ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் தனியன் –
லோகாசார்யாய குரவே கிருஷ்ண பாதச்ய ஸூ நவே
சம்சார போகி சந்தஷ்ட ஜீவ ஜீவாதவே நம-
——————————————————————————————-
திருமந்திர பிரகரணம் -உபோத்காதம் –
நித்யோ நித்யா நாம் -என்றும் –
ஜ்ஞாஜ் நௌ த்வாவஜாவீசசௌ-என்றும் –
ப்ரக்ருதிம் புருஷஞ்சைவ வித்தய நாதி -என்றும் சொல்லுகிறபடியே
ஆத்ம ஸ்வரூபம் நித்தியமாய் இருக்கச் செய்தேயும் -அசந்நேவ ச பவதி என்கிறபடியே
அநாதிகாலம் அசத் வ்யவஹாரத்துக்கு விஷயமாய்ப் போந்தது –
பகவத் விஷய ஜ்ஞான ராஹித்யத்தாலே யாகையாலே -சந்தமேனம்-என்கிறபடியே சத் வ்யவஹாரத்துக்கு விஷயமாம் போது
பகவத் விஷய ஜ்ஞான சத் பாவத்தாலே ஆக வேணும் –
இப்படிப்பட்ட ஜ்ஞான விசேஷம் ஆகிறது –
ஈஸ்வரனுடைய சேஷித்வ விஷய ஜ்ஞானமும்
உபாயத்வ விஷய ஜ்ஞானமும்
உபேயத்வ விஷய ஜ்ஞானமும் இறே –
ஈத்ருசமான ஜ்ஞான விசேஷத்துக்கு உத்பாதகமாய் இருப்பது அபௌருஷேயமாய்-நித்ய நிர்தோஷமாய்-ஸ்வத பிரமாணமான வேதம் –
அந்த வேதம் தான் -அநந்தா வை வேதா -என்கிறபடியே அசங்க்யாதமாய் இருக்கையாலும் –
அல்பஸ்ச கால என்றும்
பூத ஜீவிதமத்யல்பம் -என்னும் -நம்முடை நாள் -என்றும் இத்யாதிகளில் சொல்லுகிறபடியே
சேதனர் பரிமித கால வர்த்திகளாய் இருக்கையாலும்
உள்ள காலம் தன்னிலே வேதத்தில் சொல்லுகிற அர்த்தத்தை ஆராயவென்று இழிந்தால்
ஸ்ரேயாம்சி பஹூ விக்நாநி -என்றும் பஹவச்ச விக்நா -என்றும் சொல்லுகிறபடியே
ஸ்ரேய ப்ராப்தி பிரத்யூஹ பாஹூள்யத்தாலும் –
அந்த வேதத்தில் சார பூதமான அர்த்த நிர்ணயம் பண்ணுகைக்கு யோக்யதை யற்று இருக்கும் –
ஆனபின்பு -யத் சாரபூதம் ததுபாசிதவ்யம் -என்கிறபடியே
வேத தாத்பர்ய பூதமாய் இருப்பதொன்றாலே வேதத்தில் நிர்ணீதமான அர்த்தத்தை அறிய வேணும் –
அதில் -ருசோ யஜூம்ஷி சாமானி ததைவா அதர்வணா நி ச -சர்வம் அஷ்டாஷராந்தச் ஸ்தம்-என்கிறபடியே
சகல வேத தாத்பர்ய பூமியாய் இருப்பதொரு மந்த்ரம் ஆகையாலே
இம்மந்திர முகத்தாலே சேஷ சேஷி பாவாதி ஜ்ஞானம் உபாதேயமாகக் கடவது –
யதா சர்வேஷூ தேவேஷூ இத்யாதி பிரக்ரியையாலே சகல தைவங்களிலும் சர்வேஸ்வரன் பிரதானனாகிறாப் போலே
சகல மந்த்ரங்களிலும் இம் மந்திர விசேஷம் பிரதானமாய் இருப்பதொன்று –
ஆஸ்தாம் தே குணராசிவத்-என்றும் –
பகவோ ந்ருப கல்யாண குணா புத்ரச்ய சந்தி தே -என்றும்
தவா நந்த குணஸ் யாபி ஷடேவ ப்ரதமே குணா -என்றும் –
ஈறில வண் புகழ் என்றும் –
பஹூநி மே வ்யதீதா நி என்றும் –
என் நின்ற யோனியுமாய் பிறந்தாய் -என்றும்
பிறப்பில் பல் பிறவிப் பெருமான் என்றும் இத்யாதிகளில் சொல்லுகிறபடியே
சர்வேஸ்வரனுடைய குணங்களும் குண பரிவாஹங்களான அவதாரங்களும் அசங்க்யாதங்களாய் இருக்குமா போலே
அவற்றை அனுபந்தித்து இருக்கும் மந்திர விசேஷங்களும் பஹூபிர் மந்தரை என்கிறபடியே பஹூ விதங்களாய் இருக்கும் –
இப்படி பஹூ விதங்களான மந்திர விசேஷங்களில் வைத்துக் கொண்டு –
நாராயணாய வித்மஹே வாஸூ தேவாய தீமஹி தன்னோ விஷ்ணு ப்ரசோதயாத் -என்று
விஷ்ணு காயத்ரியிலே இம்மூன்று மந்தரத்தையும் ப்ரதான்யேன பிரதிபாதிக்கையாலே
வ்யாபக மந்திர த்ரயமும் பிரதானமாகக் கடவது –
அந்த வ்யாபக மந்த்ரங்களில் வைத்துக் கொண்டு –
பிரதமத்திலே நாராயண சப்தத்தை ப்ரதான்யேன பிரதிபாதிக்கையாலும்
மேல் தானும் வாஸூ தேவ விஷ்ணு சப்தங்களை அநாதரித்துப் பலவிடங்களிலும் நாராயண சப்தத்தை இட்டு
பகவத் ஸ்வரூபாதிகளை நிர்த்தேசிக்கையாலும்
இப்படி வேத புருஷன் ஆதரித்த அளவன்றிக்கே வேதார்த்த விசதீகரண பிரவ்ருத்தரான வ்யாசாதி பரம ருஷிகள் பலரும்
வேதார்த்த உப ப்ரும்ஹணங்களாய் இருக்கிற ஸ்வ பிரபந்தங்களிலே பலவிடங்களிலும்
ஆர்த்தா விஷண்ணா-என்றும் –
ஆபோ நாரா-என்றும்
மாபைர்மாபை -என்றும் –
சர்வ வேத ரஹாஸ் யே ப்ய-என்றும்
ஏகோ அஷ்டாஷரமே வலம் -என்றும்
சகல மந்திர ப்ரதானதயா இத்தை பிரசம்சிக்கையாலும் –
ஸ்வ யத்ன சாத்தியமான பகவத் பிரசாதத்தாலே லப்த சார்வஜ்ஞரான ருஷிகளைப் போல் அன்றிக்கே
மயர்வற மதிநலம் அருளினன் என்கிறபடியே -நிர்ஹேதுக பகவத் கடாஷத்தாலே சமதிகத சமஸ்த வஸ்து வாஸ்தவரான
ஆழ்வார்கள் பலரும் ஸ்வ பிரபந்தங்களிலே பலவிடங்களிலும் இத்தையே பிரசம்சிக்கையாலும் –
ததனுசாரிகளான பூர்வாச்சார்யர்களும் இதர மந்த்ரங்களை அனாதரித்து இத்தையே தம்தாமுக்கு தஞ்சமாக அனுசந்தித்து
உபதேச வேளையிலும் தம்தாமைப் பற்றினவர்களுக்கு இத்தையே உஜ்ஜீவன ஹேதுவாக உபதேசித்துப் போருகையாலும்
ததனுசாயிகளான நமக்கும் இதுவே அனுசந்தேயமாகக் கடவது –
விட்டுசித்தன் விரும்பிய சொல் -என்கையாலே இறே திருப்பல்லாண்டை நம் மனிச்சர் ஆதரிக்கிறது –
வாச்ய வைபவம் போல் அன்று வாசக வைபவம் -அவன் தூரஸ்தனானாலும் இது சந்நிதி பண்ணிக் கார்யம் செய்யும் –
த்ரௌபதிக்கும் பல சித்தி யுண்டாயிற்று திருநாம வைபாவத்தாலே இறே –
சாங்கே த்யம்-என்கிறபடியே இது தான் சொல்லும் க்ரமம் ஒழியச் சொன்னாலும் தன் ஸ்வரூபம் கெட நில்லாது –
ஓராயிரமாய் என்கிறபடியே அவன் தனக்கும் ரஷண பரிகாரம் இதுவே
ஜ்ஞான சக்த்யாதிகளைப் போல அல்லாத திரு நாமங்கள் –
ஜ்ஞான ஆனந்தங்களைப் போலே இது –
நாமம் ஆயிரம் ஏத்த நின்ற நாராயணா -என்றும்
நாமம் பலவுமுடை நாரண நம்பி -என்றும் சொல்லிற்றே-
இதுதான் சர்வாதிகாரம் -பிரணவ அர்த்தத்துக்கு எல்லாரும் அதிகாரிகள் –
இடறினவன் அம்மே என்னுமா போலே இது சொல்லுகைக்கு எல்லாரும் யோக்யர் –
பிராயச்சித்த அபேஷை இல்லை –
இது தான் பல ப்ரதமாம் இடத்ததில் -ஐஹ லௌகிகம் ஐஸ்வர்யம் ஸ்வர்க்காத்யம் பார லௌகிகம் -கைவல்யம்
பகவந்தஞ்ச மந்த்ரோதயம் சாதயிஷ்யதி -என்றும்
நமோ நாராயணா யேதி மந்த்ரஸ் சர்வார்த்த சாதக -என்றும் –
குலம் தரும் செல்வம் தந்திடும் -என்றும்
இத்யாதிகளில் சொல்லுகிறபடியே ஐஸ்வர்ய கைவல்ய பகவச் சரணார்த்திகள் ஆகிற திரிவித அதிகாரிகளுக்கும்
தத்தத் ஸ்வ அபிமத பல விசேஷங்களை சாதித்துக் கொடுக்கக் கடவதாய் இருக்கும் –
பகவத் சரணார்த்திகளான அதிகாரிகளில் பக்தி யோக பரனுக்கு -கர்ம ஜ்ஞானங்களின் உடைய உத்பத்திக்கு
பிரதி பந்தகங்களாய் இருக்கிற பிரபல கர்மங்களை நிவர்த்திப்பித்து
அவன் தனக்கு உத்தரோத்தரம் அபிவ்ருத்திகளையும் பண்ணிக் கொடுத்து தத்த்வாரா உபகாரகமாய் இருக்கும் –
பிரபத்த்யாதி க்ருதனுக்கு ஆத்ம யாதாம்ய ஜ்ஞான ஜனகமாய்
கால ஷேப ஹேதுவாய்-
எனக்கு என்றும் தேனும் பாலும் அமுதுமாய திருமால் திரு நாமம் என்கிறபடியே
பிரதிபாத்ய வஸ்துவைப் போலே ஸ்வயம் போக்யமுமாய் இருக்கும் –
இப்படி அபேஷித பல சாதகத்வ மாத்ரமே யன்றிக்கே –
சர்வம் அஷ்டாஷரந்தஸ் ஸ்தம் -என்றும் –
நின் திருவெட்டு எழுத்தும் கற்று –மற்றெல்லாம் பேசிலும் -என்றும்
இத்யாதிகளில் சொல்லுகிறபடியே ஜ்ஞாதவ்யங்களான நிகில த்ரய்யந்த ரஹச்ய பூத தத்வார்த்த விசேஷங்களையும்
சாகல்யேன ஜ்ஞாபிக்கக் கடவதாய் இருக்கும் –
ஜ்ஞாதவ்ய சகலார்த்தங்கள் எல்லாம் இதிலே புஷ்கலமாக பிரதிபன்னமாகில் மற்றை ரஹச்ய த்வயமும்
அனநுசந்தேயம் ஆகாதோ என்னில் -அது செய்யாது
இதிலே சங்க்ருஹீதங்களான அர்த்தங்களை அவை விசத்ருதங்களாக பிரதிபாதிக்கிறன வாகையாலே –
சகலார்த்தமும் இதிலே கண்டோக்தம் ஆகில் இறே அவை அனுசந்தேயங்கள் ஆவன –
இதிலே அச்பஷ்டங்களான அர்த்தங்களை அவை விசத்ருதங்களாக பிரதிபாதிக்கிறன வாகையாலே –
அவற்றினுடைய அனுசந்தேயத்துக்கு குறையில்லை —
வித்யா நுஷ்டான ரூபங்கள் ஆகையாலும் –
அவற்றை ஒழியப் பல சித்தி இல்லாமையாலும் -அவை அனுசந்தேயங்கள் –
இது தன்னிலே அவை அனுசந்தேயங்கள் ஆன போது இதினுடைய நைரபேஷ்யம் பக்நம் ஆகாதோ –
என்கிற சோத்யமும் பரிஹ்ருதம் –
ஆக இப்படி வேதங்களோடு
வைதிகரான ருஷிகளோடு
ஆழ்வார்களோடு
ஆசார்யர்களோடு வாசியற எல்லாரும் இத்தையே ஆதரிக்கையாலும்
எல்லா அதிகாரிகளுக்கும் நின்ற நிலைகளிலே அபேஷித பிரதானம் பண்ணக் கடவதாய் இருக்கையாலும் –
ஜ்ஞாதவ்யார்த்த ஜ்ஞாபகம் ஆகையாலும் இம்மந்திர விசேஷம் எல்லாவற்றிலும் பிரதானமாய் இருக்கும் –
இம்மந்த்ரம் தனக்கு பிரதானயேன ப்ரதிபாத்யமான அர்த்தம் ஆகிறது –
ஈஸ்வரனுக்கும் ஆத்மாவுக்கும் உண்டான சேஷ சேஷி பாவ சம்பந்தம் ஆகையாலே
ஆத்ம பரமாத்மா ஸ்வரூப நிரூபணமும் –
விரோதி ஸ்வரூப நிரூபணமும் –
கைங்கர்ய ஸ்வரூப நிரூபணமும் இதுக்கு சேஷ தயா வரக் கடவது –
அந்த சேஷ சேஷி பாவ சம்பந்தம் -த்வி நிஷ்டமாய் இருக்கையாலே –
பகவத் ஸ்வரூப நிரூபணமும்
சேதன ஸ்வரூப நிரூபணமும் அபேஷிதமாகக் கடவது –
இதுதான் சித்தமாவது -அதுக்கு விரோதியான ஸ்வா தந்த்ர்யத்தினுடைய நிவ்ருத்தி யுண்டானால் ஆகையாலே
விரோதி நிவ்ருத்தி அபேஷித்தமாய் இருக்கும் –
ஆக பத த்ரயமும் –
ஆத்ம பரமாத்மா சம்பந்தத்தை யும் –
தத் சம்பந்த விரோதியான ஸ்வ ஸ்வா தந்த்ர்யத்தினுடைய நிவ்ருத்தியையும்
தத் சாபல்ய ஹேது பூதமான கிஞ்சித் காரத்தையும் பிரதிபாதிக்கிறது –
இது தனக்கு -ஸ்வரூபம் சொல்லுகிறது -என்றும் –
பிராப்யம் சொல்லுகிறது -என்றும் வாக்யார்த்தம் –
ஸ்வரூபம் சொல்லுகிற இதுக்கு
விரோதி ஸ்வரூபமும் –
உபாய ஸ்வரூபமும்
பல ஸ்வரூபமும் அதிகாரி
ஸ்வரூபமும் பகவத் ஸ்வரூபமும் ஆகிற
அஞ்சு அர்த்தமும் சொல்லா நிற்கச் செய்தே -மற்றை நாலும் அதிகாரிக்காகையாலே அதிகாரி ஸ்வரூபமும்
பிரதமத்திலே அபேஷிதமாய் இருக்கையாலும்
பிரசித்தி ப்ராசுர்யத்தாலும் ஸ்வ ஸ்வரூபம் சொல்லுகிறது என்று பொருளாகக் கடவது –
இதில் பிரணவம் ஒன்றிலும் அன்றோ ஆத்ம ஸ்வரூபம் சொல்லுகிறது –
நமஸ்ஸாலும்-நாராயண பதத்தாலும் உபாய ஸ்வரூபத்தையும்
உபேய ஸ்வரூபத்தையும் சொல்லா நிற்க
திருமந்தரம் முழுக்க ஸ்வரூபம் சொல்லுகிறது -என்று சொல்லும்படி எங்கனே என்னில் –
பிரணவத்தில் பிரதிபாதிக்கப் படுகிற பகவச் சேஷத்வம் ஆத்மாவுக்கு ஸ்வரூபம் ஆகிறாப் போலே
உத்தர பதத்திலும் ப்ரதிபாத்யமான பகவத் ஏக சாதனத்வமும்
பகவத் ஏக சாத்யத்வமும்
இவனுக்கு ஸ்வரூபமாய் இருக்கையாலே
பத த்ரயமும் ஸ்வரூபத்தை பிரதிபாதிக்கிறது என்னக் குறையில்லை –
நாராயண பதத்தாலே பிரதிபதிகப் படுகிற சேஷ வ்ருத்தி ப்ராப்யம் ஆகிறாப் போலே
முன்பு சொல்லுகிற பகவச் சேஷத்வமும்-
அன்ய சேஷத்வ ராஹித்யமும்
ஸ்வ ஸ்வாதந்த்ர்ய நிவ்ருத்தியும் –
சித்தோபாய ச்வீ காரமும் –
ததீய சேஷத்வமும் -அத பூர்வம் அப்ராப்தமாய் –
மேல் ப்ராப்தமாய் இருக்கையாலே தத் பிரதிபாதகமான பத த்வயமும் ப்ராப்ய ஸ்வரூபத்தை
பிரதிபாதிக்கிறது என்னக் குறையில்லை
பிரணவ நமஸ் ஸூக்களாலே ஸ்வரூபம் சொல்லி
நாராயண பதத்தாலே ப்ராப்யம் சொல்லுகிறது என்னவுமாம் –
சதுர்த்யந்தமான பிரதம அஷரத்திலே ரஷகத்வ சேஷித்வங்கள் சொல்லி –
மத்யம அஷரமான உகாரத்திலே அந்ய சேஷத்வ நிவ்ருத்தியைச் சொல்லி
த்ருதீய அஷரமான மகாரத்திலே ப்ரக்ருதே பரமான ஆத்ம ஸ்வரூபத்தினுடைய ஜ்ஞானாந்த லஷணத்வம் சொல்லி –
நமஸ்ஸாலே -விரோதி ஸ்வரூபத்தின் உடைய த்யாஜ்யத்தைச் சொல்லி –
பகவச் சேஷத்வ பௌஷ்கல்ய ஹேதுவான பாகவத சேஷத்வம் சொல்லி
சேஷத்வ அனுரூபமான உபாய ஸ்வரூபம் சொல்லி
நாராயண பதத்தாலே சர்வாத்ம சேஷியான சர்வேஸ்வரன் ஸ்வரூபம் சொல்லி
சதுர்த்தியாலே சேஷ வ்ருத்தியை ப்ரார்த்தித்துத் தலைக்கட்டுகையாலே
ரஷகத்வம் தொடங்கி சேஷ வ்ருத்தி பர்யந்தமான நடுவுண்டான அர்த்த விசேஷங்கள் எல்லாம் பதார்த்தமாகக் கடவது –
ஈஸ்வரனுடைய சர்வ சேஷித்வ-சர்வ ரஷகத்வங்களும் -நிரதிசய போக்யத்வமும் தாத்பர்யார்த்தம் –
இத்திருமந்த்ரம் தான் –
அநாதி காலம் ஈஸ்வரனுக்கு ரஷ்ய பூதருமாய் சேஷ பூதருமாய் இருக்கிற சேதனர் பக்கலிலே
ரஷகத்வ சேஷித்வ புத்தி பண்ணியும் –
ஜடமாய் இதம் புத்தி யோக்யமாய் இருக்கிற பிரகிருதி தத்வத்திலே ப்ரக்ருதே பரமாய் –
ஜ்ஞானானந்த லஷணமாய் இருக்கிற
பிரத்யகாத்மா ஸ்வரூபத்துக்குப் பண்ணக் கடவ அஹம் புத்தியைப் பண்ணியும்
ஸ்வரூப விருத்தமான ஸ்வ ஸ்வா தந்த்ர்யத்தை ஏறிட்டுக் கொண்டு உபாய ஆபாசங்களிலே உபாய புத்தியையும்
பிராப்ய ஆபாசங்களிலே ப்ராப்ய புத்தியையும் பண்ணி
சம்சரித்துப் போந்த சேதனனுக்கு
பகவத் வ்யதிரிக்த சமஸ்த வஸ்துக்களினுடையவும்
ரஷ்யத்வ சேஷத்வ ஜ்ஞானத்தைப் பிறப்பித்து
ஆத்ம ஸ்வரூபம் ப்ரக்ருதே பரமாய் ஜ்ஞான ஆஸ்ரயமாய் இருக்கும் என்னும் இடத்தையும் அறிவித்து
ஸ்வரூப விரோதியான ஸ்வ ஸ்வா தந்த்ர்யத்தினுடைய நிவ்ருத்தி பூர்வகமாக
பகவச் சேஷத்வ பௌஷ்கல்யத்தைப் பிறப்பித்து
உபாய உபேய ஆபாசங்களில் உபாயத்வ புத்தி நிவ்ருத்தி பூர்வகமாக சமயக் உபாயமான சித்த சாதனத்திலே
யாதாவத் ஜ்ஞானத்தைப் பிறப்பித்து
புருஷார்த்தாந்திர நிவ்ருத்தி பூர்வகமாக நிரஸ்தாதிசய ஆஹ்லாத ஸூக பாவைக லஷணமான பகவத் கைங்கர்யமே
நிரதிசய புருஷார்த்தம் என்னும் இடத்தையும் அறிவிக்கிறது –
இத்திருமந்த்ரம் தான் -1-ஸ்வ ஸ்வரூப -2-பர ஸ்வரூப -3-விரோதி ஸ்வரூப -4-புருஷார்த்த -5-தத் உபாயங்களில்
அந்யதா பிரதிபத்தி பண்ணிப் போந்த சேதனனுக்கு யதாவத் பிரதிபத்தியைப் பிறப்பிக்கிறது –
1-ஸ்வ ஸ்வரூபம் ஆகிறது –
தேக இந்த்ரியாதிகளில் காட்டில் விலஷணமாய்-
நித்தியமாய் –
ஜ்ஞானானந்த லஷணமான ஆத்ம ஸ்வரூபம் –
அதில் யதாவத் பிரதிபத்தி யாவது –
பகவத் அனன்யார்ஹ சேஷபூதமாய்-
பகவத் ஏக ரஷ்யமாய் –
பகவத் ஏக போக்யமாய் இருக்கும் என்று அறிகை-
2-பர ஸ்வரூபமாவது-
ஹேய ப்ரத்ய நீகமாய்
கல்யாண குணாகரமாய்-
அப்ராக்ருத திவ்ய மங்கள விக்ரஹ விசிஷ்டமான பகவத் ஸ்வரூபம் –
அதில் யதாவத் பிரதிபத்தியாவது –
சர்வ சேஷியாய்-
சர்வ ரஷகமாய் –
நிரதிசய போக்யமாய் இருக்கும் என்று அறிகை –
3-விரோதி ஸ்வரூபமாவது-
ஸ்வ ஸ்வரூப பர ஸ்வரூப யாதாம்ய ஜ்ஞான ஜனன விரோதியாய்
யதாவத் ஜ்ஞான ஜனன விரோதித்வ மாத்ரமே யன்றிக்கே
ரஜஸ் தமஸ் ஸூக்களாலே அந்யதா ஜ்ஞான விபரீத ஜ்ஞான ஜனகமாய் இருக்கிற பிரகிருதி சம்பந்தம் –
அதில் யதாவத் பிரதிபத்தியாவது
ஏதத் அதீயங்களான சப்தாதி விஷயங்கள் அல்ப அஸ்திரத்வாதி தோஷ தூஷிதங்கள் ஆகையாலே
ஜூகுப்சா விஷயமாய் இருக்கும் என்றும்
அவற்றை ஸ்வ யத்னத்தாலே கழித்துக் கொள்ள ஒண்ணாதாப் போலே
பகவத் ஏக நிவர்த்தமாய் இருக்கும் என்றும் பிரதிபத்தி பண்ணுகை-
4-புருஷார்த்த ஸ்வரூபம் ஆகிறது –
அநாதி கால கர்ம ப்ரவாஹ ப்ராப்த பிரகிருதி சம்பந்த விதூ நந பூர்வகமாக –
அர்ச்சிராதி மார்க்கத்தாலே
அப்ராக்ருத திவ்ய தேசத்தை ப்ராபித்து
பகவத் குணைகதாரகரான ஸூரிகளோடே ஒரு கோவையாய் –
பகவத் அனுபவ ஜனித ஹர்ஷத்தாலே ப்ரேரிதனாய்-
காமான் நீ காம ரூப்யநு சஞ்சரன் -என்றும் –
சர்வேஷூ லோகேஷூ காம சாரோ பவதி -என்றும் –
யேன யேன ததா கச்சதி தேன தேன சஹ கச்சதி -இத்யாதிப்படியே
சர்வ தேச சர்வ கால சர்வ அவச்தைகளிலும் உசிதமாக சர்வ பிரகாரத்தாலும் பண்ணும் சேஷ வ்ருத்தி –
அதில் யதாவத் பிரதிபத்தியாவது
தானுகந்த கைங்கர்யமாதல் –
தானும் அவனும் உகந்த கைங்கர்யமாதல் பண்ணுகை அபுருஷார்த்தம் என்றும்
தந்நியுக்த கரிஷ்யாமி -என்றும்
க்ரியதாமிதி மாம் வத -என்றும் –
முகப்பே கூவிப் பணி கொள்ளாய் என்றும் இத்யாதிகளில் சொல்லுகிறபடியே
அவன் ஏவச் செய்கையே புருஷார்த்தம் என்றும்
இப்படி செய்யா நின்றால் வேறே யொரு புருஷார்த்தத்துக்கு சாதநதயா செய்கை யன்றிக்கே
ஈஸ்வரனுடைய முக விகாசமே பிரயோஜனமாகச் செய்யுமது என்றும் பிரதிபத்தி பண்ணுகை –
5-உபாய ஸ்வரூபம் ஆகிறது ஜ்ஞான சக்த்யாதி கல்யாண குணா விசிஷ்டமாய்
நித்ய மங்கள விக்ரஹோ பேதமாய் –
துஷ்கரத்வாதி தோஷ சம்பாவனா கந்த ஸூந்யமாய்-
அந்திம ஸ்ம்ருதி நிரபேஷமாய்-
ஏக ரூபமாய்
பரம சேதனமாய் ஸ்வரூப அனுரூபமாய் இருக்கிற சித்த சாதனம் –
அதில் யதாவத் பிரதிபத்தி யாவது
இதர உபாய த்யாக பூர்வகமாக ஸ்வீகரிக்க வேணும் என்றும் ஸ்வீகார விசிஷ்டமான போது
பல பிரதமாகா நிற்கச் செய்தே தந் நிரபேஷமாய் இருக்கும் என்றும் பிரதிபத்தி பண்ணுகை –
அதில் ஸ்வ ஸ்வரூபம் சொல்லுகிறது பிரணவம் –
பர ஸ்வரூபம் சொல்லுகிறது நாராயண பதம் –
விரோதி ஸ்வரூபத்தையும் உபாய ஸ்வரூபத்தையும் சொல்லுகிறது நமஸ்ஸூ
நாராயண பதத்தில் சதுர்த்தி புருஷார்த்த ஸ்வரூபத்தையும் சொல்லுகிறது –
இவ்வதிகாரிக்கு ஜ்ஞாதவ்யார்த்த பிரகாசத்வேன அத்யந்த உபாதேயமாய் இருக்கிற
ரஹவய த்ரயத்திலும் வைத்துக் கொண்டு
சரம வலோஹத்தாலும் த்வயத்தாலும் பிரதிபாதிக்கப் படுகிற உபாய உபேயங்களுக்கு முன்னே
ஆத்ம ஸ்வரூப நிரூபணம் அபேஷிதமாய் இருக்கையாலே
பிரதம ரஹவயமான திருமந்தரம் பிரதமத்திலே அனுசந்தேயம் –
———————————————————————————-
அஷரபத விபாகாதிகள் –
திருமந்தரம் தான்
ஒமித்யேக அஷரம் -நம இதி த்வே அஷரே -நாராயணா யேதி பஞ்ச அஷராணி-
ஒமித்யக்ரே வ்யாஹரேத் நம இதி பச்சாத் நாராயணா யே த் யுபரிஷ்டாத் -என்றும்
நின் திரு எட்டு எழுத்தும் கற்று -என்றும் –
எட்டு எழுத்தும் ஓதுவார்கள் வல்லார் வானம் ஆளவே -என்றும்
இத்யாதிகளில் சொல்லுகிறபடியே எட்டுத் திரு வஷரமாய் மூன்று பதமாய் இருக்கும் –
பத த்ரயமும் அர்த் தத்ரய பிரகாசகமாய் இருக்கும் –
இதில் பிரதம பதம்
ஸ்வரூப யாதாம்ய பிரதிபாதன பரமாய் இருக்கும் –
மத்யம பதம்
உபாய யாதாத்ம்ய பிரதிபாதன பரமாய் இருக்கும் –
உத்தர பதம்
உபேய யாதாம்ய பிரதிபாதன பரமாய் இருக்கும் –
சேஷத்வ அனுசந்தானத்தாலே அந்ய சேஷத்வ நிவ்ருத்தி பிறக்கும் –
பாரதந்த்ர்ய அனுசந்தானத்தாலே ஸ்வ ஸ்வா தந்த்ர்ய நிவ்ருத்தி பிறக்கும் –
கைங்கர்ய அனுசந்தானத்தாலே அப்ராப்த விஷய கிஞ்சித்கார நிவ்ருத்தி பிறக்கும் –
ஈஸ்வர சேஷித்வ ஜ்ஞானத்தாலே தேவதாந்திர பரத்வ பிரதிபத்தி நிவ்ருத்தி பிறக்கும் –
ஸ்வ பாரதந்த்ர்ய அனுசந்தானத்தாலே சாத்திய சாதனா சம்பந்த நிவ்ருத்தி பிறக்கும் –
ஈஸ்வர போகாதா அனுசந்தானத்தாலே ப்ராப்யாந்தர சம்சர்க்க நிவ்ருத்தி பிறக்கும் –
அதில் பிரதம பதமான பிரணவம்
மூன்று அஷரமாய் மூன்று பதமாய் மூன்று அர்த்த பிரகாசகமாய்
ஏகாஷரமாய் ஏக பதமாய் ஏகாரத்த பிரகாசகமுமாய் இருக்கும்
அதில் பிரதம பதமான அகாரம் – பகவத் வாசகமாய் இருக்கும் –
மத்யம பதமான உகாரம் அவதாரண வாசியாய் இருக்கும் –
த்ருதீய பதமான மகாரம் ஆத்ம வாசியாய் இருக்கும்
பிரணவம் தான் ஆத்ம ஸ்வரூபத்தையும் பர ஸ்வரூபத்தையும் பிரகாசிப்பியா நிற்கச் செய்தே
ஆத்ம ஸ்வரூபத்திலே தத் பரமாய் இருக்கும் –
ராஜ புருஷ – என்கிறவிடத்தில் ராஜாவும் பிரஸ்துதனாய்-புருஷனும் பிரஸ்துதனாய் இருக்கச் செய்தே
சப்தத்தாலே புருஷன் பிரதானனாய் அர்த்தத ராஜா பிரதானனாய் இருக்கும்
அப்படியே இவ்விடத்திலும் சப்த்தத்தாலே சேதனன் பிரதானனாய் அர்த்தத்தாலே ஈஸ்வரன் பிரதானனாய் இருக்கும்
என்று ஆழ்வான் அருளிச் செய்யும் –
ஆகையாலே சாப்தமான சேதன பிரதான்யத்தைப் பற்ற
ஒமித்யாத்மானம் யுஞ்ஜீத-என்று ஆத்ம வாசகமாகச் சொல்லும் –
ஆர்த்தமான ஈஸ்வர பிரதான்யத்தைப் பற்ற –
ஓங்காரோ பகவான் விஷ்ணு -என்றும் –
ப்ரணவஸ் சர்வ வேதேஷூ -என்றும் இத்யாதிகளில் சொல்லுகிறபடியே பகவத் வாசகமுமாய் இருக்கும் –
—————————————————————————-
அகாரார்த்த ஆரம்பம் –
அதில் பிரதம அஷரமான அகாரம் –
அவ ரஷணே -என்கிற தாதுவிலே பதமாய் நிஷ்பன்னமாகையாலே ரஷகனான ஈஸ்வரனுக்கு வாசகமாகக் கடவது –
தாத்வர்த்தம் ரஷணம் ஆகையாலே ரஷணம் ஆகிற தர்மம் சாஸ்ரயமுமாய் சவிஷயமுமாய் யல்லது இராமையாலே
அதுக்கு ஆஸ்ரயதயா பகவத் ஸ்வரூபம் தானே பத்த முக்த நித்ய ரூபமான த்ரிவிதாத்ம வர்க்கமும் புகுரும் –
ந ஹி பாலன சாமர்த்தியம் ருதே சர்வேஸ்வரம் ஹரிம் -என்கிறபடியே
பாலன சாமர்த்தியம் சர்வேஸ்வர ஏக நிஷ்டமாய் இருக்கையாலே -பகவத் ஸ்வரூபம் ப்ரஸ்துதமாய்த்து-
இவன் இன்னார்க்கு ரஷகன் என்று வ்யவச்சேதியாமையாலே த்ரிவித ஆத்ம வர்க்கமும் ப்ரஸ்துதமாம்-
இன்ன தேசத்தில் ரஷகன் என்று சொல்லாமையாலே சர்வ தேச ரஷகத்வம் சொல்லிற்று –
ஒரு கால விசேஷத்தில் ரஷகன் என்று சொல்லாமையாலே சர்வ கால ரஷகத்வம் சொல்லிற்று –
இன்ன பிரகாரத்திலே ரஷகன் என்று சொல்லாமையாலெ சர்வ பிரகார ரஷகத்வம் சொல்லிற்று
ஞாலத்தூடே நடந்தும் நின்றும் -இத்யாதி ஜ்ஞான சக்த்யாதிகள் இல்லாத போது
ரஷகத்வம் அனுபபன்னம் ஆகையாலே ஜ்ஞான சக்த்யாதி குணங்கள் ப்ரஸ்துதமாம்
ஜ்ஞான சக்த்யாதிகள் உண்டானாலும்
பந்த விசேஷமும் காருண்யாதிகளும் இல்லாத போது பட்டது படுகிறான் என்று இருக்கலாம் இறே-
அது செய்யாதே ரஷிக்கும் போது இவை அபேஷிதம் ஆகையாலே ஸ்வாமித்வாதிகள் ப்ரஸ்துதங்கள் ஆம் –
ரஷிக்கும் போது கண் காண வந்து ரஷிக்க வேண்டுகையாலே திவ்ய மங்கள விக்ரஹம் ப்ரஸ்துதமாம் –
ரஷிக்கும் போது திவ்யாயுதங்கள் அபேஷிதங்கள் ஆகையாலே ரஷணத்துக்கு ஏகாந்தமான பரிகரமும் அனுசந்தேயமாகக் கடவது –
ரஷணம் ஆகிறது தான் –
இஷ்டாநிஷ்ட ப்ராப்தி பரிஹார ரூபமாய் இருக்கையாலே –
இஷ்டமும் தத் பிராப்தியும் அநிஷ்டமும் தந் நிவ்ருத்தியும் அனுசந்தேயம் –
இஷ்டாநிஷ்ட பிராப்தி பரிஹாரம் தான் அதிகார அனுரூபமாகையாலே
பத்தர்க்கும் முமுஷுக்களுக்கும் முக்தர்க்கும் நித்யர்க்கும் இஷ்டா நிஷ்டங்கள் ஆவன
வஸ்த்ர அன்ன பா நாதி போகங்களும் –
அப்ராக்ருத திவ்ய தேச பிராப்தியும்
உத்தரோத்தர அனுபவமும் –
பகவத் அனுபவ ஜனித ப்ரீதி காரித கைங்கர்யமும்
சத்ரு பீடாதிகளும் பிரதிபந்தக கர்மமும் அனுபவ விச்சேத சங்கையும் அனுசந்தேயம் –
தர்மி ஸ்வரூபம் புகுந்த விடத்தில் ஸ்வரூப நிரூபக தர்மங்களும் பிரஸ்துதங்கள் ஆகையாலே
ஸ்ரீ நிவாசே -என்றும் –
ஸ்ரீ யபதி என்றும் –
நித்ய ஸ்ரீ என்றும் இத்யாதிகளில் சொல்லுகிறபடியே ஜ்ஞானானந்தங்களோ பாதி பகவத் ஸ்வரூபத்துக்கு
அந்தரங்க நிரூபகமாய் இருக்கிற பிராட்டி ஸ்வரூபமும் நிரூபகதையா ப்ரஸ்துதமாக ப்ராப்தம் ஆகையாலே
ஸ்ரீ லஷ்மி சம்பந்தமும் அனுசந்தேயம் –
ஆக
இப்படி யாவை சில அர்த்த விசேஷங்களை சாப்தமாகவும் ஆர்த்தமாகவும் இதினுடைய விவரணமான
நாராயண பதத்திலே அனுசந்தேயங்கள் ஆகிறன-
அவை இத்தனையும் தத் சங்க்ரஹமான இவ்வஷரத்திலேயும் அனுசந்தேயமாகக் கடவது –
ஆக
பிரதம அஷரத்தாலே சர்வ ரஷகனான சர்வேஸ்வரனுடைய ஸ்வரூபம் சொல்லப்பட்டது –
——————————————————————————
லுப்த சதுர்த்த்யர்த்தாரம்பம் –
இதின் மேல் ஏறிக் கழிந்த விபக்த்யம்சம் –
தத் பிரதி சம்பந்தியான சேதன சேஷத்வத்தை பிரதிபாதிக்கிறது
தாஸ பூதாஸ் ஸ்வதஸ் சர்வே -என்றும் –
யஸ்யாஸ்மி-என்றும் –
பரவா நஸ்மி என்றும்
தாஸோ அஹம் -என்றும் இத்யாதி பிரமாணங்கள் சொல்லுகிறபடியே
சகலாத்மாக்களுக்கும் சேஷத்வம் இறே ஸ்வரூபம் –
ஸ்வா தந்த்ர்யம் ஔபாதிகமாய் த்யாஜ்யமாய் இறே இருப்பது –
சர்வம் பரவசம் துக்கம் -இத்யாதிகளில் படியே லோகத்தில் சேஷத்வம் துக்க ரூபமாய்
ஸ்வா தந்த்ர்யம் ஸூக ரூபமாய் யன்றோ கண்டு போருகிறது –
லோக திருஷ்டிக்கு விருத்தமாக ஸூக ரூபமான ஸ்வா தந்த்ர்யத்தை த்யாஜ்யம் என்றும் –
துக்க ரூபமான சேஷத்வத்தை உபாதேயம் என்றும்
சொல்லுகை அனுபபன்னம் அன்றோ என்ன ஒண்ணாது –
லோகத்தில் ஸ்வா தந்த்ர்யம் ஆகில் ஸூக ரூபமாய் -பாரதந்த்ர்யம் ஆகில் துக்க ரூபமாய் இருக்கும்
என்று ஒரு நியமம் இல்லாமையாலே –
லோகத்தில் ஸ்வ தந்த்ரன் ஆனவன் தனக்கே ஒரு வ்யக்தி விசேஷத்திலே பாரதந்த்ர்யம் தானே
போக ரூபமாகக் காணா நின்றோம் இறே –
ஆகையாலே சேஷத்வம் தானே ஸூக ரூபமாகில் உபாதேயமாகக் கடவது
ஸ்வா தந்த்ர்யம் தானே துக்க ரூபமாகில் த்யாஜ்யமாகக் கடவது
சேவா ஸ்வ வ்ருத்திர் வ்யாக்யாதா தஸ்மாத் தாம் பரிவர்ஜ யேத்-என்று நிஷேதித்தது –
நிஷித்த சேவையையும் அப்ராப்த விஷயத்தில் சேவையையும்
ப்ராப்த விஷயத்தில் சேவையை ஸா கிமர்த்தம் ந சேவ்யதே-என்றும் –
சிற்றம் சிறுகாலே வந்துன்னைச் சேவித்து -என்றும் உபாதேயமாகச் சொல்லா நின்றார்கள் இறே
ஈஸ்வர சேஷத்வம் விஹிதமாய்
தாஸ்ய மகா ரசஜ்ஞ-என்றும்
தாஸ்ய ஸூ கைக சங்கி நாம் -என்றும் இத்யாதிகளில் சொல்லுகிறபடியே
போக ரூபமாய் இருக்கையாலே உபாதேயமாகக் கடவது –
—————————————————-
உகாரார்த்தாரம்பம் –
மத்யம அஷரமான உகாரம் சேஷத்வ விரோதியான அந்ய சேஷத்வத்தினுடைய நிவ்ருத்தியைப் பிரதிபாதிக்கிறது –
சதுர்த்தீ விபக்தியாலே -ஈஸ்வர சேஷத்வம் பிரதிபாதிதமாகச் செய்தே அந்ய சேஷத்வம் ப்ரஸ்துதம் ஆமோ வென்னில்
லோக த்ருஷ்ட்யா ஒரு அந்ய சேஷத்வ சங்கை யுண்டு அனுவர்த்திப்பது -லோகத்திலே ஒருவனுக்கு சேஷமான க்ருஹ ஷேத்ர புத்ர தாஸ தாஸிகள்
வேறேயும் சிலர்க்கு சேஷமாகக் காணா நின்றோம் –
அப்படிப்பட்ட அந்ய சேஷத்வம் இந்த ஸ்தலத்திலும் உண்டோ -என்றொரு சங்கை உதிக்கும் இறே -ஆகையாலே தாத்ருசமான அந்ய சேஷத்வம் இங்கு இல்லை
என்னும் இடத்தை பிரதிபாதிக்கிறது உகாரம் –
ததேவ பூதம் ததுபவ்யமா இதம் -என்றும் -ததேவாக் நிஸ் தத்வாயுஸ் தத் ஸூர்யஸ் தாது சந்த்ரமா -என்றும் இத்யாதிகளிலே
ஏவகார ஸ்தானத்திலே உகாரத்தை பிரயோகிக்கக் காண்கையாலே-இவ்வுகாரம் ஸ்தான பிரமாணத்தாலே அவதாரணார்த்த வாசகமாகக் கடவது –
உகாராஸ் சைவகாரார்த்த என்று அவதாரண வாசகம் என்னும் இடத்தை அருளிச் செய்தார் இறே பட்டர்
க்ருஹ ஷேத்ர புத்ர களத்ராதிகளினுடைய சேஷத்வம் போலே ஔபாதிகமாய் அநேக சாதாரணமாய் அநித்யமாய் ப்ருதக் சித்தமாய் இருக்கை யன்றிக்கே
நிருபாதிகமாய் அநந்ய சாதாரணமாய் நித்தியமாய் அப்ருதக் சித்தமான பகவச் சேஷத்வத்தை பிரதிபாதிக்கிறது –
———————————–
மகாரார்த்தாரம்பம் –
ஏவம் வித சேஷத்வம் சிதசித் சாதாரணமாய் இருப்பது -அதில் சேஷத்வ விஷய ஜ்ஞானம் தத் கார்யமாய் இருக்கிற ததநுகுண சாதனா ஸ்வீகாரம்-
தத் கார்ய அனுகுண சாத்ய அனுபவம் -தத் அனுபவ விரோதி பிரதிபந்தக நிபர்ஹணம் தொடக்கமான சேஷத்வ கார்யங்கள் பிறக்கைக்கு யோக்யதை
யுண்டாய் இருக்கிற ஜீவாத்மா ஸ்வரூபத்தை ப்ரதானதயா பிரதிபாதிக்கிற த்ருதீய அஷரமான மகாரம்
மன ஜ்ஞானே என்கிற தாதுவிலே பதமாய் நிஷ்பன்னமாகையாலே ஜ்ஞாதாவான பிரத்யகாத்மாவினுடைய ஸ்வரூபம் சொல்லுகிறது –
ஜ்ஞான வாசக சப்தம் தானே ஜ்ஞானைக நிரூபணீயனான ஆத்மாவை பிரதிபாதிக்கும் என்றும் சொல்லிற்று இறே
தத் குண சாரத்வாத் து தத் வ்யபதேச ப்ராஜ்ஞவத் -என்கிற ஸூ த்ரத்திலே-
அங்கன் அன்றியே ககாராதி பகாராந்தமான இருபத்து நாலு அஷாரமும் இருபத்து நாலு தத்வத்துக்கும் வாசகமாகச் சொல்லி இருபத்தஞ்சாம் அஷரமான
மகாரத்தை பஞ்ச விம்சகனான ஆத்மாவுக்கு வாசகமாகச் சொல்லுகையாலே மகாரம் ஆத்ம வாசகம் ஆகவுமாம் –
இம்மகாரம் ஜீவ சமஷ்டி வாசகம் ஆகையாலே கீழ்ச் சொன்ன அனன்யார்ஹ சேஷத்வத்துக்கு ஆஸ்ரயமான பத்த முக்த நித்ய ரூபமான த்ரிவித ஆத்ம வர்க்கமும் அனுசந்தேயமாகக் கடவது –
ஆத்ம ஸ்வரூபமும் ஜ்ஞானானந்த லஷணமாய் இருக்கும் என்கையாலே ஜடமாய் துக்க ரூபமாய் இருக்கிற பிரகிருதி தத்வத்தில் காட்டில் வ்யாவ்ருத்தியைச் சொல்லுகிறது –
ஜ்ஞானானந்தங்களுக்கு முன்னே பகவச் சேஷத்வத்தை நிரூபகமாகச் சொல்லிற்று ஆகையாலே அவற்றில் காட்டில் இது அந்தரங்க நிரூபகம்-ஒளிக்கு ஆஸ்ரயம் என்று மாணிக்கத்தை விரும்புமா போலேயும்
மணத்துக்கு ஆஸ்ரயம் என்று புஷ்பத்தை விரும்புமா போலேயும் சேஷத்வத்துக்கு ஆஸ்ரயம் என்று இறே ஆத்ம ஸ்வரூபத்தை விரும்புகிறது –
கீழ்ச் சொன்ன சேஷத்வம் உபய சாதாரணமாய் இருக்கையாலே சேதன பிரகாரமான அசித் தத்வமும் பகவச் சேஷத்வ ஆஸ்ரயதயா இவ்விடத்திலே அனுசந்தேயம் –
————————–
ஆக பிரணவத்தாலே
சேஷத்வ பிரதிசம்பந்தி தயா ப்ரஸ்துதமான ஈஸ்வரனை ரஷகத்வ தர்மத்தை இட்டு நிரூபித்து
அப்படிப்பட்ட ஈஸ்வரனுக்கு சேஷ பூதனான ஆத்மாவினுடைய ஜ்ஞானானந்த லஷணத்வத்தைச் சொல்லி
சர்வ சேஷியான சர்வேஸ்வரனுக்கு அனன்யார்ஹ சேஷ பூதன் ஆத்மா என்னும் இடத்தைச் சொல்லித் தலைக் கட்டுகிறது
———————————————————————————
நம பதார்த்த்ராரம்பம்
இப்படி ஸ்வா பாவிகமான பகவச் சேஷத்வத்தை அநாதி காலம் அபி பூதமாம் படி பண்ணின விரோதியினுடைய
ஸ்வரூபத்தை உபாதானம் பண்ணிக் கொண்டு தந் நிவ்ருத்தியை பிரதிபாதிக்கிறது நமஸ் ஸூ –
இது தான் சதுர்யந்தமான அகாரத்தில் சொல்லுகிற ஈஸ்வர சேஷத்வத்துக்கு விரோதியான அந்ய சேஷத்வத்தை நிவர்த்திப்பிக்கிற
உகாரத்தில் அந்ய தமதயா ப்ரஸ்துதமான ஸ்வ ஸ்வரூபத்தில் ஸ்வ ஸ்வா தந்த்ர்ய நிவ்ருத்தியை விவரிக்கிறது –
இங்கே விசேஷித்துச் சொல்லுகையாலே இத்தை ஒழிந்த அந்ய சேஷத்வ நிவ்ருத்தியைச் சொல்லுகிறது ஆகவுமாம் –
இது தான் – ந- என்றும் -ம -என்றும் இரண்டு பதமாய் இருக்கிறது -இதில் பிரதம பாவியான நஞ்ஞாலே -வீடுமின் முற்றவும் என்னுமா போலே
த்யாஜ்ய ஸ்வரூப நிரூபணம் பண்ணுமதுக்கு முன்னே த்யாகத்தைப் பிரதிபாதிக்கிறது –
ஆத்ம ஸ்வரூபம் பகவத் அனன்யார்ஹ சேஷத்வைக நிரூபணீயமாய் இருக்கும் என்னும் இடம் தோற்ற பிரணவத்தில் ஆத்ம ஸ்வரூபத்தை பிரதிபாதிப்பதற்கு முன்பே
சேஷத்வத்தை பிரதிபாதித்தால் போலே
இவ்விடத்திலும் விரோதி ஸ்வரூபம் நிஷித்த தைக நிரூபணீயமாய் இருக்கும் என்னும் இடத்தை பிரகாசிப்பைக்காக
-நிஷித்த ஸ்வரூப பிரதிபாதனத்துக்கு முன்பே நிஷேத பிரதிபாதனம் பண்ணுகிறது –
ம என்கிற இது ஷஷ்டி யாகையாலே எனக்கு என்றபடி -எனக்கு என்கிறது தன்னை யாதல் தன்னுடைமையை யாதல்
அநு ஷங்கத்தாலே கீழ்ச் சொன்ன தன்னை எனக்கு
அனந்யார்ஹத்தாலே தன்னுடைமையை எனக்கு என்கை யாகிறது நான் ஸ்வாமி என்கை
ஸ்வா தந்த்ர்யாமாவது அசேஷத்வம்
ஸ்வாமி த்வமாவது-ஸ்வ அந்ய விஷயமாய் இருக்கும் தன்னை எனக்கு என்கிறது -ஸ்வ சேஷத்வம் ஆகவுமாம் –
ந என்கிற இது பிரதிஷேதத் யோதக மாகையாலே அத்தை நிஷேதிக்கிறது –
ஈஸ்வரனுக்கு ஸ்ரீ கௌஸ்துபத்தோ பாதி ஸ்ப்ருஹா விஷயமான ஆத்ம ஸ்வரூபம் அநாதி காலம் சம்சரித்துப் போந்தது –
அஹங்க்ருதிர்யா பூதா நாம் -என்றும் -அனாத்மன்யாத்ம புத்திரியா -என்றும் சொல்லுகிறபடியே அஹங்காரத்தாலும் மமகாரத்தாலுமாக அந்த சம்சார வ்ருத்தி பிறந்து –
அஹம் அன்னம் என்கிறபடியே ஈஸ்வரனுக்கு போக்யமாம் போது-அச்யுதாஹம் தவாஸ்மீதி -என்றும் ந மமேதி ச சாஸ்வதம் -என்றும் சொல்லுகிறபடியே அவை இரண்டும் நிவ்ருத்தமாக வேணும்
நீர் நுமது என்றிவை வேர் முதல் மாய்த்து இறை சேர்மின் -என்கிறபடியே அஹங்கார மமகார ராஹித்யம் இல்லாத போது ஈஸ்வர சம்பந்த யோக்யதை இல்லை –
ஸ்வ ஸ்வாமின் ஸ்வத்வ அனுசந்தானம் இல்லாத போது ஸ்வாமி சந்நிதியில் நிற்கைக்கு அனர்ஹனாய் இறே இருப்பது –
அஹங்காரம் மமகாரங்கள் இரண்டும் அன்யோன்யம் ஆவி நா பூதமாகையாலே அஹங்காரம் வந்த இடத்தே மமகாரம் வந்து-மமகாரம் வந்த இடத்தே அஹங்காரம்
வரும்படி இருக்கையாலே அஹங்கார மமகாரங்கள் இரண்டும் ப்ரஸ்துதமாய்-இரண்டினுடைய நிவ்ருத்தியும் இவ்விடத்திலே அனுசந்தேயம்
யானே என் தனதே என்று இருந்தேன் என்று அஹங்கார மமகாரங்கள் இரண்டையும் அனுசந்தித்தவர் தாமே யானே நீ என் உடைமையும் நீயே -என்று
அனந்தரத்திலே அவற்றினுடைய நிவ்ருத்தியையும் அனுசந்தித்தார் இறே –
யச்யைதே தஸ்ய தத்த நம் -என்கிறபடியே அஹங்காரம் போனவாறே மமகாரம் போம் இறே
அஹங்கார மமகார நிவ்ருத்தி மாத்ரமே அன்றிக்கே பகவத ஏவாஹமச்மி -என்றும் தேஷாமபி நமோ நம -என்றும்
த்வதீய தர்சதே ப்யேயம் பவேத் -என்றும் -உற்றதும் உன் அடியார்க்கு அடிமை என்றும்- அடியார்க்கு ஆட்படுத்தாய் -என்றும்
அடியார்க்கு என்னை ஆட்படுத்த விமலன் -என்றும் இத்யாதியில் படியே பகவத் பாரதந்த்ர்யமும் தத் காஷ்டா பூமியான பாகவத பாரதந்த்ர்யமும் அனுசந்தேயமாகக் கடவது –
ததீய சேஷத்வ -அனன்யார்ஹ சேஷத்வங்கள் இரண்டினுடையவும் பரஸ்பர விரோதி நிபந்தனமாக ஏகத்ர சமாவேசாகட நத்தாலே
அந்ய தர பரித்யாகம் பிரசங்கிக்கும் என்று சொல்ல ஒண்ணாது -ததீய சேஷத்வ விஷய அன்வயத்வ அபாக பிரயுக்தமான பரஸ்பர விரோத
ராஹித்யம் அடியாக வருகிற ஏகத்ர சமாவேசோபாபத்தி யாலே உபய ச்வீகாரம் அவிருத்தம் ஆகையாலே –
இப்படி தர்ம த்வயத்தினுடையவும் விரோத ஹேதுவான அந்ய சப்தார்த்த ததீய சப்தார்த்தத்தை பிரதிஷேபித்துக் கொண்டு உபயத்துக்கும் ஏகத்ர சமா வேஷத்தை அங்கீகரித்து-
அவ்வழியாலே அந்ய தர பரித்யாக பிரசங்கத்தைப் பரிஹரிக்கும் போது பகவச் சேஷத்வ அபாவத்தை ஒழிய அந்ய சப்தார்த்த வ்யக்திக்கு அந்யத்வம் கடியாமையாலே
த்ருதீய அஷர வாச்யரான ஜீவர்களில் சிலருக்கு பகவச் சேஷத்வம் இன்றிக்கே ஒழியாதோ என்னில்
இங்கு விவஷிதமான ததீயத்வம் ஆகிறது பாகவத சேஷத்வ பர்யந்தமான மிதுன சேஷத்வ ஜ்ஞான அவஸ்தை யாகையாலும்
அந்யத்வம் ஆகிறது ஈத்ருசா ஜ்ஞான விசேஷ ராஹித்யம் ஆகையாலும் -சிலருக்கு சேஷத்வமாய் சிலருக்கு சேஷத்வம் இன்றிக்கே ஒழியாது –
இத்தால் பகவச் சேஷத்வ ஜ்ஞான அவஸ்தா மாத்ரம் ததீய சேஷத்வம் என்று நினைத்துப் பண்ணும் அதிபிரசங்கமும் பரிஹ்ருதம் –
இந்த நமஸ்ஸூ தான் பிரணவத்துக்கும் நாராயண பதத்துக்கும் நடுவே கிடக்கையாலே இரண்டு பதத்துக்கும் அபேஷிதமான விரோதி நிவ்ருத்தியைச் சொல்லக் கடவது –
ஆகையாலே ஸ்வரூப விரோதியும் சாதனா விரோதியும் ப்ராப்ய விரோதியும் ஆகிற விரோதி த்ரயத்தின் உடையவும் நிவ்ருத்தியை இப்பதத்திலே அனுசந்திக்கக் கடவது –
பூர்வ உத்தர பத த்வயத்திலும் ஸ்வரூபமும் பிராப்யமும் பிரதிபாதிதம் ஆகையாலே தத் விரோதி நிவ்ருத்தி இப்பதத்திலே அனுசந்தேயமாக பிராப்தம் –
சாதன ஸ்வரூபம் அபிரஸ்துதமாய் இருக்க தத் விரோதி நிவ்ருத்தி இவ்விடத்திலே அனுசந்தேயமாம்படி என் என்னில் கீழில் பதத்தில் சாதன ஸ்வரூபம் பிரஸ்துதம் ஆகையாலே
தத் விரோதி நிவ்ருத்தியை அனுசந்திக்கக் குறையில்லை –
மேலில் பதத்தில் சாப்தமாகச் சொல்லும் இப் பதத்திலே நிஷேத்யதயா ஸ்வா தந்த்ர்யம் பகவத் ஏக சாதன நைக வேஷமான ஸ்வ ஸ்வரூபத்துக்கு விரோதியாய்
ஸ்வ ரஷணத்தில் ஸ்வ அன்வயத்துக்கு ஹேது பூதமாய் இருப்பது ஓன்று இறே
தாத்ருசமான ஸ்வா தந்த்ர்யம் நிவ்ருத்தமாகை யாகிறது ஸ்வ ரஷணத்தில் ஸ்வ அன்வயம் ஸ்வரூப ஹானி என்று அறிகை இ றே –
ஸ்வ ஸ்வரூபம் ஈஸ்வரனைக் குறித்து அத்யந்த பரதந்த்ரமாய் இருக்கையாலே ஸ்வ ரஷணத்தில் தனக்கு அன்வயம் உண்டானால் ஈஸ்வரனைக் குறித்து
தனக்கு அத்யந்த பாரதந்த்ர்யம் இன்றிக்கே ஒழியும் ஆகையாலே ஈஸ்வர ஏக பரதந்திர விரோதியான ஸ்வ ரஷணத்தில் ஸ்வ அன்வயம் நிவ்ருத்தமானால்
பின்னை அன்வயம் உள்ளது அகாரத்திலே ஸ்வ ரஷகதயா பிரஸ்துதமான ஈஸ்வரனுக்கே யாகையாலே அவனுடைய உபாய பாவம் இவ்வழி யாலே இதிலே ப்ரஸ்துதமாம்
ஸ்வ ரஷணத்தில் தான் அதிகரித்தால் இறே ஈஸ்வரன் கை வாங்கி இருப்பது
தன்னுடைய ரஷணத்திலே தான் கை வாங்கினால் கஜேந்திர ரஷணம் பண்ணினால் போலே த்வரித்துக் கொண்டு இவனுடைய ரஷணத்திலே அதிகரிப்பான் ஈஸ்வரன் இறே
இப்படி ஆர்த்தமாக ஈஸ்வரனுடைய உபாய பாவம் சித்திக்கை அன்றிக்கே நமஸ் சக்ரூர் ஜனார்த்தனம் என்கிறபடியே ஸ்தான பிரமாணத்தாலே நமஸ் சப்தத்துக்கு
சரண சப்த பர்யாயத்வம் உண்டாகையாலே சாப்தமாக ஈஸ்வரனுடைய உபாய பாவம் சித்திக்கும்
இப்படி நமஸ் சப்தம் உபாய ஸ்வரூபத்தை பிரதிபாதிக்கையாலே தத் விரோதி நிவ்ருத்தியும் இப்பதத்திலே அனுசந்தேயம் –
ஸ்வ ரஷணே ஸ்வ அன்வய ஹேது பூதமான ஸ்வ ஸ்வா தந்த்ர்யம் நிவ்ருத்தமாகை சாதன விரோதி நிவ்ருத்தி பிறக்கை யாகிறது –
அனன்யார்ஹ சேஷத்வத்துக்கு பலம் சேஷி விஷய கிஞ்சித் காரம் ஆகையாலே சேஷத்வ அனுசந்தானத்துக்கு அனந்தரபாவியாய் இருப்பது
சேஷ வ்ருத்தி பிரார்த்தனை யன்றோ –ஆனால் சேஷத்வ வாசகமான பதத்துக்கு அனந்தரம் சேஷ வ்ருத்தி பிரார்த்தனா பிரதிபாதகமாய் இருக்க
உத்தர பதம் அனுசந்தேயமாக ப்ராப்தமாய் இருக்க அதுக்கு முன்பே நமஸ் ஸூ அனுசந்தேயம் ஆவான் என் என்னில் அப்பதத்தில் பிரதிபாதிதமான கைங்கர்ய கரணம்
விரோதி நிவ்ருத்தி பூர்வகமாய் இருக்கையாலும்
சேஷ வ்ருத்தி பிரார்த்தனைக்கு சேஷத்வ ஜ்ஞான பௌஷ்கல்யம் பிறக்க வேண்டும் ஆகையாலே உபேய சித்திக்கு உபாய அனந்தர பாவித்வம் உண்டாகையாலும்
விரோதி நிவ்ருத்தி யாதிகளுக்கு பிரதிபாதிதமான இந்தப் பதம் நாராயண பதத்துக்கு முன்னே அனுசந்தேயம்
உபேய சித்திக்கு உபாயாந்தர பாவித்வம் உண்டாகையாலே இறே உத்தர வாக்யத்துக்கு முன்னே பூர்வ வாக்கியம் அனுசந்தேயம் ஆகிறது –
ஈஸ்வரனுடைய உபாய பாவ அனுசந்தா னத்துக்கு ஈஸ்வரனுடைய ரஷகத்வ அனுசந்தானம் ஸ்வ சேஷத்வ அனுசந்தானம் தொடக்கமானவை -அபேஷிதங்கள் ஆகையாலே
நமஸ்ஸூ க்கு முன்னே தத் பிரதிபாதிதமான பிரணவம் அனுசந்தேயம் -இப்படி ஆகாத போது நமஸ்ஸூ உகார விவரணம் அன்றிக்கே ஒழியும் இறே
—————————————–
நாராயண பதார்த்தாரம்பம்
பிரணவ நமஸ் ஸூக்களாலே ஸ்வரூப சோதனமும் உபாய சோதனமும் பண்ணப் பட்டது –
இனி மேல் சதுர்த்யந்தமான நாராயண பதம் உபேய சோதனம் பண்ணுகிறது –
கைங்கர்ய பிரதிசம்பந்தி தயா உதிக்கும் பகவத் ஸ்வரூபமும் உபய விபூதி விசிஷ்டமாய் இருக்கையாலே உபய விபூதி யோகத்தையும் சொல்லுகிறது
நாராயண பதம் நர –நார -நாரா -என்று நித்ய பதார்த்தத்தையும் அதிநிடைய சமூஹத்தையும் சமூஹ பாஹூள்யத்தையும் சொல்லுகிறது –
பிரகிருதி புருஷ காலங்களோடு பரம பதத்தோடு முக்த நித்ய வர்க்கத்தோடு சத்ர சாமர பிரமுகமான பர்ச்சதங்களோடு-
ஆயுத ஆபரணங்களோடு பெரிய பிராட்டியார் தொடக்கமான நாய்ச்சிமாரோடு திவ்ய மங்கள விக்ரஹத்தோடு ஜ்ஞான சக்த்யாதி குணங்களோடு
வாசியற சர்வத்தையும் நார சப்தம் பிரதிபாதிக்கிறது –
எண் பெருக்கு அன்னலத்து ஒண் பொருள் என்றும் நாரணன் முழு வேழ் உலகுக்கும் நாதன் என்றும் அருளிச் செய்கையாலே சேதன அசேதனங்கள் இரண்டும் நார சப்த வாச்யமாகக் கடவது –
ஈறில வண் புகழ் நாரணன் -என்றும் வாழ் புகழ் நாரணன் என்றும் அருளிச் செய்கையாலே குணங்களும் நார சப்த வாச்யமாகக் கடவது –
செல்வ நாரணன் -என்றும் திரு நாரணன் என்றும் சொல்லுகையாலே பிராட்டி ஸ்வரூபமும் நார சப்த வாச்யமாகக் கடவது
காராயின காள நன்மேநியினன் நாராயணன் -என்கையாலே திவ்ய மங்கள விக்ரஹமும் ஆயுத ஆபரணங்களும் காந்தி சௌகுமார்யாதி குணங்களும்
நார சப்த வாச்யம் என்னும் இடம் ஸூசிதம்-
அயன சப்தம் இவற்றுக்கு இருப்பிடமாய் இருக்கும் என்று ஈஸ்வரனை பிரதிபாதிக்கிறது –
நாராயணாமயநம் -என்கிற தத் புருஷ சமாசத்தில்-நித்ய பதார்த்தங்கள் எல்லா வற்றுக்கும் ஈஸ்வரன் இருப்பிடம் என்று பொருள்
நாரா அயனம் யஸ்ய -என்கிற பஹூ வ்ரீஹீ சமாசத்தில் நாரங்களை ஈஸ்வரன் இருப்பிடமாக யுடையவன் என்னும் அர்த்தத்தை சொல்லுகிறது
அயன சப்தம் ப்ராப்யத்துக்கும் வாசகமாய் ப்ராபகத்துக்கும் வாசகமாய் இருந்ததே யாகிலும் இவ்விடத்தில் ப்ராப்ய பரமாய் இருக்கும்
பஹூ வ்ரீஹி சமாசத்தில் அயன சப்தம் திவ்யாத்மா ஸ்வரூபத்தை ஒழிந்த சகல வஸ்துக்களுக்கும் வாசகமாய் இருக்கும்
ஷஷ்டி சமாசத்தில் திவ்யாத்மா ஸ்வரூபம் ஒன்றுக்கும் வாசகமாய் இருக்கும்
ஈஸ்வரனுடைய சர்வாத்மத்வ அபஹத பாப்மத்வ பரமபத நிலயத்வத் யோதகமாம் குண விசேஷங்கள் எல்லாம் இப்பதத்திலே அனுசந்தேயங்களாகக் கடவது
—————————–=–
வ்யக்த சதுர்த்தியின் அர்த்தம்
இதில் சதுர்த்தி பிரணவத்தில் சொன்ன அனன்யார்ஹ சேஷத்வத்தினுடையவும்
நமஸ் ஸில் சொன்ன உபாய ஸ்வீகாரத்தினுடையவும் பல ரூபமான கைங்கர்ய ப்ரார்த்தனத்தை பிரதிபாதிக்கிறது –
தேச கால அவஸ்தா பிரகார விசேஷ விதுரமாக ப்ரார்த்திக்கையாலே
சர்வ தேச சர்வ கால சர்வ அவஸ்தை களுக்கும் உசிதமான சகல சேஷ வ்ருத்தியையும் சொல்லுகிறது
————————————————————
திருமந்த்ரார்த்த நிகமனம்
பிரதம அஷரமான அகாரத்தாலே ஈஸ்வரனுடைய ரஷகத்வம் சொல்லி
சதுர்த்யம்சத்தாலே ஜீவாத்மாக்களுடைய சேஷத்வம் சொல்லி
உகாரத்தாலே அந்ய சேஷத்வ நிவ்ருத்தி சொல்லி
மகாரத்தாலே சேஷத்வ ஆஸ்ரயமாய் ப்ரக்ருதே பரமான ஆத்ம ஸ்வரூபத்தின் உடைய ஜ்ஞான ஆஸ்ரயத்தை பிரதிபாதித்து
நமஸ்ஸாலே அநாதி காலம் ஏவம் வித சேஷத்வத்துக்கு திரோதாயகமாய்ப் போந்த விரோதி ஸ்வரூபத்தை நிவர்த்திப்பித்து
பாகவத சேஷத்வ ப்ரதிபாதந த்வாரா பகவச் சேஷத்வத்தை ஸ்திரமாக்கி
சேஷத்வ அனுரூபமான சித்த சாதன ஸ்வீகாரத்தைச் சொல்லி
நாராயண பதத்தாலே நித்ய வஸ்து சமூஹ பாஹுல்யத்தை சொல்லி
தத் ஆஸ்ரயமான பகவத் ஸ்வரூபத்தின் உடைய சர்வ சேஷித்வ சர்வ ரஷகத்வ நிரதிசய போக்யத்வ
நிருபாதிக பாந்தவ நியந்த்ருத்வ தாரகத்வ பிரமுகமான குண விசேஷங்களைச் சொல்லி
சதுர்த்யம்சத்தாலே நிரதிசய ஆனந்த ரூபமான சஹஜ கைங்கர்யத்தினுடைய ஆவிர்பாவ ப்ரார்த்தனத்தைச் சொல்லித் தலைக் கட்டுகிறது –
ஆக
திருமந்த்ரத்தாலே ஈஸ்வரனுக்கும் ஆத்மாவுக்கும் உண்டான சம்பந்தத்தையும்
சம்பந்த அனுரூபமான உபாய ஸ்வீகாரத்தையும்
ஸ்வீகார அனுகுணமான உபேய பிரார்த்தனையும் சொல்லித் தலைக்கட்டுகிறது –
விடை ஏழு அன்று அடர்த்த -என்கிற பாட்டும்
மூன்று எழுத்ததனை-என்கிற பாட்டும் பிரணவார்த்தமாக அனுசந்தேயம்
யானே என்கிற பாட்டு நமஸ் சப்தார்த்தமாக அனுசந்தேயம்
எம்பிரான் எந்தை என்கிற பாட்டு நாராயண சப்தார்த்தமாக அனுசந்தேயம்
ஒழிவில் காலம் எல்லாம் என்கிற பாட்டு சதுர்த்த்யர்த்தமாக அனுசந்தேயம்
அகாரார்த்தா யைவ என்கிற ஸ்லோஹம் பத த்ரயத்துக்கும் அர்த்தமாக அனுசந்தேயம் –
————————————————————————————–
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –