Archive for October, 2016

திருவாய்மொழி இருபத்து நாலாயிரப்படி –10–9- –

October 31, 2016

பரம யோகிகளுக்குப் பிறக்கக் கடவதான பர பக்தி இவர்க்குப் பிறந்து தத் பிரகாரங்களை இத் திருவாய் மொழி யளவும் வர அனுபவித்து –
இனி இங்கு இருந்து அனுபவிப்பது -ஒன்றும் இல்லாமையால் -பரம பதத்திலே போக வேணும் -என்று மநோ ரதிக்கிற இவரை
-தம்மில் காட்டில் -சடக்கெனக் கொடு போக வேணும் என்று விரைகிற ஈஸ்வரன்
அங்குத்தை அனுபத்துக்கு ஈடாம்படி மிகவும் விடாய் பிறக்கைக்காக –
தன்னுடைய ஸ்வரூப ரூப குண விபூதிகளைக் கண்ணாலே கண்டால் போலே விசதமாக பிரகாசிக்கும் படி பண்ணி அருளினான் –
அதாகிறது -வேதாந்தங்களில் பிரசித்தமான அர்ச்சிராதி கதி மார்க்கத்தையும் -சரீர விஸ்லேஷ சமயத்தில் வரும் கிலேசம்
எல்லாம் ஆறும் படி தானே வந்து முகம் காட்டும் படியையும் –
மார்க்கஸ்தரான புருஷர்களுடைய ஸத்காரங்களையும் -அம்மாக்கத்தாலே போய்ப் புகக் கடவ பரம பதத்தையும்
நித்ய ஸூரிகள் வந்து ஆதரிக்கும் படியையும் -பிராட்டிமாரும் ஸ்ரீ வைகுண்ட நாதனும் எதிரே வந்து ஆதரிக்கும் படியையும் –
நித்ய ஸூரிகள் சேவிக்க பிராட்டிமாரோடு வீற்று இருந்து அருளுகிற படியையும் -பரம ப்ராப்யரான நித்ய ஸூ ரிகள் நடுவே
தாமே ஆனந்த நிர்ப்பரராய் இருக்கும் படியையும் காட்டி அருளக் கண்டு ப்ரீதராய் -அத்தை அந்யாபதேசத்தாலே பேசி அனுபவிக்கிறார்
-தமக்கு அவன் பண்ணிக் கொடுத்த பேற்றை ஸ்ரீ வைஷ்ணவர்கள் எல்லாரும் பெற்றவராக பேசுகிற இது -அந்யாபதேசமாவது-
அது தனக்கு பிரயோஜனம் -இங்குள்ளார் ஆழ்வார் பேறு நமக்குத் தப்பாது -என்று இருக்கைக்காக –

——————————————————————

திரு நாட்டுக்குப் போக உபக்ரமிக்கிற ஸ்ரீ வைஷ்ணவர்களைக் கண்ட ப்ரீதி அதிசயத்தாலே -ஸ்த்தாவர ஜங்கமங்களுக்குப் பிறந்த விக்ருதியை அருளிச் செய்கிறார்

சூழ்  விசும்பு அணி முகில் தூரியம் முழக்கின
ஆழ்கடல் அலைதிரைக் கை எடுத்து ஆடின
ஏழ் பொழிலும் வளம் ஏந்திய என் அப்பன்
வாழ் புகழ் நாரணன் தாமரைக் கண்டு உகந்தே –10-9-1-

சூழ் விசும்பு –-பூமியை சூழும் படி இடமுடைத்தான ஆகாசத்தில் –
அணி முகில்-ஆபரணமான முகில் என்னுதல் -/ ஆகாசப் பரப்பு அடங்கலும் அணியப் பட்ட முகில் என்னுதல் /அழகிய முகில் என்னுதல் –
தூரியம் முழக்கின–தூர்ய கோஷத்தை பண்ணிற்றன –
அணி முகில் தூரியம் முழக்கின-ஒப்பித்து நின்று கொட்டுவரைப் போலே -மந்தம் ஜகரஜ்ஜூர் ஜலதா -இவன் போக்குக்கு அடியான அவன் வரவில் பிறந்த விக்ருதி இ றே இது –இவன் தானே போகப் புக்கால் சொல்ல வேண்டா இ றே -அவற்றுக்கு அபிமானிகளான இந்திர வருண பார்ஜ்ஜனியரைச் சொல்லிற்று ஆகவுமாம் –
ஆழ்கடல்-அலைதிரைக் கை எடுத்து ஆடின–தன்னுள்ளே அடக்க வற்றான அளவுடைய கடல் தைர்ய பங்கம் பிறந்து -அலையா நின்று இருந்து உள்ள  திரை யாகிற கையை எடுத்துக் கொண்டு -கூத்தாடிற்றன –
-ஏழ் பொழிலும் வளம் ஏந்திய–சப்த த்வீபங்களும் புதுக் கணித்தன -உபஹாரங்களை தரித்தன என்றுமாம் -இது எல்லாம் ஆரைக் கண்டால் என்னில் –
என் அப்பன்-எனக்கு பரம பந்து வானவன் -இவர்களோடு நிருபாதிக சம்பந்தம் அவனுக்கு உண்டானால் -அவனோடு சம்பந்தம் உள்ளவை எல்லா வற்றுக்கும் ஆதரிக்க வேண்டி இருக்கும் இ றே -ராஜ புத்ரன் போகா நின்றால் ராஜ சம்பந்தம் யுடையார்க்கு எல்லாம் அங்கீ கரிக்க வேண்டுமா போலே –
வாழ் புகழ் நாரணன் -ஆஸ்ரிதரை வாழும் படி பண்ண வற்றான கல்யாண குணங்களை யுடைய சர்வேஸ்வரன் –அவன் தன்னைக் கண்டாலோ என்னில் –
தாமரைக் கண்டு –அவன் கேட்க்கும் என்னும் பீதியாலோ என்னில் –உகந்தே-ப்ரீதி ப்ரேரிதராய் —

———————————————————

மேல் உண்டான லோகங்கள் பண்ணின ஸத்காரங்களை அருளிச்  செய்கிறார் –

நாரணன்  தாமரைக் கண்டு உகந்து நன்னீர் முகில்
பூரண பொற் குடம் பூரித்தது உயர் விண்ணில்
நீரணி கடல்கள் நின்றார்த்தன நெடுவரைத்
தோரணம் நிரைத்து எங்கும் தொழுதனர் உலகே–10-9-2-

நாரணன் தாமரைக் கண்டு உகந்து நன்னீர் முகில்–பூரண பொற் குடம் பூரித்தது உயர் விண்ணில்–நிருபாதிக சேஷியானவனுடைய அடியாரைக் கண்டு நல்ல நீரை யுடைத்தான மேகங்களானவை உகப்பாலே -உயர்ந்த ஆகாசத்தில் பூர்ண கும்பங்களாக சமைக்கப் பட்டன –முற்படக் கண்டு உகந்தன -பின்பு அவை தானே பூர்ண கும்பங்களாகாய்த்தின -ஒரு கால் தூர்ய கோஷத்தைப் பண்ணினோம் என்று இருக்கிறனவில்லை –ஆகாச சரரான தேவர்களால் ஆகாசம் எங்கும் பூர்ண கும்பம் வைக்கப் பட்டது என்றுமாம் –
நீரணி கடல்கள் நின்றார்த்தன –நீராலே அணியப் பட்ட கடல்கள் ஒருகால் ஆடினோம் என்று இராதே -ஹர்ஷத்தாலே நிரந்தரமாக ஆர்த்தன –
நெடுவரைத்-தோரணம் நிரைத்து எங்கும் தொழுதனர் உலகே–அவ்வோ லோகங்களில் உள்ளார் நெடிய வரை போலே இருந்துள்ள தோரணங்களை நட்டுத் தாங்களும் தொழுதார்கள் -உலகு என்று லோகத்தில் உள்ளாரைச் சொல்லுகிறது -மஞ்சா க்ரோஸந்தி இத்வத் — -சத்ர சாமர பாணிஸ்து-என்கிறபடியே ஹர்ஷத்தாலே எல்லா அடிமைகளும் செய்யா நின்றார்கள் –

——————————————————————–

ஆதி வாஹிக லோகங்களில் உள்ளார் திரு நாட்டுக்கு நடக்கிற ஸ்ரீ வைஷ்ணவர்கள் எதிரே வந்து புஷ்ப வர்ஷாதிகளைப் பண்ணிக் கொண்டாடுகிற படியை அருளிச் செய்கிறார் –

தொழுதனர்  உலகர்கள் தூப நல் மலர் மழை
பொழிவனர்பூமி அன்று அளந்தவன் தமர் முன்னே
எழுமின் என்று இருமருங்கு இசைத்தனர்  முனிவர்கள்
வழி இது வைகுந்தர்க்கு -என்று வந்து எதிரே–10-9-3-

தொழுதனர் உலகர்கள்--ஆதி வாஹிக லோகங்களில் உள்ளார் -கை படைத்த பிரயோஜனம் பெற்றோம் என்று தொழுதார்கள் –
தூப நல் மலர் மழை-பொழிவனர்–தூபத்தையும் -நல்ல மலர் மழையையும் பிரயோகித்து தொழா நின்றார்கள் –
பூமி அன்று அளந்தவன் தமர் முன்னே–திரு உலகு அளந்து அருளின ஸ்ரீ வாமனன் செயலுக்குத் தோற்று அடிமை புக்கவர்கள் என்றாய்த்து அவர்கள் ஆதரிக்கிறது –
எழுமின் என்று இருமருங்கு இசைத்தனர் முனிவர்கள்-இங்கே எழுந்து அருள வேணும் என்று இரண்டு அருகும் நின்று சொன்னார்கள் முனிவர்கள் -முனிவர்கள் என்று வாங்நியமம் தவிர்ந்தமைக்கு ஸூ சகம் – மௌனத்துக்கு விஷயம் புறம்பே இ றே என்று இருந்தார்கள் –
வழி இது வைகுந்தர்க்கு -என்று வந்து எதிரே–பரம பதத்துக்கு போவார்க்கு வழி இது வென்று எதிரே வந்து –தம் தம்முடைய எல்லையில் வந்தால் ஆதரிக்கிறோம் என்று இருக்கை அன்றிக்கே எதிரே வந்து ஆதரித்தவர்கள் –
பூமி அன்று அளந்தவன் தமர் முன்னே– தூப நல் மலர் மழை-பொழிவனராய்க்கொண்டு -முனிவர்களான உலகர்கள் தொழுதனர் -வைகுந்தத்துக்கு வழி இது என்று எதிரே வந்து -எழுமின் என்று இருமருங்கு இசைத்தனர் -என்று அந்வயம் –

—————————————————————-

மேலில் லோகங்களில் தேவாதிகள் ஸ்ரீ வைஷ்ணவர்கள் போகிற வழிகளில் தங்குகைக்கு பார்த்த பார்த்த இடம் எல்லாம் தோப்புக்கள் பண்ணியும் -வாத்யாதி கோஷங்களைப்  பண்ணியும் -கொண்டாடுகிற படியை யருளிச் செய்கிறார் –

எதிர்  எதிர் இமையவர் இருப்பிடம் வகுத்தனர்
கதிரவர் அவர் அவர் கைந்நிரை காட்டினர்
அதிர் குரல் முரசங்கள் அலை கடல் முழக்கு ஒத்த
மது விரி துழாய் முடி மாதவன் தமர்க்கே-10-9-4-

எதிர் எதிர் இமையவர் இருப்பிடம் வகுத்தனர்--பார்த்த பார்த்த இடம் எங்கும் -இவர்கள் இங்கே தாங்கிப் போவார்களோ -இவர்கள் இங்கே தாங்கிப் போவார்களோ -என்னும் நசையாலே தேவர்கள் தோப்புக்கள் சமைத்தார்கள் -இமையவர் என்று ஸ்வபாவ கதனம் அன்று -தோப்புக்கள் சமைக்கையில் உள்ள தவறையாலே கண் விழித்து இருக்கிற படி -பிரபுத்தராய் இருக்கிறபடி என்கை –
கதிரவர் அவர் அவர் கைந்நிரை காட்டினர்--அர்ச்சிராதிகளாய் உள்ள அவ்வோ ஆதி வாஹிக கணங்கள் -பார்த்து அருளீர் பார்த்து அருளீர் -என்று கைகளை நிரையே காட்டினார்கள் –
அதிர் குரல் முரசங்கள் அலை கடல் முழக்கு ஒத்த-அதிரா நின்றுள்ள குரலையுடைய முரசங்கள்-கடல் கிளர்ந்து முழங்கினால் போலே முழங்கா நின்றன -அங்குத் தங்குகையில் யுண்டான ஆதார அதிசயம் தோற்ற வாத்ய கோஷங்களைப் பண்ணினார்கள் –
மது விரி துழாய் முடி மாதவன் தமர்க்கே–ஸ்ரீ யபதியுடைய ஒப்பனை அழகிலே அகப்பட்டு அடிமை புக்கவர்களுக்கு என்னுதல் -இவர்களை எதிர் கொள்ளுகைக்கு பிராட்டியோடே ஒப்பித்து அருளுகிற படியைச் சொல்லுதல்-

——————————————————————-

ஆதி வாஹிக கர்த்தாக்களான வருண இந்த்ராதிகளும் மற்றும் உள்ளாறும் ஸ்ரீ வைஷ்ணவர்களுக்குப் பண்ணும் ஸத்காரத்தை அருளிச் செய்கிறார் –

மாதவன்  தமர் என்று வாசலில் வானவர்
போதுமின் எமது இடம் புகுதுக என்றலும்
கீதங்கள் பாடினர் கின்னரர் கெருடர்கள்
வேத நல் வாயவர் வேள்வியுள் மடுத்தே–10-9-5-

மாதவன் தமர் என்று வாசலில் வானவர்–பிராட்டி புருஷகாரமாக ஆஸ்ரயித்த அந்தப்புர பரிகரம் அன்றோ இவர்கள் என்றாய்த்து அவர்கள் சொல்லுவது –வழியில் தேவர்கள் -அவர்கள் ஆகிறார் வருண இந்திர பிரஜாபதிகள் –
போதுமின் எமது இடம் புகுதுக என்றலும்-கீதங்கள் பாடினர் கின்னரர் கெருடர்கள்–இங்கனே எழுந்து அருள வேணும் -எங்கள் அதிகாரங்களைக் கைக் கொள்ள வேணும் -என்று பிரார்த்திக்கிற அளவிலே -கின்னர்களும் கருடர்களும் கீதங்கள் பாடினர் –
வேத நல் வாயவர் வேள்வியுள் மடுத்தே–மேலில் லோகங்களில் வைதிகராய்க் கொண்டு சமாராதானம் பண்ணுமவர்கள் சமாராதானங்களை இவர்கள் திருவடிகளிலே சமர்ப்பித்தார்கள்-நிறபேஷாராய்ப் போகிற இவர்களுக்கு -தம் தாம் அதிகாரங்களைக் கொடுப்பார் -பாடுவார் -யாக பலங்களைக் கொடுப்பார்கள் ஆகிறார்கள் இ றே தம் தாம் ஆதரத்தாலே –ப்ரீதி கச்சின் முனிஸ் தாப்யாம் ஸம்ஸ்த்தித கலசம் ததவ்-என்று தம் தாமுக்கு உள்ளவற்றை கொடுக்கும் அத்தனை இ றே –

—————————————————————

ஸத்கார பூர்வகமாக தேவ ஸ்த்ரீகள் உகந்து ஸ்ரீ வசனங்களை ஆசீர் வசனங்களை பண்ணினார்கள் என்கிறார் –

வேள்வி  உள் மடுத்தலும் விரை கமழ் நறும் புகை
காளங்கள் வலம் புரி கலந்து எங்கும் இசைத்தனர்
ஆண்மின்கள் வானகம் ஆழியான் தமர் என்று
வாள் ஒண் கண் மடந்தையர் வாழ்த்தினர் மகிழ்ந்தே–10-9-6-

வேள்வி உள் மடுத்தலும்– விரை கமழ் நறும் புகை–அவர்கள் தங்கள் யாக பலங்களை சமர்ப்பித்த அளவிலே வேறே சிலர் அகில் தொடக்கமான த்ரவ்யங்களைக் கொண்டு நல்ல புகைகளை ப்ரவர்த்திப்பித்தார்கள் -/ விரை கமழ் நறும் புகை–பரிமள பிரசுரம் ஆகையால் ஸ்ப்ருஹணீயமான புகை –
காளங்கள் வலம் புரி கலந்து எங்கும் இசைத்தனர்--அவர்கள் கொடுக்கிறவற்றை இவர்கள் கைக் கொள்ளுகிற அளவிலே – வேறே சிலர் காளான்களையும்-வலம் புரிகளையும் -கலந்து த்வநிப்பித்தார்கள் -/ கலந்து எங்கும் இசைத்தனர்–மாறி மாறி எங்கும் ஓக்க த்வனித்தன –
ஆண்மின்கள் வானகம் ஆழியான் தமர் என்று –ஆழியான் தமர் —ஆண்மின்கள் வானகம்-என்று–சர்வேஸ்வரனுக்கு சேஷ பூதரான நீங்கள் இவ்விடத்தை யாளி கோளோ–என்றாய்த்து ஸ்தோத்ர பிரகாரம் -அவன் தானும் தன் விபூதியை -பக்தாநாம் என்று அன்றோ இருப்பது -ஆளக் குறை என் -என்பார்கள் –
வாள் ஒண் கண் மடந்தையர் வாழ்த்தினர் மகிழ்ந்தே–ஆதி வாஹிக கர்த்தாக்கள் யுடைய மஹிஷிகள் வாழ்த்தினார்கள் -ஒளியை யுடைத்தாய் ஆகர்ஷகமான கண்களை யுடையவர்கள் -இது ஸ்வரூப கதனம் பண்ணுகிறது அன்று -இவர்களை கண்டத்தாலே கண்களுக்கு உண்டான ஒளியையும் அழகையும் சொல்லுகிறது / மகிழ்ந்தே -பார்த்தாக்கள் அனுவர்த்திகையாலே விஹிதம் என்று செய்கிறார்கள் அன்று -ப்ரீதியாலே செய்கிறார்கள் -இங்கே பகவத் சம்பந்தமே ஹேதுவாக நீசராலே பரிபூதனாய்ப் போந்தவன் -சரீர வியோக சமானந்தரத்திலே தங்களுக்கு அவ்வருகு இல்லாதவர் கொண்டாடும் படி இ றே இவன் பேறு –

——————————————————————-

மருத் கணமும் வஸூ கணமும் தங்கள் எல்லைகளுக்கு அப்பாலும் செல்லலாம் இடம் எல்லாம் சென்று ஸ்ரீ வைஷ்ணவர்களை ஸ்தோத்ரம் பண்ணினார்கள் என்கிறார்-

மடந்தையர்  வாழ்த்தலும் மருதரும் வசுக்களும்
தொடர்ந்து எங்கும் தோத்திரம் சொல்லினர் தொடு கடல்
கிடந்த எம் கேசவன் கிளர் ஒளி மணி முடி
குடந்தை எம் கோவலன் குடி அடியார்க்கே–10-9-7-

மடந்தையர் வாழ்த்தலும் -அந்த தேவ ஸ்த்ரீகள் புகழ்ந்த அளவில்
மருதரும் வசுக்களும்-மருத் கணங்களும் வஸூ கணங்களும் –
தொடர்ந்து எங்கும் தோத்திரம் சொல்லினர் -தங்கள் எல்லைக்கு அப்பால் செல்லலாம் இடம் எல்லாம் சென்று புகழ்ந்தார்கள் -ஒரு நிமேஷ மாத்திரத்தில் ஒரு லோகத்தில் நின்றும் லோகாந்தரம் ஏறப் போமவர்கள் ஆகையால் தங்கள் எல்லைக்கு உள்ளுப் புகுந்த அளவால் பர்யாப்தி பிறவாமையாலே தொடர்ந்து புகழ்ந்தார்கள் -அவர்கள் தாங்கள் சடக்கென போகிறதுக்கு அடி என் என்னில் -காண்பது எஞ்ஞான்று கொலோ-என்று இருக்குமவர்கள் ஆகையாலும் -நஜீவேயம் க்ஷணம் அபி -என்று இருக்குமவன் கருத்து அறியுமவர்கள் ஆகையாலும் –
தொடு கடல்-கிடந்த எம் கேசவன்- பரமபதத்தை கலவிருக்கையாக யுடையவன் -அத்தை விட்டு -ப்ரஹ்மாதிகளுக்கு முகம் கொடுக்கைக்காக திருப் பாற் கடலிலே கண் வளர்ந்து அருளின படி –தொடு கடல் -தோண்டப்பட்ட கடல் -ஆழ்ந்த கடல் –
எம் கேசவன்- கிளர் ஒளி மணி முடி-குடந்தை எம் கோவலன்–ஆஸ்ரித அர்த்தமாக கிருஷ்ணனாய் வந்து அவதரித்து ரஷித்தவன் -அவதாரத்துக்கு பிற்பாடார் இழவாத படி திருக் குடந்தையிலே கண் வளர்ந்து அருளுகிறவன் —எம் கோவலன்—கிருஷ்ணன் தானே வந்து திருக் குடந்தையிலே கண் வளர்ந்து அருளினான் என்கிறது -அவன் போய்ப் பண்ணின கிருஷியின் பலம் அன்றோ என்று கொண்டாட நிற்பார்கள் -/ கிளர் ஒளி மணி முடி-மிக்க ஒளியை யுடைத்தாய் ஆதி ராஜ்ய ஸூ சகமான திரு அபிஷேகம் –பர வ்யூஹ வித்துவான்கள் அளவன்றிக்கே திருக் குடந்தையிலே கண் வளர்ந்து அருளுகிற நீர்மையிலே தோற்று சந்தானமாக எழுதிக் கொடுத்தவர்கள் அன்றோ இவர்கள் என்றாய்த்து அவர்கள் ஆதரிப்பது –

————————————————————————-

பிரகிருதி மண்டலத்துக்கு அவ்வருகாகத் திரு நாட்டிலே எல்லைக்கு புறம்பாக நித்ய ஸூரிகள் ஸ்ரீ வைஷ்ணவர்களை எதிர் கொள்ளுகிறபடியை  யருளிச் செய்கிறார் –

குடி  அடியார் இவர் கோவிந்தன் தனக்கு என்று
முடி யுடை வானவர் முறை முறை எதிர் கொள்ள
கொடி அணி நெடு மதிள் கோபுரம் குறுகினர்
வடிவுடை மாதவன் வைகுந்தம் புகவே–10-9-8-

குடி அடியார் இவர் கோவிந்தன் தனக்கு என்று--அவனுடைய ஸுலப்யத்திலே தோற்று சபரிகரமாக எழுதிக் கொடுத்தவர்கள் என்றாய்த்து -நித்ய ஸூ ரிகள் ஆதரிப்பது –குடந்தை எம் கோவலன் -குடி குடியார் -என்றது கீழ் —குடி குடியார் இவர் கோவிந்தன் தனக்கு -என்றது இங்கே -இவர்கள் விபவங்களிலே ஆஸ்ரயித்தவர்கள் -இவர்கள் உகந்து அருளின நிலங்களில் ஆஸ்ரயித்தவர்கள் -என்றாய்த்து அங்கு உள்ளார் ஸ்லாகிப்பது –
முடி யுடை வானவர் -அவனோபாதியும் மதிப்பில் குறைவற்றவர்கள் யாய்த்து இவர்களை ஆதரிப்பார் -அபிஷேகம் அவனுக்கும் நித்ய ஸூ ரி களுக்கும் ஒத்து இருக்குமாகில் வாசி என் என்னில் -அவன் ரக்ஷணத்துக்கு முடி சூடி இருக்கும் -இவர்கள் அடிமைக்கு முடி சூடி இருப்பார்கள் –
முறை முறை எதிர் கொள்ள-பர்யாயமாக எதிர் கொள்ள -யத்ர பூர்வே ஸாத்யா என்றும் -அடியார்கள் குழாங்களை –உடன் கூடுவது என்று கொலோ -என்றும் சொல்லுகிறபடியே தங்களுக்கு உத்தேசியரானவர்களுக்கு உத்தேச்யர்கள் ஆகிறார்கள் இ றே –
கொடி அணி நெடு மதிள் கோபுரம் குறுகினர்-இவர்கள் வருகிறார்கள் என்று கொடிகளால் அலங்க்ருதமாய் –ஒக்கத்தை யுடைத்தாய் -பரம பதத்துக்கு எல்லையான திரு மதிலில் திருக் கோபுரத்தை சென்று கிட்டினார்கள் –
வடிவுடை மாதவன் வைகுந்தம் புகவே–-தங்கள் வரவால் யுண்டான ஹர்ஷத்தாலே புதுக் கணித்த வடிவை யுடைய ஸ்ரீ யபதியதான பரம பதத்தில் புகுகைக்காக -வந்து கிட்டினார் என்றவாறே தனக்கும் பிராட்டிக்கும் வடிவு இட்டு மாறினால் போலேயாம் -என்கை –

—————————————————————-

ஸ்ரீ வைகுண்டத்தில் சென்று திரு வாசலிலே முதலிகளாலே சம்மதரானவாறே-அங்குத்தை நித்ய ஸூரிகள் சம்சாரிகள் ஆனவர்கள் ஸ்ரீ வைகுண்டத்தில் வருவதே -இது என்ன புண்ய பலம் -என்று விஸ்மயப் பட்டார்கள் என்கிறார்

வைகுந்தம்  புகுதலும் வாசலில் வானவர்
வைகுந்தன் தமர் எமர் எமது இடம் புகுது என்று
வைகுந்தத்து அமரரும் முனிவரும் வியந்தனர்
வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே–10-9-9-

வைகுந்தம் புகுதலும் வாசலில் வானவர்வைகுந்தன் தமர் எமர் எமது இடம் புகுது என்று–பரமபதத்தைச் சென்று கிட்டின அளவிலே திரு வாசல் காக்கிற முதலிகள் -ஸ்ரீ வைகுண்ட நாதனுடையார் எங்களுக்கு ஸ்வாமிகள் -எங்கள் பதத்தைக் கொள்ள வேணும் என்றாய்த்து அவர்கள் பாசுரம் -பயிலும் திருவுடையார் யாவராலும் எம்மையாளும் பரமர் -என்ற இவரைப் போலே யாய்த்து அங்குள்ளாரும் இருப்பது -திருவாசல் முதலிகள் எதிரே வந்து சத்கரித்து -கையைக் கொடுத்து -கொண்டு புக்கு தங்கள் கைபுடைகளிலே இருத்தி பிரம்பையும் கொடுப்பார்கள் ஆயத்து-சென்று புகுகிறவர்களுக்கும் கைங்கர்யமே உத்தேச்யம் -அங்கு இருக்கிறவர்களுக்கு கைங்கர்யமே யாத்திரை -ஆகையால் இவர்கள் கொள்வதும் அவர்கள் கொடுப்பதும் அது -புகுது என்றது -புகுதுக -என்றபடி
வைகுந்தத்து அமரரும் முனிவரும் வியந்தனர்-இவர்களால் ஸதக்ருதரான அளவிலே நித்ய ஸூ ரிகள் விஸ்மயப்படுவார்கள் —அமரரும் முனிவரும்–கைங்கர்ய தாரகரானவர்கள் –அமரர் -அதுக்கு ஷமர் அன்றிக்கே ஸுந்தர்ய சீலாதிகளிலே ஈடுபடும் ஸ்வ பாவரானவர்கள் –முனிவர்கள் -அஹம் சர்வம் கரிஷ்யாமி என்கிறபடியே அடிமையில் ஒன்றும் குறைய நிற்க மாட்டாதாரும் -குண அனுபவத்துக்கு அவ்வருகு கால் வாங்க மாட்டாத படியாய் இருப்பாரும் யாய்த்து -வியந்தனர் -விஸ்மயப் பட்டார்கள் –வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே–சம்சாரத்தில் சப் தாதி விஷயங்களில் பழகிப் போந்தவர்கள் பரம பதத்திலே வந்து புகுந்து கைங்கர்யமே யாத்திரை யாவது –இது ஒரு பாக்ய பலம் இருந்த படியே -என்றாய்த்து அவர்கள் கொண்டாடுவது –

———————————————————————–

சம்சாரத்தில் நின்றும் ஸ்ரீ வைகுண்டத்தில் ஸ்ரீ வைஷ்ணவர்களை அங்குள்ள அயர்வறும் அமரர்கள் கொண்டாடும் படியை அருளிச் செய்கிறார் –

விதி  வகை புகுந்தனர் என்று நல் வேதியர்
பதியினில் பாங்கினில் பாதங்கள் கழுவினர்
நிதியும் நல் சுண்ணமும் நிறை குட விளக்கமும்
மதி முக மடந்தையர் ஏந்தினர் வந்தே–10-9-10-

விதி வகை புகுந்தனர் என்று நல் வேதியர்–வைகுந்தம் புகுவது -மண்ணவர் விதியே என்று இவர்கள் சொல்லுகிற இது வார்த்தை என்று என்று வேறே சிலர் -இவர்கள் இங்கே வந்து புகுரப் பெற்ற இது நாம் பண்ணின பாக்ய பலம் அன்றோ -என்பார்கள் -விஷயங்கள் நடையாடுகிற சம்சாரத்தில் இருந்து வைத்து -அநந்ய பிரயோஜனராய் பகவத் குண அனுபவம் பண்ணப் பெற்ற மஹா புருஷர்களாய் -விண்ணுளாரிலும் சீரியர் -என்கிறவர்கள் இங்கே வந்து புகுரப் பெற்ற இது நாம் பண்ணின பாக்யம் அன்றோ என்பார்கள் –-வைகுந்தம் புகுவது -என்றது அங்கு -இங்கு புகுந்தனர் என்கையாலே தங்கள் பாக்யத்தை காட்டுகிறது -/ நல் வேதியர்--உபநிஷத் பாகத்தில் பிரதிபாத்யரானவர்கள் -யத்ரர்க்ஷய–யத்ர பூர்வே -என்று ஓதப்படுபவர்கள் –
பதியினில்-எதிரே புறப்பட்டு ஆதரித்து தங்கள் கோயில்களிலே கொண்டு புக்கு
பாங்கினில் பாதங்கள் கழுவினர்–தங்கள் ஆசனங்களில் இவர்களை வைத்து தங்கள் தாழ்ச்சி தோற்றது தறையிலே இருந்து -தங்கள் மஹிஷிகள் நீர் வார்க்க -இவர்கள் ஸ்ரீ பாதத்தை விளக்கினார்கள் –
நிதியும் நல் சுண்ணமும் நிறை குட விளக்கமும்-அவ்வளவில் பகவத் பரி சாரிகைகள் வந்து எதிரே நிற்பார்கள் -வைஷ்ணவர்களுக்கு நிதியான திருவடி நிலைகளையும் -திருச் சுண்ண பிரசாதத்தையும் -நிறை குடங்களையும் -மங்கள தீபங்களையும் ஏந்தி
மதி முக மடந்தையர் ஏந்தினர் வந்தே–தேசாந்திரம் போன பிரஜை வந்து கிட்டினால் தாய் முகம் குளிர்ந்து இருக்குமா போலே ஹர்ஷத்தாலே பூர்ண சந்திரனைப் போலே இருக்கிற முகங்களை யுடையவர்கள் வந்து எதிர் கொண்டார்கள் –

————————————————————————-

நிகமத்தில் இத்திருவாய் மொழி அப்யஸிக்க  வல்லார் வைகுந்தத்து முனிவரோடு ஒப்பர் -என்கிறார் –

வந்தவர் எதிர் கொள்ள மா மணி மண்டபத்து
அந்தமில் பேர் இன்பத்து அடியரொடு இருந்தமை
கொந்து அலர் பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன் சொல்
சந்தங்கள் ஆயிரத்து இவை வல்லார் முனிவரே–10-9-11-

வந்தவர் எதிர் கொள்ள--பிராட்டியோடே எம்பெருமான் தானே வந்து எதிர் கொள்ள -அப்ராக்ருதரான அயர்வறும் அமரர்கள் என்றுமாம் –
மா மணி மண்டபத்து-ஆனந்த மயமான திரு மா மணி மண்டபத்திலே –
அந்தமில் பேர் இன்பத்து –யவாதாத்ம பாவியாய் நிரதிசயமான ஆனந்தத்தை யுடையராய்க் கொண்டு -ஆனந்த நிர்ப்பரராய்க் கொண்டு –சம்சாரத்தில் துக்கத்துக்கு எல்லை யுண்டாகில் யாய்த்து -அஸ் ஸூகத்துக்கு அவதி சொல்லலாவது –
அடியரொடு இருந்தமைஅடியார்கள் குழாங்களை –உடன் கூடுவது என்று கொலோ -என்று ஆசைப் பட்ட படியே இருந்தமையை -அவர்களும் தங்களுக்கு போதயந்த பரஸ்பரம் பண்ணுகைக்கு துணை தேடி இ றே இருப்பது –கொந்து அலர் பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன் சொல்--நித்ய வசந்தமான சோலையை யுடைத்தான திரு நகரியை யுடைய ஆழ்வார் அருளிச் செய்த –போக்கிலே ஒருப்பட்ட வாறே திரு நகரி தொடங்கி சோலை செய்தால் போலே இருக்கை –
சந்தங்கள் ஆயிரத்து இவை வல்லார் முனிவரே–சந்தங்களை யுடைத்தான ஆயிரம் என்னுதல் -சந்தோ ரூபமான ஆயிரம் என்னுதல் -இப்பத்தையும் அப்யஸிக்க வல்லார் அத்தேசத்திலே பகவத் குண அனுபவம் பண்ணி -அதிலே வித்தராய் அதுக்கு அவ்வருகு கால் வாங்க மாட்டாதே இருக்குமவர்களைப் போலே யாவர் –

———————————————————————

கந்தாடை   அப்பன் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

திருவாய்மொழி ஒன்பதினாயிரப்படி –10-9–

October 31, 2016

பரம யோகிகளுக்கு சம்பவிப்பதான -பகவத் ஞான -வைராக்ய பக்தி பிரகாரங்களை -இத் திருவாய் மொழி அளவும் அனுபவித்து –
இனி இங்கு இருந்து அனுபவிப்பது ஒன்றும் இல்லாமையால் -திரு நாடு ஏறப் போக வேணும் -என்று மநோ ரதிக்கிற ஆழ்வாரை
ஈண்டென கொடு போக வேணும் என்று விரைகிற எம்பெருமான் இவருக்கு அங்குத்தைக்கு ஈடாகும் படி மிகவும் விடாய் பிறக்கைக்காக
திரு நாட்டுக்கு போகைக்கு ஈடாக வேதாந்தங்களில் பிரசித்தமான -அர்ச்சிராதி மார்க்கத்தையும் -அங்கு உள்ளார் பண்ணும் –
ஸத்காரங்களையும் -அவ்வழியே போய்ப் புக்க கடவிய திரு நாட்டையும் -அங்கே எம்பெருமான் அயர்வறும் அமரர்கள் சேவிக்க –
பிராட்டிமாரோடு வீற்று இருந்து அருளும் படியையும் -பரம ப்ராப்யரான அயர்வறும் அமரர்கள் நடுவே தாமே ஆனந்த நிர்ப்பரராய் இருக்கும் படியையும்
காட்டி அருளக் கண்டு ப்ரீதராய் அத்தை அந்யாபதேசத்தாலே பேசி அனுபவிக்கிறார் –

———————————————————–

திரு நாட்டுக்குப் போக உபக்ரமிக்கிற ஸ்ரீ வைஷ்ணவர்களைக் கண்ட ப்ரீதி அதிசயத்தாலே -ஸ்த்தாவர ஜங்கமங்களுக்குப் பிறந்த விக்ருதியை அருளிச் செய்கிறார்

சூழ்  விசும்பு அணி முகில் தூரியம் முழக்கின
ஆழ்கடல் அலைதிரைக் கை எடுத்து ஆடின
ஏழ் பொழிலும் வளம் ஏந்திய என் அப்பன்
வாழ் புகழ் நாரணன் தாமரைக் கண்டு உகந்தே –10-9-1-

இடமுடைத்தான ஆகாசத்தில் அழகிய மேகங்கள் தூர்ய கோஷத்தை பண்ணிற்றன-ஆழ் கடல் அலையா நின்று இருந்துள்ள திரையாகிற கையை எடுத்துக் கொண்டு ஆடிற்றன-
ஏழ் பொழிலும் வளம் ஏந்திய–சப்த த்வீபங்களும் புதுக் கணித்தன -உபஹாரங்களை தரித்தார் என்றுமாம் –
எனக்கு பரம பந்துவாய் ஆஸ்ரிதர் எல்லாம் உஜ்ஜீவிக்கும் புகழை யுடைய நாரணன் தாமரைக் கண்டு உகந்தே-

——————————————————–

மேல் உண்டான லோகங்கள் பண்ணின ஸத்காரங்களை அருளிச்  செய்கிறார் –

நாரணன்  தாமரைக் கண்டு உகந்து நன்னீர் முகில்
பூரண பொற் குடம் பூரித்தது உயர் விண்ணில்
நீரணி கடல்கள் நின்றார்த்தன நெடுவரைத்
தோரணம் நிரைத்து எங்கும் தொழுதனர் உலகே–10-9-2-

அழகிய நீர் முகில்கள்  நாரணன் தாமரைக்கு கண்டு உகந்தன–அவை தான் பூர்ண கும்பங்கள் ஆயின -ஆகாச சரரான தேவர்களால் ஆகாசம் எல்லாம் பூர்ண கும்பம் வைக்கப்  பட்டது என்றுமாம் -நீராலே அணியப் பட்ட கடல்கள் ஹர்ஷத்தாலே நிரந்தரமாக ஆர்த்தன -லோகங்களில் உள்ளார் எங்கும்  நெடுவரை போலே இருக்கும்  தோரணங்களை நிரைத்து தொழுதார்கள் –

—————————————————————–

ஆதி வாஹிக லோகங்களில் உள்ளார் திரு நாட்டுக்கு நடக்கிற ஸ்ரீ வைஷ்ணவர்கள் எதிரே வந்து புஷ்ப வர்ஷாதிகளைப் பண்ணிக் கொண்டாடுகிற படியை அருளிச் செய்கிறார் –

தொழுதனர்  உலகர்கள் தூப நல் மலர் மழை
பொழிவனர்பூமி அன்று அளந்தவன் தமர் முன்னே
எழுமின் என்று இருமருங்கு இசைத்தனர்  முனிவர்கள்
வழி இது வைகுந்தர்க்கு -என்று வந்து எதிரே–10-9-3-

பூமி அன்று அளந்தவன் தமர்–திரு உலகு அளந்து அருளினவன் குணத்திலே அகப்பட்டு அடிமை புக்கு திரு நாட்டுக்குப் போகிற ஸ்ரீ வைஷ்ணவர்கள் –
எழுமின் என்று இருமருங்கு இசைந்தனர் முனிவர்கள்-வழி இது வைகுந்தர்க்கு -என்று வந்து எதிரே–ஸ்ரீ வைகுண்டத்துக்கு போவார்க்கு வழி இது வென்று எதிரே வந்து இரண்டு அருகும் நின்று -எழுந்து அருளலாகாதோ -என்றார்கள் –முனிவர்கள்– முனிவர்கள் என்று வாங்நியமம் தவிர்ந்தமைக்கு ஸூ சகம் –

———————————————————————-

மேலில் லோகங்களில் தேவாதிகள் ஸ்ரீ வைஷ்ணவர்கள் போகிற வழிகளில் தங்குகைக்கு பார்த்த பார்த்த இடம் எல்லாம் தோப்புக்கள் பண்ணியும் -வாத்யாதி கோஷங்களைப்  பண்ணியும் -கொண்டாடுகிற படியை யருளிச் செய்கிறார் –

எதிர்  எதிர் இமையவர் இருப்பிடம் வகுத்தனர்
கதிரவர் அவர் அவர் கைந்நிரை காட்டினர்
அதிர் குரல் முரசங்கள் அலை கடல் முழக்கு ஒத்த
மது விரி துழாய் முடி மாதவன் தமர்க்கே-10-9-4-

அர்ச்சிராதிகளான அவ்வவ ஆதி வாஹிக கணங்கள் -பார்த்து அருளீர் பார்த்து அருளீர் என்று கைகளை நீரையே காட்டினார்கள் -ஸ்ரீ யபதியினுடைய அழகிலே அகப்பட்ட ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு -இவர்களை எதிர் கொள்ளுகைக்குப் பெரிய பிராட்டியாரோடு ஒப்பித்து அருளுகிறபடி என்றுமாம் –

———————————————————————–

ஆதி வாஹிக கர்த்தாக்களான வருண இந்த்ராதிகளும் மற்றும் உள்ளாறும் ஸ்ரீ வைஷ்ணவர்களுக்குப் பண்ணும் ஸத்காரத்தை அருளிச் செய்கிறார் –

மாதவன்  தமர் என்று வாசலில் வானவர்
போதுமின் எமது இடம் புகுதுக என்றலும்
கீதங்கள் பாடினர் கின்னரர் கெருடர்கள்
வேத நல் வாயவர் வேள்வியுள் மடுத்தே–10-9-5-

வாசலில் வானவர்–வழியில் தேவர்கள் -வந்து எங்கள் அதிகாரங்களைக் கொள்ள வேணும் என்று பிரார்த்திக்கிற அளவிலே கின்னர்களும் கருடர்களும் பாட்டுக்களை பாடினார்கள் -மேலில் லோகங்களில் வைதிகராய்க் கொண்டு சமாராதானம் பண்ணுமவர்கள் தங்களுடைய சமாராதான பலங்களை ஸ்ரீ வைஷ்ணவர்கள் திருவடிகளிலே சமர்ப்பித்தார்கள் –

———————————————————————-

ஸத்கார பூர்வகமாக தேவ ஸ்த்ரீகள் உகந்து ஸ்ரீ வசனங்களை ஆசீர் வசனங்களை பண்ணினார்கள் என்கிறார் –

வேள்வி  உள் மடுத்தலும் விரை கமழ் நறும் புகை
காளங்கள் வலம் புரி கலந்து எங்கும் இசைத்தனர்
ஆண்மின்கள் வானகம் ஆழியான் தமர் என்று
வாள் ஒண் கண் மடந்தையர் வாழ்த்தினர் மகிழ்ந்தே–10-9-6-

சிலர் தாங்கள் பண்ணின யாக பலங்களை சமர்ப்பிக்கும் அளவிலே வேறே சிலர் அகில் தொடக்கமான த்ரவ்யங்களைக் கொண்டு நல்ல புகைகளை ப்ரவர்த்திப்பித்தார்கள் –கலந்து எங்கும் இசைத்தனர்–கலந்து எங்கும் த்வனித்தன –

——————————————————————-

மருத் கணமும் வஸூ கணமும் தங்கள் எல்லைகளுக்கு அப்பாலும் செல்லலாம் இடம் எல்லாம் சென்று ஸ்ரீ வைஷ்ணவர்களை ஸ்தோத்ரம் பண்ணினார்கள் என்கிறார்-

மடந்தையர்  வாழ்த்தலும் மருதரும் வசுக்களும்
தொடர்ந்து எங்கும் தோத்திரம் சொல்லினர் தொடு கடல்
கிடந்த எம் கேசவன் கிளர் ஒளி மணி முடி
குடந்தை எம் கோவலன் குடி அடியார்க்கே–10-9-7-

ஆஸ்ரித அர்த்தமாக நிரதிசய ஸுந்தரிய உக்தனாய்க் கொண்டு திருப் பாற் கடலிலே கண் வளர்ந்து அருளி அங்குச் செல்ல மாட்டாதவர்களுக்காக திருக் குடந்தையிலே கண் வளர்ந்து அருளின கோபாலனுடைய க்ரமாகதமான அடியார்க்கு –

———————————————————————–

பிரகிருதி மண்டலத்துக்கு அவ்வருகாகத் திரு நாட்டிலே எல்லைக்கு புறம்பாக நித்ய ஸூரிகள் ஸ்ரீ வைஷ்ணவர்களை எதிர் கொள்ளுகிறபடியை  யருளிச் செய்கிறார் –

குடி  அடியார் இவர் கோவிந்தன் தனக்கு என்று
முடி யுடை வானவர் முறை முறை எதிர் கொள்ள
கொடி அணி நெடு மதிள் கோபுரம் குறுகினர்
வடிவுடை மாதவன் வைகுந்தம் புகவே–10-9-8-

கோவிந்தன் தனக்குத் தரும் சந்தான பிரயுக்தமான அடியார் என்று சேஷத்வத்துக்கு சூடின முடியை யுடைய அயர்வறும் அமரர்கள் பர்யாயமாக எதிர் கொள்ள –
கொடி அணி நெடு மதிள் கோபுரம் குறுகினர்–இவர்கள் வருகிறாள் என்று கொடிகளால் அலங்கரிக்கப் படுவதும் செய்து -திரு நாட்டுக்கு எல்லையான மதிலை யுடைய திருக் கோபுரத்தைக் குறுகினார்கள் -தங்கள் வரவால் உண்டான ஹர்ஷத்தாலே புதுக் கணித்த திருமேனியை யுடைய ஸ்ரீ ய பதியதான ஸ்ரீ வைகுண்டத்தில் புக்கு இருக்கைக்காக –

—————————————————————-

ஸ்ரீ வைகுண்டத்தில் சென்று திரு வாசலிலே முதலிகளாலே சம்மதரானவாறே-அங்குத்தை நித்ய ஸூரிகள் சம்சாரிகள் ஆனவர்கள் ஸ்ரீ வைகுண்டத்தில் வருவதே -இது என்ன புண்ய பலம் -என்று விஸ்மயப் பட்டார்கள் என்கிறார் –

வைகுந்தம்  புகுதலும் வாசலில் வானவர்
வைகுந்தன் தமர் எமர் எமது இடம் புகுது என்று
வைகுந்தத்து அமரரும் முனிவரும் வியந்தனர்
வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே–10-9-9-

ஸ்ரீ வைகுண்டத்தில் புகும் காட்டில் திருவாசலில் முதலிகள்  வைகுந்தனுடையார் எங்களுடைய ஸ்வாமிகள் எங்கள் பதத்தைக் கைக் கொள்ள வேணும் என்று -/ அமரரும் முனிவரும்-கைங்கர்ய தாரகரான அமரரும்  அதுக்கும் ஷமர் அன்றிக்கே பகவத் குணங்களில் ஈடு பட்டு இருக்கும் ஸ்வபாவரான முனிவரும் –

——————————————————————–

சம்சாரத்தில் நின்றும் ஸ்ரீ வைகுண்டத்தில் ஸ்ரீ வைஷ்ணவர்களை அங்குள்ள அயர்வறும் அமரர்கள் கொண்டாடும் படியை அருளிச் செய்கிறார் –

விதி  வகை புகுந்தனர் என்று நல் வேதியர்
பதியினில் பாங்கினில் பாதங்கள் கழுவினர்
நிதியும் நல் சுண்ணமும் நிறை குட விளக்கமும்
மதி முக மடந்தையர் ஏந்தினர் வந்தே–10-9-10-

தங்கள் பாக்யத்தால் அன்றிக்கே நம்முடைய பாக்யத்தாலே சம்சாரிகள் ஆனவர்கள் இங்கே வந்து புகுரப் பெற்றோம் என்று -வேதத்தில் உபநிஷத் பாகங்களாலே ப்ரதிபாத்யரான நித்ய ஸூ ரிகள் தங்கள் கோயில்களிலே-தங்கள் தாழ்ச்சி தோன்றும் படி இருந்து அவர்களுடைய ஸ்ரீ பாதங்களை விளக்கினார்கள் -ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு நீதியான திருவடி நிலைகளையும் நற் சுண்ணத்தையும் நிறை குடங்களையும்   மங்கள தீபங்களையும் ஏந்தி நெடுங்காலம் பிரஜைகளை பிரிந்து கண்ட தாய்மாரைப் போலே ஹ்ருஷ்டமாய் பூர்ண சந்திரனைப் போலே இருக்கிற முகங்களையும் யுடைய பகவத் பரிசாரி கைகள் வந்து எதிர் கொண்டார்கள்  –

———————————————————————-

நிகமத்தில் இத்திருவாய் மொழி அப்யஸிக்க  வல்லார் வைகுந்தத்து முனிவரோடு ஒப்பர் -என்கிறார் –

வந்தவர் எதிர் கொள்ள மா மணி மண்டபத்து
அந்தமில் பேர் இன்பத்து அடியரொடு இருந்தமை
கொந்து அலர் பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன் சொல்
சந்தங்கள் ஆயிரத்து இவை வல்லார் முனிவரே–10-9-11-

வந்தவர் எதிர் கொள்ள--பிராட்டியோடே கூட எம்பெருமான் தானும் வந்து எதிர் கொள்ள –அயர்வறும் அமரர்கள் -என்றுமாம் -திருமா மணி மண்டபத்திலே பரம ப்ராப்யரான அயர்வறும் அமரர்கள் நடுவே ஆனந்த நிர்ப்பரராய்க் கொண்டு இருந்தமையை -மிகவும் பூத்த பொழிலொடு கூடின திரு நகரியை யுடைய ஆழ்வாருடைய உக்தியாய் சந்தோ ரூபமான ஆயிரம் திருவாய் மொழியிலும் –

————————————————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

திருவாய்மொழி இருபத்து நாலாயிரப்படி –10–8- –

October 31, 2016

தம்மைக் குறித்து ஈஸ்வரனுக்கு உண்டான பாரதந்தர்யத்தைச் சொன்னார் அருள் பெறுவார் அடியாரிலே –
அவன் தானே மேல் விழுந்து தம்முடைய திருமேனியை விரும்பா நிற்க இத்தைத் தவிர வேணும் என்று அர்த்தித்த
இதுக்கு இசைகையாலே அந்த பாரதந்தர்யத்தை முடிய நடத்தின படியைச் சொன்னார் செஞ்சொற் கவியில் –
இதில் அஸஹ்ய அபசார பாஹுளராய் இருக்கிற நம்மை -அவற்றைப் பொறுத்து –அத்வேஷத்தைப் பிறப்பித்து –
-அது அடியாக விசேஷ கடாக்ஷத்தை நம் பக்கலிலே பண்ணி -தன்னைப் பெற வேணும் என்னும் இச்சையைப் பிறப்பித்து-
-தன்னைப் பெறுகைக்கு உபாயமும் தானே -என்னும் புத்தியை நமக்குத் பிறப்பித்து –
-சப்தாதி விஷயங்களில் பிரவணராய் திரிந்த நம்மை -பல நீ காட்டிப் படுப்பாயோ -என்னும் படி பண்ணி –
-பொய் நின்ற ஞானம் தொடங்கி இவ்வளவும் யுண்டான மஹா ஸம்ருத்தியைத் தந்து -இவ்வளவு புகுர நிறுத்தி-
-தம் பக்கலிலே மிகவும் வியாமோகத்தைப் பண்ணி -அவ்வருகும் கொண்டு போவானாய் த்வரியா நிற்கும்படியை அனுசந்தித்து –
இதுக்கு அடியாய் இருப்பதொன்று நம் பக்கலிலே யுண்டோ என்று ஆராய்ந்த இடத்து தம் பக்கல் ஒன்றும் கண்டிலர்-
-தம் பக்கலிலே உள்ளதொன்றைப் பேற்றுக்கு உடலாக நினைக்குமவர் இல்லாமையால் -இனி இதுக்கு அடி –
-ஸ்வதஸ் சர்வஞ்ஞ னானவன் தன்னையே கேட்ப்போம் -என்று பார்த்து –
இன்று தேவர் இப்படி சிரஸா வஹிக்கைக்கும்-அநாதி காலம் இத்தை விடுகைக்கும் அடி என் என்று கேட்க –
அவனும் நிருத்தரானாய் கவிழ் தலையிட்டு காலாலே தறையைக் கீறி நிக்க -நிர்ஹேதுகமாக விஷயீ கரித்து அருளினான் என்று அத்யவசித்து
-அவ் விஷயீ காரத்துக்கு அடியாக நிஸ்சீமமாய் நிஸ்சங்க்யமமான கிருபாதி குணங்களை அனுசந்தித்து –
-இது ஒரு குணவத்தையே -என்று அதிலே ஈடுபட்டு விஸ்மிதராய்க் களிக்கிறார் —

—————————————————————–

யாத்திருச்சிகமாக திருமாலிருஞ்சோலை  மலை என்றேன் -என்னில் காட்டில் அத்யந்த நிரபேஷனாய் இருக்கிற -தான் பிராட்டியோடே கூட வந்து என்னுள்ளே புகுந்து அருளினான் -என்கிறார் –

திருமால்  இரும் சோலை மலை என்றேன் என்ன
திருமால் வந்து என் நெஞ்சு நிறையப் புகுந்தான்
குரு மா மணி உந்து புனல் பொன்னித் தென் பால்
திருமால் சென்று சேர்விடம் தென் திருப் பேரே-10-8-1-

திருமால் இரும் சோலை மலை என்றேன் என்ன-சிலர் ஒரு மலையைச் சொல்லும் இடத்தில் ஒரு விசேஷணத்தை இட்டுச் சொல்ல வேணும் –அம் மாத்ரம் சொன்னேன் அத்தனை என்று இரா நின்றார் இவர் -இவ் விசேஷணத்தை இட்டுச் சொல்லிற்று தன் பக்கல் ஆதரத்தாலே என்று இரா நின்றான் அவன் -/ என்ன -மனஸ் சஹகாரம் இல்லை -யுக்தி மாத்திரமே என்று இருக்கிறார் -ராவணன் தம்பிக்கு மித்ர பாவமே அமையும் என்று இருக்கிறவன் -இவருக்கு உக்திக்கு அவ்வருகு ஓன்று வேணும் என்று இருக்குமோ –சேஷத்வம் ஸ்வரூபம் ஆகில் -உபாய பாவம் நம் தலையிலே கிடந்ததாகில் -அத்வேஷம் உண்டாகில் -நம் பேறாக விஷயீ கரிக்கைக்கு உக்திக்கு அவ்வருகு உண்டோ -என்று இரா நின்றான் அவன் –
திருமால் வந்து என் நெஞ்சு நிறையப் புகுந்தான்—திருமால் –அஹ்ருதயமாகச் சொன்னது தன்னையும் சஹ்ருதயம் ஆக்குவாரும் அருகே உண்டு -/ வந்து -நம்மை அங்கே அழைத்துக் கார்யம் கொள்ளுகை அன்றிக்கே –நாம் இருந்த இடத்தே வருவதே –சாபேஷன் இருந்த இடத்திலே பூர்ணன் வருவதே -சர்வருக்கும் அபிகம்யனானவனுக்கு நான் அபிகமயனாவதே -ஸோ அப்யகச்சன் மஹா தேஜோ சபரீம் – என் நெஞ்சம் -உக்திக்கு அசஹகாரியான என் நெஞ்சம் — நிறையப் புகுந்தான்-–விஷயாந்தரங்களுக்கு அவகாசம் இல்லாத படி பாழ் தீரப் புகுந்தான் –
குரு மா மணி உந்து புனல் பொன்னித் தென் பால்-பெரு விலையனாய் தர்ச நீயமான ரத்னங்களைக் கொண்டு வந்து தள்ளா நின்றுள்ள புனலை யுடைய பொன்னித் தென் கரையிலே
திருமால் சென்று சேர்விடம் தென் திருப் பேரே-–சிலாக்யமான தேசம் என்ற படி —ஸ்ரீ யபதி சேரும்படியான சிலாக்யமான தென் திருப் பேர் -இத்தேசத்தை வாசஸ் ஸ்தானமாக யுடையவன் -அஹ்ருதயமான என் யுக்தி மாத்ரத்தைக் கொண்டு -என் நெஞ்சிலே விரும்பிப் புகுந்தான் –
கீழ் -திருமால் -என்ற இடம் -புருஷகார பாவத்தைச் சொல்லிற்று –மேலில்-திருமால் -என்கிற இடம் உத்தரார்த்தத்தில் ஸ்ரீ லஷ்மீ சம்பந்தத்தைச் சொல்லுகிறது –

————————————————————————-

இதுக்கு முன்பு தான் சர்வேஸ்வரனாய் இருந்து வைத்தே -என்னோடே கலக்கப் பெறாமையாலே -குறைவாளனாய் இருந்தவன் -நிர்ஹேதுகமாக என்னுடைய ஹிருதயத்திலே வந்து புகுந்து பூர்ணன் ஆனான் என்கிறார் –

பேரே உறைகின்ற பிரான் இன்று வந்து
பேரேன் என்று என் நெஞ்சு நிறையப் புகுந்தான்
காரேழ் கடல் ஏழ் மலை ஏழ் உலகு உண்டும்
ஆரா வயிற்றானை அடங்கப் பிடித்தேனே–10-8-2-

பேரே உறைகின்ற பிரான்–திருப் பேரை தனக்கு கோயிலாகப் பேற்று அங்கே நிரந்தர வாசம் பண்ணுகிற சர்வேஸ்வரன்
இன்று வந்து-பேரேன் என்று என் நெஞ்சு நிறையப் புகுந்தான்-தன்னை ஒருவர் கேட்டார் இன்றிக்கே இருக்காது தானே -இனி ஒரு நாளும் போகேன் -என்று சொல்லி பிராட்டி தன் பக்கலிலே சொல்லுமத்தை தான் என் பக்கலிலே சொல்லா நின்றான் -/ என் நெஞ்சு –நிறையப் புகுந்தான்–இவனுடைய அபி நிவேசத்தை ஆதரியாத நெஞ்சானது பூர்ணமாம் படி –முன்பு நினைவு இன்றிக்கே இருக்க இன்று வந்து புகுந்தான் -முன்பு நினைவு உண்டாவது தன் பக்கல் முதல் உண்டாகில் இ றே –
காரேழ் கடல் ஏழ் மலை ஏழ் உலகு உண்டும்-புஷ் கலாதி மேகம் எழும் –சப்த சமுத்ரங்களும் -சப்த குல பர்வதங்களுமான லோகத்தை திரு வயிற்றிலே வைத்து —ஆரா வயிற்றானை –– பின்னையும் ஒன்றும் செய்யாதானாய் இருக்குமவனை
அடங்கப் பிடித்தேனே–-இப்படி அபி நிவிஷ்டனாய் இருக்கிறவனை பூர்ணன் ஆக்கினேன் –அதாகிறது பிரளய ஆபத்தைப் போக்கி ரஷித்தாலும் ஸ்ருஷ்ட்டி முதலாக மோக்ஷ பர்யந்தமாக ரத்னம் பண்ண வேண்டுகையாலே குறைவாளனாய் இருக்கும் -ஒரு தேச விசேஷத்திலே கொண்டு போய்க் கார்யம் கொள்ளலாம் படி இருக்கையாலே இப்போதே இ றே குறைவற்றது -இனி அவனுக்கு ஒரு அபேக்ஷை இல்லாத படி பரி பூர்ண பாத்திரம் ஆனேன் -என்கிறார் –

——————————————————————-

எம்பெருமான் நிர்ஹேதுகமாக தம்மோடே வந்து சம்ச்லேஷித்த படியை அனுசந்தித்து -இவன் திருவடிகள் எனக்கு இங்கனே எளிதாவதே –என்கிறார் –

பிடித்தேன்  பிறவி கெடுத்தேன் பிணி சாரேன்
மடித்தேன் மனை வாழ்க்கையுள் நிற்பதோர் மாயையை
கொடிக் கோபுர மாடங்கள் சூழ் திருப் பேரான்
அடிச் சேர்வது எனக்கு எளிது ஆயினவாறே–10-8-3-

பிடித்தேன் பிறவி கெடுத்தேன் பிணி சாரேன்-மடித்தேன் மனை வாழ்க்கையுள் நிற்பதோர் மாயையை–-தலை மேலே தாள் இணைகள் -என்கிறபடியே -அவன் திருவடிகளைக் கொண்டு வந்து என் தலையிலே வைக்க -அத்தை ஒரு நாளும் பிரியாத படி பற்றினேன் -ஜன்மத்தைப் போக்கினேன் –ஜென்ம சம்பந்தத்தால் வந்த துக்கங்களை அடியேன் -சம்சாரத்திலே நிற்கைக்கு அடியான மூல பிரக்ருதியை நிவர்த்திப்பித்தேன் -/ மடித்தேன் -மடிக்கை -திரிய விடுகை –
கொடிக் கோபுர மாடங்கள் சூழ் திருப் பேரான்-கொடிகளை யுடைத்தான கோபுரங்களாலும் மாடங்களாலும் சூழப் பட்ட திருப் பேரிலே நித்ய வாசம் பண்ணுகிறவனுடைய
அடிச் சேர்வது எனக்கு எளிது ஆயினவாறே–திருவடிகளைக் கிட்டுகை -எனக்கு அநாயாஸம் ஆவதே -சாஸ்திரங்களில் சொல்லுகிற அரும் தேவைகள் எல்லாம் கிடைக்க -கிட்டலாவது ஒரு விரகு பெறுவதே -ஸ்வயம் பிரபா புலத்தில் புக்க முதலிகளைக் கண்ணைச் செம்பளிக்கச் சொல்லி அவன் கரையிலே ஏற விட்டால் போலேயும் -ஸ்ரீ மதுரையில் உறங்கினவர்கள் ஸ்ரீ மத் த்வாரகையிலே விழித்தால் போலேயும் -சிலரை ஆபந் நிவ்ருத்தி பூர்வகமாக ஸூ கிகளாக்கும் போது அவர்கள் கண் செம்பளிக்க வேண்டுமா போலே காணும் –

————————————————————

தனக்கு திரு நாட்டுக்கு கொடுப்பானாய் இருக்கிற எம்பெருமானுடைய படியை -நீர்மையை –அனுசந்தித்து -இங்கனே எளிதாவதே -என்று என்னுடைய இந்த்ரியங்களோடே கூடக் களித்த மனசை யுடையேனாய்க் களியா நின்றேன்–கரணங்களும் களிக்க நானும் களியா நின்றேன் – -என்கிறார் –

எளிது  ஆயினவாறு என்று என் கண்கள் களிப்பக்
களிது ஆகிய சிந்தையனாய்க் களிக்கின்றேன்
கிளி தாவிய சோலைகள் சூழ் திருப் பேரான்
தெளிது ஆகிய சேண் விசும்பு தருவானே–10-8-4-

எளிது ஆயினவாறு என்று என் கண்கள் களிப்பக்-ஸூ துர்லபமான விஷயம் இங்கனே எளிதாவதே என்று -காணக் கருதும் என் கண்ணே -என்று விடாய்த்த கண்கள் களிக்கும் படி
களிது ஆகிய சிந்தையனாய்க் களிக்கின்றேன்-களித்த மனசை யுடையேனாய் -நெடியானே என்று கிடக்கும் என் நெஞ்சம் -என்ற நெஞ்சும் களிக்கப் பற்றது -கூவியும் காணப் பெற்றேன் -என்ற நான் களியா நின்றேன் -முடியானேயில் தாமும் தம்முடைய கரணங்களும் விடாய்த்த படி சொல்லிற்று -இங்கு தாமும் தம்முடைய கரணங்களும் களித்த படி சொல்லுகிறது
கிளி தாவிய சோலைகள் சூழ் திருப் பேரான்-செறிந்த சோலையை யுடைய திருப் பேரை நிரூபகமாக யுடையவன் -அக்காலத்திலே யுண்டாய் பின்பு இல்லையாகக் கூடும் –அத்தாலே சொல்லுதல் -பகவத் பரிக்ரஹமான இடத்துக்கு எல்லா நன்மையையும் யுண்டு என்பதினால் சொல்லுதல்
தெளிது ஆகிய சேண் விசும்பு தருவானே–சுத்த சத்வ மயம் ஆகையால் தெளிந்து இருந்துள்ள பரம பதத்தை தந்தே விடும் -/ சேண் விசும்பு-ப்ரஹ்ம லோகத்துக்கு அவ்வருகே உயர்ந்து இருந்துள்ள ஆகாசம் –

——————————————————

திருப் பேர் நகரான் எனக்குத் திரு நாடு தரக் கடவனாக-என்னோடே பூணித்து-தானே தடுமாற்ற தீ வினைகள் தவிர்த்தான் -என்கிறார்  –

வானே  தருவான் எனக்காய் என்னோடே ஒட்டி
ஊனேய் குரம்பை இதனுள் புகுந்து இன்று
தானே தடுமாற்ற வினைகள் தவிர்த்தான்
தேனே ஏய் பொழில் தென் திருப் பேர் நகரானே–10-8-5-

வானே தருவான் எனக்காய் என்னோடே ஒட்டி-எனக்கு வானே தருவானாய் -சம்சாரியான எனக்கு நித்ய ஸூ ரிகள் இருப்பை தருவானாக –
ஊனேய் குரம்பை இதனுள் புகுந்து -என்னோடே பூணித்து -நான் அர்த்தியாய் இருக்கச் செய்தேயும் -அராவணம ராமம் வா -என்கிறபடியே -என்னோடே சமயத்தைப் பண்ணி மாம்ஸாதி மயமாய் ஹேயமான இச் சரீரத்தின் உள்ளே தானே புகுந்து -நிர்ஹேதுகமாக வந்து புகுந்து
இன்று-நென்னேற்று ஒரு நினைவு இல்லை
தானே தடுமாற்ற வினைகள் தவிர்த்தான்-புகுந்த பின்பு தான் அனுகூலித்தேனோ-தன்னைப் பிரிந்து தடுமாறுகைக்கு அடியான புண்ய பாப ரூபமான கர்மங்களை தானே தவிர்த்தான் –
தேனே ஏய் பொழில் தென் திருப் பேர் நகரானே–மது மிக்க பொழில் —தேன் என்று வண்டு ஆகவுமாம் -இவனுக்கு என்ன குறை யுண்டாய் என் பக்கல் இங்கனே படுகிறான்

———————————————————————

தனக்கு வர்த்தித்து அருளலாம் கோயில்கள் -அநேகம் யுண்டாய் இருக்க -ஓர் இடம் இல்லாதாரைப் போலே -இருப்பேன் என்று பிரார்த்தித்திக் கொண்டு என்னுடைய ஹிருதயத்திலே நிர்ஹேதுகமாகப் புகுந்தான் என்று ப்ரீதர் ஆகிறார் –

திருப் பேர்  நகரான் திருமால் இரும் சோலைப்
பொருப்பே உறைகின்ற பிரான் இன்று வந்து
இருப்பேன் என்று என் நெஞ்சு நிறையப் புகுந்தான்
விருப்பே பெற்று அமுதம் உண்டு களித்தேனே –10-8-6-

திருப் பேர் நகரான் திருமால் இரும் சோலைப்–திரு அயோத்யையில் வாசம் போலே யாய்த்து திருப் பேரில் இருப்பு -திருச் சித்ர கூடத்தில் இருப்பு போலே யாய்த்து திருமலையில் வாசம் -அதிகம் புரவா சாச்ச –என்றும் -ஜஹவ் ச துக்கம் புரவி ப்ரவாசாத் -என்றும் குபேர இவ நந்தநே–என்றும் சொல்லக் கடவது இ றே-
பொருப்பே உறைகின்ற பிரான் இன்று வந்து— / பொருப்பு -மலை / பிரான் -உபகாரகன் /-இன்று வந்து-பூர்வ க்ஷணத்தில் நினைவு இன்றியிலே இருக்க -வந்து கொடு நிற்கக் கண்டது அத்தனை –
இருப்பேன் என்று என் நெஞ்சு நிறையப் புகுந்தான்–இஹ வத்ஸ் யாமி ஸுமித்ரே சார்த்தமே தேநபஷீணா–என்கிறபடியே -தன் பேறாக பிரதிஜ்ஜை பண்ணி -இருந்திடுவானுக்கு என்று இராதே என் நெஞ்சிலே குறைவறப் புகுந்தான் –
விருப்பே பெற்று -அவன் விருப்பத்தைப் பெற்று -அவனாலே பஹு மானம் பண்ணப் பெற்று
அமுதம் உண்டு களித்தேனே –அவனுடைய கொண்டாட்டம் ஆகிற அம்ருத பானத்தைப் பண்ணிக் களித்தேன் என்னுதல் / அவனுடைய குண அம்ருத பானத்தைப் பண்ணிக் களித்தேன் என்னுதல் /
ஷிபாமி என்று அவனுடைய அவன் உபேக்ஷைக்கு இலக்காகாதே -அவன் பஹு மானத்துக்கு இலக்கானால் -ப்ரீதி உள் அடங்காது இ றே –நரக ஹேதுவான விஷய அனுபவத்தால் வந்த களிப்பளவன்றியே -பகவத் அனுபவம் பண்ணப் பெற்ற செருக்கால் உண்டான ப்ரீதியை ஆற்றலாமோ —

——————————————————————-

தமக்கு உண்டான கார்த்தார்த்த்யத்தை அருளிச் செய்கிறார் –

உண்டு  களித்தேற்கு உம்பர் என் குறை மேலைத்
தொண்டு உகளித்து அந்தி தொழும் சொல்லுப் பெற்றேன்
வண்டு களிக்கும் பொழில் சூழ் திருப் பேரான்
கண்டு களிப்ப கண்ணுள் நின்று அகலானே-10-8-7-

உண்டு களித்தேற்கு –ஞான அனுபவத்தால் களிக்கப் பெற்ற எனக்கு -இதுக்கு மேலே ஒன்றுமே வேண்டா -இதுவே அமையும் என்னும் படி ஞான அனுபவம் தானே இனிதாய் இ றே இருப்பது –
உம்பர் என் குறை -மேலே என்ன குறை யுண்டு –உம்பர் -மேல் –
மேலைத்தொண்டு உகளித்து –மேலான தாஸ்ய ரசம் அதிசயித்து -யேந யேந தாதா கச்சதி -என்கிற ரசத்தை அனுபவித்து -சேவாச்ச்வ வ்ருத்தி -என்கிற இது இ றே கீழான தாஸ்யம் –
அந்தி தொழும் சொல்லுப் பெற்றேன்-முடிவிலே -தொழும் சொல்லுப் பெற்றேன் -அனுபவ ப்ரீதி தலை மண்டையிட்டால் -அதன் மேலே நம என்று புத்தி பூர்வகமாக சொல்லும் சொல்லைப் பெற்றேன் -நம இத்யேவ வாதின -இ றே -அதாவது ப்ரீதி வழிந்த சொல்லாலே திருவாய் மொழி பாடி அடிமை செய்யப் பெறுகை –
வண்டு களிக்கும் பொழில் சூழ் திருப் பேரான்-வண்டுகள் மது பானம் பண்ணி களிக்கிற பொழில் சூழ்ந்த திருப் பேரிலே வர்த்திக்கிறவன் -ஞானாதிகரோடு திர்யக்குகளோடு வாசி அறக் களிக்கும் தேசம் –
கண்டு களிப்ப –மெய் கொள்ளக் காண விரும்பும் என் கண்கள் என்று விடாய்த்த கண்கள் கண்டு களிக்கும் படியாக –
கண்ணுள் நின்று அகலானே--நான் போகச் சொல்லிலும் கண் வட்டத்திலும் நின்றும் போகிறிலன் -விஷய பிரவணரை போகச் சொன்னாலும் தூணைக் கட்டிக் கொண்டு போகாதாப் போலே -இப்படி அவனை அனுபவித்துக் களிக்கப் பெற்ற எனக்கு இனி மேல் ஒரு குறை யுண்டோ –

—————————————————————

வாங்மன சங்களுக்கு நிலம் அன்றிக்கே -நிரதிசய போக்யனான திருப் பேர் நகரான் -என் கண்ணுக்கு எப்போதும் விஷயமாய் -ஒரு நாளும் போகாத படி -ஸ்நேஹித்து என் பக்கல் வியாமோஹத்தைப் பண்ணி –ஹிருதயத்திலே புகுந்தான்-என்கிறார்

கண்ணுள்  நின்று அகலான் கருத்தின் கண் பெரியன்
எண்ணில் நுண் பொருள் ஏழிசையின் சுவை தானே
வண்ண நல் மணி மாடங்கள் சூழ் திருப் பேரான்
திண்ணம் என் மனத்துப் புகுந்தான் செறிந்து இன்றே –10-8-8-

கண்ணுள் நின்று அகலான்-சதா தரிசனத்துக்கு வேறு தனக்கு ஒரு விபூதி யுண்டு என்று இருக்கிறிலன்
கருத்தின் கண் பெரியன்-நம் விஷயத்தில் அவன் பார்க்கிற பாரிப்பு நமக்கு மநோ ரத விஷயம் அன்று -நம்மைக் கொண்டு போகையிலே பாரித்து அர்ச்சிராதி கணங்களை அழைப்பது –தான் அவர்களுக்கு முற்பாடன் ஆவதாகா நின்றான் –
எண்ணில் நுண் பொருள் -தாம் தாமே எண்ண நினைப்பார்க்கு துர்க்க்ரஹமான வஸ்து -ஏழிசையின் சுவை தானே-எண்ணாமல் இருக்க ஒண்ணாத போக்யதையைச் சொல்லுகிறது -சப்த ஸ்வரங்கள் இ றே பிரதானம் –
வண்ண நல் மணி மாடங்கள் சூழ் திருப் பேரான் –தேசத்தில் போக்யத்தையும் -மேன்மையும் இருக்கிற படி -நாநா வர்ணமாய் மஹார்க்கமான ரத்னங்களாலே செய்யப் பட்ட மாடங்களாலே சூழப் பட்ட தேசம் –
என் மனத்துப் புகுந்தான் செறிந்து இன்றே –தன்னை ஆதரித்து இருக்கிற என்னுடைய ஹிருதயத்திலே தன் வியாமோஹம் எல்லாம் தோன்றும் படி வந்து புகுந்தான் –
திண்ணம்-சர்வேஸ்வரன் ஒரு சம்சாரி ஹிருதயத்திலே இப்படி மேல் விழக் கூடுமோ -என்று சங்கிக்க வேண்டாம் -இது த்ருடம் —

———————————————————————-

இன்று எனக்குத் தன்னை அறிவித்து -விஷயீ கரித்து – என்னோடே திருட சம்ச்லேஷம் பண்ணினவனை பண்டு என்னை உபேக்ஷிக்கைக்கு காரணம் என் என்று கேட்க வேண்டி இருந்தேன் -என்கிறார் –

இன்று  என்னைப் பொருள் ஆக்கி தன்னை என்னுள் வைத்தான்
அன்று என்னைப் புறம் போகப் புணர்த்தது என் செய்வான்
குன்று என்னத் திகழ் மாடங்கள் சூழ் திருப் பேரான்
ஓன்று எனக்கு அருள் செய்ய உணர்த்தல் உற்றேனே–10-8-9-

இன்று என்னைப் பொருள் ஆக்கி -அஸத் கல்பனான என்னை ஒரு வஸ்து வாக்கி -பொருள் அல்லாத என்னைப் பொருளாக்கி -என்கிறபடியே –
தன்னை-சத்துக்களுக்கு ஸ்ப்ருஹநீயனான தன்னை
என்னுள் வைத்தான்-என்னோடே கூட சம்ச்லேஷம் பண்ணினான் -இன்று -என்கிறது மயர்வற மதி நலம் அருளப் பெற்றதற்கு பின்பு உண்டான அநாதி – காலத்தை –
அன்று என்னைப் புறம் போகப் புணர்த்தது என் செய்வான்–பர தந்த்ரனான என்னை புறம்போகப் பண்ணிற்று என் செயகைக்காக -பாஹ்யனாகப் பண்ணுகை யாகிறது உபேக்ஷிக்கை -புறம் போக விட்டானும் அவனே என்று இருக்கிறார் -ஸ்வ சத்தை பர அதீனமாய் இருக்கை -இவ் வஸ்துவுக்கு போக்கு வரவு ஆவது என் -இரண்டுக்கும் காரணம் சொல்ல வேணும் –
குன்று என்னத் திகழ் மாடங்கள் சூழ் திருப் பேரான்-மலைகள் போன்று விளங்கா நின்றுள்ள மாடங்களாலே சூழப் பட்ட திருப் பேர் நகரான் –
ஓன்று எனக்கு அருள் செய்ய -இன்று விஷயீ கரிக்கைக்கு ஹேது சொல்ல வேணும் –முன்பு உபாசித்தத்துக்கு ஹேது சொல்லவுமாம் –
உணர்த்தல் உற்றேனே–அறிவிக்க வேண்டி இரா நின்றேன் -இதுக்கு ஈஸ்வரன் இவருக்கு சொன்ன உத்தரம் ஏது என்று சீயர் பட்டரைக் கேட்க -இவர் தலையிலே ஒரு பழி ஏறிட்டு நெடு நாள் இழந்த நாம் சொல்லுவது என் -என்று லஜ்ஜா விஷ்டனாய் நின்றான் -என்று அருளிச் செய்தார் –

———————————————————————–

இவர் கேட்ட அதுக்கு ஒரு ஹேது காணாமையாலே நிருத்தரனாய் -உமக்கு மேல் செய்ய வேண்டுவது சொல்லீர் என்று எம்பெருமான் அருளிச் செய்ய -உன்னைக் கிட்டி ப்ரீதி பூர்வகமாக அடிமை செய்து கொண்டு உன் திருவடிகளை அனுபவிக்கப் பெற்றேன் -இதுவே இன்னம் வேண்டுவது -என்கிறார் -அவன் தானே செய்தான் என்னுமன்று அவனுக்கு வைஷம்ய நைர்க்ருண்யமும் சர்வ முக்தியும்  பிரசங்கியாதோ  -என்னில் -இத்தலையில் ருசியை அபேக்ஷித்துச் செய்கையாலே அவனுக்கு அது தட்டாது -அது ஹேது வென்று ஈஸ்வரனுக்கு உத்தரம் ஆனாலோ என்னில் -அது உபாயமாக மாட்டாது -பல வ்யாப்தமானது இ றே உபாயம் ஆவது -இந்த ருசி அதிகார ஸ்வரூபம் ஆகையால் தத் விசேஷணமாம் அத்தனை -உபாயம்  சஹகாரி நிரபேஷம் ஆகையாலும் இந்த ருசி உபாயம் ஆக மாட்டாது -இது உபாயம் அல்லாமையாலே இவர்க்கு இல்லை என்னஅவனுக்கு உண்டு என்னவுமாம் –

உற்றேன்  உகந்து பணி செய்ய உன பாதம்
பெற்றேன் ஈதே இன்னம் வேண்டுவது எந்தாய்
கற்றார் மறை வாணர்கள் வாழ் திருப் பேராற்கு
அற்றார் அடியார் தமக்கு அல்லால் நில்லாவே–10-8-10-

உற்றேன்உகந்து பணி செய்ய உன பாதம்-பெற்றேன்-கெடு மரக்கலம் கரை சேர்ந்தால் போலே கிட்டிக் கொடு நின்றேன் -ப்ரீதி ப்ரேரிதனாயக் கொண்டு -திருவாய் மொழி பாடி -உன் திருவடிகளை அனுபவிக்கப் பெற்றேன் – –சாதகமாய் மேல் -சாத்தியமாகச் சொல்லுகிறது அன்று -இரண்டும் ஏக காலத்திலே உள்ளதாகையாலே –
ஈதே இன்னம் வேண்டுவது-இது தானே மாறி மாறி யாவதாத்ம பாவியாகச் செல்லுகை இ றே –பு நரா வ்ருத்தி இன்றிக்கே ஒழிகை யாவது -மீளாது ஒழிகை -விதி போலே இருக்கிறதன்றே –
எந்தாய்--இவ்வனுபவம் ஸ்வரூப அனுரூபம் என்கிறது -இத்தலைக்கு சேஷத்வமும் தேவர்க்கு சேஷித்வமும் இ றே ஸ்வரூபம் -இவர் அபேக்ஷித்த படியே செய்கிறோம் என்ன -ப்ரீதராய் அருளிச் செய்கிறார் –
கற்றார்-ஒரு ஆசனத்தின் கீழே இருந்து போக்கினவர்கள் –
மறை வாணர்கள் வாழ் -வியாச பதம் செலுத்த ஷமர் ஆனவர்கள் அனுபவித்து வர்த்திக்கிற தேசம் –
திருப் பேராற்கு–ப்ரீதி பிரகரஷத்தாலே முகத்தை ஸ்வகதமாகச் சொல்லுகிறார் -என்னுதல் -திருப் பேரனான உனக்கு என்னுதல் –
அற்றார் அடியார் -திருப் பேர் நகரானுக்கு அற்றாரான அடியார் -என்னுதல் -அவனுக்கு அற்றவர்களுக்கு அடியார் -என்னுதல் –

———————————————————————-

நிகமத்தில் இத்திருவாய் மொழி அப்யஸிக்க  வல்லார் இட்ட வழக்காம் -வி லக்ஷண தேஜோ ரூபமான திரு நாடு என்கிறார் –

நில்லா  அல்லல் நீள் வயல் சூழ் திருப் பேர் மேல்
நல்லார் பலர் வாழ் குருகூர்ச் சடகோபன்
சொல்லார் தமிழ் ஆயிரத்துள் இவை பத்தும்
வல்லார் தொண்டர் ஆள்வது சூழ் பொன் விசும்பே–10-8-11-

நில்லா  அல்லல் நீள் வயல் சூழ் திருப் பேர் மேல்நல்லார் பலர் வாழ் குருகூர்ச் சடகோபன்--துக்கங்கள் ஆனவை -இது நமக்கு தேசம் அன்று என்று தானே விட்டுப் போம் -பெருத்த வயல் சூழ்ந்து இருந்துள்ள திருப்பேர் மேலே யாய்த்து சொல்லிற்று -வி க்ஷணர் பலரும் தம்மை அனுபவித்து இனியராய் இருக்கும் திரு நகரியை யுடையராய் இருக்கும் ஆழ்வார் அருளிச் செய்தது -நல்லார் நவில் குருகூர் -ஸர்வதா அபிகதஸ் சத்பி
சொல்லார் தமிழ் ஆயிரத்துள் இவை பத்தும்-சொல் சேர்ந்த தமிழான ஆயிரம்  என்னுதல் -பாட்ட்யேகேயேச மதுரம் என்கிறபடியே இனிமைக்கு சொல்லே அமைந்த தமிழான ஆயிரம் என்னுதல்
வல்லார் தொண்டர்-இப்பத்தை அப்யஸிக்க வல்லார் -செஞ்சொற்கவிகள் என்கிறபடியே வாசிகமான அடிமை செய்யும் வைஷ்ணவர்கள் –
ஆள்வது சூழ் பொன் விசும்பே–நிரதிசய தேஜோ ரூபமான பரம பதத்தை யாய்த்து ஆளுவது -இத் திருவாய் மொழிஅப்யசித்தவர்கள் சென்றால் ஆண்மின்கள் வானகம்-என்றாய்த்து -அங்குள்ளார் சொல்லுவது –

—————————————————————

கந்தாடை    அப்பன் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

திருவாய்மொழி ஒன்பதினாயிரப்படி –10-8–

October 31, 2016

தன்னைப் பெற வேணும் என்னும் இச்சா லேசமும் இன்றிக்கே –தன்னைப் பெறுகைக்கு ஈடான உபாயமும் இன்றிக்கே –
அதுக்கு மேலே அஸஹ்ய அபசார பஹுளனாய் மிகவும் விஷயங்களையே உகந்து இருக்கிற எனக்கு –
பொது நின்ற ஞானம் தொடங்கி இவ்வளவும் வர மஹா ஸம்ருத்தியைத் தந்து என் பக்கலிலே மிகவும் வியாமோகத்தைப் பண்ணி
இப்போது என்னை விஷயீ கரிக்கைக்கும் பண்டு என்னைப் பொகடுகைக்கும் காரணம் என் என்று –
தம்மைத் திருநாட்டில் கொடு போகையிலே விரைகிற எம்பெருமானை ஆழ்வார் கேட்க –
அவனும் நிருத்தனாய் இருந்தவாறே நிர்ஹேதுகமாக விஷயீ கரித்து அருளினான் -என்று அத்யவசித்து –
அதுக்கு அடியான நிஸ் சீமமான அவனுடைய க்ருபாதி குணங்களை மிகவும் அனுசந்தித்து அதிலே ஈடுபட்டு விஸ்மிதராய்க் களிக்கிறார்–

—————————————————————

யாத்திருச்சிகமாக திருமாலிருஞ்சோலை  மலை என்றேன் -என்னில் காட்டில் அத்யந்த நிரபேஷனாய் இருக்கிற -தான் பிராட்டியோடே கூட வந்து என்னுள்ளே புகுந்து அருளினான் -என்கிறார் –

திருமால்  இரும் சோலை மலை என்றேன் என்ன
திருமால் வந்து என் நெஞ்சு நிறையப் புகுந்தான்
குரு மா மணி உந்து புனல் பொன்னித் தென் பால்
திருமால் சென்று சேர்விடம் தென் திருப் பேரே-10-8-1-

பெரு விலையனாய் அழகியவான ரத்னங்களை கொடு வந்து தள்ளா நின்றுள்ள புனலையுடைய பொன்னியினுடைய தென் கரையிலே  ஸ்ரீயபதியான தான் சென்று சேரும் சிலாக்யமான தேசம் தென் திருப்பேர் –

—————————————————————-

இதுக்கு முன்பு தான் சர்வேஸ்வரனாய் இருந்து வைத்தே -என்னோடே கலக்கப் பெறாமையாலே -குறைவாளனாய் இருந்தவன் -நிர்ஹேதுகமாக என்னுடைய ஹிருதயத்திலே வந்து புகுந்து பூர்ணன் ஆனான் என்கிறார் –

பேரே உறைகின்ற பிரான் இன்று வந்து
பேரேன் என்று என் நெஞ்சு நிறையப் புகுந்தான்
காரேழ் கடல் ஏழ் மலை ஏழ் உலகு உண்டும்
ஆரா வயிற்றானை அடங்கப் பிடித்தேனே–10-8-2-

திருப் பேரைத் தனக்கு கோயிலாகப் பேற்று அங்கே நிரந்தர வாசம் பண்ணுகிற சர்வேஸ்வரன் -இனி ஒரு நாளும் போகேன் என்று சொல்லிக் கொண்டு என்னுடைய ஹிருதயம் பூர்ணனாம் படி இன்று வந்து புகுந்தான் -புஷ் கலாதி மேகம் ஏழையும் -சப்த சமுத்ரங்களையும் -சப்த குல பர்வதங்களையும் திரு வயிற்றிலே வைத்து -பின்னையும் குறைவாளனாய்  இருந்தவனுக்கு -இனி ஒன்றும் தேட வேண்டாதபடி பரி பூர்ணமான பாத்ரமானேன் –

——————————————————————

எம்பெருமான் நிர்ஹேதுகமாக தம்மோடே வந்து சம்ச்லேஷித்த படியை அனுசந்தித்து -இவன் திருவடிகள் எனக்கு இங்கனே எளிதாவதே –என்கிறார் –

பிடித்தேன்  பிறவி கெடுத்தேன் பிணி சாரேன்
மடித்தேன் மனை வாழ்க்கையுள் நிற்பதோர் மாயையை
கொடிக் கோபுர மாடங்கள் சூழ் திருப் பேரான்
அடிச் சேர்வது எனக்கு எளிது ஆயினவாறே–10-8-3-

எம்பெருமான் திருவடிகளை ஒரு நாளும் பிரியாத படி பற்றினேன் -ஜென்மங்களை போக்கினேன் -ஜென்ம நிமித்தங்களான துக்கங்களை சாரேன்-சம்சாரத்தில் நிற்கைக்கு உறுப்பான பிரக்ருதியை நிவர்த்திப்பித்தேன் –

——————————————————————–

தனக்கு திரு நாட்டுக்கு கொடுப்பானாய் இருக்கிற எம்பெருமானுடைய படியை -நீர்மையை –அனுசந்தித்து -இங்கனே எளிதாவதே -என்று என்னுடைய இந்த்ரியங்களோடே கூடக் களித்த மனசை யுடையேனாய்க் களியா நின்றேன்–கரணங்களும் களிக்க நானும் களியா நின்றேன் – -என்கிறார் –

எளிது  ஆயினவாறு என்று என் கண்கள் களிப்பக்
களிது ஆகிய சிந்தையனாய்க் களிக்கின்றேன்
கிளி தாவிய சோலைகள் சூழ் திருப் பேரான்
தெளிது ஆகிய சேண் விசும்பு தருவானே–10-8-4-

செறிந்த திருச் சோலையை யுடைய திருப் பேரன் ரஜஸ் தமஸ் காலுஷ்யம் இன்றிக்கே சுத்த சத்வ மயமாகையாலே தெளிந்து இருந்துள்ள ஸ்ரீ வைகுண்டத்தைத் தரும் –

——————————————————————-

திருப் பேர் நகரான் எனக்குத் திரு நாடு தரக் கடவனாக-என்னோடே பூணித்து-தானே தடுமாற்ற தீ வினைகள் தவிர்த்தான் -என்கிறார்  –

வானே  தருவான் எனக்காய் என்னோடே ஒட்டி
ஊனேய் குரம்பை இதனுள் புகுந்து இன்று
தானே தடுமாற்ற வினைகள் தவிர்த்தான்
தேனே ஏய் பொழில் தென் திருப் பேர் நகரானே–10-8-5-

மாம்ஸாதி மயமாய் ஹேயமான இச் சரீரத்தின் உள்ளே நிர்ஹேதுகமாக வந்து புகுந்து -தன்னைப் பிரிந்து தடுமாறப் பண்ணும் புண்ய பாப ரூபமான கர்மங்களை -தேன்-என்று வண்டாகவுமாம் –

———————————————————————–

தனக்கு வர்த்தித்து அருளலாம் கோயில்கள் -அநேகம் யுண்டாய் இருக்க -ஓர் இடம் இல்லாதாரைப் போலே -இருப்பேன் என்று பிரார்த்தித்திக் கொண்டு என்னுடைய ஹிருதயத்திலே நிர்ஹேதுகமாகப் புகுந்தான் என்று ப்ரீதர் ஆகிறார் –

திருப் பேர்  நகரான் திருமால் இரும் சோலைப்
பொருப்பே உறைகின்ற பிரான் இன்று வந்து
இருப்பேன் என்று என் நெஞ்சு நிறையப் புகுந்தான்
விருப்பே பெற்று அமுதம் உண்டு களித்தேனே –10-8-6-

பொருப்பு–மலை /  பிரான்-உபகாரகன் / விருப்பே பெற்று அமுதம் உண்டு களித்தேனே-அவனாலே பஹு மானம் பெற்று-அவனுடைய கொண்டாட்டம் ஆகிற அம்ருத பானத்தைப் பண்ணிக் களித்தேனே–அவனுடைய குண அம்ருதத்தைப் பணம் பண்ணிக் களித்தேன் -என்றுமாம் –

————————————————————————–

தமக்கு உண்டான கார்த்தார்த்த்யத்தை அருளிச் செய்கிறார் –

உண்டு  களித்தேற்கு உம்பர் என் குறை மேலைத்
தொண்டு உகளித்து அந்தி தொழும் சொல்லுப் பெற்றேன்
வண்டு களிக்கும் பொழில் சூழ் திருப் பேரான்
கண்டு களிப்ப கண்ணுள் நின்று அகலானே-10-8-7-

மேலான தாஸ்ய ரசம் பெருகினால் -அதன் முடிவில் ஆற்றாமை சொல்லும் -நம-என்கிற சொல்லைச் சொல்லப் பெற்றேன் -வண்டு களிக்கிற பொழில் சூழ்ந்த திருப் பேரான்-நான் கண்டு க்ருதார்த்தனாம் படி கண்ணுள்ளே நின்று அகலுகிறிலன்-இப்படி அவனை புஜித்துக் களிக்கப் பெற்ற எனக்கு இனி குறை யுண்டோ –

———————————————————————

கண்ணுள்  நின்று அகலான் கருத்தின் கண் பெரியன்
எண்ணில் நுண் பொருள் ஏழிசையின் சுவை தானே
வண்ண நல் மணி மாடங்கள் சூழ் திருப் பேரான்
திண்ணம் என் மனத்துப் புகுந்தான் செறிந்து இன்றே –10-8-8-

வாங்மன சங்களுக்கு நிலம் அன்றிக்கே -நிரதிசய போக்யனான திருப் பேர் நகரான் -என் கண்ணுக்கு எப்போதும் விஷயமாய் -ஒரு நாளும் போகாத படி -ஸ்நேஹித்து ஹிருதயத்திலே புகுந்தான்

——————————————————————–

இன்று எனக்குத் தன்னை அறிவித்து -விஷயீ கரித்து – என்னோடே திருட சம்ச்லேஷம் பண்ணினவனை பண்டு என்னை உபேக்ஷிக்கைக்கு காரணம் என் என்று கேட்க வேண்டி இருந்தேன் -என்கிறார் –

இன்று  என்னைப் பொருள் ஆக்கி தன்னை என்னுள் வைத்தான்
அன்று என்னைப் புறம் போகப் புணர்த்தது என் செய்வான்
குன்று என்னத் திகழ் மாடங்கள் சூழ் திருப் பேரான்
ஓன்று எனக்கு அருள் செய்ய உணர்த்தல் உற்றேனே–10-8-9-

குன்று போலே விளங்கா நின்றுள்ள மாடங்கள் சூழ்ந்த திருப் பேரான் ஓன்று எனக்குச் சொல்ல வேண்டும் என்று உணர்த்த வேண்டி இருந்தேன் –

——————————————————————

உற்றேன்  உகந்து பணி செய்ய உன பாதம்
பெற்றேன் ஈதே இன்னம் வேண்டுவது எந்தாய்
கற்றார் மறை வாணர்கள் வாழ் திருப் பேராற்கு
அற்றார் அடியார் தமக்கு அல்லால் நில்லாவே–10-8-10-

இவர் கேட்ட அதுக்கு ஒரு ஹேது காணாமையாலே நிருத்தரனாய் -உமக்கு மேல் செய்ய வேண்டுவது சொல்லீர் என்று எம்பெருமான் அருளிச் செய்ய -உன்னைக் கிட்டி ப்ரீதி பூர்வகமாக அடிமை செய்து கொண்டு உன் திருவடிகளை அனுபவிக்கப் பெற்றேன் -இதுவே இன்னம் வேண்டுவது -என்று ஆழ்வார் விண்ணப்பம் செய்ய -அவனும் அப்படியே செய்கிறோம் என்ன -ப்ரீதராய் -திருப் பேர் நகரான் -திருவடிகளை ஆச்ரயித்தார்க்கு ஒரு துக்கம் ஆகாதே என்கிறார் -அற்றாரான அடியார் –

————————————————————–

நிகமத்தில் இத்திருவாய் மொழி அப்யஸிக்க  வல்லார் இட்ட வழக்காம் -விலக்ஷண தேஜோ ரூபமான திரு நாடு என்கிறார் –

நில்லா  அல்லல் நீள் வயல் சூழ் திருப் பேர் மேல்
நல்லார் பலர் வாழ் குருகூர்ச் சடகோபன்
சொல்லார் தமிழ் ஆயிரத்துள் இவை பத்தும்
வல்லார் தொண்டர் ஆள்வது சூழ் பொன் விசும்பே–10-8-11-

பெருத்த  வயல் சூழ்ந்து இருந்துள்ள திருப் பேர் மேலே விலக்ஷணர் பலரும் தம்மை அனுபவித்து க்ருதார்த்தரான திரு நகரியை யுடைய ஆழ்வாருடைய சொல் சேர்ந்த-
தமிழனா ஆயிரம் திரு வாய் மொழியிலும் –

———————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

திருவாய்மொழி இருபத்து நாலாயிரப்படி –10–7- –

October 30, 2016

விதி வகையே என்கிறபடியே ஆழ்வார் விதித்த படி செய்வானாம் படி இவருக்கு பரதந்த்ரனாம் வைத்து தன்னுடைய சாபல அதிசயத்தாலே –
தலை மேல் தாளிணைகள் என்றும் நறும் துளவம் மெய்ந்நின்று கமழும் -என்றும் சொல்லுகிறபடியே இவருடைய-திரு மேனியை மிகவும் விரும்பி -இத்தேகத்தோடே கூட பரமபதத்தில் கூடக் கொண்டு போகையிலே-அபி நிவேசிக்கிற படியைக் கண்டு -நாம் பொய் நின்ற ஞானத்திலே கழித்துத் தர வேணும் -என்று
அபேக்ஷித்த போதே செய்யாது ஒழிந்தது நம்மைக் கொண்டு பிரபந்தம் தலைக் கட்டுகைக்காக என்று இருந்தோம்-அது ஒரு வியாஜ்யமாய்-சரீரத்தையே விரும்புகிறானாய் இருந்தது -இதுக்கு அடி நம்முடைய சரீரம் என்று
நம் பக்கல் விருப்பத்தால் விரும்புகிறான் அத்தனை -இது தோஷ பிரசுரம் என்று அறிகின்றிலன்-இது நமக்கு அநபிமதம் என்றும் அறிகிறிலன் -உபசயாத்மகம் யாகையாலே அஸ்திரத்தவாதி தோஷ பிரசுரம் என்றும்
–த்வத் அனுபவ விரோதி யாகையாலே அநபிமதம் என்றும் அறிவித்து –இத்தைக் கழித்துத் தர வேணும் என்று பிரார்த்திக்க
-உம்முடைய உடம்பு ஒழிய நமக்கு ப்ராப்யம் யுண்டோ -உம்முடைய உத்தேச்யத்தை நீர் விடா நின்றீரோ என்று அவன் நிர்பந்திக்க-நீ என் பக்கல் உண்டான விருப்பம் இ றே என் சரீரத்தை விரும்புகிறது -இது எனக்கு அத்யந்தம் அநபிமதம்
-எனக்காக இதில் நசையை விட்டருள வேணும் -என்று சரணம் புக்கு இரக்க-
தனக்கு இத்தை விடுகை பிரியம் இன்றிக்கே இருக்கச் செய்தேயும் –இவரைக் குறித்து பர தந்த்ரன் ஆகையால்-அப்படிச் செய்கிறோம் -என்று இசைய-
தனக்கு அபிமதமாய் இருக்க நாம் சொன்ன படி செய்வதே -என்று அத்யந்தம் ஹ்ருஷ்டராய்-இவனுடைய சீலாதி குணங்களில் அழுந்தி இவ்விஷயத்தில் அனுபவிக்க இழிவார் ஐஸ்வர்யத்தில் இழியப் பாருங்கோள்-தம் தாமை வேண்டி இருப்பார் அவனுடைய சீலாதி குணங்களில் அகப்படாதே கொள்ளுங்கோள்-என்று
ப்ரீதி அதிசயத்தாலே உபதேசித்துத் தலைக் கட்டுகிறார் –

——————————————————

திருவாய் மொழி பாடுவித்துக் கொள்ள -என்ற ஒரு வியாஜ்யத்தாலே- பேரையிட்டு கொடு வந்து புகுந்து தம் பக்கல் எம்பெருமான் பண்ணின வ்யாமோஹத்தைச் சொல்லி -இவனுக்கு அடிமை செய்வார் -இவன் சீலாதி குண வெள்ளத்திலே அகப்படாதே கொள்ளுங்கோள் -என்கிறார்

செஞ்சொற்  கவிகாள் உயிர் காத்து ஆட்செய்மின் திருமால் இரும் சோலை
வஞ்சக் கள்வன் மா மாயன் மாயக் கவியாய் வந்து என்
நெஞ்சும் உயிரும் உள் கலந்து நின்றார் அறியா வண்ணம் என்
நெஞ்சும் உயிரும் அவை உண்டு தானே யாகி நிறைந்தானே–9-7-1-

செஞ்சொற் கவிகாள்--செவ்விய சொல்லை யுடைய கவிகாள் -கவிக்குச் செவ்வை யாகிறது -அநந்ய பிரயோஜனமாய் இருக்கை -பிரயோஜனத்தைக் கணிசிக்கை கவிக்கு குடிலம் ஆகையாவது -இன்கவி பாடும் பரம கவிகள் -என்றும் -செந்தமிழ் பாடுவார் என்றும் -சொல்லுகிற முதல் ஆழ்வாரைகளை யாய்த்து நினைக்கிறது -பெரும் தமிழன் அல்லேன் -என்னா- வாய் அவனை அல்லது வாழ்த்தாது -என்கிறவர்கள் இ றே அநந்ய பிரயோஜனர் –
உயிர் காத்து ஆட்செய்மின் -உங்களை நோக்கிக் கொண்டு நின்று கவி பாடப் பாருங்கோள் -கவி பாட்டு வாசிகமான அடிமை யாகையாலே -ஆட் செய்ம்மின் -என்கிறார் -ஆட் கொள்வான் ஒத்து என்னாருயிர் யுண்ட மாயன் -என்கிறபடி அடிமை கொள்ளுவரைப் போலே புகுந்து இத்தலையை அழிக்குமவனாய்த்து–பரிஹரித்துக் கொள்ளுங்கோள் -ஆழங்காலிலே இழிந்து அமிழுமவர்கள் அவ்விடத்திலே கொண்டைக்கால் நாட்டுமாப் போலே -வம்மின் புலவர் -என்று முதலிலே ருசி இல்லாதாரையும் அழைக்கிற இவர் சீலாதி குணங்களில் அழுந்தி -இழிகிறவர்களையும் வேண்டா என்கிறார் இ றே ப்ரீதி பிரகரஷத்தாலே –
திருமால் இரும் சோலை–இத்யாதி –இவ்விஷயத்தில் தாம் இழிந்து அகப்பட்ட படியை அருளிச் செய்கிறார் மேல் -திருமலையில் நிலையும் சீலத்துக்கு உடல் இ றே
வஞ்சக் கள்வன் -களவு காணா நிற்கச் செய்தே மெய் என்னலாம் படி இருக்கை -என் கண்ணன் கள்வம் எனக்குச் செம்மாய் நிற்கும் -என்றார் இ றே -களவைக் களவு காணா நிற்கும் –
மா மாயன் -இப்படி அறிந்து ஒருவருக்கும் தப்ப ஒண்ணாத படியான ஆச்சர்ய குண சேஷ்டிதங்களை யுடையவன் -நீர் அகப்பட்ட துறை ஏது என்ன –
மாயக் கவியாய்--ஆச்சர்ய அவஹமான கவி பாடுவித்துக் கொள்ள -என்ற ஒரு பேரையிட்டுக் கொண்டு யாய்த்து வந்து கிட்டிற்று -தண்ணீர் என்ற ஒரு பேரையிட்டு அபிமத விஷயத்தை கிட்டுவாரைப் போலே -கவி பாடுவித்துக் கொள்ளுகை என்று ஒரு வியாஜ்யம் -கிட்டுக்கையே பிரயோஜனம் -தான் இருந்த இடத்திலே சென்று நாம் இருக்கை இன்றிக்கே -நாம் இருந்த இடத்திலே தான் வந்து கவி பாடுவித்துக் கொள்கை இ றே சீலம் ஆவது –வந்து செய்தது என் என்ன –
வந்து என்-நெஞ்சும் உயிரும் உள் கலந்து–நெஞ்சு என்று -சரீரத்துக்கு உப லக்ஷணம் / உயிர் என்கிறது ஆத்மாவை / சரீரத்தோடு ஆத்மாவோடு வாசியற புகுத்தி தன் பேறாக அவகாஹியா நின்றான் -முறை அத்தலை இத்தலையாய் என்னை சிரஸா வஹியா நின்றான் –
நின்றார் அறியா வண்ணம்-கலவிக்கு தேசிகரான பிராட்டி திருவனந்த ஆழ்வான் முதலானோர்க்கும் அபூமியாம் படி யாய்த்து என்னோடு கலந்து -ஆருயிர் பட்டது எனதுயிர் பட்டது -என்றார் இ றே –
என்-நெஞ்சும் உயிரும் அவை உண்டு –தேஹாத்ம விவேகம் பண்ண அறியாதே யாய்த்து புஜித்தது–சேதனனையும் அசித்தோபாதி பரதந்தனாக்கி புஜித்தான் –உருவமும் ஆருயிரும் உடனே யுண்டான் -என்கிறபடியே எனக்கு என்ன மாட்டாமைக்கு -அசித்தோபாதி யாய்த்து சேதனனும் –
தானே யாகி -போகத்தில் இழிகிற போது இருவராய் இழிந்து -எதிர்த்தலையைத் தோற்பித்து -போக்தாவும் அபிமானியும் தானே யானான் –
நிறைந்தானே–அவாப்த ஸமஸ்த காமன் ஆழ்வாரைப் பெறுவதற்கு முன்பு குறைவாளனாய் -இவரைப் பெற்ற பின்பு -பூர்ணன் ஆனான் -க்ருதக்ருத்யஸ் ததா ராம –இது விறே புரையற்ற சீலமாவது –

——————————————————————

தம்மோடு கலந்த பின்பு எம்பெருமானுக்குப் பிறந்த ஸம்ருத்தியைக் கண்டு இனியராய் அனுபவிக்கிறார் –

தானே  ஆகி நிறைந்து எல்லா உலகும் உயிரும் தானே யாய்
தானே யான் என்பான் ஆகி தன்னைத் தானே துதித்து எனக்குத்
தேனே பாலே கன்னலே அமுதே திருமால் இரும் சோலைக்
கோனே யாகி நின்று ஒழிந்தான் என்னை முற்றும் உயிர் உண்டே–9-7-2-

தானே ஆகி நிறைந்து -இருவர் கூடப் பரிமாறப் புகுந்து -பெற்றான் தானேயாய் இரா நின்றான்
எல்லா உலகும் உயிரும் தானே யாய்-ஆழ்வாரைப் பெற்ற பின்பு யாய்த்து -சர்வ லோகங்களுக்கும் -அவற்றில் யுண்டான மனுஷ்யாதிகளுக்கும் நிர்வாஹகனாய்த்து -சாமாநாதி கரண்யத்தால் அபிமானியும் தானே -என்கை –
தானே யான் என்பான் ஆகி -பொதுவான ரக்ஷகத்வம் ஒழியத் தன் பக்கலிலே அவன் இருக்கும் படி சொல்லுகிறார் -யானே என்பான் தானே யாகி –விசிஷ்ட வஸ்து வாகையாலே விசேஷ ப்ராதான்யத்தைப் பற்றிச் சொல்லுகிறது -என்னுதல் -தன் சேஷித்வத்தை எனக்குத் தந்து தான் அப்ரதானனாய் என்னை சிரஸா வஹியா நின்றான் என்னுதல் –
தன்னைத் தானே துதித்து -ஸ்துத்யன் ஆனவோ பாதி ஸ்தோதாவும் தானேயாய் –
எனக்குத்-தேனே பாலே கன்னலே அமுதே -சர்வ ரஸ என்கிறபடியே எனக்கு நிரதிசய போக்யனாய் -அவனைப் புகழும் இடத்தில் தம் பக்கல் கர்தவ்யம் கண்டிலர் -போகத்தில் வந்தால் போக்தாவாகத் தம்மைச் சொல்லுகிறார் இ றே -தன்னைத் தானே புகழ்ந்து அத்தை என் கவியாக்கிக் கெட்டு -அவன் ப்ரீதனாக அவன் பிரீயத்தைக் கண்டு பிரியப்படுகிறார் –
திருமால் இரும் சோலைக்-கோனே யாகி -கீழ்ச் சொன்ன ரசத்தோ பாதி யாய்த்துத் திருமலையில் நிற்கிற நிலையும் –உபய விபூதி யோகத்தில் காட்டிலும் ஓர் ஏற்றமாய்த்து திருமலையை யுடையவன் என்கிற இதுவும் -திருமலையில் வந்து ஆழ்வாரைப் பெற்ற பின்பாய்த்து சேஷித்வம் பூர்ணம் யாய்த்து –
நின்று ஒழிந்தான்-க்ருதக்ருத்ய ததா ராம -என்கிறபடியே பரகு பரகு அற்று நின்றான் –
என்னை முற்றும் உயிர் உண்டே–விபுவான தன்னாலும் -விளாக் குலை கொள்ள ஒண்ணாத படி யாய்த்து இத்தலையான படி –

—————————————————————–

எம்பெருமானுக்கு மேன்மேல் எனத் தன் பக்கல் யுண்டான அபிநிவேச அபர்யாவசநத்தை -எல்லை இல்லாமையை –அருளிச் செய்கிறார் –

என்னை  முற்றும் உயிர் உண்டு என் மாய ஆக்கை இதனுள் புக்கு
என்னை முற்றும் தானேயாய் நின்ற மாய அம்மான் சேர்
தென்னன் திருமால் இரும் சோலைத் திசை கூப்பிச் சேர்ந்த யான்
இன்னம் போவேனே கொலோ என் கொல் அம்மான் திருவருளே–10-7-3-

என்னை முற்றும் உயிர் உண்டு –இத்தலையை எங்கும் புக்கு அனுபவித்தானாய் விடுகை அவனுக்கு ஏற்றமாம்படியாய் இருக்கிறது –யஸ்ய சா ஜனகாத்மஜா –அப்ரமேயம் ஹி தத் தேஜ–
என் மாய ஆக்கை இதனுள் புக்கு–அதி ஷூத்ரமான என் சரீரத்தில் புக்கு தனக்கு உத்தேச்யமான ஆத்மாவளவன்றியே-அழுக்கு உடம்பு -என்று தன்னை கால் காட்டித் தவிர்ப்பித்து கொள்ள வேண்டும் படி த்யாஜ்யமான சரீரத்தையே விரும்பா நின்றான் –
இதனுள் புக்கு-இது இது என்று இவர் இறாய்க்க அவன் மேல் விழா நின்றான் என்கை –புகுந்து என்னாதே புக்கு -என்கிறது அத்தோடு தமக்கு தொற்று அற்று இருக்கிற படி தோற்றுகைக்காக-மங்க வொட்டு-என்று அவன் அனுமதி பார்த்து இருக்கும் இ றே –என்றும் அசித்தோடும் முகம் பழகின இவர் இறாய்க்க -ஹேய பிரதி படனானவன் இ றே மேல் விழா நின்றான் –
என்னை முற்றும் தானேயாய் நின்ற--ஆத்மாவோடு சரீரத்தோடு வசி யறப் புக்கு வியாபித்து தானே அபிமானியாய் நின்றான் -என்னுடைய அஹங்கார மமகாரங்களும் விஷயம் இல்லாத படி நின்றான் –
மாய அம்மான் சேர்-தென்னன் திருமால் இரும் சோலைத் –ஆச்சர்ய குண சேஷ்டிதனான சர்வேஸ்வரன் தானே வந்து விரும்பி வந்து சேருகிற தேசம் —தென்னன் என்று அத்தேசத்தில் பிரதானனைச் சொல்லுதல் -தெற்கில் திக்கில் உள்ளதாய் நன்றான திருமலை -என்னுதல் –
திசை கூப்பிச் சேர்ந்த யான்-அத்திக்கை பரம ப்ராப்யம் என்று சேர்ந்த யான் —இவர் அவன் அளவில் அன்றிக்கே அவன் உகந்த தேசத்தோடே சேர்ந்த திக்கை விரும்பா நின்றார் –அவன் இவர் அளவன்றியே-இவருடைய சரீரத்தை விரும்பா நின்றான் -இவ்வளவிலே பர்யவசியாதாப் போலேயாய் இருந்தது
இன்னம் போவேனே கொலோ –என் கொல் அம்மான் திருவருளே–இனி எனக்கு ஒரு கந்தவ்ய பூமி யுண்டோ -சர்வேஸ்வரனுடைய பாரிப்புக்கு அவதி என்னோ –அவனை விரும்பி –அவன் உகந்த தேசத்தை விரும்பி –அத்தோடு சேர்ந்த திக்கை விரும்பும் படி சேஷத்வத்தின் நிலையிலே நிறுத்தினவன்-எனக்கு ஒன்றும் செய்திலேனாய் பரகு பரகு என்கிற இதுக்கு அவதி என்னோ -விஷயம் இன்றியே இருக்க பிரமிக்கவும் ஆமாகாதே-

———————————————————————

தம்முடைய திருமேனியிலும் தம்மோடு பரிமாறலாம் நிலம் என்று திருமலையிலும் எம்பெருமானுக்கு யுண்டான வியாமோஹத்தை அருளிச் செய்கிறார் –

என் கொல்  அம்மான் திருவருள்கள் உலகும் உயிரும் தானேயாய்
நன்கு என் உடலம் கை விடான் ஞாலத்தூடே நடந்து உழக்கி
தென்கொள் திசைக்குத் திலதமாய் நின்ற திருமால் இரும் சோலை
நங்கள் குன்றம் கை விடான் நண்ணா அசுரர் நலியவே–10-7-4-

என் கொல் அம்மான் திருவருள்கள் –-சர்வேஸ்வரனுக்கு என் பக்கல் யுண்டாய் இருந்துள்ள பிரசாத அதிசயத்துக்கு அவதி என்னா –
உலகும் உயிரும் தானேயாய்-சகல லோகங்களும் சகல ஆத்மாக்களும் தான் இட்ட வழக்காய் இருக்கிறவன் தனக்கு ஒரு குறை யுண்டாய் -இப்படிப் படுகிறானோ –
நன்கு என் உடலம் கை விடான்-செருக்கர் நீச ஸ்த்ரீகள் கால் கடையிலே துவளுமா போலே என்னுடம்பை விரும்பி விடுகிறிலன் –எனக்கு மமதா விஷயம் என்னுமதுவே ஹேதுவாக விடுகிறிலன்-
ஞாலத்தூடே நடந்து உழக்கி--பூமி எங்கும் உலாவி -எல்லார் தலைகளிலும் திருவடிகளை வைத்து திரு உலகு அளந்து அருளிற்று -தம்மைப் பெறுகைக்கு கிருஷி பண்ணி என்று இருக்கிறார் -சர்வ சாதாரணன் வியாபாரம் ஆகையால் சம்பந்தம் அறிந்தால் எனக்கு என்னலாம் இ றே -இந்திரன் ராஜ்ஜியம் பெற்றானாய் போந்தான் -மஹா பாலி கொடுத்தானாய் போந்தான் –இவர் அத்தை தமக்கு என்று இருக்கிறார் –
தென்கொள் திசைக்குத் திலதமாய் நின்ற திருமால் இரும் சோலை-திரு உலகு அளந்து அருளுகை ஒரு வியாஜ்யமாய் -ஆழ்வாரை அனுபவிக்கைக்கு ஏகாந்தமான ஸ்தலம் ஏதோ என்று ஆராய்ந்து திரு மலையிலே நின்று அருளினான் -ஆரியர்கள் இகழ்ந்த தெற்கில் திக்கில் ஒரு ஆபரணம் போலே இருந்துள்ள திருமலையில் வந்து நின்றான் –
நங்கள் குன்றம் கை விடான்நங்கள் குன்றம் ஆஸ்ரிதருடைய சங்கேத ஸ்தலம் –திருமலையில் நிலை சாதனமாக -ஆழ்வார் திரு மேனியை ப்ராப்யமாக -நினைத்து இருக்கிறான் யாய்த்து –
நண்ணா அசுரர் நலியவே–-திருமலையில் நிலையால் அஸூர வர்க்கம் தானே முடிந்து போய்த்து –
உலகும் உயிரும் தானேயாய்–ஞாலத்தூடே நடந்து உழக்கி–தென்கொள் திசைக்குத் திலதமாய் நின்ற திருமால் இரும் சோலை–நங்கள் குன்றம்-நண்ணா அசுரர் நலியவே- கை விடான் -நன்கு என் உடலம் கை விடான் –என் கொல் அம்மான் திருவருள்கள்-என்று அந்வயம் –

———————————————————————-

அவன் தம்மோடு கலந்து தம் வாயாலே திருவாய் மொழி கேட்ட ப்ரீதி உள்ளடங்காமை ஆளத்தி வையா நின்றான் -என்கிறார் -நன்கு என்னுடலம் கை விடான் -என்கிற அளவு அன்றியே என் யுக்தி மாத்திரத்தாலே களியா நின்றான் -என்றுமாம் –

நண்ணா  அசுரர் நலிவு எய்த நல்ல அமரர் பொலிவு எய்த
எண்ணா தனகள் எண்ணும்  நன் முனிவர் இன்பம் தலை சிறப்ப
பண்ணார் பாடல் இன் கவிகள் யானாய்த் தன்னைத் தான் பாடி
தென்னா என்னும் என் அம்மான் திரு மால் இரும் சோலையானே–10-7-5-

நண்ணா அசுரர் நலிவு எய்த –விபரீதஸ்ததா அ ஸூ ர -என்கிறபடியே விபரீதரான அ ஸூ ரர்கள் இஸ் ஸம்ருத்தி பொறுக்க மாட்டாமையாலே முடியவும் –கிட்டக் கடவோம் அல்லோம் -என்று இருக்கும் அஸூர வர்க்கம் —
நல்ல அமரர் பொலிவு எய்த—விஷ்ணு பக்தி பரோ தேவ -என்கிறபடியே அநந்ய பிரயோஜனரான வைஷ்ணவர்கள் -இதுவே ஜீவனமாக சம்ருத்தமாகவும் -தொண்டர்க்கு அமுது உண்ணச் சொல் மாலைகள் சொன்னேன் -என்றார் இ றே
எண்ணா தனகள் எண்ணும் -உபய விபூதி யுக்தனுக்கு இன்னம் விபூதி வேணும் என்றும் -அசங்க்யாத குணகனுக்கு இன்னம் குணம் வேணும் என்றும் மேன் மேலே என எண்ணா நிற்குமவர்கள் –
நன் முனிவர் -ஈஸ்வரன் அடியாக தங்கள் ஸம்ருத்தியை எண்ணுமவர்கள் முனிவர் –அத்தலைக்கு ஸம்ருத்தியை எண்ணுமவர்கள் நல் முனிவர் –
இன்பம் தலை சிறப்ப-திருவாய் மொழி ஒழிய வேறு ஒரு சம்பத்து வேண்டா -என்று மிகவும் ஹ்ருஷ்டராம் படியாகவும் –
பண்ணார் பாடல் இன் கவிகள் -பண் மிக்கு இருந்துள்ள பாடல் -புஷ்ப்பம் பரிமளத்தோடே அலருமா போலே -திருவாய் மொழி அவதரித்த போதே பண் மினுங்கி யாய்த்து இருப்பது -/இன் கவி–பண்ணுக்கு ஆஸ்ரயமான கவி தானே இனிதாய் இருக்கை –
யானாய்த் தன்னைத் தான் பாடி–என்னைப் பேரை யிட்டு தன்னைத் தான் பாடி -புத்ரனை வார்த்தை கற்பித்து அவன் வாயாலே கேட்டு இனியனாம் பிதாவைப் போலே
தென்னா என்னும் என் அம்மான் திரு மால் இரும் சோலையானே–ப்ரீதிக்குப் போக்கு வீடாக ஆளத்தி வையா நின்றான் -ஏதத் சாம காயன் நாஸ்தே-என்று பகவத் லாபத்தில் ப்ரீதிக்கு போக்குவிட்டு சேஷ பூதன் சொல்லக் கடவத்தை -அவாக்ய அநாதர -என்கிற தான் ப்ரீதி பிரகரஷத்தாலே அந்த பூர்த்தி குலைந்து சொல்லுகிறான் இ றே –என் அம்மான் –ஸூத வசனம் ரசிக்குமா போலே சம்பந்தம் இ றே ரசிகைக்கு அடி –திரு மால் இரும் சோலையானே-இவரைக் கவி பாடுவித்த தேசம் திருமலை யாய்த்து –

——————————————————————

ஸ்ரீ யபதியானவன் திருமலையில் நின்று அருளி என்னை ஆளுகையில் மிகவும் வியாமுக்தன் ஆனான் -என்கிறார் –

திருமால்  இரும் சோலையானே யாகி செழு மூஉலகும் தன்
ஒரு மா வயிற்றின் உள்ளே வைத்து ஊழி ஊழி தலை அளிக்கும்
திருமால் என்னை ஆளுமால் சிவனும் பிரமனும் காணாது
அருமால் எய்தி அடி பரவ அருளை ஈந்த அம்மானே–10-7-6-

திருமால் இரும் சோலையானே யாகி –என்னை ஆளுமால்-திருமலையை தனக்கு வஸ்த்வய பூமியாகக் கொண்டு என்னை அடிமை கொள்ளுகைக்காக என் பக்கல் வியாமோஹமே ஒரு வடிவு கொண்டால் போலே இருக்கிறவன் –
செழு மூஉலகும் தன்-ஒரு மா வயிற்றின் உள்ளே வைத்து ஊழி ஊழி தலை அளிக்கும்–கட்டளை பட்ட தரை லோக்யத்தையும் அத்விதீயமாக சிறிதான வயிற்றிலே வைத்து -கல்பம் தோறும் கல்பம் தோறும் தலையாக ரக்ஷிக்கும் -பிரளய ஆபத்தில் ஜகத்துக்கு தன்னை ஒழிய செல்லாதா போலே என்னை ஒழிய தனக்கு செல்லாத படியாய் இருக்கை -திருமால் -ஸ்ரீ யபதி /என்னை ஆளுமால்-என் பக்கல் பிச்சு ஒரு வடிவு கொண்டால் போலே இருக்குமவன் -பிரளய ஆபத் சகனாய் -ஸ்ரீ யாபதியாய் இருக்கிறவன் என் பக்கலிலே சாபேஷனாய் நின்றான் – / சிவனும் பிரமனும் காணாது-அருமால் எய்தி அடி பரவ அருளை ஈந்த அம்மானே–ப்ரஹ்ம ருத்ராதிகள் காண பெறாமையாலே நிரதிசய பக்தி உக்தராய் திருவடிகளை அக்ரமாகப் புகழ -அவர்களுடைய அபேக்ஷிதங்களைக் கொடுத்த சர்வேஸ்வரன்-

————————————————————————-

தம்முடைய ஸம்ருத்திக்கு அடியான திருமலையை ஏத்துகிறார் –

அருளை ஈ  என் அம்மானே என்னும் முக்கண் அம்மானும்
தெருள் கொள் பிரமன் அம்மானும் தேவர்கோனும் தேவரும்
இருள்கள் கடியும் முனிவரும் ஏத்தும் அம்மான் திருமலை
மருள்கள் கடியும் மணி மலை திருமால் இரும் சோலை மலையே–10-7-7-

அருளை ஈ என் அம்மானே என்னும் முக்கண் அம்மானும்-தெருள் கொள் பிரமன் அம்மானும் –என் ஸ்வாமீ என் பக்கலிலே கிருபை பண்ணி யருள வேணும் -உடையவனானா நீ பொகட்டால் வேறு புகலுண்டோ–எண்ணுமாய்த்து -இப்படிச் சொல்லுகிறவன் ஆர் என்னில் -லலாட நேத்ரனாய்-ஈஸ்வர அபிமானியுமான ருத்ரனும் -அவனுக்கும் ஞான பிரதனனாய் ஜனகனான ப்ரஹ்மாவும் –
தேவர்கோனும்-தேவர்களுக்கு அத்யக்ஷனான இந்திரனும்
தேவரும்-தேவேந்திரன் என்று அவனுக்கு ஏற்றமான உத்கர்ஷத்தை யுடைய தேவர்களும் –
இருள்கள் கடியும் முனிவரும்-அஞ்ஞான அந்தகாரத்தை வாசனையோடு போக்கும் ஸ்மர்த்தாக்களும் –
ஏத்தும் அம்மான் திருமலை-இவர்கள் எல்லாரும் கூட ஏத்தும் சர்வேஸ்வரனுடைய திருமலை –
மருள்கள் கடியும் மணி மலை திருமால் இரும் சோலை மலையே–கைங்கர்ய விரோதிகளான அவித்யாதிகளைப் போக்குமதாய்-ஸ்வயம் புருஷார்த்தமான திருமலை -திருமலையை ஒழியவே ப்ராப்யம் யுண்டு என்று இருக்கும் நினைவை போக்குமிடம் என்றுமாம் -அது தான் ஏது என்ன –திருமால் இரும் சோலை மலையே –

———————————————————————

திருமலை தொடக்கமான கோயில்கள் எல்லாவற்றிலும் பண்ணும் அபி நிவேசத்தை  என் அவயவங்களிலே பண்ணி ஒரு க்ஷணமும் பிரிகிறிலன் -அவன் படி இருந்த படி என் -என்கிறார் —

திருமால் இரும் சோலை மலையே திருப் பாற் கடலே என் தலையே
திருமால் வைகுந்தமே தண் திரு வேங்கடமே எனது உடலே
அருமா மாயத்து எனது உயிரே மனமே வாக்கே கருமமே
ஒருமா நொடியும் பிரியான் என் ஊழி முதல்வன் ஒருவனே–10-7-8-

திருமால் இரும் சோலை மலையே திருப் பாற் கடலே என் தலையே–தெற்கில் திருமலையையும் திருப் பாற் கடலையும் என் உத்தம அங்கத்தையும் -ஓக்க விரும்பா நின்றான் –
திருமால் வைகுந்தமே தண் திரு வேங்கடமே எனது உடலே-பரமபதத்தையும் -வடக்கில் திருமலையையும் -என் சரீரத்தையும் ஓக்க விரும்பா நின்றான் –
திருமால் வைகுந்தம் -ஸ் ரியா சார்த்தம் ஜகத் பத்தி -என்கிறபடியே அம் மிதுனத்துக்குத் தகுதியான தேசம் –
இத்தேசங்களிலே பண்ணுகிற விருப்பம் தம் திருமேனியில் பண்ணுகிற விருப்பத்துக்கு சத்ருசம் அல்லாமையாலே தம்முடைய அவயவங்கள் தோறும் புக்கு அனுபவியா நின்றான் –
அருமா மாயத்து எனது உயிரே மனமே வாக்கே கருமமே-கடக்க அரிதான பிரக்ருதியோடே மயங்கி அசித் கல்பமான என் ஆத்மாவில் -அவ தாரணங்களாலே-இதுவேயோ இவன் அபி நிவேசித்து இருப்பது -என்று தோற்றும்படி இருக்கை –
ஒருமா நொடியும் பிரியான் -ஒரு க்ஷணத்தில் ஏக தேசமும் பிரிகிறிலன்
என் ஊழி முதல்வன் ஒருவனே–-என் பக்கல் அபி நிவிஷ்டன் ஆகைக்காக-கால உபலஷித சகல பதார்த்தங்களுக்கும் காரண பூதனான அத்விதீயன் -சம்ஹார காலத்தில் சகல சேதன அசேதனங்களும் தன்னை ஒழியச் செல்லாதாப் போலே யாய்த்து -இவர் திருமேனியை ஒழியத் தனக்குச் செல்லாதே இருக்கிற படி -கார்ய காரண உபய அவஸ்தா சித் அசித்துக்கள் யுடைய சத்தை தன் அதீனமாம் படி இருக்கிறவன் -தன்னுடைய சத்தை என் சரீர அதீனமாம் படி இரா நின்றான் -இவனும் ஒருவனாய் இருக்கிறானே –

——————————————————————-

நமக்கு இந்த சம்பத்து எல்லாம் திருமலையாலே வந்தது -ஆனபின்பு திருமலையைக் கை விடாதே -என்று தம் திரு உள்ளத்தைக் குறித்துச் சொல்லி -தம்மைச்  சரீரமாக திரு நாட்டிலே கொடு போக வேணும் என்று இருக்கிற எம்பெருமானுடைய அபி நிவேசத்தைக் கண்டு -இந்த ஹேயமான பிரக்ருதியை -நீக்கி என்னைக்  கொடு போக வேணும் என்கிறார் –

ஊழி முதல்வன் ஒருவனே என்னும் ஒருவன் உலகு எல்லாம்
ஊழி தோறும் தன்னுள்ளே படைத்துக் காத்துக் கெடுத்து உழலும்
ஆழி வண்ணன் என் அம்மான் அம் தண் திரு மால் இரும் சோலை
வாழி மனமே கை விடேல் உடலும் உயிரும் மங்க ஓட்டே–10-7-9-

ஊழி முதல்வன் ஒருவனே என்னும் ஒருவன் உலகு எல்லாம்-கால உபலஷித சகல பதார்த்தங்களுக்கும் காரண பூதனானவன் ஒருவனே என்று பிரமாணங்கள் சொல்லப் படுகிற அத்விதீயன் -சதேவ ஸோம்யே தமக்ரே ஆஸீத் —
ஊழி தோறும் தன்னுள்ளே படைத்துக் காத்துக் கெடுத்து உழலும்--சகல லோகங்களையும் கல்பம் தோறும் தன் சங்கல்ப ஏக தேசத்திலே உண்டாக்கி -நாம ரூபங்களைக் கொடுத்த பின்பு -தன் கார்யம் தானே செய்து கொள்ளலாம் என்று -அவ்வளவில் விடாதே அவற்றினுடைய ரக்ஷணத்தைப் பண்ணி -இவை அதி ப்ரவ்ருத்தமான வாறே சம்ஹரித்து -இதுவே யாத்ரையாய் இருக்கிற
ஆழி வண்ணன் என் அம்மான் அம் தண் திரு மால் இரும் சோலை-கம்பீர ஸ்வ பாவனானவன் என் ஸ்வாமி –கடல் போலே ஸ்ரமஹரமான வடிவைக் காட்டி என்னை சம்சார ஆர்ணவத்திலே நின்றும் எடுத்தவன் -என்றுமாம் -தர்ச நீயமான ஸ்ரமஹரமான திருமலையை –
வாழி–நான் சொல்லுகிற கார்யம் -உனக்கு நித்தியமாகச் சென்றிடுக —
மனமே கை விடேல் -நமக்கு இஸ் சம்பந்தத்துக்கு எல்லாம் அடி திருமலையான பின்பு அத்தைக்கு கை விடாதே கொள் என்று என்று திரு உள்ளத்தலாய்க் குறித்து அருளிச் செய்ய –அவனும் தன் திரு உள்ளத்தைக் குறித்து ஆழ்வார் திருமேனியை கை விடாதே கொள் -என்று அருளிச் செய்ய -இந்நிரபந்தத்தைத் தவிர்ந்து அருள வேணும் என்கிறார் -உடலும் உயிரும் மங்க ஓட்டே–சரீர பிராணாதி ரூபமான ப்ரக்ருதி சம்பந்த விநாசத்தை சம்வதித்து அருள வேணும் -திருமலை போலே உத்தேச்யமாய் இருப்பது ஓன்று அன்று –
ஹேயமான சரீரமும் பிராணனும் –மங்க வொட்டு – என்கையாலே ஆழ்வார் இங்கே எழுந்து அருளி இருந்த இருப்பு பிராரப்த கர்மத்தால் அன்று -பகவத் இச்சையாலே தானே -என்கிறது -நன்கு என்னுடலம் கை விடான் -என்றார் இ றே –

————————————————————————-

தாம் அர்த்திக்கச் செய்தேயும் தம்முடைய பிரக்ருதியால் உண்டான தேகத்தில்    சங்கத்தால் எம்பெருமான் தம் வார்த்தையை ஆதரியா விட்டவாறே -சதுர் விம்சதி தத்தவாத்மிகையான பிரக்ருதியினுடைய ஹேயதையை அவனுக்கு உணர்த்தி -இத்தை விரும்பாதே போக்கி யருள வேணும் -என்கிறார் –

மங்க ஒட்டு உன் மா மாயை திரு மால் இரும் சோலை மேய
நங்கள் கோனே யானே நீ ஆகி என்னை அளித்தானே
பொங்கு ஐம் புலனும் பொறி ஐந்தும் கருமேந்த்ரியம் ஐம் பூதம்
இங்கு இவ் வுயிர் ஏய் பிரகிருதி மான் ஆங்காரம் மனங்களே–10-7-10-

மங்க ஒட்டு உன் மா மாயை-ஒருவராலும் தப்ப ஒண்ணாத படி -நீ பந்தித்த பிரக்ருதியை மங்க இசை –த்யாஜ்யம் என்று அறிந்த பின்பு உம்முடைய சரீரத்தை நீரே உபேக்ஷிக்கும் அத்தனை யன்றோ -நம் இசைவு என் என்ன -சர்வ சக்தியான நீ பிணைத்த பிணையை அசக்தனான நான் -அவிழ்க்கவோ -மமமாயா துரத்யயா -என்றிலையோ–
திரு மால் இரும் சோலை மேய-நங்கள் கோனே--பரமபதம் கலவிருக்கையாய் இருக்க அவ்விடத்தை விட்டு திருமலையில் வந்து முற்பாடானாய் நிற்கிறது நான் சொன்ன படி கார்யம் செய்வதாக வன்றோ -திருமலையில் வந்து நின்று எனக்கு முறையை உணர்த்தினவன் -என்றுமாம் –
யானே நீ ஆகி என்னை அளித்தானே--என் அபி சந்தியை நீ யுடையையாய் என்னை ரஷித்தவனே –நான் எனக்கு பரியுமா போலே என் திறத்தில் பரிவனாய் ரஷித்தவனே -இப்படி நிர்பந்த்தித்த இடத்திலும் அவன் அநாதரித்து இருக்க இது த்யாஜ்யம் என்னும் இடத்தை அறிவிக்கிறார் –சேதனன் கர்மத்தால் ப்ரக்ருதி யாத்மா விவேகம் பண்ண மாட்டாதாப் போலே இவர் பக்கல் வியாமோஹம் அவன் பிரகிருதி யாத்மா விவேகம் பண்ண ஓட்டுகிறது இல்லை –
பொங்கு ஐம் புலனும்-சேதனனை விக்ருதனாம் படி பண்ணும் சப் தாதி விஷயங்கள் ஐந்தும் –
பொறி ஐந்தும் -வறை நாற்றத்தைக் காட்டி அகப்படுத்துமா போலே சப் தாதிகளிலே மூட்டுகிற ஸ்ரோத்ராதிகள் ஐந்தும் –கருமேந்த்ரியம் -கர்ம இந்திரியங்கள் ஐந்தும் —ஐம் பூதம்--பிருதிவ்யாதி பூதங்கள் ஐந்தும் —
இங்கு இவ் வுயிர் ஏய் பிரகிருதி மான் ஆங்காரம் மனங்களே-– -இஸ் சம்சாரத்திலே இருக்கிற -இவ்வாத்மாவைத் தொற்றி இருக்கிற மூல பிரகிருதி என்ன -மஹான் அஹங்கார மனஸ் ஸூ க்கள் என்ன -இவை யாகிற உன்னுடைய மஹா மாயையை மங்க வொட்டு என்று அந்வயம் –

———————————————————————

நிகமத்தில் மஹத் அஹங்கார விஷயமான இத்திருவாய் மொழி திருமலையில் சொல்லிற்று -என்கிறார் –

மான் ஆங்கார மனம் கெட ஐவர் வன்கையர் மங்க
தான் ஆங்கார மாயப் புக்கு தானேதானே ஆனானைத்
தேன் ஆங்காரப் பொழில் குருகூர்ச் சடகோபன் சொல் ஆயிரத்துள்
மான் ஆங்காரத் திவை பத்தும் திருமால் இரும் சோலை மலைக்கே–10-7-11-

மான் ஆங்கார மனம் கெட ஐவர் -மஹான் அஹங்காரம் மனஸ் ஸூ என்கிற இவை கெடும்படியாக -இது சரீரத்துக்கும் உப லக்ஷணம் –
ஐவர் வன்கையர் மங்க-என்கிறது கர்ம இந்திரியங்களுக்கும் சப் தாதி களுக்கும் உப லக்ஷணம் -/ வன்கையர்-பெரு மிடுக்கர் –விரோதி போகைக்கு அவன் செய்தது என் என்ன -தன் நிர்பந்தத்தைத் தவிர்ந்தான் என்கை –
தான் ஆங்கார மாயப் புக்கு -எனக்கு அபிமானியாய்ப் புகுந்து என்னுதல் /பெரிய செருக்கை யுடையனாய்க் கொண்டு புகுந்து என்னுதல் –
தானேதானே ஆனானைத்–ஆத்மாத்மீயங்களில் எனக்கு உண்டான அபிமானத்தைத் தவிர்த்து தானே அபிமானியானவனை –
தேன் ஆங்காரப் பொழில் குருகூர்ச் சடகோபன் சொல் ஆயிரத்துள்--வண்டுகளினுடைய அபிமானமேயான பொழிலை யுடைய திரு நகரியிலே ஆழ்வார் அருளிச் செய்த -ஆயிரம் திருவாய் மொழியிலும் வைத்துக் கொண்டு –
மான் ஆங்காரத் திவை பத்தும் -–மஹத் அஹங்காராதி ரூபமான பிரகிருதி நிரசன அர்த்தமாகச் சொல்லப்பட்ட இத்திருவாய் மொழி என்னுதல் -பெரிய செருக்கோடு சொன்ன இப்பத்து என்னுதல் –
திருமால் இரும் சோலை மலைக்கே–திருமலையே உத்தேச்யமாகச் சொல்லிற்று -அளக்கரைச் சொன்னவிடம் ஆநு ஷங்கிகம் —

————————————————————————-

கந்தாடை    அப்பன் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

 

திருவாய்மொழி ஒன்பதினாயிரப்படி –10-7–

October 30, 2016

இப்படி எம்பெருமான் ஆழ்வார் தம் பக்கலிலே அத்யபி நிவிஷ்டனாய் -அவர் விதித்த படியே செய்யக் கடவனாய் இருந்து வைத்து –
தன்னுடைய சாபலதிசயத்தாலே-இவரை இத்தேகத்தோடே கூடத் திரு நாட்டில் கொடு போகையில் மிகவும் அபி நிவிஷ்டனாய் –
இத்தை அறியில் இவர் இசையார் என்று பார்த்து -இவரைக் கொண்டு திருவாய் மொழி பாடுவிப்பாரைப் போலே புகுந்து
இவருடைய திருமேனியிலும் இவர் தம்மோடு கலந்த அத்யபி நிவேசத்தைப் பண்ணி இவ் உடம்போடே கூடத் திருநாடு ஏறக் கொடு போகையிலே
அவன் அபி நிவேசிக்கிற படியை அறிந்து –இவன் இப்படி அபி நிவேசிக்கில் ஒரு நாளும் பிரகிருதி விஸ்லேஷத்துக்கு உபாயம் இல்லை –
ஆனபின்பு அவனுடைய அனுபவத்துக்கு விரோதியான ப்ரக்ருதி சம்பந்தத்தை அவனைவிட்டு இங்கேயே அருப்பித்துக் கொள்ள வேணும் என்று பார்த்து அருளி
சதுர் விம்சதி தத்வாத்மக ப்ரக்ருதி தத்வத்தோடு உள்ள சம்பந்தத்தை அறுத்து என்னைக் கொடு போக வேணும் என்று பிரார்த்திக்க
-உம்முடைய உடம்பு ஒழிய வேறு எனக்கு பிராப்யம் உண்டோ -என்று அவன் நிர்பந்திக்க -என் பக்கல் உண்டான விஷயீ காரத்தாலே
யன்றோ இவ்வுடம்பில் அபி நிவேசம் பண்ணுகிறது -ஆனபின்பு எனக்காக இதில் நசையை விட்டு அருள வேணும் -என்று
இவர் சரணம் புக்கு இரக்க அவனும் அப்படியே செய்கிறோம் -என்று இசைய -அத்யந்த ஹ்ருஷ்டராய்-அவனுடைய ஸுசீலாதி குணங்களில் அழுந்தி -அவனுக்கு அடிமை செய்யப் புகில் அவனுடைய ஸு சீல்யாதி அதிசயத்தாலே பிழைக்க ஒண்ணாது
-ஆனபின்பு தம் தாமை வேண்டி இருப்பார் அவனுடைய குணத்திலே அகப்படாதே
பரிஹரித்து அடிமை செய்யுங்கோள்–என்று ப்ரீதி அதிசயத்தாலே அருளிச் செய்கிறார் –

——————————————————–

திருவாய் மொழி பாடுவித்துக் கொள்ள -என்ற ஒரு வியாஜ்யத்தாலே- பேரையிட்டு கொடு வந்து புகுந்து தம் பக்கல் எம்பெருமான் பண்ணின வ்யாமோஹத்தைச் சொல்லி -இவனுக்கு அடிமை செய்வார் -இவன் சீலாதி குண வெள்ளத்திலே அகப்படாதே கொள்ளுங்கோள் -என்கிறார்

செஞ்சொற்  கவிகாள் உயிர் காத்து ஆட்செய்மின் திருமால் இரும் சோலை
வஞ்சக் கள்வன் மா மாயன் மாயக் கவியாய் வந்து என்
நெஞ்சும் உயிரும் உள் கலந்து நின்றார் அறியா வண்ணம் என்
நெஞ்சும் உயிரும் அவை உண்டு தானே யாகி நிறைந்தானே–9-7-1-

செஞ்சொற் கவிகாள் உயிர் காத்து ஆட்செய்மின்–செவ்விய சொல்லையுடைய கவிகாள் -கவி பாடி அடிமை செய்யும் இடத்தில் உங்களை பரிஹரித்துக் கொண்டு அடிமை செய்யுங்கோள்
திருமால் இரும் சோலை-வஞ்சக் கள்வன் –என் கண்ணன் கள்வன் எனக்கு செம்மமாய் நிற்கும் -என்னுமா போலே மெய் செய்கிறான் என்று தோற்றும் படி தெரியாமே -வஞ்சிக்க வல்லனாய் -அதுக்கு அடியான மஹா ஆச்சர்யமான குண சேஷ்டிதங்களை யுடையவன் –மா மாயன் மாயக் கவியாய் வந்து என்-நெஞ்சும் உயிரும் உள் கலந்து நின்றார் அறியா வண்ணம் என்-நெஞ்சும் உயிரும் அவை உண்டு தானே யாகி நிறைந்தானே-அத்யாச்சர்ய அவஹமான திருவாயமொழி பாடுவித்துக் கொள்ள -என்று ஒரு பேரை இட்டுக் கொண்டு -இப்பரிமாற்றத்துக்கு நிலவரானார்க்கும் தெரியாத படி என் நெஞ்சையும் உயிரையும் உள்ளே புக்கு கலந்து அவற்றைப் புஜித்து-என் அபிமானத்தைப் போக்கித் தானே எனக்கு அபிமானியாய் அத்தாலே பூர்ணனானவன் –

——————————————————————-

தம்மோடு கலந்த பின்பு எம்பெருமானுக்குப் பிறந்த ஸம்ருத்தியைக் கண்டு இனியராய் அனுபவிக்கிறார் –

தானே  ஆகி நிறைந்து எல்லா உலகும் உயிரும் தானே யாய்
தானே யான் என்பான் ஆகி தன்னைத் தானே துதித்து எனக்குத்
தேனே பாலே கன்னலே அமுதே திருமால் இரும் சோலைக்
கோனே யாகி நின்று ஒழிந்தான் என்னை முற்றும் உயிர் உண்டே–9-7-2-

என்னைப் பெறுகையாலே சர்வேஸ்வரனாய் –என்னை உபகரணமாகக் கொண்டு -தன்னைத் தானே ஸ்துதித்து -எனக்கு நிரதிசய போக்யனாய் -என்னைப் பெற்ற பின்பு திருமலைக்கு நாதனும் ஆனான் -/ என்னை முற்றும் உயிர் உண்டே–என்னுயிரை ஓன்று ஒழியாமே அனுபவித்து –

————————————————————————-

எம்பெருமானுக்கு மேன்மேல் எனத் தன் பக்கல் யுண்டான அபிநிவேச அபர்யாவசநத்தை -எல்லை இல்லாமையை –அருளிச் செய்கிறார் –

என்னை  முற்றும் உயிர் உண்டு என் மாய ஆக்கை இதனுள் புக்கு
என்னை முற்றும் தானேயாய் நின்ற மாய அம்மான் சேர்
தென்னன் திருமால் இரும் சோலைத் திசை கூப்பிச் சேர்ந்த யான்
இன்னம் போவேனே கொலோ என் கொல் அம்மான் திருவருளே–10-7-3-

என் ஆத்மாவை புஜித்து அதி ஷூத்ரமான என் சரீரத்தில் வந்து புகுந்து -என்னை யடைய வியாபித்து நிற்கிற ஆச்சர்ய பூதனான சர்வேஸ்வரன் சேர்வதும் செய்து -தெற்கேயான திருமலைத் திக்கை பரம ப்ராப்யம் என்று சேர்ந்த நான் -இவ்வளவில் பர்யவசியேன் போலே இருந்தது -சர்வேஸ்வரனுடைய பாரிப்புக்கு அவதி என்னோ –

————————————————————

தம்முடைய திருமேனியிலும் தம்மோடு பரிமாறலாம் நிலம் என்று திருமலையிலும் எம்பெருமானுக்கு யுண்டான வியாமோஹத்தை அருளிச் செய்கிறார் –

என் கொல்  அம்மான் திருவருள்கள் உலகும் உயிரும் தானேயாய்
நன்கு என் உடலம் கை விடான் ஞாலத்தூடே நடந்து உழக்கி
தென்கொள் திசைக்குத் திலதமாய் நின்ற திருமால் இரும் சோலை
நங்கள் குன்றம் கை விடான் நண்ணா அசுரர் நலியவே–10-7-4-

சர்வேஸ்வரனாய் இருந்து வைத்து என் ஆத்மாவை விடாத மாத்ரம் அன்றிக்கே மிகவும் என் உடம்பை விடுகிறிலன் –பூமி எங்கும் உலாவித் திரிந்து என்னை விஷயீ கரிக்கைக்கு ஈடான நிலமாகத் திரு மலையைப் பார்த்து பிரதிகூலர் மண் உண்ணும் படி அதிலே அத்யபி நிவேசத்தைப் பண்ணி அத்தை ஒரு காலும் கை  விடுகிறிலன் –

————————————————————

எம்பெருமான் தன்னோடே கலந்து தம் வாயிலே திருவாய் மொழி கேட்ட ப்ரீதி யுள்ளடங்காமை தென்னா தென்னா என்று நித்ய முக்தரைப் போலே பாடா நின்றான் -என்கிறார் –

நண்ணா  அசுரர் நலிவு எய்த நல்ல அமரர் பொலிவு எய்த
எண்ணா தனகள் எண்ணும்  நன் முனிவர் இன்பம் தலை சிறப்ப
பண்ணார் பாடல் இன் கவிகள் யானாய்த் தன்னைத் தான் பாடி
தென்னா என்னும் என் அம்மான் திரு மால் இரும் சோலையானே–10-7-5-

உதவாத அஸூரர் இஸ் ஸம்ருத்தி பொறுக்க மாட்டாதே முடியும்படியாகவும் -அனுகூலர் இத்தைக் கண்டு சம்ருத்தராம் படியாகவும் -உபய விபூதியும் கூடினாலும் எம்பெருமானுக்கு சம்பத்து போராது-இன்னம் மேன்மேலும் நன்மைகளை வேணும் என்று எண்ணா நிற்கும் நல் முனிவர் -இதுவே அமையும் -மற்று ஒரு சம்பத்து வேண்டா -என்று மிகவும் ஹ்ருஷ்டராம் படியாகவும் –
பண் சேர்ந்து இருந்துள்ள பாடலையுடைய இனிய கவிகளை என்னைப் பேர் இட்டுக் கொண்டு தன்னைத் தான் பாடி –என் அம்மான்–என் நாதனானவன் திரு மால் இரும் சோலையானே–

—————————————————————–

ஸ்ரீ யபதியானவன் திருமலையில் நின்று அருளி என்னை ஆளுகையில் மிகவும் வியாமுக்தன் ஆனான் -என்கிறார்

திருமால்  இரும் சோலையானே யாகி செழு மூஉலகும் தன்
ஒரு மா வயிற்றின் உள்ளே வைத்து ஊழி ஊழி தலை அளிக்கும்
திருமால் என்னை ஆளுமால் சிவனும் பிரமனும் காணாது
அருமால் எய்தி அடி பரவ அருளை ஈந்த அம்மானே–10-7-6-

கல்பம் தோறும் அழகிய மூன்று லோகத்தையும் தன் திரு வயிற்றிலே வைத்து உத்க்ருஷ்டமாக ரக்ஷிக்கும் ஸ்ரீ யபதி —
சிவனும் பிரமனும் காணாதே நிரதிசய பக்தி உக்தராய் தன் திருவடிகளை ஆஸ்ரயிக்க -அவர்களுடைய அபேக்ஷிதங்களைக் கொடுத்த சர்வேஸ்வரன் –

————————————————————————-

தம்முடைய ஸம்ருத்திக்கு அடியான திருமலையை ஏத்துகிறார் –

அருளை ஈ  என் அம்மானே என்னும் முக்கண் அம்மானும்
தெருள் கொள் பிரமன் அம்மானும் தேவர்கோனும் தேவரும்
இருள்கள் கடியும் முனிவரும் ஏத்தும் அம்மான் திருமலை
மருள்கள் கடியும் மணி மலை திருமால் இரும் சோலை மலையே–10-7-7-

என் பக்கலிலே கிருபை பண்ணி அருள வேணும் என் ஸ்வாமியே என்னும் ருத்ரனும் -அவனில் காட்டிலும் அறிவுடைய ப்ரஹ்மாவும் -இந்திரனும் தேவர்களும் ஜகத்தில் அஞ்ஞான அந்தகாரத்தைப் போக்காக கடவ ரிஷிகளும் -ஏத்தும் படியை யுடைய சர்வேஸ்வரனுடைய திருமலை -ஆத்மாவுக்கு பகவத் கைங்கர்ய விரோதிகளான அவித்யாதிகள் எல்லாம் போக்கும் நிரதிசய புருஷார்த்தமான திருமலை –திரு மாலிருஞ்சோலையே –

———————————————————————

திருமால்  இரும் சோலை மலையே திருப் பாற் கடலே என் தலையே
திருமால் வைகுந்தமே தண் திரு வேங்கடமே எனது உடலே
அருமா மாயத்து எனது உயிரே மனமே வாக்கே கருமமே
ஒருமா நொடியும் பிரியான் என் ஊழி முதல்வன் ஒருவனே–10-7-8-

திருமலை தொடக்கமான கோயில்கள் எல்லாவற்றிலும் பண்ணும் அபி நிவேசத்தை தம்முடைய திரு உடம்பிலும் பண்ணா நின்றான் -என்று அனுசந்தித்து -அவனுடைய அபி நிவேசம் அவ்வளவும் அன்றிக்கே இருக்கையாலே அவை தன்னையே பரி கணித்து -இவற்றை ஒரு க்ஷணமும் பிரிகிரறிலன் –என் பக்கலிலே அபி நிவிஷ்டனான சர்வேஸ்வரனுடைய படி இருந்த படி என் -என்கிறார் –அருமா மாயத்து எனது உயிரே-என்றது மமமாயா துரத்யயா-என்னும் படியால் கடக்க அரிதான ப்ரக்ருதியோடே மயங்கின -மங்கின -என் ஆத்மா என்றவாறு –

————————————————————–

நமக்கு இந்த சம்பத்து எல்லாம் திருமலையாலே வந்தது -ஆனபின்பு திருமலையைக் கை விடாதே -என்று தம் திரு உள்ளத்தைக் குறித்துச் சொல்லி -தம்மைச்  சரீரமாக திரு நாட்டிலே கொடு போக வேணும் என்று இருக்கிற எம்பெருமானுடைய அபி நிவேசத்தைக் கண்டு -இந்த ஹேயமான பிரக்ருதியை -நீக்கி என்னைக்  கொடு போக வேணும் என்கிறார் –

ஊழி முதல்வன் ஒருவனே என்னும் ஒருவன் உலகு எல்லாம்
ஊழி தோறும் தன்னுள்ளே படைத்துக் காத்துக் கெடுத்து உழலும்
ஆழி வண்ணன் என் அம்மான் அம் தண் திரு மால் இரும் சோலை
வாழி மனமே கை விடேல் உடலும் உயிரும் மங்க ஓட்டே–10-7-9-

கால உபலஷித சகல பதார்த்தத்துக்கும் காரணம் ஒருவனே என்று சொல்லப் படுகிற அதிதீயனாய் -கல்பம் தோறும் தன்னுடைய சங்கல்பத்தினாலே ஸ்ருஷ்டியாதிகளைப் பண்ணி -அதுவே போது போக்காவதுவும் செய்து -கடல் போலே கம்பீர ஸ்வ பாவனான என் ஸ்வாமி யுடைய அழகிய ஸ்ரமஹரமான திருமாலிருஞ்சோலையை -மனசே கை விடாதே கொள்-வாழி –என்று மனசை சிலாகிக்கிறார் / உடலும் உயிரும் மங்க ஓட்டே–சரீர பிராணாதி ரூபமான பிரகிருதி சம்பந்த வி நாசத்தை சம்வதித்து அருள வேணும் —

—————————————————————-

தாம் அர்த்திக்கச் செய்தேயும் தம்முடைய பிரக்ருதியால் உண்டான சங்கத்தால் எம்பெருமான் தம் வார்த்தையை ஆதரியா விட்டவாறே -சதுர் விம்சதி தத்தவாத்மிகையான பிரக்ருதியினுடைய ஹேயதையை அவனுக்கு உணர்த்தி -இத்தை விரும்பாதே போக்கி யருள வேணும் -என்கிறார் –

மங்க ஒட்டு உன் மா மாயை திரு மால் இரும் சோலை மேய
நங்கள் கோனே யானே நீ ஆகி என்னை அளித்தானே
பொங்கு ஐம் புலனும் பொறி ஐந்தும் கருமேந்த்ரியம் ஐம் பூதம்
இங்கு இவ் வுயிர் ஏய் பிரகிருதி மான் ஆங்காரம் மனங்களே–10-7-10-

மங்க ஒட்டு உன் மா மாயை-ஒருவராலும் தப்ப ஒண்ணாத படி நீ வைத்த பிரக்ருதியை மங்க இசை / திருமலையில் வந்து நின்று -எங்களை அடிமை கொண்டு -ஒருவன் தனக்கு பரியுமா போலே என் திறத்திலே அனுக்ரஹம் பண்ணினவனே -அனுபவித்தவர்கள் தங்களுக்கு உரியர் அன்றிக்கே விக்ருதராம் படியான ஐந்து விஷயங்களும் -ஆத்மாவுக்கு நாசகமான ஞான இந்திரியங்களும் -கர்ம இந்திரியங்களும் – பிருதிவ்யாதி பூதங்களும் -இஸ் சம்சாரத்திலே இருக்கிற இவ்வாத்மாவைத் தொற்றி இருக்கிற மூல ப்ரக்ருதி -இதனுடைய விகாரமான மஹான் அஹங்காரம் மனஸ் ஸூ -இவை யாகிற உன்னுடைய மா மாயையை மங்க வொட்டு என்று அந்வயம் –

————————————————————————

நிகமத்தில் மஹத் அஹங்கார விஷயமான இத்திருவாய் மொழி திருமலையில் சொல்லிற்று -என்கிறார் –

மான்  ஆங்கார மனம் கெட ஐவர் வன்கையர் மங்க
தான் ஆங்கார மாயப் புக்கு தானேதானே ஆனானைத்
தேன் ஆங்காரப் பொழில் குருகூர்ச் சடகோபன் சொல் ஆயிரத்துள்
மான் ஆங்காரத் திவை பத்தும் திருமால் இரும் சோலை மலைக்கே–10-7-11-

மஹான் அஹங்கார மனஸ் ஸூ க்கள் கெடும்படியும் -பேறு மிடுக்கை யுண்டைய ஐந்து இந்திரியங்களும் மங்கும் படியாகவும் -எனக்குத் தானே அபிமானியாய்ப் புகுந்து ஆத்மாத்மீயங்களிலே எனக்கு யுண்டான அபிமானத்தைத் தவிர்த்தவனை -வண்டுகளினுடைய களிப்பை யுடைய பொழிலொடு கூடின திருநகரியை யுடைய ஆழ்வார் அருளிச் செய்த ஆயிரம் திரு வாய் மொழியிலும் –
மஹத் அஹங்காராதி ரூபமான ப்ரக்ருதி நிரசன அர்த்தமாகச் சொன்ன இத் திருவாய் மொழி –மிக்கு இருந்துள்ள ஹர்ஷத்தாலே பிறந்த இத்திருவாய் மொழி –

————————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

திருவாய்மொழி இருபத்து நாலாயிரப்படி –10–6- –

October 29, 2016

பக்தி ஸ்வரூபத்தை உபதேசித்து அருளி-கை ஒழிந்த அநந்தரம்-அவன் பக்கலிலே இவர் விடாய் பெருகி வருகிறபடியைக் கண்டு-
இதுக்காகத் திரு வாட்டாற்றிலே சந்நிஹிதனாய் – நஜீவேயம் க்ஷணம் அபி -என்கிறபடியே-
-இவரை ஒழிய ஒரு க்ஷண மாத்ரமும் செல்லாத படி யுடையனாய் –
இவரோடே ஆத்மாந்தமாக பண்ண வேணும் -அது செய்யும் இடத்து விச்சேதன சங்கை இல்லாத படி
பரமபதத்தில் கொடு போவோம் -என்று -பதறா நிற்கச் செய்தே-
-இவர் பர தந்த்ரர் -நம்மை நியமிக்க மாட்டார் -என்று அறியாதே -இவர்க்குத் தான் பர தந்திரனாய்
இவர் நியமிக்க கொடு போக வேணும் -என்று அவசர ப்ரதீஷனாய் இருக்கிறவனுடைய -வியாமோஹ அதிசயத்தை கண்டு
சர்வாதிகனானவன் நம்மைக் குறித்து பர தந்த்ரன் ஆவதே -என்று விஸ்மிதராய் -இதுக்கு உஸாத் துணை யாவார் ஆர் என்று பார்த்த இடத்தில்
சம்சாரிகள் சப்தாதி விஷய ப்ரவணர் ஆகையாலும்-நித்ய ஸூ ரிகள் விப்ரக்ருஷ்டர் ஆகையாலும் -இனித் தமக்கு
உடன் கேடான நெஞ்சும் தாமும் ஆனவாறே -அத்தைக்கு குறித்து நாம் பெற்ற பேறு கண்டாயே -என்று மிகவும் ஹ்ருஷ்டராகிறார் –
இதுக்கு முன்பு எல்லாம் இவனுக்கு ஸ்வா தந்தர்யமே ஸ்வரூபம் என்று போந்தார் –
இப்போது ஆஸ்ரித பார தந்தர்யமே ஸ்வரூபம் என்கிறார் –
இருந்தும் வியந்தில் காட்டில் இதுக்கு ஏற்றம் என் -என்னில் -அடியார் தம் அடியனேன்-என்ற ஹேதுவோடே அனுபவிக்கிறார் –

———————————————————-

நம்மை  விஷயீ கரிக்கையிலே ஒருப்படா நின்று கொண்டு -அது தானும் நான் விதித்த படியே செய்வானாய் இரா நின்றான் என்கிறார் –

அருள்  பெறுவார் அடியார் தன் அடியனேற்கு ஆழியான்
அருள் தருவான் அமைகின்றான் அது நமது விதி வகையே
இருள் தரும் மா ஞாலத்துள் இனிப் பிறவி யான் வேண்டேன்
மருள் ஒழி நீ மட நெஞ்சே வாட்டாற்றான் அடி வணங்கே–10-6-1-

அருள் பெறுவார் அடியார் –சர்வேஸ்வரன் அளவிறந்த பிரசாதத்தை பண்ண அதுக்கு -விஷய பூதராய் இருப்பார் சிலர் உண்டு -ராஜாக்கள் மகிஷிகளுக்கு விபூதிகளையும் தங்களையும் அவர்கள் அதீனமாக்கி வைப்பாரைப் போலே -ஈஸ்வரன் தன்னை முற்றூட்டாக கொடுத்து அனுபவிக்குமவர்கள் –
தன் அடியனேற்கு -நீக்கமில்லா அடியார் தம் அடியார் அடியார் அடியார் எங்கோக்கள் -என்று இ றே தம் ஸ்வரூபத்தை நினைத்து இருப்பது –
ஆழியான்–திரு வாழி யாழ்வானை விஷயீ கரித்தாலே போலே விஷயீ கரிக்க நினையா நின்றான் -விடலில் சக்கரம் இ றே -ஆஸ்ரிதரை நிரூபகமாக யுடையவன் -என்றுமாம் –
அருள் தருவான் அமைகின்றான் -ஆஸ்ரிதர் எல்லார் பக்கலிலும் பண்ணும் அருளை -என் பக்கலிலே பண்ணுமவனாகச் சமைந்து நின்றான் –அஸ்மா பிஸ் துல்யோ பவது -என்னுமவர்கள் இ றே இவர்கள் -ஸ்வதந்த்ரனாகில் தருகிறான் — இனிக் குறை என் என்னில் –
அது நமது விதி வகையே–அது நாம் சொல்லச் செய்வானாக நினைத்து இரா நின்றான் -அது நம்முடைய  பாக்யாதி குணம் இ றே -என்றாய்த்து பூர்வர்கள் நிர்வாஹம் -இது பிரகரணத்தோடு சேராது -நாம் விதித்த படியே செய்வானாக நினைத்து இரா நின்றான் -என்று அருளிச் செய்தார் எம்பெருமானார் -தன் பக்கல் குறைவற்று இருந்தாலும் இத்தலையில் இச்சை பார்த்து இருக்கும் இ றே –சொல் வகையே என்னாதே- விதி வகையே -என்றது -தானே தருமது வித்யதிக்ரமம் -என்று இருக்கை யாலே –இதுக்கு நான் செய்யப் பார்த்தது என் என்ன –
இருள் தரும் மா ஞாலத்துள் –-நான் அவன் வழியே போகப் பார்த்தேன் -இங்கு உகந்து அருளின நிலங்களும் பாகவத ஸஹவாசமும் உண்டாய் இருக்க அவன் வழியே போக வேண்டுகிறது என் -என்ன -அஞ்ஞான அவஹமான ஸம்ஸாரமாகையாலே-ஞானாதிகனான ப்ரஹ்லாதனையும் எதிரிடப் பண்ணிற்று இ றே –
இனி–அவன் கருத்தை அறிந்த பின்பு –
பிறவி யான் வேண்டேன்–வானுயிர் இன்பம் எய்திலென் மற்றை நரகமே எய்திலென் -என்கிற அது நான் வேண்டேன் -இனி ஈஸ்வர அபிப்ராயத்தாலே இருக்கில் இருக்கும் அத்தனை —
மருள் ஒழி நீ –நீயும் என் வழியே போரப் பார் –திரு வாறன் விளையதனை மேவி வலம் செய்து கை தொழக் கூடுங்கொல் –என்று உகந்து அருளின நிலங்களில் நசையாலே பிரமித்து ஓன்று உண்டு –அத்தைத் தவிர் –இங்கே உகந்து அருளின இதுக்கு பிரயோஜனம் அங்கே கொடு போகை யன்றோ –
மட நெஞ்சே–சாது நெஞ்சே –பவ்யமான நெஞ்சே —மடமை -அறிவின்மை
வாட்டாற்றான் அடி வணங்கே–திரு வாட்டாற்றிலே வந்து நிற்கிறவன் நினைவிலே போகப் பார் –அடி வணங்குகை யாவது -ஈரரசு தவிருகை –அவன் கருத்தில் போகை –

——————————————————————–

விதி வகையே என்று -நம் இசைவு பார்த்து இருக்கிறான் என்கிறது என் -இந்நின்ற நீர்மை இனி யாம் உறாமை  -என்று அடியிலே அபேக்ஷித்திலோமோ என்ன -அபேக்ஷித்த அளவோ நாம் பெற்றது -என்கிறார் –

வாட்டாற்றான்  அடி வணங்கி மா ஞாலம் பிறப்பு அறுப்பான்
கேட்டாயே மட நெஞ்சே கேசவன் எம்பெருமானைப்
பாட்டாயே பல பாடிப் பழ வினைகள் பற்று அறுத்து
நாட்டாரோடு இயல்வு ஒழிந்து நாரணனை நண்ணினமே–10-6-2-

வாட்டாற்றான் அடி வணங்கி மா ஞாலம் பிறப்பு அறுப்பான்-–மா ஞாலம் பிறப்பு அறுப்பான்- -வாட்டாற்றான் அடி வணங்கி—தன்னை அனுபவிக்கைக்கு விரோதியான மஹா ப்ருதிவியிலே ஜன்மத்தைப் போக்க வேணும் -என்று அன்றோ நாம் அர்த்தித்தது-
கேசவன் எம்பெருமானை–கேசியை நிரசித்தால் போலே நம் சேஷத்வ விரோதியைப் போக்கி முறையிலே நிறுத்தின படியைக் கண்டாயே –அவ்வளவேயோ-
பாட்டாயே பல பாடி–விரோதியைப் போக்கினை படி கிடக்கச் செய்தே–வாசிகமான அடிமை யைக் கொண்ட படி கண்டாயே -பாலேய் தமிழர் இசைகாரர் பத்தர் பரவும் படி யன்றோ கவி பாடுவித்துக் கொண்ட படி — கேசவன் எம்பெருமானை -பாட்டாயே பல பாடி-பிரசஸ்த கேசனாய் இருக்கிற அழகைக் காட்டித் தோற்பித்து கவி பாடுவித்துக் கொண்டான் -என்றுமாம் –
பழ வினைகள் பற்று அறுத்து–நாம் அடிமை செய்ய -பிராப்தி பிரதிபந்தகமாய் அநாதி கால ஆர்ஜிதமான அவித்யாதிகள் எல்லாம் போகப் பெற்ற படி கண்டாயே -நாம் அநாதி காலம் கூட ஆர்ஜித்த வற்றை ஒரு சர்வ சக்தி அல்ப காலத்திலேயே போக்கினை படி கண்டாயே –
நாட்டாரோடு இயல்வு ஒழிந்து –அஹங்கார மமக வச்யரோடு தொற்றற்ற படி கண்டாயே -இவை என்ன உலகு இயற்கை –கொடு உலகம் காட்டேல்-என்னப் பண்ணின படி கண்டாயே –
நாரணனை நண்ணினமே--நிருபாதிக சர்வ ரக்ஷகனைக் கிட்டப் பெற்றோம் -நிருபாதிக சர்வ பந்துவைக்க கிட்டப் பெற்றோம் –கேட்டாயே மட நெஞ்சே-பவ்யமான நெஞ்சே கேட்டாயே –என்று உபகார ஸ்ம்ருதி தொடராக கூறிக் கொள்ளுகிறார் –

————————————————————-

எம்பெருமான் நம்மை விஷயீ கரிக்க வல்லனே என்று யாம் இருக்க -அவ்வளவு அன்றிக்கே அத்யபி நிவிஷ்டனாய்-நாம் விதித்த படி செய்வானாய் இரா நின்றான் -நெஞ்சே -எண்ணின அளவன்றிக்கே கருமங்கள் விழும்படி என் என்கிறார் –

நண்ணினம்  நாராயணனை நாமங்கள் பல சொல்லி
மண்ணுலகில் வளம் மிக்க வாட்டாற்றான் வந்து இன்று
விண்ணுலகம் தருவானாய் விரைகின்றான் விதி வகையே
எண்ணினவாறு ஆகா இக் கருமங்கள் என் நெஞ்சே –10-6-3-

நண்ணினம் நாராயணனை நாமங்கள் பல சொல்லி-–நாராயணனை நாமங்கள் பல சொல்லி–நண்ணினம்–கிட்டி அனுபவிக்கப் பெற்றோம் -விண்ணுலகம் என்கிற பேற்றுக்குச் சொல்லில் -மோக்ஷத்தில் விநியோகமான -திரு மந்திரமே அமையும் -ஸர்வார்த்த சாதக -என்கிறபடியே பிரயோஜனாந்தரங்களுக்கும் அதுவே அமையும் –ப்ரீதி ப்ரேரிக்க-அனுபவத்துக்காக சொல்லுகையாலே -எல்லாத் திரு நாமங்களும் வேணும் –
மண்ணுலகில் வளம் மிக்க வாட்டாற்றான் வந்து இன்று--பரம பதத்தில் காட்டில் ஸம்ருத்தி மிக்கு இருந்துள்ள திரு வாட்டாற்றை நிரூபகமாக யுடையவன் / வளம் –சம்பத்து / ரஷ்யம் குறைவற்ற தேசம் ஆகையால் ரக்ஷகனுக்கு சம்பத்து மிக்கு இருக்கும் இங்கு -கைங்கர்யத்துக்கு விச்சேதம் இல்லாமையால் சேஷ பூதனுக்கு சம்பத்து மிக்கு இருக்கும் அங்கு -/ வந்து –நாம் செல்ல வேண்டும் தேசம் அடங்க தானே வந்து -/ இன்று -நம் பக்கல் இதுக்கு அடியாக இருப்பது ஓன்று நென்னேற்று இல்லை -இன்று இங்கனே விடியக் கண்டது அத்தனை –
விண்ணுலகம் தருவானாய்–பரம பதத்திலே செல்லப் பெறுகை யன்றிக்கே -ஆண்மின்கள் வணக்கம் -என்ற பொதுவும் இன்றிக்கே த்ரிபாத் விபூதியையும் நமக்கே தருவானாய் இரா நின்றான் –
விரைகின்றான் –சா பேஷாரான நாம் ஆறி இருக்க -நிரபேஷனானவன்-பதறா நின்றான் –முன்பு இவர் விரைந்த போது ஒரு கார்யார்த்தமாக வைத்தானாய் -அது தலைக் கட்டின வாறே -விசத்ருசமான விபூதி இவருக்குத் தரம் அன்று என்று பதறா நின்றான் –தொடங்கின அப்போதே தலைக் கட்ட வல்ல சர்வ சக்திக்கு பதற வேண்டுகிறது என் என்னில்
விதி வகையே--நாம் விதிக்கத் தருவானாக வேண்டி இரா நின்றான் –
எண்ணினவாறு ஆகா-நாம் இவனை விரைய வேணும் என்று எண்ணினோமோ –
இக் கருமங்கள் -பகவத் விஷயத்தில் பலிக்கும் படி –புறம்பு ஒருவனை ஓன்று ஆர்த்தித்தால் பேற்று அளவும் இவன் தானே அர்த்திக்க வேணும் –இவ்விஷயத்தில் இவன் ஒருகால் அர்த்தித்து விட்டால் பின்பு தன் பேறாக தானே அர்த்தித்துக் கொடுக்கும் –என் நெஞ்சே –இஸ் ஸம்ருத்தி எல்லாம் நீ என் வழியே போருகையாலே இ றே சித்தித்தது –

—————————————————————–

சர்வேஸ்வரன் தான் நாம் விதித்த இது செய்வதாகச் சொன்ன இது சம்பவிக்குமோ வென்னில்-அவனுடைய ஆஸ்ரித வாத்சல்யத்தை அனுசந்தித்தால் கூடாது இல்லை -என்கிறார் –

என்  நெஞ்சத்து உள் இருந்து இங்கு இருந்தமிழ் நூல் இவை மொழிந்து
வன்னெஞ்சத்து இரணியனை மார்வு இடந்த வாட்டாற்றான்
மன் அஞ்சப் பாரதத்து பாண்டவர்க்காய் படை தொட்டான்
நன்னெஞ்சே நம் பெருமான் நமக்கு அருள் தான் செய்வானே-10-6-4-

என் நெஞ்சத்து –-சம்சாரத்திலே விஷயாந்தர ப்ரவணமான நெஞ்சு என்று இவர் இறாயா நின்றார் -இவர் என்னது என்ற இதுவே ஹேதுவாக அவன் மேல் விழா நின்றான் –இவர் அயோக்யம் என்று அகல -அதுவே ஹேதுவாக அவன் புகுர நில்லா நின்றான் –
உள்-கார்யார்த்தமாக இருக்கை அன்றிக்கே தன் விடாய் தோற்ற உள்ளே புகுந்தான் –
இருந்து -புறம்பு ஒரு விபூதி உண்டு என்று நினையாதே ஸ்த்தாவர ப்ரதிஷ்டையாக இரா நின்றான் –
இங்கு -பரம பதத்தில் பரிமாற்றத்தை சம்சாரத்திலே உண்டாக்கினான் –
இருந்தமிழ் -விலக்ஷணமான தமிழ் –
நூல்-பின்பு லக்ஷணம் கட்டுவார்க்கும் இதுவே கொண்டு செய்ய வேண்டும் படி இருக்கை –இவர் ஆற்றாமையால் சொன்ன இத்தை -லக்ஷனோ பேதமாக்கினான் யாய்த்து-
இவை -தமக்கும் கொண்டாட வேண்டி இருக்கும் இவை –
மொழிந்து-பாடினான் அவனாய் தாம் கற்றுச் சொன்னாரோ பாதி யாக நினைத்து இருக்கிறார் –
வன்னெஞ்சத்து -பகவத் விஷயம் என்றால் அஸஹ்யமான நெஞ்சு
இரணியனை மார்வு இடந்த-துர்மானம் கிடந்த இடத்தை குட்டமிட்டு அழிக்கை-முன்பு தமப்பன் பகையாக சிறுக்கனுக்கு உதவினவன் நமக்கு உதவானோ என்று கருத்து –
வாட்டாற்றான்-பிற்பாடார்க்கு உதவுகைக்காக திரு வாட்டாற்றிலே வர்த்திக்கிறவன் –
மன் அஞ்சப் பாரதத்து பாண்டவர்க்காய் படை தொட்டான்–சிம்ஹத்தைக் கண்ட நரி போலே பீஷ்மாதி ராஜ லோகங்கள் அஞ்ச -பாரத ஸமரத்திலே கிருஷ்ணாச்ரய கிருஷ்ண பலா-என்கிறவர்களுக்கு கையாளாய் / படை தொட்டான்-படை எடுத்தான் -படை விட்டான் -என்னப் பெற்றது இல்லை -சங்கல்பத்தை குலைந்த அத்தனை -கார்யம் கொள்ளப் பெற்றிலன் -சத்ய ஸங்கல்பன் என்கிறது -ஆஸ்ரிதரை ஒழிந்த இடத்திலே இ றே -விடா விட்டது என் என்னில் -அர்ஜுனன் தான் நீ ஆயுதம் விடில் எனக்கு அவத்யம் என்கையாலே
நன்னெஞ்சே-ஆஸ்ரித பக்ஷபாதத்தைக் கேட்டால் உகக்கும் நெஞ்சே –
நம் பெருமான் -நமக்கு ஸ்வாமி யானவன் –
நமக்கு அருள் தான் செய்வானே–நமக்கு அவ் வருளைப் பண்ணியே விடும் –விண்ணுலகம் தருவானாய் விரைகின்றான் என்ற பேற்றை பண்ணியே விடும் -இது நிச்சிதம் –இசைவுக்கு நீ யுண்டு –இசைவைக் கொண்டு கார்யம் செய்கைக்கு அவனோடு சம்பந்தம் யுண்டு -நம் பேற்றுக்கு குறை யுண்டோ –

——————————————————————-

அவன் பரம பதத்துக்கு போக ஆஸ்ரிதற்கு வைத்த அர்ச்சிராதி கதியாலே போகப் பெறா நின்றேன் -நித்ய ஆஸ்ரிதரைப் போலே என்னை விஷயீ கரிக்கவும் பெற்றேன் -என்கிறார் –

வான்  ஏற வழி தந்த வாட்டாற்றான் பணி வகையே
நான் ஏறப் பெறுகின்றேன் நரகத்தை நகு நெஞ்சே
தேன் ஏறு மலர்த் துளவம் திகழ் பாதன் செழும் பறவை
தான் ஏறித் திரிவான தாளிணை என் தலை மேலே-10-6-5-

வான் ஏற வழி தந்த -அபு நராவ்ருத்த லக்ஷணமான பரமபதத்தில் ஏறுகைக்கு அர்ச்சிராதி கதியைத் தந்த -பரம பாத லாபத்தாலும் -அவ்வருகே ஒரு லாபம் என்னலாம் படி இ றே அர்ச்சிராதி கத்தி ஸித்தி –
வாட்டாற்றான் -இப்பேற்றுக்கு கிருஷி பண்ணின தேசம் –
பணி வகையே-சொன்ன படியே -மாமேகம் சரணம் வ்ரஜ -என்னும் படி -பண்டே பரமன் பணித்த பணி வகை -என்றார் இ றே -மரணமானால் -என்று சொன்ன படியே என்னவுமாம் –நான் ஏறப் பெறுகின்றேன் -நான் செல்லப் பெறா நின்றேன் –
நரகத்தை நகு நெஞ்சே-சம்சாரத்தைப் பார்த்து உன்னை வென்றேன் -என்று சிரித்து போகப் பார் -உன்னை நெடுநாள் குடிமை கொண்டது என்று பார்த்து உன் வெற்றி தோன்ற போ -விஸ்லேஷம் ஆகிற நரகத்தை நகு என்றுமாம் -இச் செருக்குக்கு அடி என் என்ன
தேன் ஏறு மலர்த் துளவம் திகழ் பாதன்-நாள் செல்ல நாள் செல்ல தேன் மிக்கு வாரா நின்றுள்ள மலரை யுடைய திருத் துழாய் விளங்கா நின்றுள்ள திருவடிகளை யுடையவன் -திருத் துழாயாலே அலங்க்ருதமான திருவடிகள் -என்றுமாம் –செழும் பறவை-இவனோட்டை சம்ச்லேஷத்தாலே தர்ச நீயமான வடிவை யுடையவன் –
தான் ஏறித் திரிவான தாளிணை -அவனுக்காகவும் அன்றிக்கே -அவனுடைய ஸூக ஸ்பர்சத்துக்காக தான் ஏறி சஞ்சரிக்குமவனுடைய திருவடிகள் –
என் தலை மேலே-–அவன் தோளில் இருக்கை தவிர்ந்து என் தலை மேலே இரா நின்றான் –

——————————————————————-

திரு வாட்டாற்றிலே சந்நிதி பண்ணி என்னை சர்வதோமுகமாக விட மாட்டாதவனுடைய திருவடிகளைக் குறுகப் பெற்றோம் -என்கிறார் –

தலை  மேலே தாளிணைகள் தாமரைக் கண் என் அம்மான்
நிலை பேரான் என் நெஞ்சத்து எப்பொழுதும் எம்பெருமான்
மலை மாடத்து அரவணை மேல் வாட்டாற்றான் மதம் மிக்க
கொலையானை மருப்பு ஒசித்தான் குரை கழல்கள் குறுகினமே–10-6-6-

தலை மேலே தாளிணைகள்-திருவடிகளாலே என் தலையை அலங்கரியா நின்றான் –
தாமரைக் கண் என் அம்மான்–என் முன்னே நின்று கண் அழகைக் காட்டி ஜிதம் எண்ணப் பண்ணா நின்றான்
நிலை பேரான் என் நெஞ்சத்து -ஹிருதயத்தின் நின்றும் கால் வாங்கு கிறிலன்
எப்பொழுதும்-சர்வ காலமும் இப்படி செய்யா நின்றான் -தன்னை அனுபவிப்பார் நாநா வித சரீரத்தாலே அனுபவிக்குமா போலே -என்னை அனுபவிக்கைக்கு அநேக விக்ரகங்களை கொள்ளா நின்றான் –
எம்பெருமான்-உடமை உடையவனைப் பெற்றால் இருக்கும் அளவு அன்று இ றே உடைமையைப் பெற்றால் உடையவனுக்கு இருப்பது –
மலை மாடத்து அரவணை மேல் வாட்டாற்றான் –மலைகளை சேர வைத்தால் போலே இருக்கிற மாடங்களை யுடைத்தான திரு வாட்டாற்றிலே திருவனந்த ஆழ்வான் மேலே கண் வளர்ந்து அருளுகிறவன் -பரியங்க வித்யையில் சொல்லுகிற படியே உத்தேச்ய வஸ்துவுக்கு குறை வெற்று இருக்கிற படி —
மதம் மிக்க-கொலையானை மருப்பு ஒசித்தான்--அனுபவ விரோதியை குவலயா பீடத்தைத் தள்ளினால் போலே தள்ளிப் பாகட்டான்
குரை கழல்கள் குறுகினமே–இப்படி போக்யமான திருவடிகளைக் கிட்டப் பெற்றோம் —குரை--ஆபரண த்வனி -கூவிக் கொள்ளும் காலம் இன்னம் குறுகாதோ-என்னும் விடாய் தீரும் படி கிட்டப் பெற்றோம் –

——————————————————————–

எம்பெருமான் சபரிகரமாக வந்து என்னுள்ளே புகுந்து அருளினான் -அத்தாலே என் உடம்பு நிரந்தரமாக த் திருத் துழாய் நாறா நின்றது -என்கிறார் –

குரை  கழல்கள் குறுகினம் நம் கோவிந்தன் குடி கொண்டான்
திரை குழுவு கடல் புடை சூழ் தென்னாட்டுத் திலதம் அன்ன
வரை குழுவு மணி மாடம் வாட்டாற்றான் மலர் அடி மேல்
விரை குழுவு நறுந்துளவம் மெய்ந்நின்று கமழுமே–10-6-7-

குரை கழல்கள் குறுகினம் –ஆபரண த்வனியோடே அவன் வந்து மேல் விழக் கிட்டப் பெற்றோம்
நம் கோவிந்தன் குடி கொண்டான்–ஆஸ்ரித வத்சலனான கிருஷ்ணன் அகம்படி வந்து புகுந்து -என்கிற படி வந்து புகுந்தான்
திரை குழுவு கடல் புடை சூழ் தென்னாட்டுத் திலதம் அன்ன–திரை மிக்கு இருந்துள்ள கடல் அருகே சூழப் பட்டு இருப்பதாய் -தென்னாட்டுக்குத் திலகம் போலேயாய் –
வரை குழுவு மணி மாடம் வாட்டாற்றான் மலர் அடி மேல்-மலைகளை நெருங்க வைத்தால் போலே இருக்கிற மணி மயமான மாடங்களை யுடைத்தான திரு வாட்டாற்றிலே நின்று அருளினவனுடைய திருவடிகளின் மேல்
விரை குழுவு நறுந்துளவம் –பரிமளம் மிக்க திருத் துழாய் –/ விரை -பரிமளம் -/மெய்ந்நின்று கமழுமே–சரீரம் நிரந்தரமாக நாறா நின்றது –குரை கழல்கள் குறுகினம்-என்று நான் சொன்ன வார்த்தை மெய் என்னும் இடம் என் உடம்பே சொல்லா நின்றது -என்கை –அன்று மற்று ஒரு உபாயம் என் -என்று தோழி சொல்லியும் -வெறி கொல் துழாய் மலர் நாறும் -என்று தாயார் சொல்லியும் போந்த இத்தைத் தம் வாயாலே சொல்லும் படியுமாய்த்து –

———————————————————————-

அத்யந்த விலஷணனான திரு வாட்டாற்றிலே எம்பெருமான் என் ஹிருதயத்திலே  ஸூலபனாய்  புகுந்து உஜ்ஜவலன் ஆகைக்கு நான் என்ன நன்மை செய்தென் -என்கிறார்  –

மெய்ந்நின்ற  கமழ் துளவ விரை ஏறு திரு முடியன்
கைந்நின்ற சக்கரத்தன் கருதுமிடம் பொருது புனல்
மைந்நின்ற வரை போலும் திரு உருவ வாட்டாற்றாற்கு
எந்நன்றி செய்தேனோ என்நெஞ்சில் திகழ்வதுவே–10-6-8-

மெய்ந்நின்ற கமழ் துளவ விரை–திரு மேனியில் கமழா நின்றுள்ள திருத் துழாயின் பரிமளம் –
ஏறு திரு முடியன்--அப் பரிமளம் மிகா நின்றுள்ள திரு முடியை யுடையனாய் -கடலில் நீர் ஸஹ்யத்திலே ஏறுமா போலே திரு முடியில் வெள்ளம் இடா நின்றது –
கைந்நின்ற சக்கரத்தன்கருதுமிடம் பொருது–நினைத்த இடத்தே சென்று யுத்தம் பண்ணி எதிரிகளை அழித்து மீண்டு திருக் கையிலே வர்த்திக்கும் திரு வாழி யுடையனாய் –பாவஞ்ஞனாய் அடிமை செய்து -ஸ்வ தூணீம் புநரா விசத்–என்றும் ராம பார்ஸ்வம் ஜகாம -என்றும் சொல்லுகிற படியே திருக் கையிலே வர்த்திக்குமாய்த்து -அத ஹரி வர நாத —
புனல்-மைந்நின்ற வரை போலும் திரு உருவ வாட்டாற்றாற்கு–புனல் போலேயும் மை போலேயும் நின்ற வரை போலேயும் என்னுதல் / –மைந்நின்ற வரை— மை மாறாத வரை –அஞ்சன கிரி -என்னுதல் -/ வாட்டாற்றாற்கு-என்று பூஜா வாசி அல்ல -வாட்டாற்றானுக்கு என்றபடி
எந்நன்றி செய்தேனோ என்நெஞ்சில் திகழ்வதுவே–என்ன நன்மை செய்தெனாக –பெரிய வுடையாரைப் போலே என்னை அழிய மாறினேனோ –திருவடியைப் போலே தனியிடத்தில் உதவினேனோ –தன்னுடைய ஆஞ்ஞா ரூபமான விஹிதங்களை அனுஷ்டித்தேனோ –என் நெஞ்சில் புகுந்த பின்பு விளங்கினான் என்னும் படி விரும்பிற்று —

————————————————————–

அத்யந்த பரி பூர்ணனான தான் இகழ்வின்றிக்கே  என் நெஞ்சத்து எப்பொழுதும் பிரியாது இரா நின்றான் -ஒருவனுடைய வ்யாமோஹமே -என்று ப்ரீதர் ஆகிறார் –

திகழ்கின்ற  திரு மார்வில் திரு மங்கை தன்னோடும்
திகழ்கின்ற திருமாலார் சேர்விடம் தண் வாட்டாறு
புகழ்கின்ற புள்ளூர்தி போர் அரக்கர் குலம் கெடுத்தான்
இகழ்வு இன்றி என் நெஞ்சத்து எப்பொழுதும் பிரியானே–10-6-9-

திகழ்கின்ற திரு மார்வில் திரு மங்கை தன்னோடும்-திகழ்கின்ற திருமாலார் சேர்விடம் தண் வாட்டாறு–வெறும் புறத்திலே விளங்கா நிற்கிற திரு மார்விலே இருக்கிற பிராட்டி யோட்டை சேர்த்தி அழகாலும் விளங்கா நின்றுள்ள ஸ்ரீ யபதியானவன் சேரும் ஸ்தானம் ஸ்ரமஹரமான வாட்டாறு –ஸ்ரீ யபதியான ஏற்றத்தோ பாதி போருமாய்த்து திரு வாட்டாற்றை கலவிருக்கையாக யுடையவனாகையும் –
புகழ்கின்ற புள்ளூர்தி –இகழ்வு இன்றி என் நெஞ்சத்து எப்பொழுதும் பிரியானே–புகழுக்கு எல்லாம் ஸ்தானமான பெரிய திருவடியை வாஹனமாக யுடையவன் -புகழ் அடங்கலும் பெரிய திருவடி பக்கலிலேயாய் –அவனை யுடையவன் என்னும் புகழே யாய்த்து இவனுக்கு உள்ளது —
போர் அரக்கர் குலம் கெடுத்தான்–செவ்வைப் பூசலில் ராக்ஷஸ வர்க்கத்தை குலமாக முடித்தான் –சம்சாரி என்று இகழாதே சர்வ காலமும் விடுகிறிலன் –

—————————————————————–

மஹாத்மாக்கள் சிலரை விஷயீ கரிக்கப் புக்கால் ஒருவருக்கும் கிடையாத சீரிய பொருளை -அவர்கள் அளவும் பாராதே தங்கள் தரத்தை  கொடுப்பர் -என்னும் இவ்வர்த்த ஸ்திதியை  -வரி வாள்வாய் அரவணை மேல் வாட்டற்றான் -என் பக்கல் காட்டி அருளினான் -என்கிறார்-

பிரியாது  ஆட்செய்து என்று பிறப்பறுத்து ஆள் அறக் கொண்டான்
அரியாகி இரணியனை ஆகம் கீண்டான் அன்று
பெரியார்க்கு ஆட்பட்டக் கால் பெறாத பயன் பெறுமாறு
வரி வாள்வாய் அரவணை மேல் வாட்டற்றான் காட்டினனே-10-6-10-

பிரியாது ஆட்செய்து என்று பிறப்பறுத்து ஆள் அறக் கொண்டான்–நமக்குத் பிரியாதே அடிமை செய் என்று அருளிச் செய்து –விரோதியையும் போக்கி –நித்ய கைங்கர்யத்தையும் கொண்டான் –எனக்கே ஆட் செய் என்ன வேண்டும் என்று எம்மா வீட்டிலே நான் பிரார்த்தித்தையும் செய்தான் -பொய் நின்ற ஞானத்தில் அபேக்ஷித்தத்தையும் செய்தான் -தனக்கே யாக என்றத்தையும் நமக்குச் செய்தான் –
அரியாகி இரணியனை ஆகம் கீண்டான் அன்று-தன்னை அழிய மாறி ஹிரண்யனுடைய முருட்டுடலை அநாயாசேன கிழித்தான் –அன்று -அச்செயலும் ப்ரஹ்லாதனுக்காக அன்று -எனக்காகச் செய்தான் என்கிறார் –
பெரியார்க்கு ஆட்பட்டக் கால் பெறாத பயன் பெறுமாறு-வரி வாள்வாய் அரவணை மேல் வாட்டற்றான் காட்டினனே-இன்று க்ரியதாமிதி –என்கிறபடியே என் விரோதியைப் போக்கி நித்ய கைங்கர்யத்தையும் கொண்டான் -மஹா புருஷர்களை ஆஸ்ரயித்ததால் ஸூ துர்லபமான பிரயோஜனத்தை பெறுவர்கள் என்னும் அர்த்தத்தை -வரியையும் ஒளியையும் வாயையும் யுடைய திருவனந்த ஆழ்வான் மேல் கண் வளர்ந்து அருளுகிற திரு வாட்டாற்றில் நாயனார் என் பக்கலிலே காட்டினார் -என் சிறுமை பாராதே தன் தரத்தில் செய்து அருளினார் -உபய விபூதியிலும் தம்மைப் போலே திருவாய் மொழி பாடப் பெற்றார் இல்லை என்று இருக்கிறார் –

———————————————————–

நிகமத்தில் அயர்வறும் அமரர்கள் இத்திருவாய் மொழியைக் கேட்டால் வித்ருஷ்ணர் ஆவர் என்கிறார் -அனுபவிக்க உரியர் நித்ய ஸூரிகள் என்கிறார் –

காட்டித்  தன் கனை கழல்கள் கடு நரகம் புகல் ஒழித்த
வாட்டாற்று எம் பெருமானை வளம் குருகூர்ச் சடகோபன்
பாட்டாய தமிழ் மாலை ஆயிரத்துள் இப்பத்தும்
கேட்டு ஆரார் வானவர்கள் செவிக்கு இனிய செஞ்சொல்லே–10-6-11-

காட்டித் தன் கனை கழல்கள் கடு நரகம் புகல் ஒழித்த—தன் கனை கழல்கள்-காட்டி -கடு நரகம் புகல் ஒழித்த–ஸ்வரூப குணங்களை பிரகாசிப்பிக்கிற வடிவைக் காட்டி சம்சார சம்பந்தத்தைத் தவிர்த்த -என்னுதல் /தன்னைக் காணப் பெறாத துக்கத்தைப் போக்கினவன் என்னுதல் /
வாட்டாற்று எம் பெருமானை–திரு வாட்டாற்றிலே என் நாதனை
வளம் குருகூர்ச் சடகோபன்வளம் -ஸம்ருத்தி
பாட்டாய தமிழ் மாலை ஆயிரத்துள் இப்பத்தும்-கேட்டு ஆரார் வானவர்கள் செவிக்கு இனிய செஞ்சொல்லே–பாட்யே கே யே ச மதுரம் -என்கிறபடியே இசையோடு புணர்ப்புண்ட தமிழ்த்தொடை –நித்ய ஸூ ரிகள் இத்தைக் கேட்டால் பர்யாப்தர் ஆகார் -இப்பாடுகிறது உள்ளீடானவன் சீலத்தாலேயே என்னில் –பாசுரத்துக்காக என்கிறது -ஸம்ஸ்ரவே மதுரம் -என்கிறபடியே செவியே தொடங்கி ரசிக்கும்
செஞ்சொல்லே–-நினைவும் சொல்லும் செயலும் ஒருபடிப் பட்ட சொல்லு -சிந்தையாலும் சொல்லாலும் செய்கையினால் -ஏன்னா செந்தமிழ் பத்தும் என்றார் இ றே –

——————————————————————–

கந்தாடை    அப்பன் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

திருவாய்மொழி ஒன்பதினாயிரப்படி –10-6–

October 29, 2016

பக்தி ஸ்வரூபத்தை உபதேசித்து அருளி -அந்நிய பரதை கெட்டுத் தன்னை ஒழியச் செல்லாத தன்மையான ஆழ்வாருடைய படியை அனுசந்தித்து
அவரை ஒழிய க்ஷண மாத்ரமும் செல்லாத படி திரு வாட்டாற்றில் எம்பெருமான் தான் இவரோடே ஆத்மாவதியாக
நிரந்தர சம்ச்லேஷம் பண்ணுகைக்காக உறுப்பாக திரு நாட்டிலே
கொடு போகையிலே பதறா நின்று வைத்து இவர் தாமே சொல்லக் கொடு போக வேணும் என்று அதுக்கு அவசர ப்ரதீஷனாய்
தம் பக்கல் பரதந்த்ரனாய் இருக்கிறவனுடைய நிர்ஹேதுக வியாமோஹத்தை அனுசந்தித்து விஸ்மிதராய்
திரு உள்ளத்தைக் குறித்து -நாம் பெற்ற பேறு கண்டாயே -என்று சொல்லி மிகவும் ஹ்ருஷ்டராகிறார் –

———————————————————

நம்மை  விஷயீ கரிக்கையிலே ஒருப்படா நின்று கொண்டு -அது தானும் நான் விதித்த படியே செய்வானாய் இரா நின்றான் என்கிறார் –

அருள்  பெறுவார் அடியார் தன் அடியனேற்கு ஆழியான்
அருள் தருவான் அமைகின்றான் அது நமது விதி வகையே
இருள் தரும் மா ஞாலத்துள் இனிப் பிறவி யான் வேண்டேன்
மருள் ஒழி நீ மட நெஞ்சே வாட்டாற்றான் அடி வணங்கே–10-6-1-

ஆழியான்–திரு வாழி யாழ்வானை விஷயீ கரித்தாலே போலே / அஞ்ஞான அவஹமான சம்சாரத்திலே பிறக்கையிலே நசை ஆற்றேன் –சாதுவான நெஞ்சே –நீ உகந்து அருளின கோயில்களில் நசையாலே -சம்சாரத்தை விட்டுத் திரு நாட்டுக்குப் போவேன் அல்லேன் நான் -என்று பண்ணின ப்ரமத்தைத் தவிர்–அவன் தந்து அருளுகிற படியே திருவடிகளை அனுபவி –

—————————————————————

வாட்டாற்றான்  அடி வணங்கி மா ஞாலம் பிறப்பு அறுப்பான்
கேட்டாயே மட நெஞ்சே கேசவன் எம்பெருமானைப்
பாட்டாயே பல பாடிப் பழ வினைகள் பற்று அறுத்து
நாட்டாரோடு இயல்வு ஒழிந்து நாரணனை நண்ணினமே–10-6-2-

கேட்டாயே பவ்யமான நெஞ்சே –தன்னை அனுபவிக்கைக்கு விரோதியான மா ஞாலப் பிறப்பு அறுக்க வேணும் என்று -கேசி ஹந்தாவாய் என்னை அடிமை கொண்ட வாட்டாற்றானை அடி வணங்கி -அவன் பிரசாதத்தாலே திருவாய் மொழியும் பாடவும்  பெற்று தன்னுடைய ப்ராப்திக்கு பிரதிபந்தகமான அவித்யாதிகள் எல்லாம் போக்கி -இதர விஷய ப்ரவணராய் நம்மோடு ஒரு பற்று இன்றிக்கே இருக்கிற நாட்டாரோட்டைச் சேர்த்தியையும் தவிர்ந்து -நாராயணனை பிராபிக்கப்  பெற்றோம் -என்கிறார் –

———————————————————–

எம்பெருமான் நம்மை விஷயீ கரிக்க வல்லனே என்று யாம் இருக்க -அவ்வளவு அன்றிக்கே அத்யபி நிவிஷ்டனாய்-நாம் விதித்த படி செய்வானாய் இரா நின்றான் -நெஞ்சே -எண்ணின அளவன்றிக்கே கருமங்கள் விழும்படி என் என்கிறார் –

நண்ணினம்  நாராயணனை நாமங்கள் பல சொல்லி
மண்ணுலகில் வளம் மிக்க வாட்டாற்றான் வந்து இன்று
விண்ணுலகம் தருவானாய் விரைகின்றான் விதி வகையே
எண்ணினவாறு ஆகா இக் கருமங்கள் என் நெஞ்சே –10-6-3-

பல திரு நாமங்களை சொல்லி எம்பெருமானை அனுபவிக்கப் பெற்றோம் / வளம்-சம்பத்து / என் நெஞ்சே -இஸ் ஸம்ருத்தி எல்லாம் உன்னுடைய ஆனுகூல்யத்தாலே வந்தது என்று கருத்து –

—————————————————————

நம் விஷயத்தில் இத்தனை பவ்யனாக சம்பவிக்குமோ என்னில் -ஆஸ்ரித விஷயத்தில் எல்லாம் செய்வானான பின்பு நாம் அபேக்ஷித்தது எல்லாம் செய்யும் என்கிறார் –

என்  நெஞ்சத்து உள் இருந்து இங்கு இருந்தமிழ் நூல் இவை மொழிந்து
வன்னெஞ்சத்து இரணியனை மார்வு இடந்த வாட்டாற்றான்
மன் அஞ்சப் பாரதத்து பாண்டவர்க்காய் படை தொட்டான்
நன்னெஞ்சே நம் பெருமான் நமக்கு அருள் தான் செய்வானே-10-6-4-

ஹிருதயத்திலே இருந்து என்னை உபகரணமாகக் கொண்டு இஸ் சம்சாரத்திலே இப்படி விலக்ஷணமான திருவாய் மொழியை அருளிச் செய்து -ஆஸ்ரிதனான ஸ்ரீ ப்ரஹ்லாத ஆழ்வானுக்காக வலிய நெஞ்சை யுடையனான ஹிரண்யனுடைய மார்வைப் பிளந்த திரு வாட்டாற்றில் எம்பெருமான் –பீஷ்மாதி ராஜாக்கள் அஞ்சும் படி பாரத ஸமரத்திலே ஆயுதம் தொடேன்  என்று ப்ரதிஜ்ஜை பண்ணி வைத்து ஆஸ்ரிதரான பாண்டவர்களுக்காக அசத்திய ப்ரதிஜ்ஜனாய் ஆயுதத்தை எடுத்தான் -எம்பெருமான் என்றால் உகக்கும் நெஞ்சே -நமக்கு நாதனான தான் நம் அபேக்ஷிதங்கள் எல்லாம் செய்யும் –

————————————————————–

அவன் பிரசாதத்தாலே ஆஸ்ரிதர்க்கு திரு நாட்டுக்குப் போகைக்கு வைத்த -அர்ச்சிராதி கதியாலே போகவும் பெறா நின்றேன் -பெரிய திருவடி மேலே இருக்குமா போலே அவன் திருவடிகள் என் தலை  மேலே இருக்கவும்  பெற்றேன் -என்று ப்ரீதர் ஆகிறார் –வழி –என்று உபாயம் ஆகவுமாம் –

வான்  ஏற வழி தந்த வாட்டாற்றான் பணி வகையே
நான் ஏறப் பெறுகின்றேன் நரகத்தை நகு நெஞ்சே
தேன் ஏறு மலர்த் துளவம் திகழ் பாதன் செழும் பறவை
தான் ஏறித் திரிவான தாளிணை என் தலை மேலே-10-6-5-

நரகத்தை நகு நெஞ்சே-நெஞ்சே அவனைப் பிரிந்து இருக்கை யாகிற நரகத்தை நகு –நரகம் -என்று சம்சாரம் ஆகவுமாம் -/ தேன் ஏறு மலர்த் துளவம் திகழ் பாதன்-தேன் மிகா நின்றுள்ள திருத்த துழாயாலே அலங்க்ருதமான திருவடிகளை யுடையவன் –

———————————————————-

திருக் கண்களின் அழகைக் காட்டி என்னை அடிமை கொண்டு என் ஹிருதயத்தில் நின்றும் ஒரு காலும் போகிறிலன் -அவன் திருவடிகளைக் குறுகப் பெற்றேன் என்று ப்ரீதர் ஆகிறார் –

தலை  மேலே தாளிணைகள் தாமரைக் கண் என் அம்மான்
நிலை பேரான் என் நெஞ்சத்து எப்பொழுதும் எம்பெருமான்
மலை மாடத்து அரவணை மேல் வாட்டாற்றான் மதம் மிக்க
கொலையானை மருப்பு ஒசித்தான் குரை கழல்கள் குறுகினமே–10-6-6-

கொலையானை மருப்பு ஒசித்தான்-தம்முடைய பிரதிபந்தகத்தைப் போக்கினை படி / குரை கழல்கள் -சிறு சதங்கைகளாலே த்வநிக்கிற திருவடிகள் –

——————————————————————–

எம்பெருமான் சபரிகரமாக வந்து என்னுள்ளே புகுந்து அருளினான் -அத்தாலே என் உடம்பு நிரந்தரமாக த் திருத் துழாய் நாறா நின்றது -என்கிறார் –

குரை  கழல்கள் குறுகினம் நம் கோவிந்தன் குடி கொண்டான்
திரை குழுவு கடல் புடை சூழ் தென்னாட்டுத் திலதம் அன்ன
வரை குழுவு மணி மாடம் வாட்டாற்றான் மலர் அடி மேல்
விரை குழுவு நறுந்துளவம் மெய்ந்நின்று கமழுமே–10-6-7-

 நம் கோவிந்தன்–ஆஸ்ரித ஸூ லபனான கிருஷ்ணன் -திரை மிக்க கடல் அருகே சூழ்வதும் செய்து -தென்னாட்டுக்கு ஒரு திலகம் போலேயாய்-மலைகள் திரண்டால் போலே இருக்கிற அழகிய மாடங்களை யுடைய திரு வாட்டாற்றில் எம்பெருமானுடைய திருவடிகளிலே பரிமளம் மிக்கு இருந்துள்ள  நல்ல செவ்வித் திருத் துழாய் –

———————————————————————

அத்யந்த விலஷணனான திரு வாட்டாற்றிலே எம்பெருமான் என் ஹிருதயத்திலே  ஸூலபனாய்  புகுந்து உஜ்ஜவலன் ஆகைக்கு நான் என்ன நன்மை செய்தென் -என்கிறார்  –

மெய்ந்நின்ற கமழ் துளவ விரை ஏறு திரு முடியன்
கைந்நின்ற சக்கரத்தன் கருதுமிடம் பொருது புனல்
மைந்நின்ற வரை போலும் திரு உருவ வாட்டாற்றாற்கு
எந்நன்றி செய்தேனோ என்நெஞ்சில் திகழ்வதுவே–10-6-8-

திரு மேனி எல்லாம் நின்று கமழ்கிற திருத் துழாயினுடைய பரிமளம் பரம்பா நின்றுள்ள திரு முடியை யுடையனாய் –திரு உள்ளமான இடத்திலே சென்று யுத்தம் பண்ணி மீண்டு வந்து திருக் கையிலே இருக்கும் திரு வாழி யை யுடையனாய் புனல் போலேயும் மை நின்ற வரை போலேயும் இருக்கிற திரு உருவை யுடைய திரு வாட்டாற்றிலே எம்பெருமானுக்கு –

——————————————————————

அத்யந்த பரி பூர்ணனான தான் இகழ்வின்றிக்கே  என் நெஞ்சத்து எப்பொழுதும் பிரியாது இரா நின்றான் -ஒருவனுடைய வ்யாமோஹமே -என்று ப்ரீதர் ஆகிறார் –

திகழ்கின்ற  திரு மார்வில் திரு மங்கை தன்னோடும்
திகழ்கின்ற திருமாலார் சேர்விடம் தண் வாட்டாறு
புகழ்கின்ற புள்ளூர்தி போர் அரக்கர் குலம் கெடுத்தான்
இகழ்வு இன்றி என் நெஞ்சத்து எப்பொழுதும் பிரியானே–10-6-9-

விளங்கா நின்ற திரு மார்விலே இருக்கிற பெரிய பிராட்டியாரோடும் கூட விளங்கா நின்றுள்ள திரு மாலார் சேரும் ஸ்தானம் -ஸ்ரமஹரமான திருவட்டாறு -புகழுக்கு எல்லாம் ஸ்தானமான பெரிய திருவடியை தனக்கு வாஹனமாக யுடையானுமாய் -பேறு மிடுக்கரான ராக்ஷஸ குலத்தை கெடுத்தவன் –

——————————————————————-

மஹாத்மாக்கள் சிலரை விஷயீ கரிக்கப் புக்கால் ஒருவருக்கும் கிடையாத சீரிய பொருளை -அவர்கள் அளவும் பாராதே கொடுப்பர் -என்னும் இவ்வர்த்த ஸ்திதியை  -வரி வாள்வாய் அரவணை மேல் வாட்டற்றான் -என் பக்கல் காட்டி அருளினான் -என்கிறார் –

பிரியாது  ஆட்செய்து என்று பிறப்பறுத்து ஆள் அறக் கொண்டான்
அரியாகி இரணியனை ஆகம் கீண்டான் அன்று
பெரியார்க்கு ஆட்பட்டக் கால் பெறாத பயன் பெறுமாறு
வரி வாள்வாய் அரவணை மேல் வாட்டற்றான் காட்டினனே-10-6-10-

எனக்காக ஹிரணியனுடைய ஹ்ருதயத்தை பிளந்தான் அன்று –இன்று எனக்கே ஆட் செய் என்று ஏம்மா வீட்டிலே நான் பிரார்த்தித்த படியே என்னை அடிமை கொண்டான் —
வாள்--ஓளி / உபய விபூதியிலும் தம்மை ஒழிய திருவாய் மொழி பாடப் பெற்றார் இல்லை -என்று இவருக்கு கருத்து –

————————————————————–

நிகமத்தில் அயர்வறும் அமரர்கள் இத்திருவாய் மொழியைக் கேட்டால் வித்ருஷ்ணர் ஆவர் என்கிறார் -அனுபவிக்க உரியர் நித்ய ஸூரிகள் என்கிறார் –

காட்டித்  தன் கனை கழல்கள் கடு நரகம் புகல் ஒழித்த
வாட்டாற்று எம் பெருமானை வளம் குருகூர்ச் சடகோபன்
பாட்டாய தமிழ் மாலை ஆயிரத்துள் இப்பத்தும்
கேட்டு ஆரார் வானவர்கள் செவிக்கு இனிய செஞ்சொல்லே–10-6-11-

தன் திருவடிகளைக் காட்டித் தன்னைக் காணப் பெறாதே நான் பட்ட மஹா துக்கத்தைப் போக்கின திரு வாட்டாற்று எம்பெருமானை -சம்ருத்தமான திரு நகரியை யுடைய ஆழ்வாருடைய இசையோடு கூடின தமிழ்த் தொடையான ஆயிரம் திருவாய் மொழியிலும் செவிக்கு இனிதாய் செவ்விய சொல்லான இத்திருவாய் மொழியை —

———————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

திருவாய்மொழி இருபத்து நாலாயிரப்படி –10–5- –

October 28, 2016

பக்தியானது ஸ்வ சாத்யத்தோடே பொருந்தினபடியை அருளிச் செய்தார் கீழ் –
-பக்தியோக பிரகாரம் எங்கனே இருக்கும் படி என்று அறிய வேணும் என்று இருப்பார் இழக்க ஒண்ணாதே என்று பார்த்து அருளி
பக்திக்கு ஆலம்பமான திரு மந்த்ரத்தை உபதேசித்து -இதனுடைய அர்த்த அனுசந்தானமே மோக்ஷ ஹேது என்று
-அது அடியாக மநோ வாக் காயங்களை ப்ரவணமாக்கி புஷ்பாதி உபகரணங்களைக் கொண்டு ஆராதியுங்கோள்-
ஸ்ரீ யபதி யாகையாலே ஸ்வாராதன் -நீங்கள் இதிலே இழியவே விரோதி வர்க்கம் தானாகவே போம் –
-இப்படி தன்னோடு பரிமாறுவார்க்கு ஸூலபனாம் -அதில் இழி யும் இடத்து அதிகாரம் சம்பாதிக்க வேண்டா –
-ருசியே அமையும் -என்று உபதேசிக்கையிலே ஒருப்பட்டு-
ஈஸ்வரன் தம்மை பரம பதத்தில் கொடு போகையில் முடுகுகிற படியாலும் உபதேசிக்கிற இவர்களுக்கு
பிரதிபத்தி விஷயமாகவும் பாசுரம் சுருக்கக் கொண்டு உபதேசித்து இத்தோடே பரோபதேசத்தைத் தலைக் கட்டுகிறர் –

———————————————————————

பக்தி உக்தராய்க் கொண்டு அவனை அனுசந்திப்பார்க்கு ஆலம்பமான திரு மந்த்ரம் இன்னது என்கிறது –

கண்ணன் கழலிணை-நண்ணும் மனம் உடையீர்
எண்ணும் திருநாமம்-திண்ணம் நாரணமே–10-5-1-

கண்ணன் கழலிணை—விபக்ருஷ்டமான பரம பதத்தில் இருக்கை இன்றிக்கே -இங்கே வந்து அவதரித்து -அதிலும் அதிகாரம் ஆராய்க்கைக்கு வசிஷ்டாதிகளும் வாசல் காப்பாரும் இன்றிக்கே -சர்வ ஸூ லபனான கிருஷ்ணன் திருவடிகளை -/ கழலிணை–தூது போதல் -சாரத்யம் பண்ணுதல் -செய்யும் திருவடிகளை –
நண்ணும் மனம் உடையீர்–நண்ணுகை -கிட்டுகை –பிரிந்து போந்து கிட்டினரைப் போலே போக்கிய வஸ்துவாய் இருக்கிறபடி –/ நண்ணும் மனம் உடையீர்-நிதி யுடையவர்கள் என்னுமா போலே –இச்சை தானே குவாலாய் இருக்கிறபடி -இதுக்கு ஒரு அதிகாரம் சம்பாதிக்க வேண்டா -இச்சையே வேண்டுவது -விலக்ஷண புருஷார்த்தமாய் இருக்க ருசி மாத்திரமே அமையும் ஆகிறது -இதுக்கு சத்ருசமான அதிகாரம் சம்பாதிக்க ஒண்ணாமையாலும் ப்ராப்த விஷயம் ஆகையால் அதிகார அபேக்ஷை இல்லாமையாலும் —/ கண்ணன் கழலிணை–என்று தாமோதரன் தாள்கள் சார்வே -என்றத்தை அனுபாஷிக்கிறார்
எண்ணும் திருநாமம்–எப்போதும் அநுஸந்திக்கும் திரு நாமம் -மந்த்ரம் என்னாதே திரு நாமம் என்கிறது -அதிகாரி நியதி யாதல் –அங்க நியதி யாதல் -வேண்டா என்கைக்காக -மாத்ரு நாம க்ரஹணத்துக்கு அதிகாரமும் வேண்டா -சரசமுமாய் இருப்பது -அது தான் ஏது என்னில்
நாரணமே–-அவதாரணத்தாலே இவ்வளவே பூர்ணம் என்கை -ப்ரணவத்தையும் நமஸ்ஸையும் சதுர்த்தியும் ஒழியவே பூர்ணம் -என்கை –அங்கம் தப்பிற்று -ஸ்வரம் தப்பிற்று -நீ ப்ரஹ்ம ராக்ஷசனாய்ப் பிற -என்னுமதில் வியாவ்ருத்தி சொல்லிற்று
திண்ணம் –பெறுகிற பேற்றின் கணத்துக்கு போருமோ-என்ன வேண்டா -நிச்சிதம் –சத்யம் சத்யம் —

————————————————————–

இரண்டாம் பட்டாலும் மூன்றாம் பட்டாலும்  இதனுடைய அர்த்தத்தைச் சொல்லுகிறது -இது ப்ரஸ்துதமான இடங்களில் அர்த்தத்தைச் சொல்லக் கடவதாய் இருப்பது ஒரு நியதி உண்டு இ றே இவர்க்கு –

நாரணன் எம்மான் பாரணங்கு ஆளன்
வாரணம் தொலைத்த காரணன் தானே–10-5-2-

நாரணன்-சப்த உபாதானம் / எம்மான் –எனக்கு ஸ்வாமி யானவன் /பாரணங்கு ஆளன்–பூமிக்கு அபிமானிநியான நாயகன் ஆனவன் – வாரணம் தொலைத்த காரணன் தானே–ஆஸ்ரித விரோதி நிரசன ஸ்வ பாவனாய் –சர்வ காரணமாய் இருக்கிறான் கிருஷ்ணன் தான் —-எம்மான் -என்கிறது சம்சார விபூதிக்கு உப லக்ஷணம் –பாரணங்கு ஆளன்-என்கிறது நித்ய விபூதிக்கு உப லக்ஷணம் -வாரணம் தொலைத்த காரணன்-என்கிறது திரு அவதாரங்கள் எல்லாவற்றுக்கும் உப லக்ஷணம் –

————————————————————-

ஸ்வாமித்வ ப்ரயுக்தமான சர்வ வித ரக்ஷணங்கள் பண்ணும் படி சொல்லுகிறது –

தானே உலகு எல்லாம் தானே படைத்து இடந்து
தானே உண்டு உமிழ்ந்து தானே ஆள்வானே–10-5-3-

தானே உலகு எல்லாம்–சர்வம் கலவிதம் ப்ரஹ்ம -என்கிற படியே தான் என்கிற சொல்லுக்குள்ளே சர்வமும் -தஜ்ஜலா நிதி -என்று சாமா நாதி கரண்யத்துக்கு நிபந்தனம் சொன்னால் போலே -இங்கு சாமா நாதி கரண்யத்துக்கு ஹேது சொல்கிறது மேல் –
தானே படைத்து–தம –ஏகீ பவதி–என்கிறபடியே ஸூ ஷ்ம சித் அசித் சரீரனான தானே சர்வ லோகங்களையும் யுண்டாக்கி –அசித விசேஷிதமான தசை யாகையாலே -அபேக்ஷிப்பாரும் இன்றிக்கே இருக்க தயமான மானாவாய்த் தானே இ றே ஸ்ருஷ்ட்டித்தான் –
தானே இடந்து–பிரளயங்கதையான பூமி -என்னை உத்தரிப்பிக்க வேணும் -என்ன வன்று இ றே நஷ்ட உத்தரணம் பண்ணிற்று –
தானே உண்டு–பிரளயம் வரப் புகா நின்றது -என்று அறிவார் இல்லையே
தானே உமிழ்ந்து –புறப்பட விட வேணும் -என்று அர்த்தியாது இருக்க -தானே உமிழ்ந்த படி –
தானே ஆள்வானே–சர்வ பிரகாரங்களாலும் ரஷிக்கையாலே -தானே உலகு எல்லாம் –

——————————————————————

ஆபோ நாரா –என்கிற வழி யாலே திருமந்த்ரார்த்தை நிர்வசித்து -அவ்வழியாலே திருமந்திரத்தை சொல்லிக்     கொண்டு புஷபஞ்சாலி பண்ணி ஆஸ்ரயிங்கோள் என்கிறார் –

ஆள்வான் ஆழி நீர்க் கோள்வாய் அரவு அணையான்
தாள்வாய் மலர் இட்டு நாள்வாய் நாடீரே-10-5-4-

ஆள்வான் ஆழி நீர்க்–ஆழி நீர் -ஆள்வான்–காரண ஜலத்திலே ஸ்ருஷ்ட்டி உன்முகனாக கண் வளர்ந்து அருளி அத்தசையிலே சேதன சமஷ்டியை ரஷித்தவன் –
கோள்வாய் –மிடுக்கு யுடைய வாய் என்னுதல் –பிரதி கூலர்க்கு மிருத்யுவான வாய் என்னுதல்
அரவு அணையான்–தாள்வாய் மலர் இட்டு நாள்வாய் நாடீரே-ஆஸ்ரித ஸூ லபன் ஆகையால் ஸ்வாராதனுடைய திருவடிகளிலே செவ்வித் பூவை பணிமாறி நாள் தோறும் ஆஸ்ரயிங்கோள் -இப்படிச் செய்ய ஸ்வரூப அனுரூபமான பேறு நிச்சிதம் -என்கிறார் –

——————————————————————–

இப்படி செவ்வி மாறாத புஷ்ப்பத்தைக் கொண்டு அவன் திரு நாமத்தை ஹர்ஷத்துக்கு போக்கு வீடாக சொல்லுங்கோள் –அப்படிச் செய்யவே ஸ்வரூப அனுரூபமான வ்ருத்தியைப் பெறலாம் -என்கிறார்

நாடீர் நாள் தோறும் வாடா மலர் கொண்டு
பாடீர் அவன் நாமம் வீடே பெறலாமே–10-5-5-

ப்ரீதி பூர்வகமான வ்ருத்திக்கு கால நியதி இல்லை -உங்கள் அபி நிவேசத்துக்கு அனுரூபமான வி லக்ஷண புஷ்பத்தைக் கொண்டு அவன் திரு நாமத்தை ஹர்ஷத்துக்கு போக்கு வீடாக சொல்லுங்கோள் -இப்படிச் செய்யவே ஸ்வரூப அனுரூபமான வ்ருத்தியைப் பெறலாம் -அங்கு சூட்டு நன் மாலைகளைக் கொண்டு ஆராதிக்கையும் -அஹம் அன்னம் அஹம் அன்னம் -என்னும் பாட்டுமாய் இ றே இருப்பது –

———————————————————————

ஆஸ்ரயணீயனைக் கண்டு ஆஸ்ரயிக்க வேண்டாவோ -என்ன பிற்பாடரான நமக்காகத் திரு மலையிலே நின்று அருளினான் -அவனை ஆஸ்ரயிங்கோள் என்கிறார் –

மேயான் வேங்கடம் காயா மலர் வண்ணன்
பேயார் முலை உண்ட வாயான் மாதவனே–10-5-6-

உங்களை ஆஸ்ரயிப்பித்துக் கொள்ளுகைக்குத் திருமலையில் பொருந்தி வர்த்திக்கிறவன் -ஆஸ்ரயணத்திலே இழிந்தாரை கொண்டு முழுகும் வடிவை யுடையவன் -விரோதி வர்க்கம் செய்யுமது என் என்னில் அது பூதனை பட்டது படும் அத்தனை -நம் பூர்வ வ்ருத்தம் பாராதே ரஷிக்கைக்கு அருகே இருப்பாரும் யுண்டு –

——————————————————————-

ப்ரீதி பிரேரிதராய் ஆஸ்ரயிக்கவும் இனிமையோடே திரு நாமம் சொல்லவும் மாட்டாதார் -அந்தப்புர பரிகரமானார் சொல்லும் வார்த்தையைச்   சொல்ல -பூர்ண உபாசனத்திலே பலம் சித்திக்கும் -என்கிறார் –

மாதவன் என்று என்று ஓத வல்லீரேல்
தீது ஒன்றும் அடையா ஏதம் சாரவே-10-5-7-

ஸ்ரீ வல்லபன் என்னும் திரு நாமத்தை உங்களுக்கு ருசி இல்லையே யாகிலும் -பர பிரேரி தராய்க் கொண்டாகிலும் நிரந்தரமாகச் சொல்ல வல்லி கோளாகில் பூர்வாகங்கள் நசிக்கும் -உத்தராகங்கள் ஸ்லேஷியா – முன்புள்ள வற்றை மறக்கும் -பின்புள்ள வற்றில் நெஞ்சு செல்லாது –
கீழ்ச் சொன்ன திரு மந்த்ரமும் -இப்பாட்டில் சொன்ன ஸ்ரீமத் பதமும் தனித் தனியே பேற்றுக்கு பர்யாப்த்தமான பின்பு -இரண்டையும் சேர்த்துச் சொன்னவர்களுக்கு பேற்றுக்குச் சொல்ல வேண்டா இ றே –

———————————————————-

அதிகாரி நியதி இல்லை -ஆரேனுமாகத் திரு நாமத்தை நிரந்தரமாகச் சொல்லுவார் நித்ய ஸூரிகளோடு ஒப்பர்-என்கிறார் –

சாரா ஏதங்கள் நீரார் முகில் வண்ணன்
பேர் ஆர் ஓதுவார் ஆரார் அமரரே–10-5-8-

சாரா ஏதங்கள் –துக்கங்கள் நம்மை வந்து கிட்டப் பெறா–
நீரார் முகில் வண்ணன்–நீராலே பூர்ணமான மேகம் போலே இருக்கிற நிறத்தை யுடையவன் -அவ்வடிவைக் காணும் தனையும் இ றே உபதேசிக்க வேண்டுவது –
பேர் ஆர் ஓதுவார் -அவன் திரு நாமத்தை நிரந்தரமாகச் சொல்லுவார் யாவர் சிலர்
ஆரார் அமரரே–அவர்கள் ஏதேனும் ஜென்ம வ்ருத்தங்களை யுடையரே யாகிலும் அவர்கள் இருந்த படியே நித்ய ஸூரிகளோடு ஒப்பர்கள்-
இத்தால் ஆஸ்ரயிப்பார்க்கு ருசி பிறக்கைக்காக அவர்கள் ஏற்றம் அருளிச் செய்கிறார் –

———————————————————————–

ஜென்மாதிகள் அப்ரயோஜம் ஆனாலும் அநந்ய பிரயோஜனாக வேணுமே என்னில் -ஆப்த உபதேசத்தைப் பற்றி இழியவே-ப்ரயோஜனாந்தர பரதா ஹேதுவான பாபங்கள் தானே அகலும் -என்கிறார் –

அமரர்க்கு அரியானை தமர்கட்கு எளியானை
அமரத் தொழுவார்கட்கு அமரா வினைகளே–10-5-9-

அமரர்க்கு அரியானை –பிரயோஜனாந்தர பரர்க்கு துர்லபனானவனை -யான் நாயம் பகவான் ப்ரஹ்மா ஜாநாதி
தமர்கட்கு எளியானை-–அநந்ய பிரயோஜனர்க்கு ஸூலபனானவனை –ஸோ அப்ய கச்சத்–ஸூ க்ரீவம் சரணம் கத –இமவ் ஸ்ம முனிசார்த்தூல கிங்கரவ் –
ஞானாதிகரான ப்ரஹ்மாதிகளே யாகிலும் -ப்ரயோஜனாந்த பரர்க்கு துர்லபன்-
ஒரு வேடுவிச்சி யாகவுமாம் -ஒரு குரங்கு ஆகவுமாம் -ருஷி யாகவுமாம் –அவர்களுக்கு கையாளாய் இருக்கும் –
அமரத் தொழுவார்கட்கு அமரா வினைகளே–அநந்ய பிரயோஜனராய்க் கொண்டு ஆஸ்ரயிக்க இழியவே பிரயோஜனாந்தர ப்ராவண்யத்துக்கு அடியானை கர்மங்களானவை தானே போம் —

————————————————————-

அவ்வளவே அன்றிக்கே கைங்கர்ய பிரதிபந்தகங்களும் போம் -ஆனபின்பு அவனை ஆஸ்ரயிங்கோள் என்கிறார் –

வினை வல் இருள் என்னும் முனைகள் வெருவிப் போம்
சுனை நல் மலர் இட்டு நினைமின் நெடியானே–10-5-10-

வினை வல் இருள் என்னும் முனைகள்வினை -கர்மம் –/ வல்லிருள்--பிரபலமான அஞ்ஞானம் –அதுக்கு அடியான தேக சம்பந்தம் -/ இவற்றைப் பற்றி வரும் ருசி வாசனைகள் ஆகிற இத் திரள்கள்
வெருவிப் போம்-நமக்கு இது நிலம் அன்று -என்று பீதமாய்ப் போம் —
சுனை நல் மலர் இட்டு நினைமின் –அழகிய செவ்விப்பூவை திருவடிகளிலே பரிமாற நினையுங்கோள் –
நெடியானே-எல்லாம் செய்தாலும் -ருணம் ப்ரவ்ருத்தம் இவ மே–என்று இருக்குமவன் –ஸ்மர்த்தா என்கிறபடியே -இவன் ஒரு கால் நினைக்க -அஹம் ஸ்மராமி-என்று என்றும் ஓக்க நினைக்குமவன் –

——————————————————————

நிகமத்தில் இப்பத்தும் -அப்யசித்தவர்களை -ஆழ்வார் தம்மைப் போலே பகவத் விஷயீ கார பாத்திரம் ஆக்கும் என்கிறார் –

நெடியான் அருள் சூடும் படியான் சடகோபன்
நொடி ஆயிரத்து இப்பத்து அடியார்க்கு அருள் பேறே–10-5-11-

நெடியான் அருள் சூடும் படியான் சடகோபன்--சர்வேஸ்வரனுடைய பிரசாதங்களுக்கு எல்லாம் பாத்ர பூதராகையாலே -அதுவே ஸ்வ பாவமான ஆழ்வார் –ஆற்ற நல்ல வகை காட்டும் -என்று சாத்மிக்க சாத்மிக்க அனுபவிக்கும் அளவன்றிக்கே-இப்போது அவன் கொடுத்த அருள் எல்லாம் கொண்டு தரித்து நின்று அனுபவிக்க வல்லராகை-
நொடி ஆயிரத்து இப்பத்து அடியார்க்கு அருள் பேறே––நொடித்தல் -சொல்லுதல் / அடியார்க்கு–அப்யஸிக்க வல்லார்க்கு / அருள் பேறே––பிரசாத லாபம் / நெடியோன் அருள் சூடும் படியான்-என்ற இவர் பேற்றைப் பண்ணிக் கொடுக்கும் –

————————————————————-

கந்தாடை     அப்பன் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

திருவாய்மொழி ஒன்பதினாயிரப்படி –10-5–

October 28, 2016

பக்தி யோகத்தை நியமித்த பின்பு -பக்தி யோகப் பிரகாரம் எங்கனே என்று அறிய வேண்டி இருப்பார் இழக்க ஒண்ணாது என்று பார்த்து அருளி
அதுக்கு ஆலம்பமான திரு நாமத்தை உபதேசித்து -இத்தை அனுசந்தித்து -அதில் சொல்லுகிறபடியே மநோ வாக் காயங்களை –
ஸ்ரீ யபதி பக்கலிலே பிரவணம் ஆக்கி -ப்ரீதி பூர்வகமாக புஷ்பாத் உபகரணங்களைக் கொண்டு நிரந்தர சமாராதானம் பண்ண
அதுக்கு உண்டான விக்னங்கள் எல்லாம் தானே போக்கி அருளி இவனையிட்டு ஆராதிப்பித்துக் கொள்ளும் -என்று கீழ் பல இடத்திலும்
ப்ரஸ்துதமான பக்தி யோக ஸ்வரூபத்தை அருளிச் செய்து -எம்பெருமான் தம்மை திரு நாட்டுக்கு கொடு போக முடுகிறமையை அனுசந்தித்து
பின்னை அவசரம் இல்லை -என்று இத்தோடே பரோபதேசத்தைத் தலைக் கட்டுகிறார் –

———————————————————–

கண்ணன் கழலிணை-நண்ணும் மனம் உடையீர்
எண்ணும் திருநாமம்-திண்ணம் நாரணமே–10-5-1-

கிருஷ்ணன் திருவடிகளை சேர்க்கைக்கு இச்சை யுடைய நீங்கள் அநுஸந்திக்கும் திரு நாமம் நாரணன் என்னும் இதுவே -இது நிச்சிதம் -மந்த்ரம் என்னாதே நாமம் என்கிறது -நியமங்கள் வேண்டா என்னுமத்தை ஸூசிப்பிக்கிறது -நாரணன் என்கிற பதத்தில் சதுர்த்தியையும் நமஸ் ஸை யும் தவிர்ந்து -இல்லாத மகாரத்தைக் கூட்டிக் கொள்ளுகையாலே -புறம்பில் மந்திரங்களில் தப்பானவை இம் மந்திரத்தின் பிரபாவத்தாலே தப்பாகாது -என்று கருத்து –

—————————————————————–

நாரணன் எம்மான் பாரணங்கு ஆளன்
வாரணம் தொலைத்த காரணன் தானே–10-5-2-

நாராயணானவன் -எனக்கு ஸ்வாமி யுமாய்-ஸ்ரீ பூமிப பிராட்டிக்கு நாயகனுமாய் -ஆஸ்ரித விரோதி நிரசன ஸ்வ பாவனுமாய் -சர்வ காரணமான கிருஷ்ணன் —எம்மான் -என்கிறது சம்சார விபூதிக்கு உப லக்ஷணம் –பாரணங்கு ஆளன்-என்கிறது நித்ய விபூதிக்கு உப லக்ஷணம் –வாரணம் தொலைத்த காரணன்-என்கிறது திரு அவதாரங்கள் எல்லாவற்றுக்கும் உப லக்ஷணம் –

————————————————————————–

தானே உலகு எல்லாம் தானே படைத்து இடந்து
தானே உண்டு உமிழ்ந்து தானே ஆள்வானே–10-5-3-

எல்லா லோகங்களினுடைய ஸ்ருஷ்டியாதிகளையும் தானே பண்ணி -தானே அவற்றை ஆள்கையாலே அந்த லோகங்கள் ஆகிறான் தானே –ஆக இரண்டாம் பட்டாலும் மூன்றாம் பட்டாலும் திரு மந்த்ரார்த்தத்தைச் சொல்லிற்று –

—————————————————————

ஆள்வான் ஆழி நீர்க் கோள்வாய் அரவு அணையான்
தாள்வாய் மலர் இட்டு நாள்வாய் நாடீரே-10-5-4-

ஆபோ நாரா –என்கிற வழி யாலே திருமந்த்ரார்த்தை நிர்வசியா   நின்று கொண்டு -எம்பெருமான் திருவடிகளிலே இத்திரு மந்த்ரத்தைச் சொல்லிக் கொண்டு -நல்ல செவ்வித் பூவை பணிமாறி நாள் தோறும் ஆஸ்ரயிங்கோள் -என்கிறார் —கோள்வாய் –-பிரதி கூலர்க்கு ம்ருத்யுவாய் இருந்துள்ள வாய் –

——————————————————————-

நாடீர் நாள் தோறும் வாடா மலர் கொண்டு
பாடீர் அவன் நாமம் வீடே பெறலாமே–10-5-5-

நாள் தோறும் செவ்வித் பூவைக் கொண்டு அவனை ஆஸ்ரயித்து அவன் திரு நாமத்தை ப்ரீதி பூர்வகமாகச் சொல்ல அவன் திருவடிகளை பெறுகை நிச்சிதம் -என்கிறார் –

————————————————————————-

மேயான் வேங்கடம் காயா மலர் வண்ணன்
பேயார் முலை உண்ட வாயான் மாதவனே–10-5-6-

ஆஸ்ரயணீயனாகச் சொல்லுகிற எம்பெருமானைக் கண்டால் அன்றோ ஆஸ்ரயிக்கலாவது என்னில் –ஆஸ்ரிதற்காக கிருஷ்ணனாய் வந்து திருவவதாரம் பண்ணி யருளி பிரதிகூல நிரசன ஸ்வ பாவனாய்  ஸ்ரமஹரமான திரு நிறத்தையும் யுடையனான ஸ்ரீ யபதியானவன்–ஆஸ்ரயிப்பார்க்காக எளிதாகத் திருமலையில் வந்து நின்று அருளினவன் -அவனை ஆஸ்ரயுங்கோள் -என்கிறாள் –

————————————————————-

மாதவன் என்று என்று ஓத வல்லீரேல்
தீது ஒன்றும் அடையா ஏதம் சாரவே-10-5-7-

பக்தி யோகம் பூர்ணமாக அனுஷ்டிக்கவும் இனிமையோடு திரு நாமம் சொல்லவும் மாட்டி கோளாகில்-பெற்றதே உடலாகக் கொண்டு அனுக்ரஹம் பண்ணும் ஸ்வ பாவையான பெரிய பிராட்டியாருக்கு வல்லபன் ஆனவனுடைய மாதவன் என்னும் திரு நாமத்தைப் பர பிரேரிதராய்க் கொண்டாகிலும் நிரந்தரமாக உச்சரிக்க வல்லி கோளாகில் பண்டு பண்ணின பாபங்கள் நசிக்கும்–மேல் செய்யும் பாபங்கள் உங்களோடு சம்பவியா வென்கிறார் –

——————————————————————

சாரா ஏதங்கள் நீரார் முகில் வண்ணன்
பேர் ஆர் ஓதுவார் ஆரார் அமரரே–10-5-8-

நீராலே பூர்ணமான மேகம் போலே இருந்த திரு நிறத்தை யுடைய எம்பெருமானுடைய திரு நாமத்தை நிரந்தரமாகச் சொல்லுவார் யாவர் சிலர் -அவர்கள் ஏதேனும் -தண்ணிய ஜென்ம வ்ருத்தங்களை யுடையரே யாகிலும் -அயர்வறும் அமரர்களோடு ஒப்பர்கள் என்று ஆஸ்ரயிப்பார்க்கு ருசி உத்பாதன அர்த்தமாக அவர்களுடைய சிலாக்யதையை யருளிச் செய்கிறார் –

——————————————————————-

அமரர்க்கு அரியானை தமர்கட்கு எளியானை
அமரத் தொழுவார்கட்கு அமரா வினைகளே–10-5-9-

பிரயோஜனாந்தர பரர்க்கு–துர்லபனாய் -அநந்ய பிரயோஜனர்க்கு ஸூ லபனாய் இருக்கிறவனை -அநந்ய பிரயோஜனரைத் தொழ -ப்ரயோஜனாந்தர ப்ராவண்யம் தானே போம் -என்கிறார் –

—————————————————————–

வினை வல் இருள் என்னும் முனைகள் வெருவிப் போம்
சுனை நல் மலர் இட்டு நினைமின் நெடியானே–10-5-10-

பகவத் கைங்கர்ய பிரதிபந்தகங்களாய் மிக்கு இருந்துள்ள அஞ்ஞான அவச நாதிகள் பீதமாய் தானே போம் –ஆஸ்ரித விஷயத்தில் எல்லா உபகாரங்களையும் பண்ணினாலும் -ஒன்றும் செய்யப் பெற்றிலோம் -என்று இருக்கும் ஸ்வ பாவனானவனை -அழகிய செவ்வித் பூக்களைத் திருவடிகளிலே பணிமாறி நினையுங்கோள் -என்கிறார் –

—————————————————————-

நெடியான் அருள் சூடும் படியான் சடகோபன்
நொடி ஆயிரத்து இப்பத்து அடியார்க்கு அருள் பேறே–10-5-11-

நிகமத்தில் -சர்வேஸ்வரனுடைய அருளுக்கு எல்லாம் பாத்ரபூதராகையே ஸ்வ பாவமான ஆழ்வாருடைய உக்தியான
ஆயிரம் திருவாய் மொழியிலும் இத் திருவாய் மொழியானது அப்யசித்தவர்களை பகவத் விஷயீ கார பாத்ரமாக்கும் -என்கிறார் –

——————————————————————-
ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-