Archive for February, 2016

ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் அருளிய திரு அழகர் அந்தாதி -76-100-

February 29, 2016

சிந்திக் கல் ஆரம் கொழிக்கும் திருச் சிலம்பாற்று அழகும்
பந்திக் கலாப மயில் ஆடும் சாரலும் பங்கயனோடு
அந்திக் கலாப மதியாற்கு அரியார் உறை ஆன் பொறுப்பும்
வந்திக் கலாம் எனில் சந்திக்கலாம் உயர் வைகுந்தமே –76–

சிந்திக் கல் ஆரம் கொழிக்கும் திருச் சிலம்பாற்று அழகும்
முத்துக்களையும் மற்றும் பல வகை இரத்தினங்களையும் அலைகளிலே வீசி ஒதுக்கின்ற சிறந்த நூபுர கங்கா நதியானது
பந்திக் கலாப மயில் ஆடும்-வரிசையான தோகை யுடைய மயில்கள் கழித்து தோகை விரித்து கூத்தாடப் பெற்ற
சாரலும் -திருமால் இருஞ்சோலை திருமலை சாரலையும்
மாதுறு மயில் சேர் மாலிருஞ்சோலை
பங்கயனோடு -பிரமனுக்கும்
அந்திக் கலாப மதியாற்கு -அந்தி மாலையில் விளங்கும் பிறைச் சந்திரனை தரித்த சிவபிரானுக்கும்
அரியார் -ஒற்றை விடையானும் நான்முகனும் உன்னை அறியாப் பெருமையோனே -பெரியாழ்வார்
உறை ஆன் பொறுப்பும் வந்திக் கலாம் எனில் -ரிஷப கிரியை வணங்கக் கூடுமாயின்
சந்திக்கலாம் உயர் வைகுந்தமே –வந்திக்கலாம் எனில் சந்திக்கலாம் -சொல் நயம் –

———————————————————————-

வைதாரையும் முன் மலைந்தாரையும் மலர்த்தாளில் வைத்தாய்
மொய்தாரை அத்தனைத் தீங்கு இழைத்தேனையும் மூது உலகில்
பெய்தாரை வானின் புரப்பான் இடபப் பெரும் கிரியாய்
கொய்தாரை வேய்ந்த திருவடிக் கீழ்த் தொண்டு கொண்டருளே –77–

மூது உலகில் -பழைமையான உலகில்
பெய்-வரையாது பொழிகின்ற
தாரை வானின்-மழைப் பெருக்கை யுடைய மேகம் போலே
புரப்பான் -வரையாது அனைவரையும் பாதுகாப்பதற்கு
இடபப் பெரும் கிரியாய் -பெரிய ரிஷப கிரியில் எழுந்து அருளி இருக்கும் அழகரே -நீ –
வைதாரையும் -சிசுபாலன் போல்வாரையும் -முன் மலைந்தாரையும் -தந்தவக்ரன் போல்வாரையும் -மலர்த்தாளில் வைத்தாய்
அத்தன்மையான நீ –
மொய்தாரை அத்தனைத் தீங்கு இழைத்தேனையும் -வானில் நஷத்ரங்கள் மொய்த்தால் போலே அத்தனை தீங்கு இழைத்தேனையும்
கொய்தாரை வேய்ந்த திருவடிக் கீழ்த் தொண்டு கொண்டருளே –பறிக்கப் பட்ட மலர்களால் ஆகிய
மாலையைத் தரித்த நின் திருவடி யின் கீழ் அடிமை கொண்டு அருள்வாய்

———————————————————————–

கொண்ட மருந்தும் கடைவாய் வழி உக கோழை வந்து
கண்டம் அருந்துயர் ஆம் போது உன் பாதம் கருதறியேன்
வண்டு அமரும் துளவோனே தென் சோலை மலைக்கு அரசே
அண்டம் அருந்தும் பிரானே இன்றே உன் அடைக்கலமே –78-

வண்டு அமரும் துளவோனே
தென் சோலை மலைக்கு அரசே
அண்டம் அருந்தும் பிரானே
கொண்ட மருந்தும் கடைவாய் வழி உக -அரிதில் வாயினுள் செலுத்தப் பட்ட பாலும் உள்ளே இறங்க மாட்டாமல் கடைவாய் வெளியே வழிய
கோழை வந்து கண்டம் அருந்துயர் ஆம் போது -கபம் நெஞ்சில் அடைத்துக் கொண்டு -அரிய மரண வேதனை யுண்டாகும் சமயத்தில்
உன் பாதம் கருதறியேன்
இன்றே உன் அடைக்கலமே —

———————————————————————

அடைக்கலம் தானை இரந்தாள் புகல அவள் பொருட்டால்
படைக்கலம் தானைத் தருமன் கெடாமல் வெம் பாரதப் போர்
இடைக்கலந்தானை அலங்காரனை சரண் என்று அடைந்தேன்
முடைக்கலம் தான் நையும் அப்போது அயர்ப்பினும் முத்தி உண்டே –79-

அடைக்கலம் தானை இரந்தாள் புகல -கண்ணபிரானைக் குறித்து ஆடையை இரந்து பெற்ற த்ரௌபதி சரணம் என்று சொல்ல
அவள் பொருட்டால் -அவள் நிமித்தமாக
படைக்கலம் தானைத் தருமன் கெடாமல் -ஆயுதங்களையும் சேனைகளையும் யுடைய தருமா புத்திரன் அழியாத படி
வெம் பாரதப் போர் இடைக்கலந்தானை
அலங்காரனை சரண் என்று அடைந்தேன்
ஆதலால் இனி
முடைக்கலம் தான் நையும் அப்போது அயர்ப்பினும் முத்தி உண்டே –
அந்திம ஸ்ம்ருதி வர்ஜனம் -சரீர அவசானத்தில் மோஷம் -ஆறு வார்த்தைகளில் யுண்டே –

————————————————————————

உண்டு இறக்கும் புவனங்களை மீள உமிழ்ந்திலை யேல்
பண்டு இறக்கும் பதுமத்தோன் புரந்தரன் பைந்தழல் போல்
கண் திறக்கும் சங்கரன் முதலோர்களைக் கண்டவர் ஆர்
திண் திறக் குஞ்சரம் சேர் சோலை மா மலைச் சீதரனே –80–

திண் திறக் குஞ்சரம் சேர்
மிக்க வலிமை யுடைய யானைகள் பொருந்திய –
சோலை மா மலைச் சீதரனே-
நீ –
உண்டு இறக்கும் புவனங்களை மீள உமிழ்ந்திலை யேல்
பண்டு இறக்கும் -முன்பு அழிந்து போன
பதுமத்தோன் புரந்தரன் -பிரமன் இந்திரன்
பைந்தழல் போல் கண் திறக்கும் சங்கரன் முதலோர்களைக் கண்டவர் ஆர் –

பரந்த தெய்வமும் பல்லுலகும் படைத்து அன்று உடனே விழுங்கி -கரந்து உமிழ்ந்து கடந்து இடந்ததும் கண்டும் தெளியகில்லீர்-
எல்லாரும் அறியாரோ எம்பெருமான் உண்டு உமிழ்ந்த எச்சில் தேவர் அல்லாதார் தாம் உளரே அவன் அருளு உலகாவது அறியீர்களே-
கடல் அரையன் விழுங்காமல் தான் விழுங்கி உய்யக் கொண்ட கொற்றப் போர் ஆழியான் குணம் பரவாச் சிறு தொண்டர் கொடியவாறே –

—————————————————————————

பிரிவாற்றாது வருந்தும் தலைவியின் நிலை குறித்துத் தோழி இரங்குதல் –

சீர் அரி தாழ் பொழில் மாலிருஞ்சோலை யில் செல்வர் செங்கட்
போர் அரி தாள் புனை தார் அரிது ஆகில் தண் பூந்துளவின்
தார் அரி தாவும் தழை அரிது ஆகில் தழை தொடுத்த
நார் அரிது ஆகில் பிழைப்பு அரிதாம் எங்கள் நன்று நுதற்கே –81–

சீர் அரி
செங்கட்போர் அரி
தாழ் பொழில் மாலிருஞ்சோலை யில் செல்வர்
சீர் அரி தாழ் பொழில் – -சூர்யன் சந்தரன்இந்திரன் போல்வார் விரும்பி தாழ்ந்து தங்கும் திருமலை என்றுமாம்
தாள் புனை தார் அரிது ஆகில்
தண் பூந்துளவின் தார் அரி தாவும் -வண்டுகள் மேல் விழுந்து மொய்க்கப் பெற்ற -தழை அரிது ஆகில்
தழை தொடுத்த நார் அரிது ஆகில் -நாறும் அறிதாகில் –
பிழைப்பு அரிதாம் எங்கள் நன்று நுதற்கே –
தெய்வத் தண் அம் துழாய் ஆயினும் -தாராயினும் தழை யாயினும் தண் கொம்பதாயினும் –
கீழ் வேராயினும் நின்ற மண் ஆயினும்-கொண்டு வீசுமினே
எம்பெருமான் அடியார் -சரம பர்வ நிலை -சம்பந்தம் ஆசை கொண்டு அருளிச் செய்கிறார்

———————————————————————-

நன்னுதலைப் பணி பூண் மார்பில் வைத்து விண் நாட்டு இருப்பார்
மின்னுதலைப் பணி மேல் துயில்வார் விடைவெற்பில் நிற்பார்
மன்னுதலைப் பணி அன்பரை வைக்கும் மலர் அடிக் கீழ்த்
துன்னுதலைப் பணி செய்வது எஞ்ஞான்று என் துயர் தொலைந்தே –82–

நன்னுதலைப் பணி பூண் மார்பில் வைத்து
விண் நாட்டு இருப்பார் -இருந்தான் -பரத்வம் –
பணி பூண் மரபு -ஸ்ரீ கௌஸ்துபம் அணிந்த திருமார்பு -நன்னுதல் -திருமகளை கொண்ட திரு மார்பு
மின்னுதலைப் பணி மேல் துயில்வார் -கிடந்தான் -வ்யூஹம் –
விடைவெற்பில் நிற்பார் -நிற்பான் -அர்ச்சை –
மன்னுதலைப் பணி அன்பரை வைக்கும் மலர் அடிக் கீழ்த்
துன்னுதலைப் பணி செய்வது -திருத் தொண்டுகளை செய்வது -எஞ்ஞான்று என் துயர் தொலைந்தே —

—————————————————————————-

தொலைந்து ஆனை ஓதும் தொலையானை அன்னை சொல்லால் மகுடம்
கலைந்தானை ஞானக் கலையானை ஆய்ச்சி கலைத் தொட்டிலோடு
அலைந்தானை பாலின் அலையானை வாணன் கை அற்று விழ
மலைந்தானை சோலை மலையானை வாழ்த்து என் மட நெஞ்சமே –83—

என் மட நெஞ்சமே —
தொலைந்து ஆனை ஓதும் -ஸ்ரீ கஜேந்திர ஆழ்வான் வலிமை குன்றி அழைக்கப் பெற்ற
தொலையானை-தொல்லையானை -ஆதி மூலம் அன்றோ -நெடும் தூரம் ஸ்ரீ வைகுண்டத்தில் இருப்பவன் என்றுமாம் –
அன்னை சொல்லால் மகுடம் கலைந்தானை
ஞானக் கலையானை-சாஸ்த்ரங்களால் கொண்டாடப் படுபவனும் -ஸ்ரீ கீதா சாஸ்திரம் வெளியிட்டு அருளினவன் என்றுமாம்
ஆய்ச்சி கலைத் தொட்டிலோடு அலைந்தானை -யசோதை பிராட்டி துணித் தொட்டிலில் அசைந்தவனும்
பாலின் அலையானை-திருப் பாற் கடலில் வாழ்பவனும்
வாணன் கை அற்று விழ மலைந்தானை
சோலை மலையானை
வாழ்த்து
தொலைந்தானை தொலையானை –
கலைந்தானை கலையானை –
அலைந்தானை அலையானை –
மலைந்தானை மலையானை –
விரோத ஆபாஸ் அலங்காரம் -முரண் விளைந்தழிவணி –

—————————————————————————–

தலைவி தோழியர்க்கு அறத்தொடு நிற்றல்

நெஞ்சில் அம்பு ஆற்ற முடியாது வேள் எய்து நீள் இரவும்
துஞ்சிலம் பால் துளியும் நஞ்சம் ஆம் சொரி கல் மழையை
அஞ்சிலம் பால் தடுத்தார் அலங்காரர் அடி விளக்கும்
நெஞ்சிலம் பாற்று அருகே கிடத்தீர் உயிர் தேற்றுதற்கே –84–

நெஞ்சில் அம்பு ஆற்ற முடியாது வேள் எய்து
நீள் இரவும் துஞ்சிலம்
பால் துளியும் நஞ்சம் ஆம்
சொரி கல் மழையை -இந்திரன் வர்ஷித்த அஞ்சிலம் பால் -அம் சிலம்பால் -கோவர்த்தன கிரியால் -தடுத்தார்
அலங்காரர் அடி விளக்கும் -பிரமன் கை கமாண்ட தீர்த்தம் கொண்டு திருவடி விளக்குவதால் வந்த –
செஞ்சிலம்பாற்று அருகே கிடத்தீர் உயிர் தேற்றுதற்கே -உயிர் பிழைக்கச் செய்வதற்காக –

—————————————————————————-

தேற்றுவித்தால் புனல் தேற்று நர் போல் திரு எட்டு எழுத்தால்
மாற்று வித்தான் என் மயக்கம் எல்லாம் மண்ணும் விண்ணும் உய்யப்
போற்று வித்தாரப் புயல் அலங்காரன் பொன் மேருவைப் போல்
தோற்று விதார் அணியும் சுந்தரத் திருத் தோள் அண்ணலே –85-

மண்ணும் விண்ணும் உய்யப்
போற்று வித்தாரப் புயல் -வணங்கப்பெற்ற பெரிய மேகம் போன்றவனும்
அலங்காரன்
பொன் மேருவைப் போல் தோற்று
விதார் அணியும் சுந்தரத் திருத் தோள் -வண்டுகள் மொய்க்கும் மாலையைத் தரித்த அழகிய தோள்களை யுடைய
அண்ணலே —
தேற்றுவித்தால் புனல் தேற்று நர் போல் -தேற்றாங்கொட்டையைக் கொண்டு கலங்கிய நீரைத் தெளியச் செய்வது போல்
திரு எட்டு எழுத்தால் மாற்று வித்தான் என் மயக்கம் எல்லாம் –
எயிற்றிடை மண் கொண்ட எந்தை இராப்பகல் ஓதுவித்து என்னைப் பயிற்றி பணி செய்யக் கொண்டான்
பீதகவாடைப் பிரானார் –என் சென்னித் திடரில் பாத இலச்சினை வைத்தார் –

—————————————————————————-

அண்ணலை வான் மதி தோய் சோலை மா மலை அச்சுதனை
தண் அலை வானவனை தெய்வ நாதனை தாள் அடைவான்
எண்ணலை வான் பகை ஆம் ஐவரோடு இசைந்து இன்னம் உடல்
புண் அலை வான் எண்ணினாய் மனமே உன் புலமை நன்றே –86–

மனமே
அண்ணலை
தண் அலை வானவனை
தெய்வ நாதனை
வான் மதி தோய் சோலை மா மலை அச்சுதனை
தாள் அடைவான்
எண்ணலை-நீ நினைக்கின்றது இல்லை –
வான் பகை ஆம் ஐவரோடு இசைந்து இன்னம் உடல் புண் அலை வான் எண்ணினாய்
உன் புலமை நன்றே –உன் அறிவுத் தேர்ச்சி நன்றாய் இருந்ததே-இகழ்ச்சிக் குறிப்பு –

——————————————————————————-

புலமையிலே நிமிர்ந்து அற்பரைப் போற்றி பொது மகளை
குல மையிலே குயிலே கொடியே என்றும் கூர் விழி ஆம்
பல ஐயிலே என்றும் பாடாமல் பாடுமின் பாவலர்காள்
நல் அமையில் ஏய் முத்தம் ஆர் சோலை மா மலை நம்பனையே –87–

பாவலர்காள்
நீங்கள்
புலமையிலே நிமிர்ந்து -கல்வித் தேர்ச்சியிலே சிறந்து
அற்பரைப் போற்றி
பொது மகளை -வேசியை –
குல மையிலே குயிலே கொடியே என்றும் கூர் விழி ஆம்
பல ஐயிலே -கூரிய கண்கள் வழிய வேலாயுதம் போலும் -என்றும் பாடாமல்
நல் அமையில் ஏய் முத்தம் ஆர் -சிறந்த மூங்கில்கள் பொருந்திய முத்துக்கள் நிறைந்த
சோலை மா மலை நம்பனையே —
பாடுமின் –
வேய் தந்த முத்தராகிய சிவ பிரான் வணங்கும் அழகர் என்பதை ஸூ சிப்பிக்கிறார் –

——————————————————————————

நம்பி நின்றேன் நின் சரணார விந்தத்தை நல் நெஞ்சு என்னும்
செம்பின் இன்றே பொறித்தேன் உனக்கு ஆள் என்று தெய்வக் குழாம்
பம்பி நின் தேசு எறிக்கும் பதம் காணப் பதறுகின்றேன்
கொம்பின் இன்தேன் சொரியும் சோலை மா மலைக் கொற்றவனே –88–

கொம்பின்–பூம் கொம்புகளில் நின்று
இன்தேன் சொரியும் சோலை மா மலைக் கொற்றவனே —
நம்பி நின்றேன் நின் சரணார விந்தத்தை
நல் நெஞ்சு என்னும் செம்பின் இன்றே பொறித்தேன் -உனக்கு ஆள் என்று–மனம் ஆகிய செப்பேட்டில்
உனக்கு ஆள் என்று இன்றே பொறித்தேன் -தாமிர சாசனம்
தெய்வக் குழாம் பம்பி—முக்தர்கள் -நித்ய சூரிகள் நெருங்கப் பெற்று – நின் தேசு எறிக்கும்
-ஒளி விளங்கப் பெற்ற பரம -பதம் காணப் பதறுகின்றேன்

——————————————————————————

கொற்ற இராவணன் பொன் முடி வீழ கொடும் கண் துஞ்சல்
உற்ற இராவணன் மாள எய்தான் ஒண் பரதனுக்குச்
சொல் தவிரா அவுணன் மாலிருஞ்சோலை தொழுது வினை
முற்ற இராவணம் நல் தமிழ் மாலை மொழிந்தனனே –89–

கொற்ற இராவணன் பொன் முடி வீழ
கொடும் கண் துஞ்சல் உற்ற -தூங்குதல் மிக்க
இராவணன் மாள எய்தான்-இருள் போன்ற கரு நிறம் யுடைய கும்பகர்ணன் இறக்கும் படியும்
ஒண் பரதனுக்குச் சொல் தவிரா அவுணன் -அணன் -ஸ்ரீ ராமன் -அண்ணல் -அவுணன் ஆக மருவி என்றுமாம்
மாலிருஞ்சோலை தொழுது
வினை முற்ற இராவணம் -இரா வணம் கர்மம் முழுவதும் இராத வண்ணம்
நல் தமிழ் மாலை மொழிந்தனனே –
இப்பிரபந்தம் கற்ற பலனையும் அருளிச் செய்கிறார் இத்தால் –

—————————————————————————–

மொழித்தத்தை கொஞ்சும் மலை அலங்காரன் முன் நூற்றுவரை
அழித்து அத்தை மைந்தர்க்கு அரசு அளித்தான் அடி நாள் தொடர்ந்து என்
உழித்தத்தைச் செய்து அன்றிப் போகா வினையை ஒரு நொடியில்
கழித்தத்தை என் சொல்லுகேன் தனக்கு ஆட்பட்ட காலத்திலே -90-

மொழித்தத்தை -சொல் அழகில் சிறந்த கிளிகள்
கொஞ்சும் மலை அலங்காரன்
முன் நூற்றுவரை அழித்து அத்தை மைந்தர்க்கு அரசு அளித்தான்
அடி நாள் தொடர்ந்து என் உழித்தத்தைச் செய்து அன்றிப் போகா வினையை–
ஆதி காலம் தொடங்கி-என்னிடைத்தில் – உழி தத்தை செய்து -துன்பம் செய்து அல்லது போகாத வினையை
ஒரு நொடியில் கழித்தத்தை என் சொல்லுகேன் தனக்கு ஆட்பட்ட காலத்திலே –

—————————————————————————–

கால் அம் அலைக்கும் புவனங்களைக் கரந்தாய் உதிரம்
கால மலைக் குமைத்தாய் அழகா கமலத்துப் பஞ்சு ஆர்
கால் அமலைக்கும் புவிக்கும் அன்பா உயிர் காயம் விடும்
காலம் மலைக்கும் கடும் கூற்றைக் காய்ந்து என்னைக் காத்தருளே –91–

கால் அம் அலைக்கும்-ஊழிக் காற்றின் உதவியால் கடல் நீர் அலை வீசிப் பொங்கி மேல் வரப் பெற்ற
புவனங்களைக் கரந்தாய்
உதிரம் கால மலைக் குமைத்தாய் -இரத்தத்தை கக்கும் படி மல்லர்களை நசுக்கி அழித்தாய்
அழகா
கமலத்துப் பஞ்சு ஆர் கால் அமலைக்கும் புவிக்கும் அன்பா
உயிர் காயம் விடும் காலம் மலைக்கும் கடும் கூற்றைக் காய்ந்து என்னைக் காத்தருளே —
நமன் தமர்கள் நலிந்து என்னைப் பற்றும் போதுஅன்று அங்கு நீ என்னைக் காக்க வேண்டும்
இடையிட்டு வந்த முதல் முற்று மடக்கு –யமகம் -முதல் எழுத்துக்கள் சில ஒன்றி நின்று வெவ்வேற பொருளில் அருளிச் செய்கிறார் –

———————————————————————–

அருளக் கொடி இடைப் பூ மாதும் நீயும் வந்து ஆளினும் ஆம்
இருள் அக்கொடிய நமன்வரும் காலத்து இகழினும் ஆம்
கருளக் கொடி அழகா அலங்கார வன் கஞ்சன் நெஞ்சத்து
உருள் அக்கு ஓடிய உதைத்தாய் எனது உயிர் உன் உயிரே –92-

கருளக் கொடி அழகா அலங்கார -ரஷணத்துக்கு கொடி கட்டி உள்ளவனே –
வன் கஞ்சன் நெஞ்சத்து உருள் அக்கு-திரண்ட எலும்பு – ஓடிய உதைத்தாய்
எனது உயிர் உன் உயிரே –உனக்கு அடிமைப்பட்ட உயிரே யாம்
ஆனபின்பு இனி
இருள் அக்கொடிய நமன்வரும் காலத்து-அந்திம காலத்திலே
கொடி இடைப் பூ மாதும் நீயும்
அருள வந்து ஆளினும் ஆம்
இகழினும் ஆம் –

—————————————————————————

பிரிவாற்றாத தலைவி தனது நிலைமையைக் கூறுதல்

உயிர்க்கும் படிக்கும் உன் ஆயிரம் பேர் என்று ஒறுத்து அன்னைமார்
செயிர்க்கும் படிக்கு நின்றேன் என் செய்கேன் செழும் தேவர்களும்
அயிர்க்கும் படிக்குறள் ஆம் அழகா அலங்காரா நெய்க்கும்
தயிர்க்கும் படிக்கும் செவ்வாய் மலர்ந்தாய் நின்னைத் தாள் பணிந்தே –93–

செழும் தேவர்களும் அயிர்க்கும் படிக்குறள் ஆம் அழகா
ஞான வளம் உள்ள தேவர்களும் இது என் என்று சந்கிக்கும் படியாக ஸ்ரீ வாமன ரூபம் கொண்ட கோல அழகா
அலங்காரா
நெய்க்கும் தயிர்க்கும் படிக்கும் செவ்வாய் மலர்ந்தாய் நின்னைத் தாள் பணிந்தே –உன்னைத் திருவடி வணங்கி -உன்னைக் காதாலித்ததாலே –
உயிர்க்கும் உன் ஆயிரம் பேர்-படிக்கும்- என்று அன்னைமார்
ஒறுத்து -செயிர்க்கும் படிக்கு நின்றேன்
இவள் பேரு மூச்சு இடுகின்றாள் -திருநாமம் பிதற்றுகிறாள் என்று சொல்லி வெறுத்து கோபிக்கும் படி நின்றேன்
பொறுமை பூணாது இங்கனம் ஆற்றாமை படுகிறாளே என்று வெறுத்து -கோபித்து -என்றவாறு
என் செய்கேன்
வெவ்வுயிர்த்து உயிர்த்து உருகும் -ஆவியனல வெவ்வுயிர்க்கும் -திருவாய்மொழி
முகில் வண்ணன் பேர் கிளரிக் கிளரிக் பிதற்றும் -திரு விருத்தம் –

————————————————————————————–

பணிபதி வாட நின்று ஆடின நூற்றுவர் பால் சென்றன
பணிபதி னாலு புவனமும் தாயின பாப் பதின்மர்
பணிபதி எங்கும் உவந்தன பங்கயப் பாவையுடன்
பணிபதி மார்பன் அலங்காரன் பொன் திருப் பாதங்களே –94-

பங்கயப் பாவையுடன்
பணிபதி மார்பன் அலங்காரன் -ஸ்ரீ கௌஸ்துபம் மணி பொருந்திய மார்பன் -அலங்கார அழகர் யுடைய
பொன் திருப் பாதங்களே —
பணிபதி வாட நின்று ஆடின -காளியன் வலிமை தளரும் படி அவன் தலையில் நர்த்தனம் செய்தன
நூற்றுவர் பால் சென்றன -துரியோதனாதிகள் பால் பாண்டவ தூதனாய் சென்றன
பணிபதி னாலு புவனமும் தாயின-பதினாலு புவனமும் தாவி அலைந்தன
பதின்மர் பாப் பணிபதி எங்கும் உவந்தன-பத்து ஆழ்வார்கள் அருளிச் செயல் அருளி ஸ்துதிக்கப் பட்ட
திவ்ய தேசங்களில் எல்லாம் உவந்து எழுந்து அருளின –

இது இரண்டாவது யமகச் செய்யுள் இந்த பிரபந்தத்தில் –

———————————————————————–

பாதகர் அத்தனை பேரும் கனகனும் பல் நகத்தா
லே தகரத் தனையேற்கு அருள் ஆளியை எட்டு எழுத்துள்
ஒது அகரத்தனை சுந்தரத் தோள் உடையானை நவ
நீத கரத்தனை சேர்ந்தார்க்குத் தேவரும் நேர் அல்லரோ –95-

பாதகர் அத்தனை பேரும் -தீ வினையுடையார் அசுரர்கள் அவ்வளவு பேரும்
கனகனும்-இரணியனும்-
பல் நகத்தா லே தகரத்
தனையேற்கு அருள்-பிரகலாத ஆழ்வானுக்கு அருளிய
ஆளியை -ஸ்ரீ நரசிம்ஹ மூர்த்தியும்
எட்டு எழுத்துள் ஒது அகரத்தனை-அகார வாச்யனும் -அகாரத்தோ விஷ்ணு
சுந்தரத் தோள் உடையானை
நவ நீத கரத்தனை
சேர்ந்தார்க்குத் தேவரும் நேர் அல்லரோ -சரண் அடைந்தார்க்கு புண்ய பயனையே அனுபவிக்கும் தேவர்களும் நிகர் அல்லர் –
பாகவத மகிமை அருளியவாறு –

————————————————————————

அல்லல் அங்கு ஆரையும் சேர்விக்கும் ஐம்புல ஆசை என்றும்
பல் அலங்கா நைந்து கோல் ஊன்றியும் பற்று அறாது கண்டாய்
மல்லல் அம் காரிகையார் மருள் தீர்ந்து வணங்கு நெஞ்சே
தொல் அலங்காரனைத் தென் திருமால் இருஞ்சோலையிலே -96-

நெஞ்சே
அல்லல் ஆரையும் சேர்விக்கும் ஐம்புல ஆசை
என்றும் பல் அலங்கா நைந்து கோல் ஊன்றியும்-எந்நாளும் பற்கள் அசையப் பெற்று உடல் தளர்ந்து கோலை ஊன்றி
அங்கு -அசை சொல்
பற்று அறாது-தொடர்ச்சி நீங்காது
ஆதலால்
மல்லல் அம் காரிகையார் மருள் தீர்ந்து -மாதர்கள் பக்கம் உண்டான மோகம் தீர்ந்து
தொல் அலங்காரனைத் தென் திருமால் இருஞ்சோலையிலே வணங்கு
கண்டாய் -தேற்றம் –

—————————————————————–

பிரிவாற்றாத தலைவி நிலையைக் குறித்துப் பாங்கி இரத்தல் –

சோலை இல்லாமையில் சேர் திருமால் இருஞ்சோலை நின்றான்
வேலையில் ஆமையின் வேடம் கொண்டான் புயம் மேவப் பெறாச்
சேல் ஐ யில் ஆம்மை இலங்கு கண்ணாள் அவன் தெய்வத் துழாய்
மாலை இல்லாமையில் மாலை உற்றாள் அந்தி மாலையிலே –97-

சோலை இல்லாமையில் -சோலை இல் ஆ -சோலைகளை தமக்கு இருப்பிடமாகக் கொண்டு மையில் -மயில்கள்
சேர் திருமால் இருஞ்சோலை நின்றான்
வேலையில் ஆமையின் வேடம் கொண்டான்
புயம் மேவப் பெறாச் -திருத் தோள்களை தழுவப் பெறாத
சேல் ஐ யில் ஆம்மை இலங்கு கண்ணாள் -சேல் மீனும் வேலாயுதமும் போன்ற மையிடப் பெற்றுள்ள கண்களை யுடைய இம்மங்கை
மத்ஸ்ய அவதாரத்தில் ஈடுபட்டு அதே போன்ற திருக்கண்கள் யுடையவள் –
அவன் தெய்வத் துழாய் மாலை இல்லாமையில் மாலை உற்றாள் -மயக்கத்தை உற்றாள் -அந்தி மாலையிலே —
மாலை பல பொருள்களில் அருளிச் செய்து -சொல் பின் வரு நிலை அணி –

———————————————————————

பிரிவாற்றாத தலைவி நிலையைக் குறித்துப் பாங்கி இரத்தல் –

மாலைக்கு அரும்பு சிறு கால் துகைக்க வருந்தும் எங்கள்
ஆலைக் கரும்பு தன் ஆசை எல்லாம் சொல்லில் ஆயிரம் தோட்டு
ஓலைக்கு அரும்பு ண் தொடமுடம் ஆம் மதி ஊர் குடுமிச்
சோலைக் கரும் புயலே அருள்வாய் உன் துளவினையே –98-

தொடமுடம் ஆம் மதி ஊர் குடுமிச் -அடியில் உராய்தலால் அடி தேய்ந்திடுமாறு சந்திர மண்டலம் தவழ்ந்து செல்லப் பெற்ற சிகரத்தை யுடைய
சோலைக் கரும் புயலே -கால மேகம் போன்றவனே
மாலைக்கு அரும்பு சிறு கால் துகைக்க -மாலைப் பொழுதிலே இளம் தென்றல் காற்று வருந்துதலால்
வருந்தும் எங்கள் ஆலைக் கரும்பு தன் ஆசை எல்லாம் -வருந்தும்
ஆலையில் அகப்பட்ட கரும்பு போன்ற எங்கள் தலைவியின் ஆசை முழுவதும்
சொல்லில் -சொல்லி வருவதனால்
ஆயிரம் தோட்டு ஓலைக்கு அரும்பு ண் -அதனை எழுதும் இடத்து ஆயிரம் பனை ஓலைக்கு எழுதுவதால் அரிய புண்ணாகும் –
பண்ணி உரைக்கில் பாரதமாம் –
இங்கனம் இருத்தலால்
அருள்வாய் உன் துளவினையே –நினது திருத் துழாய் மாலையை இவட்குத் தந்து அருள்வாய் –

————————————————————————

துளவ இலை ஆர் பொன் அடி முடி சூட்டி தொண்டு ஆக்கி என்னை
வளவிலையாக் கொண்ட நீ கை விடேல் மங்கல குணங்கள்
அளவு இல் ஐயா அலங்கார சமயிகள் ஆய்ந்த வண்ணம்
உள இலை ஆய் உரு ஆய் அருவு ஆய ஒரு முதலே –99-

மங்கல குணங்கள் அளவு இல் ஐயா -திருக் கல்யாண குணங்கள் அளவின்றி மிகப் பெற்ற ஸ்வாமீ
அலங்கார
சமயிகள் ஆய்ந்த வண்ணம் -வணங்கும் துறைகள் பல பல வாக்கி -இத்யாதி
உள இலை ஆய் உரு ஆய் அருவு ஆய ஒரு முதலே –உள்ளன இல்லன உருவ அருவ பொருள்கள்
அனைத்துமாய ஒப்பற்ற முதல்வனே -முதல் பொருளே
உளன் எனில் உளன் –இரு தகைமையோடு ஒழிவிலன் பரந்தே –
துளவ இலை ஆர் பொன் அடி முடி சூட்டி -என் சிரம் மேல் உனது பொன்னடிகளை வைத்து அருளி
தொண்டு ஆக்கி என்னை
வளவிலையாக் கொண்ட நீ கை விடேல் -நல்ல விக்கிரயப் பொருளாக கொண்ட நே கை விடாதே அருள்வாய் –
கோலமாம் என் சென்னிக்கு உன் கமலம் அன்ன குரை கழலே
மாலடி மேல் கோலமாம் குலசேகரன் –

—————————————————————————-

ஒரு பால் அமரர் ஒரு பால் முனிவர் உடன் இருந்து என்
இரு பார்வையும் உவப்பது என்றோ இடபக் கிரிக்கும்
பொரு பாற் கடற்கும் அயோத்திக்கும் பொன் துவரா பதிக்கும்
நிருபா வைகுந்தமும் நீ வீற்று இருக்கின்ற நீர்மையுமே -100-

இடபக் கிரிக்கும் -அர்ச்சைக்கு உப லஷணம்
பொரு பாற் கடற்கும் -மோதப்பற்ற திருப் பாற் கடலுக்கும் -வ்யூஹம் –
அயோத்திக்கும்-விபவம் –
பொன் துவரா பதிக்கும் -விபவம் –
நிருபா-தலைவனே
வைகுந்தமும் நீ வீற்று இருக்கின்ற நீர்மையுமே
ஒரு பால் அமரர் -நித்யர் -ஒரு பால் முனிவர் -முக்தர் -உடன் இருந்து என்
இரு பார்வையும் உவப்பது என்றோ -சேவித்து பரமானந்தை அனுபவிப்பது என்றோ –

———————————————————————

தற் சிறப்புப் பாசுரம் –

அலங்கார ருக்குப் பரமச் சுவாமிக்கு அழகருக்குக்
கலங்காப் பெரு நகரம் காட்டு வார்க்குக் கருத்தன்பினால்
நலங்காத சொல் தொடை யந்தாதியைப் பற்ப நாபப் பட்டன்
விலங்காத கீர்த்தி மணவாள தாசன் விளம்பினனே –

அலங்கார ருக்குப் பரமச் சுவாமிக்கு அழகருக்குக் -பரம சுவாமி மூலவர் திரும்நாமம்
நலங்காத-கால பேதத்தால் வாடுதல் இல்லாத
சொல் தொடை யந்தாதியைப்
பற்ப நாபப் பட்டன் விலங்காத கீர்த்தி மணவாள தாசன் -ஸ்ரீ பராசர பட்டரை ஆச்ரயித்து அவரை நீங்காது இருந்த
புகழை யுடைய அந்தரங்க சிஷ்யர் அழகிய மணவாள தாசன் –

—————————————————————————————————

கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்–

ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் அருளிய திரு அழகர் அந்தாதி -51-75-

February 28, 2016

மணவாளர் ஆவி நிகர் திரு மாதுக்கு மால் அழகர்
பணவாள் அராவில் கண் பள்ளி கொள்வார் திருப்பாதம் எண்ணக்
குணவாளர் ஆவீர் இன்றே உயிர்காள் உம்மைக் கூற்றுவனார்
நிணவாள் அராவி அறுக்கும் அப்போது நினைப்பு அரிதே –51–

உயிர்காள் -பிராணிகளே
மணவாளர் ஆவி நிகர்-உயிர் போன்ற – திரு மாதுக்கு
மால் அழகர்
பணவாள் அராவில் கண் பள்ளி கொள்வார் திருப்பாதம் எண்ணக் -தியானிக்குமாறு
குணவாளர் ஆவீர் இன்றே
ஏன் என்றால்
உம்மைக் கூற்றுவனார்
நிணவாள் அராவி அறுக்கும் -கொடு வினைக்கு ஏற்ப நிணம் தோய்ந்த -முன்பு அறுக்கப் பட்ட பிராணிகளின் கொழுப்பு தோய்ந்த –
வாள் ஆயுதத்தை கூர் செய்து அது கொண்டு அறுக்கும் படியான
அப்போது நினைப்பு அரிதே –அந்த அந்திம காலத்தில் நினைப்பது இயலாகாதாகும்
அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன் –

————————————————————————–

நினைப்பு அரியாய் எளியாய் உம்பர் யார்க்கும் நின் அன்பருக்கும்
வினைப்பரி ஆனவன் வாய் பிளந்தாய் வியன் சோலை மலை
தனிப் பிரியாய நின்ற தாள் அழகா முன் சனனத் துள்ளும்
உனைப் பரியாமல் அன்றோ பரித்தேன் இவ் உடலத்தையே –52–

நினைப்பு அரியாய் எளியாய் உம்பர் யார்க்கும் நின் அன்பருக்கும்
பத்துடை அடியவர்க்கு எளியவன் பிறர்களுக்கு அரிய வித்தகன் –
வினைப்பரி ஆனவன் வாய் பிளந்தாய்
வியன் சோலை மலை தனிப் பிரியாய நின்ற தாள் அழகா முன் சனனத் துள்ளும்
உனைப் பரியாமல் அன்றோ பரித்தேன் இவ் உடலத்தையே –
முன் ஜன்மத்தில் பக்தி செய்யாமல் அன்றோ இப்பிறவி எடுத்தேன்

————————————————————————–

உடலம் புயங்கத்து உரி போல் விடும் அன்று உவணப் புள்ளின்
அடம் அம் புயமிசை நீ வர வேண்டும் ஐ ஆனற்கும்
மடல் அம்புயற்கும் வரம் தரும் சோலை மலைக்கு அரசே
கடல் அம்பு உயர் வரையால் அடைந்தாய் என்னைக் காப்பதற்கே –53–

-ஐ ஆனனற்க்கும் -ஐந்து முகங்கள் யுடைய சிவனுக்கும்
மடல் அம்புயற்கும்-இதழ்கள் நிறைந்த தாமரை மலரில் தோன்றிய பிரமனுக்கும்
வரம் தரும் சோலை மலைக்கு அரசே
கடல் அம்பு உயர் வரையால் அடைந்தாய்
உடலம் புயங்கத்து உரி போல் விடும் அன்று-பாம்பு தனது தோலை விட்டு நீங்குவது போலே உயிர் உடம்பை விட்டு நீங்கும் அந்நாளில்
உவணப் புள்ளின்அடம் அம் புயமிசை நீ என்னைக் காப்பதற்கே –
சாமிடத்து என்னைக் குறிக்கோள் கண்டாய் சங்கோடு சக்கரம் ஏந்தினானே -பெரியாழ்வார் –

————————————————————————-

காப்பவன் அந்த மலரோனையும் கறைக் கண்டனையும்
பூப்ப அனந்தரம் போக்க வைப்பான் புனல் பார் விசும்பு
தீ பவனம் தரும் தெய்வ சிகா மணி சேவடியை
நாப் பவம் நந்தப் புகழ் வார்க்கு ஒப்பு இல்லை நவ கண்டத்தே –54-

காப்பவன்-ரஷிக்கும் பெருமாள்
அந்த மலரோனையும் கறைக் கண்டனையும்
பூப்ப அனந்தரம் போக்க வைப்பான் -ஸ்ருஷ்டிக்கவும் சம்ஹரிக்கவும்
பூப்ப மலரோனையும் -போக்கக் கறை கண்டனையும் வைப்பான் -என்றவாறு
இருவரையும் காப்பவன் என்றுமாம்
புனல் பார் விசும்பு தீ பவனம் தரும் தெய்வ சிகா மணி -பஞ்ச பூதங்களையும் சிருஷ்டித்து தேவர்கட்கு சிரோ ரத்னம்
தேவாதிதேவன் -பரம ஸ்வாமி மூலவர்
போன்ற
சேவடியை
நாப் பவம் நந்தப் புகழ் வார்க்கு ஒப்பு இல்லை நவ கண்டத்தே
பவம் நந்த -தங்கட்கு பிறப்பு இல்லையாம் படி
நா புகழ் வார்க்கு
நவ கண்டத்து ஒப்பு இல்லை -கீழ் விதேகம் -மேல் விதேகம் -வட விதேகம் -தென் விதேகம் –
வட விரேபதம்-தென்னிரேபதம் -வட பரதம் -தென் பரதம் -மத்திமம் –
பஞ்சவர்கட்கு தூது நடந்தானை ஏத்தாத நா என்ன நாவே நாராயணா என்னா நா என்ன நாவே –

————————————————————————-

கண்டா கனன் கண்ணன் அல்லால் கதி இன்மை கண்டு அடைந்தது
உண்டாக நம்ப ஒட்டாது உங்கள் ஊழ் வினை உண்மை அறிந்து
அண்டா கன வண்ணனே அருளாய் என்று அழகனுக்கே
தொண்டு ஆக நல் நெஞ்சினால் உரைப்பீர் பிறர் தொண்டர்களே –55-

பிறர் தொண்டர்களே —
கண்டா கனன் கண்ணன் அல்லால் கதி இன்மை கண்டு அடைந்தது
உண்டாக -உளதாக இருக்க
நம்ப ஒட்டாது உங்கள் ஊழ் வினை -விதி அத்தை நம்ப ஒட்டாது
இனியாயினும் நீங்கள்
உண்மை அறிந்து
அண்டா கன வண்ணனே -இடைப்பிள்ளையாய் மேக சியாமள வண்ணனை
அருளாய் என்று அழகனுக்கே -தொண்டு ஆக நல் நெஞ்சினால் உரைப்பீர் –
எந்தை வானவர்க்கும் வணங்க அரியான் அன்றிக் காப்பார் இல்லாமை விண் மண் அறியும்
வண்ணம் கரியானவர் வாணன் கண்டாகர்ணன் மார்கண்டேயனே –
கண்ணன்-கிருஷ்ணன் -கரு நிறம் யுடையவன் -கண்டவர் மனத்தை கவர்பவன் -அனைத்தையும் செய்பவன் –

————————————————————————-

தொண்டு படார் திருமால் இருஞ்சோலையில் சோதிக்கு அன்பு
கொண்டு படா மலர் இட்டு இறைஞ்சார் மடக்கோதையரைக்
கண்டு படா முலை தோய் அனுராகம் கருதி இரா
உண்டு படா நிற்கும் போதும் நைவார் எங்கன் உய்வதுவே –56–

சிற்று அறிவாளர்கள் –
தொண்டு படார் திருமால் இருஞ்சோலையில் சோதிக்கு அன்பு கொண்டு
படா மலர் இட்டு இறைஞ்சார் -வாடாத மலர்களை இட்டு அர்ச்சித்து வணங்கார்
மடக்கோதையரைக் கண்டு -மகளிர்களைக் கண்டு -படா முலை தோய் அனுராகம் கருதி-
கச்சு அணிந்த கொங்கைகளில் அணையும் சிற்றின்பம் ஆசையை மனசில் கொண்டு
இரா உண்டு படா நிற்கும் போதும் நைவார் -இரவில் உணவு உண்டு படுத்துக் கொள்ளும் போதும் வருந்துவார்கள்
உலகோர் -லோகாயதிகன் -சார்வாகன்-நிலைமை கண்டு இகழ்ந்து அருளிச் செய்கிறார்
எங்கன் உய்வதுவே —-
பெண்டிரால் சுகங்கள் உய்ப்பான் –தொண்டு பூண்டு அமுதம் உண்ணா தொழும்பர் சோறு உகக்குமாறு –திருமாலை –

————————————————————————-

உய்வம் தொழும்பு செய்து என்று இருப்போமை உய்யாமல் ஐவர்
பெய்வம் தொழு வினைக்கே என்பரால் பெருந்தேன் சிகரம்
தைவந்து ஒழுகும் மலை அலங்கார சதுமுகத்துத்
தெய்வம் தொழும் தெய்வமே என் கொலோ உன் திரு உளமே –57–

பெருந்தேன் சிகரம் தைவந்து ஒழுகும் மலை -தேன் சிகரத்தைத் தடவிக் கொண்டு பெருகப் பெற்ற
திருமால் இருஞ்சோலை யில் எழுந்து அருளி இருக்கிற
அலங்கார
சதுமுகத்துத் தெய்வம் தொழும் தெய்வமே -பிரமன் வணங்கும் பராத்பரன்
உய்வம் தொழும்பு செய்து என்று இருப்போமை -அடிமை செய்து உஜ்ஜீவிப்பொம் என்று இருக்கும் எங்களை
உய்யாமல் ஐவர் பெய்வம் தொழு வினைக்கே என்பரால் -ஐம் பொறிகள் கறுவி உஜ்ஜீவிக்க விடோம் என்று சொல்ல –
என் கொலோ உன் திரு உளமே -உனது திரு உள்ளக் கருத்து ஏதோ -எதுவும் நீ அன்றி அசையாதே –
வாழ்விப்பான் எண்ணமோ-வல்வினையில் இன்னம் என்னை ஆழ்விப்பான் எண்ணமோ அஃது அறியேன்
தாழ்விலார் பாடல் அழகார் புதுவைப் பட்டர் பிரான் கொண்டாடும் கூடல் அழகா நின் குறிப்பு –

—————————————————————————

திருவிளையாடு திண் தோள் செங்கண் மால் பல தேவருடன்
மருவு இளையான் திருமால் இருஞ்சோலை மலை என ஓர்
உரு விளையாமல் பிறப்பார் பலர் புகழ் ஓதி சிலர்
கரு இளையா நிற்க வித்தாவர் முத்தியில் காமம் அற்றே –58-

திருவிளையாடு திண் தோள் -வீர லஷ்மி எழுந்து அருளி இருந்து குலாவும் வலிய தோள்களை யுடைய
வெற்றித் திரு நீங்காத திருத் தோள்கள் –
பெரிய பிராட்டியார் தழுவி விளையாடப் பெற்ற திண்ணிய தோள்கள் –
திரு விளையாடு திண் தோள் திருமால் இருஞ்சோலை நம்பி -ஆண்டாள்
பெரிய பிராட்டியார்க்கு லீலார்த்தமாக சேண் குன்று சமைத்தால் போலே யாய்த்து திருத் தோள்கள் இருப்பது –
செங்கண் மால்
பல தேவருடன் மருவு இளையான் -நம்பி மூத்த பிரான் உடன் மனம் கலந்து பொருந்திய தம்பியாகிய எம்பெருமான்
பலதேவன் என்னும் தம் நம்பியோட பின் கூடச் செல்வான்
பட்டி மேய்ந்தோர் கார் ஏறு பலதேவர்க்கோர் கீழ்க் கன்றாய் இட்டீறிட்டு விளையாடி இங்கே போதக் கண்டீரே —
திருமால் இருஞ்சோலை மலை என
ஓர் உரு விளையாமல் -ஒரு தரமேனும் சொல்லாமல் –
பிறப்பார் -பிறந்து வருந்துவார் கர்மம் கழியப் பெறாமல் –
பலர் -பலரும் இப்படி இருக்க
புகழ் ஓதி சிலர் கரு இளையா நிற்க வித்தாவர் முத்தியில் காமம் அற்றே -சிலர் காமம் இல்லாமல் திருமலையின் மகிமையைச் சொல்லி
அதனால் கரு இளையா நிற்க -பிறப்புக்கள் சேர மாட்டாதவையாய் வலிகுன்றி நிற்க
முத்தியில் வித்து ஆவார் -வீட்டு உலகத்தில் முளைக்கும் விதை யாவார்கள் –முத்தி பெறத் தக்கவர் –

—————————————————————————-

காமத் தனை பொய் அழுக்காறு கோபம் களவு கொலை
ஆம் அத்தனையும் உடையேனை ஆறும் கொல் ஆன் பொருப்பு ஆம்
தாமத்து அனைவரும் போற்ற நின்றான் பண்டு தாமரையோன்
பூமத்தனைச் செய்த நோய் துடைத்தான் அடிப் போதுகளே –59-

ஆன் பொருப்பு ஆம் தாமத்து -ரிஷப கிரியில்
அனைவரும் போற்ற நின்றான்-அனைவரும் வணங்கிப் போற்றும் படி நின்று அருளும் பரம ஸ்வாமி
பண்டு தாமரையோன் பூமத்தனைச் செய்த நோய் துடைத்தான் அடிப் போதுகளே
முன்பு ஊமத்தம் பூவைச் சூடிய சிவ பிரானது பிரமஹத்தி தோஷத்தை போக்கி அருளிய திருவடிகள்
காமத் தனை -சிற்று இன்பம் ஆசை யுடையவனும்
பொய் அழுக்காறு கோபம் களவு கொலை
ஆம் அத்தனையும் உடையேனை ஆறும் கொல்-பாது காத்து அருளுமோ –
நைச்ய அனுசந்தானம் பண்ணி அருளுகிறார் –

——————————————————————-

போது அகத்தானும் வெண் போதகத்தானும் புராந்தகனும்
தீது அகத்து ஆனது தீர் தரும் காலை திரு அரை சேர்
பீதகத்தாய் அழகா அருளாய் என்பர் பின்னை என்ன
பாதகத்தால் மறந்தோ தனி நாயகம் பாவிப்பரே –60-

போது அகத்தானும் வெண் போதகத்தானும் புராந்தகனும்
பிரமனும் -ஐரா வதம் வெள்ளை யானையை யுடைய இந்திரனும் -திரிபுர அந்தகன் -சிவனும்
தீது அகத்து ஆனது தீர் தரும் காலை -அகத்து ஆனது தீது தீர் தரும் காலை -அரக்கர் அசுரர்
உபத்ரவங்களால் தம் மனத்தில் உண்டான துன்பம் நீங்க வேண்டிய சமயத்தில்
திரு அரை சேர் பீதகத்தாய் அழகா அருளாய் என்பர்
பின்னை
பெருமாளால் துயர் தீர்ந்த பின்பு
என்ன பாதகத்தால் மறந்தோ தனி நாயகம் பாவிப்பரே –செருக்கிப் பேசித் திரிவது ஏனோ -என்ன பேதமை –

——————————————————————–

பாவிக்கு அமல விரிஞ்சற்கு இறையவர் பத்தர் தங்கள்
ஆவிக் கமலத்து வீற்று இருப்பார் அளிப்பாடல் கொண்ட
வாவிக் கமல மண நாறும் சோலை மலையைக் கண்ணால்
சேவிக்க மலம் அறும் மனமே எழு செல்லுதற்கே –61-

மனமே-நெஞ்சை நோக்கி ஹிதம் அருளிச் செய்கிறார்
பாவிக்கு -நைச்ய அனுசந்தானம் இங்கும் -பாதகம் உடைய சிவனுக்கும் என்றுமாம்
அமல விரிஞ்சற்கு இறையவர்
பேச நின்ற சிவனுக்கும் பிரமன் தனக்கும் பிறர்க்கும் நாயகன் அவனே கபால நன் மோக்கத்துக் கண்டு கொண்மின் –
நீங்கள் ஈச்வரர்களாக சந்கித்த இவர்களும் நின்ற நிலை கண்டதே -ஒருவன் தலை கெட்டு நின்றான் -ஒருவன் ஓடு கொண்டு பிராயச் சித்தியாய் நின்றான்
ஓட்டை ஓடத்தொடு ஒழுகல் ஓடமாய் உங்கள் குறை தீரப் பற்றுகிற நீங்கள் உங்களிலும் பெரும் குறையாளரையோ பற்றுவது
பாதகியாய் பிஷை புக்குத் திரிந்தான் என்று நீங்களே சொல்லித் வைத்து அவனுக்கு பரத்வம் சொல்லுவதோ
ஒருவனுடைய ஈஸ்வரத்வம் தலையோடு போயிற்று -மற்றவனுடைய ஈஸ்வரத்வம் அவன் கை ஓடே காட்டிக் கொடுக்கிறார் –
பிரமன் சிவன் இந்திரன் வானவர் நாயகராய எங்கள் அடிகள் -திருமங்கை ஆழ்வார் –
பத்தர் தங்கள் ஆவிக் கமலத்து வீற்று இருப்பார்
அளிப்பாடல் கொண்ட வாவிக் கமல மண நாறும் சோலை மலையைக்
தாமரை போன்ற நீர்ப்பூக்களில் மொய்தற்கு வரும் வண்டுகளின் இசைப் பாட்டைக் கொண்ட தடாகங்களின் நீர் –
அம்மலர்களின் நறு மணம் வீசப் பெற்ற திருமால் இருஞ்சோலையை
கண்ணால் சேவிக்க மலம் அறும்
ஆதலால்
எழு செல்லுதற்கே –அங்கே போவதற்கு சித்தமாவாய்

—————————————————————-

செல்லுக் குவளை குழல் நாட்டம் என்று தெரிவையர் பால்
பல் உக்கு வளை முதுகு ஆம் தனையும் புன் பாட்டு உரைப்பீர்
அல்லுக்கு வளை உழும் பாண்டி நாட்டை அடைந்து நுங்கள்
சொல்லு கு அளை உண்டார்க்கு அலங்காரர்க்கு சூட்டுமினே–62-

குழல் நாட்டம் -மகளிரது கூந்தலும் கண்களும்
செல்லுக் குவளை-முறையே மேகத்தையும் நீலோற்பல மலரையும் போலே
சொல்லுப் போலும் குழல் குவளை போலும் நாட்டம் -முறை நிரல் நிறைப் பொருள்கோள்
என்று தெரிவையர் பால் -என்று அம்மாதர்களின் இடத்தில் –
பல் உக்கு வளை முதுகு ஆம் தனையும் புன் பாட்டு உரைப்பீர் –
பற்கள் விழுந்து -கூன் வளைந்த முதுகை யுடையராம் அளவும் இழிவான பாடல்களை பாடிப் புகழ்ந்து ஏங்கி நிற்பவர்களே
இனியானும் நீங்கள் –
அல்லுக்கு வளை உழும் பாண்டி நாட்டை அடைந்து-
இரவில் சங்குகள் நிலத்திலே உழுது செல்லப் பெற்ற பாண்டிய நாட்டைச் சேர்ந்து
நுங்கள் சொல்லு -உங்கள் சொல் மாலைகளை
கு அளை உண்டார்க்கு அலங்காரர்க்கு சூட்டுமினே-பூமியையும் வெண்ணெயையும் அமுது செய்து அருளிய அழகருக்கு சமர்ப்பியுமின் –

——————————————————————————————-

மேகவிடு தூது

சூட்டு ஓதிமம் சென்று சொல்லாது என் காதலை தும்பி இசைப்
பாட்டு ஓதி மங்கையரும் பணியார் பண்டு கல் மழைக்காகக்
கோட்டு ஓதி மம் எடுத்தார் சோலை மா மலைக்
கோவலனார் மாட்டு ஓதி மஞ்சினங்காள் உரைப்பீர் மறு வாசகமே –63–

மஞ்சினங்காள்-மேகக் கூட்டங்களே
சூட்டு ஓதிமம் -உச்சிக் கொண்டையை யுடைய அன்னப் பறவையானது
சென்று சொல்லாது என் காதலை -சொல்லாது
தும்பி இசைப் பாட்டு ஓதி மங்கையரும் பணியார் -மங்கையரும் சொல்ல மாட்டார்
பண்டு கல் மழைக்காகக் கோட்டு ஓதி மம் -உயர்ந்த சிகரம் -எடுத்தார்
சோலை மா மலைக் கோவலனார் மாட்டு ஓதி
உரைப்பீர் மறு வாசகமே –
கார்காலத்தில் மீண்டு வருவதாக காலம் குறித்துச் சென்ற தலைவனைக் குறித்து -வருந்தி -வானமே நோக்கும் மை யாக்கும்
-நைந்து அண்ணாந்து மேலே பார்க்க -வருமழை தவழும் மாலிருஞ்சோலை திருமலை -என்பதால்
-மேகங்களை -அவனது நிறம் போலவே -இருப்பதைக் கண்டு -உரைப்பீர் மறு வாசகமே -என்கிறார் –

——————————————————————

வாசம் பரந்த துழாயும் என் பாடலும் மாலை ஒளி
வீசு அம்பரம் பசும் பொன்னும் என் வேட்கையும் வீற்று இருக்கும்
தேசம் பரம பதமும் என் சிந்தையும் தீ வளி ஆ
காசம் பரவை கண் கண்டு உண்ட மால் அலங்காரனுக்கே –64–

தீ வளி ஆ காசம் பரவை கண் கண்டு-சிருஷ்டித்து -பின்பு உண்ட மால் அலங்காரனுக்கே –
வாசம் பரந்த துழாயும் என் பாடலும்
மாலை-சாத்தும் மாலையாம்
ஒளி வீசு அம்பரம் பசும் பொன்னும் என் வேட்கையும்
வீற்று இருக்கும் தேசம் பரம பதமும் என் சிந்தையும்
புனையும் கண்ணி எனதுடைய வாசகம் செய் மாலையே –கண்ணி எனது உயிர்க்காதல் –பல்கலன்களும் ஏலும் ஆடையும் அக்தே
நெஞ்சமே நீள் நகராக விருந்த என் தஞ்சனே
புகழ் ஒப்புமை கூட்டணி என்பர் –

——————————————————————–

அலங்காரன் சுந்தரத் தோளன் அழகன் அணி முடியில்
இலங்கு ஆரன் ஏறு திரு உடையான் எட்டெழுத்தும் கற்றார்
கலந்கார் அனங்கன் கணையால் செல்வமும் காதலியார்
மலங்கார் அருந்துயர் மேவினும் ஆகுவர் வானவரே –65-

அலங்காரன் சுந்தரத் தோளன் அழகன்
அணி முடியில் இலங்கு ஆரன் -பூ மாலையை யுடையவன்
ஏறு திரு உடையான் -திருமார்பில் திருமகள் நித்ய வாஸம் கொண்டவன் –
நாள் நாள் செல்ல ஏறி வருகிற சம்பத்தை யுடையவன் என்றுமாம்
எட்டெழுத்தும் கற்றார்
கலந்கார் அனங்கன் கணையால்-மன்மத பாணங்களால் கலங்க மாட்டார்கள்
செல்வமும் காதலியார் –
மலங்கார் அருந்துயர் மேவினும்
ஆகுவர் வானவரே –
நஞ்சு தான் கண்டீர் நம்முடை வினைக்கு நாராயணா என்னும் நாமம் –

——————————————————————–

வால் நவதார் அணி சுந்தரத் தோளன் முன் மாவலியை
தானவ தாரணி தா என்ற மாயன் தரா தலத்து
மீன் அவதாரம் முதலானவை வினை இன்றி இச்சை
ஆன அது ஆர் அறிவார் அவரே முத்த ராமவரே –66-

வால் -ஒளியுள்ள -சுத்தமான என்றுமாம் –
நவதார்-புதிய அன்று பூத்த மலர் கொண்டு தொடுக்கப் பட்டதுமாகிய
அணி சுந்தரத் தோளன்
முன் மாவலியை தானவ தாரணி தா என்ற மாயன்
தரா தலத்து மீன் அவதாரம் முதலானவை
வினை இன்றி இச்சை ஆன அது ஆர் அறிவார்
அவரே முத்த ராமவரே —
அவதார ரஹச்ய ஞானமே பேற்றைக் கொடுக்குமே –

————————————————————————

பிரிவாற்றாது வருந்தும் தலைவியைக் குறித்துச் செவிலி இரங்கல்

ஆமவரைப் பணித்து ஆள்வார் அழகர் அயன் உமையாள்
வாம அரைப் பணியான் பணி பாதத்தை வாழ்த்தும் கொங்கை
ஏம வரைப் பணி பூணாள் சந்து ஏந்து இழையாள் உரைத்தால்
வேம் அவரைப் பணியாதே எனும் எங்கள் மெல்லியலே –67-

எங்கள் மெல்லியலே-மென்மையான தன்மை யுடைய எங்கள் பெண்
ஆமவரைப் பணித்து ஆள்வார் அழகர் -அனுகூலராய் வரும் அன்பர்களை அடிமை கொண்டு ஆள்பவர் ஆகிய அழகர்
அயன் உமையாள் வாம அரைப் பணியான்-பாம்பு கச்சமும் உடையவனுமாகிய – பணி பாதத்தை
வாழ்த்தும்-வாழ்த்துகிறாள்
கொங்கை ஏம வரைப் பணி பூணாள் -ஸ்தனங்களின் மேலே ஆபரணங்களை பூண வில்லை
அவனே வந்து ரஷிக்கும் வரை காத்து இருப்போம் என்ற பாரதந்த்ர்ய ஆத்ம குணங்கள் இல்லாதவள் –
சந்து ஏந்து இழையாள் உரைத்தால் வேம் -தரித்த ஆபரணங்களை யுடைய பாங்கி சமாதான வார்த்தையை சொன்னால் உள்ளமும் உடலும் தவிப்பாள்
ஆத்மகுணங்கள் நிறைந்த பாங்கி -என்றபடி –
அவரைப் பணியாதே எனும் –பிரியேன் பியில் தரியேன் என்று அருளிச் செய்து பின்பு
சிறிதேனும் அன்பும் அருளும் இல்லாமல் பிரிந்து சென்ற அவரது பிரஸ்தாபம் சொல்லாதே என்பாள் –

—————————————————————————-

பிரிவாற்றாது வருந்தும் தலைவி நிலை கண்டு தோழி இரங்கல் –

மெல்லியலைப் பரி அங்கனையாரும் வெறுத்து வசை
சொல்லி அலைப்பர் இயங்க ஒட்டார் சுடர் மா மலையைப்
புல்லி அலைப் பரியங்கத்தில் ஏறும் புயல் பதின்மர்
நல் இயலைப் பரி அம் கழல் தாமம் நயந்த பின்னே –68–

சுடர் மா மலையைப் புல்லி-
அலைப் பரியங்கத்தில் ஏறும் புயல் -திருப் பாற் கடலில் திரு அனந்த ஆழ்வான் மேலே பள்ளி கொண்டு அருளும் மேகம் போன்ற அழகர்
பதின்மர் நல் இயலைப் பரி அம் கழல் -ஆழ்வார்கள் அருளிச் செயலை அழகிய திருவடிகளில் சாத்திய
தாமம் நயந்த பின்னே -மாலையை விரும்பிய பின்பு
மெல்லியலைப் பரி அங்கனையாரும் -இவளை பரிந்து நடத்தி வந்த செவித் தாயார் போல்வாரும்
வெறுத்து வசை சொல்லி அலைப்பர் இயங்க ஒட்டார் —

———————————————————————

பின் இறப்பும் பிறப்பும் நரை மூப்பும் பிணியும் மனை
முன் இறப்பும் பிரித்தான் இருந்தானவர் மூது இலங்கை
மன் இறப்புங்கக் கணை தொட்ட சோலை மலை அழகன்
பொன் நிறப் புண்டரிகத் திருத் தாள் அன்றி போற்றிலமே –69-

பின் இறப்பும் -பிறப்புக்கு பின் வரும் மரணத்தையும் -பிறப்பும் நரை மூப்பும் பிணியும்
மனை முன் இறப்பும் -இவற்றுக்கு காரணமான வீட்டின் மேல் இறப்பு போலே உயிரைக் கவர்ந்து கொள்ளும் கர்மங்களையும்
குடும்பத்தில் உழன்று தடுமாறுவதையும் என்றுமாம்
பிரித்தான் -இயல்பில் நீக்கி உள்ளவனும்
இருந்தானவர்-பெரிய அசுரர்களும்
மூது இலங்கை மன் இறப் புங்கக் கணை தொட்ட -சிறந்த அம்புகளை தொடுத்து அருளிய
சோலை மலை அழகன்
பொன் நிறப் புண்டரிகத் திருத் தாள் அன்றி போற்றிலமே-

———————————————————————

பிரிவாற்றாத தலைவி செவிலியரைக் குறித்து இரங்குதல்-

போற்றி இராம என்னார் சோலை மா மலை போத விடார்
மாற்றி இராவைப் பகல் ஆக்கிலார் வண் துழாய் குழல் மேல்
ஏற்றி இராசதமாக வையார் என் இடரை எல்லாம்
ஆற்றியிரார் அன்னைமார் என்னை வாய் அம்பு அளக்கின்றதே –70 —

அன்னைமார்-
எனது நோய்க்கு பரிகாரமாக
போற்றி இராம என்னார்
சோலை மா மலை போத விடார்
மாற்றி இராவைப் பகல் ஆக்கிலார் -இரவு பொழுதை மாற்றி பகல் ஆக்க மாட்டார்கள்
வண் துழாய் குழல் மேல் ஏற்றி இராசதமாக வையார்
என் இடரை எல்லாம் ஆற்றியிரார்
என்னை வாய் அம்பு அளக்கின்றதே —
மதுவார் துழாய் முடி மாயப்பிரான் கழல் வாழ்த்தினால் அதுவே இவள் உற்ற நோய்க்கு அரு மருந்தாகுமே
தண்ணம் துழாய் கொண்டு சூட்டுமினே -ஆய்ப்பாடிக்கே என்னை உய்த்திடுமினே
மிக்க சீர்த் தொண்டர் இட்ட பூந்துளவின் வாசமே வண்டு கொண்டு வந்தூதுமாகில் -போலே –

————————————————————————

அளப்பதும் அங்கையில் நீர் ஏற்பதும் தந்து அளிப்பதும் பின்
பிளப்பதும் அங்கு ஐ யில் வெண் கோட்டில் கொள்வதும் பேர் உணவாக்
கிளைப்பதும் மங்கை எனத் தோள் புணர்வதும் கேட்கில் வையம்
வளப்பதுமம் கையம் சேர் சோலை மா மலை மாதவரே –71-

வளப்பதுமம் கையம்சேர் -செழிப்பான தாமரை மலர்கள் தடாகங்களில் பொருந்திய
சோலை மா மலை மாதவரே -திருமகள் கொழுனரான திருமால்
அளப்பதும்
அங்கையில் நீர் ஏற்பதும்
தந்து அளிப்பதும் -ஆதியில் சிருஷ்டித்து ரஷிப்பதும்
பின் பிளப்பதும்
அங்கு ஐ யில் வெண் கோட்டில் கொள்வதும்
பேர் உணவாக் கிளைப்பதும் -உணவாகக் கொள்வதும்
மங்கை எனத் தோள் புணர்வதும்
கேட்கில் வையம் -இவை எல்லாம் பூமியையே –
மண்ணை யுண்டு உமிழ்ந்து பின் இரந்து கொண்டு அளந்தது
பார் இடந்து பாரை யுண்டு பார் உமிழ்ந்து பார் அளந்து பாரை யாண்ட பேராளன் –

————————————————————–

மாதவரால் உம்பரால் அறியார் மதுரைப் பிறந்த
யாதவர் ஆலிலை மேல் துயின்றார் இருந்தாழ் சுனையில்
போதவரால் உகள் மாலிருஞ்சோலை யில் போம் பிறவித்
தீது அவரால் அன்றி எத்தேவராலும் தெறல் அரிதே –72-

மாதவரால் உம்பரால் அறியார்
மதுரைப் பிறந்த யாதவர்
ஆலிலை மேல் துயின்றார்
இருந்தாழ் சுனையில் போதவரால் உகள் மாலிருஞ்சோலை யில்-
ஆழ்ந்த சுனைகளில் மிகுதியாக வரால் மீன்கள் துள்ளப் பெற்ற திருமால் இருஞ்சோலை திருமலையில்
நீர் வளம் மிக்க திருமலை என்றவாறு –
போம்-நீங்கள் சென்று செருங்கோள்-
பிறவித் தீது அவரால் அன்றி எத்தேவராலும் தெறல் அரிதே –
எருத்துக் கொடி யுடையானும் பிரமனும் இந்திரனும் மற்றும் ஒருத்தரும் இப்பிறவி என்னும் நோய்க்கு மருந்து அறிவாரும் இல்லை
மருத்துவனாய் நின்ற மா மணி வண்ணா மறு பிறவித் தவிரத் திருத்தி யுன் கோயில் கடைப்புகப் பெய் திருமால் இருஞ்சோலை எந்தாய் –

——————————————————————

அரிய வரம் தந்து அயன் முதலோர்க்கு அருள் செய்து அவரைப்
பெரியவர் அந்தம் இல் வாழ்வினர் ஆக்கி தம் பேர் அருளால்
கரியவர் அந்தணர் கை தொழும் மால் அலங்காரர் வையத்து
உரியவர் அந்தரங்கத் துயர் தீர்க்க உலாவுவரே –73–

கரியவர்
அந்தணர் கை தொழும் மால் அலங்காரர் -அம் தண் அர் -அழகிய குளிர்ச்சியான அருளை யுடையவர் –
அந்த அணவு அர் -வேதாந்தையே பொருள் என்று மேற்கொண்டு பார்ப்பவர் –
பிராமணர் தெய்வம் என்றபடி
அரிய வரம் தந்து அயன் முதலோர்க்கு அருள் செய்து
அவரைப் பெரியவர் அந்தம் இல் வாழ்வினர் ஆக்கி-கல்பான்தரம் வரை வாழச் செய்து அருளி
தம் பேர் அருளால்
வையத்து உரியவர் அந்தரங்கத் துயர் தீர்க்க உலாவுவரே –அடியார்கள் மனத் துன்பங்களை நீக்குதற் பொருட்டு உலாவுவார் –
விபவம் அர்ச்சை அந்தர்யாமித்வம் இவைகளை யுடையராய் எங்கும் வியாபித்து இருப்பவர் –

————————————————————-

உலகு உதிக்கும்படி சிந்தித்துத் தந்து இவ் உலகில் உறும்
நலகுதிக்கும் படி நின்ற பிரான் இடம் நானிலமும்
இலகுதிக்கும் விசும்பும் தொழ ஓங்கி இறால் வருடை
பலகுதிக் குந்தொரும் தேன் பாயும் சோலைப் பருப்பதமே –74-

உலகு உதிக்கும்படி சிந்தித்துத் தந்து -சங்கல்பித்து சிருஷ்டித்து
இவ் உலகில் உறும் நலகுதிக்கும் படி நின்ற -மிக்க நன்மைகள் மேன்மேலும் பொங்கும் படி -திருவருள் கொண்டு நின்ற
பிரான் இடம்-உபகாரகன் திரு உள்ளம் உகந்து எழுந்து அருளி இருக்கும் இடம் எது என்றால்
நானிலமும் இலகுதிக்கும் விசும்பும் தொழ ஓங்கி
வருடை பலகுதிக் குந்தொரும் -இறால் -தேன் பாயும்-
மலையாடுகள் பல எழும்பிப் பாயும் தோறும் தேன் கூடுகளின் நின்றும் தேன் பெருகிப் பாயப் பெற்ற
குறிஞ்சி நில திருமலையின் வளம் அருளிச் செய்கிறார்
சோலைப் பருப்பதமே –திருமால் இருஞ்சோலை மலையே –

—————————————————————-

பருப்பதம் தாம் மன்னி நிற்பது பாற் கடல் பள்ளி கொள்வது
இருப்பது அம் தாமம் பண்டு இப்போது எலாம் இள ஞாயிறு அன்ன
உருப்பதம் தாமதர்க்கு ஈயாமல் அன்பர்க்கு உதவு அழகர்
திருப்பதம் தாமரை போல்வார் உகப்பது என் சிந்தனையே –75-

இள ஞாயிறு அன்ன உருப்பதம் தாமதர்க்கு ஈயாமல்-இளம் சூரியனைப் போன்ற திரு உருவத்தை யுடைய பரம பதத்தை தாமச குணம் உள்ளோர்க்கு கொடாமல்
அன்பர்க்கு உதவு அழகர் திருப்பதம் தாமரை போல்வார்
அழகர் –
பண்டு
பருப்பதம் தாம் மன்னி நிற்பது-நின்ற திருக் கோலத்துடன் நித்ய வாஸம் செய்வது -திருமால் இருஞ்சோலையாம்
பாற் கடல் பள்ளி கொள்வது –
இருப்பது அம் தாமம் -பரமபதமாம்
இப்போது எலாம் -நிற்கிற பள்ளி கொள்ளும் இருக்கும் -இடமாகிய அனைத்துமாக -உகப்பது
என் சிந்தனையே —
முன்பு நிலம் கர்த்தா இப்பொழுது செயப்பாடு பொருள் கர்த்தா வாக அருளிச் செய்கிறார் -அதுவும் அவனது இன்னருளே போலே
நிற்பதும் ஓர் வெற்பகத்து இருப்பும் விண் கிடப்பதும் நல் பெரும் திரைக் கடலுள் நானிலாத முன் எலாம்
அற்புதன் அனந்த சயன் ஆதி பூதன் மாதவன் நிற்பதும் இருப்பதும் கிடப்பதும் என் நெஞ்சுள்ளே –
கல்லும் கனை கடலும் வைகுந்த வானாடும் புல் என்று ஒழிந்தன கொல் ஏ பாவம்
வெல்ல நெடியான் நிறம் கரியான் உள் புகுந்து நீங்கான் அடியேன் உள்ளத்தகம் –

———————————————————————–

கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்–

ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் அருளிய திரு அழகர் அந்தாதி -26-50–

February 28, 2016

நண் இன நாக முடி மேல் நடித்து என்னை நாசம் அறப்
பண்ணின நாகமும் பாரும் அளந்தன பண்டு தம்பி
மண்ணினன் ஆக வனம் போயின வளர் சோலை
மலைக் கண் இனன் ஆகம் கரியான் சிவந்த கழல் இணையே –26-

வளர் சோலை மலைக் கண் இனன் -ஓங்கி வளர்ந்த திருமால் இருஞ்சோலை மலையில் உதித்த சூரியன் போலே விளங்குபவனும்
ஆகம் கரியான் -சிவந்த கழல் இணையே —
ஆகம் கரியான் சிவந்த கழல் இணை -தொடை முரண் அணி –
நண் இன நாக முடி மேல் நடித்து -காளியன் மேல் நடனம் செய்து அருளி
என்னை நாசம் அறப் பண்ணின
நாகமும் பாரும் அளந்தன-மேல் உலகத்தையும் பூமியையும் அளந்து அருளின
கம் -சுகம் -அஃது இல்லாதது அகம் -துக்கம் -அது இல்லாத இடம் நாகம் -ஸ்வர்க்கம் –
பண்டு தம்பி மண்ணினன் ஆக வனம் போயின -ஸ்ரீ ராமாவதாரத்தில்
ஸ்ரீ பரத ஆழ்வான் நில உலகத்துக்கு அரசாட்சிக்கு உரியவன் ஆகுமாறு தாம் வனவாசம் சென்றன –

—————————————————————————-

தலைவனைப் பிரிந்த தலைவி இரங்கல் –

கழலப் புகுந்த வளை அறியார் என் கருத்து அறியார்
அழலப் புகன்று ஒறுப்பார் அன்னைமார் அறுகாற் சுரும்பு
சுழலப் புனைந்த துழாய் மார்பர் மாலிருஞ்சோலை என்னார்
தழல் அப்புவர் என் தனங்களிலே சந்தனங்கள் என்றே –27-

அன்னைமார்-என் தாய்மார்கள்
கழலப் புகுந்த வளை அறியார் -என் கைகளின் நின்றும் கழன்று விழத் தொடங்கிய வளையல்களின் தன்மையை உணரார் –
என் கருத்து அறியார் -என் காதலை உள்ளபடி உணரார் –
அழலப் புகன்று ஒறுப்பார் -என் மணம் கொதிக்க கடும் சொற்களை கூறி வருந்துவார்கள் –
அறுகாற் சுரும்பு சுழலப் புனைந்த துழாய் மார்பர் மாலிருஞ்சோலை என்னார் –
ஒரு தரமேனும் சொல்லார் -தலைவரது திவ்ய பரிமளத்தில் ஈடுபட்டு அருளிச் செய்கிறார்
ஷட்பத நிஷ்டரான சாரக்ராஹிகள் விரும்பி நாடும் இனிமையை தமது திருமேனியில் கொண்டவர் –
தழல் அப்புவர் என் தனங்களிலே சந்தனங்கள் என்றே –

——————————————————–

தனத்துக்கு அராவிய வேல் விழிக்கு ஏக்கற்று தையலரால்
தினம் துக்கர் ஆகித் திரிவார் பலர் சிலர் செங்கமல
வானத்துக் கராசலம் காத்தாற்கு சோலை மலையில் நின்ற
கனத்துக்கு அராவணை யாற்கு எம்பிராற்கு உள்ளம் காதலரே –28-

தனத்துக்கு -மகிளிரது ஸ்தனங்களுக்கும்
அராவிய வேல் விழிக்கு ஏக்கற்று-கண் அழகுக்கும் ஏங்கி
வெல்வது வேல் விளிப்பது விழி -காரணக் குறி
தையலரால் தினம் துக்கர் ஆகித் திரிவார் பலர்-மாறி மாறி பல பிறப்பும் பிறந்து திரிபவர் என்றபடி
சிலர் செங்கமல வானத்துக் கராசலம் காத்தாற்கு -ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானை ரஷித்து அருளிய
சோலை மலையில் நின்ற கனத்துக்கு -காளமேகம் போன்றவனும்
அராவணை யாற்கு எம்பிராற்கு உள்ளம் காதலரே –

————————————————————

காதலைப் பத்தினி மேல் வைத்த நீசக் கரு நிருதன்
மாதலைப் பத்தியை மண்ணில் இட்டாய் நின்னை வாழ்த்தும் தொண்டர்க்கு
ஈதலைப் பத்தியைச் செய்வோர்கள் வாழும் இட வெற்பா
தீது அலைப்பத் தியங்கித்திரி வேற்கு அருள் செய்தருளே –29-

காதலைப் பத்தினி மேல் வைத்த நீசக் கரு நிருதன் -கீழ் மகனான -இராவணன் -கரிய அரக்கனுடைய
மாதலைப் பத்தியை -மா தலைப் பத்தியை -பெரிய தலை வரிசையை –
மண்ணில் இட்டாய்
நின்னை வாழ்த்தும் தொண்டர்க்கு ஈதலைப்-அடியார்க்கு வேண்டுவன கொடுத்தலையும் –
அவர்கள் பக்கலில் பத்தியைச் செய்வோர்கள் வாழும் இட வெற்பா -ருஷப கிரியில் எழுந்து அருளி இருப்பவனே
எல்லா இடத்திலும் எங்கும் பரந்து பல்லாண்டு ஒலி செல்லா நிற்கும் சீர்த் தென் திரு மாலிருஞ்சோலையே-
புனத்தினை கிள்ளிப் புதுவவி காட்டி யுன் பொன்னடி வாழ்க வென்று இனக்குறவர் புதியது உண்ணும் எழில் மால் இருஞ்சோலை எந்தாய் –
திவ்ய தேசங்களுக்கு அழகாகிறது -அநந்ய பிரயோஜனராய் அத்தலைக்கு மங்களா சாசனம் பண்ணுபவர்கள் வர்த்திக்கை –
தீது அலைப்பத் தியங்கித்திரி வேற்கு -தீ வினை வருத்த-அதற்கு மாறு ஒன்றும் செய்ய மாட்டாதே கலங்கி அலைபவனான எனக்கு
அருள் செய்தருளே —

——————————————————————–

அருள் தருமம் கை விடாது ஏத்தும் அன்பருக்கு அன்பர் எல்லில்
இருள் தரும் அம்கை எறி ஆழியார் இசைக் கின்னரரும்
கெருடரும் மங்கையரும் வாழ் இடப கிரியில் கல்லா
முருடரும் அங்கு அயல் எய்தில் அன்றே அவர் முத்தர் அன்றே –30-

அருள் தருமம் கை விடாது ஏத்தும் அன்பருக்கு அன்பர் –
கருணையும் தர்மத்தையும் கை விடாது ஸ்துதிக்கும் அன்பர்கள் இடத்தில் அன்பை யுடையவரும்
எல்லில் இருள் தரும் அம்கை எறி ஆழியார்
இசைக் கின்னரரும் கெருடரும் மங்கையரும் வாழ் இடப கிரியில்
ஸ்வர்க்க லோகம் விட்டு இங்கேயே வருபவர்கள் என்றவாறு
கல்லா முருடரும் அங்கு அயல் எய்தில் அன்றே அவர் முத்தர் அன்றே —
கல்லா மூடர்கள் வந்தால் அப்பொழுதே அங்கேயே அவர்கள் முக்தர்கள் ஆவாரே கல்லா வேடர்கள் என்றுமாம் –
மாலிருஞ்சோலை யயன் மலை யடைவது கருமமே -மாலிருஞ்சோலை புறமலை சாரப் போவது கிறியே-
பசை அற்றால் அன்றே அப்போதே வீடு அதுவே வீடு வீடாமே –

———————————————————————–

முத்தர் அன்றே நின் கழல் ஒரு கால் கை முகிழ்க்கப் பெற்றோர்
பித்தர் அன்றே நினக்கே பித்தர் ஆகில் பிரமன் கம் கை
வைத்து அரன் தேய்துயர் தீர்த்தாய் நின் சோலை மலை மருவும்
பத்தர் அன்றே பரிவால் என்னை ஆளும் பரமர்களே –31–

பிரமன் கம் கை வைத்து அரன் தேய்துயர் தீர்த்தாய்-பிரமன் தலையை கையில் வைத்துக் கொண்டு சிவபிரான் பட்ட துன்பத்தை தீர்த்து அருளினாய்
நின் கழல் ஒரு கால் கை முகிழ்க்கப் பெற்றோர் -உனது திருவடி இணைகளை ஒரு தரம் கை கூப்பித் தொழப் பெற்றவர்கள்
முத்தர் அன்றே -அன்றே முத்தர் -அப்பொழுதே முத்தி பெற்றார் ஆவார் –
நினக்கே பித்தர் ஆகில்-பக்திப் பித்து ஏறியவர்கள்
பித்தர் அன்றே
நின் சோலை மலை மருவும் பத்தர் அன்றே -அன்றோ –
பரிவால் என்னை ஆளும் பரமர்களே –அன்பினால் என்னை ஆளும் மேலோர் ஆவார்
பகவத் சேஷத்வத்தின் எல்லை யாகிறது பாகவத சேஷத்தளவும் வருகை இறே-

———————————————————————–

பரந்தாமரை திரு மாலிருஞ்சோலைப் பரமரை கால்
கரம் தாமரை அன்னகார் நிறத்தாரை கடல் கடக்கும்
சரம் தாம் மரை திரி கான் போய் இலங்கைத் தலைவன் பத்துச்
சிரம் தாம் அரைக் கணத்து எய்தாரை எய்தற்குத் தேர் மனமே –32-

மனமே -நெஞ்சை நோக்கி ஹிதம் உரைக்கிறார் –
பரந்தாமரை -பரம் தாமத்தை உடையவரும்
திரு மாலிருஞ்சோலைப் பரமரை
கால் கரம் தாமரை அன்ன-கருமுகில் தாமரை காடு பூத்து -கம்பர்
கார் நிறத்தாரை
கடல் கடக்கும் சரம் -சமுத்திர ராசனை வென்ற ஆற்றலை யுடைய அம்பினால் –
கடம் குஞ்சரம் -என்று கொண்டு மதத்தை யுடைய யானைகளும் மான்களும் சஞ்சரிக்கும் வனம் என்றுமாம்
தாம் மரை திரி கான் போய் -தாவுகின்ற மான்கள் சஞ்சரிக்கும் வனத்திலே சென்று -மரை -மான்களில் சாதி ஓன்று
காணும் கடலும் கடந்து போய் என்றுமாம் –
இலங்கைத் தலைவன் பத்துச் சிரம் அரைக் கணத்து எய்தாரை
தாம் எய்தற்குத் தேர் -சரணம் அடையத் துணிவு கொள்வாய் –
எய்தாரை எய்தற்கு -முரண் தொடை –

———————————————————————

தேராய் இரவு பகல் இரை தேடுவை தீமை நன்மை
பாராய் இரங்குவ பாவையரால் பண்டு மாவலியால்
சோராய் இரந்தவனை திருமால் இருஞ்சோலை நின்ற
பேர் ஆயிரம் உடையானை நெஞ்சே -என்று பேணுவையே –33-

நெஞ்சே
தேராய் இரவு பகல் இரை தேடுவை
தீமை நன்மை பாராய்
இரங்குவ பாவையரால் -பாவையர் பால் -பாட பேதம்
பண்டு மாவலியால் சோராய் இரந்தவனை
திருமால் இருஞ்சோலை நின்ற பேர் ஆயிரம் உடையானை -என்று பேணுவையே –
மனத்தைப் பார்த்து அருளிச் செய்து உலகோருக்கு ஹிதம் அருளுகிறார் –

—————————————————————————–

தலைவி தனது வேட்கை மிகுதியைக் கூறுதல்

பேணிக் கவித்த வரைக் குடையாய் பெரியோர் பதின்மர்
ஆணிக் கவித்த தமிழ் மாலை கொண்டாய் அழகா கரிய
மாணிக்க வித்தக மா மலையே வண் துளவுக்கு அல்லரல்
பாணிக்கு அவித்து அடங்காது வெங்காமப் படர் கனலே –34–

பேணிக் கவித்த வரைக் குடையாய்-ஆயர்கள் இடமும் ஆ நிரைகள் இடமும் பேணி எடுத்துப் பிடித்த கோவர்த்தன கிரியை கையிலே கொண்டவனே
பெரியோர் பதின்மர் ஆணிக் கவித்த தமிழ் மாலை கொண்டாய் -சிறந்த அருளிச் செயல்களை கொண்டவனே
ஆணிப்பொன் ஆணி முத்து போலே ஆணிக் கவித்த தமிழ் மாலை என்கிறார்
அழகா
கரிய மாணிக்க வித்தக-ஞானத்தை யுடைய – மா மலையே
வெங்காமப் படர் கனலே-வெவ்விய காதல் ஆகிய மேன்மேல் பரவும் நெருப்பானது
வண் துளவுக்கு அல்லரல் -பாணிக்கு அவித்து அடங்காது
நீரினால் தணிக்கப் பட்டு அடங்கி விட மாட்டாது
விரகதாபம் தீயினும் வெவ்வியதே
உரு வெளித் தோற்றத்தாலே தலைவனை முன்னிலைப் படுத்தி அருளிச் செய்கிறார் –

———————————————————————

பிரிவாற்றாத தலைவி சந்திரனை நோக்கி இரங்கிக் கூறுதல் –

படர் ஆகுவால் குவிய குழல் ஊதிய பாலர் ஐயம்
அடர் ஆகு வாகனன் தாதைக்கு இட்டார் அலங்காரர் துழாய் க்கு
இடர் ஆகு வார் பலர் காண் தமியேனை எரிப் பது என் நீ
விடராகு வாய்க் கொண்டு உடல் சுட்டுக் கான்றிட்ட வெண் திங்களே –35–

விடராகு வாய்க் கொண்டு -விடம் ராகுவாய்க் கொண்டு
உடல் சுட்டுக் கான்றிட்ட-உடம்பைச் சுடுதலால் பொறுக்க மாட்டாத உமிழ்ந்து விடப் பெற்ற
வெண் திங்களே –
படர் ஆ -மேய்வதற்கு பல இடங்களில் பரவிச் சென்ற பசுக்கள்
குவால் குவிய -தொகுதியாக ஓர் இடத்திலே வந்து சேரும்படி
குழல் ஊதிய பாலர் -ஆய்ப்பிள்ளையாய் வளர்ந்தவரும்
ஐயம் அடர் -பிச்சை ஏற்றதால் வருந்திய
ஆகு வாகனன் தாதைக்கு -பெருச்சாளியை வாகனமாகக் கொண்ட விநாயகன் தந்தை சிவபிரானுக்கு
இட்டார்-ஐயம் இட்டார் –
அலங்காரர் துழாய் க்கு இடர் ஆகு வார் பலர் காண் -பலர் உளர் அன்றோ –
தமியேனை எரிப் பது என் நீ –
திங்கள் -ஸ்வா பதேசத்தில் -விவேகம் –மாயா காரியமான தாமச குணம் கவிந்து கொள்ள முயலவும் –
அதற்கு அகப்படாது அதனை ஒழித்து விளங்கும் சுத்த ஞானம் என்றவாறு
என்னை மாத்ரம் வருத்துவது என்னோ -அலாப தசையில் விவேகமும் பாதகம் ஆகுமே

—————————————————————————–

திங்கள் அப்பா நின்ற செந்தீக் கொழுந்தின் செழும் சங்கு போ
லும் களப்பாவை உருகுவது ஓர் கிலர் உம்பர் எல்லாம்
எங்கள் அப்பா எமைக்காவாய் என உலகு ஈர் அடியால்
அங்கு அளப்பான் வளர்ந்தார் சோலை மா மலை ஆதிபரே –36–

உம்பர் எல்லாம்
எங்கள் அப்பா எமைக்காவாய் என
உலகு ஈர் அடியால் அங்கு அளப்பான் வளர்ந்தார்
சோலை மா மலை ஆதிபரே —
செழும் சங்கு போலும் களப்பாவை-கழுத்தை யுடைய இத்தலைவி
திங்கள் அப்பா நின்ற செந்தீக் கொழுந்தின் உருகுவது-
சந்திரன் பூசி இடுகின்ற அக்னி சுவாலையினால்-நிலாவினால் கரைந்து வருவதை
ஓர் கிலர் -அறிகின்றார் இல்லை -அறிவார் ஆயின் வெளிப்படையாக வந்து இவளை திரு மணம் செய்து கொள்வாரே
விவேக விளக்கத்தால் இவள் படும் துயரை அருளிச் செய்கிறார்
பாஞ்ச ஜன்யம் போன்ற தொனி யுடையவள் -பரத்வத்தை விளக்கி
பரசமய வாதிகளுக்கு அச்சைத்தை விளைவித்து அவர்களைத் தோற்பிக்கும் என்றவாறு

———————————————————————————

ஆதி அராவில் துயில் அலங்காரர் அழகர் அன்பு ஆம்
வேதியர் ஆவுதி வீற்று இருப்பார் அண்டம் மீது இருக்கும்
சோதியர் ஆவின் பின் போந்தாரை அன்றித் தொழேன் உடலைக்
காதி அராவினும் பொன் மா மகுடம் கவிக்கினுமே –37-

ஆதி அராவில் துயில் அலங்காரர் அழகர்
அன்பு ஆம் வேதியர் ஆவுதி வீற்று இருப்பார் -ஆகுதிகளில் வீற்று இருப்பவரும் -யஞ்ஞாங்கன் -யஞ்ஞ வாஹனன் -யஞ்ஞ சாதனன் அன்றோ
அண்டம் மீது இருக்கும் சோதியர் -பரஞ்சோதியானவர்
ஆவின் பின் போந்தாரை அன்றித் -இவரைத் தவிர -மற்று ஒருவரை
தொழேன் உடலைக் காதி அராவினும் பொன் மா மகுடம் கவிக்கினுமே —
உடலை கூறு செய்து அராவி வருத்தினாலும் -பொன் மயமான பெரிய கிரீடத்தை சூட்டினாலும் தொழ மாட்டேன்

————————————————————————-

கவித்தானை மன்னற்கு நட்பு ஆய முடி கவித்தானை அன்று
புவித்தானை வற்றப் பொழி சரத்தானை பொருது இலங்கை
அவித்தானை மாலிருஞ்சோலை நின்றானை அழகனை முன்
தவித்து ஆனை வா என வந்தானை பற்றினென் தஞ்சம் என்றே –38–

கவித்தானை மன்னற்கு நட்பு ஆய -கவி தானை -வானர சேனைகளை யுடைய சுக்ரீவனுக்கு நண்பன் ஆகி
கபி -விகாரம் அடைந்து கவி யாயிற்று
முடி கவித்தானை -அவனுக்கு பட்டாபிஷேகம் செய்து அருளினவன்
கவித்தானை மன்னற்கு நட்பாய் முடி கவித்தானை -சொல் நயம் காண்க
அன்று
புவித்தானை வற்றப் -புவிக்கு ஆடையாகிய கடல் தபிக்கும் படி
பொங்கு புணரிக் கடல் சூழ் ஆடை நிலா மா மகள் -திருமங்கை ஆழ்வார்
பொழி சரத்தானை-பிரயோக்கிக்கத் தொடங்கிய ஆக்னேயாஸ்த்ரம் யுடையவன்
பொருது இலங்கை அவித்தானை
மாலிருஞ்சோலை நின்றானை அழகனை
முன் தவித்து ஆனை வா என வந்தானை
பற்றினென் தஞ்சம் என்றே -சரணம் அடைந்தேன் -தஞ்சம் -ரஷகம் என்றுமாம் –

——————————————————————————

தஞ்சம் தனம் என்று தேடி புல்லோர் தையலார் கடைக்கண்
வஞ்சம் தனம் கொள்ள வாளா இழப்பர் மதி உடையோர்
செஞ்சந் தனப் பொழில் மாலிருஞ்சொலைத் திரு நெடுமால்
நெஞ்சம் தனக்கு உவப்பாக நல்கா நிற்பார் நேர் படினே –39-

தஞ்சம் தனம் என்று தேடி புல்லோர்
தையலார் கடைக்கண் வஞ்சம் தனம் கொள்ள -கடைக் கண்ணின் வஞ்சனையும் ஸ்தனங்களின் பொலிவும் கவர்ந்து கொள்ளும்படி
வாளா இழப்பர்
மதி உடையோர்
நேர் படினே-தமக்குப் பொருள் கிடைத்தால்
செஞ்சந் தனப் பொழில் மாலிருஞ்சொலைத் திரு நெடுமால்
நெஞ்சம் தனக்கு உவப்பாக நல்கா நிற்பார் –உபயோக்கிப்பார்கள்
பகவத் பாகவத ஆச்சார்ய கைங்கர்யங்களில் விநியோகித்து க்ருதார்த்தர் ஆவார் –

———————————————————————–

நேர் ஆய ஏதனை நெஞ்சு இடந்தாய் நெடுஞ்சோலை மலைக்
கார் ஆய வேதனை முன் படைத்தாய் நின் கழற்குத் தொண்டு என்று
ஆராயவே தனைப் புண் பிறப்பு ஓயும் அவா வழியின்
பேர் ஆய வேதனை இல் உழைப் போரும் பிழைப்பர்களே –40-

நேர் ஆய ஏதனை-தனக்கு எதிராய் நின்ற குற்றத்தை யுடைய இரணியனை
நெஞ்சு இடந்தாய்
நெடுஞ்சோலை மலைக் கார் ஆய -இடைப்பிள்ளையாய் –
வேதனை முன் படைத்தாய் நின் கழற்குத் தொண்டு என்று ஆராயவே தனைப் புண் பிறப்பு ஓயும்
அவா வழியின் பேர் ஆய வேதனை இல் -பெரிய தொகுதியான துன்பங்களை தருகின்ற இல் சம்சார பந்தத்தில்
வேதனையில் உழல்வோர் என்றுமாம்
உழைப் போரும் பிழைப்பர்களே –அகப்பட்டு வருந்துபவர்களும் உய்வார்கள் –

———————————————————————-

தலைவி தோழியர்க்கு அறத்தொடு நிற்றல் –

பிழைத்தலை யான் எண்ணிப் பேசுகின்றேன் இப்பிணி மற்று ஒன்றால்
மழைத்தலை வார் குழலீர் தணியாது வருணனை முன்
அழைத்து அலை அங்கு அடைத்தார் அலங்காரர் அலங்கல் நல்கீர்
முழைத்தலை நின்று மலயா நிலம் வந்து மோதும் முன்னே –41–

மழைத் தலை வார் குழலீர் -சிரசிலே மேகம் போன்ற நீண்ட கூந்தலை யுடையவர்களே –
எம்பெருமானை தலையால் வணங்கி தலை பெற்ற பயன் பெரும் பெற்றதால் சிறப்பித்து அழைக்கிறாள்
பிழைத்தலை யான் எண்ணிப் பேசுகின்றேன்
இப்பிணி மற்று ஒன்றால் தணியாது
முழைத்தலை நின்று மலயா நிலம் வந்து மோதும் முன்னே —
மலய மாருதம் ஆகிய தென்றல் காற்று அந்த மல பர்வதத்தின் குகையின் இடத்து நின்று வந்து தாக்குவதற்கு முன்பே –
வருணனை முன் அழைத்து அலை அங்கு அடைத்தார்
அலங்காரர் அலங்கல் நல்கீர்
மலயக் குன்றின் குல மா முழையில் குடி வாழ் தென்றல் புலியே இரை தேடுதியோ -கம்பர்
மாலை யம் தண் அம் துழாய் கொண்டு சூட்டுமினே -ஆழ்வார் –

—————————————————————————-

மோது ஆக வந்தனை மூட்டு இலங்கேசன் முடிந்து விண்ணின்
மீது ஆக வந்தனை வில் எடுத்தே விடை வெற்பில் நின்ற
நாதா கவந்தனைச் செற்றாய் உனை அன்றி நான் மறந்தும்
தீ ஆக வந்தனை செய்யேன் புறம் சில தேவரையே –42–

விடை வெற்பில் நின்ற நாதா -விருஷ கிரியில் நின்று அருளும் ஸ்வாமியே
கவந்தனைச் செற்றாய் –
மோது ஆக வந்தனை -ஒருவர் உடன் ஒருவர் தாக்கிச் செய்வதான போரை
மூட்டு இலங்கேசன் -வலிய யுண்டாக்கி நடத்திய இராவணன்
முடிந்து விண்ணின் மீது ஆக வந்தனை வில் எடுத்தே
உனை அன்றி நான் மறந்தும்
தீ ஆக வந்தனை செய்யேன் புறம் சில தேவரையே –மறந்தும் புறம் தொழா மாந்தர் –

———————————————————————————

தேவரை யாதல் மனிதரை யாதல் செழும் கவிதை
நாவரை யாமல் நவிலுகிற்பீர் நம்மை ஆளும் செம் பொன்
மேவு அரை யானை இருஞ்சோலை வேங்கடம் மெய்யம் என்னும்
மா வரையானை ஒருவனையே சொல்லி வாழுமினே –43-

தேவரை யாதல் மனிதரை யாதல் செழும் கவிதை நவிலுகிற்பீர் –
நாவரை யாமல் -நாவால் இன்னாரை பாட வேண்டும் இன்னாரை பாட கூடாது என்கிற வரைமுறை இல்லாமல்
நம்மை ஆளும் செம் பொன் மேவு அரை யானை இருஞ்சோலை வேங்கடம் மெய்யம் என்னும் மா வரையானை
ஒருவனையே சொல்லி வாழுமினே -பேரின்ப வாழ்வு பெற்று உய்யுமின் –

—————————————————————————-

வாழும்மின் பங்கயச் சுந்தர வல்லி மணாளன் வெற்பைச்
சூழுமின் பந்தித்த தொல் வினை தீர்ந்து உய்ய தொங்கல் சுற்றும்
தாழும் இன்பஞ்சணை மேல் மடவார் தடமா முலைக்கே
வீழும் இன்பம் கருதி துன்ப யோனியில் வீழ்பவரே –44–

தொங்கல் சுற்றும் தாழும்
இன்பஞ்சணை மேல் -இன் பஞ்சு அணை மேல்
மடவார் தடமா முலைக்கே வீழும்
இன்பம் கருதி துன்ப யோனியில் வீழ்பவரே —
பந்தித்த தொல் வினை தீர்ந்து உய்ய –
வாழும்மின் பங்கயச் சுந்தர வல்லி மணாளன் வெற்பைச்
சூழுமின்–வாழும் மின்னல் போலே நித்ய அநபாயினி -சுந்தர வல்லி தாயார் கேள்வன் உடைய
மாலிருஞ்சோலை திருமலையை பிரதஷிணம் செய்மின்
வலம் செய்து வைகல் வலம் கழியாதே வலம் செய்யு மாய மாயவன் கோயில்
வலம் செய்யும் வானோர் மாலிருஞ்சோலை வலம் செய்து நாளும் மருவுதல் வழக்கே -ஆழ்வார்

——————————————————————————

வீழ மராமரம் எய்தார் மதி தவழ் வெற்பை நெஞ்சே
தாழ் அமர் ஆடச் சமன் குறு கான் இச் சரீரம் என்னும்
பாழ் அமராமல் பரகதி எற்றுவர் பார்க்கில் விண்ணோர்
வாழ் அமரா வதியும் நரகாம் அந்த மா நகர்க்கே –45-

நெஞ்சே
வீழ மராமரம் எய்தார்
மதி தவழ் வெற்பை -மதி தவழ் குடுமி மாலிருஞ்சோலை பதியது ஏத்தி எழுவது பயனே –
பரிபூர்ண சந்திர மண்டலத்தாலே அலங்க்ருதமான திருமலை-ஓங்கின சிகரம் என்றுமாம் –
சூற் பெண்டுகள் சுரம் ஏறுமா போலே சந்தரன் தவழ்ந்து ஏறா நின்றுள்ள சிகரத்தை யுடைய திருமலை –
தாழ் -வணங்குவாய் –
அதனால் யாது பயன் என்னில்
அமர் ஆடச் சமன் குறு கான்-அந்திம காலத்தில் போர் செய்து வென்று உயிரைக் கவர யம பகவான் அருகில் வருதலும் செய்யான்
மால் அடிமை கொண்ட அனந்தரத்து உம் பேர் நினைக்கவும் கூற்று அஞ்சுமே –
அன்றியும்
இச் சரீரம் என்னும் பாழ் அமராமல் -சரீரம் ஆகிய பாழிலே பொருந்தாத படி -மீண்டும் பிறப்பு இல்லாமல்
பரகதி எற்றுவர்
பார்க்கில் -ஆலோசித்திப் பார்க்கும் இடத்தில்
விண்ணோர் வாழ் அமரா வதியும் நரகாம் அந்த மா நகர்க்கே –
தேவர்கள் வாழும் ஸ்வர்க்கமும்-அமராவதி ஸ்வர்க்க லோக ராஜதானி – இந்த ஸ்ரீ வைகுண்டத்துக்கு முன்னே நரகு போலே ஆகுமே
அந்த மா நகர்க்கு -திருமால் இருஞ்சோலைக்கு என்றுமாம் –

—————————————————————————–

நகரமும் நாடும் புரந்தவர் நண்ணலரால் வானமும்
சிகரமும் நாடும் சிறுமை கண்டோம் மஞ்ஞை தேன் இசைகள்
பகர முன் ஆடும் பனிச்சோலை வெற்பில் நிற்பார்க்கு கஞ்சன்
தகர முன் நாள் துகைத்தார்க்கு அறிந்தீர்கள் சரண் புகுமே –46–

நகரமும் நாடும் புரந்தவர் -பட்டணங்களையும் தேசங்களையும் ஆண்ட அரசர்கள்
நண்ணலரால் வானமும் சிகரமும் நாடும் சிறுமை கண்டோம்
பகைவர்களால் அடித்துத் துரத்தப் பட்டு
காட்டியும் மலைச் சிகரத்தையும் தேடிச் செல்லும் எளிமையை கண்டோம் –
அதனால் அதில் ஆசை விட்டு -அறிந்தீர்கள்-அறிய வேண்டுபவற்றை அறிந்தீர்களே
மஞ்ஞை தேன் இசைகள் பகர–முன் ஆடும் -வண்டுகள் கீதங்கள் பாட -மயில்கள் எதிரிலே கூத்தாடப் பெற்ற
வண்டினம் முரலும் சோலை -மயிலினம் ஆடும் சோலை –
பனிச்சோலை வெற்பில் நிற்பார்க்கு -குளிர்ந்த திரு மாலிருஞ்சோலை யிலே நின்று அருளி சேவை சாதிப்பவரும்
கஞ்சன் தகர முன் நாள் துகைத்தார்க்கு
சரண் புகுமே–
வெம் மின் ஒளி வெயில் கானம் போய் குமைதின்பர்கள் செம்மின் முடித் திருமாலை விரைந்து அடி சேர்மினோ -நம்மாழ்வார் –

——————————————————————————–

சரணியன் ஆகத் தனை நினைந்தாரைத் தன் போலே வைக்கும்
அரணியன் நாகத்து அணையான் அரங்கன் அழகன் எம் கோன்
இரணியன் ஆகம் இடந்தான் கதை அன்றி ஈனர் தங்கள்
முரண் இயல் நாகத்தும் புன்குரல் ஓரி முதுக் குரலே –47-

சரணியன் ஆகத் தனை நினைந்தாரைத் தன் போலே வைக்கும்
அரணியன் -பாதுகாப்பாய் உள்ளவன் –
மணியாழி வண்ணன் உகந்தாரை தன் வடிவாக்கும் என்றே துணையாழிய மறை சொல்லும்
சாலோக்யம் -சாமீப்யம் -சாரூப்யம் சாயுஜ்யம் –
நாகத்து அணையான் அரங்கன் அழகன் எம் கோன்
இரணியன் ஆகம் இடந்தான் கதை அன்றி -திவ்ய சரித்ரம் அன்றி
ஈனர் தங்கள் முரண் இயல் நாகத்தும் புன்குரல்
பிற சமயத்தார் மாறு பாடு பொருந்திய நாவினால் பிதற்றும் இழிவான சொற்களை –
ஓரி முதுக் குரலே –கிழ நரி ஊளையிடும் பெரும் குரல் போலே செவிக்கு இன்னாததாய் வெறுக்கத் தக்கதாய் இருக்கும்
கேட்பார்கள் கேசவன் கேர்த்தி யல்லால் மற்றும் கேட்பாரோ
நாகத்துப் பாய்ந்தான் கதை அன்றி வெவ்வினைகள் துன்ன பல் நாகத்து பொய்ந்நூல் புகா என் துளைச் செவிக்கே –

———————————————————————————

முது விருந்தா வனத்து ஆநிரை மேய்த்தவர் முன் விதுரன்
புது விருந்து ஆனவர் மால் அலங்காரர் பொலாங் கழல் ஆம்
மது இருந்தாமரைக்கு ஆளாய் இரார்க்கு மது நுட்ப நூல்
எது இருந்தாலும் அதனால் விடா இங்கு இரு வினையே –48–

முது விருந்தா வனத்து -பழைய பிருந்தாவனத்திலே
ஆநிரை மேய்த்தவர்
முன் விதுரன் புது விருந்து ஆனவர்
மால் அலங்காரர் பொலாங் கழல் ஆம் -பெருமை யுடைய அழகரது அழகிய திருவடிகள் ஆகிய
மது இருந்தாமரைக்கு -தேன் கொண்ட பெரிய தாமரை மலர்களுக்கு
ஆளாய் இரார்க்கு
மது நுட்ப நூல் எது இருந்தாலும் -எது பயின்று தேறப் பெற்றாலும்
அதனால் விடா இங்கு இரு வினையே —

——————————————————————————–

தலைவி வெறி விலக்கிச் செவிலியர்க்கு அறத்தொடு நிற்றல்

வினை யாட்டியேன் கொண்ட வெங்காம நோய் வெறியாட்டினும் இச்
சினை ஆட்டினும் தணியாது அன்னைமீர் செய்ய பூங்கமல
மனையாட்டி நாயகன் மாலிருஞ்சோலை மலைச் சிலம்பாற்று
எனை ஆட்டி வாரும் சொன்னேன் எந்த நோயும் எனக்கு இல்லையே –49-

அன்னைமீர்
வினை யாட்டியேன் கொண்ட வெங்காம நோய் வெறியாட்டினும்
இச் சினை ஆட்டினும் -உறுப்புக்களில் குறை இல்லாத இந்த ஆட்டைப் பலி கொடுத்ததாலினும்
சினையாடு கர்ப்பம் கொண்ட ஆடு என்றுமாம்
தணியாது
செய்ய பூங்கமல மனையாட்டி நாயகன்
மாலிருஞ்சோலை மலைச் சிலம்பாற்று -நூபுர கங்கை என்னும் திவ்ய நதியிலே
எனை ஆட்டி வாரும் சொன்னேன் எந்த நோயும் எனக்கு இல்லையே —
வெறியாட்டினும் இச்சின்னை யாட்டினும் தணியாது சிலம்பாற்று எனையாட்டி வாரும் -சொல் நயம் சொல் பின் வரு நிலை –
ஸ்ரீ பாத தீர்த்தம் -அடியார் பாத தூளியே பாவனம் -ஸ்ரீ பாகவதர் களுடைய சம்பந்தமே பரிகாரம் –

—————————————————————————-

வண்டு விடு தூது

எனக்கு ஆவி அங்கும் உடல் இங்கும் ஆகி இருப்பதை சந்
தனக்கா இயங்கும் தமர வண்டீர் சொல்லும் தத்துவ நூல்
கனக்காவியம் கவி வல்லோர் புகழ் அலங்கார னுக்கு
வனக்காவி அம் கண்ணி மா மலராள் மணவாளனுக்கே –50–

சந் தனக்கா இயங்கும் -சந்தனம் கா இயங்கும் -சந்தன சோலைகளில் சஞ்சரிக்கும் தன்மை யுள்ள
தமர வண்டீர் -தமரம் -வண்டுகள் ஒலிக்கும் ஓசைக்கு பெயர்
எம்பெருமானை நாடி -சர்வ கந்தன் சர்வ ரசம் உள்ளவன் -திவ்ய தேசங்கள் எல்லாம் தீர்த்த யாத்ரை செய்து அனுபவிக்கும் ஆச்சார்யர்கள் –
தத்துவ நூல் -தத்வ சாஸ்திரங்களிலும்
கனக்காவியம் -பெரிய காவியங்களிலும்
புகழ் அலங்கார னுக்கு -ஸ்துதிக்கப் பெற்ற அழகருக்கு
வனக்காவி அம் கண்ணி மா மலராள் மணவாளனுக்கே-நீலோற்பல மலர் போன்ற அழகிய திருக் கண்கள் யுடைய பெரிய பிராட்டியார் கேள்வனுக்கு
எனக்கு ஆவி அங்கும் உடல் இங்கும் ஆகி இருப்பதை
சொல்லும் –
எனது உயிர் அத்தலைவன் இடமும் உடம்பு மாதரம் இங்கே இருக்கும் செய்தியைச் சொல்லுமின் –

——————————————————————————-

கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்–

ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் அருளிய திரு அழகர் அந்தாதி -1-25-

February 27, 2016

திருச் சிறப்பு பாசுரம் -தனியன் –

திரு கவி மங்கை மணவாள வள்ளல் செந்தேன் றுளித்து
முருகவிழ் தென் திருமாலிருஞ்சோலை மலை முகுந்தற்கு
இருகவின் தாள்களில் சூடும் அந்தாதியின் ஈரைம்பதில்
ஒரு கவி கற்கினும் ஞானமும் வீடும் உதவிடுமே –

திருகவி -திவ்ய கவி என்றபடி
திருகு ஆவி -மாறுபாடு வஞ்சனை இல்லாத -என்றுமாம் –
கவின் -அழகிய
இரு தாள் -உபய பாதம்
ஞானமும் வீடும் -நல்லுணர்வும் பரமபதமும்
உதவிடும் -தவறாது கொடுக்கும் –
ஆக்கியோன் பெயரும் -பிரபந்த பெயரும் -நுதலிய பொருளும் -பயனும் இந்த தனியனில் அருளிச் செய்து அருளுகிறார் அபியுக்தர் –

————————————————————–

காப்பு –

அங்கத் தமிழ் மறை ஆயிரம் பாடி அளித்து உலகோர்
தங்கட்கு வீடருளும் புருடோத்தமன் தண் வகுளத்
தொங்கற் பராங்குசன் தாளிணை மாலிருஞ்சோலை மலைச்
சங்கத் தமிழ் அழகர் அந்தாதி நடாத்தலைக் கொள்வனே –

அங்கத் தமிழ் மறை-ஆறு அங்கங்கள் கொண்ட திராவிட வேதங்கள் ஆயிரம் பாடி
அளித்து -மதுர கவிகள் -நாத முனி போன்றோர்களுக்கு உபதேச முகமாக அளித்து
உலகோர் தங்கட்கு வீடருளும் புருடோத்தமன் தண் வகுளத்
தொங்கற் பராங்குசன் தாளிணை-
புருஷ ச்ரேஷ்டர் -மகிழம் பூ மாலை தரித்த -நம்மாழ்வார் உடைய உபய பாதத்தை -வகுளாபரணர்
மாலிருஞ்சோலை மலைச் சங்கத் தமிழ் அழகர் அந்தாதி நடாத்தலைக் கொள்வனே –
தண் தமிழ் சங்கத் தனி இறைவனே -என்று தமிழ்ச் சங்கத் தலைவரான திருமால் இருஞ்சோலை அழகர் விஷயமான
அந்தாதி விக்னம் இல்லாமல் முடித்து தந்து அருளுமாறு தளை மேல் கொண்டு வணங்குவேன்
சங்கத்து அழகர் -திருப் பாஞ்ச ஜன்யம் தரித்த அழகர் என்றுமாம்
கிளர் ஒளி இளமை திருவாய் மொழியும் நம்மாழ்வார் திருவாய்மொழி விக்னம் இல்லாமல் நடாத்தி அருள
திருமால் இருஞ்சோலை விஷயமாக அருளிச் செய்தார் –

——————————————————————–

நீர் ஆழி வண்ணனை பாலாழி நாதனை நின்மலனை
சீர் ஆழி அம்கைத் திருமகள் கேள்வனை தெய்வப் புள் ஊர்
கூர் ஆழி மாயனை மால் அலங்காரனை கொற்ற வெய்யோன்
ஓர் ஆழித் தேர் மறைத்தானை எஞ்ஞான்றும் உரை நெஞ்சமே –1–

நீர் ஆழி வண்ணனை -நீர் மயமான கடல் போன்ற கரிய திரு நிறம் உடையவனை
பாலாழி நாதனை-திருப் பாற் கடலில் கண் வளர்ந்து அருளும் நாதனை
நின்மலனை
சீர் ஆழி அம்கைத் திருமகள் கேள்வனை -அழகிய மோதிரம் அணிந்த கைகளை யுடைய பெரிய பிராட்டியார் கேள்வனை
தெய்வப் புள் ஊர் கூர் ஆழி மாயனை
மால் அலங்காரனை -பெருமை பொருந்திய அழகரை
கொற்ற வெய்யோன்
ஓர் ஆழித் தேர் மறைத்தானை எஞ்ஞான்றும் உரை நெஞ்சமே —
மதி தவழ் குடுமி மால் இருஞ்சோலை பதியது ஏத்தி எழுவது பயனே –
வாக்கின் செயலை மனத்தில் ஏற்றி உரை நெஞ்சமே என்கிறார்
ஆழி -கடல் /மோதிரம் /ஸ்ரீ சக்ரத் தாழ்வான் /பொருளில் மூன்று அடிகளிலும் அருளிச் செய்கிறார் –

————————————————————————

உரை மாற்றம் உண்டு என் பொறி ஐந்தும் உன்னிடத்து அன்றி உண்ணும்
இரை மாற்றம் வேண்டும் இதுவே என் விண்ணப்பம் என் அப்பனே
உரை மாற்று அளவு அற்ற பொன் உடுத்தாய் வில் எடுத்து இலங்கை
வரை மாற்றலரைச் செற்றாய் அழகா கரு மாணிக்கமே –2-

உரை மாற்று அளவு அற்ற பொன் உடுத்தாய்
உரை கல்லிலே உரைத்து நோக்கத் தக்க மிகச் சிறந்த பொன்மயமான பீதாம்பரத்தை தரித்து
வில் எடுத்து இலங்கை வரை மாற்றலரைச் செற்றாய் அழகா கரு மாணிக்கமே —
உரை மாற்றம் உண்டு
அடியேன் உன் பக்கல் சொல்லும் சொல் ஓன்று உளது -அது யாது எனில் –
என் பொறி ஐந்தும் உன்னிடத்து அன்றி உண்ணும் இரை மாற்றம் வேண்டும்
இதுவே என் விண்ணப்பம்-என் அப்பனே –
பொய்ந்நின்ற ஞானமும் –அடியேன் செய்யும் விண்ணப்பமே -நம்மாழ்வார் அருளிச் செய்தது போலேயும்
சொல்லின் தொகை கொண்டு –இராமானுச இது என் விண்ணப்பமே -திருவரங்கத்து அமுதனார் -போலேயும் அருளிச் செய்கிறார்
விஷயாந்தரங்களில் மூழ்கி அழியாத படி உண்ணும் சோறு இத்யாதி வாசுதேவஸ் சர்வம்
-தாரக போஷாக போக்யாதிகள் எல்லாம் நீயேயாம் படி அருள வேண்டும் என்கிறார் –

———————————————————————

மாணிக்க நகம் புரை மேனி மாலுக்கு வார் சடையோன்
பாணிக் கனகம் பலி ஒழித்தானுக்கு பச்சைத் துழாய்
ஆணிக் கனக முடி அலங்காரனுக்கு அண்டம் எல்லாம்
பேணிக்கு அனகனுக்கு பித்தர் ஆனவர் பித்தர் அன்றே –3-

மாணிக்க நகம் -மாணிக்க மானதொரு மலையை
கருமாணிக்கம் -முந்திய பாசுரத்தில் மாணிக்கம் அடை
மொழியை இங்கே வருவித்துக் கொண்டு –
கரு மாணிக்கக் குன்றத்து தாமரை போலே திருமர்வு கால் கண் கை செவ்வி உந்தி யானே -ஆழ்வார்
நகம் -நடவாதது -அசலம் -மலை
புரை மேனி மாலுக்கு -ஒத்த திருமேனி யுடைய திருமாலுக்கு
வார் சடையோன் -நீண்ட கபர்த்தம் என்னும் சடை யுடைய சிவபிரானது
பாணிக் கனகம் பலி ஒழித்தானுக்கு-கையிலே ஒட்டிக் கொண்ட -பெரிய அல்லது பாரமான
பிரம கபாலத்தைக் கொண்டு -இரக்கிற பிச்சையை -நீக்கி அருளியவனும்
அண்டம் எல்லாம் பேணிக்கு -ஆண்ட கோலங்களை விரும்பிப் பாதுகாத்து அருளியவனும் –
அனகனுக்கு-தோஷம் இல்லாதவனும் ஆகிய
பச்சைத் துழாய் ஆணிக் கனக முடி அலங்காரனுக்கு -ஆணிப் போனால் செய்த திரு அபிஷேகம் சூடிக் கொண்டவனுக்கு
பித்தர் ஆனவர் பித்தர் அன்றே –பக்திப் பித்துக் கொண்டவர் -விஷயாந்தரங்களில் காதல் பித்தர் போலே இகழத் தக்கவர் இல்லையே
அரங்கனுக்கு அடியார்களாகி அவருக்கே பித்தராமவர் பித்தர் அல்லர்கள் மற்றியார் முற்றும் பித்தரே -குலசேகர ஆழ்வார் –

——————————————————————-

பித்து அரும்பா நின்ற நெஞ்சனை வஞ்சனை பேர் உலகோர்
கைத்து அரும்பாவி எனும் கடையேனை கடைக் கணியாய்
முத்தரும் பாரும் தொழும் அழகா வண்டு மூசும் துழாய்ப்
புத்தரும்பு ஆர் முடியாய் அடியாரைப் புரப்பவனே –4-

முத்தரும் பாரும் -இவ்வுலகத்தாரும் -தொழும் அழகா
வண்டு மூசும் -மொய்க்கப் பெற்ற -துழாய்ப்
புத்தரும்பு ஆர் முடியாய்
அடியாரைப் புரப்பவனே –பாதுகாத்து அருள்பவனே
பித்து அரும்பா நின்ற நெஞ்சனை -விஷயாந்தரங்களில் ஆசைப்பித்து உண்டாகுகிற மனத்தை உடையேனாக இருந்தாலும்
வஞ்சனை -வஞ்சனை யுடையேனாக இருந்தாலும் -பண்டே உன் தொண்டாம் பழ உயிரை என்னது என்று கொண்ட கள்வனாக இருந்தாலும்
பேர் உலகோர் கைத்து அரும்பாவி எனும் கடையோனை -கொடிய பாவி என்று பெரிய உலகோர் பலரும் வெறுத்து இகழும் படி நீசனாக இருந்தாலும்
அரும் பாதகன் -பொய்யன் -காமுகன் -கள்வன் –என்று சொல்லிக் கொண்டார் -திரு வேங்கடத்து அந்தாதி –
கடைக் கணியாய்-நீ கடாஷித்து அருள வேண்டும் –
கடையேனைக் கடைக்கணியாய் -சொல் நயம் –

—————————————————————–

புரந்தரன் ஆம் எனப் பூபதி ஆகி புகர் முகமாத்
துரந்து அரசு ஆளில் என் நல் குரவு ஆகில் என் தொல் புவிக்கு
வரம் தர மாலிருஞ்சோலை நின்றார்க்கு என் மனத்துனுள்ளே
நிரந்தரமாய் அலங்காரர்க்கு இங்கு ஆட்பட்டு நின்ற பின்னே –5–

தொல் புவிக்கு வரம் தர மாலிருஞ்சோலை நின்றார்க்கு
அலங்காரர்க்கு இங்கு-இவ்விடத்தில் -இம்மையில் –
என் மனத்துனுள்ளே நிரந்தரமாய் ஆட்பட்டு நின்ற பின்னே –
புரந்தரன் ஆம் எனப் பூபதி ஆகி புகர் முகமாத்
துரந்து அரசு ஆளில் என்
இவன் இந்திரனே யாவன் என்று எல்லாரும் சொல்லும்ன்படி செம்புள்ளி கள் உள்ள முகத்தை யுடைய
பட்டத்து யானையை ஏறி நடாத்தி அரசு ஆண்டால் என்ன
நல் குரவு ஆகில் என் -வறுமைப் பட்டால் என்ன –
இன்பம் தரு பெரு வீடு வந்து எய்தில் என் –அன்பன் அனகன் இராமானுசன் என்னை ஆண்டனனே –

———————————————————————-

நின்ற பிராணன் கழலும் முன்னே நெஞ்சமே நினையாய்
சென்ற பிராயம் வம்பே சென்றதால் திரு மங்கை கொங்கை
துன்று அபி ராமனை சுந்தரத் தோளனை தோளின் மல்லைக்
கொன்ற பிரானை அடைந்து அடியாரொடும் கூடுகைக்கே –6-

நெஞ்சமே
சென்ற பிராயம் வம்பே சென்றது
இனி ஆயினும்
நின்ற பிராணன் கழலும் முன்னே
திரு மங்கை கொங்கை துன்று அபி ராமனை
சுந்தரத் தோளனை -ஸூ ந்தர பூஹூ
தோளின் மல்லைக் கொன்ற பிரானை
அடைந்து அடியாரொடும் கூடுகைக்கே –
நினையாய்
ஆல் -ஈற்று ஆசை

————————————————————————–

கூடுகைக்கும் சரமத்து அடியேற்குக் கொடிய வஞ்சச்
சாடு உகைக்கும் சரணம் தர வேண்டும் தடத்து அழுந்தி
வாடுகைக் குஞ்சரம் காத்தீர் விண் வாழ்க்கைக்கும் வாள் அரக்கர்
வீடுகைக்கும் சரம் கோத்தீர் விடை வெற்பின் வித்தகரே –7-

தடத்து அழுந்தி வாடுகைக் குஞ்சரம் -யானையைக் -காத்தீர்
விண் வாழ்க்கைக்கும் -தேவர்கள் வாழும் படியாகவும் -வாள் அரக்கர் வீடுகைக்கும் சரம் கோத்தீர்
கொடிய வஞ்சம் சாடு உகைக்கும் சரணம் -சகடாசுரனை உதைத்து அழித்த திருவடிகள் என்றுமாம்
விடை வெற்பின் வித்தகரே -வ்ருஷபகிரி ஆகிய திருமால் இருஞ்சோலை திருமலையில் எழுந்து அருளி இருக்கும் ஞான ஸ்வரூபியே –
தர்மமும் ஒரு உரு தாங்கி -ரிஷப உரு தாங்கி -மாலைப்பத்தியில் அன்று அலைப்பட்ட
ஒருமை ஓங்கிய மாலிருஞ்சோலை சூழ் நாட்டின் பெருமை யாவரே பேசுவார் –
கூடுகைக்கும் சரமத்து -உடம்பை வெறுத்து உயிர் நீங்கும் அந்திம காலத்தில்
அடியேற்குக்
கொடிய வஞ்சச் சாடு உகைக்கும் சரணம் தர வேண்டும் –

———————————————————————–

பாங்கி வெறி விலக்கிச் செவிலியர்க்கு அறத்தொடு நிற்றல் –

வித்தகர் உம்பர் அரசு ஆனவனும் விதியும் கங்கை
மத்தகரும் பரவும் அலங்காரர் மழை கொண்ட கார்
ஒத்த கரும் பரஞ்சோதியர் நாமம் உரைத்து அன்னைமீர்
இத்தகரும் பர தெய்வமும் கூத்தும் விட்டு ஏத்துமினே –8-

அன்னைமீர்
இத்தகரும் -இ தகரும் -இந்த ஆட்டுக் கடா பலியும்
பர தெய்வமும்-வேறு தெய்வத்தை வழி படுதலும்
கூத்தும் -வெறியாட்டு ஆட்டுவித்தலும்
விட்டு -ஒழித்து
வித்தகர் -ஞான ஸ்வரூபி –
உம்பர் அரசு ஆனவனும் விதியும் கங்கை மத்தகரும் பரவும் அலங்காரர் –
இந்திரன் பிரமன் சிவன் ஸ்துதித்து வணங்கி வழிபடப் பெற்ற அழகரும்
மழை கொண்ட கார் ஒத்த கரும் பரஞ்சோதியர் நாமம் உரைத்து
ஏத்துமினே
ஒருங்காகவே யுலகு ஏழும் விழுங்கி உமிழ்ந்திட்ட பெரும் தேவன் பேர் சொல்ல கிற்கில் இவளைப் பெறுதீரே -நம்மாழ்வார் –

—————————————————————————-

ஏத்துமின் பத்தியினால் எட்டு எழுத்தும் இணை யடிக்கே
சாத்துமின் பத்திரத் தண் அம் துழாய் மதி தாங்கி கஞ்சம்
பூத்து மின்பத்தி செயும் பச்சை மா முகில் போல் அழகர்
காத்தும் இன்பத்தில் இருத்தியும் வைப்பர் கருணை செய்தே –9-

ஏத்துமின் பத்தியினால் எட்டு எழுத்தும் இணை யடிக்கே
இனிமையான பக்தி யுடன் அஷ்டாஷர திருமந்தரம் உச்சரியுமின்
சாத்துமின் பத்திரத் தண் அம் துழாய்
இங்கனம் செய்வீர் ஆனால்
மதி தாங்கி -சந்திர மண்டலத்தை மேலே சுமந்து -திருமுக மண்டலத்துக்கும்
கஞ்சம் பூத்து -தாமரை மலர்கள் தன்னிடத்தே பூக்கப் பெற்று -கண் கால் கை வாய் உந்தி -என்ற அவயவங்கள் –
மின்பத்தி செயும் -மின்னல்கள் ஒழுங்காகத் தோன்றப் பெற்ற -அணிந்துள்ள திரு ஆபரணங்கள் ஒளி
பச்சை மா முகில் போல்-கரிய திருமேனி
இல் பொருள் உவமை –
அழகர் காத்தும் இன்பத்தில் இருத்தியும் வைப்பர் கருணை செய்தே –பேரின்பத்தில் நிலை நிறுத்தியும் பரமபதத்தில் வைத்து அருள்வர் –

—————————————————————-

செய்தவர் ஆக வருந்தியும் தீர்த்தத் துறை படிந்தும்
கைதவர் ஆகமம் கற்றும் என் ஆம் கடற்பார் மருப்பில்
பெய்த வராகவனை மால் அலங்காரனை பேர் இலங்கை
எய்தவ ராகவ என்று ஏத்த நீங்கும் இரு வினையே –10-

செய்தவர் ஆக வருந்தியும் -தவத்தை யுடையவராக உடலும் உள்ளமும் வருந்தியும் -செய்த தவம் -செவ்விய தவம் என்றுமாம்
தீர்த்தத் துறை படிந்தும் –
கைதவர் ஆகமம் கற்றும்-வஞ்சகர்களான பிற மதத்தர்வர்கள் யுடைய ஆகம நூல்களை ஓதி யுணர்ந்தும்
என் ஆம் -யாது பயன் யுண்டாம்
கடற்பார் மருப்பில் பெய்த வராகவனை -ஸ்ரீ வராஹ நாயனாராக திரு வவதாரம் செய்து அருளினவனை –
பருமை யுடையது பார் -பார்க்கப் படுவது பார் -காரணப் பொருள் –
மால் அலங்காரனை -பெருமை உள்ள அழகரை
பேர் இலங்கை எய்தவ ராகவ
என்று ஏத்த நீங்கும் இரு வினையே —

——————————————————————

தலைவியின் ஆற்றாமையை தோழி தலைவனுக்கு கூறல் –

வினைக்கும் மருந்து அரிக்கும் பிணி மூப்புக்கும் வீகின்ற வே
தனைக்கும் மருந்து அன்ன தாள் அழகா செய்ய தாமரை அங்
கனைக்கும் அருந்து அமுதே அருளாய் நின்னைக் காதலித்து
நினைக்கும் அருந்ததி தன் உயிர் வாழ்க்கை நிலை பெறவே –11-

வினைக்கும்-புண்ய பாப ரூபா கருமங்களுக்கும்
மருந்து அரிக்கும் பிணி மூப்புக்கும் -மருந்துக்கு வசப்படாமல் அழியும் படி செய்யும் நோய்கள் கிழத் தன்மைக்கும்
இவற்றை ஒழிப்பதற்கும்
வீகின்ற வே தனைக்கும் -மரண வேதனையை போக்குதற்கும்
மருந்து அன்ன -பிணி பசி மூப்பு மரணத் துன்பங்களை நீக்க வல்ல தேவாம்ருதத்தை போன்ற
தாள் அழகா
செய்ய தாமரை அங்கனைக்கும் அருந்து அமுதே-அங்கனா -அழகிய அங்கங்கள் உடைய திருமகளுக்கும் நுகர்தற்கு உரிய அமிர்தமாக உள்ளவனே
அருளாய் நின்னைக் காதலித்து நினைக்கும் அருந்ததி தன் -அருந்ததி போன்ற -இவளது – உயிர் வாழ்க்கை நிலை பெறவே —
வெளிப்படையாக வந்து தோன்றி இவளை திருமணம் செய்து கைக் கொள்ள வேண்டும் என்கிறாள் தோழி –
மானச சாஷாத்காரம் மட்டுமே போதாது என்கிறாள் -பெரிய பிராட்டியாரைப் போலே இவளையும் நித்ய அநபாயினி ஆக்கி அருள வேணும் -என்கிறாள் –

————————————————————————————–

நிலையாமை ஆன உடலும் உயிரும் நினைவும் தம்மில்
கலையா மையானம் கலக்கு முன்னே கங்கை வைத்த சடைத்
தலை ஆம் ஐ ஆனனன் தாமரையான் தொழும் தாள் அழகன்
அலை ஆமை ஆனவன் மாலிருஞ்சோலை அடை நெஞ்சமே –12-

நெஞ்சமே –
நிலையாமை ஆன உடலும்
உயிரும் நினைவும் தம்மில் கலையா
மையானம் -மயானம் -கலக்கு முன்னே -அடைவதற்கு முன்பே
கங்கை வைத்த சடைத் தலை ஆம் ஐ ஆனனன் -ஐம் முகனான சிவனும்
சக்தியோஜாதம் -வாம தேவம் -அகோரம் -தத் புருஷம் -ஈசானாம் -ஐந்து முகங்கள் –
தாமரையான் -பிரமனும்
தொழும் தாள்
அழகன்
அலை ஆமை ஆனவன் -திருப் பாற் கடலுள் ஸ்ரீ கூர்ம வடிவாய் திரு அவதரித்தவனும்
மாலிருஞ்சோலை அடை –விரும்பி உட்கொண்டு தியானிப்பாய் –
பயனல்ல செய்து பயன் இல்லை நெஞ்சே புயன் மழை வண்ணர்புரிந்து உறை கோயில்
மயன் மிகு பொழில் சூழ் மாலிருஞ்சோலை அடைவது கருமமே –

——————————————————————————

நெஞ்சம் உருக்கும் உயிர் உருக்கும் தொல்லை நீள் வினையின்
வஞ்சம் முருக்கும் பவம் முருக்கும் வள் துழாய் அழகர்
கஞ்ச முருக்கு மலர் வாய்த் திரு நண்பர் கஞ்சனுக்கு
நஞ்சம் உருக்குவளை ஆழி அன்னவர் நாமங்களே –13-

கஞ்ச முருக்கு மலர் வாய்த் திரு நண்பர்
தாமரை மலரில் வீற்று இருக்கும் -பசாலம் பூ போன்ற சிறந்த திருவாயை யுடைய திருமகளுக்கு கேள்வன்
கஞ்சனுக்கு நஞ்சம்
உருக்குவளை ஆழி அன்னவர் -நீலோற்பல மலரையும் கடலையும் ஒத்த திருமேனி யுடையவர் –
குன்றாடு கொழு முகில் போல் குவளைகள் போல் குரை கடல் போல் நின்றாடு கண மயில் போல் நிறமுடைய நெடுமால் -பெரியாழ்வார்
நஞ்ச முருக்கும் வளை யாழி யன்னவர் -என்ற பாடம் கொண்டு கஞ்சனுக்கு விஷமாய் தோன்றியவரும்
உலகத்தை வளைந்துள்ள கடலைப் போன்ற எம்பெருமான் என்றும்
சங்கினை யுடைய கடல் போன்றவர் என்றுமாம் –
வள் துழாய் அழகர் நாமங்களே-செழிப்பான திருத் துழாய் மாலையைத் தரித்த அழகர் யுடைய திரு நாமங்கள்
நெஞ்சம் உருக்கும் உயிர் உருக்கும்
தொல்லை நீள் வினையின் வஞ்சம் முருக்கும் -வஞ்சனையை அழிக்கும்
பவம் முருக்கும் -பிறப்பை ஒழிக்கும்-

—————————————————————————-

நாமங்கள் ஆவி நழுவும் தனையும் நவின்று அவரைத்
தாமங்களாவி- தாம் அங்கு அளாவி -மனத்துள் வைப்பார் தண்டலை யின் அகில்
தூமங்கள் ஆவி மணம் நாறும் மாலிருஞ்சோலை அன்பர்
சேமம் களாவின் கனி அனை யார் பதம் சேருவரே –14-

நாமங்கள் ஆவி நழுவும் தனையும் நவின்று
அவரைத் தாமங்களாவி- திரு நாம சங்கீர்த்தனம் செய்து
தாம் அங்கு -திருமாலிருஞ்சோலை -அளாவி –அடைந்தது பற்றி
மனத்துள் வைப்பார் -தியானித்து
தண்டலை யின் -சோலைகளிலே
ஆவி -குளங்களிலே -ஹவிஸ் திருமணம் என்றுமாம்
அகில் தூமங்கள் மணம் நாறும் மாலிருஞ்சோலை
மாடுயர்ந்து ஓமப்புகை கமழும் தண் திருவல்ல வாழ் -போலே
தூமம் கள் ஆவி -அகில் புகை –தேன் -ஹவிஸ் புகை -மணம் கமழும் என்றுமாம்
அன்பர் -அனைத்து உயிர்கள் இடத்திலும் அன்பரையும்
சேமம் -ரஷகராயும் -இன்ப மயமானவர் என்றுமாம்
களாவின் கனி அனை யார் பதம் சேருவரே -களாப் பழம் ஒத்த எம்பெருமான் திருவடிகளை சேருவர்
கனங்கனி வண்ணா கண்ணா -திருமங்கை ஆழ்வார்
த்ரிகரணங்களாலும்-மனம் மொழி காயம் -தியானித்து திருநாமம் சங்கீர்த்தனம் செய்து வணங்கி அவன் அடி சேர்வர்
திருவடியே வீடாகும் –

———————————————————————————–

சேரா தகாத நரகு ஏழ் தலை முறை சேர்ந்தவர்க்கும்
வாராது அகாதம் வசை பிணி பாவம் மறி கடல் முன்
தூராத காதங்கள் தூர்த்தானை மாலிருஞ்சோலையில் போய்
ஆராத காதலுடன் பணி வீர் என் அழகனையே –15-

ஆராத காதலுடன்-போய் -ஆராத காலத்துடன் பணிவீர் -மத்திம தீபமாக -கொண்டு
மாலிருஞ்சோலையில் போய்
முன்
மறி கடல்
தூராத காதங்கள் தூர்த்தானை -எவராலும் எந்நாளிலும் தூர்க்கப்படாத
அநேக காத தூரம் அளவும் குரங்குகளால் தூரத்து மலையால் அணை கட்டி
என் அழகனையே –
பணி வீர்-
அங்கனம் வணங்கினால்
ஏழ் தலை முறை சேர்ந்தவர்க்கும்
ஏழாட் காலும் பழிப்பிலோம் நாங்கள் -பகவத் பிரபாவம் சம்பந்தி சம்பந்திகள் அளவும் செல்லக் கீழும் மேலும் வெள்ளம் இடும் –
தகாத நரகு சேரா –
வாராது அகாதம் வசை பிணி பாவம் -ஆள்;அமான கடப்பதற்கு அரிய-பளிப்பும் நாடும் தீ வினையும் நேரிடாது –

————————————————————————

பாங்கி விடு தூது —

அழக்கன்றிய கருங்கண் ணிக்குக்கண்ணி அளித்திலரேல்
வழக்கு அன்றி முன் கொண்ட வால் வளை கேளும் மறுத்தது உண்டேல்
குழக்கன்றின் பின் குழல் ஊது அலங்காரர்க்கு கோதை நல்லீர்
சழக்கு அன்றில் வாய் பிளந்தால் உய்யலாம் என்று சாற்றுமினே –16-

கோதை நல்லீர்
அழக்கன்றிய கருங்கண் ணிக்கு-கண்ணீர் விட்டு அழுதலினால் கன்றிப்போன கருமையான கண்களை யுடைய இம்மகளுக்காக
கண் -ஞான வைலஷண்யம்
க்கண்ணி அளித்திலரேல்-தலைவர் தமது மாலையைக் கொடாராயின் -நிரதிசய ஆனந்தத்தை தந்திலர் ஆகில் –
கணனிக்கு கண்ணி அளித்திலர் ஆகில் -சொல் நயம் -சொல் பின் வரு நிலை அணி –
வழக்கு அன்றி முன் கொண்ட வால் வளை கேளும் –
நியாயமாக வன்றி முன்பு இவள் இடம் இருந்து வலியக் கவர்ந்து கொண்ட ஒள்ளிய வளையல்களைத் தரும்படி கேளுங்கள்
கைப் பொருள்கள் முன்னமே கைக்கொண்டார் காவிரி நீர் செய்ப் புரள வோடும் திரு வரங்க செல்வனார் –
எம்மானார் என்னுடைய கழல் வளையை தாமும் கழல் வளையே யாக்கினரே –
வளை -அனன்யார்ஹதா சிஹ்னம்
மறுத்தது உண்டேல் -அவற்றையும் தாராது அவர் தடை சொல்வது யுண்டானால் –
குழக்கன்றின் பின் குழல் ஊது அலங்காரர்க்கு –
இளமையான கன்றுகளின் பின்னே புல்லாங்குழலை ஊதிச் சென்ற அழகப பிரானார் ஆகிய அத்தலைவர்க்கு
சழக்கு அன்றில் வாய் பிளந்தால் உய்யலாம் என்று சாற்றுமினே –
குற்றத்தை யுடைய அன்றில் பறவையின் வாயைக் கிழித்தால் தான் இவள் பிழைத்தல் கூடும் என்று சொல்லுங்கோள் –

————————————————————————-

தலை மகனது மடலூர்தல் துணிவைத் தோழி செவிலுக்கு உணர்த்தல் –

சாற்றுக் கரும்பனை கூற்று என்னும் ஆசை தமிழ் மலையைக்
காற்றுக்கு அரும்ப நையும் கண் படாள் அலங்காரற்கு அண்டர்
ஏற்றுக்கு அரும்பு அனையக் கொங்கையாள் கொண்ட இன்னலுக்கு
மாற்றுக் கரும்பனை அல்லாது வேறு மருந்து இல்லையே –17-

இம் மங்கை
சாற்றுக் கரும்பனை -கரும்பை வில்லாக யுடைய மன்மதனை
கூற்று என்னும் -யமன் என்று சொல்லுவாள்
ஆசை தமிழ் மலையைக் காற்றுக்கு -தமிழ் வளர்த்த பொதிய மலையில் நின்றும் தோன்றுவதுமான தென்றல் காற்றுக்கு
அரும்ப நையும் -அரும் பல் நையும் -அது சிறியதாக வீசும் பொழுது எல்க்லாம் வருந்துவாள்
கண் படாள் -நள் இரவிலும் உட்படத் துயில் கொள்வது இல்லை
ஆகவே
அண்டர் ஏற்றுக்கு-தேவர்களில் சிங்கம் போன்ற
அலங்காரற்கு -அழகருக்கு -அழகப பிரான் விஷயமாக –
அரும்பு அனையக் கொங்கையாள் கொண்ட –
கோங்கு அரும்பை தாமரை அரும்பை வடிவில் ஒத்த ஸ்தனங்களைக் கொண்ட இவள் கொண்ட
இன்னலுக்கு
மாற்றுக் கரும்பனை அல்லாது -மடலூர்தல் அல்லாமல்
வேறு மருந்து இல்லையே –காதல் நோயைத் தீர்க்க வேறு பரிகாரம் இல்லை –

————————————————————————

மருந்து உவந்தார் தொழும் மாலிருஞ்சோலை மலை அழகர்
அருந்துவம் தாரணி என்று அயின்றார் அடல் ஆயிர வாய்
பொருந்து வந்து ஆர் பணிப் பாயார் விதுரன் புது மனையில்
விருந்து உவந்தார் அடியார்க்கு இல்லை நோயும் வெறுமையுமே –18-

அருந்துவம் தாரணி என்று அயின்றார் -பூமியை உண்போம் என்று உண்டு அருளியவரும்
அடல் ஆயிர வாய் பொருந்து வந்து ஆர்-காற்றை உணவாகக் கொள்ளும் – பணிப் பாயார்
விதுரன் புது மனையில் விருந்து உவந்தார்-கிருஷ்ணன் பொன்னடி சாத்தப் பட்டதால் புதுமனை –
மருந்து உவந்தார் தொழும் மாலிருஞ்சோலை மலை அழகர் -சாவா மருந்தான அமிர்தத்தை விரும்பி உண்ட தேவர்கள் வணங்கப் பெற்ற அழகர்
அமரரோடு கோனும் சென்று திரிசுடர் சூழும் மலை திருமாலிருஞ்சோலை யதே -பெரியாழ்வார்
அடியார்க்கு இல்லை நோயும் வெறுமையுமே –

———————————————————————–

தலை மகன் இளமைக்குச் செவிலி இரங்குதல்

வெறுத்தவரை கஞ்சனை செற்றுளார் விடை வெற்பர் வெங்கண்
கறுத்த வரைக்கு அஞ்சல் என்று வந்தார் கனகாம் பரத்தைப்
பொறுத்த அரைக்கு அஞ்சன மேனிக்கு ஆவி புலர்ந்து உருகிச்
சிறுத்த வரைக் கஞ்சம் கூப்பும் என் பேதைக்கு என் செப்புவதே –19-

வெறுத்தவரை கஞ்சனை செற்றுளார் -தன்னை வெறுத்தவர்களையும் கஞ்சனையும் கொன்றிட்டவரும்
வெங்கண் கறுத்த வரைக்கு அஞ்சல் என்று வந்தார்-ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானுக்கு விரைந்து வந்து ரஷித்தவரும்
விடை வெற்பர்-விருஷப கிரியில் எழுந்து அருளி இருக்கும் அழகர்
கனகாம் பரத்தைப் பொறுத்த அரைக்கு -கனக அம்பரம் -பீதாம்பரம் தரித்த திரு வரியின் அழகைக் குறித்தும்
அஞ்சன மேனிக்கு ஆவி புலர்ந்து உருகிச் -ஈடுபட்டு உயிர் வருந்தி கரைந்து
சிறுத்த வரைக் கஞ்சம் கூப்பும்-வரை சிறுத்த கஞ்சம் -உத்தம லஷனமான ரேகைகளை யுடைய
சிறிய தாமரை மலர் போன்ற திருக்கைகளைக் கவித்து தொழும்
என் பேதைக்கு என் செப்புவதே –என் பெண்ணின் நிலைமையைக் குறித்து ஒன்றும் சொல்லத் தரம் இல்லை -என்றபடி –
அறியாக் காலத்துள்ளே அடிமைக் கண் அன்பு செய்வித்து அறியா மா மாயத்து அடியேனை வைத்தாயேல்-

———————————————————————

செப்போ தனம் செழுந்துப் போ செவ்வாய் என்று சேயிழை யார்க்கு
ஒப்பு ஓத நெஞ்சு உருகித் திரிவீர் கனல் ஊதை மண் விண்
அப்பு ஓதனம் என்று அமுது செய்தார் அலங்காரர் பொற்றாள்
எப்போது அனந்தல் தவிர்ந்து ஏத்த நீங்கள் இருக்கின்றதே –20-

-தனம் செப்போ –ஸ்தனங்கள் செப்போ –
செழுந்துப் போ செவ்வாய் -செழும் துப்போ -சிவந்த வாய் செழுமையான பவளமோ
என்று சேயிழை யார்க்கு -ஒப்பு ஓத நெஞ்சு உருகித் திரிவீர் வடிவும் நிறமும் பற்றி உவமைகள் எடுத்துச் சொல்லி
நெகிழ்ந்து கரைந்து வீணே திரிகின்றவர்களே
கனல் ஊதை மண் விண் அப்பு ஓதனம் என்று அமுது செய்தார்
அக்னி-காற்று -நிலம் -ஆகாயம் -நீர் -ஆகிய பஞ்ச பூதங்களை உணவாக உட்கொண்ட
அலங்காரர் -அழகருடைய
பொற்றாள் எப்போது அனந்தல் தவிர்ந்து –தூக்கம் சோம்பல் -தாமச குணம் ஒழிந்து –ஏத்த நீங்கள் இருக்கின்றதே

—————————————————————————-

இருக்கு அந்தரத்து அனைவோர்களும் ஓதி இடபகிரி
நெருக்கம் தரத்தனை ஏத்த நின்றானை நிறத்த துப்பின்
உருக் கந்தர் அத்தனைத் துன்பு ஒழித்தானை உலகம் உண்ட
திருக் கந்தரத்தானை அல்லாது எண்ணேன் ஒரு தெய்வத்தையே –21—

-அந்தரத்து அனைவோர்களும் -மேல் உலகில் உள்ள எல்லா தேவர்களும்
இருக்கு ஓதி -வேத வாக்யங்களைச் சொல்லி
இடபகிரி நெருக்கம் தரத்தனை ஏத்த நின்றானை -ரிஷப கிரி -திருமாலிருஞ்சோலை நெருக்கம் உண்டாகுமாறு
திரண்டு தன்னை ஸ்துதிக்க நின்றானை
நிறத்த துப்பின் உருக்-நிறம் விளங்கப் பெற்ற சிறந்த பவளம் போன்ற வடிவு நிறத்தை யுடைய
கந்தர் அத்தனைத் -முருகக் கடவுளுக்கு தந்தையாகிய சிவபிரானுக்கு
துன்பு ஒழித்தானை -துன்பம் ஒழித்து அருளிய
உலகம் உண்ட திருக் கந்தரத்தானை -திருக்கண்டத்தை -அல்லாது எண்ணேன் ஒரு தெய்வத்தையே –

————————————————————————–

தெய்வம் பல அவர் நூலும் பல அவை தேர் பொழுதில்
பொய் வம்பு அல என்று தோன்றும் புல்லோர்கட்கு போத நல்லோர்
உய்வம் பலனும் அவனே என்று ஓதி உணர்வர் நெஞ்சே
கொய் வம்பு அலர் சொரியும் சோலை மா மலைக் கொண்டலையே –22-

நெஞ்சே
தெய்வம் பல
அவர் நூலும் பல
அவை தேர் பொழுதில் பொய் வம்பு அல என்று தோன்றும் புல்லோர்கட்கு
அவற்றை ஆராய்ந்தால் பொய்மை யுடையவை பயன் அற்றவை அல்ல என்று அற்பர்களுக்குத் தோன்றும்
போத நல்லோர் -நல்ல ஞானம் உடைய நல்லவர்களோ –
உய்வம் -இவ்வழி எல்லா வழி செல்லாது நல் வழி சென்று உய்யக் கடவோம்
பலனும் அவனே -உபாயம் மட்டும் அல்ல உபேயமும் அவனே என்று –
என்று ஓதி உணர்வர்
கொய் வம்பு அலர் சொரியும் சோலை மா மலைக் கொண்டலையே —
நிறமும் பயனும் பற்றி வந்த உவமை ஆகு பெயர் —
ஸ்ரீ வேங்கடாத்ரி சிகராலய காளமேகம் -சோலை மலைக் கொண்டலை –
புயன் மழை வண்ணர் புரிந்து உறை கோயில் மயன் மிகு பொழில் சூழ் மாலிருஞ்சோலை –

————————————————————————–

கொண்டு அலையா நிற்கும் ஐம் புலக் கோள் மகரங்களின் ஈர்ப்பு
உண்டு அலை ஆர் பிறவிக் கடல் மூழ்குவர் உத்தமனை
தண்டலை ஆர் திரு மாலிருஞ்சோலைத் தனிச் சுடரை
புண் தலையால் வணங்கார் அணங்கு ஆர் வினை போக என்றே –23-

உலகில் பேதைகளாய் உள்ளவர்கள்
கொண்டு அலையா நிற்கும் ஐம் புலக் கோள் மகரங்களின்-ஈர்ப்பு உண்டு
மனத்தை தம் வசமாகக் கொண்டு வருத்தி நிற்கிற ஐம்புலன்கள் ஆகிய வலிய சுறா மீன்களினால் ஈர்ப்பு உண்டு -இழுக்கப் பட்டு
அலை ஆர் பிறவிக் கடல் மூழ்குவர்
உத்தமனை
தண்டலை ஆர் திரு மாலிருஞ்சோலைத் தனிச் சுடரை
புண் தலையால் -தசை பொருந்திய தங்கள் தலைகளைக் கொண்டு –
வணங்கார் அணங்கு ஆர் வினை போக என்றே –துன்பம் நிறைந்த தமது கர்மங்கள் ஒழிவனவாக -என்று நமஸ்கரிக்க மாட்டார்கள் –

—————————————————————————-

என்று உதரம் கலந்தேன் அற்றை நான்று தொட்டு இற்றை வரை
நின்று தரங்கிக் கின்றேற்கு அருள்வாய் நெடும் கான் கடந்து
சென்று தரங்கக் கடல் தூரத்து இலங்கையில் தீயவரைக்
கொன்று தரம் குவித்தாய் சோலை மா மலைக் கோவலனே –24–

நெடும் கான் கடந்து சென்று
தரங்கக் கடல் தூரத்து
இலங்கையில் தீயவரைக் கொன்று தரம் குவித்தாய்
சோலை மா மலைக் கோவலனே –பசுக்களை காக்க வல்லவன் –உயிர்களைக் காக்க வல்லவன் கோபாலன் -மருவி –
என்று உதரம் கலந்தேன் -தாயின் வயிற்றில் வந்து புகுந்தேனோ –
அற்றை நான்று தொட்டு இற்றை வரை
நின்று தரங்கிக் கின்றேற்கு -இடைவிடாது அலைகின்ற எனக்கு
அருள்வாய் -இங்கனம் இனி மேல் அலையாத படி கருணை புரிவாய் –

——————————————————————————–
கோவலன் பார்ப்புடன் கேகயம் சூழ் குளிர் சோலை மலைக்
காவலன் பாற் பாடல் கண் துயில் மால் அலங்காரன் என்றே
பாவல் அன்பால் பணிவார் அணி வானவர் ஆகி மறை
நாவலன் பார்ப்பதி நாதன் நண்ணாப் பதம் நண்ணுவரே –25-

கோவலன்-ஆயனாய் வளர்ந்தவன் –
பார்ப்புடன் கேகயம் சூழ் குளிர் சோலை மலைக் காவலன்-குஞ்சுகள் உடனே மயில்கள் சூழப் பெற்ற குளிர்ந்த திருமால் இருஞ்சோலைக்கு தலைவன்
பாற் பாடல் கண் துயில் மால்
அலங்காரன்
என்றே
பாவல் அன்பால் -பணிவார்–பரவுதல் உடைய மிக்க பக்தியினால் அப்பெருமானை வணங்கி
அணி வானவர் ஆகி-மறுமையிலே அழகிய முக்தர்களாகி
மறை நாவலன் பார்ப்பதி நாதன் நண்ணாப் பதம் நண்ணுவரே –வேதம் வல்ல நாவை நாவை யுடையவனான பிரமனும்
பார்வதி நாயகனான சிவபிரானும் அடைய மாட்டாத பரமபதத்தை அடைவார்கள் –
கோவலன் -கோபாலன்
காவலன் -லோக சம்ரஷகன்
மறை நாவலன் –
நண்ணாப் பதம் நண்ணுவர் -தொடை முரண் அணி –

————————————————————————————

கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்–

ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் அருளிய திருவேங்கடத்தந்தாதி -76-100-

February 26, 2016

ஞானக் கண் தா கனவு ஒக்கும் பவம் துடை நஞ்சு இருக்கும்
தானக் கண்டா கனற்சோதி என்று ஏத்தும் வன் தாலமுடன்
வானக் கண் தா கன வண்ணா என்று ஒது ஒலி வந்து அடையா
ஈனக் கண்டா கனற்கு ஈந்தான் பர கதி என் அப்பனே –76-

நஞ்சு இருக்கும் தானக் கண்டா -விஷம் தங்கும் இடம் -கழுத்தை யுடையவனே –
கனற்சோதி -அனல் பிழம்பின் வடிவமானவனே -கனச்சோதி-திரண்ட சோதி வடிவம் ஆனவனே –
ஞானக் கண் தா –
கனவு ஒக்கும் பவம் துடை-பிறப்பை ஒழித்து அருள்வாய் -கண்ட கனாவின் பொருள் போல் யாவும் பொய் அன்றோ
என்று ஏத்தும் -என்று சொல்லி சிவ பிரானைத் துதிக்கிற
வன் தாலமுடன் -வழிய நாவுடன் கூடி
வானக் கண் தா கன வண்ணா என்று ஒது ஒலி வந்து அடையா –
விஷ கண்டா தழல் வண்ணா என்று துதிப்பவன் முகில் வண்ணா -என்ற
செவிக்கு இனிய காணிலும் உருப்பொலார் செவிக்கினாத கீர்த்தியார் -திருச்சந்த விருத்தம்
சொல்லைக் கேட்காமல்
திருமாலைத் துதிக்கும் ஓசை தனது செவிகளில் வந்து நுழையப் பெறாத
ஈனக் கண்டா கனற்கு ஈந்தான் பர கதி என் அப்பனே —

————————————————————————–

என் அப்பன் ஆகத்துப் பொன் நூலன் வேங்கடத்து எந்தை துயில்
மன் அப்பன் நாகத்துக்கு அஞ்சல் என்றான் பல் மணி சிதறி
மின்னப் பல் நாகத்துப் பாய்ந்தான் கதை அன்றி வெவ்வினைகள்
துன்னப் பல் நா கத்துப் பொய்ந்நூல் புகா என் துளைச் செவிக்கே –77–

என் அப்பன் ஆகத்துப் பொன் நூலன்-பொன்னால் ஆகிய யஜ்ஞ்ஞோபவீதம் தரித்தவன்
ஆகத்தில் தாயாரையும் பொன் நூலூஅலையும் தரித்தவன் என்றுமாம்
வேங்கடத்து எந்தை துயில் மன் அப்பன்-கண் வளர்ந்து அருள கடலை யுடையவன் -அப்பில் துயில் மன்னுபவன் –
நாகத்துக்கு அஞ்சல் என்றான் -ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானுக்கு அபய பிரதானம் பண்ணி அருளியவன்
பல் மணி சிதறி மின்னப் பல் நாகத்துப் பாய்ந்தான்-பல முடிகளிலும் பல மாணிக்கம் தெறித்து
மின்னல் போலே விளங்கும் பற்களை யுடைய காளியன் பாம்பின் மேலே வலியப் பாய்ந்தவன்
கதை அன்றி -திவ்ய சேஷ்டிதங்கள் பற்றிய கதைகளை தவிர
வெவ்வினைகள் துன்னப்-கொடிய வினைகள் நெருங்க
பல் நா கத்துப் பொய்ந்நூல் புகா என் துளைச் செவிக்கே —
பர சமயத்தாரது-பல நாக்குகள் கத்தும் பொய்யான சமய நூல்கள் பொருள்கள் எனது செவித் துளையில் நுழையாது
பெரியார்கள் இடம் நுண்ணிய பொருளைக் கேட்கவே துளைச் செவி என்கிறார்

———————————————————————-

நாரை விடு தூது

செவித்தலை வன்னியன் சூடு உண்ட வேய் இசை தீப்பதும் யான்
தவித்து அலை வன்மயலும் தமர் காப்பும் தமிழ்க் கலியன்
கவித்தலைவன் திரு வேங்கடத்தான் முன் கழறுமின் பொன்
குவித்து அலை வந்து உந்து கோனேரி வாழும் குருகினமே –78-

பொன் குவித்து அலை வந்து உந்து கோனேரி வாழும் குருகினமே —
நீங்கள் செய்த பாக்கியம் எனக்கு கிட்ட வேண்டுமே -நானும் திருவேங்கடமுடையான் உடைய கோனேரியில் வாழ வேண்டாவோ
கோனேரி வாழும் குருகாய்ப் பிறப்பேனே –அங்குத்தை வாசம் தானே போக ரூபமாய் இருக்கும் என்கை-
வன்னியன் சூடு உண்ட வேய் இசை-நெருப்பில் சுடப்பட்ட மூங்கிலின் ஆகிற புல்லாங்குழலின் இசைப் பாட்டு –
செவித்தலை தீப்பதும் -எனது காதுகளின் இடத்தைச் சுடுவதையும் –
தீங்குழல் ஈருமாலோ -நெருப்பு போலே சுடும் வேய்ங்குழல் ஓசை என்றுமாம்
யான் தவித்து அலை வன்மயலும்-யான் விரக தாபம் கொண்டு வருந்துகிற வலிய எனது மோகத்தையும்
தமர் காப்பும் -பாங்கியர் செவிலியர் முதலிய உற்றார் சைத்ய உபசாரம் செய்து எனது பாதுகாக்கும் வகையும்
தமிழ்க் கலியன் கவித்தலைவன் -நாலு கவிப் பெருமாள் -என்று விருது வாசிக்கத் தக்க
திருமங்கை ஆழ்வார் திவ்ய ஸூகத்திகளுக்கு பாட்டுடைத் தலைவனான திரு வேங்கடத்தான் முன் கழறுமின்
பிரபஞ்ச விஷய வெறுப்பும் பகவத் விஷய அனுபவத்தில் ஆர்த்தியும் தோன்ற அருளிச் செய்கிறார்

——————————————————————————

குருகூரர் அங்க மறைத் தமிழ் மாலை குலாவும் தெய்வ
முருகு ஊர் அரங்கர் வட வேங்கடவர் முன் நாள் இலங்கை
வரு கூரர் அங்கம் துணித்தார் சரணங்கள் வல்வினைகட்கு
இரு கூர் அரங்கள் கண்டீர் உயிர்காள் சென்று இரவுமினே –79-

உயிர்காள்-பிராணிகளே
குருகூரர் அங்க மறைத் தமிழ் மாலை -திருமங்கை ஆழ்வார் அருளிச் செய்த ஆறு பிரபந்தங்கள் ஆகிய அங்கங்கள் யுடைய
சிஷை வியாகரணம் சந்தஸ் நிருத்தம் ஜ்யோதிஷம் கல்பம் -போல்வன –
நம்மாழ்வார் அருளிச் செய்த நான்கு தமிழ் வேதமாகிய பா மாலைகளில்
குலாவும் தெய்வ முருகு-பொருந்திய தெய்வத் தன்மை யுள்ள தெய்வ மணம்
ஊர் அரங்கர் -வீசப்பெற்ற ஸ்ரீ ரங்க நாதரும்
முன் நாள் இலங்கை வரு கூரர் அங்கம் துணித்தார்
வட வேங்கடவர்
சரணங்கள் வல்வினைகட்கு இரு கூர் அரங்கள் கண்டீர் -கூரிய வாள் விசேஷங்கள் ஆகும்
சென்று இரவுமினே -அவன் இடம் சென்று பிராரத்து அருள் பெறுவீர் –

——————————————————————————

இரணிய நாட்டன் இரணியன் ஈர் ஐந் தலையன் கஞ்சன்
முரணிய கோட்டின் நகத்தின் சரத்தின் முன் தாளின் துஞ்சத்
தரணியில் குத்தி இடந்து எய்து உதைத்தவன் சர்ப்ப வெற்பன்
அரணிய கேழல் அரி ராகவன் கண்ணன் ஆகி வந்தே –80-

சர்ப்ப வெற்பன் -சேஷ கிரியில் எழுந்து அருளி இருப்பவனான திருமால் –
அரணிய கேழல் -அரண் போலே ரஷிக்கும் தன்மை யுள்ள வராக மூர்த்தியும்
அரணிய -காட்டில் சஞ்சரிக்கும் என்றுமாம்
அரி-சிங்கப் பிரானும்
ராகவன்-சக்ரவர்த்தி திருமகனும்
கண்ணன் -ஸ்ரீ கிருஷ்ணனாகவும்
ஆகி வந்தே -திருவவதரித்து -முறையே
இரணிய நாட்டன் -ஹிரண்யாஷன்-பொன்னிறமான கண்கள் கொண்டவன் நாட்டம் -கண்
இரணியன்
ஈர் ஐந் தலையன்
கஞ்சன்
முரணிய கோட்டின் -வலிமை யுள்ள கொம்பினாலும்
நகத்தின்-நகங்களினாலும்
சரத்தின் -அம்புகளாலும் -கரத்தின் -பாட பேதம் -கைகளால் அம்பு தொடுத்து என்றபடி
முன் தாளின் -முந்தி நீட்டிய திருவடிகளாலும்
துஞ்சத்
தரணியில்
குத்தி
இடந்து
எய்து
உதைத்தவன்
நிரல் நிறை அணி யாக அருளிச் செய்கிறார் –

————————————————————————-

வந்தித்து இருக்கு மறை போற்றும் வேங்கட வாண மலர்
உந்தித் திருக் குங்குமம் அணி மார்ப உள் வஞ்சனையும்
புந்தித் திருக்கும் வெகுளியும் காமமும் பொய்யும் விட்டுச்
சிந்தித் திருக்குமது எக்காலம் யான் உன் திருவடியே –81-

வந்தித்து போற்றும் -போற்றி வணங்கி -துதிக்கப் பெற்ற
இருக்கு மறை -ருக் போன்ற வேதங்களால்
-வேங்கட வாண
மலர் உந்தித் திருக் குங்குமம் அணி மார்ப -திரு உந்திக்கமலம் -பெரிய பிராட்டியார் -குங்குமச் சாந்து அணிந்த திரு மார்ப
உள் வஞ்சனையும் -மனத்தில் அடங்கிய வஞ்சனைகளையும்
புந்தித் திருக்கும்-அறிவின் மாறுபாட்டையும்
வெகுளியும் -கோபத்தையும்
காமமும்
-சிற்றின்ப ஆசையையும்
பொய்யும் –
விட்டுச் சிந்தித் திருக்குமது எக்காலம் யான் உன் திருவடியே-

———————————————————————

திருவடி வைக்கப் புடவி பற்றாது அண்டம் சென்னி முட்டும்
கருவடிவைக் கலந்து ஆற்றா எண் திக்கும் கடல் மண் கொள்வான்
பொரு வடிவைக் கனல் ஆழிப் பிரான் புனல் ஆழி கட்டப்
பெரு வடிவைக் கண்ட அப்பன் எவ்வாறு அடி பேர்ப்பதுவே –82-

பொரு வடி -போர் செய்கின்ற -பலவகைப் பட்ட திவ்யாயுதங்களில் -தேர்ந்து எடுத்த
வைக்-கூர்மையான
கனல் ஆழிப்-அக்னியைச் சொரிகிற சக்ராயுதத்தை யுடைய
பிரான் -தலைவனும்
ஆழி கட்டப் -சமுத்ரத்தை அணை கட்டிக் கடக்க
புனல் பெரு வடிவைக் கண்ட -அக்கடலின் நீர் மிக்க வற்றுதலை அடையும் படி செய்து அருளிய
அப்பன்-திருவேங்கடமுடையான்
திருவிக்கிரம அவதாரம் செய்து அருளிய காலத்தில்
திருவடி வைக்கப் புடவி பற்றாது
அண்டம் சென்னி முட்டும்
கருவடிவைக் கலந்து ஆற்றா எண் திக்கும்
இங்கனம் பெரு வடிவு கொண்ட திருமால்
கடல் மண் கொள்வான் -கடல் சூழ்ந்த உலகத்தில் மூன்று அடி அளந்து கொள்வதற்காக
எவ்வாறு அடி பேர்ப்பதுவே –
பெருமை அணி கொண்டு அருளிச் செய்கிறார் –

——————————————————————–

பேர் ஆனைக் கோட்டினைப் பேர்த்தானை வேங்கடம் பேணும் துழாய்த்
தாரானை போதானைத் தந்தானை எந்தையை சாடு இறப் பாய்ந்து
ஊர் ஆனை மேய்த்து புள் ஊர்ந்தானை பஞ்சவர்க்கு உய்த்து நின்ற
தேரானை நான் மறை தேர்ந்தானை தேரும் நும் தீது அறுமே –83-

பேர் ஆனைக் கோட்டினைப் பேர்த்தானை
வேங்கடம் பேணும் துழாய்த் தாரானை
போதானைத் தந்தானை
எந்தையை
சாடு இறப் பாய்ந்து -சகடா சுரனை முறியும் படி தாவி உத்தைத்து
ஊர் ஆனை மேய்த்து -பசுக்களை மேய்த்து
புள் ஊர்ந்தானை
பஞ்சவர்க்கு உய்த்து நின்ற தேரானை
நான் மறை தேர்ந்தானை
தேரும் நும் தீது அறுமே -அறிந்து ஸ்துதியுங்கோள் -உங்கள் துன்பங்கள் நீங்கும்
பேரானை -பேர்த்தானை என்றும் -தாரானை தந்தானை -என்றும் -ஊரானை ஊர்ந்தானை -தேரானை தேர்ந்தானை –
விரத ஆபாச அலங்காரம் -முரண் விளந்தழிவணி -சொல்லிலும் பொருளிலும் முரணுதல் முரணே

தொலைந்தானை ஓதும் தொலையானை யன்னை சொல்லால் மகுடம் கலைந்தானை ஞானக் கலையானை
யாய்ச்சி கலைத் தொட்டிலோடு அலைந்தானை பாலின் அலையானை
வாணன் கை யற்று விழ மலைந்தானை சோலை மலையானை
-வாழ்த்து எண் மட நெஞ்சமே -திரு அழகர் திரு வந்தாதி –83-

மாத் துளவத் தாரானை வேட்கை எல்லாம் தந்தானை
மும்மதமும் வாரானை யன்று அழைக்க வந்தானை
காரான மெய்யான யன்பருக்கு மெய்த்தானை
கண் கை கால் செய்யானை வேலை யணை செய்தானை
வையம் எல்லாம் பெற்றானை காணப் பெறாதானை
கண் மலைக்கு கற்றானைக் காத்ததொரு கல்லானை
யற்றார்க்கு வாய்ந்தானை சம்பவள வாயானை
மா முடியப் பாய்ந்தானை யாடரவப் பாயானை -திருநறையூர் நம்பி மேக விடு தூது

———————————————————————

அறுகு ஊடு கங்கை தரித்தான் அயன் அழைத்தாலும் இச்சை
அறு கூடு மால் அடியார் அடிக்கே அப்பன் வேங்கடவன்
மறுகு ஊடு மாதர் ஏறி பூண் எறிக்கும் மதில் அரங்கன்
மறு கூடு நம்மை மருவாமல் வாழ்விப்பன் மா மனமே –84-

மா மனமே -சிறந்த மனமே -பந்த மோஷங்களுக்கு மனமே காரணம் -கொண்டாடி விளிக்கிறார்
அறுகு ஊடு கங்கை தரித்தான் -முடியில் சூடிய அறுகம் புற்களின் இடையே கங்கையையும் தரித்தவனும்
அயன் -பிரமனும்
அழைத்தாலும்-வலிய வந்து தம்மிடம் சேருமாறு கூப்பிட்டாலும்
இச்சை அறு -விருப்பம் கொள்ளாது ஒழிவாய்
கூடு மால்அடியார் அடிக்கே –
அங்கனம் சேர்ந்தால் –
ஊடு மாதர் ஏறி பூண் –மறுகு-எறிக்கும் மதில் அரங்கன்
தம் கணவர் உடன் பிணங்கி மகளிர் கழற்றி எறிந்த ஆபரணங்கள் எடுப்பவர் இல்லாமல் வீதிகளிலே கிடந்தது ஒலி வீசப் பெற்றதும்
மதிள்கள் சூழ்ந்ததுமான ஸ்ரீ ரங்கத்தை யுடைய
அப்பன் வேங்கடவன்
மறு கூடு நம்மை மருவாமல் வாழ்விப்பன் –
பறவை தங்கும் கூடு போன்று உயிர் தங்கும் உடல் –
யமகம் முன் இரண்டு அடிகளிலும் பின் இரண்டு அடிகளிலும் காணலாம் –

————————————————————————-

மாமன் அங்காந்த வல் வாய்ப் புள்ளை ஏவமடித்து பித்தன்
நா மனம் காந்த அன்று ஓட எய்தான் நறும் பூங்கொடிக்குத்
தாமன் அம் காந்தன் திருவேங்கடத்து எந்தை தாள்களில் என்
தீ மனம் காந்தம் கவர் ஊசி போல் என்று சேர்வதுவே –85-

மாமன் -மாமனான கம்சன்
அங்காந்த வல் வாய்ப் புள்ளை ஏவ -பகாசுரனை ஏவ
மடித்து -அதனைக் கொன்று
பித்தன் நா மனம் காந்த அன்று ஓட எய்தான்-சிவன் தன நாவில் பொருந்திய நீர் வற்றுமாறு பாணாசுர யுத்தத்தில் ஓடும்படி எய்தவனும்
நா மன் அம் காந்த -நா உலர என்னும் படி
நறும் பூங்கொடிக்குத் தாமன் அம் காந்தன்
திருவேங்கடத்து எந்தை
தாள்களில் என் தீ மனம் காந்தம் கவர் ஊசி போல் என்று சேர்வதுவே —
இரும்பைக் காந்தம் இழுக்கின்ற வாறு எனைத் திரும்பிப் பார்க்க ஒட்டாமல் திருவடிக் கரும்பைத் தந்து அருள்வாய் என்கிறார் –

————————————————————-

சேரும் மறுக்கமும் நோயும் மரணமும் தீ வினையின்
வேரும் அறுக்க விரும்பி நிற்பீர் வட வேங்கடத்தே
வாரும் மறுக்க அறியான் எவரையும் வாழ அருள்
கூரும் மறுக் கமலை அணி மார்பன் கைக் கோதண்டனே –86–

சேரும்-கரும கதியால் வந்து அடைகின்ற
மறுக்கமும் -மனக் குழப்பங்களும்
நோயும் மரணமும்
தீ வினையின் வேரும் -கொடிய கருமத்தின் மூலத்தையும்
அறுக்க விரும்பி நிற்பீர்– வட வேங்கடத்தே வாரும்
மறுக்க அறியான் எவரையும் -சரணம் அடைந்த எவரையுமே மறுக்காத சரணாகத வத்சலன்
வாழ அருள் கூரும் -அடியார் அனைவரும் வாழ கருணை பொழிபவன்
மறுக் -ஸ்ரீ வத்சம் மறுவையும் -கமலை -பெரிய பிராட்டியாரையும் அணிந்த -அணி மார்பன் கைக் கோதண்டனே —

———————————————————————————————————-

கோதண்டத்தான் நந்தன் வாள் கதை நேமியன் கோல வட
வேதண்டத்தான் அத்தன் இன் இசையான் மண்ணும் விண்ணும் உய்ய
மூதண்டத் தானத்து அவதரித்தான் எனில் முத்தி வினைத்
தீது அண்டத்தான் அத்தனு எடுத்தான் எனில் தீ நரகே –87-

கோதண்டத்தான் நந்தன் வாள் கதை நேமியன்
கோல வட வேதண்டத்தான் -அழகிய திருவேங்கட திருமலை யுடையவன்
அத்தன்-எல்லா உயிர்கட்கும் தலைவன்
இன் இசையான்-வேய்ங்குழல் இனிய இசையை யுடையவன் -இனிய புகழை யுடையவன் என்றுமாம் –
மண்ணும் விண்ணும் உய்ய மூதண்டத் தானத்து அவதரித்தான்
எனில் -மெய்ம்மை உணர்ந்து சொன்னால்
முத்தி -பரமபதம் கிட்டும் -அவதார ரகஸ்ய ஞானமே முக்தி தரும் என்றதாயிற்று
வினைத் தீது அண்ட -ஊழ் வினையின் தீமை வந்து தொடர -கர்ம வசித்தால் நம்மைப் போலே அவனும்
த்தான் அத்தனு எடுத்தான் -தான் அந்த தேகத்தை எடுத்தான் என்று உண்மை உணராமல்
எனில்-சொன்னால்
தீ நரகே –கொடிய நரகமே நேரும்
தராதலத்து மீனவதார முதலானவை வினையின்றி இச்சையானவதாரறிவர் அவரே முத்தராமவரே -திரு அழகர் திருவந்தாதி –

—————————————————————-

நரகம் அடங்கலும் சென்று எய்த்த பாவிக்கு நாரியர் மேல்
விரகம் அடங்க மெய்ஞ்ஞானம் வெளி செய வீடு பெற
உரகம் மடங்க நடித்த பொற்றாள் இன்று என் உச்சி வைப்பாய்
வரகமடம் கயல் ஆனாய் வடமலை மாதவனே –88–

வரகமடம் கயல் ஆனாய்-வரம் கமடம் கயல் ஆனாய் -சிறந்த ஆமை மீன் திருவவதாரம் செய்து அருளினாய்
வர -தனித்து சிறந்தவனே என்றுமாம்
வடமலை மாதவனே —
நரகம் அடங்கலும் சென்று எய்த்த பாவிக்கு
நாரியர் மேல் விரகம் அடங்க -மகளிர் விஷயமான உண்டாகும் ஆசை தணியவும்
மெய்ஞ்ஞானம் வெளி செய-தத்வ ஞானம் தோன்றவும்
வீடு பெற -பரமபதம் கிடைக்கவும்
உரகம் மடங்க நடித்த பொற்றாள் இன்று என் உச்சி வைப்பாய் -காளியன் தலை மடங்கும்படி நடனம் செய்த திருவடிகளை

காளியன் பொய்கை களங்கப் பாய்ந்திட்டவன் நீண் முடி ஐந்திலும் நின்று நடம் செய்து

—————————————————————-

மாதிரம் காதல் மனை வாழ்க்கை என்று எண்ணி வான் பொருட்டு
மாதிரம் காதம் பல உழல்வீர் இன்னும் மைந்தன் என்று ஓர்
மாது இரங்காத படி வணங்கீர் அரிமா வொடு கைம்
மா திரங்காது அமர் செய்கின்ற சேட மலையினையே –89-

காதல் மனை வாழ்க்கை-மனையாள் உடன் கூடிய இல்லத்து வாழ்தலை
மாதிரம் -மிக்க நிலை யுள்ளத்து –
என்று எண்ணி
அதற்கு உபயோகமாக
வான் பொருட்டு -மிக்க செல்வத்தை ஈட்டுதற் பொருட்டு
மாதிரம் காதம் பல உழல்வீர் -திக்குகள் தோறும் அநேக காத தூரம் சுற்றி அலைபவர்களே –
இன்னும் மைந்தன் என்று ஓர் மாது இரங்காத படி –
இன்னமும் உங்களைப் புத்திரன் என்று ஒரு பெண் அன்பு செய்யாத படி -பிறப்பு அற்று முக்தி பெறுமாறு
வணங்கீர் அரிமா வொடு கைம் மா திரங்காது அமர் செய்கின்ற சேட மலையினையே –
சிங்கங்கள் உடன் யானைகள் பின் வாங்காமல் போர் செய்யப் பெற்ற
சேஷ கிரி திருவேங்கட திருமலையில் எழுந்து அருளி இருக்கின்ற எம்பெருமானை வணங்குகள் –

———————————————————————————————

மலையின் அரக்கர் உடன்று எழுந்தார் என்று மா மறை நூல்
கலையினர் அக்கருடன் இந்திராதியர் காட்ட செய்யும்
கொலையினர் அக்கருடன் ஏறும் வேங்கடக் குன்றர் என்றால்
உலையின் அரக்கு அருள் தந்திலர் ஏனும் என் உள் அவர்க்கே –90-

மா மறை நூல் கலையினர் -பிரம தேவரும்
அக்கருடன் -அக்கர் உடன் -ருத்ராஷ மாலை /எலும்பு மாலையை தரித்த சிவ பிரானும் ஆகிய இரு மூர்த்திகள் உடன்
முனிவர்கள் யஷர்கள் என்றுமாம்
இந்திராதியர் -இந்த்ரிரன் முதலிய தேவர்கள்
மலையின் அரக்கர் உடன்று எழுந்தார் என்று காட்ட –
மலைகள் போலே அரக்கர்கள் உக்கிரம் கொண்டு ஓங்கினார்கள் என்று சொல்லி முறையிட
செய்யும் கொலையினர் -செய்த அவ்விராக்கதர் வாதத்தை யுடையரான
அக்கருடன் ஏறும் வேங்கடக் குன்றர் என்றால் -என்று சொன்னால்
அருள் தந்திலர் ஏனும் -என் உள் அவர்க்கே –உலையின் அரக்கு -நெகிழ்ந்து உருகும் –
விரக வேதனை உற்ற தலைவின் கூற்று –

——————————————————————

தோழி தலைமகனை ஏதம் கூறி இரவு வரல் விலக்கல் –

உள்ளம் அஞ்சாய்வலியாய் வலியார்க்கும் உபாயம் வல்லாய்
கள்ளம் அஞ்சு ஆயுதம் கை வரும் ஆயினும் கங்கு லினில்
வெள்ள மஞ்சு ஆர் பொழில் வேங்கடக் குன்றினில் வீழ் அருவிப்
பள்ளம் அம்சாரல் வழி வரில் வாடும் இப்பாவையுமே –91–

நீ
உள்ளம் அஞ்சாய்
வலியாய்
வலியார்க்கும் உபாயம்– கற்பிக்கும் படி –வல்லாய் –
கள்ளம் -களவும் -அஞ்சு ஆயுதம் -பஞ்சாயுதங்களும் உனக்கு கை வரும்
ஆயினும்
கங்கு லினில் -வெள்ள மஞ்சு ஆர் பொழில் வேங்கடக் குன்றினில் வீழ் அருவிப் பள்ளம் -அம்சாரல் வழி வரில்-
அழகிய மலைப் பக்கத்து வழியே நீ வந்தால்
வாடும் இப்பாவையுமே –நின் வரவை எதிர்பார்த்து இருக்கும் இப்பென்னும் வருந்துவாள்
ஆறு பார்த்துற்ற அச்சக் கிளவி துறை -என்பர் -வெளிப்படையாக வந்து திருக்கல்யாணம் செய்வதை வலியுறுத்தி அருளுகிறார்
பெரியாழ்வார் போலே அதிசங்கை யுடன் அருளிச் செய்கிறார் –

—————————————————————

பாவை இரங்கும் அசோதைக்கு முத்து பதுமச் செல்விக்கு
ஏவை இரண்டு அன்ன கண்மணி நீலம் இடு சரணப்
பூவை இரந்தவர்க்கு இன்ப வளம் புல் அசுரர்க்கு என்றும்
மா வையிரம் திரு வேங்கடத்து ஓங்கும் மரகதமே –92–

திரு வேங்கடத்து ஓங்கும் மரகதமே-பச்சை நிறமும் ஒளியையும்பற்றி –
பாவை இரங்கும் அசோதைக்கு-சித்திர பிரதிமைகளும் இந்த அழகு இல்லையே என்று இரங்கும் படியான அழகு வாய்ந்த யசோதைக்கு
முத்து -அருமையால் முத்து போன்றும் –
பதுமச் செல்விக்கு -தாமரை மலராள்- திருமகளுக்கு
ஏவை இரண்டு அன்ன கண்மணி நீலம்-இரண்டு அம்புகளைப் போன்ற கண்களில் உள்ள கரு விழிகள் போலும்
இடு சரணப் பூவை இரந்தவர்க்கு -திருவடித் தாமரையை இரந்தவர்களுக்கு
இன்ப வளம்-பேர் இன்பப் பெருக்காம்
புல் அசுரர்க்கு என்றும் மா வையிரம் -பெரும் பகையாம் –
திரு வேங்கடத்தில் ஓங்கும் மரகதமே -யசோதை பிராட்டிக்கு முத்தாகவும் பெரிய பிராட்டியாருக்கு நீல மணியாகவும்
அடியார்க்கு பவளமாகவும் -அசுரர்க்கு வைரமாகவும் -பஞ்ச ரத்னங்களையும் அருளிச் செய்கிறார் –பல படப் புனை அணி –

——————————————————————-

மரகதத்தைக் கடைந்து ஒப்பித்தது ஒத்தன வாழ்த்தினர் தம்
நரகதத்தைத் தள்ளி வைகுந்தம் நல்கின நப்பின்னை ஆம்
விரகதத்தைக்கு விடை ஏழ் தழுவின வேங்கடவன்
குரகதத்தைப் பிளந்தான் தோள்கள் ஆகிய குன்றங்களே –93-

குரகதத்தைப் பிளந்தான் -குதிரை வடிவாய் வந்த கேசி என்னும் அசுரனை வாய் பிளந்து அழித்தவனான
ஒற்றைக் குளம்பால் செல்லும் குரகதம் -குதிரை
வேங்கடவன்
தோள்கள் ஆகிய குன்றங்களே –
மரகதத்தைக் கடைந்து ஒப்பித்தது ஒத்தன-நிறம் ஒளி-திரண்டு உருண்டு நெய்ப்புடை பற்றி
வாழ்த்தினர் தம் நரகதத்தைத் தள்ளி வைகுந்தம் நல்கின நப்பின்னை ஆம் விரகதத்தைக்கு விடை ஏழ் தழுவின –

—————————————————————-

குன்றுகள் அத்தனையும் கடல் தூராக் குவித்து இலங்கை
சென்று களத்து அனைவோரையும் மாய்த்து திருச் சரத்தால்
அன்று களத்தனை அட்டானை அப்பனை ஆய் மகள் தோள்
துன்று களத்தனை ஏத்த வல்லார்க்கு இல்லை துன்பங்களே –94-

குன்றுகள் அத்தனையும்-மலைகளை எல்லாம்
கடல் தூராக் குவித்து -கடல் தூர்ந்திடும்படி -வானரங்களைக் கொண்டு கொணர்ந்து ஒருங்கு சேர்த்து அணை கட்டி
இலங்கை சென்று களத்து அனைவோரையும் மாய்த்து –
திருச் சரத்தால் -ப்ரஹ்மாசத்ரத்தால்
அன்று களத்தனை-கள்ளத்தனான இராவணனை – அட்டானை
அப்பனை
ஆய் மகள் தோள் துன்று களத்தனை -நப்பின்னை பிராட்டி யுடைய திருக் கைகளால் தழுவப் பட்ட கழுத்தை யுடையவனை
ஏத்த வல்லார்க்கு இல்லை துன்பங்களே –

————————————————————–

துன்பம் களையும் சனனம் களையும் தொலைவு அறு பேர்
இன்பம் களையும் கதி களையும் தரும் எங்கள் அப்பன்
தன்பங்கு அளையும் படி மூவரை வைத்து தாரணியும்
பின்பு அங்கு அளையும் இழுதும் உண்டானுடைப் பேர் பலவே –95–

மூவரை வைத்து-பிராட்டி -பிரமன் -சிவன் மூவரையும்
தன்பங்கு அளையும் படி-தனது திருமேனியில் பாகங்களில் பொருந்தும்படி
தாரணியும் -கல்பாந்த காலத்திலேயே பூமியையும்
பின்பு அங்கு அளையும் இழுதும் -பிறகு திருவாய்ப்பாடியிலே ஸ்ரீ கிருஷ்ணனாய் தயிரையும் நெய்யையும்
உண்டான் -எங்கள் அப்பனுடைப் பேர் பலவே
துன்பம் களையும்
சனனம் களையும்
தொலைவு அறு பேர் இன்பம் களையும் கதி களையும் தரும் -நீங்காத நிரதிசய இன்பங்களையும் பரம பத பிராப்தியையும் அளிக்கும் –
உண்டான் அடிப்பேர் பல -திருவடிகள் திருநாமங்களால் பலவே -குரு பரம்பரையை ஸூ சிப்பிக்கிறார் என்றுமாம்
குலம் தரும் இத்யாதி -திருநாம மகிமையை அருளிச் செய்கிறார் –

—————————————————————-

தலைவனைப் பிரிந்த தலைவி கடலை நோக்கி இரங்கிக் கூறல் –

பல குவளைக்குள் சில கஞ்சம் போலும் படிவ அப்பன்
நலகு அளைக்கு முன் உண்டான் நின் மாட்டும் நணுகிலனோ
உலகு வளைக்கும் கடலே நின் கண் முத்து உகுத்து இரங்கி
இலகு வளைக் குலம் சிந்தி துஞ்சாய் இன்று இரா முற்றுமே –96-

நின் கண் முத்து உகுத்து -உன் கண்களில் நின்று முத்துப் போன்ற நீர்த்துளிகளை சொரிந்து -உன்னிடம் இருந்து முத்துக்களைச் சிந்தி –
இரங்கி -புலம்பி -ஒலித்து
இலகு வளைக் குலம் சிந்தி -விளங்கும் கை வளையல்களின் வரிசையைக் கீழே சிந்தி -விளங்கும் சங்குகளின் கூட்டத்தை வெளியே சிதறி
இன்று இரா முற்றுமே -இன்று இராப் பொழுது முழுவதும்
துஞ்சாய் -தூங்குகின்றாய் இல்லை -அமைதி கொண்டு இருக்கின்றாய் இல்லை –
பல குவளைக்குள் சில கஞ்சம் போலும் படிவ அப்பன்
பல நீலோற்பல மலர்களின் இடையிடையே சில செந்தாமரை மலர்கள் பூத்தது போன்ற திருமேனியை யுடைய சுவாமியான
நலகு அளைக்கு முன் உண்டான் -அளைக்கு முன் நல கு உண்டான் -கிருஷ்ணாவதாரத்தில் வெண்ணெய் உண்பதற்கு முன்பே
கல்பாந்தரத்திலே நல்ல பூமியை விழுங்கிய தலைவன்
நின் மாட்டும் நணுகிலனோ -உலகு வளைக்கும் கடலே –
என் இடத்தில் போலே உன்னிடத்திலும் வந்து சேர்ந்திலனோ-
செம்மொழிச் சிலேடை உவமை அணியில் அருளிச் செய்கிறார்
யாமுற்றது உற்றாயோ வாழி கனை கடலே -நம்மாழ்வார் –

——————————————————————

நீட்டித்து வந்த தலைவனொடு தலைவி ஊடிப் பேசுதல் –

முற்றிலை பந்தை கழங்கை கொண்டு ஓடினை முன்னும் பின்னும்
அற்றிலை தீமை அவை பொறுத்தோம் தொல்லை ஆலின் இளங்
கற்றிலை மேல் துயில் வேங்கடவா இன்று உன் கால் மலரால்
சிற்றிலைத் தீர்த்ததற்குப் பெரு வீட்டினைச் செய்தருளே –97-

தொல்லை ஆலின் இளங் கற்றிலை மேல் -ஆலம் கன்றின் இளம் தளிர் மேல்
துயில் வேங்கடவா-ஆஸ்ரித ரஷணத்தில் ஊற்றம் உடையாய் என்றவாறு
முன்னும்-முன்னமும்
நீ எம்முடைய
முற்றிலை -சிறு முற்றத்தையும்
பந்தை -பந்தையும்
கழங்கை-விளையாடுவதற்கு உரித்தான கழற்காய் களையும்
கொண்டு ஓடினை -எடுத்துக் கொண்டு ஓடினாய் –
பின்னும் அற்றிலை தீமை-பின்பும் எம் பக்கல் தீமை செய்வதை ஒழித்தாய் இல்லை
அவை பொறுத்தோம்
இன்று உன் கால் மலரால் சிற்றிலைத் தீர்த்ததற்குப் பெரு வீட்டினைச் செய்தருளே –
மின்னிடை மடவார்கள்- – ஊடல் திருவாய்மொழி –இதற்கு மூலம்
ஸ்வா பதேசத்தில் முற்றில் -கொள்வான தவிர்வன ஆய்ந்து உணர்வும் விவேக ஞானம்
பந்து -சரீரம் முக்குணம் போலே-செந்நூல் வெண்ணூல் கருநூல் – மூன்று வகை கயிறுகளால் ஆனதால் –
விழுந்தும் எழுந்தும் சுழன்றும் உழன்றும் -விரும்பவவும் வெறுக்கவும் தக்க உடம்பு என்றவாறு
கழங்கு -ஐம்பொறிகள் -சிறுத்து ஐந்தாய் இருக்கும் விளையாட்டு கருவிகள் –
சிற்றில் -சிற்றின்பத்துக்கு உரிய பிரபஞ்ச வாழ்க்கை
உனது திருவடி ச்பர்சத்தால் இத்தை ஒழித்து-பெரு வீடான பரமபதத்தை தந்து அருள்வாய் என்றவாறு
இடையீடுள்ள உனது அனுபவமாயின் எனக்கு வேண்டா -என்கிறார் –

——————————————————————————-

அரும்பாதகன் பொய்யன் காமுகன் கள்வன் அருள் சிறிதும்
அரும்பாத கல் நெஞ்சன் ஆறாச் சினத்தான் அவாவில் நின்றும்
திரும்பாத கன்மத்தன் ஆனேற்கு சேடச் சிலம்பு அமர்ந்து அ
திரும் பாத கஞ்சம் தரில் அது காண் உன் திருவருளே –98–

அரும்பாதகன் பொய்யன் காமுகன்
கள்வன்-பண்டே யுன் தொண்டாம் பழ உயிரை என்னது என்று கொண்டேனை கள்வன் என்று -நூற்று எட்டு திருப்பதி அந்தாதி
அருள் சிறிதும் அரும்பாத கல் நெஞ்சன்
ஆறாச் சினத்தான்
அவா வினின்றும் திரும்பாத கன்மத்தன் -ஆசைகளில் இருந்து மீளாத கருமத்தை யுடையவன்
அவா வென்ப வெல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும் தவா அப்பிறப்பீந்தும் வித்து –
ஆனேற்கு
சேடச் சிலம்பு அமர்ந்து அதிரும் பாத கஞ்சம் தரில் அது காண் உன் திருவருளே –
-சிலம்பு -மலை -திருவேங்கட திருமலையில் எழுந்து அருளும்
பாத தண்டைகள் ஒலிக்கப் பெற்ற நினது திருவடித் தாமரைகளைக் கொடுத்தால் -அது வன்றோ உனது மேலான கருணை –
சேஷகிரியில் நின்ற திருவடித் தாமரைகள் என்றுமாம் –

—————————————————————————

திருமந்திரம் இல்லை சங்கு ஆழி இல்லை திரு மண் இல்லை
தருமம் திரம் ஒன்றும் செய்து அறியீர் செம்பொன் தானவனை
மருமம் திரங்கப் பிளந்தான் வடமலை வாரம் செல்லீர்
கருமம் திரண்டதை எத்தால் களையக் கருதுதிரே –99–

பேதைச் சனங்களே உங்கள் பக்கல்
திருமந்திரம் இல்லை
சங்கு ஆழி இல்லை-சங்கு சக்கர முத்திரை இல்லை
திரு மண் இல்லை -திருமான் காப்பும் இல்லை
மந்த்ரம் தாபம் புண்டரம் மூன்றும் அருளிச் செய்தது மற்றை நாமம் யாகம் இரண்டுக்கும் உப லஷணம்
தருமம் திரம் ஒன்றும் செய்து அறியீர் -சரணாகதி தர்மத்தை நிலையாக சிறிதும் செய்து பயின்றீர் இல்லை
செம்பொன் தானவனை மருமம் திரங்கப்-மார்பு வருந்த – பிளந்தான்
வடமலை வாரம் செல்லீர் -திருவேங்கட திருமலை அடிவாரம் -சென்றீர் இல்லை –
கருமம் திரண்டதை எத்தால் களையக் கருதுதிரே –மலை போலே பெரும் தொகுதியாக குவிந்து உள்ள -திரண்ட கர்மங்களை எவ்வாறு களைவீர் –
அவைஷ்ணவர்களை பரம காருண்யத்தால் ஸ்ரீ வைஷ்ணவர்கள் ஆகுமாறு அருளிச் செய்கிறார் உஜ்ஜீவன உபாயமாக –

———————————————————————–

கருமலையும் மருந்தும் கண்ணும் ஆவியும் காப்பும் அவன்
தரும் அலை உந்திய பேரின்ப வெள்ளமும் தாய் தந்தையும்
வருமலையும் திருப்பாலாழியும் திரு வைகுந்தமும்
திரு மலையும் உடையான் எனக்கு ஈந்த திருவடியே –100-

வருமலையும்-பொருந்திய திருக் கடல் மலை என்கிற ஸ்தலத்தையும்
பிரளய பெரும் கடல் என்றுமாம்
திருப்பாலாழியும்-திருப் பாற் கடலையும்
திரு வைகுந்தமும்
திரு மலையும் உடையான்
எனக்கு ஈந்த திருவடியே –அடியேனுக்கு அருளிய திருவடிகள் –
அடியேனுக்கு –
கருமலையும் மருந்தும் -பிறவி நோயை ஒழிக்கிற
மருந்தும் மருந்தாம் கரு வல்லிக்கு -நூற்று எட்டு திருவந்தாதி –
திருவடியை மருந்து என்றதற்கு ஏற்ப பிறவியை நோய் என்று அருளிச் செய்கிறார்
ஏக தேச உருவக அணி
கண்ணும் -இன்றியமையாதது -அருமை பாராட்டி கண் என்கிறார்
ஆவியும் -உயிரும்
காப்பும் -பாதுகாவலும்
அவன் தரும் அலை உந்திய பேரின்ப வெள்ளமும் –
வெள்ளம் என்றதற்கு ஏற்ப அலை உந்திய -என்கிறார்
அவன் பரம பதத்தில் தந்து அருளும் அலைகளை எறிகிற பேர் ஆனந்தப் பெருக்காய் இருக்கும்
தாய் தந்தையும் -தாய் தந்தையருமாம் -அன்புடன் ஆவன செய்தலால் –
பலபடப்புனை – அணியில் அருளிச் செய்த ஈற்றுப் பாசுரம்-

————————————————————————-

தற்சிறப்புப் பாசுரம் –

மட்டளை தண்டலை சூழ் வடவேங்கட வாணனுக்குத்
தொட்டளை யுண்ட பிரானுக்கு அன்பாம் பட்டர் தூய பொற்றாள்
உள் தளை யுண்ட மணவாள தாசன் உகந்து உரைத்த
கட்டளை சேர் திரு அந்தாதி நூறு கலித் துறையே –

பட்டர் தூய பொற்றாள் உள் -திரு பராசுர பட்டர் திருவடித் தாமரைகளிலே
தாள் உள் -திருத் தாளின் இடத்து மனப் பிணிப்பு பொருந்தியவர் என்றுமாம்
தளை யுண்ட -பக்தியினால் ஆகிய சம்பந்தம் பெற்ற -அந்தரங்க சிஷ்யரான –
மணவாள தாசன்-அழகிய மணவாள தாசன்
உகந்து உரைத்த கட்டளை சேர் திரு அந்தாதி நூறு கலித் துறையே –
தொட்டளை யுண்ட பிரானுக்கு-அளை தொட்டு உண்ட பிரானுக்கு -வெண்ணெயை கையினால் எடுத்து அமுது செய்து அருளிய பிரபுவான
மட்டளை தண்டலை சூழ் வடவேங்கட வாணனுக்குத்
வாசனை நிறைந்த சோலைகள் சூழ்ந்த வடக்கின் கண் உள்ள திருவேங்கட திருமலையில்
நித்ய வாசம் செய்து அருளும் எம்பெருமானுக்கு –
அன்பாம்-பிரியமாம் –

—————————————————————————–

கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்–

ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் அருளிய திருவேங்கடத்தந்தாதி -51-75-

February 25, 2016

தலைவி செவிலியர்க்கு அறத்தொடு நிற்றல்

உண்ட மருந்து கைக்கும் அன்னை மீர் மதன் ஓர் ஐந்து அம்பும்
கொண்டு அமர் உந்து கைக்கும் குறு காமுனம் கொவ்வைச் செவ்வாய்
அண்டம் அருந்து கைக்கும் திறந்தான் அப்பன் போல் பரியும்
எண் தமரும் துகைக்கும் பொடி காப்பு இடும் இன்று எனக்கே –51-

தலைவி செவிலியர்க்கு அறத்தொடு நிற்றல்

உண்ட மருந்து கைக்கும் -உன்னப் படுகிற அமிர்தமும் எனக்கு கசக்கும்
அன்னை மீர் -தாய்மார்களே
மதன் ஓர் ஐந்து அம்பும் கொண்டு அமர் உந்து கைக்கும் குறு காமுனம் –
மன்மதனும் ஒப்பற்ற ஐந்து அம்புகளையும் கொண்டு அமர் உந்துகைக்கு குறுகா முன்னம்
இன்று எனக்கே
கொவ்வைச் செவ்வாய் அண்டம் அருந்து கைக்கும் -திறந்தான்-வெண்ணெய் உண்ணவும்
அண்டங்களை கல்பாந்தத்தில் விழுங்கவும் திருவாயைத் திறந்தான்
அப்பன் போல் பரியும் -திருவேங்கடமுடையான் போலே உயிர்கள் பக்கல் அன்பு கொள்ளுகின்ற
எண் தமரும் துகைக்கும் பொடி காப்பு இடும் -மதிக்கத்தக்க அடியார்கள் மிதிக்கின்ற திருவடித் துகளை காப்பாக இடுங்கோள்
தானே நோயையும் நோயின் காரணத்தையும் நோய் தீர்க்கும் மருந்தையும் அம்மருந்தை பிரயோகிக்கும் விதத்தையும் உணர்த்துகிறாள்
தாராயினும் –மண்ணாயினும் கொண்டு வீசுமின் போலே
மாயன் தமர் அடி நீறு கொண்டு அணிய முயலின் மாற்றில்லை இவ் வணங்குக்கே

————————————————————————

எனக்குப் பணியப் பணி ஒரு கால் இரு காலும் நல்க
உனக்குப் பணி இங்கு இருவேம் பணியில் என் ஓர் பணியும்
நினக்குப் பணி வித்துக் கொண்டு உம் பணி நீ பணித்திலை என்
தனக்குப் பணி வெற்பின் மீது ஓங்கி நின்ற தனிச் சுடரே –52-

பணி வெற்பின் மீது-சேஷகிரியின் மேல் ஓங்கி நின்ற தனிச் சுடரே –சூர்யா சந்திர அக்னிகளிலும் மேம்பட்ட பரஞ்சோதி அன்றோ நீ
எனக்குப் பணியப் பணி ஒரு கால்-ஒரு கால் பணிய எனக்கு பணி -ஒரு தரம் வணங்குவதே எனக்கு தொழில்
இரு காலும் நல்க உனக்குப் பணி -உனது திருவடி இணைகளை அருளுவது உனக்கு உரிய க்ருத்யம்
இங்கு இருவேம் பணியில்-இவ்வாறு குறித்த நம் இருவர் வேலைகளிலும்
என் ஓர் பணியும் நினக்குப் பணி வித்துக் கொண்டு -ஒரு கால் பணிதல் ஆகிய எனது தொழிலை மாதரம் உனக்கு நீ செய்வித்துக் கொண்டு
உம் பணி நீ பணித்திலை என் தனக்குப் -இரு காலையும் நல்குதல் ஆகிய உனது தொழிலை நீ செய்கின்றாய் இல்லை –

—————————————————————————

தலைவியின் பிரிவாற்றாமை கண்ட செவிலி இரங்கல் –

தனித் தொண்டை மா நிலத்தே புரிவார்க்கு அருள் தாள் உடையாய்
தொனித் தொண்டைமான் நெடுவாய் பிறந்தாய் துங்க வேங்கடவா
முனித் தொண்டை மான் கையில் சங்கு ஆழி நல்கி என் மூரல் செவ்வாய்க்
கனித் தொண்டை மான் கையில் சங்கு ஆழி கோடல் கருமம் அன்றே –53-

தனித் தொண்டை புரிவார்க்கு-ஒப்பற்ற அடிமைத் தொழில் செய்யும் மெய்யடியார்க்கு
மா நிலத்தே -பெரிய நில உலகத்திலே
அருள் தாள் உடையாய் -தந்து அருளுகிற திருவடிகளை யுடையாய் -பரம பதத்தை யுடையவனே –
தொனித் தொண்டைமான் -கனைக்கின்ற குரலை யுடைய தொண்டையை யுடைய குதிரையினது
நெடுவாய் பிறந்தாய் -பெரிய வாயைப் பிளந்தவனே
துங்க -உயர்ந்த -வேங்கடவா -நீ
முனித் -ராஜரிஷி -தொண்டை மான் கையில் சங்கு ஆழி நல்கி
என் மூரல் செவ்வாய்க் கனித் தொண்டை மான் கையில் சங்கு ஆழி கோடல் –
புன்சிரிப்பு உள்ள சிவந்த வாயாகிய தொண்டைப் பழத்தை யுடைய மான் போன்றவளான என் மகளது கைகளில் உள்ள
சங்கு ஆழிகளை -வளையல்கள் மோதிரங்களை கவர்ந்து கொள்ளுதல்
கருமம் அன்றே –செய்யத்தக்க செயல் அன்றே

கைப் பொருள்கள் முன்னமே கைக் கொண்டார் –திருவரங்கச் செல்வனார் -நாச்சியார் திருமொழி –

—————————————————————————

பிரிவாற்றாத தலைவி பிறை கண்டு வருந்துதல்

கரு மாதவா இருந்து ஆவன செய்து என் கருத்து இருளைப்
பொரும் ஆதவா விருந்தா வனத்தாய் பொற் சவரி என்னும்
ஒரு மாது அவா விருந்தா வனக்கா உயர் வேங்கடத்து எம்
பெருமா தவா இரும் தாவு அனல் ஏயும் பிறைக் கொழுந்தே –54-

கரு மாதவா -என் கருத்து இருந்து ஆவன செய்து
இருளைப் பொரும் ஆதவா-அகவிருள் அஜ்ஞானம் ஒழித்து அருளிய சூர்யன் போன்றவனே
விருந்தா வனத்தாய்- பொற் சவரி என்னும் -உத்தம குணம் உள்ள சபரி என்னும்
ஒரு மாது அவா விருந்தா
வனக்கா உயர் வானம் கா– உயர் சோலைகள் உயர்ந்து இருக்கப் பெற்ற
வேங்கடத்து எம் பெருமா
தவா இரும் தாவு அனல் ஏயும் பிறைக் கொழுந்தே –இளம் பிறை கெடாத பெரிய தாவி எரிகின்ற நெருப்பை ஒத்து சுடுகின்றதே
ஞான உதயம் -பிறைக் கொழுந்து –

——————————————————————–

பிறை மாலையால் ஒரு பேதை நைந்தாள் அந்த பேதைக்கு நின்
நறை மாலை தா என்று மானிடம் பாடிய நா வலர்காள்
நிறை மாலை அற்று கவி மாலையால்நினையீர் திரு வெள்
ளறை மாலை வேங்கடத்தே உறை மாலை அரங்கனையே –55-

பிறை மாலையால் -பிறை சந்த்ரனது தோற்றம் உடைய மாலைப் பொழுதினால்
ஒரு பேதை நைந்தாள்
அந்த பேதைக்கு நின் நறை மாலை-வாசனை யுள்ள மாலை – தா என்று
மானிடம் பாடிய-அகப்பொருள் துறை அமைத்து -மனிதர்கள் மேல் கவி பாடிய -நா வலர்காள் -புலவர்களே
நிறை மாலை அற்று -இங்கனம் உங்கள் மனத்தில் நிறைந்த மயக்கத்தை நீக்கி –
கவி மாலையால் நினையீர்-பா மாலை கொண்டு பாடுவீராக – திரு வெள்ளறை மாலை வேங்கடத்தே உறை மாலை அரங்கனையே —
மானிடத்தைக் கவி பாடி என் -நம்மாழ்வார் -மனுஷ்யர் என்று சொல்லவும் பாத்தம் காண் கிறிலர் காணும் –
அசேதனங்களை சொல்லும் படியிலே சொல்லுகிறார் -தன்னை மெய்யாக அறியாதவன் அசித் ப்ராயன் இ றே-

——————————————————————-

அரங்கம் குடந்தை குருகூர் குறுங்குடி அட்டபுய
கரம் கண்ண மங்கை நறையூர் கடல் மலை கச்சி கண்ண
புரம் கண்டியூர் தஞ்சை மாலிருஞ்சோலை புல்லாணி மெய்யம்
தரங்கம் பரமபதம் வேங்கடேசற்குத் தானங்களே –56-

திருவரங்கம் முதல் ஸ்ரீ வைகுண்டம் வரை 17 திவ்ய தேசங்களை அடை மொழி இல்லாதபடி அழகாக அருளிச் செய்கிறார் –

—————————————————————–

தான அல் நாக மருப்பு ஒசித்தானுக்கு தான் உகந்தது
ஆன வல் நாக முடியில் நின்றானுக்கு தாள் வணங்காத்
தானவன் ஆகம் இடந்தானுக்கு ஆள் என்று தனை எண்ணா
தான் அவனாக நினைந்திருப்பாற்கு என்றும் தான் அவனே –57-

தான அல் நாக மருப்பு ஒசித்தானுக்கு -மதத்தை யுடைய இருள் பொன்ற கரு நிறம் உள்ள குவலையா பீடம் என்னும்
யானையின் தந்தங்களை ஓடித்தவனும்
நாகம் -யானை -நகத்தில் மலையில் வசிப்பதால் காரணப் பெயர்
தான் உகந்தது ஆன வல் நாக முடியில் நின்றானுக்கு -வல் நாகம் -வழிய திருவேங்கட திருமலையில் –
தாள் வணங்காத் -திருவடிகளை வணங்காத -தானே தெய்வம் என்று செருக்கி இருந்த
தானவன் ஆகம் இடந்தானுக்கு -இரணியன் மார்பை பிளந்த -ஆள் என்று தனை எண்ணா தான் அவனாக நினைந்திருப்பாற்கு -விபரீத ஞானிக்கு
என்றும் தான் அவனே-எப்பொழுதும் பயன் படாமல் இருப்பான் என்றவாறு
நியாமகன் தாரகன் சேஷி என்ற நினைவு இல்லாமல் –
இதுவும் யமக அணிப் பாசுரம் –

————————————————————————-

தானவர் ஆகம் தடிவார் வடமலைத் தண் அம் துழாய்
ஞான வராகர் தரும் அண்டம் யாவையும் நண்ணி அவர்
கால் நவராக விரல் தோறும் அத்திக் கனியின் வைகும்
வானவர் ஆக இருப்பார் அவற்றுள் மசகங்களே –58-

தானவர் ஆகம் தடிவார்
வடமலைத் தண் அம் துழாய் ஞான வராகர்
தரும் -படைத்த அண்டம் யாவையும் -அண்ட கோலங்கள் எல்லாம்
அவர் கால் நவராக விரல் தோறும் -புதிதாய் செந்நிறமாய் தோற்றும் விரல்கள் தோறும்
அத்திக் கனியின் -நண்ணி -வைகும் -அத்திப் பழங்கள்-அந்த மரத்தில் ஒட்டிக் கிடத்தல் போலே -பொருந்தித் தங்கும் –
வானவர் ஆக இருப்பார் அவற்றுள் மசகங்களே –அந்த அண்டங்களில் வசிக்கும் தேவர்கள்
அம்மரத்தில் உள்ள அத்திப் பழங்களில் மொய்த்துக் கிடக்கும் கொசுக்கள் போலே இருப்பர்-

ஆழிப்பிரான் அடிக்கீழ் உத்பவித்து அழியும் பரவையில் மொக்குகளைப் போலே பலகோடி பகிர் அண்டமே –
எம்பெருமானது விராட் ஸ்வரூபத்தின் பெருமையையும் மற்றைத் தேவர்களின் சிறுமையையும் அருளிச் செய்த வாறு

—————————————————————————

பாங்கி வெறி விளக்கிச் செவிலியர்க்கு அறத்தொடு நிற்றல்

மசகம் தரம் என்னல் ஆய நிலையா உடல் வாழ் உயிரை
அசகம் தர வல்லதோ அன்னைமீர் அண்டம் உண்டு உமிழ்வா
ரிசசுந்தர வண்ணர் வேங்கட வாணர் இலங்கையர் கோன்
தெகந்தரம் அறுத்தார் திருப் பேர் சொல்லும் தீங்கு அறவே –59-

அன்னைமீர்
மசகம் தரம் என்னல் ஆய-கொசுவுக்கு சமமானது என்று சொல்லத் தக்கதாய்
நிலையா உடல் வாழ் உயிரை
அசகம் தர வல்லதோ -ஆட்டின் தலையானது கொடுக்க வல்லதோ -இல்லையே ‘-ஆடு பலி கொடுத்தல் கார்ய கரம் ஆகாதே
வெறி விலக்கு -துறை
இனி நீங்கள் –
தீங்கு அறவே –இத்தளைவிக்கு நேர்ந்துள்ள துன்பம் நீங்குமாறு
அண்டம் உண்டு உமிழ் வாரிச கந்தர வண்ணர் –உண்டு உமிழ்ந்து -தாமரை பூத்த தொரு மேகம் பொன்ற -வடிவுடையவர்
வேங்கட வாணர்
கந்தரம் -நீரை உட்கொண்ட மேகம் என்ற பொருளில்
இலங்கையர் கோன் தெச கந்தரம் -பத்து தலைகளையும் -அறுத்தார் திருப் பேர் சொல்லும்-தீங்கு அர சொல்லும் என்று இயையும் –
கந்தரமகழுத்து -தலையைத் தரிப்பது -என்றவாறு
காக்கும் கடவுளின் திருநாம சங்கீர்த்தனமே தக்க பரிஹாரம் என்றவாறு –

————————————————————————–

தீங்கு அடமால் அத்தி முன் நின்று காலிப்பின் சென்ற கொண்டல்
வேங்கடமால் கழலே விரும்பார் விலை மாதர் மல
ஆம் கடம் மால் செய மாலாய் அவர் எச்சில் ஆகம் நச்சி
தாங்கள் தமால் அழிவார் இருந்தாலும் சவப் பண்டமே –60-

தீங்கு அடமால் அத்தி முன் நின்று -முதலையினால் உண்டான துன்பத்தை அழிக்க-ஸ்ரீ கஜேந்திர ஆழ்வான் எதிரிலே வந்து நின்று அருளிய பெருமான்
ஹஸ்தீ -அத்தி –
காலிப்பின் சென்ற கொண்டல்
வேங்கடமால் கழலே விரும்பார்
விலை மாதர் மல ஆம் கடம் மால் செய -மலமாம் கடம் மால் செய -அசுத்தம் நிறைந்த பாண்டம் பொன்ற உடம்பில் மயக்கத்தைச் செய்ய
மாலாய் அவர் எச்சில் ஆகம் நச்சி -மயக்கம் கொண்டு எச்சில் ஆகிய உடம்பை விரும்பி
தாங்கள் தமால் அழிவார் -தங்கள் குணக் கேட்டினாலேயே அழிவார்கள்
இருந்தாலும் சவப் பண்டமே -இறவாமல் பூமியில் இருந்தாலும் பிணமாகிய பொருளே யாவார் –

————————————————————-

பண்டை இருக்கும் அறியாப் பரம பதத்து அடியார்
அண்டை இருக்கும் படி வைக்கும் அப்பனை அண்டத்துக்கும்
தண் தையிருக்கும் மலர்ந்த செவ்வாயனை தாள் வணங்கா
மண்டை யிருக்கும் விடுமோ சனன மரணமுமே –61-

பண்டை இருக்கும் அறியாப் -பழைமையான வேதங்களும் முழுதும் அரிய மாட்டாத
பரம பதத்து அடியார் அண்டை இருக்கும் படி வைக்கும் அப்பனை-
நித்ய முத்தர்கள் உடன் தம் அடியாரை ஒரு கோவையாக வைத்து அருளும் திருவேங்கடமுடையானை
அண்டத்துக்கும் தண் தையிருக்கும் மலர்ந்த செவ்வாயனை -தையிர்-இடைப்போலி -தயிர் என்றபடி
தாள் வணங்கா மண்டை யிருக்கும் -வணங்கா தலையை உடைய உங்களுக்கு
விடுமோ சனன மரணமுமே –பிறப்பும் இறக்கும் நீங்காது என்றபடி –

—————————————————————–

மரணம் கடக் குஞ்சரம் நீங்க வாழ்வித்து வல் அரக்கர்
முரண் அங்கு அடக்கும் சர வேங்கடவ கண் மூடி அந்தக்
கரணம் கடக்கும் சரமத்து நீ தருகைக்கு எனக்கு உன்
சரணம் கடக்கும் சரண் வேறு இல்லை தந்து தாங்கிக் கொள்ளே –62-

மரணம் கடக் குஞ்சரம் நீங்க வாழ்வித்து -மதத்தை யுடைய யானை -ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானை ரஷித்து
வல் அரக்கர் முரண் அங்கு அடக்கும் சர
வேங்கடவ
கண் மூடி அந்தக் கரணம் கடக்கும் சரமத்து -அந்திம தசையில்
நீ தருகைக்கு எனக்கு -எனக்கு நீ அளிக்க
உன் சரணம் கடக்கும் சரண் வேறு இல்லை தந்து தாங்கிக் கொள்ளே
-உன் திருவடி அன்றி வேறு ரஷகம் இல்லை -அதனை அளித்து அருளி என்னை ஏற்றுக் கொண்டு அருள்வாய் என்றபடி
உன் சரண் அல்லால் சரண் இல்லை என்றபடி –

—————— —————————————————-

தாங்கு அடல் ஆழி வளை தண்டு வாள் வில்லில் தானவரை
ஈங்கு அட வீசி குறித்து அடித்து துணித்து எய்து வெல்லும்
பூங்கடல் வண்ணன் நிலை கிடை வந்தது போக்கு இடுப்பு
வேங்கடம் வேலை அயோத்தி வெங்கானகம் விண்ணுலகே –63–

தாங்கு அடல் -வலிமை யுடைய -ஆழி வளை தண்டு வாள் வில்லில் -பஞ்சாயுதங்களால் முறையே
தானவரை ஈங்கு அட -அழிக்குமாறு
வீசி -சுழற்றி வீசியும்
குறித்து -ஊதி முழக்கியும் –
அடித்து-அடித்தும்
துணித்து -அறுத்தும்
எய்து வெல்லும் -அம்பு எய்து ஜெயிக்கும்
பூங்கடல் வண்ணன் நிலை-நின்ற திருக்கோலமுமாய் – கிடை -கிடந்த திருக்கோலமுமாய் –
வந்தது -வந்து திருவவதரித்த இடமும் –
போக்கு -நடந்து அருளிய இடமும் –
இடுப்பு -வீற்று இருந்த திருக் கோலமாயும்
முறையே
வேங்கடம் -வேலை -திருப் பாற் கடலும் -அயோத்தி வெங்கானகம் – விண்ணுலகே —
இராமனாயும் கிருஷ்ணனாயும் வந்து -வெங்கான கம் போக்கு -தண்ட காரண்யம் -பிருந்தாவனம் நடந்து –

————————————————————————-

உலகம் தர உந்தி பூத்திலையேல் சுடர் ஓர் இரண்டும்
இலகு அந்தரமும் புவியும் எங்கே அயன் ஈசன் எங்கே
பலகந்தரமும் உணவும் எங்கே பல் உயிர்கள் எங்கே
திலகம் தரணிக்கு என நின்ற வேங்கடச் சீதரனே –64-

தரணிக்கு திலகம் என நின்ற வேங்கடச் சீதரனே-திருமாலே –
திருமகளை மார்பில் அகலகில்லேன் இறையும் என்று தரிப்பவன் சீதரன் –
திலதம் உலகுக்காய் நின்ற திரு வேங்கடத்து எம்பெருமானே -திருவாய் மொழியை அடி ஒற்றி அருளிச் செய்கிறார்
ஸ்திரீகளுக்கு பூரணமான ஆபரணம் போலே யாய்த்து பூமிக்கு திருமலை –
உலகம் தர -சிருஷ்டிக்க -உந்தி பூத்திலையேல்
சுடர் ஓர் இரண்டும் -சந்திர சூரியர்களும்
இலகு அந்தரமும் -அவை விளங்கும் ஆகாயமும்
புவியும் எங்கே
அயன் ஈசன் எங்கே
பலகந்தரமும் உணவும் எங்கே -பல மேகங்களும் -அவற்றால் ஆகிற உணவுகளும் எவ்விடத்தே தோன்றும்
பல் உயிர்கள் எங்கே –
சராசரப் பொருள்கள் யாவுமே உளவாகாது என்றவாறு –

————————————————————————
சீவார் கழலை இரண்டையும் செப்பு என்று தீங்கு உளவி
னாவார்கழலைப் பயில் செங்கையார் நலம் பேணும் ஐவர்
ஆவார் கழல் ஐ இரண்டாம் அவத்தையின் அன்று எனக்கு உன்
பூவார் கழலை அருள் அப்பனே அண்ட பூரணனே –65-

அப்பனே அண்ட பூரணனே –அண்டம் முழுவதிலும் வியாபித்து நிறைந்து இருப்பவனே –
கழலைப் பயில் செங்கையார்-கழற்சிக்காயை யாடுகிற சிவந்த கைகளை யுடையவர்களான மகளிரது –
கவலை இல்லாமல் விளையாடுபவர் என்றும்
விளையாட்டினால் ஆடவரை வசீகரிப்பவர் என்றுமாம்
சீவார் கழலை இரண்டையும் -சீ ஒழுகுகின்ற கல்லைக் கட்டியாகிய ஸ்தனங்கள் இரண்டையும்
செப்பு என்று -கிண்ணங்கள் என்று புனைந்து உரைத்து
தீங்கு உள வினாவார்-அவர்கள் இடம் உள்ள தீமைகளை விசாரித்து அறியாதவர்களாய் –
தீங்கு உள வினாவார் -தீங்கு விளைக்கும் சொற்களை யுடைய மகளிர் என்றுமாம் -இனா -பரிகாச வார்த்தைகள் என்றுமாம்
இன்னா -இனியவை இல்லாதவை என்றுமாம்
தீம் குளம் வினாவார் -இனிமையான வெல்லம் பொன்ற சொற்களை யுடையவர்
தீங்கு உளவின் ஆவார் -கொடிய வஞ்சனையில் பொருந்தி இருப்பவர்
தீம் குழலின் நாவர்-இனிமையான பேச்சுகள் யுடையவர்
நலம் பேணும் -அவர்கள் உடைய இன்பத்தை விரும்புவர்களாய்
ஐவர் ஆவார் -பந்த இந்த்ரியங்கள்
கழல் -தம் தம் ஆற்றல் ஒழியப் பெறுகிற
ஐ இரண்டாம் அவத்தையின் அன்று -பத்தா
நினைவு -பேச்சு -இரங்கல் -வெய்து உயிர்த்தல் -வெதுப்பு -துய்ப்பன தெவிட்டல் -அழுங்கல்-மொழி பல பிதற்றுதல் -மிகு மயக்கு -இறப்பு
காட்சி –அவா -சிந்தனை –அயர்ச்சி -அலற்றல்-நாண் ஒழிதல் -திகைத்தல் -மோகம் -மூர்ச்சை -இறந்துபடுதல் என்றுமாம் –
அந்நாளில்
எனக்கு உன் பூவார் கழலை அருள் -தந்து அருள்வாய்
சிந்து பூ மகிழும் திரு வேங்கடம் -புஷ்ப மண்டபம் –
தேவாசுரர்கள் முனிக் கணங்கள் விரும்பும் பூவார் கழல்கள் அருவினையேன் பொருந்துமாறு புணராயே
வேங்கடமே –பூவார் கழலார் பொருப்பு –திருவேங்கட மாலை –

———————————————————————-

பூரணன் ஆரணன் பொன்னுலகு ஆளி புராரி கொடி
வாரணன் ஆர் அணன் வாழ்த்தும் பிரான் வட வேங்கடத்துக்
காரணன் ஆர் அணங்கு அனா இறைவி கணவன் மண் ஏழ்
பாரணன் நாரணன் என்பார்க்கு நீங்கும் பழுது அவமே –66-

பூரணன் -எங்கும் நிறைந்தவன்
ஆரணன் -பிரமனும்
பொன்னுலகு ஆளி -ஸ்வர்க்க லோகம் ஆளும் இந்திரனும்
புராரி -புர அரி -திரிபுரம் எரித்த சிவனும்
கொடிவாரணன் -த்வசத்தில் கோழி வடிவை யுடைய சுப்ரமணியனும் -கொடிக் கோழி கொண்டான் -நம்மாழ்வார்
ஆர் அணன் -அவனுக்கு பொருந்திய விநாயகனும்
வாழ்த்தும் பிரான் -பல்லாண்டு பாடி–ஸ்துதிக்கும் பிரபு
வட வேங்கடத்துக் -திருவேங்கட திருமலையில் எழுந்து அருளி
காரணன்-அனைத்துக்கும் காரணன்
ஆர் அணங்கு அனா இறைவி கணவன் -தன்னை விட்டு நீங்காத தலைவியாகிய அருமையான திருமகளுக்கு கணவன்
ஆரணம் காணா இறைவி – வேதங்களும் கண்டு அரிய மாட்டாத திருமகள் -என்றுமாம்
மண் ஏழ் பாரணன் -ஏழு வகை உலகங்களையும் உண்டவன்
நாரணன் என்பார்க்கு -அவனது திருக்கல்யாண குணங்கள் -சேஷ்டிதங்கள்-பரத்வம் -திருநாமங்கள் சொல்பவர்க்கு
நீங்கும் பழுது அவமே -பழுது அவம் நீங்கும் -முன்பு செய்த தீவினைகள் எல்லாம் பயன் தராதவனவாய் ஒழியும் –

———————————————————————-

பழுத்தெட்டி பொன்ற நடுச் செல்வர் பின் சென்று பல் செருக்கால்
கொழுத்து எள் தினை அளவு எண்ணம் அற்றீர் குவடு ஏறி மந்தி
கழுத்து எட்டி அண்டர் பதி நோக்கும் வேங்கடக் காவலனை
எழுத்து எட்டினால் எண்ணி ஏத்தீர் பரகதி ஏறுவதற்கே –67–

பழுத்தெட்டி பொன்ற -பிறர்க்கு பயன்படாத பழுத்த எட்டி மரம் பொன்ற
நடுச் செல்வர் பின் சென்று-பரம்பரையாக அமைந்த செல்வம் அன்றி இடையில் வந்த செல்வம் உடையவர்கள் பின்னே தொடர்ந்து சென்றும்
அல்பன் பணம் படித்தால் அர்த்த ராத்ரியில் குடை பிடிப்பான் -இறுமாப்பு கொண்டு -பிறருக்கு உதாமல் இருப்பதால் பழுத்த எட்டி என்கிறார்
ஈயாத புல்லர் இருந்து என்ன போயென்ன எட்டி மரம் காயாது இருந்து என்ன காய்த்துப் பலன் என்ன -என்பர்
பல் செருக்கால் கொழுத்து -பல வகை செருக்கால் கொழுத்தவர்கள் ஆகியும்
எள் தினை அளவு எண்ணம் அற்றீர் -கொஞ்சம் கூட கடவுளைப் பற்றி சிந்தனை இல்லாதவர்களே –
இனியாயினும் நீங்கள் பழுதே பல பகலும் போக்காமல்
பரகதி ஏறுவதற்கே –
மந்தி -குவடு ஏறி-கழுத்து எட்டி அண்டர் பதி நோக்கும் வேங்கடக் காவலனை –
பெண் குரங்குகள் சிகரத்தில் ஏறி கழுத்தைத் தூக்கி மேல் உள்ள தேவ லோகத்தை எட்டிப் பார்க்கப் பெற்ற
திருவேங்கட திருமலையில் எழுது அருளி இருக்கும் ஸ்வாமியை
குவடு -மரக்கிளை என்றுமாம்
எழுத்து எட்டினால் எண்ணி ஏத்தீர் —அஷ்டாஷர மகா மந்த்ரத்தைக் கொண்டு த்யானித்து ஸ்துதியுங்கோள் –
எட்டு எழுத்தும் ஓதுவார்கள் வல்லர் வானம் ஆளவே -என்பர் –

——————————————————————————-

ஏறு கடாவுவர் அன்னம் கடாவுவர் ஈர் இரு கோட்டு
உறு கடா மழை ஓங்கல் கடாவுவர் -ஓடு அருவி
ஆறு கடாத அமுது எனப் பாய அரிகமுகம்
தாறுகள் தாவும் வட வேங்கடவரைத் தாழ்ந்தவரே –68-

-ஓடு அருவி ஆறு -நதிகளாக விரைந்து செல்லும் நீர் அருவிகள்
கடாத அமுது எனப்-கடுக்காத -இன் சுவை யுடைய அம்ருதம் போலே
பாய -பாய்ந்து வர
அரிகமுகம் தாறுகள் தாவும்-அரி கமுகம் தாறுகள் தாவும் -குரங்குகள் பாக்கு மரக் குலைகளின் மேலே ஏறித் தாவப் பெற்ற
வட வேங்கடவரைத் தாழ்ந்தவரே –வணங்கினவர்கள் –
ஏறு கடாவுவர் -ருஷபத்தை வாகனமாகக் கொண்டு ஏறி நடத்துவர் -ருத்ர பதவி அடைவர்
அன்னம் கடாவுவர் -அன்னப் பறவையை வாகனமாகக் கொண்டு ஏறி நடத்துவர் -பிரம பதவி அடைவர்
ஈர் இரு கோட்டு -நான்கு தந்தங்களை யுடையதும்
உறு கடா மழை -மேன்மேல் சுரக்கின்ற மத நீர்ப் பெருக்கை யுடையதுமான
ஓங்கல் கடாவுவர் -மலை பொன்ற ஐராவத யானையை ஏறி நடாத்துவர் -இந்திர பதவி அடைவர் –

——————————————————————————–

தாழ்ந்த அருக்கம் தரு ஒக்குமோ பல தாரகையும்
சூழ்ந்த அருக்கன் சுடர் ஒக்குமோ தொல் அரக்கர் என்று
வாழ்ந்த வருக்கம் களைந்தான் வடமலை மால் அடிக்கீழ்
வீழ்ந்தவருக்கு அன்பருக்கு ஒப்பரோ அண்டர் மெய்த்தவரே –69-

தாழ்ந்த அருக்கம் தரு ஒக்குமோ -இழிவான எருக்கம் செடியானது பெரிய மரத்துக்கு ஒப்பாகுமோ
பல தாரகையும் -பல நஷத்ரங்களும்
சூழ்ந்த அருக்கன் சுடர் ஒக்குமோ-சுற்றிலும் பரவும் சூரியனது ஒளிக்கு ஒப்பாகுமோ –
ஒப்பாகா -அவை போலே –
தொல் அரக்கர் என்று வாழ்ந்த வருக்கம் களைந்தான் –
பழமையான இராக்கதர்கள் என்று பிரசித்தி பெற்று வாழ்ந்த கூட்டங்களை எல்லாம் வேரோடு அழித்த
வடமலை மால் அடிக்கீழ் வீழ்ந்தவருக்கு அன்பருக்கு ஒப்பரோ அண்டர் மெய்த்தவரே —
திருவடிகளில் வீழ்ந்து வணங்கின அடியார்க்கு அன்பு பூண்டு ஒழுகுபவர்க்கு
தேவர்களும் உண்மையான தவத்தை யுடைய முனிவர்களும் ஒப்பாகார் என்றபடி –

—————————————————————————–

மெய்த்தவம் போர் உக வெஞ்சொல் இராமன் வில் வாங்கி வளைத்து
உய்ந்த அம் போர் உகம் நாலும் செய்தோர் உயர் வேங்கடத்து
வைத்த அம் போருகப் பூ ஆர் கழலை மறை மனு நூல்
பொய்த்த வம்போர் உகவார் காமம் வேட்டுப் புரளுவரே –70-

மெய்த்தவம் -உண்மையாகச் செய்த தவம்
போர் உக -யுத்தத்தில் பழுது பட்டு ஒழியுமாறு
வெஞ்சொல் இராமன் வில் வாங்கி வளைத்து உய்ந்த அம் போர் –
கடும் சொற்களைப் பேசி வந்த பரசுராமன் உடைய வில்லை -அவன் கையின் நின்றும் தம் கையில் வாங்கி வளைத்து எய்த அம்பை யுடையவரும் –
உகம் நாலும் செய்தோர் -நாலு யுகங்களையும் செய்தவருமான திருமால்
உயர் வேங்கடத்து வைத்த அம் போருகப் பூ ஆர் கழலை –
மறை மனு நூல் பொய்த்த வம்போர் -வேதம் மனு சாஸ்திரங்கள் இவை பொய் என்று கூறும் வம்பு பேச்சை யுடையவர்கள்
உகவார் -விரும்பாதவர்களாய்
காமம் வேட்டுப் புரளுவரே -சிற்றின்பத்தை விரும்பி புரண்டு வருந்துவர் –ஈற்று -ஏகாரம் அந்தோ -கழிவிரக்கம் ஈற்று –

——————————————————————————–

புரண்டு உதிக்கும் உடற்கே இதம் செய் பொருள் ஆக்கையின் நால்
இரண்டு திக்கும் தடுமாறும் நெஞ்சே இனி எய்துவம் வா
திரண்டு திக்கும் அரன் வேள் அயனார் முதல் தேவர் எல்லாம்
சரண் துதிக்கும் படி மேல் நின்ற வேங்கடத் தாமத்தையே –71-

புரண்டு உதிக்கும் -நிலை நில்லாது மாறி மாறி தோன்றும் தன்மை யுள்ள
உடற்கே -உடம்புக்கே
இதம் செய் பொருள் ஆக்கையின் -நன்மையைச் செய்கிற செல்வத்தை சம்பாதித்திற்காக
நால்இரண்டு திக்கும் தடுமாறும் நெஞ்சே
இனி
திக்கும் அரன் -நெற்றிக் கண்ணின் நெருப்பினால் எரிக்கும் தன்மை யுள்ள சிவனும்
வேள் -சுப்ரமன்யனும்
அயனார் -பிரம தேவரும்
முதல் தேவர் எல்லாம் -முதலிய தேவர்கள் எல்லாரும்
திரண்டு -ஒருங்கு கூடி
சரண் துதிக்கும் படி-தனது திருவடிகளை ஸ்தோத்ரம் செய்யும் படி
வேங்கடம் – மேல் நின்ற –
தாமத்தையே -ஒளி வடிவம் உள்ள கடவுளை –எய்துவம் வா
நீலார் கண்டத்து அம்மானும் நிறை நான் முகனும் இந்திரனும் சேலேய் கண்ணார் பலர் சூழ விரும்பும் திரு வேங்கடத்தானே –
நிகரில் அமரர் முனிக் கணங்கள் விரும்பும் திரு வேங்கடத்தானே -திருவாய்மொழி –

—————————————————————————–

பிரிவாற்றாத தலைவி தோழியரை நோக்கி இரங்கிக் கூறுதல் –

தாம் மத்து அளை வெண்ணெய்உண்ட அந்நாள் இடைத் தாயார் பிணி
தாமத் தளை உவந்தார் வேங்கடாதிபர் தாமரைப் பூந்
தாமத்தளை அணியும் மணி மார்பில் நல் தண் அம் துழாய்த்
தாமத்து அளைவது என்றோ மடவீர் என் தட முலையே –72-

பிரிவாற்றாத தலைவி தோழியரை நோக்கி இரங்கிக் கூறுதல் –
மடவீர்
மத்து அளை வெண்ணெய்-தாம்-உண்ட
அந்நாள் இடைத்
தாயார் பிணி தாமத் தளை உவந்தார்-விரும்பி ஏற்றுக் கொண்டாரே
வேங்கடாதிபர்
தாமரைப் பூந் தாமத்தளை அணியும் மணி மார்பில் –
தாமரை மலரை இடமாக யுடையளான திரு மகளையும் -கௌஸ்துபம் மணியையும் அணிந்த திரு மார்பில் தரித்த
நல் தண் அம் துழாய்த் தாமத்து அளைவது என்றோ என் தட முலையே —
தடமுலை -பக்குவமாய் முதிர்ந்த பக்தி -என்றவாறு –

இது யமகச் செய்யுள் –

——————————————————————————

தடவிகடத் தலை வேழ முன் நின்றன சாடு உதைத்துப்
படவிகள் தத்து அலை ஈர் எழ் அளந்தன பூந்திரு வோடு
அடவி கடத்தலை வேட்டன -வேங்கடத்து அப்பன் புள்ளைக்
கடவி கடத்தலை நெய் உண்ட மாதவன் கால் மலரே –73-

புள்ளைக் கடவி
கடத்தலை -குடத்தில் வைத்து இருந்த
நெய் உண்ட மாதவன்
வேங்கடத்து அப்பன் கால் மலரே —
தட-பெரிய -விகடத் தலை -கும்ப ஸ்தலங்களை யுடையதால் மேடு பள்ளம் கொண்டு மாறு பாடுற்ற தலையை யுடைய
வேழ முன் -ஸ்ரீ கஜேந்திர ஆழ்வான் முன்னிலையிலே
நின்றன-சென்று நின்றன
சாடு உதைத்துப் -சகடாசுரனை உதைத்துத் தள்ளி
படவிகள் தத்து அலை ஈர் எழ் அளந்தன -பாய்ந்து வரும் அலைகளை யுடைய கடல் சூழ்ந்த பதினான்கு லோகங்களையும் அளந்தன
பூந்திரு வோடு அடவி கடத்தலை வேட்டன-ஸ்ரீ சீதா பிராட்டி யுடன் வனத்தை கடப்பதை விரும்பி நடந்தன –

—————————————————————————–

கானகம் உண்டு அதில் போம் என்னின் நீங்கிக் கடும் பிணி காள்
தேன் அக முண்டகத் தாள் வேங்கடேசனை சென்று இரக்கும்
போனாக முண்ட வெண் நீற்றான் அயனொடும் பூமியொடும்
வானகம் உண்ட பெருமானை இன்று என் மனம் உண்டதே –74-

சென்று இரக்கும் போனாக முண்ட வெண் நீற்றான் –
பல இடங்களிலும் சென்று யாசித்துப் பெற்ற பிச்சை உணவைக் கொள்ளும் பிரம கபாலம் ஏந்தி வெண் நிற விபூதியைத் தரித்த சிவனும்
அயனொடும் -பிரமனும் ஆகிய இரு மூர்திகலோடும்
பூமியொடும்
வானகம் உண்ட பெருமானை -அனைத்தையும் உட்கொண்டு அருளின பெருமானை
தேன் அக முண்டகத் -தாமரை பொன்ற -தாள் வேங்கடேசனை
இன்று என் மனம் உண்டதே —
ஆதலால்
கானகம் உண்டு அதில் போம் என்னின் நீங்கிக் கடும் பிணி காள்-
கொடிய நோய்களே -என்னை விட்டு நீங்கி -கானகம் உளது அங்கெ செல்லுங்கோள்
எம்பெருமானே எல்லா நோய்க்கும் மருந்து -என்றவாறு –

—————————————————————————-

மனம் தலை வாக்கு உற எண்ணி வணங்கி வழுத்தும் தொண்டர்
இனம் தலைப் பெய்தனன் ஈது அன்றியே இமையோரும் எங்கள்
தனம் தலைவா எனும் வேங்கடவாண தடம் கடலுள்
நனந்தலை நாகணையாய் அறியேன் அன்பும் ஞானமுமே –75–

இமையோரும் எங்கள் தனம் தலைவா எனும் வேங்கடவாண தடம் கடலுள் -பெரிய திருப் பாற் கடலுள்
நனந்தலை -பரந்த இடம் உள்ள -நாகணையாய்
நச்சு நாகணைக் கிடந்த நாதன் -நாராயணா வோ மணி வண்ணா நாகணையாய் –
மனம் தலை வாக்கு உற -தகுதியாக -முறையே எண்ணி வணங்கி வழுத்தும்
மநோ வாக் காயம் முறை பிறழக் கூறினார்
மெய் -தலை உத்தம அங்கம் என்பதால்
தொண்டர் இனம் தலைப் பெய்தனன்-சேர்ந்தேன்
ஈது அன்றியே-இதுவே அல்லாமல்
அறியேன் அன்பும் ஞானமுமே -ஞான பக்திகளின் தன்மையை அறிவேன் அல்லேன் -காரிய காரண முறை பற்றி அன்பும் ஞானமும் என்கிறார்
மெய்யடியார் சம்பந்தமே உஜ்ஜீவன ஹேது என்றவாறு -அத்தை வியாஜமாக கொண்டு காத்து அருள்வாய் –

————————————————————————–

கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்–

ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் அருளிய திருவேங்கடத்தந்தாதி -26-50-

February 25, 2016

அஞ்சு அக்கர வட மூலத்தன் போதன் அறிவு அரிய
செஞ்சக்கர வட வேங்கட நாதனை -தேசத்துள்ளீர்
நெஞ்சக் கரவடம் நீக்கி இன்றே தொழும் நீள் மறலி
துஞ்சக் கரவடம் வீசும் அக்காலம் தொழற்கு அரிதே –26-

அஞ்சு அக்கர வட மூலத்தன் -பஞ்சாஷர மந்திரத்துக்கு உரியவனும் -ஆல மரத்தின் அடியில் வீற்று இருந்த சிவபிரானும்
அகஸ்த்ய புலஸ்திய தஷ மார்கண்டேயர் -என்றும் சனகர் சனந்தனர் சனத்குமாரர் சனத் ஸூ ஜாதர்-என்பர்
இந்த நால்வருக்கும் ஞான உபதேசம் செய்தான் என்பர்
போதன் -பிரமதேவனும்
அறிவு அரிய செஞ்சக்கர வட வேங்கட நாதனை
-தேசத்துள்ளீர்
நெஞ்சக் கரவடம் நீக்கி இன்றே தொழும் -மனத்தில் உள்ள வஞ்சனையை ஒழித்து இப்பொழுதே நீங்கள் வணங்குங்கள் –
ஏன் என்றால்
நீள் மறலி -பெரிய வடிவம் உடைய யமன்
துஞ்சக்-நீங்கள் இறக்கும் படி
கரவடம் வீசும் அக்காலம் தொழற்கு அரிதே –தன் கையில் கொண்ட பாசாயுதத்தை
உங்கள் மேல் வீசும் அந்த அந்திம காலத்தில் வணங்குவதற்கு இயலாது –

—————————————————————-

தொழும் பால் அமரர் தொழும் வேங்கடவன் சுடர் நயனக்
கொழும் பாலனை ஒரு கூறு உடையான் நந்த கோபன் இல்லத்து
அழும் பாலன் ஆகிய காலத்து பேய்ச்சி அருத்து நஞ்சைச்
செழும் பால் அமுது என்று உவந்தாற்கு என் பாடல் சிறக்கும் அன்றே –27–

தொழும் பால் -அடிமைத் தனத்தால் – அமரர் தொழும் வேங்கடவன்
சுடர் நயனக் கொழும் பாலனை -நெருப்புக் கண்ணை கொழுமை யுள்ள நெற்றியில் யுடையனான சிவபிரானை
ஒரு கூறு உடையான் -தனது திரு மேனியில் வலப் பக்கத்தில் கொண்டவனும்
நந்த கோபன் இல்லத்து அழும் பாலன் ஆகிய காலத்து பேய்ச்சி அருத்து நஞ்சைச்
செழும் பால் அமுது என்று உவந்தாற்கு என் பாடல் சிறக்கும் அன்றே-

————————————————————————

சிறக்கும் பதம் தருவார் திருவேங்கடச் செல்வர் செய்ய
நிறக்கும் பதம் தொழுது உய்ய எண்ணீர் -நெறியில் பிழைத்து
மறக்கும் பதந்தியும் சேலும் அசுணமும் வண்டினமும்
பறக்கும் பதங்கமும் போல் ஐவரால் கெடும் பாதகரே –28–

மறக்கும் பதந்தியும் -மறம் கும்பம் தந்தியும் -கோப குணத்தையும் மஸ்தகத்தையும் யுடைய யானையும்
யானை அறிந்து அறிந்தும் பாகனையே கொல்லும் -தீராக் கோபம் கொண்டதால் மறம் என்கிறார் –
சேலும் -மீனும்
அசுணமும்- அசுணம் என்னும் பறவையும் -அசுணம் மான் வகை என்றும் சொல்வர் –
வண்டினமும் -வண்டு வகைகளும்
பறக்கும் பதங்கமும்-பறக்கின்ற விட்டில் பறவையும்
போல்
நெறியில் பிழைத்து -நன்னெறியின் நின்றும் தவறி
ஐவரால் கெடும் பாதகரே –பஞ்ச இந்த்ரியங்களால் அழியும் தீ வினையை யுடையவர்களே –
யானை பரிசத்தால் -பெண் யானை மேல் உள்ள ஆசையால் -ஊற்று இன்ப ஆசையால் -அழியும்
மீன் வாய் என்னும் பொறிக்கு உரிய சுவை இன்பத்தால் அழியும் –
அசுணம் வேய்ங்குழல் ஓசையின் இனிமையில் வசப்பட்டு பரவசப்பட பறை ஓசை கேட்டு இறக்கும் -செவி -ஓசை இன்பத்தால் அழியும்
வண்டு கந்தத்தால் அழியும் -விட்டில் பூச்சி விளக்கில் கண் பொறி ஒளி யின் மேல் ஆசையால் அழியும்
சிறக்கும் பதம் தருவார் திருவேங்கடச் செல்வர் செய்ய
நிறக்கும் பதம் தொழுது உய்ய எண்ணீர் –

—————————————————————————–

பாதம் அரா உறை பாதளத் தூடு பகிரண்டத்துப்
போது அமர் ஆயிரம் பொன் முடி ஓங்கப் பொலிந்து நின்ற
நீதமர் ஆனவருக்கு எவ்வாறு -வேங்கடம் நின்றருளும்
நாத மராமரம் எய்தாய் முன் கோவல் நடந்ததுவே –29-

வேங்கடம் நின்றருளும் நாத
மராமரம் எய்தாய்
பாதம் அரா உறை பாதளத் தூடு -திருவடிகள் பாம்புகள் வசிக்கின்ற பாதாள லோகத்திலும்
போது அமர் ஆயிரம் பொன் முடி-சூட்டிய மலர்கள் பொருந்திய அழகிய ஆயிரம் திரு முடிகள்
பகிரண்டத்து ஓங்கப் பொலிந்து நின்ற -இவ்வண்ட கோளத்தின் மேன் முகட்டுக்கு வெளியிலும் வளர்ந்து தோன்ற
-விஸ்வ ரூபத்தில் -விளங்கி நின்றவனான –நீ
தமர் ஆனவருக்கு -நின் அடியார்களான முதல் ஆழ்வார்களுக்கு கட்சி அருளும் பொருட்டு
எவ்வாறு -முன் கோவல் நடந்ததுவே – அவர்கள் இருந்த இடமான திருக் கோவலூருக்கு நடந்து அருளியது எங்கனமோ
-அடியார் நெருக்கு உகந்த பெருமான் –

——————————————————————–

நடைக்கு அலங்கார மடவார் விழிக்கு நகைக்கு செவ்வாய்க்கு
இடைக்கு அலங்கு ஆர முலைக்கு இச்சையான இவன் என்று என்னை
படைக்கலம் காணத் துரந்தே நமன் தமர் பற்றும் அன்றைக்கு
அடைக்கலம் காண் அப்பனே அலர் மேல் மங்கை அங்கத்தனே –30-

அப்பனே அலர் மேல் மங்கை அங்கத்தனே —
நடைக்கு -அலங்கார மடவார் -இயற்கையும் செயற்கையுமான அழகுகளை யுடைய இல மன்கையறது நடை அழகுக்கும்
விழிக்கு நகைக்கு செவ்வாய்க்கு -கண் அழகுக்கும் -புன்சிரிப்பின் அழகுக்கும் -சிவந்த வாயின் அழகுக்கும்
இடைக்கு-இடையின் அழகுக்கும்
அலங்கு ஆர முலைக்கு-புரளுகின்ற ஹாரங்கள் அணிந்த ஸ்தனங்களின் அழகுக்கும்
இச்சையான இவன் என்று என்னை -விரும்பி ஈடுபட்ட இவன் என்று நினைத்து
நமன் தமர் படைக்கலம் -யமதூதர் ஆயுதங்களை
காணத் துரந்தே பற்றும் அன்றைக்கு-நான் கண்டு அஞ்சும் படி என் மீது பிரயோகித்து
என்னைப் பிடித்துக் கொண்டு போகும் அந்த அந்திம காலத்தில்
அடைக்கலம் காண் – என்னை ரஷிக்க இன்றே உனக்கு அடைக்கலப் பொருள் ஆகிறேன் காண் –

———————————————————————

அங்கம் அலைக்கும் வினையால் அலமரவோ உனக்கும்
அம் கமலைக்கும் அடிமைப் பட்டேன் அரவு ஆனபரி
அங்க மலைக் குடையாய் அக்கராவுடன் அன்று அமர் செய்
அங்க மலைக்கு முன் நின்றருள் வேங்கடத்து அற்புதனே –31-

அரவு ஆனபரி அங்க -அரவான பர்யங்க -ஆதி சேஷன் ஆகிய கட்டிலை யுடையவனே –
மலைக்குடையாய் -கோவர்த்தன மலையைக் குடையாய்ப் பிடித்தவனே
அக்கராவுடன் அன்று அமர் செய் -அந்த முதலையுடன் அக்காலத்தில் பொற் செய்த
அங்க மலைக்கு முன் நின்றருள் -அங்கம் மலைக்கு -அவயவங்களை யுடைய மலை போன்றதான
யானைக்கு எதிரில் சென்று நின்று ரஷித்து அருளினவனே
வேங்கடத்து அற்புதனே
அங்கம் அலைக்கும் வினையால் அலமரவோ உனக்கும் அம் கமலைக்கும் அடிமைப் பட்டேன்-

——————————————————————

அற்ப ரதத்து மடவார் கல்வியும் ஆங்கு அவர்கள்
நல் பரதத்து நடித்தலும் பாடலும் நச்சி நிற்பார்
நிற்ப ரத்தத்துக் கதிர் தோயும் வேங்கடம் நின்றருளும்
சிற் பரதத்துவன் தாள் அடைந்தேன் முத்தி சித்திக்கவே –32-

அற்ப ரதத்து மடவார் கல்வியும் -சிற்றின்பத்தையே யுடைய இள மகளிரது சேர்க்கையும்
ஆங்கு அவர்கள் நல் பரதத்து நடித்தலும் பாடலும் நச்சி நிற்பார்-பேதையர்
நிற்ப -நிற்க -நான் அவர்களோடு சேராமல்
முத்தி சித்திக்கவே –
ரத்தத்துக் கதிர் தோயும் வேங்கடம் -ரதத்து கதிர் தோயும் வேங்கடம் -சூரியன் தவழப் பெற்ற திருவேங்கடம் திருமலையில்
நின்றருளும் சிற் பரதத்துவன் -சித் பரதத்வன் -ஞான மயமான பரம் பொருள் -தாள் அடைந்தேன் –
ஜீவாத்மா தத்தவத்தை விட மேம்பட்ட பரமாத்மா என்றவாறும் –

—————————————————————–

சித்திக்கு வித்து அதுவோ இதுவோ என்று தேடி பொய்ந்நூல்
கத்திக் குவித்த பல் புத்தகத்தீர் கட்டுரைக்க வம்மின்
அத்திக்கு இத்தனையும் உண்ட வேங்கடத்து அச்சுதனே
முத்திக்கு வித்தகன் என்றே சுருதி முறையிடுமே -33-

சித்திக்கு வித்து அதுவோ இதுவோ என்று தேடி
பொய்ந்நூல் கத்திக்-தொண்டை நோகக் கதறிப் படித்து
குவித்த பல் புத்தகத்தீர்
கட்டுரைக்க வம்மின் -முத்திக்கு உண்மையான பொருளை உறுதியாக நான் சொல்ல வந்து கேண்மின் –
உம்மால் முடிந்தால் வாதிட வரலாம் என்றுமாம்
பரமாத நிரசனம் பண்ணி ஸ்வ மத ஸ்தாபனம் செய்ய வல்லவன் என்ற அத்யவசாயம் உண்டே
அத்திக்கு இத்தனையும் உண்ட-கடல் சூழ்ந்த உலகம் முழுவதையும் பிரளய காலத்தில் உட்கொண்டு அருளிய
வேங்கடத்து அச்சுதனே முத்திக்கு வித்தகன் என்றே சுருதி முறையிடுமே –
சரணம் அடைந்தவர்களை ரஷித்து கை விடாதவன் -அச்சுதன் அவனே –

—————————————————————–

முறையிடத் தேசம் இலங்கை செற்றான் முது வேங்கடத்துள்
இறை இடத்தே சங்கு உடையான் இனி என்னை ஆண்டிலனேல்
தறை இடத்தே உழல எல்லாப் பிறவி தமக்கும் அளவு
உறை இடத் தேய்ந்திடும் இவ்வந்தி வானத்து உடுக்குலமே –34-

தேசம் முறையிடத் இலங்கை செற்றான்
முது வேங்கடத்துள் ‘இறை
இடத்தே சங்கு உடையான்
இனி -சரணம் அடைந்த பின்பும் -என்னை ஆண்டிலனேல்
தறை இடத்தே உழல எல்லாப் பிறவி தமக்கும்
அளவு உறை இடத் -உறையிட்டுத் தொகை செய்தற்கு
தேய்ந்திடும் இவ்வந்தி வானத்து உடுக்குலமே –மாலைப்பொழுதில் வானத்தில் விளங்கும்
இந்த நஷத்ர கூட்டம் எல்லாம் போதாது -குறைந்திடும்
இராமன் கை யம்பும் உதவும் படைத்தலைவர் அவரை நோக்கின் இவ்வரக்கர் வம்பின் முலையாய்
உறை இடவும் போதார் கணக்கு வரம்புண்டோ -கம்பர்

———————————————————————-

உடுக்கும் உடைக்கும் உணவுக்குமே உழல்வீர் இன் நீர்
எடுக்கும் முடைக்குரம்பைக்கு என் செய்வீர் இழிமும் மதமும்
மிடுக்கும் உடைக்குஞ்சரம் தொட்ட வேங்கட வெற்பர் அண்ட
அடுக்கும் உடைக்கும் அவர்க்கு ஆட்படுமின் அனைவருமே -35-

உடுக்கும் உடைக்கும் உணவுக்குமே உழல்வீர்
இன் நீர் எடுக்கும் முடைக்குரம்பைக்கு -முடை நாற்றம் யுடைய உடம்புகளை பிறவிகளை ஒழிக்க –
ஒன்பது வாசல் தானுடைக் குரம்பை -திருமங்கை ஆழ்வார்
என் செய்வீர் -என்ன உபாயம் செய்வீர்கள்
இழிமும் மதமும் -இழி மும் மதமும் -ஒழுகின்ற மூன்று வகை மத ஜலங்களும் -இரண்டு கன்னங்கள் குறி ஓன்று ஆக மூன்று மதங்கள்
கர்ண மதம் கபோல மதம் பீஜ மதம் என்றுமாம் –
மிடுக்கும் உடைக்குஞ்சரம் -வலிமையையும் யுடைய யானையை -ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானை
தொட்ட -அபய பிரதானம் செய்து அருளி அதன் தலை மேல் தனது திருக்கையை வைத்து தொட்டு அருளிய
வேங்கட வெற்பர்
அண்ட அடுக்கும் உடைக்கும் -சங்க்ரஹ காலத்தில் அழித்து அருளும் – -அவர்க்கு ஆட்படுமின் அனைவருமே –

ஆடிய சிரசின் மீதில் அரி மலர்க்கையை வைத்து வாடினை துயரம் எய்து மனம் ஒருமித்து நம்மை நாடினை இனியோர்
நாளும் நாசமே வாராது என்று நீடிய உடலைக் கையால் தடவின நெடிய மால் –

————————————————————————-

வரும் மஞ்சு ஆனவன் ஒருவனையே உன்னி வாழ்ந்தும் தொண்டீர்
கருமம் சனனம் களைந்து உய்ய வேண்டில் கருதிற்று எல்லாம்
தரும் அஞ்சன வெற்பன் தாள் தாமரையைச் சது முகத்தோன்
திரு மஞ்சனம் செய் புனல் காணும் ஈசன் சிரம் வைத்தே –36-

வரும் மஞ்சு ஆனவன் ஒருவனையே உன்னி வாழ்ந்தும் -மழை பொழிய வருகிற நீர் கொண்ட
காள மேகம் போன்ற திருமாலையே த்யானித்து ஸ்துதியுங்கோள்
தொண்டீர்
கருமம் சனனம் களைந்து உய்ய வேண்டில்
கருதிற்று எல்லாம் தரும் அஞ்சன வெற்பன் தாள் தாமரையைச் சது முகத்தோன் திரு மஞ்சனம் செய்
புனல் காணும் ஈசன் சிரம் வைத்தே –
புனல் காண் நும் ஈசன் சிரம் வைத்தே -என்று பிரித்தும் கொள்ளலாம் –

குறை கொண்டு நான்முகன் குண்டிகை நீர் பெய்து –மறை கொண்ட மந்திரத்தால் வாழ்த்தி
கரை கொண்ட கண்டத்தான் சென்னி மேல் ஏறக் கழுவினான் அண்டத்தான் சேவடியை யாங்கு
சதுமுகன் கையில் சதுப்புயன் தாளில் சங்கரன் சடையினில் தங்கிக் கதிர்முக மணி கொண்டு இழி புனல் கங்கை
அண்ட கோளகைப் புறத்ததாய் யகிலம் யன்று அளந்த புண்டரீக மென் பதத்திடை பிறந்து
பூ மகனார் கொண்ட தீர்த்தமாய் யரன் கொளப் பகிரதன் கொணர மண்டலத்து வந்தடைந்த இம்மாநதி -கம்பர்

——————————————————————————

சிரம் தடிவான் இவனோ என்று அயன் வெய்ய தீய சொல்ல
கரம் தடிவான் தலை கவ்வ பித்து ஏறலின் கண்ணுதலான்
இரந்து அடி வீழ துயர் தீர்த்த வேங்கடத்து எந்தை கண்டீர்
புரந்து அடியேனைத் தன் பொன் அடிக்கீழ் வைக்கும் புண்ணியனே –37-

சிரம் தடிவான் இவனோ என்று அயன் -அஜந -திருமால் இடம் இருந்து தோன்றிய பிரமன் -வெய்ய தீய சொல்ல
அத்தைக் கேட்ட சிவன் உடைய கை
கரம் தடிவான் தலை கவ்வ
அது பற்றி
பித்து ஏறலின் கண்ணுதலான் இரந்து அடி வீழ துயர் தீர்த்த வேங்கடத்து எந்தை கண்டீர்
புரந்து-பாதுகாத்து – அடியேனைத் தன் பொன் அடிக்கீழ் வைக்கும் புண்ணியனே -பரிசுத்த பரதெய்வம் –

——————————————————————————

புண்ணியம் காமம் பொருள் வீடு பூதலத்தோர்க்கு அளிப்பான்
எண்ணி அம் காமன் திருத்தாதை நிற்கும் இடம் என்பரால்
நண்ணி அங்கு ஆம் அன்பரைக் கலங்காத் திரு நாட்டு இருத்தி
மண் இயங்காமல் பிறப்பு அறுத்து ஆளும் வடமலையே –38-

நண்ணி அங்கு ஆம் அன்பரைக் -விரும்பி தன்னிடத்து வந்து சேர்கின்ற பக்தர்களை
கலங்காத் திரு நாட்டு இருத்தி
மண் இயங்காமல்-மீண்டும் நிலா உலகத்தில் உழலாத படி
பிறப்பு அறுத்து ஆளும் வடமலையே —
அம் காமன் திருத்தாதை
புண்ணியம் காமம் பொருள் வீடு பூதலத்தோர்க்கு அளிப்பான்-சதுர்வித புருஷார்த்தங்களை கொடுத்து அருள
எண்ணி நிற்கும் இடம் என்பர் -சான்ட்ரொஎ -ஆல் -ஈற்று அசைச்சொல்
சமன் கொள் வீடு தரும் தடம் குன்றமே
திருவேங்கட மா மழை ஒன்றுமே தொழ நம் வினை ஓயுமே –

————————————————————————-

வடம் அலை அப்பன்னகம் சேர்ந்தவன் இடை மங்கை கொங்கை
வடம் அலையப் பன் அரும் போகம் துய்த்தவன் மாயன் கண்ணன்
வடமலை அப்பன் அடி போற்றி ஐவர் மயக்கு கர
வடம் அலையப் பன்னிரு நாமம் நாவின் மலக்குவனே –39-

இது யமகச் செய்யுள் –
வடம் அலை அப்பன்னகம் சேர்ந்தவன் –
வடம் -ஆலிலையிலும் –
அலை அப்பன்னகம் -திருப்பாற் கடலில் அந்த ஆதிசேஷன் இடத்தில் சேர்ந்து கண் வளர்ந்து அருளினவன்
இடை மங்கை கொங்கை வடம் அலையப் -இடையர் ஆயர் குலப் பெண்ணான நப்பின்னை பிராட்டி ஸ்தனங்களில் அணிந்த ஹாரங்கள் அசையும் படி
பன் அரும் போகம் துய்த்தவன் -அளவிறந்த இன்பத்தை அனுபவித்தவனும்
மாயன் கண்ணன் வடமலை அப்பன் அடி போற்றி-திருவடிகளை ஸ்துதித்து
ஐவர் மயக்கு கர வடம் அலையப் -பஞ்ச இந்த்ரியங்கள் மனத்தை மயங்கச் செய்கிற வஞ்சனை ஒழியுமாறு
பன்னிரு நாமம் நாவின் மலக்குவனே– துவாதச திரு நாமங்களை நாவினால் விடாமல் சொல்வேன் –
மலக்குதல் -உச்சரித்து அடிப்படுத்தல் -பயிற்றுதல்

————————————————————————–

மலங்கத் தனத்தை உழன்று ஈட்டி மங்கையர் மார்பில் வடம்
அலங்கத் தனத்தை அணைய நிற்பீர் அப்பன் வேங்கடத்துள்
இலங்கு அத்தன் அத்தை மகன் தேரில் நின்று எதிர் ஏற்ற மன்னர்
கலங்க தன் நத்தைக் குறித்தானைப் போற்றக் கருதுமினே –40-

மலங்கத்-மனம் கலங்கும் படி – தனத்தை உழன்று ஈட்டி-பலவிடத்தும் அலைந்து சேர்த்து
மங்கையர் மார்பில் வடம் அலங்கத் தனத்தை அணைய நிற்பீர் அப்பன் வேங்கடத்துள் இலங்கு அத்தன்
அத்தை மகன் தேரில் -பாகனாய் -நின்று எதிர் ஏற்ற மன்னர் கலங்க தன் நத்தைக் குறித்தானைப் போற்றக் கருதுமினே —
பாஞ்சஜன்யம் ஊதி முழக்கிய எம்பெருமான்

———————————————————————-

கருத்து ஆதரிக்கும் அடியேனைத் தள்ளக் கருதிக் கொலோ
திருத்தாது அரிக்கும் ஐவர்க்கு இரை ஆக்கினை செண்பகத்தின்
மருத்தாது அரிக்கும் அருவி அறா வட வேங்கடத்துள்
ஒருத்தா தரிக்கும் படி எங்கனே இனி உன்னை விட்டே –41-

கருத்து ஆதரிக்கும் அடியேனைத் -மனத்தில் உன்னையே விரும்புகின்ற தாசனான என்னை
தள்ளக் கருதிக் கொலோ –
திருத்தாது -ஆட்கொண்டு சீர் திருத்தாமல்
அரிக்கும் ஐவர்க்கு இரை ஆக்கினை -கெடுக்கும் பஞ்ச இந்த்ரியங்களுக்கு என்னை உணவாக்கி விட்டாய்
செண்பகத்தின் மருத்தாது அரிக்கும் -மரு-வாசனையுள்ள -தாது -மகரந்தப் பொடிகளை -அரித்துக் கொண்டு வரும்
செண்பகம் -மரத்துக்கும் புஷ்பத்துக்கும் பெயர்
அருவி அறா வட வேங்கடத்துள் ஒருத்தா -அத்விதீயன்
தரிக்கும் படி எங்கனே இனி உன்னை விட்டே -உன்னை அன்றி உய்யும் வகை எவ்வாறோ –
அநந்ய கதித்வத்தை வெளியிட்டு அருள்கிறார் –

———————————————————————-

உன்னைக் கரிய மிடற்றன் அயன் முதல் உம்பர் எல்லாம்
பொன்னைக் கரி ஒத்த போதும் ஒவ்வார் புகழ்க் கோசலை ஆம்
அன்னைக்கு அரிய முத்தே அப்பனே உன்னை அன்றி பின்னை
முன்னைக் கரி அளித்தாய்க்கு உவமான மொழி இல்லையே –42-

புகழ்க் கோசலை ஆம் அன்னைக்கு அரிய முத்தே –அப்பனே
பொன்னைக் கரி ஒத்த போதும் -கரி பொன்னை ஒத்த போதும்
உன்னைக் கரிய மிடற்றன் அயன் முதல் உம்பர் எல்லாம் ஒவ்வார்
ஆதலால்
முன்னைக் கரி அளித்தாய்க்கு
உன்னை அன்றி பின்னை உவமான மொழி இல்லையே –ஒப்பார் மிக்கார் இலையாய மா மாயன் அன்றோ நீ

————————————————————————-

இல்லைக் கண்டீர் இன்பம் துன்பம் கண்டீர் கண்ட ஏந்திழையார்
சொல்லை கண்டு ஈர் அமுது என்னும் தொண்டீர் தொல் அசுரன் நிறம்
கல் ஐக் கண்டீரவத்தை திரு வேங்கடவக் காவலனை
மல்லைக் கண் தீர் தரத் தேய்த்தானை வாழ்த்துமின் வாழுகைக்கே –43-

கண்ட ஏந்திழையார் -கண்ணுக்கு இலக்காகிய தரித்த ஆபரணங்கள் யுடைய மகளிரது
சொல்லை கண்டு ஈர் அமுது என்னும்
தொண்டீர் -அவர்கட்கு தொண்டு பூண்டு ஒழுகுபவர்களே
இல்லைக் கண்டீர் இன்பம்-அவ்வாறு ஒழுகுதலில் உண்மையான இன்பம் இல்லை ஏற்று அறிவீர்கள்
துன்பம் கண்டீர் -பலவகைத் துன்பமே உண்டு என்றும் அறிவீர்கள்
வாழுகைக்கே -இனி நீங்கள் பேரின்ப வாழ்வு பெறுகைக்காக
தொல் அசுரன் நிறம் -பழமையான இரணியாசுரனுடைய மார்பை
கல்-கீண்ட -கல்லுதல் -இடத்தல் –
ஐக் கண்டீரவத்தை -அழகிய நரசிங்க மூர்த்தி யானவனும் -கண்டம் -கழுத்து -அரவம் -ஓசை -மிடற்றில் தொனி யுடையவன்
திரு வேங்கடவக் காவலனை -காவலன் -அரசன் –காத்த வில் வலவன் -காவல் அன் -ரஷிக்கும் தொழில் கொண்டவன்
மல்லைக் கண் தீர் தரத் தேய்த்தானை -மல்லர்களை கண் கெடும்படி சிதத்தவனை -கண்ணோட்டம் இல்லாமல் என்றுமாம் –
வாழ்த்துமின் –பல்லாண்டு பாடி ஸ்துதியுமின்-

—————————————————————————–

கைத்தனு மோடுஇசை வெற்பு எனக் காண வெவ்வாணன் என்னும்
மத்தன் நுமோடு இகல் செய்வன் என்றே வந்துவை உறு வேல்
அத்தனும் மோடியும் அங்கியும் ஓட என் அப்பனுக்குப்
பித்தனும் ஓடினன் அங்கத்துத் தான் என்றும் பெண்ணன் என்றே –44-

கைத்தனு மோடுஇசை வெற்பு எனக் காண-கையில் ஏந்திய வில்லானது உயர்ச்சி பொருந்திய மலை போலத் தோன்ற
வெவ்வாணன் என்னும் மத்தன் -கொடிய பாணாசுரன் என்கிற உன்மத்தன்
நுமோடு இகல் செய்வன் என்றே வந்து
என் அப்பனுக்குப்
வை உறு வேல் அத்தனும் -கூர்மை மிக்க வேலாயுதத்தை ஏந்திய முருகனும்
மோடியும் -துர்க்கையும் -அங்கியும் -அக்னியும் ஓட
பித்தனும் ஓடினன் -சிவனும் ஓடினான்
அங்கத்துத் தான் என்றும் பெண்ணன் என்றே -உடம்பில் பெண்ணை உடையவன் என்று சொல்லிக் கொண்டே –
பெண் என்றால் பேயும் இரங்குமே-

——————————————————————————

பெண் ஆக்கு விக்கச் சிலை மேல் ஒருதுகள் பெய்த பொற்றாள்
அண்ணாக்கு விக்கல் எழும் போது எனக்கு அருள்வாய் பழிப்பு
நண்ணாக் குவிக்கச்சு இள முலைப் பூ மகள் நாயகனே
எண் ஆக குவிக்கக் குழல் ஊதும் வேங்கடத்து என் கண்ணனே –45–
பழிப்பு நண்ணாக் -யாதொரு நிந்தனையும் அடையாத
குவிக்கச்சு இள முலைப் பூ மகள் நாயகனே
எண் ஆக குவிக்கக் குழல் ஊதும்-பசி நிரைகள் கூட்டத்தை ஒருங்கு சேர்க்கும் பொருட்டு குழல் ஊதும்-
வேங்கடத்து என் கண்ணனே –
பெண் ஆக்கு விக்கச் சிலை மேல் ஒருதுகள் பெய்த பொற்றாள்
அண்ணாக்கு விக்கல் எழும் போது -அந்திம காலத்தில்
எனக்கு அருள்வாய்
திருவடியே வீடாய் இருக்கும் -தாள் எனக்கு அருள்வாய் –

————————————————————————-

கண் நனையேன் நெஞ்சு உருகேன் நவைகொண்டு என் கண்ணும் நெஞ்சும்
புண் அணையேன் கல் அணையேன் என்றாலும் பொற் பூங்கமலத்
தண் அனையே நல்ல சார்வாக வேங்கடம் சார்ந்து மணி
வண்ணனையே அடைந்தேற்கு இல்லையோ தொல்லை வைகுந்தமே –46-

கண் நனையேன் நெஞ்சு உருகேன் நவைகொண்டு என் கண்ணும் நெஞ்சும்
புண் அனையேன் கல் அணையேன் என்றாலும் –
இளகாத மனஸ் உடையேன் என்றாலும் ஆனந்த பாஷ்பம் பெறாத ஊனக் கண்களின் இழிவு தோன்ற
கல் போன்ற மனசும் புண் போன்ற கண்ணும் கொண்டேன் ஆகிலும்
நவை குற்றம் -நெஞ்சு உருகாமையும் கண் நனையாமையும் என்றுமாம்
பொற் பூங்கமலத் தண் அனையே நல்ல சார்வாக -பெரிய பிராட்டி யாரையே சார்வாக கொண்டு
வேங்கடம் சார்ந்து மணி வண்ணனையே அடைந்தேற்கு இல்லையோ தொல்லை வைகுந்தமே -கிடையாமல் போகுமோ-

————————————————————————-

வைகுந்தம் ஆய விழி மாதர் வேட்கையை மாற்றி என்னை
வைக்கும் தம் ஆய வினை நீக்கிய முத்தர் மாட்டு இருத்தி
வை குந்தம் மாய ஒசித்தாய் வட திரு வேங்கடவா
வைகுண்ட மாயவனே மாசு இலாத என் மா மணியே –47-

வை குந்தம் ஆய விழி மாதர் வேட்கையை மாற்றி -கூரிய வேல் படை போன்ற
கண்கள் யுடைய மகளிர் பக்கலில் உண்டான ஆசையை எனக்கு ஒழித்து
என்னை வைகும் தம் ஆய வினை நீக்கிய முத்தர் மாட்டு இருத்தி -வை
தங்கிய தமது தொகுதியான கர்மத்தை போக்கிய முக்தர்களில் ஒருவனாக இருக்கச் செய்து அருளாய்
குந்தம் மாய ஒசித்தாய்
வட திரு வேங்கடவா
வைகுண்ட மாயவனே
மாசு இலாத என் மா மணியே —என் தன் மாணிக்கமே -திருவிருத்தம்

———————————————————————-

பிரிவாற்றாகத தலைவியின் துயர் கண்ட செவிலித்தாய் இரங்கல் –

மணி ஆழி வண்ணன் உகந்தாரைத் தன் வடிவு ஆக்கும் என்றே
துணி ஆழிய மறை சொல்லும் தொண்டீர் அது தோன்றக் கண்டோம்
பணி யாழின் மென்மொழி மாலாகி பள்ளி கொள்ளாமல் சங்கோடு
அணி ஆழி நீங்கி நின்றாள் வேங்கடேசனை ஆதரித்தே –48-

தொண்டீர்
மணி ஆழி வண்ணன் உகந்தாரைத் தன் வடிவு ஆக்கும் என்றே
துணி ஆழிய மறை சொல்லும்
சாலோக்யம் -சாமீப்யம் -சாரூப்யம் -சாயுஜ்யம் -போன்ற சாம்யா பத்தி அருள்வான் என்று பொருள்களை துணிந்து கூறும் வேதங்கள் சொல்லும்
அது தோன்றக் கண்டோம் -அத்தை இங்கே கட்புலனாக தெரியப் பார்த்தோம்
எங்கனம் எண்ணின்
பணி யாழின் மென்மொழி -நுனி வளைந்த வீணையின் இசை மென்மையான சொற்களை யுடைய இப்பெண்
வேங்கடேசனை ஆதரித்தே-
அவனைப் போலவே
மாலாகி– பள்ளி கொள்ளாமல் –சங்கோடு அணி ஆழி நீங்கி நின்றாள் –
ஆசை –மயக்கம்– பள்ளி கொள்ளாமை -சயனத் திருக் கோலம் இல்லாமல் நின்ற திருக்கோலமாகி –
சங்கு சக்கரங்களை தொண்டைமான் சக்கரவர்த்தி இடம் கொடுத்து நீங்கி நின்றமை –
செம்மொழிச் சிலேடை யாக சாதித்து அருள்கிறார்

———————————————————————

ஆதரிக்க பட்ட வாள் நுதல் மங்கையர் அங்கை மலர்
மீ தரிக்கப் பட்ட நின் அடியே வெள் அருவி செம்பொன்
போது அரிக்கப் பட்டம் சூழ் வேங்கட வெற்ப போர் அரக்கர்
தீது அரிக்க பட்ட கானகத்தூடு அன்று சென்றதுவே –49-

வெள் அருவி -வெண்ணிறமான நீர் அருவிகள்
செம்பொன் போது அரிக்கப் பட்டம் சூழ் -சிவந்த பொன்னையும் -மலர்களையும் அரித்துக் கொண்டு வர -நீர் நிலைகள் சூழப் பெற்ற
வேங்கட வெற்ப
பட்ட வாள் நுதல் -பொற் பட்டத்தை யணிந்த பிரகாசமான நெற்றியை யுடைய
மங்கையர் -பட்டத்து மனைவியர்
ஆதரிக்க -அன்பு செய்யவும் –
அங்கை மலர் மீ தரிக்கப் பட்ட நின் அடியே -அழகிய தாமரை மலர் போன்ற தங்கள் கைகளின் மீது தாங்கவும் பெற்ற உனது திருவடியே
அன்று -அந்நாளில்
போர் அரக்கர் தீது அரிக்க -போர் செய்ய வல்ல இராவணன் போன்ற இராக்கதர்களால் ஆகிய தீங்கை அளிப்பதற்கு
பட்ட கானகத்தூடு சென்றதுவே –உலர்ந்த காட்டினூடே சென்றது –

————————————————————————–

கிள்ளை விடு தூது –

சென்ற வனத்து அத்தை மைந்தரை வாழ்வித்து தீய மன்னர்
பொன்ற அனத்தத்தைச் செய்த பிரான் புகழ் வேங்கடத்துள்
நின்றவன் அத்தத்துஜ ஆயுதன் பாதத்துஎன் நேசம் எல்லாம்
ஒன்ற வனத்தத்தை காள் உரையீர் அறம் உண்டு உமக்கே –50-

வனத்தத்தை காள் -வனம் தத்தை காள் -அழகிய கிளிகளே
சென்ற வனத்து -பன்னிரண்டு வருஷம் வனவாசம் சென்ற காட்டின் இடத்து
அத்தை மைந்தரை வாழ்வித்து-குந்தி புத்ரர்கள் ஆகிய பாண்டவரை தீங்கின்றி வாழச் செய்து
பின்பு
தீய மன்னர் பொன்ற அனத்தத்தைச் செய்த பிரான் -துரியோதனன் முதலிய அரசர்கள் அழியுமாறு அவர்களுக்கு கேட்டை விளைத்த பிரபுவும்
அத்தத்துஜ ஆயுதன்-திருக்கைகளில் பஞ்ச ஆயதங்களை ஏந்தியவனும்
புகழ் வேங்கடத்துள் நின்றவன்- பாதத்து என் நேசம் எல்லாம்
ஒன்ற உரையீர் -பொருந்தச் சொல்லுங்கோள்
அறம் உண்டு உமக்கே -உங்கட்கு புண்ணியம் உண்டு

————————————————————————–

கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்–

ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் அருளிய திருவேங்கடத்தந்தாதி -1-25-

February 24, 2016

இத்திரு பிரபந்தம் -திரிபு -சொல் அணி -ஒவ்வொரு அடியிலும் முதல் எழுத்து மட்டும் மாறி
-இரண்டு முதலிய பல எழுத்துக்கள் ஒன்றாகவே இருந்து பொருள் வேறு படுவது
யமகம் -சொல் அணியாகவும் இருக்கும் -எழுத்து தொடர்களே மீண்டும் வருவது யமகம் என்பர்
இத்தை மடக்கு என்பர் –
——————————

சிறப்பு பாசுரம் -தனியன் -அபியுக்தர் அருளியது என்பர் –

இக்கரை யந்திரத்துத் பட்ட தென்ன இருவினையுள்
புக்கரை மா நொடியும் தரியாது உழல் புண் பிறப்பாம்
எக்கரை நீக்கிப் படித்தாரை அந்த இரு விரசைக்கு
அக்கரை சேர்க்கும் மணவாள தாசன் அருங்கவியே –

இக்கரை யந்திரத்துத் பட்ட தென்ன -இக்கு -கரும்பானது – அரை யந்திரத்துள் பட்டது என்ன –
இருவினையுள் புக்கரை மா நொடியும் தரியாது உழல் புண் பிறப்பாம்
எக்கரை நீக்கிப் -மணல் மேட்டைக் கடக்கச் செய்து
படித்தாரை அந்த இரு விரசைக்கு அக்கரை சேர்க்கும் மணவாள தாசன் அருங்கவியே –
இருள் சேர் இரு வினையும் சேரா இறைவன் பொருள் சேர் புகழ் புரிந்தார் மாட்டு -திருக்குறள் –

—————————————————

காப்பு –

நல்ல அந்தாதி திரு வேங்கடவற்கு நான் விளம்பச்
சொல் அவம் தாதின் வழு பொருள் சோர்வு அறச் சொல் வித்தருள்
பல்ல வந்தாதிசை வண்டார் குருகைப் பர சமயம்
செல்ல வந்து ஆதி மறைத் தமிழால் செய்த வித்தகனே –

நல்ல அந்தாதி திரு வேங்கடவற்கு நான் விளம்பச் -நான் பாடுமாறு
சொல் அவம் -சொற்குற்றங்கள்
தாதின் வழு -வினைப்பகுதிகளின் குற்றங்கள்
பொருள் சோர்வு -பொருள் குற்றங்களும்
அறச் சொல் வித்தருள் -சொல்வித்து அருள்வாய் என்றபடி –
பல்ல வந்தாதிசை வண்டார் -பல்லவம் தளிர்களிலும் -தாது -பூந்துகளிலும் –
இசை வண்டு ஆர் -நறு மணத்தை உட்கொள்ளும் பொருட்டு இசை பாடும் வண்டுகள் மொய்க்கப் பெற்ற
குருகைப் பர சமயம் செல்ல வந்து ஆதி மறைத் தமிழால் செய்த வித்தகனே -ஞான ஸ்வரூபியாய் உள்ளவனே

————————————————-

திருவேங்கடத்து நிலை பெற்று நின்றன சிற்றன்னையால்
தரு வேம்கடத்துத் தரை மேல் நடந்தன தாழ் பிறப்பின்
உருவேங்கள் தத்துக்கு உளத்தே இருந்தன உற்று அழைக்க
வருவேம் கடத்தும்பி அஞ்சல் என்று ஓடின மால் கழலே –1-

திருப் பாத வகுப்பு துறை
திருமாலினது திருவடிகளின் பெருமையை அருளிச் செய்து திரு பிரபந்தம் தொடங்குகிறார் –
திருவிலே தொடக்கி அருளிச் செய்கிறார்
சிற்றன்னையால் -கைகேயி தாயார் கட்டளையால்
தரு வேம்கடத்துத் தரை மேல் நடந்தன -மரங்கள் வேகப் பெற்ற கடும் சுரத்து நிலம் மேல் நடந்து சென்றன
தாழ் பிறப்பின் உருவேங்கள் -இழிந்த பிறப்பின் வடிவத்தை யுடைய எங்களது
தத்துக்கு -ஆபத்தை நீக்குதற்கு
உளத்தே இருந்தன
கடத்தும்பி-கடம் தும்பி -மத்ததை யுடைய யானையாகிய ஸ்ரீ கஜேந்திர ஆழ்வான்
உற்று அழைக்க -முதலையால் பற்றப் பட்டு துன்பம் உற்று ஆதி மூலமே என்று அழைக்க
வருவேம் அஞ்சல் என்று ஓடின மால் கழலே -அபய வார்த்தை சொல்லி விரைந்த திருமாலினது திருவடிகள்
திருவேங்கடத்து நிலை பெற்று நின்றன -அர்ச்சாவதாரத்தில் நிலை பெற்று நின்றன
நின்றன -இருந்தன -நடந்தன ஓடின -முரண் தொடை

—————————————————————-

மாலை மதிக்குஞ்சி – ஈசனும் போதனும் வாசவனும்
நூலை மதிக்கும் முனிவரும்-தேவரும் நோக்கி அந்தி
காலை மதிக்குள் வைத்து– ஏத்தும் திருமலை கைம்மலையால்
வேலை மதிக்கும் பெருமான் உறை திரு வேங்கடமே –2-

திவ்ய பிரபந்த தலைவனின் வாசஸ் ஸ்தானம் -பதி பிரபந்த துறை –
மாலை மதிக்குஞ்சி -அந்தி மாலைப்பொழுதில் விளங்கும் பிறைச் சந்த்ரனைத் தரித்த தலை மயிர் முடியை யுடைய
ஈசனும் போதனும் வாசவனும்
நூலை மதிக்கும் முனிவரும்-சாஸ்த்ரங்களை ஆராய்ந்து அறிகிற முனிவர்களும்
தேவரும் நோக்கி அந்தி காலை-காலையிலும் மாலையிலும் தர்சித்து
மதிக்குள் வைத்து–தமது அறிவில் வைத்து -மனத்தில் கொண்டு த்யானித்து
ஏத்தும் திருமலை
கைம்மலையால் வேலை மதிக்கும் பெருமான் உறை திரு வேங்கடமே —
கை வசப்படுத்தின மந்திர கிரி என்றுமாம் -மலைகள் போன்ற கை என்றுமாம் –
கைகளாகிய மலைகளைக் கொண்டு திருப் பாற் கடலைக் கடைந்த திருமால் எழுந்து அருளி இருக்கும் திரு வேங்கடமே –

————————————————————————–

வேங்கட மாலை அவியா மதி விளக்கு ஏற்றி அங்கம்
ஆம்கடம் ஆலயம் ஆக்கி வைத்தோம் அவன் சேவடிக்கே
தீங்கு அட மாலைக் கவி புனைந்தோம் இதின் சீரியதே
யாம் கட மால்ஐயி ராவதம் ஏறி இருக்குமதே –3-

வேங்கட மாலை
அவியா மதி விளக்கு ஏற்றி -கெடாத அறிவாகிய திரு விளக்கை மனத்தில் ஏற்றி வைத்து
அங்கம் ஆம்கடம் ஆலயம் ஆக்கி -உறுப்புகளை யுடைய எமது உடம்பைத் திருக் கோயிலாக அமைத்து
வைத்தோம் -அந்தக் கரணம் ஆகிய மனசாகும் கர்ப்ப கிருகத்தில் திருவேங்கடத்து திரு மாலை எழுந்து அருளிப் பண்ணி வைத்தோம்
அவன் சேவடிக்கே
தீங்கு அட -எமது பிறவித் துன்பங்களை அப்பெருமான் அழிக்குமாறு
மாலைக் கவி புனைந்தோம்-அவன் சேவடிக்கே கவி மாலை புனைந்தோம்
இதின் சீரியதே -யாம் கட மால்ஐயி ராவதம் ஏறி இருக்குமதே-இந்திர பதவியும் இதை விட சிறந்தது இல்லையே –
நான்கு தந்தங்கள் கொண்ட ஐராவதம் என்பர் –

ஞானச் சுடர் விளக்கு ஏற்றினேன்
மார்வம் என்பதோர் கோயில் அமைத்து மாதவன் என்னும் தெய்வத்தை நாட்டி
புனையும் கண்ணி எனதுடைய வாசகம் செய்யும் மாலையே
செய்ய சுடர் ஆழியான் அடிக்கே சூட்டினேன் சொல்மாலை

———————————————————————-

இருக்கு ஆரணம் சொல்லும் எப்பொருள் இன்பமும் எப்பொருட்கும்
கருக் காரணமும் நல் தாயும் நல் தந்தையும் கஞ்சச் செல்வப்
பெருக்கு ஆர் அணங்கின் தலைவனும் ஆதிப் பெருந் தெய்வமும்
மருக்கு ஆர் அணவும் பொழில் வட வேங்கட மாயவனே –4-

இருக்கு ஆரணம் சொல்லும் எப்பொருள் இன்பமும் -மெய்ப்பொருள் இன்பமும் -பாட பேதம்
எப்பொருட்கும் கருக் காரணமும்
நல் தாயும் நல் தந்தையும் -அத்தனாகி அன்னையாகி -உலகுக்கு எல்லாம் முந்தித் தாய் தந்தை -எம்பிரான் எந்தை என்னுடைச் சுற்றம்
கஞ்சச் செல்வப் பெருக்கு ஆர் அணங்கின் தலைவனும்
ஆதிப் பெருந் தெய்வமும்
மருக்கு ஆர் அணவும் -மரு -வாசனை மிக்கு -கார் அணவும் -மேக மண்டலத்தை அளாவும் -பொழில் வட வேங்கட மாயவனே –

——————————————————————–

மாயவன் கண்ணன் மணி வண்ணன் கேசவன் மண்ணும் விண்ணும்
தாயவன் கண் நன் கமலமொப்பான் சரத்தால் இலங்கைத்
தீயவன் கண்ணன் சிரம் அறுத்தான் திரு வேங்கடத்துத்
தூயவன் கண் அன் புடையார்க்கு வைகுந்தம் தூரமன்றே –5-

மாயவன் கண்ணன் மணி வண்ணன் கேசவன்
மண்ணும் விண்ணும் தாயவன்
கண் நன் கமலமொப்பான் -புண்டரீகாஷன்
சரத்தால் இலங்கைத் தீயவன் கண்ணன் சிரம் அறுத்தான்-
இலங்கை தீய வன்கண்ணன் சிரம் சரத்தால் அறுத்தான்
திரு வேங்கடத்துத் தூயவன் கண் அன்புடையார்க்கு வைகுந்தம் தூரமன்றே –

—————————————————————

தூர இரும்புண் தரிக்கும் இக்காயத்தைச் சூழ் பிணிகாள்
நேர் அவிரும் புண்டரர்க்கு அருள்வான் நெடு வேங்கடத்தான்
ஈர இரும்புண்ட ரீகப் பொற் பாதங்கள் என் உயிரைத்
தீர இரும்பு உண்ட நீர் ஆக்குமாறு உள்ளம் சேர்ந்தனவே –6-

நேர் அவிரும் புண்டரர்க்கு அருள்வான் -நேர்மையாக விளங்கும் திருமண் காப்பை யுடைய ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு அருள்வான்
நீறு செவ்வே இடக் காணில் நெடுமால் அடியார் என்று ஓடும்
நெடு வேங்கடத்தான்
ஈர இரும்புண்ட ரீகப் பொற் பாதங்கள்-குளிர்ந்த பெரிய செந்தாமரை போன்ற பொலிவு பெற்ற இணை திருவடிகள்
என் உயிரைத் தீர இரும்பு உண்ட நீர் ஆக்குமாறு உள்ளம் சேர்ந்தனவே –
தம்மிடத்தில் லயம் படுத்தும் படி எனது மனத்தில் சேர்ந்து விட்டன
ஆதலால்
தூர இரும்–புண் தரிக்கும் இக்காயத்தைச் சூழ் பிணிகாள் –
எனது உடலை விட்டு தூரத்தில் சென்று பிழையுங்கோள்
நெய் குடத்தைப் பற்றி ஏறும் எறும்புகள் போல் நிரந்து எங்கும் கைக்கொண்டு நிற்கின்ற நோய்காள் காலம்பெற உய்யப் போமின் –
மெய்க்கொண்டு வந்து புகுந்து வேதப்பிரானார் கிடந்தார் -பைக்கொண்ட பாம்பணையோடும் பண்டு அன்று பட்டினம் காப்பே

———————————————————————

சேர்ந்து கவிக்கும் முடி கவித்தாய் சிறியேன் இதயம்
சார்ந்து உகவிக்கும் வரம் அளித்தாய் கொண்டல் தண்டலை மேல்
ஊர்ந்து கவிக்கும் வடமலையாய் பஞ்சு ஒழுக்கிய பால்
வார்ந்து உகவிக்கும் பொழுதில் அஞ்சேல் என்று வந்து அருளே –7-

சேர்ந்து-கிஷ்கிந்தை நகரைச் சார்ந்து -நண்பு பூண்டு
கவிக்கும் -ஸூ கரீவ மகா ராஜருக்கும்
முடி கவித்தாய் -விபீஷணனுக்கு முடி கவித்ததையும் கொள்ளலாம்
நின் மேல் கவி பாடவும் அருள் செய்தாய் என்னவுமாம்
சிறியேன் இதயம் சார்ந்து உகவிக்கும் வரம் அளித்தாய் கொண்டல் தண்டலை மேல் ஊர்ந்து கவிக்கும் வடமலையாய்
பஞ்சு ஒழுக்கிய பால் வார்ந்து உக விக்கும் பொழுதில்
பஞ்சைப் பாலில் நனைத்து அது கொண்டு பிழிந்து ஒழுக விட்ட பாலும் -கண்டம் அடைத்தததனால் உள்ளே இறங்கிச் செல்ல மாட்டாது
கடைவாயினின்று வழிந்து பெருக
விக்கும் பொழுதில் -விக்கல் எடுக்கின்ற அந்திம தசை எனக்கு நேரும் பொழுதில்
அஞ்சேல் என்று வந்து அருளே

———————————————————————–

வந்திக்க வந்தனை கொள் என்று கந்தனும் மாதவரும்
சிந்திக்க வந்தனை வேங்கட நாத பல் சீவன் தின்னும்
உந்திக் கவந்தனைச் செற்றாய் உனக்கு உரித்தாய் பின்னும்
புந்திக்கு அவம் தனிச் செய்து ஐவர் வேட்கையொரும் என்னையோ –8-

வந்திக்க -அடியேன் வணங்க
வந்தனை கொள் என்று -அவ்வணக்கத்தை அங்கீ கரிப்பாய் என்று பிரார்த்தித்து
கந்தனும் மாதவரும் -முருகனும் -முனிவர்களும்
சிந்திக்க வந்தனை-பிரத்யட்ஷமாக வந்து தோற்றி அருளினாய்
வேங்கட நாத
பல் சீவன் தின்னும் உந்திக் கவந்தனைச் செற்றாய்
உனக்கு உரித்தாய் பின்னும் -எனது உயிர் உனக்கு உரியதான பின்பும்
புந்திக்கு அவம் தனிச் செய்து ஐவர் வேட்கையொரும் என்னையோ –
பஞ்ச இந்த்ரியங்கள் சம்பந்தமான ஆசை என்னை தாக்கி வருத்தும் -இது என்ன அநீதி -இரங்கி அருள்வாய் –

————————————————————————-

தலைவனைப் பிரிந்து மாலை பொழுதுக்கும் அன்றில் பறவைக்கும் வருந்தும் தலைவிக்கு ஆற்றாது தோழி இரங்கல்

பொரு தரங்கத்தும் வடத்தும் அனந்தபுரத்தும் அன்பர்
கருது அரங்கத்தும் துயில் வேங்கடவ கண் பார்த்தருள்வாய்
நிருதர் அங்கத்து நிறம் போல் வரும் அந்தி நேரத்து அன்றில்
ஒரு தரம் கத்தும் பொழுதும் பொறாள் என் ஒரு வல்லியே –9-

பொரு தரங்கத்தும்-திருப் பார் கடலிலும்
வடத்தும் -ஆளிலையிலும்
அனந்தபுரத்தும்
அன்பர் கருது அரங்கத்தும் துயில்
வேங்கடவ
கண் பார்த்தருள்வாய்
நிருதர் அங்கத்து நிறம் போல் வரும் -இராக்கதர்கள் உடம்பு நிறம் போல் இருண்டு கறுத்து பயங்கரமாய்
அந்தி நேரத்து அன்றில் ஒரு தரம் கத்தும் பொழுதும் பொறாள் என் ஒரு வல்லியே
-பூம் கோடி போன்ற இவள் சகிக்க மாட்டாள் -கடாஷித்து அருள்வாய்

———————————————————————————

தலைவனைப் பிரிந்த தலைவி கடலோடு புலம்புதல் –

ஒரு மாது அவனி ஒரு மாது செல்வி உடன் உறைய
வரும் ஆ தவனின் மகுடம் வில் வீச வடமலை மேல்
கரு மாதவன் கண்ணன் நின் பால் திரு நெடும் கண் வளர்க்கைக்கு
அருமா தவம் என்ன செய்தாய் பணி எனக்கு அம்புதியே –10-

ஒரு மாது அவனி -மனைவியான பூதேவியும்
ஒரு மாது செல்வி -மற்றொரு மனைவியான ஸ்ரீ தேவியும்
உடன் உறைய –
வரும் ஆ தவனின் மகுடம் வில் வீச -உதயமாகும் சூரியன் போலே திரு அபிஷேகம் ஒளியை வீசவும்
வடமலை மேல் கரு மாதவன் கண்ணன்
நின் பால் திரு நெடும் கண் வளர்க்கைக்கு அருமா தவம் என்ன செய்தாய்
பணி எனக்கு அம்புதியே –கடலே எனக்கு சொல்லாய் என்றபடி
போக்கெல்லாம் பாலை -புணர்தல் நறும் குறிஞ்சி –ஆக்கம் சேரூடல் அணி மாருதம் –
நோக்கும் கால் இல்லிருக்கை முல்லை -இரங்கல் நறு நெய்தல் சொல்லிருக்கும் ஐம்பால் தொகை
இரங்கல் நெய்தல் நிலம் -கடலை முன்னிலைப்படுத்தி தலை மகள் பாசுரம்
மாலும் கரும் கடலே என்நோற்றாய்-வையகம் யுண்டு ஆலினிலைத் துயின்ற ஆழியான்
கோலக் கருமேனிச் செங்கண் மால் கண் படையுள் என்றும் திருமேனி நீ தீண்டப் பெற்று -போலே
உவர்க்கும் கரும் கடல் நீருள்ளான்-

—————————————————————————

அம்பரம் தாமரை பூத்து அலர்ந்தன்ன அவயவரை
அம்பரந்தாமரை அஞ்சன வெற்பரை ஆடகம் ஆம்
அம்பரம் தாம் அரை சூழ்ந்தாரை வாழ்த்திலர் ஐம்புலன் ஆம்
அம்பரம் தாம் மரை போல் திரிவாரை அகல் நெஞ்சமே –11-

அம்பரம் -கடலினிடத்து
தாமரை பூத்து அலர்ந்தன்ன அவயவரை –
கண் கை கால் முகம் வாய் உந்தி அனைத்து அவயங்களும் தாமரை பூத்து அலர்ந்தது போலேவே இருக்குமே –
கரு முகில் தாமரைக் காடு பூத்து -கம்பர்
அம்பரந்தாமரை -அழகிய பரமபததுக்கு உரியவரும்
அஞ்சன வெற்பரை -திருவேங்கடமுடையானை -அஞ்சனா சலம் என்பரே –
ஆடகம் ஆம் அம்பரம் தாம் அரை சூழ்ந்தாரை -பொன் மயமான பீதாம்பர தாரியை –
சூழ்ந்து இருந்து ஏத்துவர் பல்லாண்டு –
அம்பரம் கூரையும் கடலும் ஆகாயமும் –
வாழ்த்திலர்
ஐம்புலன் ஆம் அம்பரம் -ஐம்புலன்கள் ஆகிய வெட்ட வெளியிலே
தா மரை போல் திரிவாரை -தாவுகின்ற மான்களைப் போலே துள்ளி ஓடித் திரிபவர்களான கீழ் மக்களை
அகல் நெஞ்சமே —

————————————————————–

தலைவி தோழியர்க்கு அறத்தொடு நிற்றல்

நெஞ்சு உகந்தத்தை உமக்கு உரைத்தேன் இற்றை நீடு இரவு ஓன்று
அஞ்சு உகம் தத்தை விளைக்கும் என் ஆசை அது ஆம் இதழ் சொல்
கிஞ்சுகம் தத்தை அனையீர் இங்கு என்னைக் கெடாது விடும்
விஞ்சு கந்தத்தை விளைக்கும் துழாய் அண்ணல் வேங்கடத்தே –12-

நெஞ்சு உகந்தத்தை உமக்கு உரைத்தேன்
இற்றை நீடு இரவு ஓன்று -ஒரு இரவே
அஞ்சு உகம் -ஐந்து யுகம் போலே நீண்டு
தத்தை விளைக்கும் -துன்பத்தை மிகுவிக்கின்ற்றது
என் ஆசை அது ஆம் -நான் கொண்ட காதலே காரணமாம்
இதழ் சொல் -வாய் இதழும் சொல்லும்
கிஞ்சுகம்-முருக்க மலரையும் -கிம்சுகம் -பலாச மரம் -அதன் பூவுக்கும் கிளப் பேச்சுக்கும் தத்தை என்பர்
தத்தை -கிளி கொஞ்சிப் பேசும் பேச்சையும்
அனையீர்
இங்கு என்னைக் கெடாது-இனி நீங்கள் என்னை இங்கேயே வைத்து இருந்து கெடுத்திடாமல்
விடும் -விஞ்சு கந்தத்தை விளைக்கும் துழாய் அண்ணல் வேங்கடத்தே –
விடும் –திரு வேங்கட முடையானது திருமலையின் இடத்தே கொண்டு போய்ச் சேர்த்து விடுமின் –
மதுரைப் புறத்தே என்னை உய்த்திடுமின்
ஆணையால் நீர் என்னைக் காக்க வேண்டில் ஆய்ப்பாடிக்கே என்னை உய்த்திடுமின் –

——————————————————————–

வேங்கடத்து ஆரையும் ஈடேற்ற நின்றருள் வித்தகரைத்
தீங்கு அடத் தாரைப் புனைந்து ஏத்திலீர் சிறியீர் பிறவி
தாம் கடத்தாரை கடத்தும் என்று ஏத்துதிர் தாழ் கயத்துள்
ஆம் கடத்தாரை விலங்கும் அன்றோ சொல்லிற்று ஐயம் அற்றே –13-

வேங்கடத்து- ஆரையும் ஈடேற்ற நின்றருள் –
வித்தகரைத் -ஞான ஸ்வரூபியான எம்பெருமானை
தீங்கு அடத் தாரைப் புனைந்து ஏத்திலீர் -தீங்கு அட -பிறவித் துன்பங்களை அவன் அழிக்குமாறு –
தாரைப் புனைந்து ஏத்திலீர்-அவனுக்கு பிரியமான திருத் துழாய் முதலிய மாலைகளைச் சாத்தி ஸ்துதிக்காமல் இருக்கின்றீர்
சிறியீர் -அறிவு ஒழுக்கங்களிலே சிறியவர்களே
மற்று
பிறவி தாம் கடத்தாரை -தங்கள் பிறவிகளை தாங்களே கடத்த மாட்டாத சிறு தெய்வங்களை
கடத்தும் என்று ஏத்துதிர் -எங்கள் பிறவிகளை கடத்தும் என்று ஸ்துதிக்கின்றீர்
வந்த வினை தீர்க்க வகை யறியார் வேளூரர்-எந்த வினை தீர்ப்பார் இவர் –
தாழ் கயத்துள் ஆம் -ஆழ்ந்த தடாகத்தில் முதலை வாயில் அகப்பட்டுக் கொண்ட
கடத்தாரை விலங்கும் அன்றோ -மத நீர் பெருக்கை யுடைய மிருக சாதியாகிய யானையும் அல்லவோ
சொல்லிற்று ஐயம் அற்றே-ஆதி மூலமே -நாராயணா -ஒ மணி வண்ணா -என் ஆர் இடரை நீக்காய் என்று சொல்லிற்றே–

———————————————————————–

ஐயா துவந்தனை நாயேனை அஞ்சன வெற்ப என்றும்
கையாது உவந்தனை நின்னை அல்லால் கண்ணுதல் முதலோர்
பொய்யாது வந்து அனையார் முகம் காட்டினும் போற்றி உரை
செய்யாது வந்தனை பண்ணாது வாக்கும் என் சென்னியுமே –14-

ஐயா -ஐயனே
துவந்தனை -இரு வினைத் தொடர்பு யுடையேனான அடியேனை -நாயேனை அஞ்சன வெற்ப
என்றும் கையாது-எக்காலத்திலும் வெறுத்திடாதபடி
உவந்தனை-மகிழ்ந்து அடியேனாக இருக்கும் படி அங்கீ கரித்து அருள் செய்தாய்
நின்னை அல்லால்
கண்ணுதல் முதலோர் -சிவன் முதலிய தேவர்கள்
பொய்யாது வந்து அனையார் முகம் காட்டினும் -மெய்யாகவே வந்து வலிய முகம் காட்டினாலும்
அனையார் முகம் -அன்னை போன்ற முகம் காட்டினாலும் என்றுமாம்
போற்றி உரை செய்யாது வந்தனை பண்ணாது வாக்கும் என் சென்னியுமே —
மறந்தும் புறம் தொழா மாந்தர் அன்றோ
உலகம் உண்ட திருக் கரத்தனை அல்லது எண்ணாது ஒரு தெய்வத்தையே -அழகர் அந்தாதி –

——————————————————————

தலைவனைப் பிரிந்த தலைவியின் ஆற்றாமை கண்ட செவிலித்தாய் இரங்கல்

சென்னியில் அங்கை குவிக்கும் உயிர்க்கும் திகைக்கும் நின்னை
உன்னி இலங்கு ஐயில் கண் உறங்காள் உயர் வீடணனை
மன்னி இலங்கையில் வாழ்க என்ற வேங்கட வாண மற்று ஓர்
கன்னி இலம் கைக்கில் நின் பேர் கருணைக் கடல் அல்லவே –15-

உயர் வீடணனை மன்னி இலங்கையில் வாழ்க என்ற வேங்கட வாண -சரணாகத ரஷணத்தில் தீஷிதன் அன்றோ நீர்
உன்னை கூடிப் பிரிந்த எமது மகள்
நின்னை உன்னி
சென்னியில் அங்கை குவிக்கும்
உயிர்க்கும் திகைக்கும்-பெரு மூச்சு விடுகிறாள் -மோகித்து கிடக்கிறாள்
இலங்கு ஐயில் கண் உறங்காள் -பிரகாசிக்கும் வேலாயுதம் போன்ற கண்களை மூடித் துயில் கொள்ளாள்
கூரிய ஞானம் சங்கோசம் அடையாத நிலைமை என்றவாறு
மற்று ஓர் கன்னி இலம் -நாங்கள் இவளை அன்று வேறு பெண்ணை உடையோம் அல்லோம்
ஆத்ம ஸ்வரூப பூர்த்தி யுடையவள் அன்றோ இவள்
கைக்கில் நின் பேர் கருணைக் கடல் அல்லவே –நீ வெறுத்து உபேஷிப்பாய் ஆகில் தயாசிந்து என்ற உனது திருநாமம் நிலை பெறாதே
இவள் திறத்து என் செய்கின்றாயே

—————————————————————————

கடமா மலையின் மருப்பு ஒசித்தாற்கு கவி நடத்தத்
தடம் ஆம் அலைவற்ற வாளி தொட்டாற்கு என் தனி நெஞ்சமே
வடமா மலையும் திருப் பாற் கடலும் வைகுந்தமும் போல்
இடம் ஆம் அலைவு அற்று நின்றும் கிடந்தும் இருப்பதற்கே –16-

கடமா மலையின் மருப்பு ஒசித்தாற்கு
கவி-வானர சேனைகளை – நடத்தத் தடம் ஆம் அலைவற்ற -கடல் வற்றும்படி –
வாளி தொட்டாற்கு -ஆக்நேயாஸ்ரத்தை பிரயோகித்தவருக்கு
என் தனி நெஞ்சமே -ஒப்பற்ற நெஞ்சம் என்றுமாம் -மூன்று நிலைகளுக்கும் ஏற்றதனால் -சிறப்பித்துக் கூறி அருளுகிறார் என்றுமாம்
வடமா மலையும் திருப் பாற் கடலும் வைகுந்தமும் போல்
இடம் ஆம் அலைவு அற்று -ஸ்திரமாக -நின்றும் கிடந்தும் இருப்பதற்கே –
அத்திருப்பதிகளைக் காற்கடைக் கொண்டு அவ்விடங்களில் நின்றும் இருந்தும் கிடந்தும் செய்து அருளின நன்மைகளை எல்லாம்
என் நெஞ்சிலே யாய்த்து செய்தது
நிஹீன அக்ரேசரனான என்னை விஷயீ கரித்தவாறே திருமலையில் நிலையம் மாறி என் நெஞ்சிலே நின்று அருளினான்
தன் திருவடிகளிலே போக்யதையை எனக்கு அறிவித்த பின்பு பரம பதத்தில் இருப்பை மாறி என் நெஞ்சிலே போக ஸ்தானமாய் இருந்தான் —
திருப் பாற் கடலிலே கண் வளர்ந்து அருளின படியைக் காட்டி என்னுடைய சாம்சாரிகமான தாபத்தை தீர்த்த பின்பு
திருப் பாற் கடலில் கிடையை மாறி என் நெஞ்சிலே கண் வளர்ந்து அருளி தன் விடாய் தீர்ந்தான்
இப்படி என் பக்கல் காட்டி அருளின வ்யாமோஹம் என்னால் மறக்கலாய் இருக்கிறது இல்லை என்கிறார்

—————————————————————————-

இருப்பது அனந்தனில் எண்ணில் இல் வைகுந்தத்து என்பர் வெள்ளிப்
பருப்பதன் அம் தண் மலரோன் அறிகிலர் பார் அளந்த
திருப்பதன் நந்தன் மதலை நிற்கும் திரு வேங்கடம் என்
பொருப்பு அது அனந்தல் தவிர்ந்து உயிர்காள் தொழப் போதுமினே –17-

இருப்பது அனந்தனில் எண்ணில் இல் வைகுந்தத்து என்பர்-
தனது பரத்வம் தோன்ற ஆதி சேஷ திவ்ய சிங்காசனத்தின் மேல் வீற்று இருந்து -என்பர் மெய்யுணர்ந்த ஆன்றோர்
சென்றால் குடையாம் இத்யாதி
அத்திருக் கோலத்தை
வெள்ளிப் பருப்பதன் அம் தண் மலரோன் அறிகிலர்
பத்துடை அடியவர்க்கு எளியவன் பிறர்களுக்கு அரிய வித்தகன்
அது நிற்க
பார் அளந்த திருப்பதன் நந்தன் மதலை நிற்கும் திரு வேங்கடம் என் பொருப்பு
அது அனந்தல் தவிர்ந்து -சோம்பல் ஒளிந்து -உயிர்காள் தொழப் போதுமினே —
திருவேங்கட யாத்ரைக்கு தம்முடன் செல்ல நம்மை அழைக்கின்றார் -அனைவரும் உஜ்ஜீவிக்க வேண்டும் என்னும் பர சம்ருத்தி யுடையவர் ஆதலால் –

——————————————————————————–

போதார் அவிந்த வரையும் புகா அண்ட புற்புதத்தின்
மீது ஆர இந்த வினை தீர்க்க வேண்டும் -மண் விண்ணுக்கு எல்லாம்
ஆதார இந்தளம் தேன் பாடும் வேங்கடத்து அப்ப நின் பொற்
பாதார விந்தம் அல்லால் அடியேற்கு ஒரு பற்று இல்லையே –18-

போதார் அவிந்த வரையும் புகா-பிரமன் அழியும் அளவும் ஒடுங்குதல் இல்லாத -பிரமன் அழியும் போதும் உடன் அழியும் இயல்பினவான
அண்ட புற்புதத்தின் -நீர்க் குமிழிகள் போன்ற அண்ட கோளங்களுக்கு
மீது ஆர -மேலே உள்ள பரமபதத்தில் நான் சென்று சேரும் படி
இந்த வினை தீர்க்க வேண்டும் -இந்த கர்மங்களை போக்கி அருள வேண்டும் -விந்தம் வினை -விந்தய மலை போன்ற வினைத்தொகுதி -என்றுமாம்
மண் விண்ணுக்கு எல்லாம் ஆதார -ஸ்ரீ கூர்ம ரூபியாகவும் -திரு வயிற்றில் வைத்து நோக்கி அருளுவதாலும்
-திவ்ய சக்தியாலேயே அனைத்தும் நிலை பெறுவதாலும் –
இந்தளம் தேன் பாடும் வேங்கடத்து அப்ப -வண்டுகள் இந்தளம் என்னும் பண்ணைப் பாடுவதற்கு இடமான
சோலைகள் சூழ்ந்த திரு வேங்கட திருமலையில் எழுந்து அருளும் ஸ்வாமீ
நின் பொற் பாதார விந்தம் அல்லால் அடியேற்கு ஒரு பற்று இல்லையே

——————————————————————————-

தலைவனைப் பிரிந்த தலைவியின் வருத்தம் கண்டு ஆற்றாத தோழி சந்த்ரனை நோக்கி இரங்கி கூறல் –

பற்றி இராமல் கலை போய் வெளுத்து உடல் பாதி இரா
வற்றி இராப்பகல் நின் கண் பனி மல்கி மாசு அடைந்து
நிற்றி இராக மொழிச்சியைப் போல் நெடு வேங்கடத்துள்
வெற்றி இராமனை வேட்டாய் கொல் நீயும் சொல் வெண் மதியே –19-

பற்றி இராமல் -ஓர் இடத்தில் நிலைத்து தங்கி இராமல் எங்கும் உழன்று கொண்டு
கலை போய் -ஒளி மழுங்கப் பெற்று -உடல் மேளிதளால் ஆடை சோரப் பெற்று
வெளுத்து உடல் பாதி இரா வற்றி-தேயப்பெற்று
இராப்பகல் நின் கண் பனி மல்கி -கண்களில் நீர் நிரம்பப் பெற்று -உன்னிடத்து பனி நிரம்பப் பெற்று –
மாசு அடைந்து -நீராடாமல் தரையில் புரளுவதால் உடம்பில் தூசி படியப் பெற்ற -களங்கம் உற்று
நிற்றி இராக மொழிச்சியைப் போல் -இசைப்பாட்டு போல் இனிய சொற்களை யுடைய இவளைப் போல் நிற்கின்றாய்
அவளைப் போலவே
நெடு வேங்கடத்துள் வெற்றி இராமனை வேட்டாய் கொல் நீயும் சொல் வெண் மதியே
-திருவேங்கமுடையானை விரும்பினாயோ -சொல்வாய் -வெண்ணிற சந்திரனே –
நைவாய எம்மே போல் நாண் மதியே நீ இந்நாள் மைவான் இருள் அகற்றாய் மாழாந்து தேம்புதியால்
ஐவாய் அரவணை மேல் ஆழிப் பெருமானார் மெய் வாசகம் கேட்டு உன் மெய் நீர்மை தோற்றாயே -திருவாய்மொழி
செம்மொழிச் சிலேடை -தலைவிக்கும் வெண்மதிக்கும் –

—————————————————————————

மதி ஆதவன் கதிர் மின்மினி போல் ஒளிர் வைகுந்தம் தா
மதியாது அவன் தர வாழ்ந்திருப்பீர் வட வேங்கடவன்
மதியாத வன் கடத்துள் தயிர் வாய் வைத்த மாயப் பிரான்
மதியாதவன் உரம் கீண்டான் கழல் சென்னி வைத்திருமே –20-

மதியாத வன் கடத்துள் தயிர் வாய் வைத்த மாயப் பிரான் –
கடத்துள் மதியாத வன்தயிர் வாய் வைத்த மாயப் பிரான் –
குடத்துள் வைத்திருந்த கடையாத கட்டித் தயிரை உண்டருளிய மாயப்பிரான்
மதியாதவன் உரம் கீண்டான் -இரண்யாசுரன் மார்பை கை நகத்தால் கீண்டு அருளினவன்
வட வேங்கடவன் கழல் சென்னி வைத்திருமே —
அதன் பயனாக
மதி ஆதவன் கதிர் மின்மினி போல் ஒளிர் வைகுந்தம்-சந்திர சூரியர்கள் தேஜஸ் மின்மினி போலே ஆகும் படி
திவ்ய தேஜோ ரூபமான ஸ்ரீ வைகுண்டம்
தாமதியாது அவன் தர வாழ்ந்திருப்பீர் –இப் பிறப்பின் முடிவிலேயே அவன் கொடுத்து அருள -பெற்று நீங்கள் நிலையாக வாழ்ந்து இருப்பீர்
சரணமாகும் தன் தால் அடைந்தார்கட்கு எல்லாம் மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான் –

————————————————————————

இருபது மந்தரத் தோளும் இலங்கைக்கு இறைவன் சென்னி
ஒருபதும் அந்தரத்தே அறுத்தோன் அப்பன் உந்தி முன் நாள்
தருபதுமம் தர வந்தன நான்முகன் தான் முதலா
வருபதுமம் தரம் ஒத்த பல் சீவனும் வையமுமே –21-

இருபது மந்தரத் -மந்திர மலை போன்ற தோளும் -இலங்கைக்கு இறைவன் சென்னி ஒருபதும் அந்தரத்தே -ஆகாயத்தே -அறுத்தோன்
தோள்களும் தலைகளும் ஆகாயத்தை அலாவி வளர்ந்துள்ளனவை ஆதலால் அந்தரத்தே என்கிறார்
உடம்பின் நின்று வேறு படும் படி அறுத்தவன் -அந்தரத்தே அறுத்தோன் என்றுமாம் -போரின் இடையிலே அறுத்தோன் -என்றுமாம்
அந்தரம் -ஆகாயம் –வேறுபாடு -இடை
அப்பன் உந்தி முன் நாள் தருபதுமம் -பூத்த தாமரை மலர்
தர நான்முகன் தான் முதலா வரு-படைக்க பிரமன் முதலாக வருகின்ற
பதுமம் தரம் ஒத்த பல் சீவனும் வையமுமே வந்தன–பதுமம் என தொகை-
கோடியினால் பெருக்கிய கோடி – -கோடான கோடி -எனவுமாம் -யளவினவான பல பிராணி வர்க்கங்களும்
உலகங்களும் தோன்றின -பொருள்களை வைக்கும் இடம் வையம் -என்றவாறு

————————————————————————-

வையம் அடங்கலும் ஓர் துகள் வாரி ஒருதிவலை
செய்ய மடங்கல் சிறு பொறி மாருதம் சிற்றுயிர்ப்பு
துய்ய மடங்கல் இல் ஆகாயம் தான் விரல் தோன்றும் வெளி
வெய்ய மடங்கல் வடிவான வேங்கட வேதியற்கே –22-

வெய்ய மடங்கல் வடிவான-பயங்கரமான நரசிம்ஹ வடிவமாகிய -பிடரி மயிர் மடங்குதலை யுடைய ஆண் சிங்கம் என்றவாறு
வேங்கட வேதியற்கே –வேத வேத்யன் -வேத பிரதிபாத்யன் –
ஐம் பெரும் பூதங்களில்
வையம் அடங்கலும் ஓர் துகள்-பூமி முழுவதும் ஒரு தூசியம்
வாரி -அடங்கலும் -ஒருதிவலை -ஜலம் முழுவதும் ஒரு நீர்த்துளியாம்
செய்ய மடங்கல் -அடங்கலும் -சிறு பொறி -செந்நிறமான அக்னி முழுவதும் சிறிய அனல் பொறியாம் –
மாருதம் அடங்கலும் -சிற்றுயிர்ப்பு -காற்று முழுவதும் ஒரு சிறிய மூச்சாம்
துய்ய மடங்கல் இல் ஆகாயம் தான் -அடங்கலும் –சுத்த
மற்ற நான்கு பூதங்களும் தன்னுள் அடங்கப் பெற்ற பெருமையால் மடங்கல் இல் ஆகாயம் என்கிறார்
விரல் தோன்றும் வெளி -விரல்களின் இடையே தோன்றும் சிறிய இடைவெளியாம்
நரசிம்ஹ விஸ்வரூப பெருமையை அருளிச் செய்கிறார் –

—————————————————————————

வேதா வடம் அலை வெங்காலன் கையில் விடுவித்து என்னை
மாதா வடம் அலை கொங்கை உண்ணாது அருள் -மண் அளந்த
பாதா வடம் அலை மேல் துயின்றாய் கடற் பார் மகட்கு
நாதா வட மலையாய் அலர் மேல் மங்கை நாயகனே –23-

மண் அளந்த பாதா வடம் அலை மேல் துயின்றாய்-அலை மேல் வடம் துயின்றாய்
கடற் பார் மகட்கு நாதா -கடல் சூழ்ந்த நில வுலகத்தின் அதிதேவதை க்கு நாதன் -சீதா பிராட்டிக்கு கொழுநன் என்றுமாம்
வட மலையாய் அலர் மேல் மங்கை நாயகனே -பத்மாவதி தாயார் கொழுநன்
என்னை
வேதா வடம் அலை வெங்காலன் கையில் விடுவித்து -பிரமனும் -பாசத்தால் கட்டி வருத்தும் -கொடிய யமனும் என்கிற
இவர்களது கைகளின் நின்றும் விடுதல் பண்ணி
பிறவித்துன்பம் இல்லாதபடியும் -மரண வேதனையும் நர துன்பமும் இல்லாத படி யும்
யான் இனி
மாதா வடம் அலை கொங்கை உண்ணாது அருள் –
ஒரு தாயினது ஆரங்கள் புரளப் பெற்ற ஸ்தனங்களின் பாலை உண்ணாத படி அருள் செய்வாய் -மீளவும் பிறப்பு இல்லாத படி –

———————————————————————————

நாயகராத் திரியும் சில தேவர்க்கு நாண் இலை கொல்
தூய கராத்திரி மூலம் எனாமுனம் துத்திப் பணிப்
பாயக ராத்திரி மேனி அம்மான் பைம்பொன் வேங்கடவன்
தீய கராத்திரி சக்கரத்தால் கொன்ற சீர் கண்டுமே –24-

தூய கராத்திரி -பரிசுத்தமான யானை -கர அத்ரி -துதிக்கை யுடைய மலை – யானை என்றபடி
மூலம் எனாமுனம்-ஆதி மூலமே என்று கூப்பிடுவதற்கு முன்னமே –
துத்திப் பணிப் பாயக ராத்திரி மேனி அம்மான் பைம்பொன் வேங்கடவன் –
புள்ளிகளை யுடைய படம் உள்ள ஆதிசேஷன் ஆகிய சயனத்தையும் இருள் போலே கரிய திரு மேநியையும் உடைய தலைவனும்
பசும் பொன் விளையும் திருவேங்கட திருமலையில் எழுந்து அருளி இருப்பவனுமான எம்பெருமான்
தீய கரா -கொடிய முதலையை
திரி சக்கரத்தால் கொன்ற -சுழற்றி விட்ட சக்ராயுதத்தால் கொன்ற
சீர் கண்டுமே –சிறப்பை பார்த்து இருந்தும்
அவனே பரம் பொருள் என்று சங்கையே இல்லாமல் நிரூபணம் ஆனபின்பும்
நாயகராத் திரியும் சில தேவர்க்கு நாண் இலை கொல்-கடவும் என்று திரிகிற
வேறு சில தேவர்களுக்கு வெட்கம் இல்லையோ –

——————————————————————————–

கண்டவன் அந்தரம் கால் எரி நீர் வையம் காத்து அவை மீண்டு
உண்டவன் அம் தரங்கத்து உறைவான் உயர் தந்தை தமர்
விண்டவன் அந்த மேலவன் வேங்கடமால் அடிமை
கொண்ட அனந்தரத்து உம்பர் நினைக்கவும் கூற்று அஞ்சுமே –25–

கண்டவன் அந்தரம் கால் எரி நீர் வையம் -பஞ்ச பூதங்களையும் சிருஷ்டித்தவன் -உத்பத்தி கிரமத்தில் அருளிச் செய்கிறார்
காத்து அவை மீண்டு உண்டவன் -ரஷித்து மீண்டும் -கல்பாந்தர காலத்தில் தனது திருவயிற்றிலே உண்டு சம்ஹரித்தவன்
அம் தரங்கத்து உறைவான் -அழகிய திருப் பாற கடலிலே பள்ளி கொண்டு இருப்பவனும்
அந்தரங்கத்து உறைவான் -அடியார்கள் மனத்துள்ளான் என்றுமாம்
உயர் தந்தை தமர் விண்டவன் -சிறந்த தந்தையும் மற்றைய உறவினரும் இல்லாதவன் -கர்மவச்யன் இல்லாதவன்
உயர் அர்த்தம் விண்டவன் -ஸ்ரீ கீதா உபநிஷத் அருளிச் செய்தவன்
அந்த மேலவன்-பரம பதத்தில் எழுந்து அருளி இருப்பவனும்
ஆகிய
நம் தரம் மேலவன் -புருஷோத்தமன் என்றுமாம்
வேங்கடமால் -திருவேங்கட திருமலையில் நித்ய வாஸம் செய்து அருளும் திருமாலுக்கு
அடிமை கொண்ட அனந்தரத்து -அடிமை செய்தலை மேற் கொண்ட பின்பு
உம்பர் நினைக்கவும் கூற்று அஞ்சுமே -உடலையும் உயிரையும் வெவேறு கூறாக்கும் தேவன் கூற்று என்றவாறு –
-சாதுவராய் போதுமின்கள் என்றான் நமனும் தன் தூதுவரை கூவிச் செவிக்கு –

—————————————————————————————————–

கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்–

ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் அருளிய திருவேங்கட மாலை -76-100-

February 23, 2016

தக்க மறையோர் நாவும் தண் சாரலின் புடையும்
மிக்க மனு வளையும் வேங்கடமே -அக்கு அரவம்
பூண்டார்க்கு மால் துடைத்தார் பொங்கு ஓத நீர் அடைத்து
மீண்டு ஆர்க்கு மாறு உடைத்தார் வெற்பு –76-

தக்க மறையோர் நாவும் -தகுதி யுடைய அந்தணர்களின் நாக்கும்
மிக்க மனு வளையும்-சிறந்த மந்த்ரம் உச்சாரணத்தால் பொருந்தப் பெற்ற
தண் சாரலின் புடையும் -குளிர்ந்த அம்மலைச் சாரல்களின் பக்கங்களும்
மிக்க மனு வளையும்-மிகுதியான மனிதர்கள் பிரதஷிணம் செய்யப் பெற்ற
வேங்கடமே –
அக்கு அரவம் பூண்டார்க்கு மால் துடைத்தார் -எலும்பு மாலையும் -ருத்ராஷ மாலையாகவுமாம் -சர்ப்பங்களும் ஆபரணமாக தரித்த
சிவபெருமானுக்கு பிரமகத்தி தோஷத்தால் வந்த மயக்கத்தை போக்கி அருளியவரும்
பொங்கு ஓத நீர் அடைத்து மீண்டு ஆர்க்கு மாறு உடைத்தார் வெற்பு —
பொங்குகிற அலைகளை யுடைய கடலை அணை கட்டி மறித்து பின்பு ஆரவாரிக்கும் படி
அத் திருவணையை உடைத்து அருளின திருமால் யுடைய திருமலை –

——————————————————————

நீடு கொடு முடியும் நீதி நெறி வேதியர்கள்
வீடும் மகம் மருவும் வேங்கடமே –கோடும்
கருத்துள் அவ மாலையார் காணாமல் நின்ற
மருத்துளவ மாலையார் வாழ்வு –77–

நீடு கொடு முடியும் -உயர்ந்த அம்மலைச் சிகரங்களும் -மேல் வளைந்து இருத்தலால் -கொடு முடி என்பர் -கொடுமை -வளைவு –
மகம் மருவும் -வானத்தில் செல்லும் மக நட்சத்திரம் பொருந்தப் பெற்ற -மற்ற நஷத்ரங்களுக்கு உப லஷணம்
நீதி நெறி வேதியர்கள் வீடும் -நியாய மார்க்கத்தில் நடக்கின்ற அந்தணர்கள் யுடைய கிருகங்களும்
மகம் மருவும் -யாகங்கள் பொருந்தப் பெற்ற
அவர்கள் வீடு மக மருவும் -புத்திர பாக்கியம் பொருந்தப் பெற்ற கிருகங்கள் என்றுமாம்
வேங்கடமே —
கோடும் கருத்துள்-நேர்மை தவறிய மனத்தில்
அவ மாலையார் -அவம் மாலையார் -வீண் எண்ணங்களின் வரிசைகளை யுடையவர்கள் -அடிமைக் கருத்து இல்லாதவர்கள் –
காணாமல் -தமது ஸ்வரூபத்தை காண ஒண்ணாத படி
நின்ற -அவர்கட்கு புலப்படாமல் நின்ற
அந்தர்யாமி மனத்தூய்மை யுள்ளவர்களுக்கே புலப்படுவான்
வீண் எண்ணங்களின் மாலை தொடர்ச்சியை யுடைய நான் என்ட்டிருமாம் –
மருத்துளவ மாலையார் வாழ்வு -நறு மணம் உள்ள திருத் துழாய் மாலையை யுடையரான திருமால் எழுந்து அருளி இருக்கும் திவ்ய தேசம் –

—————————————————————————

சீதம் கொள் சாரலினும் சீர் மறையோர் இல்லிடத்தும்
வேதம் கணால் வளரும் வேங்கடமே -போதன்
சிரித்துப் புரம் துடைத்தான் தேவரொடும் அண்டம்
விரித்துப் புரந்து உடைத்தான் வெற்பு –78-

சீதம் கொள் சாரலினும்-குளிர்ச்சியைப் பெற்ற அம்மலைப் பக்கங்களிலும்
வேதம் கணால் வளரும் -வே தம் கணால் வளரும் -மூங்கில்கள் தம்முடைய கணுக்களோடு வளரப் பெற்ற
சீர் மறையோர் இல்லிடத்தும் -சிறந்த அந்தணர் வீடுகளிலும்
வேதம் கணால் வளரும் -வேதங்கள் நால் வளரும் -நான்கு வேதங்களும் ஓதப்பட்டு வளர்வதற்கு இடமான
வேங்கடமே –
போதன்-பிரமனும் -நாபிக் கமலத்தில் தோன்றியவன் –
சிரித்துப் புரம் துடைத்தான் -நகைத்து திரிபுரம் அழித்த சிவனும்
தேவரொடும் -மற்றைத் தேவர்களும் ஆகிய அனைவருடனே
அண்டம் விரித்துப்-வெளிப்படுத்தி -சிருஷ்டித்து – புரந்து -காத்து -உடைத்தான் -சம்ஹரித்த திருமாலினது -வெற்பு –திருமலை —

—————————————————————————————————–

நன்கோடு போலும் முலை நாரியரும் சண்பகத்தின்
மென்கோடும் கற்பகம் சேர் வேங்கடமே -வன்கோடு
கூரு இடு வராகனார் கோகனகை பூமி என்னும்
ஓர் இருவர் ஆகனார் ஊர் –79-

நன்கோடு போலும் முலை நாரியரும்-அழகிய யானைத் தந்தம் போன்ற ஸ்தனங்களை யுடைய மாதர்களும் –
கற்பகம் சேர் -கற்பு அகம் சேர் -பதி விரதா தர்மம் மனத்தில் அமையப் பெற்ற
சண்பகத்தின் மென்கோடும்-சண்பக மரத்தினது அழகிய கிளைகளும்
கற்பகம் சேர் -மிக்க உயர்ச்சியால் தேவ லோகத்து கற்பகத்து விருட்சத்தை அளாவப் பெற்ற
வேங்கடமே –
வன்கோடுகூரு இடு வராகனார் -கோர தந்தம் கூர்மையாக இருக்கப் பெற்ற ஸ்ரீ வராக நாயனார்
கோகனகை பூமி என்னும் ஓர் இருவர் ஆகனார் ஊர் —
இரண்டு தேவிமார்களையும் தழுவிய திரு மார்பை யுடைய திருமால் யுடைய திருப்பதி –

———————————————————–

கோடு அஞ்சும் கோதையர்கள் கொங்கையினும் குஞ்சரத்தும்
வேடன் சரம் துரக்கும் வேங்கடமே -சேடன் எனும்
ஓர் பன்னகத்திடம் தான் உற்றான் இரணியனைக்
கூர் பல் நகத்து இடந்தான் குன்று –80-

கோடு அஞ்சும் -மலைச்சிகரம் ஒப்புமைக்கு எதிர் நிற்க மாட்டாமையால் அஞ்சும்படியான
கோதையர்கள் கொங்கையினும் –
வேடன் சரம் துரக்கும் – வேள் தன் சரம் துரக்கும் -மன்மதன் புஷ்ப பாணத்தைச் செலுத்தப் பெற்ற
குஞ்சரத்தும் -யானைகளின் மீதும்
வேடன் சரம் துரக்கும் -வேட்டுவன் அம்புகளை செலுத்தப் பெற்ற
வேங்கடமே –
சேடன் எனும் -ஆதி சேஷன் என்கிற
ஓர் பன்னகத்திடம் -ஒப்பற்ற ஒரு பாம்பின் இடத்தில்
தான் உற்றான் -பொருந்தியவனும்
இரணியனைக் கூர் பல் நகத்து இடந்தான் குன்று —

————————————————————-

நாரியர் தம் கூந்தலினும் நாலும் அருவியினும்
வேரினறும் சாந்து ஒழுகும் வேங்கடமே -பாரினுளார்
அற்ப சுவர்க்கத்தார் அறிவு அரியார் முன் மேய்த்த
நல்பக வர்க்கத்தார் நாடு –81-

நாரியர் தம் கூந்தலினும்
வேரினறும் சாந்து ஒழுகும்
நாலும் அருவியினும் -கீழ் நோக்கி வரும் அருவிகளிலும்
வேரினறும் சாந்து ஒழுகும் -வேரின் அறும் சாந்து ஒழுகும் -வேரோடும் அற்ற சந்தன மரங்கள் அடித்துக் கொண்டு ஓடி வரப் பெற்ற
வேங்கடமே –
பாரினுளார் -பூமியில் உள்ளார்
அற்ப சுவர்க்கத்தார் -அல்ப ஸ்வர்க்கத்தில் உள்ளார் போன்ற
அறிவு அரியார் -அறிவு அற்றவர்களால் அரிய முடியாதவரும்
முன் மேய்த்த நல்பக வர்க்கத்தார் நாடு –
அல்ப ஸ்வர்க்கம் பசுவர்க்கம் –

——————————————————————-

மாதரார் கண்ணும் மலைச் சாரலும் காமர்
வேத மாற்கம் செறியும் வேங்கடமே -பாதம் ஆம்
போதைப் படத்து வைத்தார் போர் வளைய மாற்றரசர்
வாதைப் படத்து வைத்தார் வாழ்வு –82-

மாதரார் கண்ணும்
காமர் வேத மாற்கம் செறியும்-காம நூல் வழியை பொருந்தப் பெற்ற -காம சாஸ்த்ரம் -ஆடவரை காம வசப் படுத்துதல் –
மலைச் சாரலும்-மலைப் பக்கங்களும்
காமர் வேத மாற்கம் செறியும்-காமர் வே தமால் கம் செறியும் -அழகிய மூங்கில்கள் தமது உருவத்தால்
வானத்தை நெருங்கப் பெற்ற -தமால் தம்மால் –
வேங்கடமே –
பாதம் ஆம் போதைப் -திருவடிகள் ஆகிற தாமரை மலர்களை
படத்து வைத்தார் -காளியன் படத்தின் மேல் ஊன்ற வைத்தவரும்
போர் வளைய மாற்றரசர் வாதைப் படத் துவைத்தார் வாழ்வு –

—————————————————————

எத்திக்கும் காம்பும் எயினரும் ஆரத்தினையே
வித்திக் கதிர் விளைக்கும் வேங்கடமே –தித்திக்கும்
காரி மாறன் பாவார் காதலித்தார் தம் பிறவி
வாரி மாறு அன்பு ஆவார் வாழ்வு –83-

எத்திக்கும் காம்பும்-எல்லா பக்கங்களிலும் மூங்கில்களும்
ஆரத்தினையே வித்திக் கதிர் விளைக்கும்-முத்துக்களையே யுண்டாக்கி ஒளியை வீசப் பெற்ற –
எயினரும் -வேடர்களும்
ஆரத்தினையே வித்திக் கதிர் விளைக்கும்-ஆர தினையே வித்தி கதிர் விளைக்கும் –
மிகுதியாக தினையையே விதைத்து கதிர்களை விளையச் செய்வதற்கு இடமான
வேங்கடமே –
-தித்திக்கும் காரி மாறன் பாவார் -நம்மாழ்வார் யுடைய பாசுரத்தை பெற்றவரும்
காதலித்தார் தம் பிறவி வாரி -பிறவியாகிய கடல் -மாறு -நீங்கு வதற்கு காரணமான -அன்பு ஆவார்-அருளின் மயமாகுவார் –
வாழ்வு –நித்ய வாசம் செய்து அருளும் திவ்ய தேசம்

———————————————————————

பார் ஓடு கான்யாரும் பல் களிறும் நந்தவனம்
வேரோடலைத் தீர்க்கும் வேங்கடமே –கார் ஓதம்
சுட்ட கருவில் படையார் தொண்டரை மீண்டு ஏழு வகைப்
பட்ட கருவில் படையார் பற்று –84-

பார் ஓடு கான்யாரும் –அந்த மலையின் நின்றும் பூமியை நோக்கி ஓடி வருகிற காட்டாறுகளும் –
நந்தவனம் வேரோடலைத் தீர்க்கும் -நம் தவனம் வேர் உடலை தீர்க்கும் -நமது தாகம் நிலைத்து இருத்தலை நீக்கப் பெற்ற
அருகில் வருவாரது உடம்பில் வேர்வை யை ஓடுதலை தண்மையால் ஒழிக்கப் பெற்ற என்றுமாம்
காட்டாறுகள் பூந்தோட்டம் வேரூன்றுதலை ஒழிக்கும் என்றுமாம்
வேர் ஓடலை தீர்க்கும் -ஸ்ரமஹரமாய் இருக்கும் என்றுமாம்
பல் களிறும் -பல மத யானைகளும்
நந்தவனம் வேரோடலைத் தீர்க்கும் -வேரோடு அசைத்து இழுக்கப் பெற்ற –
வனம் நந்த -காடுகளை அழிக்க என்றுமாம் -நந்தல் அழித்தலும் வளர்த்தாலும் –
யானைகள் நந்தவனம் என்னும் இந்திரன் உடைய பூஞ்சோலையை வேருடன் அசைத்து இழுக்கும்
வேங்கடமே —
கார் ஓதம் சுட்ட -கரு நிறமான கடலை வேதும்பச் செய்த
கருவில் படையார்-பெரிய வில்லாகிய திவ்யாயுதத்தை யுடையவரும்
தொண்டரை மீண்டு ஏழு வகைப் பட்ட கருவில் படையார் பற்று –
-தேவர் மனிதர் விலங்கு பறவை ஊர்வன நீர் வாழ்வன தாவரம் ஆகிய ஏழு வகைகள்

——————————————————————

நன்காமர் வண்டினமும் நல்வாய் மதகரியும்
மென்காமர முழக்கும் வேங்கடமே -புன்காமம்
ஏவார் கழலார் எனது உளத்தில் என் தலைவை
பூ ஆர் கழலார் பொருப்பு –85-

நன்காமர் வண்டினமும்-காமர் நல் வண்டினமும்
மென்காமர முழக்கும்-மெல் காமரம் முழக்கும் –
நல்வாய்-நான்ற வாய் -நாள்கிற வாய் -நாலும் வாய் -நாலுதல் தொங்குதல் -மதகரியும் –
மென்காமர முழக்கும் -மெல் கா மரம் உழக்கும்
வேங்கடமே –
புன்காமம் ஏவார் –
எனது உளத்தில் கழலார்-
என் தலைவை பூ ஆர் கழலார்-பூவார் கழல் திருவேங்கடமுடையான் திருவடிகளின் சிறப்பு அன்றோ
பொருப்பு —

———————————————————————

பாம்பும் குளிர் சந்தின் பக்கத்தில் நிற்கின்ற
வேம்பும் மருத்துவக்கும் வேங்கடமே காம்புகரம்
ஆனவரை நன்குடையார் ஆளாய்த் தொழுது ஏத்தும்
மானவரை நன்கு உடையார் வாழ்வு -86-

பாம்பும் மருத்துவக்கும்-பாம்புகளும் காற்றை விரும்பி உணவாகக் கொள்ளப் பெற்ற
குளிர் சந்தின் பக்கத்தில் நிற்கின்ற வேம்பும் மருத்துவக்கும் –
குளிர்ந்த சந்தன மரங்களின் அருகில் நிற்கின்ற வேப்ப மரங்களும்
மரு துவக்கும் -அவற்றின் சேர்க்கையால் நறு மணம் வீசத் தொடங்கப் பெற்ற -சந்தனத்தைச் சார் தருவும் தக்க மணம் கமழும் –
வேங்கடமே
காம்புகரம் ஆனவரை நன்குடையார் -தமது கையையே காம்பாகக் கொண்ட கோவர்த்தன கிரியாகிய நல்ல குடையை யுடையவரும்
ஆளாய்த் தொழுது ஏத்தும் மானவரை நன்கு உடையார் வாழ்வு –
நிறைய தொண்டர்கள் யுடைய திருமால் நித்ய வாசம் செய்து அருளும் திவ்ய தேசம்

—————————————————————————-

சாரும் அருவிதவழ் சாரலும் செஞ்சனத்தின்
வேரும் அரவம் அறா வேங்கடமே -நேரும்
மதுகையிடவர்க் கறுத்தார் மா மலரோன் சாபம்
மதுகை இடவர்க்கு அறுத்தார் வாழ்வு –87-

சாரும் அருவிதவழ் சாரலும்-பொருந்திய நீர் அருவிகள் பெருகப் பெற்ற மலைப் பக்கங்களும்
அரவம் அறா -ஓசை நீங்காது இருக்கப் பெற்ற
செஞ்சனத்தின் வேரும்-செந்நிறமான சந்தன மரங்களின் வேரும்
அரவம் அறா -பாம்புகள் நீங்காது இருக்கப் பெற்ற
வேங்கடமே –
நேரும் மதுகையிடவர்க் கறுத்தார் -மதுகடைபர்களை ஒழித்து
மா மலரோன் சாபம் மதுகை இடவர்க்கு அறுத்தார் வாழ்வு –இடபம் ரிஷபம் -ரிஷபம் உடைய சங்கரன் சாபம் அறுத்தார் –

——————————————————–

மண் மட்டுத் தாழ் சுனையும் வட்டச் சிலா தளமும்
விண் மட்டுத் தாமரை சேர் வேங்கடமே எண் மட்டுப்
பாதம் உன்னி நைந்தார் பரம பதம் சேர்க என்று
போதமுன் நினைந்தார் பொருப்பு –88-

மண் மட்டுத் தாழ் சுனையும் -தரை அளவும் ஆழ்ந்து உள்ள சுனைகளும்
விண் மட்டுத் தாமரை சேர் -விள் மட்டுத் தாமரை சேர் -மலர்ந்த தேனை யுடைய தாமரை மலர் பொருந்தப் பெற்ற
வட்டச் சிலா தளமும் விண் மட்டுத் தாமரை சேர் –
வட்ட வடிவமான கல்லினிடமும் -மேல் உலகத்தின் அளவும் தாவுகிற மான் பொருந்தப் பெற்ற
வேங்கடமே
எண் மட்டுப் பாதம் உன்னி -பாதம் எள் மட்டு உன்னி -எள்ளளவேனும் த்யானித்து
நைந்தார் பரம பதம் சேர்க என்று போதமுன் நினைந்தார் பொருப்பு -முன்பு திரு உள்ளத்தில் சங்கல்பித்து – அருளிய திருமாலினது திருமலை –
அவர்கள் எண்ணுவதற்கு முன்பே –போத முன் -அவர்கள் வருவதற்கு முன் என்றுமாம்

————————————————

போதா இரு சுடரும் போதுதற்கும் ஓதுதற்கும்
வேதா வினால் முடியா வேங்கடமே -மாதாவின்
வீங்கு தனத்துக்கு இனியான் விம்மி அழாது ஆட்கொண்டான்
தாங்கு தன் நத்துக்கு இனியான் சார்பு –89-

போதா இரு சுடரும் போதுதற்கும் ஓதுதற்கும் வேதா வினால் முடியா
கற்பகாலத்தளவும் அழியாத சூரிய சந்த்ரர் இருவரும் ஆகாய வீதியில் செல்லுவதற்கும்
வேதா வினால் முடியா -வே தாவினால் முடியா -மூங்கில்கள் அளாவி வளர்தலால் இயலாத
ஓதுதற்கும் வேதா வினால் முடியா -தனது மகிமையைச் சொல்லுவதற்கும் -வேதாவினால் -பிரமனாலும் நிறைவேறாத
வேங்கடமே –
மாதாவின் வீங்கு தனத்துக்கு இனியான் விம்மி அழாது ஆட்கொண்டான்-பிறவாமல் என்னை ஆக்கி அடிமையும் கொண்டவனும்
தாங்கு தன் நத்துக்கு இனியான் கையில் ஏந்தி யுள்ள தனது ஸ்ரீ பாஞ்ச ஜன்ய ஆழ்வானுக்கு இனியவனுமான
சார்பு -திருமால் உகந்து அருளி நித்ய வாசம் செயுது அருளும் திருப்பதி
தாங்கு தனத்துக்கு இனியான் -கையில் நிரம்ப கொண்டு செலுத்தும் காணிக்கைப் பொருள்களைக்
கைமாறாகக் கொண்டு அர்த்தித்த அனைத்தையும் தந்து அருளும் திருவேங்கடமுடையான் சங்கல்பம் -என்றுமாம் –

————————————————————–

பேய்க்கும் ஒரு பேய் போன்று பித்து ஆயத் திரிவோர்க்கும்
வேய்க்கும் அணி முத்து வரும் வேங்கடமே -வாய்க்கு அமுது ஊர்
வண்மைப் பேர் ஆயிரம் தான் மன்னினான் மாவலி பால்
தண்மைப் பேராய் இரந்தான் சார்பு –90-

பேய்க்கும் ஒரு பேய் போன்று பித்து ஆயத் திரிவோர்க்கும் அணி முத்து வரும் -அங்கு வந்த மாத்ரத்திலே அழகிய மோஷம் சித்திக்கும் படியான
பேயனாய் ஒழிந்தேன் -எம்பிரானுக்கு அரங்கன் அடியார்களாகி அவருக்கே பித்தராமாவார் -அடியார்களுக்கு முக்தி கை வரும் திவ்ய தேசம் என்றுமாம் –
வேய்க்கும் அணி முத்து வரும் -மூங்கில்களுக்கும்-மணி முத்து இவரும்-அழகிய முத்துக்கள் மிகுதியாகத் தோன்றப் பெற்ற
வேங்கடமே –
வாய்க்கு அமுது ஊர் -உச்சரிப்பவருடைய வாய்க்கு அமிர்தம் போன்று இனிமை சுரக்கும்
வண்மைப் பேர் ஆயிரம் தான் மன்னினான்
மாவலி பால் தண்மைப் பேராய்-எளியவனாய் -மூவடி நிலத்தை – இரந்தான் சார்பு –

—————————————————————-

வாழ்க்கை மனை நீத்தவரும் வாளரியும் மாதங்க
வேட்கை மறந்திகழும் வேங்கடமே –தோள் கை விழ
மா கவந்தனைக் கவிழ்த்தார் வாழ் இலங்கைப் பாதகரை
லோக வந்தனைக்கு அழித்தார் ஊர் –91-

வாழ்க்கை மனை நீத்தவரும் மனை வாழ்க்கை நீத்தவரும்
மாதங்க வேட்கை மறந்திகழும் -மாது அங்கம் வேள்கை மறந்து இகழும் -முற்றும் ஒழித்து இகழப் பெற்ற –
பெண்ணாசையை அறக்கை விட்ட -என்ற படி
மா தங்கம் -மிக்க பொன்னாசையை அறத் தொலைத்த என்றுமாம்
கை மறந்த -கை விடுதல்
வாளரியும் மாதங்க வேட்கை மறந்திகழும் -கொடிய சிங்கங்களும் -யானையைக் கொல்ல வேண்டும் என்ற
விருப்பத்துடன் வீரம் விளங்கப் பெற்ற -மாதங்கம் -யானை
வேங்கடமே –
தோள் கை விழ மா கவந்தனைக் கவிழ்த்தார்
வாழ் இலங்கைப் பாதகரை லோக வந்தனைக்கு அழித்தார் ஊர்

——————————————————————-

கூட்டு தவத்தரும் கோளரிகளின் தொகையும்
வேட்டு வரம் பொழியும் வேங்கடமே –மோட்டு மதத்
தந்திக்கு அமலத்தார் தாம் பெறூ உம் வீடு அளித்தார்
உந்திக் கமலத்தார் ஊர் –92-

கூட்டு தவத்தரும் -மேன்மேல் செய்து வைத்த தவத்தை யுடைய முனிவர்களும் -அப்பெரும் தவ சித்தியால்
வேட்டு வரம் பொழியும்-விரும்பி அன்புடனே தம்மிடம் வேண்டுவார் வேண்டிய வரங்களை மிகுதியாகக் கொடுத்தற்கு இடமான
கோளரிகளின் தொகையும் வேட்டு வரம் பொழியும்-வலிமை யுள்ள சிங்கங்களின் தொகையும் –
வேட்டுவர் அம்பு ஒழியும்- வேடர்கள் எய்கிற பாணங்கள் தங்கள் மேல் படாதபடி தந்திரமாக விலக்கப் பெற்ற
வேங்கடமே –
-மோட்டு மதத் தந்திக்கு -உயர்ச்சியை யுடைய மத யானைக்கு
அமலத்தார் தாம் பெறூ உம் வீடு அளித்தார் -நிர்மலமான -காமம் வெகுளி மயக்கம் -போன்றவை இல்லாத
-ஞானிகள் பெரும் பரம பதம் கொடுத்து அருளியவரும்
உந்திக் கமலத்தார் ஊர் —

—————————————————————————

வஞ்சம் மடித்திருப்பார் வாக்கும் கலைக்கோடும்
விஞ்ச மடித்திருக்கு ஆர் வேங்கடமே –கஞ்சப்
பிரமா நந்த தான் பிரபஞ்சம் மாய்த்த
பரமா நந்தத்தான் பதி –93-

வஞ்சம் மடித்திருப்பார் வாக்கும்-வஞ்சனை ஒழித்து இருக்கும் அந்தணர்கள் யுடைய வாக்கும் -வஞ்சம் அடித்து -என்றுமாம் -அடித்தல் -ஒழித்தல்
விஞ்ச மடித்திருக்கு ஆர் -விஞ்ச மடித்த இருக்கு ஆர் -மிகுதியாக மடித்து மடித்துச் சொல்லப்படும் வேதங்கள் நிரம்பப் பெற்ற
கலைக்கோடும் விஞ்ச மடித்திருக்கு ஆர் -கலை மான் கொம்பும்
விஞ்ச -மிகுதியாக -மடி திருக்கு ஆர் -வளைவோடு கூடிய முறுக்குப் பொருந்தப் பெற்ற
வேங்கடமே —
கஞ்சப் பிரமா நந்த -தனது நாபித் தாமரையில் தோன்றிய பிரமனும் அழிய -கஞ்சம் -நீரில் தோன்றிய தாமரை -காரணப் பொருளில் –
தான் பிரபஞ்சம் மாய்த்த பரமா நந்தத்தான் பதி –கல்பாந்த காலத்திலேயே உலகத்தை அழித்த
-எல்லா ஆனந்தங்களிலும் மேலான பேரானந்தத்தை யுடைய திருமாலினது திருப்பதி –

—————————————————————————-

சேல் அஞ்சும் கண் மடவார் தேம் குழலும் கோங்கினமும்
மேலஞ்சு வர்க்கம் ஆர் வேங்கடமே -கோலம் சேர்
மாரில் அலங்கு அரத்தார் மற்றும் பல பூண் அணிந்த
காரில் அலங்காரத்தார் காப்பு –94-

சேல் அஞ்சும் கண் மடவார் தேம் குழலும் -நறுமணம் உள்ள கூந்தலும்
மேலஞ்சு வர்க்கம் ஆர் -மேல் அஞ்சு வர்க்கம் ஆர் -மென்மையான ஐந்து வகை பொருந்தப் பெற்ற –
முடி குழல் கொண்டை பனிச்சை சுருள் -ஐந்தும் -பின்னி விடுதல் பனிச்சை –
கோங்கினமும் -கொங்கு மரங்களின் தொகுதியும்
மேலஞ்சு வர்க்கம் ஆர் -மேல் அம் ஸ்வர்க்கம் ஆர் -மிக உயர்ச்சியால் மேலே உள்ள அழகிய சவர்க்க லோகத்தை அளாவப் பெற்ற
வேங்கடமே –
கோலம் சேர் மாரில் அலங்கு அரத்தார்-ஹாரங்களை யுடையவரும் –
மற்றும் பல பூண் அணிந்த காரில் அலங்காரத்தார் காப்பு –
காள மேகம் போன்ற அழகுடைய திருமால் காப்பு –

———————————————————

கொய்யும் மலர்ச்சோலைக் கொக்கும் பிணி யாளர்
மெய்யும் வடுத்த விரும் வேங்கடமே -நையும்
சனனாந் தகனார் தலையிலி தோள் சாய்த்த
சினநாந் தகனார் சிலம்பு –95-

கொய்யும் மலர்ச்சோலைக் கொக்கும் -பறித்தற்கு உரிய மலர்களை யுடைய சோலையில் உள்ள மா மரமும்
மா மரத்தை கொக்கு என்பர் -துளுவ நாட்டார் திசைச் சொல்
வடுத்த விரும் -வடுத்து அவிரும் -பிஞ்சு விட்டு விளங்கப் பெற்ற -வடுத்தல் -இலங்கை அரும்பல்
பிணி யாளர் மெய்யும் -நோயாளிகள் யுடைய யுடம்பும் -அங்கு வந்த மாதரத்தில்
வடுத்த விரும் -வடு தவிரும் -உடல் குற்றமாகிய அந்நோய் நீங்கப் பெற்ற
வேங்கடமே –
நையும் சனனாந் தகனார் -நையும் சனன அந்தகனார் -உயிர்கள் வருந்த காரணமான பிறப்பை அடியாருக்கு ஒழிப்பவரும்
ஜன நாந்தகன் -பிறப்புக்கு யமன் என்றபடி
தலையிலி தோள் சாய்த்த -கபந்தனுடைய தோள்களை வெட்டித் தள்ளின
சினநாந் தகனார் சிலம்பு –சினன் நாந்தகனார் சிலம்பு -கோபத்தை யுடைய நந்தகம் என்னும் வாட்படை யுடைய திருமாலினது திருமலை

—————————————————————-

நேர்க்க வலை நோயினரும் நீடு சிலை வேடுவரும்
வேர்க்க வலை மூலம் கல் வேங்கடமே –கார்க்கடல் மேல்
தாண்டும் காலத்து இறப்பார் தம்மை விழுங்கி கனி வாய்
மீண்டும் காலத் திறப்பார் வெற்பு –96-

நேர்க்க வலை நோயினரும் -மிகுதியான கவலையை தருகிற நோயை யுடையவர்களும் -அந்நோய் நீங்குதற் பொருட்டு
வேர்க்க -பக்தி மிகுதியால் தம் உடல் வியர்வை யடைய
வலை மூலம் கல் -அலை மூலம் கல் -திருப் பாற் கடலில் பள்ளி கொண்டு அருளுகிற ஆதி மூலப் பொருளைத் துதிக்கப் பெற்ற
அலை -கடலுக்கு சினையாகு பெயர் -மூலம் முதல் பொருள்
கல் -கற்றல் -திரு நாமங்களை இடைவிடாமல் உருவிட்டு ஜபித்தால்
நீடு சிலை வேடுவரும் -நீண்ட வில்லை யுடைய வேடர்களும்
வேர்க்க வலை மூலம் கல் -வேர் கவலை மூலம் கல் -வேரோடு கவலைக் கிழங்கை தோண்டப் பெற்ற
கவலைக் கிழங்கு குறிஞ்சி நில உணவு
வேங்கடமே –
கார்க்கடல் மேல் தாண்டும் காலத்து -பிரளய காலத்தில்
இறப்பார் தம்மை விழுங்கி -தனது திரு வயிற்றினுள் வைத்து அருளி
கனி வாய் மீண்டும் காலத் திறப்பார் வெற்பு –மீண்டும் கால -கனி வாய் திறப்பார் வெற்பு –

——————————————————————-

தண் தாமரைச் சுனையில் சாதகமும் வேடுவரும்
விண்டாரை நாடும் வேங்கடமே –தொண்டு ஆக்கி
ஏவத் தனக்கு உடையார் என்னை முன் நாள் எடுத்த
கோவத்தனக் குடையார் குன்று –97-

தண் தாமரைச் சுனையில்
சாதகமும் -சாதகம் என்னும் பறவையும்
விண்டாரை நாடும் -விண் தாரை நாடுகின்ற
வேடுவரும்
விண்டாரை நாடும் -உடல் கொழுப்பினால் போர் செய்ய பகத்தவரை தேடப் பெற்ற -விள்ளுதல் -மணம் மாறுபடுதல்
வேங்கடமே –
-தொண்டு ஆக்கி ஏவத்-தாசனாக்கி அடிமை கொள்ளுமாறு -ஏவ -குற்றேவல் செய்யும் படி கட்டளை இட –
தனக்கு உடையார் என்னை -என்னை தனக்கு உடமையாக ஆக்கிக் கொண்டவரும்
முன் நாள் எடுத்த கோவத்தனக் குடையார் குன்று —

———————————————————–

வாழ் அரியும் சந்தனம் தோய் மாருதமும் தாக்குதலால்
வேழ மருப்புகுதும் வேங்கடமே –நீழல் அமர்
பஞ்சவடி காட்டினான் பார் அளப்பான் போல் எவர்க்கும்
கஞ்ச அடி காட்டினான் காப்பு –98-

வாழ் அரியும்-வலிமை கொண்டு வாழ்கின்ற சிங்கங்களும்
தாக்குதலால் -மோதி யடித்தளால்
வேழ மருப்புகுதும் -வேழம் மருப்பு உகுதும் -யானைகளின் தந்தம் சிந்தப் பெற்ற
சந்தனம் தோய் மாருதமும் -சந்தன மரத்தின் மேல் பட்டு வருகிற காற்றும்
தாக்குதலால் -மேல் படுதலால்
வேழ மருப்புகுதும் -வேழம் மரு புகுதும் -மூங்கில்களும் நறு மணம் பொருந்தப் பெற்ற
வேங்கடமே –
-நீழல் அமர் -நிழல் பொருந்திய
பஞ்சவடி காட்டினான் -பஞ்சவடி வனத்தில் வசித்தவனும் -ஐந்து ஆல மரங்களின் தொகுதி
பார் அளப்பான் போல் எவர்க்கும் கஞ்ச அடி-தாமரைத் திருவடி – காட்டினான் காப்பு —

————————————————————-

எவ்விடமும் ஆறு தோய்ந்து எல்லாரும் பல் பாம்பும்
வெவ்விடரின் நீங்கி எழும் வேங்கடமே –தெவ்விடை ஏழ்
அட்டவன் நாகத்து அணையான் ஆதி மறை நூல் மார்க்கம்
விட்டவன் ஆகத்து அணையான் வெற்பு –99-

எல்லாரும்-எவ்விடமும் ஆறு தோய்ந்து
அனைவரும் அம்மலையில் பல விடத்தும் நதிகளில் மூழ்கி
வெவ்விடரின் நீங்கி எழும்-வெம் இடரின் நீங்கி எழும் -கொடிய பிறவித் துன்பத்தின் நின்றும் நீங்கி எழப் பெற்ற
பல் பாம்பும் -பல பாம்புகளும்
வெவ்விடரின் நீங்கி எழும்-வெம் விடரின் நீங்கி எழும் -வெவ்விய மலைகளின் வெடிப்புக்களின் புறப்பட்டு மேல் எழுந்து வரப் பெற்ற
வேங்கடமே —
தெவ்விடை ஏழ் அட்டவன்-விடை வ்ருஷம்
நாகத்து அணையான்
ஆதி மறை நூல் மார்க்கம் விட்டவன் ஆகத்து அணையான் வெற்பு —

——————————————————————

பாடும் மதுகரமும் பச்சைத் தழைக் குடிலின்
வேடும் மணம் மருவும் வேங்கடமே -நீடு
மகராலயம் கடந்தார் வாழ் வாசு தேவர்க்கு
மகர் ஆலயங்கள் தந்தார் வாழ்வு –100-

பாடும் மதுகரமும்-இசை பாடுவது போல் ஒலிக்கின்ற வண்டுகளும்
மணம் மருவும் -மலர்களின் நறு மணம் பொருந்தப் பெற்ற
பச்சைத் தழைக் குடிலின் -பசுமையான தழைகளால் அமைக்கப் பட்ட குடிசைகளில்
வேடும் மணம் மருவும் -வேடர்களும் கல்யாணம் செய்யப் பெற்ற
வேங்கடமே
-நீடு மகராலயம் கடந்தார் -நீண்ட கடலை தாண்டியவரும் -மகரங்களுக்கு இடமான கடல் -மகரம் -சுறா மீன்
வாழ் வாசு தேவர்க்கு மகர் -வாழ்வை யுடைய ஸ்ரீ வசுதேவருக்கு புதல்வரானவரும்
ஆலயங்கள் தந்தார் வாழ்வு -திருக் கோயில்களை தந்து அருளிய திருமால் நித்ய வாசம் செய்யும் திருப்பதி

——————————————————————-

நாந்திச் செய்யுள் –

ஆதி திருவேங்கடம் என்று ஆயிரம் பேரான் இடம் என்று
ஓதிய வெண்பா ஒரு நூறும் -கோதில்
குணவாள பட்டர் இரு கோகனைத் தாள் சேர்
மணவாள தாசன் தன் வாக்கு —

பட்டர் இரு கோகனைத் தாள் சேர் -ஸ்ரீ பராசர பட்டர் உடைய சரணார விந்தங்களை சேர்ந்த அழகிய மணவாள தாசன் உடைய திரு மொழியாகும்
கோகம் -சக்கரவாக

————————————————————————————————————————————–

கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்–

ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் அருளிய திருவேங்கட மாலை -51-75–

February 23, 2016

சிலேடைகள்
காதல் இற்றுச் சார்ந்தவர்க்கும் காமியத்தைச் சார்ந்தவர்க்கும்
வேதனைக் கூற்றைத் தவிர்க்கும் வேங்கடமே -போதகத்தை
மோதி மருப்பு ஒசித்தார் முன் பதினாறாயிரவர்
ஓதி மருப்பு ஒசித்தார் ஊர் –51-

காதல் இற்றுச் சார்ந்தவர்க்கும் காமியத்தைச் சார்ந்தவர்க்கும்
பிரபஞ்ச வாழ்வில் ஆசை முழுவதும் ஒழிந்து தன்னிடம் வந்து சேர்ந்த முனிவர்களுக்கும்
காதலித்துச் சார்ந்தவர் -பரம பதத்தை விரும்பி தன்னை அடைந்தவர்கள் என்றுமாம்
வேதனைக் கூற்றைத் தவிர்க்கும்–பிரமனையும் யமனையும் விலக்குகின்ற -வேதன் -வேதங்களை ஓதியன் -விதிக்கும் கடவுள் என்றுமாம்
காமியத்தைச் சார்ந்தவர்க்கும்-பிரபஞ்ச வாழ்வுகளை விரும்பிய வர்களுக்கும்
வேதனைக் கூற்றைத் தவிர்க்கும்-துன்பங்களின் வகைகளை ஒழிக்கின்ற
வேங்கடமே –
போதகத்தை மோதி மருப்பு ஒசித்தார்-யானையைத் தாக்கி அதன் தந்தங்களை முறித்தவரும்-
போதகத்தை மருப்பு ஒசித்து மோதினார் -என்றுமாம்
முன் பதினாறாயிரவர் ஓதி மரு பொசித்தார் ஊர் –இள மங்கையர் உடைய
ஓதி -கூந்தலின் -மரு -நறு மணத்தை -பொசித்தார்-மோந்து நுகர்ந்தவர் –
ஓதி -பெண் மயிர் -பொசித்தல் -புஜித்தல்-நுகர்தல் -துய்த்தல்-
பற்று அற்று வந்தவருக்கும் பற்று அறாது வந்தவருக்கும் சமமாக இடையூறு அகற்றி அருளும் திரு வேங்கடம் என்றவாறு

—————————————————————–

கேள்வித் துறவோரும் கேடு அற இல் வாழ்வோரும்
வேள்விக்கின மாற்றும் வேங்கடமே -மூள்வித்து
முன்பாரத முடித்தார் மொய் வேந்தர் வந்து அவிய
வன் பாரதம் முடித்தார் வாழ்வு –52-

கேள்வித் துறவோரும்-ஞானக் கேள்விகளை யுடைய துறவிகளும்
வேள்விக்கின மாற்றும்-மன்மதனால் வரும் இடையூற்றை நீக்குதற்கு இடமான -காம அவாவைக் கொள்ளாமை-என்றவாறு
வேள் -ஆடவர்க்கும் பெண்டிர்க்கும் விருப்பம் விளைவிக்கும் தேவன் மன்மதன் –விரும்பப்படும் அழகை யுடையவன் என்றுமாம்
திரு வேங்கடம் -ஆற்றும் வேங்கடம்
கேடு அற இல் வாழ்வோரும் -தீங்கு இல்லாமல் இல்லற ஒழுக்கத்தில் வாழ்வார்களும்
வேள்விக்கின மாற்றும் -வேள்விக்கு இனம் மாற்றும் -யாகத்துக்கு இனமான நல செயல்களை செய்தற்கு இடமான
ப்ரஹ்ம-தேவ -மனுஷ்ய பித்ரு பூத பஞ்ச யஜ்ஞங்கள் செய்யும் படி என்றவாறு
திரு வேங்கடமே -மாற்றும் வேங்கடம்
துறவறத்தாரும் இல்லத்தாரும் சமமாக அவரவர் தொழில் களைச் செய்யப் பெற்ற திவ்ய தேசம் என்றவாறு
-மூள்வித்து முன்பாரத முடித்தார் மொய் வேந்தர் வந்து அவிய வன் பாரதம் முடித்தார் வாழ்வு —
முன்பு ஆ -முற்காலத்தில் –
ரதம் முடி தார் மொய் வேந்தர் அவிய -தேரையும் கிரீடத்தையும்-அதிரத -மகா ரத -சமரத -அர்த்த ரத வீரர்கள்
மாலையையும் யுடைய வலிய அரசர்கள் வந்து பொருது இறக்கும் படி
வல் பாரதம் -கொடிய பாரத யுத்தத்தை
மூள்வித்து முடித்தார் -மூட்டி நிறைவேற்றிய திருமால் வாசஸ் ஸ்தானம் –

——————————————————————-

பொய் ஆம் வினையேனைப் போல்வாரும் அன்பரும் செய்
மெய் ஆம் வழுத்தேயும் வேங்கடமே செய்யாள்
தனத்து வசப் பொற்பு உள்ளார் தானவரை மோதும்
சினத்து வசப் பொற் புள்ளார் சேர்வு –53-

பொய் ஆம் வினையேனைப் போல்வாரும் -என்னைப் போன்ற நீசர்களும்
செய் மெய் ஆம் வழு-சரீர சம்பந்தத்தால் செய்யும் குற்றங்கள் -கருமங்கள் –
தேயும் -நீங்குதற்கு இடமான
திருவேங்கடம்
அன்பரும் -உள்ளன்பு யுடைய அடியார்களும்
செய் மெய் ஆம் வழுத்தேயும்-மெய்யாம் வழுத்து -உண்மையான ஸ்தோத்ரங்கள் -ஏயும் -பொருந்தப் பெற்ற
திரு வேங்கடமே
பொய்யன்பருக்கும் மெய் அன்பருக்கும் ஒரு நிகராக இருக்கப் பெற்ற திருவேங்கடம் –
செய்யாள்
தனத்து வசப் பொற்பு உள்ளார்–திருமகள் உடைய ஸ்தனத்துக்கு வசப்பட்ட -அழகை யுடையவரும்
தானவரை மோதும் சினத்து வசப் பொற் புள்ளார் -சினத் த்வசம் பொன் புள்ளார்
அசுரர்களைத் தாக்கும் கோபத்தை யுடைய கொடியான பொன்னிறமான பெரிய திருவடியை யுடைய திருமால்
சேர்வு –திரு உள்ளம் உகந்து சேரும் திவ்ய தேசம் -சேர்பு -பாட பேதம்

—————————————————————–

கோடல் இலா உள்ளத்துக் கோது இல் அடியவரும்
வேடரும் அங்கைவரை வெல் வேங்கடமே -மூடர்
மனம் ஆம் மனைக்கு ஒன்றார் வன் கஞ்சன் என்னும்
சின மா மனைக் கொன்றார் சேர்பு –54-

கோடல் இலா உள்ளத்துக் கோது இல் அடியவரும்
கோணுதல் இல்லாத -நேர் வழிப் பட்ட மணத்தை யுடைய குற்றம் இல்லா அடியவரும்
அங்கைவரை வெல்-அங்கு ஐவரை வெல் -அவ்விடத்து பஞ்ச இந்திரியங்களை வெல்வதற்கு இடமான –
வேடரும் -வேடர்களும்
அங்கைவரை வெல் -அம் கை வரை வெல் -அழகிய துதிக்கை யுடைய மலை போன்ற யானையை வெல்லுவதற்கு இடமான
வேங்கடமே –
மூடர் மனம் ஆம் மனைக்கு ஒன்றார் -மூடர்கள் உடைய உள்ளமான வீட்டில் வந்து பொருந்தாதவரும்
வன் கஞ்சன் என்னும் சின மாமனைக் கொன்றார்
சேர்பு —

——————————————————————-

மொய்வதன மங்கையர்கள் முன்கையும் யோகியர் தம்
மெய்வயதும் அஞ்சுகம் ஆர் வேங்கடமே -பெய் வளையார்
பால் திருப்பாது அஞ்சி வந்தார் பற்றினார் புன் பிறப்பை
மாற்று இருப் பாதம் சிவந்தார் வாழ்வு –55–

மொய்வதன மங்கையர்கள் முன்கையும்
அழகு மிக்க முகத்தை யுடைய மகளிரது முன்னம் கையும்
தாமரை மலர் என்று மயங்கி வண்டுகள் மொய்க்கப் பெற்ற முகம் என்றுமாம்
அஞ்சுகம் ஆர்-அம் சுகர் ஆர் -அழகிய கிளி உண்ணுவதற்கு உணவாகப் பெற்ற
மகளிர் கைகளில் கிளியை வைத்து கொண்டு உணவு ஊட்டி கொஞ்சி விளையாடும் திவ்ய தேசம் என்றவாறு
யோகியர் தம் மெய்வயதும்-யோக நிஷ்டையில் உள்ள முனிவர்கள் உடைய உடம்பின் ஆயுளும்
அஞ்சுகம் ஆர்-அஞ்சு யுகம் ஆர் -ஐந்து யுகமாகப் பொருந்தப் பெற்ற
வேங்கடமே –
பெய் வளையார் பால் திருப்பாது-மகளிர் பக்கல் மனத்தைச் செலுத்தாமல்
அஞ்சி வந்தார் பற்றினார்-அச்சம் கொண்டு தம்மிடம் வந்து சரண் அடைந்தவர்களுடைய
புன் பிறப்பை மாற்று இருப் பாதம் -திருவடி இணைகளும்
சிவந்தார் -சிவந்து இருக்கப் பெற்ற திருமால்
வாழ்வு –நித்ய வாஸம் செய்து அருளும் திருப்பதி –

———————————————————————-

இல்லக் குறத்தியரும் யாக்கை நிலை வேட்டவரும்
மெல்லக் கிழங்கெடுக்கும் வேங்கடமே -நல்ல
புதுப் பூவை வண்ணத்தான் போர் முகத்துச் செவ்வாய்
மதுப்பூவை வள் நத்தான் வாழ்வு –56-

இல்லக் குறத்தியரும்
வீட்டில் இருக்கும் குறப் பெண்களும்
மெல்லக் கிழங்கெடுக்கும் -மென்று தின்னும் பொருட்டு கிழங்குகளைத் தோண்டி எடுக்கப் பெற்ற
யாக்கை நிலை வேட்டவரும் -உடம்பு அழிதல் இன்றி நெடு நாள் நிலைத்து இருத்தலை விரும்பிய சித்தர்களும்
மெல்லக் கிழங்கெடுக்கும்-மெதுவாக -நாளடைவில் -முதுமைப் பருவத்தை ஒழிக்கப் பெற்ற
வேங்கடமே-
-நல்ல புதுப் பூவை வண்ணத்தான்-சிறந்த புதிய -அன்று மலர்ந்த காயம் பூ போன்ற கரிய திரு நிறத்தை யுடையவனும்
போர் முகத்துச் செவ்வாய் மதுப்பூவை
யுத்த களத்திலே –செவ்வாய் மது பூவை -சிவந்த தனது திரு வாயாகிய தேனை யுடைய தாமரை மலரில் வைத்து ஊதுகின்ற
வள் நத்தான் -மேன்மை யுள்ள ஸ்ரீ பாஞ்ச ஜன்யம் என்னும் திவ்ய சங்கத்தை யுடையவனாகிய திருமால்
வாழ்வு –வாழும் திவ்ய தேசம் –

———————————————————————-

தேன் இயலும் கூந்தலார் செங்கரமும் மாதவத்தோர்
மேனியும் ஐயம் பொழியும் வேங்கடமே -ஞானியர்கள்
தாம் குறி எட்டு அக்கரத்தார் தாள் உரல் மேல் வைத்து வெண்ணெய்
தாங்கு உறி எட்டு அக்கரத்தார் சார்பு –57-

தேன் இயலும் கூந்தலார் செங்கரமும்–
இயற்கை நறு மணத்தின் பொருட்டும் செயற்கை நறு மணத்தின் பொருட்டும் வண்டுகள் மொய்க்கப் பெற்ற கூந்தல் யுடைய மகளிரது சிவந்த கைகளும்
ஐயம் பொழியும்-இரப்பவர்க்கு மிகுதியாக பிச்சையிடப் பெற்ற
மாதவத்தோர் -மா தவத்தோர் மேனியும் -முனிவர்கள் உடம்பும்
ஐயம் பொழியும் -ஐ அம்பு ஒழியும் -மன்மதனது பஞ்ச பானம் பொருந்தாது இருக்கப் பெற்ற
தாமரை -அசோக-மா -முல்லை -நீலோற்பல -பூக்கள் பாணங்கள்
வேங்கடமே –
ஞானியர்கள் தாம் குறி -தத்வ ஞானிகள் குறிக் கொண்டு தியானிக்கும்
எட்டு அக்கரத்தார் -அஷ்டாஷர மகா மந்த்ரத்துக்கு உரியவரும்
தாள் உரல் மேல் வைத்து
வெண்ணெய் தாங்கு உறி எட்டு -எட்டிப் பிடித்த
அக்கரத்தார் சார்பு -அழகிய திருக்கையை யுடைய திருமால் திரு உள்ளம் உகந்து சார்ந்து இருக்கும் திவ்ய தேசம் –
உறியில் அவர் வைத்த தயிர் பால் வெண்ணெய் எட்டாமல் குந்தி உரலின் மிசை ஏறி -பொத்த உரலைக் கவிழ்த்து அதன் மேல் ஏறி –

—————————————————————–

காணை -காண்ஐ-யிலார் சொற்கேட்ட கந்தருவரும் தவரும்
வீணை இராகத்தை விடும் வேங்கடமே –கோணை
இருங்குண்டை ஓட்டினான் ஏற்பு ஒழித்தான் கூனி
மருங்கு உண்டை ஓட்டினான் வாழ்வு –58-

காணை- காண் ஐயிலார் சொற்கேட்ட -பார்க்கின்ற வேல் போன்ற கண்களை யுடைய மகளிர் பேசும் சொற்களை செவியுற்ற
கந்தருவரும் -கந்தர்வர் என்னும் தேவ ஜாதியாரும்
வீணை இராகத்தை விடும்-தாம் பாடும் இசையின் இனிமை சிறவாது என்று வீணையில் இசை வாசிப்பதை ஒழியப் பெற்ற
தவரும்
தவ ஒழுக்கைத்தை யுடைய முனிவர்களும்
வீணை இராகத்தை விடும் -பயனில் செய்கைகளையும் -ஆசையையும் துறக்கப் பெற்ற
வேங்கடமே –
-கோணை இருங்குண்டை -வலிமையை யுடைய பெரிய எருதை வாகனமாக யுடைய -கோணை முசுப்பு என்கிற முதுகின் வளைவு
ஓட்டினான்-கையில் கபாலம் ஏந்திய வனான சிவபிரான் உடைய
ஏற்பு ஒழித்தான் -இரத்தத்தை ஒழித்து அருளியவன்
கூனி மருங்கு உண்டை ஓட்டினான் -ஸ்ரீ கிருஷ்ணாவதாரத்தில் -நைக வக்ரை என்னும் கூனியின் இடத்து உள்ள உண்டையைப் போக்கி அருளிய திருமால்
வாழ்வு -நித்ய வாஸம் செய்து அருளும் திவ்ய தேசம் –
மந்தரை கூனி என்றுமாம்
கொண்டை கொண்ட கோதை மீது தேனுலாவு கூனி கூன் உண்டை கொண்டரங்க வோட்டி உள் மகிழ்ந்த நாதன்
கூனே சிதைய வுண்டை வில் நிறத்தில் தெறித்தாய் கோவிந்தா

———————————————————————

முந்நூல் மறையவர் நா மூது அரம்பை மாரின் நடு
மெய்ந்நூல் நலங்க வரும் வேங்கடமே — பொய்ந்நூலால்
அச்சமயக் கத்தினார் ஆதரிக்கத் தெய்வங்கள்
வைச்ச மயக்கத்தினார் வாழ்வு –59-

முந்நூல் மறையவர் நா -முப்புரி நூல் தரித்த பிராமணர்கள் யுடைய நா வானத்து –
மெய்ந்நூல் நலங்க வரும்-பொருள்களின் உண்மையைச் சொல்லுகிற தத்துவ சாஸ்த்ரங்களின் நல் பொருள்களை ஓதிக் கிரகித்தற்கு இடமான
மூது அரம்பை மாரின் நடு -பழைமையான தேவ மாதர்களுடைய இடையானது
மெய்ந்நூல் நலங்க வரும்-தனது வடிவத்தின் நுண்மையால்-பஞ்சு நூல் தனக்கு ஒப்பாக மாட்டாது -கெடும்படி பொருந்திய
வேங்கடமே —
பொய்ந்நூலால் -பொய்மையைக் கூறுகிற சாஸ்த்ரங்களைக் கொண்டு
அச்சமயக் கத்தினார் -அ சமயம் கத்தினார் -அந்த மதக் கோட்பாடுகளை பிதற்றும் தன்மை யுள்ளவர்கள்
ஆதரிக்கத் தெய்வங்கள் வைச்ச மயக்கத்தினார் வாழ்வு —
விரும்பிக் கொண்ட்சாடும் படி -பல தெய்வங்களை யுண்டாக்கி வைத்த மாயையை யுடைய திருமால் நித்ய வாஸம் செய்து அருளும் திவ்ய தேசம் –

—————————————————————–

ஓதும் மறை யோர் புறமும் உள்ளும் கலையின் அரு
மேதை அகலா இருக்கும் வேங்கடமே -கோதை குழல்
சுற்றாத தார் அணியார் தூய திருத்தாள் ஊன்றப்
பற்றாத தாரணியார் பற்று –60-

ஓதும் மறை யோர் புறமும்-வேதம் ஓதும் அந்தணர்கள் உடைய உடம்பும்
அரு கலையின் மேதை அகலா இருக்கும்-பெறுதற்கு அரிய மான் தோல் நீங்காது இருக்கப் பெற்ற
முப்புரி நூலோடு மானுரி இலங்கும் மார்பினில் இரு பிறப்பு ஒரு மாணாகி-திரு எழு கூற்று இருக்கை
உள்ளும் -அவர்கள் உடைய மனமும்
கலையின் அரு மேதை அகலா இருக்கும் -சாஸ்த்ரங்களின் நுட்பமான அறிவு பரந்து இருக்கப் பெற்ற
வேங்கடமே –
உள்ளும் புறமும் ஒரு நிகராக இருக்கும் வேத அத்யயனம் செய்த அந்தணர் என்றபடி
கோதை குழல் சுற்றாத தார் அணியார் -ஆண்டாள் தனது கூந்தலில் சூடாத மாலையை அன்புடன் அணிந்து கொள்ளாதவரும்
தூய திருத்தாள் ஊன்றப் பற்றாத தாரணியார் பற்று —
பரிசுத்தமான சிறந்த தமது பாதங்களில் ஒன்றை ஊன்றி அளத்தற்கு இடம் போராத
நிலவுலகத்தை யுடைய திருமால் உகந்து அருளி நித்யவாசம் செய்து அருளும் திவ்ய தேசம்
மண்ணும் விண்ணும் என் காற்கு அளவின்மை காண்மின் என்பான் ஒத்து வான் நிமிர்ந்த -திரு விருத்தம்

——————————————————————

நன் முலை போல் வெண் நகையார் நாயகர் மேல் வைத்த நெஞ்சும்
மென் முலையும் கற்பூரம் சேர் வேங்கடமே -முன் மலைந்து
தோற்ற மாரீசனார் தோற்றி மாயம் புரிய
சீற்றம் ஆர் ஈசனார் சேர்வு –61-

நன் முலை போல் வெண் நகையார் -அழகிய முல்லை அரும்பு போன்ற வெண்மையான பற்களை யுடைய மகளிர்
இடைக்குறை விகாரம் அடைந்து முல்லை -எனபது முலை யாயிற்று -பல்லுக்கு முல்லை அரும்பு உவமை -அழகிய வடிவுக்கும் வெண்மைக்கும் –
நாயகர் மேல் வைத்த -தம் தம் கணவர் இடத்தில் செலுத்திய
நெஞ்சும் -மனமும்
கற்பூரம் சேர்-கற்பு உரம் சேர் -பதி விரதா தர்மத்தின் வலிமை பொருந்தப் பெற்ற -உரம் -கலங்காத நிலைமை –
மென் முலையும்-அம்மகளிர் யுடைய மென்மையான ஸ்தனங்களும்
கற்பூரம் சேர்-பச்சைக் கற்பூரம் சேரப் பெற்ற
வேங்கடமே –
இங்கே வாழும் மகளிர் உள்ளும் புறமும் ஒத்து உள்ளன என்றவாறு
முன் மலைந்து தோற்ற மாரீசனார் தோற்றி மாயம் புரிய -மீண்டும் வந்து மாயம் செய்ய
சீற்றம் ஆர் ஈசனார் சேர்வு –

———————————————————————-

கூறும் கிளி மொழியார் கொங்கை என்றும் கண் என்றும்
வீறு மருப்பிணை சேர் வேங்கடமே -நாறும்
துளவ மலர்க் கண்ணியார் தொண்டாய்த் தமக்கு அன்பு
உள அமலர்க்கு அண்ணியார் ஊர் –62-

கூறும் கிளி மொழியார் கொங்கை என்றும்
கொஞ்சிப் பேசும் கிளி போன்ற இன் சொற்களை யுடைய மகளிரது ஸ்தனங்கள் என்று
வீறு மருப்பிணையும் -மருப்பு இணையும் -பெருமை யுற்ற இரட்டையான யானைத் தந்தங்களும்
கண் என்றும்-அவர்கள் உடைய கண்களின் நோக்கம் என்று
வீறு மருப்பிணையும் -வீறு மரு பிணையும் -சிறப்பு பொருந்திய பெண் மானும்
சேர் வேங்கடமே -பொருந்திய திரு வேங்கடமே
நாறும் துளவ மலர்க் கண்ணியார் –தொண்டாய்த் தமக்கு அன்பு உள அமலர்க்கு அண்ணியார் ஊர் –

———————————————————————-

மாதர் அம் பொன் மேனி வடிவும் அவர் குறங்கும்
மீது அரம்பையைப் பழிக்கும் வேங்கடமே -பூதம் ஐந்தின்
பம்பர மாகாயத்தார் பாடினால் வீடு அருளும்
நம் பர மா காயத்தர் நாடு –63-

மாதர் அம் பொன் மேனி வடிவும்-
மீது அரம்பையைப் பழிக்கும்-மேல் உலகில் உள்ள ரம்பை என்னும் தேவ மாதை இழிவு படுத்தப் பெற்ற
அவர் குறங்கும்-அம்மகளிறது தொடையும்
மீது அரம்பையைப் பழிக்கும் -மேன்மை யுள்ள செழித்த வாழைத் தண்டை வெள்ளப் பெற்ற
வேங்கடமே –
பூதம் ஐந்தின் -பஞ்ச பூதங்களினால் ஆகிய
பம்பர மாகாயத்தார் -பம்பரம் மா காயத்தார் -சுழல்கிற பம்பரம் போல் விரைவில் நிலை மாறுவதான -பெரிய உடம்பை யுடைய சனங்கள்
பாடினால் வீடு அருளும் நம் பர மா காயத்தர் நாடு –
ஸ்துதித்தால்-அவர்கட்கு முக்தி அருளும் நம் தலைவர் பரமாகாசம் எனப்படும் பரம பதம் யுடைய திருமாலின் திவ்ய தேசம் –

————————————————————————-

கோள் கரவு கற்ற விழிக் கோதையர்கள் பொற்றாளும்
வேள் கரமும் அம்பஞ்சு ஆர் வேங்கடமே -நீள் கரனார்
தூடணனார் முத்தலையார் துஞ்ச எய்து துஞ்சாரைக்
கூடு அணனார் முத்து அலையார் குன்று –64-

கோள் -ஆடவரை வருத்தும் தன்மையும்
கரவு-அவர்கள் மணத்தை வஞ்சனையாக கவரும் தன்மையும்
கற்ற விழிக் கோதையர்கள் பொற்றாளும்
அம்பஞ்சு ஆர்-அழகிய செம்பஞ்சு குழம்பு ஊட்டப் பெற்ற
வேள் கரமும் -மன்மதனது கையும்
அம்பஞ்சு ஆர் -பஞ்ச பாணங்கள் பொருந்தப் பெற்ற
வேங்கடமே –
நீள் கரனார் தூடணனார் முத்தலையார் துஞ்ச எய்து -பெரிய கரனும் -தூஷணனும் -த்ரிசிரசும் –
-கரனின் சேனைத்தலைவர்கள் இவர்கள் -இறக்கும்படி அம்பு செலுத்தி பின்பு
துஞ்சாரைக் கூடு அணனார் முத்து அலையார் குன்று –
உறங்காதவரான இலக்குமணனைச் சேர்ந்த தமையனாக உள்ளவரும்
முத்துக்களை யுடைய கடலில் பள்ளி கொண்டு அருளுபவருமான திருமால் உடைய திருமலை

————————————————————————-

கொங்கைக் கோடு ஏறிக் குலுக்கும் அரியும் கரியும்
வேங்கைக் கோடாதரிக்கும் வேங்கடமே -பூங்கைக்குள்
மெய்த்தவளைச் சங்கு எடுத்தார் மேகலை விட்டு அங்கை தலை
வைத்தவள் அச்சம் கெடுத்தார் வாழ்வு –65-

கொங்கைக் கோடு ஏறிக் குலுக்கும் அரியும் –
கோங்கு மரத்தை கிளைகளின் மேல் ஏறி மிக அசைகின்ற குரங்கும்
வேங்கைக் கோடாதரிக்கும்-அங்கு இருந்து அருகில் உள்ள வேங்கை மரத்தின் கிளையை விரும்பித் தாவிப் பிடிக்கிற
கரியும் -யானைகளும்
வேங்கைக் கோடாதரிக்கும் -வேங்கைக்கு ஓடாது அரிக்கும் -புலிகளுக்கு அஞ்சி ஓடாமல் எதிர்த்து நின்று பொருது அவற்றை அளிக்கப் பெற்ற
வேங்கடமே –
பூங்கைக்குள் மெய்த்தவளைச் சங்கு எடுத்தார்-பூம் கைக்குள் -அழகிய கையில் -மெய்த் தவளம்-உருவம் வெண்மையான – சங்கு எடுத்தார்
மேகலை விட்டு அங்கை தலை வைத்தவள் அச்சம் கெடுத்தார் வாழ்வு –
ஆடையைப் பற்றுதலை விட்டு தலை மேல் கை கூப்பி வணங்கிய த்ரௌபதி அச்சம் தீர்த்து அருளிய திருமால்

—————————————————————————-

மாவில் குயிலும் மயிலும் ஒளி செய்ய
மேவிப் புயல் தவழும் வேங்கடமே -ஆவிக்குள்
ஆன அருள் தந்து அடுத்தார் ஆன் நிரைக்காகக் குன்று ஏந்தி
வானவருடம் தடுத்தார் வாழ்வு –66-

மாவில் குயிலும் ஒளி செய்ய
மா மரத்தில் குயில்களும் ஒளித்து கொள்ளும் படியும்
அங்கு
மயிலும் ஒளி செய்ய -மயில்களும் பிரகாசம் அடையும் படியும்
மேவிப் புயல் தவழும்-பொருந்தி மேகம் சஞ்சரிக்கப் பெற்ற
வேங்கடமே –
குயிலும் மயிலும் மா மரத்தில் தங்குமே -புயல் வருகையால் இரண்டும் ஒரே நிகரான தன்மையை அடைகின்றன –
ஆவிக்குள் ஆன அருள் தந்து அடுத்தார் -பொருந்திய கருணையைச் செய்து -எனது உயிரினுள் சேர்ந்தவரும்
ஆன் நிரைக்காகக் குன்று ஏந்தி வான வருடம் -வர்ஷம் – தடுத்தார் வாழ்வு —

———————————————————————–

கானொடு அருவி கனகமும் முத்தும் தள்ளி
மீனோ வெனக் கொழிக்கும் வேங்கடமே -வானோர்கள்
மேகன் அயன் அம் கொண்டு ஆர் வேணி அரன் காண்பு அரியார்
காக நயனம் கொண்டார் காப்பு –67-

கானொடு அருவி கனகமும் முத்தும் தள்ளி மீனோ வெனக் கொழிக்கும்
காடுகளின் வழியாக ஓடி வரும் நீர்ப் பெருக்குகள் பொன்னையும் முத்தையும் அலைத்து எறிந்து
நஷத்ரங்களோ என்று காண்பவர்கள் சொல்லும் படி பக்கங்களில் ஒதுக்கப் பெற்ற
மீன்கள் ஒ என்று அலறித் துள்ளும் படி கொழிக்கும் என்னவுமாம்
அவ்வருவிகள்
மீனோ வெனக் கொழிக்கும் –மீ நோவு எனக்கு ஒழிக்கும் -மிகுதியான பிறவித் துன்பத்தை எனக்கு போக்குதற்கு இடமான
வேங்கடமே –
வானோர்கள் -தேவர்களும் -மேகன் -மேகத்தை வாகனமாக உடைய இந்திரனும் -அயன் -பீரமனும் –
அம் கொண்டு ஆர் வேணி அரன்-நீரை -கங்கா வெள்ளத்தை -தரித்து பொருந்திய கபர்த்தம் என்னும் சடை முடியை யுடைய சிவபிரானும்
ஔதார் வேணி -பிரகாசமான கொன்றை மாலையைத் தரித்த சிவபிரான் என்னவுமாம் –
காண்பு அரியார்
காக நயனம் கொண்டார் -காகாசுரனது ஒரு கண்ணை பரித்தவருமான திருமால் காப்பு —
அத்திரமே அதன் கண்ணை அறுத்ததும் ஓர் அடையாளம் –

———————————————————————–

கண்டு அடைந்த வானவரும் காந்தள் குல மலரும்
விண்ட விர்ந்து நிற்கின்ற வேங்கடமே -தொண்டருக்கு
வைகுந்தம் நாட்டான் மருவு உருவம் ஈந்து வைக்கும்
வைகுந்த நாட்டான் வரை –68-

கண்டு அடைந்த வானவரும்
திருமலையின் அழகைக் கண்டு -அதன் இடத்தில் வந்து சேர்ந்த தேவர்களும்
விண் தவிர்ந்து நிற்கின்ற -மிகவும் இனிமையான அவ்விடத்தை விட்டுச் செல்ல மனம் இல்லாமையால் தேவ லோகத்தை நீங்கி நிற்றற்கு காரணமான
குலம் காந்தள் மலரும் விண்டு அவிர்ந்து நிற்கின்ற -இதழ் விரிந்து மலர்ந்து விளங்கி நிற்கும் இடமான
வேங்கடமே –
தொண்டருக்கு வை குந்தம் நாட்டான் -யமன் கூரிய சூலாயுதத்தை நாட்ட முடியாமல் செய்து அருளி
வை கூர்மை குந்தம் -ஈட்டி என்றபடி
மருவு உருவம் ஈந்து -பொருந்திய தன் உருவத்தை அடியார்க்கு கொடுத்து
வைக்கும் வைகுந்த நாட்டான் வரை –ஸ்ரீ வைகுந்தத்தில் நிலையாக வைத்து அருளும் திருமால் உடைய திருமலை –
சாலோக்யம் அருளி -என்றவாறு

——————————————————————————

வாழ் அம புலியினொடு வான் ஊர் தினகரனும்
வேழங்களும் வலம் செய் வேங்கடமே -ஊழின் கண்
சற்று ஆயினும் இனியான் சாராவகை அருளும்
நல்தாயினும் இனியான் நாடு –69-

வாழ் அம புலியினொடு வான் ஊர் தினகரனும் வலம் செய் –
கல்பகாலம் அளவும் அழிவின்றி வாழ்கின்ற சந்திரனோடு -ஆகாயத்தில் சஞ்சரிக்கின்ற சூரியனும் -பிரதஷிணம் செய்யப் பெற்ற
வேழங்களும் வலம் செய் -யானைகளும் வலிமை கொள்ளப் பெற்ற
வேங்கடமே –
இனி மேல் யான் –
ஊழின் கண் சற்று ஆயினும் இனியான் சாராவகை அருளும்
நல்தாயினும் இனியான் நாடு –
ஊழின் கண்-கரும வசத்திலே –சற்று ஆயினும் சாரா வகை -சிறிதும் பொருந்தாத படி –
நல் தாயினும் மேலாக அருளிய இனிய திருமாலின் திவ்ய தேசம்

—————————————————————

நாட்கமலப் பூஞ்சுனைக்கும் சாயகங்கள் கொய் துதிரி
வேட்கும் வடிவு இல்லா வேங்கடமே வாட் கலியன்
நா வியப்பு ஆம் பாட்டினர் நச்சு மடுவைக் கலக்கித்
தாவி அப்பாம்பு ஆட்டினார் சார்பு –70-

நாட்கமலப் பூஞ்சுனைக்கும் வடிவு இல்லா-
நாளத்தோடு கூடிய தாமரையை யுடைய அழகிய சுனைகளுக்கும் நீர் குறைவு இல்லாத
சாயகங்கள் கொய் துதிரி வேட்கும் வடிவு இல்லா-
தனது அம்புகளாகிய மலர்களைக் கொய்து கொண்டு திரிகிற மன்மதனுக்கும் உருவம் இல்லா
வேங்கடமே
வாட் கலியன் நா வியப்பு ஆம் பாட்டினர்
நஞ்சு மடுவைக் கலக்கித் தாவி அப்பாம்பு ஆட்டினார் சார்பு –கொடுமையால் அப்பாம்பு என்று சுட்டிக் காட்டி அருளுகிறார் –
நர்த்தனம் செய்து காளியனை அடக்கினார் என்கிறார் –

—————————————————————–

ஆயும் துறவறத்தை அண்டின முத் தண்டினரும் வேயும்
கிளை விட்ட வேங்கடமே -தோயும்
தயிர்க்காத்தாம் கட்டுண்டார் தாரணியில் தந்த
உயிர்க்காத்து ஆங்கு அட்டு உண்டார் ஊர் –71-

ஆயும் துறவறத்தை அண்டின முத் தண்டினரும்
சிறந்தது என்று நூல்களினால் ஆராய்ந்து கூறப்பட்ட சந்நியாஸ்ரமத்தை -பொருந்திய த்ரிதண்டம் ஏந்திய முனிவர்களும்
தத்வ த்ரயம் -அறிந்து -மண் பெண் பொன் ஆசை மூன்றையும் அடக்கியவர்கள் –
கிளை விட்ட –சுற்றத்தாரை பற்று அற கை விடுவதற்கு இடமான
வேயும் கிளை விட்ட -மூங்கில்களும் கிளைகளை வெளியிட்டுச் செழித்து வளர்வதற்கு இடமான
வேங்கடமே –
-தோயும் தயிர்க்கா -தோய்ந்த தயிரைக் களவு செய்து உண்பதற்காக
தாம் கட்டுண்டார்
தாரணியில் தந்த -உலகத்தில் தம்மால் படைக்கப் பட்ட
உயிர்க்காத்து ஆங்கு அட்டு உண்டார் ஊர் —

————————————————————–

தொண்டொடு மெய்யன்பு உடையார் தூய மனமும் சந்தனமும்
விண்டொரு பொற் பாம்பணை சேர் வேங்கடமே -தண்டொடு வாள்
கோல் அமரும் கார் முகத்தார் கோடு -ஆழியார் குழையின்
கோலம் மருங்கு ஆர் முகத்தார் குன்று –72-

தொண்டொடு மெய்யன்பு உடையார் தூய மனமும்
பணிவிடை -கைங்கர்யம் -செய்தலுடன்-உண்மையான பக்தியை யுடைய அடியார்களது பரிசுத்தமான உள்ளமும்
விண்டொரு பொற் பாம்பணை சேர் -திருமாலுடனே அழகிய ஆதி சேஷன் சயனத்தை த்யானிக்கப் பெற்ற –
விஷ்ணு -என்பதே விண்டு என்று மருவி –
சந்தனமும் விண்டொரு பொற் பாம்பணை சேர் –
சந்தன மரங்களும் விண் தொடு -உயர்ச்சியால் ஆகாசத்தை அளாவிய பொலிவான கிளைகள் பொருந்தப் பெற்ற
வேங்கடமே –
தண்டொடு வாள்
கோல் அமரும் கார் முகத்து -அம்புகள் பொருந்திய வில்லையையும் கொண்டவர்
ஆர் கோடு -ஆழியார் ஒலிக்கின்ற சங்கத்தையும் கொண்டவர்
குழையின் கோலம் மருங்கு ஆர் முகத்தார் குன்று –
குண்டலங்களின் அழகு இரண்டு பக்கங்களிலும் பொருந்திய திருமுகத்தை யுடைய திருமாலினது திருமலை –

——————————————————————-

கிட்டும் நெறி யோகியரும் கிள்ளைகளும் தம் கூடு
விட்டுமறு கூடு அடையும் வேங்கடமே -எட்டுமத
மாவென்று வந்தான் வர நாளை வா இன்று
போ என்று உவந்தான் பொருப்பு –73-

கிட்டும் நெறி யோகியரும் தம் கூடு விட்டுமறு கூடு அடையும்
சரீரம் விட்டு வேறு சரீரம் புகப்பெற்ற
கிள்ளைகளும் தம் கூடு விட்டுமறு கூடு அடையும் -கிளிகளும் வசிக்கும் கூண்டை விட்டு நீங்கி வீதிகளில் சேரப் பெற்ற
வேங்கடமே –
எட்டுமத மா வென்று வந்தான்-அஷ்ட திக் கஜங்களைச் சயித்து வந்த இராவணன்
ஐராவதம் -புண்டரீகம் -வாமனம் -குமுதம் -அஞ்சனம் -புஷ்ப தந்தம் -சார்வ பௌமம்-சுப்பிரதீகம் -அஷ்ட திக் கஜங்கள்
வர நாளை வா இன்று போ என்று உவந்தான் பொருப்பு –வந்தான் –போர் ஒளிந்து மீண்டான் -என்றுமாம் –

———————————————————————

மட்டு வளர் சாரலினும் மாதவத்தோர் சிந்தையினும்
விட்டு மதி விளங்கும் வேங்கடமே -கட்டு சடை
நீர்க் கங்கை ஏற்றான் இரப்பு ஒழித்தான் நீள் குறள் ஆய்ப்
பார்க்கு அங்கை ஏற்றான் பதி –74-

மட்டு வளர் சாரலினும் -மலர்களின் நின்றும் கூண்டுகளின் நின்றும் தேன் பெருகி வழியப் பெற்ற அம்மலையின் பக்கங்களிலும்
விட்டு மதி விளங்கும் -மதி விட்டு விளங்கும் -சந்தரன் ஒளியை வீசி விளங்கப் பெற்ற
மாதவத்தோர் சிந்தையினும்
விட்டு மதி விளங்கும் -விஷ்ணு மதி -திருமாலை விஷயமாகக் கொண்ட ஞானச் சுடர் விளங்கப் பெற்ற
வேங்கடமே –
கட்டு சடை நீர்க் கங்கை ஏற்றான் இரப்பு ஒழித்தான்
நீள் குறள் ஆய்ப் பார்க்கு அங்கை ஏற்றான் பதி –ஆலமர் வித்தின் அரும் குறள் ஆனான் –

——————————————————————-

புக்கு அரு மாதவரும் பூ மது உண் வண்டினமும்
மெய்க்க வசம் பூண்டு இருக்கும் வேங்கடமே -ஒக்க எனை
அன்பதினால் ஆண்டார் அரிவையொடும் கான் உறைந்த
வன்பதினால் ஆண்டார் வரை –75-

புக்கு அரு மாதவரும் மெய்க்க வசம் பூண்டு இருக்கும்
அங்கு வருகின்ற அரிய பெரிய தவத்தை யுடைய முனிவர்களும்
மெய்க்க வசம் பூண்டு இருக்கும் -மெய் கவசம் பூண்டு இருக்கும் -சத்தியமாகிய கவசத்தை தரித்து இருக்கப் பெற்ற
பூ மது உண் வண்டினமும் மெய்க்க வசம் பூண்டு இருக்கும்
மலர்களில் உள்ள தேனைக் குடிக்கின்ற வண்டுகளின் கூட்டமும்
மெய்க்கு அவசம் பூண்டு இருக்கும் -மதுபான மயக்கத்தால் உடம்பில் தம் வசம் தப்பி பரவசமாம் தன்மையை கொண்டு இருக்கப் பெற்ற
வேங்கடமே
-ஒக்க-தம் மெய்யடியாரை ஒக்க
எனை-அடிமைத் திறம் இல்லாத என்னையும்
அன்பதினால் ஆண்டார்
அரிவையொடும் கான் உறைந்த வன்பதினால் ஆண்டார் வரை
வல் பதினால் -கொடிய பதினான்கு -ஆண்டார் -வருடங்களை யுடைய திருமாலினது வரை -திருமலை

——————————————————————–

கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்–