முதல் திருவந்தாதி–பாசுரங்கள் –81-90– -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் —

பிரயோஜனாந்தர பரர்க்கும் கூட உடம்பு நோவக் கடலைக் கடைந்து அம்ருதம் கொடுத்து அவர்களை சாவாமல்
காத்தவனுடைய பேர் அன்றோ அநாதியான நரகத்தின் நின்றும் கைப்பிடித்து ஏற விடும் பரிகரம்-என்கிறார் –

(திரு நாம சங்கீர்த்தனம் நேராக உபாயம் ஆகாதே –
ஸர்வ தர்மான் பரித்யஜ்ய -பகவானே உபாயம் என்கிற திருட அத்யாவசிய இல்லாதவனுக்கு இது உபாயம்
ப்ரபன்னனுக்கு கைங்கர்ய ரூபம் ஆகும்)

பிரயோஜனாந்தர பரர்க்கும் கூட உடம்பு நோவக் கடல் கடைந்து அபேக்ஷித சம்விதானம் பண்ணுமவன்
திரு நாமமே கிடி கோள் சம்சாரத்தை கடக்கைக்கு உபாயம் -என்கிறார் –

ஆளமர் வென்றி யடு களத்துள் அஞ்ஞான்று
வாளமர் வேண்டி  வரை நட்டு நீளவரைச்
சுற்றிக் கடைந்தான் பெயரன்றே தொல் நரகைப்
பற்றிக் கடத்தும் படை -81-

பதவுரை

ஆள் அமர்–யுத்த வீரர்கள் நெருங்கி யிருக்கப் பெற்றதும்
வென்றி–ஜெயத்தை யுடையதுமான
அடு களத்துள்–(எதிர்த்தவரைக்) கொல்லுகின்ற யுத்த களத்திலே
அஞ்ஞான்று–(அசுரர்களைத் தேவர்கள் மேல் விழுந்து நலிந்த) அக் காலத்திலே
வாள் அமர் வேண்டி–(அநுகூலரான தேவர்கட்கு வெற்றி யுண்டாகும்படி) மதிப்புடைய யுத்தத்தை விரும்பி.
(அதற்கு ஏற்ப)
வரை நட்டு–(தண்ணீரில் அமிழக் கூடிய, மந்த்ர) பர்வதத்தை மத்தாக நாட்டி.
நீள் அரவை சுற்றி–உடல் நீண்ட வாசுகி நாகத்தைக் கடை கயிறாகச் சுற்றி
கடைந்தான்–அமுத முண்டாகும்படி திருப்பாற் கடலைக் கடைந்தவனுடைய
பெயர்–திரு நாமம் (எப்படிப்பட்ட தென்றால்)
பற்றி–(ஸம்ஸாரிகளை) வாரிப் பிடியாகப் பிடித்துக் கொண்டு போய்
தொல் நரகை–பழமையாயிருக்கிற (ஸம்ஸாரமென்னும்) நரகத்தை
கடத்தும்–தாண்டு விக்கின்ற
படை–ஸாதனம்.(அல்லேன் என்றாலும் விடாதே தானே பற்றி  கடத்தும் படை)

ஆளமர் வென்றி யடுகளத்துள் –ஆள் நிறைந்து வென்றியை யுடைத்தாய் முடிப்பதான யுத்த ஸ்தலத்திலே
வாளமர் வேண்டி-மதிப்புடைத்தான பூசலை வேண்டி –
வரை நட்டு-மந்திரத்தை நட்டு –
அஞ்ஞான்று-அஸூரர்கள் தேவர்களை முறித்து வாயில் இட்டுச் செல்லுகிற அன்று
வாளமர்-தேவர்களுக்கு மதிப்பும் ஆயுஸ்ஸூம் யுண்டாகும் படி
நீள் அரவைச்-சேதனத்தை
சுற்றிக் கடைந்தான் பெயரன்றே தொல் நரகைப்-பற்றிக் கடத்தும் படை-அள்ளி எடுத்துக் கொடு போய்
பரம பதத்தில் வைக்கும் -பற்றி -அல்லேன் என்றாலும் விடாது –

(மஹா விஸ்வாசம் மற்றவர்களுக்கும் திருநாம ஸங்கீர்த்தனமே பல பிரதமாகும்
வாஸ்ய பிரபாவம் போல் அன்று வாசக பிரபாவம்
அவன் தூரஸ்தனானாலும் இது கிட்டே நின்று உதவும்
திரௌபதிக்கு ஆபத்தில் புடவை சுரந்தது திருநாமம் இறே)

—————————-

பிரயோஜனாந்தர பரர்க்கும் கூட உடம்பு நோவக் கடல் கடைந்து அபேக்ஷித சம்விதானம் பண்ணுமவன்
திரு நாமமே கிடி கோள் சம்சாரத்தை கடக்கைக்கு உபாயம் -என்கிறார் –

ஆளோடு ஆள் மிடைந்து கிடப்பதாய்-வென்றியை யுடைத்தாய் -எதிரிகளை முடித்து விழ விடுகிற யுத்த பூமியிலே
அஸூரர்கள் தேவர்களை மேலிட்டு நலிகிற அன்று அனுகூலரான தேவர்களுக்கு ஜெயம் யுண்டாகும் படி
ஒளியை யுடைத்தாய் இருபத்தொரு யுத்தம் வேணும் என்று அபேக்ஷித்து -நீரைக் கண்டால் ஆழக் கடவ
கடைந்து அருளினவனுடைய திரு நாமம் அன்றோ பழையதாய் வருகிற சம்சாரம் ஆகிற
நரகத்தை அள்ளி எடுத்துக் கொடு போய்க் கடத்தி விடும் சாதனம் –

—————————————————————–

இப் பாட்டாலே சர்வ ஸமாஸ்ரயணீயத்துவமும் ஆஸ்ரித பாரதந்தர்யமும் சொல்லுகிறது –

தேவர்கள் ஆஸ்ரயிக்கும் படி கடலிலே கிடந்த அளவன்றிக்கே பெண் பிறந்தாரும் ஆஸ்ரயிக்கலாம் படி
திருமலையிலே வந்து சந்நிஹிதன் ஆனார் என்கிறார் –

படையாரும் வாள் கண்ணார் பாரசி நாள் பைம் பூம்
தொடையலோ டேந்திய தூபம் இடையிடையில்
மீன் மாய மாசூணும் வேங்கடமே லோரு நாள்
மானமாய வெய்தான் வரை -82-

பதவுரை

மேல் ஒருநாள்–முன்னொரு காலத்திலே [ஸ்ரீராமாவதாரத்திலே]
மான்–மாரீசனாகிற மாய மான்
மாய–இறந்து விழும்படி
எய்தான்–அம்பு தொடுத்து விட்ட இராமபிரான் (நித்திய வாஸஞ்செய்கின்ற)
வரை–மலையாவது,
படை ஆரும் வாள் கண்ணார்–வாள்-வேலாயுதம் போன்று ஒளி பொருந்திய கண்களையுடைய பெண்கள்
பாரசி நாள்–த்வாதசி யன்று
பை பூ தொடையலோடு–பசிய (வாடாத) மலர்களைத் கொண்டு தொடுத்த மாலையோடு கூட
ஏந்திய–திருவேங்கட முடையானுக்கு ஸமர்ப்பிக்கும்படி) ஏந்தியுள்ள
தூபம்–தூபமானது
இடை இடையில் மீன்–(ஆகாசத்தில்) நடுவே நடுவே தோன்றுகின்ற நக்ஷத்ரங்கள்
மாய–மறையும்படி
மாசூணும்–மாசு ஏறும்படி பண்ணா நிற்கிற
வேங்கடமே–திருமலையே யாகும்.

படையாரும் வாள் கண்ணார் -வாள் போன்று ஒளி பொருந்திய கண்களை யுடையார்
பாரசி நாள்-துவாதசி அன்று –

படையாரும் வாள் கண்ணார் பாரசிநாள் –வாள் போன்ற ஒளியை யுடைத்தான கண்களை யுடையரான ஸ்த்ரீகள் -துவாதசி நாள்
பைம்பூம்-தொடையலோ டேந்திய தூபம்-அழகியதாய் தொடுத்த மாலையோடு கூடின தூபம்
இடையிடையில்-மீன் மாய மாசூணும் -பூக்களோடு கூடின புகையானது ஆகாசத்தில் கலக்கத் தோற்றின
நக்ஷத்ரங்களை மாசூணாப் பண்ணா நின்றது –

வேங்கடமே லோருநாள்-மானமாய வெய்தான் வரை –பண்டு ஒரு நாள் ராக்ஷஸன் மாயா மிருகமாய் வர
இத்தைப் பிடித்துத் தர வேணும் என்று பிராட்டி அருளிச் செய்தது மறுக்க மாட்டாமே அத்தை முடித்தவனுடைய மலை

இப் பாட்டாலே சர்வ ஸமாஸ்ரயணீயத்துவமும் ஆஸ்ரித பாரதந்தர்யமும் சொல்லுகிறது –
வாள் கண்ணார் -தங்களை சிலர் ஆஸ்ரயிக்க இருக்கும் அவர்கள் –
மீன் மாய -ஆகாசம் தோற்றாத படி பூக்களும் புகையுமாகத் தோற்றுகை
மான் இத்யாதி -பிராட்டிக்கு நியாம்யன் ஆனால் போலே
நியாமியனாய்ப் புக்கு -தன் அனர்த்தம் என்று மீளாது கார்யம் செய்யுமவன் —

(பிராட்டிக்கு வசப்பட்டவனாய் தன் அநர்த்தத்தையும் காணாமல் அவள் கார்யம் செய்ய முற்பட்டால் போலே
அடியார்க்கும் வசப்பட்டு அவர்கள் கார்யம் செய்ய முற்படுவான் என்று கருத்து-)

———————————————————-

தேவர்கள் ஆஸ்ரயிக்கும் படி கடலிலே கிடந்த அளவன்றிக்கே பெண் பிறந்தாரும் ஆஸ்ரயிக்கலாம் படி
திருமலையிலே வந்து சந்நிஹிதன் ஆனார் என்கிறார் –

வேலாகிற ஆயுதத்தோடு ஒத்து இருப்பதாய் ஒளியை யுடைத்தான கண்களை யுடைய பெண்களானவர்கள்
துவாதசி நாளிலே அழகிய பூக்களால் தொடுத்த மாலைகளோடு கூட தரித்த தூபமானது நடு நடுவே
ஒரோ நக்ஷத்ரங்களை யுடைத்தான ஆகாசமானது மறையும் படி அத்தைச் சென்று மாசு ஏறும்படி பண்ணா நிற்கும் திரு மலையே-
முன்பு ஒரு நாளிலே பிராட்டி வசன பரதந்த்ரனாகக் கொண்டு மாயா ம்ருகம் முடியும் படி அம்பு எய்து
விழ விட்ட சக்கரவர்த்தி திரு மகன் வர்த்திக்கிற திரு மலை —

——————————————————-

ஒரு செயலேயோ –

நாம் ஆஸ்ரித பரதந்த்ரராய் அவர்கள் கார்யம் செய்வோம் என்னும் இடம் நீர் என் கொண்டு அறிந்தீர் என்ன
மது கைடபர்களைப் பொடி படுத்தும் பரிகரமுடைய நீ அத்தை விட்டு மலையை எடுப்பது
ஏறு அடர்ப்பது யாய்த்து வெறுமனேயோ -என்கிறார் –

(பிராட்டியோ ஆ நிரையோ கோப கோபீ ஜனங்களோ வாசி இல்லாமல் -ஆஸ்ரித ரக்ஷணம் செய்யும் ஸ்வ பாவன் என்பதைக் காட்டவே இப்பாசுரம்)

வரை குடை தோள் காம்பாக ஆநிரை காத்து ஆயர்
நிரை விடை யேழ்   செற்றவா  றேன்னே உரவுடைய
நீராழி யுள்  கிடந்து நேரா நிசாசரர் மேல்
பேராழி கொண்ட பிரான் –83-

பதவுரை

உரவு உடைய–மிடுக்கை யுடைத்தான
நீராழியுள்–நீரை யுடைய திருப்பாற் கடலிலே
கிடந்து–திருக் கண் வளர்ந்து,
நேர் ஆ(ன)–எதிரியாக வந்த
நிசாசரர் மேல்–மதுகைடபர் முதலிய ராக்ஷஸர்களின் மீது
(அவர்கள் நீறாகும்படி)
பேர் ஆழி–பெரிய சக்ராயுதத்தை
கொண்ட–கையிற் கொண்டிருக்கிற
பிரான்–உபகாரகனே!
(இப்படி கருதுமிடஞ் சென்று பொருது கை நிற்க வல்ல திருவாழி யாழ்வானிருக்கவும் அவனைக் கொண்டு காரியங்கொள்ளாமல்)
வரை குடை ஆக–(ஒருவராலும் அசைக்கவும் முடியாத கோவர்த்தன) மலையே குடையாகவும்.
தோள் காம்பு ஆக–தனது திருத் தோளே அந்தக் குடைக்குக் காம்பாகவும் ஆக்கி
ஆ நிரை காத்து–பசுக்களின் கூட்டங்களைப் பாதுகாத்து,
(நப்பின்னைப் பிராட்டிக்காக)
ஆயர் நிரை விடை ஏழ்–இடையர்கள் வைத்திருந்த திரண்ட ரிஷபங்கள் ஏழையும்
செற்றவாறேன்னே –முடித்த விதம் எங்ஙனே?

வரை குடை தோள் காம்பாக ஆநிரை காத்து –மலை குடையாகவும் தோள் காம்பாகவும் பசுக்களைக் காக்க
ஆயர் நிரை விடை யேழ்   செற்றவா  றேன்னே –நப்பின்னைப் பிராட்டிக்கு பிரதிபந்தகமான ஏழு வ்ருஷபத்தையும் முடித்தபடி எங்கனே —
உரவுடைய-நீராழி யுள்  கிடந்து நேரா நிசாசரர் மேல் பேராழி கொண்ட பிரான் -உரவு–என்று மிடுக்குக்குப் பெயர் -சர்ப்பம் என்றுமாம் –
திருப் பாற் கடலிலே கிடந்து-எதிரான மது கைடபர் மேலே திரு வாழியை (வீசிய )வாங்கின உபகாரகன் –

இத்தால் ஆஸ்ரிதற்கு விரோதம் வந்த போது தன் உடம்பு நோவக் கார்யம் செய்யும் என்றபடி –
ஒரு செயலேயோ – வந்ததுக்குத் தக்கது கொண்டு கார்யம் செய்வதே -(கல் மழைக்கு கல் எடுத்தான் -கல் எடுத்து கல் மாரி காத்தான் என்றும் )

உரவுடைய நீர் -முது நீர்
பேராழி இத்யாதி -இந்திரன் நோவாதபடி உன் தோள் நோவ ரஷிப்பதே –

——————————————————————–

நாம் ஆஸ்ரித பரதந்த்ரராய் அவர்கள் கார்யம் செய்வோம் என்னும் இடம் நீர் என் கொண்டு அறிந்தீர் என்ன
மது கைடபர்களைப் பொடி படுத்தும் பரிகரமுடைய நீ அத்தை விட்டு
மலையை எடுப்பது
ஏறு அடர்ப்பது யாய்த்து வெறுமனேயோ -என்கிறார் –

மிடுக்கு யுடைத்தான நீரை யுடைய திருப் பாற் கடலிலே கண் வளர்ந்து எதிரிட்ட ராக்ஷஸ பிரக்ருதிகளான
மதுகைடபர்கள் மேலே அவர்கள் பொடி படும்படி மிடுக்கால் பெரிய திரு வாழியை எடுத்துக் கொண்ட உபகாரகனே-
இப்படிக் கருதும் இடம் பொருது கை நிற்க வல்ல சக்ரம் யுண்டாய் இருக்க -அத்தை விட்டு –
ஒருவராலும் சலிப்பிக்க ஒண்ணாத மலை குடையாகவும் திருத் தோள் அதற்குக் காம்பாகவும் பசுத் திரள்களை ரக்ஷித்து-
நப்பின்னை பிராட்டையோட்டை சம்ஸ்லேஷத்துக்கு பிரதிபந்தகமாக இடையர் முன்னிட்ட திரண்ட ரிஷபங்கள் ஏழையும் முடித்த பிரகாரம் எங்கனே –

இத்தால் ஆஸ்ரித விரோதி உண்டானாலும் உன் சங்கல்பத்தால் அன்றிக்கே உடம்பு நோவக் கார்யம் செய்யும் ஸ்வபாவன் அன்றோ நீ என்றபடி –

——————————————————————————————————–

உபகாரகனான உன்னுடைய பெருமையை வேறு சிலரால் அறியப் போமோ —

உன்னுடைய ரஷ்யத்து அளவு அல்லாத ரக்ஷகத்வ பாரிப்பு ஒருவரால் பரிச்சேதிக்கலாய் இருந்ததோ -என்கிறார் –

பிரானுன்  பெருமை பிறர் ஆர் அறிவார்
உரா யுலகளந்த நான்று வராகத்
தெயிற்று அளவு போதாவா றென்கொலோ எந்தை
அடிக்களவு போந்த படி -84-

பதவுரை

பிரான்–உபகாரகனே!
உலகு–லோகத்தை
உராய் அளந்த நான்று–எங்கும் ஸஞ்சரித்து அளந்த காலத்தில்
எந்தை–எனது ஸ்வமியான வுன்னுடைய
அடிக்கு–திருவடிகட்கு
அளவு போந்த–அளப்பதற்குப் போந்திருந்த
படி–பூமியானது-படிக்கு அளவாக நிமிர்த்த திருவடி –
வராகத்து–வராஹ ரூபியான உன்னுடைய
எயிறு–திரு வெயிற்றின்
அளவு–ஏக தேசத்தளவும்
போதா–போதாதாக இருந்த
ஆறு–விதம்
என் கொல்–எங்ஙனேயோ?-பெரும் கேழலார் மஹா வராஹ -ஸ்புட பத்ர லோசந –
உன் பெருமை பிறர் ஆர் அறிவார்–உனது பெருமையை யறிவார் யாருமில்லை

பிரானுன்  பெருமை பிறர் ஆர் அறிவார்-உரா யுலகளந்த நான்று–உராய் என்று பட்டர்-அநாயாசேன அளந்த அன்று -என்று
அருளிச் செய்தார் -உலாவி -என்றுமாம் (கிடைப்பாரா என்று தடிவிப் பார்த்தானாம் )-பூமியிலே பொருந்த விட்டு என்னலுமாம் –
எந்தை-அடிக்களவு போந்த படி —– வராகத்-தெயிற்று அளவு போதாவா றென்கொலோ –ஒரு நாள் திருவடிக்குள்
அடங்கியது திரு எயிற்றுக்குப் போந்ததில்லை -என்கிறது –ரஷ்யத்தின் அளவன்று ரக்ஷகன் பாரிப்பு
நான் ஒருவனுமே உன் குணங்களில் குமிழ் நீர் உண்ணா நின்றேன்

—————–

உன்னுடைய ரஷ்யத்து அளவு அல்லாத ரக்ஷகத்வ பாரிப்பு ஒருவரால் பரிச்சேதிக்கலாய் இருந்ததோ -என்கிறார் –

உபகாரகனே -எங்கும் ஓக்க சஞ்சரித்துக் கொண்டு நீ லோகத்தை அளந்து கொண்ட அன்று என் ஸ்வாமியான
உன்னுடைய திருவடிகளுக்கு அளவு போந்த பூமியானது வராஹ ரூபியான உன்னுடைய திரு எயிற்றில் ஏக தேசத்து அளவும்
போதாதாய் இருக்கிற பிரகாரம் எங்கனேயோ -ஆன பின்பு ஏவம் விதனான உன்னுடைய பெருமையை
சர்வஞ்ஞனான நீ அறிவுதியோ அறியாயோ என்று ஸந்தேஹிக்கும் அத்தனை போக்கி வேறு சிலர் யார் தான் அறிவார்

உராய் உலகளந்த -உலாவிக் கொண்டு உலகு அளந்த -என்றபடி -ரலயோ ரபேத –என்னக் கடவது இறே –
அன்றிக்கே உரோஸிக் கொண்டு உலகு அளந்த -என்றாக்கி எல்லோரோடும் தீண்டிக் கொண்டு -என்றுமாம் –

(குர மத்ய கதோ யஸ்ய மேரு கண கணாயதே
புள்ளி நிலனும் -பரிபாடல் -2-84–ஸ்ரீ வராஹத் திரு உருவில் புள்ளி போல் பூமி
ஸ்வரூபத்துக்கே ஆபத்து வந்த பூமியை ரஷித்த அவதாரம் -ரஷ்யத்தின் அளவில்லா பாரிப்பு -உண்டே
ரக்ஷண பாரிப்பின் அதிசயத்தை உன்னைத் தவிர வேறே அறிவார்
ஸோ அங்க வேத யதி வா ந வேத -அந்தப்பிரம புருஷன் தனது பெருமையைத் தானே அறிவானோ மாட்டானோ -)

——————————————————————————————————————–

பிறர் யார் அறிவார் -என்பாரைத் தம்முடைய திரு உள்ளம் நான் அறிந்து இருக்கிறேன் என்ன –
நீயும் இந்திரிய ஜெயம் பண்ணி ஆஸ்ரயணத்தில் இழிந்தாய் அல்லது சாஷாத்கரித்தாயோ -என்கிறார் –

இந்திரிய ஜெயம் பண்ணி அவனை ஆஸ்ரயிக்கிற நீ தான் அவன் படிகளில் ஒன்றைக் கண்டு
அனுபவிக்கப் பெற்றாயோ -பெற்றாய் ஆகில் -நெஞ்சே சொல்லிக் காண் -என்கிறார் –

படி கண்டு அறிதியே பாம்பணையினான் புட்
கொடி கண்டு அறிதியே கூறாய் வடிவில்
பொறி யைந்து முள்ளடக்கிப்   போதொடு நீரேந்தி
நெறி நின்ற நெஞ்சமே நீ –85-

பதவுரை

பொறி ஐந்தும்–பஞ்சேந்திரியங்களையும்
(வெளியில் மேய வொட்டாதபடி)
வடிவில் உள் அடக்கி–சரீரத்திற்குள்ளே அடங்கி யிருக்கச் செய்து-வடிவு இல்லாத இந்த்ரியங்களுக்கு என்றுமாம் -வடிவு ஸ்வபாவம் -என்று ஒருபடிப்பட்டவை அல்லவே
போதொடு நீர் ஏந்தி–(திருவாராதன ஸாமக்ரியான) புஷ்பங்களையும் தீர்த்தத்தையும் தரித்துக் கொண்டு
நெறி–ஆஸ்ரயிக்கும் மார்க்கத்திலே
நின்ற–நிலைத்து நின்ற
நெஞ்சமே–மனமே!
நீ–நீ
பாம்பு அணையினான்–சேஷ ஷாயியான பெருமானுடைய
புள் கொடி–கருடப் பறவை யாகிற த்வஜத்தை
கண்டு–ஸேவித்து
அறிதியே–அநுபவித்து அறிந்திருக்கிறாயோ? (அன்றி)
படி–அவனது திருமேனியை
கண்டு அறிதியே–ஸேவித்து அநுபவித்து அறிந்திருக்கிறாயோ?
கூறாய்–சொல்லு-

படி கண்டு அறிதியே பாம்பணையினான் -திருமேனி கண்டு அறுதியோ -அவனுடைய படுக்கை கண்டு அறுதியோ —
புட் கொடி கண்டு அறிதியே-த்வஜம் கண்டு அறுதியோ
கூறாய் -சொல்லாய் –
வடிவில்-பொறி யைந்து முள்ளடக்கி-சரீரத்தில் இந்திரியங்கள் ஐந்தையும் அடக்கி –வடிவில்லாத இந்திரியங்களை
அடக்கி என்றுமாம் -கண்டவா திரிந்த தொண்டனேன்(பெரிய திருமொழி 1-6-)-என்னுமா போலே என்னவுமாம் –
போதொடு நீரேந்தி-நெறி நின்ற நெஞ்சமே நீ -புஷ்பாதி உபகரணங்களைக் கொண்டு ஆஸ்ரயணத்திலே இழிந்தாய் இத்தனை இறே —
நாம் அறியாது இருக்கப் பெற்ற படி என் என்ன -திரு உள்ளத்தைக் குறித்து -வடிவில்-பொறி யைந்து முள்ளடக்கி-
வடிவிலே -உடம்பிலே அடக்கி -வடிவு இல்லாத படி என்றுமாம்-ஒரு படிப் பட்டு இராது -என்றுமாம் —

———————————————————————

இந்திரிய ஜெயம் பண்ணி அவனை ஆஸ்ரயிக்கிற நீ தான் அவன் படிகளில் ஒன்றைக் கண்டு
அனுபவிக்கப் பெற்றாயோ -பெற்றாய் ஆகில் -நெஞ்சே சொல்லிக் காண் -என்கிறார் –

நெஞ்சே யந்த்ர கல்பமான இந்திரியங்கள் ஐந்தையும் பாஹ்ய விஷயங்களில் போகாத படி சரீரத்துக்கு உள்ளே
நியமித்த ஆஸ்ரயண உபகரணங்களான புஷ்ப்பங்களோடே கூட ஜலத்தைத் தரித்துக் கொண்டு ஸமாஸ்ரயண
மார்க்கத்தில் நிலை நின்று ஆஸ்ரயித்தாயாய் இருக்கிற நீ –
திருவனந்த ஆழ்வானைப் படுக்கையாக யுடையனான சர்வேஸ்வரனுடைய தூரத்திலே ஆஸ்ரிதர் கண்டு வாழும் படி
எடுத்துக் கொண்டு வருகிற பெரிய திருவடி யாகிற த்வஜத்தைக் கண்டு அனுபவித்து அறிவுதியோ-
அவன் திரு மேனியைக் கண்டு அறிவுதியோ -அவன் திரு வனந்த ஆழ்வானுக்கு உடம்பு கொடுக்கும் படி –
தான் கண்டு அறிவுதியோ -இவற்றிலே இன்னது கண்டேன் என்று ஒன்றைச் சொல்லிக் காணாய்-
வடிவு இல்லாத பொறி ஐந்தும் என்றுமாம் -ஒரு வழிப் பட்டு இருக்கை அன்றிக்கே பல அபிசந்திகளை உடைத்தாய் இருக்கும் என்கை –
வடிவு இல்லாமை யாவது தெரியாத படி இருக்கை என்றுமாம் -கண்டு அனுபவிப்பதற்கு முன்னே
ஞான லாப மாத்திரம் கொண்டு திருப்தி பிறந்து இருக்க ஒண்ணாது காண் -என்றபடி -(ஞான தசை மேலே தர்சன தசையாகவும் பிராப்தி தசைகளாகவும் முற்ற வேண்டுமே )

வடிவில் பொறி ஐந்தும் -வடிவு இல்லாத அதீந்த்ரியங்கள் என்றும் -வடிவு என்று ஸ்வ பாவத்தைச் சொன்னதாகவும் –
ஒரு வழிப் பட்டு இருக்கை அன்றிக்கே பல அபி சந்திகளை யுடைத்தாய் அன்றோ இருக்கும் இவை –
சஞ்சலம் ஹி மனஸா
நின்றவா நில்லா நெஞ்சு –பெரிய திருவந்தாதி -1-
கண்டவா திரிந்த தொண்டனேன் -பெரிய திருமொழி -1-6-3-

———————————————————————————————————–

இவர் தம்முடைய திரு உள்ளத்தைக் குறித்து -சாஷாத் கரித்திலை இறே -என்னத் தரியான் இறே -அவன் –

(உயிரான பாசுரம் -புலவர் நெருக்கு உகந்து இன்றும் நமக்காக சேவை சாதிக்கிறான்-நின்றாயால்-அன்று கோப கோபி ஆநிரை நெருக்கி நின்றாயால் -பின்பு மூவருக்கு நடுவில் நின்றாயால் -இனி இன்றும் நமக்காக நின்றாயால் -மூன்றுக்கும் அந்வயம் )

இப்படி இவர் தம் திரு உள்ளத்தைக் குறித்து அவனை சாஷாத் கரித்து அனுபவிக்க பெற்றிலை இறே என்று சொன்னது
பொறுக்க மாட்டாமல் -இவர் இருந்த இடத்திலேயே பிராட்டியும் தானுமாக வந்து நெருக்க -அத்தைக் கண்டு அனுபவிக்கிறார் –

நீயும் திருமகளும் நின்றாயால் குன்றேடுத்துப்
பாயும் பனி மறுத்த பண்பாளா வாசல்
கடை கழியா யுள் புகாக் காமர் பூங்கோவல்
இடை கழியே பற்றி இனி —86-(மறைத்த பாட பேதம் )

பதவுரை

குன்று–கோவர்த்தன மலையை
எடுத்து–வேரோடு பிடுங்கி யெடுத்து
பாயும் பனி மறுத்த–மேலே வந்து சொரிகிற மழையை மேலே விழாமல் தடுத்த
பண்பாளா–குண சாலியே!
காமர் பூ கோவல்–விரும்பத் தக்க அழகிய திருக் கோவலூரில்,
வாசல் கடை–திருவாசலுக்கு வெளியே.
கழியா–வெளிப் பட்டுப் போகாமலும்
உள் புகா–உள்ளே புகாமலும்
இடை கழியே–நடுக் கட்டான இடை கழி யிடத்தையே
(பொய்கை பூதம் பேய் என்ற நாங்கள் மூவரும் தங்கியிருந்ததனால்)
பற்றி–விரும்பிய இடமாகக் கொண்டு
நீயும் திருமகளும்–நீயும் பெரிய பிராட்டியுமாக
இனி–இப்போது
நின்றாய்–நின்றருளினாய்;
ஆல்–ஆச்சரியம்!

நீயும் திருமகளும் நின்றாயால் -தாமரையாள் ஆகிலும் சிதகுரைக்கு மேல் என்னடியார் அது செய்யார் -என்ற நீயும்
உன்னுடைய பரிகரம்- திருவடி – நலியப் புக -நகச்சின் நாபராத்யதி -என்ற அவளுமாய் நின்றாயால் -(இருவரின் பாரிப்பு அதிசயத்துக்கு பிரமாணங்கள் காட்டி அருளி வியாக்யானம் -லகுதரா ராமஸ்ய கோஷ்ட்டி க்ருதா -தோஷம் இல்லாதவன் யார் தான் என்ற யுக்திகள் )
குன்றேடுத்துப்-பாயும் பனி மறுத்த பண்பாளா–உடம்பில் விழப் புக்க மழையை மலை எடுத்துப் பரிஹரித்து நீர்மை போலே இருந்தது
இப்போது நெருக்கு அபேக்ஷிதமாக நெருங்கின படி -(கல் எடுத்து கல் மாரி காத்த பண்பு நீர்மை -நெருக்கு உகக்கும் ஸ்வ பாவம் )
வாசல்-கடை கழியா யுள் புகாக் காமர் பூங்கோவல் இடை கழியே பற்றி இனி —இடை கழிக்கு உள்ளும் புறமும்
காட்டுத் தீ போலே இரா நின்றது -(சேஷத்வம் அறியாத சம்சாரிகள் வெளியில் இருக்க -உபாயாந்தர ரிஷிகள் -அசித்வத் பாரதந்தர்யம் அறியாதவர்கள் உள்ளே இருக்க -)
காமுகரானவர்கள் உகந்த விஷயத்தின் யுடைய கண் வட்டம் விட்டுப் போக மாட்டாதாப் போலே(காமுகரானவர்கள்-இங்கு லோக விலக்ஷணமாக மிதுனம் )
இனி -இப்போது -இனி திருக் கோவலூரிலே நிற்கிறது கர்ம பல அனுபவத்துக்கு அன்று இறே –
சம்சாரிகளை நரகத்தில் புகாமல் காக்க விறே

நீயும் இத்யாதி -ஆஸ்ரித ரக்ஷணத்தில் முற்பாடனான நீயும் -அக்ர தஸ்தே கமிஷ்யாமி -என்று
உனக்கு முற்படும் பிராட்டியும் – (பகவத் த்ராயா நம -ரிஷிகள் ரக்ஷண த்வரையால் தண்டகாரண்யத்துக்கு முற்பாடாக சென்ற தாயார் -)பண்பாளா -அன்று அங்கனம் உதவினாய -(நீயும் -திரு மகளும் -இரண்டு இடத்திலும் சகாரம்- உம்மை -ஆச்ரித ரக்ஷண ப்ராதான்யத்தைக் காட்டும் )
கடை கழியா யுள் புகா–அங்கு அவர்கள் ஆபத்து தீர்த்தான் -இங்கு தன் ஆபத்து தீர்த்த படி -புறம்பு காட்டுத் தீயோடு ஒக்கும் –

(தர்மம் தர்மி விட்டுப் பிரியாதது போல் பிராட்டியும் அவனும் )

(தேஹலீசன் -இடை கழிப் பெருமாள் -என்றே ப்ரஸித்த திரு நாமம்
நீயும் திருமகளும் -பகவதஸ் த்வராயா நம
கிமேதந் நிர்த்தோஷா க இஹ ஜகதி – ஸ்ரீ குண ரத்ன கோஸம்
ந கச்சின் ந அபராத்யதி
அக்ரதஸ் தே கமிஷ்யாமி
ந ஜீவேயம் க்ஷணம் அபி
அகலகில்லேன் இறையும்
அஹம் அர்த்தம் விநா அஹந்தா நிரா தாரா ந ஸித்த்யதி
அஹந்தயா விநா அஹம் ஹி நிருபாத்யோ ந ஸித்த்யதி
அவளுக்கு ஆதாரமான நீயும் உனக்கு ஸ்வரூப நிரூபக பூதையான அவளும்
எங்கள் அடிச்சுவட்டை மோந்து காண்டு இனி வரும் காலம் எல்லாம் நித்ய வாஸம் செய்து அருளப் போகிறாய் அன்றோ -என்கிறார்)

————————————————————————-

இப்படி இவர் தம் திரு உள்ளத்தைக் குறித்து அவனை சாஷாத் கரித்து அனுபவிக்க பெற்றிலை இறே என்று சொன்னது
பொறுக்க மாட்டாமல் -இவர் இருந்த இடத்திலேயே பிராட்டியும் தானுமாக வந்து நெருக்க -அத்தைக் கண்டு அனுபவிக்கிறார் –

கண்டதொரு மலையைப் பிடுங்கி எடுத்து மேலே வந்து சொரிகிற மழையைப் பரிஹரித்த நீர்மையை யுடையவனே-
திரு வாசலுக்கு புறம்பு போக மாட்டாதே உள்ளுப் புக மாட்டாதே ஸ்ப்ருஹணீயமாய் அழகியதாய்
திருக் கோவலூர் இடை கழியைப் பற்றி ஆஸ்ரித ரக்ஷணத்தில் முற்பாடனான நீயும் -உன்னிலும் முற்பட்ட
திரு மகளாருமாக எங்களோடு கலக்கப் பெற்ற உகப்பின் கனத்தாலே பரந்த கால் பாவி
இப்போது தரித்து நின்றாயே–என்று அனுபவிக்கிறார் –

(குத்து விளக்கு எரிய -இருவரும் ரக்ஷணம் பாரித்த -பாசுரம் -மலர் மார்பா வாய் திறவாய் -மைத்தடம் கண்ணினாய் -தத்துவம் அன்று தகவும் அன்று)

—————————————————————————————————————————–

இப்படி சர்வேஸ்வரன் வந்து சந்நிஹிதனான பின்பு நரகத்துக்கு ஆள் கிடையாது –
அவ்வவ் விடங்களுக்குக் கடவார் வாசல்களை அடைத்து ஓடிப் போக அமையும் என்கிறார் –

(திரு நாம பலத்தால் நரகம் இல்லை தொண்டர் அடிப்பொடி ஆழ்வார் இங்கு திவ்ய தேச பார்ஸ்வ வர்த்தியால்

உவந்த உள்ளத்தனாய் நீள் முடியைச் சொல்லி திருக்கமல பாதம் -இங்கு தோள்களைச் சொல்லி திருவடி )

இனியார் புகுவார் எழு நரக வாசல்
முனியாது மூரித்தாள் கோமின் கனிசாயக்
கன்று எறிந்த தோளான் கனை கழலே காண்பதற்கு
நன்கு அறிந்த நா வலம் சூழ் நாடு —87–

பதவுரை

கனி சாய-விளாம்பழம் உதிர்ந்து விழும்படி
கன்று–வத்ஸாஸுரனை
எறிந்த–எறி தடியாக எடுதெறிந்து இரண்டசுரரையும் முடித்த
தோளான்–திருத் தோள்களை யுடையவனான ஸர்வேஸ்வரனுடைய
கனை கழலே–ஆபரண த்வநியை யுடைய திருவடிகளை
கண்பதற்கு–ஸேவிப்பதற்கு ஸாதநம் (அவன் உகந்து வாழ்கிற திருக்கோவலூர்க்கு ஸமீபமான இடத்தில் வஸிப்பதுதானென்று)
நன்கு–நன்றாக
அம் நாவல் சூழ் நாடு–அழகிய ‘ஜம்பூ’ என்று பேர் படைத்த பரந்த த்வீ பத்திலுள்ள பிராணிகள்
அறிந்த–அறிந்து விட்டன;
(இப்படியானபின்)
எழு நரகம் வாசல்–ஏழுவகைப்பட்ட நரகங்களின் வாசல்களிலே
இனி–இனிமேல்
புகுவார் ஆர்–பிரவேசிப்பவர் யாவர்?
(ஒருவருமில்லை)
(ஓ யம கிங்கரர்களே!)
முனியாது–(உங்கள் ஸ்தானத்துக்கு அழிவுண்டாவதாகச் சொல்லுகிற என் மேல்) கோபங்கொள்ளமல்
மூரி தாள் கோமின்–(இனி ஒருகாலும் திறக்க முடியாதபடி) பெரிய தாழ்ப்பாளைப் போட்டுப் பூட்டுங்கோள்-

அம் நாவல் சூழ் நாடு -அழகியதாய் ஜம்பூத்வீபம் என்ற பெயர் பெற்ற பரந்த நாட்டில் உள்ள பிராணிகள் –

இனியார் புகுவார் எழு நரக வாசல்–எழு நரக வாசல்-என்கிறது கிளர்த்தியை யுடைத்தான -நரகம் என்னவுமாம் –
ஏழு வகை நரகம் என்னவுமாம் –
முனியாது மூரித்தாள் கோமின்-இனிப் புகுவார் இல்லை -மிடுக்குடைய தாளைக் கோவுங்கோள்
கனி சாயக்-கன்று எறிந்த தோளான் கனை கழலே காண்பதற்கு–கனை கழல் -என்றது இலக்கைக் குறித்து
நடக்கிற போது திருவடிகளின் ஆபரணத் த்வனியை
நன்கு அறிந்த நா வலம் சூழ் நாடு —ஐம்பூத வீபமானது நன்றாக அறிந்தது –
நன்றாக அறிகை -சம்சாரத்தினின்றும் -போகோம் என்று இருக்கை –
உகந்து அருளின தேசம் இங்கு உண்டாயிற்றே என்று அஸூயை பண்ணாதே பொறுத்து இருக்கை –

இனி இத்யாதி -எங்கள் பதத்துக்கு அழிவு சொல்வதே என்று பொடியாதே — கனை கழல் -ஆபரண த்வனி –
நா வலம் -ஐம்பூத வீபம் -ஏகம் தரணி மாஸ் நிதவ்–(வால்மிகி )ஒரு படுக்கையில் இருப்பார்க்கு பயம் உண்டோ

———————————————————

இப்படி சர்வேஸ்வரன் வந்து சந்நிஹிதனான பின்பு நரகத்துக்கு ஆள் கிடையாது –
அவ்வவ் விடங்களுக்குக் கடவார் வாசல்களை அடைத்து ஓடிப் போக அமையும் என்கிறார் –

கன்றாயும் விளவாயும் இரண்டு அஸூரர் தன்னை நலிகைக்கு இடம் பார்த்து நிற்க -அத்தை அறிந்து
முள்ளிட்டு முள்ளைக் களைவாரைப் போலே அஸூரா விஷ்டமான விளவின் பழங்கள் உதிர்ந்து விழும்படியாக
அஸூரா விஷ்டமான கன்றை எறி தடியாக எடுத்து எறிந்து இரண்டையும் முடித்துப் பொகட்ட திருத் தோள்களை
யுடையனான சர்வேஸ்வரனுடைய ஆபரண த்வனியை உடைத்தான திருவடிகளைக் கண்டு அனுபவிக்கைக்கு சாதனம்
நாவலோடே கூடிப் பரந்து நிற்கிற நாட்டில் உள்ள பிராணிகள் ஆனவை அவன் உகந்து வர்த்திக்கிற
திருக் கோவலூருக்குத் தோள் தீண்டியான ஸ்தலத்திலே வாசமே என்று நன்கு அறிந்தன-இப்படியான பின்பு
சப்த விதமான நரக த்வாரங்களிலே இனிப் போய்ப் பிரவேசிக்கக் கடவார் யார் -எங்கள் பதத்துக்கு அழிவாம் படி
இப்படி வார்த்தை சொல்லுவதே என்று பொடியாதே இனி ஒரு நாளும் திறக்க ஒண்ணாத படி பெரிய தாளை பூட்டுங்கோள்-

ஆழ்வார்களும் அருளிச் செயல்களும் நடையாடும் இடமே நாடு -அல்லாத இடம் காடு என்று கருத்து

எழு நரகம் -எழுகிற சம்சாரிகள் அடங்கலும் சென்று புகு கிற நரகத்வாரம்-என்றுமாம் -கிளர்த்தியை யுடைத்தான நரகம் என்றுமாம் –

(இவ் வாழ்வாருடைய பொலிக பொலிக பொலிக -திருவாய் -5-2- இருக்கிற படி இப்பாசுரம்)

——————————————————————————————————————–

இப்படி திருக் கோவலூரோடு தோள் தீண்டியான நாட்டைப் பற்றி இருந்து இவ் விஷயத்தை வீட்டுப் புறம்பே அந்நிய பரராய்த்
திரியக் கண்ட படியால் வழி பறிக்கும் நிலத்திலே தம் கைப் பொருள் கொண்டு தப்பினார் உகக்குமா போலே
என்னுடைய கரண த்ரயத்தையும் கொண்டு நான் முன்னே அங்கே பிரவணனாகப் பெற்றேன்
என்று ஸ்வ லாபத்தைப் பேசி இனியராகிறார் –

நாடிலும் நின்னடியே நாடுவன் நாடோறும்
பாடிலும்  நின் புகழே பாடுவன் சூடிலும்
பொன்னாழி ஏந்தினான் பொன்னடியே சூடுவேற்கு
என்னாகில் என்னே எனக்கு –88-

பதவுரை

நாடிலும்–(மனத்தினால்) தேடும் போது
நின் அடியே–உனது திருவடிகளையே
நாடுவன்–தேடுவேன்;
நாள் தோறும்–எப்போதும்
பாடிலும்–வாய் விட்டு ஏதாவது சொல்லும் போதும்
நின் புகழே–உனது புகழ்களையே
பாடுவன்–பாடுவேன்;
சூடிலும்–ஏதாவதுதொன்றைத் தலையில் அணிவதாயிருந்தாலும்
பொன் ஆழி ஏந்தினான்–அழகிய திருவாழியைத் தரித்து கொண்டிருக்கின்ற உன்னுடைய
பொன் அடியே–அழகிய திருவடிகளையே
சூடுவேற்கு எனக்கு–சிரோ பூஷணமாகக் கொள்பவனான எனக்கு
என் ஆகில் என்–எது எப்படியானாலென்ன?

நாடிலும் நின்னடியே நாடுவன்-நினைக்கிலும் உன் திருவடியையே நினைப்பான்
நாடோறும்-எப்போதும் -பாடிலும்  நின் புகழே பாடுவன் சூடிலும்-பொன்னாழி ஏந்தினான் பொன்னடியே சூடுவேற்கு-
ஒன்றைச் சூடிலும் திரு வாழி ஏந்தின உன்னுடைய வி லக்ஷணமான திருவடிகளை சூடா நின்ற எனக்கு
என்னாகில் என்னே எனக்கு —பரம பதத்தில் போனாலும் வாக் மனஸ் காயங்கள் அங்கே ப்ரவணமாகையாகவே செய்வது-
அது இங்கேயே பெற்றேனாகில் எனக்கு இங்கே இருக்கையை நல்லது -என்கிறார் -அவன் படிக்கு சம்சாரிகள் படியைப் பார்த்தால்
யமனுக்கு என்றும் -யதி வா -என்றும் -சொல்லத் தலை அறுப்புண்டிலனோ-(தேன மைத்ரி பவ -சீதா உபதேசம் –
யதிவா ராவணஸ் ஸ்வயம் -முன்பே பெருமாள் வார்த்தை )
பொன்னடியே -இதுவே ( பொன்னடியே)பிரயோஜனமாக வாக் காயங்களை ஒழிய நினைக்கிலும்
என்னாகில் என்னே எனக்கு -நாட்டார் நரகம் புகில் என் -தவிரில் என் -ஆர் தான் அழ–

(சிந்தையாலும் -வாயினால் பாடி -முக்கரணங்கள் பாசுரங்கள் உண்டே –
நினைப்பது பிரதானம் என்று தோற்றினாலும் -சூடுவது காயிகம் தானே –
ஆகவே -ஒவ் ஒன்றும் முக்கரணங்களால் என்றே கொள்ள வேண்டும்)

——————————————————————–

இப்படி திருக் கோவலூரோடு தோள் தீண்டியான நாட்டைப் பற்றி இருந்து இவ் விஷயத்தை வீட்டுப் புறம்பே அந்நிய பரராய்த்
திரியக் கண்ட படியால் வழி பறிக்கும் நிலத்திலே தம் கைப் பொருள் கொண்டு தப்பினார் உகக்குமா போலே
என்னுடைய கரண த்ரயத்தையும் கொண்டு நான் முன்னே அங்கே பிரவணனாகப் பெற்றேன்
என்று ஸ்வ லாபத்தைப் பேசி இனியராகிறார் –

நெஞ்சைக் கொண்டு தேடும் இடத்திலும் -தேவரீருடைய திருவடிகளையே தேடா நிற்பன் -சர்வ காலத்திலும்
ப்ரீதி பரவசனாய் ஸ்தோத்ரம் பண்ணும் இடத்திலும் -தேவரீருடைய கல்யாண குணங்களையே வாய் விட்டுப் பாடா நிற்பன்
நான் என் தலையால் சாதரமாக தரிக்கும் இடத்திலும் ஸ்ப்ருஹணீயமான திரு வாழியை அழகு பெற தரித்த
சர்வாதிகனான உன்னுடைய அழகிய திருவடிகளையே ஸீரோ பூஷணமாக தரிக்கக் கடவனாய் இப்படி கரண த்ரயத்தாலும்
உள்ள பிரயோஜனம் கொள்ளப் பெற்ற எனக்கு ஏதானாலும் நல்லது -நாட்டார் அறிந்து இந்த லாபத்தை பெறில் என்-
இழக்கில் என் -எனக்கு ஏதாகில் நல்லது என்றபடி-
அன்றிக்கே இங்கே இருக்கில் என் அங்கே போகில் என் -ஏதானால் எனக்கு நல்லது என்றுமாம் –

ஆரானும் ஆதானும் செய்ய அகலிடத்தை
ஆராய்ந்து அது திருத்தல் ஆவதே -சீரார்
மனத் தலை வன் துன்பத்தை மாற்றினேன் வானோர்
இனத் தலைவன் கண்ணனால் யான் —பெரிய திருவந்தாதி –25-போல் ஸம்ஸாரிகளை வெறுத்து ஸ்வ லாபத்தைப் பேசி மகிழ்கிறார் –

——————————————————————————————————————

கீழ்ப் பிறந்த லாபம் திரியட்டும் பின்னாட்டுகிற படியைச் சொல்லுகிறார் –

(பகவத் பாகவத சம்பந்தத்தால் வந்த உத்கர்ஷம் -உபா தேய அபிமானம் )

(எம்பார் -எம்பெருமானார் திருவடி சம்பந்தத்தால் வந்த பெருமையால் புகழ ஏற்றுக் கொண்டது போல் இங்கும் –
எனக்கு நிகர் யார் அகல் ஞாலத்திலே -என்பர்களே)

எனக்காவார் ஆரோருவரே எம்பெருமான்
தனக்காவான் தானே மற்றல்லால் புனக்காயாம்
பூ மேனி காணப் பொதியவிழும் பூவைப் பூ
மா மேனி காட்டும் வரம் ——-89-

பதவுரை

எனக்கு–(எம்பெருமானுடைய நிர்ஹேதுக கடாக்ஷத்திற்குப் பாத்திர பூதனான எனக்கு
ஆவார் ஆர் ஒருவரே–ஒப்பாகுபவர் எவரொருவரிருக்கின்றனர்?
[எவருமில்லை;]
எம்பெருமான்–அந்த ஸர்வேஸ்வரனும்
தானே தனக்கு ஆவான் அல்லால்–தானே தனக்கு ஒப்பாவானே யல்லாமல்
மற்று–அவன் தானும் எனக்கு ஒப்பாக வல்லனோ?
(இப்படி நீர் சொல்லும்படி உமக்கு வந்த ஏற்ற மென்ன? என்னில்)
புனம் காயா பூமேனி–தனக்கு உரிய நிலத்தில் தோன்றிய காயாம் பூவின் நிறமும்
காண பொதி அவிழும் பூவைப் பூ–காணக் காணக் கட்டவிழா நிற்கும் பூவைப் பூவின் நிறமும்(பூவைப்பூ வண்ணா )
வரம்–சிறந்ததான
மா மேனி–(அவனது) கரிய திருமேனியை-மா வரம் -பர்யாய சப்தங்கள் -மீமிசை
காட்டும்–எனக்குக் காட்டா நிற்கும்.
[ஆகையாலே, போலியான பொருள்களைக் கண்டும் அவனைக் கண்டதாகவே நினைந்து மகிழ்கிற
எனக்கு ஒருவரும் ஒப்பாகார் என்றது.]

எனக்காவார் ஆரோருவரே –என்னோடு ஒப்பார் ஒருவரும் இல்லை இறே என்னவுமாம் —
எனக்கு ஆவார் எவர் என்னவுமாம்
என்னோடு ஒப்பார் ஒருவரும் இல்லை என்று நீர் சொல்லுவான் என் -பரம சேதனன் உண்டே என்னில்
எம்பெருமான்-தனக்காவான் தானே–என்னோடு ஓத்தார் இல்லை என்றேன் அத்தனை அல்லது எம்பெருமானுடைய
உயர்த்தி இல்லை என்றேனோ –நீர் என்னோடே ஒப்பார் இல்லை என்று சொல்லிற்று எத்தாலே என்னில் –
மற்றல்லால் புனக்காயாம்-பூ மேனி காணப் பொதியவிழும் பூவைப் பூ-மா மேனி காட்டும் வரம் —–
அவனோடு சத்ருசமான பதார்த்தங்கள் வர்த்திக்கிற தேசத்திலே நின்றேன் -ஓர் அடி அன்றோ குறைய நின்றது(ஸத்ருச சம்பந்த பதார்த்தங்கள் நினைவுக்கு வருமே -அடுத்த தசை அவனே நேராகப் பார்ப்பது -அதுவே ஓர் அடி குறை )
அவன் என்று சாஷாத் கரிக்கும் அத்தனை அன்றோ வேண்டுவது –
புனக்காயாம்-பூ மேனி-புனத்திலே நிற்கிற காயம் பூ மேனியை – காணப் பொதியவிழும் பூவைப் பூ–காணக் காண அலரா நின்ற பூவைப் பூ
இவை இரண்டும் அவனுடைய வரமான மா மேனியைக் காட்டா நின்றது –நாட்டாருக்கு நினைக்கையில் உள்ள வருத்தம் போரும்
எனக்கு மறக்க -நானும் ஒருவனே –வரமாக -தன்னிலும் விசதமாக -என்றுமாம் -(இவை தங்களை விட கண்ணனை காட்டும் என்றபடி )

(வரம் -மா -பர்யாயம் -மிகச் சிறந்த என்றும் -வ்ரியதே இதி வர -வ்யுத்பத்தியால் வரிக்கப்படும் சிறந்த மேனி என்றுமாம்)

(இதர சேஷத்வமே வடிவான ஸம்ஸாரிகள் -பகவத் விஷயத்திலே பழக்கமே இல்லாதவர்களாய் –
பகவத் சேஷத்வமே வடிவான எனக்கு ஒப்புவார் அல்லரே
வருத்தப்பட்டு பகவத் அனுபவத்தைப் பெற்ற வ்யாஸாதி மகரிஷிகளும் – வரவாறு ஓன்று இல்லையால் -என்றால் போலே
என்னிடம் ஒரு கைம்முதல் இல்லாமல் இருக்க நிர்ஹேதுக கிருபையால் அவனை அனுபவிக்கப் பெற்ற எனக்கு ஒப்பு அல்லரே
சீதனையே தொழுவார் விண்ணுளாரிலும் சீரியர் என்பதால் நித்ய முக்தர்களும் ஒப்பு அல்லர்
எம்பெருமானும் தான் தோன்றியான சேஷித்வ ரஸத்தை யுடையவனாய் சேஷத்வ ரஸத்துக்கு இட்டுப் பிறவாததால் அவனும் எனக்கு ஒப்பு அல்லனே)

(இவற்றைக் காணும் போது இவற்றைக் காட்டிலும் எம்பெரு திரு மேனியே எனக்குத் தெளிவாகத் தெரிகிறது -அப்படிப்பட்ட எனக்கு ஒப்பாவார் யார் -என்கிறார்-காட்டும் — பகவானை ஞானத்திலே அனுபவித்து கண்ணாலே காணப் பெறாத குறை தீரக் கண்ணுக்குக் காட்டும் )

காயாம்பூ மேனி -என்ற இடத்தில் உள்ள மேனி -காணப் பொதி அவிழும் பூவைப்பூ -மேனி என்றும் கூட்டிக் கொண்டு

கொண்டல் தான் மால் வரை தான் மா கடல் தான் கூரிருள் தான்
வண்டு அறாப் பூவை தான் மற்றுத் தான் -கண்ட நாள்
காருருவம் காண்டோறும் நெஞ்சு ஓடும் கண்ணனார்
பேருருவம் என்று எம்மைப் பிரிந்து –பெரிய திருவந்தாதி -49-என்றும்

கருவிளை யொண் மலர்காள் காயா மலர்காள் திருமால்
உரு வொளி காட்டுகின்றீர் யெனக்குய் வழக்கொன்று உரையீர்
திரு விளையாடு திண் தோள் திருமால் இரும் சோலை நம்பி
வரி வளையில் புகுந்து வந்தி பற்றும் வழக்குளதே –நாச்சியார் திருமொழி -9-3-என்றும்

பைம் பொழில் வாழ் குயில்காள் மயில்காள் ஒண் கரு விளைகாள்
வம்பக் களங்கனிகாள் வண்ணப்பூவை நறும் மலர்காள்
ஐம் பெரும் பாதகர்காள் அணி மால் இரும் சோலை நின்ற
எம்பெருமான் உடைய நிறம் உங்களுக்கு என் செய்வதே —நாச்சியார் திருமொழி 9-4-என்றும்

உள்ள ஸ்தலங்களில் சொல்லப்பட்ட கார் உருவங்களுக்கு உப லக்ஷணம்

———————————————————————–

கீழ்ப் பிறந்த லாபம் திரியட்டும் பின்னாட்டுகிற படியைச் சொல்லுகிறார் –

நிர்ஹேதுகமாக இப் பேற்றைப் பெற்று சேஷத்வமே வடிவாய் இருக்கிற எனக்கு ஒப்பாக வல்லார் வேறு ஒருவர் உண்டோ
நாட்டில் ஓர் ஒப்பில்லாத அளவன்றிக்கே தான் தோன்றியான பேற்றை யுடையனாய் –
சேஷத்வ ரசத்துக்கு இட்டுப் பிறவாத சர்வேஸ்வரன் தானே தனக்கு ஒப்பாம் இத்தனை ஒழிய எனக்கு ஒப்பாக வல்லனோ-
இந்த ஞான லாபம் மாத்திரமே யாய் -சாஷாத் கரிக்கப் பெறாத குறை கிடக்கிறதே என்று சங்கிக்க இடம் அறும் படி
தன்னிலத்திலே நின்று செவ்வி பெற்ற காயாம்பூவின் உடைய நிறமும் -காணாக் காணாக் கட்டு நெகிழ்ந்து வருகிற
பூவைப் பூவினுடைய நிறமும் அவனுடைய ஸ்லாக்யமான வடிவை அழகிதாகக் காட்டா நின்றது –
அன்றிக்கே வ்ரீ யத இத வர –என்றாய் -என்னால் பிரார்த்திக்கப் படுகிற வடிவை அழகிதாகக் காட்டா நிற்கும் என்னுதல் –

———————————————————————————————————

நரசிம்ஹ ரூபியான ஈஸ்வரனுடைய ஆஸ்ரித விரோதி நிரசன சீலத்தையும் வாத்சல்யத்தையும் அனுசந்திக்கிறார் –

போலியைக் காட்டித் தம்மைத் தரிப்பித்த பிரசங்கத்தில் ப்ரஹ்லாதனுக்கு விரோதியைப் போக்கித்
தன்னைக் காட்டித் தரிப்பித்த படியை அருளிச் செய்கிறார் –

வரத்தால் வலி நினைந்து மாதவ நின் பாதம்
சிரத்தால் வணங்கானாம் என்றே உரத்தினால்
ஈரியாய் நேர் வலியோனாய இரணியனை
ஒரரியாய் நீ யிடந்த தூன் –90-

பதவுரை

மாதவ–திருமாலே!
ஈர் அரி ஆய்–(இரண்டு கூறாகக்) கிழித்துப் போட வேண்டிய -அரி-சத்துருவாகி
நேர் வலியோன் ஆய்–எதிர்த்து நின்று போர் செய்யும் வலிவை யுடையனாகிய-பரியனாக வந்தவன் அன்றோ –
இரணியனை–ஹிரண்யாஸுரனது
ஊன்–சரீரத்தை ,
ஓர் அரி ஆய்–ஒப்பற்ற நரசிங்க மூர்த்தியாகி
உரத்தினால்–உனது மிடுக்கினாலே
நீ இடந்தது–நீ உன் நகங்களினால் குத்திக் கீண்டதானது,
வரத்தால்–(பிரமன் முதலானவர்கள் கொடுத்த) வரத்தினால் (தனக்கு உண்டான)-வரத்தினால் ஸ்ரத்தை வைத்த -இத்யாதி –
வலி–பலத்தை
நினைந்து–பெரிதாக மதித்து
நின் பாதம்–உனது திருவடிகளை
சிரத்தால்–தனது தலையினால்
வணங்கானாம் என்றே–வணங்காமலிருந்தானென்ற காரணத்தினாலோ?
(அன்று; பக்தனான ப்ரஹ்லாதனை நலிந்தானென்ற காரணத்தினாலே.)

வரத்தால் வலி நினைந்து –வரத்தால் தனக்கு மிடுக்கு உண்டாக நினைத்தான் அல்லது
வரம் கொடுத்தவர்கள் சக்தி பகவத் அதீனம் என்று அறிந்திலேன் –
மாதவ– வரம் கொடுத்தவர்களாலும் வணங்கப் படுமவன்

(விராமன் -ஒய்வு -வரங்களும் -வரங்களை பெற்றவனும் கொடுத்தவனும் ஒய்வு கொடுக்கும் பெருமாள்- ப்ரஹ்மா ருத்ரன் இந்திரன் வந்தாலும் பயன் இல்லை -திருவடி ராவணன் இடம் உபதேசம்)

நின் பாதம்- சிரத்தால் வணங்கானாம் என்றே –அவன் இழவுக்கு வெறுக்கிறார்
உரத்தினால்– ஈரியாய்–மிடுக்காலே ஈரப்படும் அரியானவன்–சத்ருவானவன் –பெரிய சத்ரு என்றுமாம் —
நேர் வலியோனாய இரணியனை-நேரே வலியனான ஹிரண்யனை
ஒரரியாய் நீ யிடந்த தூன் –நாட்டிலே நடையாடும் ஸிம்ஹம் அன்று -தன்னுடைய இச்சையால் பிறந்த ஸிம்ஹம் என்றுமாம்
ஓரப்படும் அரியாய் –எல்லாரும் த்யானம் பண்ணும்-ஓரப்படும்- ஸிம்ஹம் -என்றுமாம் –

வரத்தால் -தேவர்கள் வரத்தை மிடுக்காக நினைத்தான் -வணங்கு வித்துக் கொள்ளும் விஷயம் இருக்கும் படி –
வணங்கானாம் என்றே -1-பிள்ளை பக்கல் பரிவு -2-தப்பச் செய்தோம் -என்னாம் -என்றுமாம்
3-உன் வஸ்து அழியாமைக்கு என்றுமாம் -(இம் மூன்றுமே ஈர்ந்ததுக்குக் காரணம் – வணங்காமைக்காக அல்லவே )

ஈரரி–பெரிய சத்ரு –

ஓரரி-சிம்ஹங்களில் ஒப்பு பிடிக்க ஒண்ணாது –

————————————————————————–

போலியைக் காட்டித் தம்மைத் தரிப்பித்த பிரசங்கத்தில் ப்ரஹ்லாதனுக்கு விரோதியைப் போக்கித்
தன்னைக் காட்டித் தரிப்பித்த படியை அருளிச் செய்கிறார் –

சர்வர்க்கும் ஆஸ்ரயிக்கலாம் படி இருக்கிற ஸ்ரீயபதியானவனே–இரண்டு கூறாகக் கிழித்துப் பொகடப் படும் சத்ருவாய்-
நேர் நிற்க வல்ல பலத்தை யுடைய ஹிரண்யனை -நாட்டில் கண்டு அறியாத அத்விதீயமான நரசிம்ஹமாய்க் கொண்டு
அவன் மிடுக்கும் கீழ்ப் படும் படியான மிடுக்காலே -மாம்சளமான பெரிய சரீரத்தை ஆஸ்ரித வத்சலனான நீ
இடந்து பொகட்டது ப்ரஹ்மாதிகள் கொடுத்த வரத்தால் வந்த தன் மிடுக்கைக் கனத்த நினைத்து சர்வாதிகனான
உன்னுடைய திருவடிகளைத் தலையால் வணங்கி ஆஸ்ரயியாதே இருந்தான் என்றோ -அன்று இறே
சிறுக்கனைப் பல கறுவி நலிந்தான் என்னும் இது கொண்டு இறே -என்றபடி –

இரணியன் தன் சீற்றத்தினால் வணங்கியதால் உனக்கு ஒரு பெருமையோ மகிழ்ச்சியோ வந்து விடப் போவதில்லையே -எதனாலே என்னில்

நாக்கொண்டு மானிடம் பாடேன் நலமாகத்
தீக்கொண்ட செஞ்சடையான் பின் சென்று -என்றும் பூக் கொண்டு
வல்லவாறு ஏத்த மகிழாத வைகுந்தச்
செல்வனார் சேவடி மேல் பாட்டு –நான்முகன் திருவந்தாதி–75-

இப் பாசுரத்தை ஒட்டியே -கடும் சீற்றத்துக்குக் காரணத்தை கூரத்தாழ்வான் வரதராஜ சத்வம் -68-இல்-
யத் அபராத சஹஸ்ரம் அஜஸ்ரஜம் த்வயி சரண்ய ஹிரண்ய உபாவஹத்
வரத தேந சிரம் த்வம் அவிக்ரிய விக்ருதிம் அர்ப்பக நிர்ப்பஜ் நாத் அகா-68–

ஆஸ்ரித விஷயத்தில் பஷ பாதம் பிரசித்தம் அன்றோ –
த்வயி கிஞ்சித் சமா பந்நே கிம் கார்யம் சீதயா மம –என்பவன் அன்றோ-

ஈஸ்வரன் அவதரித்து செய்த ஆனைத் தொழில்கள் எல்லாம் பாகவத அபசாரம் பொறாமையாலே -என்று நஞ்சீயர் அருளிச் செய்வர்

நரஸிம்மம் -பக்த ப்ரஹ்லாதனுக்காக
ராகவ ஸிம்ஹம் -கோபஸ்ய வசம்
யாதவ ஸிம்ஹம் -அர்ஜுனன் -பீஷ்மர்
ரெங்கேந்திர ஸிம்ஹம் -திருப்பாணாழ்வார் -லோக சாரங்க முனிவர் -தனது கதவை அடைத்து -அவரையும் திருத்திப் பணி கொள்ளும் அர்ச்சை ஏற்றம்

————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: