Archive for August, 2016

திருவாய்மொழி ஒன்பதினாயிரப்படி -4-2–

August 31, 2016

இதர புருஷார்த்தங்கள் அடைய தோஷ அனுசந்தான பூர்வகமாக பகவத் வைலக்ஷண்ய அனுசந்தானத்தைப் பண்ணி
பரமபோக்யமான எம்பெருமானோடே கலந்து பரிமாற வேணும் என்று ஆசைப்பட்டு பெறாமையாலே கலங்கி – முடியானே -யில்
பிறந்த விடாய் ரசாந்தரங்களால் அபிபூதமானது தலை எடுத்து அதுக்கு மேலே தேச காலங்களினாலே விபக்ருஷ்டமான
அவன் படிகளையும் காண வேணும் என்னும் அபிநிவேசம் மிகப் படர்ந்து நினைத்தபடி கிடையாமையாலே
அப்ரக்ருதிங்கதராய் தம்முடைய தசையைக் கண்டு பந்துக்கள் சோகிக்கிற படியை –
எம்பெருமானை ஆசைப் பட்டு பெறாதே நோவு படுகிறாள் ஒரு பிராட்டியுடைய திருத் தாயார் பேச்சாலே அவனுக்கு விண்ணப்பம் செய்கிறார் –

————————————————————————————————-

வடதளி சாயியான சர்வேஸ்வரனுடைய திருவடிகளில் சாத்தின திருத் துழாயை இப்போதே பெற வேணும்
என்று ஆசைப்படா நின்றாள் என்று திருத் தாயார் சோகிக்கிறாள்-

பாலன் ஆய், ஏழ் உலகு உண்டு, பரிவு இன்றி
ஆலிலை அன்ன வசம் செயும் அண்ணலார்
தாளிணை மேல் அணி தண் அம் துழாய் என்றே
மாலுமால் வல் வினையேன் மட வல்லியே.–4-2-1-

பரிவின்றி -நோவின்றிக்கே
அன்னவசம் செய்கை-இடம் வளம் கொள்ளுகை
மாலுமால் -மயங்கா நின்றாள்
வல்வினை என்கிறது -இவள் இங்கண் துர்கடங்களை ஆசைப்படுகைக்கு காரணம் என் கர்மம் என்கிறாள்
மடம்-தான் நினைத்ததே நினைக்கை –

—————————————————————————————————-

திருக் குரவையில் கிருஷ்ணனுடைய லீலா சேஷ்டிதங்களை காண ஆசைப் படா நின்றாள் என்கிறாள் –

வல்லி சேர் நுண்ணிடை ஆய்ச்சியர் தம்மொடும்
கொல்லைமை செய்து குரவை பிணைந்தவர்
நல்லடி மேல் அணி நாறு துழாய் என்றே
சொல்லுமால் சூழ்வினை யாட்டியேன் பாவையே.–4-2-2-

வல்லி சேர்-என்று தொடங்கி
வல்லி போலே இருக்கிற வடிவையும் நுண்ணிய இடையையும் உடைய இடைப் பெண்களை தன்னுடைய
ஸுந்தர்யாதிகளாலே வரம்பு அழித்து அவர்களோடே திருக் குரவை கோத்து அருளினவனுடைய ஸ்ப்ருஹணீயமான திருவடிகளில்
சூழ்வினை-தப்பாதே அகப்படுத்தும் பாவம்

——————————————————————————————————

திரு உலகு அளந்து அருளின எம்பெருமான் திருவடிகளில் திருத் துழாயை ஆசைப் படா நின்றாள் என்கிறாள் –

பாவியல் வேத நன் மாலை பல கொண்டு,
தேவர்கள் மா முனிவர் இறைஞ்ச நின்ற
சேவடி மேல் அணி செம் பொன் துழாய் என்றே
கூவுமால் கோள்வினை யாட்டியேன் கோதையே.–4-2-3-

பாவியல் வேத-இத்யாதி –
நல்ல சந்தஸை உடைத்தான் ருக்வேதத்திலே வைஷ்ணவமான பல ஸூக்தங்களைக் கொண்டு
தேவர்களும் ருஷிகளும் ஆஸ்ரயிக்கலாம் படி தன்னைக் கொடுத்துக் கொடு நின்ற
கோள்வினை-முடித்து அல்லது போகாத பாபம்
கோதை -தன்னுடைய மயிர் முடியையும் மாலையையும் கண்டாரை இப்பாடு படுத்த வல்லள் என்று கருத்து

———————————————————————————————————

சர்வ ஸ்மாத் பரனாய் திரு நாட்டிலே எழுந்து அருளி இருக்கிற சர்வேஸ்வரனுடைய திருவடிகளில்
திருத் துழாயை ஆசைப்படா நின்றாள் என்கிறாள் –

கோது இல் வண்புகழ் கொண்டு, சமயிகள்
பேதங்கள் சொல்லிப் பிதற்றும் பிரான், பரன்
பாதங்கள் மேல் அணி பைம் பொன் துழாய் என்றே
ஓதுமால்; ஊழ் வினையேன் தடந் தோளியே.–4-2-4-

கோது இல் -வண்புகழ் கொண்டு, சமயிகள்-
ஒரு குணத்தை அனுசந்தித்தால் குணாந்தரத்தில் போக ஒட்டாத படி கால் கட்ட வல்லவனான அவ்வவ குணங்களிலே நிஷ்டர் ஆனவர்கள்
பேதங்கள் சொல்லிப் பிதற்றும் பிரான், –
அவ்வவ குணங்களிலே வாசிகளை சொல்லி ஈடுபட்டு அடைவு கெடச் சொல்லும்படியான உதார குணத்தை உடையனாய்
பரன்-
எல்லா படியாலும் எல்லாரிலும் மேல் பட்டு இருந்தவனுடைய
ஊழ் வினையேன் –
இப்படி துக்க அனுபவத்துக்கு ஈடாம் படி முன்னமே பாபத்தை பண்ணினேன்
தடந் தோளியே-
எம்பெருமானை பிச்சேற்ற வல்ல தோள்களை உடையவள் -என்றவாறு –

———————————————————————————————————-

நப்பின்னை பிராட்டிக்காக எருது ஏழு அடர்த்து அருளின கிருஷ்ணனுடைய திருவடிகளில் திருத் துழாயை ஆசைப் படா நின்றாள் -என்கிறாள் –

தோளி சேர் பின்னை பொருட்டு எருது ஏழ்தழீஇக்
கோளியார், கோவலனார்,குடக் கூத்தனார்
தாள் இணை மேல் அணி தண் அம்துழாய் என்றே
நாளும் நாள் நைகின்றதால் என்றன் மாதரே.–4-2-5—

தோளி சேர் பின்னை-இத்யாதி
தன்னோடு துல்யமான சீல வயோ வ்ருத்தங்களை உடையளாய் தனக்கே அசாதாரணமான தோள் அழகை உடைய நப்பின்னை பிராட்டிக்காக
எருது ஏழையும் தழுவிக் கொள்ளுவதும் செய்து அவர்களுக்கு சத்ருசமான ஆபிஜாத்யத்தையும் செருக்கையும் உடையவர்
நாளும் நாள்-நாள் தோறும் நாள் தோறும் –

———————————————————————————————————-

ஸ்ரீ வராஹமாய் பிரளய ஆர்ணவத்திலே பூமியை எடுத்து அருளின போதில் திருவடிகளில்
திருத் துழாயை பெற வேணும் என்று ஆசைப் படுகிற படியை சொல்லுகிறாள் –

மாதர் மா மண் மடந்தை பொருட்டு ஏனமாய்,
ஆதி அம் காலத்து அகலிடம் கீண்டவர்
பாதங்கள் மேல் அணி பைம்பொன் துழாய் என்றே
ஓதும்மால் எய்தினள் என்றன் மடந்தையே.–4-2-6-

மாதர் மா மண் -இத்யாதி –
ஸ்நேஹ யுக்கதையாய் அதி ஸ்லாக்யையான ஸ்ரீ பூமிப பிராட்டிக்காக
பகவத் அவதார காலம் ஆகையாலே ஸ்லாக்க்யமான வராஹ கல்பத்தின் ஆதியிலே நீரும் சேறும் காண இறாயாத
வராஹ வேஷத்தைக் கொண்டு மஹா பிருத்வியை எடுத்து அருளினவருடைய
ஒத்திகை -சொல்லுகை –

———————————————————————————————————-

அம்ருத மதன தசையில் பெரிய பிராட்டியாரை திரு மார்பிலே வைத்து அருளின எம்பெருமானுடைய
திருவடிகளில் திருத் துழாயை ஆசைப்படா நின்றாள் என்கிறாள் –

மடந்தையை வண் கமலத் திரு மாதினைத்
தடங்கொள் தார் மார்பினில் வைத்தவர் தாளின் மேல்
வடங்கொள் பூந் தண் அம்துழாய் மலர்க்கே இவள்
மடங்குமால்; வாணுதலீர்!என் மடக்கொம்பே.–4-2-7-

மடந்தை -பருவம்
தடங்கொள் தார் மார்பினில்-இடம் உடைத்தாய் திருமாலையை உடைய திரு மார்பிலே
வடங்கொள் பூந் தண் அம்துழாய் மலர்க்கே இவள்-மடங்குமால்
தொடை யுண்டு போக்யமாய் இருந்துள்ள தண்ணம் துழாய் மலரை ஆசைப்பட்டு சுருண்டு விழா நின்றாள்
ஏதேனும் தசையில் விக்ருதை யாகாது இருக்கக் கடவ என் மகள்
வாணுதலீர்-ஒளியை உடைய நுதலை யுடையீர்-உங்களை போலே இவளைக் காணப் பெறுவது காண் என்று கருத்து –

———————————————————————————————————-

கொம்பு போல் சீதை பொருட்டு, இலங்கை நகர்
அம்பு எரி உய்த்தவர் தாள் இணை மேல் அணி
வம்பு அவிழ் தண் அம் துழாய் மலர்க்கே இவள்
நம்புமால்; நான் இதற்கு என்செய்கேன் நங்கைமீர்?–4-2-8-

ஸ்ரீ ஜனகராஜன் திருமக்களுக்காக லங்கா தஹனம் பண்ணி அருளின சக்கரவர்த்தி திருமகனுடைய திருவடிகளில்
நிரதிசய போக்யமான திருத் துழாயை ஆசைப்படா நின்றாள் என்கிறாள்
அம்பு எரி உய்த்தவர் -சாரா அக்னியை புகை விட்டவர் –

——————————————————————————————————–

நங்கைமீர்! நீரும் ஓர் பெண் பெற்று நல்கினீர்;
எங்ஙனே சொல்லுகேன் யான் பெற்ற ஏழையை?
சங்கு என்னும்; சக்கரம் என்னும்; துழாய் என்னும்;
இங்ஙனே சொல்லும் இராப்பகல் என்செய்கேன்?–4-2-9-

அவனுடைய ஆயுதங்களை காண வேணும் என்று சொல்லப் புக்கு முடியா சொல்ல மாட்டாதே நோவு படா நின்றாள் -என்கிறாள்
நல்குகை -வளர்க்கை / ஏழையை-கிடையாதத்தை ஆசைப்படுகிற சபலையை

——————————————————————————————————–

உன் மகள்- நீ இட்ட வழக்கு அன்றோ – அவளுக்கு ஹிதம் சொல்லாய் என்றவர்களைக் குறித்து தான் சொல்லிற்றுக் கேளாதே
அவனை ஆசைப் பட்டு மிகவும் அவசன்னையாக நின்றாள் என்கிறாள் –

என் செய்கேன்? என்னுடைப் பேதை,என் கோமளம்,
என் சொல்லும் என் வசமும் அல்லள்; நங்கைமீர்!
மின்செய் பூண் மார்பினன் கண்ணன் கழல் துழாய்
பொன்செய் பூண் மென்முலைக்கு என்று மெலியுமே.–4-2-10-

என் செய்கேன்? -இத்யாதி
ஹிதம் கொள்ளுகைக்கு ஈடான விவேகம் இன்றிக்கே வியஸன சகையும் இன்றிக்கே இருந்துள்ள என் மகள்
நான் சொல்லிற்று கொள்ள முதலிலே நான் இட்ட வழக்கு அல்லள்
விளங்கா நின்றுள்ள கௌஸ்துபாதி ஆபரணங்களை திரு மார்பிலே உடைய கிருஷ்ணன் உடைய திருவடிகளில்
திருத் துழாயை விரஹ வைர்ணயத்தையே ஆபரணமாக உடைத்தாய் துவண்டு இருக்கிற முலைக்கு வேணும் என்று
சொல்லப் புக்கு முடியச் சொல்ல மாட்டாதே மெலியா நின்றாள்
இதுக்கு நான் செய்வது என்
பொன்செய் பூண்-பொன்னாலே செய்யப் பட்ட ஆபரணம் என்றும் சொல்லுவார் –

——————————————————————————————————

நிகமத்தில் ஆழ்வாருக்கு இனி இல்லை என்ன வந்த அவசாதம் எல்லாம் தீரும் படி சம்ச்லேஷித்து அருளின கிருஷ்ணன் திருவடிகளில்
தாம் அருளிச் செய்த ஆயிரத்தில் இத் திரு வாய் மொழி வல்லார் அயர்வறும் அமரர்களுக்கு சத்ருசர் ஆவார் -என்கிறார்

மெலியும் நோய் தீர்க்கும் நம் கண்ணன் கழல்கள் மேல்
மலிபுகழ் வண் குருகூர்ச் சடகோபன் சொல்
ஒலிபுகழ் ஆயிரத்து இப்பத்தும் வல்லவர்
மலிபுகழ் வானவர்க்கு ஆவர் நற்கோவையே.–4-2-11-

மலி புகழ் தொடங்கி
எட்டாத நிலத்தையும் அனுபவிக்கைக்கு அபி நிவேசித்தார் என்னும் புகழ் மிக்கு இருந்துள்ள ஆழ்வார் அருளிச் செயலாய்
எம்பெருமானுடைய கல்யாண குணங்களை வ்யக்தமாய்ச் சொல்லுகிற இது திருவாய் மொழி வல்லவர் –

————————————————————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

திருவாய்மொழி இருபத்து நாலாயிரப்படி -4-2–

August 31, 2016

ஐஸ்வர்யாதிகள் உடைய தோஷ அனுசந்தான பூர்வகமாக பகவத் வை லக்ஷண்யத்தை உபதேசிக்க -அது அவர்களுக்கு பலியாதே
தம் பக்கல் விடாய்க்கு யுத்தம்பகம் ஆயிற்று –
ராவணனுக்கு சொன்ன ஹிதம் அவனுக்கு செவிப்படாதே ஸ்ரீ விபீஷண ஆழ்வானுக்கு பெருமாளை பற்றுகைக்கு உறுப்பானால் போலே
வீடுமின் முற்றத்திலும் -சொன்னால் விரோதத்திலும் -ஒரு நாயகத்திலும் பரோபதேசம் பண்ணின இது தமக்கு வைஸத்யத்துக்கு உறுப்பாய்
மூன்று களை பறித்த பயிர் போலே தம்முடைய பிரேமத்தை சத்சங்கம் ஆக்கிற்று –
முடியானேயில் பிறந்த விடாய் ரசாந்தரங்களால் அபிபூதமானது தலை எடுத்து தேச காலங்களால் விபக்ருஷ்டமான அவன் படிகளை
இப்போதே காண வேணும் என்னும் விடாயைப் பிறப்பித்து அப்போதே அனுபவிக்கப் பெறாமையாலே அப்ரக்ருதிங்கதராய் தம்முடைய
தசையைக் கண்ட பந்துக்கள் சோகிக்கிற படியை –
எம்பெருமானை ஆசைப் பட்டு பெறாதே மோஹங்கதையாய் நோவு படுகிறாள் ஒரு பிராட்டியைக் கண்ட திருத் தாயார் பேச்சாலே அருளிச் செய்கிறார்
சாகரம் தர்த்து முத்யுக்தம் ரூபமப்ரதிமம் மஹத் த்ரஷ்டும் இச்சாமி தே வீர -என்ற திருவடியைக் கண்ட அநந்தரம்
கடல் கடந்த உன்னுடைய வடிவைக் காட்ட வேணும் -என்றான் -பீமா சேனன் –
பூத காலத்தே செய்ததை காட்ட வல்லன் -என்கிற சக்தியை அறிகையாலே-அப்படியே அவன் சக்தியை அறிகையாலும்
தன் சாபலத்தாலும் இவளும் தேச கால விபக்ருஷ்டமானவற்றை காண வேணும் என்று ஆசைப்படுகிறாள் –

———————————————————————————————–

வடதளி சாயியான சர்வேஸ்வரனுடைய திருவடிகளில் சாத்தின திருத் துழாயை செவ்வி மாறாதே இப்போதே பெற வேணும்
என்று ஆசைப்படா நின்றாள் என்று திருத் தாயார் சோகிக்கிறாள்-

பாலன் ஆய், ஏழ் உலகு உண்டு, பரிவு இன்றி
ஆலிலை அன்ன வசம் செயும் அண்ணலார்
தாளிணை மேல் அணி தண் அம் துழாய் என்றே
மாலுமால் வல் வினையேன் மட வல்லியே.–4-2-1-

பாலன் ஆய்,
ஆத்மா நம் மானுஷம் மன்யே-என்று மனிச்சுக்கு அவ்வருகு அறியாதாப் போலே இவ் வவஸ்தைக்கு அவ்வருகு திரு உள்ளத்திலும் இன்றிக்கே இருக்கை
முக்த சிசு என்றும் -தூய குழவியாய் என்றும் -படியாதுமில் குழவிப் படி என்றும் -சொல்லுகிறபடியே அதிசைஸவம் இருந்தபடி
ஏழ் உலகு உண்டு,
பால்யத்தின் கார்யம் இருந்த படி -பிரளய ஆபன்னமான லோகங்களை ஸாத்மிக்கும் ஸாத் மியாது -என்று அறியாதே எடுத்து திரு வயிற்றில் வைத்தான்
பரிவு இன்றி
பரிவு -வருத்தம் -லோகங்களை திரள வயிற்றிலே வைத்தால் சாத்யாமல் வரும் நோவு இன்றிக்கே இருக்கை –
ஆலிலை-
ஒரு பவனான ஆலிலையில் –
லோகங்கள் சாத்மியாது என்று அறியாதாப் போலே யாயிற்று இது படுக்கையாய் போராது என்று அறியாதபடியும்
அன்ன வசம் செயும்
அன்னம் என்று உணவு -அதுக்கு அனுகுணமான வியாபாரத்தை பண்ணுமவன்
அச் சைசைவத்திலும் ரக்ஷணத்தில் அவதானம் இருந்தபடி
இடக்கை கீழ்ப் படக் கிடந்தானாகில் லோகங்கள் ஜெரித்துப் போம் இ றே
அண்ணலார்
சர்வ ரக்ஷகனான ஸ்வாமி -அவன் சைசைவத்திலும் ரக்ஷணத்தில் அவதானம் போலே யாயத்து இவள் மோஹத்திலும் முறையில் கலக்கம் அற்று இருக்கும் படி
சம்சாரிகளை ஆபத்தே முதலாக ரஷித்த சர்வ ரக்ஷகன் ஆனவனை ஓர் அபலைக்கு உதவானோ -என்னா நின்றாள்
அண்ணலார் தாளிணை-
சேஷ பூதன் பற்றுவது சேஷியுடைய திருவடிகளை இ றே
தாளிணை மேல் அணி தண் அம் துழாய்
வட தள சாயியினுடைய திருவடிகளில் திருத் துழாயை செவ்வி மாறாமே அனுபவிக்க வேணும் என்னா நின்றாள்
அவன் அகடிதங்களை செய்திலனாகில் இவள் துர்லபங்களை ஆசைப்படாள் கிடீர்
துழாய் என்றே
கலியர் சோறு சோறு என்னுமா போலே பலகாலும் இத்தையே சொல்லா நின்றாள்
ஒரு காலத்திலே செய்து அற்று போனது இனிக் கிடையாது என்று நான் சொன்ன ஹித வசனம் செவிப் படாதே தான் நினைத்ததையே சொல்லா நின்றாள்
மாலுமால்
மாலுதல் -மயங்குதல் -மோஹியா நின்றாள்
கிடையாததை ஆசைப் பட்டால் மோஹமேயாய் தலைக் கட்ட வேணுமோ
மணியிலே அக்னி புத்தி பிறந்தால் சுட வேணுமோ
வல் வினையேன்
இவளை இப்படி காணும்படியான பாபத்தை பண்ணினேன்
மோஹித்தவளுக்கு துக்க அனுபவம் இல்லை
உணர்ந்து இருந்து கிலேசப் படுகிறாள் தான் ஆகையால் -வல்வினையேன் -என்கிறாள்
மட வல்லியே.–
மடப்பமாவது -பற்றிற்று விடாதே நின்று அத்தையே நினைக்கை
வல்லி-
ஒரு கொள் கொம்பிலே சேரா விடில் தரியாத படியான பருவம் -பதிசம்யோக ஸூ சலபம் வய

——————————————————————————————————

திருக் குரவையில் கிருஷ்ணனுடைய லீலா சேஷ்டிதங்களை காண ஆசைப் படா நின்றாள் என்கிறாள் –

வல்லி சேர் நுண்ணிடை ஆய்ச்சியர் தம்மொடும்
கொல்லைமை செய்து குரவை பிணைந்தவர்
நல்லடி மேல் அணி நாறு துழாய் என்றே
சொல்லுமால் சூழ்வினை யாட்டியேன் பாவையே.–4-2-2-

வல்லி சேர் நுண்ணிடை
வல்லி மருங்குல் -என்றால் போலே வல்லிக் கொடி போலே இருக்கிற இடையை உடையவர்கள் என்னுதல்
வல்லி போலே இருக்கிற வடிவை உடையவர்கள் என்னப் புக்கு இடைக்கு உவமானம் இல்லாமையால் -நுண்ணிடை என்னுதல்
ஆய்ச்சியர் தம்மொடும்
என் பருவத்தில் பெண்கள் அநேகருக்கு உதவினவன் எனக்கு உதவானோ என்கிறாள்
கொல்லைமை செய்து –
வரம்பு அழிந்த செயல்களை செய்து தன் ஸுந்தர்யாதிகளாலே அவர்கள் மரியாதைகளை அழித்து
குரவை பிணைந்தவர்
பெண்கள் கோவையில் தன்னைத் தொடுத்தான் –
நல்லடி மேல் -அவனுடைய ஸ்ப்ருஹணீயமான திருவடிகளில்
அணி நாறு துழாய் என்றே
பெண்கள் அடியும் இவன் அடியும் பட்ட அடிச்ச சுவடு கந்தத்திலே தோற்றும் படியான திருத் துழாயை யாயிற்று இவள் ஆசைப் படுகிறது –
ப்ரஹ்மசாரி எம்பெருமான் திருவடிகளில் ஆசைப்படுமவள் அன்றே
என்றே சொல்லுமால்
பாவியேன் நினைத்த படி வாய் விடக் கடவுள் அன்றியிலே இருக்கிற இவளுடைய ஸ்த்ரீத்வம் எல்லாம் எங்கே போயிற்று
சூழ்வினை யாட்டியேன் பாவையே.–
தப்பாமல் அகப்படுத்தும் பாபத்தைப் பண்ணினேன் –
பாவையே -நிருபாதிகமான ஸ்த்ரீத்வத்தை உடையவள்
பாவை சொல்லுமால் –
நினைத்து வாய் விடக் கடவது அன்றிக்கே இருக்கும் ஸ்த்ரீத்வம் எல்லாம் போய் தன் அபிமதத்துக்கு தான்
வாய் விட வேண்டும்படி யாயிற்று என்னுடைய பாபம் இறே –

—————————————————————————————————-

திரு உலகு அளந்து அருளின எம்பெருமான் திருவடிகளில் திருத் துழாயை ஆசைப் படா நின்றாள் என்கிறாள் –

பாவியல் வேத நன் மாலை பல கொண்டு,
தேவர்கள் மா முனிவர் இறைஞ்ச நின்ற
சேவடி மேல் அணி செம் பொன் துழாய் என்றே
கூவுமால் கோள்வினை யாட்டியேன் கோதையே.–4-2-3-

பாவியல் வேத நன் மாலை பல கொண்டு,
பாக்களால் இயலப் பட்ட வேதம் -சந்தஸ் ஸூ க்களை உடைத்தான் வேதம்
அதில் நன்றான மாலைகளைக் கொண்டு -ஸ்ரீ புருஷ ஸூக்தாதிகளைக் கொண்டு –
சர்வ வேதா யத் பத்மாம நந்தி -என்கிறபடியே அல்லாத இடங்களுக்கும் ப்ரதிபாத்யனே யானாலும் ஆராத நத்திலே யாதல் -விபூதியிலே யாதல் பரந்து இருக்கும் –
தேவர்கள் மா முனிவர் இறைஞ்ச நின்ற-
தேவர்களும் சனகாதிகளும் -சங்கைஸ் ஸூ ராணாம் -என்கிறபடியே ஸ்தோத்ரம் பண்ண திரு உலகு அளந்த படி –
சேவடி -மேல் அணி செம் பொன் துழாய் என்றே-கூவுமால்
எடுத்த திருவடியில் கவிழ் வில் சிவப்பு எல்லாருக்கும் அனுபவிக்கலாய் இருந்த படி –
எல்லார் தலைகளிலும் திருவடிகளை வைத்து ரஷித்தவன் எனக்கு உதவாது ஒழியுமோ -என்னா நின்றாள்
அவன் திருவடிகளில் சாத்தின ஸ் ப்ருஹணீயமான திருத் துழாயைச் சொல்லிக் கூப்பிடா நின்றாள்
கோள்வினை-யாட்டியேன்
கொள்ளும் வினை –முடிக்கும் வினை என்னுதல் -கொள் என்று மிடுக்காய் வலிய பாபம் என்னுதல் –
கோதையே.–
இவள் மாலையையும் மயிர் முடியையும் கண்ட நாயகன் படும் பாட்டை இவள் தான் படா நின்றாள் -என்கிறாள் –

—————————————————————————————————-

சர்வ ஸ்மாத் பரனாய் திரு நாட்டிலே எழுந்து அருளி இருக்கிற சர்வேஸ்வரனுடைய திருவடிகளில்
திருத் துழாயை ஆசைப்படா நின்றாள் என்கிறாள் –

கோது இல் வண்புகழ் கொண்டு, சமயிகள்
பேதங்கள் சொல்லிப் பிதற்றும் பிரான், பரன்
பாதங்கள் மேல் அணி பைம் பொன் துழாய் என்றே
ஓதுமால்; ஊழ் வினையேன் தடந் தோளியே.–4-2-4-

கோது இல்
கோது இன்றிக்கே இருக்கை -குணத்துக்கு கோது இல்லாமை யாவது -குணாந்தரத்தில் போகாத படி கால் காட்டுகை
வண்புகழ் கொண்டு,
கல்யாண குணங்களைக் கொண்டு
சமயிகள்-
சீல குணம் துவக்கு அற்று – அதில் காட்டில் வீர குணம் துவக்கு அற்று -அதில் காட்டில் ரூப குணமான ஸுந்தர்யாதிகள் துவக்கு அற்று
என்று ஓர் ஓர் கோடியிலே நிஷ்டரானவர் என்னுதல்
தஹர உபகோஸல சாண்டில்யாதி வித்யா நிஷ்டர்களை சொல்லவுமாம் –
பேதங்கள் சொல்லிப்
தாங்கள் பற்றின குணங்களுக்கு ஏற்றம் சொல்லி
பிதற்றும்
அவற்றிலே ஈடுபட்டு ஜ்வர சந்நிபதரைப் போலே அடைவு கெடச் சொல்லுகை –
பிரான்,
இப்படி இவர்கள் பேசும்படி குணங்களை உபகரித்தவன்
பரன்-பாதங்கள் மேல் அணி
சர்வ ஸ்மாத் பரனான ஸ்ரீ வைகுண்ட நாதன் திருவடிகளில் நித்ய ஸூ ரிகள் சாத்தின
பைம் பொன் துழாய்
ஸ் ப்ருஹணீயமான திருத் துழாய்
என்றே-ஓதுமால்;
இதையே எப்போதும் சொல்லா நின்றாள்
ஊழ் வினையேன் –
ஊழ் என்று முறை -இதுவும் பிராப்தமாம் படியான பாபத்தை பண்ணினேன்
தடந் தோளியே.–-
நாயகனைப் பிச்சேற்ற வல்ல தோள் அழகை உடையவள் என்கை –

—————————————————————————————————-

நப்பின்னை பிராட்டிக்காக எருது ஏழு அடர்த்து அருளின கிருஷ்ணனுடைய திருவடிகளில் திருத் துழாயை ஆசைப் படா நின்றாள் -என்கிறாள்

தோளி சேர் பின்னை பொருட்டு எருது ஏழ்தழீஇக்
கோளியார், கோவலனார்,குடக் கூத்தனார்
தாள் இணை மேல் அணி தண் அம்துழாய் என்றே
நாளும் நாள் நைகின்றதால் என்றன் மாதரே.–4-2-5—

தோளி சேர் பின்னை பொருட்டு
கிருஷ்ணனோடு துல்ய சீல வயோ வ்ருத்தையான நப்பின்னை பிராட்டிக்காக
அஸி தேஷணா-என்றால் போலே கிருஷ்ணனைக் காட்டில் இவளுக்கு தோள் அழகு தன்னேற்றம் –
இகாரத்தை அவயயமாக்கி தோள் சேர் பின்னை -என்று ஒரு தமிழன் சொன்னான் –
எருது ஏழ்தழீஇக்-கோளியார்,-
எருதுகள் ஏழையும் தழுவிக் கொள்ளுமவர் -அவளை பெறுகைக்கு ஹேது வாகையாலே போக ரூபமாய் இருந்தபடி –
கோவலனார்,குடக் கூத்தனார்-தாள் இணை மேல் அணி தண் அம்துழாய் என்றே-
அவனைப் பெறுகைக்கு ஈடான ஆபி ஜாத்யத்தையும் செருக்கையும் உடையவர் –
வில்லை முறித்தாலும் இஷுவாகு வம்ஸயர்க்கு அல்லது பெண் கொடாத ஜனகனைப் போலே எருது ஏழு அடர்த்தாலும்
இடைத் தனத்தில் புரை உண்டாகில் பெண் கொடார்கள் இறே
அவளுக்கு உதவின கிருஷ்ணன் திருவடிகளில் திருத்துழாயை யாயிற்று இவள் ஆசைப் பட்டது
நாளும் நாள் நைகின்றதால் –
ஒரு நாள் நைகைக்கு ஆஸ்ரயம் பொறாத மார்த்வத்தை உடையவள் நாள் தோறும் நாள் தோறும் நையா நின்றாள்
ஆச்ரயத்தையும் கொடுத்து நை யப் பண்ணும் விஷயம் இறே
நைகின்றதால் என்றன் மாதரே.-
நையா நின்றது என் பெண் பிள்ளை

——————————————————————————————————

மனிச்சு அழியாமல் நப்பின்னை பிராட்டிக்கு உதவினால் போல் அன்றியே ஸ்ரீ பூமிப பிராட்டிக்காக தன்னை அழிய
மாறினவனுடைய திருவடிகளில் திருத் துழாயை ஆசைப் படா நின்றாள் என்கிறாள் –

மாதர் மா மண் மடந்தை பொருட்டு ஏனமாய்,
ஆதி அம் காலத்து அகலிடம் கீண்டவர்
பாதங்கள் மேல் அணி பைம்பொன் துழாய் என்றே
ஓதும்மால் எய்தினள் என்றன் மடந்தையே.–4-2-6-

மாதர்
நிருபாதிகமான ஸ்த்ரீத்வத்தை உடையவள் -என்னுதல் ஸ்நேஹ யுக்தை என்னுதல்
மா மண் மடந்தை பொருட்டு
ஸ்லாக்த்யையான ஸ்ரீ பூமிப் பிராட்டிக்காக
ஏனமாய்,
பாசி தூர்த்து -இத்யாதி நீருக்கும் சேற்றுக்கும் இறா யாத வடிவைக் கொண்டு –
ஆதி அம் காலத்து அகலிடம் கீண்டவர்-பாதங்கள் மேல் அணி பைம்பொன் துழாய் என்றே-
வராஹ கல்பாதியாய் அவதாரகாலம் ஆகையாலே ஸ்லாக்யமான காலத்திலே மஹா பிருத்வியை
அண்ட பித்தியினின்றும் ஒட்டு விடுவித்து அருளினவருடைய திருவடிகளில்
ரோமாந்தரஸ் த்தா முனயஸ் ஸ் துவந்தி -என்று சனகாதிகள் இட்ட திருத் துழாயை யாயிற்று இவள் ஆசைப்படுகிறது
ஓதும்மால் எய்தினள்
எப்போதும் இத்தையே சொல்லும்படியான பிரேமத்தை -பிரமத்தை -உடையவள் ஆனாள்
என்றன் மடந்தையே.–
இவள் பருவத்தை கண்டார் யாயிற்று மால் எய்துவர் -அத்தலை இத்தலை யாவதே –

————————————————————————————————-

அம்ருத மதன தசையில் பெரிய பிராட்டியாரை திரு மார்பிலே வைத்து அருளின எம்பெருமானுடைய
திருவடிகளில் திருத் துழாயை ஆசைப்படா நின்றாள் என்கிறாள் –

மடந்தையை வண் கமலத் திரு மாதினைத்
தடங்கொள் தார் மார்பினில் வைத்தவர் தாளின் மேல்
வடங்கொள் பூந் தண் அம்துழாய் மலர்க்கே இவள்
மடங்குமால்; வாணுதலீர்!என் மடக்கொம்பே.–4-2-7-

மடந்தையை
சர்வ காலமும் அனுபவ யோக்த்யையாய் இருக்குமவள் என்னுதல் -பருவத்தை சொல்லுதல் -பருவமும் எழிலும் ஓன்று அன்று இ றே
வண் கமலத் திரு மாதினைத்
நல்ல தாமரைப் பூவை இருப்பிடமாக உடைய திரு வாகிற மாதை -சாஷாத் லஷ்மியை
தடங்கொள் தார் மார்பினில்
அவளுக்கு அந்தபுரமாய் போரும் பரப்பை உடைத்தாய் ஸர்வேச்வரத்வ ஸூ சகமான தோள் மாலையை உடைத்தான் திரு மார்பிலே வைத்தவர்
பச்யதாம் சர்வ தேவா நாம் யயவ் வக்ஷஸ் ஸ்தலம் ஹரே என்று தேவ ஜாதி அடங்கப் பார்த்து இருக்க
திரு மார்பிலே ஏற ஆதரித்து தம் பேறாக வைத்தவர்
வைத்தவர் தாளின் மேல்-வடங்கொள் பூந் தண் அம்துழாய் மலர்க்கே
திருவடிகளில் ஸ்பர்சத்தாலே தன் நிலத்தில் போலே வடம் கொள்ளா நிற்பதாய் அழகியதாய் குளிர்ந்து செவ்வியை உடைத்தான
திருத் துழாயை ஆசைப் படா நின்றாள்
அழகியதாத் தொடை யுண்ட துழாய் என்னவுமாம்
இவள் மடங்குமால்;
நையா நின்றாள்
மால் எய்தினாள் என்னும் அளவே அன்றியே சொல்லப் புக்கு சொல்ல மாட்டாதே சுருண்டு விழா நின்றாள்
வாணுதலீர்!
ஒளியை உடைய நுதலை உடைய நீங்கள் -உங்களை போலே இவளைக் காணப் பெறுவது எப்போது
என் மடக்கொம்பே.–
என்னைப் பிரியாதே அவிக்ருதையாய் இருந்தவள் படும் பாடே இது

————————————————————————————————

ஸ்ரீ ஜனகராஜன் திருமக்களுக்காக லங்கா தஹனம் பண்ணி – விரோதியைப் போக்கின -அருளின
சக்கரவர்த்தி திருமகனுடைய திருவடிகளில் -நிரதிசய போக்யமான திருத் துழாயை ஆசைப்படா நின்றாள் என்கிறாள்

கொம்பு போல் சீதை பொருட்டு, இலங்கை நகர்
அம்பு எரி உய்த்தவர் தாள் இணை மேல் அணி
வம்பு அவிழ் தண் அம் துழாய் மலர்க்கே இவள்
நம்புமால்; நான் இதற்கு என்செய்கேன் நங்கைமீர்?–4-2-8-

கொம்பு போல் சீதை பொருட்டு,
வஞ்சிக் கொம்பு போலே இருக்குமவள் என்னுதல் -ஏவ அவஸ்த்தை ஏக தேசம் என்னுதல்
இலங்கை நகர் அம்பு எரி உய்த்தவர் தாள் இணை மேல் அணி
சந்த்ர ஆதித்யர்களும் புகைப் பயப்படுமூர்
சர அக்னியை புக பிறப்பித்தவர் -கேவல அக்னி சோற்றை வேவிக்குமது ஒழிய பிரவேசிக்க கூசுமூர்
கையாலே சர அக்னியை பிரவேசிப்பித்தான்
யதா ராகவா நிர்முக்த சர -என்று திருவடி புகிலும் சரஸ்த நீயானாக இ றே புகுந்தது
வம்பு அவிழ் தண் அம் துழாய் மலர்க்கே இவள்-நம்புமால்;
பரிமளத்தை உடைத்தாய் இருக்கும் என்னுதல் -நித்ய அபூர்வமாய் இருக்கும் என்னுதல் –
பண்டு ஒருத்திக்கு உதவினவன் எனக்கு உதவானோ என்று ஆசைப்படா நின்றாள்
அசாதாரண விக்ரஹத்தை இதர சஜாதீயம் ஆக்கினால் போலே ஏதேனும் ஒரு புஷபத்தை சாத்தினாலும் திருத் துழாய் இதர சஜாதீயமாக ஆயிற்றாகக் கடவது
நான் இதற்கு என்செய்கேன்
கிருஷ்ணனைப் போலே சாதாரணன் அன்றிக்கே ஏக தாரா வ்ரதன் திருவடிகளில் திருத் துழாயை எங்கே தேடுவேன்
அவளும் அவனுமான சேர்த்தியிலே ஆசைப்பட்டாள் என்று அறிகிறிலள்
நங்கைமீர்?–
பூரணைகளான நீங்கள் சொல்ல வல்லி கோளே-என்கிறாள் –

—————————————————————————————————

அவனுடைய ஆயுதங்களை காண வேணும் என்று சொல்லப் புக்கு முடியா சொல்ல மாட்டாதே நோவு படா நின்றாள் -என்கிறாள் –

நங்கைமீர்! நீரும் ஓர் பெண் பெற்று நல்கினீர்;
எங்ஙனே சொல்லுகேன் யான் பெற்ற ஏழையை?
சங்கு என்னும்; சக்கரம் என்னும்; துழாய் என்னும்;
இங்ஙனே சொல்லும் இராப்பகல் என்செய்கேன்?–4-2-9-

நங்கைமீர்! நீரும் ஓர் பெண் பெற்று நல்கினீர்;
உங்கள் பூர்த்தி நான் சொல்லக் கேட்டு அறிய வேணுமே உங்களுக்கு
நீங்களும் ஒரு பெண் பிள்ளையை பெற்று வளர்த்தி கோளே
நல்குகை -வளர்க்கை -இவள் பட்டது பட்டார் உண்டோ
உன் பெண் பிள்ளைக்கு வாசி என் என்ன
எங்ஙனே சொல்லுகேன் யான் பெற்ற ஏழையை?
என்னுடைய பெண் பிள்ளை படி என்னாலே பாசுரம் இட்டுச் சொல்லாயோ இருக்கிறது
நங்கைமீர் என்று சம்போதிப்பது சஜாதீயரை -இவளுக்கு சஜாதீயர் ஆழ்வார்களாம் இத்தனை
நீங்களும் பகவத் விஷயத்தில் பிரவணர் நான் பட்டது பட்டார் உண்டோ -என்று கருத்து
யாதோ வாசோ நிவர்த்தந்தே-என்கிற விஷயத்தை முடிய பேசிலும் இவ்விஷயத்தில் அவகாஹித்தார் படி பாசுரம் இட்டு சொல்ல முடியாது என்கை
சதா பரகுணாவிஷ்டோ த்ரஷ்டாவ்யஸ் சர்வ தேஹிபி -என்று கண்டு இருக்கும் அத்தனை போக்கி பேசப் போகாது
ப்ரியோஹி ஜஃனானி நோஸ்யார்த்தம் -என்று இ றே அவன் வார்த்தையும்
கிடையாததிலே கிடைக்குமதில் பண்ணும் சாபல்யத்தை பண்ணுகிறவள்
உன்னால் சொல்லலாம் அம்சத்தை சொல்லிக் காண் என்ன
சங்கு என்னும்;
பெரு வருத்தத்தோடு -சங்கு -என்னா நின்றாள் -இப்படி அருமைப் பட்டோம் என்று மீள அறிகிறிலள்
சக்கரம் என்னும்;
சொல்லவும் மாட்டு கிறிலள் -மீளவும் மாட்டு கிறிலள் -இவை இரண்டுக்கும் நடுவே கிடக்கிற தோள் மாலையை நினைத்து
துழாய் என்னும்;
சங்கு சக்கரங்கள் என்றும் -கூரார் ஆழி வெண் சங்கு ஏந்தி-என்றும் கூடச் சொல்ல மாட்டு கிறிலள்
ஆபத்து மிக்க திசையிலும் சங்க சக்ர கதா பாணே-என்றாள் இ றே
இங்ஙனே சொல்லும் இராப்பகல் என்செய்கேன்?–
சொல்லித் தலைக் கட்ட மாட்டாதே -மீளவும் மாட்டாதே -இப்படி சர்வ காலமும் சொல்லா நின்றாள் –
நான் ஸ்த்ரீத்வத்தை பார்த்து மீளப் பண்ணவோ -சொல்லித் தலைக் கட்டப் பண்ணவோ -என்கிறாள் –

——————————————————————————————————————-

உன் மகள்- நீ இட்ட வழக்கு அன்றோ – அவளுக்கு ஹிதம் சொல்லாய் என்றவர்களைக் குறித்து தான் சொல்லிற்றுக் கேளாதே
அவனை ஆசைப் பட்டு மிகவும் அவசன்னையாக நின்றாள் என்கிறாள் –

என் செய்கேன்? என்னுடைப் பேதை,என் கோமளம்,
என் சொல்லும் என் வசமும் அல்லள்; நங்கைமீர்!
மின்செய் பூண் மார்பினன் கண்ணன் கழல் துழாய்
பொன்செய் பூண் மென்முலைக்கு என்று மெலியுமே.–4-2-10-

என் செய்கேன்? என்னுடைப் பேதை
சொன்ன ஹிதம் கேட்க்கும் பருவம் அன்று
,என் கோமளம்,
ஹிதம் கேட்க்கிலள் என்று விட ஒண்ணாத படி வியஸன சஹம் இல்லாத ஸுகுமார்யத்தை உடையவள்
என் சொல்லும் என் வசமும் அல்லள்;
சொன்ன ஹிதம் கேட்பதும் செய்யாள் -ஹிதம் சொல்லலாம் படியும் இருக்கிறிலள்
நங்கைமீர்!
இவளை பெற்ற என்னைப் போல் அன்றிக்கே நீங்கள் பூரணைகள் இ றே
இவளைப் போலே இருக்கும் பெண் பிள்ளையை பெறாதவர்கள் ஆகையால் குறை வற்றவர்கள் இ றே
மின்செய் பூண் மார்பினன்
மின்னா நின்ற ஆபரணம் உண்டு -ஸ்ரீ கௌஸ்துபம் -அத்தை திரு மார்பிலே உடைய கிருஷ்ணனுடைய திருவடிகளில்
திருத் துழாய் விரஹ வைர்ண்யத்தையே ஆபரணமாக உடைய முலைக்கு –
பொன்னாலே செய்த ஆபரணத்தை உடைய முலை என்றுமாம்
ஸ்ரீ கௌஸ்துபம் புருஷோத்தம லக்ஷணம் ஆனால் போலே விரஹத்தில் வைவர்ணயம் ஸ்த்ரீத்வ லக்ஷணம் இ றே
கண்ணன் கழல் துழாய்-பொன்செய் பூண் மென்முலைக்கு என்று மெலியுமே.
விரஹத்தாலே துவண்ட முலைக்கு வேணும் என்று சொல்ல நினைத்து முடியச் சொல்ல மாட்டாதே மெலியா நின்றாள்
மணி மிகு மார்பினில் முல்லை போது என் வன முலை கமழ்வித்து -என்கிற படியே ஸ்ரீ கௌஸ்துபம் தன் முலையிலே அழுந்த
அணைக்க ஆயிற்று இவள் ஆசைப்படுகிறது –
மெலியுமே.-
இவள் மெலியா நின்றாள் -நான் என் செய்கேன் -இவளுடைய அவஸ்தை இருக்கிற படியால் இவளைக் கிடைக்க மாட்டாதாய் இரா நின்றது
-நான் எங்கனே ஜீவிக்கக் கட வேன்-என்கிறாள் –

——————————————————————————————–

நிகமத்தில்-இத் திரு வாய் மொழியை அப்யஸிக்க வல்லார் அயர்வறும் அமரர்களுக்கு சத்ருசர் ஆவார் -என்கிறார்

மெலியும் நோய் தீர்க்கும் நம் கண்ணன் கழல்கள் மேல்
மலிபுகழ் வண் குருகூர்ச் சடகோபன் சொல்
ஒலிபுகழ் ஆயிரத்து இப்பத்தும் வல்லவர்
மலிபுகழ் வானவர்க்கு ஆவர் நற்கோவையே.–4-2-11-

மெலியும் நோய் தீர்க்கும் நம் கண்ணன் கழல்கள் மேல்
இவ் வவ சாதனம் எல்லாம் தீரும்படி வந்து முகம் காட்டின கிருஷ்ணன் திருவடிகளில் –
மெலியும் என் செய் கேன்-என்று கை விட்டாள் திருத் தாயார் –
உடையவர்கள் கை விடார்கள் இ றே
நம் கண்ணன்-தாஸாம் ஆவிர் பூத் ஸவ்ரி என்று இப்படிப் பட்ட ஆபத்துக்களில் வந்து முகம் காட்டும் என்ற பிராமண பிரசித்தி
மலிபுகழ்- வண் குருகூர்ச் சடகோபன் சொல்
கிட்டாதவற்றையும் அனுபவிக்க ஆசைப் பட்டார் என்னும் புகழ் மிக்கு இருக்கிற ஆழ்வார் சொன்னது
ஒலிபுகழ் ஆயிரத்து இப்பத்தும் வல்லவர்-
ஆர்த்தியை விளைக்க வல்லவன்-பரிஹரிக்க வல்லவன் -அது தன் பேறாய் இருக்க வல்லவன் என்கிற கல்யாண குணங்களை
வ்யக்தமாகச் சொல்லுகிற இப்பத்தையும் அப்யஸிக்க வல்லவர்கள்
மலிபுகழ் வானவர்க்கு ஆவர் நற்கோவையே-
நித்ய அனுசந்தானம் பண்ணா நிற்க செய்தே விடாய் மிக்கு இருப்பவர் என்னும் புகழை உடைய நித்ய ஸூரிகளுக்கு -நல்ல சேர்த்தியாவர் –

————————————————————————————————-

கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

திருவாய்மொழி இருபத்து நாலாயிரப்படி -4-1–

August 30, 2016

த்வயத்தில் உத்தர கண்டார்த்தத்தை அருளிச் செய்தார் கீழ் மூன்று பத்தாலும்-
இனி மூன்று பத்தாலே பூர்வ கண்டார்த்தத்தை அருளிச் செய்கிறார் –
கீழ் பகவத் அனுபவத்தால் ஹ்ருஷ்டரானவர் அந்த ப்ரீதி ப்ரகரஷத்தாலே இவ்விஷயத்தை ஒழிய ஐஸ்வர்யாதிகளில் மண்டி
கிடக்கிறவர்களைப் பார்த்து –இவர்கள் இவற்றினுடைய அல்ப அஸ்திரத்வாதி தோஷங்களை அறியாமையால் இவற்றை விரும்புகிறார்கள் -என்று
இவற்றினுடைய தோஷங்களை உபபாதியா நின்று கொண்டு பரம புருஷார்த்த பூதனான எம்பெருமான் திருவடிகளை ஆஸ்ரயின்கோள் -என்கிறார்
வீடுமின் முற்றவும் -திருவாய் மொழியில் பகவத் ஸமாச்ரயணத்தில் நோக்கு
சொன்னால் விரோதம் – திருவாய் மொழியில் பகவத் அர்ஹ காரணங்களைக் கொண்டு அபிராப்தமாய் நிஷ் பிரயோஜனமான விஷயங்களை
கவி பாடி பாழே போக்காதே கொள்ளுங்கோள் என்றார்
அத்தாலே ஸித்தித்த த்ரவ்யமும் அஸ்திரம் என்கிறது இதில் –

—————————————————————————————————————————–

முதல் பாட்டில் சர்வ பவ்மரானவர்கள் ராஜ்யத்தை இழந்து இரந்து ஜீவிக்கும் படி துர்க்கதராவார் –
ஆனபின்பு நித்ய ஸ்ரீ யான சர்வேஸ்வரனைப் பற்றப் பாருங்கோள் என்கிறார் –

ஒரு நாயகமாய் ஓட உலகு உடன் ஆண்டவர்
கருநாய் கவர்ந்த காலர் சிதைகிய பானையர்
பெரு நாடு காண இம்மையிலே பிச்சை தாம் கொள்வர்
திரு நாரணன் தாள் காலம் பெறச் சிந்தித் துய்ம்மினோ.–4-1-1-

ஒரு நாயகமாய்
சர்வ பூமிக்கும் வேறு எதிர் இன்றிக்கே-ஏகாதிபதிகளாய் -பதிம் விஸ்வஸ்ய-என்கிற சர்வேஸ்வரனாக வாய்த்து பாவிப்பது
ஓட
காலமும் அறுபதினாறாயிரம் ஆண்டு இ ரே சக்கரவர்த்தி ஜீவித்தது -அப்படியே நெடும் காலமும்
உலகு உடன் ஆண்டவர்
தன்னோடே லோகம் மருவும்படி ஆண்டவர் என்னுதல்-
பாபம் பண்ணினார் முன்னே கையும் வில்லுமாய் நின்ற சகஸ்ர பாஹ்வர்ஜுனனைப் போலே-லோகம் எங்கும் ஆண்டவர் என்னுதல்
அகார்யசிந்தா சமகாலமேவ -என்கிறபடியே பாபம் செய்தவர் முன்பே கையும் வில்லுமாய்க் கொண்டு போந்த கார்த்த வீர்ய அர்ஜுனனைப் போலே என்னுதல்
ராஜ்யம் நாம் மஹாவியாதி ரசிகித் ஸ் யோ வி நாசன -ப்ராதரம் வா ஸூதம்வா அபி த்யஜந்தி கலு பூமி பா –
கருநாய் கவர்ந்த காலர்-
ராஜ்யத்தை இழந்து -பிக்ஷை ஒழிய ஜீவனம் இன்றிக்கே பகலில் புறப்பட லஜ்ஜித்து இருளிலே புறப்பட்டால் இருள் செறிவு போலே
கிடந்த நாய்களின் வாயிலே காலை இடுகையாலே அவற்றால் கவ்வப்பட்ட காலை உடையவர்
கரு நாய் -கருமை -சீற்றமாய் -வெட்டிய நாய் என்றுமாம்
கரு நாய் -குட்டியிட்ட நாய் என்றுமாம்
முன்பு ஸார்வ பவ்மன் என்று சொல்லுமதுவும் போய் நாய் கவர்ந்த காளான் என்று நிரூபகமாய் –
சிதைகிய பானையர்-
கண்ட இடம் எல்லாம் பொளிந்து-உபயோக அர்ஹம் இன்றிக்கே பொகட்டு கிடந்தது ஒன்றை எடுக்கும் –
பண்டு பொன் காலத்தில் அல்லது ஜீவியானே
பெரு நாடு காண
முன்பு ராஜாக்கள் தங்களைக் காண அவசரம் பெறாதே நிற்கும் படி இருந்தவர்கள் இருந்ததே குடியாக திரண்டு காணும் படி-

தாங்கள் சம்ருத்தராய் வாழ்ந்த தேசத்தில் உள்ளார் எல்லாரும் காணும் படி
இம்மையிலே
தாங்கள் ஜீவித்த ஜென்மத்திலே
பிச்சை தாம் கொள்வர்
முன்பு ராஜாக்களுக்கு ராஜ்யம் வழங்கும் –
இன்று பிக்ஷை தனக்குத் தேட்டமாய் இருக்கும் –
முன்பு ராஜாக்கள் ரத்நாதிகளை பச்சையாகக் கொண்டு வந்தால் அநாதரித்து இருக்குமவனுக்கு பிக்ஷை திட்டமான படி
முன்பு ராஜாக்கள் கொண்டு வந்த பச்சையை ஆள் இட்டு இ றே வாங்குவது
இப்போது இவன் அபேக்ஷையே போக்கி இடுவார் இல்லை ராஜ்ய ஸ்ரீ இங்கனே யானபின்பு
திரு நாரணன்
இடர் கெடுத்த திருவாளன் இணை அடி-
தத்ர நாராயண ஸ்ரீ மான்
ஸ்ரீயபதியை ஆஸ்ரயிங்கோள்
ஒரு மிதுனம் இ றே ஆசிரயணீயமும் ப்ராப்யமும் -ஒரு மிதுனத்துக்கு இ றே சேஷம் இ றே இது
தாள்
சேஷ பூதம் பற்றுவது திருவடிகளை இ றே
காலம் பெறச் –
ஜீவிதும் மரணாந்தம் ஹி ஜராந்தே ரூபா யவ்வனே சம்பதச்ச வி நா சாந்தா ஜானன் கோ த்ருதிமாப் நுயாத்-
நாளை செய்கிறோம் என்னுமது அன்று
யன் முஹூர்த்தம் க்ஷணம் வாபி வா ஸூ தேவோ ந சிந்தயந்தே
வா ஸூ தேவ தருச்சாய சாகி மர்த்தம் ந ஸேவ்யதே
சிந்தித் துய்ம்மினோ-
ரக்ஷகன் என்கிற ப்ரபத்தியே அமையும் -ப்ரபத்திக்கும் இதுவே அர்த்தம் என்கிறார்
நினைவோடு வ்யாப்தமாயிற்று உஜ்ஜீவனம் இருப்பது
அனர்த்தம் எல்லாருக்கும் ஒத்து இருக்கையாலே எல்லாரையும் அபேக்ஷிக்கிறார் –

————————————————————————————————————-

ராஜ்யத்தை இழக்கையே யன்றிக்கே சத்ருக்கள் கையிலே அபிமதைகளான ஸ்த்ரீகளையும் பறி கொடுப்பர் -என்கிறார் –

உய்ம்மின் திறை கொணர்ந்து’ என்று உலகு ஆண்டவர் இம்மையே
தம் மின்சுவை மடவாரைப் பிறர் கொள்ளத் தாம் விட்டு
வெம்மின் ஒளி வெயில் கானகம் போய்க் குமைதின்பர்கள்;
செம்மின் முடித் திரு மாலை விரைந்து அடி சேர்மினோ. –4-1-2-

உய்ம்மின் திறை கொணர்ந்து’
ராஜாக்களை -உங்கள் சர்வஸ்வத்தையும் தந்து பிராணனைக் கொண்டு பிழைத்துப் போங்கோள் -என்றாய்த்து சொல்வது
பீஷாஸ்மாத் வாத பாவத-என்கிற அத்தை அநு கரிக்கிறார்கள்
என்று உலகு ஆண்டவர்
படையும் குதிரையும் கொண்டு திறை கொள்ள வேண்டா -ஒரு யுக்தி மாத்திரத்தாலே லோகத்தை அடையச் செலுத்தினவர்கள்
இம்மையே-
இப்படி வாழ்ந்த இந்த ஜென்மம் தன்னிலே
தம் மின்சுவை மடவாரைப் பிறர் கொள்ளத்
தங்களுக்கு போக்யைகளாய் அசாதாரணை களான ஸ்திரீகளை சத்ருக்கள் பரிக்ரஹிக்க
நஹுஷன் இந்திராணியை ஆசைப் பட்டதும் துரியோதனன் திரௌபதியை ஆசைப்பட்டதும் உதா ஹரணம்
தாம் விட்டு-
பிராண ரக்ஷணத்துக்காக தாங்களே பிரார்த்தித்து விட்டு
வெம்மின் ஒளி வெயில் கானகம் போய்க்
அவர்களுக்குச் செல்லும் நாட்டிலே வர்த்திக்கப் பெறாதே நிர்மானுஷமான காட்டிலே போய்
வெவ்விய மின்னொளி உண்டு -பேய்த்தேர் -அத்தையும் வெயிலையும் உண்டான காடு என்னுதல்
குமைதின்பர்கள்;
இவர்கள் போன இடத்தே சத்ருக்களாலே நலிவு படுவர்கள்-தப்பித் போனாலும் வி நாசத்தோடே யாயிற்றுத் தலைக் கட்டுவது
செம்மின் முடித் திரு மாலை விரைந்து –
இப்படி பரிபூதராகாதே வாழ வேண்டி இருக்கில் -சிவந்து மின்னா நின்ற திரு அபிஷேகத்தை உடைய ஸ்ரீ யபதியை ஆஸ்ரயிங்கோள் –
ஆஸ்ரயித்தார் தலையிலே வைக்க முடி உண்டு -தருவிப்பாரும் உண்டு என்கை -விரையாமையால் உள்ள இழவே உள்ளது -அவன் மூடியைத் தரிலும்
அடி சேர்மினோ. –
திருவடிகளில் தலையைச் சேருங்கோள் –யாவன்ன சரணவ் ப்ராது –

————————————————————————————————————-

ராஜாக்கள் தங்கள் காலிலே விழுந்தால் அநாதரித்து இருக்கும் மதிப்புடையவர்கள் ஒரு சேதனன் என்று
ஒருவர் நினையாத படி மதிப்பு அறுவர்கள் என்கிறார் –

அடி சேர் முடியினர் ஆகி அரசர்கள் தாம் தொழ
இடி சேர் முரசங்கள் முற்றத்து இயம்ப இருந்தவர்
பொடி சேர் துகளாய்ப் போவர்கள் ஆதலில் நொக்கெனக்
கடி சேர் துழாய் முடிக் கண்ணன் கழல்கள் நினைமினோ.–4-1-3-

அடி சேர் முடியினர் ஆகி
தூரத் தண்டன் இடுகை அன்றிக்கே-தங்கள் முடியும் இவன் காலும் சேரும்படி தண்டன் இடுகை
அரசர்கள்
ஈஸ்வர அபிமானிகள்
தாம் தொழ
ஸ்ரீ பாதத்தே தண்டன் இடப் பெற்றோம் என்று அந்தரங்க சேவை பண்ணினாராய் திருப்தராவார்கள்
இவன் அநாதரித்து இருக்க தான் அறிந்த அறிவாக தொழுது என்றுமாம்
இடி சேர் முரசங்கள் முற்றத்து இயம்ப இருந்தவர்
இடி போலே இருந்த வாத்தியங்கள் முற்றத்திலே முழங்க இருந்தவர்
வந்தவர் தண்டன் இட்டுக் கிடக்க அநாதரித்து ஆடல் பாடல் கண்டு இருந்தான் ஆயத்து
சிரஸா யாசதஸ் தஸ்ய என்னும் விஷயத்தை அன்றே தண்டன் இட்டது
பொடி சேர் துகளாய்ப் போவர்கள்
பொடியோடு சேர்ந்த தூளியாய்ப் போவர்கள்
தனித்து பிரதிபத்தி பண்ண ஒண்ணாதே ஒன்றோடு கூட்டி பிரதிபத்தி பண்ண வேண்டும்படி யாவார்கள்
துகைத்தால் ஒரு சேதனன் என்று கூச வேண்டாம் படி மதிப்பு அறுவர்கள்
ஆதலில் நொக்கெனக்
ஆனபின்பு சடக்கென
கடி சேர் துழாய் முடிக் கண்ணன் கழல்கள் நினைமினோ.–
ஸர்வேச்வரத்வ ஸூ சகமான திருத் துழாய் மாலையால் அலங்க்ருதமான கிருஷ்ணன் திருவடிகளை நினையுங்கோள் –
திருமுடியோட்டை ஸ் பர்சத்தாலே நாள் செல்ல நாள் செல்ல பரிமளம் பரிமளம் மிகா நிற்கை
பரிகர மது ஸூதன ப்ரபந்நான் -என்று யமாதிகள் அஞ்சும் மதிப்பை பெறுவர் –

———————————————————————————————————-

ஐஸ்வர்யமும் மதிப்பும் அன்று நிலை நில்லாதது போக்தாக்களும் சபரிகரமாக நசிப்பர் என்கிறார் –

நினைப்பான் புகின் கடல் எக்கலின் நுண் மணலிற் பலர்
எனைத்தோர் உகங்களும் இவ்வுலகு ஆண்டு கழிந்தவர்
மனைப்பால் மருங்கு அற மாய்தல் அல்லால் மற்றுக் கண்டிலம்
பனைத்தாள் மத களிறு அட்டவன் பாதம் பணிமினோ.–4-1-4-

நினைப்பான் புகின்
கடலிலே இழிந்தாரைப் போலே எல்லை காணப் போகாது -என்னுதல்
தாம் லோக யாத்திரையை நினையாதவர் என்னுதல்
கண்டு ஆற்றேன் என்ற பர துக்க அஸஹிஷ்ணுக்கள் -என்னுதல்
கடல் எக்கலின் நுண் மணலிற் பலர்
கடலில் எக்கலில் நுண்ணிய மணலில் அநேகர்
எனைத்தோர் உகங்களும்
அநேக யுகங்கள்
இவ்வுலகு ஆண்டு கழிந்தவர்-முடிந்தவரை
சகஸ்ர யுக பயந்த மஹர்யத் ப்ரஹ்மணோ விது
கங்கா யாஸ் சிகதாதாரா யதா வர்ஷதி வாஸவே-சகியா கணயிதும் லோகே நவ்ய தீதா பிதாமஹா
மனைப்பால் மருங்கு அற மாய்தல் அல்லால் மற்றுக் கண்டிலம்
வாழ்ந்த மனையிடம் -மருங்கு -பார்ஸ்வம் -அற-இரண்டுக்கும் பேதம் தெரியாதபடி
கனக்க ஜீவித்தான் ஆகில் அசலிட்டு பார்வஸ்த்தர்க்கும் அநர்த்தமாம்
பெரு மரம் விழும் போது அருகு நின்றவற்றையும் நசிப்பிக்கும்
நசிக்குமது ஒழிய ஸ் திதரராய் இருப்பார் ஒருவரையும் கண்டிலோம்
பனைத்தாள் மத களிறு அட்டவன் பாதம் பணிமினோ.–
பனை போலே பயாவஹமான காலை யுடைத்தாய் மத்த கஜமான குவலயா பீடத்தை கொன்றவன் திருவடிகளில் தலை சாயுங்கோள் –
கீழ்ப் பாட்டில் மாம் -இன் அர்த்தம் -இதில் அஹம் -இன் அர்த்தம் -வலிய பிரதிபந்தகங்களை நிரயத்னமாக தள்ள வல்லவனை ஆஸ்ரயிங்கோள் –

————————————————————————————————————-

செல்வக் கிடப்போ பாதி அங்கநா சம்ச்லேஷ ஸூ கமும் அஸ்திரம் என்கிறார் –

பணிமின் திருவருள் என்னும் அம் சீதப் பைம் பூம் பள்ளி
அணி மென் குழலார் இன்பக் கலவி அமுது உண்டார்
துணி முன்பு நாலப் பல் ஏழையர் தாம் இழிப்பச் செல்வர்
மணி மின்னு மேனி நம் மாயவன் பேர் சொல்லி வாழ்மினோ.–4-1-5-

பணிமின் திருவருள் என்னும்-
படுக்கையில் ஸ்திரீகளை வைத்து தான் தாழ நின்று திரு உள்ளத்து ஓடுகிறது என்-அருளிச் செய்யலாகாது -என்னுமாயிற்று
தன்னை ஒழிந்தார் எல்லாரும் தன்னை அனுவர்த்திக்க தான் ஸ்திரீகளை அனுவர்த்திக்கிறான் இ றே -தன் ரசிகை தோற்ற
அம் சீதப் பைம் பூம் பள்ளி
தர்ச நீயமாய் குளிர்ந்து பரந்த பூவாலே செய்த படுக்கையிலே யாயிற்று அவர்களை வைப்பது
அணி மென் குழலார்
இவர்கள் கொண்டாட்டத்தை அநாதரித்து குழலைப் பேணுவது –ஆபரணத்தை திருத்துவது ஆகா நிற்பர்கள்
இன்பக் கலவி அமுது உண்டார்
அவர்கள் அநங்கீகார பிரமுகமான சம்ச்லேஷத்தால் வந்த ஆனந்த அம்ருதத்தை புஜித்தவர்கள்
அல்லி மலர் மகள் போக மயக்குகளை அனுகரிக்கிறார்கள்
பணிமின் திருவருள் -என்கிற இத்தை அணி மென் குழலாரிலே சேர்த்து நிர்வஹிப்பார்கள் பூர்வர்கள்
பட்டர் இன்பக் கலவி அமுது உண்டாரிலே சேர்த்து நிர்வஹிப்பர்
துணி முன்பு நாலப்
அந்த ஸ்திரீகளை வேறே சிலர் அபஹரித்து அனுபவிக்கிற இடத்திலே தன் சாபல அதிசயத்தாலே துணியாய் பின்புத்தைக்கு எட்டாம் போராமையாலே
முன்பை மறைத்து செல்வர்கள்-சாடீ மாச்சாத்திய துச்சதாம் -என்ற த்ரிஜடைனைப் போலே
பல் ஏழையர் தாம்
முன்பு இவனை ஒழிய தங்களுக்கு செல்லாத சபலைகள் ஆனவர்கள் தாங்களே
இழிப்பச்
இவனுடைய கார்ப்பண்யத்தையும் கார்ஸ்யத்தையும் சொல்லி அநாதர வசனங்களை பண்ண
செல்வர்
தம்மோட்டை பாவ பந்தத்தாலே யன்றோ சொல்லுகிறது -என்று அத்தையும் புத்தி பண்ணாதே செல்வர்
திருஷ்ணை கா நிருபத்ரவா -இ றே
மணி மின்னு மேனி
ஆனபின்பு பக்தா நாம் என்று இருக்குமவன் உடம்பை பற்றுங்கோள்
ஏஷ சர்வஸ்வ பூதஸ்து -ஸூ லபமாய் நிரவாதிக தேஜோ ரூபமான வடிவை உடையவன்
நம் மாயவன்
ஆஸ்ரித விஷயத்தில் செய்தது போராது என்று இருக்குமவன்
இப் பேற்றுக்கு செய்ய வேண்டுவது என் என்னில்
பேர் சொல்லி வாழ்மினோ.–
திரு நாமத்தைச் சொல்லி நிரதிசய போகத்தில் அந்வயின்கோள் –

—————————————————————————————————————

நாட்டிலே நிலை நிற்க ஜீவிக்கிறாரும் சிலர் இல்லையோ என்னில் -ஸ்ருஷ்ட்டி காலம் தொடங்கி இற்றை யளவும்
வர ஏக ரூபமாக ஜீவித்தார் ஒருவரும் இல்லை -என்கிறார் –

வாழ்ந்தார்கள் வாழ்ந்தது மாமழை மொக்குளின் மாய்ந்து மாய்ந்து
ஆழ்ந்தார் என்று அல்லால், அன்று முதல் இன்று அறுதியா
வாழ்ந்தார்கள் வாழ்ந்தே நிற்பர் என்பது இல்லை ; நிற்குறில்
ஆழ்ந்தார் கடற் பள்ளி அண்ணல் அடியவர் ஆமினோ.–4-1-6-

வாழ்ந்தார்கள் வாழ்ந்தது-
லோகத்தில் ஜீவித்தவர்கள் ஜீவித்தது இவர் வி நாசமாக நினைத்து இருக்குமத்தை இ றே அவர்கள் வாழ்வாக நினைத்து இருக்கிறது
இன்னம் கெடுப்பாயோ -என்றார் இ றே இவர் –
மாமழை மொக்குளின்
பெரு மழைக் குமிழி போலே -ஜல புத்புத வத்சமம் -மா மழை என்கிறது அநந்தரம் விழும் துளியோடே வசிக்கும் என்கைக்காக
மாய்ந்து மாய்ந்து
நசித்து நசித்து
ஆழ்ந்தார் என்று அல்லால், அன்று முதல் இன்று அறுதியா
வாழ்ந்தார்கள் வாழ்ந்தே நிற்பர் என்பது இல்லை ;
ஜீவித்த நாள் பண்ணின பாபத்தாலே அதோ கதியில் விழுமது ஒழிய ஸ்ருஷ்ட்டி காலமே தொடங்கி இற்றை அளவும் வர ஜீவித்தவர்கள் ஒருபடிப்பட
ஜீவித்தார்கள் என்னும் அர்த்தம் தான் முதலிலே இல்லை -அர்த்தம் தான் முதலிலே உண்டாகில் இறே இவர்களுக்கு உண்டு இல்லை என்ன வேண்டுவது
நிற்குறில்-
நிலை நின்ற புருஷார்த்தம் வேண்டி இருக்கில்
ஆழ்ந்தார் கடற்-
ஆழ்ந்து ஆர் கடல் -ஆழ்ந்து பரந்த கடலை
பள்ளி அண்ணல் அடியவர் ஆமினோ.–
படுக்கையாக உடைய சர்வேஸ்வரன் –
உறுத்தாத படி ஆழத்தையும் அங்குசிதமாக கண் வளர்ந்து அருளுகைக்கு பரப்பையும் உடைத்தாகை-
திருப் பாற் கடலிலே வந்து கண் வளர்ந்தது -கர்ம நிபந்தனமாக அன்று இ றே -ஆஸ்ரயணீயன் ஆகைக்காக இ றே
அவன் நினைவோடு சேர ஸ்வரூப அனுகுணமான புருஷார்த்தை பற்றுங்கோள்
ஆமின் –
சேஷம் அல்லாத வஸ்து இன்று சேஷம் ஆயிற்றாக நினைத்து இருக்கும் சர்வேஸ்வர அபிப்ராயத்தாலே சொல்லுகிறது –

—————————————————————————————————————

அன்ன பாநாதி போகங்களும் அநித்தியம் என்கிறார் –

ஆமின் சுவை அவை ஆறோடு அடிசில் உண்டு ஆர்ந்த பின்
தூமென் மொழி மடவார் இரக்கப் பின்னும் துற்றுவர்,
‘ஈமின் எமக்குஒரு துற்று’என்று இடறுவர் ; ஆதலின்,
கோமின் துழாய்முடி ஆதிஅம் சோதி குணங்களே.–4-1-7-

ஆமின் சுவை –
இனிதான சேவை -ஆம் -என்றது ஆன என்றபடி -சித்தமானவை என்கை
அவை ஆறோடு
ஷட் ரசம் என்று பிரசித்தமானவற்றோடு கூட
அடிசில்
அடிசில் என்று ஷேபிக்கிறார்-முதலியார் என்றும் -அடிசில் என்னும் இ றே வ்யவஹரிப்பது
உண்டு ஆர்ந்த பின்
பூர்ணமாக ஜீவித்த பின்
தூமென் மொழி மடவார் இரக்கப் பின்னும் துற்றுவர்,
பரிவாலும் பேச்சின் இனிமையாலும் மறுக்க ஒண்ணாத படி அசாதாரணை களான ஸ்த்ரீகள் இரக்கப் பின்னும் ஜீவிக்குமவர்கள்
‘ஈமின் எமக்குஒரு துற்று’என்று இடறுவர் ;
அவர்களை வேறே சிலர் கொண்டு போன இடங்களிலே தன் வயிறு வாழாமையால் சென்று -எல்லாருமாக எனக்கு ஒரு பிடி தர வேணும் -என்னும்
எமக்கு -பண்டு அல்லது கண்டால் தன் வாயில் இடாதே அவர்களுக்கு கொடுக்குமவன் தன் செல்லாமையாலே எமக்கு என்கிறான் இ றே
இடறுவர்-அவர்கள் முகம் பாராது ஒழிந்தாலும் தட்டித் திரிவர்
ஆதலின்,
ஜீவத்தினுடைய நிலையாமை இதுவான பின்பு
கோமின் துழாய்முடி ஆதிஅம் சோதி குணங்களே.–
ஜகத் காரண பூதனாய் நிரவதிக ஸுந்தர்ய உக்தனாய் -ஒப்பனை அழகை உடையனான ஈஸ்வரனுடைய
நிரவதிக கல்யாண குணங்களை சேர்த்து அனுபவியுங்கோள் –
அந்நாத– சோஸ்னுதே-என்று -ஓவாத ஊணாக உண்-என்கிறபடியே அனுபவியுங்கோள்

—————————————————————————————————————

ராஜ்யத்தின் உடைய அஸ்தைர்யம் புருஷ தோஷத்தால் அன்றோ -இவன் திருந்தவே அதுவும் ஸ்திரம் ஆகாதோ என்னில்
ஆனாலும் இந்திர ராஜ்யாதி போகங்கள் எம்பெருமானை ஆஸ்ரயியா விடில் கிடையா -ஆஸ்ரயித்துப் பெற்றாலும்
அவை தன் ஸ்வ பாவத்தால் நிலை நில்லா -ஆனபின்பு அவன் தன்னையே ஆஸ்ரயிங்கோள் என்கிறார் –

குணங்கொள் நிறை புகழ் மன்னர் கொடைக்கடன் பூண்டிருந்து
இணங்கி உலகு உடன் ஆக்கிலும், ஆங்கு அவனை இல்லார்
மணங்கொண்ட போகத்து மன்னியும் மீள்வர்கள்; மீள்வு இல்லை;
பணங்கொள் அரவணையான் திரு நாமம் படிமினோ.–4-1-8-

குணங்கொள் நிறை புகழ் மன்னர்
குணவான்களாய் குண வத்தா பிரதையையும் உடையராய் இருக்கை-குணவான் ஆகிலும் அப்ராப்தான் ஆகில் உபேக்ஷிப்பார்கள்
மன்னர் -அபிஷிக்த ஷத்ரிய புத்ரராகை-பிறப்பித்தார் ஆகிலும் கிட்டுவார் இல்லையே லுப்தனாகில்
கொடைக்கடன் பூண்டிருந்து-
கொடுக்கையே ஸ்வ பாவமாய் இருப்பது -உதாரமாய் கொடை வழங்கினாலும் மேன்மை பாவித்து இருக்குமாகில் பொருத்தம் இன்றிக்கே இருக்கும் இ றே
இணங்கி
எல்லோரோடும் பொருந்தி வர்த்திக்கை
உலகு உடன் ஆக்கிலும்,
லோகத்தை தங்களோடு சேர்த்துக் கொண்டார்களே யாகிலும் -ராமோ ராஜ்யம் உபாசித்தவா -என்னக் கடவது இ றே
ஆங்கு அவனை இல்லார்
அவன் பிரசாதம் அடியாக பெறாதார்க்கு ராஜ்யம் தான் கிடையாது
மணங்கொண்ட போகத்து
செவ்வியை உடைத்தான் ஐஸ்வர்யம்
மன்னியும் மீள்வர்கள்-
அது கிட்டினாலும் அதுக்கு அஸ்திரத்வம் ஸ்வ பாவம் ஆகையால் மீள்வர்கள்
மீள்வு இல்லை;
புநாரா வ்ருத்தி இல்லை -எத்தாலே என்னில்
பணங்கொள் அரவணையான் திரு நாமம் படிமினோ.–
ஸ்வ ஸ் பர்சத்தாலே விகசிதமான பணங்களை உடைய திரு அனந்த ஆழ்வானை நிரூபகமாக் உடையவனுடைய திரு நாமங்களில் பிரவணர் ஆகுங்கோள்
திரு நாமத்தால் பிரவண ரானாரை திரு வனந்த ஆழ்வானோ பாதி விடான் என்கை
ஏவம்வித் பாதே நாத்யா ரோஹதி -என்னும் படுக்கையை உடையவன் என்றுமாம்
பலாபிசந்தி ரஹிதமாக தான தர்மத்தை அனுஷ்ட்டித்து எம்பெருமானை உத்தேச்யம் ஆக்காதே பலாபிசந்தி யுக்தமாக
அனுஷ்ட்டித்து ஸ்வர்க்காதி போகங்களை பற்றினால் நிலை நில்லா என்றுமாம் –

—————————————————————————————————————

கீழ் எட்டுப் பாட்டாலே ஐஹிக போகம் அஸ்திரம் என்றது -ஐஹிகமான ராஜ்யாதிகளே என்று நிலை நில்லாதவை
உடம்பை ஒறுத்து பெறும் ஸ்வர்காத் ஐஸ்வர்யங்களும் நிலை நில்லாதன என்கிறார் –

படி மன்னும் பல்கலன் பற்றோடு அறுத்து,ஐம் புலன்வென்று,
செடி மன்னு காயம் செற்றார்களும், ஆங்கு அவனை இல்லார்
குடி மன்னும் இன் சுவர்க்கம் எய்தியும் மீள்வர்கள்; மீள்வு இல்லை;
கொடி மன்னு புள்ளுடை அண்ணல் கழல்கள் குறுகுமினோ. –4-1-9-

படி மன்னும் பல்கலன்
க்ரமாதகமாய் வருகிற ஆபரண ஜாதங்கள் என்னுதல் -படி கால் படி கால் வருகிற ஆபரணம் -என்னுதல் –
பற்றோடு அறுத்து-
அவற்றை விட்டு வர்த்திக்கை இன்றிக்கே வாசனையும் போகை
,ஐம் புலன்வென்று,
அவற்றில் ருசிக்கு அடியானை இந்திரியங்களை ஜெயித்து -இந்திரியாணி புராஜித்வா –
செடி மன்னு காயம் செற்றார்களும்,
தபஸ் ஸூ க்குக்காக தீர்க்க அனுசந்தானத்தாலே தூறு மண்டும்படி சரீரத்தை செறுத்து தபஸைப் பண்ணினாலும் -நெறியார் குழல் கற்றை –
ஆங்கு அவனை இல்லார்-
அவன் பிரசாதம் ஒழிய அவன் தன்னை உத்தேச்யமாக பண்ணாத போது என்னவுமாம்
குடி மன்னும் இன் சுவர்க்கம் -பெற்றாலும் மீள்வர்கள்
எய்தியும் மீள்வர்கள்
பூமியிலே போலே அன்றிக்கே தீர்க்க காலம் இருக்கலாய் விலக்ஷணமான ஸ்வர்க்கம் பெற விரகு இல்லை –
மீள்வு இல்லை;
பு நாரா வ்ருத்தி இல்லை –
கொடி மன்னு புள்ளுடை அண்ணல் கழல்கள் குறுகுமினோ. –
ஆஸ்ரிதரை தனக்கு நிரூபகமாகக் கொள்ளும் சர்வாதிகன் திருவடிகளை கிட்டப் பாருங்கோள்
நித்ய ஆஸ்ரிதரோடு இன்று ஆஸ்ரயிக்கிறவனோடு வாசி அற முகம் கொடுக்குமவன் என்கை –

—————————————————————————————————————

ஐஸ்வர்யம் நிலை நில்லாது ஆகில் நிலை நின்ற புருஷார்த்தமான கைவல்யத்தை பற்றுகிறோம் என்ன –
கைவல்ய புருஷார்த்தம் துஸ் சாதம் என்றும் -அது தான் அபுருஷார்த்தம் என்றும் ப்ரதிபாதிக்கிறார் –

குறுக மிக உணர்வத்தொடு நோக்கி எல்லாம் விட்ட
இறுகல் இறப்பெனும் ஞானிக்கும் அப்பயன் இல்லையேல்,
சிறுக நினைவது ஓர் பாசம் உண்டாம்; பின்னும் வீடு இல்லை,
மறுகல் இல் ஈசனைப் பற்றி விடாவிடில், வீடு அஃதே.–4-1-10-

குறுக மிக உணர்வத்தொடு நோக்கி-
குறுக- கிட்ட விட்டு -தூரம் போய் விஷயங்களை க்ரஹிக்கும் மனசை ப்ரதயக்கர்த்த விஷயமாகி –
ப்ரத்யாஹ்ருந்த்ரியனுக்கே இ றே இவ்வநுஸந்தானம் உண்டாவது
மிக உணர்வத்தொடு நோக்கி-
அந்த மனசை ஞான ஸ்வரூபனான ஆத்மாவோடு சேர்த்து ஆத்ம பிரவணம் ஆக்கி
மிக நோக்கி -விசத தமமாக அனுசந்தித்து -ஆத்ம அவலோகனத்தை பண்ணி
எல்லாம் விட்ட
ஐஸ்வர் யத்தோடு பகவத் அனுபவத்தோடு வாசி அற விட்ட
இறுகல் இறப்பெனும் ஞானிக்கும்
இந்த சங்கோசத்தையும் மோக்ஷமாக நினைத்து இருக்கும் ஞான நிஷ்டனுக்கும்
இறுகல்-பகவத் அனுபவத்தைப் பற்ற தமக்கு சங்குசிதமாய் இருக்கை
இறப்பு -மோக்ஷம்
அப்பயன் இல்லையேல்,-
எம்பெருமானை சுபாஸ்ரயமாக பற்றா விடில் ஆத்ம அனுசந்தானம் பண்ண ஒண்ணாது
இவர் தாம் பிரயோஜனமாக நினைத்து இருக்கிறதை யாயிற்று அவன் ஆத்ம ப்ராப்திக்கு சாதனமாகப் பற்றுகிறது
சிறுக நினைவது ஓர் பாசம் உண்டாம்; –
தேவோஹம் மனுஷயோஹம்-என்கைக்கு அடியான பந்தம் உண்டாம் -அவித்யாதிகள் சதாசாதகமாக பணைக்கும்
பின்னும் வீடு இல்லை,-
அவனை சுபாஸ்ரயமாகப் பற்றினாலும் அந்திம ஸ்ம்ருதி இல்லையாகில் மோக்ஷ சித்தி இல்லை –ஆதிபரதனைப் போலே மானாய்ப் போம் இத்தனை
மறுகல் இல் ஈசனைப் பற்றி
ஹேய ப்ரத்ய நீகனாகவும் ஞான ஏக ஆகாரகனாகவும் அனுசந்தித்து அவனோடு சஜாதீயனாகவும் ஆத்மாவை அனுசந்தித்து
மறுகல் இல்-மறுகுகிற சமயத்தில் -சரீர விஸ்லேஷ சமயத்தில் என்னவுமாம் –
விடாவிடில், வீடு அஃதே.–
இப்படி துஸ் சாதகம் ஆகையால் -ஈஸ்வர சாபேஷம் யாகையாலும் -பகவத் அனுபவத்தை குறித்து தண்ணிது யாகையாலும்
தண்ணிது ஆனது தானே ஸ்த்திரம் ஆகையால் மிகவும் அபுருஷார்த்தம் ஆகையால் -அபிராப்த புருஷார்த்தம் ஆகையால்
அண்ணல் கழல்கள் குறுகுமினோ -என்று கீழ்ச் சொன்ன கைங்கர்யமே புருஷார்த்தம் –

—————————————————————————————————————-

நிகமத்தில் இது திருவாய் மொழி கற்றார் ஐஸ்வர்ய ஷூ த்ர புருஷார்த்தங்களை தவிர்ந்து பகவத் கைங்கர்ய ஏக போகர் ஆவார் -என்கிறார் –

அஃதே உய்யப் புகும் ஆறு என்று கண்ணன் கழல்கள் மேல்
கொய் பூம் பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன் குற்றேவல்
செய்கோலத்து ஆயிரம் சீர்த்தொடைப் பாடல் இவை பத்தும்
அஃகாமல் கற்பவர் ஆழ் துயர் போய் உய்யற் பாலரே.–4-1-11-

-அஃதே உய்யப் புகும் ஆறு என்று-
நான் சொன்னதுவே ஆத்மாவுக்கு உஜ்ஜீவன உபாயம் என்று
அது ஏது என்னில்
கண்ணன் கழல்கள் மேல்-நினைமினோ என்கிறது –
ஸூ லபனான கிருஷ்ணனை யாயிற்று கவி பாடிற்று –
கொய் பூம் பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன் குற்றேவல்-
நித்ய வசந்தமான சோலை சூழ்ந்த திரு நகரிக்கு நிர்வாஹகரான ஆழ்வார் யாயிற்று கவி பாடினார்
-செய்கோலத்து ஆயிரம்
கவிக்கு
செய் -செய்த கவி –வாசிகமான அடிமை என்னுதல்
கோலத்து ஆயிரம்–கவிக்கு சொல்லுகிற அலங்காரங்களால் குறைவற்று இருக்கை
சீர்த்தொடைப் பாடல் இவை பத்தும்
கல்யாண குணங்களை தொடுத்துச் சொன்ன இது திருவாய் மொழி
அஃகாமல் கற்பவர்
தப்பாமல் -இவற்றில் ஒரு பாட்டும் விடாதபடி கற்றால் ஆயத்து ஐஸ்வர் யாதிகளுடைய தோஷம் விசததமமாவது
ஆழ் துயர் போய் உய்யற் பாலரே.–
ஐஸ்வர் யாதிகளில் உபா தேய பாவத்தால் வரும் துக்கம் போய் -உஜ்ஜீவனமே ஸ்வ பாவமாக உடையவர் ஆவார்
காலம் பெறச் சிந்தித்து உய்ம்மினோ என்று தாம் சொன்னபடியை உடையராகை –

—————————————————————————————————————

கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

திருவாய்மொழி ஒன்பதினாயிரப்படி -4-1–

August 30, 2016

இப்படி எம்பெருமானை அனுபவித்து மிகவும் ப்ரீதரான ஆழ்வார் ஹர்ஷ ப்ரகரஷத்தாலே இவனை ஒழிய ஐஸ்வர் யாதிகளை
ஆசைப்பட்டுள்ளவர்களுக்கு -அவற்றினுடைய அல்ப அஸ்திரத்வாதி தோஷங்களைக் காட்டி ஹேயதையை சாதியா நின்று கொண்டு
பரம புருஷார்த்த பூதமான -எம்பெருமான் திருவடிகளை ஸமாச்ரியிங்கோள்-என்கிறார்
வீடுமின் முற்றவும் -பகவத் ஸமாச்ரயண ப்ரதிபாதன பரம்
இத்திருவாய் மொழி வைராக்ய ஜனன அர்த்தமாக இதர புருஷார்த்தங்களுடைய ஹே யதா ப்ரதிபாதன பரம் –

—————————————————————————————————————-

முதல் பாட்டில் சர்வ பவ்மரானவர்கள் ராஜ்யத்தை இழந்து இரந்து ஜீவிக்கும் படி துர்க்கதராவார் –
ஆனபின்பு நித்ய ஐஸ்வர்ய உக்தனான திரு நாராயணனுடைய திருவடிகளையே பரம ப்ராப்யமாக ஆஸ்ரயித்து உஜ்ஜீவியுங்கோள் என்கிறார் –

ஒரு நாயகமாய் ஓட உலகு உடன் ஆண்டவர்
கருநாய் கவர்ந்த காலர் சிதைகிய பானையர்
பெரு நாடு காண இம்மையிலே பிச்சை தாம் கொள்வர்
திரு நாரணன் தாள் காலம் பெறச் சிந்தித் துய்ம்மினோ.–4-1-1-

ஏகாதிபதிகமாய் நெடும் காலம் லோகத்தை எல்லாம் ஆண்டவர்கள் ராஜ்யத்தை இழந்து காரியவான நாய்களால்
கவர பட்ட கால்களை உடையராய் பொளிந்த பாண்டங்களைக் கொண்டு பண்டு தங்களைக் காண அவசரம் பெறாத மனுஷ்யர் எல்லாம்
காணும் படி தாங்கள் சம்ருத்தராய் வாழ்ந்த இந்த லோகத்திலேயே பிக்ஷையை விரும்பிக் கொள்வர் –

——————————————————————————————————————-

தங்களால் அபிபூதரான சத்ருக்களாலே தங்களுடைய மஹிஷிகளையும் இழப்பர் என்கிறார் –

உய்ம்மின் திறை கொணர்ந்து’ என்று உலகு ஆண்டவர் இம்மையே
தம் மின்சுவை மடவாரைப் பிறர் கொள்ளத் தாம் விட்டு
வெம்மின் ஒளி வெயில் கானகம் போய்க் குமைதின்பர்கள்;
செம்மின் முடித் திரு மாலை விரைந்து அடி சேர்மினோ. –4-1-2-

உய்ம்மின் திறை கொணர்ந்து-இத்யாதி
எனக்குத் திறையிட்டுப் பிழைத்து இருங்கோள் -என்று ராஜாக்களை சொல்லி இந்த யுக்தி மாத்ரத்தினாலே இந்த லோகத்தை அடைய
ஆண்டவர் தாங்கள் இப்படி வாழ்ந்த இப்பிறவியில் தாங்கள் ஜீவிக்கைக்காகத் தங்களுக்கு நிரதிசய போக்யைகளான ஸ்திரீகளை
சத்ருக்கள் பரிக்ரஹித்து போக்கற்றுத் தாங்களே அவர்களே கொண்டு போக வேணும் என்று பிரார்த்தித்து விட்டு
வெம்மின் ஒளி-இத்யாதி
நாடுகளிலே சஞ்சரிக்கப் பெறாதே கொடிய வெயிலை உடைய காட்டிலே போய் அங்கும் சத்ருக்களாலால் நலிவு படா நிற்பர்
இப்படி பரிபூதராகாதே வாழ வேண்டி இருந்து கோளாகில்-சிவந்த ஒளியை உடைய திரு அபிஷேகத்தை உடையனான ஸ்ரீ யபதியை
ஈண்டென ஆஸ்ரயிங்கோள் -ஆஸ்ரயித்தார் தலையிலே வைக்கச் சூடின முடி என்று கருத்து –

—————————————————————————————————————-

மற்றுள்ள ராஜாக்கள் தங்களை ஆஸ்ரயித்து அவர்களை ஒன்றாக மதியாதே வாழ்ந்தவர்கள்
அந்த ஐஸ்வர் யத்தை இழந்து ஒருவரும் மதியாதபடி யாவார் என்கிறார் –

அடி சேர் முடியினர் ஆகி அரசர்கள் தாம் தொழ
இடி சேர் முரசங்கள் முற்றத்து இயம்ப இருந்தவர்
பொடி சேர் துகளாய்ப் போவர்கள் ஆதலில் நொக்கெனக்
கடி சேர் துழாய் முடிக் கண்ணன் கழல்கள் நினைமினோ.–4-1-3-

தங்கள் காலிலே முடி படியும்படியாக அந்நிய ராஜாக்கள் வந்து தொழுது க்ருதார்த்தராகா நிற்க -இடி இடித்தால் போலே
வாத்தியங்கள் முற்றத்திலே த்வனிக்க இருந்தவர்
ஷூ த்ர தூளி போலே அவதீர்ணம் பண்ணினோம் என்று நினைக்கப் பாத்தம் போராத படி மதிப்புக் கெடுவர் –
ஆகையால் இங்கண் எளிவரவு படாதே பெரு மதிப்பு உண்டாம் படி சர்வ ஐஸ்வர்ய ஸூசகமாய் தன் திருக் குழலின் செவ்வையாலே
க்ஷணம் தோறும் பரிமளம் மிகா நின்றுள்ள திருத் துழாயாலே அலங்க்ருதனாய் பரம போக்யனான
கிருஷ்ணன் திருவடிகளை ஈண்டென நினையுங்கோள் –

——————————————————————————————————————–

ஐஸ்வர்யம் ஒன்றுமே அன்று நிலை நில்லாது ஒழிகிறது -போக்தாக்கள் ஆனவர்களும் சபரிகரமாக நசிப்பர் என்கிறார் –

நினைப்பான் புகின் கடல் எக்கலின் நுண் மணலிற் பலர்
எனைத்தோர் உகங்களும் இவ்வுலகு ஆண்டு கழிந்தவர்
மனைப்பால் மருங்கு அற மாய்தல் அல்லால் மற்றுக் கண்டிலம்
பனைத்தாள் மத களிறு அட்டவன் பாதம் பணிமினோ.–4-1-4-

எனைத்தோர் உகங்களும்-அநேக யுகங்கள்
வாழ்ந்த ஸ்தலமும் அருகும் தெரியாத படி நசித்து போமித்தனை போக்கி ஸ்திரராய் இருப்பாரையும் கண்டிலோம்
ஆஸ்ரயண விரோதிகளை போக்கும் ஸ்வபாவனானவனுடைய திருவடிகளை ஆஸ்ரயிங்கோள்

————————————————————————————————————————

அங்க நா சம்ச்லேஷ ஸூ கமும் செல்வக் கிடப்புப் போலே அஸ்திரத்தவாதி தூஷிதம் என்கிறார் –

பணிமின் திருவருள் என்னும் அம் சீதப் பைம் பூம் பள்ளி
அணி மென் குழலார் இன்பக் கலவி அமுது உண்டார்
துணி முன்பு நாலப் பல் ஏழையர் தாம் இழிப்பச் செல்வர்
மணி மின்னு மேனி நம் மாயவன் பேர் சொல்லி வாழ்மினோ.–4-1-5-

பணிமின் -தொடங்கி
அழகியதாய் குளிர்ந்து பரம்பி இருந்துள்ள பூம் படுக்கைகளில் இருந்து ரசிகத்வத்தின் மிகுதியாலே போக்தாவானவன் தான்
-பணிமின் திருவருள் என்று கீழ்மை சொல்ல வேண்டும் படி வேண்டற் பாடு உடையராய் இவன் கொண்டாட்டத்தை அங்கீ கரியாதே
குழலை பேணா நின்றுள்ள அந்த ஸ்த்ரீகளுடைய அநங்கீகார பிரமுகமான சம்ச்லேஷ அம்ருதத்தை பானம் பண்ணினவர்கள் –
பணிமின் திருவருள் -என்று கீழ்மை சொல்லுகிறார் -ஸ்த்ரீகள் என்றும் சொல்லுவார்
துணி முன்பு-என்று தொடங்கி –
ஆசச்சாதிக்கப் பொறாமையால் துணி முன்பு நாலும் படி க்ருபணராய் இவனைப் பெறா விடில் செல்லாதபடியான ஸ்த்ரீகள் பல வகைகளால் உபேக்ஷிக்க
அத்தைப் புத்தி பண்ணாதே பின்னையும் அவர்கள் இருந்த இடங்களிலே செல்லா நிற்பர்
நிரதிசய போக்யமான திரு அழகையும் ஆஸ்ரிதரை விடில் தரிக்க மாட்டாத படி அதிமாத்ரமாய் நிருபாதிகமான ஸ்நேஹத்தையும் உடையவன் என்று
ப்ரசித்தனான எம்பெருமானுடைய திரு நாமத்தை வாயாலே சொல்லி வாழுங்கோள் –

—————————————————————————————————————–

ஸ்ருஷ்ட்டி காலம் தொடங்கி இன்று அளவும் ஐஸ்வர்யவான்களாக ஜீவித்தார் ஒருவரையும் கண்டிலோம் என்கிறார் –

வாழ்ந்தார்கள் வாழ்ந்தது மாமழை மொக்குளின் மாய்ந்து மாய்ந்து
ஆழ்ந்தார் என்று அல்லால், அன்று முதல் இன்று அறுதியா
வாழ்ந்தார்கள் வாழ்ந்தே நிற்பர் என்பது இல்லை ; நிற்குறில்
ஆழ்ந்தார் கடற் பள்ளி அண்ணல் அடியவர் ஆமினோ.–4-1-6-

வாழ்ந்தார்கள்-இத்யாதி
ஐஸ்வர்யத்தை பெற்று வாழ்ந்தோர் ஒருவரும் இல்லையோ என்னில் -வாழ்ந்தவர்கள் வாழ்ந்தது வர்ஷ ஜல புத்பதம் போலே நசித்து நசித்து
ஜீவித்த நாள் பண்ணின பாபத்தாலே அதோ கதியில் விழுந்து போன அத்தனை போக்கி
மா மழை மொக்குள் என்றது -மஹா வர்ஷத்தில் குமிழி சடக்கென மாயும் என்னும் இடம் தோற்றுகைக்காக
நிற்குறில்-இத்யாதி –
நிலை நின்ற புருஷார்த்தம் வேண்டி இருக்கில் ஆழ்ந்து அகன்று இருந்துள்ள திருப் பாற் கடலிலே ஸமாச்ரயணீயனாய் கொண்டு
கண் வளர்ந்து அருளுகிற சர்வேஸ்வரனுக்கு அடியார் ஆகுங்கோள் –

————————————————————————————————————–

அந்நிய பாநாதி போகங்களுடைய அநித்யையை அருளிச் செய்கிறார் –

ஆமின் சுவை அவை ஆறோடு அடிசில் உண்டு ஆர்ந்த பின்
தூமென் மொழி மடவார் இரக்கப் பின்னும் துற்றுவர்,
‘ஈமின் எமக்குஒரு துற்று’என்று இடறுவர் ; ஆதலின்,
கோமின் துழாய்முடி ஆதிஅம் சோதி குணங்களே.–4-1-7-

ஆமின் சுவை-இத்யாதி
இனிதான ரசம் ஆறோடு ச பஹு மானமாக இட்ட சோற்றை உண்டு சமைந்த பின்பு பேச்சின் இனிமையால் சொல் மறுக்க ஒண்ணாத
படியான ஸ்த்ரீகள் இரக்க-மறுக்க மாட்டாமையால் பின்னையும் நிற்குமவர்கள்
ஈமின் எமக்குஒரு துற்று’என்று-இத்யாதி –
அந்த ஸ்த்ரீகள் வாசலிலே சென்று -எல்லீரும் கூடி எனக்கு ஒரு பிடி ஐடா வேணும் -என்று வேண்டித் தட்டித் திரிவர்
இப்படி விஷய போகங்கள் அநித்தியம் ஆகையால் ஜகத்துக்கு காரணமாய் நிரவதிக ஸுந்தர்ய உக்தனுமாய்
திருத் துழாயாலே அலங்க்ருதன் ஆனவனுடைய கல்யாண குணங்களை அநுஸந்தியுங்கோள்

—————————————————————————————————————

இந்த ராஜ்யாதி போகங்கள் எம்பெருமானை ஆஸ்ரயியா விடின் கிடையா -ஆஸ்ரயித்து பெற்றாலும் நிலை நில்லா என்கிறார் –

குணங்கொள் நிறை புகழ் மன்னர் கொடைக்கடன் பூண்டிருந்து
இணங்கி உலகு உடன் ஆக்கிலும், ஆங்கு அவனை இல்லார்
மணங்கொண்ட போகத்து மன்னியும் மீள்வர்கள்; மீள்வு இல்லை;
பணங்கொள் அரவணையான் திரு நாமம் படிமினோ.–4-1-8-

குணங்கொள் -என்று தொடங்கி –
மேலுக்கு குணவான்களாய் -குண வத்தா பிரதையையும் உடைய ரான ராஜாக்கள் தங்களுக்கு உள்ளே தனத்தை எல்லாருக்கும்
கொடுக்கையே ஸ்வ பாவமாய் இவ் வழி யாலே எல்லோரோடும் சேர்ந்து தங்களை பிரிய ஒண்ணாதபடி
சேர்த்துக் கொண்டார்கள் ஆகிலும் எம்பெருமான் பிரசாதம் இல்லையாகில் ராஜ்யம் கிடையாது –
மணங்கொண்ட-என்று தொடங்கி –
ராஜ்ய ஸூ கம் பெற்றாலும் நிலை நில்லாது -ஆனபின்பு தன்னுடைய நாம உச்சாரணம் பண்ணினாரை
திரு அனந்த ஆழ்வானை போலே சேஷம் ஆக்கிக் கொள்ளுமவனுடைய திரு நாமங்களில் பிரவணர் ஆகுங்கோள்
போகத்துக்கு மீள் வில்லை –
தான தர்மத்துக்கு பலமாக எம்பெருமானைப் பற்றாதே ஸ்வர்க்காதி போகங்களை பற்றினால் நிலை நில்லா என்றுமாம் –

————————————————————————————————————–

ஐஹிகமான ராஜ்யாதிகளே அல்ல -உடம்பை ஒறுத்துப் பெறும் ஸ்வர்க்காத் ஐஸ்வர்ய ஸூ கங்களும் நிலை நில்லா என்கிறார் –

படி மன்னும் பல்கலன் பற்றோடு அறுத்து,ஐம் புலன்வென்று,
செடி மன்னு காயம் செற்றார்களும், ஆங்கு அவனை இல்லார்
குடி மன்னும் இன் சுவர்க்கம் எய்தியும் மீள்வர்கள்; மீள்வு இல்லை;
கொடி மன்னு புள்ளுடை அண்ணல் கழல்கள் குறுகுமினோ. –4-1-9-

படி மன்னும் -என்று தொடங்கி
பழையதாய் வருகிற பூமியையும் ஆபரணங்களையும் அவற்றால் நசையோடே கூட விட்டு ஐந்து இந்த்ரியங்களையும் வென்று
தபஸ் ஸூ க்குக்காக உண்டான தீர்க்க கால அவஸ்தா நத்தாலே தூறு மண்டும்படி உடம்பைச் செறுத்தவர்களும்
அவனைப் பெற்றார் ஆகில் ஸ்வர்க்கம் கிடையாது
கொடி மன்னு புள்ளுடை அண்ணல் கழல்கள் குறுகுமினோ.
பூமியைப் போலே அன்றியே நெடு நாள் இருக்கலாம் ஸ்வர்க்கத்தை பெற்றும் இழப்பர்
ஆனபின்பு ஆஸ்ரிதரை தனக்கு வ்யாவர்த்தக விசேஷணமான பெரிய திருவடி போலே அந்தரங்கராக விஷயீ கரிக்கும்
ஸ்வ பாவனான சர்வேஸ்வரன் திருவடிகளை ஆஸ்ரயிங்கோள்
மீள்வு இல்லை; –
உடம்பை பொறுத்து தபஸ்ஸூ பண்ணினாலும் அதுக்கு பலதயா எம்பெருமானைப் பற்றாதே
ஸ்வர்க்க ப்ராப்தியை பற்றினால் அது நிலை நில்லாது என்றுமாம் –

————————————————————————————————————–

கைவல்ய புருஷார்த்தம் துஸ் சாதம் என்றும் -அது தான் அபுருஷார்த்தம் என்றும் ப்ரதிபாதிக்கிறார் –

குறுக மிக உணர்வத்தொடு நோக்கி எல்லாம் விட்ட
இறுகல் இறப்பெனும் ஞானிக்கும் அப்பயன் இல்லையேல்,
சிறுக நினைவது ஓர் பாசம் உண்டாம்; பின்னும் வீடு இல்லை,
மறுகல் இல் ஈசனைப் பற்றி விடாவிடில், வீடு அஃதே.–4-1-10-

குறுக மிக-என்று தொடங்கி
பாஹ்ய அர்த்தங்களில் தூரப் போய் பழகின மனசை அவற்றின் நின்றும் மீட்டு பிரத்யாகாத்மாவின் பக்கலிலே பிரவணம் ஆக்கி
விசததமமாம் படி ஆத்ம அவலோகநத்தை பண்ணி ஆத்ம வ்யதிரிக்த சகல புருஷார்த்தங்களிலும் தொற்று அற்ற அந்த சங்குசித தசையை
மோக்ஷம் என்னும் ஞான நிஷ்டனுக்கும் ஸ்வயம் புருஷார்த்த ரூபமான எம்பெருமானை சுபாஸ்ரயமாக பற்றா விடில்
ஆத்ம அவலோகன விரோதியான கர்மம் போகாதே நிற்கும்
பின்னும் வீடு -என்று தொடங்கி
ஆத்ம அவலோகநாம் கை வந்தாலும் ஹேய ப்ரத்ய நீகனாய் ஞான ஏக காரனான சர்வேஸ்வரனை அனுசந்தித்து அவனோடு சஜாதீயம் என்று
ஆத்மாவை அனுசந்திக்கை யாகிற இந்த அந்திம ஸ்ம்ருதி இல்லையாகில் மோக்ஷத்துக்கு உபாயம் இல்லை
இப்படி துஸ் சாதகம் ஆகையால் சாதிக்கும் இடத்திலும் எம்பெருமானைப் பற்றியே சாதிக்க வேண்டுகை யாகையாலும்
தத் கைங்கர்யத்தை குறித்து தண்ணியது ஆகையால் பகவத் கைங்கர்யமே பரம புருஷார்த்தம் –

———————————————————————————————————-

நிகமத்தில் இது திருவாய் மொழி கற்றார் ஐஸ்வர்ய ஷூ த்ர புருஷார்த்தங்களை தவிர்ந்து பகவத் கைங்கர்ய ஏக போகர் ஆவார் -என்கிறார் –

அஃதே உய்யப் புகும் ஆறு என்று கண்ணன் கழல்கள் மேல்
கொய் பூம் பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன் குற்றேவல்
செய்கோலத்து ஆயிரம் சீர்த்தொடைப் பாடல் இவை பத்தும்
அஃகாமல் கற்பவர் ஆழ் துயர் போய் உய்யற் பாலரே.–4-1-11-

அதுவே உஜ்ஜீவன உபாயம் என்று எம்பெருமான் திருவடிகளில் ஆழ்வார் அருளிச் செய்த விலக்ஷணமான
ஆயிரத்தில் அவனுடைய கல்யாண குணங்களையே தொடுத்த இது திரு வாய் மொழி –
அஃகாமை -தப்பாமை

————————————————————————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

திருவாய்மொழி இருபத்து நாலாயிரப்படி -3-10–

August 29, 2016

கீழ் உபதேசித்த ஹிதம் நெஞ்சில் படாத -இப்படி ஹேயரான சம்சாரிகளைப் நடுவிலே இருந்து வைத்து
பகவத் விஷயத்துக்கு அர்ஹமான கரணங்களை உடையேனாகப் பெற்றேன்
அது தன்னிலும் ஆஸ்ரித அர்த்தமாக கர்மா வஸ்யரைப் போலே சம்சாரிகள் நடுவே வந்து திருவவதரித்த
திவ்ய அவதாரங்களையும் அவதார ஸித்தமான திவ்ய குணங்களையும் திவ்ய சேஷ்டிதங்களையும் அனுசந்தித்து
இதுவே போது போக்கப் பெற்றேனுக்கு -இதில் காட்டில் வேண்டுவது ஓன்று உண்டோ என்று மிகவும் ப்ரீதர் ஆகிறார் –
முடியானேயில் தம்முடைய ஆற்றாமையும் நித்ய ஸூ ரிகளுடைய அனுபவத்தையும் அனுசந்தித்தவாறே இழவாய் தோற்றிற்று
சொன்னால் விரோதத்தில் சம்சாரிகள் படியை பார்த்தவாறே அவ்விழவு தானே பேறாகத் தோற்றிற்று –

—————————————————————————————————

இத் திருவாய்மொழியில் பிரதிபாதிக்கிற பொருளை சங்க்ரேஹண அருளிச் செய்கிறார்-

சன்மம் பலபல செய்து வெளிப்பட்டுச் சங்கொடு சக்கரம் வில்
ஒண்மை யுடைய உலக்கை ஒள் வாள் தண்டு கொண்டு புள் ஊர்ந்து உலகில்
வன்மை உடைய அரக்கர் அசுரரை மாளப் படை பொருத
நன்மை உடையவன் சீர் பரவப் பெற்ற நான் ஓர் குறைவு இலனே.–3-10-1-

சன்மம் பலபல செய்து –
ஜென்ம ஹேது இன்றிக்கே-சம்சாரி சஜாதீயனாக பிறக்கிற இவ்வவதாரத்தை அடி யறியுமவர்கள் அவதாரத்துக்கு அவ்வருகு
பரத்வத்திலும் போக மாட்டாதே இறே இருப்பது
தஸ்ய தீரா பரிஜா நந்தி யோ நிம்-என்னக் கடவது இறே
வேத புருஷனும் -ப ஹூ தா விஜாயதே -என்னும் இத்தனை இறே
ஜென்ம கர்மச மே திவ்யம் -என்றும் -ப ஹூ நி மே என்றும் அவன் தானே நெஞ்சு உளுக்கி இறே இருப்பது
எந்நின்ற யோனியுமாய் பிறந்தாய் -என்றும் -பிறப்பில் பல் பிறவிப் பெருமான் -என்றும் -பிறந்தவாறும் -என்றும் தீமதாம் அக்ரேஸரான இவரும் வித்தராய் இருப்பர்
ஆக பிராமண ஸ்ரேஷ்டமான வேதத்தோடு பிரமேய பூதனான ஈஸ்வரனோடு பிரமாதாக்களான இவரோடு வாசி அற பரிச்சேதிக்க மாட்டாதே வித்தராய் யாயிற்று இருப்பது –
பல
ஒரு அவதாரத்தை அனுசந்தித்தால் -எத்திறம் என்று வித்தராமவர் அநேக அவதாரத்தை பொறுக்க மாட்டார் இறே
பல பல
தேவாதி யோனி பேதங்களும் -அவாந்தர பேதங்களும்
செய்து
தன் தரம் குலையாமே ஆவிர்பவித்து தன் கார்யம் செய்யப் பெற்றோமோ
ததச்ச துவாதச மாஸே -என்றும் பன்னிரு திங்கள் என்றும் -நாட்டார் பத்து மாசம் கர்ப்ப வாசம் பண்ணினால்
தான் பன்னிரண்டு மாசம் கர்ப்ப வாசம் பண்ணி இறே அவதரித்தது
பிதா புத்ரேண பித்ருமான் யோ நி யோ நவ் -நாவேத வின்மநுதே தம் ப்ருஹந்தம் -என்கிறபடியே
சர்வ காரணனான தான் ஸ்வ கார்யங்களிலே ஒன்றுக்கு காரியமாய் இறே அவதரித்தது –
வெளிப்பட்டுச்
ந சஷூஷா க்ருஹ்யதே -என்கிற தன்னை கண்ணுக்கு விஷயம் ஆக்கி சதா சஞ்சரிக்கிற இடத்தே நிதி கண்டு
எடுக்குமா போலே யாயிற்று கண்ணுக்கு விஷயம் ஆக்கின படி –
சங்கொடு சக்கரம் வில்-ஒண்மை யுடைய உலக்கை ஒள் வாள் தண்டு கொண்டு-
அவதரிக்கும் போது திவ்ய ஆயுதங்களோடு வந்தாயிற்று அவதரிப்பது-
தன்னை வெளியிட்டிலும் திவ்ய ஆயுதங்களோடு சேர்த்தி மறைக்க வேண்டி இ றே இருப்பது
உபஸம்ஹர சர்வாத்மன் ரூபமேதத் சதுர்புஜம் -ஜா நாது மாசாவதாரந்தே கம்சோயம்திதி ஜன்மஜ –என்ன கடவது இ றே
சங்கொடு சக்கரம்-
தன்னில் பிரியாத ஸுர ப்ராத்ரம் -கச்சதா மாதுல குலம் இத்யாதி –
வில்-ஒண்மை யுடைய உலக்கை ஒள் வாள் தண்டு –
என்று எல்லாம் இவர்க்கு ஆபரணமாய் இருக்கிற படி
ஒரு கற்பக தரு பணைத்து பரப்பு மாறப் பூத்தால் போலே யாயிற்று வடிவு அழகும் தோளும் திவ்ய ஆயுத சேர்த்தியும் இருப்பது –
புள் ஊர்ந்து
இதுவும் ஒரு சேர்த்தி அழகு –
ஒரு மேருவை கினிய ஒரு மேகம் படிந்தால் போலே யாயிற்று பெரிய திருவடியை மேல் கொண்டால் இருப்பது –
மஞ்சுயர் பொன் மலை மேல் -ஆஸ்ரிதர் இருந்த இடங்களிலே சென்று காட்சி கொடுக்கை
உலகில்
நித்ய ஸூ ரிகளுக்கு தகுதியாய் இருக்க சம்சாரிகளுக்கு காட்சி கொடுத்த படி –
வன்மை உடைய அரக்கர் அசுரரை
இவ் வழகைக் கண்டும் நெஞ்சு நெகிழாதவர்கள்
இவ்விஷயத்தில் தம்முடைய மென்மை போலே எல்லார்க்கும் இருக்குமோ என்று இருக்கிறார்
திருவடி திருத்த தோளிலே காணவே-வணங்கிப் போகலாய் இருக்க எதிரிடுவதே பையல்கள் –
அழகுக்கு இலக்காய் வாழ்ந்து போகலாய் இருக்க அம்புக்கு இலக்கு ஆவதே
மாளப் படை பொருத
படை -ஆயுதம் -தேவா நாம் தானவா நாஞ்ச-என்று சம்பந்தம் ஒத்து இருக்க -ஆச்ரித விரோதிகள் என்னுமத்தை பார்த்து அழியச் செய்யும்
படை பொருத நன்மை -உடையவன் –
அவர்கள் பக்கல் ஆன்ரு சம்சயம் பண்ணாது ஒழிகை -சங்கல்பத்தை கொண்டு கார்யம் கொள்கை தீமை என்கை –
சீர் –
வீர குணம் -அதுக்கு அடியான ஆஸ்ரித வாத்சல்யம் -அதுக்கு அடியான ஸ்வாமித்வம் இவை முதலான கல்யாண குணங்கள்
பரவப் பெற்ற நான்-
இக்குணங்களை அடைவு கெட ஏத்தப் பெற்ற நான்
ஓர் குறைவு இலனே-
முதலிலே சம்சாரிகளைப் போலே அறியாது ஒழிதல் -அவதரித்து கண்ணுக்கு இலக்காய் பாசுரம் இட்டு பேச நிலம் இன்ரிக்கே இருத்தல் –
சிசுபாலாதிகளை போலே நம்மில் ஒருத்தன் என்று பரிபவித்து முடிந்து போதல்
ஸ்ரீ விஸ்வ ரூபத்தில் அர்ஜுனனைப் போலே நீச்சு நீராய் இருத்தல் அன்றிக்கே இவ்விஷயத்தை புகழப் பெற்ற எனக்கு ஒரு குறையும் இல்லை என்கிறார் –
ஸோஸ்னுதே ஸர்வான் காமான் -என்று ஒரு தேச விசேஷத்தில் அனுபவிக்கக் கடவ குண அனுபவத்தை இங்கே அனுபவிக்கப் பெற்ற எனக்கு
பரம பதத்தில் போகப் பெற்றிலேன் என்கிற குறை உண்டோ என்கிறார் –

——————————————————————————————————–

முதல் பாட்டிலே திருவவதாரங்களை சொன்னார் -இதில் திரு அவதார கந்தமாக திருப் பாற் கடலிலே கண் வளர்ந்து அவதரித்து
ஆஸ்ரித விரோதிகளை அழியச் செய்த கிருஷ்ணனுடைய பூக்களை பேசப் பெற்ற எனக்கு ஒரு தட்டு இல்லை என்கிறார் –

குறைவு இல் தடம் கடல் கோள் அரவு ஏறித்தன் கோலச் செந்தாமரைக் கண்
உறைபவன் போல ஓர் யோகு புணர்ந்த ஒளி மணி வண்ணன் கண்ணன்
கறை அணி மூக்குடைப் புள்ளைக் கடாவி அசுரரைக் காய்ந்த அம்மான்
நிறை புகழ் ஏத்தியும் பாடியும் ஆடியும் யான் ஒரு முட்டு இலனே.–3-10-2-

குறைவு இல் தடம் கடல்
நானே அன்று -என்னிலும் குறைவற்றார் உண்டு
திருமேனி நீ தீண்டப் பெற்று மாலும் கருங்கடல் என்நோற்றாய்-என்கிறபடியே சர்வ காலமும் தன மடியிலே வைத்துக் கொண்டு இருக்கப் பெற்ற இதுவும் ஒன்றே –
தடம் கடல்
தாலும் தோளும் முடிகளும் சமனிலாத பல பரப்பி -என்கிறபடியே அங்குசிதமாக கண் வளர்ந்து அருளும் படி இடமுடைத்தான இதுவும் ஒரு பாக்யமே-
கோள் அரவு ஏறி
கோள் -என்று ஒளியாய் -ஸ்வ ஸ் பர்சத்தாலே உண்டான ஒளியை சொல்லுகிறது
கோள் என்று தேஜோ பதார்த்தங்களான க்ரஹங்களாய் அவ் வழியிலே ஒளியைச் சொல்லுகிறது
கோள் என்று மிடுக்காய் -ப்ரக்ருஷ்ட விஞ்ஞான பலை கதாமநி -என்கிறபடியே தாரண சாமர்த்தியத்தை சொல்லுகிறது என்றுமாம்
அரவு
மென்மை குளிர்த்தி நாற்றம் இவற்றை பிரக்ருதியாக உடையனாய் இருக்கை
ஏறி
சுழல வந்து சாதரமாக நோக்கி ஏறுகை
தன் கோலச் செந்தாமரைக் கண்-உறைபவன் போல ஓர் யோகு புணர்ந்த
வெறும் புறத்திலே ஆலத்தி வழிக்க வேண்டும்படியாய் ஐஸ்வர்யா ஸூ சகமான சிவப்பை உடைத்தாய் இருக்கை
கண்ணுறைகை -கண் வளர்கை – கண் வளர்த்தல் என்ற பேராய்-ஜகாத் ரேஷன் சிந்தனை உக்தன் ஆகை
ரஷ்ய வர்க்கம் கரைமரம் சேரும்படி யாதல்
ஆத்மாநம் வா ஸூ தேவாக்க்யம் சிந்தையன் -என்கிறபடியே -ரக்ஷகனான தன்னை யாதல் அனுசந்திக்கை –
ஒளி மணி வண்ணன் கண்ணன்
ரஷ்ய வர்க்கத்தை தன வடிவு அழகாலே துவக்கி கரைமரம் சேர்க்கைக்காக கிருஷ்ணனாய் வந்து அவதரித்தவன்-
ஒளியை உடைய நீல மணி போலே இருக்கிற வடிவை உடைய கிருஷ்ணன்
கறை அணி மூக்குடைப் புள்ளைக்
ராஜாக்கள் கறுப்பு உடுத்து நகர சோதனை க்குப் புறப்பட்டால் பரிகரமும் முகம் தோற்றாமல் சேவிக்கக் கடவது இ றே
பிரதி கூலருடைய ருதிரத்தாலே கறை ஏறி அதுவே ஆபரணமாய் இருக்கும் மூக்கு என்னுதல்
முட்டையை பருவம் நிரப்புவதற்கு முன்பே உடைத்ததால் பிறந்த தழும்பாய் -அது ஸ்ரீ வத்சம் போலே இவனுக்கு ஆபரணமாய் இருக்கும் என்னுதல்
கடாவி
நடத்தி
அசுரரைக் காய்ந்த
ஆஸ்ரிதர் உடைய போக பரிகரமே ஆஸ்ரிதர் விரோதி நிரசனத்துக்கும் பரிகரம் என்கை -காய்ந்த -நசிப்பித்த
அம்மான்
இப்படி சிறியத்தை பெரியது தின்னாத படி நோக்கும் நிருபாதிக சேஷி
நிறை புகழ் ஏத்தியும் பாடியும் ஆடியும் யான் ஒரு முட்டு இலனே.–
இந்த லக்ஷணத்தாலே குறைவற்ற புகழை ப்ரீதி பிரகரக்ஷத்தாலே ஏத்தியும் பாடியும் பிரேம பாரவஸ்யத்தாலே
இருந்த இடத்தில் இராதே ஆடியும் வர்த்திக்கிற நான் பகவத் போகத்துக்கு ஒரு ப்ரதிஹதையை உடையேன் அல்லேன் என்கிறார் –

——————————————————————————————————–

சர்வேஸ்வரனுடைய போக்யதா அனுசந்தான ப்ரீதி பலாத்காரத்தாலே அவனுக்கு அடிமை செய்கையில்
ப்ரவ்ருத்தனான எனக்கு ஷூ த்ர விஷய ப்ராவண்யத்தால் ஒரு மநோ துக்கமும் இல்லை என்கிறார் –

முட்டு இல் பல் போகத்து ஒரு தனி நாயகன் மூவுலகுக்கு உரிய
கட்டியைத் தேனை அமுதை நன் பாலைக் கனியைக் கரும்பு தன்னை
மட்டு அவிழ் தண் அம் துழாய் முடி யானை வணங்கி அவன் திறத்துப்
பட்டபின்னை இறை யாகிலும் யான் என்மனத்துப் பரிவு இலனே.–3-10-3-

முட்டு இல் பல் போகத்து ஒரு தனி நாயகன் மூவுலகுக்கு உரிய
சில நாள் சென்றவாறே முட்டுப் படக் கடவது அன்றிக்கே பலவகைப் பட்ட போகங்களை உடையனாய் இருக்கை –
அப்ரதிஹத அசங்கக்யேய போகனாய் இருக்கை –
ஒரு தனி நாயகன்
ப்ரஹ்மாதிகளுக்கும் ஏகாதி பத்யம் சொல்லக் கடவது -அங்கண் இன்றியிலே அத்விதீயனான தனி நாயகன் –நிரஸ்த சாமாப்யதிகனாய் இருக்கை
மூ உலகுக்கு உரிய தனி நாயகன் என்று கீழே கூட்டுதல்
த்ரைலோக்கியம் அபிதாதேந யேந ஸ்யான் நாத வத்த்ரம் -என்கிறபடியே சர்வ லோக சாதாரணனான
சர்வ லோக சரண்யாய என்று என்னோபாதி பெருமாளுக்கு உங்களால் சொல்லலாவது உண்டோ என்னும் படி இறே இருப்பது
‘மூவுலகும் உரிய கட்டியை என்று மேலோடு கூட்டுதல்
போக்யமும் சர்வ சாதாரணமாய் இருக்கை
கட்டியைத் தேனை அமுதை நன் பாலைக் கனியைக் கரும்பு தன்னை
கட்டியை -உள் வாயோடு புற வாயோடு வாசி அற ஏக ரசமாய் ரஸ கண்மாய் இருக்கை -ரஸோவை ச
தேனை -அதில் காடின்யம் தவிர்ந்து இருக்கை
அமுதை -வி லக்ஷண போக்யமாய் இருக்கை
நன் பாலை -அவிலக்ஷணர்க்கும் போக்யமாய் இருக்கை
நன்மை -எங்கும் கூட்டக் கடவது
கனியை -கண்ட போதே நுகரலாம் படி இருக்கை
கரும்பு தன்னை -கை தொட்டு ரசிப்பிக்க வேண்டாது இருக்கை
ஆக சர்வ ரஸ -என்றபடி
இவை எல்லாம் உபமானமாகப் போராமையாலே அது தன்னையே சொல்லுகிறது
மட்டு அவிழ் தண் அம் துழாய் முடி யானை
தேன் விரிகிற திருத்த துழாயாலே அலங்க்ருதமான திரு அபிஷேகத்தை உடையவனை -ஆக ஆஸ்ரயணீய வஸ்துவுக்கு ஸ்வரூபம் சொல்லிற்று
வணங்கி
அவன் தந்த கரணங்களைக் கொண்டு அவன் திருவடிகளை கிட்டுகை சேஷ பூதனுக்கு ஸ்வரூபம்
அவன் திறத்துப்-பட்டபின்னை
அவன் இடையாட்டத்தில் பட்ட பின்பு
இறை யாகிலும் யான் என்மனத்துப் பரிவு இலனே.-
அத்யல்பமும் -விஷயாந்தர விமுகனான நான் -ஏன் மனசில் துக்கம் உடையேன் அல்லேன் –

——————————————————————————————————–

தேவதாந்தரங்களை பற்றினார்க்கு அவர்கள் தஞ்சம் அல்லர் என்னும் இடத்தையும் தன்னைப் பற்றினாரைத் தான் கை விட்டுக் கொடான்
என்னும் இடத்தையும் காட்டின இவனைப் பற்றின எனக்கு ஒரு துக்கம் இல்லை -என்கிறார் –

பரிவு இன்றி வாணனைக் காத்தும் என்று அன்று படையொடும் வந்து எதிர்ந்த
திரிபுரம் செற்றவனும் மகனும் பின்னும் அங்கியும் போர் தொலையப்
பொரு சிறைப் புள்ளைக் கடாவிய மாயனை ஆயனைப் பொன் சக்கரத்து
அரியினை அச்சுதனைப் பற்றி யான் இறையேனும் இடர் இலனே.–3-9-4-

பரிவு இன்றி வாணனைக் காத்தும் என்று
அநிருத்த ஆழ்வானைப் பற்ற கிருஷ்ணன் எடுத்து விட்ட தசையில் ருத்ரன் பண்னக்கு பண்ணின பிரதிக்ஞ்ஜை –
வருத்தமற வாணனை காக்கக் காட்டுவோம் என்று தன் ஓலக்கத்திலே சொன்னான்
காக்கக் கடவேன் அல்லேன் என்னா விட்டது தன்னை குவாலாக நினைத்து இருக்கை
அன்று
அநிருத்த ஆழ்வானை சிறை வைத்த அன்று
படையொடும் வந்து எதிர்ந்த
தனி வீரம் செய்யக் கடவதாக நினைத்து தன் வெற்றி காண்கைக்கு படை திரட்டிக் கொண்டு வந்தபடி -முண்டன் நீறன் -இத்யாதி -படை -ஆயுதம் என்றுமாம் –
பாரவஸ்யம் சமாயாத சூ லீ ஜ்ரும்பண தேஜஸா -என்று கையில் ஆயுதத்தோடு மோஹித்தபடி
தன் வெறுமையை முன்னிட்டு அஞ்சலியைக் கொண்டு வரும் விஷயத்தை எதிர்க்கைக்கு ஹேது என் என்னில்
திரிபுரம் செற்றவனும்
திரிபுர தஹநம் ஆகிற அபதானத்தாலே சஞ்சத அபிமானன் ஆகையால்
திரிபுர தஹன சமயத்தில் வில்லுக்கு மிடுக்காய் நாணுக்கு திண்மையாய் அம்புக்கு கூர்மையாய் தனக்கு அந்தராத்மாவாய்எ
திரிகளை தலை சாயும்படி பண்ணின படியை மறந்து தானே செய்தவனாக பிரமித்தவன் என்கை –
மகனும்
தன்னிலும் மிடுக்கனாய் தேவ சேனாபதியான ஸூப்ருஹ்மண்யனும்
பின்னும் அங்கியும்
அதுக்கு மேலே நாற்பத்து ஒன்பது அக்னியும்
போர் தொலையப்
இனி ஒரு யுத்தத்திலும் புக்க கடவோம் அல்லோம் என்னும்படி -போரிலே மாள -என்றுமாம் –
பொரு சிறைப்
இப்படி தொலைத்தார் ஆர் என்னில் -பெரிய திருவடியின் சிறகு
புள்ளைக் கடாவிய மாயனை
அவன் கருத்து அறிந்து நடத்த வல்ல ஆச்சர்ய பூதனை
ஆயனைப்
அவன் தோற்றது தன் தரம் குலையாதே நிற்கிற நிலையிலே
இவன் வென்றது தன்னைத் தாழ விட்ட இடத்திலே
பொன் சக்கரத்து-அரியினை
அநு கூலர்க்கு ஸ் ப்ருஹணீயமான திரு வாழியைத் தரித்து சத்ருத்துக்களுக்கு அப்ரதிருஷ்யன் ஆனவனை-
கிருஷ்ண கிருஷ்ண மஹா பாஹோ ஜாநே த்வாம் புருஷோத்தமம்-
தோள் வலி கண்ட பின்பு ஆயிற்று சர்வேஸ்வரன் என்று அறிந்தது
அச்சுதனைப்
ஆஸ்ரிதனை நழுவ விடாதவனை
அநிருத்த ஆழ்வானுக்காக மார்பிலே அம்பு ஏற்கையாலே ஆஸ்ரிதற்கு தஞ்சம் என்று விசுவசிக்கத் தட்டு இல்லை
பற்றி யான் இறையேனும் இடர் இலனே.–
இவனைப் பற்றின எனக்கு அல்ப துக்கமும் இல்லை –
பேரன் என்று இருக்கையாலே அநிருத்த ஆழ்வானுக்கு நாலு நாள் சிறை இருக்க வேண்டிற்று
அடியேன் என்று பற்றினவன் ஆகையால் எனக்கு அதுவும்வேண்டிற்று இல்லை –

———————————————————————————————————-

வைதிக புத்ர அநயன மஹா அபதானத்தை அனுசந்தித்து இவனைப் பற்றின எனக்கு ஒரு துக்கம் இல்லை என்கிறார்

இடர் இன்றியே ஒருநாள் ஒரு போழ்தில் எல்லா உலகும் கழியப்
படர் புகழ்ப் பார்த்தனும் வைதிகனும் உடன் ஏறத் திண் தேர் கடவிச்
சுடர் ஒளியாய் நின்ற தன்னுடைச் சோதியில் வைதிகன் பிள்ளைகளை
உடலொடும் கொண்டு கொடுத்தவனைப் பற்றி ஒன்றும் துயர் இலனே.–3-10-5-

இடர் இன்றியே
வருத்தம் இன்றியே
ஒருநாள்
ஏகாஹதீக்ஷை யான க்ரதுவிலே
ஒரு போழ்தில்
ப்ராதஸ் ஸ்வநம் தலைக் கட்டி மாத்யந்திந சவனத்துக்கு முன்னே –
எல்லா உலகும் கழியப்
ஆவரண சப்தகத்வத்துக்கும் அவ்வருகு படுத்தி
படர் புகழ்ப் -பார்த்தனும் வைதிகனும்
யஸ்ய மந்த்ரீச கோப்தாச ஸூ ஹ்ருச்சைவ ஜனார்த்தன -என்கிறபடியே சர்வ வித பந்துவாய் பற்றின புகழை உடைய அர்ஜுனனும்
-கிருஷ்ணன் திருவடிகளில் நிரவதிகமான ஸ்நேயத்தை உடைய ப்ராஹ்மணனும்
உடன் ஏறத்
தன்னோடே கூட ஏற
திண் தேர் கடவிச்
காரியாகாரம் குலையாமே மூல காரணமான ப்ரக்ருதி பர்யந்தமாக தேருக்கு திண்மையைக் கொடுத்து நடத்தி
சுடர் ஒளியாய் நின்ற –
நிரவதிக தேஜோ ரூபமாய் ஏக ரூபமாய் நின்ற
தன்னுடைச் சோதியில்
தனக்கு அசாதாரணமான தேசம் –
காகபக்ஷதரோ தன்வீ சிகீ கநகமாலயா சோபயன் தாண்ட காரண்யம் தீப் தேந ஸ்வேந தேஜஸா -என்கிறபடியே
தன்னுடைய காந்தி வெள்ளம் இட்டால் போலே இருக்கை –
அத்யர்க்கா நல தீப்தம் தத் ஸ்தானம் விஷ்ணோர் மஹாத்மன –
வைதிகன் பிள்ளைகளை-உடலொடும் கொண்டு கொடுத்தவனைப் பற்றி ஒன்றும் துயர் இலனே.–
சரீர சம்பந்தம் அற்றால் போகக் கடவதாய் இருக்க -இச் சரீரத்தோடு யாயிற்று இவர்களைக் கொண்டு போயிற்று
காலக்ருத பரிணாமம் இல்லாத தேசம் ஆகையால் அவ்வுடம்போடே அப்பருவத்தோடே கொண்டு வந்து கொடுத்தவனைப் பற்றுகையாலே ஒரு துக்கம் இல்லை என்கிறார் –
புத்ரார்த்தியான அளவன்றியே ஸ்வரூபத்தை அறிந்து பற்றின எனக்கு ஒரு துக்கம் இல்லை என்கிறார் –

——————————————————————————————————————

தன்னுடைய அப்ராக்ருத திவ்ய விக்ரஹத்தை இதர சஜாதீயமாக்கி சம்சாரிகள் கண்ணுக்கு விஷயமாக்கின கிருஷ்ணனுடைய
குணங்களை அனுபவிக்கப் பெற்ற எனக்கு ஒரு துக்கமும் இல்லை என்கிறார் –

துயர் இல் சுடர் ஒளி தன்னுடைச் சோதி நின்ற வண்ணம் நிற்கவே
துயரின் மலியும் மனிசர் பிறவியில் தோன்றிக் கண் காண வந்து
துயரங்கள் செய்து தன் தெய்வ நிலை உலகில் புக உய்க்கும் அம்மான்
துயரம் இல் சீர்க் கண்ணன் மாயன் புகழ் துற்ற யான் ஓர் துன்பம் இலனே.–3-10-6-

துயர் இல் சுடர் ஒளி தன்னுடைச் சோதி
ஹேய ப்ரத்ய நீக சுத்த சத்வ மயம் ஆகையால் நிரவதிக தேஜோ ரூபமாய் பிறருக்கு உள்ளது ஓன்று அன்றிக்கே-தனக்கு அசாதாரணமான விக்ரஹமானது
நின்ற வண்ணம் நிற்கவே
அவ்விருப்பில் ஒன்றுமே குறையுமே விளக்கில் கொளுத்தின விளக்கு போலே அங்கு நின்ற வண்ணம் இங்கு நிற்க
துயரின் மலியும் மனிசர் பிறவியில் தோன்றிக் கண் காண வந்து
துக்கோத்தரமான மனுஷ்யருடைய ஜென்மத்தில் வந்து ஆவிர்ப்பவித்து மாம்ஸ சஷூஸ்ஸூ க்கு விஷயம் இன்றிக்கே
நித்ய ஸூ ரிகளுக்கு சதா தர்ச நீய விஷயமான தன்னை மாம்ஸ த்ருஷ்டிக்கு விஷயம் ஆக்கி
துயரங்கள் செய்து
அநு கூலரை அழகால் ஈடுபடுத்தி பிரதி கூலரை ஆயுதத்தால் அழியச் செய்து –
க்ருத்வா பாராவதரணம் ப்ருதிவ்யா ப்ருது லோசன மோஹயித்வா ஜகத் சர்வம் கதஸ் ஸ்வம் ஸ்த்தானமுத்தமம் –
பிரதி கூலரை முட்க்கோலால் சாடியும் அநு கூலரை அழகால் சாடியும் போனபடி
தன் தெய்வ நிலை
தன்னுடைய அப்ராக்ருதமான ஸ்வ பாவத்தை
உலகில்
இதுக்கு இட்டுப் பிறவாத சம்சாரத்திலே
புக உய்க்கும்
பிரவேசிக்கும் -பரமபதத்தில் நடையாடக் கடவ ஸ்வபாவத்தை சம்சாரிகளுக்கு தெரிவித்தவன்
தூது போயும் சாரத்யம் பண்ணியும் தன் படியைத் தெரிவித்தவன் என்றுமாம்
உய்க்கும் -செலுத்தும்
அம்மான்
அபேஷா நிரபேஷமாக-இவர்களுக்கு தன் படிகளை வெளியிடுகைக்கு வேண்டும் ப்ராப்தியைச் சொல்லுகிறது
இச் செயலால் லோகத்தை எழுதிக் கொண்டவன் என்றுமாம் –
துயரம் இல் சீர்க் கண்ணன் மாயன் புகழ் துற்ற யான் ஓர் துன்பம் இலனே.–
ஹேய ப்ரத்ய நீகமான கல்யாண குணங்களையும் ஆச்சர்யமான சேஷ்டிதங்களையும் உடைய கிருஷ்ணனுடைய புகழை
நெருங்க புஜிக்கப் பெற்ற எனக்கு ஒரு துக்கமும் இல்லை என்கிறார் –

———————————————————————————————————————–

அகர்ம வஸ்யன் ஆகையால் ஈஸ்வரனுக்கு இவ்விபூதியில் உள்ளது லீலா ரஸமாத்ரம் ஆகையால் அத்தை அனுசந்தித்த
எனக்கு கர்ம வஸ்யத்தை இல்லை -இந்த லீலா விபூதியில் அந்வயிக்கவும் வேண்டா –

துன்பமும் இன்பமும் ஆகிய செய் வினையாய் உலகங்களுமாய்
இன்பம் இல் வெந் நரகாகி இனிய நல்வான் சுவர்க்கங்களுமாய்
மன்பல் உயிர்களும் ஆகிப் பலபல மாய மயக்குகளால்
இன்புறும் இவ் விளையாட்டுடையானைப் பெற்று ஏதும் அல்லல் இலனே.–3-10-7-

துன்பமும் இன்பமும் ஆகிய செய் வினையாய்
ஸூ க துக்கங்களை விளைக்கக் கடவதான புண்ய பாப ரூப கர்மங்களுக்கு நியாமகனாய்
உலகங்களுமாய்
அவற்றை ஆர்ஜிக்கும் கர்ம பூமிக்கு நிர்வாஹகனாய் என்னுதல்
போக பூமிகளான ஸ்வர்க்க நரகங்களுக்கு நிர்வாஹகனாய் என்னுதல்
இன்பம் இல் வெந் நரகாகி இனிய நல்வான் சுவர்க்கங்களுமாய்
ஸூ க கந்த ரஹிதம் அன்றிக்கே கொடிதான் துக்க அனுபவமேயான நரகத்துக்கு நிர்வாஹகனாய் -சுத்த ஸூ க அனுபவமேயான ஸ்வர்க்கத்துக்கு நிர்வாஹகனாய்
உலகங்களுமாய் -என்ற இடம் கர்ம பூமியான போது-ஸ்வர்க்க நரகங்களை சொல்லுகிறது
அங்கு போக பூமியைச் சொன்ன போது ஸூ க துக்கங்களை சொல்லிற்றாகக் கடவது
மன்பல் உயிர்களும் ஆகிப்
கர்ம கர்த்தாக்களும் தத் பல போக்தாக்களுமாய் நித்யராய் அசங்க்யாதரான சேதனர்க்கு நிர்வாஹகனாய்
பலபல மாய மயக்குகளால்-இன்புறும் இவ் விளையாட்டுடையானைப் பெற்று-
இப்படிப் பலபலவான பிரக்ருதி விகார முகத்தால் சேதனர்க்குப் பிறக்கும் மதி விப்ரமங்களாலே ப்ரீத்ய அவாஹமான லீலைகளை உடையவனை பெற்று
பரம காருணிகனானவனுக்கு பர துக்க அனுசந்தானம் ப்ரீதிக்கு ஹேது வானபடி என் என்னில்
இவற்றைத் தன் தயையாலே ரக்ஷிக்க நினைத்தால் அது இவற்றுக்கு அநிஷ்டமாய் இருக்கும் இருப்பு அவனுக்கு ஹாஸ்ய ஹேதுவாய்
அவ் வழி யாலே லீலா ரச ஸாதனமாய் விட்டன –
ஏதும் அல்லல் இலனே.-
அவனுடைய அகர்ம வஸ்யத்தையை அநு சந்திக்கப் பெற்ற எனக்கு கர்ம வஸ்யன் ஆகையும்-தத் பலமான
லீலா விபூதி அன்வயமும் ஆகிற துக்கமும் இல்லை என்கிறார்
நமாம் கர்மாணி லிம்பந்தி நமே கர்ம பல ஸ் ப்ருஹா-இதிமாம் யோ அபி ஜா நாதி கர்மபிர் ந சபத்யதே-
மம மாயா துரத்யயா–மாமேவ யே பிரபத்யந்தே மாயாமேதாம் தரந்திதே -என்ன கடவது இ றே –

————————————————————————————————————————–

நித்ய விபூதியை அனுபவித்துக் கொண்டு இருக்கிற மேன்மையை உடையவன் ஜகாத் ரக்ஷணம் பண்ணும் நீர்மையை
அனுசந்திக்கப் பெற்ற எனக்கு ஒரு துக்கமும் இல்லை என்கிறார் -பிராட்டி புருஷகாரமாக மாமேகம் -என்ற
கிருஷ்ணனைப் பற்றின எனக்கு ஒரு துக்கமும் இல்லை என்கிறார் என்றுமாம் –

அல்லல் இல் இன்பம் அளவு இறந்து எங்கும் அழகு அமர்சூழ் ஒளியன்
அல்லி மலர்மகள் போக மயக்குகள் ஆகியும் நிற்கும் அம்மான்
எல்லை இல் ஞானத்தன் ஞானம் அஃ தேகொண்டு எல்லாக் கருமங்களும் செய்
எல்லை இல் மாயனைக் கண்ணனைத் தாள் பற்றி யான் ஓர் துக்கம் இலனே.–3-10-8-

அல்லல் இல் இன்பம் அளவு இறந்து –
ஸ்வர்க்காதி களைப் போலே துக்க மிஸ்ரமாய் பரிச்சின்னமான ஸூ கம் இன்றிக்கே துக்க கந்த ரஹிதமாய் அபரிச்சின்னமான ஆனந்தத்தை உடையவன் –
எங்கும் அழகு அமர்சூழ் ஒளியன்
த்ரிபாத் விபூதி எல்லாம் வெள்ளமிடும் காந்தியை யுடையவன் -அழகு என்று அவயவ சோபையாய் சூழ் ஒளி என்று சமுதாய சோபையைச் சொல்லுகிறது
அல்லி மலர்மகள் போக மயக்குகள் ஆகியும் நிற்கும் அம்மான்
இவ்வழகு காட்டில் எறிந்த நிலா ஆகாத படி அநு பவிப்பார் உண்டு என்கிறது
புஷபத்தில் பரிமளம் ஒரு வடிவு கொண்டால் போலே இருக்கிற பிராட்டியோட்டை கலவியால் பிறந்த
மயக்குகள் -ஆனந்தங்கள் –
ஆகியும் நிற்கும் -தன்னுடைய ஆனந்தத்துக்கு மேலே ஸ்ரீ யபதித்வத்தால்வந்த ஆனந்தத்தைத் உடையனாய் இருக்கும்
அம்மான் -ஆனந்த மயனாய் ஸ்ரீ யபதி யானவன் இ றே சர்வேஸ்வரன்
எல்லை இல் ஞானத்தன் –
மன்ஸவீ என்னுமா போலே ப்ரணய தாரையில் அவளுக்கு ஆனைக்கு குதிரை வைக்க வல்ல ஞானாதிக்யத்தை உடையவன்
ஞானம் அஃ தேகொண்டு -எல்லாக் கருமங்களும் செய்
அவன் அடியாக பிறந்த சஹகாரி நிரபேஷமான சங்கல்ப ரூப ஞானத்தால் கார்ய பூதமான ஜகத்தை எல்லாம் அவளுக்கு பிரியமாக உண்டாக்கினவன்
யஸ்யா வீக்ஷம் முகம் ததிங்கித பராதீ நோ விதத்தே அகிலம் -என்றார் இ றே
எல்லை இல் மாயனைக்
சங்கல்ப ரூப ஞானத்தால் ஸ்ருஷ்டியாதிகளைப் பண்ண வல்ல ஆச்சர்ய சக்தி உக்தனை
இப்படி ஆர் இருக்கிறார் என்னில்
கண்ணனைத்
கிருஷ்ணனை -க்ருஷ்ண ஏவ ஹி லோகா நாம்
கண்ணனைத் தாள் பற்றி யான் ஓர் துக்கம் இலனே.–
பிராட்டி புருஷகாரமாக சஹகார நிரபேஷமாக நம் கார்யம் செய்பவனுமாய்
ஏஷ -ஹ் யே வா நந்தயாதி -என்கிறபடியே ஆனந்த அவஹனானவனைப் பற்றின எனக்கு ஒரு துக்கமும் இல்லை என்கிறார் –

—————————————————————————————————————————–

அகடிதக்கடநா சமர்த்தனான வடதள சாயியை அனுபவிக்கப் பெற்ற எனக்கு ஒரு தளர்வும் இல்லை என்கிறார் –
மஹா பிரளய வ்ருத்தாந்தத்தை அனுசந்திக்கிறார் என்னுதல் –

துக்கம் இல் ஞானச் சுடர் ஒளி மூர்த்தி துழாய் அலங்கல் பெருமான்
மிக்க பன் மாயங்களால் விகிர்தம் செய்து வேண்டும் உருவுகொண்டு
நக்க பிரானோடு அயன் முதலாக எல்லாரும் எவையும் தன்னுள்
ஒக்க ஒடுங்க விழுங்க வல்லானைப் பெற்று ஒன்றும் தளர்வு இலனே.–3-10-9-

துக்கம் இல் ஞானச் சுடர் ஒளி மூர்த்தி துழாய் அலங்கல் பெருமான்
அஞ்ஞானம் கலசாத ஞானத்தையும் நிரதிசய தேஜோமய மான திவ்ய விக்ரஹத்தையும் உடையனாய்
அதுக்கு ஒப்பனையான திருத் துழாய் மாலையால் அலங்க்ருதனான சர்வேஸ்வரன்
மிக்க பன் மாயங்களால்
அபரிச்சேதயமாய் பலவகைப் பட்ட ஆச்சர்ய சக்தி யோகத்தால்
விகிர்தம் செய்து வேண்டும் உருவுகொண்டு
இச்சா க்ருஹீதமான விக்ரகங்களை பரிக்ரஹித்து சிறிய வடிவைக் கொண்டு பெரிய லோகங்களை திரு வயிற்றிலே வைத்து ஒரு பவனான
ஆலம் தளிரிலே கண் வளர்ந்து -இப்படி சேராச் சேர்த்தியான சேஷ்டிதங்களைப் பண்ணி
நக்க பிரானோடு அயன் முதலாக எல்லாரும் எவையும் தன்னுள்-ஒக்க ஒடுங்க விழுங்க வல்லானைப்
ஸ்வ கோஷ்டியிலே உபகாரகனாக ப்ரசித்தனான ருத்ரன் –அவனுக்கு ஜனகனான ப்ரஹ்மா தொடக்கமான சகல சேதன அசேதனங்களையும்
தன் திரு வயிற்றிலே ஏக காலத்திலே பிரளயம் தேடிலும் காண ஒண்ணாத படி வைத்து ரக்ஷிக்க வல்லவனை
நைமித்திக பிரளயமான போது அவர்களுக்கு ரஷ்யமான த்ரை லோக்யத்தை ரஷிக்கையாலே அவர்களுக்கு ரக்ஷகன் என்கை –
பெற்று ஒன்றும் தளர்வு இலனே.–
சர்வ சக்தியாய் -ப்ரஹ்மாதிகளுக்கு ரக்ஷகனானவனை அனன்யா ப்ரயோஜனனாய் ஆஸ்ரயித்த எனக்கு ஒரு துக்கம் உண்டோ என்கிறார்

——————————————————————————————————————————-

ஜகத் சரீரியாய் சர்வத்தையும் நோக்கி ஆபிமுக்யம் பண்ணினாரை அசாதாரண விக்ரஹத்தோடே வந்து அவதரித்து
ரக்ஷிக்குமவனைப் பற்றின எனக்கு ஒரு கேடு இல்லை என்கிறார் –

தளர்வு இன்றியே என்றும் எங்கும் பரந்த தனிமுதல் ஞானம் ஒன்றாய்
அளவுடை ஐம்புலன்கள் அறியா வகையால் அருவாகி நிற்கும்
வளர் ஒளி ஈசனை மூர்த்தியைப் பூதங்கள் ஐந்தை இருசுடரைக்
கிளர் ஒளி மாயனைக் கண்ணனைத் தாள் பற்றி யான் என்றும் கேடு இலனே.–3-10-10-

தளர்வு இன்றியே என்றும் எங்கும் பரந்த தனிமுதல் ஞானம் ஒன்றாய்
ஒரு பதார்த்தத்திலும் குறையாத படி என்றும் ஓக்க ஏக ரூபமாய் எல்லாக் காலத்திலும் வியாபித்து இவற்றை ஸ்ருஷ்டிக்கும் இடத்தில்
த்ரிவித காரணமும் தானே யாய் விலக்ஷண ஞான ஸ்வரூபனாய்
அளவுடை ஐம்புலன்கள் -அறியா வகையால் அருவாகி நிற்கும்
அளவுபட்ட இந்திரியங்கள் -பரிச்சின்ன விஷய க்ராஹங்கள் இ றே -அவற்றுக்கு அறிய ஒண்ணாத படி அவிஷயமாக நிற்கும்
வளர் ஒளி ஈசனை
வியாப்த கத தோஷம் தட்டாதே -அனஸ் நன் நன்யோ அபிசாக சீதி-என்று நியன்தருதவத்தால் வந்த உஜ்ஜ்வல்யத்தை உடையவன்
மூர்த்தியைப்
இப்படி ஜகத்தை தனக்கு சரீமாக உடையனாய் இருக்கச் செய்தே அசாதாரண விக்ரஹத்தை உடையனாய் இருக்கும் –
பூதங்கள் ஐந்தை இருசுடரைக்
வியாபிக்கும் இடத்தில் காரியத்தோடு காரணத்தோடு வாசி அற வியாபித்து இருக்கும் –
பூதங்கள் என்று காரணத்துக்கு உப லக்ஷணம்
இரு சுடர் என்று காரியத்துக்கு உப லக்ஷணம்
கிளர் ஒளி மாயனைக் கண்ணனைத்
நிரவதிக தேஜோ ரூபமான விக்ரஹத்தை இதர சஜாதீயம் ஆக்கிக் கொண்டு வ ஸூ தேவ க்ருஹே அவத்தீர்ணன் ஆனவனை
தாள் பற்றி யான் என்றும் கேடு இலனே.–
இவன் விமுகனான அன்றும் வியாப்தியாலே சத்தையை நோக்கி இவன் ஆபிமுக்யம் பண்ணின அன்று கண்ணுக்கு தோற்ற நின்று
ரக்ஷிக்குமவன் திருவடிகளை முறையிலே பற்றின எனக்கு ஒரு நாளும் ஒரு அநர்த்தம் இல்லை –

———————————————————————————————————————————–

நிகமத்தில் இது திருவாய்மொழியை அப்யசித்தாரை சர்வ லோக பிரசித்தராம் படி ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ யிலே நடத்தி
பரம பதத்தில் சென்றால் தன் ஐஸ்வர்யம் இவர்கள் இட்ட வழக்கு ஆகும் என்கிறார் –

கேடு இல் விழுப் புகழ்க் கேசவனைக் குருகூர்ச் சடகோபன் சொன்ன
பாடல் ஓர் ஆயிரத்துள் இவையும் ஒருபத்தும் பயிற்ற வல்லார்க்கு அவன்
நாடும் நகரமும் நன்குடன் காண நலனிடை ஊர்தி பண்ணி
வீடும் பெறுத்தித் தன் மூவுல குக்கும் தரும் ஒரு நாயகமே.–3-10-11-

கேடு இல் விழுப்
கேடின்றி விழுப்பத்தை உடைத்தான்
புகழ்க் கேசவனைக்
நித்ய சித்த கல்யாண குணங்களை உடைய கேசி ஹந்தாவை யாயிற்று இவர் கவி பாடிற்று
குருகூர்ச் சடகோபன் சொன்ன-பாடல்
ரகுவர சரிதம் முனி ப்ரணீதம் -என்கிறபடி அவதாரத்துக்கு அவ்வருகு போக மாட்டாத ஆழ்வார் ஆயிற்று கவி பாடினார்
பாடல் ஓர் ஆயிரத்துள்- இவையும் ஒருபத்தும்
புஷபம் பரிமளத்தோடே அலருமா போலே இசையோடு யாயிற்று பிறந்தது
பயிற்ற வல்லார்க்கு
பயில வல்லார்க்கு என்னுதல் -ப்ரவர்த்திப்பிக்க வல்லார்க்கு என்னுதல் -அவன் தரும் என்று அந்வயம்
நாடும் நகரமும்-
அவிசேஷஞ்ஞரும் த்ரவ்ய விசேஷங்கள் அறிந்து இருக்கும் விசேஷஞ்ஞரும்
நன்குடன் காண
நன்மையுடனே காண -இவனும் ஒருவனே என்று கொண்டாட
நலனிடை ஊர்தி பண்ணி
நன்மையாவது -ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ -ஸ்ரீ வைஷ்ணவனாம் படி பண்ணி
வீடும் பெறுத்தித்
இங்கே இருந்த நாள் வைஷ்ணவ ஸ்ரீ யோடே நடக்கப் பண்ணி பின்பு நிரதிசய புருஷார்த்த மோக்ஷத்தைக் கொடுக்கும் –
தன் மூவுல குக்கும் தரும் ஒரு நாயகமே.–
தன்னுடைய த்ரிவித ஆத்ம வர்க்கத்துக்கும் இவன் தான் அத்விதீய நாயகனாம் படி பண்ணிக் கொடுக்கும் –
அவன் தன்னதான ஐஸ்வர்யத்தை இவன் என்னது என்னும் படி பண்ணும் –

——————————————————————————————————————————

கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

திருவாய்மொழி ஒன்பதினாயிரப்படி -3-10-

August 29, 2016

இப்படி ஹேயரான சம்சாரிகளைப் போல் அன்றியே எம்பெருமானுடைய திவ்ய அவதாரங்களையும் திவ்ய குணங்களையும்
பலவகையாய் ஜகத் ரக்ஷண அர்த்தமாக உள்ள சேஷ்டிதங்களையும் அனுசந்தித்திக் கொண்டு போது போக்கப் பெற்றேனுக்கு
இதில் காட்டில் வேண்டுவது ஓன்று உண்டோ என்று தாம் பகவத் அர்ஹ கரணராய் க்ருதார்த்தரான படியை அனுசந்தித்து மிகவும் ப்ரீதர் ஆகிறார் –

———————————————————————————————–

ஆஸ்ரித சம்ரக்ஷணத்து அர்த்தமாக பல காலும் வந்து திருவவதாரம் பண்ணி யருளி அவர்கள் சத்ருக்களை நிரசியா நின்றுள்ள
எம்பெருமானுடைய கல்யாண குணங்கள் ப்ரீத்தி பூர்வகமாக அனுபவிக்கப் பெற்றேன் என்று
இத் திருவாய்மொழியில் பிரதிபாதிக்கிற பொருளை சங்க்ரேஹண அருளிச் செய்கிறார்-

சன்மம் பலபல செய்து வெளிப்பட்டுச் சங்கொடு சக்கரம் வில்
ஒண்மை யுடைய உலக்கை ஒள் வாள் தண்டு கொண்டு புள் ஊர்ந்து உலகில்
வன்மை உடைய அரக்கர் அசுரரை மாளப் படை பொருத
நன்மை உடையவன் சீர் பரவப் பெற்ற நான் ஓர் குறைவு இலனே.–3-10-1-

சன்மம் பலபல செய்து வெளிப்பட்டு-
அசங்க்யேய அவதாரங்களை பண்ணிக் கொண்டு ஒருவரால் காண முடியாத தான் தோற்றி
வன்மை-
தன் அழகு கண்டால் சிதிலர் ஆகாமை –
படை
ஆயுதம்
நன்மை –
பிரதி கூல விஷயத்தில் ஆன்ரு சம்சயம் பண்ணாமை
சீர் பரவப் பெற்ற-
கல்யாண குணங்களை சிதில கரணனாய் அனுசந்திக்கப் பெற்ற நான் –

—————————————————————————————————-

திரு அவதாரம் பண்ணி அருளுகைக்கு அடியாக திருப் பாற் கடலிலே கண் வளர்ந்து அருளி -ஸ்ரீ வ ஸூ தேவர் திரு மகனாய் வந்து
திரு அவதாரம் பண்ணி அருளி ஆஸ்ரித விரோதி நிரஸனம் பண்ணா நின்றுள்ள கிருஷ்ணனுடைய கீர்த்தியை ப்ரீதி ப்ரேரிதனாய் கொண்டு
பல படியும் அனுபவிக்கப் பெறுகையாலே எனக்கு ஒரு தட்டு இல்லை என்கிறார் –

குறைவு இல் தடம் கடல் கோள் அரவு ஏறித்தன் கோலச் செந்தாமரைக் கண்
உறைபவன் போல ஓர் யோகு புணர்ந்த ஒளி மணி வண்ணன் கண்ணன்
கறை அணி மூக்குடைப் புள்ளைக் கடாவி அசுரரைக் காய்ந்த அம்மான்
நிறை புகழ் ஏத்தியும் பாடியும் ஆடியும் யான் ஒரு முட்டு இலனே.–3-10-2-

குறைவு இல் தடம் கடல் கோள் அரவு ஏறி-
தன்னுடைய சந்நிதானத்தாலே குறைவற்று கண் வளர்ந்து அருள போரும்படியான பெரிய கடலிலே நிரவதிக தீப்தி உக்தனான திரு வனந்த ஆழ்வான் மேலே ஏறி
கோள் ஆகிறது மிடுக்கு என்றும் சொல்வர் / கண்உறைகை -கண் வளர்ந்து அருளுகை
ஓர் யோகு புணர்ந்த-இத்யாதி
திரு வனந்த ஆழ்வானோட்டை ஸ்பர்சத்தாலும் -ஸ்வ குண அனுசந்தானத்தாலும் உஜ்ஜவலமான திரு நிறத்தை உடையவனாய்
ஆஸ்ரித ஆபன் நிவாரண அர்த்தமாக கிருஷ்ணனாய் வந்து திரு வவதாரம் பண்ணி யருளி பிரதி கூலருடைய ருதிரத்தால் கறை ஏறி
அதுவே ஆபரணமாக திரு மூக்கை உடைய பெரிய திருவடியை நடத்தி அஸூர நிரஸனம் பண்ணின சர்வேஸ்வரனுடைய
பரிபூரணமான புகழை ஹ்ருஷ்டனாய்க் கொண்டு மிகவும் அனுபவிக்கப் பெறுகையாலே நான் ஒன்றும் ப்ரதிஹத போகன் அல்லேன்

—————————————————————————————————–

சர்வேஸ்வரனுடைய போக்யதா அனுசந்தான ப்ரீதி பலாத்காரத்தாலே அவனுக்கு அடிமை செய்கையில்
ப்ரவ்ருத்தனான எனக்கு ஒரு மநோ துக்கமும் இல்லை என்கிறார் –

முட்டு இல் பல் போகத்து ஒரு தனி நாயகன் மூவுலகுக்கு உரிய
கட்டியைத் தேனை அமுதை நன் பாலைக் கனியைக் கரும்பு தன்னை
மட்டு அவிழ் தண் அம் துழாய் முடி யானை வணங்கி அவன் திறத்துப்
பட்டபின்னை இறை யாகிலும் யான் என்மனத்துப் பரிவு இலனே.–3-10-3-

முட்டு இல் பல் போகத்து-ஒரு தனி நாயகன்
அப்ரதிஹத அசங்க்யேய போகனாய் நிரஸ்த ஸமஸ்த சமாதிகனான சர்வேஸ்வரனாய்
மூவுலகுக்கு உரிய-இத்யாதி
எல்லாருக்கும் ஓக்க பிராப்தமான ஜகத்திலே ரஸ வஸ்துக்கள் எல்லாம் போலேயுமாய் இவ்வளவு என்று பரிச்சேதிக்க ஒண்ணாத படி
நிரதிசய போக்யமாய் இருந்துள்ள அவன் திருவடிகளில் அடிமையில் அந்வயித்த பின்பு
மூ உலகுக்கு உரிய ஒரு தனி நாயகன் என்று கூட்டிக் கொள்ளவுமாம் –

———————————————————————————————————

தேவதாந்த்ரங்கள் ஆச்ரயித்தாருடைய ஆபத்துக்கு துணை யல்லர் என்னும் இடத்தைக் காட்டின
எம்பெருமானை ஆஸ்ரயித்து உன்மூலித ஸமஸ்த துக்கன் ஆனேன் –

பரிவு இன்றி வாணனைக் காத்தும் என்று அன்று படையொடும் வந்து எதிர்ந்த
திரிபுரம் செற்றவனும் மகனும் பின்னும் அங்கியும் போர் தொலையப்
பொரு சிறைப் புள்ளைக் கடாவிய மாயனை ஆயனைப் பொன் சக்கரத்து
அரியினை அச்சுதனைப் பற்றி யான் இறையேனும் இடர் இலனே.–3-9-4-

பரிவு இன்றி -வருத்தம் இன்றி /படை -சேனை –
திரிபுரம் பெற்றவன் -திரிபுர தஹன அபதான சஞ்சாத அபிமானனான ருத்ரன் –
மகன் -ஸூ ப்ரஹ்மண்யன் /அங்கி – அக்னி
போர் தொலையப்-இத்யாதி
பல ஹீனராம் படி பொரு கிற திருச் சிறகை உடைய பெரிய திருவடியை அத்யாச்சிரயமாம் படி கடவி ரமணீய தர்சநமான திரு வாழியை
தரிக்கையாலே சத்ருக்களுக்கு அப்ரதிருஷ்யனாய் திருவடிகளை ஆச்ரயித்தார்க்கு ஒரு சோர்வு வராதபடி பண்ணும்
ஸ்வ பாவனான ஆயனைப் பற்றுகையாலே –

————————————————————————————————————-

வைதிக புத்ர அநயன மஹா அபதானத்தை அனுசந்தித்து துக்கம் இல்லை என்கிறார் –

இடர் இன்றியே ஒருநாள் ஒரு போழ்தில் எல்லா உலகும் கழியப்
படர் புகழ்ப் பார்த்தனும் வைதிகனும் உடன் ஏறத் திண் தேர் கடவிச்
சுடர் ஒளியாய் நின்ற தன்னுடைச் சோதியில் வைதிகன் பிள்ளைகளை
உடலொடும் கொண்டு கொடுத்தவனைப் பற்றி ஒன்றும் துயர் இலனே.–3-10-5-

இடர் இன்றியே ஒருநாள் ஒரு போழ்தில் எல்லா உலகும் கழியப்-படர் புகழ்ப் பார்த்தனும் வைதிகனும் உடன் ஏறத் திண் தேர் கடவிச்
ஒரு நாளிலே ஒரு முஹூர்த்தத்திலே ஒரு வருத்தமும் இன்றிக்கேஅண்டத்துக்கு உறம்பான ஆவரண லோகங்களும் கழியும் படி தன்னையே
நாதனாகவும் தோழனாகவும் தூதனாகவும் சாரதியாகவும் மற்றும் எல்லா பரிஜனமாகவும் உடையனான பெரும் புகழை உடைய
அர்ஜுனனும் வைதிகனும் உடனே ஏற கார்ய ரூபமாய் வைத்து தன் ஆகாரம் அழியாது இருக்கச் செய்தெ காரியங்களுக்கு எல்லாம்
மூல காரணமான ப்ரக்ருதி பர்யந்தமாக போம்படி திருத் தேரை நடத்தி
சுடர் ஒளியாய் நின்ற தன்னுடைச் சோதியில் வைதிகன் பிள்ளைகளை-உடலொடும் கொண்டு கொடுத்தவனைப் பற்றி ஒன்றும் துயர் இலனே-
அப்ராக்ருத தேஜோ ரூபமாய் தனக்கு அசாதாரணமான திரு நாட்டிலே புக்கருளி வைதிக புத்திரர்களை அவ்வுடம்போடே அப்பருவத்தோடே
கொண்டு வந்து கொடுத்தவனைப் பற்றுகையாலே நிர்த் துக்கன் ஆனேன் –

—————————————————————————————————————–

கிருஷ்ணனுடைய நிரவதிகமான அழகை அனுபவித்த எனக்கு ஒரு துக்க கந்தமும் இல்லை என்கிறார் –

துயர் இல் சுடர் ஒளி தன்னுடைச் சோதி நின்ற வண்ணம் நிற்கவே
துயரின் மலியும் மனிசர் பிறவியில் தோன்றிக் கண் காண வந்து
துயரங்கள் செய்து தன் தெய்வ நிலை உலகில் புக உய்க்கும் அம்மான்
துயரம் இல் சீர்க் கண்ணன் மாயன் புகழ் துற்ற யான் ஓர் துன்பம் இலனே.–3-10-6-

துயர் இல் சுடர் ஒளி-இத்யாதி
ஹேய ப்ரத்ய நீகமாக தேஜோ ரூபமாய் ஸ்வ அசாதாரணமான திவ்ய ரூபத்தை கூடக் கொண்டே துக்க சாகர மக்நரான
மனுஷ்யருடைய பிறவியிலே அவர்களை ரஷித்து அருளுகைக்காக வந்து திரு அவதாரம் பண்ணி அருளி அவர்களுடைய
சஷூர் விஷயமாக வந்து தன் ஸுந்தர்யாதி களாலே அவர்களை மிகவும் ஈடுபடுத்தி
தன் தெய்வ நிலை-இத்யாதி
தன்னுடைய அப்ராக்ருத ஸ்வ பாவத்தை லோகத்தில் ஆவிஷ்கரித்து அத்தாலே எல்லாரையும் அடிமை கொண்டு அச் செயலால்
அத்யாச்சர்ய பூதனான ஹேய ப்ரத்ய நீகனாய் கல்யாண குணகனான கிருஷ்ணனுடைய புகழை –

———————————————————————————————————————-

லீலா உபகரணத்தாலே எம்பெருமானுக்கு உண்டான ரசத்தை அனுபவித்து நிர்த் துக்கனேன் ஆனேன் -என்கிறார் –

துன்பமும் இன்பமும் ஆகிய செய் வினையாய் உலகங்களுமாய்
இன்பம் இல் வெந் நரகாகி இனிய நல்வான் சுவர்க்கங்களுமாய்
மன்பல் உயிர்களும் ஆகிப் பலபல மாய மயக்குகளால்
இன்புறும் இவ் விளையாட்டுடையானைப் பெற்று ஏதும் அல்லல் இலனே.–3-10-7-

துன்பமும் இன்பமும் ஆகிய செய் வினையாய் –
ஸூக துக்கங்களை விளைக்கக் கடவ புண்ய பாப ரூப கர்மங்களுக்கு நியாமகனாய்
உலகங்களுமாய்
அவை ஆர்ஜிக்கும் கர்மா பூமிக்கு நிர்வாஹகனாய் -பல அனுபவ பூமி என்றுமாம் –
இன்பம் இல் வெந் நரகாகி இனிய நல்வான்-சுவர்க்கங்களுமாய்-
ஸூக கந்தம் இல்லாத துக்கமே அனுபவிக்கக் கடவதான நரகத்துக்கு நிர்வாஹகனாய் -சுத்த ஸூ கமே அனுபவிக்கக் கடவதான ஸ்வர்க்கத்துக்கு நிர்வாஹகனாய் –
நரகு என்றும் ஸ் வர்க்கம் என்றும் ஸூ க துக்கங்கள் ஆகவுமாம்
மன்பல் உயிர்களும் ஆகிப்
ஸ்வர்க்க நரகாதிகளை என்றும் புஜிக்கக் கடவதான ஆத்மாக்களுக்கு நிர்வாஹகனாய்
பலபல மாய மயக்குகளால்-இன்புறும் இவ் விளையாட்டுடையானைப் பெற்று ஏதும் அல்லல் இலனே.–
இப்படி உள்ள அசங்க்யேயமான ப்ரக்ருதி விகார முகத்தால் உண்டான சேதனருடைய மதி விபரமங்களாலே
ப்ரீத்யாவஹமான லீலைகளை உடையவனைப் பெற்று பரம காருணிகனான எம்பெருமானுக்கு பிறருடைய துக்க அநு சந்தானம்
ப்ரீதி ஹேது வான படி எங்கனே என்னில் தன்னுடைய கருணையால் அவற்றை ரக்ஷிக்க நினைத்தால் அந்த ரக்ஷணம் அவற்றுக்கு
அநிஷ்டமாய் இருக்கிற இருப்பு அவனுக்கு ஹாஸ்ய ஹே துவாய் அவ் வழியால் லீலா ரஸ சாதகமாய் விட்டன –

——————————————————————————————————————–

எம்பெருமான் நித்ய விபூதி அனுபவம் பண்ணும் படியை பேசி அனுபவிக்கிறார் –

அல்லல் இல் இன்பம் அளவு இறந்து எங்கும் அழகு அமர்சூழ் ஒளியன்
அல்லி மலர்மகள் போக மயக்குகள் ஆகியும் நிற்கும் அம்மான்
எல்லை இல் ஞானத்தன் ஞானம் அஃ தேகொண்டு எல்லாக் கருமங்களும் செய்
எல்லை இல் மாயனைக் கண்ணனைத் தாள் பற்றி யான் ஓர் துக்கம் இலனே.–3-10-8-

துக்க கந்தம் இன்றிக்கே நிரவதிகமான ஆனந்தத்தை உடையனாய் நிரதிசய ஸுந்தர்யத்தை உடையனாய்
போக்யையான பெரிய பிராட்டியாரோட்டை கலவியாலே வந்த நிரதிசய ஆனந்தங்களை உடையனாய் இருக்கை யாகிற ஐஸ்வர்யத்தை உடையனான
சஹகாராந்தர நிரபேஷமான தன் சங்கல்ப ரூப ஞானத்தால் பெரிய பிராட்டியாருக்கும் பிரியமாக கார்ய பூத ஜகத்தை எல்லாம் உண்டாக்கும்
ஸ்வபாவனாய் இப்படிப்பட்ட முடிவில்லாத ஆச்சர்யங்களை உடையனான கிருஷ்ணனுடைய திருவடிகளை சேர்ந்து –

———————————————————————————————————————-

சர்வாச்சார்ய பூமியான வடதள சாயியை அனுபவிக்கப் பெற்ற எனக்கு ஒரு தளர்வும் இல்லை என்கிறார் –
மஹா பிரளய வ்ருத்தாந்தத்தை அனுசந்திக்கிறார் என்னுதல் –

துக்கம் இல் ஞானச் சுடர் ஒளி மூர்த்தி துழாய் அலங்கல் பெருமான்
மிக்க பன் மாயங்களால் விகிர்தம் செய்து வேண்டும் உருவுகொண்டு
நக்க பிரானோடு அயன் முதலாக எல்லாரும் எவையும் தன்னுள்
ஒக்க ஒடுங்க விழுங்க வல்லானைப் பெற்று ஒன்றும் தளர்வு இலனே.–3-10-9-

ஹேய ரஹிதமான ஞானத்தையும் நிரதிசய தேஜோ மயமான திவ்ய ரூபத்தையும் உடையனாய் சர்வேஸ்வரத்வ ஸூசகமான திருத் துழாய்
மாலையால் அலங்க்ருதனாய் -அபரிச்சேதயமான அநேக ஆச்சர்ய சக்திகளால் ஸ்வ அபிமத திவ்ய தேஹங்களைக் கொண்டு
ஆச்சர்ய சேஷ்டிதங்களைப் பண்ணி பிரதானரான ருத்ரன் ப்ரஹ்மா என்கிற இவர்கள் தொடக்கமாக சேதன அசேதனங்களை அடைய
தன் திரு வயிற்றிலே ஒரு காலே சென்று சேரும்படி விழுங்க வல்லவனை

—————————————————————————————————————–

ஸமஸ்த வஸ்துக்களிலும் ஆத்மதயா வியாப்தனாய் அவர்களுடைய இந்திரியங்களுக்கும் கோசாரம் இன்றிக்கே ஜகத் சரீரனான
கிருஷ்ணனை வணங்கப் பெற்ற எனக்கு ஒரு நாளும் ஒரு கேடு இல்லை என்கிறார் –

தளர்வு இன்றியே என்றும் எங்கும் பரந்த தனிமுதல் ஞானம் ஒன்றாய்
அளவுடை ஐம்புலன்கள் அறியா வகையால் அருவாகி நிற்கும்
வளர் ஒளி ஈசனை மூர்த்தியைப் பூதங்கள் ஐந்தை இருசுடரைக்
கிளர் ஒளி மாயனைக் கண்ணனைத் தாள் பற்றி யான் என்றும் கேடு இலனே.–3-10-10-

ஏக ரூபமாக என்றும் -எல்லா விடத்திலும் வியாப்பிப்பதும் செய்து -ஜகத்துக்கு சஹாயாந்தர நிரபேஷமான காரணமாய்
வி லக்ஷண ஞான ஸ்வரூபனாய் பரிச்சின்ன வஸ்து க்ராஹகமான இந்த்ரியங்களால் அறிய ஒண்ணாத படி அவற்றுக்கு விஷயமாய் நிற்கும் –
வியாப்பிய வஸ்து கத தோஷை அஸம்ஸ்ப்ருஷ்டனாய்-அவற்றுக்கு நியாமகனாய் மிக்கு இருந்துள்ள உஜ்ஜ்வல்யத்தை உடைய
திவ்ய தேஹ உக்தனாய் பூத பவ்திதமான ஜகத்தை சரீரமாக உடையனாய் நிரவதிக தேஜோ விசிஷ்டா திவ்ய ரூபத்தோடே வந்து
வஸூதேவ க்ருஹே அவ தீரணனான எம்பெருமானுடைய திருவடிகளை –

——————————————————————————————————————–

நிகமத்தில் இது திருவாய் மொழியை அப்யசிக்குமவர்களை இந்த லோகத்தில் எல்லாரும் அறியும் படி வைஷ்ணவ ஸ்ரீ யிலே நடத்தி
பின்னை திரு நாட்டிலும் கொண்டு போவதும் செய்து தன்னுடைய ஐஸ்வர்யம் எல்லாம் இவர்கள் இட்ட வழக்காகும் என்கிறார் –

கேடு இல் விழுப் புகழ்க் கேசவனைக் குருகூர்ச் சடகோபன் சொன்ன
பாடல் ஓர் ஆயிரத்துள் இவையும் ஒருபத்தும் பயிற்ற வல்லார்க்கு அவன்
நாடும் நகரமும் நன்குடன் காண நலனிடை ஊர்தி பண்ணி
வீடும் பெறுத்தித் தன் மூவுல குக்கும் தரும் ஒரு நாயகமே.–3-10-11-

நித்ய சித்த கல்யாண குணங்களை உடையனான கேசி ஹந்தாவை ஆழ்வார் அருளிச் செய்த ஆயிரம் திருவாய் மொழியிலும்
இது திருவாய் மொழியை அப்யஸிக்க வல்லார்க்கு –நாடு நகரமும் -விஷேசஞ்ஞரும் -அவிஷேசஞ்ஞரும்

—————————————————————————————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

திருவாய்மொழி ஒன்பதினாயிரப்படி -3-9-

August 27, 2016

தம்முடைய கரண க்ராமமும் எம்பெருமானைக் காண ஆசைப்பட்டு நெடும் போது கூப்பிட்டு பெறாமையாலே மிகவும் அவசன்னரான ஆழ்வார்
நம்மோடு சக துக்கிகளாய் இருப்பார் உண்டோ என்று பார்த்த இடத்தில் தாம் ஒழிய வ்யதிரிக்தர் எல்லாம் தாம்
பகவத் ப்ரவணர் ஆனால் போலே சப் தாதி விஷயங்களில் மிகவும் ப்ரவண ராய் அதுக்கு உறுப்பாக
மனுஷ்யாதிகளை கவி பாடி திரிகிற படியைக் கண்டு தம்முடைய வியசனம் எல்லாம் மறந்து
ஸமஸ்த கல்யாண குணாத்மகனாய் அத்யந்த ஸூ ந்தரனாய் ஸ்ரீ யபதியாய்-இப்படி இருக்கையாலே கவி பாடுகைக்கு விஷயம் போந்து
தன்னைப் பாடின கவியைக் கொண்டாடுகைக்கு ஈடான பரிஜனங்களை யும் உடையவனாய் கவி பாடினார்க்கு வழங்குகைக்கு ஈடான
விபூதிகளையும் உடையவனாய் -ஸ்வ ஆராதனாய் அவர்களுக்கு போக மோஷாதி சகல புருஷார்த்தங்கள் கொடா விடிலும்
தன்னைப் பாடுகையே பிரயோஜனம் போந்து இருக்கிற எம்பெருமானை ஒழிய -கவி பாடுகைக்கு ஈடான நன்மைகள் ஒன்றும் இன்றிக்கே
கவி பாடினார்க்கு தருவதும் ஒன்றும் இன்றிக்கே தங்கள் நிஸ் ஸ்ரீ கராய் அதுக்கு மேலே கவி பாடினவர்கள் சந்திக்கும் தனை நாள்
நிலை நிற்பதுவும் செய்யாதே முடியும் ஸ்வபாவராய்
கவி பாடினால் ஒரு பிரயோஜனம் பெறாமையே அன்றியே கவி பாட்டு உண்கிறவனுக்கு இல்லாத நன்மைகளை
ஏறிட்டு பாடுகையாலே அவனுக்கு உள்ள தோஷங்களை வெளியிட்டு அவ்வழியாலே அவனுக்கு அவத்யாவஹராய் அபிராப்த விஷயத்தில் பாடுகையாலே
கவி பாடினார் நரகம் புகும் படி இருக்கிற ஷூ த்ரரை பகவத் அர்ஹமான உங்களுடைய அழகிய கவிகளைக் கொண்டு ஸ்துதிக்கை ஈடு அன்று
என்று அருளிச் செய்து -உங்களை போலே அன்றியே நான் வேறு சிலரை ஸ்துதிக்கை அநர்ஹ கரணனாக பெற்றேன் என்று ப்ரீதராய் முடிக்கிறார்
ஊனில் வாழ் உயிரிலே ப்ரீதிக்கு நித்ய ஸூ ரிகளை சஜாதீயராக தேடினால் போலே இங்கு வியசனத்துக்கு சம்சாரிகளை
சஜாதீயராகக் கருதி இங்கண் அல்லாமையாலே அவர்களை திருத்தப் பார்க்கிறார் –

—————————————————————————————————

வேறு சிலரை கவி பாடுகிறவர்களுக்கு ஹிதம் உபதேசிக்கைக்காக ப்ரவ்ருத்தரான ஆழ்வார்
அவர்களுக்கு ருசி பிறக்கைக்காக தம்முடைய மதத்தை அருளிச் செய்கிறார் –

சொன்னால் விரோதம் இது, ஆகிலும் சொல்லுவன் கேண்மினோ!
என் நாவில் இன்கவி யான் ஒருவர்க்கும் கொடுக்கிலேன்
தென்னா தெனா என்று வண்டு முரல் திரு வேங்கடத்து
என் ஆனை என் அப்பன், எம்பெருமான் உளனாகவே.–3-9-1-

சொன்னால் விரோதம் இது, ஆகிலும் சொல்லுவன்
பிரயோஜனாந்தர பரராய் இருக்கிற உங்களுக்கு நான் சொல்லுகிற ஹிதம் அஸஹ்யமாகக் கடவது –
ஆகிலும் உங்கள் அநர்த்தம் பொறுக்க மாட்டாமையாலே சொல்லாத் தவிரேன்
எம்பெருமானை ஒழிய வேறு சிலரை கவி பாடாதே கொள்ளுக்குங்கோள் என்று நிஷேதயத்தயா சொல்லுகையும் ஈடு அல்லாவாகிலும்
பகவத் அநு ரூபமாய் இருக்கிற உங்களுடைய கவிகள் அவனுக்கே யாக வேணும் என்னும் லோபத்தாலே சொல்லுகிறேன் என்றுமாம் –
கேண்மினோ!
நான் சொன்ன பொருள் அனுஷ்ட்டிக்க மாட்டி கோள் ஆகிலும் இத்தனையும் கேட்டுத் தீர வேணும்
என் நாவில் இன்கவி யான் ஒருவர்க்கும் கொடுக்கிலேன்
நிரதிசய போக்யமாய் எம்பெருமானுக்கே அர்ஹமான கவிகளை அவனுக்கு தவிர மாற்று ஒருவருக்கு நான் கொடுக்க ஷமன் அல்லேன் –
தென்னா தெனா என்று வண்டு முரல் திரு வேங்கடத்து-என் ஆனை என் அப்பன், எம்பெருமான் உளனாகவே-
நிரதிசய போக்யமான திருமலையில் எனக்கு நித்ய அபூர்வமாய் கவி பாட விஷயம் போந்து எனக்கு மஹா உபகாரத்தை பண்ண வல்லனாய்
அபிராப்த ஸ்தலத்திலே கவி பாடுகை ஆகாதபடி எனக்கு நாதனுமாய் இருக்கிறவன் என்னை கவி பாடுத்திக் கொள்ள வந்து நிற்க –

————————————————————————————————

சத்தியமாய் சமக்ரமாய் இருந்த கல்யாண குண சம்பத்துக்களை உடையனாய் இருந்துள்ள எம்பெருமானை விட்டு
அஸத் கல்பராய் அவஸ்து பூத சம்பத்துக்களை உடையர் ஆனவர்களை கவி பாடுவாரை நிந்திக்கிறார் –

உளனாகவே எண்ணித் தன்னை ஒன்றாகத் தன் செல்வத்தை
வளனா மதிக்கும் இம் மானிடத்தைக் கவி பாடி என்
குளன் ஆர் கழனி சூழ் கண்ணன் குறுங்குடி மெய்ம்மையே
உளன் ஆய எந்தையை எந்தை பெம்மானை ஒழியவே?–3-9-2-

உளனாகவே -இத்யாதி –
அசன்நேவ ச பவதி -என்னும் கணக்காலே இன்றிக்கே இருக்கிற தன்னை ஒரு சரக்காக அனுசந்தித்து தனக்கு தக்க ஷூ த்ர சம்பத்தை
ஒரு சம்பத்தாகக் கொண்டாடும் இம் மதி கேடரை கவி பாடி என்ன பிரயோஜனம் உண்டு –
குளன் ஆர் கழனி-இத்யாதி –
நல்ல பொய்கை களால் அலங்க்ருதமான கழனி சூழ்வதும் செய்து எம்பெருமான் என்னது என்று அபிமானிக்க வேண்டும்படி நன்றாய் இருந்துள்ள
திருக் குறுங்குடியிலே சொன்ன குணங்கள் எல்லாம் பத்தும் பத்தாக உடையனாய் எனக்கு நாதனுமாய் என் குடிக்கு நாதனுமாய் நிக்கிறவனை ஒழிய –

——————————————————————————————————

அத்யந்த விலஷணனாய் மஹா உபகாரகனான எம்பெருமானை ஒழிய ஷூத்ர மனுஷ்யரை கவி பாடி என்ன பிரயோஜனம் உண்டு -என்கிறார்

ஒழிவு ஒன்று இலாத பல் ஊழிதோறு ஊழி நிலாவப் போம்
வழியைத் தரும் நங்கள் வானவர் ஈசனை நிற்கப் போய்க்
கழிய மிக நல்ல வான்கவி கொண்டு புலவீர்காள்!
இழியக் கருதி ஓர் மானிடம் பாடல் என்னாவதே?–3-9-3-

ஒழிவு ஒன்று இலாத -இத்யாதி –
காலம் உள்ளதனையும் இடைவிடாதே ப்ரக்ருதி வஸ்யன் அன்றிக்கே ஈஸ்வர பரதந்த்ரனாய் வர்த்திகைக்கு ஈடான உபாயத்தை
அயர்வறும் அமரர்களும் தானும் கூட விரும்பித் தருமவனை தவிர வேறு கவி பாடுகைக்கு விஷயம் தேடித் போய்
வழி என்று அர்ச்சிராதி மார்க்கம் என்றும் -ப்ராப்யமான கைங்கர்யம் என்றும் சொல்லுவர்-
கழிய மிக நல்ல-இத்யாதி
அற மிக்க நல்லவாய் வலியவான கவிகளைக் கொண்டு விசேஷஞ்ஞரான நீங்கள் உங்களுக்கு ஸ்வரூப ஹானி வரும்படி பார்த்து –

———————————————————————————————————————–

தன்னை கவி பாடினார்க்கு தன்னோடு ஒத்த வரிசையை கொடுக்குமவனை தவிர மந்த ஆயுசு ஸூக்களாய்
இருக்கிற மனுஷ்யரைக் கவி பாடினால் பெறுவது அத்யல்பம் என்கிறார்-

என்னாவது, எத்தனை நாளைக்குப் போதும், புலவீர்காள்!
மன்னா மனிசரைப் பாடிப் படைக்கும் பெரும்பொருள்!
மின்னார் மணிமுடி விண்ணவர் தாதையைப் பாடினால்,
தன்னாகவே கொண்டு சன்மம் செய்யாமையும் கொள்ளுமே.–3-9-4-

என்னாவது, எத்தனை-இத்யாதி –
கவி பாடினார் கவி கொண்டு வந்து கேட்பீக்கும் தனை நாள் இருக்கைக்கு ஆயுஸ் ஸூ இல்லாத மனுஷ்யரைக் கவி பாடினால்
அவர்கள் இருந்தார்களே யாகிலும் பெறுமது ஓன்று பெற்றாலும் அதியல்பம்
பெரும் பொருள் என்று உபாலம்பம்
மின்னார் மணிமுடி-இத்யாதி
ஓளி மிக்கு இருந்துள்ள மணிகளோடு கூடின முடியை உடைய அயர்வறும் அமரர்கள் அதிபதியைக் கவி பாடினால்
தன்னோடு ஒத்த வரிசையைக் கொடுத்து பின்னை சம்சாரத்தையும் அறுக்கும்
தன்னாகவே கொண்டு–தனக்கு ஆக்கிக் கொள்ளும் என்றுமாம்
மின்னார் மணிமுடி விண்ணவர் தாதை-என்றதுக்கு கருத்து
கவி பாடினவர்கள் தலையிலே முடியை வைத்து அயர்வறும் அமரர்களும் தானும் கொண்டாடும் என்று –

——————————————————————————————————————–

ஹேய குணராய் உபகாரகரும் இன்றிக்கே இருந்துள்ள ஜனங்களை விட்டு -ஸமஸ்த கல்யாண குணகரனாய்
நமக்கு அபேக்ஷிதம் எல்லாம் தரும் ஸ்வ பாவனான எம்பெருமானைக் கவி பாட வாருங்கோள் என்கிறார் –

கொள்ளும் பயன் இல்லை, குப்பை கிளர்த்தன்ன செல்வத்தை
வள்ளல் புகழ்ந்து,நும் வாய்மை இழக்கும் புலவீர்காள்!
கொள்ளக் குறைவிலன் வேண்டிற்று எல்லாம் தரும் கோதுஇல் என்
வள்ளல் மணிவண்ணன் தன்னைக் கவி சொல்ல வம்மினோ.–3-9-5-

கொள்ளும் பயன் இல்லை, குப்பை கிளர்த்தன்ன செல்வத்தை-வள்ளல் புகழ்ந்து,நும் வாய்மை இழக்கும் புலவீர்காள்!
அவர்கள் பக்கல் கொள்ளக் கடவது ஒரு பிரயோஜனம் இன்றிக்கே குப்பையை கிளறினால் போலே ஆராயப் புகில்
ஹேயமாய் இருக்கிற சம்பத்தை நன்றாகக் புகழ்ந்து அவர்களுடைய தோஷத்தை வெளிப்படுத்தி உங்களுடைய வாக்மிதையையும் இழந்து இருக்கிற
நீங்கள் விசேஷஞ்ஞராய் இருக்கிறிகோள் –
கொள்ளக் குறைவிலன் வேண்டிற்று எல்லாம் தரும் கோதுஇல் என்-வள்ளல் மணிவண்ணன் தன்னைக் கவி சொல்ல வம்மினோ-
நம்முடைய கவிக்கு விஷயமாக வேண்டும் புஷ்கல்யத்தை உடையனாய் அபேக்ஷித்தமான போக மோஷாதிகளை எல்லாம் தரும் ஸ்வ பாவனாய்
உபகரிக்கும் இடத்தில் ஜல ஸ்தல விபாகம் பாராதே புஷ்கலமாக கொடா நின்றால்-இங்கனம் கொடா நின்றோம் என்ற அபிமானமும் இன்றிக்கே
இந்நீர்மைகள் ஒன்றும் இல்லை யாகிலும் கைக்கூலி கொடுத்துக் கவி பாட வேண்டும் அழகை உடையனானவனை கவி சொல்ல வாருங்கோள் –

———————————————————————————————————————-

ஜீவன அர்த்தமாக மனுஷ்யாதிகளை ஸ்துதிக்கிறோம் -என்று அவர்கள் சொல்ல -அதி ஷூ த்ரரான மனுஷ்யரை ஆஸ்ரயித்து
ஜீவனம் பெறுமத்தைக் காட்டிலும் சரீரங்கள் நோவ சுமை சுமந்தும் கைத் தொழில்கள் செய்தும் ஜீவிக்கை நன்று என்ன –
அவர்களும் அத்தாலே எங்களுக்கு வேண்டுவது எல்லாம் கிடையாது -ஆதலால் எங்கள் இஷ்ட தேவதைகளை கவி பாடி எங்கள் அபேக்ஷிதங்களை பெறுவோம் என்ன
நீங்கள் அவர்களை ஸ் துதிக்கைக்கு ஈடான நீர்மைகள் அவர்களுக்கு இல்லாமையால் அந்நீர்மைகளை உடைய எம்பெருமான் பக்கலிலே சேரும்
உங்களுக்கு ஸுர்யமே சித்திப்பது -ஆனபின்பு எம்பெருமானையே கவி பாட வாருங்கோள் என்கிறார் –

வம்மின் புலவீர்!நும் மெய் வருத்திக் கை செய்து உய்ம்மினோ!
இம்மன் உலகில் செல்வர் இப்போது இல்லை நோக்கினோம்;
நும் இன் கவி கொண்டு நும்நும் இட்டா தெய்வம் ஏத்தினால்
செம்மின் சுடர்முடி என் திருமாலுக்குச் சேருமே.–3-9-6-

வாருங்கோள் -நித்தியமாய் வருகிற இவ்வுலகத்தில் உங்கள் கவியின் தரம் அறிந்து கொண்டாடிக் கொடுக்கும் செருக்குடையாரை
இப்போது ஆராய்ந்து பார்த்த இடத்தில் கண்டிலோம் -கவி பாட்டு உண்கிற தேவதையின் பேரும் அவ்வளவும் சென்று
அவற்றுக்கு வாசகமாம் வகையிலும் அவனையே கவி பாடிற்றாம் –

—————————————————————————————————————

எம்பெருமானை ஒழிய வேறு சிலரை கவி பாடுகைக்கு நான் ஷமன் அன்றிக்கே ஒழியப் பெற்றேன் -என்று பிரித்தார் ஆகிறார் –

சேரும் கொடை புகழ் எல்லை இலானை,ஓர் ஆயிரம்
பேரும் உடைய பிரானை அல்லால்,மற்று யான்கிலேன்;
மாரி அனைய கை, மால்வரை ஒக்கும் திண்தோள் என்று,
பாரில் ஓர் பற்றையைப் பச்சைப் பசும்பொய்கள் பேசவே.–3-9-7-

சேரும் கொடை புகழ் -இத்யாதி
ஏதேனும் கொடுத்தான் என்றாலும் அவனுக்கு ஆகிற்கும் என்று இருக்கிற தன்னுடைய கொடையாலே வந்த புகழுக்கு எல்லை இல்லாதானுமாய்
கவி பாடுகைக்கு ஈடான குண சேஷ்டிதாதிகளுக்கு ப்ரதிபாதகமான அசங்க்யாதமான திருநாமங்களை உடையானை ஒழிய
மாரி அனைய-இத்யாதி –
உதாரணத்துக்கு கை மேகத்தோடு ஒக்கும் -திண்மைக்கு தோள் மலையோடு ஒக்கும் -என்று பூமியிலே
தருண சமானாய் இருப்பான் ஒருவன் ஆகிற ஷூ த்ர ஜந்துவை கவி பாடுகை ஆகிற கலப்பில்லாத பொய் சொல்ல
பாரில் ஓர் பற்றையை-குடிப் பற்று இல்லாத அதி லுப்தனை என்றுமாம் –

——————————————————————————————————————–

அகில ஹேய ப்ரத்ய நீக கல்யாண குண சாகரமாய் நப்பின்னை பிராட்டிக்கு வல்லபனாய் இருக்கிறவனை ஒழிய
வேறு சில ஷூ த்ர மனுஷ்யரை கவி பாட நான் உபக்ரமிக்கிலும் என் வாய் அதுக்கு பங்கு ஆகாது என்கிறார்-

வேயின் மலிபுரை தோளி பின்னைக்கு மணாளனை
ஆய பெரும்புகழ் எல்லை இலாதன பாடிப்போய்க்
காயம் கழித்து,அவன் தாளிணைக் கீழ்ப்புகும் காதலன்,
மாய மனிசரை என்சொல வல்லேன் என்வாய் கொண்டே?–3-9-8-

வேயிற் காட்டிலும் அழகியதாய் பரஸ்பரம் ஒத்த தோளை உடைய நப்பின்னை பிராட்டிக்கு வல்லபன் ஆணவனுடைய கல்யாணமாய்
அசங்க்யாதமான மஹா குணங்களை நெடுநாள் இனிதாக அனுபவித்துப் பின்னை இந்த பிராகிருத சரீரத்தை விட்டு
பகவத் அர்ஹமான அப்ராக்ருத சரீரத்தை பெற்று அவன் திருவடிக்கு கீழ் புகை வேண்டி இருந்த நான் –

——————————————————————————————————————-

பரம உதாரனாய் இருந்துள்ள எம்பெருமானாலே தன்னை கவி பாடுகையே ஸ்வபாவமாக பண்ணப் பட்டேனான எனக்கு
இதர ஸ்தோத்ரங்களில் அதிகாரம் இல்லை என்கிறார் –

வாய் கொண்டு மானிடம் பாடவந்த கவியேன் அல்லேன்;
ஆய் கொண்ட சீர் வள்ளல் ஆழிப் பிரான் எனக்கே உளன்;
சாய் கொண்ட இம்மையும் சாதித்து, வானவர் நாட்டையும்
நீ கண்டு கொள் என்று வீடும் தரும் நின்று நின்றே.–3-9-9-

ஆய் கொண்ட சீர் வள்ளல் ஆழிப் பிரான் எனக்கே உளன்;
ஸமஸ்த கல்யாண குணாத்மகனாய் திரு ஆழி முதலான திவ்ய ஆயுதங்களை உடையவன் பரம உதார குணத்தால் என்னுடைய
கவிகளுக்கே தன்னை விஷயமாக தந்து அருளினான் –
சாய் கொண்ட இம்மையும் சாதித்து, வானவர் நாட்டையும்-நீ கண்டு கொள் என்று வீடும் தரும் –
மோக்ஷ ஸூ கத்திலும் நன்றாம்படி இஹ லோகத்தில் ஸ்வ அனுபவத்தை எனக்கு பண்ணித்த தந்து ஸ்ரீ வைகுண்டத்தை
நீ கண்டு கொள் என்று அந்த மோக்ஷத்தை தரும் -பின்னையும் ஒன்றும் செய்யப் பெற்றிலோம் என்று மிறுக்கு படா நிற்கும் –
நின்று நின்றே
கீழ்ச சொன்னவை தரும் இடத்து அடைவடைவே தரும் என்றுமாம் –

———————————————————————————————————————

சர்வேஸ்வரன் கவியான எனக்கு இதர ஸ்தோத்திர கரணமானது அநு ரூபம் அன்று என்கிறார் –

நின்று நின்று பல நாள் உய்க்கும் இவ்வுடல் நீங்கிப் போய்ச்
சென்று சென்றாகிலும் கண்டு,சன்மம் கழிப்பான் எண்ணி,
ஒன்றி ஒன்றி உலகம் படைத்தான் கவி ஆயினேற்கு
என்றும் என்றும் இனி மற்றொருவர் கவி ஏற்குமே?–3-9-10-

நெடும் காலம் கூட வாகிலும் நின்று நின்று பல நாளும் ஆத்மாவுக்கு பாதகமான சரீரத்தை விட்டுப் போய் இனிப் பிறவாத படி
இவ்வாத்மாக்களை பண்ண வேணும் என்று எண்ணி அதிலே மிகவும் ஒருப்பட்டு லோகத்தை எல்லாம் உண்டாக்கினவனுடைய
கவியான எனக்கு காலம் உள்ள தனையும் வேறு சிலரை கவி பாடுகை தகுதி அன்று –
நெடுநாள் கூடாவாகிலும் தன்னைக் கண்டு என்றுமாம் –

——————————————————————————————————————

நிகமத்தில் இது திருவாய் மொழியை பாட மாத்ரத்தை சொல்ல வல்லார்க்கு வேறு சிலரைக் கவி பாட வேண்டா வென்று
கற்பிக்க வேண்டும்படியான சம்சாரத்தில் ஜென்மம் இல்லை என்கிறார் –

ஏற்கும் பெரும் புகழ் வானவர் ஈசன் கண்ணன் றனக்கு
ஏற்கும் பெரும் புகழ் வண் குருகூர்ச் சடகோபன் சொல்
ஏற்கும் பெரும் புகழ் ஆயிரத்துள் இவையும் ஓர்பத்து
ஏற்கும் பெரும்புகழ் சொல்ல வல்லார்க்கு இல்லை சன்மமே.–3-9-11-

இப்பாட்டுக்கு தகுதியான மிக்க புகழை உடையனாய் அயர்வறும் அமரர்கள் அதிபதியாய் இருந்துள்ள கிருஷ்ணன் தனக்கு
ஏற்று இருந்துள்ள பெரும் புகழை உடைய ஆழ்வார் அருளிச் செயலாய் சொன்ன புகழ் எல்லாம்
தக்கு இருந்துள்ள ஆயிரத்துள்ளே ஏற்கும் புகழான இது திரு வாய் மொழி சொல்ல வல்லார்க்கு –

———————————————————————————————————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

திருவாய்மொழி இருபத்து நாலாயிரப்படி -3-9–

August 27, 2016

தம்முடைய கரண க்ராமமும் எம்பெருமானைக் காண ஆசைப்பட்டு நெடும் போது கூப்பிட்டு பெறாமையாலே மிகவும் அவசன்னரான ஆழ்வார்
நம்மோடு சக துக்கிகளாய் இருப்பார் உண்டோ என்று பார்த்த இடத்தில் தாம் ஒழிய வ்யதிரிக்தர் எல்லாம் தாம்
பகவத் ப்ரவணர் ஆனால் போலே சப் தாதி விஷயங்களில் மிகவும் ப்ரவண ராய் அதுக்கு உறுப்பாக
மனுஷ்யாதிகளை கவி பாடி திரிகிற படியைக் கண்டு தம்முடைய இழவை எல்லாம் மறந்து
ஸமஸ்த கல்யாண குணாத்மகனாய் அத்யந்த ஸூ ந்தரனாய் ஸ்ரீ யபதியாய்-இப்படி இருக்கையாலே கவி பாடுகைக்கு விஷயம் போந்து
தன்னைப் பாடின கவியைக் கொண்டாடுகைக்கு ஈடான பரிஜனங்களை யும் உடையவனாய்-கேட்டாரார் வானவர்கள் -என்றும்
தொண்டர்க்கு அமுது உண்ண சொல் மாலைகள் சொன்னேன் -கவி பாடினார்க்கு வழங்குகைக்கு ஈடான
விபூதிகளையும் உடையவனாய் -எங்கனம் சொல்லிலும் இன்பம் பயக்கும் என்னும் படி -ஸ்வ ஆராதனாய் அவர்களுக்கு
போக மோஷாதி சகல புருஷார்த்தங்கள் கொடாவிடிலும்-தன்னைப் பாடுகையே பிரயோஜனம் போந்து இருக்கிற எம்பெருமானை ஒழிய
-கவி பாடுகைக்கு ஈடான நன்மைகள் ஒன்றும் இன்றிக்கே -கவி பாடினார்க்கு தருவதும் ஒன்றும் இன்றிக்கே தங்கள் நிஸ் ஸ்ரீ கராய் அதுக்கு மேலே
கவி பாடினவர்கள் சந்திக்கும் தனை நாள் -நிலை நிற்பதுவும் செய்யாதே முடியும் ஸ்வபாவராய்
கவி பாடினால் ஒரு பிரயோஜனம் பெறாமையே அன்றியே கவி பாட்டு உண்கிறவனுக்கு இல்லாத நன்மைகளை
ஏறிட்டு பாடுகையாலே அவனுக்கு உள்ள தோஷங்களை வெளியிட்டு அவ்வழியாலே அவனுக்கு அவத்யாவஹராய் அபிராப்த விஷயத்தில் பாடுகையாலே
கவி பாடினார் நரகம் புகும் படி இருக்கிற ஷூ த்ரரை பகவத் அர்ஹமான உங்களுடைய அழகிய கவிகளைக் கொண்டு ஸ்துதிக்கை ஈடு அன்று
என்று அருளிச் செய்து -உங்களை போலே அன்றியே நான் வேறு சிலரை ஸ்துதிக்கை அநர்ஹ கரணனாக பெற்றேன் என்று ப்ரீதராய் முடிக்கிறார்
ஊனில் வாழ் உயிரிலே ப்ரீதிக்கு நித்ய ஸூரிகளை சஜாதீயராக தேடினால் போலே இங்கு வியசனத்துக்கு சம்சாரிகளை
சஜாதீயராகக் கருதி இங்கண் அல்லாமையாலே அவர்களை திருத்தப் பார்க்கிறார் —
இவர் தம்முடைய இழவுக்கு கூப்பிடுகை தவித்து தங்கள் இழவுக்கு கூப்பிடும்படி பண்ணுவதே சம்சாரிகள் —

——————————————————————————————————————-

ஷூ த்ர விஷயங்களை கவி பாடுகை ஹிதம் அன்று என்று உபதேசிக்கையிலே ப்ரவ்ருத்தர் ஆனவர் அவர்களுக்கு ருசி பிறைக்கைக்காக
நான் இருக்கிற படி கண்டி கோளே-என்று தம்முடைய மதத்தை அருளிச் செய்கிறார் –

சொன்னால் விரோதம் இது, ஆகிலும் சொல்லுவன் கேண்மினோ!
என் நாவில் இன்கவி யான் ஒருவர்க்கும் கொடுக்கிலேன்
தென்னா தெனா என்று வண்டு முரல் திரு வேங்கடத்து
என் ஆனை என் அப்பன், எம்பெருமான் உளனாகவே.–3-9-1-

சொன்னால் விரோதம் இது, -ஆகிலும் சொல்லுவன் –
நீங்கள் சில பிரயோஜனங்களை நினைத்து கவி பாடா நிற்க -நான் அத்தை தவிருங்கோள் என்றால் உங்களுக்கு அது அஸஹ்யமாகிலும்
உங்கள் அநர்த்தம் பொறுக்க மாட்டாமையாலே சொல்லத் தவிரேன் -அஸேவ்ய சேவை நிஷேத்யத்தயா சொல்லவும் ஆகாதபடியாய் இருக்க
சொல்லுகிற எனக்கே விரோதமாய் பலிக்கிலும் உங்கள் அநர்த்தம் கண்டு சொல்லப் புக்கேன் ஆகையால் நீங்கள் மீளும் தனையும் சொல்லத் தவிரேன்
சொன்னால் உங்களுக்கு விரோதம் என்று பிரதிபன்னமாய் இருந்ததே யாகிலும் சொல்லுகிறேன் என்றுமாம்
யோ அவசதாஸ் ச உச்சயதாம் -என்று திரு நாமத்தை சொன்னால் அநந்தரம் இடி விழும் என்று வரும் அனர்த்தத்தை சொன்னிகோள் ஆதல்
திரு நாமத்தை சொன்னி கோள் ஆதல் செய்யுங்கோ ள் என்றான் இறே ப்ரஹ்லாத ஆழ்வான்
நீங்கள் அஹிதத்தில் பிரவணராய் மீள மாட்டாதாப் போலே உங்கள் ஹிதத்திலே பிரவணனான நானும் மீள மாட்டேன் என்கிறார் –
கேண்மினோ!
அனுஷ்ட்டிக்க வேண்டா -நீங்கள் செவி தாழ்க்க அமையும் –
ஸ்ரவணம் அனுஷ்டான சேஷமாக வேண்டாவோ -ஸ்ரவணம் மாத்திரமே அமையுமோ என்னில் -விஷய ஸ்வபாவத்தால் அனுஷ்டான பர்யந்தமாக முடியும் என்று இருக்கிறார்
பஹு வசனத்தால் அநர்த்தம் சர்வ சாதாரணம் ஆகையால் எல்லாரையும் ஓக்க கால் பிடிக்கிறார் –

என் நாவில் இன்கவி யான் ஒருவர்க்கும் கொடுக்கிலேன்
யஸ் யை தே தஸ்ய -என்கிறபடியே தம்மைப் போலே தம்முடைய நாவும் அவனுக்கு அநந்யார்ஹ சேஷம் -என்கிறார் –
நாப்படைத்த கார்யம் கொண்டேன் நான் ஒருவனுமே யன்றோ -என்கிறார் -இவள் இராப்பகல் வாய் வெரீஇ -என்னும் படியான நா வி றே
இன்கவி –
அவனுக்கு இனிதாகை யாலே தமக்கும் இனிதாய் இருக்கிறபடி –
சேஷிக்கு இனிதான வழியாலே தனக்கு இனிதாகை இ றே -சேஷத்வத்தினுடைய எல்லை
யான்
அநந்யார்ஹ சேஷ பூதனான நான்
ஒருவர்க்கும் கொடுக்கிலேன்
அத்யந்த பரதந்த்ரமாக சொல்லி வைத்து கொடுக்கிலேன் என்பான் என் என்னில் -அவன் தான் இத்தாலே அநேகம் பெற்றானாய்
இருக்கையாலே புறம்பு கொடேன் என்கையாலே இங்குத்தைக்கே அநந்யார்ஹம் என்கை
கொடுக்கிலேன் -கொடுக்க ஷமன் அல்லேன்
தென்னா தெனா என்று வண்டு முரல் —
நிரதிசய போக்யமாய் கவி பாடுகைக்கு விஷயம் போந்து இருக்கும் விஷயத்தை யாயிற்று இவர் கவி பாடுகிறது
பகவத் விஷயத்தில் ப்ரத்யாசத்தியை உடைய திர்யக்குகளோடு முமுஷுக்களோடு வாசி அற்று இருக்கிற படி
திரு வேங்கடத்து என் ஆனை-
வேதத்தில் காட்டில் ஸ்ரீ ராமாயணத்துக்கு உண்டான வாசி போலே –
ஸ்ரீ வால்மீகி பகவான் கவி பாடின விஷயத்தில் காட்டில் தாம் கவி பாடுகிற விஷயத்தின் ஏற்றம் அருளிச் செய்கிறார் –
செந்தமிழ் பாடுவார் தாம் வணங்கும் தேவர் -என்னக் கடவது இ றே
என் ஆனை
கவி பாடிப் பெற்ற ஆனை-தன்னை ஒழிய வேறு ஒன்றை கொடுக்குமவன் அன்று இ றே இவர் கவி பாடிற்று
ஆனை என்கையாலே கவி பாடுகைக்கு விஷயம் போந்து இருக்கை –
என் அப்பன்,-
நாட்டார் பிறரை கவி கவி பாடி திரியா நிற்க அவர்களுக்கும் ஹிதம் சொல்லும் படி பண்ணின மஹா உபகாரகன்
எம்பெருமான்
அபஹாரங்களையே பண்ணினாலும் விட ஒண்ணாத பிராப்தி இருக்கிறபடி
உளனாகவே-
சேதனர் தன்னை கிட்டாத போது -அசன்னேவ –வாய் இருக்குமா போலே என் வாயால் ஒரு சொல் கேளாத அன்று உளன் ஆகாதவனாய் இருக்கை
ஸூலபனாய் கவி பாடுகைக்கு விஷயம் போந்து உபகாரகனாய் -ப்ராப்தனாய் -வத்சலனாய் -இருக்கிற இவனை ஒழிய வேறு சிலரை நான் கவி பாட சக்தனோ -என்கிறார்
நான் செய்கிறபடியே யன்றோ உங்களுக்கு செய்ய அடுத்து என்கிறார் –

———————————————————————————————-

சத்தியமாய் சமக்ரமாய் இருந்த கல்யாண குண சம்பத்துக்களை உடையனாய் இருந்துள்ள எம்பெருமானை ஒழிய
இதுக்கு எதிர் தலையானவர்களை கவி பாடினால் என்ன பிரயோஜனம் உண்டு என்கிறார் –

உளனாகவே எண்ணித் தன்னை ஒன்றாகத் தன் செல்வத்தை
வளனா மதிக்கும் இம் மானிடத்தைக் கவி பாடி என்
குளன் ஆர் கழனி சூழ் கண்ணன் குறுங்குடி மெய்ம்மையே
உளன் ஆய எந்தையை எந்தை பெம்மானை ஒழியவே?–3-9-2-

உளனாகவே எண்ணித்
அசன்னேவ -என்றும் -நேஹ நா நா அஸ்தி -என்றும் பிரமாணம் சொல்லுகையாலே இல்லை என்று அத்யவசித்து இறே இவர் இருப்பது –
தன்னைக் கட்டிக்க கொண்டு போகச் செய்தே-நேயமஸ்தி புரீ லங்கா நியூயம் நச ராவண -யஸ்மா திஷவாகு நாதேந பத்தம் வைரம் மஹாத்மநா-என்றான் இறே திருவடி
தன்னை
என்றும் உளனாய் இருக்கிற ஈஸ்வரனை இல்லை என்று இருக்கையாலே அஸத் கல்பனான தன்னை
-உளன் கண்டாய் நல் நெஞ்சே -என்னும் அன்று இறே தானும் உளனாவது
தன்னை ஒன்றாகத்
தன்னை ஒரு சரக்காக புத்தி பண்ணி –
தன் செல்வத்தை-
தனக்குத் தான் இன்றிக்கே இருக்க தனக்கு ஓர் ஐஸ்வர்யம் உண்டாக நினைத்து
சதி தர்மிணி தர்மா சிந்த்யந்தே -அதி ஷூத்ரமான சம்பத்தை –
வளனா மதிக்கும் –
வளன் என்று அழகு ஆதல் -ஏற்றம் ஆதல் –
சர்வேஸ்வரனுடைய ஐஸ்வர்யத்துக்கும் அவ்வருகாக நினைத்து இருக்கை –
தானே யாயிற்று இத்தை ஒன்றாக நினைத்து இருப்பான் –
வேறு ஒருவன் நினைத்து இருக்கும் போது இவன் தன்னை அவஸ்துவாக இறே நினைத்து இருப்பது
கல் ப்ரஹ்ம தேசத்தில் கரிக்கால் ப்ரஹ்ம ராயன் வார்த்தை –
இம் மானிடத்தைக்
கீழ் பிரஸ்துரான அஞ்ஞரை -மனுஷ்யர் என்று சொல்லப் பாத்தம் போராமையாலே மானிடம் என்கிறார் –
கவி பாடி என்-
இவர்கள் மறைத்திட்டு வைத்த குற்றங்களை ப்ரபந்ததீ கரித்து வெளியிட்டால் உங்களுக்கு என்ன பிரயோஜனம் உண்டு
குளன் ஆர் கழனி சூழ் –
விளை நிலத்தில் காட்டில் நீர் நிலம் விஞ்சி இருக்கை –
குளன்-குளம் -ரஷ்யத்தில் காட்டில் ரக்ஷகம் விஞ்சி இருக்கை
கண்ணன் குறுங்குடி
சர்வேஸ்வரன் என்னது என்று அபிமானித்த தேசம்
கண் நல் குறுங்குடி என்று நிர்வஹித்தான் ஒரு தமிழன் –
மெய்ம்மையேஉளன் ஆய
சொன்ன குணங்கள் எல்லாம் பத்தும் பத்தாக உடையவனாய் இருக்கை –
இவ்விஷயத்தில் அர்த்தவாதம் இல்லை -புறம்பு உள்ளத்தில் அர்த்த வாதம் இல்லாதது இல்லை
இவ்விஷயத்தில் உள்ளது எல்லாம் சொல்ல ஒண்ணாது -புறம்பு உள்ளத்தில் சொல்லலாவது ஒன்றும் இல்லை
எந்தையை -எந்தை பெம்மானை ஒழியவே?
நான் கவி பாடுகைக்கு தன் குணங்களை பிரகாசிப்பித்து வைத்த உபகாரகனை –
கவி பாடுகைக்கு ப்ராப்த விஷயம் என்னவுமாம்
பிராப்தி தம் அளவில் பர்யவசியாமையாலே -என் குல நாதன் என்கிறார் –
ஸமஸ்த கல்யாண குணாத்மகனாய் ப்ராப்தனுமாய் இருந்துள்ள அவனை ஒழிய ஷூத்ர மனுஷ்யரைக் கவி பாடி என்ன பிரயோஜனம் உண்டு என்கிறார்

—————————————————————————————————————–

விலஷணனாய் உபகாரகனான எம்பெருமானை ஒழிய ஷூத்ர மனுஷ்யரை கவி பாடி என்ன பிரயோஜனம் உண்டு -என்கிறார்

ஒழிவு ஒன்று இலாத பல் ஊழிதோறு ஊழி நிலாவப் போம்
வழியைத் தரும் நங்கள் வானவர் ஈசனை நிற்கப் போய்க்
கழிய மிக நல்ல வான்கவி கொண்டு புலவீர்காள்!
இழியக் கருதி ஓர் மானிடம் பாடல் என்னாவதே?–3-9-3-

ஒழிவு ஒன்று இலாத பல் ஊழிதோறு ஊழி நிலாவப் –
கால தத்வம் உள்ளதனையும் இடைவிடாதே
நிலாவ -வர்த்திகைக்கு
ந ச புனர் ஆவர்த்ததே -என்கிறபடியே யாவதாத்மபாவி ப்ரக்ருதி சம்பந்தம் அற்று ஸ்வராதீனனாய் வர்த்திகைக்கு
போம்-வழியைத் தரும்-
பேற்றில் காட்டில் வழிப் போக்கே அமைந்து இருக்கும் அர்ச்சிராதி மார்க்கத்தை தரும் என்னுதல்
தன்னைக் கிட்டும் உபாயத்தை தரும் என்னுதல் -ப்ராப்யம் என்னுதல்
வழியை தருகை யாவது -உபாயமாகை-ப்ராப்யமான போது தான் போம் ரீதியாய் -அதாகிறது ஸ்வ பாவமாய் சஹஜ கைங்கர்யத்தை சொல்லுகிறது
நங்கள் வானவர் ஈசனை
அவன் எல்லா ஏற்றங்களையும் தந்தாலும் செய்தது போராது என்னும் ஓலக்கம்
நிற்கப் –
இப்படிப் பட்டவன் இவன் வாயாலே ஒரு சொல் கேட்க்கை தன் பேறாக நினைத்து நிற்க
போய்க்
அபிராப்தராய் -கவிக்கு பரிசில் கொடுக்க ஷமர் அல்லாமையாலே ஒளித்துப் போம் அவர்களை இ றே தேடித் போவதே –
கழிய மிக நல்ல –
எத்தனையேனும் மிக நல்ல
வான்கவி
கனத்த கவி -தது பாக்த ஸமாஸ சந்தியோகம் -என்று சொல் சேர்ந்து இருக்கை
கொண்டு புலவீர்காள்!
கவிக்கும் விஷயத்துக்கும் வாசி அறியும் விஸேஜ்ஞரான நீங்கள்
இழியக் கருதி -ஓர் மானிடம் பாடல் என்னாவதே?
நின்ற நிலையும்அழியும்படி பார்த்து
த்ருஷ்டத்தில் ஸ்வரூப ஹானி -அத்ருஷ்டத்தில் நரகம்
அறிவுக்கு பிரயோஜனம் மேல் மேல் என உயர்ந்த தேடுகை அன்றோ
ஷூ த்ர மனுஷ்யரை கவி பாடுகிறது ஏதுக்காக-
பகவத் சேஷ பூதராய் இருக்கிற உங்கள் ஸ்வரூபத்துக்கு சேர்ந்ததோ
உங்கள் கவிக்கு சேர்ந்ததோ
பாட்டு உண்கிறவனுக்கு ஒரு நன்மை உண்டாகவோ –

—————————————————————————————————————–

கவி பாடினார்க்கு தன்னோடு ஒத்த வரிசையை கொடுக்குமவனை ஒழிய
மந்த ஆயுஸ்ஸூக்களான ஷூத்ரரைக் கவி பாடப் போவது ஏன் என்கிறார் –

என்னாவது, எத்தனை நாளைக்குப் போதும், புலவீர்காள்!
மன்னா மனிசரைப் பாடிப் படைக்கும் பெரும்பொருள்!
மின்னார் மணிமுடி விண்ணவர் தாதையைப் பாடினால்,
தன்னாகவே கொண்டு சன்மம் செய்யாமையும் கொள்ளுமே.–3-9-4-

என்னாவது,
ஒன்றும் ஆவது இல்லை -ஒன்றும் இல்லை என்கிறது என்-கவி பாடுவாரும் கொடுப்பாருமாய் அன்றோ -செல்லுகிறது என்ன
எத்தனை நாளைக்குப் போதும்,
நிரூபித்தால் கவி பாட்டு இட்டு இறையாய் இ றே இருப்பது
சஹகாரிகளையும் கூட்டி கவி பாடினால் பெறுமது பாடின நாளைக்கு போராதாக வாயிற்று இருப்பது
புலவீர்காள்!
உங்கள் வாசி அறிவுக்கு போருமோ இது
மன்னா மனிசரைப்
நிலை இல்லாத மனுஷ்யரை
கவி பாடி கேட்ப்பிக்கும்தனை நாள் அவர்கள் இருக்கில் இ றே அல்பம் தானும் உள்ளது
பாடிப் படைக்கும் பெரும்பொருள்!
இந்த ஸ்ரீ யபதி குறைவற கொடானோ -என்று ஷேப யுக்தி
மின்னார் மணிமுடி விண்ணவர் தாதையைப் பாடினால்,
ஓளி மிக்க மணிகளை உடைய முடி
விண்ணவர்க்கு விசேஷணம் ஆனபோது கவி பாடினார்க்கு கொடுக்கச் சூடின முடி -என்கை –
தன்னாகவே கொண்டு சன்மம் செய்யாமையும் கொள்ளுமே.
தனக்காக கொண்டு என்னுதல்
சாம்யா பத்தியை கொடுக்கும் என்னுதல்
நீசரை கவி பாடுகைக்கு அடியான சரீர சம்பந்தத்தை அறுக்கும்
தலையில் முடியை வைத்து விலங்கை வெட்டி விடுமா போலே நித்ய ஸூ ரிகள் பேற்றைக் கொடுத்தாயிற்று சம்சார சம்பந்தத்தை அறுப்பது –

—————————————————————————————————————–

ஹேயராய் கவி பாடினால் பெறுவதும் ஓன்று இன்றியே இருக்கிறவர்களை ஒழிய ஸமஸ்த கல்யாண குணாத்மகனாய்
சகல பிரதனான சர்வேஸ்வரனை கவி பாட வாருங்கோள் என்கிறார் –

கொள்ளும் பயன் இல்லை, குப்பை கிளர்த்தன்ன செல்வத்தை
வள்ளல் புகழ்ந்து,நும் வாய்மை இழக்கும் புலவீர்காள்!
கொள்ளக் குறைவிலன் வேண்டிற்று எல்லாம் தரும் கோதுஇல் என்
வள்ளல் மணிவண்ணன் தன்னைக் கவி சொல்ல வம்மினோ.–3-9-5-

கொள்ளும் பயன் இல்லை,
கவி பாடுவது தங்களுக்கு ஒரு பிரயோஜனத்துக்கும் எதிர் தலைக்கு ஒரு நன்மை வரும் இ றே –
பெறக் கடவது ஒரு பிரயோஜனம் இல்லை -அப்ராப்த விஷயம் ஆகையால் இது தானே பிரயோஜனமாக கவி பாடும் விஷயம் அன்று
குப்பை கிளர்த்தன்ன செல்வத்தை
அவர்களுக்கு பிரயோஜனம் ஆகாது ஒழியுமோ என்னில் -அதுவும் விபரீத பலம் –
குப்பையை கிளறினால் இருக்கிற சம்பத்தை
அவர்கள் மறைத்திட்ட வைத்த தோஷங்களை வெளியிடுகையாலே அவர்களுக்கு அவத்யாவஹமாம் அத்தனை –
வள்ளல் புகழ்ந்து,-
நன்றாக புகழ்ந்து -மஹா வம்ச ப்ரஸூதன் -உதாரன் என்று இறே கவி பாடுவது
அதற்கு எதிர்தலையான அவர்கள் தோஷத்தை வாயிற்று அது பிரகாசிப்பது
இது அவர்களுக்கு பிரயோஜனம் –
நும் வாய்மை இழக்கும் –
உங்களுக்கு பிரயோஜனம் உங்களுடைய வாக்மிதையை இழக்கை-
வாய்மை யாகிறது -மெய் -அத்தை இழந்து பொய்சொல்லி கள்-என்று பிரசித்தராம் அத்தனை
புலவீர்காள்!
உங்கள் விசேஷ ஞானம் இருந்தபடி என்
கொள்ளக் குறைவிலன்
கீழ் சொன்னதுக்கு எதிர்தலையாய் இருக்கை -நீங்கள் வைத்துச் சொல்லும் நன்மைகளை எல்லாம் ஸ்வீகரிக்கைக்கு ஒரு குறை உடையான் அல்லன்
-ஸமஸ்த கல்யாண குணாத்மகன் ஆகையால் -வேண்டிற்று எல்லாம் தரும்
பவ்மம் மநோரதம் ஸ்வர்க்க்யம் ஸ்வர்க்கி வந்த்யஞ்ச யத்பதம்–ததாதி த்யாயி நாம் நித்யமப வர்க்க ப்ரதோ ஹரி
சகல பல பிரதோஹி விஷ்ணு –
கோதுஇல் –
கொடைக்கு கோதாவது -கொடுத்தோம் என்று இருக்கையும் -பிரதியுபகாரத்தை நினைத்து கொடுக்கையும் -வரைந்து கொடுக்கையும்
நீர் இது அறிந்தபடி என் என்ன –
என்-வள்ளல் –
அநு பூத அர்த்தத்தை சொல்லுகிறேன்
மணிவண்ணன் தன்னைக் கவி சொல்ல வம்மினோ.–
ஒரு பிரயோஜனம் இல்லை யாகிலும் கைக்கு கூலி கொடுத்து கவி பாட வேண்டும் அழகை உடையவன் என்கை –
ரூபா ஆபாசம் கண்ட இடத்தே உங்கள் உடைமையைக் கொடுத்தான் மேல் விழா நின்றி கோள்
இப்படிப் பட்ட விஷயத்தை பிற காலியாதே கவி பாட வாருங்கோள் என்கிறார் –

—————————————————————————————————————–

ஜீவன அர்த்தமாக மனுஷ்யாதிகளை கவி பாடுகிறோம் என்ன ஷூத்ரரை கவி பாடி ஜீவிப்பதில்
உடம்பு நோவ பணி செய்து ஜீவிக்கை நன்று -என்கிறார் –

வம்மின் புலவீர்!நும் மெய் வருத்திக் கை செய்து உய்ம்மினோ!
இம்மன் உலகில் செல்வர் இப்போது இல்லை நோக்கினோம்;
நும் இன் கவி கொண்டு நும்நும் இட்டா தெய்வம் ஏத்தினால்
செம்மின் சுடர்முடி என் திருமாலுக்குச் சேருமே.–3-9-6-

வம்மின் –
காட்டுது தீயில் அகப்பட்டாரை பொய்கையைக் காட்டி அழைப்பாரை போலே வாருங்கோள் என்கிறார்
புலவீர்!
நல்லதும் தீயதும் அறியும் நீங்கள் –
நீர் அழைக்கிறது என் -பிறரைக் கவி பாடி யாகிலும் தேஹ யாத்திரையை நடத்த வேண்டாவோ என்ன -உங்கள் தரம் குலையாதே ஜீவிக்கல் ஆகாதோ –
நும் மெய் வருத்திக் கை செய்து உய்ம்மினோ!
உங்கள் சரீரத்தை வருத்தியும் கைத் தொழில் செய்து ஜீவிக்கப் பாருங்கோள் -என்பர் எம்பார் –
அத்தால் ஜீவனம் பூர்ணம் ஆகாது -பிறரைக் கவி பாடி யாகிலும் ஜீவிக்க வேணும் என்ன –
இம்மன் உலகில் செல்வர்-
பிரவாஹ ரூபமான நித்தியமாய் செல்லுகிற இஜ்ஜாகத்தில் செல்வர் இல்லை –
உங்களுக்கு பின்னையும் சிலரை ஆர்த்தியாமல் பூர்ணமாக தருகைக்கு ஈடான சம்பத்து உடையார் இல்லை
இப்போது இல்லை நோக்கினோம்;
பண்டே சம்சாரிகளில் செல்வர் இல்லை -இவர் சம்சார யாத்திரையில் கண் வைக்குமவர் அல்லர்
இவர்கள் பிரயோஜனத்துக்காக இப்போது ஆராய்ந்து பார்த்தால் இவர்கள் குறை தீர்க்க வல்லார் இன்றிக்கே இருந்தது
நும் இன் கவி கொண்டு -நும்நும் இட்டா தெய்வம் ஏத்தினால்
மனுஷ்யர் பக்கல் அன்றோ பசை இல்லாதது -எங்கள் இஷ்ட தேவதைகளை கவி பாடுகிறோம் என்ன உங்கள் கவி அவர்களுக்கு ஸ் துதியாக மாட்டாது என்கிறார்
பகவத் விஷயத்துக்கு சேரும் கவிகளைக் கொண்டு உங்கள் இஷ்ட தேவதைகளை ஏத்தினால் -உங்கள் குண அநு ரூபமாக ராஷசராயும் தாமஸரராயும் உள்ள
தேவதைகளை ஏத்தினால் -அப் புகழ்ச்சிக்கு அடியான குணங்கள் இல்லாமையால் அவர்களுக்கு சேராது -ஆருக்கு சேர்வது என்னில்
செம்மின் சுடர்முடி என் திருமாலுக்குச் சேருமே-
ஆதி ராஜ்ய ஸூ சகமான திரு அபிஷேகத்தை உடைய ஸ்ரீ யபதிக்கே சேரும்
புண்டரீகாக்ஷன் என்றும் -ஸ்ரீ மான் என்றும் மஹா உதாரன் என்றும் இ றே கவி பாடுவது
அது உள்ள இடத்தில் சொல்லுகையாலே அவனையே கவி பாடிற்றாம் அத்தனை
கவி பாட்டு உண்கிற தேவதையின் பேரும் தத் அந்தர்யாமி அளவும் செல்லுகையாலே அவனையே கவி பாடிற்றாம் அத்தனை
உங்களுக்கு ஸுர்யமே சித்திப்பது -பகவத் விஷயம் ஒழிய கவி பாட வேணும் என்னும் நிர்பந்தம் உங்களுக்கு உண்டானாலும்
அது கிட்டாத பின்பு இவனையே கவி பாட வாருங்கோள் என்கிறார்
யேய ஜந்தி பித்ரூன் தேவன் ப்ராஹ்மணான் சஹு தாசனான் சர்வ பூதாந்த்ராத்மானம் விஷ்ணுமேவ யஜந்திதே-

———————————————————————————————————-

வழி அடிக்கும் இடத்திலே தன் கைப் பொருள் கொண்டு தப்பினவன் உகக்குமா போலே -இவர்களை போல் அன்றியே
பகவத் விஷயத்தை ஒழிய வேறு சிலரை கவி பாடுகைக்கு நான் ஷமன் அன்றிக்கே ஒழிய பெற்றேன் -என்று பிரித்தார் ஆகிறார் –

சேரும் கொடை புகழ் எல்லை இலானை,ஓர் ஆயிரம்
பேரும் உடைய பிரானை அல்லாம்,மற்று யான்கிலேன்;
மாரி அனைய கை, மால்வரை ஒக்கும் திண்தோள் என்று,
பாரில் ஓர் பற்றையைப் பச்சைப் பசும்பொய்கள் பேசவே.–3-9-7-

சேரும் கொடை புகழ் எல்லை இலானை,
கொடையாலே சேர்ந்த புகழுக்கு எல்லை இல்லாதவனை -தகுதியான கொடையால் உண்டான புகழுக்கு எல்லை இல்லாதவனை – என்றுமாம்
ஓர் ஆயிரம்-பேரும் உடைய பிரானை
ஜமபில என்று ஒரு சந்தஸியிலே வைத்து கவி பாட ஒண்ணாதாய் இருக்கை இன்றிக்கே கவி பாடுகைக்கு விஷயமான
குண சேஷ்டிதங்களுக்கு வாசகமாய் அசங்க்யேயமான திரு நாமங்களை உடையவனை
ஓராயிரம் -ஓர் ஒன்றே கவி பாடுகைக்கு விஷயம் போந்து இருக்கும் படி அத்விதீயமாய் இருக்கை
பிரானை –
அவற்றை எனக்கு பிரகாசிப்பித்த மஹா உபகாரகனை
அல்லாம்,மற்று யான்கிலேன்;
வேறு சிலரை கவி பாடுகைக்கு நான் ஷமன் அல்லேன் -இவர் பாடாது ஒழி கிறது என் என்னில்
மாரி அனைய கை,-
கொடுக்கை தான் பிரயோஜனமாக கொடுத்து -கொடுக்கப் பெறாத போது உடம்பு வெளுக்குமவன்
மால்வரை ஒக்கும் திண்தோள் -என்று
பெரிய மலை போல் திண்ணியதான தோளை யுடையவன் என்னுதல் -கொடுக்க என்றால் தேம்புகிற தோளை -கொடுக்க கொடுக்க பணைக்கும் தோள் என்கை
பாரில்-
போக பூமியில் அன்றிக்கே பூமியிலே வர்த்திக்கிற
ஓர் பற்றையைப்
உத்பத்தி ஸ் திதி வி நாசங்கள் தனக்கும் உறுப்பு அன்றிக்கே பிறருக்கும் உறுப்பு அன்றிக்கே இருக்கும் சிறு தூற்றை
ஒரு தமிழன் பாரில் -என்கிறது ஒரு நத்தம் இல்லை என்கை -பற்றை என்கிறது கண்டது எல்லாம் பற்ற கடவனாய் விடக் கடவது ஒன்றும் இன்றிக்கே இருக்கை என்றான்
த்ருண சமன் என்றாய்த்து சொல்லிப் போருவது
பச்சைப் பசும்பொய்கள் பேசவே.–
மெய் கலவாத பொய் சொல்ல நான் ஷமன் அல்லேன் –
ஆயிரம் பேரும் உடைய பிரானை அல்லால் மாற்று பாரில் ஓர் பற்றையைபச்சை பசும் பொய்கள் பேச யான் கிலேன்-

———————————————————————————————————

நப்பின்னை பிராட்டிக்கு வல்லபனாய் ஹேய ப்ரத்ய நீக கல்யாண குண கணனாய் இருக்கிறவனை -உள்ளத்தை கவி பாடி
சரீர சம்பந்தத்தை அறுத்து அவன் திருவடிகளில் அடிமை செய்ய வேணும் என்னும் அபி நிவேசத்தை உடைய நான்
ஷூத்ர மனுஷ்யரை என் கரணத்தைக் கொண்டு கவி பாட ஷமன் அல்லேன் -என்கிறார் –

வேயின் மலிபுரை தோளி பின்னைக்கு மணாளனை
ஆய பெரும்புகழ் எல்லை இலாதன பாடிப்போய்க்
காயம் கழித்து,அவன் தாளிணைக் கீழ்ப்புகும் காதலன்,
மாய மனிசரை என்சொல வல்லேன் என்வாய் கொண்டே?–3-9-8-

வேயின் மலிபுரை தோளி-
பசுமைக்கும் சுற்று உடைமைக்கும் வேயைக் காட்டிலும் விஞ்சின அழகை உடைத்தாய் -பரஸ்பர சத்ருசமான தோள்களை உடைய
நப்பின்னை பிராட்டிக்கு வல்லபன் ஆனவனை
பிறரை கவி பாடுகைக்கு யோக்கியமான சரீர சம்பந்தத்தை அறுக்கைக்கும்-வி லக்ஷண சரீரத்தைப் பெற்று
திருவடிகளை கிட்டுக்கைக்கும் புருஷகாரம் நப்பின்னை பிராட்டி என்கை
அச் சேர்த்தியில் கவி பாடக் கடவ நான் மற்றும் சிலரை கவி பாடவோ
பின்னைக்கு மணாளனை
யஸ்ய சா ஜனகாத்மஜா அப்ரமேயம் ஹி தத்தேஜ
ஆய
ஆயப் பட்டு இருக்கை -ஹேய பிரதிபடமாய் இருக்கை
ஆய -என்று ஆன-என்று ஆய் -ஸ்வரூப அநு பந்தி என்றுமாம்
பெரும்புகழ் –
ரூப குணத்தோடு ஆத்ம குணத்தோடு வாசி அற ஒரோ ஒன்றோ நிரவதிகமாய் இருக்கை
எல்லை இலாதன –
இப்படிப் பட்ட குணங்கள் அசங்க்யாத மாய் இருக்கை –
பாடிப்போய்க்-காயம் கழித்து,-
இக் குணங்களை ப்ரீதி பிரேரிதனாய் சொல்லி இதுவே யாத்திரையாக -பின்னை இச் சரீரத்தை விட்டு
பாண்டரஸ்யா தபத் ரஸ்ய ச் சாயாயாம் ஜரிதம்மயா-என்று சக்கரவர்த்தி பிரஜா ரக்ஷண அர்த்தமாக சுற்றும் பயணம் திரிந்து
முத்துக் குடை நிழலிலே சரீரத்தை ஜெரிப்பித்தால் போலே பகவத் குண அனுபவத்தால் சரீரத்தை ஜெரிப்பித்து என்கிறார்-
அவன் தாளிணைக் கீழ்ப்புகும் காதலன்,
அவன் பக்கலிலே பிரயோஜனாந்தரங்களை கொள்ள இராதே விலக்ஷண சரீரத்தை பெற்று தாய் முலைக்கீழ் ஒதுங்கும்
ஸ்தந்த்ய பிரஜையை போலே திருவடிகளின் கீழே ஒதுங்கிடுவன் என்னும் அபி நிவேசத்தை உடையனான நான்
மாய மனிசரை
உத்பத்தியோடே வியாப்தமான விநாசத்தை உடையவர்களை
என்சொல வல்லேன் என்வாய் கொண்டே?–
பகவத் விஷயத்துக்கு அர்ஹமான இக்கரணத்தைக் கொண்டு பிறரை கவி பாட வல்லேனோ -என்கிறார்
ப்ரேமம் அவன் திருவடிகளில் கிடைக்க விஷயாந்தரத்துக்கு நானும் என் கரணமும் இல்லை என்கை –
வேறே ஒரு கரணம் பெற்றேனாகில் வேறே சிலரைக் கவி பாடலாயிற்று –

——————————————————————————————

பரம உதாரனாய் இருந்துள்ள எம்பெருமானாலே தன்னை என் கவிக்கு விஷயமாகி வைத்த பின்பு
இதர ஸ்தோத்ரங்களில் அதிகாரம் அல்லேன் என்கிறார் –

வாய் கொண்டு மானிடம் பாடவந்த கவியேன் அல்லேன்;
ஆய் கொண்ட சீர் வள்ளல் ஆழிப் பிரான் எனக்கே உளன்;
சாய் கொண்ட இம்மையும் சாதித்து, வானவர் நாட்டையும்
நீ கண்டு கொள் என்று வீடும் தரும் நின்று நின்றே.–3-9-9-

வாய் கொண்டு மானிடம் பாடவந்த கவியேன் அல்லேன்;
ஸ்ருஷ்டத்வம் வனவாசாய என்கிறபடியே அவன் தன்னை ஏத்துகைக்காக தந்த வாக்கைக் கொண்டு ஷூ த்ரரைக் கவி பாட பிறந்தேன் அல்லேன்
யாதோ வாசோ நிவர்த்தந்தே -என்கிற விஷயத்தை கவி பாடப் போமோ -என்னில்
தன்னை எனக்கு விஷயம் ஆக்கித் தந்தால் கவி பாடக் குறை என் என்கிறார்
ஆய் கொண்ட சீர்
ஆயப்பட்ட சீர் -ஹேய ப்ரத்ய நீக கல்யாண குணகணன்
வள்ளல்
பரம உதாரன்
ஆழிப் பிரான்
இக்குணங்களை காத்தூட்ட வல்ல பரிகரத்தை உடையவன்
எனக்கே உளன்;
என் கவிக்கே தன்னை விஷயம் ஆக்கினான் –
சாய் கொண்ட இம்மையும் சாதித்து,
ஒளியை உடைத்தான் ஐஹிக ஸூ கத்தையும் தந்து
சாய் -ஓளி -கொள்கை -உடைத்தாகை
மோக்ஷ ஸூ கத்திலும் நன்றாம்படி ஐஹி கத்தில் ஸ்வ அனுபவமே யாத்ரையாம் படி பண்ணித் தருகை
வானவர் நாட்டையும்
அத்தேசம் நித்ய ஸூ ரிகளுக்கு இட்ட வழக்காய் இருக்கை
குடி இருப்பாரோ பாதி யாயிற்று ஸ்ரீ வைகுண்ட நாதனுக்கு –
நீ கண்டு கொள் என்று –
க்ருசம் தச குணம் மயா-என்று பண்டாரத்தை வளர்த்து வைத்து பெருமாள் மீண்டு எழுந்து அருளினை போது ஸ்ரீ பரத ஆழ்வான் காட்டிக் கொடுத்தால் போலே
நித்ய ஸூ ரிகளோபாதி இவர் கையில் காட்டிக் கொடுக்கை
அபூர்வ லாபம் அன்றிக்கே இழந்தது கண்டானாய் இருக்கை என்றுமாம்
வீடும் தரும்
கைங்கர்ய ஸூ கத்தையும் தரும் -முக்திர் மோஷோ மஹா நந்த –
நின்று நின்றே.–
இப்படி முழுக்க கொடுத்தாலும் இவனுக்கு என் செய்தோம் -என்று குறைப் பட்டு இருக்கும் -என்று நம்முடைய பூர்வர்கள் நிர்வஹிப்பர்கள்
ஒரு தமிழன் அடைவடைவே என்றான்
முந்துற ஐ ஹிகத்திலே அனுபவிப்பித்து பின்பு ஒரு தேச விசேஷத்தை காட்டிக் கொடுத்து பின்பு கைங்கர்ய ஸூகத்தை கொடுக்கும்
இவை தரும் இடத்தில் சாத்மிக்க சாத்மிக்க தரும் -என்றுமாம் –

————————————————————————————————

சர்வேஸ்வரன் கவியான எனக்கு இதர ஸ்தோத்திர கரணமானது அநு ரூபம் அன்று என்கிறார் —

நின்று நின்று பல நாள் உய்க்கும் இவ்வுடல் நீங்கிப் போய்ச்
சென்று சென்றாகிலும் கண்டு,சன்மம் கழிப்பான் எண்ணி,
ஒன்றி ஒன்றி உலகம் படைத்தான் கவி ஆயினேற்கு
என்றும் என்றும் இனி மற்றொருவர் கவி ஏற்குமே?–3-9-10-

நின்று நின்று பல நாள்
பல நாள் நின்று நின்று -அநாதி காலம் இடைவிடாதே
உய்க்கும்
அனுபவிக்கும் -பாதிக்கும்
இவ்வுடல்
த்ருஷ்ட்டி விஷம் போலே பய ஸ்தானமாய் இருக்கிறபடி
நீங்கிப் போய்ச்
விட்டுப் போய்
சென்று சென்றாகிலும்
நெடும் காலம் கூட வாகிலும்
கண்டு,
நம்மை இவன் கண்டு
சன்மம் கழிப்பான்
ஜென்ம சம்பந்தம் அரும்படி பண்ண வேண்டும் என்று
எண்ணி,
மநோ ரதித்து
ஒன்றி ஒன்றி உலகம் படைத்தான்
ஸ்ருஷ்டிகள் பலித்ததில்லை என்று கை வாங்காதே மிகவும் ஒருப்பட்டு லோகங்களை உண்டாக்கினான்
கவி ஆயினேற்கு
கவியாயினுக்கு
அவன் ஸ்ருஷ்ட்டி பலித்து அநந்யார்ஹனான எனக்கு
என்றும் என்றும் இனி மற்றொருவர் கவி ஏற்குமே?–
கால தத்வம் உள்ளதனையும் வேறு சிலருடைய கவியில் எனக்கு அந்வயம் உண்டாகி தகுமோ
வேறு சிலர்க்கு கவியாக நான் தகு வேனோ என்றுமாம்
இப்போது பகவத் குணங்களை பாடி மேலும் அஹம் அன்னம் அஹம் அன்னம் அஹம் அன்னம் அஹம் அந்நாத அஹம் அந்நாத அஹம் அந்நாத
– ஏதத் சாம காயன் நாஸ்தே-என்று பாடப் புகுகிற நான் வேறு சிலர்க்கு தகு வேனோ –
சென்று சென்று ஆகிலும் கண்டு நின்று நின்று பல நாள் உய்க்கும் இவ்வுடல் நீங்கிப் போய் ஜன்மம் கழிப்பான் எண்ணி
ஒன்றி ஒன்றி உலகம் படைத்தான் கவியாயினேற்கு என்றும் என்றும் இனி மாற்று ஒருவர் கவி ஏற்குமோ –

—————————————————————————————————

நிகமத்தில் இது திருவாய் மொழியை -இயல் மாத்ரத்தை -சொல்ல வல்லார்க்கு -பிறரைக்
கவி பாட யோக்கியமான நீச ஜென்மம் இல்லை என்கிறார் –

ஏற்கும் பெரும் புகழ் வானவர் ஈசன் கண்ணன் றனக்கு
ஏற்கும் பெரும் புகழ் வண் குருகூர்ச் சடகோபன் சொல்
ஏற்கும் பெரும் புகழ் ஆயிரத்துள் இவையும் ஓர்பத்து
ஏற்கும் பெரும்புகழ் சொல்ல வல்லார்க்கு இல்லை சன்மமே.–3-9-11-

ஏற்கும் பெரும் புகழ் வானவர் ஈசன் கண்ணன் றனக்கு
தகுதியான மிக்க புகழை உடையனாய் நித்ய ஸூரிகளுக்கு நிர்வாஹகனாய் -அம்மேன்மையோடே வந்து அவதரித்து மனுஷ்யத்தவே பரத்வத்தை உடையவனும்
ஏற்கும் பெரும் புகழ் வண் குருகூர்ச் சடகோபன் சொல்
உபய விபூதி உக்தன் என்றால் -அவனுக்கு தக்கு இருக்குமா போலே சர்வேஸ்வரன் கவி என்றால் அதுக்கு போரும்படி இருக்கிற ஆழ்வார் –
சொல் ஏற்கும் பெரும் புகழ் ஆயிரத்துள்-
யாதோ வாசோ நிவர்த்தந்தே -என்கிற விஷயத்தை விளா க்குலை கொண்ட பிரபந்தம் என்றால் அதுக்கு போரும்படி ஆயிரம்
இவையும் ஓர்பத்து ஏற்கும் பெரும்புகழ் -சொல்ல வல்லார்க்கு
ஆயிரத்திலும் இப்பத்துக்கு தகுதியான புகழை உடைத்து ஸ்வரூப அநு குணமாக அப்ராப்த விஷயத்தை தவிர்ந்து
ப்ராப்த விஷயத்திலே கவி பாட சொல்லிற்று ஆகையால் ஏறிட்ட நன்மை எல்லாம் பொறுக்கை
இல்லை சன்மமே.
பிறரை கவி பாட வேண்டா -என்று உபதேசிக்க வேண்டுகிறது இஸ் சம்சாரத்தில் பிறப்பு இ றே -அந்த ஜென்ம சம்பந்தம் அறும் என்கிறார் –

——————————————————————————————————-

கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

திருவாய்மொழி ஒன்பதினாயிரப்படி -3-8-

August 25, 2016

அன்று தேர் கடவிய பெருமான் கனை கழல் காண்பது என்று கொல் கண்கள் -என்று செய்ய தாமரை கண்ணனில் எழுந்த ஆசையானது
உத்தம்பகமான பயிலும் சுடர் ஒளி யில் அனுசந்தானத்தாலும் சதாசாகமாக பணைத்து தாம் அபேக்ஷித்தபடி காணப் பெறாமையாலே
அத்யந்தம் அவசன்னராய் ஒரோ ஒன்றே சர்வ இந்திரிய விருத்தியையும் ஆசைப்படுகிற தம்முடைய இந்திரியங்களும்
அப்படியே விடாய்த்த ஆழ்வார் தாமும் -துர்பிக்ஷ காலத்தில் தரித்ரனாய் பஹு ப்ரஜனானவன் பிரஜைகள் உடைய பசிக்கும்
தன் பசிக்கும் ஆற்றாமே கூப்பிடுமா போலே திவ்ய பூஷணங்களையும் திவ்ய ஆயுதங்களையும்
அப்ராக்ருதமாய் ஸ்வ அசாதாரணமான திரு மேனியையும் ஸமஸ்த கல்யாண குணங்களையும் ஆஸ்ரித அர்த்தமான சேஷ்டிதங்களையும்
உடையனான எம்பெருமானைக் காண வேணும் என்று கூப்பிடுகிறார் –
இந்திரியங்கள் ஆசைப் பட்டன வென்றும் -ஒரோ இந்த்ரியமே இந்த்ரியாந்தரங்களுடைய விஷயங்களையும் ஆசைப்பட்டது என்றும் சொல்லுகிற
இவற்றால் ஆழ்வாருடைய அபிநிவேசத்துக்கு அளவில்லாமை சொல்லிற்றாய் விட்டது –

————————————————————————————————————

திரு உள்ளம் எம்பெருமானைக் காண வேணும் என்று ஆசைப்பட்டு பெறாமையாலே அவசன்னமாய் கிடக்கிறபடியை அருளிச் செய்கிறார் –

முடியானேஎ! மூவுலகும் தொழுது ஏத்தும்சீர் அடியானேஎ! ஆழ்கடலைக் கடைந்தாய்! புள்ளூர்
கொடியானேஎ! கொண்டல்வண்ணா! அண்டத்து உம்பரில் நெடியானேஎ! என்று கிடக்கும்என் நெஞ்சமே.–3-8-1-

முடியானேஎ!-இத்யாதி
ஆதி ராஜ்ய ஸூ சகமாய் எப்போதும் தர்ச நீயமான திரு அபிஷேகத்தையும் உடையையுமாய் குணாகுண நிரூபணம் பண்ணாதே
சகல லோகங்களுக்கும் காரணம் ஆனவனே -அழகிய திருவடிகளை என் தலையில் வைக்கப் பெறுகிறதில்லை என்று கருத்து –
ஆழ்கடலைக் கடைந்தாய்-இத்யாதி
பிரயோஜனாந்தர பரர்க்கும் கூட மஹா வியாபாரங்களை பண்ணி அபேக்ஷித்ங்களைக் கொடுப்பதும் செய்து நினைப்பதுக்கு முன்னே
ஆஸ்ரிதர் இருந்த இடத்தில் செல்லுகைக்கும் -செல்லுமத்துக்கு முன்னே தூரத்திலே கண்டு வாரா நின்றான் என்று உகக்கைக்கும் ஈடாக பெரிய திருவடியை
வாகனமாகவும் த்வஜமாகவும் உடையையாய் -பெரிய திருவடி மேலே மேருவின் மேலே வர்ஷூகவலாஹம் போலே இருந்து அருளுவதும் செய்து
ஐஸ்வர்யாதிகளால் ப்ரஹ்மாதிகளில் காட்டிலும் அதுக்கான ஆனவனே –

———————————————————————————————————————————-

மன பூர்வோ வாக் உத்தர -என்னும் கணக்காலே மனசுக்கு அநந்தரமான வாக் இந்த்ரியத்தினுடைய சாபலத்தை அருளிச் செய்கிறார் –

நெஞ்சமே நீள் நகராக இருந்த என் தஞ்சனே! தண் இலங்கைக்கு இறையைச் செற்ற
நஞ்சனே! ஞாலம் கொள் வான் குறளாகிய வஞ்சனே! என்னும் எப்போதும் என் வாசகமே.–3-8-2-

நெஞ்சமே நீள் நகராக இருந்த என் தஞ்சனே! -இத்யாதி –
ஹ்ருதயத்தை இட்டளம் இல்லாத நகரமாகக் கொண்டு இருந்த என் ஆபத்சகனே-
நெஞ்சமே என்கிற ஏவகாரம் வாக்கு மநோ வ்ருத்தியை ஆசைப்பட்டமையை ஸூ சிப்பிக்கிறது –
சர்வ இந்திரிய விருத்தியையும் ஆசைப்பட்டமைக்கு உப லக்ஷணம் -இப்படி எல்லா பாட்டுக்களிலும் அனுசந்திப்பது
தண் இலங்கைக்கு இறையைச் செற்ற-இத்யாதி
ஆஸ்ரித விரோதி நிரசன சமர்த்தனாய் அவர்களுடைய அபேக்ஷிதம் முடிக்கும் விரகு அறியுமவனே –

——————————————————————————————————————————

தம்முடைய கைகளுக்கு தனக்கு அடைத்த வ்ருத்தியிலும் வாக் வ்ருத்தியிலும் அகப்பட உண்டான சாபலத்தை அருளிச் செய்கிறார் –

வாசகமே ஏத்த அருள் செயும் வானவர் தம் நாயகனே! நாள் இளந் திங்களைக் கோள்விடுத்து
வேய் அகம் பால் வெண்ணெய் தொடு வுண்ட ஆன் ஆயர் தாயவனே! என்று தடவும் என் கைகளே.–3-8-3—

வாசகமே ஏத்த அருள் செயும் வானவர் தம் நாயகனே!
அயர்வரும் அமரர்களுக்கு அதிபதியாய் வைத்து வாக்குக்கே ஸ்துதி சாமர்த்தியத்தை தந்தாய்
அப்படி நாங்களும் ஏத்தும்படி பண்ண வேண்டும் என்று கைகளுக்கு கருத்து
நாள் இளந் திங்களைக் கோள்விடுத்து-
இடையருடைய மூங்கில் குடில்களில் வெண்ணெய் களவு காணப் புக்கு வெண்ணெய் யைப் பெற்ற ப்ரீதி ப்ரகரஷத்தாலே பூர்ணனாய்
நாளால் இளையனான சந்திரனைப் போலே இருக்கிற திரு முகத்தின் ஒளி புறப்படும்படியாக ஸ்மிதம் பண்ணி
வெண்ணெய் அமுது செய்து ஆனாயர் பக்கல் தாய் போலே பரிவனானவனே

—————————————————————————————————————————————

கண்களானவை -கைகளுடைய பரிமாற்றமும் வேணும் -ஸ்வ வ்ருத்தியான தரிசனமும் வேணும் என்னா நின்றன -என்கிறார் –

கைகளால் ஆரத் தொழுது தொழுது உன்னை வைகலும் மாத்திரைப் போதும் ஓர் வீடு இன்றிப்
பைகொள் பாம்பு ஏறி உறை பரனே! உன்னை மெய்கொளக் காண விரும்பும் என் கண்களே.–3-8-4-

விடாய் தீரும்படி கைகளால் உன்னை மிகவும் தொழுது என்றும் ஒரு க்ஷணமும் இடைவிடாதே
உன்னுடைய ஸ்பர்சத்தாலே விகசிதமான பணங்களை உடைய திரு வனந்த ஆழ்வான் மேலே உறைகையாலே அதி சிலாக்யனாய் உள்ளவனே
உரு வெளிப்பாடு போல் அன்றியே மெய்யாக்க காண வேணும் என்று விரும்பா நிற்கும் –

—————————————————————————————————————-

ஸ்ரோத் இந்திரியம் -காணவும் வேணும் கேட்கவும் வேணும் -என்னா நின்றது -என்கிறார் –

கண்களாற் காண வருங் கொல் என்று ஆசையால் மண் கொண்ட வாமனன் ஏற மகிழ்ந்து செல்
பண் கொண்ட புள்ளின் சிறகு ஒலி பாவித்துத் திண் கொள்ள ஓர்க்கும் கிடந்து என் செவிகளே.–3-8-5-

கண்களாற் காண வருங் கொல் -இத்யாதி
கண்களால் காண வருமோ என்னும் ஆசையினால் ஆஸ்ரிதர் இருந்த இடத்தே தானே வந்து அவர்கள் அபேக்ஷிதங்களை முடிக்கும்
ஸ்வபாவனான ஸ்ரீ வாமனன் -ஏறுகையாலே ஹ்ருஷ்டானாய்க் கொண்டு நடவா நின்றுள்ள பெரிய திருவடியினுடைய பண்ணை
வென்று இருக்கிற திருச் சிறகில் உண்டான ப்ருஹத்ரதந்தராதி சாம த்வனியை நினைந்து
திண் கொள்ள-இத்யாதி
அவன் வர உத்யோகத்தில் தொடங்கி இந்த த்வனியை கேட்க வேணும் என்று மிகவும் குறிக் கொண்டு இரா நின்றன –

———————————————————————————————————

என்னுடைய பிராணனானது உன்னுடைய கீர்த்தியை கேட்க வேணும் என்று ஆசைப் படா நின்றது என்கிறார் –

செவிகளால் ஆர நின் கீர்த்திக் கனியெனும் கவிகளே காலப் பண் தேன் உறைப்பத் துற்றுப்
புவியின் மேல் பொன் நெடுஞ் சக்கரத்து உன்னையே அவிவு இன்றி ஆதரிக்கும் எனது ஆவியே.–3-8-6-

செவிகளால்-இத்யாதி
உன்னுடைய கீர்த்தி ரூபமான கவியாகிற கனிகளை காலப் பண்ணாகிற தேனை மிகக் கலந்து செவிகளாலே பூர்ணமாக புஜித்து
புவியின் மேல்-இத்யாதி –
அற அழகியதாய் பெருத்து இருக்கிற திரு ஆழியை திருக் கையிலே உடையையாய் இருக்கிற உன்னை இங்கனே காணலாம் திரு நாட்டிலே
போய் அன்றியே காண கடவது அல்லாத சம்சாரத்திலே காண வேணும் என்று ஆசைப்படா நின்றது என்னுடைய பிராணன் –

————————————————————————————————————–

மஹா பாபி யாகையாலே நெஞ்சின் விடாய் தீர்க்கவும் பெற்றிலேனான நான் நெடு நாள் கூப்பிட்ட இடத்திலும்
உன்னுடைய அழகு காணவும் பெற்றிலேன் என்கிறார் –

ஆவியே! ஆரமுதே;என்னை ஆளுடைத் தூவி அம் புள்ளுடையாய்!சுடர் நேமியாய்!
பாவியேன் நெஞ்சம் புலம்பப் பல காலும் கூவியும் காணப்பெறேன் உன கோலமே.–3-8-7-

தாரகனுமாய் மிகவும் போக்யமும் ஆனவனே
பெரிய திருவடி மேலே இருந்த இருப்பைக் காட்டி என்னை அடிமை கொள்ளுவதும் செய்து
நிரவதிக தீப்தி யுக்தமான திருவாழியை உடையவனே
இவை இரண்டு பதத்தாலும் வருகைக்கும் விரோதி நிரசனத்துக்கும் பரிகரவத்யையைச் சொல்லிற்று என்றுமாம் –

—————————————————————————————————————-

உம்முடைய அபேக்ஷிதம் செய்கைக்கு ஈடான காலம் வர வேண்டாவோ -என்னும் பக்ஷத்தில்
அதுவும் நீ இட்ட வழக்கு அன்றோ -ஆனபின்பு நான் இழக்கப் போமோ -என்கிறார் –

கோலமே! தாமரைக் கண்ணது ஓர் அஞ்சன நீலமே! நின்று எனது ஆவியை ஈர்கின்ற
சீலமே! சென்று செல்லாதன முன் நிலாம் காலமே! உன்னை எந்நாள் கண்டு கொள்வனே?–3-8-8-

அழகு ஒரு வடிவு கொண்டால் போலே இருக்கிறவன்
மநோ ஹரமான திருக் கண்களையும் வி லக்ஷணமாய் சிரமஹரமாய் நீல வர்ணத்தை வகுத்தால் போலே இருக்கிற
வடிவை உடையையாய் நீ நெடு நாள் பொகட்டாலும் மறக்க ஒண்ணாத படி என்னை ஈர்கிற சீலமே ஸ்வபாவகமாக ஆனவனே –
அதாவது -செந்தாமரைக் கண்ணா வில் சீலவத்தை –
பூத பவிஷ்யத் வர்த்தமான கால த்ரயமும் நீ இட்ட வழக்காம் படி இருக்கிறவனே –

———————————————————————————————————-

ஆஸ்ரித ரக்ஷண உபாயஜ்ஞ்ஞனுமாய் -பிரதிகூல நிரசன சமர்த்தனுமாய் இருக்கிற உன்னை நான் சேர்வது என்று என்கிறார் –

கொள்வன் நான், மாவலி! மூவடி தா’என்ற கள்வனே! கஞ்சனை வஞ்சித்து வாணனை
உள்வன்மை தீர,ஓர் ஆயிரம் தோள் துணித்த புள்வல்லாய்! உன்னை எஞ்ஞான்று பொருந்துவனே?–3-8-9-

மஹா பலீ எனக்கு மூவடி வேணும் தா -என்ற முக்தமான பேச்சாலே அவனை சர்வ ஸ்வாஹரணம் பண்ணினவனே –
கம்சன் உன் திறத்து செய்ய நினைத்த தீங்கு அவன் தன்னோடே போம்படி பண்ணி ருத்ரனை உடையம் என்கிற அபிமானம் எல்லாம்
பக்கனமாம் படி பாணனை அநாயாசேன ஆயிரம் தோலையும் துணிப்பதும் செய்து பெரிய திருவடியை யுத்தத்தில் கருத்து அறிந்து நடத்த வல்லவனே –

——————————————————————————————————-

உன்னுடைய குண ஜிதனாய் உன்னைக் காணப் பெறாத வ்யாசனத்தாலே துக்கப்படுகிற நான்
இன்னம் எத்தனை காலம் துக்கப் படக் கட வேன் என்கிறார் –

பொருந்திய மாமருதின்னிடை போய எம் பொருந் தகாய்! உன் கழல் காணிய பேதுற்று
வருந்தி நான் வாசக மாலை கொண்டு உன்னையே இருந்திருந்து எத்தனை காலம் புலம்புவனே?–3-8-10-

அல்ப விவரமாய் பெருத்து இருக்கிற மருதுகளின் நடுவே அகப்படாதே போய் என்னை ரஷித்த மஹா ப்ரபாவனே
மருதின் நடுவே தவழ்ந்து போன திருவடிகளை காணவேணும் என்று ஆசைப்பட்டு
பெரிய வருத்தத்தோடு உன் குணத்தைச் சொல்லிக் கொண்டு –

———————————————————————————————–

நிகமத்தில் இது திருவாய்மொழி இயல் மாத்ரத்தை தரித்தவர் யாரேனும் ஆகிலும் இதில் பிராரத்த படியே
அனுபவிக்கையில் தட்டு இல்லாத நிரதிசய போக்யமான திரு நாட்டிலே செல்வர் என்கிறார் –

புலம்பு சீர்ப் பூமி யளந்த பெருமானை நலங்கொள் சீர் நன் குருகூர்ச் சடகோபன் சொல்
வலங்கொண்ட வாயிரத்துள் இவையுமோர் பத்து இலங்குவான் யாவரும் ஏறுவர் சொன்னாலே –3-8-11-

எல்லாராலும் ஏத்தப் படும் குணங்களை உடையனாய்க் கொண்டு பூமியை அளந்து இக்குணத்தாலே எல்லாருக்கும் ஸ்வாமியாய் இருக்கிறவனை –
இது திருவாய் மொழியில் சொன்ன படியே பக்தியுடைய ஆழ்வார் அருளிச் செயலுமாய் எம்பெருமானை உள்ளபடி பிரதிபாதித்த ஆயிரத்தில் இப்பத்து –

—————————————————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

திருவாய்மொழி இருபத்து நாலாயிரப்படி -3-8–

August 25, 2016

அன்று தேர் கடவிய பெருமான் கனை கழல் காண்பது என்று கொல் கண்களே -என்று செய்ய தாமரைக்கு கண்ணனில் எழுந்த ஆசைக்கு
பயிலும் சுடர் ஒளி யில் அனுசந்தானமும் -பாகவத ஸ்வரூப நிரூபகமான பகவத் ஸ்வரூபம் பும்ஸாம் த்ருஷ்ட்டி சித்த அபஹாரி யாகையாலே
பாகவதர்களோடு போதயந்த பரஸ்பரம் பண்ணி தரிக்கைக்கு உடல் அன்றிக்கே ஸ்மாரகமாய்-காத்ரைஸ் சோகாபி கர்சிதை -இத்யாதிப்படியே
விடாய்க்கு உத்தம்பகமாய் சதசாகமாக விடாய் பிறந்தவாறே ஓன்று ஒன்றே சர்வ இந்திரிய வ்ருத்தியை ஆசைப்படுகிற
தம்முடைய கரண க்ராமமும் அப்படியே விடாய்த்த தாமும் –
நாம் அவனை என்றோ காண்பது என்று துர்பிக்ஷ காலத்தில் தரித்ரனாய்-பஹு பிரஜனானவன் பிரஜைகள் பசிக்கும் தன பசிக்கும் ஆற்றாமே
கூப்பிடுமா போலே ஆபரணங்களையும் திவ்ய ஆயுதங்களையும் இவற்றுக்கு ஆச்ரயமான வடிவு அழகையும் குணங்களையும் சேஷ்டிதங்களையும்
உடையவனாய் காணப் பெறுவது என்றோ என்று கேட்டார் அடைய நீர்ப் பண்டமாம் படி கூப்பிடுகிறார் –
குஹேந சார்த்தம் தத்ரைவ ஸ்திதி தோஸ்மி திவசான் பஹூன் -என்று ஸூ மந்த்ரனுக்கு குஹ ஸஹவாசம் ஆனால் போலே இவருக்கும் பாகவத ஸஹவாசம்
அசேதனமாய் ஞானப்ரசர த்வாரமான இந்திரியங்கள் சேதன சமாதியாலே ஆசைப்பட்டது என்றும் –
ஒரோ இந்த்ரியமே இந்த்ரியாந்தரங்களினுடைய விஷயங்களை ஆசைப்பட்டது என்றும் சொல்லுகிற இவற்றால் ஆழ்வாருடைய விடாய்க்கு
அளவில்லாமையைச் சொன்ன படி –
இந்த்ரியாந்தர விஷயம் இந்த்ரியாந்தரத்துக்கு விஷயமாகக் கூடுமோ -என்னில்-ஈஸ்வர இச்சையால்
சர்ப்பத்துக்கு சாஸூஸ்ரவஸ்த்வம் கூடினால் போலே இவற்றுக்கும் அது அடியாகக் கூடும் –

————————————————————————————————————————

தம்முடைய திரு உள்ளத்துக்கு உண்டான அபிநிவேச அதிசயத்தை அருளிச் செய்கிறார் –

முடியானேஎ! மூவுலகும் தொழுது ஏத்தும்சீர் அடியானேஎ! ஆழ்கடலைக் கடைந்தாய்! புள்ளூர்
கொடியானேஎ! கொண்டல்வண்ணா! அண்டத்து உம்பரில் நெடியானேஎ! என்று கிடக்கும்என் நெஞ்சமே.–3-8-1-

முடியானேஎ! –
ஆதிராஜ்ய ஸூ சகமாய் உபய விபூதிக்கும் தவித்த முடி இ றே-சேஷ பூதனுக்கு சேஷித்வம் இ றே முதல் காணப்படுவது
அவன் சேஷித்வ பிரகாசமான திரு அபிஷேகத்தில் முந்துறக் கண் வைக்கிறார் -தர்ச நீயமான திரு அபிஷேகம்
இவருடைய அபிநிவேச அதிசயம் இசையின் ஓசையிலே அறியும் அத்தனை –
மூவுலகும் தொழுது ஏத்தும்சீர் அடியானேஎ! –
அவனுடைய சேஷித்வத்தை அனுசந்தித்தால் தம்முடைய அனுரூபமாக திருவடிகளில் இ றே விழுவது
குணாகுண நிரூபணம் அசேஷ லோக சரண்யமான திருவடிகளை உடையவனே
மதீய மூர்த்தானாம் அலங்கரிஷ்யதி -என்று வகுத்த திருவடிகளை என் தலையிலே வைக்கப் பெறுவது எப்போது காண் என்று கருத்து
ஆழ்கடலைக் கடைந்தாய்!
இந்த சம்பந்த அனுரூபமான புருஷார்த்தம் அன்றிக்கே ஷூத்ரங்களை அபேக்ஷிக்கிலும் உடம்பு நோவக் கடந்து கொடுக்குமவன் –
அப்ரமேயோ மஹோததி என்கிறபடியே அத்யகாதமான கடலை குளப்படி போலே கலக்கின படி
புள்ளூர்-கொடியானேஎ! –
பெரிய திருவடியை வாகனமாகவும் கொடியாகவும் உடையவனே -ஆஸ்ரிதர் இருந்த இடத்தே செல்லுகைக்கு வாகனமாய்
தூரத்திலே கண்டு வாரா நின்றான் என்று தரிக்கைக்கு த்வஜமாகை
கொண்டல்வண்ணா!
மேருவின் மேலே ஒரு காள மேகம் படிந்தால் போலே யாயிற்று பெரிய திருவடி மேல் இருப்பு –
அண்டத்து உம்பரில் நெடியானேஎ! –
பெரிய திருவடியின் முதுகில் இருப்பைக் கண்டால் ப்ரஹ்மாதிகளுடைய ஐஸ்வர்யம் ஷூத்ரமாய்-இவனே சர்வாதிகன்-என்று தோற்றும்படி இருக்கை-
வடிவு அழகோபாதி இவர்க்கு ஐஸ்வர்யமும் ஆகர்ஷகமாய் இருக்கிற படி –
என்று கிடக்கும்என் நெஞ்சமே.-
இப்படிகளைச் சொல்லி அச் சொல்லைத்த தலைக் கட்டாமே கிடக்கும்-
உக்த்வார்யேத்தி சக்ருத்தீ நம் புனர் நோவாச கிஞ்சன -என்ற ஸ்ரீ பரத்தாழ்வானை போலே
ன் நெஞ்சமே.-
என் மனனே என்கிறார் அல்லர் -நான் செய்தபடி செய்ய இப்பிரஜையைக் கொண்டு என் செய்கேன் -என்கிறார் –

———————————————————————————————————————————–

மன பூர்வோ வாக் உத்தர -என்ற மனசுக்கு அநந்தரமான வாக்கு -தன விருத்தியையும் நெஞ்சின் விருத்தியையும் ஆசைப்படா நின்றது என்கிறார் –

நெஞ்சமே நீள் நகராக இருந்த என் தஞ்சனே! தண் இலங்கைக்கு இறையைச் செற்ற
நஞ்சனே! ஞாலம் கொள் வான் குறளாகிய வஞ்சனே! என்னும் எப்போதும் என் வாசகமே.–3-8-2-

நெஞ்சமே நீள் நகராக இருந்த என் தஞ்சனே!
வாக் இந்த்ரியத்தின் வார்த்தை இறுக்கியபடி -அவதாரணத்தால் மநோ வ்ருத்தியை வாக்கு ஆசைப்பட்டது என்கை
நெஞ்சின் பக்கலிலேயோ எப்போதும் இருக்கலாவது -என் பக்கல் ஒரு கால் இருந்தால் ஆகாதோ
நீள் நகராக
கலங்கா பெரு நகரிலே இருக்கும் இட்டளம் தீரும்படி யாயிற்று இவர் திரு உள்ளத்தில் பாரிப்பு
என் தஞ்சனே!
ஆபத் சகனே –விடாய்த்து கூப்பிடப் பண்ணின உபகாரம்
சம்சாரிகள் விஷயாந்தரங்களைப் பற்றி கூப்பிடா நிற்க இவர் இவ்விஷயத்தில் கூப்பிடுகிறது நெஞ்சிலே இருக்கை இறே
தண் இலங்கைக்கு இறையைச் செற்ற நஞ்சனே!
கட்டளை பட்ட லங்கைக்கு இறைவனான ராவணனை நிரசித்து அவனுக்கு நஞ்சானவனே
அஹோ வீர்ய மஹோதைர்ய மஹோசத்தவ மஹோத்யுதி ஸ்வர்க்கோயம் தேவலோகயம்இந்த்ரசியேயாம்
புரீ பவேத் சித்திர்வேயம்-என்று பரம விரக்தனான திருவடியும் மதித்த ஐஸ்வர்யம் இறே
ஞாலம் கொள் வான் குறளாகிய
ராவணனைப் போலே மகாபலியை தலையை அறா விட்டது உதாரன் ஆகையால்
அவனால் அபஹ்ருதையான பூமியை மீடகைக்கு விரகு அறியுமவனே
சர்வாதிகனான தன்னை அர்த்தியாக்கி இந்திரனுக்கு ராஜ்யத்தை வாங்கிக் கொடுத்த விரகு
வஞ்சனே!
சிறு காலாலே மூவடி என்று வேண்டிப் பெரிய காலாலே இரண்டு அடியிலே அடங்கின வஞ்சனம்-
கொள்வான் -என்கிறார் இந்திரன் பேறு தன் பேறாக இருக்கையாலே
வஞ்சனே! என்னும் எப்போதும் என் வாசகமே.–
அவ்வஞ்சனத்தையே சர்வ காலமும் சொல்லா நின்றது என் வாக்கானாது
அவ்வஞ்சனத்தை அனுசந்தித்த பின்பு ராமாவதாரத்தில் செவ்வையிலும் போகிறது இல்லை
ஸ்வரூபம் அறியாமை செய்த இடம் இ றே அவ்வவதாரம் -தன்னை அழிய மாறின இடம் இறே இது
எப்போதும்
கலியன் சோறு சோறு என்னுமா போலே

————————————————————————————————————————–

கைகளானவை வாக் விருத்தியையும் தன் விருத்தியையும் ஆசைப்படா நின்றது –

வாசகமே ஏத்த அருள் செயும் வானவர் தம் நாயகனே! நாள் இளந் திங்களைக் கோள்விடுத்து
வேய் அகம் பால் வெண்ணெய் தொடு வுண்ட ஆன் ஆயர் தாயவனே! என்று தடவும் என் கைகளே.–3-8-3—

வாசகமே ஏத்த அருள் செயும் வானவர் தம் நாயகனே!
கைகளின் வார்த்தை இருக்கிறபடி-இவ்வாக்கே ஏத்திப் போம் அத்தனையோ -நான் ஒரு கால் ஏத்தினால் ஆகாதோ -என்னா நின்றது –
தத் விப்ராசோ விபன்யவ-என்கிறபடியே நித்ய ஸூ ரிகள் ஏத்த இருக்கிற உனக்கு வாக்கு ஏதேனும் பச்சை இட்டது உண்டோ –
நித்ய ஸூ ரிகளை போலே வாக்குக்கு ஏத்துகையே ஸ்வ பாவமாக கொடுத்தவன் என்னுதல்
நித்ய ஸூ ரிகளை போலே எனக்கும் ஏத்துகையே ஸ்வ பாவமாக வேணும் என்னுதல்
நாள் இளந் திங்களைக் கோள்விடுத்து
நாளால் இளையனான சந்திரனைப் போலே -அபி நவமான சந்திரனைப் போலே என்கை -கோள்-ஒளி -திரு முகத்தின் ஒளி புறப்படும்படி ஸ்மிதம் பண்ணி
வேய் அகம் பால் வெண்ணெய் தொடு வுண்ட –
இடையருடைய மூங்கில் குடில்களில் வெண்ணெய் களவு கண்டா
இடைச்சிகள் மறையச் சேமித்து வைத்த வெண்ணெய்யைக் களவு காணப் புக்கு நிறத்தின் இருட்சியாலும் அவ்விடத்தில் இருளாலும் தெரியாமையாலே
தடவ பாக்ய வசத்தால் கையிலே தட்டின ஹர்ஷத்தாலே ஸ்மிதம் பண்ணி அதுவே கை விளக்காக வெண்ணெய் அமுது செய்யும் என்கை –
ஆன் ஆயர் தாயவனே!
இடையாருக்கு தாய் போலே பரிவன் ஆனவனே
என்று தடவும் என் கைகளே.–
அவன் வெண்ணெய் களவு காணப் புக்க இடத்தே வழியைக் கட்டிப் பிடித்துக் கொள்ள தேடா நின்றது என் கைகள்
நவநீத ஸுர்ய வ்ருத்தாந்தத்தை அனுசந்தித்தவாறே கைகளுக்கு கண் தோற்றுகிறது இல்லை -என்னவுமாம் -ராமம் மே அநு கதாத்ருஷ்ட்டி –

—————————————————————————————————

கண்களானவை கைகளின் வ்ருத்தத்தையும் ஸ்வ வ்ருத்தியான தரிசனத்தையும் ஆசைப்படா நின்றது என்கிறார் –

கைகளால் ஆரத் தொழுது தொழுது உன்னை வைகலும் மாத்திரைப் போதும் ஓர் வீடு இன்றிப்
பைகொள் பாம்பு ஏறி உறை பரனே! உன்னை மெய்கொளக் காண விரும்பும் என் கண்களே.–3-8-4-

கைகளால்
தொழுகைக்காக கண்ட கைகளால்
ஆரத் தொழுது தொழுது
பசியர் வயிறு நிறைய உண்ண வேணும் என்னுமா போலே
வீபசையாலே தொழுகை தானே பிரயோஜனம் என்கை
ஒரு பிரயோஜனத்துக்கு தொழில் அது கிட்டினவாறே தவிர்க்கும்
அநந்ய பிரயோஜனம் ஆனாலும் சாதனா புத்தயா தொழில் சாத்தய சித்தி அளவில் மேலும்
இது தானே பிராப்யம் ஆகையால் நித்தியமாய் இருக்கும் -நித்யாஞ்சலி புடா ஹ்ருஷ்டா -என்னக் கடவது இ றே
உன்னை
அஞ்சலிக்கு வகுத்த உன்னை
இத்தலை தொழுது அல்லாதது தரிக்க மாட்டாதா போலே தொழுவித்துக் கொண்டு அல்லது தரிக்க மாட்டாத உன்னை
வைகலும் மாத்திரைப் போதும் ஓர் வீடு இன்றிப்
சர்வ காலமும் ஒரு க்ஷணமும் இடை விடாதே -நித்ய அக்னிஹோத்ர வ்யாவ்ருத்தி
பைகொள் பாம்பு ஏறி உறை பரனே!
இப்படி தொழுகைக்கு
அடியான சர்வாதிகத்வமும் ஸ்ப்ருஹநீயத்வமும் சொல்லுகிறது –
ஸ்வ ஸ்பர்சத்தாலே விகசிதமான பணங்களை உடைய திரு வனந்த ஆழ்வான் மேலே நித்ய வாசம் பண்ணுகையாலே
தகட்டில் அழுந்தின மாணிக்கம் போலே ஸ்ப்ருஹணீயமாய்-இருக்கை
அனந்த சாயி என்கிறபடியே சர்வாதிகாத்வம் சொல்லிற்று ஆகவுமாம்
உன்னை
இப்படி பிராப்தனும் போக்யமுமான உன்னை
மெய்கொளக் காண விரும்பும் என் கண்களே.–
மானஸ அநு பவமாதரமாய் -பாஹ்ய சம்ச்லேஷத்துக்கு எட்டாது ஒழிகை அன்றிக்கே மெய்யாகக்காண வேணும் என்று விரும்பா நின்றன –

—————————————————————————————————–

செவிகளானவை காண வேணும் கேட்க வேணும் என்னா நின்றது -என்கிறார் –

கண்களாற் காண வருங் கொல் என்று ஆசையால் மண் கொண்ட வாமனன் ஏற மகிழ்ந்து செல்
பண் கொண்ட புள்ளின் சிறகு ஒலி பாவித்துத் திண் கொள்ள ஓர்க்கும் கிடந்து என் செவிகளே.–3-8-5-

கண்களாற் காண வருங் கொல் என்று
சஷூச்ச த்ரஷ்டவ்யஞ்ஜ நாராயண -என்கிறபடியே கண்ணுக்கு வகுத்த விஷயத்தை காண வருமோ என்னா நின்றது -எத்தாலே என்னில்
ஆசையால்
அபி நிவேசமே ஹேதுவாக
மண் கொண்ட வாமனன்
தன் வஸ்துவை பிறர்க்கு விட்டுக் கொடாமைக்காக தன்னை அர்த்தி யாக்கினவன்
ஏற மகிழ்ந்து செல்
அவன் மேற்கொள்ளுகையால் உண்டான ஹர்ஷத்தாலே அதுக்கு போக்கு விட்டு சஞ்சரியா நிற்கை
பண் கொண்ட புள்ளின்
பரிஷ்க்ரியை உடைய என்னுதல் -ப்ருஹத் ரதந்த்ராதி சாம த்வனியை வென்ற சிறகு ஒலி என்னுதல் –
சிறகு ஒலி பாவித்துத்
சிறகு ஒலியாலே அவன் வரவை அனுசந்தித்து
திண் கொள்ள ஓர்க்கும் கிடந்து என் செவிகளே.-
முன்னே நின்று சிலர் சொன்ன வார்த்தையும் கேளாத படி திண்ணியதாக அவதானம் பண்ணிக் கொண்டே இரா நின்றன
ஸ்ரீ பரதாழ்வான் கிலிகிலா சப்தத்துக்கு செவி மடுத்துக் கொடு கிடந்தால் போலே –

—————————————————————————————————————————————————-

என்னுடைய பிராணனானது உன்னுடைய கீர்த்தியை கேட்க வேணும் என்று ஆசைப் படா நின்றது -என்கிறார் –

செவிகளால் ஆர நின் கீர்த்திக் கனியெனும் கவிகளே காலப் பண் தேன் உறைப்பத் துற்றுப்
புவியின் மேல் பொன் நெடுஞ் சக்கரத்து உன்னையே அவிவு இன்றி ஆதரிக்கும் எனது ஆவியே.–3-8-6-

செவிகளால் ஆர நின் கீர்த்திக் கனியெனும் கவிகளே –
செவிகள் வயிறு நிறையும்படியாக உன் கீர்த்தி ரூபமாய் கனி போலே இருக்கிற கவிகளை
கவி கனி போலே இருக்கை அன்றிக்கே கனி கவி யாயிற்று என்கிறது இ றே போக்யதாதிசயத்தாலே –
காலப் பண் தேன் உறைப்பத் துற்றுப்
செருக்கர் நல்ல பலன்களை தேனில் தோய்த்து புஜிக்குமா போலே காலப் பண்ணாகிற தேனை மிகக் கலந்து அனுபவித்து
புவியின் மேல்
இவ்வனுபவம் ஒரு தேச விசேஷத்திலே ஆகாதபடி பூமியின் மேலே –
ஒரு தேசத்திலே விடாய்த்தாரை பிரதேசாந்தரத்திலே விடாய் தீர்க்குமா போலே அன்றியே ஆசைப்பட்ட கரணங்களோடு இங்கே பெற வேணும் என்கை
பொன் நெடுஞ் சக்கரத்து உன்னையே
தேசம் இதுவே யானவோபாதி விஷயமும் இதுவே யாக வேணும்
ஸ்ப்ருஹணீயமாய் போக்யதைக்கு எல்லை இன்றிக்கே இருக்கிற திரு ஆழியை நிரூபகமாக உடைய உன்னை
தாமஸ பரமோ தாதா சங்கு சக்ர கதா தாரா
அவிவு இன்றி ஆதரிக்கும் எனது ஆவியே.–
விச்சேதம் இல்லாதபடி ஆதரியா நின்றது
துர்லபம் என்று பாராதே கை புகுரு விஷயத்திலே போலே சாபலம் பண்ணா நின்றது
எனது ஆவியே.–
அவன் அருள் பெரும் அளவு ஆவி நில்லாது என்கிற ஆவி –

————————————————————————————————————

கரணங்களை ஒழிய தம்முடைய இழவை சொல்லுகிறார் –

ஆவியே! ஆரமுதே;என்னை ஆளுடைத் தூவி அம் புள்ளுடையாய்!சுடர் நேமியாய்!
பாவியேன் நெஞ்சம் புலம்பப் பல காலும் கூவியும் காணப்பெறேன் உன கோலமே.–3-8-7-

ஆவியே!
அபி நிவேசம் மிக்காலும் ப்ராப்யன் ஆகிறான் சேஷியானால் வரும் தனையும் பாடாற்ற வேண்டாவோ என்னில் –
பிராணனை ஒழிய தரிக்க வல்லோமோ என்கிறார் –
ஆரமுதே;
தாரகமான அளவன்றிக்கே போக்யமுமாய் இருக்கை –
என்னை ஆளுடைத் தூவி அம் புள்ளுடையாய்!
மற்றை அம்ருதத்தை கொண்டு வருமவனே இவ்வம்ருதத்தையும் கொண்டு வருவான் –
பெரிய திருவடியின் முதுகில் இருப்பைக் காட்டி என்னை எழுதிக் கொண்டவனே –
என்னை ஆளுடைத் தூவி அம் புள்-என்று பெரிய திருவடியோடே அன்வயித்துச் சொல்லவுமாம் –
சேர்க்குமவர்களுக்கு சேஷம் என்று இ றே இவர் இருப்பது
சுடர் நேமியாய்!
போக்யத்தைக்கும் பிரதிபந்தக நிவ்ருத்திக்கும் தானே அமைந்து இருக்கை –
தாரகமுமாய் போக்யமுமாய் -சேர்ப்பாரும் உண்டாய் பிரதிபந்தகம் போக்குவாரும் உண்டாய் இருக்க நான் இழக்கும் படி எங்கனே என்கிறார் –
பாவியேன்
பகவத் விஷயத்தில் ஆசைப் பட்டாரில் இழந்தார் இல்லை கிடீர்
பாவியேன் நெஞ்சம்-
எனக்கு கரணமாய் இ றே இதுக்கும் இழக்க வேண்டிற்று -மமைவ துஷ்க்ருதம் கிஞ்சித் -இத்யாதி
புலம்பப்
இழவோடே கூப்பிட
பல காலும் கூவியும் காணப்பெறேன் உன கோலமே.-
அதுக்கு மேலே நான் பல காலும் கூப்பிடவும்
ஓர் யுக்தி மாத்ரத்துக்கு முகம் கொடுக்கும் விஷயத்தை கிடீர் இப்படிப் பட்டும் காணாது ஒழி கிறது –
கூவியும் காணப்பெறேன் –
ஸ்வரூபம் பெற்றேன் அல்லேன்-அபிமதம் பெற்றேன் அல்லேன் என்கிறார்
தத் தஸ்ய சத்ருசம் பவேத் -என்று இருக்கப் பெற்றிலேன்
மடலூர்ந்தார் பெற்ற பேற்றை பெற்றேன் அல்லேன்
என் ஸ்வரூபத்தை நோக்கினேன் அல்லேன் -அவன் ஸ்வரூபத்தை நோக்கினேன் அல்லேன்
உன்னுடைய நீர்மையும் அழித்தேன்-என்னுடைய சேஷத்வத்தையும் அழித்தேன் –
உன கோலமே
இரண்டு தலையையும் அழித்தே யாகிலும் பெற வேண்டும் விஷய வை லக்ஷண்யத்தை சொல்லுகிறது
வ்யதிரேகத்தில் புறம்பே போது போக்குதல் கண் உறங்குதல் செய்யும் விஷயம் அன்று இறே –

———————————————————————————————————————–

உம்முடைய அபேக்ஷிதம் செய்கைக்கு ஈடான காலம் வர வேண்டாவோ -என்னில் அதுவும் நீ இட்ட வழக்கு அன்றோ என்கிறார் –

கோலமே! தாமரைக் கண்ணது ஓர் அஞ்சன நீலமே! நின்று எனது ஆவியை ஈர்கின்ற
சீலமே! சென்று செல்லாதன முன் நிலாம் காலமே! உன்னை எந்நாள் கண்டு கொள்வனே?–3-8-8-

கோலமே!
அழகு என்றும் தாதாஸ்ரயம் என்றும் இரண்டு அன்றிக்கே அழகு தானே ஒரு வடிவு கொண்டால் போலே இருக்கை
ஞான ஸ்வரூபன் என்றும் ஞான குணகன் என்றும் சொல்லக் கடவது இ றே ஞாதாவை
தாமரைக் கண்ணது ஓர் அஞ்சன நீலமே!
தாமரையை ஒரு போலியாகச் சொல்லலாம் படி யான திருக் கண்களை உடையையாய் அதுக்கு பரபாகமாய் சிரமஹரமான வடிவை உடையவனே
அஞ்சனம் என்றும் நீலம் என்றும் சொல்லுகையாலே ஓன்று ஒப்பாக மாட்டாமையாலே கதிர் பொறுக்குகிறார்
நீலம் தன்னை வடிவாக வகுத்தால் போலே இருக்கை –
நின்று எனது ஆவியை ஈர்கின்ற சீலமே!
வியதிரேகத்தில் வடிவை மறக்கிலும் பின்பு நின்று பின்னாடி மறக்க ஒண்ணாத படி என் நெஞ்சை ஈரா நின்றுள்ள சீலமே ஸ்வரூபம் ஆனவனே
செய்ய தாமரைக் கண்ணனில் நெஞ்சினால் நினைப்பான் எவன் என்கிற அர்ச்சாவதாரத்தில் நீர்மையை இ றே இவர் நினைக்கிறது
சென்று செல்லாதன-
தேஹ குணங்களும் ஆத்ம குணங்களும் குறைவற்று இருந்தாலும் இன்ன காலத்தில் பெற கடவது என்று அன்றோ இருப்பது என்னில்
பூத பவிஷ்ய வர்த்தமான கால த்ரயமும் நீ இட்ட வழக்கு அன்றோ என்கிறார்
காலஸ்யச ஹாய் ம்ருத்யோச்ச ஜங்கம ஸ்தாவரஸ்யஸ
ஈசதே பகவா நேகஸ் சத்யமேதத் பிரவீ மிதே சத்யம் -இத்யாதி -பகவத் விஷயத்தில் அர்த்த வாதம் இல்லை
முன் நிலாம் காலமே!
முன்னே வர்த்திக்கிற காலமே
உன்னை
சர்வ பிரகார வி லஷணனாய் கால த்ரயமும் நீ இட்ட வழக்கான உன்னை
எந்நாள் கண்டு கொள்வனே?–
நான் பெரும் நாள் இன்ன நாள் என்ன வேணும் –
பூர்ணே சதுர்தசே வர்ஷே என்று ஸ்ரீ பரத ஆழ்வானுக்குச் சொன்னால் போலே சொல்ல வேணும் என்கிறார் –

——————————————————————————————————————

ரக்ஷண உபாயஜ்ஞ்ஞனுமாய் -பிரதிகூல நிரசன சமர்த்தனுமாய் இருக்கிற உன்னை நான் சேர்வது என்று என்கிறார் –

கொள்வன் நான், மாவலி! மூவடி தா’என்ற கள்வனே! கஞ்சனை வஞ்சித்து வாணனை
உள்வன்மை தீர,ஓர் ஆயிரம் தோள் துணித்த புள்வல்லாய்! உன்னை எஞ்ஞான்று பொருந்துவனே?–3-8-9-

கொள்வன் -நான்
பெற்றால் அல்லது போகேன் என்னுதல்
வி நீத வேஷத்தைக் கண்டு நம் பக்கலிலே ஒன்றைக் கொள்ளுவது காண் என்று இருந்த அவன் நினைவு அறிந்து நான் கொள்வன்-என்னுதல் –
மாவலி!
இதுக்கு முன்பு ஒரு பிரபுவுக்கு தாழ்வு சொல்லி அறியானே
அவதாரத்துக்கு முன்பு அறியான் -பிரபு இல்லாமையால்
அவதரித்த பின்பு பிறந்த அன்றே பிக்ஷையில் அதிகரிக்கையாலே கற்கைக்கு அவசரம் இல்லை
அவன் தன்னை முதல் பேர் சொல்லி கண்டு அறியாமையால் இவனைப் பார்த்து இவன் பருவத்தால் ப்ரீதனாய்
உனக்கு வேண்டுவது என் என்ன
மூவடி தா –
மூவடி என்றான்
தன்னை வேண்டும் தரம் அன்றிக்கே இருக்கையாலே அநாதரிக்க தா என்றான்
என்ற கள்வனே!
சுக்ராதிகள் விரோதிக்க அவர்கள் செவிப்படாத படி உன் முக்தமான பேச்சாலே அவனை அபஹரித்தவனே
கஞ்சனை வஞ்சித்து
கம்சன் குவலயா பீடத்தில் நலிய நினைக்க அந்நினைவை அவன் தன்னோடே போம்படி பண்ணி
வாணனை-உள்வன்மை தீர,-ஓர் ஆயிரம் தோள் துணித்த-
ஷூ த்ர தேவதையை பற்றி -அத சோ அபயங்கதோ பவதி -என்று இருக்குமா போலே இருந்த வாணன் நெஞ்சு வலி போம்படியாக
பெரிய திருவடி மேல் ஏறி சாரிகை வந்து அவனுடைய பாஹு வனத்தை சேதித்தவனே
புள்வல்லாய்!-
வாள் வல்லான் -தாள் வல்லான் -என்றால் போலே
உன்னை
சர்வஞ்ஞனாய் -சர்வ சக்தனாய் -ப்ராப்தனாய் இருந்துள்ள உன்னை
எஞ்ஞான்று பொருந்துவனே?–
பிரிந்தவன் கூடினால் போலே இ றே இவர்க்கு ஸ்வரூப ஞானம் பிறந்த படி
அநன்யார்ஹையான பிராட்டி அசோகவ நிகையிலே இருந்தால் போலே யாயிற்று ஸ்வரூப ஞானம் பிறந்தால் சம்சாரத்தில் இருக்கும் இருப்பு –

——————————————————————————————————–

உன்னைக் காணப் பெறாத வ்யாசனத்தாலே துக்கப்படுகிற நான் -இன்னம் எத்தனை காலம் துக்கப் படக் கட வேன் என்கிறார் –

பொருந்திய மாமருதின்னிடை போய எம் பொருந் தகாய்! உன் கழல் காணிய பேதுற்று
வருந்தி நான் வாசக மாலை கொண்டு உன்னையே இருந்திருந்து எத்தனை காலம் புலம்புவனே?–3-8-10-

பொருந்திய
இவனை நலிய நினைத்து க்ருத சங்கேதராய் நின்றபடி -நிரவிவரம் என்னவுமாம் –
மாமருதின்னிடை போய-
அவ்வருகே சாய்ந்து அவன் மேலே சாய்ந்ததாகில் என் படக் கட வேன் -என்று வயிறு பிடிக்கிறார்
ஓன்று என்னலாம் படி அவகாசம் இன்றியே நிற்க அவகாசம் உள்ள இடத்தில் போமோ போலே அதன் நடுவே போனபடி
எம் பொருந் தகாய்!
அதில் அகப்படாதே சேஷியான உன்னை எனக்குத் தந்த பெரியோனே
உன் கழல் காணிய பேதுற்று
உன் திருவடிகளைக் காண வேணும் என்று ஆசைப் பட்டு
யாமலார்ஜு நயோர் மத்யே ஜகாம கமலேஷண -தத் கட கடா சப்த சமா கர்ணன தத் பர-என்று மருது முறிந்த ஓசையைக் கேட்டு
புரிந்த பார்த்த போதைச் சிவந்த திருக் கண்களையும் அப்போதைத் திருவடிகளின் சிறப்பையும் காண வாய்த்து இவர் ஆசைப்பட்டது –
பேதுற்று
மயர்வற மதி நலம் அருள பெற்ற ஞானமும் போயிற்று
வருந்தி
ஆசைப்பட்ட விஷய அநு குணமாய் இறே நோவு பாடும் இருப்பது –ஒரு சொல் தொடை எடுக்கையாகிறது ஒரு மலையை எடுத்தால் போலே இருக்கிறது
நான்
விரஹம் பொறுக்க மாட்டாத மேன்மையை உடைய நான்
வாசக மாலை கொண்டு
உன் குணத்துக்கு வாசகமான சொல் தொடையைக் கொண்டு
உன்னையே இருந்திருந்து
யதோ வாசோ நிவர்த்தந்தே-என்னும்படியான உன்னையே
ஒரு வார்த்தை தலைக் கட்டுகைக்கு நடுவே பல படி இளைப்பாற வேண்டி இருக்கை
எத்தனை காலம் புலம்புவனே?–
இதுக்கு முடிவு என்று -என்கிறார் -சாதனா புத்தியா சொல்ல மாட்டார் -ப்ராப்யபுத்தியாலே தவிர மாட்டார்

—————————————————————————————

நிகமத்தில் இது திருவாய்மொழி இயல் மாத்ரத்தை தரித்தவர் யாரேனும் ஆகிலும் இதில் பிராரத்த படியே
அனுபவிக்கையில் தட்டு இல்லாத நிரதிசய போக்யமான திரு நாட்டிலே செல்வர் என்கிறார் –

புலம்பு சீர்ப் பூமி யளந்த பெருமானை நலங்கொள் சீர் நன் குருகூர்ச் சடகோபன் சொல்
வலங்கொண்ட வாயிரத்துள் இவையுமோர் பத்து இலங்குவான் யாவரும் ஏறுவர் சொன்னாலே –3-8-11-

இருந்ததே குடியாக ஏத்தும் படியான குணங்களை உடையனாய் தன் விபூதியை
அளந்து கொள்ளுகையினாலே ஸ்வாமி யானவனை யாய்த்து கவி பாடுகிறது
இதில் சொன்ன பேறு விடாயை உடைய ஆழ்வார் ஸ்ரீ ஸூக்திகள்
ப்ரதிபாத்யனை விளாக் குலை கொண்டு இருக்கும் -என்னுதல்
ப்ரதிபாதன சாமர்த்யார்த்த்தை உடைய ஆயிரம் என்னுதல்
அத்விதீயமான இப்பத்தை சொன்னால் இன்னார் இனையார் என்னாதே
பகவத் அனுபவத்துக்கு விச்சேதம் இல்லாத வை லக்ஷண்யத்தை உடைய பரமபதத்தை பிராபிக்க பெறுவர் –

———————————————————————————————-

கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-