ஸ்ரீ பராசர பட்டார்யா ஸ்ரீ ரங்கேச புரோஹித
ஸ்ரீ வத்சாங்க ஸூத ஸ்ரீ மான் ஸ்ரேயசே மேஸ்து பூயசே-
பெருமாளை நதி மலை சமுத்ரம் கல்ப விருஷம் மேகம் சூர்யன் சந்தரன் -ஒன்றாக வருணித்து
ஸ்ருதி ஸ்ம்ருதி இதிஹாச புராணங்கள் காவ்யங்கள் அருளிச் செயல்கள் பூர்வாசார்யா ஸ்ரீ ஸூ கதிகள் மேற்கோள்கள் காட்டி
அமையப் பெற்ற திருமஞ்சனக் கட்டியங்கள்
ஸ்லோஹங்களும் அருளி அவற்றுக்கு ஸ்ரீ பராசர பட்டர் வ்யாக்டானங்களும் அருளிச் செய்து உள்ளார் –
அம்ருத பிரபவம் ப்ரபாப்ரபாவ
ப்ரஹதத்வான் தலசத் விலாச ஜாதம்
சகலம் சகலா நுமோத ஹேதும்
சசினம் த்வாம் கலயாமி ரங்க ராஜ –ஸ்லோஹம் 1-
நாயந்தே – ஸ்ரத்தயா தேவோ தேவத்வம் அஸ்நுதே -என்றும்
அஸ்ய ஈஸாநா ஜகதோ விஷ்ணு பத்நீ -என்றும் –
ஆநீதவாதம் ஸ்வதயா ததேகம் -என்றும் ஹ்ரீச்ச தே லஷ்மீச்ச பத்ன்யௌ-என்றும் ஸ்ரீ வத்ச வஷா நித்ய ஸ்ரீ என்றும்
சுவையன் திருவின் மணாளன் என்றும் சொல்லுகிறபடியே –ஸ்ரீ யபதியாய்
விஜ்ஞானமானந்தம் ப்ரஹ்ம -என்றும் -சந்தா நந்த சிதா நந்தம் -என்றும் -சுடரின்பம் -என்றும் சொல்லுகிறபடியே ஜ்ஞா நானந்த ஸ்வரூபனாய்
பராச்ய சக்தி விவிதைவச்ரூயதே ஸ்வாபாவிகீ ஜ்ஞாந பலக்ரியா ச -என்றும் –
தேஜோ பலைச்வர்ய மஹாவபோத ஸூ வீர்ய சக்த்யாதி குணைகராசி -என்றும்
ஈறில வணபுகழ் நாரணன் என்றும் சொல்லுகிறபடியே சமஸ்த கல்யாண குணாத் மகனாய்
பாருப -என்றும் இச்சாக்ருஹீதாபிமதோரு தேக -என்றும் -சுட்டுரைத்த நன் பொன் உன் திருமேனி ஒளி ஒவ்வாது என்றும் சொல்லுகிறபடியே
அதி விலஷண திவ்ய மங்கள விக்ரஹ விசிஷ்டராய் –
யஸ்ய சாயாம்ருதம் சேஷாஹி யஸ்ய ம்ருத்யு -என்றும் அச்யா மமச சேஷாஹி விபூதிருபயாத்மிகா -என்றும் –
கண்ணாவான் என்றும் மண்ணோர் விண்ணோர்க்கு -என்றும் சொல்லுகிறபடியே லீலா போக பரிகார பூத விபூதி த்வய பூஷிதராய்
இப்படி விலஷண ஸ்வரூப குண விக்ரஹ விபூதிகளை உடையராய் இருக்கையாலே அவாப்த சமஸ்த காமராய் இருக்கச் செய்தேயும் –
அளவிறந்த அனர்த்தக் கடலிலே அழுந்திக் கிடந்தது அலைகிற அகில சேதனர் திறத்தில் -அருளுடையவன் -என்னும்படி
ஆஜான சித்தமான அழகிய அருளாலே அவர்களுக்கு ஆஸ்ரயணீயாராகைக்காக -ஏவம் பஞ்ச பிரகார அஹம் ஆத்மநாம் பததாமத -என்றும்
விண் மீது இருப்பாய் மலை மேல் நிற்பாய் கடல் சேர்ப்பாய் மண் மீது உழல்வாய் இவற்றுள் எங்கும் மறைந்து உறைவாய் -என்றும் சொல்லுகிறபடியே
பரத்வாதி பிராகார பஞ்சகத்தைப் பரிக்ரஹித்து அருளின இடத்திலே
தமஸ பரஸ்தாத் -என்றும் -சேணுயர் வானத்து இருக்கும் -என்றும் அம்பச்ய பாரே -என்றும்
பாலாழி நீ கிடக்கும் பண்பை யாம் கேட்டேயும் காலாழும்-என்றும் சொல்லுகிறபடியே
பர வ்யூஹங்கள் தேச விப்ரக்ருஷ்டங்கள் ஆகையாலும் விபவங்கள் கதஸ் ஸ்வஸ் தானமுத்தமம் -என்றும் –
செய்து போன மாயங்களும் -என்றும் சொல்லுகிறபடியே விபவங்கள் கால விப்ரக்ருஷ்டம் ஆகையாலும்
யமாத்மா ந வேத யஸ்ய ஆத்மா சரீரம் -என்றும் கட்கிலீ என்றும் சொல்லுகிறபடியே அந்தர்யாமி கரண விப்ரக்ருஷ்டம் ஆகையாலும் –
இங்கன் இன்றிக்கே அர்ச்சாவதாரம் சர்வ பிரகார சந்நிக்ருஷ்டமாய்
அர்ச்சாவதார விஷயே மயாப் யுத்தேசதஸ் ததா
உக்தா குணா ந சக்யந்தே வக்தும் வர்ஷ சதைரபி -என்றும்
நெஞ்சினால் நினைப்பான் யவன் அவனாகும் நீள் கடல் வண்ணன் -என்றும் சொல்லுகிறபடியே –
அனவதிக்க சௌலப்யாதி கல்யாண குண கண சீமா பூமி யாகையாலும்
அர்ச்சா ரூபியாய்க் கொண்டே அகில ஆத்மாக்களையும் அங்கீ கரிக்கக் கடவோம் என்று திரு உள்ளம் பற்றி அருளி
பக்தர்களும் பகைவர்களும் பழ மொழி வாய் முனிவர்களும் பரந்த நாடும் சித்தர்களும் தொழுது இறைஞ்சத் திசை விளக்காய்
நிற்கின்ற திருவரங்கம் -என்கிறபடியே
அஜ்ஞ சர்வஜ்ஞ விபாகம் அற அசேஷ லோக சரண்யராய்க் கொண்டு திருவரங்கப் பெரு நகரிலே
அழகிய மணவாளப் பெருமாளாய்க் கொண்டு எழுந்து அருளி இருக்கிற தேவரீர்
இப்பொழுது திருநாள் என்கிற வ்யாஜத்தாலே திருவடி நிலை கோத்துப் புறப்பட்டு அருளி பஹூ வித கடாஷ அம்ருத வர்ஷத்தாலே
சேதனருடைய ப ஹூதா சந்தத துக்க வர்ஷத்தை மாற்றி அருளின விடாய் அறத் திரு மஞ்சனமாடி யருளி
மங்களாங்க ராகசங்கி திவ்யாங்க ராகராய் -ஸூ ர்யாம் சுஜா நிதம் தாபம் நிதயே தாராபதி சமம் -என்னும்படி கொடும் கதிரோன் கதிரால்
வந்த தாபத்தை அமுதுறு பசுங்கதிராலே அந்தி காவலன் -ஆற்றுமா போலே சர்வ ஜன தாபத்ரய நிர்வாபகராய்க் கொண்டு எழுந்து அருளி நிற்கிற நிலை
பத்ம உல்லாச கரத்தவ அதோஷா கரத்தவ –சக்ரவாக பஷிக்களுக்கு உகப்பாக இருத்தல் -ரதாங்க ப்ரியத்வாதிகளாலே
சந்திரனில் காட்டில் வைஷம்யம் உண்டாய் இருக்கச் செய்தேயும்
ஒரோ வகையாலே சந்த்ரனோடு சாம்யம் விண்ணப்பம் செயலாய் இரா நின்றது -அது எங்கனே என்னில்-
அம்ருதப்ரபவம்
நாயந்தே -சந்த்ரனானவன் ஸூ தா நிதியாகையாலே தேவ போக்யமான அம்ருததுக்கு பிறப்பிடமுமாய்
அங்கன் அன்றிக்கே அம்ருத சப்த வாச்யமான பயோநிதியின் பயஸ் சைப் பிறப்பிடமாய் உடையவனாய் இருக்கும்
தேவரீர் -அம்ருதஸ் யைஷ சேது -என்றும் -மோஷ மிச்சேத் ஜனார்த்தநாத் என்றும் –
வீடாம் தெளி தரு நிலைமையதொழிவிலன் -என்றும் சொல்லுகிறபடியே
அம்ருத சப்த வாச்யமான மோஷத்திற்கு நிர்வாஹகருமாய்
ததோ போஸ்ருஜத -என்றும் -அப ஏவ ச சர்ஜாதௌ-என்றும்
தானோர் பெரு நீர் தன்னுள்ளே தோற்றி -என்றும் சொல்லுகிறபடியே
அம்ருத சப்த வாச்யமான காரண ஜலத்துக்கு உத்பாதகருமாய் இரா நின்றீர் –
ப்ரபாப்ரபாவ ப்ரஹதத்வான் தலசத் விலாச ஜாதம்-
நாயந்தே
சந்த்ரனானவன் -ருந்தே சர்வதிசாம் நிரந்தர தமஸ் தந்த்ராளுதாம் சந்த்ரமா -என்கிறபடியே
தன்னுடைய சந்த்ரிகா வைபாவத்தாலே நிரஸ்தமான-பணிவளர் செங்கோல் இருள் வீற்று இருந்து பார் முழுதும் -என்னும் படியான
அந்தகாரத்தினுடைய விளங்கா நின்ற விஜ்ரும்பணத்தை உடையனாய் இருப்பன் –
தேவரீரும் சோபயன் தண்ட காரண்யம் தீப்தேன ஸ்வேன தேஜஸா -என்றும்
நிலவும் சுடர் சூழ் ஒளி மூர்த்தி என்றும் -தேஷோமே வானுகம்பார்த்த மஹா மஜ்ஞானஜம் தம
நாசயாம் யாத்மா பாவஸ்தோ ஜ்ஞாநதீ பேன பாஸ்வதா -என்றும் –
அருள் புரிந்த சிந்தை யடியார் மேல் வைத்துப் பொருள் தெரிந்து கான் குற்ற வப்போது இருள் தெரிந்து நோக்கினேன் நோக்கி -என்றும்
சொல்லுகிற படிஎயான திவ்ய விக்ரஹ பிறப்பை யாளும் -ஸ்வரூப ப்ரபையான சங்கல்பத்தாலும்
தூரதோ நிவாரிதமான ஆஸ்ரிதர் உடைய பாஹ்ய அபாஹ்ய அந்த காரங்களை யுடையராய்
த இமே ஸ்ரீ ரங்க ஸ்ருங்கார தே பாவா யௌவன கந்தின -என்னும்படி
விளங்கா நின்றுள்ள யௌவன க்ருத திவ்ய விலாசத்தை யுடையருமாய் இரா நின்றீர்
சகலம்
சந்த்ரனானவன் ஸ்வ அம்ச ரூபமான ஷோடச கலைகளோடு கூடி இரா நிற்பன்
தேவரீர் விசேஷ நிரூபகத்தாலே கலாசப்த வாசான பிராட்டியோடும் திவ்யாயுதங்களோடும்
வேதைச்ச சர்வை ரஹமேவ வேத்ய -வேதாந்தக்ருத் வேத விதவ சாஹம் -என்றும் சொல்லுகிறபடியே
கலா சப்த வாச்யங்களான வேதங்களோடும் கூடி இரா நின்றீர் –
சகலா நுமோத ஹேதும் –
சந்த்ரனானவன் த்ரிஜகதாமாநந்த நாடிந்தம -என்கிறபடியே -சகலர்க்கும் ஆனந்த ஹேதுவாய் இரா நிற்பன்
தேவரீர் -சர்வ சத்வ மநோ ஹர -என்கிறபடியே சர்வ ஜன சம்மோத காரண பூதருமாய் -ப்ராஹ்மண ப்ரிய-என்கிறபடியே
விசேஷித்துக் கலா சப்த வாச்யமான அத்யாத்ம சாஸ்த்ரத்திலே நிலை நின்றவர்களுக்கு ஆனந்தயாதி என்கிறபடியே
ஆனந்த ஹேது பூதருமாய் இரா நின்றீர் –
சசினம் த்வாம் கலயாமி ரங்க ராஜ —
இதம் ரங்க சந்திர -என்று அறிவுடையாரால் அனுபபிக்கப்பட்ட தேவரீருடைய சந்திர சாம்யத்தை இப்போது அடியோங்களின்
ஆனந்த சாகரம் அபிவ்ருத்த மாம்படியாகவும் சேவமான ஜன லோசன சகோரங்கள் சரிதார்த்தங்கள் ஆம்படியாகவும்
ஸ்ரீ ரங்கா பர பர்யாயாமான விஷ்ணு பதத்திலே வெளியிட்டுக் கொண்டு நிற்கிற நிலை போலே இந்நிலை இருந்தது –
————————————————–
அநிசம் குமுதம் விகாஸ யந்தம்
சததம் பூர்ண மஹர் நிசம் ச த்ருச்யம்
அனுபப்லவ மத்ய ரங்க ராஜம்
மநுதே சந்த்ரமசம் ஜநோநுமாந்யம் –ஸ்லோகம் -2-
நாயந்தே
ஞானச் சோதி என்கிறபடியே அகில ஹேய ப்ரத்ய நீகராய் கல்யாணைகதானராய் -ஸ்வ இதர சமஸ்த வஸ்து விலஷணராய்-
எஞ்ஞான்றும் எங்கும் ஒழிவற நிறைந்து நின்ற மெய்ஞ்ஞானச் சோதி -ஸ்வரூபராய் இருக்கும் தேவரீர்
அசித விசேஷிதான் ப்ரலய சீமனி சம்சரத கரண களேபரைர் கடயிதும் தயமான மநா -என்கிறபடியே
தயாமானமானாவாய்க் கொண்டு அநாதியான கர்ம பிரவாஹத்தாலே சதுர்வித சரீரங்களிலும் பிரவேசித்து
சதுர்தச புவனங்களிலும் தட்டித் திரிகிற சேதனர்
த்ரிவித சரீரங்களை த்யஜித்து மனுஷ்ய சரீரத்தைக் கரண த்ரயத்தாலும் கால த்ரயத்தாலும் கர்ம த்ரயத்திலே அந்வயிப்பித்து
அசித் த்ரயத்துக்கு அவ்வருகான தான் குண த்ரயத்தாலே பத்தனாய் ஷூ பிதனாய் ஆசா த்ரயத்திலே-மண் பெண் பொன் ஆசைகள்- அகப்பட்டுக் கொண்டு
அஜ்ஞனாய் தத்வத்ரயத்தை அறியாதே தாபத்ரயத்தாலே தப்தனாய் இருக்க அவனை
-ச ப்ரஹ்மா ச சிவஸ் சேந்த்ரஸ் சோஷர பரம்ஸ் ஸ்வராட் -என்கிறபடியே
தேவதாந்திர த்ரயத்துக்கு சேஷியாய் மஹிஷீ த்ரயத்திற்கும் வல்லபனாய் –
ஆத்ம த்ரயத்துக்குக் காரண பூதனாய் சதா ஆனந்த ப்ரிதனாய் தோஷ கந்த ரஹிதனாய்-த்ரிவித காரண வஸ்துவாய் -ஸ்ரீ மானான தேவரீர்
நாயமாத்மா பரவசநேன லப்ய -ந மேதயா ந பஹூநா ஸ்ருதேன
யமேவைஷ வருணுதே தேன லப்ய த்ச்யைஷ ஆத்மா விவ்ருணுதே தநூம் ஸ்வாம் -என்கிறபடியே
விசேஷ கடாஷத்தினாலே விரோதித்ரயத்தை விடுவிக்கக் கோலி-ஸூக்ருத த்ரயத்தை -யாத்ருச்சிகம் ஆநுஷங்கிகம் ப்ராசங்கிகம் -தொடுமவனாக்கி
ஆகார த்ரயத்தை யுடைய ஆசார்ய உபதேச்யமான மந்திர த்ரயத்தாலே மாசருத்துப்
பதத்ரயத்தை அனுபவிப்பித்து அஜ்ஞான த்ரயத்தை தவிர்ப்பித்து
ஆகார த்ரயத்திலே அன்வயிப்பித்து பர்வ த்ரயத்தாலே பாகமாக்கி லோக த்ரயத்தை உபேஷித்துப்
பாத த்ரயத்திலே கொண்டு போய் -சந்மந்திர த்ரயத்தாலும் மோஷ உபாய போகத்தைப் புஜிப்பிக்க வேணும் என்று திரு உள்ளம் பற்றி
ததாபி புருஷாகாரோ பக்தா நாம் த்வம் பிரகாசசே -என்றும் -அர்ச்சாத்மா நாவதீர்ணோசி பக்தானுக்ரஹ காம்யயா -என்கிறபடியே
அடியோங்களுக்கு அர்ச்சாவதார ரூபியாய் -என்கிறபடியே
ஆதி ராஜ்ய மதிகம் புவ நா நாம் ஈசாதே பிசு நயன் கில மௌளி என்கிறபடியே
சகல புவன ஆதி ராஜ்ய ஸூ சகமாய்க் கொண்டு
குடைந்து வண்டுண்ணும் துழாய் முடியும் -அதனுள்ளே அடங்கித் தோற்றுகின்ற-மை வண்ண நறும் குஞ்சிக் குழல்களும்
ரூபா ஔதார்ய குணை பும்ஸாம் திருஷ்டி சித்த அபஹாரிணம்-என்கிறபடியே மையல் ஏற்றி மயக்குகிற மாய மந்திரமான திரு முக மண்டலமும்
ஒரு மாநிலம் எழுமால் வரை முற்றும் உண்ட கண்டமும் -கற்பகக் காவான நரபல தோள்களும்
மடமகள் குயமிடை தடவரை யகலமும் அல்குலும் சிற்றிடையும்
அரைச் சிவந்த வாடையும் தேனே மலரும் திருப் பாதமுமாய்க் கொண்டு சந்நிதி பண்ணி
தேவரீர் சந்தன குங்கும பங்கா லிப்த சர்வாங்கராய் எழுந்து அருளி இருக்கும் நிலை
சந்த்ரனோடே வ்யதிரேகம் விண்ணப்பம் செயலாய் இரா நின்றது -எங்கனே என்னில் –
அநிசம் குமுதம் விகாஸ யந்தம்
நாயந்தே
சந்த்ரனானவன் ராத்ரியிலே குமுத சப்த வாச்யனான ஆம்பல் பூவை அலர்த்துமவனாய் இருப்பவன்
பார் வண்ண மடமங்கை பத்தராய் இருக்கும் தேவரீர்
குணா ரூபா குணாச்சாபி ப்ரீதிர் பூயோ வ்யவர்த்த வைதேஹ்யா பிரியமா காங்கஷன் ஸ்வம் ச சித்தம் விலோபயன் -என்றும்
தடம் பெரும் தோள் ஆரத் தழுவும் பார் என்னும் மடந்தையை மால் செய்கின்ற மால் -என்றும் சொல்லுகிறபடியே
கு -சப்த வாச்யையான பூமி பிராட்டிக்கு முத் சப்த வாச்யமான ஹர்ஷத்தை எப்பொழுதும் வ்ருத்தி பண்ணி அருளா நின்றீர்-
சததம் பூர்ணம்
நாயந்தே
சந்த்ரனானவன் ஒரு நாள் பூர்ணனாய் மற்றைப் போது அபூர்ணனாய் இருப்பான்
தேவரீர் -இதம் பூர்ணமத பூர்ணம் பூர்ணாத் பூர்ணாத் முத்ரிச்யதே –பூர்ணஸ்ய பூர்ண மாதாய பூர்ண மேவாவ சிஷ்யதே -என்கிறபடியே
சததம் பூரணராய் இரா நின்றீர்
அஹர் நிசம் ச த்ருச்யம் –
நாயந்தே –
சந்த்ரனானவன் ராத்ரி காலங்களிலே த்ருச்யனாய் இருப்பவன்
தேவரீர் வரதஸ் சர்வ பூதானாம் அத்யாபி பரித்ருச்யதே என்கிறபடியே
அபீஷ்ட வரதராய் எல்லோராலும் எப்பொழுதும் காணப் படுபவராய் இருந்தீர் –
அனுபப்லவம்
நாயந்தே
சந்த்ரனானவன் ராஹூ க்ரஸ்தன் ஆகையாலே ஸோபப்லவனாய் -கேடு அழிவு -இரா நின்றான் –
தேவரீர் ராஹோச் சிரச்ச சிச்சேத் தேவா நாம் ப்ரபுரச்யுத -என்கிறபடியே
ராஹூ வைத் தலை யறுத்துப் போடுமவர் ஆகையாலே அனுபப்லாவராய் இருந்தீர் -அழிவில்லாதவர்-
அத்ய ரங்க ராஜம் மநுதே சந்த்ரமசம் ஜநோநுமாந்யம்
எல்லாக் காலத்திலும் குமுதோல்லா சாகரராய் -எல்லாக் காலத்திலும் பூரணராய் எல்லாக் காலத்திலும் காணப் படுபவராய் –
ஒருக்காலத்திலும் க்ரசிக்கப் படாதவர் ஆகையாலே -சந்த்ரே த்ருஷ்டி சமாகம -என்று நாம் சொன்னால் போலே
நீங்களும் நம்முடைய திவ்ய மங்கள விக்ரஹத்திலே வைத்த கண் வாங்காத நம்மை யனுபவிக்கக் கடவீர்
நாம் புஷ்ணாமி சௌஷதீஸ் சர்வா– சோமோ பூத்வார சாத்மக -என்று சொன்ன படியே ரசாத்மக சந்திர சரீரகனாய்
ஔஷதிகளை ஆப்யாயனம் பண்ணுகிறாப் போலே உங்களையும் இவ்வர்ச்சா ரூபமான சரீரத்தாலே
ஆப்யாயனம் -போஷித்தல் -பண்ணக் கடவோம் என்று புறப்பட்டு நிற்கிற நிலை போலே இருந்தது –
————————————————
குங்குமாருண முதஞ்சித ஸ்ரியம்
கோமலாருண சரோஜா சம்ஸ்திதம்
ரங்க மந்திர தமோ நிவாரணம்
சங்கதே தபநதீதிதிம் ஜன –ஸ்லோகம் -3-
நாயந்தே
ஆதித்யனோ வென்று பார்த்தால் குங்கும வர்ணனான அருணனை உடையனாய் இருப்பன்
தேவரீரோ வென்று பார்த்தால் சாத்தின குங்குமத்தால் உண்டான சிவந்த நிறத்தை யுடையராய் இருப்பீர் –
உதஞ்சித ஸ்ரியம் –
நாயந்தே
ஆதித்யனோ வென்று பார்த்தால் பிரபாகரன் ஆகையாலே மிகுந்த அழகாய் யுடையனாய் இருப்பன்
தேவரீரோ வென்று பார்த்தால் சம்ச்லேஷ ஸ்லாக்யையான நாச்சியாரை யுடையராய் இருப்பீர் –
கோமலாருண சரோஜா சம்ஸ்திதம்
நாயந்தே
ஆதித்யனோ வென்று பார்த்தால் அழகியதான அருண அரவிந்தத்திலே இரா நிற்பன்
தேவரீரோ வென்று பார்த்தால் கோமல அருண பத்மாசனஸ்தராய் இருப்பீர்-
தமோ நிவாரணம் –
நாயந்தே
ஆதித்யனோ வென்று பார்த்தால் லோகத்தில் அந்தகார நிராசத்தைச் செய்யுமவனாய் இருப்பன்
தேவரீரோ வென்று பார்த்தால் சகல ஆத்மாக்கள் யுடையவும் தமஸ் சப்த வாச்யமான அஜ்ஞான நிவர்த்தகராய் இருப்பீர் –
ரங்க மந்திர–சங்கதே தபநதீதிதிம் ஜன —
ஆக இப்படி ஆதித்யாநாம் அஹம் விஷ்ணு என்கிறபடியே தேவரீர் ஆதித்யனான பிரகாரத்தை ஆதித்ய சாதர்ம்யத்தாலே
அடியோங்களுக்கு இத்திரு மஞ்சன சமயத்திலே வெளியிட்டுக் கொண்டு நிற்கிற நிலை போலே இருந்தது –
——————————————————–
பவந்தம் ஸ்ரீ மந்தம் ஹசித கலி காலாங்க்ருதமிஹ
அசோகம் குர்வந்தம் பிரமரஹித மத்யுத்சவகரம்
ஸூகஸ் பர்ச்ச லிஷ்யத் பவநஜ மஹா நந்த பரிதம்
வசந்தம் ரங்கே சப்ரகட ஸூ மனஸ்கம் மநுமஹே –ஸ்லோகம் -4-
நாயந்தே
சர்வம் கல்விதம் ப்ரஹ்ம -என்றும் -நேஹ நா நாஸ்தி கிஞ்சன -என்றும் -ஐததாத்ம்யமிதம் சர்வம் என்றும்
யஸ் யாத்மா சரீரம் -யஸ்ய ப்ருத்வீ சரீரம் -என்றும் தாநி சர்வாணி தத்வபு -என்றும் யாவராய் நிற்கின்றது எல்லாம் நெடுமால் -என்றும்
உடன் மிசை யுயிர் எனக் கரந்து எங்கும் பரந்துளன் -என்றும் சொல்லுகிறபடியே
சர்வ சரீரியாய் சர்வ அந்தர்யாமியாய் எழுந்து அருளி இருக்கிற தேவரீர்
நம்முடைய சரீர பூதர்களான சர்வ பிராணிகளும் இக்காலத்தில் ஆதித்யனுடைய அதி தீஷணங்களான கிரணங்களாலே
மிகவும் சந்தப்தராய் இரா நின்றார்கள் –
தேவரீர் -மாதா பிபதி கஷாயம் ஸ்தநந்தயோ பவதி நீ ரோக -என்கிற ந்யாயத்தாலே -இவர்களுடைய தாபம் போம்படி
சிசிரோபசாரங்களைக் கொள்ளக் கடவோம் என்று திரு உள்ளம் பற்றி இப்போது திரு மஞ்சனம் கண்டு அருளி
சந்தன குங்கும பங்கா லங்க்ருத சர்வகாத்ரராய் எழுந்து அருளி இருக்கிற நிலை
மதுச்ச மாதவச்ச வாசந்திகா புத்ரௌ என்கிறபடியே தேவரீர் இளையவர் ஆகையாலே
வசந்த காலத்தோடு ச்லேஷை விண்ணப்பம் செய்யலாய் இரா நின்றது -எங்கனே என்னில்-
பவந்தம் ஸ்ரீ மந்தம் –
நாயந்தே
வசந்த காலமானது -சைத்ர ஸ்ரீ மான் அயம் மாஸ -என்கிறபடியே மற்றுள்ள காலங்களில் காட்டில் பெரிதும் சபையை யுடையதாய் இருக்கும்
தேவரீரும்- ஸ்ரிய ஸ்ரியம் -என்றும் -திருவுக்கும் திருவாகிய செல்வா தெய்வத்துக்கு அரசே -என்றும் சொல்லுகிற படியே
சர்வஸ்மாத பரதவ ஸூ சகமாய் இருக்கிற ஸ்ரீ யபதித்வத்தை யுடையராய் இருந்தீர் –
ஹசித கலி காலாங்க்ருதமிஹ அசோகம் குர்வந்தம் பிரமரஹிதம்
நாயந்தே
வசந்த காலமானது அசோகம் என்கிற மரத்தை வண்டுகளுக்கு பூம் கொத்துக்களாலே அலங்க்ருதமாய்ப் பண்ணா நிற்கும்
தேவரீரும் -கலௌ கிருதயுகம் தஸ்ய -என்றும் –
கலியுகம் ஒன்றும் இன்றிக்கே தன்னடியார்க்கு அருள் செய்யும் -என்றும் சொல்லுகிறபடியே
ஹசித கலி காலாங்க்ருதமிஹ அசோகம் குர்வந்தம் -அதி ஷேபிக்கப் பட்ட கலி காலத்தை யுடைத்தாய்
நித்யம் பிரமுதிதாஸ் சர்வே யதாக்ருத யுகே ததா -என்னும் படி க்ருத யுகத்திலே போலவே துக்க ரஹிதராய்ப் பண்ணி அருளா நின்றீர் –
அத்யுத்சவகரம் –
நாயந்தே
வசந்த காலமானது வசந்தே ஜ்யோதிஷா யஜேத -என்கிறபடியே ஜ்யோதிஷ்டோமாதிகளான அத்யுத்சவங்களைப் பண்ணா நிற்கும்
தேவரீரும் -ப்ரமரஹித மத்யுத்சவகரம் -என்றும் -கலக்கமில்லா நல் தவ முனிவர் கரை கண்டோர் -என்றும்
எண்ணாதனகள் என்னும் நன் முனிவர் இன்பம் தலை சிறப்ப -என்றும் சொல்லுகிற படியே
ப்ரம ரஹிதர்களான பராங்குச பரகலாதி களுடைய திரு உள்ளத்திற்கு அதி ஹர்ஷங்களைப் பண்ணி அருளா நின்றீர் –
ஸூகஸ் பர்ச்ச லிஷ்யத் பவநஜ மஹா நந்த பரிதம்
நாயந்தே
வசந்த காலமானது -அங்கைரதங்க தப்தை ரவிரல் மா லிங்கிதும் பவன –என்றும் -சக்யமரவிந்த ஸூ ரபி -என்கிறபடியே
ஸூக ஸ்பர்சமாய்க் கொண்டு எல்லாவற்றையும் அலாவி வருகிற மந்த மாருதத்தாலே உண்டான ஆனந்தத்தை உடைத்தாய் இருக்கும்
தேவரீர் ஸ்ரீ ராமாவதாரத்திலே கண்டேன் பிராட்டியை என்று போந்த திருவடியை
ஏஷ சர்வ ஸ்வ பூதஸ்து பரிஷ்வங்கோ ஹநூமத–மயா கால மிமம்ப்ராப்ய தத்தம் தஸ்ய மஹாத் மன -என்றும்
வாத மா மகன் மர்க்கடம் விலங்கு மற்றோர் சாதி என்று ஒழிந்திலை உகந்து காதலாதரம் கடலினும் பெருகச் செய்தகவினுக்கு
இல்லை கைம்மாறு -என்றும் சொல்லுகிற படியே
கடலைக் கடந்த திருவடியாலும் கடக்க ஒண்ணாத படி அனுகூல ஸ்பர்சனாய்க் கொண்டு ஆலிங்கனம் பண்ணப் பெற்ற திருவடியினால்
உண்டாகிய அலங்கநீயமான பெரிய ஆனந்தத்தாலே நிர்ப்பரராய் எழுந்து அருளி இருந்தீர் –
ப்ரகட ஸூ மனஸ்கம் –
நாயந்தே
வசந்த காலமானது புண்ய புஷ்பித காநந-என்கிறபடியே -மற்றுள்ள காலங்களுக்கு எல்லாம்
பிரதானமாய் பிரகடமாய் -பிரகாசமாய் -பூ முடி சூடி இரா நிற்கும்
தேவரீரும் -ச நோ தேவச்சுபயா ஸ்ம்ருத்யா சம்யுநக்து -என்றும் -ச்ரேயோ த்யாயீத கச்சான -என்றும் சொல்லுகிறபடியே
அதி பிரசித்தமாய் அதி சோபனகரமாய் இரா நின்ற திரு உள்ளத்தை யுடையராய் இருந்தீர் –
ரங்கேச பவந்தம் வசந்தம் மநுமஹே —
தேவரீருடைய இந்நிலை அர்ஜுனனுக்கு சாரதியேத் திருத் தேர்த் தட்டிலே எழுந்து அருளி இருந்து
-ருதூநாம் குஸூ மாகர -என்று அர்ஜுனனுக்கு உபதேசித்த ரகஸ்ய அர்த்தத்தை இப்போது
அடியோங்களுக்கு வெளியிட்டுக் கொண்டு நிற்கிற நிலை போலே இருந்தது –
———————————————————————————————–
ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பராசர பட்டர் திருவடிகளே சரணம் –
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply