முதல் திருவந்தாதி– பாசுரங்கள் –61-70- -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் —

ஹிதத்தில் அறியாததுக்கு-தம் தாமுடைய உத்பத்தியில் வைத்து அறிவுணர்த்துகிறார் -(உத்பாதாகனே-பெற்றவனே காக்க வேண்டுமே )

அவனை ஒழிய இவை தம் தாமுக்கு ஹிதம் அறியாது என்றீர் –
அவன் தான் இவை தன்னை நோக்க வேணும் என்கிற ஹேது என் என்னில்
பெற்றவனை ஒழிய வளர்ப்பார் உண்டோ என்கிறார் –

உலகும் உலகிறந்த ஊழியும் ஒண் கேழ்
விலகு கருங்கடலும் வெற்பும் உலகினில்
செந்தீயும் மாருதமும் வானும் திருமால் தன்
புந்தியிலாய புணர்ப்பு ——-61-

பதவுரை

உலகும்–பூமி முதலிய லோகங்களும்
உலகு இறந்த ஊழியும்–இவ்வுலகம் யாவும் அழிந்து கிடக்கிற பிரளய காலமும்
ஒண் கேழ் விலகு–அழகிய நிறத்தோடு அலை யெறிகிற
கரு கடலும்–கரு நிறத்ததான ஸமுத்ரமும்
வெற்பும்–மலைகளும்.
உலகினில் செம் தீயும்–இவ்வுலகத்திலுள்ள செந்நிறமான் தேஜஸ் பதார்த்தங்களும்
மாருதமும்-காற்றும்
வானும்–ஆகாயமும்
(ஆகிய இவையாவும்-ஐந்த்தைச் சொல்லி அஹங்காராதிகளுக்கும் உப லக்ஷணம்-)
திருமால் தன்–லக்ஷ்மீபதியான எம்பெருமானுடைய(திருமால் -திருவுக்கு ப்ரேரகத்வம் தூண்டும் -ஸ்ருஷ்டிக்கு அவனே )
புந்தியில்–ஸங்கல்ப ஞானத்திலால்
ஆய–படைக்கப்பட்ட
புணர்ப்பு–படைப்புக்களாம்.

புந்தியிலாய புணர்ப்பு –சங்கல்பத்தினால் உண்டாக்கிய ஸ்ருஷ்ட்டி –

உலகும் உலகிறந்த ஊழியும்-லோகம் அடங்க தானே சேஷித்த காலமும் -(சதேவ சோம்ய ஏகமேவ அத்விதீயம் –)
ஒண் கேழ்-விலகு கருங்கடலும் வெற்பும் உலகினில்–அழகிய நிறத்தை யுடைய அலை எறியா நின்ற கடலும்
லோகத்துக்கு ஆதாரமான மலையும் –
செந்தீயும் மாருதமும் வானும் திருமால் தன்-புந்தியிலாய புணர்ப்பு ——-இவ் வோக்கமான கடலிலே லோகம் அலைந்து
நோவு படப் புக்கவாறே -ஐயோ நோவு படா நின்றதே -என்று அதுக்குத் துக்கித்த பிராட்டிக்கு பிரியமாக தன் சங்கல்ப ஞானத்தால் ஸ்ருஷ்டித்து(பஹுஸ்யாம் ப்ரஜாயேய )
தெளிந்து அழகியதாய் சலிக்கின்ற கடலும் –பூமிக்கு ஆணி அடித்தால் போலே இருக்கும் வெற்பும் –
திருமால் இத்யாதி -தாய்க்கு பிரியமாக பிரஜைகளை நோக்கும் அத்தனை இறே (தத் இங்கித இத்யாதி )-

இத் தலை அறிந்தோ ஸ்ருஷ்டித்தது -விலக்காமையே உள்ளது –

————————————————————–

அவனை ஒழிய இவை தம் தாமுக்கு ஹிதம் அறியாது என்றீர் –
அவன் தான் இவை தன்னை நோக்க வேணும் என்கிற ஹேது என் என்னில்
பெற்றவனை ஒழிய வளர்ப்பார் உண்டோ என்கிறார் –

பூமியாதிகளான லோகங்களும் -லோகங்கள் எல்லாம் கால சேஷமாம் படி அமிழ்ந்து கிடக்கிற சம்ஹார காலமும்
அழகிய நிறத்தை யுடைத்தாய் அலை எறியா நின்றுள்ள ஸ்ரமஹரமான கடலும் -பூமிக்கு ஆணி அடித்தால் போலே
இருக்கிற குல பர்வதங்களும் -பின்னையும் லோகத்தில் யுண்டான சிவந்த நிறத்தை யுடைய தேஜஸ் பதார்த்தங்களும்
வாயுவும் ஆகாசமும் -இவை எல்லாம் பிராட்டிக்கு உகப்பாக ஜகத் ஸ்ருஷ்டியில் ஒருப்பட்ட
ஸ்ரீ யபதி யுடைய சங்கல்பிதமான வகுப்பை யுடையன —

(சாம்யா பத்தி இருந்தாலும் -ஜகத் வியாபார வர்ஜம் -)

(அவளுக்கும் இது -ஆனால் அவளது உகப்புக்காகவே செய்கிறான் -தோகை விரிக்கும் ஆண் மயில் போல்)

(தத் இங்கித பராதீனன்-ப்ரூ பங்கா பிரமாணம் -உல்லாச -இத்யாதி )

(“ஈஷத் த்வத் கருணா நிரீக்ஷண ஸுதா ஸந்துக்ஷணாத் ரக்ஷ்யதே
நஷ்டம் ப்ராக் ததலாபதஸ் த்ரிபுவனம் ஸம்ப்ரத்யனந்தோதயம்
ச்ரேயோ ந ஹ்யரவிந்த லோசனமன: காந்தா ப்ரஸாதாத்ருதே
ஸம்ஸ்ருத்யக்ஷர வைஷ்ணவாத் வஸுந்ருணாம் ஸம்பாவ்யதே கர்ஹிசித்“-ஸ்ரீ சது ஸ்லோகீ – 3வது ஸ்லோகம்)

“இந்த மூவுலகும் கொஞ்சம் கருணையுடன் கூடிய உன் பார்வை என்னும் அம்ருதத்தினுடைய நனைப்பதால் இரட்சிக்கப் படுகிறது.
அது கிடைக்காததால் முன்பு அழிந்தது. இப்போது பலவகையாகத் தோற்றமளிக்கிறது.
ஐஹிகம், கைவல்யம், பரமபதம், என்கிற மூவகையான சுகங்களும் மனிதர்களுக்குத்
தாமரைக் கண்ணனுடைய திருவுள்ளத்துக்கு இனியவளான உன் திருவருளல்லது மேன்மை
ஒரு போதும் எதிர் பார்க்கப் படுவதில்லை யன்றோ”

(அவளது ஆனந்தத்துக்காகவே ஸ்ருஷ்ட்டி
தூண்டி விடுகிறாள்
இவளது கண் புருவ நெரிப்பே பிரமாணம்)

(திருமால் தன் புந்தியிலாய புணர்ப்பு -ஜகத் ஸ்ருஷ்டியில் பிராட்டிக்கு அந்வயம் உண்டு என்கிறது
திரு -பிராட்டி விசேஷணம் -அப்ராதான்யம்
மால் -விசேஷ்யம் -ப்ரதாநம்
அவனுக்கே பஹுஸ்யாம் -சங்கல்பமும் நிமித்த உபாதாந ஸஹ காரி -த்ரிவித காரணத்வமும் அவனுக்கே
ஸ்ருஷ்டி லீலா ரஸத்தில் அவனைத் -தூண்டுவதும் -லீலா ரஸத்தில் பங்கு பெறுவதும் அவளது)

“ஈஷத் த்வத் கருணா நிரீக்ஷண ஸுதா ஸந்துக்ஷணாத் ரக்ஷ்யதே
நஷ்டம் ப்ராக் ததலாபதஸ் த்ரிபுவனம் ஸம்ப்ரத்யனந்தோதயம்
ச்ரேயோ ந ஹ்யரவிந்த லோசனமன: காந்தா ப்ரஸாதாத்ருதே
ஸம்ஸ்ருத்யக்ஷர வைஷ்ணவாத் வஸுந்ருணாம் ஸம்பாவ்யதே கர்ஹிசித்“–ஸ்ரீ சது ஸ்லோகீ – 3வது ஸ்லோகம்

“இந்த மூவுலகும் கொஞ்சம் கருணையுடன் கூடிய உன் பார்வை என்னும் அம்ருதத்தினுடைய நனைப்பதால் இரட்சிக்கப் படுகிறது.
அது கிடைக்காததால் முன்பு அழிந்தது. இப்போது பலவகையாகத் தோற்றமளிக்கிறது.
ஐஹிகம், கைவல்யம், பரமபதம், என்கிற மூவகையான சுகங்களும் மனிதர்களுக்குத்
தாமரைக் கண்ணனுடைய திருவுள்ளத்துக்கு இனியவளான உன் திருவருளல்லது மேன்மை ஒரு போதும் எதிர் பார்க்கப் படுவதில்லை யன்றோ”

ஸ்வஸ்தி ஸ்ரீர் தி சதா அசேஷ ஜெகதாம் சர்க்க உப சர்க்க ஸ்திதீ
ஸ்வர்க்கம் துர்க்கதிம் ஆம வர்க்கிக பதம் ஸர்வஞ்ச குர்வந் ஹரி
யஸ்யா வீஷ்யா முகம் தத் இங்கித பராதீநோ விதத்தே அகிலம்
க்ரீடேயம் கலு நாந்ய தாஸ்ய ரஸதா ஸ்யாதைக ரஸ்யாத் தயா –ஸ்ரீ ஸ் தவம் -1-

அசேஷ ஜெகதாம்–எல்லா உலகங்களுக்கும்
சர்க்க உப சர்க்க ஸ்திதீ –ஸ்ருஷ்ட்டி சம்ஹார ரக்ஷணங்களையும்
ஸ்வர்க்கம் துர்க்கதிம் ஆம வர்க்கிக பதம் –ஸ்வர்க்கத்தையும் நரகத்தையும் மோக்ஷ ஸ்தானத்தையும்
சர்வம் ச –மற்றும் உள்ள எல்லாவற்றையும்
குர்வந் ஹரி –உண்டு பண்ணா நிற்கிற எம்பெருமான்
யஸ்யா முகம் வீஷ்யா –யாவள் ஒரு பிராட்டியினுடைய முகத்தை நோக்கிக் கொண்டு
தத் இங்கித பராதீநோ–அந்த முகத்தின் புருவ நெறிப்பு முதலிய குறிப்புகளைப் பின் சென்றவனாய்
அகிலம் விதத்தே –ஸ்ருஷ்ட்டி முதலாக கீழ்ச் சொன்ன எல்லாவற்றையும் உண்டு பண்ணுகிறானோ
அந்யதா–அப்படி அவள் முகக் குறிப்பைப் பின் செல்லா விடில்
அஸ்ய –இந்த எம்பெருமானுக்கு
தயா –அப்பிராட்டியோடே
ஐக ரஸ்யாத் –ஒரு நீராக ஒருமித்து இருக்க வேண்டிய காரணத்தினாலே
க்ரீடேயம்-இயம் கிரீடா -ஸ்ருஷ்ட்டி முதலான இந்த விளையாட்டானது
அஸ்ய ரஸதா–இந்த எம்பெருமானுக்கு ஆனந்தத்தை விளைப்பதாக
ந ஸ்யாத் கலு–ஆக மாட்டாது அன்றோ
ச ஸ்ரீ –அந்தப் பெரிய பிராட்டியார்
ஸ்வஸ்தி திஸதாத் –நன்மையை அளிக்கக் கடவள்-

இவர் அபேக்ஷிக்கும் நன்மையாவது பிராட்டியை நன்றாக ஸ்துதிக்க அனுகூலமான
வாக் ஸம்ருத்தி -பக்தி ஸம்ருத்தி இத்யாதிகள் என்பது மேல் ஸ்லோகத்திலே விசதமாம் —

யத் ப்ரூ பங்கா பிரமாணம் ஸ்திரசர ரசநா தார தம்ய முராரே -பட்டர்

நம ஸ்ரீ ரெங்க நாயக்யை யத் ப்ரூ விப்ரம பேதத
ஈசேஸிதவ்ய வைஷம்ய நிம்நோந்நத மிதம் ஜகத் -பட்டர்

ஸ்ரீ யை ஸமஸ்த சித் அசித் விதாந வ்யஸநம் ஹரே
அங்கீ காரிபிரா லோகைஸ் சார்த்த யந்த்யை க்ருத அஞ்சலி -பட்டர்

உல்லாஸ பல்லவித பாலித ஸப்த லோகீ
நிர்வாஹ கோர கித நேம கடாக்ஷ லீலாம்
ஸ்ரீ ரெங்க ஹர்ம்ய தல மங்கள தீப ரேகாம்
ஸ்ரீ ரெங்க ராஜ மஹிஷீம் ஸ்ரீ யம் ஆஸ்ரயாம –பட்டர்

ஜகத் காரணத்தில் இவளுக்கு அந்வயம் உண்டோ என்று ப்ரஸ்னம் பண்ணின நடாதூர் அம்மாளைக் குறித்து பிள்ளான்
இவ்வர்த்தத்தில் ஸந்தேஹம் யுண்டோ –
ஆவாப்யாம் கர்மாணி கார்த்தவ்யாநி பிரஜாஸ் ச உத்பாத யி தவ்யா-என்று
நம் இருவராலும் கர்மங்கள் செய்யப்பட வேண்டும் – குழந்தைகளும் பிறப்பிக்கப் பட வேண்டும் – என்று பிரமாணம் சொல்லுகையாலே
ஸஹ தர்ம சரியான இவளுக்கு அந்வயம் உண்டு என்று அருளிச் செய்தார் – என்கிற ஐதிக்யம் இங்கு அனுசந்திக்கத் தக்கது –

——————————————————————————————————-

உத்பன்னமான பின்பு இவரதோ தம் காரியத்துக்கு கடவராய் இருக்கிறது -என்கிறது -களை பிடுங்கும்படி –

இவற்றை உண்டாக்கித் தான் கடக்க இருக்கை அன்றிக்கே இவற்றைக் களை பிடுங்கி நோக்குவானும் அவனே என்கிறார் –

(ஸ்ருஷ்டித்து -ததேவா அநு பிரவேசித்து கூடவே இருந்து உடன் இருந்து உடனுக்கு உடன் ரஷித்த இடங்களில் சிலவற்றைக் காட்டுகிறார்
தோள்கள் வியாபாரங்கள் – -ஸூந்த்தர தோளுடையான் )

புணர் மருதி நூடு போய்ப் பூங்குருந்தம் சாய்த்து
மண மருவ மால் விடை யேழ்   செற்று கணம் வெருவ
ஏழுலகத்    தாயினவு மெண்டிசையும் போயினவும்
சூழரவப் பொன்கணையான் தோள் ——-62-

பதவுரை

புணர் மருதின் ஊடு போய்–ஒன்றோடொன்று இணைந்திருந்த (இரட்டை) மருதமரத்தின் நடுவே தவழ்ந்து சென்று
[பின் பொருகாலத்தில்]
பூங்குருந்தம் சாய்த்து–(இலையும் கொம்புந் தெரியாதபடி) பூக்கள் நிரம்பியிருந்த குருந்த மரத்தை தள்ளிப் போட்டு
(மற்றுமொரு காலத்தில்)
மணம் மருவ–(நப்பின்னைப் பிராட்டியோடு) விவாஹம் நிறைவேறுதற்காக
மால் விடை ஏழ் செற்று–பெரிய வடிவையுடைய ஏழு ரிஷபங்களையும் முடித்து
(இன்னமொரு காலத்தில்)
கணம் வெருவ–எல்லாப் பிராணிகளும் நடுங்கும்படி
ஏழ் உலகும் தாயினவும்–மேலேழுலகங்களில் தாவிச் சென்றவையும்
எண் திசையும் போயினவும்–எட்டுத் திக்குக்களிலும் போய்ப் பரவியவையும்.
[எவை யென்றால்]
சூழ் அரவம் பொங்கு அணையான் தோள்–(பரிமளம் குளிர்த்தி மென்மை என்னும் குணங்கள்) நிரம்பிய திருவனந்தாழ்வானை
சிறந்த படுக்கையாக வுடையனான ஸர்வேச்வரனது திருத் தோள்களேயாம்.

புணர் மருதி நூடு போய்ப் பூங்குருந்தம் சாய்த்து-ஓன்று என்னலாம் படி நிர் விவரமாய் இருந்த மருதினிடை போய்
தர்ச நீயமான குருந்தத்தைச் சாய்த்தும்
மண மருவ மால் விடை யேழ்   செற்று–நப்பின்னை பிராட்டி யுடைய பாணி க்ரஹண மங்களமானது தலைக் கட்டும் படிக்கு
ஈடாக பெரிய எருதுகள் ஏழையும் செற்று
கணம் வெருவ–சங்கைஸ் ஸூராணாம்–என்கிறபடியே அனுகூலரோடு பிரதிகூலரோடு வாசி யற இது என்னாகப் புகுகிறதோ
-என்று வெருவும் படிக்கு ஈடாக
ஏழுலகத்    தாயினவு மெண்டிசையும் போயினவும்
—–ஏழு உலகையும் அநாயாசேன கடந்தனவும் -எட்டுத் திக்குகளிலும் போய் வியாபித்தனாவும் –
சூழரவப் பொன்கணையான் தோள் -பரந்து மென்மை குளிர்த்தி நாற்றங்களை யுடைத்தாய் (மெத்தென்ன பஞ்ச சயனம் )இருந்துள்ள திருவனந்த ஆழ்வானைப் படுக்கையாக யுடையவன் –

ஆஸ்ரித விரோதி நிரசன களை பிடுங்கிய படி

பூங்குருந்தும் -பூவைக் காட்டி அந்நிய பரதை பண்ணி வஞ்சிக்கப் பார்க்கை – மணம் இத்யாதி -தனக்கு வந்த கர்மத்தைத் தீர்த்த படி(நமது கர்மங்கள் போல் ஏழு ரிஷபங்கள் )
ஏழு உலகு இத்யாதி -பிராட்டிக்கு செய்யும் செயலை இந்த்ரனுக்குச் செய்கை – எண்டிசையும் போயின -திக்குகளை வெளியடக்கை(த்ரிவித பரிச்சேத ரஹிதன் -ரூபத்தாலேயும் -ஸ்வரூபத்தாலும் மட்டும் அன்றிக்கே )
சூழ் அரவு இத்யாதி -இப்படி படுக்கையிலே கண் வளரப் பெறாதே-அலமந்து திரிவதே
பாண்டரஸ் யாத பத் ரஸ்ய சாயாயாம் ஜரிதம் மயா–சிம்ஹாசனத்தில் இருக்க அவசரம் பெற்றிலன்-
-இக் காலத்தில் இறே நிழலிலே முத்துக் குடை இடுவது(கிழவனே ஓடு -அப்பனுக்குத் தப்பாத பிள்ளை -உட்கார நேரம் இல்லாமல் ஓடி -ரக்ஷணம் செய்தார்களே -)

மொய்ம் மாய மருதான அசுரரைப் பொன்று வித்து -பெரியாழ்வார் 3-1-3- அஸூர ஆவேசமும் உண்டே

சங்கைஸ் ஸூராணாம் திவி பூதலஸ் தைஸ்
ததா மனுஷ்யைர் ககநே ச கேசரை
ஸ்துத க்ரமான் ய ப்ரஸகார ஸர்வதா
மமாம்ஸ் து மங்கள்ய விருத்தயே ஹரி –ஸ்ரீ விஷ்ணு தர்மம்

————————————————————-

இவற்றை உண்டாக்கித் தான் கடக்க இருக்கை அன்றிக்கே இவற்றைக் களை பிடுங்கி நோக்குவானும் அவனே என்கிறார் –

இடைவெளி யறப் பொருந்தி நின்ற யாமளார்ஜூநங்கள் நடுவே ஊடறுத்துக் கொண்டு தவழ்ந்து போய் –இலையும் கொம்பும்
தெரியாத படி பூத்துக் கிடந்த குருந்தத்தை தள்ளிப் பொகட்டு –பிராட்டியைக் கைப் பிடிக்கை யாகிற கல்யாணம்
தலைக் கட்டுகைக்காகப் பெரிய வடிவை யுடைய ருஷபங்கள் ஏழையும் முடித்து -சங்கைஸ் ஸூ ராணாம் -என்கிறபடியே
அனுகூல பிரதிகூல விபாகம் அற சர்வ பிராணி கணமும் என்னாகத் தேடுகிறதோ என்று நடுங்கும் படி சப்த லோகங்களையும்
வருத்தம் அற அளந்து கொண்டனவும் -எட்டுத் திக்குகளிலும் போய் வியாபித்தனவும் -விஸ்திருதனாய்-
மென்மை குளிர்த்தி நாற்றங்களை யுடைய திருவனந்த ஆழ்வான் ஆகிற ஓங்கிய திருப் படுக்கையிலே கண் வளர்ந்து
அருளின சர்வேஸ்வரனுடைய திருத் தோள்கள் கிடீர் -அந்த படுக்கையும் பொறாத ஸுகுமார்யத்தை யுடையவன் கிடீர்
இச் செயல்களை செய்தான் -அப் படுக்கையில் கண் வளர பெறாமல் இப்படி அலமந்து திரிவதே என்று வயிறு பிடிக்கிறார் –

—————————————————————————————————————-

இப்படி அவன் ஸூலபன் என்று அறிந்து அனுசந்தித்த பின்பு என்னுடைய இந்திரியங்கள் அவனை அல்லது அறிகிறது இல்லை –

இப்படி இருக்கிற அவன் பக்கலிலே என்னுடைய சர்வ இந்திரியங்களும் ப்ரவணம் ஆய்த்து-
நானும் பிரவணன் ஆனேன் என்கிறார்

தோளவனை யல்லால் தொழா என் செவி யிரண்டும்
கேள்வன தின் மொழியே கேட்டிருக்கும் -நா நாளும்
கோணா கணையான் குரை கழலே கூறுவதே
நாணாமை நள்ளேன் நயம்  ——-63-

பதவுரை

தோள்–(எனது) கைகளானவை
அவனை அல்லால் தொழா–(வேறு சிலரைத் தொழு என்று நான் சொன்னாலும்) அப்பெருமானை யல்லது வேறு எவரையும் வணங்க மாட்டா;
என் செவி இரண்டும்–எனது காதுகளிரண்டும்
கேள் அவனது–ஸகலவித பந்துவுமாகிய அப்பெருமான் விஷயமான
இன் மொழியே–இனிய பேச்சுக்களையே(அவனைப் பற்றிய அருளிச் செயல்களும் -அவனது இனிய சொற்களும் -என்றபடி )
கேட்டு இருக்கும்–கேட்டுக்கொண்டு (அதனாலே) ஸத்தை பெற்றிருக்கும்;(கேட்டபடியாலே சத்தை )
என் நா–என்னுடைய நாவானது
நாளும்–நாள்தோறும்
கோள் நாக அணையான்–மிடுக்கை யுடையனான திருவனந்தாழ்வானைப் படுக்கையாக வுடைய அப்பெருமானது
குரை கழலே–ஒலிக்கின்ற வீரக் கழலை யணிந்த திருவடிகளையே
கூறுவது–சொல்லா நிற்கிறது
(இப்படியான பின்பு)
நயம்–சம்சாரிகள் விரும்பும் சப்தாதி விஷயங்களை
நாணாமை நள்ளேன்–வெட்கப்படாமல் விரும்பு வாரைப் போலே நான் விரும்ப மாட்டேன்.

தோளவனை யல்லால் தொழா –நான் வேறு ஒன்றைத் தொழச் சொன்னாலும் என் தோளானது அவனை அல்லது தொழுகிறது இல்லை –
என் செவி யிரண்டும்-கேள்வன தின் மொழியே கேட்டிருக்கும் –என் செவிகள் உறவானவனுடைய இனிய மொழியைக் கேட்டிரா நின்றது
நா நாளும்-என்னுடைய நாக்கானது எப்போதும்
கோணா கணையான் குரை கழலே கூறுவதே–கோள்-என்று ஒளிக்கும்-மிடுக்குக்கும் பேர்
ப்ரக்ருஷ்ட விஞ்ஞான பலைக தாமநி-என்னும் படியே அனந்த சாயியான சர்வேஸ்வரனையே கூறும் அத்தனை
நாணாமை நள்ளேன் நயம்  —–(லௌகீகர்கள் )ஆசைப்படுவதான-சப் தாதிகளை லஜ்ஜியாதே கிட்டேன் –
ஹாஸ்யமான விஷயம் என்றுமாம் –

அவன் ரக்ஷகனாகவுமாம் தவிரவுமாம் –
அவன் தான் தனக்குப் பகை என்னலாம் படி இருந்தாலும் என் செவி தானும் கேட்பது (புல்லாணி எம்பெருமான் பொய் கேட்டு இருப்பேனே )-ஆசைப்படும் விஷயங்கள் –
நாணாமை நள்ளேன்-ஆண் பிள்ளை சோற்றான்வியை ஆசைப் பட்டவனைப் போலே உணர்ந்தவனுக்கு லஜ்ஜிக்க வேணும்
கோள் -பிராட்டிக்கும் தனக்கும் கிடைக்கைக்கு யுண்டாகை-

(கேள் அவனது –மாதா பிதா பிராதா நாராயண–ஸூபால உபநிஷத் -கேள் உறவினர் -இன்ன உறவு என்று விசேஷியாமையாலே ஸர்வ வித பந்துவும் அவனே –

இன் மொழியே -ஸம் ஸ்ரவே மதுரம் வாக்யம்

கோள் நாகணை –கோள் -பலம் -அமிதவ் ஜா பர்யங்க-கௌஷீதகி –
ப்ரக்ருஷ்ட விஞ்ஞான பலைக தாமநி -ஸ்தோத்ர ரத்னம்

நயம் நாணாமை நள்ளேன் -நயம் -பிறரால் விரும்பப்படும் விஷயாந்தரங்கள் -இவற்றை லஜ்ஜை இல்லாமல் அணுக மாட்டேன்
ஸ்வரூப ஞானம் பிறந்த பின்பு வெட்கத்தோடே மீள வேண்டும்படி அன்றோ பிராக்ருத விஷயங்களின் தீமை -)

———————————————————————-

இப்படி இருக்கிற அவன் பக்கலிலே என்னுடைய சர்வ இந்திரியங்களும் ப்ரவணம் ஆய்த்து-
நானும் பிரவணன் ஆனேன் என்கிறார்

என்னுடைய தோள்களானவை நான் வேறு சிலரைத் தொழு என்னிலும் அந்த சர்வேஸ்வரனை அல்லது தொழுகிறனவில்லை —
என்னுடைய செவிகள் இரண்டையும் நிருபாதிக பந்துவான அவனுடைய ஸம்ஸரவே மதுரம் -ஆன பேச்சைக் கேட்டு
அத்தாலே தரித்து இருக்கும் –நாவானது -சர்வ காலமும் மிடுக்கை யுடைய திருவனந்த ஆழ்வானைப் படுக்கையாக யுடைய
சர்வேஸ்வரனுடைய ஆபரண த்வனியை யுடைத்தான -திருவடிகளையே சொல்லா நிற்கும் –
நாட்டார் விரும்பி மேல் விழுகிற விஷயங்களை அவர்களில் வியாவ்ருத்தனான நான் நிர்லஜ்ஜனாய்க் கொண்டு செறியேன்-
ஞானம் பிறந்த பின்பு லஜ்ஜித்து மீள வேண்டும் படி காணும் விஷய ப்ராவண்யத்தின் பொல்லாங்கு இருப்பது –

(எம்பெருமானே இந்திர வேஷம் போட்டு வந்தாலும் அம்பரீஷன் பார்க்க மாட்டானே)

———————————————————————————————————

பிராப்தத்தைச் செய்து அபிராப்தத்தைச் செய்யேன் என்று இருக்கிற என் பக்கல் பாபத்துக்கு வரப் போமோ -என்கிறார் –

உமக்கும் உம்முடைய கரணங்களுக்கும் பகவத் விஷயத்திலே இதர விஷயங்களைக் கடைக் கணியாத படி
ப்ராவண்யம் உரைத்தாலும் துர் வாசனையாலே அவை வந்து மேலிடில் செய்வது என் -என்ன –
நான் நின்ற நிலை இதுவான பின்பு எங்கனே அவை வந்து மேலிடும் படி -என்கிறார் –

நயவேன் பிறர் பொருளை நள்ளேன் கீழரோடு
உயவேன் உயர்ந்தவரோடு  அல்லால் வியவேன்
திரு மாலை யல்லது தெய்வம் என்று ஏத்தேன்
வருமாறு என் என் மேல் வினை  —–64–

பதவுரை

பிறர் பொருளை–பரம புருஷனுடைய பொருளான ஆத்ம வஸ்துவை
நயவேன்–(என்னுடையதென்று) விரும்ப மாட்டேன்;
கீழாரோடு–ஆத்மா அபஹாரம் பண்ணும் ஸம்ஸாரிகளோடு
நள்ளேன்–ஸ்நேஹம் கொள்ள மாட்டேன்;
உயர்ந்தவரோடு அல்லால்–சிறந்த ஸ்ரீவைஷ்ணவர்களோடு தவிர (மற்றவர்களோடு)
உயவேன்–கால க்ஷேபம் பண்ணமாட்டேன்.
திருமாலை அல்லது–ஸ்ரீ யபதியான எம்பெருமானை யன்றி (தேவதாந்தரங்களை)
தெய்வம் என்று ஏத்தேன்–தெய்வமாகக் கொண்டு துதிக்க மாட்டேன்;
வியவேன்-(இப்படியிருப்பதற்கு ஹேதுவான ஸத்வ குணம் எனக்குத் தானுள்ளதென்று அஹங்கரித்து என்னைப் பற்றி நானே) ஆச்சரியப்படவும் மாட்டேன்;
(இப்படியான அறிமாட்டார்கள். பின்பு)
என் மேல்–எம்பெருமானுடைய அநுக்ரஹத்திற்கு இலக்கான என் மேலே
வினை–அவனது நிக்ரஹ ரூபமான ) பாபம்
வரும் ஆறு என்–வரும் விதம் ஏது? [வரமாட்டாது]

நயவேன் பிறர் பொருளை -பிறர் பொருளை ஆசைப்படேன் –த்ரவ்யத்துக்கு உத்கர்ஷமாவது-த்ரவ்யம் தன்னுடைய
நன்மையாலும் -உடையவனுடைய நன்மையாலும் —
த்ரவ்யம் பரிணாமியான அசித் அன்றிக்கே ஆத்ம த்ரவ்யமாய் இருந்தது -யஸ் யாத்மா சரீரம் –பதிம் விஸ்வஸ்ய
ஆத்மேஸ்வரீம் –என்று ஓதப்படுகிறவன் உடையவன் —
உத்க்ருஷ்டமான ஆத்மாவை -என்னது -என்று இரேன் -(அந்யதா பிரதிபத்யே –சோரேண -பாரதம் )

நள்ளேன் கீழரோடு–ஆத்மாவை என்னது என்று இருக்குமவர்களோடு -இவர்களே கீழார் ஆகிறார் -அவர்களோடு கிட்டேன்
-தங்கள் படி ஆக்கிக் கொள்வர் என்று

உயவேன் உயர்ந்தவரோடு  அல்லால் -உத்தமர் என்னும் அவர்களோடு அல்லது உசாவேன்

வியவேன்-திரு மாலை யல்லது தெய்வம் என்று ஏத்தேன்–ஸ்ரீ யபதி யைக் கண்டு அல்லது விஸ்மயப் படேன் -(வியத்தல் விஸ்மயத்தல் )
அவனை அல்லது வேறு சிலரை தெய்வம் என்று ஸ்துதியேன் – வியவேன்-திரு மாலை-ஸ்ரீ யபதியினுடைய ஐஸ்வர்யத்தை அர்த்த வாதம் என்று இரேன்
(பரன் திறம் அன்றி மற்று வேறே தெய்வம் இல்லையே -பிரகாரமாக நாட்டினான் தெய்வம் எங்கும் )

வருமாறு என் என் மேல் வினை  —-அவசியம் அநு போக்தவ்யம்– என்கிற வசனத்தைக் கொண்டு என் பக்கலிலே வரப் போமோ பாபத்துக்கு -என்கிறார் –

(கீழ் விஷய அனுபவம் வாராது
ஆகவே இங்கு பாபம் என்று தத் கார்யமான விஷய அனுபவங்கள்)

க்ருதக்ருத்யன் என்கிறார் –எம்பெருமான் விரும்பும் ஆத்மாவை அபஹரியேன் -ராவணன் செயலைச் செய்யேன்
கீழார் அவனுக்கு கூட்டுப்படும் மாரீச பிரப்ரு த்திகள்- உயர்ந்தவர் விஸ்வாமித்திராதிகள் -மஹா தமாநஸ் து –
பெரியோர் -த்ருணீக்ருத விரிஞ்சாதி நிரங்குச விபூதய-ப்ரஹ்மாதிகளைக் கண்டால் அடுப்படைக் கல்லாக நினைத்து இருக்கும் அத்தனை –
திரு மாலை யல்லது வியவேன் தெய்வம் என்று ஏத்தேன்
வருமாறு என் என் மேல் வினை  –அவசியம் அநு போக்தவ்யம்–என்கிறவை என்னை நலியவோ –

(யோ அந்யதா சந்த மாத்மாநம் அந்யதா ப்ரதிபத்யதே
கிம் தேந ந க்ருதம் பாபம் சோரேண ஆத்ம அபஹாரிணா –ராவணனை ஒத்ததொரு திருட்டு அன்றோ இது –

உத்தம புருஷஸ் த்வ அந்நிய -என்பதால் பரமபுருஷனை பிறர் என்னலாமே –
ஸ்ரீ கௌஸ்துபம் போல் இனிய வஸ்து அன்றோ -)

————————————————————————-

உமக்கும் உம்முடைய கரணங்களுக்கும் பகவத் விஷயத்திலே இதர விஷயங்களைக் கடைக் கணியாத படி
ப்ராவண்யம் உரைத்தாலும் துர்வாசனையாலே அவை வந்து மேலிடில் செய்வது என் -என்ன –
நான் நின்ற நிலை இதுவான பின்பு எங்கனே அவை வந்து மேலிடும் படி -என்கிறார் –

உத்தம புருஷஸ் த்வந்ய–(கீதை -15)என்கிறபடியே சர்வ விசஜாதியனான சர்வேஸ்வரனுடைய ஆத்ம த்ரவ்யத்தை என்னது என்று விரும்பேன் –

(புருஷோத்தமன் -வியாபித்து -தாங்கி -ஸ்வாமித்வம் -மூன்றாலும் –மற்றவை சொத்துக்கள் -ஆளப் படுபவை- தாங்கப்படுபவை இந்த ஸ்லோகம் அடியாகவே ஆளவந்தார்)
பிறரதான ஆத்மாவை என்னது என்று இருக்கும் தாழ்ந்த சம்சாரிகளோடு செறியேன் -உத்துங்கமான ஆத்ம வஸ்து
சர்வ உத்தமனான சர்வேஸ்வரனுடையது என்று இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்களை ஒழிய ஏதேனும் ஒன்றை உசாவேன் –
சர்வாதிகனான ஸ்ரீ யபதியை ஒழிய புறம்பே சிலரை ஆஸ்ரயணீய தேவதைகள் என்று புத்தி பண்ணி வாய் விட்டுப் புகழேன்
இவ்வாகாரங்கள் நமக்கு உண்டாயத்தே என்று ஆச்சர்யப் பட்டேன் -இப்படியான பின்பு பகவத் அனுக்ரஹ பாத்ரரான நம்முடைய
மேல் தன் நிக்ரஹ ரூபமான பாபம் வந்து மேலிடும் படி எங்கனே –(அனுக்ரஹம் புண்யம் -நிக்ரஹம் தானே பாபம் )திருமாலை அல்லது வியவேன்–
அவனை அல்லது தைவம் அன்று ஏத்தேன்–என்னவுமாம் –

—————————————————————————————————————

இது எனக்கு ஒருவனுக்குமே அன்று -அவனை ஆஸ்ரயித்தார் எல்லார்க்கும் ஒக்கும் என்கிறார் –

வினையால் அடர்ப்படார் வெந் நரகில் சேரார்
தினையேனும் தீக் கதிக் கண் செல்லார் நினைதற்
கரியானைச் சேயானை ஆயிரம் பேர்ச் செங்கட்
கரியானைக் கை தொழுதக்கால்   ——-65–

பதவுரை

நினைதற்கு அரியானை–(ஸ்வ ப்ரயத்நத்தாலே) நினைப்பதற்குக் கூடாதவனும்
சேயானை–(நெஞ்சுக்கு விஷயமாகாதபடி) மிக்க தூரத்திலிருப்பவனும்
ஆயிரம் பேர்–ஆயிரம் திருநாமங்களை யுடையவனும்-பேர் ஆயிரம் கொண்ட பீடுடையான் -நாமம் ஸஹஸ்ரவான் –
செம் கண் கரியானை–சிவந்த திருக் கண்களையும் கறுத்த வடிவை யுமுடையனுமான பெருமானைக் குறித்து
கை தொழுதக்கால்–அஞ்சலி பண்ணினால் (ஆல் -துர்லபம் )
(அப்படி அஞ்சலி பண்ணினவர்கள்)
வினையால்–நல் வினை தீ வினைகளால்
அடர்ப் படார்–நெருக்கு பட மாட்டார்கள்;
வெம் நரகில்–கொடிய சம்ஸாரமாகிற நரகத்தில்
சேரார்–(மீண்டும்) சென்று கிட்ட மாட்டார்கள்;
தினையேனும்–சிறிதளவும்
தீ கதிக்கண்–கெட்ட வழிகளில்
செல்லார்–போக மாட்டார்கள்.

(தென் புலத்தார்க்கும் என்றும் கடவுடையேன் அல்லேன் -அமுதனார்)

வினையால் அடர்ப்படார் -பாபத்தால் அடர்க்கப் படார்
வெந்நரகில் சேரார்-பாப பலமான நரகில் சேரார்
தினையேனும் தீக் கதிக் கண் செல்லார் -தர்ம புத்ரன் நன்றாக தர்சனம் பண்ணினவோ பாதியும் கூடாது இவர்களுக்கு
நினைதற்–கரியானைச்–ஸ்வ யத்னத்தாலே அறியப் போகாதவனை
சேயானை -அதுக்கு அடி தூரஸ்தனாகை(விஷய விலக்ஷணம் )
ஆயிரம் பேர்ச் செங்கட்-கரியானைக் கை தொழுதக்கால்   ——தான் கொடுத்த அறிவை யுடையார்களுக்கு
ஏத்துகைக்கு ஆயிரம் திரு நாமத்தையும் -கண்டு அனுபவிக்கைக்கு ஸ்ரமஹரமான வடிவையும் யுடையவனை அஞ்சலி பண்ணினால்
வினையால் அடர்ப்படார்-என்னைப் போல் விதேய கரணம் இன்றியே பாவனம் என்று ஆஸ்ரயித்ததற்கு பாபம் போம்(கைங்கர்யம் என்று ஆஸ்ரயிக்கும் கோடியில் இவர் )
வினை -இங்கு அனுபவிக்கும் பாப பலம் அனுபவியார் -வெந்நரகு போய் அனுபவிக்கும் பாப பலம்
தினை -அஸத்யாபவத்தாலே(தர்மபுத்ரன் நன்றாக தர்சனம் செய்ய வேண்டிற்றே )
நினைதற்–கரியானைச்–ஸ்வ யத்னத்தாலே நினைப்பதற்கு அரியானை -சேயானை -இவன் குற்றம் அன்று -வஸ்து ஸ்வ பாவம்

ஆயிரம் இத்யாதி -தானே காட்டுவார்க்கு இழிந்த இடம் எல்லாம் துறையாகை
கை தொழுதக்கால் -பாலைக் குடிக்க நோய் போம் -வகுத்தது செய்ய அமையும் –

(யாரும் ஒர் நிலைமையன் என அறிவரிய எம்பெருமான் -திருவாய் -1-3-4-)

——————————————————————–

இது எனக்கு ஒருவனுக்குமே அன்று -அவனை ஆஸ்ரயித்தார் எல்லார்க்கும் ஒக்கும் என்கிறார் –

ஸ்வ யத்னத்தாலே அளவிட்டு நினைக்கைக்கு மிகவும் அரியனாய் மநோ ரத பதத்துக்கு மிகவும் எட்டாத படி அதி தூரஸ்த-தன்னாய்
தன் அருளாலே அறிந்து அனுபவிக்க இழிந்தார்க்கு இழிந்த இடம் எங்கும் துறையும் படி குண சேஷ்டிதங்களுக்கு வாசகமான
ஆயிரம் திரு நாமங்களை யுடையனாய் வாத்சல்ய ஸூ சகமாய்ச் சிவந்த திருக் கண்களையும் –
அதுக்குப் பகைத் தொடையான கறுத்த வடிவையும் யுடையனான சர்வேஸ்வரனை அஞ்சலி பிரணாமாதி அனுவர்த்தனங்களைப் பண்ணி
ஆஸ்ரயித்தால் புண்ய பாப ரூப கர்மங்களாலே நெருக்குப் படார் -அதுக்கு பலமாக வரக் கடவதாய் அதி குரூரமான
சம்சாரம் ஆகிற நரகத்திலே சென்று கிட்டார் –ஏக தேசமும் துர்மார்க்கங்களிலே போகார்-

———————————————————————————————————————————

அறிவுடையார்களாய் இருப்பார்கள் ஆகில் பஜனீயன் அவனே கிடீர் என்கிறார்

காலை எழுந்து உலகம் கற்பனவும் கற்று உணர்ந்த
மேலைத் தலை மறையோர் வேட்பனவும் வேலைக் கண்
ஓராழி யானடியே யோதுவது மோர்ப்பனவும்
பேராழி கொண்டான் பெயர் ——66-

பதவுரை

உலகம்–உயர்ந்தவர்களான முமுக்ஷுக்கள்-உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டே
காலை எழுந்து–(ஸத்வ குணம் வளரக் கூடிய ) விடியற் காலையில் துயில் விட்டெழிந்து
கற்பனவும்–அப்யஸிப்பனவும்,
கற்று உணர்ந்த மேலை தலைமறையோர்–படித்து அறிவு நிரம்பிய வைதி கோத்தமர்கள்-கற்க வேண்டிய முறை அறிந்து -ஆச்சார்ய கைங்கர்யம் பண்ணி –
வேட்பனவும்–ஸாக்ஷாத்கரிக்க ஆசைப்படுவனவும்.
(எவை யென்றால்)
வேலைக் கண் ஓர் ஆழியான்–திருப் பாற்கடலில் ஒப்பற்ற திருவாழியை யுடையனாய்ப் பள்ளி கொண்டிருக்கும் பெருமானுடைய
அடியே–திருவடிகளேயாம்;
ஓதுவதும்–மஹான்களால் ஸ்ரவணம் பண்ணப் பெறுவனவும்
ஓர்ப்பனவும்–மநநம் பண்ணப் பெறுவனவும்
(எவை யென்றால்)
பேர் ஆழி கொண்டான்–பெரிய கடல் போன்ற திருமேனியைக் கொண்ட அப்பெருமானுடைய
பெயர்–திருநாமங்களேயாம்.

உலகம் -உயர்ந்தோரான முமுஷுக்கள் –

காலை எழுந்து உலகம் கற்பனவும் –ஸத்வ உத்தரமான காலையில் எழுந்து இருந்து -மோக்ஷ இச்சை யுடையவர்கள் –கற்பனவும் –
கற்று உணர்ந்த மேலைத் தலை மறையோர் வேட்பனவும்–அறிவு தலைக் கட்டினவர்கள்-பாவன பிரகர்ஷத்தாலே சாஷாத் கரிப்பனவும்
வேலைக் கண்–ஓராழி யானடியே யோதுவது மோர்ப்பனவும்–இவற்றினுடைய ரக்ஷணத்துக்காக திருப் பாற் கடலிலே
கையும் திருவாழியுமாய்க் கிடக்கிற சர்வேஸ்வரனுடைய திருவடிகளையே –
பேராழி கொண்டான் பெயர் —-சர்வேஸ்வரனுடைய திரு நாமங்களையே இவர்களுடைய ஸ்ரவணத்துக்கும் ஆனந்தத்துக்கும் விஷயமாவது –

காலை -சர்வ உத்தரமான காலம் -வேலைக் கண் ஓர் ஆழியான் அடியே – கரையை யுடைத்தாய் –ஒப்பில்லாத கடல் –
பேர் ஆழி கொண்டான் -இவர்களை ரஷிக்கைக்காக உருவின பத்திரமும் தானுமாய் இருக்கை –கை கழலா நேமியான்-

(காலை எழுந்து உலகம் கற்பனவும் -உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டே
காலை -ஆயுளுக்கு ஆரம்ப நிலை யான இளமை
கிளர் ஒளி இளமை கெடுவதன் முன்னம் –திருவாய் -2-10-1-

வேலைக்கண் ஓர் ஆழியான் அடியே -வேலை -கரை -கண் -இடம்
திருப்பாற் கடலிலே ஒப்பற்ற திரு வாழியை ஏந்தி நிற்பவன் இணை அடிகள்
ஓர் ஆழி -சக்ரதாரி என்று கொண்டு -பேராழி கொண்டான் -பெரிய கடல் போலே கண்டார் களைப்பை ஆற்றும் வடிவை எடுத்துக் கொண்டு இருக்கிறவன் என்று பொருள் கொள்வது -)

——————————————————————–

அறிவுடையார்களாய் இருப்பார்கள் ஆகில் பஜனீயன் அவனே கிடீர் என்கிறார்

கிளர் ஒளி இளமை (2-10-1 )-என்கிறபடியே பஜன அனுரூபமான கரண பாடவமுள்ள பால்ய அவஸ்தையில் ஆஸ்ரயண
உன்முகராய்க் கொண்டு கிளர்ந்து லோகம் அடங்க அப்யசிக்குமவையும்-ஞாதவ்யர்த்தங்களை(அர்த்த பஞ்சக )ஓர் ஆச்சார்யன் பக்கலிலே கேட்டு
அவற்றை அலகலகாக அறிந்து இருப்பார்களாய் -அத்தாலே வந்த மிக்க உயர்த்தியை யுடையரான பரம வைதிகர் அடங்கலும்
அறிவின் பலமாக சாஷாத் கரிக்க ஆசைப் படுவனவும் -கரையோடே கூடி இடமுடைத்தாய் -அத்விதீயமான கடலிலே
கண் வளர்ந்து அருளுகிற சர்வேஸ்வரன் திருவடிகளே –

அதுக்கு சாதனமாக ஸ்ரவணம் பண்ணுவதும் மனனம் பண்ணுவதும்
ரக்ஷண பரிகரமான பெரிய திரு வாழியை யுடையனான சர்வேஸ்வரனுடைய குண சேஷ்டிதாதிகளுக்கு வாசகமான திரு நாமங்கள்

பேர் ஆழி கொண்டான் -பெரிய கடல் போலே ஸ்ரமஹரமான வடிவை எடுத்துக் கொண்டு இருக்கிறவன் என்னவுமாம் –
அப்போது ஓர் ஆழியான் என்றது அத்விதீயமான திரு வாழியை யுடையவன் என்று கொள்வது –

(ஸ்ரோதவ்ய -மந்தவ்ய -நிதித்யாஸனம் -தர்சனம் -நான்கையும் இங்கு தமிழ் படுத்தி அருளிச் செய்கிறார் -)

—————————————————————————————————————

மோக்ஷ இச்சை யுடையவர்களுக்கும் அறிவு தலை நின்றவர்களுக்கும் அவனுடைய திருவடிகளை ஏத்துவது-
அவனுடைய திரு நாமங்களையே ஏத்துவது என்று (கீழே )சொல்லிற்று -ஞானத்துக்கு அவனே விஷயம் ஆகையால் என்கிறது (இப் பாட்டில்)-

இப்படி அறிவில் தலை நின்றவர்கள் அவனை ஆசைப்படுகைக்கு அடி
அறிவுக்கு கந்தவ்ய பூமி ஸ்ரீ யபதி அல்லாது இல்லாமையாலே-என்கிறார் –

பெயரும் கருங்கடல் நோக்கும் ஆறு ஒண் பூ
உயரும் கதிரவன் நோக்கும் -உயிரும்
தருமனையே நோக்கும் ஒண் தாமரையாள் கேள்வன்
ஒருவனையே நோக்கும் உணர்வு –67-

பதவுரை

ஆறு–ஆறுகளானவை
பெயரும் கரு கடலே நோக்கும்–அலை எறிகிற  பொங்கி கிளர்கின்ற மஹா ஸமுத்ரத்தையே நோக்கிச் செல்லும்;
ஒண் பூ–அழகிய தாமரைப் பூவானது
உயரும்–உயர்ந்த ஸ்தாநத்திலே [ஆகாசத்திலே] இருக்கிற
கதிரவனே–ஸூர்யனையே
நோக்கும்–கண்டு மலரும்;
உயிரும்–(அவைஷ்ணவர்களுடைய)பிராணனும்
தருமனையே நோக்கும்–யம தர்ம ராஜனையே சென்று சேரும்;
[இவை போலவே]
உணர்வு–ஞானமானது
ஒண் தாமரையாள்–அழகிய தாமரைப் பூவிற்
கேள்வன்–பிறந்த பிராட்டிக்கு
ஒருவனையே–வல்லபனான பெருமானொருவனையே
நோக்கும்–சென்று பற்றும்

பெயரும் கருங்கடல் நோக்கும் ஆறு –ஆறானது பூர்ணமாய் சலியா நின்ற கடலையே நோக்கா நின்றது
ஆறு கடலை நிறைக்கைக்கு அன்று புகுகிறது -புக்கு அல்லது தான் தரிக்க மாட்டாமை
ஒண் பூ -உயரும் கதிரவன் நோக்கும்–தாமரைப் பூவானது தூரஸ்தன் ஆகிலும் ஆதித்யனுக்கு அலரும் அத்தனை -அக்னி யாதிகளுக்கு அலராது
உயிரும் -தருமனையே நோக்கும் –யமனைக் கிட்டி யல்லது வேறு ஓர் இடத்திலே புக ஒண்ணாது
ஒண் தாமரையாள் கேள்வன் -ஒருவனையே நோக்கும் உணர்வு –ஞானம் ஆகில் ஸ்ரீ யப்பதியை அறியும் அத்தனை
மற்று ஒன்றை அறியாது –தத் ஞானம் அஞ்ஞானம் அது அந்யதுக்தம் –வித்யா அன்யா சில்பை நை புணம்–(ஸ்ரீ விஷ்ணு புராணம் )என்னும் படியே

(செந்தழலே வந்து அழலைச் செய்திடினும் செங்கமலம் அந்தரஞ்சேர் வெங்கதிரோற்கு அல்லால் அலராவால் -பெருமாள் திருமொழி -5-6-
ஞானம் -அறிவு திரு வில்லாத தேவரை நோக்காதே –

ஸம் ஞாயதே யேந தத ஸ்த தோஷம்
ஸூத்தம் பரம் நிர்மலம் ஏக ரூபம்
சந்த்ருஸ்யதே வா அப்யதி கம்யதே வா
தத் ஞானம் அஞ்ஞானம் அதன்யதுக்தம் -ஸ்ரீ விஷ்ணு புராணம் -6-5-87-

(நிர்மலமாய் தோஷம் இல்லாததாய் -உயர்ந்த- ஏக ரூபமாய் -அறிவதுக்கும் காண்பதுக்கும் அடைவதற்கும் -ஞான தரிசன பிராப்தி -பர ப்ரஹ்மம் )

தத் கர்ம யன்ன பந்தாய ஸா வித்யா யா விமுக்தயே
ஆயாஸா யாபரம் கர்ம வித்யா அந்யா ஸில்ப நை புணம் -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-19-41-)

————————————————————————-

இப்படி அறிவில் தலை நின்றவர்கள் அவனை ஆசைப்படுகைக்கு அடி
அறிவுக்கு கந்தவ்ய பூமி ஸ்ரீ யபதி அல்லாது இல்லாமையாலே-என்கிறார் –

காற்று வளத்திலே கொந்தளித்துக் கிளரக் கடவதாய் -பரப்பை யுடைத்தான கடலை ஆறானது நோக்கும்
அழகிய தாமரைப் பூவானது உச்ச ஸ்தல வர்த்தியான ஆதித்யனையே நோக்கா நிற்கும்
பகவத் பரர் அல்லாத நாட்டில் பிராணிகள் அடங்கலும் சரீர விஸ்லேஷ அனந்தரத்திலே தர்ம ராஜாவான யமனையே சென்று கிட்டா நிற்கும்
இவை இவை நியதமானால் போலே ஞானமானது அழகிய தாமரைப் பூவை இருப்பிடமாக யுடைய
பெரிய பிராட்டியார்க்கு வல்லபனான சர்வேஸ்வரன் ஒருவனையேயுமே சென்று பற்றா நிற்கும்
ஞானம் ஆகில் ஸ்ரீ யபதியைப் பற்றி அல்லது நில்லாது என்கை -பகவத் வியதிரிக்த விஷயங்களை பற்றி பிறக்கும் ஞானம்
எல்லாம் அஸத் கல்பம் -தத் ஞானம் அஞ்ஞானம் அது அந்யதுக்தம் –வித்யா அன்யா சில்பை நை புணம்–என்னக் கடவது இறே-

—————————————————————————————————————–

கீழ் ஞானத்துக்கு விஷயம் அவன் என்றது -உணர அரிது -என்கிறது இப் பாட்டில் –

இப்படி அறிவுக்கு பர்யவசான பூமி -அவன் அல்லது இல்லையாய் இருக்க -அவன் தன்மை அறிவார் தான் இல்லை என்கிறார்

உணர்வாரார் உன் பெருமை ஊழி தோறு ஊழி
உணர்வாரார் உன் உருவம் தன்னை உணர்வாரார்
விண்ணகத்தாய் மண்ணகத்தாய் வேங்கடத்தாய் நால்  வேதப்
பண்ணகத்தாய் நீ கிடந்த பால் ——-68-

பதவுரை

விண்ணகத்தாய்–பரமபதத்திலெழுந்தருளி யிருப்பவனே!
மண்ணகத்தாய்–இந்த மண்ணுலகில் திருவவதரிப்பவனே!
வேங்கடத்தாய்–பரத்வமும் ஸுலப்யமும் பொருந்தி நின்ற திருமலையில் நின்றருள் பவனே!
பண் நால் வேதம் அகத்தாய்–ஸ்வர ப்ரதானமான நான்கு வேதங்களாலும் அறியப் படுபவனே!
உன் பெருமை–(இப்படிப்பட்ட) உன்னுடைய பெருமையை
ஊழி தோறு ஊழி–காலமுள்ளதனையும்
(இருந்து ஆராய்ந்தாலும்)
உணர்வார் ஆர்–அறியக் கூடியவர் யாவர்?
உன் உருவம் தன்னை–உனது திவ்யாத்ம ஸ்வரூபத்தைத்தான்
உணர்வார் ஆர்–அறியக்கூடியவர் யாவர்?
நீ கிடந்த பால்–(ஆர்த்த ரக்ஷணத்துக்காக ) நீ பள்ளி கொண்டிருக்கப் பெற்ற திருப்பாற்கடலைத்தான்
உணர்வார் ஆர்–அறிய வல்லாரார்? [எவருமில்லை.]

உணர்வாரார் உன் பெருமை -ஜூஷ்டம் யதா பஸ்யத் யன்யமீஸம்-என்கிறபடியே குணங்களோடு கூடி இருக்கிற
உன்னை உணர்வார் யார் என்கிறது -(ஜூஷ்டம்-அபரிமிதமான குணங்கள் சேஷ்டிதங்கள் விபவங்கள் திவ்ய மங்கள விக்ரஹங்கள் விஸிஷ்ட ப்ரஹ்மம் )
ஊழி தோறு ஊழி-உணர்வாரார் உன் உருவம் தன்னை உணர்வாரார்–காலத்தை எல்லாம் ஒரு போகியாக்கி -உன்னுடைய
ஸ்வரூப ரூப குணங்களை உணரப் புக்கால் உணர அரிது என்கிறது
விண்ணகத்தாய் மண்ணகத்தாய் –ஸ்ரீ வைகுண்டத்தில் இருந்த நீ அவதார ரூபேண பூமியிலே வந்து அவதரித்து
அத்தாலே ஸுலப்யத்தை யுடையவனே -கடல் கிட்டிற்று என்னா பரிச்சேதிக்கப் போகாது இறே –
வேங்கடத்தாய் –சம்சாரிகளுடைய சகல துரிதங்களும் போம்படி திருமலையிலே வந்து நிற்கிறவனே(அவதார ஸுலப்யமே பரத்வம் என்னலாம் படி எளியவனாய் )
நால்  வேதப்-பண்ணகத்தாய் –ஸ்வரத்துக்கு உள்ளீடாய் நின்று ப்ரதிபாதிக்கிற வேதங்களுக்கு பிரவர்த்தகன் ஆனவனே
நீ கிடந்த பால் ——நீ கிடந்த பால் உணர்வார் யார் -(வேதம் அறிந்தேன் அஹம் -வேத புருஷனான நான் -மஹாந்தம் -அறிவுக்கு அப்பால் பட்டவன் என்று அறிந்தேன் )
உன்னாலும் அறிய ஒண்ணாது உன் ஐஸ்வர்யம் – காலம் எல்லாம் கூடினாலும் ஸுலப்யம் அறிய ஒண்ணாது –
விண்ணகம் அவதாரம் இவை என்கை —

விண்ணகத்தானாய் பாற் கடலானனாய் மண்ணகத்தானாய் வேங்கடத்தானாய் நின்றான்
நால் வேதப் பண்ணாகம் –ஐஸ்வர்யம் ப்ரதிபாதிக்கிறது கண்ணுக்கு விஷயம் இறே –
மற்றையது இங்கு சொல்லிற்று அனுவாதம் காண்கையாலே–தஸ்ய தீரா பரிஜாநந்தி யோநிம்–அவனுடைய பிறப்பு –
உயர்வற உயர் நலம் உடையவன் பிறப்பு இறே –தீரா –தீ மதாம் அக்ரேஸரா –மயர்வற மதி நலம் பெற்றார்
பரிஜாநந்தி –க்ஷணம் தோறும் எத்திறம் என்பர் –

(தஸ்ய தீரா பரிஜாநந்தி -நன்கு அறிகிறார்கள் -அறிய முடியாது என்று –
பத்துடை அடியவர்களுக்கு எளியவன் பிறருக்கு அறிய வித்தகன் -எத்திறம் என்று மோகிக்கும் படி -என்பதையே பாரிஜாநந்தி என்று உபநிஷத்

(யானும் ஏத்தி ஏழு உலகும் முற்றும் ஏத்தி பின்னும் தானும் ஏத்தி –ஏத்த ஏத்த என் செய்தோம் -ஆழ்வார்)

யோ அஸ்யாத் யஷ பரமே வ்யோமன் -ஸோ அங்க வேத யதி வா ந வேத -தனக்கும் தன் தன்மை அறிய அரியவன் அன்றோ
தஸ்ய தீரா பரிஜாநந்தி யோநிம் -க்ஷணம் தோறும் எத்திறம் என்னும்படி அன்றோ –
யஸ்யா மதம் தஸ்ய மதம்
உனது ஸ்வரூப குணங்களை உணர்வது ஒருபுறம் இருக்கட்டும் -உனது விபூதிக் கடலிலே ஒரு துளியாய் வருந்தினார் கூப்பீடு கேட்க கண் வளரும் இடமான திருப்பாற் கடல் ஒன்றையேனும் அளவிட்டு அறிவார் உண்டோ)

——————————————————————-

இப்படி அறிவுக்கு பர்யவசான பூமி -அவன் அல்லது இல்லையாய் இருக்க -அவன் தன்மை அறிவார் தான் இல்லை என்கிறார்

பரம பதத்திலே மேன்மை தோற்ற எழுந்து அருளி இருக்குமவனாய் -பூமி உபலஷிதையான லீலா விபூதியில் நீர்மை தோற்ற வந்து
அவதரிக்கும் ஸ்வபாவனாய் -இரண்டு இடத்துக்கும் பொதுவாய்க் கொண்டு மேன்மை நீர்மைகள் இரண்டும் கரை புரளும் படி
திருமலையிலே வந்து நின்று அருளினவனாய் -ஸ்வர பிரதானமான நாலு வேதத்தாலும் யுக்த வைபவ யுக்தனாய்(சாம வேதத்துக்கு கானம் பிரதானம் -ஸ்வரம் அனைத்துக்கும் உண்டு )
ப்ரதிபாதிக்கப்படும் ஸ்வ பாவனானவனே -இப்படி இருக்கிற உன்னுடைய குண வைஷண்யத்தாலே வந்த பெருமையை
கால தத்வம் எல்லாம் கூடினாலும் அறிய வல்லார் யார் –

அந்த குணங்களுக்கு ஆஸ்ரயமாய் இருக்கிற உன்னுடைய
திவ்ய ஆத்ம ஸ்வரூப வைலக்ஷண்யத்தை தான் அறிய வல்லார் யார்

நீ ஆர்த்த ரக்ஷணத்துக்காக பள்ளி கொண்டு அருளுகிற திருப் பாற் கடலை அறிய வல்லார் யார் –

—————————————————————————————————————

எல்லாம் (ஸ்வரூபம் ரூபம் குணம் சேஷ்டிதம் )ஒழிய ஒரோ ஒன்றை அரிய போமோ -என்கிறது(தனக்கும் தன் தன்மை அறியாததும் உதாரணம் )

வேறு ஒருவரால் அறிய ஒண்ணாமை கிடக்க கிடீர்– ஸ்வதஸ் சர்வஞ்ஞனான உன்னாலே தான் உன்னை அறியப் போமோ –என்கிறார் —

பாலன்  றனதுருவாய்  யேழுலகுண்டு ஆலிலையின்
மேலன்று நீ வளர்ந்த மெய்யன்பர் ஆலன்று
வேலைநீ ருள்ளதோ விண்ணதோ மண்ணதோ
சோலை சூழ் குன்றெடுத்தாய் சொல்லு —–69-

பதவுரை

சோலை சூழ் குன்று எடுத்தாய்–சோலைகளால் சூழப்பட்ட கோவர்த்தன மலையைக் குடையாக வெடுத்துப் பிடித்தவனே!
நீ பாலன் தனது உரு ஆய்–நீ சிறு குழந்தை வடிவு கொண்டு-பாலன் -ரக்ஷிக்க வேண்டிய பருவம்
ஏழ் உலகு–எல்லா வுலகங்களையும்-உப லக்ஷணத்தால் அனைத்தையும்
உண்டு–திரு வயிற்றிலே வைத்து
ஆல் இலையின் மேல்–ஓர் ஆலந்தளிரின் மேல்
அன்று–பிரளய காலத்தில்
வளர்ந்த–கண் வளர்ந்த செயலை
மெய் என்பர்–(ஆப்த தமரான வைதிகர்கள் யாவரும்) ஸத்யமென்கிறார்கள்.
அன்று-(எல்லாம் அழிந்து கிடந்த) அக் காலத்தில்
ஆல்–அந்த ஆலானது
வேலை நீர் உள்ளதோ–வெள்ளங் கோத்துக் கிடக்கிற பிரளய ஸமுத்திரத்தின் ஜலத்திலுள்ளதோ?
(அல்லது)
விண்ணதோ–(நிராலம்பமான) ஆகாசதில்லுள்ளதோ?
மண்ணதோ–(பிரளய ஜலத்திலே கரைந்து போன) பூமியிலுள்ளதோ?
சொல்லு–இவ் வாச்சரியத்தை நீயே சொல்ல வேணும்.

பாலன்  றனதுருவாய் –ரக்ஷக அபேக்ஷமான வடிவை யுடையையாய்
யேழுலகுண்டு -வியாதிரிக்த சகல பதார்த்தங்களையும் ரக்ஷித்து
ஆலிலையின் மேல் -சர்வர்க்கும் ஆதாரமான சர்வ ரக்ஷகனுக்கு கண் வளரப் போகாத ஆலின் இலை மேலே
மேலன்று நீ வளர்ந்த மெய்யன்பர் -அன்று வளர்ந்தத்தை ஆப்த தமரானவர்கள் மெய் என்பர்கள்-
வேத மரியாதை இல்லையாகில் ஸூன்யமாதல்–உண்டாகில் சத்யமாதலே யுள்ளது
ஆலன்று- வேலைநீ ருள்ளதோ விண்ணதோ மண்ணதோ
சோலை சூழ் குன்றெடுத்தாய் சொல்லு —-ஏழு வயசிலே மலையைக் கீழ் மேலாக எடுத்த நீ அவற்றைச் சொல்ல வேணும் –
அன்று -திக்கு எல்லாம் அழிந்த அன்று –

வேலை இத்யாதி –
நீ கண் வளர்ந்த பாற் கடலில் உள்ளதோ –நிராலம்பமான ஆகாசத்தத்ததோ -கரைந்து போன பூமியிலதோ -சொல்ல வேணும்
பின்பு மழை எடுத்த ஆச்சர்யம் இதுக்கு சத்ருசமோ –இத்தால் அவன் தன் படியை அவன் தானே சொல்லுகையும் அரிது -என்றபடி –

பாலனுடைய ரூபத்தை யுடையையாய் -அப்ராக்ருதமான மஹத்தரமான திரு மேனியைச் சிறுக்கி சஜாதீயம் ஆக்குகை மெய் என்பர் ரிஷிகள்
எத்திறம் -என்ன -பொய் என்ன ஒண்ணாதே -மெய் -நீயே சர்வத்துக்கும் தாரகன் ஆனமையும் மெய் -இருந்த படி என்
சோலை இத்யாதி -ஏழு பிராயத்தில் பெரிய மலையை எடுத்த ஆச்சர்யமும் சொல்ல வேணும் –
இது ஆழ்வார் வந்தால் கேட்க இருந்தோமோ என்றானே எம்பெருமான் -இது அத்யந்தம் விஸ்மயம் -என்கிறார் –

(மெய் என்பர்
அப்ராக்ருதமான மகத்தான பெரிய திருமேனியை மிகச் சிறிய குழந்தையின் வடிவாக்குவது
அதற்க்கு உள்ளே எல்லா உலகங்களையும் அடக்குவது
அவ்வடிவைக் கொண்டு பவனான ஆலந்தளிரிலே கண் வளர்வது
அனைத்துமே உண்மை -என்று ஈடுபட்டு எத்திறம் என்பர்களே
மெய் -உனது திருமேனி அப்ராக்ருதம் என்பதும் மெய்
அத்தைப் பிராகிருத சஜாதீயம் ஆக்கினாய் என்பதும் மெய்
அது மிக மஹத்தானது என்பதும் மெய் -அத்தைச் சிறியது ஆக்கினாய் என்பதும் மெய்
அது ஸர்வ ஆதாரம் என்பதும் மெய் -அதற்கு ஒரு ஆலந்தளிரை ஆதாரம் ஆக்கினாய் என்பதும் மெய்
இது போன்ற அகடிகடநா ஸாமர்த்யங்கள் இருந்தபடி என்
சொல்லு -ஒவ்வொரு செயலும் உன்னால் சொல்ல முடியாதது அன்றோ)

———————————————————————-

வேறு ஒருவரால் அறிய ஒண்ணாமை கிடக்க கிடீர்– ஸ்வதஸ் சர்வஞ்ஞனான உன்னாலே தான் உன்னை அறியப் போமோ –என்கிறார் –(தனக்கும் தன் தன்மை அறியான் )

ஒரு குறட்டைத் (கன்னத்தை)தெறித்தால் ஒரு குறட்டிலே பால் பெருகும் படி முக்த சிசுவான விக்கிரஹத்தை யுடைய வனாய்
சப்த லோகங்களையும் திரு வயிற்றிலே வைத்து ஒரு பவனான ஆலந்தளிரிலே அந்த பிரளய சமயத்திலே
சர்வ சக்தியான நீ கண் வளர்ந்து அருளின இத்தை பரமார்த்தம் என்று கொண்டு பரம ஆப்தரான ரிஷிகள் அடங்கலும் சொல்லா நின்றார்கள்
அந்த ஆலானது சர்வமும் அழிந்த அன்று வெள்ளம் கோத்துக் கிடக்கிற சமுத்திர ஜலத்தில் உள்ளதோ
அன்றிக்கே -நிராலம்பமான ஆகாசத்தில் உள்ளதோ –இல்லையாகில் பிரளய ஜலத்தில் கரைந்து போன பூமியிலே உள்ளதோ
ஏழு திரு நக்ஷத்திரலே ஏழு நாள் ஒருபடிப் பட சோலைகளாலே சூழப் பட்ட கோவர்த்தன பர்வதத்தை எடுத்துத்
தரித்துக் கொண்டு நின்றவனே -இத்தை அருளிச் செய்ய வேணும் -உன்னாலும் உன் படி சொல்ல முடியாது என்று கருத்து –

——————————————————————————————————————

இப்படி அபரிச்சின்ன சக்தியான பின்பு அவனை எல்லோரும் ஆஸ்ரயிங்கோள் என்கிறார் –

இப்படியான பின்பு ஜகத்தில் உள்ளார் அடங்கலும் அநந்ய பரராய்க் கொண்டு அவனை ஆஸ்ரயிங்கோள் என்கிறார் –

சொல்லும் தனையும் தொழுமின் விழுமுடம்பு
செல்லும் தனையும் திருமாலை -நல்லிதழ்த்
தாமத்தால் வேள்வியால் தந்திரத்தால் மந்திரத்தால்
நாமத்தால்  ஏத்துதிரேல் நன்று —–70-

பதவுரை

திருமாலை–பிராட்டியோடு கூடின பெருமானை
நல் இதழ் தாமத்தால்–அழகிய மலர்களைக் கொண்டு தொடுத்த மாலைகளாலும்
வேள்வியால்–யாகம் முதலிய ஸத் கரு மங்களாலும்
தந்திரத்தால்–(மந்த்ரமில்லாத) வெறும் க்ரியைகளாலும்
மந்திரத்தால்–(க்ரியா கலாபமில்லாத) வெறும் மந்திரங்களாலும்
விழும் உடம்பு செல்லும் தனையும்–அஸ்திரமான இந்த சரீரம் உள்ள வரையில்
தொழுமின்–தொழுங்கள்;
(இவற்றை செய்ய சக்தி யில்லா விட்டால்)
சொல்லும் தனையும்–(உங்களுக்குச்) சொல்லக் கூடிய சக்தியுள்ள வரையிலும்
நாமத்தால்–திருநாமங்களைக் கொண்டு
ஏத்துதிர் ஏல்–புகழ்ந்தீர்களாகில்
நன்று–அது மிகவும் நல்லது.

சொல்லும் தனையும் தொழுமின் –நாக்கு சொல்லப் பாங்கான போது எல்லாம் சொல்லி ஆஸ்ரயிங்கோள்
விழுமுடம்பு செல்லும் தனையும் -உடம்பு பாங்கான போது எல்லாம் ஆஸ்ரயிங்கோள்
திருமாலை– பாங்கான போது ஆஸ்ரயிக்க -யாவதாத்மபாவி ஆஸ்ரயித்தானாகக் கொள்ளும் பித்தனைச் சொல்லுகிறது –
நல்லிதழ்த்-தாமத்தால் வேள்வியால் தந்திரத்தால் மந்திரத்தால்–நல்ல செவ்விப் பூவை யுடைய மாலையால் –
செவ்வி மாலை கிடையாதாகில் கர்தவ்யமான கர்மத்தால் —

(மாலை கிடைக்கா விடில் யஜ்ஞம் -அது அவ்வளவு உசந்தது பெரியாழ்வார் -ஆண்டாள் -துளஸீ ப்ருத்யர் -மாலா காரர் -சிந்து பூ மகிழும் திருவேங்கடம் )

அது கிடையாதாகில் அதுக்கு அடியான தந்திரத்தால் –
அது அடையப் போகாதாகில் மந்த்ரத்தைக் கொண்டு செய்வது –
க்ரியா ரூபமான தந்திரம் அரிதாளில் வாக் வ்ருத்தியான மந்திரத்தால் செய்வது –

(தந்திரம் மந்த்ரத்திலும் ஸ்ரேஷிடம் -நம்பூதிரிகள் கேரளா)

மந்திரத்துக்கு தேச கால நியதியும் அதிகாரி நியதியும் வேணும் என்று இருந்திகோள் ஆகில்
நாமத்தால்  ஏத்துதிரேல் நன்று —–திரு நாமத்தால் ஏத்துவது -தாய் பேர் சொல்ல குளித்து வர வேண்டா இறே –
திருமாலே -நியதி உண்டு என்னில் அம்மே என்னுமோபாதி சொல்ல அமையும் –

(பட்டர் நஞ்சீயர் ஸம்வாதம் -மனு பகவான் கங்கை நீராடக் போகிறவன் குளித்துப் போக வேண்டுமோ)

———————————————————————

இப்படியான பின்பு ஜகத்தில் உள்ளார் அடங்கலும் அநந்ய பரராய்க் கொண்டு அவனை ஆஸ்ரயிங்கோள் என்கிறார் –

புருஷகார பூதையான பிராட்டியோடே நித்ய சம்யுக்தையான சர்வேஸ்வரனை –இப்போது விழும் இப்போது விழும் என்னும் படி
அஸ்திரமான சரீரமானது விழும் அளவும் அழகிய பூக்களால் யுண்டான திருமாலையாலும்
யாகாதி ஸத் கர்மங்களாலும்-மந்த்ர விதுரமான(மந்த்ரம் இல்லாத )கேவல கிரியைகளாலும் -க்ரியா விதுரமான மந்த்ரங்களாலும் ஆஸ்ரயிங்கோள் –
இதுக்கும் சக்தம் இன்றிக்கே இருக்கில் உங்கள் வாக்கு யுக்தி சாமர்த்தியத்தை உடைத்தாய் கொண்டு சொல்லும் அளவும்
குணாதிகளுக்கு வாசகமான (ஆதி -ரூபம் ஸ்வரூபம் சேஷ்டிதங்கள் )திரு நாமங்களாலே ஸ்ரீ யபதியைப் புகழ்வுதிகோள் ஆகில் அது மிகவும் நல்லது –

————————————————————————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: