ஊழிகளாய் உலகு ஏழும் உண்டான் என்றிலம் பழம் கண்டு
ஆழி களாம் பழ வண்ணம் என்றேற்கு அக்தே கொண்டு அன்னை
நாழி வளோ வென்னும் ஞாலம் உண்டான் வண்ணம் சொல்லிற்று என்னும்
தோழிகளோ உரையீர் எம்மை யம்மனை சூழ் கின்றவே – – -71 – –
அலர் பரவும் தாய் முனியவும் இருக்கிற இக்கள வொழுக்கம் இனி ஆகாது -மணந்து கொள்ளல் வேண்டும் என்று விவாஹ ருசியை வெளியிட்டவாறு –
ஊழிகளாய் உலகு ஏழும் உண்டான் என்றிலம்–ஊழிகள்-பன்மை காலத்தின் பகுப்புக்களைக் குறிக்கும் -சகல காலங்களுக்கும் நிர்வாஹகன் -சர்வ ரக்ஷகன்
பழம் கண்டு-ஆழி களாம் பழ வண்ணம் என்றேற்கு-பழத்தின் நிறம் கடலின் நிறம் என்றே சொன்னேன் / நாழ் குற்றம் –
ஸ்வாபதேசம் –-ஆழ்வார் அவன் வண்ணம் ஸ்வபாவம் கடல் போலே என்று சொல்வதைக் கேட்டு -இது சாதனாந்தர நிஷ்டையில் உள்ளோர் வார்த்தை யன்றோ என்ன-என் நெஞ்சு ஆராயாமல் ஆரோபித்துச் சொன்ன வார்த்தை
ஊழிகளாய் உலகு ஏழும் உண்டான் என்றிலம்-உபாஸனைக்கு உரிய காரண வடிவத்தை சொன்னோம் இல்லை
-பழம் கண்டு-ஆழி களாம் பழ வண்ணம் என்றேற்கு-பலத்தைக் கண்டு கடல் போலென்ற வடிவம் என்றே சொன்னேனே
அக்தே கொண்டு அன்னை-அந்த சொல்லுக்கே வேறே பொருளைக் கொண்டு ஞானிகள்
நாழி வளோ வென்னும்-பரதந்த்ர ஸ்வரூபத்துக்கு விரோதமான ஸ்வாதந்தர்ய வார்த்தை என்று ஏறிட்டுச் சொல்வார்கள்
ஞாலம் உண்டான் வண்ணம் சொல்லிற்று என்னும்-உபாஸனைக்கு உரிய காரண வடிவைச் சொன்னேன் என்பர்
தோழிகளோ உரையீர் எம்மை யம்மனை சூழ் கின்றவே -ஏறிட்டு சங்கித்த சங்கைக்கு என் நெஞ்சு அறிந்த நீங்களே பரிஹாரம் சொல்லுங்கோள்-
————————————————————————
சூழ்கின்ற கங்குல் சுருங்காவிருளின் கருந்திணிம்பை
போழ்கின்ற திங்களம் பிள்ளையும் போழ்க துழாய் மலர்க்கே
தாழ்கின்ற நெஞ்சத்தொரு தமியாட்டியேன் மாமைக்கின்று
வாழ்கின்றவாறு இதுவோ வந்து தோன்றிற்று வாலியதே – – – 72 –
இருளுக்கு ஆற்றாத தலைவி அதுக்கு மேலே இளம் பிறை கண்டு தளர்ந்து உரைத்தல் -துயர் நீக்க வந்தான் என்று
கருதும் படி வந்து மேலும் துயரை விளைவிப்பதே
பேறு கிட்டாததால் வந்த மோகாந்தகாரமும் -அதனை அடக்கி மேலிடுவதான தத்வ ஞான பிரகாசமும் இரண்டும்
ஒன்றின் மேல் ஒன்றுடன் சேர்ந்து வருந்தி ஸ்வரூபத்தை அழிக்க இருக்கும் தன்மை -சந்திரோதயம் -என்றது விவேகத்தை –
———————————————————————–
வால் வெண்ணிலா வுலகாரச் சுரக்கும் வெண் திங்கள் என்னும்
பால் விண் சுரவி சுர முதிர்மாலை பரிதி வட்டம்
போலும் சுடர் ஆழிப் பிரான் பொழில் ஏழும் அளிக்கும்
சால்பின் தகைமை கொலாம் தமியாட்டி தளர்ந்ததுவே – 73- – –
நிலாவின் இடத்து பாலின் தன்மையையும் -அதை வெளியிடும் அம்ருத கிரணான சந்திரன் இடத்து பால் சுரக்கும்
பசுவின் தன்மையையும் ஏறிட்டுச் சொல்வது ரூபக அலங்காரம்
அரும் தவன் சுரபியே ஆதி வானமா விரிந்த பேருதயமே மடி வெண் திங்களா -வருந்தலின் முலை கதிர் வழங்கு
தாரையாய்ச் சொரிந்த பால் ஒத்தது நிலவின் தோற்றமே -கம்பர் –
விண் சுரவி சுர-தெய்வப்பசு சுரப்பி –
உரிய காலத்திலே பேறு கை புகாமையாலே ஞான விளக்கமும் பாதகமாக ஆழ்வார் தளர்ச்சியைக் கண்ட
பாகவதர்கள் நொந்து அருளிச் செய்யும் பாசுரம் –
பிரான் பொழில் ஏழும் அளிக்கும்-சால்பின் தகைமை கொலாம் தமியாட்டி தளர்ந்ததுவே-ஸ்வாபாவிகமான சர்வ ரக்ஷகத்வமும்
இவர் பால் கிடையாது ஒழிவதே– -பாட பேதம் –
———————————————————————
தளர்ந்தும் முறிந்தும் வரு திரைப்பாயில் திரு நெடுங்கண்
வளர்ந்தும் அறிவுற்றும் வையம் விழுங்கியும் மால் வரையைக்
கிளர்ந்து மறிதரக் கீண்டு எடுத்தான் முடி சூடு துழாய்
அளைந்து உண் சிறு பசுந்தென்றல் அந்தோ வந்து உலாகின்றதே – – -74 –
நாயகன் உடைய திரு முடியில் சூடிய திருத் துழாய் வாசனை பருகி வந்து தென்றல் வீச நாயகி மகிழ்ந்து பேசும் பாசுரம் –
அவன் வரவுக்கு ஸூ சகம் என்று சொல்லி தோழி தலைவியை ஆற்றாமை தணிக்கும் பாசுரம் என்றுமாம்
திரு நெடுங்கண்-வளர்ந்தும் அறிவுற்றும்-லோக ரக்ஷணம் சிந்தனை -யோக நித்திரை -அறிதுயில் -விழி துயில் -துயிலாத துயில் -போய் உறக்கம் –
மால் வரையைக்-கிளர்ந்து மறிதரக் கீண்டு எடுத்தான்-பசுக்கள் எட்டிப் புல் மேயலாம் படி கோவர்த்தன மலையைத் தலை கீழாக எடுத்துக் பிடித்தமை –
சிறு பசுந்தென்றல்-மந்த மாருதம் –
ஸ்வாபதேசம் -ஆழ்வார் எம்பெருமானது காருண்யம் ஐஸ்வர்யம் போக்யதைகளில் ஈடுபட்டு தரித்தமையம்
அவனது மஹா குணங்களை சொல்லி ஆழ்வாரை பாகவதர்கள் ஆற்றாமை தனித்தவையும் சொல்லிற்று யாய்த்து-
—————————————————————–
உலாகின்ற கெண்டை யொளியம்பு எம்மாவியை யூடுருவக்
குலாகின்ற வெஞ்சிலைவாள் முகத்தீர் குனிசங்கிடறிப்
புலாகின்ற வேலைப் புணரி யம்பள்ளி யம்மான் அடியார்
நிலாகின்ற வைகுந்தமோ வையமோ நும் நிலை இடமே – -75 – –
நாயகியும் தோழியும் ஒருங்கு இருந்த சமயம் நோக்கி நாயகன் அங்குச் சென்று தன் கருத்தை குறிப்பதற்கு வியாஜமாக ஊர் வினவுகிறான் –
இவர்கள் வடிவு அழகு மிக வேறுபட்டு சிறந்து இருத்தலால் –நும் நிலையிடம் வைகுந்தமோ -இவ்வுலகத்தில் இல்லாதால் –வையமோ
-உமது இடம் அந்த நித்ய விபூதியோ -ஞான விசேஷங்கள் கண்டால் முக்தரோ என்னலாம் படி –
பூர்ண அனுபவம் கிடைக்கப் பெறாமையாலே இவர் இவ்வுலகத்தவரோ என்றும்
-சம்சார சம்பந்தம் இல்லாமையால் அவ்வுலகத்தவரோ என்றும் சங்கை –
———————————————————————-
இடம் போய் விரிந்து இவ் உலகளந்தான் எழிலார் தண் துழாய்
வடம் போதினையும் மட நெஞ்சமே நங்கள் வெள் வளைக்கே
விடம் போல் விரிதல் இது வியப்பே வியன் தாமரையின்
தடம் போதொடுங்க மெல்லாம் பலலர்விக்கும் வெண் திங்களே – -76 – –
சந்திரன் தாமரையை வருத்தி மூடச் செய்து ஆம்பலை அலர்த்துவது போலே -தாமரைக்கு தலைவன் ஸூ ரியான் மறைந்த இடத்தில்
-தலைவனை பிரிந்த என்னை வருத்தி கை வளைகள் கழல பண்ணுவதில் ஆச்சர்யம் இல்லையே
வடம் போதினையும்-போது வடம் இனையும் -மாலையைப் பெரும் பொருட்டு வருந்துகிற -/ வடம் போதில் நையும் என்றும் பிரித்து அதே பொருள்
விடம் போல் விரிதல் -நம்மை கொலை செய்யவே தோன்றியது என்றபடி
ஸ்வாபதேசம் -பேறு பெறாத நிலையில் தமக்கு உண்டான விவேகமும் பிரதிகூலமாய் வருத்தும் தன்மையை ஆழ்வார் திரு உள்ளத்தை நோக்கி கூறுதலாம்
இடம் போய் விரிந்து இவ் உலகளந்தான் எழிலார் தண் துழாய்-வடம் போதினையும் மட நெஞ்சமே-சர்வ ஸூலபனானவனுடைய
போக்யதையில் ஈடுபட்டு பூர்ண அனுபவம் கிடைக்காமல் வருந்தும் இள மனமே –
வியன் தாமரையின்-தடம் போதொடுங்க மெல்லாம் பலலர்விக்கும் வெண் திங்களே-சிறந்த பொருள்களை வெளிக் காட்டாமல்
இழிந்த பொருள்களை வெளிக்காட்டுகிற விவேகம்
நங்கள் வெள் வளைக்கே-விடம் போல் விரிதல் இது வியப்பே -நம் சுத்தமான அடிமைத் தன்மையை குலைக்க பரப்பும் இது ஆச்சர்யமோ –
———————————————————————
திங்களம் பிள்ளை புலம்பத் தன் செங்கோலரசு பட்ட
செங்களம் பற்றி நின்று எள்கு புன்மாலை தென் பாலிலங்கை
வெங்களம் செய்த நம் விண்ணோர் பிரானார் துழாய் துணையா
நங்களை மாமை கொள்வான் வந்து தோன்றி நலிகின்றதே – -77-
மாலைப் பொழுதை மகளாகவும் -சூரியனை அவள் கணவனாகவும் -சந்திரனை அவர்கள் பிள்ளையாகவும்
-சூரியனது சிவந்த கிரணங்களை செங்கோலாகவும்
சூர்யன் அஸ்தமிப்பதை கணவன் இறந்ததாகவும் -அஸ்தமித்த திக்கை அவன் இறந்து விழுந்த போர்காலமாகவும்
அஸ்தமிக்கும் காலத்து செவ்வானத்தை அவன் ரத்தம் தெரித்ததாகவும் உருவாக்கப் படுத்தியவாறு
கணவனை பிரிந்தவளுக்கு பார்த்த பொருள்கள் எல்லாம் தம்மைப் போலே கணவனை இழந்ததாகவே கருதுவாளே
இப்படி கண்டார் இரங்கத் தக்க நிலைமையை அடைந்த மாலைப் பொழுது ஞாபக முகத்தால் வருத்தப்படுகிற திருத் துழாயை
துணையாகக் கொண்டு நாயகியை வருத்துதலை
தனது மக்கள் தனிமைப்பட தன் கணவனை இழந்து வருந்திய தாடகை அகஸ்திய சாபத்தை உதவியாகக் கொண்டு
முனிவர்களை எதிர்த்து வருந்துதல் போலே கொள்க
மாலைப் பொழுதில் காணப்படும் பிறையின் பிரகாசக் குறையை வாடுதலாகவும் -அக்காலத்தில் பறவைகள் கடல் ஓசையை அழுகை குரலாகவும்
தென் பாலிலங்கை-வெங்களம் செய்த நம் விண்ணோர் பிரானார் –பிராட்டிக்கு உதவியவர் -விண்ணோர்களுக்கு உதவியவர் எமக்கு கொடுமை தீர்த்திலரே –
துழாய் துணையா-மாலைப் பொழுதும் தம்மைப் போலவே திருத் துழாய் துணையாக பெற வில்லையே என்று வருந்துவதாக ஆழ்வார் திரு உள்ளம்
அவன் போக்யத்தை தம்மை நினைப்பூட்டி வருந்துவதை இத்தால் ஆழ்வார் அறிவிக்கிறார்
திங்களம் பிள்ளை புலம்பத் தன் செங்கோலரசு பட்ட-செங்களம் பற்றி நின்று எள்கு புன்மாலை-தமக்கு உண்டான ஞான பிரகாசமும் துயர் அடையும் படி விவேகமும் குலைந்து-பக்தியே விஞ்சி ஆற்றாமையே விளைக்கும் கொடிய காலம்
தென் பாலிலங்கை-வெங்களம் செய்த நம் விண்ணோர் பிரானார் துழாய் துணையா-துஷ்ட நிக்ரஹ சிஷ்ட பரிபாலன சீலரான-எம்பெருமானது போக்யதையை நினைப்பூட்டிக் கொண்டு –
நங்களை மாமை கொள்வான் வந்து தோன்றி நலிகின்றதே – -எமது ஸ்வரூபத்தை மாற்றும் படி வருத்துகிறது –
————————————————————
நலியும் நரகனை வீட்டிற்றும் வாணனை திண் தோள் துணித்த
வலியும் பெருமையும் யான் சொல்லும் நீர்த்தல்ல மைவரை போல்
பொலியும் உருவில் பிரானார் புனை பூம் துழாய் மலர்க்கே
மெலியும் மட நெஞ்சினார் தந்து போயின வேதனையே – – 78- –
ஆழ்வார் திரு உள்ளம் அவன் திருத் துழாய் மாலையைப் பெற ஆசைப்பட்டு கிடையாமையாலே இவருக்கு
வருத்தம் விளைவித்து அவன் இடம் தான் போய் அடைந்ததே
இவரே தேவாதி தேவன் என்பதை நரகாசுர வத – பாணாசூர விருத்தாந்தங்களால் வெளியிட்டு –
வருணன் குடை -மந்தரகிரி சிகரம் ரத்னா கிரி -அதிதி உடைய குண்டலங்கள் -ஐராவத யானை -கவர்ந்து போக -சத்யாபாமை தேவி யுடன்
கருட வாகனத்தில் வந்து முரனை அழித்து-நாயகனையும் அழித்து 16100 — தேவ கன்னிகைகளையும் -கொண்டு பாரிஜாதம் கொணர்ந்து
துவாரகையில் சத்யா பாமை வீட்டுப் புழக்கடையில் நாட்டினானே
அவனது விரோதி நிரசன வல்லமை பரத்வம் நம் போல்வாருக்கும் வேதங்களுக்கும் கூட சொல்ல முடியாதே
அவனைக் கிட்டி அனுபவிக்கப் பெறாமல் அவனது போக்யத்தையிலே மனம் செலுத்துவதும் ஆற்றாமையையே விளைவிக்கும் -என்றவாறு
————————————————————————–
வேதனை வெண் புரி நூலனை விண்ணோர் பரவ நின்ற
நாதனை ஞாலம் விழுங்கும் நாதனை ஞாலந்தத்தும்
பாதனைப் பாற்கடல் பாம்பணை மேல் பள்ளி கொண்டு அருளும்
சீதனையே தொழுவார் விண்ணுளாரிலும் சீரியரே – – -79 –
நாயகனைப் பிரியாத மகளிர் பாக்யத்தை கூறித் தலைவி இரங்கும் பாசுரம் -இங்கேயே அவனை-இடைவிடாமல் அனுபவிக்கப் பெற்றவர் முக்தர்களிலும் சீரியர்
பாற்கடல் பாம்பணை மேல் பள்ளி கொண்டு அருளும்-சீதனையே-ஸ்ரீ தேவி பூ தேவி திருவடி வருட -அப்படிப்பட்ட இடையில்லாத் போகம் தனக்கு கிடையாமையை சொல்லி
வேத முதல்வன் விளங்கு பூரி நூலன் –ஞாலந்தத்தும் பாதனைப் -திரு உலகு அளந்த திருவடி யுடையவன் -உத்பத்தி ஸ்தானமான திருவடியை யுடையவன் என்றுமாம்
-திருமாலின் திருவடியின் நின்றும் பூ லகம் வந்தமை புருஷ ஸூ கதம் சொல்லுமே
உண்ணும் சோறு இத்யாதி -மனம் மொழி காயம் மூன்றாலும் இங்கேயே பகவத் அனுபவமே யாத்திரையாக-கொண்ட ஆழ்வார் நித்ய ஸூ ரிகளிகளும் மேம்பட்டவர் என்றதாயிற்று –
————————————————————————–
சீரரசாண்டு தன் செங்கோல் சில நாள் செலீ இ க்கழிந்த
பார் அரசு ஒத்து மறைந்தது நாயிறு பாரளந்த
பேரரசே எம் விசும்பரசே எம்மை நீத்து வஞ்சித்த
ஓரரசே அருளாய் இருளாய் வந்து உறுகின்றதே – -80 – –
மாலைப் பொழுது கண்டு தலைவி இரங்கும் பாசுரம் -உரு வெளிப்பாட்டால் நாயகன் நேராக தோன்றி-அவனை நோக்கி அருளிச் செய்யும் பாசுரம் –
சீரரசாண்டு தன் செங்கோல் சில நாள் செலீ இ க்கழிந்த-பார் அரசு ஒத்து மறைந்தது நாயிறு -சூர்யா அஸ்தமனம் அரசன் ஆண்டு மறைந்தால் போலே என்றவாறு –
நீர் வந்து ரஷியா விடில் அரசர்கள் இல்லாத ராஜ்யத்தில் கணவனை இழந்த பெண் மக்கள் கொடியோரால்-படும் பாட்டை இருளினால் நான் பாடுவேன் என்கிறார் யாயிற்று
இருளில் அகப்பட்ட தன்னையும் சூரியனையும் மீட்க ஓங்கி இலக்கு அளந்த உத்தமன் வேண்டுமே –பாரளந்த பேரரசே -என்கிறார் –
பரமபதம் போலே என்னையும் அனர்யார்ஹம் ஆக்கிக் கொள்ளத் தக்கவனே-எம் விசும்பரசே
பிரியேன் பிரிந்தால் தறியேன் -இன்ன காலத்தில் வருவேன் சொல்லி வராமல் –எம்மை நீத்து வஞ்சித்த ஓரரசே –
ஓரரசே -இப்படியும் ஒரு தலைவன் உண்டாவதே –
என்னை உபேக்ஷித்து உன்னைக் காட்டாது இருக்கும் இந்த ஸ்வபாவத்தில் முடி சூடி இருக்கிறவனே-வஞ்சித்ததோர் அரசே –
அவனைச் சேர பெறாமையாலே விவேக பிரகாசம் குலைந்து மோஹாந்தகாரம் மேல் இடுகின்ற படியை-எம்பெருமானைக் குறித்து விண்ணப்பம் செய்கிறார்
இத்தால் சம்சாரத்தில் இருப்பு அஞ்ஞானம் வந்து மேல் இடும்படி இருக்கையாலே கடுக இவ்விருப்பைக் கழித்துத் தர வேணும்-என்று அருளிச் செய்கிறார் -நம்பிள்ளை -ஸ்ரீ ஸூ க்திகள்-
—————————————————————
ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
-ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
நம் ஆழ்வார் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .
Leave a Reply