ஸ்ரீ யபதியான -சர்வேஸ்வரனாலே-சகல ஜகத் உஜ்ஜீவன அர்த்தமாக திருவவதரித்து அருளின
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் –
சம்சார சேதனர்க்கு தத்வ ஞானம் பிறந்து -அவர்களுக்கு உஜ்ஜீவிகைக்கு உடலாக
தம்முடைய பரம கிருபையாலே -அருளிச் செயல் ரகஸ்யம் -என்று பிரசித்தமான
ஸ்ரீ ரகஸ்ய த்ரய வியாக்யானத்தை அருளிச் செய்தார் –
அதற்கு பூர்வர்கள் ஸ்ரீ ஸூக்திகளைக் கொண்டே பூஷணம் -என்ற விவரணம் அருளிச் செய்து உள்ளார் –
தனியன்கள் –
திராவிடம் நாய ஹ்ருதயம் குரு பர்வ க்ரமாகதம்
ரம்யஜா மாத்ரு தேவேந தர்சிதம் கிருஷ்ண ஸூ நா-
அவிட்டம் -திரு நக்ஷத்ரம்
திராவிடம் நாய ஹ்ருதயம்-எல்லா ஆழ்வார்களுடைய ஹ்ருதயம் இங்கு
கீழே ஆச்சார்ய ஹ்ருதயம் -நம்மாழ்வார் திரு உள்ளக் கருத்து
குரு பர்வ க்ரமாகதம்
ரம்யஜா மாத்ரு தேவேந தர்சிதம் கிருஷ்ண ஸூ நா-ஸ்ரீ வடக்குத் திரு வீதிப் பிள்ளை திருக்குமாரர்
மா முடும்பை அண்ணலோடு சேமமுடன் வைகுந்தம் சென்றக்கால் மாம் என்று தொட்டு உரைத்த சொல்லும்
த்வயம் தன்னின் ஆழ் பொருளும் எட்டு எழுத்தும் சொல்லுவார் யார் –ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யார்
தலையான வெட்டெழுத்தில் பிறந்து சரணாகதித்தாய்
முலை யாரமுதில் வளர்ந்த பிரான் முடும்பைக்கு அதிபன்
மலையார் திருபுயத்தான் மணவாளன் மலர் அடிக்கே
நிலையான நெஞ்சம் பெற்றே யும்பர் வாழ்வு நிலை பெற்றதே–
ஸ்ரீ யபதியாய் ஸ்ரீ வைகுண்ட நிகேதனாய் -நித்ய முக்த அனுபாவ்யனாய் –
நிரதிசய ஆனந்த யுக்தனாய்–இருக்கிற சர்வேஸ்வரன் –
(பத்தர்களுள் இங்கேயே அனுபவிக்கும் ஆசை கொண்டவர்கள் தானே -முமுஷுக்கள்)
அந்த நித்ய ஸூரிகளோபாதி-தன்னை அனுபவித்து நித்ய கைங்கர்ய ரசராய் வாழுகைக்கு பிராப்தி உண்டாய் இருக்கச் செய்தேயும்
அத்தை இழந்து அசந்நேவ-என்கிறபடியே (ப்ரஹ்மம் அசத் என்றால் இவனும் அசத் – சத் என்று அறிந்தால் வாழ்கிறான் )
அசத் கல்பராய் கிடக்கிற சம்சார சேதனர் உடைய இழவை அனுசந்தித்து
அத்யந்த வியாகுல சித்தனாய் (காருண்யத்தால் வந்த கலக்கம் )
இவர்கள் கரண களேபரங்களை இழந்து இறகு ஒடிந்த பஷி போலே கிடக்கிற தசையிலே
கரணாதிகளைக் கொடுத்து அவற்றைக் கொண்டு வியபசரியாதே தன்னை ஆஸ்ரயித்து உஜ்ஜீவிக்கைக்கு உடலாக
அபௌருஷேயமாய் -நித்ய நிர்தோஷமாய்-ஸ்வத பிரமாணமான வேதத்தையும் –
தத் உப ப்ரஹ்மணங்களான ஸ்ம்ருதி இதிகாச புராணாதிகளையும்
பிரவர்த்திப்பித்த இடத்திலும்
அந்த சாஸ்திர அப்யாசத்துக்கு அநேக யோக்யதை வேண்டுகையாலே -அவ்வழியாலே ஜ்ஞானம் பிறந்து
சேதனர் உஜ்ஜீவிக்கை அரிதாய் இருக்கிறபடியைத் திரு உள்ளம் பற்றி
சகல சாஸ்திர தாத்பர்யங்களையும் ஸூக்ரஹமாக இவர்கள் அறியலாம்படி பண்ண வேணும் என்று
ஸ்வரூப உபாய புருஷார்த்த யாதாத்ம்ய பிரதிபாதகமான ரகஸ்ய த்ரயத்தையும்
ஸ்வயம் ஏவ ஆச்சார்யனாக நின்று பிரகாசிப்பித்தது அருளினான் –
(மூன்று விஷயங்களை அறிந்து கொள்ள ரஹஸ்ய த்ரயம்
திரு மந்த்ரம் -ஸ்வரூபம் விளக்கும் / சரம ஸ்லோகம் உபாயம் விதிக்கும் / த்வயம்-புருஷார்த்தம் கைங்கர்யம் பிரார்த்தனை
தானே வெளியிட்டு -ஈஸ்வரன் தானும் ஆச்சார்ய பதவி –
உபதேசம் பண்ணினவன் ஒருவன் -வெவ்வேறே காலம் வெவ்வேறே தேசம் வெவ்வேறே அதிகாரிகளுக்கு )
அதில் ஸ்ரீ திருமந்த்ரத்தை பத்ரிகாஸ்ரமத்திலே ஸ்வ அம்ச பூதனான நரன் விஷயமாகப் பிரகாசிப்பித்தான்
ஸ்ரீ த்வயத்தை விஷ்ணு லோகத்திலே ஸ்வ மஹிஷி விஷயமாக -பிராட்டி விஷயமாக பிரகாசிப்பித்தான்
ஸ்ரீ சரம ஸ்லோகத்தை திருத்தேர் தட்டிலே ஸ்வ ஆஸ்ரிதனான அர்ஜுனன் விஷயமாக பிரகாசிப்பித்தான் –
ஆகையால் இறே-ஸ்ரீ லஷ்மீ நாத சமாரம்பம் என்று குரு பரம்பர ஆதியிலே ஈஸ்வரனை அனுசந்திக்கிறது –
முமுஷு வாகிறான் -அவிச்சின்ன பகவத் அனுபவ பிரதிபந்தக சம்சார நிவ்ருத்தியில் இச்சை யுடையான் ஒருவன் –
இவனுக்கு ரகஸ்ய த்ரய ஜ்ஞானம் அவஸ்ய அபேஷிதம்
இனி இந்த ரகஸ்ய த்ரயம் தான் சப்தம் ஸூக்ரஹமாய் இருந்ததே யாகிலும் அர்த்தம் உபதேச கம்யம் ஆகையாலும்
அத்தை அறிந்தே எல்லாரும் உஜ்ஜீவிக்க வேண்டுகையாலும்
அந்த ரகஸ்ய த்ரயத்திலும் பூர்வாச்சார்யர்களுடைய உபதேச பரம்பரா ப்ராப்தமான அர்த்த விசேஷங்களை
சர்வர்க்கும் ஸூக்ரஹமாகவும் ஸூ வ்யக்தமாகவும் அழகிய மணவாள பெருமாள் நாயனார்
தம்முடைய பரம கிருபையாலே இப் பிரபந்த முகேன அருளிச் செய்கிறார் –
இப் பிரபந்தத்தில் இவர் அருளிச் செய்கிற வாக்யங்களில் எல்லாம் அருளிச் செயல் சந்தைகளையே சேர்த்து அருளிச் செய்கிறது
மயர்வற மதிநலம் அருளப் பெற்றவர்கள் பேசின திவ்ய ஸூக்திகள் ஆகையாலே ஆப்த தமமுமாய் அத்யந்த போக்யமுமாய்
இருக்கிற இதுவே நமக்கு அநவரதம் அபிமதம் ஆகையாலும்
முகம் அறிந்தவன் கோத்த முத்து பெரு விலையனமாம் போலே சந்தைகளை தாம் சேர்த்த
சாதுரியாலே அருளிச் செயலில் ரசஜ்ஞ்ர்க்கு இதில் அர்த்தத்தில் காட்டிலும்
சப்தம் தானும் மிகவும் இனிதாய் இருக்கும் என்னும் அபிப்ராயத்தாலும் –
ஆகையால் இப்பிரபந்தம் சப்தம் அர்த்தம் ஆகிய இரண்டின் ரசத்தாலும் விசேஷ ஜன மநோ ஹரமாய் இருக்கும் –
இன்னமும் பிரபந்தாந்தரங்களில் அனுக்தமான அர்த்த விசேஷங்களும் இப்பிரபந்தத்தில் உண்டாகையாலும்
இது எல்லாருக்கும் ஆதரணீயமாய் இருக்கும் –
அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் இப்பிரபந்தம் வெளியிட பிரதான ஹேது காருண்யம் ஆகும் –
(ரஹஸ்யம் -சரம விஷயம் -ரக்ஷித்து அனுஷ்டானம் -மிக வீர்யம் உள்ளவை –
அனைவருக்கும் அதிகாரம் -பூர்வர்கள் பேணி அருளுவார்கள்
பாசுரப்படி ராமாயணம் -ஆச்சார்ய ஹ்ருதயம் போலவே அருளிச் செயல்களைக் கொண்டே இந்த பிரபந்தம்
அமலனாதி பிரான்- திருப்பாவை -கண்ணி நுண் சிறுத் தாம்பு -வியாக்யானங்களும் நாயனார்
அருளிச் செயல்கள் ஸ்ரீ ஸூக்திகளை பிரதானமாகக் கொண்டு அருளிச் செய்கிறார்
சொல்லின் இனிமை அர்த்தத்தை சீர்மை இரண்டும் உண்டே இதில் –
அல்லும் பகலும் அனுசந்திப்பாருக்கு
சொல்லும் பொருளும் தொகுத்து உரைத்தான் நல்ல
மணவாள மா முனிவன் மாறன் மறைக்குத்
தணவா நூற்று அந்தாதி தான்-திருவாய் மொழி நூற்று அந்தாதி தனியன்- )
இப்பிரபந்தத்தை வெளியிட்டு அல்லது தரிக்க ஒண்ணாதபடி விசரிப்பித்த சம்சாரி சேதனர்கள் உடைய
ஸ்வரூப பிராப்த பரம புருஷார்த்த அனுபவத்துக்கு இடைச்சுவரான
அப்ராப்த அநந்த அபுருஷார்த்தங்கள் உடைய அநாதி கால அனுபவமும்
அதனுடைய அநாகத (அநகாத காலம் -வரும் காலம்) அநந்த கால அனுவர்த்த அநார்ஹதையும்
ஆகிற அனர்த்தங்களையும் பிரகாசிப்பித்துக் கொண்டு
சர்வாத்மாக்களின் உடையவும் பரம புருஷார்த்த அனுபவ யோக்யதா ஹேதுவை
ச பிரமாணமாகவும் ச த்ருஷ்டாந்தமாகவும் அருளிச் செய்கிறார் -ஒரு கடல் -என்று தொடங்கி –
——————————————————-
1-திருமந்திர பிரகரணம் –
அவதாரிகை –
1-1-ஆத்ம த்ரைவித்யம் –
ஒரு கடல் துறையிலே படுகிற முத்து மாணிக்கங்களில் சில ஒளி வுடையவாய் ,
சில கோது பெற்று ,அவற்றிலே சிலவற்றைக் கடைந்து , சேர்ந்தவாறே — நல்லவற்றோடு ஒரு கோவை ஆம் போல ,-
பெரும் புறக் கடலான – (பெரிய திரு மொழி 7-10-1 )-நாராயணனுடைய சங்கல்பத்தாலே சத்தையைப் பெறுகிற ஆத்மாக்களிலே
(பிருஹத் பஹுத் சிந்து–திருப் பாற் கடலில் இருந்து வெளி வந்ததால் புறம் -தேனீ கூட்டம் தேவர்கள்
திருப் பாற் கடலில் இருந்து வெளி வந்ததால் புறம் -தேனீ கூட்டம் தேவர்கள்
முத்தின் திரள் கோவையை — பத்தராவி பெருமாள்-உத்சவர் திரு நாமம் -ஸ்ரீ கிருஷ்ண மங்கள க்ஷேத்ரம்
சர்வ பதார்த்தங்களையும் தன்னுள்ளே வைத்து ரஷிக்கும் கடல் -அடங்குக உள்ளே -சம்பந்தம் விலக்காமமையே வேண்டியது )
சிலர் —துளங்கு ஒளி சேர் தோற்றத்து நல் அமரர் (இரண்டாம் திருவந்தாதி -3)-என்னும் படி நித்யராய்
சிலர் -வன் சேற்று அள்ளலிலே- (திரு விருத்தம் -100) -அழுந்தி அழுக்கு ஏறி ஆப்புண்டு – (திரு விருத்தம் -95 )..பத்தராய் ,
(பிறப்பாம் பொல்லா அரு வினை மாய -கர்மா வாசனை ருசி -பொய்ந் நிலம்-அடி காணா பிறப்பு சூழல் – தானே வன் சேற்று அள்ளல்
ஆப்புண்டு –வலையுள் பட்டு அழுந்தி –விடில் செய்வது என் என்றே தெரியாமல் சம்சாரத்தில் உழன்று -ஆப்பு அவிழ்ந்து –
மூதாவியில் தடுமாறி -ஸூஷ்ம சரீரத்தில் தடுமாறி -பாஞ்சாக்னி வித்யை மூலமே -அடுத்த பிறவி -நடுவில் தடுமாறி –
யாதானும் பற்றி ப்ரஹ்மத்தின் இடம் நீங்கும் விரதம் நாம் கொண்டு -திருமாலோ நல் வீடு செய்யும் மாதா பிதா
ஸூஷ்ம சரீரம் கழிந்து -ஸ்வரூப ஆவிர்பாவம் -அப்கராக்ருத திருமேனி பெற்று -ஓளி கொண்ட சோதியோடே -)
அவர்களில் சிலர் –மலம் அறக் கழுவி மாசு அறுக்கப் பட்டு – (திருவாய் மொழி -1-3-8 )..
ஒளி கொண்ட சோதியோடே –(திருவாய்மொழி -2-3-10 )..வானத்து அணி அமரர் ஆக்குவிக்க – (இரண்டாம் திருவந்தாதி -2 ).
வானவர்க்கு நற் கோவையாம் –(திருவாய்மொழி -4-2-11 )-படி முக்தராக கடவர்கள் ..
(பகவத் விஸ்லேஷத்தால் -விடாய்க்க சம்பாவனை இல்லாத சம்சாரத்தில் -விடாய்த்த ஆழ்வார் –
அங்கு விடாய்க்க சம்பாவனை இல்லை -விஸ்லேஷம் இல்லை -அங்கும் விடாய்ப்பார் –
கைங்கர்ய ஹானி வரக் கூடாதே -விஷய வைலக்ஷண்யம் படுத்தும் பாடு –
அவர்களும் அனுபவிக்க முடியாமல் தவிப்பது -ஆரா அமுதன் அன்றோ
மலி புகழ் -விசேஷணம் ஆழ்வாருக்கும் வானவருக்கும் இந்த பாசுரத்தில் உண்டே )
நல் சரக்கு ஒளியின் வுடைய மிகுதி குறைவால் உள்ள பெருமை சிறுமை ஒண் பொருள் ஆன – (திரு வாய் மொழி -1-2-11 )..
ஆத்மாவுக்கும் எந்த ஞானத்தின் வுடைய ஏற்ற சுருக்கத்தாலே வுண்டாகக் கடவது ..
(பிறர் நன் பொருள் -மதுர கவி ஆழ்வார்
கர்மத்தால் ஞானம் ஏற்றமும் தாழ்வும் -ஞானத்துக்கு அனுகுணமான பிறவி -இப்படித் தானே பிறவி சுழல்-
கர்மம் தொலைய ஸ்வரூப ஆவிர்பாவம் – )
—–
அதாவது -கடல் -திருஷ்டாந்தம் -சர்வேஸ்வரன் தார்ஷ்டாந்திகம் –
முத்து மாணிக்கங்கள் -திருஷ்டாந்தம் –ஜீவாத்மாக்கள் தார்ஷ்டாந்திகம் –
முத்து மாணிக்கங்களில் த்ரை விதயம் போலே ஜீவாத்ம த்ரை விதயம்
முத்து மாணிக்கங்களில் சில ஸ்வத ஒளி யுடையன – அவ்வோபாதி ஜீவாத்மாக்களில் நித்யர்கள் ஸ்வ பாவத ஸூ த்தர்கள் –
முத்து மாணிக்கங்களில் சில கொத்தை பற்றியவை -அஸூத்தங்கள் -அவ்வோபாதி ஜீவாத்மாக்களில் சம்சாரிகள் அஸூத்தர்கள் –
முத்து மாணிக்கங்களில் சில கடையப் பட்டு ஸூத்தி அடைந்து நல்லவற்றோடு ஒரு கோவையாக சேர்க்கப் பட்டவை –
அவ்வோபாதி பத்தர்களிலே சிலர் அஜ்ஞநாதிகள் கழியப் பெற்று நித்ய ஸூரிகளோடு ஒரு கோவையாக சேர்க்கப் பட்டவர் முக்தர் -என்றபடி
ஆத்ம ஸ்வரூபம் நிர்விகாரம் -சங்கோச விகாச பாஜனம் அல்ல என்று சித்தாந்தம் ஆகையாலே ஜீவாத்மாக்களுக்கு
சிறுமை பெருமை தர்ம பூத ஜ்ஞான த்வாரா என்று திரு உள்ளம் பற்றி அருளிச் செய்கிறார் –
இந்த ஞானத்தின் உடைய ஏற்றச் சுருக்கத்தாலே -என்று –
(நான் ஞானம் தர்மி ஞானம் -இது சுருங்கவோ மலரவோ செய்யாது -என்னுடைய ஞானம் -தர்ம பூத ஞானம்
நான் அடிமை என்பதால் பரமாத்மா இல்லை – அறிவாளி என்பதால் அசேதனம் தேகத்தை விட வேறே
ஞாத்ருத்வம் -அசித் விலக்ஷணன் – சேஷத்வம் -பரமாத்மா சேஷி )
———————————–
1-2-சம்சாரிகளின் பகவத் அனுபவ யோக்யதை –
சம்சாரிகளின் பகவத் அனுபவ யோக்யதை
அயர் வறும் அமரர்களான (1-1-1-) நித்யரும் ,
கரை கண்டோர் (திரு வாய் மொழி 8-3-10 ) என்கிற முக்தரும் ,
எம்பெருமானையும் தங்களையும் உள்ள படி உணர்ந்து , அறிவுக்குச் சேர்ந்த போகமும் அடிமையும் பெற்று
பெரு மக்கள் உள்ளவர் (திரு வாய் மொழி 3-7-5 ) என்னும் படி உள்ளாராகிறாப் போல ,
(நீதி வானவர் -சேஷத்வ பாரதந்தர்யம் -நிறைந்த சத்துக்கள் -உள்ளவர் -நித்யர்
போகமும் அடிமையும் பெற்று-அறிவுக்கு வடிகால் போகம் -அறிவு மட்டும் இருந்தால் அஹங்காரம் –
அடிமைத் தனமும் வேண்டும் -இரண்டையும் அறிந்து இரண்டையும் பெற்றவர் )
மறந்தேன் உன்னை (பெரிய திருமொழி 6-2-2 )
யானே என்னை அறிய கில்லாது ( திரு வாய் மொழி 2-9-9 ) என்னும் படி இரண்டு தலையையும் மறந்து
(இரண்டு பாசுரங்கள் இருவரையும் மறந்ததுக்கு பிரமாணங்கள் )
மறந்த மதி (பெரிய திருமொழி -6-2-2 )யும் இன்றிக்கே ,
(மனத்தால் இறந்தேன் -மனம் தானே ஊற்றுவாய்-மறந்த மதி இல்லாமல் அசன்நேவ
தங்களையும் மறந்து ஈஸ்வரனையும் மறந்து கைங்கர்யமும் இழந்து இழந்தோம் என்ற இழவும் இன்றிக்கே )
அகங்கார மம காரங்களும் ,
ராக த்வேஷங்களும்
புண்ய பாபங்களும்
தேஹ சம்பந்தமும் ,
பந்து சங்கமும் ,
விஷய (விஷயாந்தர)-பிராவண்யமும் ,
அர்த்த ஆர்ஜனமும் ,
தேஹ போஷணமும் ,
பிரயோஜனந்த ஸ்ரயத்தையும் ,
தேவா தாந்த்ர பஜனமும் ,
சமயாந்தர ருசியும் ,
சாதனாந்தர நிஷ்டையுமாய்
ஸ்வர்க நரக கர்பங்களிலே வளைய , வளைய வந்து
வழி திகைத்து (திரு வாய் மொழி 3-2-9 )
நின்று இடறி (திரு வாய் மொழி 4-7-7 )
அனர்த்தக் கடலில் அழுந்தி ( பெரியாழ்வார் திருமொழி -5-3-7 )
நானில்லாத முன் எல்லாம் ( திரு சந்த விருத்தம் -65 )
பொருள் அல்லாத என்னும் படி ( திரு வாய் மொழி 5-7-3 )
என்னும் படி உரு அழிந்த
மா நிலத்து வுயிர்களான ( திரு மாலை -13 ) சம்சாரிகளும்
எம்பெருமான் சேஷியாய் தங்கள் அடியராய் இருக்கிற
ஒழிக்க ஒழியாத உறவை ( திருப் பாவை -28 -நவவித சம்பந்தம் உண்டே ) உணர்ந்து
ஆம் பரிசான ( திரு மாலை -38 ) அனுபவமும் அடிமையும் பெற்றால் இறே –
அடியேனை பொருள் ஆக்கி ( திரு வாய் மொழி 10-8-9 )
யானும் உளன் ஆவன் ( பெரிய திருவந்தாதி -76 ) என்கிற படி சத்தை பெற்றார்கள் ஆவது ..
(போகமும் அடிமையும் உபக்ரமித்து -ஆம் பரிசான அனுபவமும் அடிமையும் நிகமிக்கிறார்-மிக உணர்ந்து –
உணர்ந்து அசித் விருத்தி ஞாத்ருத்வத்தால் -மிக உணர்ந்து என்றது சேஷத்வ ஞானம் பெற்று என்றவாறு –
அடியேனைப் பொருளாக்கி -9-8-8–
பொருளாக்கி என்னை உன் பொன் அடிக் கீழ்ப் புக வைப்பாய் -மருளே இன்றி என்னை உன் நெஞ்சத்து இருத்தும்
தெருளே -தரு தென் திரு நாவாய் – ஞானம் பெற்றதும் அடியேன் –
இன்று என்னைப் என்னைப் பொருளாக்கி 10-8-9-ஆழ்வார் நான் என்றாலே அடியேன் தானே
திருத்தின பின்பே நான் -மாறி அடியேன் ஆகும் -தூதோஹம் ராமஸ்ய தாஸோஹம் கோசலேந்ரஸ்ய மாறினதே
பிராட்டி கடாக்ஷம் பெற்றதும் -)
—————————–
ஒரு நிலத்திலே ஒரு கூறு உவர்ந்து கிடக்க மற்றைக் கூறு விளைவது அறுப்பது ஆம் போலே –
நித்ய விபூதியும் நித்ய ஸூரிகளும் பகவத் அனுபவமே யாத்ரையாகச் செல்லா நிற்க
நித்ய முக்தரோபாதி பகவத் அனுபவ யோக்யதை இருக்கச் செய்தே சம்சாரம் ஆகிற பாலை நிலத்தில் உள்ளார்
சப்தாதி விஷயங்களில் பிரவணராய்-இவற்றின் உடைய லாப அலாபங்களே பேறும் இழவுமாய்-
பகவத் விமுகராய் -பகவத் அனுபவத்தை இழந்து கிடக்கிறபடியை அருளிச் செய்கிறார் -அயர்வறும் என்று தொடங்கி –
இரண்டு தலை -ஜீவ பரர்கள்
சத் சப்த வாச்யனான ஆத்மாவுக்கு ஆம் பரிசு என்று கைங்கர்யம் பெற்றால் தானே சத் பெறுவான் –
——————————————————————–
1-3-பகவத் க்ருஷி ..
இந்த மெய் ஞானம் இன்றி ,வினையியல் பிறப்பு அழுந்துகிற -திரு வாய் மொழி-3-2-7- இவர்களுக்கு
தாமரையாள் கேள்வன் ஒருவனையே (முதல் திருவந்தாதி -67 ) நோக்குகிற ஞானத்தை அறிவிக்கைக்கு
(உணர்வு -ஆத்ம ஞானம் -மிதுனமே உத்தேஸ்யம் -பாஸ்கரனும் பிரபையும் போலே –
ஒருவனையே -அப்ருத்க் சித்த விசேஷம் ஆத்மா
நக நதி பதி கடல் -பெயரும் கரும் கடலே நோக்கும் ஆறு -நதி)
நீர்மை யினால் அருள் செய்த (பெரிய திரு மொழி 2-8-5 )
சரணமாகிய நான்முறை நூல்களும் – ( திரு வாய் மொழி 8-3-2 )-வேத சாஸ்திரங்கள்-
(கைவல்யார்த்தி பற்றி இப்பாசுரம் -எல்லா புருஷார்த்தங்களுக்கும் வேதமே சரணம் -ஸாஸ்த்ர யோநித்வாத் )
நூல் கடல் ( மூன்றாம் திரு அந்தாதி -32-வித்யா சமுத்திரம் என்றவாறு -வேதம் உச்சாரணமாகவே வருமே
வட தள- தேவகி ஜடரா -சடகோப வாக் ரெங்க க்ருஹே- வேத சிரஸ்-பக்தர் உள்ளம் -இடமாகக் கொண்ட கோபாலன் )
என்னும் படி பரந்து
மன்னா இம் மனிசப் பிறவியுள் (பெரிய திருமொழி 1-10-6 -மன்னா -நிலை யில்லாத மனிசப் பிறவி என்றபடி
தன்னாக்கி -ஸாம்யபத்தி இன்னருள் செய்யும் திரு வேங்கடம் மேய என் ஆனை என் அப்பன் என் நெஞ்சில் உளானே )
மதி இல்லா மானிடங்களான (திரு மாலை -9 ) இவர்களுக்கு (ஆயுளும் இல்லை – புத்தியும் இல்லை – அதுவோ கடல் )
கரை காண ஒண்ணாமை யாலே ,
ஒத்தின் பொருள் முடிவை ஒத்தின் சுருக்காய் இருப்பது ஒன்றாலே அறிவிக்க வேண்டும் என்று
(இரண்டாம் திருவந்தாதி -39-ஒத்தின் பொருள் முடிவும் அத்தனையே மாதவன் பேர் சொல்லுவதே ஒத்தின் சுருக்கு
திருமந்திரம் விவரணம் த்வயம் -ஆகவே நாராயணன் சொல்லி ஸ்ரீ மந் நாராயணன் -மாதவன்
வேதத்தால் நானே சொல்லப்படுகிறேன்
வேதம் என்னை சொல்லி அல்லது நிற்காது
வேதத்தாலேயே நான் சொல்லப்படுகிறேன் –ஸ்ரீ கீதா ஸ்லோகம் -15-15-)
தெய்வ வண்டாய் ( திரு வாய் மொழி 9-9-4 )
அன்னமாய் ( பெரிய திரு மொழி 5-7-3 -அன்னமாய் அங்கு அன்று அருமறை பயந்தான்
அரங்க மா நகர் அமர்ந்தான் -64-வித அபிமானம் அரையர் சேவை உண்டே )
அமுதம் கொண்ட ( பெருமான் திரு மார்பன்-பெரிய திருமொழி 6-10-3 -அமுதம் உப்புச்சாறு
தேவதாந்தரங்களுக்கு கொடுத்து ஆய்ச்சி வெண்ணெய் உண்ட திருமால் அன்றோ இவன்)
மைத்த சோதி (பெரிய திரு மொழி 1-3-6 ) எம்பெருமான்
வேத சாகை களிலும் ,
(அத்தன் எந்தை ஆதி மூர்த்தி ஆழ் கடலைக் கடைந்த மைத்த சோதி எம்பெருமான்
வதரி வணங்குதுமே -திருமந்திரம் இங்கே தானே சிங்காமை விரித்தான் )
ஓதம் போல் கிளர் ( திரு வாய் மொழி 1-8-10 -கல்யாண குணங்களை ஓதம் போலே வேதம் கிளருமே-)
நால் வேத கடலிலும் ( பெரிய திரு மொழி 4-3-11 ) ,
தேனும் பாலும் அமுதுமாக (-திருமால் திரு நாமம் நானும் சொன்னேன் நமரும் உரைமின் நமோ நாராயணமே
பெரிய திரு மொழி 6-10-6 ) சேர்த்து பிரித்து எடுத்து
அற நூல் சிங்காமை விரித்தவன் ( பெரிய திரு மொழி 10-6-1-சிங்காமை விரித்தவன் -சங்கோசம் இல்லாமல்
அற நூல் திரு மந்த்ரம் -வேதங்களில் உள்ள ஸமஸ்த அர்த்தங்களும் இதிலே உண்டே ) என்னும் படி
நர நாராயண ரூபத்தைக் கொண்டு சிஷ்யாச்சார்யா கிரமம் முன்னாக
பெரு விசும்பு அருளும் ( பேர் அருளாளன்-வதரி யாச்சிரமத்து உள்ளான்–பெரிய திருமொழி 1-4-4 –
விசும்பு சுவர்க்கம் -அருளும் அருளாளன் -பரம பதம் அருளும் பேர் அருளாளன் ) பேர் அருளாலே
பெரிய திரு மந்த்ரத்தை ( திரு நெடும் தாண்டகம் -4 ) வெளி இட்டு அருளினான்
——————————
காருணிகனான சர்வேஸ்வரன் நீர்மையினால் சத்வாரகமாகவும் அத்வாரகமாகவும்
வெளியிட்டு அருளின பிரமாணங்கள் பல பல –
அவற்றில் முனிவரை இடுக்கி வெளியிட்டு அருளினவை -வேத வேதாந்தங்களும் –
ஸ்ம்ருதி இதிஹாச புராணங்களும் -திவ்ய பிரபந்தங்களும் ஆகும் –
முந்நீர் வண்ணனாய் வெளியிட்ட சாஸ்திரம் ரகஸ்ய த்ரயம் ஆகும் –
சம்சாரிகளுக்கு தத்வ ஹித புருஷார்த்த யாதாம்ய பிரதிபாதமாக வெளியிடப்பட்ட சாஸ்த்ரங்களில் வேதங்களின்
தத்வ ஜ்ஞான அப்ரயோஜகத்வத்தை அருளிச் செய்கிறார் -வேத சாஸ்திரங்கள் -என்று தொடங்கி
ஒத்தின் பொருள் முடிவை -ஒத்தின் சுருக்காய் -இருப்பது ஒன்றாலே -என்றது
ஒத்தின் பொருள் முடிவும் இத்தனையே -மாதவன் பேர் சொல்லுவதே ஒத்தின் சுருக்கு -என்கிறபடியே
வேதாந்த தார்பர்யமாய் -ருசோ யஜூம்ஷி சாமா நி ததைவாதர்வணா நிச -சர்வம் அஷ்டாந்தர அந்தஸ்ச்தம்-என்கிறபடியே
சகல வேத சங்க்ரஹமான திரு மந்த்ரத்தாலே -என்றபடி –
தெய்வ வண்டாய் -இத்யாதி வேத சாரமாய் –தேனும் பாலும் அமுதுமாய திருமால் திரு நாமம் என்னும் படி
(மாதவன் என்பதால் திருமால் )
இருக்கிற இத்தை வேதத்தில் நின்றும் அவன் க்ரஹிக்கிற போது-கிரஹித்த பிரகாரத்தை
த்ரி பிரகாரமாக வர்ணித்து அருளிச் செய்கிறார்
அதாவது -தூவியம் புள்ளுடைத் தெய்வ வண்டு ஆகையாலே –
ஷட் பதமானது சாகா சஞ்சாரம் பண்ணி மதுவை எடுக்குமா போலே
சார பூத சம்ஸ்த்தார்த்த போத கதயா
சர்வ ரசமான தேன் போலே இருக்கிற இத்தை வேத சாகைகளிலே கிரஹித்த படியும்
அன்னமாய் அங்கு அருமறை பயந்தான் என்கிறபடியே ஹம்ச ரூபியானவன் ஆகையாலே –
அன்னமானது நீரிலே கலந்து கிடக்கிற பாலை விவேகித்து எடுக்குமா போலே
நானும் சொன்னேன் நமரும் உரைமின் -என்னும் படி -இருக்கையாலே சர்வாதிகாரமான பால் போலே இருக்கிற இத்தை
(தீர்த்தம் -சர்வாதிகாரம் இல்லை -அரிசி வாங்குகிறோம் ஜலம் சேர்த்து அன்னம் -சர்வாதிகாரம் இல்லை -வேதம் போலே –
பால் தானே சர்வாதிகாரம் -ஆழ்வார்கள் அருளிச் செயல்களும் திருமந்திரம் போலே)
ஓதம் போல் கிளர் வேத நீரில் நின்றும் க்ரஹித்த படியும்
அமுதம் கொண்ட பெருமான் என்கிறபடியே அஸூர பய பீதராய் -அமரத்வ சாபேஷரான தேவர்களுடைய ரஷணமர்த்தமாக
விலஷண போக்யமாய் விநாச ஹரம் ஆகையாலே அம்ருதம் போல் இருக்கிற இத்தை
(சம்சார பீதராய் இருக்கும் நமக்கு அம்ருத்த்வம் அருள )
நால் வேதக் கடலிலே க்ரஹித்த படியையும் சொல்லுகிறது -அற நூல் சிங்காமை விரித்தவன் என்னும் படி –இத்யாதி
ஆக -இப்படி வேத சாரமான இத்தை ஸ்வ மேய எடுத்து
அமரர் பெரு விசும்பு அருளும் பேர் அருளாளன் வதரியாச்சிரமத்து உள்ளான் என்கிறபடியே –
நித்ய ஸூரிகளுக்கு போக்யமாய் பரம ஆகாச வாச்ய சப்தமான பரமபதத்தைக் கொடுப்பதான நிர்துஹேக கிருபையாலே
நர நாராயணனாய் உலகத்து அற நூல் சிங்காமை விரித்தவன் -என்கிறபடியே
ஸ்வரூப சாஸ்திரம் சங்குசிதம் ஆகாமல் உபதேச அனுஷ்டங்களாலே விஸ்த்ருதமாம் படி பண்ணினான் -என்கை-
(புகை நெருப்பு -கண்ணாடி அழுக்கு -கர்ப்பக்குடம் -தோல் கர்ப்பம் மூடுவது போலே மூன்று த்ருஷ்டாந்தம்
சார்ந்த இரு வல்வினை பிரியாமல் புகை / கண்ணாடி அழுக்கு மீண்டும் மீண்டும் பிராயச்சித்தம் பண்ணி
போக்கிக் கொண்டாலும் மீளவும் -அம்மா பார்த்து உந்த தான் குழந்தை வெளி வரும் –
தெய்வம் மாம் ஏவ -அவன் மூலமே வெளி வரலாம்
அதே போலே வண்டு-தேன்/ அன்னம்-பால் / அமுதம் கொடுத்தது இங்கு
சிங்காமை -சுருக்கம் இல்லாமல் -வேதங்களில் உள்ள சகல அர்த்த ப்ரதிபாதிதம் இதுக்கு உண்டே )
————————————————————————————————–
1-4-ஸ்ரீ மூல திரு மந்திரத்தின் ருஷி / சந்தஸ் / தேவதைகள் -பெருமை ..
இது தனக்கு அந்தர் யாமியான நாராயணன் ருஷி ..
தேவி காயத்ரி சந்தஸ் ஸூ ..
பரமாத்வான நாராயணன் தேவதை
பிரணவம் பீஜம் ..
ஆய சக்தி .. சுக்ல வர்ணம் ..
மோஷத்தில் விநியோகம் .
(ருஷியும் தேவதையும் நாராயணனே இதுக்கு -முந்நீர் வண்ணன் தானே வெளியிட்டு அருளினான் அன்றோ
பிரகர்ஷேன மிகுதியாக ஸ்தூலதே பகவான் அநேந -ஸ்தோத்ரம் செய்யப்படுகிறார் -ஆகையால் பிரணவம்
பிரார்த்தனாயாம் சதுர்த்தி -இதுவே இந்த மந்திரத்துக்கு சக்தி )
சிந்தை பிரியாத ( பெரியாழ்வார் திரு மொழி 2-3-2 ) பரமாத்மா என்கிற படியே
அந்தர் யாமியும் பர மாத்மாவுமான தானே இதுக்கு ருஷியும் தேவதையுமாய் –
(நண்ணித் தொழுமவர் சிந்தை பிரியாத நாராயணா -அநந்ய ப்ரயோஜனராய்-
ருஷியும் தேவதையுமாய் அந்தர்யாமிக்கும் பரமாத்வாவுக்கும் இந்த ஒரே பாசுரம்
பிரமாணம் தத்வம் நாராயண பர என்பதால் பரமாத்மா -)
வைப்பும் தங்கள் வாழ்வும் ஆனான் ( பெரிய திரு மொழி 1-3-7 ) என்னும் படி
பிரம குருவாய் ( பெரியாழ்வார் திருமொழி 5-2-8 ) ஞானத்தைக் கொடுத்து
உபாயமாய்
தனி மா தெய்வமாய் (திரு வாய் மொழி 8-10-7 ) மோஷத்தைக் கொடுத்து
பிராப்யனுமாய் இருக்கையாலும் ,
(நிஷேப வித்தன் புதையல் வைப்பு சாதனம் / வாழ்வு ப்ராப்யம்
ஞானத்தை கொடுத்து உபாயம் என்பதற்கு பிரம குருவாய் ப்ரஹ்மம் உபதேஷ்டா-ப்ரஹ்மமே உபதேசித்தான் திமிர் இருக்குமே
குருவாக அதனால் வந்தான்-பட்டினம் காப்பு என் திரு உள்ளமே உனக்கு காப்பு –
பல்லாண்டு பாடி நான் உன்னை ரஷிப்பேன்
ஸ்ருஷ்டிக்கு பலன் அவன் தளிர் திருவடிக்கீழ் புகுதல் -தனி மா ஓத்தார் மிக்கார் இலையாயவன் -ப்ராப்யம் )
நாராயண பரங்களான வேதங்களும் ,
அதுக்கு பொருள் சொல்லக் கடவ மந்த்ரைக சரணரான ருஷிகளும் ,
(ஆழ்வார்கள் தாமே முனிகள் ரிஷிகள்-நமோ நாராயண ஸர்வார்த்த சாதகம்
மா கதிக் கண் செல்லும் வழி நாராயணா என்பதே -நாவில் தழும்பு எழும் படி நாராயணா என்று
ஓவாதே-பொருளை சம்பாதிக்கும் நேர பகல் -சந்தோஷிக்கும் நேரம் இரவு -இரண்டு பொழுதும் –
சாதனமும் சாத்தியமும் நாராயணனே அழைத்து –தீ கதிக் கண் செல்ல அகங்கார மமகாரங்கள் )
நா வாயில் வுண்டே என்றும் ( முதல் திரு அந்தாதி -95 )
நா தழும்பு எழ ( பெருமாள் திரு மொழி 2-4 )
நல் இருள் அளவும் பகலும் (பெரிய திரு மொழி 1-1-5 )
ஓவாதே நமோ நாராயணா (பெரியாழ்வார் திரு மொழி 5-1-3 ) என்றும்
நாராயண தமரான ( திரு வாய் மொழி 10-9-1 )ஆழ்வார்களும்
வைதிக விதிகளும் தங்கள் நினைவைப் பின் செல்லும் படியான
ஆழ்வார்களை அடி ஒற்றி திராவிட வேதத்துக்கு கருத்து அறிவிக்கும் நம் ஆச்சார்யர்களும்
இத்தையே ஒரு மிடறாக விரும்புகை யாலும் –
நம்பி நாமம் ( பெரிய திரு மொழி 6-10-10 ) எ ன்னும்படி அர்த்த பூர்த்தியை உடைத்தாய் ஆகையாலும் ,
முமுஷு களுக்கு கழிப்பனான ஸூத்ர மந்த்ரங்களிலும்
ஓக்க ஓதா நிற்க ,
ஓடித் திரியும் யோகிகளாலே ( திரு வாய் மொழி 8-8-9 ) விரும்பப் பட்டு ,
அர்த்த பூர்த்தியை உடைத்தல்லாத மற்ற மந்த்ரங்களிலும் ஏற்றத்தை உடைத்தாய் ,
(பூரணமான நாமம் -பூர்ணணைப் பற்றியது -நாமும் நம்பி சொல்லலாமே-வியாபக மந்திரங்களிலும் ஸ்ரேஷ்டம்
ஓடித் திரியும் யோகிகள் விஷ்ணு நாமம் சொல்லி கைவல்யம் போன்றதை பெறுவார்கள் என்றவாறு
மூன்று வியாபக மந்திரங்களும் ஸ்ரீ விஷ்ணு காயத்ரியின் ஓக்க ஓதுமே
எதுக்காக வியாபகம் -யார் வியாபிக்கிறார் -எதை வியாபிக்கிறார் –
எப்படி -வியாபிக்கிறார் -எதுக்கு வியாபிக்கிறார் -பூர்ணம் நாராயணா மட்டுமே )
குலம் தரும் (பெரிய திரு மொழி 1-1-9 ) என்கிற படியே
தர்மம் , அர்த்தம் , இஹ லோக பர லோக போகம் , ஆத்ம பரமாத்மா பாகவத அனுபவங்கள் , என்கிற
புருஷார்த்தங்களையும் சாதித்துக் கொடுக்கக் கடவதாய் ,
(விபீஷணன் இஷுவாகு குலம் -விதுரர் தர்மபுத்திரர் ஈமச் சடங்கு பண்ணும் குலம் பெற்றார் –
கௌசிக பண் கொண்டு ப்ரஹ்ம ராக்ஷஸ்ஸூ பாணர் குல நம்பாடுவானால் குலம் பெற்றான்
நாராயண மந்த்ரம் ஸர்வார்த்த சாதகம் – )
எட்டினாய பேதமோடு ( திருச் சந்த விருத்தம் -77 )என்றும் –
ஆர்வமோடு இறைஞ்சி நின்று ( திருச் சந்த விருத்தம் -78 ) என்கிற படியே
அல்லாத உபாயங்களுக்கும் துணை செய்யக் கடவதாய் ,
(எட்டினாயா பேதமோடு -சாஷ்டாங்க பிராணாமம் -சாதனங்களுக்கு உப லக்ஷணம் –
நலம் கழல் ஆர்வமோடு இறைஞ்சி நின்று அவன் பெயர் எட்டு எழுத்தும் -வாரமாக ஓதி -பற்றுக்கொம்பு திரு மந்த்ரம்
ஏஷ நாராயண ஸ்ரீ மான்-நீர் அரவணைக் கிடந்த ஷீராப்தி நாதனின் கழல் )
சித்த உபாயத்தில் இழிவாருக்கு —
அடியேன் அடைந்தேன் முதல் முன்னமே ( திரு வாய் மொழி 2-3-6 ) என்கிற படியே , ஸ்வரூப ஞானத்துக்கும் ,
தொழில் எனக்கு ( நான் முகன் திரு வந்தாதி -85 ) என்கிற படியே பொழுது போக்குக்கும் ,
மந்திரத்தால் மறவாது (திரு நெடும் தாண்டகம் -4 ) என்கிற படியே இங்கு உற்ற அனுபவத்துக்கும் பரி கரமாய்ப்
(சேர்ந்தார் -மரக்கலம் கரை சேர்ந்தால் போலே இவனை அடைந்தார்களுக்கு-தீ வினைகட்க்கு அரு நஞ்சை –
முன்னமே அடைந்ததற்கு -திண் மதியை -மஹா விசுவாசம் -அம்பரீஷன் இந்திரன் வேஷம் கொண்டு பரீஷை-
அற்றுத் தீர்ந்தார்களுக்கு உயிர் போலே -அக்குளத்து மீன்-
அடியேன் அடைந்தேன் முதல் முன்னமே -முன்பு இழந்த காலம் நினைவுக்கு வராதபடி அன்றோ இப்பொழுது பூர்ணம் அனுபவம்
ஸ்வரூப ஞானம் பெற்றதும் திரு நாம சங்கீர்த்தனமே பொழுது போக்கு –
மந்த்ரத்தை மந்திரத்தால் மறவாது -அந்தணர் மாடு -தனமான- வேதாந்தத்தில் மறைந்து உள்ள அவனை மறவாமல் திரு மந்த்ரம் ) –
பெற்ற தாயினும் ஆயின (பெரிய திரு மொழி 1-1-9 ) செய்யுமதான படியாலே ,
இடறினவன் அம்மே என்னுமா போலே
நானும் சொன்னேன் (பெரிய திருமொழி 6-10-6 ) என்னும் படி சர்வாதி காரமாய் ,
(ஸ்ரேஷ்டமான ஜென்மம் திருமந்திரம் கொடுக்கும் -உடல் பிறவி தாய் -ஞானப்பிறவி இது –
சம்சாரத்தில் இடறி திருமந்திரம் -மாதா நாராயணா -பிதா நாராயணா –
தேனும் பாலும் அமுதுமாய திரு மால் திரு நாமம் -சர்வ வித போக்யம்-
தெய்வ வண்டு ஹம்சம் அமுத ப்ரதன்-அருளிய திருமந்திரம் அன்றோ –
ஆண்டான் -புருஷகாரம் -அடிமை சேஷத்வ ரசம் -மூன்றும் சேர்ந்து ஏக ரசம் –
அ உ ம -சேர்ந்து பெருமாள் பிராட்டி இளைய பெருமாள் போலே
ரிஷிகள் கோஷ்ட்டி ஆழ்வார் கோஷ்ட்டி எல்லாம் இதுவே
ஓர் ஆயிர நாமம் ஒள்ளியவாகப் போக–ஆயிர நாமங்களுக்கு சத்ருசம் )
ஓவாது உரைக்கும் உரை ( முதல் திரு வந்தாதி -95 ) என்னும் படி சொல்லி இளைப்பாறலாய் ,
வாயினால் நமோ நாராயண ( பெரியாழ்வார் திரு மொழி 4-5-2 ) என்கிற படியே
துஞ்சும் போதைக்கு ( பெரிய திருமொழி 1-1-10) மோர் குழம்பு போல இளைப்பாறலாய் ,
செல் கதிக்கு நல் துணையா (பெரிய திருமொழி 1-1-8 ) என்கிற படியே
அர்ச்சிராதி கதிக்கு பொதி சோறாய்
(ஒருவன் தனக்கு பகவத் சம்பந்தம் உண்டு இல்லை என்பதை தானே அறியலாம் –
ஐயோ என்று இரங்கினால் உண்டு என்றும் -அத்தனையும் வேண்டும் என்று இருந்தான் ஆகில்
சம்பந்தம் இல்லை ஆகும் வியாக்யானம் -)
நமோ நாராயணா ( திருப் பல்லாண்டு -11 ) என்கிற படியே
தெளி விசும்பில் ( திருவாய்மொழி 9-7-5 ) போகத்தையும் வளர்க்கக் கடவதாய் –
(நல்வகையால் நமோ நாராயணா -அநந்ய ப்ரயோஜனராக ஸ்வயம் பிரயோஜனமாக சொல்வது
சேஷத்வம் அநாதி -திரு மாலே நானும் உனக்கு பழ அடியேன் –
ஆத்மா நித்யம் அறிபவன் சேஷத்வ ஞானம் இல்லா விட்டால் அசத் தானே
மேகத்தை தூது -9-7–திரு மூழிக் களத்து உறையும் ஒண் சுடர்க்கு – )
தேனாகி பாலாம் திரு மாலான அவன் உள்ளீடு போலே ( முதல் திருவந்தாதி -92)
தேனும் பாலும் அமுதுமாய் திருமால் திரு நாமு மாய் (பெரிய திருமொழி 6-10-6 )
எப்பொழுதும் தித்திக்கக் கடவதாய் ( பெரிய திருமொழி 7-4-5 )
(தேன் பால் திரு மால்-நித்ய விபூதியில் திருவே தேன் அவனே மால் -த்ருதீய விபூதி நாதன் –
அத்தை விட விரும்பி ஆனாய்ச்சி வெண்ணெய் இது அன்றோ சதுர்த்தி விபூதி அவனுக்கு —
நஞ்சீயர் ஈடுபட்டு அருளிச் செய்யும் பாசுரம் என்று நம்பிள்ளை அருளிச் செய்வார் என்று
பெரியவாச்சான் பிள்ளை அருளிச் செய்கிறார் )
மற்று எல்லாம் பேசிலும் ( பெரிய திருமொழி 8-10-3 ) என்கிற படியே
அறிய வேண்டும் அவை எல்லாம் உடைத்தாய் ,
எம்பெருமான் ( பெரிய திரு மொழி 2-2-2 -எந்தை ஜனகன் -வைத்ய வீரராகவன் -எம்பெருமான் -ஸ்வாமி )
தெய்வத்துக்கு அரசு ( பெரிய திரு மொழி 7-7-1 -அழுந்தூர் தேவராஜ பெருமாள் மூலவர் ஆ மருவி அப்பன் -உத்சவர்) என்னும் படி
கழி பெரும் தெய்வமாய் ( திரு விருத்தம் -20-இளம் தெய்வம் அன்று இது -சஹி வெறி விலக்கு பாசுரம் ) இருக்கிறாப் போல ,
மந்த்ராணாம் மந்த்ர ராஜா என்கிற படியே எல்லா மந்த்ரங்களிலும் மேலாய்
பெரும் தேவன் ( திரு வாய் மொழி 4-6-4 -சஹி வெறி விலக்கு திருவாய் மொழி ) பேரான பெருமையும் உடைத்தாய் இருக்கும் .
(ஆலி நாட்டு அரசு -தெய்வத்துக்கு அரசு -அரசமரம் அடியில் -மந்த்ர அரசு -மந்திரராஜா திருமந்திரம் )
பொருள் இல்லாத கடல் ஓசையில் பக்ஷிகள் சொல் மேலாய்
அதில் நாட்டு வழக்கு சொல் மேலாய்
அதில் தொண்டரைப் பாடும் சொல் மேலாய்
அதில் இஷ்ட தேவதைகளை ஏத்தும் சொல் மேலாய்
அதில் வேதார்த்தம் சொல்லுவது மேலாய்
அதில் வேதம் மேலாய்
அதில் வேதாந்தம் மேலாய்
அதில் நாராயண அனுவாகம் மேலாய்
அதில் பகவத் மந்த்ரங்கள் மேலாய்
அதில் மற்றை இரண்டும் கடல் ஓசையோபாதி யாம் படி மேலாய் இருக்கும் ..
வளம் கொள் பேர் இன்பமான பெரிய மந்த்ரம் ( பெரிய திரு மொழி 4-3-9 ) என்றும் –
(பாசுரத்தில் பேர் இன்பம் பெருமாளைச் சொல்லும் -செம் பொன் செய் கோயில் பதிகம் –
பக்தர்கள் உள்ளத்தில் ஊறிய தேன் -பேர் இன்பம் வளர்ந்தது -அபரிச்சின்ன ஆனந்த ஸ்வரூபன் – )
தனி மா புகழே எஞ்ஞான்றும் நிற்கும் படி ( திரு வாய் மொழி 8-10-7 ) என்கிற படியே
தான் அறிந்த உறவாலே எல்லார் பக்கலிலும் நடக்கிற சௌஹார்த்ததாலே
பொருள் என்று ( திரு வாய் மொழி 2-10 -11 ) சரீரங்களைக் கொடுத்து
ஒழிவற நிறைந்து ( திரு வாய் மொழி 3-2-7 ) அந்தர் யாமியாய் சத்தையை நோக்கி
(அந்தர்யாமி இரண்டு வகை உண்டே –
வஸ்துத்வம் நாம பாக்த்வம் இருக்க உள்ளே இருக்க வேண்டும்
அதிஷ்டான ஆத்மாவுக்கு சிந்தித்து தியானத்துக்கு -திரு மேனி உடன் சேவை –
அது போலே கல்லுக்குள்ளும் மட்டைக்குள்ளும் இல்லையே
கண் காண நிற்கில் ஆணை இட்டு விலக்குவான் என்று உள்ளே இருந்து நல்லது பண்ண அன்றோ உள்ளே உள்ளான் )
ஜன்மம் பல பல செய்து ( திருவாய் மொழி 3-10-1 )
கண் காண வந்து ( திரு வாய் மொழி 4-7-2 -சகல மனுஷ நயன விஷயாந்தகரனாக )
ஆள் பார்த்து ( நான் முகன் திரு வந்தாதி -60 ) அவதரித்து
(ஜென்ம கர்ம மே திவ்யம் -அவனுக்கும் திவ்யமாக -பூரி ஜகந்நாதன் தன் சரிதை
யோகினி தாய் பத்னிமார்களுக்கு சொல்வதைக் கேட்டு விரிந்த கண்களுடன் சேவை
அவன் சொன்னாலும் பஹு நீ என்றே சொல்லும் படி பல பல உண்டே –
செய்து -பன்னிரு திங்கள் மணி வயிறு வாய்த்து- அத்தத்தின் பத்தாம் நாள் வந்து தோற்றி –
உன்னை ஈயாயே-என் கண் காண வந்து ஈயாயே -4-7-2-நெஞ்சு என்னும் உள் கண்ணால் இல்லை
கட் கண்ணால் பார்க்கும் படி )
அருள் புரிந்த சிந்தை அடியார் மேல் ( இரண்டாந் திருவந்தாதி-59 ) வைத்து
முகம் மாறுகிற சேதனரைச் சேர விட்டுக் கொள்கைக்கு இடம் பார்க்கிற எம்பெருமான் வுடைய
உய்வதோர் பொருளான ( பெரிய திருமொழி 1-1-1 )
அருளாலே (இரண்டாந் திருவந்தாதி- -41 ) யாரேனும் ஒருவருக்கு
(உய்வதோர் பொருள் -கிருபை இரக்கம் ஒன்றே உபாயம் – -அருளாலே யாரேனும் ஒருவருக்கு )
பொய் நின்ற ஞானத்துக்கு ( திரு விருத்தம் – 1 ) அடியான
முக் குணத்து இரண்டு அவை அகற்றி ( திரு எழு கூற்று இருக்கை )
( பொய் நின்ற ஞானத்துக்கு பீஜம் முக்குணம் )
உய்யும் வகை ( திருவாய் மொழி 5-2-5 ) உணரும்-
ஒன்றினில் ஒன்றி ( திரு எழு கூற்று இருக்கை )
உணர்வு எனும் பெரும் பதம் நாடி (பெரிய திருமொழி -1-1-1-இரக்கத்தால் மதி நலம் அருள பெறுவோம் )
அறியாதன அறிவிக்கும் ( திருவாய் மொழி 2-3-2 -நீ செய்தன அடியேன் அறியேன் -நீ ஸ்வாமி என்பதால் செய்தாய் -)
ஞானத் துறையான ( திரு விருத்தம் -93 ) ஆசார்யனைக் கிட்டினால் ,
அவன் செயல் நன்றாக திருத்தி ( கண்ணி நுண் சிறுத் தாம்பு -10 )
(செயல் நன்றாக -ஆச்சார்யன் செயல் -சிரவணம் மனனம் மஹா விசுவாசம் வர வைக்கிறார் –
சத் அனுஷ்டானம் -நன்றாக பணி கொள்வான் -திருந்து சொல்லாமல் திருத்தி -ஆச்சார்யர் க்ருத்யம் -)
பிறர் கேட்பதன் முன் ( பெரிய திருமொழி 2-4-9) என்று தனி இடத்தே கொண்டு இருந்து
உள்ளம் கொள் அன்பினோடு (பெரிய திரு மொழி 5-8-9 ) இன் அருள் சுரந்து
(உளம் கொள் அன்பு- ஹிதம் சொல்லப் போகும் ப்ரீதி யுடன் -பெற்ற தாய் பிறப்பித்த தந்தை -திருவேங்கடமுடையான் )
பாடி நீர் உய்மின் ( பெரிய திருமொழி 1-1-7) என்று அருளிச் செய்யும்
இந்த திரு மந்திரத்தினுடைய ஏற்றத்தை அறிந்து
பேணி அதுக்கு உள் ஈட்டான
அந்தணர் மாட்டு அந்தி வைத்த ( திரு நெடும் தாண்டகம் -4 )
மந்திரத்தில் பக்தியைப் பண்ணி ,
இத்தை உபகரித்தவன் பக்கலிலே நீ செய்தன ( திரு வாய் மொழி 2-3-2 ) என்று
க்ருதஜ்ஞனாய் போரும் அவனுக்கு உஜ்ஜீவநம் உண்டாகக் கடவது ..
————————————————
அவிதித்வா ருஷிம் சந்த-என்கிற ஸ்லோகத்திலே சொன்னபடி பாபாதிகள் ஒன்றும் வாராமைக்கு திரு மந்த்ரத்தின் உடைய
ருஷிச் சந்தோ தேவதா பீஜ சக்தி வர்ண விநியோக ஸ்தான ந்யாசாதிகள்-
அவ்வோ கல்ப சம்ப்ரதாயங்களுக்கு ஈடாகக் கண்டு கொள்ள வேணும் –
திருமந்தரம் தன்னை அனுசந்திப்பார்க்கு ப்ரதிபாத்யமான வஸ்துவோ பாதி
ருஷிச் சந்தோ தேவதைகளும் -பீஜ சக்திகளும்
சோஷண தாஹ நாதிகளும்-(உலர்த்தல் எரித்தல்) ஆகிய இவை எல்லாம் அனுசந்தேயமாகக் கடவது –
அது வேண்டுவான் என் என்னில் –
நமோ நாராயணாய வென்று பரமாத்மனைச் சூழ்ந்து இருந்து ஏத்துவர் -என்று –
இம் மந்திர அனுசந்தானம் பண்ணுவார் நித்ய ஸூரிகளாய்-அவர்களுடைய யாத்ரை யாயிற்று இது –
அத்தை இறே குண த்ரயாத்மிகையான பிரகிருதி வச்யனான இவன் அனுசந்திக்கப் பார்க்கிறது –
ஆகையாலே ஒரு பாவனையாலே அவர்களோபாதியாக தன்னுடைய சரீரத்தையும் பாவித்து அனுசந்திக்கைக்காக
சோஷணாதிகள் வேண்டுகிறது –
இனி ருஷிச் சந்தோ தேவதைகளை அனுசந்திக்கிறது -இம் மந்த்ரத்தில் உண்டான ஆதர அதிசயத்தாலே –
பீஜ சக்திகளை அனுசந்திக்கிறது -மோஷ ப்ரதம் என்று அவ்வழியாலே இவனுக்கு இதில் விஸ்வாசம் பிறக்கைக்காக-
இவை இத்தனையும் திரு உள்ளம் பற்றி அருளிச் செய்கிறார் —
இது தனக்கு அந்தர்யாமியான நாராயணன் ருஷி -என்று தொடங்கி-
திரு மந்த்ரத்துக்கு உண்டான பரிக்ரஹ அதிசயத்தை அருளிச் செய்கிறார் –நாராயண பரங்களும் -என்று தொடங்கி –
திரு மந்த்ரத்தின் உடைய அர்த்த பூர்த்தியையும் மந்த்ராந்தரங்களின் அர்த்த அபூர்த்த்யாதிகளையும்
அருளிச் செய்கிறார் -நம்பி நாமம் -என்னும் படி -என்று தொடங்கி –
ஷூத்ர மந்த்ரங்களிலும் -பகவன் மந்த்ரங்களை -ஷூத்ர மந்த்ரங்கள் என்கிறது பல த்வாரா –
அர்த்த காம புத்ர வித்யாதி ஷூத்ர பலங்களை கொடுக்கிற வழியாலே என்கை-
ஒக்க ஓதா நிற்க -விஷ்ணு காயத்ரியில் -நாராயணாய வித்மஹே என்று தொடங்கி -விஷ்ணு வாசுதேவ சப்தங்கள்
நாராயண சப்தத்தோடு ஒக்க ஓதப்படா நின்றது இறே
ஓடித் திரியும் யோகிகள் -நிர்விசேஷ சின் மாத்ர வஸ்து வாதிகளான குத்ருஷ்டிகள் –
நாராயண சப்தம் போலே ஸ்வரூப ரூப குணாதி களை எல்லாம் பிரதிபாதியாதே
ஸ்வரூப மாத்ரத்தை பிரதிபாதிக்கையாலே விஷ்ணு சப்தம் குத்ருஷ்டிகளாலே ஆதரிக்கப் படுகிறது –
அர்த்த பூர்த்தியை உடைத்து அல்லாத வாஸூ தேவ மந்த்ரம் வ்யாப்ய அத்யாஹாராதி சாபேஷதையாகிற அபூர்த்தியை யுடையது –
ஷடஷரி -வியாப்த பதார்த்தங்களையும் -வியாபன பிரகாரத்தையும் -வியாப்தி பலத்தையும் –
வியாபகனுடைய குணங்களையும் சொல்லாதே
வியாப்தி மாத்ர பிரகாசகம் ஆகையாலே அபூர்ணம் –
வியாபன பிரகாரத்தைச் சொல்லா நிற்கச் செய்தேயும் வியாப்ய பதார்த்தங்களுக்கு வாசக சப்தம் அல்லாமையாலும்
சர்வம் வசதி -என்று அர்த்த பலத்தாலே -சர்வ சப்தம் -புகுந்தாலும் -அதில் குணம் அன்வயியாமையாலும் –
இனி குண சித்திக்காக பகவச் சப்தத்தை கூட்டிக் கொள்ள வேண்டுகையாலும் –
வியாப்தி பலத்தை சொல்லாமையாலும் திருத் த்வாதசாஷரியும் அபூர்ணம் –
மற்ற மந்த்ரங்களிலும் ஏற்றம் -என்றது -இம்மந்த்ரம் அவை போல் அன்றியிலே –
வ்யாப்த பதார்த்தங்களோடு -வியாபன பிரகாரத்தோடு-
வியாப்தி பலத்தோடு -வியாபகனுடைய குணங்களோடு வாசி அற சாப்தமாகக் காட்டுகையாலே
அவற்றில் காட்டில் இதுக்கு அர்த்த பௌஷ்கல்ய நிபந்தனமான ஆதிக்யம் உண்டு என்றபடி –
திரு மந்த்ரத்தின் உடைய வைபவத்தை பல படியாக அருளிச் செய்கிறார் –
குலம் தரும் என்கிறபடியே -இத்யாதி –
மந்திர மந்த்ராந்தங்களின் ராஜத்வத்தை அருளிச் செய்கிறார் -எம்பெருமான் தெய்வத்துக்கு அரசு -இத்யாதி –
சப்த சாமான்யத்தில் திரு மந்த்ரத்தின் சீர்மையை விவரித்து அருளிச் செய்கிறார் -பொருள் இல்லாத -இத்யாதி –
வதரியாஸ்ரமித்துள்ளான் திருமந்த்ரத்தை வெளியிட்டு அருளினாலும் அதனை நாம் பெறுவது ஓர் ஆச்சார்யன் மூலமாக இறே –
அது பெறாமல் விலகிப் போருகிற நம்மை சர்வேஸ்வரன் நல் வழிப்படுத்தி ஆச்சார்ய சம்பந்தத்தை உண்டாக்கும்
சோபனா க்ரமத்தை அருளிச் செய்கிறார் -தனி மாப் புகழே-என்று தொடங்கி –
இவ்விடத்தில்
1-ஈச்வரஸ்ய ச சௌஹார்த்தம்
2-யத்ருச்சா ஸூ ஹ்ருதம்
3-ததா -விஷ்ணோ கடாஷம் –
4-அத்வேஷம்
5-ஆபிமுக்யம் ச
6-சாத்விகை – சம்பாஷணம் ஷடேதா நி ஹ்யாசார்யா ப்ராப்தி ஹேதவே-என்கிற வசனம் அனுசந்தேயம்
மந்த்ரே தத் தேவதாயாம் ச ததா மந்திர ப்ரதே குரௌ–என்கிற வசனத்தையும் –
மந்த்ரத்திலும் மந்த்ரத்துக்கு உள்ளீடான வஸ்துவிலும் மந்திர பிரதனான ஆச்சார்யன் பக்கலிலும்
பிரேமம் கனக்க உண்டானால் கார்யகரம் ஆவது -முமுஷுப்படி -சூர்ணிகை 4-என்கிறவற்றையும்
அடி ஒற்றி அருளிச் செய்கிறார் –
இத் திருமந்த்ரத்தின் உடைய ஏற்றத்தை -என்று தொடங்கி
——————————————————————————————
திரு மந்த்ரத்தில் அர்த்த பஞ்சக பிரதிபாதனம்
திரு மந்திரத்தில் அர்த்த பஞ்சக பிரதி பதனம் ..
எம்பெருமானோடு
இவ் வாத்மாவுக்கு
உண்டான உறவை அறிய (ஞானமே உபாயம் -திருவடியே தான் உபாயம் என்ற ஞானமே வேண்டுவது
பழ அடியேன் – அநாதி ஸித்தமான சேஷத்வம் அறிவதே வேண்டியது –
ஞானாந் மோக்ஷம் அஞ்ஞானம் சம்சாரம் -பகல் கண்டேன் நாரணனைக் கண்டேன் -ப்ரஹ்ம ஞானமே பகல் )
அறிய ஒட்டாத விரோதியை
ஒரு வழியாலே கழித்து பெரும் பேற்றை இது வெளி இடுகையாலே
முமுஷுக்கு அறிய வேண்டும் அஞ்சு அர்த்தமும் இதுக்குள்ளே உண்டு ..
அர்த்த பஞ்சக பிரதி பாதன பிரகாரம் ..
இதில் ஸ்வரூபம் சொல்லுகிறது -பிரணவம் ..
விரோதியையும் அது கழிக்கைக்கு உபாயத்தையும் சொல்லுகிறது -நமஸ்ஸூ
பர ஸ்வரூபம் சொல்லுகிறது -நாரயண பதம்
புருஷார்த்தம் சொல்லுகிறது -சதுர்த்தி –
(நாராயணாய பவேயம் -சகல கைங்கர்யங்களும் செய்யப் பெற வேண்டும் -பிரார்த்தனா சதுர்த்தி )
பிராப்யமும் விரோதியும் உபாயமும் பலமும்
ஆத்மாவுக்கு ஆகையாலே ஸ்வரூபம் சொல்லுகையிலே இதுக்கு நோக்கு ..
(ஸ்வம் ரூபம் ஸ்வரூபம்- தானான தன்மை -தானே ஸ்வரூபம் தான் –
மல்லிகைப் பூவின் ஸ்வரூபம் மல்லிகைப்பூ தானே
அசித்துக்கு தான் ஸ்வரூபமே மாறும் -சேதனனுக்கு ஸ்வரூபம் மாறாது -ஸ்வ பாவம் மாறும்
ஸ்வரூபம் சொல்லுகையிலே இதுக்கு நோக்கு-நான் யார் புரிவதே வேண்டியது-
பிரணவம் நம்மை பற்றியே சொல்ல வந்தது -ஜீவாத்ம ஸ்வரூபமே பிரதானம் -இதை அறிந்த பின்பு தானே மற்றவற்றால் பலன் )
(ஓர் சம்ஹிதா ஆகாரம் -ஓர் எழுத்து / மூன்று எழுத்து அசம்ஹிதா ஆகாரம்
இரண்டு அர்த்தங்கள் வருமே –
ஓம் ஒரே பதம்- ஒரே எழுத்து-
பகவத் அநந்யார்ஹ சேஷத்வ ஆஸ்ரயா ஜீவன் -ஓர் எழுத்து அர்த்தம் -நமக்காக உபதேசம் –
இதுவே குணம் அடையாளம் -வேறே ஒருவருக்கு ஆழ் படாமல் அவனுக்கே அடிமை -பண்பு இதுவே –
சேஷ சேஷி பாவம் சரீர சரீரீ பாவத்துடன் அவனுடன் ஒட்டிக் கொண்டே இருக்கிறோம் –
குணம் ஜாதி கிரியா மூன்றும் ஒரு வியக்தியை-த்ரவ்யத்தை – ஆஸ்ரயிக்கும்–தனியாக இருக்காதே –
ஜீவாத்மா ஞானம் ஆனந்தம் சேஷத்வம் மூன்றும் கொண்டவன் –
அசேஷ சித் அசித் வஸ்து சேஷிநே சேஷ சாயிநே -நிர்மல ஆனந்த கல்யாண நிதி-சொத்தான தன்மை அறிந்து
கைங்கர்யம் செய்து சேஷியின் அதிசயத்துக்காகவே இருக்க வேண்டும் –
அநந்யார்ஹ சேஷ பூதன் அடியேன் என்கிற ஞானமே ஞானம்-இத்தை சொல்ல வந்ததே பிரணவம் -இதுவே ஸ்வரூபம்
ஸ்வரூப நிரூபக தர்மம் -விசேஷணம் -நிரூபித்த ஸ்வரூபத்தை விளக்கும் –
சாமந்தி பூ -பூக்கள் இல்லாவற்றிலும் வேறுபடுத்தி -பூ நிரூபக தர்மம் –
சாமந்தி -விசேஷணம் -மல்லிகை போல்வன இல்லை என்பதைக் காட்டுமே
அடியேன் உள்ளான் உடல் உள்ளான் –பரம் பரன் -ஆத்மாவை சேஷம் என்றே ஆதரிக்கும்
மணத்தைக் கொண்டு பூவையும் ஒளியைக் கொண்டு மாணிக்கத்தையும் ஆதரிப்பது போலே -)
—————————————————–
மற்று எல்லாம் பேசிலும் -என்கிறபடியே -அறிய வேண்டும் அர்த்தங்கள் எல்லாம்
இதுக்கு உள்ளே உண்டு என்கிறார் -எம்பெருமானோடு -என்று தொடங்கி
எம்பெருமானோடு என்ற பர ஸ்வரூபமும் —
இவ்வாத்மாவுக்கு என்று ஸ்வ ஸ்வரூபமும் –
உண்டான உறவை அறிய -என்று அநாதி சித்த சம்பந்தத்தைப் பற்றின ஜ்ஞானம் ஆகிற உபாயமும்
(ஞானாந் மோக்ஷம் அஞ்ஞானம் சம்சாரம் -பகல் கண்டேன் நாரணனைக் கண்டேன் -ப்ரஹ்ம ஞானமே பகல்)
அறிய ஒட்டாத விரோதி என்று விரோதி ஸ்வரூபமும் –
கழித்துப் பெரும் பேற்றை என்று அநிஷ்ட நிவ்ருத்தி பூர்வகமாக இஷ்ட பிராப்தி ரூப புருஷார்த்த ஸ்வரூபமும் பிரதிபாதிதம் –
திருமந்த்ரத்தின் உடைய ஜ்ஞாதவ்ய பஞ்சக பிரதிபாதன பிரகாரத்தை அருளிச் செய்கிறார் -இதில் -என்று தொடங்கி –
திரு மந்த்ரத்துக்கு அர்த்த பஞ்சகத்தில் இன்னதில் நோக்கு என்கிறார் பிராப்யம் -என்று தொடங்கி
———————————————————————————
திரு மந்திரத்தின் வாக் யார்தம் ..
சேஷத்வம் போலே ,அவனே உபாயமும் , உபேயமும் என்று இருக்கை ஸ்வரூபம் ஆகையாலும்,
அந்நிய சேஷத்வமும் , ஸ்வ ஸ்வா தந்திரியமும் ,குலைகை கைங்கர்யம் போலே பேறு ஆகையாலும் ,
ஸ்வ ஸ்வரூபத்தையும் சொல்லி புருஷார்த்ததையும் சொல்லுகிறது என்று வாக் யார்தம் ..
( சேஷத்வம் போலே என்றது பிரணவ அர்த்தம் -உபாயம்-நமஸ் அர்த்தம் -உபேயம் -நாராயணாயா அர்த்தம் )
திரு மந்திரத்தின் அக்ஷர பத ஸங்க்யைகள்
பேசுமின் திரு நாமம் எட்டு எழுத்தும் (பேசும் இன்-பெரிய திருமொழி 1-8-9-அம்மே குழந்தை சொல்வது போலே ) என்கிற படியே
இது எட்டு திரு எழுத்தாய் –
ஓம் -என்றும் -1- திரு எழுத்தாய்
நம -என்றும் -2-திரு எழுத்தாய்
நாரயண -என்றும் -5- திரு எழுத்தாய்
மூன்று பதமாய் இருக்கும் ..
பிரணவ அர்த்தம் ..
இதில் முதல் பதமான -பிரணவம் -அ -என்றும் -உ -என்றும் -ம -என்றும் மூன்று திரு எழுத்தாய் ,
நால் வேதக் கடல் அமுது ( பெரியாழ்வார் திருமொழி 4-3-11 ) என்னும் படி வேத சாரமாய் ,
மூன்று எழுத்தாகி ( பெரியாழ்வார் திரு மொழி 4-7-10 )என்கிறபடியே மூன்று பத மாய் ,
மூன்று பொருளை வெளி இடக் கடவதாய் ,
(மர்யாதா புருஷோத்தமன்–மூன்று வியாக்ருதிகள் -விசேஷ வியாகாரம்-அ உ ம – பூ புவ சுவ-பிறக்கும் –
நிருத்தம் ஒரு அங்கம் -மூன்று எழுத்து அதனால் -மூன்று எழுத்தாக்கி -இதை நம்பி உள்ளாருக்கு-
அசம்ஹிதா ஆகாரம்-)
மூலமாகிய ஒற்றை எழுத்தாய் (பெரியாழ்வார் திரு மொழி 4-5-4 )
ஒரு பதமாய் ,ஒரு பொருளைக் காட்டக் கடவதாய் , இருக்கும் –
(சம்ஹிதா ஆகாரம் -பகவத் அநந்யார்ஹ சேஷத்வம் ஜீவன் )
சப்த அர்த்தங்கள் என்ற இரண்டாலும் , ஜீவ பர பிரதான்யம் கொள்ளக் கடவது இறே ..
ஓங்கார ரதம்- பார்த்த செல்வத் தேர் போல ( பெரிய திரு மொழி 2-10-8 ) இறே இருப்பது ..
அடியேன் அடி ஆவி அடைக்கலம் ( திரு விருத்தம் -85 ) என்கிற படியே ,
ஆத்ம சமர்பணத்திற்கு மந்திரமாய் ,
(அவனுக்கு சொத்து என்று உணர்கிறார் -உணர்த்தியே சரணாகதி
த்வமேவ உபாய பூத மே பவ இதி-பிரார்த்தனா மதி சரணாகதி
அநந்ய சாத்தியே ஸ்வ ஆபீஷ்ட்ய -மஹா விஸ்வாச பூர்வகம் ததேவ உபாயம் என்ற யாசகமே பிரபத்தி)
சந்தஸ்ஸூ வேதங்களில் பிரணவம் நான் என்ற மூன்று எழுத்தாய் ( பெரியாழ்வார் திரு மொழி 4-10-4 )
முதல்வனோடே வேறு செய்யாமல் ( திரு சந்த விருத்தம் -116 ) ஒரு பேரிலே இரு பாகு ஆகையாலே ,
இரண்டு பங்குக்கு ஒரு மூல பிரமாணம் போலேயாய்
வேதத்துக்கு கீழும் மேலும் செப்பும் மூடியும் போல ,
செம்சொல் மறைப் பொருளை (பெரியாழ்வார் திரு மொழி 4-10-7 ) இது சேமித்துக் கொண்டு இருக்கும் ..
(திருட்டு பஞ்சம் நோய் -திரு மந்த்ரம் அறிந்தால் -பிரணவம் அறிந்து திருட்டு போகும் –
நமஸ் அர்த்தம் அறிந்து பஞ்சம் தீர -நாராயணாயா அர்த்தம் அறிந்து அறிந்து நோய் போகுமே-
ஸ்ரீ கௌஸ்துப ஸ்தானம் -பர ப்ரஹ்மம் சொத்து -ஆத்ம அபகாரம் பெரிய களவு –
நம்பினேன் பிறர் நன் பொருள் தன்னையும் –
வேதங்களுக்கு சுருக்கம் -மங்களம் கொடுக்கும் -பிரணவம் –
உலகு எல்லாம் நீயே யாகி -த்ரிவித காரணமும் நீயே -மூன்று எழுத்தாய முதல்வனேயோ –
அகர முதல் எழுத்து எல்லாம் – போலவே – வாஸ்யங்களுக்கு காரணம் ப்ரஹ்மம் வாசக காரணம் அகாரம் –
ஒரு பேரிலே இருவருக்கும் இருப்பு -ப்ரணவத்திலும் நாராயணாயா இரண்டிலும் இருவருமே உண்டே
பிரதானம் ஒவ் ஒருவருக்கேயாக இருந்தாலும் –
வேறு செய்து தம்முள் என்னை வைத்திடாமையால் -இத்தையே வேறு செய்யாமல் -நாயனார்
செஞ்சொல் -ஆராதனத்துக்கும் ஆராதனத்துக்கு விஷயம் -உபாயம் உபேயம் அவனே -பூர்வ பாகம் உத்தர பாகம் –
மறையின் பொருளாக நின்று-அரங்கத்தம்மானை -சொல்லாகவும் அர்த்தமாகவும் -அ சப்த காரணம் அதனால் –
இது சேமித்துக் கொண்டு இருக்கும் -வேதத்தையும் அவனையும் -பிரணவம் சேமித்துக் கொண்டு இருக்குமே -)
————————————-
திருமந்த்ரார்த்தத்துக்கு வாக்யார்த்தம் அருளிச் செய்கிறார் -சேஷத்வம் -என்று தொடங்கி –
இங்கே இது தன்னில் சொல்லுகிற அர்த்தம்
ஸ்வரூபமும் ஸ்வரூப அனுரூபமான ப்ராப்யமும் -முமுஷுப்படி -சூர்ணிகை -26-என்கிற
உலகாரியன் திரு வாக்கும் –
இம்மந்திரம் தன்னில் சொல்லுகிற அர்த்தம் இவ்வாத்மாவினுடைய சேஷத்வ பாரதந்தர்யங்கள் ஆகிற ஸ்வரூபமும்
அந்த ஸ்வரூபத்துக்கு அனுரூபமாய் இருந்துள்ள கைங்கர்யம் ஆகிற ப்ராப்யமும் -என்கிற
மா முனிகள் திருவாக்கும் அனுசந்தேயங்கள்
ப்ராப்யத்தின் ஸ்வரூப அனுரூபவத்வம் ஆவது -சேஷத்வ பாரதந்தர்யங்களுக்குத் தகுதியாய் இருக்கை
அதாவது ஸ்வ ப்ரயோஜநத்வ ஸ்வ கர்த்ருத்வ பிரதிபத்தி கந்த ரஹிதமாய் இருக்கை –
அதாவது அவன் முக மலர்த்திக்கு உறுப்பாக அவன் நியமித்தபடி பண்ணுகை –
ஸ்வ பிரயோஜன நிவ்ருத்தி சேஷத்வ பலம் –
பராதீன ப்ரவ்ருத்தி நிவ்ருத்திகத்வம் பாரதந்தர்யம் -என்று இறே பூர்வர்கள் அருளிச் செய்தது
(பரகத அதிசய ஆதானேச்சயா-சேஷ லக்ஷணம் -சேஷிக்கு பெருமை சேர்ப்பதே செய்வது சேஷ பூதனுக்கு கர்த்தவ்யம் –
பாரதந்தர்யம் -அவனே பிரதானம்-பர தந்திரம் -யாருக்கு பகவான் பிரதானமோ யஸ்ய அவன் பரதந்த்ரன்
ஸ்வம் பிரதானம் யஸ்ய ஸ்வதந்த்ரன் –
செய்விக்கப்பட்டு செய்கிறோம் -கர்த்தா நாம் இல்லை -அவன் அதீனம் நம் பிரவ்ருத்திகளும் நிவ்ருத்திகளும்
சேஷத்வம் புரிய அவன் ஆனந்தத்துக்கு மட்டும் செய்வது -ஸ்வ ப்ரயோஜன நிவ்ருத்தி
பாரதந்தர்யம் புரிய ஸ்வ ப்ரவ்ருத்தி நிவ்ருத்தி
அவன் முக மலர்த்திக்கு உறுப்பாக அவன் நியமித்தபடி பண்ணுகை-இதுவே சேஷத்வமும் பாரதந்தர்யமும் -)
திரு மந்திரத்தின் உடைய அக்ஷர ஸங்க்யையும் பத ஸங்க்யையும் ஸ பிரமாணமாக அருளிச் செய்கிறார் –
பேசுமின் -என்று தொடங்கி –
இனி பிரணவத்துக்கு அர்த்தம் அருளிச் செய்வதாக திரு உள்ளம் பற்றி அதனுடைய அக்ஷர த்ரயாத்மகதையை
அருளிச் செய்கிறார் -இதில் முதல் பதமான -என்று தொடங்கி –
இவர் தாமே உபய பிரதானமான பிரணவம் -ஆச்சார்ய சூர்ணிகை -161- என்று இறே அருளிச் செய்தது –
ஓமித் யாத்மாநம் யுஜ்ஜீத -என்றும் –
ஓங்காரோ பகவான் விஷ்ணு -என்றும் சொல்லுகிறபடியே
சப்தார்த்தங்களினுடைய ப்ராதான்யத்தாலே
ஜீவ ஈஸ்வரர் இருவருக்கும் வாசகமாய்க் கொண்டு இருவருடைய பிரதான்யம் தோன்றுவிக்கிற பிரணவம் போலே -என்றபடி –
அர்ஜுன ரதம் போலே பிரணவம் சேஷ பிரதானம் ஆகையால் –
ராஸ மண்டலம் போலே நாராயண சப்தம் சேஷி பிரதானம் ஆகையால் புநக்ருதி இல்லை –
திருவல்ல வாழ் உறையும் கோனாரை அடியேன் -திருவாய் -5-9-1-என்று இறே ஆழ்வார் அருளிச் செய்தது –
நாராயண சப்தத்திலும் பிரணவத்திலும் போலே இந்த நிர்த்தேசம் –
அவனைச் சொல்லும் போது தம்மை இட்டு அல்லது சொல்லப் போகாது –
தம்மைச் சொல்லும் போதும் அவனை இட்டு அல்லாதது சொல்ல ஒண்ணாது –
கோனாரை என்ற இடம் நாராயண சப்தார்த்தம் –
அடியேன் என்ற விடம் ப்ரணவார்த்தம் –
பிரணவம் ஜீவ பிரதானம் –
நாராயண சப்தம் ஈஸ்வர பிரதானம் –
பிரணவம் தன்னுள் சாப்த பிரதான்யம் ஜீவனுக்கு ஆனாலும் ரக்ஷகனான சேஷிக்கே ஆர்த்த பிரதான்யம் –
பிரணவத்துக்கு ஆத்ம சமர்ப்பணமும் அர்த்தம் ஆகையால் அத்தை அருளிச் செய்கிறார்
அடியேனடியாவி -என்று தொடங்கி –
பிரதம அக்ஷரத்தில் சதுர்த்தி ஸம்ப்ரதானத்திலேயாய் –
ப்ரஹ்மணே த்வா மஹஸே -ஓமித்யாத்மநாம் யுஞ்ஜீத-அடியேனடியாவி யடைக்கலமே-என்கிறபடியே
விரோதி பயத்தால் கலங்கின தசையில் செய்யப்படும் ஆத்ம சமர்ப்பணம் -என்றபடி
(சதுர்த்தி நாலாம் வேற்றுமை -சம்பிரதாயம்- சமர்ப்பித்து -கொடுத்து ஓம் சொல்லி ஆத்மாவை சமர்ப்பித்தல் என்றபடி
அதவா கிந் னு சமர்ப்பிக்க அதுவும் அவனதே என்று தெளிந்து )
பிரணவத்தின் சகல வேத சங்க்ரஹத்தை அருளிச் செய்கிறார் -சந்தஸ் -என்று தொடங்கி –
கீழும் மேலும் செப்பும் முடியும் போலே -என்றது –
ப்ராஹ்மண ப்ரணவம் குர்யாத் ஆதாவந்தே ச ஸர்வதா -ஸ்ரவதி அநோங்க்ருதம் பூர்வம் பரஸ்தாச்ச விசீரியதே -என்று
வேதம் கீழ் ஒழுகிப் போகாமைக்காகவும் மேல் சிதறிப் போகாமைக்காகவும் –
கீழும் மேலும் செப்புப் போலே மூடிக் கொண்டு கிடக்கத் தக்கதாய்
சகல மந்திரங்களுக்கும் ஸ்வ சம்பந்தத்தால் உன்மேஷ கரமாய் இருக்கும் என்றபடி –
——————————————————————————————————————–
அ -கார அர்த்தம் ..
ஓர் எழுத்து ஓர் உரு (பெரிய திருமொழி 6-1-5 ) என்னும் படி
(வாசக ஜாதத்துக்கு- சொற்கள் கூட்டத்துக்கு பிரதானம் அகார சப்த வாஸ்யனே-அகாரத்துக்கு உருவமானவனே )
இதுக்கு பிரக்ருதியாய் -(பகுதி விகுதி -பிரகிருதி விக்ருதி -)
முதல் எழுத்தாய் , எல்லா வற்றிலும் ஏறி ,சொல் நிறப்பத்தை வுண்டாக்குகிற
துளக்கமில் விளக்கான (திருக் குறும் தாண்டகம் -18 ) அகாரம் ..
நான் மறையின் சொல் பொருளுக்கு அடியாய் (நாச்சியார் திருமொழி 11-6)
அவை அவை தோறும் ( திரு விருத்தம் -96 )
(சமயங்கள் பல பல நின் மூர்த்தி -அந்தர்யாமியாகி பரப்பி வைத்து -நின் கண் வேட்க்கை எழுவிப்பேன்)
நிறைந்து நின்ற (திருவாய் மொழி 3-2-7 )
அக்ஷரங்களில் அகாரம் நான் என்று
மேல் இருந்த விளக்கான (பெரியாழ்வார் திருமொழி 4-3-11 )
எம்பெருமானைக் காட்டுகிறது ..
(நாலிரு மூர்த்தி -அஷ்டாக்ஷரமாகவே-மேல் இருந்த விளக்கு–
ஷரம் பிரதானம் -சேதனம் -இரண்டையும் ப்ரேரிரிக்கும் பரமாத்மா )
(காரணத்வம் -ரக்ஷகத்வம்-சேஷி -ஸ்ரீ யபதித்தவம் நான்கையும் அகாரம் சொல்லும் என்பதை மேலே விளக்குகிறார்
1–ஸ்வரூபத்தால் காரணத்வம்
2–தாது அர்த்தத்தால் ரக்ஷகத்வம்
3–ப்ரத்யயம் ஆய-லுப்த சதுர்த்தி – சேஷி -அவனுக்கு அகார வாச்யனுக்கு நான் அடிமை –
4–ஸ்ரீ யபதித்தவம்–காரணத்துக்கும் ரக்ஷகத்வத்துக்கும் சேஷியாவதற்கும் ஸ்ரீ யபதித்வம் வேண்டுமே -இது ஆர்த்தமாக சித்தம்
இன்றியமையாத அடையாளம் -ஸ்வரூப நிரூபக தர்மம் -விசேஷணங்கள் வியாவ்ருத்தம்-காட்டவே –
அவன் திரு மார்பில் விட்டுப் பிரியும் அன்று தான் இவ் வஷரத்தில் நின்றும் பிரிவாள் )
இது அவ ரக்ஷண -என்கிற தாதுவிலே பதம் ஆகையாலே , இந்த ரஷகம் ஆகிற தொழில்
காக்கும் இயல்வினனான ( திரு வாய் மொழி -2-2-9 ) சர்வேஸ்வரன் பக்கலிலே கிடக்கை யாகையாலே ,
(காப்பவன் -என்று சொல்லாமல் -காக்கும் இயல்வினன் -ரக்ஷகத்வம் சர்வேஸ்வரன் பக்கலிலே மட்டுமே கிடக்கும்
ஈஸ்வரனை அல்லால் ரக்ஷகர் அல்ல பிரபந்த பரித்ராணாம் சொல்லுமே )
மூவாத் தனி முதலாய் மூ வுலகும் காவலோன் ( திருவாய் மொழி 2-8-5 ) என்கிற படியே
காரண வஸ்துவே ரஷகமும் என்று தோன்றும் ..
தேச கால அவஸ்த பிரகார அதிகாரிகளை இட்டு ரஷணத்தை சுறுக்காமை யாலே ,-
துளிக்கின்ற வான் இன் நிலம் ( திரு வாய் மொழி 2-3-10 )-என்றும் –
வரும் காலம் நிகழ் காலம் கழி காலமாய் ( திரு வாய் மொழி 3-1-5 ) -என்றும் –
ஞாலத் தூடே நடந்தும் நின்றும் கிடந்தும் இருந்தும் ( திரு வாய் மொழி 6-9-3 )-என்றும் –
மன் உயிர்க்கு எல்லாம் அரணாய (முதல் திரு வந்தாதி -60 ) என்கிற படியே –
எல்லாத் தேசத்திலும் , எல்லாக் காலத்திலும் ,எல்லா அளவிலும் , எல்லா வழியாலும் ,
எல்லோரையும் ரஷிக்கும் படியைக் காட்டுகிறது ..(ஐந்துக்கும் ஐந்து பாசுரங்கள் )
(சாலப் பல நாள் உகந்து உயிர்கள் காப்பான்-6-9-3- -ஐந்தையும் காட்டுமே -சர்வ பிரகார ஸர்வதா ரக்ஷகன் )
அருளால் அளிப்பார் யார் ( திரு வாய் மொழி 2-2-2 )-என்றும் –
உவந்து எம்மைக் காப்பாய் ( நான் முகன் திரு வந்தாதி -19 ) -என்கிற படியே
அருளையும் உகப்பையும் பரிகரமாகக் கொண்டு ,
(காப்பாய் நீ காப்பதனை யாவாய் நீ -ரக்ஷகனும் ரக்ஷிக்க மநோ ரதிப்பவனும் நீ
காக்க வேண்டும் விருப்பம் கொண்டவனும் நீயே )
மலர் கதிரின் சுடர் உடம்பாலும் (திரு வாய் மொழி 3-1-5 )
விகஸ்வர கிரண தேஜோ ரூபம்–மலர்-விகஸ்வர – கதிர்-கிரண -தேஜோ -சுடர்-ரூபம் – உடம்பு-
மலர்ந்து கொண்டே இருப்பதைச் சொல்லும் -விபீடணர்க்காக மலர் கண் வைத்து -மலர்க்கண் இல்லை )
வருந்தாதே ஞானத்தாலும் ( திரு வாய் மொழி 3-1-5 )
எழுவார்க்கு (முதல் திரு வந்தாதி -26 ) உடம்பைப் பூண் கட்டியும் ,
விடை கொள்வார்க்கு ( முதல் திரு வந்தாதி -26 )
செடியார் ஆக்கை கழித்தும் ( திரு வாய் மொழி 1-5-7 )
வழுவா வகை நினைந்தார்க்கு ( முதல் திரு வந்தாதி -26 ) தன் தாளின் கீழ் சேர்த்தியை (திருவாய்மொழி 7-5-10-) உண்டாக்கியும் ,
(பிறப்போடு நோயோடு மூப்பொடு இறப்பிவை பேர்த்து பெரும் துன்பம் வேரற நீக்கித்
தன் தாளின் கீழ்ச் சேர்த்து அவன் செய்யும் சேமத்தை எண்ணி -கீழே ஆக்கையை மட்டும் நீக்கி )
சேர்ந்தார்களை (முக்தர்களை – திரு வாய் மொழி 2-3-6 ) என்றும் மகிழப் பண்ணியும்
பிரிந்து கூடாதார் பணிவும் பண்பும் தாமேயாயும்-(பிரிந்து கூடாதார்-நித்யர்களுக்கு இந்த சப்தம் -திரு வாய் மொழி -8-3-6 )
பண்ணும் ரஷணம் சேதனர் நின்ற அளவுக்கு ஈடாய் இருக்கும் ..
அகாரார்த்தம் -ஸ்ரீ யபதியே-
திருவுக்கும் திருவாகிய செல்வன் -பெரிய திருமொழி -7-7-1-
( ஸ்வ வியதிரிக்த சமஸ்தருக்கும் ஸ்ரீ இவளே -அவனும் இதிலே அடங்கும்-இதனாலேயே தெய்வத்துக்கு அரசு -காரணத்வம் அவனுக்கு )
திருமங்கை தன்னோடும் திகழ்கின்ற திருமாலார் –திருவாய்மொழி -10-6-9–என்று அவனுக்கு நிரூபகம் ஆகையால்
(ஸ்ரீ மத்வம்-காரணம் அடியாக உபாதியால் வந்தது இல்லை -நிருபாதிகம்–இவள் திரு மார்பில் இல்லாத அன்றும்
திரு மார்பு திகழ்கின்றதாம் -இல் பொருள் -இல்லாத அன்றும் -இப்படி இருக்க
திரு மங்கை தன்னோடும் திகழ்கின்ற திருமால் -யதார்த்த ஸ்ரீ மத்வம் )
த்யு மணியையும் ( சூரியனையும் ) மாணிக்கத்தையும் பூவையும் விடாத ப்ரபையும் ஒளியும் மணமும் போலே
மணியை யணி யுருவில் -( பெரிய திருமொழி-8-9-2-)-என்னும் படியே
தன்னோடும் பிரிவில்லாத திரு மகள் -( பெரிய திருமொழி–4-5-5-/-5-6-7-)ஆகையால்
(சிந்தாமணி இவனே -வரு மானம் தவிர்க்கும் -அவமானம் தவிர்க்கும் அணி யுருவில் திருமாலை –
பிரிவில்லாத திரு மகள் மூன்று பாசுரங்களில் உண்டு )
ஊழி ஊழி தலையளிக்கும் திருமால் – (திருவாயமொழி-10-7-6–என்னும் படி ரக்ஷண தர்மத்துக்கு
இவள் தர்ம பத்னி யாகையாலும்
திருமாலே நானும் உனக்கு –திருப்பல்லாண்டு -11-
திரு மார்பா உனக்காகித் தொண்டு பட்ட -பெரிய திருமொழி-6-3-9- -என்னும்
( சொல்லாய் திரு மார்பா -இவன் தான் பண்ணின பாபம் அனுபவிக்கட்டும் என்று ஆறி இருக்க
நான் ப்ரஹ்மச்சாரி நாராயணனையா பற்றினேன் )
ஆத்மாவுக்கு மிதுன சேஷத்வம் ஸ்வரூபம் ஆகையாலும்
ஸ்வரூப ரூப விபவங்களைப் போலே
( அகாரத்தில் இந்த மூன்றும் )ப்ரக்ருதி ப்ரத்யய தாதுக்களையும் விடாமையாலே
( பிராட்டியினுடைய ப்ரமேய த்ரய சம்பந்தம் போலே உள்ள பிராமண த்ரய சம்பந்தத்தை அருளிச் செய்கிறார்
ஸ்வரூப நிரூபக தர்மம்- திரு மார்பை விட்டு பிரியாமல் ரூபம் –ரஷிக்க இவள் வேண்டுமே விபவம்-
அகார ஸ்வரூபம் ரூபம் விபவம்-காரணத்வம் ரக்ஷகத்வம் சேஷித்வம் மூன்றும் )
இதிலே ( அகாரத்திலே )ஸ்ரீ சம்பந்தமும் அனுசந்திக்கப்படும்
—————————————————-
இவ்வக்ஷர த்ரயத்துக்கும் அடைவே அர்த்தம் அருளிச் செய்வதாக திரு உள்ளம் பற்றி பிரமம் அகரார்த்தத்தை
அருளிச் செய்கிறார் -ஓர் எழுத்து என்று தொடங்கி –
அக்ஷராணாம் அகாரோஸ்மி-என்றத்தையும் பற்ற அக்ஷரங்களில் அகாரம் நான் -இத்யாதி –
இவ்வாகாரத்தில் பிரக்ருத் யர்த்தமான காரணத்வமும் -தாதவர்த்தமான ரக்ஷகத்வமும் இறே சொல்லப் படுகிறது –
இதனை அருளிச் செய்கிறார் -இது அவ ரக்ஷணே -என்று தொடங்கி –
இந்த ரக்ஷகத்வம் அவச்சேதகம் இல்லாமையால் –
அநுபாதிக நிர்தேச ஹி அசங்ககோசோ மநீஷீணாம் கத்யதே -என்கிற நியாயத்தாலே சர்வ விஷயம் –
இது தன்னை அருளிச் செய்கிறார் -தேச கால -என்று தொடங்கி –
ரஷா பிரகாரங்கள் விஷயங்கள் தோறும் பிரமாணங்கள் காட்டின படியில் விசித்ரங்களாய் இருக்கும்
இது தன்னை அருளிச் செய்கிறார் -அருளால்-என்று தொடங்கி –
எழுவார் -ஐஸ்வர்யார்த்திகள்
விடை கொள்வார் -கைவல்யார்த்திகள்
வழுவா வகை நினைந்து இருப்பார் -பகவத் சரணார்த்திகள்
சேர்ந்தார் -முக்தர்
பிரிந்து கூடாதார் -நித்ய ஸூரிகள்
இங்கே இவை இரண்டும் சேதனர் நின்ற அளவுக்கு ஈடாய் இருக்கும் -முமுஷுப்படி -37-என்ற
உலகாரியன் திரு வாக்கு அனுசந்தேயம் -(இவை இரண்டும் விரோதியைப் போக்குகையும் அபேக்ஷித்தத்தைக் கொடுக்கையும் )
இனி இப்பதத்தில் அர்த்த பலத்தால் அனுசந்திக்கப்படும் ஸ்ரீயபதித்வத்தை அருளிச் செய்கிறார் –
திருவுக்கும் -என்று தொடங்கி –
அநன்யா ஹி மயா ஸீதா பாஸ்கரேண பிரபாயதா-என்றும்
அநன்யா ராகவேணாகம் பாஸ்கரேண பிரபாயதா -என்றும்
இருவர் வாக்காலும் இருவரும் இருவருக்கும் ப்ருதக் ஸ்திதி இல்லை என்னும் இடம் சித்தம்
பிராட்டிக்கு உண்டான அந்நயத்வம் உபய சம்மதம் இறே-
இந்த அப்ருதக் சித்தியை த்ருஷ்டாந்த த்ரயத்தாலே நிரூபிக்கிறார் த்யுமணி என்று தொடங்கி –
பாஸ்கரேண பிரபாயதா -என்கிற ஸ்ரீ ராமாயண வசங்களை அடியொற்றி த்யுமணி த்ருஷ்டாந்தம் –
ப்ரஸூ நம் புஷ்யந்தீம் –ஸ்வயா தீப்தயா ரத்னம் -என்ற பட்டர் திரு வாக்கை அடியொற்றி
மாணிக்க புஷ்ப்ப த்ருஷ்டாந்தம் —
இத்தால்
பிராட்டிக்கு பகவத் ஸ்வரூப நிரூபகத்வமும் –
பகவத் அப்ருதக் சித்தியும் –
பகவத் பத்நீத்தவமும் –
சேஷத்வ பிரதி சம்பந்தித்தவமும் ப்ரகடிதம்-
பிராட்டியினுடைய ப்ரமேய த்ரய சம்பந்தம் போலே உள்ள பிராமண த்ரய சம்பந்தத்தை அருளிச் செய்கிறார் –
ஸ்வரூப என்று தொடங்கி –
இருவரையும் பிரித்து விரும்பினால் ராவண ஸூர்ப்பணகைகளைப் போலே அநர்த்தமே பலிக்கும் இத்தனை-
இருவரையும் பற்றினால் இறே ஸ்ரீ விபீஷண ஆழ்வானைப் போலே வாழல் ஆவது –
ஸ்ரீ விபீஷண ஆழ்வானுக்கு ஸ்ரீ ரெங்க விமான லாபத்துக்கு மேல்பட வாழ்ச்சி இல்லை இறே
—————————————————————————————————-
(அகார வாச்யனான நாராயணனுக்கு ஜீவாத்மா அடிமை -க்கு -லுப்தம் -லுப்த சதுர்த்தி –
ஏறிக் கழிந்த சதுர்த்தி – நாராயணாயா வியக்த சதுர்த்தி -)
(வியாபக மந்த்ரம்
வியாப்தி நிறைந்து இருத்தல் -எதை வியாப்யம்- எப்படி வியபான பிரகாரம் எதுக்காக வியாபியா பலம்-வியாபன குணம்
ஓம் நமோ விஷ்ணோ -வியாபிக்கிறார் இதி விஷ்ணு –
வாசு தேவ -ஸர்வத்ர வசதி அத்யாஹாரம் பண்ணி எத்தை வியாபிக்கிறார் -பிரகாரம் வாஸூ வசிக்கிறார் –
எதற்க்காக இல்லை -வியாபகம் குணம் -பகவதே சப்தம் சேர்த்து சொல்லும்
நாராயணாய -ஐந்தும் உண்டே -நாரங்களை வியாபிக்கிறார்-அந்தர்யாமியாக வியாபிக்கிறார் –
பலம் -உபாயமாக புருஷார்த்தமாக -குணங்கள் நார சப்தத்தில் உண்டே -)
( ஓம் -அ ஆய உ ம் / நமஸ் / நாராயணாயா
ரக்ஷகன் கர்த்தா காரணம் சேஷி நான்கும்
ஆய -தாதர்த்தே சதுர்த்தி -தத் அர்த்த பிரயோஜனம் -அவனே பிரயோஜனம் யாருக்கோ –
நாலாம் வேற்றுமை உருபு -தாதார்த்தம் அவனுக்காக -அவன் பிரயோஜனத்துக்காக என்றவாறு –
தாதர்த்த ஸ்வ பாவம் தன்மை தாதார்த்யம்-
ச ஏவ யஸ்ய அர்த்தம் பிரயோஜனம் –
அகார வாஸ்யனையே தனக்கு பிரயோஜனமாகக் கொண்ட மகார வாஸ்யன் –
ஸ்வ பிரயோஜன நிவ்ருத்தி -இதுவே சேஷத்வ பலன்
அகார மகார சம்பந்தம் சொல்ல வேற்றுமை உருபு -நாராயணாயா -இதுக்கு விவரணம் –
ஆகவே நான்காம் வேற்றுமை உருபு -இதுக்கு பொருள் தாதர்த்யம்
அவ்வானவருக்கு அடிமை என்று ஆச்சார்யர் உபதேசம்
நடுவில் உகாரம் –
அகாரத்துக்கே -அடிமை -கீழே சேஷத்வம் -இங்கு அநந்யார்ஹ சேஷத்வம் -யாருக்கும் தகுதி இல்லாத சேஷத்வம் சொல்ல வந்தது –
உகாரம் -ஏவ
பரமாத்வுக்கே ஜீவாத்மா அடிமை என்று பிரணவம் சொல்லும் -அ ஆய உ ம -நான்கும் வேண்டுமே இத்தைச் சொல்ல –
ஆய இல்லா விடில் ஸ்வரூப ஐக்கியம் அகாரம் மகாரம்
உகாரம் அவனுக்கே அடிமை சொல்ல வந்தது )
லுப்த சதுர்த்தி யர்த்தம் ..
இதில் ஏறிக் கழிந்த சதுர்த்தி -ரஷிக்கப் படுகிற வஸ்துக்கள் அடைய அவனுக்கு சேஷம் என்று
கண்ட வாற்றால் தனதே வுலகு (திரு வாய் மொழி 4-5-10 ) என்னும் படி
ரஷிக்கைக்கு அடியான உறவை அறிவிக்கிறது ..
(தனதே உலகு– தான் அ– தனது ஆய- தனதே உகாரம் அவதாரணம்- உலகு -பிரணவம் கண்டவாற்றாலே அறிகிறோம்
அகாரம் மகாரம் சமா நாதி கரண்யத்தில் படிக்காமல் -நம் சித்தாந்த பிரதிதந்தரம் –
இத்தைக் கை விளக்காகக் கொண்டு ஸ்வரூபத்தால் வேறே வேறே தத்வம் –
இஹ நாநா அஸ்தி -இரண்டாக பார்த்தால் மிருத்யு சம்சாரத்தில் உழன்று
சத் ஏவ ஏகம் ஏவ அத்விதீயம்
இதம் சர்வம் கலு ப்ரஹ்மம்-அபேத சுருதிகள்
போக்தா போக்யம் ப்ரேரிதா பேத சுருதிகள்
தானே உலகு எல்லாம் -தானே உண்டு உமிழ்ந்து என்றும் பாசுரங்கள் உண்டே
இரண்டு வாக்கியங்களும் உண்டே
ஸ்ரீ கஜேந்திர தாசர் -அஹம் ஏவ பர தத்வம் -தர்சனம் பேத ஏவ ச -ஆறு வார்த்தைகள் –
கூடிற்றானால் –அது அதுவே -உடல் மிசை உயிர் எனக் கரந்து எங்கும் பரந்துளன்
கார்யம் காரணம் நிபந்தமான சாமா நாதி கரண்யம் -மண் குடம் தங்கச் சங்கிலி போலே உலகமே ப்ரஹ்மம்
விசிஷ்ட ப்ரஹ்மம் -இவரைப் போலே இரண்டாவது இல்லை அத்விதீயம் -ஓத்தார் மிக்கார் இலையாய மா மாயன் –
இது சர்வம் ஸம்ஞ்ஜயம்-கடக சுருதிகள் கொண்டு -ஆழ்வார்கள் அருளிச் செயல்களைக் கொண்டு ஒருங்கே விட்டு ஸ்ரீ பாஷ்யம் -)
ரக்ஷிக்கிறவன் ஸ்வாமியாய் /ரக்ஷிக்கப் படுகிறவர்கள் தாச பூதராய் இருக்கை இறே
இரண்டு தலைக்கும் நிலை நின்ற ஸ்வரூபம் ..
அடியேன் என்று இசையாதவனை ( திரு வாய் மொழி 8-8-2) ஆத்மாவை இல்லை செய்த
கள்ளனாக -விறே சொல்லுவது ..
( என்னுள்ளான் என்று இருந்தால் -சேஷத்வம் அறியாமல் -அடியேன் உள்ளான் -ஆத்மாவுக்குள் உள்ளான் –
தாஸ்யம் இசைந்து அடியேன்
அடிமைத் தானம் இல்லாய் என்பவன் ஆத்மாவை இல்லை என்கிறான்
ஒளி இல்லா மாணிக்கம் -மணம் இல்லாத பூ -போலே ஆகுமே )
——————————————-
இனி மேல் இதில் விபக்தி தன்னை நீர்த்தேசித்து விபக்த்யார்த்தம் அருளிச் செய்கிறார் —
இதில் ஏறிக் கழிந்த சதுர்த்தி -இத்யாதியால் –
இவ்விடத்தில் சதுர்த்தீ விபக்தி கொள்ள பிராப்தம் –
பிரதம த்ருதீய அக்ஷரங்களை சாமாநாதி கரணங்களாகக் கொண்டு
ஜீவ பரமாத்மாக்கள் உடைய ஸ்வரூப ஐக்யம் இங்கே சொல்லப் படுகிறது என்னும்
குத்ருஷ்ட்டி பக்ஷத்துக்கு
பஹு பிராமண விரோதமும்
சமபி வ்யாஹ்ருத நமஸ் சப்த நாராயண சப்த வ்யக்த சதுர்த்தியில் உடைய ஸ்வ ரஸார்த்த விரோதமும் வரும் –
அதாவது —
சதுர்த்த்யந்தம் ஆகாதே ப்ரதமாந்தமாய்-தத்வமஸி போலே ஆத்ம பரமாத்மாக்களுடைய ஐக்ய பரமாகிறது -என்னும்
சதுர்த்யந்தமான நாராயணாயா என்னும் விவரணத்தோடே விரோதிக்கும் –
அதுக்கு மேலே நாராயண பதத்தில் சொல்லுகிற சரீராத்ம பாவத்தோடும் விரோதிக்கும் –
அஹமபி நமம பகவத ஏவ அஹமஸ்மி -என்று ஸ்வ ஸ்வாதந்தர்ய நிவ்ருத்தி பூர்வகமாக
பகவத ஏக பாரதந்தர்யத்தை சொல்லுகிற நமஸ் சப்தத்தோடு விரோதிக்கும் –
பதிம் விஸ்வஸ்ய –
ஜ்ஞாஜ்ஞவ் த்வ அஜவ் ஈஸநீசவ்-
ஷராத்மாநவ் ஈசதே தேவ ஏக –
யஸ் யாஸ்மி -(நான் யாருக்கு உரியவனாக இருக்கிறேனோ )
பரவா நஸ்மி –
தாஸ பூதா ஸ்வதஸ் சர்வே ஹ்யாத்மான
பரமாத்மனா
ஆத்ம தாஸ்யம் ஹரே ஸ்வாம்யம்
தாஸோஹம் வாஸூ தேவஸ்ய
உத்தம புருஷஸ் த்வந்ய-என்று
ஈஸ்வரனுடைய சேஷித்வத்தையும் சேதனனுடைய சேஷத்வத்தையும் சொல்லுகிற ஸ்ருதி ஸ்ம்ருதிகளோடே விரோதிக்கும்
ஆக
அகார விவரணமான நாராயண பதம் சதுர்த்யந்தம் ஆகையால் சங்க்ரஹமான இதுவும்
சதுர்த்த்யந்தம் ஆகவேண்டும் என்றபடி
விபக்த்யர்த்த்தை அருளிச் செய்கிறார் -உறவை -என்று –
ஸ்வ விஷயக பகவத் சேஷத்வ ஞானம் இல்லாத போது ஆத்ம அபஹார ரூபமான ஸ்வாதந்தர்ய புத்தி நடக்கையாலே
ஸ்வரூபம் அழிந்து விடும் என்று அருளிச் செய்கிறார் -அடியேன் -என்று தொடங்கி –
ஆக –
ப்ரக்ருத்யர்த்தமான ஈஸ்வரனுடைய காரணத்வமும்
தாத்வர்த்தமான ரக்ஷகத்வமும்
அர்த்த பலத்தால் வந்த ஸ்ரீ யபதித்வமும்
ப்ரத்யய ஸித்தமான சேதன சேஷத்வ பிரதி சம்பந்தியான சேஷித்வமும்
ஆகிற அகாரார்த்தத்தை அருளிச் செய்தார் ஆயிற்று
——————————————————————————————-
உ -காரர்த்தம் ..
உ காரம் அறுதிப் பாட்டைக் காட்டுகை யாலே ,எம்பெருமானுக்கே சேஷம் என்று பிறர்க்கான நிலையைக் கழிக்கிறது ..
ஒருவனுக்கு அடிமையான க்ருஹ க்ஷேத்ரம் முதலானவை பிறர்க்கு ஆக்கலாம் படி வந்தேறியாய் ,
நிலை நில்லாதே கழிகிறாப் போல அன்று இறே ஆத்மாவின் சேஷத்வம் –
(ஸ்தான ப்ரமாணத்தால் அவதாரண அர்த்தம் -அநந்யார்ஹத்வத்தைச் சொல்லும் )
சாயை போல ( பெரியாழ்வார் 5-4-11 )
நிழலும் அடி தாறும் ( பெரிய திருவந்தாதி -31 ) என்னும் படி
நிழல் போல்வனரான ( திரு விருத்தம் -3 ) நாய்ச்சிமாருடைய சேஷத்வம் போல , அநந்யார்ஹமுமாய் இருக்கும் –
( ஸ்ரீ ராமானுஜ பதச்சாயை-ஸ்ரீ எம்பார் -பாட வல்லார் -சாயை போலே அணுக்கர் ஆவார் -என்றவாறு
ஸ்வாமி திருவடி நிழலே நமக்கு நிழல் -நிழல் அநந்யார்ஹம் சொல்ல வேண்டாமே
அடி தாறு -ஸ்ரீ பாத ரேகை -இதுவும் அநந்யார்ஹம் தானே
மூவருமே அவனுக்கு நிழல் -என்றும் பூமி தேவி நீளா தேவி இருவரும் ஸ்ரீ தேவி நிழல் போல என்றும் வியாக்யானம் )
பிறர்க்கு அடைந்து தொண்டு படுகை ஆத்ம நாசமாய் ( பெரிய திரு மொழி 2-5-2 )
புறம் தொழாது ஒழிகை தேட்டம் ஆகையாலே ( நான் முன் திருவந்தாதி -68 )
மற்றானும் அல்லனே ( சிறிய திரு மடல் -54 ) என்று தேறும் படி
அவன் முகத்து அன்றி விழியேன் ( நாச்சியார் திரு மொழி 12-4 )
(கோவிந்தனுக்கு அல்லால் வாயில் போகா கொங்கைத் தலம் இவை )என்று இருக்கை ஆயிற்று ஸ்வரூபம் –
என்னை முற்றும் உயிர் உண்டு ( திரு வாய் மொழி 10-7-3 ) என்னும் படி எம்பெருமானுக்கு
வாய் புகு சோறான ஆத்மாவை பிறர்க்கு ஆக்குகையாவது –
மறையவர் வேள்வியில் புரோடாசத்தை நாய்க்கு இடுமா போல ( நாச்சியார் திரு மொழி 1-5 ) இருப்பது ஓன்று இறே
—————————————-
அநந்தரம்
மத்யம அக்ஷரமான-உகாரத்துக்கு அர்த்தம் அருளிச் செய்கிறார் -உகாரம் -என்று தொடங்கி –
அதாவது -அவதாரண வாசகமான -இவ்வுகாரத்தில் கீழ் ஈஸ்வர சேஷமாக சொன்ன இவ்வாத்ம வஸ்து
அந்நியருக்கு சேஷம் அன்று என்னும் இடத்தைச் சொல்லுகிறது -என்கை –
(பிராட்டி நித்ய முக்தர் ஆச்சார பாகவதர்கள் -அவனுக்கு சரீர பூதர் -கைங்கர்யம் அவனுக்கு ப்ரீத் அர்த்தமாகவே
வேறே பிரயோஜனாந்தரத்துக்கு இல்லாமல் -இதுவே அநந்யார்ஹத்வம்)
சதுர்த்தியாலே
ஈஸ்வர சேஷத்வம் ப்ரதிபாதிதமாகச் செய்தே-அந்நிய சேஷத்வம் பிரஸ்துதம் ஆமோ என்னில்
லோகத்தில் ஒருவனுக்கு சேஷமான க்ருஹ க்ஷேத்ர புத்ர தாஸாதிகள் வேறேயும் சிலருக்கு சேஷமாய் இருக்கக் காண்கையாலே
அப்படிப்பட்ட அந்நிய சேஷத்வம் இந்த ஸ்தலத்திலும் உண்டோ என்ற ஒரு சங்கை உதிக்கும் இறே-
ஆகையால் தாத்ருசமான அந்நிய சேஷத்வம் இங்கு இல்லை என்னும் இடத்தை பிரதிபாதிக்கிறது உகாரம் –
வானிடை வாழும் அவ்வானவர்க்கு மறையவர் வேள்வியில் வகுத்த அவி-இத்யாதியை
உட்க்கொண்டு அருளிச் செய்கிறார் -மறையவர் -என்று தொடங்கி
அதாவது –
ஆராத்யரான இந்திராதி தேவர்களுக்கு போக்யதா சேஷமாக கல்பிதமான புரோடாசத்தை தர்சன ஸ்பர்ச நாதிகளுக்கு
அநர்ஹமாம் படி நிஹீனமாய் இருக்கிற நாய்க்கு இடுமா போலே இருபத்தொன்று –
பிராப்த சேஷியான ஈஸ்வரனுக்கு சேஷமான ஆத்ம வஸ்துவை சர்வ பிரகாரத்தாலும் ஹேயரான
சம்சாரிகளுக்கு சேஷமாக்குகை -என்கை –
ஈஸ்வரனுக்கு இவ்வாத்ம வஸ்து சேஷமாய் இருக்கும் இடத்தில்
ஷேத்ராதிகளைப் போலே அன்றியிலே கிரய விக்ரய அநர்ஹமாய் இருக்கும் –
புத்ராதிகளைப் போலே சர்வ சாதாரணம் அன்றியிலே அநந்ய சாதாரணமாய் இருக்கும் –
பார்யையைப் போலே ஓவ்பாதி சம்பந்தம் அன்றியிலே ஸ்வ பாவிக சம்பந்தத்தை உடைத்தாய் இருக்கும் –
தேகத்தோபாதி பிறர்க்கு ஆக்கலாய் இருக்கை அன்றியிலே ஒழிக்க ஒழியாத சம்பந்தத்தை யுடைத்தாய் இருக்கும் –
குணங்கள் போல் அன்றியிலே குணியாய் அநந்யார்ஹ சேஷமாய் இருக்கும் –
க்ருஹ ஷேத்ராதிகள் ப்ருதக் ஸ்திதி யோக்யமான த்ரவ்யம் ஆகையால் க்ரய விக்ரயாதி களாலே
அநந்யார்ஹம் ஆகைக்கு யோக்யதை உண்டு
இங்கு ப்ருதக் ஸ்தித் அயோக்ய த்ரவ்யம் ஆகையால் அநந்யார்ஹம் ஆகைக்கு யோக்யதை இல்லை –
ஆக
அகாரத்திலும் சதுர்த்தியிலும் உகாரத்திலும்
ஈஸ்வரனுடைய ரக்ஷகத்வமும் -சேதனனுடைய ரஷ்யத்வமும்
ஈஸ்வரனுடைய சேஷித்வமும் சேதனனுடைய சேஷத்வமும்
சேஷத்வத்தினுடைய அநந்யார்ஹதையும் சொல்லிற்று ஆயிற்று
ஆக
உகார அர்த்தத்தை அருளிச் செய்தார் ஆயிற்று
(பொருள் விளக்கம் -இலக்கண விளக்கம்
ஓம் -அ ரக்ஷகன் கர்த்தா சேஷி
ஆய -தாதர்த்தம்-மகாரத்தின் சேஷத்வம்
ஸூ ப்ரயோஜன நிவ்ருத்தி
உ காரம் -அவனுக்கே இவன்
இலக்கண குறிப்பு –
அ முதல் -அவ ரஷனே தாது -அவ ரக்ஷணம் வ வ் அ சேர்ந்து -அ லோபம் -அவ் தான் இருக்கும் –
தாதுவுக்கு மேல் ப்ரத்யயம் வந்தால் க்ருதந்தம் வரும் –
ஆய நான்காம் வேற்றுமை உருபு -இதில் மேல் வரும் -சதுர்த்தி ஏக வசனம் -ப்ரத்யம் ஜே -லோபம் –
சூத்ரம் படி -லுப்த சதுர்த்தி அந்தமாக இருக்கும்
விஜ் ப்ரத்யயம் ஆஸ்ரயம் கர்த்தா -ரக்ஷகனுக்கு -என்ற பொருள்
உ காரம் -இரண்டாம் பதம் ஸ்தான பிரமாணத்தால் இது அவதாரண அர்த்தம்
ததேவ பூதம் -அவனே -தது சந்த்ர-ஏவ தானே து -என்றபடி –
அறுதி இடுதல் பொருளில் வரும்
அர்த்த பின்னமாய் -து -லோபம் அடைந்து உ மட்டும் இருக்கும் -அவனுக்கே சேஷம்
அ உ சேர்ந்து ஓ -சந்தி-குண சந்தி-அ எ ஓ -மூன்றும் ஆகலாம்
ஓ ஆவதுக்கு-கண்டம் இருந்து உச்சரிப்பு
உ உதடு இருந்து உச்சரிப்பு-
அ -தொண்டை -உ உதடு -சேர்ந்து அ எ ஓ -அ மட்டும் இருந்தால் கண்டம் மட்டும் இருக்கும்
ஓ கண்டோக்தம் -தொண்டையிலும் உதட்டிலும் -இதுவே உசிதம் என்றவாறு
அகாரம் உகாரம் மகாரம் -ரிக் யஜுர் சாம -பூ புவ சுவ -கடைந்து எடுத்து உருக்கி பொன் போலே அருளி –
தானே உலகு தனதே உலகு -அபேத பேத சுருதி இரண்டையும் அருளிச் செய்து –
உடல் மிசை உயிர் எனக் கரந்து எங்கும் பரந்துளன் – கடக சுருதியும் அருளிச் செய்கிறாரே -ஆழ்வார் – )
———————————————————————————————————-
மகார அர்த்தம் ..
மகாரம் – ககாரம் முதலான 24 எழுத்தும் ,
பாரு நீர் எரி காற்றினோடும் ஆகாசமும் ( பெரிய திரு மொழி 1-8-7 )
துன்னு கர சரணம் முதலாக எல்லா உறுப்பும் ( திரு வாய் மொழி 7-8-9 )
செவி வாய் கண் மூக்கு உடல் (முதல் திருவந்தாதி -12 )
உன்னு சுவை ஒளி யூறு ஒலி நாற்றம் ( திரு வாய் மொழி 7-8-9)
பிரகிருதி மானாங்கார மனங்கள் ( திரு வாய் மொழி 10-7-10 ) என்கிற 24 தத்துவங்களையும் காட்டி ,
தான் 25 தத்வமான ஆத்மாவைக் காட்டக் கடவ தாகையாலும் ,-
மன -ஞானதே -என்கிற தாது
ஞானத்துக்கு இருப்பிடமான ஆத்மாவைக் காட்டுகையாலும் ,
(மந ஞாநே – ஞான மயம்–ஞான ஸ்வரூபம் என்றும் –ஞானத்துக்கு ஆஸ்ரயமாயும்-
ஞானம் என்ற குணத்துக்கு இருப்பிடமாயும்- ஞானி -ஞான குணகன் –
ஞானம் மாத்திரம் அன்றிக்கே நிலை நின்ற-நித்தியமான- ஞாதாவாய் ,
ஞானம் க்ஷணிகம் -அநித்தியம்- ஆகந்துகம் -இயற்க்கை எல்லை -என்ற பக்ஷங்கள் உண்டே )
சென்று சென்று பரம் பரமாய் ( திரு வாய் மொழி 8-8-5-நின்ற ஓன்று -தேக இந்திரிய மன தீப்த அந்யமான ஆத்மா
அன்னமய பிராண மய மன மய விஞ்ஞான மய ஆனந்த மய -இப்படி மேலே மேலே சென்று
நன்றாய் ஞானம் கடந்து -இந்த்ரியங்களால் காண முடியாமல் ) என்னும் படி
முன் உருவில் பின் உருவாய் (திரு நெடும் தாண்டகம் -1 )
விஞ்ஞானம் என்னும் படி அறிவால் மிக்கு ,
(ஆத்மா விஞ்ஞாதா -ஞானம் உடையவரையே விஞ்ஞானம் என்று சொல்லலாம்படி
அறிவாளி -இவரே அறிவு என்று சொல்லும்படி -அதீத கோபமுடையவரை கோபமே இவர் என்னுமா போலே )
ஞானம் மாத்திரம் அன்றிக்கே ,
உணர்ந்து உணர்ந்து (திரு வாய் மொழி 1-3-6 ) என்னும் படி
நிலை நின்ற ஞாதாவாய் ,
(உணர்வு -ஞப்தி-மாத்திரம் என்று இல்லாமல் -உணர்ந்து -விஞ்ஞானம் என்று சொல்லும் படி விஞ்ஞாதா )
தேனும் பாலும் கன்னலும் அமுதுமாகி தித்தித்து ( திரு வாய் மொழி 8-8-4 ) என்னும் படி
ஆனந்த ரூபமான ஆத்ம வஸ்துவை
பிறர்க்கு உரித்து அல்லாத படி ,சேஷமாகச் சொல்லப் பட்டது என்கிறது ..
(ஆனந்த ரூபம் என்றாலே ஞான ரூபம் என்பது சித்தம்-அநிஷ்ட நிவ்ருத்தி மட்டும் முக்தி -கல் போலே என்ற பக்ஷம் ஒவ்வாது
இஷ்ட பூர்த்தியும் வேண்டும் -அனுகூல ஞானம் தான் ஆனந்தம் -பிரதிகூல ஞானம் தான் துக்கம்-
பகவானுக்கே உரித்தான அநந்யார்ஹ சேஷ பூதன் -அசேதனமும் இதுக்குள்ளே படிக்க வேண்டியதாய் இருந்தாலும்
தனக்கு சொத்தாக இருப்பதால் அவனுக்கு ஸந்தோஷம் சேதனன் உணர்ந்தால் தானே –
ஜடப்பொருள் போலவும் இல்லாமல் அவனைப் போலே ஸ்வ தந்த்ர புத்தியும் இல்லாமல் இருக்க வேண்டும் –
பகவத் கல்யாண அனுபவ ஜனித ப்ரீதி கார்ய கைங்கர்யமே புருஷார்த்தம் அன்றோ —
அனுகூல ஞானத்தால் ஆனந்தம் -ஆனந்தத்துக்கு பிரயோஜனம் கைங்கர்யமே –
ஞாத்ருத்வ ஆனந்தத்ருத்வ சேஷத்வ பலன் இது என்றவாறு )
கண்கள் சிவந்த தின் படியே –திருவாய்மொழி- 8-8 ) ஞான ஆனந்தாதி களுக்கு முன்னே சேஷத்வம் சொல்லிற்று ..
(அடியேன் உள்ளான் -8-8-2-ஞாத்ருத்வம் ஜடப் பொருள்களின் வியவ்ருத்தி
பரமாத்மாவுக்கே சேஷன் ஜீவாத்மா -என்று ஓ -காரத்தாலே–பரமாத்வாவுக்கு அநந்யார்ஹ சேஷத்வம் என்று
சொன்ன பின்பு தான் அந்த சேஷிக்கு சேஷன் ம காரம் என்கிறது –)
மணத்தையும் ஒளியையும் கொண்டு விரும்பப் படும் பூவும் மாணிக்கமும் போல ,
அவனுக்கு ஆன போது விரும்பப் பட்டு
பிறர்க்கு ஆன போது ஏறாளும் இறையோனில் ( திரு வாய் மொழி 4-8 ) படியே கை விடப்படும்
ஆத்மா என்று தோற்றுகைக்காக
அடியோம் என்று ( திருப் பல்லாண்டு -10 ) எழுத்துப் பட்ட அன்று சேஷத்வம் எல்லோருக்கும் பொதுவாகையாலே
ஆத்மாக்கள் திரளையும்
ஆத்மாக்கள் என் வுடைமையையும் ( பெரியாழ்வார் திரு மொழி 5-4-1 ) என்னும் படி
ஆத்மாவுக்கு சேஷமான அசித்தையும் இம் ம -காரம் தான் காட்டக் கடவது .
(ஞானம் உடைய சேஷன் -ம காரம்-என்று இல்லாமல் -சேஷத்வமுடைய ஆத்மா ஞானமும் உடையவனும் என்கிறது )
—————————–
அநந்தரம் த்ருதீய அக்ஷரமான மகாரத்தின் அர்த்தத்தை அருளிச் செய்கிறார் -மகாரம் -என்று தொடங்கி –
ககராதி மகாராந்தமான அக்ஷரங்களில் மகாரம் இருபத்தஞ்சாம் அக்ஷரம் ஆகையால் தத்துவங்களில் இருபத்தைந்தாம்
தத்துவமான ஆத்மாவைக் காட்டும் –
முதல் இருபத்து நாலு அக்ஷரங்களும் இருபத்து நாலு அசேதன தத்துவங்களைக் காட்டும் –
இவ்விடத்தில்
பூதாநி ச க வர்க்கேண
ச வர்க்கேண இந்திரியாணி ச – ( கர்ம இந்திரியங்கள் -)
ட வர்க்கேண த வர்க்கேண ஜ்ஞான கந்தாத யஸ் ததா-
மன பகா ரேணை வோக்தம்
பகாரேண த்வஹன்ருதி-
பகாரேண பகாரேண மஹான் ப்ரக்ருதி ருச்யதே
ஆத்மா து ச மகாரேண பஞ்ச விம்ச ப்ரகீர்த்தித-என்கிற பாத்திமா உத்தர புராண வசனம் அனுசந்தேயாம்
ஜீவாத்மாக்களுடைய ஸ்வரூபமான ஞாத்ருத்வ சேஷத்வங்களிலே சேஷத்வமே பிரதானம் –
ஆகை இறே ஆழ்வார் ஆத்ம ஸ்வரூபத்தை அடியேன் -8-8-2- என்று நிர்த்தேசித்தார்
இங்கே
அஹம் ப்ரத்யய வேத் யதவாத்
மந்த்ரே பிரதம மீரணாத்
பாஷ்ய காரஸ்ய வஸனாத்-
இத்யாதி பூர்வர்கள் வசனம் அனுசந்தேயம்
ஜீவாத்மா ஸ்வரூப பரமான நான்கு திருவாய்மொழிகளில் ஒன்றான ஏறாளும் இறையோனில் ஸ்ரீ ஆழ்வார்
ஏறு திருவுடையை ஈசன் உகப்புக்கு வேறு படில் என்னுடைமை மிக்க வுயிர் -தேறுங்கால்
என் தனக்கும் வேண்டா -திருவாய்மொழி நூற்றந்தாதி -38-என்று அருளிச் செய்கிறார் –
(பயிலும் -பாகவதருக்கு சேஷம் /அடுத்து அவனால் விரும்பப்படாதவை த்யாஜ்யம் /
கண்கள் சிவந்து -பிடித்தது என்றால் ஸ்ரீ கௌஸ்துபம் போலே / கரு மாணிக்க அநந்யார்ஹத்வம் -இப்படி நான்கும் )
சேஷத்வ பஹிர்ப்பூதம் அஸஹ்யம் -என்று இறே
ஸ்ரீ எதிகட்க்கு இறைவன் ஸ்ரீ யமுனைத் துறைவன் ஸ்ரீ ஸ்தோத்ர ரத்ன நிஷ்கர்ஷம்-
(அணைய-இத்யாதி -பெருமக்கள் பரிக்ரஹித்தது -பார்த்தோம் )
இவற்றை அருளிச் செய்கிறார் -கண்கள் சிவத்தில் படியே -என்று தொடங்கி –
சேஷத்வம் சர்வ ஆத்ம சாதாரணம் ஆகையால் மகாரம் ஆத்ம சாமான்ய பரம் என்கிறார் அடியோம் என்று தொடங்கி –
தத் உபகரணம் வைஷ்ணவ மிதம் -அஷ்ட ஸ்லோகீ-1-என்ற ஸ்ரீ பட்டர் ஸ்ரீ ஸூக்தியை அடி ஒற்றி அருளிச் செய்கிறார்
அசித்தையும் காட்டக் கடவது -என்று –
அதாவது பிரதானரான சேதனரைச் சொன்ன போதே அவர்களுக்கு
போக்ய போக உபகரண போக ஸ்தான ரூபேண சேஷமான அசித் வர்க்கமும்
பகவத் சேஷத்தயா இப்பதத்தில் அனுசந்தேயம் என்றபடி –
(சேதனனுக்கு சேஷம் இல்லை -பகவத் சேஷமாகவே நமது சரீரம் இத்யாதிகள் )
சேதனத்வாரா அசித்தை உபலஷிக்கும் படி சேதன வாசியான பதத்தை எடுக்கிறது
அந்த அசித்தில் காட்டிலும் சேதனனுடைய ப்ராதான்யம் தோற்றுகைக்காக –
ஆக
பத த்ரயாத்மகமான ப்ரணவத்தில்-
பிரதம சரம பதங்கள் சம்பந்தி த்வய விசேஷத்தைச் சொல்லிற்று –
மத்யம பதம் அவற்றினுடைய சம்பந்த விசேஷத்தைச் சொல்லிற்று
(இலக்கண குறிப்பு
ம் மூன்றாவது பதம்
மந ஞாநே தாது -அ லோபம் -அந் லோபம் -ஞானத்துக்கு ஆஸ்ரயம் -அறிவை உடையவன் என்ற அர்த்தம் தேறும் )
———————————————————————————-
( 1–நம பிரத்வீ பாவம்-பணிவுடன் வணக்கம் -மனசாலும் வாயாலும் காயிகத்தாலும்–
நீயே உபாயம் -வேறே புகல் இல்லை -உபாயத்தை சொல்லும் –
பிரணவம் ஸ்வரூபம் சொல்லி -அதுக்கு அநு ரூபமான -ஏற்ற -ஒப்பதான- உபாயத்தை இது சொல்லும் –
2–ஸ்வரூப விரோதங்களான அகங்கார மமகாரங்களைத் தொலைத்து கொடுக்கும் என்றுமாம் –
3–ததீய சேஷத்வம் பாரதந்தர்யம் -அடியார்க்கு அடியான்-உற்றதும் உன் அடியார்க்கு அடிமை –
4-அவனே உபாயம் என்னும் இடத்தையும் ,வெளி இடுகிறது -நமஸூ-)
நமஸ் – சப்தார்த்தம் ..
சர்வ ரக்ஷகனான ஸ்ரீயபதிக்கு அநந்யார்ஹ சேஷமாகை யாகிற நிலை நின்ற உறவை
ஆத்மாவை அறிய ஒட்டாத விரோதியை -நம -என்று கழிக்கிறது ..
(சர்வ ரக்ஷகனான ஸ்ரீ யபதிக்கு-அ காரமும் லுப்த சதுர்த்தியும் -அநந்யார்ஹ சேஷம் உகாரம் –
நிலை நின்ற உறவு ஆத்மா மகாரம் -பிரணவ அர்த்தம் பார்த்ததை சுருக்கமாக இங்கே அருளிச் செய்கிறார்
அகண்ட நமஸ் -சகண்ட நமஸ்-இரண்டும் உண்டே -நான் எனக்கு உரியவன் அல்லேன்-
சொன்னாலே தேவரீருக்கு உரியவன் அர்த்தம் சித்திக்கும் –
அல்லேன் எனக்கு நான்-என்று நிஷேதம் -முன்னாக வீடு மின் முற்றவும் போலே –
கண்டனன் கற்பினுக்கு அணியை த்ருஷ்டா சீதா -போலே -)
நமஸ் ஸூ -ந என்றும் ம -என்றும் இரண்டு பதமாய் இருக்கும் ..
ம -என்கிற இத்தை ந – என்று கழித்து – வீடுமின் முற்றத்தின் ( திரு வாய் மொழி 1-2 ) -போல
கழித்துக் கொண்டு ..கழிக்கப் படும் அத்தைக் காட்டுகிறது ..
அவன் உடையவனாய் , தான் உடமை -யானமை நிலை நிற்பது –
தனக்குத் தான் கடவ னாகவும் ,
தன்னது அல்லாத ஆத்மாத்மீயங்களை -என்னது -என்று நினைக்கிற
அகங்கார மமகாரங்களை
வேர் முதல் ( திரு வாய் மொழி 1-2-3 ) மாய்த்தா ல் ஆகையாலே
உ -காரத்திலே கழிவுண்ட பிறரிலே சொருகின தன்னை -நம -என்று வெளியாக கழிக்கிறது —
சம்சாரத்துக்கு விதையாய் ,காட்டுத் தீயும் மிருத்யுவும் போல , ஸ்வரூபத்தை சுட்டு உரு அழிக்கிற –
நான்- எனது -என்கிற கழித்தல் இறே ஸ்வரூப சித்தி உள்ளது ..
தனக்கும் , பிறர்க்கும் ஆளானானால் ,அவனுக்கும் அவன் வுடையார்க்குமாக வேண்டுகையாலே ,
பகவத் சேஷத்வம் ,பிராட்டி அளவும் சென்றார் போல ,மிதுன சேஷத்வமும் ,
திரு மாலுக்கு உரிய தொண்டர் தொண்டர் ( திரு வாய் மொழி 6-9-11 ) அளவும் ஓடி ,
மெய் அடியார்கள் தம் எல்லையில் அடிமையையும் ( பெருமாள் திரு மொழி 2-10 ) இது காட்டக் கடவது .
ஒருவன் தனக்கு என்று எழுதிக் கொண்ட அடிமையும் , காணியும் ,
பார்யா புத்ராதிகளுக்கும் விற்று விலை செல்லும் படி ஆக்கினால் ,
அவனுக்கு நிலை நின்றதாம் போலே ,
அற விலை செய்த ( திரு வாய் மொழி 8-1-10 )
அடிமை அறக் கொண்ட ( திரு வாய் மொழி 4-9-6 )
ஆத்ம ஆத்மீயங்களை எந்தம்மை விற்கவும் பெறுவார்கள் ( பெரியாழ்வார் திருமொழி 4-4-10 )..
ஈது எல்லாம் உனதே ஆக ( திரு நெடும் தாண்டகம் -27 ) என்னும் படி
அடியார்க்கு ஆட்படுத்தால் இறே ( திருப் பள்ளி எழுச்சி )
அவன் நிலை ஆளாக ( பெரிய திரு மொழி 3-6-9 ) உகந்தான் ஆவது–
( ஸ்வரூபத்துக்கு நிலை பெற்று இருப்பது அடியார்க்கு ஆட்பட்டால் அன்றோ )
எல்லாரும் தாச பூதராய் இருக்க ,
அவர்கட்கு அஙகு அருள் இல்லா ( பெரிய திரு மொழி 5-6-8 ) என்னும் படி சிலரை த்விஷத்துக்கள் என்று
அழல விழித்து ( பெரியாழ்வார் திரு மொழி 1-8-5 )
சிலர் பக்கலிலே என்றும் அருள் நடந்து ( பெரிய திரு மொழி 3-10-1-ஷிபாமி என்று சொல்ல வேண்டாத அடியார் – )
என் தமர் ( பெரிய திரு மொழி 10-6-5 -நமன் தமர் என் தமரை வினவப் பெறுவார் அலர் )
என் அடியார் (பெரியாழ்வார் திரு மொழி 4-9-2 )
என்னுடைய பிராணங்கள் ,(மம பிராணா பாண்டவர் )
என்னுடைய ஆத்மா ,
இரண்டாம் அந்தராத்மா , என்று அவன் விரும்புகையாலே
அவனை உள்ளத்து ( பெரிய திரு மொழி 11-6-7 ) எண்ணாதே இருப்பாரோடு ( பெரிய திரு மொழி 2-6-1 ) உறவு அறவும்
எண்ணும் நெஞ்சு வுடையாருக்கு ( பெரிய திரு மொழி 2-6-2 ) அடிமைப் படுகையும்
ஸ்வரூபம் என்னும் இடத்தை
உ -காரமும் நமஸ்ஸூம் அறிவிக்கிறது என்று இறே ..
திரு எட்டு எழுத்தும் கற்ற ஆழ்வார் –
மற்று ஓர் தெய்வம் உள்ளது என்று இருப்பாரோடு வுற்றிலேன்
வுற்றதும் உன் அடியார்க்கு அடிமை ( திரு வாய் மொழி ( பெரிய திரு மொழி 8-10-3 ) என்றது —
ஆத்மாவினுடைய சேஷத்வம் இவ்வளவும் சென்று நிலை நின்றால் போல ,
அவனுடைய ரஷகத்வமும் நிலை நிற்பது ..ஸ்வ ரஷணத்திலே தான் அந்வயியாது ஒழிந்தால் ஆகையாலே
இந்த ஸ்வாதந்த்ரயத்தை அறுத்து ,அவனே உபாயம் என்னும் இடத்தையும் ,வெளி இடுகிறது -நமஸூ ..
சரணம் புகச் சொல்ல -நமஸ்ஸைப் பண்ணினார்கள் -என்கிற வழியாலே
உபாயத்தைக் காட்டுகிறதாகவும் சொல்லுவார்கள் —
(ஸ்தான பிரமாணம் -இந்த இடத்தில் நம சொல்வதே சரணாகதி என்றவாறு –
நெறி வாசல் தானேயாக நின்றானை-ஸ்வ தந்த்ரனான அவனே ரக்ஷகன் அவனே உபாயம் –
சேஷத்வம் சொல்ல வந்தது ஓங்காரம்
பாரதந்தர்யம் சொல்ல வந்தது நமஸ்ஸூ
இஷ்ட விநியோக அர்ஹத்வம் சேஷத்வம்
இஷ்ட வினியுஜ்யமாநத்வம் பாரதந்தர்யம் -)
நடுவே கிடந்து ,ஸ்வரூபத்துக்கும் ,உபாயத்துக்கும் ,பிராப்யத்துக்கும் , களை அறுத்து ,
நல் வகையால் ( திருப் பல்லாண்டு -11 )
வேம்கடத்து உறைவார்க்கு ( திரு வாய் மொழி 3-3-6 )
மேலைத் தொண்டு உகளித்து ( திரு வாய் மொழி 10-8-7 ) என்று
ஸ்வரூபமும் ,உபாயமும் , பிராப்யமும் தானாய்-
( தீய வகை — நமோ சொல்லாமல் நாராயணாய -ஸ்வரூபம் சிக்ஷிக்கிறது
வேங்கடத்து உறைவார்க்கு -சதுர்த்தியில் அர்த்தம் –நம-என்னலாம் கடமை -உபாய பாவம் என்னிடத்தில் இல்லை –
அவனுக்கே சொத்து நான் -எனக்கு அன்று -உபாய பாவம் இல்லை –
திருப்பேர் நகர் -இறுதி பதிகம் பெற்ற திவ்ய தேசம் –
தொழும் சொல் -அதுக்கும் மேல் அந்தி தொழும் சொல் -நம இத் ஏவ வாதிந –
திருவாய் மொழி ஆகிய சொல் -தான் அந்தி தொழும் சொல் -நம அர்த்தமே இது – )
உற்று எண்ணில் ( திரு வாய் மொழி 7-9-10 ) ஆத்ம சமர்பணத்துக்கும் தான் வுரியன் அல்லாத
பார தந்த்ரியத்தின் மிகுதியை
எனது ஆவியும் உனதே (திரு வாய் மொழி 5-7-10 )
என் உடைமையும் நீயே (திரு வாய் மொழி 2-9-9 ) என்கிறபடியே காட்டி ,
ஸ்வரூபத்தை ஓட வைக்கையாலே இத்தை ( நமஸ்ஸை ) ஆந்தராளிக வைஷணவ பதம் என்று
பூர்வாசார்யர்கள் விரும்புவார்கள் ..
(ஞானம் வந்த பின்பும் ஆத்ம சமர்ப்பணம் -உற்று எண்ணில் -சிந்தித்துப் பார்த்தால் முன்பு செய்த பெரிய களவுக்கு ஒக்குமே
ஓட வைக்கையாவது ஒவ் ஒன்றிலும் ந ம சேர்த்து அர்த்தம் புரிந்தால் தானே என்றபடி )
( ஓம் ந ம–நம ந ம -நாராயாணாயா ந ம -என்று மூன்றுடன் அன்வயித்து அர்த்தங்கள் உண்டே
மத்திமாம் பதம் போலே நடு நக்ஷத்ரம் -ஸ்ரீ மதுரகவி ஆழ்வாரும் ஸ்ரீ அனந்தாழ்வானும் திரு அவதாரம்
பிரிந்து உள்ள ந ம ஸ் -நடுவில் இருப்பதால் இது ஸ்வரூபம் கதி கம்யம் மூன்றும் சிஷிதம் -அழுக்கு எடுக்கப்படும்
புரதா ஈஷிதா ஓம் ந ம ஸ்வரூபம் சிஷிதம்-எனக்கு சேஷன் அல்லேன் என்று காட்டும் -முதல் அழுக்கு போகும் –
ஸ்தான தகா -உபாயம் சிஷிதம்-உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன் -சமித்து பாதி சாவித்ரி இல்லாமல் –
என் நான் செய்கேன் யாரே களை கண் என்னை என் செய்கின்றாய் முதலில் சொல்லி
உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன் -தெளிவாக அருளிச் செய்தார் –
பச்சாத் அ பி -நாராயணாய ந ம-புருஷார்த்த சிஷிதம் –
அவன் ஆனந்தத்துக்காகவே -என் ஆனந்தத்துக்காக இல்லை என்று அழுக்கு கழித்து சிஷை )
————————————————————
இனி திருமந்திரத்தில் மத்யம பதமான நமஸ்ஸூக்கு அர்த்தம் அருளிச் செய்கிறார் -சர்வ என்று தொடங்கி –
அதில் அவாந்தர பத பேதத்தை அருளிச் செய்கிறார் -நமஸ் ஸூ என்று தொடங்கி –
வீடுமின் முற்றவும் -என்னுமா போலே -நம-என்று நிஷேத பூர்வகமாக நிஷேத்யத்தைச் சொல்லுகிறது –
இதில் மகாரம் -மன ஞானே-என்கிற தாதுவிலே -ஷஷ்ட்யந்தமாய் -எனக்கு நான் உரியேன் -என்கிறது
நகாரம் இதை நிஷேதித்து -யானே நீ என்னுடைமையும் நீயே -2-9-9–என்கிறபடியே –
தன்னுடைய மமதா நிவ்ருத்தியையும் -மமதைக்கு ஊற்றான அகங்கார நிவ்ருத்தியையும் அனுசந்திக்கிறது –
கீழே சதுர்த்தியில் சொல்லுகிற பாரதந்தர்யத்தாலே ஸ்வதந்தர்யம் கழி உண்டு இருக்க -இங்கு நிவ்ருத்தம் ஆகிற
அஹங்காரம் மமகாராம் ஆகிறது என் என்னில்-
அங்கு பகவத் பாரதந்தர்ய விரோதியான ஸ்வ ஸ்வா தந்தர்யத்தை கழிக்கிறது –
இங்கு ஸ்வ ரக்ஷணத்தில் தான் இழிகை இறே அதுக்கு விரோதியாய் அறுவது –
அதாகிறது –
ஸ்வ ரக்ஷணமாக சாதன அனுஷ்டானம் பண்ணுகை -அது ஸ்வரூப ஹாநியாய் இறே இருப்பது –
பர்த்தாவுக்கு சேஷமான சரீரத்தை அவகாதாதி வியாபாரங்களாலே பதி விரதை ரஷிக்கை யாகிறது
பர்த்தாவுக்கு ஸ்வரூப ஹானியாய்-தனக்கும் ஸ்வரூப ஹானியாய் இறே இருப்பது –
ஆகையால் நவ த்வார புரமான லங்கா புரத்திலே நிருத்தையான பிராட்டி -தத் தஸ்ய சத்ருசம் பவேத் -என்று
சக்கரவர்த்தி திருமகன் பக்கலிலே ந்யஸ்த பரையாய் இருந்தால் போலே இருக்கை இவனுக்கு ஸ்வரூபம் –
ஆக இத்தால்
ஸ்வ ரக்ஷணத்தில் இழிகை ஸ்வரூப ஹாநியாம் படி ஈஸ்வரனுக்கு அத்யந்த பரதந்த்ரம் இந்த ஆத்ம வஸ்து என்றதாயிற்று –
ஸ்வ ரக்ஷண ஷமனான பர்த்தா இருக்க -ஸ்வ ரக்ஷணத்தில் நின்றும் பதி விரதை கை வாங்கினால்
பர்த்தாவே ரக்ஷகனாய் அறுமோ பாதி
இவனும் அத்யந்த பரதந்த்ரனாய் அற்றால் ஈஸ்வரனே இறே ரக்ஷகனாய் அறுவான்-
ஆகையால் ஈஸ்வரனுடைய உபாய பாவமும் ஆர்த்தமாகச் சொல்லிற்று ஆயிற்று –
நின் திரு வெட்டு எழுத்தும் கற்று நான் உற்றதும் உன் அடியார்க்கு அடிமை -என்று திரு மங்கை ஆழ்வார் அனுசந்தித்து
அருளிச் செய்கிறார் -தனக்கும் பிறர்க்கும் -என்று தொடங்கி –
ஈஸ்வரனுக்கு இவன் அத்யந்த பரதந்த்ரனாவது -அவனுக்கு இஷ்ட விநியோக அர்ஹன் ஆகில் இறே –
அவனுக்கு இஷ்டர் ஆகிறார் -ஞானி த்வாதமைவ மே மதம் -என்கிற ஸ்ரீ வைஷ்ணவர்கள் இறே –
ஸ்ரீ வைஷ்ணவர்கள் ஆகிறார் -ஜங்கம ஸ்ரீ விமாநானி-என்கிறபடியே –
ஈஸ்வரனுக்கு திவ்ய மங்கள விக்ரஹத்தோபாதி சரீர பூதராய் அறுகையாலே-
( ஜங்கம -நடமாடும் -திவ்ய விமானம் ஸ்ரீ வைஷ்ணவர்கள் -)
பர்த்ரு சரீரத்தில் மேல் விழுகிற ஸ்த்ரீக்கு பாதி வ்ரத்ய பங்கம் இல்லாதவோபாதி
அநந்யார்ஹ சேஷத்வத்துக்கு பங்கம் வாராது -( அவனது பிரசாத பாத்திரமான ஸ்ரீ வைஷ்ணவர்கள் தானே அவனது சரீரம் -)
அநந்யார்ஹ சேஷத்வத்தினுடைய அப்ரசுயுத்திக்கு சரீரத்வம் ப்ரயோஜகம் ஆகில் -சேதன அசேதன விபாகம் அற-
சர்வமும் சரீரமாய் அன்றோ இருப்பது –
ஆனால் சரவர்க்கும் சேஷ பூதனாக வேண்டி வந்ததீ என்னில் -அவனுக்கு பிரசாத பாத்ரரான ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு
சேஷமாய் இருக்கும் இருப்பு சரீரத்வ சாமான்யத்தாலே வியபிசரியாது-
பர்த்தாவோடு பார்யைக்கு அவ்யவதாநேநா சம்பந்தம் உண்டாகா நிற்கச் செய்தேயும் -ஆர்த்தவாதி தோஷ தூஷிதை யானவன்று –
பர்த்தாவோடு ப்ரஜைகளோடு வாசி அற எல்லார்க்கும் அஸ்புருசையாய்-
குளித்தவாறே ஸம்ஸ்லேஷிக்கலாம்படி இருக்கிறாப் போலே
அகங்கார மமகராதிகள் உண்டான வென்று த்யாஜ்யமாய் -அவை போன வன்று இவை தானே உபேதாயமாகக் கடவது –
ஆக பிரயோஜகமாய் அற்றது -ஈஸ்வரனுக்கு பிரசாத பாத்ரமான சரீரம் உத்தேச்யமாகக் கடவது –
நிக்ரஹ பாத்ரமான சரீரம் த்யாஜ்யமாகக் கடவது -இத்தை அருளிச் செய்கிறார் -எல்லாரும் -என்று தொடங்கி –
நமஸ் சப்தத்தால் ( பாரதந்தர்ய )ஸ்வரூபம் சொல்லப் பட்டால் போலே உபாயமும் சொல்லப்படுகிறது –
இது தன்னை அருளிச் செய்கிறார்
ஆத்மாவினுடைய என்று தொடங்கி –
கச்சத்வம் ஏனம் சரணம் சரண்யம் புருஷர்ஷபா-என்று சரணம் புகுறுங்கோள் -என்று உபதேசிக்க
திரௌபதியா சஹிதா சர்வே நமஸ் சக்ரு ஜனார்த்தனம் -என்று அனுஷ்டான வேளையிலே
நமஸ்காரத்தை பண்ணினார்கள் -என்கிற
ஸ்தான பிரமாணத்தாலே நமஸ் சப்தம் சாப்தமாகவே உபாய வாசகமாகக் கடவது –
இத்தை அருளிச் செய்கிறார் -சரணம் என்று தொடங்கி-
( ஆக ஆர்த்தமாகவும் சாப்தமாகவும் நமஸ்ஸூ காட்டும் )
ஆக
பிரணவத்தாலும் -நமஸ் -சப்தத்தாலும் –
ஸ்வரூபமும் ஸ்வரூப அனு ரூபமான உபாயமும் சொல்லிற்று ஆயிற்று –
மந்த்ர ப்ரஹ்மணி-என்கிற பட்டர் ஸ்ரீ ஸூக்தியை அடி ஒற்றி அருளிச் செய்கிறார் –
நடுவே கிடந்தது -என்று தொடங்கி –
காகாஷி நியாயத்தாலே நமஸ்ஸூ – கீழும் -மேலும் -ஸ்வ ஸ்தானத்திலும் அன்வயித்து
ஸ்வரூப உபாய புருஷார்த்தங்களை சிக்ஷிக்கிறது என்று இறே பட்டர் அருளிச் செய்தது –
இத்தால் பிரதம பதத்தில் சொன்ன ஸ்வரூபத்துக்கு விரோதியும் –
நம பதத்தில் அர்த்தமாக சித்திக்கிற உபாயத்துக்கு விரோதியும்
உத்தர பதத்தில் சொல்லுகிற ப்ராப்யத்துக்கு விரோதியும் கழிக்கக் கடவதாய் இறே இருப்பது என்றபடி –
ஆத்மாத்மீயங்கள் இரண்டும் அத்தலைக்கு ப்ரகார தயா சேஷம் -என்றும் –
துக்கத்தை போக்குவாய் போக்காது ஒழிவாய் -வேறு ஒரு ரக்ஷக வஸ்துவை உடையேன் அல்லேன் என்றும் –
உன் உகப்புக்கு புறம்பான எங்களுடைய ஆசையைப் -போக்கு என்றும்
நமஸ் சப்தத்தாலே சொல்லிற்று ஆயிற்று என்றபடி –
(அப்ருதக் சித்த விசேஷணம் பிரகாரம் -விட்டுப் பிரியாமல் சார்ந்தே இருக்கும்
மாணிக்கம் ஒளி –பூ மணம்-போலே )
ஸ்வரூப உபாய புருஷார்த்தங்கள் மூன்றுக்கும் விரோதி அகங்கார மமகாரங்கள் ஆகையால்
தன் நிவ்ருத்தியைச் சொல்லுகிறது -நமஸ் சப்தம் என்றதாயிற்று –
( இப்படி மூன்று இடங்களிலும் விரோதியாக இருப்பதால் நீர் நுமது என்ற இவை வேர் முதல் சாய்க்க வேண்டும்
ந ம -விளக்கம்
புராதா அன்வயம் ஓம் ந ம -ஸ்வரூபம் சிஷிதம் -எனக்கு நான் அல்லேன் -நான் எனக்கு அடிமை அல்லேன் –
ஸ்வா தந்தர்யம் பகவானுக்கே -நாம் பரதந்த்ரர்கள்
ஸ்தான தயா அன்வயம் -நம ந ம -என்னை ரஷிக்கும் பொறுப்பு – கதி உபாயம் என்னது இல்லை -என் முயற்சி லேசமும் இல்லை –
பஸ்ஸாத் அன்வயம் நாராயணாயா ந ம-காம்யம் புருஷார்த்தம் சிஷிதம் -அவன் ஆனந்தமே பலம் -என் மகிழ்ச்சி பலம் ஆகாது –
உன் ஆனந்தத்துக்குக்கவே கைங்கர்யம்
இப்படி ந ம மூன்று இடங்களிலும் மூன்று அர்த்தங்கள் -வருமே
மூன்று சேர்க்கை -நாராயணனுக்கே உரியவன் -எனக்கு சேஷம் அல்லேன் –
உபாயத்தில் நம் முயற்சி இல்லை -ஸ்தானத்தில் அன்வயம் –
நமக்கும் அவனுக்கும் ஆனந்தத்துக்காக -களை -விட்டு -மற்றை நம் காமங்கள் மாற்று –
படியாய் கிடந்தது பவள வாய் காண வேண்டுமே
———————————————————————————————————-
நாராயண பதார்த்தம் –
நாராயண –
பதம் தன்னை அடியானாக உணர்ந்தவன் சேஷி பக்கல் அடிமையை இரக்கும் படியைச் சொல்லுகிறது ..
நாராயணன் என்றது அ – காரத்தில் சொன்ன சேஷியை வெளி இடுகிறது –
நர /நாரா நாராக / என்றும் அழியாத சேஷ வஸ்துக்களின் திரளைக் காட்டுகிறது –
நரன் என்று சொல்லப் படுகிறவன் பக்கல் நின்றும் பிறந்த வற்றையும் ,
தத்வங்களிலே முற்பட்ட பிரதானமான அப்புக்களையும் நாரங்கள் என்னக் கடவது-
என்றும் உண்டாய் ,
ஒரு படிப் பட்டு
ஆவது அழிவது ஆகா நிற்க ,ஸ்வரூப நாசம் இன்றிக்கே இருக்கிற
இரண்டு விபூதியில் உள்ள வற்றை எல்லாம் சொன்ன படி –
இனன் உணர் முழு நலம் ( திரு வாய் மொழி -1-1-2-) என்கிற ஞான ஆனந்தாதிகளும் ,
(முழு உணர்வு முழு நலம் -கட்டடங்க ஞானம்-சர்வஞ்ஞத்வம் -கட்டடடஙக ஆனந்தம் – )
மழுங்காத ஞான (திரு வாய் மொழி 3-1-9 )
உயர்வற உயரும் (திரு வாய் மொழி 1-1-8 ) என்கிற ஞான சக்தி யாதிகளும்
ஆசறு சீலாதிகளும் ( திரு வாய் மொழி 5-3-1)
(மாசறு சோதி குற்றம் அற்ற திரு மேனி-பக்தாநாம் என்று இருக்கை –
ஆசறு சீலன் -குற்றமற்ற சீல குணம் -தனது பேறாக கலக்கும் ஸ்வ பாவம்
உணர் முழு நலன் -ஸ்வரூபம் ஞான ஆனந்த மயன்-
சங்கல்ப ரூப ஞானம் -ஞானம் உடையவன் -ஞான குணத்வம் சொல்லும்
பகவான் -ஷட் குணம் -ஞானம் பலம் ஐஸ்வர்ய வீர்ய சக்தி தேஜஸ் -அந்தரங்க குணங்கள் -ஸ்ருஷ்டிக்கு உபயோகிகள்
சீலாதி குணங்கள் – இவை அடுத்த நிலையான குணங்கள் -)
இவற்றை வெளி இடுகிற
மணி உருவில் பூதம் ஐந்தான (திரு நெடும் தாண்டகம் -1-)
நீல சுடர் விடு மேனியும் (திரு விருத்தம் –14-)
(அப்ராக்ருதம் -பஞ்ச உபநிஷத் சக்தி மயமான திரு மேனி -மணி உருவம் –
மாலே மணி வண்ணா -உள்ளே இருப்பதைக் காட்டும் -நம் சரீரம் ஸ்வரூபம் திரோதானம் –
இதுக்கு எதிர் தட்டான சுத்த சத்வம் -எனவே மறைக்காதே –
மணி உருவிலும் இருப்பான் பூதம் ஐந்திலும் இருப்பான் என்றுமாம் –
மாணிக்கச் செப்பிலே பொன் போலே தனக்கு ஆஸ்ரயமான குணங்கள் -ஸ்வரூபம் பார்க்க முடியாது
குணங்கள் தனியாக அனுபவிக்க முடியாது திருமேனி தானே இவற்றை வியக்தமாகக் காட்டும் )
வெறி கொள் சோதி மூர்த்தி (திரு வாய் மொழி-6-9-8- )
மலர் புரையும் ( திரு நெடும் தாண்டகம்-5-) என்கிற சௌகந்த்ய சௌகுமார்யாதிகளும்
முகச் சோதி மலர்ந்ததுவோ ( திரு வாய் மொழி 3-1-1 ) என்னும் படியாய் இருக்கிற
சென்னி நீண் முடி ஆதியாய உலப்பில் அணி கலத்தன் ( திரு வாய் மொழி 5-5-9 ) பூஷணங்களும்
அம் தாம வாள் முடி சங்காழி நூலாரம் ( திரு வாய் மொழி-2-5-1-) என்கிற ஆபரணங்களோடு
ஒரு கோவையான ஆயுதங்களும்
பார் மகள் பூ மங்கையோடு சுடர் ஆழி சஙகு இரு பால் ( பெரிய திரு மொழி -2-10-9- ) என்னும் படி
ஆழ்வார்களோடு ஓக்க அனுபவிக்கிற நாய்ச்சிமார்களும் ,
திரு மகள் பூமி ஏவ மற்ற அமரர் ஆட் செய்வார் ( திரு வாய் மொழி 8-1-1 ) என்ற சேர்த்தியிலே
ஏவிற்றுச் செய்கிற நித்ய ஸூரிகளும் (பெரியாழ்வார் திரு மொழி 4-2-6-)
அடியோரோடு இருந்தமை ( திரு வாய் மொழி-10-9-11-) என்னும் படி இவர்களோடு சாம்யம் பெற்ற முக்தரும் ,
சென்றால் குடையாம் ( முதல் திருவந்தாதி -53 ) என்று அவர்கள் உபகரண ரூபமாகக் கொண்ட
சத்ர சாமராதிகளும் ,(ரூபமாகக் கொண்ட – நித்ய ஸூரிகளே இவை )
தேவர் குழாத்துக்கு இருப்பிடமான ( திரு வாய் மொழி -5-5-10- ) திரு மா மணி மண்டபமும்
அத்தைச் சூழ்ந்த கொடி அணி நெடு மதிள் கோபுரமும் ( திரு வாய் மொழி 10-9-8-)
அதில்
வாசலில் ( வழியில்-அர்ச்சிராதி கதி மார்க்கத்தில் மாதவன் தமர் இவர்கள் என்று அந்தப்புர பரிகரம் என்று சத்கரிப்பார்கள் )
வானவரும் ( திரு வாய் மொழி 10-9-5)
மீட்சி இன்றி வைகுந்த மா நகரும் ( திரு வாய் மொழி -4-10-11 )
கோவில் கொள் தெய்வங்களினுடைய திவ்ய விமானங்களும் ( திரு வாய் மொழி 8-6-5 )
மாட மாளிகை (நாச்சியார் திருமொழி 4-5)என்னும்படி
(விதி வகை புகுந்தனர் என்று )நல் வேதியர் ( திரு வாய் மொழி 10-9-10 ) பதிகளைச் சூழ்ந்த
ஆராமங்களும் (சிறிய திரு மடல் -71 )
(திரு மால் திருக் கோளூரில் )அந்த பூ இயல் பொழிலைச் சூழ்ந்து (திரு வாய் மொழி 6-7-5 ) வளர்கிற
ஒத நெடும் தடங்களும்
(தடாகங்களும் என்றவாறு திருவாய் மொழி 5-9-7-ஐரம்வத தீர்த்தம் உண்டே அங்கு- விராஜை நதி -இது தடாகம் )
அவற்றுக்கு அடியான விரஜையும் ,
வைகுந்த வானாடும் ( பெரிய திருவந்தாதி -68 )
சூழ் பொன் விசும்பான பரம ஆகாசமும் ( திரு வாய் மொழி 10-8-11 )
(ஆண்மின்கள் வணக்கம் ஆழியான் தமர் என்று -ஸ்ரீ பரமபதம் -விண்ணோர் நாடு தானே –
தொண்டர் ஆள்வது -நிரதிசய தேஜோ மயமான -பொன் -)
(இது வரை நித்ய விபூதி -மேலே லீலா விபூதி )
சுரர் அறிவரு நிலையான ( திருவாய் மொழி 1-1-8 ) மூல பிரக்ருதியும் ,
(விண் முதல் முழுவதும் -ஆகாசத்தை சொல்லி -உண்டையும் பாவும் போலே கோக்கப் படுவதால்
பிரக்ருதியை இச்சப்தம் சொல்லும்)
மங்கிய வருமான ( திருவாய் மொழி 8-1-6-சம்சாரத்தில் சிறைப்பட்ட ) பக்த வர்க்கமும் ,
கால சக்கரமும் (திரு வாய் மொழி 4-3-5 ) ,
(கண்ணன் எம்பிரான் அம்மான் கால சக்கரத்தானுக்கே
ஆழி கொண்டு மறைத்து -இருளை ஓட்டும் அருளார் திருச் சக்கரம் ஏந்தியவன் என்றுமாம் )
மானாங்காரம் ( திரு வாய் மொழி 10-7-10/11) முதலான தத்துவங்களும் ,
அவற்றாலே சமைந்த பத்தினான் திசைக் கண் நின்ற ( திரு சந்த விருத்தம் -79-பதினான்கு ஈர் ஏழு லோகங்களில் வாழ்பவர் )
புற இமையோர் ( திருவாய்மொழி 4-9-8 ) வாழ் தனி முட்டை கோட்டையும்
( சதுர் தச புவனங்களும் அவற்றைச் சூழ்ந்த தச அண்டங்கள் -அண்டம் முட்டை தானே –
கோட்டை வெளி போக முடியாதே அவன் அருள் அன்றி )
மனிசர் தெய்வம் மற்றும் மற்றும் மற்றும் முற்றுமான பதார்த்தங்களும் ( திருவாய்மொழி 3-6-1 ),
(ஸ்தாவர ஜங்கம -அதுக்குக் காரணமான பஞ்ச பூதங்கள் -அதுக்குக் காரணம் -முற்றுமாக )
எண் மீது இயன்ற ( திருவாய் மொழி 6-9-5 ) புற அண்டங்களுமாக சொல்லப் படுகிற இவை
நாரங்கள் ஆகின்றன ..
நலம் திகழ் நாரணன் ( பெருமாள் திரு மொழி 1-11-ஞானம் ஆனந்தம் )
வண் புகழ் நாரணன் ( திரு வாய் மொழி 1-2-10 -கல்யாண குணங்கள் )
வாழ் புகழ் நாரணன் ( திரு வாய் மொழி 10-9-1- சீலாதி குணங்கள் )
நன் மேனியினன் நாராயணன் ( திருவாய்மொழி -9-3-1- திருமேனி )
பல் கலன் நடையா உடை திரு நாரணன் (திருவாய் மொழி 3-7-4-திவ்ய ஆபரணங்கள் )
தெய்வ நாயகன் நாரணன் (திருவாய்மொழி 5-7-4 )
நாராயணனுக்கு (திருவாய்மொழி 5-7-1 )
நாராயணனுக்கு ( பெரியாழ்வார் திருமொழி 3-7-11 -ஆலிலை துயின்ற )
ஏக மூர்த்தி இரு மூர்த்தி ( திருவாய் மொழி 5-3-3 ) என்று தொடங்கி ,
நடுக் கடலுள் துயின்ற நாராயணன் (திருவாய் மொழி 4-3-3 )
தானாம் அமைவுடை நாரணன் ( திருவாய் மொழி 1-3-3 )
நாரணன் எம்மான் பார் அணங்கு ஆளன் ( திருவாய் மொழி 10-5-2 )
நாராயணன் நங்கள் பிரான் (திரு வாய் மொழி 9-3-1 )
நீரார் பேரான் ( பெரிய திருமொழி 2-4-6 -நீரார் பேரான் நெடுமாலுக்கு இடம் மா மலையாவது நீர் மலையே)
என்று பல இடங்களிலும் நாரங்களாக தோற்றுகிறவற்றை
பொங்கு புணரி கடல் சூழ் ஆடை (பெரிய திருமொழி 6-10-9 ) என்கிற பாட்டிலே திரள அருளிச் செய்து அருளினார் –-
(பொங்கு புணரிக் கடல் சூழாடை நில மா மகள் மலர் மா
மங்கை பிரமன் சிவன் இந்திரன் வானவர் நாயகராய
எங்கள் அடிகள் இமையோர் தலைவர் உடைய திரு நாமம்
நங்கள் வினைகள் தவிர வுரைமின் நமோ நாராயணமே -6-10-9-உபய விபூதி நாதனின் திரு நாமம் திரு அஷ்டாஷரம்)
—————————————————–
அநந்தரம் -நாராயண பதார்த்தத்தை அருளிச் செய்கிறார் -நாராயண பதம் என்று தொடங்கி –
அகார நாராயண பதங்களுக்கு உண்டான சங்க்ரஹ விஸ்தர பாவத்தை அருளிச் செய்கிறார் —
நாராயணன் என்றது தொடங்கி –
அகாரத்தை விவரிக்கிறது நாராயண பதம்-சுருங்கச் சொன்ன அர்த்தம் தன்னை
அஞ்ஞானம் சம்சயம் விபர்யயங்கள் கழியும் படி முகாந்தரத்தாலே தெளிவிக்கை விவரணம் –
இஸ் சங்க்ரஹ விவரண பாவம் பிரதம அக்ஷரம் முதலாக யதா சம்பவம் கண்டு கொள்வது –
உகாரத்தை விவரிக்கிறது நமஸ் ஸூ –
அகாரத்தை விவரிக்கிறது நாராயண பதம் –
மகாரத்தை விவரிக்கிறது சதுர்த்தி
நார பதம் -என்றும் சொல்லுவார்கள் -என்றபடி –
ரஷ்ய அம்சமும் ரக்ஷண பிரகாரமும் இறே அகாரத்தில் விவரணீயமான அம்சம் –
அதில் நார சப்தத்தாலே ரஷ்ய அம்சத்தை விவரிக்கிறது –
நாராயணன் என்கிற ஸமஸ்த பதத்தாலே ரக்ஷண பிரகாரத்தை விவரிக்கிறது
(அயனமாகவும் ஆதாரமாகவும் இருக்கும் பிரகாரம் )
அதில் ரஷ்ய விவரணம் பண்ணுகிறது நார பதம் –
ரிங்ஷயே -என்கிற தாதுவிலே -ர-என்ற பதமாய் -க்ஷயிக்கும் வஸ்துவைச் சொல்லி
நகாரம் அத்தை நிஷேதித்து –
நர -என்று ஷயம் இல்லாத நித்ய வஸ்துவைக் காட்டி
ஸமூஹ அர்த்தத்தில் அண் பிரத்யமும் ஆதி வ்ருத்தியுமாய் -நார என்று நித்ய வஸ்து சமூகத்தைச் சொல்லி –
நாரா -என்று பஹு வசனம் ஆகையால் ஸமூஹ பாஹுள்யத்தைச் சொல்லுகிறது-
இத்தை அருளிச் செய்கிறார் -நர -நார நாரா -என்று தொடங்கி
இங்கு சொல்லப்படும் நித்யத்வம் ஸ்வரூபேண நித்யத்வம் -ப்ரவாஹ ரூபேண நித்யத்வம் என்று த்விவிதம் –
ஸ்வரூபேண நித்யத்தை யாவது -சத்தான பதார்த்தத்தை உடைய உத்பத்தி விநாச அத்யந்த அபாவம்-
பிரவாஹா ரூபேண நித்யத்தை யாவது -உத்பத்தி விநாச யோகியா நிற்கச் செயதேயும்
பூர்வ காலத்தில் உண்டான நாம ரூப லிங்காதிகள் உடைய அநந்யதாபாவம் –
ஆக நாரா என்று நித்ய பதார்த்தங்களின் சமூகங்களை சொல்லுகிறது –
ஸ்ருஷ்ட்வா நாரம் -என்கிற ஸ்ரீ வராஹ புராண வசனத்தையும் –
ஆபோ நாரா -என்கிற ஸ்ரீ மனு வசனத்தையும் உட்க்கொண்டு
அருளிச் செய்கிறார் -நரன் -என்று தொடங்கி –
அப்புக்களை எடுத்தது ததவாந்தரங்களுக்கும் உப லக்ஷணம் என்னும் இடம்
நராஜ் ஜாதானி -( பாரதம் ) -இத்யாதிகளாலே சித்தம் –
இந்த பஹு வ்ரீஹி சமாசமான நிர்வசனத்தில்
நாராயணன் உடைய சர்வவித காரணத்வமும் –
அயன சப்தத்தில் –
ஈயத இத்யயனம்-என்கிற கர்மணி வுயத்பத்தியாலே இவற்றை
வியாப்பியமாக வுடையவனுடைய சர்வ வியாபகத்வமும் –
அதுக்கு உபயுக்தமான நிரதிசய ஸூஷுமத்வமும் சொல்லிற்று ஆயத்து –
இப் பொருள்கள் -ஈயதே அஸ்மின் -என்கிற அதிகரண வுயுத்பத்தியாலும் வரும் –
ஆகாசம் கடாதிகளாலே வியாபிக்குமா போலே தன் ஸ்வரூப ஏக தேசங்களாலே வியாபிக்கை அன்றிக்கே-
ஜாதி வியக்தி தோறும் வியாபிக்குமா பாதி சமாப்ய ஆத்மதயா வியாபித்து தரிக்கும் என்கிறது நாராயண பதம் –
இந்த அந்தர் வியாப்தியையும் பஹிர் வியாப்தியையும் நினைத்து இறே அனோர் அணீயான் மஹதோ மஹீயான் -என்றது –
(ஆதார ஆதேயத்வம் தூண் உத்தரம் போலே இல்லாமல் -எல்லாமாகவும் அவனே -முழுவதுமாக தாங்குகிறார் –
இதனால் தான் ஸ்வரூப ஏக தேச வியாபிக்கை அன்றிக்கே-ப்ரஹ்ம பகுதி தான் ஒவ் ஒன்றிலும் இருக்குமோ என்றால்
முழுவதுமாக -குடத்துக்குள்ள ஏக தேச ஆகாசம் போலே இன்றிக்கே -கோத் வம் ஜாதி–பசுவின் முழுவதும் வியாபிக்கும் -அதே போலே
இதுக்கு உவமானம் காட்ட முடியாதே -ஓத்தார் மிக்கார் இலையாய மா மாயன் அன்றோ
அணுவுக்குள் அணு-பெரிய வற்றையும் பெரியதாக -இவை இரண்டையும் –உள்ளே வெளியே வியாபிக்கிறார் -)
நித்ய வஸ்துக்களை ஸ பிரமாணமாக அருளிச் செய்கிறார் –
உணர் முழு நலம் -என்று தொடங்கி –
பிராட்டியினுடைய -நார கோடி கடிதத்வத்தை அருளிச் செய்கிறார் -பார் மகள்-என்று தொடங்கி –
உடையவரும் கத்யத்திலே இங்கனே இறே அருளிச் செய்தது –
( பிராட்டியும் நார கோஷ்டி என்றவாறு )
இத்தால் நாராயண பதத்தில் கைங்கர்ய பிரதிசம்பந்தி ஒரு மிதுனம் என்றதாயிற்று –
————————————————————————
அயன சப்தார்த்தம் ..
அயனம் -என்று இருப்பிடமாய் ,
1-நாரங்களுக்கு இருப்பிடம் என்றும் ,
2-நாரங்களை இருப்பிடமாக உடையவன் என்றும் சொல்லக் கடவது ..
நான் உன்னை அன்றி இலேன் –கண்டாய் நாரணனே- நீ என்னை அன்றி இல்லை ( நான்முகன் திருவந்தாதி -7 ) என்று
ஒன்றை ஓன்று குலையில் இரண்டு தலையும் இல்லை யாம்படி இருக்கையாலே ,
(உன் கிருபைக்கு வேறு விஷயம் இல்லை -உன் கடாக்ஷம் இல்லாமல் எனக்கு சத்தை இல்லையே
நின் அருள் என் கண் அன்றி புகல் ஒன்றும் இல்லை நின் அருளுக்கும் அஃதே புகல்- இருவருக்கும் பயனான பின்பு )
தன் உள் அனைத்து உலகும் நிற்க –நெறிமையால் தானும் அவற்றுள் நிற்கும் பிரான் ( திரு வாய் மொழி 9-6-4 )
என்கிற மேன்மையும் நீர்மையும் சொல்லிற்று ஆயிற்று ..
1-எல்லா வற்றுக்கும் காரணமாய் ,
2-அந்தராத்மாவாய் ,
3-அவற்றின் தோஷம் தட்டாமே நின்று ,
4-நியமித்து ,
5-தான் ஒளியை வுடையானாய் ,
6-ஸ்வாமியாய் ,
7-எல்லா உறவுமாய் ,
8-உபாயமுமாய் ,
9-உபேயமுமுமாய் ,
இருக்குமது எல்லாம் இதிலே தோற்றும்..
(சமாசங்கள் —சொற்கள் சேர்த்தியை விளக்கும்
முதல் சொல்லுக்கு முக்யத்வம் -இரண்டாவது சொல்லுக்கு முக்யத்வம்–இரண்டுக்கும் இல்லாமல் வேறே ஒன்றுக்கும் –
இரண்டுக்கும் பிரதானம் -இப்படி நான்கும் –
தத் புருஷ சமாசம்–உத்தர பதார்தகம் போதகம் -ராஜ புருஷன் -வேலையாளுக்கு முக்கியம்
பஹு வ்ருஹீ சமாசம் -அந்யா பதார்த்த போதகத்வம் -சாஷாம்–பீதாம்பர-பீத மஞ்சள் -அம்பர ஆடை –
இரண்டையும் குறிக்காமல் தரித்த அவனைச் சொல்லும்
அவ்யயயீ பாவம் -முன் சொல் முக்யத்வம் -உப கங்கா -கங்கையின் கரை -பூர்வ பதார்த்த போதகத்வம்
த்வந்த சமாசம் -இரண்டுக்கும் சமமாக பிரதானம் -ராம கிருஷ்ணர் வந்தார்கள் ஆகதவ்-இருவருக்கும் முக்யத்வம்
நாராணாம் அயனம் ஆஸ்ரயம் யாகா யாரோ அவன் நாராயணன் -தத் புருஷ சமாசம் -அயனத்துக்கு முக்யத்வம் இதில்
நித்ய வஸ்துக்களுக்கு இருப்பிடம்-உத்தர பதார்த்த போதகத்வம் இங்கு-
நாரா அயனம் யஸ்ய சக -யாருக்கோ அவர் நாராயணன் -நாரங்கள் இவனுக்கு இருப்பிடம் –
இவற்றுக்கு-நாரங்களுக்கும் அயனத்துக்கும் முக்யத்வம் இல்லை – -நாரங்களை ஆச்ரயமாகக் கொண்டு உள்ள
மூன்றாவதான நாராயணன் -பஹு வ்ருஹி சமாசம் -பீதாம்பரம் போலே –
எல்லாவற்றுக்கும் ஆஸ்ரயமாக தாங்கி பரத்வம் -உபாயமும் ப்ராப்யமும் என்றுமாம்
நாரங்களுக்குள் இருப்பதால் அந்தர்யாமித்வம் -ஸுவ்லப்யம் வெளிப்படும் -ஜுகுப்ஸை இல்லாமல் உகந்து உள்ளான் –
இத்தை விட்டு எதுக்கு ஸ்ரீ வைகுண்டம் –
ர -அழியும் பொருள் -ந நிஷேதம் -நர அழியாத பொருள் -அணு ப்ரத்யயம் வர ஆதி தீர்க்கமாகி நார பன்மையால் நாரா-
அயனம் -அஸ்மின் ஈயதே இதில் அடைகின்றன ஆஸ்ரயம்
தத் புருஷ சமாசம் -அனைத்துக்கும் ஆதாரம் -மேன்மை சொல்லும்-எளிமையும் சொல்லும்
தாழ்ந்த பொருள்களுக்கும் இருப்பிடம் எளிமை -வசிஷ்டர் முதல் நம் பர்யந்தம் -பரத்வமும் இதில் உண்டே
அய கதவ் செல்விடம்–நாரங்களுக்கு கதியாக இருப்பவர் நாராயணன் -கதி உபாயமும் உபேயமும்
நாரங்களுக்கு உபாயமாகவும் உபேயமாகவும்
கருவி கரனே உத்பத்தி -ஆல் மூன்றாம் வேற்றுமை -நாரங்கள் இவனால் அடைகின்றன -கத்தியால் பழத்தை நறுக்கி —
உபாயம் காட்டும் -இவர் மூலம் அடைகிறோம்
கர்மணி உத்பத்தி -இரண்டாம் வேற்றுமை -இத்தை அடைகிறார்கள் -உபேயத்வம் –
செயல் படும் பொருள் –
நாரங்களால் அடையைப் படுகிறான் –
இவனை அடைகின்றன -ப்ராப்யத்வம்
ஆதாரம் –ஆஸ்ரயம் -அனைத்துக்கும் –
உபாயம் உபேயம் -மூல ப்ரக்ருதிக்கு இல்லையே -ஞானம் உடைய சேதனனுக்குத் தானே
அசித் விட வேண்டும் இங்கு–
ப்ராப்யம் என்று சொல்லும் பொழுது பிராட்டி வாத்சல்யாதி குணங்களும் சேரும் -இவற்றுக்கும் ப்ராப்யத்வம் உண்டே
உபாயத்வம் -அவன் மட்டுமே -மற்றவற்றுக்கு அர்த்த சங்கோசம் கொள்ள வேண்டும்
இனி பஹு வ்ருஹி சமாசம்
விபுவான தான் அனைத்துக்குள்ளும் புகுந்து இருப்பதால் ஸுவ்லப்யம்
அந்தர்யாமியாக அனைத்தையும் நியமிப்பதால் பரத்வமும் இங்கே உண்டே
நாரங்களுக்குள் புகுகிறான் என்னும் பொழுது குணங்களைச் சேர்க்க முடியாதே -அர்த்த சங்கோசம் கொள்ள வேண்டும் –
வியாபக மந்த்ரங்கள் -எதை எதற்க்காக யாரை எப்படி எந்த குணத்தோடு -ஐந்து விஷயம் பார்த்தோம் -நாராயண பூர்த்தி
பகவதே சொல் தருவிக்க வேண்டாமே இங்கு
நார சப்தத்துக்கு குணங்களும் உண்டு -வியாபிக்கும் அவனுக்கும் குணங்கள் உண்டே –
ஆத்மாஸ்ரய தோஷம் கூடாதே -தானே தனக்கு இருப்பிடம் ஆகாதே – தன் கழுத்தில் தானே என்ற முடியாதே –
சில குணங்களை வியாப்யம் என்று கொஞ்சம் பிரித்து சொன்னால் அநவஸ்தா தோஷம் வரும்
ஆக குணங்களைத் தவிர என்றே கொள்ள வேண்டும்
உள்ளே வியாபித்து -ஆதாரமாக இருப்பது எப்படி
ஆத்மா ஸூஷ்மம்–ஆறு பக்கம் அற்றது இடைவெளி இல்லையே – ஒளி மயமானது -தடுக்க முடியாது
ஜன்னல் சூர்ய வெளிச்சம் -விளக்கு வெளிச்சம் எல்லாம் போகலாமே -தடை இருக்காதே -அதே போலே ஞானம்
ஞான ஸ்வரூபன் இருவரும் -தடை இல்லையே -அந்தர் வியாப்தி ஒக்கும் -)
—————————————————————–
தத்புருஷ பஹு வ்ரீஹீ சமாஜ த்வயத்தை அருளிச் செய்கிறார் -அயனம் -என்று தொடங்கி –
தன் குணங்களில் ஈஸ்வரன் வியாபிக்கும் போது குண விசிஷ்டானாயே வியாபிக்க வேணும் –
நிர்குணமாய் வஸ்து இராமையாலே –
அப்போது வ்யாப்ய குணங்களே வ்யாபகங்களாய் -வியாபக குணங்களே வ்யாபயங்களாய் வருகையால்
ஆத்ம ஆஸ்ரய தோஷம் உண்டாகும் –
அதுக்கு மேலே தன் குணங்களில் குணி வியாபிக்க வேணும் என்று புக்கால்
தத் ஆஸ்ரயமான குணங்களையும் குணி வியாபிக்க வேணும் -ஆகையால் அனவஸ்தா துஸ்தமாம் –
ஆகையால் நாரங்களுக்கு ஆஸ்ரயம் என்கிற இடத்தில் குணங்களையும் சொல்லிற்றே யாகிலும் –
நாரங்களை ஆஸ்ரயமாக உடையவன் என்கிற இடத்தில் குணங்களை ஒழிய சொல்ல வேணும் என்றதாயிற்று
ஆக
ஸமஸ்த கல்யாண குணாத்மகத்வம் –
உபாயவிபூதி நாதத்வம் –
சர்வ ஸ்மாத் பரத்வம் –
சர்வ சரீரத்வம் –
உள்ளிட்டவை யுக்தமாய் நின்றது –
ஸமாஸ த்வயத்தாலும் பலித்த அம்சத்தை அருளிச் செய்கிறார்-நான் உன்னை -என்று தொடங்கி –
அந்தரத்தில் அந்தணனை -என்றும் –
யாவையும் யவரும் தானாய் அவரவர் சமயம் தோறும் தோய்விலன்-என்றும்
சர்வ பூத அந்தராத்மா -அபஹத பாப்மா -இத்யாதி
பிரமாணங்களை உட் கொண்டு அருளிச் செய்கிறார் –
அந்தராத்மாவாய் அவற்றின் தோஷம் தட்டாமே நின்று -என்று –
அதாவது வியாப்யகத தோஷை-அச்மஸ்ப்ருஷ்ட ஸ்வ பாவன்-என்றபடி –
எம்பிரான் எந்தை என்னுடைச் சுற்றம் –
சேலேய் கண்ணியரும்-
பிராதா பர்த்தா ச –
மாதா பிதா -என்றத்தை உட் கொண்டு அருளிச் செய்கிறார் -எல்லா உறவுமாய் -என்று –
இண்-க தவ்-என்கிற தாதுவிலே யாதல் -அய-கதவ்-என்கிற தாதுவிலே யாதல் –
ஸித்தமான அயன பதத்தில் -கரனே வ்யுத்பத்தியாலும் –கர்மணி வுயுத்பத்தியாலும்
ப்ரகாசிதமான உபாயத்வ உபேயத்வங்களை அருளிச் செய்கிறார் –
உபாயமுமாய் உபேயமுமாய் -என்று –
பஹு வ்ரீஹீ யோஜனை கொள்ளுகிற இடத்தில்
யோக்யதா அனுகுணமாக நார சப்தத்தை குணங்களை ஒழிந்த வஸ்துக்களுக்கு
வாசகமாக கொண்டால் போலே –
தத் புருஷ யோஜனையிலும் அயன சப்தத்தை உபாய உபேய வாசியாகக் கொள்ளும் அளவில்
யோக்யதா அனுகுணமாக நார சப்தத்தை அசேதனங்களை ஒழிந்த சேதன வஸ்துக்களுக்கு
வாசகமாகக் கொள்ளக் கடவது –
நாரஸ்த் விதி சர்வ பும்ஸாம் சமூஹ பரிகத்யதே-கதி ராலம்பாநம் தஸ்ய தேன நாராயண ஸ்ம்ருத -என்றும்
நார சப்தேன ஜீவா நாம் சமூஹே ப்ரோச்யதே புதை -தேஷாம் அயன பூதத்வாத் நாராயண இஹோச்யதே-என்றும்
இத்யாதிகளாலே இவ்வர்த்தம் சொல்லப் படா நின்றது இறே
——————————————————————————————————
வ்யக்த சதுர்த்தி அர்த்தம் ..
ஆய -என்று-
ம -காரத்தில் சொன்ன ஆத்மாவுக்கு
அ -காரத்தில் சொன்ன சேஷத்வம் நிலை நிற்பது
கைங்கர்யத்தில் தான் அந்வயித்தால் ஆகையாலே ,அடிமையில் இரப்பைக் காட்டுகிறது ..
(லுப்த சதுர்த்தி தாதர்த்தம் -இங்கு பிரார்த்தனா சதுர்த்தி )
தொடர்ந்து குற்றேவல் ( திரு வாய் மொழி 9-2-3)
(திருப் புளிங்குடி கிடந்தான் -எழுந்து -தொழ இருந்து -இவனே நின்றும் இருந்தும் சேவை சாதிக்க பிரார்த்தனை
தொடர்ந்து குற்றேவல் -இத்தலையில் இப்படி செய்ய அடுப்பது-தொல் அடிமை -)
ஆட் செய் எக்காலத்தும் (திரு வாய் மொழி 2-9-4 -தனக்கேயாக எனைக் கொள்ளும் ஈதே) –
சென்றால் இருந்தால் நின்றால் (முதல் திரு வந்தாதி -53 )
ஊரும் புள் கொடியும் அஃதே ( திரு வாய் மொழி 10-2-3) என்கிற படியே
(நித்ய சூரிகள் ஒவ் ஒருவரையும் பல கைங்கர்யங்கள் கொண்டு அருளுவதுக்கு த்ருஷ்டாந்தம் -அஹம் சர்வம் கரிஷ்யாமி )
எல்லா தேசங்களிலும் திரைக்குள்ளோடு புறம்பற வாசி அற எல்லா அடிமைகளையும்
முகப்பே கூவிப் பணி கொண்டு அருள ( திருவாய் மொழி 8-5-7) வேணும் என்கிற இரப்பை
ஒழிவில் காலத்தில் (திரு வாய் மொழி 3-3-1 ) படியே காட்டக் கடவது
—————————————————–
இனி இதில் விபக்தி அம்சத்தாலே கைங்கர்யத்தை பிரார்த்திக்கிற படியை ச பிரமாணமாக அருளிச் செய்கிறார் –
ஆய -என்று தொடங்கி
நா கிஞ்சித் குர்வத சேஷத்வம் –என்றத்தை உட்க்கொண்டு -சேஷத்வம் இத்யாதி அருளிச் செய்கிறார்
ஆக –
லுப்த வ்யக்த சதுர்த்தி அர்த்தங்கள்
நிரூப்ய நிரூபக பாவம்
நிரூபிதம் –
—————————————————————————————————————-
மூல மந்த்ர ஸங்க்ரஹம் ..
ஆக ,
இந்த திரு மந்த்ரம் ,
சர்வ ரக்ஷகனான ஸ்ரீய பதிக்கு ,-(அகாரார்த்தம் -)
அநந்யார்ஹ சேஷ பூதனாய் ,-(உகார அர்த்தம் லுப்த சதுர்த்தி அர்த்தம் -)
சரீர இந்திரயாதிகளில் வேறு பட்டு ,ஞான ஆனந்த மயனாய்
ஸ்வதந்த்ரன் இன்றிக்கே , சர்வ பிரகார பர தந்த்ரனான ,நான் ,-(மகார அர்த்தம் )
உபய விபூதி நாராயணனுக்கு
சர்வ வித கைங்கர்யங்களிலும் ,அந்வயிக்க பெறுவேனாக ,வேணும் என்று இருக்கை ,(நாராயணாயா -அர்த்தம் )
ஆத்மாவுக்கு ஸ்வரூபம் என்கிறது ..
——————————————————-
இனி இம் மந்திரத்தால் ப்ரதிபாதிக்கப் பட்ட அர்த்தங்களை சங்க்ரஹித்து அருளிச் செய்கிறார் –
ஆக என்று தொடங்கி -அதாவது
1-சேதனனுடைய ப்ரக்ருதே பரத்வமும் —
2-ப்ரக்ருதே பரனுடைய சேஷத்வமும் –
3-சேஷத்வத்தினுடைய அநந்யார்ஹதையும் –
4-அநந்யார்ஹ சேஷத்வ பிரதிசம்பந்தியையும் –
5-அநந்யார்ஹ சேஷ பூதனுடைய அஹங்கார மமகார நிவ்ருத்தியையும் –
6-தன் நிவ்ருத்தமான ஸ்வரூபத்தின் உடைய அத்யந்த பாரதந்தர்யத்தையும் –
7-பாரதந்தர்ய காஷடையான-ததீய சேஷத்வத்தையும் –
8-பரதந்த்ரனுக்கு அனுரூபமான உபாயத்தையும் –
9-உபாய பலமான கைங்கர்யத்தையும் –
10-கைங்கர்ய பிரதி சம்பந்தியையும் சொல்லுகிறது -என்றபடி
ஆக –
திருமந்த்ரத்தால் –
1-பிராணவத்தால் சேஷத்வம் சொல்லி –
2-நமஸ் சப்தத்தால் தத் விரோதியான ஸ்வாதந்த்ரன் உடைய நிவ்ருத்தி சொல்லி
3-நாராயண பதத்தாலே அந்த சேஷத்வத்தை சரீர ஆத்ம பாவ சம்பந்த முகேன த்ருடீ கரிக்கையாலே
திருமந்திரம் ஸ்வரூப யாதாம்ய பரமாய் இருக்கும் –
——————————————————————————————–
திரு மந்திரத்தின் ஆபத் நிவர்த்தன பிரகாரம் ..
எம்பெருமானை ஒழிந்த பிறரை ரஷகர் என்று இருந்தால் ,
தேக ஆத்ம அபிமானம் ,
அந்நிய சேஷத்வம் ,
ஸ்வ ஸ்வா தந்தர்யம் –
மமகாராம் நடத்தல் ,
ஸ்ரீ வைஷ்ணவர்களை சஜாதியர் என்று இருத்தல் ,
தன் பேற்றுக்கு தான் யத்தனித்தல்
பகவத் விபூதியில் சிலரோடு வெறுப்பு நடத்துதல் ,
சம்சாரிகளை உறவு என்று இருத்தல் ,
ஷூத்ர போகங்களிலே நெஞ்சு கிடத்தல் ,-செய்யில் திரு மந்திரத்தில் – அன்வயம் இல்லையாகக் கடவது ..
(பட்டர் அஷ்ட ஸ்லோகி நான்காம் ஸ்லோகார்த்தம் இது )
———————————————–
தேஹா சக்தாத்ம புத்தி -என்கிற பட்டர் திருவாக்குப் படி -சம்சாரிகள் ஸ்வரூப அனுபந்திகளான ஆபத்துக்களையும்
திரு மந்திரத்துக்கு உண்டான தன் நிவர்த்தகத்வத்தையும்
வியதிரேக முகத்தால் அருளிச் செய்கிறார் -எம்பெருமானை -என்று தொடங்கி –
———————————————————————————————————————
மூல மந்த்ர அர்த்த நிகமனம் ..
மூன்று எழுத்து (பெரியாழ்வார் திருமொழி-4-7-10-மூன்று அக்ஷரங்கள்)
விடை ஏழ் அன்று அடர்த்து ( திரு வாய் மொழி 8-9-3 -கண்ணபுரம் ஓன்று உடையானுக்கு அடியேன் ஒருவர் உரியேனோ )
யானே என்னை ( திரு வாய் மொழி 2-9-9 -யானே நீ என் உடைமையும் நீ அஹங்காரம் மமகாராம் போனதை சொல்லும் ந ம )
எண் பெருக்கு அந் நலம் ( திரு வாய் மொழி 1-6-10-நாராயணன் நாமம் நிர்தேசம் )
எம்பிரான் எந்தை (பெரிய திருவந்தாதி 1-1-6-நாராயணன் சப்தார்த்தம் )
ஒழிவில் காலம் ( திரு வாய் மொழி 3-3-1 -பிரார்த்தனாயாம் சதுர்த்தி அடிமை செய்ய வேண்டும் -தந்தைக்கே )
வேங்கடங்கள் ( திரு வாய் மொழி 3-3-6-உபாயம் பகவான் தனி சிறப்பு )
நாட்டினாய் என்னை ( பெரிய திரு மொழி 8-10-9) என்கிற பாட்டுக்களை
(உனக்கு முன் தொண்டாக நாட்டினாய் -நம்முடையான் என்று அங்கே நாட்டுங்கோள் -அடிமை கொள்ளும்
கணக்கு புஸ்தகத்தில் –எட்டு எழுத்திலே நீ எனக்கு அடிமை -அநந்யார்ஹ சேஷ பூதரில் நீயும் ஒருவர் -)
திரு மந்த்ர அர்த்தமாக பூர்வர்கள் அனுசந்திப்பார்கள் ..
திருமந்திர பிரகரணம் முற்றிற்று –
———————————————————————–
திருமந்திர ப்ரதிபாதகமான பாசுரங்களைக் காட்டி நிகமிக்கிறார்-மூன்று எழுத்து என்று தொடங்கி –
இத் திருமந்த்ரத்தில் –
தெளிவுற்று வீவின்றி நின்றவர் -என்கிறபடியே பாஹ்ய குத்ருஷ்ட்டி மதங்களால் கலக்க ஒண்ணாத
தெளிவும் நிஷ்டையும் உடையவனை ஆதரிக்கும் தேசத்திலும் கூட
யத்ர அஷ்டாக்ஷர சம்சித்த மஹா பாகோ மஹீயதே -ந தத்ர சஞ்சரிஷ்யந்தி வியாதி துர்பிக்ஷ தஸ்கரா -என்கிறபடியே
த்ருதீய பதார்த்த விரோதியான விஷயாந்தர ருசி ரூப வியாதியும் –
மத்யம பதார்த்த விரோதியான ஸ்வ ரஷனே ஸ்வ அந்வய ரூப துர் பிஷமும்
பிரதம பதார்த்த விரோதியான ஆத்ம அபஹார ஹேது அஹங்காராதி ரூப மஹாதஸ்கரனும் -ஆகிற
தோஷங்கள் நடையாடா என்றதாயிற்று –
(பிரணவம் -அவனுக்கு சொத்து அறிந்து திருட்டு போகும்
ந ம -பஞ்சம் இல்லை -துர் பிக்ஷம்
நாராயணாயா -ஐச்வர்யம் கைவல்யம் வியாதிகள் போகுமே )
ஆக –
அந்தணர் மாட்டு அந்தி வைத்த மந்திரத்தை மந்திரத்தால் மறவாது என்றும் வாழுதியில் வாழலாம் என்றதாயிற்று
(திரு நெடும் தாண்டகம் )
——————————————————————————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ .வே. வேளுக்குடி வரதாச்சார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –