அணோர் அணீய ஸீம் விஷ்ணோ மஹதோபி மஹீயஸீம்
ப்ரபத்யே பாதுகாம் நித்யம் தத்பதே நைவ சம்மிதாம் –781-
பெருமாள் அணுவைப் போல் சிறிய உருவம் எடுத்து இருக்கும் போதும் மிகப்பெரிய உருவம் எடுத்த போதும்
அதற்க்கு ஏற்ற திருவடி யுடையவராய் இருப்பதால் அந்தத் திருவடியுடன் -அந்தத் திருவடிக்கே ஏற்றதாயும்
பரமாத்ம ஸ்வரூபத்துக்கு ஏற்றதாகவும் இருக்கின்ற ஸ்ரீ பாதுகையை எப்போதுமே சரணமாகப் பற்றுகின்றேன்
——————————————————————————-
ப்ரதிதிஷ்டதி பாத சம்மிதாயாம் த்வயி நித்யம் மணி பாதுகே முகுந்த
இதரே து பரிச்ச தாஸ்த ஏதே விபவ வ்யஞ்ஜன ஹேதவோ பவந்தி –782-
ஸ்ரீ மணி பாதுகையே பகவானுடைய திருவடிக்கு சமானமான உன்னிடத்திலேயே எப்போதும் நிலைத்து நிற்கிறார் அவர் –
அவருடைய மற்ற திவ்ய அணி கலன்கள் திருக்குடை திருச் சாமரம் போன்றவை இது போல் அன்று
அவை அவருடைய ஐஸ்வர்யப் பெருமைக்கு அடையாளங்களாம் -அவர் பெருமையை வெளிப்படுத்த வென்று ஏற்ப பட்டனவாம் –
—————————————————————————
தவ ரங்க நரேந்திர பாத ரஷே
ப்ரக்ருதிஸ் சந்நபி பக்தி பாரதந்த்ர்யாத்
பவதீம் வஹதீவ பன்ன கேந்திர
ப்ரதித ஸ்வஸ்திக லஷணை சிரோபி –783-
ஸ்ரீ பாதுகையே ஆதிசேஷன் உனக்கு மூல உரு தான் -ஆயினும் உன்னிடத்தில் உள்ள பக்தியின் பேரளவினால் போலும்
உன் வடிவவமான துத்தியை -ஸ்வஸ்திகம் – -அது போன்ற ரேகையை -உன் வடிவைத் தன் ஆயிரம் படங்களிலும் தரிக்கிறான்
இணத்துத்தி அணி பணம் ஆயிரங்கள் -என்ற ஸ்ரீ குலசேகரப் பெருமாள் உடைய ஸ்ரீ ஸூக்திகள் உன்னைப் பற்றியே –
——————————————————————–
பரஸ்ய பும்ஸ பத சந்நிவேசான்
பிரயுஜ்ஞதே பாவித பஞ்சராத்ரா
அகப்ரதீபான் அபதிஸ்ய புண்ட்ரான்
அங்கேஷூ ரங்கேஸய பாதுகே த்வாம் –784–
ஸ்ரீ பாதுகையே பாஞ்ச ராத்ர -வைகானச -ஆகம சாஸ்திரங்கள் படி பெருமாளை ஆராதிப்பவர் பகவான் திருவடி வடிவில்
ஸ்ரீ ஹரி பாதாக்ருதியில் -திருமண்களைத் தம் நெற்றி மார்பி வயிறு புஜம் கழுத்து என்று உடலின் பாகங்களில் தரிப்பது
பாபங்களைப் போக்குபவை என்று இது செய்வது -திருவடிகளின் உருவம் எனபது வெறும் வியாஜமே –
உண்மையில் நீ தான் அப்படித் தரிக்கப் பெறுவது -உன் உருவமாய் இருப்பதே பாபம் போக்க வல்லவை யாகும் –
——————————————————————————-
விம்ருஷ்ய ரங்கேந்திர பதிம் வராயா
ஸ்ருதே ஸ்திதாம் மூர்த்தநி பாதுகே த்வாம்
பத்நந்தி வ்ருத்தா சமயே வதூநாம்
தவன் முத்ரிதாநி ஆபரணாநி மௌமௌ –785–
ஸ்ரீ பாதுகையே விஷயம் அறிந்த பெரியோர்கள் விவாஹ சமயத்தில் மணப்பெண் தலையில் நுகத் தடியுடன் திரு மாங்கல்யத்தை வைப்பது ஏன்
திரு மாங்கல்யத்தில் திருமான் ரூபமாக நீ இருக்கிறாய் என்பதை ஆராய்ந்து அப்படி வைக்கிறார்கள் -ஏன்
ஸ்ரீ ரங்க நாதப் பெருமானைத் தனது பதியாகக் கொள்ளும் ஸ்ருதி மாதர்கள் தம் சிரஸ்ஸில் திருப் பாதுகையைத் தாங்குகிறார்களே-
ஸ்ருதி போற்றுவது எல்லாம் பெருமாளை -அவர் ஸ்ரீ பாதுகையுடன் ஸ்ருதிகள் தலையில் நிற்பதால் தானே –
————————————————————————–
வஹந்தி ரங்கேஸ்வர பாத ரஷே
தீர்க்காயுஷாம் தர்சித பக்தி பந்தா
ஆசாதி பாநாம் அவரோத நார்ய
த்வன் முத்ரிகாம் மங்கள ஹேம ஸூத்ரை–786-
ஸ்ரீ பாதுகையே திக் பாலர்கள் தீர்க்காயுஸ்ஸூ உள்ளவர் -எங்கனம் -அவர்கள் மகிஷிகள் அதிக பக்தியுடன் பொன் சரட்டில்
கட்டிய திரு மாங்கல்ய தாரணம் செய்வது உன்னுடைய வடிவத்தைக் கொண்டே -அவர்கள் தீர்க்க ஸூமங்கலிகளாய் இருப்பது இதனாலே –
————————————————————————————————-
வ்யூஹ க்ரமேண பிரதி தாரமக்ரே
சந்தர் சயந்தீ மணி பாதுகே த்வாம்
பாதும் த்ரிலோகீம் பதபத்ம பாஜம்
சௌ தார்ச நீம் சக்தி மவைமி சௌரே –787-
ஸ்ரீ மணி பாதுகையே ஸ்ரீ வாஸூ தேவாதி வியூஹங்களாகத் தன்னை விஸ்தரிக்கிற பகவானை நீ எதிரில் காட்டுகிறாய் –
அவன் பிரசித்தமான திரு வரங்கன் -நீ மூன்று உலகங்களையும் காப்பவள் –
பிரசித்தமான திரு வரங்கனுடைய ஸூதர்சன மூர்த்தியின் அஷம்-திருவச்சு -வியூஹ வாஸூ தேவ மூர்த்தி –
அதுவும் தன் யந்த்ரத்தில் ஸ்ரீ பாதுகையைக் கொண்டது -ஆக ஸ்ரீ பாதுகை சௌதர்சன சக்தியைப் பெற்றது
அந்த சக்தி மூன்று உலகங்களையும் ரஷிக்க ஸ்ரீ பாதுகையை அடைந்து உள்ளது -ஸ்ரீ பாதுகையிலும் திருச் சக்கர ரேகை யுண்டே –
——————————————————————–
பத்தாசிகா கநக பங்கஜ கர்ணிகாயாம்
மத்யே க்ருசா முரரிபோ மணி பாதுகே த்வம்
சந்த்ருச்யசே சரசிஜாச நயா க்ருஹீதம்
ரூபாந்த்ரம் கிமபி ரங்க விஹார யோக்யம் –788-
ஸ்ரீ மணி பாதுகையே நீ தங்கத் தாமரை ஒன்றில் அதன் நடுப்பாகமான காயில் வீற்று இருக்கிறாய் –
ஸ்ரீ சடாரியின் மேல் அதன் தோற்றம் பங்கஜ கர்ணிகை போலே இருக்குமே –
இடையில் சிறுத்து உள்ளாய் -ஸ்ரீ ரங்கத்தில் நடமாடுகிறாய்-
நீ ஸ்ரீ ரங்கத்தில் நாடக மேடையில் இப்படி ஆட மகா லஷ்மியின் மற்றொரு உருவமோ –
பிராட்டியும் தாமரையில் இருந்து -இடை சிறுத்து- நடம் ஆடுபவள் அன்றோ –
———————————————————————————————
மாநோசிதஸ்ய மததீன ஜநஸ்ய நித்யம்
மாபூத் அத க்ருபண தேதி விசிந்த்த யந்த்யா
பந்தி க்ருதம் த்ருவ மவைமி வலக்நதேசே
கார்ஸயம் த்வயா கமல லோசந பாத ரஷே –789–
ஸ்ரீ பாதுகையே நீ இடை சிறுத்துத் தோன்றுவதன் காரணம் எனக்கு இப்படிப் படுகிறது –
என்னை ஆஸ்ரியப்பவர் மிகவும் பூஜ்யர் -அவர் பணம் புகழ் படிப்பு பக்தி இப்படி ஏதோ ஒன்றிலோ
எல்லா வற்றிலோ இளைத்துச் சிறுத்து ஐயோ என்று மற்றவர் இரங்கும்படிஇருக்கலாகாது -அவர் இளைப்பை எல்லாம்
நான் எடுத்துக் கொண்டு என்னிடம் இப்படிச் சிறை வைத்து விட்டேன் என்று சொல்வது போலே –
——————————————————————————
மன்யே க்ருசாம் உபயத ப்ரதிபன்ன வ்ருத்திம்
மன்யே சமீஷ்ய பவதீம் மணி பாத ரஷே
நித்யம் முகுந்த பத சங்கம விப்ர யோகௌ
நிஸ் சிந்வதே க்ருததிய ஸூக துக்க காஷ்டாம் –790–
ஸ்ரீ மணி பாதுகையே நீ நடுவில் சிறுத்தும் இரு புறங்களிலும் பருத்தும் இருப்பது பற்றிக் கற்று அறிந்தவர் சொல்வது இது தான்
எப்போதும் பெருமாளுடைய திருவடித் தொடர்பு இழந்து இருப்பத் சிறுமை தரும்
முன் திருப்பாதமும் திருக் குதிக்காலும் அழுந்தி அவ்விடங்களில் பருமன் அகலம் ஏற்பட்டதாம்
ஏன் என்றால் -ஸூகம் -மேற்படி சம்பந்தம் -துக்கம் சம்பந்தம் இழப்பது -என்று வரை அறுத்து இருக்கிறார்களே –
தத் சம்ஸ்லேஷ வியோகைக ஸூக துக்க –ஸ்ரீ ஆளவந்தார் ஸ்ரீ கீதார்த்த சங்க்ரஹம் -29-
———————————————————————————
ரங்கேஸிதுஸ் சரண பங்கஜ யோர் பசந்தீ
ரஷா ப்ரசாதன விகல்ப சஹாம் அவஸ்தாம்
மான்யாக்ருதிர் நிவேசசே மணி பாத ரஷே
மத்யே பரிச்சத விபூஷண வர்கயோஸ் த்வம் –791-
ஸ்ரீ மணி பாதுகையே போற்றத் தகும் ஸ்வரூபம் உடைய உன்னை இரண்டு விதமாகவும் சொல்லலாம்
பெருமாள் திருவடிகளைக் காப்பவை -அதாவது பரிச்சதங்கள் வகை திருக்குடை திருச் சாமரம் போல்வன
அதே சமயம் திருவடிக்கு அலங்காரமாக உள்ளவை -திருக்கை வளை திருக் கிரீடம் போல பூஷணம் என்று –
————————————————————————
அங்காந்தரேஷூ நிஹி தான்ய கிலானி காமம்
பர்யாய கல்பந சஹாநி விபூஷணாநி
நித்யம் முகுந்த பத பத்ம தலாநுரூபம்
னைபத்யமம்ப பவதீ நயனா பிராமம் –792–
ஸ்ரீ அம்மா மற்ற திரு அவயவங்களில் சாத்தப் பட்டுள்ள திரு ஆபரணம் ஒன்றை எடுத்து இன்னொன்றைச் சாத்தினால் ஏற்கும் –
அவ்வாபரணங்கள் அவற்றைப் பரஸ்பரம் மாற்றுவதை சஹிக்கும் -பகவானின் திருவடித் தாமரைகளில் பூண்ட திரு ஆபரணம் நீ
நியதம் மாற்ற முடியாது -இது கண்டவர் கண்ணுக்கு இனியது –
——————————————————————————————
யே நாம பக்தி நியதைஸ் தவ சந்நிவேசம்
நிர்விச்ய நேத்ர யுகளைர் ந பஜந்தி த்ருப்திம்
கால க்ரமேண கமலேஷண பாத ரஷே
ப்ராயேண தே பரிணமந்தி சஹச்ர நேத்ரா –793–
ஸ்ரீ பாதுகையே நீ திருவடிகளில் அமைந்து இருக்கிற சந்நிவேசத்தை எவர்கள் பக்தியோடு பொருந்திய கண் இணைகளால்
சேவித்து அனுபவித்துத் திருப்தி அடையாமல் போய் காணக் கண் ஆயிரம் வேணுமே என்று பாரிக்கின்றனரோ
அவர்கள் கால க்ரமத்தில் ஆயிரம் கண் பெறுவார்
இந்த்ரப் பதவி உப லஷணம் மட்டுமே -பிரம்மாதி பதவிகளும் அனைத்து அபிலாஷையும் பெறுவார் –
————————————————————————–
பதம ப்ரமாணமிதி வாதி நாம் மதம்
மது ஜித்பதே மஹதி மாசமா பூதிதி
வயுத பாதி தஸ்ய சரணாவநி த்வயா
நிகமாத்ம நஸ்தவ சமப்ரமாணதா –794-
ஸ்ரீ பாதுகையே -வெறும் ஒற்றைச் சொல் -மாடு எனபது போல பொருள் அற்றது -பிரமாணம் ஆகாது
மாடு மேய்க்கிறது என்றால் தான் கருத்து ஏற்பட்டு பிரமாணம் ஆகும் என்பர் தார்க்கிகர்
பதம் அப்ரமாணம் என்று அவர்கள் சொவதை மறுத்து பகவத் பதம் பிரமாணம் என்று சொல்ல எண்ணி நீ அளவாய் யுடையாய்
திருப் பாதங்களுக்கு ஏற்ற அளவு ஸ்ரீ பாதுகை -நீயும் திருப்பாதமும் சமப்ரமாணர் -இன்னொரு பொருளில் கூட
நீ நன்றாக செல்பவள் -ஆதலால் நிகமம் -அதாவது நீயே வேத ரூபம் -வேதத்திற்குப் போல் உனக்கும் பிரமாண்யம்
அந்தப் பிரமாணத்தை திருப் பாதத்துக்கு வழங்கி நீவிர் இருவரும் சம பிரமாணராய் இருக்கிறீர்கள் –
——————————————————————————
அப்ரபூதமபவத் ஜகத்ரயம்
யஸ்ய மாதும் உத்தி தஸ்ய பாதுகே
அப்ரமேயம் அமி தஸ்ய தத்பதம்
நித்யமேவ நநு சம்மிதம் த்வயா –795-
ஸ்ரீ பாதுகையே -திரு உலகு அளந்த சமயம் மூன்று உலகும் அவன் திருவடிக்கு போதாமல் போயிற்று –
அளவிட முடியாதவனான அவனுடைய அளவிட ஒண்ணாத மஹிமை கொண்ட அந்த திருவடியும் கூட உன்னாலே
நித்தியமே அளவிடப் பட்டு நிகிறதே -உன் பெருமைக்கு மற்றவை ஏதும் இணையாகாது –
———————————————————————————-
ஆலவாலமிவ பாதி பாதுகே பாத பஸ்ய பவதீ மதுத்விஷ
யத் சமீப வின தஸ்ய ஸூ லிந சாரி ணீ பவதி மௌளி நிம் நகா –796-
ஸ்ரீ பாதுகையே நீபாத்தி -பகவான் அதில் முளைத்து ஓங்கி இருக்கும் மரம் -பக்கத்தில் வணங்கி நிற்கும் சிவனுடைய
தலையில் உள்ள கங்கை நீர் கால் வாயாகப் பாய்ந்து பாத்திக்குள் ஜல நிறைவு ஏற்படும் –
————————————————————–
மோதமாந முநி ப்ருந்த ஷட்பதா பாதி மகதி மகரந்த வர்ஷிணீ
கா அபி ரங்க ந்ருப்தே பதாம் புஜே கர்ணிகா கநக பாது காமயீ –797-
பொற் பாதுகையான ஒரு தாமரைக் காய் -பூவின் நடு சமயத்தில் உள்ளது -மோஷம் என்கிற தேனை அருந்த வென்று
களிப்புடன் முனிவர் கூட்டங்கள் என்னத் தக்க வண்டுகள் சுற்றிச் சுற்றி வட்டம் இடுகின்றன
ஸ்ரீ ரங்க நாதனுடைய திருவடித் தாமரையில் இந்த கர்ணிகை அல்லது காய் விளங்குகிறது –
————————————————————–
யுகபத நு விதாசயன் யௌவனம் துல்யராகம்
யதுபதிரதி சக்ரே யாவதோ ரூப பேதான்
ததிதமதி விகல்பம் பிப்ரதீ சந்நிவேசம்
தவ கலு பத ரஷே தாவதீ மூர்த்திராசீத் -798-
ஸ்ரீ பாதுகையே ஸ்ரீ கிருஷ்ணன் தனக்கு ஈடாகக் காதல் கொண்ட கோப ஸ்திரீகளின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு
அவவவருக்கு வேண்டியபடி எத்தனை ரூபம் எடுத்தாரோ
பதினாறாயிரம் கோபிகளாம்-அவ்வளவு பெருமாள் எடுத்த போது நீயும் மேலும் அதிகமாக இரண்டு மடங்காக ரூபம் எடுத்தாயே –
———————————————————————-
தத்தத் வ்ருத்தே நு குணதயா வாமநீம் வ்யாபிநீம் வா
ப்ராப்தே ரங்க ப்ரதிதவிபவே பூமிகாம் ஸூ த்ரதாரே
மன்யே விச்வஸ்திதிமய மஹாநாடி காம் நேத்து காமா
நா ந சம்ஸ்தா பவதி பவதீ பாதுகே நர்த்த கீவ –799-
ஸ்ரீ பாதுகையே ஸ்ரீ ரங்கம் ஒரு அரங்க மேடை -பெயர் பெற்ற ஸூத்ரதாரன் -கதா நாயகன் -வெவ்வேறு சந்தர்ப்பங்களுக்கு
ஏற்றபடி -சிறியதாகவோ பெரியதாகவோ வேஷம் போட்டுக் கொள்ள நேரும் –
அப்போது எல்லாம் நீயும் ஆட்டக்காரி போல் தகுந்த வேஷத்தைக் கூடவே ஏற்று
உலக ரஷை என்னும் பெரும் நாடைத்தை நாடகத்தை ஆடிக் காட்டுகிறாய் –
————————————————————————
மாநே பரம் சமா நே ப்ரத்ய ஷேணாகமே நாபி
ஹரி சரணஸ்ய தவாபி து வைஷம்யம் ரஷ்ய ரஷகத்வாப்யாம் –800-
ஸ்ரீ பாதுகையே பகவான் திருவடிக்கும் உனக்கும் எவ்வளவு ஒற்றுமை -பிரத்யஷப் பார்வையில் சமானர்கள்-
ஆகமங்களும் சமம் என்று சொல்வதால் சமானர்கள் -ஆகவே அளவு கணக்கும் ஞானமும் மிகவும் சரிசமம் –
ஆனால் காக்கப் படுபவர் காப்பவர் என்ற நோக்கில் பார்த்தால் நிறைய வேறுபாடு உண்டு –
திருவடி காக்கப்படும் வஸ்து நீ ரஷிக்கும் திறம் பெற்றவள் –
———————————————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .
Leave a Reply