Archive for May, 2016

பகவத் விஷயம் காலஷேபம்- 97- திருவாய்மொழி – -4-6-6….4-6-11–ஸ்ரீ உ. வே. வேளுக்குடி ஸ்வாமிகள்-

May 31, 2016

தணியும் பொழுது இன்றி நீர் அணங்கு ஆடுதிர்; அன்னைமீர்!
பிணியும் ஒழிகின்றது இல்லை, பெருகும் இது அல்லால்;
மணியின் அணி நிற மாயன் தமர் அடி நீறு கொண்டு
அணிய முயலின், மற்று இல்லை கண்டீர் இவ்வணங்குக்கே.–4-6-6-

விலஷண விக்ரக விசிஷ்டன் சர்வேஸ்வரன் திருவடிகளில் பந்தவான் –பாகவதர் -பாத தூளி கொண்டு
தணியும் பொழுது இன்றி நீர் அணங்கு ஆடுதிர்; அன்னைமீர்!-பெற்றதால் –
பால்யை இவள் என்று வார்த்தை கேளாமல் -ஆட்டம் நிறுத்தாமல்
பிணியும் ஒழிகின்றது இல்லை, பெருகும் இது அல்லால்;-பெருகி வருகிறது
மீளப் பரிகாரம்
மணியின் அணி நிற மாயன் தமர் அடி நீறு கொண்டு-நீல ரத்னம் போலே -அத்தையும் விஞ்சி
நிறம் -ஆச்சார பூதன் -பக்தர்கள்
சேஷத்வ சம்பந்த ஞானம் அறிந்தவர்
தவளப் பொடி சுத்தமான
அணிய முயலின், மற்று இல்லை கண்டீர் இவ்வணங்குக்கே.அணிவிக்க தொடங்கும் போதே
இவ்வணங்குக்கே-இந்த திவ்ய பெண்ணுக்கு -இதுவே ஆச்வாசதுக்கு ஹேது
அழகுக்கு ஈடுபட்ட இவளுக்கு இதிலே அகப்பட்டார் உடைய அனுபந்தமே பரிகாரம்

‘தாய்மார்களே, நீங்கள் தவிர்வது ஒரு காலம் இல்லாமலே அணங்கு ஆடுகின்றீர்கள்; வியாதியும் மேலும் மேலும் மிகுகின்றது
என்னும் இதுவேயல்லாமல் நீங்கிற்றில்லை; நீலமணி போன்ற அழகிய நிறம் வாய்ந்த மாயனுடைய அடியார்களுடைய
பாததூளியைக்கொண்டு அணிவதற்கு முயற்சி செய்தால், அதுவே இவள் உற்ற நோய்க்கு அருமருந்தாகும்;
அது ஒழிய இந்தப் பெண்ணிற்கு வேறு ஒரு பரிஹாரம் இல்லைகண்டீர்.

‘அன்னைமீர்! நீர் தணியும் பொழுது இன்றி அணங்கு ஆடுதிர்; பிணியும் பெருகும். இது அல்லால் ஒழிகின்றது இல்லை,’ என்க.
நீறு – புழுதி; தூளி. மற்று – பிறிது என்னும் பொருளில் வந்தது. கண்டீர் – முன்னிலையசை; தேற்றமுமாம்.

இந்தப் பெரிய முயற்சி எல்லாம் வேண்டா; ‘தவளப்பொடி’ என்று சொன்னது இன்னது என்று விசேடித்து,
‘அதனைச் செய்ய முயன்ற அளவிலே இவள் நோய் தீரும்,’ என்கிறாள்.

அன்னைமீர்! நீர் தணியும் பொழுது இன்றி அணங்கு ஆடுதிர் –
விலக்குவார் உளர் ஆகையாலே, ‘இன்ன போது தவிரச் சொல்லுவர்கள்’ என்று அறியாமையாலே,
உச்சி வீடு விடாதே அவர்கள் ஆடத் தொடங்கினார்கள்.

பிணியும் ஒழிகின்றது இல்லை –
காரணம் தொடர்ந்து நிற்கையாலே காரியமான நோயும் தொடர்ந்தே நிற்கின்றது.

பெருகும் இது அல்லால் –
கிண்ணகப் பெருக்குப் போலே மேன் மேலும் கிளர்ந்து வாராநின்றது.

மணியின் அணி நிற மாயன் தமர் அடி நீறு கொண்டு அணிய முயலின் –
நீலமணிபோலே அழகிய நிறத்தையுடையனாய், குணங்களாலும் செயல்களாலும் ஆச்சரியத்தையுடைய சர்வேசுவரனுடைய
அடியார்களுடைய பாத தூளியைக் கொண்டு வந்து அணிய முயன்றால்.
‘ஒழுக்கத்தால் உயர்ந்த குலத்தில் பிறந்த பழி ஆகையாலே கழுவாயைக் கனக்க விதித்தோமத்தனை;
பாததூளியினுடைய பிரபாவத்தைப் பார்த்தால் இவையெல்லாம் வேண்டா;
முயலுதல் மாத்திரம் அமையும்,’ என்பாள்,
‘அணிய முயலின்’ என்கிறாள்.
‘தொண்டர் அடிப்பொடி ஆட நாம் பெறில் கங்கைநீர் குடைந்தாடும் வேட்கை என்னாவதே!’ என்றாரே-குலசேகரப்பெருமாள்- அன்றோ?
நலம் தரும் காரியங்களில் நினைதல் மாத்திரமே அமையும்; தீமை தரும் காரியங்களில் வர்ஜனமே வேண்டும்.
வண்டரும் சுண்டர் ( செண்டர் என்பர் ) என்கிறவர்களுக்கு –த்ரவ்யம் சேமிக்க வைக்கும் கைங்கர்ய பரர்-ராமானுஜர் நியமித்தவர்கள் –
அரையன் சொன்ன வார்த்தைக்குப் பிள்ளை உறங்கா வில்லிதாசர் பரிஹாரம் செய்தபடியை இங்கே நினைப்பது. ‘என்றது
என் சொல்லியவாறோ?’ எனின், அகளங்க நாட்டாழ்வான் இவர்களுக்கு அமணன் பாழியிலே சிங்கத்தைக் காட்டித்
‘திருமுற்றம்; திருவடி தொழுங்கோள்,’ என்ன, அவர்களும் மெய் என்று திருவடி தொழுது,
‘அது அமணன் பாழி’ என்று அறிந்தவாறே மோஹித்து விழ,
பிள்ளை உறங்கா வில்லி தாசர் தம் ஸ்ரீ பாத தூளியை அவர்களுக்கு இட,
உணர்ந்து எழுந்திருந்த உண்மை வரலாற்றினை உணர்த்தியபடி.

திருக்கொட்டாரத்தின் அருகே கைந்நிரை கட்டிக் கொண்டிருக்கிற நாளிலே, சீயர் இத்திருவாய்மொழி அருளிச்செய்கிறாராய்
இப்பாசுரத்தளவிலே வந்தவாறே, ‘
தேர்ப்பாகனார்க்கு’ என்று நோய்க்கு நிதானம் சொன்னாளாகில், அத்தேர்ப்பாகனை யிட்டு நீக்கிக்கொள்ளாமல்,
‘மாயன் தமர் அடி நீறு கொண்டு அணிய முயலின்’ என்று இதனைப் பரிஹாரமாகச் சொல்லுவான் என்?
நோய்க்குக் காரணம் ஒன்றும் பரிஹாரம் ஒன்றுமேயாயோ இருப்பது?’ என்று நான் (நம்பிள்ளை) கேட்டேன்;
‘மோர்க்குழம்பு இழியாதே மோஹித்துக் கிடந்த சமயத்தில் சுக்கு இட்டு ஊதிப் பின்பு மோர்க்குழம்பு கொடுத்துப் பரிஹரிப்பாரைப் போலே,
‘தேர்ப்பாகனார்க்கு’ என்ற போதே அவரைக் கொடுவந்து காட்டப்பெறாமையாலே, முற்பட இவ்வழியாலே தேற்றிப் பின்னை
அவரைக் கொடு வந்து காட்டுவதாகக்காணும்’ என்று அருளிச்செய்தார்.
(சுக்கு ஸ்லாங்க்யம் -மாறன் திரு அடி நீரை விட தமர் திரு அடி நீர் ஸ்ரேஷ்டம் என்றவாறு )

‘அழகு சீலம் முதலியவைகளாலே ஆயிற்று இவள் மோஹித்தது; நீங்களும் அழகு சீலம் முதலியவைகளிலே
தோற்றிருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்களுடைய பாததூளியைக் கொண்டு பரிஹரிக்கப் பாருங்கோள்,’ என்பாள்,
‘மணியின் அணி நிற மாயன் தமர் அடி நீறு கொண்டு’ என்கிறாள்.
‘பொடி படத் தீரும்’ என்றபடி.
மற்று இல்லை கண்டீர் இவ்வணங்குக்கே –
பொடி பொடி யாகத்தீரும் என்றுமாம் –
இஃது அல்லது பரிஹாரம் இல்லாதபடியான மேன்மையை உடைய இவளுக்கு இதனையே பரிஹாரமாகப் பாருங்கோள்.

——————————————————————————

அணங்குக்கு அருமருந்து என்று,அங்கு ஓர் ஆடும் கள்ளும்பராய்,
துணங்கை எறிந்து,நும் தோள் குலைக் கப்படும் அன்னைமீர்!
உணங்கல் கெடக் கழுதை உதடு ஆட்டம் கண்டு என் பயன்?
வணங்கீர்கள் மாயப் பிரான் தமர் வேதம் வல்லாரையே.–4-6-7-

சத்தை அழிந்து -ஆச்சர்ய பூதன் சர்வேஸ்வரன் -சேஷ பூதர் வைதிக அக்ரேசர் -ஆஸ்ரயிங்கோள்
அணங்குக்கு அருமருந்து என்று,அங்கு ஓர் ஆடும் கள்ளும்பராய்,-நிஷித்த -வஸ்துக்கள்
துணங்கை எறிந்து,நும் தோள் குலைக் கப்படும் அன்னைமீர்!தேவதா ஆவேசம் -தலை விரித்து -ஆட
உணங்கல்-உலர்த்திய நெல் – கெடக் கழுதை உதடு ஆட்டம் கண்டு என் பயன்?-உணற்ற போட்டும் நெல் -கழுதை உதடு
ஆட்டம் கண்டு கொண்டு இருந்தால் என்ன பயன் -சாப்பிட்டதை பார்த்தேன் –
சாப்பிடப் போகிறது பார் என்றாயே -அதனால் பார்த்தேன்
ஸ்வரூபம் நாசம் ஆகும் என்றவாறு -சத்தையே அழியும்
வணங்கீர்கள் மாயப் பிரான் தமர் வேதம் வல்லாரையே
சுணங்கை -பாட பேதம் -துணங்கை–கூத்து பெயர் -சுணங்கை–சூர்ணம்
மாயப் பிரான்-ஆஸ்ரித குண சேஷ்டிதங்களை அனுபவிப்பித்து உபகரித்தவன்
மாயப் பிரான் தமர் வேதம் வல்லாரையே-வைதிக அக்ரேசர் பாகவதர்களை வணங்கும் படி

‘இப்பெண்ணினுடைய நோய்க்கு அரிய மருந்தாகும் என்று நினைத்து, அங்கே ஓர் ஆட்டினையும் கள்ளினையும் வைத்துத் துதித்துத்
துணங்கை என்னும் கூத்தினை ஆடி உங்களுடைய தோள்களை வருத்துகின்ற தாய்மார்களே! காய்கின்ற நெல் கெட,
அதனைத் தின்னுகின்ற கழுதையினுடைய உதடு ஆடுகின்ற ஆட்டத்தைக் கண்டு கொண்டு இருப்பதனால் பயன் யாது?
மாயப்பிரானுடைய அடியார்களாகிற ஸ்ரீ வைஷ்ணவர்களை வணங்குங்கோள்,’ என்றவாறு.
பராய் – துதித்து. ‘துணங்கை’ என்பது, கூத்து வகைகளுள் ஒன்று; ‘துணங்கை – சிங்கி; என்னை?
‘பழுப்புடை இருகை முடக்கி யடிக்க, தொடக்கிய நடையது துணங்கை யாகும்,’ என்பது (சிலப்.) அடியார்க்கு நல்லாருரை.
உணங்கல் – காயவைத்துள்ள நெல். வேதம் வல்லார் – வேதங்களிலே வல்ல ஸ்ரீ வைஷ்ணவர்கள்.

‘மற்றைத் தேவர்களைப் பற்றினால் இவளுடைய அழிவே பலித்துவிடும்; இவள்
பிழைக்க வேண்டி இருந்தீர்கோளாகில், ஸ்ரீ வைஷ்ணவர்களைப் பற்றுங்கோள்,’ என்கிறாள்.

அணங்குக்கு அரு மருந்து என்று –
தெய்வத்தன்மையையுடைய இவளுக்குத் தகுதியான பெறுதற்கு அரிய மருந்து என்று.
‘இவள் வேறுபட்ட சிறப்பினையும் அறிந்திலீர்கோள்’ என்பாள், ‘அணங்குக்கு’ என்கிறாள்.
அணங்கு –
தெய்வப் பெண்; ‘சூரும் அணங்கும் தெய்வப் பெண் பெயர்’ என்னக்கடவதன்றோ?
அங்கு ஓர் ஆடும் கள்ளும் பராய் –
தாழ்ந்த பொருள்களைத் துதித்து. பராய் – பராவி; பிரார்த்தித்து.
துணங்கை எறிந்து –
துணங்கை என்பது ஒரு கூத்து விசேடம். எறிதல் – இடுதல். ‘ஆடல் இட்டு’ என்றபடி.
துணங்கைக் கூத்து என்று கைதட்டி ஆடுவதொரு கூத்து உண்டு; அதனைச் சொல்லிற்றாதல்;
அன்றிக்கே, மஞ்சட் பொடியைக் கையிலே பிடித்து ஒருவர்க்கு ஒருவர் எறிந்து ஆடுவது ஒன்று உண்டு. அதனைச் சொல்லிற்றாதல்.

நும் தோள் குலைக்கப்படும் அன்னைமீர் –
பகவானிடத்தில் செய்த அஞ்சலி மாத்திரமும் ‘இறைவனுடைய நீர்மையாலே மிகை’ என்று இருக்கக்கூடிய
நீங்கள் படும் எளிவரவே இது! ‘தொழுது எழுதும் என்னும் இது மிகை’ என்றே அன்றோ இவர்கள் இருப்பது?
சம்பந்தம் உணர்த்தும் பதிகம் -தோழி -பிரணவார்த்தம்
-உபாய நிரபேஷன்-கை கூப்புச் செயலும் கூடாதே -நமஸ்-தாயார் நிலை -என்பதால் -இப்படி இருக்கக் கடவ நீங்கள் என்றவாறு

உணங்கல் கெடக் கழுதை உதடு ஆட்டம் கண்டு என் பயன் –
ஜீவனத்திற்குச் சாதனமாய் இருக்கின்ற நெல்லானது அழிந்துபோகும்படிக்குத் தகுதியாக, அதனைத் தின்னுகிற கழுதையினுடைய
உதட்டின் செயலைக் கண்டிருந்தால் என்ன பிரயோஜனம் உண்டு?
அப்படியே இவளைக் கொண்டு வாழ்வதற்கு இருக்கிற நீங்கள் இவளுக்கு அழிவினை உண்டாக்கக் கூடியதான
வேறு தேவதைகளின் சம்பந்தமுடையாருடைய செயல்களைக் கண்டுகொண்டிருக்கிற இதனால் என்ன பிரயோஜனம் உண்டு?
பிரயோஜனம் இல்லாமை மாத்திரமே அன்று; அழிவே சித்திப்பது.
அன்றிக்கே,
உணங்கல் கெட – இவளுடைய உணங்குதல் கெட; ‘இவள் இளைப்புத் தீர’ என்றபடி.
கழுதை – பேயை, கழுது – பேய். உதடு ஆட்டம் கண்டு என் பயன் – நீங்கள் ஆடும் கள்ளும் பிரார்த்தித்துக் கொடுக்க,
அது அதனை உண்ணும்போது அதனுடைய உதடு ஆடுகிறபடியைக் கண்டிருப்பதனால் என்ன பயன் உண்டு?’ என்று
ஐயன் திருக்குருகைப் பெருமாள் அரையர் நிர்வஹிப்பர். ‘கழுது பேயும் பரணும்’ என்னக் கடவதன்றோ?

‘இதில் பிரயோஜனம் இல்லையாகில், பிரயோஜனத்தினை உடையதாய் இருக்குமதனைச் சொல்லாய்,’ என்ன,
வணங்கீர்கள் –
அவர்கள் திருவடிகளிலே விழுப்பாருங்கோள். ‘‘அவர்கள்’ என்றது யாரை?’ என்ன,
மாயப்பிரான் தமர் வேதம் வல்லாரை –
ஆச்சரியமான குணங்களையும் செயல்களையுமுடையவனுடைய குணங்களிலே ஈடுபட்டிருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்களை.
‘எல்லா வேதங்களாலும் அறியப்படுமவன் யானே,’ என்றும்,
‘எல்லா வேதங்களும் எந்தப் பரம்பொருளிடத்தில் ஒரே முகமாய் ஆகின்றனவோ’ என்றும்,
(ஒத்தின் பொருள் முடிவும் இதுவே )
எல்லாச்சொற்களுக்கும் எவரிடத்தில் தாத்பரியமோ அந்தக் கோவிந்தனை வணங்குகிறோம்,’ என்றும் சொல்லுகிறபடியே
வேத தாத்பரியம் கைப்பட்டிருக்குமவர்கள் ஆதலின், ‘வேதம் வல்லார்’, என்கிறது.

‘வேதம் வல்லார்’ என்று இங்குக் கூறுதற்குக் கருத்து என்?’ என்னில்,
‘வேறு தெய்வங்களின் சம்பந்தமுடையார் புகுந்து சிகிச்சை செய்வதற்குப் பரிஹாரமே அன்றோ இவள் சொல்லப் புகுந்தது?
அதில்,‘அவனை ஒழிந்தது ஒரு தேவதைக்குத் தனித்து ஓர் உயிர்ப்பு இல்லை;அவனே உத்தேஸ்யம்,’ என்று
இருக்குமவர் காலிலே விழுங்கோள்,’ என்று கூறுதல். (பரன் திறம் அன்று பல்லுலகீர் தேவம் ஒன்றும் இல்லையே )
‘தேவதைகள்தோறும் தனித்தனியே காரியம் உண்டு’ என்று இராமல்,
‘எல்லாச் சொற்களும் ஒரே பொருளைச் சொல்லுவது’ என்று இருக்குமவர்களைப் பற்றப் பாருங்கோள் என்கிறாள்’ என்றபடி.

—————————————————————————————————

வேதம் வல்லார்களைக் கொண்டு விண்ணோர் பெருமான் திருப்
பாதம் பணிந்து,இவள் நோய் இது தீர்த்துக் கொள்ளாது போய்,
ஏதம் பறைந்து,அல்ல செய்து,கள்ளூடு கலாய்த்தூஉய்,
கீத முழவிட்டு, நீர் அணங்கு ஆடுதல் கீழ்மையே.–4-6-8-

பாகவத புருஷகார மாகக் கொண்டு -முதலில் ஸ்ரீ வைஷ்ணவர்களைப் பற்ற சொல்லி –
இதில் இவர்களை முன்னிட்டு சூரி சேவ்யனைப் பற்ற சொல்கிறாள்
வேதம் வல்லார்களைக் கொண்டு -வேத தாத்பர்யம் அறிந்த -உபாய நிரபேஷன் என்று அறிந்து -கைங்கர்யமே புருஷார்த்தம்
விண்ணோர் பெருமான் திருப் பாதம் பணிந்து,-நித்ய சூரிகள் -சேவ்யன்
இவள் நோய் இது தீர்த்துக் கொள்ளாது போய்,-விலஷண நோய்
ஏதம் பறைந்து,அல்ல செய்து,கள்ளூடு கலாய்த்தூஉய்,-ஸ்வரூப ஹானி -இதர தேவதைகள் சப்தங்கள் –
அகர்தவ்யங்கள் செய்து –
நடுவே நடுவே ஆராதனா சாமக்ரியை -தூவி
கீத முழவிட்டு, நீர் அணங்கு ஆடுதல் கீழ்மையே.–முழவு வாத்ய கோஷம் பண்ணி
இவள் உடன் அனுபந்தம் பாசம் உடைய நீங்கள் -பிரபன்ன குடிக்கு இழுக்கு ஆகுமே

‘வேதத்திலே வல்லவர்களான ஸ்ரீ வைஷ்ணவர்களைக்கொண்டு நித்தியசூரிகளுக்குத் தலைவனான சர்வேசுவரன் திருவடிகளை வணங்கி,
இவளுடைய நோயாகிய இதனைத் தீர்த்துக் கொள்ளாமல், சிறு தெய்வங்கள் பக்கல் சென்று குற்றமுள்ளவற்றைச் சொல்லிச் செய்யத்
தகாத காரியங்களைச் செய்து, கள்ளினை வீட்டிற்குள்ளே கலந்து தூவிக் கீதத்தோடு கூடின முழவென்னும் வாத்தியத்தை அடித்து
நீங்கள் அணங்கு ஆடுதல் இக்குடிக்கு இழுக்கேயாம்,’ என்றவாறு.
‘வேதம் வல்லார்களைக் கொண்டு பாதம் பணிந்து தீர்த்துக்கோடல் தக்கது,’ என்க. அங்ஙனமன்றி,
‘போய்ப் பறைந்து செய்து தூவி ஆடுதல் கீழ்மையாம்,’ என்க. ஏதம் – குற்றம். பறைந்து – சொல்லி. கலாய் -கலந்து.

‘ஸ்ரீ வைஷ்ணவர்களைப் புருஷகாரமாகக் கொண்டு சர்வேசுவரன் திருவடிகளிலே சரணம் புக்கு இவளுடைய
நோயைத் தீர்த்துக்கொள்ளுதலை விட்டு, புன்சிறு தெய்வங்களைப் பற்றுதல் உங்களுக்குக் கீழ்மையை விளைக்கும்,’ என்கிறாள்.

வேதம் வல்லார்களைக் கொண்டு –
‘சர்வேசுவரனே பலமும் பலத்தை அடைதற்குரிய வழியும்,’ என்கிற வேத தாத்பரியம் கைப்பட்டவர்களைப் புருஷகாரமாகக் கொண்டு என்றது,
‘வேறாக, ஏத்தி இருப்பாரை வெல்லுமே மற்றவரைச் சார்த்தி இருப்பார் தவம்,’ என்கிறபடியே,
அவர்கள் காலிலே விழப்பெறில் விரைவில் நோய் தீர்தல் கூடும். அது கூடாதே அன்றோ? -இது உலகில் நடை பெறாதே –
தம்மைப் போன்றவர்களாக நினைத்திருக்கையாலே ருசி விசுவாசங்கள் அவர்கள் பக்கல் கனக்கப் பிறவாதே அன்றோ?
ஆன பின்னர், அவர்களைப் புருஷகாரமாகக் கொண்டு அவனைப் பற்றுதற்குப் பாருங்கோள் என்கிறாள்,’ என்றபடி.
இங்கு இருக்கும் நாள்களுக்குப் புருஷகாரமாக முமுக்ஷூக்கள் உளர்; அங்குதானே நித்தியசூரிகள் உளரே அன்றோ?
‘அந்த அமாநவன் முத்தர்களைப் பரம்பொருளிடம் சேர்ப்பிக்கின்றான்,’ என்கிறபடியே,
அவர்கள் கொடுபுக்கு இருத்தலே அன்றோ அவ்வோலக்கத்தில் இருப்பது?

வேதம் வல்லார்களைக் கொண்டு சர்வேசுவரன் திருப்பாதம்’ என்னாதே,
‘விண்ணோர் பெருமான் திருப்பாதம்’ என்று அருளிச்செய்வதனால்
நித்தியசூரிகளும் புருஷகாரமாய் இருப்பவர்கள் என்பது தோன்றுகிறது;
அதனை விளக்குகிறார், ‘இங்கிருக்கும்’ என்று தொடங்கி.
இவர்கள் இருவரும் புருஷகாரமாய் இருப்பது, முமுக்ஷூத்வ அவஸ்தையிலும், முத்த அவஸ்தையிலும் ஆம்.
‘அவர்கள் புருஷகாரமாய் இருப்பர்களோ?’ என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார்,
‘அந்த அமாநவன்’ என்று தொடங்கி. இது, சாந்தோக்யஉபநிட. 4 : 15.
அமாநவனைச் சொன்னது, நித்திய சூரிகளுக்கும் உபலக்ஷணம்.
இங்கு, ‘முடியுடை வானவர் முறைமுறை எதிர்கொள்ள’ என்ற தமிழ் மறை அநுசந்திக்கத் தகும். இது, திருவாய். 10. 9 : 8.

விண்ணோர் பெருமான் திருப்பாதம் பணிந்து –
அயர்வு அறும் அமரர்கள் அதிபதி திருவடிகளிலே பணிந்து. இவள் நோய் இது தீர்த்துக்கொள்ளாது –
நோய் கொண்டவள் இவள்; நோய்தான் இது; இதற்குத் தகுதியான பரிஹாரத்தைச் செய்யாமல்.

போய் –
நம்முடைய நிலைக்கு மிக்க தூரமாய் உரியது அல்லாதது ஒன்றிலே கைகழியப் போய்.
ஏதம் பறைந்து –
உங்களுக்குக் குற்றமானவற்றை நீங்கள் சொல்லி.
அல்ல செய்து –
செய்யக் கூடியது அல்லாததைச் செய்து.
கள் ஊடு கலாய்த் தூஉய் –
அசுத்தமான பொருள்களைக் கொண்டு வீடு முழுதும் கலந்து தெளித்து. தூய்மை இல்லாத பொருள்களைத் தீண்டுதலைப்
போன்றது ஒன்றே அன்றோ, வேறு தெய்வங்களினுடைய சம்பந்தமும்? ‘விண்ணோர் பெருமான் திருப்பாதம் பணிந்து இவள் நோய்
இது தீர்த்துக்கொள்ளாது’ என்கையாலே, அவனைக் கொண்டு பெறுதற்குப் பாராமல், அவனுக்குப் புறம்புமாய் யான் எனது என்னும்
செருக்குகளை உட்கொண்டதான கிரியா கலாபங்களாலே பெறுதற்குப் பார்க்கையும் அதனைப் போன்றது ஒன்றே ஆயிற்று என்பதனைத் தெரிவித்தபடி.
அற மேலாய் இருக்கும் மருந்தே அன்றோ இவள் சொல்லிற்று? அதனை அன்றோ இவர்கள் விரும்புதல் இன்றி நிற்கிறது?
கீதம் முழவு இட்டு –
தண்ணிதான கீதத்தோடே கூடின முரசுகளை ஒலிப்பித்து.
நீர் அணங்கு ஆடுதல் –
பகவானுடைய குணங்களை அனுபவிக்கின்ற அனுபவத்தாலே ‘உண்டு களித்தேற்கு உம்பர் என்குறை?’ என்னக்கூடிய
நீங்கள் தெய்வம் ஏறினவர்களாய்க்கொண்டு ஆடுவது.
கீழ்மையே –
‘சாலத் தண்ணிது. உங்கள் அளவில் போகுமது அன்று; உங்கள் வழிக்கும் கொத்தை’ என்றபடி. ஊடு -உள்ளே.

———————————————————————————-

கீழ்மையினால் அங்கு ஓர் கீழ்மகன் இட்ட முழவின் கீழ்
நாழ்மை பலசொல்லி, நீர் அணங்கு ஆடும் பொய் காண்கிலேன்;
ஏழ்மைப் பிறப்புக்கும் சேமம் இந் நோய்க்கும் ஈதே மருந்து;
ஊழ்மையில் கண்ணபிரான் கழல் வாழ்த்துமின் உன்னித்தே.–4-6-9-

ஸ்வ தந்தரமாக பண்ணும் நிஷ் பிரயோஜனமான -பார்க்க மாட்டோம் –
ஸ்ரீ கிருஷ்ணன் திருவடிகளில் மங்களா சாசனம் பண்ண வேண்டும் என்கிறாள்
கீழ்மையினால் அங்கு ஓர் கீழ்மகன் இட்ட முழவின் கீழ்-நிகர்ஷம் -நீசன் சொல்லும் படி வாத்ய அனுவ்ருத்தி பண்ணி
நாழ்மை பலசொல்லி, நீர் அணங்கு ஆடும் பொய் காண்கிலேன்;தேவதாந்திர உத்கர்ஷம் சொல்லி -நிஷ்பலம்
ஏழ்மைப் பிறப்புக்கும் சேமம் இந் நோய்க்கும் ஈதே மருந்து;சப்த சப்த சப்தச -ஷேமம்-இதுவே –
ஊழ்மையில் கண்ணபிரான் கழல் வாழ்த்துமின் உன்னித்தே.-ஸ்வரூப பிராப்தம்
-மரபை மாற்றாமல் சுலபன் -திருவடிகளை மங்களா சாசனம் பண்ணுமின் –

‘அங்குத் தாழ்ந்த மகனாலே அடிக்கப்படுகின்ற முழவின்கீழே இருந்துகொண்டு, குற்றமுள்ளன பலவற்றைச் சொல்லிக்கொண்டு,
நீங்கள் உங்கள் கீழ்மையினாலே அணங்கு ஆடுகின்ற பொய்யை நான் காணமாட்டேன்; எழுவகைப்பட்ட பிறப்புகளுக்கும் பாதுகாவலாம்;
இதுவே இந்நோய்க்கும் மருந்தாகும்; ஆதலால், முறையாகக் கண்ணபிரானுடைய திருவடிகளை நினைத்து வாழ்த்துங்கள்,’ என்றவாறு.
‘நீர் கீழ்மையினால் அணங்கு ஆடும் பொய்’ எனக் கூட்டுக. ‘கண்ணபிரானுடைய கழல் உன்னித்து வாழ்த்துமின்,’ என மாறுக. நாழ்மை : குற்றம்.

‘நீங்கள் செய்கின்ற பயன் இல்லாத காரியங்களை நான் காணமாட்டேன்; பிழைக்க வேண்டும் என்று
இருந்தீர்கோளாகில், கிருஷ்ணன் திருவடிகளை நினைத்து வாழ்த்துங்கள்,’ என்கிறாள்.

கீழ்மையினால் –
உங்கள் தண்மையினாலே; இவர்களுக்குத் தண்மையாவது, இராஜச தாமச குணங்களாலே மறைக்கப்பட்டிருத்தல்.
‘ஆகையால் அன்றோ இக்காரியம் செய்கிறார்கள்?’ என்றபடி.
அங்கு ஓர் கீழ்மகன் இட்ட முழவின்கீழ் –
‘இன்ன இடத்தான், இன்னான்’ என்று சொல்ல ஒண்ணாத ஒரு சண்டாளன் அடிக்கிற முரசின் கீழே புக்கிருந்து.
நாழ்மை பல சொல்லி –
அவற்றுக்கு இல்லாத ஏற்றங்களைப் பலவும் சொல்லி; என்றது,
‘உண்டும் உமிழ்ந்தும் கடந்தும் இடந்தும்’ என்று சர்வேசுவரனைச் சொல்லுமாறு போலே,
‘இவன் இன்னது செய்தான், இன்னது செய்தான்,’ என்று சொல்லா நிற்பர்களேயன்றோ? – அதனைத் தெரிவித்தபடி.
நாழ் என்பது குற்றத்திற்கும் இல்லாததனைச் சொல்லுகைக்கும் ‘நான்’ என்று அபிமானித்திருக்கைக்கும் பேர்.
நீர் அணங்கு ஆடும் பொய் காண்கிலேன் –
நீங்கள் தெய்வம் ஏறினவர்களாய்க்கொண்டு ஆடுகின்ற இப்பொய் என்கண்களுக்கு ஒரு பொருளாய்த் தோற்றுகிறது இல்லை.
‘பலவகைப்பட்ட பொருள்கள் இல்லை,’ -ப்ரஹ்மத்தை அந்தராத்மாவாகக் கொள்ளாத வஸ்துவே இல்லையே -என்கிறபடியே,
‘அவனை ஒழிந்தது ஒரு தெய்வத்திற்கு அவன் துணை இன்றித் தானே ஒரு பொருளாய் இருக்கும் தன்மை உண்டு,’ என்று
இருக்கில் அன்றோ அவர்கள் செய்வது ‘மெய்’ என்று தோற்றுவது?

‘நாங்கள் செய்கிறவை பொய்யாகில், நீ சொல்லுகிறது மெய்யாய் எவ்வளவு பலிக்கும்?’ என்ன
ஏழ்மை பிறப்புக்கும் சேமம் –
எல்லாப் பிறவிகளிலும் காவலாம்; ஒரு நன்மை உண்டானால், அதனை
ஏழ் ஏழாகச் சொல்லக் கடவதன்றோ? அதனால், ‘ஏழ்மை’ என்கிறாள்.
அன்றிக்கே,
‘தண்ணிதான பிறவி’ என்னலுமாம். ஏழ்மை – தண்மை. ‘நாங்கள் பிறவிகளிற் காவலாமதுவோ தேடுகிறது?
இவள் நோய்க்குப் பரிஹாரம் அன்றோ? அதனைச் சொல்லாதே மற்று ஒன்றைச் சொல்லுகிறது என்?’ என்ன, ‘
ஆகில், சம்பு அறுத்து ஆர்க்கைக்குப் போக வேண்டுமோ?
இந்நோய்க்கும் ஈதே மருந்து –
அடி பற்றின மருந்து அன்றோ? ஊழ்மையில் – முறையிலே; ஊழ் – முறை.
அன்றிக்கே,
நீங்கள் செய்கிறவை போலன்றிக்கே, முறையிலே செய்ததாகவுமாம்.’

கண்ணபிரான் கழல் உன்னித்து வாழ்த்துமின் –
‘உபகாரகனான கிருஷ்ணன் திருவடிகளை வாழ்த்தப் பாருங்கோள். ‘அடிக்கழஞ்சு பெறும் மருந்தேயன்றோ அது?
அது செய்யுமிடத்தில் எல்லாரும் ஒக்க நினைத்து வாழ்த்தப்பாருங்கோள்,’ என்பாள், ‘வாழ்த்துமின்’ எனப்
பன்மை வாய்பாட்டாற் கூறுகின்றாள்.
இப்படிச் செய்யவே, எல்லாப் பிறவிகளிலும் பாதுகாவலாய் இவள் நோய்க்கும் பரிஹாரமாம்;
மேலும், செய்யத்தக்கதனைச் செய்தவர்களும் ஆவோம்.
‘பகவான் தம்மை நினைத்த அளவில் மங்களத்தைக் கொடுக்கிறார்,’ என்பது ஸ்ரீ விஷ்ணு புராணம்.

—————————————————————–

உன்னித்து மற்றொரு தெய்வம் தொழாள், அவனை அல்லால்;
நும் இச்சை சொல்லி,நும் தோள் குலைக்கப்படும் அன்னைமீர்!
மன்னப் படுமறை வாணனை வண் துவராபதி
மன்னனை ஏத்துமின்! ஏத்துதலும்,தொழுது ஆடுமே.–4-6-10-

காட்டு மன்னார் அங்கு –நாட்டு மன்னார் இங்கு –ஸ்ரீ வித்யா ராஜ கோபாலன் –
ஆழ்வார் திரு உள்ளம் அறிந்து மா முனிகள் -சமர்ப்பித்து அருளினார்
கபிஸ்தலம் -பாசுரமும் முன்னோர் சமர்ப்பித்தவை -நேராக பெயர் இல்லாமல் -ஆற்றங்கரை கிடந்த -என்பதையே கொண்டே –
பொழுது போக்கும் ஆழ்வார் அருளிச் செயல்களிலே கொண்டவர்கள் இவர் –
உலகம் ஏத்தும் –குண பால -கிழக்கே -திருக்கண்ணபுரம் -காட்டு மன்னார் கோயில் -கிழக்கே யானையாக -பெரியவாச்சான் பிள்ளை –
நீங்கள் ஸ்துதித்த போதே ஆச்வத்தையாகும் -நித்ய வேத பிரதிபாத்யனான -மன்னப் படும் மறை வாணன்
பரமை காந்தியான இவள் -ஏக அந்தம் ஒன்றே முடிவு
உன்னித்து மற்றொரு தெய்வம் தொழாள், அவனை அல்லால்;-நினைக்க மாட்டாள் -தொழுவது மட்டும் இல்லை என்று இல்லை
நும் இச்சை சொல்லி,நும் தோள் குலைக்கப்படும் அன்னைமீர்!-பரிவாலே கலங்கி அவைஷ்ணவ வியாபாரம்
உங்களுக்கு அபிமதம் -பகவத் பரிசர்யா உபகரணம் அன்றோ உங்கள் தோல் விசித்ரா தேக சம்பந்தி
ஈஸ்வரனுக்கு அன்றோ நிவேதனம் பண்ண வேண்டும்
குலைத்து ஆடும்படி படா நின்றன
மன்னப் படுமறை வாணனை வண் துவராபதி-வேதம் பிரதானதையா பிரதிபாத்யன் -கொடுத்தவனும் அவனே சொல்லப்படுபவனும் அவனே
ஆஸ்ரிதர்க்கு நித்ய சந்நிதி பண்ணி அருளுகிறான்
தஷிண த்வாரகை -பிரசித்தி -சதஸ்-பிராபல்யம் புண்ய ஷேத்ரங்களுக்கு –
மன்னனை ஏத்துமின்! ஏத்துதலும்,தொழுது ஆடுமே.-சொன்னால் -சம காலத்திலேயே -பிரபுத்தியையாய் தொழுது -ந்ருத்தம் பண்ணுவாள் –

‘சர்வேசுவரனை அல்லாமல் வேறு ஒரு தெய்வத்தை நினைந்து வணங்கமாட்டாள் இவள்; இங்ஙனமிருக்க, உங்களுக்கு
விருப்பமானவற்றையெல்லாம் சொல்லி, உங்களுடைய தோள்களை வருத்திக்கொள்ளுகின்ற தாய்மார்களே!
என்றும் நிலைத்திருக்கின்ற வேதங்களால் சொல்லப்படுகின்றவனும் வளப்பம் பொருந்திய துவாரகைக்கு அரசனுமான
சர்வேசுவரனைத் துதி செய்யுங்கள்; துதி செய்த அளவிலே அவனைத் தொழுது ஆடுவாள்,’ என்றவாறு.
‘உன்னித்துத் தொழாள்’ என்க. ‘சொல்லிக் குலைக்கப்படும் அன்னைமீர்’ என்க. மன்னுதல் – நிலை பெறுதல்

‘இவளுக்குக் கிருஷ்ணன் திருவடிகளில் உண்டான ஐகாந்தியத்தை நினைத்து,
அவனை ஏத்துங்கோள்; இவள் பிழைப்பாள்,’ என்கிறாள்.

உன்னித்து மற்று ஒரு தெய்வம் தொழாள் அவனை அல்லால் –
தன் நெஞ்சாலே மதித்து வேறு ஒரு தெய்வத்தைத் தொழுது அறியாள் இவள்.
‘தொட்டில் பருவமே தொடங்கிப் பரம சினேகிதராய் இராநின்றார்’ என்கிறபடியே,
பிறை தொழும் பருவத்திலும் பிறை தொழுது அறியாள்.
பிறரை தொழுது அறியாள் -சந்தரன் தலையில் கொண்ட ருத்ரனை தொழ மாட்டாள் என்றுமாம் —
பிறை பல் முளைக்கும் பொழுதும் என்றுமாம் –
‘முலையோ முழுமுற்றும் போந்தில; பெருமான் மலையோ திருவேங்கடம் என்று கற்கின்ற வாசகம் இவள் பரமே!’ என்று
நீங்கள் ஆச்சரியப்படும்படி அன்றோ அவ்விளமைப்பருவத்திலும் இருந்தது? –
சாதனா பக்தி இல்லை சாத்திய பக்தியும் இல்லை -சஹஜ பத்தி –
இனி, ‘இப்போது பர்வதத்தை விட்டுப் பதர்க்கூட்டத்தைப் பற்றுமோ? ஆகையாலே,
இன்னார்க்கு இன்னது பரிஹாரம் என்று ஒன்று இல்லையோ? அது அறிந்து பரிஹரிக்க வேண்டாவோ?
முழங்கால் தகர மூக்கிலே ஈரச்சீரை கட்டுமாறு போலேயன்றோ நீங்கள் செய்கிற பரிஹாரம்?
வேறு தெய்வங்களின் சம்பந்தம் இவளுக்குப் பொறாது,’ என்று அறிய வேண்டாவோ?’ என்கிறாள் என்றபடி

‘அநந்ய தைவத்வம் –
‘வேறும் பற்றக்கூடிய ஒரு தெய்வம் உண்டு, அது காப்பாற்றுகிறது,’ என்று நினைக்க விரகு இல்லை கண்டாய் எனக்கு.
ஸஹபத்நியா –
என்று, பெரிய பெருமாள் திருவடிகளிலே இவர் புகும் போதும் இவர்க்கு எடுத்துக் கைநீட்டப் புகுமத்தனை போக்கி,
பெரிய பெருமாள் தாம் உத்தேசியமாகப் புக்கு அறியேன். (ஸஹ பதன்யா விசாலாக்ஷி நாராயணன் உபகமனத் )
இயம்க்ஷமாச –
இராவணன் பலவாறாகப் பிதற்றிய வார்த்தைகளையும் இராக்ஷசிகளுடைய கைகளாலும் வாயாலும் அச்சம் உறுத்துதலையும்
பொறுத்திருந்ததும் ‘அவருடைய ஓர் இன்சொல் கேட்கலாம்’ என்று கண்டாய்.
பூமௌச ஸய்யா –
‘இத் தரைக்கிடை கிடந்ததும் தேவரீருடைய மடியில் படுத்துக்கொண்டேன்,’ என்கிறபடியே, ‘அவருடைய மடியில் இருப்பு
ஒருகால் சிந்திக்குமோ?’ என்னுமதனாலே கண்டாய்.
நியமஸ் தர்மமே –
‘காப்பாற்றும் தர்மம் அவர் தலையிலே’ என்னுமதனாலே கண்டாய் நான் இருந்தது; என்றது,
‘பத்துத் தலைகளையுடையவனே! எரிக்கப்படுவதற்குத் தகுந்தவனே! எனக்கு ஆற்றல் இருந்தும், என்னுடைய கற்பாகிய ஒளியால்
உன்னைச் சாம்பலாகச் செய்யேன்,’ என்று இராவணனைப் பார்த்துக் கூறியது ஸ்ரீ ராமபிரானை நினைத்து’ என்றபடி.
பதிவிரதாத்வம் –
‘சரணாகதி அடைந்தவர்களைப் பாதுகாத்தல் எனக்கு விரதம்,’ என்றவருடைய விரதம் ஒழிய,
‘எனக்கு’ என ஒரு சங்கல்பத்தை உண்டாக்கி இவற்றை அழிக்க நினைத்திலேன் கண்டாய்.
விபலம் மம இதம் –
தப்பாதவையும் தப்பிவிட்டன. ‘எது போலே?’ என்னில்,
மாநுஷாணாம் கிருதக்னேஷூ கிருதமிவ –
‘நான் என்னை மனிதனாகவே நினைக்கிறேன்,’ என்றவர்க்கும் உண்டே அன்றோ மனிதத் தன்மை?
அவரை ஒழிந்தார் திறத்துச் செய்த காரியங்களைப் போன்று விழுந்தது. என்றது,
‘தப்பாதது தப்பிற்று,’ என்றபடி, ‘அதற்கு அடி என்?’ என்னில்,
மம இதம் –
‘அவர் பக்கல் குறையில்லை; அதற்கு இலக்கு நான் ஆகையாலே,’ என்றாள் பிராட்டி.

நும் இச்சை சொல்லி –
உங்களுக்கு இஷ்டமானவற்றைச் சொல்லி; என்றது, ‘பொருளின் உண்மையைப் பார்த்தாலும் இவளைப் பார்த்தாலும்
வேறு தெய்வங்களின் சம்பந்தம் பொறாததாய் இருந்ததே அன்றோ? இனி உள்ளது உங்களுக்குத் தோற்றிய
வார்த்தைகளைச் சொல்லுகையாயிற்றே அன்றோ?’ என்றபடி.

நும் தோள் குலைக்கப்படும் அன்னைமீர் –
துர்விருத்தர் செய்வதை விருத்தவான்கள் செய்வர்களோ?
‘தோள் அவனை அல்லால் தொழா’ என்றே அன்றோ நீங்கள் சொல்லுவது?
ததேக சேஷத்வம் –விருத்தவான்கள் -பஞ்ச சம்ஸ்காரம் பண்ணாத துர்வ்ருத்தர்கள் –
ஆதலால், நீங்கள் இவற்றுக்கு வேறுபட்டவர்களாமவர்கள் அல்லிரே,’ என்றபடி. ‘ஆனால், செய்ய அடுப்பது என்?’ என்ன,

மன்னப்படு மறைவாணனை –
நித்தியமான வேதங்களாலே சொல்லப்படுகையாலே வந்த ஏற்றத்தினையுடையவனை;
மன்னப்படுதல் -நித்தியமாய் இருத்தல். என்றது, மனிதனுடைய புத்தியினாலே உண்டானவை அல்லாமையாலே,
வஞ்சனை முதலான தோஷங்கள் இன்றிக்கே, முன்னே முன்னே உச்சரித்துப் போந்த கிரமத்திலே
பின்னே பின்னே உச்சரித்து வருகின்ற தன்மையைப் பற்றச் சொன்னபடி.
அன்றிக்கே
‘மன்னுகையாவது, பயிலுதலாய், ஓதுகின்ற விதியின்படி வந்துகொண்டிருக்கும்
வேதங்களால் சொல்லப்படுகின்றவனை’ என்னுதல்.
ஆக, ‘ஆகமம் முதலானவைகளில் சொன்னவற்றைக்கொண்டோ பரிஹரிக்கப் பார்ப்பது?
வேதங்களால் அறியப்படுகின்றவனைப் பற்றப் பாருங்கோள்,’ என்கிறாள் என்றபடி
அஷட் கரணம் கேட்காமல் மூன்றாவது ஆள் கேட்காமல் காலஷேபம் -வேத அத்யாயனம் –

வண் துவராபதி மன்னனை –
கேட்டார் வாய்க் கேட்டுப் போகாமே கண்ணாலே கண்டு அனுபவிக்கலாம்படி வந்து அவதரித்தவனை.
‘நீரிலே புக்கு அழுந்தினாரை முகத்திலே நீரைத் தெளித்துப் பரிஹரிக்குமாறு போலே, தேர்ப்பாகனார்க்கு மோஹித்த இவளை,
வண் துவராபதி மன்னன் திருநாமத்தைச் சொல்லித் தெளியச் செய்யப் பாருங்கோள்,’ என்பாள்,
‘வண் துவராபதி மன்னனை ஏத்துமின்’ என்கிறாள்.
32 சேவை -மூல மூர்த்தி முதல் சேவை பரவாசு தேவன் -உத்சவர் -32 சேவை ஸ்ரீ வித்யா ராஜகோபாலன் –
32 சேவைகள் கொடுத்த -வண்மை –வண்டு வராத -செண்பகா ஷேத்ரம் –

ஏத்துமின் –
வாய் படைத்த பிரயோஜனம் பெற ஏத்துங்கோள். ‘
சீர் பரவாது, உண்ண வாய்தான் உறுமோ ஒன்று?-பெரிய திருவந்தாதி -51-’ என்று அன்றோ நீங்கள் சொல்லுவது?
மிண்டர் பாய்த்து உணும் சோற்றை விலக்கி நாயக்கி இட்டு -இவர்களுக்கு புல்லைத் திணிமின் -திருமாலை –
ஏத்துதலும் தொழுது ஆடும்
– நீங்கள் செய்யத்தகும் காரியத்தைச் செய்து முடித்தவர்கள் ஆகுமளவே அன்று;
‘பிறகு அவன் அச்சம் இல்லாதவன் ஆகிறான்,’ என்கிறபடியே
ஏத்தின உடனேயே தெளிவையுடையவளாய்த் தொழுது ஆடுவாள். உணர்த்தி உண்டானால் செய்வது அது போலே காணும். என்றது,
‘தரித்து ஆடுதற்குத் தக்க ஆற்றலையுடையவளும் ஆவாள்,’ என்றபடி.
விழிக்கும்- தொழுது ஆடு என்னாமல் –சொல்ல வேண்டியது இல்லை இவளுக்கு –
உணர்த்தி உண்டானால் இத்தையே செய்பவள் அன்றோ -தரித்து -வியாபரிப்பாள்-என்றவாறு –

மன்னார் குடி ஸ்ரீ ராஜமன்னார் சமர்ப்பித்து அருளினார் மணவாள மா முனிகள்-தெற்கு த்வாராபதி

—————————————————-

தொழுது ஆடித் தூ மணி வண்ணனுக்கு ஆட்செய்து நோய் தீர்ந்த
வழுவாத தொல் புகழ் வண் குருகூர்ச் சடகோபன் சொல்
வழுவாத ஆயிரத்துள் இவை பத்து வெறிகளும்
தொழுது ஆடிப் பாடவல்லார் துக்க சீலம் இலர்களே.–4-6-11-

விக்ருதராய் அனுபவிப்பார் பகவத் விச்லேஷாதி துக்கம் அடையார்
தொழுது ஆடித் தூ மணி வண்ணனுக்கு ஆட்செய்து நோய் தீர்ந்த-அஞ்சலி பண்ணி -சேஷத்வ ஞானத்தால்
உஜ்வலமான மாலே மணி வண்ணா -கைங்கர்யமாக தொழுவதும் ஆடுவதும்
விஸ்லேஷ துக்க ரூப வியாதி ஷமிக்கும் படி
வழுவாத தொல் புகழ் வண் குருகூர்ச் சடகோபன் சொல்-தேவதாந்திர ஸ்பர்சம் வராத குறை இல்லாத
பகவத் சேஷத்வ பிரதை-ஸ்வரூபாதிகள் ஒன்றும் குறை இல்லாத பகவத் பிரபாவம் சொல்லும் திருவாய்மொழி
வழுவாத ஆயிரத்துள் இவை பத்து வெறிகளும்-வெறி யாட்டும் துறை -அர்த்த அனுசந்தாபம் செய்து
தொழுது ஆடிப் பாடவல்லார் துக்க சீலம் இலர்களே-துக்கம் இல்லாத ஸ்வ பாவம் –
பிரேம பாரவச்யத்தால் -பகவத் விஸ்லேஷ துக்கம் -தந் நிவர்த்தமாக தேவதாந்திர ஸ்பர்சம் பெரும் பெரிய துக்கமும் வாராது
மயங்கின நிலையிலும் தேவதாந்திர ஸ்பர்சம் வராது என்றவாறு
நல்லது பண்ணுவதாக நினைத்து தப்பு -திருதராஷ்ட்ரன் கைகேயி போலே இந்த திருத் தாயாரும் -செய்தாளே

‘பரிசுத்தமான நீலமணி போன்ற நிறத்தையுடைய சர்வேசுவரனுக்குத் தொழுதும் ஆடியும் அடிமை செய்து நோய் தீர்ந்த,
குற்றமில்லாத இயல்பான புகழையுடைய வளப்பம் பொருந்திய திருக்குருகூரிலே அவதரித்த ஸ்ரீசடகோபராலே சொல்லப்பட்ட
குற்றம் இல்லாத ஆயிரம் திருப்பாசுரங்களுள் வெறியாட்டுச் சம்பந்தமான இவை பத்துப் பாசுரங்களையும் தொழுது
ஆடிப்பாடுதற்கு வல்லவர்கள் துக்கத்தின் தன்மையும் இல்லாதவர்கள் ஆவார்கள்,’ என்றவாறு.

‘தொழுது ஆடித் தீர்ந்த சடகோபன்’ என்றும், ‘வழுவாத தொல்புகழையுடைய சடகோபன்’ என்றும் தனித்தனியே கூட்டுக.
‘பாட வல்லார் துக்கம் இலர்,’ என்க. சீலம் – தன்மை.

‘இத்திருவாய்மொழியை மனப்பூர்வமாகக் கற்க வல்லவர்கள், தாம் பிரிந்து பட்ட துன்பம் படாமல் பலத்திலே சேர்வர்,’ என்கிறார்.

தொழுது ஆடித் தூ மணி வண்ணனுக்கு ஆட்செய்து நோய் தீர்ந்த –
இதற்கு, ‘மோஹித்தவள் சிறிது தெளிந்தவாறே, மோர்க்குழம்பு குடித்தாள், தரித்தாள், கண் விழித்தாள்,
வார்த்தை சொன்னாள்,’ என்பார்களே அன்றோ?’ அது போன்று காணும்,’ என்று அம்மங்கி அம்மாள் பணிப்பர்.
பின்பு பிறந்த மிகுந்த மயக்கத்தாலே பிறந்த உணர்த்தியைக் குவாலாகச் சொல்லுகிறது.
மேல் ‘சீலம் இல்லாச் சிறியன்’ என்னும் திருவாய்மொழி யாகையாலே, உணர்ந்து கூப்பிட வேண்டுமளவே பிறந்தது.
இந்தத் தோழி தானும் அறிந்திலள் காணும் பகவானுடைய பெருமையை. அவர்களை ‘ஏத்துங்கோள்’ என்றாளே அன்றோ?
அது வேண்டாதே, தான் ‘ஏத்துங்கோள்’ என்ற இது தானே அமைந்தது இவள் உணருகைக்கு.
பகவானுடைய பெருமை புறம்புள்ளார்க்கு அறிய ஒண்ணாததைப் போன்று, உட்புகுந்தாராய் அறிந்தாராய்
உள்ளவர்கட்கும் ‘இவ்வளவு’ என்று அறிய ஒண்ணாததாய்க் காணும் இருப்பது.-தனக்கும் தன் தன்மை அறியாதவன் அன்றோ –
முன்பு மயக்கம் -அழுகை இல்லை
தெளிந்தாள்-சம்ச்லேஷம் இல்லையே என்று கூவுவாள் அடுத்த பதிகம் -நடுவு நிலை இல்லையே இவளுக்கு
தோழி வார்த்தை கேட்டதுமே தெளிந்தாள் -திரு நாம சங்கீர்த்தனம் –
நமனும் முத்கலனும் பேச நரகமும் ஸ்வர்க்கமும் ஆகும் நாமங்கள் உடைய நம்பி பிரபாவம் தோழியும் அறிய வில்லையே –

வழுவாத தொல்புகழ் –
வழுவாத தொல் புகழாவது, மயங்கிக் கிடக்கிற நிலையிலும் வேறு தெய்வங்களின் சம்பந்தமும்
அத்தெய்வங்களின் அடியார்களுடைய சம்பந்தமும் அவ் வப்பொருள்களின் தன்மையால் விநாசத்திற்கு ஹேதுவாய்,
அவ்வாறு மயங்கிக் கிடக்கிற நிலையிலும் பகவானுடைய திருப்பெயரும் அவன் அடியார்களுடைய சம்பந்தமும்
பொருள்களின் தன்மையால் தாரகமுமாம்படியான ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீயிலே நிலைநின்ற புகழ்.
ஒருவன் வைஷ்ணவனாகையாவது, இது. ‘சர்வேசுவரன் ரக்ஷகன்’ என்று ஒருவன் பக்கலிலே ஒரு வார்த்தை கேட்டு விட்டு,
வேறு தெய்வங்களின் சம்பந்தமும் பாகவதர் அல்லாதார் சம்பந்தமும் உண்டாகுமே யானால்,
வைஷ்ணவன் ஆவதற்கு விரகு இல்லை கண்டீர்.
முன் பகுதியை அநுசந்தித்தால் இத்தலையால் ஒரு துரும்பு நறுக்கவும் தகுதி இல்லாதபடியாய் இருக்கும்;
பின் பகுதியை நினைத்தால், இளைய பெருமாளைப்போலே கண்ணுறங்கவும் விரகு இல்லையாய் இருக்கும்;
ஒருவன் பக்கலிலே ஒரு வார்த்தை கேட்டு விட்டு-த்வயம் -சரம ஸ்லோகம்
பூர்வார்த்தம் -துரும்பு நறுக்க பிராப்தி இல்லை -உபாயமாக
உத்தரார்த்தம் -உறங்க விரகு இல்லை-கைங்கர்யமாக அனைத்தும் பண்ண வேணுமே –
‘கழிவது ஓர் காதல் உற்றார்க்கும் உண்டோ கண்கள் துஞ்சுதல்?’ என்றே அன்றோ இருப்பது?
‘சொரூபம் இது’ என்று அறிந்தால் சொரூபத்திற்குத் தகுதியான கைங்கரியமும்
அதற்கு விரோதியானவற்றைக் காற்கடைக் கொள்ளுமதுவும்
இல்லையாகில், ஞானம் பிறந்தது இல்லையாமித்தனையே அன்றோ? இஃது இல்லையாகில்,
ஆழ்வார்கள் போன வழியிலே சேர்ந்திலனாமித்தனை.
அவகாத ஸ்வேதம் போலே ஆனுகூல்ய சங்கல்பம் அங்கங்கள் -பிரபத்திக்கு அங்கமாக கொள்ளக் கூடாது -என்றவாறு-
‘திருவடிதன் நாமம், மறந்தும் புறந்தொழாமாந்தர்’ என்றும்,
‘திருவில்லாத் தேவரைத் தேறேன்மின் தேவு’ என்றும்,
‘எண்ணாத மானிடத்தை எண்ணாதபோது எல்லாம் இனியவாறே’ என்றும்,-எண்ணும் கோஷ்டியில் இருக்க வேண்டும் –
‘பேராளன் பேரோதும் பெரியோரை ஒருகாலும் பிரிகிலேன்’ என்றும் அன்றோ இவர்கள்படி?
பல காலங்களாக இவன் சூழ்த்துக்கொண்ட பாவங்கள் போகையும், நித்திய கைங்கரியம் பெறுகையுமாகிற
இப் பேற்றுக்கு இவ்வளவாகிலும் செய்யாதிருக்க விரகு உண்டோ?

வழுவாத ஆயிரத்துள் இவை பத்து வெறிகளும் –
இவ்வாத்துமாவுக்கு அறிய வேண்டிய அர்த்தங்களில் ஒன்றும் தப்பாதபடி சொன்ன வெறி விஷயமான இப்பத்தும்.
‘வெறி விலக்கு’ என்று ஒரு துறை உண்டு; அதாவது, விரஹ சுரத்தாலே நோவுபடுகிறவளுக்கும்
ஆடு அறுப்பது, கள் உகுப்பது, பலியிடுவதாகப் பரிஹரிக்கப் புக, தோழியானவள்,இது ஒரு விஷயத்தில்
பாவபந்தம் அடியாக வந்த நோயாயிற்று; மற்று ஒன்றால் அன்று,’ என்று அவர்கள் செய்கின்றவற்றை விலக்குவது.
தொழுது அடிப்பாட வல்லார் –
பெண்பிள்ளையினுடைய மோஹம் தீர்ந்தால் பந்துக்களுக்கு உள்ள பிரியம் ‘இது கற்றார்க்கும் உண்டு’ என்று இருக்கிறார் ஆயிற்று இவர்.
துக்க சீலம் இலர்களே –
மோஹித்த விடத்து வேறு தெய்வங்களினுடைய சம்பந்தம் உண்டாகையும்,
பாகவத சம்பந்தம் இன்றிக்கே ஒழிகையுமாயிற்றுத் துக்கமாவது.
அஃது இல்லாமையே தன்மையாக உடையர் ஆவர்.
சீலம் – தன்மை.

————————————————————

திராவிட உபநிஷத் சங்கதி -ஸ்ரீ வாதி அழகிய மணவாள ஜீயர் –

தத் உசிதஜ்ஞ தே வாரிதா ஏ ஷூத்ர தேவ
முகதா பரிகாரஷட்கே அலப்ய ஸ்வாபேஷ்ய-
சடஜித் வியசநாத் விசம்யே
ஸ்வப்ன உபமாத் -அனுபவாத் -அமுதோப்ய லப்ய

தத் உசிதஜ்ஞ- இறைவ -உசித ஞானம் உள்ளவர்கள் வாக்கால் – தோழிகள் -வாக்கால்
தே வாரிதா -அவர்கள் தோழிகளால் -தாய்மார்கள் – விலக்கப்பட்டார்கள் –
ஏ ஷூத்ர தேவ முகதா பரிகார -அவர்கள் செய்யும் பரிகாரம் ஸூத்ர தேவதா முகமாக இருப்பதால்
ஷட்கே -ஆறாவது திருவாயமொழியால்
அலப்ய ஸ்வாபேஷ்ய-சடஜித் வியசநாத் விசம்யே–அறிவற்று மயங்கி -விரும்பியது கிட்டாமல் –
பாஹ்ய சம்ஸ்லேஷம் இல்லையே -ஸ்வப்னமாக போனதே –
ஸ்வப்ன உபமாத் -அனுபவாத் -அமுதோப்ய லப்ய-நன்கு அனுபவித்தார் மானஸ சாஷாத்காரம் கீழே –

அந்ய தேவதைக்கு அகப்படாமல் -நிரசித்து – -சர்வ சரண்யத்வம் இதில் குணம் –
அன்யா தேவதா ஸ்பர்ச நிவர்த்தகத்வம் என்றுமாம்

—————————————————————-

திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி -ஸ்ரீ தேசிகன் –

இச்சாத் சாரத் யோகாத் பிரகரண நவநாத்
ஸ்ரீ துளச்யாட்ய மௌலே-ஸ்துத் அங்க்ரியோ பாத தூள்யா
ஸ்வ ஜன பஜன தத் பாத தூளி நமோபி தன் மூல
ஸ்வ அங்க்ரி நுத்யா தத் இதர பஜந தியாக பூர்வே

1–இச்சாத் சாரத் யோகாத் –போர்ப்பாகு தான் செய்து அன்று ஐவரை வெல்வித்த மாயப்போர்த் தேர்ப் பாகனார்க்கு

2-பிரகரண நவநாத் –திசைப்பின்றியே சங்கு சக்கரம் என்று இவள் கேட்க–சங்கு சக்கரம் -ஸ்தோத்ரத்தால்-

3-4–ஸ்ரீ துளச்யாட்ய மௌலே-ஸ்துத் அங்க்ரியோ –மதுவார் துழாய் முடி மாயப்பிரான் கழல் வாழ்த்தினால்-என்றும்
ஒருங்காகவே உலகு ஏழும் விழுங்கி உமிழ்ந்திட்ட பெருந்தேவன்-என்றும் அருளிச் செய்த படியே
ஸ்துதி திரு நாம சங்கீர்த்தனத்துக்கும் உப லக்ஷணம் -3/4/பாசுரம் சேர்த்து

5-பாத தூள்யா –தவளப் பொடிகொண்டு நீர் இட்டிடுமின்; தணியுமே.

6–7—ஸ்வ ஜன பஜன தத் பாத தூளி நமோபி –மாயன் தமர் அடி நீறு கொண்டு
அணிய முயலின், மற்று இல்லை கண்டீர் இவ்வணங்குக்கே-என்றும்
வணங்கீர்கள் மாயப் பிரான் தமர் வேதம் வல்லாரையே-என்றும் அருளிச் செய்த படியே –

8–9-தன் மூல ஸ்வ அங்க்ரி நுத்யா –வேதம் வல்லார்களைக் கொண்டு விண்ணோர் பெருமான் திருப்
பாதம் பணிந்து,இவள் நோய் இது தீர்த்துக் கொள்ளாது போய்,–என்றும்
கண்ணபிரான் கழல் வாழ்த்துமின் உன்னித்தே-என்றும் அருளிச் செய்த படியே

10-தத் இதர பஜந தியாக பூர்வே–உன்னித்து மற்றொரு தெய்வம் தொழாள், அவனை அல்லால்;

அந்ய தேவதா சம்பந்த நிவர்த்தகம் -தேவதாந்த்ர தத் அடியார் தியாக பூர்வகமாக அவனை அவன் அடியார் மூலம் –

——————————————————-

திருவாய் மொழி நூற்றந்தாதி -பாசுரம் 36-பிள்ளை லோகம் ஜீயர் வியாக்யானம்–

தீர்ப்பார் இலாத மயல் தீரக் கலந்த மால்
ஒர்ப்பாதும் இன்றி யுடன் பிரிய -நேர்க்க
அறிவழிந்து உற்றாரும் அறக் கலங்க பேர் கேட்டு
அறிவு பெற்றான் மாறன் சீலம்—36-

சாத்மிக்க சாத்மிக்க கொடுப்பவன் உடனே பிரிந்தானே –
ஒர்ப்பாதும் இன்றி-அசங்க்யேவ சங்கதி

—————————————————-

அவதாரிகை –

இதில்
பிரணயித்வ குண விசிஷ்ட வஸ்துவை பிரத்யஷமாக
அனுபவிக்கப் பெறாமல்
பிரகிருதி விக்ருதியாய் மோஹித்துக் கிடக்க –
பிரேம பரவசர் பிரதிகிரியை பண்ணத் தேட
அத்தை பிரபுத்த ஸூஹ்ருத்துக்கள்-இது அநநுரூபம் -என்று
அறிந்து அனுரூபமான
நிதானத்தையும்
தத் பரிகாரத்தையும்
விதிக்கிற பாசுரத்தை அனுவதித்து அருளிச் செய்கிறார் –

அது எங்கனே என்னில் –
கீழ் உண்டான அனுபவம் மானச அனுபவ மாத்ரமாய்
பாஹ்ய கரண யோக்கியம் அல்லாமையாலே
தம் தசையைத் தாம் அறியாதபடி மோஹித்துக் கிடக்க
பரிசர வர்த்திகளான பரிவர்கள்-அத்தைக் கலங்கி
சர்வான் தேவான் நமஸ் -யந்தியின் படியே
பரிவின் கனத்தாலே பரிஹரிக்க ஒருப்பட
இவர் பிரகிருதி அறிந்த ஸ்ரீ மதுரகவி பிரக்ருதிகளான
பிரபுத்த ஸூஹ்ருத்துக்கள்
அத்தை விலக்கி
உசித பரிஹாரத்தை விதித்துச் சொல்லுகிறபடியை

கலந்து பிரிந்த தலைமகள்
அறிவு அழிவு கண்டு கலங்கி
பரிவின் கனத்தாலே -தேவதாந்திர பரையாய்
பிரதிபன்ன பாஷிணியான கட்டுவிச்சி பாசுரம் கொண்டு
வெறி யாட்டாலே
பரிஹரிக்க தேடுகிற தாய்மாரை நோக்கி

இவள் பிரகிருதி அறியும் உயிர் தோழி யானவள்
நோயின் நிதானத்தை நிரூபணத்தாலே அறிந்தாளாய்க் கொண்டு
கிருஷ்ணன் அடியாக வந்த நோவுக்கு அவனைக் கொண்டே பரிஹரிக்கும் அது ஒழிய
நீங்கள் செய்கிறவை பரிஹாரம் அல்ல
தேவதாந்த்ர ஸ்பர்சத்துக்கும்
தத் சம்பந்தி ஸ்பர்சத்துக்கும்
தேர் பாகனாரான வண் துவாராபதி மன்னனை ஆஸ்ரயித்து
மாயன் தமர் அடி நீர் கொண்டு அணியுங்கோள் என்று
வெறி விலக்கின பாசுரத்தாலே அருளிச் செய்கிற
தீர்ப்பாரை யாமினி — யில் தாத்பர்யத்தை
தீர்ப்பார் இலாத மயல் தீரக் கலந்த மால் -என்று துடங்கி
அருளிச் செய்கிறார்-

—————————————–

வியாக்யானம்–

தீர்ப்பார் இலாத மயல் தீரக் கலந்த மால் –
மண்ணை இருந்து துழாவில்-4-4-
மயல் பெரும் காதலானது தீர
வீற்று இருந்து ஏழ் உலகில்-4-5- கலந்த சர்வேஸ்வரன் –

ஒர்ப்பாதும் இன்றி யுடன் பிரிய –
பிரிகைக்கு ஹேது நிரூபணம்
அத்யல்பமும் ஆராயாமல்
பெருக்காறு வற்றி அடி சுடுமா போலேயும்
அபிஷேக மகோத்சவம் குலைந்து அரண்ய பிரவேசம் ஆனால் போலேயும்
உடனே பிரிய
பேதை நின்னைப் பிரியேன் -என்னுதல்
பொருட்கோ பிரிவன-என்னுதல்
செய்யாமல்
கலந்த கலவி கனவு என்னலாம் படி அசங்கிதமாக அகல
நேர்க்க –

நேர்க்க அறிவழிந்து –
சத்ருக்ந அநந்தாச்தித-என்னும்படி பரத ஆழ்வான் நின்றால் போலே நில்லா
மோஹித்தால் போலே மோஹித்து –

நேர்க்க அறிவு அழிகை யாவது –
மண்ணை இருந்து துழாவியில் காட்டிலும்
அறிவு கலங்கி
அங்கு
காணவும்
கேட்கவும்
பேசவும்
பின் செல்லவும்
ஷமையாய் இருந்தாள்-
இங்கு
குவளைத் தடம் கண்ணும் கோவைச் செவ்வாயும் பயந்து
மதி எல்லாம் உள் கலங்கி மயங்கி இறே கிடக்கிறது

உற்றாரும் அறக் கலங்க –
யேது ராமஸ்ய ஸூஹ்ருதயஸ் சர்வே தே மூட சேதச -என்னும்படி
அத்தைக் கண்ட அன்னையரும்
தோழியரும்
தொடக்க மானவரும்
மிகவும் அறிவு கலங்கிக் கிடக்க
ஸ்ரீ கௌசல்யாரைப் போலே மங்களா சாசன பரையான மாதா
சர்வான் தேவான் நமஸ்யந்தி ராமச்யார்த்தேய யசச்வின-
என்னும்படியே எத்தை யாகிலும் செய்து
இவளை மீட்கத் தேட –
அவ்வளவில் தேவ தாந்திர பரையாய் இருப்பாள் ஒரு கட்டுவிச்சி
அதுக்குப் பரிஹாரமாக சொல்லுகிற
ஆடும் கள்ளும் இறைச்சியும் கரும் சோறும் செஞ்சோறும்
ஆகிய நிந்த்ய த்ரவ்யங்களாலே
இளம் தெய்வத்துக்கு இழைத்தாடும் நிஹீநதைகளைக் கண்டு
இவள் பிரகிருதி அறியும் உயிர் தோழி யானவள் அத்தை நிஷேதித்து
தேர்ப் பாகனாற்கு இவள் சிந்தை துழாய் த்திசைக்கின்றதே -என்று

பேர் கேட்டு அறிவு பெற்றான் மாறன் சீலம் –
நோய்க்கு நிதானத்தையும்
அதுக்கு பரிஹாரமாக
சங்கு சக்கரம் -என்று இசைக்கும் படியையும்
மாயப் பிரான் கழல் வாழ்துதலையும்
பெரும் தேவன் பேர் சொல்லும் படியையும்
களிறு அட்ட பிரான் திரு நாமத்தால் தவளப் பொடி கொண்டு நீர் இட்டிடுமின் -என்றும்
மாயன் தமரடி நீறு கொண்டு அணிய முயலில் -என்றும்
வணங்கீர்கள் மாயப் பிரான் தமர் வேதம் வல்லாரை -என்றும் –
ஊழ்மையில் கண்ண பிரான் கழல் வாழ்த்துமின் -என்றும்
வண் துவாராபதி மன்னனை ஏத்துமின் -என்றும்
சொன்ன படியைக் கேட்டு
தொழுது ஆடி
தூ மணி வண்ணனுக்கு ஆட்செய்து
நோய் தீர்ந்த பிரகாரத்தை -பேர் கேட்டு அறிவு பெற்றாள் -என்கிறது –

மாறன் சீலம் –
ஆழ்வார் ஸ்வபாவம் இது வாயிற்று -(மயங்கின நிலையிலும்)
செவிக்கு இனாத கீர்த்தியை கேட்டு சத்தயா பாதகமாகவும் –
செவிக்கு இன்பம் ஆவதும் செங்கண் மால் நாமம் -என்கிற
கேசவன் கீர்த்தியைக் கேட்டு சத்தை பெறவுமே இறே இருப்பது-

———————————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ. வே.வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

பகவத் விஷயம் காலஷேபம் -96- திருவாய்மொழி – -4-6-1….4-6-5–ஸ்ரீ உ. வே. வேளுக்குடி ஸ்வாமிகள்–

May 31, 2016

மேல் திருவாய்மொழி ‘வீற்றிருந்து ஏழுல’ காயிருக்க, அதனை அடுத்த இத்திருவாய்மொழி,
‘தீர்ப்பாரையாம் இனி’யாய் இருப்பதே! எம்பார்,
மேல் திருவாய்மொழியையும் இத்திருவாய்மொழியையும் அருளிச் செய்து, ‘மோருள்ளதனையும் சோறேயோ?
‘மேலெல்லாம் கலவிக்கும் பிரிவுக்கும் ஒருபடி சங்கதி சொல்லிக் கொண்டு போந்தோம்;
இதிலே வந்தவாறே மேடும் பள்ளமுமாயிருந்தது; இது என்னாலே சொல்லலாயிருந்ததோ இதற்கு அசங்கதி ரேவ சங்கதி?’
மேல் திருவாய்மொழியில் அப்படிக் கரை கடந்ததான பிரீதியோடே சென்றது;
இத்திருவாய்மொழியில் இப்படி மயக்கத்தோடே தலைக்கட்டிற்று;
இதற்கு இருந்து அடைவு சொல்லுவேனோ? இதற்கு அசங்கதி ரேவ சங்கதி,’ என்று அருளிச்செய்வாராம்.

‘ஸ்ரீ பரதாழ்வான், ‘பெருமாளுடைய மகுடாபிஷேகத்திற்கு நம்மை அழைத்து வந்தது ஆகையால்,
அவரைத் திரு முடி சூட்டி அடிமை செய்யக்கடவோம்,’ என்று பாரித்துக்கொண்டு வர,
கைகேயி, ‘ராஜந் என்று உனக்கு முடி வாங்கி வைத்தேன்,’ என்ற போது அவன் துடித்தாற்போலே,
இவரும் சரீரத்தின் தோஷத்தை நினைத்து, அஞ்சித் துடித்தாராயிற்று,– 1‘பொய்ந்நின்ற ஞானத்’திலே;
‘நான் அவர் அடியேன் அன்றோ? அவர் என் சொல்லை மறுப்பரோ? –
இப்போதே மீட்டுக்கொண்டு வந்து திருமுடி சூட்டுகிறேன்,’ என்று
திருச்சித்திரகூடத்திலே கிட்டுமளவும் பிறந்த தரிப்புப்போலே -ஆயிற்று திருவாசிரியத்தில் பிறந்த தரிப்பு;
பின்பு, பதினான்கு ஆண்டு கூடி ஆசை வளர்ந்தாற்போலேயாயிற்று. திருவந்தாதியில் ஆசை பெருகினபடி;
‘என் நெஞ்சினார் தாமே அணுக்கராய்ச் சார்ந்தொழிந்தார்’, ‘முயற்சி சுமந்து எழுந்து’ என்று
கூறலாம்படி அன்றோ ஆசை பெருகினபடி? -முந்துற்ற நெஞ்சே –
மீண்டு எழுந்தருளித் திருமுடி சூட்டிக்கொண்ட பின்னர் அவன் எண்ணம் தலைக்கட்டினாற்போலே
ஆயிற்றுத் திருவாய்மொழியில் இவரை அனுபவிப்பித்தபடி.

மேல் ‘வீற்றிருந்து ஏழுலகு’ என்ற திருவாய்மொழியில் பிறந்த கரை கடந்ததான பிரீதியானது மானச அனுபவ மாத்திரமாய்ப்
புறக்கரணங்களால் அனுபவிக்க முடியாமையாலே, எத்தனையேனும் உயர ஏறியது தகர விழுகைக்குக் காரணம் ஆமாறுபோலே
மோஹத்துக்கு உறுப்பாய்த் தலைக்கட்டிற்று.
இப்படி இருக்கிற தம் நிலையை, சர்வேசுவரனோடே கலந்து பிரிந்து நோவுபடுகிறாள் ஒரு பிராட்டி,
தன் ஆற்றாமையாலே மோஹித்துக் கிடக்க,
இவள் நிலையை நினைத்த உறவினர்களும் மோஹித்து, ‘இது வேறு தெய்வங்களாலே வந்ததோ!’ என்று வேறு தெய்வங்களின்
சம்பந்தமுடையாரைக் கொண்டு புகுந்து பரிஹாரம் செய்யப் புக, இவள் தன்மை அறிந்த தோழியானவள்,
நீங்கள் செய்வனவாக நினைப்பவை இவள் நோவிற்குப் பரிஹாரம் அல்ல; அழிவிற்கே காரணமாமித்தனை;
ஆன பின்பு, ‘பகவானுடைய நாமங்களைச் சொல்லுவதாலும் பாகவத பாத தூளியாலும் பரிஹரிக்கப் பாருங்கோள்,’ என்கிற
அவள் பாசுரத்தாலே தம் நிலையைப் -அநந்ய தைவத்வம் -பேசுகிறார்.

இவர்தாம், ‘உம்மைப் பிரிந்தால் சீதை இல்லாதவள் ஆவாள்; அப்படியே, நானும் இல்லாதவன் ஆவேன்,’ என்றும்,
‘அடியவனான என்னைத் தேவரீருக்குப் பின்னேயே சஞ்சரிக்கும்படி செய்தருள வேண்டும்,’ என்றும் சொல்லுகிறபடியே,
பிரிவிலே தரியாமைக்கு இளையபெருமாளோடு ஒப்பர்;
அவன் பொகட்ட இடத்தே கிடக்கைக்கும் குண அநுசந்தானத்தாலே பிழைத்திருக்கைக்கும் ஸ்ரீபரதாழ்வானோடு ஒப்பர்;
எத்தனையேனும் ஆற்றாமை கரை புரண்டாலும் ‘அத்தலையாலே பேறு,’ என்று இருக்கைக்குப் பிராட்டியோடு ஒப்பர்.

‘உயர்வற உயர்நலம்’ என்ற திருவாய்மொழியிலும் பரத்துவமே அன்றோ பேசிற்று?
‘பத்துடை அடியவர்’ என்ற திருவாய்மொழியில் அவதார சௌலப்யத்தை அநுசந்தித்து மோஹித்தாரே யாயினும்,
‘அஞ்சிறைய மடநாராய்’ என்ற திருவாய்மொழியில் தூது விட வல்லராம்படி உணர்த்தியுடையவரானார்;
‘வீற்றிருந்தேழுலகு’ என்ற திருவாய்மொழியில் பரத்துவத்தைக் கூறிய பின்னர், இத்திருவாய்மொழியில் தாமும் மோஹித்துத்
தம் நிலையை நினைந்த உறவினர்களும் மோஹித்து வேறு தெய்வங்களின் சம்பந்தமுடையார் புகுந்து கலக்கினாலும்
உணர்த்தி அறும்படி ஆயினார்.
பகவானைப் பெறுகின்ற காலத்தில் உணர்த்தியும், பெறாத காலத்தில் மோஹமுமாய்ச் சொல்லும் இது,
இவ்வாழ்வார் ஒருவர்க்குமே உள்ளதொன்றாயிற்று.

மற்றும், ஞாநாதிகராய்ப் பகவத் விஷயத்தில் கைவைத்தார்களாயிருக்குமவர்களிலும் ஸ்ரீவசிஷ்ட பகவான் புத்திரனுடைய
பிரிவால் வந்தவாறே கடலிலே புகுவது, மலையிலே ஏறி விழுவது ஆனான்;
ஸ்ரீ வேத வியாச பகவானும் சாயா சுகனைக் கொண்டு உய்ந்தான்;
ஆதலால், பகவத் விஷயத்தில் லாபாலாபமே பேறு இழவாய் இருக்கும் இது, இவ்வாழ்வார் ஒருவர்க்குமே உள்ளதாகும்.

இப்படி இவள் மோஹித்துக் கிடக்க, இவளைக் கண்ட உறவின் முறையார் எல்லாரும் பிரமாஸ்த்திரத்தாலே
கட்டுப்பட்டவர்களைப் போன்று மோஹித்து, செய்யத் தகும் காரியங்கள் இவை, செய்யத் தகாத காரியங்கள் இவை என
அறுதியிடுவதற்கு ஆற்றல் இல்லாதவராய்க் கலங்கிக் கிடக்க,
அங்குப்போலே உணர்ந்திருந்து நோக்குகைக்கு ஸ்ரீஜாம்பவான், மஹாராஜர், திருவடி போல்வாரும் இல்லை யாயிற்று.
‘அந்த நிலையோடு கூடிய ஸ்ரீ பரதாழ்வான் பக்கத்தில் இருந்த ஸ்ரீ சத்ருக்நாழ்வான்’ என்கிறபடியே,
ஸ்ரீ சத்ருக்நாழ்வான் அருகில் இருந்தார் என்னும் இதுவும் இல்லையாயிற்று.
‘பெருமாள் காடேற எழுந்தருளினார்; சக்கரவர்த்தி துஞ்சினான்;
இனி நீயே அன்றோ இராச்சியத்துக்குக் கடவாய்?
உன்னைக் கொண்டன்றோ நாங்கள் வாழ இருக்கிறது?’ என்கிறார்கள் அல்லர்;
‘உன் முகத்தில் உறாவுதல் காணக்காண உன்னை இழக்கமாட்டார்;
அவர் வரவு அணித்து என்றன்றோ நாங்கள் வாழ்கிறது?’ என்றார்களே அன்றோ?
அப்படியே, இவளைக் கொண்டே வாழ இருக்கிறார்கள். ஆகையாலே,
எல்லாம் ஒக்க இவள் நிலையைக் கண்டு கலங்கிக் கிடந்தார்கள்.

இங்ஙனங்கிடக்க, இவ்வளவிலே நாட்டிலே வேரறிவார் விரகறிவார் மந்திரமறிவார் மருந்தறிவார் அடங்கலும் வந்து புகுர,
அவ்வளவிலே, வேறு தெய்வங்களின் சம்பந்தமுடையார்,
‘ஸ்ரீ வைஷ்ணவர்களுடைய வீட்டினைத் தூஷிக்க நமக்கு நல்ல அளவு’ என்று வந்து புகுர,
இவளுடைய உறவு முறையிலுள்ளார் கலங்கிக் கிடக்கையாலே, ‘இவளுடைய நோய் இன்னது’ என்றும், ‘
பரிஹாரம் இன்னது’ என்றும் அறியாதே,
அவர்களிலே ஒருத்தி ஒரு கட்டுவிச்சியை ‘இவள் நோய் யாது? நோய்க்கு நிதானம் யாது?’ என்று கேட்டு. அவள் சொற்படியே,
‘ஆராதனத்துக்குரிய பொருள்கள், நிந்திக்கப்படுகின்ற கள் முதலானவைகள்; தெய்வம், மிகத் தாழ்ந்த தெய்வம்; சாஸ்திரம்,
வேதங்கட்குப் புறம்பான ஆகமங்கள்; ஆசாரியர்கள், பூசாரிகள்’ என்கிறபடியே, நிந்திக்கப்படுகின்ற பொருளை
இவளைப் பாதுகாப்பதற்குப் பரிகரமாகக் கொண்டு, புன்சிறு தெய்வம் ஆவேசித்ததாகக் கொண்டு,
வேறு தெய்வ சம்பந்தமுடையாரை ஆசாரியராகக் கொண்டு, இவள் பக்கல் உண்டான அன்பின் மிகுதியாலே,
‘இவள் பிழைக்குமாகில் யாதேனும் ஒரு வழியாலேயாகிலும் நீக்கிப் பாதுகாத்தல் அமையும்,’
என்று வழியல்லா வழியிலே இழிந்தார்கள்;
அப்படிக் கலங்கப் பண்ணுமே அன்றோ அன்பு? ‘முதியவர்களும் இளையவர்களுமான பெண்கள்
காலையிலும் மாலையிலும் கூடிக்கொண்டு, கீர்த்தியையுடைய ஸ்ரீராமபிரானுடைய நன்மைக்காக எல்லாத் தேவர்களையும்
வணங்குகிறார்கள்,’ என்கிறபடியே செய்தார்களே அன்றோ திருவயோத்தியிலுள்ளார்?

இதனைக் கண்ட உயிர்த்தோழியானவள், ‘இவர்கள் செய்கிற இவை,
இவள் அகவாயில் கிடக்கிற உயிரையும் இழக்கப் பண்ணுமித்தனை;
இனி, நாம் இத்தை அறிந்தோமாகச் சொல்லில், ‘உன் காவற்சோர்வாலே வந்ததன்றோ?’ என்று சொல்லுவார்கள்;
நாம் கைவாங்கி இருந்தோமாகில், இவளை இழக்க வரும்; இனி, இதற்குப் போக்கடி என்?’ என்று விசாரித்து,
‘இவர்கள்தாமும் ‘இதுதான் யாதோ?’ என்று ஆராயாநின்றார்களேயன்றோ? அதைப்போன்று நாமும் ஆராய்வதிலே இழிந்து
இவள் தன்மையைக் கொண்டு சொன்னோமாகச் சொல்லுவோம்,’ என்று பார்த்து,
‘நீங்கள் இவளுக்கு ஓடுகிற நோவும் அறிந்திலீர்கோள்;
நிதானமும் அறிந்திலீர்கோள்; பரிஹாரமும் அறிந்திலீர்கோள்; நீங்கள் பரிஹாரமாகச் செய்கிறவை, கருமுகை மாலையைச் செவ்வி
பெறுத்த என்று நெருப்பிலே இடுவாரைப்போலே இவளை இழக்கைக்குக் காரணமாமித்தனை;
ஆன பின்னர், இவற்றை விட்டு, இக்குடியிலே பழையதாகச் செய்துபோரும் பரிஹாரத்தைச் செய்யப் பாருங்கோள்;
‘உலகேழுமுண்டான் சொன்மொழி மாலை அம்தண் அம்துழாய் கொண்டு சூட்டுமினே,-திரு விருத்தம் -20-’ என்றும்,
‘தண் அம் துழாய்த் தாராயினும் தழையாயினும் தண் கொம்பதாயினும் கீழ் வேராயினும் நின்ற
மண்ணாயினும் கொண்டு வீசுமினே,-திரு விருத்தம் -53’ என்றுமே
அன்றோ முன்பும் விதித்தது? அங்கு ‘நின்ற மண்ணாயினும்’ என்றாள்; இங்கு, ‘மாயன் தமர்அடி நீறு’ என்றாள்’
இதுவே அன்றோ அடிபடச் செய்து போந்த பரிஹாரம்?-அடி பட -முன்பே செய்த -திருவடி சம்பந்தம் -பாகவத சேஷத்வம் -என்றவாறு
ஆயிட்டு, இவள் நோய் இது; நோய்க்கு நிதானமும் இது; இதற்குப் பரிஹாரமும், பகவானுடைய திருநாமங்களைச் சொல்லுதலும்
பாகவதர்களுடைய பாததூளியைச் சேர்ப்பிக்கையும்,’ என்று சொல்லி- அவர்கள் செய்கிறவற்றை நீக்குவிக்கிறாளாய்ச் செல்லுகிறது.

‘இதுதன்னில் ஓடுகிறது என்?’ என்னில், அறிவு அற்று இருக்கும் நிலையிலும் வேறு தேவதைகளுடைய சம்பந்தமும்
அத்தேவதைகளுக்கு அடிமைப்பட்ட அடியார்களுடைய சம்பந்தமும் அவ்வப்பொருள்களினுடைய தன்மையால் பாதகமுமாய்,
பகவானுடைய திருநாமங்களைச் சொல்லுதலும் பாகவதர்களுடைய சேர்க்கையும் பொருள்களின் தன்மையால் தாரகமுமாம்படி
ஆழ்வார்க்கு வைஷ்ணவத்தின் தன்மை முறுகினபடி சொல்லுகிறது.
‘இராவணன் மாயா சிரசைக் காட்டின போது பிராட்டியும் மற்றைப் பெண்களைப் போன்று
சோகித்துக் கண்ணநீர் விழவிட்டாளாய் இருந்தது;
இதற்கு அடி என்? இது கேட்ட போதே முடிய அன்றோ தக்கது?’ என்று சீயரைக் கேட்க,
‘அவதாரத்தில் மெய்ப்பாட்டாலே ‘மெய்’ என்றே சோகித்தாள்; ஞானம் இன்றியிலே பிழைத்திருப்பதற்குக் காரணம்
அவருடைய உளதாம் தன்மையாகையாலே உளளாயிருந்தாள்;
இவ்வர்த்தம் மெய்யாகில் உளளாம் தன்மையும் இல்லையாம்,’ என்று அருளிச்செய்தார்.

——————————————–

தீர்ப்பாரை யாம் இனி எங்ஙனம் நாடுதும் அன்னைமீர்!
ஓர்ப்பால் இவ் வொண்ணுதல் உற்ற நல் நோய் இது தேறினோம்;
போர்ப்பாகு தான் செய்து அன்று ஐவரை வெல்வித்த மாயப்போர்த்
தேர்ப் பாகனார்க்கு இவள் சிந்தை துழாஅய்த் திசைக்கின்றதே.–4-6-1-

பராங்குச நாயகி -பாகிலே பிடிபட்ட பாவை -போர்பாகு -தேர்பாகு-
பாண்டவ பஷபாதி கிருஷ்ணனுக்கு ஈடுபட்டவள் -ஆராய்ந்து கண்டோம் -தீர்க்க வேண்டிய நோய் -நல்ல நோய்
பக்தியை வளர்க்கத் தானே வேண்டும் –
தீர்ப்பாரை யாம் இனி எங்ஙனம் நாடுதும் அன்னைமீர்!-இவள் பக்கல் பரிவாலே -எப்படியாவது தீர்க்க
பரிகாரம் தேடும்
யாம் -என்று தங்களையும் இவர்கள் கோஷ்டியில் சேர்த்துக் கொண்டு -நோயின் அடி அறியாமல்
ஓர்ப்பால் இவ் வொண்ணுதல் உற்ற நல் நோய் இது தேறினோம்;-நீ ஆராய்ந்தாயோ
ஒர்ப்பால் -இப்போது நிரூபித்து பார்த்தால் -முன்னால் என்றால் காவல் சோர்வாகுமே
ஸ்லாக்கியமான -இவள் ஸ்வ பாவம் கண்டு – அற்று தீர்ந்தவள் அவயவ சோபையாலும்-
நோய் ஆந்தரமாக உற்றதாலும் -பிராவண்யா ரூபமான விலஷணமான-பக்தி பெயரை மட்டும் சொல்லாமல் –
போர்ப்பாகு தான் செய்து அன்று ஐவரை வெல்வித்த மாயப்போர்த்-யுத்தத்துக்கு நிர்வாகத் திறமை உடைய
தானே செய்து -வெல்லும் படி
ஆயுதம் எடேன் –பகலை இரவாக்கியும் -போன்ற கிரித்ரிம யுத்தம்
தேர்ப் பாகனார்க்கு இவள் சிந்தை துழாஅய்த் திசைக்கின்றதே-எதிரிகள் அம்பு தன் மேல் விழும் படி முன்னே சாரதியாய் நின்றவனை
ஈடுபட்டு -அழிந்து -மயங்கி இருக்கிறாள் –
தேவதாந்திர வியாபாரம் இல்லை –
துழாய் -வினை எச்சப்பாடமும் உண்டு

‘அன்னைமீர்! இந்நோயினைத் தீர்ப்பதற்குரியவர்களை இனிமேல் யாம் எங்ஙனே தேடுவோம்? ஓர்ப்பாலே, இந்தப் பிரகாசம் பொருந்திய
நெற்றியையுடைய பெண்ணானவள் அடைந்த நல்ல நோயினது தன்மை இது என்று தெளிந்தோம்; போருக்குரிய காரியங்களையெல்லாம் தானே செய்து,
அக்காலத்தில் பஞ்சபாண்டவர்களை வெல்லும்படி செய்த மாயப்போர்த் தேர்ப்பாகனார் விஷயத்தில் இவள் மனமானது கலங்கி மயங்குகின்றது,’ என்க.

அன்னைமீர்! யாம் இனித் தீர்ப்பாரை எங்ஙனம் நாடுதும்? ஓர்ப்பால் தேறினோம், இவ்வொண்ணுதல் உற்ற இது நல்நோய்;
தேர்ப்பாகனாருக்கு இவள் சிந்தை துழாஅய்த் திசைக்கின்றது,’ எனக் கூட்டுக. ஓர்ப்பு – ஆராய்ந்து உணர்தல். பாகு – பகுதி. மாயம் – வஞ்சனை.
தேர்ப்பாகன் – பார்த்தசாரதி; கிருஷ்ணன். துழாஅய் – வினையெச்சம். இப்பத்துத் திருப்பாசுரங்களும் ‘வெறி விலக்கு’ என்னும் துறையின்பாற்படும்.
இத்திருவாய்மொழி கலி நிலைத்துறை.

தோழியானவள், இவள் நோய்க்கு நிதானத்தைச் சொல்லி, ‘நீங்கள் செய்கிறவை பரிகாரம் அல்ல,’ என்று விலக்குகிறாள்.

தீர்ப்பாரை யாம் இனி எங்ஙனம் நாடுதும் –
இதற்கு, மூன்று படியாக அருளிச்செய்வர்;
‘தீர்ப்பாரை எங்ஙனம் நாடுதும்’ என்கையாலே, ‘நீங்கள் செய்கிறவை பரிஹாரம் அல்ல’ என்று அவற்றை விலக்குவதிலே தாத்பரியம்;
‘என்னை?’ எனின், இவர்கள், நோயினை நீக்குவதற்கு வேண்டிய உபாயங்களைச் செய்து கொண்டிருக்கும் போது
‘தீர்ப்பாரை எங்கே தேடுவோம்’ என்று கூறினால், இவை பரிஹாரம் அல்ல என்பது தானே போதருமே அன்றோ?
அங்ஙன் அன்றிக்கே,
‘இவள் ஊரும் நாடும் உலகமும் தன்னைப்போலே ஆக்கிக்கொண்டே அன்றோ இருப்பது?
ஆதலால், இவளோடு ஒக்க மோஹிப்பவர்கள் கிடைப்பார்களத்தனை போக்கித் தீர்ப்பாரை எங்கே தேடுவோம்?’ என்னுதல்;
அன்றிக்கே,
‘தோழியாகிய தானும் இப்போது தீர்ப்பாரை ஆராயா நிற்கிறாள் என்று தோற்றி இருந்தது’ என்னுதல்.
அன்றிக்கே,
‘கடல்வண்ணர் இது செய்தார்; காப்பார் ஆர்?’ என்கிறபடியே, -சொல் என்றே கட்டுவிச்சி சொன்னாள் –
‘மருந்தே நோய் நீங்குதற்குத் தடையாய் இருந்தால், பரிஹாரம் உண்டோ?’ ‘நச்சு மா மருந்த’மேயன்றோ தடையாகிறது?
‘ஆனந்தமாக இருப்பவர், மருந்தாக இருப்பவர், மருத்துவராக இருப்பவர்’–நிர்வாணம் பேஷஜம் பிஷக் –மருந்தே அபத்யம்-
என்கிறவன் ஆயிற்று விரோதி ஆகிறான்’ என்பாள், ‘இனி’ என்கிறாள்,’ என்னுதல்.

யாம் –
‘அன்னைமீர்?’ என்று விளித்தவள் அவர்களையும் உளப்படுத்தி, ‘யாம்’ என்கிறாள்;
இதனால், தாய்மார்க்கும் தோழிமார்க்கும் வாசி அற்று இருத்தலைத் தெரிவித்தபடி.
அன்றிக்கே,
தாய்மார் மங்களாசாசனம் செய்து மீளா நிற்க, ‘ஸ்ரீராமபிரானுடைய நண்பர் யாவரும் மனம் கலங்கிச் சோகம்
என்னும் சுமையால் அழுத்தப்பட்டவர்களாய்ப் படுக்கையிலிருந்து அப்பொழுது எழுந்திருக்கவில்லை,’ என்று
சொல்லப்படுகின்றவாறே அதுவும் மாட்டாதே கிடந்தார்களே அன்றோ தோழன்மார்? ஆகையாலே,
தாய்மார்க்கும் தோழிமார்க்கும் வாசி அறுக்கும் விஷயம் என்று தோழிமார்க்கு ஏற்றம் சொல்லுகிறது என்னுதல்.

‘நோய் இன்னது என்று அறிந்த பின்பு’ என்பாள், ‘இனி’ என்கிறாள்;
ஆக, தோழியானவள், ‘இனிப் பரிஹாரம் உண்டோ? எங்கே தேடக்கடவோம்?’ என்றவாறே,
‘இவள் கையது நம் காரியம். இவள் அறிந்தாளாக அடுக்கும்,’ என்று உறவினர் அனைவரும் இவள்மேலே
ஒருமுகம் செய்து பார்த்தனர்; ‘இனி, நாம் முன்னே அறிந்தோமாகச் சொல்லில் நம் காவற் சோர்வாலே வந்தது ஆம்;
நாம் இப்போதே ஆராய்ந்தோம் ஆவோம்,’ என்று பார்த்து,

ஓர்ப்பால் –
‘இப்போது ஓர்ந்து பார்த்தவிடத்து’ என்கிறாள். என்றது, ‘நீங்களும் ஆராயா நின்றீர்களே அன்றோ?
உங்களைப் போன்று நானும் ஆராய்ந்து பார்த்தவிடத்தில் இங்ஙனே தோற்றிற்று,’ என்கிறாள் என்றபடி.
இவள் தான் ஒரு கூரத்தாழ்வானோடு ஓக்குங்காணும்; –
போதாயன வ்ருத்தி கிரந்தம் -இழந்தோம் -துக்கம் பட -ஸ்வாமி திரு உள்ளம் ஆகில் சொல்லவா என்றாரே —
தாய்மார் -ஸ்ரீ பாஷ்ய காரர் -கூரத்தாழ்வான் தோழி –
மனத்தினைப் புறத்தே செல்ல விடாது உட்பொருளை நோக்கச் செய்தால்,-மனசை பிரத்யக் ஆக்கினால் —
மூவகைத் தத்துவங்களையும் அலகு அலகாகக் காண வல்லள் ஆயிற்று.

இவ் ஒள் நுதல் உற்ற நல் நோய் இது தேறினோம் –
இத்தகைய சிறப்பினையுடைய நுதலை யுடையவள் இம் முகத்தை யுடையவளுக்கு
வேறு முகத்தாலே வருவது ஒரு நோய் உண்டோ?
முகாந்தரத்தாலே -சாடு -வேறு காரணத்தால் -கண்ணன் திரு முகத்தைப் பார்த்தே இவள் மயங்குவாள் –
‘கண்ணன், கோளிழை வாண் முகமாய்க் கொடியேன் உயிர் கொள்கின்றதே!’ -7-7-8-என்கிறபடியே,
அம்முகத்தால் வர வேண்டாவோ?
இவள் நோய் என்றால் அவன் அடியாக வர வேண்டாவோ? ஸ்ரீ பரதாழ்வான் நோய் என்றால், சாதுர்த்திகமா யிருக்குமோ?
ஸ்ரீ ராம விரஹத்தாலே வந்தது என்று பிரசித்தமன்றோ? இவளை இப்படிப் படுத்துவது ஒரு விஷயமாக வேண்டாவோ?
அம்பு பட்ட வாட்டத்தோடே முடிந்தாரையும், நீரிலே புக்கு முடிந்தாரையும் முகத்திலே தெரியாதோ?
அப்படியே, குணங்களால் மிக்க சர்வேசுவரனை ஆசைப்பட்டுப் பெறாமையால் உண்டான மோஹம் ஆகையாலே
முகத்தில் செவ்விக்கு ஆலத்தி வழிக்க வேண்டும்படி ஆயிற்று இருக்கிறது.

பரிஹாரம் இல்லாதபடி மறுபாடுருவக் கொண்ட நோய் ஆதலின்,
‘உற்ற நோய்’ என்கிறாள். இந்நோய்தான் பரிஹரிக்கவேண்டா;
‘கைக்கூலி கொடுத்துக்கொள்ள வேண்டும் நோய்,’ என்பாள், ‘நல்நோய்’ என்கிறாள்.
இந்நோய் கொள்ளுகைக்கே அன்றோ முமுக்ஷூக்கள் முயற்சி செய்வது? அப்படியிருக்க, இந்நோய் கொள்ளுகை அன்றிக்கே,
பரிஹாரம் சொல்ல இருப்பதே நான்!
ஞானம் பிறந்த பின்பு சரீரம் முடியும் வரையிலும் செல்லத் தேக யாத்திரைக்கு உறுப்பாய்,
பின்பு தானே அழிவில்லாத பலமான நோய் அன்றோ இது?
இதர சாதனமாக நோக்குமிடத்துச் சாதனமாய், சாதன புத்தி கழிந்த அன்று தானே பலமாக இருக்குமே அன்றோ? ‘
சிலாக்கியமான ஆபத்தை அடைந்தவனாய்’ என்கிறபடியே,அடிக்கழஞ்சு பெற்ற ஆபத்தாயிற்று;
இடர்ப்பட்ட இடத்திலே சர்வேசுவரன் அரை குலைய வந்து விழும்படியான ஆபத்தாயிற்று இது.
‘என்னிடத்திலேயே வைக்கப்பட்ட பத்தியினாலே, உண்மையாக அறிவதற்கும் பார்ப்பதற்கும் என்னுடைய சொரூபத்தை
அடைவதற்கும் தகுந்தவனாய் இருக்கின்றேன்,’ என்கிறபடியே,-
இப்பொழுது தான் பக்தி சப்தம் –ஞான தர்சன பிராப்தி மூன்றுக்கும் பக்தியே வழி –
இது உண்டானால், பின்னை அவன் கைப்பட்டானேயன்றோ? இருடிகள் கோஷ்டியில் கலக்கம் அரிதாய் இருக்குமாறு போலே;
இவர்கள் கோஷ்டியில் தெளிவு அரிதாய் ஆயிற்று இருப்பது; ஆதலின்,தேறினோம்’ என்கிறாள்.
‘இதர விஷயங்களிலே ஈடுபாடு ஆகாது’ என்கிற தெளிவே அன்றோ இருடிகளுக்கு உள்ளது?
பகவானிடத்தில் ஈடுபட்ட காரணத்தால் வந்த கலக்கமே அன்றோ இது?

ஆகில், அது சொல்லிக்காணாய்,’ என்ன, சொல்லுகிறாள் மேல் :
போர்ப் பாகு தான் செய்து –
போர்க்கு வேண்டும் வகைகளை எல்லாம் தானே செய்து; என்றது, ‘இரண்டு தலைக்கும் உறவாய்ப் பொருந்தவிடச் சென்று,
போர்க்களத்தில் வந்தவாறே, ‘மூன்று உலகங்கட்கும் நாதனும் ஜனார்த்தனனுமான அந்தக் கண்ணபிரான்
தருமபுத்திரனுக்கு மந்திரியாயும் இரட்சகனாயும் இருக்கிறான்,’ என்கிறபடியே, அவர்கள் பறித்துக்கொண்ட பரிகரமெல்லாம்
தானேயாய் நின்றானாயிற்று,’ என்றபடி. பாகு – நிர்வாஹகர் செய்யும் தொழில்.
அன்றிக்கே,
‘ஏழுலகும் தனிக்கோல் செல்ல வீற்றிருந்த தான் செய்து’ என்னுதல்; என்றது, ‘தனது ஆசன பலத்தாலே எல்லாவற்றையும்
நடத்தக் கடவ தான் செய்து கை தொடனாய்’ என்றபடி. ‘தான்’ என்று மேன்மை சொல்லிற்று.
‘இவள் மோஹிக்கிறது அவனுடைய எளிமைக் குணத்துக்கே அன்றோ?’ என்றது,
‘எளியவனுடைய எளிமைக் குணத்துக்கு அகப்படுமவள் அன்று இவள்; அம் மேன்மையுடையவன்
தாழ நின்றதிலே அகப்படுமவளே அன்றோ இவள்?’ என்றபடி.

அன்று தான் செய்து ஐவரை வெல்வித்த –
அவர்கள் நூற்றுவராய் தீயோர் அடைய அங்கே திரண்டு, இவர்கள் தாம் ஐவராய் வெறுவியராய் நின்ற அன்று,
தான்-தானே – கையும் அணியும் வகுத்து, படை பொருத்தி, சாரதியாய் நின்று,
குதிரைகள் இளைத்தவிடத்து வாருணாஸ்திரங்கள் விடலாமிடங்கள் காட்டி விடுவித்து,
அங்கே குதிரைகளை விட்டு நீரூட்டிப் பூட்டி வென்றான்,’ என்னுமிடம். அருச்சுனன் மேலேயாக வேண்டும்
செயல்கள் முழுதும் தானே செய்தானே அன்றோ? துரியோதனன் முதலியோர்களையும் இவளையும் தோற்பித்தவதிலும்
அரிது காணும் பாண்டவர்களை வெல்வித்தது; ஆதலின், ‘ஐவரை வெல்வித்த’ என்கிறது.
‘என்றது, என் சொல்லியவாறோ?’ எனின், ‘
துரியோதனன் முதலியோர்கள் செருக்குக் கொண்டவர்கள் ஆகையாலே தோற்பிக்கை அரிது; –
ஸ்த்ரீத்வ அபிமானம் பராங்குச நாயகி -இவளைப் பெண்மைக்குரிய அபிமானத்தாலே தோற்பிக்கை அரிது; அப்படியே,
‘ஏ கிருஷ்ண! வெற்றியையாவது இராச்சியத்தையாவது நாங்கள் விரும்பவில்லை; இராச்சியத்தினாலே என்ன பயன்?
போகங்களினால் என்ன பயன்? உயிர் வாழ்ந்திருப்பதனால் என்ன பயன்?’ என்ற பாண்டவர்களை வெல்வித்தலும் அரிது என்றபடி

மாயம் போர் –
ஆச்சரியமான போர்;
அன்றிக்கே, ‘
வஞ்சனையுடைய போர்’ என்னுதல். பகலை இரவாக்குவது, ‘ஆயுதம் எடேன்’ என்று ஆயுதம் எடுப்பது ஆனவை
இத்தலையிலும் உண்டு; மஹாரதர் பலர் கூடி ஒருவனான அபிமன்யுவைக் கொன்றது
தொடக்கமானது அத்தலையிலும் உண்டு; இவற்றைச் சொன்னபடி.

தேர்ப்பாகனார்க்கு –
அருச்சுனனைப் பகைவர்கள் சீறினால் அழியச்செய்வது தன்னையாம்படி, உடம்புக்கு ஈடு இடாதே
வெறுங்கையோடே -கவசம் சாத்திக் கொள்ளாமல் –
சாரதிக்கு கவசம் கூடாது யுத்த நீதியாம் -தேர்த்தட்டிலே முன்னே நின்று சாரதி வேஷத்தோடே
செய்த தொழிலைச் சொல்லுகிறது. என்றது,
‘நீண்ட கைகளை யுடைய தருமபுத்திரரே! நான் உமக்கு அடியவனாய் இருக்கிறேன்;
ஏவிக் காரியங்கொள்ளல் ஆகாதோ?’ என்றமையைத் தெரிவித்தபடி.

இவள் –
அப் பாகிலே பிடிபட்ட இவள்.
தாழ்ந்த குணங்கள் இல்லாத அந்தப் பரம்பொருள் உம்முடைய சரீரத்தில் பரந்து இருக்கிறார்,’ என்கிறபடியே,-
ஹனுமானைப் பார்த்து பீமா சேனன் சொல்வது
சாரதியாய் இருக்கும் வேஷம் இவள் வடிவிலே நிழல் எழுந்து தோற்றுகிறது இல்லையோ? –
அன்று தேர் கடாவிய கனை கழல் காண்பது என் கொலோ கண்கள் -விபவத்திலே மூழ்கி

சிந்தை துழாஅய்த் திசைக்கின்றது –
இவள் நெஞ்சு கலங்கி மோஹிப்பது தேர்ப்பாகனார்க்கு; ‘கடல் கலங்கிற்று’ என்றால், ‘மந்தரத்தாலே’ என்று இருக்க வேண்டாவோ?
(பராங்குச பயோதி ரஸீமா பூமா அன்றோ ஆழ்வார் )
சாரதியாய் இருந்து செய்த தொழில்களைத் தவிர, பரமபதத்தில் முதன்மைக்கு மோஹிப்பாளோ மயர்வு அற மதிநலம் அருளப்பெற்ற இவள்?
மயர்வுஅற மதிநலம் அருளப்பெற்றார் கலங்கும் போது அவனுடைய அடியார்கட்குப் பரதந்திரப்பட்டு இருக்கும் குணத்திலே ஆகவேண்டாவோ?
ஒருவனுக்குச் சோகத்தை நீக்கினவன் காணுங்கோள் இவளுக்குச் சோகத்தை விளைத்தான்.
ஆணுக்குச் சோகத்தைப் போக்கினான்; அபலைக்குச் சோகத்தை விளைத்தான்.

———————————————————————–

திசைக்கின்றதே இவள் நோய் இது மிக்க பெரும் தெய்வம்
இசைப்பின்றி நீர் அணங்கு ஆடும் இளம் தெய்வம் அன்று இது
திசைப்பின்றியே சங்கு சக்கரம் என்று இவள் கேட்க நீர்
இசைக்கிற்றீர் ஆகில் நன்றேயில் பெறுமிது காண்மினே –4-6-2-

ஷூத்ர தேவதா மூலம் அல்ல -சர்வாதிக -அவனது அசாதாராண திவ்ய ஆயுத அடையாளம் சொல்லி இவளைப் பெறுமின்
திசைக்கின்றதே இவள் நோய் -இவள் நோயால் தான் இருவருக்கும் மோகம்
இது மிக்க பெரும் தெய்வம் -நோய் தெய்வம் -கார்ய காரண நிபந்தன சாமா நாதி கரண்யம் –
சர்வாதிகன் -அபரிச்சின்ன –
நீராய் போலே
இசைப்பின்றி நீர் அணங்கு ஆடும் இளம் தெய்வம் அன்று இது– தெய்வா விஷ்டராய் –
திசைப்பின்றியே-பிரமிக்காமல்
சங்கு சக்கரம் என்று இவள் கேட்க -அசாதாராண சிஹ்னம் -இவள் உணரும் படி
நீர் இசைக்கிற்றீர் ஆகில் -வாய் திறந்து சொன்னாள் -அவள் கேட்கும் படி
நன்றேயில் பெறுமிது காண்மினே-இல்லத்தை பெறுவாள் -நிதானம் அடைவாள் -நன்றாகவே இருப்பு பெறுவாள்
இது பிரத்யஷம் -சத்தை உடன் இருப்பாள்
நாயகன் பக்கல் இல் வாழ்க்கை பெறுவாள் –

ஷூத்ர தேவதா சாந்தியால் இன் நோய் போக்குகை அரிது- பகவத் விஷயத்தை சொல்லில் இவளைப் பெறலாம்

திசைக்கின்றதே -இவள் நோய்
குண நிமித்தமாக இவள் அறிவு கெடா நின்றாள்
நீங்கள் அவள் நோய் நிமித்தமாக அறிவு கெடா நிற்கிறீர்கள்
தாய்மார் -கௌரவித்து வார்த்தை
இதுக்கு நிதானம் அறிந்த நீ சொல்லிக் காண் என்ன

இது மிக்க பெரும் தெய்வம்
கம்பீர -வானோர் தலைமகன் சீராயின வந்த நோய் -திருவிருத்தம்-53-
சாமாநாதி காரண்யம் -கார்ய காரண பாவனத்தால்
சர்வேஸ்வரன் அடியாக வந்த கனவிய
இந்த நோய்க்கும் இத்தை உண்டாக்கிய அவனுக்கும் அபேதம் -கார்ய காரண பாவத்தால் –
இது தன்னை அவனாக சொல்கிறாள்

இசைப்பின்றி நீர் அணங்கு ஆடும் இளம் தெய்வம் அன்று இது
நீர் பரிகாரம் செய்யும் உங்களுக்கும் ஒரு சேர்த்தி இல்லை
இந்த நோய்க்கும் சேர்த்தி இல்லை
இவளுக்கும் சேர்த்தி இல்லை
பகவத் விஷயத்தில் முதலில் கை வைத்தார் பெரும் நோய் இல்லையே
ஒரு வழியாலும் ஒரு சேர்த்தி இல்லை –
உங்கள் மகள் பிரபன்ன ஜன குடியில் வந்தவள் -இவளுக்கும் சேர்த்தி இல்லை –
நோவுக்கு நிதான பூதனுக்கும் சேர்ந்தது அல்ல –
தேவதாந்தர சம்பந்தம் -குந்துமணி -தங்கம் -கௌசிக மகாத்மயம் -ப்ரஹ்ம ரஜஸ்சும் அறிந்ததே
இதர தேவதைகள் இந்நிலத்தில் வந்து புக மாட்டார்கள் -அவர்களுக்கும் சேர்த்தி இல்லை

பிள்ளை உறங்கா வல்லி தாசர் -குடி மகன் -ஒருவனுக்கு ஐயனார் ஏறி வலித்தவாறே
உனக்கு வேண்டியது என் என்று கேட்க
பால் பழம் சாந்து -தண்டு ஏற வேண்டும் அணுக்கன் குடை வேணும் என்ன
சாந்து புழுகு ஆபராணாதிகள் வாங்கி சாந்தி செய்து வர
அன்று இரவு – பண்டை விட இரண்டு பக்கம்
பிள்ளை -பிடிக்கும் குடைக்கு கீழே நான் வரவோ -கூவிக் கொண்டே ஓடிற்றே
பரமபக்தன் உடைமை சேராது –
கோவர்த்தனம் -இதனால் தான் -செய்து அருளினான் -தேவதாந்திர பிரசாதம் பக்தருக்கு கூடாதே
பகவத் விஷயத்தில் விக்ரதராக வேண்டிய நீர்
உதவாத ஷூத்ர தேவதை கண்டு ஆடுவதோ -நீங்கள் ஆடாமல் வேறு யாரோ ஆட
ஆட்டம் மேவி அயர்வு எய்தும் மெய்யடியார்

திசைப்பின்றியே
பரிகாரத்திலும் மயங்காமல்
நிதானத்தில் கலக்கம் பிறந்தாலும்
அறிவு கெட்ட அம்சம் என் -பரிகாரத்திலும் அறிவு கெடாத வழி என்

சங்கு சக்கரம் என்று இவள் கேட்க நீர் இசைக்கிற்றீர் ஆகில்
சங்கு சக்கரங்கள் என்று கை கூப்பும்
சங்கு என்னும்
வட்ட வாய் நேமி வலம் கையா என்று மயங்கும்
இத்தையே சொல்லி -மருந்தாகுமே
நோவு வந்த வழியை அறிந்து பரிகரிக்க வேண்டாமோ
சங்கு சக்கரம் என்று பரிகரிக்கப் பாருங்கோள்
சங்கு என்னும் சக்கரம் என்னும் -சொல்லப் போகிறார்களோ
சங்கு சக்கரம் -சொல்லிப் பரிகரிக்கப் பாருங்கோள் –

பெண்ணுக்கு மயக்கம் -பிரிக்க சக்தி இல்லை –
இவளுக்கு ஆசை -சங்கு என்னும் சக்கரம் என்னும் என்றே சொல்லி
கடலை குளப்படி ஆக்கப் பார்க்கிறீர்கள்
சங்கு என்னும் சக்கரம் -நிதானமாக சொல்ல வேண்டும் –
மனசில் நினைப்பதை நீங்கள் சொல்ல வேண்டும் –
நீங்கள் சொன்னீர்கள் ஆகில் –
இவள் கேட்கும் படி சொன்னீர்கள் ஆனால்
ஆனால் -எங்கே சேர்க்க வேண்டும்
அவள் கேட்க நீங்கள் சொன்னீர்கள் ஆனால்
நீங்கள் முதலில் செய்த தப்புக்கு ஷாமணம் செய்தால் தானே உங்களுக்கு காத்து கொடுப்பாள்
இப்படி சொல்வது தான் செவிப்படும் -தரித்து நீங்கள் உக்தி மாதரம் சொல்ல வல்லீர்கள் ஆகில்

ஆய்ச்சி மகன் அந்திம சமயத்தில் -பட்டர் -தம்மை அறியாதே கலங்கிக் கிடக்கிற படியைக் கண்டு
மெல்ல அழகிய மணவாள பெருமாளே சரணம் -காதில் சொல்ல -இவர் பக்தியை அறிந்த பட்டர் -இவர் காதில் சொல்ல-
அனந்தரம் அதிலே உணர்த்தி உண்டாய் -நெடும் பொழுது அத்தையே சொல்லி திருநாட்டுக்கு நடந்தாராம்
பெற்ற மக்கள் பெண்டிர் என்று இவர் உதாவார் என்று பிரிந்தேன் -கலியன் -திருவிண்ணகர் பாசுரம்-
சோர்வினால் பொருள் வைத்தது உண்டானால் சொல்லு சொல்லு என்பரே -பெரியாழ்வார்-4-5-

என்ன நன்மை
நன்றேயில் பெறுமிது காண்மினே
இல் பெரும் -சரீரம் என்றும் குடும்பம் என்றும் அர்த்தம்
ஆத்மாவுக்கு ஆயதனமான சரீரம் பெரும்
இல் கிளத்தி – க்ருஹுணியாக பெரும் -என்று தமிழர்
ஏ இல் -எயில் கானமாய் பண்ணை வென்ற வார்த்தை சொல்லும்
மயக்கம் தெளிந்து மதுரா மதுராலாபா போலே –

இது காண்மின்
இதுவும் காண்மினே
தேவதாந்திர பஜனம் செய்தீர்
நான் சொன்னதையும் காண்மின்
நான் கை கண்டு சொன்னேன் -சங்கு சக்கரம் கையிலே கண்டதை சொன்னபடி-
ஒன்றேயோ பரிகாரம்
பலத்துடன் சேர்விக்கும்
பெண் புள்ளைக் கடாவுகின்றது காணீர்
இது காண்மின்-இவள் தன நெஞ்சில் பிரகாசிக்கிற படியை காண்மின்
நெஞ்சினூடே ஏசல் காண்கிறான்-வெள்ளைச் சுரி சங்கினுடன் ஆழி ஏந்தி –
நன்றே இல் பெரும் -இது காண்மின் –

————————————————————————-

இது காண்மின் அன்னைமீர்! இக்கட்டு விச்சி சொற் கொண்டு நீர்
எதுவானும் செய்து அங்கு ஓர் கள்ளும் இறைச்சியும் தூவேன்மின்!
மதுவார் துழாய் முடி மாயப்பிரான் கழல் வாழ்த்தினால்
அதுவே இவள் உற்ற நோய்க்கும் அரு மருந்தாகுமே.–4-6-3-

நிந்த்யமான-உபகரணங்களைக் கொண்டு இதர தேவதா சாந்தி செய்யாமல்-கழல் வாழ்த்தினால் -நிரதிசய போக்யமான
அவன் திருவடிகளை பல்லாண்டு பாடுவதே
பேஷஜமாம் போக்யமுமாம் -நோய்க்கு மருந்தும் விருந்தும் -இதுவே
நோய்க்கும் அரு மருந்தாகுமே-விருந்தை தேடினாள் நோய் பட்டாள் -விருந்தை கொடுத்தால் நோயும் போகுமே அந்த அர்த்தத்தில் உம்மை
இது காண்மின் அன்னைமீர்! இக்கட்டு விச்சி சொற் கொண்டு நீர்-பெருமையாக -இறுமாப்பு -சொல்லிற்று கேளாமல்
ஸ்வபாவம் நானே அறிவேன் உற்ற நண்பர்கள் உண்மை அறிவார்கள்
இந்த தண்ணிய -இவள் வார்த்தையால் -ஸ்வரூபம் பாராமல் -ஹேய தேவதா அனுவ்ருத்தி ரூபமான
எதுவானும் செய்து அங்கு ஓர் கள்ளும் இறைச்சியும் தூவேன்மின்!-குலம் அறிவீர் -தூஷியாமல் –
மதுவார் துழாய் முடி மாயப்பிரான் கழல் வாழ்த்தினால்-பல்லாண்டு பாடி -ஏத்தினால் -ஸ்தோத்ரம் பாலும் மருந்துமாம்
திருத் துழாயால் அலங்க்ருதமான-அனுபவிப்பிக்கும் உபகாரன்
கழலுக்கு பல்லாண்டு பாடுவதே ஸ்வரூப அனுரூபம்
அதுவே இவள் உற்ற நோய்க்கும் அரு மருந்தாகுமே.-இது ஒன்றே -இவளுக்கும் பெறுதற்கு அரிய மருந்து
அவளுக்கும் விருந்தும் ஆகும் -உங்கள் கலக்கத்துக்கும் பரிகாரமாகும் –கழல் வாழ்த்த இவை அனைத்தும் கிட்டும்

தாய்மார்களே! இதனைக்காணுங்கோள்; இந்தக் கட்டுவிச்சியினுடைய வார்த்தையைக்கொண்டு நீங்கள் ஏதாகிலும் செய்து
அவ்விடத்திலே ஒரு கள்ளையும் மாமிசத்தையும் இறைக்காதீர்கள்; தேன் ஒழுகுகின்ற திருத்துழாயைத் தரித்த திருமுடியையுடைய
மாயப்பிரானுடைய திருவடிகளைத் துதித்தால், துதிக்குமதுவே இவள் அடைந்திருக்கும் நோய்க்கும் சிறந்த மருந்தாகும்,’ என்றபடி.

அன்னைமீர்! இக்கட்டுவிச்சி சொல்லைக்கொண்டு செய்து தூவேன்மின்,’ என்க. தூவுதல் – வணங்குவதற்காக வைத்தல்.
மாயன் -ஆச்சரியமான குணங்களையும் செயல்களையுமுடையவன். பிரான் – உபகாரகன்.

பொருந்தாத காரியங்களைச் செய்யாமல் அவன் திருவடிகளை ஏத்துங்கோள்; அதுவே இந்நோய்க்கும் மருந்து,’ என்கிறாள்.

அன்னைமீர் இது காண்மின்
வயிற்றில் பிறந்தவர்கள் என்னுமது ஒன்றனையே கொண்டு சொல்லுகிற நலத்தைக் கேளாதொழிய வேண்டுமோ?
ஏவுகின்றவர்கள் என்னும் இத்தனையோ வேண்டுவது? வயிற்றிலே பிறந்தவர்களாகிலும் சொன்ன வார்த்தை
நல்லதாக இருக்குமாகில் கைக்கொள்ள வேண்டாவோ? திருமாலைப் பாடக் கேட்டு,
‘விளக்கொளியை மரகதத்தைத் திருத்தண் காவில் வெஃகாவில் திருமாலைப் பாடக் கேட்டு,
‘வளர்த்ததனால் பயன்பெற்றேன்; வருக’ என்று மடக்கிளியைக் கைகூப்பி வணங்கினாளே.’-திருநெடுந். 14.- ’ என்று
மடக்கிளியைக் கைகூப்பி வணங்கினவளும் உங்களிலே ஒருத்தி அன்றோ? அது கிடக்க :

நான்முகன் பித்ருக்களை திட்ட அவரால் சுக்ராச்சாரியார் இடம் முறை இட
அங்கிரஸ் பிள்ளை சுக்ராச்சாரியார் இடம் வந்து பித்ருக்கள் முறை இட அவர் புத்ரர்களே என்று கூப்பிட்ட விருத்தாந்தம்
புத்திரர்களே!’ என்று அல்லவா சொன்னார் என்றாரும் இல்லையோ?

யாரேனும் சொல்லிலும் வார்த்தை நன்றாகில்
கைக்கொள்ள வேண்டாவோ? இக்கட்டுவிச்சி சொற்கொண்டு – ‘பரிஹாரம் சொல்லுகிற இவள் தன்மை கண்டீர்களே அன்றோ?
இவள் வார்த்தையைக் கேட்டீர்களே அன்றோ? இதனையோ ஆதரிப்பது! நான் சொல்லுகிற வார்த்தையையே
இவள் சொன்னாலும் கேட்கக் கடவதோ? ‘காணிலும் உருப்பொலார்’ என்கிறபடியே அன்றோ இருப்பது?’ என்பாள், ‘இக்கட்டுவிச்சி’ என்கிறாள்.
இவள் சொன்ன வார்த்தையை யான் கூறினாலும் என்னையுங்கூடத் துறக்கும்படி அன்றோ
வார்த்தையின் பொல்லாங்கு இருப்பது?’ என்பாள், ‘இச்சொல்’ என்கிறாள்.
‘செவிக்கு இனாத கீர்த்திய’ராய் இருக்கின்றமையைத் தெரிவித்தபடி

நீர் –
பேய் முலை நஞ்சு, ஊணாக உண்டான் உருவொடு பேர் அல்லால், காணா கண் கேளா செவி,’ என்று இருக்கக்கூடிய நீங்கள்
நாஸ்திகரான பௌத்தர் ஜைநர் முதலான மதத்தினர்களும் ‘பிற உயிரை வருத்தல் ஆகாது’ என்பார்களே அன்றோ?
அவ்வழியாலே கைக்கொள்ளுமவர்களோ நாம்? ‘எந்த உயிரையும் கொல்லுதல் கூடாது,’ என்ற விதியைக் கைக்கொள்ளுதல் போன்று
வைத ஹிம்சையும்’ கைக்கொள்ள வேண்டாவோ? ‘ஆத்தும தத்துவத்தை யறிந்த
பிரஹ்ம ஞானிகள்’ என்னப்படுமவர்களன்றோ உங்களுக்கு உபதேசிக்கத் தக்கவர்கள்?

எதுவானும் செய்து
யாதேனும் பொருத்தம் இல்லாத காரியத்தைச் செய்து. உங்கள் ஆசாரத்தோடு சேர்ந்திருக்கப் பெறில், அதுவும் ஆகுமே அன்றோ?
‘செய்யாதன செய்யோம்’ என்றும், ‘மேலையார் செய்வனகள் வேண்டுவன’ என்றும் அன்றோ உங்கள் ஒழுக்கம்?
அங்கு ஓர் இறைச்சியும் கள்ளும் தூவேன்மின் –
தாழ்ந்த பொருள்களைக் கொண்டு வைஷ்ணவத் திருமாளிகையைத் தூஷியாதே கொள்ளுங்கோள். ‘அங்கு’ என்று முகத்தை மாற
வைத்துச் சொல்லுகிறாள். ‘ஆகில், தவிருகிறோம்; பரிஹாரத்தைச் சொல்லிக்காணாய்,’ என்ன, சொல்லுகிறாள் மேல் :

மது வார் துழாய் முடி மாயப்பிரான் கழல் வாழ்த்தினால் –
‘விரை மட்டு அலர் தண் துழாய் என்னும்’ என்று நீங்கள் சொல்ல அன்றோ நான் கேட்டது?
திருக்குழலின் சம்பந்தத்தாலே தேன் பெருக்கு எடுத்து ஓடுகின்ற திருத்துழாயைத் திருமுடியிலே யுடையனாய்,
அழகு சீலம் முதலியவைகளால் ஆச்சரியத்தையுடையனாய், அந்த அழகு முதலானவற்றை அடியார்களுக்காக ஆக்கி வைக்கும்
உபகாரகன் திருவடிகளை வாழ்த்தினால். ‘உன் சேவடி செவ்வி திருக்காப்பு’ என்றே அன்றோ வாழ்த்துவது?
ஆதலால், இவர்கள் திருநாமம் சொல்லுவதுதான் மங்களாசாசன முகத்தாலே ஆயிற்று என்க.
‘கெண்டை ஒண் கண்ணும் துயிலும்’ என்றார் திருமங்கை மன்னனும்.
கெண்டை ஒண் கணும் துயிலும் என்நிறம் பண்டு பண்டு -போல் ஒக்கும் மிக்க சீர்த்
தொண்டர் இட்ட பூம் துளவின் வாசமே வண்டு கொண்டு வந்து ஊதுமாகிலே –பெரிய திருமொழி 11-1-9-
உறக்கத்தால் அல்லாத செல்லாத கண் துயிலும்
கலப்பதற்கு முன்னே -பண்டு பண்டு நிலை – -வாசி அறியாதார் நிரபேஷர்
என்ன பண்ணினால் -கண் உறங்கும்
மிக்க சீர் தொண்டர் துளவின் வாசம்
பரிவர் இல்லை என்றே இவள் துக்கம் -வியாதியும் போனது பரிவர் உள்ளார் என்று அறிந்து
நஞ்சீயர் நம்பிள்ளை சம்வாதம் -மூலம் இந்த அர்த்தம்

அதுவே
-அடையத் தக்கதுமாய் இனியதுமான அதுதானே
.இவள் உற்ற நோய்க்கும் அருமருந்து ஆகும் –
இவள் மறுபாடு உருவக் கொண்ட நோய்க்கு பெறுதற்கு அரிய மருந்தாம். என்றது,
‘மேல் காற்றிலே காட்டப் பரிஹாரமாம்,’ என்றபடி.

——————————————————————————-

மருந்து ஆகும் என்று,அங்கு ஓர் மாய வலவை சொற் கொண்டு,நீர்
கருஞ்சோறும் மற்றைச் செஞ்சோறும் களன் இழைத்து என் பயன்?
ஒருங்காகவே உலகு ஏழும் விழுங்கி உமிழ்ந்திட்ட
பெருந்தேவன் பேர் சொல்லகிற்கில், இவளைப் பெறுதிரே.–4-6-4-

கிருத்ரம -இவள் செய்வது பிரயோஜனம் இல்லை -ஆபத் சகன் திருநாமம் சொல்ல
மருந்து ஆகும் என்று,அங்கு ஓர் மாய வலவை சொற் கொண்டு,நீர்-பிரதிபத்தி பண்ணி –
வலவை-நேர்மை இல்லாதவள் -ஊர் பேர் இல்லாதவள் -க்ருத்ரிமை -வார்த்தையை விச்வசித்து
தேவதாந்திர ஸ்பர்சதுக்கு யோக்யதை இல்லாத நீங்கள் -பெண்ணின் பரிவால் கலங்கி
கருஞ்சோறும் மற்றைச் செஞ்சோறும் களன் இழைத்து என் பயன்?-சாத்விக அன்னம் இல்லாமல் -பொடி போட்டு வர்ணம் மாற்ற கூடாது
சிகப்பு ரஜஸ் கருத்து தமஸ் -தேவதாந்திர சந்நிதானம் களத்திலே
ப்ரீதி சாந்தி பண்ண என்ன பிரயோஜனம்
ஒருங்காகவே உலகு ஏழும் விழுங்கி உமிழ்ந்திட்ட-ஆஸ்ரித அனாஸ்ரித்த விபாகம் இல்லாமல் ரஷித்து அருளிய
பெருந்தேவன் பேர் சொல்லகிற்கில், இவளைப் பெறுதிரே.-சத்தை -போகுமே ஸ்வரூபம் இழந்தால் சத்தை போகுமே
பர தேவதை திரு நாமம் சொல்ல வல்லீர் ஆகில் இவளை பெறுவீர் –

‘இவள் நோய்க்குப் பரிஹாரமாகும் என்று நினைத்து, வஞ்சனை பொருந்திய ஒரு வலவையினது சொல்லைக் கொண்டு
நீங்கள் கருஞ்சோற்றையும் செஞ்சோற்றையும் அங்கே அத்தேவர்களுடைய முன்னிலையில் படைப்பதால் பயன் யாது?
ஒருசேர ஏழ் உலகங்களையும் பிரளயகாலத்தில் உண்டு, பின் பிரளயம் நீங்கினவுடனே வெளி நாடு காண உமிழ்ந்த
அறப்பெரிய சர்வேசுவரனது திருப்பெயரைச் சொல்லுவீர்களே யானால், இவளைப் பெறுவீர்கள்,’ என்றவாறு.
மருந்து – பரிஹாரம். வலவை – பலவாறு பேசுகின்றவள். களன் – படைக்குமிடம். ‘சொற்கொண்டு இழைத்துப் பயன் என்?’ என்க.
பெருந்தேவன் – ‘முதலாவார் மூவரே; அம் மூவ ருள்ளும் முதலாவான் மூரிநீர் வண்ணன்,’ என்பதனைக் குறித்தபடி.

‘வஞ்சனையுடையவளாய்த் தோன்றியதைச் சொல்லுகிற இவளுடைய பலவாறான வார்த்தைகளை விட்டு,-ஆபத்சகன் -உண்டு உமிழ்ந்து -ரஷித்தவன் –
ஆபத்திற்குத் துணைவனான சர்வேசுவரனுடைய திருநாமத்தைச் சொல்ல வல்லீர்கோளாகில், இவளைப் பெறலாம்,’ என்கிறாள்.

மருந்து ஆகும் என்று –
பத்தியத்திற்கு மாறானவற்றைச் செய்கின்றவர்கள் மருந்து ஆகும் என்று. ‘பத்தியம்’
என்று சொல்லிக்கொள்ளவும் வேண்டுமோ? ‘மருந்தாம்’ என்றபடி.
அங்கு ஓர் மாயவலவை சொற்கொண்டு –
வஞ்சனையுடையவளாய் நெஞ்சில் தோற்றியவைகளையே சொல்லக்கூடியவளான இவள் வார்த்தையைக் கேட்டு.
‘அங்கு ஓர்’ என்று விருப்பம் இல்லாமையைத் தெரிவிக்கிறாள்.

நீர் –
சத்துவ குணத்தை உடையவர்களாய், பகவத் விஷயமல்லது சொல்லாதவர்களாய், நேர்மையாளர்களா யிருக்குமவர்கள்
வார்த்தையைக் கேட்கக்கூடிய நீங்கள் படும் எளிவரவே!
அன்றிக்கே,
‘போனகம் செய்த சேடம் தருவரேல் புனிதம் அன்றே?’ என்ற
சத்துவ குணமுடையார் அமுது செய்த பிரசாதத்தின் பெருமையை அறிந்த நீங்கள். என்றது,
‘சத்துவகுணமுடைய அன்னமல்லது தொடக்கூடியவர் அல்லாத நீங்கள்’ என்றபடி.

கருஞ்சோறும் மற்றைச் செஞ்சோறும் –
தாமச அன்னமும் அதனோடு தோள் தீண்டியான இராஜச அன்னமும்.
களன் இழைத்து என் பயன் –
இராஜச தாமச தேவதைகளுக்கு அவ்வத்தெய்வங்கள் வந்து தங்கியிருக்கும் இடங்களிலே
இராஜசமாயும் தாமசமாயுமுள்ள சோற்றினைக் கொண்டு இடச் சொல்லுகிற முறையிலே இட்டால் என்ன பிரயோஜனம் உண்டு?
பிரயோஜனம் இல்லாமை மாத்திரமேயன்று; அழிவோடே முடியும். களன் – ‘களம்’ என்றபடி. இழைக்கை – இடுகை.
என்றது, புன்சிறு தெய்வங்கள் வந்து தங்கியிருக்கும் நாற்சந்தி தொடக்கமானவற்றிலே அவற்றுக்குச் சொல்லுகிற
நியமங்களோடே படைத்தலைக் குறித்தபடி.
‘பிரளய காலத்தில் எல்லாப் பொருள்களையும் பாதுகாத்தவனான சர்வேசுவரனை ஒழியப் பிரளய ஆபத்தில்
பாதுகாக்கலாமாகில் ஆயிற்று, இவளைப் புன்சிறு தெய்வங்களைக் கொண்டு பாதுகாக்கலாவது,’ என்பாள்,
‘விழுங்கி உமிழ்ந்திட்ட பெருந்தேவன்’ என்கிறாள்.
‘இதில் ஒரு பிரயோஜனம் இல்லையாகில், மற்று, பிரயோஜனம் உண்டாக நீ நினைத்ததைச் சொல்லாய்,’ என்ன,
‘செய்வீர்கோளேயாகில் உங்களுக்கு ஒரு பேரேயன்றோ நான் சொல்லுகிறது?’ என்கிறாள் மேல் :

ஒருங்காகவே உலகு ஏழும் விழுங்கி உமிழ்ந்திட்ட பெருந்தேவன் –
‘அடியார், அடியர் அல்லாதார்’ என்று பாராமல், எல்லாரையும் ஒக்க ஒரே காலத்தில் திருவயிற்றிலே வைத்து நோக்கி,
பிரளயம் கழிந்தவாறே வெளிநாடு காணப் புறப்பட விட்ட பரம்பொருள்.
‘ஒருவர் களன் இழையாதிருக்கச்செய்தே வந்து,வரையாதே பாதுகாக்குமவன்’ என்பாள், ‘ஒருங்காகவே’ என்கிறாள்.
‘ஒருவர் விரும்பாதிருக்க, ஆபத்தே காரணமாக வந்து உதவுமவன்’ என்பாள், ‘உலகு’ என்கிறாள்.
ஆக, ‘அத்தகைய எம்பெருமானைப் பற்றுங்கோள்,’ என்கிறாள்
எல்லாப் பொருள்களையும் பாதுகாப்பவன் ஆகையாலே, எல்லாரைக்காட்டிலும் அறப்பெரியவனான சர்வேசுவரன்;
தளர்ந்தார் தாவளமானவன்-ஆர்த்த ரக்ஷகன் என்றபடி -. முன்பு முகந்தோற்றாதே நின்றானே யாகிலும்,
ஆபத்து வந்தவாறே முகங்காட்டிக் காக்குமவனாயிற்று.
அவன் இப்படியிருப்பான் ஒருவன் ஆகையாலே, எளிதில் ஆராதிக்கப்படுமவன்; —
நீங்கள் பற்றுகின்ற தேவதைகளைப் போன்று கெட்ட தன்மைகளையுடையவன் அல்லன்; ‘
அட்டது ஒழியச் சுட்டது கொண்டு வா,’ என்கிறபடியே, கஷ்டப்பட்டு ஆராதிக்கப்படுமவன் அல்லன்.
தான் காக்குமிடத்தில் இத்தலையில் காப்பதற்கு அறிகுறியான விலக்காமையே வேண்டுவது.
இதனால், ‘அந்தப் பிரளயம் தீர்த்தவனேகாணும் இந்தப் பிரளயத்துக்கும் கடவன்;
நம்மோடு ஒக்கப் பிரளயத்திலே அழுந்தும் புன்சிறு தெய்வங்களையோ பற்றுவது? வரையாதே
எல்லாப் பொருள்களையும் பாதுகாப்பவனாயுள்ளவனை அன்றோ பற்றத் தகுவது?’ என்கிறாள் என்றபடி.

பேர் சொல்லகிற்கில் –
திருப்பெயரைச் சொல்ல வல்லீர்கோளேயானால். ‘இப்படி நேர்த்தி அற்று இருக்குமாகில் பலமும் அளவுபட்டு இருக்குமோ?’ என்னில்,
இவளைப் பெறுதிர் –
அத்தேவதைகள் மாட்டு நேர வேண்டுவன எல்லாம் நேர்ந்தாலும், ‘என் பயன்?’ என்று பிரயோஜனம் இல்லையாகச் சொல்லிற்று;
இங்கு நேர்த்தி திருநாம மாத்திரம் சொல்லுகையாய், பேற்றில் வந்தால் இவளைப் பெறுதலாகிற பெரிய பலத்தைப் பெறலாம்.
‘பேர் சொல்ல வல்லீர்கோளாகில் இவளைப் பெறலாம்; இல்லையாகில் இழக்குமித்தனை,’ என்றபடி.

———————————————————-

இவளைப் பெறும் பரிசு இவ்வணங்கு ஆடுதல் அன்று;அந்தோ!
குவளைத் தடங்கண்ணும் கோவைச் செவ்வாயும் பயந்தனள்;
கவளக் கடாக்களிறு அட்டபிரான் திரு நாமத்தால்
தவளப் பொடிகொண்டு நீர் இட்டிடுமின்; தணியுமே.–4-6-5-

இவள் நோய் விஞ்சா நின்றது நீங்கள் செய்வதால் –
பிரபல விரோதி நிவர்த்தகன் -ஸ்ரீ கிருஷ்ணன் – திரு நாமத்தால் -உச்சரித்து –
பரிசுத்த சூர்ணம் -வெள்ளை -திரு நாமம் ஸ்பர்சிப்பியுங்கோள்
இவளைப் பெறும் பரிசு இவ்வணங்கு ஆடுதல் அன்று;அந்தோ!நீங்கள் செய்வதால் இவள் நோய் விஞ்சி போனதே
குவளைத் தடங்கண்ணும் கோவைச் செவ்வாயும் பயந்தனள்;-பரந்த கண்கள் -நிறம் அழிந்து -பரிகாரம்
கவளக் கடாக்களிறு அட்டபிரான் திரு நாமத்தால்-குவலயா பீடம் மதம் ஏற்ற லாகிரி வஸ்துக்கள் -கொன்று -மதுரையில் பெண்களுக்கு
-கிருஷ்ணன் -மீண்டும் நிறம் குவளைப் பூ கோவைச் செவ்வாய் ஆனதே
தவளப் பொடிகொண்டு நீர் இட்டிடுமின்; தணியுமே-அந்த சரித்ரம் சொல்லி -திரு நாமம் சொல்லி -விரோதி நிரசன ஸூசகம்
ப்ரஹ்ம நிஷ்டர் பாகவதர் ஸ்ரீ பாத தூளி கொண்டு -சடக்கென ஸ்பர்சிக்கும் படி செய்வீர் -சிறிய வேலை தான்
விஞ்சி இருக்கும் வை வர்ண்யம் தணியும் தன்னிறம் பெறுவாள்

‘ஐயோ! இவளைப் பெறுதற்குரிய வழி இந்த அணங்கு ஆடுதல் அன்று; குவளை போன்ற விசாலமான கண்களும் கொவ்வைக்கனி
போன்ற சிவந்த வாயும் பசலை நிறத்தை அடைந்தாள். கவளத்தை உண்ணுகின்ற மதம் பொருந்திய குவலயாபீடம் என்னும்
யானையைக் கொன்ற கண்ணபிரானுடைய திருப்பெயரைச் சொல்லிக் கொண்டு அடியார்களுடைய தூய்மையான பாததூளியை
இவளுக்கு நீங்கள் இடுங்கோள்; இட்டவளவில் இந்நோய் தணியும்.’
பயந்தனள் – பசந்தனள். கவளம் – யானை உண்ணும் உணவு. அட்ட – கொன்ற.
தவளம் – வெண்மை; இங்குத் தூய்மையைக் காட்டிற்று. பொடி – தூளி.

‘நீங்கள் செய்கிற பரிஹாரம் நோயை மிகுதி ஆக்கா நின்றது;
அதனை விட்டு, நோய்க்குத் தகுதியான பரிஹாரத்தைச் செய்யுங்கோள்,’ என்கிறாள்.

இவளைப் பெறும் பரிசு இவ்வணங்கு ஆடுதல் அன்று –
‘இங்ஙனம் சிறப்பினை உடையளாய் இருக்கிற இவளைப் பெறுகைக்கு உபாயம் இத் தெய்வ ஆவேசங்கொண்டு ஆடுமது அன்று;
இந்த நற்சரக்கைப் பெறப் பார்ப்பவர்கள் இந்தத் தாழ்ந்த செயல்களாலேயோ பெறப்பார்ப்பது?’ என்றபடி.
இவள் இப்படிச் சொன்னவிடத்திலும் இவர்கள் மீளாதொழிகையாலே,
அந்தோ –
‘ஐயோ! இவளை இழந்தோமே அன்றோ!’ என்கின்றாள்.
‘இத்தெய்வ ஆவேசங் கொண்டு ஆடத் தொடங்கிய அளவில் இவளை இழந்தோமாதல் எப்படி?’ என்ன, ‘பார்க்கமாட்டீர்களோ?
குவளைத் தடம் கண்ணும் கோவைச் செவ்வாயும் பயந்தனள் –
‘குவளை அம் கண்ணி’ என்கிறபடியே,
குவளைப் பூப்போலேயாய் அனுபவிக்கின்றவர்கள் அளவு அல்லாத பரப்பையுடைத்தான கண்ணும்,
‘கோவை வாயாள்’ என்கிறபடியே, கோவைப்பழம் போன்ற சிவந்த உதடும் பசலை நிறத்தையடைந்தாள்.
‘தொண்டை அம் செங்கனி வாய் நுகர்ந்தானை’-பெரிய திருமொழி-3-7-2- என்றும்,
‘மணநோக்கம் உண்டான்’-பெரிய திருமொழி -8-10-1- என்றும் சொல்லுகிறவாறே ‘இவை அல்லவோ அவனுக்கு ஊண்?
ஆதலால், அவனுடைய வாய்புகுசோறு அன்றோ பறி உண்டாகிறது?’ என்கிறாள்.
(ஞானியை விக்ரகத்தோடே ஆராதிக்குமே )
பகவானைப் பிரிந்ததனால் உண்டான விரஹத்துக்கும் அகஞ்சுரிப்படாதவள்,
வேறு தெய்வங்களின் சம்பந்தத்தாலும் அத்தெய்வங்களின் அடியார்களுடைய சம்பந்தத்தாலுமாகப் பசலை நிறத்தை அடைந்தாள்.

‘ஆனால், பரிஹாரம் சொல்லாய்,’ என்ன,
‘நெடுங்காலமும் கண்ணன் நீள் மலர்ப்பாதம் பரவிப் பெற்ற இளமான்’-திருவிருத்தம் -37- என்று நீங்களே அன்றோ சொன்னீர்கோள்?
அப்படியே, கண்ணபிரானுடைய திருவடிகளை அடைந்து அவனாலே நீக்கிக்கொள்ளப் பாருங்கோள்,’ என்கிறாள்.
கவளம் கடாம் களிறு அட்டவன் திருநாமத்தால் தவளம் பொடி கொண்டு நீர் இட்டிடுமின் –
மதஜலம் ஒழுகாநின்றுள்ள குவலயாபீடத்தை முடித்த உபகாரகனது திருநாமத்தாலே போக்குவதற்குப் பாருங்கோள்.
இதனால், ‘பிரபலமான தடைகளையும் வருத்தம் இன்றிப் போக்க வல்லவன்’ என்பதனைக் குறிப்பித்தவாறு.
‘கவளத்தை உண்பித்துப் போதையைத் தரும் பொருள்களைக் குடிப்பித்துப் பிச்சு ஏற்றுவித்த களிறு’ என்பாள்,
‘கவளக் கடாக் களிறு’ என்கிறாள். ‘தூய்மையான பொடி’ என்பாள், ‘தவளம் பொடி’ என்கிறாள்.
‘பாபம் செய்வதற்குத் துணை புரிந்தவர்கள், கழுவாய்க்கும் கூட்டுப்பட வேண்டாவோ?’ என்பாள், ‘நீர்’ என்கிறாள்.
‘இட்டிடுமின்’ என்றது, ‘இவள் மேலே இடுங்கோள்’ என்றவாறு.
‘வேறு தெய்வங்களின் சம்பந்தம் உண்டானதற்குப் பகவானுடையநாமத்தைச் சொல்லிப் பரிஹரிக்கப் பாருங்கோள்;
வேறு தெய்வங்களின் அடியார்களுடைய சம்பந்தத்துக்கு ஸ்ரீ வைஷ்ணவர்களுடைய
பாததூளியைக் கொண்டு பரிஹரிக்கப் பாருங்கோள்,’ என்கிறாள்
ஆக, ‘இங்கே புகுந்த அநீதிகள் இரண்டு உள :
அவ்விரண்டனுக்கும் இவ்விரண்டனையுங் கொண்டு பரிஹரிக்கப் பாருங்கோள்,’ என்கிறாள் என்றபடி.
‘இப்படிச் செய்தல் பரிஹாரம் ஆகுமோ?’ என்ன,
தணியுமே –
இவள் கண்ணும் விழித்து நிறமும் வரும்படி காட்டித் தரக் கடவேன்.

———————————————————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ. வே.வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

பகவத் விஷயம் காலஷேபம் 95- திருவாய்மொழி – -4-5-6….4-5-11–ஸ்ரீ உ. வே. வேளுக்குடி ஸ்வாமிகள்-

May 30, 2016

கரிய மேனி மிசை வெளிய நீறு சிறிதே இடும்
பெரிய கோலத் தடங்கண்ணன் விண்ணோர் பெருமான் தன்னை
உரிய சொல்லால் இசைமாலைகள் ஏத்தி உள்ளப்பெற்றேற்கு
அரியது உண்டோ எனக்கு இன்று தொட்டும் இனி என்றுமே?–4-5-6-

அச்கலித-ப்ரேமம் -நழுவல் இல்லா -நிரதிசய அனுபாவ்யமான அழகு -ஸ்தோத்ர முகத்தால் அனுபவித்த
எனக்கு துர்லபம் ஒன்றும் இல்லையே
கரிய மேனி மிசை வெளிய நீறு சிறிதே இடும்-வெளிய நீறு அஞ்சனப்போடி -ஸ்யாமளமான வடிவு அழககுக்கு மேலே
பெரிய கோலத் தடங்கண்ணன் விண்ணோர் பெருமான்றனை-அனுபவிக்கக் கொடுப்பவர் –ஸூ ரிகளை குமிழ் நூரூட்டும்-
உரிய சொல்லால் இசைமாலைகள் ஏத்தி -இந்த அழகுக்குத் தக்க -படி எடுத்துக் காட்டும் படி அல்லவே அவன் படி
இவனுக்கு ஏற்ற சப்தங்கள் உண்டே -இவற்றையும் அவனே அன்றோ அருளினான் -சொல்ல பின்னுரு சொன்னேன் என்றார்
உள்ளப்பெற்றேற்கு-பெற்றதால் இனி
அரியது உண்டோ எனக்கு இன்று தொட்டும் இனி என்றுமே?-துர்லபமானது ஏதாவது உண்டோ
வெளியம் -அஞ்சனம் -அன்றியே -ஸ்யாமளமான திருமேனிக்கு மேலே – பச்சைக் கற்பூர பொடி-வெளிய நீறு –
கற்பூர படி ஏற்ற உத்சவம் -பொடி தூவி -அளவு படச் சாத்தின -முகவாயிலும் -திருமண் காப்பிலும் இன்றும் சாத்துவார்களே –

‘கரிய திருமேனியின்மேலே வெண்மையான சூர்ணத்தைச் சிறிதளவே இடுகின்ற, பெரிய அழகிய விசாலமான திருக்கண்களையுடையவனும்,
நித்தியசூரிகளுக்குத் தலைவனுமான சர்வேசுவரனைத் தகுதியான சொற்களாலே சமைந்த இசையோடு கூடிய மாலைகளால் துதித்து நினைக்கின்றவனான
எனக்கு இன்று தொடங்கி இனி எப்பொழுதும் கிடைத்தற்கு அருமையான பொருள் ஒன்று உண்டோ?’ என்கிறார்.

‘இடும்’ என்பதனைக் கண்ணுக்கு அடைமொழியாக்குவர் வியாக்கியாதா.
அதனைப் பெருமானுக்கு அடைமொழியாக்குவர் திருக்குருகைப்பிரான் பிள்ளான்.
‘இடும் பெருமான்’ என்றும்,பெரிய கோலத் தடங்கண்ணனாகிய பெருமான்’ என்றும் தனித்தனியே கூட்டிக்கோடல் வேண்டும்.
வெளிய நீறு – பச்சைக்கற்பூரச் சூர்ணம். ‘நீறு’ என்பது, பல பொருள் ஒரு சொல் :
‘சிலைவேடன் அவ்வளவில், நீறாய் விழுந்தான் நிலத்து’ (நளவெண்) என்றவிடத்துச் சாம்பலையும்.
‘மாந்தரும் மாவும் செல்ல மயங்கிமேல் எழுந்த நீறு’ (சிந்.) என்றவிடத்துப் புழுதியையும்.
‘மந்திரமாவது நீறு’ என்றவிடத்து விபூதியையும் காட்டுதல் காண்க.
அரசர்கள் அஞ்சனம் அணிந்துகோடல் மரபு. ‘உள்ளப்பெற்றேற்கு எனக்கு இன்று தொட்டும் இனி என்றும் அரியது உண்டோ?’ எனக் கூட்டுக.

‘சர்வேசுவரன் திருவடிகளில் அடிமை செய்யவும் பெற்றுத் தடைகளும் போகப்பெற்றேன்,’ என்றார் மேல் பாசுரத்தில்.
‘ஆனால், இனி உமக்குச் செய்ய வேண்டுவது என்?’ என்றான் ஈசுவரன்;
‘இதற்கு முன்பு பெறாததாய் இனிப் பெற வேண்டுவது ஒன்று உண்டோ?’ என்கிறார் இப்பாசுரத்தில்.

கரிய மேனி மிசை –
திருக்கண்களில் கருவிழியினுடைய கறுத்த நிறத்தால் வந்த அழகுக்கு மேலே. மேனி – நிறம்.
‘கரியவாகிப் புடை பரந்து’ என்னக்கடவதன்றோ?
வெளிய நீறு –
அஞ்சன சூர்ணம்,
சிறிதே இடும் –
அதனை அளவே கொண்டு அலங்கரிக்கும். –ஆரார் அயில் வேற்கண் அஞ்சனத்தின் நீறு அணிந்து’ என்னக் கடவதன்றோ?
அழகுக்கு இட வேண்டுவது இல்லையே? இனி, மங்களத்தின் பொருட்டு இடுவது ஆகையாலே, ‘சிறிதே இடும்’ என்கிறது.
பெரிய கோலம் –
ஒப்பனை வேண்டாதபடி அழகு அளவு இறந்து இருக்கிறபடி.
தடம் கண்ணன் –
அனுபவிக்கின்றவர்களுடைய அளவில் நில்லாது அனுபவிக்கப்படுகின்ற பொருள் மிக்கு இருக்கிறபடி.
அன்றிக்கே,
‘கரிய மேனி மிசை வெளிய நீறு சிறிதே இடும் பெரிய கோலம் தடம் கண்ணன்’ என்பதற்கு,
‘திருமேனியில் கறுத்த நிறத்தாலே வந்த அழகுக்கு மேலே அதற்குப் பரபாகமான திருக்கண்களிலே அஞ்சனத்தை இடுகின்ற’ என்னலுமாம்.
இனி, ‘கரி’ என்று யானையாய், அத்தால் நினைக்கிறது குவலயாபீடமாய், குவலயாபீடமானது,
அம்மேனி மிசை –
அழகிய திருமேனியிலே, வெளிய – சீற. ‘நீறு சிறிதே இடும் – பொடியாக்கும்’ என்றார் ஒரு தமிழ்ப்புலவர்.

விண்ணோர் பெருமான் –
‘இக் கண்ணழகை அனுபவிக்கின்றவர்கள் நித்தியசூரிகள்’ என்பார், அதனையடுத்து ‘விண்ணோர் பெருமான்’ என்கிறார்.
‘பரமபதத்திலுள்ளார் அடைய அனுபவியாநின்றாலும், அனுபவித்த பாகம் குறைந்து
அனுபவிக்கவேண்டிய பாகம் விஞ்சியிருக்கும்’ என்பார், ‘பெருமான்’ என்கிறார்.

உரிய சொல்லால் –
அவயவ சோபை அது; அனுபவிக்கின்றவர்கள் அவர்கள்; இப்படியிருந்தால், ‘நாம் பாடுகிற கவிக்கு இது விஷயம் அன்று’ என்று
மீளுதல் அன்றோ தக்கது?- இப்படி இருக்கச்செய்தேயும், இவ்விஷயத்திற்கு நேரே வாசகமான சொற்களாலே.
இசை மாலைகள் –
ஸம்ஸ்ராவே அமுதம் வாக்கியம்-‘கேட்பதற்கு இனியனவான வார்த்தைகள்’ என்கிறபடியே, திருச்செவி சார்த்தலாம்படி இருக்கை.

ஏத்தி உள்ளப்பெற்றேற்கு –
ஏத்தி அனுபவிக்கப்பெற்றஎனக்கு. அரியது உண்டோ – அடையாதது அடைய வேண்டியதாய் இருப்பது யாதொன்றுமில்லை,’ என்கிறபடியே,
‘இதற்கு முன்பு அடையாததாய் இனி எனக்கு அடையப்படுவது ஒன்று உண்டோ?
எனக்கு –
ஈஸ்வரோஹம்-‘ஈசுவரன் நான்’ என்று இருக்கிற இவ்வுலகத்திலே அடிமை இனிக்கப்பெற்று,
சொரூபத்திற்குத் தகுதியாக வாசிகமான அடிமை செய்யப்பெற்று,
‘வினை நோய்கள் கரிய’ என்கிறபடியே, விரோதிகள் கழியப்பெற்று இருக்கிற எனக்கு.

இன்று தொட்டும் இனி என்றுமே –
அடிமையில் இழிந்த இன்று தொடங்கி இனி மேல் உள்ள காலம் எல்லாம் அரியது இல்லை.
(திருமாலே நானும் உனக்கு பழ அடியேன் -அடிமைத்தனம் அநாதி –இசையாமல் இழக்கிறோம்
இசைவித்து தான் தாள் இணை அடிக்கீழ் இருத்தும் அம்மான் அன்றோ )
பின்னர் அவன் பயம் இல்லாதவன் ஆகிறான்,’ என்பது உபநிடதம்.
பின்பு ‘தீர்ப்பாரை யாம் இனி’ என்ற திருவாய்மொழியாவது அறியாமலே அன்றோ இவர் இவ்வார்த்தை சொல்லுகிறது?

——————————————————————–

என்றும் ஒன்று ஆகி ஒத்தாரும் மிக்கார்களும் தன் தனக்கு
இன்றி நின்றானை எல்லா உலகும் உடையான்றனைக்
குன்றம் ஒன்றால் மழைகாத்த பிரானைச் சொன் மாலைகள்
நன்று சூட்டும் விதி எய்தினம் என்னகுறை நமக்கே?–4-5-7-

சமாப்யாதி ரஹிதம் -போக்யதைக்கு -பரத்வம் -மற்ற அவச்தைகளிலும் -அவதாரம் -ஹாரத்த ரூபம் –
என்றும் ஒன்று ஆகி ஒத்தாரும் மிக்கார்களும் தன் தனக்கு இன்றி நின்றானை -தனக்கு அசாதாரண சௌலப்யாதிகள் –
இதுவே தானான தன்மை -நிரதிச போக்யமான இவை –
தனக்கு ஒத்தார் மிக்கார் இல்லை -வேறே இடம் சொல்வார் -இங்கு இந்த இனிமைக்கு
எல்லா உலகும் உடையான்றனைக்-கிருஷ்ணச்ய க்ருதே -அவரே அனைத்தும் -சேஷமாக உடையவன்
குன்றம் ஒன்றால் மழைகாத்த பிரானைச் -இந்த்ரனால் வந்த வர்ஷாபத்தை
கண்டதொரு மலையால் ரஷித்த உபகாரகன்
சொன் மாலைகள்-சப்த சந்தர்ப்ப பா மாலைகளை
நன்று சூட்டும் விதி எய்தினம் என்னகுறை நமக்கே?–அவன் உகந்து கொள்ளும் படி
பகவத் கிருபையே விதி நமக்கே ஆத்மனி பஹூ வசனம்

‘எக்காலத்திலும் தன்னுடைய எல்லாப் படிகளுக்கும் ஒத்தவர்கள் இல்லை என்கையேயன்றித் தன்னுடைய சௌலப்ய குணத்துக்கு
ஒத்தவர்களும் மிக்கவர்களும் இல்லாமலே நின்றவனும், எல்லாவுலகங்களையுமுடையவனும், மழையினால் துன்புறாதபடி
பசுக்களையும் ஆயர்களையும் கோவர்த்தனம் என்னும் ஒரு மலையினால் காத்த உபகாரகனுமான சர்வேசுவரனுக்குச் சொன்மாலைகளைப்
பெரிதாகச் சூட்டுவதற்குத் தக்கவாறு அவனுடைய கிருபையைப் பெற்றோம்; ஆதலால், நமக்கு இனி என்ன குறை? ஒரு குறையும் இல்லை,’ என்றபடி.
தன்தனக்கு – தன்னுடைய சௌலப்ய குணத்துக்கு. ‘நன்று பெரிதாகும்’ என்பது தொல்காப்பியம்.
விதி – பகவானுடைய திருவருள். ‘நமக்கு என்ன குறை?’ என மாறுக.

“அரியது உண்டோ எனக்கு?’ என்கிற இந்த நிறைவு உமக்கு எத்தாலே வந்தது?’ என்ன
‘பகவானுடைய கிருபையாலே வந்தது,’ என்கிறார்.

என்றும் –
எல்லாக்காலமும்.
ஒன்று ஆகி ஒத்தாரும் மிக்கார்களும் தன் தனக்கு இன்றி நின்றானை –
‘அந்தப் பரமாத்துமாவுக்குச் சமானமான பொருளும் மேலான பொருளும் காணப்படுகிறது இல்லை,’ என்கிறபடியே,
எல்லாம் கூடின கூட்டத்துக்கு ஒப்பு இல்லாமையே அன்றிக்கே, ஒரோ வகைக்கும் ஓர் ஒப்பு இன்றிக்கே இருப்பவனை.
‘அவனுக்குச் சரீரமாக இருப்பதனாலே, ஒத்தாராயும் மிக்காராயும் இருப்பாரை இன்றிக்கே இருப்பவனை’ என்றபடி.
ஆழ்வார் -ஐக்ய நிராகாரம் செய்து அருளுகிறார் –
என்றும் ஒன்றாகி –
ஒவ் ஒரு குணத்துக்கும் -அதனால் வரும் போக்யதைக்கும்
சமமோ அதிகமோ இல்லை -அவனும் உண்டு குணங்களும் உண்டு என்பதால்
‘தன் தனக்கு இன்றி நின்றானை’ என்பதற்கு,
எம்பெருமானார் தெற்கே எழுந்தருளின நாளிலே, ஆளவந்தார் மகனார்
சொட்டை நம்பி அருளிச்செய்த வார்த்தை: ‘தன் தனக்கு என்றது, தானான தனக்கு என்றபடி.
ஒரு படிக்கு ஒப்பு இன்றிக்கே இருக்கிறது பரத்துவத்தில் அன்று; ‘என்னை நான் மனிதனாகவே நினைக்கிறேன்,’ என்கிறபடியே,
அவதரித்து மனிச்சு ஏறிட்டுக்கொண்டு நிற்கிற நிலையிலே’ என்றாராம்.
எல்லா உலகும் உடையான் தன்னை –
‘உலகங்களினுடைய தோற்றமும் பிரளயமும் கிருஷ்ணனிடத்திலே; இது பிரசித்தம்;
சராசரங்களாகிற இந்தப் பிராணி வர்க்கம் எல்லாம் கிருஷ்ணன் நிமித்தமாகவே இருக்கின்றன. இது பிரசித்தம்,’ என்கிறபடியே,
எல்லா உலகங்கட்கும் ஈசுவரனான கிருஷ்ணனை. ‘இப்படி எல்லாவற்றையுமுடைய செருக்காலே உடைமை நோவுபடவிட்டுப்
பார்த்துக்கொண்டு இருப்பானோ?’ என்னில், ‘அங்ஙனம் இரான்,’ என்கிறார் மேல் :

குன்றம் ஒன்றால் மழை காத்த பிரானை –
இந்திரன் பசிக்கோவத்தாலே பசுக்களும் ஆயர்களும் தொலையும்படி மழை பெய்த போது, தோன்றியது ஒருமலையை எடுத்து,
அந்த ஆபத்தினின்றும் காத்த உபகாரகனை. ‘தீ மழை’ அன்றோ?

சொன்மாலைகள் நன்று சூட்டும் விதி எய்தினம் –
சொன்மாலைகள் நன்று சூட்டும்படியான பாக்கியத்தை அடையப்பெற்றோம். பரத்துவத்தில் குணங்கள் உளவாம் தன்மை மாத்திரமே உள்ளது,
அவதரித்த இடத்தே அன்றோ அவை பிரகாசிப்பன? ‘இப்படி விஷயம் நிறைவுற்றிருந்தால் ‘பேச ஒண்ணாது’ என்று மீளுகை அன்றிக்கே,
இந்நிலையிலே விளாக்குலை கொண்டு பேசும்படியானேன்,’ என்பார், ‘நன்று சூட்டும்’ என்கிறார்.
இவர் இப்போது ‘விதி’ என்கிறது,
பகவானுடைய கிருபையை. தமக்குப் பலிக்கையாலும், அவனுக்குத் தவிர ஒண்ணாதாகையாலும்,
‘விதி’ என்கிறார். ‘விதி சூழ்ந்ததால்’ -திருவாய்.2. 7 : 6.-என்றாரேயன்றோ முன்னரும்?
என்ன குறை நமக்கே –
ந ஷமாமி -‘சீற்றத்திற்கு’ இலக்கு ஆகாதே அவன் கிருபைக்கு விஷயமான நமக்கு ஒரு குறை உண்டோ?
நமக்கு ஒரு குறை உண்டாகையாவது, பகவானுடைய கிருபையை அளவிற்கு உட்படுத்துகையேயன்றோ?

காகாசுர விருத்தாந்தம்
‘ஸ :- பாதுகாவலே சொரூபமாக இருக்குமவர்,
தம் – தீய செயலிலே முதிர நின்ற அவனை,
நிபதிதம் பூமௌ – தெய்வத் தன்மையாலே பூமியிலே கால் வையாதவன் போக்கற்றுத் தரையிலே வந்து விழுந்தான்;
அன்றிக்கே, குழந்தை தீம்பு செய்தால் தந்தை தண்டிக்கத் தொடர்ந்தால், தாயின் காலிலே விழுமாறு போலே காணும்,
இவன் பூமியிலே விழுந்தது.
சரண்ய :-
ஏதேனும் தசையிலும் சரணமாகப் பற்றுதற்குத் தகுந்தவர்.
சரணாகதம் –
கண்வட்டத்தில் வேறு கதியில்லாமை தோன்ற விழுந்துள்ளவனை.
வதார்ஹமபி –
பெருமாள் சித்தாந்தத்தாலும் கொல்லுதற்கு உரியவனே; ஆனாலும்,
காகுத்ஸ்த : –
குடிப்பிறப்பால் வந்த நீர்மையாலே பாதுகாத்தார். ‘குடிப்பிறப்பு, தண்டிக்கத் தகுந்தவரைத் தண்டித்தற்குக் காரணமாய் இராதோ?’ என்னில்,
கிருபயா பரிபாலயது –
‘நாம் தொடங்கின கார்யம் பிரபலமான கர்மத்தாலே முடிக்க ஒண்ணாததைப் போன்று, அவரும் கிருபைக்குப் பரதந்திரப்பட்டவர்
ஆகையாலே நினைத்த காரியத்தை முடிக்கமாட்டார். அவன் கிருபை விளையும் பூமியைப் பற்றியவன் ஆனான்;
அதற்கு மேலே கிருபையும் விளைந்தது; இனி, அவர் எவ்வழியாலே தண்டிப்பார்?
ஆகையாலே, எனக்குக் குறை உண்டாகையாவது, பகவானுடைய கிருபை அளவிற்குட்பட்ட விஷயமாக அன்றோ?’ என்கிறார்.
(பெருமானுக்கு கிருபை விளையும் பூமி -பூமி பிராட்டி -சீதையால் – கிருபை விளைந்தது
எடுத்த கார்யம் செயல் முடிக்காமல் அன்றோ கிருபை தடுத்தது இங்கு )

————————————————————————–

நமக்கும் பூவின்மிசை நங்கைக்கும் இன்பனை ஞாலத்தார்
தமக்கும் வானத்தவர்க்கும் பெருமானைத் தண் தாமரை
சுமக்கும் பாதப் பெருமானைச் சொல்மாலைகள் சொல்லுமாறு
அமைக்க வல்லேற்கு இனியாவர் நிகர் அகல் வானத்தே?–4-5-8-

உபய விபூதி உக்தன் -ஸ்துதிக்கும் எனக்கு சத்ருசர் இல்லை -என்கிறார் –
நமக்கும் பூவின்மிசை நங்கைக்கும் இன்பனை –
அநாதி அஜ்ஞ்ஞானாதி சம்சார சம்சர்க்கத்தாலே -நீசனான எனக்கும் -நித்ய சூரிகள் நாயகி -பூவில் பிறப்பால் வந்த இனிமை
சௌகுமார்யம் சௌகந்த்யம் -பூவின் மிசை ஆத்ம குண பூர்த்தி -நங்கை
போக்யதா அதிசயத்தாலே -முதலிலே நமக்கும் -மீதி வழிந்த சொச்சம் அவளுக்கு
ஞாலத்தார்-தமக்கும் வானத்தவர்க்கும் பெருமானை லீலா விபூதியில் உள்ள –
இங்குள்ளார் முதலில் -படுகரணன் –விண்ணோர் தலைவன்
தண் தாமரை சுமக்கும் பாதப் பெருமானை -ஆசன பத்மம் தோற்று அதனால் சுமக்குமே -ஆசன பத்மத்திலே அழுந்தின திருவடிகள் –
சௌந்த்ர்ய சௌகந்த்ய லாவண்யா -இவ்வாகார அனுசந்தானத்தாலே
சொல்மாலைகள் சொல்லுமாறு அமைக்க வல்லேற்கு -உடை குலைப் படாமல் -மனஸ் சிதிலமாகா –
மற்றவர் பேச முடியாது -நான் பேசினேன் -நானும் சிதிலமாகாமல்
அமைத்து தரிக்க வல்லேன் -தேற்றி சொல்ல வந்தேனே
இனியாவர் நிகர் அகல் வானத்தே?–உபய விபூதியிலும் -த்ரிபாத் விபூதியிலும் அவிகார ஆகாரமாக –
அங்கு உள்ளாரும் அனுபவித்து அழுது கொண்டு இருக்க –
நானும் அழுதேன் -பாடும்படி கிருபையும் செய்தானே
இந்தலத்திலே தாமரை போலே இங்கேயே அனுபவிப்பிக்கப் பண்ணினான்
இருள் தரும் மா ஞாலத்திலே -தெளி விசும்பில் அனுபவிப்பார் சத்ருசம் அல்லர்
கலங்கா பெருநகர் -கலங்குவாரும் கலங்கப் பண்ணுவாறும் இல்லையே -விண்ணுளாரிலும் சீரியர்

‘தன் திருவடிகளை இன்று வந்து பற்றிய நமக்கும் தாமரை மலரில் வீற்றிருக்கும் பெரிய பிராட்டியார்க்கும் இனியனானவனும்,
பூலோகத்திலுள்ளவர்கட்கும் நித்தியசூரிகட்கும் தலைவனும், குளிர்ந்த தாமரை மலராலே சுமக்கப்படுகின்ற திருவடிகளையுடைய
பெருமானுமான சர்வேசுவரனைச் சொல் மாலைகள் சொல்லும்படியாகத் தரிக்க வல்ல எனக்குப்
பரமபதத்திலேயுள்ள நித்தியசூரிகளுக்குள் இனி ஒப்பாவார் யாவர்?’ என்கிறார்.
‘நமக்கும்’ என்ற உம்மை, இழிவு சிறப்பு. ‘தண் தாமரை சுமக்கும் பாதப் பெருமான்’ என்ற இவ்விடத்து,
‘மலர்மிசை ஏகினான்’ என்ற திருக்குறளை நினைவுகூர்க. ‘அமைக்க வல்லேன்’ என்றது, தரித்திருந்து பாடும்படியைத் தெரிவித்தபடி.
‘யாவர்’ என்ற வினா, இன்மைப்பொருளைக் குறித்து நின்றது. வானம் – இடவாகு பெயர்.

எம்பெருமானுக்குத் தம் பக்கல் உண்டான அன்பின் மிகுதியை நினைத்து, ‘அவனுடைய உபய விபூதிகளை உடையனாம் தன்மைக்கும்
மிருதுத் தன்மைக்கும் தகுதியாகக் கவி சொல்ல வல்ல எனக்குப் பரமபதத்திலும் ஒப்பு இல்லை,’ என்கிறார்.

நமக்கும் –
இன்று தன் திருவடிகளைப் பற்றிய நமக்கும்.
அன்றிக்கே, பிறந்து இறந்து பிறிவிகளிலே உழன்று திரிகின்றவர்கட்கும் இவ்வருகாயிருக்கிற நமக்கும்;
‘நீசனேன் நிறைவு ஒன்றும் இலேன்’ என்றாரே அன்றோ தம்மை?
பூவின்மிசை நங்கைக்கும் –
நித்திய சூரிகளுக்கும் அவ்வருகாய், ரூப குணத்தாலும் ஆத்தும குணத்தாலும் நிறைந்திருக்கிற பெரிய பிராட்டியார்க்கும்.
மலரில் மணத்தை வகுத்தாற் போலே இருந்துள்ள மிருதுத் தன்மையையும் இனிமையையும் உடையவளாதலின்,
‘பூவின் மிசை நங்கை’ என்கிறது.
‘இத்தலை நிறைவு இன்றியே இருக்கிறாப் போலே யாயிற்று அத்தலை குறைவு அற்றிருக்கிறபடி’ என்பார், ‘நங்கை’ என்கிறார்.

இன்பனை –
இன்பனாமிடத்தில், முற்பாடு இங்கேயாய்ப் பின்பு ஆயிற்று அவளிடத்தில் அன்பு செலுத்தியிருப்பது.
இலங்கையிலேயுள்ள சுவேல மலையிலே பெருமாள் எழுந்தருளி நிற்கச் செய்தே இராவணன் கோபுர சிகரத்தே வந்து தோன்றினவாறே,
‘இராஜத் துரோகியான பையல் திரு முன்பே நிற்கையாவது என்?’ என்று மஹாராஜர் அவன்மேலே எழப் பாய்ந்து வென்று வந்த போது
பெருமாள் அவரைப் பார்த்து, ‘இராஜாக்கள் இப்படிப்பட்ட சாகஸ காரியங்களைத் தாங்களே செய்யமாட்டார்கள்,’ என்றார்; என்றது,
‘சிலர்மேல் விழ வேண்டினால், சேனைத் தலைவர்கள் நிற்க அரசரோ மேல் விழுவார்?’ என்கிறார் என்றபடி.
‘ஸ்ரீராமபிரான் உலகங்கட்கெல்லாம் நாதனாய் இருந்தும் சுக்கிரீவனை நாதனாக இச்சிக்கிறார்,’ என்னா நின்றதே அன்றோ?
கிடைப்பது கிடையாதொழிவது இச்சியா நின்றார்.
‘அத்தகைய இந்த ஸ்ரீராமபிரான் சுக்கிரீவனைச் சரணமாக அடைந்தார்,’ என்னா நின்றதே அன்றோ?
நீர் மஹாராஜரான தரம் குலைய அவன் ஒரு வார்த்தை சொல்லுமாகில்,
நீர் தேடிப் போகிற சரக்குதான் நமக்கு என்ன செய்ய?’ என்றாரே அன்றோ?
இன்பனாமிடத்தில், முற்பாடு இங்கேயாய்ப் பின்பாயிற்று அவளிடத்தில் அன்பு செலுத்தியிருப்பது,’ என்பதற்குப் பிரமாணங் காட்டுகிறார்,
‘நீர்மஹாராஜரான தரம் குலைய’ என்று தொடங்கி. இது, ஸ்ரீராமா. யுத். 41 :4.
‘நீர் தேடிப்போகிற சரக்கு’ என்றது, சீதாபிராட்டியை.
பரிகரம் இருக்க அரசனா முன்னால் போவது என்றாரே பெருமாள் –
தாமே இவனுக்கு பரிகரம் என்ற நினைவால் அர்ஜுனனுக்கு இவன் தான் முன்னே இன்று பார்த்த சாரதி பெயர் வாங்கிக் கொண்டார் –
அன்று ஈன்ற கன்றின் மேல் உள்ள வாத்சல்ய அதிசயம் –
இச் சுலோகப்பொருளோடு,
‘இந்நிலை விரைவின் எய்தா தித்துணை தாழ்த்தி யாயின் நன்னுதற் சீதை யாலென்? ஞாலத்தாற் பயனென்? நம்பி!
உன்னையான் தொடர்வன்; என்னைத் தொடருமிவ் வுலக மெல்லாம்; பின்னை என்?
இதனை நோக்கி விளையாடிப் பிழைப்ப செய்தாய்.’என்ற கம்பராமாயணச் செய்யுளை ஒப்பு நோக்குக.

‘ஸ்ரீ விபீஷணாழ்வானைப் புகுரவொட்டேன்!’ என்றார் மஹாராஜர்;
‘இவன் புகுராவிடில் நாம் உளோம் ஆகோம்,’ என்கிறார் பெருமாள்;
‘இப்படி இருவரும் மாறுபடுதற்குக் கருத்து என்?’ என்று நஞ்சீயர் கேட்க,
‘இருவரும் ‘சரணமாகப் பற்றினவர்களை விடோம்!’ என்று மாறுபடுகிறார்கள் காணும்,’ என்பது பட்டர் அருளிச்செய்த வார்த்தை. என்றது,
‘சுக்கிரீவம் சரணம் கத:’ என்றதனை நடத்தப் பார்த்தார் மஹாராஜர்;
‘ராகவம் சரணம் கத:’-(சுக்ரீவம் நாதம் இச்சதி -வார்த்தைக்கு இந்த அர்த்தம் என்றபடி ) என்றதை நடத்தப் பார்த்தார் பெருமாள்,’ என்றபடி
‘அங்ஙனமாயின், மஹாராஜர்க்குத் தம்மை அடிமையாக நினைத்திருக்கும் நிலை குலையாதோ?’ எனின், ஆகையாலே அன்றோ
‘ஆநயைநம் ஹரி சிரேஷ்ட – வானரங்களுக்குத் தலைவனே!
இவனை அழைத்துக் கொண்டு வா’ என்று அவரை இடுவித்து அழைத்துக்கொள்ள வேண்டிற்று?

‘ஆதலால் அபய மென்ற பொழுதத்தே யபய தானம் ஈதலே கடப்பாடு என்பது இயம்பினீர் என்பால் வைத்த
காதலால்; இனி வேறு எண்ணக் கடவதென்? கதிரோன் மைந்த!
கோதிலாதவனை நீயே என்வயிற் கொணர்தி என்றான்.’- என்றார் கம்பநாடரும்.

‘இப்படி அவன் இருக்கைக்கு அடி என்?’ என்னில், அதனை அருளிச்செய்கிறார் மேல் :
ஞாலத்தார் தமக்கும் வானத்தவர்க்கும் பெருமானை –
இப்படி நெடுவாசிபட்ட விஷயங்களிலே சினேகம் ஒத்திருக்கைக்கு அடி, சம்பந்தம் இரண்டு இடத்தில் உள்ளாரோடும் ஒத்திருப்பினும்,
இவர் படுக்கைப் பற்றில் உள்ளவராகையாலே.
அன்றிக்கே, ‘அவன் இறைவனான நிலையும் இத்தலை பரதந்திரமான நிலையும் ஒத்திருக்கையாலே’ என்னுதல்.
அன்றிக்கே, ‘தாய் தந்தையர்கள் குழந்தைகளில் குறைவாளர் பக்கலிலே யன்றோ இரங்குவது?
அதனாலே, சமுசாரிகள் முற்பட வேண்டுகிறது,’ என்னுதல். அந்தப் பரம பதமும் உண்டாயிருக்கவே அன்றோ,
‘அந்தப் பரமாத்துமா உயிர்க்கூட்டம் எல்லாம் பிரிகிருதியில் லயப்பட்டுக் கிடந்த அக்காலத்தில் தான்
தனியாய் இருந்து சந்தோஷத்தை அடையவில்லை,’ என்கிறது?

தண் தாமரை சுமக்கும் பாதப்பெருமானை –
குளிர்ந்த தாமரைத் தவிசினாலே தரிக்கப்பட்ட திருவடிகளையுடைய பெருமானை.
குளிர்த்தியாலும் பரிமளத்தாலும் செவ்வியாலும் தாமரை திருவடிகளுக்குத் தோற்றுச் சுமக்கிறாப் போலே ஆயிற்று இருக்கிறது;
ஆதலின், ‘தாமரை சுமக்கும் பாதம்’ என்கிறது. ‘தாமரை நின் கண் பாதம் கை ஒவ்வா’ என்றது அன்றோ முன்பும்?
ஸ்ரீ ஸூ ந்தர பாஹு ஸ்தவ ஸ்லோகம் –
சௌகந்த்யம் சௌகுமார்யம் மார்த்வம் போட்டி -டம்பம் அடிக்கும் –ஆசன தாமரை -பராஜிதம் -திருவடித் தாமரை வென்றதே –
பெருமான் –
எல்லார்க்கும் தலைவன்
சொல் மாலைகள் சொல்லுமாறு அமைக்க வல்லேற்கு –
அவனுடைய உபய விபூதிகளை உடைமையால் வந்த ஐசுவரியத்துக்கும் மிருதுத்தன்மைக்கும் தகுதியாம்படியான கவி பாட வல்ல எனக்கு.
இதற்கு, ‘சர்வேசுவரன்,ஆழ்வீர்! நம்மை ஒரு கவி சொல்லும்,’ என்றால்,
அப்போதே கவி சொல்லிச் சமையும்படியாக வல்ல எனக்கு,’-ஆசு கவித்துவம்- என்கிறார் என்று முன்புள்ள முதலிகள் நிர்வஹிக்கும்படி.
அங்ஙனன்றிக்கே, பட்டர், ‘என்னாகியே, தப்புதல் இன்றித் தனைக் கவி தான் சொல்லி’ என்கிறபடியே,
சர்வேசுவரன் கவி பாடினான். ஆகையாலே, கவி பாடத் தட்டு இல்லை;
அவன் அங்கீகரித்துத் திருக்கண்களாலே குளிர நோக்கி,
‘நீர் ஒரு கவி சொல்லும்,’ என்றால் ‘பிரீதியாலே உடை குலைப்படாமல்
தரித்து நின்று சொல்ல வல்லேனான எனக்கு’ என்று அருளிச்செய்வர்.

முன்புள்ள முதலிகள் நிர்வாஹத்துக்குக் கருத்து, ‘ஆசு கவியாகக் கவி சொல்லிச் சமைக்க வல்லேனான எனக்கு’ என்பது.
பட்டர் நிர்வாஹத்திற்குக் கருத்து, ‘தரித்து நின்று சொல்ல வல்லேனான எனக்கு’ என்பது.
‘என்னாகியே’ என்ற பாசுரம், திருவாய். 7. 9 : 4.‘உடைகுலைப்படாதே’என்றது ‘பரவசப்படாமல்’ என்றபடி.

இனி யாவர் நிகர் அகல் வானத்தே –
பரமபதத்திலே தரித்து நின்று, ‘அஹமந்நம் அஹமந்நம் – நான் பரமாத்துமாவுக்கு இனியன், நான் பரமாத்துமாவுக்கு இனியன்’
என்னுமவர்கள் எனக்கு என் கொண்டார்? திரிபாத் விபூதியாய்ப் பரப்பை யுடைத்தாமத்தனையோ வேண்டுவது? –
அகல் வானம் அது -நிகர் அற்றவன் அடியேனே
தெளிவிசும்பு ஆகையாலே அந்நிலந்தானே சொல்லுவிக்கும்;
இருள் தருமாஞாலமாகையாலே இந்நிலம் அதனைத் தவிர்ப்பிக்கும்;
‘சீதனையே தொழுவார் விண்ணுளாரிலும் சீரியர்’-திருவிருத்தம், 79.– என்னக் கடவதன்றோ?

———————————————————————————-

வானத்தும் வானத்துள் உம்பரும் மண்ணுள்ளும் மண்ணின் கீழ்த்
தானத்தும் எண் திசையும் தவிராது நின்றான் தன்னை,
கூனற் சங்கத் தடக்கை யவனை, குடமாடியை,
வானக் கோனைக் கவிசொல்ல வல்லேற்கு இனி மாறுஉண்டோ?–4-5-9-

எண் திசையும் தவிராது நின்றான்-வியாப்தி தசை — குடமாடியை,-அவதார தசை -உள்ளடக்கி ஸ்துதிக்க வல்லன்
வானத்தும் வானத்துள் உம்பரும் மண்ணுள்ளும்-ஸ்வர்க்கம் -உபரிதன லோகம் உள் வானம் -மகாதாதி சித்தர்
மண்ணின் கீழ்த் தானத்தும் எண் திசையும் தவிராது நின்றான் தனை,-வியாப்தி தசை
தேவாதி ப்ராஹ்மனாதி-ஆக எட்டு வகை -தேவர்களில் நான்கு வகை
ப்ராஹமணர் ராஷசர் -ராவணன் -அஷ்ட விதங்களில் சர்வ வியாபகன்
கூனற் சங்கத் தடக்கை யவனை, குடமாடியை,-பரம சுலபன் -அவதார தசை -முகம் தொடராமல் ரஷிக்கை அன்றிக்கே
பவ்யமான சங்கத் தாழ்வான்-தர்ச நீயமான –
குடமாடியை-சர்வ ஜன மநோ ஹாரி சேஷ்டிதங்கள்
இந்நிலையில் வானவர் கோன்-என்றபடி –
மனுஷ்யத்வே பரத்வம் -கீதாச்சார்யன் நிலையில் இல்லை குடமாடும் பொழுதே
இத்தை தான் அவர்களுக்கு அபூர்வம் –
வியாப்தி -அவதாரம் சேஷ்டிதம் பரத்வம் -கபளீகரித்து பாட வல்ல எனக்கு யார் நிகர்
இனி மாறுஉண்டோ?–ஒவ் ஒரு ஆகாரம் பாடவும் அதிகாரிகள் இல்லை

‘சுவர்க்க லோகத்திலும் அதற்குள்ளே மேலேயிருக்கின்ற பிரமலோகம் முதலான உலகங்களிலும் பூலோகத்திலும் பூமியின் கீழேயிருக்கின்ற
பாதாளலோகத்திலும் எட்டுத் திக்குகளிலும் நீங்காது பரந்து நிற்கின்றவனும், வளைந்த சிறந்த பாஞ்சஜன்யம் என்னும்
சங்கைப் பெரிய கையிலே உடையவனும், குடக்கூத்தாடியவனும், நித்தியசூரிகளுக்குத் தலைவனுமான சர்வேசுவரனைக் கவி சொல்ல
வல்ல எனக்கு இனி ஒப்பாவார் உளரோ?’ என்கிறார்.
கூன் நல் – கூனல். வான் அம் கோன் – வானக்கோன்; அம் – சாரியை.

‘அவனுடைய எங்கும் பரந்திருத்தல் அவதாரங்கள் முதலான எல்லா நிலைகளிலும் புக்குக்
கவி சொல்ல வல்ல எனக்கு எதிர் உண்டோ?’ என்கிறார்.
நித்தியசூரிகள் தாங்கள் அனுபவிக்கின்ற விஷயத்தில் இனிமையின் மிகுதியாலே வேறு ஒன்று அறியார்கள்;
யாரைக் கண்டால் கண் பார்க்காதோ புத்தி வேறு ஒன்றில் போகாதோ -சுருதி வாக்கியம் –
வேறு ஒரு பிரகாரம் போகாது என்று கொண்டு -ஆழ்வார் –
முத்தர்கள் ‘இந்தச் சரீரத்தை நினையாமலே எங்கும் சஞ்சரிக்கிறார்கள்’ என்கிறபடியே, இவ்வுலக வாழ்க்கையை நினையாமல்
நிற்பர்களாகையாலே, அவர்களும் நித்தியசூரிகளோடு ஒப்பர்கள்;
இங்குள்ள பராசரர் வியாசர் முதலிய முனி புங்கவர்கள் ஒரோ துறையிலே மண்டியிருப்பர்கள்; ‘எங்ஙனே?’ என்னில்,
‘ஸ்ரீ வால்மீகி பகவான் ஸ்ரீ ராமாவதாரமல்லது அறியாதே இருக்கும்.
ஸ்ரீ பராசர பகவானும் ஸ்ரீ வேதவியாச பகவானும் கிருஷ்ணாவதாரமல்லது அறியார்கள்;-கிருஷ்ண த்வைபாயனர் —
ஸ்ரீ சௌனக பகவான் அர்ச்சாவதாரத்திலே ஈடுபட்டவனாய் இருக்கும்;
அங்ஙனன்றிக்கே, சர்வேசுவரனை எல்லா நிலைகளிலும் புக்குக் கவி பாடப்பெற்ற என்னோடு ஒப்பார் உளரோ?’ என்கிறார்.

வானத்தும் –
சுவர்க்கத்திலும்,
வானத்து உள் உம்பரும் –
அதற்குள்ளாய்ப் பெரியதாயிருக்கிற மஹர் லோகம் முதலியவைகளிலும்.
அன்றிக்கே,
‘வானத்தும் வானத்துள் உம்பரும் என்பதற்குச் சுவர்க்கம் முதலான உபரிதனலோகங்களிலும்
அவற்றுக்குள்ளே மேலே இருக்கிற பிரம லோகம் முதலானவைகளிலும் இருக்கிற
பிரமன் முதலான தேவர்கள்’ என்று பொருள் கூறலுமாம்.
மண்ணுள்ளும் – பூமியிலும்,
மண்ணின் கீழ்த்தானத்தும் –
கீழே உண்டான பாதாளம் முதலியவைகளிலும்,
எண்திசையும் –
எட்டுத்திக்குகளிலும்,
தவிராது நின்றான்தன்னை –
அவ்வத்தேசங்களிலும் அவ்வத்தேசங்களிலே இருக்கிற தேவர்கள் முதலான எல்லாப் பொருள்களிலும்,
கடல் கோத்தாற் போலே எங்கும் ஒக்கப் பரந்து நிறைந்து இருக்கிறவனை. இதனால், அணு அளவான பொருள்களிலும்
விபுவாய் இருக்கிற பொருளிலும் வாசி சொல்லுகிறது;
‘எங்ஙனே’ என்னில், அணுவான ஆத்துமா, சரீரம் எங்கும் பரந்திருக்க மாட்டாது;
விபுவான ஆகாயத்திற்கு ஏவுகின்ற தன்மையோடு கூடிப் பரந்திருக்கும் தன்மை இல்லை.

இப்படி எங்கும் பரந்து நிற்கிறவன், பரந்திருக்கப்படுகின்ற பொருள்களோடு ஒக்க வந்து அவதரிக்கும்படி சொல்லுகிறது மேல் :
கூன் நல் சங்கம் தடக்கையவனை –
‘இப்படி அவதரிப்பதுதான் இதரசஜாதீயனாயோ? என்னில், ‘ஆதியஞ்சோதி உருவை அங்கு வைத்து இங்குப் பிறந்த’ என்கிறபடியே,
தன்னுடைய பிரகிருதி சம்பந்தமில்லாத திருமேனியை இதர சஜாதீயமாக்கிக்கொண்டாயிற்று வந்து அவதரிப்பது,’ என்கிறது. என்றது,
‘தேவர்களுக்கும் தேவர்களான நித்திய சூரிகளுக்குத் தலைவனே! சங்கு சக்கரம் கதை இவற்றைத் தரித்தவனாய் வந்து அவதரித்தாய்,’
என்று சொல்லும்படியாயிற்று இருந்தது என்றபடி.

‘அஞ்சலி செய்தவராய் வணக்கத்துடன் இருக்கின்ற’ என்கிற இளைய பெருமாளைப் போலே, பகவானுடைய அனுபவத்தால்
வந்த மகிழ்ச்சியாலே சரீரத்தை வளைத்துக் கொண்டிருப்பவன் ஆதலின், ‘கூனல் சங்கம்’ என்கிறது. என்றது,
‘வாயது கையதுவாக அனுபவிக்கின்றவன் அன்றோ?’ என்றபடி.
‘உண்பது சொல்லில் உலகளந்தான் வாயமுதம்; கண்படை கொள்ளல் கடல்வண்ணன் கைத்தலத்தே;
பெண்படையார் உன்மேல் பெரும்பூசல் சாற்றுகின்றார்; பண்பல செய்கின்றாய் பாஞ்ச சன்னியமே!’-என்ற நாய்ச்சியார் திருமொழிப்
பாசுரத்தை அடியாகக்கொண்டு எழுந்தது.–‘வாயது கையது’ என்பது, சிலேடை.
உரிமை நிலை நாட்டி -வாரணமாயிரம் -இப்பொழுது அத்தை கேட்கிறாள் -கற்பூரம் நாறுமோ –
சங்கரய்யா உன் செல்வம் சால பெரியதே -நிகர் உனக்கு யார் -என்கிறாள்
லீலா விபூதியும் நித்திய விபூதியுமாகிய இரு வகைப்பட்ட உலகங்களும்
வந்து ஒதுங்கினாலும், பின்னையும் கையே விஞ்சி இருக்குமாதலின் ‘தடக்கை’ என்கிறது.
குடமாடியை –
எங்கும் ஒரே தன்மையாய்ப் பரந்து நின்றாற்போலே, ஓர் ஊராகக் காணும்படி குடக்கூத்து ஆடினபடி.
குடக்கூத்தினைக் கூறியது, எல்லாச் செயல்களுக்கும் உபலக்ஷணம்
வானம் கோனை –
ஓர் ஊர் அளவன்றிக்கே ஒரு நாட்டுக்காகக் காட்சி கொடுத்துக்கொண்டிருக்கிறபடி
கவி சொல்ல வல்லேற்கு –
இப்படி இருக்கிறவனை எங்கும் புக்குக் கவி சொல்ல வல்ல எனக்கு.
இனி மாறு உண்டே –
அகல்வானம்’ என்று விசேடித்துச் சொல்ல வேண்டுமோ?
‘நித்திய விபூதி லீலா விபூதிகளாகிற இரு வகைப்பட்ட உலகங்களிலும் எதிர் இல்லை’ என்கிறார்.

———————————————————

உண்டும் உமிழ்ந்தும் கடந்தும் இடந்தும் கிடந்தும் நின்றும்
கொண்ட கோலத்தொடு வீற்றிருந்தும் மணம் கூடியும்
கண்ட ஆற்றால் தனதே உலகு என நின்றான் றன்னை
வண்தமிழ் நூற்க நோற்றேன் அடியார்க்கு இன்ப மாரியே.–4-5-10-

வியாப்ய விஷய ரஷண அர்த்தமான மநோ ஹார சேஷ்டிதங்கள்
உண்டும் உமிழ்ந்தும் கடந்தும் இடந்தும் கிடந்தும் நின்றும்-கிரியா பதங்கள் எல்லாம் -வைத்து -கடந்தது அளந்தது –
கொண்ட கோலத்தொடு வீற்றிருந்தும் -மீண்டு வந்து திருப் பட்டாபிஷேகம் செய்து அருளி
மணம் கூடியும்-நித்ய உத்சவமாய் -திருக்கல்யாணம்
கண்ட ஆற்றால் தனதே உலகு என நின்றான் றன்னை-சேஷ்டித பிரகாரங்கள் மூலம் –பதிம் விச்வச்ய -பிரமாணம் –
சேஷம் -காட்ட -பிரமாணம் வேண்டாமே –
தனக்கே சேஷம் நாடாகச் சொல்லுமே
வண்தமிழ் நூற்க நோற்றேன் அடியார்க்கு இன்ப மாரியே.-
அருள் மாரி-கலியன் -திராவிட பிரபந்தம் -விலஷணம்-சர்வாதிகாரம் –
பாட அவன் அங்கீ காரம் ஆகிய புண்ணியம் பெற்றேனே –
பாகவதர்களுக்கு ஆனந்த வர்ஷி –
எண்ணில் அடங்காத சேஷ்டிதங்களை எண்ணிப்பாடின இவற்றுக்குள் அடங்கும் -அகடிகடநா சாமர்த்தியம்

பிரளய காலத்தில் உலகத்தையெல்லாம் புசித்தும், பிரளயம் நீங்கியவுடனே வெளி நாடு காண உமிழ்ந்தும், திரிவிக்கிரமனாய் அளந்தும்,
வராக அவதாரமாய் இடந்து எடுத்தும், கடற்கரையிலே கிடந்தும், இலங்கையில் போர் முடிந்த பின்பு தேவர்களுக்குக் காட்சியளித்து நின்றும்,
மீண்டு வந்து மகுடாபிஷேகம் செய்த திருக்கோலத்தோடு வீற்றிருந்தும், இராச்சிய பரிபாலனம் செய்தும் போந்த காரியங்களைக்
கண்கூடாகப் பார்த்த தன்மையால் இந்த உலகமெல்லாம் தனக்கே உரிமைப்பட்டவை என்று சொல்லும்படி நின்ற சர்வேசுவரனைப் பற்றி
வளப்பமான தமிழ்ப்பிரபந்தத்தைச் செய்வதற்குப் புண்ணியத்தைச் செய்தேன்;
இப்பிரபந்தமானது அடியார்க்கு இன்பத்தையுண்டாக்கும் மேகமாகும்,’ என்கிறார்.

‘மணங்கூடியும் செய்து போந்த காரியங்களைக் கண்ட ஆற்றால்’ என விரித்துக்கொள்க.

அவன் செயல்கள் அடங்க என் சொல்லுக்குள்ளேயாம்படி கவி பாட வல்லேனாய், வகுத்த சர்வேசுவரனிடத்திலே வாசிகமான அடிமை
செய்யப்பெற்ற அளவன்றிக்கே, ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு ஆனந்தத்தையுண்டாக்கக் கூடியவனாகவும் பெற்றேன்,’ என்கிறார்.

உண்டும் –
பிரளய ஆபத்திலே திருவயிற்றிலே வைத்து நோக்கியும்.
உமிழ்ந்தும் – திருவயிற்றிலேயிருந்து நெருக்குப்படாதபடி வெளி நாடு காணப் புறப்பட விட்டும்.
கடந்தும் – மஹாபலி போல்வார் பருந்து இறாஞ்சினாற் போலே பறித்துக்கொண்டால் எல்லை நடந்து மீட்டும்.
இடந்தும் – பிரளயம் கொண்ட பூமியை மஹாவராஹமாய் அண்டப் பித்தியிலே செல்ல முழுகி எடுத்துக்கொண்டு ஏறியும்,
கிடந்தும் – என்றது,
‘பகைவர்களை அழிக்கின்ற ஸ்ரீராமபிரான் பாம்பின் உடல் போலே இருக்கிற திருக்கையைத் தலையணையாகக் கொண்டு, கிழக்கு
முகமாகக் கையைக் கூப்பிக்கொண்டு கடலை நோக்கிச் சயனித்தார்,’ என்கிறபடியே, கிடந்த கிடையிலே இலங்கை குடி வாங்கும்படியாக,
ஒரு கடல் ஒரு கடலோடே சீறிக் கிடந்தாற்போலே கடற்கரையிலே கிடந்தபடியைத் தெரிவித்தவாறு.
நின்றும் –
‘கம்பீரமான வில்லைப் பிடித்துக் கொண்டு நிற்கின்ற ஸ்ரீ ராமபிரானைத் தாரையானவள் கண்டாள்,’ என்கிறபடியே, நின்ற நிலை
கொண்ட கோலத்தொடு வீற்றிருந்தும் –
‘பர்ணசாலையில் எழுந்தருளியிருப்பவரும் சடை மரவுரி இவற்றைத் தரித்தவருமான ஸ்ரீ ராமபிரானை ஸ்ரீ பரதாழ்வான் பார்த்தார்,’ என்கிறபடியே,
இருந்த இருப்பாதல்; க்ஷத்திரியர்களுக்குரிய ஒப்பனையோடே பதினோராயிரம் ஆண்டு இருந்த இருப்பாதல்.
மணம் கூடியும் –
பதினோராயிரம் ஆண்டு தன் படுக்கைப் பற்றான பூமியைக் காப்பாற்றுகையாலே ஸ்ரீ பூமிப்பிராட்டி அணைக்க, அவளோடே கலந்தும்.

கண்ட ஆற்றால் உலகு தனதே என நின்றான் தன்னை –
பிரமாணங்கொண்டு அறிய வேண்டாமல், தொன்று தொட்டு வருகின்ற அனுபவம் கொண்டு,
‘இவனுக்கே உரிமை’ என்று அறியலாய் இருக்கை; என்றது, ஒருவன் ஒரு நிலத்தைத் திருத்துவது கமுகு வைப்பது
எரு இடுவதாய்க் கிருஷி பண்ணாநின்றால், ‘இது இவனது’ என்று அறியலாமே அன்றோ?’
ஒத்தி நிலத்தில் கமுகு வைக்க மாட்டார்கள் —
‘பெய்த காவு கண்டீர் பெருந்தேவுடை மூவுலகே,’ –திருவாய். 6. 3 : 5.-என்னக் கடவதன்றோ?

வண் தமிழ் நூற்க நோற்றேன் –
திருவாய்மொழி பாடுகைக்குப் பாக்கியம் செய்தேன். தன்னைச் சொன்ன மாத்திரத்தில் எல்லாப் பலன்களையும்
கொடுக்கக் கூடியதான உதார குணத்ததாய் இருத்தலின், ‘வண்தமிழ்’ என்கிறது.
அன்றிக்கே.
இது முன்னே நடந்ததாயிருந்தாலும் இப்பொழுது நேரிற்கண்டது போல இருக்கின்றது,’ என்பது போன்று,
லவ குசர்கள் பாட பாட நடந்த ராம சரித்ரம் மக்களுக்கு விளங்கினது போலே –
பழையதாகச் செய்தவை இவர் பேச்சாலே இன்று செய்த செயல் போலே விளக்கமாய் இருத்தலின், ‘வண்தமிழ்’ என்கிறது என்னுதல்.
‘கண்டவாற்றால்’ என்று நேரில் பார்ப்பதாய் இருக்கிறதே அன்றோ?

அடியார்க்கு இன்பமாரியே –
சர்வேசுவரனைக் கவி பாடப் பெற்ற இதுவேயோ? இது, வைஷ்ணவர்களுக்கு ஆனந்தத்தை உண்டாக்கக் கூடியதாகவும் ஆயிற்று.
இன்பத்தையுண்டாக்கும் மேகம் ஆதலின், ‘இன்பமாரி’ என்கிறது.
‘இது எனக்கு இருக்கிறபடி கண்டால், இது உகக்குமவர்களுக்கு எங்ஙனே இருக்கிறதோ!’ என்கை.
‘தொண்டர்க்கு அமுது உண்ணச் சொன்மாலைகள் சொன்னேன்,’ என்றாரே அன்றோ?

———————————————————–

மாரி மாறாத தண் அம் மலை வேங்கடத்து அண்ணலை
வாரி மாறாத பைம்பூம் பொழில் சூழ் குருகூர் நகர்க்
காரி மாறன் சடகோபன் சொல் ஆயிரத்து இப்பத்தால்
வேரி மாறாத பூமேல் இருப்பாள் வினை தீர்க்குமே.–4-5-11-

திருவாய் மொழிப் பிள்ளை -இவரும் வைகாசி விசாகம் திருவவதாரம் –
திருவேங்கடத்தான் ஆழ்வாரை சூழ்ந்தே இருப்பார்கள் -ஆழ்வார் திருநகரி –
அன்வய மாத்ரத்தாலே பகவத் அனுபவ விரோதியான சகல பாபங்களையும் தன கடாஷ மாத்ரத்தாலே போக்கி அருளுவாள்
மாரி மாறாத தண் அம் மலை வேங்கடத்து அண்ணலை-அனுக்ரஹம் -ஆழ்வார் வாக் நதி ஓட –அழகிய குளிர்ந்த திருமலை
சீலம் உடைய -தாழ்ந்தாருக்கு முகம் கொடுத்து நிற்கும் -சௌசீல்ய சீமா பூமி -நிருபாதிக சுவாமி
வாரி மாறாத பைம்பூம் பொழில் சூழ் குருகூர் நகர்க்-ஜல சம்ருத்தி மாறாமல் –
பாத பாதிகளுக்கு சிசிரோபசாரம் -மரங்களுக்கு -குளிர்ந்த உபசாரம்
காரி மாறன் சடகோபன் சொல் ஆயிரத்து இப்பத்தால்
பித்ரு சம்பந்தம் உடையவராய் -மாறன் குடிப்பெயர் -உலக இயல்பில் இருந்து மாறி
வேரி மாறாத பூமேல் இருப்பாள் வினை தீர்க்குமே.–வேரி பரிமளம் -மது பிரவாகம் மாறாமல் தாமரையில் நித்யவாசம்
அனுபவ விரோதிகள் -ரதி மதி -இத்யாதி -கடாஷம் ஒன்றாலே –
ஈஸ்வரத்வ அபராத சஹாத்வம் அவர்ஜ நீயம் என்று கருத்து –

‘மழை மாறாமல் இருந்துகொண்டிருக்கின்ற குளிர்ந்த அழகிய திருமலையில் எழுந்தருளியிருக்கின்ற திருவேங்கடமுடையானை,
வருவாய் மாறாமல் இருக்கின்ற பசுமையான பூக்கள் நிறைந்த சோலைகளாற் சூழப்பட்ட திருக்குருகூரிலே எழுந்தருளியிருக்கின்ற
காரிமாறரான சடகோபரால் அருளிச்செய்யப்பட்ட ஆயிரத்துள் இப்பத்துத் திருப்பாசுரங்களையும் சொல்லுகிறவர்கட்கு,
வாசனை மாறாத தாமரைப் பூவில், எழுந்தருளியிருக்கின்ற பெரிய பிராட்டியார் வினையைத் தீர்ப்பார்,’ என்கிறார்.
வாரி – வருவாய் : வரவுக்குக் கருவியாய் இருப்பது. இ -கருவிப்பொருள் விகுதி. காரி – ஆழ்வாருடைய தந்தையார் பெயர்.
மாறன் சடகோபன் – இவருடைய திருப்பெயர். வேரி – வாசனை. தீர்க்கும் – செய்யுமென் முற்று.

‘இத்திருவாய்மொழி கற்றாரைப் பெரிய பிராட்டியார் தம் பொறுப்பாகக் கொண்டு
எல்லாத் துக்கங்களையும் போக்குவார்,’ என்கிறார்.

மாரி மாறாத தண் அம் மலை வேங்கடத்து அண்ணலை –
எப்பொழுதும் மழை பெய்கையாலே சிரமத்தைப் போக்கக் கூடியதாய்க் காட்சிக்கு இனியதான திருமலையையுடைய
சர்வேசுவரனை ஆயிற்றுக் கவி பாடிற்று; ‘நமக்கும் பூவின் மிசை நங்கைக்கும் இன்பனை’ என்கிறபடியே,
நித்திய அநபாயினியான பெரிய பிராட்டியாருக்கு முன்பே நித்திய சமுசாரிகளுக்கும் முகங்கொடுக்கும் சீலமுடையவனது
தன்மையைச் சொல்லிற்றாகையாலே, சீலத்துக்கு எல்லையான திருவேங்கடமுடையான் ஆயிற்றுக் கவி பாடிற்று.
‘விண்முதல் நாயகன் நீள் முடி வெண் முத்த வாசிகைத்தாய், மண் முதல் சேர்வுற்று
அருவி செய்யா நிற்கும் மாமலை’ -திரு விருத்தம் -50-ஆகையாலே,
அறற்றலையாய்க் காட்சிக்கு இனியதாய் இருத்தலின், ‘மாரி மாறாத தண் அம் மலை’ என்கிறது.
கிரீட மகுட சூடாவதம்ச -திரு மலை கிரீடம் போலே -வெண் முத்தம் போலே அருவி
அரல்- நீர் தலை தன்னிடம் அறற்றலை ஜலம் மாறாத தேசம் -தர்மம் தலையில் கொண்ட தேசம் -என்றுமாம்-

வாரி மாறாத பைம்பூம்பொழில் சூழ் குருகூர் நகர் –
அழகியதாய்க் காட்சிக்கு இனியதாய் இருந்துள்ள பொழிலாலே சூழப்பட்ட திரு நகரி.
திருநகரிக்கு ஸஹ்யம் திருமலையாகையாலே,
திருமலை மாரி மாறாதாப் போலே திருநகரியும் வாரி மாறாதே இருக்குமாதலின், ‘வாரி மாறாத நகர்’ என்கிறது.

காரி மாறன் சடகோபன் சொல் ஆயிரத்து இப்பத்தால் ‑
சொன்ன பொருளில் அதிசங்கை பண்ணாமைக்கு ஆப்தி அதிசயம் சொல்லுகிறது.
வேரி மாறாத பூமேல் இருப்பாள் வினை தீர்க்கும் –
‘இத்திருவாய்மொழி கற்றார்க்குப் பலம் கொடுப்பாள் பெரிய பிராட்டி,’ என்கிறது. திருமலை மாரி மாறாதாகையாலே,
திருநகரி வாரி மாறாது; ஆறாக் கயமாகையாலே -பொற்றாமரை கயமாகையாலே –
பிராட்டியுடைய ஆசனமாகிய தாமரை வேரி மாறாது.
(வேரி பரிமளம் -கீழே பன்னீராயிரத்தில் மது அர்த்தம்
மாரி-வாரி -வேரி-மூன்றும் மாறாது – )

‘இது கற்றார்க்கு இவள் பலம் கொடுக்க வேண்டுவான் என்?’ என்னில், தனக்கு முன்பே தான் காட்டிக்கொடுத்த
சேதனருக்கு புருஷகாரமாக திருவடியைக் காட்டி அவற்றை சேதனருக்கு கொடுத்த என்றபடி -இந்த சமுசாரியை
விரும்பும் சீல குணத்தையாயிற்று இதில் சொல்லிற்று; இந்தச் சீல குணம் ஒருவர்க்கும் நிலம் அன்று;
தான் அறிதல் மயர்வற மதிநலம் அருளப்பெற்றவர் அறிதல், செய்யும் இத்தனையாயிற்று;
‘இந்தப் பிரபாவத்தை அறிந்து இவர் வெளியிட்டார்,’ என்னும் கருணையின் மிகுதியாலே, –
பிரசாத வெள்ளம் திருக்கண்களில் வழிய பிரவாஹமாக வெளியிட –
சர்வேசுவரன் பலம் கொடுக்கிற நிலையிலே அவனை விலக்கி,
‘நானே இதற்குப் பலம் கொடுக்கவேண்டும்,’ என்று தனக்கே பொறுப்பாக ஏறிட்டுக் கொண்டு, பலம் கொடுக்கும்.
இத்திருவாய்மொழி கற்றாருடைய, பகவானுடைய அனுபவத்திற்கு விரோதியான
எல்லாத்தடைகளையும் ஈண்டு ‘வினை’ என்கிறது. தீர்க்கும் – போக்குவாள்.
‘இத்திருவாய்மொழி கற்றார்க்கு அந்தப்புரத்திலே படியும் நடையும்’ என்கை.
வினை தீர்க்கும் பாசுரம் -பலம் கொடுக்கும் வியாக்யானம் –அநிஷ்டம் போக்கி இஷ்ட பிராப்தி கிட்டும்
சகல பிரதி பந்தகங்கள் போக்கும் -தன்னடையே பலம் கிட்டுமே -படி நடை -இரண்டும் அந்தப்புரம் –

————————————————————————————–

திராவிட உபநிஷத் சங்கதி -ஸ்ரீ வாதி அழகிய மணவாள ஜீயர் –

ஆனந்த நிர்ப்பர ஆ தீன விபூதி உக்தம் அத வீஷம்
நான்யஸ்ய சமாப்தி ஆசசாத அதி பஞ்சமா
நாபி அனவாப்ய மத்ய ஆனந்த பூரம்
நான்யத்ராப்ய அஸ்தி நாபி அநவாப்யம் அஸ்தி

ஆ தீன விபூதி உக்தம் -தீன விபூதி லீலா -அ தீன -நித்ய விபூதி
வைகுண்ட நாதம்
அத வீஷம்-நன்கு கண்டார் -நன்றாக ஸ்தோத்ரம்
நான்யச்ய சமாப்தி -அன்யா சம நாஸ்தி
ஆசசாத அதி பஞ்சமா–ஐந்தாவில் கூறி
நாபி அனவாப்ய மத்ய -நிறைவேறாத ஆசையும் இல்லையே
ஆனந்த பூரம் -மகிழ்ச்சியில் எல்லை

நித்ய விபூதி வைசிஷ்ட்யம் -இதில் காட்டிய கல்யாண குணம்-வீற்று இருக்கும் வேற்றுமை தோற்ற இருக்கும் இருப்பு

பரம புருஷார்த்தத்வம் -4-1- முதல் பதிகம்
ஆர்யத்வம் -பாலனாய் -4-2–குணங்கள் -யாரை நினைக்க உள்ளம் தூக்கிச் செல்லப்படுமோ
அந்யோந்ய சம்ச்லிஷ்ட்த்வம் -4-3-நன்றாக கலந்து
சர்வ சம்பந்தித்வம் –சர்வ சத்ருசத்வம் -4-4-போலி கண்டு மயங்கி –
சர்வாத்மத்வம்- புகழும் நல ஒருவன் என்கோ கீழே பார்த்தோம்
நித்ய விபூதி வைசிஷ்ட்யம் இதில்

—————————————————————-

திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி -ஸ்ரீ தேசிகன் –

நிந்தித்த அந்ய ஆபன்னான் அந்ய பந்தோ சரசிஜ நிலய வல்லபே
சாந்திர மோதே பக்த அக த்வம்ச சீலே தத் உசித சமய
ஆஸ்வாச தான -ப்ரதன் -ப்ரவீண கர்ப்பூர ஆலேப
சோபே சமயதிக ரஹித தோஷகே சர்வ பூர்ணே ஸர்வத்ர-

1-நிந்தித்த அந்ய -பாக்யம் இல்லாதாரை நிந்தித்தும்

2-ஆபன்னான் அந்ய பந்தோ –வீவு இல் சீர் ஆற்றல் மிக்கு ஆளும் அம்மானை வெம்மா பிளந்தான்றனை–
ஆஸ்ரித அர்த்தமாக அவதரித்து விரோதி நிரசன சீலன்

3-சரசிஜ நிலய வல்லபே–மைய கண்ணாள் மலர்மேல் உறை வாள் உறை மார்பினன்

4-சாந்திர மோதே –வீவு இல் இன்பம் மிக எல்லை நிகழ்ந்தனன் மேவியே–ஆனந்த எல்லை-

5-பக்த அக த்வம்ச சீலே –மேவி நின்று தொழுவார் வினை போக மேவும் பிரான்

6-தத் உசித சமய ஆஸ்வாச தான -ப்ரதன் -ப்ரவீண –ஆற்ற நல்ல வகை காட்டும் அம்மானை —
பொறுக்க பொறுக்க-சாத்மிக்க-சாத் மிக்க

7-கர்ப்பூர ஆலேப சோபே –பெரிய கோலத் தடங்கண்ணன் விண்ணோர் பெருமான்-
வெளிய நீறு -பச்சை கற்பூரம் -சோபை மிக்கு

8-சமயதிக ரஹித –ஒத்தாரும் மிக்கார்களும் தன் தனக்கு இன்றி நின்றானை –
ஓத்தார் மிக்கார் தன் தனக்கு இல்லாமல் ஸுலப்யம் இயற்கைத்தனம்

9-தோஷகே –நமக்கும் பூவின்மிசை நங்கைக்கும் இன்பனை-ஆனந்திப்பிக்குமவன்

10-சர்வ பூர்ணே –வானத்தும் வானத்துள் உம்பரும் மண்ணுள்ளும் மண்ணின் கீழ்த்
தானத்தும் எண் திசையும் தவிராது நின்றான் தன்னை,-சர்வ வியாபகத்வம்

ஸர்வத்ர–உண்டும் உமிழ்ந்தும் கடந்தும் இடந்தும் கிடந்தும் நின்றும்
கொண்ட கோலத்தொடு வீற்றிருந்தும் மணம் கூடியும்
கண்ட ஆற்றால் தனதே உலகு என நின்றான் றன்னை
சொல் மாலைகள் ஏற்ற நோற்றேற்கு இனி என்ன குறை எழுமையுமே
தன்யன் ஆனேன் -பாடப் பெற்றேன்

ஏவம் பூதன் வண் துவாராபதிப் பிரான் ஸ்துதிப்பவர் பாஹ்யவான்
தத் வியதிரிக்தர் பாஹ்ய ஹீனர்

——————————————————-

திருவாய் மொழி நூற்றந்தாதி -பாசுரம் 35-பிள்ளை லோகம் ஜீயர் வியாக்யானம்–

வீற்று இருக்கும் மால் விண்ணில் மிக்க மயல் தன்னை
ஆற்றுதற்காத் தன் பெருமையானது எல்லாம் -தோற்ற வந்து
நன்று கலக்கப் போற்றி நன்கு உகந்து வீறு உரைத்தான்
சென்ற துயர் மாறன் தீர்ந்து —35-

————————————————————-

அவதாரிகை –

இதில்
அப்ராக்ருத விபூதியில்
அசாதாராண ஆகாரத்தைக் காட்ட அனுபவித்து ஹ்ருஷ்டராகிற படியைப் பேசின பாசுரத்தை
அனுவதித்து அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில் –

வல்வினை தீர்க்கும் கண்ணனான சர்வேஸ்வரன்
சத்ருச சம்பந்த வஸ்துக்களையும் அவனாகவே
அனுசந்திக்கும்படி பிறந்த இவருடைய பித்து சவாசனமாகத் தீரும்படி
சர்வ தேவ நமஸ்காரம் கேசவனுக்கு செல்லுமே -மழை நீர் அருவிகள் கடலுக்கு போவது போலே -சாதாராண ஆகாரம் சர்வாத்மகம்
அசாதாராண வடிவம் -சத்வாரகமாக அன்றி நேராக கூராழி வெண் சங்கு ஏந்தி வாராய்
விலஷண ஸ்வரூப குண விக்ரஹ விபூஷண ஆயுத பத்னீ பரிஜன விசிஷ்டனாய்க் கொண்டு
பரமபதத்திலே வ்யாவ்ருத்தி தோன்ற இருக்கிற மேன்மையையும்
லீலா விபூதியில் உள்ளார் எல்லாரையும்
ஸ்ருஷ்ட்ய அனுபிரவேசாதிகளால் ரஷிக்கிற அளவன்றிக்கே
மனுஷ்யாதி ரூபேண வந்து அவதரித்து
ரஷித்துக் கொண்டு போருகிற படியையும் இவருக்குக் காட்டிக் கொடுத்து
சர்வேஸ்வரன் இவரோடு வந்து பூர்ண சம்ச்லேஷம் பண்ணி அருள
அத்தைக் கண்டு

சூழ் விசும்பு அணி முகிலுக்கு மேலே அங்கே சென்றால்
பண்ணுகிற மங்களா சாசனத்தை
இங்கேயே இருந்து
அவனுடைய உபய விபூதி ஐஸ்வர்யத்துக்கும் மங்களா சாசனம் பண்ணி
க்ருத்க்ருத்யராய்
உபய விபூதியிலும் என்னோடு ஒப்பார் இல்லை -என்று
ஹ்ருஷ்டர் ஆகிற -வீற்று இருந்து ஏழ் உலகின் தாத்பர்யத்தை
அருளிச் செய்கிறார் -வீற்று இருக்கும் மால் விண்ணில் -இத்யாதியாலே -என்கை –

———————————————————————————

வியாக்யானம்–

வீற்று இருக்கும் மால் -விண்ணில்
விண்ணில்-வீற்று இருக்கும் மால்-
ஆசீன காஞ்சநே திவ்யேச ச சிம்ஹாச நே பிரபு -என்றும்
ராமம் ரத்ன மயே பீடே சஹ ஸீதம் ந்யவேசயத் -என்றும்
பரிவார்யா மஹாத்மானம் மந்த்ரினஸ் சமூபசிரே -என்றும்
சொல்லுகிறபடியே
வானக் கோனாய்
விண்ணோர் பெருமானாய்
மைய கண்ணாள் மலர் மேல் உறை மார்பனாய்
வீற்று இருந்து ஏழ் உலகும் தனிக் கோல் செல்ல
எழுந்து அருளி இருக்கிற சர்வேஸ்வரன் –

மிக்க மயல் தன்னை –
ஆழ்வார் உடைய அத்யந்த
வ்யாமோஹத்தை-
மயல் பெரும் காதல் என் பேதைக்கு என் செய்கேன் வல் வினையேனே -என்று
பெற்றவர்களும் பேசிக் கை விடும்படியான
மிக்க மயல் தன்னை

ஆற்றுதற்காத் –
கைபிடித்த தான் ‘இத்தை ஆற்றுதற்க்காக-

தன் பெருமையானது எல்லாம் -தோற்ற வந்து –
கீழில் ப்ரமம் எல்லாம் ஆறும்படி –
பூவின் மிசை நங்கைக்கு இன்பன் –
தூவியம் புள்ளுடையான் அடலாழி அம்மான் தன்னை –
என்று
பிராட்டியாரோடும்
நித்ய சித்தரோடும்
கூடி இருக்கிற இருப்பையும்
ஞாலத்தார் தமக்கும் வானவர்க்கும் பெருமானை -என்றும்
உபய விபூதி ஐஸ்வர்ய உக்தனாய் இருக்கிற படியையும்
வீவில் சீரன் மலர்க் கண்ணன் விண்ணோர் பெருமான் தன்னை -என்றபடி
குண விக்ரஹாதி வைலஷண்யம் முதலான
வைபவம் எல்லாம் பிரகாசிக்க
இங்கே வந்து –

நன்று கலக்கப் –
மேவி நின்று தொழுவார் வினை போக மேவும் பிரான் -என்னலாம்படி
இவருடன் சம்ச்லேஷிக்க –

போற்றி நன்கு உகந்து –
சர்வ ஸ்மாத் பரனான சர்வேஸ்வரனை கண்டு –
போற்றி என்றே கைகள் ஆரத் தொழுது
மங்களா சாசனம் பண்ணி
வீவில் காலம் இசை மாலைகள் ஏத்தி மேவப் பெற்றேன்
வீவில் இன்பம் மிக வெல்லை நிகழ்நதன் மேவியே –
என்று மிகவும் ஹ்ருஷ்டராய் –

அந்த ப்ரீதி உத்ததியாலே
வீறு உரைத்தான் –
வானக் கோனை கவி சொல்ல வல்லேற்கு இனி மாறுண்டே -என்றும்
இனி யாவர் நிகர் அகல் வானத்தே -என்றும்
தாம் உபய விபூதியிலும் வ்யாவர்த்தரான படியைப் பேசினார்

சென்ற துயர் மாறன் தீர்ந்து –
நிவ்ருத்த துக்கரான ஆழ்வார்
விஸ்லேஷ வ்யசனம் -என்னுதல்
வெய்ய நோய்கள் முழுவதும் வியன் ஞாலத்து வீயவே -என்றும்
காற்றின் முன்னம் கடுகி வினை நோய்கள் கரியவே -என்றும்
சொல்லுமவை யாதல் –

சென்ற துயர் -தீர்ந்து – மாறன் -நன்கு -உகந்து -வீறு -உரைத்தான் –
நடந்து சென்ற துக்கம் தீர்ந்து
ஆழ்வார் அத்யந்த ப்ரீதராய்
ப்ரீதி பிரகர்ஷத்தாலே
தம்முடைய பெருமையை
தாமே பேசினார் -ஆயிற்று-

—————————————————————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ. வே.வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

பகவத் விஷயம் காலஷேபம் -94- திருவாய்மொழி – -4-5-1….4-5-5–ஸ்ரீ உ. வே. வேளுக்குடி ஸ்வாமிகள்–

May 30, 2016

மேல் திருவாய்மொழியிலே அப்படி விடாய்த்தவர், ‘இனி என்ன குறை எழுமையுமே?’ என்னப் பெறுவதே!
உன்மச்தக ப்ரீதி அப்ரீதி மாறி மாறி வருமே -இந்த இரண்டு திருவாய்மொழிக்கும் ஏற்றம் என் என்னில் –
மேல் ‘பொய்ந்நின்ற ஞானம்’ தொடங்கிக் ‘கோவைவாயாள்’ என்ற திருவாய்மொழி முடிய,
‘மண்ணையிருந்து துழாவி’ என்னுந் திருவாய்மொழியில் உண்டான விடாய்க்குக் கிருஷி செய்தபடி.
அப்படி விடாய்க்கும்படி செய்த கிருஷியின் பலம் சொல்லுகிறது இத்திருவாய்மொழியில்.
‘பேற்றுக்கு இதற்கு -பல்லாண்டு பாடுவதற்கு மேல் என்றபடி -அவ்வருகு சொல்லலாவது இனி ஒன்று இல்லை.
‘அங்குப் போய்ச் செய்யும் அடிமைகளை இங்கே இருந்தே செய்யும்படி தன் சொரூபம் முதலானவைகளைத் தெளிவாகக் காட்டிக்
கொடுத்தானாகையினாலே,அவ்வருகு சொல்லலாவது இல்லை,’ என்றபடி.
அவ்வர்ச்சிராதி கதியைப்பற்றிப் பேசுகின்ற-‘சூழ்விசும்பு அணி முகில்’ என்ற திருவாய்மொழிக்குப் பின்
இத்திருவாய்மொழியாகப் பெற்றது இல்லையே!’ என்று அருளிச்செய்வர் நஞ்சீயர்.
-நம்மாழ்வார் மங்களா சாசனப் பதிகம் இது –
( பல்லாண்டு என்று பரமேஷ்ட்டியை -என்று நிகமத்தில் பெரியாழ்வார் அருளிச் செய்தலால் அது அங்கு சென்று
பெற்ற பேறு என்பதில் சங்கை இல்லையே -ஆகையால் இதுவும் சூழ் விசும்புக்கு அப்புறம் இருக்க வேண்டும் என்றார் ஆயிற்று )

பெருமாளும் இளைய பெருமாளுமான இருப்பிலே பிராட்டிக்குப் பிரிவு உண்டாக, மஹாராஜரையும் சேனைகளையும் கூட்டிக்கொண்டு
சென்று பகைவர்கள் கூட்டத்தைக் கிழங்கு எடுத்து அவளோடே கூடினாற்போலே, போலி கண்டு இவர் மயங்கின இழவு எல்லாம் போகும்படி,
நித்திய விபூதியையும் லீலா விபூதியையுமுடையனாய் இருக்கின்ற தன் படிகள் ஒன்றும் குறையாதபடி கொண்டு வந்து காட்டிக் கொடுத்து,
‘கண்டீரே நாம் இருக்கின்றபடி?
இந்த ஐசுவரியங்களெல்லாம் ஒன்றாய்த் தலைக்கட்டுவது, நீர் உம்முடைய வாயாலே ஒரு சொல்லுச் சொன்னால் காணும்,’ என்று
இவர் திருக்கையிலே தாளத்தைக் கொடுக்க, அவ்விருப்புக்கு மங்களாசாசனம் பண்ணி,
‘இவ்வுலகம் பரமபதம் என்னும் இரண்டு உலகங்களிலும் என்னோடு ஒப்பார் இலர்,’ என்று மிக்க பிரீதியையுடையவர் ஆகிறார்.

ஆழ்வார் விடாய் கொண்டமைக்குப் பெருமாளைத் திருஷ்டாந்தமாக்கினாற்போலே, விடாய் தீர்ந்தமைக்கும் பெருமாளைத்
திருஷ்டாந்தமாக்குகிறார் இங்கு. என்றது, இச் சேர்த்தியைச் சேர்த்து வைக்கின்றவர்கள் கூட இருக்கச் செய்தே பிரிகையும்,
போலி கண்டு மயங்குகையும், தக்க பரிகரத்தைக்கொண்டு பரிஹரிக்கையும்,
இரண்டு இடங்களிலும் உண்டு ஆகையாலே, திருஷ்டாந்த தார்ஷ்டாந்திக பாவத்தைத் தெரிவித்தபடி.
அங்கு, அச்சேர்த்திக்குக் கடகர் இளைய பெருமாள்; இங்கு, நித்தியசூரிகள்;
அங்கு மிருகத்தின் போலி; இங்கு அவன் போலி.
அங்குப் பரிகரம் மஹாராஜர் முதலானோர்;
இங்கு யாதோர் ஆகாரத்தைக் கண்டு மயங்கினார், அந்த ஆகாரத்தோடு கூடிய வேஷத்தைக் காட்டுகை.
அங்குப் பிராட்டியோடு கூடிச் சந்தோஷித்தாற்போலே இவர் திருக்கையிலே தாளத்தைக் கொடுக்க,
இவரும் சந்தோஷித்து மங்களாசாசனம் பண்ணுகிறார்-என்க.

நின்ற குன்றத்தினை நோக்கி நெடுமால்’ ஆக மயங்கின மயக்கத்திற்கு வான மாமலையான தன்னைக் காட்டிக்கொடுத்தான்;
‘நீறு செவ்வே இடக்காணில் நெடுமால் அடியார் என்று’ மயங்கி ஓடினதற்கு,
‘தூவி அம்புள் உடையான் அடல் ஆழி அம்மான்’ என்கிற நித்திய புருஷர்களைக் காட்டிக்கொடுத்தான்;
‘செய்யது ஓர் ஞாயிற்றைக் காட்டிச் சிரீதரன் மூர்த்தி ஈது’ என்றதற்கு,
‘மைய கண்ணாள் மலர்மேல் உறைவாள் உறைமார்பினன்’ என்று தானும் பெரிய பிராட்டியாருமாய் இருக்கிற இருப்பைக் காட்டிக்கொடுத்தான்;
‘திருவுடை மன்னரைக் காணில் திருமால்’ என்றதற்கு, உபய விபூதிகளையுடையனான தன் ஐசுவரியத்தைக் காட்டிக்கொடுத்தான்;
‘விரும்பிப் பகவரைக் காணில், வியலிடம் உண்டான்’ என்று சிறிய ஆனந்தமுடையாரைக் கண்டு மயங்கினவர்க்கு,
‘வீவில் இன்பம் மிக எல்லை நிகழ்ந்த நம் அச்சுதன்’ என்று ஆனந்தமயனாய் இருக்கிற இருப்பைக் காட்டிக்கொடுத்தான்;
பிறர் வாயால் ‘என் செய்கேன்’ என்றதைத் தவிர்த்து, தம் திருவாயாலே ‘என்ன குறை எழுமையுமே’ என்னப் பண்ணினான்.

——————————————————————————————

வீற்றிருந்து ஏழுலகும் தனிக்கோல் செல்ல, வீவு இல் சீர்
ஆற்றல் மிக்கு ஆளும் அம்மானை வெம்மா பிளந்தான்றனைப்
போற்றி என்றே கைகள் ஆரத் தொழுது,சொல் மாலைகள்
ஏற்ற நோற்றேற்கு இனி என்ன குறை எழுமையுமே?–4-5-1-

சமஸ்த லோக நிர்வாகன் -பல்லாண்டு பாடப் பெற்ற தமக்கு எக்காலமும் குறை இல்லையே -என்கிறார்
வீற்றிருந்து -விலஷணன் -வேற்றுமை தோற்ற வீற்று இருந்து -சர்வ ஆதாரத்வ -சர்வ நியந்த்ருத்வ –
சர்வ சேஷித்வ -சர்வ வியாபகத்வ -இவற்றால் –
பக்தன் -விசுத்த முக்தன் -நித்யர் விட புருஷோத்தமன் –
கண்டவாற்றால் தனதே உலகு என்று நிற்பான் –
திவ்ய விபூதியில் திவ்ய பர்யங்கத்தில் தர்மாதி பீடம் -இருந்து
ஏழுலகும் தனிக்கோல் செல்ல, -லீலா விபூதி நாயகத்வம் -வியக்த -அவ்யக்த- கால ரூபமாய்
-சுத்த சத்வ ரூபம் சதுர்வித அசேதன ரூபம் -காரண கார்ய ரூபேண அங்கும் இங்கும் –
சுத்த திவ்ய கோபுரம் மண்டபம் -அங்கு -பிரகிருதி காரணம் -மகான் -பிருத்வி காரணம் இங்கு
பக்த முத்த நித்ய த்ரிவித-சேதனர் -ஏழு வகை
அசஹாய -செங்கோல் ஒன்றே கொண்டு ஆளுகிறான் -சங்கல்ப ரூபமான அத்விதீயமான –
வீவு இல் சீர்-நித்ய விபூதி நாயகத்வம் -அப்ரதிகதமான தடங்கல் இல்லாத பண்ண முடியாத–
ஞான சக்த்யாத் கல்யாண குணா கணன்
ஆற்றல் மிக்கு ஆளும் அம்மானை-மஹத்தால் வந்த உத்ரேக ரஹிதமாய்-முக்குறும்பு இல்லாமல் –
சாந்தியால் வந்த ஆற்றல் இவனுக்கு -பிரசாந்த ஆத்மா -ஆழ்கடலில் உள்ள பரம சாந்தி –
ஸ்வா பாவிகம் -ஸ்வரூப வைபவம்
சர்வ சுவாமி
வெம்மா பிளந்தான்றனை–கேசி ஹந்தா -ரஷணத்துக்கு உதாரணம் –
செம்மையே நிரூபகம் இவனுக்கு வெம்மையே நிரூபகம் இதுக்கு
நாரதர் -பயப்பட -ஜகத் அஸ்தமிக்கும் -பார்த்தால் கேசி அஸ்தமிக்க
ரஷநீய வர்க்கத்துக்கு விரோதி அன்றோ -செற்றார் திறல் அழிய -இடையர் கண்ணனுக்கு எதிரி
செற்றார்க்கு வெப்பம் கொடுக்கும் விமலா -பாகவத விரோதிகள் -செற்றார் த்வயம்
குதிரை -கைம்மா யானை -இரு கூறாக விடும்படி -பில த்வாரம் –
போற்றி என்றே கைகள் ஆரத் தொழுது-பலபடிகளாலும் போற்றி -மங்களா சாசனம் பண்ணி
விண்ணைத் தொழுத ஆகாசம் பார்த்து -பசி உடன் அங்கு
இங்கு ஆர தொழுது -கையும் பசிக்குமே -முடியானே -பார்த்தோம்
அஞ்சலி பண்ணி
,சொல் மாலைகள் ஏற்ற நோற்றேற்கு -சப்த சந்தர்ப்ப ரூபமான -சிரசா வஹிக்கும் படி -சமர்ப்பிக்கைக்கு
நோற்றேன் -விதி வாய்க்கின்றது காப்பார் யார்
பெருமாள் கிருபை -நிர்ஹேதுகம் -இதுவே ஆழ்வாருக்கு புண்ணியம்
இனி என்ன குறை எழுமையுமே-ஏழு ஜன்மங்களிலும் போற்றிக் கொண்டே இருப்பேன் -இனி என்ன குறை –
மனத்திடை வைப்பதாம் மாலை –அதிகாரி ஸ்வரூபம் ஏரி வெட்டுவது -உபாயம் இல்லையே –
சப்த சப்த சப்தச -சரீர விமோசன தேச பிராப்தி குறைகள் இல்லை -நித்ய விபூதி அனுபவம் இங்கேயே உண்டே
பாலர் போலே இப்படி பேசுவார் -பக்தர் மௌக்த்யம் கண்டு ஆனந்திப்பான் –
பதட்டுத்துக்கு மயங்குவான் -ப்ரபன்ன ஜன கூடஸ்தர் ஆகிறார் இத்தால்

‘வேறுபாடு தோன்ற இருந்து ஏழுலகங்களிலும் ஒரே கோல் செல்லும்படியாகப் பொறுமை மிகுந்து ஆளுகின்ற அழிதலில்லாத
கல்யாண குணங்களையுடைய அம்மானும், கொடிய கேசி என்னும் அசுரனது வாயைப் பிளந்தவனுமான சர்வேசுவரனைப்
‘போற்றி போற்றி’ என்று சொல்லிக்கொண்டே கைகள் வயிறு நிறையும்படி தொழுது சொற்களாலாகிய மாலைகளை
அவன் தலைமேல் தாங்கும்படி பாட வல்ல புண்ணியத்தையுடைய எனக்கு
இனி ஏழேழ்படிகாலான பிறவிகள் வரக்கூடியனவாக இருந்தாலும்,
என்ன குறை இருக்கின்றது? ஒரு குறையும் இன்று,’ என்றவாறு.
வி-கு : ‘ஏழுலகும் தனிக்கோல் செல்ல வீற்றிருந்து ஆற்றல் மிக்கு ஆளும் வீவில்சீர் அம்மான்’ என்க.
‘வீ’ என்பதற்கு ‘அழிதல்’ என்பது பொருள்.
‘போற்றி – பரிகாரம்’ என்பர் நச்சினார்க்கினியர். ‘போற்றி -பாதுகாத்தருள்க;
இகரவீற்று வியங்கோள்’ என்பர் அடியார்க்கு நல்லார்.
‘இனி எழுமையும் என்ன குறை?’ என மாறுக. எழுமையும் – ‘எப்பொழுதும்’ என்னலுமாம்.
இத்திருவாய்மொழி கலித்துறை என்னும் பாவகையில் அடங்கும்.

‘சர்வேசுவரனாய் வைத்து அடியார்களைக் காப்பாற்றுவதற்காக மனிதர் கதியில் வந்து அவதரித்த ஸ்ரீ கிருஷ்ணனைக் கவி
பாடப் பெற்ற எனக்கு நாளும் ஒரு குறையும் இல்லை,’ என்கிறார்.

வீற்றிருந்து –
வீற்று என்று வேறுபாடாய், தன் வேறுபாடு அடங்கலும் தோற்ற இருந்து.
ஈண்டு ‘வேறுபாடு’ என்றது, தன்னினின்று வேறுபட்ட எல்லாப் பொருள்களும் தனக்கு அடிமையாகத் தான்
இறைவன் ஆகையாலே வந்த வேறுபாட்டினை. இங்ஙன் அன்றாகில்,
ஒன்றற்கு ஒன்று வேறுபாடு எல்லாப் பொருள்கட்கும் உண்டே அன்றோ?
ஆதலால், இங்கு ‘வேறுபாடு’ என்றது, உயர்த்தியால் வந்த வேறுபாட்டினையே என்க.
எல்லா ஆத்துமாக்களுக்கும் ஞானமே வடிவமாய் இருப்பதாலே, அவனோடு ஒப்புமை உண்டாயிருக்கச் செய்தேயும்,
எங்கும் பரந்திருத்தல், எல்லாப்பொருள்கட்கும் இறைவனாயிருத்தல்,
எல்லாப் பொருள்களையும் ஏவுகின்றவனாயிருத்தல் ஆகிய
இவை அந்தச் சர்வேசுவரன் ஒருவனிடத்திலேயே கிடக்குமவை அல்லவோ?’
தன்னை ஒழிந்தார் அடையத் தனக்கு அடிமை செய்யக்கடவனாய், தான் எங்கும் பரந்திருப்பவனாய்,
ஆகாசம் பரந்திருத்தலைப் போல அன்றிக்கே,
ஜாதி பொருள்கள் தோறும் நிறைந்திருக்குமாறுபோலே இருக்கக்கடவனாய், இப்படிப் பரந்திருத்தல் தான் ஏவுவதற்காக அன்றோ?
இவ்வருகுள்ளாரை அடையக் கலங்கும்படி செய்யக்கூடியவைகளான அஞ்ஞானம் முதலானவைகள்-
தர்மாதீ பீடம் ஞான அஜ்ஞ்ஞான –தர்ம அதர்ம –வைராக்ய -அவைராக்ய –ஐஸ்வர்யம் அநஸ்வர்யம்-எட்டு கால்கள் –
முழுதும் தன் ஆசனத்திலே கீழே அமுக்குண்ணும்படி அவற்றை அதிஷ்டித்துக்கொண்டு இருக்கும் படியைத் தெரிவிப்பார்,
‘இருந்து’ என்கிறார்.
அன்றிக்கே, ‘தன்னினின்றும் வேறுபட்ட எல்லாப் பொருள்களையும் உடையவன் ஆகையால்
வந்த ஆனந்தம் தோற்ற இருக்கிற இருப்பைச் சொல்லுகிறது’ என்னுதல்.

ஏழ் உலகும் தனிக்கோல் செல்ல –
சுற்றுப்பயணம் வந்து உலகத்தையெல்லாம் நிர்வாகம் செய்கையன்றிக்கே, இருந்த இருப்பிலே
உலகமடையச் செங்கோல் செல்லும் படியாக ஆயிற்று இருப்பது. ‘ஏழ் உலகு’ என்று பரமபதமும் அதற்குக் கீழே உள்ள
உலகங்களுமான இரு வகை உலகங்களையும் சொல்லிற்றாதல்;
பரமபதத்திற்கு இப்பால் உள்ள உலகங்கள் மாத்திரத்தைச் சொல்லிற்றாதல். இரு வகையான உலகங்களையும் சொல்லும் போது
மூன்று வகையான ஆத்துமாக்களையும் நான்கு வகையான பிரகிருதியையும் சொல்லுகிறது.
நான்கு வகையான பிரகிருதிகளாவன : காரிய காரண உருவமான இரு வகைப்பட்ட பிரிவுகள் அங்கு;
இங்கும், அப்படியுண்டான இரு வகைப்பட்ட பிரிவுகள். லீலாவிபூதி மாத்திரத்தைச் சொன்னபோது,
கீழேயுள்ள உலகங்களையும் பூமியையும் கூட்டி ஒன்று ஆக்கி, பரமபதத்திற்கு இப்பாலுள்ள உலகங்களை ஆறு ஆக்கி,
ஆக ஏழையும் சொல்லுகிறது என்று கொள்க.

வீவு இல் சீர் –
அழிவில்லாத கல்யாண குணங்களைச் சொல்லுதல்; நித்தியமான பரமபதத்தைச் சொல்லுதல்.
ஆக, ‘ஏழ் உலகு’ என்பதற்கு உபயவிபூதிகளையும் என்று பொருள் கொண்டால், ‘
இங்கு வீவில்சீர்’ என்பதற்குக் கல்யாண குணங்கள் என்ற பொருளும்,
அங்கே, லீலாவிபூதியை மாத்திரம் கொண்டால், இங்கு நித்தியவிபூதி என்ற பொருளும்
கோடல் வேண்டும் என்பதனைத் தெரிவித்தபடி.

‘இப்படி உபயவிபூதிகளையுமுடையவனான செருக்கால் தன் பக்கல் சிலர்க்குக் கிட்ட ஒண்ணாதபடி இருப்பானோ?’ என்னில்,
‘அங்ஙனம் இரான்’ என்கிறார் மேல் : ஆற்றல் மிக்கு ஆளும் அம்மான் –
‘ஸ்ரீராமபிரான் இராச்சியத்தை விநயத்தோடு கூடினவராய் நடத்துகையாலே இராச்சியத்தை உபாசித்தார்’ என்பது போன்று
‘செருக்கு அற்றவனாய் ஆளுகின்ற அம்மான்’ என்கிறார். என்றது,
வழி அல்லா வழியே வந்த ஐசுவரியமுடையவன் பிறர்க்குத் திரிய
ஒண்ணாதபடி நடப்பான் என்பதனையும், உடையவனுடைய ஐசுவரியமாகையாலே தகுதியாய்
இருக்கின்றமையையும் தெரிவித்தபடி.
அன்றிக்கே, ‘ஆற்றல்’ என்றது, வலியாய், ‘இவ்வுலகமனைத்தையும் நிர்வஹிக்கைக்கு அடியான
தரிக்கும் ஆற்றலைச் சொல்லுகிறது’ என்று சொல்லுவாரும் உளர்.
இனி, ‘அம்மான்’ என்பதற்கு, ‘எல்லாரையும் நியமிக்கின்ற தன்மையால் வந்த
ஐசுவரியத்தையுடையவன்’ என்று பொருள் கூறலுமாம்.

வெம் மா பிளந்தான் தன்னை –
‘ஆற்றல் மிக்கு ஆளும்படி சொல்லுகிறது’ என்று பட்டர் அருளிச் செய்யும்படி. ‘என்றது, என் சொல்லியவாறோ?’ எனின்,
இவ்வுலகங்கள் அனைத்தையம் உடையவன் ஆனால், இருந்த இடத்தே இருந்து,
‘தஹபச – கொளுத்து அடு’ என்று நிர்வஹிக்கையன்றிக்கே,
இவர்களோடே ஒரே சாதியையுடையனாய் வந்து அவதரித்து, இவர்கள் செய்யும் பரிபவங்களை அடையப் பொறுத்து,
களை பிடுங்கிக் காக்கும்படியைச் சொல்லுகிறது என்றபடி. சமந்தக மணி முதலியவைகளிலே பரிபவம் பிரசித்தம்;
‘நான் ‘பந்துக்களுக்கு இரட்சகன்’ என்பது ஒரு பெயர் மாத்திரமேயாய்,
இவர்களுக்கு அடிமை வேலைகளையே செய்துகொண்டு திரிகின்றேன்,’ என்றும்,
‘நல்ல பொருள்களை அனுபவிக்கும் அனுபவங்களில் பாதியைப் பகுத்திட்டு வாழ்ந்து போந்தேன்;
இவர்கள் கூறுகின்ற கொடிய வார்த்தைகளையெல்லாம் பொறுத்துப் போந்தேன்,’ என்றும் அவன் தானும் அருளிச் செய்தான்.

இனி, ‘வெம் மா பிளந்தான்றன்னை’ என்பதற்கு, ‘ஆற்றல் மிக்கு ஆளும் அம்மான் யார்?’ என்றால்,
இன்னான் என்கிறது என்று அம்மங்கி அம்மாள் நிர்வஹிப்பர்.
கேசி பட்டுப்போகச் செய்தேயும் தம் வயிறு எரித்தலாலே ‘வெம்மா’ என்கிறார் இவர்.
‘நன்றாகத் திறந்த வாயையுடையவனும் மஹாபயங்கரமானவனுமான அந்தக் கேசி என்னும் அசுரன்,
இடியினாலே தள்ளப்பட்ட மரம் போலே
கண்ணபிரானுடைய திருக்கையாலே இரண்டு கூறு ஆக்கப்பட்டவனாய்க் கீழே விழுந்தான்,’ என்பது ஸ்ரீவிஷ்ணு புராணம்.
கேசி வாயை அங்காந்துகொண்டு வந்த போது, சிறு குழந்தைகள் துவாரம் கண்ட இடங்களிலே கையை நீட்டுமாறு போலே,
இவன் பேதைமையாலே அதன் வாயிலே கையை நீட்டினான்;
முன்பு இல்லாதது ஒன்றைக் கண்ட காட்சியாலே கை பூரித்துக் கொடுத்தது;
கையைத் திரும்ப வாங்கினான்; அவன் இருபிளவாய் விழுந்தான் என்பது.

போற்றி –
சொரூபத்திற்குத் தக்கனவாய் அன்றோ பரிவுகள் இருப்பன? கேசி பட்டுப் போகச் செய்தேயும்
சமகாலத்திற் போலே வயிறு எரிந்து படுகிறாராயிற்று இவர்.
என்றே – ‘நம’ என்று வாயால் எப்பொழுதும் சொல்லிக்கொண்டு இருக்கும்
தன்மை வாய்ந்தவர்களாய் இருப்பார்கள்,’ என்பது போன்று,
அன்று இவ்வுலகம் அளந்தான் போற்றி -ஆறு தடவை ஆண்டாள் போலே –
ஒருகால், ‘பல்லாண்டு’ என்றால், பின்னையும் ‘பல்லாண்டு பல்லாண்டு’ என்னுமத்தனை

கைகள் ஆரத் தொழுது –
‘வைகுந்தம் என்று கைகாட்டும்’ என்று வெற்று ஆகாசத்தைப் பற்றித் தொழுத கைகளின்
விடாய் தீர்ந்து வயிறு நிறையும்படி தொழுது.
சொல் மாலைகள் –
வாடாத மாலைகள். என்றது, ‘அநசூயை கொடுத்த மாலை போலே செவ்வி அழியாத மாலைகள்’ என்றபடி.
ஏற்ற –
‘ஆராதனத்தைத் தாமாகவே தலையாலே ஏற்றுக்கொள்ளுகிறார்’ என்கிறபடியே, திருக்குழலிலே ஏற்றும்படியாக.
நோற்றேற்கு –
இவர் இப்போது நோற்றாராகச் சொல்லுகிறது,
1- ‘மண்ணையிருந்து துழாவி’ என்னும் திருவாய்மொழியில் சொல்லப்பட்ட விடாயை;
முன் கணத்திலே நிகழ்வது ஒன்றேயன்றோ ஒன்றுக்கு ஏதுவாவது?
அன்றிக்கே,2-‘பகவானுடைய கிருபையை’ என்னலுமாம்.
கிருபை என்றுமே இருந்தாலும்–பூர்வ ஷண வர்த்தி இறே ஒன்றுக்கு ஹேது வாகும்–
அதனால் விடாய்த்தது அன்றோ என்கிறார் –

இனி என்ன குறை –
பரமபதத்திற்குச் சென்றாலும் தொண்டு செய்தலாலேயாகில் சொரூபம்;
அதனை இங்கே பெற்ற தனக்கு ஒரு குறை உண்டோ?
இங்கே இருந்தே அங்குத்தை அனுபவத்தை அனுபவிக்கப்பெற்ற எனக்கு ‘
அங்கே போகப் பெற்றிலேன்’ என்கிற குறை உண்டோ?
அங்கே போனாலும் சூழ்ந்திருந்து ஏத்துவர் பல்லாண்டே அன்றோ?’ ‘இது எத்தனை குளிக்கு நிற்கும்?’ என்னில்,
எழுமையுமே –
முடிய நிற்குமவற்றை எவ்வேழாகச் சொல்லக்கடவதன்றோ?
‘கீழே பத்துப் பிறவியையும் தன்னையும் பரிசுத்தப்படுத்துகிறது’ என்றும்,
‘மூவேழ் தலைமுறையைக் கரை ஏற்றுகிறது’ என்றும் சொல்லப்பட்டிருக்கின்றது அன்றே?

‘பூவளரும்திரு மாது புணர்ந்தநம் புண்ணியனார் தாவள மான தனித்திவம் சேர்ந்து, தமருடனே
நாவள ரும்பெரு நான்மறை ஓதிய கீதமெலாம் பாவளரும் தமிழ்ப் பல்லாண் டிசையுடன் பாடுவமே.’- என்பது வேதாந்த தேசிகன் ஸ்ரீசூக்தி.

————————————————————————————————

மைய கண்ணாள் மலர்மேல் உறை வாள் உறை மார்பினன்
செய்ய கோலத்தடங் கண்ணன் விண்ணோர் பெருமான் தனை
மொய்ய சொல்லால் இசை மாலைகள் ஏத்தி உள்ளப் பெற்றேன்
வெய்ய நோய்கள் முழுதும் வியன் ஞாலத்து வீயவே.–4-5-2-

ஸ்ரீ யபதி -கடகர் உண்டே -மேன்மைக்கு அடியான லஷ்மி சம்பந்தம் –உடையவனை -என்னுடைய ஜகத் சம்பந்தியான
சகல கிலேசங்களைத் தீரும் படிக்கு புகழப் பெற்றேன்
மைய கண்ணாள் மலர்மேல் உறை வாள் உறை மார்பினன்-அஸி தீஷணை -ஸ்வ பாவத்துக்கு மேல் மை தீட்டி
பிறந்த புகுந்த இரண்டையும் சொல்லி –அவன் வடிவு நிழல் இட்டது அடியாக -நீல மேக சியாமளன்
மார்பில் அமர்ந்தது இயற்க்கை -நித்ய யோகம் -அகலகில்லேன் இறையும் என்று
ஆபிரூப்யம் அபிஜாதம் இரண்டையும் சொல்லி பரிமளமே வடிவாகக் கொண்ட போக்யதையாயும்
நித்ய வாசம் செய்யும் நிரதிசய போக்ய பூதை-
செய்ய கோலத்தடங் கண்ணன் -அழகை உடைத்தாய் -பிரேம பாரவச்யத்தாலே விச்தீர்ணமான –
அவளை நோக்கி மேலும் சிவந்த கண்ணுக்கு விஷயாதீனம் இந்த பாசுரம் –
(ஒன்பதாம் பத்தில் திருமேனிக்கு விஷய ஆதீனம் உண்டே )
இவள் கண் அவன் கறுத்த மேனி பார்த்து -அவன் திருக்கன் இவள் திரு மேனியைப் பார்த்து என்றபடி
விண்ணோர் பெருமான் தனை-இந்த ரசத்தை அனுபவிப்பித்து -அமரர்கள் அதிபதியை
மொய்ய சொல்லால் இசை மாலைகள் ஏத்தி உள்ளப் பெற்றேன்-செறிந்து -சப்தம் -வாக்கியம் -பாடம் -இசை உடைத்தான
வெய்ய நோய்கள் முழுதும் வியன் ஞாலத்து வீயவே.-விச்தீர்ணமான ஜகத்தில் -பரிதாப ஹேது
திருமந்தரம் சமசித்த யத்ர அஷ்டாஷர -மகாத்மா எங்கே கொண்டாடப் படுகிறார்களோ
வியாதி துர்பிஷம் திருட்டு சஞ்சரிக்க மாட்டார்கள் -தஸ்கரம் திருட்டு -பிரணவார்த்தம் நன்றாக அறிந்தால் போகுமே
துர்பிஷம் -நமஸ் -அர்த்தம் சம்சித்தியில் போகுமே -நாராயணாய– அர்த்தம் சம்சித்தியில் -வியாதி போகும்
வாழ்கிறவர் இருக்கும் தேசம் இல்லை -அவர்களை கொண்டாட வேண்டும்
இசை மாலைகளில் நாராயணாய ஏத்தினேன் -அதனால் வியாதி போகுமே என்கிறார்
அவித்யா கர்ம வாசனா ருசி பிரகிருதி -ஜன்ம -சம்பந்த சமஸ்த வியாதிகள்
அவித்யா காரணமாகவே -பகவத் ஆத்மா ஞானம் ஒன்றே அடிப்படை -பொய் நின்ற ஞானம்
அதன் அடியாக -பொல்லா ஒழுக்கம் -அதுக்கு அடியாக -அழுக்கு உடம்பு –
இதுவே கர்மா வாசனை ருசி பிரகிருதி ஜன்ம சம்பந்தம் என்றது
ஏத்தி உள்ளப் பெற்றேன் -ஸ்தோத்ரம் பண்ணி -அவன் திரு உள்ளம் மலர அத்தைக் கண்டு ஆனந்தப் பட்டேன் என்றபடி –

‘மையணிந்த கண்களையுடையவளும் தாமரை மலரில் வசிப்பவளுமான பெரிய பிராட்டி நித்திய வாசம் செய்கின்ற மார்பையுடையவனும்,
செந்நிறம் பொருந்திய அழகிய விசாலமான திருக்ண்களையுடையவனும், நித்திய சூரிகளுக்குத் தலைவனுமான
சர்வேசுவரனைச் செறிந்த சொற்களாலே தொடுக்கப்பட்ட இசை பொருந்திய மாலைகளாலே, அகன்ற இவ்வுலகத்திலே
கொடிய நோய்கள் முழுதும் அழியும்படியாகத் துதித்து அனுபவிக்கப் பெற்றேன்,’ என்கிறார்.

மைய கண் – கரிய கண் என்னலுமாம். ‘விண்ணோர் பெருமான்றன்னை வியன் ஞாலத்து வெய்ய நோய்கள் முழுதும்
வீய இசை மாலைகள் ஏந்தி உள்ளப்பெற்றேன்’ எனக் கூட்டுக.

இம்மஹத்தான ஐசுவரியத்துக்கு அடியான திருமகள் கேள்வனாம் படியை அருளிச்செய்கிறார்.

சர்வேசுவரன் திருவருளாலே அவன் கருத்து அறிந்து நடத்தும் பிரமனுடைய திருவருள் காரணமாக, நாரதர் முதலிய முனிவர்கள்
மூலமாக ஆயிற்று ஸ்ரீமத் ராமாயணம் தோன்றியது; இப்படிப்பட்ட ஸ்ரீராமாயணத்திற்காட்டில் தாம் அருளிச்செய்த பிரபந்தத்திற்கு
ஏற்றம் அருளிச்செய்கிறார். ‘திருமாலால் அருளப்பட்ட சடகோபன்’ என்கிறபடியே, அவர்கள் இருவருடையவும் திருவருள் அடியாக
ஆயிற்று இப்பிரபந்தங்கள் பிறந்தன. ‘சீதாயாஸ்சரிதம் மஹத் – சீதையினுடைய பெருமை பொருந்திய சரிதம்’ என்னுமது இரண்டுக்கும் ஒக்கும்;
‘திருமாலவன் கவி யாது கற்றேன்?’ என்றாரே அன்றோ இவரும்? அவன் பாடித் தனியே கேட்பித்தான்;
அவளோடே கூடக் கேட்பித்து அச்சேர்த்தியிலே மங்களா சாசனம் செய்தார் இவர்;
மையகண்ணாள் மலர்மேலுறைவாள் உறை மார்பினனை ஆயிற்றுக் கவி பாடிற்று.
கவிக்கு விஷயம் ஒக்கும்
1-ஐஸ்வர்யஹேது-மிதுனத்தால் /2-ஹேது அவளும் அவனும் ஆகையாலும் -/3-இவர்களைப் பாடி /4-இவர்களால் கேட்க்கப்பட்டு
இப்படி ஐஸ்வர்யத்தாலும் ஹேதுத்வத்தாலும் விஷயத்தாலும் ஸ்ரோத்ரத்வத்தாலும் இதுக்கு ஏற்றம் உண்டே –

மைய கண்ணாள் –
‘கறுத்த கண்களையுடையவள்’ -அஸி தேஷிணா-ஸ்ரீராமா. சுந். 16 : 5.-என்னக் கடவதன்றோ?
அன்றிக்கே, பெரிய பிராட்டியார் திருக்கண்களாலே ஒருகால் பார்த்தால்
ஒருபாட்டம் மழை விழுந்தாற்போலே சர்வேசுவரன் திருமேனி குளிரும்படி யாயிற்று இருப்பது;
ஆதலால், ‘மைய கண்ணாள்’ என்கிறார் என்னுதல். ‘மழைக்கண் மடந்தை’-திருவிருத்தம், 52.- என்னப்படுமவளன்றோ அவள்?’
இவள் திருவருள் இல்லாமையேயன்றோ அல்லாதார் விரூபாக்ஷர் ஆகிறது? ‘இந்த உலகமானது எந்தப் பிராட்டியின் புருவங்களினுடைய
செயல்களின் விசேடத்தால் நியமிக்கும் பொருளாயும், நியமிக்கப்படுகின்ற பொருளாயும் ஆகுகையாகிற தாரதம்மியத்தாலே
மேடு பள்ளமுள்ளதாக ஆகின்றதோ, அந்த ஸ்ரீரங்கநாயகியின்பொருட்டு நமஸ்காரம்,’ என்கிறபடியே,
அவள் உண்மையாலும் இன்மையாலுமே யன்றோ ஒருவன் அழகிய மணவாளப் பிள்ளையாயிருக்கிறதும்,
ஒருவன் பிச்சையேற்பானுமாயிருக்கிறதும்?
பட்டர் தானே இப்படி தைர்யமாக நாம் நாமவதற்கும் அழகிய மணவாளன் அப்படி ஆவதற்கும் இவள் கடாஷமே காரணம் என்கிறார் –
(பரம/ அபரம /அப ரம- சம்பந்தம் /இல்லாமல் -திரு இல்லா தேவர் )

மலர்மேல் உறைவாள் –
செவ்வித்தாமரை மலரின் வாசனை வடிவு எடுத்தாற்போன்று பிறந்தவள். அவயவ சோபை அது; சௌகுமார்யம் இது.
உறை மார்பினன் –
பூவிலும் கூசி அடியிடுமவள் பொருந்தி வசிக்கும் மார்வு படைத்தவன். ‘ஸ்ரீ ஜனக ராஜன் திருமகள் பெருமாளைக் கை பிடித்த பின்பு
ஸ்ரீ மிதிலையை நினையாதது போன்று, இவளும் இவன் மார்வில் இனிமை அறிந்த பின்பு தாமரையை நினையாதவள்’ என்பார்,
‘உறை மார்பினன்’ என்கிறார். ‘மக்களின் அண்மையில் இருக்கிற தன் சரீரத்தை முத்தன் நினைப்பது இல்லை,’ என்கிறபடியே,
முத்தர்கள் இல்லறவாழ்வினை நினையாதது போன்று இவளும் தாமரை மலரை நினையாதபடி.

இப்பாசுரத்தில் ‘மையகண்ணாள் மலர்மேலுறைவாள் உறை மார்பினன்’(ஸ்ரீயபதித்வம்) என்று
கூறுவதற்கு நான்கு வகையில் கருத்துஅருளிச்செய்கிறார்:
‘இம்மஹத்தான ஜஸ்வர்யத்துக்கு அடியான திருமகள்கேள்வனாம்படியை அருளிச்செய்கிறார்’ என்பது, முதல் கருத்து.
‘இம்மஹத்தான ஐஸ்வரியம்’ என்றது, முதற்பாசுரத்தின் முன்னிரண்டு அடிகளையும் திருவுள்ளம் பற்றி.
‘சர்வேசுவரன் திருவருளாலே’ என்றது முதல் ‘இப்பிரபந்தங்கள் பிறந்தன’ என்றது முடிய, இரண்டாவது கருத்து.
இந்த இரண்டாவது கருத்தால், ஸ்ரீராமாயணத்தைக்காட்டிலும்
திருவாய்மொழிக்கு ஏற்றத்தையும் ஏற்றத்திற்குரிய காரணத்தையும் அருளிச்செய்கிறார்.
இங்கு,‘நாரணன் விளையாட் டெல்லாம் நாரத முனிவன் கூற ஆரணக் கவிதை
செய்தா னறிந்த வான்மீகி என்பான்’-கம்பராமாயணத் தனியன்
‘சீதாயாஸ் சரிதம்’ என்றது முதல், ‘என்றாரேயன்றோ இவரும்’ என்றது முடிய,
மூன்றாவது கருத்து. கவிக்கு விஷயம் பிராட்டியும் அவனும் என்கிற இது,
ஸ்ரீராமாயணத்திற்கும் இப்பிரபந்தத்திற்கும் ஒக்கும் என்பது மூன்றாவதன் கருத்து.
‘அவன் பாடித் தனியே’ என்றது முதல் ‘ஆயிற்றுக்கவி பாடிற்று’ என்றது முடிய, நான்காவது கருத்து,
‘அவன்’ என்றது, ஸ்ரீவால்மீகி பகவானை.ஆக, ஸ்ரீராமாயணத்துக்கும் பிரபந்தத்துக்கும் இரண்டு ஆகாரத்தாலே
வேறுபாடும், ஓர் ஆகாரத்தாலே ஒப்புமையும் கூறியபடி.

செய்ய கோலத் தடம் கண்ணன் –
சிவந்து காட்சிக்கு இனியனவாய்ப் பரப்பையுடையனவான திருக்கண்களையுடையவன்.
ஓர் இடத்திலே மேகம் மழை பெய்யாநின்றால்
அவ்விடம் குளிர்ந்திருக்குமாறு போலே, ‘மைப்படி மேனி’ என்கிறபடியே, சர்வேசுவரனுடைய கரிய மேனியை ஒருபடியே
பார்த்துக்கொண்டிருப்பாளே அன்றோ இவள்? இவள் திருக்கண்களிலே
அவன் திருமேனியின் நிறம் ஊறி இவள் மைய கண்ணாளாயிருக்கும்;
‘செய்யாள் திருமார்வினில் சேர் திருமால்’–9-4-1- என்கிறபடியே, மார்பில் இருக்கின்ற
அவளை ஒருபடியே பார்த்துக் கொண்டிருக்கையாலே
அவள் திருமேனியில் சிவப்பு ஊறி இவன் தாமரைக் கண்ணனாய் இருக்கும்;
‘இருவர் படியும் இருவர் கண்களிலே காணலாம்;
அவன் படி இவள் கண்களிலே காணலாம்; இவள் படி அவன் கண்களிலே காணலாம்.
இவர்களுடைய கண் கலவி இருக்கும்படியிறே இது.
கண்ணோடு கண்ணினை கவ்வி கம்பர் –
இவர் கவி விண்ணப்பம் செய்யக் கேட்டு அத்தாலே வந்த பிரீதிக்குப் போக்கு விட்டு
அவன் பிராட்டியைப் பார்க்க, அவள்,அந்ய பரதை பண்ணாமல் –
‘வேறு ஒன்றிலே நோக்கில்லாமல் -என்னைப் பார்க்காமல் –அத்தைக் கேட்கலாகாதோ?’
என்று சொல்ல, இப்படிக் காணும் கேட்டது.

விண்ணோர் பெருமான் தன்னை –
இக்கண்ணின் குமிழிக்கீழே விளையும் நாட்டினைச் சொல்லுகிறது.
அன்றிக்கே, ‘இக்கண்ணழகும் இச்சேர்த்தியழகும் காட்டில் எறித்த நிலா ஆகாமல்,
‘தாமரைக் கண்ணனை விண்ணோர் பரவுந்தலைமகனை என்கிறபடியே,
அனுபவிக்கின்றவர்களை யுடையவனை’ என்னுதல்.
ஆக, பெரிய பிராட்டியாரும் அவனும் கூடவிருக்க நித்தியசூரிகள் ஓலக்கங்கொடுக்க
ஆயிற்றுக் கவி கேட்பித்தது,’ என்றவாறு.

மொய்ய சொல்லால் இசை மாலைகள் ஏத்தி உள்ளப்பெற்றேன் –
சர்வேசுவரனுடைய வேறுபட்ட சிறப்பினை நினைத்துக் ‘கவி பாட’ என்று ஒருப்பட்டு,
‘வேதவாக்குகள் மனத்தால் நினைக்கவும்
முடியாமல் எந்த ஆனந்த குணத்தினின்றும் மீளுகின்றனவோ’ என்கிறபடியே மீளாமல்,
விஷயத்துக்கு நேரான பாசுரம் இட்டுக் கவி பாடப் பெற்றேன்.
‘மொய்’ என்பது செறிவைச் சொல்லுதல்; அல்லது, பெருமையைச் சொல்லுதல், என்றது,
‘செறிவில்லாத பந்தமாய் இருக்கையன்றிக்கே, கட்டுடைத்தாய் இருக்கையாதல்,
விஷயத்தை விளாக்குலை கொள்ளவற்றாய் இருக்கையாதல்’ என்றபடி.
வாசனை மிக்குள்ள மாலை போலே,
கேட்டார் கட்டு உண்ணும்படி இசை மிகுந்து இருப்பனவாதலின், ‘இசை மாலைகள்’ என்கிறது.
நினைத்து அன்று போலேகாணும் ஏத்திற்று; ஆதலால், ‘ஏத்தி உள்ளப் பெற்றேன்’ என்கிறது.
இதனால், ‘மனம் முன்னே வாக்குப் பின்னே’ என்கிற நியதி இல்லையாயிற்று இவர் பக்கல் என்கிறது.
‘என் முன் சொல்லும்’-திருவாய்மொழி, 7. 9 : 2.- என்கிறபடியே,
அவன் நினைவு மாறாமையாலே இது சேர விழுமே அன்றோ?’
‘ஆம் முதல்வன் இவன் என்று தன் தேற்றி’என் நாமுதல் வந்து புகுந்து நல் லின்கவி
தூ முதல் பத்தர்க்குத் தான் தன்னைச் சொன்ன
என் வாய்முதல் அப்பனை என்று மறப்பனோ?’ என்பது திருவாய்மொழி, 7. 9 : 3.‘ என்றபடி.
அன்றிக்கே, ‘‘முடியானே’ என்ற திருவாய்மொழியில் உறுப்புகள் விடாய்த்தாற்போலே, இங்கும் தனித்தனியே
ஆயிற்று அனுபவிக்கிறது’ என்னலுமாம். தாமும் உறுப்புகளைப்போன்று ஈடுபட்டார். என்றது,
‘நாட்டினாய் என்னை உனக்கு முன் தொண்டாக, மாட்டினேன் அத்தனையே கொண்டு
என் வல்வினையைப், பாட்டினால் உன்னை என் நெஞ்சத் திருந்தமை காட்டினாய்,
கண்ணபுரத்து உறை அம்மானே!’-பெரிய திருமொழி, 8. 10 : 9.- என்கிறபடியே,
இவர் வாக்குக் கவி பாட, இவர்தாம் நம்மைப் போன்று சொல்லினாரித்தனை என்றபடி.
நாட்டினாய் என்னை உனக்கு முன் தொண்டாக – அடிமையில் இனிமையறியாத என்னை,
‘இவன் நம்முடையான்’ என்று அங்கே நாடு என்று நிறுத்தி வைத்தாய்;
உன்னுடைய அங்கீகாரத்தைக்கொண்டு முன்புள்ள கர்மங்களை வாசனையோடே போக்கினேன்.
பாட்டினால் உன்னை என் நெஞ்சத்திருந்தமை காட்டினாய் –
பாடின வழியாலே, சர்வஞ்ஞனாய் சர்வசத்தியாயிருக்கிற நீ
என் மனத்திலே இருந்தமையைப் பிரகாசிப்பித்தாய்.
கண்ணபுரத்துறை அம்மானே – பாடுவித்த ஊர் திருக்கண்ணபுரம், பாடுவித்த முக்கோட்டை இருக்கிறபடி.

வெய்ய நோய்கள் முழுதும் வியன் ஞாலத்து வீய –
‘அவசியம் அனுபவித்தே தீரவேண்டும்’ என்கிறபடியே,
அனுபவித்தால் அல்லது நசிக்கக் கடவன அல்லாத கர்மங்கள் முழுதும் நசிக்க.
இவ்வுலகத்திலே இருக்கச் செய்தே, இவை முழுதும் அழிந்தன என்று சொல்லலாம்படி யாயிற்று,
பகவானுடைய அனுபவத்தாலே பிறந்த தெளிவு;
ஆதலால், ‘வியன் ஞாலத்து வீய’ என்கிறது.
அன்றிக்கே,
‘பனை நிழல் போலே தம்மை ஒருவரையும் நோக்கிக் கொள்ளுகை யன்றிக்கே, ஊரும் நாடும் உலகமும்
தம்மைப் போலே யாம்படி தாம் இருந்த உலகத்தில் உண்டான கர்மங்களும் முழுதும் அழிந்தன,’ என்னுதல்.
அங்ஙனம் அன்றிக்கே,
‘வியன் ஞாலம்’ என்று வேறு ஒரு தேசம் போலே இருக்கச் சொல்லுகையாலே,
தாம் ‘வீற்றிருந்து ஏழுலகு’ என்னும் இத் திருவாய்மொழியை அருளிச் செய்கிறது
பரமபதத்திலே இருந்து போலே காணும்,’ என்று அருளிச் செய்வர்.
பாவனையின் மிகுதியாலே திருவுள்ளம் பரமபதத்திலேயாய் அங்குற்றாராய்த் தோன்றுகிறபடி.
வியன் ஞாலம் – ‘ஆச்சரியப்படத் தக்க உலகம்’ என்னுதல்; ‘பரப்பையுடைத்தான உலகம்’ என்னுதல்.

————————————————————————————————–

வீவு இல் இன்பம் மிக எல்லை நிகழ்ந்த நம் அச்சுதன்
வீவு இல் சீரன் மலர்க் கண்ணன் விண்ணோர் பெருமான் தன்னை
வீவு இல் காலம் இசை மாலைகள் ஏத்தி மேவப் பெற்றேன்;
வீவு இல் இன்பம் மிக எல்லை நிகழ்ந்தனன் மேவியே.–4-5-3-

மேன்மையாலும் -ஸ்ரீ யபதித்வத்தாலும் சித்தமான ஆனந்தாதி கல்யாண குணமயன்-யோகம் உடையவனை
ஸ்தோத்ரம் பண்ண ஆனந்த பூரணன் ஆனேன்
வீவு இல் இன்பம் மிக எல்லை நிகழ்ந்த நம் அச்சுதன்-அவிச்சின்ன மான ஆனந்தம் -ஆனந்த வல்லி-மிகுதியான எல்லை –
மனுஷ்ய யௌவனம் -தொடங்கி-மேலே மேலே –
வாக்குக்கும் மனசுக்கும் எட்டாத -என் போல்வாருக்கும் கொடுப்பதில் நழுவாத நம் அச்சுதன்
வீவு இல் சீரன் மலர்க் கண்ணன் விண்ணோர் பெருமான்றனை
ஆனந்தத்துக்கு அடி -எல்லை இல்லாத கல்யாண குண யோகம் -யௌவன தொடக்கமான -நித்ய –
ஸூ சகமான புண்டரீகாஷன் -அகவாய் தெரியுமே திருக் கண்களில்
இதனால் விண்ணோர் பரவும்
வீவு இல்காலம் இசை மாலைகள் ஏத்தி மேவப்பெற்றேன்;-ஒழிவு இல்லாத -கான ரூபம்
வீவு இல் இன்பம் மிக எல்லை நிகழ்ந்தனன் மேவியே-ஆனந்த மயனைக் கிட்டி -அவனது ஒட்டுமே கிட்டினால் -வெட்டினால் விலகுவோம்
-முடிவு இல்லாத அவன் ஆனந்தம் பெற்றோம் -பட்டோமே -உயர்த்தியால் -பஹூமான உக்தி

‘நித்தியமான இன்பத்தினது மிக்க எல்லையிலே தங்கியிருக்கின்ற நம் அச்சுதனும், அழிவில்லாத கல்யாண குணங்களையுடையவனும்,
தாமரை மலர் போன்ற திருக்கண்களையுடையவனும். நித்திய சூரிகளுக்குத் தலைவனுமான சர்வேசுவரனை ஒழிவில்லாத காலமெல்லாம்
இசை பொருந்திய பாமாலைகளால் துதித்துக் கிட்டப்பெற்றேன்; அவ்வாறு அவனைக் கிட்டியதனால்,
முடிவில்லாத மிக்க இன்பத்தினது எல்லையையுடையவன் ஆனேன்,’ என்கிறார்.
‘மிக’ என்பது, ‘மிக்க’ என்ற சொல்லின் விகாரம். ‘மேவி வீவில் மிக்க இன்ப எல்லை(யிலே) நிகழ்ந்தனன்,’ என மாறுக.

‘எல்லா நற்குணங்களையும் உடையனாய் உபயவிபூதிகளையும் உடையனான சர்வேசுவரனைக் கிட்டிக் கவி பாடுகையாலே,
அவனுடைய ஆனந்தத்தையும் விளாக்குலை கொள்ளும்படியான ஆனந்தத்தையுடையன் ஆனேன்,’ என்கிறார்.

வீவு இல் இன்பம் –
அழிவு இன்றிக்கே இருப்பதான ஆனந்தம். ‘அதுதான் எவ்வளவு போதும்?’ என்னில்,
மிக எல்லை நிகழ்ந்த – ‘
இனி, இதற்கு அவ்வருகு இல்லை’ என்னும்படியான எல்லையிலே இருக்கிற. நம் –ஆனந்த வல்லியில் பிரசித்தி.
அச்சுதன் –
இதனை ஒரு பிரமாணம் கொண்டு விரித்துக்கூற வேண்டுமோ? இவ்வானந்தத்திற்கு ஒருகாலும் அழிவு இல்லை
என்னுமிடம் திருப்பெயரே சொல்லுகிறதே அன்றோ?

வீவு இல் சீரன் –
இந்த ஆனந்தத்திற்கு அடியான பரமபதத்தை உடையவன்.
அன்றிக்கே, ‘நித்தியமான குணங்களையுடையவன்’ என்றுமாம்.

குணங்களும் விபூதியும் ஆனந்தத்திற்குக் காரணமாய் அன்றோ இருப்பன?
மலர்க்கண்ணன் –
ஆனந்தத்தை இயல்பாகவேயுடையவன் என்னுமிடத்தைத் திருக்கண்கள் தாமே கோள் சொல்லிக் கொடுப்பனவாம்.
விண்ணோர் பெருமான் தன்னை –
இக்கண்ணழகுக்குத் தோற்று ‘ஜிதம் – தோற்றோம்’ என்பாரை ஒரு நாடாகவுடையவனை.
‘தாமரைக் கண்ணனை விண்ணோர் பரவுந் தலைமகனை’ என்னக்கடவதன்றோ?

வீவு இல் காலம் –
‘சிற்றின்பங்களை அனுபவிக்கப் புக்கால், அவை அற்பம் நிலை நில்லாமை முதலிய குற்றங்களாலே கெடுக்கப்பட்டவை ஆகையாலே,
அனுபவிக்குங்காலமும் அற்பமாய் இருக்கும்; இங்கு, அனுபவிக்கப்படும் பொருள் அளவிற்கு அப்பாற்பட்டதாகையாலே,
காலமும் முடிவில்லாத காலமாகப் பெற்றது,’ என்பார், ‘வீவில் காலம்’ என்கிறார்.
‘ஒழிவில் காலமெல்லாம் என்ன வேண்டியிருக்கும்’ என்றபடி.
இசை மாலைகள் –
‘கருமுகை மாலை’ என்னுமாறு போன்று இசையாலே செய்த மாலை. வாசிகமான அடிமை அன்றோ செய்கின்றது?
ஏத்தி மேவப் பெற்றேன் – ஏத்திக்கொண்டு கிட்டப் பெற்றேன். ‘இதனால் பலித்தது என்?’ என்னில்,
வீவு இல் இன்பம் மிக எல்லை நிகழ்ந்தனன் –
நித்தியமாம் எல்லை இல்லாததான ஆனந்தத்தையுடையேன் ஆனேன்.

‘சர்வேசுவரனுடைய ஆனந்தத்தையும் உம்முடைய ஆனந்தத்தையும் ஒன்றாகச் சொன்னீர்; பின்னை உமக்கு வேற்றுமை என்?’ என்னில்,
‘வேற்றுமை எனக்குச் சிறிது உண்டு,’ என்கிறார் மேல் :ஆனந்தத்தில் சாம்யாபத்தி உண்டே -அதனாலே அதே சப்தங்கள் -பின்னும் –
மேவி – அவனுக்கு இயல்பிலே அமைந்தது; எனக்கு அவனை அடைந்த காரணத்தால் வந்தது; அவனுடைய ஆனந்தத்திற்கு அடி இல்லை;
என்னுடைய ஆனந்தத்திற்கு அடி உண்டு. என்றது, ‘இந்தப் பரமாத்துமா தானே ஆனந்தத்தைக் கொடுக்கிறான்,
என்கிற ஏற்றம் உண்டு எனக்கு; அவனுக்குத் தான் தோன்றி என்றபடி.

——————————————————————–

மேவி நின்று தொழுவார் வினை போக மேவும் பிரான்
தூவி அம் புள்ளுடையான் அடல் ஆழி அம்மான் தன்னை
நாவியலால் இசை மாலைகள் ஏத்தி நண்ணப் பெற்றேன்;
ஆவி என் ஆவியை யான் அறியேன் செய்த ஆற்றையே.–4-5-4-

அநந்ய பிரயோஜநாதிகளை காத்தூட்ட -பரிகரம் உண்டே -வாஹனம் -பெரிய திருவடி -திரு ஆழி உண்டே –
மேவி நின்று தொழுவார் வினை போக மேவும் பிரான்-சேர்ந்து -கலந்து -அநந்ய -விரோதி பாபங்கள் ஸ்வயமேவ நசிக்கும் படி
சம்ச்லேஷித்து –
தூவி அம் புள்ளுடையான் அடல் ஆழி அம்மான்றனை-சிறகு -தூவி -அழகிய -தன்னைக்கொண்டு வர பஷபாதம் –
அம் சிறைப் புள் -வெஞ்சிறை புள் கூட்டிப் போகும் போது
கை கழலா நேமியான் மண் மேல் வினை கடிவான் -யுத்தோன்முகன்-சர்வேஸ்வரன் நியந்தாவை
நாவியலால் இசை மாலைகள் ஏத்தி நண்ணப் பெற்றேன்;-கான ரூபம் சந்தர்ப்பம்
ஆவி என் ஆவியை யான் அறியேன் செய்த ஆற்றையே-அனைவருக்கும் ஆவி –என்னாவி -ஸ்ரீ ரெங்க நாத மம நாத
பிரிகதிர் படாமல் சர்வாத்மா
தாரகன் -அந்தராத்மா பூதன் -தனக்கு சரீரமான என் ஆவியை -ஸ்துதிப்பித்து-உகப்பித்து விரும்புகிற பிரகாரம் -யான் அறியேன்
ஏவம்விதம் என்று பரிச்சேத்து-அறியேன் -இதுவும் -இந்த அறியாமையும் -ஆழம் கால் பட உறுப்பாயிற்று

‘வேறு பயன் ஒன்றையும் கருதாது பொருந்தி நின்று தொழுகின்ற அடியார்களுடைய பாவங்கள் போகும்படி அவர்களோடு சேர்கின்ற உபகாரகனும்,
சிறகையுடைய அழகு பொருந்திய கருடப்பறவையை வாகனமாக உடையவனும், பகைவர்களைக் கொல்லுகின்ற சக்கரத்தைத் தரித்த தலைவனுமான
சர்வேசுவரனை, நாவின் தொழிலாலே இசை மாலைகளைக்கொண்டு ஏத்திக் கிட்டப் பெற்றேன்;
பரமாத்துமாவான சர்வேசுவரன் என் ஆத்துமாவைச் செய்த தன்மையினை யான் அறியமாட்டுகின்றிலேன்,’ என்கிறார்.
தொழுவார் – பெயர். ‘ஆவி, என் ஆவியைச் செய்த ஆற்றை யான் அறியேன்,’ என்க.

‘அநந்யப் பிரயோஜனரையும், முதலிலேயே பயன்களில் இழியாத நித்தியசூரிகளையுமுடையனாய் வைத்து,
நித்தியசூரிகளுக்கு அவ்வருகான தான், பிறந்து இறந்து உழல்கின்ற தம் பக்கல் செய்த மஹோபகாரத்தைத் தம்மால்
அளவிட்டு அறிய முடிகிறது இல்லை,’ என்கிறார்.

மேவி நின்று தொழுவார் –
கிட்டக்கொண்டு –தேஹி மே ததாமி தே -‘நான் உனக்குத் தருகிறேன்; நீ எனக்கு ஒன்று கொடு,’ என்று
வேறு பிரயோஜனங்களுக்கு மடியேற்றுக்கொண்டு போகை அன்றிக்கே
,எழுவார் விடை கொள்வார் ஈன் துழாயானை வழுவா வகைநினைந்து வைகல் தொழுவார்’-முதல் திருவந்-26-என்கிறபடியே,
அவன் றன்னையே பிரயோஜனமாகக் கொண்டு தொழுமவர்கள். என்றது,
‘இன்று வந்தித்தனையும் அமுது செய்திடப்பெறில் நான் ஒன்று நூறாயிரமாக் கொடுத்துப் பின்னும்
ஆளும் செய்வன்’- நாய்ச்சியார் திருமொழி, 9 : 7.என்கிறபடியே தொழுமவர்கள் என்றபடி.
கொடுத்துக் கொள்கை அன்றிக்கே கொண்டதுக்குக் கைக் கூலி கொடுக்க வேண்டும் –
வினை போக –
‘அவர்களுக்குப் பின்னை வினை உண்டோ?’ என்னில், வேறு பிரயோஜனங்களிலே
நெஞ்சு செல்லுகைக்கு அடியான பாவங்கள் போகும்படியாக.
‘ஆஸ்ரயண விரோதி கழிந்ததேயாகிலும், பாப ஹேதுவான சரீரம் இருக்கையாலே வேறு பிரயோஜனங்களிலே மனம்
செல்லுகைக்கு அடியான பாபம் உண்டாகைக்குக் காரணம் உண்டே யன்றோ? அத்தகைய பாபங்கள் போம்படி’ என்பது கருத்து.
மேவும் பிரான் –
இவன் வேறு பிரயோஜனங்களைக் கருதாதவனாய்க் கிட்டினவாறே சர்வேசுவரனும்
வேறு பிரயோஜனத்தைக் கருதாதவனாய்க் கிட்டுவானே அன்றோ?
நடுவில் வினைகளுக்கு ஒதுங்க இடமில்லாமையாலே அழிந்து போகும்;
‘இங்கில்லை பண்டு போல் வீற்றிருத்தல் என்னுடைய செங்கண்மால் சீர்க்கும் சிறிதுள்ளம் – அங்கே
மடியடக்கி நிற்பதனில் வல்வினையார் தாம் மீண்டு அடி யெடுப்ப தன்றோ அழகு?’-என்பது பெரிய திருவந். 30.’ என்றாரே அன்றோ?
பிரான் -உபகாரமே இயல்பு என்னும்படி இருக்குமவன்.

ஆக, முதலடியில், முன்பு சில நாள்கள் வேறு பிரயோஜனங்களைக் கருதினவர்களாயிருந்து, பின்பு தன்னையே
பிரயோஜனமாக விரும்பினார் திறத்தில் உபகரிக்கும்படி சொல்லிற்று.
முதலிலேயே வேறு பிரயோஜனங்களில் நெஞ்சு செல்லாதபடி
இருக்கின்ற திருவனந்தாழ்வான் பெரிய திருவடி முதலானவர்களை உடையனாயிருக்கும்படி சொல்லுகிறது மேல்

தூவி அம் புள் உடையான் –
‘தூவி’ என்ற அடைமொழியால், நினைத்த இடத்திலே கொண்டு ஓடுகைக்கு அடியான கருவியை யுடையவன் என்பதனையும்,
‘அம் புள்’ என்றதனால், ‘தேவரீர் திருவடிகளாலே நெருக்கி அழுத்தின தழும்பினாலே சோபிக்கிறவன்’ என்கிறபடியே,
சோபிக்கிற அழகையுடையவன் ஆகையாலே வந்த ஏற்றத்தையுடையவன் என்பதனையும் தெரிவித்தபடி.
தூவி – சிறகு. அம் -அழகு. அடல் ஆழி – ‘பரமபதத்திலுங்கூட அவனுக்கு என்வருமோ என்று
அச்சங்கொண்டிருப்பவன் ஆகையாலே, எப்போதும் ஒக்க யுத்த சந்நத்தனாய் இருப்பவன்’ என்பார்
அடல் ஆழி’ என்கிறார். அடல் – மிடுக்கு. அம்மான் தன்னை – ‘பெரிய திருவடி திருத்தோளிலே பெயராதிருத்தல்,
திருவாழியைச் சலியாதே பிடித்தல் செய்ய வல்லவனே எல்லார்க்கும் தலைவன்,’ என்பார்,
‘தூவியம் புள்ளுடையான் அடலாழி அம்மான்’ என்று ஒரு சேர அருளிச்செய்கிறார்.-
ஆங்கார வார மதுகேட்டு அழலுமிழும் பூங்கா ரரவணையான் பொன்மேனி – யாங்காணவல்லமே யல்லமே மாமலரான் வார்சடையான்
வல்லரே யல்லரே? வாழ்த்து.’-பரமபதத்திலுங்கூட அவனுக்கு என்வருமோ என்று அச்சங்கொண்டிருப்பவன்–அஸ்தானே பயசங்கிகள் –

நா இயலால் இசை மாலைகள் ஏத்தி –
நெஞ்சு ஒழியவும், வாக்கின் தொழில் மாத்திரமே இசை மாலைகள் ஆயிற்றன; என்றது, நாப் புரட்டினது எல்லாம்
இயலும் இசையுமாய்க் கிடக்கையைத் தெரிவித்தபடி.

ஏத்தி நண்ணப் பெற்றேன் –
இவர் நண்ணியன்று ஏத்தியது; ஏத்தியாயிற்று நண்ணியது.
ஆவி என் ஆவியைச் செய்த ஆற்றை யான் அறியேன் –
‘உலகங்கட்கு எல்லாம் ஓர் உயிரேயோ’ என்றும், ‘ஆத்மந ஆகாஸ : ஸம்பூத :- பரமாத்துமாவினின்றும் ஆகாசம் உண்டாயிற்று’ என்றும்,
‘சர்வாத்துமா’ என்றும் சொல்லுகிறபடியே, ஒரு காரணமும் பற்றாமே எல்லாப் பொருள்கட்கும் ஆவியாய் இருப்பவனை ‘ஆவி’ என்கிறார்,
அன்பன் -அனைவருக்கும் -பொதுவான சப்தம் போலே ஆவி இங்கும் -சநிருபாதிக சர்வாத்மாத்வம் –
தாம் மிகமிகத் தாழ்ந்தவர் என்பதனைத் தெரிவிப்பார், ‘என் ஆவியை’ என்கிறார், என்றது,
அவன் விபு; தாம் அணு என்பதனைத் தெரிவித்தபடி. ‘இந்தப் பரமாத்துமாதானே சந்தோஷத்தைக் கொடுக்கின்றான்?’ என்றும்,
‘வீவில் இன்பம் மிக எல்லை நிகழ்ந்தனன்’ என்றும் சொல்லுகிறபடியே, அவனோடு ஒத்த ஆனந்தத்தை உடையவராம்படி
தம்மைச் செய்தமையைத் தெரிவிப்பார், ‘செய்த ஆற்றை’ என்கிறார்,
அன்றிக்கே, ‘உலகமே உருவமாய் இருக்கின்ற ஒருவன், தன் சரீரத்திலே ஒன்றைப் பெறாப்பேறு
பெற்றானாகத் தலையாலே சுமப்பதே!’ என்கிறார் என்னுதல்
அனுபவித்துக் குமிழி நீர்உண்டு போமித்தனை போக்கி, அது பேச்சுக்கு நிலம் அன்று என்பார், ‘யான் அறியேன்’ என்கிறார்.
அன்றிக்கே, ‘செய்த நன்றியை அறிதலும் அவனது,’ என்கிறார் என்னலுமாம்.

——————————————————————–

ஆற்ற நல்ல வகை காட்டும் அம்மானை அமரர் தம்
ஏற்றை எல்லாப் பொருளும் விரித்தானை எம்மான் தன்னை
மாற்ற மாலை புனைந்து ஏத்தி நாளும் மகிழ்வு எய்தினேன்;
காற்றின் முன்னம் கடுகி வினை நோய்கள் கரியவே.–4-5-5-

அனுபவ உபகரணமான -ஞானாதிகளைக் கொடுத்து அனுபவிப்பிக்கும் சர்வேஸ்வரனை -சகல கிலேசங்களும் –
ச காரணமாக-சடக்கென -ஸ்வயமேவ -நசிக்கும் படி ஸ்துதிக்கப் பெற்றேன்
ஆற்ற நல்ல வகை காட்டும் அம்மானை-சாத்மிக்கப் சாத்மிக்க -பொறுக்க பொறுக்க –
ஞானா பக்திகள் -பரபக்தி -பரஞான பரம பக்தி பர்யந்தமாக -பிரபன்ன —
சாஸ்திரங்கள் கொடுத்து -தானே அவதரித்து -ஆச்சார்ய மூலம் –
பகவத் சம்பந்தி -பர ச்மர்த்தியையே நோக்காகக் கொண்டு –
போக்தாக்களுக்கு பிரகாசிப்பிகும் -நிருபாதிக சுவாமி
அமரர் தம் ஏற்றை -நித்ய சூரிகளுக்கு தருவது போலே -நமக்கும் அருளி -செருக்கை உடையவனாய்
நிரங்குச ஸ்வா தந்த்ரன் –
எல்லாப் பொருளும் விரித்தானை -கீதா உபநிஷத் மூலமாக தன்னையும் தன்னை அடையும் பிரகாரங்களையும்
தன்னை அடைந்து அனுபவிக்கும் பிரகாரங்களையும் -உபாய உபேயங்களை -கர்மாதி -பக்தி யோகம் -அருளிச் செய்தானே
தத்வ ஹித புருஷார்த்தங்களை -மூன்றுமே தானே என்று விரித்தானே
எம்மான்றனை
மாற்ற மாலை புனைந்து ஏத்தி நாளும் மகிழ்வு எய்தினேன்;
சொற்கள் -மறுமாற்றம் -ஸ்தோத்ரம் பண்ணி –
காற்றின் முன்னம் கடுகி வினை நோய்கள் கரியவே-வாயு வேகம் மநோ வேகம் என்பார்களே –
ஞான ப்ரேமாதி பிரதிபந்தங்கள் –ராகத்வேஷாதி மகா வியாதிகளையும்
சீக்ரமாக -வெந்து போகும் படியாக -உரு மாய்ந்து போகும் படி

‘பொறுக்கப்பொறுக்க அனுபவிப்பதற்கு நல்ல வகையைக் காட்டுகின்ற அம்மானை, நித்தியசூரிகளுக்குத் தலைவனை,
எல்லாப் பொருள்களையும் பகவத்கீதை மூலமாக விரித்தவனை, எனக்குத் தலைவனை, வினைகளும் நோய்களும் காற்றிற்கு முன்னே
விரைந்து சென்று கரிந்து போகும்படியாக, சொற்களாலே மாலை புனைந்து ஏத்தி எப்பொழுதும் மகிழ்ச்சியுடையவன் ஆனேன்,’ என்கிறார்.
‘வினைகளும் நோய்களும் காற்றின் முன்னம் கடுகிக் கரிய, எம்மானை மாற்றம் மாலை புனைந்து ஏத்தி, நாளும் மகிழ்வு எய்தினேன்,’ எனக் கூட்டுக,
‘கடுகிக்கரிய, புனைந்து ஏத்தி, மகிழ்வு எய்தினேன்,’ என்க.

‘தான் எல்லார்க்கும் தலைவனாய் இருந்து வைத்து அருச்சுனனுக்கு எல்லாப் பொருள்களையும் பொறுக்கப் பொறுக்க அருளிச்செய்தாற் போலே,
எனக்குத் தன் படிகளைக் காட்ட, கண்டு அனுபவித்து, நான் என்னுடைய தடைகள் எல்லாம் போம்படி திருவாய்மொழி பாடி,
எல்லை அற்ற ஆனந்தத்தையுடையவன் ஆனேன்,’ என்கிறார்.

ஆற்ற –
அமைய : பொறுக்கப் பொறுக்க என்றது, ‘குளப்படியிலே கடலை மடுத்தாற் போலே யன்றிக்கே,
பொறுக்கப் பொறுக்க ஆயிற்றுத் தன் கல்யாண குணங்களை அனுபவிப்பித்தது’ என்றபடி.
‘இந்நின்ற நீர்மை இனியாம் உறாமை’ என்றதன் பின்
‘வீற்றிருந்து ஏழ் உலகு’ என்ற திருவாய்மொழியின் அனுபவத்தை அனுபவிப்பித்தானாகில்,
நான் உளேன் ஆகேன் ஆன்றோ?’ என்கிறார் என்றவாறு.

நல்ல வகை காட்டும் –
தன்னுடைய குணங்களையும் செயல்களையும் அனுபவிப்பிக்கின்ற.
அம்மானை –
உடையவன் உடைமையின் நிலை அறிந்தன்றோ நடத்துவான்?
அமரர் தம் ஏற்றை –
சிறிய விஷயங்களையும் உண்டறுக்க மாட்டாதே போந்த என்னை அன்றோ நித்தியசூரிகள் எப்பொழுதும் அனுபவம்
பண்ணுகிற தன்னை அனுபவிப்பித்தான்?
அன்றிக்கே,
‘தனக்கு ஒரு குறை உண்டாய் அன்று;
அனுபவிக்கின்றவர்கள் பக்கல் குறை உண்டாய் அன்று;
தான் சர்வேசுவரனாய் இருந்து வைத்தும், தன் படிகளை அனுபவிக்கும் நித்திய சூரிகளையுடையனாய் இருந்து வைத்தும்
என்னை அனுபவிப்பித்தான்,’ என்கிறார் என்னுதல்.
தம்மை அனுபவிப்பித்த வகையைச் சொல்லுகிறார் மேல்:

எல்லாப் பொருளும் விரித்தானை –
முதல் வார்த்தையிலே ‘தர்மம் இன்னது என்றும், அதர்மம் இன்னது என்றும் அறிகின்றிலேன்,
‘நான் உனக்கு மாணாக்கன்; உன்னைச் சரணம் அடைந்தேன்; என்னைத் தெளியச் செய்வாய்,’ என்ற அருச்சுனனுக்குப்
பிரகிருதி புருஷ விவேகத்தைப் பிறப்பித்து, கரும யோகத்தை விதித்து, ‘அதுதன்னை, நான் செய்கிறேன் என்ற எண்ணத்தைப்
பொகட்டுப் பலத்தில் விருப்பமில்லாமல் செய்வாய்’ என்று, பின்னர் ஆத்தும ஞானத்தைப் பிறப்பித்து, பின்பு பகவத் ஞானத்தைப் பிறப்பித்து,
எப்பொழுதும் நீங்காத நினைவின் உருவமான உபாசனக் கிரமத்தை அறிவித்து, இவ்வளவும் கொண்டு போந்து இதன் அருமையை
அவன் நெஞ்சிலே படுத்தி, ‘இவை என்னால் செய்யத் தக்கவை அல்ல’ என்று கூறிச் சோகித்த பின்பு,
‘ஆகில், என்னைப் பற்றிப் பாரம் அற்றவனாய் இரு,’ என்று தலைக்கட்டினாற்போலே ஆயிற்று,
கிரமத்தாலே தன்னுடைய குணங்களையும் செயல்களையும் இவரை அனுபவிப்பித்தபடி.

அஸ்தானே சிநேக காருண்யம் -கர்ணன் இத்தாலே இழந்தானே -அதே போலே அர்ஜுனன் கொண்டான் –
மூன்று குற்றங்களை பச்சை இட்டான் -அர்ஜுனன் விஷாத யோகம் முதலில் –தர்மம் அதர்மம் த்யாகுலம் –
பிரகிருதி புருஷ விவேக ஞானம் பிறப்பித்து -பால்யாதி போலேவே -ததாகா தேகாந்திர பிராப்தி –
சத்துக்கு அபாவம் வராது -அசத்துக்கு பாவம் வராது –
நியதம் குரு கர்ம அகர்ம-ஞான யோகம் விட கர்ம யோகம் சிறந்தது -சர்வம் கிருஷ்ணார்ப்பணம் –
ஜனகர் போல்வார் கர்ம யோகத்தால் -காட்டி -த்ரிவித தியாகம் -ஆத்மா சரீரம் பிராணன் இந்திரியங்கள் பரமாத்மா -ஐவரும் உண்டே
கர்த்த்ருத்வ புத்தி இல்லாமல்–கர்த்ருத்வம் சாஸ்திரம் அர்த்தத்வாத் -பராத்து தத் ஸ்ருதே –
அவனுக்கு அடங்கி -பலாபிசந்தி பூர்வகமாக -அஹங்கா மமகாரங்கள் இல்லாமல்
ஞானம் என்னும் அக்னியால் கர்மங்களைத் தொலைத்து -ஆத்ம ஞானம் வளர்த்து –
இத்தை விட பவித்ரமான வேறு உபகரணம் இல்லை –
ஸூவ யாதாத்ம்யம் ஏழாவதில் ஆத்ம ஸ்வரூபம் அறிவித்து மேலே – ஸூவ மஹாத்ம்யம் ஒன்பதாவில்
சர்வஸ்ய-வியாப்தன் தான் -அஹம் சர்வஸ்ய பிரபவம் -தரித்து நிர்வகித்து -தன் பெருமையும் காட்டி அருளி
மன் மநாபவ–நித்ய யுக்தா உபாச்யதே -ஞான தர்சன பிராப்திக்கு -பக்தி ஒன்றே வழி
அனசூயை பொறாமை இல்லாததால் இத்தை சொல்கிறேன் -ராஜ குஹ்ய ராஜ யோகம் –
வகை காட்டி அருள வேணும் -நல்ல வகை என்னை தேர்ந்து எடுத்து சொல்லக் கூடாதே
சரம ஸ்லோகம் -அத்தனையும் செய் -விடு -உபாய பாவமாக இல்லாமை கைங்கர்ய ரூபமாக –
ஸ்வீகாரத்தில் உபாய புத்தி தவிர்த்து -சோகப்பட வேண்டாம் –
பற்றினது என்னை -நம் ஆதீனம் -கரிஷ்யே வசனம் தவ -சொல்லி வந்தான் –
அன்று -மாயன் தெய்வத் தேரில் செப்பின கீதையின் செம்மைப் பொருள் அன்றோ –
புறம்பு சொன்னவை எல்லாம் இவன் நெஞ்சை சோதிப்பதற்காக –
இங்கு வகை –உபாயம் இல்லை -அடியிலே இவனே உபாயம்
கிருஷ்ண த்ருஷ்ணையை வளர்த்ததே –குண சேஷ்டிதங்களை அனுபவிப்பது
அர்ஜுனனுக்கு உபாயம் -ஆழ்வாருக்கு ஸ்வரூப ரூப குண சேஷ்டிதங்களை அனுபவிப்பித்து
பக்தியை வளர்த்ததே ஆற்ற நல் வகை

எம்மான் தன்னை –
‘அருச்சுனனுக்குப் பலித்ததோ, இல்லையோ, அறியேன். அந்த உபதேசத்தின் பலம் நான் பெற்றேன்,’ என்கிறார்.
அவனும் இப்பொருளைக் கேட்ட பின்னர், ‘அடியார்களை நழுவ விடாதவரே! தேவரீர் திருவருளால் என்னால்
தத்துவ ஞானம் அடையப்பட்டது; விபரீத ஞானம் நீங்கியது; எல்லாச் சந்தேகங்களும் நீங்கி நிலைபெற்றவனாய் இருக்கிறேன்;
போர் செய்ய வேண்டும் என்கிற தேவரீருடைய வார்த்தையை இப்போதே நிறைவேற்றிவிடுகிறேன்,’ என்று கூறியவன்,
மீண்டும், ‘சந்தேகத்தையுடையவனாய் இருக்கிறேன்’ என்றானே அன்றோ? –அநு கீதை மீண்டும் பிறந்ததே –
உத்தேசிக்கிறவனும் எல்லார்க்கும் பொதுவானவன்; உபதேசிக்கிற பொருளும் எல்லார்க்கும் பொதுவானது.
ஆகையாலே, அதனை யறிந்த இவர்க்குப் பலித்தது என்னத் தட்டு இல்லை அன்றோ?
‘செம்மை யுடைய திருவரங்கர் தாம்பணித்த மெய்ம்மைப் பெருவார்த்தை விட்டுசித்தர் கேட்டிருப்பர்.’ நாய்ச்சியார் திருமொழி, 11 : 10.
என்னக் கடவதன்றோ? இவர் மநோரதத்திலே நின்று போலே காணும் அருளிச் செய்தது.

த்ரைவர்ணிகர்களுக்கே கீதா சாஸ்திரம் -உபாசனம் -இவர்களுக்கும் பாரதந்திர ஞானம் வந்து ஸ்வாதந்திர லேசம்
இல்லாதவர்களுக்கும் பிரபத்தியே தானே ஸ்வரூப விரோதம் உபாசனம் -சர்வ சாதாரணம் பொது நின்ற பொன்னம் கழலே உபாயம் –
இதனாலே தான் ஆழ்வாருக்கு உபதேசித்து -இது பலித்ததே –
அர்ஜுனன் ரதம் இல்லாமல் விஷ்ணு சித்தர் மநோ ரதம் –
இந்த தேர் தட்டிலே இருந்து இத்தை அருளிச் செய்தார் ஆயிற்று இந்த நல்ல வகையை

மாற்றம் மாலை புனைந்து ஏத்தி –
சொன்மாலையைத் தொடுத்து ஏத்தி. என்றது, அவன் செய்த உபகாரத்திலே தோற்று ஏத்தினார்;
அது திருவாய்மொழியாய்த் தலைக்கட்டிற்று,’ என்றபடி.
மாற்றம் – சொல். நாளும் மகிழ்வு எய்தினேன் – அழிவு இல்லாத ஆனந்தத்தையுடையவன் ஆனேன். எய்துகை – கிட்டுகை.
‘இப்படிப் பெரிய பேற்றினைப் பெற்றீராகில், விரோதிகள் கதி என்ன ஆயிற்று?’ எனின்,

காற்றின் முன்னம் கடுகி வினை நோய்கள் கரியவே –
வினைகளும் வினைகளின் பயனான பிறவியும், காற்றினைக்காட்டிலும் விரைந்து எரிந்து சாம்பல் ஆயின.
புதுப்புடைவை அழுக்குக் கழற்றுமாறு போலே, கிரமத்தாலே போக்க வேண்டுவது தானே போக்கிக் கொள்ளப் பார்க்குமன்றே அன்றோ?
அவன் போக்கும் அன்று அவனுக்கு அருமை இல்லையே?
‘வினைப்படலம் விள்ள விழித்து’ என்கிறபடியே, ஒருகால் பார்த்துவிட அமையுமே?
‘பாப ரூபமான கர்மத்தினுடைய கூட்டங்கள், மேருமலை மந்தர மலை இவைகளைப் போன்று
உயர்ந்திருந்தாலும், வைத்தியனைக் கிட்டிக் கெட்ட வியாதி
அழிந்து போவது, கிருஷ்ணனை அடைந்து பாவங்கள் அழிகின்றன,’ என்கிறபடியே,
வியாதியின் மூலத்தை அறிந்த வைத்தியனைக் கிட்டின வியாதி போலே அன்றோ சர்வேசுவரனைக் கிட்டினால் இவை நசிக்கும்படி?

‘வானோ? மறிகடலோ? மாருதமோ? தீயகமோ? கானோ? ஒருங்கிற்றும் கண்டிலமால் ;- ஆனீன்ற
கன்றுயரத் தாம் எறிந்து காயுதிர்த்தார் தாள் பணிந்தோம் வன்துயரை யாவா மருங்கு.’-இது, பெரிய திருவந். 54.

—————————————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ. வே.வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

பகவத் விஷயம் காலஷேபம் 93- திருவாய்மொழி – -4-4-6….4-4-11–ஸ்ரீ உ. வே. வேளுக்குடி ஸ்வாமிகள்-

May 29, 2016

கூத்தர் குடம் எடுத்து ஆடில்,‘கோவிந்தனாம்’எனா ஓடும்;
வாய்த்த குழல் ஓசை கேட்கில், ‘மாயவன்’ என்றுமை யாக்கும்;
ஆய்ச்சியர் வெண்ணெய்கள் காணில், ‘அவன் உண்ட வெண்ணெய் ஈது’ என்னும்;
பேய்ச்சி முலை சுவைத்தாற்கு என் பெண் கொடி ஏறிய பித்தே!–4-4-6-

மநோ ஹர சேஷ்டிதங்களை அனுசந்தித்து
கூத்தர் குடம் எடுத்து ஆடில்,-துர்லபம் -ஆதில் என்கிறார் –
‘கோவிந்தனாம்’எனா ஓடும்;-செருக்கு மிக்கு கூத்தாடும் கிருஷ்ணன் –
பிராமணர் தனம் விஞ்சினால் யாகங்கள் பண்ணுவது போலே
வாய்த்த குழல் ஓசை கேட்கில்,-நெஞ்சை வருத்தும் ஓசை
‘மாயவன்’ என்றுமை யாக்கும்;-இடைப்பெண்கள் பிரணய ரோஷம் ஆறும் மாறும் படி –
தனது தாழ்ச்சி வைத்து -குழல் ஓசை -மோஹியா நிற்கும்
ஆய்ச்சியர் வெண்ணெய்கள் காணில்,-இடைச்சிகள் கையில் வெண்ணெய்
‘அவன் உண்ட வெண்ணெய் ஈது’ என்னும்;-சஜாதீய வெண்ணெய் -பிராமணிகள் வெண்ணெய் தொட மாட்டானாம் –
அதனால் இவளும் ஆய்ச்சியர் வெண்ணெய் என்கிறாள்
பேய்ச்சி முலை சுவைத்தாற்கு -லோகத்தார்க்கு தன்னையே ரஷித்து உபகாரித்தாரே
என் பெண் கொடி ஏறிய பித்தே!-கொடி போன்ற மெல்லிய இவள் –
பிச்சைப் பற்றி பிச்சிப் பிச்சி சொல்கிறாள்
பூ தரும் புணர்ச்சி -களிறு தரும் பணர்ச்சி போல் இல்லாமல்
தன்னை காப்பாத்திக் கொண்டதற்கு தன்னையே சமர்ப்பிக்கிறார் ஆழ்வார் –

கூத்தாடுமவர்கள் குடங்களை எடுத்து ஏறவிட்டுக் கூத்தாடினார்களாகில், ‘கோவிந்தன் ஆம்’ என்று ஓடும்;
பொருந்திய வேய்ங்குழலின் இசையைக் கேட்டால், ‘கிருஷ்ணன்தான்’ என்று மோகிப்பாள்;
ஆய்ப்பெண்கள் கையிலே வெண்ணெயைப் பார்த்தால், ‘இது அந்தக் கிருஷ்ணன் உண்ட வெண்ணெய் ஆகும்,‘ என்பாள்;
பூதனையினுடைய முலையைச் சுவைத்து அவளை உயிர் உண்ட கண்ணபிரான் விஷயத்தில் என்னுடைய கொடி போன்ற
பெண்ணானவள் கொண்ட பிச்சு இருந்தவாறு என்னே!

தன் மகளுடைய பிச்சுக்கு நிதானத்தையும் அது அடியாக வந்த பிச்சையும் சொல்லுகிறாள்.

கூத்தர் குடம் எடுத்து ஆடில் கோவிந்தன் ஆம் எனா ஓடும் –
இவள் தன்மை அறிந்திருக்கையாலே ‘இவளைக் கிடையாது’ என்று கூத்து விலக்கி யிருந்தாற் போலே காணும் கிடப்பது;
ஆதலின், ‘ஆடில்’ என்கிறாள்.
ஆயர்கள் செருக்குக்குப் போக்கு விட்டு ஆடுவது ஒரு கூத்தாயிற்று குடக்கூத்தாகிறது.இடையர் கூத்தாட வில்லை -இங்கு
விளைவது அறியாதே வழிப்போக்கர் புகுந்து ஆடாநிற்பர்களே, அதனைக்கண்டு, இக்குடக்கூத்து ஆடும் போது நிறைந்த பசுக்களையுடைய
கிருஷ்ணனாக வேண்டும் என்று காண ஓடும். ‘இரந்து திரிகின்ற இவர்கள் அவன் ஆகையாவது என்?’ என்பார்கள் அன்றோ
அதனைக் கேட்டும், அவன் கிருஷ்ணனே என்று காண ஓடுகின்றாள் என்பாள், ‘ஆம் எனா ஓடும்’ என்கிறாள்.

வாய்த்த குழல் ஓசை கேட்கில் மாயவன் என்று மையாக்கும் –
‘பொருளின் தன்மை அறிந்தவர்கள், பொருளின் தன்மை அறியாதவர்கள்’ என்று வாசி இன்றிக்கே எல்லாரையும் ஒக்க
ஈடுபடுத்தும் குழலின் நல்லிசை வந்து செவிப்படில் கிருஷ்ணன் என்று மோஹிப்பாள்;
‘நுடங்கு கேள்வி இசை’ என்னப்படுகின்றவன் அன்றோ அவன்?
அன்றிக்கே, ‘பகல் எல்லாம் பசுக்களின் பின்னே போனேன்; மாதா பிதாக்களுக்குப் பரதந்திரன் ஆனேன்; பிரிந்தேன் ஆற்றேன்,
‘ஒரு பகல் ஆயிரம் ஊழி’ என்பன போலே சொல்லிச் சமாதானம் பண்ணிக்கொண்டு வந்து தோற்றுமவன் என்று,
அவன் குழலிலே வைத்துச் சொல்லும் தாழ்ந்த சொற்களை நினைத்து மோஹிக்கும் என்னுதல்.

ஆய்ச்சியர் வெண்ணெய்கள் காணில் அவன் உண்ட வெண்ணெய் ஈது என்னும் –
முடைநாற்றம் மிக்க வெண்ணெய்கள் காணில், ‘களவு காணப் புக்கு வாயது கையது ஆக அகப்பட்ட போது எஞ்சியிருந்த
வெண்ணெயோடே ஒத்த வெண்ணெய் ஈது,’ என்பாள்.
உண்டு சேஷித்த வெண்ணெய் உடன் சஜாதீயம் -சம்பந்த பதார்த்தம் -உண்டு விட்டது சேஷித்த என்று சொல்ல ஒண்ணாது –
பொதுவான வெண்ணெய் -வாயது கையதாக பிடித்த போது கையில் சேஷித்த வெண்ணெய் என்றவாறு
‘பிராமணப் பெண்கள் தீண்டிய வெண்ணெய் இது,’ என்றால் கொள்ளாள் என்பாள்,
‘ஆய்ச்சியர் வெண்ணெய்’ என்கிறாள்.
‘இவள் இப்படிக் கலங்குகைக்கு நிதானம் என்?’ என்னில், ‘அவன் முன்னரே ஓர் உபகாரத்தைப் பண்ணி வைத்தான்;
அதிலே தோற்ற அன்று தொடங்கி இவள் பிச்சு ஏறத் தொடங்கினாள்,’ என்கிறாள் மேல் :
பேய்ச்சி முலை சுவைத்தாற்கு –
தாயுங்கூட உதவாத சமயத்திலே பூதனை வந்து முலை கொடுக்க, அவ்வளவிலே உணர்த்தி உண்டாய், அவளை முடித்துத் தன்னை
நோக்கித் தந்தானே! அவ்வுபகாரத்திலே தோற்று அன்று தொடங்கி இவள் பிச்சு ஏறினாள்.-‘என்றது, என் சொல்லியவாறோ?’ எனின்,
பூத்தரு புணர்ச்சி, புனல் தருபுணர்ச்சி, களிறு தருபுணர்ச்சி என்ற இவை புணர்ச்சிக்குக் காரணங்களாம்.
எட்டாத கொம்பிலே நின்றதொரு பூவை ஆசைப்பட்டால், இவன் தன்னைப் பேணாதே இவள் ஆசையை முடித்துக் கொடுக்கை;
‘இவன் தன்னைப்பேணாதே நம் நினைவை முடித்தானே!’ என்று அதற்காகத் தன்னைக் கொடுக்கை பூத்தரு புணர்ச்சியாம்.
ஆற்றிலே அழுந்துகிற இவளைத் தான் புக்கு ஏற விட்டதற்காகத் தன்னைக் கொடுக்கை புனல் தருபுணர்ச்சியாம்.
தன் நினைவின்றியே யானையின் கையிலே அகப்பட்டவளை மீட்டுக் கொடுத்ததற்காகத் தன்னைக் கொடுக்கை களிறு தரு புணர்ச்சியாம்.
இங்கே இவற்றுள் ஒன்றும் அன்று; அவன் தன்னை நோக்கினதற்கு இவள் தன்னை எழுதிக் கொடுக்கிறாள்;
என் பெண் கொடி –
இவர்களில் வேறுபாடு, இயல்பாகவே அமைந்த பெண் தன்மையையுடையவள்.
ஏறிய பித்து –
இவள் கொண்ட பிச்சு.

————————————————————————————

ஏறிய பித்தினோடு ‘எல்லா உலகும் கண்ணன் படைப்பு’ என்னும்’
நீறு செவ்வே இடக் காணில், நெடுமால் அடியார்’ என்று ஓடும்;
நாறு துழாய்மலர் காணில்,‘நாரணன் கண்ணி ஈது’ என்னும்;
தேறியும் தேறாதும் மாயோன் திறத்தனளே இத் திருவே.–4-4-7-

பரத்வம் சிஹ்னம் கண்டு -படிகளில் ஈடுபட்டும் -கலங்கிய பொழுதும் இல்லா பொழுதும்
ஏறிய பித்தினோடு ‘எல்லா உலகும் கண்ணன் படைப்பு’ என்னும்’-அதிகப்பட்ட பிரமம் வந்த பொழுதும் – –
வேதாந்த வித்துக்கள் போலே -எல்லா லோகமும் கண்ணன் படைப்பு –
அத்வைதிகள் -கண்ணன் என்பர் -கிருஷ்ணன் ஏவ –
வேதமும் அறிந்தவர்கள் சொல்லும் பிரமாணம்
நீறு செவ்வே இடக் காணில், நெடுமால் அடியார்’ என்று ஓடும்;-பஸ்மம் நீளவாட்டில் இட்டாலும் -ஊர்த்வ புண்டரம் போலே –
த்ரவ்யம் இன்னது என்று அறியாமல் -அத்யந்த வ்யாமுக்தன் அடியார் என்று பிரமித்து
அத்யந்த வ்யாமுக்த சர்வேஸ்வரன் -நெடுமால்
நாறு துழாய்மலர் காணில்,‘நாரணன் கண்ணி ஈது’ என்னும்;உண்மையான திருத் துழாய் கண்டால் ஓடாது இருப்பாளோ
தேறியும் தேறாதும் மாயோன் திறத்தனளே இத் திருவே.-
அத்திரு அவனைப் பற்றும் இத்திரு இருவரையும் பற்றும் -அத்திரு மார்பைப் பற்றும் -இத்திரு திருவடிகளைப் பற்றும்
அவளும் -நின் ஆகத்து இருப்பது -கண்டும் இவளும் நின் தாள் நயந்து இருந்தாளே
மிகவும் கலங்காத அந்த திரு -ஊர்த்வம் மாசாய ஜீவிஷ்ட்டே -தத் தஸ்ய சத்ருசம் பவேத்
பிரிந்த தசையில் சத்ருச சம்பந்த பதார்த்தங்களைக் கண்டு -இத்திரு -கலங்கி
சீதையைப் போல் தேறியும் இவளைப் போலே தேறாமலும்
மாயோன் இடமே ஈடுபடா நின்றாள் – -தெளிந்து கோவை வாயாள் -தேராமல் மண்ணை இருந்து துழாவி –

மிகுந்த மயக்கத்தை அடைந்திருக்கும் நிலையிலும் ‘இந்த எல்லா உலகங்களும் கண்ணபிரானுடைய படைப்பு,’ என்னா நிற்கும்;
திருநீற்றினை நேரே (ஊர்த்துவபுண்டரம்) இட்டிருத்தலைக் கண்டால் ‘சர்வேசுவரனுடைய அடியார்கள்’ என்று ஓடுவாள்;
வாசனை வீசுகின்ற திருத்துழாயினைக் கண்டால், ‘நாராயணனுடைய மாலை இதுவாகும்,’ என்பாள்; ஆதலால், இந்தப் பெண்ணானவள்
தெளிந்த நிலையிலும் தெளியாத நிலையிலும் ஆச்சரியமான குணங்களையுடைய சர்வேசுவரனுடைய திறத்தினளே ஆவாள்.
செவ்வே இடுதலாவது, மேல் நோக்கியிருக்கும்படி ஊர்த்துவபுண்டரமாக இடுதல். ‘இத்திரு, தேறியும் தேறாதும், மாயோன் திறத்தனள்,’ என்க.

‘தேறின போதோடு தேறாதபோதோடு வாசி அற எப்போதும் அவன் திறம் அல்லது அறியாளே!’ என்கிறாள்.

ஏறிய பித்தினோடு எல்லா உலகும் கண்ணன் படைப்பு என்னும் –
இவள் பிச்சேறி இருக்கிற நிலையிலே, ‘இந்த உலகம் எல்லாம் கிருஷ்ணனாலே படைக்கப்பட்டன,’ என்பாள்.
பிராமணர் பிச்சு ஏறினாலும், ஓத்துச் சொல்லுமாறு போலே இவ்விஷயத்தில் வாசனை இருக்கிறபடி.
இவள் பிச்சு ஏறிச் சொல்லும் வார்த்தை கேட்கைக்கு, மைத்திரேயர் முதலிய மஹரிஷிகளைப்போலே தொடர்ந்து திரிய வேண்டிக்காணும்
திருத்தாயார்க்கு இருக்கிறது. ‘எல்லா உலகங்களும் மஹாவிஷ்ணுவின் சமீபத்தினின்றும் உண்டாயின;
அந்த விஷ்ணுவினிடத்தில் தானே எல்லா உலகங்களும் லயமாகின்றன?’ என்னா நின்றாள்.
‘உலகங்களினுடைய பிறப்பும் கிருஷ்ணனே, பிரளயமும் கிருஷ்ணனே என்னும் இவை பிரசித்தம்’ என்கிற
இதில் ஒருக்காலும் கலக்கமில்லை என்றபடி.

நீறு செவ்வே இடக் காணில் நெடுமால் அடியார் என்று ஓடும் –
நீற்றினைச் செவ்வே இட்டிருத்தலைக் கண்டால் மேல் நோக்கியிருக்கும் அத்துணை மாத்திரத்தையே கொண்டு
‘மகா வராஹத்தை எடுத்த மஹாவிஷ்ணுவினால் தூக்கப்பட்டவள் ஆகிறாய்’ என்கிறபடியே, என்றும் ஒக்க பகவானுடைய சம்பந்தம்
மாறாத தேசத்தில் மண்ணைக்கொண்டு தரித்துப் போருமவர்களாகக் கொண்டு மயங்கி, ‘இவர்கள் சர்வேசுவரன் அடியார்’ என்று ஓடாநிற்கும்.
பிராயஸ்சித்தப் பிரகரணங்களிலே பிரஹ்மஹத்தி முதலான பாவங்களைப் பண்ணினார்க்குப் பிராயஸ்சித்தமாக விதித்த
திரவியத்தைத் தாமசபுருஷர்கள் தரித்துப் போந்தார்கள்;
அந்தத் திரவியத்தைப் பாராதே செவ்வை மாத்திரத்தைக் கொண்டு மயங்குகின்றாள் இவள்;
அது பொடிபட்டுக் கிடக்கிறது என்று அறிகின்றிலள்; சிறிது ஒப்புமை அமையுமாயிற்று இவள் மயங்குகைக்கு,
இவளுடைய மயக்கபுத்தி இருக்கிறபடி. ‘நன்று; அவர்கள் செவ்வே இடுவார்களோ?’ என்னில், அதுவும் அன்றிக்கே,
மசகப் பிராயராய் இருப்பவர்கள் தரிப்பார்களே அன்றோ?

நாறு துழாய் மலர் காணில் நாரணன் கண்ணி ஈது என்னும் –
வாசனையையுடைய திருத்துழாயைக் காணில், ‘உபய விபூதிகளையுமுடையனான சர்வேசுவரன் ஐஸ்வரியத்துக்கு இட்ட தனி மாலை ஈது,’ என்னும்.
அது அல்லாததனை அதுவாக நினைத்து மயங்குகின்றவள் அதனையே கண்டால் விடாளே அன்றோ?
‘சுடர்முடிமேலும் தாளிணை மேலும் புனைந்த தண் அம் துழாய்’ என்கிறபடியே, அவன்-சிரஸா வஹித்து – தலைமேல் கொண்டு அடியார்க்குக்
கொடுக்குமது அன்றோ அதுதான்? என்றது. ‘ஸ்ரீசடகோபனுக்குச் சாத்துகை’ என்றபடி.

தேறியும் தேறாதும் –
‘துழாய் மலர் காணில்’ என்றதனை நோக்கித் ‘தேறியும்’ என்கிறாள்;
நீறு செவ்வே இடக்காணில்’ என்றதனை நோக்கித் ‘தேறாதும்’ என்கிறாள்.
அன்றிக்கே, ‘கோவை வாயாள்’ என்ற திருவாய்மொழியை நோக்கித் ‘தேறியும்’ என்கிறாள்;
இத்திருவாய்மொழியை நோக்கித் ‘தேறாதும்’ என்கிறாள் என்னுதல்.

மாயோன் திறத்தனளே இத்திருவே –
மாயோன் இடையாட்டத்திலாள் இத்திரு. பிறந்த ஞானம் கலக்கத்துக்குக் காரணமாம்படி செய்ய வல்ல ஆச்சரியத்தையுடையவன்
என்பாள், ‘மாயோன்’ என்கிறாள். ‘அநபாயிநியான அவளோடு ஒக்க விகற்பிக்கலாம்படி காணும் இவள்படிகள் தாம் இருப்பன’ என்பாள்,
‘இத்திரு’ என்கிறாள். அவளுக்கு அவன் உத்தேஸ்யன்; இருவரும் உத்தேஸ்யரான சேர்த்தி உண்டு இவளுக்கு.

———————————————————————-

திருவுடை மன்னரைக் காணில், ‘திருமாலைக் கண்டேனே’ என்னும்;
உருவுடை வண்ணங்கள் காணில், ‘உலகுஅளந் தான்’என்று துள்ளும்;
‘கருவுடைத் தேவில்கள் எல்லாம் கடல்வண்ணன் கோயிலே’ என்னும்;
வெருவிலும் வீழ்விலும் ஓவாக் கண்ணன் கழல்கள் விரும்புமே.–4-4-8-

ஐஸ்வர்ய -திருவுடை மன்னர்கள் -ஆபி ரூப்ய-உருவுடை வண்ணங்கள் -ஆதரணீயதயா -கருவுடைத் தேவில்கள்-
போலி -கண்டாலும் -எல்லா அவச்தைகளிலும் அவனையே விரும்பும்
திருவுடை மன்னரைக் காணில், ‘திருமாலைக் கண்டேனே’ என்னும்;-பூரணமான ஐஸ்வர்யம் உடைய அரசர்கள்
பரி பூரணமான ஐஸ்வர்யம் உடைய திருமால் -ஏக தேச அல்ப அம்ச சாம்யம் -பிரம கார்யம்
உருவுடை வண்ணங்கள் காணில், ‘உலகுஅளந் தான்’என்று துள்ளும்;-கடலும் காயாவும் கருவிளை
தொடக்கமான உரு -வெவ்வேற வடிவம் வெவ்வேற வர்ணம்
ஒரு நாளே வளர்ந்த செவ்வி உடைய ரூபா சோபை
ஆழி எழ -போலே -கரு நீல வர்ணம் -ஆகாசம் சூரியன் சந்தரன் -சங்கு சக்கரம் -திரு ஆபரணங்கள் நஷத்ரம்
தாயார் மின்னல் போலே வெட்ட -துள்ளுகிறார் ஆழ்வார்
‘கருவுடைத் தேவில்கள் எல்லாம் கடல்வண்ணன் கோயிலே’ என்னும்;-கர்ப்பக்ருஹம் -பிரதிமையை உடைய
எந்த கோயில்களைக் கண்டாலும் -தேவு இல் தேவ க்ருஹம்
கடல் போன்ற தர்ச நீயமானவன் உடைய திருக் கோயில்
வெருவிலும் வீழ்விலும் ஓவாக் கண்ணன் கழல்கள் விரும்புமே.-பந்து சன்னதியால் அஞ்சின போதும் –
ஆர்த்தியாலே மோகித்த போதும் வாசி அற இடைவிடாமல் திருவடிகளை ஆதரியா நிற்கும்

‘செல்வத்தையுடைய அரசர்களைக் கண்டால், ‘திருமகள் கேள்வனைக் கண்டேன்,’ என்பாள்; அழகு பொருந்திய வடிவங்களைக் கண்டால்,
‘உலகத்தையெல்லாம் அளந்த திரிவிக்கிரமன்’ என்று துள்ளுவாள்; படிமங்களையுடைய கோயில்கள் எல்லாம்
‘கடல் போன்ற நிறத்தையுடைய திருமால் கோயில்களே’ என்பாள்; தெளிவுடையளாய்ப் பந்துக்களுக்கு அஞ்சின காலத்திலும்
மயங்கின காலத்திலும் இடைவிடாமல் கண்ணபிரானுடைய திருவடிகளையே விரும்பாநின்றாள்,’ என்றவாறு.
திரு – அரசச்செல்வம். வண்ணம் – வடிவிற்கு ஆகுபெயர். கரு – படிமை. தே இல் – கோயில்; தே – தெய்வம்.
வெருவுதல் – உறவினர்க்கு அஞ்சுதல். வீழ்தல் – மயக்கம்.

‘மிகத்தடுமாறிய நிலையினளாய் இருந்தாலும் இவள் அவனுக்கே உரியவளாய் இருக்கின்றாள்,’ என்கிறாள்.

திருவுடை மன்னரைக் காணில் திருமாலைக் கண்டேனே என்னும்
-குறைவற்ற ஐஸ்வரியங்களையுடைய இராசாக்களைக் காணில், ‘திருமகள் கேள்வனை ஒருபடி காணப் பெற்றேனே’ என்பாள்.
நாதமுனிகள், இராஜா சாமந்தன் தலையிலே அடியை இட்டு யானைக் கழுத்திலே புக்கபடியைக் கண்டு,
சர்வேசுவரன் பிரமன் முதலியோர் தலையிலே அடியிட்டுப் பெரியதிருவடியை மேற்கொள்ளும்படி இதுவாகாதே!’ என்னா
மோகித்தார் என்பது பிரசித்தமே அன்றோ? இராஜா தன் சேனையோடே கங்கை கொண்ட சோழபுரத்து ஏறப் போகச்செய்தே,
பெரிய முதலியார் மன்னனார் திருவடிகளிலே சேவித்திருக்கச் செய்தே, பெண்பிள்ளை வந்து,
‘நம் அகத்திலே ஒரு குரங்கும் இரண்டு வில்லிகளும் ஒரு பெண்ணுமாய் வந்து புகுந்தார்கள்,’ என்றவாறே,
‘பெருமாளும் இளைய பெருமாளும் பிராட்டியும் ஐந்திரவியாகரண பண்டிதனும்’ என்று புத்தி பண்ணிப் பின் தொடர்ந்து போய்,
முன்னே போகின்றவர்கள் ‘போகின்றார்கள், போகின்றார்கள்’ என்னக் கேட்டுக் கீழை வாசலிலே சென்றவாறே,
‘இப்படிப் போகின்றவர்களைக் கண்டீர்களோ?’ என்று வாசலில் அவர்களைப் பார்த்துக் கேட்க,
அவர்கள் ‘கண்டிலோம்’ என்ன, அதுவே காரணமாகத் திருநாட்டிற்கு எழுந்தருளினார் அன்றோ?-காணும் அளவும் போனாரே

உருவுடை வண்ணங்கள் காணில் உலகு அளந்தான் என்று துள்ளும் –
நீலம் குவளை காயா உருப்பெற எழுதின சித்திரம் இவற்றைக் காணில், நிற மாத்திரத்தையும் ஊனக்கண்ணுக்குத் தோன்றுகிற
எளிமைத் தன்மையையும் கொண்டு, குணாகுண நிரூபணம் பண்ணாதே எல்லார் தலைகளிலும் திருவடிகளை வைத்தவன் என்று,
பசுவின் அருகே கட்டி வைத்த கன்று துள்ளுமாறு போலே பரபரப்போடும் கூடிய செயல்களைப் பண்ணாநிற்கும்.

கருவுடைத் தேவில்கள் எல்லாம் கடல்வண்ணன் கோயிலே என்னும் –
கல் புதைத்துக் கிடக்கும் இடங்களைக் காணில், அவையெல்லாம் பெரிய பெருமாள் பள்ளிகொண்டருளுகிற கோயிலே என்பாள்.
இவற்றிற்கு உள்ளீடு சர்வேசுவரன் ஆகையாலே, இவற்றைக் ‘கரு’ என்கிறது.
‘திசைமுகன் கருவுள் இருந்து படைத்திட்ட கருமங்களும்’ என்பது மறைமொழி.

வெருவிலும் வீழ்விலும் ஓவாக் கண்ணன் கழல்கள் விரும்பும் –
தெளிவுடையளாய்ப் பந்துக்களைக் கண்டு அஞ்சியிருக்கும் போதோடு அறிவு அழிந்து மோகித்த சமயத்தோடு வாசி அற,
இடைவிடாதே கிருஷ்ணன் திருவடிகளையே விரும்பாநிற்பாள். ‘இது, என்றும் ஒரே தன்மையாய் இருக்கும்.
மாறாடி வருவது மோஹமும் உணர்த்தியும்; நிலையாயிருப்பது இதுவே.
இதனால், பகவானிடத்தில் ஈடுபட்டு இருக்குந்தன்மை இவர்க்கு உயிரோடு சேர்ந்தேயிருப்பது என்றபடி.
பகவத் பிராவண்யம் -அபி நிவேசம் இவருக்கு -சத்தா பிரயுக்தம் -சஹஜம்

—————————————————————————-

விரும்பிப் பகவரைக் காணில், ‘வியலிடம் உண்டானே’ என்னும்;
கரும் பெரு மேகங்கள் காணில், ‘கண்ணன்’ என்று ஏறப் பறக்கும்;
பெரும் புலம் ஆநிரை காணில், ‘பிரான் உளன்’ என்று பின் செல்லும்;
அரும் பெறல் பெண்ணினை மாயோன் அலற்றி அயர்ப்பிக்கின்றானே.–4-4-9-

ஆஸ்ரிதர் பக்கல் உபகாரம் அனுசந்தித்து சத்ருச சம்பந்திகள் கண்டு வாய் புலற்றி
விரும்பிப் பகவரைக் காணில், ‘வியலிடம் உண்டானே’ என்னும்;சன்யாசிகளைக் கண்டு -வில்லி புத்தூர் பகவர் துறை மாற்றி –
கைங்கர்ய பரர்-குண நிஷ்டர் -வைதிகர் -வேத தாத்பர்யம் ரகச்யார்த்தம் நிஷ்டர் என்பர் அவர் –
பழுதிலா ஒழுகல் ஆறு வேண்டும் வேதம் அறிய –
வேத சாரம் -மனம் உடையீர் ஸ்ரத்தையே அமையும் -ஆத்மாவைப் பாக்கும் திருமந்தரம் -என்பர்
ஞான பூர்த்தியால் ஆஸ்ரிதர்களை
இதுவே சதர்சம் இவர்களுக்கும் அவனுக்கும் -மோஷ ஆச்ரமிகள் சன்யாசிகள் –
கரும் பெரு மேகங்கள் காணில், ‘கண்ணன்’ என்று ஏறப் பறக்கும்;-கறுத்த பெருத்த
ஞான அஜ்ஞ்ஞான விபாகம் இல்லாமல் வடிவைக் காட்டி உபகரித்தவன் -பறக்க தேடா நிற்கும்
பெரும் புலம் ஆநிரை காணில், ‘பிரான் உளன்’ என்று பின் செல்லும்;-பசுக் கூட்டம் பார்த்தால் –
இவற்றை மேய்த்து ரஷிப்பவன்–கண்டால் கண்ணன் –
கூடவே வருவார் -நடுவில் நிச்சயமாக உளன் -உடன் கூட அனுபவிப்பான்
அரும் பெறல் பெண்ணினை மாயோன் அலற்றி அயர்ப்பிக்கின்றானே.-உபகார சேஷ்டிதங்களை உடைய -மயக்கம் அடைய வைக்கிறான் –

‘பகவானுக்கு அடிமைப்பட்ட துறவிகளைக் கண்டால், விரும்பி, ‘அகன்ற உலகத்தை எல்லாம் புசித்த திருமால்’ என்பாள்;
கரிய பெரிய மேகங்களைக் கண்டால், ‘கண்ணபிரான்’ என்று கூறிக் கொண்டு மேலே எழுந்து பறப்பதற்குப் பாராநின்றாள்;
பெரியனவாயும் காட்சிக்கு இனியனவாயும் இருக்கிற பசுக்கூட்டங்களைக் கண்டால், ‘கண்ணபிரான் அவற்றினிடையே இருக்கிறான்,’ என்று
அவற்றின் பின்னே செல்லுவாள்; பெறுதற்கரிய என் பெண்ணினை மாயவன் வாய்விட்டு அலற்றும்படி செய்து மயங்கச் செய்கிறான்,’ என்கிறாள்.

பகவர் – பகவானுக்கு அடிமைப்பட்டவர்கள்; சந்யாசிகள். ‘காணில் விரும்பி என்னும்’ என மாறுக. விரும்புதல் – பெண்ணின் தொழில்.

பெறுதற்கு அரிய இவள், தன்னையே வாய் வெருவி மயங்கும்படி பண்ணா நின்றான்,’ என்கிறாள்.

பகவரைக் காணில் விரும்பி வியல் இடம் உண்டானே என்னும் –
ஞானம் பக்தி வைராக்கியம் முதலான குணங்களால் நிறைந்தவர்களாய் இதர விஷயங்களில் விரக்தராய்
இருக்கும் துறவிகளைக் காணில், ஆதரித்து,
‘பிரளய ஆபத்திலே உலகத்தை அடைய வயிற்றிலே வைத்து நோக்கி, பாதுகாக்கப்பட வேண்டிய பொருள்களைப் பாதுகாத்தலைச் செய்கையாலே
வந்த மன நிறைவு தோற்ற இருக்கின்ற சர்வேசுவரன்,’என்னும். வியல் இடம் – அகன்றதாய் உள்ள பூமி.
‘நின்ற குன்றத்தினை நோக்கி நெடுமாலே!’ என்று மயங்கினாற் போலே காணும் அடியார்களைச் சர்வேசுவரனாகக் கொண்டு
மயங்குகின்றதாகிய இதுவும்.
அசித்துக்கும் ஈசுவரனுக்கும் பேதமுண்டாயிருக்கச் செய்தேயும் ஐக்கியம் கூறியது மயக்கத்தின் காரியமானாற் போன்று, இதுவும்
மயக்கத்தின் காரியம்’ என்றபடி.

கரும்பெரு மேகங்கள் காணில் கண்ணன் என்று ஏறப் பறக்கும் –
கறுத்துப் பெருத்துச் சிரமத்தைப் போக்கக்கூடியதான மேகத்தைக் கண்டவாறே, அவ்வடிவையுடைய கிருஷ்ணன் என்று,
பறப்பாரைப்போலே இருக்கப் பரபரப்போடு நிற்பாள். மேகத்தைக் கண்ட அளவில் சிறகு எழும் போலே காணும். -மயில் ஆலுமே –
சேர்ப்பாரை பஷிகள் ஆக்கி பிரபன்ன ஜட கூடஸ்தர் -ஜ்ஞான கர்மங்களே சிறகுகள் –
மேகத்தைக் கண்டவாறே ஒரு பக்ஷபாதம் உண்டாகக் கூடியதன்றோ?’ ‘இராஜேந்திர சோழன் என்ற ஊரிலே
திருவாய்க்குலத்தாழ்வார் என்ற ஒருவர் உண்டு; அவர் கார் காலத்தில் பயிர் பார்க்க என்று புறப்பட்டு மேகத்தைக் கண்டவாறே மோஹித்து
விழுந்தார்; அவர் விழுந்ததைக் கண்டு நின்ற குடிமகன் ஓடி வந்து அவரை எடுத்துக்கொண்டு வந்து வீட்டிலே விட்டு,
‘இவர் தன்மை அறிந்திருந்தும் இந்நாளிலே இவரை வயல் பார்க்கப் புறப்பட விடுவார் உண்டோ?’ என்றான்.

‘குவலையஞ் சூழ்கடல் காயா மரகதங் கொண்டல் நெய்தல்
குவலையங் கண்டன்பர் நைவரென்றால் கொற்ற வாணற்குவா
குவலைய நேமி தொட்டாயரங் கா!கொடும் பல்பிறப்பா
குவலையங் கற்றுனைக் காணில் என்னாங்கொல் குறிப்பவர்க்கே?’–என்ற திவ்வியகவியின் திருப்பாசுரம், இங்கு அநுசந்திக்கத்தகும்.

‘வெய்யோனொளி தன்மேனியின் விரிசோதியின் மறையப்
பொய்யோஎனு மிடையாளொடு மிளையானொடும் போனான்
மய்யோ மர கதமோ மறிகடலோமழை முகிலோ
அய்யோஇவன் வடிவென்பதொர் அழியாஅழ குடையான்’– என்ற கம்பநாட்டாழ்வார்

பெரும்புலம் ஆநிரை காணில் பிரான் உளன் என்று பின்செல்லும் –
அளவு மிகுந்து பெருத்துக் காட்சிக்கு இனியதாய் இருக்கிற பசுநிரைகளைக் காணில், ‘என் நிலை அறிந்து வந்து
உதவுகைக்காகக் கடைக்கூழையிலே வாரா நின்றான்’ என்று அவற்றிற்குப் பின்பு ஏறப்போகாநிற்கும்.
அன்றிக்கே, ‘அவற்றின் திரளுக்குள்ளே அவனையும் காணலாம்’ என்று அவற்றின் பின்னே போகா நிற்கும் என்னுதல்.
பின் செல்லும்’ என்பதற்கு இரண்டு வகையாகக் கருத்து அருளிச்செய்கிறார்:
ஒன்று, கிருஷ்ணன் பசுக்கூட்டங்கட்குப் பின்னே வருகின்றான் என்று நினைத்து, முன்னிடத்தில் இருக்கும் இவள் கிருஷ்ணனிருக்கும்
பின்னிடத்திற்குச் செல்கின்றாள் என்பது.
மற்றொன்று, கிருஷ்ணன் பசுக்களின் மத்தியில் இருக்கிறான் என்று நினைத்துப்
பசுக்களின் பின்னேயே தொடர்ந்துசெல்கின்றாள் என்பது.

அரும்பெறல் பெண்ணினை –
ஸ்ரீராமா! தசரத சக்கரவர்த்தி செய்த மஹத்தான தவத்தாலும் மஹத்தான யாகம் முதலிய செயல்களாலும்
அவருக்குப் புத்திரன் ஆனாய்,’ என்கிறபடியே, தம்மைப் பெற்றவர்கள் பட்ட வருத்தம் அல்ல கண்டீர் நான் இவளைப் பெறுதற்குப் பட்டது;
அடியிலே பல காலம் தவம் செய்தே அன்றோ இவளைப் பெற்றது இவள்.
‘அடியிலே’ என்றது, சிலேடை : ‘ஆதி காலத்திலே’ என்பதும், ‘திருவடிகளிலே’ என்பதும் பொருள்.

மாயோன் –
‘குரவர்களாகிய தாய் தந்தையர்கள் நம்மை என் செய்வார்கள்?’ என்கிறபடியே, பெற்றவர்களைக் கை விடும்படி செய்ய வல்லவன்.
அலற்றி அயர்ப்பிக்கின்றான் –
எப்போதும் தன்னையே வாய் வெருவும்படி செய்து, அத்துணையில் நில்லாது மயங்கும்படி பண்ணாநின்றான்.

—————————————————————————————-

அயர்க்கும்;சுற்றும் பற்றி நோக்கும்; அகலவே நீள் நோக்குக் கொள்ளும்;
வியர்க்கும்; மழைக் கண் துளும்ப வெவ் வுயிர் கொள்ளும்;மெய் சோரும்;
பெயர்த்தும்‘கண்ணா!’என்று பேசும்; ‘பெருமானே, வா!’என்று கூவும்;
மயற் பெருங் காதல் என் பேதைக்கு என் செய்கேன் வல் வினையேனே?–4-4-10-

சௌலப்யாதி குணங்களை அனுசந்தித்து சத்ருசா சம்பந்தி பதார்த்தங்களையும் கூட காண முடியாத ஆர்த்தி விஞ்சி
அயர்க்கும்;சுற்றும் பற்றி நோக்கும்; அகலவே நீள் நோக்குக் கொள்ளும்;மோகியா நிற்கும் -நடுவில் கொஞ்சம் உணர்ந்து சுற்றும் நோக்கும்
உணர்த்தி வந்ததும் இந்த அவஸ்தையில் வாராது ஒழிவான் என்று
வந்து கொண்டு இருக்கிறான் -என்று கண்ணை விளித்து தூரமும் பார்க்கும்
வியர்க்கும்;காணா விட்ட வாறே -பிரணய ரோஷம் -தலை எடுத்து வியர்த்து நீராகி நிற்கும்
மழைக் கண் துளும்ப வெவ் வுயிர் கொள்ளும்;மெய் சோரும்;-மழை போலே -வெளியில் வியர்த்த நீர் தவிர கண் வழியே வரும்
-கோப அக்னியால் சுவரி அடி அற்று உலர்ந்து வெம்மை தோன்ற நெடு மூச்சு எறியும்
பரிதாபத்தால் சரீரம் தரிக்க முடியாமல் சோர்ந்து போகும்
பெயர்த்தும்‘கண்ணா!’என்று பேசும்; ‘பெருமானே, வா!’என்று கூவும்;ஆசையால் மீண்டும் கண்ணா -சம்பாதித்து
பெயர் கேட்ட பின்பு வந்தானாக -கை காட்டிதற்கே தூணில் தோன்றினான் -அதிசயமாக வந்தானே -என்று அழைக்கும்
மயற் பெருங் காதல் என் பேதைக்கு என் செய்கேன் வல் வினையேனே?-பிச்செரும் படி பெரும் காதல்
பவ்யம் இல்லாத சொல் கேளாத பெண் -அதி பிரபல பாவம் -வாராதவனை வரப் பெறுவேனோ -இவளை ஆற்றுவேனோ

‘மயங்குவாள்; பின்னர் நாற்புறத்திலும் பலகாலும் பாராநிற்பாள்; விரிந்து செல்லும்படி நீண்ட தூரம் பார்ப்பாள்;
பின்னர் வியர்த்து நீராக நிற்பாள்; குளிர்ந்த கண்களில் நீர் துளும்பும்படி பெருமூச்சு எறிவாள்; தளர்வாள்; மீண்டும்,
‘கண்ணபிரானே!’ என்று பேசுவாள்; ‘பெருமானே, வா!’ என்று கூவுவாள்;
பெரிய காதலால் மயக்கங்கொண்ட என் பெண்ணிற்கு வல்வினையேன் என் செய்வேன்!’ என்கிறாள்.
‘அயர்க்கும், நோக்கும், கொள்ளும், வியர்க்கும், கொள்ளும், சோரும், பேசும், கூவும்’ என்பன,
செய்யும் என் முற்றுகள். பேதை – பருவப்பெயர்.

நிறம் முதலியவற்றால் எம்பெருமானை ஒத்திருக்கும் பொருள்களை நினைப்பதற்கு ஆற்றல் இல்லாத துன்பத்தின்
மிகுதியாலே இவளுக்குப் பிறந்த வேறுபாடுகளைச் சொல்லி, ‘நான் என் செய்வேன்?’ என்கிறாள்.

அயர்க்கும் –
நின்றுகொண்டு இருக்கும்போதே சித்தத்தின் செயல் அற்று மயங்குவாள்.
சுற்றும் பற்றி நோக்கும் ‑
பின்னையும் அறிவு குடிபுகுந்து, தன் ஆபத்தே செப்பேடாக அவன் வரவை அறுதியிட்டு, வந்து அருகே நின்றானாக,
ஆசையோடு சுற்றும் பாரா நிற்பாள்.
அகலவே நீள் நோக்குக் கொள்ளும் –
அங்குக் காணாமையாலே, ‘எப்படியும் இவ்வளவில் புறப்படாதொழியான்,’ என்று அவன் புறப்படுதல் தொடங்கிக்
காண்கைக்காகப் பரக்கக் கொண்டு பரம பதத்தளவும் செல்லப் பாரா நிற்பாள்.
வியர்க்கும் –
அங்குக் காணாமையாலே, ‘என்னளவு இதுவாய் இருக்க வாராது ஒழிவதே!’ என்று நொந்து, இளைப்பாலே வேரா நிற்பாள்.
மழைக்கண் துளும்ப வெவ்வுயிர் கொள்ளும் –
மழைபோலே அருவி சொரிகின்ற கண்ண நீரானது கோபத்தீயாலே சுவறி அடி அற்றுக் கண்ணளவிலே துளும்பும்படி
அவ்வெம்மை தோன்ற நெடுமூச்சு எறிவாள். என்றது, ‘வியர்வையாய்ப் புறப்பட்டுப் புறப்படாதது கண்ணீராய்ப் புறப்படும்;
கண்ணீராய்ப் புறப்படாதது நெடுமூச்சாய்ப் புறப்படும்,’ என்றபடி.

மெய் சோரும் –
அகவாயில் உள்ளது நேராகப் போனவாறே தன் வசம் இல்லாத சரீரத்தையுடையவள் ஆம்.
‘இவள்படியே இப்படித் துவளுவது! ஏன்? முடிந்தாலோ?’ எனின், அற முடிய ஒட்டாதே ஆசையாகிய தளை?
பெயர்த்தும் கண்ணா என்று பேசும் –
மீண்டும் ‘கிருஷ்ணனே!’ என்று விளிப்பாள். பெருமானே வா என்று கூவும் – அவ்வாறு விளித்து, அந்தத் திருப்பெயராலே
பிறந்த நினைவின் மிகுதியாலே வந்த உருவெளிப்பாட்டாலே வந்தானாகக் கொண்டு, ‘வா’ என்று அழைப்பாள்.
அன்றிக்கே, பின்னையும் ‘உடையவன் உடைமையை இழக்க விடுமோ?’
நாம் படுவது காண மறைய நின்றானத்தனை’ என்று ‘வா என்று அழைப்பாள்’ என்னுதல்.
‘பெருமானே வா என்று கூவும்’ என்றதற்கு இரண்டு விதமாகக் கருத்து அருளிச்செய்கிறார், ‘அவ்வாறு விளித்து’ என்று தொடங்கி.
‘உரு வெளிப்பாடு’என்றது, ஞானத்தின் தெளிவை. முதல் கருத்து, பாவனையின் மிகுதியாலே
முன்னே தோன்றுகையாலே வா என்று அழைக்கிறாள் என்பது.
இரண்டாவது கருத்து, ‘இந்நிலையில் உடையவன் நம்மை விட்டுப் போகான், மறைய நிற்கின்றான்’ என்று
நினைத்து வா என்று அழைக்கிறாள் என்பது.

மயல் பெருங்காதல் என் பேதைக்கு –
மயக்கத்தைச் செய்யக் கூடியதான பெரிய காதலையுடைய என்னுடைய இளம் பெண்ணுக்கு,
என் செய்கேன் –
இவள் மயங்காதபடி செய்யவோ? நான் இதனைப் பொறுத்திருக்கவோ?
வல்வினையேனே –
இவளை இப்படிக் காணும்படி மஹா பாவத்தைப் பண்ணினேன்!
ஆழ்வான் திருக்கண்கள் நோவுபட்ட பின்பு எம்பெருமானார் திருவுள்ளம் நோவுபட்டாற்போலேகாணும் திருத்தாயார் திருவுள்ளமும் படுகிறது
தாயாரின் ஈடுபாடு, ‘இவள் படியே’ என்று தொடங்கும் வாக்கியம். ‘
இவள்படி’ என்றது, சிலேடை : சரீரமும், விதமும்.

‘அவத்தப் புன் சமயச் சொற் பொய்யை மெய்யென்று அணிமிடறு புழுத்தான்றன் அவையில் மேவிச்
‘சிவத்துக்கு மேற்பதக்குண்’ டென்று தீட்டும் திருக் கூர வேதியர்கோன் செவ்வி பாடப்
பவத்துக்கம் பிணி நீங்க நரகந் தூரப் பரமபதங் குடிமலியப் பள்ளி கொள்ளும்
நவத்துப்புச் செங்கனி வாய்க் கரிய மேனி நம்பெருமாள் அரங்கேசர் ஆடி ரூசல்.’– என்றார் திவ்விய கவியும்.

—————————————————————————–

வல்வினை தீர்க்கும் கண்ணனை வண் குருகூர்ச் சடகோபன்
சொல் வினையாற் சொன்ன பாடல் ஆயிரத்துள் இவை பத்தும்
நல்வினை என்று கற்பார்கள் நலனிடை வைகுந்தம் நண்ணித்
தொல் வினை தீர எல்லாரும் தொழுது எழ வீற்றிருப்பாரே.–4-4-11-

பகவத் சேஷத்வ சாம்ராஜ்ய பிரதிஷ்டிதர் ஆவார்கள் புருஷார்த்தம் கிட்டும் –
வல்வினை தீர்க்கும் கண்ணனை வண் குருகூர்ச் சடகோபன்-ஆஸ்ரிதர் -சம்ச்லேஷ பிரபந்தகங்களை தீர்க்கும்
அனுபவிக்க விரோதியான -ஆழ்வார் தசை –
சர்வ பாபேப்யோ மோஷயிஷ்யாமி
சொல் வினையாற் சொன்ன பாடல் ஆயிரத்துள் இவை பத்தும்-வாசிக சேஷ வ்ருத்தி ரூபமாக -வாசா கைங்கர்யம்
நல்வினை என்று கற்பார்கள் நலனிடை வைகுந்தம் நண்ணித்-நலனுடை -பாட பேதம் -அவன் மேவு வைகுந்தம் -கிட்டும் –
விலஷண வ்ருத்தி விசேஷம் கற்பதே தொண்டு என்று நினைத்து
பகவத் அனுபவ ஆனந்தம் உடைத்தான ஸ்ரீ வைகுண்டம்
தொல் வினை தீர எல்லாரும் தொழுது எழ வீற்றிருப்பாரே-அவித்யாதிகள் தீர -மறுவல் இல்லாதபடி –
நித்ய சூரிகள் ததீய சேஷத்வம் தோன்ற தொழுவார்
கிளர்த்தி உடன் நாடு நாயகமாக வீற்று இருப்பார் -சேஷத்வ சாம்ராஜ்ய பட்டாபிஷேகம் –
வேறு பாடு தோன்ற -4-4- சொல்லி வந்த வேறுபாடு –
ஆழ்வாரைப் பற்றி வந்த வேறுபாடு என்றபடி

வளப்பம் பொருந்திய திருக்குருகூரில் அவதரித்த ஸ்ரீ சடகோபர், கொடிய வினைகளை எல்லாம் தீர்க்கின்ற கண்ணபிரான்
விஷயமாகச் சொல்லியல்லாது நிற்க ஒண்ணாத பத்தி பாரவஸ்யத்தாலே சொன்ன திருப்பாசுரங்கள் ஆயிரத்துள்
இந்தப் பத்துத் திருப்பாசுரங்களையும் புண்ணியம் என்று கற்பவர்கள், நன்மையையுடைய பரமபதத்தை அடைந்து,
பழமையான வினைகள் எல்லாம் நீங்க, எல்லாரும் தொழுது எழும்படி வேறுபட்ட சிறப்போடு எழுந்தருளியிருப்பார்கள்.
‘சடகோபன் கண்ணனைச் சொல்வினையாற்சொன்ன பாடல் இவை பத்தும் நல்வினை என்று கற்பவர்கள், தொல்வினை தீர,
வைகுந்தம் நண்ணி, எல்லாரும் தொழுது எழ வீற்றிருப்பர்,’ என்க. வண்மை சடகோபருக்கு அடை : குருகூருக்கு ஆக்கலுமாம்.

‘இத்திருவாய்மொழி கற்றார், சமுசாரத்துக்கம்போய், பகவானை விட்டுச் சிறிதும் பிரிதல் இல்லாத திருநாட்டிலே
எல்லாரும் தலைமேல் தாங்கும்படி மேன்மையோடே இருக்கப்பெறுவர்,’ என்கிறார்.

வல் வினை தீர்க்கும் கண்ணனை –
அடியார்களுடைய பிரிவிற்குக் காரணமான மஹா பாவத்தைப் போக்கும் தன்மையனான கிருஷ்ணனை.
இதனால், ‘பெற்றவர்கள் கைவிட்டால் பிடித்தவர்கள் கைவிடார்கள்,’ என்பதனைத் தெரிவித்தபடி.
என் செய்கேன் என்று கை விட்டதும் -இவன் கைக் கொண்டான் -கை பிடித்தவர் -இதம் சீதா -பிரியம் உடன் -பிடித்தவர்
வண் குருகூர்ச் சடகோபன் –
பெருவள்ளலான ஆழ்வார். இன்று நாமுங்கூட இருந்து பகவானுடைய குணங்களை அநுசந்தானம் பண்ணும்படி
பண்ணின வள்ளன்மை அன்றோ? -ஆதலால், ‘வண் சடகோபன்’ என்கிறது.
சொல் வினையால் சொன்ன பாடல் –
சொல்லி அல்லது நிற்க ஒண்ணாத பத்தி பாரவஸ்யத்தாலே சொன்ன பாடல்.
அன்றிக்கே, ‘பகவானுடைய குணங்களின் பலாத்காரத்தாலே சொன்ன பாடல்’ என்னுதல்.
அன்றிக்கே, ‘சொல் தொழிலால் – அதாவது, வாசிகமான அடிமையால் சொன்ன பாடல்’ என்னுதல்.
ஆயிரத்துள் இவை பத்தும் –
ஆயிரம் திருவாய்மொழியிலும், இவர் எம்பெருமானுக்கு நிறம் முதலியவற்றால் ஒத்திருப்பவையான பொருள்களைக் கண்டு
அவனாக நினைத்துப் பிச்சு ஏறின இத்திருவாய்மொழி.

நல் வினை என்று கற்பார்கள் –
இப்படிப் பிச்சு ஏறின இது எல்லார்க்கும் கூடுவது ஒன்றா? அன்றே அன்றோ?
ஆன பின்னர், இது பாவனம் என்றாகிலும் கற்க வல்லவர்கள்.
அன்றிக்கே, ‘இது விலக்ஷண கிருத்யம் என்று கற்குமவர்கள்’ என்னுதல்.
நலனிடை வைகுந்தம் நண்ணி –
பிரிவு என்பது சிறிதும் இல்லாத பரமபதத்தைக் கிட்டி.
தொல்வினை தீர –
அநாதியாய் வருகின்ற அவித்தியை முதலானவைகள் தீர்ந்து.
எல்லாரும் தொழுது எழ
சமுசார சம்பந்தம் சிறிதும் இல்லாதவரான நித்திய சூரிகளும் தொழுது ஆதரிக்க. என்றது,
‘பணியா அமரருங்கூட, ‘பதியினில் பாங்கினில் பாதங்கள் கழுவினர்’ என்கிறபடியே,
அவர்கள் வழிபாடு செய்து ஆதரிக்கும்படி ஆவர்கள்,’ என்றபடி.
‘தொழுது எழு என் மனனே’ என்று, அநாதிகாலம் ‘பரம்பொருளைப் பற்றிய அறிவு இல்லாதவன்,
இல்லாதவன் போலே ஆகிறான்,’ என்னும்படி
போந்தவர் அவனைத் தொழுது உய்வு பெற்றாற்போலே காணும், இவர் பாடின திருவாய்மொழியைக் கற்றவர்களைத்
தொழுது நித்திய சூரிகள் உய்வு பெறும்படி.
வீற்றிருப்பாரே –
அவன் இறைவனாம் தன்மைக்கு முடிசூடி இருக்கப்பெறுவர்கள்.
‘அந்த முத்தன் சுதந்தரன் ஆகிறான்,’ என்னக் கடவதன்றோ? என்றது,
‘கர்மம் அற்றவன் ஆகின்றான்’ என்றபடி. வீற்று -வேறுபாடு.
ஸ்வராட் பவதி -ஸ்ருதி-சாம்யாபத்தி அடைந்து -கைங்கர்ய சாம்ராஜ்யத்துக்கு முடி சூடி என்றபடி –

————————————————————————–

திராவிட உபநிஷத் சங்கதி -ஸ்ரீ வாதி அழகிய மணவாள ஜீயர் –

தேன பிரகர்ஷம் அதிமாத்ர பவம் ஸூ கீயம் –
சாத்ம்யம் விதாதுமத தூரகத முகுந்தே
சம்பந்திநஸ்ய சத்ருநஸ்ய விலோக்ய
சௌரெ ப்ரமை யால் முனி ஆர்த்திம்

தேன பிரகர்ஷம் அதிமாத்ர பவம் ஸூ கீயம் –
சாத்ம்யம் விதாதுமத -சாத்ம்யம் ஆவதற்கு
தூரகத முகுந்தே -தள்ளிப் போக தளன்று
சம்பந்திநஸ்ய சத்ருநஸ்ய
விலோக்ய சௌரெ-பார்த்து
ப்ரமை யால்
முனி ஆர்த்திம்
பொறுக்கப் பண்ணி -சாத்ம்ய போக பிரதத்வம் -9-2- புளிங்குடி
போக சாந்தனம் -பண்ணி
சாந்த்யத்வம் குறைக்கும் தன்மை இங்கு
பொறுக்க பொறுக்க போகம் கொடுக்கும் தன்மை -9-2-புளிங்குடி -இங்கு போகம் குறைக்கும் தன்மை –

—————————————————————-

திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி -ஸ்ரீ தேசிகன் –

பூம்யாத் தேகி சாகராத் தேகி ஜ்வலன சசிமுகைகி
வச்துபூர் வத்ச்ய பூர்வ ந்ருத்யைத்ய லோகாதிபி
ஊர்த்வ புண்டர தளம் துளசி தாமம் பிருத்வி ஷிப்தி
ஆத்மீய தாஸ்யை சுவீக ஸூ சதுரச

1-பூம்யாத் தேகி –மண்ணை இருந்து துழாவி, ‘வாமனன் மண் இது’ என்னும்;
விண்ணைத் தொழுது, அவன் மேவு வைகுந்தம்’ என்று கை காட்டும்–மண்ணை -ஆதி -விண் –

2-சாகராத் தேகி –பெய் வளைக் கைகளைக் கூப்பி, ‘பிரான் கிடக்கும் கடல்’ என்னும்;

3-ஜ்வலன சசிமுகைகி–அறியும் செந்தீயைத் தழுவி,‘அச்சுதன்’ என்னும்
ஒன்றிய திங்களைக் காட்டி, ‘ஒளி மணி வண்ணனே!’ என்னும்;

4-வச்துபூர் வத்ச்ய பூர்வ –கோமள வான் கன்றைப் புல்கி, ‘கோவிந்தன் மேய்த்தன’ என்னும்;

5–ந்ருத்யைத்ய –கூத்தர் குடம் எடுத்து ஆடில்,‘கோவிந்தனாம்’எனா ஓடும்;

6–லோகாதிபி-ஏறிய பித்தினோடு ‘எல்லா உலகும் கண்ணன் படைப்பு’ என்னும்’
ஊர்த்வ புண்டர தளம் -நீறு செவ்வே இடக் காணில், நெடுமால் அடியார்’ என்று ஓடும்;
துளசி தாமம் –நாறு துழாய்மலர் காணில்,‘நாரணன் கண்ணி ஈது’ என்னும்;

8–பிருத்வி ஷிப்தி–திருவுடை மன்னரைக் காணில், ‘திருமாலைக் கண்டேனே’ என்னும்;

9-ஆத்மீய தாஸ்யை –விரும்பிப் பகவரைக் காணில், ‘வியலிடம் உண்டானே’ என்னும்;

10–சுவீக ஸூ சதுரச—-மயற் பெருங் காதல் என் பேதைக்கு என் செய்கேன் வல் வினையேனே?

வல்வினை தீர்க்கும் கண்ணனை–வண் துவரை பெருமாள் விச்லேஷத்தால் -ஆச்ரிதை துக்கிப்பியா நின்றான் –
இறுதியில் விலக்கினான் அன்னை கைவிட்டதும் –

——————————————————-

திருவாய் மொழி நூற்றந்தாதி -பாசுரம் 34-பிள்ளை லோகம் ஜீயர் வியாக்யானம்–

மண்ணுலகில் முன் கலந்து மால் பிரிகையால் மாறன்
பெண்ணிலைமை யாய்க் காதல் பித்தேறி -எண்ணிடில் முன்
போலி முதலான பொருளை யவனாய் நினைந்து
மேல் விழுந்தான் மையல் தனின் வீறு–34-

———————————————-

அவதாரிகை –

இதில்
சத்ருச பதார்த்தங்களையும்
சம்பந்தி பதார்த்தங்களையும்
அவனாகவே பிரமித்து பேசின பாசுரத்தை அனுவதித்து
அருளிச் செய்கிறார்
அது எங்கனே என்னில் –
கீழ் –
காதல் மையல் ஏறினேன் -என்று
பிரணயித்வ குணத்தை அனுபவித்து விளைந்த
ப்ரீதி பிரகர்ஷம் ஆஸ்ரயத்தையும் அழிக்கும் படி கரை அழித்துப் பெருக
அத்தை அரை ஆறு படுத்துக்கைக்காக அவன் பேர நிற்க –
பிரிந்தது அவனை ஆகையாலே அவசன்னராய்
ராம குணங்களுக்கு இட்டுப் பிறந்த பரத ஆழ்வான்
ஒரு வேடன் வாய் இட்டு
ராம சரிதத்தைக் கேட்டு
தரித்தால் போலே
இவ் வாழ்வாரும் அவனோடு சத்ருச பதார்த்தங்களையும்
சம்பந்தி பதார்த்தங்களையும்
அவனே என்று பிச்சேறும் படி
தமக்குப் பிறந்த அவஸ்தா விசேஷத்தை
அன்யாபதேசத்தாலே பேசின
மண்ணை இருந்து துழாவி -யின் -அர்த்தத்தை
மண்ணுலகில் -இத்யாதியால் -அருளிச் செய்தார் -என்கை –

—————————————–

வியாக்யானம்–

மண்ணுலகில் முன் கலந்து மால் பிரிகையால் –
பூலோகமான இவ் விபூதியில் முன்னம்
கோவை வாயாளிலே பெறாப் பேறான சம்ச்லேஷத்தை யுண்டாக்கி
சர்வேஸ்வரன் விச்லேஷிக்கையாலே –

மாறன் பெண்ணிலைமையாய்க் –
ஆழ்வார்
அபலையினுடைய
அவஸ்தையை
அடைந்து –

காதல் பித்தேறி –
என் கொடியே பித்தே -என்னும்படி
பக்தியாலே காதல் பித்தேறி –
க்வசிதுத் பரமதே -இத்யாதிப்படியே சித்த விப்ரகம் பிறக்க –

எண்ணிடில்-
அந்த பித்தேறின பிரகாரத்தை நிரூபிக்கில் –

அன்றிக்கே –
பித்தேறி எண்ணிடில் –
பித்தேறின ஆகாரத்தோடே
தாம் நிரூபிக்க புகில்

முன் போலி முதலான பொருளை யவனாய் நினைந்து –
அதாவது –
மண்ணை இருந்து தொடங்கி
அயர்க்கும் அளவும் பிரதிபாதிக்கப் படுகிற
முன் கண்ட சத்ருச பதார்த்தங்களையும்
சம்பந்த பதார்த்தங்களையும்
அவனாகவே பிரதிபத்தி பண்ணி -என்கை –

இது எத்தாலே என்னில்
மேல் விழுந்தான் மையல் தனின் வீறு
மையல் தனின் வீறு -மேல் விழுந்தான்-
வயாமோஹ அதிசயத்தாலே
அவற்றிலே அத்ய அபி நிவிஷ்டரானார்
இவருடைய அபி நிவிஷ்ட அதிசயம் இருந்த படி என் என்று
ஜீயருக்கும் இது கண்டு
சஹிக்க ஒண்ணாதபடி யாயிற்று —

சத்ருச பதார்த்தங்களும்
சம்பந்த பதார்த்தங்களும் ஆவன –

சத்ருச பதார்த்தம் –
விண்
கடல்
நாயிறு
செந்தீ
தண் காற்று
ஒன்றிய திங்கள்
நின்ற குன்றம்
நன்று பெய்யும் மழை
கூத்தர்
நீறு செவ்வே இட
திரு வுடை மன்னர்
உரு வுடை வண்ணங்கள்
கருவுடைத் தேவில்கள்
விரும்பிப் பகவர்
கரும் பெரு மேகங்கள் —

சம்பந்தி பதார்த்தங்கள் ஆவன –
நாறு துழாய்
வாமனன் மண்
கோமள வான் கன்று

சம்பந்த பதார்த்த சத்ருசங்கள் –
போம் இள நாகம்
வாய்த்த குழலோசை
ஆய்ச்சியர் வெண்ணெய்
என்று விபஜித்து ஆயிற்று ஆச்சான் அருளிச் செய்யும் படி-
அடையவளைந்தான் அரும் பெரும் உரை அருளிச் செய்த ஆத்தான் ஜீயர் –

————————————————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ. வே.வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

பகவத் விஷயம் காலஷேபம் -92- திருவாய்மொழி – -4-4-1….4-4-5–ஸ்ரீ உ. வே. வேளுக்குடி ஸ்வாமிகள்–

May 29, 2016

மேல் திருவாய்மொழியில் அவனுடைய காதல் குணத்தை அருளிச்செய்தார்;
இத் திருவாய்மொழியில் பிச்சு ஏறினார்;
இவர்க்கு மேல் திருவாய்மொழியில் பிறந்த கரை கடந்த பிரீதியானது இவருடைய சொரூபமும் அழியும் என்னும்படியாய் இருந்தது;
அந்த ரசத்தை அரையாறு படுத்திப் பொறுக்கும்படி செய்கைக்காக அந்தக் கலவியைச் சிறிது நெகிழ நின்றான் ஈசுவரன்.
ஆனாலும், பிரிந்தது அவனை ஆகையாலே, அது தன் காரியத்தைச் செய்து அன்றி நில்லாதே அன்றோ?
ஆகையாலே ஆற்றாமை மீதூர்ந்து, செல்வத்திலே பேராசையுள்ள ஒருவன்
கிழிச்சீரையைக் -கிழிச்சீரை – பணப்பை.-கெடுத்தால் அதனோடு
போலியான முடிகளை எல்லாம் அவிழ்த்து அவிழ்த்துப் பார்க்குமாறு போன்று, அவனோடு ஒத்த பொருள்களையும் -சத்ருசம்-
அவனோடு சம்பந்தப்பட்ட பொருள்களோடு ஒத்த பொருள்களையும் அகப்பட அவனாகக் கொண்டும்,
-சம்பந்தப்பட்ட பொருள்களாகக் கொண்டும் மயங்கிக் கிட்டிப் பார்த்து அவன் அன்றிக்கே ஒழிந்தால் மீளவும் மாட்டாதே
நோவுபட்டுச் செல்லுகிறது.- ‘வைப்பாம் மருந்தாம்’ என்னும்படியே, இவர்க்குச் சேமநிதி அன்றோ அவன்?

‘அவனோடு ஒத்த பொருள்கள்’ என்றது, ‘கரும்பெருமேகங்கள்’, ‘உருவுடைவண்ணங்கள்’,
‘விரும்பிப் பகவரைக் காணில்’ என்பன போன்று வரும் பாசுரங்களைத் திருவுள்ளம் பற்றி.
‘அவனோடு சம்பந்தப்பட்ட பொருள்களோடு ஒத்த பொருள்கள்’ என்றது, ‘கோமள ஆன்கன்று,’
‘ஆய்ச்சியர் வெண்ணெய்கள்’, ‘வாய்த்த குழலோசை’ என்பன போன்று வருகின்ற பாசுரங்களைத் திருவுள்ளம் பற்றி.
அவனோடு சம்பந்தப்பட்ட பொருள்களோடு ஒத்த பொருள்களைத் தேடுகிறதற்குக் கருத்து,
‘இவர் பகவானையும் பாகவதர்களையும் உத்தேஸ்யராக நினைத்திருக்கு மவராகையாலே,
பகவானைப் பிரியுமிடத்துப் பாகவதர்களோடு கூடியாகிலும் தரிக்கலாம் என்று தேடுகிறார்’ என்பது.

‘பிராட்டியைத் தேடுவதில் நோக்கமுடைய பெருமாள் ஓரிடத்தில் சுற்றும் முகத்தைத் திருப்பி மேலே பார்க்கிறார்;
‘ஓரிடத்தில் தம் வலிமையால் நாலு பக்கங்களிலும் சுழலுகிறார்;
ஓரிடத்தில் பித்தனைப்போலத் தோற்றுகிறார்,’ என்கிறபடியே,
பிராட்டியைப் பிரிந்த பின்னர் ஆற்றாமையாலே மேல் நோக்கிப் பார்த்து விலங்கச் சஞ்சரிப்பது,
அதுதானும் மாட்டாது ஒழிவது,
‘ஒரு மரத்தினின்றும் வேறு மரத்திலே சென்று கிட்டுவது, ‘மைதிலியைக் கண்டீர்களோ?’ என்று கேட்பது,
ஆணாறு பெண்ணாறுகள் ஒன்று இன்றிக்கே-ஆண் ஆறு மேற்கு நோக்கி-நதம்/ நதி பெண் ஆறு கிழக்கு நோக்கி – தேடுவதாய்,
அவர் பட்டாற்போலே இவளும் அப்படியே படுகிறாள் இப்போது.
இப்படி நோவுபடுகிற இவள் நிலையை நினைத்த திருத்தாயார், இவள் படுகிற பாடுகளையும் இவள் சொல்லுகிற
வார்த்தைகளையும் சொல்லி, இது கண்டு தான் பொறுக்கமாட்டாமல் நோவு படுகின்றபடியையும் சொல்லிக் கை வாங்குமளவாக,
அவன் வந்து முகங்காட்டித் தேற்றுவிக்கத் தரித்ததாய்த் தலைக்கட்டுகிறது இத்திருவாய்மொழி.

————————————————————————————————

மண்ணை இருந்து துழாவி, ‘வாமனன் மண் இது’ என்னும்;
விண்ணைத் தொழுது, அவன் மேவு வைகுந்தம்’ என்று கை காட்டும்;
கண்ணை உண்ணீர் மல்க நின்று, ‘கடல்வண்ணன்’ என்னும்;அன்னே!என்
பெண்ணைப் பெருமயல் செய்தாற்கு என் செய்கேன், பெய் வளையீரே!–4-4-1-

மூன்றாவது தாய் பதிகம் -விபூத் த்வய சம்பந்தம் அனுசந்தித்து
மண் வைகுந்தம் -பூமி அந்தரிஷங்களைக் கண்டு விக்ருதி ஆகா நின்றாள்
மண்ணை இருந்து துழாவி, ‘வாமனன் மண் இது’ என்னும்;-அவன் இரந்து- அளந்து கொண்ட மண்
இந்த ஆழ்வார் திருநகரி கலி யுக மண்ணைத் தடாவி
விண்ணைத் தொழுது, அவன் மேவு வைகுந்தம்’ என்று கை காட்டும்;-ஆகாசம் தொழுது -ஸ்ரீ வைகுண்டம் –
விண் மீது இருப்பாய் -திக்கையே நோக்கி
கண்ணை உண்ணீர் மல்க நின்று, ‘கடல்வண்ணன்’ என்னும்;அன்னே!என் அபரோஷித்தாரைப் போலே
நேராக கண்ணால் கண்டால் போலே –
கூட இருந்து பார்த்ததை நினைவில் கொண்டு சொல்கிறாள் –
ஹஸ்த முத்ரையால் காட்டுகிறாள்
பார்க்க முடியாத ஸ்ரீ வைகுண்டம் -பிரத்யஷமாக பார்த்தால் போலே -பிறருக்கும் காட்டும்
நீணிலா முற்றத்து–நின்று இவள் நோக்கினாள் – காணுமோ கண்ணபுரம் என்று காட்டினாள்-
மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான் அவன் –
இங்கு பற்றி அங்கு போகலாம்
கண்ணுக்குள் கண்ண நீர் மல்க -அகவாயில் அஸ்ரு ஜலம் -அனுபவம் வழிந்து
அபரிச்சின்ன ஸ்வ பாவம் -ஸ்ரமஹரமான வடிவைக் காட்ட ஆர்த்தி போக்க
பெண்ணைப் பெருமயல் செய்தாற்கு என் செய்கேன், பெய் வளையீரே!-வினவிய தோழிகளைப்
பார்த்து -சொல்கிறாள் திருத் தாயார் –
முக்தமான பெண்ணை -பெரும் பிச்சு -பார்த்த பார்த்த பதார்த்தங்கள் அவனே என்பாள்
இவள் வளை போலே கழருகை அன்றி இடப் பெற்ற வலைகல் கொண்டீர்
எத்தை செய்வேன்
அழைத்துக் கொடுக்க மாட்டு கிறிலேன்
அவர் தாமும் வரும் வரை பிச்சை தவிர்கிறிலேன்
அம்மே -வெறுப்பில்
விண் -பாஞ்ச பௌதிகம் -அங்கு வரை பிரகாசிக்கும் படி காட்டி அருளினான்

அணிந்த வளையல்களையுடைய பெண்காள்! இருந்து பூமியைத் துழாவி, ‘இது வாமனனுடைய பூமியாகும்,’ என்பாள்;
ஆகாயத்தை நோக்கித் தொழுது, ‘அவன் எழுந்தருளியிருக்கின்ற பரமபதம்’ என்று கை காட்டுவாள்;
கண்களில் நீர் பெருகும்படி நின்று ‘கடல் போன்ற நிறத்தையுடையவன்’ என்பாள்:
ஐயோ! என்னுடைய பெண்ணைப் பெரிய மயக்கத்தை அடையச் செய்தவர்க்கு எதனைச் செய்வேன்?
‘என்னும், காட்டும், என்னும்’ என்பன, செய்யும் என் முற்றுகள். ‘கண்ணை’ என்பதில், ஐகாரம் அசைநிலை,
உருபு மயக்கமாகக் கோடலும் அமையும்.
‘அன்னே’ என்பது, அந்தோ என்னும் பொருளைக் காட்டுவதோர் இடைச்சொல்.
‘அன்னேயோ அன்னேயோ ஆ கொடியேற் கடுத்தநாள் அரக்கர் வேந்தள். பின்னேயோ’
(கம்ப. உயுத். இராவணன் வதைப். 288.) என்றவிடத்தும்‘அன்னே’ என்பது இப்பொருளதாதல் காணலாகும்.
இத்திருவாய்மொழி அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்.

வினவ வந்தவர்களுக்குத் தன் மகள் செய்தியைக் கூறுகின்ற தாயானவள்,
‘இப்படி இவளை எம்பெருமான் பிச்சு ஏற்றினான்; நான் இதற்கு என் செய்வேன்?’ என்கிறாள்.

மண்ணை இருந்து துழாவி –
‘மண்முழுதும் அகப்படுத்து நின்ற எந்தை’ என்கிறபடியே, அவன் திருவடிகளுக்கு உட்பட்ட பூமிப்பரப்பு அடைய இருந்து துழாவா நிற்கும்.
அவன் சம்பந்தங்கொண்டே இதனை விரும்புகிறது; ‘அது ஓரிடத்தில் இருப்பது அன்றே?’ என்றது, ‘எங்கும் இருப்பது’ என்றபடி.
‘முன்பு தோற்றுகின்ற சோலை என் என்பது?’ என்று பெருமாள் கேட்டருள. ‘பண்டு ‘சித்தாஸ்ரமம்’ என்று
ஸ்ரீ வாமனன் எழுந்தருளியிருந்த தேசமாயிற்று; அவன் எழுந்தருளின பின்பு அவன் பக்கல் பத்தியாலே விடமாட்டாமே
அம் மண்ணை மோந்துகொண்டு கிடப்பேன்,’-உப புஜ்யதே -அனுபவிக்கிறேன் — என்றான் அன்றோ விசுவாமித்திரன்?
‘விஷ்ணு பகவான் மனித உருவத்தோடு சக்கரவர்த்தி திருமகனாய் இராமன் என்ற பெயரோடு இப்பூமியில் சஞ்சரித்தார்,’ என்றான்
திருவடி.–பீமா சேனன் இடம் ஆரண்ய பர்வத்தில் சொன்னார் –பாவோ நான்யத்ர கச்சதி என்றேன் –
‘தங்கள்நாயகரிற் றெய்வம் தவம் பிறிதில்என்று எண்ணும் மங்கைமார் சிந்தை போலத் தூயது; மற்றுங் கேளாய்:
எங்கள் நான்மறைக்கும் தேவர் அறிவிற்கும் பிறர்க்கும் எட்டாச் செங்கண்மால் இருந்து மேனாள் செய்தவம் செய்த தன்றே.’-கம்பர்
இச்சுலோகப்பொருளோடு,
‘அந்த வார்சிலை இராமனுக்கு அடிமையாய் என்றும் சிந்தையால் அவன் திருப்பதம் சிந்தைசெய் பவனும்
முந்தை யாகிய வாயுவுக்கு உற்பவித்தவனும் இந்த வாழ்வுடை அனுமனே என்றனன் இகலோன்.’ என்ற செய்யுள்
திண்சுட ராழி யரங்கேசர் திக்குத் திருச்செவியில் மண் கழலில் சத்ய லோகம் சிரத்தில் மருத்து உயிரில்
தண் கதிர் உள்ளத்தில் வான் உந்தியில் செந் தரணி கண்ணில் ஒண் கனல்
இந்திரன் வாழ் முகப்போதில் உதித்தனரே’- என்றார் திவ்வியகவியும்.

ஆகையாலே, அவன் பக்கல் ருசியுடையார் விடமாட்டார்கள் அன்றோ?
இருந்து –
இவ்விருப்புக்கு முன் கணத்தில்
நிற்றல் நடத்தல் கிடத்தல் முதலியவற்றில் ஒரு நியதி இன்றிக்கே நோவுபட்டமை தோன்றுகிறது.

துழாவி –
இதனால், பித்தத்தால் பீடிக்கப்பட்டவன் சந்தனக் குழம்பினின்றும் கைவாங்க மாட்டாததைப் போன்று
இம் மண்ணை விடமாட்டாமையும் தோன்றுகிறது.
விட்டுக் கைவாங்கினால் விரஹ அக்நியினாலே வேம். தாங்கள் தெளிந்திருந்தார்களாய்
‘இவள் மயங்கினாரைப் போன்று செய்கின்றது என் என்பது?’ என்பர்களே,
அவர்களை ‘நீங்கள் மயங்கினீர்களோ?’ என்னுமாயிற்று இவள் என்கிறாள் மேல்
வாமனன் மண் இது என்னும் –
‘வாமனன் மண் அன்றோ இது?’ என்னா நின்றாள்.
‘திருவடியிலே பிறந்ததனால் உண்டான வாசனையையுடைய பூமி அன்றோ?’ என்னா நின்றாள் என்றபடி,
‘பூமியானது வாசனையையுடையது’ என்றே அன்றோ நாட்டில் பிரசித்தி?
‘ஸர்வகந்த:’ என்கிற விஷயத்தினுடைய சம்பந்தமே ஆயிற்று இவள் அறிவது.
அடியே பிறந்து அடைய கந்தம் -கந்த தன்மாத்ரை பிருத்வி என்றவாறு -வாமனன் திருவடியால் பெற்ற கந்தம் –
பூமிக்கு வாசனை இயற்கையாய் இருக்கவும், திருவடிகளினுடைய சம்பந்தத்தால் வந்த வாசனை என்று இவளுக்கு நினைவு என்கிறார்
‘பூமியானது’ என்று தொடங்கும் இரண்டு வாக்கியத்தாலே,
‘விண்ணொலி தழுவும், காற்று மேவுறும் ஒலியு மூறும், நண்ணுமால் ஒலியும் ஊறும் நலந்திகழ் உருவும் செந்தீ,
தண்ணறல் ஒலியும் ஊறு முருவமுஞ் சுவையும் சாரும், மண்ணிதை நான்கி னோடு மணத்தையும் புணர்ந்து மன்னும்.’
என்பது பாகவதம், சுகமுனி தத்துவமுரைத்த அத்தியாயம்.

‘அவன் இரந்து தனக்கு ஆக்கிக்கொண்டது அன்றோ?’ என்னா நின்றாள்; அவனதானால் இந்திரனுக்குக் கொடுத்தது போன்று
கொடுக்க வேண்டா காணும் இவளுக்கு; அவனது ஆனபோதே இவளது ஆயே இருக்கும்.
இது வாமனன் மண் ஆகவே இது என் மண் இவர் நினைக்க -இந்தரன் தன் மண் என்று அவனும் என் மண் என்கிறான் –
அவனது எல்லாம் இவரது -பார்த்தா உடையது நாயகிக்கு உண்டே -அப்படி சம்பந்தம் உடைய ஆழ்வார் -கொடுக்க வேண்டாமே -ததீயத்வம்
‘அவனது அன்று காண்’ என்று இவளை மீட்க ஒண்ணாதே? ‘கண்கூடாகப் பார்க்கும்போதும் உங்களுக்குச் சந்தேகம்
தொடராநின்றதோ?’ என்கிறாள் என்பாள்,
ஜீவாத்மா வாமனன் என்று புரிந்தால் தானே இது வாமனன் மண் இது என்று உணர்வீர்கள் -சேஷத்வம் புரிய வில்லையே
‘இது என்னும்’ என்கிறாள். ‘ஆயின், நேரே காண்கின்றாளாயின், அனுபவிக்கத்தடை என்?’ எனின்,
இறந்த காலத்தில் உள்ளதும் நிகழ்காலத்தில் உள்ளதைப் போன்று தோன்றுகின்ற தித்தனை போக்கி,
மண் அளந்தவனை இப்போது காண ஒண்ணாதே?

விண்ணைத் தொழுது அவன் மேவும் வைகுந்தம் என்று கைகாட்டும் –
இறந்த காலத்தில் உள்ளதும் நிகழ்காலத்தில் உள்ளதைப் போன்று தோன்றுமாறு போன்று,
வேறு உலகத்தின் செயலும் இங்கே தோன்றாநின்றது.
நமக்கு அவ்விடத்திலும் இவ்விடம் அணித்தாய் இருக்குமாறு போன்று, அவர்களுக்கு ‘அக்கரை, இக்கரை’ என்னும்படி
இவ்விடத்திலும் அவ்விடம் அணித்தாய்த் தோன்றும்.
ஆர்ஷ்டிஷேணன் ஆஸ்ரமத்திலே நின்று பரமபதம் கண்டார்களே அன்றோ சிலர்?

‘அக்கரை யென்னு மனத்தக் கடலுள் அழுந்தி உன் பேரருளால் இக்கரையேறி இளைத்திருந்தேனை
அஞ்சேல் என்று கைகவியாய்’ என்பது பெரியாழ்வார் திருமொழி.
அக்கரை – சமுசாரம். இக்கரை – பரமபதம். ‘அப்படிக் கண்ட பேர் உளரோ?’ என்ன,
‘ஆர்ஷ்டிஷேணன்’ என்று தொடங்கி அதற்கு விடை
அருளிச்செய்கிறார். ஆர்ஷ்டிஷேணன் என்பவர் ஒரு முனிவர்.
‘சிலர்’ என்றது, தருமபுத்திரனை. தருமபுத்திரனுக்கு அம்முனிவர்
தமது ஆஸ்ரமத்திலிருந்து பரமபதம் காட்டினார் என்று சரிதம் கூறும்.
திருமங்கை ஆழ்வார் சன்னிதியில் இருந்து தானே உத்பலாக விமானம் இன்றும் சேவை ஆகும் —

‘என்னோடே கலந்து அகன்ற இடம் போலே பிரிவோடே கூடி இராமல் அவன் நித்தியவாசம் செய்யும் தேசம்’ என்பாள்,-
இவள் தன்னை மேவா வைகுந்தம் என்கிறாள் ‘அவன் மேவும் வைகுந்தம் என்னும்’ என்கிறாள்.
‘மேவும் வைகுந்தம்’ என்பதில் அவதாரத்திற்கு வேறுபாடும் தனக்கு இழக்க வேண்டாமையும் தோன்றும்.
அவன் ஒரே தன்மையனாய் இருக்கின்ற இருப்பை நினைத்து,
அவ்விருப்பிலும் தாம் அனுபவிக்கப் பெறாமையாலே நடுவே தளர்ந்து,
சொல்லப் புக்க வார்த்தையைத் தலைக்கட்டமாட்டாதே ஹஸ்த முத்திரையாலே
தலைக்கட்டாநின்றாள் என்பாள், ‘கைகாட்டும்’ என்கிறாள்.
‘பரமபதத்திலே நித்திய சூரிகள் எப்பொழுதும் அனுபவித்துக் கொண்டிருக்க, அவர்களைப் போன்ற சம்பந்தம்
நமக்கும் உண்டாயிருக்க நாம் இழப்போமே!’ என்று தளர்ந்து தொடங்கின வார்த்தையைத் தலைக்கட்ட மாட்டுகின்றிலள்’ என்றபடி.
அன்றிக்கே, ‘பெயர் ஒற்றுமையாலும் மேலே உள்ள தன்மையாலும்
இந்த ஆகாசத்தைப் பரமபதம் என்று தொழாநிற்கும்,’ என்னலுமாம்.
முடிக்க முடியாமல் ஹஸ்த முத்தரை காட்டுகிறாள் -என்றும் அஞ்சலி செய்கிறாள் என்றுமாம் –

கண்ணை உள் நீர் மல்க நின்று –
‘அவதாரம் போல அன்றிக்கே என்றும் ஒக்க அனுபவிக்கலாம்படி இருக்கிற பரமபதத்தில்
இருப்பிலும், நான் இழப்பதே!’ என்று
கண்ணீர் மல்காநின்றாள்.
கடல் வண்ணன் என்னும் –
ஒரு கருங்கடல் வடிவு கொண்டு செவ்வே இருந்தாற்போலே அங்கு இருக்கும் இருப்பைச் சொல்லாநின்றாள்;
அவ் வடிவினைக் காட்டிக் காணும் இவளை அவன் பிச்சு ஏற்றினான்;
இவளும் தன்னைப் பிச்சு ஏற்றின படியே சொல்லா நின்றாள் என்றபடி.
‘ஏற்றின படி’ என்றது, சிலேடை : ‘ஏற்றிய திருமேனி’ என்பதும், ‘ஏற்றிய விதம்’ என்பதும் பொருள்.
அன்னே –
‘அம்மே’ என்று துக்கத்தின் மிகுதியைக் காட்டுவதோர் இடைச்சொல்.
‘மன்னே’ என்னலுமாம்.
என் பெண்ணை –
‘யுவதியாயும் குமாரிணியாயும் இருப்பவள்’ என்றபடியே, கலவியிலும் உட்புக மாட்டாத பருவமாயிற்று இவளது.
பெருமயல் செய்தார்க்கு –
‘தம்மைக் கலந்து பிரிந்தார் படும் வியசனத்தளவும் அன்று காணும்
இவளைப் படுத்தியது,’ என்பாள், ‘பெருமயல்’ என்கிறாள்.
அவனை ஒத்த பொருள்களைக் கண்டு கலங்கினாள் இவளே அன்றோ?
ஆண்டாள் -மையல் ஏற்றி மயக்க -உன் முகம் மாய மந்த்ரம் தான் கொலோ -பெரு மையல் இல்லையே
சீதா -கலந்து பிரிந்த -உன்மாதம் விகாராவோ -மகோ உன்மாதம் இல்லை
இவள் வியசனம் அதிகம் -சத்ருச பதார்த்தங்கள் பார்த்து அவனே என்று பிரமித்து அன்றோ இவள்
என் செய்கேன் –
இவள் ஆற்றாமை தீர அவனை வரச் செய்யவோ?
‘அவன் வருமளவும் கிரமத்திலே அடையலாம் என்று பார்த்து
ஆறி இருக்க வேண்டுங்காண் என்று இவளைத் தரிப்பிக்கவோ?
யாது செய்வேன்?
பெய்வளையீரே!
‘பெருவெள்ளத்திலே புறவடி நனையாமலே இருப்பாரைப் போன்று, இவ்வளவிலும் கையும் வளையுமாய்
இருப்பதே நீங்கள்!’ என்பாள், ‘பெய்வளையீரே! என்கிறாள்.-
நகையை இட்டுக் கொண்டு இருப்பாள் -பிராந்திய வார்த்தை –
அன்றிக்கே, ‘நீங்கள் வளை தொங்குகைக்குச் செய்த உபாயத்தைச் சொல்ல வல்லீர்களோ,
நானும் கைமேல் செய்து பார்க்க!’ என்பாள், அங்ஙனம் விளிக்கின்றாள் என்னலுமாம்.

————————————————————————————————-

பெய் வளைக் கைகளைக் கூப்பி, ‘பிரான் கிடக்கும் கடல்’ என்னும்;
செய்யது ஓர் ஞாயிற்றைக் காட்டி, ‘சிரீதரன் மூர்த்தி ஈது’ என்னும்;
நையும் கண்ணீர் மல்க நின்று, ‘நாரணன்’ என்னும்; அன்னே!என்
தெய்வ உருவிற் சிறுமான் செய்கின்றது ஒன்று அறியேனே.–4-4-2-

கடலையும் ஆதித்யனையும் கண்டு சிதிலை ஆகா நிற்கிறாள்
பெய் வளைக் கைகளைக் கூப்பி, ‘பிரான் கிடக்கும் கடல்’ என்னும்;-பல காலும் கழன்று
இடப்பெறாத-கடல் வண்ணன் சொன்னதும்
தெம்பு வந்து சில வளைகள் விழாமல் இருக்க –
உன்னித்து –வண் துவராபதி மன்னன் -சகி வெறி விலக்க-ஏத்துமின் -எத்துதலும் தொழு ஆட சொல்ல -அடுத்த பாட்டில்
தொழுது ஆடி தூ மணி -இந்த வார்த்தை கேட்டு தைர்யம் மிருத சஞ்சீவனம் அன்றோ அவன் திரு நாமம்
சரணம் புக்கும் தேவர்களுக்கு சரண்யம் பாற் கடல் என்னும்
செய்யது ஓர் ஞாயிற்றைக் காட்டி, ‘சிரீதரன் மூர்த்தி ஈது’ என்னும்;-சிறந்த ஒளி-அத்விதீயனான ஆதித்யன்
-வித்யா சகாயம் -ஆதித்யஸ்தம் -சூர்ய நாராயணன் சனாதன் என்னை துதிப்பாய் என்றானே
ஸ்ரீ லஷ்மி விசிஷ்டன் சுருதி போலே ஸ்ரீதரன் –
நையும் கண்ணீர் மல்க நின்று, ‘நாரணன்’ என்னும்; அன்னே!என்-நைந்து -சரண்யன் உபாஸ்யன் -கிட்ட முடியாமல்
நிருபாதிக சம்பந்த உக்தன்
தெய்வ உருவிற் சிறுமான் செய்கின்றது ஒன்று அறியேனே-தெய்வ–காந்தி -தெய்வ உரு -சிறுமி –சூரிகள் வடிவு போலே
அப்ராக்ருத தேஜஸ் இவளுக்கு இருக்க -சரண்யா ஸ்தலத்தை அஞ்சலி பண்ணா நின்றாள் -பிரான் கிடக்கும் கடல்
உபாஸ்ய ஸ்தலம் காட்டா நின்றாள் -கப்யாசம் -புண்டரீக அஷிணி பார்த்தோம்
ஒன்றிலே நின்றாளாக இல்லாமல் தாவிக் கொண்டே இருக்கிறாள் –

அப்ராக்ருத ரூப்யையாக உள்ளாள்-செய்கின்றது ஒன்றும் அறியேன் –

பெய் வளைக் கைகளைக் கூப்பி
அவனைத் தொழுவித்துக் கொள்ளும் பரிகரம் உடையவள் தான் தொழா நின்றாள்
அவளைத் தொழுவிக்கப் போகும் காணும் கையில் வளை கொண்டது
அவன் சங்கு சக்கரம்
கடல் வண்ணன் என்றவாறே சரிந்த -கழன்ற வளைகளை ஒழிய -வளைகள் பூரித்தன
கையிலே பிரம்மாஸ்திரம் கொண்டு இவள் படும் பாடு
பரகால நாயகி திருக்கையில் மடல் போலே –
வீரக் கழல் உடன் பட்டு கிடப்பாரைப் போலே இவள்
திருப் பாற் கடல் -விட்டு இங்கே வந்தான் அணித்தாக-தமக்காக வந்த -மகா உபகாரகன்
இரவு கடல் ஓசை உடன் அலைந்து இருக்க –
சூர்ய உதயம் கண்டு ஸ்ரீ தரன் வடிவு
சர்வதா சாத்ருசம் -இல்லை யாகிலும் அல்ப சாத்ருசம் பிரமிக்க அமையா நின்றது –
கொஞ்சம் தேஜஸ் என்பதால் அல்பம் என்கிறாள் இல்லை –
பள பளப்பை வைத்து இல்லை -ஸ்ரீதரன் -பாஸ்கரன் ஒளி -பிரியாமை வைத்தே மயங்குகிறாள்-
பெருமாள் பிராட்டி வார்த்தை
மாதா பிதா சேரா நிற்க -அவர்கள் சந்நிதியில் பசித்த பிள்ளைகள் -பிரஜைகள் – போலே சிதிலை யாகா நின்றாள்
புருஷகார பூதை அருகே இருப்பினும்– பெறாத நான்– யார் புருஷகாரம் பண்ணிப் பெறுவேன்
அம்மே -போலே ஸ்ரீ மன் நாராயணன் சொல்ல மாட்டாமல்-தளர்ந்து -செல்வ நாரணன் சொல்ல மாட்டாளே -நாராயணன்
கண்ணீராலே கையைக் கழுவி -நல்ல கார்யம் செய்ய -கை கழுவ வேண்டுமே -கண்ணீரால் கழுவி நாராயணன் என்கிறாள்
பின்னை நாராயணா என்றே சொல்லிக் கொண்டு நின்றாள்
யாகம் போலே வைதிக கிரியை
அம்மே -மைத்ரே போலே ஊன்று கோல்
தெய்வ உருவில் -சத்ருச சம்பந்த பதார்த்தம் நினைக்க நினைக்க
சதா பச்யந்தி சூரிகள் போலே அவர்கள் தேஜஸ்
இதிலும் சாம்யம் இவளுக்கு
அவர்கள் புராணர் விண்ணாட்டு மூதுவர் -பழையவர்கள்
இவள் இளைய மான் -அன்று ஈன்ற கன்று
செய்கின்றது ஒன்றும் அறியேன் –

—————————————————————–

அறியும் செந்தீயைத் தழுவி,‘அச்சுதன்’ என்னும்;மெய் வேவாள்;
எறியும் தண் காற்றைத் தழுவி, ‘என்னுடைக் கோவிந்தன்’ என்னும்;
வெறி கொள் துழாய் மலர் நாறும் வினையுடை யாட்டியேன் பெற்ற
செறிவளை முன்கைச் சிறுமான் செய்கின்றது என்கண்ணுக்கு ஒன்றே?–4-4-3-

அக்னி வாயு அவன் தானாகவே பிரதிபத்தி பண்ணுகிறாள்
அறியும் செந்தீயைத் தழுவி,‘அச்சுதன்’ என்னும்;மெய் வேவாள்;-
தேஜோமயோ விக்ரகம் -சொல்லுவது மட்டும் இல்லை -தழுவி -அச்சுதன் என்கிறாள்
அறிவாள் முன்பு -முன் தசையில் – இப்பொழுது அறியாமல் தழுவினாலும் -மெய் வெந்து போகணுமே -இவள் மெய் மேவாள்-
விரஹ தாபம் -கொதித்து இருக்க -முன்பு -விரஹ தாபம் அனைய –
நேர் மாறி இவர்கள் உணர -அச்சுதன் சொன்னதும் அக்னி வாய் திறக்குமோ -பாம்பு கருடன் சொன்னதும் விலகுமே போலே
அச்சுதன் சப்தார்த்தம் நழுவ விடாதவன் -அக்னி அறிந்து -அவனை தகையப் போமோ
பிரகலாத சரிதம் போலே உடம்பு வேவாள்
இவள் பிரமித்தாலும் அவனுக்கு அஞ்சுகையாலே -நெருப்பு தகையாதே
பீஷாத்மாத் –இத்யாதி
எறியும் தண் காற்றைத் தழுவி, ‘என்னுடைக் கோவிந்தன்’ என்னும்;-பிரணயி போலே -பக்யனான கோவிந்தன்
காற்று -கிலேசிக்கிறேன் என்று காற்றில் கடியனாய் வந்தானே
வெறி கொள் துழாய் மலர் நாறும் வினையுடை யாட்டியேன் பெற்ற-பரிமளப் பிரசுரமான திருத் துழாய் நாறா நின்றும்
காற்றுடன் வந்து கலந்து வீசி உஜ்ஜீவித்தார்
இப்படி பிரமிக்கும் அளவு பாப்பம் செய்த
செறிவளை முன்கைச் சிறுமான் செய்கின்றது -அவனாக நினைத்து மேல் விழுவதால் பூரித்து -செறி வளை-முக்தமான மான்
என்கண்ணுக்கு ஒன்றே?ஓன்று அல்ல -ஒருவளும் அல்ல -சேர்ந்தவளா செராதவலா -பக்தையா நித்யையா
நெருப்பு சுடாமையால் லோகத்தார் படி அல்லள்
காற்று சுடாமையாலே பிரிந்தார் படி அல்லள்
போலி கண்டு பிரமிக்கையால் கொடினார் படி அல்லள்
திருத் துழாய் மணப்பதால் கூடாதார் படியும் அல்லள்

‘சுடும் தன்மையது என்று எல்லாராலும் அறியப்படுகின்ற சிவந்த நெருப்பைத் தழுவி, ‘அச்சுதனே!’ என்று சொல்லுவாள்;
உடம்பு வேகின்றிலள்; வீசுகின்ற குளிர்ந்த காற்றைத் தழுவி, ‘என்னுடைய கோவிந்தனே!’ என்பாள்;
வாசனையையுடைய திருத்துழாய் மலரின் நறுமணம் வீசாநின்றாள்; மஹா பாவியாகிய யான் பெற்ற செறிந்த
வளையல்கள் பொருந்திய முன்கையினையுடைய சிறிய மான் போன்ற என் பெண்ணானவள் செய்கின்ற
செயல் என் கண்களுக்கு ஒன்றா? அன்று; பல,’ என்கிறாள்.
‘பெற்ற சிறுமான்’ என்க. செய்கின்றது – வினையாலணையும் பெயர். ‘ஒன்றே’ என்பதில் ஏகாரம் : எதிர்மறை.

இவளுடைய அதியான செயல்களைச் சொல்லப்புக்கு, ‘அவற்றிற்கு எண் இல்லை’ என்கிறாள்.

அறியும் –
‘ஒன்றால் அவிக்க ஒண்ணாது, எரிக்குந் தன்மையது’ என்று எல்லாராலும் அறியப்படுகின்ற.
அன்றிக்கே,
‘இவள் தானும் இப்படி மயங்குவதற்கு முன்பு எரிக்குந்தன்மையது என்று அறிந்து நீக்கிப் போந்தது’ என்னுதல்.
செந்தீயைத் தழுவி –
எரிக்கின்ற நெருப்பைத் தழுவாநின்றாள்;
‘மந்திரம் மருந்து முதலியவைகளால் தடைசெய்யப்பட்ட ஆற்றலையுடையது’ என்று தான் தழுவுகிறாளோ?’
தேஜஸாம் ராசி மூர்த்ததாம் -‘ஒளிகளின் நிலையான திரள்’ என்கிறபடியே, ஒளியுடைமையையே பார்த்துத் தழுவாநின்றாள்.
அன்றிக்கே,
‘பொருநீர்க் கடல் தீப்பட்டு எங்கும், திகழும் எரியோடு செல்வது ஒப்ப’ என்னுமாறு போன்று, இப்போது தனக்காக
ஒரு மாணிக்கப்படி சாத்தி அணைக்கைக்காக வந்தான் என்று பார்த்துத் தழுவுகின்றாள் என்னுதல்.
ரத்னாங்கி சாத்திக் கொண்டு வந்தான் இவளை அணைக்க வந்தான்
அச்சுதன் என்னும் –
‘உடைமையை மங்கக் கொடாமைக்காக வந்தானே!’ என்பாள்.
மெய் வேவாள் –
இவள் தான் மயக்கத்தாலே கட்டிக் கொள்ளுகிறாள்; ‘அந்நெருப்புத் தன் காரியம் செய்யாது ஒழிவான் என்?’ என்னில்,
‘அந்த விராட் புருஷனுடைய முகத்திலிருந்து இந்திரனும் அக்கினி தேவனும் உண்டானார்கள்,’ என்கிறபடியே,
அச்சுதன் முகத்தாலே வந்தது ஆகையாலே எரித்திலது. -அச்சுதன் முகத்தால் பிறந்த அக்னி -பக்தி இரண்டும் –
அன்றிக்கே, ‘செந்தீயைத் தழுவி அச்சுதன் என்னும்; மெய் வேவாள்’ என்கிறாள் ஆகையாலே,
இவளுடைய அக்கினி ஸ்தம்பந மந்திரம் இருக்கிறபடி என்னுதல்.
அன்றிக்கே, ‘அந்தப் பகவானை நினைப்பதனால் உண்டான சந்தோஷத்தோடு கூடினவனாய்’ என்கிறபடியே,
‘அவனுடைய நினைவாலே நனைந்திருக்கையாலே சுட மாட்டுகிறது இல்லை,’ என்னுதல்.
‘தந்தையே! இந்த நெருப்புக் காற்றாலே தூண்டப்பட்டதாக இருப்பினும், இங்கு என்னைக் கொளுத்த இல்லை;
நான் நான்கு பக்கங்களிலும் எல்லாத் திக்குகளிலும் தாமரைப்பூக்களாகிற விரிப்பினால் பரப்பப் பட்டனவாயும்
குளிர்ந்திருப்பனவாயும் பார்க்கிறேன்,’ என்றான் அன்றோ ஸ்ரீ பிரஹ்லாதாழ்வான்?
அன்றிக்கே,ஸீதோபவ – தண்ணிது ஆகக்கடவாய்’ என்றவளும் இல்லை அன்றோ?
‘தண்ணிதாகக் கடவாய்’ என்றவள் தானே இங்ஙனம் செய்கிறாள்? ஆதலின், எரித்திலது’ என்னுதல்.
ஆக, ‘பிரிவு காலத்தில் வாயு புத்திரனைத் தழுவுகை நாயகனுக்கும் நாயகிக்கும் பணி’ என்றபடி.
‘ஹநுமானான திருவடிக்கு என்னால் கொடுக்கப்பட்ட இந்த ஆலிங்கனமானது’ என்றதனால், நாயகன் தழுவினமை உணரலாகும்.
‘வாயுவினின்றும் நெருப்பு உண்டாயிற்று,’ என்றதனால், நெருப்புக் காற்றின் புத்திரனாதல் உணர்தல் தகும்.

ஸ்ரீராமா. சுந். 53 : 28. இதனால், தன் சத்தியாலே வேவாதிருந்தாள் என்பதனைத் தெரிவித்தபடி.
‘தாயே யனைய கருணையான் துணையே! ஏதுந் தகைவில்லா
நாயே யனைய வல்லரக்கர் நலியக் கண்டால் நல்காயோ?
நீயே உலகுக் கொரு சான்று, நிற்கே தெரியுங் கற்பு,அதனில்
தூயேன் என்னில் தொழுகின்றேன்; எரியே! அவனைச் சுடல்,’ என்றாள்’– என்றார் கம்பநாட்டாழ்வார்.
‘செந்தீயைத் தழுவி’ என்றதற்குச் சிலேடையாக அருளிச்செய்கிறார்,
‘பிரிவுகாலத்தில்’ என்று தொடங்கி. வாயு புத்திரன் – நெருப்பும், அனுமானும்.

எறியும் தண் காற்றைத் தழுவி –
வீசுகிற குளிர்ந்த காற்றைத் தழுவி. ‘விரஹ நோயினரைச் சுடுந்தன்மையதான காற்றும் சுட்டிலது;
இதுவன்றோ ஆச்சரியம்!’ என்பாள், ‘எறியும் தண்காற்றை’ என்கிறாள்.
‘பிராணனிடத்தில் காற்றுத் தோன்றியது’ என்கிறபடியே, இக் காற்றும் அவனுடைய பிராணனாய் இருப்பது ஒன்றே அன்றோ?
ஆகையாலே, அதுவும் சுட்டதில்லை.
என்னுடைக் கோவிந்தன் என்னும் –
‘நீங்கி ஒரு கணநேரமும் உயிர் பிழைத்திருக்கமாட்டேன்!’ என்கிறபடியே, ‘பிரிவில் பொறுக்க வல்லனோ?
அவன் உண்மை பிறர் பொருட்டாக அன்றோ இருப்பது?’ என்று சொல்லாநிற்கும்.
அன்றிக்கே, ‘கன்று மேய்த்த வடிவோடே என் துன்பம் தீர அணைக்க வந்தான் என்று சொல்லாநின்றாள்,’ என்னுதல்.
காம் பூமி -பாலயதி கோவிந்தன் -பரோபகாரம் -பரார்த்தமாகவே இருப்பான் -என்னுடை கோவிந்தன் -ஆர்த்தி தீர வந்தானே –
‘உலகத்தார் படியும் அன்று; விரஹ நோயினர்கள் படியும் அன்று; உலகத்தார் படியாகில் நெருப்புச் சுடவேண்டும்;
விரஹ நோயினர்கள் படியாகில் காற்றுச் சுடவேண்டும்; இரண்டும் கண்டிலோம்,’ என்கிறாள்.

வெறி கொள் துழாய் மலர் நாறும் –
‘கோவைவாயாள்’ என்ற திருவாய்மொழியிற் கூறிய கலவியால் வந்த பரிமளம் பத்து எட்டுக் குளிக்கும் நிற்குமே அன்றோ?
அத்தாலேயாதல்; வந்தேறி கழிந்தால் ஆத்துமாவின் தன்மை பகவானுக்கு உரிமைப்பட்டதாய் அன்றோ இருப்பது? அத்தாலேயாதல்.
அனன்யார்ஹ சேஷத்வம் சம்பந்த வாசனை உண்டே –
அன்றிக்கே, ‘காற்றோடே கலந்து வந்து புகுந்து அணைந்தான்’ என்று காரியத்தைக் கொண்டு கற்பித்துக் கூறுகின்றாள் ஆகவுமாம்.
‘அன்றி மற்றோர் உபாயம் என் இவள் அம்தண் துழாய் கமழ்தல்?’ என்னக் கடவதன்றோ?
-குட்ட நாட்டுத் திருப்புலியூர் திருத் துழாய் வாசனை கமழ்வதை தோழிகள் அன்னைக்கு தெரிவிக்க

வினையுடையாட்டியேன் பெற்ற –
இவள் இத்தனை உள் புகுந்தது – மூழ்கியது நான் செய்த பாபமே அன்றோ?
பிரிவிலும் வடிவு திருத்துழாய் நாறும்படி உள்புகுந்து – மூழ்கி, பின்பு போலி கண்டு மயங்கும்படி மயக்கமேயாய் விடுகைக்கு அடி,
பாவத்தைச் செய்த என் வயிற்றிற்பிறப்பே அன்றோ?’ என்கிறாள் என்றபடி.
பல பிறவிகளிலே ஈட்டப்பட்ட புண்ணிய பலத்தைப் பாப பலமாகச் சொல்லுகிறாளாயிற்று இப்போதை இழவைப் பற்ற.
பகவத் விஷயத்தில் உள் புகுந்தவர்கள் பெற்றவர்களுக்கு ஆகார்களே அன்றோ?
‘அன்னையும் அத்தனும் என்று அடியோமுக்கு இரங்கிற்றிலள்,’ என்னக் கடவதன்றோ?

செறிவளை முன்கைச் சிறுமான் –
முன் கையிலே செறிந்த வளையை யுடையவள்; இதுவன்றோ இருக்கத் தகும்படி! முன்பு இருக்கும்படி யாதல்,
பின்பும் அப்படியே இருக்கத் தகுமவள் என்னுதல்.
அன்றிக்கே, ‘இவள் வளைத்தழும்பு அவன் உடம்பில் காண்கை அன்றிக்கே, இவள் உடம்பிலே அவன் உடம்பில்
திருத்துழாய் காணுமத்தனையாவதே!’ என்பாள், ‘செறிவளை முன்கை என்கிறாள்’ என்னுதல்.
‘இதற்கெல்லாம் பற்றுக்கோடு எங்குத்து?’ என்பாள், ‘சிறுமான்’ என்கிறாள். ‘நனி இளையள்’ என்றபடி.

செய்கின்றது என் கண்ணுக்கு ஒன்றே? –
‘ஒன்றன்று; பல’ என்கிறாள்.-
அன்றிக்கே, ‘ஒன்றே’ என்பதற்கு,
‘நெருப்பைக் கட்டிக்கொள்வது, காற்றைத் தழுவுவது, திருத்துழாய் நாறுவது ஆகா நின்றாள்.
‘நெருப்புச் சுடாமையாலே உலக ஒழுக்கினள் என்று நிச்சயிக்க ஒண்கிறது இல்லை;
போலியான காற்றைத் தழுவுகையாலே ‘சேர்ந்தவள்’ என்ன ஒண்ணாது;
திருத்துழாய் நாறுகையாலே ‘விரஹிணி’ என்ன ஒண்ணாது;
ஆகையாலே, ஒன்றில் வைக்கப்பட்டிருக்கிறதோ இவள் படி?’ என்கிறாள் என்னுதல்.

——————————————————————————–

ஒன்றிய திங்களைக் காட்டி, ‘ஒளி மணி வண்ணனே!’ என்னும்;
நின்ற குன்றத்தினை நோக்கி, ‘நெடுமாலே! வா!’ என்று கூவும்;
நன்று பெய்யும் மழை காணில், ‘நாரணன் வந்தான்’ என்று ஆலும்;
என்று இன மையல்கள் செய்தார் என்னுடைக் கோமளத்தையே.–4-4-4-

உஜ்ஜ்வலம் உத்துங்கம் ஸ்ரமஹரமான வடிவு சந்தரன் -மலை- மேகம் -மூன்றையும் –
ஒன்றிய திங்களைக் காட்டி, ‘ஒளி மணி வண்ணனே!’ என்னும்;ஒன்றப்பட்ட -கலைகளால் -பூர்ண சந்தரன் –
அருகில் நின்றார்க்குக் காட்டி
சுத்த ஸ்படிகம் -போலே -ஒளி ஸ்படிக மணி போன்ற -வடிவு
ஏகாரம் -மழுங்கிய சந்தரன் இல்லை -பூர்ண சந்த்ரனைக் காட்டி -ஆஷேபிப்பாருக்கு இது தான் கண்ணன்
நின்ற குன்றத்தினை நோக்கி, ‘நெடுமாலே! வா!’ என்று கூவும்;சந்திர பத்து அளவும் -ஒக்கம் உள்ள –
மதி தவழ் குடுமி மால் இரும் சோலை –
நெடுமாலே -சம்போதனம் -சிநேகம் -பைத்தியம் மால் –மலை போலே ஒக்கம் -நெடு மால்
உன் வடிவு போலே நெடிதான சிநேகம் -மலையின் நெடுமை சிநேகத்துக்கு ஒப்பு –
சாபராதம் போலே நிற்க வேண்டாம் -தபிக்க விட்டு இருந்ததால் வருந்தி தேங்கி கால் தாழ்ந்து
கேளாமை போன நீ யாரைக் கேட்டு வர வேணும்
நன்று பெய்யும் மழை காணில், ‘நாரணன் வந்தான்’ என்று ஆலும்;பயிர் தளிரும் படி நார சப்த வாச்யன் அப்பு –
மழை லஷணையால் மேகம் –
நிறம் -ஔதார்யம் -காரணம் -இங்கே சொல்ல வில்லை
பெய்யும் -சப்தம் ஜல துளி -ஆபோ நாரா –
நமது உராவுதல் தீர வந்தான் -துளிர்க்க வைக்க இவன் வந்தான் -பயிர்களை துளிர்க்க மழை வருமா போலே
ஆலும் -ஆடும் -மயில் -ஆழ்வார் ஆடுவார் இவனைக் கண்ட
தலையினோடு தட்ட –
என்று இன மையல்கள் செய்தார் என்னுடைக் கோமளத்தையே.–மென்மையானவள் -கூடுவதையும்
தாங்கா தவள் பிரிவை தாங்குவாளோ
என்று பண்ணினார்- எப்படி பண்ணினார் –
இந்த துர் தசையிலே களம் இடம் உண்டோ -கோமளம் அன்றோ

‘பதினாறு கலைகளும் நிறைந்த சந்திரனைக் காட்டி, ‘ஒளி பொருந்திய படிகமணி போன்ற நிறத்தையுடையவனே!’என்பாள்;
நிற்கின்ற மலையைப் பார்த்து, ‘நெடுமாலே! வா,’ என்று கூவுவாள்; மிக அதிகமாகப் பெய்கின்ற, மேகத்தைக் கண்டால்,
‘நாராயணன் வந்தான்!’ என்று மகிழாநிற்பாள்; என்னுடைய கோமளத்தை இத்தகைய மயக்கங்களைச் செய்தார் என்றுகாண்,’ என்கிறாள்.
ஒளி மணி – படிகமணி. ‘நன்று பெரிது’ என்பது தொல்காப்பியம். ‘என்னுடைய கோமளத்தை இன மையல்கள் செய்தார் என்று’ என மாறுக.
என்று – எச்சமுமாம். ‘இன’ என்பது, ‘இன்ன’ என்பதன் விகாரம். இன்ன – இத்தன்மையான.

வியஸன சஹிதை இல்லாத-‘துன்பத்தைப் பொறுக்கும் ஆற்றல் இல்லாத இவளை இப்படி நோவுபடுத்துவதே!’ என்கிறாள்.

ஒன்றிய திங்களைக் காட்டி –
எல்லாக் கலைகளும் நிரம்பின சந்திரனை அருகு நின்றவர்களுக்குக் காட்டி.
ஒளி மணி வண்ணனே என்னும் –
‘ஒளி மணி வண்ணனே!’ என்று அழைக்கின்றாள். ‘புகரையுடைத்தான இரத்தினம் போலே குளிர்ந்த
வடிவோடே அணைக்க வந்ததே!’ என்பாள் என்றபடி.
அன்றிக்கே,
‘இவன் மிக்க ஒளியையுடைய சர்வேசுவரன்’ என்று அவர்களுக்குச் சொல்லா நிற்பாள் என்னுதல்.
சைத்ய குண சாம்யம் -சந்த்ரனுக்கும் இவனுக்கும் -வா -சப்தம் சேர்த்து -சம்போதனம் -வாராய் -சொல் சேர்த்துக் கொண்டு-
கொதித்து கிடக்கும் அங்கங்களுக்கு குளிரும் படி வா என்கிறாள் -சந்திரன் சதி ஆஹ்லாத சைத்திய குளிர்ந்த-
கேட்ட அவர்கள். ‘இம்மழுங்கல் சந்திரன் அவன் ஆகையாவது என்?’ என்பார்களே? ‘ஐயம் இன்று; இவன் அவனே’ என்பாள்,
‘ஒளி மணி வண்ணனே’–ஸூ நிச்சிதம்- எனத் தேற்றேகாரம் கொடுத்துக் கூறுகிறாள்.

நின்ற குன்றத்தினை நோக்கி –
இவ்வளவிலே ஏதேனும் ஒருமலை வாராக் கண்ணுக்குத் தோன்றுமே? அதனைப் பார்த்து,
‘நெடுமாலே வா,’ என்று கூவும் –
வடிவில் பெருமையைக் கண்டவாறே, ‘உலகம் முழுதையும் தன் திருவடிகளின் கீழே இட்டுக்கொள்ளும்படி பெரிய வடிவையுடைய
திருவுலகு அளந்தருளின சர்வேசுவரன்’ என்று நினைத்து, ‘இங்ஙனே வாராயோ?’ என்று அழைப்பாள். இது, பிள்ளான் நிர்வாஹம்.
அங்ஙன் அன்றிக்கே, சீயர்,-நஞ்சீயர்- ‘மலை பேரமாட்டாதே பல கால் மழை பெய்கையாலே அழுக்கு அற்றுப் பசுகு பசுகு என்று இருக்குமே?
அதனைக் கண்டு, ‘அவன் குற்றமுடையவன் ஆகையாலே நாணங் கொண்டு, வந்து கிட்ட மாட்டாமையாலே
பச்சைப் படாத்தை இட்டு முட்டாக்கிட்டு நிற்கிறான்,’ என்று,
‘யானைக் கூட்டத்துக்குக் – யானையின் கலவி.-கதவு இடில் -தடையிடுதல்.-அன்றோ
உமக்கு நாண வேண்டுவது? இங்ஙனே போரீர்,’ என்னா நின்றாள்,’ என்று பணிப்பர்,

நன்று பெய்யும் மழை காணில் நாரணன் வந்தான் என்று ஆலும் –
கெட்டு மழை அன்றிக்கே பெய்ய வேண்டிய காலத்தில் பெய்யும் மழையைக் கண்டவாறே, -‘நாரணன்’-ஒரு காரணம் இன்றியே
உயிரை நோக்குமவன் வந்தான் என்று, மயில்கள் கார் காலத்திலே மகிழ்ச்சியினாலே ஆரவாரித்து ஆடுவதைப் போலே ஆடுகிறாள்.
என்று – என்று இப்படிகளைச் சொல்ல.
உபகாரம் கறுமை குளிர்த்தி -மூன்றும் சாதுர்ச்யம் -மழை மேகத்துக்கும் இவனுக்கும் –
இன மையல்கள் செய்தார் –
இப்படிப் பிச்சுகளைப் பண்ணினார். அன்றிக்கே, ‘இப்படிப் பிச்சு ஏற்றிற்று என்று?’ என்னலுமாம்.
‘இவள் எனக்கு அடங்கியிருப்பவளாதல் தவிர்ந்த பின்பு இவற்றிற்கெல்லாம் காலம் உண்டோ?’ என்கிறாள்.
‘என் சொல்லும் என் வசமும் அல்லள்’-திருவாய். 4. 2 : 10.- என்றது எப்போது?
இவளை இப்படிப் பிச்சு ஏற்றிற்று எப்போது?’ என்கிறாள் என்றபடி.
என்னுடைக் கோமளத்தையே –
அதுதான் செய்யும்போது இடம் வேண்டாவோ?’ ‘கலவியும் கூடப் பொறாத மிருதுத் தன்மையை யுடையவளைப் பிரிவு
பொறுக்கும்படி செய்வதே!’ என்பாள், ‘என்னுடைக் கோமளத்தை’ என்கிறாள்.

————————————————————————————

கோமள வான் கன்றைப் புல்கி, ‘கோவிந்தன் மேய்த்தன’ என்னும்;
போம் இள நாகத்தின் பின் போய், ‘அவன் கிடக்கை ஈது’ என்னும்;
ஆம் அளவு ஒன்றும் அறியேன் அருவினை யாட்டியேன் பெற்ற
கோமள வல்லியை மாயோன் மால் செய்து செய்கின்ற கூத்தே!–4-4-5-

ரஷண பிரவ்ருத்திகளை அனுசந்தித்து -கோவிந்தன் -கன்றுகள் -சர்ப்பங்கள் -அவன் ரஷித்தவன் –
சுமுகன் -பள்ளிக் கட்டின் கீழ் வந்தானே -அத்தை சொல்ல வில்லை
இங்கு ஆதி சேஷன் மேல் சயனித்து உறங்குவான் போல் யோகு செய்வான் –
கோமள வான் கன்றைப் புல்கி, ‘கோவிந்தன் மேய்த்தன’ என்னும்;-இளையவாய் –
கற்றுக் கறவை -கன்றுகள் ஆக இருக்கும் பொழுதே கறவை –
வான் -அளவிலே பெரிய -கிருஷ்ண கர ஸ்பர்சம் பெற்றதால் -ஒரே ஜாதி -அதனால் கன்று ஒருமை-
பசு மேய்க்கைக்கு முடி சூட்டிய
கன்றை -ஒருமை -மேய்த்தன-பன்மை -ஜாதி ஏக வசனம் –
ஆழ்வார் கட்டும் கன்றுகள் ஒரே ஜாதி -அவன் மேய்த்தன பல வுண்டே
வான் ஆண் கன்று என்றுமாம்
இட்டமான பசுக்களை இனிது மறித்து நீரூட்டி
கோமள -துள்ளிப் போகும் -இனம் புரியாமல் இளம் கன்று பயம் அறியாதே
இலைகள் சல சலக்க நாகம் ஓட
போம் இள நாகத்தின் பின் போய், ‘அவன் கிடக்கை ஈது’ என்னும்;-இது போன இடத்தில் அவனும் இருப்பானே
படுக்கை தானே இது
ஆம் அளவு ஒன்றும் அறியேன் அருவினை யாட்டியேன் பெற்ற-வினை -அனுபவித்து முடிக்க முடியாமல்
ஈடுபடுகைக்கு உறுப்பாக பெற்ற
எவ்வளவு புண்ணியம் -பாபமும் புண்ணியமும் வினை கர்மம் தானே
கோமள வல்லியை மாயோன் மால் செய்து செய்கின்ற கூத்தே!-ஆம் அளவு ஒன்றும் அறியேன்-
இவ்வளவு என்று அறிய முடியவில்லையே
வல்லி கொள் கொம்பு இல்லாமல் -மால் தேடும் மனம் -கோல் தேடி போகும் கொழுந்து
மால் செய்து -பிச்சேறும் படி
இவள் பாம்பின் வாயில் புகுந்து அழிந்தால் அவளும் அவன் விபூதியும் முடியுமே –
தாரகமே இல்லை என்றால் தரிக்கப் பட்டவனும் இல்லையே
நித்ய வஸ்து சர்வ நியந்தாவுக்கு என்ன ஆகும் அறியேன்

‘இளமையையுடைய பெரிய கன்றுகளைத் தழுவிக் ‘கிருஷ்ணன் மேய்த்த கன்றுகள் இவையாகும்’ என்பாள்;
செல்லுகின்ற இளமையையுடைய பாம்பின் பின்னே சென்று, ‘இது அவன் படுக்கை’ என்னாநின்றாள்; மேல் விளையக் கூடியது
ஒன்றனையும் அறிகின்றிலேன். போக்கற்கு அரிய தீய வினைகளையுடைய யான் பெற்ற இளைய வல்லிக்கொடி போன்ற
பெண்ணை மாயோன் மயக்கத்தைச் செய்து செய்கின்ற கூத்து என்னேதான்!’ என்கிறாள்.
கோமளம் – இளமை; அழகுமாம், மேய்த்தன : வினையாலணையும் பெயர்.
கிடக்கை – படுக்கை. கூத்து – தொழில் உணர்த்தும் பெயர்; பகாப்பதம்.

‘இவளுக்கு இந்தத் துன்பம் எவ்வளவாய் முடியக் கூடியது என்று அறிகின்றிலேன்?’ என்கிறாள்.

கோமளம் வான் கன்றைப் புல்கி –
‘பருவத்தால் இளையதாய் வடிவால் பெருத்திருக்கிற கன்றுகளைத் தழுவி’ என்னுதல்; -சிறு மா மனிசர் போலே
‘மாணிக்கம் போலே வேறுபட்ட சிறப்பினவாய்ப் பெருத்திருக்கிற கன்றுகளைத் தழுவி’ என்னுதல்.
கோமளம் என்று மாணிக்கத்துக்கும் இளமைக்கும் பேர்.
ஆக, இப்படிக் காட்சிக்கு இனியவாய் மிருதுத்தன்மையை உடையனவுமான கன்றுகளைத் தழுவி என்றபடி.
கிருஷ்ணன் பருவம்போலே ஆயிற்று இவற்றின் பருவம் இருக்கும்படி.
கிட்டினார்க்கு ஒப்புமையை அடைதலே -சாம்யாபத்தி -அன்றோ பலம்?
கோவிந்தன் மேய்த்தன என்னும் –
வஸ்த்ய மத்யகதம் பாலன்-‘கன்றுகளின் நடுவில் உள்ளவனும் இளமைப் பருவமுடையவனுமான கிருஷ்ணன்’ என்றும்,
திவத்திலும் பசு நிரை மேய்ப்பு உவத்தி -‘கன்று மேய்த்து இனிது உகந்த காளாய்’ என்றும் வருகின்றவாறே.
‘இவற்றினுடைய பாதுகாவலுக்கு முடி சூடினவன் உகந்து காப்பாற்றினவை’ என்பாள்.
-கன்றுக்குட்டி கண்ணன் என்று அன்றோ இவன் முடி சூடியது -ஸா பத்நயா விசாலாட்சி அயோத்யா ராமன் போலே-
‘உரியவன் உணர்ந்து நோக்கினவை என்று தோற்றுகிறதாயிற்று இவற்றின் வடிவில் அழகின் நிறைவு.
கன்றின் கழுத்தினைக் கட்டிக்கொண்டவாறே – அது துள்ளிப் போகா நிற்குமே – அதனைக் கண்டு,
கோவிந்தன் -மேய்த்தன -வெறுப்புடன் -கன்றுக் குட்டி கழுத்தைக் கட்டி போகின்றான் –
என்னை எப்பொழுது கட்டுவான் – ‘அவன் பரிகரமாகவே இருந்தது’ என்பாள்.
வெறுப்பிலே நோக்காக வேறும் ஒரு கருத்து அருளிச்செய்கிறார்,-
அவன் ஓடுமாறு போலே இவையும் ஓடாநின்றன,’ என்பது கருத்து.

போம் இள நாகத்தின் பின் போய் –
அவ்வளவிலே ஒரு பாம்பு போகாநிற்குமே, அதன் பின்னே போகா நிற்கும். –
இவளுடைய போகப் பிராவண்யம் இருக்கும்படி. ‘முத்தர்கள் எப்பொழுதும் பகவானை அனுபவிக்கும் அனுபவத்தாலே
இருபத்தைந்து வயதினர்களாகவே இருப்பார்கள் அன்றோ?
அவர்களுடைய இளமை இது என்றிருக்கிறாள்’ என்பாள், ‘இளநாகம்’ என்கிறாள்.
‘போகம்’ என்பது, பாம்பின் உடலுக்கும் அனுபவத்திற்கும் பெயர்
இளமைப்பருவமுடைய கன்றுகளைத் தழுவுவதற்கு அடி யாது?’ என்ன,
‘கிருஷ்ணன்’ என்று தொடங்கி அதற்கு விடை அருளிச்செய்கிறார்.
‘இவற்றுக்குக் கிருஷ்ணன் பருவம் வருகைக்கு அடி யாது?’ என்ன,
‘கிட்டினார்க்கு’ என்று தொடங்கி அதற்கு விடை அருளிச்செய்கிறார்.
‘தம்மையே நாளும் வணங்கித் தொழுவார்க்குத் தம்மையே ஒக்க அருள் செய்வ ராதலின்’- என்பது பெரிய திருமொழி.
‘கன்றைப் புல்கி’ என்றும், ‘நாகத்தின் பின்போய்’ என்றும் கூறாநின்றாள்; ‘இத்தனை உணர்த்தி உண்டோ?’ என்னில்,
கன்று ஓரிடத்தே நிற்கையாலே கழுத்தினைக் கட்டிக்கொண்டாள்; அம்புக்கு எட்டாதபடி பாம்பு ஓடாநிற்குமாதலின்,
அதன் பின்னே போகாநின்றாள். ‘அது புக்க இடத்தே அவன் வரவு தப்பாது’ என்று
காண்கைக்காக அதன் பின்னே போகாநிற்கிறாள் என்றபடி.
அவன் தானும் பரம போகியாய் இருப்பான் ஒருவன் அலனோ?
‘பரம போகி’ என்பதற்கு, ‘பரமனான போகியையுடையவன்’ என்றும்,
‘பரமனான போகி’என்றும் பொருள் காண்க. போகி – பாம்பு; இன்பத்தை யுடையவன்.
அவன் கிடக்கை ஈது எனும் –
அது ஒரு தூற்றிலே போய்ப் புகுமே, அதனை நோக்கிக் கொண்டு கிடப்பாள்’ அவன் வந்தால் காண்கைக்கு.

ஆம் அளவு ஒன்றும் அறியேன் –
உலகமே அழியப் புகுகிறதோ?’ அறிகின்றிலேன். என்றது, ‘இவளை இழக்கவே உலகத்திற்குக் காரணமானவன்
கிடைக்கமாட்டான்; காரணமானவன் இல்லாமையாலே காரியமான இவ்வுலகம் தன்னடையே இல்லையாமே அன்றோ?’ என்றபடி.
அன்றிக்கே, ‘பாம்பு என்று மீளமாட்டுகின்றிலள்; இது என்னாய் விளையக் கடவது?’ என்கிறாள் என்னுதல்.
பாம்போடு ஒரு கூரையிலே பயின்றாற்போலே அன்றோ திருத் தாயார்க்கு இருக்கிறது?
‘பாம்போடு ஒரு கூரையிலே பயின்றாற் போல் தாங்கா துள்ளம் தள்ளுமென் தாமரைக்கண்ணா!’–பெரிய திருமொழி,-11-3-

அருவினையாட்டியேன் பெற்ற –
‘இவளுக்கு இங்ஙனம் ஒரு புத்தி பிறந்து படுகிறது நான் செய்த பாபமே அன்றோ?’ என்பாள்,
‘அருவினையாட்டியேன்’ என்கிறாள்.
‘பிறந்திட்டாள்’ என்கிறபடியே,-‘பின்னைகொல்! நிலமா மகள்கொல்! திருமா மகள்கொல் பிறந்திட்டாள்!
என்ன மாயங்கொ லோ!இவள் நெடுமால் என்றே நின்று கூவுமால்’– திருவாய்மொழி, 6. 5 : 10.
அக்கரையளாய் – பரமபதத்திலிருப்பவள்-இவள் தனக்குப் பெறாப் பேறாய் இருக்கிறபடியைத் தெரிவிப்பாள், ‘பெற்ற’ என்கிறாள்.
‘அன்றிக்கே, ‘நெடுங்காலமும் கண்ணன் நீள் மலர்ப்பாதம் பரவிப் பெற்ற’-திருவிருத்தம், 37.- என்கிறபடியே,
‘செய்து முடிக்க ஒண்ணாத புண்ணியங்களைப் பண்ணிப் பெற்ற மிருதுத் தன்மையையுடைய இவளை’ என்னுதல்.
கோமள வல்லியை –
‘கேவலம் வல்லி அன்று; கோமள வல்லி ஆயிற்று.-மிருதுத்தன்மையையுடைய வல்லி.
அன்றிக்கே, ‘ஒரு கொள் கொம்போடே சேர்க்கவேண்டும் பருவம்; அதாவது, பிள்ளைப்பருவம்’ என்னுதல்.
மாயோன் –
தன்னைக் கண்டால் தந்தாமை அறியாதபடி பண்ண வல்ல காதல் குணத்தையுடையவன்.
மால் செய்து –
பிச்சு ஏற்றி. செய்கின்ற கூத்து – அடிக்கிற ஆட்டம். ‘ஆம் அளவு ஒன்றும் அறியேன்’ என மேல் உள்ளதனோடு கூட்டுக.

——————————————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ. வே.வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

பகவத் விஷயம் காலஷேபம் 91- திருவாய்மொழி – -4-3-6….4-3-11–ஸ்ரீ உ. வே. வேளுக்குடி ஸ்வாமிகள்-

May 29, 2016

கால சக்கரத்தொடு வெண் சங்கம் கை ஏந்தினாய்!
ஞால முற்றும் உண்டு உமிழ்ந்த நாராயணனே!’ என்று என்று,
ஓல மிட்டு நான் அழைத்தால் ஒன்றும் வாராயாகிலும்,
கோலமாம் என் சென்னிக்கு உன் கமல மன்ன குரை கழலே.–4-3-6-

3/6 பாசுரங்களில் இவர் சமர்ப்பிக்க வில்லை சேவை சாதிக்கா விடிலும் உன் திருவடிகள் சம்பந்தமே –இத்தலைக்கு சத்தை –
ப்ரணயம் வெளியிடுகிறார்
கால சக்கரத்தொடு வெண் சங்கம் கை ஏந்தினாய்!-காலன் -பகவத் பாகவத் அடியார்களுக்கு –
பரபாக ரசாவகன் திருப் பாஞ்ச ஜன்யம் -சோபாவஹமான திருக்கரங்களில்
1-ஞால முற்றும் உண்டு உமிழ்ந்த நாராயணனே!’ என்று என்று,-ரஷ்யமான ஜகத்துக்கு -பிரளய ஆபத்தில் –
2-திரு வயிற்றில் வைத்து ரஷித்து
3-நிருபாதிக சம்பந்தம் -நாராயணன் -இந்த மூன்றையும் கூவி
ஓல மிட்டு நான் அழைத்தால் ஒன்றும் வாராயாகிலும்,-இருந்த இடத்தில் இருந்து நகர சக்தன் அல்லாமல்
நீ வரும் சுவடு கூட -இல்லாமல் இருந்தாலும் –
கோலமாம் என் சென்னிக்கு உன் கமல மன்ன குரை கழலே-உன்னை ஒழிய செல்லாத எனக்கு –நிரதிசய போக்யமான –
ரஷனத்துக்கு இட்ட வீரக் கழல் எண் சென்னிக்கு அலங்காரம் –ப்ரேமம் சத்தா பிரயுக்தம்

‘பகைவர்களுக்கு முடிவு காலத்தைச் செய்கின்ற சக்கரத்தையும் வெண்மையையுடைய சங்கினையும் திருக்கைகளிலே ஏந்தினவனே!
பூமி முழுதினையும் உண்டு உமிழ்ந்த நாராயணனே!’ என்பதாகக் கூப்பிட்டு நான் அழைத்தால், சிறிதும் வாராமல் இருந்தாயேயாகிலும்,
உனது தாமரை மலர் போன்ற ஒலிக்கின்ற திருவடிகள் எனது தலைக்கு அலங்காரமாம்.
‘உன் கமலம் அன்ன குரைகழல் என் சென்னிக்குக் கோலமாம்,’ என்க. கோலம் – அழகு. ஒன்றும் – சிறிதும். எண்ணுப் பொருளுமாம்.

‘இப்படிக் காதலை உடையையாய் இருந்துள்ள நீ என்னைக் கிட்டாதே ஒழிந்தாயேயாகிலும், உன் திருவடிகளே எனக்குத்
தாரகம் முதலானவைகள்,’ என்கிறார். ‘உனக்கு நான் உதவப்பெற்றிலேனாகிலும், என் உயிர் முதலானவைகள் உனக்குத்
தாரகம் முதலானவைகள் ஆனாற்போலே, நீ வாராயாகிலும் உன் திருவடிகள் எனக்குத் தாரகம் முதலானவைகள்,’ என்கிறார்.
‘அவனுடைய காதலைச் சொல்லாநிற்க, நடுவே தம்முடைய காதலைச் சொல்லுவான் என்?’ என்னில்,
இருவர் கூடிக் கலவாநின்றால் பிறக்கும் ரசங்களும் இருவருக்கும் உண்டாய் இருக்குமேயன்றோ? அவற்றுள்,
மேல் எல்லாம் அவனுடைய காதலைச் சொல்லிக் கொண்டு போந்தார்; இப்போது அவனுடைய காதலின்
மிகுதி தம்மையும் காதலன் ஆக்கிற்று என்கைக்காகத் தம்முடைய காதலைச் சொல்லுகிறார்.

கால சக்கரத்தொடு வெண்சங்கம் கை ஏந்தினாய் –
இவர் கூப்பிட்ட பாசுரந்தான் இதுவாயிற்று. -மூன்று விழி சொற்கள் என்றவாறு –
பகைவர்களுக்குக் கூற்றுவனான திருவாழியோடேகூட, நீலநிறம் பொருந்திய
திருமேனிக்குப் பரபாகமான வெண்மையை யுடைத்தான ஸ்ரீ பாஞ்சஜன்யத்தை, வெறும்புறத்திலே ஆலத்தி வழிக்க வேண்டும் படியிருக்கிற
அழகிய திருக்கையிலே பூ ஏந்தினாற்போலே ஏந்தினவனே! ஸ்ரீ பாஞ்சஜன்யத்துக்கு வெளுப்புத் தன்மை ஆனாற்போலே,
திருவாழிக்குப் பகைவர்களை அழித்தலும் தன்மையாய் இருக்குமாதலின், ‘காலசக்கரம்’ என்கிறார்,

ஞாலம் முற்றும் உண்டு உமிழ்ந்த –
பிரளய ஆபத்திலே வரையாமல் திருவயிற்றிலே வைத்துக் காத்து, அப்பிரளயம் கழிந்தவாறே வெளிநாடு காணப் புறப்படவிட்டு,
இப்படி வரையாமல் காப்பாற்றுகின்ற. என்றது, ‘இவற்றை ஆபரணமாகக் கொண்டு அலங்கரித்து, உலகம் நோவுபடத் தான்
அலங்காரம் அழியாதே இருக்கை. அன்றிக்கே, ஆபத்திற்குத் துணைவனாய் இருக்கும் என்பதனைத் தெரிவித்தபடி.

நாராயணனே –
இப்படி வரையாமல் பாதுகாக்கவும் ‘இவன் நம்மைப் பாதுகாத்தான்’ என்று கைம்மாறு தேடி நெஞ்சாறல் படவும்
வேண்டாதபடி சம்பந்தம் இருக்கிறபடி, ‘தாய் நம்மை வயிற்றிலே பாதுகாத்தாள்; நாம் இவளுக்கு என் செய்வோம்?’ என்று
நெஞ்சாறல்படுவார் இலரே அன்றோ? அதற்கு அடி, சம்பந்தம்; அப்படியே அன்றோ அவனும்?
‘தாய் இருக்கும் வண்ணமே உம்மைத் தன் வயிற்று இருத்தி உய்யக்கொண்டவன்’ என்பதே அன்றோ
ஆறு அங்கம் கூற அவதரித்த ஆலிநாடர் திருவாக்கு?

என்று என்று
–1- கையும் ஆழ்வார்களுமான அழகையும் –2-காலத்திற்குத் தகுதியாக ஆபத்தில் துணையாயினமையையும்,
3–இவை இல்லாவிடிலும் விட ஒண்ணாத சம்பந்தத்தையும் சொல்லி. ‘என்று என்று’ என்னும் அடுக்கு,
தனித்தனியே ஆழங்காற்பட்டமையைத் தெரிவிக்கிறது.

ஓலம் இட்டு நான் அழைத்தால் –
வலி இழந்தவனான நான் கூப்பிட்டு அழைத்தக்கால். ‘ஓலமிட்டு’ என்றதனால் பரமபதத்திலே இருந்தாலும் நிலை குலைந்து
வரவேண்டும்படி பெருமிடறு செய்து கூப்பிடுகின்றமை போதரும்.
ஒன்றும் வாராயாகிலும் –
‘உபப்பிலாவியம் என்ற நகரத்திலிருந்து வந்தவரான ஸ்ரீ கிருஷ்ணன் குசஸ்தலம் என்கிற இடத்தில் தங்கியிருக்கிறார்;
அவர் காலையில் இங்கு வருவார்,’ என்கிறபடியே, அங்குநின்றும் புறப்பட்டான், இங்கே வந்துவிட்டான் என்று
வருகைக்குக் காரணம் இல்லையேயாகிலும்.
அன்றிக்கே, ‘கிருஷ்ணனுடைய திருப்பெயரை நினைவு ஊட்டுகின்ற திருச்சின்னத்தின்
ஓசையானது குளிர்ந்திருக்கும்’ என்னக்கடவதன்றோ?

என் சென்னிக்குக் கோலமாம். –
‘ஸ்ரீராமபிரானுடைய திருவடிகள் என் தலையினால் தாங்குகின்றவரையில் எனக்குச் சாந்தி உண்டாக மாட்டாது’ என்று
இருக்கின்ற என் தலைக்குக் கோலமாம்.
உன் கமலம் அன்ன –
‘செவ்விப்பூச் சூட வேண்டும்’ என்று ஆசைப்படுவாரைப் போலே.
குரைகழல் –
குரை என்று பரப்பாய், அதனாலே இனிமையின் மிகுதியைச் சொல்லிற்றாதல்;
அன்றிக்கே, ஆபரணங்களின் ஒலியைச் சொல்லிற்றாதல். “வாராயாகிலும் கோலமாம்’ என்பான் என்?’ என்னில்,
‘வாராது ஒழியக்கூடாது; கூடாதது கூடிலும் என் நினைவு இது,’ என்கிறார்.
என்னை அடியிலே இப்படி ஆக்கினாயே!’ என்பது கருத்து. அடிவிடில் ‘நின்னலால் இலேன்காண்’ என்பாரே!

‘உமக்கு இப்படி ருசியைப் பிறப்பித்தார் யார்?’ என்ன, ‘என்னை அடியிலே’ என்று தொடங்கி அதற்கு விடை அருளிச்செய்கிறார்.
‘அடியிலே’ என்றது, சிலேடை : ‘திருவடிகளிலே’ என்பதும், ‘ஆதிகாலத்திலே’ என்பதும் பொருளாம்.
ஆகையாலே, சத்தாபிரயுக்தம் என்கிறார், ‘அடி விடில்’ என்று தொடங்கி. ‘நின்னலால் இலேன்காண்’ என்ற இது, திருவாய்மொழி, 2.3:7.

———————————————————————————–

குரை கழல்கள் நீட்டி மண் கொண்ட கோல வாமனா!
குரை கழல் கை கூப்புவார்கள் கூட நின்ற மாயனே!
விரைகொள் பூவும் நீரும் கொண்டு ஏத்த மாட்டேனேலும் உன்
உரை கொள் சோதித் திருவுருவம் என்னது ஆவி மேலதே.–4-3-7-

அகிஞ்சித் கரனாய் இருக்கினும் -ஆனந்யார்ஹமாய் ஆக்கி அடிமை கொள்ளும்
ஸ்வாபவம் உடைய திரு மேனி ஆத்மாவை விஷயீ கரித்து
வாமனா -பிரணவம்
கை கூப்புவார்கள் நமஸ் ஏத்த -நாராயணாய -கைங்கர்யார்த்தம்
குரை கழல்கள் நீட்டி மண் கொண்ட கோல வாமனா!-வீரக் கழல் –
குரை கழல் கை கூப்புவார்கள் கூட நின்ற மாயனே!-அஞ்சலி பண்ணினால்-கூட –
அவர்கள் உடன் கூட -உபாயம் உபேயமாக நின்ற
விரைகொள் பூவும் நீரும் கொண்டு ஏத்த மாட்டேனேலும் உன்-பரிமளப் பிரசுரமான -பூவும் நீரும் -ஆராதிக்க –
ஸ்தோத்ரம் பண்ணி ஆபிமுக்யம் செய்து
உரை கொள் சோதித் திருவுருவம் என்னது ஆவி மேலதே -வேதாந்த வாக்யம் ஸ்தோத்ரம் பண்ணி –
அவற்றாலும் சொல்லி முடிக்க முடியாத
உனது திரு மேனி எனது ஆத்மா மேல் அபி நிவிஷ்டமாய் ஆனதே

ஒலிக்கின்ற திருவடிகளை நீட்டி உலகத்தை அளந்து கொண்ட அழகிய வாமனனே!
ஒலிக்கின்ற திருவடிகளில் கைகூப்பி வணங்குகின்றவர்கள் அடையும்படி நின்ற மாயவனே! வாசனை பொருந்திய
பூக்களையும் தண்ணீரையும் கொண்டு துதிக்கமாட்டேனேயாகிலும், வேதங்களால் புகழப்படுகின்ற உன்னுடைய
சோதி மயமான திருமேனியானது என்னுடைய உயிரின் மேலதேயாம்.

‘நீட்டிக்கொண்ட வாமனா! என்க. ‘ஏத்தமாட்டேனேலும், உன் திருவுருவம் என்னது ஆவி மேலது,’ என்க.
விரை – வாசனை. ‘விரை’ என்னும் அடையை நீருக்கும் கூட்டுக.
இப்பாசுரத்தில் முதல் அடியாலே, சேஷித்வ பிரதானமான பிரணவார்த்தமும்,
‘குரைகழல்கள் கைகூப்புவார்கள்’ என்றதனால், நமஸ் சப்தார்த்தமும்,
‘கூடநின்ற மாயனே’ என்றதனால்,
நாராயண சப்தார்த்தமும் சொல்லுகிறது என்பர் பெரியோர்.

‘மேலே கூறிய அன்பும் அதற்குத் தகுதியான செயல்களும் இன்றிக்கே இருக்கிலும்
என் உயிரே உனக்கு ஜீவனத்திற்கு ஏது ஆவதே!’ என்கிறார்.

குரை கழல்கள் நீட்டி –
‘மண் முழுதும் அகப்படுத்து நின்ற’ என்கிறபடியே, பூமிப்பரப்பு அடையத் திருவடிக்குள்ளே யாம்படி திருவடியை நிமிர்த்து.
குரை – பரப்பு என்னுதல்; ஓசை என்னுதல்.
மண் கொண்ட கோல வாமனா –
மண் கொண்ட பின்பும் வாமன வேஷம் இவர் திருவுள்ளத்திலே ஊற்றிருந்தபடி.ஊன்றி இருந்த படி –
இந்திரனுக்கு இராச்சியம் கொடுக்கை அன்றிக்கே, தம்மை அனுபவிப்பிக்கைக்காக அவ்வடிவு கொண்டான் என்று இருக்கிறார்.
இதனால்,பிராப்தியைச் சொல்லிற்று. அஞ்சலி மாத்திரத்தாலே சாதிக்கப்படு பொருள் என்கிறார் மேல்:
குரைகழல் கை கூப்புவார்கள் கூடநின்ற மாயனே –
‘உன் திருவடிகளிலே கைகூப்பி வணங்கினவர்கள் உன்னைக் கூட நின்ற மாயனே’ என்னுதல்.
அன்றிக்கே, ‘கைகூப்புவார்கள் குரை கழல்கள் கூட நின்ற மாயனே’ என்று கொண்டு கூட்டி,
‘உன்னைக் கைகூப்புவார்கள் குரைகழல்கள் கூட நின்ற மாயனே’ என்னுதல்.
திருவடிதான் அஞ்சலிக்கு விஷயமுமாய் அஞ்சலியினாலே சாதிக்கப்படுகின்ற பொருளுமாய் அன்றோ இருப்பது?
இந்திரனுக்கு இராச்சியம் கூறுபட்டாற்போலே இவர்க்கும் அத்திருவடிகளில் அழகு
கூறுபட்டதாதலின், ‘குரை கழல்கள்’ என்கிறார்.
‘அவனுக்குச் சாதனமானது இவர்க்குச் சாத்தியம் ஆயிற்று,’ என்றபடி.
சேஷத்வ ராஜ்ஜியம் இவருக்கு -புருஷார்த்தமே திருவடியே தானே

மாயனே –
‘ஓர் அஞ்சலி மாத்திரத்தாலே உன்னை அடையலாம்படி இருப்பதே! இது என்ன ஆச்சரியந்தான்!’ என்கிறார்.
விரை கொள் பூவும் நீரும் கொண்டு ஏத்த மாட்டேனேலும் –
வாசனையையுடைத்தான பூவையும் நீரையும் கொண்டு ‘எல்லாமாய் இருக்கிற பூமியைப்
பனி போன்று குளிர்ந்திருக்கின்ற தண்ணீரால் நனைக்கட்டும்;
பின்னர், மற்றவர்கள் எங்கும் பொரிகளாலும் மலர்களாலும் வாரி இரைக்கக் கடவர்கள்,’ என்கிறபடியே.
வகுத்த அடிமை செய்யமாட்டிற்றிலனே யாகிலும். என்றது, ‘ஓர் அஞ்சலி மாத்திரத்தாலே
உன்னை அடையலாம்படி நீ இருந்தால்,
அறிவுள்ள ஒருவன் மலர் முதலான கருவிகளைக்கொண்டு அடிமை செய்கையன்றோ தக்கது?
அப்படிச் செய்யப் பெற்றிலனேயாகிலும்’ என்றபடி.

உரை கொள் சோதித் திரு உருவம் –
‘சக்கரவர்த்தி திருமகன் இராச்சியத்தை ஆளுகின்ற காலத்தில் மக்களுக்கு இராமன் இராமன் இராமன்
என்று எல்லா வார்த்தைகளும் உண்டாயின;
உலக முழுவதும் இராமன் சொரூபமே ஆயிற்று,’ என்பது போன்று, ‘அது அது’ என்று வாய் புலற்றும்படி
இருக்கிற சோதி மயமான திருமேனி’ என்னுதல்.
அன்றிக்கே, ‘பேச்சுக்கு அப்பாற்பட்ட திருமேனி’ என்னுதல்.
அன்றிக்கே, ‘மாற்றும் உரையும் அற்ற திருமேனி’ என்னுதல்;
‘சுட்டு உரைத்த நன்பொன் உன் திருமேனி ஒளி ஒவ்வாது,’ என்பது தமிழ் மறை அன்றோ?
என்னது ஆவி மேலது –
இப்படி வேறுபட்ட சிறப்பினையுடைய உன் திருமேனி என் உயிரின் மேலது. நித்தியசூரிகளுக்குப் போக்கியமான
திருமேனிக்குத் தாரகம் முதலானவைகள் என் ஆத்துமா ஆவதே! ‘கலியர் சோற்றின்மேல் மனம்’ என்னுமாறு போலே.
‘இவர்தாம் ‘அஹமந்நம் அஹமந்நம் அஹமந்நம் – நான் பரமாத்துமாவிற்கு இனியன்;
நான் பரமாத்துமாவிற்கு இனியன்; நான் பரமாத்துமாவிற்கு இனியன்,’ என்று இருக்குமவர் அன்றோ?
நித்ய சூரிகளுக்கு சத்தையான உன் திருமேனி என் ஆத்மா தாரகாதிகள் ஆவதே
-பசியன் சோற்றைக் கண்டால் போலே -இருப்பதே -அன்னமாகக் கொண்டு அந்நாதனாக அனுபவிக்கிறான் –

உரைகொள்’ என்பதற்கு மூன்று வகையாகப் பொருள் அருளிச்செய்கிறார்:
முதற்பொருளில், உரையையுடைத்தாயிருக்கை. இரண்டாவது பொருளில்,
உரையை வென்றிருக்கை. மூன்றாவது பொருளிலும் உரையை வென்றிருக்கை
என்பதே பொருள்.

——————————————————————————-

என்னது ஆவி மேலையாய்! ஏர் கொள் ஏழ் உலகமும்
துன்னி முற்றும் ஆகிநின்ற சோதி ஞான மூர்த்தியாய்!
உன்னது என்னது ஆவியும்; என்னது உன்னது ஆவியும்;
இன்ன வண்ணமே நின்றாய் என்று உரைக்க வல்லனே?–4-3-8-

ஞானம் பக்தி ஞப்தி முதல் பத்தில் /முக்தி இரண்டாம் பத்து /வ்ருத்தி கைங்கர்யம் மூன்றாம் பத்தில் /
அதனால் ஏற்படும் விரக்தி நான்காம் பத்தில்
இவை ஆழ்வாருக்கு ஏற்பட்ட நிலைகள் நான்கிலும் –
பரத்வம் -காரணத்வம் -வியாபகத்வம் -நியந்த்ருத்வம் காட்டிக் கொடுத்தான் என்றுமாம் –
என்னது உன்ன– தாவியில் அறிவார் ஆத்மா என்னும் அவன் மதம் தோற்றும் -ஆச்சார்ய ஹிருதயம்
அறிவார்களுக்கு உயிர் ஆனாய் அறிவார்களை உயிராக கொண்டவன் –

எனக்காக அனைத்து உலகும் வியாபித்து என்னை அங்கீ கரித்து
என்னது ஆவி மேலையாய்!-அபி நிவிஷ்டனாய்க் கொண்டு
ஏர் கொள் ஏழ் உலகமும்-ஔஜ்வல்யம் ஸ்வ பாவமாகக் கொண்ட அனைத்து உலகையும்
துன்னி முற்றும் ஆகி நின்ற சோதி ஞான மூர்த்தியாய்!-சமஸ்த பதார்த்தங்களும் பிரகாரமாகக் கொண்டு
ஸ்வயம் ஜோதி ரூபமான ஞானமே ஸ்வரூபம் –
இங்கு மூர்த்தி ஸ்வரூபம் -ஞான மயம் -ஞானமும் உண்டு -தர்ம தர்மி ஞானம்
அஹம் -தர்மி ஞானம் இதம் தர்மபூத ஞானம் –
ஞான ஸ்வரூபனாய் ஞான குணகனுமாய் –
உன்னது என்னது ஆவியும்; என்னது உன்னது ஆவியும்;-இருவருக்கும் போக்கியம் –
முதலில் என்னதாவி உன்னது -அவன் போக்யமாக அனுபவிக்க அத்தைக் கண்டு இவர் அனுபவிக்கிறார்
என்னதாவி உன்னது என்றும் சொல்லவில்லை உன்னதாவி என்னது என்றும் சொல்ல வில்லையே
நான் முதலில் சமர்ப்பித்து தேவரீர் வாங்கிக் கொண்டீர்-வருமே-
பரகத ஸ்வீகார நிஷ்டை காட்ட உன்னது முதலில்- கிருஷி அவனது
இன்ன வண்ணமே நின்றாய் என்று உரைக்க வல்லனே?-இதுக்கு என்ன பாசுரம் சொல்லுவேன்
உபய அனுராகம் சொல்லிற்று ஆயிற்று

‘என் உயிர்மேல் காதல் கொண்டுள்ளவனே! அழகு பொருந்தியிருக்கின்ற ஏழ் உலகங்களிலும் பரந்து நிறைந்து
எல்லாப் பொருள்களுமாகி நின்ற சோதி மயமான ஞானத்தையே வடிவாக உடையவனே! என்னுடைய உயிரும் உன்னுடையது;
உன்னுடைய உயிரும் என்னுடையது; இன்ன தன்மையிலே நின்றாய் என்று உரைக்க வல்லனோ? வல்லவன் அல்லன்,’ என்றவாறு.
மேலையாய் – விளிப்பெயர்; எச்சமாகக் கோடலும் அமையும். அப்பொழுது மேலை ஆகித் துன்னி முற்றுமாகி நின்ற மூர்த்தி’ என இயையும்.
‘வல்லனே’ என்றதில், ஏகாரம் எதிர்மறைப்பொருளது.

‘ஒருவரை ஒழிய ஒருவர்க்குச் செல்லாதபடி பிறந்த கலவி, பேச்சுக்கு நிலம் அன்று,’ என்கிறார்.

என்னது ஆவி மேலையாய் –
1-‘என் ஆத்துமாவைப் பெற்று அதனால் வந்த பிரீதி பிரஹர்ஷத்தை யுடையாய்’ என்னுதல்.
அன்றிக்கே.2- ‘என்னைப் பெற வேண்டும் என்னும் ஆசையை உடையாய்’ என்னுதல். மேலையாய் – எச்சம்.
அன்றிக்கே, 3-‘என்னது ஆவி மேலையாய்!’ என்பதனை விளிப்பெயர் என்னுதல். -சம்போதனம் –

ஏர்கொள் ஏழ் உலகமும் துன்னி முற்றுமாகி நின்ற சோதி ஞான மூர்த்தியாய் –
‘இவரைப் பெற்ற பிரீதியாலே பரந்து நிறைந்து நிற்றலும் புதுக்கணித்தது என்கிறார்’ என்னுதல்.
அன்றிக்கே, ‘ஒருவனைப் பிடிக்க நினைத்து அவன் பக்கல் உண்டான ஆசையாலே ஊரை வளைவாரைப்போலே,
தம்மை அகப்படுத்துகைக்காகப் பரந்து நிறைந்து இருப்பவன் ஆனான் என்கிறார்’ ஆதல்.
இவரோடே வந்து கலந்த பின்பு உலகத்திற்குப் பிறந்த புதுக்கணிப்பைத் தெரிவிப்பார், ‘ஏர்கொள் உலகம்’ என்கிறார்.
‘உண்டி உடல் காட்டும்’ என்னுமாறு போலே, ஆத்துமா நிறைந்தவாறே சரீரமும் புதுக்கணிக்குமே அன்றோ?
உலகத்தையே உருவமாக உடையவன் அன்றோ அவன்? சாதி, பொருள்கள் தோறும் மறைந்து இருத்தல் போன்று,
இறைவனும் குறைவறப் பரந்து நிற்கின்றான் ஆதலின், ‘துன்னி முற்றுமாகி நின்ற’ என்கிறார்.
சோதியின் உருவமான ஞானத்தையே வடிவாகவுடையன் ஆதலின், ‘சோதி ஞான மூர்த்தியாய்’ என்கிறார்.

என்னது ஆவியும் உன்னது; உன்னது ஆவியும் என்னது –
என்னுடைய ஆவி உன்னது; உன்னுடைய ஆவி என்னது. என் சொரூபம் நீ இட்ட வழக்கு; உன் சொரூபம் நான் இட்ட வழக்கு.
இவ்விடத்தை ஆளவந்தார் அருளிச் செய்கையில் இருந்த முதலிகளிற் சிலர், ‘இவ்வாத்துமாவின் சொரூபம் அவன்
இட்ட வழக்கு என்பது கூடும்; அவன் சொரூபம் இவன் இட்ட வழக்காவது என்?’ என்று கேட்க,
‘இவன் தன்னை அவனுக்கு ஆக்குவான் என்ற அன்று கர்மம் தடைசெய்யவும் கூடும்;
சர்வேசுவரன் தன்னை இவன்
இட்ட வழக்கு ஆக்கும் அன்று தடைசெய்பவர் இலர்; ஆன பின்பு, அதுவே நிலை நிற்பது
மேலும், ‘இவன் சொரூபம் அவன் இட்ட வழக்கு ஆகக் கூடுமோ?’ என்று இதிலே காணும்
சந்தேகிக்க வேண்டுவது,’ என்று அருளிச்செய்தார்.
நிரந்குச ஸ்வ தந்த்ரம் அடியாக கொண்ட ஆஸ்ரித பாரதந்திர கல்யாண குணம்
அரசன் தன் குழந்தை காலால் தனது கன்னம் அடித்துக் கொள்வது போலே
காளி தாசன் கதை -பொன் கழஞ்சு பண்ணிப் போடச் சொன்னானே –

இன்னவண்ணமே நின்றாய் –
இந்த வகையிலே நின்றாய். என்று உரைக்க வல்லனே –
‘இப்படிப்பட்ட உன்னுடைய காதல் குணத்தை என்னால் பாசுரம் இட்டுச் சொல்லலாய் இருந்ததோ?’ என்கிறார்

ஆஸ்ரித பாரதந்திரம் -காட்டிய இடத்துக்கு த்ருஷ்டாந்தங்கள் -உபய விபூதியிலும்-
1-ஆவாசம் -இச்சாமி -சர பங்கர் இடம் இடம் கேட்டார் பெருமாள் –
தான் பரமபதம் போவதாக சொல்லி -சுதீஷ்ணர் ஆஸ்ரமம் -கை காட்ட
துஷ்ட மிருகங்கள் –10.5 வருஷம் ஆஸ்ரம மண்டலம் சுத்தி வந்து மீண்டு வந்து அகஸ்த்யர் ஆஸ்ரமம் காட்டினார்
2-விஷ்வக் சேனர் வர -பிரம்மா மாத்த -அந்தபுரம் தேவிமார் மறைந்து –
பிரியேன உதார வீஷணை தேவரீர் இட்ட வழக்கு அன்றோ சொல்லி –

பரஸ்பர ஸ்நேஹம் -அவதாரிகை -அவனது பிரணயித்வம் மிக்கு –
அத்தைக் கண்டு இவர் அன்பாக பரிணமித்தது என்றவாறு

——————————————————

உரைக்க வல்லன் அல்லேன்; உன் உலப்பு இல் கீர்த்தி வெள்ளத்தின்
கரைக்கண் என்று செல்வன் நான்? காதல் மையல் ஏறினேன்;
புரைப்பு இலாத பரம்பரனே பொய்யிலாத பரஞ்சுடரே!
இரைத்து நல்ல மேன்மக்கள் ஏத்த, யானும் ஏத்தினேன்.–4-3-9-

பாரமார்த்திக பரத்வ-உண்மையான -பரத்வ ஔஜ்வல்யம் -என்னால் பேச முடியுமோ
தனித்து முடியாது முன்னுறு சொல்ல பின்னுறு சொல்வேன்
ஆஸ்ரித விஷய பாரதந்த்ர்யம் சொல்ல வல்லேன்
ஆனந்த குணம் வேதம் திரும்பிற்று அத்தைப் பாடுவேன்
உரைக்க வல்லன் அல்லேன்; உன் உலப்பு இல் கீர்த்தி வெள்ளத்தின்-முடிப்பு இல்லாத பிரணயித்வ அன்பு வெள்ளம்
கரைக்கண் என்று செல்வன் நான்? காதல் மையல் ஏறினேன்;
கரை இடத்து கூட போக முடியாதே -காதல் கடலின் கரை கூட வர முடியாதவன்
அடியிலே பேச இழிந்தது எனது பிரேமத்தாலே-
காதல் மையல் -பத்தர் பித்தர் பேதையர் போலே பேசினேன் கம்பர்
கலங்கி போனேன் -அத்தால் பாடினேன் இது வரை
புரைப்பு இலாத பரம்பரனே பொய்யிலாத பரஞ்சுடரே!பொய் கலவாத -உண்மையான பரம்பரன் -பாரமார்த்திகம்
என்னுடன் கலந்து ஔஜ்வல்யம் உடையவன் -வெண்ணெய் உடன் கலந்து போலே என் மெய்யுடன் கலந்தான்
இரைத்து நல்ல மேன்மக்கள் ஏத்த, யானும் ஏத்தினேன்-நித்ய சூரிகள் ஸ்தோத்ரம் பண்ண அடியேனும் சேர்ந்து பண்ணினேன்
அவன் வாசி பார்ப்பவன் இல்லையே –
இரைத்து -பெரும் கடல் போலே கோஷித்து -ஹாவு ஹாவு ஹாவு -பிரேம பரவசத்தால் நானும் ஏத்தினேன் –

‘உரைப்பதற்கு ஆற்றலுடையேன் அல்லேன்; உன்னுடைய எல்லையில்லாத கீர்த்தியாகிய வெள்ளத்தின் கரையிடத்தில்
நான் என்று செல்வேன்? காதலால் மயக்கத்தை அடைந்தேன்; குற்றம் இல்லாத பரம்பரனே! பொய்யில்லாத பரஞ்சுடரே!
நல்ல மேன்மக்கள் ஆரவாரம் செய்துகொண்டு ஏத்த, அதனைக் கண்டு யானும் ஏத்தினேன்,’ என்கிறார்.
பரம்பரன் – உயர்ந்த பரன்; மூவர்க்குள் முதல்வன். பரம் -உயர்வு.
நல்ல மேன்மக்கள் – நித்தியசூரிகள். ‘இரைத்து ஏத்த’ என்க.

‘அனுபவிக்கப்படும் பொருள் பேசத் தட்டு என்?’ என்ன,
‘உன் கரை இல்லாத காதல் என்னுடைய பேச்சுக்கு நிலம் அன்று,’ என்கிறார்.

உரைக்க வல்லன் அல்லேன் –
உன் காதல் குணத்தை அனுபவித்துக் குமிழிநீர் உண்டு போமித்தனை போக்கிப் பேசித் தலைக்கட்ட மாட்டுகின்றிலேன்.
‘எல்லாம் பேச ஒண்ணாதாகில், பேசக்கூடிய கூற்றினைப் பேசினாலோ?’ என்னில்,
உன் உலப்பு இல் கீர்த்தி வெள்ளத்தின் கரைக்கண் நான் என்று செல்வன் –
உன்னுடைய முடிவில்லாத காதல் குணத்தால் வந்த கீர்த்திக் கடலினுடைய கரையிலே தான் என்னாலே செல்லப்போமோ?’
‘இப்படிக் கரை அருகும் செல்ல அரிய விஷயத்தில் நீர் பேசுவதாக முயற்சி செய்வான் என்?’ என்னில்,

காதல் மையல் ஏறினேன் –
‘என்னுடைய ஆசையாலே மிக்க கலகத்தை உடையவன் ஆனேன்;
பிச்சு ஏறினாரை ‘நீர் இப்படிச் செய்வான் என்?’ என்னக் கடவதோ?
இவ்விஷயத்தில் மயங்குவான் என்? மயங்குவார்க்கு ஒரு பற்றுக்கோடு வேண்டாவோ?’ என்ன,
‘நித்தியசூரிகள் பித்து ஏறி ஏத்தக் கண்டேன்; அத்தாலே செய்தேன்,’ என்கிறார் மேல் :
நித்தியசூரிகளோடு இவரோடு அவன் தன்னோடு வேற்றுமை இன்றி அன்றோ இவ்விஷயம் இருப்பது?
முற்றறிவினனாய் எல்லாவற்றையும் முடிக்கவல்ல ஆற்றலையுடையனான தான் அறியப்புக்காலும்
தனக்கும் தன் தன்மை அறிவு அரியனாய் அன்றோ இருப்பது?
தன்னை அறியப் புக்க வேதங்கள் பட்டது படுமத்தனை தானும்.

புரைப்பு இலாத பரம்பரனே பொய்யிலாத பரஞ்சுடரே –
எல்லாப் பொருள்கட்கும் உயர்ந்தவனாய் இருக்கிற இருப்பில் குற்றம் இல்லாதது போலே, என்னுடைய கலவியிலும்
வடிவிற் பிறந்த ஒளியிலும் குற்றம் இன்றிக்கே இருக்கின்றவனே!
அன்றிக்கே,
‘கரை கடந்த காதல் குணம் உண்மையில் கண்ணழிவு இல்லாதது போலே, என்னுடைய கலவியிலும் பொய்யின்றிக்கே
அத்தால் வந்த ஒளி வடிவிலே தோன்ற இருக்கிறவனே!’ என்னுதல்.
நல்ல மேன்மக்கள் இரைத்து ஏத்த யானும் ஏத்தினேன் –
‘நித்திய சூரிகள் பரமபத்தியை உடையவர்களாய்க் கடல் கிளர்ந்தாற்போலே இரைத்துக்கொண்டு ஏத்தக் காண்கையாலே
யானும் ஏத்தினேன் அல்லது, யான் ஆற்றலுடையனாய் ஏத்தினேனோ?’ என்கிறார்.

————————————————————–

யானுமேத்தி ஏழுலகும் முற்றுமேத்தி பின்னையும்
தானுமேத்திலும் தன்னை யேத்த வேத்த வெங்கு எய்தும்
தேனும் பாலும் கன்னலும் அமுதமாகித் தித்திப்ப
யானும் எம்பிரானையே ஏத்தினேன் யானுய்வானே –4-3-10-

ஒருவராலும் எல்லை காண ஒண்ணாத -அபரிச்சேத்யம் உள்ள -சத்தா சித்த்யர்த்தமாக ஏத்தினேன் -நா படைத்த பயன்
யானுமேத்தி ஏழுலகும் முற்றுமேத்தி பின்னையும் தானுமேத்திலும் தன்னை யேத்த வேத்த-மயர்வற மதிலம் அருளப் பெற்ற யானும்
அஜ்ஞ சர்வஜ்ஞ வாசி இல்லா-அபரிச்சேத்யன்
ஒன்றையே அனைவரும் மேன்மேலும் ஏத்தினாலும் -ஏக கண்டராய்
வெங்கு எய்தும் -ஆகிலும் முடிவு எய்தாதே
ஆனால் ஏத்துவது என் என்றால்
தேனும் பாலும் கன்னலும் அமுதமாகித் தித்திப்ப-சர்வ பிரகார ரசம்
யானும் எம்பிரானையே ஏத்தினேன் யானுய்வானே -நான் உஜ்ஜீவிக்கைக்காகவே ஏத்தினேன் –

சர்வேஸ்வரனும் ஏக கண்டராய் ஏத்த முடியாத -சத்தைக்காக ஏற்றினேன்

சர்வரும் சிறியார் பெரியார் வாசி இல்லாமல்
ஸ்வதஸ் சர்வஜ்ஞ்ஞன்
தொடங்கின கார்யம் தலைக் கட்ட வல்ல சர்வ சக்தன் ஏத்தினாலும்
இருப்பதை செய்வ வல்லவன்
இல்லாமையை பண்ண முடியாதே
பெருமையை பேசுவது எல்லை இல்லை
இல்லாதவற்றை இல்லை என்பதே
உனது பெருமையின் எல்லை உனக்கும் உன் மணாளனுக்கும் தெரியாதே என்பர்
ஒரு மிடறாக ஏத்தினாலும் -எத்தின இடம் அளவு பட்டு ஏத்தா இடம் விஞ்சி இருக்குமே -இவன் விஷயத்தில்

அந்ய பரர் -உலகோர்
அநந்ய பரர் -யான்
அளவுடையார்
அளவில்ளார்
கடலுக்குள் கூழாங்கல் திமிங்கலம் அழுந்தி வாசி இல்லையே
நீர் ஏத்த இழிவான் என் என்னில்
சர்வரச ரச்யத்தை போக்யதை யாலும் ஏத்தினேன்
பிரணயித்வம் உபகரித்த உபகாரத்தாலும் ஏத்தினேன்
இனிது -உபகாரம் -அசக்தி என்று இந்த விஷயம் பாடுவீரோ
ஏத்தாவிடில் பிழையேன்
உஜ்ஜீவிக்க ஏத்தினேன் –
சக்தி இல்லாவிடிலும் உஜ்ஜீவனம் பெற ஏத்தினேன்

—————————————————————————-

உய்வு உபாயம் மற்று இன்மை தேறி, கண்ணன் ஒண் கழல் மேல்
செய்ய தாமரைப் பழனம் தென்னன் குருகூர்ச் சடகோபன்
பொய்யில் பாடல் ஆயிரத்துள் இவையும் பத்தும் வல்லார்கள்
வையம் மன்னி வீற்றிருந்து விண்ணும் ஆள்வர் மண்ணூடே.–4-3-11-

உபய விபூதியும் தங்கள் நியமத்தில் கொள்வார்கள் -உடையவர் ஆவோம்
உய்வு உபாயம் மற்று இன்மை தேறி,-உஜ்ஜீவனதுக்கு உபாயம் வேறு இல்லை என்று அறுதி இட்டு
கண்ணன் ஒண் கழல் மேல்
செய்ய தாமரைப் பழனம் தென்னன் குருகூர்ச் சடகோபன்-சிவந்த –ஸ்லாக்யநீயமான –நிர்வாகர் –
ஆழ்வார் பிரணயித்வ குணத்தில்
பொய்யில் பாடல் ஆயிரத்துள் இவையும் பத்தும் வல்லார்கள்-அர்த்த அனுசந்தானம் உடன் அனுசந்தித்து
வையம் மன்னி வீற்றிருந்து விண்ணும் ஆள்வர் மண்ணூடே-மண்ணோடு பாட பேதம் –
மண்ணில் இருந்தே விண்ணுக்கு போக சீட்டுப் பெறுவார்கள்
வியாவ்ருத்தி தோன்ற வீற்று இருந்து -மண்ணோடு பூமியோடு பரம பதமும் ஆள்வார்

செந்தாமரைமலர்கள் நிறைந்துள்ள வயல்களாற் சூழப்பட்ட தெற்குத் திசையிலேயுள்ள
சிறந்த திருக்குருகூரிலே அவதரித்த ஸ்ரீசடகோபர்,
நன்னெறி சேர்வதற்கு உரிய வழி வேறு இல்லாமை தெளிந்து, கண்ணபிரானுடைய சிறந்த திருவடிகளின்மேலே சாத்திய
பொய் இல்லாத பாசுரங்கள் ஆயிரத்துள் இவை பத்துப் பாசுரங்களையும் கற்று வல்லவர்கள் பூலோகத்தில் பல காலம்
தங்கியிருந்து இவ்வுலகத்தில் இருந்துகொண்டே பரமபதத்தையும் அரசாட்சி செய்வார்கள்.
குருகூர்ச்சடகோபன் உபாயம் மற்று இன்மை தேறிக் கண்ணன் கழல்கள் மேலே கூறிய இவை பத்தும் வல்லார்கள்
வீற்றிருந்து மண்ணூடே விண்ணும் ஆள்வர்’ எனக் ‘கூறிய’ என்னும் வினையை வருவித்து முடிக்க.
‘தேறிக் கூறிய பத்து’ என்க. தென்னன் என்பதனைத் ‘தென் நல்’ எனப் பிரித்துக் குருகூர்க்கு அடையாக்குக.
அன்றி, ‘தென்னன் சடகோபன்’ எனச் சடகோபர்க்கு அடையாக்கலுமாம். மன்னி – நிலைபெற்று.

‘சர்வேசுவரனுடைய இரண்டு வகைப்பட்ட உலகங்களின் செல்வங்களும்
திருவாய்மொழியைக் கற்றவர்கள் இட்ட வழக்கு,’ என்றார்.

உய்வு உபாயம் மற்று இன்மை தேறி –
இவர் சர்வேசுவரனுடைய காதல் குணத்தைப் பேசத் தொடங்கியது, பேசித் தலைக்கட்ட வல்லவராய் அன்று;
இஃது ஒழியத் தரிக்கைக்கு உபாயம் இல்லை என்று தெளிந்து.
கண்ணன் ஒண் கழல் மேல் –
தான் பரம காதலன் என்பதனை அவதரித்துப் பிரகாசிப்பித்த கண்ணபிரானுடைய திருவடிகளிலே.
அவதரித்து ஆவிஷ்கரித்து பிரணயித்வம் காட்டி அருளி –
செய்ய தாமரைப் பழனம் தென் நல் குருகூர்ச்சடகோபன் –
சிவந்த தாமரையையுடைய பழனங்களையுடைத்தாய்த் தெற்குத் திக்கிற்குச் சிறந்ததாயுள்ள
திருநகரியையுடைய ஆழ்வார் அருளிச்செய்த.
அவனுடைய காதல் குணத்தைச் சொல்லுதலாலே இவர் தரித்தவாறே ‘எல்லா மரங்களும் காலம் அல்லாத காலத்திலும்
பழங்களையுடையன ஆகக்கடவன,’ என்கிறபடியே ஆயின ஆதலின், ‘செய்ய தாமரைப் பழனம்’ என்கிறது.

பொய் இல் பாடல் ஆயிரத்துள் இவையும் பத்தும் –
‘இந்தக் காவியத்தில் உம்முடைய வாக்கு ஒன்றேனும் பொய்யாக மாட்டாது,’ என்கிறபடியே,
‘பொய்யில்’ என்பதனைத் திருவாய்மொழி எல்லாவற்றுக்கும் அடைமொழியாகக் கொள்க.
‘பொய்யில்லாத ஆயிரம்’ என்ற போதே அவ்வோபாதி இப்பத்துப் பாசுரங்கட்கும் வருமே அன்றோ?
வால்மீகிக்கு -பொய்யில்லாத மநோ ராம காவ்யம் பாடும் என்று பிரம்மா ஆசீர்வாதம்
அன்றிக்கே, ‘அவாப்த சமஸ்த காமனான சர்வேசுவரன் ஒரு நித்திய சமுசாரியோடே இப்படி விரும்பி வந்து கலந்து
இவருடைய உயிர் முதலானவற்றையே தனக்கு உரிய இன்பப் பொருள்களாக இருந்தான் என்கிற
காதல் குணத்தில் பொய் இன்றிக்கே இருக்கிற பத்து’ என்னுதல்.

வையம் மன்னி வீற்றிருந்து –
பூமியிலே எம்பெருமானாரைப் போலே-பர சமுர்த்தியே ஏக பிரயோஜனம் – ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீயோடே பல காலம் இருந்து.
மண்ணூடே விண்ணும் ஆள்வர் –
இங்கே இருக்கச் செய்தே பரமபதம் தங்கள் சிறு முறிப்படி செல்லும்படி ஆள்வர்கள். என்றது,
‘அங்கே போனால் ‘ஆண்மின்கள் வானகம் ஆழியான் தமர்’ என்கை அன்றிக்கே,
இங்கே இருக்கச் செய்தே தாங்கள் இட்ட வழக்காகப் பெறுவர்’ என்றபடி.

‘வையம் மன்னி வீற்றிருந்து’ என்கிற இடத்தில் ‘நம்மைப் போலே வாய் புகு சோறாகப் பறி கொடாதே,-
ஆழ்வார் போலே -32 வருஷம் மட்டும் –
பாவியேன் பல்லிலே பட்டு தெறிப்பதே – பல காலம் பூமியிலே ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீயோடே
‘நாட்டாரோடு இயல்வொழிந்து’ என்கிறபடியே,
தங்கள் வேறுபாடு தோன்ற இருக்கப் பெறுவர்கள்,’ என்று சீயர் உருத்தோறும் அருளிச்செய்வர்.
இளமையிலே பட்டரைப் பறி கொடுத்தவர் அன்றோ அவர்?
தமக்கு கிட்டாத ஆச்சார்யர் இழக்க வேண்டாம் – –
முட்டாக்கு போட்டு தீட்டு காத்து கைம்பெண் போலே நஞ்சீயர் இருந்தாரே –

——————————————————————————

திராவிட உபநிஷத் சங்கதி -ஸ்ரீ வாதி அழகிய மணவாள ஜீயர் –

ப்ரீதக பரம் ஹரி மமுஷ்ய சதா ஸ்வா பாவாத் — மனம் மொழி மெய் -மூன்றாலும் கைங்கர்யம் செய்ய
ஸ்ரக் சந்தன பிரமுக சர்வவித
ஸூ போக்ய சம்லிஷ்டம்வான் இதம் உவாச -என்னது உன்னதாவி இத்யாதி
சர்வ வித போக்ய-முனி
அந்யோந்ய சசம்ச்லிஷ்டத்வம் –இந்த திருவாய் மொழி குணம்
காலோபாதி நிவர்த்தகத்வம் -காலத்தடங்கலை தகர்த்து அருளி குணம் என்றுமாம் –
உபதேச ரத்னமாலையில் இத்தை காட்டி அருளுவார்

—————————————————————-

திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி -ஸ்ரீ தேசிகன் –

மித ச்லிஷ்ட பாவம் -அன்யோன்ய -போக்யம்
சேதக கந்தா -மனசை சந்தனம்
ஸ்துதி வசன க்ருத-ஸ்ரக் பட அஞ்சலி ஆபரணம் –திருமாலை திரு வஸ்திரம்
பிராண வாசி –பிராணனே இருப்பிடம்
கலித வர சிரோ பூஷண -ஆத்மாவை ஸீரோ பூஷணம்
சேதனேன -காதல் -ஞானம் கனிந்த நலம் கொண்டு நைபவர்
சீஷ்ணா சத்பாட பீத
ஸூ தனு சாதன ஆத்ம ரூப
விதன்மன் –திவ்ய விக்கிரகத்துக்கு க்ருஹம் ஆத்மாவை கொண்டு
அந்யோந்ய ஆத்ம யோகாத் –எட்டும் ஒன்பதும் பத்தும் இந்த அர்த்தம்
ஆஸ்ரித ஆத்மாத்மீயங்கள் அந்யோந்யம் ஒருவருக்கு ஒருவர் இட்ட வழக்கு
சர்வேஸ்வரத்வம் குறை இல்லாமல்
நிரவதிக தேஜஸ் உக்தனாய் -ஒன்பதாவதில்
சர்வ சேதனர் யதாவத் ஸ்தோத்ர அசக்யன் -பத்தாவதில்

————————————-

திருவாய் மொழி நூற்றந்தாதி -பாசுரம் 33-பிள்ளை லோகம் ஜீயர் வியாக்யானம்–

கோவான வீசன் குறை எல்லாம் தீரவே
ஓவாத காலத் துவாதிதனை -மேவிக்
கழித்தடையக் காட்டிக் கலந்த குணம் மாறன்
வழுத்துதலால் வாழ்ந்துது இந்த மண் –33

பட்டர் நிர்வாகம் -கால உபாதி நிரசன குணம் -அடையக் காட்டி

——————————————

அவதாரிகை –

இதில்
கால உபாதியைக் கழித்து அனுபவிப்பித்த படியை அருளிச் செய்கிற பாசுரத்தை
அனுவதித்து அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில்
இப்படி தேச கால விப்ரக்ருஷ்டங்களானதன் படிகளை அனுபவிக்க வேணும் என்று ஆசைப் பட்ட இவர்க்கு
கால சக்கரத்தான் ஆகையாலே
கால உபாதியைக் கழித்து
வர்த்தமான காலம் போலே யாக்கிக் கொடுத்து
இவர் சத்தையே தனக்கு எல்லாமாக இருக்கிற தன்
பிரணயித்வ குணத்தையும்
அவன் அனுபவிப்பிக்கவே எல்லாம் பெற்றாராய்
இந்த பிரணயித்வ குணத்தையும் அனுபவித்து
அந்த ப்ரீதி பிரகர்ஷத்தாலே அத்தையே பேசிச் செல்லுகிற
கோவை வாயாளின் அர்த்தத்தை
சங்க்ரஹித்து அருளிச் செய்கிறார்
கோவான ஈசன் -இத்யாதியால் -என்கை –

——————————————-

வியாக்யானம்–

கோவான வீசன்-
ஆழ்வாரைத் தரிப்பிக்கவே
ஜகத்து உஜ்ஜீவிக்கும் என்று
சர்வ நிர்வாஹகனான
சர்வேஸ்வரன் –
ஆழ்வார் அழிந்தால் அவருக்குள் தானும் உளனே -மின்னு மா மழை தவழும் -ஆறு அங்கம் கூற
அவதரித்தவர்க்கு தன்னைக் காட்டி அருளினான்

குறை எல்லாம் தீரவே –
கீழில் திருவாய் மொழியில்
தேச காலாதித போக்ய வஸ்துவை அனுபவிக்கப் பெறாத
துக்கத்தால் வந்த சங்கோசம் எல்லாம்
நிவ்ருத்தமாம்படி
கால சக்கரத்தான் ஆகையாலே –

ஓவாத காலத் துவாதிதனை —
விச்சேதியாமல் நடந்து செல்லுகிற காலத்தில்
அதீதமான உபாதியை –

மேவிக் கழித்து –
அகால பலின -என்னும்படி
இவரோடு சேர்ந்து
அந்த கால உபாதியைக் கழித்து –

அடைய காட்டிக் –
கீழே அபேஷித்த அவதானங்களைக் காட்டி -என்னுதல்-
அன்றிக்கே
பூசும் சாந்து –
கண்ணி எனது உயிர் -இத்யாதிகளாலே –
கரணங்களும் கரணியான இவர் சத்தையும்
இவருக்கு அங்கராக ஆபரண அம்பராதிகள் ஆன படியையும் காட்டின படி-கீர்த்தி -ஆதி சப்தத்தில்
ஆகவுமாம் –
உன்னாகம் முற்றும் அகத்தடக்கி ஆவி அல்லல் மாய்த்ததே -என்று
என் ஆவி நிர் துக்கமாயிற்று என்று அருளிச் செய்தபடி –

கலந்த குணம் –
உன்னது என்னதாவியும் என்னது உன்னதாவியும் இன்ன வண்ணமே நின்றாய்
என்று உரைக்க வல்லனே -என்று இப்படி
ஏக தத்வம் என்னலாம் படி

கலந்த குணம் –
சம்ச்லேஷித பிரணயித்வ குணத்தை –

மாறன் வழுத்துதலால் –
ஆழ்வார் சத்தை பெற்று
யானும் எம்பிரானை ஏத்தினேன் யான் உய்வானே -என்று
இப்படி கீழ் வ்யசனம் தீர்ந்து
எம்பிரானை ஸ்தோத்ரம் பண்ணுகையால் –

வாழ்ந்துது இந்த மண் –
இந்த ஜகத்தில் உள்ளார் எல்லாரும் எல்லாம் சத்தை பெற்று
வாழ்ந்தார்கள் –
வையம் மன்னி வீற்று இருந்து –என்று இறே பல சுருதி –
அன்றிக்கே
விஸ்வம் பரா புண்யவதீ-என்று
ஆழ்வார் கால் தரித்து இருக்கையாலே
பூமி பாக்யவதியாகி
வாழ்ந்தது ஆகவுமாம்-

————————————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ. வே.வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

பகவத் விஷயம் காலஷேபம் -90- திருவாய்மொழி – -4-3-1….4-3-5–ஸ்ரீ உ. வே. வேளுக்குடி ஸ்வாமிகள்-

May 29, 2016

எல்லாத்தேசத்திலும் எல்லாக்காலத்திலும் உண்டான அவன் படிகள் எல்லாம் இப்போதே பெற்று அனுபவிக்க வேண்டும் என்று
விடாய்ப்பார் ஒருவரைப் பெறுகையாலே, இவர் உயிர் வாழ்வினையே இறைவனாகிய தனக்கு எல்லாமாம்படி இருக்கிற
தன் காதல் குணத்தைக் காட்டிக் கொடுக்கக் கண்டு, இவரும் எல்லாம் பெற்றாராய் அனுபவிக்கிறார்.
சர்வேசுவரனுடைய ‘பாலனாய் ஏழுலகு’ இத்திருவாய்மொழி.

மந்திர லோபம் கிரியா லோபம் போக்க-நித்ய திருவாராதானம் பொழுது சொல்ல வேண்டிய திருவாய்மொழி -இதுவாகும்-
‘சர்வேசுவரனுடைய ‘பாலனாய் ஏழுலகு’ இத்திருவாய்மொழி’ என்றது, ‘மேல் திருவாய்மொழியாகிய ‘பாலனாய் ஏழுலகில்’
ஆழ்வாருடைய காதற் குணம் சொன்னாற்போலே, இத்திருவாய்மொழியில்
ஆழ்வார் பக்கல் சர்வேசுவரனுக்கு உண்டான காதற் குணம் சொல்லுகிறது’ என்றபடி.
வாஸூ தேவ சர்வம் என்று இருப்பார்க்கு அவரே சர்வம் என்று இருப்பானே –ஆழ்வார் பாலனாய் -போன்ற பல நிலைகளில்
சாத்திக் கொண்ட வகுள மாலை அனுபவிக்க இவன் ஆசைப் படுகிறான்
‘நெடுமாற்கடிமை, ஆழ்வாருடைய நெடுமாற்கடிமையும் எம்பெருமானுடைய நெடுமாற்கடிமையும் என இரு வகைப்படும்;
அவற்றுள் எம்பெருமானுடைய ‘நெடுமாற்கடிமை’ இத்திருவாய்மொழி,’ என்றார் முன்னும். இரண்டாம் பத்து ஏழாந்திருவாய்மொழி முன்னுரை.

இதுதனக்கு மூன்று படியாக நிர்வஹிப்பர்கள் நம் முதலிகள்;
ஒன்றை கேட்டால் -வேறு ஒன்றைக் காட்டி சமாதானம் பண்ணுவது
அத்தையே கொடுப்பதாகச் சொல்லுவது –
அத்தையே கொடுப்பது -என்ற மூன்று நிலைகளும் மூவரும் அருளுவார்கள் –

எம்பார், “அம்புலி அம்மானைப் பிடித்துத் தரவேண்டும்’ என்று அழுத குழந்தைக்குத் தேங்காயைக் –
உடைத்த தேங்காயைக்-கொடுத்து அழுகையை ஆற்றுவாரைப்போலே, வேறு ஒரு குணத்தைப் -காதற்குணத்தை.-
பிரகாசப்படுத்தி அனுபவிப்பிக்க அனுபவிக்கிறார்,’ என்று அருளிச்செய்வர்.

திருமலை நம்பி, ஒருவன் ஒன்றை விரும்பினால், அவனும் அது செய்வானாய்த் தலை துலுக்கினால், பின்பு பின்னில்
இழவு தோன்றாதே அன்றோ இருப்பது? ஆகையாலே, அவனும் ‘அப்படிச் செய்கிறோம்’ என்ன, மேல் உண்டான இழவு மறந்து,
எல்லாம் பெற்றாராய் அனுபவிக்கிறார்,’ என்று அருளிச்செய்வர்.
ஸ்ரீ கௌசல்யையார், பெருமாள் வனத்திற்கு எழுந்தருளுகிற போது, ‘ஒரே புதல்வனை யுடைய நான் உம்மைப் பிரிந்திருக்க மாட்டேன்!
கூட வருவேன் இத்தனை!’ என்ன, ‘ஆச்சி, நீர் சொல்லுகிற இது தர்மத்திற்கு விரோதம் கண்டீர்,’ என்று முகத்தைப் பார்த்து
ஒரு வார்த்தை அருளிச்செய்ய, இழவை மறந்து மங்களாசாசனம் பண்ணி மீண்டாரே அன்றோ?’
இது, பேச்சின் இனிமை விசுவாசத்திற்குக் காரணம் என்பதற்குத் திருஷ்டாந்தம்.
‘ஒரே புதல்வனையுடைய நான்’ என்று தொடங்குமிவ்விடத்தில்,
‘ஆகி னைய! அரசன்றன் ஆணையால் ஏகல் என்பது யானு முரைக்கிலென்;
சாகலா உயிர் தாங்க வல்லேனையும் போகில் நின்னொடுங் கொண்டனை போகென்றாள்.’ என்ற செய்யுளையும்,
‘ஆச்சி! நீர் சொல்லுகிற இது’ என்றுதொடங்குமிடத்தில்
‘என்னை நீங்கி இடர்க்கடல் வைகுறும் மன்னர் மன்னனை வற்புறுத் தாதுடன்
துன்னு கானம் தொடரத் துணிவதோ?அன்னை யே!அறம் பார்க்கிலை யாமென்றான்.’-என்றும்
‘வரிவில் எம்பி மண்ணர சாயவற்கு உரிமை மாநிலம் உற்றபின் கொற்றவன்
திருவின் நீங்கித் தவம்செயு நாளுடன் அருமை நோன்புகள் ஆற்றுதி யாமன்றே!’- என்ற செய்யுள்களையும் ஒப்பு நோக்கல் தகும்.
ஸ்ரீ கிருஷ்ணன், ‘மாஸூச – சோகத்தைக் கொள்ளாதே’ என்று ஒரு வார்த்தை அருளிச் செய்ய, அருச்சுனன்,
‘சந்தேகங்கள் எல்லாம் நீங்கினவனாய் நிலைத்து நிற்கிறேன்; உனது வார்த்தையின் படி செய்கிறேன்,’ என்று தரித்தானே அன்றோ?

பட்டர், ‘முக்காலத்தில் உள்ளவற்றையும் இப்போதே பெறவேண்டும் என்று விடாய்த்த இவர்க்கு அப்படியே அனுபவிக்கலாம்படி,
கால சக்கரத்தன் ஆகையாலே, கால வேறுபாட்டிற்குரிய காரணங்களைக் கழித்து, நிகழ்காலத்திற் போலே அனுபவத்திற்குத்
தகுதியாகும்படி காலத்தை ஒரு போகி ஆக்கிக்கொடுக்க அனுபவிக்கிறார்,’ என்று அருளிச் செய்வர்.

கால சக்கரத்தன்’ என்றது, ‘சக்கரம் போன்று சுழன்று வருகின்ற காலத்துக்கு நிர்வாஹகன்’ என்றபடி.
‘ஒரு போகி ஆக்கி’ என்றது, ‘நடுவில் தடையில்லாத வெளியாக்கி’ என்றபடி. அல்லது, ‘ஒரே காலத்தில் பலமாக்கி’
என்னலுமாம். பட்டர் நிர்வாகத்துக்கு நிதானம், ‘கால சக்கரத்தானுக்கே’-என்ற நாலாவது திருப்பாசுரம்.

‘மேல் திருவாய்மொழியில் விரும்பியபடியே இத் திருவாய்மொழியில் அனுபவிக்கிறார்’ என்று அருளிச்செய்யக் காரணம் வருமாறு :
‘தோளி சேர் பின்னை’ என்றதற்கு, ‘கோவை வாயாள்’ என்ற பாசுரம்.
‘கொம்பு போல்’என்ற பாசுரத்திற்கு, ‘மதிள் இலங்கைக் கோவை வீய’ என்ற பாசுரப்பகுதி.
‘பாலனாய்’ என்ற பாசுரத்திற்கு, ‘கால சக்கரத்தோடு’ என்ற பாசுரம்.
‘பாவியல் வேத நன்’ என்ற பாசுரத்திற்கு, ‘குரை கழல்கள் நீட்டி’ என்ற பாசுரம்.
மற்றைப் பாசுரங்களையும் இங்ஙனமே கண்டுகொள்க.

—————————————————————————

கோவை வாயாள் பொருட்டு ஏற்றின் எருத்தம் இறுத்தாய்! மதிள் இலங்கைக்
கோவை வீயச் சிலை குனித்தாய்! குல நல் யானை மருப்பு ஒசித்தாய்!
பூவை வீயா நீர்தூவிப் போதால் வணங்கேனேலும், நின்
பூவை வீயாம் மேனிக்குப் பூசும் சாந்து என் நெஞ்சமே.–4-3-1-

பிராப்தி விரோதி போக்கும் ஸ்வ வாபன் -சர்வேஸ்வரனுக்கு -நெஞ்சை சந்தனமாக்குகிறார் –அங்கராகம்
கோவை வாயாள் பொருட்டு ஏற்றின் எருத்தம் இறுத்தாய்! மதிள் இலங்கைக்-கோவை-
பழம் போலே சிவந்த -அதரம் தெரியவே சிரிப்பாளாம்-
சீதை மந்தகாசம் திரு அயோத்தியில் -ஸ்ரீ தண்ட காரண்யத்தில் தான் இப்படி சிரித்தாளாம்-
நம்பி மூத்த பிரான் -கண்ணன் வந்ததும் இந்த வெண்ணெய் தின்னும் பிள்ளையா என்று கணுக் என்று சிரித்தாளாம்
ககுஸ்தன் -க்குது திமில்
கோவை வீயச் சிலை குனித்தாய்! குலநல் யானை மருப்பு ஒசித்தாய்!-இலங்கைக்கு கோவை நிர்வாகன் ராவணன் -அடுத்த விரோதி இங்கே
ஜாதி யானை -குவலயா பீடம் -தந்தம் அநாயாசேன -ஒசித்து
நப்பின்னை -ஸ்ரீ ஜனக ராஜன் திரு மகள் -ஸ்ரீ வடமதுரை ஸ்திரீகளுக்கும் -செய்து அருளின விரோதி நிரசன சீலம்
பூவை வீயா நீர் தூவிப் போதால் வணங்கேனேலும், -புஷ்பம் விட்டு விலகாமல் நீர் அக்ரமாக-பணிமாறி பிரேமத்தால்
நின் பூவை வீயாம் மேனிக்குப் பூசும் சாந்து என் நெஞ்சமே.-
ஏற்பட்ட காலத்தில் வணங்க வில்லை எனினும்
பூவை பூ நிறம் உடைய -சாத்த தகுந்த அந்தராகம் -சந்தனம் -அனுராக -லேசமே காரணமாக –பற்றாசாக -ஆஸ்ரய தோஷம் பாராமல் –
ஆக்கி அருளினாய் -இதுக்கு அடி
அவஸ்தா சப்தக விகாரம் கழித்து -ஏழு கொம்புகள் -கர்ப்ப ஜன்ம பால்ய கௌமாரம் யௌவனம் –மூப்பு மரணம் -புண்ய பாபங்கள் –
தீ மனம் கெடுத்து -தசேந்தரன் -இராவணன் -விவேக சரம் விட்டு
பகவத் பாகவத பிரவேச விரோதி துர்மானம் -ஆனை போலே மதத்து இருக்கும் நிலை கழித்து
ஆதலால் -நம் பிராப்ய விரோதிகளை அழித்து-ராக லேசம் உண்டே -நெஞ்சை கொண்டார் –

கொவ்வைக்கனி போன்ற சிவந்த வாயையுடைய நப்பின்னைப்பிராட்டி காரணமாக இடபங்களின் கழுத்தை முரித்தாய்!
மதிலால் சூழப்பட்ட இலங்கை நகர்க்கு அரசனான இராவணன் அழியும்படி வில்லை வளைத்தாய்!
சிறந்த நல்ல குவலயாபீடம் என்னும் யானையின் தந்தங்களை முரித்தாய்! பூக்களை விட்டு அகலாத தண்ணீரைத் தூவி
அவ்வக்காலத்தில் வணங்குதல் செய்திலேன் ஆயினும், பூவைப் பூவினது நிறத்தையுடைய
நினது திருமேனிக்குப் பூசுகின்ற சாந்து என் நெஞ்சமே ஆகும்.

‘நீர் தூவி வணங்கேனேலும் மேனிக்குப் பூசும் சாந்து என் நெஞ்சம்,’ என்க. ‘நீர் வீயாப் பூவை’ என மாறுக. வீதல் – நீங்குதல்;
வீயா -நீங்காத. பூவை என்பதில் ‘ஐ’ இரண்டாம் வேற்றுமை யுருபு. ஆக, நீரை விட்டு அகலாத பூ, ‘நீர்ப்பூ’ என்றபடி.
அன்றிக்கே, வீயாப் பூவை – ‘உலராத மலர்களை’ என்னலுமாம். நான்காம் அடியில் ‘பூவை’ என்பதே சொல்;
‘காயாம் பூ’ என்பது பொருள். வீ – மலர். ‘ஆகும் மேனி’ என்க.

‘நப்பின்னைப் பிராட்டி, ஸ்ரீ ஜனகராஜன் திருமகள் தொடக்கமானார் உனக்குத் தேவிமார்களாய் இருக்க. நீ அவர்கள் பக்கலிலே
இருக்கும் இருப்பை என் பக்கலிலே இருக்கும்படி என் இருப்பே உனக்கு எல்லாமாய்விட்டது,’ என்கிறார் ஆதல்;
அன்றிக்கே,
‘அடியார்களுடைய பகைவர்களை அழிக்கிற இடங்களில் அந்த அந்தச் சமயங்களில் வந்து முகங்காட்டி
அடிமை செய்யப் பெற்றிலேன் நான்; இங்ஙனே இருக்கவும், என் மனத்தினையே இனிய பொருளாகக் கொள்வதே!’ என்கிறார் ஆதல்.

கோவை வாயாள் பொருட்டு ஏற்றின் எருத்தம் இறுத்தாய் –
‘தன்னைப் பேணாதே அவனுக்கு இவ்வெருதுகளின் மேலே விழ வேண்டும்படியாய் இருந்தது
அவயவ சோபை-உறுப்புகளின் அழகு’ என்பார், ‘கோவை வாயாள்’ என்கிறார்.
அன்றிக்கே, இடபங்களை முன்னிட்டு, ‘இவற்றை அடர்த்தாருக்கு இவளைக் கொடுக்கக் கடவோம்,’ என்று
இவளை அலங்கரித்து -இடு சிவப்பு இட்டு –
முன்னே கொண்டு வந்து நிறுத்தினார்கள்;
‘இவளை அணையலாமாகில் இவற்றை முரித்தல் ஆகாதோ?’ என்று தன்னைப் பேணாதே
அவற்றின் மேல் விழுந்தான் என்பார், ‘கோவை வாயாள்’ என்கிறார் என்னுதல்.
அன்றிக்கே, ‘நம்பி மூத்த பிரான் முற்பட வந்து கிட்டின இடத்து, ‘இவன் தலையிலே வெற்றி கிடந்தால் செய்வது என்?’ என்று
வெறுப்பாலே கீழ் நோக்கிய முகத்தாளாய் இருந்தாள்;
ஸ்ரீ கிருஷ்ணன் வந்து தோன்றினவாறே பிரீதியின் மிகுதியாலே புன்முறுவல் பூத்தாள்;
அப்போது அதரத்தில் பழுப்பு இருந்தபடியைத் தெரிவிப்பார், ‘கோவை வாயாள்’ என்கிறார்’ என்னுதல்.
‘அந்தப் புன்முறுவலுக்குத் தோற்றுத் தன்னை அவளுக்கு ஆக்கினான்’ என்றபடி.
ஏற்றின் பிடரியை முரித்தான் ஆதலின், ‘எருத்தம் இறுத்தாய்’ என்கிறார். எருத்தம் – கழுத்து.
அவற்றின் செருக்கிற்குக் காரணம் கழுத்தே அன்றோ? அதனை முரித்தபடி.
‘வீரராய் இருப்பார் எதிரி கையில் ஆயுதத்தை வெறுங்கையோடு சென்று வாங்குமாறு போலே
இருப்பது ஒன்றே அன்றோ, இவன் செய்தது?
அவைதாம் தலையான ஆயுதத்தோடே-திமிரு -திமில் -என்றவாறு – அன்றோ நிற்கின்றன?
மாயா மிருகமான மாரீசன் பின்னே பெருமாள் எழுந்தருளுகிற போது இளைய பெருமாள் தெளிந்து நின்று,
‘இது மாயா மிருகம் கண்டீர்; இராக்கதர்களுடைய மாயை,’ என்றாற்போலே, நானும் அவ்வளவிலே நின்று ‘
இவை அசுர ஆவேசம் உண்டு’ என்ன அன்றோ அடுப்பது? அது செய்யப் பெற்றிலேன்,’ என்கிறார்.

மதிள் இலங்கைக் கோவை வீயச் சிலை குனித்தாய் –
‘மதிளை உடைத்தான இலங்கைக்கு நிர்வாஹகன் அல்லனோ?’ என்று செருக்கு உற்றிருக்கிற இராவணன் முடிய வில்லை வளைத்தாய்;
‘இம்மதிளும் ஊரும் உண்டே நமக்கு,’ என்று சக்கரவர்த்தி திருமகனை எதிரிட்டவன் ஆதலின், ‘மதிள் இலங்கைக்கோ’ என்கிறார்.
சர்வ இரட்சகனான பெருமாளை விட்டு, மதிளை இரட்சகம் என்று இருந்தானாயிற்று.
இது அன்றோ தான் தனக்குச் செய்து கொள்ளும் காவல்?
ஆக, ‘மதிள் இலங்கைக் கோ’ என்றதனால், ‘இராவணனால் ஆளப்படுகின்ற இலங்கை’ என்கிறபடியே,
மண்பாடு தானே ஒருவர்க்கும் புகுவதற்கு அரிது; அதற்குமேலே உள் நின்று நோக்குகின்றவனுடைய வலிமையைக் கூறியபடி.
இராக்கதர்கள் மாயப்போர் அல்லது அறியார்கள்; அதைப்போன்று, இவர் செவ்வைப் பூசல் அல்லது அறியார்;
ஆதலின், ‘சிலை குனித்தாய்’ என்கிறார்.
‘நீர் தரும யுத்தத்தில் ஆற்றல் உள்ளவராய் இருத்தல் போன்று, இராக்கதர்கள் மாயப்போர் செய்வதில் ஆற்றல் உள்ளவர்கள் கண்டீர்,’ என்று
ஸ்ரீ விபீஷணாழ்வானைப் போன்று அறிவிக்கப் பெற்றிலேன்.
குலம் நல்யானை மருப்பு ஒசித்தாய் –
ஆகரத்திலே பிறந்து எல்லா இலக்கணங்களையுமுடைய குவலயாபீடத்தினுடைய கொம்பை வருத்தம் என்பது சிறிதும் இன்றி முரித்தவனே!
அவ்வளவிலே ஸ்ரீமதுரையில் உள்ள பெண்களைப் போல நின்று, ‘தரையில் உள்ள இராமனுக்கும் தேரில் உள்ள
இராக்கதனுக்கும் போர் ஏற்றது அன்று,’ என்று சொல்லப் பெற்றிலேன்.

பூவை வீயா நீர் தூவி –
‘மலர்களைத் திருவடிகளிலே பணிமாறி நீரைத் தூவி’ என்னுதல்;
அன்றிக்கே, ‘மலரை ஒழியாத நீர் – மலரோடே கூடின நீர்; அதனைத் தூவி’ என்னுதல்.
போதால் வணங்கேனேலும் –
அந்த அந்தக் காலத்திலே பூவை வீயா நீர் தூவி வணங்கிற்றிலேன் ஆகிலும். என்றது,
‘எருது ஏழ் அடர்த்தல் தொடக்கமான காலங்களிலே பிறந்த சிரமம் மாற, குளிர்ந்த உபசாரம் பண்ணிற்றிலேன் ஆகிலும்’ என்றபடி.

பூவை வீயாம் நின் மேனிக்கு –
பூவால் அல்லது செல்லாத நின் திருமேனிக்கு.
அன்றிக்கே, ‘பூவைப்பூவோடு ஒத்த திருமேனி’ என்னுதல். என்றது,
‘மலர்ந்த மலரைப் போன்ற மிருதுத் தன்மையையுடைய திருமேனிக்கு’ என்றபடி.
வீ என்பது பூவுக்குப் பேர். மேனிக்குப் பூசும் சாந்து என் நெஞ்சமே –திருமேனிக்குப் பூசும் சாந்து என் நெஞ்சமாய்விடுவதே!
நம்பி மூத்த பிரானும் தானுமாக ஸ்ரீ மதுரையிற் போய்ப் புக்கவாறே கூனியைக் கண்டு,
‘அண்ணர்க்கும் நமக்கும் பூசலாம்படி சாந்து இட வல்லையோ?’ என்ன, வழக்கனாய் இருக்கிற சாந்தைக் கொடுத்தாள்;
‘இது உனக்காய் இருந்தது’ என்ன, அதற்குமேல் தரமாய் இருப்பது ஒன்றனைக்காட்டினாள்;
‘இது கம்சனுக்கு ஆம்’ என்ன, அதற்கு மேல் தரமாய் இருப்பது ஒன்றனைக் காட்டினாள்;
‘நிறமே இதில் கொள்ளக்கூடியது’ என்ன,
இப்படி அருளிச்செய்தவாறே, ‘வெண்ணெய் நாற்றத்திலே பழகினார் இளம் பருவமுடையார் இருவர் சாந்தின் வாசி அறிந்தபடி என்?’ என்று,
அதனால் வந்த உவகை தோன்றப் புன்முறுவல் செய்தாள்;
‘நல்ல சாந்து இடுக்கைக்காக இது ஒரு முகம் இருந்தபடி என்தான்!’ என்கிறான்.
ஆக, ‘நற்சரக்குப் பரிமாறுவார். அது கொண்டு பயன் கொள்ளுவார் உடம்பின் வாசி அறிய வேண்டுங்காண்;
நம் அண்ணர் உடம்புக்கும் நம் உடம்புக்கும் ஈடான சந்தனம் தா,’ என்று, இப்படித் தரம் இட்டுப் பூசப்படுகின்ற
திருமேனி என்பதனைத் தெரிவிக்கும் பொருட்டு, ‘மேனி’ என வேண்டாது கூறுகிறார்.

———————————————————————————————

பூசும் சாந்து என் நெஞ்சமே; புனையும் கண்ணி எனதுடைய
வாசகம் செய் மாலையே; வான் பட்டாடையும் அஃதே;
தேசமான அணிகலனும் என்கை கூப்புச் செய்கையே;
ஈசன், ஞாலம் உண்டு உமிழ்ந்த எந்தை ஏக மூர்த்திக்கே.–4-3-2-

சாந்து -நெஞ்சம் -/ -மாலை -வாசகம் செய் பா மாலை /பட்டாடையும் வாசகம் செய் பா மாலையே /
கை கூப்புச் செய்கை -அணி கலன்-
இப்படி முக்கரணங்கள்-மநோ வாக் காயங்கள் சமர்ப்பித்து –
திருஷ்டி விதி-சந்த்யா வந்தனத்தில் சொல்கிறோம் -அசௌ ஆதித்ய ப்ரஹ்ம -என்று
சூர்யன் ஒளியை ப்ரஹ்மம் ஒளி என்று சொல்வது போலே –
ஈசன், ஞாலம் உண்டு உமிழ்ந்த எந்தை ஏக மூர்த்திக்கே.
சர்வ நியந்தா -சர்வ ரஷகன் –ஸ்வாமி -முக்கரணங்களும் போக்யமாகா நின்றது –
ஈசன் -ஞாலம் உண்டு உமிழ்ந்த -எந்தை என்பதால்
நிருபாதிக நியந்தா -இவ் வபதானத்தால் என்னை அடிமை ஆக்கிக் கொண்ட ஸ்வாமி
ஏக மூர்த்தி-அத்விதீயம் -திரு மேனி -நாராயணன் மூர்த்தி கேசவன்
பூசும் சாந்து என்நெஞ்சமே; கூனி சாத்திய சாந்து என் மனமே
புனையும் கண்ணி எனதுடைய வாசககம் செய் மாலையே; மாலாகாரர் உகந்து சாத்தும் -ஆகாதோ மம கேதம் –
ஆகதவ் –உபாகதவ் -கேகம் உபாகதவ் -மம கேகம் உபாகதவ் –ஐந்து சப்தங்கள் —
பரம பதம் -திருப்பாற்கடல் -வடமதுரை -பெரிய தெரு -குறுக்குத்தெரு -ஐந்து உண்டே
ஸ்ரீ வைகுண்டம் உபாகதோ -பெரிய தெரு- மம கேகம் உபாகதௌ -தன்யோஹம் அர்ச்ச இஷ்யாமி
குறும்பு அறுத்த நம்பி போலே -வாக் வ்ருத்தி சப்தத்தால் தொடுக்கப்பட்ட
வான் பட்டாடையும் அஃதே;-திரு வநந்த ஆழ்வான் -சமர்ப்பித்த –
கம்சனின் வண்ணான்-ரஜதன் சாத்தியைதை சொல்லாமல் தப்பு பண்ணி -தட்டப் பட்டான் –
பூம் பட்டாம் திருமாற்கு அரவு –அங்கே அவனே -சமர்ப்பித்தான் என்றபடி இங்கே
தேசமான அணிகலனும் என்கை கூப்புச் செய்கையே;அஞ்சலி பந்தம்
மாத்தி சொன்னால் என்ன -ஒப்பனைக்கு பௌஷ்கல்யம்-சப்தமும் அர்த்தமும் சேர்ந்து தானே வாசகம் செய் மாலை –
அஞ்சலி -தலையிலே வைத்தது -கை கூப்பினத்தை அவன் தனது தலைக்கு மேல் கொள்கிறானே – திரு அபிஷேகம் போலே –

ஈசனும் உலகத்தை எல்லாம் உண்டு உமிழ்ந்த என் தந்தையுமான ஏகமூர்த்திக்குப் பூசுகின்ற சந்தனம் எனது நெஞ்சமே ஆகும்;
சார்த்துகின்ற மாலையும் என்னுடைய சொற்களாலே தொடுக்கப்பட்ட மாலையே ஆகும்; உயர்ந்த பொன்னாடையும்
அந்த வாசகம் செய் மாலையே ஆகும்; ஒளி பொருந்திய அணியப்படுகின்ற ஆபரணங்களும்
என் கைகளால் கூப்பித் தொழுகின்ற வணக்கமே ஆகும்.
வாசகம் – சொற்கள். வாசகம் செய் மாலை – திருவாய்மொழி முதலான பிரபந்தங்கள்.
ஏகமூர்த்தி – தன்னை ஒத்த இரண்டாவது ஒரு பொருள் இல்லாதபடியான விக்கிரஹத்தையுடையவன்.
‘ஏக மூர்த்திக்குச் சாந்து நெஞ்சமே; கண்ணி வாசகம் செய் மாலையே; பட்டாடையும் அஃதே;
கலனும் கைகூப்புச் செய்கையே ஆம்,’ என்க.

‘என்னுடைய உறுப்புகளின் காரியங்களான – நினைவு முதலானவைகளே எல்லாவற்றாலும் நிறைவுற்று விளங்கும்
இறைவனுக்கு இன்பப் பொருள்கள் எல்லாம் ஆயின,’ என்கிறார்.
(கரண கார்யங்கள் மனசால் உருகுதல் இத்யாதிகள் -ஸ்ம்ருதி யாதிகள் -இத்தைக் கொண்டே பரிபூர்ணன் –
அவாப்த ஸமஸ்த காமன் -அன்றோ-போக உபகரணங்களாக கொண்டான் )

பூசும் சாந்து என் நெஞ்சமே –
சர்வேசுவரனுடைய திருமேனியின் வேறுபட்ட சிறப்பினையும், அவனுக்குத் தம் பக்கல் உண்டான விருப்பத்தையும்
நினைத்துப் பின்னாடி மீளவும் சொல்லுகிறார், ‘பூசுஞ்சாந்து என் நெஞ்சமே’ என்று.
புனையும் கண்ணி –
செலவு மாலை -வழக்கனான மாலை, அன்றிக்கே, சார்த்தப்படும் மாலை.
என்னுடைய வாசகம் செய்மாலை –
இவர் அவனுக்கு என்று சொல்ல வேண்டா; இவர் உண்மையாகில் அவனுக்கேயாய் இருக்கும்; ஆதலின், ‘எனதுடைய’ என்கிறார்.
இவர் நெஞ்சினைக் காட்டிலும் வாக்குப் பரிமளம் விஞ்சி இருக்கும் போலே காணும்.
சாந்து மணம் கொடுப்பது பூவை அணிந்த பின்பே அன்றோ?
ஆஸ்ரித கர ஸ்பர்சம் விரும்புவன் அன்றோ -இவர் அவனுக்கு என்று சொல்ல வேண்டாமே
ஆழ்வார் எனக்கு சொன்னாலும் அவனுக்கே -நாம் அவனுக்கே சொன்னாலும் நமக்கே –
நான் -அஹம் -மாறாடி அன்றோ இருக்கும்
நானே அவர் தனம் ஆனபின்பு என்னுடையது எல்லாமே உன்னுடையதே

வான் பட்டாடையும் அஃதே –
பூ கட்டியே இ றே சாந்து மணம் கொடுக்கும் -நெஞ்சின் பெருமை வாசகத்தாலே தானே தெரியும் –
அந்தச் சொற்கள்தாமே புருஷோத்தமனாம் தன்மைக்கு அறிகுறியான பரிவட்டமும்.
இவருடைய பா, நல்ல நூல் ஆதலின், வான் பட்டாடை ஆயிற்றுக்காணும்;
‘நல்ல நூலாக வேண்டும்’ என்று அடியிலே நோற்று நூற்றவர் அன்றோ?
வாசகம் பட்டாடை ஆயினவாறு யாங்ஙனம்?’ என்ன, அதற்கு விடையைச் சிலேடையாக அருளிச்செய்கிறார்,
‘இவருடைய பா’ என்று தொடங்கி. பா –செய்யுள்; நூலின் சேர்க்கை. நூல் -சாஸ்திரம்; இழை. ‘அடியிலே நோற்று நூற்றவர்’ என்றது.
“கண்ட வாற்றால் தனதே உலகென நின்றான் றன்னை வண்தமிழ் நூற்க நோற்றேன் அடியார்க்கு இன்ப மாரியே.” (திருவாய். 4. 5 : 10.)
நூற்றல்; பிரபந்தத்தைச் செய்தல்.

தேசமான அணிகலனும் –
தனக்கு ஒளியை உண்டாக்குகிற ஆபரணமும்.
என் கைகூப்புச் செய்கையே –
சேரபாண்டியன் தம்பிரானைப் போன்று, அவனுக்கு ஒளியை உண்டாக்கா நின்றது இவருடைய அஞ்சலி.
‘இவற்றாலே நிறம் பெற்றானாய் இருக்கிறவன் தான் ஒரு குறைவாளனாய் இருக்கின்றானோ?’ எனின்,
ஈசன் –
சர்வேசுவரன் என்கிறார். ‘ஆயின், ‘இரட்சகன்’ என்னும் பெயரேயாய் உடைமை நோவுபட விட்டிருப்பவன் ஒருவனோ?’ எனின்,
ஞாலம் உண்டு உமிழ்ந்த –
உலகத்திற்கு எல்லா வகையாலும் இரட்சகன் என்கிறார்.
எந்தை –
அந்த இரட்சணத்தாலே என்னை அடிமை கொண்டவன்.
ஏக மூர்த்திக்கு –
ஈடும் எடுப்பும் இல்லாததான திருமேனியை யுடையவனுக்கு. ஏகமூர்த்திக்குப்
பூசும் சாந்து என் நெஞ்சமே –
‘‘சர்வகந்த :’ என்கிற திருமேனியை உடையவனுக்குப் பூசும் சாந்து என் நெஞ்சம் ஆவதே! இது சேருமே!’ என்கிறார்.

——————————————————————————————————-

ஏக மூர்த்தி இருமூர்த்தி மூன்று மூர்த்தி பல மூர்த்தி
ஆகி ஐந்து பூதமாய் இரண்டு சுடராய் அருவாகி
நாகம் ஏறி நடுக்கடலுள் துயின்ற நாராயணனே!உன்
ஆக முற்றும் அகத்து அடக்கி ஆவி அல்லல் மாய்த்ததே.–4-3-3-

சர்வாத்மா பாவாதியால் வந்த -புகழும் நல ஒருவன் என்கோ 3-4- பார்த்தோம் -சம்பந்தம் உடைய வடிவு அழகை அனுபவித்து
இங்கு ஜகதாகார வடிவு அழகு -சொன்னபடி –
ஜகம் எல்லாம் சரீரமாக -பௌவ நீர் ஆடையாகச் சுற்றி -கலியன்
பார் அகலம் திருவடியா -பவனம் மெய்யா -செவ்வி மா திறம் எட்டும் தோளா -அண்டம் திரு முடியா -போலே
நீராய் நிலனாய்-போலேவும் -சாஷாத்காரம் பெற்றவர்களே இத்தை உணர முடியும்
அனுபவித்து பிரகிருதி துக்கம் தீரப் பெற்றேன்
ஏக மூர்த்தி -ஸூஷ்ம -காரண ரூபம் -பிரகிருதி சரீரமாக கொண்ட -நாம ரூப விபாக அனர்ஹ -ஏகமேவ என்கிறபடியே
இருமூர்த்தி -அவ்யக்த காரணமான -மகதாதி -தமஸ் -பிரகிருதி -அவ்யக்தம் -அஷரம் -விபக்தம் பர்யாய சொற்கள் –
மஹத் அஹங்காரங்கள் -வடிவாக கொண்டவன் -சரீரமாக கொண்ட ப்ரஹ்மம்-
மூன்று மூர்த்தி -சாத்விக ராஜச தாமஸ -அஹங்காரம் -தத்தேஜா ஐத்யேஷ -சங்கல்பித்தே
-வைகாரிக -சாத்விக /-மனஸ் /தைஜச-ராஜச /பூதாதி தாமஸ –
வைஷம்யங்களை பிரகாரமாக உடையவன் -சரீரமாக
பல மூர்த்தி ஆகி -ஏகாதச இந்த்ரியங்கள் -வைகாரிக காரியம்
ஐந்து பூதமாய் -பூதாதி -கார்யம் பஞ்ச பூதங்கள் –
இது வரை சமஷ்டி சிருஷ்டி -மேலே வியஷ்டி சிருஷ்டி -சத்வாரகம் நான்முகன் மூலம்
இரண்டு சுடராய் -சூர்ய சந்தரன் –
அருவாகி-அந்தராத்மாவாக அனுபிரவேசித்து ஸூஷ்ம பூதனாய்
அனுபிரவேசம் ஜீவாத்மாவை சரீரமாகக் கொண்டு நாம ரூபம் கொடுத்து
புத்திக்கு புரிய இப்பொழுது சொல்லி -சத்தைக்கு சிருஷ்டியின் பொழுதே அனுபிரவேசம் உண்டே
நாகம் ஏறி நடுக்கடலுள் துயின்ற நாராயணனே!-அந்தராத்மா தயாவாலும் -ஷீராப்தி நாதனாகியும் -ரஷண அர்த்தமாக –
உன் ஆக முற்றும் -கீழ் சொன்ன உன் வடிவம் முற்றியும் -என் சகல கரணங்களையும் -சர்வ அலங்காரமாகக் கொண்டு
அகத்து அடக்கி ஆவி அல்லல் மாய்த்ததே.என் நெஞ்சுக்கு உள்ளே அடக்கி கபளீ கரித்து அனுபவித்து
கீழ் பட்ட அல்லல்கள் அனைத்தும் தீர்த்தாயே
அன்றிக்கே
பர மூர்த்தி -அளவும் -பர வ்யூஹ விபவ அவஸ்தைகளையும் சொல்லி
ஐந்து பூதம் –லீலா விபூதி சம்பந்தம் சொல்லி –
அத்விதீய வாசுதேவ -ஏக மூர்த்தி
சாந்தோதித நித்யோதித இரண்டு அவஸ்தைகள் இரு மூர்த்தி
நித்யோதிதத -மூன்றாக சங்கர்ஷண பிரத்யும்னன் அனிருத்னன் -வ்யூஹம் மூன்றும்
கேசவாதி -பல மூர்த்தி -அவதாரங்களிலும் பல மூர்த்தி என்றுமாம்

‘ஒரு மூர்த்தியாகி இருமூர்த்தியாகி மும்மூர்த்தியாகிப் பல மூர்த்தியாகி ஐம்பூதங்களாகி இருசுடர்களான சூரிய சந்திரர்களாகி
இவற்றுக்கு உள்ளுயிராகித் திருப்பாற்கடலின் நடுவில் ஆதிசேஷனாகிய படுக்கையின்மேலே ஏறி யோகநித்திரை செய்கின்ற நாராயணனே!
உன் திருமேனிக்கு வேண்டும் சாந்து பூமாலை முதலிய இன்பப்பொருள்கள் எல்லாம் என்னுள்ளேயாம்படி செய்து
உன் திருவுள்ளமானது துன்பத்தை நீக்கியது,’ என்கிறார்.என்றது, ‘ஒருபடி கரை மரம் சேர்க்க வல்லனே’ என்று
இருந்த உன்னுடைய திருவுள்ளத்தில் துன்பம் கெட்டு, கிருதார்த்தன் ஆனாயே!’ என்றபடி.
ஆவி – ஈண்டு, மனம். ‘ஆவி அடக்கி அல்லலை மாய்த்தது’ என்க.

‘இத்தலையை உனக்கு ஆக்கி அத்தாலே கிருதக் கிருத்தியன் ஆனாயே!’ என்கிறார்.

ஏகமூர்த்தி –
‘சோமபானம் செய்தற்குரிய சுவேத கேதுவே! காணப்படுகிற இந்த உலகமானது படைப்பதற்கு முன்னே ‘சத்’ என்று
சொல்லக்கூடியதாயும் நாமரூபங்கள் இன்மையால் ஒன்றாகவும் அடையக்கூடிய வேறு பொருள் இல்லாததாயும் இருந்தது,’ என்கிறபடியே,
படைப்பதற்கு முன்னே ‘இது’ என்ற சொல்லுக்குரிய பொருளாய்க் கிடந்த உலகமுழுதும்,
அழிந்து ‘சத்’ என்று சொல்லக்கூடிய நிலையாய் -பொடி மூடிய தணல்-நீறு பூத்த நெருப்புப்போலே
இவை அடையத் தன் பக்கலிலே கிடக்கத் -தான் ஒருவனுமேயாய் நிற்கும் நிலையைச் சொல்லுகிறது.
ஆக, ‘படைப்புக்கு முன்னே இருக்கும் இருப்பைச் சொல்லுகிறது,’ என்றபடி.

இரு மூர்த்தி –
பிரகிருதியும் மஹானும் ஆகிய இரண்டையும் நோக்கிக்கொண்டு அவற்றைத் திருமேனியாகக் கொண்டிருக்கும்
இருப்பைச் சொல்லுகிறது; என்றது, ‘காரிய காரணங்கள் இரண்டையும் தனக்குத் திருமேனியாக வுடையனாய் இருக்கும்
இருப்பைச் சொல்லுகிறது,’ என்றபடி. இரண்டுக்கும் உண்டான அண்மையைப் பற்றச் சொல்லுகிறது.
அவ்யக்தத்தினுடைய மலர்ந்த விளக்கமான நிலையன்றோ மஹானாகிறது?
காரணம் கார்யமாகட்டும் என்று அனுக்ரஹிக்க கடாஷிக்கிறார் என்றபடி -இரண்டையும் பிடித்து
-காரண கார்ய அவஸ்தைகள் இரண்டையும் சொன்னபடி –

மூன்று மூர்த்தி –
மூன்று விதமான அகங்காரங்களைச் சரீரமாகக் கொண்டிருக்கும் இருப்பைச் சொல்லுகிறது.
சாத்விகமாயும் இராஜசமாயும் தாமசமாயும் மூன்று வகைப்பட்டே அன்றோ அகங்காரந்தான் இருப்பது?
பல மூர்த்தியாகி ஐந்து பூதமாய் –
மேலே கூறிய முறை அன்று இங்குச் சொல்லுகிறது; சாத்துவிக அகங்காரத்தின் காரியம்,
பதினோரிந்திரியங்கள்; தாமச அகங்காரத்தின் காரியம், மண் முதலான ஐம்பெரும்பூதங்கள்; இரண்டற்கும் உபகாரமாய் நிற்கும்,
இராஜச அகங்காரம்-ராஜச அஹங்காரம் மேற்பார்வையாளர் போலே ; ஆக பதினோரிந்திரியங்களையும், குணங்களோடு கூடிய
ஐம்பெரும்பூதங்களையும் சொல்லி -அவற்றைத் திருமேனியாகவுடையவனாய் இருக்கும் இருப்பைச் சொல்லுகிறது.
(நம்பிள்ளை -ச குணமான பூத பஞ்சகம் என்பதால் வியாசர் பஷத்தை சொன்னபடி )

அவ்யக்தம் பிரக்ருதியின் அவஸ்தா பேதம்
பிரகிருதி -அவிபக்த தமஸ் -விபக்த தமஸ் அஷர தமஸ் அவ்யக்தம் தமஸ் -நான்கு நிலைகள் உண்டே
பூதலே -விதை -போலே பிரகிருதி -பீஜ ச்தாநீயம்
நிச்சிருத வெடித்த -நிலை விபக்தி
சலில சம்ஸ்ருஷ்ட -நீரை வாங்கி -சிதில –
உஜ்ஜூன பீஜ சமான ஆகாரம் -முளை அவ்யக்தம்
அங்கூர ஸ்தானம் முளை ஸ்தானம் மகான் -நான்கு நிலைகளை தாண்டி –
சகுணமான பூத பஞ்சகம்-வேத வியாசர் அபிப்ராயம் இது –
தன் மாத்ரா விசிஷ்டமான பூதம் எகமாக்கி ஐந்து பூதம் என்கிறது
ஏகாதச இந்த்ரியங்கள் -தன்மாத்ரா விசிஷ்ட பூதங்கள் ஐந்தும்
சப்தாதி குணங்கள் ஐந்தும் -பிரித்து -24 தத்வங்கள் –
பராசரர் -ஏகாதச இந்த்ரியங்கள் -தன்மாத்ரைகள் ஐந்தும் -பிரித்தே சொல்லி -இவரும் 24 தத்வங்கள் -என்பர் –

இரண்டு சுடராய் –
‘பிரமாவானவர் சூரிய சந்திரர்களை முன்பு போலே படைத்தார்,’ என்கிறபடியே, படைத்த சூரிய சந்திரர்களைச் சொல்லுகிறது.
இவற்றைக் கூறியது, காரியமான பொருள்கள் எல்லாவற்றிற்கும் உபலக்ஷணம்.

அருவாகி –
‘அவற்றைப் படைத்து அவற்றுக்குள் அநுப்பிரவேசித்தார்; அவற்றுக்குள் அநுப்பிரவேசித்துச்
சேதனமாயும் அசேதனமாயும் ஆனார்,’ என்றபடியே, இவற்றை உண்டாக்கி இவைகள் பொருள் ஆகைக்காகவும்
பெயர் பெறுகைக்காகவும் தான் அவ்வவ் வுயிருக்குள் அந்தராத்துமாவாய் அநுப் பிரவேசித்து நிற்கும் நிலையைச் சொல்லுகிறது.
‘நன்று; மேலே, அசித்தை அருளிச் செய்தாராதலின், அங்கு ‘அரு’ என்பதற்கு ஆத்துமா என்று பொருள் கூறுதல்
ஏற்புடைத்தாம் அன்றோ?’ என்னில், சரீரமாகவுடைய நான் அந்தரியாமியாய்ப் புகுந்து நாம ரூபங்களை உண்டு பண்ணுகிறேன்,’ என்கிறபடியே,
இந்த ஆத்துமாக்களையெல்லாம் சரீரமாகவுடைய சர்வேசுவரனுக்கு அநுப் பிரவேசமாகையாலே அப்பொருளும் சொல்லிற்றாயிற்று.

நாகம் ஏறி நடுக்கடலுள் துயின்ற நாராயணனே –
தன்னால் படைக்கப்பட்ட பிரமன் முதலானோர்கட்குப் பற்றப்படுமவன் ஆகைக்காகத் திருப்பாற்கடலின் நடுவில்
திருவனந்தாழ்வான் மேலே சாய்ந்தருளினவனே!
அன்றிக்கே, ‘பயிரைச் செய்து செய்த்தலையிலே குடி கிடக்குமாறு போன்று, படைக்கப்பட்ட பொருள்களைப் பாதுகாத்தற்காகக்
கண்வளர்ந்தருளுகின்றவனே!’ என்னவுமாம். ‘இப்படி எல்லாக் காலமும் ஒரு படிப்படத் திருவருள் புரிதலையே
இயல்பாகவுடையன் ஆகைக்கு அடியான சம்பந்தத்தையுடையவன்’ என்பார், ‘நாராயணனே’ என்கிறார்.
அனைவரையும் சமமாக பார்க்க வேண்டுமே இத்தை அறிந்த பின்பு வித்யா விநய தர்சனம் பண்டிதம் சம தர்சினி -என்றானே –

உன் ஆகம் முற்றும் –
உன் திருமேனிக்கு வேண்டும் சாந்து பூமாலை பரிவட்டம் ஆபரணங்கள் இவையெல்லாம்.
அகத்து அடக்கி –
என்னுள்ளே உண்டாம்படி செய்து. ‘இதுவே அன்றோ படைப்புக்குப் பிரயோஜனம்? இப்படிச் செய்த காரணத்தால்
துக்கம் இல்லாதவர் ஆனார் யார்?’ என்னில்,
‘அவன்’
என்கிறார் மேல்;
ஆவி அல்லல் மாய்த்தது –
உன் திருவுள்ளத்தில் உண்டான துன்பம் ஒருபடி அழியப்பெற்றதே! என்றது,
‘இத்தலையை ஒருபடி கரைமரஞ் சேர்த்து நீ கிருதக்கிருத்யன் ஆனாயே!’ என்றபடி.
அன்றிக்கே, ‘என் உள்ளமானது துக்கம் இல்லாததாயிற்று,’ என்னுலுமாம்.

இனி, இப்பாசுரத்திற்கு, ‘ஏகமூர்த்தி என்பது, பரத்துவத்தைச் சொல்லுகிறது’ என்றும்,
‘இருமூர்த்தி’ என்பது, வியூகத்தைச் சொல்லுகிறது; அதாவது, ‘வாசுதேவ சங்கர்ஷணர்களைச் சொல்லுகிறது’ என்றும்,
‘மூன்று மூர்த்தி என்பது, ‘வியூகத்தில் மூன்றாம் மூர்த்தியான பிரத்யும்நரைச் சொல்லுகிறது’ என்றும்,
‘பல மூர்த்தி’ என்பது, அவதாரங்களைச் சொல்லுகிறது என்றும்,
‘ஐந்து பூதமாய் இரண்டு சுடராய் அருவாகி நாகம் ஏறி நடுக்கடலுள் துயின்ற நாராயணனே!’ என்பது,
இன்னார் படைப்புக்குக் கடவர், இன்னார் பாதுகாத்தலுக்குக் கடவர் என்கிற படியாலே சொல்லுகிறது’ என்றும் நிர்வஹிப்பார்கள் உளர்.
‘உளர்’ என்பதனாலே, இவ்வாறு பொருள் கூறுதல் தமக்குத் திருவுள்ளம் அன்று என்பது போதரும்.

‘இந்த ஆத்துமாக்களை எல்லாம் காரிய காரணங்கள் இரண்டையும்’ என்றது, மஹானாகிய காரியத்தையும்
மூலப்பகுதியாகிய காரணத்தையும் குறித்தபடி.
‘அகங்காரம் முதலான தத்துவங்களும் மூலப்பகுதியின் காரியமாயிருக்க,
‘மஹத்’ என்னும் தத்துவத்தை மாத்திரம் சொல்லுவான் என்?’ என்னும்
வினாவிற்கு விடை அருளிச்செய்கிறார், ‘இரண்டுக்கும் உண்டான’ என்றுதொடங்கி. ‘
அண்மை எப்படி?’ என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார்,
‘அவ்யக்தம்’ என்று தொடங்கி. ‘அவ்யக்தத்தினுடைய மலர்ந்த விளக்கமான நிலை’ என்றது,
அவ்யக்தமாவது, பிரகிருதியினுடைய நிலை வேறுபாடுகளுள் ஒன்று;
பிரகிருதியானது. ‘அவிபக்த தமஸ்’ என்றும், ‘விபக்த தமஸ்’ என்றும்,‘அக்ஷரம்’ என்றும்,
‘அவ்யக்தம்’ என்றும் நான்கு வகையாக இருக்கும்;
அவற்றுள் ஒன்றான அவ்யக்தத்தினுடைய காரியநிலை மகானாய் இருத்தலால் என்றபடி,
‘அவிபக்த தமஸ்’ என்பது, பூமியில் விதைக்கப்பட்ட விதை போன்றது.
‘விபக்த தமஸ்’ என்பது, பூமியிலிருந்து எழும் விதை போன்றது.
‘அக்ஷரம்’ என்பது, நீருடன் கலந்து நனைந்து பிரிந்த உறுப்புகளையுடைய விதைபோன்றது.
‘அவ்யக்தம்’ என்பது, ஊறிப் பருத்து மேலெழுந்து வெடித்த விதை போன்றது.
‘மகத்’ என்பது, வித்தினின்றும் எழுந்த முளை போன்றது.

‘மேலே கூறிய முறையன்று இங்குச் சொல்லுகிறது’ என்றது,
‘ஏகமூர்த்தி இருமூர்த்தி மூன்று மூர்த்தி’ என்ற இடங்களில் காரணகாரியங்கள் என்ற முறை பற்றி அருளிச்செய்தார்;
‘இனி, அருளிச்செய்வது அம்முறையில் அன்று,’ என்றபடி. அதனை விளக்குகிறார், ‘சாத்விக அகங்காரம்’ என்று
தொடங்கி. பதினோர் இந்திரியங்கள் ஆவன, ஞானேந்திரியங்கள் ஐந்து, கர்மேந்திரியங்கள் ஐந்து,
மனம் ஒன்று. இங்குக் கூறிய தத்துவங்களின் முறையையும் விரிவையும் பரம காருணிகரான
ஸ்ரீமத் பிள்ளை லோகாசார்யர் அருளிச்செய்த தத்துவத்திரயத்தில் அசித் பிரகரணத்தாலும்,
பாகவதத்தில் சுகமுனி தத்துவமுரைத்த அத்தியாயத்தாலும் தெளிவாக உணரலாகும்,

‘ஐந்து பூதமாய் இரண்டு சுடராய் அருவாகி’ என்றதனால், இன்னார் படைப்புக்குக் கடவர் என்றும்,
‘நாகமேறி நடுக்கடலுள் துயின்ற நாராயணனே’ என்றதனால், இன்னார் பாதுகாத்தலுக்குக் கடவர் என்றும் பிரித்துக் கூட்டிக்கொள்க.
‘ஐந்து பூதமாய் இரண்டு சுடராய் அருவாகி’ என்றது, சிருஷ்டியைக் கூறுவதனால்,
மேலே கூறிய பிரத்யும்நரது தொழிலாகிய சிருஷ்டியைக் கூறுகின்றது என்பது பொருள்.
‘நாகமேறி நடுக்கடலுள் துயின்ற நாராயணனே’ என்பது,
‘அநிருத்தரையும் அவருடைய காரியமான பாதுகாத்தலையும் கூறுகின்றது’ என்பது பொருள்.
‘ஆயின், சங்கர்ஷணருடைய தொழிலாகிய சம்ஹாரத்தைக் கூறவில்லையே?’ எனின்,
‘அழித்தலானது, படைத்தற்றொழிலில் லயப்பட்டிருப்பது ஒன்றாகையால்,
அது, பொருளாற்றலால் தானே சித்திக்கும்’ என்க.

———————————————————————————

மாய்த்தல் எண்ணி ‘வாய்முலை தந்த மாயப் பேய் உயிர்
மாய்த்த ஆய மாயனே! வாமனனே! மாதவா!
பூத்தண் மாலை கொண்டு உன்னைப் போதால் வணங்கேனேலும்,நின்
பூத்தண் மாலை நெடு முடிக்குப் புனையும் கண்ணி எனதுயிரே.–4-3-4-

அனுகூல சத்ருவான -பூதனை -நிரசித்து -என்ன அனந்யார்ஹம் ஆக்கிக் கொண்ட ஸ்ரீ யபதி –
உனக்கு எனது பிராணன் திரு முடிக்கு விசேஷ அலங்காரம் ஆவதே
மாய்த்தல் எண்ணி ‘வாய்முலை தந்த மாயப் பேய் உயிர்-திருப்பவளத்தில்–முலை தாயைப் போலே வந்த பேய்ச்சி –
முதல் வந்த -12 மைல் தூரம் சரீரம் விழ -விளையாடிக் கொண்டு
பூதி கந்தமே இல்லை -சர்வகந்தன் சர்வரசன் -கோபால பாவத்தில் புரையற்ற மாயன்
மாய்த்த ஆய மாயனே! வாமனனே! மாதவா!-அபதானத்தால் ஜகத்தை ஆனந்யார்ஹம் ஆக்கி –
விஷப்பாலாக இருந்தாலும் ரசமாக இருக்க
-ஜகத் குரு வான படியால் -குற்றம் பொறுக்க
ஜகத்தை ரஷிக்க-ஸ்வாமித்வத்தை பிரகாசிப்பிக்கும் வேஷம்
ஸ்வா பாவிக ஸ்ரீ யபதித்வம் நிலை நிறுத்தி -வாமன அவதாரம் -பிரதம ஆச்ரயம் ப்ரஹ்மச்சாரி –
வாமனனே மாதவம் சங்கை வேண்டாம் என்கிறார் -உன்னை -அனுகூல சத்ரு -பூதனை மகா பலி இருவரையும் –
பூத்தண் மாலை கொண்டு உன்னைப் போதால் வணங்கேனேலும்,நின்-விலஷணமான புஷ்ப உக்தமாக
-அவஸ்தா -நேரங்களில் போது-இங்கு போது -காலம் -எந்தக்காலத்திலும் செய்யாமை –
-பண்ண விடாவிடிலும் -தத் தத் காலங்களில் -அவதார சமயங்களிலும் –
பூத்தண் மாலை நெடு முடிக்குப் புனையும் கண்ணி எனதுயிரே-ஆத்மாவே -ஆதி ராஜ்ய ஸூசகமான
ஒக்கம் கொண்ட திரு அபிஷேகம் -நெடு முடி
அலங்காரமாக சாத்தும் மாலை எனது ஆத்மாவாவதே பிராணன் ஆவதே –மாயவனே -இதுவும் அவன் மாயம்
கீழே பாசுரங்கள் மாலை -இங்கு சத்தையே-என்றவாறு-

அழிப்பதற்கு நினைத்து உனது திருவாயிலே முலையை வைத்துப் பாலைக் கொடுத்த வஞ்சனை பொருந்திய பேய் மகளாகிய
பூதனையினது உயிரை நீக்கிய ஆச்சரியமான செயல்களை யுடைய ஆயனே! வாமனனே! திருமகள் கணவனே!
குளிர்ந்த மலர்களால் தொடுக்கப்பட்ட மாலையைக்கொண்டு உன்னை அவ்வக்காலத்தில் வணங்கிலேனே யாகிலும்,
உனது குளிர்ந்த அழகிய மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட நீண்ட திருமுடிக்கு அணிகின்ற மாலை என்னுடைய உயிரேயாம்.
‘எண்ணித் தந்த பேய்’ என்க. ‘ஆய மாயனே’ என்பதனை ‘மாய ஆயனே’ எனப் பிரித்துக் கூட்டுக. ஆயன் – கிருஷ்ணன்.

‘பூதனை முதலானோரை அழிக்கின்ற காலத்தில் சிரமம் தீரக் குளிர்ந்த உபசாரங்களைச் செய்யப்பெற்றிலேனே யாகிலும்,
குளிர்ந்த உபசாரத்தால் அல்லது செல்லாத உன்னுடைய மிருதுத் தன்மையை யுடைய திருமேனிக்குச் சாத்தும்
மாலை என் உயிரேயாய்விடுவதே!’ என்கிறார்.
ஆழ்வார் உடைய சத்தையே-அவனுக்கு அலங்காரம் –

மாய்த்தல் எண்ணி –
‘இன்னாரை மாய்த்தல் எண்ணி என்னாமையாலே உலகத்தையே அழிப்பதற்காக அன்றோ
அவள் கோலி வந்தது?’ என்பதனைத் தெரிவிக்கிறார்.
கேசி வரும் பொழுது நாரதர் பயந்தாரே இப்படியே –
‘சரீரியை நலிந்தால் சரீரம் தன்னடையே அழிந்துவிடும். அன்றோ?
உயிரிலே நலிந்தால் உறுப்புகள் தோறும் தனித்து நலிய வேண்டாவே அன்றோ?
உலகங்கட்கெல்லாம் ஓர் உயிரே அன்றோ அவன்?
‘நம்மைக் கொல்ல வருகின்றான்; சந்தேகம் இல்லை,’ என்றாரே அன்றோ மஹாராஜர்?
ஆக, ‘அவள் கோலி வந்த படி அவசியம் சிலர் பரிய வேண்டியதாக இருந்ததாதலின்’
‘மாய்த்தல் எண்ணி’ என்கிறார் என்றபடி.

வாய் முலை தந்த –
அவன் திருப்பவளத்திலே நஞ்சினைக் கொடுத்தாற் போலே இருக்கையாலே ‘தந்த’ என்கிறார்.
அன்றிக்கே, ‘தருகையும் கொடுக்கையும் ஒரு பொருட்சொற்களாய்,
கொடுத்த என்னும் பொருள் பெற்றுக் கிடக்கிறது,’ என்னுதல்.
மாயப் பேய் –
பிறவியால் வந்த அறிவு கேட்டுக்கு மேலே, வஞ்சனையை யுடையளாயும் வந்தாள்; என்றது,
‘பேயாய் வருகை அன்றிக்கே, தாயாயும் வந்தாள்,’ என்றபடி.
‘தாயாய் வந்த பேய்’ என்றார் திருமங்கை மன்னன்.
உயிர் மாய்த்த –
அவள் கோலி வந்ததனை அவள் தன்னோடே போக்கினபடி.
மாய ஆயனே – ஆச்சரியமான ஆற்றலையுடைய ஆயனே!
இவனும் பிள்ளையாயே முலையுண்டான்; அவளும் தாயாய் முலை கொடுத்தாள்;
பொருளின் தன்மையாலே முடிந்தாள் இத்தனை.

வாமனனே –
‘வெங்கொங்கை உண்டானை மீட்டு ஆய்ச்சி ஊட்டுவான், தன்கொங்கை வாய்வாய்த்தாள் சார்ந்து’ என்றும்,
‘பேய்ச்சிபால் உண்ட பெருமானைப் பேர்ந்தெடுத்து, ஆய்ச்சி முலைகொடுத்தாள் அஞ்சாதே’ என்றும் சொல்லப் படுகின்றபடியே
அந்த அவதாரத்தில் பூதனை முலை கொடுத்தால் அதனை மாற்றுவதற்கு உரிய மருந்தாக முலை கொடுக்கைக்கு
ஒரு தாயாகிலும் உண்டே அன்றோ அங்கு?
அதுவும் இன்றிக்கே, இவனைப் பெற்றிட்டு வைத்துத் தாயும் தமப்பனும்-அதிதி கஸ்யபர்- தவத்திலே
கருத்து ஊன்றினவர்களாய் இருந்துவிட, அசுரத்தன்மை வாய்ந்தவர்கள் இருந்த இடத்தே
தானே போய்க்கிட்டும்படியாய் அன்றோ இருந்தது? என்றது
‘தான் இருந்த இடத்தே அவர்கள் வந்து கிட்டினாற்போலே அன்றோ எதிரிகள் இருந்த இடத்தே தான் சென்று கிட்டுமது?
அது, மிகவும் வயிறு எரித்தலுக்குக் காரணமாய் இருக்குமே அன்றோ?’ என்றபடி. அதனையே அன்றோ,
‘சீராற் பிறந்து சிறப்பால் வளராது, பேர்வாமன் ஆகாக்கால் பேராளா!’ என்று வயிறு பிடித்தார்கள்?

இவனை – வாமனனை. ‘தாயும் தமப்பனும்’ என்றது, அதிதியையும் காசிப முனிவரையும்.
‘காலநு னித்து உணர் காசிபன் என்னும் வாலறிவற்கு அதிதிக்குஒரு மகவாய்
நீலநிறத்து நெடுந்தகை வந்தோர் ஆலமர் வித்தின் அருங்குறள் ஆனான்.’– என்றார் கம்பநாட்டாழ்வார்.

மாதவா –
‘தீ நாள் திருவுடையார்க்கு இல்’ என்கிறபடியே, இந்த அபாயங்களில் அவன் தப்பியது அவள் நெஞ்சோடே யிருந்து
நோக்குகையாலே அன்றோ? -சஹ்ருதயமாக -உளமாக-என்றுமாம் –
ஓர் அபாயமும் இல்லையே யாகிலும், பெரிய பிராட்டியாரும் அவனுமான சேர்த்திக்கு
மங்களாசாசனம் செய்கின்றவர்கள் தேட்டமாய் இருக்கிறது காணும். அன்புடையவர்கள்
‘வடிவாய் நின்வல மார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு,’ என்னா நின்றார்கள் அன்றோ?

பூத்தண் மாலைகொண்டு உன்னைப் போதால் வணங்கேனேலும் –
பூதனை முதலாயினோர் வந்து கிட்டின அவ்வக் காலத்திலே குளிர்த்தியை யுடைத்தான பூ மாலையைக் கொண்டு
குளிர்ந்த உபசாரத்தைச் செய்யப் பெற்றிலேனே யாகிலும்.
பூத்தண்மாலை நெடுமுடிக்குப் புனையும் கண்ணி எனது உயிரே –
குளிர்ந்த மாலையால் அல்லது செல்லாதபடியாய் ஆதி ராஜ்ய சூசகமான உன்னுடைய திருமுடிக்கு விரும்பிச் சார்த்தும் மாலை,
என் உயிர் –
என் சத்தையாய் விட்டது.

—————————————————————————-

கண்ணி எனது உயிர் காதல் கனகச் சோதி முடி முதலா
எண்ணில் பல் கலன்களும்; ஏலும் ஆடை யும் அஃதே;
நண்ணி மூவுலகும் நவிற்றும் கீர்த்தியும் அஃதே;
கண்ணன் எம்பிரான் எம்மான் கால சக்கரத் தானுக்கே.–4-3-5-

இங்கு உயிர் காதல் -ஆத்மாவையும் அபி நிவேசத்தையும் -சமர்ப்பிக்கிறார் -ஆபரணாதி சமஸ்தமும் –
1-ஸ்வாமி –2-உபகாரகன் -3-சுலபன் -4-போக்யன் -5-கண்ணன் –ஐந்துக்கும் இவரும் ஐந்தும் கீர்த்தியையும் சேர்த்து –
1-கண்ணி-2 எனது உயிர்-அபிமான அந்தர்கதமான -தலையால் -ஆழ்வாரை தாங்குகிறார் -என்றவாறு
காதல் கனகச் சோதி முடி முதலா எண்ணில் பல்கலன்களும்; ஏலும் ஆடை யும் அஃதே;-ஆத்ம தர்மம் ப்ரேமம்
-தங்க மயமான ஆதி ராஜ்ய ஸூ சகம் -திரு அபிஷேகம் –
அசந்க்யேயமான திவ்ய ஆபரணங்களும் அவையே
அநு ரூபமான திருப் பீதாம்பரமும் அதுவே
நண்ணி மூவுலகும் நவிற்றும் கீர்த்தியும் அஃதே;-
காதலைக் கொண்டு இத்தனையும் -சாகரம் அன்றோ -கடலின் மிகப் பெரியதால்
-கடல் புரைய விளைவித்தான் -தத்வ த்ரயமும் கபளீ கரிக்குமே ஆழ்வார் அவா
திக்கு எட்டும் பரவி -எண் திசையும் அறிய இயம்புகேன் -கீர்த்தியும் ஆழ்வார் காதலே
பிரேமத்துக்கு -விஷயமாக உள்ளதே அவனுக்கு அலங்காரம் -என்றவாறு
கண்ணன் எம்பிரான் எம்மான் கால சக்கரத் தானுக்கே.-கால நிர்வாககன் -திரு வாழி- யுடையவன்
அழகைக் காட்டி கால வச்யன் ஆகாமல் அடிமைப் படுத்தி -ஸ்வாமி –
உபகாரகன் -கால தத்வம் உள்ளதனையும் அழகை அனுபவிப்பித்த
கால சக்கரம் வைத்து இரண்டையும் அநிஷ்ட நிவ்ருத்தி -இஷ்ட பிராப்தி
அவதாரம் -காலத்துக்கு அனுரூபமாக –

காலத்தை நடத்துகின்ற சக்கரத்தையுடையனான எம்மானும் எம்பிரானுமான கண்ண பிரானுக்கு, என்னுடைய உயிரானது
அவன் அணிந்து கொள்ளுகின்ற மாலையாய் இராநின்றது; அவன் தரித்திருக்கின்ற பொன் மயமான ஒளி பொருந்திய
திருமுடி முதலான எண் இல்லாத பல வகையான ஆபரணங்களும் என்னுடைய அன்பே யாய் இராநின்றது;
பொருந்திய பீதாம்பரமும் அந்த அன்பேயாகும்; மூவுலகத்தாரும் பொருந்திச் சொல்லுகின்ற கீர்த்தியும் அந்த அன்பேயாகும்.

‘எனது உயிர் கண்ணி; காதல் கனகச் சோதி முடி முதலா எண் இல் பல் கலன்களும் அஃதே;
ஏலும் ஆடையும் அஃதே; கீர்த்தியும் அஃதே’ என்க.
கண்ணி – மாலை. கண்ணி என்பதற்குத் ‘தலையில் அணியும் மாலை’ என்பர் புறநானூற்று உரையாசிரியர்.
கலன் – ஆபரணம்.

தம்முடைய அன்பு முதலானவைகள் ஓர் ஒன்றே ஆபரணங்கள் முதலான
எல்லாப் பரிச்சதங்களும் ஆயிற்று அவனுக்கு என்கிறார்.

எனது உயிர் கண்ணி –
‘நான் ‘என்னது’ என்று இருக்கிறதை அன்றோ அவன் தனக்கு மாலையாகக் கொண்டது?’ என்பார்,
‘எனது உயிர் கண்ணி’ என்கிறார்.
அன்றிக்கே, ‘மார்வத்து மாலை’ என்கிறவளைத் தனக்கு மாலையாகக் கொள்ளுகை தக்கது;
அஃது ஒழிய என் உயிரை அன்றோ தனக்கு மாலையாகக் கொண்டான்?’ என்பார்,
‘கண்ணி எனது உயிர்’ என்கிறார் என்னலுமாம்.
கனகம் சோதி முடி முதலா எண் இல் பல் கலன்களும் காதல் –
விரும்பத் தக்கதாய் ஆதி ராஜ்ய சூசகமான திருமுடி முதலான எண் இறந்து பல வகைப்பட்ட
திரு ஆபரணங்களும் என்னுடைய அன்பேயாம்.
‘இவருடைய காதல் அவனுக்கு ஆபரணமாவது என்?’ என்னில்,
இவருடைய அன்பிற்குத் தான் விஷயமாகப் பெற்ற இதனையே,
தனக்குப் பல ஆபரணங்கள் சாத்தினால் பிறக்கும் புகர் உண்டாக அவன் நினைத்திருக்கையாலே,
அதனை நோக்கிச் சொல்லுகிறார்.
குணம் த்ரவ்யம் ஆகுமா -இவற்றைக் கொண்டு பெரும் உகப்பு இவர் அபி நிவேசம் கண்டு அடைகிறார் -என்றபடி
-அத்ருஷ்ட ரூபமான மானஸ அனுபவம் காதல் ப்ரேமமே வேண்டுவது –
பூவை –பூம் புட்டில் யாவையும் திருமால் திரு நாமங்களை போலே –
அதே பிரியம் இவள் திருநாமத்தால் அடைகிறாள் -என்றபடி போலே –

ஏலும் ஆடையும் அஃதே –
திரு அரைக்குத் தகுதியான திருப்பீதாம்பரமும் அந்த அன்பேயாம்.
ஒரு நாள் ஸ்ரீ வைஷ்ணவ வண்ணாத்தான், திருப் பரிவட்டங்களை அழகியதாக
வாட்டிக்கொண்டு வந்து எம்பெருமானார்க்குக் காட்ட,
மிக உவந்தாராய் அவனைப் பெருமாள் திருவடிகளிலே கைப்பிடித்துக்கொண்டு புக்கு,
‘நாயன்தே! இவன் திரு அரைக்குத் தகுதியாம்படி
வாட்டினபடி திருக்கண் சார்த்தி அருளவேண்டும்’ என்று இவற்றைக் காட்டியருள,
கண்டு உவந்தருளி, உடையவரை அருள்பாடு இட்டருளி,
‘இவனுக்காக ரஜகன், நம் திறத்தில் செய்த குற்றம் பொறுத்தோம்’ என்று திருவுள்ளமாயருளினார்.
அன்றிக்கே,
‘ஏலும் ஆடையும் அஃதே’ என்பதற்கு, ‘சிறந்த பொன்னாடை’ என்கிறபடியே,
அர்த்தவாதம் இல்லை -மகா ரஜதம்-தங்கமயம் -வெள்ளிப் பட்டைகள் -திருப் பரிவட்டம் -உபநிஷத் –
‘புருடோத்தமனுக்கு இலக்கணமான திருப்பீதாம்பரமும் அந்த அன்பேயாம்’ என்னலுமாம்.
இவர் பல காலம் கூடிப் பண்ணுகிற திரு ஆபரணமும் திருப்பரிவட்டமும் அன்றோ?
‘அறியாக் காலத்துள்ளே அடிமைக்கண் அன்பு செய்வித்து’ என்கிறபடியே,
இவருடைய அன்பு அடியே தொடங்கியுள்ளது அன்றோ?
‘இது கூடுமோ?’ என்று சந்தேகிக்க வேண்டா; இவை ‘பொய்யில் பாடல்’ ஆகையாலே கூடும்.

மூ உலகும் நண்ணி நவிற்றும் கீர்த்தியும் அஃதே –
விசேடஜ்ஞர் அன்றிக்கே, மூன்று உலகத்துள்ளாரும் வந்து கிட்டிக் கடல் கிளர்ந்தாற்போலே
துதிக்கிற கீர்த்தியும் அந்த அன்பேயாம்.
‘இவர் காதலித்த பின்னர் வேறு பொருள்களிலே நோக்குள்ளவர்களும் அப்பொருள்களில் நோக்கு
இல்லாதவர்களாகி ஏத்தாநின்றார்கள்.’ என்றாயிற்றுவன் நினைத்திருக்கிறது.
பிரயோஜனத்தை விரும்புகிறவர்கள் துதிக்கிற கீர்த்தியை அநந்யப்பிரயோஜனரான
தம்முடைய காதல் என்னலாமோ?’ என்ன, அதற்கு விடை அருளிச் செய்கிறார்,
‘இவர் காதலித்த பின்னர்’ என்று தொடங்கி. இங்கே‘ஊரும் நாடும் உலகமும் தன்னைப்போல் அவனுடைய,
பேரும் தார்களுமே பிதற்ற’ (திருவாய். 6. 7 : 2.) என்ற திருப்பாசுரம் அநுசந்திக்கத்தகும்.

ஆக, ‘ஓர் இனப்பொருள்கள் பலவாதலே அன்றி, வேற்றினப் பொருள்களும்
பலவாகத் தொடங்கின’ என்பதனைத் தெரிவித்தவாறு.
முதலா -பல ஜாதிகளுக்கும் -என்றவாறே –
இக்காதலுக்குக் கைதொட்டுக் கிருஷி பண்ணினபடி சொல்லுகிறது மேல் :
விருத்த வான்களைக் காட்டிக் காணும் விருத்தி பரர் ஆக்கிற்று இவரை.

கால சக்கரத்தான் எம்மான் எம்பிரான் கண்ணனுக்கு –
கையும் திருவாழியுமான அழகைக் காட்டி எனக்கு வேறு ஒன்றிலே நெஞ்சு செல்லாதபடி
செய்தலாகிய மஹோபகாரத்தைச்செய்து,
‘கழிவதோர் காதலுற்றார்க்கும் உண்டோ கண்கள் துஞ்சுதல்?’ என்னும்படி செய்த என் ஸ்வாமியான கிருஷ்ணனுக்கு.
பகலை இரவு ஆக்க வல்ல சக்கரமாதலின், ‘காலசக்கரம்’ என்கிறார்.
கால சக்கரம் – ‘காலத்தை நடத்துகின்ற சக்கரம்’ என்றபடி.
அன்றிக்கே, ‘கலிகாலத்தில் பாஷண்டிகளால் கெடுக்கப்பட்ட மக்கள் விஷ்ணுவாகிய
சர்வேசுவரனைப் பூஜிக்கின்றார்கள் இல்லை,’ என்கிற காலத்திலும்,
இருள் தரு மா ஞாலத்திலும் இருளை ஓட்டி, அருளார் திருச்சக்கரமாய்த் திருக்கரத்திலே விளங்கிக் கொண்டிருப்பவன் ஆதலின்,
‘காலத்திற்குக் கட்டுப்பட்டிருக்குந்தன்மையைப் போக்கும் சக்கரம்’ என்னுதல்.
சர்வேசுவரன் திருக்கரத்தைத் தான் பிரியாமல் இருத்தல் போலே,
திருவடிகளைத் தாம் பிரியாதபடியான ருசியை உண்டாக்கக்கூடிய திருவாழி என்பதனைத் தெரிவித்தபடி.
அவனுடைய திருக்கையிலே நின்ற அழகாலே மக்கள் சென்று காலிலே விழும்படி செய்யுமவன் என்பதாம்.
‘அருளார் திருச்சக் கரத்தால் அகல்விசும் பும்நிலனும் இருளார் வினைகெடச் செங்கோல் நடாவுதிர்’
பாஷண்டோ -கலி காலத்தில் -கலௌ ஜகத் பதிம் -பூஜிக்காமல் -பராசரர் –
காலத்தால் வந்த கொடுமை பாதிக்காமல் அருளிய திரு ஆழி என்றவாறு
அவர் திருக்கையை விட்டு பிரியாமல் இவரை திருவடியில் விழ வைத்து பிரியாமல் பண்ணி அருளினார் என்றபடி

————————————————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ. வே.வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

பகவத் விஷயம் காலஷேபம் -89- திருவாய்மொழி – -4-2-6….4-2-11–ஸ்ரீ உ. வே. வேளுக்குடி ஸ்வாமிகள்-

May 28, 2016

மாதர் மா மண் மடந்தை பொருட்டு ஏனமாய்,
ஆதி அம் காலத்து அகலிடம் கீண்டவர்
பாதங்கள் மேல் அணி பைம்பொன் துழாய் என்றே
ஓதுமால் எய்தினள் என்றன் மடந்தையே.–4-2-6-

ஸ்ரீ பூமிப் பிராட்டிக்கு உதவிய வராஹ நாயனார் திருவடிகளில் உள்ள திருத் துழாய் -கிடைக்க பிச்சேறி
மாதர் மா மண் மடந்தை பொருட்டு ஏனமாய்,–நீருக்கும் சேற்றுக்கும் இறாயாமல்-
ஆதி அம் காலத்து அகலிடம் கீண்டவர்-கல்பாதி-ஸ்வாயம்பூ மனு -படைத்து -வைக்க பூமி இல்லையே –
பிரமன்-விடைத்த மூக்கு வெளியே -பெரும் கேழலார்-
அம்-சிருஷ்டிக்கு யோக்யமாகும் பிராதுர் பாவ யோக்யம் ஆகும் நன்மை -அண்ட பித்தியில் இருந்து
பாதங்கள் மேல் அணி பைம்பொன் துழாய் என்றே-ரிஷிகள் -சனகாதிகள் -ஸ்தோத்ரம் பண்ணி சமர்ப்பித்த திருத்துழாய்
ஓதுமால் எய்தினள் என்றன் மடந்தையே-பிரமத்தை அடைந்த -மடப்பம் –சொல்வதைக் கேட்கும் நிலையில் இல்லை

என்னுடைய பெண்ணானவள் காதலையுடைய பூமி தேவியின் பொருட்டுப் பண்டைக் காலத்தில் வராக அவதாரத்தைச் செய்து
அகன்ற பூ உலகத்தை ஒட்டு விடுவித்து எடுத்து வந்தவருடைய திருவடிகளின் மேலே அணிந்த பசிய அழகிய திருத்துழாய்
என்றே சொல்லும் படியான மயக்கத்தை அடைந்தாள்.
‘ஆதி அம் காலத்து மாதர் மண் மடந்தை பொருட்டு ஏனமாய் அகலிடம் கீண்டவர்’ என்க.
‘என்றன் மடந்தை மால் எய்தினள்,’ என மாறுக.

‘மனிதத் தன்மை அழியாமல் நப்பின்னைப் பிராட்டிக்கு உதவினாற் போல அன்றிக்கே,ஸ்ரீ பூமிப் பிராட்டிக்காகத் தன்னை
அழிய மாறியும் உதவினவனுடைய திருவடிகளில் திருத்துழாயை ஆசைப்படா நின்றாள்,’ என்கிறாள்.

மாதர் –
அழகு. நிருபாதிகமான பெண்மையையுடையவள் என்னுதல்; –ஆழ்வார் போலே -பெண் தன்மை ஏறிட்டுக் கொள்ள வேண்டாமே-
மாதர் என்று காதலாய், ‘சினேகத்தையுடையவள்’ என்னுதல்.-அஹம் -சிஷ்யாச்சா -தாஸ்யாச்சா -பக்த்யாச்சா -என்றாளே
மா மண் மடந்தைபொருட்டு –
ஏற்றத்தை யுடையவளான ஸ்ரீ பூமிப் பிராட்டியின் பொருட்டு.–அரவாகி சுமத்தியால்–திருவானவள் சீறாளோ-விராதன் –

ஏனமாய் –
‘பாசி தூர்த்துக் கிடந்த பார்மகள்’ என்கிறபடியே, காதலி உடம்பு பேணாமல் கிடக்க, காதலன் உடம்பு பேணி இருக்கை
காதலுக்குத் தக்கது அன்றே? ஆதலால், ‘மாசு உடம்பில் நீர் வாரா மானம் இலாப் பன்றியாம் தேசு’ என்கிறபடியே,
நீருக்கும் சேற்றுக்கும் இளையாத வடிவை யுடையவனாய்.
ஆதி –
வராக கல்பத்தின் ஆதியிலே.
அம் காலத்து –
அழகிய காலத்தில் -காப்பாற்றுகின்ற சர்வேசுவரன் தன் விபூதியைக் காப்பதற்காகக் கொண்ட கோலத்தை
அனுபவிக்கிற காலம் ஆதலின், ‘அம் காலம்’ என்கிறது.
கோல வராகம் ஒன்றாய் நிலம் கோட்டிடை கொண்ட எந்தாய் –

அகல் இடம் கீண்டவர் பாதங்கள்மேல் அணி பைம்பொன் துழாய் என்றே ஓதும் மால் எய்தினள் –
பெரிய இவ்வுலகத்தை அண்ட பித்தியினின்றும் ஒட்டு விடுவித்து எடுத்துக்கொண்டு ஏறினவனுடைய திருவடிகளிலே
வேத மயம் சரீர — யஜ்ஞவராஹன் -‘அந்த வராக நயினாருடைய மயிர்க்கால்களில் உள்ள மஹரிஷிகள் துதி செய்கிறார்கள்,’ என்கிறபடியே,
‘சனகன் முதலானோர்-மானஸ குமாரர்கள்- இட்ட திருத்துழாயை ஆயிற்று இவள் ஆசைப்படுகிறது.
இதனையே எப்போதும் சொல்லும்படி பிச்சு ஏறினாள்’ என்பாள், ‘மால் எய்தினள்’ என்கிறாள்.

என் றன் மடந்தையே –
‘அவன் அன்றோ பிச்சு ஏறுவான்?’ என்று இருப்பவளாதலின், ‘என் மடந்தை’ என்கிறாள்.
‘இப் பருவத்தைக் கண்டார் படுமதனை இப் பருவமுடைய இவள் படுவதே!’ என்கிறாள்.
பேதை- பெதும்பை -மங்கை- மடந்தை -அரிவை – தெரிவை – பேர் இளம் பெண் அவஸ்தைகள் –
அவள் மாதர் மா மண் மடந்தை -இவள் என் மடந்தை -ஆபிஜாத்யம் ஏற்றம்

——————————————————-

மடந்தையை வண் கமலத் திரு மாதினைத்
தடங்கொள் தார் மார்பினில் வைத்தவர் தாளின் மேல்
வடங்கொள் பூந் தண் அம் துழாய் மலர்க்கே இவள்
மடங்குமால்; வாணுதலீர்!என் மடக்கொம்பே.–4-2-7-

அமிருத மதன தசையில் -பிராட்டியை திரு மார்பில் -அஜிதன் -ஹரி -இவன் திரு நாமம் –
இவன் திருவடிகளில் திருத் துழாய் நிமித்தமாக
மடந்தையை வண் கமலத் திரு மாதினைத் தடங்கொள் தார் மார்பினில் வைத்தவர் -பருவம் -அழகிய -தர்ச நீயமான
கமலம் இருப்பிடம் –ஸ்ரீ என்னும் திரு நாமம் -திரு -மாது – சௌந்தர்யாதிகள்
தாளின் மேல்-ஈச்வரத்வ சூசகம் மாலை -தாருக்கும் மாதருக்கும் இங்கே இடம் -தடம் -விசாலமான-வைஜயந்தி வனமாலை –
ஏறும் படி – யயௌ வஷஸ் ஸ்தலம் ஹரி -அடைந்தாள் -என்னாமல் வைத்தவர் –
இவள் அமரும் படி வைத்து அருளினார் -தத் கால வர்த்திகள் தேவர்கள் சாத்தின
வடங்கொள் பூந் தண் அம்துழாய் மலர்க்கே இவள்-தொடையை உடைத்தாய் தர்ச நீயமான
குளிர்ந்த செவ்விய திருத் துழாய் மாலைக்கு தோற்று -வடங்கொள் பூ-தழைத்த புஷ்ப்பம் என்றுமாம்
மடங்குமால்; வாணுதலீர்!என் மடக்கொம்பே.-சிதிலமாகி –உஜ்வலமான நெற்றி உடையவள்
பவ்யமான வஞ்சி கொடி -சுருளா அவசன்னையாய் உள்ளாள்-உங்களை போலே இவளும் ஆக வேண்டுமே

ஒளி பொருந்திய நெற்றியையுடைய பெண்களே! என்னுடைய பெண்ணானவள், மடந்தைப் பருவத்தை யுடையவளாகிய,
வளப்பம் பொருந்திய தாமரைப்பூவில் வீற்றிருக்கின்ற பெரிய பிராட்டியைப் பரந்த மாலையை அணிந்த திருமார்பிலே வைத்த
எம்பெருமானுடைய திருவடிகளின் மேலே அணிந்த தொடுக்கப்பட்ட பூக்களையுடைய
குளிர்ந்த அழகிய திருத்துழாய் மலர்க்கே இவள் சுருண்டு விழுகின்றாள்.
‘என் மடக்கொம்பு இவள் துழாய் மலர்க்கே மடங்கும்,’ எனக்கூட்டுக.
கொம்பு – ஆகுபெயர். ‘தார் கொள் தடம் மார்பு’ என மாறுக.

‘அமிர்தத்திற்காகத் திருப்பாற்கடலைக் கடைகிற காலத்திலே பெரிய பிராட்டியாரைத் திரு மார்பிலே
வைத்தருளினவனுடைய திருவடிகளிற் சார்த்தின திருத்துழாயை ஆசைப்படா நின்றாள்,’ என்கிறாள்.
தானே பெண்ணாகி-வானவரை பெண்ணாகி அமுதூட்டியவன் அன்றோ -திருமார்பில் இடம் கேட்க வில்லையே
பிறந்த அன்றே நேரே அமர்ந்து திருக்கல்யாணம் -பிறந்த அன்றே விரோதி நிரசன சீலன் நரசிம்ஹன் –

மடந்தையை –
எப்போதும் ஒக்க போகத்திற்குத் தகுதியான பருவத்தை யுடையவளை.
(பிறந்த அன்றே திரு மார்பில் ஏறி திருக் கல்யாணம்
பிறந்த குழந்தை சண்டை நரசிம்மன் -போலே)
வண் கமலத் திருமாதினை –
அழகிய தாமரைப்பூவை இருப்பிடமாகவுடைய திருவாகிற பெண் பிள்ளையை. ‘சாக்ஷாத் இலக்குமியை’ என்றபடி.
தடம்கொள் தார் மார்பினில் வைத்தவர் –
பெரிய பிராட்டியாருக்குத் திவ்ய அந்தப்புரமாகப் போகும்படி இடமுடைத்தாய், இறைமைத் தன்மைக்கு
அறிகுறியான மாலையை யுடைத்தான மார்பிலே வைத்தவர்.
அந்தப்புர தீபம் -கௌச்துப ஸ்வஸ்தி தீபம் -சித்திரம் கோலம் –
மாட்டுக் கொம்பு கொண்டு இவனை போட்டுவித்தானே -லஷ்மி லலித க்ருஹம்
கமலா -கௌஸ்துபம் -பர தேவதா கோஷம் –
யசோதை அச்சுத்தாலி ஆமைத்தாலி ஐம்படைத்தாலி -இதுவே சௌலப்யம் காட்டிக் கொடுக்கும் –

மார்பினில் வைத்தவர் தாளின்மேல் வடம்கொள் பூந்தண் அம் துழாய் மலர்க்கே இவள் மடங்குமால் –
பஸ்யதாம் சர்வ தேவா நாம் –‘மஹாலக்ஷ்மி யானவள் பார்த்துக் கொண்டிருக்கின்ற எல்லாத் தேவர்களுக்கும் நடுவில்
பகவானுடைய திருமார்பை அடைந்தாள்’ என்கிறபடியே,
அமிர்தத்திற்காகக் கடைகிற காலத்தில் ‘அம்மா நமக்கு இம்மார்பு பெறவேண்டும்’ என்று தன்பாடு ஏற வர,
அவளும் தண்ணீர் தண்ணீர் என்னும் படி அம்மா -ஸ்வாமி -இவனும் அம் மா பிராட்டி தனக்கு வேண்டும் என்றபடி –
அவளையும் மார்பிலே வைத்துக் கொண்டவனுடைய திருவடிகளின் மேலே செறியத் தொடை உண்டு காட்சிக்கு
இனியதாய்க் குளிர்ந்து செவ்வியையுடைத்தான திருத்துழாய்ப் பூவை
ஆசைப்பட்டுக் கிடையாமையாலே சுருண்டு விழுந்து கிடவா நின்றாள்.

வாள் நுதலீர் –
என் மடக்கொம்பே ‑
என்னைப் பிரியாமல் எல்லா அளவிலும் விகாரம் இல்லாதவளாய் இருக்குமவள் படும் பாடே இது!

வெருவு மாலமும் பிறையும் வெவ் விடையவற்கீந்து
தருவும் வேறுள தகைமையும் சதமகற் கருளி
மருவு தொல் பெரு வளங்களும் வேறுற வழங்கித்
திருவுமாரமும் அணிந்தனன் சீதர மூர்த்தி.’

————————————————————————–

கொம்பு போல் சீதை பொருட்டு, இலங்கை நகர்
அம்பு எரி உய்த்தவர் தாள் இணை மேல் அணி
வம்பு அவிழ் தண் அம் துழாய் மலர்க்கே இவள்
நம்புமால்; நான் இதற்கு என் செய்கேன் நங்கைமீர்?–4-2-8-

அவன் ஏக தார வ்ரதன் நானும் ஸ்ரீ ஜனக ராஜன் திரு மகள் -தாராயினும் –மண்ணாயினும் வேண்டும் –
கொம்பு போல் சீதை பொருட்டு, இலங்கை நகர்-வஞ்சிக் கொடி அபிரூபையாய் –
அயோ நிஜை-கர்ப்ப சம்பந்தம் இல்லாமல் –
அம்பு எரி உய்த்தவர் தாள் இணை மேல் அணி-சராக்னி -பிரவேசிப்பித்தவர் –
முன்பு நுழைய மாட்டார் -அக்னிக்கு துணையாக சரம் -திருவடிகளின் மேல் –
அணிவித்த -ப்ரஹ்மாதிகள் பவான் நாராயணோ தேவ ஸ்துதித்த
வம்பு அவிழ் தண் அம் துழாய் மலர்க்கே இவள்-அபி நவ பரிமள விகாசியாய் -அழகிய குளிர்ந்த
நம்புமால்; நான் இதற்கு என் செய்கேன் நங்கைமீர்?-விரும்பி -பூர்ணையாய் உள்ளீர்களே
இவளும் உங்கள் போலே ஆக என்ன செய்வேன் –

பெண்களே! என் மகளாகிய இவள், பூங்கொம்பு போன்ற சீதாபிராட்டி காரணமாக இலங்கை நகரிலே நெருப்பைச் சொரிகின்ற
அம்பைச் செலுத்திய ஸ்ரீராமபிரானுடைய இரண்டு திருவடிகளின் மேலே அணிந்த வாசனையோடு மலர்கின்ற குளிர்ந்த அழகிய
திருத்துழாய் மலரையே விரும்பாநின்றாள்; இதற்கு நான் என்ன செய்வேன்?
‘நங்கைமீர்! இவள் அம்பு எரி உய்த்தவர் தாள் இணை மேல் அணி துழாய் மலர்க்கே நம்பும்;
என் செய்கேன்?’ எனக்கூட்டுக.
அம்பு எரி -ஆக்நேய அஸ்திரமுமாம். நம்புதல் – விரும்புதல்;
‘நம்பும் மேவும் நசையா கும்மே,’ என்பது தொல்காப்பியம் (சொல்).

‘ஸ்ரீஜனகராஜன் திருமகளுடைய விரோதியைப் போக்கின சக்கரவர்த்தி திருமகன் திருவடிகளில்
சாத்தின திருத்துழாயை ஆசைப்படா நின்றாள்’ என்கிறாள்.

கொம்பு போல் –
‘வஞ்சிக்கொம்பு போலே’ என்னுதல்;
‘அநந்யா – வேறுபட்டவள் ஆகேன்’ என்கிறபடியே, ஒரு பொருளில் ஒரு பகுதியான உறுப்பு’ என்னுதல்.
ராகவேண் அஹம் –பாஸ்கரேண பிரபை -ஏக வஸ்துவில் ஏக தேசம் –
சீதை பொருட்டு –
சீதைக்காக.
இலங்கை நகர் –
சூரிய சந்திரர்கள் சஞ்சரிப்பதற்குப் பயப்படும் ஊர்.
அம்பு எரி உய்த்தவர் –
அம்பாகிய நெருப்பைப் புகச் செய்தவர்.
சக்கரவர்த்தி திருமகன் இதனைக் கை தொட்டு சிக்ஷித்துக் குணவான் ஆக்கிப் பின்பே அன்றோ போகவிட்டது?
பலவான் ஆக்கி என்றபடி -நாணுக்கும் குணவான் -நாணை ஏற்றி அனுப்பினார் என்றபடி –
ஆகையாலே, கேவலாக்நி புகுதற்குக் கூசும் ஊரிலே தன் வாய் வலியாலே புக்கதாயிற்று.-
சரத்தின் பலம் -வாய் வலி –
இப்படி, தான், முதுகிட்டாரையுங்கூட, குணவான்கள் ஆக்கும்படி ஏக்கற்றவருடைய திருவடிகளில் சார்த்தப்பட்ட.

ஏ- வரும் வெஞ்சிலை -ஏ – க்கற்றவர் -சக்தி கொடுத்து போக்க வைத்தவர்
ஏ -அம்பு -கை தொடுகை -பிடிக்கையும் அடிக்கையும்
சிஷை -அர்ஜவம் நியமிக்கி -நாணில் ஏத்தி
முதுகிடவை முதுகிலே அம்புறா தூணி வைப்பதும் -சொன்ன வார்த்தை கேட்கால் முது காட்டி ஓடினார் –

வம்பு அவிழ் தண் அம்துழாய் மலர்க்கே –
‘வாசனையையுடைத்தான மலர்’ என்னுதல்;
‘எப்பொழுதும் புதியதாகவே இருக்கும் மலர்’ என்னுதல்.
அவன் சக்கரவர்த்தி திருமகனாய் இருக்கச் செய்தேயும். பிரகிருதி சம்பந்தம் இல்லாத திவ்விய திருமேனியை
உடையவனாய் இருப்பது போன்று, அவன் ஏதேனும் ஒன்றாலே வளையம் வைத்தாலும்
இவர்களுக்குத் தோற்றுவது திருத்துழாயாயே ஆதலின்,
‘இலங்கை நகர் அம்பு எரி உய்த்தவர் தாள்இணைமேல் அணி துழாய் மலர்’ என்கிறாள்.
நம்புமால் –
அதனை எப்போதும் விரும்பாநின்றாள்.
நான் இதற்கு என் செய்கேன் –
ஸ்ரீகிருஷ்ணனைப் போலே ஊர்ப் பொது அன்றிக்கே, ஏகதார விரதனானவன்
திருவடிகளில் திருத்துழாயை நான் எங்கே தேடும்படி?
நங்கைமீர் –
‘நீங்கள் எல்லாவற்றாலும் நிறைந்தவர்களாய் இருக்க, இவள் இப்படிப் படுகிறபடி கண்டீர்கள் அன்றோ?
இதற்கு ஒரு பரிகாரம் சொல்ல வல்லீர்களோ?’ என்கிறாள்.

————————————————————————————————

நங்கைமீர்! நீரும் ஓர் பெண் பெற்று நல்கினீர்;
எங்ஙனே சொல்லுகேன் யான் பெற்ற ஏழையை?
சங்கு என்னும்; சக்கரம் என்னும்; துழாய் என்னும்;
இங்ஙனே சொல்லும் இராப்பகல் என் செய்கேன்?–4-2-9-

நிதான பாசுரம் -சங்கு சக்கரம் துழாய் இவற்றையே சொல்லிக் கொண்டு –
சங்கு -சொன்னாள்–தாய் அனுவாதம் –தேறாமல்-இவற்றையே மாறி மாறி சொல்லிக் கொண்டு –
ஒவ் ஒன்றுக்கும் 48 நாள் இடை வெளி
-ஒரு மண்டலம் நான் பார்த்துக் கொண்டே இருந்தேன் இவளை -11 பாட்டு வரும் வரை
முளைக்கதிர் -கிளி சொல்லிச் சொல்லி -அளப்பரிய ஆரமுதை –அந்தணர் தம் சிந்தையானை –கண் முழிக்க -வளர்த்ததனால்
-பயன் பெற்றேன் -வருக என்று கை கூப்பி -கிட்டே தான் இருந்தும் ஒரு அடி பிரியாமல் இருக்க வேண்டும்
பெருமாள் சீதைக்கு நடுவில் உள்ள கடல் போல இந்த பிரிவு இருந்ததே -எங்ஙனே சொல்லுகேன் யான் பெற்ற ஏழையை?
இட்ட கால் இட்ட கைகளாக இருந்தாள்-இராப்பகல் –
இன்றியமையாத அடையாளம் -6-1- திரு வண் வண்டூர் – சொல்லி விடுவாள் –
நங்கைமீர்! நீரும் ஓர் பெண் பெற்று நல்கினீர்;-ஒரு பெண்ணை பற்றி ஸ்நேஹித்து வளர்த்தீர்களே
கிடைக்காத இடம் சபலம் ஆசை படும் -என்ன சொல்கிறாள்
எங்ஙனே சொல்லுகேன் யான் பெற்ற ஏழையை?-சொல்ல முடியாதே -சொல்லு நிர்பந்திக்க
சங்கு என்னும்; சக்கரம் என்னும்; துழாய் என்னும்;இங்ஙனே சொல்லும்-இப்படியே –
இரவில் கண் முழித்து பார்த்தாயா
இராப்பகல் என் செய்கேன்-அஹோராத்ரி விபாகம் இல்லாமல்
இப்படி தனித்தனியே சொல்லிக் கொண்டு -கண் துயில் அறியாள்
என் செய்கேன் -ஸ்வரூபம் பார்த்து இவள் வாய் மூட பண்ணவோ –
தத் தஸ்ய சத்ருசம் பவேத்
ரஷகன் ஸ்வரூபம் பார்த்தாலும் இவள் ஸ்வரூபம் பார்த்தால்
தாத் கால அசாதாரண சிஹ்னம் நன்றாக சொல்லும் படி பலத்தை உண்டாக்கவோ -பக்தி உண்டு பலம் இல்லை
அவை தன்னை இப்போது சந்நிஹிதம் ஆக்கவோ
பிரேம தசைக்கு அல்லாத ஆழ்வார்கள் தசையும் ஒவ்வாது -நீரும் பெண் பெற்றீர் -தாத்பர்யம்

பெண்மணிகாள்! நீங்களும் ஒவ்வொரு பெண்ணைப் பெற்று விரும்பி வளர்க்கிறீர்கள்;
யான் பெற்ற பெண்ணினைக் குறித்து
எந்த வகையில் பேசுவேன்? ‘சங்கு’ என்கிறாள்; ‘சக்கரம்’ என்கிறாள்; ‘துழாய்’ என்கிறாள்;
இரவும் பகலும் இங்ஙனமே சொல்லுகின்றாள்; இதற்கு என் செய்வேன்?
‘இராப்பகல் இங்ஙனே சொல்லும்; என் செய்கேன்?’ என மாறுக.
‘என்னும், சொல்லும்’ என்பன, செய்யும் என் முற்றுகள்.

‘அவனுடைய ஆயுதம் முதலானவைகளைக் காண வேண்டும்’ என்று சொல்லப் புக்கு,
முடியச் சொல்ல மாட்டாதே நோவு படா நின்றாள்,’ என்கிறாள்.

நங்கைமீர் –
உங்கள் நிறைவு, இவள் படுகிற பாடு நான் சொல்லக் கேட்டு அறிய வேண்டி இருக்கிறது அன்றோ உங்களுக்கு?
நீரும் ஓர் பெண் பெற்று நல்கினீர் –
நீங்களும் ஒரு பெண் பிள்ளையைப் பெற்று வளர்க்கின்றீர்கள் அன்றோ?
நல்குகை – வளர்க்கை-ஸ்நேஹிக்கை-ஸ்நேஹத்துடன் வளர்க்கை-
இவள் பட்டது பட்டார் உளரோ?
‘எங்கள் பெண் பிள்ளைகளைக் காட்டிலும் உன் பெண் பிள்ளைக்கு வாசி என்?’ என்னில்,
எங்கனே சொல்லுகேன்-
இவள் படி பேச்சுக்கு நிலம் ஆகில் அன்றோ நான் சொல்லுவது? என்றது,,
படி எடுத்து உரைக்கும் படி அல்லன் பெருமாள் -திருவடி
‘மனத்தாலுங் கூட நினைக்க முடியாமல் வேத வாக்குகள் அந்த ஆனந்த குணத்தினின்றும் திரும்புகின்றன,’ என்கிற
பகவானுடைய குணங்களை நிலமாகப் பேசிலும், நற்குணக் கடலிலே
ஆடுகின்றவர்களுடைய (ஆழ்வார்களுடைய) படி பேச்சுக்கு நிலம் அன்றே?’ என்றபடி.
‘பகவானுடைய குணங்களில் ஈடுபட்டவனாய் எல்லாராலும் எப்பொழுதும் பார்க்கத் தகுந்தவனாய் இருப்பான்’ என்கிறபடியே,
கண்டிருக்கும் அத்தனை போக்கிப் பேச முடியாது.
‘என் ஒருவனிடத்திலேயே பத்தியுடைய ஞான சிரேஷ்டன் ஆகிறான்;
அத்தகைய ஞானிக்கு நான் மிகவும் பிரியமுள்ளவன்;
அவனும் எனக்குப் பிரியமுள்ளவன்,’ என்பதே அன்றோ அவன் வார்த்தையும்?
தேசத்தாலும் காலத்தாலும் கைகழிந்த பொருள்களை அந்த அந்தத் தேசத்தோடும் காலத்தோடும்
கூடினதாகப் பெறவேண்டும் என்கிற
இவள் படி என்னாலே பேசலாய் இருந்ததோ?
தர்ஷ்டவ்யா மட்டும் -சர்வ தேஹம் தேகம் கொண்ட எல்லாரும் இந்த பக்தனைப் பார்க்க வேண்டும்
-வா ஸூ தேவ சர்வம் – தேஹம் எடுத்து வந்த –
அனைவருக்கும் -அவனுக்கும் கூட பார்க்க வேண்டும் படியே இவர்கள் படி
-த்ரஷ்டவ்ய ஏவ -ந வாச்யஸ்- வாசாம் மகோசரம் –
அத்யர்த்தம் பிரியம் -ஞானிகளுக்கு பிரியமானவன் -அவர்கள் காட்டும் பிரியத்தை
என்னால் காட்ட முடியவில்லையே –ஏழாம் அத்யாய ஸ்லோகம்
ஆயினும், எங்களைக்காட்டிலும் நீ அண்மையில் இருப்பவள் அன்றோ?
தெரிந்த மட்டு அதனைச் சொல்லிக் காணாய்’ என்ன, கைமேலே சொல்லுகிறாள் :–கேட்ட உடனே சொன்னாள்

சங்கு என்னும் –
மலையை எடுத்தாற்போலே பெரு வருத்தத்தோடே சங்கு என்னும். அது பொறுத்தவாறே,
சக்கரம் என்னும் –
மீளவும் மாட்டுகின்றிலள், சொல்லவும் மாட்டுகின்றிலள். இரண்டற்கும் நடுவே கிடக்கிற மாலையை நினைத்து,
துழாய் என்னும் –
கண் மலங்க மலங்க விளித்து நடுவில் உள்ள திருத் துழாய் மாலை கண்டு துழாய் என்பாள்
சூர்ய சந்திரர் போலே சக்கர சங்கு பார்த்து இராப்பகல் –
‘சங்கு சக்கரங்கள்’ என்று கை கூப்பும் -என்றும்,
‘கூரார் ஆழி வெண் சங்கு’ என்றும் சொல்ல மாட்டுகின்றிலள்.
ஆபத்து மிக்கவாறே ஒருத்தி, ‘சங்க சக்ர கதா பாணே – சங்கையும் சக்கரத்தையும் கதையையும்
கைகளில் தரித்திருப்பவனே!’ என்றாள் அன்றோ?
மற்றவரால் ஆபத்து வந்தால் இப்படி முழுக்க கூப்பிடலாம் -இவனாலே வந்ததால் இவளால்
முழுக்க சொல்ல முடியாமல் ஒவ் ஒன்றைச் சொல்லி சோர்ந்து போகிறாள்
விரோதி நிவர்த்தகங்கள் -சங்கு சக்கரம் சொல்வது பிராப்தம் -அங்கு திரௌபதிக்கு ஆபத்து
ஒரு கா புருஷனால் இங்கு இவளுக்கு புருஷோத்தமனால்
இங்ஙனே சொல்லும் -சொல்லத் தொடங்குவது, சொல்லித் தலைக் கட்டமாட்டாது ஒழிவதாய்ப் படாநின்றாள்.
‘இப்படிச் சொல்லுவது எத்தனை போது?’ என்னில்,
இராப் பகல் –
எல்லாக்காலமும்.
என்செய்கேன் –
இவளைத் தொடங்கினதைச் சொல்லித் தலைக்கட்டப் பண்ணவோ?
பெண்மையைப் பார்த்து மீளும்படி பண்ணவோ?
என் செய்கோ?

——————————————————————

என் செய்கேன்? என்னுடைப் பேதை,என் கோமளம்,
என் சொல்லும் என் வசமும் அல்லள்; நங்கைமீர்!
மின்செய் பூண் மார்பினன் கண்ணன் கழல் துழாய்
பொன்செய் பூண் மென்முலைக்கு என்று மெலியுமே.–4-2-10-

எனக்கு விதேயை இல்லாமல் ஸ்ரீ கிருஷ்ணன் உடைய ஆபரண சோபையில் அகப்பட்டு
என் செய்கேன்? என்னுடைப் பேதை,என் கோமளம்,-ஹிதம் கேட்கும் பருவம் இல்லாத பேதை –
ஹிதம் சொல்லப் பொறுக்க மாட்டாத மார்த்வம் -உடையவள்
என் சொல்லும் என் வசமும் அல்லள்; நங்கைமீர்!-என் சொல்லிலும் வசத்திலும் நினைவிலும்
இவள் இல்லையே -இவள் அவஸ்தை இருந்த படி
மின்செய் பூண் மார்பினன் கண்ணன் கழல் துழாய்-திரு ஆபரணம் தரித்த -ஸ்ரீ கௌஸ்துபாதி –
ஒளி விடும் திரு மார்பினன்
அவன் திருவடி திருத் துழாய்
பொன்செய் பூண் மென்முலைக்கு என்று மெலியுமே.-
விரஹத்தால் -பசலை -வைவரண்யமே ஆபரணமாக கொண்ட மார்பு
விஸ்லேஷ அசஹமாய் துவண்ட -கிரிசை சரீரை யாகா நின்றாள்

நங்கைமீர்! என்னுடைய பேதை, என்னுடைய கோமளம் என் சொல்லிலும் வருகின்றிலள்; என் வசமும் வருகின்றிலள்;
என் செய்வேன்? பிரகாசத்தைச் செய்கின்ற ஆபரணங்கள் பொருந்திய மார்பை யுடையவனான கண்ணபிரானுடைய திருவடிகளில்
அணிந்த திருத்துழாய், பொன்னாற் செய்த ஆபரணங்களையுடைய மெல்லிய முலைகளுக்கு அலங்காரமாக வேண்டும் என்று மெலியா நின்றாள்.
‘கோமளம் கண்ணன் கழல் துழாய் மென்முலைக்கு என்று மெலியும்;
என் சொல்லும் என் வசமும் அல்லள்; என்செய்கேன்?’ எனக்கூட்டுக.

‘உன்மகள் நீ இட்ட வழக்கு அன்றோ? அவளுக்கு நலத்தைச் சொல்லி மீட்கத் தட்டு என் உனக்கு?’ என்றவர்களைக் குறித்து,
‘நான் சொல்லிற்றுக் கேளாதே அவனையே ஆசைப்பட்டு மிகவும் மயங்கா நின்றாள்,’ என்கிறாள்.

என்செய்கேன் –
இவள் நிலை இருந்தபடியால் இவளைக் கிடையாததாய் இருந்தது; நான் எங்ஙனே வாழக்கடவேன்?
என்னுடைப் பேதை –
நான் சொல்லும் நல்வார்த்தைகளைக் கேட்கும் பருவம் அல்லள்.
என் கோமளம் –
‘நான் சொன்ன நல் வார்த்தையைக் கேட்டிலள்’ என்று கைவிட ஒண்ணாதபடி வியசனத்தைப் பொறுக்க முடியாத மென்மையையுடையவள்.
என் சொல்லும் அல்லள் என் வசமும் அல்லள் –
நான் சொன்ன நல்வார்த்தைகளைக் கேட்பதும் செய்யாள்; நான் நலம் சொல்லலாம்படி இருப்பதும் செய்யாள்.
நங்கைமீர் –
இதில் நீங்கள் அறியாதன இல்லை அன்றே?

மின் செய் பூண் மார்பினன் கண்ணன் கழல் துழாய் –
மின்னுகின்ற ஸ்ரீ கௌஸ்துபத்தை மார்விலேயுடைய ஸ்ரீ கிருஷ்ணன் திருவடிகளில் திருத்துழாய்.
பொன் செய் பூண் மென்முலைக்கு –
பொன்னாலே செய்த ஆபரணங்களையுடைத்தாய் விரக தாபத்தைப் பொறுக்கும் ஆற்றல் இல்லாத முலைக்கு.
அன்றிக்கே,
பொன்செய்திருக்கை – பசலை பூத்திருக்கை’ என்னுதல்; ‘மென்முலை பொன் பயந்திருந்த’ என்னக் கடவது அன்றோ?
‘அந்தப் பசலையினையே ஆபரணமாகவுடைய முலை’ என்றபடி. ‘நிந்திக்கப் படாதவள்’ என்னுமாறு போலே.
அவன் புருஷத் தன்மைக்கு இலக்கணமான கௌஸ்துபம் போலே ஆயிற்று, பெண் தன்மைக்கும் பசலை;
ஆதலின், ‘மின் செய் பூண் மார்பினன் – பொன் செய்பூண் முலை’ என்று விசேடித்துக் கூறுகின்றாள்.
காதலனைப் பிரிந்ததால் உளதாய விரகத்தில் இப்படிப் பொன் பயக்கையே அன்றோ பெண் தன்மைக்கு இலக்கணம்?
தனம் படைத்தாரில் இவளைப் போன்று தனம் படைத்தார் உளரோ?
‘தன் காதலனைப் பிரியமாட்டாமையாலே பொன் இட்டுக்கொள்ளுகிறது’ என்பாள், ‘மென்முலை’ என்கிறாள்.
மெலியும் –
‘மென்முலைக்கு வேண்டும்’ என்று சொல்லப்புக்கு மெலிவோடே தலைக்கட்டும்.

——————————————————————

மெலியும் நோய் தீர்க்கும் நம் கண்ணன் கழல்கள் மேல்
மலிபுகழ் வண் குருகூர்ச் சடகோபன் சொல்
ஒலிபுகழ் ஆயிரத்து இப்பத்தும் வல்லவர்
மலிபுகழ் வானவர்க்கு ஆவர் நற்கோவையே.–4-2-11-

பலன் சொல்லி -சாது கோட்டியுள் ஆவாரே
மெலியும் நோய் தீர்க்கும் நம் கண்ணன் கழல்கள் மேல்-விரஹ விதையை போக்கும் -நம் கண்ணன்
சேவை சாதித்த பின் தாயார் அனைவரையும் மறந்து
மலி புகழ் வண் குருகூர்ச் சடகோபன் சொல்-அபி நிவிஷ்டர் என்னும் படி -காலாந்தர விஷயத்திலும் ஆசைப்படும் புகழ் உண்டே
ஸ்லாக்கியமான -திருக் குருகூர்
ஒலி புகழ் ஆயிரத்து இப்பத்தும் வல்லவர்-பாவ யுக்தமாக அப்யசிக்க வல்லவர்கள்
மலி புகழ் வானவர்க்கு ஆவர் நற் கோவையே. -நித்ய ஸூரிகளுக்கு -கோவையாகி -இருப்பார் –
கைங்கர்யம் இல்லாமல் இருக்க பிரசங்கமே இல்லை அதிசங்கை பண்ணி துன்பப்படுவார்களே
விடாமல் அவிச்சின்னமாய் அபி வ்ருத்தமான -நித்ய சூரிகள்

பிரிவால் மெலிகின்ற விரக நோயினைத் தீர்க்கின்ற நம் கண்ணபிரானுடைய திருவடிகளின் மேல் மிக்க புகழையுடைய
வளவிய திருக்குருகூரில் அவதரித்த ஸ்ரீசடகோபரால் அருளிச் செய்யப்பட்ட ஒலி புகழ் ஆயிரம் திருப்பாசுரங்களில்
இந்தப் பத்துத் திருப்பாசுரங்களையும் வல்லவர்கள் மிக்க புகழையுடைய நித்திய சூரிகளோடு ஒரு கோவை ஆவார்கள்.
ஒலி புகழ் – பேசப்படும் புகழ். ‘வல்லவர் நற்கோவை ஆவர்,’ என்க. கோவை ஆதல் – சேர்ந்தவர் ஆதல்.

‘இத்திருவாய்மொழியைக் கற்க வல்லவர் நித்தியசூரிகளோடு ஒத்தவர் ஆவர்,’ என்கிறார்.

மெலியும் நோய் தீர்க்கும் –
‘மெலியும்’ என்று தாயார் கை வாங்கினாள்;
‘பெற்றார் பெற்றொழிந்தார்’ என்கிற பாசுரப்படியே
‘பெற்றார் பெற்றொழிந்தார் பின்னும் நின்று அடியேனுக்கு உற்றானாய் வளர்த்து என்னுயிராகி நின்றானை
முற்றா மாமதி கோள் விடுத்தானை எம்மானை எத்தால் யான் மறக்கேன்? இதுசொல் என் ஏழைநெஞ்சே!’–பெரிய திருமொழி. 8. 9 : 7.

உடையவன் – சுவாமி.
பின்னையும் உடையவன் கைவிடானே? ஆதலின், ‘மெலியும் நோய் தீர்க்கும்’ என்கிறது.

நம் கண்ணன் –
இப்படிப்பட்ட ஆபத்துகளிலே வந்து முகங்காட்டுவான் என்னும் பிரமாண பிரசித்தியைப்பற்ற, ‘நம் கண்ணன்’ என்கிறது.
‘-சாஷாத் மன்மத மன்மத -கண்ணபிரான் அந்தக் கோபஸ்திரீகளுக்கு மத்தியில் தோன்றினான்,’ என்பது ஸ்ரீபாகவதம்.
கண்ணன் கழல்கள்மேல் –
இப்படிச் சரீரம் மெலிவதற்கு அடியான விரக வியசனத்தைப் போக்கும் அடியார்கட்குச் சுலபனான ஸ்ரீகிருஷ்ணன் திருவடிகள் விஷயமாக.
மலி புகழ் –
‘தேச காலங்களால் கை கழிந்த அவன் படிகளையும் இப்போதே பெற வேண்டும்’ என்று விடாய்க்கும்படி
பகவத் விஷயத்திலே விடாய்க்கையால் வந்த புகழே அன்றோ? ஆதலின், ‘மலிபுகழ்’ என்கிறது.
வண் குருகூர்ச் சடகோபன் சொல் –
இப்படிப்பட்ட புகழையுடைய ஆழ்வார் அருளிச்செய்த.
ஒலி புகழ் ஆயிரத்து இப்பத்தும் வல்லவர் –
இப்படி இவரை விடாய்ப்பித்தவன் அவ்விடாய் போன இடம் தெரியாதபடி நீக்க வல்லன் என்கிற கல்யாணகுணங்களை
விளக்கமாகச் சொல்லுகிற இந்தப் பத்தையும் கற்க வல்லவர்கள்.
மலிபுகழ் வானவர்க்கு நற்கோவை ஆவர் –
வானவரோடு நல்ல சேர்த்தி ஆவர். ‘மலி புகழ் வானவர்’ என்றதனால், இவ்வாழ்வாரோடு ஒப்பர்கள் ஆயிற்று அவர்களும்.
பகவானுடைய பிரிவால் விடாய்க்கைக்கு இடம் இல்லாத சமுசாரத்திலிருந்து இவர் விடாய்க்க வல்லவர் ஆனாற் போலே ஆயிற்று,
பகவானோடு நித்திய அனுபவம் பண்ணா நிற்கச் செய்தே விடாய்க்க வல்லராம்படியும்.-
அசம்பாவித விடாய்-இருவருக்கும் சாம்யம் –

——————————————————————————————–

திராவிட உபநிஷத் சங்கதி -ஸ்ரீ வாதி அழகிய மணவாள ஜீயர் –

தம் புருஷார்த்தம் –
இதரார்த்த ருசே ஹே நிவர்த்யா -வேறே ஐஸ்வர்யம் கைவல்யங்களை நிவர்த்தி பூர்வகமாக
முனி முமோஹா-
ஸ்திரீ பாவனம் சமதிகம்ய -அடைந்து –
சாந்த்ராஸ் ஸ்ப்ருஹா –திருஷ்ணை -காதல் வளர்ந்து
சமய தேச விதூர ஹந்த -ஈப்சுஹு -காலாந்தர தேசாந்தர –
ததா அனவாப்தி த்விதீயே -ஆசைப்பட்ட படி கிடைக்காமல் பெண் பாவனை

ஆர்யத்வம் -கல்யாண குணம் -நித்ய ஸூ ரிகள் போல அனுபவம் –
பரதன் ராமனைக் கூப்பிட்டான் ஆர்யா என்று -கோவிந்தராஜன் வியாக்யானம் –
ஆர்யா -யார் உடைய குணம் வெகு தூரம் அப்பால் நிற்கும் –நம்மையும் அவனைப் போல் ஆக்கும் —
ஞானம் பலம் சக்தி தேஜஸ் நம்மை அவன் இடம் கூட்டிச் செல்பவன்

—————————————————————-

திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி -ஸ்ரீ தேசிகன் –

அழகாக பிரித்து -பத்து வித திருத் துழாய் -சிறப்பை கிரஹித்து -பத்து விபவம் எடுத்து அருளிச் செய்த ஸ்லோகம் –

சைத்யாத் சௌகந்த்ய பூம்னா
சங்கதச்ய -யோகாத் –திருத் துழாய் விசேஷணங்கள்
விபவ
வடதள சயநாத் அர்ஹனீய-அபதாநாத்
கிருஷ்ண மூர்த்தி சடாரி
உயர் திண்–நோற்ற நாலும்-வரிசையாக வருவதால் –
வேதாதிகளில் — பௌருஷம்-மானவ -கீதா- வைஷ்ணவம் -போலே -அருளிச் செயலில் இது –
தர்ம சாஸ்திரம் மகா பாரதம் புராணங்கள் -சொல்லாமல் –
மரபுகள் உண்டே
சைத்யாத் -குளிர்த்தி
சௌகந்த பூம்னா -பரிமள பாஹூள்யம்
ருசி -ருசிரதச்வ –
காந்தி -செம் பொன் துழாய்
போஷநாத் -அடர்ந்து பைம் பொன் துழாய்
ஆபி ரூப்யா-அழகான
சந்தர்ப்பாத் -தொடர்ச்சியாக
புஷ்ப சங்காத் -கதம்ப மாலை போலே
மஹித துளசி காமாலயா-சிலாக்யமான
சங்க தஸ்ய சக்கர தீச்ய யோகாத் -சங்கம் சக்ரம் நடுவில் உள்ள திருத் துழாய் -இதற்கு
வட தள சயநாத் –ஆதி சொல்லி ஒன்பதையும்-
ராச க்ரீடன –
த்ரிவிக்ரம க்ரமண-மூன்றாவது பாசுரம் -மூன்று திருவடிகள் நினைவு கொள்ள -ஓங்கி உலகளந்த போலே
பரமபத விகரன
வ்ருஷ கண மர்த்தன
மேதினி சமுத்தரண- ஸ்ரீ வராஹ
அம்ருத மதன
லங்கா தகன -அபதானங்கள்
சம்பன்ன -அனேக போக்கிய –

————————————–

திருவாய் மொழி நூற்றந்தாதி -பாசுரம் 32-பிள்ளை லோகம் ஜீயர் வியாக்யானம்–

பாலரைப் போல் சீழ்கிப் பரனளவில் வேட்கையால்
காலத்தால் தேசத்தால் கை கழிந்த -சால
அரிதான போகத்தில் ஆசை யுற்று நைந்தான்
குருகூரில் வந்துதித்த கோ —-32-

கோ -பிரபன்னராட்-
போகம் -கைங்கர்ய அனுபவத்தில்

————————————–
அவதாரிகை –

இதில்
தேச கால விப்ரக்ருஷ்டமான அவன் படிகளை
தம் தாம் தேச கால விசிஷ்டமாம் படி
அனுபவிக்க வேண்டும் என்று ஆதரித்த
பாசுரத்தை அனுவதித்து
அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில் –
மூன்று களையும் பறித்து சங்காயுமும் வாரின பயிர்
சத சாகமாகப் பணைக்குமா போலே –
வீடுமின் முற்றவும்
சொன்னால் விரோதம் –
ஒரு நாயகம் –
என்ற மூன்று திருவாய் மொழிகளிலே
சம்சாரிகளைக் குறித்து உபதேசித்த இடத்தில்
அவ் உபதேசம் அவர்கள் திருந்துகைக்கு உடல் அன்றிக்கே
தமக்கு
ரசாந்தரங்களாலே அபி பூதனாய்க் கிடந்த
முடியானேயில் விடாய்க்கு உத்தம்பகமாய்
பக்தி சத சாகமாகப் பணைக்க
அத்தாலே தேச கால விபக்ரஷ்டமான அவன் படிகளை
இப்போதே கண்டு அனுபவிக்க வேண்டும் என்னும் அபேஷை பிறந்து
அபேஷித்த படியே அனுபவிக்கப் பெறாமையாலே
தாம் நோவு பட்டு சொல்லுகிற படியை
அந்யாப தேசத்தாலே அருளிச் செய்த
பாலனாய் ஏழு உலகின் அர்த்தத்தை அருளிச் செய்கிறார்
பாலரைப் போலே -இத்யாதியாலே -என்கை –

———————————————————————
வியாக்யானம்–

பாலரைப் போல் சீழ்கிப் –
பிராப்த அப்ராப்த விவேகம்
பண்ண அறியாத பாலர்
தேசத்தாலே விப்ரக்ருஷ்டமான அம்புலி யம்மானையும்
காலத்தாலே கை கழிந்து போன பலாதி வஸ்துக்களையும்
அப்போதே கொடு வந்து தர வேணும் -என்று
பாலச்ய ருதி தம்பலம் -என்னும்படி ரோதனத்தை முன்னிட்டு
அபேஷிக்குமா போலே
இவரும் தேச கால விப்ரக்ருஷ்டமான
பர அவஸ்தய தத் அனுபவங்களை
அப்போதே பெற வேணும் என்று
அழுவன் தொழுவன் -என்னும்படி
பாலர் செய்யுமத்தைச் செய்து
அபீ இதாநீம் ச காலச்யாத் வநாத்பிரத்யா கதம்புன -என்று இறே
ஆசை யுடையார் பவிஷ்ய காலத்தை சம காலமாக அபேஷித்து இருப்பது
அப்படியே இறே இவர் பூத காலத்தில் படிகளை அபேஷிக்கிறார் –

பரனளவில் வேட்கையால் –
சர்வ ஸ்மாத் பரன் இடத்தில்
பர பக்தியாலே –

பரன் -காலத்தால் தேசத்தால் கை கழிந்த –
பாதங்கள் மேல் அணி பைம் பொற்றுழாய் என்றே யோதுமால் எய்தினாள் -என்றத்தை நினைக்கிறது
தேச விபக்ருஷ்டமான பர வ்யூஹங்களும்
கால விபக்ருஷ்டமான விபவமும்
பர விஷய பக்தி ஏகதேசமாய்
ஆலிலை அன்னவசம் செய்யும் அண்ணலார் தாளினை மேல்
தண்ணம் துழாய் என்றே மாலுமால் -என்று துடங்கி
கண்ணன் கழல் துழாய் பொன் செய் பூண் மென் முலைக்கு என்று மெலியும் -என்று
விபவ பிராவண்யம் இறே விஞ்சி அருளிச் செய்தது –
அவை ஆவன
குரவை பிணைந்தவர் நல்லடி -என்றும்
தேவர்கள் மா முனிவர் இறைஞ்ச நின்ற சேவடி -என்றும்
குடக் கூத்தனார் தாளிணை -என்றும்
அகலிடம் கீண்டவர் பாதங்கள் -என்றும்
திருமாதினைத் தடம் கொள் தார் மார்பினில் வைத்தவர் தாள் -என்றும்
இலங்கை நகரம் பரி யுய்தவர் தாளிணை -என்றும்
கண்ணன் கழல் -என்றும்
இப்படி விபவத்தை அடி விடாமல் இருக்கிற படி -என்கை
ந்யக்ரோத சாயியையும் -ஆலிலை / பீயூஷ ஹாரியையும்–பீயூஷ -அமுதில் வரும் -பெண்ணமுதம்
நாயக்ரோத சாயீ பகவான் பீயூஷா ஹரணச்ததா -என்று
விபவங்களோடே இறே சஹ படித்தது-
இங்கேயும்
மடந்தையை வண் கமலத் திரு மாதினை தடம் கொள் தார் மார்பினில் வைத்தவர் -என்றும்
விண்ணவர் அமுது உண்ண அமுதினில் வரும் பெண் அமுதை
ஸ்வீகரித்த படி சொல்லிற்று –

சால அரிதான போகத்தில் ஆசை யுற்று நைந்தான் –
இப்படி
தேச காலங்களால் கை கழிந்து இருக்கிறது
தத் கால வர்திகளுக்கும் தத்ரஸ்தராய் ஆனவர்களுக்குமே இறே அனுபாவ்யமாய் இருப்பது
என்று அறியாமல் –
அபி நிவேச அதிசயம் மாறுபாடுருவும்படி யாவகாடமாய்-அவகாடம் -ஆழ்ந்து அனுபவம் –
அத்தை அப்போதே பெறாமையாலே
சிதிலர் ஆனால் –

இதுக்கடி
குருகூரில் வந்துதித்த கோ –
ஆகையாலே
திரு அயோத்தியில் பிறப்பு ராம பக்தியை ஜனிப்பிக்குமா போலே
திரு நகரியில் பிறப்பும் பராபி நிவேசத்தைப் பிறப்பிக்கும் இறே

கோ
ராஜா
ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு எல்லாம் ராஜா என்றபடி –
இவ்விடம் அராஜாகமாய் ஆகாமைக்கு ஆயிற்று
ஆழ்வார் அங்கு நின்றும் போந்து ஆவிர்பவித்தது –

————————————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ. வே.வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

பகவத் விஷயம் காலஷேபம் -88- திருவாய்மொழி – -4-2-1….4-2-5–ஸ்ரீ உ. வே. வேளுக்குடி ஸ்வாமிகள்-

May 28, 2016

இராம விரகத்தில் திரு வயோத்தியில் உள்ளார் கூப்பிட்டாற்போலே, தாமும் தம்முடைய உறுப்புகளுமாய்ப்
பெருவிடாய்ப்பட்டுக் கூப்பிட்டார், ‘முடியானே’ -3-8-என்ற திருவாய்மொழியில்;
இக்கூப்பீட்டை அல்லாதார் மிகச் சிறிய பிரயோஜனங்களுக்காகப் புறம்பே கூப்பிடுகிறபடியைக் கண்டு, ‘இது இவ்விஷயத்திலே
ஆகப் பெற்றது இல்லையே!’ என்று நொந்து, ‘நாம் முந்துற முன்னம் இவ்விஷயத்திலே கூப்பிடப்பெற்றோம் அன்றோ?’ என்று உகந்தார்,
‘சொன்னால் விரோதம்’3-9- என்ற திருவாய்மொழியில்;
‘அவ்வளவேயோ? பகவானைத் துதிப்பதற்குத் தகுந்த உறுப்புகளை உடையோமாகவும் பெற்றோம்,’ என்றார்
‘சன்மம் பலபல’-3-10- என்ற திருவாய்மொழியில்;
அல்லாதார் தங்கள் தங்களுடைய உறுப்புகளைப் பாழே போக்குகைக்கு அடியான ஐஸ்வரிய கைவல்யங்களிலே ஈடுபாடு
உள்ளவராய்க் கேட்டினை அடைகிறபடியைக் கண்டு, அவற்றினுடைய சிறுமை,நிலையின்மை முதலிய தோஷங்களையும்,
சர்வேசுவரன் அடையத்தக்க மேலான பலமாய் இருக்கிறபடியையும் உபதேசித்து,
‘அவற்றை விட்டு அவனைப் பற்றுங்கோள்,’ என்றார், ‘ஒரு நாயகம்’ -4-1-என்ற திருவாய்மொழியில்.
பரம புருஷார்த்வம் -பரம பிராப்யத்வம் கல்யாண குணம் காட்டி அருளினார் -ஒரு நாயகம் பதிகத்தில் –

நான்கு -அன்யாபதேசம் -2 தாய் /1 மகள் /1 தோழி பதிகங்கள் –
கிண்ணகத்தில் இழிந்து ஓடும் ஆறு -கரைகள் இரண்டையும் நடுவிலும் ஓடுமா போலே மூன்று தசைகள் -அனைத்திலும் பக்தி ரசம் ஓடுமே –
திவ்ய தேசம் -4-10/திரு நாராயண புரம் மன்னார் குடி சமர்ப்பித்த பாசுரங்கள் இந்த பத்தில்
4-2/6-10-திருவடி பிரஸ்தாபம் எல்லா பாசுரங்களிலும் உண்டு
திருத் துழாய் சம்பந்தத்தையும் அடிக்கடி சொல்லி -சங்க சக்கரம் -6-1 போலே இதிலும் சொல்லி வருவார்
3-3- சகல கைங்கர்யம் பிரார்த்தித்தார் -இதில் முன் காலத்து அனுபவம் -பூத காலம் மட்டும் பிரார்த்திக்கிறார்

பிராசங்கிகமாக, இவ்வொரு நாயகம் அருளிச் செய்தவரே அன்றோ ‘சூழ்விசும்பு அணிமுகி’லும்-10-9- அருளிச்செய்தார்?
இதனை ஸ்ரீ வைஷ்ணவர்கள் திருவுள்ளம் பற்றுங்கோள்’ என்று பிள்ளை அருளிச்செய்வர். என்றது,
‘இது கண்கூடாகக் காண்பது போன்று இச்சரீரம் நீங்கிய பின்னர்
அதுவும் காண அன்றோ நாம் புகுகிறது! இனி எத்தனைநாள்?’ என்றபடி.

ஆக மூன்று திருவாய்மொழிகளாலும்-வீடு -சொன்னால்- ஒரு – இப்படிப் பரோபதேசம் செய்த இது,
சமுசாரிகள் திருந்துகைக்குக் காரணம் ஆகாமல்.
அத்தாலும் தமக்குப் பகவானிடத்திலே விடாய் பிறந்தபடி சொல்லுகிறார் இதில்.
அத்தாலும்–உம்மைத் தொகை -முடியானே பதிகத்தில் கரணங்கள் விடாய்த்தாலும் -இந்த உபதேசத்தாலும் என்றபடி –

‘அவற்றை விட்டு அவனைப் பற்றுங்கோள்,என்றது, மற்றைய விஷயங்களினுடைய தோஷங்களைச் சொல்லுதல்
முன்னாகப் பகவானுடைய வேறுபட்ட சிறப்பினைச் சொல்லி,
‘அவனைப் பற்றுங்கோள்; மற்றைய விஷயங்களை விடுங்கோள்,’ என்றே
அன்றோ அருளிச் செய்தது?-
அது அவர்கள் திருந்துவதற்குக் காரணமாகாமல் தமக்குப் பற்று மிகுதற்குக் காரணமாயிற்று;
ஸ்ரீ விபீஷணாழ்வான் இராவணனுக்குச் சொன்ன நலம் அவன் திருந்துவதற்குக் காரணமாகாமல்
தான் பெருமாளைப் பற்றுதற்குக் காரணம் ஆனாற்போலேயும்,
ஸ்ரீ பிரஹ்லாதாழ்வான் இரணியனுக்குச் சொன்ன நலம் அவன் நெஞ்சிலே படாமல் தனக்குப் பகவானிடத்தில் பத்தி
மிகுதற்குக் காரணம் ஆனாற்போலேயும்,
‘வீடுமின் முற்றவும்’, ‘சொன்னால் விரோதம்’, ‘ஒரு நாயகம்’ என்னும்
இம் மூன்று திருவாய்மொழிகளிலும் பிறரைக் குறித்து அருளிச் செய்த நலம் அவர்கள் திருந்துவதற்குக் காரணம் ஆகாமல்,
மூன்று களையும் பறித்துச் சங்காயமும் வாரின பயிர் நூறு கிளைகளாகப் பணைத்துப் பலிக்குமாறு போலே
தமக்கு அவன் பக்கலிலே காதல் நூறு கிளைகளாகப் பணைக்கைக்குக் காரணம் ஆயிற்று என்றபடி.
சங்காயம்–ஆனைப்புல்-பயிர் போலவே இருக்கும் -ஏமாற்றி கெடுக்கும் -கைவல்யம் என்றவாறே-
இவர்களுக்குக் களையாவது,
1-2-பகவானுக்கு வேறுபட்ட விஷயங்களும்,
3-9-சேவிக்கத் தகாதாரைச் சேவை செய்து திரிகையும்,
4-1-ஐஸ்வர்யத்தைப் புருஷார்த்தம் என்று இருக்கையும்.
சங்காயமாவது, பயிர்களின் இடையிடையே முளைத்து,
அறியாதார்க்குப் பயிர் போலே தோற்றி, அதனை வாரிப் பொகடாத போது
நெல் பதர்க்கும்படியாய் இருப்பது ஒன்று.
அப்படியே கைவல்யமும்.

இந்தக் காதற்பெருக்கும் இப்படிச் செல்லாநிற்கச் செய்தே, முன்பு ‘முடியானே’-3-8- என்ற திருவாய்மொழியில் பிறந்த விடாய்
வேறு ரசங்களாலே மூடப்பட்டுக் கிடந்தது;
அந்த விடாய் தலை எடுத்து, ‘தேசத்தாலும் காலத்தோடும் தேசத்தோடும் கூட்டி
இப்போதே அனுபவிக்க வேண்டும்,’ என்னும் விடாயையும் பிறப்பித்தது;
அவை அப்போதே கிடையாமையாலே அந்த விடாய்தான் வேறு நிலையைப் பிறப்பித்தது;
அந்த நிலைதான் சர்வேசுவரனோடு கலந்து பிரிந்தாள் ஒரு பிராட்டி நிலையாய், பிராட்டி தான் மயங்கினவளாய்க் கிடக்க,
அவள் நிலையைப் பார்த்த திருத்தாயார்,
‘தேசத்தாலும் காலத்தாலும் கை கழிந்த அவன் படிகளையும்
அந்த அந்தத் தேசத்தோடும் காலத்தோடும் கூட்டி இப்போதே பெற்று அனுபவிக்க வேண்டும் என்கிறாள்,’
என்கிற பாசுரத்தாலே தம் நிலையைப் பேசுகிறார்
திருவடியைக் கண்ட வீமசேனன், ‘இவன் சத்திமான்’ என்று தோற்றுகையாலே, ‘ஓ வீரனே! கடலைத் தாண்டுதற்கு முயற்சி
செய்யப்பட்டதும் ஒப்பு இல்லாததும் பெரியதுமான உனது சரீரத்தைக் காண விரும்புகிறேன்,’ என்கிறபடியே,
‘நீ முன்பு கடல் கடந்த வடிவை நான் இப்போது காண வேண்டும்,’ என்றானே அன்றோ?
அப்படியே, இவளும் பகவானுடைய சத்தியை அறிந்தபடி யாலேயும்,
தன் ஆசையின் மிகுதி யாலேயும்
இறந்த காலத்தில் உள்ளவற்றையும் இப்போதே பெற வேண்டும் என்று ஆசைப்படா நின்றாள் என்கிறாள்.

—————————————————————————————

பாலன் ஆய், ஏழ் உலகு உண்டு, பரிவு இன்றி
ஆலிலை அன்ன வசம் செயும் அண்ணலார்
தாளிணை மேல் அணி தண் அம் துழாய் என்றே
மாலுமால் வல் வினையேன் மட வல்லியே.–4-2-1-

இரண்டாவது தாய் பதிகம் -ஆடி ஆடி -முதல் தாய் பதிகம் –
வடதள சாயி திருவடிகளில் திருத் துழாய் பெற வேண்டும் என்று பிரமியா நிற்கிறாள் –
பாலன் ஆய், ஏழ் உலகு உண்டு, பரிவு இன்றி-ஆலிலை அன்ன வசம் செயும் அண்ணலார்
மிறுக்கு இல்லாமல் ஆலிலை மேல் உண்டதுக்கு ஈடாக சயனித்து -வலப்பக்கம் -ஜீரணம் ஆகக் கூடாதே -சுவாமி
தாளிணை மேல் அணி தண் அம் துழாய் என்றே மாலுமால் வல் வினையேன் மட வல்லியே-இந்த அபதானத்துகுத் தோற்று
நித்ய ஸூரிகள் சாத்திய திருத் துழாய் மேல் நசை வைக்கிறாள்
பவ்யமான -பிடித்த பிடி விடாத துவட்சி -கொடி போலே -உபக்னம் அபேஷை-கொள் கொம்பு தேடுமே –
அகடிதங்களை கடிப்பிக்கும் சக்தனால் ஆகாதது இல்லையே —
காலிணை-பாட பேதம்

அதிபால்யமான வடிவையுடையனாய் எல்லா உலகங்களையும் உண்டு வருத்தம் இல்லாமல் ஆலின் இலையிலே உண்ட உணவு
அறாமைக்குத் தகுதியாகக் கிடக்கும் பெருமையையுடைய இறைவனது இரண்டு திருவடிகளின்மேலே அணிந்த குளிர்ந்த அழகிய
திருத்துழாயினைப் பெறவேண்டும் என்றே மயங்காநின்றாள்; தீவினையேனாகிய என்னுடைய, பற்றியதை விடாத வல்லிக்கொடி
போன்ற பெண்ணானவள்.
‘வல்வினையேன் மடவல்லி ஆல் இலை அன்ன வசம் செயும் அண்ணலார் தாளிணை துழாய் என்றே மாலும்,’ என்று கூட்டுக.
‘பரிவு இன்றி அன்ன வசம் செயும் அண்ணலார்’ என்க.
இத்திருவாய்மொழி, கலி விருத்தம்.

‘ஆல் இலையைப் படுக்கையாக உடையவனுடைய திருவடிகளிலே சார்த்தின திருத்துழாயைச் செவ்வியோடே
இப்போதே பெறவேண்டும் என்று ஆசைப்படாநின்றாள்,’ என்கிறாள்.

பாலன் ஆய் –
கலப்பு அற்ற பிள்ளைத்தனத்தை உடையனாய்; ‘படியாதும் இல் குழவிப் படி’ என்னக் கடவது அன்றோ?
பருவம் நிரம்பின பின்பு உலகத்தை எடுத்து வயிற்றிலே வைத்து ஆலிலையிலே சாய்ந்தானாகில்,
என் மகள் இப்பாடு படாளே! ‘அவன் ஒரு நிலையிலே காண் காப்பாற்றுமவன் ஆவது’ என்று மீட்கலாமே!’ என்பாள்
‘பாலன்’ என்கிறாள். ‘என்னை மனிதனாகவே எண்ணுகிறேன்,’ என்கிறபடியே, இந்த நிலை ஒழிய முன் நிலை
நெஞ்சிற்படாமல் இருந்தானாதலின், ‘ஆய்’ என்கிறாள்.
ஏழ் உலகு உண்டு –
‘இது சரிக்கும்; இது சரியாது,’ என்று அறியாமல் ஏதேனுமாக முன்பு தோன்றியதை வாயிலே எடுத்து இடும்படி ஆயிற்றுப் பருவம்.
‘காப்பாற்றுகின்ற சர்வேசுவரனுடைய தொழில் ஆகையாலே, இது பாதுகாவலாய் முடிந்தது இத்தனை.
ரக்ஷகன் உடைய வியாபாரம் ஆகையால் ரக்ஷணம் ஆயிற்று-
அவன் பொறுக்கும் செயலைச் செய்தானாகில்,
இவளும் பொறுக்கும்படியானவற்றை ஆசைப்படாளோ?’ என்பது தாயாருடைய உட்கோள்.
ஆபத்து உண்டானால் வரைந்து நோக்குமது இல்லை ஆதலின், ‘உலகு’ என்கிறாள்.

பரிவு இன்றி –
ஒரு வருத்தம் இன்றிக்கே. என்றது, உலகங்களை எடுத்து வயிற்றிலே வைக்கிற இடத்தில் அதனால்
ஒரு வருத்தம் இன்மையைத் தெரிவித்தபடி.
ஆல் இலை –
அப்பொழுது தோன்றியது ஓர் ஆல் இலையிலே. என்றது,
‘அவ்வடம் பண்ணிக்கொடுத்த சுத்த பத்திரத்திலே’ என்றபடி,
அவ்வடம் பண்ணிக்கொடுத்த’ என்றது, ‘வேறு படுக்கை படுப்பார் இல்லை,’என்றபடி.
அவ்வடம் – அந்த ஆலமரம். சுத்த பத்திரம் – வெற்று இலை.
அன்ன வசம்செயும் –
பதிம் விச்வச்ய ஆத்மேச்வரம் இல்லாமல் தன் வசமாக அன்றிக்கே –
‘அஹம் அன்னம் – நான் இனியபொருளாய் இருப்பவன்’ என்கிற
அன்னத்திற்கு வசமாக. என்றது,- உண்ட உணவு சரியாதபடி அதற்குத் தகுதியாகச் செய்தமையைத் தெரிவித்தபடி.
அதற்குத் தகுதியாக’ என்றது, ‘வலக்கை கீழாக’ என்றபடி.
‘தாமக் கடையுகத் துள்ளே விழுங்கித் தரித்த பழஞ் சேமப் புவனம் செரிக்கும் என்றே சிவன் மாமுடிக்கு
நாமப் புனல்தந்த பொற்றாள் அரங்கர் நலஞ் சிறந்த வாமத் திருக்கர மேலாகவே கண் வளர்வதுவே.’- – திருவரங்கத்து மாலை.

அண்ணலார் –
எல்லாப் பொருள்களையும் காக்கின்றவருமாய் எல்லாப்பொருள்களுக்கும் ஸ்வாமியும் ஆனவர்.
எல்லாப் பொருள்களையும் காக்கின்றவரான உமக்கு உம்மை ஆசைப்பட்ட வலிமை அற்றவளான
என் விருப்பத்தைச் செய்யத் தட்டு என்?’ என்கிறாள் என்பாள்.
‘அண்ணலார்’ என்கிறாள். அவன் இளமைப்பருவத்தில் பாதுகாப்பதில்
குறிக்கோளாய் இருப்பது போலே ஆயிற்று இவள் மயங்கி இருக்கும் காலத்திலும் முறையில் கலக்கம் அற்று இருந்தபடி.
ரஷணம் பாலனாய் இருந்தாலும் விடாதவன் போலே சேஷத்வத்தில் இவள் கலக்கம் அற்று இருக்கிறாள் –

அண்ணலார் தாள் இணை –
அடிமையாக உள்ளவன் பற்றுவது ஸ்வாமியினுடைய திருவடிகளை அன்றோ?
தாள் இணைமேல் அணி தண் அம் துழாய் –
இப்படி இவள் ஆசைப்படுகைக்கு அடியிலே பச்சை யிட்டாள் காணும்.
பிராஹ்மணன் பிச்சு ஏறினாலும் ஓத்துச் சொல்லுமாறு போன்று,
இவளும் அடியில் கற்றுப் பழகியதனையே சொல்லா நின்றாள்;
தாள் பட்ட தண் துழாய்த் தாமத்திலே -திருவாய். 2. 1 : 2.-அன்றோ வாசனை பண்ணிற்று?

துழாய் என்றே – எப்போதும் அத்தையே சொல்லாநின்றாள்.
அடியிலே பச்சையிட்டாள், சிலேடை : அடியிலே – முதலிலே, திருவடிகளிலே. பச்சை – உபகாரம், திருத்துழாய்.
அடியோம் என்றும் -அடிச்சியோம் -நாயகி -தேறியும் தேறாமால் இருந்தாலும் சேஷத்வம் மாறாதே
‘கெடுவாய், இது, சேராதது காண்; இறந்த காலத்தில் உள்ளது ஒன்றுகாண்,’ என்றால்,
அது செவியிற்படுகிறது இல்லை என்பாள்
‘என்றே’ எனப் பிரிநிலை ஏகாரம் கொடுத்து ஓதுகிறாள்.
ஒரு காரணத்தாலே சாதித்துக்கொள்ள முடியாமல் இருக்கையைத் தெரிவித்தபடி.

மாலுமால்–மாலும் –
மயங்கும். என்றது, ‘இது ஒரு சொல் அளவேயாய் அகவாயில் இன்றிக்கே இருக்கை அன்றிக்கே,
உள் அழியா நின்றாள்,’ என்றபடி.
மாணிக்கத்தின் ஒளியிலே நெருப்பு என்னும் புத்தி பிறந்தால் அது பின்னைச் சுடவும் வேண்டுமோ?

வல்வினையேன் –
மயக்கம் உற்றவளாய்க் கிடக்கிற இவளுக்கு ஒரு துக்கத்தின் நினைவு இல்லை ஆதலின், உணர்ந்திருந்து
பார்த்துக் கூறுகிற தன்னை ‘வல்வினையேன்’ என்கிறாள்.

மடம் வல்லி –
-ஒரு கொள் கொம்போடே சேர்க்க வேண்டும் பருவமாதலின், ‘வல்லி’ என்கிறாள்.
‘தமப்பபனாரான ஜனக மஹாராஜர் நாயகனை அடைவதற்குத் தக்க என்னுடைய வயதினைப் பார்த்து வியசனமாகிற
கடலில் மூழ்கினார்,’ என்கிறபடியே இருக்கையைத் தெரிவித்தவாறு. மடம் – பற்றிற்று விடாமை.

———————————————————————–

வல்லி சேர் நுண்ணிடை ஆய்ச்சியர் தம்மொடும்
கொல்லைமை செய்து குரவை பிணைந்தவர்
நல்லடி மேல் அணி நாறு துழாய் என்றே
சொல்லுமால் சூழ்வினை யாட்டியேன் பாவையே.–4-2-2-

திருக் குரவை கோத்த -அவன் திருவடி திருத் துழாய்
வல்லி சேர் நுண்ணிடை ஆய்ச்சியர் தம்மொடும்-கொடி போன்ற நுண்ணிய இடை -வரம்பு அழியும் படி
கொல்லைமை செய்து குரவை பிணைந்தவர்-மரியாதை இல்லாத தன்மை கொல்லமை-ராசக்ரீடை
நல்லடி மேல் அணி நாறு துழாய் என்றே-ந்ருத்தம் ஆடும் நல்ல அடி -ஆயர் பெண்களுக்குத் தக்க -அதீத வாசனை
சொல்லுமால் சூழ்வினை யாட்டியேன் பாவையே-காணும் படி தப்பாமல் சூழ்ந்த வினைகள் -என் பெண் பிள்ளை –

செய்த தீவினையை யுடையேனாகிய என்னுடைய பாவை போன்ற பெண்ணானவள், ‘கொடிபோன்ற நுண்ணிய இடையையுடைய
ஆயர் பெண்களோடும் வரம்பு அழிந்த செயல்களைச் செய்து குரவைக்கூத்தைக் கோத்து ஆடிய கண்ணபிரானுடைய சிறந்த
திருவடிகளின் மேலே அணிந்த வாசனை வீசுகின்ற திருத்துழாய்,’ என்றே சொல்லா நின்றாள்.
‘பாவை சொல்லும்’ என மாறுக. பிறவிப்பிணிக்கு மருந்தாகலின், ‘நல்லடி’ என்கிறாள்.
‘வாலறிவன் நற்றாள்’ என்றார் திருவள்ளுவனாரும்.

‘எல்லாப் பொருள்களையும் காப்பாற்றுகின்றவனான சர்வேசுவரன் பிரளய ஆபத்திலே உடைமையாகிற
தன் உலகத்தைக் காப்பாற்றினானாகில், அதுவும் பேற்றுக்கு உடலாமோ?’ என்ன, ‘
அது உடல் அன்றாகில் தவிருகிறேன்;
என் பருவத்தினையுடைய பெண்களுக்கு உதவின இடத்திலே எனக்கு உதவத் தட்டு என்?’
என்னா நின்றாள் என்கிறாள்.

வல்லி சேர் நுண் இடை –
‘வள்ளி மருங்குல்’-பெரிய திருமொழி, 3. 7 : 1.– என்றாற்போலே,
வல்லிக்கொடி போலே இருக்கிற இடையை யுடையவர்கள் என்னுதல்;
நுண்ணிய இடையை யுடைய வல்லி போன்ற வடிவினை யுடையவர்கள் என்னுதல்.
இடைக்கு உபமானம் இல்லாமையாலே, ‘நுண்ணிடை’ என்கிறது.
ஆய்ச்சியர் தம்மொடும் –
திருவாய்ப்பாடியில் இவள் பருவத்தையுடைய பெண்கள் பலரோடும்.
கொல்லைமை செய்து –
வரம்பு அழிந்த செயல்களைச் செய்து.
அன்றிக்கே, ‘தன் அழகு முதலியவைகளாலே அவர்கள் மரியாதையை அழித்து’ என்னலுமாம்.
குரவை பிணைந்தவர் –
அவர்களோடு தன்னைத் தொடுத்தபடி.
இதனால், ‘என் பருவத்தினை யுடைய பெண்கள் பலர்க்கும் உதவினவர்,
அவர்கள் எல்லார் விடாயையுமுடைய எனக்கு உதவத் தட்டு என்?’ என்னா நின்றாள் என்றபடி.
ஒவ் ஒன்றில் ஆழ்வாருக்கு சாம்யம் சொல்லி -அனைத்திலும் இவருக்கு ஈஸ்வரனும் சாம்யம் இல்லை -ஆச்சார்ய ஹிருதயம் –

நல் அடிமேல் அணி –
பெண்களும் தானுமாய் மாறி மாறித் துகைத்த திருத்துழாய் பெற வேண்டும் என்று ஆசைப்படுகிறாள்.
பிரஹ்மசாரி எம்பெருமான் திருவடிகளில் திருத்துழாய் ஆசைப்படுபவள் அன்றே இவள்?
நாறு தூழாய் –
அவர்களும் அவனுமாகத் துகைத்தது என்று அறியுங்காணும் இவள் வாசனையாலே; ‘கலம்பகன் நாறுமே அன்றோ?’
தாயார் மாலை மாத்தின வாசனை வேற நாற்றம் உண்டாகுமே -வாசனை அறிந்தார் அறிவார் -அடி அறிந்தார் அறிவார் —
என்றே சொல்லுமால் –
நினைத்தது வாய் விடமாட்டாத பெண்மை எல்லாம் எங்கே போயிற்று?
சூழ் வினையாட்டியேன் –
தப்பாதபடி அகப்படுத்திக் கொள்ளும்படியான பாபத்தைப் பண்ணினேன்.
அத்ருஷ்ட பூர்வ வ்யசன -தேன துக்கேன மஹதா ‘பிராட்டி துக்கத்தால் அழுதுகொண்டு என்னைப் பார்த்து வார்த்தை ஒன்றும்
சொல்லவில்லை,’ என்பது போன்று இருக்குமவள் வார்த்தை சொல்லுகிறது என் பாபமே அன்றோ என்பாள்,
தன்னைச் ‘சூழ் வினையாட்டியேன்’ என்கிறாள்.
பாவையே –
‘எல்லா நிலைகளிலும் தன் அகவாயில் ஓடுகிறது பிறர் அறியாதபடி இருக்கக்கூடிய இயல்பாகவே அமைந்த
பெண்மையையுடைய இவள் தன் பேற்றுக்குத் தான் வார்த்தை சொல்லும்படி ஆவதே!

—————————————————————————

பாவியல் வேத நன் மாலை பல கொண்டு,
தேவர்கள் மா முனிவர் இறைஞ்ச நின்ற
சேவடி மேல் அணி செம் பொன் துழாய் என்றே
கூவுமால் கோள்வினை யாட்டியேன் கோதையே.–4-2-3-

சர்வ லோகமும் ஸ்துதிக்கும் த்ரிவிக்ரமன் திருவடி திருத் துழாய்
கண்ணன் விட்டாலும் உலகத்துக்கு உதவின -இவன் அன்றோ –
பாவியல் வேத நன் மாலை பல கொண்டு,-சந்தஸ்ஸில் -வர்த்திக்கும் -வேத ஸூக்தங்களை-நல் மாலை –இரண்டையும்
வேதேஷூ புருஷ ஸூ க்தம் –
தேவர்கள் மா முனிவர் இறைஞ்ச நின்ற-சங்க ஈச்வரனாம் -சனகாதி முனிவர்களும் -ஆழி எழ –ஜய ஜய
சேவடி மேல் அணி செம் பொன் துழாய் என்றே-அவர்களால் அணிவிக்கப்பட்ட -பொன் போன்ற ஸ்ப்ருஹநீயம்
கூவுமால் கோள்வினை யாட்டியேன் கோதையே.-மாலை /சூடும் குழல் /பெண் மூன்றும் -பிரபல பாபம் -போக்க முடியாத –
சூழ் விசும்பு அப்புறமும் இப்பெண் அழுவதை பார்க்க முடியாத பாவியேன் –

‘வலிய தீய வினைகளைச் செய்த என்னுடைய பெண்ணானவள், ‘பாக்களோடு கூடின வேதங்களில் சிறந்த மாலைகளைக் கொண்டு
தேவர்களும் பெருமை பொருந்திய முனிவர்களும் துதிக்கும்படி உலகத்தை அளந்து நின்ற சிவந்த திருவடிகளின்மேலே அணிந்த
சிவந்த பொன் போன்று விரும்பத்தக்க திருத்துழாய்’ என்றே கூப்பிடாநின்றாள்.’
தேவர்கள் முனிவர்கள் நன்மாலை பல கொண்டு இறைஞ்ச நின்ற சேவடி’ என்க, ‘கோதை கூவும்,’ என மாறுக.

‘ஓர் ஊருக்காக உதவினதே அன்றிக்கே, ஒரு நாட்டுக்காக உதவினவன் பக்கல் உள்ளது பெறத் தட்டு என்?’
என்னா நின்றாள் என்கிறாள்.
கீழும் மேலும் திரு அவதாரபரம் என்பதால் இப்பாசுரமும் திரு அவதாரபரம் என்கிறார் –

பா இயல் வேதம் –
பாவாலே இயற்றப்பட்ட வேதம், பா – செய்யுள். 2‘அநுஷ்டுப்’ என்றும், ‘பிருஹதீ’ என்றும், ‘திருஷ்டுப்’ என்றும்
இவை முதலாகச் சொல்லப்படுகின்ற சந்தஸ்ஸூக்களை யுடைத்தான வேதம் ஆதலின், ‘பா இயல் வேதம்’ என்கிறார்.
நல் மாலை பல கொண்டு –
அதிலே நன்றான மாலைகளைக் கொண்டு; என்றது, ஸ்ரீ புருஷசூக்தம் முதலியவைகளை.
‘யாதொரு அடையத் தக்க பரம்பொருளின் சொரூபத்தை எல்லா வேதங்களும் சொல்லுகின்றனவோ’ என்றும்,
‘எல்லா வேதங்களாலும் அறியப்படுகின்றவன் யானே’ என்றும் சொல்லப்படுகின்றவாறே மற்றைய இடங்களிலும்
சொல்லப்படுகின்றவன் அவனேயாகிலும்,
சொரூப ரூப குணங்களுக்கு நேரே வாசகங்களாக இருக்கையாலே, அவற்றை நன்மாலைகள்’ என்கிறார்
அன்றிக்கே, ‘
ஆராதனத்திலும் விபூதி விஷயமாகவும் பரந்திருக்கும் வேதத்தையும்
ஸ்ரீ புருஷசூக்தம் முதலானவைகளையும் கொண்டு’ என்னலுமாம்.

தேவர்கள் மா முனிவர் இறைஞ்ச நின்ற –
தேவர்களும் சனகன் முதலிய முனிவர்களும் –‘சுவர்க்கத்திலுள்ள தேவ கூட்டத்தாலும் பூமியிலுள்ள மனிதர்களாலும்
ஆகாயத்தில் திரிகின்ற வைமாநிகர்களாலும் துதிக்கப்பட்டவனாய் உலகத்தை அளந்த அந்தத் திரிவிக்கிரமன்,
எப்பொழுதும் எனக்கு மங்களம் உண்டாகுமாறு துணையாக வேண்டும்,’ என்கிறபடியே
துதித்துப் பற்றும்படி திரு உலகு அளந்து நின்ற.
சே அடி –
‘மா முதல் அடிப்போது ஒன்று கவிழ்த்து அலர்த்தி’ என்கிறபடியே,
தலையிலே பூப்போலே வந்திருக்கிற போது மேலே பார்த்தவாறே
அனுபவிக்கத் தகுந்ததாய் இருந்த சிவப்பை யுடைத்தாய் இருக்கை. –
‘அடியில் ராகம் அன்றோ இப்படி ஆக்கிற்று இவளை?
அன்றிக்கே,
செவ்விய அடி என்றாய், அடிக்குச் செவ்வையாவது, ‘பொது நின்ற பொன்னங்கழல்’ என்கிறபடியே,
அடியார் அடியர் அல்லார் என்ற வேற்றுமை அற எல்லார் தலைகளிலும் வைத்த செவ்வை.
‘தளிர் புரையும் திருவடி என் தலை மேலவே’ என்று ஈடுபடும்படி அன்றோ அடியில் நேர்மை இருப்பது?

சே அடிமேல் அணி செம்பொன் துழாய் என்றே கூவுமால் –
அத் திருவடிகளிற் சாத்தின விரும்பத் தக்கதான திருத்துழாய் என்று சொல்லிக் கூப்பிடா நின்றாள்.
‘தோளிற் சார்த்தின மாலை கொடுக்கிலும் கொள்ளாள்’ என்பாள்,
‘சே அடி துழாய் என்றே கூவுமால்’ என்கிறாள்.
ஆல் – இது ஒரு ஆச்சரியம் இருந்தபடி என்னே!
அன்றிக்கே,
அசையுமாம்.
கோள் வினையாட்டியேன் –
முடித்து அல்லாது விடாத பாவத்தைச் செய்த என்னுடைய.
அன்றிக்கே,
கோள் என்று மிடுக்காய், ‘அனுபவித்தே தீர்க்க வேண்டும்படியான பாவம்’ என்னுதல்.
கோதையே –
தன் மாலையையும் மயிர் முடியையும் கண்டார் படுமதனைத் தான் படுவதே!
இம் மாலையையுடைய இவள் வேறு ஒரு மாலையை ஆசைப்படுவதே! மார்வத்து மாலையான இவள் வேறு ஒரு
மாலையை ஆசைப்படுவதே! மார்வத்து மாலைக்கு மால் அவன்; அம்மாலுக்கு மால் இவள்.
கோதை என்பது, ‘பூமாலை, பெண்களின் தலைமயிர், பெண்’ முதலிய பல பொருள்களைக் குறிப்பதொரு பெயர்ச்சொல்.
முதல் இரண்டு பொருள்களையும் அருளிச்செய்கிறார், ‘தன் மாலையையும்’ என்று தொடங்கி.
மூன்றாவது பொருளை அருளிச்செய்கிறார், ‘இம்மாலையையுடைய இவள்’ என்று தொடங்கி.
கோதை என்பது, பிராட்டி தன்னைச் சொல்லுகிறதாகத்
திருவுள்ளம் பற்றிப் பொருள் அருளிச்செய்கிறார், ‘மார்வத்து மாலையான’ என்று தொடங்கி.
மார்வத்து மாலை – பிராட்டி. ‘உன் திருமார்வத்து மாலைநங்கை’ என்பது -திருவாய். 10. 10 : 2.)
மார்வத்து மாலைக்கு மால் அவன் -இவள் அம்மாலுக்கு மால் -திருமாலுக்கு மாலுக்கு விஷயம் என் மாலை கோதை –

——————————————————————————-

கோது இல் வண்புகழ் கொண்டு, சமயிகள்
பேதங்கள் சொல்லிப் பிதற்றும் பிரான், பரன்
பாதங்கள் மேல் அணி பைம் பொன் துழாய் என்றே
ஓதுமால்; ஊழ் வினையேன் தடந் தோளியே.–4-2-4-

ஸூரி போக்யன் -பரமபத நிலையானது திருத் துழாய் -விபவம் தீர்த்தம் பிரசாதித்து போவானே –
அவன் நித்ய விபூதி நாயகன் அன்றோ
வைதிகன் பிள்ளைகளை கொண்டு வந்து கொடுத்தானே –
கோது இல் வண் புகழ் கொண்டு, சமயிகள்-உயர்ந்த கல்யாண குணங்கள் –
ஸூ உத்கர்ஷம் -அவனால் இவற்றுக்கு பெருமை
பரார்த்தமாகவே அனுபாவ்யம் –
குண சித்தாந்திகள் -சீலாதிகள் -சௌர்யாதிகள் –
பேதங்கள் சொல்லிப் பிதற்றும் பிரான், பரன்-தது தது உத்கர்ஷ பேதங்கள் –
சரசமான அக்ரமான உக்திகள் -உபகாரகன் -சர்வ ஸ்மாத் பரன்
பாதங்கள் மேல் அணி பைம் பொன் துழாய் என்றே-பசுத்த -திருத் துழாய் -பாராயணம் பண்ணா நின்றாள்
ஓதுமால்; ஊழ் வினையேன் தடந் தோளியே.–தோள் விஞ்சி -கால தத்வம் -அளவும் போக்க முடியாத பாபங்கள்
வேய் போலும் எழில் உருண்ட தோள்கள்

ஊழ்வினையேனான என்னுடைய பெண்ணானவள், ‘சமயிகள் குற்றம் இல்லாத வளவிய
கல்யாணகுணங்களைக் கொண்டு
ஒவ்வொரு குணத்திற்குரிய உயர்வின் பேதங்களைச் சொல்லிப் பிதற்றும்படியான
பிரானாகிய பரனுடைய திருவடிகளின் மேலே
அணிந்த பசுமையான அழகிய திருத்துழாய்’ என்றே சொல்லாநின்றாள்.
‘சமயிகள் வண்புகழ் கொண்டு பேதங்களைச் சொல்லிப் பிதற்றும் பரன்’ என்க.
பிதற்றும் – பிதற்றப்படுகின்ற. பிரான் – உபகாரகன்,
‘தடந்தோளி ஓதும்’ என மாறுக.
ஊழாவது, இருவினைப்பயன் செய்தவனையே சென்று அடைதற்கு ஏதுவாய நியதி.
தோளி -தோளையுடையவள். ‘சமயிகள்’ என்றதன் பொருளை வியாக்கியானத்திற் காண்க.

‘பெருக்காறு வற்றினாற் போலே ஒருகால் எல்லாரையும் வாழ்வித்துப் போன அவதாரங்களில் உள்ளதனை
நான் இப்போது எங்கே தேடுவேன்?’ என்ன,
‘அது தவிருகிறேன்; என்றும் ஒக்க ஓரே தன்மையனாய் இருக்கின்ற
பரமபத நிலையன் திருவடிகளில் திருத்துழாய் பெறத் தட்டு என்?’ என்னா நின்றாள் என்கிறாள்.

பரன் பாதங்கள்மேல் அணி’ என்றது போன்றவைகளைக் கடாக்ஷித்து, அவதாரிகை அருளிச்செய்கிறார்.
‘பெருக்காறு வற்றினாற் போலே’ என்ற
இவ்விடத்தில் ‘பூகத ஜலம்போலே அந்தர்யாமித்வம்; ஆவரணஜலம் போலே பரத்வம்;
பாற்கடல் போலே வியூகம்; பெருக்காறு போலே
விபவங்கள்;அதிலே தேங்கின மடுக்கள் போலே அர்ச்சாவதாரம்,’ என்னும்
பிள்ளைலோகாசார்யர் ஸ்ரீ சூக்திகளை ஒப்பு நோக்குக.

கோது இல் —
குற்றம் அற்ற; ‘குற்றங்கட்கு எதிர்த்தட்டான’ என்றபடி.
குணத்திற்குக் கோது இல்லாமையாவது, ஒரு குணத்தை அநுசந்தித்தால் மற்றைய குணங்களிற் போகாதபடி காற் கட்டுகை.
அப்படி இராதாகில், அல்லாத விஷயங்களிற் காட்டில் வேற்றுமை இல்லையே அன்றோ?
வண்புகழ் –
கல்யாண குணங்கள். கொண்டு – இக்குணங்களைச் சொல்லிக்கொண்டு.
சமயிகள் –
ஒரோ குணத்தில் கால் தாழ்ந்து மற்றைய குணங்களில் போக மாட்டாதவர்கள்; என்றது,
‘சீல குணம் துவக்க வற்று; அதிலும் வீரகுணம் துவக்க வற்று;
அதிலும் உருவ குணமான அழகு முதலானவைகள் துவக்க வல்லன,’ என்று
இவற்றிலே நிஷ்டரானவர்கள் என்றபடி.
இனி, சொன்ன இவர்களை ஒழிய, ‘சத்வித்யா நிஷ்டர், தகரவித்யா நிஷ்டர்,
உபகோசல சாண்டில்யாதி வித்யா நிஷ்டரைச் சொல்லவுமாம்.

சர்வஜ்ஞத்வம் முதலான குணங்களோடு கூடின சொரூபம் உபாசிக்கத் தக்கது’ என்று கூறுபவர்கள் சத் வித்யா நிஷ்டர்.
‘குணமும் உபாசிக்கத் தக்கது; சொரூபமும் உபாசிக்கத் தக்கது’ என்று கூறுமவர்கள் தகர வித்யா நிஷ்டர்.
‘கண்களில் வசிக்கின்ற சர்வேசுவரன் உபாசிக்கத் தக்கவன்’ என்று கூறுமவர்கள் உபகோசல வித்யா நிஷ்டர்.
‘உலகமே உருவாயுள்ள சர்வேசுவரன் உபாசிக்கத் தக்கவன்’ என்று கூறுமவர்கள் சாண்டில்ய வித்யா நிஷ்டர்.

பேதங்கள் சொல்லி –
தாங்கள் அனுபவிக்கிற குணங்களுக்கு ஏற்றங்களைச் சொல்லி; என்றது,
சீல குணத்தை அனுபவித்து, இதுவும் ஒரு குணமே! இது போலேயோ வீர குணம்!’ என்றாற் போலே சொல்லுதல் என்றபடி.
பிதற்றும் –
அந்தக் குணங்களிலே ஈடுபட்டு ஜ்வர சந்நி பதிதரைப்போலே அடைவு கெடக் கூப்பிடா நிற்பர்கள்.
பிரான் பரன் –
அவர்களுக்கு இப்படி உபகாரகனான ஸ்ரீவைகுண்டநாதன்; என்றது,
இமையோர் தமக்கும் செவ்வே நெஞ்சால் நினைப்பரிதால் வெண்ணெய் ஊண் என்னும் ஈனச்சொல்’-திரு விருத்தம்- என்கிறபடியே,
இக் குணங்களை அவர்களுக்கு நிலமாக்கி அனுபவிப்பிக்கையாலே ‘பிரான்’ என்கிறாள் என்றபடி.

பரன் பாதங்கள்மேல் அணி பைம்பொன் துழாய் என்றே ஓதும் –
‘சூட்டு நன்மாலைகள் தூயன ஏந்தி’ என்கிறபடியே,
மிக்க சீர்த் தொண்டரான நித்தியசூரிகள் அவன் திருவடிகளிலே சார்த்தினதாய்
அதனாலேயே மிகவும் விரும்பத்தக்கதான திருத்துழாய் என்று எப்போதும் சொல்லாநின்றாள்.
ஊழ் வினையேன் –
வந்தது அடைய முறையாம் படியான பாவத்தைப் பண்ணின யான். ஊழ் – முறை.
தடந்தோளியே –
இப்படிக் கை விஞ்சின அழகை யுடையவள், குணங்களுக்கு இருப்பிடமான
அவன் திருவடிகளிலே திருத்துழாயை ஆசைப்படா நின்றாள்.
இத் தோள் அழகுக்கு இலக்கு ஆனாரோ, இவளோ, இப்படி அடைவு கெடப் பிதற்றுவார் என்பாள், ‘தடந்தோளி’ என்கிறாள்.

—————————————————–

தோளி சேர் பின்னை பொருட்டு எருது ஏழ் தழீஇக்
கோளியார், கோவலனார்,குடக் கூத்தனார்
தாள் இணை மேல் அணி தண் அம் துழாய் என்றே
நாளும் நாள் நைகின்றதால் என்றன் மாதரே.–4-2-5—

கிருஷ்ணன் திருவடிகளில் திருத்துழாய்
தோளி சேர் பின்னை பொருட்டு எருது ஏழ் தழீஇக்-சீலாதி களால் அவனுக்கு சத்ருசையான நப்பின்னை
தழுவி -இவளை அடைய -விரோதியையும் தழுவுவான் –
கோளியார், கோவலனார்,குடக் கூத்தனார்-ஸ்வ பாவர் -அனுரூபமான குலம்-குடக் கூத்தில் மநோ ஹர சேஷ்டிதங்கள் உடையவர்
தாள் இணை மேல் அணி தண் அம் துழாய் என்றே-வீர அபதானத்துக்குத் தோற்று –
ராச க்ரீடை -திருவிக்கிரம -ரிஷபங்கள் தழுவியவன் திருவடி வாசம் அறிபவள்
நாளும் நாள் நைகின்றதால் என்றன் மாதரே–என் பெண் பிள்ளை சிதிலை ஆகிறாள் -மாதர் -மார்த்தவம் படைத்தவள்-

‘என்னுடைய பெண்ணானவள், ஒத்த தோள்களை யுடையவளான நப்பின்னைப் பிராட்டி காரணமாக ஏழ் எருதுகளையும்
தழுவிக் கொண்டவரும், ஆயர் வமிசத்தில் பிறந்தவரும், குடக்கூத்தை ஆடியவருமான கண்ணபிரானது இரண்டு திருவடிகளின் மேலே
அணிந்த குளிர்ந்த அழகிய திருத்துழாய் என்றே நாளுக்கு நாள் வருந்தா நின்றாள்,’ என்கிறாள்.
தோளி – தோள்களையுடையவள். தழீஇ – தழுவி; சொல்லிசை அளபெடை.
கோளியார் – கொண்டவர். ‘மாதர் நைகின்றது,’ என மாறுக.

‘எல்லா ஆத்துமாக்களுக்கும் பரனாய்ப் பரமபதத்தில் உள்ளவனாய்க் கிட்டுதற்கு முடியாதவனாய் இருக்கிறவன் திருவடிகளில்
சார்த்தின திருத்துழாயை என்னால் தேடப்போமோ?’ என்ன,
‘ஆனால், இங்கே என்னைப் போன்றாள் ஒருத்திக்காகத்
தன்னைப் பேணாதே எருது ஏழ் அடர்த்த கிருஷ்ணன் திருவடிகளில் சாத்தின
திருத்துழாய் பெறத் தட்டு என்?’ என்னாநின்றாள் என்கிறாள்.

தோளி சேர் பின்னை –
‘ஒத்த சீலம் வயது ஒழுக்கம் இவற்றையுடையவளும், ஒத்த குலம் இராஜ லக்ஷணம்
இவற்றையுடையவளுமான பிராட்டிக்குப் பெருமாள் தக்கவர்;
பெருமாளுக்குப் பிராட்டியும் தக்கவள்,’ என்கிறபடியே, குடிப்பிறப்பு முதலியவைகளால் பெருமாளுக்கு ஒத்தவளாய்க்
‘கறுத்த கண்களையுடையவள்’ என்று அவரிலும் இவளுக்கு ஏற்றமானாற் போலே,
மற்றை அழகு எல்லாம் கிருஷ்ணனோடு ஒத்திருக்கும்;
தோள் அழகு அவனைக் காட்டிலும் இவளுக்கு விஞ்சி இருக்கும் ஆதலின், ‘தோளி’ என்கிறது.
அவளுடைய அவயவ சோபையிலே தோற்று அத் தோளோடே அணைக்கைக்காக;

தோளி சேர் பின்னை பொருட்டு -தாதர்த்த சதுர்த்தி -அவளுக்காகவே வியாபாரித்தது –

எருது ஏழ் தழீஇக் கோளியார் –
எருதுகள் ஏழனையும் தழுவிக் கொள்ளுமவர். -கொல்லுமவர்-அடுத்த கணத்திலே அவளைத் தழுவப் பார்க்கிறான் ஆகையாலே,
அவளைத் தழுவினாற் போலே இருக்கிறதாயிற்று எருதுகளோடு பொருததும்;
ஆகையாலே அன்றோ ‘எருது ஏழ் தழீஇ’ என்கிறது?
அவளைப் பெறுகைக்குக் காரணம் ஆகையாலே, அவற்றின் கொம்போடே பொருததும்
இக்கொம்போடே சேர்ந்தாற்போலே போக ரூபமாய் இருக்கிறபடி.

கோவலனார் குடக்கூத்தனார் –
அவளைப் பெறுகைக்குத் தகுதியான குடிப்பிறப்பையும் செருக்கையும் உடையவர்.
வில் முரித்தாலும் இக்ஷ்வாகு வமிசத்தார்க்கு அல்லது பெண் கொடாத ஜனகனைப் போலே, எருது ஏழ் அடர்த்தாலும்
ஆய்க்குலத்தில் குறை உண்டாகில் பெண் கொடார்கள் அன்றே ஆயர்கள்? ஆதலின், அதனை அடுத்துக் ‘கோவலனார்’ என்கிறது.

தாள் இணைமேல் அணி தண் அம் துழாய் என்றே –
அவளுக்கு உதவின கிருஷ்ணன் திருவடிகளில் சாத்தின திருத்துழாயை ஆயிற்று இவள் ஆசைப்பட்டது.

நாளும் நாள் நைகின்றது –
ஒருநாள் நைகைக்கும் ஆஸ்ரயம் இல்லாத மென்மையையுடையவள், நாள்தோறும் நையா நின்றாள்.
நைவதற்குரிய சரீரத்தையும் கொடுத்து நையப் பண்ணும் விஷயமே அன்றோ?

என்றன் மாதர் –
என் பெண் பிள்ளை.
அன்றிக்கே, தன்னைப்போலே பிறந்து விலங்கு முரித்துக் கொண்டு போய்ப் பூதனை சகடாசுரன் இரட்டை மருத மரங்கள்
முதலானவைகளோடே பொருது, ‘தழும்பு இருந்த தாள் சகடம் சாடி’ என்கிறபடியே,
தழும்பு ஏறி இருப்பாள் ஒருத்தியோ என் பெண்பிள்ளை என்பாள், ‘என்மாதர்’ என்கிறாள் என்னுதல். என்றது
‘தொடுங்கால் ஒசியும் இடை இளமான் அன்றோ?’ என்கிறாள் என்றபடி.
நமஸ் சப்த்தார்த்த நிஷ்டை -இடையில் உள்ள பதம் அன்றோ –

—————————————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ. வே.வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-