கண்ணி நுண் சிறுத் தாம்பு -1-கண்ணி நுண் சிறுத்தாம்பினால் கட்டுண்ண — ஸ்ரீ தம்பிரான் படி -அருளிச் செய்த வியாக்யானம் –

அவதாரிகை –

ஆழ்வாருடைய நிரதிசய போக்யதையைச் சொல்லுகிறது -ப்ராப்ய காஷ்டையான ஆழ்வாரைப் பற்றுகிற இவர்
பிரதம அவதியான பகவத் விஷயத்திலே இழிவான் என் என்னில்
ஆழ்வாருடைய போக்யாதிசயம் தோற்றுகைக்காகவும் அவருடைய முக மலர்த்தி தோற்றுகைக்காகவும்
அவர் உகக்கும் பகவத் விஷயம் ஆகையாலும் பேசுகிறார் –

சரம அதிகாரி சேகரர் ஆகிறார் இவர் -ஆழ்வார் திருவடிகளே தாரகாதி -யாகக் கொண்டவர்
1-அவர் -அப்பொழுதைக்கு அப்பொழுது ஆராமுதம் -இவர் -அண்ணிக்கும் அமுதூரும் என் நாவுக்கே -போக்யதா பிரகர்ஷம்
2-அவர் -மலக்கு நாவுடையேற்கு என்றார் -இவர் நாவினால் நவிற்று –
3-அவர் அடிக் கீழ் அமர்ந்து –இவர் மேவினேன் அவன் பொன்னடி
4-கண்ணன் அல்லல் தெய்வம் இல்லை -தேவு மற்று
5-பாடி இளைப்பிலம் என்றார் -பாடித் திரிவேனே -ஆனந்தப் பட்டார் வாசி உண்டே
6-இங்கே திரிந்தேற்கு இழுக்கு உற்றேன் -திரி தந்தாகிலும்
7-உரிய தொண்டர் தொண்டர் —நம்பிக்கு ஆள் உரியனே
8-தாயாய் தந்தையாய் -அன்னையாய் அத்தனாய்
9-ஆள்கின்றான் ஆழியான் -என்னை ஆண்டிடும் தன்மையான் -வெப்பம் இல்லை குளிர்ந்து அன்றோ
10-கடியனாய் கஞ்சனைக் கொன்ற பிரான் -தக்க சீர் சடகோபன்
11-யானே என் தனதே என்று இருந்தேன் -நம்பினேன் பிறர் நன் பொருள் தன்னையும் –நம்பினேன் மடவாரையும் முன் எலாம்
12-எமர் கீழ் மேல் ஏழ் ஏழ் பிறப்பும் நம்முடிய வாழ்வு வாய்கின்றவா -மா சதிர் -இன்று தொட்டும் எழுமையும் எம்பிரான்
13-என்னால் தன்னை இன் தமிழ் பாடிய ஈசன் -நின்று தன புகழ் ஏத்த அருளினான்
14-ஒட்டுமே இனி என்னை நெகிழ்க -என்றும் என்னை இகல்விலன் காண்மின் -நீங்களே பாருமின் -சங்கையே இல்லை
15-மயர்வற மதிநலம் அருளினான் -ஒண் தமிழ் சடகோபன் அருளையே
16-அருள் உடையவன் -அருள் கண்டீர் இவ் உலகத்தில் மிக்கதே -உயர்ந்த அருள் என்கிறார் இவர்
17-பே ரே ன் என்று -நெஞ்சு நிறைய புகுந்தான் –நிற்கப்பாடி என் நெஞ்சுள் நிறுத்தினான் -கண்ணன் அங்கே திருவாய்மொழி இங்கே
18-வழு விலா அடிமை செய்ய வேண்டும் -ஆட்புக்க காதல் அடிமைப் பயன்
19-ஆராத காதல் -ஆட்புக்க காதல் -தாஸ்யம் ஸ்பஷ்டம் இங்கே தான்
20-பொருள் அல்லாத என்னை பொருள் ஆக்கி -அடிமை கொண்டான் -பயன் நன்றாகிலும் பாங்கலர் ஆகிலும் செயல்
21-கோல மலர்ப் பாவைக்கு அன்பாகிய அன்பேயோ -தென் குருகூர் நம்பிக்கு அன்பன் -திருஷ்டாந்தம் இல்லை இங்கு -போட்டி இல்லை இங்கு
22-உலகம் படைத்தான் கவி -மதுர கவி -இவர்
23-உரைக்கவல்லார்க்கு வைகுந்தம் ஆகும் தம்மூர் எல்லாம் -நம்புவார் பதி வைகுந்தம் காண்மினே பிரத்யஷம் -சங்கையே இல்லையே –

பிரத்யுபகாரம் செய்ய இயலாமல் குண அனுசந்தானம் செய்து -முனிவர்கள் யோகிகள் -குண நிஷ்டர் கைங்கர்ய நிஷ்டர்
1-போக்யதா பிரகர்ஷம் -முதல் பாட்டில்
2-தேக யாத்ரைக்கு தாரகம் -பாவின் இன்னிசை பாடத் திரிவனே
3-பகவத் விஷயம் உத்தேச்யம் ஆழ்வார் உகந்த விஷயம் -திரி தந்தாகிலும்
4-விஷயீ கரித்து அருளி -அன்னையாய்
5-இதர விஷய பிராவண்யம் விட்டு தம் அளவு வரும் படி சாதுர்யம் -நம்பினேன்
6-ஆழ்வார் தம்மை விஷயீ கார உறுதி -ஆறாம் -இன்று தொட்டும் எழுமையும் -ஒன்பது குளிக்கு நிற்கும் -புகழ் ஏத்த அருளினான்
7-கிருபா பிரகாசம் -சடகோபன் அருளையே
8-ஆழ்வார் கிருபை விஞ்சி -அருள் கண்டீர் இவ் உலகினில் மிக்கதே
9-சகல வேத ரகசியம் -ஸூ பிரதிஷ்டியாக நெஞ்சில் நிறுத்தி -மிக்க -வேதத்தின் உட் பொருள் -நிற்கப்பாடி
10-உபகாரம் பிரத்யுபகார நிரபேஷம் -முயல்கின்றேன் உன் தன மொய் கழற்கு அன்பையே -பலன் சொல்லி தலைக் கட்டுகிறார்

——————————————

வியாக்யானம்-

உரலினோடு இணைந்து இருந்து ஏங்கிய எளிவு –எத்திறம் -என்றும்
பிறந்தவாறும் என்றும் -பையவே நிலையும் வந்து -என்றும்
ஆழ்வார் ஆழம் கால் பட்ட விஷயம் ஆகையால் அத்தைப் பேசுகிறார்

கண்ணி இத்யாதி
ஆழ்வார் பக்கல் இவருக்கு உண்டான உத்தேச்யத்தை இருந்தபடி
ஆழ்வாருடைய உத்தேச்ய வஸ்துவைக் கட்டினதொரு கயிற்றினுடைய உள் மானம் புறமானம் ஆராயும் படி யாய்த்து இவர் கை ஒழிந்த படி பகவத் விஷயத்தில்
கண்ணித்தாம்பு
என்றது -உடம்பில் கட்டப் புக்கால் உறுத்தும் படி பல பிணைகளை யுடைத்தாய் இருக்கை
நுண் தாம்பு
உடம்பிலே அழுந்தும்படி நேரிதாய் இருக்கை
சிறுத் தாம்பு
இவனைக் கட்டின பின்பு உரலோடு சேர்க்கைக்கு எட்டாம் போராது இருக்கை –

கட்டுண்ணப் பண்ணிய
உரலை நேராகச் செதுக்கப் போகாது
அப்போதாகக் கயிற்றை நெடுக விடப் போகாது
இனி இவனை விட்டு நெடிய கயிறு தேடி எடுக்கப் புகில் இவன் தான் எட்டான் காற்றில் கடியனாய் ஓடும்
இனிச் செய்வது என் -என்று அவள் தடுமாறுகிற படியைக் கண்டான்

கட்டுண்ணப் பண்ணிய
சதைக ரூப ரூபாய என்கிற தன்னுடைய திருமேனியை நெருக்கி இடம் கண்டு கட்டும் படி பண்ணினான்
கட்டுகைக்கு பரிகாரம் இல்லை என்று நிவ்ருத்தை யாமாகில் பிறந்து படைக்க நினைத்த குணத்தை இழக்கும் அத்தனை இ றே
ஆகையாலே திருமேனியிலே இடம் கொடுத்தான்
கண்ணியார் குறும் கயிற்றால் கட்ட வெட்டு என்று இருந்தான்
கண்ணிக் குறும் கயிற்றால் கட்டுண்டான் என்றும் எல்லாரும் ஈடுபடும் துறை இ றே இது தான் –

தாம் நா சைவ –யதி சக் நோஷி என்று தாய் கட்டின கட்டை அவிழ்க்க சக்தன் அல்லேன் என்று இருந்தான் இ றே
சம்சார பந்த ஸ்திதி மோஷ ஹேது -என்று ஸ்வ வியதிரிக்தரை யடையக் கட்டுகைக்கும் விடுகைக்கும் ஹேது வானவன் கிடீர்
இப்போது ஒரு அபலை கட்டின கட்டை அவிழ்க்க சக்தன் இன்றிக்கே இருக்கிறான்
செருக்கனான சார்வ பௌமன் அபிமத விஷயத்தின் கையில் அகப்பட்டு ஒரு கருமுகை மாலையாலே கட்டுண்டால்
அதுக்கு பிரதிகிரியை பண்ண மாட்டாதே இருக்குமா போலே இ றே இவள் கட்டின கட்டுக்கு பிரதிகிரியை பண்ண மாட்டாது இருக்கிற இருப்பும்
பிறருடைய கர்ம நிபந்தனமான கட்டு அவிழ்க்கும் அத்தனை அல்லது தன் அனுக்ரஹத்தால் வந்த கட்டு தன்னாலும் அவிழ்க்கப் போகாது என்கை
ஆழ்வார் மயர்வற மதிநலம் அருளப் பெற்றவர் ஆகையாலே உயர்வற உயர்நலம் உடையவன் என்று அவர் குணத்தை வர்ணித்தார்
இவர் முதல் அடியிலே ஆழ்வார் தம்மையே பற்றுகையாலே அவன் திருமேனியில் ஸ்பர்சித்த தொரு தாம்பை வர்ணிக்கிறார்
அவருடைய உத்தேச்ய வஸ்து வெளிறாய்க் கழிகிறது இ றே
அதவா
கட்டுண்ணப் பண்ணிய
பக்தி உண்டாகிலும் அவன் தானே தன்னை அனைத்துத் தர வேண்டும் படியாய் இது பின்னையும் சிறிதாய் இருக்குமாய்த்து
நாயமாத்மே த்யாதி –யமேவைஷா வ்ருணுதே தேன லப்யஸ் தஸ்யைஷ ஆத்மா விவ்ருணுதே தநூம் ஸ்வாம்-என்கிறபடியே
இனி இந்த பக்தி இவன் நெஞ்சில் அந்ய பரத்தையை அறுக்கும் அத்தனை
எட்டினோடு இரண்டு எனும் கயிற்றினால் மனம் தனைக் கட்டி -என்கிறபடியே எட்டும் இரண்டும் பத்தாய் பக்தியைச் சொன்னபடி
எட்டு என்று திரு அஷ்டாஷரமாய் அத்தாலே யாதல் -இரண்டு என்று வாக்ய த்வயமாய் அத்தாலே யாதல் வசீகரித்து என்னவுமாம்
அல்லது எட்டும் இரண்டும் அறியாதார்க்குக் கட்டப் போகாதே-
இவன் தன்னைக் கட்டுவது -ஒரு வெண்ணெயைக் களவு கண்டான் -ஊரை மூலையடியே நடத்தினான் என்று இ றே
இவன் சாமான்யன் என்று இடுமீடு எல்லாம் இடுங்கோள்என்று இருந்தான் –அதாவது களவிலே தகண் ஏறின படி –
இவனைக் கட்டி வைத்து அடிக்கப் புக்கவாறே தொழுகையும் என்கிறபடியே தொழத் தொடங்கும்
எல்லாரையும் தொழுவித்துக் கொள்ளுமவன் இ றே தொழுகிறான்
இத்தசையில் அபிமத சித்திக்கு ஓர் அஞ்சலியே சாதனம் என்று அறியுமவன் இ றே
தாம் நா சைவோதரே பத்வா பிரத்யபத்நா து ஸூ கலே -யதி சக் நோஷி கச்ச தவம் -தான் தாயான பரிவு தோற்ற
இவனைக் களவிலே கண்டு பிடித்து தாம்பாலே உரலோடு அடுத்துக் கட்டி மறு கண்ணியும் பொத்தி
நீ வல்லையாகில் போய்க் காணாய் என்று உருக்கி விட்டால் போக மாட்டாதே இருக்கும்
பராஸ்ய சக்திர் விவிதைவ ச்ரூயதே என்று ஒதப்படுகிற வஸ்து இவளுக்கு எளிதான படி இ றே இங்கனே சொல்லுகிறாள்
அதி சஞ்சல சேஷ்டித -துறு துறுக்கையாய்க் கொண்டு ஊர் பூசல் விளைத்தவன் அல்லையோ
இத்யுக்த்வா -ஒரு சொல்லாலே விலங்கிட்டு வைத்து
அத நிஜம் கர்ம சா சகாரா -அவள் கறப்பது கடைவதாகத் தொடங்கினாள்
குடும்பி நீ -இவனைப் போலே நியமிக்க வேண்டுவன அநேகம் உண்டு இ றே இவளுக்கு –

பெருமாயன்
நிரதிசய ஆச்சர்ய யுக்தன்
இத்தால் அவாப்த சமஸ்த காமனுக்கு ஒரு குறை உண்டாய் அது தன்னை ஷூத்ரரைப் போலே களவாகிற வழி எல்லா வழியே இழிந்து
சர்வ சக்தியான தான் அது தன்னைத் தலைக் கட்ட மாட்டாதே வாயது கையதாக அகப்பட்டுக் கட்டுண்டு -பையவே நிலையும் -என்று
உடம்பு வெளுத்து நின்ற நிலை அளவும் செல்ல நினைக்கிறார்

என்னப்பனில்
ஆழ்வார் இவர்க்கு உத்தேச்யராய் நிற்க இங்கனே சொல்லுவான் என் என்னில் பகவத் சம்பந்தம் அற வார்த்தை சொன்னார் ஆகில்
ஆழ்வாரோட்டை சம்பந்தத்தை அறுத்துக் கொண்டாராம் அத்தனை இ றே -அத்தாலே சொல்லுகிறார்
அதவா
பும்ஸாம் திருஷ்டி சித்தாபஹாரிணம்-என்கிறபடியே அவ்வருகு போவாரையும் துவக்க வல்ல விஷயம் ஆகையாலே
துவக்குண்டு சொல்லுகிறார் ஆகவுமாம் –

என்னப்பனில் நண்ணி
பகவத் விஷயத்தில் நின்றும் ஆழ்வார் பக்கல் கிட்டி –
சப்தாதி விஷய ப்ராவண்யங்களை விட்டு பகவத் விஷயத்தைக் கிட்டுகையில் உண்டான அருமை போல் அன்று பிரதம அவதியான பகவத் விஷயத்தை விட்டுப் புருஷார்த்தத்தில் சரம அவதியான ததீய சேஷத்வத்தைக் கிட்டுகை-
சப்தாதி விஷயங்களை விடலாம் -அதின் தோஷ தர்சனத்தாலே அங்கு -இங்கு அங்கன் ஒரு தோஷம் காண விரகில்லை-ஆகையாலே அதிலும் இது அரிது

தென் குருகூர் நம்பி –
நல்கி என்னை விடான் நம்பி என்று ஆழ்வார் தாம் உத்தேச்யமாகப் பற்றின விஷயத்தின் பூர்த்தி யளவன்று இ றே இவர் பற்றின விஷயத்தின் பூர்த்தி
எங்கனே என்னில் –பகவத் விஷயத்தைப் பற்றினால் அதினஎல்லையான ஆழ்வார் அளவும் வர வேண்டி இருக்கும்
ஆழ்வாரைப் பற்றினால் அவ்வருகு கந்தவ்யம் இல்லை இ றே
ஆசார்யர்களை நம்பி எண்ணக் கற்பித்தார் ஸ்ரீ மதுர கவிகள் இ றே என்று ஜீயர் அருளிச் செய்வர்

என்றக்கால்
மநோ வாக் காயங்கள் மூன்றும் வேண்டி இருக்கும் பகவத் விஷயத்துக்கு
ஓர் உக்தி மாத்ரமே அமையும் இவ்விஷயத்துக்கு
பூர்த்தியால் வந்த ஏற்றமே யன்று -சௌ லப்யத்தாலும் ஏற்றம் உண்டு என்கை-

அண்ணிக்கும்
தித்திக்கும்
பகவத் விஷயத்தை அனுபவித்தால் ஆஅல்வாருக்கு பிறக்கும் ஆனந்தம் எல்லாம் இவ்விஷயத்திலே ஓர் உக்தி மாத்ரத்தாலே எனக்கு சித்திக்கிறது

அமுதூறும்
அமுது ஊற்று மாறாதே நிற்கும்
ந ச புனராவர்த்ததே என்ற விஷயம் ஆழ்வாருக்கு தத் பிரசாதத்தாலே நித்யமாகச் செல்லுகிறாப் போலே
எனக்கும் ஆழ்வார் பிரசாதத்தாலே நித்ய அபூர்வமாய்ச் செல்லப் பெற்றேன்

என் நாவுக்கே
இது பின்னை எங்களுக்கு ரசிக்கிறது இல்லையீ என்னில்
முதல் அடியான பகவத் விஷயம் கூட ரசியாது இருக்கிற உங்களுக்கு அதின் எல்லையிலே நிற்கிற எனக்கு ரசிக்குமா போலே ரசிக்குமோ
என் நாவுக்கே
அநாதியாக விஷயாந்தரங்களை ரசித்துப் போந்த என் நாவுக்கே இவ்விஷயம் ரசிக்கிறது என்றுமாம் –

——————————————————————————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ தம்பிரான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் .
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: