ஸ்ரீ நஞ்சீயர் -அருளிச் செய்த வியாக்யானம் –
நீர் க்ருதக்ருத்யரான படி எங்கனே என்னில்-
வீவில் காலம் இசைமாலைகள் ஏத்தி மேவப் பெற்றேன் என்கிறபடியே கால தத்வம் உள்ளதனையும்-ஆழ்வார் தம்மையே ஏத்தும் படி பண்ணினார் என்கிறார் –
இன்று தொட்டும் எழுமையும் எம்பிரான்
நின்று தன் புகழ் ஏத்த அருளினான்
குன்ற மாடத் திருக் குருகூர் நம்பி
என்றும் என்னை இகழ்விலன் -காண்மினே-6-
இன்று தொட்டும் எழுமையும் எம்பிரான்-நின்று தன் புகழ் ஏத்த அருளினான்
இன்று தொட்டும்
பகவத் விஷயத்தில் காட்டில் தத் சம்பந்தியான ஆழ்வார் உத்தேச்யர் என்று ருசி பிறந்த இன்று தொடங்கி –
எழுமையும் –
கால விச்சேதம் இன்றிக்கே எனக்கு உபகாரகரான ஆழ்வார் –
போன காலமும் எனக்கு ருச்யபாவத்தாலே இழந்தேன் இத்தனை
நின்று
ப்ராப்யத்தில் பிரதம அவதியாகில் இ றே கமன பிரசங்கம் உள்ளது
எல்லை நிலத்தில் புக்கார் நிலை நிற்கும் அத்தனை இ றே
மானிடம் பாட வந்த கவியேன் அல்லேன் -என்று ஆழ்வாருக்கு வ்யவர்த்ய விஷயம் மனுஷ்யர் இ றே
இவர்க்கு வ்யாவர்த்யம் எம்பெருமான் ஆனபடி –
குன்ற மாடத் திருக் குருகூர் நம்பி
பர்வதங்கள் போலே இருந்துள்ள மாடங்களை யுடைய திருக் குருகூரில் நிரபேஷரான ஆழ்வார் –
ஆழ்வார் பூர்த்தி எல்லை காண ஒண்ணாதாப் போலே மாடங்களின் உயர்த்தி எல்லை காண ஒண்ணாத படி –
என்றும் என்னை இகழ்விலன் -காண்மினே
தாம் ஸ்தோத்ரம் பண்ணுகைக்கு ஹேது சொல்லுகிறார்
ஆழ்வார் சந்நிதி போலே காணும் இவரைப் பேசுவிக்கிறது
உங்களைப் போலே பகவத் விஷயத்தில் அன்றி நான் ஆழ்வார் கவியானபடி காண மாட்டி கோளோ-
——————————————————————–
ஸ்ரீ நம்பிள்ளை -அருளிச் செய்த வியாக்யானம் –
ஆழ்வார் இப்போது இங்கனே விஷயீ கரித்தார் ஆகிலும் நீர் தாம் அநாதி காலம் புறம்பே அந்ய பரராய்ப் போந்தேன் என்றீர்
இன்னமும் அப்படிப் புறம்பே போகிலோ வென்ன-அங்கனே போகலாம் படியோ ஆழ்வார் அருளிச் செயல் இருப்பது என்கிறார் –
இன்று தொட்டும் எழுமையும் எம்பிரான்
மேல் ஒரு நாளிலே பலிப்பதாக விட்டு வைக்கிறாரோ
விஷயீ கரித்த இன்று தொடங்கி
ஏழு ஜன்மம் என்கிறது உப லஷணம்-மேல் உள்ள காலம் எல்லாம் என்றபடி
பிரான் பெரு நிலம் கீண்டவன் -என்று பகவத் விஷயத்திலே ஆழ்வார் சொல்லுமத்தை உபகார ச்ம்ருதியாலே –எம்பிரான்--என்று அவர் விஷயத்திலே சொல்லுகிறார் -(பிரான் அவர் பொதுவான உபகாரத்தை -இவர் எம்பிரான் தமக்கு செய்ததை )
நின்று தன் புகழ் ஏத்த அருளினான்-
உபகார ச்ம்ருதியாலே பகவல் லாபத்து அளவும் இவரைப் பற்றி நின்று
பின்னை அது கிட்டின வாறே அதிலே தோள் மாறும்படி யன்றியே
தம்முடைய அனுபவத்துக்கு உள்ளே பகவத் அனுபவமாம் படி ஆழ்வார் எனக்கு அருளிற்று
தன் புகழ் ஏத்த
ஆழ்வார் தமக்கு உபகரித்த பகவத் விஷயத்தை ஒழியப் புறம்பே போனாராகில் இ றே
இவர் தம்மை ஏத்தினார் அன்றிக்கே ஒழிவது –
குன்ற மாடத் திருக் குருகூர் நம்பி–
ஆழ்வார் தம்மையும் ஏத்தி இன்னமும் ஒரு விஷயத்தை ஏத்த வேண்டும்படியோ ஆழ்வாருடைய பூர்த்தி இருப்பது –
குன்ற மாடத் திருக் குருகூர் நம்பி-
குன்றம் போல் மணி மாட நீடு திருக் குருகூர் -என்று ஆழ்வார் அருளிச் செய்யுமது இவர் நெஞ்சில் வாசிதமாய் இருப்பது –அது தன்னையே சொல்லும் அத்தனை இ றே
என்றும் என்னை இகழ்விலன் -காண்மினே
யாவதாத்மபாவி புறம்பு ஒன்றில் போகாதபடி யன்றோ என்னை விஷயீ கரித்தது
என் தண்மை பாராதே என்னை விஷயீ கரித்தவர் நான் புறம்பே போவேன் என்றால் போகலாம் படி என் வசம் என்னைக் காட்டித் தருவரோ –
——————————————————————–
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் -அருளிச் செய்த வியாக்யானம் –
கீழ் இரண்டு பாட்டாலே தம்முடைய தோஷ அதிசயத்தையும் -அத்தோஷமே பற்றாசாக தம்மை ஆழ்வார் அங்கீ கரித்த படியையும் –
-ஆழ்வார் அங்கீ கரித்த அநந்தரம் அத் தோஷங்களைத் தாம் வென்ற படியையும் -அவை போகையாலே-ஆழ்வார் திருவடிகளில் தமக்கு உண்டான ஆதரத்தையும் சொன்னார் –
இத்தைக் கேட்டவர்கள் இப்போது உம்முடைய குற்றம் கழிந்ததே யாகிலும் உமக்கு பிரகிருதி சம்பந்தத்தாலே பின்னையும் மறுவல் இடாதோ-(புகை நெருப்பு -பிரியா பாபங்கள் / கண்ணாடி அழுக்கு -துடைக்க துடைக்க திரும்பும் /பனிக் குடம் கர்ப்பம் -தானே உடைந்து வராதே -மூன்றும் பாபங்களை போக்க -)
-அதுக்குப் பரிஹாரமாக நீர் கண்டு வைத்தது என்ன -கீழ் உள்ள தோஷமும் நான் சாதனா அனுஷ்டானம் பண்ணிப் போக்கினேனோ-
ஆழ்வார் அங்கீ காரத்தால் போய்த்தாகில் அவ்வங்கீ காரம் மாறினால் அன்றோ அது மேலிடுவது
ஆழ்வார் என் தோஷம் கண்டு ஒரு காலும் இகழார்-இது காண மாட்டி கோளோ வென்று இப்பாட்டாலே உத்தரம் சொல்லுகிறார் –
கீழ்ப் பாட்டில் ஆழ்வார் திருவடிகளில் உண்டான தம்முடைய-1- ஜ்ஞான-2- பக்திகளைச் சொன்னார்-(சதிர்த்தேன் என்பதால் ஞான பக்தியை சொல்லி-ஆழ்வார் திருவடிகளில் கைங்கர்யமே பக்தி )
இதில் அவர் பக்கல் தமக்குப் பிறந்த3- வ்யவசாயம் சொல்லுகிறார்-( உறுதி முக்கியம் -நின்று -என்பதால் உறுதி -)
தாம் அங்கீ கரித்த இன்று முதல் யாவதாத்மா பாவியாகத் தம்முடைய குண கீர்த்தனம் பண்ணிப் போரும்படி என் பக்கலிலே
கிருபையைப் பண்ணின ஆழ்வார் குற்றம் கண்டு கைவிடப் புகுகிறாரோ என்று இகழாமைக்கு அடி சொல்லுகிறார் இப்பாட்டின் முற்கூற்றாலே-
இன்று தொட்டும் எழுமையும் எம்பிரான்-
என் தோஷமே பச்சையாகக் கைக்கொண்ட இன்று தொட்டும்
மேல் உள்ள காலங்களிலும்
இப்போதை அங்கீகாரம் யாதொருபடி இருக்கிறது -இதன் கீழ் யாய்த்து மேல் உள்ள காலம் அடைய அவர் என்னை விடாத படி என்று தாத்பர்யம்-(தோஷமே பச்சையாக கொண்ட இன்று தொட்டும் மேலும் தோஷமே பச்சையாக கொள்ளுவார் அன்றோ )
இவருடைய நியமம் இருக்கிற படி ஒரு தேச விசேஷத்திலே போனாலும் ஆழ்வார் கீழே ஒதுங்குமவர் யாய்த்து இவர் -(பல்லவம் –புஷ்பித்தம் -பலிதம் மூன்று நிலைகள்)
மாதுல குலத்துக்குப் போன ஸ்ரீ பரதாழ்வானைப் பின் சென்ற ஸ்ரீ சத்ருக்ன ஆழ்வானைப் போலே இவரும் நித்ய சத்ருக்னர் இ றே
திருக் குருகூர் நம்பிக்கு அன்பன் ஆகையாலே ப்ரீதி புரச்க்ருதத்வம் உண்டாய்த்து
எம்பிரான்
எனக்கு ஸ்வாமி யானவர் -ஸ்வாமி யானவன் ஸ்வ த்தைக் குற்றம் கண்டு இகழுமோ
எம்பிரானை எந்தை தந்தை தந்தைக்கும் தம்பிரானை -என்று ஆழ்வார் பகவத் விஷயத்தைச் சொல்லக் கேட்டுப் போந்த-வாசனையாலே தாமும் எம்பிரான் என்கிறார்
இன்று தொட்டும் எழுமையும் எனக்கு எம்பிரான் என்று கீழோடு கூட்டலாம்
ஒருகால் பகவத் ஸ்வம்மாய் ஒருகால் ஆழ்வார்க்கு ஸ்வம்மாய் இராதே சர்வ காலமும் ஆழ்வாருக்கு ஸ்வம் என்று தம்மை நினைத்து இருக்கிறார் யாய்த்து
எம்பிரான் –
எனக்கு உபகாரகர் ஆனார் –
என்னுடைய குன்றனைய குற்றத்தையே குணமாகக் கொண்டு நான் அதபதியாமல் நோக்கினவர்
என்னுடைய அஹங்கார அர்த்த காமங்களில் நசை அறுத்து ஆத்ம ஜ்ஞானாதிகளை உபகரித்த அளவன்றிக்கே
பகவத் விஷயத்தில் காட்டிக் கொடாதே தாமே கைக்கொண்ட மஹா உபகாரகர்
மேல் அந்த உபகாரம் தன்னை உபபாதிக்கிறார்
நின்று தன் புகழ் ஏத்த அருளினான்-
தம்முடைய சத்குண சம்ஸ்துதியைப் பண்ணும் படி அருளைப் பண்ணினார்
தன் புகழ் ஏத்த அருளினான்
தென் குருகூர் நம்பி என்றக்கால் அண்ணிக்கும்-என்று தொடங்கி -முயல்கின்றேன் உந்தன் மொய் கழற்கு அன்பையே
என்று இறுதியாக தம்முடைய புகழை ஏத்தும் படி அருளினார்-
ஏத்த
நற்பூவைப் பூவீன்ற வண்ணன் புகழ் இயற்றுவாய் -என்று தொடங்கி -மொய் கழலே ஏத்த முயல் -என்ற ஆழ்வார் தம்மைப் போலே
ஏத்த உத்யோகித்து விட்ட அளவன்றிக்கே பத்தும் பத்தாக ஏத்தும்படி அருளினார்-(வாசிக கைங்கர்யம் முடித்து காயிக கைங்கர்யம் உத்தியோகித்தார் இவர் – முயல்கிறேன் மொய் கழற்கு அன்பை என்பதால் )
தன் புகழ் ஏத்த
ஆழ்வார் பகவத் குணங்களையே புகழும் படித் திருத்தினாரே யாகிலும் இவர் தம்முடைய ப்ரீதியாலே தன் புகழ் ஏத்த அருளினார் என்கிறார் (ஆழ்வார் தம்மைப் பாட சொல்லிக் கொடுக்க மாட்டாரே -ஸஹபூஜ்யா மத் பக்தன் -நின்னொடு ஓக்க வழி பட அருளினாய் -என்பதால் -சாம்யம் -ப்ரீதி அதிசயத்தால் ஆழ்வாரை பாடுகிறார் -)
தன் புகழ் ஏத்த
பகவத் குணங்கள் போலே குற்றம் காண்கையும்-கண்டத்துக்கு தக்க தண்டம் பண்ணுகையுமாயோ ஆழ்வார் குணங்கள் இருப்பது
அன்னையாய் அத்தனாய் என்னை யாண்டிடும் தன்மையான் என்கிறபடியே வாத்சல்ய உத்தரமாய் அன்றோ இருப்பது-ஆழ்வாருடைய நிகரில் புகழ் இது இ றே-
தன் புகழ் ஏத்த அருளினான்
இவருடைய புருஷார்த்த சாதனங்கள் இருக்கிறபடி -( கண்ணே உன்னை காண கருதி -சாதனம் சாத்யம் -காண்கையே புருஷார்த்தம் -போலே இங்கும் )
இவ்வாசிக கைங்கர்யத்துக்கு சாதனம் ஆழ்வார் கிருபை என்று அறுதி இடுகிறார்
நீயும் நின் அஞ்சிறைய சேவலுமாய் ஆ ஆ வென்று எனக்கு அருளி -என்று கடகர் அங்கீ காரத்துக்கும் கருணையே வேணும் என்று-ஆழ்வார் பாடே அறிந்து வைப்பரே
ஏத்தும் இடத்தில் -நின்று தன் புகழ் ஏத்த அருளினான்
ஆழ்வாருடைய குணங்களைப் புகழ்கையே புருஷார்த்தம்
அது சித்திப்பதும் அவருடைய அருளாலே என்று அத்யவசிதனாய் ஏத்தும் படியும் அருளினார் –புருஷார்த்த பூதருமாய் சாதன பூதருமானவர்கள் இ றே அத்யவசாய ப்ரதரும் – (தன் புகழ் ஏத்த அருளினான் -புருஷார்த்தம் -சாதன-நின்று அருளி -உறுதிப்பாடு )
நின்று தன் புகழ் ஏத்த
அவருடைய குண அனுசந்தானத்தாலே மனஸ் சைதில்யம் பிறக்கையாலே -முனே வஷ்யாம்யஹம் புத்வா -என்கிறபடியே –நெஞ்சை ஒருங்கப் பிடித்து நின்ற ஏத்த என்றுமாம் –
குன்ற மாடத் திருக் குருகூர் நம்பி-
பர்வத சிகரங்களைக் கொண்டு வந்து வைத்தாப் போலே இருக்கிற மாடங்களை யுடைத்தான திரு நகரியிலே வர்த்திக்கிற பூரணரான ஆழ்வார்
கீழில் பாட்டில் செம்பொன் மாடம் என்று மாடங்களின் உடைய அலங்காரத்தைச் சொன்னார்
இதில் மாடங்கள் வெறும் புறத்திலே ஆகர்ஷகமாய் சர்வதாதுசமலங்க்ருதமாய் சம்சார பீதருக்கு அண்டை கொள்ளலாம் படி இருக்கும் என்கிறார்
நம்பி
யாவதாத்மா பாவி தம்முடைய புகழை ஏத்தா நின்றாலும் வரையிடாத குண பூர்த்தியை யுடையவர் –
என்றும் என்னை இகழ்விலன் –
எனக்கு தோஷம் மேலிட்ட போதோடு குணம் மேலிட்ட போதோடு வாசியற -என்னை அநாதரிக்கிறிலர்-(நம்மாழ்வாரால் அங்கீகாரம் பண்ணப் பட்ட குணம் உண்டே இப்பொழுது )
நம்பி என்னை என்றும் இகழ்விலன்
அவர் என்னை அநாதரிப்பார் ஆகில் அவருடைய பூர்த்தி நிறம் பெறும் படி என்
குன்ற மாடத் திருக் குருகூர் நம்பி என்றும் என்னை இகழ்விலன்
அம்மாடங்களுக்கு சலனம் உண்டானாலும் ஆழ்வார் திரு உள்ளம் சலியாது
காண்மினே
இவ்வர்த்தம் உங்களுக்கு ஏறக் காண மாட்டி கோளோ
காண்மினே
பகவத் குணங்களை யாராய்கிற நீங்கள் அத்தை விட்டு ஆழ்வார் குணங்களை நெஞ்சாலே காண மாட்டி கோளோ
காண்மினே
ப்ராப்த முத்தம குணாந பரித்ய ஜந்தி -என்றும் -பாணானார் திண்ணம் -என்றும் சொல்லுகிற பிரமாணங்களிலே-பார்த்துக் கொள்ள மாட்டி கோளோ –
————————————————————————–
ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply