Archive for September, 2016

திருவாய்மொழி இருபத்து நாலாயிரப்படி –6-7–

September 30, 2016

கீழ் மோஹங்கதையான பிராட்டி -சிரேண சம்ஜ்ஞாம் ப்ரதி லப்ய-என்று காலம் உணர்த்த உணர்ந்து -அநந்தரம்
அவனைக் காணப் பெறாமையாலே -அவனைக் கண்டு அல்லது தரிக்க மாட்டாத தசை பிறந்து -பந்துக்களையும் தன்னுடைய லீலா பரிகரங்களையும்
பொகட்டுத் தன் மரியாதைகளையும் அதி லங்கித்து தனி வழியே திருக் கோளூர் ஏறப் போனாள் –
திருத் தாயார் வளை இழந்தாள் நிறம் இழந்தாள் -என்று கூப்பிட்டு சோக நித்ரா விஷடையாய்க் கிடந்தவள் உணர்ந்து
-இவளைத் தன் மாளிகையில் காணாமையாலே எங்கே போனாள் என்று விசாரித்து இங்கு இருந்த போதும் அவனையே போது போக்கி
இருக்கக் காண்கையாலே-திருக் கோளூரிலே போனாள் -என்று நிச்சயித்து -ம்ருது பிரக்ருதியாய் அதின் மேலே விரஹ தூர்பலையாய் இருக்கிற இவள்
-அவ் வூர் தனி வழியே எங்கனம் போகிறாள் -சென்றால் தான் அவ் வூரையும் அவனையும் கண்டு எங்கனே உடை குலையப் படுகிறாள் என்று
தன் மகள் அவசாதத்தாலும் -தான் அவளை பிரிகையாலும் மிகவும் நோவு பட்டுக் கூப்பிடுகிறாள் -இங்குப் பொருந்தாமையும்
-அங்குப் புக்கு அல்லது தரிக்க மாட்டாமையும் தனி வழியே போகையும்-பழிக்கு அஞ்சாமையும் –
இவை இ றே கீழில் திருவாய் மொழியில் காட்டில் இதுக்கு ஏற்றம் -அவனைப் பார்த்து இலள்-தன்னைப் பார்த்து இலள்
–என்னைப் பார்த்து இலள் -தனி வழியே போய் இத்தை எல்லாம் கடலிலே கவிழ்த்தாள் என்கிறாள் –
அல்ப சராசரங்கள் இவை சுவைத்து அகன்று ஒழிந்தேன் என்று சப் தாதி விஷயங்களில் கை கழிய போந்தேன் என்றவர்
-பகவத் விஷயத்தில் கை கழிய போனபடி சொல்லுகிறது -நித்ய சித்தருடைய யாத்திரை சம்சாரத்தில் இவர்க்குப் பிறந்த படி சொல்லுகிறது –

——————————————————————-

தன் மகள் ஆகையாலும் அவள் தன் ஸ்வ பாவத்தாலும் இவள் இங்கு நின்று போய்ப் புகுமூர் திருக் கோளூர் என்று அத்யவசிக்கிறாள் –

உண்ணுஞ்  சோறு பருகுநீர் தின்னும்வெற்றிலையு மெல்லாம்
கண்ணன்எம் பெருமான் என்றென்றே கண்கள் நீர்மல்கி
மண்ணினுள் அவன் சீர்வளம் மிக்கவன் ஊர்வினவித்
திண்ணம் என்இளமான் புகுமுர் திருக்கோளூரே.–6-7-1-

உண்ணுஞ் சோறு பருகுநீர் தின்னும்வெற்றிலையு மெல்லாம்-கண்ணன்எம் பெருமான்
ஜீவித்து அல்லது தரிக்க ஒண்ணாத சோறு -தாஹித்தால் பானம் பண்ணி யல்லது நிற்க ஒண்ணாத தண்ணீர் -தின்றால் அல்லது புஷ்டனாக விரகு இன்றிக்கே இருக்கும் வெற்றிலையும் -தாரக போஷக போக்யம் ஆனவை எல்லாம் எனக்கு நாதனான கிருஷ்ணன் -வாஸூ தேவஸ் சர்வம் -என்று ஆயிற்று இவள் இருப்பது
என்றென்றே கண்கள் நீர்மல்கி-
இடைவிடாமல் இப்படியே சொல்லி -அவளைக் காணப் பெறாமையாலே கண்கள் சோகா ஸ்ருவாலே நிரம்பி -அவ்விஷயத்தை இடைவிடாமல் அனுசந்தித்து -ஸ்மர்த்தவ்ய விஷய சாரஸ்யத்தாலே-ஆஹ்லாத சீத நேத்ராம்பு -என்கிறபடியே ஆனந்தா ஸ்ருவாலே நிரம்பி என்னவுமாம் –
மண்ணினுள் அவன் சீர்வளம் மிக்கவன் ஊர்வினவித்
உகந்து அருளின நிலங்களிலே ப்ரவணை யாகையாலே விண்ணில் போகாள் என்று இருக்கிறாள் –சீர் -என்கிறது ஸுசீல்யாதிகளை-அவை ஸ் புடமாக அனுபவிக்க லாவது இங்கேயே –பரமபதத்தில் குண ஸத்பாவம் இ றே உள்ளது -வ ளம் மிக்கவன்-சம்பன்னமானவன் -ப்ரணய தாரையிலே விதக்தனானவன்
ஊர்-பரமபதம் கலவிருக்கை என்னும் படி விரும்பி வர்த்திக்கும் நத்தம் இது –வினவி –வழி க்கு பாதேயம் இருக்கும் படி -திருக் கோளூர் எங்கே என்னவும் –இங்கே என்னவும் இங்கேயோ என்று அனுபாஷிக்கையும் -இது இ றே வழி க்கு தாரகம்
திண்ணம் என்இளமான் புகுமுர் திருக்கோளூரே.–என் வயிற்றில் பிறப்பாலும்-இவள் படியாலும் இவள் புகுமூர் திருக் கோளூரே –இது ஸூ நிச்சிதம்
மரு பூமியிலே தண்ணீர் போலே இ றே சம்சாரத்தில் திருக் கோளூர்-

———————————————————————-

திருக் கோளூரிலே புக்க என் பெண் பிள்ளை மீள வருமோ -சொல்லி கோள் என்று பூவைகளை திருத் தாயார் கேட்க்கிறாள் –

ஊரும்  நாடும் உலகமும் தன்னைப் போலே அவனுடைய
பேரும் தார்களுமே பிதற்றக் கற்பு வான் இடறி
சேரும் நல் வளம் சேர் பழனத் திருக் கோளூர்க்கே
போருங்கொல் உரையீர் கொடியேன் கொடி பூவைகளே –6-7-2-

ஊரும் நாடும் உலகமும் தன்னைப் போலே –
தான் இருந்த ஊரும்-அத்தோடு சேர்ந்த நாடும் -அத்தோடு சேர்ந்த லோகமும் -ராமாவதாரத்திலும் ஒரு ஊர் இ றே திருந்திற்று -இங்கு லோகே அவ தீர்ண பாமர்த்த சமக்ர பக்தி யோகாயா -என்கிறபடியே யாயிற்று திருத்துகை –அங்கே பரம சாம்யா பன்னரைத் தேடித் போகிறாள் ஆகில் தான் திருத்தினார் ஆகாதோ –
அவனுடைய பேரும் தார்களுமே பிதற்றக் -அரவிந்த லோசனன் என்றும் -மட்டவிழ் தண்ணம் துழாய் -என்றும் விரை மட்டலர் தண் துழாய் -என்றும் சொல்லா நிற்கை -ப்ரீதி பிரேரிதராய் அக்ரமாகச் சொல்லுகை -ஜாமதகன் யஸ்ய ஜல்பத -என்கிற படியே -இப்படி லோகம் அடங்க அக்ரமமாக சொல்லும் படி பண்ணி –
கற்பு வான் இடறி-வானான கற்பை இடறி -வலிதான மரியாதையை மதியாதே என்னுதல் -வலிய அறிவை என்னுதல் -கடக்க அரிதான மரியாதையை த்ருணம் போலே அதி லங்கித்து
சேரும் நல் வளம் சேர் பழனத் திருக் கோளூர்க்கே-போருங்கொல் உரையீர்
தகுதியான நல்ல சம்பத்தையும் நீர் நிலங்களையும் யுடைய திருக் கோளூருக்கே புகுருமோ -தன் மனஸ் ஸூ முற்பட்டு நிற்கையாலே வந்து புகுர வல்லளோ-என்கிறாள் -திருக் கோளூருக்கே புக்கவள் மீளுமோ என்றுமாம்
கொடியேன் -இவளை பெறுகைக்கு பாக்யத்தை பண்ணி வைத்து தனியே புறப்பட்டு போன இவள் அளவு உங்களைக் கேட்டு அறிய வேண்டும்படி பாபத்தைப் பண்ணினேன்
கொடி பூவைகளே –உபக்னத்தை ஒழிய தரியாத தசை -அவ் வூரில் புக்கு அல்லது தரிக்க மாட்டாள் என்கை –பூவைகளே உரையீர் –சொல்லாது ஒழி கைக்கு பெற்ற குற்றம் இல்லையே உங்களுக்கு -நான் ஹிதம் சொல்லுகையாலே மறைத்தாள் ஆகிலும் -இன்ன இடத்துக்கு போகிறேன் என்றும் -அங்குப் போனால் செய்யுமவையும் உங்களுக்கு சொல்லிப் போகக் கூடும் இ றே -சொல்லி கோள் -அறிவித்து போனாள் ஆகில் ராமாவதாரத்தில் போலே லோகமாகப் பின் தொடரும் இ றே-

———————————————————————

திருக் கோளூர் ப்ரத்யாஸன்னம் ஆனால் எங்கனே உடை படக் கடவள்-என்கிறாள் –

பூவை  பைங்கிளிகள் பந்து தூதை பூம்புட்டில்கள்
யாவையும் திருமால் திரு நாமங்களே கூவி எழும்என்
பாவை போய்இனித் தண்பழனத் திருக்கோளூர்க்கே
கோவைவாய் துடிப்ப மழைக்கண்ணொடு என்செய்யுங்கொலோ?–6-7-3-

பூவை -கிளியிலே அவாந்தர பேதம்
பைங்கிளிகள் பந்து தூதை பூம்புட்டில்கள்-பச்சைக் கிளி பூம் புட்டில்கள்-தன்னுடைய லீலா உபகரணங்களான
யாவையும் திருமால் திரு நாமங்களே கூவி எழும்-
யாவையாலும் பிறக்கும் ரசம் எல்லாம் அவனுடைய திரு நாமத்தால் பிறக்குமாயிற்று இவளுக்கு -அவனுடைய லீலா உபகரணங்களோ பாதியும் போருமாயிற்று இவளுடைய லீலா உபகரணங்களும் -பகவான் நாமங்களை சொல்லி உஜ்ஜீவிக்கும் –திரு நாமச் சுவடு அறிந்த பின்பு லீலா உபகரண தர்சனம் -ஸ்ரீ பரத ஆழ்வானுக்கு ராஜ்ய தர்சனம் போலே அஸஹ்யமாய் இருக்கும் -இவளுடைய லீலா உபகரணங்கள் அவனுக்கு போக உபகரணங்களாய் இருக்கும் -இந்த லீலா உபகரணங்கள் திரு நாமத்தை சொல்லிற்று ஆனாலோ என்ன -என்று பெற்றி கேட்க -பந்து தூதை பூம் புட்டிகளால் ஏறாது என்று பிள்ளை பரிஹரித்தார் -அவற்றைத் திரு நாமத்தை சொல்லி அழைத்தால் ஆனாலோ என்னில் அது -உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணன் என்று இருக்கிறதுக்குச் சேராது –
திருமால் -இவள் திரு நாமம் சொல்லும் போது த்வயத்தில் படியே ஸ்ரீ மன் நாராயணன் என்று ஆயிற்று சொல்லுவது
என் பாவை -நிருபாதிக ஸ்த்ரீத்வத்தை உடையவள் –
போய்இனித்-லீலா உபகரண ரசமும் திரு நாம மேயான இருப்பை விட்டு -அங்கு என்ன ஏற்றகத்துக்குப் போனாள்
தண்பழனத் திருக்கோளூர்க்கே-ஸ்ரமஹரமான நீர் நிலங்களை உடைய ஊர்
கோவைவாய் துடிப்ப மழைக்கண்ணொடு என்செய்யுங்கொலோ?–கலக்கிற போது தானே மேல் விழுந்து கலக்கிற படியும் -பிரியேன் பிரிவில் தரியேன் -என்று கலந்த படியும் -பிரிந்த படியும் -வரவு தாழ்த்த படியும் -தனி வழியே தாம் செல்ல இருந்த படியும் -சென்ற பின்பு -ஹ்ரீரேஷா ஹி மமாதுலா -என்று லஜ்ஜாவிஷ்டனாய் காலைப் பிடியாது ஒழிந்த படியும் -இவற்றை நினைத்து கோவைப் பழம் போலே இருக்கிற அதரம் துடிக்க மிக்க நீரை உடைய கண்ணோடு என் படுகிறாளோ -தனி வழியே போனாள் -நான் கூடப் போகப் பெற்றிலேன் என்கிறாள் –

——————————————————————–

இவளை நாட்டார் குண ஹீனை என்பார்களோ குணாதிகை என்று கொண்டாடுவார்களோ என்கிறாள் –

கொல்லை என்பர்கொலோ? குணம்மிக்கனள் என்பர்கொலோ?
சில்லைவாய்ப் பெண்கள் அயற்சேரி உள்ளாரும் எல்லே!
செல்வம் மல்கி அவன் கிடந்த திருக்கோளூர்க்கே
மெல்லிடை நுடங்க இளமான் செல்ல மேவினளே.–6-7-4-

கொல்லை என்பர்கொலோ? குணம்மிக்கனள் என்பர்கொலோ?
கொல்லை -வரம்பு அழிந்த நிலம் -அவன் தானே வர இருக்கக் கடவ மரியாதையை அழித்துப் போனார்களோ என்பார்கள் -குணாதிக விஷயத்துக்கு போரும்படி செய்தாள் என்று கொண்டாடுவார்களோ -தத் தஸ்ய சத்ருசம் பவேத் -என்கிற வசனத்தை பார்த்து கர்ஹிப்பார்களோ -இவளுடைய ருசி விஷயத்துக்கு அனுரூபமாய் இருந்தது என்பார்களோ விதியைப் பார்த்து கர்ஹிப்பார்களோ -காம வசனத்தைப் பார்த்து நன்று என்பார்களோ -ந காம தந்த்ரே தவ புத்தி ரஸ்த்தி -விரக்தரான நீர் காம பரவசரான எங்களை என் படுத்துகிறீர் என்றாள் இ றே-தாரை இளைய பெருமாளை -ஸ்வரூபத்தை பார்த்து கர்ஹிப்பார்களோ -விஷயத்தை பார்த்து உகப்பார்களோ –
சில்லைவாய்ப் பெண்கள் அயற்சேரி உள்ளாரும்
சிலுகு வாரிகளான நம் சேரியில் உள்ளாரும் -அயல் சேரியான அந்நிய ஸ்த்ரீகளும் -வசன பரரானவர்களும் -அவர்களுக்கு உடல் அன்றியே -இருந்த வூரில் இருக்கும் மானிடர் எத்தவங்கள் செய்தார் கொலோ -என்னும் ப்ரேமார்த்த சித்தரும்
எல்லே!-என்னே என்று ஆச்சர்யம் ஆதல் -சொல்லுகிறவர்களைக் குறித்து சம்போதானம் ஆதல் –
செல்வம் மல்கி-இவர்கள் சொல்லிற்று சொல்லுகிறார்கள் என்று அவள் செய்வது செய்தாள் -சம்பத்தானது கரை புரண்டு வரும்படியான தேசம்
அவன் கிடந்த திருக்கோளூர்க்கே-தன் பெருமையைப் பாராதே ஆர்த்த ரக்ஷண அர்த்தமாக வந்து கண் வளர்ந்து அருளுகிற தேசம் –மெல்லிடை நுடங்க-இவளும் தன் ஸ்வரூபத்தை அறிந்திலள் தன் இடையை அறிந்தாள் ஆகில் போக்கிலே ஒருப்படுமோ-மிருதுவான இடை துவள –இளமான் -முக்தையான பெண் -தன் மார்த்வத்தையும் -வழியில் அருமையையும் -அவன் ஸ்வரூபத்தையும் அறிய மாட்டாத மௌக்த்யம்
செல்ல மேவினளே.–இவள் போக்கிலே ஒருப்பட்டாள் -கொல்லை என்பர் கொலோ –

—————————————————————-

திருக் கோளூருக்கு அணித்தான திருச் சோலையையும் அங்கு உள்ள பொய்கை களையும்-அவன் கோயிலையும் கண்டால் எங்கனே உகக்குமோ என்கிறாள்-

மேவி நைந்து  நைந்து விளையாடலுறாள் என்சிறுத்
தேவி போய் இனித் தன் திருமால் திருக் கோளூரில்
பூவியல் பொழிலும் தடமும் அவன்கோயிலும் கண்டு
ஆவிஉள் குளிர எங்ஙனே உகக்குங்கொல் இன்றே?–6-7-5-

மேவி நைந்து நைந்து விளையாடலுறாள்
அவனுடைய ஸுந்தர்ய சீலாதிகளிலே நெஞ்சை வைத்து -நினை தொறும் சொல்லும் தொறும் நெஞ்சு இடிந்து உகும் -என்று சிதிலை யாகா நின்றாள் –
பருவத்துக்கு அனுரூபமான வியாபாரத்தை விட்டாள்-மால் பால் மணம் சுழிப்ப மங்கையர் தோள் கை விட்டு -என்கிறபடியே அத்தலையைப் பற்றி யாயிற்று இதில் உள்ளவற்றை விட்டது
என்சிறுத்தேவி-த்யாஜ்ய உபாதேய விபாகம் -பருவம் நிரம்பாத அளவிலே கிடீர் உண்டாயிற்று -பால்யாத் ப்ரப்ருதி ஸூ ஸ் நிக்த-என்கிறபடியே பருவம் நிரம்பாது இருக்க பிராட்டிமாரோடு ஒக்கச் சொல்லலாம் படி இருக்கிற படி
போய் இனித் தன் திருமால் திருக் கோளூரில்
இதில் காட்டில் அங்கு என்ன -ஏற்றகம் உண்டாய் போனாள் -தத் தஸ்ய சத்ருசம் பவேத் என்று இருக்க மாட்டிற்று இலள் -தனக்கு சர்வ ஸ்வமான ஸ்ரீ யபதி கண் வளர்ந்து அருளுகிற வூரிலே -பிராட்டியோபாதி தன் பக்கல் வ்யாமுக்தனானவன் வர்த்திக்கிற வூரிலே என்றுமாம் –
பூவியல் பொழிலும் தடமும் அவன்கோயிலும் கண்டு
நித்ய வசந்தமான பொழிலும் -அதுக்கு உள்ளாக பரப்பு மாறப் பூத்த தடாகங்களும் -அதுக்கு உள்ளாக அவன் கோயிலும் கண்டு -இங்கே இருந்து அனுசந்தித்து நோவு பட்டவள் காணப் பெருகிறாளே
ஆவிஉள் குளிர-கமர் பிளந்த ஹிருதயம் மறு நனையும் படி
எங்ஙனே உகக்குங்கொல் இன்றே?–எங்கனே பிரிய படுகிறாளோ -இங்கே இருந்து நினைத்துப் பட்ட கிலேசத்தை கண்ட நான் அந்த அனுபவ ப்ரீதி காணப் பெற்றிலேன் இன்றே -எனக்கு அவளை பிரிந்த சோகமே யாய்ச செல்லுகிறது -அவளுக்கு நல்விதிவாய் ப்ரீதியோடே செல்லுகிறது இ றே –

———————————————————-

அவனுடைய ஸ்நேஹ பஹு மான வீஷீதாதிகளைக் கண்டு ப்ரீதி பிரகர்ஷத்தாலே சிதிலை யாகக் கடவள்  ஆகாதே என்கிறாள் –

இன்று  எனக்கு உதவாது அகன்ற இளமான் இனிப்போய்த்
தென்திசைத் தலத மனைய திருக்கோ ளூர்க்கே
சென்று தன் திருமால் திருக்கண்ணும் செவ்வாயும் கண்டு
நின்று நின்று நையும் நெடுங்கண்கள் பனிமல்கவே.–6-7-6-

இன்று எனக்கு உதவாது அகன்ற
தன்னை பிரிந்து நோவு படுகிற இத்தசையிலே துணை இன்றிக்கே இருக்கிற எனக்கு உதவாதே கை கழிய போன -தன்னைப் பிரிந்து நோவு படும் என்று உதவுகைக்கு அன்றோ தன்னைப் பெற்றது -இத்தசைக்கு உதவாள் ஆகில் இனி எற்றைக்கு உதவ இருக்கிறாள் -இமாமவஸ்தா மா பன்னோ நேஹபஸ்யாமி ராகவம்
இளமான்-உதவப் பெற்றிலோம் -என்று அனுதபிக்கவும் அறியாத பருவம்
இனிப்போய்த்-பெற்றோரை விடும் படி இவ்விஷயத்தில் அவகாஹித்த இதுக்கு மேலே என்ன ஏற்றம் பெறப் போனாள் -பெற்றோரை விட்டு பற்றுமது இ றே ப்ராவண்யத்துக்கு எல்லை
தென்திசைத் தலத மனைய திருக்கோ ளூர்க்கே
தெற்குத் திக்குக்கு திலதமான திருக் கோளூரிலே சென்று -பல ஹானியாலே போய்ப் புகுகையில் உண்டான அருமையை சொல்லுகிறது –
சென்று தன் திருமால் -பிதா மாதா ச மாதவ -என்று நிருபாதிக பந்தத்தைக் காட்டி யாயிற்று சோபாதிக பந்தத்தை அறுத்தது
திருக்கண்ணும் -நெடு நாள் பிரிந்து விட்ட விடாய் தீர பஹு மானம் தோற்ற நோக்கும் கண் –
செவ்வாயும்-சாபராதன் ஆனேன் என்று தாழ்வு தோற்ற சொல்லும் அதரமும்
கண்டு-நோ பஜனம் ஸ்மரன் இதம் சரீரம் -என்னும் விஷயத்தை இ றே கண்டது
நின்று நின்று நையும் நெடுங்கண்கள் பனிமல்கவே.
ப்ரீதி பிரகர்ஷத்தாலே காணக் காண சிதிலை யாகா நின்றாள் இ றே -கண்களின் பரப்பு அடங்கலும் ஆனந்த ஸ் ருவாலே பூர்ணம் ஆகிறது இ றே-

———————————————————–

இவள் பிரகிருதி மார்த்வத்தையும் -பிரிவால் வந்த சைத்திலயத்தையும் அனுசந்தித்து இவை எல்லாம் அவ்வளவு செல்ல போக வல்லாள் ஆகில் இ றே என்கிறாள் –

மல்குநீர்க் கண்ணொடு மையலுற்ற மனத்தினளாய்
அல்லும்நன் பகலும் நெடுமால் என்றழைத் தினிப்போய்ச்
செல்வம் மல்கி அவன்கிடந்த திருக்கோளூர்க்கே
ஒல்கி ஒல்கி நடந்து எங்ஙனே புகுங்கொல் ஒசிந்தே?–6-7-7-

மல்குநீர்க் கண்ணொடு மையலுற்ற மனத்தினளாய்-அல்லும்நன் பகலும் நெடுமால் என்றழைத்து -பகவத் குண ஸ்ம்ருதியாலே நீர் மல்கின கண்களையும் -அனுசந்திக்க ஒண்ணாத படி அறிவு கெட்ட மனசையும் உடையளாய் -உள்ளும் புறமும் ஓக்க இருண்டு கிடக்க-எங்கனே போம்படி -கண்ண நீரால் பதார்த்த தர்சனம் இல்லை -திகப்ரம்மம் உண்டாம்படி அகவாய் இருந்தது -நல்ல இரவும் நல்ல பகலும் -மனஸ் சஹகாரமும் இன்றிக்கே இருக்க -அதிவ்யாமுக்தனே என்று கூப்பிடா நின்றாள் -இழவிலும் அவ்விஷயத்தையே சொல்லி கூப்பிடுகையாலே சிலாக்யமான காலம் என்கிறாள் -தன் வ்யாமோஹத்தை காட்டி இ றே இவளை அலவலை யாக்கிற்று
இனிப்போய்ச்-அஹோராத்ரம் அவன் வ்யாமோஹம் அனுபவிக்கிற இவ்விடத்தை விட்டு என்ன ஏற்றம் பெறப் போனாள் -யயவ்ச காசித் ப்ரேமாந்தா-என்கிறபடியே இருட்சி கை கொடுக்க இ றே போயிற்று
செல்வம் மல்கி அவன்கிடந்த திருக்கோளூர்க்கே
ஐஸ்வர்யம் மினுங்க அவன் கிடந்த தேசம் -ஸ்ரீ மான் ஸூ க ஸூ ப்த பரந்தப -என்ற கிடை அழகு காண வாயிற்று இவள் போயிற்று -கிடந்ததோர் கிடக்கை என்ன கடவது இ றே -சாய்ந்த போது யாயிற்று அழகு மிக்கு இருப்பது
ஒல்கி ஒல்கி நடந்து எங்ஙனே புகுங்கொல் ஒசிந்தே?–
ஒடுங்கி ஒடுங்கி -ஓர் அடி இடும் போது நடுவே பலகால் இளைப்பாற வேண்டும்படி இருக்கை -துவண்டு எங்கனே போடப் புக்க கடவள்-

———————————————————-

திருக் கோளூரிலே சங்கத்தால் என்னை பொகட்டுப் போனவள் அஸ் சங்கமே துணையாக அங்கே போய் புக வல்லளோ -என்கிறாள் –

ஒசிந்த நுண்ணிடைமேல் கையை வைத்து நொந்துநொந்து
கசிந்த நெஞ்சினளாய்க் கண்ணநீர் துளும்பச் செல்லுங்கொல்?
ஒசிந்த ஒண்மல ராள்கொழுநன திருக்கோளூர்க்கே
கசிந்த நெஞ்சினளாய் எம்மை நீத்தஎம் காரிகையே.–6-7-8-

ஒசிந்த நுண்ணிடைமேல்-தொட்டார் மேல் தோஷமான நொய்ம்மை -அதுக்கு மேலே ஸ்தான பாரத்தால் வந்த துவட்சி-அதின் மேலே
கையை வைத்து நொந்துநொந்து-ஸ் ராந்தியாலே இடையிலே கையை வைத்தாள்-அது பொறாமையால் ஸ்ராந்தி ஹேது வாயிற்று -மிகவும் அவசன்னையாய் பல ஹானியை பரிஹரிக்கைக்காக விளைவது அறியாதே செய்தாள் -அத்தாலே பலஹானியை விளைத்தாளாய் விட்டது -நெஞ்சிலே பல ஹானி இறுக்கியபடி
கண்ணநீர் துளும்பச் -நெஞ்சை நோவு படுத்துகிற வகை இருக்கிற படி
செல்லுங்கொல்?-அங்கே போய் புக வல்ல ளோ –
ஒசிந்த ஒண்மல ராள்கொழுநன-வண்டாலே ஆத்தசாரமான புஷபம் போலே நித்ய சம்ச்லேஷத்தாலே துவண்டு இருக்கிற பிராட்டிக்கு நாயகன் -இவருடைய சேர்த்தி யாயிற்று இவளை கொண்டு போயிற்று -அவனுடைய பிரணயித்தவம் இ றே இவளை இருக்க ஒட்டாது ஒழிந்தது
திருக்கோளூர்க்கே கசிந்த நெஞ்சினளாய்-திருக் கோளூரிலே சங்கத்தை பண்ணின நெஞ்சை உடையவளாய் –
எம்மை நீத்தஎம் காரிகையே.–என்னைப் பொகட்டுப் போன -என் பிள்ளை தன்னை சன்யசித்துப் போன பின்பும் தன் சாபலத்தாலே ஒரு தலை விடாது ஒழிகிறாள்
கசிந்த நெஞ்சினளாய் –எம்மை நீத்த எம் காரிகை –கசிந்த நெஞ்சினளாய் சொல்லுங்கோள்-அங்குத்தை சங்கம் என்னோட்டை உறவு அறுக்கும் அத்தனையோ -அங்கே கொடு போகவும் வற்றோ –

————————————————————–

எம்பெருமான் பக்கல் அத்யந்தம் பிரவணை யாய் இருக்கிற இவள் சேரியில் உள்ளார் சொல்லும் பழியே பாதேயமாகக் கொண்டு திருக் கோளூருக்கே போனாள் என்கிறாள்-

காரியம் நல்லனகள் அவைகாணில் என் கண்ணனுக்கு என்று
ஈரியா யிருப்பாள் இதெல்லாம் கிடக்க இனிப்போய்ச்
சேரி பல்பழி தூஉய் இரைப்பத் திருக்கோளூர்க்கே
நேரிழை நடந்தாள் எம்மை ஒன்றும் நினைத்திலளே.–6-7-9-

காரியம் நல்லனகள் அவைகாணில் என் கண்ணனுக்கு என்று
பதார்த்தங்களில் நல்லனவற்றைக் காணில் -ஒன்றிலும் கண் வைப்பது இல்லை -கண்டாள் ஆகில் எனக்காக தன்னை யோக்கி வைத்த கிருஷ்ணனுக்கே என்னும் –
ஈரியா யிருப்பாள் -கிருஷ்ணனுக்கு என்றால் மேல் ஒன்றும் சொல்ல மாட்டாதே -அவன் குணங்களை அனுசந்தித்து நீராய் இரா நின்றாள் -ஈரித்து இருக்கும் -ஆர்த்த ஹ்ருதையாய் இருக்கும்
இதெல்லாம் கிடக்க-வி லக்ஷண பதார்த்த தரிசனத்தில் அவனுக்கு என்கை -அவன் குண அனுசந்தானத்தாலே விக்ருதியாகை -இவற்றை அளவிறந்த சம்பத்தாக நினைத்து இருக்கிறாள் இவள் -கண்டதை மமேதம் என்று இராதே அவனுக்கு என்று இருக்கை இ றே சம்பத்து –இனிப்போய்ச்-பாவ சுத்தியால் துஷ்டனாம் அவனுக்கு ஓன்று செய்யப் புறப்பட்டு போனாளோ-இத்தலையில் உள்ளது ஓன்று இல்லை -அவனுக்கு வேண்டுவது ஓன்று இல்லை –
சேரி பல்பழி தூஉய் இரைப்பத் திருக்கோளூர்க்கே
சேரியில் உள்ளார் பழிகளை சொல்லி கடல் கிளர்ந்தால் போலே கோஷிக்க -போக நினைத்தாள் -புறப்பட்டாள் -தனி வழியே போனாள் -தாயைப் பொகட்டு போனாள் -குலத்தை பார்த்திலள் -அவனைப் பார்த்திலள் -என்றால் போலே பல பழிகள் –
நேரிழை நடந்தாள் எம்மை ஒன்றும் நினைத்திலளே.
திருக் கோளூரிலே போகையாலே போனாள் என்னாதே-நடந்தாள் என்கிறாள் -வயிற்றில் பிறந்தாரே யாகிலும் பகவத் விஷயத்தில் ஓர் அடி வர நின்றால்கௌரவித்து வார்த்தை சொல்ல வேணும் என்கை -வழித்துணையாக நினைத்திலள் -அங்கே சென்று எதிர் கொள்ளுவாரில் ஒருத்தியாக நினைத்திலள் -பழி சொல்லுவார் கோடியாகவும் நினைத்திலள் -குரவ கிங்கரிஷ்யந்தி-என்றும் நினைத்திலள்-

———————————————————————

குடிக்கு வரும் பெரும் பழியைப் பாராதே திருக் கோளூரிலே புக்கு அவனை ஒரு காலும் விடுகின்றிலள் என்கிறாள் –

நினைக்கிலேன் தெய்வங்காள்! நெடுங்கண் இளமான் இனிப்போய்
அனைத்துலகு முடைய அரவிந்த லோசனனை
தினைத்த னையும் விடாள் அவன்சேர் திருக்கோ ளூர்க்கே
மனைக்கு வான் பழியும் நினையாள் செல்ல வைத்தனளே.-6-7-10-

நினைக்கிலேன் தெய்வங்காள்! நெடுங்கண் இளமான் இனிப்போய்
புகுந்த விருத்தாந்தத்தை நினைக்கில் ஆழம் காலாய் இரா நின்றது -தன்னோடு ஓக்க உறங்காமையாலே தெய்வங்களைக் கூட்டிக் கொள்கிறாள்
நெடுங்கண்– போக்தாக்கள் அளவில்லாத கண் –இளமான்-தன் கையில் பிரஹ்மாஸ்திரம் என்று அறியாத பருவம்
இனிப்போய்-சர்ப்ப யாகத்தில் போலே அவன் தான் வந்து விழும் படியான கண்ணைப் படைத்த இவள் -தான் போகை மிகை என்கை –
அனைத்துலகு முடைய அரவிந்த லோசனனை-உபய விபூதி உக்தன் என்கிற இடத்தை கோட் சொல்லுகிற கண்களை உடையவனை -இவள் நெடுங்கண் இளமான்-அவன் அரவிந்த லோசனன் -அவன் கண் ஸர்வேச்வரத்வ ஸூ சகம் -அவனையும் கூட விளாக் குலை கொள்ளும் கண் இவளது
தினைத்த னையும் விடாள் அவன்சேர் திருக்கோ ளூர்க்கே
க்ஷண காலமும் விடாள்-இங்கு இருந்து பட்ட கிலேசத்தாலே -அங்கு அனுபவிக்கப் புக்கால் பிரியேன் என்னவும் நெஞ்சை விட்டுக் கொடாள்-அவன் பொருந்தி வர்த்திக்கிற திருக் கோளூருக்கே
மனைக்கு வான் பழியும் நினையாள் செல்ல வைத்தனளே.-புகுகையில் ஒருப்பட்டாள் -என்னுதல் -நாசா புனராவர்த்ததே என்று தான் மீளாத படி புகுகையாலே நாம் அங்கே செல்லும்படி வைத்தாள் என்னுதல் –
குடிக்கு வரும் வலிய பழியையும் நினைக்கிறிலள் -இவள் போய் அவனைப் பெறுகை குடிக்கு நிலை நின்ற பழி என்று இருக்கிறாள் –

—————————————————————–

நிகமத்தில் இப்பத்தும் வல்லார் இட்ட வழக்காய் இருக்கும் திருநாடு என்கிறார்  –

வைத்தமா  நிதியாம் மதுசூ தனையே அலற்றிக்
கொத்தலர் பொழில்சூழ் குருகூர்ச்சட கோபன் சொன்ன
பத்து நூற்றுள் இப்பத்து அவன்சேர்திருக்கோ ளூர்க்கே
சித்தம் வைத்துரைப் பார்திகழ் பொன்னுல காள்வாரே.–6-7-11-

உண்டு என்ன உயிர் நிற்க்க கடவதாய் அனாயாச போக்யமாய் இஷ்ட விநியோக அர்ஹமான மஹா நிதி போலேயாய் விரோதி நிராசன ஸ்வ பாவனானவனை சொல்லி ஆர்த்தியாலே கூப்பிட்டு
கொத்தலர் – நித்ய வசந்தமான திரு நகரி -விரஹத்தை அனுசந்திக்க ஷமம் இல்லாதபடி அவன் பக்கலிலே ஏகாக்ர சித்தர் ஆகையால் பிறந்த தேற்றத்தாலே ஊருக்கு பிறந்த ஸம்ருத்தி
பத்து நூற்றுள் இப்பத்து– கிழி கிழி யாய் கொடுப்பாரை போலே –
அவன் பொருந்தி வர்த்திக்கிற திருக் கோளூருக்கே நெஞ்சை வைத்து சொல்லுமவர்கள்
திகழ் பொன்னுல காள்வாரே.– தனி வழியே போனாள் என்று கரைய வேண்டாத படி -அர்ச்சிராதி கணம் வழி நடத்த பரமபதத்தில் புக்கு நித்ய அனுபவம் பண்ணப் பெறுவார்கள் –

———————————————————

கந்தாடை  அப்பன் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

 

திருவாய்மொழி ஒன்பதினாயிரப்படி –6-7-

September 30, 2016

இப்படி அப்ரக்ருதிங்கதையான இப்பிராட்டி நெடும் போதோடு கூட உணர்ந்து பின்னையும் எம்பெருமானை காணப் பெறாமையாலே
அவனை ஒழியத் தரிக்க மாட்டாமை தன் பந்துக்கள் பக்கலிலும் கிரீட உபகாரணாதி களிலும் அத்யந்த விமுகையுமாய்-
எம்பெருமானைக் கண்டு அல்லாதது தரிக்க மாட்டாமையாலே தன் மரியாதைகளை அதிலங்கித்து தனியே திருக் கோளூர் ஏறப் புக
-சோக நித்திரை போய் உணர்ந்து இப்பிராட்டியை தன் மாளிகையில் காணாத திருத் தாயார் -இவள் திருக் கோளூரில் போனாள்-என்று
அத்யவசித்து-இவள் இங்கு இருக்கும் போதும் அவனாலே போது போக்கி இருக்கும் படியும் -அதி ம்ருது பிரக்ருதியாய் இருக்கிற இவள் அவ் வூரிலே
தனியே எங்கனம் போக்க கடவள் என்றும் -அங்கே சென்றால் அவ் வூரையும் அவனையும் கண்டால் எங்கனம் உடை குலைப் படக் கடவள் என்றும்
சொல்லா நின்று கொண்டு தன் பெண் பிள்ளையுடைய அவசாதத்தாலும் -அவளைத் தான் பிரிகையாலும் மிகவும் நோவு பட்டு சோகிக்கிறாள் –

——————————————————————-

இப்பிராட்டியுடைய திருத் தாயாரானவள் -தன் பிள்ளையை தன் மாளிகையில் காணாது ஒழிந்து-தன் மகள் ஆகையாலும் அவளுடைய ஸ்வ பாவ அனுசந்தானத்தாலுமாக -இவள் இங்கும் நின்றும் போய்ப் புகுமூர் திருக் கோளூரே-என்று அத்யாவசிக்கிறாள் –

உண்ணுஞ்  சோறு பருகுநீர் தின்னும்வெற்றிலையு மெல்லாம்
கண்ணன்எம் பெருமான் என்றென்றே கண்கள் நீர்மல்கி
மண்ணினுள் அவன் சீர்வளம் மிக்கவன் ஊர்வினவித்
திண்ணம் என்இளமான் புகுமுர் திருக்கோளூரே.–6-7-1-

பசியில் உண்ணக் கடவ சோறும் -தாஹத்தால் குடிக்கக் கடவ தண்ணீரும் -தின்னாது ஒழியில் தரியாத தசையில் தின்னக் கடவ வெற்றிலையுமான தாரகாதிகள் எல்லாம் எனக்கு என் ஸ்வாமியான கிருஷ்ணனே என்னா நின்று கொண்டு அவனைக் காணப் பெறாமையாலே கண் நீர் மல்கி –
அவனுடைய கல்யாண குணங்களையும் சம்பன்னனானவன் விரும்பி இருந்துள்ள ஊரையும் தனக்கு வழி போகைக்கு உறுப்பு யுண்டாம்படி வினவிக் கொண்டு என் பெண் பிள்ளை பூமியில் போகுமூர் திருக் கோளூரே -இது நிச்சிதம்-

———————————————————————

திருக் கோளூரிலே புக்க என் பெண் பிள்ளை மீள வருமோ -சொல்லி கோள் என்று பூவைகளை திருத் தாயார் கேட்க்கிறாள் –

ஊரும்  நாடும் உலகமும் தன்னைப் போலே அவனுடைய
பேரும் தார்களுமே பிதற்றக் கற்பு வான் இடறி
சேரும் நல் வளம் சேர் பழனத் திருக் கோளூர்க்கே
போருங்கொல் உரையீர் கொடியேன் கொடி பூவைகளே –6-7-2-

பேரும் தார்களுமே பிதற்ற-தன் படியைக் கண்டு அவனுடைய திரு நாமங்களையும் சிஹ்னங்களையும் அடைவு கெட்டுப் பிதற்றும் படி பண்ணி –
கற்பு வான் இடறி-கடக்க அரிதான தன் மரியாதையை த்ருணம் போலே பொகட்டு
சேரும் நல் வளம் சேர் சேர் பழனத் திருக் கோளூர்க்கே
போருங்கொல் உரையீர்
-நல்ல சம்பத்தை யுடைய திருக் கோளூருக்கே போய்ச் சேரும் என் பெண் பிள்ளை -பூவைகாள் உங்களைக் காண என்றாகிலும் வருமோ -சொல்லி கோள் -போருங்கொல்-போக வல்லளேயோ -என்றுமாம் –
கொடியேன் -இப் பெண் பிள்ளையை பிரிந்த இன்னாப்பாலே கொடியின் -என்கிறாள் –

——————————————————————–

திருக் கோளூர் ப்ரத்யாஸன்னம் ஆனால் எங்கனே உடை படக் கடவள்-என்கிறாள் –

பூவை  பைங்கிளிகள் பந்து தூதை பூம்புட்டில்கள்
யாவையும் திருமால் திரு நாமங்களே கூவி எழும்என்
பாவை போய்இனித் தண்பழனத் திருக்கோளூர்க்கே
கோவைவாய் துடிப்ப மழைக்கண்ணொடு என்செய்யுங்கொலோ?–6-7-3-

பூவை பந்து முதலான அழகிய உபகரணங்களை கண்டால் ஸ்ரீ பரத ஆழ்வானுக்கு ராஜ்ஜியம் கண்டால் போலே இவளுக்கு அஸஹ்யமாய் அவற்றால் உள்ள ரசமும் பகவான் நாம உச்சாரணத்தாலே யாய் உஜ்ஜீவிக்கும் என் மகள் -இதுக்கு மேல் ஸ்ரமஹரமான நீர் நிலங்களை யுடைய திருக் கோளூருக்கே போய் -என் பாவை எம்பெருமானுடைய பிரத்யா சத்தியாலே  உடை குலைப்பட்டு -தான் நெடுநாள் அவனைப் பிரிந்து பட்ட பாடும் -அவன் கை விட்டு இருந்த படியையும் நினைத்து கோவைப் பழம் போலே இருக்கிற திருப் பவளம் துடிப்ப மிக்கு இருந்துள்ள நீரை உடைய கண்ணும்  இவளுமாய் என் படக் கடவளோ  –

————————————————————-

சிலுகு வாரிகளான நம் சேரியில் உள்ளாரும் அயல் சேரியில் உள்ளாரும்-அந்நிய ஸ்த்ரீகளும் இவளுடைய விருத்தாந்தத்தைக் கண்டு குண ஹீனை என்பரோ-இம் மஹா குணத்தை அறிந்து கொண்டாடுவாரோ என்கிறாள் –

கொல்லை என்பர்கொலோ? குணம்மிக்கனள் என்பர்கொலோ?
சில்லைவாய்ப் பெண்கள் அயற்சேரி உள்ளாரும் எல்லே!
செல்வம் மல்கி அவன் கிடந்த திருக்கோளூர்க்கே
மெல்லிடை நுடங்க இளமான் செல்ல மேவினளே.–6-7-4-

கொல்லை-வரம்பு கடந்தாள்
சம்பத்தாலே மிக்கு அவன் கண் வளர்ந்த திருக் கோளூருக்கே அத்யந்த முக்தையான பெண் பிள்ளை தன்னுடைய மிருதுவான இடை துவள போய்ப் புக்காள்-

———————————————————

திருக் கோளூருக்கு அணித்தான திருச் சோலையையும் அங்கு உள்ள பொய்கை களையும்-அவன் கோயிலையும் கண்டால் எங்கனே உகக்குமோ என்கிறாள் –

மேவி நைந்து  நைந்து விளையாடலுறாள் என்சிறுத்
தேவி போய் இனித் தன் திருமால் திருக் கோளூரில்
பூவியல் பொழிலும் தடமும் அவன்கோயிலும் கண்டு
ஆவிஉள் குளிர எங்ஙனே உகக்குங்கொல் இன்றே?–6-7-5-

அவனுடைய குண சேஷ்டிதாதிகளை அனுசந்தித்து மிகவும் சித்திலையாய் விளையாட்டுகளிலும் மூளாள் -ப்ராப்த யவ்வனை அன்றிக்கே இருக்கிற பருவத்தில் இப்படி வி லக்ஷணையாய் இருக்கிற   இப் பெண் பிள்ளை இதுக்கு மேலே தனக்கு சர்வ ஸ்வமான ஸ்ரீ யபதி யுடைய திருக் கோளூரிலே போய் –பூவியல் பொழில் -என்றும் பூத்து இருக்கும் பொழில் / ஆவிஉள் குளிர-மிகவும் கமர் பிளந்து இருக்கிற ஹ்ருதயம் உள் குளிர்ந்து இருக்கிற படி –

——————————————————————

திருக் கோளூரிலே சென்று எம்பெருமானுடைய ஸ்நேஹ பஹு ளமான வீஷீதாதிகளைக் கண்டு ப்ரீதி பிரகர்ஷத்தாலே மேன்மேல் என சிதிலையாக கடவள் ஆகாதே என்கிறாள்

இன்று  எனக்கு உதவாது அகன்ற இளமான் இனிப்போய்த்
தென்திசைத் தலத மனைய திருக்கோ ளூர்க்கே
சென்று தன் திருமால் திருக்கண்ணும் செவ்வாயும் கண்டு
நின்று நின்று நையும் நெடுங்கண்கள் பனிமல்கவே.–6-7-6-

தன்னைப் பிரிந்து நோவு படுகிற எனக்கு இத்தசைக்கு துணை அன்றிக்கே போன சிறுப் பெண்  பிள்ளை எனக்கு உதவாதத்துக்கு   மேலே தெற்குத் திக்குக்கு திலகம் போலே இருக்கிற திருக் கோளூரிலே போய்ப் புக்கு பெரிய பிராட்டியார் பக்கல் போலே தன் பக்கல் பிரணயி யானவள் –

———————————————————————-

இவள் பிரகிருதி மார்த்வத்தையும் எம்பெருமானைப் பிரிந்து சிதிலை யாய் இருக்கிற படியையும் அனுசந்தித்து இவள் புக்கால் படும்படியை அனுசந்திக்க வேண்டுவது அவள் அவ்வளவும் சென்று புக வல்லாள் ஆகில் இ றே என்கிறாள் –

மல்குநீர்க் கண்ணொடு மையலுற்ற மனத்தினளாய்
அல்லும்நன் பகலும் நெடுமால் என்றழைத் தினிப்போய்ச்
செல்வம் மல்கி அவன்கிடந்த திருக்கோளூர்க்கே
ஒல்கி ஒல்கி நடந்து எங்ஙனே புகுங்கொல் ஒசிந்தே?–6-7-7-

பகவத் குண ஸ்மரணத்தாலே நீர் துளும்பா நின்ற கண்ணையும் -அனுசந்தானம் பண்ண ஒண்ணாத படி அறிவு கெட்ட மனசையும் உடையளாய் -அல்லாதார்க்கு போலே வ்யர்த்தமே போகிற காலம் அல்லாமையாலே சிலாக்கியமான பகலும் இரவும் அதிவ்யாமுக்தனே என்று கூப்பிட்டு -இதுக்கு மேலே ஒரு புருஷார்த்தம் தேடித் போய்
ஐஸ்வர்யம் மிக்கு அவன் கிடந்த திருக் கோளூருக்கே தன்னுடைய பல ஹானியாலே தளர்ந்து வாடி வாடி எங்கனே போய் புக்க கடவள்-

———————————————————-

திருக் கோளூரிலே சங்கத்தால் என்னை பொகட்டுப் போன என் பெண் பிள்ளை அஸ் சங்கமே துணையாக அங்கே போய் புக வல்லளேயோ என்கிறாள் –

ஒசிந்த நுண்ணிடைமேல் கையை வைத்து நொந்துநொந்து
கசிந்த நெஞ்சினளாய்க் கண்ணநீர் துளும்பச் செல்லுங்கொல்?
ஒசிந்த ஒண்மல ராள்கொழுநன திருக்கோளூர்க்கே
கசிந்த நெஞ்சினளாய் எம்மை நீத்தஎம் காரிகையே.–6-7-8-

துவண்டு நுண்ணியதாய் இருக்கிற இடையிலே தன்னுடைய ச்ராந்தியாலே கையை வைத்து மிகவும் அவசன்னையாய்-
தன்னோட்டை சம்ச்லேஷத்தால் துவண்ட திருமேனியை யுடைய பெரிய பிராட்டியாருக்கு நாயகன் ஆனவன்
இது திருவாய் மொழியில் பல இடத்திலும் என் பெண் பிள்ளை -என்று சொல்லுகைக்கு காரணம் அவள் நசை அற்ற பின்னும் அவள் மேல் தனக்கு நசை அறாமை-

—————————————————————–

எம்பெருமான் பக்கல் அத்யந்தம் பிரவணை யாய் இருக்கிற இவள் சேரியில் உள்ளார் சொல்லும் பழியே பாதேயமாகக் கொண்டு திருக் கோளூருக்கே போனாள் என்கிறாள்-

காரியம்  நல்லனகள் அவைகாணில் என் கண்ணனுக்கு என்று
ஈரியா யிருப்பாள் இதெல்லாம் கிடக்க இனிப்போய்ச்
சேரி பல்பழி தூஉய் இரைப்பத் திருக்கோளூர்க்கே
நேரிழை நடந்தாள் எம்மை ஒன்றும் நினைத்திலளே.–6-7-9-

முதலிலே ஒன்றும் அனுசந்திக்க மாட்டாள் –அங்கனம் இருக்கச் செய்தே விலக்ஷணமான அவ்வவ பதார்த்தங்களை ஒருகால் அனுசந்தித்தாள் ஆகில் என் கிருஷ்ணனுக்கு என்று மேல் ஒன்றும் சொல்ல மாட்டாதே நீராக நிற்கும் இவள் இங்கு அவனை நினைத்து இருக்கும் இருப்புக்கள் எல்லாம் தவிர அதுக்கு மேல் ஒரு புருஷார்த்தம் தேடி –
தங்கள் சேரியில் உள்ளார் பல பழிகளை சொல்லி கோஷியா நிற்க திருக் கோளூரிலே பெண் பிள்ளை போனாள் -திருக் கோளூருக்குப் போகையாலே தன் பெண் பிள்ளையே யாகிலும் நடந்தால் என்று ச பஹு மானமாகச் சொல்லுகிறாள்
எம்மை தனக்கு பிரதி கூல கோடியிலும் நினைத்திலள்-

——————————————————————

குடிக்கு வரும் பெரும் பழியைப் பாராதே திருக் கோளூரிலே புக்கு அவனை ஒரு காலும் விடுகின்றிலள் என்கிறாள் –

நினைக்கிலேன்  தெய்வங்காள்! நெடுங்கண் இளமான் இனிப்போய்
அனைத்துலகு முடைய அரவிந்த லோசனனை
தினைத்த னையும் விடாள் அவன்சேர் திருக்கோ ளூர்க்கே
மனைக்கு வான் பழியும் நினையாள் செல்ல வைத்தனளே.-6-7-10-

புகுந்த வ்ருத்தத்தை நினைக்கவும் க்ஷமை ஆகிறிலன்-தெய்வங்காள் என்று தன் ஆற்றாமையால் சொல்லுகிறாள்
விசாலமான திருக் கண்களை உடைய சிறுப் பெண் பிள்ளை இங்கு இருக்கிற இருப்புக்கு மேலே ஸர்வேச்வரத்வ ஸூ சகமான அழகிய திருக் கண்களை உடையவனை ஒரு க்ஷணமும் விடுகிறிலள்
குடிக்கு வருகிற பெரும் பழியையும் பாராதே இத்தை எல்லாம் கடலிலே கவிழ்த்து அவன் கண் வளருகின்ற திருக் கோளூருக்கே போனாள் –

—————————————————————

நிகமத்தில் இப்பத்தும் வல்லார் இட்ட வழக்காய் இருக்கும் திருநாடு என்கிறார்  –

வைத்தமா  நிதியாம் மதுசூ தனையே அலற்றிக்
கொத்தலர் பொழில்சூழ் குருகூர்ச்சட கோபன் சொன்ன
பத்து நூற்றுள் இப்பத்து அவன்சேர்திருக்கோ ளூர்க்கே
சித்தம் வைத்துரைப் பார்திகழ் பொன்னுல காள்வாரே.–6-7-11-

ஆயாசப் படாதே உபயோகம் கொள்ளலாம் படி வைத்த மஹா நிதி போலே இருக்கிற பிரதிகூல நிராசன ஸ்வ பாவனான எம்பெருமானையே சொல்லி ஆர்த்தியோடே கூப்பிட்டு
தாம் விரஹ தசையை அனுசந்திக்க ஷமர் அல்லாத படி பகவத் விஷயத்திலே ஏகாக்ரர் ஆகையால் தமக்குப் பிறந்த தேற்றத்தால் சம்ருத்தமான திரு நகரியை உடைய ஆழ்வார் அருளிச் செய்த ஆயிரம் திருவாய் மொழியிலும் திருக் கோளூரிலே அருளிச் செய்த இது திருவாய் மொழியை புத்தி பூர்வகமாகச் சொல்ல வல்லார் –

————————————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

திருவாய்மொழி இருபத்து நாலாயிரப்படி –6-6–

September 29, 2016

கீழில் திருவாய் மொழியில் இவளுக்கு பிறந்த தசை முற்றி வ்யஸனம் அதிசயிக்கையாலே அது பொறுக்க மாட்டாமையாலே
இவளுடைய தோழியும் மோஹிக்க -இது தசையிலும் இவளை ஜிவிப்பிக்க விரகுகளை மநோ ரதிக்கையாலே தரித்து இருக்கிற திருத் தாயார்
இவளுடைய வலயாதிகள் காணக் காண சிதிலமாய் போகிற படியைக் கண்டு -அவற்றைத் தனித் தனியே சொல்லி கூப்பிடுகிறாள்
-நகர பத்த நாதிகள் வேவப் புக்காள்-அது விழுந்தது உது விழுந்தது என்னுமா போலே விரஹ அக்னியால் தன் மக்கள் இழந்தவற்றைச் சொல்லுகிறாள்
கீழில் திருவாய் மொழியில் அலாப தசையோபாதி கிடையாது என்றாலும் விட மாட்டாத படி தன்னுடைய மநோ வாக் காயங்கள்
இவ்விஷயத்தில் அதி பிரவணமான படி சொல்லிற்று
-இதில் அந்த அலாபத்தால் வந்த பாரவஸ்யத்தை சொல்லுகிறது –

————————————————————

இவள் ஸ்ரீ வாமன ப்ராதுர்பாவத்தில் குண சேஷ்டிதாதிகளிலே அகப்பட்டு வளை இழந்தாள் என்கிறாள் –

மாலுக்கு  வையம் அளந்த மணாளற்கு
நீலக் கருநிற மேக நியாயற்கு
கோலச்செந் தாமரைக் கண்ணற்கு என் கொங்கலர்
ஏலக் குழலி இழந்தது சங்கே.–6-6-1-

மாலுக்கு-நீ எனக்கு வேண்டா என்று அகன்று முடிய புகுந்த தசையில் தன் செல்லாமையைக் காட்டி பொருந்த விட்டுக் கொண்ட வ்யாமோஹத்தை யுடையவனுக்கு -அவன் தன் பிச்சை காட்டி யாயிற்று இவளை பிச்சேற்றிற்று –
வையம் அளந்த மணாளற்கு-உகாதவரையும் கூட தன்னை இரப்பாளன் ஆக்கி தன் திருவடிகளின் கீழே இட்டுக் கொண்ட வ்யாமோஹத்தாலே அநந்யார்ஹம் ஆக்கி தன்னை போக்தாவானவனுக்கு
நீலக் கருநிற மேக நியாயற்கு-நெய்த்து கறுத்த நிறத்தை யுடைய மேக ஸ்வபாவற்கு -பிரயோஜன நிரபேஷமாக கொடுக்கையும் -கொடுக்கப் பெறாத போது உடம்பு வெளுக்கையும் -வ்யாமோஹம் இன்றிக்கே ஒழிந்தாலும் விட ஒண்ணாத வடிவும் உதார குணமும் இருக்கிற படி
கோலச்செந் தாமரைக் கண்ணற்கு-தர்ச நீயமாய் வாத்சல்யத்தாலே சிவந்து விகாசாதிகளை யுடைத்தான திருக் கண்களை யுடையவனுக்கு
தாமரைத் தடங்கண் விழிகளில் அகவலைப் படுப்பான் -என்று கண்ணாலே யாயிற்று அகப்படுத்திக் கொண்டது -விசேஷணம் தோறும் தனித் தனியே அவனுக்கு என்று தனித் தனியே அகப்பட்ட துறைகளை சொல்லுகிறாள் -தன் மகள் மேல் பட்ட காம பாணங்களை எண்ணுகிறாள் காணும் தாயார் –
என் கொங்கலர்-ஏலக் குழலி இழந்தது சங்கே.–ஏலம் போல் கமழா நின்றுள்ள நறு நாற்றத்தை யுடைய மயிர் முடியை யுடைய மகள் -கொங்கு -பரிமளம் -இவள் மயிர் முடி ஒன்றுக்கும் தோற்று குமிழ் நீர் உண்ணுமவன் கிடீர் இவளை அழித்தான் -பங்களப் படை கொண்டு தனி வீரம் செய்வாரை அழிக்குமா போலே
இவளுக்குத் தோற்று -அவன் இழக்குமத்தை இவள் இழந்தாள் –சங்கு -வளை –

—————————————————————–

திரு உலகு அளந்து அருளின எம்பெருமானுடைய ஸ்ரீ பஞ்சாயுத தாரணத்தாலே வந்த அழகிலே அகப்பட்டு  என் மகள் தன்னுடைய அழகிய நிறத்தை இழந்தாள் -என்கிறாள் –

சங்குவில் வாள்தண்டு சக்கரக் கையற்கு
செங்கனி வாய்ச்செய்ய தாமரைக் கண்ணற்கு
கொங்கலர் தண்ணந் துழாய் முடி யானுக்குஎன்
மங்கை இழந்தது மாமை நிறமே.–6-6-2-

சங்குவில் வாள்தண்டு சக்கரக் கையற்கு-செங்கனி வாய்ச்செய்ய தாமரைக் கண்ணற்கு
ஸ்ரீ பஞ்சாயுதங்களின் சேர்த்தி அழகிலே யாயிற்று இவள் ஈடுபட்டது –இவளுடைய நிறம் கொள்ளுகைக்கு எத்தனை ஆபரணம் வேணும் -ஸ்மிதமும் நோக்கும் போலே ஆயுதச் சேர்த்தியும் தகுதியாய் இருக்கிற படி
கொங்கலர் தண்ணந் துழாய் முடி யானுக்குஎன்-மங்கை இழந்தது மாமை நிறமே.
பரிமளம் ப்ரவஹிக்கிற குளிர்ந்த திருத் துழாய் வளையத்தை யுடையவனுக்கு -ஆபரணம் –அவயவங்கள் -ஒப்பனை -எத்தனை செயல் வேணும் -இவள் நிறம் கொள்ளுகைக்கு – என் மங்கை-தன் பருவத்தால் இவற்றை அடங்கத் தோற்ப்பிக்குமவள் கிடீர் –மாமை என்றும் நிறம் என்றும் பர்யாயம் -இவ்விடத்தில் நிறம் என்று அழகாய் நிறத்தில் அழகை இழந்தாள் –

————————————————————

வட தள சாயி படிகளில் அகப்பட்டு தன் பெருமையை இழந்தாள் என்கிறாள் –

நிறங்கரி யானுக்கு நீடுலகு உண்ட
திறங்கிளர் வாய்ச்சிறுக் கள்வ னவர்க்கு
கறங்கிய சக்கரக் கையவ னுக்குஎன்
பிறங்கிருங் கூந்தல் இழந்தது பீடே.–6-6-3-

நிறங்கரி யானுக்கு
ஸ்ரமஹரமான வடிவிலே யாயிற்று இவள் தோற்றது -நீலக் கரு நிற மேக நியாயற்கு-என்ன வேண்டா வாயிற்று -நிறத்துக்கு ஒப்பாக மாட்டாமையாலே
நீடுலகு உண்ட-திறங்கிளர் வாய்
பரப்பை உடைத்தான பூமியை திரு வயிற்றிலே வைத்த பிரகாரத்தை கோட் சொல்லா நின்ற திரு வாதாரத்தை யுடைய -வையம் ஏழும் கண்டாள் பிள்ளை வாயுள்ளே-என்ன கடவது இ றே-ரக்ஷகத்வ பிரகாசகமான திரு வதரம்
சிறுக் கள்வ னவர்க்கு-சிறிய வடிவிலே பெரிய லோகங்களை வைத்து ஒருவருக்கும் பரிச்சேதிக்க ஒண்ணாத சேஷ்டிதத்தை உடையவனுக்கு -வடிவுக்குச் சேராத சேஷ்டிதம் -சேஷ்டிதத்துக்கு சேராத வடிவு
தன்னுடைய ரக்ஷகத்வத்தையும் அக்கடிதகடநா சாமர்த்யத்தையும் காட்டியாயிற்று இவளை அகப்படுத்திற்று
கறங்கிய சக்கரக் கையவ னுக்கு-
விரோதி நிரசன த்வரையாலே -சுழன்று வாரா நின்றுள்ள திரு வாழி யை கையிலே உடையவனுக்கு -வடிவு அழகும் ரக்ஷகத்வமும் அன்றியே ரக்ஷணத்தில் உத்யுக்த பரிகரத்தை உடையவன் என்கை –
என்-பிறங்கிருங் கூந்தல் இழந்தது பீடே.–
சுற்றுடைத்தாய் ஓளுக்கு நீண்ட மயிர் முடியை யுடையவள் -பிறங்கு -என்று பெருமை / இருமை என்றும் பெருமை -சுற்றுடைமையிலும் ஒழுகு நீட்சியிலுமாய் இருக்கிறது கூந்தல் –மயிர் முடி -எதிர்த் தலையைத் தோற்பிக்கும் கூந்தலை யுடையவள் கிடீர் தன் பெருமையை இழந்தாள் -யஸ்ய சா ஜனகாத்மஜா –அப்ரமேயம் ஹி தத்தேஜ-என்று அவனுக்கு ஏற்றத்தைக் கொடுக்கும் பெருமையைக் கிடீர் இவள் இழந்தது -பீடு -பெருமை –

——————————————————–

சதுர் முகனுக்கு ஸ்ரஷ்டாவாய் வைத்து தன் மேன்மை பாராதே ஆஸ்ரித அபிமதங்களை செய்து அருளும் மஹா குணத்தை உடையவனுக்கு என் பெண் பிள்ளை தன்னுடைய நீர்மையை இழந்தாள் என்கிறாள்-

பீடுடை  நான்முகனைப்படைத் தானுக்கு
மாடுடை வையம் அளந்த மணாளற்கு
நாடுடை மன்னர்க்குத் தூது செல் நம்பிக்கு என்
பாடுடை அல்குல் இழந்தது பண்பே.–6-6-4-

பீடுடை நான்முகனைப்படைத் தானுக்கு-சதுர்தச புவனத்தையும் ஸ்ருஷ்டிக்க வல்ல பெருமையுடைய சதுர்முகனை ஸ்ருஷ்டித்தவனுக்கு –
மாடுடை வையம் அளந்த மணாளற்கு-மாடு என்று தனம்-வஸூ மதியான பூமி என்னுதல் / மாடு -என்று இடமாய் பரப்பை உடைத்தான பூமி என்னுதல் -திரு உலகு அளந்து அருளின க்ருத்ரிம சேஷ்டிதத்தாலே தன்னை அநன்யார்ஹை ஆக்கினவனுக்கு
நாடுடை மன்னர்க்குத் தூது செல் நம்பிக்கு -நாடுடைய ராஜாக்களான பாண்டவர்களுக்கு தூத கிருத்யம் பண்ணி -அத்தாலே பூர்ணன் ஆனவனுக்கு
நாடுடையார் வேறே சிலராக்கி -அவர்களுக்கு ஏவலாளாய் திரியும் –நம்பி க்கு -இன்னார் தூதன் என நின்றான் என்று அச் செயலால் இட்ட சட்டை பீறும்படி இருக்கை -அடியிலே ஜகத்தை உண்டாக்கி அபஹரித்தார் உண்டாகில் எல்லை நடந்து மீட்டுக் கொண்டு -அத்தை ஆஸ்ரிதற்கு ஆக்குகைக்கு இழி தொழில் செய்து அந்நீர்மையைக் காட்டி இவள் நீர்மையை அபஹரித்தான்
என் பாடுடை அல்குல் இழந்தது பண்பே.–இடமுடைத்தான கடி பிரதேசத்தை உடையவள் -பாடு -இடம் -பும்பாவம் மனஸா யயு -என்று சஜாதீயரையும் அழிக்கும் வடிவு அழகு -அவன் பும்ஸாம் த்ருஷ்ட்டி சித்த அபஹாரியாய் இருக்கிறாப் போலே –பண்பு – நீர்மை –

————————————————————–

வேத ப்ரதானாதி உபகாரங்களை பண்ணினவனுக்கு என் மகள் கற்பு இழந்தாள் என்கிறாள் –

பண்புடை வேதம் பயந்த பரனுக்கு
மண்புரை வையம் இடந்த வராகற்கு
தெண்புனற் பள்ளிஎம் தேவபி ரானுக்குஎன்
கண்புனை கோதை இழந்தது கற்பே.–6-6-5-

பண்புடை வேதம் -ஈஸ்வரனை உள்ளபடியே காட்டித் தரும் நீர்மையை யுடைய வேதம் —பயந்த -ப்ரஹ்மாவை ஓதுவிக்கை – பரனுக்கு-வேத ப்ரதிபாத்யன் ஆகையாலும்-ப்ரஹ்மாவுக்கு வேத சஷூசைக் கொடுக்கையாலும் -சர்வ ஸ்மாத் பரனானவனுக்கு-அறிவு இழந்தாருக்கு அறிவு கொடுக்குமவன் கிடீர் இவள் அறிவை அழித்தான்
மண்புரை வையம்-மண் மிக்க பூமி –-கிடந்த வராகற்குபயந்த பரனுக்கு-பிறருடைய ஸ்வரூப சித்யர்த்தமாக -தன்னை அழிய மாறுபவன் -மானமிலா பன்றியாம் தேசு -என்ன கடவது இ றே -மண் மிகுதி சொல்லிற்று எடுக்கையில் அருமை தோற்றுகைக்காக
தெண்புனற் பள்ளி -தெளிந்த புனலை உடைத்தான ஏகார்ணவத்தை படுக்கையாக உடையவன் -முதலிலே ஸ்ருஷ்ட்டி உன்முகனாய் ஸ் வச்சமான நீரை உடைய ஏகார்ணவத்திலே ஜகத் ரக்ஷண சிந்தனை பண்ணிக் கொண்டு கண் வளர்ந்து அருளுமவன் என்கை
-எம் தேவபி ரானுக்கு-ப்ரஹ்மாதிகளுக்கு ஸ்ருஷ்டியாதி உபகாரகன் என்னுதல் -அயர்வறும் அமரர்கள் அதிபதி கிடீர் ஒருவர் இல்லாதா போலே ஸ்ருஷ்ட்டி உன்முகனாய் இருக்கிறான் என்னுதல் -என்-கண்புனை கோதை இழந்தது கற்பே–கண்டார் கண்களை ஆபரணமாக உடைய மயிர் முடி -அதாகிறது கண்டார்க்கு வைத்த கண் வாங்க ஒண்ணாத படி கண்ணை பிணிக்க வற்றாய் இருக்கை -கண் என்று பீலிக் கண்ணாய் -அத்தை புனைந்த கோதை என்று ஜாதி உசிதமான ஆபரணம் என்பான் தமிழன் –இழந்தது கற்பே-சர்வருக்கும் ஞான பிரதனான தனக்கும் கூட அறிவு கொடுக்குமவள் அறிவைக் கிடீர் இழந்தது -கற்பு கல்வி -அதாவது -ஞானம் –

—————————————————————

ஏகார்ணவ சாயியான எம்பெருமானுடைய திவ்ய அவயவ ஸுந்தர்யத்திலே அகப்பட்டு என் பிள்ளை தன்னுடைய மெய் இழந்தாள் என்கிறாள் –

கற்பகக் காவன நற்பல தேளாற்கு
பொற்சுடர்க் குன்றன்ன பூத்தண் முடியற்கு
நற்பல தாமரை நாண்மலர்க் கையற்குஎன்
விற்புரு வக்கொடி தோற்றது மெய்யே.–6-6-6-

கற்பகக் காவன நற்பல தேளாற்கு-பொற்சுடர்க் குன்றன்ன பூத்தண் முடியற்கு-
ஒரு சாயல் கற்பகச் சோலை போலே யாய் -அவ்வளவு அன்றிக்கே விலக்ஷணமான தோள்களை யுடையவனுக்கு -ஒளியை யுடைய பொன் மலை போலே யாய் -தர்ச நீயமான திரு முடிக்கு அனுகூலமான திரு அபிஷேகத்தை யுடையவனுக்கு -பூ என்று மாலைகளால் அலங்க்ருதம் என்றுமாம் -இது சர்வ திவ்ய ஆபரணங்களும் உப லக்ஷணம் –நற்பல தாமரை நாண்மலர்க் கையற்கு-நன்றாய் பலவாய் செவ்வித் தாமரை பூ போலே இருக்கிற திருக் கையை உடையவனுக்கு –என்-விற்புரு வக்கொடி தோற்றது மெய்யே.–வில் போலே இருக்கிற புருவத்தை உடைய என் பெண் -ப்ரஹ்மாஸ்திரத்தை கொண்டு முடிந்து கிடப்பாரைப் போலே ஜய ஹேதுவான பரிகரத்தை கொண்டு கிடீர் தோற்றது -ஊர்த்தவம் மாஸன்ன ஜீவிஷ்யே-என்னும் வடிவைக் காட்டி ந ஜீவேயம் க்ஷணம் அபி -என்னப் பண்ணும் வடிவைக் கிடீர் கொண்டது-

———————————————————————

ஷீரார்ணவ சாயியான எம்பெருமானுடைய ஆபரண சோபாதிகளிலே  அகப்பட்டு என் பெண் பிள்ளை தன்னுடைய லாவண்யத்தை இழந்தாள் என்கிறாள் –

மெய்யமர்  பல்கலன் நன்கணிந் தானுக்கு
பையர வின் அணைப் பள்ளியி னானுக்கு
கையொடு கால்செய்ய கண்ணபி ரானுக்குஎன்
தையல் இழந்தது தன்னுடைச் சாயே.–6-6-7-

மெய்யமர் பல்கலன் -திரு மேனியில் பூத்தால் போலே பொருந்தி இருந்துள்ள கிரீடாதி நூபுராந்தமான திருவாபரணங்கள்
நன்கணிந் தானுக்கு-பூண வல்லபடியாலே வந்த அழகு –
பையர வின் அணைப் பள்ளியி னானுக்கு-
ஸ்வ ஸ்பர்சத்தாலே விகசிதமான பணங்களை-யுடைய நாற்றம் மென்மை குளிர்த்தி இவற்றை பிரக்ருதியாக யுடையவனை படுக்கையாக உடையனாய் அதிலே கண் வளர்ந்து அருளினவனுக்கு –இதுவும் ஒரு ஆபரண விசேஷம் போலே காணும் -கீழ் சொன்ன ஒப்பனை நிறம் பெரும் படுக்கை இ றே
கையொடு கால்செய்ய கண்ணபி ரானுக்கு-திருமேனிக்கு பரபாகமான சிவப்பை யுடைய திருக் கைகளையும் திருவடிகளையும் யுடையனாய் உபகார சீலனான ஸூ லபனுக்கு -திரு வனந்த ஆழ்வானோட்டை சேர்த்தியாலே யாயிற்று அவயவங்கள் தொடக்கமானவை பூர்ணம் ஆயிற்று
என்-தையல் இழந்தது தன்னுடைச் சாயே.–என் பெண் பிள்ளை இழந்தது மாணிக்கத்தின் ஓளி போலே தனக்கு நிறம் கொடுக்கும் லாவண்யத்தை -கழற்றி பூணும் ஆபரணத்தைக் காட்டி கழற்ற ஒண்ணாத ஆபரணத்தைக் கொண்டான் –தையல் -பெண் / சாய் -லாவண்யம் –

———————————————————-

பிரதிகூல நிரசன பரம்பரையை யுடையனான கிருஷ்ணனுக்கு தோற்று என் பெண் பிள்ளை ஸ்த்ரீத்வத்தை இழந்தாள் என்கிறாள் –

சாயக்  குருந்தம் ஒசித்த தமியற்கு
மாயச் சகடம் உதைத்த மணாளற்கு
பேயைப் பிணம்படப் பாலுண் பிரானுக்குஎன்
வாசக் குழலி இழந்தது மாண்பே.–6-6-8-

சாயக் குருந்தம் ஒசித்த தமியற்கு-அஸூரா விசிஷ்டமான குருந்தை வேரோடு சாய்ந்து விழும்படி முறித்த –-தமியற்கு--நம்பி மூத்த பிரானை ஒழியவே தனி வீரம் செய்தவனுக்கு -தான் தனிமையிலே சென்று உதவக் காணும் இவளுக்கு நினைவு
மாயச் சகடம் உதைத்த மணாளற்கு-கிருத்ரிம சகடம் என்னுதல் -தளர்ந்தும் முறிந்தும் என்கிறபடியே சகடம் உரு மாயும் படி என்னுதல் -மணாளற்கு-ஸ்ரீ ஜனக ராஜன் திருமாலுக்கு தனுர் பங்கம் போலே இவ்வாபத்தானத்தை காட்டி யாயிற்று இவளை அநன்யார் ஹை யாக்கிக் கொண்டது –
பேயைப் பிணம்படப் பாலுண் பிரானுக்குஎன்-சூர்ப்பணகாவைப் போலே ஓர் அனர்த்தத்தை விளைக்க உயிரோடே விடாதே பூதனையை பிணமாய் விழும்படி முலைப் பண்ண வல்ல மஹா உபகாரகனுக்கு
என் வாசக் குழலி இழந்தது மாண்பே.–நைசர்க்கிக்க பரிமளமானகுழலை யுடைய என் பெண் -அவனை சர்வ கந்த என்று சொல்லுகைக்கு அடியான குழல் என்கை -வாசம் செய் பூங்குழலாள் இ றே -தம் பும்ஸத்வ ப்ரயுக்தமான செயல்களை எல்லாம் காட்டி இவளுடைய ஸ்த்ரீத்வத்தை கொண்டான் —மாண்பு -மாட்சிமை -ஸ்த்ரீத்வம் –

—————————————————————–

ஸ்ரீ வாமனாதி அநேக அவதாரங்களை பண்ணி இருந்துள்ள எம்பெருமானுடைய திரு வழகிலே அகப்பட்டு என் பிள்ளை தன்னுடைய அழகை  இழந்தாள் என்கிறாள் –

மாண்பமை கோலத்துஎம் மாயக் குறளற்கு
சேண்சுடர்க் குன்றன்ன செஞ்சுடர் மூர்த்திக்கு
காண்பெருந் தோற்றத்துஎம் காகுத்த நம்பிக்குஎன்
பூண்புனை மென்முலை தோற்றது பொற்பே.–6-6-9-

மாண்பமை கோலத்துஎம் மாயக் குறளற்கு-அழகு சமைந்த ஒப்பனையை யுடையவனாய் -ஆச்சர்யமான வேஷத்தை யுடைய ஸ்ரீ வாமனனுக்கு-மாண்பு -அழகு –மாயம் -என்று வஞ்சகம் ஆகவுமாம் –
சேண்சுடர்க் குன்றன்ன செஞ்சுடர் மூர்த்திக்கு-கையிலே நீர் விழுந்த வாறே வளர்ந்த படி -ஓங்கிப் புகரை யுடைய மலை போலே சிவந்த ஒளியை யுடைய வடிவை யுடையவனுக்கு
காண்பெருந் தோற்றத்துஎம் காகுத்த நம்பிக்கு-கண்ணுக்கு இனியதாய் அபரிச்சேத்யமான போக்யமான சந்நிதியை யுடையவன் என்னுதல் -ஜென்ம ராமஸ்ய ஸூ மஹத் -என்கிற அவதாரம் ஆதல் -குண பூரணமான சக்கரவர்த்தி திருமகனுக்கு –
என் பூண்புனை மென்முலை தோற்றது பொற்பே.–பூண் என்று ஆபரணமாய் அத்தாலே அலங்க்ருதமாய் விரஹ சஹம் அல்லாத முலையை யுடையவள் -பொற்பு என்று அழகு –-பூம் புணை மென் முலை என்கையாலே ஒப்பனையால் வந்த அழகை இழந்தாள் -அவனைத் தோற்பிக்கும் முலையை உடையவள் கிடீர் தோற்றாள்-

————————————————————

பரத்வம் என்ன -அவதாரம் என்ன -ஜகதாகாரதை என்ன -இவற்றை அடங்கக் காட்டி இவளுடைய எல்லாவற்றையும் கொண்டான் என்கிறாள் –

பொற்பமை  நீண்முடிப் பூந்தண் துழாயற்கு
மற்பொரு தோளுடை மாயப் பிரானுக்கு
நிற்பன பல்லுருவாய் நிற்கு மாயற்கு என்
கற்புடை யாட்டி இழந்தது கட்டே.–6-6-10-

பொற்பமை நீண்முடிப் பூந்தண் துழாயற்கு-அழகு சமைந்து இருப்பதாய் -ஆதி ராஜ்ய பிரகாசகமான திரு அபிஷேகத்தை உடையனாய் -அதின் மேலே ஐஸ்வர்ய ஸூ சகமான திருத் துழாய் மாலையையும் உடையவனுக்கு – -பூந்தண் துழாய் -ஸ்வ ஸ்பர்சத்தாலே பூத்து ஸ்ரமஹரமாய இருக்கை
மற்பொரு தோளுடை மாயப் பிரானுக்கு-வந்து திருவவதரித்து மற்பொரு தோளை யுடையவன் – மாயப் பிரானுக்கு-சாத்தின சாந்து அழியாத படி மல் பொருத ஆச்சர்யம் -சாவத்தகர்த்த சாந்தணி தோள் சதுரன் இ றே -மற்றும் ஆச்சர்யமான உபகாரகங்களைப் பண்ணினவன் என்றுமாம்
நிற்பன பல்லுருவாய் நிற்கு மாயற்கு – -ஸ்தாவர ஜங்கமாத்மக சகல பதார்த்தங்களும் அந்தர்யாமியாக நிற்கிற ஆச்சர்ய பூதனுக்கு
என்-கற்புடை யாட்டி — .–மிக்க அறிவுடைய என் மகள் -தத் தஸ்ய சத்ருசம்பவேத்-என்று இருக்கும் அறிவு இ றே
இழந்தது கட்டே-தனக்கு உள்ளவற்றை நேராகக் காட்டி இவள் பக்கல் உள்ளவற்றை நேராகக் கொண்டான் -கட்டு என்று மரியாதையாய் அத்தை இழந்தாள் என்றுமாம் –

—————————————————————

நிகமத்தில் இத்திருவாய் மொழி யை அப்யஸிக்க வல்லார் நித்ய ஸூ ரிகள் போகத்தை புஜிக்கப் பெறுவார்கள் என்கிறார் –

கட்டெழில்  சோலை நல் வேங்கட வாணனைக்
கட்டெழில் தென்குரு கூர்ச்சட கோபன்சொல்
கட்டெழில் ஆயிரத்து இப் பத்தும் வல்லவர்
கட்டெழில் வானவர் போகம்உண்பாரே.–5-6-11-

கட்டெழில் சோலைகட்டு -கடி என்றத்தை கட்டு என்று வலித்து-பரிமளத்தை யுடைய நல்ல சோலை –நல் வேங்கட வாணனைக்-சேஷ சேஷிகள் இருவருக்கும் உத்தேச்யமான திரு மலை -வாணனைக்-நிர்வாஹகனை -திருவேங்கடமுடையானை யாயிற்றுக் கவி பாடிற்று -திருவேங்கடத்து என்னானை என்னப்பன் எம்பெருமான் உளனாகவே –என் நாவில் இன்கவி யான் ஒருவருக்கும் கொடுக்கிலேன் -என்று இருக்குமவர் இ றே
கட்டெழில் தென்குரு கூர்ச்சட கோபன்சொல்-கட்டு என்று அரண் -அரணை யுடைய திரு நகரி
கட்டெழில் ஆயிரத்து இப் பத்தும் வல்லவர்-கட்டு என்று தொடை -அழகிய தொடையை யுடைத்தாகை
கட்டெழில் வானவர் போகம்உண்பாரே.–பெரிய வானவர் -போக விசேஷணம் ஆகவுமாம் -சம்சாரத்தில் போகம் கர்ம நிபந்தம் ஆகையால் அல்பமாய் அஸ்திரமாய் இருக்கும் இ றே -ஸ்வரூப அனுரூபம் ஆகையால் சம்ருத்தமாய் நித்தியமாய் இருக்கை -நாலு அடியிலும் என்கிற சப்தம் சாகல்ய பரமாகவுமாம் –நீர்மைக்கு எல்லையான திருமலை ஆஸ்ரயணீய ஸ்தலம் -மேன்மைக்கு எல்லையான பரமபதம் அனுபவ ஸ்தலம் -ஒன்றி யாக்கை புகாமை உய்யக் கொள்வான் நின்ற வேங்கடம் இ றே-

———————————————————————-

கந்தாடை  அப்பன் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

திருவாய்மொழி ஒன்பதினாயிரப்படி –6-6-

September 29, 2016

கீழில் திருவாய் மொழியில் பிறந்த வ்யஸனம் முறுகடி யிடுகையாலே இப்பிராட்டியும் மோஹித்து-அது பொறுக்க மாட்டாமை
இவளுடைய தோழியும் மோஹித்த தசையிலும்-இவளை ஜீவிப்பிக்கைக்கு விரகுகளை மநோ ரதிக்கையாலே
தரித்து இருக்கிற திருத் தாயாரானவள் -இவளுடைய வலயாதிகள் காணக் காண சிதிலமாய் போகிறபடியை கண்டு –
அவற்றைத் தனித் தனியே சொல்லி சோகிக்கிறாள்-

———————————————————–

இவன் உலகு அளந்து அருளின எம்பெருமானுடைய குண சேஷ்டிதாதிகளிலே அகப்பட்டு வளை இழந்தாள் என்கிறாள் –

மாலுக்கு  வையம் அளந்த மணாளற்கு
நீலக் கருநிற மேக நியாயற்கு
கோலச்செந் தாமரைக் கண்ணற்கு என் கொங்கலர்
ஏலக் குழலி இழந்தது சங்கே.–6-6-1-

ஆஸ்ரித விஷயத்தில் மிகவும் வ்யாமுக்தனாய் அதி மானுஷ சேஷ்டிதங்களைப் பண்ணி ஆஸ்ரிதருடைய அபேக்ஷிதங்களை முடித்துக் கொடுத்த இச் செயலால் இவளை அகப்படுத்தி இவளுக்கு போக்தாவானவனுக்கு
அற நெய்த்துக் கறுத்த நிறத்தை யுடைய மேகம் போலே சிரமஹரமான நிறத்தையும் அதினுடைய உதாராதிகளையும் உடையனாய் ஆஸ்ரிதருடைய அபேக்ஷிதம் முடித்துக் கொடுக்கப் பெற்ற ஹர்ஷ ப்ரகர்ஷத்தாலே அழகு பெற்ற திருக் கண்களையும் உடையவனும் –
விசேஷணம் தோறும் அவனுக்கு என்கிறது தனித்தனியே ஈடுபடுகையாலே
ஏலக் குழலி இழந்தது சங்கே-ஏலம் போலே நறு நாற்றத்தை கமழா நின்ற குழலை யுடைய என் மகள் –

————————————————————–

திரு உலகு அளந்து அருளின எம்பெருமானுடைய ஸ்ரீ பஞ்சாயுத தாரணத்தாலே வந்த அழகிலே அகப்பட்டு  என் மகள் தன்னுடைய அழகிய நிறத்தை இழந்தாள் -என்கிறாள் –

சங்குவில் வாள்தண்டு சக்கரக் கையற்கு
செங்கனி வாய்ச்செய்ய தாமரைக் கண்ணற்கு
கொங்கலர் தண்ணந் துழாய் முடி யானுக்குஎன்
மங்கை இழந்தது மாமை நிறமே.–6-6-2-

திருப் பவளத்தில் அழகும் திருக் கண்களில் அழகும் போலே தகுதியான ஸ்ரீ பஞ்சாயுதங்களை திருக் கையிலே தரித்த அழகை உடையவனுக்கு-இவை சர்வாயுதங்களுக்கும் உப லக்ஷணம் –கொங்கலர்-பரிமளம் மிகுகை-

———————————————————————-

ஆலிலையில் கண் வளர்ந்து அருளினவனுடைய ஸுந்தரியாதிகளிலே அகப்பட்டு என் பெண் பிள்ளை தன்னுடைய பெருமையை இழந்தாள் என்கிறாள் –

நிறங்கரி யானுக்கு நீடுலகு உண்ட
திறங்கிளர் வாய்ச்சிறுக் கள்வ னவர்க்கு
கறங்கிய சக்கரக் கையவ னுக்குஎன்
பிறங்கிருங் கூந்தல் இழந்தது பீடே.–6-6-3-

இம் மஹா லோகத்தை எல்லாம் திரு வயிற்றிலே வைத்துக் கொண்டமை தெரியும் படியான திருப் பவளத்தையும் யுடையவனாய் -தான் சிறுத்து ஒருவருக்கும் பரிச்சேதிக்க ஒண்ணாத அத்யாச்சர்ய சேஷ்டிதங்களை யுடையவனுக்கு –
பிரதிபக்ஷத்தை மாய்க்கையில் உண்டான த்வரையாலே எப்போதும் சுழன்று வாரா நின்றுள்ள திரு வாழியைத் திருக் கையிலே உடையனான கிருஷ்ணனுக்கு –என்-பிறங்கிருங் கூந்தல்-வளர்ந்து பெருத்து இருந்துள்ள கூந்தலை யுடைய என் பெண் பிள்ளை –

—————————————————————–

சதுர் முகனுக்கு ஸ்ரஷ்டாவாய் வைத்து தன் மேன்மை பாராதே ஆஸ்ரித அபிமதங்களை செய்து அருளும் மஹா குணத்தை உடையவனுக்கு என் பெண் பிள்ளை தன்னுடைய நீர்மையை இழந்தாள் என்கிறாள் –

பீடுடை  நான்முகனைப்படைத் தானுக்கு
மாடுடை வையம் அளந்த மணாளற்கு
நாடுடை மன்னர்க்குத் தூது செல் நம்பிக்கு என்
பாடுடை அல்குல் இழந்தது பண்பே.–6-6-4-

மாடுடை வையம் அளந்த மணாளற்கு-வஸூமதியான பூமியை இந்திரன் இழந்தான் என்று பார்த்து -அவனுக்கு வாங்கிக் கொடுத்து அருளுகைக்காக பண்ணின கிருத்ரிம சேஷ்டிதத்தாலே தன்னை அகப்படுத்தினவனுக்கு
நாடுடை மன்னர்க்குத் தூது செல் நம்பிக்கு-நாடுடைய ராஜாக்களான பாண்டவர்களுக்கு தூத க்ருத்யம் பண்ணி அத்தாலே பரிபூர்ணன் ஆனவனுக்கு
பாடுடை அல்குல் இழந்தது பண்பே--இடமுடைத்தான கடிப்பிரதேசத்தை யுடைய என் பெண் பிள்ளை-

—————————————————————–

வேத ப்ரதானாதி உபகாரங்களை பண்ணினவனுக்கு என் மகள் கற்பு இழந்தாள் என்கிறாள் –

பண்புடை வேதம் பயந்த பரனுக்கு
மண்புரை வையம் இடந்த வராகற்கு
தெண்புனற் பள்ளிஎம் தேவபி ரானுக்குஎன்
கண்புனை கோதை இழந்தது கற்பே.–6-6-5-

பண்புடை வேதம் பயந்த பரனுக்கு-மண்புரை வையம் இடந்த வராகற்கு-
தன்னை பிரதிபாதிக்க வற்றான வேதத்தை ப்ரஹ்மாவுக்காக ஆவிஷ்கரிப்பதும் செய்து -எல்லாரிலும் பரனாய் மண் மிக்க பிருத்வியை கிடந்த ஸ்ரீ வராஹமானவனுக்கு -மண் மிகுதி சொல்லிற்று -எடுக்கையில் அருமை தோற்றுகைக்காக
தெண்புனற் பள்ளிஎம் தேவபி ரானுக்குஎன்-கண்புனை கோதை இழந்தது கற்பே.–
கண் வளர்ந்து அருளுகைக்கு ஈடாம்படி ஸ்வாச்சமான நீர் வெள்ளத்தை யுடைத்தான ஏகார்ணவத்திலே கண் வளர்ந்து அருளா நின்று ப்ரஹ்மாதி தேவர்களுக்கும் ஸ்ருஷ்டியாதி உபகாரகனுக்கு -கண்டாருடைய கண்ணை பிணிக்க வல்ல -அழகை யுடைய என் பெண் பிள்ளை தன்னுடைய கல்வியை  இழந்தாள்-

—————————————————————

ஏகார்ணவ சாயியான எம்பெருமானுடைய திவ்ய அவயவ ஸுந்தர்யத்திலே அகப்பட்டு என் பிள்ளை தன்னுடைய மெய் இழந்தாள் என்கிறாள் –

கற்பகக் காவன நற்பல தேளாற்கு
பொற்சுடர்க் குன்றன்ன பூத்தண் முடியற்கு
நற்பல தாமரை நாண்மலர்க் கையற்குஎன்
விற்புரு வக்கொடி தோற்றது மெய்யே.–6-6-6-

ஒரு சாயல் கற்பக சோலை போலேயேயாய் -அவ்வளவு அன்றிக்கே நன்றான பழ திருத் தோள்களை உடையனாய் ஒளியை யுடைய பொன் மலை போலே யாய் -அழகியதாய் திருமுடிக்கு அனுகூலமான திரு அபிஷேகத்தை உடையவனுக்கு –திரு அபிஷேகம் சர்வ திவ்ய ஆபரணங்களும் உப லக்ஷணம்
அழகியதாய் பலவாய் செவ்வித் தாமரை பூ போலே இருக்கிற திருக் கைகளை யுடையவனுக்கு வில் போலே இருக்கிற புருவத்தை யுடைய என் பெண் பிள்ளை உடம்பு இழந்தாள்-

———————————————————————

ஷீரார்ணவ சாயியான எம்பெருமானுடைய ஆபரண சோபையிலே அகப்பட்டு என் பெண் பிள்ளை தன்னுடைய லாவண்யத்தை இழந்தாள் என்கிறாள் –

மெய்யமர்  பல்கலன் நன்கணிந் தானுக்கு
பையர வின் அணைப் பள்ளியி னானுக்கு
கையொடு கால்செய்ய கண்ணபி ரானுக்குஎன்
தையல் இழந்தது தன்னுடைச் சாயே.–6-6-7-

திருமேனிக்கு சேர்ந்து இருந்துள்ள பல திரு அணிகலன்களையும் அழகிதாகச் சாத்தி அருளி தன்னுடைய ஸ் பர்சத்தாலே பணம் விரித்து இருக்கிற திரு வனந்த ஆழ்வான் மேலே அவ்வொப்பனை நிறம் பெறும்படி கண் வளர்ந்து அருளினவனுக்கு –
கறுத்த திரு நிறத்தில் பகைத்து தொடையாய் சிவந்து இருந்துள்ள திருக் கைகள் திரு வடிகள் முதலான திவ்ய அவயவங்களை யுடையனாய் அனுக்ரஹ சீலனான கிருஷ்ணனுக்கு -லாவண்யமாவது -ஓளி-

——————————————————————-

பிரதிகூல நிரசன பரம்பரையை யுடையனான கிருஷ்ணனுக்கு என் பெண் பிள்ளை மாண்பை இழந்தாள் என்கிறாள் –

சாயக்  குருந்தம் ஒசித்த தமியற்கு
மாயச் சகடம் உதைத்த மணாளற்கு
பேயைப் பிணம்படப் பாலுண் பிரானுக்குஎன்
வாசக் குழலி இழந்தது மாண்பே.–6-6-8-

அஸூர வடிவான குருந்தை வேரோடு சாய்ந்து விழும்படி தனியே நின்று முறித்து ஆ ஸூ ரமான க்ருத்ரிம சகடத்தை பொடியாம்படி உதைத்த இச் செயலாலே இவள் தனக்கே யாம் படி பண்ணிக் கொண்டவனுக்கு –
பூதனையை பிணமாய் விழும்படி முலைப்பால் உண்ண வல்ல மஹா உபகாரகனுக்கு
நை சர்க்கிகமான பரிமளமான குழலை யுடைய என் பெண் பிள்ளை தன்னுடைய மாட்சியை இழந்தாள் -அதாவது ஸ்த்ரீத்வம் –

————————————————————-

ஸ்ரீ வாமனாதி அநேக அவதாரங்களை பண்ணி இருந்துள்ள எம்பெருமானுடைய திரு வழகிலே அகப்பட்டு என் பிள்ளை தன்னுடைய பொற்பை இழந்தாள் என்கிறாள் –

மாண்பமை கோலத்துஎம் மாயக் குறளற்கு
சேண்சுடர்க் குன்றன்ன செஞ்சுடர் மூர்த்திக்கு
காண்பெருந் தோற்றத்துஎம் காகுத்த நம்பிக்குஎன்
பூண்புனை மென்முலை தோற்றது பொற்பே.–6-6-9-

அழகு சமைந்த ஒப்பனையை யுடையவனாய் -அத்யாச்சர்ய பூதனாய் ஆஸ்ரித பவ்யனான ஸ்ரீ வாமனனாய் உயர்ந்து இருந்துள்ள சுடர்க் குன்று போலேயாய் செஞ்சுடரை யுடைய வடிவை யுடையவனுக்கு
ஸ்ப்ருஹணீயமாய்-அபரிச்சேதயமான தோற்றத்தை யுடையவனாய் சர்வ குண சம்பன்னனாய் ஆஸ்ரித பரதந்த்ரனான காகுத்ஸதனுக்கு -ஜென்ம ராமஸ்ய ஸூ மஹத் -என்கிற அவதார மஹாத்மம் ஆகவுமாம் –
ஆபரணங்களால் அலங்க்ருதையாய் -அதும் பொறாத ஸுகுமார்யத்தை உடையளான என்னுடைய மகள் தன்னுடைய அழகை இழந்தாள் –

—————————————————————-

ஸ்ரீ வைகுண்ட நாதனாயும்-ஸ்ரீ கிருஷ்ணாதி அவதாரங்களை பண்ணியும் -பிரதிகூல நிரசனங்களைப் பண்ணியும் -ஜெகதாகாரனாயும் இருக்கிற எம்பெருமானுக்கு என் மகள் கட்டு இழந்தாள் என்கிறாள் –

பொற்பமை நீண்முடிப் பூந்தண் துழாயற்கு
மற்பொரு தோளுடை மாயப் பிரானுக்கு
நிற்பன பல்லுருவாய் நிற்கு மாயற்கு என்
கற்புடை யாட்டி இழந்தது கட்டே.–6-6-10-

மிகவும் அழகியதாய் -சர்வ ஐஸ்வர்ய ஸூசகமான திரு அபிஷேகத்தையும் திருக் குழலிலே ஸ்பர்சத்தாலே பூத்து ஸ்ரமஹரமான திருத் துழாய் மாலையையும் உடையனாய் -பூசின சந்தனம் அழியாத படி மல்லரோடு பொருத தோளையும் உடையனாய் இப்படி அத்யாச்சர்யமான மஹா உபகாரங்களைப் பண்ணுமவனுக்கு
ஸ் தாவர ஜங்கமாத்மகமான ஜகத்தை தனக்கு சரீரமாக யுடையனாய் நிற்கிற கிருஷ்ணனுக்கு மிகவும் கற்புடையவளாய் இருக்கிற என் மகள் எல்லாம் இழந்தாள் -லோக யாத்திரையை இழந்தாள் என்றுமாம் –

——————————————————————–

நிகமத்தில் இத்திரு வாய் மொழி வல்லவர்கள் அயர்வறும் அமரர்களுடைய போகத்தை புஜிப்பார் என்கிறார் –

கட்டெழில்  சோலை நல் வேங்கட வாணனைக்
கட்டெழில் தென்குரு கூர்ச்சட கோபன்சொல்
கட்டெழில் ஆயிரத்து இப் பத்தும் வல்லவர்
கட்டெழில் வானவர் போகம்உண்பாரே.–5-6-11-

நாலு பாதத்திலும் கட்டு என்கிற சப்தம் சாகல்ய பரம் -நாலு பாதத்திலும் கட்டுக்குப் பொருள் -பரிமளமும்– காவலும்–தொடையும் -பெருமையும் -என்றுமாம்  –

————————————————————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

திருவாய்மொழி இருபத்து நாலாயிரப்படி –6-5-

September 29, 2016

கீழ் கிருஷ்ண அனுபவமே பண்ணினார் -அந்த ப்ரீதி உள் அடங்காமையாலே பாஹ்ய சம்ச்லேஷ அபேக்ஷை பிறந்து
அது பெறாமையாலே தமக்கு பிறந்த பாரவஸ்யத்தை அந்யாபதேசத்தாலே அருளிச் செய்கிறார் என்று பூர்வர்கள் நிர்வாகம் –
பட்டர் -கீழே நிரவதிக ப்ரீதியாய் சென்றது -அதுக்கும் இதுக்கும் சேர்த்தி இங்கனம் ஆக ஒண்ணாது
-தண்ணீர் குடியா நிற்க விக்கினால் ரஸா அனுபவம் கலங்கி நோவு படுமா போலே -செல்லுகிற ப்ரீத்யனுபவம் கலங்கி
பிறந்த பாரவஸ்ய அதிசயத்தை அருளிச் செய்கிறார் என்று அருளிச் செய்வர்-அதாவது
பொய் நின்ற ஞானம் தொடங்கி இவ்வளவும் வர பகவத் விஷயத்தில் பூர்ண அனுபவம் இன்றிக்கே இருக்கையாலே
தமக்குப் பிறந்த ப்ராவண்ய அதிசயத்தை அருளிச் செய்கிறார் –
இது திருவாய் மொழிக்கு கீழ் எல்லாம் -சர்வேஸ்வரனைப் பேசினார் -இத்திரு வாய் மொழியிலே தம்மை பேசுகிறார் –
யதோ வாசோ நிவர்த்தந்தே-என்கிற விஷயத்தை விளாக்குலை கொண்டு -பேசுகைக்கு தாம் அல்லது இல்லாதா போலே –
இவ்விஷயத்தில் தம் விஷயத்தை பேசுகைக்கும் தாம் அல்லது இல்லை யாயிற்று –
தலை மகளாயும்-திருத் தாயாரையும் -தோழியாயும் பிறந்த அவஸ்தைகள் அடங்க இவர் தமக்கே பிறந்த
தசா விசேஷம் என்னும் படி இ றே இவரது பிரணவ அதிசயம் –
ப்ராவண்யத்தை விளைக்கிற திருத் தாயாரும் தோழியும் நிஷேதிக்கிறது சாதனா புத்த்யயே என்று இறே -என்று
–இவள் மேல் விழுகிறது ப்ராப்ய புத்தியால் -இந்த ப்ராவண்ய அதிசயத்தை அந்யாபதேசத்தாலே அருளிச் செய்கிறார் –
திருத் தொலை வில்லி மங்கலத்தில் நின்று அருளினை தேவபிரானுடைய அழகிலும் -அவ்ஊரில் சம்பத்திலும் ப்ரவண சித்தையாய் இருப்பாள்
ஒரு பிராட்டியை -அதி பிராவண்யம் ஆகாது என்று மீட்க நினைத்த திருத் தாய்மாரை இவள் கருத்து அறிந்த தோழி
-உங்களை இவளை மீட்க முடியாது -என்கிற பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –
ஜனக ராஜன் திருமகள் திருவவதரித்த அளவிலே ஜ்யோதிஷரைக் கேட்க
ஸார்வ பவ்மனுக்கு புக கடவள்–கனக்க ஜீவிக்கும் – நடுவே வனவாச கிலேசமும் அனுபவிக்க கடவள் -என்றார்கள்
அது போலே இவளுக்கும் ஒரு அபம்ருத்யு உண்டு -அதாவது திருத் தொலை வில்லி மங்கலத்தில் இவளைக் கொண்டு போகாது ஒழியில்
இவள் ஜீவிக்கும் என்றார்கள் -அவ் ஊரில் கொண்டு புகாத படி அல்லாமையாலே கொண்டு புக்கார்கள்
-அங்கே அவகாஹித்த படியைக் கண்டு மீட்கப் புக -இனி இவளை மீட்க முடியாது -நீங்களும் இவள் வழியே ஒழுக பாருங்கோள் -என்று
தோழி வார்த்தையாகச் செல்லுகிறது –
இத்தால் சேஷத்வம் சத்தா ப்ரயுக்தமானவோபாதி ப்ராவண்யமும் சத்தா ப்ரயுக்தம் என்னும் இடத்தை நிர்வஹிக்கிற தாயிற்று –

——————————————————————-

இவள் பிரகிருதி அறியாதே திருத் தொலை வில்லி மங்கலத்தை காட்டின பின்பு உங்கள் ஹித வசனத்துக்கு இவள் மீளுமோ -என்கிறாள் –

துவளில்மா மணி மாடமோங்கு தொலைவில்லி மங்கலம்தொழும்
இவளை நீர் இனி அன்னைமீர்! உமக்காசை இல்லை விடுமினோ;
தவள ஒண்சங்கு சக்கரமென்றும் தாமரைத் தடங்கண் என்றும்
குவளை ஒண்மலர்க் கண்கள் நீர்மல்க நின்று நின்று குமுறுமே.–6-5-1-

துவளில்மா மணி மாடமோங்கு தொலைவில்லி மங்கலம்தொழும்
குற்றம் அற்று இருக்கையாலே பெரு விலையனான மணியாலே செய்த மாடம் –மணிக்கு தோஷ பாவம் -வந்து கழித்தது அன்றிக்கே -ப்ராகபாவமும் இன்றிக்கே -அத்யந்த பாவமாய் இருக்கை -முக்தனுடைய அபஹத பாப்மத்வாதிகள் போல் அன்றிக்கே -ஈஸ்வரனுடைய அபஹத பாப்மத்வாதிகள் போலே இருக்கை –திவா ராத்ர விபாகம் பண்ண ஒண்ணாத படியான பிரகாசமான மாடம் –
ஓங்கு –ஆகாச அவகாசம் அடையும்படியான மாடம் -கலந்து பிரிகிற போது-ஊர் எது என்ன -அணிமை சொல்லுகைக்காக அவ் ஊரின் மாடங்களின் நிழல் அன்றோ இது என்றான் ஆயிற்று –
தொலைவில்லி மங்கலம்தொழும் இவளை –
பர வியூஹ விபவங்களிலே தொழுதவள் அல்லள்-அது தன்னிலும் உள்ளு நிற்கிற அரவிந்த லோசன் அளவாகில் அன்றோ மீட்கலாவது-அவனோடே சம்பந்தம் உள்ள இடம் எங்கும் புக்கு அவகாஹித்தவளை மீட்கப் போமோ -விஷயம் பரோஷமாய்-எட்டாது கான் என்று மீட்கவோ -ப்ரத்யக்ஷ விஷயம் பரிச்சின்னம் என்று மீட்கவோ-தொழும் இவளை -ஞானா நந்தங்களுக்கு முன்னே நிரூபகம் இ றே பாரதந்தர்யம் -தொழுகையே நிரூபகமாய் இருக்கிறவளை -தாஸோஹம் வாஸூ தேவஸ்ய -ப்ராஞ்சலீம் ப்ரஹவமாஸீனம் -ஒன்றை உருகு பதத்தில் பிடித்தால் வலித்தாலும் அப்படியே உருவ நிற்கும் ஆயிற்று
நீர் -இவளுடைய ப்ராவண்யத்தில் சாதனா புத்தி பண்ணுகிற நீங்கள்
இனி -இவளுக்கு இவ் ஊரைக் காட்டின பின்பு
அன்னைமீர்!-ப்ராப்த யவ்வனை யானாலும் -பெற்றோம் என்கிற ப்ராப்தியைக் கொண்டு மீட்கப் போமோ –அவ்வருகு பட்டாலும் நியந்தரு தையைக் கொண்டு மீட்கவோ
உமக்காசை இல்லை விடுமினோ;
வகுத்தவன் கைக்கு கொண்டால் உமக்கு ஆசை இல்லை –ஹிதம் சொல்லுவதை
பெற்ற எங்களை விடுங்கோள் என்கிறது எத்தைக் கொண்டு என்ன
தவள ஒண்சங்கு சக்கரமென்றும்
ஸ்யாமமான திரு நிறத்துக்கு பரபாகமான திரு நிறத்தை யுடைய ஸ்ரீ பாஞ்ச ஜன்யமும்
உண்பது சொல்லில் உலகலந்தான் வாய் அமுதம் என்று பிராட்டிமாரும் ஆசைப்பட்டு சீறு பாறு என்னும் செல்வம் உடையவன்
அங்கனம் விசேஷணம் இட்டுச் சொல்ல ஒண்ணாத திரு வாழி
என்றும் -இவற்றைக் காண வேணும் என்னுதல் –இவற்றோடு வர வேணும் என்னுதல் -சொல்ல மாட்டு கிறி லள் -பல ஹானியாலே
தாமரைத் தடங்கண் என்றும்-தாமரையை ஒரு வகைக்கு ஒப்பாகச் சொல்லலாய்-போக்தாக்கள் அளவன்றிக்கே இரண்டு ஆழ்வார்கள் அளவும் அலை எறிகிற திருக் கண்கள்
என்றும் என்றும் என்கையாலே துர்பலன் மலையை எடுத்தால் போலே இருக்கிற படி
குவளை ஒண்மலர்க் கண்கள் நீர்மல்க நின்று நின்று குமுறுமே.–
குவளையும் ஒப்பாக மாட்டாத அழகிய கண்கள் நீர் மல்கும் படியாக -தாமரைத் தடங்கண் நீர் மல்க பிராப்தமாய் இருக்க இவள் கண் நீர் பாய்வதே –இவள் ஜிதந்தே என்பது கண்ண நீரால் யாயிற்று -கிமர்த்தம் தவ நேத்ராப்யாம் -இவளை மீட்கப் போமோ
நின்று நின்று குமுறுமே.–கன்றைக் கிட்டு கட்டி வைத்தால் ஸூ ரபி படுமா போலே படா நின்றாள் -பெரு வெள்ளத்தில் சுழிக்குமா போலே அகவாயில் உள்ளது வெளியிட மாட்டாதே நின்று சுழிக்கிற படி
உகும் இறும் என்றால் போலே சிலர் சொன்னார்கள் -அவர்கள் இவளுக்கு ஓடுகிற பாவ வ்ருத்தி அறியாமையால் சொல்லுகிறார்கள் -இவள் இப்படி அவகாஹித்த பின்பு மீட்கப் பாராதே பின் செல்லப் பாருங்கோள் என்கிறாள் –

——————————————————————–

அவ்ஊரில் கொண்டு புக்கத்துக்கு மேலே திரு நாளிலே கொண்டு புகுவார் உண்டோ என்கிறாள் –

குமுறுமோசை விழவொலித் தொலை வில்லி மங்கலம் கொண்டு புக்கு
அமுத மென்மொழி யாளை நீர்உமக் காசை யின்றி அகற்றினீர்
திமிர்கொ டாலொத்து நிற்கும் மற்றிவள் தேவ தேவபிரான்என்றே
நிமியும் வாயொடு கண்கள் நீர்மல்க நெக்கொசிந்து கரையுமே.–6-5-2-

குமுறுமோசை விழவொலித் தொலை வில்லி மங்கலம்
ஓத்துச் சொல்வார் -சங்கீர்த்தனம் பண்ணுவார் -பாடுவாராய் -எழுத்தும் சொல்லும் பொருளும் தெரியாதபடி விரவிக் கொண்டு எழுகிற த்வனியைக் கொண்டு திரு நாளிலே ஆரவாரம்
பரமபதத்தில் கொண்டு புக்கி கோளாகிலும் மீட்கலாயிற்று
கொண்டு புக்கு-இவள் அறியாதே இருக்க நீங்களே கொண்டு புக்கு –
அமுத மென்மொழி யாளை நீர்உமக் காசை யின்றி அகற்றினீர்
இவள் பேச்சைக் கேட்டால் போன உயிரும் மீளுமாயிற்று -மென் மொழி -அம்ருதத்தில் வியாவ்ருத்தி-ஸ்ரவண யோக்யமாய் இராதே அம்ருதம்
மதுரா மதுரா லாபா என்று இவள் பேச்சைக் கேட்க ஆசைப்பட்டு இருக்குமவன் பெற்றுப் போனான் -நீங்கள் ஆசை இல்லாமையால் அகற்றினி கோள் -தம் தாமுக்கு அனர்த்தத்தை தாம் தாமே விளைத்துக் கொள்ளுவார் உண்டோ -அகற்றுகை யாவது –அகலும் படி பண்ணினி கோள் என்கை –அதாவது இவ் ஊரில் புக்க பின்பு இவர்களோடு வார்த்தை சொல்லாத தவிர்ந்தாள் யாயிற்று
திமிர்கொ டாலொத்து நிற்கும் மற்றிவள் தேவ தேவபிரான்என்றே
ஸ்தபதை யானால் போலே இருக்கும் -வியாபார க்ஷமை இன்றியே இரா நின்றாள் -ஸ் தப்தோ சாஸ் யுத தாமாதேச மபிராஷ்ய -என்கிறபடியே பரிபூர்ண ஞானரைப் போலே இரா நின்றாள்-
மற்றிவள்–வேறு இவள் வார்த்தை சொல்லப் புக்காள் ஆகில் –
தேவ தேவபிரான்என்றே-இங்கே கண்டாலும் அயர்வரும் அமரர்கள் அதிபதி இங்கே வந்து ஸூலபனானான் -என்றாயிற்று இவள் புத்தி பண்ணுவது
என்றே நிமியும் வாயொடு கண்கள் நீர்மல்க
அந்த சீலவத்யையை சொல்லப் புக்கு தலைக் கட்ட மாட்டாதே உதடு நெளிக்கும்-உதடு நெளிக்கிற வாயோடு கண்ண நீர் மல்க –
நெக்கு -சிதலையுமாய் –
ஒசிந்து -பரவசையுமாய் –
கரையும் -நீராகா நின்றாள்
நெக்கொசிந்து கரையுமே.-பெரு வெள்ளத்தில் கரையானாது நெகிழ்ந்து ஒட்டு விட்டு ஒசிந்து பொசிந்து அவயவியாகாத படி கரைந்து போமா போலே அழிந்து போகா நின்றாள் -இப்படி இவள் கரையா நிற்க வன் நெஞ்சரான நாம் இதுக்கு பாசுரம் இடுவது மீட்க்கத் தேடுவது ஆகா நின்றோம் இ றே-

———————————————————————-

திருநாளில் தான் கொண்டு போகிறி கோள் -திருச் சோலை உள்ளிட்டு இவளை கொண்டு போய் கெடுத்தி கோள் -என்கிறாள் –

கரைகொள்  பைம்பொழில் தண்பணைத் தொலை வில்லி மங்கலம்கொண்டுபுக்கு
உரைகொள் இன்மொழி யாளை நீர்உமக் காசை யின்றி அகற்றினீர்
திரைகொள் பௌவத்துச் சேர்ந்ததும்திசை ஞாலம் தாவி அளந்ததும்
நிரைகள் மேய்த்ததுமே பிதற்றி நெடுங்கண் நீர்மல்க நிற்குமே.–6-5-3-

கரைகொள் பைம்பொழில் தண்பணைத் தொலை வில்லி மங்கலம்கொண்டுபுக்கு
திருப் பொருநல் கரையை விழுங்கி பரந்து இருந்துள்ள சோலையையும் நீர் நிலங்களையும் யுடைத்தான திருத் தொலை வில்லி மங்கலத்திலே இவளைக் கொண்டு புக்கு -போகிற நீங்கள் திருச் சோலையூடே கொண்டு போக வேணுமோ
உரைகொள் இன்மொழி யாளை
கேட்டார் அடங்க இது ஒரு பேச்சே என்று கொண்டாடும்படியான இனிய மொழியை யுடையவள் என்னுதல் -அர்த்தத்தில் இழியா வேண்டாதே சப்தமே அமைந்து இருக்கும் என்னுதல் -பாலேய் தமிழர் இசைகாரர் பத்தர் பரவும் ஆயிரம் –என்று நின்றார் நின்ற துறைகளில் ஈடுபடும்படி இருக்கை –மாற்றும் உரையும் அற்ற பேச்சு என்னுதல் -உரை என்று ஸ்ரீ ராமாயணமாய் அது குத்துண்ணும் படி இருக்கும் என்னுதல்
நீர்உமக் காசை யின்றி அகற்றினீர்
அவ் வூரில் கொடு புகுகையும் இவள் பக்கல் நசை அறுகை என்றும் பர்யாயம் அன்றோ -இவளை வேண்டாமை இ றே கொடு புக்கது
திரைகொள் பௌவத்துச் சேர்ந்ததும்திசை ஞாலம் தாவி அளந்ததும்
வ்யூஹ விபவங்களையும் இங்கேயே அனுபவிக்கும் படி இ றே இவள் அவகாஹித்தது-ஸ்வ ஸ்பர்சத்தாலே திரைக் கிளர்த்தியை யுடைத்தாய் களித்து வருகிற திருப் பாற் கடலிலே கண் வளர்ந்து அருளிற்றும் -பரமபதத்தை விட்டு ப்ரஹ்மாதிகள் கூக்குரல் கேட்க்கைக்காக வந்து கிடக்கிற நீர்மையிலே சிதிலை யாகா நின்றாள்
மஹா பலியால் பூமி அபஹ்ருதை யாயிற்று என்று கேட்டவாறே அப்படுக்கையில் பொருந்தாதே திக்குகளோடே கூடின பூமியை அநாயாசேன எல்லை நடந்து கொண்டதும் -நிரைகள் மேய்த்ததுமே
அது பரதசை என்னும்படி கோப சஜாதீயனாய் கையிலே கோலைக் கொடுத்து பசு மேய்த்துவா என்னலாம் படியான நீர்மையையும் அனுசந்தித்து -அப்படிப்பட்ட ஆச்ரிதார்த்த ப்ரவ்ருத்திகளை
பிதற்றி நெடுங்கண் நீர்மல்க நிற்குமே.
ஜாமதக்கன யஸ்ய ஜல்பத-என்கிறபடியே அடைவு கெடச் சொல்லி -இக்கண்ணில் பரப்பு அடைய நீர் மல்கும் படி -பிதற்றவும் க்ஷமை அன்றிக்கே ஸ்தப்த்தையாய் இரா நின்றாள்-

————————————————————

அவ் வூரையும் அங்குள்ள ஸ்ரீ வைஷ்ணவர்களையும் கண்ட பின் தடை நிற்கை தவிர்ந்தாள் -என்கிறாள் –

நிற்கும் நான்மறை வாணர் வாழ்தொலை வில்லி மங்கலம் கண்டபின்
அற்க மொன்றும் அறவு றாள்மலிந் தாள்கண் டீர்இவள் அன்னைமீர்!
கற்கும் கல்வி யெல்லாம் கருங்கடல் வண்ணன் கண்ண பிரான்என்றே
ஒற்கம் ஒன்றும் இலள் உகந்துகந்து உண்மகிழ்ந்து குழையுமே.–6-5-4-

நிற்கும் நான்மறை -அபவ்ருஷேயமாய் நித்தியமான வேதங்கள் –
வாணர் -வேதங்கள் தங்கள் இட்ட வழக்காய் செல்லுகையாலே வ்யாஸ பதம் செலுத்த வல்லவர்கள்
வாழ்தொலை வில்லி மங்கலம்
வேத தாத்பர்ய பூதனானவனைக் கண்டு நித்ய அனுபவம் பண்ணுகிற வூர் -ஸ்வாத்யாயாத் யோகம் ஆஸீத -என்னும் அளவு அன்றிக்கே -யோகாதி ஸ்வாத் யாயமா மநேத் -என்று ஆரூட யோகமாய் இருக்குமவர்கள்
கண்டபின்-அவ் வூரில் ஸ்ரீ வைஷ்ணவர்களும் அவனுமான சேர்த்தியைக் காட்டிக் கொடுத்து கெடுத்தி கோள்
அற்க மொன்றும் அறவுறாள் –
அற்கம் -அல்குதல் அடங்குதல் தாயார் சொல் வழி வருமத்தை ஒன்றையும் அறவிட்டாள்
மலிந் தாள்கண் டீர்-இவளுடைய பகவத் ப்ராவண்யம் எனக்குத் தெரியாதபடி விஞ்சினாள் கிடி கோள்
இவள் அன்னைமீர்!-மீட்க்கத் தேடுகிற உங்களோடு இவள் கருத்து அறிந்தேனாய் சொன்ன என்னோடு வாசி இல்லை தெரியாமைக்கு -நித்ய ஸூ ரிகள் யாத்திரை சம்சாரிகளுக்கு தெரியில் அன்றோ நமக்கு இவள் அளவு தெரிவது
கற்கும் கல்வி யெல்லாம் கருங்கடல் வண்ணன் கண்ண பிரான்என்றே
சொல்லும் சொல் எல்லாம் திரு நாமமே யாய் -இது தன்னிலும் வடிவு அழகுக்கும் ஆஸ்ரித பாரதந்தர்யத்துக்கும் வாசகமான திரு நாமங்களையே சொல்லா நின்றாள் -கிருஷ்ணன் ஆகில் ஆஸ்ரித பாரதந்தர்யம் பிரசித்தம் இ றே -பிரான் -உபகார சீலன் –
என்றும் ஒற்கம் ஒன்றும் இலள் உகந்துகந்து உண்மகிழ்ந்து குழையுமே.-
திருநாமங்களை இடைவிடாதே செல்லா நின்றால்-இளைப்பு ஒன்றும் இன்றிக்கே இரா நின்றாள்-
ஒற்கம் -ஒல்குதல்-அதாவது ஒடுங்குதல் -இளைப்பு
திரு நாமங்கள் வழியே அவன் அழகையும் குணங்களையும் நினைந்து மேன் மேல் என ப்ரீதையாய்
உண்மகிழ்ந்து குழையுமே.-– அந்தகாரண ப்ரீதி அதிசயத்தாலே ஆஸ்ரயம் அழியா நிற்கும்-

———————————————————-

இவள் ஸ்வ பாவத்தை அறிந்து வைத்தே -தேவ பிரானுடைய அழகைக் காட்டிக் கொடுத்து கோளே -என்கிறாள் –

குழையும்  வாண்முகத் தேழையைத் தொலை வில்லி மங்கலம் கொண்டு புக்கு
இழைகொள் சோதிச் செந்தாமரைக்கண் பிரான் இருந்தமை காட்டினீர்
மழை பெய்தால் ஒக்கும் கண்ண நீரினொடன்று தொட்டுமை யாந்திவள்
நுழையுஞ் சிந்தையள் அன்னைமீர்தொழும் அத்திசை உற்று நோக்கியே.–6-5-5-

குழையும் வாண்முகத் தேழையைத்
ஒரு சம்ச்லேஷ விஸ்லேஷம் வேண்டாதே ஸ்வபாவ சுத்தமான மார்த்தவத்தாலே நையும் ஸ்வ பாவையாய் -உகந்து உகந்து உள் மகிழ்ந்து குழையும் -என்கிற பகவத் அனுபவத்தால் ஒளியை யுடைத்தான முகத்தை யுடையளாய் -கிடையாது என்றாலும் மீள மாட்டாத சாபலத்தை யுடையவளை
தொலை வில்லி மங்கலம் கொண்டு புக்கு
பெருக்காற்றிலே கொடு புகுவாரைப் போலே திருத் தொலை வில்லி மங்கலத்தில் கொடு புக்கு -அது தனக்கு மேலே ஆழம் காலிலே கொடு புகுவாரைப் போலே அங்கு இருந்த இருப்பைக் காட்டினீர்
இழைகொள் சோதிச் செந்தாமரைக்கண் பிரான் இருந்தமை காட்டினீர்
ஆபரணங்களினுடைய ஒளியை யுடைத்தாய் இருக்கை என்னுதல் -வேறு ஆபரணம் வேண்டாதே தானே ஆபரணமான தேஜஸ் என்னுதல் -ஆபரண ஓளி தன்னுள்ளே அடங்கும்படி இருக்கும் இருக்கும் சோதி என்னுதல்
செந்தாமரைக்கண் -விகாசம் செவ்வி குளிர்த்தி நாற்றம் இவற்றால் தாமரையை ஒப்பாகச் சொல்லலாய் இருக்கும் திருக் கண் -அகவாயில் தண்ணளிக்கு பிரகாசகமான கண்கள்
பிரான் -பக்தானாம் என்கிற வடிவு
இருந்தமை காட்டினீர்-கிடையை காட்டுதல் -நின்றமையைக் காட்டுதல் -அன்றிக்கே இருந்தபடியை காட்டினி கோள் -கிடந்தான் ஆகில் -கிடந்ததோர் கிடக்கை -என்பார்கள் -நின்றான் ஆகில் நிலையாரே நின்றான் -என்பார்கள் -இருந்தான் ஆகில் பிரான் இருந்தமை காட்டினீர் என்பார்கள் -இருந்தபடியே உத்தேசியமாம் இத்தனை
காட்டினீர் -தானே கண்டு மீள மாட்டாதே -நோக்கி இருந்த படி கண்டாயே -முறுவல் இருந்தபடி கண்டாயே -என்று காட்டிக் கொடுத்து கெடுத்தி கோளே
மழை பெய்தால் ஒக்கும் கண்ண நீரினொடன்று தொட்டுமை யாந்திவள்
வர்ஷ தாரை போலே மிக்க கண்ண நீரை யுடையளாய் இரா நின்றாள் -காட்டின உங்களை போலே குறி அழியாதே இருக்கிறாளோ -ஏழை என்ற இடத்தை மூதலிக்கிறாள் –அன்று தொட்டும் –நீங்கள் காட்டின அன்று தொடங்கி –மை யாந்து -மயங்கி -குழையும் -என்கிற இடத்தை மூதலிக்கிறாள்
இவள் நுழையுஞ் சிந்தையள் அன்னைமீர்தொழும் அத்திசை உற்று நோக்கியே.
அவன் குணங்களில் உட்ப்புகா நின்ற நெஞ்சை யுடையவள் -ஸ்வரூபத்தையும் ஆத்மகுணத்தையும் ஒழிய வடிவு அழகிலே இடம் கொள்ளா நின்றாள்
அன்னைமீர் -இவளை மீட்கப் பார்க்கிற அளவு இ றே உங்களது –அத்திசை உற்று நோக்கியே.-தொழும் -அவ் வூரின் திக்கை  ஏகாக்ர சிந்தையாய் நோக்கித் தொழா நின்றாள் –

—————————————————————–

கலக்கத்தாலே முதலிலே பார்க்க மாட்டாள் -பார்த்தாள் ஆகில் மற்று ஓர் இடமும் நோக்காள் -என்கிறாள் –

நோக்கும் பக்கமெல்லாம் கரும்பொடு செந்நெல் ஓங்குசெந்தாமரை
வாய்க்கும் தண்பொருநல் வடகரை வண்தொலைவில்லி மங்கலம்
நோக்குமேல் அத் திசையல்லால் மறு நோக்கிலள் வைகல் நாடொறும்
வாய்க்கொள் வாசகமும் மணி வண்ணன் நாமமே இவள் அன்னைமீர்!–6-5-6-

நோக்கும் பக்கமெல்லாம் -பார்த்த பார்த்த இடம் எல்லாம் -பொருநல் நோக்கும் பக்கம் எல்லாம் -என்று பாடுவாரும் உண்டு
கரும்பொடு செந்நெல் ஓங்குசெந்தாமரை-வாய்க்கும் தண்பொருநல் வடகரை வண்தொலைவில்லி மங்கலம்-
கரும்புக்கும் அத்தோடு கூட எழுந்த செந்நெலுக்கும் செந்தாமரை யானது நிழல் செய்யா நின்றது -உரம் பெற்ற மலர்க்கமலம் உலகு அளந்த சேவடி போல் உயர்ந்து காட்ட -என்கிறபடியே
வாய்க்கும் -சம்ருத்தமாம் -என்னுதல் — இட்டது எல்லாம் சதா சாகமாகப் பனைக்கும் -என்னுதல் –
சிரமஹரமான திருப் பொருநலின் வடகரையில் நகரங்களுக்கு உண்டான சிறப்புக்களில் ஒன்றும் குறையாத அந்த வூரை
நோக்குமேல் -அத் திசையல்லால் மறு நோக்கிலள்-
-முதலிலே பார்க்க மாட்டாள் -பார்த்தாள் ஆகில் அத்திக்கை யல்லால் வேறு ஒரு திக்கை நோக்கிகிறிலள்
வைகல் நாடொறும்-கழிகிற நாள் தோறும் -என்னுதல் -தாழ்த்து விடுகிற நாள் தோறும் என்னுதல் –
வாய்க்கொள் வாசகமும் -சொல்லும் வார்த்தையும் –
மணி வண்ணன் நாமமே -குண விஷயம் ஆதல் -விபூதி விஷயம் ஆதல் அன்றிக்கே -அழகுக்கு வாசகமான திரு நாமங்களே இவள் சொல்லுகிறது
இவள் அன்னைமீர்!–இவ்விஷயத்தில் இவள் அவகாஹித்த படி கண்டி கோளே-

———————————————————————-

அவன் சின்னங்களும் திரு நாமங்களும் இவள் வாயிலே பட்ட பின்பு நிறம் பெற்றன என்கிறாள் –

அன்னைமீர்!  அணி மாமயில் சிறு மானிவள்நம்மைக் கை வலிந்து
என்ன வார்த்தையும் கேட்குறாள் தொலை வில்லி மங்கலம் என்றலால்
முன்னம் நோற்ற விதி கொலோ? முகில் வண்ணன் மாயம் கொலோ?
அவன்சின்னமும் திருநாமமும் இவள் வாயனகள் திருந்தவே.–6-5-7-

அன்னைமீர்! அணி மாமயில் சிறு மானிவள்நம்மைக் கை வலிந்து
இவள் பருவம் இது –நமக்கு அவ்வருகே போன ஆச்சர்யம் பாரி கோளே -மைத்ரேய என்னுமா போலே –
அழகிய நிறத்தை உடையளாய் -முக்தமான மான் போலே அதி பாலையாய் இருக்கிறவள்-அழகியதாய் சிலாக்யமானமாய் இருக்கிற மயில் போலே இருக்கிற சிறுப் பெண் என்றுமாம்
முக்தையான இவள் நம்மைக் கை விஞ்சி -நம்மில் காட்டிலும் அந்தரங்கை யானாள்
என்ன வார்த்தையும் கேட்குறாள் தொலை வில்லி மங்கலம் என்றலால்
தொலை வில்லி மங்கலம் என்கை ஒழிய ஏதேனும் ஒரு வார்த்தையும் கேட்க்கிறீலள் -என்னுடைய வார்த்தையும் கேட்க்கிறீலள் -உங்களை மறைத்ததும் சொல்லுவது எனக்கு இ றே -அவ் வூரை நான் சொல்லிலும் கேட்க்கும் –
முன்னம் நோற்ற விதி கொலோ? -முன்னே பண்ணின பாக்ய பலமோ -ஜன்மாந்தர சகஸ்ரரேஷூ -பஹு நாம் ஜென்ம நா மந்தே –
முகில் வண்ணன் மாயம் கொலோ?-அதுக்கு இத்தனை கனத்த பலம் உண்டாக மாட்டாது -அழகைக் காட்டிப் பண்ணின ஆச்சர்ய சேஷ்டிதங்களோ -அதில் சம்சயம் இத்தலையாலே சாதித்ததுக்கு இத்தனை கனத்த பலம் உண்டாக மாட்டாது என்று -இதில் சம்சயம் -இதுக்கு முன்பு ஒரு வ்யக்தியில் இப்படி பிறக்கக் காணாமையாலே
அவன்சின்னமும் திருநாமமும் இவள் வாயனகள் திருந்தவே.–
தவள ஒண் சங்கு சக்கரம் -என்று ஆபரணத்தோடே விகல்பிக்கலாம் படி யான சங்கு சக்ராதி சிஹ்னங்களும்
அரவிந்த லோசனன்தேவ பிரான் என்று அவனுக்கு வாசகமான திரு நாமங்களும்
நிறம் பெறும்படி இவள் வாயினவாயின -அல்லாதார் தங்கள் திருந்துகைக்காக திரு நாமங்கள் சொல்லுவார்கள் -திருநாமம் திருந்துகைக்கு இவள் சொல்ல வேணும் -நாமும் திரு நாமங்கள் சொல்கிறோம் -இவள் வாயில் பட்ட வாறே இங்கனம் உயிர் பெற வேணுமோ என்கிறாள் –

————————————————————-

திருத் தொலை வில்லி மங்கலம் திருவடி தொழுத அந்நாள் தொடங்கி இன்று அளவும் உண்டான இவளுடைய ஸைதில்யத்தை சொல்லுகிறாள் –

திருந்து வேதமும் வேள்வியும் திரு மா மகளிரும் தாம்மலிந்து
இருந்து வாழ்பொருநல் வடகரை வண்தொலை வில்லி மங்கலம்
கருந்தடங் கண்ணி கைதொழுத அந்நாள் தொடங்கி இந்நாள்தொறும்
இருந்திருந்து அரவிந்தலோசந! என்றென்றே நைந்திரங்குமே.–6-5-8-

திருந்து வேதமும்
வேதம் கட்டளை பட்டது அவ் வூரார் பரிஹரித்த பின்பாயிற்று -ஸ்வரூபம் ஞான மாத்திரம் என்னும் சுருதிகள் -ஞாத்ருத்வ சுருதிகள் பேதாபேத சுருதிகள் -சகுண சுருதிகள் -நிர்குண சுருதிகள் இவை யடங்க விஷய விபாகத்தாலே ஒருங்க விட்டுக் கொண்டு இருக்குமவர்கள்
வேள்வியும்-வைதிக சமாராதானமும்
திரு மா மகளிரும் தாம்மலிந்து இருந்து வாழ் – பொருநல் வடகரை வண்தொலை வில்லி மங்கலம்-
ஆராத்யரான பெரிய பிராட்டியாரும் தானும் சம்ருத்தமாய் இருந்து வாழுகிற வூர் -வேதமும் வைதிக சமாராதானமும் அதன் பலமான சம்பத்துமானவை மிக்கு இருந்து வர்த்திக்கிற வூர் -என்றுமாம் –தாம் என்றது கீழ் சொன்னவை தாம் என்கை –
கருந்தடங் கண்ணி கைதொழுத அந்நாள் தொடங்கி இந்நாள்தொறும்
கண் அழகுக்கு அஸி தேக்ஷிணை யோடு ஒக்கும் –-தடம் கண்ணி -அவளில் காட்டில் வியாவ்ருத்தி -அவனை அனுபவிக்கையாலே வந்தது இ றே அவளுக்கு -அம் மிதுனத்தை அனுபவிக்கும் ஏற்றம் உண்டு இ றே இக் கண்ணுக்கு
-இவள் கரும் தடம் கண்ணி -அவன் அரவிந்த லோசனன்
திருவடி தொழுத அன்று தொடங்கி இன்றை வரையும் என்னுதல் -அன்று தொடங்கி இக்காலம் எல்லாம் என்னுதல்
இருந்திருந்து அரவிந்தலோசந! என்றென்றே நைந்திரங்குமே.
ஒரு கால் அரவிந்த லோசனன் என்னும் போது நெடும் போது கூடிப் பெரு வருத்தத்தோடே சொல்ல வேண்டி இருக்கை –
என்றென்றே – இருக்க மாட்டாதே நிரந்தரமாக சொல்லா நின்றாள் -அவ் வழி யாலே அழகையும் குணங்களையும் நினைத்து நையா நின்றாள் -இரங்குமே-சரீரத்து அளவு அன்றிக்கே நெஞ்சம் சிதிலமாகா நின்றது –

——————————————————————–

இவள் மநோ வாக் காயங்கள் முதலிலே தொடங்கி அவன் பக்கலிலே பிரவணம் ஆயிற்றின என்கிறாள் –

இரங்கி  நாள்தொறும் வாய்வெரீஇ இவள் கண்ண நீர்கள் அலமர
மரங்களும் இரங்கும் வகை மணி வண்ணவோ என்று கூவுமால்
துரங்கம் வாய் பிளந்தானுறை தொலை வில்லு மங்கலம் என்று தன்
கரங்கள் கூப்பித்தொழும் அவ்வூர்த் திருநாமம் கற்றதற் பின்னையே.–6-5-9-

இரங்கி நாள்தொறும் வாய்வெரீஇ
மனஸ் ஸூ நெகிழ்ந்து -அகவாய் அழிந்த வழி புக்கு போக்கு வீடு இருக்கிற படி –
வாசனையே உபாத்யாயராக சொல்லுமது ஒழிய -உணர்த்தியோடே சொல்வது ஒரு நாளும் இல்லை –
நாடொறும் வாய் வெரி இ -என்றது பொய் நின்ற ஞானம் தொடங்கி இவ்வளவும் வரக் கூப்பிட்ட கூப்பீட்டை இ றே
இவள் கண்ண நீர்கள் அலமர-கண்கள் வாய் வெருவுகிற படி -கண்ணாலே போக்கு விடுகிற படி
மரங்களும் இரங்கும் வகை-அசித் கல்பமான ஸ்தாவரங்களும் இரங்கும் படி யாயிற்று -இவள் ஆர்த்த த்வனி -அபி வ்ருஷா பரிம்லா நா -என்று ராம விஸ்லேஷத்தில் பட்டது அடங்க இவள் பேச்சில் படா நின்றன –
மணி வண்ணவோ என்று கூவுமால்-வடிவு அழகுக்கு வாசகமான திரு நாமத்தையே சொல்லா நின்றாள் -நீல மணி போலே குளிர்ந்து இருக்கிற திரு நிறத்தை உடையவனே என்னா நின்றாள்
துரங்கம் வாய் பிளந்தானுறை தொலை வில்லு மங்கலம் என்று தன்
கேசி ஹந்தாவான கிருஷ்ணன் -அவதாரத்தில் பிற்பாடருடைய விரோதிகளை போக்குகைக்காக நித்ய வாசம் பண்ணுகிற திருத் தொலை வில்லி மங்கலம் என்று –
தன் கரங்கள் கூப்பித்தொழும்-இவள் தொழுவித்துக் கொள்ளுமவள்-என்று இருக்கிறாள் தோழி -அத்தலை இத்தலை யாவதே என்கிறாள் -இது தான் என்று தொடங்கி -என்னில் –
அவ்வூர்த் திருநாமம் கற்றதற் பின்னையே.
வார்த்தை சொல்லக் கற்ற பின்பு -திரு நகரியில் உள்ளார் -திருத் தொலை வில்லி மங்கலம் -என்றாயிற்று வார்த்தை கற்பது -கோயிலில் உள்ளார் கோயில் என்றும் பெருமாள் என்றும் கற்குமா போலே –
அவ் வூர்த திரு நாமம் என்கிறது இவள் வாயால் திருத் தொலை வில்லி மங்கலம் -என்றமையில் உள்ள இனிமை தான் சொன்னால் பிறவாமையாலே –

——————————————————————–

அவனால் அல்லது செல்லாத படியான இவளுடைய ப்ராவண்ய அதிசயத்தைக் கண்டு பிராட்டிமாரில் ஒருத்தியோ -என்று சங்கிக்கிறாள் –

பின்னை கொல்?நிலமாமகள்கொல்? திருமகள்கொல்? பிறந்திட்டாள்
என்ன மாயங்கொலோ? இவள்நெடு மால்என்றே நின்று கூவுமால்
முன்னி வந்தவன் நின்றிருந் துறையும் தொலை வில்லி மங்கலம்
சென்னியால் வணங்கும் அவ்வூர்த் திருநாமம் கேட்பது சிந்தையே.–6-5-10-

பின்னைகொல்?நிலமாமகள்கொல்? திருமகள்கொல்? பிறந்திட்டாள்
நப்பின்னை பிராட்டி பிறந்திட்டாளோ -அங்கனம் இன்றிக்கே ஸ்ரீ பூமி பிராட்டி பிறந்திட்டாளோ -எல்லாருக்கும் இவ் வேற்றங்களைக் கொடுக்கும் பிராட்டி தான் பிறந்திட்டாளோ -என்பார்கள் பூர்வர்கள் –
சர்வேஸ்வரனுக்கு சம்பத்தாய் இருக்கிறவள் பிறந்தாளோ-அதுக்கு விளை பூமியாய் இருக்கிறவள் பிறந்தாளோ -அவ் விளை பூமியினுடைய பல ஸ்வரூபமாய் இருக்கிறவள் பிறந்தாளோ –
அங்கனம் இன்றியே அவர்களுக்கும் இவள் படி இல்லாமையால் அவர்களோடு ஒப்பு அன்று -லோகம் எல்லாம் வாழ்க்கைக்கு இவள் ஒருத்தி பிறந்தாள் என்றுமாம் -விஷ்ணு நா சத்ருஸோ வீரயே -என்றால் போலே நாய்ச்சிமார் பக்கலிலும் ஒரு வகைக்கு ஒப்பு சொல்லலாம் படி இருக்கையாலே கதிர் பொறுக்குகிறாள் -உபமான ம சேஷானாம் ஸாதூ நாம் யஸ் சதாபவத் -என்கிறபடியே எல்லாருக்கும் இவரை ஒப்பாகச் சொல்லலாம் -இவருக்கு ஒப்பாவார் ஒருவரும் இல்லை
என்ன மாயங்கொலோ? இவள்நெடு மால்என்றே நின்று கூவுமால்
இவள் திரு நாமத்தை சொல்லி கூப்பிடா நின்றாள் –இது என்ன ஆச்சர்யமோ -இவ் விபூதியில் இங்கனம் இருப்பாரையும் காணலாம் ஆகாதே -அவன் தன் பக்கல் பண்ணின வ்யாமோஹ அதிசயத்தை சொல்லிக் கூப்பிடா நின்றாள்
முன்னி வந்தவன் நின்றிருந் துறையும் தொலை வில்லி மங்கலம்
தன்னுடைய வ்யாமோஹத்துக்கு அவன் கிருஷி பண்ணின படி -முற்பாடானாய் வந்து -அவன் நிற்பது இருப்பதாகாக் கொண்டு நித்ய வாசம் பண்ணா நிற்கும் வூர் -பசியன் சோறு தாழ்த்தால்படுமா போலே
சென்னியால் வணங்கும் அவ்வூர்த் திருநாமம் கேட்பது சிந்தையே.
தன் கரங்கள் கூப்பித் தொழுகையும் பிரார்த்த்யமான படி -இருந்த இடத்தே இருந்து தலையை சாய்க்கும் படி ஆனாள்-இவள் அகவாய் ஓடுகிறது அவ் வூர் திரு நாமம் கேட்க்கையிலே -திரு நாமத்தை கேட்க வல்லேனே என்று ஆயிற்று இவள் மநோ ரதம்-
இவள் வாயால் சொல்லக் கடவ திரு நாமத்தை நாம் சொல்லிக் கெடுக்க கடவோம் அல்லோம் -என்று அவ் வூர் என்கிறாள் –

—————————————————————–

நிகமத்தில் இது திருவாய் மொழி யில் கருத்தை சொல்லிக் கொண்டு -இத்தைக் கற்றவர்கள் இதுக்கு அனுரூபமான கைங்கர்யத்தை பண்ணப் பெறுவார் என்கிறார் –

சிந்தையாலும்  சொல்லாலும் செய்கையினாலும் தேவ பிரானையே
தந்தை தாய் என்றடைந்த வண்குரு கூரவர் சடகோபன்
முந்தை ஆயிரத்துள் இவை தொலை வில்லி மங்கலத்தைச்சொன்ன
செந்தமிழ் பத்தும் வல்லார் அடிமை செய்வார் திருமாலுக்கே.–6-5-11-

சிந்தையாலும் சொல்லாலும் செய்கையினாலும் –
மநோ வாக் காயங்கள் மூன்றும் -ஒருபடிப்பட அவன் பக்கலிலே ப்ரவணமாய் இருக்கிற படி –இரங்கி -என்றும் –மணி வண்ணாவோ என்று கூவுமால் -என்றும் –தன் கரங்கள் கூப்பித் தொழும் -என்றும் -மூன்றாலும் இவருக்கு உண்டான இவருக்கு உண்டான பிராவண்ய அதிசயம் இ றே இது திருவாய் மொழியிலே சொல்லிற்று
தேவ பிரானையே தந்தை தாய் என்றடைந்த
அயர்வரும் அமரர்கள் அதிபதியாய் வைத்து திருத் தொலை வில்லி மங்கலத்திலே ஸூ லபனாய் இருந்தவனையே சர்வவித்த பந்துவும் என்று -அப்படியே பற்றுவதும் செய்தவர் -வண்குரு கூரவர் சடகோபன்
அவனே தமக்கு சர்வவித்த பந்துவும் ஆனால் போலே அவ் வூரில் உள்ளார் -ஆழ்வாரே எல்லா உறவு முறையும் -என்று ஆயிற்று இருப்பது -அன்னையாய் அத்தனாய் -என்னும் ஸ்ரீ மதுர கவிகளை போலே
முந்தை ஆயிரத்துள் இவை தொலை வில்லி மங்கலத்தைச்சொன்ன
பழையதான வேதார்த்தத்தை அருளிச் செய்கையாலே சர்வேஸ்வரன் இதர சஜாதீயன் ஆனால் போலே -வேதமும் தமிழாய் வந்து இவர் பக்கலிலே அவதரித்த படி
செந்தமிழ் பத்தும் வல்லார் அடிமை செய்வார் திருமாலுக்கே.
செவ்விய தமிழ் -பசும் தமிழ் -அர்த்தத்தை விசதமாகக் காட்டுவது -இப்பத்தை அப்யஸிக்க வல்லார் ஸ்ரீ யபதிக்கு அடிமை செய்வார்


கந்தாடை  அப்பன் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

திருவாய்மொழி ஒன்பதினாயிரப்படி –6-5-

September 29, 2016

குரவை ஆய்ச்சியரிலே ஸ்ரீ கிருஷ்ண சேஷ்டிதங்களை அனுபவித்த ப்ரீதி பிரகர்ஷத்தாலே பரவசராய்
செல்லுகிற ப்ரீத்யனுபவம் கலங்கி நோவு படுகிற ஆழ்வார் -பொய் நின்ற ஞானம் தொடங்கி இவ்வளவும் வர
-பகவத் குண சேஷ்டிதாதிகளாலே ஈடுபட்டு இருக்கிற தம்முடைய தசையை அனுசந்தித்து இத்தை அந்யாபதேசத்தாலே பேசுகிறார் –
இப்படி குரவை ஆய்ச்சியரிலே கிருஷ்ண குண சேஷ்டிதாதிகளை அனுசந்தித்து மிகவும் ப்ரீதராய்
பாஹ்ய சம்ச்லேஷத்திலே அபேக்ஷை பண்ணி -அது பெறாமையாலே தமக்கு ஓடுகிற தசையை அந்யாபதேசத்தாலே பேசுகிறார் என்றுமாம் –
திருத் தொலை வில்லி மங்கலத்தில் சம்பத்திலும் -அங்கு நின்று அருளுகிற தேவபிரானுடைய திரு அழகிலும் அகப்பட்டு
பண்டு பழகின பழக்கத்தின் மிகுதியால் மிகவும் பிரவண சித்தையாய் இருக்கிற பிராட்டியைக் கண்டு
-இவளுக்கு அவன் பக்கல் உண்டான அதி மாத்ர ப்ராவண்யத்தை தவிர்க்கையாலே உபாக்ராந்தைகளான திருத் தாய்மாரைக் குறித்து
இப்பிராட்டி யுடைய கருத்து அறிவாள் ஒரு தோழி -இவள் திருத் தொலை வில்லி மங்கலம் கண்டஅன்று தொடங்கி
அரவிந்த லோசனனை ஒழிய புறம்புள்ளது ஒற்றது எல்லாம் அற்று -அவனே எல்லாமாகக் கொண்டு அவன் பக்கலிலே
இவளுடைய மநோ வாக் காயங்கள் மிகவும் பிரவணம் ஆயிற்று -இப்படி விளையும் படியான இவள் பிரக்ருதியை அறிந்து வைத்து
இவளைத் திருத் தொலை வில்லி மங்கலத்திலே நீங்களே கொண்டு புக்கு -அங்குத்தைப் படி காட்டிக் கொடுத்து இனி
மீட்க நினைத்தால் முடியுமோ -ஆனபின்பு இவள் பக்கல் ஆசையை அறுங்கோள் என்கிறாள் –

————————————————————–

திருத் தாய்மாரைக் குறித்து இவளுடைய தோழியானவள் இவள் பிரகிருதி அறிந்து வைத்து இவளுக்கு திருத் தொலை வில்லி மங்கலத்தை காட்டின நீங்கள் ஹித உபதேசம் பண்ணினால் உங்களுக்கு ஒரு பிரயோஜனம் இல்லை என்கிறாள் –

துவளில்மா மணி மாடமோங்கு தொலைவில்லி மங்கலம்தொழும்
இவளை நீர் இனி அன்னைமீர்! உமக்காசை இல்லை விடுமினோ;
தவள ஒண்சங்கு சக்கரமென்றும் தாமரைத் தடங்கண் என்றும்
குவளை ஒண்மலர்க் கண்கள் நீர்மல்க நின்று நின்று குமுறுமே.–6-5-1-

துவளில்மா மணி-பழிப்பு அற்று சிலாக்கியமான மணி
தொழும்-இவளை -தொழுகையே ஸ்வ பாவமான இவளை
தவள ஒண்சங்கு சக்கரமென்றும் தாமரைத் தடங்கண் என்றும்-குவளை ஒண்மலர்க் கண்கள் நீர்மல்க நின்று நின்று குமுறுமே.
அதி தவளமாய் அழகிதாய் இருக்கிற ஸ்ரீ பாஞ்ச ஜன்யம் என்றும் திரு வாழி என்றும் -தாமரைத் தடாகம் போலே இருக்கிற திருக் கண்கள் என்றும் சொல்லி பின்னையும் இவற்றை காண வேணும் என்று சொல்ல உபக்ரமித்து -மாட்டாதே குவளை போலே இருக்கிற அழகிய கண்கள் நீர் மல்கும் படியாக தன்னுடைய துக்கத்தை வாய் விட்டுச் சொல்ல மாட்டாதே நிரந்தரமாக குமுறா நின்றாள்-

—————————————————————

இவளைத் திரு தொலை வில்லி மங்கலத்தில் திரு நாளிலே கொடு புகுவார் உண்டோ -என்கிறாள் –

குமுறுமோசை விழவொலித் தொலை வில்லி மங்கலம் கொண்டு புக்கு
அமுத மென்மொழி யாளை நீர்உமக் காசை யின்றி அகற்றினீர்
திமிர்கொ டாலொத்து நிற்கும் மற்றிவள் தேவ தேவபிரான்என்றே
நிமியும் வாயொடு கண்கள் நீர்மல்க நெக்கொசிந்து கரையுமே.–6-5-2-

குமுறுமோசை விழவொலித் தொலை வில்லி மங்கலம் கொண்டு புக்கு
எழுத்தும் சொல்லும் பொருளும் தெரியாதே ஒன்றாய் எழுகிற த்வனியை உடைத்தான திரு நாளில் ஆரவாரத்தை யுடைத்தான திருத் தொலை வில்லி மங்கலத்திலே தான் அறியாது இருக்கிற இவளை நீங்களே கொடு புக்கு
அமுத மென்மொழி யாளை நீர்உமக் காசை யின்றி அகற்றினீர்
இவளுடைய இனிய பேச்சுக்கள் கேட்க ஆசை இல்லாமையால் நீங்கள் இவள் அகலும்படி பண்ணினி கோள்
திமிர்கொ டாலொத்து நிற்கும் -ஸ் த்பதை யானால் போல் இருக்கும்
மற்றிவள் தேவ தேவபிரான்என்றே-நிமியும் வாயொடு கண்கள் நீர்மல்க நெக்கொசிந்து கரையுமே.–
பின்னையும் இவள் திருத் தொலை வில்லி மங்கலத்தில் எம் பெருமானுடைய திரு நாமத்தை சொல்ல வென்று உபக்ரமித்து முடிய சொல்ல மாட்டாதே கண்கள் நீர் மல்கி உள்ளோடுகிற அவசாதத்தின் மிகுதியால் சிதிலையுமாய் நீராகா நின்றாள் –நிமிகை –உதடு நெளிக்கை-

————————————————————–

திருத் தொலை வில்லி மங்கலத்துக்கு கொடு போகிற நீங்கள் திருச் சோலையிலே உள்ளிட்டு கொடு போய் கெடுத்தி கோள் -என்கிறாள் –

கரைகொள்  பைம்பொழில் தண்பணைத் தொலை வில்லி மங்கலம்கொண்டுபுக்கு
உரைகொள் இன்மொழி யாளை நீர்உமக் காசை யின்றி அகற்றினீர்
திரைகொள் பௌவத்துச் சேர்ந்ததும்திசை ஞாலம் தாவி அளந்ததும்
நிரைகள் மேய்த்ததுமே பிதற்றி நெடுங்கண் நீர்மல்க நிற்குமே.–6-5-3-

கரைகொள் பைம்பொழில் தண்பணைத் தொலை வில்லி மங்கலம்கொண்டுபுக்கு
திரு பொருநல் கரையை விழுங்கி குளிர்ந்த திருச் சோலையையும் சிரமஹரமான நீர் நிலத்தையும் யுடைய திருத் தொலை வில்லி மங்கலத்திலே கொண்டு புக்கு
உரைகொள் இன்மொழி யாளை நீர்உமக் காசை யின்றி அகற்றினீர்
ஒருத்தி பேச்சே -என்று நாடு எல்லாம் உரைக்கும் படி இருந்த இந்த மொழியாளை -பொருள் இன்றி உரையே கொள்ளப்படும் மழலை வார்த்தை உடையாள் என்றுமாம் –
திரைகொள் பௌவத்துச் சேர்ந்ததும்திசை ஞாலம் தாவி அளந்ததும்-நிரைகள் மேய்த்ததுமே பிதற்றி நெடுங்கண் நீர்மல்க நிற்குமே.
தன்னுடைய சந்நிதானத்தாலே களித்து திரை மோதா நின்றுள்ள திருப் பாற் கடலிலே கண் வளர்ந்து அருளின படியும் -திக்குகளோடே கூடின ஜகத்தை எல்லாம் அநாயாசேன வளர்ந்து அளந்து கொண்டு அருளின படியும் -பசு மேய்த்து அருளின படியும் -ஆகிற ஆச்ரிதார்த்த ப்ரவ்ருத்திகளையே அடைவு கெடச் சொல்லி தன் கண்ணில் பரப்பு எல்லாம் நீர் மல்க பிதற்றவும் க்ஷமை இன்றிக்கே நிற்கும் –

—————————————————————–

திருத் தொலை வில்லி மங்கலத்தையும் -அங்குள்ள ஸ்ரீ வைஷ்ணவர்கள் சமஷ்டியையும் யாதொருநாள் கண்டாள்-அன்று தொடங்கி தடை நிற்கை தவிர்ந்தாள் என்கிறாள் –

நிற்கும் நான்மறை வாணர் வாழ்தொலை வில்லி மங்கலம் கண்டபின்
அற்க மொன்றும் அறவு றாள்மலிந் தாள்கண் டீர்இவள் அன்னைமீர்!
கற்கும் கல்வி யெல்லாம் கருங்கடல் வண்ணன் கண்ண பிரான்என்றே
ஒற்கம் ஒன்றும் இலள் உகந்துகந்து உண்மகிழ்ந்து குழையுமே.–6-5-4-

அபவ்ருஷேயமாய் நித்தியமான வேதங்கள் தங்கள் இட்ட வழக்கு ஆகையால் வியாச பதம் செலுத்த வல்லவராய் உள்ளவர்கள் அந்த வேதார்த்த பூதனான எம்பெருமானைப் பெற்று வாழுகிற திருத் தொலை வில்லி மங்கலத்தை கண்ட பின் ஒன்றும் தடை நில்லாள் -அன்னைமீர் இவள் நம்மை கை கடந்தாள் கிடி கோள் –
சொல்லும் சொல் எல்லாம் திரு நாமங்களே யாய் செல்லா நின்றாள் –வருத்தம் ஒன்றும் இன்றிக்கே அத் திருநாமங்கள் வழியே அவன் அழகையும் அவன் குணங்களையும் அனுசந்தித்து மேன் மேல் என ப்ரீதையாய்-அந்தகரணமும் ப்ரீதமாய்-அந்த ப்ரீதி அதிசயத்தாலே அழியா நிற்கும் –

—————————————————————–

இவளுடைய ஸ்வ பாவத்தை அறிந்து வைத்து இவளைத் திரு தொலை வில்லி மங்கலத்திலே கொடு புக்கு எம்பெருமானுடைய அழகைக் காட்டிக் கொடுத்து கெடுத்தி கோள் என்கிறாள் –

குழையும்  வாண்முகத் தேழையைத் தொலை வில்லி மங்கலம் கொண்டு புக்கு
இழைகொள் சோதிச் செந்தாமரைக்கண் பிரான் இருந்தமை காட்டினீர்
மழை பெய்தால் ஒக்கும் கண்ண நீரினொடன்று தொட்டுமை யாந்திவள்
நுழையுஞ் சிந்தையள் அன்னைமீர்தொழும் அத்திசை உற்று நோக்கியே.–6-5-5-

குழையும் வாண்முகத் தேழையைத் தொலை வில்லி மங்கலம் கொண்டு புக்கு-இழைகொள் சோதிச் செந்தாமரைக்கண் பிரான் இருந்தமை காட்டினீர்-
தன்னுடைய மார்த்தவத்தாலே நையும் ஸ்வ பாவையாய் நிரதிசய தீப்தி யுக்தமான திரு முகத்தை யுடையளாய் -அதி சபலையுமாய் இருக்கிற இவளை திருத் தொலை வில்லி மங்கலத்திலே கொண்டு புக்கு -வேறு ஒரு ஆபரணம் வேண்டாதே தானே ஆபரணமான தேஜஸை யுடையனாய் -சிவந்த தாமரைப் பூ போலே இருக்கிற திருக் கண்களை யுடையனாய்க் கண்களைக் காணவே அறிந்து கொள்ளலாம் படியான தண்ணளியையும் உடையனாய் இருக்கிறவனுடைய -ஒருவருக்கும் கோசரம் அன்றிக்கே இருக்கிற இருப்பில் அழகையும் நீங்களே காட்டிக் கொடுத்து கோளே
இழைகொள் சோதி-ஆபரணத்தின் ஓளி தன்னுள்ளே அடங்கின சோதி என்றுமாம்
இருந்தமை-அவன் படிகளை எல்லாம் என்றுமாம்
மழை பெய்தால் ஒக்கும் கண்ண நீரினொடன்று தொட்டுமை யாந்திவள்-நுழையுஞ் சிந்தையள் அன்னைமீர்தொழும் அத்திசை உற்று நோக்கியே.
அன்னைமீர் வர்ஷ தாரை போலே மிக்கு இருந்துள்ள கண்ண நீரோடு அன்று தொடங்கி மயங்கி -அவ்விருப்பிலும் பகவத் குணங்களிலே உட்ப்புகா நின்ற சிந்தையை உடையளாய்த் திருத் தொலை வில்லி மங்கலத்தின் திக்கை ஏகாக்ர சிந்தையாய்க் கொண்டு நோக்கி அபி நிவேசத்தாலே தொழா நிற்கும்-

———————————————————————

இக்கலக்கத்திலும் திருத் தொலை வில்லி மங்கலத்தை நோக்கினாள் ஆகில் மற்று ஓர் இடமும் நோக்காள் என்கிறாள் –

நோக்கும் பக்கமெல்லாம் கரும்பொடு செந்நெல் ஓங்குசெந்தாமரை
வாய்க்கும் தண்பொருநல் வடகரை வண்தொலைவில்லி மங்கலம்
நோக்குமேல் அத் திசையல்லால் மறு நோக்கிலள் வைகல் நாடொறும்
வாய்க்கொள் வாசகமும் மணி வண்ணன் நாமமே இவள் அன்னைமீர்!–6-5-6-

நோக்கும் பக்கமெல்லாம் – பார்த்த பார்த்த இடம் எல்லாம் /வாய்க்கும்-ஸம்ருத்தமாகை / நோக்குமேல் -நோக்க க்ஷமை யாகில் –
வைகல் நாடொறும்-வாய்க்கொள் வாசகமும் மணி வண்ணன் நாமமே –
என்றும் ஓக்க நிரந்தரமாக இவள் பகவத் ஸுந்தரியாதிகளாலே-வித்தை யாகையாலே வாயில் புறப்படும் சொல்லும் திரு நாமமே
வைகல் நாடொறும்-தாழ்த்து விடுகிற நாள் தோறும் என்றுமாம்
அன்னைமீர்-என்ற சம்போதானத்துக்கு கருத்து ஒருத்தி படி கண்டி கோளே -என்கிறது –

——————————————————————–

எம்பெருமானுடைய சிஹ்னங்களும் திரு நாமங்களும் அடைய இவள் வாயிலே பட்ட பின்பு நிறம் பெற்றன என்கிறாள் –

அன்னைமீர்!  அணி மாமயில் சிறு மானிவள்நம்மைக் கை வலிந்து
என்ன வார்த்தையும் கேட்குறாள் தொலை வில்லி மங்கலம் என்றலால்
முன்னம் நோற்ற விதி கொலோ? முகில் வண்ணன் மாயம் கொலோ?
அவன்சின்னமும் திருநாமமும் இவள் வாயனகள் திருந்தவே.–6-5-7-

அன்னைமீர்  அணி மாமயில் சிறு மானிவள்நம்மைக் கை வலிந்து-என்ன வார்த்தையும் கேட்குறாள் தொலை வில்லி மங்கலம் என்றலால்–அழகிய மாமையுடைய மயில் போலே இருக்கிற இச் சிறுப் பெண் பிள்ளை நம்மைக் கை கடந்து அந்தரங்கை யாகக் கொண்டு இருக்கிற நான் சொல்லிலும் திருத் தொலை வில்லி மங்கலம் என்கை ஒழிய மற்று ஒன்றும் கேளாள்-
என்ன வார்த்தை-என்றது ஏதேனும் ஒரு வார்த்தை யாகிலும் கேளாள் என்றுமாம் –
முன்னம் நோற்ற விதி கொலோ? முகில் வண்ணன் மாயம் கொலோ?-
-பண்டு பண்ணின பாக்ய பலமோ -எம்பெருமான் தன் வடிவு அழகைக் காட்டி பண்ணின ஆச்சர்யமான செயலோ
அவன்சின்னமும் திருநாமமும் இவள் வாயனகள் திருந்தவே.-
அவனுடைய திரு வாழி தொடக்கமான சிஹ்னங்களும் குண சேஷ்டிதங்களுக்கு ப்ரதிபாதகமான திரு நாமங்களும் நிறம் பெறும்படி இவள் வாயன் ஆயின –

—————————————————————

திருத் தொலை வில்லி மங்கலம் திருவடி தொழுத அன்று தொடங்கி இன்று அளவும் பிராட்டிக்கு உண்டான சைத்திலயத்தைச் சொல்லுகிறாள் –

திருந்து  வேதமும் வேள்வியும் திரு மா மகளிரும் தாம்மலிந்து
இருந்து வாழ்பொருநல் வடகரை வண்தொலை வில்லி மங்கலம்
கருந்தடங் கண்ணி கைதொழுத அந்நாள் தொடங்கி இந்நாள்தொறும்
இருந்திருந்து அரவிந்தலோசந! என்றென்றே நைந்திரங்குமே.–6-5-8-

அங்கு உள்ளார் பரிக்ரஹை யாலே நிறம் பெற்ற வேதமும் -வைதிக சமாராதானங்களும் -பெரிய பிராட்டியாரும் தானும் சம்ருத்தமாய் இருந்து வாழ்கிற திருப் பொருநல் வடகரையான திருத் தொலை வில்லி மங்கலத்தை -வேதமும் வைதிக சமாராதனங்களும் -அத்தால் வந்த சம்பத்துமானவை மிக்கு இருந்து வாழ்ந்து சொல்லுகிற திருத் தொலை வல்லி மங்கலம் என்றுமாம் –
கறுத்து பெருத்து இருக்கிற திருக் கண்களை யுடைய இவள் திருவடி தொழுத அன்று தொடங்கி இன்று அளவும் நெடும் போதோடு கூடி வருந்தி அரவிந்த லோசனன் என்று இப்படி நிரந்தரமாக சொல்லி அவ் வழியாலே அவனுடைய அழகையும் குணங்களையும் நினைத்து சித்திலையாய் நோவு படா நின்றாள்-

——————————————————————-

இப்பெண் பிள்ளையுடைய மநோ வாக் காயங்கள் மூன்றும் எம்பெருமான் பக்கலிலே மிகவும் பிரவணம் ஆயிற்றன என்கிறாள் –

இரங்கி  நாள்தொறும் வாய்வெரீஇ இவள் கண்ண நீர்கள் அலமர
மரங்களும் இரங்கும் வகை மணி வண்ணவோ என்று கூவுமால்
துரங்கம் வாய் பிளந்தானுறை தொலை வில்லி மங்கலம் என்று தன்
கரங்கள் கூப்பித்தொழும் அவ்வூர்த் திருநாமம் கற்றதற் பின்னையே.–6-5-9-

இவள் நாள் தோறும் நோவு பட்டு எம்பெருமானுடைய குணங்களை வாய் வெருவி மிகவும் கண்ண நீர்கள் பாய மரங்களும் இரங்கும் படி திரு நாமத்தைச் சொல்லி கூப்பிடா நின்றாள்
கேசி ஹந்தாவான கிருஷ்ணன் வர்த்திக்கிற தேசம் என்று தன்னுடைய அழகிய கைகளை கூப்பித் தொழும் திருத் தொலை வில்லி மங்கலம் என்ன கற்ற பின்பு
அவ்வூர்த் திருநாமம்-என்பான் என் என்னில் பெண் பிள்ளை திருத் தொலை வில்லி மங்கலம் என்றால் உள்ள இனிமை தன் வாயாலே சொன்ன இடத்திலே பிறவாமையாலே

———————————————————————–

பின்னை கொல்?நிலமாமகள்கொல்? திருமகள்கொல்? பிறந்திட்டாள்
என்ன மாயங்கொலோ? இவள்நெடு மால்என்றே நின்று கூவுமால்
முன்னி வந்தவன் நின்றிருந் துறையும் தொலை வில்லி மங்கலம்
சென்னியால் வணங்கும் அவ்வூர்த் திருநாமம் கேட்பது சிந்தையே.–6-5-10-

இவள் எம்பெருமான் பக்கலிலே அதி பிரவணையாய் இருக்கிற படியையும்-இவளுக்கு அவனால் அல்லது செல்லாது இருக்கிற படியையும் கண்டு இவளோடு ஓக்க மற்று சங்கிக்க ளாவார் ஒருவரும் இல்லாமையால் பிராட்டிமாரில் ஒருத்தியோ-என்று சங்கிக்கிறாள் -இவர்களில் ஒருத்தியோ என்று சங்கித்து -அவர்களுக்கும் இவள்படி இல்லாமையால் லோகம் எல்லாம் வாழ்க்கைக்கு இவள் ஒருத்தி பிறந்தாள் என்றுமாம் –
இவள் திரு நாமத்தை சொல்லி நிரந்தரமாக கூப்பிடா நின்றாள் -இது என்ன ஆச்சர்யம் –
இப் பெண்பிள்ளையை கிடைக்கும் என்று முற்கோலி வந்து பதறி – நின்று அருளியும்-இருந்து அருளியும் – நிரந்தரமாக வர்த்தித்து அருளுகிற திருத் தொலை வில்லி மங்கலத்தை தலையால் வணங்கும் -அவ் வூர் திரு நாமம் கேட்க்கையிலே இவளுக்கு மநோ ரதமும் –

—————————————————————

நிகமத்தில் இது திருவாய் மொழி  யில் கருத்தை வ்யக்தம்  ஆக்கா நின்று கொண்டு -இத்தைக் கற்றவர்கள் இதுக்கு அனுரூபமான கைங்கர்யத்தை பண்ணப் பெறுவார் என்கிறார் –

சிந்தையாலும்  சொல்லாலும் செய்கையினாலும் தேவ பிரானையே
தந்தை தாய் என்றடைந்த வண்குரு கூரவர் சடகோபன்
முந்தை ஆயிரத்துள் இவை தொலை வில்லி மங்கலத்தைச்சொன்ன
செந்தமிழ் பத்தும் வல்லார் அடிமை செய்வார் திருமாலுக்கே.–6-5-11-

மநோ வாக் காயங்களாளினால் திருத் தொலை வில்லி மங்கலத்தை எம்பெருமானையே எல்லா உறவுமுறையும் என்று பற்றவும் செய்து -திரு நகரியில் உள்ளார்க்கு சர்வவிதமுமான ஆழ்வார் அருளிச் செய்த
முந்தை ஆயிரம்-அர்த்த பழைமையாலே பழையதான ஆயிரம் –

——————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

திருவாய்மொழி இருபத்து நாலாயிரப்படி –6-4-

September 28, 2016

பிறந்தவாற்றிலே குணங்களை தரித்து நின்று அனுபவிக்க வல்லனாம் படி பண்ணி அருள வேணும் என்று சரணம் புக்கார்
-திரு வண் வண்டூரில் தூது விட்டார் –
அவன் வரக் கொண்டு மின்னிடை மடவாரிலே ப்ரணய ரோஷத்தால் அகலப் புக்க தம்மைச் சேர விட்ட உபகாரத்தை அனுசந்தித்தார் –
சர்வ நியந்தாவான மேன்மை யுடையவன் என்னை தாழ நின்று பொருந்த விட்டுக் கொள்வதே -என்று உபகார ஸ்ம்ருதியால் ஏத்தினார் –
இதில் ஸ்ரீ கிருஷ்ண அவதார சேஷ்டிதங்களை அனுசந்தித்து ப்ரீதர் ஆகிறார் –
பாவோ நான்யத்ர கச்சதி -என்று திருவடி ஸ்ரீ ராமாவதராத்திலே பிரவணனாய் இருக்குமா போலே இவரும் ஸ்ரீ கிருஷ்ணாவதாரத்தில் யாயிற்று பிரவணராய் இருப்பது
மாசறு சோதியில் -சேணுயர் வானத்து இருக்கும் –என்று தூரஸ்தன் -என்று இன்னாதாரான இழவு தீர
இந்த லோகத்தில் ஸ்ரீ பிருந்தாவனத்தில் பெண்களோடு பரிமாறின பரிமாற்றத்தைக் காட்டிக் கொடுக்க அனுசந்தித்து ப்ரீதர் ஆகிறார்
மானேய் நோக்கிலே தொல் அருள் நல் வினையால் சொல்லக் கூடுங்கோல் -என்று நாக்கு நீர் வந்து திரு நாமம் சொல்வது என்றோ
என்று ஆசைப்பட்ட இழவு தீர ஸ்ரீ கிருஷ்ண குணங்களை அனுபவித்து பேசி ப்ரீதர் ஆகிறார்
சன்மம் பல பல -விலேயிலும் -ஒரு குறைவிலன் என்றார்
இதிலும் என்ன குறைவு எனக்கு என்றார்
அதுக்கும் இதுக்கும் வாசி என் என்னில் -அங்கு சம்சாரிகளில் காட்டில் வ்யாவருத்தனாகப் பெற்றேன் என்றார்
இதில் குண அனுபவ ப்ரீதி பிரகர்ஷத்தாலே எனக்கு ஒரு குறைவு இல்லை என்கிறார் –

—————————————————————–

அஹோ ராத்ரம்   ப்ரீதி பூர்வகமாக  ஸ்ரீ கிருஷ்ண சேஷ்டிதங்களை அனுபவிக்கப் பெற்றேன் -இனி எனக்கு என்ன குறை உண்டு என்கிறார் –

குரவை  ஆய்ச்சியரோடு கோத்ததும் குன்றம்ஒன்று ஏந்தியதும்
உரவுநீர்ப் பொய்கை நாகங் காய்ந்ததும் உள்பட மற்றும்பல
அரவில் பள்ளிப் பிரான்தன் மாய வினைகளையே அலற்றி
இரவும் நன்பகலும் தவிர்கிலன் என்ன குறைவு எனக்கே.–6-4-1-

குரவை ஆய்ச்சியரோடு கோத்ததும்
மின்னிடை மடவாரிலே அகலப் புக்கு தாழ நின்று பொருந்தின படி -இடைப் பெண்களோடு பொருந்தினால் போலே இருக்கிறதாயிற்று -தன்னோடு அவர்களை கோக்கை அன்றியே -அவர்களோடு தன்னை கோத்த படி -பஞ்ச லக்ஷம் குடியில் பெண்களோடு கலந்த ப்ரீதி உண்டாயிற்று இவரோடு கலந்த ப்ரீதி –
கோக்கை -தொடுக்கை -கை கோத்துக் கொண்டு ஆடும் கூத்து இ றே குரவைக் கூத்து -ஆவது
குன்றம்ஒன்று ஏந்தியதும்
அவர்களை அனுபவிக்கை அன்றியே -அவர்களுக்கு வந்த ஆபத்தை போக்கின படி -இந்திரன் பசி க்ராஹத்தாலே அழிய வர்ஷிக்கத் தொடங்கின வாறே முன்னே நின்றதொரு மலையை எடுத்து ரஷித்த படி
ஏந்தியதும் -ஏழு வயசில் ஏழு நாள் ஒருபடிப்பட மலையை எடுத்துக் கொடு நிற்கச் செய்தேயும் -ஆச்ரிதார்த்த ப்ரவ்ருத்தி ஆகையால் வருத்தம் அற்று இருந்த படி
உரவுநீர்ப் பொய்கை நாகங் காய்ந்ததும் உள்பட மற்றும்பல
வலியை யுடைத்தான நீர் -விஷத்தால் பாதகமான வலி யாதல் -முது நீர் ஆகையால் வலிய நீர் ஆதல் —உரவு-விஷம் என்னுதல் -வலிய என்னுதல் –
நாகங் காய்ந்ததும் -பெண்களோட்டை ஜலக் க்ரீடைக்கு விரோதி என்று காளியனை ஓட்டினதுவும் –
உள்பட மற்றும்பல-இவை முதலான சேஷ்டிதங்களுக்கு தொகை இல்லை
பிறந்த வாற்றில் பல ஹானியால் சொல்ல மாட்டிற்று இலர்
இங்கு ப்ரீதி பிரகர்ஷத்தாலே தரித்து சொல்ல மாட்டாது ஒழிகிறார்
அரவில் பள்ளிப் பிரான்-
அவதரிக்கைக்காக திருப் பாற் கடலிலே கண் வளர்ந்து அருளினவன் -ஆஸ்ரித விரோதியான சர்ப்பத்தை போக்கினான் -அஜ் ஜாதியிலே ஒருவனுக்கு உடம்பு கொடுத்தான் -ஜாதி பிரயுக்தம் அன்று நிரஸனம் -ஆஸ்ரித விரோதி என்று -பிறந்த வாற்றில் -நாகணை மிசை நம்பிரானை ப்ரத்யபிஜ்ஜை பண்ணுகிறார்
தன் மாய வினைகளையே அலற்றி
ஆச்சர்ய சேஷ்டிதங்களை ப்ரீதியாலே அடைவு கெடச் சொல்லி
இரவும் நன்பகலும் தவிர்கிலன் என்ன குறைவு எனக்கே.
நல்ல இரவும் நல்ல பகலும் -சுடர் கொள் இராப் பகல் என்று விரஹத்தில் அக்னி கல்பமான அஹோராத்ரம் போல் அன்று இ றே
தவிர்கிலன்-விடு கிறி லேன்
என்ன குறைவு எனக்கே.
கால பேதம் உள்ள தேசத்திலே இருந்து -ஏக ரூபமாக அனுபவிக்கப் பெற்ற எனக்கு -ஒரு தேசத்திலே போக வேணும் என்னும் குறை உண்டோ –

—————————————————————

தொல் அருள் நல் வினையால்  சொலக் கூடுங்கொல் -என்று பிரார்த்தித்த படியே பெறுகையாலே திரு நாட்டில் தான் தன்னோடு ஒப்பார் உண்டோ என்கிறார் –

கேயத் தீங்குழல் ஊதிற்றும் நிரை மேய்த்ததும் கெண்டை ஒண்கண்
வாசப் பூங்குழல் பின்னை தோள்கள் மணந்ததும் மற்றும் பல
மாயக் கோலப் பிரான்தன் செய்கை நினைந்து மனம் குழைந்து
நேயத்தோடு கழிந்த போது எனக்கு எவ்வுலகம் நிகரே.–6-4-2-

கேயத் தீங்குழல் ஊதிற்றும் –
கேயம் -என்று கானம் / தீங்குழல்-இனிய குழல் /பர தந்திரனாய் பசு மேய்க்கப் புகையால் வரவு தாழ்த்தேன் இத்தனை -என்றால் போலே சில பாசுரங்களை நெஞ்சை வருத்தும் இசையோடு கூட்டி பெண்கள் நெஞ்சில் மறம் மாறும் படி குழல் ஊதிற்றும் –
நிரை மேய்த்ததும்
அக்குழல் ஓசையே தாரகமாக வளருமவை யாயிற்று பசுக்கள் -பெண்களும் அக் குழல் ஓசை வழியே சேருமவர்கள்-ஒன்றைக் கொண்டு எல்லா காரியமும் செய்ய வல்லான் இ றே
கெண்டை ஒண்கண்-வாசப் பூங்குழல் பின்னை தோள்கள் மணந்ததும்
பசு மேய்த்த விடாய் தீருவது நப்பின்னை பிராட்டி தோளோடு அணைந்தாயிற்று -நப்பின்னை பிராட்டி முக்தமான அழகிய திருக் கண்களாலே குளிர நோக்கி அழகிய திருக் குழலில் பரிமளத்தாலே திருமேனியை வாசிதமாக்கி -பசு மேய்த்து வந்த சிரமம் தீர -பர்த்தாராம் பரிஷஸ் வஜே–என்கிறபடியே அணைக்க அவள் தோளோடு கலந்ததும்
மற்றும் பல-மற்றும் உண்டான பிராட்டிமாரோடு கலந்த படி
மாயக் கோலப் பிரான்-நப்பின்னை பிராட்டியாரோடே கலவியால் வந்த ஒற்று மஞ்சளும் மாளிகைச் சாந்துமான அத்யாச்சர்யமான ஒப்பனையை யுடையனாய் -உபகார சீலனானவனுடைய
தன் செய்கை நினைந்து மனம் குழைந்து
கிருஷ்ண சேஷ்டிதங்களை நினைத்து அத்தாலே நெஞ்சு நெகிழ்ந்து –
நேயத்தோடு கழிந்த போது எனக்கு எவ்வுலகம் நிகரே.–
இனிமையோடே கழிந்த காலம் -ஒரு தேச விசேஷத்திலும் தான் எனக்கு எதிர் உண்டோ -ஸ்மர்த்தவ்ய விஷய சாரஸ்யத்தாலே அனுபவ வேளையில் போலே ஸ்ம்ருதி வேளையிலும் இனிமையோடே செல்லக் கடவதானால்-எனக்கு எங்கே எதிர்-

—————————————————-

கிருஷ்ண சேஷ்டிதங்களை அனுபவித்துக் கொண்டு காலம் போக்கப் பெற்ற எனக்கு ஒரு விஸ்லேஷம் ஆகிற நோவு இல்லை என்கிறார் –

நிகரில்  மல்லரைச் செற்றதும் நிரை மேய்த்ததும் நீள் நெடுங்கைச்
சிகர மாகளிறு அட்டதும் இவைபோல்வனவும் பிறவும்
புகர்கொள் சோதிப் பிரான்தன் செய்கை நினைந்து புலம்பி என்றும்
நுகர வைகல் வைகப்பெற்றேன் எனக் கென்னினி நோவதுவே?–6-4-3-

நிகரில் மல்லரைச் செற்றதும்
மிடுக்குக்கு சத்ருசம் இன்றிக்கே இருக்கிற மல்லரைச் பெற்றதும் -ஷத்ரிய ஜன்மத்துக்கு அனுரூபமாக விரோதி நிராசனம் பண்ணினதும்
நிரை மேய்த்ததும்
கோப ஜன்மத்துக்கு அனுரூபமாக பசு மேய்த்ததும் -பசு மேய்த்த அநாயாசேனாவோ பாதி யாக வாயிற்று மல்லரை லீலையாக நிரசித்ததுவும்
நீள் நெடுங்கைச்
வீபிசையாலே அற நெடுங்கை-என்கை -கடக்க போகிலும் எட்டிப் பிடிக்க வல்ல கை-அவன் அதுக்கு தப்பின பின்பும் இன்று இவர் வயிறு பிடிக்கிறார்
சிகர மாகளிறு அட்டதும்
பர்வத சிகரம் போலே உரத்து பெருத்து இருக்கிற குவலயா பீடத்தை நிரசித்ததும்
இவைபோல்வனவும் பிறவும்
இவை போலே மற்றும் உண்டான கேசி நிரசன நாதிகளும்
புகர்கொள் சோதிப் பிரான்
விரோதி நிரசன த்தாலே ஒளி பெற்ற தேஜஸ் ஸூ –உபகார சீலன்
தன் செய்கை நினைந்து புலம்பி என்றும்
தன் சேஷ்டிதங்களை அனுசந்தித்து நாள்தோறும் அடைவுகெட கூப்பிட்டு
நுகர வைகல் வைகப்பெற்றேன்
அனுபவத்தோடு காலம் கழிய பெற்றேன் என்னுதல்-அனுபவிக்கலாம் படி காலம் நெடுக்கப் பெற்றேன் என்னுதல்
எனக் கென்னினி நோவதுவே-
ப்ரீதி பிரேரிதனாய் அனுபவிக்கிற எனக்கு இப்படி காலம் நித்தியமான பின்பு -விஸ்லேஷம் ஆகிற நோவு உண்டோ-

———————————————————————

யசோதை பிராட்டிக்கு அத்யந்தம் பவ்யனாய்-ஆஸ்ரித பவ்யனாய் உள்ள  அவ்விருப்பிலே பிரதிகூலரை மாய்த்த கிருஷ்ணனை அனுபவிக்கப் பெற்ற எனக்கு இனி அவாப்தவ்யம் இல்லை என்கிறார்

நோவ  ஆய்ச்சி உரலோ டார்க்க இரங்கிற்றும் வஞ்சப்பெண்ணைச்
சாவப் பாலுண்டதும் ஊர் சகட மிறச் சாடியதும்
தேவக் கோலப் பிரான்தன் செய்கை நினைந்து மனங்குழைந்து
மேவக் காலங்கள் கூடினேன் எனக்கு என் இனி வேண்டுவதே?–6-4-4-

நோவ ஆய்ச்சி உரலோ டார்க்க இரங்கிற்றும்
தாயாருக்கு பிரேமம் உள்ள அளவும் சீற்றம் உண்டு இ றே -இவர் தம் திருமேனியில் கட்டினால் போலே நோவு படுகிறார் –
தாயார் கட்டின கட்டுக்கு பிரதிகிரியை இல்லாமையால் நோவு பட்டு பீதனாய் இருந்தும் –ஆஸ்ரித கர்ம பந்தமும் பிரதிகூலர் பந்தித்த பந்தமும் இ றே அறுக்கலாவது
வஞ்சப்பெண்ணைச்-சாவப் பாலுண்டதும்
தாய் வடிவு கொண்டு வந்த பூதனை முடியும் படி நச்சுப் பால் உண்டதுவும் -சூர்பணகையை போலே பின்பு இருந்து பூசல் விளைக்க வையாதே முடிக்கப் பெற்ற படி
ஊர் சகட மிறச் சாடியதும்
பரிஹாரமாக வைத்த சகடம் அஸூரா வேசத்தால் வந்து நலிய புக-திருவடிகளாலே தூக்கலாம் படி சாடியதும் –
முலை வரவு தாழ்த்து திருவடிகளை நிமிர்த்த மாத்திரத்திலே சகடாஸூரன் அழிந்த படியால் -சாடியது என்கிறார் –
தேவக் கோலப் பிரான்
விரோதியை அழிக்கையால் வந்த அப்ராக்ருதமான அழகை எனக்கு உபகரித்தவன் –
தன் செய்கை நினைந்து மனங்குழைந்து-மேவக் காலங்கள் கூடினேன் எனக்கு என் இனி வேண்டுவதே?–
அவன் சேஷ்டிதங்களை அனுபவித்து நெஞ்சு நெகிழ்ந்து இச் சேஷ்டிதங்களோடே பொருந்தும்படி காலங்களைக் கூடப் பெற்றேன் -இனி எனக்கு வேண்டுவது என்-இவ்வனுபவத்தோடே காலம் செல்லப் பெற்ற எனக்கு அவாப்தவ்யம் உண்டோ –

—————————————————————–

திருவவதாரம் பண்ணி அருளினை பின்பு -கம்சன் அறியாத படி வளர்ந்து கம்சனை மாய்த்த படி -இன்று இருந்து அனுபவிக்கப் பெற்ற எனக்கு எதிர்  இல்லை என்கிறார் –

வேண்டித்தேவர் இரக்க வந்து பிறந்ததும் வீங்கிருள்வாய்ப்
பூண்டு அன்று அன்னை புலம்பப் போய் அங்கோர் ஆய்க்குலம்புக்கதும்
காண்ட லின்றி வளர்ந்து கஞ்சனைத் துஞ்ச வஞ்சம்செய்ததும்
ஈண்டு நான் அலற்றப் பெற்றேன் எனக்கு என்ன இகல்உளதே?–6-4-5-

வேண்டித்தேவர் இரக்க வந்து பிறந்ததும்
தேவர்கள் அர்த்திக்க-வேண்டி வந்து தன் உகப்பாலே பிறந்ததுவும் -பிதரம் ரோசயாமாச-சம்ச்லேஷ பஜதாம் த்வாரா பரவச -பரித்ராணாயா ஸாதூ நாம் —
வீங்கிருள்வாய்ப்-
வளருகின்ற இருளிலே -வீங்கிருள் வாய் பிறந்ததும் -என்னுதல் -வீங்கிருள் ஆய்க்குலம் புக்கதுவும் என்னுதல் -வீங்கிருளின் உண்டுளியாய்-என்ற பய ஹேதுவான இருள் அன்றிக்கே-பய நிவ்ருத்திக்கு உடலான இருள் இ றே
பூண்டு அன்று அன்னை புலம்பப்
பிறந்த அன்றே தேவகியார் -முன்பே ஆறு பிள்ளைகளை இழைக்கை யாலும் -புத்ர வாத்சல்யத்தாலும் கம்ச பயத்தாலும் திருவடிகளைக் கட்டிக் கொண்டு கதற –
போய்-
முலைச் சுவடு அறியாமையால் இவனுக்கு போகலாம் இ றே –
அங்கொர் ஆய்க்குலம்புக்கதும்
அத்தசையிலே அஞ்சினான் புகலிடமாய் இருப்பது ஓர் இடைச்சேரி உண்டாவதே -கம்சனுக்கு குடி மக்களாய் இருக்கச் செய்தேயும் -அவனுக்கு அநிஷ்டம் என்று பாராதே மறைத்து வைத்து அடைக்கலம் நோக்க வல்ல ஊர்
காண்ட லின்றி வளர்ந்து
கம்சன் வஞ்சித்து வரக் காட்டின துஷ்ப்ரக்ருதிகள் அறியாதபடி வளர்ந்து –
கஞ்சனைத் துஞ்ச வஞ்சம்செய்ததும்
கம்சன் அழைத்து வஞ்சிக்க நினைக்க -அவன் நினைவை அவன் தன்னோடே போக்கினதுவும் -ராமாவதாரம் போலே -செவ்வைப் பூசல் அல்லது அறியான் -என்று இராமை இ றே பிழைத்தது
ஈண்டு நான் அலற்றப் பெற்றேன்
இங்கே இருந்து அனுபவித்து ப்ரீதியாலே அடைவு கெட பேசப் பெற்றேன் -ஈண்டு – இங்கு என்றபடி -இப்போது என்னவுமாம் -இக்காலத்தில் -அதாகிறது -தேவகியாரையும் ஸ்ரீ வ ஸூ தேவரையும் போலே சம காலத்திலே இருந்து வயிறு ஏரியாதே -கம்ச விஜய பர்யந்தமாக இக்காலத்தில் அனுபவிக்கப் பெற்றேன்
எனக்கு என்ன இகல்உளதே?–
எனக்கு என்ன எதிர் உண்டு என்னுதல் -எனக்கு என்ன கிலேசம் உண்டு என்னுதல் –இகல் -யுத்தம் -யுத்தத்தால் வரும் கிலேசம் ஆதல் -யுத்தத்தில் வரும் எதிர் ஆதல்-

———————————————————–

கிருஷ்ணனுடைய பிரதிகூல நிரசன பரம்பரையை அனுபவிக்கப் பெற்ற  எனக்கு இனி ஒரு மநோதுக்கம் இல்லை என்கிறார் –

இகல்கொள்  புள்ளைப் பிளந்ததும் இமிலேறுகள் செற்றதுவும்
உயர்கொள் சோலைக் குருந்தொசித்ததும் உட்பட மற்றும்பல
அகல்கொள்வைய மளந்த மாயன் என்னப்பன்தன் மாயங்களே
பகலிராப் பரவப் பெற்றேன் எனக்கென்ன மனப்பரிப்பே.–6-4-6-

இகல்கொள் புள்ளைப் பிளந்ததும்
யுத்த்தோன் முகனான பகாஸூரனை பிளந்ததுவும் -பக்ஷி வேஷத்தாலே வந்து எதிரிட்டான் ஆயிற்று பஹா ஸூ ரன் -அவனை அநாயாசேன பிளந்தான்
இமிலேறுகள் செற்றதுவும்
கண்டார்க்கு பயாவஹமான ககுத்துக்களை யுடைய ரிஷபங்களை நிரசித்ததுவும் –இமில் -ககுத்து –
உயர்கொள் சோலைக் குருந்தொசித்ததும்
ஓங்கி தழைத்து இருந்துள்ள குருந்தை முறித்ததுவும் -தர்ச நீயமான ஸ்தாவர வேஷத்தைக் கொண்டு வந்த மஹா ஸூரனை முடித்ததுவும்
உட்பட மற்றும்பல
கன்றாயும் விளாவாயும் வந்த அஸூரர் முதலாக -வேறும் நிரசித்தவை அநேகங்கள் -இந்த திர்யக் ஸ்தாவரங்களை நித்ய ஸூ ரிகள் கைங்கர்யத்துக்காக பரிக்ரஹிப்பார்கள் -இங்கு பிராதிகூல்யத்துக்கு உறுப்பாக கொண்ட வடிவுகள் இ றே -இதுக்கு பாப பிராசர்யம் அடி -அதுக்கு இச்சை அடி –
அகல்கொள்வைய மளந்த மாயன்
பரப்பை யுடைத்தானா பூமி அடங்கலும் தன் திருவடிகளின் கீழே த்தை கொண்ட ஆச்சர்யத்தை யுடையவன் -வரையாதே தீண்டும் ஸ்வ பாவ சாம்யத்தாலே சொல்லுகிறார்
என்னப்பன்தன் மாயங்களே
இவ்வபதானம் தமக்கு உதவ பலித்தது என்று இருக்கிறார் -ஆச்சர்ய சேஷ்டிதங்களையே
பகலிராப் பரவப் பெற்றேன் எனக்கென்ன மனப்பரிப்பே.–
இரவோடு பகலோடு வாசி அற அனுபவித்து ப்ரீதியாலே அடைவு கெடப் பேசப் பெற்றேன் -எனக்கு என்ன மநோ துக்கம் உண்டு -பரிவு என்கிறதை சந்தஸ் ஸூ க்குச் சேர பரிப்பு என்கிறது-

—————————————————————-

பிரதிகூலர் அனுகூலரை நலியுமது பொறுக்க மாட்டாமை திருவாவதரித்து அவர்களை அழியச்  செய்யும் சேஷ்டிதங்களை நினைக்கும் நெஞ்சுடைய எனக்கு பூமியில் எதிர் இல்லை என்கிறார் –

மனப்பரிப்போடு அழுக்கு மானிட சாதியில் தான்பிறந்து
தனக்கு வேண்டுருக் கொண்டு தான்தன சீற்றத்தினை முடிக்கும்
புனத்துழாய்முடி மாலை மார்பன்என்னப்பன்தன் மாயங்களே
நினைக்கும் நெஞ்சுடையேன் எனக்கினியார் நிகர் நீணிலத்தே.–6-4-7-

மனப்பரிப்போடு அழுக்கு மானிட சாதியில் தான்பிறந்து
நமக்கு அநந்யார்ஹ சேஷமாய் இருக்கிற இவ்வஸ்து தேக சம்பந்தத்தால் பஹு முகமாக நோவு படுவதே என்னும் மநோ துக்கத்தோடு யாயிற்று திரு வவதரித்தது
ப்ரஹ்மாதிகளும் கூட அருவருக்கும் மனுஷ்ய ஜாதியிலே -அகில ஹேய ப்ரத்ய நீகனான தான் -அப்ராக்ருத திவ்ய சமஸ்தானத்தோடே கர்ப்ப வாசம் பண்ணிக்க கொண்டு அவதரித்து -மானுஷே லோகே ஐஜ்ஜே-தன் ஜென்மத்தை அனுசந்திக்க சம்சாரிகளோட ஜென்ம சம்பந்தம் போம்படிதான தான் பிறந்து
தனக்கு வேண்டுருக் கொண்டு
சதுர்புஜனாவது -த்விபுஜனாவாது -கோபாலனாவது -வைஸ்வ ரூபத்தை கொள்ளுகை-இவை தான் ஆஸ்ரித அர்த்தம் ஆகையால் தனக்கு அபிமதமாய் இருக்கும் -வேண்டுரு -எரிச்சயம் -இச்சையால் என்றுமாம்
தான்தன சீற்றத்தினை முடிக்கும்
ஆஸ்ரித வத்சனான தான் ஆஸ்ரித விரோதிகளை போக்கி -அத்தாலே தன் சினம் தீர்ந்தானாய் இருக்கும் -பிரஜையை நலிந்தவர்களை தாய் தனக்கு சத்ருசு என்று நிலைக்குமா போலே
புனத்துழாய்முடி மாலை மார்பன்
ஆஸ்ரித விரோதிகளை போக்கப் பெற்றதால் ஒப்பித்து இருக்கிற படி
என்னப்பன்தன் மாயங்களே
அவனுடைய ஆச்சர்ய சேஷ்டிதங்களையே
நினைக்கும் நெஞ்சுடையேன் எனக்கினியார் நிகர் நீணிலத்தே.
இடைவிடாமல் அநுஸந்திக்கும் நெஞ்சு உடையேன் –காரணம் பந்த மோஷாயா -என்கிற பொதுமை தவிர்ந்து அசாதாரணமான நெஞ்சை பெற்றேன் –
பஞ்சஸாத் கோடி விஸ்தீரணையான பூமியில் எனக்கு எதிர் யார்-

—————————————————————–

பாண விஷய பிரமுகரான கிருஷ்ண சேஷ்டிதங்களையே அநுஸந்திக்கும் நெஞ்சை யுடைய எனக்கு இனி கலக்கம் உண்டோ என்கிறார்-

நீணிலத்தொடு வான்வியப்ப நிறை பெரும் போர்கள்செய்து
வாண னாயிரம் தோள்துணித்ததும் உட்பட மற்றும்பல
மாணியாய்நிலம் கொண்ட மாயன் என்னப்பன்தன் மாயங்களே
காணும் நெஞ்சுடையேன் எனக்கினி என்ன கலக்க முண்டே?–6-4-8-

நீணிலத்தொடு வான்வியப்ப
பரப்பை யுடைத்தான பூமியில் உள்ளோரோடு -தேவர்களும் கூட விஸ்மயப்படும் படி -பராபிபவ சாமர்த்தியத்தை யுடைய தேவர்களோடு எளியரான மனுஷயரோடு வாசியற ஆச்சர்யப் படும் படி இருக்கை -ரஞ்ச நீ யஸ்ய விக்ரமை -என்று எதிரிகளும் கூட விஸ்மயப்படும் படி இருப்பது –
நிறை பெரும் போர்கள்செய்து
வலிதாய் பெரிதான யுத்தத்தை பண்ணி
வாண னாயிரம் தோள்துணித்ததும்
அபிராப்த விஷயத்தில் அஞ்சலி பண்ணினத்துக்கு பிராயச்சித்தம் பண்ணுவாராய்ப் போலே பாணனுடைய பாஹு வனத்தை சேதித்ததும் -உஷை பித்ருஹீனை யாகாமைக்காக இ றே கொல்லாது ஒழிந்தது
உட்பட மற்றும்பல
பாணனை ரக்ஷிக்கிறேன் -என்று ஏறட்டுக் கொண்டு பசலும் குட்டியும் தானுமாக முதுகிட்டுப் போன படியும் -கிருஷ்ண கிருஷ்ண மஹா பாஹோ ஜானோ த்வாம் புருஷோத்தமம்-என்று முதுகிலே அம்பு தைத்த பின்பு சர்வேஸ்வரனாக அறிந்த படியும் -வேறும் அநேகம் –
மாணியாய்நிலம் கொண்ட –
ஆஸ்ரித ரக்ஷணத்தில் அர்த்தியாய் தன்னை அழிய மாறி ரஷித்தவனை –
மாயன்
தன் உடைமையை பிறரது ஆக்கி இரந்து சிறிய காலைக் காட்டி பெரிய காலாலே அளந்து கொண்டும் -தன் அழகாலும் சீலத்தாலும் சுக்கிராதிகள் வார்த்தை செவிப்படாத படி மஹா பலியை எழுதிக் கொண்டும் -இப்படி ஆச்சர்ய சேஷ்டிதங்களை யுடையவன் –
என்னப்பன்தன் மாயங்களே
அவர்கள் தலையிலே திருவடிகளை வைத்த இது தம் பேறாக நினைத்து இருக்கிற படி -இப்படி தனித் தனியே அனுபவித்து முடிக்க ஒண்ணாத ஆச்சர்ய சேஷ்டிதங்களை அநுஸந்திக்கும் நெஞ்சை யுடையேன் –
காணும் நெஞ்சுடையேன் எனக்கினி என்ன கலக்க முண்டே?–
அநுஸந்திக்கும் நெஞ்சு -நெஞ்சு என்னும் உட் கண் -என்ன கடவது இ றே
அங்கனம் அன்றியே -முடியானே யில் கரணங்களை யுடையாராகையாலே மனஸ்ஸூ சஷூர் இந்திரிய விருத்தியும் லபிக்க வற்றான படி சொல்லுகிறது -என்று பிள்ளான் பணிக்கும் –
இதர தேவதைகளை ரக்ஷகர் என்கிற கலக்கமும் -ஈஸ்வரனுடைய ரக்ஷணத்தில் அதி சங்கை பண்ணும் கலக்கமும் -தனக்குத் தானே கடவன் என்கிற கலக்கமும் இல்லை –

————————————————————-

வைதிக புத்ராநயனம் தொடக்கமான அபதானங்களை யுடைய சர்வேஸ்வரனை மலக்கும் நா வீறுடைய என்னோடு ஒப்பார் உண்டோ என்கிறார் –

கலக்க  ஏழ்கடல் ஏழ்மலை உலகேழும் கழியக் கடாய்
உலக்கத் தேர்கொடு சென்ற மாயமும் உட்பட மற்றும்பல
வலக்கை ஆழி இடக்கைச் சங்கம் இவை யுடை மால்வண்ணனை
மலக்கு நாவுடையேற்கு மாறுளதோ இம்மண்ணின் மிசையே?–6-4-9-

கலக்க ஏழ்கடல் ஏழ்மலை உலகேழும் கழியக் கடாய்
ஏழு கடலையும் ஏழு மலையையும் ஏழு லோகங்களையும் கழிய தரையிலே நடத்தினால் போலே நடத்தி -நீருக்கும் மலைக்கும் ஆகாசத்துக்கும் வாசி தெரியாத படி நடத்தி -கலங்க என்றாய் -எங்கும் ஓக்க அதிர நடத்தி என்றுமாம்
உலக்கத் தேர்கொடு சென்ற மாயமும்
தமஸ்ஸூ க்கு அவ்வருகே செல்ல முடியாத தேரைக் கொண்டு சென்ற ஆச்சர்யமும் —உலக்க – முடிய / கார்ய ரூபமான தேரைக் காரண த்திலே கார்ய ஆகாரம் குலையாமல் நடத்தின ஆச்சர்யம்
உட்பட மற்றும்பல
வைதிக புத்திரர்களை இத்தேசத்தில் நின்றும் கொடு போருகையும்-போன செவ்வியில் கொடு வந்து சேர்க்கையும் -பிரதாசாவனத்துக்கு மாத்யந்தினசவத்துக்கு முன்னே இது அடங்கச் செய்கையும் –
வலக்கை ஆழி இடக்கைச் சங்கம் இவை யுடை மால்வண்ணனை
தாமஸ பரமோ தாதா சங்க சக்ர கதா தரா-என்று சர்வாதிக வஸ்துவுக்கு லக்ஷணம் ஆயிற்று திவ்யாயுதங்கள் -வலக்கையில் திரு வாழி யையும் -இடக்கையில் ஸ்ரீ பாஞ்ச ஜன்யமும் -இவற்றை யுடையனுமாய் -கறுத்த நிறத்தை யுடையவனை
மால் வண்ணனை என்ன அமைந்து இருக்க திவ்யாயுதங்களை சொல்லுவான் என் என்று கஞ்சனூர் வண் துவரைப் பெருமாள் பட்டரை கேட்க -அவிக்ருத வஸ்துவுக்கு லக்ஷணம் இ றே திவ்யாயுதங்கள் என்றார்
மலக்கு நாவுடையேற்கு மாறுளதோ இம்மண்ணின் மிசையே?
அவாக்ய அ நாதரா என்கிற சர்வாதிக வஸ்துவை விக்ருதமாக்கும் நா வீறுடைய எனக்கு
சோழேந்திர சிம்ஹனை உளுக்காகப் பண்ண வல்ல நாவைப் படைத்த எனக்கு -பூமியில் எதிர் உண்டோ
ஈஸ்வரன் உளுக்கு ஆகும் படி கவி சொல்ல வல்லார் தம்மை ஒழிய சிலைவர் இல்லாமையால் வேறு என்னோடு ஒப்பார் இல்லை என்கிறார்-

—————————————————————–

சம்சாரத்தின் உள்ளே வந்து திருவவதாரம் பண்ணி யருளி நிரபாயமான திரு நாட்டிலே போய்ப் புக்க படியை அனுபவிக்கப் பெற்ற வேறு சிலர் நிர்வாஹர் வேண்டும்படி குறையுடையேன் அல்லேன்-என்கிறார் –

மண்மிசைப்  பெரும்பாரம் நீங்க ஓர்பாரத மாபெரும்போர்
பண்ணிமாயங்கள் செய்துசேனையைப் பாழ்படநூற் றிட்டுப்போய்
விண்மிசைத் தன தாமமே புக மேவிய சோதிதன்தாள்
நண்ணி நான்வணங்கப் பெற்றேன் எனக்கார் பிறர் நாயகரே-6-4-10-

மண்மிசைப் பெரும்பாரம் நீங்க
த்ரிபாத் விபூதியில் -யத்ர பூர்வே ஸாத்யாஸ் சந்தி தேவா -என்கிறபடியே கனத்தார் உண்டாய் இருக்கச் செய்தேயும் பாரம் இல்லை இ றே -அஹங்கார ஸ்பர்சம் உடையார் இல்லாமையால் -ஆகையால் இ றே மண் மிசைப் பெரும் பாரம் என்று விசேஷிக்கிறது –
ஓர்பாரத மாபெரும்போர்-
பெரும் பாரம் -விஸ்வம்பரை பொறுக்க ஒண்ணாது இருக்கை -ஓர் பாரதம் -மஹா பாரதம் –அதாகிறது பெரும் போரை விளைத்து
பண்ணிமாயங்கள் செய்து
பகலை இரவாக்கியும் -ஆயுதம் எடேன் என்று ஆயுதம் எடுத்தும்
சேனையைப் பாழ்பட
உபய சேனையிலும் உள்ள பூபாரம் அடங்க வேறும் தறையாம் படி
நூற் றிட்டு
மந்திரித்து -யஸ்ய மந்த்ரீச கோப்தாச-என்ன கடவது இ றே -ஆயுதம் எடுக்க ஓட்டோம் என்கையாலே சூழ் பாலே அழித்தான்
போய் -விண்மிசைத் –
பொய்யாசனம் எடுவார் -பரிபாவிப்பாரான தேசத்தை விட்டுப் போய் -பரிவரேயான பரம பதத்தில்
தன தாமமே புக மேவிய சோதி
கதஸ் ஸ்வம் ஸ்தானம் உத்தமம் –என்கிறபடியே தனக்கு அசாதாரணமான ஸ்தானத்தில் போய்ப் புக்கான்
தன்தாள்-நண்ணி நான்வணங்கப் பெற்றேன் எனக்கார் பிறர் நாயகரே-
அவன் திருவடிகளைக் கிட்டி நான் அனுபவிக்கப் பெற்றேன் -எனக்கு வேறு நியந்தாக்கள் உண்டோ -புருஷார்த்த காஷடையாக ததீயரை நினைக்கை யாலே-அவர்களை பிறர் என்கிறிலர்-

————————————————————–

நிகமத்தில் கிருஷ்ண சேஷ்டிதங்களை பேசின இப்பத்தும் கற்றார் ஆழ்வார் தம்மைப் போலே கிருஷ்ணனுக்கே பக்தராவார் என்கிறார் –

நாயகன்  முழுவேழுலகுக்குமாய் முழுவேழுலகுந் தன்
வாயகம்புக வைத்துமிழ்ந்து அவையாய் அவை அல்லனுமாம்
கேசவன் அடியிணை மிசைக் குருகூர்ச்சடகோபன் சொன்ன
தூய ஆயிரத் திப்பத்தால் பத்தராவர் துவளின்றியே.–6-4-11-

நாயகன் முழுவேழுலகுக்குமாய் முழுவேழுலகுந் தன்-வாயகம்புக வைத்துமிழ்ந்து அவையாய் அவை அல்லனுமாம்-
சகல சேதன அசேதனங்களும் நியாந்தாவாய் -பிரளய ஆபத்தில் வயிற்றிலே வைத்து ரக்ஷித்து-உள்ளிருந்து நெருக்கு படாமே வெளிநாடு காண புறப்பட விட்டு சர்வ அவஸ்தையிலும் அவற்றை பிரகாரமாக உடையனாய்
அவற்றின் பக்கல் நிற்கச் செய்தேயும் அசித் கதமான பரிணாமமும் சேதன கதமான துக்கித் வாதிகளும் தன் பக்கல் தட்டாத படி நிற்கும்
இது இ றே கீழில் திரு வாய் மொழியில் சொல்லிற்று -அத்தை அநு பாஷிக்கிறது
கேசவன் அடியிணை மிசைக்-
கேசி ஹந்தா என்கையாலே இது திரு வாய் மொழியில் கிருஷ்ண விருத்தாந்தத்தை இ றே சொல்லிற்று –
ஆக இரண்டு திருவாய் மொழி களையும் அனுபாஷிக்கிறது -என்னுதல் ‘
கிருஷ்ண ஏவ ஹி லோகா நாம் உத்பத்தி என்கிறபடியே கிருஷ்ண விஷயமே சொல்லுகிறது என்னுதல் –
குருகூர்ச்சடகோபன் சொன்ன-தூய ஆயிரத் திப்பத்தால் பத்தராவர் துவளின்றியே.–
ஆப்தரான ஆழ்வார் அருளிச் செய்த ஆயிரத்திலும்-
தூய்மை யாவது -ஸ்ரீ -கிருஷ்ண விருத்தாந்தத்தில் கலப்பு அற்று இருக்கை –
துவள் -குற்றம் –அதாவது பரத்வத்திலே நெஞ்சு செல்லுகை -அத்தை தவிர்ந்து ஸ்ரீ கிருஷ்ண அவதாரத்தில் பிரவணராக பெறுவார் -திருவடி ஸ்ரீ ராமாவதாரத்தில் பிரவணராய் இருக்குமா போலே


கந்தாடை   அப்பன் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

திருவாய்மொழி ஒன்பதினாயிரப்படி –6-4-

September 28, 2016

ஸ்ரீ ராம விருத்தாந்தத்திலே திருவடியைப் போலே ஸ்ரீ கிருஷ்ண விருத்தாந்தத்திலே சக்தரான ஆழ்வார் தாம் பிரணய கோபத்தால்
-மின்னிடை மடவாரிலே -எம்பெருமானோடு சம்ச்லேஷிப்பேன் அல்லேன் -என்று மிறங்கின நம்மை –
ஆவேன் என்னப் பண்ணி அருளின உபகாரகத்தை -நல்குரவிலே அனுசந்தித்து –
மாசறு சோதியில் -சேணுயர் வானத்து இருக்கும் என்கையாலே -தூரஸ்தன் என்று இன்னாதான ஆழ்வார்
-அணியவாய் எண்ணி முடிக்க ஒண்ணாதனவாய் உள்ள ஸ்ரீ கிருஷ்ண வ்ருத்தாந்தங்களை காட்டி அருளக் கண்டு
-தொல் அருள் நல் வினையால் சொல்லக் கூடுங்கோல் -என்று மநோ ராதித்த படியே இனிதாகப் பேசி அனுபவிக்கிறார்
பிறந்த வாற்றில்-பல ஹானியால் பேச மாட்டிற்று இலர்
குரவை ஆய்ச்சியரில் -எல்லா சேஷ்டிதங்களையும் தரித்துப் பேசுகிறார்-

——————————————————-

ப்ரீதி பூர்வகமாக இரவும் பகலும் ஸ்ரீ கிருஷ்ண சேஷ்டிதங்களை அனுபவிக்கப் பெற்றேன் -இனி எனக்கு என்ன குறை உண்டு என்கிறார் –

குரவை  ஆய்ச்சியரோடு கோத்ததும் குன்றம்ஒன்று ஏந்தியதும்
உரவுநீர்ப் பொய்கை நாகங் காய்ந்ததும் உள்பட மற்றும்பல
அரவில் பள்ளிப் பிரான்தன் மாய வினைகளையே அலற்றி
இரவும் நன்பகலும் தவிர்கிலன் என்ன குறைவு எனக்கே.–6-4-1-

உரவுநீர்ப் பொய்கை-விஷ ஜலம் -வலிய நீர் என்றுமாம்
அரவில் பள்ளிப் பிரான்-திரு அவதாரம் பண்ணுகைக்காக திருப் பாற் கடலிலே கண் வளர்ந்து அருளினவன் -நாகணை மிசை நம்பிரான் ப்ரத்யபிஜ்ஜை பண்ணுகிறது
மாய வினைகள்-ஆச்சர்யமான சேஷ்டிதங்கள்
இரவும் நன்பகலும்-எம்பெருமானைப் பெற்று அனுபவிக்கிற காலம் ஆகையால் நன்றான இரவும் பகலும் –

———————————————————–

தொல் அருள் நல் வினையால்  சொலக் கூடுங்கொல் -என்று பிரார்த்தித்த படியே பெறுகையாலே திரு நாட்டில் தான் தன்னோடு ஒப்பார் உண்டோ என்கிறார் –

கேயத் தீங்குழல் ஊதிற்றும் நிரை மேய்த்ததும் கெண்டை ஒண்கண்
வாசப் பூங்குழல் பின்னை தோள்கள் மணந்ததும் மற்றும் பல
மாயக் கோலப் பிரான்தன் செய்கை நினைந்து மனம் குழைந்து
நேயத்தோடு கழிந்த போது எனக்கு எவ்வுலகம் நிகரே.–6-4-2-

கானத்தோடே இனிய குழலை  ஊதிற்றும்–பசு மேய்த்து வந்த இளைப்பு தீரும்படி அவனை தன்னுடைய முக்தமான அழகிய கண்களாலே அம்ருதத்தை வர்ஷித்தால் போலெ குளிர நோக்கி திருக் குழலிலே பரிமளம் அவன் திரு மேனி எல்லாம் வெள்ளம் இடும்படி தழுவின நப்பின்னை பிராட்டி யுடைய தோள்களில் கலந்ததுவும் -நப்பின்னை பிராட்டியோட்டை சம்ச்லேஷத்தால் அத்யாச்சர்யமான அழகையும் உடையனாய் அனுக்ரஹ சீலனாய் இருக்கை –நேயத்தோடு கழிந்த போது -இனிமையோடு போன காலம் –

——————————————————————-

கிருஷ்ண சேஷ்டிதங்களை அனுபவித்துக் கொண்டு எனக்கு காலம் எல்லாம் போகப் பெற்றேன் -இன்னது பெற்றிலேன் என்று நோவ வேண்டுவது இல்லை என்கிறார் –

நிகரில்  மல்லரைச் செற்றதும் நிரை மேய்த்ததும் நீள் நெடுங்கைச்
சிகர மாகளிறு அட்டதும் இவைபோல்வனவும் பிறவும்
புகர்கொள் சோதிப் பிரான்தன் செய்கை நினைந்து புலம்பி என்றும்
நுகர வைகல் வைகப்பெற்றேன் எனக் கென்னினி நோவதுவே–6-4-3-

தங்கள் மிடுக்குக்கு லோகத்தில் ஒப்பு இன்றிக்கே இருக்கிற மல்லரைச் செற்றது பசு மேய்த்தது போலே வருத்தம் இல்லா லீலா மாத்திரமே
புகர்கொள் சோதி-பிரதிகூல நிரசனத்தாலே ஒளி பெட்ரா தேஜஸ் ஸூ
நுகர வைகல் வைகப்பெற்றேன்-அனுபவிக்கைக்கு ஈடாக காலம் நெடுக பெற்றேன் என்றுமாம் –

—————————————————————–

நோவ  ஆய்ச்சி உரலோ டார்க்க இரங்கிற்றும் வஞ்சப்பெண்ணைச்
சாவப் பாலுண்டதும் ஊர் சகட மிறச் சாடியதும்
தேவக் கோலப் பிரான்தன் செய்கை நினைந்து மனங்குழைந்து
மேவக் காலங்கள் கூடினேன் எனக்கு என் இனி வேண்டுவதே?–6-4-4-

யசோதை பிராட்டிக்கு அத்யந்தம் பவ்யனாய்-அவ்விருப்பிலே பிரதிகூலரை மாய்த்த கிருஷ்ணனை அனுபவிக்கப் பெற்ற எனக்கு இனி அவாப்தவ்யம் இல்லை என்கிறார் -தேவக் கோலப் பிரான்- ஊருகிற சகடத்தை தப்பாத படி நிரசித்து இருந்த அப்ராக்ருதமான அழகை உடையான் –

——————————————————————–

திருவவதாரம் பண்ணி அருளினை பின்பு -கம்சன் அறியாத படி வளர்ந்து கம்சனை மாய்த்த படி -இன்று இருந்து அனுபவிக்கப் பெற்ற எனக்கு ஒரு மிடி இல்லை என்கிறார் -எதிர் உண்டோ என்றுமாம் –

வேண்டித்தேவர் இரக்க வந்து பிறந்ததும் வீங்கிருள்வாய்ப்
பூண்டு அன்று அன்னை புலம்பப் போய் அங்கோர் ஆய்க்குலம்புக்கதும்
காண்ட லின்றி வளர்ந்து கஞ்சனைத் துஞ்ச வஞ்சம்செய்ததும்
ஈண்டு நான் அலற்றப் பெற்றேன் எனக்கு என்ன இகல்உளதே?–6-4-5-

வேண்டித்தேவர் இரக்க வந்து பிறந்ததும்
தேவர்கள் இரக்க தானே அபி நிவிஷ்டனாய் வந்து பிறந்ததுவும் -இருளிலே வந்து பிறந்தான் என்றுமாம் -கம்ச பயத்தாலும் -விஸ்லேஷிக்கிறான் என்னும் வியசனத்தாலும் -கட்டிக் கொண்டு தாயார் கதற இருளிலே போனான் -என்னவுமாம் –
ஈண்டு நான் அலற்றப் பெற்றேன்-சம காலத்திலே இருந்து பயப்படாதே இப்போது நிர்ப்பயனாய் இனிதாக அனுபவிக்கப் பெற்றேன் –

———————————————————————-

கிருஷ்ணனுடைய பிரதிகூல நிரசன பரம்பரையை அனுபவிக்கப் பெற்ற  எனக்கு இனி ஒரு மநோதுக்கம் இல்லை என்கிறார் –

இகல்கொள்  புள்ளைப் பிளந்ததும் இமிலேறுகள் செற்றதுவும்
உயர்கொள் சோலைக் குருந்தொசித்ததும் உட்பட மற்றும்பல
அகல்கொள்வைய மளந்த மாயன் என்னப்பன்தன் மாயங்களே
பகலிராப் பரவப் பெற்றேன் எனக்கென்ன மனப்பரிப்பே.–6-4-6-

இகல்கொள் புள்ளைப் பிளந்ததும்-எதிரிட்ட புள்ளைப் பிளந்ததும்-இமில் -என்று ககுத்தை சொல்கிறது
உயர்கொள் சோலைக் குருந்தொசித்ததும்-ஸ்ப்ருஹணீயமாம் படி உயர்ந்து தழைத்து நின்ற குருந்தின் வடிவைக் கொண்ட அஸூரனை முடித்ததும்-

—————————————————

ஆஸ்ரிதர் உடைய நோவு பொறுக்க மாட்டாமை-அப்ராக்ருத திவ்ய சமஸ்தானத்தோடே கூட தானே  வந்து பிறந்து அருளினவனுடைய சேஷ்டிதங்களை நினைக்கும் நெஞ்சுடைய எனக்கு ஆர் நிகர் நீள் நிலத்து என்கிறார்

மனப்பரிப்போடு  அழுக்கு மானிட சாதியில் தான்பிறந்து
தனக்கு வேண்டுருக் கொண்டு தான்தன சீற்றத்தினை முடிக்கும்
புனத்துழாய்முடி மாலை மார்பன்என்னப்பன்தன் மாயங்களே
நினைக்கும் நெஞ்சுடையேன் எனக்கினியார் நிகர் நீணிலத்தே.–6-4-7-

தனக்கே அபிமதமான த்விஜ சதுர்புஜாதி ரூபங்களைக் கொண்டு -ஆஸ்ரிதருடைய விரோதிகளை போக்கினால் -அவர்களுக்கு ஒரு கார்யம் செய்தானாய்  அன்றிக்கே தன்னுடைய சீற்றத்தை முடித்தானாய் இருக்கும் –ஆஸ்ரிதருடைய விரோதிகளை போக்கி -திருமஞ்சனம் ஆடி அருளி ஒப்பித்த அழகிய திருத் துழாய் மாலையை திரு முடியிலும் திரு மார்பிலும் உடையவன் –

—————————————————————–

நீணிலத்தொடு வான்வியப்ப நிறை பெரும் போர்கள்செய்து
வாண னாயிரம் தோள்துணித்ததும் உட்பட மற்றும்பல
மாணியாய்நிலம் கொண்ட மாயன் என்னப்பன்தன் மாயங்களே
காணும் நெஞ்சுடையேன் எனக்கினி என்ன கலக்க முண்டே?–6-4-8-

பாண விஷய பிரமுகரான கிருஷ்ண சேஷ்டிதங்களையே அநுஸந்திக்கும் நெஞ்சை யுடைய எனக்கு இனி கலக்கம் உண்டோ என்கிறார்
காணும் நெஞ்சுடையேன்-அநுஸந்திக்கும் நெஞ்சு உடையேன்-

—————————————————————-

சர்வேஸ்வரனை மலங்கப் பண்ணும் நா வீறுடைய எனக்கு பூமியில் எதிர் உண்டோ என்கிறார்-

கலக்க  ஏழ்கடல் ஏழ்மலை உலகேழும் கழியக் கடாய்
உலக்கத் தேர்கொடு சென்ற மாயமும் உட்பட மற்றும்பல
வலக்கை ஆழி இடக்கைச் சங்கம் இவை யுடை மால்வண்ணனை
மலக்கு நாவுடையேற்கு மாறுளதோ இம்மண்ணின் மிசையே?–6-4-9-

ஏழு கடலையும் ஏழு மலையையும் ஏழு லோகங்களையும் கழிய தரையிலே நடத்தினால் போலே ஓக்க நடத்தி –
இவை எல்லாம் கலங்க என்றுமாம்
ஆவது -அதிருகை / உலக்க -முடிய / மால்வண்ணனை-கறுத்த நிறத்தை யுடையவனை-

—————————————————————

சம்சாரத்தின் உள்ளே வந்து திருவவதாரம் பண்ணி யருளி நிரபாயமான திரு நாட்டிலே போய்ப் புக்க படியை அனுபவிக்கப் பெற்ற வேறு சிலர் நிர்வாஹர் வேண்டும்படி குறையுடையேன் அல்லேன்-என்கிறார் –

மண்மிசைப்  பெரும்பாரம் நீங்க ஓர்பாரத மாபெரும்போர்
பண்ணிமாயங்கள் செய்துசேனையைப் பாழ்படநூற் றிட்டுப்போய்
விண்மிசைத் தன தாமமே புக மேவிய சோதிதன்தாள்
நண்ணி நான்வணங்கப் பெற்றேன் எனக்கார் பிறர் நாயகரே-6-4-10-

மாயங்கள் செய்து-ஜயத்ரதன் வதத்தின் அன்று திரு வாழி யாலே ஆதித்யனை மறைக்கை தொடக்கமான மஹா ஆச்சர்யங்களை யுடையவனை
நூற் றிட்டு-மந்திரித்து-

——————————————————————

நிகமத்தில் கிருஷ்ண சேஷ்டிதங்களை பேசின இப்பத்தும் கற்றார் ஆழ்வார் தம்மைப் போலே கிருஷ்ணனுக்கே பக்தராவார் என்கிறார் –

நாயகன்  முழுவேழுலகுக்குமாய் முழுவேழுலகுந் தன்
வாயகம்புக வைத்துமிழ்ந்து அவையாய் அவை அல்லனுமாம்
கேசவன் அடியிணை மிசைக் குருகூர்ச்சடகோபன் சொன்ன
தூய ஆயிரத் திப்பத்தால் பத்தராவர் துவளின்றியே.–6-4-11-

நாயகன் முழுவேழுலகுக்குமாய் முழுவேழுலகுந் தன்-வாயகம்புக வைத்துமிழ்ந்து அவையாய் அவை அல்லனுமாம்-கேசவன்-என்றது கீழில் திரு வாய் மொழியையும் இது திரு வாய் மொழியையும் அநு பாஷிக்கிறது -என்றும் சொல்லுவார்
தூய ஆயிரத் திப்பத்தால்-ஆயிரம் திருவாய் மொழியிலும் கிருஷ்ண சேஷ்டிதங்களைப் பேசின இது திருவாய் மொழியால் –துவள் -குற்றம்

—————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

திருவாய்மொழி இருபத்து நாலாயிரப்படி –6-3-

September 27, 2016

கீழ் பிரணய ரோஷத்தாலே -அவனோடே சம்ச்லேஷிப்போம் அல்லோம் என்று இருந்த தம்மை -தன் ஆற்றாமையையும் அழகையும் காட்டி
சேர்த்துக் கொண்ட படியைக் கண்டு விஸ்மிதராக -நீர் இது ஓன்று கொண்டோ விஸ்மிதர் ஆகிறது -நாம் சேராத வற்றை எல்லாம்
சேர்த்து ஆள வல்லோம் காணும் -என்று தன் விருத்த விபூதி கத்வத்தைக் காட்டக் கண்டு -முன்பு பிரிவாலே வந்த
அவசாதத்துக்கு உதவிற்றிலன் -என்று வெறுத்தவர் -சர்வ கதனாய்-தத்கத தோஷ ரசம் ஸ்ப்ருஷ்டனாய் ஸமஸ்த கல்யாண குணாத்மகனான இவனே
நமக்கு ப்ராப்யமும் ப்ராபகமும் மற்றும் உள்ள சர்வ வித பந்துவும் என்று அவன் பெருமையை அனுபவித்து ப்ரீதராய் கொண்டு பேசுகிறார்
-நித்ய சம்சாரியாய் போனவன்றும் மயர்வற மதி நலத்தை நிர்ஹேதுகமாக அருளி என்னை பொருந்த வீட்டுக் கொண்டான்
-வள வேழ் உலகில் அயோக்யதையை அனுசந்தித்து -அகலப் புக-தன் நீர்மையைக் காட்டி சேர்த்துக் கொண்டான்
-இப்போது பிரணய ரோஷத்தாலே அகன்று முடிய புக -தன்னுடைய சர்வ சக்தி யோகத்தாலே சேர விட்டுக் கொண்டான்
-அவை போல் அன்று இ றே பிரணய ரோஷம் -அகல ஒண்ணாதே அணுக ஒண்ணாதே இருப்பது ஓன்று இ றே -இத்தால் சொல்லிற்று ஆயிற்று
–அகன்று முடிந்து போவோம் என்பாரையும் உடையவன் முடிய விட்டுக் கொடான்-என்கிறது –
முதல் திருவாய் மொழியிலே பரத்வத்தை அனுசந்தித்து -பத்துடை அடியவரிலே ஸுலப்யத்தை அனுசந்தித்தார் –
இங்கு மின்னிடை மடவாரிலே ஸுலப்யத்தை அனுசந்தித்து இது திருவாய் மொழியிலே பரத்வத்தை அனுசந்திக்கிறார்-
இப்படி கண் அழிவு அற்ற மேன்மையும் நீர்மையும் உள்ளது இவனுக்கே என்று அனுசந்தித்து ப்ரீதி பிரகர்ஷத்தாலே பேசுகிறார் –

————————————————————-

விருத்த விபூதிகனான சர்வேஸ்வரனை திரு விண்ணகரிலே காணப் பெற்றேன் என்கிறார்-

நல்குரவும் செல்வும் நரகும் சுவர்க்கமுமாய்
வெல்பகையும் நட்பும் விடமும் அமுதமுமாய்ப்
பல்வகையும் பரந்த பெருமான் என்னை ஆள்வானைச்
செல்வம் மல்கு குடித் திருவிண்ணகர்க் கண்டேனே.–6-3-1-

நல்குரவும் செல்வும் நரகும் சுவர்க்கமுமாய்-வெல்பகையும் நட்பும் விடமும் அமுதமுமாய்ப்
தாரித்ரியமும் -அதற்கு எதிர்த்தட்டான ஐஸ்வர்யமும் -துக்க அனுபவம் பண்ணும் நரகமும் -ஸூக அனுபவம் பண்ணும் சுவர்க்கமும் –
சமாதானத்தால் மீளுமது அன்றிக்கே வென்றே விட வேண்டும் பகையும் –அதற்கு எதிர்த்தட்டான உறவும்
முடித்தே விடக் கடவதான விஷமும் -முடியாத படி காத்து போக்யமுமாய் இருக்கும் அமுதமுமாய் –
அநிஷ்டமான தாரித்யாதிகளோடு இஷ்டமான ஐஸ்வர்யாதிகளோடு -வாசியற -ததீயத் ஆகாரத் வேண-இவருக்கு உத்தேசியமாய் இருக்கும் இ றே -இதில் தோஷ அம்சம் அஸஹ்யம் அன்றோ என்னில் -தன்னை தேஹ விசிஷ்டனாக அனுசந்தித்த போது த்யாஜ்யமாம் -சேஷத்வ விசிஷ்டனாக அனுசந்தித்த போது உபாதேயமாகக் கடவது -ராஜ புத்திரனுக்கு பிதாவினுடைய ஓலக்கத்தோடு சிறைக் கூட்டத்தோடு வாசியற பிதாவின் ஐஸ்வர்யம் என்று இருக்கும் இ றே
பல்வகையும் பரந்த பெருமான் என்னை ஆள்வானைச்
இப்படி விபூதி முகத்தாலே பல படியும் விஸ்ருத்தனானவன் -நாஸ்த்யந்தோ விஸ் தரஸ்ய மே என்று தன் விபூதிக்கு எல்லையில்லை என்று இ றே தானும் சொல்லுவது –
செல்வம் மல்கு குடித் திருவிண்ணகர்க் கண்டேனே.
சர்வகதனானது தமக்காக என்று இருக்கிறார் –ஒருவனை பிடிக்க சுற்றி ஒரூரை வளைப்பாரை போலே -இப்படி சர்வகதனான பெருமையை உடையனாய் வைத்து -ப்ரணய ரோஷத்தாலே அகன்று -முடிய புக்க என்னை தாழ நின்று சேர்த்துக் கொண்ட உபகாரகனை என்றுமாம் –
செல்வம் மல்கு குடித் திருவிண்ணகர்க் கண்டேனே.
நிரவதிக சம்பத்தை உடைய தேசம் -பிரிந்து தூது விட வேண்டாதே-ப்ரணய ரோஷத்தாலே -கிட்ட ஓட்டோம் -என்று வியசனப் படாதே -நித்ய அனுபவம் பண்ணலாம் இடம் என்கை -லஷ்மனோ லஷ்மி சம்பன்னவ் -என்கிறபடியே இடைவிடாதே பகவத் அனுபவ ஸ்ரீ -இ றே சம்பத்து ஆகிறது –
திருவிண்ணகர்க் கண்டேனே.-ஓர் இடத்திலே காண ஆசைப்பட்டு ஓர் இடத்தே காண்கை அன்றிக்கே தூது விட்ட அர்ச்சாவதாரத்திலே கண்டு அனுபவிக்கப் பெற்றேன் –

—————————————————————-

ஸ்வ யத்னத்தால் ஒருவருக்கும் காண ஒண்ணாத பெருமையை யுடையனாய் வைத்து என்னை அடிமை கொள்ளுகிறவன் ஊரான திரு விண்ணகர் சர்வ வி லக்ஷணம் என்கிறார் –

கண்ட இன்பம் துன்பம் கலக்கங்களும் தேற்றமுமாய்த்
தண்டமும் தண்மையும் தழலும் நிழலுமாய்க்
கண்டு கோடற்கரிய பெருமான் என்னை ஆள்வானூர்
தெண்திரைப் புனல் சூழ் திருவிண்ணகர் நன்னகரே.–6-3-2-

கண்ட இன்பம் – பரிச்சின்ன ஸூ கம் -ப்ரத்யக்ஷ சித்தம் அன்றிக்கே -சாஸ்திர ஸித்தமாய்-அபரிச்சின்னமான ஸூ கத்திலே இ றே தமக்கு அந்வயம்
துன்பம் -அதற்கு எதிர்த்தட்டான துக்கம் –தண்டமும் தண்மையும் தழலும் நிழலுமாய்க்
கலக்கங்களும் தேற்றமுமாய்த்-அஞ்ஞானங்கள் / ஞானம் /கோபம் /பிரசாதம் /உஷ்ணத்தை பண்ணும் அக்னியும் /சீதா ஸ்வ பாவமான நிழலும்
கண்டு கோடற்கரிய பெருமான் என்னை ஆள்வானூர்
ஸ்வ யத்னத்தாலே காண ஆசைப்பட்டார்க்கு அரியனாய் இருக்கிறவன் கிடீர்-தான் மேல் விழுந்து என்னைக் காண ஆசைப்படுகிறான் –கண்டு கொள்வதற்கு அரிய சர்வேஸ்வரனாய் என்னை அடிமை கொண்டவனூர்
தெண்திரைப் புனல் சூழ் திருவிண்ணகர் நன்னகரே.–தெளிந்த திரையை யுடைத்தான ஜலத்தாலே சூழப்பட்ட திரு விண்ணகர் -பரமபதம் உத்தேச்யம் ஆனவாறே -விரஜாய் உத்தேச்யம் ஆமா போலே -அவ்வூர் உத்தேச்யம் ஆனவாறே அங்கு உள்ள ஜல ஸம்ருத்தியும் உத்தேச்யமாய் இருக்கிறது இ றே இவர்க்கு –-நன்னகரே-கலங்கா பெருநகரம் இதற்கு சத்ருசம் அன்று -விடாய்த்த இடத்திலே விடாய் தீரலாம் படி இருக்கிற ஏற்றம் உண்டு இ றே இதுக்கு –

————————————————————

திரு விண்ணகர் அப்பனுடைய கல்யாண குணங்களை ஒழிய வேறு ஒருவருக்கும் உத்தாரகம் இல்லை என்கிறார்  –

நகரமும் நாடுகளும் ஞானமும் மூடமுமாய்
நிகரில் சூழ்சுடராய் இருளாய் நிலனாய் விசும்பாய்ச்
சிகர மாடங்கள் சூழ் திருவிண்ணகர்ச் சேர்ந்தபிரான்
புகர்கொள் கீர்த்தி அல்லால்இல்லை யாவர்க்கும் புண்ணியமே.-6-3-3-

நகரமும் நாடுகளும் –
சிறுமை பெருமையால் வந்த விரோதம் ஆதல் -நாகரிகர் போக பிரதானராய் உத்க்ருஷ்டராய் இருப்பார்கள் -நாட்டில் உள்ளார் அபக்ருஷ்டராய் தேஹ தாரண மாத்திரமே பிரயோஜனமாய் இருக்கும்மா தாழ்வு உண்டு -அத்தால் வந்த விரோதம் ஆதல் –
ஞானமும் மூடமுமாய்-ஞாதாக்களும் அஞ்ஞருமாய்
நிகரில் சூழ்சுடராய் இருளாய்
ஒப்பு இன்றிக்கே சூழப் பட்ட பரப்பை யுடைத்தான தேஜசாய் -அதற்கு எதிர்தலையான தமஸாய்
நிலனாய் விசும்பாய்ச்-கடினமான பூமியாய் -அச்சமான ஆகாசமாய்
சிகர மாடங்கள் சூழ் திருவிண்ணகர்ச் சேர்ந்தபிரான்
சிகரங்களை சேர வைத்தால் போலே இருக்கிற மாடங்கள் சூழ்ந்த திரு விண்ணகரிலே நித்ய வாசம் பண்ணுகிற உபகாரகன்
புகர்கொள் கீர்த்தி அல்லால்இல்லை யாவர்க்கும் புண்ணியமே.
ஸத்பாவமே இ றே பரம பதத்தில் உள்ளது –அந்தகாரத்தில் தீபம் போலே புகர் பெற்றது -இங்கே இ றே கீர்த்தி -மின்னிடை மடவாரிலே இறாய்த்த நமக்கே அன்றியே இதில் இழியாதார்க்கும் கீர்த்தி யல்லது உஜ்ஜீவன சாதனம் இல்லை –

—————————————————————-

இவ்விபூதி யடங்க அவன் கிருபையால் உண்டாயிற்று –இது பொய்யல்லாமை பார்த்துக் கொள்ளுங்கோள் என்கிறார் –

புண்ணியம் பாவம் புணர்ச்சி பிரிவென்று இவையாய்
எண்ணமாய் மறப்பாய் உண்மையாய் இன்மையாய் அல்லனாய்
திண்ண மாடங்கள் சூழ் திருவிண்ணகர்ச் சேர்ந்தபிரான்
கண்ணன் இன்னருளே கண்டு கொண்மின்கள் கைதவமே.–6-3-4-

புண்ணியம் பாவம் புணர்ச்சி பிரிவென்று இவையாய்
ஸூ க துக்க ஹேதுவான புண்ய பாபங்களும் -தத் பல பூதமான அபிமத சம்ச்லேஷ விஸ்லேஷன்களும்–
எண்ணமாய் மறப்பாய் உண்மையாய் இன்மையாய்
அநு கூல விஷயமான எண்ணமும் -பிரதி கூல விஷயமான விஸ்ம்ருதியும் -ஸத்பாவ அஸத் பாவங்களுமாய் –
அல்லனாய்-புண்ய பாவங்களை அனுபவியா நிற்க செய்தே தான் அகர்ம வஸ்யனாய்
திண்ண மாடங்கள் சூழ் திருவிண்ணகர்ச் சேர்ந்தபிரான்-கண்ணன்
பிரளயத்திலும் அழியாத மாடங்கள் -அவ்வவதாரத்துக்கு பிற்பட்ட என்னைப் பெறுகைக்காக திரு விண்ணகரிலே வந்து நிற்கிற கிருஷ்ணனான உபகாரகன்
இன்னருளே கண்டு கொண்மின்கள் கைதவமே.
தன் பேறாகப் பண்ணும் கிருபையால் இது அடங்க உண்டாயிற்று –கைதவமே.–-இதில் அர்த்தவாதம் உண்டோ -இல்லை இ றே – -ஆராய்ந்து கொள்ளுங்கோள்-

—————————————————————-

சிறியார் பெரியார் என்னாதே சர்வர்க்கும் ரக்ஷகன் திரு விண்ணகர் சேர்ந்த பிரான் என்கிறார் –

கைதவம் செம்மை கருமை வெளுமையுமாய்
மெய்பொய் இளமை முதுமை புதுமை பழமையுமாய்ச்
செய்த திண்மதிள் சூழ்திரு விண்ணகர்ச் சேர்ந்த பிரான்
பெய்த காவு கண்டீர் பெருந்தேவுடை மூவுலகே.–6-3-5-

கைதவம் செம்மை கருமை வெளுமையுமாய்
கிரித்திரிமம்–ஆர்ஜவம் –கறுப்பும் வெளுப்பும் –
மெய்பொய் இளமை முதுமை புதுமை பழமையுமாய்ச்
சத்யம் -அசத்தியம் -பால்ய-வர்த்தகம் -அத்யாதனமும் புராதனமும் –
செய்த திண்மதிள் சூழ்திரு விண்ணகர்ச் சேர்ந்த பிரான்
புதிதாக செய்தாப் போலே -தொழிலை யுடைத்தாய் திண்ணிதான மதிள்-பெய்த காவு கண்டீர் -பெருந்தேவுடை மூவுலகே.-
ப்ரஹ்மாதி ஸ்தாவர அந்தமான ஜந்துக்கள் அவனாக்கின சோலை – மூவுலகே.-மேலும் கீழும் நடுவும் –பெய்த காவு-உண்டாக்கின சோலை -சர்வரையும் ஸ்தாவரமாக சொல்லுகையாலே -சர்வருடைய ரக்ஷணமும் பகவத் அதீனம் என்கை -மின்னிடை மடவாரிலே -பொருந்தோம் என்றதுவும் ஸ்வ அதீனம் அன்று என்கை –

————————————————————-

நான் அல்லேன் என்ன செய்தே  தன்னுடைய குண சேஷ்டிதங்களை காட்டி மறக்க ஒண்ணாத படி என்னோடே கலந்து அத்தாலே க்ருதார்த்தனாய் அத் உஜ்ஜவலனாய் இருக்கிறவன் திரு விண்ணகர் சேர்ந்த பிரான் கண்டீர் என்கிறார் –

மூவுலகங்களுமாய் அல்லனாய் உகப்பாய் முனிவாய்
பூவிலவாழ் மகளாய்த் தவ்வையாய்ப் புகழாய்ப் பழியாய்த்
தேவர் மேவித் தொழும் திருவிண்ணகர்ச் சேர்ந்தபிரான்
பாவியேன் மனத்தே உறைகின்ற பரஞ்சுடரே.–6-3-6-

மூவுலகங்களுமாய் அல்லனாய்
க்ருதகம்-அக்ருதகம் – க்ருதாக்ருதகம் -இவற்றைச் சொல்லி அல்லனாய் என்கையாலே -இவ்வளவு அன்றிக்கே அசாதாரணமான நித்ய விபூதியை யுடையவனாய்
உகப்பாய் முனிவாய்-ராக த்வேஷங்களாய்
பூவிலவாழ் மகளாய்த் தவ்வையாய்ப் புகழாய்ப் பழியாய்த்
ஸ்ரீ யும் –அஸ்ரீயும் -தவ்வை – அஸ்ரீ -பிராட்டி கடாக்ஷத்தால் வந்த புகழாய்-அ ஸ்ரீ சம்பந்தத்தால் வந்த பழியாய்-
தேவர் மேவித் தொழும் திருவிண்ணகர்ச்
நித்ய சூரிகள் நித்ய விபூதி போலே பொருந்தி தொழும் -ப்ரஹ்மாதிகள் வரை நாற்றம் பொறுக்க மாட்டாத தேசத்திலே -திரு விண்ணகரின் நீர்மையை அனுபவிக்க நித்ய ஸூ ரிகள்படுகாடு கிடக்கிற படி
திருவிண்ணகர்ச் சேர்ந்தபிரான்-திரு விண்ணகரிலே நித்ய வாசம் பண்ணுகிற உபகாரகன் -நித்ய ஸூ ரிகள் மேல் விழ இருக்கிறவன் தான் மேல் விழ -அல்லேன் என்று இருக்கிற படியை நினைத்து பாவியேன் என்கிறார்
பாவியேன் மனத்தே உறைகின்ற பரஞ்சுடரே.–-போகு நம்பீ என்று சொல்லிற்று என் நெஞ்சை விட மாட்டாதவனைக் கிடீர் -நித்ய ஸூ ரிகளோடு கலந்ததில் காட்டில் கிடீர் என்னைப் பெற்ற பின்பு பிறந்த புகர்-நின்று இலங்கு முடியினாய் -என்றது இ றே-

—————————————————————-

எத்தனையேனும் அளவுடையார்க்கும் வலிய புகல் அவன் அல்லது இல்லை என்கிறார் –

பரஞ்சுடர் உடம்பாய் அழுக்குப் பதித்த உடம்பாய்
கரந்தும் தோன்றியும் நின்றும் கைதவங்கள் செய்தும் விண்ணோர்
சிரங்களால் வணங்கும் திருவிண்ணகர்ச் சேர்ந்தபிரான்
வரங்கொள் பாதமல்லால் இல்லை யாவர்க்கும் வன்சரணே.–6-3-7-

பரஞ்சுடர் உடம்பாய் அழுக்குப் பதித்த உடம்பாய்
நிரவதிக தேஜோ ரூபனாய் -அப்ராக்ருதமான திரு மேனியை யுடையனாய் -தேஜஸாம் ராசி மூர்ஜிதம்-ஜகத் சரீரனாய் –
கரந்தும் தோன்றியும் நின்றும் கைதவங்கள் செய்தும் விண்ணோர்
யமாத்மா நவேத-என்று அவனுக்கு அத்ருஷ்டனாய்க் கொண்டு அந்தராத்மாவாய் நின்றும் –
ஆவிர்ப்பூதம் மஹாத்மான -என்று ராம கிருஷ்ணாதி அவதாரங்களை பண்ணியும் -அவ்வோ இடங்களிலே பதினோராயிரம் ஆண்டு -நூறாண்டு -நின்றும்
தன் படிகள் சிசுபாலாதிகளுக்கு தோற்றாத படி பண்ணியும் -ஆஸ்ரிதற்கு தோற்றும் படி பண்ணியும் –கைதவம் -வஞ்சனம்
சிரங்களால் வணங்கும் திருவிண்ணகர்ச் சேர்ந்தபிரான்
ப்ரஹ்மாதிகள் தலையால் வணங்கும் படி திரு விண்ணகரிலே நித்ய வாசம் பண்ணுகிற உபகாரகன் –
வரங்கொள் பாதமல்லால் இல்லை யாவர்க்கும் வன்சரணே.–
வரையாதே எல்லார்க்கும் ஆஸ்ரயிக்கலாம் படியான ஸ்ரேஷ்டமான திருவடிகள்
சிறியோர் பெரியோர் என்று அன்றிக்கே எல்லார்க்கும் தஞ்சமான புகல் வேறு இல்லை –அல்லாதவை ஓட்டை ஓடத்தோடு ஒழுகல் ஓடமாய் கழுத்துக் கட்டியாய் இ றே இருப்பது –

————————————————————

எல்லார்க்கும் புகல் என்ற மாத்திரம் அன்றிக்கே எனக்கு விசேஷித்து புகல் என்கிறார் –எனக்கு புகலான மாத்திரம் அன்றியிலே-மற்றும் எல்லாம் திரு விண்ணகர் சேர்ந்த பிரான் -என்கிறார் –

வன்சரண் சுரர்க்காய் அசுரர்க்கு வெங்கூற்றமுமாய்த்
தன்சரண் நிழற்கீழ்உலகம் வைத்தும் வையாதும்
தென்சரண் திசைக்குத் திருவிண்ணகர்ச் சேர்ந்தபிரான்
என்சரண் என்கண்ணன் என்னை ஆளுடை என்னப்பனே.–6-3-8-

வன்சரண் சுரர்க்காய் அசுரர்க்கு வெங்கூற்றமுமாய்த்
தேவ ஜாதிக்கு தன்னை அழிய மாறி ரக்ஷிக்கும் புகலாய்-தத் பிரதி கூலர்க்கு -வெங்கூற்றம் –அந்தகன் தண்ணீர் என்னும் படியான கூற்றமாய்-
தன்சரண் நிழற்கீழ்உலகம் வைத்தும் வையாதும்
தன் பாதச் சாயையிலே அநந்ய பிரயோஜனரை வைத்தும் -அல்லாதாரை பஹிஷ்கரித்தும் –
தென்சரண் திசைக்குத் திருவிண்ணகர்ச் சேர்ந்தபிரான்
தக்ஷிணா திக் க்ருதா யேன சரண்யா புண்ய கர்மணா -என்கிறபடியே தெற்குத் திக்குக்கு சரணமான
என்சரண் என்கண்ணன் என்னை ஆளுடை என்னப்பனே.–
எனக்கு புகலானவன்–எனக்கு பவ்யனானவன்-என்னை அடிமை கொண்டு போகிறவன் -எனக்கு உபகாரகன் –

————————————————————-

என்னுடைய சிரமம் எல்லாம் தீரும் படி தன்னுடைய பாதச் சாயையை எனக்கு -நான் அல்லேன் -என்ன -வலியது தந்தான் என்கிறார்

என்னப்பன் எனக்காய் இகுளாய் என்னைப் பெற்றவளாய்ப்
பொன்னப்பன் மணியப்பன் முத்தப்பன் என்னப்பனுமாய்
மின்னப் பொன்மதிள் சூழ் திருவிண்ணகர்ச் சேர்ந்த அப்பன்
தன்னொப்பார் இல்லப்பன் தந்தனன் தன தாள்நிழலே.–6-3-9-

என்னப்பன் எனக்காய்
பூதா நாம் யோ அவ்யய பிதா என்கிற போது வன்றிக்கே -எனக்கே யான பிதாவாய் –
இகுளாய் -தோழியாய் -இது தமிழர் நிர்வாகம் -நம்முடையவர்கள் செவிலித் தாய் -என்று நிர்வஹிப்பர்கள்-தாய்க்கு தோழியாய் இருக்கும் இ றே செவிலித் தாய் -அத்தைச் சொல்கிறது –
என்னைப் பெற்றவளாய்ப்-உடம்பு நொந்து பெற்றவளாய்
பொன்னப்பன் மணியப்பன் முத்தப்பன் என்னப்பனுமாய்-
பொன்னும் மணியும் முத்தும் போலே எனக்கு உபகாரகன் –
மின்னப் பொன்மதிள் சூழ் திருவிண்ணகர்ச் சேர்ந்த அப்பன்
மின்னா நின்றுள்ள பொன் மதிள் சூழ்ந்த திரு விண்ணகரிலே நித்ய வாசம் பண்ணுகை யாகிற உபகாரத்தை பண்ணினவன் –
தன்னொப்பார் இல்லப்பன் –
உபகாரகரில் தன்னோடு ஒப்பார் இல்லாத உபகாரகன் -ப்ரணய ரோஷத்தால் நான் அகலப் புக தான் தாழ நின்று பொருந்த விட்டுக் கொண்டவன் –
தந்தனன் தன தாள்நிழலே.-
தன் தாள் நிழல் தந்தான் -தன் பாதாச்சாயைத் தந்தான் -அழித்தாய் உன் திருவடியால் -என்கிறபடியே என் மநோ ரத்தத்தை திருவடிகளாலே அழித்து தன் திருவடிகளின் கீழே இட்டுக் கொண்டான் –

——————————————————————-

அவனுடைய திருவடிகள் அல்லது மற்றொரு ரக்ஷகம் இல்லை என்னும் இடத்தை புத்தி பண்ணுங்கோள் என்கிறார் –

நிழல்வெய்யில் சிறுமை பெருமை குறுமை நெடுமையுமாய்ச்
சுழல்வன நிற்பன மற்றுமாய் அவை அல்லனுமாய்
மழலை வாய்வண்டு வாழ் திரு விண்ணகர் மன்னு பிரான்
கழல்கள் அன்றி மற்றோர் களை கண்இலம்; காண்மின்களே.–6-3-10-

நிழல்வெய்யில்-சீத ஹே துவான நிழலும் -உஷ்ண ஹேதுவான வெய்யிலும்
சிறுமை பெருமை -அணுத்வ மஹத்வங்கள்
குறுமை நெடுமையுமாய்ச்-மத்யம பரிமாண வஸ்துக்களில் உண்டான ஹரஸ்ய தீர்க்கங்கள்
சுழல்வன நிற்பன -ஸ்தாவர ஜங்கமங்கள்
மற்றுமாய் -அ நுக்தமான சர்வமுமாய்
அவை அல்லனுமாய்-தத் கத தோஷைரஸம்ருஷ்டனாய் இருக்கை
மழலை வாய்வண்டு வாழ் திரு விண்ணகர்
மழலை பேச்சையுடைய வண்டுகள் தம்தாம் அபிமதங்கள் பெற்று வாழ்கிற ஊர்
மன்னு பிரான்-கழல்கள் அன்றி மற்றோர் களை கண்இலம்; காண்மின்களே.–நித்ய வாசம் பண்ணுகிற உபகாரகன் திருவடிகள் அல்லது வேறு புகல் இல்லை -மாம் ஏக சரணம் வ்ரஜ -என்கிறவன் அன்றிக்கே -திருவடிகள் தானே தஞ்சம் என்கை
காண்மின்களே.-இத்தை எல்லோரும் புத்தி பண்ணுங்கோள் –

——————————————————————–

நிகமத்தில் இது திருவாய் மொழி வல்லார் நித்ய ஸூரிகளுக்கு கௌரவ்யர் என்கிறார் –

காண்மின்கள் உலகீர்! என்று கண்முகப்பே நிமிர்ந்த
தாளிணையன்தன்னைக் குருகூர்ச் சடகோபன் சொன்ன
ஆணை ஆயிரத்துத் திருவிண்ணகர்ப் பத்தும் வல்லார்
கோணைஇன்றி விண்ணோர்க் கென்று மாவர் குரவர்களே.–6-3-11-

காண்மின்கள் உலகீர்! என்று கண்முகப்பே நிமிர்ந்த-தாளிணையன்தன்னைக்
நோக்கு வித்யை காட்டுவரைப் போலே இது ஓர் ஆச்சர்யம் பாருங்கோள் என்று லௌகிகர் எல்லாருடையவும் கண் எதிரே வளர்ந்த திருவடிகளை யுடையவனை -உங்கள் தலையிலே திருவடிகளை வைக்க வாருங்கோள் -என்றால் இசைவார் இல்லையே
குருகூர்ச் சடகோபன் சொன்ன-
இந்த ஸுலப்யத்தை அநு சந்தித்தவர் சொன்ன வார்த்தை யாகையாலே ஆப்தம் என்கை
ஆணை ஆயிரத்துத் திருவிண்ணகர்ப் பத்தும் வல்லார்
பீஷாஸ் மாத் வாதே பவதே -என்கிறபடியே ஆயிரத்திலும்-ஜெகன் நியமனத்தைச் சொன்ன திரு விண்ணகர் விஷயமான இப்பத்தை அப்யஸிக்க வல்லார்
கோணைஇன்றி விண்ணோர்க் கென்று மாவர் குரவர்களே.
மிறுக்கு இன்றிக்கே நித்ய ஸூ ரிகளுக்கு என்றும் ஓக்க கௌரவ்யர் ஆவார்


கந்தாடை   அப்பன் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

 

திருவாய்மொழி ஒன்பதினாயிரப்படி –6-3-

September 27, 2016

இப்படி பிரணய கோபம் தலையெடுத்து சர்வ பிரகாரத்தாலும் எம்பெருமானோடு சம்ச்லேஷிப்போம் அல்லோம் -என்று இருந்த தம்மை
தன் ஆற்றாமையையும் அழகையும் காட்டி சேர்த்துக் கொண்டு சம்ச்லேஷித்த படியைக் கண்டு -தன்னோடு சேர்வோம் அல்லோம்
என்பாரையும் சேர்த்துக் கொள்ள வல்ல திரு விண்ணகர் அப்பனுடைய விருத்த கடநா சாமர்த்தியம் இருந்த படி என் -என்று விஸ்மிதராக
-இப் பிரசங்கத்தாலே -இன்னமும் பாரீர் -என்று -தன்னுடைய விபூதி கத்வத்தைக் காட்டி அருளக் கண்டு -பண்டு -தன்னைப் பிரிந்து
-மஹா அவசாதத்துக்கு உதவிற்றிலன் -என்று இன்னாதாரான ஆழ்வார் -இப்படி உபகாரகனாய் கொண்டு தானே தனக்கு ப்ராப்யமும் ப்ராபகமும்
-மற்றும் எல்லாமாயும் இருக்கிற படியையும் -அவனுடைய விருத்த விபூதி கத்வத்தையும்-அகில ஹேய ப்ரத்ய நீகத்வத்தையும்
-மற்றும் உண்டான ஸுந்தரியாதிகளையும் ப்ரீதராய்க் கொண்டு பேசுகிறார் –

——————————————————————

முதல் பாட்டில் விருத்த விபூதிகனான சர்வேஸ்வரனை திரு விண்ணகரிலே காணப் பெற்றேன் என்கிறார் –

நல்குரவும்  செல்வும் நரகும் சுவர்க்கமுமாய்
வெல்பகையும் நட்பும் விடமும் அமுதமுமாய்ப்
பல்வகையும் பரந்த பெருமான் என்னை ஆள்வானைச்
செல்வம் மல்கு குடித் திருவிண்ணகர்க் கண்டேனே.–6-3-1-

தாரித்ரியமும் -வெல்லப்படும் பகையும் உறவும் -விபூதி முகத்தாலே பல படியும் விஸ்த்ருதனான-சர்வேஸ்வரனாய் இருந்து வைத்து -நான் அல்லேன் என்று அகலப் புக தான் மேல் விழுந்து என்னை சேர்த்துக் கொண்டு அடிமை கொள்ளுகிறவனை –செல்வம் மல்கு -சம்பத் மிகுகை-

——————————————————————–

கண்ட இன்பம் துன்பம் கலக்கங்களும் தேற்றமுமாய்த்
தண்டமும் தண்மையும் தழலும் நிழலுமாய்க்
கண்டு கோடற்கரிய பெருமான் என்னை ஆள்வானூர்
தெண்திரைப் புனல் சூழ் திருவிண்ணகர் நன்னகரே.–6-3-2-

விருத்தமான விபூதி விஸ்தாரங்களை யுடையனாய் -ஸ்வ பாஹு பலத்தாலே ஒருவராலும் காண ஒண்ணாத படி அறப் பெரியனாய் இருந்து வைத்து என்னை அடிமை கொள்ளுகிறவனுடைய ஊரான திரு விண்ணகர் அவனுடைய திவ்ய நகரங்கள் எல்லா வற்றிலும் நல்ல நகரம் என்கிறார் -கண்ட இன்பம்-பரிச்சின்ன ஸூ கம் / தண்டமும் தண்மையும் -கொடுமையும் தண்ணளியும் /
தழலும் நிழலுமாய்க்-உஷ்ணிக்கும் நெருப்பும் குளிரும் நிழலும் –

————————————————————

நகரமும்  நாடுகளும் ஞானமும் மூடமுமாய்
நிகரில் சூழ்சுடராய் இருளாய் நிலனாய் விசும்பாய்ச்
சிகர மாடங்கள் சூழ் திருவிண்ணகர்ச் சேர்ந்தபிரான்
புகர்கொள் கீர்த்தி அல்லால் இல்லை யாவர்க்கும் புண்ணியமே.-6-3-3-

திரு விண்ணகர் சேர்ந்த பிரானுடைய கல்யாண குணங்களை ஒழிய ஒருவருக்கும் உத்தாரகம் இல்லை என்கிறார் -நகரமும் நாடுகளும்-சிறுமை பெருமையாலே விரோதம் சொல்லிற்று / நிலனாய் விசும்பாய்ச் -ரூபியான நிலனும் அரூபியான விசும்புமாய் / புகர்கொள் கீர்த்தி-என்றது திரு நாட்டில் காட்டில் திரு விண்ணகரிலே புகுந்த பின்பு அவனுடைய கல்யாண குணங்கள் நிறம் பெற்ற படி –


புண்ணியம்  பாவம் புணர்ச்சி பிரிவென்று இவையாய்
எண்ணமாய் மறப்பாய் உண்மையாய் இன்மையாய் அல்லனாய்
திண்ண மாடங்கள் சூழ் திருவிண்ணகர்ச் சேர்ந்தபிரான்
கண்ணன் இன்னருளே கண்டு கொண்மின்கள் கைதவமே.–6-3-4-

புண்ய பாப ரூபாதியால் எம்பெருமானுக்கு விசேஷணத் வேன தோற்றுகிற விபூதி எல்லாம் அவன் கிருபையால் உண்டாயிற்று -இது பொய்யல்லாமை ஆராய்ந்து பார்த்து கொள்ளுங்கோள் -என்கிறார் –
புணர்ச்சி பிரிவு -புண்ய பாப பல ரூபமான சம்ச்லேஷ விஸ்லேஷன்கள்-/ அல்லனாய்-புண்ய பாபாதிகளுக்கு நியாமகனாய் அவற்றுக்கு வஸ்யன் அன்றிக்கே இருக்கும் என்கிறது –இன்னருள் என்கிறது -ஒரு காரணம் அறப் பண்ணும் கிருபை –

———————————————————————

கைதவம்  செம்மை கருமை வெளுமையுமாய்
மெய்பொய் இளமை முதுமை புதுமை பழமையுமாய்ச்
செய்த திண்மதிள் சூழ்திரு விண்ணகர்ச் சேர்ந்த பிரான்
பெய்த காவு கண்டீர் பெருந்தேவுடை மூவுலகே.–6-3-5-

சிறியார் பெரியார் என்னாதே-எல்லார்க்கும் ரக்ஷகன் திரு விண்ணகர்ச் சேர்ந்த பிரான் என்கிறார் –
ப்ரஹ்மாதி பீபீலிகா அந்தமான சகல ஜந்துக்களும் அவனாக்கின சோலை -எல்லாரையும் ஓக்க ஸ்தாவரமாக பேசுகையாலே தந்தாமுடைய சகல நிர்வாஹத்வமும் பகவத் அதீனம் என்று கருத்து-

—————————————————————-

மூ வுலகங்களுமாய்  அல்லனாய் உகப்பாய் முனிவாய்
பூவிலவாழ் மகளாய்த் தவ்வையாய்ப் புகழாய்ப் பழியாய்த்
தேவர் மேவித் தொழும் திருவிண்ணகர்ச் சேர்ந்தபிரான்
பாவியேன் மனத்தே உறைகின்ற பரஞ்சுடரே.–6-3-6-

மூவுலகங்களுமாய் அல்லனாய் -அவ்வளவு அன்றிக்கே மற்றும் விலக்ஷணமான விபூதியை உடையனாய் –
பூவிலவாழ் மகளாய்த் தவ்வையாய்ப்-ஸ்ரீயும் அஸ்ரீயுமாய்
புகழாய்ப் பழியாய்த்-கீழ் சொன்ன இரண்டையும் உடையவர்களுக்கு வரும் இரண்டையும் சொல்லுகிறது
தேவர் மேவித் தொழும் திருவிண்ணகர்ச்-அயர்வறும் அமரர்களும் வந்து தொழும் படியான திரு விண்ணகர் -எம்பெருமான் மேல் விழ செய்தே-தாம் அல்லேன் என்று இருந்த இருப்பை நினைத்து பாவியேன் என்கிறார் –

————————————————————–

பரஞ்சுடர்  உடம்பாய் அழுக்குப் பதித்த உடம்பாய்
கரந்தும் தோன்றியும் நின்றும் கைதவங்கள் செய்தும் விண்ணோர்
சிரங்களால் வணங்கும் திருவிண்ணகர்ச் சேர்ந்தபிரான்
வரங்கொள் பாதமல்லால் இல்லை யாவர்க்கும் வன்சரணே.–6-3-7-

எத்தனையேனும் அளவுடையார்க்கும் வலிய புகல் அவன் அல்லது இல்லை என்கிறார் -அப்ராக்ருதமான திரு உடம்பை உடையவனாய் -ஜகத் சரீரனாய் -அதீந்திரனாயும் -கண் காண வந்து திருவவதாரம் பண்ணியும் -ஆஸ்ரிதற்காக அத் திரு உடம்போடு நெடு நாள் வர்த்தித்து அருளியும்-இப்படி ஸூ லபனாய் வைத்து தன்னை யுகாவாதார் திறத்து வஞ்சனங்கள் பண்ணியும் –

————————————————————

வன்சரண்  சுரர்க்காய் அசுரர்க்கு வெங்கூற்றமுமாய்த்
தன்சரண் நிழற்கீழ்உலகம் வைத்தும் வையாதும்
தென்சரண் திசைக்குத் திருவிண்ணகர்ச் சேர்ந்தபிரான்
என்சரண் என்கண்ணன் என்னை ஆளுடை என்னப்பனே.–6-3-8-

எனக்கு சரணமான மாத்திரமே அல்ல -மற்றும் எல்லாம் திரு விண்ணகர் சேர்ந்த பிரான் என்கிறார் —
அநந்ய பிரயோஜனரை பரிக்ரஹித்தும் -அல்லாதாரை பஹிஷ்கரித்தும் –
தெற்கு திக்குக்கு சரணாக -எனக்கு ஸூ லபன்–என்னை அடிமை கொண்டு உபகரித்தவன் –

————————————————————

என்னுடைய சிரமம் எல்லாம் தீரும்படி-தன்னுடைய பாதச் சாயையை எனக்கு -நான் அல்லேன் -என்ன -வலியது தந்தான் என்கிறார்-

என்னப்பன்  எனக்காய் இகுளாய் என்னைப் பெற்றவளாய்ப்
பொன்னப்பன் மணியப்பன் முத்தப்பன் என்னப்பனுமாய்
மின்னப் பொன்மதிள் சூழ் திருவிண்ணகர்ச் சேர்ந்த அப்பன்
தன்னொப்பார் இல்லப்பன் தந்தனன் தன தாள்நிழலே.–6-3-9-

எனக்கு உறுதியான என் பிதாவாய் -தோழியாய் -பொன்னும் மணியும் முத்தும் போலே போக்யனாய் -எனக்கு அவ்வளவும் அன்றிக்கே மிகவும் உபகாரகனாய்
என் போல்வாருக்கு எளியனாம் படி திரு விண்ணகரிலே வருகை யாகிற உபகாரகத்தை பண்ணினவன் -உபகாரகனாம் இடத்திலே தனக்கு ஒப்பு இல்லாதவன் –

——————————————————–

அவனுடைய திருவடிகள் அல்லது மற்றொரு ரக்ஷகம் இல்லை என்னும் இடத்தை புத்தி பண்ணுங்கோள் என்கிறார் –

நிழல்வெய்யில் சிறுமை பெருமை குறுமை நெடுமையுமாய்ச்
சுழல்வன நிற்பன மற்றுமாய் அவை அல்லனுமாய்
மழலை வாய்வண்டு வாழ் திரு விண்ணகர் மன்னு பிரான்
கழல்கள் அன்றி மற்றோர் களை கண்இலம்; காண்மின்களே.–6-3-10-

சிறுமை பெருமை– அணுத்வ மஹத்வங்கள் /
குறுமை நெடுமையுமாய்ச்– நடுவுள்ள ஹரஸ்வ தீர்க்கங்கள் / -சுழல்வன நிற்பன- ஸ்தாவர ஜங்கமங்கள் /
அவை அல்லனுமாய்-இவற்றில் இவனுக்கு வியாப்தி கர்ம நிபந்தம் அல்லாமையாலே -தன் பக்கல் அவற்றின் தோஷம் தட்டாது ஒழிகை
மழலை வாய்வண்டு-இனிய மிடற்று ஓசை யுடைய வண்டு-

—————————————————————-

நிகமத்தில் இது திருவாய் மொழி வல்லார் அயர்வறும் அமரர்களுக்கு போக்யராவார் என்கிறார் –

காண்மின்கள்  உலகீர்! என்று கண்முகப்பே நிமிர்ந்த
தாளிணையன்தன்னைக் குருகூர்ச் சடகோபன் சொன்ன
ஆணை ஆயிரத்துத் திருவிண்ணகர்ப் பத்தும் வல்லார்
கோணைஇன்றி விண்ணோர்க் கென்று மாவர் குரவர்களே.–6-3-11-

காண்மின்கள் உலகீர்! என்று கண்முகப்பே நிமிர்ந்த-தாளிணையன்தன்னை-
லோகத்தில் உள்ள எல்லீரும் கண்டு க்ருதார்த்தர் ஆகுங்கோள் என்று அவர்கள் கண் எதிரே வளர்ந்த திருவடிகளை யுடையவனை
ஆணை ஆயிரத்துத் திருவிண்ணகர்ப் பத்தும் வல்லார்-
ஆயிரம் திருவாய் மொழிகளிலும் அவனுடைய ஜெகன் நிர்வாகத்தை சொன்ன இது திரு வாய் மொழி வல்லார்
கோணைஇன்றி -மிறுக்கு இன்றி
குரவர்களே.-கௌரவ்யர்

——————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-