ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் அருளிச் செய்த — ஸ்ரீ தனி த்வயம் -உத்தர வாக்யார்த்தம் —

ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் தனியன் –

லோகாசார்யாய குரவே கிருஷ்ண பாதச்ய ஸூ நவே
சம்சார போகி சந்தஷ்ட ஜீவ ஜீவாதவே நம-

——————————————————————————————-

உத்தர வாக்யத்தின் தாத்பர்யம்–

இந்த உபாயம் தான் ஐஸ்வர் யாத் யுபேய ஆபாசங்களுக்கும் பொதுவாய் இருக்கையாலே
அவற்றினுடைய த்யாக பூர்வகமாக மேல் நிரதிசயமான
உத்தம புருஷார்த்தத்தை விவஷிக்கிறது -ஸ்ரீ மதே -என்று –

இவ்வைஸ்வர்யாதி புருஷார்த்தங்களை சாஸ்திரம் ஆதரியா நிற்க உபேய ஆபாசம் என்று கழிப்பான் என் என்னில்
இவைதான் அல்ப அஸ்திரத்வாதி
தோஷ தூஷிதங்களாய் இருக்கையாலும் –
ஸ்வரூப பிராப்தம் அல்லாமையாலும் த்யாஜ்யம் –

தேஹாத்ம அபிமானிக்கு புத்திர பச்வன்னாதிகள் புருஷார்த்தமாய் இருக்கும் –
தேஹம் அஸ்திரம் என்னும் ஜ்ஞானம் பிறந்தவாறே அவை அவனுக்கு த்யாஜ்யமாய் இருக்கும்
இனி பரலோக புருஷார்த்தங்களில் வந்தால்
நரகம் அநிஷ்டமாய் இருக்கையாலே அதில் ருசியே பிறந்ததில்லை –
ஐஸ்வர்யம் ஆகிற ஸ்வர்க்காத் யனுபவத்தில் வந்தால் ஊர்வசீ சாலோக்யத்திலே ஸூக பிராந்தி கிடக்கையாலே ருசி யுண்டாய் இருக்கும் –
அத்தை லபித்து அனுபவிக்கப் புக்கில் தேவதை துச்சீல தேவதை யாகையாலே தன்னை உபாசித்துத் தான் கொடுத்த பலத்தை அனுபவிக்கும்
சாம்யா பத்தி பொறுக்க மாட்டாமையாலே யயாதியை -த்வமஸ- என்று தள்ளினால் போலே தள்ளும் –
இது தப்பி அனுபவிக்கப் புக்கவன்றோ
ஷீணே புண்யே மர்த்யலோகம் விசந்தி -என்று புண்ய ஷயம் பிறந்து நரகத்திலே விழப் புகுகிறோம்
என்கிற பயத்தோடு இருந்து அனுபவிக்கையிலே
உயிர்க் கழுவில் ஸூ கம் போலே துக்க விசேஷமாய் இருக்கும் அத்தனை –
ஸூக லவம் உண்டானாலும் வகுத்த புருஷார்த்தம் அல்லாமையாலே ஸ்வரூப ப்ராப்தம் அன்று
லோக விநாசம் உண்டாகையாலே அஸ்திரம் –

இனி ப்ரம லோக-சத்ய லோகம் – பிராப்தியில் வந்தால் அனுபவம் செல்லா நிற்கச் செய்தே ஷூத்பிபாசையாலே
ஸ்வமாம்சத்தைப் பஷித்துப் பின்னையும் போயிருக்கும் என்று சொல்லுகையாலும்
பூரணமான நிஷ்க்ருஷ்ட ஸூகம் அல்லாமையாலும்
ஸ்வரூப ப்ராப்தம் அல்லாமையாலும் த்யாஜ்யம்

இங்கன் ஒத்த துரித பரம்பரைகளும் இன்றியிலே அசித் வ்யாவ்ருத்தி விசேஷமான ஆத்ம வஸ்து விலஷணம் ஆகையாலே
பிராப்தியிலே ருசி யுண்டாய் இருக்கும் –
அத்தை லபித்து அனுபவிக்கப் புக்கால் பகவத் அனுபவமும் அங்கு உள்ளாருடைய பரிமாற்றமும் பிரகாசியா நிற்க
அவ்வனுபவதுக்கு யோக்யதை யுண்டாய் இருக்கக் கிடையாமையாலே
கீழ்ச் சொன்ன வற்றில் காட்டில் தனக்கு உண்டான ஸூகம் அடைய விதவா லங்காரம் போலே
அவத்யமாய் துக்கமாய் முடிவில்லாத நரக சமானமாய் இருக்கையாலே அதுவும் த்யாஜ்யம்

கீழ்ச் சொன்னவை போலே அல்பம் இன்றியே நிரதிசயமுமாய் அஸ்திரமும் இன்றியே நித்யமுமாய்
ஸ்வரூபத்துக்கு அநனுரூபம் இன்றியே அனுரூபமுமாய்
புநரா வ்ருத்தி இன்றியே அபுநா வ்ருத்தி லஷண மோஷமுமான உத்தம புருஷார்த்தத்தை விவஷிக்கிறது உத்தர வாக்கியம் –
உத்தர வாக்யத்தின் தாத்பர்யம் முற்றிற்று

—————————————————-

உத்தர வாக்யத்தின் பிரதிபத வியாக்யாநாரம்பம் –

ஸ்ரீ மதே –
என்றது கீழ் புருஷகார பூதையானால் போலே நித்ய ப்ராப்யம் என்கிறது –
இவள் ப்ராப்யை என்னும் இத்தை இச் சப்தம் காட்டுமோ என்னில்

ஸ்ரீ மதே -என்கிற விபக்தியாலும்
ஆய -என்கிற சதுர்த்தியாலும்-தாதர்யத்தைக் காட்டும் இத்தனை –
இரண்டும் ஏக விபக்தி யாகையாலே நாராயண பதத்துக்கு ஸ்ரீ சப்தம் விசேஷணம் ஆகையாலே
ஸ்ரீ மன் நாராயணன் பொருட்டு என்றாய்த்து ஸ்ரீ சப்தம் காட்டுவது –

ப்ராப்யை என்று இச் சப்தம் காட்டாதாகில் அவனோபாதி ப்ராப்யை என்று சொல்லுகிற அர்த்தம் சேருகிறபடி எங்கனே என்னில்
அவன் பிரதான ப்ராப்யனாய்த்தும் ஸ்வாமி யாகையாலே இறே –
இவளும் இவனுக்கு மஹிஷி-
இவர்களைக் குறித்து ஸ்வாமிநி என்னும் இச் சப்தமே இவளுடைய ப்ராப்யதையைச் சொல்லத் தட்டில்லை –
எங்கனே என்னில்

கீழ் ஸ்ரீ சப்தத்திலே இவர்களைக் குறித்து ஸ்வாமிநி என்னும்-வ்யுத்பத்தியாலும்-
விஷ்ணுபத்நீ என்கிற பிரமாணத்தாலும் சித்தமான அர்த்தத்துக்கு வாசகமான ஸ்ரீ மச் சப்தத்தை
இங்கே பிரயோகிக்கையாலே இச் சப்தமே இவளுடைய ப்ராப்யதையைச் சொல்லுகிறது –
தன்னை ஒழிந்தார்க்கு ப்ராப்ய சித்திகள் இவளுடைய கடாஷமாய் இருக்கும் –
இது தன்னை நம்மாழ்வார் -கோலத் திருமா மகளோடு உன்னைக் கூடி -என்றும் –
இளைய பெருமாளும் பவாம்ஸ்து சஹ வைதேஹ்யா கிரிசா நுஷூ ரம்ச்யதே -என்று
பெருமாள் ப்ராப்யரானவோ பாதி பெரிய பிராட்டியார் ப்ராப்யை என்றும் அருளிச் செய்தார்கள் –

இவ்வடிமை கொள்ளச் சேர இருக்கிற இருப்பை ஸ்ரியா சார்த்தம் ஜகத்பதி -இத்யாதிகளாலே –
இவள் ப்ராப்யத்தை எங்கும் ஒக்க வ்யாப்தம் –
அவனுடைய ப்ராப்யத்தை ச்வதஸ் சித்தம் அதுக்கு ஏகாயனனும் இசையுமே –
இவளுடைய ப்ராப்யதையைச் சொல்லுகையாலே இறே இதுக்கு பிரதான்யம்-
மாதா பிதாக்கள் இருவரையும் சேர அனுவர்த்திக்கும் புத்ரனைப் போலே
ஸ்வாமியும் ஸ்வாமிநியும் சேர்ந்த சேர்த்தியிலே அடிமை செய்கை சேஷ பூதனுக்கு ஸ்வரூபம் –

சாதன தசையில் புருஷகாரத்தை அபேஷித்தவோபாதி-சாத்திய தசையிலும் இருவருமான சேர்த்தி அபேஷிதம்
ஸ்ரீ மதே என்கிற மதுப்பாலே கீழில் மத் பதத்தில் அர்த்தம் போலே இங்கும் இருவருமான சேர்த்தியால்
வந்த போக்யதை நித்யம் என்கிறது –
இப்படி இச் சேர்த்தி ஒழிய தனித்து அவளே ப்ராப்யை என்று பற்றுதலும்
அவனே ப்ராப்யம் என்று பற்றுமதுவும் விநாசம் எங்கே கண்டோம் என்னில்
பிராட்டி ஒழிய பெருமாள் பக்கலிலே போக்ய புத்தி பண்ணின ஸூர்ப்பணகை நசித்தாள்-
பெருமாளைப் பிரித்து பிராட்டி பக்கலிலே போக்ய புத்தி பண்ணின ராவணன் நசித்தான் –
உடலையும் உயிரையும் பிரித்தார்க்கு விநாசம் அல்லது இல்லை இறே –
அனந்யா ராகவேணா ஹம் பாஸ்கரேண பிரபா யதா –
அனந்யா ஹி மா சீதா பாஸ்கரேண பிரபா யதா -என்று இவருடைய சத்பாவமும் இதுவான பின்பு
இனி இவர்களைப் பிரிக்கை யாவது வஸ்துவினுடைய சத்பாவத்தை இசையாமை இத்தனை இறே –
இவ்வஸ்து சத்பாவத்தை இசைந்தார்க்கு மிதுநமே இறே ப்ராப்யம் –

————————————————————–

நாராயணன் –
என்று எல்லா வழியாலும் வகுத்த சர்வாத்ம ஸ்வாமி என்கிறது –
கீழ் பற்றுகைக்கு சௌலப்யம் பிரதானமானவோ பாதி
இங்கும் அடிமை செய்கைக்கு வகுத்த சப்தம் அபேஷிதம் ஆகையாலே ஸ்வாமி த்வத்திலே நோக்கு –
வகுத்த ஸ்வாமி என்கையாலே இவனை ஒழிந்த அசேவ்யசேவை அபுருஷார்த்தம் என்கிறது –

திருமந்த்ரத்திலே நாராயண சப்த வாச்யமான அர்த்த விசேஷங்கள் இந் நாராயண சப்தத்தில் உபதேசியாது ஒழிவான் என் என்னில்
அங்கு ஸ்வரூபம் சொல்லுகிறது ஆகையாலே
சேதன அசேதனமான நித்ய பதார்த்தங்களினுடைய சமூஹங்கள் பலவற்றுக்கும் ஆவாச பூமியாய் இருக்கிறான்
என்று சர்வ ஸ்வாமித்வம் சொல்லிற்று –
இங்கு அசித் வ்யாவ்ருத்தனான சேதனனுக்கு பிராப்யம் சொல்லுகையாலே சர்வ ஸ்வாமித்வம் சொல்லிற்று –
கீழ் நாராயண பதத்தில் சொன்ன குணங்களும் இப்பதத்தில் ப்ராப்யபரமாக அனுசந்தேயம் –
அவன் தான் நிற்கும் நிலையிலே குணங்கள் நிற்பது –
பிராப்யமான ஆகாரமும் ப்ராபகமான ஆகாரமும் அவன் தனக்கு உண்டானால் போலே அவன் குணங்களுக்கும் உண்டு –
அங்கும் தன் குணங்களை ப்ராப்யபரமாகச் சொல்லுகிறது –

சோஸ்நுதே சர்வான் காமான் சஹ ப்ரஹ்மணா விபச்சிதேதி -என்றும்
பிணங்கி யமரர் பிதற்றும் குணம் -என்றும் குண அனுபவமே பிராப்யமாகச் சொல்லிற்று இறே
நித்ய ஸூ ரிகள் அனுபவிக்கக் கடவ குணங்களை நித்ய சம்சாரியை முக்தனாக்கி இக்குணங்களை இவர்கள் அளவிலே
மட்டம் செய்து கொடுத்து சாஷாத் கரித்து அனுபவிப்பிகையாலே சௌலப்யம் ப்ராப்யம் –

சேறு தோய்ந்த இவனை ப்ராகல்ப்யமேயாய் இருக்கிற நித்ய ஸூரிகளுடைய கோவையிலே ஒருவனாக்கி
அனுபவிப்பைக்கையாலே சீல குணம் ப்ராப்யம்

அனுபவிக்கிற இவனுடைய தோஷம் பார்த்தல் தன் வைலஷண்யம் பார்த்தல் செய்யாதே இவனை
அனுபவிப்பிக்கையாலே வாத்சல்யம் பிராப்யம் –

இவனுடைய அசேவ்ய சேவைகளைத் தவிர்த்து ஸ்வரூப அனுரூபமான கைங்கர்யத்தைக் கொடுத்து
அடிமை கொள்ளுகையாலே வகுத்த ஸ்வாமித்வம் பிராப்யம்

இந்த ஜ்ஞான சக்த்யாதி குணங்களை அனுபவிக்கிற இவனுக்கு போக்த்ருத்வ சக்தியையும் கொடுத்து
அனுபவிப்பைக்கையாலே அவற்றோடு இவற்றினுடைய கார்ய வஸ்தையான சீலாதி குணங்களோடு வாசியற
எல்லாம் கட்டடங்க இவனுக்கு பிராப்யம்
ஈஸ்வரன் தான் ப்ராப்யன் ஆகிறது -இக் குணங்களுக்கு ஆஸ்ரய பூதன் என்று இறே

நித்ய சம்சாரியை முக்தனாக்கி அனுபவிப்பிக்கையாலே வேறே குணங்கள் ப்ராப்யமாய்த்து என்னில்
ஸ்வேன ரூபேண குணங்கள் அடைய பிராப்யம் என்னும் இடம் கண்டோம் இறே
நித்ய ஸூரிகள் குமிழ் நீர் உண்கையாலே சம்சாரி சேதனனை இதுக்கு நிலவனாக்கி அனுபவிப்பிக்கிற
உபகார ச்ம்ருதிக்காக இட்ட பாசுரங்கள் இறே இவை –
ஒன்றும் செய்யாத போதும் போக்யதை இறே குணங்களுக்கு வேஷம் –
அவன் குணம் என்று இவை போக்யமான பின்பு குணா நாம ஆஸ்ரயமானவன் ஸ்வரூபத்துக்கு போக்யதையே
நிரூபகம் என்னும் இடம் சொல்ல வேண்டா விறே

நாராயண சப்தத்தில் அனந்தரத்தில் விக்ரஹத்தையே ஸ்பஷ்டமாகச் சொல்லாது ஒழிவான் என் –
விக்ரஹம் ப்ராப்யமாய் இருக்க என்னில்
இதுக்கு சாதனமான பூர்வார்த்தத்திலே விக்ரஹ வைலஷண்யத்தைச் சொல்லுகையாலே பிராபகமான வஸ்து
தான் ப்ராப்யம் ஆகையாலே இங்கு சப்தேன சொல்லிற்று
இல்லை யாகிலும் இங்கு உண்டு என்னும் இடம் அர்த்தாத் சித்தம்
விக்ரஹத்துக்கு போக்யதையே வேஷமாய் இருக்கையாலே இங்கு சித்தமாய் இருந்தது

அதிகாரியினுடைய கதி ஸூந்யதையாலே உபாயமாக வேண்டுகிறது -அதுவும் அவனுக்கு அபாஸ்ரயமாம் படி
உபதேசிக்க வேண்டுகையாலே சப்தேன சொல்லிற்று
பிரசித்தமான விஷயத்துக்கு பூரிக்க வேண்டாவே
இந்த விக்ரஹத்துக்கு இங்கனே இருப்பதொரு ஏற்றம் உண்டு –
மாணிக்கச் செப்பிலே பொன்னையிட்டு வைத்தால் போலே ஸ்வரூப குணங்களுக்கு பிரகாசகமாய் இருக்கையாலே
இக் குணங்களினுடைய போக்யதை எல்லை யறிந்து விக்ரஹத்து அளவும் செல்லப் பெற்றது இல்லை –
விக்ரஹத்தை அவன் தான் ஆவிஷ்கரித்து சதா பச்யந்திக்கு விஷயம் ஆக்கின போது அனுபவிக்கும் அத்தனை –

ஆக இந் நாராயண சப்தத்தாலே சர்வாத்ம ஸ்வாமித்வம் சொல்லிற்றாய்த்து –

——————————————————-

ஆய –
என்கிற இது சதுர்த்தியாகையாலே நித்ய கைங்கர்யத்தைப் பிரார்த்திக்கிறது –
இச் சதுர்த்திக்கு தாதர்த்யம் அர்த்தமாய் இருக்க
நித்ய கைங்கர்யத்தை பிரார்த்திக்கிறது என்கைக்கு கைங்கர்யத்தைக் காட்டுமோ என்னில்
வ்ருஷாய ஜலம்-என்றால் வ்ருஷத்தின் பொருட்டு என்னுமா போலே
நாராயணாயா என்றால் நாராயணனுக்கு சேஷம் என்று காட்டும் அத்தனை அன்றோ என்னில்

ஸ்வரூபம் தாதர்த்தமான போது ஸ்வரூப அனுபந்தியாய் வரும் ஸ்வ பாவங்களும் தாதர்த்தமாகக் கடவது இறே-
சேஷ பூதனுக்கு சேஷ வ்ருத்தி இறே ஸ்வ பாவம் –
புஷ்பம் பரிமளத்தோடே அலருமா போலே ஸ்வரூப பிராப்தி யாவது கைங்கர்ய பிராப்தியாகக் கடவது –
கைங்கர்யம் சஹஜமாகையாலே —
தாதர்த்தமாவது –
சேஷத்வம் சொன்னவிடத்தில் சேஷ வஸ்துவைச் சொல்லிற்றாய்-
அது சொன்னவிடத்தில் சேஷ வ்ருத்தியைச் சொல்லிற்றாய் –
அவ் வழியாலே கைங்கர்யம் சொல்லிற்றாய்க் கடவது –

ஆனால் சர்வ தேச சர்வ கால சர்வ தேச உசிதமான சகல கைங்கர்யங்களையும் பண்ணப் பெறுவேனாக வேணும் என்கிற
பிரார்த்தனையைக் காட்டுமோ இச்சப்தம் என்னில்
இந்த ஸ்வரூப ஸ்வபாவம் தானே ஒரே காலத்திலேயாய் வேறொரு காலத்திலேயே இன்றிக்கே இருக்குமோ -என்னில்
எல்லா தேசத்திலும் உண்டு என்று வந்து புகுந்து -உடனாய் மன்னி -என்கிறபடியே
இத்தேசங்களில் ஓரோர் அவஸ்தைகளில் ஓரோர் இடங்களிலேயாய்
ஓரோர் அடிமை இன்றிக்கே இருக்குமோ என்னில் –
சகல கைங்கர்யங்களும் உண்டு என்று வந்து புகுந்து வழு விலா வடிமை என்கிறபடியே
பிரணவத்தாலும் நமஸ் ஸாலும் ஸூத்த ஸ்வரூபரான நமக்கு என்று போகாதிகாரியைச் சொல்லுகிறது –

அவ்விடத்திலே செய்ய வேண்டும் நாம் -என்று திருப்பாவாடை இனிது என்று சொல்லுமா போலே
இவன் கைங்கர்யம் இனிது என்று இவன் எல்லா அடிமையையும் பாரித்தால் அவன் கொள்ளுமோ –
உத்துங்க தத்தவம் அன்றோ என்னில் இவன் இருந்து ப்ரார்த்திக்கவே அவன் கொள்ளும் இடத்தைப் பற்றவே பிரார்த்தனை புகுந்தது –

இச்சப்தத்துக்கு சேஷத்வம் அர்த்தமாய் இருக்க கைங்கர்யத்தை கால தேசங்கள் இட்டுப் பெருக்கி
அது சந்திக்கிறதற்கு பிரயோஜனம் என் என்னில்
கலியன் பையையாகக் குவிகிக்க வேணும் என்னுமா போலே தனக்கு ஸ்வரூப அனுரூபமாய் சர்வாதிகாரமுமான கைங்கர்யத்தில் இறே
போக்யதையில் வைபவத்தாலே வந்த அபி நிவேசம் –
பகவத் அனுபவமும் கைங்கர்யமாய் இருக்கச் செய்தே அது ஈஸ்வரனுக்கும் ஒத்து தனக்கும் ப்ரீதி உண்டாகையாலே
இப்பிரீதி காரிதமான கைங்கர்யம் உண்டாய்த்து -இனி கைங்கர்யத்துக்கு அவ்வருகு இல்லையே பிராப்யம் –

கீழ்ச் சொன்ன பிராட்டியும் குணங்களும் விக்ரஹமும் ஈஸ்வரனும் ப்ராப்யம் அன்றோ என்னில் –
இக்கைங்கர்யத்துக்கு வர்த்தகர் ஆகையாலே ப்ராப்யர் ஆனார்கள் இத்தனை
கைங்கர்யமே பிராப்யம் —
அர்ச்சிராதி சாலோக்யாதி பரபக்த்யாதிகள் பிராப்யம் ஆனவோபாதி பகவல்லாபமும் ப்ராப்யமான ஆகாரம் –
கைங்கர்யமே பிரதான ப்ராப்யம்

சாலோக்யாதிகளில் சாயுஜ்யம் பிரதானமாகச் சொல்லுகிறது கைங்கர்யம் ஆகையால் இறே –
சாயுஜ்யம் ப்ரதிபன்னா தீவ்ர பக்தாஸ் தபஸ்விந-கிங்கரா மம தே நித்யம் பவந்தி நிருபத்ரவா -என்கிறபடியே சாயுஜ்யமாவது கூட்டரவு-
கூடினால் அல்லது கைங்கர்யம் சித்தியாது -ச்த்ரீபுமாங்கன் ஒன்றானார்கள் என்றால் ஏகத்ரவ்யம் ஆனார்கள் என்று அன்று இறே
ஒரு மிடறு ஆனார்கள் என்று பொருளாய்த்து-
அப்படியே இக்கைங்கர்யம் கொள்ள இருக்கிற சேஷியுடைய நினைவும் –
கைங்கர்யம் செய்து ஸ்வரூபம் பெற இருக்கிற சேஷபூதனுடைய நினைவும் ஒன்றாய் –
அதாவது சேஷியினுடைய நினைவு தனக்கு நினைவாய் அவனுடைய போக்யமே தனக்கு போக்யமாகத் தலைக்கட்டுகை –

ஒரு மிதுனம் போக்யம் மிக்கு உன்மச்தக ரசமாய்க் கலவா நின்றால் பிறக்கும் இனிமை இருவர்க்கும் ஒக்கும் இறே –
அதில் பரதந்த்ரனான இவனுக்கு பிறக்கும் இனிமை பாரதந்த்ர்யத்தோடே சேர்ந்து இருக்க வேணும் இறே -அதாவது
இவன் செய்யும் அடிமை கண்டு அவன் உகந்தால்
பின்னை அவன் உகந்தபடி கண்டு உகக்கை இறே இவனுக்கு ஸ்வரூபம் –

கைங்கர்ய விஷயமாக வங்கிபுரத்து நம்பி பணிக்கும் படி –
கிம் குர்ம இதி கைங்கர்யம் -என்று பகவத் அனுபவ ப்ரீதியாலே தடுமாறி என் செய்வோம் என்று இருக்கை -என்று
அங்கன் இன்றிக்கே மானசமாயும் வாசிகமாயும் காயிகமாயும் இறே செய்யும் அடிமைகள் –

சோஸ்நுதே சர்வான் காமான் சஹ ப்ரஹ்மணா விபிஸ்சிதா-என்று மானசமான அடிமை –
ஹாவு ஹாவு ஹாவு அஹம் அன்னம் அஹம் அன்னம் அஹம் அன்னம் அஹம் அந்நாதோ அஹம் அந்நாதோ அஹம் அந்நாதோ -என்றும்
நாம இத்யேவ வாதி ந -என்னும் இவை வாசிகமான அடிமை
யதா தருணவத்சா வத்சம் வத்சோ வா மாதரம் சாயா வா சத்த்ச்வம் அனுகச்சேத்-கச்சன் தம நுவ்ரஜேத்-ததா பிரகாரம் யேன யேன
தாதா கச்சதி தேன தேன சஹ கச்சதி -என்னும் இவை காயிகமான அடிமை –

ஆக இவையாய்த்து கைங்கர்யம் -இவை செய்யும் இடத்தில் –
தனக்கே யாக எனைக் கொள்ளுமீதே -என்கிறபடியே ஸ்ரக் சந்த நாதிகளைப் போலே
அவனுக்கு கைதொடுமானமாய் இருக்கை -அதாவது
விநியோகம் கொள்ளும் அவனுக்கே உறுப்பாய் தனக்கு என்ன வேறொரு ஆகாரம் இன்றிக்கே இருக்கை –
அப்படி -படியாய் -என்கிறபடியே
அசித் சமாதி யிலேயாம் படி தன ஸ்வரூபத்தை சிஷித்தால் பின்னை அவன் உகந்தபடி கண்டு உகக்கும்
என்னத் தட்டில்லை இறே புருஷகாரமாகைக்கு –

————————————————

இதுக்கு வரும் விரோதி நிவ்ருத்தியைச் சொல்லுகிறது நமஸ்ஸூ –
நம -என்கிறது
கைங்கர்யத்தில் நான் என்கிற விரோதியைப் போக்கித் தந்து அருள வேணும் என்கிறது
அஹங்கார கர்ப்பமான கைங்கர்யம் புருஷார்த்தம் அன்றே –
ஆகையாலே அவ்வளவும் செல்ல உள்ள அஹங்கார மமகாரங்களைப் போக்கித் தந்து அருள வேணும் என்கிறது –

அஹங்காரத்தை நிஷேதிக்கையாலே அத்தால் வந்த மமகாரமும் இந் நமஸ் ஸிலே நிஷேத்யமாய்த்து
அஹங்கார மமகாரங்கள் ஆகிற சேற்றிலே அநாதி காலம் புதையுண்டு கிடந்த சேதனனை நமஸ் சாகிற நீரிலே
கழுவுகையாலே ஆசும் மாசும் அற்றபடி –

இவன் முக்தனாய் ப்ராப்ய அனுபவம் பண்ணும் போதும் எனக்கு என்னுமது அங்கும் உண்டோ என்னில் -அங்கு இல்லை –
இக்கைங்கர்யம் பெற வேணும் என்று அபேஷிக்கிறவன் விரோதியோடே இருந்து அபேஷிக்கிறவன் ஆகையாலே
தேஹாத்மா அபிமானம் தொடக்கமாக கைங்கர்யத்தில் அஹங்கார கர்ப்பமீறாக நடுவுண்டான விரோதிகளைப் போக்கித்
தந்து அருள வேணும் என்று உபாசன வேளையாகைலே அபேஷிக்கிறான்
திருமந்த்ரத்திலே நமஸ்ஸி லே ஸ்வரூப விரோதி நிவ்ருத்தயை சொல்லிற்று —
இந் நமஸ்ஸிலே ப்ராப்ய விரோதியான ஸ்வ பிரயோஜநத்தை துடைத்தது –

கைங்கர்யம் ஆவது பிரகர்ஷயிஷ்யாமி -என்றும் –
படியாய்க் கிடந்தது உன் பவளவாய் காண்பேனே -என்றும்
உந்தன் திருவுள்ளம் இடர் கெடும் தோறும் நாங்கள் வியக்க இன்புறுதும் -என்றும்
தனக்கே யாக எனைக் கொள்ளுமீதே -என்றும் –
உனக்கே நாம் ஆட்செய்வோம் என்றும் –
தூயனவேந்தி -என்றும் –
நீத ப்ரீதி புரஸ் க்ருத -என்றும் –
சாயா வா சத்த்வம் அனுகச்சேத்-என்றும்
ப்ரீயதே சததம் ராம -என்றும்
முகப்பே கூவிப் பணி கொள்ளாய்-என்றும் –
க்ரியதாம் இதி மாம்வாத -என்றும்
ஏவ மற்றமரர் ஆட்செய்வார் -என்றும்
ரமமாணா வனே த்ரய -என்றும்
இவை இறே இவன் அடிமை செய்யும் போது இருக்கும் படி –

இத்தால் சொல்லுகிறது பாரதந்த்ர்ய காஷ்டைகள் –

—————————————————————–

ஆக
புருஷகாரம் சொல்லி –
அதினுடைய நித்யத்வம் சொல்லி –
அப்புருஷகாரம் மிகை என்னும்படியான வாத்சல்யாதி குண யோகம் சொல்லி –
விக்ரஹ வைலஷண்யம் சொல்லி –
இஷ்ட பிராப்திக்கும் அநிஷ்ட நிவாரணத்துக்கும் நிரபேஷமான உபாயம் சொல்லி –
தத் ஸ்வீகாரம் சொல்லி –
ஸ்வாமித்வ பூர்த்தி சொல்லி –
கைங்கர்ய பிரார்த்தனை சொல்லி –
கைங்கர்ய விரோதி போனபடி சொல்லித் தலைக்கட்டுகிறது –

ஷட்குண ரசான்னமான அஹம் அன்னத்திலே நெஞ்சு வையாதே ஸ்வாமிக்காக்குகை –
தேனும் பாலும் கன்னலும் அமுதுமாகித் தித்திப்பா
அங்கண்ணன் உண்ட என்னாருயிர்க் கோதிது-என்று பின்பு ஆபாதரணீயம் –

தனி த்வயம் முற்றிற்று –

———————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: