜாதீய புத்தியால் தன்னோடே இணைக்க வற்றான மிருக பஷிகளை பார்வையாக வைத்து பிடிப்பாரைப் போலே
பார்வை வைத்து இணக்குவதாக-அதுக்கு ஆவார் ஆர் என்று தேடி –
கழறலம் ஒன்றே நிலம் முழுதாயிற்றே -என்கிற பாசுரத்தில் படியே தன்னுடைய திருவடித் தாமரையும் ஞான தீபமும் மாறுபாடுருவின பரப்பு எங்கும்
ஓட்டிப் பார்த்த புண்டரீகாக்ஷனுடைய திருக் கண்களானவை ஓர் இடத்திலும் அதுக்கு ஆவாரைக் காணாமையாலே
-ஒரு விஷயத்தை அப்படிக்கு ஆக்குமதாக பார்க்கிற அளவிலே ஸ்ரீ விபீஷண ஆழ்வான் விஷயமாக எப்போதும் அன்போடு பார்த்துக் கொண்டே
கிடக்கையாலே தனக்கு பள்ள மடையான திசையிலே ஜாதி நியமமாதல் வர்ண நியமமாதல் அன்றிக்கே கர்ம அநு குணமாக ஏதேனும்
ஒரு சரீரத்தில் பிரவேசித்து அந்த சரீரத்தின் வழியே போய் ஜென்ம பரம்பரைகளிலே தோல் மாறி அவ்வனர்த்தத்திலே வெறுப்பு இன்றிக்கே
அதிலே அவகாஹித்து தரை காண ஒண்ணாத சம்சார சாகரத்தின் உள்ளே ஆழ்ந்து நடுங்குகிற இவ்வாழ்வார் மேல் பட
-இப்படி இவர் மேல் பட்ட இத்தை -நம் மேல் ஒருங்கே பிறழ வைத்தார் -என்கிறபடியே ஒரு மடைப் படுத்தி -எங்கும் பக்க நோக்கு அறியான் -என்று
நாய்ச்சிமார் முலைத் தடத்தாலே நெருக்கி அணைத்தாலும் புரிந்து பார்க்க அறியான் என்னும் படி ஸ்வ இச்சையால்
நிர்ஹேதுகமாக பண்ணப் பெற்ற விசேஷ கடாக்ஷம் யாய்த்து கீழ்ச் சொன்ன ஆழ்வார் பிரபாவத்துக்கு ஹேது
இத்தால் அத்ரி ஜமதக்கினி இத்யாதி சங்கா ஸூ த்ரத்தில் சொன்ன சங்கைகள் எல்லாம் கிடக்க
அனந்தன் மேல் புண்ணியங்கள் பலித்தவர் இவர் -என்று நிச்சிதம் யாயிற்று –

95-சிரமணீ விதுர -நித்ய சம்சாரியாய் போந்தார் ஒருவருக்கு பகவத் கடாக்ஷ மாத்திரத்தாலே சகல பாபங்களும் நீங்கி
இந்த பிரபாவம் எல்லாம் உண்டாகக் கூடுமோ என்னில் –
ஸ்ரீ சக்ரவர்த்தி திருமகன் தானே சென்று விஷயீ கரித்த வேடுவிச்சியான சிரமணீ -தேவரீருடைய அழகிய திருக் கண் பார்வையாலே
என்னுடைய பிராப்தி பிரதிபந்தகங்கள் எல்லாம் போய்ப் பரி சுத்தை யானேன் -என்று சொல்லும் படியாகவும்
கண்ண பிரான் தானே சென்று கிரஹத்திலே புகுந்து விரும்பி அமுது செய்யப் பெற்ற ஸ்ரீ விதுரர் அழகிய திருக் கண்களின்
கடாக்ஷத்தாலே சகல சாம்சாரிக தோஷங்களும் போய் பரிசுத்தராம் படியாகவும்
பக்த விலோசனத்திலே ருஷி பத்னிகளில் ஒருத்தி -தத்ரைகா விக்ருதா பர்த்ரா பகவந்தம் யதாச்ருதம் ஹ்ருதோ பகூஹ்ய விஜஹவ் தேஹம் கர்ம நிபந்தனம் -என்று
கிருஷ்ண விஷய ப்ராவண்யத்தாலே அப்போதே சம்சாரத்தில் நின்றும் விடுபட்டவளாம் படி யாகவும் பண்ணின
சர்வேஸ்வரனுடைய கடாக்ஷமானது அனுபவ விநாஸ்யமான சகல பாபங்களும் ஒரு கணப் பொழுதிலே தீரும்படி செய்யத் தட்டுண்டோ –

96-கோ விருத்திக்கு -இப்படி ஆழ்வாரை எம்பெருமான் நிர்ஹேதுகமாக விசேஷ கடாக்ஷம் பண்ணினது ஏதுக்காக-
கடாக்ஷத்தின் தன்மை தான் எப்படிப் பட்டது -கடாக்ஷிக்கப் பெற்ற பின்பு இவர் எங்கனே யானார் -என்னில்
பசுக்களை ரஷிக்கக் கருதின கண்ண பிரானை ஒவ்வொரு பசுவையும் தனித்தனியே ரஷிப்பது என்றால் மஹா சிரமமாகும் என்று பார்த்து
சதுபாயமாக நெரிஞ்சிக் காட்டை பசும் புல் காடாம்படி சங்கல்பித்தால் போலே ஜகத்தினுடைய ஹிதார்த்தமாக
-எதிர் சூழல் புக்கு எனைத்தோர் பிறப்பும் எனக்கே அருள்கள் செய்ய விதி சூழ்ந்ததால் எனக்கேல் அம்மான் திரிவிக்ரமனையே -என்று
இவர் பேசும் படி சர்வ பூதங்களின் பக்கலிலும் நடக்கிற தன்னுடைய ஸுஹார்த்த பலமான பிரசாதம் ஆகிற கிருபையை
இவர் ஒருவர் விஷயமாக ஒரு மடைப்படுத்தி அஞ்ஞான சக்திகளுக்கு எல்லையாய் இருக்கிற இவரைத் தன்னோடு ஒத்த
ஞான சக்திகளை யுடையராம் படி பண்ண இப்படி அவனாலே திருந்தின இவர் ஊரும் நாடும் உலகமும் தன்னைப் போலவே
அவனுடைய பேரும் தார்களுமே பிதற்ற என்கிறபடியே தம்மோடு அந்வயித்த இந்த லோகத்தாரை எல்லாம்
தம்மைப் போலே பகவத் ஏக பரராகப் பண்ணும் படி யானார் –

97-அதாவது மயர்வற -ஆழ்வாரை எம்பெருமான் தன்னோடு ஒத்த ஞான சக்திகளை யுடையராம் படி பண்ணுகை யாவது
மயர்வற மதிநலம் அருளுகை -அஞ்ஞானத்தை சவாசனமாகப் போக்கி பக்தி ரூபா பன்ன ஞானத்தைக் கொடுக்கை –

98-இருள் துயக்கு மயக்கு -மயர்வற மதிநலம் அருளுகையாவது -இன்னது என்கிறது -அடியோடு ஞானம் பிறவாமையும் –
-நிர்ணயமாக அன்றிக்கே சந்தேகமாக யுணர்வதும் -உள்ளபடி உணருகை அன்றிக்கே விபரீதமாக யுணர்வதும்
-உள்ளபடி உணர்ந்ததை மறந்து போகையும் ஆகிற நான்கு வகைப்பட்ட சங்கோச அவஸ்தையும் அற்று
மன பரிசுத்தியாலே விகசிதமாய் கொழுந்து விட்டு ப்ராப்த விஷயத்தை நோக்கி கிளருகிற ஞானத்தை பரமபக்தி தசா பர்யந்தம் ஆகும் படி பண்ணுகை
-இதற்குப் படிப்படியாக சில அவஸ்தா பேதங்கள் உண்டு -அவை -காதல் -அன்பு -வேட்க்கை -அவா -அதாவது
சங்கம் காமம் அநுராகம் ஸ்நேஹம் என்கிற அவஸ்தா பேதங்கள் –
-இப்படிப்பட்ட அவஸ்தைகளுக்குத் தகுதியான நாமங்களை யுடைத்தாகின்ற -மலர் மிசை எழுகிற ஞானத்தை க்ரமேண
பரமபக்தியின் தசையின் அளவாக முதிரப் பண்ணுகையே மயர்வற மதி நலம் அருளுகை –

99-ஜன்மாந்தர சகஸ்ர -இனி மேல் இவ்வாழ்வாருடைய பக்தியானது -உபாசகர்களுடைய பக்தி எண்ண -ப்ரபன்னர்கள் எம்பெருமானிடத்து பெறும்
கைங்கர்ய உபகரணமான பக்தி என்ன-இவ்விரண்டு பகுதிகளில் காட்டிலும்
விலக்ஷணம் என்பதை அறிவிக்கைக்காக முதலில் சாதன பக்தியின் நிலைமை காட்டப் படுகிறது –
அநேக ஜென்மங்களில் பகவத் ஆராதனை ரூபமாக அனுஷ்டித்த சத் கர்மங்களாலே ப்ரஹ்ம வித்துக்களாக ப்ரசித்தரானவர்களுடைய
வம்சங்களிலே பிறந்து பகவத் விஷயமான சப்தங்களை எழுதுவது வாசிப்பது பிறர் சொல்லக் கேட்பதாய் கொண்டு இந்த சாஸ்திர அப்யாஸ முகேன
பிறந்த தத்வ ஞானத்தை யுடையராய் நித்ய கர்ம அனுஷ்டான உபயுக்தமாய் இருந்துள்ள காய சுத்த்யர்த்தமான ஸ்நானத்தைப் பண்ணி
சந்த்யா வந்தன காயத்ரீ ஜபம் பஞ்ச மஹா யஜ்ஜம் ஷாட் கர்மங்கள் என்று இப்படி
இருந்துள்ள நித்ய நைமித்திக கர்ம அனுஷ்டானங்களால் பரி பூர்ணராய் நித்ய கர்மாதிகளை குறைவற அனுஷ்டிக்கையாலே
தபஸிலே யோக்யதை பிறந்தவாறே காய சோஷண அர்த்தமாக ஆகாரத்தைக் குறைத்து பிராண தாரணத்துக்கு
தக்க அளவாக்கி உஷ்ண காலங்களில் மலை யுச்சியிலும் பஞ்சாக்கினி மத்யத்திலும் நின்று சீத காலங்களில் குளங்களில் முழுகிக் கிடந்து
ஜீரண பர்ண பலாச நராயும் இப்படி தபஸ் சர்யையாலே உடம்பை உலர்த்தி கீழ் சொன்ன கர்ம அனுஷ்டானத்தாலே துக்க ஹேதுவான
பாபங்களைப் போக்கி -இப்படி பிரதிபந்தக பாப நிவ்ருத்தியாலே மனஸ் சுத்தி ஹேதுவான விவேகாதிகளும்
சமதமாதிகளும் அபிவ்ருத்தமாக -காம க்ரோத லோப மோஹ மத மாத்சர்யா அஞ்ஞான அஸூயைகளாகிற ஏட்டையும் போக்கி
அஹிம்சை முதலான அஷ்ட வித புஷ்ப்பங்களையும் இட்டு -சாஷ்டாங்க பிரமாணம் பண்ணி புஷ் பாங்க ராகாதிகளான
சமாராதன உபகரணங்களை சம்பாதித்திக் கொண்டு பகவத் சமாராதனத்தை செய்து பரிசுத்த அந்த கரணராய்
விஷயாந்தர வனங்களில் ஓடா நிற்கிற மிகக் கொடிய இந்திரியங்கள் ஆகிற மத்த கஜத்தை ஞானம் ஆகிற அங்குசத்தாலே வசப்படுத்தி
விஷய போகங்களைக் குறைத்து பகவத் விஷய ப்ரவணமாக்கி இந்திரிய மார்க்கத்தைத் தடுத்தி
இப்படி ஜிதேந்த்ரியராய் அவித்யா அஸ்மிதா ராக த்வேஷா அபி நிவேச ரூப கிலேச பஞ்சக சஞ்சாரத்தை தவிர்த்து
ஸ்வயம் பிரகாசமான ஆத்ம ஸ்வரூபத்தை சாஸ்திர யுக்த ப்ரக்ரியையாலே சாஷாத் கரித்து
யோகமாகிற உபாயத்தாலே கிட்டி ஆன்ருசம்சய ரூப தர்மத்தை யுடையவர்களான தார்மிக அக்ரேஸருடைய ஹிருதயத்திலே பொருந்தி
இரா நின்றுள்ள பெறுதற்கு அரிய அத்யுஜ்வல விக்ரஹம் யுடையவனாய் இருக்கும் சர்வேஸ்வரனை -கண்கள் சிவந்து -என்ற பாட்டிலே
சொல்லுகிறபடியே ஹிருதய கமலத்தில் த்யானம் பண்ணி அந்த தியானத்துக்கு விச்சேதமும் விஸ்ம்ருதியும் அற்று அநுஸ்யூதமாக நடக்கும்த்ரு
வ அநு ஸ்ம்ருதியுமாய் -ஸ்வப்னத்தில் காட்டிலும் அதிசயிதமாக ப்ரத்யக்ஷ சாமானகாரமாய் -அப்படி தரிசன சமமான அது தான்
அங்கநா பரிஷ்வங்கம் போலே ஸ்மர்த்தவ்ய விஷய சாரஸ்யத்தாலே மிகவும் பிரியமாய் பரமபதத்தில் அனுபவத்தையும் உபேக்ஷிக்கும் படி
தானே பரம பிரயோஜனமாம் படி ரசிக்கையாலே அநந்ய பிரயோஜனமாய் -வேதனம் என்றும் உபாசனம் என்றும் சேவை என்றும்
த்யானம் என்றும் இத்யாதி சப்தங்களால் சொல்லப் படுகிற பக்தியானது கர்ம ஞான சம்ஸ்க்ருத அந்த கரணனுக்கு பிறக்குமது ஓன்று
ஆகையால் சேதன சாத்யமாய் பகவத் ப்ரசாதன உபாயதயா தத் பிராப்தி சாதனமான பக்தியாக வேதாந்த சாஸ்திரத்தில் சொல்லப்பட்டது
இத்தால் கர்ம ஞான சாத்யையாய் பகவத் பிராப்தி சாதனமான உபாசகருடைய பக்தியின் வேஷம் காட்டப் பட்டது –
பிரபன்னர் எம்பெருமான் இடத்தில் பிரார்த்தித்து பெருகிது கைங்கர்ய உபகரண பக்தி விசேஷம் மேல் பிரதிபாதிக்கப் படுகிறது –

100-ஸ்வீக்ருத சித்த சாதனர் -பிரபன்னர்களுடைய பக்தி ஸ்வரூபம் நிரூபிக்கப் படுகிறது
-த்வத் பாத மூலம் சரணம் ப்ரபத்யே -என்று சித்த உபாய ஸ்வீகாரம் பண்ணின பிரபன்னர் –
போஜனத்துக்கு பசி போலே இந்த பக்தி கைங்கர்யத்துக்கு உபகரணம் ஆகையால் ப்ராப்யமான கைங்கர்யம் போலே இதுவும் நமக்கு பிராப்யம் என்று கருதி –
பகவத் பக்திம் அபி ப்ரயச்ச மே -இத்யாதிகளில் படியே இந்த பக்தியை பகவான் பக்கலிலே பிரார்த்திக்க சரீர
வியோகத்துக்கு பிறகு பகவத் பிராப்தி பண்ணுவதற்கு முன்னே சித்திக்கும் –

101-இது உபயமும் இன்றிக்கே –முன் சொல்லப் பட்ட ஆழ்வாருடைய பக்தியானது -உபாய பக்தியும் பல பக்தியும் ஆகிற
இவ்விரண்டு பக்தியும் இல்லாமல் -திருத் துழாய்க்கு பரிமளம் போலே கூடப் பிறந்து விட ஒண்ணாததாய் -மநோ ரதப்படி அனுபவிக்கப் பெறாத போது
போஜனம் பெறாத தசையில் பசி போலே கஷ்டம் என்பது வியாதி என்பதாம் படி வெறுப்பை விளைத்து
அசோஷியமான ஆத்ம வஸ்துவை சோஷிப்பித்து அபிநிவேச சாகரத்தில் விழுந்து துவளும்படி பண்ணி
இதர உபாய பரித்யாக பூர்வகமாக அவனே உபாயம் என்று அறுதி இட்டு இருக்கும் இவரை
குதிரியாய் மடலூர்துமே என்னும்படி த்யஜித்த உபாயத்திலே மூட்டுகையாலே தியாக நிஷ்டாஹானியையும்
உனபாதம் சேர்ந்தேனே-அடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே -என்று அடிக்கடி பிரபத்தி பண்ணும் படி ஆக்குகையாலே
ஸக்ருத் கர்தவ்யமான சுவீகாரத்தில் நிஷ்டாஹானியையும் உண்டாக்கி
சத்தைக்கும் போகத்துக்கும் விருத்திக்கும் உபகாரணமாய் இருபத்தொன்று
ஆக -இவருடைய பக்தி சாதித்துப் பெற்றதும் அன்று -அபேக்ஷித்துப் பெற்றதும் அன்று -சஹஜையாய் இருப்பது ஓன்று என்றதாய்த்து –

102-இடகிலேன் நோன்பு -இங்கனம் இன்றிக்கே இவருடைய பரம பக்தி -கர்ம ஞான பகுதிகள் ஆகிற சாதன த்ரயத்தையும்
இந்த ஜென்மத்தில் அனுஷ்டிக்கையாதல்-பூர்வ ஜென்மங்களில் ஆதல் -அப்யாஸத்தாலே யாதல் -உண்டானதாய் இருக்கக் கூடாதோ என்னில்
இடகிலேன் என்று அட்டகில்லேன் ஐம்புலன் வெல்ல கில்லேன் கடவனாகி காலம் தோறும் போப் பறித்து ஏத்த கில்லேன் -என்றும்
நோற்ற நோன்பிலேன் நுண் அறிவிலேன் -என்றும் இத்யாதி பாசுரங்களில் கர்ம ஞான பக்தி யோகங்கள் ஒன்றிலும்
தமக்கு நிவேசம் இல்லை என்னும் இடத்தை ஆழ்வார் தாமே அருளிச் செய்கையாலே வர்த்தமான ஜென்மத்தில்
கர்ம ஞான பக்திகள் ஆகிற சாதன த்ரய அனுஷ்டானத்தால் உண்டானது அல்ல
கிற்பன் கில்லேன் என்றிலேன் முன நாளால் -என்றும் -தெரிந்து உணர்ந்து ஓன்று இன்மையால் தீ வினையேன் வாளா இருந்து
ஒழிந்தேன் கீழ் நாள்கள் எல்லாம் -என்றும் அருளிச் செய்கையாலே பூர்வ ஜென்மங்களில் அப்யாஸத்தால் உண்டானதும் அல்ல –

103-இப்பிறப்பே சில நாளில் -ஆழ்வாருடைய பக்தியின் வை லக்ஷண்யம் -இன்னமும்
-குறிக்கொள் ஞானங்களால் எனை யூழி செய்தவமும் கிறிக் கொண்டு இப்பிறப்பே சில நாளில் எய்தினன் யான்-என்று
யம நியாமாத்யவஹிதராய் கொண்டு சம்பாதிக்க வேண்டிய வேதன தியாக உபாஸனாத்தியவஸ்தா விசேஷங்களான ஞானங்களாலே
அநேக கல்பம் கூடி ஸ்ரவணமாய் மனனமாய் த்ருவ அநு ஸ்ம்ருதியாய் வரக் கடவதான பக்தி யோகம் ஆகிற தபஸினுடைய பலத்தை
ஒரு யத்னமும் இல்லாமல் சத் உபாய பூதனான அவ் வெம்பெருமானாலே பீஜே ஜென்மத்தில் ஸ்வல்ப காலத்திலே பெற்றேன் என்று
ஆழ்வார் தாமே ஸ்பஷ்டமாக அருளிச் செய்து வைக்கையாலே வர்த்தமான ஜென்மத்தில் சாதன த்ரய அனுஷ்டானத்தால் உண்டானது என்றும்
பூர்வ ஜென்ம அப்யாஸத்தால் உண்டானது என்றும் சொல்லுகிற இரண்டு வாதமும் கழியுண்டாய்த்து –

104-பெறும் பாழில் ஷேத்ரஞ்ஞன் –ஆனால் இவர்க்கு இந்த பக்தி உண்டாகைக்கு ஹேது என் என்னில் -பலனை அனுபவிப்பவனான
எம்பெருமானுடைய கிருஷி பலித்த படி இது என்பது ஷேத்ரமும் பயிர் செய்பவனும் பயிரும் அதன் பலனுமாக ரூபித்திக் கூறப்படுகிறது –
அளவிட முடியாததாய் போக மோக்ஷங்களை விளைத்துக் கொள்ளலாம் நிலமான பிரகிருதி தத்துவத்தில் கலியுகம் ஆகிற வன்னியன்
இவனை நலியுங்கோள் என்று ஏவ மனசைத் தங்களுக்கு சேஷமாக ஆளுகிற மிடுக்கரான இந்திரியங்கள் ஆகிற குறும்பர்
இச் சேதனனுக்கு நியாமகராய்க் கொண்டு தேஹத்திலே குடி புகுந்து தங்களுக்கு பிரதானமான மனசையும் தங்கள் நினைத்த வழியே
நடக்கும் படியாகப் பண்ணி விஷயங்களில் படிந்து புஜிக்கிற போகத்திலே ஒரு காலும் திருப்தி பெறாதே -இவற்றாலே வந்த நலிவை
ஆற்றி இருப்போம் என்றால் ஆற்ற ஒண்ணாத படி விஷய போகங்களை புஜிக்க வேணும் என்று இவனைச் சிறை செய்து தனக்கு
அபீஷ்டமானவற்றை தா வென்று துகைத்து இழுத்து சரீரமாகிய செக்கிலே இட்டுச் சுழற்றி க்ரூரமாய் கரை ஏற ஒண்ணாத படியாய்
இருக்கும் விஷயங்கள் ஆகிற படு குழியிலே தள்ளி வெகுவிதமாகத் தண்டித்து அர்த்த காமங்கள் இரண்டையும்
கடன் செலுத்திக் கொள்ளுவாரைப் போலே செலுத்திக் கொள்ள -பக்த சேதனனுடைய பக்திக்கு விளை நிலமான மனசானது
ஸூ க்ருத கந்தம் அற்று பாழ் பட்ட வாறே -இந்திரிய வஸ்யத்தையாலே இப்படி பாழ் பட்ட மனசை தன் வசம் ஆக்குவதற்காக
இந்திரியங்கள் ஆகிற ஐவர் ஷயித்து முடிந்து போம்படி ஸ்தாவர பிரதிஷ்டையாக இருந்தான் –
கிருபையாகிற வாளை உருவி பாபம் ஆகிற தூறுகளை நிர்மூலம் ஆக்குவித்து உருமாய்ந்து போம்படி தக்தமாக்கினான் –
பகவத் ஆபி முக்கியம் பிறந்த அளவிலே இவன் பாகவதன் ஆனான் என்று சம்சாரிகள் சொல்லும் படி பழி மொழியை பக்தி யாகிற பயிர் வளருவதற்கு
எருவாக இட்டு ஞானம் ஆகிற அம்ருத நதியை வாயளவாகத் தலைக்கு மேலே போம்படி பெருகப் பண்ணினான் –
மனசானது ஆர்த்தமாய் பதம் செய்து வாய்த்தவாறே அந்நெஞ்சிலே சங்கம் ஆகிற நெல்லை விரைத்து-தத் ஏக பரதந்த்ரமாய் -தத் ஏக போகமாய்
வளருகிற இப்பயிரிலே கர்த்ருத்வ போக்த்ருத்வ புத்தியை விளைக்கும் அஹங்கார மமகாரங்கள் ஆகிற களையையும்
ஊசி வேரோடு பறித்துப் பொகட்டான் -களை பரித்தாலும் பட்டி புகாமல் நோக்கினால் அன்றிப் பயிர் தலைப் பெற்றுச் செல்லாதாகையாலே
பக்தியாகிற இப்பயிருக்கு பட்டியான இந்திரியங்கள் ஆகிற சேக்களினுடைய ஸ்வச்சந்த சஞ்சார ஹேதுவான கர்வத்தைப் போக்கினான்
பக்தியாகிற பயிர் விளைந்து கிடக்கிற நெஞ்சு அந்யார்ஹம் ஆகாத படி
பள்ளி யறை குறிக் கொள்மின் -என்கிறபடியே காவல் அடைத்து காளமேக நிபாஸ்யமான வடிவழகை வர்ஷித்து வளர்க்கையாலே
அந்த பக்தியாகிற பயிர் கடல் போலே அபரிச்சேத்யமாம் படி பலித்து பக்தி பரிபாக நிபந்தமான ஆர்த்தியால் வரும் பாரவஸ்யம் பிறந்த வாறே
ஒரு நாள் புஜித்து விடுகை யன்றிக்கே நாள் தோறும் புஜியா நிற்கச் செய்தேயும் அதிருப்தனாய் இத்தலையில்
ஸ்வல்பம் சேஷித்துக் கிடக்கிறது என்று நிரூபித்து அறிய வேண்டும்படியாக
அருகே இருந்த பிராட்டிமார் முதலானோரும் அறிய மாட்டாதபடி பெரும் பசியரானவர்கள் விளைந்த நெல்லைச் சேர அறுத்துக்
கொண்டு போய் புஜிக்கப் பற்றாமல் முற்றின அளவுகளைக் கொஞ்சம் கொஞ்சமாக கொண்டு போய் புஜிக்குமா போலே
முக்தன் ஆனவாறே பின்பு பூர்ணமாக புஜிப்போம் என்று இருக்க மாட்டாத தன் அபி நிவேசத்தாலே இச் சரீரத்தோடு இருக்கச் செய்தே
விளைந்த பரிபாக அநு குணமாக மனஸ் ஸூக்குத் திருப்தி பிறவாமல் மேன்மேலும் விரும்பி புஜித்து பரிபக்வமான இவ்வஸ்து
காலக் கழிவாலே தரைப் பட்டு மங்கிப் போகாமல் பிராப்தி விரோதமான கர்மங்களை அறுத்தான் –
அறுத்த நெல் கதிரை தடியால் அடித்து பதரும் மணியும் பிரிக்குமா போலே -அருள் என்னும் தண்டால் அடித்து -என்கிறபடியே –
தன்னுடைய கிருபை யாகிற த்ருடமான சாதனத்தாலே பதர் போன்ற ஆத்ம அனுபவத்தில் ருசியை அறுத்தான் –
அந்த நெல்லில் உமியை விடுவிக்குமா போலே ஆத்மாவைப் பொதிந்து கிடக்கிற ஆதி வியாதி ஷட்பாவ விகாரங்களுக்கு காரணமான ஸ்தூல தேகத்தை விடுவித்தான் –
பின்பு அரிசியைத் தவிடு ஏறக் கழுவுமா போலே சம்சரண ஹேதுவாய்ப் போந்த ஸூ ஷ்ம சரீரத்தை விரஜா ஜல ஸ்பர்சத்தாலே
வாசனா ரேணுக்களோடே போக்கி -ஸ்தூல ஸூஷ்ம ரூபையான ப்ரக்ருதியில் நின்றும் விவேகித்து வாங்கின இவ்வாத்ம வஸ்துவை
அமானவ கர ஸ்பர்சத்தாலே அப்ராக்ருத தேஹத்திலே பிரவேசிப்பித்து ஸத்கார ஸாமக்ரியோடு எதிரே வருகிற அப்சரஸ்ஸூக்களைக் கொண்டு
ஞானாதி ஷட் குணங்கள் ஆகிற அறு சுவைகளோடே அஹம் அன்னம் -என்கிற அன்னமாம் படி பக்குவம் ஆக்கி
நித்ய ஸூ ரிகளுக்கு பரம போக்யமாம் படி யானவாறே-இவ்வாத்ம வஸ்துவை முழுக்க புஜிப்பதாக-இவ்வாத்ம வஸ்துவுக்கு ருசி பிறப்பதற்கு முன்னே
பிடித்தும் பாரித்து இவன் கர்க்ஷகன் என்று தோற்றும் படி க்ருஷி சாதனத்தை கையிலே கொண்டு இவ்வாத்ம உஜ்ஜீவனத்துக்கு
மிகவும் யதனியா நிற்கும் ஸ்வபாவனாய் ஸ்வ விஷய பக்தியை விளைக்கைக்கு கிருஷி பண்ணித் திரியும் சர்வேஸ்வரனுடைய ‘
கிருஷியின் பலம் இ றே இவ்வாழ்வாருக்கு உண்டான இந்த பக்தி –
இத்தால் ஆழ்வாருடைய பக்தியின் உத்பத்திற்கு காரணம் பகவானுடைய கிருஷி என்றதாயிற்று –

105-கோசல கோகுல –இப்படி இத்தலையில் ஒரு ஸூ க்ருதமும் இல்லாமல் இருக்க ஈஸ்வரனுடைய கிருஷி பலிக்கக் கண்ட இடம் உண்டோ என்றால்
திரு வயோத்தி கோசல தேச வர்த்திகளான சராசரங்கள் எல்லாம் -புற் பா முதலாக புல் எறும்பாதி ஓன்று இன்றியே –
-நற் பாலுக்கு உய்த்தனன் -என்னும்படி நிர்ஹேதுகமாக பகவத் விஷயீ காரம் பெற்ற படியும்
கோகுலத்தில் உண்டான சராசரங்கள் எல்லாம் அவன் ஒருவன் குழலூதின போது நிர்ஹேதுக பகவத் ப்ராவண்ய பரவசங்களான
படியைக் கண்டு -நங்கைமீர்காள் இஃதோர் அற்புதம் கேளீர் -என்று விசேஷஞ்ஞர் ஈடுபட்டுச் சொல்லும் படியும் கண்டோம் அன்றோ
இத்தால் எம்பெருமான் நிர்ஹேதுக விஷயீ காரம் இப்படிப் பலிக்கக் காண்கையாலே ஆழ்வாருடைய பக்தியும்
அவனது நிர்ஹேதுக கிருஷி பலம் என்னத் தட்டில்லை என்றதாயிற்று –

106-பட்டத்துக்கு உரிய யானையும் -ஆனால் இப்படி நிர்ஹேதுகமாக விஷயீ கரிக்கும் அளவில் எல்லாரையும் விஷயீ கரிக்கலாய் இருக்க
இங்கனே இவர் ஒருவரை விஷயீ கரிக்கைக்கு ஹேது என் என்னில் -அராஜகமான தேசத்தில் பட்டத்துக்கு உரிய யானையைக் கண்ணைக் கட்டி விட்டால்
அவ்வானையால் எடுக்கப் பட்ட ஒருவன் ராஜாவாகும் போது -அல்லாதார் எல்லாம் கிடைக்க இவனை இப்படி எடுக்கைக்கு அடி என்
என்று ஆராயாதாப் போலேவும் ராஜாவானவன் தன் செருக்கால் ஒருத்தியைத் தனக்கு மஹிஷியாகப் பரிக்ரஹிக்கும் அளவில்
இப்படிக்கு ஒத்த ஸ்த்ரீகள் பலரும் உண்டாய் இருக்க இவளை இவன் இப்படி பரிக்ரஹிக்கைக்கு அடி என் என்று ஆராயாதாப் போலே யும் –
நிரங்குச ஸ்வதந்த்ரனான சர்வேஸ்வரன் ஸ்வ அதீனமுமாய் ஸ்வார்த்தமுமான ஆத்ம வஸ்துக்களிலே ஓர் ஒன்றை ஸ்வ இச்சையால்
தன் விநியோகத்துக்கு உரித்தாம் படி விஷயீ கரித்தால் அதுக்கு ஹேது ஆராயப்படாது –

107-முந்நீர் வாழ்ந்தார் சூட்டும் -இப்படி சொல்லுவான் என் -இவர் தமக்கு ஞானத்தை ஸூ க்ருதங்கள்அன்றோ இல்லை என்றது –
யாதிருச்சிகாதி அஞ்ஞாத ஸூக்ருதங்கள் அடியாக அங்கீ கரித்தான் ஆகாதோ என்னில்
முந்நீர் ஞாலம் படைத்த –வாழ்ந்தார்கள் வாழ்ந்தது -சூட்டு நன் மாலைகள் -கோவை வாயாள் பொருட்டு -ஆழி எழ -இத்யாதிகளால் –
தமது வ்ருத்தாந்தங்களையும் பிறரது விருத்தாந்தங்களையும் சாஷாத் கரித்து அருளிச் செய்கிற ஆழ்வாருக்கு அஞ்ஞாதமான அம்சம் ஒன்றும் இல்லாமையால்
தம்மை ஈஸ்வரன் அங்கீ கரிக்கைக்கு அடியான யாதிருச்சிகாதி ஸூ க்ருதங்கள் உண்டாகில் மற்றவை போலே அவையும் பிரகாசிக்கும் –
பிரகாசித்தால் ஆழ்வார் அருளிச் செய்வர்-அப்படி அருளிச் செய்யக் காணாமையாலும் கேவல நிர்ஹேதுக விஷயீ கார பிரகாசக
ஸ்ரீ ஸூ க்திகள் பலவும் அருளிச் செய்தமை காண்கையாலும் அவையும் இவர்க்கு இல்லை –

108-செய்த நன்றி தேடி –இப்படி அங்கீ கார ஹேதுவாய் இருபத்தொரு ஸூ க்ருதம் இல்லையே யாகிலும் -அத்வேஷமும் ஆபி முக்கியமும்
ஸூ க்ருதம் அடியாக ஆனாலோ என்னில் -வாட்டாற்றார்க்கு என் நன்றி செய்தேனோ என் நெஞ்சில் திகழ்வதுவே -என்று
எம்பெருமான் தம்மை விஷயீ கரிக்கைக்கு உடலாகத் தாம் செய்த ஸூ க்ருதம் ஏதேனும் உண்டோ என்று தேடிக் காணாமல்
என்னைத் தீ மனம் கெடுத்தாய் -மருவித் தொழும் மனமே தந்தாய் -என்று தீ மனம் போக்கை யாகிற அத்வேஷமும்
மருவித் தொழும் மனம் உண்டாகை யாகிற ஆபி முக்கியமும் -இரண்டுமே அவனாலே உண்டாய்த்து என்று
தாமே நிஷ்கரிஷ்க்கையாலே அத்வேஷ ஆபி முக்யங்களும் சாதகர்மத்தாலே வந்தவை அன்று –

109-எண்ணிலும் வரும் –ஆனால் பரம பக்திக்கு முகம் காட்டுமா போலே என்னில் பரி கணனைக்கும் முகம் காட்டும் என்றாரே இவர் தாம் –
அந்த பரி கணநை தான் இவருக்கு உண்டானாலோ என்னில் –எண்ணிலும் வரும் என் இனி வேண்டுவம்-என்றது
எம்பெருமானுடைய குண பிரகர்ஷத்தை சொன்ன அத்தனையே யன்றோ -அந்த பரிகணநைக்கு தம்மோடு அந்வயம் இல்லாமை கண்டு
கண்டாயே நெஞ்சே கருமங்கள் வாய்க்கின்று -ஓர் எண் தானும் இன்றியே வந்தியலுமாறு -என்று தம்
திரு உள்ளத்துக்கு மூதலிக்கையாலே அதுவும் இவர்க்கு இல்லை –

110-மதியால் இசைந்தோம் என்னும் -அது தான் வேண்டுமோ -தமக்கு அனுமதி இச்சைகள் இருப்பதாக அருளிச் செய்தார் –
அவைதான் ஹேது வானாலோ என்னில்
வைத்தேன் மதியால் எனது உள்ளத்தகத்தே-என்றும் -யானும் என் நெஞ்சும் இசைந்து ஒழிந்தோம் என்றும்
தமக்கு இருப்பதாகச் சொன்ன அநுமதியும் இசைவும் ஈஸ்வர கிருஷி பலம் என்னும் இடம்
-யானொட்டி என்னுள் கிருத்துவம் என்று இலன்-என்றும் –
இசைவித்து என்னை உன் தாளிணைக் கீழ் இருத்தும் அம்மானை -என்றும் -என் இசைவினை -என்றும் அருளிச் செய்யும்
-ஸ்வ ஸூக்திகளாலே விளங்கும் –

111-மாதவன் மலை நீர் -இவை ஒன்றும் இல்லை யாகிலும் மாதவன் என்றும் -திருமால் இரும் சோலை என்றும் சொன்ன யுக்தி மாத்ரத்தை
பற்றாசாகக் கொண்டு எம்பெருமான் தம்மை விஷயீ கரித்தானாக ஆழ்வார் அருளிச் செய்கையாலே அவை தான் உண்டே என்னில் –
மாதவன் என்றதே -கொண்டு என்னை இனி இப்பால் பட்டது -யாதவங்களும் சேர் கொடேன் என்று என்னுள் புகுந்து இருந்து -என்றும் –
திருமால் இரும் சோலை மலை என்றேன் -திருமால் வந்து என் நெஞ்சு நிறையப் புகுந்தான் -என்று சொல்லும் படி
மாதவன் என்று நம் பேரைச் சொன்னான் -திருமால் இரும் சோலை மலை என்று நம் ஊரைச் சொன்னான் -என்று ஏறிடுகிறவை
ஈஸ்வரன் உகந்த திரு நாமம் என்றும் -அவன் உகந்து வர்த்திக்கிற திருமலை என்றும் சொன்னவை அல்ல -பேருக்கும் மலைக்கும் வியாவ்ருத்தி சொன்ன மாத்திரமே —
மற்றும் இவையோடு சஹபடிதமாய் பொருமவையான -என் அடியார் விடாய் தீர்த்தாய் -அவர்களுக்கு ஒதுங்க நிழலைக் கொடுத்தாய் –
என்று ஏறிடுகிறவை தன் பயிர் கெடாமைக்கு தண்ணீர் இறைக்கிறதும் சூது சதுரங்கம் ஆடுகைக்காக திருத்த திண்ணை கட்டி வைக்குமது ஒழிய
பாகவதர்களுடைய விடாயைத் தீர்க்கைக்கும் அவர்கள் ஒதுங்க நிழல் ஆகைக்கும் செய்கிறது அல்லாமையாலே அன்யார்த்தம்
இவை இத்தனையும் இத்தலையில் நினைவு இன்றிக்கே இருக்க அவனடித்து ஏறிடுகிறவை யாகையாலே புத்தி பூர்வகம் அல்ல
இவை தான் பல ஹேதுவாக சாஸ்த்ர விஹிதங்களும் அன்று -பகவத் விஷயீகாரம் என்கிற மகா பாலத்துக்கு சத்ருசமும் அல்ல
இவை உண்டானால் இவ்வருகே சில அல்ப பிரயோஜனங்களுக்கு ஹேதுவாம் அத்தனை -ஆகையால் இவை பகவத் அங்கீகார ஹேது வாக மாட்டாது –

112-இவன் நடுவே -ஆனால் இவரை இப்படி நிர்ஹேதுகமாக விஷயீ கரிக்க வேண்டுவான் என் என்னில் -இப்படி ஒன்றை ஆரோபித்தாகிலும்
விஷயீ கரிக்குமவன் நிர்ஹேதுகமாக வந்து -த்வம்மே இத்யாதிப்படியே -இவன் என் அடியான் என்று பிடிக்க -அதுக்கு இவர் இசையாமல் –
என்னை நீ உன் அடியான் என்றது எத்தாலே -என்ன -இவரை இசைவிக்கைக்காக வேதத்தை பிரமாணமாகக் காட்ட –
அது எழுதா மறையாகையாலே -அத்தை ஓலைப் படா பிரமாணம் என்று இவர் அத்தை அந்யதாகரித்து தம்முடைய அநாதியனுபவத்தை
பிரபலமாகக் கொண்டு நிற்கையாலே ஆட்சியிலும் பிரபலமான தொடர்ச்சியை முன்னிட்ட அளவிலே அதுக்கு சாக்ஷி யார் என்று கேட்டவாறே
தத்வ தர்சிகளான ஞானிகளை சாக்ஷியாகக் காட்ட -அவர்கள் உனக்கு பக்ஷ பாதிகள்-என்று அதுக்கும் இவர் கண் அழிவு சொல்லுகையாலே அநாதி காலம்
தாம் அஹம் மம என்று இருந்து போந்த அனுபவம் ஆத்ம அபகாரம் ஆகிய வலிய களவுகளாலே வந்தது என்று இவர் அநு தபிக்கும் படி
இந்திர ஜாலங்களை போலே த்ருஷ்ட்டி சித்த அபஹாரிகளான வடிவு அழகையும் சீலத்தையும் சேஷ்டிதங்களையும் காட்டி வாய் மாளப் பண்ணி
இவர் தம்மதாக நினைத்து இருந்த ஆத்மாத்மீயங்களை தன்னதாக்கிக் கொள்ளும் படியாக அநிவார்யமான கிருபையானது எம்பெருமானைச் சூழ்ந்து கொண்டது –

113-வரவாறில்லை வெறிதே-எல்லாம் செய்தாலும் இப்படிப்பட்ட கிருபையானது அநாதி காலம் இவ்வாத்ம விஷயமாக பெருகாமல் இன்று பெருகும் அளவில்
இதுக்கு ஒரு ஹேது வேண்டுகையாலே இதுக்கு உடலாக கல்பிக்கலாவதொரு ஸூ க்ருதம் இல்லையோ என்னில்
-வரவாறு ஓன்று இல்லையால் வாழ்வு இனிதால் -என்றும் -வெறிதே அருள் செய்வார் -இத்யாதிகளால் பகவத் விஷயீ காரம்
நிர்ஹேதுகம் என்று ஆழ்வார் தாமே அறுதியிட்டு பின்பு தனியேன் வாழ் முதலே -என்று
தம்முடைய பேற்றுக்கு மூல ஸூ க்ருதமாக இவர் அருளிச் செய்தே அவ்வீஸ்வரனை ஒழிய வேறு கல்பிக்கலாவதொரு ஸூ க்ருதம் இல்லை –

114-நலம் அருளினன் என் கோல் -இப்படி நிர்ஹேதுக விஷயீ கார பாத்ர பூதரான இவருடைய பக்தி எம்பெருமானது அருளினாலேயே பெறப்பட்டதாகிலும்
உபாசகனுக்கு கர்ம ஞான ஜெனித பக்தி போலே இவருக்கு பிராப்தி சாதனம் இதுவோ என்னில் -மயர்வற மதி நலம் அருளினன் என்று
-தம்முடைய பக்தியுத்பத்தி காரணம் கேவல பகவத் கிருபை -என்று உபக்ரமித்து
என் கொல் அம்மான் திருவருள்கள் -என்னு-பிராப்தி தசையோடு -வாசி யற ஆமூல சூடம் -மால் அருளால் மன்னு குருகூர்ச் சடகோபன் -என்று
நின்ற நிலை தோறும் அவன் அருள் கொண்டே தரிக்க வேண்டும் ஸ்வபாவரான இவர்க்கு -ஆறா வன்பில் யடியேன் உன் அடி சேர் வண்ணம் அருளாயே
-என்கையாலே -மதி நலம் அருளினன் -என்று முதலிலே பக்தி காரணமாகச் சொன்ன கிருபையே தத் சரண கமல ப்ராப்திக்கும் சாதனம் –

115-புணர் தொறும் என்ன -இப்படி பிராப்தி சாதனம் கிருபையே யாகில் -இந்நின்ற நீர்மை இனி யாம் உறாமை -என்ற போதே இவர் அபேக்ஷிதம்
செய்து விடலாய் இருக்க -இவரை இந்நிலத்திலே வைத்து ஸ்வ சம்ச்லேஷ விஸ்லேஷங்களாலே ஞான பக்திகளை வளர்த்தது ஏதுக்காக என்னில் –
கனமான கர்ண பூஷணம் இடுகைக்கு இடமாம்படி நூலிட்டுத் திரியிட்டு குதம்பை இட்டு காது பெருக்குமா போலேயும்
மாச உபவாசிகளுக்கு முதலிலே போஜனம் இட்டால் பொறாது என்று சோற்றை அறைத்து உடம்பில் பூசிப் பொரிக் கஞ்சி கொடுத்து
பொரிக் கூழ் கொடுத்து நாளடைவில் போஜனம் பொறுப்பிக்குமா போலேயும் -ஆற்ற நல் வகை காட்டும் அம்மான் -என்று
தனக்கு பொறுக்க பொறுக்க தன் குண சேஷ்டிதாதிகளைக் காட்டி அவ்வழியாலே என்னை அடிமை கொண்டவன் என்னும் படி
பகவத் அனுபவம் கனாக் கண்டு அறியாத இவர்க்கு அதி சிலாக்யமாய் நித்ய ஸூ ரிகள் அனுபவிக்கிற போகத்தை முதல் முதலிலே கொடுத்தால்
சாத்மியாது என்று கருதி அது சாத்மிக்கைக்காக சிரமம் செய்வித்த படி -ஆனபின்பு ஞான பக்திகளை வளர்த்தது பிராப்தி சாதனதயா அன்று என்று கருத்து –

116-இவற்றால் வரும் சம்–கீழ்ச சொன்ன இக்காரியங்கள் அடியாக வரும் சம்ச்லேஷமும் விஸ்லேஷமும் எவை என்னில் –
ப்ரத்யக்ஷ துல்யமான மானஸ அனுசந்தானம் -சம்ச்லேஷம் -அபேக்ஷிதமான பாஹ்ய அனுபவம் பெறாமையாலே
உள்ள அனுபவமும் அடி மண்டி யோடே கலங்கும் படி பிறந்த அந்த கரணம் ஸைதில்யம்-விஸ்லேஷம் –

117-புண்ணியம் பாவம் புணர்ச்சி -ஆனால் அபிமத விஷய சம்ச்லேஷ விஸ்லேஷன்கள் புண்ய பாப நிபந்தனமாக அன்றோ லோகத்தார்க்கு வருவது –
லோக விலக்ஷணரான இவர்க்கு அவை வருகைக்கு நிதானம் ஏது என்னில் -நாட்டார்க்கு புண்ய பாப பலமாய்க் கொண்டு வருகிற சம்ச்லேஷ விஸ்லேஷன்களை
புண்ய பாப ரூபமான பிரபல கர்மங்கள் அற்று இருக்கிற இவ்வாழ்வாருக்கு பிரிய பரனும் ஹித பரனுமான ஈஸ்வரன் தானே நடத்திக் கொண்டு போவான் –
கிம் நிமித்தம் என்னில் -துளக்கம் அற்ற அமுதாய எங்கும் பக்க நோக்கு அறியான் என் பைந்தாமரைக் கண்ணன் -என்று
ஸ்வ சம்ச்லேஷத்தாலே இவர் அதி ப்ரீதராக்சைக்கும்-தழை நல்ல இன்பம் தலைப் பெய்து எங்கும் தழைக்கவே-என்று
விஸ்லேஷ வியசனத்தாலே நான் முடியா நின்றேன் -இனி என் துக்கம் காணாமையாலே லோகம் எல்லாம் ஸூ கித்து சம்ருதமாகக் கடவது -என்னும் படி
மிகவும் துக்க நிமக்நராகைக்காகவும் -இப்படி ப்ரீதி துக்கங்களை வளர்ப்பதும் ஞான பக்திகளை வளர்க்கையில் நினைவாலே என்பது கீழ்ச் சொல்லப்பட்டது –

118-ஞானத்தில் தம் பேச்சு -இவர் ஞான தசையில் தாமான தன்மையில் நின்று பேசுவர் -பிரேம தசையில் அவஸ்த் தாந்த்ரபன்னராய்ப் பெண் பேச்சாய் பேசுவர்

119-தேறும் கலங்கி என்றும் -இப்படி தெளிவும் கலக்கமுமான இத்தசைகளில் பேச்சில் வாசி ஒழிய ஸ்வரூபத்திலும் வாசி உண்டோ என்னில்
சிந்திக்கும் திசைக்கும் தேறும் கை கூப்பும் -என்றும் -கண்ணீர் மிகக் கலங்கிக் கை தொழும் நின்று இவளே -என்றும்
தெளிந்த திசையிலும் கலங்கின திசையிலும் சேஷத்வ பிரகாசகமான அஞ்சலி மாறாமையாலே – தேறியும் தேறாதும் மாயோன் திறத்தனளே இது திருவே-
என்கிறபடியே தெளிந்த தசையோடு கலங்கின தசையோடு வாசி அற இரண்டு அவஸ்தைகளிலும் சேஷத்வ ரூப ஸ்வரூபம் நிலை குலையாது –

120-அடியோம் தொடர்ந்து -ஆனால் இவர்க்கு அவஸ்தாந்தரம் ஏது என்னில் -அடியோம் போற்றி ஓவாதே -தொடர்ந்து குற்றேவல் செய்து -என்று
தாமான தன்மையில் சொல்லுகிறது போலே -அடிச்சியோம் தலை மிசை நீ அணிவாய் -திருவடிக் கீழ் குற்றேவல் முன் செய்ய -என்று
ஸ்த்ரீத்வ திசையிலும் சொல்லுகையாலே ஸ்வரூபத்திலும் -ஸ்வரூப அநு ரூப வ்ருத்தி பிரார்த்தனையிலும் பேதம் இல்லை –
பிராட்டியான பாவனையாலே தம் பேச்சான இது போய் பெண் பேச்சாகை இவருக்கு அவஸ்தாந்தரமாவது –

—————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ உ .வே. காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஆச்சார்ய ஹிருதயம் -சூர்ணிகை 50-99–தாத்பர்ய சாரம் -ஸ்ரீ உ வே காஞ்சி ஸ்வாமிகள் —

December 23, 2016

50-இயற்பா மூன்றும் – நம்மாழ்வார் உடைய பிரபந்தங்கள் நான்கின் உள்ளும் இயற்பா என்னும் ஆயிரத்தில் சேர்ந்த மூன்றில்
முதலதான திரு விருத்தம் ருக்வேத ஸ்தாநீயம்-இரண்டாவதான திருவாசிரியம் யஜுர் வேத ஸ்தாநீயம்
-மூன்றாவதான பெரிய திருவந்தாதி அதர்வண வேத ஸ்தாநீயம் -சரம பிரபந்தமான திருவாய் மொழி சாம வேத ஸ்தாநீயம் –

51-ருக்கு சாமத்தாலே -சாம சங்க்ரஹமான ருக்கானது -தனக்கு விவரணமுமாய் ரசமுமாய் இருந்துள்ள காந ரூபமான சாமத்தாலே
ரஸ ஸஹிதமாய்-ஹாவு ஹாவு ஹாவு-இத்யாதியான ஸ்தோபத்தாலே விஸ்திருதமானால் போலே
ருக்வேத ஸ்தாநீயமான திரு விருத்தம் நூறு பாட்டும் இசையில் கூட்டின வாறே சாம வேத ஸ்தாநீயமாய்
சரசமாய் இருந்துள்ள திருவாய்மொழி யாயிரமும் பாட்டாகப் பரம்பிற்று –

52-சந்தோகன் என்று -சாமம் அநேக விதம் ஆகையால் திருவாய்மொழி எந்த சாமத்தோடு ஒக்கும் என்னில் சாந்தோக்ய சாமத்தோடு ஒக்கும்
சாம வேத கீதனாய-என்று திரு மழிசை பிரானும் -சாமி அப்பன் என்று திருமங்கை ஆழ்வாரும் சாம வேதோஸ்மி என்று
கீதாச்சார்யானும்-சொன்ன சாமம் சாமான்யம் ஆகாமல்
சந்தோகன் பவ்ழியன் ஐந்து அழல் ஒப்பு தைத்ரியன் சாமவேதி என்று மேலே சொல்லா நிற்க முதலிலே சந்தோகன் என்று சிறப்புற பிரித்து உரைத்து
யாழ் பயில் நூல் நரம்பின் முதிர் சுவை -என்று யாழ் விஷயமாக அப்யஸிக்கப் படுவதாக சாஸ்திரத்தில் சொன்ன லக்ஷணத்தை யுடைய
நரம்பில் பிறந்த பண் பட்ட ரசம் என்னும் படி காந ஸ்வரூபம் போலே பரம போக்யனானவன் என்று
காந சாமான்யம் ஆகாமல் பண்ணின் இன் மொழி யாழ் நரம்பில் பெற்ற பாலையாகி -பெரிய திருமொழி -என்று
அந்த சந்தோக சாமத்தின் நிறமான பாலை யாகிற பண்ணை இட்டு விசேஷிக்கையாலே -பஸ்வதி கரண நியாயத்தாலே
-பசு நா யஜேத-வேதம் சாகபசு-ஆட்டை சொல்லுவது போலே –சாம வேத கீதன் – சாமி -சாமவேதோஸ்மி -என்ற இடங்களில்
பொதுப்படையாகச் சொல்லப்பட்ட சாம சப்தமும் -கீழ்ச சொன்ன சாந்தோக சாமமும் அதன் கீதமும் ஆகிற விசேஷத்திலே பர்யவசிக்கும்
-ஆனபின்பு -சந்தோக சாமமே இத்திருவாய்மொழி-
உத்கீத -பிரணவத்தை முதலிலே மாறாடி-சாமத்துக்கு ஐந்து பாகங்கள் உண்டே –ப்ரஸ்தாவம்-உத்கீதம்
-ப்ரதிஹாரம்-உபத்ரவம்-நிதனம் -ஐந்து பாகங்கள் உண்டே -சாம்ந உத்கீதோ ரஸ -என்று சாமத்துக்கு ரசமாக சொல்லப்படும்
பிரணவத்தை முன்னிட்டு கானம் பண்ணப் படுமதாய் இருப்பது -உத்கீதமாய் இருப்பது ஆகையால்
-உயர்வற -உகாரத்தில் உபக்ரமித்து பிறந்தார் உயர்ந்தே -தகாரத்தில்-உபசம்ஹரித்தார் –
அர்ச்சிராதி கதி -சாந்தோக்யத்தில் சொன்ன படியை சூழ் விசும்பு -பதிகத்தில் அருளி -ஏதத் சாம காயன் நாஸ்தே
-அஹம் அன்னம் –அஹம் அந்நாத -என்பதையே தொண்டர்க்கு அமுது உண்ண சொல்மாலைகள் சொன்னேன்
-பாடு நல் வேத ஒலி பரவைத் திரை போல் முழங்க -என்றும் எங்கும் எழுந்த நல் வேதத்து ஒலி நின்று ஓங்கு -என்றபடி
-சாந்தோக்யத்துடன் ஒக்கும் என்றபடி -சிறிய திரு அத்யயனம் -பகல் பத்து உத்சவம் -என்றும்
பெரிய திரு அத்யயனம் இராப் பத்து உத்சவம் -திருவாய் மொழி அன்றோ –

53-புரவி ஏழு ஒரு கால் –ஏழு குதிரைகளும் ஒரு சக்கரத்தையும் உடைத்தாகையாலே -விலக்ஷணமான பெருமை வாய்ந்த தேரிலே
-தேஜோ விசேஷத்தாலே திரு வாழி உடன் ஒத்து -கால சக்ர நிர்வாஹகனான -எம்பெருமான் ஆஞ்ஜையை நடத்தி –
நக்ஷத்ரம் முதலிய சோதி மண்டலம் தேஜஸை குறைத்து -அக்னியினுடைய தேஜஸ் ஸூ க்கும் சந்திரன் உடைய அம்ருதத்துக்கும் பிறப்பிடமாயும்
மந்தேஹர் என்னும் ராக்ஷஸர்களுக்கு சிவந்த நெருப்பாயும் -அர்ச்சிராதி கதிக்கு முதல் வாசலையும் -அனைவருக்கும் கண் போன்ற
சர்வேஸ்வரன் திருகி கண்ணிலே பிறந்த கண் மணியாயும் -வேதமயமுமாய் இருக்கும் ஸூர்ய மண்டலத்தில் –
சீர் பூத்த செழும் கமலத் திருத் தவிசில் வீற்று இருப்பவனாய் -தோள் வளையும் மகரக் குண்டலங்களும் கிரீடமும் ஹாரமும்-
திரு வாழி திருச் சங்கும் பொன்னிறமான திரு மேனியும் -செந்தாமரைக் கண்களும் உடையனாய் -பகவத் விக்ரஹத்தையும்
ஆதித்ய மண்டலத்தையும் தன்நிறம் ஆக்குகின்ற சிவந்த திரு நிறத்தை உடையளான பிராட்டியோடே கூட ஆதித்யன் உள்ளே இருப்பவனாய்
எப்போதும் சிந்திக்க யுரிய தேஜோ ரூபியாய் இருக்கிற விலக்ஷண பரம புருஷனை ப்ரதிபாதிக்கின்ற சந்தோக சாமத்துக்கு ரசமாய் இருந்துள்ள
உத் கீதம் -உகாரம் -ஆதியாகவும் -உயர்வற / பிறந்தார் உயர்ந்தே -தகாரம்-அந்தமாகவும் -ஒரு திரு நாமமே ஆயிரம் முகமாக நின்று
உலகு ஏழும் அளிக்க வல்ல -ஒன்றான கங்கை ஆயிரம் முகமாக பெருகினால் போலே
-லோக பாவனமாக ஆயிரம் பாட்டாக விஸ்தரித்து அருளுகிறார் என்பர் வேதாச்சார்ய பட்டர் –

ஆக இவ்வளவாலே ஆழ்வாருடைய நான்கு திவ்ய பிரபந்தங்களும் வேத ரூபம் என்பதும் –
அங்க உபாங்க சகிதம் என்பதும் –
வேதத்துக்கு உள்ள லக்ஷணங்களும் அமைய பெற்றன என்றும் –
நித்யமாயும் அபவ்ருஷேயமாயும் இருக்கும் என்பதும் –
இவற்றில் இன்ன பிரபந்தம் இந்த வேத ஸ்தாநீயம் என்பதும் –
சாம வேத ஸ்தாநீயமான திருவாய் மொழி சாம வேத ஸ்ரேஷ்டமான சந்தோக சாம உபநிஷத்துக்கு சமம் என்றும் நிரூபிக்கப் பட்டன –
இனி ஆழ்வாருடைய நான்கு பிரபந்தகங்களுக்கும் வேத சாம்யம் தவிர வேத உப ப்ரும்ஹண சாம்யமும் உண்டு என்கிறது –

54-அன்றிக்கே ஸ்வரூப குண –வேத உப ப்ரும்ஹண சாம்யம் சொல்லுவது எங்கனம் என்னில்
எம்பெருமான் உடைய ஸ்வரூப குண விபூதி சேஷ்டிதங்களை ப்ரதிபாதியா நின்றுள்ள சுருதியில் சொல்லப்பட்ட ஸ்வரூபத்தையும்
குணங்களையும் விஷாதம் ஆக்குவதற்காக அவதரித்த பாஞ்சராத்ர ஆகமம் போலேயும்
விபூதியை விஷாதம் ஆக்குவதற்காக அவதரித்த புராணங்களை போலேயும்
சேஷ்டிதங்களை விசதமாக்க அவதரித்த இதிகாசங்கள் போலேயும்
எல்லை அற்ற தேஜோ ராசி மயமான ஸ்ரீ மன் நாராயண மங்கள விக்ரஹத்தை ப்ரதிபாதியா நின்றுள்ள வேத பாகங்களை
விசதப்படுத்த இந்த நான்கு பிரபந்தங்களும் திரு அவதரித்தன-
ஸ்வரூபம் குணம் விபூதி சேஷ்டிதம் ஆகிய எல்லாமே அனைத்திலும் உண்டே என்றாலும் -பாஞ்ச ராத்ரங்களுக்கு ஸ்வரூப குணங்களில் நோக்கு என்றும்
புராணங்களுக்கு-திரு விருத்தம் உபக்ரமத்தில் -முழு நீர் முகில் வண்ணன் -என்று திரு மேனியை பிரஸ்தாவித்து –
மைப்படி மேனியும் செந்தாமரைக் கண்ணும் -என்று அதனையே பிரஸ்தாவிக்கையாலும்
திருவாசிரியத்தில் -மீதிட்டுப் பச்சை மேனி மிகப்பகைப்ப -என்று உபக்ரமத்திலே திருமேனியை பிரஸ்தாவித்து மேலேயும்
தாமரைக் காடு மலர்க்கண்ணோடு கனிவாயுடையதுமாய் என்று அதனையே பிரஸ்தாவிக்கையாலும்
பெரிய திருவந்தாதியிலும் -நற்பூவைப் பூவீன்ற வண்ணன் -என்று உபக்ரமித்து -முடிவிலும் கார் கலந்த மேனியான் -என்று அதனையே பேசுகையாலும்
திருவாய் மொழியிலும் -துயரறு சுடரடி -என்று உபக்ரமித்து -புனக்காயா நிறத்த -என்று தலைக் கட்டுகையாலும்
நம்மாழ்வார் திவ்ய பிரபந்தங்களை திவ்ய மங்கள விக்கிரஹத்திலே பெறும் பான்மையான நோக்கு என்பது மிகவும் பொருந்தும் –

55-கல்பாதியிலே தோற்றிற்று-ஆழ்வார்கள் அருளிச் செயல்களும் -மகரிஷிகளின் கிரந்தங்களும் -உத்பத்தி மூலம் அருளிச் செய்து -இதன் ஏற்றம் அருளிச் செய்கிறார் –
சங்கீர்ணங்கள்-ஸாத்விகங்கள் -ராஜசங்கள் -தாமஸங்கள் -என்றும் சொல்லப்படும் அஹஸ் ஸூக்கள் ஆகிற கல்பங்களினுடைய ஆதிகளிலே கிளர்கின்ற குணங்களுக்கு ஏற்ப
தாமச கல்பங்களிலே -அக்னி சிவன் -மஹாத்ம்யத்தையும் –
ராஜஸ கல்பங்களில் நான்முகன் -தன்னுடைய மஹாத்ம்யத்தையும் –
சாத்விக கல்பங்களிலே சர்வேஸ்வரனுடைய மஹாத்ம்யத்தையும்
மூன்றும் கலசினா சங்கீர்ண கல்பங்களில் -பித்ருக்கள் சரஸ்வதி தன்னுடைய -பேசும் நான் முகனுடைய -மஹாத்ம்யத்தையும்
ஆகமம் முதலிய மோஹ சாஸ்திரங்கள் பிரவர்ப்பித்த ருத்ரன் -சுடுகாடுகளில் திரிந்து -பிணங்களின் நீற்றை உடம்பில் பூசி எலும்பு மாலை தரித்து
-புலித் தோல் உடுத்து -கங்கை சர்ப்பம் சந்திரன் தலையில் தரித்து -ரிஷப வாஹனாய் நீல கண்டனாய் -ஈஸ்வரனாய் நினைத்து இருப்பவன்
-சத்வ குணம் தலை எடுத்து -சர்வேஸ்வரனை தான் உபதேசிக்கும் வகையை -அகஸ்தியர் புலஸ்தியர் தக்ஷன் மார்க்கண்டேயர்
-நால்வரில் ஒருவனான புலஸ்தியன் பண்ணின வர பிரதானம் ஆர்ஷ கிரந்தங்களில் உத்பத்திக்கு மூலம்
-வால்மீகி பகவானுக்கு நான்முகன் அனுக்ரஹமும் -பராசர பகவானுக்கு புலஸ்திய பிரசாதமும் -இப்புடைகளிலே அறியலாம் –

56-பரம சத்வத்தோடே – ரஜஸ் தமஸ் கலசாமல் சுத்த சத்வ குணத்தோடு கூடி வேத மார்க்கங்களை நன்கு விசாரித்து
அருள் செய்யுமவனாய் பரிபூர்ண ஞானத்தை நிரூபகமாக யுடையனாய் -ப்ரஹ்மாதிகளுக்கு அந்தர்யாமியாய் அந்த அந்த கார்யங்களை
நிர்வஹிக்கையாலே அவர்களை சொல்லும் சப்தத்தாலும் சொல்லப் படுமவனாய் -சர்வ ஸ்மாத் பரனான திரு மகள் கொழுநனாலே
மயர்வற மதி நலம் அருள பெற்றவராய் -அந்த அத்வாரக சாஷாத் -பகவத் பிரசாதத்தை மூலமாகக் கொண்டு ஆழ்வார் திவ்ய பிரபந்தங்கள் என்றபடி –

57-கருவுள் வேறு அலாமை -ஆழ்வார் எம்பெருமான் அருள் அடியாகவே பாடினார் என்பதற்கு பிரமாணம் –
ப்ரஹ்மாதிகளுக்கு அந்தர்யாமியாக இருந்து அவர்கள் கார்யம் பண்ணா நிற்கச் செய்தே
ஜகத் ஸ்ருஷ்ட்டி வேத உபதேசம் ஜகாத் சம்ஹாரம் திரிபுர தஹநம்-போன்றவற்றை இவர்களே செய்தவர்களாக லோகத்தார் சொல்லும் படி
த்ருணத்தையும் கொண்டு கார்யம் செய்ய வல்ல சாமர்த்தியம் யுடையவன் ஆகையால் -கவி பாட வல்ல வால்மீகி பராசர
முதல் ஆழ்வார்களை இட்டு பாடுவித்திக் கொள்ளாமல் -என்னையும் தன்னோடு ஒத்த ஞான சக்திகளை யுடையனாம் படி பண்ணி
வாய் முதல் அப்பனாய் வந்து -என் தோஷம் தட்டாத படி நான் புகழ்ந்தமையாலே
ஸ்ரீ வைகுண்ட நாதனாக தான் ஆனால் போலே -குருகூர்ச் சடகோபன் சொல் -என்று ஆழ்வார் தாமே பாடும் படி
நாடு எல்லாம் அஞ்சலி பண்ணும் படி -பண்ணார் பாடலின் கவிகள் யானாய்த் தன்னைத் தான் பாடி -என்றால் போலே –

58-தர்ம வீர்ய ஞானத்தாலே–ரிஷிகளில் காட்டில் ஆழ்வாருக்கு உண்டான வாசி மேலும் அருளிச் செய்கிறார்
-ரிஷிகள் தாம் தாம் அனுஷ்டித்த தபோ ரூபமான தர்மத்தின் சக்தியினால் ஜனித்த ஞானத்தினால்
அறிய வேண்டுமவற்றை தெளிய அறிந்து மகிழ்ச்சி கொண்டவர்களாய் -அந்த தெளிவும் மகிழ்ச்சியும் அடியாக
மேன்மேலும் ஸ்லோகங்களை தொடுத்துக் கொண்டே சென்றார்கள் –
ஆழ்வாரோ என்னில் அதற்கு எதிர் தட்டாக -அயர்வறும் அமரர்கள் அதிபதியால் மயர்வறும் மதி நலம் அருள பெற்று
ஞானம் பரிபக்குவமான நிலைமை யாகிய பக்தியால் பிரிவாற்றாமையாலே ஞானம் எல்லாம் அடி மண்டியோடே கலங்கி
நினைத்த படி எம்பெருமானை அனுபவிக்கப் பெறாமையாலே சோகித்து-
எத்திறம் உரலினோடு இணைந்து இருந்து ஏங்கிய எளிவே-என்று சொல்லி ஆறு மாசமும் -பிறந்தவாறும் வளர்ந்தவாறும் -என்று சொல்லி
ஆறு மாசமும் -கண்கள் சிவந்து பெரியவாய் -என்று சொல்லி ஆறு மாசமும் மோஹித்துக் கிடந்தது
ஒரு சொல் எடுக்க ஒரு மலை எடுக்குமா போலே வருந்தி ஈரச் சொற்களால் பிரபந்தங்களை அருளிச் செய்தார் அன்றோ –

59-ஸ்வாத்யாய யோகங்களை –வேதத்தையும் அஷ்டாங்க யோகத்தையும் அப்யஸித்து -அவ்வழியாலே பரமாத்மாவை இப்டிப்பட்டவன் என்று தெளிந்து
இப்படி தன் முயற்சியால் கண்ட காட்சியில் விளக்கம் இன்மையால் இன்று அளவும் சம்சார போக விஷயங்களான ஆசை என்கிற
பல பல பாசங்களாலே கட்டுப் பட்டு இருப்பர் ஓதி உணர்ந்த ரிஷிகள் -ஆழ்வாரோ என்னில் தன்னைக் காண்கைக்கு உறுப்பாக
அப்பெருமான் கொடுத்து அருளினை திவ்ய ஞான ரூபமான கண்ணாலே பிரமன் சிவன் முதலானோர்க்கும் அறியனான
சர்வேஸ்வரனை மிக விளக்கமாக சாஷாத் கரித்த போதே -இந்நின்ற நீர்மை இனி யாம் உறாமை -என்று
அவனைக் கால் காட்டும்படி தம் முயற்சியால் கழிக்க ஒண்ணாமை பிரபலங்களான புறம்பு உண்டான
பற்றுக்கள் அவன் அருளாலே அடியோடு விட்டு நீங்கப் பெற்றார் –

60-அவர்களுக்கு காயோடு –ரிஷிகளுக்கு கனி காய் கிழங்கு சருகு காற்று தண்ணீர் ஆகிய இவையே தாரக போஷாக்கை போக்யங்களாய் இருக்கும்
ரிஷிம் ஜுஷாமஹே க்ருஷ்ண த்ருஷ்ணா தத்வம் இவோதிதம் -என்னும்படி எம்பெருமான் பக்கல் உள்ள காதலே வடிவு எடுத்தவரான
ஆழ்வார்க்கோ என்னில் உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணன் –

61-அழு நீர் துளும்ப -எம்பெருமானைப் பிரிந்த வருத்தத்தினால் கண்ணும் கண்ண நீருமாய் கடலோடு மலையோடு ஆகாசத்தோடு
வாசி அற எங்கும் தேடி நெஞ்சு கலங்கி திருமாலே என்று கூப்பிட்டு எங்கே காணக் கடவேன்-என்று இவ்விதமாக எம்பெருமான்
விஷயத்தில் ஆழ்வார் படும் ஆற்றாமை எல்லாம் ரிஷிகளுக்குப் புத்ர விரஹத்திலே யாய் இருக்கும் –
வசிஷ்ட பகவான் புத்ரன் இறந்த வருத்தத்தினால் மரணத்தை விரும்பி மலையில் ஏறி விழுவது நெருப்பிலே குதிப்பது கழுத்திலே
கல்லைக் கட்டிக் கொண்டு கடலிலே விழுவது ஆக இப்படி எல்லாம் தடுமாறினார் என்பதும்
வேத வியாச பகவான் புத்திர வியோகம் பொறுக்க மாட்டாமல் புத்திரனே என்று வாய் விட்டுக் கூப்பிட்டு
அழுது கொண்டு காணப் பெறாமையாலே அலமந்து திரிந்தார் என்பதும் புராண சித்தம் –

62-பல சாதன தேவதா –கீழ்ச் சொன்னவை மாத்திரம் அன்றியே -பலன் சாதனம் தேவதாந்த்ரம் -ஆகிய இவ்விஷயங்களில் ரிஷிகளின்
பிரபத்தியில் காட்டிலும் ஆழ்வாருடைய பிரதிபத்திக்கு நெடு வாசி உண்டு -எம்பெருமானை அடைவதே பலனாகவும் கர்ம ஞானாதிகளே உபாயமாகவும்
இந்திரன் முதலிய தேவதைகளுக்கு அந்தர்யாமியான ஈஸ்வரனே உத்த்ஸ்யன் ஆகையால்
அந்த தேவதைகள் அனுவர்த்திக்க யுரியர் ஆகவும் யாயிற்று ரிஷிகள் பேசுவது
ஆழ்வார் அருளிச் செய்வதோ என்னில் -கைங்கர்யமே புருஷார்த்தம் ஆகவும் அதனைப் பெறுவிப்பது
பிரபத்தியாகவும் -இதர தேவதைகள் அநு வர்த்திக்க யுரியர் அல்லராகவும் –

63-ராமாயணம் நாராயண -அருளிச் செயல் வை லக்ஷண்யம் –
ராம கதையைச் சொல்லுவதாக ராமாயணம் என்று தொடங்கி-கங்கையின் உத்பத்தி -ஸூ ப்ரஹ்மணியன் உத்பத்தி -புஷ்பக வர்ணனம்
-முதலான கதைகளை பரக்க பேசுவதால் -அஸத் கீர்த்தனம் பண்ணி வாக்கில் அசத்தி படைத்தான் வால்மீகி –
நாராயணன் கதை -என்று தொடங்கி சம்பவ பர்வத்திலே பீஷ்மர் முதலான பல் பலர் உத்பத்தி பிரகாரங்களை விரிவாக பேசி –
பூசல் பட்டோலை என்னும்படி பாரத போர் வகைகளையே பரக்க நின்று வர்ணித்த படியாலும் -அஸத் கீர்த்தனத்திலே மிகவும் பரந்து அசுத்தமான வாக்கை
பகவத் கதை மொழி யாகிற கங்கையாலே சுத்தம் ஆக்குகிறேன் என்று சுத்தி பண்ணினான் வேத வியாச பகவான்
இப்படி இல்லாமல் திருமால் அவன் கவி யாது கற்றேன் -என்ற படி திருமால் விஷயமான கவி என்று வாயோலை இட்ட படியே
இதர விஷய சம்பந்தம் உள்ள சொல் ஒன்றும் கலசாத படி விஷயத்துக்கு தக்க சொற்களால் சொல்லப்பட்ட சர்வேஸ்வரனுக்கு வாய்த்த நம்மாழ்வார் அருளிச் செயல்
வேதங்களில் புருஷ ஸூ க்தம்-தர்ம சாஸ்திரங்களில் மனு ஸ்ம்ருதி -மஹா பாரதத்தில் ஸ்ரீ கீதை -புராணங்களில் ஸ்ரீ விஷ்ணு புராணம் –
சாரமாய் இருக்குமா போலே வேறு பேசின் வாசனையும் அற்ற மற்ற திவ்ய பிரபந்தங்களுக்குள் இதுவும் சாரமாய் இருக்கும் -என்றபடி –

64-குரு-சிஷ்ய -ஆழ்வார் அருளிச் செயலோடு இணங்காதவை தள்ளுபடி என்றல் -திவ்ய பிரபந்தங்களுக்குள் சாரமான நம்மாழ்வார் ஸ்ரீ ஸூ க்திகளின்
பிராமண்ய அதிசயத்தை விளக்க -ஆழ்வார்கள் ஏக கண்டர் என்றும் -அவர்களில் தலைவரான நம்மாழ்வார் அருளிச் செய்த பிரபந்தங்கள் மேம்பாட்டையும்
தெரிவித்துக் கொண்டு -இவற்றுக்கு சேராத சாஸ்திரங்கள் விலக்கப் படுபவையே என்கிறபடி
ஜைமினி உடைய பூர்வ மீமாம்சைக்கு நிரீஸ்வர வாதம் மூலம் வந்த விரோதத்தை பர மத வாத அந்நிய பரதவ வாதங்களால் பரிஹரிக்க வேண்டினால் போலே இல்லாமல்
செஞ்சொல் கவிகாள் என்றும் -செந்தமிழ் பாடுவார் என்றும் -இன்கவி பாடும் பரம கவிகாள் -என்றும் -பதியே பரவித் தொழும் தொண்டர் என்றும் –
ஆடிப்பாடி அரங்காவோ என்று அழைக்கும் தொண்டர் என்றும் -ஒருவர் ஒருவரை ஸ்லாகித்துக் கொண்டு பேசுவதே பேசும் ஏக கண்டர்கள் –
இதில் சிறந்த நம்மாழ்வாருடைய அதி விலக்ஷண திவ்ய ஸ்ரீ ஸூக்திகளைக் கொண்டே தெளியாத மறை அர்த்தங்களை தெளிய பெறலாம்
ப்ரதிபாத்ய வஸ்துவை உள்ளபடியே பிரதிபாதிக்கும் சாமர்த்தியம் உள்ள இவர் திவ்ய பிரபந்தங்களை சேராத சாஸ்திரங்கள் கழிக்கப் படுவனவாம் –

65-பாஷ்ய காரர் இது கொண்டு -அருளிச் செயல்கள் கொண்டே சாஸ்திர அர்த்தங்கள் நிர்ணயித்தார் உண்டோ என்னில்
ஸ்ரீ பாஷ்ய காரர் ஸ்ரீ பாஷ்யம் செய்து அருளும் போழ்து ஸூத்ர வாக்கியங்களில் சந்தேக கோசாரமான அர்த்தங்களை எல்லாம்
ஆழ்வார் ஸ்ரீ ஸூ க்திகளைக் கொண்டே நிர்ணயித்து ஒருங்க விட்டு அருளுகிறார் என்றபடி –

66-அதுக்கு மூலம் -ஸ்ரீ பாஷ்ய காரர் இப்படி ஒருங்க விடுவதற்கு மூலம் ஏது என்னில் -விதயச் ச வைதிகா-த்வதீய கம்பீர மநோ அநு சாரிண -என்று
ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னத்தில் ஸ்ரீ ஆளவந்தார் அருளிச் செய்ததே -ஆழ்வார் போல்வார் நினைவையே சாஸ்திரங்கள் பின் செல்லும் என்றபடி –

67-ஆப்திக்கு இவர் -இப்படி மஹா வித்வான்கள் இது கொண்டு சாஸ்த்ரார்த்தங்கள் நிர்ணயிக்க வேண்டும் படி மிக பிரபலமாயும்
வேத சாம்யமுமாய் ஆப்த தமமுமாய் இருக்கும் இதில் வேறே சில பிரமாணங்களை -ஸாக்ஷியங்களை எடுப்பான் என்
-உளன் சுடர் மிகு சுருதியில் -என்றும் -மார்கண்டேயனும் கரியே -என்றும் -பார்த்தன் தெளிந்து ஒழிந்த பைந்துழாயான் பெருமை -என்றும்
-வேதம் மார்க்கண்டேயன் அர்ஜுனன் சாஷிகளாக சொல்வது என் என்னில் -பரம ஆப்தமான வேதமும் ஆப்திக்கு உறுப்பாக
வியாஸரையும் மனுவையும் ப்ரஹ்ம வாதிகளையும் சொன்னால் போலே என்றபடி –

68-பாரத கீதைகளின் -ஆழ்வார் அருளிச் செயலை உபப்ரும்ஹணமாக சொன்ன பக்ஷத்தில் வேதத்துக்கு இது வியாக்யானம் என்றது ஆகும்
ஒழிய -வேத ரூபம் இதம் க்ருதம் -என்றும் -த்ராவிடீம் ப்ரஹ்ம ஸம்ஹிதாம் -என்று மஹான்கள் இதை வேதமாக சொல்லக் கூடுமோ என்னில்
வேதான் அத்யாபயாமாச மஹா பாரத பஞ்சமான்-என்றும் -பகவத் கீதா ஸூ உபநிஷத் ஸூ -என்றும் சொல்லுகிறபடியே
வேதமும் உப நிஷத்தும் ஆகிறாப் போலே
இதுவும் வேத வியாக்யமான உப ப்ரும்ஹணம் ஆனாலும் வேத ரகஸ்யமும் ஆகக் குறையில்லை –
வேத ரகஸ்யம் என்றது -வேதத்தில் ரகசியமான உபநிஷத் -சாந்தோக்யம் சமம் என்றபடி –

69-உதாத்தாதி –வேதத்துக்கும் உப ப்ரும்ஹணங்களுக்கும் உள்ள அலங்காரங்கள் அருளிச் செயலுக்கும் ஒக்கும் என்றல் –
வேதத்துக்கும் உப ப்ரும்ஹணங்களுக்கும் -உதாத்த -அநு தாத்த-ஸ்வரித-ப்ரசயங்கள்-என்கிற ஸ்வர விசேஷங்களும் /
க்ரம ஜடா பஞ்சாதிகளும் ப்ரஸ்ன அஷ்டகங்களும் / அத்யாயம் அம்சம் பர்வம் ஸ்கந்தம் -முதலானவைகளும்/
பத வாக்ய பாத வ்ருத்த காண்ட அத்தியாயங்களும் ஆகிற / பல அலங்காரங்கள் உண்டானால் போலே அருளிச் செயல்களுக்கும்
-குற்று எழுத்து முதலான பதின் மூன்று எழுத்தும் /-நேர் அசை நிரை அசை என்கிற இரண்டு அசையும் -/
ஆசிரிய யுரிச்சீர் முதலான முப்பது சீரும் -/ குறள் அடி முதலான ஐந்து அடியும் / மோனை முதலான நாற்பத்து மூன்று தொடையும் /
சேர் நிரை நிரை நிரை முதலானவையும் /செப்பலோசை முதலான ஓசையும் / நேர் ஓன்று ஆசிரியத் தளை முதலான ஏழு தளையும்/
தாழ் இசைத் துறை என்கிற பாக்கள் இனம் மூன்றும் /பிரபந்த ரூபத்வம் ஆகிற யாப்பும் வெண்பா முத
பத்து என்கிற அவாந்தர பரிச்சேதமும் / நூறு என்கிற பிரதான பரிச்சேதமும் /ஆயிரம் என்கிற மஹா பரிச்சேதமும்
-ஆகிற கவிக்குச் சொல்கிற சகல அலங்காரங்களும் உண்டு –

70-அதவா வேத வேத்ய–அருளிச் செயல் அபூர்வமான ஒரு வேத ஆவிர்பாவம் -என்றல் -கீழ் சொல்லியபடி அருளிச் செயலுக்கு வேத சாம்யமும்
உப ப்ரும்ஹண சாம்யமும் உண்டு என்று உபபாதித்த வழி அன்றியே -வேதத்தின் ஆவிர்ப்பாவ விஷயமாய் இவ்வாழ்வாரால் நிர்மிதமாக
பிரசித்தமாய் இருப்பது ஓன்று என்று மற்று ஒரு யோஜனையும் சொல்லப்படுகிறது –
வேத வேத்யே பரே பும்சி ஜாதே தசரதாத் மஜே வேத ப்ரா சேதஸா தாஸீத் சாஷாத் ராமாயணாத்மநா -என்று
வேத ப்ரதிபாத்யனான பரம புருஷன் சக்கரவர்த்தி திரு மகனாய் அவதரித்த அளவில் -அபவ்ருஷேயமான வேதமும்
ஸ்ரீ வால்மீகி பகவான் பக்கல் நின்றும் ஸ்ரீ ராமாயணமாக திரு அவதரித்தது என்கிற நியாயத்தினால்
பல இடங்களிலும் எம்பெருமானுடைய பரத்வ நிலையைப் பேசுகையாலே -பரத்வத்தில் நோக்கான வேதமானது அப்பெருமானுடைய
வ்யூஹ அவஸ்தையில் -அதன் குணம் ரூபம் க்ருத்யம் முதலியவற்றைப் பேச பாஞ்சராத்ரமாக அவதரித்தது –
அந்தர்யாமி -நிலையில் வியாப்தியை பேச மனு ஸ்ம்ருதி முதலிய ஸ்ம்ருதிகளாக அவதரித்தது
ராம கிருஷ்ணாதி விபவ நிலையில் அவதார சேஷ்டிதம் போன்றவற்றை பேச ஸ்ரீ ராமாயண மஹா பாரத இதிஹாசங்களாக ஆவிர்பவித்தது –
பிற்பட்டார் இறவாத படி அர்ச்சையாக-அதன் பெருமையை பேச சர்வ ஸூ லபமாய் சர்வாதிகாரமாய் தமிழ் வடிவாய் திராவிட வேதமாக ஆவிர்பவித்தது
எல்லாவற்றிலும் எல்லாம் சொல்லிற்றே ஆகிலும் ஒவ் ஒன்றிலே ஊற்றம் என்றதாயிற்று –

71-மண்ணாடின ஸஹ்ய ஜலம் -அபவ்ருஷேயமான வேதமே இப்படி அருளிச் செயலாக நிலைமை அடைந்ததாகில் -கலங்கினதாய்
உட் பொருளை ஸ்பஷ்டமாக வெளிக்காட்டும் தன்மை குன்றப் பெறாதோ என்னில் -ஆழ்வார் வக்தாவாக அமைந்த விசேஷத்தால்
அது வேறுபடியாக ஆயிற்று என்பதை த்ருஷ்டாந்ததுடன் மூதலிக்கிறார் –
உயர்ந்த நிலத்தில் நின்றும் வேகத்தோடு வந்து பூமியில் விழுகையாலே மண்ணோடு கூடியதாய் கலங்கி ஸஹ்ய பர்வதத்தில் நின்றும் வருகிற ஜலமானது –
தோதவத்தித் தூய் மறையோர் துறையிலும் –ஸ்ரீ ரெங்கத்தில் திருக் காவேரி துறை –
பொருநல் சங்கணி துறையிலும் -ஆழ்வார் திரு நகரி தாமிர பரணி துறை -வந்தவாறே துறை வாசியால்
தெளிந்த நீராய் தன்னுள்ளே கிடக்கிற பொருள்களை நன்றாக பிரகாசிக்குமா போலே –
பிபேத் அல்ப ஸ்ருதாத் வேதோ மா மாயம் ப்ரதரிஷ்யதி-என்று வேதம் தான் நடுக்கும் படி -அதன் கருத்து அறியாமல்
தம் நெஞ்சில் தோன்றுகிற வற்றையே சொல்லும் சிற்று அறிவாளர் கலைக்காக கலங்கின வேதமானது -யதார்த்த ஞானத் துறையான
ஆழ்வார் பக்கலிலே வந்து சேர்ந்து கலக்கம் தீர்ந்து தெளிவை அடைந்து பரம அர்த்த விசேஷங்களை எல்லாம் அறிவிக்க வல்லதாயிற்று
செய்ய தமிழ் மாலைகள் நாம் தெளிய ஓதித் தெளியாத மறை நிலங்கள் தெளிக்கின்றோமே -ஸ்ரீ தேசிகன் -வேதாந்தாசார்யரும் அருளிச் செய்தார் –

72-மேகம் பெருகின -வேதத்துக்கு போலே அருளிச் செயல்களுக்கும் சில நியமங்கள் இல்லாமைக்கு காரணம் கூறுதல் –
வாயில் வைக்க வழங்காத படி விரஸமாயும் -ஸ்பர்ச காலாதி நியமங்களோடு கூடினதாயும் இருக்கின்ற கடல் நீரானது மேகத்தாலே உட் கொள்ளப் பட்டு
வர்ஷிக்கப் படும் அளவில் அந்த மேக ஸ்பர்சத்தாலே வைரஸியம் நீங்கி எல்லாக் காலத்திலும் எல்லார்க்கும் போக்யம் ஆவது போலே
அத்யயன கால நியமத்தையும் -அதிகாரி நியமத்தையும் யுடைய வேத வித்யா சமுத்திர வசனமானது ஆழ்வாருடைய திரு வாக்கில் புகுந்து
கால நியம அதிகாரி நியமங்கள் இல்லாத தன்மையை அடைந்து திருத்தம் பெற்றவாறே எப்போதும் எல்லாரும் அதிகரிக்கலாம் படி யாயிற்று –

73-ம்ருத்கடம் போல் அன்றியே -வடமொழி வேதம் போல் அன்றியே -அருளிச் செயல் சர்வாதிகாரமாய் இருப்பதனால் இதற்கு யாதொரு குறையும் வாராது –
மண் குடம் நியத அதிகாரிகளே தொட யுரியதாய் எல்லார்க்கும் தொட ஒண்ணாதாய் இருக்க -பார்த்திவமாய் இரா நிற்கச் செய்தே
பொற் குடம் எல்லாருக்கும் தொட யுரியதாய் இரா நின்றது அன்றோ –
இத்தால் காரணமான வேதம் அதிக்ருதாதிகாரம் ஆனாலும் அதின் கார்யமான திவ்ய பிரபந்தம் ஸம்ஸ்கார விசேஷத்தாலே
சர்வாதிகாரமாய் இருக்கக் குறை இல்லை என்பதும் இந்த சர்வாதிகாரத்வம் சிறப்புக்கே உறுப்பு என்பதும் தேறிற்றாம்-

74-பெறும் புறக் கடலும் -வ்யூஹ அந்தர்யாமி விபவ நிலைமைகளில் அவகாஹிக்கப் பெறாதார்க்கு ஸூலபமாக அர்ச்சாவதாரம் அமைந்தது போல்
பாஞ்ச ராத்ர ஸ்ம்ருதி இதிகாசங்களில் அதிகாரம் அற்றவர்களுக்கு எளிதாக அருளிச் செயல் அமைந்தது என்றல்-
ப்ரமாணமான வேதமும் ப்ரமேயமான எம்பெருமானும் பல பல அவதாரங்களை செய்கின்ற விஷயம் முன்னமே சொல்லப் பட்டது -அதாவது
வேதம் -பாஞ்ச ராத்ரமாகவும் -ஸ்ம்ருதியாகவும் -இதிஹாச புராணமாகவும் -அருளிச் செயலாகவும் -வடிவு எடுத்தது என்றும்
வேத வேத்யனான பரம புருஷனும் -வ்யூஹமாகவும் விபவமாயும் -அந்தர்யாமியாயும் -அர்ச்சையாயும் வடிவு எடுத்தனன் என்றும் -சொல்லிற்று
அளவிட முடியாமையாலே வேதமும் ஒரு கடல் -எம்பெருமானும் ஒரு கடல் -அவகாஹிக்க முடியாத
சில பாகங்களும் அவகாஹிக்க கூடிய ஒரு பாகமும் கடலுக்கு உண்டு –
அலை எறிந்து கிடைக்கும் இடமும் நிலை காண ஒண்ணாத படி ஆழ்ந்து இருக்கும் இடமும் அவகாஹிக்க முடியாத பாகமும் ஆகும் –
கழிகளாய்க் கொண்டு ஓடுமிடம் அவகாஹிக்கக் கூடிய இடமாகும் -அளவிட முடியாமை பற்றி
பெறும் புறக் கடல் என்று சொல்லப்பட்ட எம்பெருமான் ஆகிற பிரமேயம் ஆனது
கடல் அலை செறிந்து நிற்கும் இடம் போலே ஞானாதி ஷட் குணங்கள் நிறைந்த தான் அவற்றிலே இரண்டு இரண்டு
குணங்களை பிரகாசிப்பித்துக் கொண்டு சங்கர்ஷணாதி ரூபத்தாலே வ்யூஹித்து இருக்கும் இடத்திலும்
கடலில் நிலை காண ஒண்ணாத படி ஆழ்ந்து இருக்கும் இடம் போலே கண்ணால் காண ஒண்ணாம் அந்தர்யாமியாய் நிற்கும் இடத்திலும்
கடலானது கழிகளாய் கொண்டு ஓடும் இடம் போலே கண் காண வந்து தோன்றி ஞாலத்தூடே நடந்து திரிந்த அவதாரமான இடத்திலும்
தேச தூரத்தாலும் -இந்திரிய தூரத்தாலும் -கால விபர்யயத்தாலும் கிட்டி அனுபவிக்க முடியாதவர்களுக்கு அதிலே தேங்கின மடுக்கள் போலே
அர்ச்சாவதார என்கிறபடியே தேச காலாதி விப்ரகர்ஷ லவ கேசமும் இல்லாதபடி கல்பிக்கப் பட்ட மிகவும் ஸூலபமான விஷயம்
பிரமேயத்தின் ஆவிர்ப்பாவ பரம்பரையில் கடைசி அவஸ்தையான அர்ச்சாவதாரம் –
இப்படியே அளவிட முடியாததாய் பரத்வ பரமான வேத சமுத்ரமானது –
கடலின் அலை செறிந்த இடம் போலே வ்யூஹ ப்ரதிபாதகமாய்க் கொண்டு வேறு ஒரு நிலைமை எய்தி பாஞ்ச ராத்ரமான இடத்திலும்
கடலில் ஆழ்ந்த இடம் போலே அந்தர்யாமித்வ ப்ரதிபாதகமாகி அவகாஹித்து அர்த்தம் காண ஒண்ணாத படி மன்வாதி ஸ்ம்ருதி ரூபமான இடத்திலும்
சமுத்திரம் கழிகளாய் ஓடுமா போலே அவதார ப்ரதிபாதகமாகி இதிஹாச ரூபமாய் பரம்பின இடத்திலும்
ஞான சக்தி முதலியவற்றின் சங்கோசத்தினால் அவகாஹித்து விடாய் தீர மாட்டாதவர்களுக்கு சாய்க்கரகம் போலே
சிரமம் இல்லாமல் உப ஜீவிக்கலாம் படி மிகவும் எளிதான சாஸ்திரம் –
பிராமண பூதமான வேதத்தின் உடைய ஆவிர்ப்பாவ பரம்பரையின் கடைசி அவஸ்தையான திருவாய்மொழி –

75-வீட்டின்ப -ஆழ்வார் பக்கலிலே ஜாதி நிரூபணம் பண்ணலாகாது என்றல் -கீழே பிராமண ப்ரமேய வைபவம் விரித்து அருளி
பிரமாதாவான ஆழ்வார் உடைய வைபவம் மேலே விரித்து அருளுகிறார் -விலஷணரே என்றாலும்
நான்காம் வருணத்தவர் -என்று சங்கித்தாலும் மஹா பாபம் உண்டு என்னப் படுகிறது
-பகவத் விஷயம் என்றால் உள் கனிந்து இருக்கும் அவர்களுடைய திரு மாளிகைகளில் அவர்கள் உகந்த தொரு த்ரவ்யத்தை
திருமேனியாகக் கொண்டு இருந்து இன்பம் விளைக்கிற அர்ச்சாவதாரத்தை பார்த்து இது இன்ன இன்ன லோகம் அன்றோ என்றால்
எப்படிப்பட்ட பாபம் உண்டோ -அதே போலே –
விசேஞ்ஞர்களுக்கு பரமானந்தத்தை விளைப்பதான திருவாய் மொழியை நோக்கி இது தமிழ் பாஷை அன்றோ என்று இகழ்தல்
எப்படிப் பட்ட பாபம் உண்டோ -அப்படிப்பட்ட பாபம் ஆழ்வார் பக்கல் ஜாதியைப் பற்றின இகழ்ச்சி செய்தலால் உண்டாகும் -என்றபடி –

76-பேச்சுப் பார்க்கில் -அருளிச் செயலின் பாஷையையும் ஆழ்வாருடைய ஜாதியையும் கணிசிக்க லாகாது என்பதை திடப்படுத்தல் –
விஷய வைலக்ஷண்யத்தை நோக்காமல் -சம்ஸ்க்ருத பாஷையில் உள்ளதும் -ஜென்ம கௌரவம் உடையார் சொல்லுவதும் தான் ஆதரிக்கத் தக்கது -என்று
கொள்ளுகிற பக்ஷத்தில் -கள்ள நூல் -பொய் நூல் -என்று கழிக்கப் பட்ட சம்ஸ்க்ருத பாஷா மயமான பாஹ்ய சாஸ்திரம் முதலானவையும்
பரிக்ரஹிக்க வேண்டியவைகளாக பிரசங்கிக்கும் -அப்படியே மத்ஸ்ய கந்தையான மகனான வியாசர் சொன்ன ஐந்தாம் வேதமான மஹா பாரதமும்
கற்றினம் மேய்க்கிலும் மேய்க்கப் பெற்று காடு வாழ் சாதியுமாகப் பெற்ற கிருஷ்ணன் சொன்ன கீதா உபநிஷத்தும் த்யாஜ்யமாகவும் பிரசங்கிக்கும் –

77-கிருஷ்ண க்ருஷ்ண த்வைபாயன –வியாசர் உடையவும் -கண்ணன் யுடையவும் உத்பத்தியில் காட்டிலும் ஆழ்வார் அவதாரத்துக்கு உண்டான சிறப்பு –
கண்ண பிரான் ஒருத்தி மகனாய் பிறந்து ஓர் இரவில் ஒருத்தி மகனாய் இருந்தவன் -வியாசனோ கன்னிகையின் மகனாகப் பிறந்தவன் –
இவர்கள் உடைய உத்பத்தி போல் அன்று ஆழ்வாருடைய திருவவதாரம் -ஏன் என்னில்
நெடும் காலமும் கண்ணன் நீண் மலர்ப்பாதம் பரவிப் பெற்ற -என்று திரு விருத்தத்தில் தாமே பேசலாம் படி யாய்
ரிஷிம் ஜுஷாமஹே க்ருஷ்ண த்ருஷ்ணா தத்வம் இவோதிதம் –ஸ்ரீ ரெங்க ராஜ ஸ்தவம் -படியே பகவத் விஷயமான ஆசையே ஒரு வடிவு
கொண்டால் போலே இருக்கிறவர் ஆயிற்று ஆழ்வார்
ஆகையால் இடைச்சி வயிற்றில் பிறந்த கிருஷ்ணனுடையவும் வலைச்சி வயிற்றில் பிறந்த கிருஷ்ண த்வைபாய னுடையவும்
உத்பத்தியில் காட்டிலும் ஆழ்வார் அவதாரம் மிகச் சிறந்ததே -என்றபடி –

78-பெற்றும் பேர் இழந்தும் -ஆழ்வார் அவதாரச் சிறப்பை நன்கு நிலை நாட்டுவதற்காக ஸ்ரீ கிருஷ்ண வியாச மாதாக்களின் யுடையவும்
-ஆழ்வாரது திருத் தாயார் யுடையவும் தன்மைகளைத் தெரிவித்தல் –
திருவின் வடிவு ஒக்கும் தேவகி பெற்ற என்கிறபடியே -கிருஷ்ணனைப் பிள்ளையாகப் பெற்று இருக்கச் செய்தேயும் -அவனுடைய
பால்ய ரசம் ஒன்றும் அனுபவிக்கப் பெறாமையாலே -திருவிலேன் ஒன்றும் பெற்றிலேன் என்று பேர் இழந்தவளான தேவகியும் –
த்வீபே பதரிகாமிஸ்ர் பாதராயண மச்யுதம் பராசராத் ஸத்யவதீ புத்ரம் லேபே பரந்தபம்-என்கிறபடியே வியாசனைப் பிள்ளையாகப்
பெற்று இருக்கச் செய்தேயும் அவனால் உள்ள ரசம் ஒன்றும் அனுபவிக்கப் பெறாத படி -புன கன்யா பவிஷ்யதி -என்று என்ற
பராசர வசனத்தாலே மீண்டும் கன்னிகையான மத்ஸ்ய கந்தையும்-
எல்லாம் தெய்வ நங்கை யசோதை பெற்றாள்-என்னும் படி கிருஷ்ணனுடைய பால சேஷ்டிதங்கள் எல்லாம் அனுபவிக்கப் பெற்று இருக்கச் செய்தேயும் –
தத்துக் கொண்டாள் கொலோ தானே பெற்றாள் கொலோ என்றும் -இம்மாயம் வல்ல பிள்ளை நம்பீ உன்னை என் மகனே என்பர் நின்றார் -என்றும்
அவனுடைய அதி மானுஷ சேஷ்டிதங்கள் அடியாக தானும் பிறரும் சங்கிக்கும் படியான மாத்ருத்வத்தை யுடைய யசோதையும்
ஆக மூன்று தாய் மார்களும் -நெடும் காலமும் கண்ணன் நீண் மலர்ப்பாதம் பரவிப் பெற்ற -என்றும் -நங்கைமீர் நீரும் ஒரு பெண் பெற்று
நல்கினீர் எங்கனே சொல்லுகேன் யான் பெற்ற ஏழையை -என்றும் சொன்ன ஆழ்வார் திருத் தாயாருக்கு இறையும் ஒப்பாக மாட்டார்களே –

79-மீன நவ நீதங்கள் –மீன் வெறி நாறுகிற வியாசர் பிறப்பிடமும் -வெண்ணெய் முடை நாறுகிற கண்ணன் பிறப்பிடமும்
வெறி கொள் துழாய் மலர் நாறும் வினையுடை யாட்டியேன் பெற்ற -என்றும் –
அன்றி மற்று ஓர் உபாயம் என் இவள் அம் தண் துழாய் கமழ்தல் குன்ற மா மணி மாட மாளிகைக் கோலக் குழாங்கள் மல்கித்
தென் திசைத் திலதம் புரை குட்ட நாட்டுத் திருப்புலியூர் நின்ற மாயப்பிரான் திருவருளாம் இவள் நேர் பட்டதே -என்றும்
தாமே அருளிச் செய்யுமாறு பகவத் சம்பந்த பிரகாசகமான திருத் துழாய்ப் பரிமளம் கமழப் பெற்ற
ஆழ்வார் அவதார ஸ்தலத்துக்கு ஈடாகுமோ-ஆகாது -என்றவாறு –

80-ஆற்றில் துறையில் -வியாசர் பிறப்பிடம் -ஆறு தான் அசிஷ்ட பரிக்ரஹம் யுடைய கங்கையாய் -துறை ஒடத் துறையாய் -ஊர் வலைச் சேரியாய் இருக்கும் –
கண்ணன் பிறப்பிடம் -ஆறானது கிருஷ்ண ஜல பிரவாஹம் யுடைத்தாகையாலே தமோ மயமான யமுனையாய் -துறையும் அதில்
காளிய விஷ தூஷிதமான துறையாய் -ஊர் தானே அறிவு ஒன்றும் இல்லாத ஆய்க்குலமாய் இருக்கும் –
இனி இவ்வாழ்வாருடைய உத்பத்தி ஸ்தலத்தை ஆராய்ந்தாலோ -ஆறு -பவள நன் படர்க் கீழ் சங்குறை பொருநல் -என்று
விலக்ஷண பதார்த்தங்களுக்கு ஜென்ம பூமியாய் மிகச் சிறந்ததான தாம்ர பரணியாய் -துறை சுத்த ஸ்வபாவமாய் இருக்கிற
சங்குகள் வந்து சேர்கிற திருச் சங்கணி துறையாய் -ஊர் -நல்லார் நவில் குருகூராய் இருக்கும் –
ஆகையால் வியாச கிருஷ்ணர்கள் யுடைய ஆறுகளையும் துறைகளையும் ஊர்களையும் காட்டில் ஆழ்வாருடைய
ஆற்றுக்கும் துறைக்கும் ஊருக்கும் உள்ள வைஷம்யம் வாய்க்கு நிலம் அல்ல என்றவாறு –

81-தேவத்வமும் -ஆழ்வாருக்கு யுண்டான சதுர்த்த வருணப் பிறப்பு அடிமைச் சுவடு அறிந்தவர்கட்க்கு தேஜஸ் கரம் என்பதை த்ருஷ்டாந்தத்தோடு மூதலித்தல் –
ராவண சம்ஹாரம் தலைக் கட்டின பின்பு பிரமன் முதலான தேவர்கள் வந்து -பவான் நாராயணோ தேவ -என்று மேம்படச் சொல்லி போற்றினது அஸஹ்யமாய் –
ஆத்மாநம் மானுஷம் மன்யே ராமம் தசாரதாத் மஜம்-என்று தன்னை தயரதன் மகனாகவே சொல்லிக் கொள்ளுகையாலும் –
கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடை எடுத்து கோ நிரை காத்த பின் அந்த அதி மானுஷ சேஷ்டிதங்களை கண்டு ஆச்சர்யப்பட்ட இடையர்
கண்ணா நீ தேவனா அசுரனா யக்ஷனா கந்தர்வனா சொல்ல வேணும் -எங்கள் இழி குலத்தையும் உன் தன் செயல் வன்மையையும் நோக்கும் இடத்து
எங்களுக்கு மிக்க அதி சங்கையாய் இருக்கின்றதே என்று சங்கித்துச் சொல்ல -அது அஸஹ்யம் என்பது தோன்றச் சிறிது போது வாய் திறவாமல் இருந்து பின்பு
நான் தேவனும் அல்லன்-கந்தர்வனும் அல்லன் -யக்ஷனும் அல்லன் -அசுரனும் அல்லன் -உங்களில் ஒருவனே ஆவேன்-
-வேறு விதமாக ஒன்றும் எண்ண வேண்டா என்கையாலும் -தேவர்க்கும் தேவனான தான் லோக சம்ரக்ஷண அர்த்தமாக மனுஷ்ய சஜாதீயனாய்
அவதரித்த அளவில் தேவனாகச் சொல்லுகையும் தனக்கு நிந்தையாம் படி புரை யறப் பிறக்கும் சீலவானான ஈஸ்வரனுக்கு கல்யாண குணங்கள்
ஓளி பெற்று வரும் தாழ்ந்த ஜென்மங்கள் போலே -ப்ராஹ்மண்யத்துக்கு எல்லை நிலமான ப்ரஹ்மாவும் பிறக்கையும் சேஷத்வ விரோதியான
அஹங்காரத்துக்கு ஹேது வாகையாலே -ஆத்மாவுக்கு அவத்யம் என்று இகழும் படி அடிமைச் சுவடு அறிந்தவர்களுக்கு
-பண்டை நாளாலே -என்கிற திருவாய் மொழியில் பல் படி கால் குடி குடி வழி வந்து ஆட் செய்யும் -என்று இது முதலாகச் சொன்ன படியே
தாஸ்யத்துக்கு விரோதியான ஜென்மாதி அபிமானம் இன்றிக்கே கைங்கர்ய அநு ரூபமான குடிப் பிறப்பானது
பரம பதத்தில் பகவத் கைங்கர்யத்துக்கு தகுதியாக பரிக்ரஹிக்கும் தேகம் போலே சேஷ வஸ்துவான ஆத்மாவுக்கு தேஜஸ் கரமாம் –

82-ஜனக தசரத -ஆழ்வார் அவதாரம் பர உபகாரகம் என்றல்- ஜனக குலத்துக்கு மூத்த பெண்ணான -பிராட்டி பிறந்து –
ஜனகா நாம் குலே கீர்த்திம் ஆஹரிஷ்யதி மே ஸூ தா –என்கிறபடி தான் பிறந்த குலத்துக்கு கீர்த்தி உண்டாக்கினால் போலேயும் –
தசரத குலத்துக்கு நடுவில் பிள்ளையான -பரதாழ்வான் பிறந்து -மூத்தார் இருக்க இளையோர் முடி சூடக் கடவது அன்று என்கிற –
குல மரியாதையை நடத்தின அளவும் அல்லாமல் மூத்தவரான பெருமாளுடைய பிரிவில் சடை புனைந்து மரவுரி யுடுத்து
கண்ண நீரால் யுண்டான சேற்றிலே தரைக் கிடை கிடந்துகுலத்துக்கு முன்பு இல்லாத ஏற்றங்களை யுண்டாக்கினால் போலேயும் –
வ ஸூ தேவ குலத்துக்கு கடைக் குட்டியான கிருஷ்ணன் பிறந்து தாய் தந்தையரின் கால் விலங்கு அறுத்தால் போலேயும்
இவ்வாழ்வார் திரு வவதரித்து மலி புகழ் வண் குருகூர் -என்னும் படி தாம் பிறந்த ஊருக்கு புகழ் உண்டாக்கி -குடிக்கிடந்து ஆக்கம் செய்து -என்று
சேஷத்வ குல மரியாதை தப்பாத படி நின்ற அளவே அல்லாமல் எம்பெருமானை பிரிந்த வருத்தத்தை கனத்தால்
காண வாராய் என்று என்று கண்ணும் வாயும் துவர்ந்து -கண்ண நீர் கைகளால் இறைத்து இட்ட கால் இட்ட கையாகத் தரைக் கிடை கிடந்த
பிரேம விசேஷத்தாலே -இக்குடிக்கும் முன்பு இல்லாத ஏற்றத்தையும் உண்டாக்கி -அறுவர் தம் பிறவி யஞ்சிறையே -என்கிறபடியே
தம்முடைய திவ்ய பிரபந்த அப்யாஸ முகத்தால் தம்மோடு அந்வயம் யுடையாருடைய சம்சாரம் ஆகிற சிறையும் அறுத்தார் —
த்ருஷ்டாந்த பூதரான மூவர் செய்ததும் இவர் ஒருத்தரே செய்கையாலும் -இத்தனையும் ஸ்வரூப அநு கூலமாகச் செய்கையாலும்
இவரது அவதாரம் மிகவும் பர உபகாரகம் ஆயிற்று என்கை –

83-ஆதித்ய ராம திவாகர -ஆழ்வார் திரு அவதாரத்தால் உலகுக்கு உண்டான நன்மைகளை பேசுதல் –
யத் கோ சகஸ்ரம் அபஹந்தி தமாம்ஸி பும்ஸாம் நாராயணோ வசதி யத்ர ச சங்க சக்ர —
யன் மண்டலம் சுருதி கதம் பிரணமந்தி விப்ரா தஸ்மை நமோ வகுள பூஷண பாஸ்கராய -என்று அருளிச் செய்த
முன்னோர்கள் நம்மாழ்வாரை ஸூர்யனாகவே உருவாக்கப் படுத்தினார்கள்
திருவாய் மொழி ஆயிரம் ஆகிற ஆயிரம் கிரணங்களை யுடையராய் -மஹிஷீ பூஷண ஆயுத விசிஷ்டனான நாராயணனை
கண்கள் சிவந்து பெரியவாய் -என்கிற பாசுரத்தில் படியே உள்ளே உடையராய் -வேத வித்துக்களான சகல சிஷ்டர்களும் கேட்ட போதே
தாம் இருந்த தேசத்தை நோக்கி வணங்கும் படியான வைபவத்தை யுடையராய் -ஆக இப்படிப் பட்ட தன்மைகளால்
ஸூ ர்யனாகச் சொல்லலாம் படி இரா நின்ற ஆழ்வாரை தொழுகிறேன் -என்பதே இந்த ஸ்லோகம்
இந்த வகுள பூஷண பாஸ்கரன் தவிர வேறே மூன்று ஸூ ர்யர்கள் உலகில் உண்டே –ப்ரசித்தனான ஸூர்யன்
சரஜாலாம்சுமான் ஸூர கபே ராம திவாகர சத்ரு ரஷோமயம் தோயம் உபசோஷம் நயிஷ்யதி -என்கிறபடியே
அம்புகளாகிற கிரணங்களை யுடையனாய்க் கொண்டு சத்ரு ராக்ஷஸ சமூகம் ஆகிற சமுத்திரத்தை வற்றப் பண்ணின ராம ஸூர்யன்
ததோகில ஜகத் பத்ம போதாய அச்யுத பானு நா தேவகீ பூர்வ சந்த்யாம் ஆவிர்ப்பூதம் மஹாத்மநா-ஸ்ரீ விஷ்ணு புராணம் -என்கிறபடியே
சகல லோகம் ஆகிற தாமரைப் பூ மலரும் படி தேவகி யாகிற கீழ்த் திசையிலே ஆவிர்ப்பவித்த ஸ்ரீ கிருஷ்ண ஸூர்யன்
ஆக இப்படி பிரசித்தர்களான -மூன்று ஸூர்யர்களுக்கும் ஆகாத கார்யங்கள் வகுள பூஷண பாஸ்கரன் உதயமான வாறே ஆயின -எங்கனே என்னில்
கதிரவன் குண திசை சிகரம் வந்து அணைந்தான் கனவிருள் அகன்றது -என்னும் படி ஸூர்யன்
வெளி இருளை மாத்திரம் போக்கிக் கொண்டு உதிப்பான் -உள் இருள் அவனால் நீங்காது -ஆழ்வார் ஆகிய ஸூ ர்யனால் அது நீங்கப் பெற்றது
ஸ்ரீ இராமாயண சித்த ராம ஸூ ர்யன் -சத்ரு ராக்ஷசர் ஆகிய சமுத்திரத்தை வற்றைப் பண்ணின அளவே அல்லது
சம்சார சமுத்திரத்தை வற்றப் பண்ணின படி இல்லை -சம்சார சமுத்திரமும் வற்றிற்று ஆழ்வார் ஆகிய ஸூர்யனால் –
ஸ்ரீ விஷ்ணு புராண சித்த கிருஷ்ண ஸூர்யன் -அகில ஜகத் பத்மத்தை விகசிக்கத் செய்தான் அத்தனை அல்லது ஹ்ருதய புண்டரீகத்தை
விகசிக்கச் செய்தான் என்று இல்லையே -போதில் கமல வன்னெஞ்சமும் விகசிக்கப் பெற்றது ஆழ்வார் ஆகிற ஸூரய்னாலே தானே –
இத்தால் அஞ்ஞான அந்தகாரத்தைப் போக்கி -சம்சார சாகரத்தை சோஷிப்பித்து -ஹிருதய புண்டரீகத்தை விகசிக்கச் செய்த
வகுள பூஷண பாஸ்கரருடைய வைபவம் வாசா மகோசரம் என்றதாயிற்று –

84- வம்ச பூமிகளை உத்தரிக்க -இப்படி பரம விலக்ஷணரான ஆழ்வார் மூன்று வருணங்களுள் ஒன்றிலே அவதரியாமல்
நான்காம் வருணத்தில் தாழ விழிந்ததற்கு ஹேது கூறுதல் –
யயாதி சாபத்தால் ராஜ்ய அர்ஹம் இல்லாத படி இழிவாய்க் கிடந்த யாது வம்சத்தை உத்தரிக்கைக்காக ஆய்க்குலம் புக்க கோபாலனைப் போலேயும்-
ஹிரண்யாக்ஷ பலத்தால் நிலை குலைந்து கிடந்த பூமியை உத்தரிக்கைக்காக பாதாளத்தில் தாழ இழிந்த வராஹ ரூபியைப் போலேயும்
இவ்வாழ்வாரும் குலம் தாங்கும் அபிமானத்தாலே சம்சாரத்திலே மூக்கிக் கிடப்பார்களை அந்நிலையில் நின்றும் பேதித்து
-அபிமான துங்கன் என்னும் உயர்த்தியை யுடையவர் ஆக்குகைக்காக -அகங்கார ஹேதுவான வருணங்கள் அநர்த்த கரம் என்று
தோற்றும் படி அஃது இல்லாத சதுர்த்த வருணத்திலே தாழ இழிந்தார்-

85-மிலேச்சனும் பக்தனானால் -இன்னமும் ஆழ்வாரது வைபவத்துக்கு உறுப்பாக பொதுவில்
பாகவத வைபவத்தை பல உதாஹரன்களாலும் வெளியிட்டு அருளுகிறார் –

மத் பக்த ஜன வாத்சல்யம் பூஜா யாஞ்ச அநு மோதனம்-ஸ்வயம் அப்யர்ச்ச நஞ்சைவ மதர்த்தே டம்ப வர்ஜனம் -மத்கதா ஸ்ரவணே பக்தி –
ஸ்வ நேத்ர அங்க விக்ரியா மம அநு ஸ்மரணம் நித்யம் யச்ச மாம் நோப ஜீவதீ பக்திர் அஷ்டவிதா ஹ்யேஷா யஸ்மின் மிலிச்சேபி வர்த்ததே
ச விப்ரேந்தரோ முனி ஸ்ரீ மான் ச யதிஸ் ச ச பண்டித -தஸ்மை தேயம் ததோ க்ராஹ்யம் ச ச பூஜ்யோ யதா ஹ்யஹம்
என்று மிலேச்ச ஜாதியில் பிறந்தவனும் அஷ்ட வித பக்தியை யுடையவன் ஆகில் அவனை உத்க்ருஷ்ட வர்ணத்தவரான
சதுர்வேதிகள் அபிஜநாதி அபிமான தூஷிதமான ஸ்வ ஸ்வரூபத்தின் சுத்திக்காக அநு வர்த்திக்கலாம் -அவன் இடத்தில் ஞானம் பெறலாம்
குல தைவ துல்யமாக அவனை பூஜித்து ஸ்ரீ பாத தீர்த்தம் ஸ்வீகரிக்கலாம் -அவனுடைய தளிகை பிரசாதம் ஸ்வீகரிக்கலாம்
பரம பாவனமாம் -என்று அருளிச் செய்த எம்பெருமானுடைய திரு முகப் பாசுரத்தையும் –

அபர ராத்திரியிலே சென்று பாடித் திருக் குறுங்குடி நம்பியை திருப்பி பள்ளி உணர்த்துகையாலே முன்பு இராமபிரானையும்
கண்ணபிரானையும் அரங்கத்தம்மானையும் திருப்பள்ளி உணர்த்தின விச்வாமித்ரன் பெரியாழ்வார் தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் ஆகிற
இவர்களோடு ஸகோத்ரியாய்-அனன்யா பிரயோஜன வ்ருத்தியிலே அன்விதனாய உள் கலந்து ஜென்ம ஸித்தமான நைச்சியத்தை
யுடையனான நம்பாடுவான் -சோமா சர்மா வாகிற ப்ராஹ்மணனுடைய யாக வைக்கலய தோஷத்தால் வந்த
ப்ரஹ்ம ராக்ஷ சத்வத்தை கைசிகப் பண்ணாலே போக்கி யாக்கத்தைத் தலைக் கட்டின படியையும் –

ஜென்ம வ்ருத்த ஞானங்களால் தண்ணியரான குஹப் பெருமாள் சகல பிரகாரங்களாலும் உத்க்ருஷ்டனான சக்கரவர்த்தி திரு மகனுக்கு
சமான ஸ்நேகிதராய் அந்த ராம வசனத்தாலே -இளைய பெருமாளுக்கு தமையன் என்ற விருதை பெற்றவராய் இங்கனம் தம்மை அங்கீ கரித்தவன்
அன்று இரவே சித்திர கூடத்தில் பெருமாள் பள்ளி கொண்டு அருளா நிற்க பரிவாலே கண் உறக்கம் அற்று கையும் வில்லுமாக
காத்துக் கொண்டு இருக்கிற இளைய பெருமாளையும் அதி சங்கை பண்ணி தாம் ஆயுத பாணியாய்க் கொண்டு அவர் மேலே கண்ணாய் நின்று
அவருடைய நினைவை சோதித்து ராம விக்ரஹ கிலேசத்தோடே சித்ர கூடத்து என்ற வந்த பரத ஆழ்வானுக்கு
இளைய பெருமாள் திருத் தமையனார் பக்கல் பிரேம பார தந்தர்யங்களே நிரூபகமாம் படி இருக்கும் இருப்பை –
தான் -குஹன் -சொல்லும்படி இஷ்வாகு வம்சத்தவர்களோடு ஏக குலம் ஆனபடியையும் –

முன்னோர் தூது வானரத்தின் வாய் மொழிந்து -என்கிறபடியே பிராட்டிக்குத் தூது மொழியைத் திருவடி வாயிலே சொல்லி விட்ட
சக்கரவர்த்தி திருமகன் -சபர்யா பூஜிதஸ் சம்யக் ராமோ தசாரதாத்மஜ-என்று சபரியின் கையில் பண்ணின சம்யக் போஜனத்தையும் –

கோதில் செங்கோல் குடை மன்னரிடை நடந்த தூதா -என்னும்படி பாண்டவர்களுக்காகத் தூது போன கண்ண பிரான்
பீஷ்மர் துரோணர் முதலானோருடைய க்ருஹங்களை விட்டு -விதுரான் அன்னானி புபுஜே சுசீநீ குண வந்தி ச -என்கிறபடியே
பாவனத்தவ போக்யத்வங்கள் கண்டு உகந்து ஸ்ரீ விதுரர் திரு மாளிகையில் பண்ணின ச குண போஜனத்தையும் –

ஓத மா கடலைக் கடந்தேறி உயர் கொள் மாக் கடிகாவை இறுத்துக் காதல் மக்களும் சுற்றமும் கொன்று கடி இலங்கை மலங்க
வெரித்துத் தூது வந்த குரங்கு -என்று சொல்லப் பெற்ற திருவடி -த்ருஷ்டா சீதா -என்று வந்த ப்ரீதியாலே -தத் துல்யம் சக போஜனம் -என்று
திரு உள்ளம் பற்றி -கோதில் வாய்மை யினாயோடும் உடனே யுண்பன் நான் என்ற பெருமாளோடே பண்ணின ஸஹ போஜனத்தையும் –

யது குலத்தில் இறந்து இடைக் குலத்திலே வளருகையாலே ஒரு பிறவியிலே இரு பிறவியான
கிருஷ்ணனுக்கு தரும புத்திரர் தம்முடைய யாகத்தில் அக்ர பூஜை கொடுத்த படியையும் –

ரிஷி புத்ரராய் பிறந்து பொருந்தர் இடத்திலே தஜ் சஜாதீயராய் வளருகையாலே ஒரு பிறவியிலே இரு பிறவியான
திரு மழிசைப் பிரானுக்குப் பெரும் புலியூர் அடிகள் தம்முடைய யாகத்தில் அக்ர பூஜை கொடுத்த படியையும்-

பஞ்ச பாண்டவர்களில் முதல்வரான தர்ம புத்திரர் விதுரர்க்கு ஞானப் பெருமையையும் அசரீரி வாக்கையும் கொண்டு
ஸந்தேஹியாமல் புத்ர க்ருத்யம் -சரம கைங்கர்யம் – செய்த படியையும் –

தயரதன் புதல்வரில் நால்வரில் முதல்வரான பெருமாள் சஹஜரான இளைய பெருமாளும் கூட நிற்கச் செய்தே-
அவர் கையிலும் காட்டிக் கொடுக்காமல் தானே பெரிய உடையார்க்கு -ஜடாயு மஹா ராஜர்க்கு – புத்ர க்ருத்யம் செய்த படியையும் –

பெரிய நம்பி திருக் கோஷ்டியூர் நம்பி பெரிய திருமலை நம்பி என்று ச ப்ரஹ்மசாரிகளாய் -ஆளவந்தார் திருவடிகளாய் –
உடையவருக்கு ஆச்சார்யர்களாய் பிரசித்தரான நம்பிகள் மூவரிலும் பிரதானரான பெரிய நம்பிகள் மாறனேர் நம்பிக்கு
புரோடாசத்தை நாய்க்கு இடாதே கொள்ளும் என்று ஆளவந்தார் அருளிச் செய்து
போன படியே புரோடாசமாக நினைத்து புத்ர க்ருத்யம் செய்த படியையும் –

சிந்து பூ மகிழும் திருவேங்கடம் ஆகையால் புஷப மண்டபமான திருமலையில் பணிப் பூவும் கையுமாய் திரு உள்ளம் அறியப்
பரிமாறுகையாலே திருவேங்கடமுடையானுக்கு அந்தரங்கரான குறும்பு அறுத்த நம்பியைத்
தொண்டைமான் சக்கரவர்த்தி அனுவர்த்தித்த படியையும்

வேகவத் யுத்தரே தீரே புண்ய கோட்யாம் ஹரிஸ் ஸ்வயம் வரதஸ் சர்வ பூதாநா மத்யாபி பரித்ருச்யதே -என்கிறபடியே தியாக மண்டபமான
பெருமாள் கோயிலிலே திருவால வட்டமும் கையுமாய் பேர் அருளாளனுக்கு அந்தரங்கராய நின்ற திருக் கச்சி நம்பியை
வைதிக சிகாமணியான உடையவர் அனுவர்த்தித்த படியையும் –

தெண்ணீர்ப் பொன்னி திரைக் கையால் அடி வருடப் பள்ளி கொள்ளும் என்கிறபடியே போக மண்டபமான கோயிலிலே வீணையும் கையுமாய்
பெரிய பெருமாளுக்கு அந்தரங்கராய் வர்த்தித்த திருப்பி பாண் ஆழ்வாரை லோக சாரங்க மஹா முனிகள் அனுவர்த்தித்த படியையும்

தேவ பூஜாயாம் -என்கிற தாதுவின் படியே -யாகம் என்னப் படுகிற திருவாராத நத்திலே-பிள்ளை யுறங்கா வல்லி ஸ்பர்சத்தாலே காய சுத்தி பண்ணின உடையவரும்
அநு யாக சப்த வாஸ்யமான பிரசாத சுவீகாரத்திலே பிள்ளை ஏறு திரு உடையார் தாசருடைய கர ஸ்பர்சத்தாலே அன்ன சுத்தி பண்ணின நம்பிள்ளையும்
உத்தர வீதி குடி புகுகிற போது பிள்ளை வான மா மலை தாசர் சஞ்சாரணத்தாலே ஸ்தல சுத்தி பண்ணின நடுவில் திரு வீதிப் பிள்ளை பட்டரும் ஆகிற
ஞான வ்ருத்தர்கள் உடைய ஆசார க்ரமத்தையும் அறிய வல்லவர்களுக்கு அன்றோ
இன்ன ஜென்மம் உத்க்ருஷ்டம் இன்ன ஜென்மம் அபக்ருஷ்டம் என்று ஜென்மத்தின் யுடைய ஏற்றத் தாழ்வுகள் தெரியக் கூடும் –

86-அஞ்ஞர் பிரமிக்கிற -பகவத் விஷய ஸ்பர்சம் அற்ற வர்ணாஸ்ரமங்களும் ஞான வ்ருத்தங்களும் ஹேயம் என்றல்-
எம்பெருமானுக்கு அடிமை பட்டு இருத்தலே ஆத்மாவுக்கு நிரூபகம் என்று நிஷ்கர்ஷித்து -அதற்குத் தகுதியாக
த்யாஜ்ய உபாதேயங்களை பகுத்து உணரத் தக்க ஞானம் இல்லாதவர்கள் எம்பெருமான் உடைய சம்பந்தம் இன்மையால்
நிஷ்க்ருஷ்டங்களாய் இருக்கிற வர்ண ஆஸ்ரம வித்யா வ்ருத்தங்களை உத்தம வர்ணம் என்றும் -உத்தம ஆஸ்ரயம் என்றும்
-சத் வித்யை என்றும் -சத் வ்ருத்தம் என்றும் உத்க்ருஷ்டமாக நினைத்து இருப்பார்கள் -ஆனால் ஞானிகள் அவற்றை இகழ்வார் -எங்கனே என்னில் –
சதுர் வேத தரோ விப்ரோ வாஸூ தேவம் ந விந்ததி வேத பார பராக்ராந்தஸ் ச வை ப்ராஹ்மண கர்த்தப-என்று
நான்கு வேதங்களையும் அதிகரித்து வைத்தே வேத விழுப் பொருள் ஆகிய எம்பெருமானை அறியாதவன் –
குங்குமம் சுமந்த கழுதை போலே தான் சுமந்து கொண்டு திரிகிற வேதத்தின் பரிமளம் அறியாத பிராமணாக் கழுதை என்றும்
ஸ்வபசோபி மஹீ பால -விஷ்ணு பக்தோ த்விஜாதிக -விஷ்ணு பக்தி விஹீ நஸ்து யதிச் ச ஸ்வபசாதம-என்று உத்தம
ஆஸ்ரமியானாலும் எம்பெருமான் இடத்தில் பக்தி இல்லாதவன் சண்டாளனில் காட்டில் கீழ்ப் பட்டவன் என்றும்
தத் கர்ம யன் ந பன்னாய சா வித்யா யா விமுக்தயே அபரம் கர்ம வித்ய அந்நியா சில்ப நை புணம்-என்று மோக்ஷ அர்த்தமாக
உபயோகப்படும் வித்யை எதுவோ அதுவே வித்யை யாகும் -அப்படி அல்லாதது செருப்புக் குத்தக் கற்ற கல்வி போன்றதே யாகும் -என்றும் –
ஆம் நா யாப்யச நானி அரண்ய ருதிதம் வேத வ்ரத அந்நிய அன்வஹம் மேதச்சேதபலாநி பூர்த்த விதயஸ் சர்வே ஹூதம் பஸ்மநி தீர்த்தா
நாமவகாஹநாநி க கஜஸ்நா நம் வி நா யத் பதத் வந்த்வாம் போருஹ சம்ஸ்ம் ருதீர் விஜயதே தேவஸ் ச நாராயண –முகுந்த மாலை –என்று
எம்பெருமானுடைய சிந்தனை இல்லாதவர்கள் செய்கின்ற கர்ம அனுஷ்டானம் சாம்பலில் இட்ட ஆ ஹூதி போலே பிரயோஜனம் அற்றது என்றும்
யஸ்ய அகிலாம் இவஹபிஸ் ஸூ மங்கலை வாசோ விமிச்ரா குண கர்ம ஜன்மபி -ப்ராணந்தி சும்பந்தி
புநந்தி வை ஜகத் யாஸ் தத்வி யுக்தாச் சவசோப நா மதா-என்றும்
விஷ்ணு பக்தி விஹீ நஸ்ய வேதச் சாஸ்திரம் ஜபஸ் தப அபிராணஸ் ஏவ தேஹஸ்ய மண்டநம் லோக ரஞ்சனம் -என்று –
பகவத் விஷயத்தில் அந்வயம் பெறாத உக்திகளும் -பகவத் பக்தி இல்லாதவனுடைய அறிவும் நடத்தையும் பிணக் கோலம் செய்வது ஒக்கும் என்றும்
ப்ராதுர்ப் பாவைஸ் ஸூ ர நர சமோ தேவ தேவஸ் ததீயா -ஜாத்யா வ்ருத்தைரபி ச குணதஸ் தாத்ருசோ நாத்ர கர்ஹா-
கிந்து ஸ்ரீ மத் புவன பவன த்ராணத-அன்யேஷு வித்யா வ்ருத்த ப்ராயோ பவதி விதவா கல்ப கல்ப ப்ரகர்ஷ -என்று
பகவத் விஷயத்தில் அந்வயம் அற்றவர்கள் உடைய கல்வி ஒழுக்கச் சிறப்புக்கள் பகவத் சம்பந்த ஞானம் ஆகிற
ஸூமங்கலி விலக்ஷணம் இல்லாமை பற்றி -விதவ அலங்காரம் துல்யம் என்றும் ஞானிகள் இகழ்வார்கள்-
ஆக இப்படி பகவத் விஷய சம்பந்தம் அற்ற வர்ண ஆஸ்ரமங்களும் ஞான ஒழுக்கங்களும் ஹேயம் என்கையாலே
கீழே தாழ்ந்த ஜென்மமாகக் கருதப்பட்ட ஜென்மம் இன்னது -என்று நிரூபிக்கப் பட்ட தாயிற்று –

—————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ உ .வே. காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஆச்சார்ய ஹிருதயம் -சூர்ணிகை 1-49–தாத்பர்ய சாரம் -ஸ்ரீ உ .வே. காஞ்சி ஸ்வாமிகள் —

December 23, 2016

திவ்ய பிரபந்தங்களில் -ஆழ்வார் உடைய திரு உள்ளக் கருத்தை தெளிய வெளியிட்டு அருளி
-செவிக்கு இனிய செஞ்சொல் -இந்த ஆச்சார்ய ஹிருதயம் –

பண வாள் அரவு அணை பள்ளி பயில்பவர்க்கு எவ் உயிரும்
குணா போகம் என்று குருகைக்கு அதிபன் உரைத்த தூய
உணர் பாவின் உள் பொருளும் அறியா உலகு அறிய
மணவாளன் மாறன் மனம் உரைத்தான் வண் முடும்பை வந்தே

மாதவத்தோன் மாறன் மனம் கூறும் மணவாளன்
தோ தவத்தித் தூய் மறையோரான பெற்றார் –நீதி யினால்
ஆங்கு அவர் தாள் சேர் பெற்றாராய் மணவாள மா முனி
பூம் கமலத் தாள்கள் நெஞ்சே போற்று-

தந்து அருள வேணும் தவத்தோர் தவப் பயனாய்
வந்த முடும்பை மணவாளா -சிந்தையினால்
நீ யுரைத்த மாறன் நினைவின் பொருள் அனைத்து என்
வாயுரைத்து வாழும் வகை

விஷயங்கள் சங்க்ரஹம் –
1-சார அசார விவேகம் பண்ணுகைக்கு எம்பெருமான் சாஸ்திரங்களை அருளிச் செய்தான்
2-அந்த சாஸ்த்ரங்களினால் தத்வ ஞானம் பிறப்பதின் அருமையை நோக்கி சகல சாஸ்திர தாத்பர்யமான திரு மந்த்ரத்தை வெளியிட்டு அருளினான் –
3-சாஸ்திரங்களின் -அவற்றின் தாத்பர்யமான திரு மந்திரத்தின் விஷய பேதம் –
4–இவை இரண்டிலும் ஊற்றம் உடைய அதிகாரிகளின் பிரகாரங்கள் –
5–அந்த வியாஜ்ஜியத்தாலே ப்ரஸ்துதமான திருவாயமொழியின் வைபவம் –
6-அதற்கு வக்தாக்களான ஆழ்வார்களுடைய பிரபாவம் –
7-அதற்கு மூலமான பகவான் நிர்ஹேதுக கடாக்ஷம் –
8-அந்த கடாக்ஷம் அடியாக ஆழ்வாருக்கு பிறந்த ஞான பக்திகள் -அந்த ஞான பக்தி தசைகளில் இவர் பேசும் பேச்சுக்கள்
9-அந்த பக்தி தசையில் பிரேமா யுக்தர்கள் எல்லோரோடும் இவருக்கு உண்டான சாம்யம் –
10-இவர் பேசும் அந்யாபதேசங்களுக்கு ஸ்வாபதேசங்கள் –
11-அந்த பக்திக்கு இலக்கான திவ்ய தேசங்களில் எழுந்து அருளி இருக்கும் எம்பெருமானின் குண விசேஷங்கள் –
12-அந்த குணங்கள் மலிந்த எம்பெருமானை அனுபவித்து அந்த ப்ரீதி உள் அடங்காமல் புரா வெள்ளம் இட்டு திவ்ய பிரபந்தமாக வழிந்தமை
13-பொருள் ஒற்றுமையால் ஸ்ரீ கீதைக்கும் திருவாய் மொழிக்கும் உள்ள சாம்யம் -அதினில் காட்டில் இதற்கு உண்டான ஏற்றம் –
14-ஆழ்வார் இதில் உபதேசிக்கும் விஷய பேதங்கள் -அந்த விஷயங்கள் தோறும் இவர் உபதேசிக்கும் அர்த்த விசேஷங்கள்
15-அந்த வியாஜ்ஜியத்தாலே உபதேசத்துக்கு இலக்கான சிஷ்ய லக்ஷணம்
16-அந்த லக்ஷணம் இல்லாதார்க்கும் இவர் உபதேசிக்க ஹேதுக்களும் அந்த உபதேசம் பலித்தமையும்
17-உபதேசிக்கும் இந்த திவ்ய பிரபந்தங்கள் ரகஸ்ய த்ரயார்த்தம் என்பதும்
18-அந்த ரகஸ்ய த்ரயத்தில் பிரதிபாதிக்கப் படும் அர்த்த பஞ்சகமும் இந்த பிரபந்தங்களிலே சங்க்ரஹ விவரண ரூபேண அருளிச் செய்தமையும்
19-பிரபந்த ஆரம்பத்தில் வேண்டிய மங்களாசரணங்கள் இந்த திவ்ய பிரபந்த ஆதியில் இருந்தமையும்
20-சாது பரித்ராணாதி களுக்காக பகவத் அவதாரம் போலே-ஜகாத் ரக்ஷணார்த்தமாக இப்பிரபந்த அவதாரமும்
21-பத்து பத்தாலும் பிரதிபாதிக்கப்படும் ஈஸ்வரனுடைய பரத்வாதி குணங்கள்
22-பத்து பத்தாலும் இக் குணக் கடலானவன் ஆழ்வாருக்கு தத்வ ஞானம் முதலாக பகவத் பிராப்தி பர்யந்தமாக பிறப்பித்த தசா விசேஷங்கள்
23-பத்து தோறும் இவர் தாம் பிறருக்கு உபதேசித்த பிரகாரங்கள்
24-இவருக்கு முதலிலே ஆர்த்தி பிறந்து இருக்கச் செய்தே-ஈஸ்வரன் இவரை இங்கே வைகைக்கு பிரதான அப்ரதான ஹேதுக்கள்
25-இவருக்கு பிறப்பித்த பர பக்தி பர ஞான பரம பக்தி தசா விசேஷங்கள் தோன்றும் இடங்கள்
26-திருவாய் மொழியின் ஒன்றான தாத்பர்யத்தை கூறி நிகமித்தல்-

1-காருணிகனான –அருள் கடலான எம்பெருமான் -அறிவிலிகளான சம்சாரிகள் ஞானம் என்னும் விளக்கை ஏற்றி அகவிருள் நீங்கப் பெற்று
தன்னைக் கண்டு சத் அஸத் விவேகம் பண்ணுகைக்காக
சகல வேத காரணமாய் -நித்தியமாய் -ஸர்வார்த்த பிரகாசமாய் இருக்கிற அகாரத்தில் நின்றும் உண்டான விளக்குப் போன்ற வேதங்களையும்
அவற்றுக்கு உப ப்ரும்ஹணங்களான வற்றையும் வெளியிட்டு அருளினான் –

2-விவேக -சத் அஸத் விவேகத்துக்கு பலன் ஏது என்னில்-த்யாஜ்யங்களை விடுகையும் உபாதேயங்களைப் பற்றுகையுமேயாம்

3-த்யாஜ்ய உபாதேயம் -அனைவருக்கும் துக்கம் த்யாஜ்யம் -ஸூகம் உபாதேயம்-

4-இவற்றுக்கு எல்லை -அநந்த கிலேச பாஜனமான சம்சாரத்தில் அழுந்துகைக்கு மேற்பட்ட துக்கம் இல்லை –
நித்ய விபூதியில் நிரந்தரம் பகவத் அனுபவம் பண்ணுகைக்கு மேற்பட்ட ஸூகம் இல்லை –

5-அநந்த கிலேசம் -கீழ் சொன்ன துக்க பரம அவதிக்கு ஹேது அர்த்த பஞ்சக ஞானம் இல்லாமை –
கீழ் சொன்ன ஸூக பரம அவதிக்கு ஹேது அர்த்த பஞ்சக உணர்ச்சி –

6-இவற்றுக்கு காரணம் -அர்த்த பஞ்சக ஞானம் உண்டாகைக்கு காரணம் சத்வ குண பிராசர்யம் –

7-சத்வ அசத்வ –ரஜஸ் தமஸ் குணங்களின் பிராஸுர்யத்துக்கு காரணம் இவ்விருள் தரும் மா ஞாலத்தில் பிறவி
-சத்வ குண பிராஸுர்யத்துக்கு காரணம் ஜாயமான கடாக்ஷம் –

8-இவற்றுக்கு மூலம் -பிறவிக்கு மூலம் புண்ய பாபங்கள் -ஜாயமான கடாக்ஷத்துக்கு மூலம்
எம்பெருமானுடைய ஸ்வாபாவிக கிருபை யாகிற ஸூ க்ருதம் –

9-கர்ம க்ருபா -புண்ய பாப ரூப கர்மங்களுக்கு காரணம் அவித்யை -கிருபைக்கு காரணம் ஸுஹார்த்தம் –

10- ஏதன் நிமித்தம் -அவித்யைக்கு அடி அநாதியான அசித் சம்பந்தம் -ஸுஹார்த்தத்துக்கு அடி அத்யந்த அநாதியான நாராயண சம்பந்தம்

ஆக இவ்வளவாலும்
அசித் சம்பந்தம் அடியாக அவித்யை -அது அடியாக புண்ய பாபங்கள் -அவை அடியாக பிறவி –அது அடியாக ரஜஸ் தமோ குண பிராசர்யம்
–அது அடியாக அர்த்த பஞ்சக ஞானம் இல்லாமை -அது அடியாக சம்சார துக்கம் உண்டாகும் -என்றும்
நாராயண சம்பந்தம் அடியாக அவனுடைய ஸுஹார்த்தம் -அது அடியாக கிருபை -அது அடியாக ஜாஅது அடியாக
அர்த்த பஞ்சக ஞானம் -அது அடியாக மோக்ஷ ஸூ கம் உண்டாகும் என்றும் சொல்லப் பட்டது ஆயிற்று –

11-இவை கிட்டமும் –கிட்டமானது தன்னோடு சேர்ந்த மாணிக்கத்தை ஒளி அறத் தின்று -உரு அழித்து-தன்னைப் போலே ஆகுமா போலே –
அசித் சம்பந்தமானது ஒண் பொருளான ஆத்மாவை அஸத் கல்பம் ஆக்கி ஞானம் லேசம் அற தின்று சத்தா ஹானியைப் பண்ணும் —
வேட்டு வேளான் என்கிற குளவியானது அபதார்த்தமான ஒரு புழுவை சுவரில் கொண்டு வைத்து ஊதித் தன்நிறம்
ஆக்குமா போலே நாராயண சம்பந்தமானது பொருள் அல்லாததை பொருள் ஆக்கி விபுத்வ சாம்யம் தந்து தன்னாக்கி சத்தை பெறுவிக்கும் –

12-ஓன்று கூடியதாய் -அசித் சம்பந்தம் வந்தேறி -நாராயண சம்பந்தம் அநாதி –

13-இந்த உதரத் தரிப்பு -இந்த அநாதி சம்பந்தமே இப்பகவான் கலைகளை வெளியிட்டமைக்கு ஹேது வாயிற்று –

14-வத்ஸலையான -தாயானவள் பிள்ளை முகம் கன்றாத படிக்கு மண் தின்ன விட்டு -அதனால் உண்டான தோஷம் போகப் பிறகு
ஆத்மா வர்க்கங்களின் அனைத்தின் நிறத்திலும் தாய் போலே வத்ஸலையான எம்பெருமான் சேதனனுடைய ருசிக்குத் தக்கவாறு
பந்தகங்களையும் காட்டிப் பின்னை பந்த நிவர்த்தக பேஷஜம் ஆனவற்றையும் காட்டின் பொருந்தும் –

15-அது தானும் ஆஸ்திக்ய –சகல ஆத்மாக்களுக்கும் ஹிதத்தையே கோருமவனான எம்பெருமான் இப்படி
பந்தகங்களையும் காட்டியது -தானும் க்ரமத்திலே அவர்களை உஜ்ஜீவிப்பைக்கு இட்ட வழியாம் –

16-சதுர்விதமான -அவகாஹிக்க அரிய பல்வகைப்பட்ட அர்த்தங்களையும் அமைத்துக் கொண்டு இரா நின்ற சாஸ்திரங்களின்
தாத்பர்யம் கைப்படும் படி அதிகரிப்பதற்கு -ஜம்பூத்வீமத்தின் நவம கண்டத்தில் பிறவி -மானிடப் பிறவி -சரீரஸ் தைர்யம் -அதிகாரி வர்ணத்தில் உத்பத்தி
-இளமையின் வாய்ப்பு -நெஞ்சி இசைவு முதலானவை -இன்றியமையாதன வாதையால் -இவ்வளவும் பெற்று -இடையூறு ஒன்றும் இன்றி
சாஸ்திரங்களை அதிகரிப்பது அரிது என்று திரு உள்ளம் பற்றின எம்பெருமான் தன கருணையால் சம்சாரி சேதனரை உஜ்ஜீவிப்பைக்காக
ஸ்ரீ பத்ரிகாஸ்ரமத்திலே நர நாராயண ரூபேண தானே சிஷ்யனுமாய் ஆச்சார்யனுமாய் திருவவதரித்து
சகல சாஸ்திர தாத்பர்ய சாரமான திரு மந்த்ரத்தை வெளியிட்டு அருளினான் –

17-முனிவரை இடுக்கியும் -வியாசர் முதலிய மஹர்ஷிகளுக்கு அந்தர்யாமியாய் இருந்து அவர்களைக் கொண்டு வெளியிட்ட சாஸ்திரத்து
அதாவது சாஸ்திரங்கள் வர்ணாஸ்ரம தர்மங்களை சொல்லும் என்கை -தானாக நின்று வெளியிட்ட திருமந்த்ரத்துக்கு சேதனருடைய
நிஷ்க்ருஷ்ட வேஷத்தில் நோக்கு -அதாவது திரு மந்த்ரம் ஆத்ம ஸ்வரூபத்தை மாத்திரம் சோதிக்கத் தோன்றியது என்றபடி –

18-தோல் புரையே -உள் இதழான ஸ்வரூபத்தில் ஊற்றம் இன்றிக்கே-மேல் எழ தேஹத்திலே நோக்கான சாஸ்திரத்தை அதிகரிக்க
-ஆபி ஜாத்தியமாதல் – ஆசாரமாதல் ஆகிற யோக்யதை வேணும் -ஸ்வரூப ஸ்பர்சியான திரு மந்திரத்துக்கு அனைவரும் அதிகாரிகள் –

19-சாஸ்திரிகள் –சாஸ்திர நிஷ்டரான உபாசகர்கள் ஆறு நீந்துவதற்கு தெப்பத்தை ஒரு கையிலே இடுக்கிக் கொண்டு தாங்களும் ஒரு கை
துழாவுகின்றவர்களைப் போன்று -ஸ்வ யத்னத்தையும் -அதனாலாகும் பகவத் கிருபையையும் அவலம்பித்து சம்சார சாகரத்தை கடக்க நினைப்பார்கள் –
திரு மந்த்ர நிஷ்டரான பிரபன்னர்கள் ஓடத்தின் உள்ளே இரு கையையும் விட்டு நிர்ப்பரராய் இருப்பாரைப் போலே வைகுந்தன்
என்பதோர் தோணியைப் பற்றி கேவல பகவத் கிருபையையே -அதாவது ஸ் வ யத்னத்தால் விளையாத பகவத் கிருபையையே
உத்தாரகம் என்று அத்யவசித்து -கூவிக் கொள்ளும் காலம் இன்னம் குறுகாதோ என்று பகவத் பிராப்தி காலத்தை ப்ரதீஷித்து இருப்பார்கள் –

20-இவை ஸ்வரூபத்தை -சாஸ்திர நிஷ்டர்கள் ஸ்வ ப்ரவ்ருத்திகளிலே ஊன்றுவதற்கும் -திரு மந்த்ர நிஷ்டர்கள் பகவத் கிருபையையே உத்தாரகம் என்று
அத்யவசித்து இருப்பதற்கும் காரணம் ஏது என்னில் ஆத்ம ஸ்வரூபத்தைப் பற்றி அவரவர்கள் தெரிந்து கொண்டு இருக்குமதுவே யாம் –
சாஸ்திர நிஷ்டர்கள் தெரிந்து கொண்டு இருக்குமது எங்கனே என்னில் ஆத்ம ஸ்வரூபம் ஞானத்தையே குணமாக யுடைத்தாய் இருக்கும் –
அந்த ஞானத்தால் எங்கும் வியாபித்து தேகத்தில் காட்டில் விலக்ஷணமாய் கர்த்ருத்வ போக்த்ருத்வ யுக்தமாய் பகவானுக்கு சேஷமாய் இருக்கும் என்று –
இனி திரு மந்த்ர நிஷ்டர்கள் தெரிந்து கொண்டு இருக்குமது எங்கனே என்னில் எம்பெருமானை தவிர்ந்து எல்லாம் ஹேயம் என்னும் அறிவைப் பெறும் படி
நிர்ஹேதுகமாக எம்பெருமான் நடத்த அதனாலே ஆத்ம ஸ்வரூபத்தை தேஹாதி விலக்ஷணமாய் ஞாத்ருத்வாதி குணகமாய்
-பாகவத சேஷத்வ பயந்த பகவச் சேஷத்வமே வடிவாய் -பாரதந்தர்ய போக்யதைகளையே ஸ்வரூபமாக யுடைத்தாய் இருக்குமதாக-
இப்படிப்பட்ட உணர்ச்சியின் வாசியினாலேயே சாஸ்திர நிஷ்டர்கள் ஸ்வ யத்னத்தாலே பிறவிக்கடலை நீந்த நினைப்பதும்
சார நிஷ்டர்கள் தங்கள் பாரத்தை அவன் மேலே பொகட்டு ஸ்வ யத்ன ரஹிதராய் இருக்கையும் பிராப்தம் ஆகிறது –

21-சேஷத்வ போக்த்ருத்வங்கள் –சாஸ்திர முகத்தால் ஸ்வரூபத்தை அறியும் அளவில் -பகவச் சேஷத்வமும்
-பகவத் அனுபவ போக்த்ருத்வமே பிரகாசிக்கும் –
சாஸ்திர தாத்பர்யமான திரு மந்திரத்தின் உட் புக்கால் -பாரதந்தர்யமமும் போக்யதையும் ஆகிற ஸ்வரூப யாதாம்யம் பிரகாசிக்கும் –
இவற்றில் சேஷத்வத்தில் காட்டில் பாரதந்தர்யம் மிகச் சிறந்தது ஆகும் -எதனால் என்னில் –
இஷ்ட விநியோகத்துக்கு போக்யமாய் இருக்கும் அளவே சேஷத்வம் ஆகும் –
அவ்வளவே அல்லாமல் இவ்வஸ்துவை சேஷிக்கு இஷ்டமான படி விநியோகப் படுத்திக் கொடுக்கும் பாரதந்தர்யம் –
ஆகவே ஸ்வரூப யோக்யதா ரூப மான சேஷத்வத்தில் காட்டில் பல உபாதான ரூபமான பாரதந்தர்யமே சிறந்தது –
இனி போகத்தில் ஸ்வார்த்த புத்திக்கு ஹேதுவான போக்த்ருத்வத்தில் காட்டில் அந்த போக்த்ருத்வத்தை சேஷியினுடைய
உகப்புக்கு உறுப்பாக்கிக் கொடுக்கிற போக்யத்தை சிறந்ததாய் இருக்கும் –

22-ஞான சதுர்த்திகளின் -சேஷத்வம் பாரதந்தர்யம் -போக்த்ருத்வம் போக்யதை-என்கிற நான்கினுள் சேஷத்வமும் போக்த்ருத்வமும் தாழ்ந்தவை என்றும்
பாரதந்தர்யமும் போக்யதையும் உயர்ந்தவை என்றும் நிஷ்கர்ஷிப்பதற்கு திரு மந்திரத்தில் என்ன கமகம் உள்ளது என்னில் -அது நிரூபிக்கப் படுகிறது –
திரு மந்திரத்தில் சேஷத்வம் தோன்றின பின்பும் அதற்கு ஒரு விரோதி தோன்றி அதைக் களைய வேண்டியதாயிற்று –
அப்படியே அதில் போக்த்ருத்வம் தோன்றின பின்பும் அதற்கும் ஒரு விரோதி தோன்றி அதைக் களைய வேண்டியதாயிற்று
பார தந்தர்யம் தோன்றின பின்பு அதற்கு ஒரு விரோதியும் தோன்றிற்று இல்லையே -அதைக் களைய வேண்டிய பிரசக்தியும் இல்லை யாயிற்று –
போக்யதை தோன்றின பின்பு அதற்கும் ஒரு விரோதி தோன்றிற்று இல்லை -அதைக் களைய வேண்டிய பிரசக்தியும் உண்டாயிற்று இல்லை
ஆக மேலே விரோதி தோன்றும் படியாக நிற்கிற சேஷத்வ போக்த்ருவங்களில் காட்டில் -விரோதி தோன்றப் பெறாத
பாரதந்தர்ய போக்யத்தைகளே மேலானவை என்னத் தட்டில்லை-
இரண்டுக்கும் விரோதிகள் தோன்றினதாகவும் அவை களையப் பட்டதாகவும் சொன்னது இனி விவரிக்கப் படுகிறது –
பிரணவத்தின் மூன்றாவது அக்ஷரமான மகாரமானது ஆத்மாவைச் சொல்லுகிறது –
மன ஞானி என்கிற தாது அடியாக மகாரம் தோன்றிற்று ஆதலால் ஆத்மா ஞாதா வென்று சொல்லிற்று ஆகிறது –
ஞாதாவான போதே கர்த்தாவுமாய் போக்தாவுமாய் யாயிற்று –
இந்த போக்த்ருத்வமானது -அந்த போகத்திலே ஸ்வார்த்தம் ஆகிற கல்மஷத்தின் உதயத்தை -தான் அனுபவித்து தானே ஆனந்தப் படுவதாகிற விரோதியை
ஸஹித்து இருந்த படியால் தான் மேலே நம-என்று அந்த விரோதியைக் களைய நேர்ந்தது –
ஆகவே போக்த்ருத்வமானது மேல் எழுந்த சாமான்ய தர்மம் என்றும் போக்யதை என்பது வடி கட்டி எடுக்கப் பட்ட சாரமான தர்மம் என்றும் தேறிற்று-
இப்படியே சேஷத்வத்தில் காட்டிலும் பாரதந்தர்யமே சாரம் என்பதும் தேறும் -எங்கனே என்னில்
பிரணவத்திலே -இதிலே சதுர்த்தி ஏறிக் கழியும் -என்கிற முமுஷுப்படி ஸ்ரீ ஸூ க்தியின் படியே ஹாரித்த்தின் மேல் ஏறிக் கழிந்ததான
லுப்த சதுர்த்தியில் யாயிற்று சேஷத்வம் தோன்றி இருக்கிறது -இது தோன்றி இருக்கச் செய்தேயும் தன்னைத் தானே
ரஷித்துக் கொள்வதில் முயற்சி செய்வதற்கு ஹேது வான ஸ்வாதந்தர்யத்தைக் காட்டுகிற
ம -என்கிற சஷ்ட்டி ஏற்பட்டு அப்படிப் பட்ட ஸ்வாதந்தர்யத்தை -ந -என்று கழிக்க வேண்டியதாயிற்று -அதி கழிந்தே பாரதந்தர்யம் பிரகாசித்தது –
ஆக சேஷத்வம் மாத்திரம் தோன்றினால்-அதின் மேல் ஒரு விரோதி உண்டாகி அதனை பார தந்தர்ய வேஷத்தினால் கழிக்க வேண்டியும் –
போக்த்ருத்வம் தோன்றினால் தான் ஆனந்தப் படுவதாகிற ஒரு விரோதி உண்டாகி அதனை போக்யதா வேஷத்தினால் கழிக்க வேண்டியும்
நேர்ந்த படியால் விரோதியின் உத்பத்தியை ஸஹிக்குமவை ஞாத்ருத்வ போக்த்ருவங்கள் என்று ஸ்பஷ்டமாக அறியலாயிற்று –
பாரதந்தர்யமும் போக்யதையும் சித்தித்த பின்பு அவற்றின் மேலே ஒரு விரோதியும் தோன்றவும் இல்லை -அது கழிக்கப் படவும் இல்லை –
ஆகவே அவை விரோதியின் உத்பத்தியை சஹியாதவை என்ற காரணத்தினால் சிறந்தவை யாயின –
சேஷத்வ போக்த்ருவங்கள் வடிக் கட்ட வேண்டிய நிலைமைகள் என்றும் பாரதந்தர்ய போக்யதைகள் வடிக் கட்டியான நிலைமைகள் என்றும் தேறிற்று –

இப்படி உத்க்ருஷ்டமான பாரதந்தர்ய போக்யதைகளை ஆத்மாவுக்கு வடிவாக சாரஞ்ஞரான திரு மந்த்ர நிஷ்டர் உணர்ந்தமையால்
அவர்களுக்கு ஸ்வ யத்ன ராஹித்யம் உண்டாயிற்று -இங்கண் அன்றியே கீழ்ப் படியான சேஷத்வ போக்த்ருத்வங்களை
ஆத்மாவுக்கு வடிவாக சாஸ்திரிகள் உணர்ந்தமையாலே அவர்களுக்கு ஸ்வ ப்ரயத்னபரத்வம் உண்டாயிற்று என்று நிகமித்துக் கொள்க –

23-முளைத்து எழுந்த -ஸ்வப்ரயத்ன லவ லேசத்தையும் -ஸ்வ பிரயோஜன லவ லேசத்தையும் சஹியாதவையாய்
எம்பெருமானுடைய போகத்துக்கு மிகவும் பாங்காய் இருந்து கொண்டு ஸ்வ ரூபத்தை நிரூபிக்கும் அவையான
பாரதந்தர்யமும் போக்யத்தையும் கீழ்ச் சொன்ன தன்மைகள் இல்லாத சேஷத்வத்தையும் போக்த்ருத்வத்தையும் கீழ்ப் படுத்தித் தாமே மேலாய் இருக்கும் –
இந்த சூரனையில் பிரதமம்-மத்யமம் -சரமம்-என்று மூன்று பதங்கள் உள்ளன -திரு மந்திரத்தில் முதல் அக்ஷரத்தில்
லுப்த சதுர்த்தியில் தோன்றின சேஷத்வம் பிரதம தசை –
பிறகு அந்த சேஷத்வத்துக்கு ஆச்ரயத்தைச் சொல்லுமதான மகாரத்தில் தோன்றின ஞாத்ருத்வ பல ப்ராப்தமான போக்த்ருத்வம் மத்யம தசை –
அதன் மேலே நம பத-நாராயண பதங்களில் விளங்கின பாரதந்தர்யமும் போக்யதையும் சரமம் –
சரமமான இவை பிரதம மத்யம தசைகளான சேஷத்வ போக்த்ருத்வங்களைப் பகல் விளக்குப் போலே பயன் அற்றதாகவும்
மின் மினிப் பூச்சி போலே அற்பமான ஒளியை யுடையதாகவும் பண்ணும் என்றதாயிற்று –

24-நாலில் ஓன்று -கீழில் பிரவ்ருத்தி பரராகச் சொல்லப் பட்ட சாஸ்திரிகளுக்கும் -நிவ்ருத்தி பரராகச் சொல்லப் பட்ட
சாரஞ்ஞர்களுக்கும் -அந்த ப்ரவ்ருத்தி நிவ்ருத்தங்களுக்கு ஹேதுக்கள் எவை என்னில் –
சேஷத்வ போக்த்ருத்வங்கள் -பாரதந்தர்ய போக்யதைகள் -என்கிற நான்கினுள் சேஷத்வ போக்த்ருத்வங்களே
ஆத்மாவுக்கு ஸ்வரூபம் என்று கண்ட சாஸ்திர நிஷ்டர்களை –
போக்த்ருத்வமானது -போக்ய வஸ்து கிடைப்பதற்கு போக்தாவானவன் முயற்சி செய்ய வேண்டாவோ -என்னும் நினைவாலே
போக்ய பூதமான பகவத் விஷயத்தின் லாபத்துக்கு உறுப்பான உபாய ப்ரவ்ருத்தியிலே கொண்டு மூட்டும்
பாரதந்தர்ய போக்யதைகளையே ஸ்வரூப யுண்மை வடிவு என்று கண்ட சாரஞ்ஞர்களாகிய திரு மந்த்ர நிஷ்டர்களை போக்யதை யானது
போக்தாவான எம்பெருமான் அன்றோ தனக்கு போக்யமான இவ்வாத்ம வஸ்துவை பெறுகைக்கு முயற்சி பண்ணுவான் –
அப்பெருமானுக்கு போக்யமாய் இருக்கும் இவ்வாத்ம வஸ்துவுக்கு அவனைப் பெறுவதற்கான முயற்சிகளைச் செய்ய அதிகாரம்
இல்லை என்னும் நினைவாலே உபாய ப்ரவ்ருத்தியிலே நின்றும் மீள்விக்கும் -அதாவது நிவ்ருத்தியிலே மூட்டும் –
சேஷத்வ போக்த்ருத்வ பாரதந்தர்ய போக்யதைகள் ஆகிற நாலில் ஒன்றான போக்த்ருத்வம் ஆனது சாஸ்திரிகளை
உபாய அனுஷ்டானத்திலே பிரவர்த்திப்பிக்கும்
போக்யதை யாகிற மற்ற ஓன்று சாரஞ்ஞரை உபாய அனுஷ்டானத்தில் நின்றும் நிவர்த்திப்பிக்கும் என்றதாயிற்று –

25-முற்பாடர்க்கு–திருமந்திர நிஷ்டர்களுக்கும் -சேஷத்வ போக்த்ருத்வங்கள் உண்டே -அவர்கள் இடத்தில்
அவை எப்படி இருக்கும் என்னில் -அது சொல்லுகிறது இதில் –
சாஸ்திரிகள் என்று முற்படச் சொல்லப்பட்ட -உபாசகர்களுக்கு கர்மத்துக்கு அங்கமாய் உள்ள அவை இரண்டும்
-செயல் தீரச் சிந்தித்து வாழ்வாரே வாழ்வார் -என்ற திரு மழிசைப் பிரான் அருளிச் செயலின் படியே
இவ்வாத்மா செய்யக் கடவது ஒன்றும் இல்லை -எம்பெருமானே நிர்வாஹகன் என்று அனுசந்தித்து உபாய அனுஷ்டானம் ஆகிய
பிரவ்ருத்தியில் நின்றும் நிவ்ருத்தரான-சாரஞ்ஞர்களான பிரபன்னருடைய கைங்கர்யம் ஆகிய வ்ருத்தியிலே
எம்பெருமான் உகப்பை பின் செல்லுமத்தைத் தவிர தம் நிர்பந்தத்தைக் காட்டிக் கொள்ள மாட்டா –

26-கர்ம கைங்கர்யங்கள் -கீழ் சூர்ணிகையில் க்ரியா என்னும் சப்தத்தால் சொன்ன கர்மமும் -வ்ருத்தி -என்னும் சப்தத்தால் சொன்ன கைங்கர்யமும்
முறையே சாஸ்திரஞ்ஞர்கள் யுடையவும் சாரஞ்ஞர்கள் யுடையவும் எந்த அம்சத்துக்கு ஏற்று இருக்கும் என்னில்
கர்ம அனுஷ்டானமானது அஸத்யமுமாய் அநித்யமுமான வருணத்துக்கு -ஜாதிக்கு -ஏற்றதாய் இருக்கும்
கைங்கர்யமானது சத்யமுமாய் நித்யமுமான அடிமைக்கு ஏற்று இருக்கும்
வருணத்தை அசத்தியம் அநித்தியம் என்பது -ஆத்மாவுக்கு ஏற்பட்டது அன்று -வந்தேறியான -தேகத்தின் அளவிலே நின்று
அந்த தேகத்தோடே கூடவே கழிந்து போகுமது அன்றோ -அடிமை அப்படிப்பட்டது அன்றே
-திருமாலே நானும் உனக்கு பழ வடியேன் -என்றபடி யவாதாத்மபாவி தொடரும் -ஆகவே சத்யமுமாயும் நித்யமாயும் இருக்குமே –

27-இவற்றுக்கு விதி ராகங்கள் -வேதங்களில் யஜேதே என்றும் -ஜூ ஹூ யாத் -என்றும் உள்ள விதிகள் கர்மத்தைப் பிரேரிக்கின்றன –
கைங்கர்யம் அப்படி விதியினால் விளைவது அன்று -உகந்து பணி செய்து -என்று அருளிச் செய்கையாலே
அநு ராகமே கைங்கர்யத்தை பிரேரிக்கின்றது –

28-மண்டினாரும் -கண்டியூர் அரங்கம் மெய்யம் கச்சி பேர் மல்லை என்று மண்டினார் என்று உகந்து அருளினை திருப்பதிகளில்
ஊற்றம் உடையவர்கள் -பிரபன்னர் -கைங்கர்யத்துக்கு ஆஸ்ரய பூதர் -அந்த பாசுரத்திலேயே -மற்றையார்க்கு உய்யலாமே -என்று
மற்றையாராகச் சொல்லப்பட்ட உபாசகர் கர்மத்துக்கு ஆஸ்ரய பூதர்-

29-அருள் முடிய நிறுத்தி -அவரவர்கள் ஏதேனும் தேவதைகளை ஆஸ்ரயித்து பெற நினைக்கும் பேறுகள் எம்பெருமான் தன்னுடைய
அனுக்ரஹத்தாலே தேறுகின்றன என்னும்படி -தனக்குச் சரீர பூதர்களான தேவதைகளை நிறுத்தி அவர்களுக்கு அந்தர்யாமியாய்
நின்றவிடம் கர்மத்துக்கு இலக்கு -அங்கனம் இன்றியே -நல்லதோர் அருள் தன்னாலே காட்டினான் திருவரங்கம்
உய்பவர்க்கு உய்யும் வண்ணம் -என்றும் -கருத்துக்கு நன்றும் எளியனாய் -என்றும் சொல்லுகிறபடியே கேவலம் தன்
கருணையாலே மிகவும் எளியனாய் கொண்டு அர்ச்சாவதாரமாய் நிற்கிற இடமே கைங்கர்யத்துக்கு இலக்கு
அக்னி இந்திரன் சோமன் வருணன் பிரஜாபதி பசுபதி ப்ருஹஸ்பதி -வழிபாடுகள் எல்லாம் அந்தர்யாமி -பகவான் -ஒருவனே இலக்கு என்றபடி –

30-இவற்றாலே-இப்படி தேவதாந்த்ராமியையும் -அர்ச்சாவதாரத்தையும் விஷயமாக யுடைய இத்தன்மைகளாலே
சாதாரண விக்ரஹ விசிஷ்டனை விஷயமாக உடைய-கர்மம் சாதாரணம் என்றும் -அசாதாரண விக்ரஹ விசிஷ்டனை விஷயமாக யுடைய
கைங்கர்யம் அசாதாரணம் என்றும் சொல்லப்படும்-

31-ஜாதி ஆஸ்ரம -ப்ராஹ்மணாதி ஜாதிகளிலும் ப்ரஹ்மசர்யம் முதலிய ஆஸ்ரமங்களிலும் -ஜ்யோதிஷ்டோமாதி தீஷைகளிலும்
தர்மம் பேதிக்குமா போலே -அத்தாணிச் சேவகம் என்கிற அந்தரங்க சேவை யாகிற கைங்கர்யத்தில் அதிகரித்தவர்களுக்கு
தேவதாந்தரயாமி விஷயமாய் -தத் சரீர பூத தேவதா த்வாரா தத் ஆராதனம் ஆகையால் சாதாரணமாய் இருந்துள்ள
கர்மம் உறங்குவான் கைப் பண்டம் போலே தன்னடையே நழுவும் –

32-சாதன சாத்யங்களில் –சாதனத்தில் முதல் அடியான கர்மமும் -சாதியத்தின் சரம அவதியான கைங்கர்யமும் -இத்தார தம்யம் அறிந்தவர்களை –
நீங்கள் வர்ண தர்ம நிஷ்டர்கள் -நாங்கள் தாஸ வ்ருத்தி நிஷ்டர்கள் -என்று உறவு அறுத்து துறை வேறு இட்டு போகப் பண்ணிற்று
இங்கே வில்லிபுத்தூர் பகவர் வ்ருத்தாந்தத்தை ஸ்மரிப்பது-திரு வயிந்த்ர புரத்தில் துறை வேறு இட்ட ஐதிகம் –

33-வேத வித்துக்கள் – வேத வித்துக்களான பூர்வ பாக நிஷ்டர்கள் காயத்ரியின் உபதேசத்தால் பிறப்பிக்குமது-கர்ம நிஷ்டர்க்கு ஸ்ரேஷ்டமான ஜென்மம் –
வேத தாத்பர்ய வித்துக்கள் -திரு மந்த்ர உபதேசத்தால் பிறப்பிக்குமது கைங்கர்ய நிஷ்டர்க்கு ஸ்ரேஷ்டமான ஜென்மம் –

34-அந்தணர் மறையோர் -விசேஷண பூத சரீரத்வாரா வந்த வருணமும் -தத் ப்ரயுக்தமான வைதிகத்வமும் கர்ம படர்களுக்கு நிரூபகம்-
ஆத்ம வஸ்துவுக்கு அந்தரங்க நிரூபகமான சேஷத்வமும் -தத் ப்ரயுக்த கிஞ்சித் கரத்வமும் பிரபன்னர்க்கு நிரூபகம் –

35-ஒரு தலையில் –கர்ம நிஷ்டர் என்று சொல்லப் பட்ட ஒரு தலையிலே சரீர அநு பந்திகளான க்ராம குலாதிகளை இட்டு
வழங்கும் அந்த வியபதேசத்தை கைங்கர்ய நிஷ்டரான மற்றைத் தலையில் உள்ளவர்கள் -திரு மந்த்ர சித்த பகவத் சம்பந்த ஞான ப்ரயுக்தமாய்
சேஷத்வ விரோதியான அஹங்காராதிகள் இல்லாமையால் நிர்தோஷமாய் இருக்கிற இக்குலத்துக்கு அவத்யம் என்று கருதி
வேங்கடத்தை பாதியாக வாழ்வீர்காள் -என்றும் -கோயிலிலே வாழும் வைட்டணவன்-என்றும்
பகவத் அந்வயம் உள்ள தேச சம்பந்தத்தை இட்டு வியவஹரிப்பர்கள் –

36-விப்ரர்க்கு -ப்ராஹ்மணர்க்கு கோத்ர கூடஸ்தர் பராசராதிகள் -சரண கூடஸ்தர் பாராசர்யாதிகள்-ஸூத்ர கூடஸ்தர் போதாயநாதிகள்-
பிரபன்ன ஜனங்களுக்கு கூடஸ்தர் நம்மாழ்வார் திரு மங்கை ஆழ்வார் தொடக்கமான ஆழ்வார்களும் -எம்பெருமானார் முதலான ஆச்சார்யர்களும் –

37-அத்யயன ஞான அனுஷ்டானங்கள் -முதலிலே வேதத்தை ஆச்சார்ய உச்சாரண அநு உச்சாரண முகேன அக்ஷர ராசி கிரஹணம் பண்ணுகை யாகிற
அத்யயனத்தை பண்ணி -மீமாம்ச ஸ்ரவணாதிகளாலே வேதார்த்தம் அறிந்து தத் அநு ரூபமான அனுஷ்டானம் உண்டானால்
ப்ராஹ்மண்யம் சித்திக்குமா போலே திருவாய் மொழியை ஆச்சார்ய முகேன ஓதி உபதேச முகத்தால் அதன் பொருளை அறியப் பெற்று
அதற்குத் தக்கவாறு அனுஷ்ட்டிக்கவும் வல்லார் ஆனால் யாயத்து வைஷ்ணத்வம் சித்திப்பது –

38-இந்த உட் பொருள் கற்று -வேதம் ஓதுகைக்கு பிரயோஜனம்
ஈஸ்வரனை உள்ளபடி அறிந்து -ஸ்வரூப அனுரூபமான புருஷார்த்தம் கைங்கர்யம் –
என்று அத்யவசிக்கையாலே இப்படிப்பட்ட ஞானம் இல்லாமல் நான்கு வேதங்களையும் அதிகரித்தவர்களே யாயினும்
அந்த வேதத்தோடு தங்களுக்கு சம்பந்தம் இன்றி அதுக்கு அசல் ஆனவர்கள் என்று அறுதி இடப்பட்டு –
விஷ்ணு பக்தி விஹிநோ யஸ் சர்வ சாஸ்த்ரார்த்த வேத்யபி -ப்ராஹ்மண்யம் தஸ்ய நபவேத் தஸ்யோத் பத்திர் நிரூப்யதாம்-என்று
இவர்கள் ப்ராஹ்மணர் அல்லர் என்று உத்பத்தி ஆராயப்படும் –

39-எவ்வுலகத்து எவ் –ஓதுவார் ஒத்து எல்லாம் எவ்வுலகத்து எவ்வெவையும் -என்கையாலே
வேதமானது ஓதுமவர்களுடைய பேதத்தாலும் -லோக பேதத்தாலும் பஹு விதமாய் இருக்கும் –

40-அதில் சம்ஸ்க்ருதம் -இப்படி பஹு விதமான வேதத்தில் சம்ஸ்க்ருத வேதம் -திராவிட வேதம் -என்கிற பிரிவு –
சம்ஸ்க்ருதம் தன்னில் ருக் வேதம் யஜுர் வேதம் சாம வேதம் அதர்வண வேதம் என்கிற பிரிவு போலே –
வேத ராசி ஒன்றாய் இருக்கச் செய்தே-சம்ஸ்க்ருத பாஷா ரூபமானது ருக்காதி பேதத்தாலே
நான்காவது போலே -பாஷா பேதத்தாலும் பிரிந்து இருக்கும் என்றபடி –

41-செந்திறத்த–செந்திறத்த தமிழோசை வட சொல்லாகி -என்று ஸம்ஸ்க்ருதத்தோடு சஹாபடிதமும் பிரதம யுக்தமாகையாலே-
அகஸ்திய ப்ரகாசிதமான மாத்திரம் கொண்டு ஆகஸ்த்யம் என்னப் படுகிற திராவிடமும் அநாதியாய் யுள்ளதாம் –

42-வட மொழி மறை -மறை என்ற இவ்வளவே சொல்ல அமைந்து இருக்க வட மொழி மறை என்று விசேஷித்து சம்ஸ்க்ருத வேதம்
என்றது திராவிட வேதமும் உண்டு என்று நினைத்து அன்றோ -ப்ரதிகோடி இல்லாத போது இப்படி விசேஷிக்க வேண்டாவே –

43-வேத சதுஷ்ட்ய அங்க -ருக் வேதம் முதலிய நான்கும் -சீஷா வியாகரணம் நிருத்தம் சந்தஸ் கல்பம் ஜ்யோதிஷம் -ஆகிற ஆறு அங்கங்களும்
மீமாம்ச நியாய புராண தர்ம சாஸ்த்ராதிகள் -உப அங்கங்கள் எட்டுமாய் இருந்துள்ள பதினாலும் போலே
திரு விருத்தம் -திருவாசிரியம் -பெரிய திருவந்தாதி திருவாய்மொழி ஆகிற திராவிட வேதங்கள் நான்குக்கும்
திருமங்கை ஆழ்வாருடைய திவ்ய பிரபந்தங்கள் ஆறும் -மற்றை ஆழ்வார்கள் எண்மருடைய
விலக்ஷணருடைய பிரபந்தங்களும் அங்க உபாபங்கள் ஆகுமே –

44-சகல வித்யாதிக -வேதமானது தனது அங்க உபாங்களான சகல வித்யைகளில் காட்டிலும் தனக்கு உண்டான வைபவத்தாலே
மேன்மை பெற்றால் போலே நம் ஆழ்வாருடைய நான்கு திவ்ய பிரபந்தங்களும் தம் அங்க உபாங்களான
மற்ற எல்லா பிரபந்தங்களில் காட்டிலும் ஸ்வ வைபவத்தாலே மேலாய் இருக்கும் –

45-வேத நூல் –வேத நூல் பிராயம் என்று அத்தை வேத சாஸ்திரம் என்றால் போலே
இத்தையும் இரும் தமிழ் நூல் -என்று பெரிய திராவிட சாஸ்திரம் என்கையாலும் –
அத்தை சுருதிஸ் ஸ்ம்ருதிர் மமைவாஞ்ஞா -என்று -பகவத் ஆஞ்ஞா ரூபமாகச் சொன்னால் போலே
-இத்தையும் ஆணை யாயிரம் -என்று அப்படிச் சொல்லுகையாலும் –
அத்தை -வசையில் நான் மறை -என்று விப்ர லம்பாதி தோஷ ரஹிதம் என்றால் போலே
-இத்தையும் ஏதமில் ஆயிரம் -என்று நிர்தோஷமாகச் சொல்லுகையாலும்
அத்தை சுடர் மிகு சுருதி என்று ஸ்ரூயத இதை சுருதி -என்கிறபடியே பூர்வ பூர்வ உச்சாரண க்ரமத்திலே
ஸ்ரவண இந்த்ரியத்தாலே -கிரஹிக்கப் படுமதாகச் சொன்னால் போலே
இத்தையும் செவிக்கு இனிய செஞ்சொல் -என்று ஸ்ராவ்யமாகச் சொல்லுகையாலும்
அத்தை வேத நூல் ஓதுகின்றது உண்மை யல்லது இல்லை -என்று சத்யவாதி என்றால் போலே
இத்தையும் பொய்யில் பாடல் ஆயிரம் -என்று அசத்திய கந்த ரஹிதம் என்கையாலும்
அத்தை -பண்டை நான் மறை -என்று அநாதியாகவும் -நிற்கும் நான் மறை என்று மேல் அழிவு இல்லாததகாகவும்-சொன்னால் போலே
இத்தையும் -முந்தை யாயிரம் -அழிவில்லா யாயிரம் -என்று அவ்வண்ணமாகவே சொல்லுகையாலும்
இத லக்ஷணங்கள் எல்லாம் இரண்டுக்கும் ஒக்கும் என்று உணரத் தக்கது –

46-சொல்லப் பட்ட வென்ற -குருகூர்ச் சட கோபன் சொல்லப்பட்ட வாயிரம் -என்று திருவாய் மொழியில் ஆழ்வாருக்குச் சொன்ன கர்த்ருத்வம் –
அநாதி நிதநா ஹ்யேஷா வாகுத்ருஷ்டா ஸ்வயம்புவா -என்று ஸ்ம்ருதி அந்த வேதத்தை ப்ரஹ்மா ஸ்ருஷ்ட்டித்தான் என்றால் போலே –
அநாதி நிதனமான சந்தர்ப்பம் ப்ரஹ்மாவின் வாக்கில் நின்றும் ஆவிர்பவித்த மாத்திரம் கொண்டு ப்ரஹ்மாவுக்கு அதில் சொன்ன கர்த்ருத்வம் போலே இதிலும்
ஆழ்வாருக்குச் சொன்ன கர்த்ருத்வம் ப்ரகாசத்வ ப்ரயுக்தம் ஆகையால் -இத்தால் இதனுடைய நித்யத்வ அப்வருஷேயங்களுக்கு ஹானி வாராது என்கை –

47-நால் வேதம் கண்ட – நாலு வேதங்களையும் சாஷாத் கரித்த ஸ்ரீ வேத வியாச பகவான் வேதாதிகளின் முன்னைய ஆனு பூர்வியை தர்சித்துச் சொன்ன படியால் –
தர்ச நாத் ருஷி -மனன சீலோ முனி -கவி -க்ராந்த தர்சீ -என்கிற அர்த்தங்களை நினைத்துக் கொண்டு
ருஷேஸ் தஸ்ய மஹாத்மன என்றும் -வ்யாஸ ரூபி மஹா முனி -என்றும் -கவி முக்ய பாராசர்ய-என்றும்
-அவரை ருஷி முனி கவி என்றால் போலேயும்-
மந்த்ர தர்சிகள் ஆனவர்களை பூர்வ சித்த சந்தர்ப்பத்தை சாஷாத் கரித்துச் சொன்ன வர்கள் என்னும் இடம் தோற்ற
நம ருஷிப்யோ மந்த்ர க்ருத்ப்யா-என்றும் பகவான் ஸுநக முனி என்றும் இத்யாதிகளாலே ருஷி முனி என்றால் போலேயும்
திராவிட வேதமான இதன் பூர்வ சித்த ஆனு பூர்வியை சாஷாத் கரித்துப் பேசின இவ்வாழ்வாரையும்
-ருஷிம் ஜுஷா மஹே-என்றும் சடகோப முனிம் வந்தே -என்றும் –
உலகம் படைத்தான் கவி யாயினேற்கு என்றும் –முன்பு உண்டான சந்தர்ப்பத்தை தர்சித்துப் பேசினவர் என்னும் இடம் தோற்ற
ருஷி என்றும் முனி என்றும் கவி என்றும் சொல்லா நிற்கும் –

48-படைத்தான் கவி -பிரளயம் கொண்ட உலகத்தை முன்பு போலே ஸ்ருஷ்டித்த ஈஸ்வரனுடைய கவி நான் –என்னும் அர்த்தம் தோற்ற –
ஒன்றி ஒன்றி உலகம் படைத்தான் கவி யாயினேற்கு -என்று ஆழ்வார் தாம் அருளிச் செய்த பாசுரத்தை நோக்கும் இடத்து
ஸ்ருஷ்ட்டி தோறும் சந்த்ர ஸூ ர்யாதி சகல பதார்த்தங்களும் யதா பூர்வ கல்பநமாய் வருமா போலே
இந்த திராவிட வேதமும் ஸ்ருஷ்ட்டி தோறும் யதா பூர்வ கல்பநமாய் வரும் என்று தோற்றுமாயிற்று-

49-உறக்கம் தலைக் கொண்ட –சம்ஹார சமயத்திலே நாம ரூப விபாக அநர்ஹமாய்-சத்வஸ்தமாய்க் கிடந்த வித்தை
ஸ்ருஷ்ட்டி காலம் வந்தவாறே விபக்தமாக்கி மஹதாதி சகல தத்வங்களையும் அண்டீத்தையும் ஸ்ருஷ்டித்து
-சதுர்முக ஸ்ருஷ்டிக்கு முன்னாக ஏகார்ணவத்திலே -இவை நல் வழியாய்க் கரை சேரும் விரகு ஏதோ என்று
அனுசந்திக்கை யாகிற யோக நித்ரையைச் செய்த பின்பு ஸூப்த பிரபுத்த நியாயத்தாலே ஸம்ஸ்காரகதமாய்க் கிடந்த
நாலு வேதங்களையும் ஆனு பூர்வி தப்பாமல் ஸ்மரித்த தன் தகப்பனான சர்வேஸ்வரன் பக்கல் அவ்வேதங்களை ஓதின
சதுர்முகன் நித்ய ஸ்நான-உபவீத கிருஷ்ணாஜிநதாரன-
பிஷான்ன போஜன -இந்திரிய ஜய-சதா அத்யயன பரத்வங்களான ப்ரஹ்மசர்ய லக்ஷணங்களோடே கூடினவனாய்
தனக்கு ஜ்யேஷ்ட புத்திரனான ருத்ரன் முதலானோர்க்கு அந்த வேதத்தை ஓதுவித்தால் போலே
சம்ஹார காலத்தில் நாம ரூபங்களை இழந்தால் போலே சத்தையும் இழந்து போகாமல் எந்தையான முறையால்
தன் மேலே ஏறிட்டுக் கொண்டு நோக்கி மீண்டும் கரண களேபரங்களை தந்து ஞான விகாசத்தைப் பண்ணின
ஆதி பகவான் தானே ஆழ்வாருக்கு ப்ரஹ்ம குருவாய் இரவும் பகலும் முன்னுருச் சொல்ல ஆழ்வாரும்
அநு உச்சாரணம் பண்ண -இப்படி அவன் பக்கலில் ஓதின
இவ்வாழ்வாரும் தம் பக்கலில் க்ருதஞ்ஞரான மதுர கவிகள் போல்வாரை அப்யஸிக்க -வேதமானது தன்னை ஓதுமவர்களை இட்டு
நிரூபிக்கப் படுமதாகையாலே -ஆதர்வணம்-காண்வம் -தைத்திரீயம் -என்று பேர் பெற்றால் போலே ஆழ்வார்
இந்த திராவிட வேதத்துக்கு முதன்மையான அதயேதாவானது பற்றி இதுவும் சடகோபன் சொல் -என்று பேர் பெற்றது –

ஆக -37-சூரணையில் ப்ரஸ்துதமான திருவாய் மொழியின் வேதத்வம் இவ்வளவும் வர சாதிக்கப் பட்டது –

—————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ உ .வே. காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

-ஸ்ரீ தேசிகன் அருளிச் செய்த ஸ்ரீ பரமார்த்த ஸ்துதி –

December 14, 2016

ஸ்ரீ மான் வேங்கட நாதார்ய கவிதார்க்கிக கேஸரீ
வேதாந்தாசார்யோ மே சந்நிதத்த்தாம் சதா ஹ்ருதி —

திருப்புட் குழி -ஸ்ரீ விஜயராகவ -போரேற்று நாயனார்
திருப் புட் குழி அம் போரேறு -கலியன் -திரு விட வெந்தை -பதிகத்திலும் -திருமடலிலும் மங்களா சாசனம் –
அலம் கெழு தடக்கை ஆயன் வாய் ஆம்பற்கு அழியுமால் என்னுள்ளம் என்னும்
-புலன் கெழு பொரு நீர்ப் புட் குழி பாடும் போதுமோ நீர் மலைக்கு என்னும்
குலம் கெழு கொல்லி கோமள வல்லி கொடியிடை நெடு மழைக் கண்ணி
-இலங்கு எழில் தோளிக்கு என் நினைந்து இருந்தாய் இடவெந்தை எந்தை பிரானே –2-7-8-
-புலன் கெழு பொரு நீர்ப் புட் குழி பாடும் –புஷ்கரணியே நமது இந்திரியங்களை கொள்ளுமே -இங்கு –
மரகதத்தை -புட் குழி எம் போர் ஏற்றை -திரு மடலில் –
மரகத வல்லி தாயார் -கமலா –மின்னை -இரு சுடரை –வெள்ளறை யுள் கல்லறை மேல் –
-பொன்னை மரகதத்தை புட் குழி எம் போர் ஏற்றை -தாயார் உடன் சேர்த்து மங்களா சாசனம் –
வறுத்த பயர் முளை யிட்டு -புத்ர பாக்யம் -இறந்த குழந்தையை மீட்டு கொடுத்த -பரீக்ஷித் -குரங்கு முதலைகளை உயிர் கொடுத்து மீட்ட –
தன்னடையே வரும் பலன்கள் -மோக்ஷம் ஒன்றே நமது குறிக்கோள் -வியர்வை தானே வருமே –
ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் அவதார ஸ்தலம் -கீல் குதிரை -உண்டே -ஸ்ரீ -எம்பெருமானார் எழுந்து அருளி கற்ற ஸ்தலம் –

அவனே பரமார்த்தம் -அர்த்தம் -உபாயம் -பரமமான உபாயம் -உபாயாந்தரங்கள் பிரபத்தி -ஆச்சார்ய அபிமானம் -சரம பர்வ நிஷ்டை
-பஞ்சமோ உபாய நிஷ்டர்கள் -அவனும் இதில் அந்தரகதம்—உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன் என்று
இருப்பவர்களுக்கு ஆச்சார்ய அபிமானம் உத்தாரகம் என்பது இதனாலே தானே –
கையைப் பிடித்து கார்யம் கொள்ளாமல் காலை-திருவடியில் விழுந்து கொள்வது போலே தானே -உதர முடியாதே -மோக்ஷ ஏக உபாயம் –
சரணாகதி பிரபத்தி ஸ்தோத்ரம் என்றபடி —
ஸ்ரீ ராமாயணம் தானே சரணாகதி சாஸ்திரம் -தேவர்கள் சரணாகதி தொடங்கி விபீஷணன்
–சரணாகதி வரை உண்டே –விஜயராகவன் தானே இங்கே –
சர்வாதிகாரம் -விளம்பம் இல்லா பலன் -யாருக்கும் கிட்டும் -ஜடாயுவுக்கும் -காட்ட -திருப் புள்ளம் பூதங்குடி -இங்கும் உண்டே
க்ருத்ர புஷ்கரணி இங்கு தான் –சம்ஸ்காரம் வெப்பம் தாங்காமல் -நாய்ச்சியார் இடது வலது மாறி -சற்றே ஒதுங்கியும் சேவை இங்கே உண்டே
ரண புங்கவர் திரு நாமம் சொல்லி அருளுகிறார் இதில்
அர்த்தம் -பிரயோஜனம் -பரம புருஷார்த்தம் -இதுவே -அத்தை பற்றிய ஸ்தோத்ரம் -என்றுமாம் –
ப்ரீதி காரித கைங்கர்யம் தானே பரம புருஷார்த்தம் -மீளுதலாம் ஏதம் இலா -மாக வைகுந்தம் –
கற்பார் ராம பிரானை அல்லால் மற்றும் கற்பரோ புல் பா முதலா புல் எறும்பாதி ஒன்றும் இல்லா –நற்பாலுக்கு உய்தனன் அன்றோ –
உபாய உபேய ஐக்கியம் -இயற்கையாகவே –
பாட்டினால் உன்னை என் நெஞ்சத்து இருந்தமை காட்டினாய் -ஸ்துதியே பரமார்த்தம் -பாட்டினால் கண்டு வாழும் பாணர் தாள் பரவ வேண்டுமே –
பிரணவம் -பிரகர்ஷனே ஸ்த்துத்யே நன்றாக ஸ்துதிக்கிறோம் –
கால ஷேபம்-பரமார்த்தம் என்றபடி -பாட்டின் இன்னிசை பாடித் திரிவனே –ஸ்துவன் நாம சகஸ்ரரேண –
பரமார்த்தம் புருஷார்த்தம் ஸ்துதி சரணாகதி -மானஸ காயிக வாசிக -மூன்றாலும் -அவனாலே அவனைப் பெறுவதே -ஒரே சப்தத்தில் அடக்கி
ஸ்துதி முதலிலா பரமார்த்தம் முதலிலா -படித்தால் நூற்று நூறு -நூற்றுக்கு நூறு விளக்கி படிக்கச் சொல்வது போலே
புருஷார்த்தம் முதலில் சொல்லி -ஸ்தோத்ரம் அப்புறம் -/அனுஷ்டானத்தில் ஸ்தோத்ரம் முதலில் –
அவன் உபேயம் தான் நமக்கு வேறே வழி இல்லாமல் அன்றோ உபாயமாக போற்றுகிறோம் -கருமுகை மாலை சும்மாடு
பரம -பரம ஸ்வாமி –பரா மா யஸ்ய யாருடையவளோ அவன் -அஸ்ய -அர்த்தம் -அவதார பிரயோஜனம் –
அமுதினில் வரும் பெண்ணைக் கொள்ள அன்றோ –
முமுஷுக்களை உருவாக்க -மிதுனமாக -இதுவே பரமார்த்தம்
முமுஷுக்களை உருவாக்கும் பெருமாள் பற்றிய ஸ்துதி என்றுமாம் –

———————————————-

ஸ்ரீ மத் க்ருத்ர ஸரஸ்தீர பாரிஜாதம் உபாஸ்மஹே
யத்ர துங்கை ரதுங்கைஸ் ஸ ப்ரண தைர்க்ருஹ்யதே பலம் -1-

ஸ்ரீ மத்-மங்களம் -சோபை உள்ள –
க்ருத்ர ஸரஸ்தீர -க்ருத்ர புஷ்காரணியில் உள்ள சரஸ் -பொய்கை-தீர கரையில்
பாரிஜாதம் உபாஸ்மஹே -கல்பக வ்ருக்ஷம் போன்ற போரேற்று நாயனார் -ஸ்ரீ விஜய ராகவனை –
வண் த்வரை நட்டான் -இங்கே அவனே -பன்மையில் உபாசனத்தின் பெருமையால் -இனிமை தனி அருந்த மாட்டாரே
-அடியோமோடும் நின்னோடும் பல்லாண்டு போலே
யத்ர துங்கை ரதுங்கைஸ் ஸ ப்ரண தைர் -சரணாகதி பண்ணினவர்களால் –யார் ஒரு பெருமாள் இடம்
-உயர்ந்த தாழ்ந்த அனைவரும் -துங்கை அதுங்கை -ஸ -உம்மைத் தொகை -தாழ்ந்தவர்களாலும் –
க் ருஹ்யதே பலம் -பயனைப் பெற்றுக் கொள்வோம் –
பாரிஜாத மரத்தை விட வியாவருத்தி -குகன் சுக்ரீவன் ஜடாயு போல்வாரும் –வால்மீகி வசிஷ்டர் விசுவாமித்திரர் ஜாபாலி மட்டும் இல்லையே
ப்ரணதன்- பிராக்வீ பாவம் -நம கை கூப்பி -விநயத்துடன் -வணங்குடை தவ நெறி -ப்ரணத பரதந்த்ரன் அன்றோ
கைங்கர்யத்தால் உயர்ந்தவர் ஜடாயு –
திர்யக் கூட மோக்ஷம் கொடுத்தாய் -யோகம் செய்ய -யோக்யதை இல்லை -ப்ராஹ்மண ராக்ஷஸரை -கையால் அடி பட்டால்
மோக்ஷம் இல்லை என்னும் சாஸ்திரம் -புலஸ்திய குலம்–இரண்டும் இருந்தாலும் கொடுத்தாய் -ஆழ்வார்கள் ஆச்சார்யர்கள் அன்றோ
நீ செய்த கார்யம் -விரோதி பரிகாரம் பண்ணி இது சர்வம் சம்ஜயம் -செய்ய வேணும்
கைங்கர்ய சிகாமணி அன்றோ -பிறப்பியத்துக்கு இளைய பெருமாள் பெரிய உடையார் சிந்தையந்தி பிள்ளை திரு நறையூர் அரையர் போலே –
சம்பாதி காதுக்கு எட்டிற்றே ஜடாயு -வானர முதலிகள் மூலம் -கடல் கரையில்
வ்ருக்ஷம் -வாஸி பார்க்காதே -மனுஷ்யன் தானே பார்ப்பான் -நதியோ மரமோ உயர்ந்தவன் தாழ்ந்தவன் பார்க்காதே –
பரமார்த்தம் நீ ஒருவனே –நாம் அனைவரும் வில்லாண்டான் ஒருவனே தஞ்சம் என்று இருப்போம் –
அகில புவன -ஜென்ம ஸ் தேமா–அங்கு –
அனுஷ்டுப் எட்டு எழுத்தாம் -திருமந்தார்தம் -இந்த முதல் ஸ்லோகம்
புங்கவ -ஆண் பசு காளை-சமர – போர் ஏறு -போர் ஏற்று நாயனார் –

——————————————–

குருபி த்வத் அந்நிய சர்வ பாவை -குண சிந்தவ் க்ருத சம்ப்ல வஸ்வதீயே
ரண புங்கவ வந்தி பாவமிச்சன் அஹமஸ்யேகம் அநுக் ரஹாஸ் பதம் தே -2-

குருபி த்வத் அந்நிய சர்வ பாவை -உன்னை தவிர வேறு ஒன்றிலும் பேச்சு நினைவு செயல் இல்லாத
-சிந்தை செயல் சொல்லாலும் உன்னையே அடைந்த எனது ஆச்சார்யர்கள்
-குண சிந்தவ் க்ருத சம்ப்ல வஸ்வதீயே-குணக்கடலில் விழுந்தேன் -சம்சாரக் கடலில் இருந்தேன் மற்றவர் சொல்ல
-இவரோ கவி ஸிம்ஹம் அன்றோ -ஆச்சார்யர் கிருபையால் அன்றோ அவனது -சீர் என்னும் கடலில் அழுந்த –
ப்லவம் கப்பல் சம்ப்லவம் தாண்ட முடியாத -க்ருத -அழுந்தி –
ரண புங்கவ வந்தி பாவமிச்சன்-யுத்தத்தில் சாமர்த்யம் -பும் கவ காளை -வந்தி பாவம் -வணங்கும் -இச்சன் ஆசை உண்டு
நெஞ்சு வாய் கை அனைத்தும் காணேன் -கடல் கொண்டதே –
அடியேன் ஆச்சார்யர்களும் இங்கே அழுந்தி இருக்க
ரண புங்கவ -ராமர்- -கண்ணன் தேரோட்டி தோஷங்களால் நம்மை ஆள் கொள்வான் –
குணங்களால் வென்றவர் பெருமாள் –
ஒரு வில்லால் –செருவிலே அரக்கர் கோனை செற்ற சேவகனார் -அணை காட்டியது கோதண்டம் பிடித்த பிடியில் –
ஓர் வெங்கணை உய்த்தவன் -ஒரே -அமோஹ பாணம்-மராமரம் ஏழும் எய்தாய் ஒரே அம்பால்-
ஒரு சொல் ஒரு வில் ஒரு மனைவி -ஒரே செயல் -அன்றோ பெருமாளுக்கு –
சஸ்திரம் தரித்தவர்களில் ராமனாக இருக்கிறேன் என்பான் கீதாச்சார்யனும்
கச்சாமி–ரண-சண்டையில் அயர்ந்த -ரஜனீயன் -பெருமாள் – -ரணத்தாலா ராமனாலா-
சத்ருக்களும் வாழ்த்தும் படி -பெருமை பெருமாளுக்கு –மண்டோதரி சதுஸ்லோகி /தாரை / சூர்ப்பணகை–
ஸ்தோத்ரம் பண்ண ஆசை -கிளி போலே ஆச்சார்யர்கள் பயிற்று வைக்க –
அஹமஸ்யேகம் அநுக் ரஹாஸ் பதம் தே–அஹம் -அடியேன்-உன்னுடைய அனுக்ரஹத்துக்கு பாத்திரமாக உள்ளேன் –
ஞானக்கை கொடுத்து -மீட்டு அருள வேணும் –
ஜனன மரண சக்ர நகர -அகதி சரண்யன் ஆளவந்தார் -அநந்த சாகரம் அந்தர் நிமக்நன் -குமிழ் நீர் உண்ணும் படி -குணக்கடலில் ஆழ்ந்து —
சிந்தை மற்று ஒன்றில் திறத்தினில் இல்லாமல் -சிந்தையாலும் சொல்லாலும் செய்கையாலும் -தேவ பிரானே தந்தை தாய் என்று
அடைந்தவர் சடகோபன் -our-நம்மாழ்வார்
கைங்கர்ய நித்ய நிராதயை பவத் ஏக போகை -நிதியை அநு க்ஷண –நவீனம் ருசாந்தர பாவை -நீச பாவை பரஸ்பரம்
-மத் தெய்வம் -இப்படி உள்ளவர்களே -சிறந்த மருந்து நமக்கு சம்சாரத்தில் –
உன் அடியார்க்கு என் செய்வான் என்றே இருத்தி –நின் புகழில் வைக்கும் சிந்தையிலும் மற்று இனிதோ — நீ கொடுக்கும் வைகுந்தம் என்று அருளும் வான்
கார் கலந்த மேனியான் -கை கலந்த ஆழியான் -பாம்பணையான் -சீர் கலந்த சொல் நினைந்து போக்காரேல் –என் நினைத்து போக்குவார் இப்போது –
சீலம் கொள் நாதமுனி –
குண அனுசந்தானம் அபய ஹேது -ஸூவ தோஷ அனுசந்தானம் பய ஹேது
வெளியில் வராமல் அனுபவித்து ஸ்தோத்ரம் பண்ண வேண்டும்
ஆயர் கொழுந்தாய் அவரால் புடை யுண்ணும் –தூய அமுதை பருகி பருகி மாயப் பிறவி மயர்வு அறுத்தேனே –

———————————————-

புவநாஸ்ரய பூஷணாஸ்திர வர்க்கம் -மநசி தவன்மயதாம் மமதாநோது
வபுராஹவ புங்கவ த்வதீயம் மஹிஷீணாம் அநிமேஷ தர்ச நீயம் -3-

புவநாஸ்ரய பூஷணாஸ்திர வர்க்கம் -அஸ்திரம் பூஷணங்களுக்கு ஆஸ்ரயம் -புவனங்களுக்கு ஆஸ்ரயம்
அஸ்திர பூஷண அத்யாயம் -நமக்கு பிரதி நிதி -கௌஸ்துப மணி ஸ்வரூபம் -நீல நாயக கல் -பகவான் ஹரி -ஜீவாத்மா வர்க்கம் –
ஸ்ரீ வத்சம் -மறு-பிரகிருதி மண்டலம் -/ கதை -தர்ம பூத ஞானம் புத்தி
அஹங்காரம் சாத்விக இந்திரியங்கள் -தாமச பூதங்கள் தன்மாத்திரை -சங்கம் சார்ங்கம் இவை
ஞானம் கத்தி -அஞ்ஞானம் உறை/ வைஜயந்தி -பஞ்ச தன்மாத்திரைகள் –
மயிர்க்கால் ஒன்றால் புவனம் தாங்குகிறேன் -கீதை
க்ரீடாதி –நூபுராதி அநந்த திவ்ய ஆபரணம் -சங்கம் -கடகம் -ஷோடசாயுதங்கள் –
-மநசி தவன்மயதாம் மமதாநோது -அதுவாகவே இருக்கும் தன்மை –திருமேனி மனஸ் நிறையும் படி
வபுராஹவ புங்கவ த்வதீயம்-த்வதீயம் வபுஸ்
மஹிஷீணாம் அநிமேஷ தர்ச நீயம் – அகலகில்லேன் இறையும் திரு பூமி நீளா தேவிகள் கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டே
–திரு மேனியும் சுத்த சத்வமயம் -தியானத்துக்கு விஷயம் ஆகட்டும்
மையார் கருங்கண்ணி –செய்யாள் -கறுத்தவனை பார்த்து -செய்யலை பார்த்து -சிவந்த கண்கள் அவனுக்கு –
சதா பஸ்யந்தி ஸூ ரய –இருந்து இருந்து -அரவிந்தலோசனா என்று என்றே
-கரும் தடம் கண்ணி -தாயார் திரு நாமம் -தொலை வில்லி மங்கலம் -வட கரையில் –
தம் த்ருஷ்ட்வா பர்த்தாராம் -பரிஷஸ் வஜே -நம் பெருமாள் நிற்க -பெரிய பெருமாள் தாயார் பருகி பருகி –
உன்னை என் நெஞ்சத்து இருந்தமை காட்டினாய் –
என் நெஞ்சத்துள் இருந்து இவை மொழிந்து –
யமம் நியமம் –அஷ்டாங்க யோகம் -நெஞ்சில் நிறைய தியானம் சமாதி நிலைக்கு
மஹிஷிகளுக்கு சேவை சாதிப்பது போலே எங்களுக்கும் வேண்டுமே என்கிறார் –

——————————————–

அபி ரஷிது மக்ரத ஸ்திதம் த்வாம் ப்ரணவே பார்த்த ரதே ஸ பாவ யந்த
அஹித ப்ரசமைர யத்ன லப்யை கத யந்த்யாஹவ புங்கவம் குணஜ்ஞா -4-

அபி ரஷிது மக்ரத ஸ்திதம் த்வாம் –
அக்ரே -முன்னே -ரக்ஷணம் ஒரே செயலுக்கு -ஸ்திதம் த்வாம் எழுந்து அருளி -காக்கும் இயல்வினன் கண்ணன் –
ஸூ பிரயத்தன நிவ்ருத்தி -அஹம் மத் ரக்ஷண பரன் பலன் அனைத்தும் என்னது அல்ல ஸ்ரீ யபதி உன்னதே -புத்திசாலிகள் சொல்வார்கள் –
அடியார்களை ரஷிப்பதே சோறு அவனுக்கு -உணவைப் பறிக்க கூடாதே -ஈஸ்வர பிரவ்ருத்தி விரோதி – ஸ்வ பிரவ்ருத்தி நிவ்ருத்தி –
தமேவ சரணம் -ஆட்டு வாணியன் இடம் முலை குடிக்கும் குழந்தையை தாய் இடம் பிடுங்கி கொடுப்பது போலே –
-கழுத்துக்கு கட்டி நாமே ரசிப்போம் -களைவாய் துன்பம் களை யாது ஒழிவாய் களை கண் மாற்றிலம் –
குரங்கு முதலிகளை இரவில் காத்த -வில் நழுவாது சொல் நழுவாது –
ப்ரணவே பார்த்த ரதே ஸ பாவ யந்த-
-அகாரத்தில்-பார்த்தன் ரதத்திலும் முன் தட்டிலும் –அவ ரக்ஷனே தாது -மந்த்ரத்திலும் –
அஹித ப்ரசமைர யத்ன லப்யை
-அயத்தனம் லப்தை முயலாமலே அடைய -அஹிதர்கள் அழியவும்
கத யந்த்யாஹவ புங்கவம் குணஜ்ஞா
ஆஹவ புங்கவர் -ஆஹவம் சண்டைக் களம் யஜ்ஜம் -என்றுமாம் –ஏத்துமின் -போர் பாகு தான் செய்து அன்று
ஐவரை வெல்வித்த தேர்ப்பாகன் – -பாகில் பிடிபட்ட பாவை –பராங்குச நாயகியை பிடிக்க பக்குவமான பாகு இவன்
–பிரயத்தனம் செய்யாமல் -பீஷ்மாதி கள் அழிய –
அழல விழித்தான் அச்சோ அச்சோ -பால் வர வில்லை உதைத்தால் சகடாசுரன் மாய -பால் வர உறிஞ்ச பூதனை மாள –

———————————————

கமலா நிரபாய தர்மபத்நீ கருணாத்யா ஸ்வயம் ருத்விஜோ குணாஸ்தே
அவநம் ஸ்ரயதா மஹீந மாத்யம் ஸ ஸ தர்ம ஸ்த்வதநன்ய சேவ நீய -5-

கமலா நிரபாய தர்மபத்நீ –
இயம் சீதா மம சுதா சக தர்ம சரிதவ —சரணாகத வத்சலன் -இதுவே தர்மம் இவனுக்கு –
புருஷகார பூதை -நீரிலே நெருப்பு பூத்தால் போலே –கல்யாண குணங்களை கிளப்பி விட வேண்டுமே -உருவகம்
யஜ்ஜம் -அவன் சரணாகத ரக்ஷணம் -நிரபாய -பிரியாமல் அகலகில்லேன் இறையும்–சக தர்ம சாரிணி
–ஈஸ்வரன் கார்யம் செய்யான் இவள் புருஷகாரம் இல்லாத பொழுது –
மரகத வல்லி தாயார் -கமலா –மின்னை -இரு சுடரை –வெள்ளறை யுள் கல்லறை மேல் –பொன்னை மரகதத்தை
புட் குழி எம் போர் ஏற்றை -தாயார் உடன் சேர்த்து மங்களா சாசனம் –
க ம லாதி -கொடுக்கிறாள் வாங்குகிறாள் -நம்மை அவன் இடம் –
கருணாத்யா ஸ்வயம் ருத்விஜோ குணாஸ்தே
–குணங்கள் ருத்துக்கள் -தயை கருணை போல்வன -நெய் பால் தயிர் ஹோமம் வேண்டுமே
அவநம் ஸ்ரயதா மஹீந மாத்யம்-
சரணாகதர்களை காப்பதே யாகம் -அஹீன யாகம் ஒருவரே செய்யலாம் -16 கல்யாண குணங்கள் –ஆத்யம் உயர்ந்தது –
ஸ ஸ தர்ம ஸ்த்வதநன்ய சேவ நீய-
உன்னை தவிர வேறு யார்க்கும் செய்ய முடியாதே -ராவணன் இடம் -சீதை -கையைப் பிடி சரணாகத வத்சலன்
-சர்வ லோக சரண்யா ராகவாய மஹாத்மனே -விபீஷணன்
குற்றம் பார்க்காமல் இருக்க பிராட்டி -கல்யாண குணங்கள் -இரண்டும் வேண்டுமே
-த்ரிஜடை சொப்பனம் -ராஜசிகள் -லகுதர ராமஸ்ய கோஷ்ட்டி –

——————————————–

க்ருபணா ஸூ திய க்ருபா ஸஹாயம்-சரணம் த்வாம் ரண புங்கவ ப்ரபந்நா
அபவர்க்க நயாதநத்ய பாவா வரிவஸ்யா ரஸ்மேகம் ஆத்ரியந்தே -6-

க்ருபணா ஸூ திய க்ருபா ஸஹாயம்
கிருபையால் -துணை -ஸஹாயம் -லஷ்மி ஸஹாயம் -வறுமையில் தவிப்பவர்கள் -நல்ல புத்தி உள்ளவர்கள்
உபாயாந்தரங்கள் இல்லாதவர்கள் என்றவாறு -முக்கிய அதிகாரம் -சரணாகதிக்கு –
அதிகாரி நியமம் கால தேச நியமம் இல்லை -கேவலம் விஷய நியமமே உண்டு
நோற்ற நோன்பிலேன் -இத்யாதி -/ குளித்து மூன்று அனலை ஓம்பும் –இத்யாதி /சர்வ தர்மான் பரித்யஜ்ய /
மாம் ஏகம் சரணம் வ்ரஜ –விட்டே பற்ற வேண்டும் –
அறிவு ஒன்றும் இல்லாத -கர்மா ஞான பக்தி உபாயமாக இல்லாமல் -கைங்கர்யத்தில் புகும் –
ப்ரஹ்மாஸ்திரம் மஹிமை அறிந்த புத்திமான்கள் என்றபடி -பிரபத்திக்கு ஹேது சோகம் -பலன் சோக நிவ்ருத்தி
கர்மாதீனம் ஒழிந்து கிருபாதீனம் அந்த பேரின்பம் அடைவோமே
தயா ஷாந்தி –ஆச்ரித ஸூ லபன் ஸுந்தர்யம் -ஸஹாயம்
எதுவே என் பணி என்னாது அதுவே ஆட் செய்யுமீடே –
ச ஏகதா பவதி-அங்கு உண்டே -அநந்தம்-அநந்த கைங்கர்யங்களும் செய்யப் பாரித்து இருக்க வேணும்
குண அனுபவ கைங்கர்யங்களே பொழுது போக்காக -உகந்து அருளினை தேசங்களில் இருக்க வேண்டுமே –
-சரணம் த்வாம் ரண புங்கவ ப்ரபந்நா
உம்மையே சரணமாக பற்றி –
அபவர்க்க நயாதநத்ய பாவா
ஸ்ரீ வைகுண்டம் -நடக்கும் ரீதி -அனைத்து கைங்கர்யம் கிடைக்கும் என்று கேள்விப்பட்டு -அநந்ய பாவம் –
வரிவஸ்யா ரஸ்மேகம் ஆத்ரியந்தே
கைங்கர்ய ரசம் -ஆனந்தம் அடைகிறார்கள் -இங்கேயே –
அனுபவ ஜெனித ப்ரீதி காரித கைங்கர்யமே பரம புருஷார்த்தம் -கடமை உந்த இல்லை –
குணங்களையம் திரு மேனி அழகையும் அனுபவிக்க அனுபவிக்க –
ப்ரீதி உந்த -மேலும் கைங்கர்யம் செய்ய வேண்டுமே —
குழந்தைக்கு தாய் போலே –அனுபவம் –ப்ரீதி -கைங்கர்யம் மூன்றுமே வேண்டும் –
மானஸ காயிக வாசிக கைங்கர்யம் மூன்றும் –ஸுஹார்த்தம் -பரஸ்பர ஹிதைஷிகளாய் இருக்க வேண்டுமே

——————————————–

அவதீர்ய சதுர்விதம் புமர்த்தம் பவதர்த்தே விநியுக்த ஜீவித சன்
லபதே பவத பலாநி ஐந்து நிகிலான் யத்ர நிதர்சனம் ஜடாயு -7-

அவதீர்ய சதுர்விதம் புமர்த்தம்-நான்கையும் விட்டு
பவதர்த்தே-உன் பொருட்டே
விநியுக்த ஜீவித சன் -உயிர் உடல் அனைத்தையும் உனக்கே விட்டவனாய்
லபதே பவத பலாநி ஐந்து நிகிலான்-ஸமஸ்த பலன்களை உன்னிடம் அடைகிறான் -சர்வ தர்மான் பரித்யஜ்ய –
கொள் என்ற பெரும் செல்வம் நெருப்பாக –வையம் தன்னோடு கூடாமல் -மாறனார் வரி வெஞ்சிலைக்கு ஆட் செய்யும் பாரினார் –
மோக்ஷம் வேண்டாம் -அச்சுவை பெறினும் வேண்டேன் -பாவோ நான்யத்ர கச்சதி –கண்ட கண்கள் மற்று ஒன்றைக் காணாவே
-ரங்க தனம் -திருவடி /ஸ்ரீ விபீஷண ஆள்வான் -திருப் பாண் ஆழ்வார் /தொண்டர் அடிப் பொடி ஆழ்வார்
எம்மா வீட்டுத் திறமும் செப்பேன் —நின் செம்மா மா பற்பு தலை சேர்த்து ஒல்லை -திருப் பொலிந்த சேவடி
என் சென்னியின் மேல் பொறித்தாய் -இளையவர்க்கு கவித்த மௌலி -அரசு அமர்ந்தான் அடி சூடும் அரசு
உன்னை விட்டு மற்றவற்றை வேண்டுபவன் ஒன்றுமே பெற மாட்டானே –
சேஷத்வம் சித்திக்கும் -அவனுக்கும் -கலந்து -ஆவி நலம் கொள் -சேஷத்வம் கொண்டான் -அவனுக்கு சேஷித்வம் ஸ்வரூபம்
நிலை நிற்க–புலன் கொள் மாணாய் நிலம் கொண்டானே -ஜீவனையும் கைங்கர்யமும் நமக்கே தெரியாமல் கொள்வானே-
யத்ர நிதர்சனம் ஜடாயு-சாக்ஷி -கைங்கர்யமே புருஷார்த்தம் என்பதற்கு -ஜடாயு க்ஷேத்ரம் அன்றோ இது -திருப் புட் குழி –
ப்ரீதி உடன் ராவணனை எதிர்த்து சீதை பிராட்டி காத்து -ஆயுஷ்மன் -அந்த நிலையிலும் பல்லாண்டு –
நித்ய யுக்தானாம் யோக க்ஷேமம் வஹாம் யஹம் –கச்ச லோகம் -என்று அருளினான்

—————————————-

சரணாகத ரக்ஷண வ்ரதீ மாம் ந விஹாதும் ரண புங்க வார்ஹஸி த்வம்
விவிதம் புவனே விபீஷனோ வா யதி வா ராவண இத்யுதீ ரிதம் தே -8-

சரணாகத ரக்ஷண வ்ரதீ மாம்-
கருணை -விரதமாக கொண்டாய் –சக்ருதேவ –அபயம் சர்வ பூதேப்யோம் ஏதத் விரதம் மம -பிராணனை விட்டும் -அழிய மாறியும்
தாண்ட காரண்யம் -சீதை -வில்லா பொம்மையா -அழகுக்காக-ரக்ஷணம் தீஷிதம் -என்னையும் அகல கில்லான்
வெட்டிக் கொண்டு போகும் பொழுதும் -நெஞ்சம் அகல்விக்க கில்லான் -என்னை நெகிழக்கிலும் –
ஞானம் சக்தி கருணை தயை இருக்க பாபம் வெல்லுமா – பிடித்தார் பிடித்தாரை பற்றி பெறுவோம்
ந விஹாதும் ரண புங்க வார்ஹஸி த்வம் –
என்னை கை விட தகுதி இல்லையே -என் பாவம் உன் கருணைக்கு விஞ்சாதே
விவிதம் புவனே -லோகமே அறியும் -உமது வாக்கியம் -மித்ர பாவேந–நத்யஜேயம் கதஞ்சன –
தோஷாவானாக இருந்தால் தான் கைக்கு கொள்வேன்
குற்றம் உண்டா பார்க்க வில்லை -நல்லது ஏதாவது உண்டோ பார்க்கிறேன் வித்வான் -வேலை தப்பை கண்டு பிடிக்க
பெருமாள் தோஷம் தேடி கைக் கொள்ள -அன்றோ –
வசிஷ்டர் விஸ்மாமித்ரர் பெற்றது பெருமை இல்லையே –
விபீஷனோ வா யதி வா ராவண இத்யுதீ ரிதம் தே-அவனே -தானே -ஸ்வயம் – வந்து இருந்தால் ஊரே வாழ்ந்து போகும் –
வார்த்தை நினைவு படுத்துகிறார்

பொய்யே கைம்மை சொல்லிப் புறமே புறமே ஓடுகின்றவர்களையும் தேவரீர் மெய்யே சரணாகதர்களாகவே
திரு உள்ளம் பற்றி ரக்ஷணம் பண்ணி அருளுவீர் அன்றோ –
சுரி குழல் கனி வாய்த் திருவினைப் பிரித்த கொடுமையில் கடுவிசை அரக்கனான விட இல்லையே
கிம் புநர் நியாய சித்தம் படி அடியேனையும் திரு உள்ளம் பற்றி அருள வேணும் என்கிறார் ஆயிற்று –

——————————————–

புஜ கேந்திர கருத்மாதித லப்யை த்வதநுஜ்ஞாநுபவ ப்ரவாஹி பேதை
ஸ்வ பதே ரண புங்கவ ஸ்வயம் மே பரிசர்யா விபவை பரிஷ் க்ரியேதா –9-

புஜ கேந்திர கருத்மாதித லப்யை- த்வதநுஜ்ஞாநுபவ ப்ரவாஹி பேதை
ஆஜ்ஜை -கடைமை -ப்ரீதி அனுக்ஜ்ஜா கைங்கர்யம் -விருப்பத்துடன் -பார்த்த பார்வைக்கு –
கருதும் இடம் பொருதும் சக்கரத் தாழ்வான
கண் கொத்திப் பாம்பு –
ஸ்வ பதே ரண புங்கவ ஸ்வயம் மே -மாம் –பரிசர்யா விபவை பரிஷ் க்ரியேதா-
வைத்து அலங்கரித்துக் கொள்ளும் ஸ்வ பதத்தில் சென்றால் குடையாம் –இத்யாதி
ஸ்ரீ வைகுண்டம் அருளி நித்யர் திருவடி திரு அநந்த ஆழ்வான்-பெற்ற கைங்கர்யம் -கண்ணே உன்னைக் காணக் கருதும்
ஓன்று ஒன்றின் செயலை விரும்ப உள்ளது எல்லாம் தான் விரும்ப -பை கொள் பாம்பணையான்
கட்ச்செவி-ஒரே இந்திரியம் இரண்டு வேலை படுத்து கொண்டு உள்ளாய் -சஷூஸ் ஸ்ரவணம் –
ஒழிவில் காலம் எல்லாம் உடனாய் மன்னி -வழு விலா அடிமை செய்ய வேண்டும் நாம் –
எம்பெருமான் பொன் மலை மேல் ஏதேனும் ஆவேனே -கிம் கரவாணி -என்ன அடுத்தது நியமனம் –
அணைய–பெரு மக்கள் -விரும்புவார்கள் -அனந்தாழ்வான் -எறும்பு -இன்றும் வகுள வ்ருக்ஷமாக சேவிக்கிறோமே –

பகவத் கைங்கர்யங்கள் -ஆஜ்ஜா கைங்கர்யம் என்றும் அநுஜ்ஜா கைங்கர்யம் என்றும் இரண்டு வகைகள் –
தேவதா அந்தர்யாமியாய் நின்ற இடங்களில் – ஆஜ்ஜா கைங்கர்யம் –
நல்லதோர் அருள் தன்னாலே காட்டினான் திருவரங்கம் உய்பவர்க்கு உய்யும் வண்ணம் -என்று
கேவல ஸ்வ கிருபையால்-அத்யந்த ஸூ லபனாய்க் கொண்டு
அடியோமுக்கே எம்பெருமான் அல்லீரோ -என்று மண்டும்படியான அர்ச்சாவதாரத்தில் நிற்கிற இடம்
அநுஜ்ஜா கைங்கர்யத்துக்கு இலக்கு –

ஸ்வயம் பரிஷ் க்ரியேதா-கதாஹமை காந்திக நித்ய கிங்கர ப்ரஹர்ஷயிஷ்யாமி -என்று
ஸ்தோத்ர ரத்னத்தில் ஸத் சம்பிரதாய சாரார்த்தத்தையே இங்கும் அருளிச் செய்கிறார்

—————————————

விமலா சய வேங்கடேச ஜன்மா ரமணீயா ரண புங்கவ ப்ரஸாதாத்
அநாஸூயு பிராத ரேண பாவ்யா பரமார்த்த ஸ்துதி ரன்வஹம் ப்ரபந்நை-10-

விமலா சய வேங்கடேச ஜன்மா ரமணீயா ரண புங்கவ ப்ரஸாதாத்
ஸ்ரீ போரேற்று நாயனார் பிரசாதத்தால் -குற்றம் அற்ற நெஞ்சு-உபாயாந்தர ப்ராப்யாந்தர சம்பந்தம் இல்லாத
அருளிச் செய்த ஜன்மா -பெண் பால் -ஸ்ரீ தேசிகன் பெண் -கல்யாண ராமன் –கன்னிகா தானம் செய்து அருளுகிறார்
அநாஸூயு பிராத ரேண பாவ்யா பரமார்த்த ஸ்துதி ரன்வஹம் ப்ரபந்நை
பிரபன்னர்களால் தினம் அனுசந்தித்து -புருஷார்த்தம் -பொறாமை இல்லாமல் -தாழ்வாக மற்றவரை
நினையாமல் ஆசை யுடன் நித்ய அனுசந்தானம் செய்ய வேண்டும் -சரணாகத வத்சலன் -குண கடல் அன்றோ –
முதல் ஸ்லோகமே பல ஸ்ருதி போல் அமைந்ததால் இங்கே பலன் சொல்லித் தலைக்கட்டிற்று இலர் –

——————————————

இதி பரமார்த்த ஸ்துதி சம்பூர்ணம்

கவி தார்க்கிக ஸிம்ஹாய கல்யாண குண சாலிநே
ஸ்ரீ மதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம —

—————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேதாந்த தேசிகன் திருவடிகளே சரணம் .
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ த்ரமிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி -உபோத் காதம் –ஸ்ரீ உ வே .மன்னார்குடி ராஜ கோபால ஸ்வாமிகள்–

December 12, 2016

ஸ்ரீ மான் வேங்கட நாதார்ய கவி தார்க்கிக கேசரி
வேதாந்த சார்ய வர்யோ மே சந்நிதத்தாம் சதா ஹ்ருதி –

ஸ்ரீ யபதி கல்யாண குணங்கள் ஒவ்வொரு திருவாய் மொழியிலும் —
10 ஸ்லோகங்கள் உபோத் காதம் –
100 ஸ்லோகங்கள் -திருவாய்மொழி
10 ஒவ்வொரு நூற்றுக்கும்
1-4-திருவாய்மொழிக்கு-அஞ்சிறைய மட நாராய் -இரண்டு ஸ்லோகங்கள்
4-9-திருவாய்மொழிக்கு -நண்ணாதார் முறுவலிப்ப – மூன்று ஸ்லோகங்கள்
4-7-திருவாய்மொழிக்கு சீல மில்லா சிறிய னேலும் – இரண்டு ஸ்லோகங்கள்
ஆக 114 ஸ்லோகங்கள்
6 ஸ்லோகங்கள் -உப சம்ஹாரம்
ஆக மொத்தம் — 130 ஸ்லோகங்கள்
————————
முதல் ஸ்லோகம் –
சாரஸ் சாரஸ் வதா நாம் சடரி புபணிதி -சாந்தி ஸூத்தாந்த சீமா
மாயா மாயா மி நீபி ஸ்வ குண விததி-பிரபந்த யந்தீம் தயந்தீ
பாரம் பாரம் பரீதோ பவ ஜல திபவந் மஜ்ஜ நா நாம் ஜனா நாம்
ப்ரத்யக் ப்ரத்யக்ஷ யேந்த பிரதி நியதரமா -சந்நிதானம் நிதானம் -1-

சடரி புபணிதி–ஸ்ரீ சடகோபன் -திரு வாய் மொழி -எப்படிப் பட்டது –
1-சாரஸ் சாரஸ் வதா நாம்-சரஸ்வதி -வாக் இந்த்ரியங்களால் வெளிப்படட வேதம் -நா-வில் நின்று மலரும் ஞானக் கலைகள் -சாரம் -சார தமம்-
சாரம் -சாரஸ்வதானாம் -சரஸ்வதி -வாக்கு -சாரஸ்வது -வேதம் -இதிஹாச புராணங்கள் –
2-சாந்தி ஸூ த்தாந்த சீமா -எல்லை நிலம் -அளவற்ற பெருமை -சாந்தி -மனஸ் கலக்கல் இல்லாத -ஸூ த்தாந்த -அந்தப்புரம் ஏகாந்தம் -ஸ்தானம்
-ஏகாந்த புத்தி -நம் சித்தாந்தம் ஸூத்தாந்த சித்தாந்தம் -மறந்தும் புறம் தொழா மாந்தர் -திரு மடப்பள்ளி சம்ப்ரதாயம் -பரிசுத்தம் ஏகாந்தம் கலக்கம் இல்லாத
மடப்பள்ளி வந்த மணம் எங்கள் வார்த்தையில் மன்னியதே –
3-ஆயாமம் -வளர்ச்சி மேலும் மேலும் ஸ்வ குண விததி -முக்குண மயம்-தொடர்ந்து -வளர்ந்து -வரும் மாயா -பிரகிருதி
பந்தயந்தீம் கட்டிப் போட வல்லது -பந்த ஹேது-முக்குணங்களுமே –மம மாயா துரத்யயா
தயந்தீ -விநாசம் பண்ணும் -குளகம் நீர் பருகுவது போலே -எடுத்து பானம் பண்ணுவது போலே எளிதாக நீக்கும்
4–பாரம் பாரம் பரீதோ பவ ஜல திபவ- ந் மஜ்ஜ நா நாம் ஜனா நாம்
பாரம் -அக்கரை-பாரம்பரீத -படிப்படியாக -பாவ -சம்சாரம் ஜலதி சாகரம் -மூழ்கிக் கொண்டே இருக்கும் ஜனங்கள்
படிப்படியாக -பாரம் பவ ஜல மக்னனானாம் ஜனானாம் பாரம் -சம்சார சாகரம் -முழுகும் ஜனங்கள் –பாரம் -அடையும் கரை –
5-ப்ரத்யக் ப்ரத்யக்ஷ யேந்த பிரதி நியதரமா -சந்நிதானம் நிதானம் –
ரமா சந்நிதானம் -பெரிய பிராட்டியார் -கூடவே –
மேலும் நியதமாக-எல்லா இடங்களிலும் -என்றவாறு
-இவன் அவள் இல்லா இடத்திலும் இருக்கலாமே -அத்தை நிவர்த்திக்க பிரதி நியதமாக -என்கிறார் –
நிதானம் -ஆதார ஆஸ்ரய புதன் –
ப்ரத்யக்ஷமாக காட்டி அருளி -நக -நமக்கு -ப்ரத்யக் ப்ரத்யக்ஷ-அந்தராட்டிஹ்மா அந்தராத்மாகாவும் காட்டி அருளுகிறார் என்றபடி

———————

ப்ரஜ்ஞாக்யே மந்த சைலே பிரதித குண ருசிம்-நேத்ர யன் சம்ப்ரதாயம்
தத் தல்லப்தி ப்ரசக்தைர நுபதி விபுதை ரர்த்திதோ வேங்கடேச
தல்பம் கல்பாந்த யூன சடஜித் உபநிஷத் துக்த்த சிந்தும் விமத் நன்
க்ரத் நாதி ஸ் வாது காதா லஹ ரித ச ச தீ -நிர்க்கதிம் ரத்ன ஜாதம் –2-

ப்ரஜ்ஞாக்யே மந்த சைலே -அவன் மந்தர பர்வதம் -இவர் சதாச்சார்யர் உபதேசம் கொண்டு -அசைக்க முடியாத
-அது ஜடம் –இது ப்ரஜ்ஞா -மந்த -மத்து -சைலம் மலை
பிரதித குண ருசிம்– ஸ்திரமான பிரசித்தமான -கல்யாண குணங்களை அனுபவிக்கும் ஊற்றம் கொண்ட கயிறு
நேத்ர யன் சம்ப்ரதாயம் -சம்ப்ரதாயம் படி பூர்வாச்சார்யர் வியாக்யானம் கொண்டு -உபதேச பரம்பரை -நேத்ரம் -கண் என்றும் கயிறு என்றும் –
தத் தல்லப்தி ப்ரசக்தைர நுபதி விபுதை -விபுதர்கள் பிரயோஜனாந்த பார்த்தார்கள் அர்த்திக்க அவன் -இவர் இடம் அனுபதி -அநந்ய பிரயோஜனர்கள் அர்த்திக்க
அர்த்திதோ வேங்கடேச-
தத் தல்லப்தி-அந்த அந்த பாசுரங்களில் உள்ள கல்யாண குணங்களை காட்டித் தர அர்த்திக்க –
தல்பம் கல்பாந்த யூன -கல்பங்கள் முடிவில் நித்ய யுவ -யுவா ஆறாம் வேற்றமை சேர்ந்து யூன
-தல்பம் படுக்கை -சேஷ -சுத்த விமலா மனசா -வேத மௌலி-வேதாந்தம் –
சடஜித் உபநிஷத் துக்த்த சிந்தும் விமத் நன் -திருவாய் மொழி பாற் கடல் -திராவிட உபநிஷத் -துக்த சிந்து -பாற் கடல் -விமத் நன் -கடைந்து
க்ரத் நாதி ஸ் வாது காதா லஹரிதசசதீ -க்ரத் நாதி-முகம் பார்த்து அனுபவிக்கும் படி
நிர்க்கதிம் ரத்ன ஜாதம் — ரத்ன குவியல் -ரத்நாகரம் சமுத்திரம் –
கல்யாண குணங்களே அமிர்தம் –ரத்ன குவியல் -ரத்னாகாரம் -சமுத்ரம் -நிர்க்கதம் -ஆயிரம் அலைகள் -கிரந்தாதி -கோத்து-
ரத்னாவளி -அருளிச் செய்கிறார் -ஸ்வாது -அத்யந்த போக்யம்-பிரசக்தயதி –

———————– ——————————————————————————-

பாஞ்சாலீ காத்ர சோ பாஹ்ருத ஹ்ருதய வதூ வர்க்க பும்பாவ நீதயா
பத்யவ் பத்மா சஹாயே பிரணயிநி பஜத -ப்ரேயஸீ பாரதந்தர்யம்
பக்தி ஸ் ருங்கார வ்ருத்தயா பரிணமிதி முநேர் பாவ பந்த ப்ரதிம்நா
யோகாத் ப்ராகுத்தரா வஸ்தி திரிஹ விரஹோ தேசிகா ஸ் த்ரதூதா –3-

பாஞ்சாலீ காத்ர சோ பாஹ்ருத ஹ்ருதய வதூ வர்க்க பும்பாவ நீதயா-திரௌபதி சரீர அழகு -அபகரிக்க பட்ட மற்ற பெண்கள்
-புருஷ பாவம் அடைய -வன பர்வம் வேத வியாசர் -பத்ம பத்ராக்ஷி -பிராகிருத பெண்ணை பார்த்தே இப்படி என்றால் -பும்ஸாம் த்ருஷ்ட்டி சித்த அபகாரம்
பத்யவ் பத்மா சஹாயே பிரணயிநி பஜத -அநபாயினி -சஹா அயம் -பிரயணித்வம் -கோவை வாயாள்-சத்தை ஒவ் ஒருவருக்கு ஒருவர் –
ப்ரேயஸீ பாரதந்தர்யம் -சர்வ பிரகாரத்தாலும் அவன் அதீனம்-ஸ்ரீ மான் -விடாமல் சேர்ந்து இருக்கும் -ஸ்ரீ யபதி என்பதே அர்த்தம் என்பர்
-ப்ரீதிக்கு விஷயம் அவள் பாரதந்தர்யம் -அளவற்ற பாரதந்தர்யம்
பக்தி ஸ்ருங்கார வ்ருத்தயா பரிணமிதி முநேர் பாவ பந்த ப்ரதிம்நா-புருஷருக்கு -அதுக்கு மேலே -விரக்தருக்கு -ஞானாதிகர் வேறே
-எப்படி ஸ்த்ரீ பாவம் -சிருங்கார விருத்திகள் -முதல் ஸ்ரீ யப்படி-காமுகன் வார்த்தை என்று அஞ்சிறைய மட நாரை-1-4- கேட்டு விலகினான் —
ஆனந்த பரிவாஹ திருவாய் மொழி – – பாஹ்ய ஹானியால்-போனானே -தூது விட்டு திர்யக் காலிலே விழுந்து –
சிருங்காரம் -அபி நிவேசம் -பரிணமித்த பக்தி -நிரூபாதிக பதி-மற்றவர் அனைவரும் ஸ்த்ரீ பிராயர்கள் -அவனும் பிரணயித்தவமும் காட்டி
-உன் மணாளனை எம்முடன் நீராட்டு -அவளும் கூடவே இருக்க –
ப்ரதிம்நா-பாவ பந்த கனத்தால் –
யோகாத் ப்ராகுத்தரா வஸ்தி திரிஹ விரஹோ தேசிகாஸ் த்ரதூதா -யோகம் மானஸ அனுபவம்
-ஸ்வரூப ரூப குண விபூதிகள் பத்தும் பத்துமாக அனுபவித்து -அனுபவ ஜெனித ப்ரீதி பரிவாஹம்-வியோகம் துக்கம் விரஹம் ஆற்றாமை
– யோகாத் -ப்ராக் உத்தர அவஸ்தா -முன்னும் பின்னும் பகவத் அனுபவம் இல்லை -ஏற்ற நோற்றேற்க்கு என்ன குறை
-வீற்று இருந்து -திருவாயமொழி -நித்ய விபூதி அனுபவம் இங்கேயே அனுபவித்து -சூழ் விசும்பு அணி முகில் அடுத்து அன்றோ இது
இருந்து இருக்க வேண்டும் -தீர்ப்பாரை யாமினி வருவது அறியாமல் அன்றோ அருளிச் செய்கிறார் –
பக்ஷிகளை கடகராக தூது விடுகிறார் -தேசிகாஸ் த்ரதூதா-

———————————————————————————————————–

பாஷா கீதி ப்ர சஸ்தா பகவதி வசநாத் -ராஜ வச்சோபசாராத்
சா சாகஸ்த்ய ப்ரா ஸூதாத் விதி பரி ஜக்ருஹே பூமிகா பேத யோக்யா
யத் தத் க்ருத்யம் ஸ்ருதீ நாம் முனி கண விஹிதை-சேதி ஹாசை புராணை
ஸ்தத்ரா சவ் சத்த்வ ஸீம் ந சடமத நமு நே -சம்ஹிதா ஸார்வ பவ்மீ -4-

பாஷா கீதி ப்ர சஸ்தா பகவதி வசநாத்
-பாஷா -திராவிட -நிஷிதா -நகர்த்தவ்ய -வைதிக பரிக்ரீருஹீதம் இல்லை -வசனம் இருந்தாலும்
-ப்ரசாஸ்தா -கொண்டாடப் படுவதாய் இருக்கும் -எதனால் பகவத் வசனமாக இருப்பதால் -ஸ்வரூப ரூப குண விஷயம் என்பதால்
பகவதி ஏழாம் வேற்றுமை உருபு கொண்டு -மத்ஸ்ய புராணம் வசனம் -தார்மிக ராஜா -நரகம் போக -பகவத் குணம் பேசிய ப்ராஹ்மணன் நாடு கடத்தினாயே –
-ராஜ வச்சோபசாராத்-ராஜாவைஉபசாரம் பண்ணுவது போலே பண்ணத் தக்கது -ராஜாதி ராஜ சர்வேஸ்வரன் அன்றோ
-தங்கள் தங்கள் பாஷையில் கொண்டாடுவது போலே
சா சாகஸ்த்ய ப்ரா ஸூதாத் –
சாக அகஸ்த்யா -உப லஷிதம் பெருமை உடைய –சமஸ்க்ருதம் அறிய பெற்றவர் -மதி நலம் அருள பெற்றவர்
-அகஸ்ய பாஷா வபுஷா சரீரம் போலே வேதத்துக்கு –
விதி பரி ஜக்ருஹே பூமிகா பேத யோக்யா
-பல பல வேஷங்கள் பூமிகா பேதம் -ரெங்கே தாமினி -தசாவதாரம் நாடகம் என்பர் தேசிகன் –
பக்தர் பிரபன்னர் ப்ரேமத்தால் தாய் மகள் தன் பேச்சு -ஆழ்வார் -இவை பேச யோக்கியமான தமிழ் என்றபடி -தெளியாத மறை நூல்கள் தெளிய –
யத் தத் க்ருத்யம்- ஸ்ருதீ நாம் முனி கண விஹிதை-சேதி ஹாசை புராணை
-வேதங்கள் இதிகாசம் புராணங்கள் இருக்க -இவை உத்க்ருஷ்டம் -தேவதா பரத்வம் சொல்லாமல் -சாத்விக புராணம் –
ஆதித்ய ஹ்ருதயம் ஸ்ரீ ராமாயணத்தில் இடைச் செருகல் என்பர்
-இவற்றை விட ஸ்ரேஷ்டம்- திருவாய் மொழி -சத்வ குணமே பூர்ணமாக இருப்பதால் –
ஸ்தத்ரா சவ் சத்த்வ ஸீம் ந சடமத நமு நே –
சடகோப முனி சத்வ குணம் ஸீம்னா-உண்ணும் சோறு -எல்லாம் கண்ணன் –
சம்ஹிதா ஸார்வ பவ்மீ –
விச்சேதம் இல்லாமல் -தொடர்ந்து -அந்தாதி ரூபமாக அருளிச் செய்யப் பட்டதால் –

—————————————————————————————————–

ஆதவ் சாரீர கார்த்தக்ரமமிஹ விசதம் விம்ச திரவத்தி சாக்ரா
சங்ஷேபோ அசவ் விபாகம் பிரத்யதி சருசாம் சாரு பாடோ ப பன்னம்
சமயக்கீதாநுபந்தம் சகல மநுகதம் சாம சாகா சஹஸ்ரம்
சம்லஷ்யம் ஸாபி தே யைர் யஜுரபி தசகைர் பாத்ய தர்வார சைஸ்ஸா –5-

ஆதவ் சாரீர கார்த்தக்ரமமிஹ விசதம்-தொடக்கத்தில்
விம்ச திரவத்தி சாக்ரா -அக்ரா–சார்வே -கண்ணன் -அருள் -முனியே வரை ஆறு சதகங்கள் –விம்சதி -முதல் 11 பாசுரங்கள்
சித்த த்விகம் சர்வ ஜகத் காரணத்வம் -அடுத்த 10- வீடு மின் முற்றவும் -சாதிய த்விகம் விசத்தமாக
சாரீர -545 ஸூ த்ரங்கள்-4 அத்தியாயங்கள் –16 பாதங்கள் – -2 த்விகம் – சித்தம் சாத்தியம் -ராக பிராப்தமான சாத்தியம் –
முமுஷு மோக்ஷம் இச்சா பிராப்தம் பலம் -உபாயம் விதேயம் -அத்தை தான் சாஸ்திரம் விதிக்கும் -ப்ரஹ்மம் ஸ்வரூபாதிகள் சித்தம்
-ஸ்ம்ருதிகள் சமன்வய அதிகாரம் -சம்யக் அன்வயம் -வேதாந்த வாக்கியங்கள் ப்ரஹ்மத்திடமே அன்வயம் -முதலில் சொல்லி அடுத்து
-வேத வருத்தம் -கபிலர் -ஹிரண்யகர்ப யோக ஸ்ம்ருதிகள் போல்வன -பாஹ்ய குத்ருஷ்டிகள் வாதம் -வேதாந்த விரோதமானவற்றை மட்டும் நிராகரித்து –
-அவிரோதம் -நிரூபித்தவற்றை திருடிகரித்து –வேதாந்த சாஸ்திரம் -சர்வ சரீரி அந்தர்யாமி என்பதால் சாரீரா சாஸ்திரம் -சாதனா அத்யாயம் -பல அத்யாயம் –
அர்த்த க்ரமம்-ஸ்ருத்தி -வேதாந்த வாக்கியங்களை திரட்டி –அதிகரண சாராவளி -சிரேஷ்டா
-ஸ்திதி சம்ஹாரம் உப லக்ஷணம் -காரண பூதன் -1-1- இதில் -7 அதிகரணங்கள் – தேஹீ -1-2- சரீரமாக கொண்டவன்
-ஸமஸ்த சேதன அசேதனங்களையும் -தாரகன் நியாந்தா சேஷி -ஸ்வரூபம் சங்கல்பத்தாலும் –
பிரயோஜகத்வம் -சரீரத்வம் -ஜவ த்வாராவாகவும் -அவ்யஹிதமாகவும் -சரீரி -தானே ஸ்வரூபேண தரிக்கிறான்
-சர்வம் கல்விதம் இதம் ப்ரஹ்ம-இதி சாந்த உபஷித -காரண கார்யம் பேதம் நிரூபிக்க பட்டதும் -இங்கே சரீர ஆத்ம பாவம் -தஜ்ஜலான் இதி –
ஸூ நிஷ்டா -தானே தனக்கு ஆதாரம் -அடுத்து -1-3-
நிரவதி மஹிமா -1-4 -அசைக்க முடியாத -சாங்க்யர்களாலும்-
2-1-அபார்த்த பாதகம் -விரோதங்கள் அற்ற –
2-2- ஸ்ரீத ஆப்த -ஆஸ்ரிதர்களுக்கு ஆப்தம் –
சங்ஷேபோ அசவ் விபாகம் பிரத்யதி சருசாம் சாரு பாடோ ப பன்னம்
21 சாகைகள் ரிக் வேதம் –மந்த்ரம் 4 பாதங்கள் -சமமான அக்ஷரங்கள் -சாரு பாடம்-அழகிய -கீதா பிரதானம் சாம வேதத்துக்கு -சேஷ யஜுர் லக்ஷணம் –
21 பாசுரங்கள் இவற்றை காட்டும்
சமயக்கீதா நு பந்தம் சகல மநுகதம் சாம சாகா சஹஸ்ரம்
1000 பாசுரங்கள் -சாம சாகா சகஸ்ரம் –
மநு -மந்த்ரம் -சாந்தோக்யம் கொண்ட சாம வேதம் -ப்ரஹ்ம வித்யைகள் கொண்டது -இசையுடன் கூடிய திருவாய் மொழி
சம்லஷ்யம் ஸாபி தே யைர் யஜுரபி –
யஜுவ்ர் வேத லக்ஷணம் -ரிக் ஸ்துதி பிரதானம் -1300 ஸூ க்தங்கள் கொண்ட ரிக்வேதம் யோகத்தால் ஆராதிக்கும் தேவதைகளை ஸ்துதி பண்ணும்
-சாம வேதம் காண பிரதானம் -யகாதி அனுஷ்டானம் வேத பிரயோஜனம் -அக்னி ஹோத்ரம் தொடக்கமான யாகாதிகள் செய்வதே வேதாத்யயனம் செய்வதின் பலம்
-ஆத்மசமர்ப்பணம் நிரூபித்து திருவாய் மொழி யஜுவ்ர் வேத சாம்யம் -அபிதேயம் -சப்த சமுதாயார்த்தம் அபிதானம் –
தசகைர் பாத்ய தர்வார சைஸ்ஸா-
பாத்ய அதர்வா -அதர்வண -மிகுந்த ரசங்கள் கூடிய திருவாய் மொழி -8 சாகைகள் அதர்வண வேதத்தில் -அஷ்ட ரசங்கள் -சாந்தி ரஸா பிரதானம்
-ஸ்ருங்காரா தொடங்கி-நவ ரசம் -சாந்தி ரசம் அபிநயித்து காட்ட முடியாது அஷ்ட ரசம் என்பர் -பரத நாட்டியம் -ஒன்பதாவது சாந்தி சேர்த்து -சமதமாதிகள் சாந்தி –
வீரம் உத்ஸாகம் -பூரணமான திருவாய்மொழி-சாந்தி கிட்டும் –

————————————————————————————————-

விஷய சங்க்ரஹம் சாதிக்கிறார் -மேல் ஐந்து ஸ்லோகங்களால் –
முதல் நான்கு பத்துக்கள் -சாஸ்த்ரா பிரதிபாத்யர்த்தங்கள் –

ப்ராஸ்யே சேவா நு குண்யாத் ப்ரபு மிஹ சதிகே சமம்ஸ்தே முக்தேருபாயாம்
முக்த ப்ராப்யம் த்வ தீயே மு நிரநுபுபுதே போக்யதா விஸ்தரேண
ப்ராப்யத்வோ பாயாபா வவ் ஸூ ப ஸூ ப கத நோ நித்யா வா தீத்த்ருதீயே
அநந்ய ப்ராப்யஸ் சதுர்த்தே சம பவ திதரை ரப்ய நன்யாத் யுபாய –6-

ப்ராஸ்யே -சதகே-முதல் சதகத்தில்-
சேவா நு குண்யாத் ப்ரபு மிஹ -பிரபுவை -அசாதாரண சப்தம் -பிரபாவதி -சர்வ நியாந்தா -பல பிரதானம் -அஹம் சர்வ எஜ்ஜாம் பிரபு ரேவச –
சமம்ஸ்தே முக்தேருபாயாம் -அமம்ஸத்த -தெளிவாக அனுசந்தித்தார் -முக்தேர் உபாயம் -என்பதற்கு விதேயம் பிரபு -எது இல்லா விட்டால் எது உண்டாகாது அது விதேயம் –
ஹேது -சேவா அணுகுண்யாத் -சேவ்யத்வம் இருப்பதால் -சேவைக்கு உரியவனாய் இருப்பதால் –
பத்து குணங்கள் -பரத்வம் ஆசிரயணீத்வம் –போக்யத்வம் ஆர்ஜத்வம் சாத்மீக போக பிரத்வம் நிருபாதிக ஸுஹார்த்தம் இத்யாதி –
முக்த ப்ராப்யம் -அவனே முக்த பிராப்யம்
த்வ தீயே-இரண்டாம் சதகத்தில்
மு நிரநுபுபுதே -அணு சந்தானம் -அநு புபுதே தொடர்ந்து சிந்தனை பண்ணி
போக்யதா விஸ்தரேண-போக்யம் தானே ப்ராப்யம் -உபாயம் பண்ணி பய வஸ்துவை அடைவோம் –
ஹேது போக்யத்வம் -வாயும் திரை -வியதிரேகத்தால் நிரூபிக்கிறார் -முதலில் -க்ஷணம் காலமும் விட்டு பிரிய முடியாதே -சமான துக்கம் -லலித உத்துங்க பாவம் –
திண்ணன் வீடு -நம் கண்ணன் -பரத்வம் சொல்லி -நம் சொல்லி ஸுலப்யம் எல்லை -கோபால கோளரி –மூன்று அடிகள் பரத்வம் ஒரே சப்தம் எளிமை –
அடியார்களுக்கு கொடுப்பான் போக்யத்தை தேனும் பாலும் கன்னலும் ஓத்தே –ஆடி ஆடி -போகம் சாத்திமிக்க
-அந்தாமத்து -தனது பேறாக இதில் -ஊனில் வாழ் உயிர் ஆழ்வாருக்கு பேறு -அந்தாமத்து அன்பு இவனுக்கு புருஷார்த்தம் -அதிசங்கை பண்ண
மா ஸூ ச என்கிறார் ஆழ்வார் -வைகுந்த -உன்னை நான் பிடித்தேன் கோல் சிக்கெனவே -என்கிறார் –
சம்பந்திகள் அளவும் -கேசவன் தமர் –எமர்-இருவரும் இதனால் விரும்ப –
அணைவது -பரம பத முக்த ப்ராப்ய போகம் -தாய் தந்தை படுக்கையில் அஹம் ப்ரஹ்மாஸ்மி இங்கே போதராய்
-அகஸ்திய பாஷையில் கலந்து பேசி அனுபவித்து -தனக்கே யாக அதுவும் –
ப்ராப்யத்வோ பாயாபா வவ்
ஸூ ப ஸூ ப கத நோ நித்யா வா-அழகிய பாவானத்வம் திவ்ய மங்கள விக்ரஹமே
தீத்த்ருதீயே சதகம் -மூன்றாம் பத்தால்-திவ்ய மங்கள விக்ரஹத்தால் உபாயம் உபேயத்வம்
முடிச்சோதி –தொடங்கி -அருளிச் செய்தார் இத்தையே மூன்றாம் பத்தால்
அநந்ய ப்ராப்யஸ் -அவன் ஒருவனையே பற்ற -பரம பிராப்யம்
சதுர்த்தே -நாலாம் பத்தால் -மற்றவை அல்பம் அஸ்திரம்
ஒரு நாயகமாய் -தொடங்கி –
சம பவ து -இதரை ரப்ய நன்யாத் யுபாய -மேலே அவனை அநந்ய ப்ராபகம்-5-10 பத்தால் -அவனே அநந்ய உபாய பூதன் -என்று சாதித்து அருளுகிறார் –

—————————————————————————-

தேவ ஸ்ரீ மான் ஸ்வ சித்தே கரணமிவ வத ந்நேகமர்த்தம் ஸஹஸ்ரே
சேவ்யத் வாதீன் தசார்த்தான் ப்ருதஸிக சதகை ர்வக்தி தத் ஸ் தாப நார்த்தான்
ஐகை கஸ்யாத் பரத்வா திஷூ தசத குணே ஷ்வாய தந்தே ததா தே
தத் தத் காதா குணா நாம நு வித ததி தத் பஙக்த்ய பங்க்தி சங்க்யா-7-

ப்ராப்ய ப்ராபக ஐ க்யமே -பிரபந்த பிரதிபாத்ய குணம் -அனந்த வேதங்களுக்கும் த்வத் பிராபியே ஸூயமேவ உபாயா சுருதிகள் கோஷிக்குமே
தேவ ஸ்ரீ மான் -சகல ஜகத்தையும் நிரூபாதிக்க சேஷி -ஸ்ரீ மான் -தேவ -சாமான்ய -ஸ்ரீ மான் -விசேஷணம்
ஸ்வ சித்தே -தன்னை பலமாக அடைய
கரணமிவ -சாதனம் -உபகரணம் -தானே என்று
வத ந்நேகமர்த்தம் ஸஹஸ்ரே-ஒரே பொருளை அறிவித்து கொண்டு -வதன் ஏகம் அர்த்தம் –
சேவ்யத் வாதீன்- தசார்த்தான் –
ப்ருதஸிக சதகை ர்வக்தி தத் ஸ்தாபநார்த்தான் -ஸ்தாபனம் -ஸ்தாபிக்க வேண்டிய குணங்கள் -பத்தும்
சேவ்யத்வம் போக்யத்வம் திவ்ய மங்கள வி க்ரஹத்வம் -மற்றவை அல்பம் அஸ்திரம் —
பிராபத்தான ஸூ லபன் –அநிஷ்ட நிவ்ருத்தி –சிந்தா அனுவ்ருத்தி -இஷ்டா -நிருபாதிக்க பந்து -அர்ச்சிராதி போன்ற பத்தும்
இவற்றை விஸ்தீரத்து நூறு -பரத்வம் /ஆசிரயணீய சாமான்யன் ஸுலப்யம் அபராத சஹத்வம் -ஸுசீல்யம் -ஸூராத்யன்
-அதி போக்யத்வ ஆராதனத்வம் -ஆர்ஜவம் -சாத்திமிக்க போக பிரதத்வம் -உதார பாவன் –
க்ஷணம் விரக /இப்படி நூறு குணங்கள் காட்டி அருளி –
ஐகை கஸ்யாத்- பரத்வா திஷூ தசத குணேஷ்-பரத்வாதி தச குணங்களை
வாயதந்தே ததா தே -தத் தத் காதா குணா நாம
அநு வித ததி தத் பஙக்த்ய பங்க்தி சங்க்யா–1000 பாசுரங்களில் –
இவற்றை 1000 குணங்களாக வெளிப்படுத்தி –
நி ஸ் சீமா கல்யாண குணங்கள் / முழு நலம் -ஞானானந்த /அனந்த லீலை விஷயம் /சத்தா ஸ்திதி பிரவ்ருத்திகள் நிவ்ருத்திகள் தன் ஆதீனம்
/விஸ்வரூபியாத் -கரந்து எங்கும் பரந்துளன் -/சர்வாத்மாபாவம் /ஸ்திர சுருதி சித்தன் -சுடர் மிகு சுருதி –
சர்வ வியாபி -பரத்வத்தை விஸ்தீரத்து -பரன் அடி மேல் குருகூர் சடகோபன் –

—————————————————————————————————–

சேவ்யத்வாத் போக்யபாவாத் ஸூ பத நு விபவாத் சர்வ போக்யாதிகத்வாத்
ஸ் ரேயஸ் தத்தேதுதா நாத் ஸ் ரித விவிச தயா ஸ் வாஸ்ரித நிஷ்ட ஹ்ருத்த்வாத்
பக்தச்சந்தா நு வ்ருத்தே நிருபதிக ஸூ ஹ்ருத் பாவத சத் பதவ்யாம்
சாஹாயாச்ச ஸ்வ சித்தே ஸ்வயமிஹ கரணம் ஸ்ரீ தர ப்ரத்யபாதி–8-

சேவ்யத்வாத் -சேவா யோக்யத்வாத்
போக்யபாவாத் –
ஸூ பத நு விபவாத்-திவ்ய மங்கள விக்ரஹம்
சர்வ போக்யாதிகத்வாத்
ஸ் ரேயஸ் தத்தேதுதா நாத் -தத் ஹே து -தானே உபாயம் உபேயம்
ஸ் ரித விவிச தயா-ஆஸ்ரிதர் வசப்பட்டவன் ஆறாம் பத்து
ஸ் வாஸ்ரித நிஷ்ட ஹ்ருத்த்வாத் -ஆஸ்ரிதர் அநிஷ்டங்கள் அபகரிப்பவன் -ஏழாம் பத்து
பக்தச்சந்தா நு வ்ருத்தே ஆஸ்ரிதர் -விருப்பம் அனுகுணமாக தான் -தமர் உகந்த செயல்கள் -செய்பவன்
நிருபதிக ஸூ ஹ்ருத் பாவத -நிருபாதிக பந்து ஒருவனே
சத் பதவ்யாம் -சாஹாயாச்ச -அர்ச்சிராதி வழி துணை பெருமாள்
ஸ்வ சித்தே ஸ்வயமிஹ கரணம்-
ஸ்ரீ தர ப்ரத்யபாதி –நிரூபிக்கப் பட்டான்

———————————————————————————————————–

ப்ரூதே காதா சஹஸ்ரம் முரமதந குண ஸ் தோமா கர்பம் மு நீந்த்ர
ப்ரத்யே கஞ்சாத்ர காதா பிரதித விபு குணா ஸ் யஷ்ட மத்யக்ஷ யாம
தத்ரா சங்கீர்ண தத் தத்த சக குண சதா ஸ்தாபநவ் சித்ய யுக்தான்
ஐதம் பர்யா வருத்தாந கணித குணி தான் தத் குணா நுதக்ருணீ ம –9-

ப்ரூதே காதா சஹஸ்ரம் -அருளிச் செய்கிறார் ஆயிரம் பாசுரங்கள்
முரமதந குண ஸ் தோமா கர்பம் -முரன்-நிரசித்த முர மதன -ஸ்தாமம் சமுதாயம் -கல்யாண குணங்களை -தன்னுள் அடக்கி
மு நீந்த்ர–பகவத் குண -மனன சீல -சிரேஷ்ட
ப்ரத்யே கஞ்சாத்ர காதா
பிரதித விபு குணா ஸ் யஷ்ட மத்யக்ஷ யாம -பிரத்யக்ஷமாக நாம் தேசிகன் காண்கிறார் -கௌரார்த்த பஹு வசனம் -ஸ்பஷ்டமாக கண்டார் -சாஷாத் கரித்து
தத்ர அசங்கீர்ண தத் தத்த சக குண-அனுபவித்த குணங்களை -தசக குணங்கள் நூறு -பரத்வம் —அபராத சஹத்வம் போல்வன
-அசங்கீர்ணம் புனர் யுக்தி இல்லாமல் -தத்ர -இப்படி அனுபவித்த அவற்றை
சதா ஸ்தாபநவ் சித்ய யுக்தான் -ஸ்தாபிக்க ஓவசித்தம் யுக்தான் —
ஐதம் பர்யா வருத்தா ந -தன்னைத் தானே -காட்டி -வேறு ஒன்றை எதிர்பார்க்காமல் –
அகணித குணிதான்-எண்ணிக்கை இல்லாத -பெருமை ஒவ் ஒன்றுக்கும்
தத் குணா நுதக்ருணீ ம -வெளிப்படுத்தி அருளுகிறார் -உத்க்ரஹணம் -நாம் அனுபவிக்க –

———————————————————————————————-

இச்சா சாரத்ய சத்யாபித குண கமலா காந்த கீதான் த சித்ய
ச்சுத்தாந்தாசாரா ஸூ த்தை ரியம நக குண க்ரந்தி பந்தா நு பத்தா
தத்தாத் ருக்தாம் பர்ணீ தடகத சடஜித் த்ருஷ்ட சர்வீய சாகா
காதா தாத்பர்ய ரத்நா வலி சில பயோத் தாரிணீ தாரணீ யா -10-

இச்சா சாரத்ய சத்யாபித குண -இச்சையால் சாரத்யம் பண்ணிய -சத்யாபிதா குணங்கள் -அதனாலே -வெளிப்பட்ட
கமலா காந்த கீதான் த சித்ய -ஸ்ரீ கீதையில் -ஸ்ரீ யபதி -சரம ஸ்லோகத்தில் -மெய்ம்மை பெரு வார்த்தை விஷ்ணு சித்தர் கேட்டு இருப்பார் -இவரே சாக்ஷி —
ச்சுத்தாந்தாசாரா ஸூ த்தை-அந்தப்புர -பரமை ஏகாந்திகளுக்கு -சாத்திக் கொள்ள –
ரியம நக குண க்ரந்தி பந்தா நு பத்தா-இயம்-இந்த -அநக குணம் -ஹேயப்ரத்ய நீக-முகம் பார்த்து கோக்கப் பட்ட
தத்தாத் ருக்தாம்பர்ணீ தடகத -அவனுக்கு ஒத்த பெருமை -தாம்ரபரணீ தடம் -சேர்ந்த ஆழ்வார் -பொரு நல் -சங்கணி துறைவன் -வடகரை –
சடஜித் த்ருஷ்ட சர்வீய சாகா-சாஷாத் கரிக்கப் பட்ட -த்ருஷ்டா -விசுவாமித்திரர் காயத்ரி மந்த்ரம் கண்டால் போலே -ரிஷிகள் மந்த்ர த்ரஷ்டாக்கள்-
சர்வீய சாகை -அனைவரும் அதிகரிக்கும் படி —
காதா தாத்பர்ய ரத்நா வலி -தாத்பர்ய ரத்னங்களால் கோக்கப் பட்ட மாலை
அகில பயோத் தாரிணீ தாரணீ யா –சாத்திக் கொள்ள -நெஞ்சுக்கு உள்ளும் -கொண்டு –அகிலம் சம்சாரம் -தாண்டுவிக்க -உத்தாரணம்

——————————————————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை   அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ உ வே .மன்னார்குடி ராஜ கோபால ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேதாந்த தேசிகன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-