ஸ்ரீ பராசர பட்டார்யா ஸ்ரீ ரங்கேச புரோஹித
ஸ்ரீ வத்சாங்க ஸூத ஸ்ரீ மான் ஸ்ரேயசே மேஸ்து பூயசே-
ஸ்ரீ யபதியினுடைய கல்யாண குணங்களை -அசங்க்யேய கல்யாண குண கனௌக மஹார்ணவ -என்றும் –
அபார கருணாம்புதே -என்றும் -ஆஸ்ரித வாத்சல்யைக ஜலதே -என்றும்
எம்பெருமானார் ஸ்ரீ கத்ய த்ரயத்தில் அருளிச் செய்து இருக்கும் படி ஸ்ரீ பராசர பட்டரும்
இரண்டு ஸ்லோகங்கள் அருளிச் செய்து அவற்றுக்கு வியாக்யானங்களும் அருளிச் செய்துள்ளார் –
மரகத மணி ரம்யம் ரம்ய மாணிக்ய முக்தா
பலவில சித காத்ரம் ப்ரஸ் புரத் கந்த வாஹம்
விஹித விவித ஜந்தும் ப்ரோல்ல சந்மீ நலீலம்
ஸூ கம ஜல நிதிம் த்வாம் மன்மஹே ரங்க ராஜ –ஸ்லோகம் –13–
நாயந்தே –
தேவரீர் திருமஞ்சனமாட ஏறி யருளி எழுந்து அருளி நிற்கிற நிலை -இங்கனே ஒரு சமுத்ரத்தோடு
சாம்யா பன்னமாய் இரா நின்றது -எங்கனே என்னில் –
மரகத மணி ரம்யம் –
சமுத்ரமோ வென்று பார்த்தால் -மரகத மணி போலே பசுத்து ரம்யமாய் இருக்கும்
தேவரீரோ என்று பார்த்தால் -வாமனன் என் மரகத வண்ணன் -என்றும் -ராமம் மரகதச் யாமம் -என்றும்
சொல்லுகிறபடியே மரகத மணி போல ரம்யமாய் இருப்பீர் –
ரம்ய மாணிக்ய முக்தா பலவில சித காத்ரம்-
சமுத்ரமோ என்று பார்த்தால் அழகியதான மாணிக்கம் என்றும் முத்துக்கள் என்றும்
இவைகளாலே விளங்குகிற மெய்யை உடையதாய் இருக்கும் –
தேவரீரோ வென்று பார்த்தால் ரத்னாபரணங்களாலும் முக்தாபரணங்களாலும் விளங்கா நிற்கிற
திவ்ய மங்கள விக்ரஹத்தை யுடையராய் இருப்பீர் –
ப்ரஸ் புரத் கந்த வாஹம் –
சமுத்ரமோ வென்று பார்த்தால் வாரிதிர்மாருதோத்ஷி ப்ததாங்க சதுராக்ருதி -என்கிறபடியே
எப்போதும் காணலாம் படியான காற்றின் அலைதலால் உண்டான அலைகளை யுடைத்தாய் இருக்கும்
தேவரீரோ வென்று பார்த்தால் சந்தன குங்கும கர்ப்பூராதிகளின் கந்தங்களை வஹித்து அருளா நிற்பீர் –
விஹித விவித ஜந்தும்-
சமுத்ரமோ வென்று பார்த்தால் சலில நிவ ஹங்களாலே மறைக்கப் பட்ட விவித ஜந்துக்களை யுடைத்தாய் இருக்கும்
தேவரீரோ வென்று பார்த்தால் ஸ்வரூப ரூப குண விபவ ஐஸ்வர் யங்களாலே விஹிதரான
சகல ஜீவ வர்க்கங்களையும் யுடையராய் இருப்பீர் –
ப்ரோல்ல சந்மீ நலீலம்
சமுத்ரமோ வென்று பார்த்தால் விளங்கா நிற்கிற மீன்களின் லீலைகளை யுடைத்தாய் இருக்கும் –
தேவரீரோ வென்று பார்த்தால் அலை கடல் நீர் குழம்ப அகடாவோடியகல் வானுரிஞ்ச முதுகில் மலைகளை மீது
கொண்டு வருமீனை மாலை -என்னும்படி மத்ச்யவதாரத்தில் உண்டான லீலையை உடையயீராய் இருப்பீர் –
ஸூ கம ஜல நிதிம் த்வாம் மன்மஹே ரங்க ராஜ –
ஆக இப்படி மா மணியும் மலர்மேல் மங்கையும் சங்கமும் தங்குகின்ற அலைகடல் போன்றிவர் ஆர் கொல்-என்னும் படியான
இந்நிலை சமுத்ரத்தோடு தேவரீருக்கு உண்டான சாதர்ம்யத்தை வாழ்வித்துக் கொண்டு எழுந்து அருளி இருக்கிற நிலை போலே இருந்தது –
————————————————————————–
மணி வரருசிவாஹீ மத்ஸ்ய ரூபம் ததாநோ
லலிததவள சங்கோ லங்க்யன்நேவ வேலாம்
வித்ருத புவன பாரோ வீஷ்யசே ரங்க தாமன்
அபர இவ வபுஷ்மா நாபகாநா மதீச –ஸ்லோகம் –14-
நாயந்தே –
ஆபோ வா இதமாக்ரே சலிலமேவாசீத்-என்றும் –
அப ஏவ ச சர்ஜா தௌதா ஸூ வீர்யமபாஸ் ருஜத்-ததண்ட மபவத்தைமம் சஹாஸ்ராம்சு சமப்ரபம் -என்றும் –
கடலாழி நீர் தோற்றி -என்றும் -தானோர் பெரு நீர் தன்னுள்ளே தோற்றி அதனுள் கண் வளரும் -என்றும்
நன்மைப் புனல் பண்ணி நான்முகனைப் பண்ணி -என்றும் சொல்லுகிறபடியே பிரதமத்தில் ஜலத்தை சிருஷ்டித்து -அதிலே
நாநா வீர்யா ப்ருதக் பூதாஸ் ததஸ்தே சம்ஹிதம் விநா
நாசக்நுவன் ப்ரஜாஸ் ஸ்ரஷ்டு மசமா கம்ய கருத்ஸ் நச
சமேத்யான் யோன் சம்யோகம் பரஸ்பர சமாஸ்ரயா
மஹதாத்யா விசேஷான் தாஹ்யண்ட முத்பாத யந்தி தே-என்கிற
பஞ்சீ கரண பிரகாரத்தாலே மூல பிரக்ருதியையும் மஹதாதிகளானபிரகிருதி விக்ருதிகளையும்
ஆகாசாதிகளான சுத்த விக்ருதிகளையும் ஆக இவை எல்லாவற்றையும் அண்டமாக சிருஷ்டித்து
அண்டாத் ப்ரஹ்மா சமபவத் தேன ஸ்ருஷ்டமிதம் ஜகத் -என்றும்
பத்மே திவ்யே அர்க்க சங்காசே நாப்யா முத்பாத்ய மாமபி ப்ராஜா பத்யம் த்வயா கர்ம பூர்வம் மயி நிவேசிதம் -என்றும்
வான நான்முகனை மலர்ந்த தண் கொப்பூழ் மலர் மிசைப் படைத்த மாயோனை -என்றும் சொல்லுகிறபடியே
அவ்வண்டத்திலே ப்ரஹ்மாவை சிருஷ்டித்து –
தத் அந்தர்யாமியாய்க் கொண்டு தேவ திர்யக் மனுஷ்ய ஸ்தாவர ரூபமான சதுர்வித சிருஷ்டியையும் நடத்தி-
தத் ரஷண அர்த்தமாக வ்யூஹ விபவ அந்தர்யாமி அர்ச்சாவ தாரங்களை சங்கல்ப்பித்து
சகல ப்ராணிகளுடையவும் ஞான விரோதியாய் இருக்கிற
அநாத்ம அன்யாத்ம புத்திர்யா அஸ்வே ஸ்வமிதி யாமதி -அவித்யா தரு சம்பூதி பீஜ மேதத்த்விதா ஸ் திதம் -என்றும்
நீர் நுமது -என்றும் பொய்ந்நின்ற ஞானம் -என்றும் சொல்லப்படுகிற அஜ்ஞானத்தை
மானம் ப்ரதீபமிவ காருணிகோ ததாதி என்றும் -வேத நான்காய் -என்றும் சொல்லப்படுகிற
பிரமாண பிரதானத்தாலே சவாசனமாகப் போக்கி ரஷித்தும்
அந்த வேதத்தை மதுகைடபப்ரப்ருதிகள் அபஹரிக்க அவர்களை நிரசித்து ஹம்ச மத்ச்யாதிகளான விபவங்களாலே
ப்ரஹ்மா வுக்கு வேத உபதேசம் பண்ணி ரஷித்து தேவரீர்
ஷீராப்தேர் மண்டலாத்பாநோ யோகிநாம் ஹ்ருதயா தபி ரதிம் கதோ ஹரிர் யத்ர தத் ரங்கம் முநயோவிது -என்கிறபடியே
ஸ்ரீ ரங்க ஷேத்ரத்திலே அர்ச்சா ரூபியாய் அவதரித்து ஸூ லபராய் எழுந்து அருளி இருந்தது
இப்பொழுது சகல ஆத்மாக்களுடையவும் தாபத்ரய சாந்த்யர்த்தமாகத் திருமஞ்சனத்துக்கு ஏறி அருளின தேவரீரை
ஆதி கார்யமாய் ஜல தத்வ ரூபமான சமுத்ரத்தோடு ஒக்க வர்ணிக்கலாய் இருந்தது -எங்கனே என்னில் –
மணி வரருசிவாஹீ –
நாயந்தே
தேவரீர் மனிச்யாமபர புமான் -என்றும் மணியுரு -என்றும் -சொல்லுகிற க்ரமத்திலே -இந்திர நீலக் கல்லின் ஒளியை யுடையராய் இருந்தீர்
சமுத்ரமானது குவலயதள ச்யாமளருசி -என்கிறபடியே நீல வர்ணமாய் இரா நின்றது
மத்ஸ்ய ரூபம் ததாநோ
தேவரீர் –மத்யஸ்ய கமலா லோசன -என்றும் -மத்ஸ்யரூப நமோஸ்துதே -என்றும் -ஆபத் பஞ்சநமஞ்சலிம் விஜயிநே
மத்ஸ்யாய தித்சா மஹே-என்றும்
முதுகில் மலைகளை மீது கொண்டு வருமீனை -என்றும் -மீனாய் ஆமையுமாய் -என்றும் சொல்லுகையாலே
மத்ஸ்ய ரூபத்தை யுடையராய் இருந்தீர்
சமுத்ரமானது திமி மகர திமிங்கிலாதி மத்ஸ்யை அதிகஹநோ -என்றும் -நிதிரம்பசாம் கபீர -என்கிறபடியே
நாநா வித மஹா மத்ஸ்ய சரீரங்களை தரியா நின்றது –
லலிததவள சங்கோ
தேவரீர் சங்க சக்கர கதா பாணே -என்றும் -பச்சான் நாராயணச் சங்கீ -என்றும்
சங்கு சக்கரம் அங்கையில் கொண்டான் -என்றும் சொல்லுகிறபடியே
ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தை யுடையராய் இருந்தீர்
சமுத்ரமும் -க்லேசாத பக்யாமதி சங்க யூதம் -என்றும் -மலர்மேல் மங்கையும் சங்கமும் தங்குகின்ற அலை கடல் -என்றும்
சொல்லுகிற படியே பல சங்குகளை யுடையதாய் இருந்தது –
லங்க்யன்நேவ வேலாம் –
நாயந்தே
தேவரீர் மர்யாதா நாம் ச லோகஸ்ய கர்த்தா காரயிதா ச ச -என்றும்
மர்யாதாஸ்தாபநாயா ச -என்றும் சொல்லுகிறபடியே தாம் கல்பித்த மரியாதையைத் தாமும் கடவாதவராய் இருந்தீர்
சமுத்ரமானது யதா வேலாம் ஹி சாகர -என்கிறபடியே கரையைக் கடவாதாய் இருந்தது –
வித்ருத புவன பாரோ –
தேவரீர் -விஷ்ணு நா வித்ருதே பூமி -என்றும் –
வ்யாதே ஹீதி விதாரிதே சிசுமுகே த்ருஷ்ட்வா சமஸ்தம் ஜகத் மாதா யஸ்ய ஜகாம விஸ்மய வசம் பாயாத் ச வ கேசவ -என்றும்
வையம் ஏழும் கண்டாள் பிள்ளை வாயுளே -என்றும் சொல்லுகிறபடியே சகல லோகங்களையும் தரித்து எழுந்து அருளி இருந்தீர்
சமுத்ரமானது -ஜீவனம் புவனம் வனம் -என்று சொல்லுகிறபடியே
புவன சப்தம் ஜலம் பர்யாயம் ஆகையாலே தரிக்கப் பட்ட ஜல பரத்தை யுடைத்தாய் இருந்தது
வீஷ்யசே ரங்க தாமன் அபர இவ வபுஷ்மா நாபகாநா மதீச –
ஆகையால் வடிவுடை வானோர் தலைவனான தேவரீரை வடிவுடைத்தான வேறொரு சமுத்ரம் என விண்ணப்பம் செய்யலாய் இரா நின்றது –
——————————————————————–
நாநாநுவ்ருத்தி விஷயம் நதராஜ ஹம்சம்
நாநாண்ட ஜாதசமதிஷ்டி தமப்ஜரம்யம்
சேவாவ தீர்ண ஸூ மருத்கண மத்ய ரங்கின்
பாவா நூரூப நதமித்ய நுமன்மஹே த்வாம் –ஸ்லோகம் –15–
நாயந்தே
நாராயண பரம் ப்ரஹ்மம் -என்றும் -நாரணன் முழு வேழ் உலகுக்கும் நாதன் -என்றும் -சொல்லுகிறபடியே
நிரந்குச ஸ்வ தந்த்ரனாய் இருக்கச் செய்தேயும்
இமௌ ஸ் மமுநிசார்தூல -கிங்கரௌ சமுபஸ்திதௌ ஆஜ்ஞாபாய யதேஷ்டம் தே சாசனம் கரவாவகிம் -என்றும் –
உன்தனக்கு அன்பரானார் அவருகந்து அமர்ந்த செய்கை உன் மாயை -என்றும் சொல்லுகிறபடியே
ப்ரணத பரதந்திர சர்வ பிரவ்ருத்திகரர் ஆகையாலே
பாலாழி நீ கிடக்கும் பண்பை யாம் கேட்டேயும் காலாழும் நெஞ்சழியும் கண் சுழலும் -என்கிறபடியே
கிடை அழகு காண ஆசைப்பட்ட ஆஸ்ரிதர் அபேஷ அனுகுணமாக பெரிய பெருமாளாய்-
-திருவரங்கப் பெரு நகருள் தெண்ணீர்ப் பொன்னி திரைக் கையால் அடிவருடப் பள்ளி கொண்டு -அதற்கு மேலே
ஆணிச் செம்பொன் மேனி எந்தாய் நின்று அருளாய் -என்கிறபடியே ஆசைக்கு ஈடான அழகிய மணவாளராயக் கொண்டு
திருமடந்தை மண் மடந்தை இருபாலும் திகழ நிலையார நின்று அருளி -பின்னையும் அறிந்து அறிந்து இவ்வீதி போதுமாகில் என்று
ஆசைப்படுகிற பிரணயிநீ பரிஜனங்களுக்காக திவ்ய உத்சவாபதேசத்தாலே மேனகை முதலானோர் வெள்கி ஆடல் மாறும்படி வீதி உலாவி அருளி
தேய்த்துக் கிடக்க நான் ஒட்டேன் மஞ்சளும் செங்கழு நீரின் வாசிகையும் நாறு சாந்தும் அஞ்சனமும் கொண்டு வைத்தேன்
-ஆடி அமுது செய் -என்று அபேஷிக்கிற அந்தரங்கருக்காக இப்போது திருமஞ்சனமாடி யருளி
சௌந்தர்ய பிரபாவத்தாலே சூழ்ந்து இருந்து ஏத்துவாரை
அறச் சுழியாறு படுத்திக் கொண்டு நிற்கிற நிலை
ஓர் ஆற்றோடு ச்லேஷித்து விண்ணப்பம் செய்யலாய் இரா நின்றது -அது எங்கனே என்னில் –
நாநாநுவ்ருத்தி விஷயம்
ஆறானது ஸ்நான பானாதி காமநயா நாநா வித பிராணிகளுடைய அனுவர்த்தனத்திற்கு விஷயமாய்
வேக வைபவ விவச விவித பதார்த்த சார்த்த அநுகம்யமானமுமாய் இருக்கும்
தேவரீர் -மன்மனா பவ மத்பக்தோ மத்யாஜி மாம் நமஸ் குரு -என்கிறபடியே
த்யான அர்ச்சன பிரணாமாதி ரூபேணவும் பஜன பிரபதன ரூபேணவும் நாநா விதமான ஆஸ்ரயணத்திற்கு விஷய பூதராய் இரா நின்றீர் –
நதராஜ ஹம்சம்
அன்ன மாடுலவு மலை புனல் -என்கிற ந்யாயத்தாலே சம்ச்லேஷத்தாலே துவண்ட வடிவை யுடைத்ததான
பரிசர ராஜ ஹம்சத்தை யுடைத்தாய் இருக்கும்
தேவரீர் -அனுகூல மஹீ பால வ்யானம்ர மௌளி பரம்பரா மணி மகரிகாரோசிர் நீராஜ தாங்க்ரி-என்கிறபடியே
திருவடிகளிலே ப்ரணதரான ராஜ ஸ்ரேஷ்டரை யுடையராய் இரா நின்றீர் –
நாநாண்ட ஜாதசமதிஷ்டிதம்
ஆறானது நாநா வித காரண்ட வாதி -நீர்க்காக்கை போன்றவை -அண்ட ஜங்களாலே -பறவைகளாலே அதிஷ்டிதமாய் இருக்கும்
தேவரீர் -ரோம கூபே ஹ்யநந்தாநி ப்ரஹ்மாண்டாநி ப்ரமந்தி தே -என்றும்
அண்டா நாம் த்வதுதரமா ம நந்தி சந்தஸ்தானம் -என்னும்படி அனந்தங்களான அண்டங்களாலே அடையப்பட்டு இரா நின்றீர் –
அப்ஜரம்யம் –
ஆறானது செவ்வித் தாமரைப் பூக்களாலே தரித்து இருக்கும் -செந்தலிருக்கும்-
தேவரீர் தவள வெண் சங்கு -என்னும்படி திரு நிறத்திற்கு பரபாகமான வெளுப்பை யுடைத்தான ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தாலே அழகியராய் இரா நின்றீர் –
சேவாவ தீர்ண ஸூ மருத்கணம் –
ஆறானது ஆகந்துக பத்ம சௌகந்தி கங்களின் அபரிமிதமான பரிமளங்களை அணைத்து ஏறிட்டுக் கொள்ளுகைக்காக
இறங்கின அழகிய மந்த மாருத ப்ருந்தத்தை உடைத்தாய் இருக்கும்
தேவரீர் திருநாள் சேவிக்கைக்காக ஸ்வர்க்கத்தில் இருந்து இறங்கின வடிவுடை வானோரான ஸூந்தர வ்ருந்தாரக சந்தோகத்தை உடையராய் இரா நின்றீர் –
அத்ய ரங்கின் பாவா நூரூப நதமித்ய நுமன்மஹே த்வாம் —
ஆக இப்புடைகளாலே நாட்டில் காணும் ஆறோடு ஒத்து இருக்குமதாய்
அவை போலே தான் நினைத்த வாக்கிலே போகை யன்றிக்கே பச்யத மன ப்ரவண மோகமிவா ம்ருதஸ்ய -என்று
ஆஸ்ரிதருடைய அபிப்பிராயத்தை அனுசரிப்பதான அரங்க மா நகருள்ளான் -என்கிற அமுத வாறானது
அகில தாபங்களையும் ஆற்றும் படி அபிமுகமாய் நிற்கிற நிலை போலே இருந்தது –
——————————————————————————-
வ்ருத்திர் வேகவதீ சமாஸ்ரித ஜன த்ராணே பவச்சேதச
தாம்ரா குங்கும பத்ரிகா பஜதடீ தே துங்க பதரோ ஜ்ஜ்வலா
ரங்கா தீஸ்வர நர்மதாச பணிதி சோணஸ் ஸூஜாதோ தர
தஸ்மாத் ஸ்நாநவிதௌஜ நோஹி மநுதேத்வாம் சர்வ தீர்த்தாத்மகம் –ஸ்லோகம் -16-
நாயந்தே –
ஏக இத்ராஜா ஜகதோ பபூவ என்றும் -சர்வலோக மகேஸ்வர -என்றும் -சர்வஸ் யேசான-என்றும் –
தமீச்வராணாம் பரமம் மஹேஸ்வரம் தம் தைவதா நாம் பரமம் ச தைவதம் -என்றும் -த்ரயாண மாபி ராகவோ ராஜ்யம் அர்ஹதி -என்றும்
வீற்று இருந்து ஏழ் உலகும் தனிக்கோல் செல்ல -என்றும்
பொங்கோதம் சூழ்ந்த புவனியும் விண்ணுலகும் அங்காதும் சோராமே ஆள்கின்ற வெம்பெருமான் செங்கோலுடைய
திருவரங்கச் செல்வனார் -என்றும் சொல்லுகிறபடியே
சகல லோக நாயகராய் இருக்கிற இருக்கிற தேவரீர் -அஜாயமா நோ பஹூ தா விஜாயதே -என்றும் –
பரித்ராணாய சாதுநாம் விநாசாய ச துஷ்க்ருதாம் தர்ம சம்ச்தாப நார்த்தாய சம்பவாமி யுகே யுகே -என்றும்
ச உச்ரேயான் பவதி ஜாயமான -என்றும் -ஆதி யஞ்சோதி யுருவை யாங்கு வைத்து இங்குப் பிறந்த வேத முதல்வன் -என்றும் சொல்லுகிறபடியே
சாதுக்களை ரஷிக்கைக்காகவும் விரோதிகளை நிரசிக்கைக்காகவும் தர்ம சம்ஸ்தாபனார்த்தமாகவும் இங்கு அவதரித்து அருளிற்று –
அப்பொழுது அர்ஜுனனுக்கு தூத்ய சாரத்யங்கள் பண்ணி -விரோதிகளை நிரசித்து அருளினாப் போலே இப்போதும் யவ நாதிகளான
ஆஸ்ரித விரோதிகளை நிரசித்து அருளி சகல லோகத்தையும் க்ருதார்த்தராம் படி பண்ணி அருளிற்று –
இப்பொழுது ஹ்ரீச்ச தே லஷ்மீச்ச பத்ன்யௌ என்றும் -தேவிமாராவார் திருமகள் பூமி -என்றும் சொல்லுகிறபடியே
நாச்சிமாரோடு கூட சகல பிராணிகளுடைய தாபத்ரயங்களும் போம்படி
திருமஞ்சனத்துக்கு ஏறி அருளின தேவரீருடைய திருமநியிலே சகல தீர்த்தங்களும் கானலாய் இருந்தது -அது எங்கனே என்னில் –
வ்ருத்திர் வேகவதீ சமாஸ்ரித ஜன த்ராணே பவச்சேதச-
நாயந்தே
பரமாபதமா பன்னோ மநஸா சிந்தயத்தரிம் சது நாக வரச் ஸ்ரீ மான் நாராயண பராயண -என்றும்
நாராயணா ஒ மணி வண்ணா நாகணையாய்-என்றும் சொல்லுகிறபடியே –
பரமா பன்னனான ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானை ரஷிக்கைக்காக எழுந்து அருளிய போது
கரிப்ரவரப்ரும்ஹிதே பகவதஸ் த்வராயை நம -என்கிறபடியே தேவரீருடைய திரு உள்ளத்திலே ப்ரவ்ருத்தி வேகவதியாய் இருந்தது
ஆகையாலே -வேகவதீ என்கிற தீர்த்தமாகச் சொல்லலாமே இரா நின்றது –
தாம்ரா குங்கும பத்ரிகா –
தேவரீர் திருமேனியில் சாத்தி அருளின குங்கும சர்ச்சையானது தாமர வர்ணையாய் இரா நின்றது
ஆகையாலே தாமர பரணீ என்ற தீர்த்தமாய்ச் சொல்லலாய் இரா நின்றது –
பஜதடீ தே துங்க பதரோ ஜ்ஜ்வலா –
உத்துங்க பாஹூ சிகர -என்றும் -பத்ர பாஹ -என்றும் -மணிவரைத் தோள் என்றும் -சொல்லுகிறபடியே
திருத் தோள்கள் ஆனவை உத்துங்கமாய் பத்திரமாய் உஜ்ஜ்வலமுமாய் இரா நின்றது
ஆகையாலே துங்க பத்ரா என்ற தீர்த்தமாகச் சொல்லலாய் இரா நின்றது –
ரங்கா தீஸ்வர நர்மதாச பணிதி-
மதுர பாஷீ என்றும் ப்ரியம்வத என்றும் -நர்மாலாபம் முஹூர நுவதன் -என்றும் சொல்லுகிறபடியே
தேவரீர் அருளிச் செய்யும் உக்திகள் நர்மத்தைக் கொடுக்குமதாய் இருந்தன
ஆகையாலே நர்மதா என்ற தீர்த்தமாகச் சொல்லலாய் இருந்தது –
சோணஸ் ஸூ ஜாதோ தர
வித்ரும சந்நிபாதர -என்றும் -பவளச் செவ்வாய் -என்றும் -வாயும் சிவந்து கனிந்து -என்றும் –
கோலம் திரள் பவளக் கொழுந்துண்டாம் கொலோ -என்றும் சொல்லுகிறபடியே தேவரீருடைய அதரமானது சோணமாய் இரா நின்றது
ஆகையாலே சோணம் -சிவப்பு -என்னும் நதம் என்று சொல்லலாய் இரா நின்றது –
தஸ்மாத் -த்வாம் – சர்வ தீர்த்தாத்மகம் –ஜ நோ மநுதே –
ஆகையாலே இப்படி எழுந்து அருளி இருக்கிற தேவரீரை சேவித்து நிற்கிற சகல சாத்விகர்களும் தேவரீரைத் திரு மணியிலே
சகல தீர்த்தங்களையும் வெளியிட்டுக் கொண்டு எழுந்து அருளி நிற்கிறவராக புத்தி பண்ணா நின்றார்கள் –
—————————————————————-
எனக்கே தன்ன்னோத் தந்த கற்பகம் அன்றோ -நம்பெருமாளை கற்பக விருஷமாக இரண்டு ஸ்லோகங்கள் அருளிச் செய்கிறார் மேல் –
அநேக சாகாச்ரித மாச்ரிதேப்யோ
தத்தாபி காங்ஷம் த்ரி தசைக போக்யம்
ஸூ பர்ண ரம்யம் ஸூ மனஸ் சமேதம்
ஸூ ரத்ருமம் த்வாம் ஸூ தியோ வதந்தி –ஸ்லோகம் -17-
நாயந்தே
சகல ஜகத் ஸ்ரஷ்டாவாய் -சர்வ ரஷகனாய் -சகல ஜகன் நியந்தாவாய் -சர்வ சேஷியாய் -சமாப்யதிக ரஹிதனாய்
அயர்வறும் அமரர்கள் அதிபதியாய் -பொங்கோதம் சூழ்ந்த புவனியும் விண்ணுலகும் அங்காதும் சோராமே
ஆள்கின்ற செங்கோலுடைய திருவரங்கச் செல்வரான தேவரீரை ஒரு கற்பகத் தருவாக விண்ணப்பம் செயலாய் இரா நின்றது –
அநேக சாகாச்ரித-
கல்பகமானது சர்வ ஆனந்தமான நந்த வனத்திலே சம்பவிக்கையாலே அனுகுல கந்தளிதமான சுவடுகளாலே பூரணமாய் இருக்கும்
தேவரீரும் -வேதைச்ச சர்வை ரஹமேவ வேத்ய -என்கிறபடியே சகல சாகா சிரஸ் ஸூ விதித சரண யுகள சரோஹராய் இருந்தீர் –
ஆச்ரிதேப்யோ தத்தாபி காங்ஷம் –
கற்பகமானது தன பக்கலிலே சென்று அபேஷித்தவர்க்கு அபேஷ அணு குணமாக பல பிரதான விலஷணமாய் இருக்கும்
தேவரீரும் வேண்டிற்று எல்லாம் தரும் கோதில் என் வள்ளலாய் இருந்தீர் –
த்ரி தசைக போக்யம் –
கற்பகமானது அம்ருதாசனராய் அத ஏவ அமர்த்யரான தேவ வர்க்கத்திற்கு அனுகூல தயா பாவ்யமாய் இருக்கும்
தேவரீரும் யத்ர பூர்வே சாத்யாஸ் சந்தி தேவா -என்றும் -விண்ணாட்டவர் மூதுவர் -என்றும் சொல்லுகிறபடியே
நிரந்தர அனுபவ காமுகரான நித்ய ஸூ ரிகளுக்கு நிரதிசய போக்யராய் இருந்தீர் –
ஸூ பர்ண ரம்யம் –
கற்பகமானது கண்டவர் கண்கள் உகந்து இருக்கும் படி கௌதுக்க ஜனகமான பத்ர விசேஷங்களாலே ரமணீயமாய் இருக்கும்
தேவரீரும் ஸூ பர்ணோசி கருத்மான் -என்கிறபடியே திருவடி மேல் கொள்ளுகையாலே
மஞ்சுயர் பொன் மலை மேல் எழுந்த மா முகில் போன்று உளர்வந்து காணீர் அஞ்சிறைப் புள்ளும் ஓன்று ஏறி வந்தார் -என்னும் படியாய் இருந்தீர் –
ஸூ மனஸ் சமேதம்
கற்பகமானது மதுகர குல கர்வ நிர்வாஹக மத முதித மனோ பவமான்ய சஸ்திர மாலாயமான மஞ்சரிகளாலே மாநநீயமாய் இருக்கும்
தேவரீரும் சத்வ நிஷ்டராய் -சதாசாரசேவா நிபுணராய் விதித சகல தத்வார்த்தராய் இருக்கிற வித்வத் சங்கங்களாலே சேவ்யமானராய் இருந்தீர் –
ஸூ ரத்ருமம் த்வாம் ஸூ தியோ வதந்தி –
ஆக இப்படி சகல சுருதி சிரோமான்யமாய் சகல பிரதான தீஷா தஷமாய் சர்வ ஸூ லபமாய் ஸூ ஜாதமாய்
எனக்கே தன்னைத் தந்த கற்பகம் என்கிறபடியே சர்வ உபாய தரித்ரரான அடியோங்களுக்கு சர்வச வத்தையும்
கொடுக்கைக்கு ஒருப்பட்டு நிற்கிற ஒரு கற்பக தருவின் நிலை போலே இருந்தது –
——————————————————————-
ஸ்ரீ மத் ஸூ ரங்க தரணீச விசால சாகம்
ஸ்ரீ கௌஸ்துபஸ் புரித மீப்சிததா நதஷம்
ஹம்சாதி சத்த்வி ஜைவரை ருப சேவ்யமாநம்
த்வாம் மன்மஹே ஸூ ரதரும் ஸூ ர நாத நாத –ஸ்லோகம் –18-
நாயந்தே
ஏகோ ஹ வை நாராயண ஆஸீத் ந ப்ரஹ்மா நே சான நே மே த்யாவா ப்ருதிவீ -என்றும்
சதேவ சோம்ய இதமக்ர ஆஸீத் -என்றும் -அசத்வா இதமக்ர ஆஸீத் -என்றும்
நாசதா ஸீன் நோஸ தாசீத் -என்றும் சொல்லுகிறபடியே பூதர சரிதா சாகர பிரமுகமான சப்த த்வீபங்களும்
அதல விதலாதிகளான அதோலோகங்களும்
பூர்ப்புவாஸ் ஸூ வர மஹர் ஜனஸ் தபஸ் சத்யம் -என்று சொல்லப்படுகிற ஊர்த்வ லோகங்களும்
அவ்வோ லோக அந்தர்வர்த்திகளான தேவ மனுஷ்ய தெரியக் ஸ் தாவராதி சகல வஸ்துக்களும் உப சம்ஹ்ருதங்களாய்
தேவரீர் ஒருவருமே யாய் -ஒன்றும் தேவும் உலகும் உயிரும் மற்றும் யாதும் இல்லா வன்று -என்னும்படி
சர்வ சூன்யம் என்னலாம் படியாய் இருந்துள்ள அக்காலத்திலே
பரம காருணிகராய் இருந்துள்ள தேவரீர் சதா பச்யந்தி ஸூரய -என்று நித்ய விபூதியில் உள்ள ஸூ ரிகள் நம்மை சதா அனுபவம் பண்ணச் செய்தே
லீலா விபூதியில் உள்ள இவ்வாத்மவர்க்கங்கள் நம்மைக் கண்டு அனுபவிக்கப் பெறாமல் இழவு படுவதே -என்று திரு உள்ளத்திலே நொந்து அருளி
யதா பூர்வமகல்பயத் -என்றும் -வித்தாய லோகான் விதாய பூதானி விதாய சர்வா பிரதிசோ திகச்ச -என்றும் சொல்லுகிறபடியே
யதா பூர்வம் சமஸ்த பிரபஞ்சத்தையும் உண்டாக்கி அருளி தத் ஸ்ருஷ்ட்வா ததேவாநு ப்ராவிசத்ததநு பிரவிச்ய -என்று
எடுத்ததொரு அகம் குடிபுகுவாரைப் போலே
தத்தத்த அண்டாந்தர்வர்த்திகளான சகல வஸ்துக்களையும் சகல வஸ்துக்களையும் அனுபிரவேசித்து அருளி
பரித்ராணாய சாது நாம் -என்கிறபடியே ஆஸ்ரித சம்ரஷணாதி பிரயோஜனத்தை திரு உள்ளத்திலே கொண்டு அருளி திருவவதரித்து
நித்ய விபூதி லீலா விபூதி வ்யாவ்ருத்த ஸ்ரீ ரங்க தரணிய தீசராய் இப்பொழுது எழுந்து அருளி நிற்கிற நிலை
கற்பக வ்ருஷத்தொடு சாம்யமாக விண்ணப்பம் செய்யலாய் இரா நின்றது -எங்கனே என்னில் –
ஸ்ரீ மத் ஸூ ரங்க தரணீச –
விசால சாகம்
நாயந்தே
அக்கற்பக தருவானது விசாலங்களான சாகைகளை உடைத்தாய் இருக்கும்
தேவரீரும் விஸ்த்ருங்களான வேத சாகைகளை உடைத்தாய் இருப்பீர் –
ஸ்ரீ கௌஸ்துபஸ் புரிதம்-
நாயந்தே
அக்கற்பக மானது ஸ்ரீ கௌஸ்துபம் போலே ஸ்புரிதமாய் இருக்கும் –
தேவரீரும் ஸ்ரீ தேவி என்ன ஸ்ரீ கௌஸ்துபம் என்ன இவைகளாலே விளங்கா நிற்பீர் –
ஈப்சிததாநதஷம்
அக்கற்பக மானது இச்சித்த வற்றை கொடுக்க வற்றதாய் இருக்கும்
தேவரீரும் சகல பல பிரதோ ஹி விஷ்ணு -என்கிறபடியே ஆஸ்ரிதர்களுக்கு சகல பலங்களையும் கொடுத்து அருளா நிற்பீர் –
ஹம்சாதி சத்த்வி ஜைவரை ருப சேவ்யமாநம் –
அக்கற்பக மானது ஹம்சம் முதலிய பஷி ஜாலங்களாலே சேவிக்கப் படா நிற்கும்
தேவரீரும் ஹம்சர் பரம ஹம்சர் தொடக்கமான சத்துக்களாய் உள்ள ப்ராஹ்மண உத்தமர்களாலே சேவிக்கப் படா நிற்பீர் –
த்வாம் மன்மஹே ஸூ ரதரும் ஸூ ர நாத நாத —
ஆக இப்படி அழகிய மணவாளப் பெருமாள் எனபது ஒரு கற்பக வருஷம்
ஆஸ்ரிதர்களுக்கு அபீஷ்ட பிரதானம் செய்கைக்கு ஒருப்பட்டு நிற்கிற நிலை போலே இருந்தது –
————————————————————————————————————
அத்யாயதே வசதி ஹல்லக புஷ்பமாலா
வஷச்தலே விநிஹிதா தவ ரங்க ராஜ
ஸ்வச் சந்த சாநி கமலா சரணார விந்த
மாணிக்ய நூபுர மயூக பரம்பரேவ –ஸ்லோகம் –19-
நாயந்தே
யதோ வாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மநஸா சஹ -என்றும்
யஸ்யாமதம் தஸ்ய மதம் மதம் யஸ்ய ந வேத ச -என்றும்
ப்ரத்யஸ் தமிதபேதம் யத் சத்தாமாத்ரா மகோசரம் வசஸா மாத்ம சம்வேத்யம் தத் ஜ்ஞானம் ப்ரஹ்ம சம்ஜ்ஞிதம் -என்றும்
தத்வேன யஸ்ய மஹிமார்ணவ சீகராணு சக்யோ நமாதுமபி சர்வபிதா மஹாத்யை-என்றும்
யசயாச்தே மகிமா நமாத்மன இவத்வத் வல்லபோபி பிரபு -நாலம் மாதுமியத்தயா-என்றும்
தனக்கும் தன தன்மை யறிவறியானை-என்றும் -அறிந்தன வேத அரும் பொருள் நூல்கள் அறிந்தன கொள்க அரும் பொருளாதல் -என்றும்
தாமோதரன் உருவாகிய சிவற்கும் திசைமுகற்கும் ஆமோ தரமறிய எம்மானை என்னாழி வன்னனையே -என்றும் சொல்லுகிறபடியே
தேவரீருடைய ஸ்வரூபம் அபரிச்சேத்யம் என்று சித்தமாக இருக்கச் செய்தே முமுஷூக்களான ஆத்மாக்களுக்கு
யதாவஸ்திதமான பரமாத்ம ஜ்ஞானத்தாலே மோஷம் பெற வேண்டுகையாலே
சத்யம் ஜ்ஞானம் அநந்தம் ப்ரஹ்ம -என்றும் -ப்ராணோ ப்ரஹ்ம கம் ப்ரஹ்ம காம் ப்ரஹ்ம -என்றும்
அவிகாராய சுத்தாய நித்யாய பரமாத்மனே சதைக ரூப ரூபாய விஷ்ணவே சர்வ ஜிஷ்ணவே-என்றும்
நந்தா விளக்கே அளத்தற்கு அரியாய் நரநாரணனே-என்றும் உணர் முழு நலம் -என்றும்
அப்பொழுதைக்கு அப்பொழுது என்னாராவமுதமே -என்றும் சொல்லுகிற பிரமாணங்களாலே
ஸ்வரூபம் நிரூபிதம் ஆயினும் நிரூபித்த ஸ்வரூபத்துக்கு விசேஷணமான-
வசீ வதான்யோ குணவான் ருஜூச் சுசிர் மருதூர் தயாளூர் மதுர ஸ்திரஸ் சமை கருதீ க்ருதஜ்ஞஸ்
த்வமசி ஸ்வ பாவதஸ் சமஸ்த கல்யாண குணாம்ரு தோததி-என்று சொல்லப்படுகிற தர்மங்களில் பிரதான நிரூபகையான பிராட்டி
ஹ்ரீச்ச தே லஷ்மீச்ச பத்ன்யௌ -என்றும் அச்யேசா நோ ஜகதோ விஷ்ணு பத்னீ என்றும் -சரத்தா தேவோ தேவத்வம் அஸ்நுதே -என்றும்
நாராயண பரம் ப்ரஹ்ம சக்திர் நாராயநீச சா வா பகாவதி சம்ச்லேஷா தேக தத்வமிவஸ்திதௌ-என்றும்
அனந்யா ராகவேணாஹம் பாஸ்கரேண ப்ரபாயதா -என்றும்
வாரணி முலையாள் மலர்மகளோடு மண் மகளுடன் நிற்ப -என்றும் சொல்லுகிற படியே
நித்ய அனபாயிநியாய்க் கொண்டு திரு மார்பிலே எழுந்து அருளி இருக்கையாலே
இப்போது திருமஞ்சனம் என்று ஒரு வியாஜ்யத்தை இட்டு ஏறி அருளின தேவரீருடைய திரு மார்பிலே சாத்தின
செங்கழு நீர்த் திரு மாலையை இப்படி விண்ணப்பம் செய்யலாய் இரா நின்றது -எங்கனே என்னில்
அத்யாயதே வசதி ஹல்லக புஷ்பமாலா வஷச்தலே விநிஹிதா தவ ரங்க ராஜ
ஸ்வச் சந்த சாநி கமலா சரணார விந்த மாணிக்ய நூபுர மயூக பரம்பரேவ —
நாயந்தே
விசால வஷஸ்தல சோபி லஷணம்-என்றும்
பீநவஷா விசாலாஷ -என்றும்
கவாட விஸ்தீர்ண மநோரமோர -என்றும்
என் திருமகள் சேர் மார்பனே என்றும் சொல்லுகிற பிரகாரத்தாலே
நாச்சியாருக்கு ஹிரண்ய ப்ராகாரமாய் மிகவும் அகன்று இருக்கிற தேவரீருடைய திரு மார்பிலே சாத்தின செங்கழுநீர்
வேதாந்தாஸ் தத்வ சித்தாம் முரபிதுரசி யத்பாத சிஹ்னைஸ் தரந்தி -என்றும்
அலர்மேல் மங்கை யுறை மார்பா -என்றும் -சொல்லுகிறபடியே தாம் வேண்டினபடி உலாவா நிற்கிற
நாச்சியாருடைய மாணிக்கத் திருச் சிலம்பினது ஒளி ஒழுங்கு போலே இரா நின்றது –
———————————————————————————–
ரங்கே சரஜநீசர்சா ராஜதே தவ வஷசி
தேவா ஹிரண்ய வர்ணாய தேஹகாந்திரி வோதிதா –ஸ்லோகம் –20-
நாயந்தே
சர்வ ஜகத் காரண பூதராய்– சர்வ ஸ்வாமி யாய் -சர்வ கர்ம சமாராத்யராய் -சர்வ ரஷகராய் -சர்வ சேஷியாய்
-சர்வ உபாஸ்யராய் -சர்வ நியாமகராய் -இருக்கிற தேவரீர் -சைத்ர ஸ்ரீ மா நயம் மாச புண்ய புஷ்பித காநன-என்கிறபடியே
தேவரைப் போலே
ஸ்ரீ மானாய் -பாவனமாய் -திருமகள் சேர் மார்பனே -என்றும் -அலர்மேல் மங்கை யுறை மார்பா -என்றும் –
திருமகளார் தனிக் கேள்வன் பெருமை யுடைய பிரானார் -என்றும் அருளிய அபியுக்தர் பாசுரப்படியும்
ஹிரண்ய வர்ணாம் ஹரிணீம் என்று சொல்லும் ஸ்ருத்யர்த்தத்தின் படியேயும்
தேவரீர் திருமார்பில் எழுந்து அருளி இருக்கிற ஹிரண்ய வரணையான நாச்சியாரின் திரு மேனியின் பிரபை போலே இரா நின்றது –
சர்வகந்த சர்வரச என்று சொல்லப்படும் தம்மைப் போலே போக்யமுமான இம்மாசத்திலே பூ முடி சூடி
வசந்தே வசந்தே யஜேத -என்று சொல்லுகிறபடியே
தாமும் ஒரு யஜ்ஞம் பண்ணுவதாக தீஷித்து அருளி சுருதி ஸ்ம்ருதி சர்வமமை வாஜ்ஞா -என்று சொல்லுகிறபடியே
தேவரீருடைய ஆஜ்ஞா ரூபமான ஸ்ருதியின் அர்த்தங்களுக்கு உப ப்ருஹ்ணமான ஸ்ரீ பகவத் சாஸ்திர க்ரமத்தாலே
யஜ்ஞே ந யஞ்மய ஜந்த தேவா -என்கிறபடியே தேவரீர் நடத்தி அருளுவதும் யஜ்ஞமாய்
அதிலே தாமே பிராப்யமும் ப்ராபகமும் ஆவீர் என்னும் இந்த ரகஸ்ய அர்த்தத்தை வெளியிட வேண்டித் திருமஞ்சனமாடுவதாக
எழுந்து அருளி திரு மார்பினில் சாத்திய மஞ்சள் காப்பு இங்கனே சொல்லலாய் இரா நின்றது –
————————————————————————————
ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பராசர பட்டர் திருவடிகளே சரணம் –
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –