தத்வத்ரயம் -அசித் பிரகரணம் -சாரார்த்த தீபிகை – P.B.A.ஸ்வாமிகள்

சூர்ணிகை -77-
அசித்து ஞான சூன்யமாய் விகாராச பதமாய் இருக்கும் –
அவஸ்தா பேதங்கள் உண்டே -சித் வஸ்து தானே ஏக ரூபமாய் இருக்கும்
சூர்ணிகை -78-
இது சுத்த சத்வம் என்றும் -மிஸ்ர சத்வம் என்றும் -சத்வ சூன்யம் என்றும் த்ரிவிதமாய் இருக்கும் –
பரமபதம் பிரகிருதி காலம் இவை மூன்றும் என்பர் மேல்
சூர்ணிகை -78-
இதில் சுத்த சத்வமானது–ரஜஸ் தமஸ் ஸூக்கள் கலசாதே கேவலசத்வமாய்
நித்தியமாய்-ஜ்ஞான ஆனந்த ஜனகமாய்-கர்மத்தால் அன்றிக்கே-கேவல பகவத் இச்சையாலே
விமான கோபுர மண்டப பராசாசாதி ரூபேண பரிணமிக்கக் கடவதாய்
நிரவதிக தேஜோ ரூபமாய் நித்ய முக்தராலும் ஈச்வரனாலும் பரிச்சேதிக்கஅரிதாய் அதி அத்புதமாய் இருப்பதொன்று –
சுடர் ஒளியாய் நின்ற தன்னுடைச் சோதி -சுழி பட்டோடும் சுடர்ச் சோதி வெள்ளம் –
சூர்ணிகை -80-
இத்தை சிலர் ஜடம் என்றார்கள் -சிலர் அஜடம் என்றார்கள் –
அஜடம் பெரும்பான்மையான அபிப்ராயம் -இஹ ஜடாமாதிமாம் கேசிதா ஹூ -தத்வ முக்தா கலாபம் -ஜடம் என்கிறவர் பஷம்
சூர்ணிகை -81-
அஜடமான போது நித்யருக்கும் முக்தருக்கும் ஈஸ்வரனுக்கும் ஜ்ஞானத்தை ஒழியவும் தோற்றும் –
சூர்ணிகை -82-
சம்சாரிகளுக்குத் தோற்றாது –
சம்சாரிகளுக்கு தோற்றாத அளவில் அதனுடைய ஸ்வயம் பிரகாசத்துக்கு கொத்தை இல்லை -தர்ம பூத ஞானம் கர்ம விசேஷங்களால்
பிரதிபந்திக்கப் படுவது போலே பத்த தசையில் சுத்த சத்வ பிரகாசத்வம் பிரதி பந்திதிக்கப் பட்டு உள்ளது
சூர்ணிகை -83-
ஆத்மாவிலும் ஜ்ஞானத்திலும் பின்னமான படி என் -என்னில்
சூர்ணிகை -84-
நான் என்று தோற்றாமையாலும்–சரீரங்களாய் பரிணமிக்கையாலும்-விஷயங்களை ஒழியவும் தானே தோற்றுகையாலும்
சப தச பாசாதிகள் யுண்டாகையாலும்-பின்னமாகக் கடவது –
சூர்ணிகை -85-
மிஸ்ர சத்வமாவது
சத்வ ரஜஸ் தமஸ் ஸூ க்கள் மூன்றோடும் கூடி பத்த சேதனருடைய ஜ்ஞான ஆனந்தங்களுக்கு திரோதாயகமாய்
விபரீத ஜ்ஞான ஜநகமாய் நித்தியமாய் ஈஸ்வரனுக்கு க்ரீடா பரிகரமாய் பர தேச பேதத்தாலும் கால பேதத்தாலும்
சத்ருசமாயும் விஸ்த்ருசமாயும் இருக்கும் விகாரங்களை யுண்டாக்கக் கடவதாய்
பிரகிருதி அவித்யை மாயை என்கிறபேர்களை யுடைத்தாய் இருக்கும் அசித் விசேஷம் –
பிரகிருதி -அவித்யை மாயை —
சூர்ணிகை -86-
பிரகிருதி -என்கிறது விகாரங்களைப் பிறப்பிக்கையாலே-
அவித்யை -என்கிறது ஜ்ஞான விரோதி ஆகையாலே –
மாயை -என்கிறது – விசித்திர சிருஷ்டியைப் பண்ணுகையாலே
பிரகிருதி சப்தம் -மகாதாதி விக்ருதாதிகள் -காரணத்தை சொல்லும் -பிரக்ருதிச் ச பிரதிஜ்ஞாதிருஷ்டாந்த நுபரோதாத் –
அவித்யை ஞானம் இல்லாமை -ஞானத்தில் வேறு பட்டது -ஞான விரோதி -இங்கே ஞான விரோதி அர்த்தம்
மாயை விசித்திர ஆச்சர்ய சிருஷ்டி என்றபடி
சூர்ணிகை -87-
இதுதான்
பொங்கைம்புலனும் பொறி ஐந்தும் கருமேந்த்ரியம் ஐம்பூதம்
இங்கு இவ் உயிர் ஏய பிரகிருதி மானாங்கார மனங்கள் – என்கிறபடியே
இருபத்து நாலு தத்வமாய் இருக்கும் –
சூர்ணிகை -88-
இதில்-பிரதம-தத்வம்-பிரகிருதி
பிரகிருதி பிரதானம் அவயகதம் -குணங்களின் பாகுபாடு வியக்தமாக தெரியாதே –
சூர்ணிகை -89-
இது அவிபக்த தமஸ் -என்றும்விபக தமஸ் என்றும் -என்றும் அஷரம் என்றும் சில அவஸ்தைகளை யுடைத்தாய் இருக்கும் –
சம்ஹார தசையில் நாம ரூப அர்ஹம் இன்றிக்கே அவிபக்த தமஸ் -சிருஷ்டி காலத்தில் விபக்த தமஸ் -பின்பு பகவத் சங்கல்ப விசேஷத்தால்
தமஸ் அவஸ்தை குலைந்து புருஷ சமஷ்டி கர்ப்பத்வம் தோன்ற அஷர அவஸ்தை அடையும்
சூர்ணிகை -90-
இதில் நின்றும் குண வைஷம்யத்தாலே மஹதாதி விசேஷங்கள் பிறக்கும் –
சூர்ணிகை -91-
குணங்கள் ஆகிறன சத்வ ரஜஸ் தமஸ் ஸூ க்கள் –
சூர்ணிகை -92-
இவை பிரக்ருதிக்கு ஸ்வரூப அனுபநதிகளான ஸ்வ பாவங்களாய
பிரக்ருத அவஸ்தையில் அனுத பூதங்களாய் விகார தசையில் உத் பூதங்களாய் இருக்கும் –
சூர்ணிகை -93-
சத்வம் ஜ்ஞான ஸூ கங்களையும் உபய சங்கத்தையும் பிறப்பிக்கும் –
சூர்ணிகை -94-
ரஜஸ் ஸூ ராக தருஷணா சங்கங்களையும் காம சங்கத்தையும் பிறப்பிக்கும் –
சூர்ணிகை -95-
தமஸ் ஸூ விபரீத ஜ்ஞானத்தையும் அநவதா நத்தையும் ஆல சயதயையும் நித்ரையும் பிறப்பிக்கும் –
கார்யம் கொண்டு இவற்றை நிரூபிக்கிறார்
சூர்ணிகை -96-
இவை சமங்களான போது விகாரங்கள் சமங்களுமாய் அஸ்பஷ்டங்களுமாய் இருக்கும்
விஷமங்கள் ஆனபோது விகாரங்கள் விஷமங்க ளுமாய் ஸ்பஷ்டங்களுமாய் இருக்கும் –
சூர்ணிகை -97-
விஷம விகாரங்களில் பிரதம விகாரம் மகான் –
சூர்ணிகை -98-
இது சாத்விகம் ராஜசம் தாமசம் என்று த்ரிவிதமாய் அத்யவசாய ஜனகமாய் இருக்கும் –
சூர்ணிகை -99-
இதில் நின்றும் வைகார்யம் தைஜசம் பூதாதி என்று த்ரிவிதமான அஹங்காரம் பிறக்கும்
சூர்ணிகை -100-
அஹங்காரம் அபிமான ஹேதுவாய் இருக்கும் –
சூர்ணிகை -101-
இதில் வைகாரிகத்தில் நின்றும்
ச்ரோத்ர-தவக்-சஷூர்-ஜிஹ்வா-க்ராணங்கள்–என்கிற ஜ்ஞான இந்த்ரியங்கள் ஐந்தும்
வாக்-பாணி-பாத-பாயு-உபச்தங்கள்-என்கிற கர்ம இந்த்ரியங்கள் ஐந்தும்
மனஸ் ஸூம் ஆகிற-பதினோரு இந்த்ரியங்களும் பிறக்கும் –
வைகாரிக -தைஜச -பூதாதி மூவகை பேதங்கள் அஹங்காரத்தில் -வைகாரிக -சாத்விக அஹங்காரம் -பூதாதி தாமஸ அஹங்காரம் –
சூர்ணிகை -102-
பூதாதியில் நின்றும் சப்த தந்மாத்ரை பிறக்கும் – இதில் நின்றும் ஆகாசமும் ஸ்பர்ச தந்மாத்ரையும் பிறக்கும்
இதில் நின்றும் வாய்வும் ரூப தந்மாத்ரையும் பிறக்கும்-இதில் நின்றும் தேஜஸ் ஸூம் ரச தந்மாத்ரையும் பிறக்கும்
இதில் நின்றும் அப்பும் கந்த தந்மாத்ரையும் பிறக்கும்-இதில் நின்றும் ப்ருதிவி பிறக்கும் –
சூர்ணிகை -103-
ஸ்பர்ச தந்மாத்ரை தொடக்கமான நாலு தந்மாத்ரைகளும் ஆகாசம் தொடக்கமான நாலு பூதங்களுக்கும் கார்யமாய்
வாயு தொடக்கமான நாலு பூதங்களுக்கும் காரணமாய் இருக்கும் என்றும் சொல்லுவார்கள்-
சூர்ணிகை -104-
தன மாத்ரங்கள் ஆவன பூதங்களின் யுடைய சூஷ்ம அவஸ்தைகள் –
தன்மாத்ரைகள் அவிசேஷங்கள்-பூமியும் அப்பும் இயற்கையாக சாந்தங்களாக இருக்கும் -தேஜஸ் வாயு கோரங்களாக இருக்கும் –
ஆகாசம் முடமாய் இருக்கும் -இவை கூடி மூன்றும் கலந்து இருக்கும்
சூர்ணிகை -105-
மற்றை இரண்டு அஹங்காரமும் வைகார்யங்களைப் பிறப்பிக்கும்
ராஜச அஹங்காரம் சஹகாரியாய் இருக்கும் –
சூர்ணிகை -106-
சாத்விக அஹங்காரம்-சப்த தந்மாத்ராதி பஞ்சகத்தையும் அடைவே சஹகாரியாய் கொண்டு
ச்ரோத்ராதி ஞான இந்த்ரியங்கள் ஐந்தையும் சிருஷ்டிக்கும்
தத சஹ க்ருதமாய்க் கொண்டு வாகாதி கர்ம இந்த்ரியங்கள் ஐந்தையும் சிருஷ்டிக்கும்
இவற்றை ஒழிய தானே மனசை சிருஷ்டிக்கும் என்றும் சொல்லுவார்கள் –
சூர்ணிகை -107-
சிலர் இந்த்ரியங்களில் சிலவற்றை பூத கார்யம் என்றார்கள்
சூர்ணிகை -108-
அது சாஸ்திர விருத்தம்
சூர்ணிகை -109-
பூதங்கள் ஆபயாயங்கள் இத்தனை –
சூர்ணிகை -109-
இவை கூடினால் அல்லது கார்யகரம் அல்லாமையாலே மண்ணையும் மணலையும் நீரையும் சேர்த்து ஒரு த்ரவ்யமாக்கிக்
சுவர் இடுவாரைப் போலே ஈஸ்வரன் இவற்றை எல்லாம் தன்னிலே சேர்த்து ஓர் அண்டமாக்கி அதுக்கு உள்ளே சதுர்முகனை சிருஷ்டித்து அருளும் —
சூர்ணிகை -110-
இவை கூடினால் அல்லது கார்யகரம் அல்லாமையாலே மண்ணையும் மணலையும் நீரையும் சேர்த்து ஒரு த்ரவ்யமாக்கிக்
சுவர் இடுவாரைப் போலே ஈஸ்வரன் இவற்றை எல்லாம் தன்னிலே சேர்த்து ஓர் அண்டமாக்கி அதுக்கு உள்ளே சதுர்முகனை சிருஷ்டித்து அருளும் –
சூர்ணிகை -111-
அண்டத்தையும் அண்ட காரணங்களையும் தானே யுண்டாக்கும்
அண்டத்துக்கு உட்பட்ட வஸ்துக்களை சேதனருக்கு அந்தர்யாமியாய் நின்று யுண்டாக்கும் –
சூர்ணிகை -112-
அண்டங்கள் தான் அநேகங்களாய்-பதினாலு லோகங்களோடே கூடி-ஒன்றுக்கு ஓன்று பதினாறு மடங்கான
ஏழு ஆவரண்ங்களாலும் சூழப் பட்டு-ஈஸ்வரனுக்கு கரீடா க நதுக சத்தா நீயங்களாய் ஜலபுத புதம் போலே ஏக காலத்திலே ஸ்ருஷ்டங்களாய் இருக்கும்-
கந்தர்வாதிகள் -புவர் லோகம் –க்ரஹ நஷாத்ரா இந்த்ராதிகள் சுவர்க்க லோகம்
அதிகாரம் கழிந்து அதிகார அபெஷை உள்ள இந்த்ராதிகள் மகர் லோகம்
சனகாதிகள் ஜனார் லோகம் பிரஜாபதிகள் -தபோ லோகம் ப்ரஹ்ம -சத்ய லோகம்
சூர்ணிகை -113-
பூதங்களில் ஆகாசம் அவகாச ஹேது வாயு வஹ நாதி ஹேது
தேஜஸ் ஸூ பச நாதி ஹேது – ஜலம் சேசன பிண்டி கரணாதி ஹேது பிருத்வி தாரணாதி ஹேது –என்பார்கள்-
சூர்ணிகை -114-
ச்ரோத்ராதி ஜ்ஞான இந்த்ரியங்கள் ஐந்துக்கும் அடைவே சப்தாதிகள் ஐந்தையும் க்ரஹிக்கை தொழில் –
வாகாதி கர்ம இந்த்ரியங்கள் ஐந்துக்கும் விசாக சில பக்த யுக்திகள் தொழில்
மனஸ் ஸூ இவை இத்தனைக்கும் பொது –
சூர்ணிகை -115-
ஆகாசாதி பூதங்களுக்கு அடைவே சப்தாதிகள் குணங்களாய் இருக்கும் –
சூர்ணிகை -116-
குணா விநி மாயம் பஞ்சீ கரணத்தாலே –
சூர்ணிகை -117-
ஆகாசம் கறுத்துத் தோற்றுகிறதும் அத்தாலே –
சூர்ணிகை -118-
முன்புத்தை தன மாத்ரைகளோடே கூடிக் கொண்டு உத்தர உத்தர தன்மாத்ரைகள் ஸ்வ விசேஷங்களைப் பிறப்பிக்கையாலே
குணாதிக்யம் யுண்டாயிற்று என்றும் சொல்வார்கள்-
சூர்ணிகை -119-
சத்வ ஸூன்யமாவது காலம் –
சூர்ணிகை -120-
இது பிரகிருதி பிராக்ருதங்களின் யுடைய பரிணாமங்களுக்கு ஹேதுவாய்
கலா காஷ்டாதி ரூபேண பரிணமிக்கக் கடவதாய் நித்யமாய்
ஈஸ்வரனுக்கு க்ரீடா பரிகரமாய் சரீர பூதமாய் இருக்கும் –
சூர்ணிகை -121-
மற்றை இரண்டு அசித்தும் ஈஸ்வரனுக்கும் ஆத்மாவுக்கும் போக உபகரண போக ஸ்தானங்களாய் இருக்கும் –
சூர்ணிகை -122-
போக்யங்கள் ஆகிறன-விஷயங்கள்போக உபகரணங்கள் ஆகிறன –
சஷூராதி கரணங்கள் போக ஸ்தானங்கள் ஆகிறன -சதுர்தச புவனமும் சமச்த தேஹமும் –
லீலா விபூதி பிரக்ரியை மட்டுமே இங்கே அருளிச் செய்யப் படுகிறது
ஸூர நர திர்யக் ஸ்தாவராத்மகமான சமஸ்த தேஹங்களும் போக ஸ்தானம் -அனுபவ ஜ்ஞானம் பிறக்கும் ஸ்தலம் –
ஈஸ்வரனுக்கு இந்த விபூதியில் உண்டான போகய போக உபகரணாதிகளையும் -அவதார கந்தமான ஷீரார்ணவ சயனம் -அவதார விசேஷங்கள்
-அர்ச்சாவதாரங்கள் ஆகிய இவற்றில் உண்டான விநியோக விசெஷன்களால் அறிவது –
சூர்ணிகை -123-
இதில் முற்பட்ட அசித்துக்கு–கீழ் எல்லை யுண்டாய்-சுற்றும் -மேலும் -எல்லை இன்றிக்கே இருக்கும்
நடுவில் அசித்துக்கு சுற்றும் கீழும் எல்லை இன்றிக்கே மேல் எல்லை யுண்டாய் இருக்கும்
காலம் எங்கும் ஒக்க யுண்டாய் இருக்கும் –
சூர்ணிகை -124-
காலம் தான் பரம பதத்தில் நித்யம் இங்கு அநித்யம் என்றும் சொல்லுவார்கள் –
சூர்ணிகை -125-
சிலர் காலத்தை இல்லை என்றார்கள் –
பௌ த்தாதிகள் காலம் இல்லை என்பர்
சூர்ணிகை -126-
பிரத்யஷத்தாலும்-ஆகமத்தாலும் சித்திக்கையாலே அது சொல்ல ஒண்ணாது –
சூர்ணிகை -127-
பலரும் திக்கு என்று தனியே ஒரு த்ரவ்யம் யுண்டு என்றார்கள் –
சூர்ணிகை -128-
பல ஹேதுக்களாலும் ஆகாசாதிகளிலே அந்தர்பூதம் ஆகையாலே அதுவும் சேராது –
சூர்ணிகை -129-
சிலர் ஆவரணா பாவம் ஆகாசம் என்றார்கள் –
ஆகாசம் தனியாக இல்லை என்பர்
சூர்ணிகை -130-
பாவ ரூபேண தோற்றுகையாலே அதுவும் சேராது –
சூர்ணிகை -131-
வேறே சிலர் இது தன்னை நித்யம் நிரவயவம் விபு அபாரத யஷம் என்றார்கள் –
சூர்ணிகை -132-
பூதாதியிலே பிறக்கையாலும் அஹங்காராதிகள் இல்லாமையாலும் கண்ணுக்கு விஷயம் ஆகையாலும் அவை நாலும் சேராது
சூர்ணிகை -133-
தவக் இந்த்ரியத்தாலே தோற்றுகையாலே வாயு அப்ரத்யஷம் என்கிற அதுவும் சேராது –
சூர்ணிகை -134-
தேஜஸ் ஸூ பௌ மாதி பேதத்தாலே பஹூ விதம்
சூர்ணிகை -135-
அதில் ஆதித்யாதி தேஜஸ் ஸூ ஸ்திரம் தீபாதி தேஜஸ் ஸூ அஸ்திரம் —
சூர்ணிகை -136-
தேஜஸ் ஸூ க்கு நிறம் சிவப்பு ஸ்பர்சம் ஔஷண்யம்-
சூர்ணிகை -137-
ஜலத்துக்கு நிறம் வெளுப்பு-ஸ்பர்சம் சைத்யம் ரசம் மாதுர்யம்
சூர்ணிகை -138-
பூமிக்கு நிறமும் ரசமும் பஹூ விதம் –
சூர்ணிகை -139-
ஸ்பர்சம் இதுக்கும் வாயுவுக்கும் அனுஷணா சீதம்
சூர்ணிகை -140-
இப்படி அசித்து மூன்று படிப் பட்டு இருக்கும் –

————————————————————————————————–

கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ P.B.A.ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
பிள்ளை லோகாச்சார்யர் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: