ஸ்ரீ பராசர பட்டர் அருளிய நம்பெருமாள் திருமஞ்சன கட்டியங்கள் — ஸ்லோஹங்கள்–5–12–

ஸ்ரீ பராசர பட்டார்யா ஸ்ரீ ரங்கேச புரோஹித
ஸ்ரீ வத்சாங்க ஸூத ஸ்ரீ மான் ஸ்ரேயசே மேஸ்து பூயசே-

சத் பஷபாதாத் புவநா ஸ்ரயத்வாத்
சந் மாநசா வாச நிபந்தனத்வாத்
பத்மாச்ரயத்வாச்ச பவாநிதா நீம்
ஹம்ஸோ யதா ராஜதி ரங்க ராஜ -ஸ்லோஹம் -5-

நாயந்தே
ஹம்சச்சுசிஷத் -என்றும் -அன்னமாய் அன்று அங்கு அருமறை பயந்தான் அரங்க மா நகர் அமர்ந்தான் -என்றும் சொல்லுகிறபடியே
சகல சாத்வில லோக லோசா நாநந்த பாராவார ஹேதுவான வடிவழகை யுடைய தேவரீரை
ஒரு அன்னமாக விண்ணப்பம் செய்யலாய் இரா நின்றது எங்கனே என்னில் –

சத் பஷபாதாத்
நாயந்தே
அன்னமானது தூவிசேர் அன்னம் என்று கொண்டு நன்றான பஷபாதத்தை யுடைத்தாய் இருக்கும்
தேவரீரும் மம ப்ராணா ஹி பாண்டவா -என்கிற கணக்கிலே சத்துக்களுக்கு பஷபாதியாய் இரா நின்றீர் –

புவநா ஸ்ரயத்வாத்
நாயந்தே
அன்னமானது அதிஹ்ருத்யமாய் நிர்மலமான ஜீவன சவித வர்த்தியாய் இருக்கும்
தேவரீரும் -வசந்தி சர்வ பூதா நி என்ற கணக்கிலே அகில சேதன அசேதனங்களுக்கும்
ஆஸ்ரயமாய் எழுந்து அருளி இருக்குமவராய் இருந்தீர் –

சந் மாநசா வாச நிபந்தனத்வாத்
நாயந்தே
அன்னமானது -மநோ ஹராமான மானஸ சரஸ்சிலே வர்த்தியா நிற்கும்
தேவரீரும் புகுந்து நம்முள் மேவினார் -என்கிறபடியே சத்துக்களுடைய மனசிலே எழுந்து அருளி இருக்குமவராய் இருந்தீர்

பத்மாச்ரயத்வாத்-பத்மாலயத்வாத் -பாட பேதம் -இதுவே சிறந்ததாகக் கொள்வர் –
நாயந்தே
அன்னமானது பங்கேருஹ பரிசர வர்த்தியாய் இருக்கும்
தேவரீரும் -என் திருமகள் சேர் மார்பனே -என்றும் -வடித் தடம் கண் மலரவளோ வரையாகத் துள்ளிருப்பாள் -என்றும்
சொல்லுகிறபடியே பூவில் பரிமளமான பிராட்டி திரு மார்பிலே நித்ய வாஸம் பண்ணும்படியாய் இரா நின்றீர் –

பவாநிதா நீம் ஹம்ஸோ யதா ராஜதி ரங்க ராஜ –
ஆக இப்படி தேவரீர் நின்ற நிலை அத்யாச்சர்ய அவதாரமாய் -அதி மநோ ஹரமாய் -சத்கதியாய்
-சல்லாபசதுரமாய் -உரையாட வல்ல –நாரமத்ய வர்த்தியாய் இருப்பது
ஒரு அன்னம் அஞ்சாதே கொள் என்று அபய பிரதானம் பண்ணிக் கொண்டு நிற்கிற நிலை போலே இருந்தது –

————————————————————————————————–

அந்த ஸ்தித ஸூ மனசா மமரேசரத்ன
ச்சாயா விகல்பிதருசி நயனா பிராமம்
ஆபாதிதஸ் மரகுண பிரதி தப்ரசார
சாகாஸூ ரங்க ந்ருபதிர் மதுபோ விபாதி –ஸ்லோகம் -6-

நாயந்தே சஷூர் தேவாநா முதமர்தயாநாம் -என்றும்
கண்ணாவான் என்றும் மண்ணோர் விண்ணோர்க்கு -என்றும் சொல்லுகிறபடியே உபய விபூதியில் உள்ளார்க்கும் தர்சன ஹேது த்ருஷ்டி பூதராய்
உயர்வற உயர் நலம் உடையவன் -என்று ஆனந்த குண விசிஷ்டராய் அந்த ஆனந்த குண அதிசயத்துக்கு மேலே
மயர்வற மதிநலம் அருளினான் என்று பக்தி ரூப ஜ்ஞான பிரதானத்தாலே நிர்ஹேதுக உபகாரகராய்
அதுக்கு மேலே அயர்வறும் அமரர்கள் அதிபதி என்று சகல ஸூரி சம்சேவ்யமானரான தேவரீர்
சர்வ பிரகார விமுகரான சம்சாரி சேதனரை விஷயீ கரிக்கைக்காகத் திருவடி நிலை கோத்துப் புறப்பட்டு அருளி
ரூப ஔதார்ய குணை த்ருஷ்டி சித்த அபஹாரிணம்-என்கிறபடியே த்ருஷ்டி சித்த அபஹாரியான
திவ்ய மங்கள விக்ரஹ வைலஷணயத்தைக் காட்டி அருளி
சமஸ்த சேதனருடைய மனஸ்ஸூக்களும் பாஹ்ய விஷயங்களில் செல்லாதே தேவரீர் பக்கலிலே
ஒரு மடை கொள்ளும் படி பண்ணி அருளத் திரு உள்ளமாய்
மத் பக்த பாத தோ யேன மத் ஸ்நாபித ஜலேநவா நரா -பாபாத் ப்ரமுச்யந்தே ஸ்நானபாநாதி கர்மபி -என்று
தேவரீர் திரு மஞ்சனமாடி யருளின தீர்த்தாலும்
அரங்காவோ என்று அழைக்கும் தொண்டர் அடிப்பொடி சூடுதலாலும் அடியோங்கள் அபாச்த சமஸ்த பாபராய் உஜ்ஜீவிக்கும் படி
தேவரீர் திருமஞ்சனமாடி யருளி சந்தன குங்கும பங்கா லங்க்ருதராய் நிற்கிற இந்நிலை
ஒரு மதுரமாக விண்ணப்பம் செய்யலாய் இரா நின்றது -எங்கனே என்னில் –

அந்த ஸ்தித ஸூ மனசாம்
நாயந்தே
மதுகரமானது பூம் கொத்துக்களின் உள்ளே நுழைந்து அந்த ஸ்திதமாய் இருக்கும் –
தேவரீரும் அந்தணர் தம் சிந்தையான் என்கிறபடியே அநந்ய பிரயோஜனருடைய அந்த கரணங்களிலே அநவரதம் எழுந்து அருளி இரா நின்றீர் –

அமரேச ரத்னச்சாயா விகல்பிதருசி
மதுகரமானது இந்திர நீலத்தின் கறுப்பை யுடையது என்னலாம் படி கறுப்பு நிறம் உடைத்தாய் இருக்கும்
தேவரீரும் சாமத்தின் நிறம் கொண்ட தாடாளன் -என்கிறபடியே ச்யாமமான திருமேனியை யுடையராய் இருந்தீர் –

நயனா பிராமம்
மதுகரமானது கண்டவர் கண்களுக்கு ஸ்ப்ருஹாஸ் பதமாய் இருக்கும் –
தேவரீரும் உன்னைக் காண விரும்பும் என் கண்கள் -என்கிறபடியே கண்டவர் கண்களுக்கு
ஆசை மிகும் படியான வடிவழகை யுடையராய் இருந்தீர் –

ஆபாதிதஸ்மரகுண
மதுகரமானது காமன் கார்முகத்துக்கு குணபூதமாய் இருந்தது –
தேவரீரும் காமனைப் பயந்த காளை-என்கிறபடியே அநங்கியான காமனுக்கு அங்கி யாம்படி குணாதானம் பண்ணி அருளினீர் –

பிரதி தப்ரசார சாகாஸூ –
மதுகரமானது மதுலோலுபம் ஆகையாலே -பூத்த கொம்புகள் தோறும் உலவித் திரியா நிற்கும் –
தேவரீரும் வேத சாகைகளிலே விவித விநோத சஞ்சாரம் பண்ணி யருளா நின்றீர் –

ரங்க ந்ருபதிர் மதுபோ விபாதி —
ஆக இப்புடைகளாலே ஸ்ரீ ரங்க ராஜரான தேவரீர் தூவியம் புள்ளுடைத் தெய்வ வண்டு -என்று நம்மாழ்வார்
அருளிச் செய்த படியே வண்டின் நிலையை அடியோங்களுக்கு வெளியிட்டுக் கொண்டு நிற்கிற நிலை போலே இந்நிலை இருந்தது –

————————————————————————–

சார்த்தம் த்விஜைச் ஸ்ராவண கர்ம ரங்கின்
கல்போசி தஸ் நாநா விதிம் கரோஷி
ச்ருதிம் ருத்ப்யாம் வ்யபதிச்யமாநம்
ஸ்வயம் மமாஜ்ஞம் அநுவர்த்தயாமி –ஸ்லோகம் -7-

நாயந்தே
ஸ்ரவண நஷத்ரமானது எல்லா நஷத்ரங்களில் காட்டில் பிரசச்தமாய் இருக்கக் கடவது –
இதுக்கு ப்ராசச்த்யம் எங்கனே என்னில் -ஸ்ரவண நஷத்ரம் விஷ்ணோ தேவதா என்கையாலே –
விச்வாத்மாக்களுக்கும் அதிபதியாய் இருக்கிற தேவரீர் தாமே இந்த நஷத்ரத்துக்கு அதி தேவதை யாகையாலே
இது எல்லா நஷத்ரங்களிலும் காட்டில் பிரசச்தமாய் இருக்கும்
சர்வேஷூ சாவதாரேஷூ ஸ்ரவணர் ஷேரிபூன் ப்ரதி
ஜயார்த்த முத்யமம் சக்ரே பகவான் மது ஸூ தன-என்கையாலே
எல்லா அவதாரங்களிலும் இந்த நஷத்ரம் பார்த்துப் புறப்படுகையாலும்
தஸ்மாத் ஸ்வா த்யாயோஸ் த்யே தவ்ய-என்று கொண்டு சொல்லுகிற நித்ய விபூதியிலும் உள்பட
ஸ்ராவணயாம் ப்ரஷ்டபத்யாம் வா உபாக்ருத்யயதா விதி யுக்தச் சந்தாம்ச்ய தீயீத -என்று கொண்டு சொல்லுகிற
அத்யய நாரம்ப காலமாக ஸ்ராவணி யான பௌர்ணமாசையைச் -ஆவணி அவிட்டத்தைச் -சொல்லுகையாலும்
உப நீய து யச்சிஷ்யம் வேதமத்யாப யேத் த்விஜ-ஸகல்பம் ஸரகஸ்யம் ச தமாசார்யம் பிரசஷதே -என்று கொண்டு
ஆசார்யன் தன்னுடைய கரணத்தை ப்ரகடீ கரிக்கைக்கு பிரதம ஆச்சார்யராய் இருக்கிற தேவரீர்
இந்த ஸ்ராவண கர்மத்தை ப்ரத்யஷமாக நாம் உள்பட அனுஷ்டிக்கக் கடவோம் என்று சொல்லி அருளினீர்
இதுக்கு ஹேது என் என்னில்
ஸ்ருதி ஸ்ம்ருதி மாமி வாஜ்ஞா என்று கொண்டு பிரதிஜ்ஞை பண்ணி அருளினீர்
ஸ்ருதி ஸ்ம்ருதி களுக்கு ஆரம்பம் இதிலேயாய் இருக்கும்
தேவரீரும் த்ரை வர்ணிகரோடு கல்ப உசித திரு மஞ்சனம் பண்ணி அருளி நம்முடைய ஆஜ்ஞை யான
ஸ்ருதி ஸ்ம்ருதி யுக்த கர்மங்களை நாம் உள்பட அனுஷ்டிப்போம் என்று எழுந்து அருளி நிற்கிற நிலை போலே இருந்தது

————————————————————————

சமுன் மிஷத் பத்மஜதார சம்ஸ்ரிதா
தவாவதாரக்ரம பாட தத்பரா
த்ரயீவ ரங்கேச சமர்த்யதே ஜனை
அசௌ ஜயந்தீத் யுதிதே யமஷ்டமீ –ஸ்லோகம் –8-

நாயந்தே
ஜெயந்தி சம்ஜ்ஞையான இந்த அஷ்டமியை த்ரயீ என்று சொல்லலாம் படி இருந்தது -எங்கனே என்னில் –

சமுன் மிஷத் பத்மஜதார சம்ஸ்ரிதா
ரோஹிணீ நஷத்ரம் பிரஜாபதிர் தேவதா என்கையாலே பிரஜாபதி தேவதாகமாகும்
இங்கு பத்மஜ சப்தம் ஸ்ரஷ்டா பிரஜாபதிர் வேதா -என்ற பர்யாயமான பிரஜாபதிக்கு வாசகமாய் இருக்கும்
தேவரீர் வஸூ தேவரை ஸ்தம்பாதிகளைப் போலே நிமித்தமாகக் கொண்டு அவதரித்து அருளிற்று –
இப்படி நியமித்த நிமித்த மாத்ரமான வஸூ தேவரும் காச்யப பிரஜாபதியின் அம்சம் ஆகையாலே ப்ரஜாபதியாய் இருந்தார்
இவரை நிமித்தமாகக் கொண்டு இந்த ஜயந்தி அஷ்டமியில் தேவரீர் அவதரித்து அருளுகையாலே
இவரையும் இதற்கு அதிதேவதை என்னலாய் இரா நின்றது
ஆக இந்த ஜெயந்தி என்னும் அஷ்டமி பத்மஜ தாரமுண்டு பிரஜாபதி தேவதாகமான ரோஹிணீ அத்தோடு கூடி இருக்கக் கடவதாய் இருக்கும்
த்ரயீ எனப்படும் வேதமும் பத்மஜனுண்டு ஆதி ப்ரஹ்மா அவனாலே உச்சார்யா மாணமான தாரம் உண்டு பிரணவம்
அத்தோடு சஹிதமாய் இருக்கும்
இந்த அஷ்டமியோ என்னில் பத்மஜ தாரமுண்டு ரோஹிணி அத்தோடு கூடி இருக்கக் கடவதாய் இருக்கும் –

தவாவதாரக்ரம பாட தத்பரா –
நாயந்தே
வேதம் தேவரீருடைய க்ரமத்தைச் சொல்லுகையாலே அதிலே தத் பரமாய் இருக்கும் -எங்கனே என்னில்
வேதம் த்ரீணி பதாவி சக்ரமே விஷ்ணுர் கோபா அதாப்ய -என்றது-க்ரமு-பாத விஷேபே -ஆகையாலே
தேவரீருடைய த்ரிவிக்ரம அவதாரத்தை அது சொல்லா நின்றது –

இந்த ஜெயந்த்யஷ்டமியும் யஸ்யாம் ஜாதோ ஜகந்நாத கிரீடீ கௌச்துபீ ஹரி -என்கையாலே தேவரீருடைய அவதார காலத்தைச் சொல்லா நின்றது
த்ரயீவ ரங்கேச சமர்த்யதே ஜனை அசௌ ஜயந்தீத் யுதிதே யமஷ்டமீ -ஆகையாலே தேவரீர் அவதரித்து அருளின
ஜெயந்த்யஷ்டமியை தேவரீர் அவதார ப்ரபாவத்தாலே சர்வ பிராணிகளும் த்ரயீ என்று கொண்டு அறுதி இடா நின்றார்கள்-

———————————————————————-

அம்ருதமயம நந்தம் சித்த சர்வார்த்த ஜாதம்
நியமித சகலார்த்தம் நிச்சிதாத்மாவ போதம்
கிமிஹ பஹூ நிருக்தை கீர்த்தா நாபீஷ்டதம் த்வாம்
நிகமமிவ மநோஜ்ஞம் ரங்க ராஜாத்ய மன்யே –ஸ்லோகம் –9-

நாயந்தே
சர்வே வேதா யத்ரைகம் பவந்தி -என்றும் -சர்வே வேதா யத்பதமாம நந்தி -என்றும் –
வேதைச்ச சர்வைரஹமேவ வேத்ய -என்றும் -மறையாய நாள் வேதத்துள் நின்ற மலர்ச்சுடரே -என்றும் சொல்லுகிறபடியே
சகல வேத வேத்யராய் -ந சஷூ ஷா பச்யதி கச்ச நைனம்-என்றும்
-கட்கரிய பிரமன் சிவன் இந்திரன் என்று இவர்க்கும் கட்கரிய கண்ணன் என்றும் சொல்லுகிறபடியே கட்கரியராய் இருக்கிற தேவரீர்
வரதயதி ந புவ்யவாதரிஷ்ய -என்கிறபடியே நாம் அதீந்த்ரியராய் இருந்தால் நம்முடைய ஆராதன பரங்களான வைதிக தர்மங்கள் சங்குசிதங்களாம்
ஆகையால் நாமே நம்மை வெளியிடக் கடவோம் என்று திரு உள்ளம் பற்றி அருளி –
தென்னாடும் வடநாடும் தோழா நின்ற திருவரங்கம் திருப்பதியிலே அகில ஜன நயன விஷய தாங்கதராய் இப்பொழுது
தேவரீருடைய ஆராதனா ரூபமாகச் செஞ்சொல் வேள்விப்புகை கமழும் படி மறைப் பெரும் தீ வளர்த்து இருக்கிற
அறம் திகழும் மனத்தவர் திறத்தில் காருண்யம் கரை புரண்டு அவர்களைக் கடாஷிக்க வேணும் எனக் கருதித்
திருநாள் என்று பேரிட்டு புறப்பட்டருளி அபாங்க வீஷணங்களாலே அநந்ய பிரயோஜனரான தர்மசாரிகளை தன்யராக்கி –
கர்த்தா காரயிதா ச ச என்றும் -யத்ய தாசரதி ஸ்ரேஷ்ட தத்ததே வேதரோ ஜன -என்றும் சொல்லுகிறபடியே
தேவரீருடைய அனுஷ்டான முகத்தாலும் வைதிக தர்ம ஸ்தாபனம் செய்து அருளுகைக்காக சக்ரமமாகத் மாடியருளி
மிக்க வேதியர் பக்கல் அந்தஸ்தமான அனுகம்ப அனுராகங்கள் புற வெள்ளம் இட்டாப் போலே அழகிய
திரு மார்பைச் சந்தன குங்கும பங்கங்களாலே அலங்கரித்துக் கொண்டு நிற்கிற நிலை
வேதத்தோடு சாம்யம் விண்ணப்பம் செய்யலாய் இரா நின்றது -எங்கனே என்னில் –

அம்ருதமயம்-
நாயந்தே
வேதமானது வாசா விரூப நித்யயா-என்றும் -நிற்கும் நான்மறை -என்றும் -சொல்லுகிறபடியே நித்ய ஸ்வரூபமாய் இருக்கும் –
தேவரீர் ச தா ஆத்மா அந்தர்யாம்யம்ருத -என்றும் கேடிலீ என்றும் -சொல்லுகிறபடியே
நிரபாய ஸ்வரூபராயும்-எததேவாம்ருதம் த்ருஷ்ட்வா த்ருப்யந்தி -என்றும் -என்னரங்கத்து இன்னமுதர் என்றும் சொல்லுகிறபடியே
அம்ருதம் போலே நிரதிசய போக்ய பூதராயும் இரா நின்றீர் –

அநந்தம்-
வேதமானது -அநந்தா வைவேதா -என்றும் ஓதுவார் ஒத்து எல்லாம் -என்றும் சொல்லுகிறபடியே அபரிச்சேத்யமாய் இருக்கும் –
தேவரீர் -சத்யம் ஜ்ஞானம் ஆனந்தம் பிரம்மா -என்றும் -அச்சுதனை அனந்தனை -என்றும் சொல்லுகிறபடியே
த்ரிவித பரிச்சேத ரஹீதராய் இரா நின்றீர் –

சித்த சர்வார்த்த ஜாதம்
வேதமானது சாதுர்வர்ண்யம் த்ரயோ லோகா -என்கிறபடியே தன்னாலே பிரதிபாதிக்கப்பட்ட வர்ணாஸ்ரமாதி
சமஸ்த அர்த்தங்களையும் உடைத்தாய் இருக்கும்
தேவரீர் பதிம் விச்வச்ய இத்யாதிப்படியே சேஷிதயா சித்த சர்வார்த்த ஜாதருமாய் யோக சித்தருமாய் நித்ய சித்தருமாய் இருப்பார்க்கு
சர்வ புருஷார்த்த ரூபருமாய் சகல பல பிரதருமாய் ஆப்த காமஸ்ய கா க்ரியா என்றும் சத்யகாம என்றும்
வா ஸூ தேவோ சிபூர்ண -என்றும் சொல்லுகிறபடியே அவாப்த சமஸ்த காமருமாய் இரா நின்றீர் –

நியமித சகலார்த்தம்
வேதமானது -இதழ் குர்யாத் இதம் நகுர்யாத் -என்று நியமிக்கப் பட்டு இருக்கிற
விதி நிஷத ஆத்மகங்களான சகல கார்ய வாக்யார்த்தங்களை உடைத்தாய் இருக்கும் –
தேவரீர் -அந்த பிரவிஷ்டத் சாஸ்தா ஜனா நாம் சர்வாத்மா -என்கிறபடியே சங்கல்ப்பத்தாலே
நியமிக்கப் பட்டு இருக்கிற சித் அசித் ஆத்மாக சகல பதார்த்தங்களையும் உடையராய் இரா நின்றீர் –

நிச்சிதாத்மாவ போதம் –
வேதமானது பஞ்ச விம்சோயம் புருஷ பஞ்ச விம்ச ஆத்மா பவதி -என்று சதுர்விம்சதி தத்வாத்மகமான தேகாத்பரமாகவும் –
யஸ் யாஸ்மி பத்யு தமந்த்ரேமி -என்று பரதந்த்ரமாகவும் -யஸ் யாத்மா சரீரம் -என்று தேவரீருக்குச் சரீரமாகவும்
நிச்சயிக்கப் பட்ட ஜீவாத்மா ஜ்ஞானத்தையும்
பதிம் விச்வச்ய இத்யாதிப்படியே சேஷித்வாதி வேஷேண நிச்சயிக்கப்பட்ட பரமாத்மா ஸ்வரூப ஜ்ஞானத்தையும் யுடைத்தாய் இருக்கும்
தேவரீர் ஸ்ரீ கீதாமுக கிரந்த நிச்சிதாத்மா அவபோதருமாய் -த்வமேவ த்வாம் வேதத யோசி சோசி என்கிறபடியே
தேவரீராலே நிச்சயிக்கப்பட்ட தேவரீருடைய ஸ்வரூப ஜ்ஞானத்தை யுடையராய் இரா நின்றீர் –

கிமிஹ பஹூ நிருக்தை
அதிகம் பேசி என்னாவது –
கீரத்த நாபீஷ்டிதம் வேதமானது புறம் பார்க்க வேண்டாதபடி தன்னைக் கீர்த்தித்த மாத்ரத்திலே அபேஷித புருஷார்த்த பிரதமாய் இருக்கும்
தேவரீரும் நெடியான் தன் நாமமே ஏத்துமின்கள் ஏத்தினால்
கீர்த்தா நாபீஷ்டதம் த்வாம் தாம் வேண்டும் காமமே காட்டும் கடித்து -என்றும்
குலம் தரும் -என்றும் இத்யாதிப்படியே சாதநாந்தர நிரபேஷமாய் திருநாம சங்கீர்த்தன மாத்ரத்தாலே
த்ரிவர்க்க அபவர்க்க ரூப சர்வ அபேஷித ப்ரதராய் இருந்தீர் –

மநோஜ்ஞம்-
வேதமானது பூர்வ உத்தர பாகன்களாலே தேவரீருடைய ஆராதனா ரூப தர்மத்தையும் -ஆராத்யரான தேவரீருடைய
ஸ்வரூப ரூப குணா விபூதிகளையும் அறிவிப்பிக்கையாலே எழில் வேதம் என்னும் படி அழகியதாய் இருக்கும்
தேவரீர் -உள்ளுவார் உள்லிற்று எல்லாம் உடன் இருந்து அறிதி -என்கிறபடியே நினைவுக்கு வாய்த்தலையான நெஞ்சிலே
குடியிருந்து சர்வ அபிப்ப்ராயங்களையும் சாஷாத் கரித்துக் கொண்டு இரா நின்றீர் –

த்வாம் நிகமமிவ ரங்க ராஜாத்ய மன்யே –
ஆக இப்புடைகளாலே –
அரங்கத்து அமலன் -என்றும் -வைத்த மா நிதி என்றும் -சதுர்மூர்த்தி -என்றும் -பிறப்பிலி -என்றும்
-சொல்லப்படுகிற நம்மைப் போலே –
வசையில் நான்மறை -என்று ஹேய ப்ரத்ய நீகமாய் -ப்ராஹ்மணானாம் தனம் வேத -என்றும் -ருசஸ் சாமாநி யஜூம்ஷி சாஹி ஸ்ரீ ரம்ருதாசதாம் -என்றும்
அந்தணர் மாடு -என்றும் -சொல்லுகிறபடியே அறிவுடையார்க்கு நிதியாய் மறை நான்கு என்று சதுர் பிரகாரமாய்
முது வேதம் என்று பிறப்பற்று இருக்கிற வேதத்தை -பண்டை நான்மறையும் வேள்வியும் -என்று தொடங்கி-
-அண்டமும் தானே நின்ற வெம்பெருமான் அரங்க மா நகர் அமர்ந்தான் என்று சொல்லலாம்படியான நம்மைக் கண்டால் போலே
காணுங்கோள்-என்று தேவரீருக்கும் வேதத்திற்கும் உண்டான சாம்யத்தை வெளியிட்டுக் கொண்டு நிற்கிற நிலை போலே இந்நிலை இருந்தது –

———————————————————————————————————

ச்யாமாபம் மகுடோ பேதம் கட காஞ்சித முந்னதம்
சத்வாச்ராயம் ரங்கராஜம் மஹீதரம வைம் யஹம் –ஸ்லோகம் –10-

நாயந்தே
விஷ்ணு பர்வதாநாமதிபதி -என்றும் -மேரு சிகரினா மகாம் -என்றும் சொல்லுகிற படியே
தேவரீர் எழுந்து அருளி இருக்கும் இருப்பை ஒரு பர்வதம் என்று விண்ணப்பம் செய்யலாய் இரா நின்றது –
எங்கனே என்னில் –

ச்யாமாபம்
நாயந்தே
பர்வதமானது ச்யாமளமாயும் கோமளமாயும் இருக்கும்
தேவரீரும் பச்சை மா மலை போல் மேனி என்கிறபடியே மரகத மலையை உருவகுத்தால் போலே இரா நின்றீர் –

மகுடோ பேதம் –
பர்வதமானது உயர்ந்த கொடு முடியோடு கூடி இருக்கும்
தேவரீரும் சேஷித்வ ஸூ சகமான துன்னு மா மணி முடி யுடனே கூடோ இரா நின்றீர் –

கட காஞ்சிதம்-
பர்வதமானது தாழ்வரைகள் உடன் கூடி இருக்கும்
தேவரீரும் ஆஸ்ரித விரோதிகளை விஹஸ்தமாக்கக் கடவதான கடகம் என்னும் ஹஸ்தாபரணத்தோடு கூடி இரா நின்றீர் –
விஹாச்தமாக்க -கை இழக்கும் படி -பலம் இழக்கும் படி என்றவாறு

உந்னதம் –
பர்வதமானது ஒருகாலும் அளவு கொள்ள ஒண்ணாது ஆகையாலே விஷ்ணு பதாஸ்ரயமாய் உயர்ந்து இரா நிற்கும்
தேவரீரும் -நெடியான் படி கடந்தான் -என்று பதக்ராந்தியாலே எட்ட ஒண்ணாத படியாய் இருந்தீர் –

சத்வாச்ராயம் –
பர்வதமானது சிம்ஹாதிகளான சத்வங்களுக்குப் புகலிடமாய் இருக்கும் –
தேவரீரும் சத்வம் விஷ்ணு பிரகாசகம் என்றும் சத்வம் ஆஸ்ரய க என்றும் சொல்லுகிறபடியே சத்வ குண பிரசுரராய் இரா நின்றீர் –

ரங்கராஜம் மஹீதரம வைம் யஹம் —
ஆக இப்படி அத்யாச்சர்யமாய் -அதி மநோ ஹரமாய் -அகில ஜன நயன குதூஹல பிரதமாய் –
அம்போருக வாசிநியான பிராட்டியினுடைய விளையாட்டுக்கு என்று பருவம் செய்து நிற்கின்ற ஒரு மலையின் நிலை போலே இருந்தது –

————————————————————————————-

சத்வோன்னதஸ் சகல சத்வ நிவாஸ பூமி
சௌவர்ண ரம்யா விபவஸ் ஸூமநோ மநோஜ்ஞ
சத்வ்ருத்த சங்க சமதிஷ்டித பார்ச்வதேச
சைலாத்மநா ஸ்புரசி ரங்க மஹீச்வர தவம் –ஸ்லோகம் -11-

நாயந்தே தேவரீர் திருமஞ்சனமாட ஏறி யருளி நிற்கிற நிலை இங்கனே ஒரு பர்வத்தின் நிலை போலே இரா நின்றது -எங்கனே என்னில் –

சத்வோன்னதஸ்-
பர்வதாமோ என்று பார்த்தால் பலத்தால் வந்த உயர்த்தியை உடைத்தாய் இருக்கும்
தேவரீரும் சுத்த சத்வாதி கோ விஷ்ணு -என்கிறபடியே சத்வோத்தரராய் இருப்பீர் –

சகல சத்வ நிவாஸ பூமி –
நாயந்தே
பர்வதமோ என்று பார்த்தால் நர மிருக பசு பஷி ஸ்தவராதி சத்வங்களுக்கு ஆவாச பூமியாய் இருக்கும்
தேவரீரும் பூதா வாச வா ஸூ தேவ -என்று கொண்டு சகல சேதன அசேதனங்களுக்கும் ஆஸ்ரய ஸ்தலமாய் இருப்பீர் –

சௌவர்ண ரம்யா விபவஸ்-
நாயந்தே
பர்வதமோ வென்று பார்த்தால் அழகிதான போன்படும் ஆகாரங்களை யுடைத்தாய் இருக்கும்
தேவரீரோ வென்றால் -ப்ராஹ்மணோஸ்ய முக மாசீத் பாஹூ ராஜன்ய க்ருத-யூரூத தஸ்ய யத்வைச்ய -பத்ப்யாம் சூத்ரோ அஜாயத-
என்கிறபடியே ஷாத்ரியாதிகளான சிறந்த வர்ணன்களுக்குப் பிறப்பிடமாய் இருப்பீர் –

ஸூமநோ மநோஜ்ஞ-
நாயந்தே
பர்வதமோ வென்று பார்த்தால் நாநா விதங்களான புஷ்பங்களாலே அழகியதாய் இருக்கும் –
தேவரீரோ வென்றால் சுத்த அந்தகரணர்களான வித்வான்களுக்கு மநோ ஹரராய் இருப்பீர்
அன்றியே புஷ்பங்களாலே அலங்கரிக்கப் பட்டு மநோ ஹரராய் இருப்பீர் –

சத்வ்ருத்த சங்க சமதிஷ்டித பார்ச்வதேச –
நாயந்தே
பர்வதமோ வென்று பார்த்தால் சத்வ்ருத்தரான தபஸ்வி ஜனங்களாலே அதிஷ்டிக்கப் பட்ட பார்ச்வ பிரதேசங்களை யுடையதாய் இருக்கும் –
தேவரீரோ வென்றால் சத்வ்ருத்தர்களான சாத்விக ஜாதியராலே சேவிக்கப் பட்டு இருக்கிற அழகு ஒலக்கத்தை யுடையராய் இருப்பீர்

சைலாத்மநா ஸ்புரசி ரங்க மஹீச்வர தவம் –
ஆக இப்படி அழகிய மணவாளப் பெருமாள் என்பதொரு அபி நவ சைலமானது ஆஸ்ரிதரை வாழ்விக்கைக்கு
ஒருப்பட்டு நின்ற நிலை போலே இந்நிலை இருந்தது –

———————————————————————————————————-

அசேஷ சாபூர்த்திம் விததம சேஷைஸ் ஸ்வ விபவை
பிரசித்த் யத் கல்யாணம் ப்ரகட தர பீதாம்பர ருசிம்
க்ருதஸ் வாஸ்த்யோத்சே கான்நிகில ஸூ மன ப்ரீதி ஜநகம்
பவந்தம் மன்யேஹம் ஸூ ரசி கரிணம் ரங்க ந்ருபதே–ஸ்லோகம் -12–

நாயந்தே
தேவரீர் –ஏகோ ஹவை நாராயண ஆஸீத் ந ப்ரஹ்மா நேசான நேமே த்யாவா ப்ருத்வீ -என்றும்
சதேவ சோம்யே தமக்ர ஆஸீத் ஏக மேவாத்விதீயம் -என்றும்
அசாத்வா இதமஆக்ரா ஆஸீத் -என்றும்
தத்தேகம் தாஹ்ய வ்யாக்ருத மாசீத் -என்றும்
ஹந்தாஹி மிமாச்திஸ்ரோ தேவதா அநேன ஜீவேநாத்மா நானுப்ரவிச்ய நாம ரூபே வ்யாகரவாணி -என்றும்
ப்ரஹ்மாதிஷூ ப்ரலீதேஷூ நஷ்டே ஸ்தாவர ஜங்கமே ஏகஸ் திஷ்டதி விச்வாத்மா சது நாராயண பிரபு -என்றும் –
எதௌ த்வௌ விபுதச் சேஷ்டௌ ப்ரசாத க்ரோத ஜௌ ஸ்ம்ருதௌ–ததா தர்சிது பந்தாநௌ சிருஷ்டி சம்ஹார காரகௌ-என்றும்
ஒன்றும் தேவும் உலகும் உயிரும் மற்றும் யாதும் இல்லா வன்று நான்முகன் தன்னோடு தேவர் உலகோடு உயிர் படைத்தான் -என்றும்
செய்ய தாமரைக் கண்ணனாய் உலகு எழும் உண்ட அவன் கண்டீர் வையம் வானம் மனிசர் தெய்வம் மற்றும் மற்றும் மற்றும் முற்றுமாய் -என்றும்
சொல்லுகிறபடியே நிமித்த உபாதாச சஹாகாரிகள் என்கிற த்ரிவித காராணங்களும் தானேயாய் –

அதிஷ்டாத்ரந்தரத்தை அபேஷியாமையாலே நிமித்தமும் –
ஸூஷ்ம சித் அசித் விசிஷ்டம் ஆகையாலே உபாதாநமும் –
கலாதியான சமஸ்த வஸ்துக்களுக்கும் அந்தர்யாமியாய்க் கொண்டு ப்ரேரகர் ஆகையாலே சஹகாரி காரணுமுமாய் –
ஐததாத்ம்யமிதம் சர்வம் -என்றும் -சர்வம் கல்விதம் ப்ரஹ்ம தஜ்ஜலா நிதி சாந்த உபாசீத் -என்றும்
சர்வ கத்வாத நந்தச்ய ச ஏவாஹமவஸ்தித –மத்தஸ் சர்வேமஹம் சர்வம் மயிசர்வம் சநாதநே -என்றும்
நிற்கின்றது எல்லாம் நெடுமால் -என்றும்
பண்டை நான்மறையும் வேள்வியும் கேள்விப் பதங்களும் பதங்களின் பொருளும் பிண்டமாய் விரிந்த பிறங்கு ஒளி அனலும்
பெருகிய புனலொடு நிலனும் கொண்டல் மாருதமும் குரை கடல் ஏழும் ஏழு மா மலைகளும் விசும்பும் அண்டமும்
தானே நின்ற வெம்பெருமான் அரங்க மா நகர் அமர்ந்தான் -என்றும் சொல்லுகிறபடியே –ஸ்தூல சித் அசித் விசிஷ்டமான காரியமும் தானேயாய்
அசித விசேஷிதான் ப்ரலய சீமனி சம்சாத கரண கலே பரைர் கடயிதும் தயமாநமநா -என்கிறபடியே
அசித் கல்பங்களான ஆத்மாக்களை தயையாலே கரண களேபரங்களோடு கூட சிருஷ்டித்து அருளிற்று –

இப்படி ஸ்ருஷ்டமான ஜகத்திலே- பரித்ராணாய சாதுநாம் விநாசாய ச துஷ்க்ருதாம் தர்ம சம்ஸ்தாப நார்ததாய சம்பவாமி யுகே யுகே -என்றும் –
வேண்டித் தேவர் இரக்க வந்து பிறந்ததும் -என்றும்
நீள் கடல் சூழ் இலங்கைக் கோன் தோள்கள் தலை துணி செய்தான் -என்றும்
சொல்லுகிறபடியே ஆஸ்ரிதர்களுக்கு இஷ்ட ப்ராப்தியையும் அநிஷ்ட நிவ்ருத்தியையும் பண்ணுகைக்கு அவதீர்ணரான
தேவரீருக்கு பர்வதாதிகளும் திரு மேனி என்று சுருதி ச்ம்ருதிகளிலே பிரதி பாதிக்கப் பட்டு இரா நின்றது
விஷ்ணு பர்வதா நாமதிபதி -என்றும் மேரு ரூபாச்ச விஷ்ணோ -என்றும்
-செக்கர் மா முகில் உடுத்து மிக்க செஞ்சுடர்ப் பரிதி சூடி அஞ்சுடர் மதியம் பூண்டு பல சுடர் புனைந்த பவளச் செவ்வாய்த்
திகழ் பசுஞ்சோதி மரகதக் குன்றம் -என்றும் திருமாலுரு வொக்கும் மேரு -என்றும் சொல்லுகையாலே
த்ரை லோக்ய ஆதாரமான மஹா மேருவும் தேவரீரே யாகையாலே
திருமஞ்சனத்திற்கு எழுந்து அருளி இருக்கும் தேவரீரை மஹா மேரு வென்று விண்ணப்பம் செய்யலாய் இரா நின்றது -எங்கனே என்னில் –

அசேஷ சாபூர்த்திம் விததம சேஷைஸ் ஸ்வ விபவை-
நாயந்தே
தேவரீர் மத்ச்யாதி ப்ராதுர்பாவ ரூப விபவங்களாலே -ஆயுர் ஆரோக்யம் அர்த்தாமச்ச போகாம்ச்சை வாநுஷங்கிகாத் –
ததாதி த்யாயதாம் நித்யம் அபவர்க்க ப்ரதோ ஹரி -என்றும்
சகலபல ப்ரதோ ஹி விஷ்ணு -என்றும் -வேண்டிற்று எல்லாம் தரும் கோதில் என் வள்ளல் -என்றும் சொல்லுகிறபடியே
சகல ஆஸ்ரிதர்களுடைய ஆபீஷ்டங்களையும் கொடுக்கையாலே அசேஷாசா பூர்த்தியையும் பண்ணிக் கொண்டு எழுந்து அருளி இருந்தீர்
மகா மேருவோ வென்றால் ஸ்ருங்கங்கள் ஆகிற ஸ்வ விபவங்களாலே எல்லாத் திக்குகளையும் நிறைத்துக் கொண்டு நின்றது –

பிரசித்த்யத் கல்யாணம் –
தேவரீர் பராஸ்ய சக்திர் விவிதைவ ச்ரூயதே -என்றும் -சத்யகாம சத்யசங்கல்ப -என்றும்
சமஸ்த கல்யாண குணாத் மகோசௌ -என்றும் -அந் நலனுடை யொருவன் -என்றும் சொல்லுகிறபடியே
பிரசித்தமான கல்யாண குணங்களை யுடையராய் இரா நின்றீர்
மகா மேருவோ வென்றால் மிகவும் உண்டாகா நிற்கிற சௌவர்ண ரூபத்தை யுடைத்தாய் இரா நின்றது –

ப்ரகட தர பீதாம்பர ருசிம் –
தேவரீர் -மஹாரஜநம் வாஸ -என்றும் -பீதகவாடை யுடை தாழ-என்றும் -அந்திபோல் நிறத்தாடையும் -என்றும் சொல்லுகிறபடியே
சாத்தின திருப் பீதாம்பரத்தை யுடையராய் இருந்தீர்
மகா மேருவோ வென்றால் தன் நிறத்தாலே ஆகாசத்தை எல்லாம் பொற்கென்னப் பண்ணிக் கொண்டு இரா நின்றது –

க்ருதஸ் வாஸ்த்யோத்சே கான்நிகில ஸூ மன ப்ரீதி ஜநகம்
தேவரீர் -ந ச புனராவர்த்ததே -என்றும் ப்ரஹ்ம வேத ப்ரஹ்மைவ பவதி -என்றும்
அத்யாபி ந நிவர்த்தந்தே த்வாசத சாஷர சிந்தகா -என்றும் -புணைக் கொடுக்கிலும் போக வொட்டாரே -என்றும்
தம்மையே ஒக்க அருள் செய்வர் என்றும் சொல்லுகிறபடியே க்ரமத்தாலே இதர புருஷார்த்தங்களில்
வ்யாவ்ருத்தமான அநந்த ஸ்திர பல மோஷ புருஷார்த்தத்தை கர்ம ஞான பக்திகளிலும்
விலஷணமான பிரபத்தியில் நிஷ்டையை யுடையரான சாத்விகருக்குக் கொடுத்து அருளி அவருக்கு ப்ரீதி ஜனகருமாய் இருந்தீர்
மகா மேருவோ வென்றால் ஸ்வர்க்கத்தை அளாவும் படியான உயர்த்தியை யுடையதாகையாலே
எல்லா தேவர்களுக்கும் பிரியத்தைக் கொடுக்குமதாய் இருந்தது –

பவந்தம் மன்யேஹம் ஸூ ரசி கரிணம் ரங்க ந்ருபதே–
ரங்கா தீசனே ஆக இப்புடைகளாலே தேவரீரை மகா மேரு என்று விண்ணப்பம் செய்யலாய் இரா நின்றது –

—————————————————————————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பராசர பட்டர் திருவடிகளே சரணம் –
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Advertisement

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: