Archive for November, 2015

ஸ்ரீ ராமானுசன் பத்திரிகையில் இருந்து அமுத முத்துக்கள் திரட்டு – பாகம் -3-

November 29, 2015

வேய் மரு தோளிணை பதிகத்தில் – அடிச்சியோம் தலை மிசை நீ யணியாய் ஆழியம் கண்ணா உன் கோலப் பாதம் -10-3-6-
கடல் போன்ற ஸ்ரமஹரமான திருக்கண்களை -உடையவனே -என்பதே எல்லா வ்யாக்யானங்களிலும்
சக்ராஜாயுத த்வாத் -திராவிட தாத்பர்ய ரத்னாவளி -என்கிறார்

ஹரிர் ஹரதி பாபானி துஷ்ட சித்ரைரபி ஸ்ம்ருத-அநிச்சயாபி சம்ஸ்ப்ருஷ்டோ தஹத்யேவ ஹி பாவக –
வாராணஸ்யாம் குரு ஷேத்ரே நைமிசாரண்ய ஏவ ச தத்தம் ஸ்யாத் தேன யே நோக்தம் ஹரிரித்ய யஷர த்வயம்

ஆதியிலே அரவரசை அழைத்த அரங்கர் அவனியிலே இருநூறாண்டு இரு நீ என்னப்
பாதியிலே உடையவராய் வந்து தோன்றிப் பரமபதம் நாடியவர் போவேன் என்ன
நீதியாய் முன் போலே நிற்க நாடி நிலுவைதனை நிறைவேற்றி வாரும் என்னச்
சாதாரணம் எனும் மா வருடம் தனில் தனித்துலா மூல நாள் வந்தார் தாமே

கண்ணன் என்னும் கரும் தெய்வம் –
தத்வ முக்தா கலாப மங்கள ஸ்லோஹம்
லஷ்மீ நேத்ரோத் பல ஸ்ரீ சத்த பரிசயாத் ஏஷ சம்வர்த்தமான
நாபீ நாலீ கரிங்கநமதுகரபட லீ தத்த ஹஸ்தா வலம்ப
அஸ்மாகம் சம்பதோகான் அவிரலது லசீ தாம சஞ்ஜாத பூமா
காளிந்தீ காந்தி ஹாரீ கலையது வபுஷ காலிமா கைடபாரே

கமல மா மாதின் குவளை ஒண் மலரேய் கண்களில் காட்சியால் கிளர்ந்து
கமலமாம் கொப்பூழ் மிசை சுழன்று ஒளிரு மளிகளின் சவிதான் கை தரவே
கமலை சேர் மார்பில் கமழு நல் துளவ மாலையின் கதிரும் சேர்ந்து இலக்கக்
கமல நல் யமுனைக் காந்தியால் மிகுத்த கண்ணனார் கருமை நம் காப்பே

கைடபாரே வபுஷ காலிமா அஸ்மாகம் சம்பதோகான் கலையது –
கண்ணபிரானின் கருமை நிறம் நமக்கு செல்வ மிகுதியை விளைத்திட பிரார்த்தனை –
-கண்ணனை விட கண்ணனார் கருமையே நம் காப்பே என்கிறது -அந்த கருமைக்கு நான்கு விசேஷணங்கள்

லஷ்மீ நேத்ரோத் பல-ஸ்ரீ சத்த பரிசயாத்-சம்வர்த்தமான
பிராட்டி குவளையம் கண்ணியும்-மையார் கரும் கண்ணியும் ஆவாள் -அவள் அனவரதம் உற்று நோக்குகையாலே -என்றவாறு
கமல மா மாதின் குவளை ஒண் மலரேய் கண்களில் காட்சியால் கிளர்ந்து என்றவாறு
நாபீ நாலீ கரிங்கந மதுகரபட லீ தத்த ஹஸ்தா வலம்ப
திரு நாபீ கமலத்தில் மது பானார்த்தமாக சுழலமிடா நின்றுள்ள வண்டுகள் கூட்டம் கொடுத்த கருமை என்றவாறு
கமலமாம் கொப்பூழ் மிசை சுழன்று ஒளிரு மளிகளின் சவிதான் கை தரவே -என்றவாறு
அவிரலது லசீ தாம சஞ்ஜாத பூமா –
தோளிணை மேலும் நன் மார்பின் மேலும் சுடர் முடி மேலும் தாளிணை மேலும் புனைந்த தண்ணம் துழாய் மாலையன் ஆகையாலே -என்றுமாம்
கமலை சேர் மார்பில் கமழு நல் துளவ மாலையின் கதிரும் சேர்ந்து இலக்கக் -என்றுமாம்
காளிந்தீ காந்தி ஹாரீ
தூய பெருநீர் யமுனைத் துறைவன் -கமல நல் யமுனைக் காந்தியால் -என்றுமாம் -மிகுத்த கண்ணனார் கருமை நம் காப்பே

பாதகங்கள் தீர்க்கும் பரமனடி காட்டும் வேதம் அனைத்துக்கும் வித்தாகும் கோதை தமிழ்
ஐயைந்தும் ஐந்தும் அறியாத மானிடரை வையம் சுமப்பதும் வம்பு
பாதகங்கள் தீர்க்கும் பரமன் —அந்த பரமன் அடி காட்டும் வேதங்கள் –அந்த வேதங்கள் அனைத்துக்கும் வித்து கோதை தமிழ் –என்றவாறு
அபௌருஷேயமாய் இருக்கும் வேதங்களுக்கு வித்தா –
-ரூசோ யஜூம்ஷி சாமானி ததைவ தர்வாணா திச
சர்வம் அஷ்டாஷராந்தஸ் ஸ்தம் யச்ச அந்வய தபி வாங்மயம் -என்கிற பிரமாணத்தின் படியே
ஒரு விருஷத்தின் சாகை உபசாகைகள் எல்லாம் விதைக்குள் இருப்பது போலே
அறிய வேண்டிய அர்த்தம் எல்லாம் இதுக்கு உள்ளே உண்டு என்றபடி -அதாவது தத்வம் ஹிதம் புருஷார்த்தங்கள்
எல்லாம் எளிதிலே காட்டி அருளுகிறாள் என்றவாறு
தத்வம் –பரமாத்மா தத்வம் ஜீவாத்மா தத்வம்
ஜகத் காரணன் -சர்வாத்ம ரஷகன் -பர வ்யூஹ விபவ அந்தர்யாமி அர்ச்சா ரூபன் இத்யாதி
ஏகோ ஹ வை நாராயணா ஆஸீத் –யதோ வா இமானி பூதானி ஜாயந்தே –அஜாயமானோ பஹூதா விஜாயதே –
-ச ச ஸ்ரேயான் பவதி ஜாயமான -பிதா புத்ரேண பித்ருமான் யோ நியோ நௌ-இத்யாதி வேத உபநிஷத் கட்டளையிலே
நந்தகோபன் குமரன் யசோதை இளம் சிங்கம் -நாராயணனே நமக்கே பறை தருவான் —நாற்றத் துழாய் முடி நாராயணன்
-நாரயனனனே -பாற் கடல் பையைத் துயின்ற பரமன் அடி பாடி -ஓங்கி உலகளந்த உத்தமன் –
-ஆழி மழைக் கண்ணா -ச ஆத்மா அங்காநி அந்யா தேவதா – என்று அந்தர்யாமித்வம்
புள்ளரையன் கோயில் -கோயில் காப்பானே -உன் கோயில் நின்று இங்கனே போந்தருளி -அர்ச்சாவதாரம் –இத்யாதிகளால் அருளிச் செய்கிறாள்
சேஷத்வம் -அன்யார்ஹ சேஷத்வம் -அச்சித்வத் பாரதந்த்ர்யம் -ஆகிய ஜீவாத்மா ஸ்வரூபத்தை -உன் தன்னோடு உற்றோமேயாவோம்
-மாற்றார் உனக்கு வலி தொலைந்து -அபிமான பங்கமாய் வந்து -இத்யாதிகளால் அருளிச் செய்கிறாள்
ஹிதம் -உபாயம் -தொழுது வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க –உன்னை அருத்தித்து வந்தோம் -உன் பொற்றாமரை அடியே போற்றும் –
புருஷார்த்தத்தை உனக்கே நாம் ஆட்செய்வோம் –இதுவே ஜீவ நாடி என்பதை பாரார்த்த்யம் ஸ்வம் ஸ்ருதிசத சிரஸி சித்தம்
அத்யாபயந்தீ -என்பதை பட்டர் கை விளக்கு ஏற்றி காட்டி அருளினார்
உன் தன்னோடு உறவேல் –பல உறவுகள் உண்டே என்று காட்டி அருளும் வாக் சாமர்த்தியம்
-பிதாச ரஷகச் சேஷீ பார்த்தா ஜ்ஞேயோ ரமாபதி ஸ்வாம் யாதாரோ மமாத்மாச போக்தாச ஆதயம நூதித –
ஆத்ய ம நூ -மூல மந்த்ரம் -அதில் பிரதிபாதிக்கப் பட்ட ரமாபதி -இந்த நவவித சம்பந்தங்களையுமே உறவேல் என்று அருளிச் செய்கிறாள்

மிலேச்சனும் பக்தனானால் –தூது மொழிந்து நடந்து வந்தவர்களுடைய சமயக் சகுண சபோஜனமும் –
உபகாராய ஸூ க்ரீவோ ராஜ்ய காங்ஷி விபீஷணா நிஷ்காரணாய ஹனுமான் தத்துல்யம் சஹ போஜனம் -என்று திரு உள்ளம் பற்றி கோதில் வாய்மையினானோடு உடனே உண்பன் என்ற பெருமாளோடு பண்ணின சஹ போஜனம் -ஒரு காலத்திலே உண்பாரைப் போலே உன்னுடனே
ஒரு நிகராக சுக துக்கங்களை அனுபவிக்கக் கடவேன் யான் என்று ஒற்றுமை நயம் தோற்ற கூறி ஹனுமானைத் தழுவிக் கொண்ட சிறந்த விஷயம் –
கோவிந்த சுவாமி விருத்தாந்தம் -இங்கு ஒழிந்து போகம் எய்தி பின்னும் நம்மிடைகே போதுவாய் என்ற பொன்னருள் –ஈஸ்வரன் நினைத்தால் விஷய பிரவணரையும் இவ்வசனை அறுத்துக் கொண்டு போகும் சர்வ சக்தன் என்னும் இடமும் -எத்தனைஎனும் பகவத் பிரவணரையும் தேக சம்பந்தத்தின்
வழியே கொண்டு போய் வி நாசத்தைப் பலிப்புக்கும் என்னும் இடமும் வெளியிட்டது –

ஓது வாய்மையும் உவனியப் பிறப்பும் உனக்கு முன் தந்த அந்தணன் ஒருவன் -உவநியம் உப நயனம் சிதைந்து –த்விஜம் –
-முற்பட த்வயத்தை கேட்டு இதிஹாச புராணங்களையும் அதிகரித்து பரபஷ பிரதி ஷேபத்துக்கு உடலாக நியாய மீமாம்சைகளையும்
அதிகரித்து -போது போக்கும் அருளிச் செயலிலேயாம் நம்பிள்ளையை போலே அதிகரிப்பிக்க வல்லான் ஒருவன் -என்றவாறு

மார்கழித் திங்கள் -நாராயணன் -பரமபத நாதன் -தமஸ பரமோ தாதா சங்க சக்ர கதாதர –ஜாதோசி தேவதேவேச சங்க சக்ர கதாதர –
பாற் கடலுள் பையத் துயின்ற பரமன் -ஏஷ நாராயண ஸ்ரீ மன் ஷீரார்ணவ நிகேதன நாக பர்யங்கம் உத்ஸ்ருஜ்யஹி ஆகாதோ மதுராம் புரிம் –
அரவத் தமளியினோடும்- அழகிய பாற் கடலோடும் –ஓங்கி உலகளந்த உத்தமன் -திருக் கோவலூர் அனுபவம்
ஆழி –பழியம் தோளுடைப் பத்ம நாபன் -திரு வநந்த புரம்
மாயனை -வடமதுரை அனுபவம் -மதுரா நாம நகரீ புண்யா பாபா ஹரி சுபா யஸ்யாம் சாதோ ஜகந்நாத –
புள்ளும் சிலம்பின -திரு வண் வண்டூர் அனுபவம் –வைகல் பூங்கழிவாய்-விடிவை சங்கொலிக்கும் திரு வண் வண்டூர்
அடிகள் கை தொழுது -அகாரம் -உணர்தல் உடல் உணர்ந்து -உகாரம் -மின் கொள் சேர் புரி நூல் -மகாரம் போலே இங்கும் அரி–உங்கள் -முனிவர்கள்
கீசு கீசு -தயிர் ஒலி -உத்காயதீ நாம் அரவிந்த லோசனம் வ்ரஜாங்க நா நாம் திவம் அஸ்ப்ருசத் த்வனி நிர்மந்தன சப்தம் இஸ்ரிதோ நிரஸ்யதே
யேன திசாம் அமங்கலம் -ஆய்சிகளின் பாட்டு ஒலி-மதத்தின் ஒலி -சகாரத்தால் ஆபரண த்வனி -இத்தால் திருவாய்ப்பாடி அனுபவம்
கீழ் வானத்தில் தேவாதி தேவன் -திருவத்தியூர் அனுபவம் -நம்மாழ்வார் திருப்பள்ளி -உணர்த்தப் படுகிறார் -இமையோர் தலைவன் -அமரர்கள் அதிபதி
தூ மணிதிருக்கடிகை –மிக்கானை மறையாய் விரிந்த விளக்கு -தூ மணி மாடத்து சுற்றும் விளக்கு எரிய
நோற்றுச் சுவர்க்கம் -திருக் காட்கரை -அனுபவம் -யமவைஷவ்ருணுதே தேன லப்ய -பரக்கத ச்வீகாரம் -செய்த வேள்வியர் வையத் தேவர் -தான் என்னை முற்றப் பருகினான் கார் ஒக்கும் காட்கரை அப்பன் –தெரு வெல்லாம் காவி கமழ் காட்கரை -இங்கும் நாற்றத் துழாய் முடி நறு மணம் கமழா நிற்கும்
கற்றுக் கறவைதிரு மோகூர் –முகில் வண்ணன் பேர்பாட -தாள தாமரையில் -காள மேகத்தை யன்றி மற்று ஓன்று இலம் கதியே -நாசௌ புருஷ காரேண ந சாப்யன்யேன ஹேது நா கேவலம் ச்வேச்ச்சையை வாஹம் ப்ரேஷே கஞ்சித் கதாசன -ஸ்ரீ கிருஷ்ண மேகம் மதுரையிலே மின்னி ஆய்ப்பாடியிலே பொழியுமே
கனைத்து இளம கன்றுசித்ரகூட அனுபவம் -சினத்தினால் தென்னிலங்கை கோமானைச் செற்றான் -சினம் அடங்க மாருதியால் சுடுவித்தான்
-மனத்துக்கு இனியான் -திருமகளோடு இனிது அமர்ந்த செல்வன்
புள்ளின் வாய் கீண்டான் -திருக்குடந்தை -பள்ளிக் கிடத்தியோ ஏரார் கோலம் திகழக் கிடந்தாய் -நாகத்தணைக் குடந்தை –
-திருமழிசைபிரான் முற்பட அருளிச் செய்தார் இ றே
உங்கள் புழக்கடை -வாவியுள் செங்கழுநீர் -நெல்லில் குவளை கண் காட்ட நீரில் குமுதம் வாய்காட்ட அல்லிக் கமலம் முகம் காட்டும் கழனி அழுந்தூர் –
நாவுடையாய் -செந்தமிழும் வடகளையும் திகழ்ந்த நாவர் -சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன் -நெய்யார் ஆழியும் சங்கமும் ஏந்தும் நீண்ட தோளுடையாய்
எல்லே இளம் கிளியேதிரு வல்லிக் கேணி அனுபவம் –வல்லானை கொன்றானை –விற்பெரு விழவும் கஞ்சனும் மல்லும்
வேழமும் பாகனும் வீழ -நூற்றுவர் தம் பெண்டிரும் எய்தி நூல் இழப்ப –
நாயகனாய் -திருக் குறுங்குடி அனுபவம் -துயில் எழப் பாடுவான் –வாயால் முன்னம் முன்னம் மாற்றாதே -நம்பாடுவான் –விரதத்துக்கு
பங்கம் செய்ய வேண்டாம் என்று சொல்லி பல சபச்தன்களை செய்து நேச நிலைக்கதவம் நீங்கி இருக்கும் நிலையை சேவித்து திரும்புகிறான் –
அம்பரமே தண்ணீரே -காழிச் சீராம விண்ணகரம் -அம்பரமூடறுத்து ஓங்கி உலகு அளந்த உம்பர் கோமான் -ஒரு குறளாய் இரு நிலம்
மூவடி மண் வேண்டி உலகனைத்தும் ஈரடியால் ஓடிக்கினவன்
உந்து -திரு நறையூர் அனுபவம் -மன்னு மறையோர் திரு நறையூர் மா மலை போல் பொன்னியலும் மாடக் கவாடம் கடந்து புக்கு
என்னுடைய கண் களிப்ப நோக்கினேன் —-ஒரு இன்னிள வஞ்சிக் கொடி ஓன்று நின்றது தான் அன்னமாய் மானாய் அணி மயிலாய்
ஆங்கிடையே–அன்ன திருவுருவம் நின்றது –பந்தார் விரலி –பந்தார் விரலாள் – பெரிய திருமொழி -6-6-8-
குத்து விளக்கு -திருவிடவெந்தை -கொங்கை மேல் வைத்துக் கிடந்த -நீளா துங்க ஸ்தன கிரி தடீ ஸூ ப்தம் -திவளும்
வெண் மதி போல் திருமுகத்தரிவை செழும் கடல் அமுதினில் பிறந்த வவலும் நின்னாகத்து இருப்பது அறிந்தும் –
முப்பத்து மூவர் -திருப்பாடகம் -அமரர்க்கு முன் சென்று கப்பம் தவிர்க்கும் -அரவு நீள் கொடியோன் அவையுள் ஆசனத்தை அஞ்சி இடாதே இட
அதற்குப் பெரிய மா மேனி அண்டம் ஊடுருவ பெரும் திசை அடங்கிட நிமிர்ந்தோன் -பாண்டவர்கள் கப்பம் கம்பம் நடுக்கத்தை தீர்த்தவாறு –
ஏற்ற கலங்கள் -திருக் கண்ண மங்கை திரு நாராயண புரம்–பெரியாய் -பெரும் புறக் கடல் –விண்ணில் விண்ணவராய் மகிழ்வு எய்துவர்
பலன் சொல்லி பெரியாராய் ஆக்கி அருளுபவன் -பற்றார் நடுங்க முன் பாஞ்ச சந்நியத்தை வாய் வைத்த போர் ஏறே
-ச கோஷா தாரத்த ராஷ்ட்ரானாம் ஹ்ருதயா நிவ்யதாரயத்-வெண் சங்கம் ஓன்று ஏந்திய கண்ணா
ஆற்றப் படைத்தான் மகனே -யதிராஜ சம்பத் குமாரனே –பல்கலையோர் -பெரும் பசுக்கள் -தோற்றமாய் நின்ற சுடர்
-புற்றில் மறைந்து பின்பு தோற்றமாய் நின்ற இதிகாசம் பிரசித்தம் இ றே
அம் கண் மா ஞாலம் -திரு மால் இரும் சோலை –அபிமான பங்கமாய் வந்து அடி பணிந்தமை -கொன்னவில் கூர் வேல் கோன் நெடுமாறன்
தென் கூடல் கோன் தென்னன் கொண்டாடும் தென் திரு மால் இரும் சோலையே -இதமிமே ஸ்ருணுமோ மலயத்வஜம் நருபமிஹ-ஆழ்வான்
மாரி மலை முழஞ்சில் -திருவரங்கம் -உன் கோயில் நின்று இங்கனே -கோயில் -திருவரங்கம் -ஞாலத்தூடே நடந்தும் நின்றும்
நடை அழகை நம் பெருமாள் பக்கல் காணலாம்
அன்று இவ்வுலகம் -கோவர்த்தன் அனுபவம் -குன்று குடையாய் எடுத்தான் குணம் போற்றி –செந்தாமரைக் கை விரல்கள்
கோலமும் அழிந்தில –திருவுகிர் நொந்துமில
ஒருத்தி -திருக்கண்ணபுரம் -தந்தை காலில் விலங்கற வந்து தோன்றிய தோன்றல் -தாய் எடுத்த சிறு கோலுக்கு
உளைந்து ஓடித் தயிர் உண்ட வாய் துடைத்த மைந்தன்
மாலே -ஸ்ரீ வில்லி புத்தூர் -ஆலினிலையாய் -பாலகன் என்று பரிபவம் செய்யேல் பண்டு ஒரு நாள் ஆளிநிலை வளர்ந்த சிறுக்கன் இவன்
கூடாரை திருவேங்கடம் —விரோதி நிரசனமும் கூடி இருந்து குளிர்ந்த படியும் -அப்பனுக்கு சங்கு ஆழி அளித்து -ஒழிவில் காலம் எல்லாம்
உடனே மன்னி இருக்க பாரித்தது வேங்கடத்து எழில் கொள் சோதி எந்தை தந்தை தந்தைக்கே –குளிர் அருவி வேங்கடம் –
கறவைகள் -ஸ்ரீ பிருந்தாவனம் -கானம் சேர்ந்து உண்போம் –கானம் என்றும் வேணு காண கோஷ்டியில் என்றுமாம்
சிற்றம் சிறு காலை த்வாராபதி –உனக்கே நாம் ஆட்செய்வோம் பதினாறாம் ஆயிரவர் தேவிமார் பணி செய்ய துவரை என்னுமத்தில்
நாயகராய் வீற்று இருந்த மணவாளர் -பல்லாயிரம் தேவிமாரோடு பௌவம் ஏறி துவரை எல்லாரும் சூழ –
வங்க கடல் -ஸ்ரீ வில்லிபுத்தூர் -அணி புதுவை -மின்னனைய நுண் இடையார் விரி குழல் மேல் நுழைந்த வண்டு இன்னிசைக்கும் வில்லி புத்தூர் -ஆண்டாளுடைய குழலிலே -தூவி யம் புள்ளுடைத் தெய்வ வண்டு நுழைந்து அபி நிவேசம் கொண்டது பிரசித்தம் –
மென்னடைய அன்னம் பரந்து விளையாடும் வில்லி புத்தூர் -வேண்டிய வேதங்களோதி -அன்னமாய் அன்று அங்கு அருமறை பயந்தான் –

மார்கழி -பாரோர் புகழ -என்றது மகிழ என்றபடி -க்யாதி லாப பூஜா அபேஷை இல்லாதவர்கள் –காரணே கார்ய உபசார
-புகழ்ச்சிக்கு காரணமான மகிழ்ச்சியே இங்கே விவஷிதம்
வையம் -செய்யாதன செய்யோம் -சாஸ்த்ரங்களில் விதித்தவையாக இருந்தாலும் மேலையார் செய்யாதன செய்யோம் -ஆசாரியர்கள்
அனைவரும் முன் ஆசரித்த ஆசாரம் தன்னை அறியாதார் பேசுகின்ற வார்த்தைகளைக் கேட்டு மருளாதே பூர்வர்கள் சீர்த்த நிலை தன்னை நெஞ்சே சேர் -வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க -மனோ பூர்வ வாக் உத்தர -யன் மன சாத்யா எதி தாதி வாசா வத்தி –மனஸ் சஹகாரம் இல்லாமல் பித்தனாக பகவத் விஷயம் பேசினாலும் எம்பெருமானுக்கு உகப்பே என்றபடி
கீசு கீசு -கிருஷ்ண கிருஷ்ண -அறுகால் வரி வண்டுகள் ஆயிர நாமம் சொல்லி சிறுகாலைப் பாகும்-பொழில் வாய் இருந்து
வாழ் குயில்கள் அரி அரி என்றவை அழைப்ப
பந்தார் விரலி –போகய போக உபகரண போக ஸ்தானங்கள் கை அடைப்பாக கொண்ட -உபய விபூதி நாயகர் -நிரவாஹகர் – உடையவர்
முப்பத்து மூவர் -நப்பின்னை நங்காய் திருவே –குழல் கோவலர் மடப்பாவையும் மண் மகளும் திருவும் -ஸ்ரீ தேவி பூ தேவி களுடன் ஒக்க பரிகணிதை-
ஏற்ற கலங்கள்பசுக்கள் ஆற்றப் படைத்தான் மகனே விபவம்-பெரியாய் -பரத்வம் -ஊற்றம் உடையாய் வ்யூஹம்
உலகினில் தோற்றமாய் -அந்தர்யாமித்வம் –நின்ற சுடரே -அர்ச்சாவதாரம்
மேலையார் செய்வனகள் வேண்டுவன -ச யத் பிரமாணம் குருதே-

நல்குரவும் செல்வமும் –சம்பத் தாரித்ர்ய பாவாத் —-அகதி தகட நம் ப்ராஹ க்ருஷ்ணம் சடாரி -தேசிகன்
வன் சரண் சுரர்க்காய் அசுரர்க்கு வெம் கூற்றமுமாய் -இதற்கு அகடிதகட நா சக்தி வேண்டியது இல்லையே
சர்வ நியந்த்ருத்வம் அனுபவிக்கப் படுகிறது -ஆறாயிரப் படியில் பிள்ளான்

லஷ்மி நாதாக்க்ய சிந்தௌ சடரி புஜதல ப்ராப்ய காருண்ய நீரம்
நாதத்வாரா வப்ய ஷிஞ்சத் ததனு ரகுவராம் போஜ சஷூர் ஜராப்யாம்
கதவா தாம் யாமு நாக்க்யாம் சரிதமத யதீந்த்ராக்ய பத்மா கரேந்த்ரம்
சம்பூர்யா பிராணி சச்யே பரவஹதி சத்தம் தேசிகேந்திர ப்ரமௌகை–

பரீவா தேஷு யே மூகா பதிராச் ச ச பரோக்தி ஷூ
பர ரந்த்ரேஷூ ஜாத்யந்தா தைர் ஜிதம் புவனத்ரயம் –
பிறரை தூற்றுவதில் ஊமைகளாயும் -பிறர் செய்யும் தூற்றைக் கேளாமையால் செவிடர்களாயும் -பிறர் குறைகளைக் காண்பதில்
பிறவிக் குருடர்கள் போலேயும் இருந்து மூவுலகையும் வெல்வார்கள் –

ஆராவமுதன் -என்பதைக் காட்டிலும் ஆராவமுது -அதி மநோஹர வ்யாபதேசம் -என் அமுதினைக் கண்ட கண்கள் போலே
-மருத்துவனாய் நின்ற மா மணி வண்ணா -என்பதை விட மருந்தும் பொருளும் அமுதமும் தானே -எனபது அன்றோ மிக மிக ரசிப்பது
–பெரும் புறக் கடல் -ப்ருஹத் பஹிஸ் சிந்து –வான மா மலைத் தடாகம் -சேற்றுத் தாமரை -சோலை -தேனமாம் பொழில்
திரு மோகூர் ஏரி -தாள தாமரை –திருக் குறுங்குடி பொய்கை -கரண்ட மாடு பொய்கை
பிரமாணம் -தொண்டர்க்கு அமுது உண்ணச் சொன்மாலைகள் சொன்னேன் -நல்ல வமுதம் பரகாலன் பனுவல்களே -பக்தாம்ருதம் –திராவிட வேத சாகரம்
பிரமாதாக்கள் -வைகல் பாட வல்லார் வானோர்க்கு ஆராவமுதே
பிரமேயம்அண்டர் கோன் அணி யரங்கன் என் அமுது –அடியேன் மேவி அமர்கின்ற அமுதே திரு வேங்கடத்து எம்பெருமானே
–சோலை மலைக்கு அரசே கண்ண புரத்து அமுதே -திரு மேய்த்து இன்னமுத வெள்ளத்தை –அமுதே திருமால் இரும் சோலைக் கோனே
-ஆரா வின்னமுதை தென் அழுந்தையில் மன்னி நின்ற -அமுதினைக் கண்ண மங்கையுள் -என்றாலும்
ஆராவமுது திருக்குடந்தை எம்பெருமானுக்கே உபபத நிரபேஷமாய் இருக்கும்
பேர் அருளாளன் -தேவப் பெருமாளுக்கும் திருக் குறுங்குடிப் பெருமாளுக்கும் -திரு நாங்கூர் செம் பொன் செய் கோயில் பெருமாளுக்கும்
பத்தராவி -திரு நின்றவூர் பெருமாளுக்கும் திருக் கண்ண மங்கை பெருமாளுக்கும்
சூழ் விசும்பிலும் –குடந்தையன் கோவலன் குடி யார்க்கு –தொடர்ந்து எங்கும் தோத்திரம் சொல்லினர் -பவிஷ்யத் ஜ்ஞானம் கொண்டே
நம்மாழ்வார் அருளிச் செயல் -திருமங்கை ஆழ்வாரும் -ஆரம்பத்தில் சூழ் புனல் குடந்தையே தொழுது -என்றும் -சொல்லுகேன் வம்மின்
சூழ் புனல் குடந்தையே தொழுமின் -என்றும்- தண் குடந்தை கிடந்த மாலை அடி நாயேன் நினைந்திட்டேனே என்று நிகமிக்கிறார்
-அடுத்த பாசுரத்தில் அன்னமாய் முனிவரோடு அமரர் ஏத்த அருமறையை வெளிப்படுத்த அம்மான் -நாத யாமுன போல்வாரை அன்னம் என்னும் –
ஸ்ரீ நாத முனி களோடு கூட -அமரர் ஏத்த -திருக் குருகூரில் உள்ள நிலத்தேவர்கள் துதிக்க
-அருமறையை வெளிப்படுத்த அம்மான்–நாதனுக்கு நாலாயிரம் உரைத்தான் வாழியே
ஆராவமுதம் அங்கு எய்தி அதில் நின்றும் வாராது ஒழிவது ஓன்று உண்டே -சிறிய திருமடல் -இங்கே காண இப்பிறப்பே மகிழ்வர் எல்லியும் காலையே
ரசோவை ச ரசம் ஹ்யேவாயம் லப்த்வா ஆ நந்தி பவதீ -தைத்ரியம் -ஏதத் அம்ருதம் ஏதத் அபயம் ஏதத் ப்ரஹ்ம -சாந்தோக்யம் -8-3-4-
ஆராவமுதே -பதிகம் தொடக்கத்திலே எம்பெருமான் திரு நாமம் இதில் ஒன்றிலே தான் யாருக்கு ஆராவமுதம் -பக்தர்களுக்கு –

-ஆறாயிரப்படி -உன்னோடு பிறரோடு வாசி அற எல்லாருக்கும் ஒக்க சர்வ காலமும் அனுபவித்தாலும் ஆராத போக்யம் -பிள்ளான் –
தானே அனுபவித்து குமிழ் நீர் உண்பானாம்ஆள் இட்டு அந்தி தொழாமல் பெருமாள் தானே
-ஸ்வயமத விபோ ஸ் வேன ஸ்ரீ ரெங்க தாம்னி மைதலீ ரமண வபுஷா ஸ்வார் ஹாண்யாராத நாநி அஸி லம்பித
அக்ரே தார்ஷ்யேண பச்சாத் அஹிபதி சயநேந ஆத்மநா பார்ச்ச்வ யோச்ச ஸ்ரீ பூமிப்யோ மத்ருப்த்யா நயன சுலகனைஸ் சேவ்யமா நாம் ருதௌகம்

அடியேன் உடலம் நின்பால் அன்பாயே–ஸ்வரூப சித்தமான அடியேன் -உடலமும் ஆத்ம தர்மம் கொண்டபடி
-ஆத்மதர்மம் சேஷத்வம் உடலினால் பிரகாசம் அடைவது போலே ஆத்மதர்மமான அன்பும் உடலிலே விளக்கமுற
-வடிவிலே தொடை கொள்ளலாம் படி இருக்குமாயிற்று ஆழ்வாருடைய அன்பு
பேசாது இருந்து பின்னைத் தேறித் தெளிந்து ஒருவாறு பேசுகிறபடி -நீராய் அலைந்து கரைய உருக்குகின்ற –
நெடுமாலே -கருமை பெருமை மையல் –கரியவன் பெரியவன் பித்தன் -அவன் கருமையே நமக்கு செல்வம் தந்திடும்
பெருமை ப்ரஹ்ம -சர்வத்ர ப்ருஹத்த்வ குண யோகேன ஹி ப்ரஹ்ம சப்த ப்ருஹத்வஞ்ச ஸ்வரூபேண
குணைச்ச யத்ர அநவதிக அதிசயம் சோஸ்ய முக்யோர்த்த

சீரார் செந்நெல் கவரி வீசும் –
உரம் பெற்ற மலர்க் கமலம் உலகளந்த சேவடி போல் உயர்ந்து காட்ட வரம்பற்ற கதிர்ச் செந்நெல் தாள் சாய்த்து தலை வணக்கும்
தன்னரங்கமே -அஹம் அன்னம் -என்னுமவர்கள் சீரார் செந்நெல் –-பெருமாளுக்கு அமுதுபடியாகும் சீர்மை உண்டே
செழு நீர்த் திருக் குடந்தை -ஆழ்வார் நீராய் அலைய தேசம் எல்லாம் வெள்ளமிட்டு-பெருமானோ நீர் புரை வண்ணன்
-ஆழ்வார் நீராய் அலைந்து கரைபவர் -ஒன்பதோடு ஒன்றுக்கும் மூ வுலகும் உருகுமே –பாசுரம் ஒதுபவர்களோ -ஊற்றின் கண்
நுண் மணல் போல் உருகா நிற்பார் நீராயே-இத்தனையும் சேர்ந்தால் செழு நீர்த் திருக் குடந்தை யாக கேட்க வேணுமோ/இப்படி செந்நெலுக்கு சீர்மை திருக் குடந்தைக்கும் -திருவரங்கத்துக்கும் மட்டுமே -என்பர்  /

ஏரார் கோலம் திகழக் கிடந்தாய் –
கௌசல்யா -கிடை அழகில் ஈடுபட்ட முனிவர் உத்திஷ்ட நரசார்தூல -என்றவாறே எழுந்து இருந்ததில் வியப்பில்லை -திரு மழிசைப் பிரான்
எழுந்து இருந்து பேசு –என்றதும் அர்ச்சாவதார சமாதியையும் குலைத்து பேசி அருளினாயே வாழி-கேசனே
அசைவில் உலகம் பரவக் கிடந்தாய் -அசைவு -திசைவில் வீசும் செழு மா மணிகளாக சொல்லப் பட்ட திரு மழிசைப் பிரானுக்காக
அசைந்து கொடுத்தது -அதிலே உலகம் பரவக் கிடந்தாய் -அந்த நீர்மைக்கு உலகு எல்லாம் ஈடுபடும் படி கிடந்தாயே
கண்டேன் அம்மானே -ச மயா போதித ஸ்ரீ மான் ஸூ க ஸூ பதா என்னும்படி உணர்த்தி விட்டுத் துடித்த பிராட்டி போலே
அன்றியே கண்ணாரக் கண்டு களிக்கின்றேன் -என்கிறார்

ப்ராப்யச்ச ப்ரஹ்மணோ ரூபம் ப்ராப்துச் ச ப்ரத்யகாத்மன ப்ராப்த்யுபாயம் பலம் ப்ராப்தேஸ் ததா பிராப்தி விரோதி ச வதந்தி
சகலா வேதாஸ் சேதிஹாசபுராணா கா முனயஸ் ச மஹாத்மநோ வேத வேதார்த்த தர்சின –
முனயஸ் ச மஹாத்மநோ -என்றது ஆழ்வார்களையே -மிக்க இறை நிலையும் இத்யாதி
எம்மாவுருவும் வேண்டு மாற்றாலாவாய் எழில் ஏறே -இச்சா க்ருஹீத அபிமதோரு தேக -ச உஸ்ரேயன் பவதி ஜாயமான
அடியேன் -அடியேன் அரு -அரூபி என்றபடி ஆத்மா உள்ள அளவும் திருவடிகளை பிரியாதே இருக்க பிரார்த்திக்கிறார்
-கன்னார் மதில் சூழ் குடந்தைக் கிடந்தாய் அடியேன் அரி -என்கிறார் – நானாகிய ஆத்மா என்றபடி -என்னுடைய ஆத்மா இல்லை
கழல்கள் அவையே சரணாகக் கொண்ட குருகூர்ச் சடகோபன் -சரணாகதி என்னும் சார்வுடன் மற்று ஒன்றை அரணாகக் கொள்ளாதார் அன்பு வாழி
என்னான் செய்கேன் -எந்த உபாயாந்தரத்தாலும் செய்வேன் அல்லேன் -நீ தந்து அருளின ஞானத்தால் ஸ்வரூபம் உணர்ந்து -பகத் ரூபாபன்ன ஞானம் அன்றோ -காலாழும் நெஞ்சு அழியும் –கழல்கள் அவையே -என்கிறார் -திருவடிக் கீழ் குற்றேவல் -உற்றேன் உகந்து பணி செய்து
என்னை யாண்டாய் –உனக்கு ஆட்பட்டும் -பிரியா அடிமை என்னைக் கொண்டே குடந்தை திருமாலே
உழலை என்பிற் பேய்ச்சி முலை யூடஅவளை உயிர் உண்டான் –மாயை யாகிற விரோதி நிரசன சீலன் –
ஸ்வ ரஷண ஸ்வ அந்வய விரோதியையும் களைவாய் துன்பம் களையாது ஒழிவாய் களை கண் மற்று இலேன்
தான் ஆஸ்ரியிக்கை என்ற நினைவும் விரோதி என்பதால் –தந் நிவ்ருத்தியையும் இசைவித்து என்னை உன் தாளிணை கீழ் இருத்தும் அம்மானே என்கிறார்

தமிழ் மாலைகள் நாம் தெளிய ஓதி தெளியாத மறை நிலங்கள் தெளிகின்றோமே -கலக்கமான பொருள்கள் வேதம் சொல்லும் எனபது இல்லை
-உபய வேதங்களும் ஏகாரத்த பிரதிபாதகங்கள் தானே
மறை நிலங்கள் -வேதங்கள் மட்டும் அல்ல பஞ்சமோ வேதம் இதிகாசங்களும் உப ப்ருஹ்மணங்களும்
நாராயணன் முழு யேழ் உலகுக்கும் நாதன் வேதமயன் -மறந்தும் புறம் தொழா மாந்தர் -நாராயணனின் பரத்வமும் இதரர்கள்
அபரத்வமும் அருளிச் செயல்களாலே தெளியப் பெற்றோம் -மாயத் தோற்றம் என்பாரை பிறந்தவாறும் –
-மாயை -சங்கல்ப ரூபா ஜ்ஞானமே -எல்லையில் ஜ்ஞானத்தன் ஜ்ஞானம் அக்தே கொண்டு எல்லாக் கருமங்களும் செய்
–எல்லையில் மாயனைக் கண்ணனை -உயர் நலம் உடையவன் -சீர்த் தொடை யாயிரம் -சீர் கலந்த சொல் நினைந்து போக்காரேல்-
-குணம் பாடி ஆவி காத்து இருப்பேனே —உடன் மிசை உயர் எனக் கரந்து எங்கும் பரந்து உளன் -சரீரத்மா நிபந்தனம் -சுருதி -மிகு சுருதி
-சுடர் மிகு சுருதி -சுருதி பேத சுருதி -மிகு சுருதி அபேத சுருதி -சுடர் மிகு சுருதி -கடக சுருதி

யத் கோ சஹச்ரம் அபஹந்தி தமாம்சி பும்ஸாம்
நாராயணோ வசதி யத்ர ச சங்க சக்ர
யன் மண்டலம் ஸ்ருதிகதம் பிரணமந்தி விப்ராஸ்
தஸ்மை நமோ வகுள பூஷண பாஸ்கராய
சூர்யன் -த்யேயஸ் சதா சவித்ரு மண்டல மத்ய வர்த்தீ நாராயணஸ் சரசிஜாச நசன்னிவிஷ்ட கேயூரவான்-
மகர குண்டலவான் கிரீடி ஹாரீ ஹிரண்யவயபுர் திருத்த சங்க சக்ர –
இந்த வகுள பூஷண பாஸ்கரரும்-கண்கள் சிவந்து பெரியவாய் வாயும் சிவந்து கனிந்து உள்ளே வெண் பல் இலகு சுடர் இலகு விலகு
மகர குண்டலத்தன் கொண்டல் வண்ணன் சுடர் முடியன் நான்கு தோளன் குனி சார்ங்கன் ஒண் சங்கதை வாள் ஆழியான் ஒருவன் அடியேன் உள்ளானே –
யன் மண்டலம் -வேத பிரதி பாத்தியமான சூர்யா மண்டலம் -திரு வவதார ஸ்தலம் சுருதி வேதம் காது இரண்டுக்கும்
இன்றும் காதில் திருக் குருகூர் ஆழ்வார் என்றதும் கை கூப்பி வணங்குகின்றோம்
பவிஷ்யந்தி –தாம்ரபர்ணீ நதி தீர -என்று ஆழ்வார் ஜீயர் அவதாரங்கள் ஸூ சகம்
யுக க்ரமம் –கருத யுகத்தில் பிராமணராய் -தத்தாத்ரேயர் -பரசுராமன் -த்ரேதா யுகத்தில் சக்கரவர்த்தி திருமகன்
-த்வாபர யுகத்தில் வ ஸூ தேவ நந்தகோபன் குமாரனாகவும் -கலி யுகத்தில் -ஆழ்வார்
ரிஷிம் ஜுஷாமஹே கிருஷ்ண த்ருஷ்ணா தத்வ மிவோதிதம்

ஆங்கு அரும்பிக் கண்ணீர் சோர்ந்து அன்பு கூரும் அடியவர்க்கு ஆரமுதம் ஆனான் தன்னை -பெரிய திருமொழி -2-10-4-
அடியவர் –-பேயாழ்வார் -திருக்கண்டேன் பொன் மேனி கண்டேன் –இன்றே கழல் கண்டேன் -என்று ஆதியிலும்
பைம் பொன் முடியான் அடி இணைக்கே பூரித்து என் நெஞ்சே புரி -என்றும்
-முயன்று தொழு நெஞ்சே –தண் அலங்கல் மாலையான் தாள் -என்றும்
கரியான் கழலே தெருள் தன மேல் கண்டாய் தெளி -என்றும்
வாழும் வகை யறிந்தேன் –எங்கள் பெருமான் அடி சேரப் பெற்று -என்று மத்யத்திலும்
குட்டத்துக் கோள் முதலை துஞ்சக் குறித்து எறிந்த சக்கரத்தான் தாள் முதலே நம்கட்குச் சார்வு -என்று நிகமித்து
அடியைச் சிக்கென பிடித்து பேயாழ்வார் அடியவர் ஆகிறார்
அன்பு கூரும் அடியவர் –பூதத்தாழ்வார்
அன்பே தகளியாய் -என்று தொடங்கி -விளவின் காய் கன்றினால் வீழ்த்தவனே –என்தன் அளவன்றால் யானுடைய அன்பு -என்று
நிகமித்து தனது அன்பை வாய் விட்டு உரைத்தார்
அரும்பிக் கண்ணீர் சோறும் அடியவர் -பொய்கையாழ்வார்
பழுதே பல பகலும்  போயின என்று அஞ்சி அழுதேன் -என்றபடி அரும்பிக் கண்ணீர் சோர்ந்தவர்
காசார பூர்வகவி முக்கய விமர்த்த ஜன்மா புண்யா
தடேஷூ ஸூபகஸ்ய ரஸோ பஹூஸ் தே–தேகளீச ஸ்துதி-

ப்ரஹ்மாதிகள் சம்சாரத்தைப் பிரவர்த்திப்பிக்க பிரதானர் ஆனால் போலே தந் நிவ்ருதிக்கு பிரதானாரானார்
திருமழிசை பிரான் –பரத்வத்தை ஸ்தாபித்து அருளி -ஆழ் பொருளை அறிவிக்க முற்படுகிறேன் -என்கிறார்
தொடங்கும் பொழுதே அறிவித்தேன் ஆழ் பொருளை என்கிறார் சத்ய சங்கல்பன் மதி நலம் அருளப் பெற்றவர் ஆகையாலே

சதேவ ஸோம்ய இதமக்ர ஆஸீத் ஏகமேவ அத்விதீயம் -சாந்தோக்யம் -சத் சப்தத்தால் மூலப் பொருளையும்
வாஜசநேயகத்தில் -ப்ரஹ்ம வா இதம் ஏகமேவ அக்ர ஆஸீத் –ப்ரஹ்ம சப்தத்தால் மூலப் பொருளையும்
ஐதரேயத்தில் -ஆத்மா வா அயமேக ஏவாக்ரா ஆஸீத் –என்று ஆத்மா சப்தத்தால் அறிவுடைய மூலப் பொருள் என்கிறது
ஏகோ ஹை வை நாராயண ஆஸீத் ந ப்ரஹ்மா நே சான -மஹா உபநிஷத் வாக்யத்தால் அந்த சத் -ப்ரஹ்ம –ஆத்மா -போன்ற
சாமான்ய சப்தத்தால் சொல்லிய மூலப் பொருள் நாராயண -என்கிறார்

நீராட கிருஷ்ண சம்ச்லேஷம் -நான் அடிமை செய்ய விடாய் நான் ஆனேன் எம்பெருமான் -தான் அடிமை கொள்ள விடாய் தான் ஆனான் ஆனதன் பின்
வெள்ளக் குளத்தே விடாய் இருவரும் தணிந்தோம் உள்ளக் குடத் தேனை ஒத்து -பிள்ளை பெருமாள் ஐயங்கார் நூற்று எட்டு திருப்பதி யந்தாதி –

பகல் பத்து -முதல் நாள் -திருப் பல்லாண்டு -பெரியாழ்வார் திருமொழி -1-9 -அபிநயம் வியாக்யானம் முதல் இரண்டு திருப்பல்லாண்டு பாடல்கள்
இரண்டாம் நாள் -பெரியாழ்வார் திருமொழி -2-10-முதல் -5-3 -வரை -ஆற்றிலிருந்து –தன்னேராயிரம் இரண்டு பாடல்களுக்கும் அபிநயம் வியாக்யானம் -/மூன்றாம் நாள் பெரியாழ்வார் திருமொழி -5-4/திருப்பாவை நாச்சியார் திருமொழி 12 வரை -சென்னியோங்கு மார்கழி திங்கள் -இரண்டு பாட்டுக்கும்
அபிநயம் வியாக்யானம் -திருப் பொலிந்த சேவடி என் -சென்னியின் மேல் பொறித்தாய் -அரையர் தம் திருக் கையால் ஆழ்வார்கள் ஆசார்யர்கள் கோஷ்டியாருக்கும் சாதிப்பார்
நான்காம் நாள் -நாச்சியார் திரு மொழி 13/14-பெருமாள் திருமொழி /திருச் சந்த விருத்தம் -சேவை -கண்ணன் என்னும் கரும் தெய்வம்
/இருளிரிய -இரண்டு பாட்டுக்கும் அபிநயம் வியாக்யானம் –
கஞ்சைக் காய்ந்த கருவில்லி -அழகிய மணவாளப் பெருமாள் கம்ச வதம் செய்து அருளின படி எவ்வண்ணமே என்ன -மூன்று தடவை கேள்வி கேட்டு
-பின்பு பெருமாள் திருமொழி திருச்சந்த விருத்தம் -சேவை ஆனபின்பு இரண்டாம் பகல் பத்து சேவையில் தம்பிரான் படி
கம்ச வத விஷயமான வியாக்யானம் சேவித்து அழகிய மணவாளன் கம்ச வதம் செய்து அருளினது இங்கனே என்று சொல்லி
கிருஷ்ணாவதாரம் முதல் கம்ச வதம் வரை நடித்துக் காட்டி கடைக் கண் என்னும் சிறைக் கோலால் தொடங்கி -சேஷ பாசுரங்கள் சேவை யாகும்
ஐந்தாம் நாள் -திருமாலை அமலனாதிபிரான் -திருமாலை முதல் பாட்டுக்கு அபிநயம் -வியாக்யானம் –ஆறாம் பாட்டு மூன்றாம் அடி –
அரங்கனார்க்கு ஆட்செய்யாதே –என்ற இடத்தில் -திரு அத்யயன உத்சவ சேவை புறப்பாடு திருவாராதனம் வேத விண்ணப்பம் அருளிப்பாடு
அபிநயத்துக் காட்டி பின்பு சேஷ பாசுரங்கள் அமலனாதிபிரான்
ஆறாம் நாள் -கண்ணி/பெரிய திருமொழி -3-5- வரை கண்ணி நுண் சிறுத் தாம்பு வாடினேன் வாடி இரண்டுக்கும் அபிநயம் வியாக்யானம்
ஏழாம் நாள் -பெரிய திருமொழி -3-6-முதல் 5-6- தூவிரிய மலருழக்கி-அபிநயமமும் வியாக்யானமும் ஒ மண் அளந்த தாளாளா–
மூன்று முறை சேவித்து அழகிய மணவாளப் பெருமாள் திரு உலகு அளந்து அருளின படி எங்கனே என்ன -அத திரு மொழியில் மேல்
பாசுரங்களை சேவியாமல் மேலே சொல்லி பிற்பகலில்  இரண்டாம் சேவையில் வாமன அவதார விஷயமாக தம்பிரான் படி வியாக்யானம்
சேவித்து அவ்வவதார வ்ருத்தாந்தங்களை நடித்துக் காட்டி தண் குடந்தை நகராளா வரை எடுத்த தோளாளா ஆரம்பித்து அத்திருமொளியை முடிப்பார்கள்
எட்டாம் நாள் -பெரிய திருமொழி -5-7- முதல் 8-10–பண்டை நான்மறையும் பாசுர அபிநயம் வியாக்யானம் -அரங்க மா நகர் அமர்ந்தானே –
அவதார வைபவங்கள் -அரங்கம் என்று சேர்ந்து வரும் சந்தைகள் 70 மேல் சேவிக்கப்படும் -மாயிரும் குன்றம் ஓன்று மத்தாக ஆயிரம் தோளால்
அலைகடல் கடைந்தான்-அழகிய மணவாளப் பெருமாள் அம்ருத மதனம் செய்து அருளினபடி எவ்வண்ணமே என்ன -மூவிசை சொல்லி
அத்திரு மொழியில் மேல் பாசுரங்களை சேவியாமல் மேலே சொல்லி பின்பு இரண்டாம் சேவையில் அம்ருத மதன விஷயமாக
தம்பிரான் படி வியாக்யானம் சேவித்து சேஷமான பாடல்களை சொல்லி அத திருமொழியை முடிப்பார்கள்
ஒன்பதாம் திருநாளில் -பெரிய திருமொழி -8-2-முதல் 10-1- தெள்ளியீர் பாசுர அபிநயம் சேவை -திரு நெடும் தாண்டகம் முதல் பாசுர அபிநயம் வியாக்யானம் -இரண்டாம் சேவையில் முத்துக் குறி -திரு நெடும் தாண்டகம் -11 பாட்டு கட்டுவிச்சி சொல்லும் கூடல் குறியை முத்துக் குறியாக அபிநயித்துக் காட்டுவார்கள்
முத்துக் குறிக்காக அரையர் பெருமாள் இடம் தீர்த்தம் சடாரி -ஆழ்வார் ஆசார்யர்களுக்கும் கோஷ்டிக்கும் சாதிப்பார்
திருப் பொலிந்த -சடாரி மட்டும் –இன்றும் நாளையும் தீர்த்தமும் சடாரியும் உண்டு
பத்தாம் திருநாள் -பெரிய திருமொழி -10-2 தொடங்கி திரு நெடும் தாண்டகம் முடிய சேவை -இரக்கமின்றி அபிநய வியாக்யானங்கள்
பிற்பகல் ராவண வதத்துக்கு அருளிப்பாடு -கொண்டாட்டம் -இன்றும் அரையர் தீர்த்தம் ஸ்ரீ சடாரி சாதிப்பார் -இன்று நாச்சியார் திருக் கோலம்

வைகுண்ட ஏகாதசி -ரத்னாங்கி சேவை -உயர்வற உயர்நலம் தொடங்கி ஆழ்வாரை திரு முன்பே அழைத்து அந்த ஹர்ஷத்துக்கு போக்குவீடாக
பக்தி உலா படி ஏத்தம் திருவந்திக்காப்பு -திவ்ய ஆஸ்தான மண்டபத்தில் ஆழ்வார்கள் ஆசார்யர்கள் திரளை இருந்தான் கண்டு கொண்டே
-மூன்றாம் ஸ்ரீ யபதி முதல் பாட்டுக்கும் ஈடு வாசிப்பார் -முதல் பத்து முடிய சேவை பெரிய பெருமாள் முத்தங்கி சேவை
ஏழாம் திருநாள் ஆழ்வாருக்கு நாச்சியார் திருக் கோலம் ஆல்வாரைக் கண்டு மோஹித்து கொட்டகை உத்சவம்
-ஆஸ்தானம் எழுந்து அருளும் முன்பு கைத்தல சேவை இவள் திறத்து என் செய்கின்றாயே கேட்பது நெஞ்சை உருக்கப் பண்ணும்
கோயில் திரு வாசலிலே முறை கேட்ட கேள்வியாக்கி -ஆசார்ய ஹிருதயம் இரவில் கங்குலும் பகலும் அபிநயம் வியாக்யானம்
அந்திப் போதில் அவுணன் உடல் இடந்தானே -ஹிரண்ய வதம்  வியாக்யானம் அபிநயம் பின்பு அரையர் தீர்த்தம் ஸ்ரீ சடகோபன் சாதிப்பார்
பின்பே ஏழாம் பத்தை சேவித்து முடிப்பது
எட்டாம் நாள் -குதிரை நம்பிரான் மேல் வீற்று இருக்கும் -மல் வெளியில் நிலை வேடுபறி -வாடினேன் வாடி தொடங்கி
திரு மங்கை ஆழ்வார் உடன் திரு மா மணி மண்டபம் சேர்த்தல் இரவில் நெடுமாற்கு அடிமை அபிநய வியாக்யானம்
பத்தாம் நாள் -சந்திர புஷ்கரணியில் தீர்த்தவாரி ஆழ்வாருக்கு -திருவடி தொழ சித்தமாக தாள தாமரை வியாக்யானம்
திருவடி தொழ எழுந்து அருளும் போது சூழ் விசும்பும் திருவடி தொழும் போது முனியே நான்முகனும் அரையர் சேவை
முனியே நான்முகன் ஒவ் ஒருபாட்டையும் இரு முறை சேவிப்பது -அது முடியும் வரை வேர் அற்ற மரம் போலே
ஆழ்வார் திருவடி வாரத்தில் திருத் துழாயால் மூடப் பெற்று இருப்பார்
அடுத்த நாள் இயற்பா ஆஸ்தானத்திலே-அன்று தொடங்கி ஸ்ரீ ரெங்க நாச்சியார் சன்னதியிலே ஐந்து நாள் பகல் பத்தும்
ஐந்து நாள் இராப் பத்தும் -அதில் தொடக்கம் அரையர் சேவிப்பது அத்யாபகர்கள்

—————————————–

ஸ்ரீ  கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ P.B.A. ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ  பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ ராமானுசன் பத்திரிகையில் இருந்து அமுத முத்துக்கள் திரட்டு – பாகம் -2-

November 28, 2015

அணி திருவரங்கத்துக்கு அடை மொழிகள் -வண்டினம் முரலும் சோலை -மயிலினம் ஆலும் சோலை –
கொண்டல் மீது அணவும் சோலை -குயிலினம் கூவும் சோலை —வண்டு -மயில் -கொண்டல் -குயில் –
வண்டு -லஷ்மி கல்பல தோத் துங்க ஸ்தன ஸ்தபக சஞ்சல ஸ்ரீ ரெங்க ராஜ ப்ருங்கோ மே ரமதாம் மாந சாம்புஜே –ஸ்ரீ ரெங்கராஜ ஸ்தவம் -1-10–
-ஸ்தபக சஞ்சல அம்புஜே ரமதாம் –தாமரை மலரில் உள் புகுந்து படிந்து ரம்யா நிற்குமே வண்டு
-நப்பின்னை கொங்கை மேல் வைத்துக் கிடந்த மலர்மார்பன் அன்றோ –
மயில் -பிரலய சமய ஸூ ப்தம் ஸ்வம் சரீரைக தேசம் –ச்வெச்சயா விச்த்ருணாந கசிதமிவ கலாபம் சித்ரமாதத்ய தூந்வன்
அநு சிகினி சிகீவ க்ரீடசி ஸ்ரீ சமஷம் –ஸ்ரீ ரெங்க கலாபம் –ஆண் மயில் தோகை விரித்து விளையாடுவது போலே -சிருஷ்டி –
கொண்டல் –சிஞ்சேத் இமஞ்ச ஜனம் -மேட்டு பள்ள நிலம் பார்க்காமல் -இந்திரயா —-ஸ்ரீ ரங்க தாமனி தயா –ராசா நிர்ப்பரத்வாத் –சீதள காள மேக -1-82
குயில் -வனப்ரியா பரப்ருத அமர கோசம் -அர்ராமம் சூழ்ந்த அரங்கம் -அண்டர் கோன் அமரும் சோலை -அர்ச்சக பராதீன அகிலாத்ம ஸ்திதி

மார்க்க சீர்ஷம் -ஆசார்ய அபிமானமே உத்தாரகம் –
கதிர்மதியம் போல் முகத்தான் -ஸ்ரீ பாஷ்யாதி கிரந்தங்கள் சூர்யன் போலே பரமத நிரசனம் -ஆசார்ய ஹிருதயம் ஸ்ரீ வசன பூஷணம் பகவத் விஷயம் திருமந்த்ரார்த்தம் -அருளிச் செய்யும் பொழுது சௌம்ய முகராய் ஆஹ்லாத சீத நேத்ராம்பு வராய் இருப்பார்
நாராயணன் நமக்கே பறை தருவான் -சாஷான் நாராயணோ தேவ க்ருத்வா மர்த்யமயீம் தநூம் மகனான் உத்தரதே லோகன் -அனுசந்தேயம்
பாற் கடலுள் பையத் துயின்ற பரமன் -உனது பாலே போல் சீரில் பழித்து ஒழிந்தேன் –பரமன் -ஆசார்யன் -அடி பாடுகை –மாறன் அடி
பணிந்து உய்ந்தவன் அடி பணிந்த முதலியாண்டான் –குரு பரம்பரை சொல்வது
ஓங்கி உலகளந்த உத்தமன் –ரஹச்ய த்ரயம் -ஷட்த்ரயம் -ஸ்ரீ கீதை -தத்வத்ரயம் -பௌத்த ஜைனமத குரு அதம குரு
-அநு வருத்தி நிர்பந்தம் செய்து உபதேசிப்பார் -மத்யம குரு
பயல் நன்றாகிலும் பாங்கலராகிலும் செயல் நன்றாக திருத்திப் பணி கொள்பவன் உத்தம குரு
தஸ்மை நமோ வகுள பூஷண பாஸ்கராய -கலயாமி கலித்வம்சம் கவும் லோக திவாகரம் -ஸ்ரீ மான் ஆவிர்பூத் பூமௌ ராமானுஜ திவாகர –
மச்சித்தா மத்கத போதயந்த பரஸ்பரம் -கலந்து பேசின பேச்சரவம்
ப்ரியோஹி ஜ்ஞானி நோத்யர்த்தமஹம் சச மம பிரியா -கோதுகலமுடைய பாவாய் -மொய்ம்மாலாய் ஒழிந்தேன் எம்பிரான் என் மேலானே
-வாரிக் கொண்டு உன்னை விழுங்குவன் காணில் என்று ஆர்வுற்ற என்னை ஒழிய என்னில் முன்னம் பாரித்து தான் என்னை முற்றப் பருகினான்
யத்ர அஷ்டாஷர சம்சித்தோ மஹா பாஹோ மஹீயதே ந தத்ர சஞ்சரிஷ்யந்தி வியாதி துர்பிஷதஸ்கரா –கொன்று உயிர் உண்ணும்
விசாதி பகை பசி தீயன வெல்லாம் நின்று இவ்வுலகில் கடிவான் நேமிப்பிரான் தமர் போந்தார்
அம்பரம் தண்ணீர் சோறு -பரமபதம் -விரஜை -அஹம் அன்னம் அஹம் அந்நாதா -மந்த்ரோ மாதா குரு பிதா -ஞாலத்துப் புத்ரனைப் பெற்றோர் நங்கைமீர் நானே மற்று யாரும் இல்லை யசோதை =திருமந்தரம் –
அம்பரம் ஊடறுத்து ஓங்கி உலகளந்த திருமந்த்ரார்த்தம் சர்வ வ்யாபகத்வம் -மந்திரத்தை மந்திரத்தால் மறவாது என்றும் வாழுதியேல் என்ற அநந்தரம் ஒண் மிதியில் புனலுருவி ஒரு கால் –
செம் பொற் கழல் அடி செல்வா பல தேவா -நின் திரு வெட்டு எழுத்தும் கற்று நான் உற்றதும் உன் அடியார்க்கு அடிமை
உம்பியும் நீயும் -பாகவத சேஷத்வமும் பகவத் சேஷத்வமும் ஒன்றை விட்டு ஒன்றை பிரிந்து இராதே
மத களிறு ஐந்தினையும் சேரி திரியாமல் -உந்து மத களிற்றின் -ஓடாத தோள் வலியன் -ஜ்ஞானக் கை தா –
ஏழு ரிஷபங்கள் -காம குரோத லோப மோஹ மதம் மாத்சர்ய அஸூயை -கந்தம் கமழும் குழலி -செண்பக மல்லிகை இத்யாதி
அஹிம்சா பிரதமம் புஷ்பம் புஷ்பம் இந்த்ரிய நிக்ரஹ சர்வ பூத தயா புஷ்பம் ஷமா புஷ்பம் விசேஷித-த்யானம் புஷ்பம் தப புஷ்பம்
ஜ்ஞானம் புஷ்பம் ததைவ ச சத்யம் அஷ்டவிதம் புஷ்பம் விஷ்ணோ ப்ரீதிசரம் பவேத்
பஞ்ச சயனம் -அர்த்த பஞ்சகம் –கோட்டுக்கால் கட்டில் -சதுர்விதமான தேஹ வர்ண ஆஸ்ரம அதிகாரி பல மோஷசாதன கதி
யுக தர்ம யுஊஹ ரூபா க்ரியாதிகள் –கோப்புடைய சீரிய சிங்காசனம் -அத்வைத -அபேத -ஸ்ருதி /பேத த்வைத  ஸ்ருதி-/கடக ஸ்ருதி –
நின் கையில் வேல் போற்றி -ஆழி -கோயில் பொறியாலே ஒற்றுண்டு நின்று –சாரித்ரோத்தார தண்டம் வஜ்ரா தண்டம் த்ரி தண்டம்
-விஷ்வக் சேனா யதிபதிரபூத் வேதர சாரஸ் த்ரிதண்ட
ஒருத்தி -திருமந்த்ரத்திலே பிறந்து த்வயத்திலே வளர்ந்து ஓர் இரவில் ஒளித்து -சத்யவ்ரத ஷேத்ரம் கூட்டி வந்த தேவபிரான் –

நெறி வாசல் தானேயாய் நின்றானை –தேவோ நாமோ சகஸ்ரவான் -திரு நாமம் சாதிக்கிறார் பொய்கையார் -பிராபக பிராப்ய
ஐக்யமும் போக்யத்வமும் தனக்கே -உபாய உபேயத்வே ததிஹ தவ தத்வம் ந து குனௌ-பட்டர் -அசாதாரண லஷணம்

சேற்றுக் கமல வயல் சூழ் அரங்கர் தம் சீர் தழைப்பபோற்றித் தொழு நல்ல அந்தணர் வாழ் இப்பூதலத்தே
மாற்றற்ற செம்பொன் மணவாள மா முனி வந்திலனேல் ஆற்றில் கரைத்த புளி யல்லவோ தமிழ் ஆரணமே

வரவர முனி சதகம் -துக்தோ தன வத்தவளமதுரம் சுத்த சத்வைக ரூபம் ரூபம் யஸ்ய ஸ்புட யதிதராம் யம் பணீந்த்ராவதாரம் –

ஹாரோபி –நார்ப்பிதா கண்டே ஸ்பர்சே சம்ரோத பீருணா ஆவயோரந்திர சாதா பர்வதாஸ் ஹரிதோ தருமா -ஸ்ரீ இராமாயண ஸ்லோஹம்-
இங்கே பீருணா சீதயா மயா என்று லிங்க த்வயத்திலும் அந்வயம் –

மத சித்தா மத்கதபிராணா போதயந்த பரஸ்பரம் கதயந்தச்ச மாம் நித்யம் துஷ்யந்தி ச ரமநதி ச –
தெரித்து எழுதி வாசித்தும் கேட்டும் வணங்கி வழிபட்டும் பூசித்தும் போக்கினேன் போது
வக்தாரஸ் தத் வசநேன அநந்ய பிரயோஜநேந துஷ்யந்தி ச்ரோதரச்ச தத் சரவணநேந அநவதிக அதிசய பிரியேண ராமந்தே -ஸ்வாமி ஸ்ரீ ஸூக்திகள்
தெரித்து -தெரிவிக்கை -பிரவசனம் பண்ணுகை-பின்பு பிறர் சொல்ல கேட்டும் -என்பதால் துஷ்யந்தி ரமந்தி இரண்டு பத பிரயோகங்கள்

பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் -நூற்றெட்டு திருப்பதி அந்தாதி காப்புச் செய்யுள்கள் –
பொய்கை பூதன பேயார் பொன் மழிசைக் கோன் மாறன்
செய்ய மதுரகவி சேரர் பிரான் -வையகம் எண்
பட்டர்பிரான் கோதை தொண்டர் பாதப் பொடி பாணன்
காட்டவிழ் தார் வாட் கலியன் காப்பு

பிறவாத பேறு பெறுதற்கு எஜ்ஞ்ஞான்றும்
மறவாது இறைஞ்சேன் மனனே -துறவாளன்
வண் குருகூர் வாவி வழுதி வள நாடுடைய
தண் குருகூர் நம்பி திருத் தாள்

முன்னே பிறந்து இறந்து மூதுலகில் பட்டதெல்லாம்
என்னே மறந்தனையோ என்னெஞ்சமே-சொன்னேன்
இனி எதிரா சன்மங்கள் இன்று முதல் பூதூர்
முனி எதிராசன் பேர் மொழி

முக்காலம் எல்லா முகில் வண்ணன் வைகுந்தத்து
எக்காலம் செல்வான் இருக்கின்றேன் -தக்கார் எண்
கூரத் தாழ்வான் அடியைக் கூடுதற்கு நாயடியேன்
போரத் தாழ்வான சடம் போட்டு

நான் கூட்டில் வந்தவன்றே நான் அறியா தன்மை எல்லாம்
தான் கூட்டி வைத்த நலத்தான் கண்டீர் -ஆங்கூட்டச்
சிட்டருக்கு வாய்த்த திருவரங்கன் இன்னருளால்
பட்டருக்கு ஆட்பட்ட பயன்

ஈரிருபதாம், சோழம் ஈரொன்பதாம் பாண்டி
ஓர் பதின்மூன்றாம் மலை நாடு ஓர் இரண்டாம் சீர் நடுநாடு
ஆறோடு ஈரெட்டு தொண்டை அவ்வடநாடு ஆறிரண்டு
கூறு திரு நாடு ஒன்றாகக் கொள்

தேவப் பெருமாள் மங்களா சாசனம் —என் நெஞ்சமேயான் –உலகம் ஏத்தும் ஆழியான் அத்தி ஊரான் –
அத்தி யூரான் புள்ளை யூரான் –இரண்டு பாசுரங்கள் பூதத் தாழ்வார் –
அயர்வறும் அமரர்கள் அதிபதி -மணியை வானவர் கண்ணனை -நம்மாழ்வார்
வரம் தரும் மா மணி வண்ணன் இடம் மணி மாடங்கள் சூழ்ந்த அழகாய கச்சி –திருமங்கை ஆழ்வார்

ஆறும் ஆறும் ஆறுமாய்-திருச்சந்த விருத்தம் -2- திருவாய்மொழி -6-6-6-கற்பகக் காவான நற்பல தோளற்கு பொற் சுடர்க் குன்றன்ன
பூம் தண் முடியற்கு நற் பல தாமரை நாள் மலர்க் கையற்கு எண் விற் புருவக் கொடி தோற்றது மெய்யே-
இதற்கு ஈடு -தோற்றது மெய்யே -ஊர்த்வம் மாசாத் ண் ஜீவஷ்ய -என்னப் பண்ணும் வடிவைக் காட்டி
-ந ஜீவேயம் ஷணம் அபி -என்னப் பண்ணும் வடிவைக் கிடீர் கொண்டது
வி நா தாம் அஸி தேஷிணாம்–மையார் கண்ணிகமல மலர்மேல் செய்யாள் -கண்டனன் கற்பனுக்கு அணியைக் கண்களால்
தெண்டிரை யலை கடல் இலங்கைத் தென்னகர் –சீதா பிராட்டி கண்களால் கண்டேன் என்கிறார் திருவடி

நால்வர் கூடி நான்கு பிள்ளைகளை பெற்றனர் -பெருமாள்
நால்வர் கூடி ஒரு  பிள்ளையைப் பெற்றனர் -கண்ணன்
அறுவர் கூடி ஆயிரமாயிரம் பிள்ளைகளைப்பெற்றனர் –
ஞான பலம் இத்யாதியால் தயை ஷாந்தி ஔதார்யாதிகள் திருக் கல்யாண குணங்கள் –
தேவும் தன்னையும் பாடி யாடத் திருத்தி -2-7-4–தேவு -ஐஸ்வர்யம் தன்னை -ஆஸ்ரித பாரதந்த்ரம்

ஆசை வாய்ச் சென்ற சிந்தையராகி -பெரியாழ்வார்
ஆசாயா யே தாசாஸ் தே தாஸா ஹந்த சர்வ லோகஸ்ய
ஆஸா தாஸீ யேஷாம் தேஷாம் தாஸா யதே ஜகத் சர்வம் -ஸூ பாஷித ஸ்லோஹம்
ஆசைக்கு வசப்பட்டவர்கள் உலகு அனைத்துக்கும் வசப்படும் ஆசை யாருக்கு வசப் பட்டதோ அவர்களுக்கு உலகம் வசப்படும் என்றவாறு –

ஓவி நல்லார் எழுதிய தாமரை யன்ன கண்ணும் –அட்ட புயகரத்தேன் என்றாரே -திரு மங்கை ஆழ்வார்
கோவில் தருமம் உங்கள் குலத்து உதித்தோர் கட்கு எல்லாம் -ஓவியத்து எழுத ஒண்ணா வுருவத்தாய் -கம்பர்
சித்ரே நிவேச்ய பரிகல்பித சத்வயோகா -காளிதாசர்
எழுதாப் பெரிய பெருமாளை எழுத வரிய பெருமான் என்று எண்ணாதே எழுதி இருந்தேனே -பிள்ளை பெருமாள் ஐயங்கார்

1-1-5- ஈஷத்யதிகரணம் –
தந் நிஷ்டஸய மோஷோபதேசாத்
கதி சாமான்யாத் –
இரண்டு ஸூ த்ரங்கள்
தச் -சப்தத்தினால் -சச் சப்த வாச்யனான -சத்தை உபாசிப்பவனுக்கு -சத் வித்யா பிரகரணம் ஆசார்யவான் புருஷோ வேத தஸ்ய
தாவதேவ சிரம் யாவந்த விமோஷ்யே அத சம்பத்ஸயே -நாராயணனே சச் சப்த வாச்யன்-
தமேவம் வித்வான் அம்ருத இஹ பவதி -தச் சப்த வாச்யம் சொல்லும் தேவதா விசேஷத்தையே இங்கே தந் சப்தம் சொல்லுகிறது
வா ஸூ தேவ மநாராத்ய கோ மோஷம் சமவாப்ஸ்யதி–போன்ற பிரமாணங்களால்
மோஷ ஹேதுத்வ லிங்கத்தால் சச் வப்த வாச்யன் நாராயணனே என்றதாகும்
சர்வாணி ரூபாணி விசித்ய தீர நாமானி க்ருத்வா அபிவதன் யதாஸ்தே-என்பதனால் நாம ரூப வ்யாகர்த்தா வாகவே இருக்கும் தன்மை சொல்லப் பட்டது
இனி கதி சாமான்யாத் -கதி யாவது ப்ரவ்ருத்தி -அர்த்த போதகத்வம் -சாமான்யமாக இருப்பதாவது ஆவசியம் ஆகையாலே
-காரண வாக்யங்கள் எல்லாம் ஒரு மிடறாக இருக்க வேண்டுகையாலே
அத புருஷோ ஹ வை நாராயணோ காமயத் -பரஜாஸ் ஸ்ருஜ்யேதி -என்றும்
ஏகோ ஹ வை நாராயண ஆஸீத் ந ப்ரஹ்மா நேசாநோ நேமே த்யாவாப்ருதீவி -என்றும் திருவவதாரங்கள் எல்லாம் குணா பரிவாஹ ரூபங்களே
பேத ஸ்ருதிகள் -ஷரம் பிரதானம் அம்ருதாஷரம் ஹர ஷராத்மா நாவீசதே தேவ ஏக -போல்வன
நேஹ நா நாஸ்தி கிஞ்சன —சர்வம் கல்விதம் ப்ரஹ்ம –
தத்வமஸி-போல்வன அபேத ஸ்ருதிகள்
யஸயாத்மா சரீரம் யஸ்ய ப்ருத்வீ சரீரம் ய ஆத்மனி திஷ்டம் -போல்வன கடக ஸ்ருதிகள்

யத்வை கிஞ்ச மநுரவதத் தத் பேஷஜம் -மநு சொன்னது எல்லாம் மருந்து –
வேதேஷூ பௌருஷம் ஸூ க்தம் புராணே ஷூ வைஷ்ணவம் பாரதே பகவத் கீதா தர்ம சாஸ்த்ரேஷூ மா நவம்
– ஸம்ருத்யதிகரண ஸ்ரீ பாஷ்யத்திலும் இதுவே காட்டி அருளுகிறார்

பூவில் வாழ் மகளாய் தௌவையாய் புகழாய் பழியாய் -திருவாய்மொழி –6-3-6—தௌவையாய் மூதேவி யாய் -வ்ருத்த விபூதி சமுச்சயம் -பிரணயரோஷத்தால் ஊடி இருந்த தன்னையும் கூட்டிக் கொண்ட சாமர்த்தியத்தால்

நாவகாரியம் சொல்லிலாதவர் -நாவுக்கு அக்காரியம் -திருக் கோட்டியூர் நம்பி போல்வார் -அர்த்த கௌரவத்தால்
அடுத்த பாசுரம் குற்றம் இன்றி குணம் பெருக்கிக் குருக்களுக்கு அனுகூலராய் செற்றம் ஒன்றிலாதவர்-எம்பெருமானாரை ஸூசகப் படுத்தும்

இரந்து உரைப்பது உண்டு வாழி ஏம நீர் நிறத்தம்மா வரம் தரும் திருக் குறிப்பில் வைத்ததாகில் மன்னு சீர்
பரந்த சிந்தை ஒன்றி நின்று நின்ன பாத பங்கயம் நிரந்தரம் நினைப்பதாக நீ நினைக்க வேண்டுமே –101-
இரட்டித்து சொல்லும் பாசுரம் -வரத தவ கலு பிரசாதா தருதே சரணமிதி வாசோபி மே நோதியாத் -ஸ்ரீ வரதராஜ ஸ்தவம்-

யாதவாப்யுதம் -நான்காவது அத்யாயம் -ஆறாவது ஸ்லோஹம்
நந்தச் ஸ தீவ்ரேண பயேன சத்யஸ் சமேத்ய பஸ்யன் அநகம் குமாரம்
தேநைவ தஸ்ய த்ரி ஜகன் நியந்து ப்ராயுங்க்த ரஷாம் பரமார்த்த வேதி —
அப்பைய தீஷிதர் -பரமார்த்த வேதி –எம்பெருமானே சர்வ ரஷகன் என்ற உண்மையை உணர்ந்தவர்
உண்மையில் -தத்தே பவது மங்களம்-குசல பிரச்னம் -பல்லாண்டு போற்றி என்று அடியவர் சொல்வதையே தனக்கு ரஷையாக கொண்டவன் அன்றோ
காப்பாரும் இல்லை கடல் வண்ணா உன்னை தனியே போய்- எங்கும் திரிதி -காக்கும் இயல்வினன் கண்ணன் என்று அறிந்தும் -சொல்பவர்கள் அன்றோ
அவ்விடத்திலே -11 ஸ்லோஹம் -விச்வாதி விச்வாதிக சக்தி ரேகா நாமானி ரூபாணி ஸ நிர்மி மாண-நாமைகதேச க்ரஹணேபி
மாதர் பபூவ க்ருஷ்ணோ பஹூமான பத்ரம் –குழந்தை மழலைப் பேச்சு பஹூமானம் தானே தாய்க்கு
34-ஸ்லோஹம் -ஆநீத மக்ரே நிஜ பந்த நார்த்தம் தாமாகிலம் சம்ஹித மபய பூர்ணம் -விலோக்ய நிர்விண்ணதி யோ
ஜனன்யாஸ் சங்கோச சக்த்யா ஸ பபூவ பத்ய-சுருக்குவாரை இன்றியே சுருக்கி -கட்டுண்ணப் பண்ணிய பெரு மாயன்
– சங்கோச சக்த்யா ஸ பபூவ பத்ய–என்னும் அழகு -வேதத்தில் சம்ஹிதை -பதம் க்ரமம்-மூன்று உண்டு -நெடுக தண்டாகாரமாக
போகும் சம்ஹிதை -துண்டு துண்டாக ஓதுவது பதம் -பதங்களை பிணைத்து ஓதுவது க்ரமம் -யசோதை நீளமாக வைத்த கயிறு சம்ஹிதை
போலே துண்டு துண்டு ஆக்கினது பத அவஸ்தை சேர்த்து பிணைத்தது க்ரம அவஸ்தை -தாமாகிலம் சம்ஹிதமாபி -என்று அருளிச் செய்த அழகு
விவித முநி கணோப ஜீவ்ய தீர்த்தா விகமித சர்ப்பகணா பரேண பும்ச
அபஜத யமுநா விசுத்தி மக்ர்யாம் சமித பஹிர் மத சம்ப்லவா த்ரயீவ –4-126
கண்ணபிரான் ஸ்வாமி ராமானுஜர் -ஒப்புமை -யமுனை -வேதம் -காளியன் -குதர்க்க வாதிகள் -ஐந்து துர்வாதங்கள்
-ஈஸ்வரன் இல்லை -அனுமான சித்தன் -குணங்கள் விபூதிகள் இல்லை -ஒருவன் இல்லை பல ஈஸ்வரன் -சர்வ ஸூ ந்யவாதம் போல்வன
-வாய்த்த காளியன் மேல் நடமாடிய கூத்தனார் -நாவலிட்டு உழி தருகின்றோம் நமன் தமர் தலைகள் மீதே –
இத்தை புரியாமல் -வேத மூர்த்தியான ஸூ ர்யனின் பெண்ணான யமுனை என்கிறார் அப்பைய தீஷிதர் –
ஆச்வாச்ய வாகம்ருத வ்ருஷ்டி பிராதி தேயாத்
தைதேய பார நமிதாம் தரணீஞ்ச தேவீம்
ஆவிர்ப்பு பூ ஷூரநகோ வ ஸூ தேவ பத்ன்யாம்
பத்மாபதி ப்ரணிததே சமயம் தாயா —முதல் அத்யாயம் முடிவு ஸ்லோஹம்
ஆவிர்புபூ ஷூ சொன்னதுமே அ நக -தோஷம் இல்லாதவன் -பரிகார அலங்காரம் -கர்ம வச்யன் போலே தோற்றம் அற்றவன் என்றபடி
த்ரச்யன் முகுந்தே நவநீத சௌர்யாத் நிரப்புக் ந்காத்ரோ நிப்ருதம் சயான
நிஜா நி நிச்சப்த சாம் யயாசே பத்த்வாஞ்ஜலிம் பாவ விபூஷாணா நி -4-28
கை கூப்பி யாசித்தான் -அஞ்சி உடலை ஒடுக்கிக் கொண்டு அசையாமல் ஓர் இடத்தில் கைகளைக் குவித்துக் கொண்டு
கவிழ்ந்து படுத்தவனாவான் என்று நேராக எழுதுகிறார் -சிறிய திருமடல் அனுபவம் இல்லாமல்

சங்க தமிழ் மாலை முப்பதும் -சங்கம் சங்கமாகக் குழாங்கள் கூடி அனுபவிக்கும் பிரபந்தம் என்றபடி
-குழாங்களாய் அடியீருடன் கூடி நின்று ஆடுமினோ -திருவாய் -2-3-11-
செங்கண் திரு முகத்துச் செல்வத் திருமாலின் திருவருள் பெருக்காலே தானே இந்த அனுபவம்

ஜீவக் ஸூ தாத பாதேஷூ நூதநே தார சங்க்ரஹே மத்ருபிச் சிந்த்யமாநாநாம் தேஹிநோ திவசா கதா -உத்தர ஸ்ரீ இராமாயண ஸ்லோஹம்
அப்பா பிழைத்து இருந்த காலம் -மிதிலையில் பிராட்டி கைப் பிடித்த காலம் மீண்டு வந்து அயோத்தியில் தாய்மார்களுடன் மகிழ்வாக
இருந்த காலம் அப்பப்பா -அந்த நல்ல நாட்கள் மீண்டு வாராவோ —
ஸ்மரசி ஸூதநு தஸ்மின் பர்வதே லஷ்மணேந பிரதி விஹித சபர்யா ஸூப்தயோஸ் தான்ய ஹானி ஸ்மரசி சரச நீராம்
தத்ர கோதாவரீம் வா ஸ்மரசி ச ததுபாந்தேஷூ ஆவயோ வரத்த நா நி –
கர்ப்பிணி பிராட்டி உடன் பெருமாள் பேசும் பேச்சுக்கள் -சித்ர கூடத்தில் இருப்பை நினைவு கூறி அருளுகிறார்

போத மணவாள மா முனிவன் ஈடுரைப்பது கேட்டுப் பூரித்து நின்ற பெருமாள் -சேற்றுக் கமல வயல் சூழ் அரங்கர் தம் சீர் தழைப்பப்
போற்றித் தொழு நல்ல அந்தணர் வாழ இப் பூதலத்தே மாற்றற்ற செம் பொன் மணவாள மா முனி வந்திலனேல்
ஆற்றில் கரைத்த புழி யல்லவோ தமிழ் ஆராணமே
கணை நாணில் ஓவாத் தொழில் சார்ங்கன் தோல் சீரை நல் நெஞ்சே ஓவாத ஊணாக உண்-பெரிய திருவந்தாதி

தம் பெரிய போதமுடன் –ஆச்சார்யா கடாஷ அதீனமான ஞானம் இல்லாமல் –இலக்கணப் பிழைகள் காண முடியாத படி
என்பதால் ஏதமில் பன்னீராயிரம் என்று சாதித்து அருளுகிறார் மா முனிகள்
வள வேழ் உலகு -ஈற்றடியில் எந்தாய் என்பான் நினைந்து நைந்தே என்பதை இவர் மட்டுமே –இனைந்து நைந்தே -என்கிறார்

எறும்புக்கு அருளிச் செயல்கள் -புற்பா முதலா புல் எரும்பாதி ஓன்று இன்றியே —நெய்க்குடத்தைப் பற்றி ஏறும் எறும்புகள் போலே
—இருபாடி எரி கொள்ளியின் உல் எறும்பு போலே
இரும்புக்கு -இரும்பு போல் வலிய நெஞ்சம் –இரும்பு அனன்று உண்ட நீர் —
நாய்க்கு –நாய் கூலை வாலால்–மிண்டர் பாய்ந்து உண்ணும் சோற்றை விலக்கி நாய்க்கு இடுமினீரே –கவ்வு நாயும் களுக்கும்
நரிக்கு -ஆளியைக் காண்பரியாய் அரி காண் நரியாய் –நரிப்படைக்கு ஒரு பாகுடம் போலே –வெள்ளத்திடைப் பட்ட நரியினம் போலே

தண்டேனுகரா மண்டூகம் தண் தாமரையுடன் பிறந்தே
வண்டே கானத்திடைப் பிறந்தும் வந்தே கமலமது உண்ணும்
அண்டே பழகி இருந்தாலும் அறியார் பொல்லார் நல்லோரைக்
கண்டே களிப்பர் உறவாடிக் கற்றோர் நல்லோர் பெற்றக்கால் –வினோத ரச மஞ்சரி

பெரியாழ்வார் திருமொழி தாய் பாசுர பதிகங்கள் இரண்டு -ஐய புழுதி உடம்பு அலைந்த –நல்லதோர் தாமரைப் பொய்கை
நம் ஆழ்வார் ஆடி ஆடி -2-4- தொடக்கி -கங்குலும் பகலும் -7-2- உடன் தாய் பாசுரம் தலைக் கட்டி அருளுகிறார் -7 பதிகங்கள்
திருமங்கை ஆழ்வார் -2-7- திவளும் வெண் மதி போல் -தொடங்கி-9 பத்தில் மூவரில் முன் முதல்வன் திருமால் இரும் சோலை பதிகதுடன் தலைக் கட்டுகிறார்
தலைவி பாசுரம் -2 பத்து அட்ட புயகரம் பதிகம் தொடங்கி 11 பத்து மன்னிலங்கு பாரத பதிகத்துடன் தலைக் கட்டுகிறார்
திருமங்கை ஆழ்வார் -தாய் பேச்சு பதிகங்கள் -8 தலை மகள் பதிகங்கள் -15-
தோழி பதிகம் இல்லை என்றாலும் தோழி உடன் பேசுவது போலே அவ்வன்னதவர் நிலைமை கண்டும் தோழி –
-கோழி கூவு என்னுமால் தோழி நான் ஏன் செய்கேன் -போன்றவை உண்டு

நாயகனாய் நின்ற நந்த கோபன் -உந்தம் அடிகள் முனிவர் உன்னை நான் என் கையில் கோலால் நொந்திட மோதவும் கில்லேன்
-சர்வேஸ்வரனுக்கும் சர்வ ஸ்வாமி என்கிறார்கள்
இரு கரையும் அழிக்கும் நிர்ஹேதுக கிருபா பிரவாஹம் திருவாய்ப் பாடியிலே கண்டோம் இ றே-
அந்னவான் பவதிக்கு வஸூ தேவர் இலக்கு -அந்நாதோ பகவதிக்கு நந்தகோபர்
அன்னம் ப்ரஹ்மேதி வ்யஜா நாத் -அன்னமாகிய பர பிரமத்தை தவம் செய்து ஸுய யத்னத்தால் பெற்றாரே ஒழிய
புஜிக்க பெற வில்லையே -எல்லாம் நந்த கோபன் பெற்றானே
நாசௌ புருஷ காரேண ந சாபி அன்யேன ஹேது நா கேவலம் ஸ்வேச்சையா வஹம் ப்ரேஷே கஞ்சித் கதாசன -ஸ்ரீ கீதை
கோசல கோகுல சராசரம் செய்யும் குணம் ஓன்று இன்றியே அற்புதம் எண்ணக் கண்டோம் –

ஷீரம் சர்க்கர ஏவ யாபிரப்ருதக்பூதா ப்ரபூதைர் குணை
ஆகௌமாரகம ஸ்வதந்த சக்தே கிருஷ்ணச்ய தார கேளைய -பாலும் சக்கரையும் போலே ஸ்ரீ கிருஷ்ணனும் ஸ்ரீ பலராமனும்
யத் விஸ்லேஷ லவோபி காலியபுவ கோலாஹலாயா பவத் –
தமையன் ஒரு நாள் பேர நிற்க தம்பி பாம்பின் வாயில் புகும்படி ஆயிற்றே
வளை வண்ண நன் மா மேனி தன்னம்பி நம்பியும் இங்கு வளர்ந்தது அவன் இவை செய்து அறியான் –
அண்ணற்கு அண்ணானோர் மகனைப் பெற்ற யசோதை நங்காய் -அண்ணல் கண்ணான் -சர்வ ஸ்வாமி என்று சொல்லும்
திருக்கண்கள் உடையவன் -அண்ணற்கு அன்னான் இவன் தீம்பிலே தகண் ஏறி அவன் தீம்பே அறியாதவன் என்றவாறு
பட்டி மேய்ந்தோர் காரேறு பலதேவேர்கோர் கீழ்க் கன்றாய்

ஸ்ரீ வைஷ்ணவ லஷணம் -அஹிம்சா சமதா -ஸ்ரீ கீதை -10-5-
சமதா ஆத்மநி ஸூ ஹ்ருத் ஸூ விபஷே ஸூ ச சம மதித்வம் -ஸ்ரீ கீதா பாஷ்ய ஸ்ரீ ஸூ கதிகள்
சம்மதி ராதம ஸூ ஹ்ருத் விபஷ பஷே –இதி பகவத் பராசர வசனம் இஹ தத்தத் பதை ஸ்மாரிதம் -ஸ்ரீ தேசிகன்
தாத்பர்ய சந்த்ரிகை ஸ்ரீ ஸூ க்திகள் -நசலதி நிஜவர்ண தர்மதோ ய -சம்மதி ராதம ஸூ ஹ்ருத் விபஷ பஷே நஹரதி
நச ஹந்தி கிஞ்சி துச்சை சிதமநசம் தமவேஹி விஷ்ணு பக்தம் –ஸ்ரீ விஷ்ணு புராணம் 3-7-20-
தன்னைப் போலே நண்பர் பகைவர் இடம் இருக்கும் தன்மை என்றவாறு
குற்றம் செய்தவர்கள் பக்கல் பொறையும் கிருபையும் சிரிப்பும் உகப்பும் உபகார ஸ்ம்ருதியும் நடக்க வேணும்

இறையோ இரக்கினும் ஈங்கோர் பெண் பால் எனவும் இரங்காது அறையோ என நின்றதிரும் கருங்கடல் ஈங்கு இவள் தன
நிறையி வினியுன் திருவருளால் அன்றிக் காப்பரிதால் முறையோ அரவணை மேல் பள்ளி கொண்ட முகில் வண்ணனேதிரு விருத்தம் -62-
கங்குலும் பகலும் -7-2- திருவாய்மொழிக்கு சங்க்ரஹணம்-முகில் வண்ணன் அடி மேல் சொன்ன சொல் மாலை யாயிரத்து
இப்பத்தும் வல்லார் முகில் வண்ணம் வானத்து இமையவர் சூழ பேர் இன்ப வெள்ளத்தே இருப்பார்

தேஷாம் சத்த யுக்தாநாம் பஜனாம் ப்ரீதி பூர்வகம் ததாமி புத்தியோகம் தம் யேன மாம் உபயாந்தி தி –
ப்ரீதி பூர்வகம் பஜதாம் -சங்கரர் பாஷ்யம் -நம் ஸ்வாமி ப்ரீதி பூர்வகம் ததாமி –பகவத் குணாதிசய பிரகாசனமே பரம பிரயோஜனம் தேசிகன்
நமஸ்காரம் ஒரு தடவை பிரதஷினம் பல தடவை -என்பதற்கு பல பிரமாணங்கள் உண்டே
அவன் கடாஷம் நிர்ஹேதுகம் -என் நன்றி செய்தேனோ என் நெஞ்சில் திகழ்வதுவே-என் உணர்வினில் உள்ளே இருத்தினேன்
அதுவும் அவனது இன்னருளே -வெறிதே அருள் செய்வர் –அஜ்ஞ்ஞாத யாத்ருச்சிக ஆநு ஷங்கிக ப்ரா சாங்கிக சாமான்ய புத்தி மூல
ஸூகருத விசேஷங்களை வியாஜமாகக் கொண்டு விசேஷ கடாஷம் பண்ணி -தேசிகன் -மருவித் தொழும் மனமே தந்து –தீ மனம் கெடுத்து

இயம் கேவல லஷ்மீ சோபாயத்வ பிரத்யயாத்மிகா -ஸ்வ ஹேதுத்வத்யம் ருந்தே கிம் புநஸ் சஹ காரிணாம்–நியாய சித்தான்ஜனம்
பிரபத்திக்கே உபாயத்வம் இல்லாத பொது அதன் சஹாகாரிக்களுக்கு இல்ல என்று சொல்ல வேண்டுமோ என்றபடி
இசைவித்து உன் தாளிணைக் கீழ் இருத்தும் அம்மானே -சவீ காரம் தானும் அவனாலே வந்தது சிருஷ்டி அவதார முகத்தாலே பண்ணி அருளிய கிருஷி பலம்
நிதானம் தத்ராபி ஸ்வயம் அகில நிர்மாண நிபுண —தேசிகன் -வரத தவ கலு பிரசாதாத்ருதே சரணமித வசோபி மேநோதியாத் -கூரத் ஆழ்வான்
ஸ்வாமீ ஸ்வ சேஷம் ஸ்வ வசம் ஸ்வ பரத்யேன நிம்ப்ரம் ஸ்வ தத்த ஸ்வ தியா ஸ்வாரத்தம் ஸ்வ ஸ்மின் ந்யஸ்யதி மாம் ஸ்வயம்
-ஒன்பதின்கால் ஸ்வ சப்த பிரயோகம் ஈஸ்வரனுக்குத் தானே சேதன லாபம் புருஷார்த்தம் -ஆஸ்ரித சம்ரஷணம் ஸ்வ லாபம் மத்வா ப்ரவர்த்ததே –
-ப்ராப்தாவும் ப்ராபகனும் ப்ராப்திக்கு உகப்பானும் அவனே -கதாஹைமை காந்திக நித்ய கிங்கரர் ப்ரஹர்ஷயிஷ்யாமி -ஆளவந்தார்
-தன்னுடைய அனுவ்ருத்தியால் ஈஸ்வரனுக்கு பிறக்கும் ஹர்ஷமே இ றே சேதனனுக்கு பிராப்யம்
அனாவ்ருத்தி ஸ்ரீ பாஷ்யத்தில் எம்பெருமானார் -அவதாரிகையில் யதி பரம புருஷாயத்தம்
முக்தைச்வர்யம் தர்ஹி தஸ்ய ஸ்வ தந்த்ரத்வேன தத் சங்கல்பாத் முக்தஸ்ய புநாவ்ருத்தி சம்பவா சங்கேத் யத் ராஹ -என்று அருளி
ந ச பரம புருஷஸ் சத்ய சங்கல்ப அத்யர்த்தபிரியம் ஜ்ஞாநினம் லப்த்வா கதாசிதா வர்தயிஷ்யதி -என்று சாதிக்கிறார்
ஜீவாத்மா வாகிற சொத்தோ சைதன்யம் ஆகிற கல்மஷத்தோடும் கூடி இருக்கையாலே சிறிது தலையாட்டவும்
வாலாட்டவும் பெறுகிறது -தன்னை நன்றாக உணரும் போதுதலை மடிந்து நிற்கிறது

ஸ்வ கத -ச்வீகாரம் –மார்க்கடகிசோர நியாயம் –நித்ய யுக்தஸ்ய யோகிநா —தஸ்யாஹம் ஸூ லபம் –பரகத ச்வீகாரம் -மார்ஜாரகி சோர நியாயம் –
தஸ்ய நித்ய யுக் தஸ்ய நித்ய யோகம் காங்ஷாமாணஸய யோகின -அஹம் ஸூ லப -அஹமேவ பிராப்ய -ந மத்பாவ ஐஸ்வர்யாதிக ஸூ பிராபச்ச -தத்வியோ கமசஹமாந அஹமேவ தவம் வருணே மத பிராப்த்ய அநு குணோபாசன விபாக -தத் விரோதி நிரசனம் அத்யர்த்தமத் ப்ரியத்வாதிகம் ச அஹமேவ ததாமீத்யர்த்த -யமேவேஷ வ்ருணுதே தேன லப்ய -இதி ஹி ஸ்ருயதே -வஹ்யதே ச தேஷாம் சத்த ய்க்தானாம் பஜதாம் ப்ரீதி பூர்வகம் ததாமி புத்தியோகம் தம் யேனமாம் உபயாந்திதே தேஷாமேவா நுகம்பார்த்த மஹா மஜ்ஞ்ஞா நஜம் தம நாசயாம் யாத்ம பாவஸ்தோ ஜ்ஞான தீபேன பாச்வதா இது -ஸ்வாமி ஸ்ரீ கீதா பாஷ்யம் ஸூக்திகள்
அவன் இவனைப் பெற நினைக்கும் போது பாதகமும் வில க்கு அன்று —உடைமையை உடையவன் சென்று கைக் கொள்ளுமா போலே ஸ்வாமி யான அவன் தானே வந்து அங்கீ கரிக்கக் கண்டிருக்க பரதந்த்ரனான இச் சேதனன் ஆனவன் தான் பலியாய் தன ச்வீகாரத்தாலே ஸ்வ தந்த்ரனான அவனைப் பெற நினைக்கும் அளவில் அவன் நினைவு கூடாதாகில் இப்படி விலஷணையாய் இருக்கிற பிரபத்தியும் தத் லாப சாதனம் ஆகாது என்றபடி –ஸ்வாமி யாய் ஸ்வ தந்த்ரனான அவன் ஸ்வமமாய் பர தந்த்ரனாய் இருக்கிற இருக்கிற இவனை ஸ்வ இச்சையால் பெற நினைக்கும் அளவில் பாதகமும் பிரதிபந்தகம் ஆக மாட்டாது என்கை-இவை இரண்டாலும் ஸ்வ கத ச்வீகார அனுபாயத்வமும் பரகத ச்வீகார உபாயத்வமும் காட்டப் பட்டது -மா முனிகள் ஸ்ரீ சூக்திகள்

சர்வ அபராதங்களுக்கும் பிராயச் சித்தமான பிரபத்தி தானும் அபராத கோடியிலேயாய் ஷாபணம் பண்ண வேண்டும்படி நில்லா நின்றது இ றே
நெடுநாள் அந்ய பரையாய்ப் போந்த பார்யை லஜ்ஜா பயங்கள் இன்றிக்கே பர்த்ரு சகாசத்திலே வந்து நின்று என்னை அங்கீ கரிக்க வேணும் என்று
அபேஷிக்குமா போலே இருப்பது ஓன்று இ றே இவன் பண்ணும் பிரபத்தி
கைங்கர்ய பிரபத்தியும் பண்ண வேணும் -சார்வ பௌவனை நீசப் பெண் ஆசைப் படுமா போலே ஐயோ என்ன ஆசைப் பட்டோம்
இது தகுமோ -என்று நெஞ்சாறல் பாடவும் வேணும்
புகழ்வெல்லாம் பட்டுரையாய் புற்கென்றே காட்டுமால் பரஞ்சோதி -ஒப்பாகச் சொல்வது இழிவு என்பர் கடல் வண்ணா
கொண்டல் வண்ணா காயா வண்ணா என்னவும் அருளிச் செய்வர்
ஆவியுள் கலந்த ஹர்ஷம் உந்த அறிவு இழந்து கைம்மாறாக ஆத்மாவை மீளா அடிமையாகக் கொடுத்து பின்னையும்
தனது ஸ்வரூபத்தை உள்ளபடி விவேகித்து -அனுதபிக்கவும் வேணும்
த்வய உச்சாரண அநுச்சாரணத்தாலே பிரபத்தி அனுஷ்டானம் பிறந்த பின்பு -பழுத்த ஆத்ம சமர்ப்பணமாகத் தலைக் கட்டும்
நெறி காட்டி நீக்குதியோ -பர தந்த்ரமான வஸ்துவை ஸ்வ தந்த்ர க்ருத்யமான உபாய அனுஷ்டானத்திலே மூட்டித் தனக்கு அசலாக்குகை
மதிராபிந்து மிஸ்ரமான சாத கும்பமய கும்பகத்த தீர்த்த சலிலம் போலே அஹங்கார மிஸ்ரமான உபாயான்தரம் -என்று பிள்ளான் பணிப்பாராம் –
தானே கர்த்தா தானே போக்தா என்னும் அஹங்காரம் -ஸ்வ யதன நிவ்ருத்தி பார தந்த்ர்ய பலம்
நயாச திலகத்தில் தேசிகன் இத்தை அருளிச் செய்கிறார் –ஆர்த்தேஷூ ஆசுபலா தத் அந்ய விஷயேப் யுச்சின்ன தேஹாந்திர
வஹ்ன்யாதே அந பேஷணாத் தநுப்ருதாம் சத்யாதிவத் வியாபி நீ ஸ்ரீ ரஜ்கேச்வர யாவதாத்ம நியத த்வத் பாரதந்த்ர்யோ சிதா
த்வவ்யேவ த்வத் பாராதீர பிஹித ஸ்வ உபாய பாவஸ்து மே –என்று அருளிச் செய்கிறார்

பராஸ்ய சக்திர் விவிதைவ ச்ரூயதே –சர்வ சக்தி யுக்தன் -விசித்திர சக்தி உக்தன் -விலஷண சக்தி உக்தன் -அத்புத சக்தி உக்தன்
-ஆச்சர்ய சக்தி உக்தன் -அகடிதகட நா சக்தி உக்தன்
ஸ்ருதேச்து சப்த மூலத்வாத் —அந்தர் பஹிஸ்ஸ தத் சர்வம் — வ்யாப்ய நாராயண ஸ்தீத –அணோரணீயான்
சகல வஸ்து விலஷணஸ்ய சாஸ்த்ரைக சமதிகமஸ்ய அசிந்த்ய அப்ரமேய அத்புத சக்தி யுக்தஸ்ய பரஸ்ய ப்ரஹ்மண

ஆத்ம குணங்களில் பிரதானம் சமமும் தமமும் -சமம் -அந்த கரண நியமனம் -தமம் பாஹ்ய கரண நியமனம் –
ஸ்ரீ கீதை 10-4/16-1.2- ஸ்வாமி மாற்றிச் சொல்லும் இடங்களும் உண்டு
சீர் ஓன்று தூப்புல் திரு வேங்கடமுடையான் பார் ஒன்றச் சொன்ன பழ மொழியுள் ஓர் ஒன்றே அமையாதோ
தாரணியில் வாழ்வாருக்கு வான் ஏறப் போகும் வாழ்வு

யதீந்த்ரர் அபிமாநித்தது திரு நாராயணபுரம் -யதீந்திர பிரவணர் அபிமாநித்தது -இராஜ மன்னார் கோயில்
வண துவாராபதி மன்னன் –மணி வண்ணன் –வாசு தேவன் –மணியில் அணி நிற மாயன் -நான்கு அர்ச்சா ரூபங்கள் -அசாதாராண திரு நாமங்கள் -நம்மாழ்வார் சாத்தியவை -தீர்ப்பாரை யாமினி மாசறு சோதி -இரண்டு திருவாய் மொழி களும் நித்ய அனுசந்தானம் இங்கே —
மாறன் மடலும் வெறி விலக்கும் மா முனி தன் தேறல் கமலைத் திருத் துதியும்
ஊழி வரும் கோபால விம்சதியும்  வண் துவரைக் கோனான கோபாலனுக்கு ஆன கூற்று
தீர்ப்பாரை யாமினியில் மாசறு சோதிப் பதிகத்தில் சேர்ப்பன் தென் துவரைச் சீமானை ஒர்ப்பன் என்னச்
சொன்ன மணவாள மா முனியே தொல்லுலகில் இன்னும் ஒரு நூற்றாண்டு இரும்
நாம் யார் பெரிய திரு மண்டபமார் நம்பெருமாள் தாமாக எம்மைத் தனித்து அழைத்து நீ  மாறன்
செந்தமிழ் வேதத்தின் செம்பொருளை நாடோறும் வந்து உரையாய் என்று ஏவுவதே வாய்ந்து –

வணங்கும் துறைகள் பல பல வாக்கி –புற மதங்களை நிரசிக்கலாமோ -அமிர்தம் விஷம் இரண்டையும் அவன் தான் ஆக்கினான்
-ஆனந்த ரூபமாகை யாவது -ஜ்ஞானம் பிரகாசிக்கும் பொழுது அநு கூலமாய் இருக்கை-விஷ சஸ்த்ராதிகளைக் காட்டும் பொழுது
பிரதிகூலமாய் இருக்கைக்கு அடி தேஹாத்மா பிரமாதிகள் -ஈச்வராத்மகம் ஆகையாலே எல்லா பதார்த்தங்களுக்கும்
ஆனுகூல்யமே ஸ்வ பாவம் பிராதிகூல்யம் வந்தேறி

பொங்கும் பரிவாலே வில்லிபுத்தூர் பட்டர் பிரான் பெற்றான் பெரியாழ்வார் என்னும் பெயர் –
தவன் மௌலி கந்த ஸூ பகாம் உபஹ்ருத்ய மாலாம் லேபே மஹத்தர பத அநு குணம் பிரசாதம் –ஸ்ரீ கோதா ஸ்துதி
மஹத்தர பத -பெரியாழ்வார் திருவடி என்றபடி
யாம் ஔ திமித ஆயுஷ்மான் அன்வேஷசி மஹா வனே -என்றாரே பெரிய வுடையாரான ஜடாயு மகா ராஜரும்

ப்ரத்யாதி சந்தி பவ சஞ்சரணம் ப்ரஜாநாம் பக்த அநு கந்துரிஹா யஸ்ய கதாகதா நி -வேகா சேது ஸ்தோத்ரம் –
-பக்தனை பின் சென்ற யதோத்தகாரி சஞ்சாரம் அனுசந்திக்க நமது சம்சார சஞ்சாரம் தொலையுமே –
யஸ்ய பிரசாத கலயா பதிர -ஸ்ருணேதே பங்கு -பிரதாவதி ஜவேன ச வக்தி மூக-அந்த ப்ரபச்யதி ஸூ தம் லபதே ச வந்த்யா
தம் தேவமேவ வரதம் சரணம் கதோஸ்மி -ஆளவந்தார் சரணாகதி பண்ணி -ஆ முதல்வன் -தர்சன ஸ்தாபகர் ஆக்கி அருள
–தென் அத்தியூர் கழல் இணைக் கீழ் அன்பு பூண்டவர் அன்றோ
ஆவாரார் துணை என்று அலை நீர் கடலுள் அழுந்தும் நாவாய் போலே -துளங்கி நின்று வழி திகைத்து அலமந்து நிற்கும்
தசையிலே காத்து அருளின மிதுனம் அன்றோ -யஜ்ஞ மூர்த்தி விருத்தாந்தத்தாலும் உண்டே

கைங்கர்யமே பரம புருஷார்த்தம் -நம்மாழ்வார் -முன் செய்த முழு வினையால் திருவடிக் கீழ் குற்றேவல் முன் செய்ய முயலாதேன்
அகல்வதுவோ விதியினமே -என்று அருளி -ஒழிவில் காலம் எல்லாம் உடனே மன்னி வழுவிலா வடிமை செய்ய வேண்டும் நாம் –
என்று பிரார்த்தித்து உற்றேன் உகந்து பணி செய்து உனது பாதம் பெற்றேன் என்று நிகமிக்கிறார்
பெரியாழ்வார் -நியதமும் அத்தாணிச் சேவகமும் தந்து என்னை வெள்ளுயிர் ஆக்க வல்ல -என்று அருளி
உனக்கு பணி செய்து இருக்கும் தவமுடையேன்
ஆண்டாள் -குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது –உனக்கே நாம் ஆட்செய்வோம் –கேசவ நம்பியைக் கால் பிடிப்பாள் என்னும் இப் பேறு
எனக்கு அருள் கண்டாய் –என்றும் பள்ளி கொள்ளும் இடத்து அடி கொட்டிட கொள்ளுமாகில் நீ  கூடிடு கூடலே -என்று அருளிச் செய்கிறார்
ஆளவந்தார் -கதா அஹம் ஐ காந்திக நித்ய கிங்கர பிரகர்ஷயிஷ்யாமி என்று அருளிச் செய்தார்
எம்பெருமானார் கத்யத்தில் நித்ய கிங்கரோ பவா நி என்று பிரார்த்தித்து நித்ய கிங்கரோ பவ என்று அரங்கனால் அருளப் பெற்றார்

வெம் கதிரோன் குலத்துக்கு ஓர் விளக்கு -ஆயர் குலத்தில் தோன்றும் அணி- மணி  -விளக்கு -ஆயர் பாடிக்கு ஒரு அணி விளக்கு-இவை விபவத்தில்
வேடார் திருவேங்கடம் மேய விளக்கே -முனியே திரு மூழிக் களத்து விளக்கே –இத்யாதிகள் அர்ச்சிராதி விளக்கு
நந்தா விளக்கே அளத்தற்கு அரியாய் –வேதாந்த விழுப் பொருளின் மேல் விளக்கு -பொதுவான விளக்கு –
முந்நீர் வாழ்ந்த சூட்டும் கோவை ஆழ என்கிற சாஷாத் க்ருத ஸ்வ பர வ்ருத்தாந்தர்க்கு –
கமலக் கண்ணன் என் கண்ணினுள் உள்ளான் காண்பான் அவன் கண்களாலே -ஸ்வ பர பிரகாசத்வங்கள் அவனாலே தான் என்றதாயிற்று
அந்த விளக்கை காண -ஞானச் சுடர் விளக்கு ஏற்றினேன் -உய்த்து உணர்வு என்னும் ஒளி கொள் விளக்கு ஏற்றி வைத்து அவனை நாடி
மானம் ப்ரதீபவமிவ காருணிகோ ததாதி பட்டர் -மானம் -பிரமாணம் –ஆதௌ வேதா பிரமாணம் -வேதமே முதல் விளக்கு
-அதில் இருந்து ஞான விளக்கு ஏற்றி நந்தா விளக்கைக் காண வேண்டும் –

பெரிய திருமொழி -4-2-வண் புருடோத்தம பதிகம் நிகமான பாசுரத்தில் -உலகில் எண்ணிலாத பேரின்பம் உற்று இமையவரோடும் கூடுவரே
-இச்சுவை தவிர யான் போய் யான் பெரும் இந்திர லோகம் ஆளும் அச்சுவை பெறினும் வேண்டேன் -பரமபதத்தையும் த் ருணீ கரித்து
இருப்பவர்களுக்கு எண்ணில்லாத -எண்ணவும் முடியாத என்றும் அசங்க்யேதமான என்றும் இங்கேயே கிட்டும் இன்பம் என்றுமாம்

———————————————————————————

ஸ்ரீ  கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ P.B.A. ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ  பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ ராமானுசன் பத்திரிகையில் இருந்து அமுத முத்துக்கள் திரட்டு – பாகம்-1-

November 28, 2015

ஸ்வ ஸ்வாமி ஸ்வ சேஷம் ஸ்வ வசம் ஸ்வ பரத்வேன நிர்ப்பரம் ஸ்வ தத்த ஸ்வ தியா ஸ்வார்த்தம் ஸ்வஸ்மின் ந்யஸ்யதி மாம் ஸ்வயம் –
ஸ்ரீ தேசிகன் நியாச சதகத்தில் ஸ்ரீ ஸூக்திகள் –ஒன்பதின் கால் ஸ்வ சப்த பிரயோகம் பண்ணி சித்த உபாயத்தின் சீர்மை காட்டி அருளி இருக்கிறார்

பகவத் பிரபத்தி விரோதி ஸ்வ ப்ரவ்ருத்தி நிவ்ருத்தியே பிரபத்தி

வனத்திடரை ஏரியாம் வண்ணம் இயற்றும் இதுவல்லால் மாரி யார் பெய்கிற்பார்  மற்று -பூதத் தாழ்வார்

த்வமேவ உபாய பூதோ மேபவதி பிரார்த்தனா மதி சரணாகதி

இயம் கேவல லஷ்மீ சோபாயத்வ பிரத்யயாத்மிகா ஸ்வ ஹேதுத் வதியம் ருந்தே கிம்பு நஸ் சஹ காரிணாம்–தேசிகன் -நியாய சித்தாஞ்சனா ஸ்ரீ ஸூக்திகள்

மாம் ஏகம் சரணம் வ்ரஜ -இதர அநபேஷ உபாயத்வம்

பிரபத்தி உபாயத்துக்கு இக்குற்றங்கள் ஒன்றும் இல்லை -என்றது வேறு ஒரு குற்றம் உண்டு -மா முனிகள்
அதாவது ஆபாத ப்ரதீதியில் உபாயத்வ பிரதிபத்திக்கு அர்ஹ்யமாம் படி இருக்கை

இதிஹ இதிஹ-இப்படியாம் இப்படியாம் என்ற வடசொல்லின் மேல் -ஸ்வார்த்தேயஞ்-பிரத்யாயம் ஏறி ஐதிக்யம் ஆயிற்று
இதி ஹஸ்ம ப்ராஹூ-அநாதி காலம் பரம்பரையாக சொல்லி வந்ததே இதிஹாசம்

பிரத்யாசந்தி பவ சஞ்சரணம் பிரஜா நாம் பக்த அனுகந்துரிஹ யஸ்ய கதா கதா நி –ஸ்ரீ தேசிகன் -வேகா சேது ஸ்தோத்ரம் -யதோத்த காரி பற்றிய ஐதிக்யம் –

அவிஜ்ஞ்ஞாதா —ந தே நிரச நீயா அபிது சோச நீயா –பட்டர்

ஆழ்வார் உடையவர் மணவாள மா முனி -பிரணவம் -அகாரம் உகாரம் மாகாரம் சேர்ந்த ஓங்காரம் பிரணவம்

நாணி இனி ஒரு கருமமும் இல்லை நாலயலாரும் அறிந்து ஒழிந்தார் பாணியாது என்னை மருந்து செய்து கொண்டு பண்டு பண்டாக்க யுறுதிராகில் -ஆண்டாள்
கெண்டை ஒண் கணும் துயிலும் எந்நிறம் பண்டு பண்டு போல் ஒக்கும் மிக்க சீர் தொண்டர் இட்ட பூந்துளவின் வாசமே வண்டு கொண்டு வந்து ஊதுமாகிலே-திருமங்கை ஆழ்வார்
இன்றைய தசை -விச்லேஷம் -பண்டைய தசை -சம்ச்லேஷ தசை –பண்டு பண்டைய தசை -சம்சாரிகள் தசை –சம்யோகா விப்ரயோகாந்தா அன்றோ

பூவரு மயனொடும் புகுந்து பொன்னகர் மூவுலகை உலகினும் அழகு முற்றுற ஏவினன் அயற்றினன் கணத்தில் என்பரால் தேவரும்
அருள் கொளத் தெய்வத் தச்சனே -என்றும் -பொன்னிலும் மணியினும் அமைந்த பொற்புடை நன்னகர் நோக்கினான் நாகம் முன்னையின்
அழகுடைத் தென்று மொய்கழல் மன்னனும் உவந்து அதன் நோக்கினன் முனிவும் மாறினன்-என்றும் கம்பர் அருளிச் செய்து
-திருவடி துவம்சம் ஆக்கிய இலங்கையை புனர் நிர்மாணம் பண்ணியதைக் காட்டி அருளுகிறார்-

தத்ர யத்தாவதுச்யதே யோசௌ நாராயண பிரசித்த பரமாத்மா சர்வாத்மா இதி தத் ந நிராக்ரியதே -யதபி தஸ்ய பகவத அபிகம நாதி லஷண மாராத நம் அஜஸ்ரம் அனன்ய சித்தயா அபிப்ரே யதே ததபி ந பிரதிஷித்யதே சுருதி சம்ருத்யோர் ரீச்வர பரணீ தா நஸய பிரசித்தத்வாத் –ஆதி சங்கர ஸ்ரீ ஸூக்திகள் -ஸ்ரீ மன் நாராயணனுக்கே பாரம்ய பிரதிஷ்டாபனம் –

யோகிநாம் அபி சர்வேஷாம் மத்கதேன அந்தராத்மா -ஸ்ரத்தாவான் பஜதே யோ மாம் ச மே யுக்ததமோ மத -ஸ்ரீ கீதை
இதுக்கு சங்கர பாஷ்யம் -யோகிநாமே சர்வேஷாம் ருத்ராதி த்யான பராணாம் -மத்கதேன மயி வா ஸூ தேவே சமாஹி தேன அந்தராத்ம நா -அந்த கரணன ஸ்ரத்தா வான் ஸ்ரத்ததா நஸ் சன்பஜதே சேவதேயோ மாம் சமே மம யுக்ததம அதிசயே ந யுகத மத அபிப்ரேத –

கேசவ நாம சங்கர பாஷ்யத்தில் –கோ ப்ரஹ்மே திசமாக்க்யாத ஈசோஹம் சர்வ தேஹி நாம் ஆவாம் தவாங்கே சம்பூதௌ தஸ்மாத் கேசவ நாமாவான்

அர்க்க திரு நாம-சங்கர பாஷ்யம் -ப்ரஹ்மாதிபி பூஜ்ய தமைரபி அர்ச்ச நீயத்வாத் அர்க்க –

அமிதாசன திரு நாம சங்கர பாஷ்யத்தில் -சம்ஹார சமயேவிச்வமச் நா நீதி அமிதாசன -சிவ பெருமானும் விஸ்வ பஹிர் பூதன் அல்லனே

அத்தாசரா சரக் ரஹணாத்-ஸூ தரத்தின் படியே அகில சேதன அசேதனங்களையும் உண்டவ நாராயணன் சிவ பெருமானையும் உண்டான் என்றபடி

சதுர்முக சமக்க்யாபி சடகோப முனௌ ஸ்திதா ஸ்வ வாசா மாத்ரு துஹித்ரு சகீவாசா ச வர்ண நாத் –
ஆழ்வார் -தாமான -73 திருவாய் மொழிகள் –தலைமகள் 17 திருவாய் மொழிகள் -தாய் -7
திருவாய்மொழிகள் -தோழி -மூன்று திருவாய்மொழிகள் -நான்கு முகங்கள் உண்டே

ச்வாமித்வ ஆத்மத்வ சேஷித்வ பும்ஸ்த்வாத்யா ஸ்வாமி நோ குணோ ஸ்வேபயோ தா சத்வ தேஹத்வ சேஷத்வ ஸ்த்ரீத்வ தாயி ந –
சர்வ ஸ்வாமி -சர்வ பூத அந்தராத்மா -சர்வ சேஷி புருஷோத்தமன் -ஸ்வாமி தாசர்-சேஷி சேஷ பூதர் -ஆத்மா சரீர பூதர் புருஷோத்தமன் பெண்மை –
தாசத்வ தேகத்வ சேஷத்வங்கள் போலே ஸ்த்ரீத்வத்மமும் இயல்பே -வந்தேறி இல்லை
அத்யந்த பாரதந்த்ர்யம் ஸ்திரீ தர்மம் -பத்ரு பார்யா பாவ சம்பந்தம் -உகாரார்த்தம் -பின்னை கொல் நிலமா மகள் கொல் திருமகள் கொல் –
தாய் அத்யவசாய நிஷ்டை -பேறு தப்பாது என்று துணிந்து இருக்கை -தலை மகள் த்வரா நிஷ்டை பேற்றுக்கு த்வரிக்கவும் வேணுமே

வெற்றிலை -இலவசம் -கையடைக் காயும் -அடைக்காய் திருத்தி நான் வைத்தேன் –அடை இலைக்கு பொதுச் சொல்- காய் -காய்களுக்கு பொதுச் சொல் -அடைக்காய் வெற்றிலை பாக்கு -அதனால் இலைவசம் வெற்றிலை வழியாக வந்த சொல் –மறுதாரை பாய்வதை மடிசா ர் பாய்கிறது மருவி சொல்லாயிற்று

ஸ்வா தீன த்ரிவித சேதன அசேதன ஸ்வரூப ஸ்திதி ப்ரவ்ருத்தி பேதம் -திருவாய் மொழி -1-1-4/5/6 பாசுரங்களை அடி ஒட்டியே ஸ்வாமி அருளிச் செய்கிறார்

பண்டை நாளில் பிறவி உண்ணாட்டுத் தேசு இ றே -பண்டை நாளாலே நின் திருவருளும் – -9-2- திருவாய்மொழி-
நின் கோயில் சீய்த்து பல்படிகால் குடி குடி வழி வந்து ஆட்செய்யும் தொண்டர் -என்று முதல் பாசுரத்திலும்
உன் பொன்னடிக் கடவாதே வழி வருகின்ற வடியர் என்று இரண்டாம் பாட்டிலும் தொடர்ந்து குற்றேவல் செய்து தொல்லடிமை
வழி வரும் தொண்டீர் என்று மூன்றாம் பாட்டிலும் அஹங்காரம் குடி புகாமல் கைங்கர்யத்துக்கு அனுரூபமான குடிப்பிறப்பு என்றபடி

தென்னகர் -நன்னகர் –மா நகர் -நீணகர் –பெரு நகர் –
தென்னகர் -ஆயிரத்துள் இவை பத்தும் திரு வல்லவாழ் சேமம் கொள்   தென்னகர் மேல்
நன்னகர் -தெண்டிரைப் புனல் சூழ் திரு விண்ணகர் நன்னகரே
மா நகர் -ஏர் வள ஒண் கழனி பழன தென் திருப் பேரெயில் மா நகரே
நீணகர் -இன்பம் பயக்க —திருவாறன் விளை என்னும் நீணகரம் அதுவே
பெரு நகர் -பெரு வரை மதில்கள் சூழ்ந்த பெரு நகர் அரவணை மேல் –திருமங்கை ஆழ்வார் அப்பக் குடத்தான் கையில் இலங்கு ஆழி சங்கு திருமொழி

உறையிலாடாத ஆழ்வார் -திருமழிசை ஆழ்வார் –

புஷ்ப த்யாக போக மண்டலங்கள் மூன்றையும் நம்மாழ்வார் திரு விருத்தத்தில் மங்களா சாசனம்

மன்மநா பவ மதபக்த —மயி -சர்வேஸ்வர நிகில ஹேய ப்ரத்ய நீக கல்யாணை கதா நே சர்வஜ்ஞ்ஞே சத்ய சங்கல்பே
நிகில ஜகதேக காரண பரஸ்மின் ப்ரஹ்மணி புருஷோத்தமே புண்டரீகத லாமலா யதே ஷணே ஸ்வச்ச நீல ஜீமுத சங்கா சே
யுகபதிததி நகர சஹச்ர த்ருசதேஜசி லாவண்யா அம்ருத மஹோ ததௌ உதார பீவர சதுர் பாஹௌ அத்யுஜ்ஜ்வல பீதாம்பரே
அமல கிரீட மகர குண்டல ஹார கேயூர கடக பூஷிதே அபார காருண்ய
சௌசீல்ய சௌந்தர்ய மாதுர்ய காம்பீர ஔதார்ய வாத்சல்ய ஜலதௌ அநா லோசித விசேஷ அசேஷ லோக சரண்யே
சர்வ ஸ்வாமிநி தைல தாராவத் அவிச்சேதன நிவிஷ்ட ம நா பவ -ஸ்வாமி ஸ்ரீ ஸூக்திகள் –18 விசேஷணங்கள் உள்ளன –
பண்டரு மாறன் பசும் தமிழ் ஆனந்தம் பாய் மதமாய் விண்டிட எங்கள் இராமானுச முனி வேழம் –
கலிமிக்க செந்நெல் கழனிக் குறையல் கலைப் பெருமான் ஒலி மிக்க பாடலை யுண்டு தன்னுள்ளம் தடித்து அதனால் வலிமிக்க சீயம் இராமானுசன்
ஸ்வரூப வை லஷண்யம் -திவ்ய மங்கள விக்ரஹ சௌந்தர்யம் -திவ்ய பூஷணாதி வைசிஷ்ட்யம் திருக் கல்யாண குண பௌஷ்கல்யம்
-எடுத்துக் காட்டியே பக்தியை வளர்ப்பவர்கள் அன்றோ

யாமி நயாமீதி தவேவததி புரஸ் தாத்த ஷநேன தன வங்க்யா களிதாநி புரோ வலயாநி அபராணி புநஸ் ததைவ தளிதா நி —யாமி போகிறேன்
என்றாலும் ந யாமி உன்னையும் கூட்டி போவேன் போக மாட்டேன் என்றாலும் வளையல்கள் போகுமே

கிருஷ்ணத் வைபாயநம் வியாசம் வித்தி நாராயணம் பிரபும் கோஹ்யன்யோ புவி மைத்ரேய மஹா பாரத க்ருத் பவேத் தேன வ்யச்தாயதா வேதா மத்புராணே மஹாத்மநா -ஸ்ரீ விஷ்ணு புராணம் -3-4-5-
சஹோவாச வியாச பாராசர்ய–பாரத பஞ்சமோ வேதா –வேதான் அத்யாபயமாச மஹா பாரத பஞ்சமான் –

வேத வேத்யே பர் பும்சி ஜாதே தசரதாத் மஜே வேத ப்ராசேத சரதாசீத் சாஷாத் ராமாயணாத் ம்நா –
-இராமாயணம் என்னும் பக்தி வெள்ளம் -சாகரம் என்னக் கடவது இ றே

ஸ்ருதியில் அவதாரங்கள் -அஜாய மாநோ பஹூதா விஜாயதே –ச உஸ்ரேயான் பவதி ஜாயமான –பிதா புத்ரேண பித்ருமான் யோனி யோ நௌ-
உயிர் அளிப்பான் என்நின்ற யோனியுமாய் பிறப்பாய் இமையோர் தலைவா -ஆழ்வார் -பஹூ நி மே வ்யதாதீதி ஜன்மா நி தவ சார்ஜூன -ஸ்ரீ கீதை

வகுள பூஷண பாஸ்கர உதயமான இடத்திலே சூர்யோதயம் ஆன பின்போ த்வாதசி பாராயணம் -ஆழ்வார் திரு நகரி அம்மையார் பேச்சு

நீராட்டம் -ஏஷ   ப்ரஹ்ம பிரவிஷ்டோச்மி க்ரீஷ்மே சீதமிவ ஹ்ரதம் –
கர சரண சரோஜே காந்திமன் நேத்ரே மீ நே ச்ரம முஷி புஜவிசீ வ்யாகுல ஆகாதே மார்க்கே ஹரி சரசி விகாஹனம் –
காலை நல் ஞானத்துறை படிந்தாடி கண் போது செய்து -திரு விருத்தம்

சோழ நாட்டு திவ்ய தேசங்கள் மங்களாசாசனம் முடித்து திருவரங்கம் வர இருந்த திரு மங்கை ஆழ்வார் ஸ்வபனத்தில்
-திரு அரங்கன் -தோன்றி கூப்பிட்டு அருள -கூந்தம் கமழும் கூடலூரில் இருந்து திரு வெள்ளறை புண்டரீகாஷ பெருமாளை
மங்களா சாசனம் பண்ணி இங்கே வந்தாராம் -கோபுர பிரதிஷ்டைகள் எல்லாம் முடித்த பின்பே மேலே தொடர்ந்தாராம்
பின்பே அப்பக் கூடத்தான் நாதன் கோயில் திரு விண்ணகர் திரு நறையூர் திருச் சேறை திருவழுந்தூர் சிறு புலியூர்
திருக் கண்ண மங்கை திருக் கண்ண புரம் திருக் கண்ணங்குடி திரு நாகை மங்களா சாசனம் செய்து தலைக் கட்டி
பாண்டிய மலை நாட்டு திவ்ய தேச மங்களா சாசனம் செய்து அருளினார்
நம் ஆழ்வார் அவா அற்று வீடு பெற்ற அன்றே வைகுண்ட நீள் வாசல் திறக்கப் பட்டது என்பதால்
வைகுண்ட ஏகாதசி ஸ்வர்க்க வாசல் இன்றும் திறக்கப் படுகிறது

காளம் வலம்புரியன்ன நல் காதல் அடியவர்க்கு தாளம் வழங்கி தமிழ் மறை இன்னிசை தந்த வள்ளல் மூளும் தவ நெறி மூட்டிய
நாத முனி கழலே நாளும் தொழுது எழுவோம் நமக்கு யார் நிகர் நானிலத்தே

பொருவரும் சீர் ஆரியன் இராமானுசன் -3- மூன்று விசேஷணங்கள் -திருக் கல்யாண குணங்கள் அனுஷ்டானம் ஆர்ஜவம் -மூன்றும்
அஸ்மத் குரோர் பகவதோஸ்ய தயைக சிந்தோ -என்பதே பொரு வரும் சீர் -ஆரியர் -ஆசார்ய சீலர்-

அறம் சீறும் உறு கலியை துறக்கும் பெருமை இராமானுசன் -ராமானுஜ முநிர் ஜியாத் யோ ஹரேர் பக்தி யந்த்ரிதாத்
கலி கோலாஹல க்ரீடா முதாக்ரஹ மபாஹரத் -பட்டர்

அம்ருத சாகராந்தர் நிமக்ன சர்வாவயவஸ் ஸூகமாஸீத –ஸ்ரீ வைகுண்ட கத்ய  ஸ்ரீ ஸூக்திகள்
அம்ருத கடலுள் அழுந்திய சர்வ திவ்ய அவயவங்களையும் உடையேனாக இனிது இருக்கக் கடவன்
திருவாசிரியம் இரண்டாம் பாசுரம் -உலகு படைத்ததுண்ட–அறை கழல் சுடர்ப் பூம் தாமரை சூடுதற்கு –நேரிய காதல்
அன்பிலின்பீன் தேறல் அமுத வெள்ளம் -காதல் அன்பு இன்பு தேறல் அமுத வெள்ளம் -ஒரு பொருள் பன்மொழிகள்
கதா அஹம் பகவத் பாதா புஜத்வயம் சிரசா தாரயிஷ்யாமி -கதா அஹம் பகவத் பாதாம் புஜ த்வத் பரிசர்யா சயா –
-கதா அஹம் பகவத் பஜத்வ்ய பரிசர்யா கரணயோக்யா –பகவத் பரிசர்யாயாம் ஆசாம் வர்த்தயித்வா —
முகில் வண்ண வானத் திமையவர் சூழ இருப்பார் பேரின்ப வெள்ளத்தே
அத்தை இங்கே காண இப்பிறப்பே மகிழ்வர் எல்லியும் காலையே
முன்னவராம் நம் குரவர் மொழிகள் உள்ளப் பெற்றோம் முழுது நமக்கவை பொழுது போக்காகப் பெற்றோம் -மா முனிகள்
எம்பெருமான் தன் சரிதை செவியால் கண்ணால் பருகுவோம் இன்னமுதம் மதியோம் அன்றோ
அறிவை என்னும் அமுதவாறு தலைப் பெற்று வாய்க் கொண்டதே –ஆயர் ஏற்றை அமரர் கோவை அந்தணர் தம் அமுதத்தினை –
மறைப் பாற் கடலை திரு நாவின் மந்தரத்தால் கடைந்து துறைப் பால் படுத்தி தமிழ் ஆயிரத்தின் சுவை அமிழ்தம்
கறைப் பாம்பணை பள்ளியான் அன்பர் ஈட்டம் களித்து அருந்த நிறைப்பான் கழல் அன்றிச் சன்ம விடாய்க்கு நிழல் இல்லையே
அருமறை துணிந்த பொருள் முடிவை இன் சொல் அமுது ஒழுகுகின்ற தமிழினில் விளம்பி யருளிய சடகோபர் சொல்
பெற்று உயர்ந்தன அழகிய மணவாளர் கொற்றப் புயங்களே -சீதேதி மதுராம் வாணீம் போலே அமுது ஒழுகுகின்ற தமிழ்
அமுதிலும் ஆற்ற இனியன் அன்றோ -பக்தாம்ருதம் விஸ்வ ஜன அநு மோதனம் -தொண்டர்க்கு அமுது உண்ண சொல் மாலைகள் சொன்னேன் –
அமுதத்துக்கு அருளிச் செயல்களிலே எவ்வளவே உண்டே-

அகாரோவை சர்வ வாக் -அகர முதல்  எழுத்து எல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு –அவ ரஷணே தாது -பிதா புத்திர –
ரஷ்ய ரஷக -சேஷ சேஷி பாவங்கள் மூன்றும் காட்டும் -லுப்த சதுர்த்தி அவனுக்கே சேஷன் என்று காட்டும் –
உகாரம் -பத்தி பத்நீ பாவம் -கொண்டானை யல்லால் அறியாக் குல மகள் போல்
மகாரம் -மன ஜ்ஞானே -ஜ்ஞாத்ரு-ஜ்ஞ்ஞேய பாவம் -ஒண் தாமரையாள் கேள்வன் ஒருவனையே நோக்கும் உணர்வு-
நம பதம் ஸ்வ-ஸ்வாமி பாவம் -நாராயண –தத் புருஷ சமாசம் –பஹூவ்ரீஹீ சமாசம்
–நாரணாம் அயனாம் -தத் புருஷன் -ஆதார ஆதேய பாவம் -நாரா அயனம் யஸ்ய ச பஹூவ்ரீஹீ -சரீர சரீர பாவம் ஆய -போக்த்ரு போகய பாவம் –
ஆக திருமந்தரம் நவவித சம்பந்தம் -பிதா ச ரஷகஸ் சேஷீ பார்த்தா ஜ்ஞேயோ ரமாபதி ஸ்வாம் யாதாரோ மமாத்மா ச போக்தா சாத்யம் அநுதித –

தோளிணை மேலும் தன மார்பின் மேலும் சுடர் முடி மேலும் தாளிணை மேலும் புனைந்த தண்ணம் துழாய் மாலை
-தவம் மேஹம் மே-பண்டே உன் தொண்டாம் பழ உயிரை என்னதென்று கொண்டேன்

தூது மொழிந்து –தூது நடந்து –தூது வந்தவர்கள் -தூது மொழிந்து நடந்து வந்தவர்கள்
தூது மொழிந்தவர் -சக்கரவர்த்தி திருமகனார் -முன்னோர் தூது வானரத்தின் வாயில் மொழிந்து
-தூது நடந்தவர் -பாண்டவ தூதப் பெருமாள் –கோதில் செங்கோல் குடை மன்னருடை நடந்த தூதா
தூது வந்தவர் -திருவடி -ஓத மா கடலைக் கடந்தேறி –தூது வந்த குரங்குக்கே –தூதோஹம் கோசலேந்திரஸ்ய-
மூவரும் முறையே –சமயக் போஜனம் –ச குண போஜனம் – சஹ போஜனம் -செய்து அருளினார்கள்
பெருமாள் -சபர்யா பூஜிதஸ் சமயக் ராமோ தசரதாத்மஜ–சபர்யா சமயக் பூஜிதா
கண்ணபிரான் -விதுரான்நாதி புபுஜே சுசீ நி குண வந்தி ச —ச குண போஜனம் இது
திருவடி -பரத்வாஜர் ஆஸ்ரமத்தில் -உபகாராய ஸூ க்ரீவோ ராஜ்ய காங்ஷீ விபீஷண நிஷ்காரணாய ஹனுமான் தத்துல்யம் சஹ போஜனம் –சமயக் போஜனம்
ஆக -தூது மொழிந்தவருடைய சமயக் போஜனமும் தூது நடந்தவருடைய ச குண போஜனமும் -தூது வந்தவரோடு சஹ போஜனமும் சொல்லிற்று ஆயிற்று

ஐவரில் நால்வரில் மூவரில் முற்பட்டவர்கள் -ஐவரில் முற்பட்டவர் தர்ம புத்ரர் –நால்வரில் முற்பட்டவர் பெருமாள்
-மூவரில் முற்பட்டவர் –பெரிய நம்பி -திருக் கோஷ்டியூர் நம்பிக்கும் பெரிய திருமலை நம்பிக்கும் முற்பட்டவர் அன்றோ
இவர்கள் சந்தேஹியாமல் சஹாஜரோடு புரோடோசமாகச் செய்த புத்ர கருத்தியம் பிரசித்தம் அன்றோ

நம பிரணவ சோபிதம் நவகஷாய கண்டம் பரம்
த்ரிதண்ட  பரிமண்டிதம் த்ரிவித தத்வ நிர்வாஹகம்
தயாஞ்சித த்ரு கஞ்சலம் தளிதவாதி வாக் வைபவம்
சமாதி குண சாகரம் சரணமேமி ராமானுஜம் –ஆழ்வான் முக்தகம்

அர்வாஞ்சோ யத்பத சரசிஜ த்வந்த்வ மாஸ்ரித்ய பூர்வே
மூர்த்நா யஸ் யான்வய முபகதா தேசிகா முக்திமாபு
சோயம் ராமானுஜ முநிரபி ஸ் வீய முக்திம் கரஸ்தாம்
யத் சம்பந்தாத் அமநுத கதம் வர்ண்யதே கூர நாத —

அந்தமிலா மறை ஆயிரத்து ஆழ்ந்த அரும் பொருளைச்
செந்தமிழாகத் திருத்திலனேல் நிலத் தேவர்களும்
தந்தம் விழாவொழகும் என்னாம் குருகூர் வந்த பண்ணவனே –சடகோபர் அந்தாதி
அநந்தா வை வேதா –

பூ மன்னு-இத்யாதி பூ -பூநிலாயா -பூமிக்கு -இங்கு புஷ்பம் -மூன்று வகைப் புஷ்பங்கள்
வண்டுகளோ வம்மின் நீர்ப்பூ நிலப்பூ மரத்தில் ஒண் பூ உண்டு களித்து உழல்வீர்க்கு -திரு விருத்தம்
திருமேனியில் சாத்திக் கொண்டவை –பூம் தண் மாலைத் தண் துழாயும் -தோளிணை மேலும் இத்யாதி
– நீரிலும் நிலத்திலும்–பூவையும் காயாவும் நீலமும் பூக்கின்ற காவி மலர் என்றும் கள்ளார் துழாயும் கணவலரும்
கூவிளையும் முள்ளார் முளரியும் ஆம்பலும் முன் கண்டக்கால் –தாம் உளரே தாமரையின் பூ உளதே
பக்தர்கள் கைகளில்-இண்டை கொண்டு தொண்டர் ஏத்த -என்றும் வானவர் வானவர் கோனொடும் சிந்து பூ மகிழும் – -இப்படி மூன்று வகை-

சிந்தையினால் சொல்லினால் செய்கையால் நிலத்தேவர் குழு வணங்கும் சிந்தை மகிழ் திரு வாறன் விளை யுறை தீர்த்தனுக்கு அற்ற பின்னே சிந்தை
மற்று ஒன்றின் திறத் தல்லாத் தன்மை தேவ பிரான் அறியும் -ஆழ்வாரும் பரமபதம் பெயரை சொல்லாமல் மற்று ஓன்று என்று அருளிச் செய்கிறாரே

இங்கே காண இப்பிறப்பே மகிழ்வர் எல்லியும் காலையே –8-5-11–சன்மம் பல பல -3-10-நானோர் குறைவிலனே –
-யான் என்றும் கேடிலனே பாசுரம் தோறும் களித்து அருளுகிறார்
குரவை ஆய்ச்சியரோடு -6-4-என்ன குறை நமக்கே –எனக்கார் பிறர் நாயகரே -இதிலும் பாசுரம் தோறும் களித்து அருளுகிறார்-
இறையவன் எங்கோனே உலகாரியன் தேன் மலர்ச் சேவடிசிந்தை செய்பவர் மா நிலத்தில் இன்பம் எய்தி வாழ்பவரே -ஸ்ரீ வசன பூஷண தனியன்
பிரமாண பிரமேய ப்ரமாத்ரு சேவா இன்பத்துக்கு ஈடு இணை இல்லையே எங்கும் என்றபடி

ந சேத ராமானுஜேத் ஏஷா சதுரா சதுரஷரீ
காம வஸ்தாம் ப்ரபத்யந்தே ஜந்தவோ ஹந்த மாத்ருசா –முதலி யாண்டான் முக்தகம்

மஸ்தக மஸ்து மதியம் நிஸ்துல யதிராஜ பாத பத்மயாம்
வடினம் ஹ்ருத்யஞ்ச சதா தத்குண கீர்த்தன விசிந்தன பிரவணம்

பிங்கல சாமாக்க்ய வர்ஷே மேஷே சுபமாசி சூழ பஞ்சம்யாம்
ஆர்த்ரா நாம் நி சுபே பி ஸ்தவா நி ராமாநுஜார்ய மவ தீர்ணம் —

அனந்த பிரதம ரூபம் லஷ்மணஸ்து தத பரம் பலபத்ரஸ் த்ருதீ யஸ்து கலௌ ராமானுஜ ஸ்ம்ருத

அகம் –உட்புறம் -அகம் சிவந்த கண்ணினராய் –க்ருஹம் -ஓடி அகம் புக்கு –நான் -உன் பொன்னடிக் கீழ் வளைப்பகம்
அடை -இல்லை – அடையார் கமலத்து -அடைக்காய் திருத்தி -அடைந்திடு -சாளக்ராமம் அடை நெஞ்சு
அணை–படுக்கை -மெல்லணை மேல் துயின்றாய் /சேது மலை கொண்டு அலை நீர் அணை கட்டி -அணைத்துக் கொள் ஆரென்று நெஞ்சே அணை
அரி -சிங்கம் -அந்தியம் போதில் அரியுருவாகி /பகைவன் -அரியை அழித்தவனை பல்லாண்டு /ஹரி -மெள்ள எழுந்து அரி என்ற பேரரவம் /
குரங்கு -மலையால் அரி குலம் பணி கொண்டு அலை கடல் அடைத்தான் /வண்டு போதரிக் கண்ணினாய் -பூவில் படிந்த வண்டு /
மான் போதரிக் கண்ணினாய் -சஞ்சரிக்கின்ற மானின் கண் /அறிந்து போகடுதல் -அரிசினத்தால் ஈன்ற தாய்
அற -அறும்படி -மயர்வற மதி நலம் -வினைகளை வேர் அறப் பாய்ந்து /மிகவும் -அற வினியன் -அறப் பதறி /அற்பமாம் படி என் அவா அறச் சூழ்ந்தாயே
ஆழி -கம்பீரத் தன்மை -ஆழி மழைக் கண்ணா /கடல் ஆழி சூழ் இலங்கை ஆழியுள் புக்கு /
/மண்டலாகாரம் -ஆழி திகழ் திருச் சக்கரத்தின் /சூ ர்யன் ஆழியால் அன்று அங்கு ஆழியை மறைத்தான்

கற்றது கை மண் அளவு கல்லாதது மலை யளவு -பரத்வாஜோ ஹ த்ரிபி ராயுர்ப்பிர் ப்ரஹ்மார்ய முவாஸ-
ஏஹீமம் வித்தி அயம் வை சர்வ வித்யேக தஸ்மா ஏதம் சாவித்ரம் உவாச
சாவித்ரா வித்யை-வகுள பூஷன பாஸ்கரர் வித்யை -திருவாய் மொழி -பக்தாம்ருதம் விஸ்வ ஜன அநு மோதனம்–சர்வார்த்தம் -என்றது இ றே
த்யேயஸ் சதா சவித்ரு மண்டல மத்ய வர்த்தீ நாராயணஸ் சரசிஜா சன சந்நிவிஷ்டகேயூரவான் மகர குண்டல வான்
கிரீடி ஹாரீ ஹிரண்யமய வபுர் த்ருத சங்க சக்ர –ஸ்லோஹம்
கண்கள் சிவந்து பெரிய வாய் வாயும் சிவந்து கனிந்து உள்ளே வெண்டவிலகு சுடரிலகு விலகு மகர குண்டலத்தன் கொண்டல் வண்ணன்
சுடர் முடியன் நான்கு தோளன் குனி சார்ங்கன் ஒண் சங்கதை வாள் ஆழியான் ஒருவன் அடியேன் உள்ளானே –
ஹிரண்மயவபு -ஸ்லோஹம் ஆழ்வார் -கொண்டல் வண்ணன் -வகுள பூஷண பாஸ்கரர் உள்ளத்திலே
குளிர்ந்த வண்ணம் இருக்கும் இருப்பை தானே சொல்லிக் கொண்டார்-
யுஜ்ஞ்ஞான ப்ரதமம் மனஸ் தத்வாய சவிதா திய
அக்னிம் ஜ்யோதிர் நி சாய்ய ப்ருதிவ்யா அத்யாபரத் —
மதுரகவி ஆழ்வார் தென் திசை ஜ்யோதிஸ் பார்த்தே வந்தார் -மனஸ் திய தத்வாய யுஜ்ஞ்ஞான -தொழுது எழு மனனே

அத்யாபகர் ஏற்றம் -வைகல் பாட வல்லார் வானோர்க்கு ஆராவமுதே –முதல் அத்யபகர் -அதா பயந்தீ -கேளாய் என்கிறாள் ஆண்டாள்
-வேத வித்துக்கள் அத்யேதாக்கள் தான் அத்யாபகர் ஆக முடியாதே

கலௌ கலு பவிஷ்யந்தி நாராயண பராயணா க்வசித் க்வசித் மஹா பாகா த்ரமிடேஷூ ச பூரிச தாமர பரணீ நதீ யத்ர கிருதமாலா
பயஸ்வி நீ காவேரீ ச மஹா பாகா ப்ரதீசீ ச மஹா நதீ
ஐந்து நதிகள் -தாமரபரணி -கிருதமாலா பயஸ்வி நீ காவேரி ப்ரதீசீ –நம்மாழ்வார் மதுர கவி ஆழ்வார் -தாமர பரணி நதி தீரம்
கிருதமாலா -வைகை பெரியாழ்வார் ஆண்டாள் /பயஸ்வி நீ பாலாறு -முதல் ஆழ்வார்களும் திரு மழிசை ஆழ்வாரும்
காவேரி தீர்த்தத்தில் தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் திருப் பாண் ஆழ்வார் திரு மங்கை ஆழ்வார் மூவரும்
ப்ரதீசீ மேலாறு -மலை நாடு -குலசேகர ஆழ்வார்

மேகம் பருகின சமுத்ராம்பு போலே நூற்கடல் சொல் இவர் வாயனவாய்த் திருந்தினவாறே சர்வதா சர்வ உபஜீவ்யமாமே –
பராங்குச பரகாலாதி ரூபத்தாலே அபி நவமாக ஒரு தசாவதாரத்தை பண்ணி மேகங்கள் சமுத்திர ஜலத்தை வாங்கி
சர்வ உப ஜீவ்யமான தண்ணீராக உமிழுமா போலே –

தேவாதி தேவனை சென்று நாம் சேவித்தால் ஆராய்ந்து அருள் -8-யாம் வந்த கார்யம் ஆராய்ந்து அருள் –23-
நாமே வருவதை சஹியான் பரகத ச்வீகாரமே பாங்கு
மங்களா சாசனம் பண்ணவே வந்தோம் உன்னிடம் ஓன்று பெற வந்தோம் அல்லோம் உனக்கே நாம் ஆட செய்வோம்
-இத்தை நாங்கள் சொல்லியா நீ தெரிந்து கொள்ள வேண்டும் என்றுமாம்
ஆர் என்னை ஆராய்வார் -திருவாய் -5-4-5–மாறன் திரு உள்ளத்து சென்ற துயர் ஓதுவது எங்கனயோ –
அந்தோ என் துயரை தீர்க்க ஆராய்வார் இல்லையே -ஒரு பொருள்
வீட்டின்பப் பாக்களில் த்ரவ்ய பாஷா நிரூபண சமம் இன்ப மாரியில் ஆராய்ச்சி -ஆழ்வார் பிறவியையும் பேச்சையும் ஆராய்வார் ஆறும்
இல்லையே என்றபடி -பேச்சுப் பார்க்கில் கள்ளப் பொய் நூல்களும் க்ராஹ்யங்கள் -பிறவி பார்க்கில் அஞ்சாம் ஒத்தும் அறு மூன்றும் கழிப்பானாம்

நத்வே வாஹம் ஜாது நாசம் ந த்வம் நேமேஜநா–திபா ந சைவ ந பவிஷ்யாஸ் சர்வே வயமத பரம் -ஸ்ரீ கீதை 2-12
-ஜீவாத்மா பரமாத்மா பேதமும் ஜீவர்களுக்குள் பரஸ்பர பேதமும் காட்டி அருளினான்
தேஹி நோஸ்மின் யதா தேஹே கௌமாரம் யௌவனம் ஜரா ததா தேஹாந்திர ப்ராப்தி தீரஸ் தத்ர ந முஹ்யாதி –
ஸ்ரீ கீதை -2-13- பிரக்ருத யாத்ம விவேகம் காட்டி அருளினான்
அத்யந்த இமே தேஹா -ந ஜாயதே ம்ரியதே வா கதாசித் -வாஸாம்சி ஜீர்ணாநி யதா விஹாய –விசிஷ்டாத்வைதம் நிதி இவை
ஜாதஸ்ய ஹி த்ருவோ ம்ருத்யு த்ருவம் ஜன்ம ம்ரு தஸ்ய ச தஸ்மா த பரிஹார் யேர்த்தே ந த்வம் சோசிதும் அர்ஹசி-முதல் சோகம் தீர்த்து அருளி

ஸ்வாமித்வாத் மத்வ சேஷித்வ பும்ஸ்த்வாத்யா ஸ்வாமி நோ குணா ஸ்வேப்யோ தாசஸ்த்வ தேஹத்வ சேஷத்வ ஸ்த்ரீத்வ சாயின –
ஸ்வாமி -சொத்து /ஸ்வாமித்வம் தாசஸ்த்வம் /ஆத்மத்வம் தேஹத்வம் /சேஷித்வம் சேஷத்வம் /பும்ஸ்த்வம் ஸ்த்ரீத்வம் -என்றவாறே

பருப்பதத்து கயல் பொறித்த பாண்டியர் -பெரியாழ்வார் -பர்வதம் பருப்பதம் -உருவு கரியதாய் முகம் செய்தாய் உதய பருப்பதத்தின் மேல் 14-7- ஆண்டாள்
அரும் கலமேஅரும் கலவுருவினாயர் பெருமானவன் -பெரியாழ்வார் –ஆற்ற அனந்தலுடையாய் அரும் கலமே -ஆண்டாள்
இந்த்ரகோபம்-இந்த கோபங்கள் எம்பெருமான் கனிவாய் ஒப்பான் –பெரியாழ்வார் –இந்திர கோபங்களே எழுந்தும் பரந்திட்டனவால் -ஆண்டாள்
ஓட்டரா -ஓடி பொருளில் -என்னிடைக்கு ஓட்டரா அச்சோ -பெரியாழ்வார் -ஓட்டரா வந்து என்னைக் கைப்பற்றி -ஆண்டாள்
கண்ணாலம் -நாடும் நகரும் அறிய நல்லதோர் கண்ணாலம் -பெரியாழ்வார் –கண்ணாலம் கோடித்து கன்னி தன்னை -ஆண்டாள்
குப்பாயம் -சட்டை –குப்பாயம் என நின்று காட்சி தரும் -பெரியாழ்வார் -போர்த்தமுத்தின் குப்பாயப் புகர் மால் -ஆண்டாள்
கருப்பூரம் -பங்கயம் நல்ல கற்பூரமும் நாறி வர -பெரியாழ்வார் –கருப்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ -ஆண்டாள்
கோதுகலம்கோதுகலமுடைய குட்டனேயோ -பெரியாழ்வார் –கோதுகலமுடைய பாவாய் எழுந்திராய் -ஆண்டாள்
புண்ணில் புளிப்பெய்தால்புண்ணில் புளிப்பெய்தால் ஒக்கும் தீமை -பெரியாழ்வார் –புண்ணில் புளிப்பெய்தால் போல் -ஆண்டாள்
பாஞ்ச சன்னியம்அப் பாஞ்ச சன்னியமும் பல்லாண்டே –பாஞ்ச சந்நியத்தை பத்ம நாபனோடும்
வில்லிபுத்தூர் இனிது அமர்ந்தாய் உன்னைக் கண்டார் -பெரியாழ்வார் வில்லிபுத்தூர் உறைவான் தன பொன்னடி -ஆண்டாள்
வெள்ளை விளி சங்கு வெஞ்சுடர்த் திருச் சக்கரம் -பெரியாழ்வார் –வெள்ளை விளி சங்கின் பேரரவம் கேட்டிலையோ -ஆண்டாள்
க்ருத்திகாஸ் வக்நிமாததீத —முகம் வா ஏதன் நஷத்ராணாம் யத் கிருத்திகா – கிருத்திகா நஷத்ரம் அக்நிர் தேவதா
-அக்நிர் ந பாது கிருத்திகா -வேதத்தில் கிருத்திகா நஷத்ரத்துக்கு பிரதான்யம்

அந்தஸ் தத்தர் மோபதேசாத்–1-1-21-அந்தரதிகரண ஸ்ரீ பாஷ்ய ஸ்ரீ ஸூ க்திகள்-சாதவோஹி உபாசக -தத் பரித்ராணம் ஏவ உத்தேச்யம்
-ஆநு ஷங்கிகஸ்து துஷ்க்ருதாம் வி நாச -சங்கல்ப மாத்ரேணாபி ததுபபத்தே -சாதவ -உகத லஷண தர்ம சீலா வைஷ்ணவ வாக்ரேசரா
-மத சமாஸ்ரயணே ப்ரவ்ருத்தா -மன நாம கர்ம ஸ்வரூபாணாம் வாங் மநஸா கோசரதயா மத தர்சநாத் விநா ஸ்வாத் மதாரண
போஷணாதிக மல்பமா நா-ஷண மாத்ர காலம் கல்ப சஹஸ்ரம் மன்வாநா ப்ரசிதீல சர்வகாத்ரா பவேயுரிதி மத ஸ்வரூப சேஷ்டி
தாவலோகநாலா பாதி தாநேந தேஷாம் பரித்ராணாய-ஸ்ரீ கீதா பாஷ்ய ஸ்ரீ ஸூ க்திகள்
தன்னுடைய திவ்ய சேஷ்டிதம் மாத்ரமேயோ எனக்கு போக்யமாகச் செய்து அருளிற்று -தன்னுடைய திவ்ய அவதாரங்கள் எல்லாம்
என் பக்கல் உள்ள சங்கல்ப்பத்தாலே எனக்கு போக்யமாகச் செய்து அருளினான் -ஆறாயிரப்படி -1-8-8-ஸ்ரீ ஸூ க்திகள்

திரு மழிசை பிரான் மட்டுமே மங்களாசாசனம் –திருக் கபிஸ்தலம் -அன்பில்
நம்மாழ்வார் ஒருவரே மங்களா சாசனம் —திருக் குருகூர்-திருப் புளிங்குடி -வர குண மங்கை -ஸ்ரீ வைகுண்டம் -துலை வில்லி மங்கலம் -இரட்டைத் திருப்பதிகள் -திருக் கோளூர் -தென் திருப் பேரை -பெருங்குளம் -சிரீவர மங்கல நகர் -வான மா மலை
திரு வநந்த புரம் -திரு வண் பரிசாரம் -திரு வாட்டாறு -திருக் காட்கரை -திருச் சிற்றாறு -திருப் புலியூர் -திரு வண் வண்டூர்-
திருக் கடித்தானம் -திரு வாறன் விளை-ஆக 18 திவ்ய தேசங்கள் –
குலசேகர பெருமாள் -மட்டுமே மங்களாசாசனம் –திரு வித்துவக்கோடு
பெரியாழ்வார் மட்டுமே மங்களாசாசனம்–கண்டம் என்னும் கடி நகர்ஆண்டாள் உடன் சேர்ந்து ஸ்ரீ வில்லி புத்தூர்
ஆண்டாள் மட்டும் மங்களா சாசனம் –விருந்தாவனம்
திருமங்கை ஆழ்வார் மட்டும் மங்களா சாசனம் –தொண்டை நாட்டில் –பரமேஸ்வர விண்ணகரம் –திருத் தண்கா -விளக்கொளி பெருமாள்
–பவள வண்ணன் -நீரகம் -காரகம் -கார்வானம் –நிலாத் துங்கள் துண்டம் -திருக் கள்வனூர் -திரு புட்குழி -திரு நின்றவூர் -திருவிட வெந்தை -ஆக 11 –
நடு நாட்டில் –திருவயிந்தபுரம்
சோழ நாட்டில் –காழிச் சீராம விண்ணகரம் –திரு நாங்கூர் திருப்பதிகள் 9-திரு இந்தளூர் -திரு வெள்ளியங்குடி -திருப் புள்ளம் பூதம் குடி
-கூந்தல் கமழும் கூடலூர் -நந்தி புர விண்ணகரம் நாதன் கோயில் -திரு நறையூர் -திருச்சேறை -திருவழுந்தூர் -சிறு புலியூர்
-திருக் கண்ண மங்கை -திருக்கண்ணங்குடி -திருநாகை -உறையூர் தலைச் சங்க நாண் மதியம் -திரு ஆதனூர் -ஆக 25
பாண்டி நாட்டில் –திருப் புல்லாணி -திரு மெய்யம்-திருக் கூடல் -தென் மதுரை -ஆக மூன்றும்
வட நாட்டில் –திருப் பிரிதி -நைமிசாரண்யம் -சிங்க வேழ் குன்றம் ஆக மூன்றும் –

——————————————————————–

ஸ்ரீ  கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ P.B.A. ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ  பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ ரெங்கராஜ ஸ்தோத்ரம்–ஸ்ரீ பராசர பட்டர் —

November 24, 2015

சப்த பிரகார மத்யே சரசிஜ முகளோத்பா சமாநே விமாநே
காவேரி மத்ய தேசே ம்ருது தரபரணி ராட் போக பர்யங்க பாகே
நித்ரா முத்ரா பிராமம் கடி நிகட சிர பார்ஸ்வவி ந்யஸ்த ஹஸ்தம்
பத்மா தாத்ரீ கராப்யாம் பரிசித சரணம் ரங்க ராஜம் பஜேஹம் —1

கங்கையில் புனிதமாய காவேரி நடுபாட்டில் பொன் மதிள் ஏழ் உடுத்த ஸ்ரீ ரெங்க விமானத்தில் அரவரசப் பெரும் சோதி அனந்தன்
என்னும் அணி விளங்கும் உயர் வெள்ளை யணை மேவி சீர் பூத்த செலும் கமலத் திருத் தவிசில் வீற்று இருக்கும்
நீர் பூத்த திரு மகளும் நிலமகளும் அடிவருடப் பள்ளி கொள்ளும் பரமனை தாம் இடை வீடின்றி பாவனை செய்யும் பரிசினை அருளிச் செய்கிறார்

சப்த பிரகார மத்யே
மாட மாளிகை சூழ் திரு வீதியும் -மன்னு சேர் திருவிக்ரமன் வீதியும் -ஆடல் மாறனகளங்கன் வீதியும்
ஆலி நாடன் அமர்ந்துறை வீதியும் -கூடல் வாழ் குலசேகரன் வீதியும் -குலவு ராச மகேந்தரன் வீதியும் -தேடுதன்மவன் மாவலன் வீதியும் தென்னரங்கன் திரு வாரணமே
சரசிஜ முகளோத்பா சமாநே விமாநே
சரசிஜ முகுள உத்பா சமாநே விமாநே -தாமரை முகிலம் போலே விளங்கும் பிரணவாகார ஸ்ரீ ரெங்க விமானத்திலே
காவேரி மத்ய தேசே
உபய காவேரி மத்யத்தில் உள்ள தென் திருவரங்கத்திலே
ம்ருது தரபரணி ராட் போக பர்யங்க பாகே
பர ஸூ குமாரமான திரு வனந்த ஆழ்வான் திருமேனி ஆகிற திருப் பள்ளி மெத்தையிலே
நித்ரா முத்ரா பிராமம்
நிதர முத்ரா அபிராமம் -உறங்குவான் போலே யோகு செய்யும் பெருமான் –
ஒரு பாம்பை மெத்தையாக விரித்து அதன் மேல் கள்ள நித்தரை கொள்கின்ற
கடி நிகட சிர பார்ஸ்வவி ந்யஸ்த ஹஸ்தம்
திருவரை யருகில் ஒரு திருக்கையும் திருமுடி யருகில் ஒரு திருக் கையும் வைத்து இருப்பவரும்
பிரம்மா ருத்ராதிகளுக்கும் தலைவர் என்று திரு அபிஷேகத்தைக் காட்டி அருளியும்
திரு முழம் தாள் அளவும் நீட்டி திருவடியில் தாழ்ந்தார்க்கு தக்க புகல் இடம் என்று காட்டி அருளியும்
வலத் திருக்கை பரத்வத்தையும் -இடத்திருக்கை சௌலப்யத்தையும் கோட் சொல்லி தருமே
பத்மா தாத்ரீ கராப்யாம் பரிசித சரணம்
திருமகளும் மண் மகளும் தமது திருக்கைகளினால் திருவடி வருடப் பெற்றவருமான
வடிவிணை இல்லா மலர்மகள் மற்றை நிலமகள் பிடிக்கும் மெல்லடியைக் கொடு வினையேனும் பிடிக்க கூவுதல் வருதல் செய்யாதே -என்னும் அபிசந்தியால்
ரங்க ராஜம் பஜேஹம்
ரங்க ராஜம் அஹம் பஜே -ஸ்ரீ ரெங்க நாதரை நான் சேவிக்கின்றேன்-

———

மேல் நான்கு ஸ்லோகங்களால் தமது ஆற்றாமையை வெளியிடுகிறார் –

கஸ்தூரீகலித ஊர்த்வ புண்ட்ர திலகம் கர்ணாந்த லோல ஈஷணம்
முகதஸ் மேர மநோ ஹர அதர தளம் முக்தா கிரீட உஜ்ஜ்வலம்
பசயத் மானஸ பச்யதோ ஹர ருச பர்யாய பங்கே ருஹம்
ஸ்ரீ ரெங்கா திபதே கதா து வதனம் சேவேய பூயோப் யஹம்–2-

கஸ்தூரீகலித ஊர்த்வ புண்ட்ர திலகம்
கஸ்தூரீ காப்பினால் அமைந்த திவ்ய உஊர்த்வ புண்டரீக திலகம் உடையதும்
கர்ணாந்த லோல ஈஷணம்
திருச் செவி யளவும் சுழல விடா நின்ற திருக் கண்களை உடையதும்
கரியவாகிப் புடை பரந்து மிளிர்ந்து செவ்வரி யோடி நீண்ட அப்பெரிய வாய கண்கள் என்றபடி
முகதஸ் மேர மநோ ஹர அதர தளம்
வ்யாமோஹமே வடிவு எடுத்து புன் முறுவல் செய்து கொண்டு மநோ ஹரமாய் இருக்கின்ற திரு வதரத்தை உடையதும்
முக்தா கிரீட உஜ்ஜ்வலம்
முத்துக் கிரீடத்தால் ஒளி பெற்று விளங்குவதும்
பசயத் மானஸ பச்யதோ ஹர ருச
கண்டார் நெஞ்சை கவரும் அழகு வாய்ந்த
பர்யாய பங்கே ருஹம்
தாமரையே என்னலாம்படி உள்ளதுமான
ஸ்ரீ ரெங்கா திபதே கதா து வதனம் சேவேய பூயோப் யஹம்
ஸ்ரீ ரெங்க நாதருடைய திரு முக மண்டலத்தை அடியேன் மறுபடியும் என்று சேவிப்பேன்

களி மலர் சேர் பொழில் அரங்கத்து உரகம் ஏறிக் கண் வளரும் கடல் வண்ணர் கமலக் கண்ணும்
ஒளி மதி சேர் திரு முகமும் கண்டு கொண்டு என் உள்ளம் மிக என்று கொலோ உருகும் நாளே -போலே அருளுகிறார்

————-

கதாஹம் காவேரீ தட பரிசரே ரங்க நகரே
சயா நம் போ கீந்த்ரே சதமகமணி ச்யாமல ருசிம்
உபாசீன க்ரோசன் மது மதன நாராயண ஹரே
முராரே கோவிந்தேத்ய நிசமப நேஷ்யாமி திவசான் –3-

காவேரீ தட பரிசரே
திருக் காவேரி கரை யருகில்
ரங்க நகரே
திரு வரங்க மா நரரிலே
சயா நம் போ கீந்த்ரே
திரு வநந்த ஆழ்வான் மீது பள்ளி கொண்டு அருளா நின்ற
சதமகமணி ச்யாமல ருசிம்
சதமகன் இந்த்ரன் -இந்திர நீல ரத்னம் போன்ற ச்யாமளமான காந்தியை யுடைய -பச்சை நீலம் கருமை பர்யாயம் –
உபாசீன
பணிந்தவனாகி
க்ரோசன் மது மதன நாராயண ஹரே முராரே கோவிந்த இதி அநிசம் –
மது ஸூ தனா நாராயண ஹரி முராரி கோவிந்த போன்ற திரு நாமங்களை இடைவிடாது சொல்லிக் கொண்டு நின்றவனாய்
கதாஹம் -அப நேஷ்யாமி திவசான் —
அஹம் கதா திவசான் அப நேஷ்யாமி –அடியேன் எப்போது ஜீவித சேஷமான நாட்களை எல்லாம் போக்குவேன்

தெண்ணீர்ப் பொன்னி திரைக் கையால் அடிவருடப் பள்ளி கொள்பவன் -ஸ்ரீ ரெங்கன் -அவனை திரு நாமங்கள் வாய் வெருவி சேவித்து
போது போக்கவும் -காவரிக் கரையில் இருந்து திரு நாமங்களை வாய் வெருவிக் கொண்டு போது போக்கவும் பாரிக்கிறார்

———————————————

கதாஹம் காவேரீ விமல சலிலே வீத கலுஷ
பவேயம் தத்தீரே ஸ்ரமமுஷி வசேயம் கநவநே
கதா வா தம் புண்யே மஹதி புளிநே மங்கள குணம்
பஜேயம் ரெங்கேசம் கமல நயனம் சேஷ சயனம் –4-

காவேரீ விமல சலிலே வீத கலுஷ பவேயம்
திருக் காவேரியிலே நிர்மலமான தீர்த்தத்திலே குடைந்தாடி சகல கல்மஷங்களும் அற்றவனாக நான் என்றைக்கு ஆவேன்
விமல சலிலே -தெளிந்த –தெண்ணீர் பொன்னி –பிரசன்னாம்பு –
தெளிவிலா கலங்கள் நீர் சூழ் -துக்தாப்திர் ஜன நோ ஜனன்ய ஹமியம் -ஆறுகளுக்கு கலக்கமும் தெளிவும் சம்பாவிதமே
வீத கலுஷ -விரஜா ஸ்நானத்தால் போக்க வேண்டிய கல்மஷமும் இங்கே போகுமே –
தத்தீரே ஸ்ரமமுஷி -கநவநே-கதா-வசேயம்
அந்தக் காவேரியின் கரையில் விடாய் தீர்க்கும் எப்போது வசிக்கப் பெறுவேன் சோலைகளிலே
தத் தீரே கநவநே -வண்டினம் முரலும் சோலை மயிலனம் ஆலும் சோலை கொண்டல் மீதணவும் சோலை
குயிலனம் கூவும் சோலை அண்டர் கோன் அமரும் சோலை -போலவும்
கதள வகுள ஜம்பூ –ஸ்புரித சபர தீர்யன் நாளி கேரீ-ஸ்ரீ ரென்ச ராத சதவ ஸ்தோத்ரங்கள் போலேவும்
புண்யே மஹதி புளிநே
புனிதமாயும் பெருமை வாய்ந்த மணல் குன்றிலே -ஸ்ரீ ரங்கத்திலே
மங்கள குணம்
கதாஹம-பஜேயம் ரெங்கேசம் கமல நயனம் சேஷ சயனம்
அரவணை மேல் பள்ளி கொண்டு அருளும் -தாமரை போன்ற திருக் கண்களை உடைய
கல்யாண குண நிதியான ஸ்ரீ ரெங்க நாதரை எப்போது சேவிக்கப் பெறுவேன் –

———————————————-

பூகி கண்டத் வயச சரசஸ் நிகத நீர உபகண்டாம்
ஆவிர்மோத ஸ்திமித சகுன அநூதித ப்ரஹ்ம கோஷாம்
மார்க்கே மார்க்கே பதிக நிவஹை உஞ்சயமான அபவர்க்காம்
பச்யேயம் தாம் புநரபி புரீம் ஸ்ரீ மதீம் ரங்க தாம்நே –5-

பூகி கண்டத் வயச சரசஸ் நிகத நீர உபகண்டாம்
பாகு மரங்களின் கழுத்து அளவாகப் பெருகுகின்றதும் -தேனோடு கூடினதும் சிநேக யுக்தமுமான தீர்த்தத்தை சமீபத்தில் உடையதாய்
வெள்ள நீர் பரந்து பாயும் விரி பொழில் அரங்கம் அன்றோ
ஆவிர்மோத ஸ்திமித சகுன அநூதித ப்ரஹ்ம கோஷாம்
மகிழ்ச்சி உண்டாகி ஸ்திமிதமாய் இருக்கின்ற பறவைகளினால் அனுவாதம் செய்யப் பட்ட வேத கோஷத்தை உடைய
அரு மா மறை யந்தணர் சிந்தை புக செவ்வாய்க் கிளி நான்மறை பாடு தில்லைத் திருச் சித்ர கூடம் -திருமங்கை ஆழ்வார்
தோதவத்தித் தீ மறையோர் துறை படியத் துளும்பி எங்கும் போதில் வைத்த தேன் சொரியும் புனல் அரங்கம் என்பதுவே -பெரியாழ்வார்
மார்க்கே மார்க்கே பதிக நிவஹை உஞ்சயமான அபவர்க்காம்
வழிகள் தோறும் வழி நடப்பவர்களின் கூட்டங்களினால் திரட்டி எடுத்து கொள்ளப் படுகிற மோஷத்தை யுடையதான
ஸ்ரீ ரெங்க திரு வீதிகளிலே முக்தி கரஸ்தம் என்ற படி -கோயில் வாசமே மோஷம் என்றுமாம்
காவேரீ விரஜா சேயம்-வைகுண்டம் ரங்க மந்த்ரம் -ஸூ வாஸூ தேவோ ரங்கேச –ப்ரத்யஷம் பரமம் பதம் -என்னக் கடவது இ றே
பச்யேயம் தாம் புநரபி புரீம் ஸ்ரீ மதீம் ரங்க தாம்நே –
ஸ்ரீ ரெங்க நாதனுடைய அந்தக் கோயிலை அடியேன் மறுபடியும் சேவிக்கப் பெறுவேனோ

—————————————————————————–

ஜாது பீதாம்ருத மூர்ச்சிதாநாம் நா கௌ கசாம் நந்த நவாடி கா ஸூ
ரங்கேஸ்வர த்வத் புரம் ஆஸ்ரிதா நாம் ரத்யாசு நாம் அந்யதமோ பவேயம் –6-

பீதாம்ருத மூர்ச்சிதாநாம்
அம்ருத பானம் பண்ணி மயங்கிக் கிடக்கிற
நந்த நவாடி கா ஸூ-
தேவேந்தரன் உடைய சோலைப் புறங்களிலே
நா கௌ கசாம் -ஜாது -பவேயம் –
அமரர்களில் ஒருவனாக ஒருக்காலும் ஆகக் கடவேன் அல்லேன்
பின்னியோ என்னில்
ரங்கேஸ்வர
ஸ்ரீ ரெங்க நாதனே
த்வத் புரம் ஆஸ்ரிதா நாம்
தேவரீர் உடைய ஸ்ரீ ரெங்கம் நகரியைப் பற்றி வாழ்கிற
ரத்யாசு நாம் அந்யதமோ
திருவீதி நாய்களுள் ஒரு நாயாகப் பிறக்கக் கடவேன் –

இந்திர லோகம் ஆளும அச்சுவை பெறினும் வேண்டேன் -என்றும் எற்றைக்கும் ஏழ் ஏழ் பிறவிக்கும் உற்றோமே ஆவோம் எ
ன்பர் கோஷ்டியில் இவரும் அன்றோ
வாய்க்கும் குருகை திருவீதி எச்சிலை வாரி யுண்ட நாய்க்கும் பரமபதம் அளித்தான் அன்றோ
அஹ்ருத சஹஜ தாஸ்யாஸ் ஸூ ரய –ஸ்ரீ ரெங்க ராஜ ஸ்தவம் –ஸ்ரீ ரங்கத்திலே மனுஷ்ய திர்யக் ஸ்தாவரங்கள் எல்லாருமே நித்ய முக்தர்கள் என்றாரே
ஸ்ரீ ரெங்க நாத ஸ்தோத்ரங்கள் இந்த ஆறும் -மேல் இரண்டும் முக்த கங்கள்-என்பர்

—————————————————————————————-

அசந் நிக்ருஷ்டஸ்ய நிக்ருஷ்ட ஜந்தோர் மித்த்யா அபவாதேன கரோஷி சாந்திம்
ததோ நிக்ருஷ்டே மயி சந் நிக்ருஷ்டே காம் நிஷ்க்ருதிம் ரங்க பதே கரோஷி —

அ சந் நிக்ருஷ்டஸ்ய
உண்மையில் உமது அருகில் வாராத
நிக்ருஷ்ட ஜந்தோர்
ஒரு நாயின் சம்பந்தமான
மித்த்யா அபவாதேன
பொய்யான அபவாதத்தினால்
கரோஷி சாந்திம்
சாந்தி கர்மாவைச் செய்து போரா நின்றீர்
ததோ நிக்ருஷ்டே மயி
அந்த நாயினும் கடை பெற்றவனான அடியேன்
சந் நிக்ருஷ்டே
வெகு சமீபத்திலே வந்த போது
காம் நிஷ்க்ருதிம் ரங்க பதே கரோஷி —
ஸ்ரீ ரெங்க நாதரே என்ன சாந்தி செய்வீர்

கீழே -ரத்யாசு நாம் அந்யதமோ பவேயம் –என்றதாலே இந்த முக்தகமும் இங்கே சேர்ந்து அனுசந்திக்கப் படுகின்றது போலும்

—————————–

ஸ்ரீ ரெங்கம் கரி சைலம் அஞ்சன கிரிம் தார்ஷ்யாத்ரி சிம்ஹாசலௌ
ஸ்ரீ கூர்மம் புருஷோத்த மஞ்ச ச பத்ரி நாராயணம் நைமிசம்
ஸ்ரீ மத் த்வராவதீ பிரயாக மதுரா அயோத்யா கயா புஷ்கரம்
சாளக்ராம கிரிம் நிஷேவ்ய ரமதே ராமானு ஜோயம் முனி

ஸ்ரீரங்கத்தையும், காஞ்சிபுரத்தையும், திருப்பதியையும், அஹோபிலத்தையும், சிம்மாசலத்தையும்(சோளிங்கர்),
கூர்மத்தையும் (ஆந்திரா), புரு‌ஷோத்தமத்தையும், பத்ரிகாசிரமத்தையும், நைமிசாரண்யத்தையும்,
அழகு பொருந்திய துவாரகா பட்டினத்தையும், பிரயாகையையும், மதுராபுரியையும், அயோத்தியையும்,
கயா ஷேத்திரத்தையும், புஷ்கரத்தையும், சாளக்கிராமத்தையும் நேரில் கண்டு
உம் திருப்பாதங்களை சேவிக்கும் பாக்கியத்தை அருள் செய்வீராக.

————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பராசர பட்டர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

திருப்பாவை உபன்யாச சாரம் -2014–ஸ்ரீ உ. வே. கருணாகாராச்சார்யார் ஸ்வாமிகள் —

November 24, 2015

ஸ்ரீ பூமி பிராட்டியே ஆண்டாள்
அமுதனாம் அரங்கனுக்கு மாலை இட்டாள் வாழியே
கோ பூமி வாக்கு -மணம் பூ மாலை -ஸ்ரீ கோதை -பூமியில் இருந்து எடுத்து -வாக்கு வன்மை -ஆரஞ்சு பாசுரங்கள் -அவ்வைந்தும் ஐந்தும் –
ஸ்ரீ வராஹ அவதாரம் -தகுந்த தமப்பனாருக்கு காத்து இருந்தாள்-என்னை ஆண்டாள் -தமிழால் எங்களை ஆண்டாள் ஈச்வரீம் சர்வ பூதானாம் -பக்தியால் கண்ணனையும் ஆண்டாள் -பெரியாழ்வாரையும் ஆண்டாள் -பதிம் விச்வச்ய-அவன் ஒருவனே புருஷோத்தமன் –
ஸ்ரீ பூமிப் பிராட்டிக்கு ஏற்றம்
பூமியை தலையால் தரித்து -விச்வம் பரே-பூமிப் பிராட்டிக்கு ஏற்றம் -சிரசாக கொண்டாடி -வஷஸ் ஸ்தானம் பெரிய பிராட்டியார்
அரவாகி சுமற்றியால் -கம்பர்-மலர்மகள் அறியாள் –ஒ –
ஸ்ரீ ராமன் -சீதா பிராட்டி –ஸ்ரீ வராஹ -பூமி பிராட்டி –ஸ்ரீ கிருஷ்ணன் -நப்பின்னை பிராட்டி
அர்ச்சையில் ஆண்டாள் –எம்பெருமானுக்கே உபதேசம் -கேளாய் -கேட்டியேல் -இத்யாதியால்
வார்த்தை சொல் பேச்சு போன்றவைகள் போலே இல்லாமல் -ஆசார்ய அபிமானமே உத்தாரகம் –
இடம் பெற்றார் எல்லாம் -எனது உடலாய் நிற்க -அஜந -இடர் பிறப்பு இல்லா ஜன்மம் -அன்பால் -அடம் பற்றாம்
-சரணம் -ஆவி -தாது காஷ்டம் -உபலம் -நானே உய்யும் வழி நினைந்து -நயாமி பரமாம் கதி -இடம் பெற்று இயல்வுடன்
வாழ எடுப்பேன் -ஆதி வாஹகர் கையிலே காட்டிக் கொடேன்
ஆசார்யர் ஆழ்வார் கொஷ்டிக்குள் புக தேசிகன் தமிழ் தேசிக பிரபந்தங்களையும் சமஸ்க்ருதம் ஸ்லோஹம் பலவும் அருளிச் செய்தார்
ஸ்காந்த புராணம் -நோன்பு வ்ரதம் உண்டே -காத்யாயாநி வ்ரதம்-ஸ்ரீ மத பாகவதம் -அநுகாரம் -ஆழம் கண்டவர் இல்லை -ராமானுஜரே தயங்கி அருளினார்
நன்னாளால் -ஆலாபனை -காலத்தைக் கொண்டாடுகிறாள் –
பிரதிபத் -பாட்டியம்மை –பிரதமை அத்யயனம் கூடாதே -அன்று படித்த பிள்ளை போலே சீதா பிராட்டி மெலிந்து இருந்தாள் -வால்மீகி
ஹிருதயத்தில் நரம்பு மேலே -புரிதத் என்னும் கொழுப்பு மேலே நாராயணன் மேலே ஆத்மா படுத்து இருக்க -வேதம் எல்லாம் சொல்லுமே –
தேவர் விடியற்காலம் –காலை -4-6- மணி -மார்கழி மாசம் -வில்லங்கம் வராதே -தேவர்களுக்கும் சத்ய குணம் வரும் –
ஸ்ரீ ராமானுஜராக்கிய ஸ்ரீ ஸூ க்தி –நீராடப் போதுவீர் போதுமினோ -ஆசை உடையார்க்கு எல்லாம்
ந கர்மணா -பந்தங்களில் இருந்து விடுபட -ந பிரஜா -பிள்ளையாலும் இல்லை -ந நேன -அம்ருதத் தத்தவம் த்யாகே-த்யாகத்தால் மட்டுமே
–மோஷம் -வேதம் -எண்ண த்யாகம் -இறைவன் இடம் ஒப்படைப்பதே சன்யாசம்
-சரணா கதிக்கு அனைவரும் அந்தணர் அந்தியர் எல்லையில் நின்ற அனைவரும் இறைவனுக்கு –
நேரிழையீர் -நேர் கொண்டு பார்க்க -புன்னகை பொன்னகை விட நல்லதே -ஆத்ம குணங்கள் -நீங்களே ஆபரணங்கள் போலே
-ஸ்ரீ கௌஸ்துபம் புருடன் மணி வரமாக -கார் மேனி செங்கண் கதி மதியம் போல் முகத்தார் -வடிவழகை மறவாதார் பிறவாதாரே –
அன்யாபதேசம் -தப்பாக எதிர்மறை சொல்லாக ஸ்வா பதேசம் –என்பர் -தொன்யார்த்தம்-சரியானதே –
fanatic fan விசிறி போலே பழகிய வார்த்தை
ஆசார்ய வைபவம் -மதி -நிறைந்த -புத்தி நிறைந்த -நேரிழையீர் -தாஸ்ய சின்னம் தரித்து –
தப்பைத் திருத்த கூர் வேல் கொடும் தொழிலன்
அமிர்தம் -வந்த நாள் ஏகாதசி முதலில் ஆலகால விஷம் –அரிசி உணவு கூடாது -11 இந்த்ரியங்கள் துன்புறுத்தாமல் இருக்க ஏகாதசி விரதம் –
மந்த்ரங்கள் -ஏரார்ந்த கண்ணி —
தீக் குறளை-சென்றோதோம் கோள் சொல்வது குறள் -அதனால் தீக் குறளைச் எனபது தப்பாது
ஆந்தனையும் -தனக்கு மிந்தி தர்மம் இல்லை எனபது இல்லை -கொள்வான் கொள்ளும் அளவும் கொடுப்போம்
ஐயம் பிச்சை -உயர்ந்தார்களுக்கு வணங்கி தாம் கொடுப்பது ஐயம் -தாழ்ந்தார் வணங்கி வாங்கி கொள்வது பிச்சை
ஆசார்ய பரம் -வியாக்யானம் -திருக் கல்யாண குணங்களில் படிந்து -வெள்ளத்தரவில் துயில் வளர்ந்த பையத் துயன்ற பரமன் –
இதம் விஷ்ணு விசக்ரமே -ஓங்கி உலகளந்த உத்தமன் -எகா தசி வரதம் -நடுவில் உபத்ரவம் வந்தால் சொல்லும் வேத மந்த்ரம் -வ்ரத லோபம் போக்க மந்த்ரம்
நாராயணன் –பரமன் அடி -உத்தமர் பேர் -அவனை விட திருவடி -அத்தை விட திரு நாமம் உசத்தி சர்வாதிகாரம் என்பதால் –
கட்டிப் பொன் போலே அவன் பணிப் பொன் போலே திரு நாமம்
நீங்காத செல்வம் -கைங்கர்யம் -ஓங்கி உலகு அளந்த -லோகம் உலகம் -பார்த்து பார்த்து சிருஷ்டித்த
-சாஸ்திரமும் லோகம் ஆசார்ய பரம் -மூன்று மழை- ரஹச்ய த்ரயம்-
செந்நெல் -கிருஷிகன் அவனே -அவனுக்கு பயன் படும்படி -ஜீவாத்மா -கயல் கடாஷம் -பொரி வண்டு -பகவானே ஹிருதயத்தில் படிந்து
-சதாசார்யர் -பசுக்கள் போலே வாங்கக் குடம் நிறைக்கும் கியாதி லாப பூஜா அபேஷை இல்லாமல் –
“ஆழி மழை கண்ணா -ஆசார்யன் இடம் சிஷ்யன் நடக்கும் முறை – -அர்ஜுனன் பார்த்த சாரதி இடம் -சிஷ்யன் நான் நல்லது சொல் சொன்னது போலே –
ஆழியுள் புக்கு -இதிகாசங்கள் புராணங்கள் ஸ்ம்ருதிகள் கூடின ஸ்ருதிகள் -கல்யாண குணங்களை அனுபவித்து சொல்லி அருளி
மாயனை -மா நிறம் கறுப்பு என்றுமாம் -கிருஷ்ணன் -கண்ணன் என்னும் கரும் தெய்வம்
வட மதுரை -மன்னு-வட மன்னு மதுரை -ஆல மரம் போலே மன்னி -வடக்கு என்று இல்லை ஆண்டாள் கோபி பாசுரங்களில்
–ஆய்ப்பாடிக்கு வடக்கு இல்லையே மதுரை
ஆயர் பாடிக்கு அணி விளக்கு -இங்கும் அணி என்ற பாடமே மோனைக்கு சேரும் மணி விளக்கு பாட பேதம்
ஆச்சார்யனே மாயன் -கூரத் ஆழ்வானை தர்சித்த மாத்ரமே சத்வ குணம் -தீர்த்தங்களில் வாசம் செய்பவர்
தாயை குடல் விளக்கம் -வேதமே மாதா -வேதங்களுக்கு மங்கள சூத்ரம் கண்ட இன்பம்
10 இந்த்ரியங்கள் எழுப்பி -10 பாசுரங்கள் -என்றுமாம் துன்பற்ற மதுர கவி -வருத்தப்படாத வாலிபர் அன்றோ -அவனே பின்பு போவான் –
ஆச்சார்யவான் புருஷ —ஆசார்ய சம்பந்தமே -அபிமானமே உத்தாரகம் –
பிள்ளாய் -விசேஷணம் இல்லாமல் சம்போதிக்கிறார் முதலில்
எழுந்திராய் -எழு என்னாமல் -எழுந்து இரு -சத்தை பெரு என்கிறாள் -இல்லாவிடில் மூச்சு விட்டுக் கொண்டு இருக்கும் பிணமே
-இத்தால் பெரியாழ்வார் விஷ்ணு சித்தர் -எழுப்பப் படுகிறார் -அரவத் தமளி யோடும் உள்ளம் புகுந்தான்
-வெள்ளத்தரவில் -ஹரி என்ற பேர் அரவம் நாரணன் என்ற அன்னை நரகம் புகாள்-என்றாரே –
ஆனைச் சாத்தான் -ஆனை மேல் இருக்கும் சாஸ்தா -ஐயப்பன் போலே
காசு பிறப்பும் -பிறந்த வீட்டு புகுந்த வீட்டு ஆபரணங்கள் -இரண்டு திரு மாங்கல்யம் -கலகலப்ப கை பேர்த்து
வாச நறும் குழல் -இரண்டு விசேஷணங்கள்–செண்பக பூ வாசனைக்கு வண்டு வராதே –
பாண்டியன் -நக்கீரன் -குழலுக்கு வாசம் உண்டா இல்லா சர்ச்சை -தீர்க்க அந்தரி சூட்டக் கனாக் கண்டேன் –குழலுக்கு வாசம் உண்டு
என்று அரங்கனே சொல்லி சூடிக் கொள்வான் என்று காட்ட ஸ்ரீ வில்லிபுத்தூர் திருவவதரித்து
நாராயணன் -நாராயணன் மூர்த்தி -நாற்றத் துழாய் முடி நாராயணன் மூன்றும்
உலகு அளந்த உத்தமன் ஒவ் ஒரு பத்திலும் உண்டு
கோவிந்தா -மூன்றும் இறுதியில் அன் மொழித் தொகை பூங்குழல் –நாரங்களுக்கு அயனம் -தத்புருஷ -நாராயணன் மூர்த்தி
பஹூ வ்யூதி சமானம் -ஜகத்தை யார் குருவாக கொண்டவரோ ஜகத் குரு -கதை பஹூ விஹூதி சமாசம் –
கேசவன் -மூன்று வித அர்த்தங்கள் -உண்டே -விரோதி நிரசன் -அழகிய கேசம் -பிரம்மா ஈசன் இருவருக்கும் ஈசன் –
குமார குருபரர் காப்பு பருவம் பாட – -பைம் தமிழ் பின் சென்ற பச்சைப் பசும் கொண்டலே -மீனாட்சி பிள்ளை தமிழ் –
-ஆழ்வார் பின் சென்ற மேக வண்ணன் -யதோத்த காரி -சொன்ன வண்ணம் செய்த பெருமாள் -வேக வதி அணை-வேகா அணை -மருவி வெக்கா ஆயிற்று
கா விரி கா விரித்த சோலைகள் விரித்த வேத புருஷன் -சொல்லும் -உத்தான சயனம் -ஆராவமுத ஆழ்வான் -வாழி கேசனே-
பேய் பெண்ணே -பேய் ஆழ்வார் பூதத் ஆழ்வார் -இருவரும் சேர்ந்ததால் ஆழ்வார் பேட்டை
காசும் பிறப்பும் -வெண்பா வில் அருளினார் கல கலப்ப -விருத்தம் -பூநிலாத ஓசை உண்டே -நாயகப் பெண் பிள்ளாய் -பிரான் –
இன்றாக நாளையாக -இனி சிறிது நின்றாக -நின் திருவருள் என்பாலதே -நன்றாக நான் உன்னை அன்றி இலேன் கண்டாய்
-நாரணனே -நீ என்னை அன்றி இலையே -வாழி கேசனே -கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ -தேசமுடையாய் சக்கரத்தாழ்வார் அம்சம் அன்றோ
போவான் போகின்றாரை -ஸ்ரீ பகவத் கீதை சாரம் -போக வேண்டும் ஒரே நோக்காக -மூன்று வித த்யாகங்கள் உண்டே
தேவாதி தேவனை சென்று நாம் சேவித்தால் –ஆவா என்று ஆராய்ந்து -பொய்கை ஆழ்வார் -தமர் உகந்தது எவ்வுருவம்
-அவ்வண்ணம் ஆழியானாம்-பாசுரம் ஒட்டி-அஹம் பிரஹ்மாஸ்மி—கண்டவர் விண்டிலர் விண்டவர் கண்டிலர் –
உபநிஷத் சித்தம் -பர ப்ரஹ்மம் உருவம் இல்லாமல் இருக்க முடியாது முமுஷூக்கள் உருவம் வேண்டாம் என்று நினைத்தால் இருக்கலாம் –
த்ரவம் பாத்ரம் கொண்ட உருவை கொள்வது போலே இல்லை –
மாமான் மகளே -கோபி பாவம் மறந்து தானான தன்மையில் கோபிகளில் ஒருத்தி சம்பந்தம் கொள்ள ஆசைப் படுகிறாள்
பிரபன்னன் தேக யாத்ரைக்கு கரைந்தான் ஆகில் நாஸ்திகனாம் அத்தனை இறே எம்பெருமானார் ஸ்ரீ ஸூ கதி -தூ மணி மணி மாடம் –நாச்சியார் கோயில் –
கோ செமபியான் சோழன் -யானை சிலந்தி பிறந்த -நாயன்மார் அப்புறம் -யானை நுழையாத கோயில்கள் கட்டி -70 சிவன் கோயில்கட்டி பெரிய புராணம் –
சிவ பெருமானே அஷ்டாஷரம் மந்த்ரம் உபதேசித்து -மகா மகன் -மகளே வஞ்சுள வல்லி தாயார் சுகந்த கிரி தூபம் கமழ-சுற்றும் மூர்த்திகள் ஜ்வலிக்க
-சுற்றும் விளக்கு -தட்டினால் திறக்கப் படும் இல்லை திறந்து வைத்து இருக்கும் வந்தால் போதும்
மாமீர் –தேவிகாள் -பூஜா வாக்கியம் போலே அன்னை தயையும் -அடியாள் பணியும் -அலர் பொன்னின் அழகும்
-புவி பொறையும் -வன முலை வேசி -போலேயும் விறல் மந்த்ரி மதியும் பேசில் இவை உடையாள் பெண்மணி
விஷ்ணு சஹச்ர நாமம் கண் கண்ட மருந்து -கிழம் படுத்து கிறது -முக்கூர் -அரங்கனே பழைய பெருமாள் -என்பதால் -செல்லப் பெயர் புருஷ புராணா –
திருக் கோபுரம் கட்ட -ஆணை -மூன்று வேளையும் சஹச்ர நாமம் அர்ச்சனை செய்து -சித்தி -அடைந்ததே
மா மாயன் மாதவன் வைகுந்தன் என்று என்று –
அவதூறு சொல்லாமல் ஊமை
ஸ்வ தோஷங்கள் கேட்காமல் செவிடாக
அனந்தல் -சோம்பல் -சம்சார விஷயங்களிலே
ஏமப் பெரும் துயில் மந்தரப் பட்டாளோ -பகவத் விஷயம் ஆழம் கால் பட்டு
பூதத் ஆழ்வார் -இது என்பர் -பேர் சாத்தி பேர் -ஓதுவதே மாதவன் பேர் சொல்வதே வேதத்தின் சுருக்கு -திரு நாமமே வேதம் என்று அருளி –
நோற்று ஸ்வர்க்கம் -கிருஷ்ணன் திருமாளிகை அருகிலே -உள்ள கோபி –தேற்றமாய் வந்து -மாடி படியில் உருண்டு வராமல்
கதவை திறக்க விடிலும் வாயைத் திறக்கக் கூடாதோ
நம்மால் -போற்றப் பறை தரும் புண்ணியம்
நம் மேல் -நமது மேலே வ்யாமோஹம் கொண்டவன் –
மோஹம் –ஆ மோஹம் வ்யாமோஹம் -அன்பு –எல்லா திக்குகளிலும் -அதுக்கும் மேலே –ஏக புத்ரா அபிமாநாத் –
பிரஜாபதி பிரஜா ஸ்ருஷ்டா அனுபிரவேசேத் -ப்ரேணா -ப்ரேம்ணா ந விஜுகிப்சதே -வேதம் சொன்னதையே ஆழ்வார்கள்
மூன்றாவது நாராயணன் -நாற்றத் துழாய் முடி நாராயணன்
நாரங்களை உடையவன் இவனும் -மூன்றாவது நாராயணம் திருப்பாவையில் இது –அவனுக்கு உள்ள கல்யாண குணங்கள் இதில் சொல்கின்றது -ரிங்ஷயம் -நர -அழியாத பொருள்கள் – அதுக்கு அடிப்படை நம்மால் -நமது மால் -போற்றப் பறை தரும் புண்ணியன் -கோயில் சாந்து முப்பது குளிக்கும் ஆகுமே
துளவ நாறிடம் சேது தரிசனம் செய்தான் -வில்லிபுத்தூரார் -அர்ஜுனன் யுகம் தாண்டி அனுபவித்தானாம் -நாற்றத் துழாய் –
அஜாயமான பஹூதா ஜாயதே -அவதாரம் -கூற்றத்தின் வாய் வீழ்ந்த கும்ப கர்ணன் -போற்றப் பறை தரும் புண்ணியன்
தானே -இங்கு messenger மற்றைய சம்ப்ரதாயம் -படகில் விழுந்த குழைந்தையை காக்க அக்பர் குதித்து உணர்ந்தார் இந்த அன்பை
பீர்பால் காட்டிக் கொடுத்து -தான் ஆடா விடிலும் தசை ஆடுமே
வீழ்த்தப் பட்டான் இல்லை வீழ்ந்த -இவனே வீழ்ந்தான் -பேர்கள் ஆயிரம் உடைய வல்லரக்கர் புக்கு அழுந்த தயரதன் பெற்ற மணி மகரத் தடாகம்
பேய் ஆழ்வார் -வாசல் திறக்காத ஆழ்வார் -துழாய் -வெற்பு என்று வேங்கடம் பாடும் -நாயகி பவம் -ஒரே பாசுரம் -தாய்
– ஈன துழாய் கற்பு என்று சூடும் -பேய் ஆழ்வார் இதில் இருந்து தான் தொடக்கம் தேற்றமாய் 14 பாசுரங்கள் துழாய் பற்றி மூன்றாம் திருவந்தாதியில் உண்டே
உடம்பு அழகு -சொல்லாத ஐந்தும் -ஞான இந்த்ரியங்கள் -மேலே ஐந்தும் கர்மேந்த்ரியங்கள் -பொற் கோடியே -ஸ்வர்ண லதா -ருக்மிணி -தங்கத்தாலே –
கறவை -பொதுவான -ஆடு மாடு அனைத்துக்கும் கற்றுக் கறவை -கன்றுகள் உடன் கூடிய கறவை கணங்கள் -கன்றுகளான கறவைகள் -கிருஷ்ணன் திருவவதரித்த பின்பு வயசு குறையும் – செற்றார் திறல் அழிய -அவர்களை அழிக்க இல்லைஅவர்கள் திறல் மட்டும் அழிக்கவே
-பொம்மணாட்டி பொம்மை போலே புருஷனை ஆட்டி வைக்க அந்த மண்ணுக்கு இந்த மண் போறாதோ – மாறனேர் நம்பி இவரே மாறனுக்கு நேர் என்று ஆளவந்தார் அருளிச் செய்தது -பிராக்ருத சரீரத்துக்கு பிராக்ருத பொருள்களே போதுமே என்றவாறே
பெரியாழ்வார் திருமழிசை பொய்கைஆழ்வார் பூதத் தாழ்வார் பேய் ஆழ்வார் -நம் ஆழ்வா-
குற்றம் ஓன்று இல்லாத கோவலர் -நம் ஆழ்வார் -தனிச் சிறப்பு -உண்டே வேதமும் கற்று கறவை இளமை குன்றாமல் இன்றும் இருக்கும்
-வசிஷ்டர் அருளிச் செய்த ஸ்வரம் இன்றும் உண்டே -வேத விருத்த குத்ருஷ்டிகள் பாஹ்ய -திறல் அளித்தாரே இல்லை என்றாலும் இருப்பதையே சாதிக்குமே
-no where -now here -நம் ஆழ்வார் திருமேனியையும் வர்ணிக்கிறார் இதில் -சரீரத்துடன் கூட்டிச் செல்ல ஆசைப் பட்டானே .-
ஆசார்யர் -ஆழ்வார் இரண்டும் இவரே -சுற்றத்தார் எல்லாரும் -அத்யயன உத்சவம் -முகில் வண்ணன் அடி மேல் சொன்ன ஆயிரம் -அடியை சேர்ந்து உய்ந்தவர்
பேர் இன்ப வெள்ளம் –திரு வள்ளுவர் -வீட்டுப்பால் -நம் ஆழ்வார் இடம் விட்டு -அறத்துப் பால் பொருள் பால் காமத்து பால் மட்டும் பாடி –
தாமரைக் கண்ணர் உலகு -பேரின்ப வெள்ளம் -வள்ளுவர்-செல்வப் பெண்டாட்டி -அதுவும் நம் விதி வகையே -கேசவன் தமர் -ஆழ்வார் சம்பந்தத்தாலே -நாமும் பேறு அடைகிறோம்
பெருமாள் சீதா பிராட்டி திருக் கல்யாணம் காணக் கண் கோடி வேணும் இந்த்ரன் ஆயிரம் கண் கொண்டு பார்க்க -கிழிந்த வஸ்த்ரம் இந்த்ரன் என்பாரே
மச்சினன் இல்லாத குறை -அதனால் மச்சினன் உள்ள பெண்ணை தேடி திருக் கல்யாணம் -நற் செல்வன் தங்காய்-
நற் செல்வன் -லஷ்மணன் –மனத்துக்கு இனியான் -பெருமாள் –பெருமாள் முடி இழந்தார் லஷ்மணன் முடி சூடினார்
-தோன்றி மாயும் செல்வம் இல்லையே கைங்கர்யம் -கருணா காகுஸ்தன் -சினத்தினால் தென்னிலங்கை கோமானைச் செற்றான்
நீலன் -அக்னி பகவான் பிள்ளை -அக்னி அஸ்தரம் மாலையாக விழ –ஆஞ்சநேயர் கண்டு பூர்வ விரோதம் -தவந்த யுத்தம் -கொண்ட சீற்றம்
மந்த்ரம் -சொல்லி -தோள் மேல் ஏற்றிக் கொண்டு -திருவடி -பூர்வ வைர மனுஸ்மரன்-வில்லங்கமான -என்று திருவடி நலியப் புகுந்தான் –
கோப வசம் ஆனார் பெருமாள் —தூக்கின கரங்களுடன் –வெறும் கையேடு இலங்கை புக்கான் -பழி பின் தொடர -கம்பர் -ராம பானம் நினைந்தது அழுதான் –ருசிகள் சாபம் போலே இந்த சாபம் -பானம் என்றவாறே
வீர ராகவன் திரு நாமம் சாத்தியதே ராவணன் –
நமஸ்தே ருத்ர மன்யவே -வேதம் -ருத்ரனே உனது சினத்துக்கு வணக்கம் –சினத்தினால் வென்றான் -வேத மந்த்ரம்
இங்கு இரவிலும் இட்டிலி கிடைக்கும் விநியோக பிரயோக வாசகம் -ருத்ரன் அக்னி -சிவ ஆகமங்களில் சிவ பரம் -ராமன் தாத்பர்யார்த்தம்
நமஸ்தே ஹஸ்த தன்வனே -வில் கை கொண்டு முதலில் சொல்லி ஸ்ரீ ராம பெருமான் கதை கேட்டு உருகி அழுவதால் ருத்ரன் என்றதும் பெருமாள் என்பதே
இதனாலே வேதம் அனைத்துக்கும் வித்து –
மிருத சஞ்சீவனம் ஸ்ரீ ராம திரு நாமம் பட்டர் –
அன்று சராசரங்களை வைகுந்தத்து ஏத்தி தில்லை நகர் திரு சித்ர கூடம் தன்னுள் -நலம் திகழ் நாரணன் அடிக் கீழ் நண்ணுவாரே –
உத்சவர் அமர்ந்த திரூக் கோலம் -இத்தையே விரித்து கம்பர் அருளி 10000 பாசுரங்கள் –தீஷிதர் அங்கீகாரம் பண்ண -அரங்கேற்றம் -3000 பேர் கூட்டம் —
பாம்பு கடித்த குழந்தை பிழைக்கும் -நாக பாச படலம் -வ்ருத்தாந்தம் –குலசேகர ஆழ்வார் எழுப்பப்படுகிறார்-மனத்துக்கு இனியான் என்பதால்
ராமானுஜரையும் குறிக்கும் -ஸ்ரீ பெரும் புதூரில் இரண்டு தடவை சேவிப்பார்கள் இந்த பாசுரத்தை
புள்ளின் வாய் கீண்டவன் -ஜடாயுவை கொன்ற -இவன் தான் ஜடாயுவைக் கொன்றான் என்ற மந்த்ரம் லஷ்மணன் சொல்லி அனுப்பி –
நாட்டில் பிறந்து படாதன பட்டு மனிசர்க்காய் -என்றும் வியாக்யானம் ராம கிருஷ்ண கோஷ்டிகள் என்றும் வியாக்யானம்
அரக்கன் என்பதால் ஹிரன்ய கசிபு இல்லை அசுரன் தானே அவன் -பொல்லா அரக்கனை -நல்ல அரக்கனும் உண்டே -நல்ல அசுரனும் உண்டே
-விலோசனன் பிரகலாதன் பிள்ளை பொல்லா அசுரன்
கிள்ளிக் களைந்தானை -அங்குள்யா அக்ரேன இச்சன் ஹரி கணேஸ்வர -கபி சப்தம் இல்லை -ஹரி -குரங்கு சிங்கம் மான் தவக்களை விஷ்ணு –
நான் சிங்கமாக கிழிந்த அவனே இங்கு ராவணன் -லஷ்மி நரசிம்ஹன் மடியில் தான் மார்பில் இல்லை
லஷ்மி -ஹிரண்யனை திருத்திப் பணி கொண்டு இருக்கலாமே -இத்தை மனசில் வைத்து கிள்ளிக் களைந்தானை -அபாய பிரதான சாரம் நகங்களே பஞ்சாயுதங்கள்-சர்வ பிரகரனாயுதம் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் -நகமே ஆயுதம் -சங்கரர் பட்டர் வியாக்யானம்
மீண்டும் புள்ளும சிலம்பின காண்-எழுந்த பறவைகள் அங்கே– இங்கு வந்து குட்டிகளுக்கு ஊட்டி
குடைந்து நீராட நடைக் கிணறு ஸ்வாமி தாம்பரத்தில் கட்டிக் கொண்டாராம்
போதரிக் கண்ணினாய் -தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் -பூம் தோட்டம் வைத்து புஷ்ப கைங்கர்யம்
மேம் பொருள் –சோம்பரை உகத்தி போலும் -கள்ளம் தவிர்ந்து கலந்தேலோ -ஸூ சகமாய் தெரிவிக்கும் பாசுரம் –
பங்கயக் கண்ணானை பாடேலோ ரெம்பாவாய் -சேர்த்து உங்கள் -புழக்கடை தோட்டத்து -வாவியுள் –
ராமானுஜர் -இளைய -கப்யாசம் புண்டரீகாஷம் -யாதவ பிரகாசர் -சாந்தோக்யம் –
வெள்ளைத் தாமரைப் பூ புண்டரீகாஷம் -கப்யாசம் கபி ஆசனம் -வாவியுள் பங்கயக் கண்ணன் -கபி சூர்யன் தண்ணீரை உறிஞ்சுவதால் -உதய சூர்யன் கிரணம் பட்டு -கம் -தண்ணீர் அத்தை இருப்பிடமாக -வாவியுள் பங்கயம் –கபி தண்டு தண்ணீரை உறிஞ்சும்
-இள நீரை வேறு பாத்ரம் விட்டு குடிக்கக் கூடாது சாஸ்திரம் பூசணிக்காய் காம்புடன் இருந்தால் கெடாமல் நிறைய நாள் இருக்குமே
நங்காய் -நானா காய் -நாணாதாய் நாராயணா என்னாத நா என்ன நா -வேதத்தில் புண்டரீகாஷம் செந்தாமரை -திருப் பாண் ஆழ்வார் -எழுப்பப் படுகிறார் –
எல்லே –இந்த கோபியை எழுப்ப வேண்டாமே உள்ளே கோபி பாடுகிறாள் சப்தம் கேட்கிறதே –
இளம் கிளியே -கொண்டாடுகிறாள் -சங்கோடு சக்கரக் கையன்னை –பங்கயக் கண்ணனை அனுபவிக்க
சில் என்று அலையாதீர் -நாட்டியமே நடக்கிறது இங்கே
நங்கைமீர் போதருகின்றேன் -என்ன வார்த்தை மரியாதை உடன் -பேசி -அனைவரும் ஸ்வாமி நம் சம்ப்ரதாயம்
நானே தான் ஆயிடுக –
பரதன் -தரித்தவன் -பாரம் சுமந்தவன் -நானே தான் ஆயிடுக சொல்லிக் கொண்டவனே
நகை போட்ட குரங்கு போலே கூனி போக -கைகேயி -கூரிய மதி சத்ருக்னன் -இவளே காரணம் -சொல்லிக் கொடுக்க –
ந மந்த்ராயா-ந ச மாதுரசய கைகேயி தசரததன் ராகவன் மேல் தப்பில்லை மத பாபமே –பிறந்தே இல்லா விடில் –
செய்யாத குற்றம் ஏற்றுக் கொண்டதால் பரதன் –இத்யாதி
இன்றைய இராமாயண த்தில் இந்த ச்லோஹம் இல்லை
முன்பு இருந்து இருக்க வேண்டும் –
கோ மூத்திரம் -ஆகாரம் பிராயச்சித்தமாக கொண்டு இருட்டிலே குளித்து -நானே தான் ஆயிடுக –
எல்லே -இளம் கிளியே வாய் விட்டு பாராட்டி ஆரம்பிகிறார்கள்
ஸ்தவ்ய ஸ்தவ பிரியன் அவனுமே
திருப்பாவை யாகிறது இப்பாசுரம் -பாகவதர் நிஷ்டை இது -சிற்றம் சிறு காலை பகவத் நிஷ்டை –
சத் சங்காத் பவ –ஒல்லை நீ போதராய் -சீக்கிரம் வா –
நீ மட்டும் ஸ்வயம் பாகம் பண்ணுகிறாயோ -உனக்கு என்ன வேருடையாய்
பரிஜனங்களை சேவிப்போம் -புறப்பாட்டில்
குட நீர் காலில் சேர்ப்பார்கள் திரு குடந்தை ஆண்டான் திரு பாதம் தாங்குவார்களை
இவர்கள் அவள் ஸ்பர்சம் ஆசைப் படுகிறாள்
நீயே எண்ணிக் கொள் போந்து எண்ணிக் கொள்
சேஷ பங்கம் -பூபாரா -விக்ரமன் -இந்த்ரன் -ஊர்வசி -கொண்டு விட்டு -படாத பாகம் வீண் என்றபடி
வல்லானை யைக் வேற்றுமை தொகை -கொன்றானை -மாயனை பாடு -பகவாத் திரு நாம சங்கீர்த்தனம்
அத்தானை கொன்றான் அத்தானை காத்தான்
ஆனையை கொன்று ஆனையைக் காத்து
குரங்கை -அசுரனை -அரக்கனை இப்படி பேசி -கேநோ உபநிஷத் கதை -யட்ஷன் -அக்னி புல்லை எரிக்க முடியாமல்
-வாயு அசைக்க முடியாமல் -இந்த்ரன் போக -அவன் கொடுத்த சக்தியால் வென்றீர் பார்வதி உபதேசம் –மாயாவியைப் பாட வேண்டும்
பகவத் விஷயத்தில் ஈடு பட்டு பாராட்ட வேண்டும்
அடியவர்களை உபசரித்து
மரியாதை உடன் பொறுத்துக் கொண்டு பதில் கொடுத்து
வசவையும் பாராட்டி -வசவும் ஆசீர்வாதம்
நானே தான் ஆயிடுக
அடியவர் சேர்வதில் தவறை
வேறு உடைமை இல்லாமல் முன்னோர் வலி
எல்லாரையும் சேர்ந்தே இருக்க ஆசை கொண்டு
ஒருவரையும் விடாமல் சேர்த்து கொண்டு
மாயனைப் பாடி கீர்த்தனே யாத்ரை -11 பாடங்கள் இந்த பாசுரத்தில் -சமாப்ததிக தரித்திரன் ஒப்பில்லாத அப்பன் -ஒத்தார் மிக்கார் இலையாய மா மாயன்
லவண வர்ஜிதம் -உப்பு இல்லாத -ச்லோஹம் -எல்லாம் ஆண்டாள் போட்ட பிச்சை –திருத் தகப்பனார் அருளிய ஸ்லோஹம்
திருமங்கை ஆழ்வார் இத்தால் உணர்த்தப் படுகிறார்
குமுத வல்லி நாச்சியார் இன்பம் விடாமல் மால் பால் மனம் வைத்து ஆழ்வார் ஆனாரே திரு மங்கை ஆழ்வார் -அழகையே உபாசித்து -இளம் கிளியே -ஆழ்வார் தான் கேட்ட அஷ்டாஷரம் -நன்று நான் உய்யக் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம் பத்து தடவை அருளி -மீண்டும் நறையூர் -நாமம் சொல்லில் நமோ நாரணமே -நானும் சொன்னேன் -இளம் கிளி போலே பாடி
மென் கிளி போல் மிழற்றும் என் பேதையே தானே சொல்லிக் கொண்டார்
உனக்கு என்ன வேறு உடையை -வாழ்ந்தே போம் -வன் தொண்டர் -தடம் பொங்கத் தங்கோ போங்கோ –எல்லாரும் ஒக்க –ஈதே அறியீர் உரிமையால் பேசி –
எல்லாரும் போந்தாரோ கடைசில் வந்த ஆழ்வார் -பொன்னானாய் –என்னானாய் என்னானாய் –தென்னானாய் –முன்னானாய் –முதலானாயே -வல்லானை கொன்றானை எத்தனை யானை -ஸ்ரீ ரெங்க மங்கள மணிம திசை நோக்கி -தினம் சொல்லிக் கொள்கிறோம் –
அனைவருக்கும் பொதுவாக ஆழ்வார் அருளி -வியாக்யானங்களில் சில வற்றைக் காட்டி அருளினாலும்
தேவதா ஸார்வ பௌமனாய் இருந்தாலும் பின்னானார் வணங்கும் சோதி -யாய் -ஆனாயே
தோளுக்கு இனியானை ஆழ்வாருக்கு கொடுத்து தான் கைத்தல சேவை யால் உள்ளே எழுந்து அருளி
தை ஹஸ்தம் வரை அத்யயன உத்சவம்
மஞ்சள் குழி உத்சவம் -தனது உத்சவத்தை ஆழ்வாருக்கு கொடுத்து -மன்னி யாற்றில் அத்யாபகர்கள் இறங்கி நாச்சியார் கோயில்
நிலையாக நின்றான் நீள் கழலே -தனக்காக திருவடி கொடுத்தவனை நோக்கி சேவித்து இன்றும் நடக்கும் -இவர் செய்த மாயங்கள் பல உண்டே
நாயகனாய் நின்ற -நந்த கொபனுக்கும் -வாசல் காப்பானுக்கும் -கோயில் காப்பானுக்கும் -நந்த கோபன் மகனுக்கும் –
நென்னலே செப்பேலோ ஆனைச்சாத்தன் -கன்னட தெலுங்கு மலையாள பாஷைகள் உண்டே –
துயில் எழும் போதைக்கு அழகை அனுபவிக்க வேண்டும் என்கிறார்கள் –
அம்பரமே -தண்ணீரே -அனேகமாக jan முதல் நாள் வரும் –
கேசவ மாதம் மார்கழி -நாராயண மாசம் தை -ஆகம சாஸ்திரம் –
தா -தமயத்வம் -அடங்கி வாழ வேதம் சொல்லிக் கொடுக்கும் -தேவர்களுக்கு பிரம்மா உபதேசம்
தா -தயைத்வம் கருணை காட்ட -அசுரர்களுக்கு உபதேசம்
மனுஷ்யர்களுக்கு -தா -தத்த கொடுங்கோள் -கொடுக்கும் மனஸ் வேண்டும்
நாமே மூவரும் மூன்று தன்மைகளும் வேண்டும் -சாத்விக ரஜஸ் தமஸ் மூன்றும் உண்டே –
இடி தான் தாதா ஓசை இன்றும் சொல்லி -வேதம் சொல்லும் இந்த கதை -இந்த பண்புகளே வேண்டும்
ஆறு கோரிக்கை -வேதா சந்தத்தி -வேதமும் சந்ததியும் வளரட்டும் ரேவண -தாதா அபிவருத்தி –கேட்காமல் கொடுப்பவர் வாழ்க
தபஸ் பலன் -யாசிதா வேண்டும் -நாங்கள் யாசகம் பண்ணக் கூடாது -கொடுக்கும் நிலை வேண்டும் அன்னம் நிறைய வேண்டும்
அதிதிகள் வேண்டும் -இத்தை காட்டி அருள அம்பரமே -இத்யாதி
இட்டுப் பிறந்தவர் -அம்பரமே தண்ணீரே -ஏவகாரம்
வெந்நீர் மேலே குளிர்ந்த தண்ணீரை விட கூடாது -சாஸ்திரம் -குளிர்ந்த நீர் மேலே வெந்நீர் விட வேண்டும்
42 பட்டம் ஜீயர் உபன்யாசம் -ஐயமும் பிச்சையும் -வேஷ்டி கேட்டு வாங்கி -கொடுத்தாச்சா -பைத்தியம் -லஷ்மி நரசிம்ஹர் சொத்து
-உபன்யாசம் இனி இல்லை கொடுத்த பின்பே தொடரும் -80 வருஷம் முன்பு முக்கூர் ஸ்வாமி இத்தை காட்டி அருளி
கொம்பனார் -கொம்பின் கொழுந்தே -சர்வம் கல்விதம் ப்ரஹ்மா-பிறர் துக்கம் கண்டு துடித்தால் ஸ்ரீ வைஷ்ணத்வம்
தர்ம தேவதை உருகி -கங்கை தர்ம த்ரவம் என்று பெயர் -கங்காதரன் –ஸ்ரீ பாத தீர்த்தம் உலகு அளந்த உம்பர் கோமானே –
உறங்கேலோ ரெம்பாவாய் -வ்யாவ்ருத்தம் -இது மட்டும்
ஏல் எடுத்து இதில் மட்டும் –மற்றவை ஏலோரெம்பாவாய்
கிருஷ்ணன் படுக்கையே பல ராமன் -கௌசல்யா சுப்ரஜா ராமா -லஷ்மணன் இல்லையே அங்கும் படுக்கை
இங்கும் படுக்கையை இழுக்க சொல்லி பாடுகிறாள்
மந்த்ரம் சொல்லிக் கொடுத்த ஆசார்யன் -நந்த கோபன்
மந்த்ரம் -யசோதா மந்த்ரம் மாதா அன்று நான் பிறந்திலேன் -பிறந்த பின்பு மறந்திலேன்
தெய்வம் -பாகவத சேஷத்வம் நான்கும் -யாதாம்யார்த்தம் -உற்றதும் உன் அடியார்க்கு அடிமை நான்கும் காட்டும் பாசுரம் –
உந்து மத களிற்றன் -நப்பின்னை பிராட்டிக்காக தனியாக சொல்லும் பாசுரம் நாலாயிரத்திலும் -இது ஒன்றே
பிராட்டி தத்வம் முழுவதும் இதில் –உ -உயிர் –கு க் உ –குத்து விளக்கு –மு ம் உ முப்பத்து மூவர் –மூன்றிலும் உகாரம் -உண்டே
ராதா -14 வயசு கண்ணன் 2 வயசு -யதாவப்யசம்
இடுப்பில் வைத்து -ராதே கிருஷ்ணா கத்தி ஓட -நந்த கோபர் -யமுனைக் கரைக்கு –
தோப்பில் வெளிப்பட -ஜெயா தேவர் -18 வயசு யுவாகா மாறி -நம் போலே வயசு இல்லையே இஷ்டமான சங்கல்பம் படியே அவனுக்கு -நமக்கு கர்மம் அடி -ராதா கிருஷ்ணனுக்கு இஷ்ட க்ருஹீஹம்
கும்பன் -யசோதை பிராட்டி சகோதரன் -மிதிலை அருகில் -நவமி -குழந்தை நப்பின்னை பின்னால் பிறந்ததால் -ஏழு எருதுகள் -கம்சன் ஏழு அசுரர்களை அவற்றில் செலுத்து -அவற்றை அடக்கி -நீளா தேவி -ஒரு கொம்பை அடைய இந்த கொம்புகளில் விழுந்து
யதவாப்யாசம் -அப்பைய தீஷிதர் வியாக்யானம் -ஹரி வம்ச கதை -இங்கேயே வளர்ந்தாள் என்பதற்கு பெரியாழ்வார்
-நப்பின்னை காணில் சிரிக்கும் -புழுதி அளைந்த பொன் மேனி– மேனி பொன் மேனி புழுதி அளைந்த -பொன் மேனி காணப் பெரிதும் உகப்பேன்
உடல் இருக்க தலை குளிக்கும் -பேராயன் அதுவும் மாட்டான் -புனிதன் அன்றோ இவன்
கோபிகள் தண்ட காரண்ய ரிஷிகள் -நப்பின்னை கண்ணன் சாஷாத் மிதுனம் என்று அறிந்தவர்கள் -கட்டித் தழுவ ஆசைப் பட்டார்கள்
-ரிஷி -பாப்பான் -பார்ப்பார்கள் -ரிஷி தர்சநாத் -மற்றவர் பார்க்க முடியாதத்தை பார்ப்பார்கள்
பார்ப்பனன் -த்விஜன் இரண்டு பிறவி -முட்டை குஞ்சு இரண்டு -தவிச பறவை -பல்லும் இரண்டு தடவை -த்விஜற பல்லுக்கும் சமஸ்க்ருதம்
மந்திர ஜன்மம் -காயத்ரி உபதேசம் –உண்ட பின்பே -குமார போஜனம் உண்டே
அஷ்டாஷர -சமாஸ்ரயணம் செய்ய வெறும் வயிறு தேவை
பல்லும் பிராமணனும் -பொதுவும் -ஓன்று கொண்டால் விடாதவை -ரகசியம் சொல்ல வெளி விடுவான்
பார்ப்பு -பறவை குஞ்சு -பார்ப்பு அனன் -குஞ்சு போலே ஜடாயு பார்த்தார் -ராம லஷ்மணர்களை
பல ராமன் சொல்ல நப்பின்னை பிராட்டி இடம் சென்றார்கள் கோபிகள்
சிபார்சு -ஸ்ரீ பார்ச்வம் -அவள் பக்கம் புருஷகாரம்
ஆகார த்ரயம் -பிரபன்ன பாரிஜாத ஸ்லோஹம் நடாதூர் அம்மாள் பேரன் அருளிச் செய்தது
புருஷகாரம் உபாயம் உபேயம் மூன்று பாசுரங்கள் ஜனகன் பெண் சொல்லிக் கொண்டாள் சீதா பிராட்டி ராவணன் கபட ஜாதி
இந்த தப்பாலே தூக்கிப் போனான்
தசரதர் நாட்டுப் பெண் என்றாள் திருவடி இடம் பெருமாள் இடம் சேர்ந்தாள்
மத்த கஜம் போன்ற கண்ணபிரான் இருக்க உந்து மத களிற்றன்
மாடுகளே யானை போலே வாசுதேவர் யானைகளும் இவர் இடம்
ஐந்தில் இரண்டு பழுது இல்லை -பால் தயிர் வெண்ணெய் மூன்றும் பழுது கோ மூத்ரம் சாணி மட்டுமே கொடுக்கும் ”
மைத்துனன் பேர் பாட -நலுங்கில் பரிகாசம் பாடுவது போலே -செந்தாமரைக் கையால் -திறக்கச் சொல்லி வேண்டுகிறாள்
வந்து திறவாய் -தாமரை கை இல்லை செம்மையான தாமரை கை அன்றோ இவளது -அவன் அபயம் தருவது சரணம் அடைந்தாள்
இவள் தானே தருவாள் லகுதரா ராமஸ்ய கோஷ்டி -சீரார் வளை பிரிவு இல்லாததால் -சீர்மை
சீரார் செந்நெல் -கவரி வீசும் -செழு நீர் திருக் குடந்தை ஏரார் கோலம் திகழக் கிடந்தாய்
மகிழ்ந்து திறவாய் -மகிழ்ந்து வந்து –
ஸ்ரீ ஸூ கதம் அடையாளங்கள் எல்லாம் இதிலே உண்டே -ஹிரன்ய வர்ணாம் ஹரீணீம்–ஹஸ்தி நாத பிரதானி -யானை பிளிற எழுந்து உந்து மத
கந்தத்வாராம் -துரா தர்ஷாம் கந்தம் கமழும் –
நித்ய புஷ்டாம் -சீரார் வளை
பத்ம ஹஸ்தே -செந்தாமாரை
ஸ்ரீ ஆறு வியாப்தி உண்டே அவை எல்லாம் இதில் உண்டே
ஸ்ரேயதே இது ஸ்ரீ -வந்து எங்கும் கோழி
ச்ரோநோதி குயில் கூவின
ஸ்ரேயதே ஸ்ரீனாதி பின்னை
ஸ்ராயவதி கடை திறவாய்
ஸ்ரானாதி கந்தம் கமழும்
இதனாலே ராமானுஜர் இதில் மண்டி ஆழம் கால் பட்டு
-பலராமன் காட்டிக் கொடுக்க நப்பின்னை -பங்குனி உத்தரம் ஸ்வாமி நமக்கு காட்டிக் கொடுத்து கத்ய த்ரயம் அருளிச் செய்தாரே
religion philaasaphy -இரண்டும் வேவேறே
-i root of -1 pole இல்லாததை வைத்து கொண்டு
சேஷம் –இறைவனுக்கே அடிமை -தாசன் வேற சேஷன் வேற -அவனுக்கே அதிசயத்தை விளைவிக்க –
கைங்கர்யம் செய்பவன் தாசன் –சேஷப் பராரர்த்வாத் -மற்றவர்க்காகவே
மேன்மை கூட்ட –சக்கரை பாலுக்கு கூட்டி –
நாம் இருந்ததால் தான் நாராயணன் -தொண்டர் இருந்தால் தான் தலைவர் –
சேஷன் -அறிவு இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம் சுவருக்கு சுண்ணாம்பு -இரண்டும் அசேதனம்
நாம் இருப்பதே அவனுக்காக -பாரார்த்த்யம் நீ தூங்கலாமா -உனக்கே நாம் ஆட்செய்வோம் -உன் சொத்து வீணாகிறதே -ஆண்டாள் நினைவு படுத்துகிறாள் – அத்யா பயந்தி
அத்யாபகர் –சொல்லிக் கொடுப்பவர் அருளிச் செயல் அறிந்தவர் -கட்டிப் போட்டு பாடம் சொல்லிக் கொடுக்கிறாள் -ச்வோசிஷ்ட்யாம் -பலாத்குருத புங்க்தே –தானே எடுத்து அனுபவித்தாள்–கனபாடி-படித்தவர் வேதம் எல்லை இல்லை படித்து முடியவில்லையே -பூயோ பூயோ நமஸ்க்ருதம்
இன்றும் திருப்பாவை சொல்லிக் கொடுத்து இருக்கிறோம் -த்யான ஸ்லோஹம்
வாய் வெருவி வேங்கடமே வேங்கடமே என்கின்றாளால் -அனந்தாழ்வான் -பட்டர் நம் ஆழ்வார் சோமாஜி ஆண்டான் எம்பெருமானார் –
ஆண்டாள் அழகர் -இருவரையும் ஸ்தோத்ரம் -பூமி தேவிக்கு ஸ்தனம் திருமலைகள் -துங்கஸ் ஸ்தன கிரி
இருவருக்கும் போட்டி நம்மை ரஷிக்க இந்த பாசுரத்தில் -குத்து விளக்கு எரிய எங்கள் வயிறு எரிய-
நூல் இழப்ப -திரௌபதிக்கு நூல் வழங்கி -இந்த நாளே அவர்கள் நூல் இழந்தார்கள் -அது போலே கோட்டுக்கால் இங்கேயும் குவலாய பீட யானை யுடைய தந்தம் -பஞ்ச சயனம் -வெள்ளை -வாசனை -மென்மை-குளிர்ந்து -அழகு –மெத்தென்ற -அதிக விசேஷணம்–பஞ்ச -அகலமான சயனம் என்றுமாம்
தே பஞ்ச ரத மாஸா -அனந்த ராம தீஷிதர் உபன்யாசம் கதை
மலர் மார்பா –மலரில் உறைகின்ற அவளை மார்பில்
மலர்கின்ற மார்பா -மலர்ந்து கொண்டு இருக்கிற மார்பா -ஹர்ஷத்தால் விரியுமே
வினைத்தொகை -ஊறு காய் முக்காலத்திலும் -ஊறின காய் ஊறிக் கொன்ற -ஊறப் போகின்ற
செய் நன்றி கொன்ற மகற்கு -போலே –க்ரியாம் கிரியமானாம் கரிஷ்யமானாம் மூன்றும் சொல்ல வேண்டும்
தத்துவம் nature -சிறை இருந்தவள் ஏற்றம் தான் பிரிந்து தேவர் ஸ்திரீகள் சிறை அறுக்க -மூன்று பிரிவு -மூன்று ஆகாரங்களையும் காட்டி
தகவு அன்று -கருணைக்கும் ஒத்து வராதே
கடைக்கண் பார்வைக்காகவே கார்யம் செய்கிறான்
நாச்சியார் முன்னே எழுந்து இருந்து -நாச்சியார் கோயில் –
ராசா பஞ்சகம் -ஐந்து அத்யாயம் சுகர் அருளி அத்தையே நாராயணீயத்தில் ஐந்து தசகம் ராசா கிரீடை வர்ணனை உண்டு
வைராக்கியம் வர இத்தை பாராயணம் பண்ண வேண்டும்
கொட்டிக் கொட்டி கிளவி ஆக்குவது போலே எத்தை த்யானம் பண்ணுகிறோமே அப்படியே ஆவோம் -இந்த பஞ்ச அத்யாயத்தையும் சுருக்கி இந்த பாசுரம் –
குத்து விளக்கு எங்கும் கொண்டு போகலாம் ஆசார்ய ஞானம் பிரகாசிக்க
கோட்டுக்கால் -நான்கு வேதங்கள் மேல் உள்ள கொள்கை -இதனாலே ப்ரஹ்ம ஞானம் வர வேண்டும்
சாஸ்திர யோநித்வாத் –
சோ காம்யா பஹூச்யாம் -ஆசைப் பட்டு ப்ரஹ்மம் பிரபஞ்சமாக மாறிற்று -எல்லாமே ப்ரஹ்மம் -ப்ரஹ்மம் சாராத ஓன்று இல்லையே
சர்வம் கல்விதம் ப்ரஹ்மம் -விசிஷ்டாத்வைதம் –
தண்ணீர் கொண்டு வந்தான் தண்ணீர் உடன் கூடிய குடம் போலே ப்ரஹ்மம் கூடிய நாம் –
என் ஹிருதயம் -நான் வேற ஹ்ருதயம் வேற
பஞ்ச சயனம் -அர்த்த பஞ்சகம் -அறிந்து -ஸ்ரீ யபதி த்யானம் செய்து மலரும் மார்பால் ஆசார்யர் -கொங்கை திருமலைகள்
-அங்கே நித்ய வாசம் செய்பவன் இடம் நெஞ்சை வைத்து இருப்பார்கள்
மை தடம் கண்ணினாய் உபதேச ஞானத்தால் விரிந்த ஞானம் உடைய சிஷ்யர்கள்
ஆசார்யர் பகவத் அனுபவத்துக்கு தடையாக சிஷ்யன் இருக்கக் கூடாது
சிஷ்யன் ஆசார்யன் உடம்புக்கு கவலை பட வேண்டும் -ஆசார்யன் சிஷ்யன் ஆத்ம சிந்தனை மட்டுமே தர வேண்டும்
பிரியாமல் ஆசார்யர் கூடவே இருக்க வேண்டும் –
ப்ரஹ்ம ஞானத்தால் மோட்ஷம் இல்லை பகவத் கருணை யால் மட்டுமே மோட்ஷம் -சரணாகதி ஏற்றுக் கொண்டு கடாஷித்தால் தான் கார்யகரம்
சித்தோபாயம்–தகவு ஒன்றாலே கார்ய கரம் -என்கிறாள் இதிலும்
அவனைப் பெற அவனே வழி -புல்லைக் காட்டி புல்லைக் கொடுப்பாரைப் போலே
இந்த்ரியங்களை வசப்படுத்தி –விஷயங்கள் இருந்தாலும் –மனசை நிலைப்படுத்தி புத்தி அலை பாயாமல் -மகாத் -அவயகதம் -புருஷம்
-அவனை வசப்படுத்தி அவனை பிடிக்கலாம் கொக்கை பிடிக்க கொக்கு மேல் வெண்ணெய் வைப்பது போலே
நீரே பிடி பட்டுக்கோ காலில் விழுந்தால் -அவன் அகப்படுவான் -கட்டை விரலை பிடிக்க -அது வளைந்து கொடுக்க வேண்டுமே
முப்பத்து மூவர் குத்து விளக்கு உபேயமும் உபாயமும்
கம்பம் கப்பம் மோனைக்காக இந்த்ரன் தோட்டத்து முந்தரி போலே -முன் சென்று -தேவர்களுக்காக மாட்டுமா –
அவர்கள் செய்யாததை நீ செய்தாய் -யானைக்காக -என்றுமாம் -அகஸ்த்யர் சாபம்
-ச்வல்ப்யம் அபி தர்மஸ்ய -நல்லது செய்தால் வீணாகாதே யானையாக போனாலும் கிருஷ்ண பக்தி மாறாமல் இருந்ததே –
ஆதி மூலம் கூக்குரல் கேட்டதும் ந அஹம் -எல்லோரும் சொல்ல -தேவர்கள் கப்பம் -யானை உடைய கப்பம்
ஆர்ஜவம் திறமை உடையவன் -ஆழி கொண்டு ஆழி மறைத்தான்
கிருஷ்ணன் தர்ப்பணம் பண்ணி– பீஷ்மர் துரியோதனன் இடம் தமப்பன் உள்ளவன் பண்ண மாட்டானே சொல்லியும் நம்பாமல்
நீர் பாண்டவர் பஷ பாதி சொல்லி அப்படி திறல் உடையவன் —
கர்ணன் பரசுராமன் இடம் கற்க -இந்த்ரன் பூச்சியாக தொடையை கடிக்க -ஷத்ரியன்-ஹிருதயம் நவநீயம் ப்ராஹ்மனச்ய-
ஆபத்தில் நினைவு வராது -சாபம் – தேர் சக்கரம் மாட்டிக்க -சல்யன் -தேரோட்டி -இரங்கி -ஷணம் முஹூர்த்தம் காத்து இருக்க –
கர்ணன் -த்ரௌபதி -துச்சாதனன் -அரக்கு மாளிகை தர்மம் காக்காமல் இருந்தும் -கொண்டாடுகிறார்கள் தப்பாக
-செற்றார் திறல் அழிய வெப்பம் கொடுக்கும் வாய் சொல்லால் வெப்பம் கொடுத்து
விமலா -புனிதன் கொன்ற -அவன் உணரும் படி கொன்ற புனிதன் –
உக்கம் விசிறி தட்டொளி -கண்ணாடி -உன் மணாளானையும் தந்து –உன்னுடன் சேர்ந்து இருந்து போகம் அனுபவிக்க
உக்கமும் -உப்பமும் -உப்பு உப்பு கடல் -ஆடல் பாடல்
தட்டொலியும்-வாத்திய ஓசை -என்பர் தமிழர் -முப்பத்து என்பதற்கு மோனை
பிராட்டி -சேர்த்து வைத்து -துலுக்க நாச்சியார் -அவளையும் ஆட் கொண்டு -தினம் ரொட்டி அரங்கன்
-எண்ணெய் காணா ரெங்கன் நெய்க் கிணறு உண்டு
வெள்ளி படா அரங்கன் -எல்லாம் தங்க மயம்-
கொல்லை அரக்கியை மூக்கரிந்திட்ட குமரனார் -அவளுக்கு இவள் மூலம் அவனை அடையலாம் அறியாமல்
-வேதவதி தான் சீதை –அக்னி பிரவேசம் -சாபம் கதை -இரண்டு பேரையும் பெருமாள் அக்னியில் வரும் பொழுது பார்த்து
28 கலி யுகம் -திருக் கல்யாணம் -பிருகு -உதைக்க -திருச்சானூர் -ஸ்ரீ பத்மாவதி -மங்கள ஸ்நானம் ஸ்ரீ நிவாசனுக்கு –
எண்ணெய் தேய்க்க-சூர்யன் -தூது விட்டு -பிராட்டியே தேய்க்க விட இப்போதே எம்மை நீராட்டு -நாடி நீ வேங்கடவற்கு -தனியன் இதனால் தான்
மாற்றாதே பால் சொரியும் –பசுக்கள் பெரும் பசுக்கள் -வள்ளல் பெரும் பசுக்கள் –
ஆண்டாள் -என்னையும் ஆண்டாள் -தமிழை ஆண்டாள் -அவனையும் ஆண்டாள் -அனைவரையும் ஆண்டாள்
மகன் -கேட்ட சொல்லைக் கேட்கும் பிள்ளை -தசரத புத்திரன் நந்தகோபன் மகன் –அங்கு இல்லாததை வைத்து சொல்வதைக் கேட்டு மகிழ்வான்
அஷ்ட புஜம் -யானையை காக்கா நான்கு திருக்கரங்கள் காணாதே -த்வரை மிக்கு -ஊற்றம் உடையாய் பெரியாய் -பெரும் பசுக்கள் போலே
-விஸ்வரூபம் எடுத்துக் காட்டி அஜாயமானோ பஹூதா விஜாயதே -தோற்றமாய் நின்ற சுடர் -un born is born many times
-பிறக்க பிறக்க தேஜஸ் மிக்கு -ஸ்ரேயான் பவதி ஜாயமான -வேதம் -சுடரே -வேதத்தின் வித்து அன்றோ
குடகு மலை மேற்கில் உள்ள மலை- குட திசை குண திசை கிழக்கு -முரட்டு சமஸ்க்ருதம் நடை யாடும் தேசம் என்று
முதுகைக் காட்டி வட திசை பின்பு காட்டி -ஆற்றாது வந்து -காகாசூரன் போலே நாமும் விழுந்து
நாம் நம்மை 1000 ராவனங்கள் போலே நினைத்து கொள்ள வேண்டும்
புகழ்ந்தும் வந்தோம் போற்றியும் வந்தோம் மங்களா சாசனம் ஸ்தோத்ரம் இரண்டும் செய்தோம் -ஆசார்ய சிஷ்ய லஷனங்கள் சொல்லும் பாசுரம்
-அகில புவன ஜன்ம ச்தேம- சகல நிகில -அகில அர்த்தம்
ஸ்ரீ நடதூர் அம்மாள் ஸ்ரீ பாஷ்யம் 18 தடவை -கூரத் ஆழ்வான் கொள்ளுப் பேரன் -ஸூ தர்சன ஸூரி
-சொல்ல எழுதி வைத்து -சசாம பிகி -18 அர்த்தங்களும் சொல்லி
ஸூதப் பிரகாசிகை -கேட்டதை எழுதி வைத்து -தேசிகன் அத்தை ரஷித்து-எதிர் கொண்டு மீது அளிப்ப மாற்றாதே -முன்னோர் சொல் படியே
எங்கள் மேல் -எம் கண் மேல் –கண்ணோடு கண் நோக்கின் வாய் சொல்லால் என்ன பயன் -வேத மந்த்ரம் சேஷ யாகம் –
சாம்பன் -கிருஷ்ணன் பிள்ளைக்கு துரியோதனன் பெண் லஷ்மணா கல்யாணம் -சம்பந்தி முறை –
சங்கம் இருப்பார் போலே வந்தார்கள் அர்ஜுனனும் துரியோதனனும்
பிரதான நயன கடாஷம் –பாவனம்-
செங்கண் -அன்பு தோன்ற -கடாஷம் -எப்படி பார்க்க வேண்டும் கட்டளை இடுகிறாள் –
இவளது அழகை அவனால் முழுவதும் அனுபவிக்க முடியாதே என்றுமாம்
சாபம் வேற பாபம் வேற
பிரயாச்சித்தம் விநாசயம் இல்லாமல் அனுபவத்தாலே விநாசயம் சாபம்
அகல்யை சாபம் பெருமாள் ஸ்ரீ பாத தூளியால் –
சந்தரன் -சந்திர புஷ்கரணி
பிண்டியார் –சாபம் தீர்த்த -திரு மார்பில் வயர்வை பிரம கபாலம் பத்ரி -தப்த குண்டம் -மூன்று வேளை ஸ்நானம் செய்ய வேண்டும்
எங்களுக்கு எல்லாம் வேண்டும் பாத தூளி பார்வை அனைத்தும் வேண்டும் என்கிறாள்
ஆசார்யர் கடாஷமே வேண்டும் என்கிறார் -3/8/1000 கண்களால் கிடைக்காததே இவர் ஒரு கண்ணால் கடாஷித்தால்
கிடை அழகைப் பார்த்து அனுப்பி நடை அழகைப் பார்க்க ஆசை -சிங்கம் என்று-கொண்டாடி எழுந்து அருளும் அழகையும்
எப்படி நடக்க வேண்டும் என்றும் அருளுகிறாள்
உறங்கும் -கிடந்தது உறங்கும் -மன்னிக் கிடந்தது உறங்கும் -கிடந்தது ஈடுபட்டு -ஏரார் கோலம் திகழக் கிடந்தது
–கிடந்த நம்பி -கிடந்தவாறும் -படுக்கை வேற சம்சாரம் பேர்ந்தால் அல்லது பேரென் என்று கிடக்கிறான் –
அது கிடைக்க தவம் கிடந்தேன் சொல்வது போலே -பேடை யுடன் கிடந்த சிங்கம் -மன்னிக் கிடந்து உறங்கும் –
வியாக்யானம் -கவியின் உள் பொருளை உணர்ந்து அருள -யோகேஸ்வர கிருஷ்ணா -யத்ர பார்த்ரோ தநுர்த்தரா -கையிலே வில்லை ஏந்திய அர்ஜுனன்
யோகம் -நாம ரூபம் கொடுத்து அருளிய ஈஸ்வரன் -என்றபடி -யோகிகள் சரியான பாடம் இல்லை –
கண்ண பிரான் திருவடியே சரணம் எல்லாம் என்று இருக்கும் அர்ஜூனன் -வியாக்யானம் -தத் பதம் ஆஸ்ரய –
போட்ட வில்லை தூக்கி கண்ணன் சொல்வதை செய்வேன் என்று காண்டீபம் தூக்கினானே -கண்ணனே எல்லாம் என்று நம்பி இருக்கும் என்று வியாக்யானம் –
கீதை கீதா பாஷ்யம் தாத்பர்ய சந்த்ரிகை சேர்த்து அனுபவிக்க வேண்டும் -மன்னிக் கிடந்து உறங்கும் -இருப்பதால் -பேடை உடன் சுகமாக -வியாக்யானம் –
சீரிய –சீர்மை -வேரி -வாசனை -மிருகங்கள் கொழுப்பு வாசனை –வாசனையும் நாற்றமும் -மாறுமே -இவர்களுக்கு சிங்கம் நாற்றம் உகக்குமே
மூரி -சோம்பல் -சாச்த்தாவுக்கும் சாசனம் இடுகிறார்கள் கோபிகள் – விஜிதாத்மா விதேயாத்மா -அவிதேயாத்மா பிரித்து சிலர் வியாக்யானம் -விதேயன் -சொன்னவற்றை கேட்பான் பட்டர் -பக்தர்களுக்கு -பித்தன் அன்றோ –
சர்வம் கல்விதம் –அவாக்ய அநாதர-சாண்டில்ய விதியை சாந்தோக்யம் -சர்வ கந்த சர்வ ரச-திரு மேனி உண்டே என்கிறது
பூவைப் பூ வண்ண -பூவைப் பூ உமா சமஸ்க்ருதம் –காயாம்பூ -218 பூ கபிலர் பாடுகிறார் -நீல கலர் வாசனை உடன் உள்ளதே பூவைப் பூ –
இங்கனே போந்தருளி காட்டிக் கொடுக்கிறாள் -நடை அழகை -மணல் வெளியில் உலாத்திக் காட்டி -இங்கனே போந்தருளி –
சீரிய சிங்கா சனம் -சீர்மை பொருந்திய -யாம் வந்த கார்யம் ஆராய்ந்து அருள் -உன்னை தர்சனம் செய்வதே கார்யம் –
பகவத் அனுபவம் –ஹிருதய குகையில் மன்னி கிடந்து உறங்கும் ஸ்ரீ நரசிம்ஹன் -தீ விழித்து பாஹ்ய குத்ருஷ்டிகளை
பகவத் அனுபவ வாசனை காட்டி -பொறுமையாக பகவத் விஷயம் சாதித்து -ஜீவாத்மா பிறந்த -வந்த கார்யம் -காட்டி அருளி
தேசிகன் திருவவதாரம் ஸூ சகம் என்பர் இப்பாசுரம் –
சதுர்வித கதி -சிம்ஹ வயாக்ரா கஜ ரிஷப சர்ப்ப கதிகள் ஐந்தும் சேவிக்கலாம் -புஜங்கன் -சர்ப்ப கதி
இந்த கொடு உலகத்தை யன்றோ அளந்தாய் உனது ஸூ குமாரமான திருவடிகளைக் கொண்டு
அருள் தருவான் அமைகின்றான் அது நமது விதி வகையே -ஆர்த்த பிரபத்தி -திருப்த பிரபத்தி இரண்டும் உண்டே –
சகடாசுரன் உடம்பும் மோட்ஷம் -பெற்றதே திருவடி சம்பந்தத்தால் -தாதி பாண்டன் பானையும் போனது போலே
குஞ்சித்த திருவடிகளுக்கு பல்லாண்டு -கழல் போற்றி
நாத் த்வாராக -அடிக்கடி bok அமுது செய்யப் பண்ணி -அங்கும் கோவர்த்தன கிரிதரன் திருக் கோலம்
சபலை குழந்தைக்கு முதுகு காட்டி இருக்கும் மாதா போலே இந்த்ரனை பொறுத்து அருளிய குணம் போற்றி
கோவிந்த பட்டாபிஷேகம் -காம தேனு பால் சொரிய ஐராவதம் நீர் பொழிய
உபரி இந்த்ரன் -சூப்பர் இந்த்ரன் –மருவி உப இந்த்ரன் ஆயிற்று -ஹரி வம்ச ஸ்லோஹம்
தேவோ வா –கேட்க –ஷணம் பூத்வா கிஞ்சித் பிரணய கோபா அஹம் வோ பாந்தவ ஜாதா -தேவத்வம் நிந்தையானவனுக்கு–
-நீர்மை -சௌசீல்யம் -மஹதக மந்தைக சக சம்ச்லேஷக –
வேல் போற்றி -வாரியார் -வேல் உண்டா கேட்டாராம் ஸ்வாமி இடம் -ஆயுதம் -சக்ராம்சம் -வில்லாகவும் வேலாகவும் ஆகும் –
அஷ்ட புஜம் -சூலம் உட்பட ஷோடஸ ஆயுதம் -வேல் முருகனுக்கு குமார தாரா -நீர் வீழ்ச்சி முருகன் தபஸ் -பரசுராமன் முருகன் வில் வித்தை பரமேஸ்வரன் இடம் -மழுவை கொடுத்தார் -ஸ்காந்த புராணம் -சமஸ்க்ருத -திருப்பதி பெருமாள் தன்னுடைய வேல் ஆயுதம் கொடுத்தார் -திருவேங்கட மகாத்மயம்
வேளாங்கண்ணி சிக்கில் வேல் -வேல் அம் கண்ணி உடம்பு வேர்க்கும் -அம்மா இடம் கொடுத்து வாங்கிக் கொண்டார்
பாலனாய் -ஏழ் உலகும் -அவன் கொண்ட துழாய் கேட்டு அழுது -அடுத்து கோவை வாயாள் பொருட்டு சந்தோஷம்
கால சக்கரத்தை -எம்மானுக்கே பாடி திருப்பிக் கொடுத்தான்
சக்கரத் ஆழ்வார் பலன் உண்டே
அன்று –இன்று நின் கையில் வேல் போற்றி
32 போற்றி -ஜெயா ஜெயா ஸ்ரீ ஸூ தர்சன
நடாதூர் அம்மாள் -லாட புரம் ஆற்காடு பக்கம் லாடர் மந்த்ரவாதி இருந்தார் -அம்மாள் சிஷ்யன் -அப்புள்ளார் சிஷ்யர் -தேசிகன் மாமா –
குட்டி தேவதை உபாசித்து வாயிற்று வலி -சக்கரத் ஆழ்வார் -போகவதி -வெற்றி வேல் வீர வேல் -ஜெயா ஹீத 32 போற்றி பாடி அருளி –
மந்த்ரவாதிக்கு வாயிற்று வலி வந்தது அவன் ஓடி காலில் விழ பிரார்த்தித்து
லாடன் -அக்ரஹாரம் கொடுத்து -அது பார்த்து தேசிகன் சுதர்சன அஷ்டகம் -திரு புட்குழி
ஆனி சித்தரை சக்கரபாணி —எழுந்து அருளுவார் -இரங்கேல் சிம்காசனத்திலே இறங்காமல் என்றுமாம் முக்கூர் அழகிய சிங்கர் அருளுவாராம்
பிரமாணங்கள் காட்டிய ஆசார்யர்
இலங்கை சரீரம்
சகடம் போலே சுற்றி இருக்காமல்
குனிந்த சிஷ்யன் கொண்டு பாஹ்ய மதங்களை நிரசித்து
சம்சார மழை காக்க திருவேங்கடம்
நின் கையில் வேல் சங்கு சக்கர லாஞ்சனை போற்றி ஆசார்ய பரம்
.சத் வித்யை -வேதம் உபதேசிக்கும் -கதை சொல்லி -உத்தாரகர் -ஸ்வேதா கேதுவுக்கு -12 வருஷம் வேதம் படித்து 24 வயசில் திரும்பி வர -ஸ்தப்தோஸ்தி-அவனை அறிந்தாயா -ஆவேசம் -ஆள்பவனை அறிந்தாயா -அறிந்தால் தன்னடையே அடக்கம் வரும் -ஆள்கின்றான் ஆழியன் அறிய வேண்டுமே
சதைவ சோம்யே இதமக்ர ஆஸீத் -ஏக மேவ அத்விதீயம் -ஒருத்தி -சோழ ராஜா அத்விதீயன் ஆளவந்தார் -இதில் இருந்தே –
பிள்ளை பிறந்த அன்றே பேரனையும் பார்த்தாள்-தம் அத்புதம் பாலகம் -சதுர புஜம் -பீதாம்பரம் -குழைந்தை யும் சேர்த்து பார்த்தாள்
-பால மட்டும் சொல்லாமல் பாலகம் -பாலனான க என்கிற பரமன் உடன் பிறந்து -மார்பில் லஷ்மி -மாட்டுப் பெண் பேரன் உடன் பிள்ளையை
பெற்ற ஒருத்தி அன்றோ -கருடன் வேத பாராயணம் சொல்லிக் கொண்டு பின்னே செல்ல யமுனை கடந்து -ஓர் இரவில் –
கம்சன் —உக்ர சேனர் மனைவி பால் கொடுத்து வளர்க்க வில்லை -கந்தர்வன் வேஷம் போட்டு வந்து -கெடுத்தது அறிந்து –
குலத்துக்கு நாசம் பண்ணும் குழந்தை சாபம் -பெற்றாள் –பூதனை எடுத்து வளர்த்தாளாம்
உன்னை அர்த்தித்து வந்தோம் -உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன் -திருத் தக்க செல்வமும்
-நீ தானே ஸ்ரீ யபதி உன்னையே கேட்டு வந்தோம் -உன் வருத்தமும் தீர நாங்கள் பாடுவோம் -வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்து
-உன் வருத்தம் சொல்ல வில்லையே –உன் வருத்தம் எங்கள் வருத்தம் பின் வருவோர் வருத்தமும் தீரும் படி என்றுமாம் –
சம்சாரம் -இரவு -சதாசார்யன் உபதேசம் பெற்று அஷ்டாஷரம் பெற்று திரு மந்த்ரம் தாயாக பெற்று -அன்று நான் பிறந்திலேன் -திரு மந்த்ரத்தில் பிறந்து த்வயத்தில் வளர்ந்து –பெருமையை காட்டாமல் ஒளித்து வளர -குழந்தை போலே -ஆசார்யர் தனது பெருமையை காட்டாமல் –கலிக்கு பொறுக்காதே இது -கலி துன்புறுத்தும் இப்படிப் பட்டவர்களை -இதுவே கம்சன் -அதையும் மீறி ஆசார்யன் கருணையால் -பொலிக பொலிக கலியும் கெடும் கண்டு கொண்மின் –
ப்ரீதி வளர்க்கும் ஆசார்யர் -ஞானம் தர யாசித்து வந்தோம் இவர்களுக்கும் திருத் தக்க செல்வம் உண்டே –
-ஆசார்யன் அபிமானத்தால் வருத்தமும் தீர்ந்து மகிழ்வோம்
மால் -வ்யாமோஹம் -பரத்வன் என்றுமாம் -மணி வண்ணா -முந்தானையில் முடிந்து ஆளும் படி சௌலப்யன்
சாளக்ராமம் போலே -ஸூ ஆரதனன்–பால் அன்ன வண்ணத்து -சங்கம் -சத்வ குணம் வளர்க்குமே
.பால் வண்ணன் -முகில் வண்ணன் மணி வண்ணன் இருந்தாலும் சத்வ குணம் ஓங்கி ஆரம்பிக்க -சசி வர்ணம் சதுர புஜம் -விஷ்ணுவை த்யானம் –
“பல்லாண்டு இசைப்பாரே -சங்கீதம் -பாடுவாரே இல்லை
கோல விளக்கே நப்பின்னை பிராட்டியையும் தர வேண்டும்
விதானம் -ஆதி சேஷன் தர வில்லை பீதாம்பரம் தந்தானாம் –
ஆலின் இலையாய் -அகதி தகட நா சாமர்த்தியம் கொண்டவன் -போல்வன சங்கங்கள் கொடுக்க வல்லவன்
ஆல் இன் நிலையாய் –தானே வேர் முதல் தனி வித்து –
ஏவ கார பிராட்டி -நீயே பாஞ்ச ஜன்யம் நீயே பறை -நாங்கள் அனுபவிக்க நீயே யாக வேணும் என்றுமாம் –கன்றுகள் பிரம்மா விருத்தாந்தம் -உண்டே
போக்யாச்ச ப்ரஹ்ம அன்னம் ப்ரஹ்ம எல்லாம் ப்ரஹ்மா சொல்லிக் கொள்வோமே
மாலே மணி வண்ணா -மாம் அர்த்தம் சொல்லுகிறது
ஆலின் இலையாய் அஹம் அர்த்தம் சொல்லுகிறது -பெரிய வாச்சான் பிள்ளை
வட பத்ர சாயி –திரு வநந்த ஆழ்வான் -சேஷ சாயி -எல்லா படுக்கை -சக்கரத் தாழ்வார் -கருடன் வாகனம் -ஸ்ரீயபதி லஷணம்-
இந்த பாசுரம் -ஸ்ரீ வில்லி புத்தூரில் இரண்டு தடவை அனுசந்திப்பார்கள் –
கோவிந்தா -கபளே கபளே அனுஸ்மரன் -கிருஷ்ண அநு ஸ்மரணம் பிராயச்சித்தம் எல்லாவற்றுக்கும் -கிருஷ்ண கிருஷ்ணா கிருஷ்ணா சிலர் சொல்வார்கள்
கிருஷ்ணனுடைய சேஷன் என்று நினைத்துக் கொள்ள வேண்டும் -என்பதே தாத்பர்யம் -அவன் தான் நிர்வாஹகன் -நாம் அவனுக்கு சேஷன் என்று உணர்வதே பிராயச் சித்தம் -இதுவே அநு ஸ்மரணம்
கோவர்த்தன கிரி நாதன் என்பதால் கோவிந்தா அநு ஸ்மரணம்
இதில் மூட நெய் பெய்து -வந்ததும் கோவிந்தா -கானம் சேர்ந்து உண்போம் -கோவிந்தா –
பணி விடை செய்வதே உணவு சிற்றம் சிறு காலையிலும் கோவிந்தா எங்களிடம் தோற்பதே உனக்கு புகழ் -கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா –
நாடு புகழும் பரிசினால் விரோதிகளும் கொண்டாடும் படி
நாடு நகரம்- நாடு பட்டிக்காடு -நகரம் -நாகரீகம் உள்ள இடம்
விரோதம் வெளிக்காட்டும் இடம் நாடு –
சூடகம் -ராக்குடி -கை வளை–பல் கலனும் -இது தவிர பல உண்டு –யாம் அணிவோம் ஆடை உடுப்போம் -இதில் யாம் இல்லை –
இருவருக்கும் பொதுவான ஆடையாம் -பால் சோறு அக்காரவடிசில் -பாலிலே வேக வேண்டும் –
பாலால் விளைந்த நெல்லில் வந்த அரிசி கரும்பும் பாலாலே விளைந்த வெள்ளம் -மூட நெய் -நெய் கண்ட பொங்கல் இல்லை -ஊடுருவி நெய் -பெய்து முழங்கை வழிவார -சம்ச்லேஷத்தால் உருகி நெய் வழியும் -கூடி இருக்கும் ஹர்ஷம் உன்ன மாட்டார்கள் –
சத்யம் ஞானம் ஆனந்தம் ப்ரஹ்மா –சோஸ்நுதே சர்வான் காமான் சக -ஆனந்த வல்லி உபநிஷத் அர்த்தம்
ஐந்து–சொல்லி 500 அப்சரஸ் சதம் வாஸோ ஹஸ்தா -வஸ்த்ரம் -சதம் சூர்ண ஹஸ்தா -சதம் அஞ்சன ஹஸ்தா -சதம் பண ஹஸ்தா
-சதம் மாலா ஹஸ்தா –இது கிட்ட இங்கு ஐந்து -சங்கு சக்கர லாஞ்சனை -இருக்க வேண்டும் -சூடகமே தோள் வளை இத்யாதி
அஷ்டாஷரம் -திருவாராதனம் -பாடகம் திரு மண் சாத்திக் கொண்டு –
சமாஸ்ரயணம் இத்யாதி ஐந்தும் -ஐந்து அங்கம் -ஐயங்கார் -ஐந்து அங்கங்கள் -அனுகூலச்ய சங்கல்பம் இத்யாதி ஐந்தும் –
ஐந்து அர்த்த பஞ்சகம் –
பிரபன்ன பாரிஜாதம் நடதூர் அம்மாள் அருளிச் செய்தது –ரகஸ்ய த்ரய சாரம் -தேசிகன் -நடாதூர் அம்மாள் அருளிச் செய்யும் சுருக்கு –
எங்கள் ஆழ்வான் சந்நிதி திரு வெள்ளறை -நடதூர் ஆழ்வான் சந்நிதி ராஜ கோபாலன் கும்ப கோணம் -திரு வநந்த பரம்
வரத தேசிகன் -வாத்சல்ய வரத குரு -நடதூர் அம்மாள் -அனந்தாழ்வான் சிஷ்யனாக தயிர் சாதம் பிரசாதம் கொண்டு நடதூர் அம்மாளுக்கு கொடுத்த ஐதிகம்
பிரணவம் அர்த்தம் தெரியாமல் பிரமாவை முருகன் ஜெயிலில் வைக்க -நவ வித சம்பந்தம் உண்டே பிரணவத்தில்
ராமாயா-ரிஷிகள் -ராம பத்ராய தசரதர் -பத்ரம் சேர்த்து திருஷ்டிக்கு -ராம சந்த்ராயா -கௌசல்யை -வேதயே -வசிஷ்டராதிகள் ரகு நாதாயா அயோத்யா வாசிகள் நாதன் -சீதை சீதையா பதமே -மிதிலை வாசிகள் -நம் போல்வார் ஆழ்வாராதிகள் ஸ்ரீ யபதி என்போமே
சிறு பேர் அழைத்தோம் சீறி அருளாதே –
இறைவா -பலன் கொடுக்க -நீ தாராய் பறை -கைங்கர்யம் கொடுப்பது உனது இரக்கம் அடியாக -அவனைப் பார்த்தாள் நித்ய விபூதியும் போராது
என்னைப் பார்த்தாள் இருக்கும் நரகங்கள் போதாதே உனக்கு எவ்வளவு திண்டாட்டம் அனந்தாழ்வான் ஸ்ரீ ஸூ கதிகள்
ஏலோரெம்பாவாய் -பாவை -விக்ரஹம் -எம் பாவையே -ஏல் ஏற்றுக் கொள் ஓர் ஆராய்ந்து அருளுவாய் –
இங்கும் நோன்பு நோற்று நம்மைப் பெற என்று ஓர்ந்து அருள் செய்ய வேண்டும்
சங்கல்ப விசிஷ்டனாய் அனைவர் உள்ளும் புகுந்து கடல் கடைய வைத்தான் –விண்ணவர் -அமுது உண்ண அமுதினில் வரும்
பெண்ணமுது உண்ணவனே –அன்னல் செய்து அலை கடல் கடைந்து –
கண்ணுதல் நஞ்சு உண்ணக் கண்டவனே -கடாஷத்தால் -காத்து
மாயவன் -உமாதவன் இருவரும் -உமை தவன் ருத்ரன் –
வங்கக் கடல் -பாற் கடலிலும் கப்பல் உண்டே -அக்கரையில் இருந்து இக்கரை கூட்டிப் போக -சித்த உபாயம் -வைகுந்தம் என்னும் தோநி -விஷ்ணு போதம் –
கேசவன் -பிள்ளை பேரன் உடன் -திருக்கல்யாணம் -கேசம் அழகு என்றுமாம் –
சேயிழையீர் -பொருத்தமான ஆபரணங்கள்
அப்பறை-கோபிகளுக்கு கண்ணன் -மக்களுக்கு -வேண்டிற்று எல்லாம் தரும் கோதில் கண்ணன் -எப்பறை என்று சொல்லாமல்
கோதை -கோதா -சொல்லை வாக்கை செல்வம் தருபவள் பூமியை பிளந்து வந்தவள் -மாலை என்றுமாம்
ஆசார்யர் திருவடி வைத்தே நிரூபகம் -பட்டர் பிரான் கோதை -பட்டர் -வேதம் கற்று கற்பித்தவர்கள் –

———————————————————————–

கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
-ஸ்ரீ உ. வே. கருணாகாராச்சார்யார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ யாமுனாசார்யர் அருளிச் செய்த ஸ்ரீ ப்ரேமேய ரத்னம் -நான்காம் பிரகரணம் –உபேய யாதாத்ம்யம் –

November 24, 2015

ஸ்ரீ மங்கள ஸ்லோகம்
பிரமேய ரத்னம் ரமணீய பஹோ புரோதசா யாமுநே தேசிகேந
உத்த்ருத்ய வேதாம்பு நிதேரபாராத் ப்ரோக்தும் மநோ லங்க்ருதயே முமுஷோ –

ரமணீய பாஹு ப்ரோஹிதர் -யமுனா தேசிகன் -யாமுனாச்சார்யார்
ஸூந்தர தோளுடையானுக்கு -கைங்கர்யம்
கூரத்தாழ்வான் அரங்கனுக்கு போல் இவர் அழகருக்கு கைங்கர்யம்
திருமாலை ஆண்டான் மூலம் இவருக்கு வந்த கைங்கர்யம் இது
உத்த்ருத்ய அபாரமான வேதாம்பு வேதக்கடலில் இருந்து உத்தரித்து அருளினார்
ப்ரமேய ரத்னம் முமுஷுக்களுக்கு அலங்காரமாக எழுதுகிறேன்

பாற் கடலைக் கடைந்து அமுதம் பெண் அமுதம்
மறைப்பால் கடலைக் கடைந்து நா பர்வதம் போல் திருவாய் மொழி
இவர் வேதாம்பு வேதக்கடலில் இருந்து உத்தரித்து அருளினார்

ஸூந்தர தோளுடையான் உடைய புரோஹிதரான யாமுனாசார்யராலே
வேதக் கடலிலே இருந்து முமுஷூவுக்கு
மனஸ்ஸூக்கு அலங்க்ருதமாக அருளிச் செய்யப் பட்டது -என்றவாறே –

யாமுன கவிவா தீந்திர ஸூந்தரஸ்ய புரோஹித
பிரமேய ரத்ன மகரோத் சர்வேஷாம் ஜ்ஞான சம்பதே –

இவர் மூன்றாவது யமுனாச்சார்யர்
ஸ்ரீ ஆளவந்தார் முதலிலும்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை உடைய திருத்தகப்பனார் இரண்டாவது யமுனாச்சார்யர் –

——-

அவனுக்கு மாஸூச சொல்வதே உத்தர வாக்கியம்
ஒழிவில் காலம்-கைங்கர்ய பிரார்த்தனை முதலிலே பின்பே உலகமுண்ட பெரு வாயா சரணாகதி -அனுஷ்டான வேளையில் அப்படி
கண்டேன் சீதையை முதலில் சொல்லி
கறவைகள் முதலில் சரணாகதி
சிற்றம் சிறு காலை பின்பு -நமக்கு உபதேசிக்கும் பொழுது
மேம் பொருள் போக விட்டு -கைங்கர்யம் முதலில் வாழும் சோம்பர் சரணாகதி பின்பு -அனுஷ்டானம் அங்கும்
இங்கு
முதலில் லஷ்யம் குறிக்கோள் -சீர்மை இவற்றை விளக்கி
அநந்தரம் ஆச்சார்ய வைபவம் சொல்லி
உபாய வைபவம் சொல்லி
உபேய வைபவம் இதில் -நமக்கு உபதேசிக்கும் பிரபந்தம் என்பதால் )

ஸ்ரீ ப்ரேமேய ரத்னம்-நான்காம் பிரகரணம் –உபேய யாதாத்ம்யம்

அநந்தரம்-உபேய யாதாத்ம்யம் பிரதிபாதிக்கப் படுகிறது –
எங்கனே என்னில் –

உபேயங்கள் அநேக விதங்களாய் இருக்கும்
ஐஸ்வர்யம் என்றும் –
கைவல்யம் என்றும் –
பகவத் பிராப்தி என்றும் –

(மூன்று தத்துவங்களை அனுபவிப்பதால் ப்ராப்யங்களும் மூன்று
அசித் அனுபவம் ஐஸ்வர்யத்துக்கு
சித் அனுபவம் -கைவல்யம்
ஈஸ்வர அனுபவம் -பகவத் பிராப்தி )

இதில் ஐஸ்வர்யம் பலவகையாய் இருக்கும் –

கைவல்யமாவது
கன்று நாக்கு வற்றிச் சாவா நிற்க தாய் தன் முலையைத் தானே உண்ணுமா போலே –
என்று பட்டர் அருளிச் செய்வர் –

(கன்று பரமாத்மா
தாய் -நாம்
அவன் அனுபவிக்கப் பாரிக்க நாமோ விலகி நம்மையே அனுபவிப்பது போல் )

சர்வ அலங்க்ருதையான ஸ்திரீக்கு பர்த்ரு விக்ரஹம் போலே
என்று நம்பிள்ளை அருளிச் செய்வர்

(இங்கும் பரமாத்மா -பெண் -அனைத்து கல்யாண குணங்களும் ஆபரணம்
நம்மைப் பார்த்தா
இங்கு மாற்றியும் சொல்ல இடம் உண்டு –
நாமும் ஸ்வா பாவிக கல்யாண குணங்களைக் கொண்டு தானே இருந்து அறியாமல் உழல்கிறோம் )

இனி பகவத் பிராப்தியாவது
ஐஸ்வர்ய கைவல்யங்களை காற்க் கடைக் கொண்டு
அர்ச்சிராதி மார்க்கத்தாலே அந்தமில் பேரின்பமான பரம பதத்தை அடைந்து
ஆவிர்பூத ஸ்வரூபராய்-
சாலோக்ய சாரூப்ய சாமீப்ய சாயுஜ்யாதிகளைப் பற்றி அனுபவிக்கை-
(ஆதி -பகவத் ப்ரீதி காரித ஸகல வித கைங்கர்யங்கள்
படியாய்க்கிடந்து பவள காண்கை )

ஐஸ்வர்யத்தில் ஆசை
நீர்க் குமிழியை பூரணமாகக் கட்ட நினைக்குமா போலே –
(அல்பம் அஸ்திரம் )

கைவல்யம்- மஹா போகத்துக்கு இட்டுப் பிறந்து இருக்க –
ஸ்வயம் பாகம் பண்ணுமோ பாதி
(ஸ்திரமாய் இருந்தாலும் -அல்பமாய் இருக்குமே
மஹத்தான பகவத் பிராப்தி போல் இல்லையே )

இனி பகவத் பிராப்தியாவது
ஈஸ்வரனுடைய ஸ்வரூப ரூப குண விபூதிகளை சாஷாத் கரித்து அனுபவித்து –
அவ்வனுபவ அதிசயத்துக்குப் போக்கு வீடாக –
பணி மானம் பிழையாமே அடியேனைப் பணி கொண்ட -(4-8-2-)-என்று
சர்வ வித கைங்கர்யங்களையும் பண்ணி
அந்த கைங்கர்ய விசேஷத்தாலே ஈஸ்வரனுக்கு பிறந்த முகோல்லாசத்தைக் கண்டு
ஆனந்தியாய் இருக்கை –

(மணிமாமை குறையில்லா மலர் மாதர் உறை மார்பன்
அணிமானத் தடைவரைத் தோள் அடல் ஆழித் தடக்கையன்
பணி மானம் பிழையாமே அடியேனைப் பணி கொண்ட
மணி மாயன் கவராத மடநெஞ்சால் குறைஇலமே–4-8-2-

பணி மானம் பிழையாமே-குறை அற்ற கைங்கர்யம்
ஸகல தேச ஸகல கால ஸகல அவஸ்தித ஸகல வித கைங்கர்யங்களும்

உடையவர் எழுந்தருளியிருக்கிற மடத்திலே ஸ்ரீ வைஷ்ணவர்கள் அமுது செய்யா நிற்க,
ஆச்சான் தண்ணீரமுது பரிமாறுகிறவர், ஓர் அருகே சாய நின்று பரிமாறினார்;
அத்தை உடையவர் கண்டு, ஓர் அடி வந்து முதுகிலே மோதி, ‘நேரே நின்றன்றோவுடோ பரிமாறுவது?’ என்றார்;
என்ன, ‘பணிமானம் பிழையாமே அடியேனைப் பணிகொண்ட’ என்று பணித்தார் ஆச்சான்.

கைங்கர்யமும் ஸாஷாத் உபேயம் இல்லை
இத்தால் அவனுக்கு வரும் முக விலாசம் உபேயம் )

சிலர் குணாநுபவம் பண்ணுவார்கள் –

கரை கட்டாக் காவேரி போலே பகவத் குணங்கள்
என்று திருக் குருகைப் பிரான் பிள்ளான் பணிப்பர்

சிலர் விக்ரஹ அனுபவம் பண்ணுவார்கள்–

பக்தர்களுக்கு அன்ன பானாதிகளே தாரகம் –
ஸ்ரக் சந்தனாதிகள் போஷகம் –
சப்தாதிகள் போக்யம்
நித்ய முக்தர்களுக்கு திவ்ய மங்கள விக்ரஹம் தாரகம் –
(ஆச்சார்யர் உகந்த )கைங்கர்யம் போஷகம் –
பகவத் ப்ரீதி போக்யம் என்று ஆச்சான் பிள்ளை அருளிச் செய்வர்

இரண்டு பங்குக்கு ஒரு கை ஓலையோ பாதி
உபாய உபேயம் இரண்டும் ஈச்வரனே என்று நஞ்சீயர் அருளிச் செய்வர்

(உபாயமும் உபேயமும் அவனே
நாம் பற்றும் உபாயம் இல்லையே
விடுவித்திப் பற்றுவிக்கும் அவனே உபாயம்
கைங்கர்யமும் ஸாஷாத் உபேயம் இல்லை
இத்தால் அவனுக்கு வரும் முக விலாசம் உபேயம்)

உபாய பிரார்த்தனையும் உபேய பிரார்த்தனையும்-அதிகாரி க்ருத்யம்
என்று எம்பார் அருளிச் செய்வர்

அப்பொழுதைக்கு அப்பொழுது என் ஆராவமுதம் -என்கிறபடி
பிரதி ஷணம் அபூர்வ ரசத்தை உண்டாக்குகை யாலே
நித்ய பிரார்ர்த்த நீயமுமாய் இருக்கும் உபேயம் என்று பட்டர் அருளிச் செய்வர்

புருஷகார விசிஷ்டம் உபாயம்
லஷ்மீ விசிஷ்டம் உபேயம் என்று ஆச்சான் பிள்ளை அருளிச் செய்வர்

(உபாயத்துக்கு புருஷகார சப்த பிரயோகமும் –
இது இருந்தாலே கார்யகரம்
ராமாவதாரதுக்கு சீதா தேவி-வராஹம் பூமா தேவி -கிருஷ்ணனுக்கு நப்பின்னை தேவி போல்
உபேயத்துக்கு லஷ்மி பத பிரயோகம்
ஒன்றைப் பத்தாக வர்த்தித்துப் போவாள் அன்றோ )

வியவசாயம் உபாயம் -கைங்கர்யம் உபேயம்
என்று பிள்ளை அருளிச் செய்வார்

(இவை அதிகாரி கிருத்யம் என்றாலும்
இவற்றையே சொல்லலாம் படி
அவன் ஸித்தமாய் இருக்கிறான் அன்றோ )

புத்ரனுக்கு மாத்ரு பித்ரு ஸூஸ் ருஷை இரண்டும் ப்ராப்தமாய் இருக்குமோ பாதி
சேதனனுக்கு மிதுன சேஷ வ்ருத்தியே
உபேயமாகக் கடவது என்று பெரிய பிள்ளை அருளிச் செய்வர்

இவனுக்கு பிராப்யமான தொரு மிதுனம் மரமும் கொடியும் சேர்ந்தால் போலே
என்று நம்பிள்ளை அருளிச் செய்வர் –

சேஷித்வம் ஆவது உபேயத்வம்-
எங்கனே என்னில்
(உபகாரம் ஏற்றுக் கொள்ளும்-சேஷி- அவனே சேரும் இடம் உபேயம்)

சேஷ பூதனாலே பண்ணப் பட்ட கிஞ்சித் காரமாகிற அதிசயத்துக்கு ஆஸ்ரயமாய்
அதிசயம் ஆக்குகை என்று நஞ்ஜீயர் அருளிச் செய்வர்
(கைங்கர்யத்தை உபேயமாக்குகிறான் -என்றவாறு)

ராஜ்ய பிரஷ்டனான ராஜாவுக்கு மீண்டும் ராஜ்ய பிராப்தி உண்டானவோ பாதி
சேஷ பூதனான இச் சேதனனுக்கு சேஷித்வ அனுபவம்
என்று இளைய ஆழ்வாரான திருமலை யாண்டான் அருளிச் செய்வர்

மிதுன சேஷ பூதனனுக்கு ஸ்வரூப அனுரூபமான பிராப்யம் மிதுனமேயாய் இருக்கும் –
இதில் ஒன்றில் பிரிக்கில்
பிராபா பிரவான்களைப் பிரிக்க நினைக்குமோபாதி என்று
நம்பிள்ளை அருளிச் செய்வர்

இதில் ஒன்றை விட்டு ஒன்றைப் பற்ற நினைத்தான் ஆகில்
மாத்ரு ஹீனனான புத்ரனோபாதி அறவையாயும் ( உதவி அற்றவனாயும் )
பித்ரு ஹீனனான புத்ரனோபாதி அநாதனயுமாயும் இருக்கும் —
இருவரும் கூடின போது இறே ஸ்ரீ மத் புத்ரன் ஆவது -என்று பெரியாண்டான் அருளிச் செய்வர்

பிராட்டியை ஒழிய ப்ரஹ்மசாரி எம்பெருமானை பற்ற நினைத்தான் ஆகில்
ஏகாயநம் ஆகிற படு குழியில் விழும்
எம்பெருமானை ஒழிய பிராட்டியைப் பற்ற நினைத்தான் ஆகில்
ஆநீசாக்ரம் ஆகிற படு குழியில் விழும் என்று நஞ்சீயர் அருளிச் செய்வர் –
(ஆநீசாக்ரம்-ஆநீச அக்ரம் -நீசர்கள் கூட்டம் )

வ்யாகர சிம்ஹங்களோ பாதி உபாய விசேஷம் –
யூதபதியான மத்த கஜத்தோ பாதி உபேய விசேஷம் என்று
திருக் கோட்டியூர் நம்பி அருளிச் செய்வர்
(உபாயத்தில் தானே ஒரு தனி முதல்
உபேயத்தில் அடியார் குழாங்கள் விசிஷ்ட ப்ரஹ்மம்
உத்தாரக ஆச்சார்யர் வலி மிக்க சீயம் ஸ்வாமி ஒருவரே
உபகாரக ஆச்சார்யர் பலர் உண்டே
பண்டரு மாறன் பசும் தமிழ் ஆனந்தம் பாய் மாதமாய் விண்டிட எங்கள் இராமானுச முனி வேழம்
கலைப் பெருமாள் ஒலி மிக்க பாடலை யுண்டு தன்னுள்ளம் தடித்து அதனால் வலி மிக்க சீயம் )

இச் சேதனனுக்கு கைங்கர்யம் பண்ணும் போது சேஷத்வ சித்தி இல்லை –
ஈஸ்வரனுக்கு கைங்கர்யம் கொள்ளாத போது சேஷித்வ சித்தி இல்லை
இருவருக்கும் இரண்டும் இல்லாத போது இருவருடைய போகமும் குலையும் என்று
பிள்ளை யுறங்கா வல்லி தாசர் அருளிச் செய்வர் –

இதில் சேஷத்வத்தால் உண்டான போகம் சேஷியதாய்-
இவன் இப்படி கொள்ளுகிறான் என்கிற பரிவு சேஷ பூதனுக்கு உள்ள போகம்
என்று மிளகு ஆழ்வான் வார்த்தை —
(கொண்டதற்கு கைக்கூலி கொடுக்க வேண்டுமே )

படியாய்க் கிடந்தது உன் பவள வாய் காண்பேனே -என்பது பிரமாணம்

(செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே
நெடியானே! வேங்கடவா! நின்கோயி லின்வாசல்
அடியாரும் வானவரு மரம்பையரும் கிடந்தியங்கும்
படியாய்க் கிடந்துன் பவளவாய் காண்பேனே
இன்றும் கூட பெருமாள் கோயில் படிகளை “குலசேகரப் படி ” என்று கூறும் வழக்கம் உள்ளது.)

ஸ்ரீ ஸ்தனம் போலே போக்யன் -சேதனன்
போக்தா -பரம சேதனன் –
(அஸ்திர பூஷண அத்யாயம் -புருஷன் மணி வரையாக நீல நாயகக்கல் போல் ஆத்மா )

ஆனால் அசித்தில் காட்டில் வாசி
ஏது என்னில் –
ஈஸ்வரன் போக்தா -நாம் போக்யம் என்கிற ஜ்ஞான விசேஷம்
என்று திருமாலை யாண்டான் அருளிச் செய்வர்

இக் கைங்கர்யம் போக ப்ரீதியாலே உண்டாம் –
அந்த ப்ரீதி அனுபவத்தால் வரும் –
அனுபவம் அனுபாவ்யத்தை அபேஷித்து இருக்கும் –

(பகவானுக்கு இது போகம் என்ற எண்ணத்தால் ப்ரீதியாக இருக்க வேண்டும்
ஸூவ போக்த்ருத்வ புத்தி கூடாதே
அவனுக்கு அதிசயத்தை ஏற்படுத்துவதே கர்த்தவ்யம்
கைங்கர்யம் பண்ணி அவன் மகிழ்வதைப்பார்த்து நாம் மகிழ வேண்டும்
அவனால் விரும்பப்படாத ஆத்ம ஆத்மீயங்கள் வேண்டாம் என்பார்களே ஆழ்வார்கள்
அனுபாவ்யம் -ஈஸ்வரன்
அவனுடைய ஸ்வரூப ரூப குண விபூதிகள் தானே நாம்மால் அனுபவிக்க விஷயங்கள் )

அனுபாவ்ய ஸ்வரூபமும்
ரூபமும்
குணமும்
விபூதியும் உபாதா நமுமாய் –

இதில் ஸ்வரூபம் பரிச்சேதிக்க அரிது

குணங்கள் அளவிறந்து இருக்கும் –
சீலம் எல்லையிலான் –
பிணங்கி அமரர் பிதற்றும் குணம் என்று பிரமாணம் –

இனி பூர்ண அனுபவம் பண்ணலாவது விக்ரஹம் ஒழிய இல்லை –

அவ் விக்ரஹம் தான்
1-அப்ராக்ருதமாய்
2-ஸ்வயம் பிரகாசமுமாய்
3-ஆனந்த அம்ருத தாரைகளைச் சுரக்கக் கடவதாய்
4-பொற் குப்பியின் மாணிக்கம் போலே அக வாயில் உண்டான
திவ்யாத்ம ஸ்வரூபத்தை புறம் பொசிந்து காட்டக் கடவதாய்
5-முத்தின் திரள் கோவை என்கிறபடியே
அபரிமித கல்யாண குணங்களைக் கண்ணாடி போலே பிரகாசிப்பக் கடவதாய்
6-வடிவிணை இல்லா மலர் மகள் மற்றை நிலமகள் பிடிக்கும் மெல்லடியை -என்கிறபடியே
பூவில் பரிமளமான பிராட்டியும்
மண்ணில் பரிமளமான பிராட்டியும்
மடித்துப் பிடித்தாலும் மாந்தும் படியான மென்மையை உடைத்தாய்
7-நித்ய அனுபாவ்யமாய்
8-பூர்வ பாக சித்தமான கர்ம பாகத்தாலும் ஆராதிக்கப் படுமதாய் இருப்பதொன்று

அது தான் அஞ்சு வகையாய் இருக்கும்
1-பரத்வம் என்றும்
2-வ்யூஹம் என்றும்
3-அவதாரம் என்றும்
4-அந்தர்யாமித்வம் என்றும்
5-அர்ச்சாவதாரம் என்றும் –

அதில்
பரத்வம் ஆவது –
முக்த ப்ராப்யமாய் இருக்கும் –

வ்யூஹம்
ஆஸ்ரிதர் உடைய கூக்குரல் கேட்கைக்காக திருப் பாற் கடலிலே
பள்ளி கொள்ளக் கடவதாய் சனகாதிகளுக்கு போக்யமாய் இருப்பதொன்று –

அவதாரங்கள்
ராம கிருஷ்ணாதிகள்

அந்தர்யாமித்வம்
ஆத்ம உஜ்ஜீவன அர்த்தமாக ஸ்வரூபேண நியமித்துக் கொண்டு நிற்கும் நிலை

அங்கன் அன்றியே
உபாசகர்க்கு ஸூ பாஸ்ரயமான விக்ரஹத்தோடு
ஹ்ருதய புண்டரீகத்திலே நிற்பதொரு ஆகாரம் உண்டு

(விபுத்வம் முதல் நிலை
வியாபித்து நியமித்து அடுத்து -சத்தைக்காக உள்ளே -அடுத்த நிலை
மூன்றாவது தன்னையே காட்டி லஷ்மீ விசிஷ்டமாய் விக்ரஹ விசிஷ்டமாய் அனுக்ரஹ விசிஷ்டமாய்
உபாசகர் -அனுக்ரஹித்து போஷித்து வளர்த்து -இது மூன்றாவது நிலை

அந்தரா யம் நியமிப்பவர் -செலுத்துபவர் -ஆணை ஈடுபவர்
அப்ரஹ்மாத்மாக தத்துவமே இல்லையே
அநு பிரவேசம் -தத் ஸ்ருஷ்ட்வா ததேவ அநு பிரவேசத் -வஸ்துவாக இருக்க -முதல் நிலை
அசித்தை நியமிக்க முடியாதே
அனுமதி -உதாசீனம் -ப்ரவர்த்திகம் -மூன்று நிலைகள் உண்டே
பிரார்த்தனை மூலம் பிரேரிதனாக ஆக்க வேண்டும்
அனுகூலராக ஆக வேண்டும்
பராயத்தா அதிகரணம்
ததாமி புத்தி யோகம் -எல்லாருக்கும் இல்லையே
தேஷாம் சதத யுக்தாயாம் கூடவே இருக்க

நன்று இருந்து யோக நீதி நண்ணுவார்கள் சிந்தையுள்
சென்று இருந்து தீவினைகள் தீர்த்த தேவதேவனே
குன்று இருந்த மாடம் நீடு பாடகத்தும் ஊரகத்தும்
நின்று இருந்து வெஃகணைக் கிடந்தது என்ன நீர்மையே? (திருச்சந்த விருத்தம் -63)

உளன் கண்டாய் நன்னெஞ்சே உத்தமன் என்றும்
உளன் கண்டாய் உள்ளுவார் உள்ளத்து உளன் கண்டாய்
வெள்ளத்தில் உள்ளானும் வேங்கடத்து மேயானும்
உள்ளத்தில் உள்ளான் என்று ஓர் —முதல் திருவந்தாதி—99-

உளன் கண்டாய் நன்னெஞ்சே உத்தமன் என்றும்
உளன் கண்டாய் உள்ளுவார் உள்ளத்து உளன் கண்டாய்
விண் ஒடுங்கக் கோடு உயரும் வீங்கருவி வேங்கடத்தான்
மண் ஒடுங்கத் தான் அளந்த மன் ——மூன்றாம் திருவந்தாதி–40-

உளன் கண்டாய் நல் நெஞ்சே உத்தமன் என்றும்
உளன் கண்டாய் உள்ளுவார் உள்ளத்து உளன் கண்டாய்
தன்னொப்பான் தானாய் உளன் காண் தமியேற்கு
என்னொப்பார்க்கு ஈசன் இமை–நான்முகன் திருவந்தாதி–86-

ஆறாம் அதிகரணம் –பரா யத்த அதிகரணம்–ஸூத்ரம் –252–பராத்து தத் ஸ்ருதே –2-3-40–
து ஸப்தம் சங்கையை விலக்குகிறது
பராத் -பரம புருஷ ஸங்கல்பத்தாலே
தத் -கர்த்ருத்வம் ஏற்படுகிறது
ஸ்ருதே-அந்தப் பிரவிஷ்டச் ஸாஸ்தா ஜனானாம் ஸர்வாத்மா ய ஆத்மாநம் அந்தரோ யமயதி -என்று
பரமாத்மாவுக்கு அதீனமான கர்த்ருத்வம் ஸ்ருதியில் கூறப்படுவதால்
இப்படி ஜீவன் பராதீன கர்த்தா என்றால் -ஈஸ்வரனே எல்லாரையும் தூண்டுவதால்
ப்ரயோஜக கர்த்தா ஆதலின் கர்மாவின் பலம் கர்த்தாவையே சாரும் என்பதால்
அவனுக்கே விதி நிஷேத வாக்யங்களுக்கு வச்யத்வம் ஏற்படும் என்ற சங்கையை நிரசிக்கிறார் –அனுமதிப்பார்களுக்கு மட்டுமே )

அர்ச்சாவதாரங்கள்
கோயில்
திருமலை துடக்கமான ப்ராப்ய ஸ்தலங்கள்

நாடு அழியா நிற்க மேல் நிலமாகிற நீணிலா முற்றத்திலே
இனிய சந்தன குஸூம தாம்பூலாதிகளாலே அலங்கரித்து
சத்திர சாமராதிகள் பணிமாற-
அத்தேச வாசிகளுக்கு முகம் கொடுத்து
த்ரிபுவன சக்ரவர்த்தி என்று விருது பிடிக்குமா போலவும்
பயிர் உலவா நிற்க கடலிலே வர்ஷிக்கும் காள மேகம் போலவும் –
த்ருஷார்த்தன் நாக்கு வற்றிச் சாவா நிற்க மத்ஸ்யத்துக்கு தண்ணீர் வார்க்கும் தார்மிகனைப் போலவும் –
பரத்வத்தில் இருப்பு

பரம உதாரனாய் இருப்பவன் ஒரு தார்மிகன்
ஒரு க்ராமத்துக்குக் கொடுத்த த்ரவ்யத்தை
நாலு கிராமணிகள் வாங்கி
விபஜித்துக் கொள்ளுமோ பாதி
ஷீர வ்யூஹமான ஷீராப்தி
(வாஸூ தேவ ஸங்கர்ஷண ப்ரத்யும்ன அநிருத்னர்கள் )

குண ஹீன பிரஜைகளைத் தள்ளி
குணவான்களைக் கைக் கொள்ளும் பிதாவோபாதியும்
மண்டல வர்ஷம் போலவும் அவதாரங்கள்
(பெருக்காறு போல் விபவங்கள் -அக்காலத்தில் உள்ளாருக்கே )

நாம் அழிக்க நினைத்தாலும் அழியாதபடி நம்மையும் தன்னையும் நோக்கிக் கொண்டு
நாமாக நினைத்த வன்று அதுக்கான இடத்தில் முகம் காட்டியும் –
பித்தர் கழுத்திலே சுளுக்கு இட்டுக் கொண்டால் பின்னே நின்று அறுத்து விடும் மாதாவைப் போலேயும்-
மதம் பட்ட ஆனை கொல்லப் புக்கால் அதின் கழுத்தில் இருந்த பாகன் அதன் செவியை இட்டு
அதன் கண்ணை மறைக்குமா போலேயும்
இரா மடமூட்டுவாரைப் போலேவும்
உணரில் கையைக் கடிக்கும் என்று உறக்கத்தில் பாலும் சோறும் புஜிப்பிக்கும்
மாதாவைப் போலவும் அந்தர்யாமித்வம்

ராஜ மகிஷி தன் பர்த்தாவினுடைய பூம் படுக்கையில் காட்டில் பிரஜையினுடைய தொட்டில்
கால் கடை போக்யமாக வந்து கிடக்குமா போலவும்
கோயில்
திருமலை
பெருமாள் கோயில் துடக்கமான அர்ச்சா ஸ்தலங்கள் –

(அளப்பரிய ஆராவமுதை அரங்கம் மேய அந்தணனை )

முத்துத் துறையிலே குடில் கட்டிக் கொடுக்கிற கர்ஷகனைப் போலவும்
க்ராமாதி தேவதையும்
க்ருஹார்ச்சையும்
என்று திருக் குருகைப் பிரான் பிள்ளான் –
(குடீ குஞ்சேஸ்வர -நம் குடிலில் நம்மை விஷயீ கரிக்கவே வந்து அருளுகிறான் )

ஆவரண ஜகம் போலே பரத்வம்
ஷீராப்தி போலே வியூஹம்
பெருக்காறு போலே வைபவம்
பூகத ஜலம் போலே அந்தர்யாமித்வம் –
அவற்றில் தேங்கின மடுக்கள் போலே அர்ச்சாவதாரம்
என்று ஆச்சான் பிள்ளை அருளிச் செய்வர்

சேதனனுடைய ஸ்வரூப ஸ்தித்யாதிகள் பகவத் அதீனங்களாய் இருக்குமா போலே
அர்ச்சாவதாரத்தினுடைய ஸ்வரூப ஸ்திதி பிரவ்ருத்யாதிகளும்
ஆஸ்ரிதர் இட்ட வழக்காய் இருக்கும் என்று ஜீயர் அருளிச் செய்வர்

(கிரந்தம் ஆரம்பத்தில் த்ருஷ்ட அதிருஷ்ட பலன்கள் அவன் அதீனம் என்றாரே
இங்கே அவன் நமது அதீனம் -பக்த பராதீனன் -அஸ்வதந்த்ரர்
அம்பரீஷர் துர்வாசர் சரித்திரம் அறிவோம் )

பக்த பராதீனம் –
தமர் உகந்தது எவ்வுருவம் அவ்வுருவம் தானே என்று பிரமாணம் –

(தமருகந்த தெவ்வுருவம் அவ்வுருவம் தானே,
தமருகந்த தெப்பேர்மற் றப்பேர், – தமருகந்து
எவ்வண்ணம் சிந்தித் திமையா திருப்பரே,
அவ்வண்ணம் அழியா னாம் )

தான் உகந்த விக்ரஹத்தை ஆராதிக்கும் போது
ராஜவத் உபசாரமும் –
புத்ரவத் ஸ்நேஹமும்
சர்ப்பவத் பீதியும்
உண்டாக வேண்டும் என்று எம்பார் அருளிச் செய்வர்

பரத்வாதிகள் ஐந்தையும் சேர பரமாச்சார்யர் அனுசந்தித்து அருளினார் –
தேனே பாலே கன்னலே அமுதே திருமால் இரும் சோலைக் கோனே -என்று

(தானே ஆகி நிறைந்து எல்லா உலகும் உயிரும் தானே யாய்
தானே யான் என் பான் ஆகி தன்னைத் தானே துதித்து எனக்குத்
தேனே பாலே கன்னலே அமுதே திருமால் இரும் சோலைக்
கோனே யாகி நின்று ஒழிந்தான் என்னை முற்றும் உயிர் உண்டே-10-7-2-
இவனே விண் மீதி இருப்பாய் இத்யாதி பஞ்ச பிரகாரமும் )

பட்டருடைய சரம காலத்தில் பெருமாள் எழுந்து அருளி வந்து
நாம் உமக்குச் செய்ய வேண்டுவது என் என்று கேட்டருள
பரம பதத்தில் இந்தச் சிவந்த முகம் காணேன் ஆகில்
மீண்டும் இங்கே வர வேணும் என்று விண்ணப்பம் செய்தார்

ஸூஷேத்ரம் உழுவான் ஒருவனுக்கு
மேட்டு நிலத்தையும் காட்டுமோ பாதி
கோயில் வாஸம் தனக்கு
பரமபதம் கழுத்துக் கட்டியாய் இறே இருப்பது என்று பட்டர் அருளிச் செய்வர்

(கோயில் வாஸத்துக்கு பரமபதம் இடையூறு அன்றோ
காவேரி விரஜா சேயம் வைகுண்டம் ரங்க மந்திரம்….
ஸ வாசுதேவோ ரங்கேச: பிரத்யக்ஷம் பரம் பதம்…)

மஹதா புண்ய மூலே ந-என்று பிரமாணம் –
நல்லார்கள் வாழும் நளிர் அரங்கம் என்னும் கோயில் விட்டு பரமபதத்துக்கு போ
என்றால் குறைப்பாடு படும் என்று நம்பிள்ளை அருளிச் செய்வர் –

(பொல்லாக் குறளுருவாய்ப் பொற்கையில் நீரேற்று
எல்லா வுலகு மளந்துகொண்ட வெம்பெருமான்
நல்லார்கள் வாழும் நளிரரங்க நாகணையான்
இல்லாதோம் கைப்பொருளு மெய்துவா னொத்துளனே)

அமரர் சென்னிப் பூ என்கையாலே
காகந குஸூமாம் போலே
பரத்வம்

வ்யூஹம் -பாற் கடல் பையத் துயின்ற பரமன் -என்றும் –
அனந்தன் தன மேல் நண்ணி நன்கு உறைகின்றான் என்றும்
சொல்லுகிறபடியே அருள் விஞ்சி இருக்கும்

மீனோடு ஆமை கேழல் அரி குரலாய் முன்னும் இராமனாய்த் தானாய்ப் பின்னும் இராமனாய்த் தாமோதரனாய்க்
கற்கியும் ஆனான் என்கிறபடியே
அவதாரங்கள் பத்தின் கீழ் மாற்றாய் இருக்கும்

அந்தர்யாமித்வம் ஆத்ம யாதாம்ய அதீனமாய்
அங்கணஸ்த கூப ஜலம் போலே
குணவத் க்ராஹ்யமாய் இருக்கும்

இனி அர்ச்சாவதாரமே
பின்புள்ளார்க்கும் ஆஸ்ரயிக்கலாவது –
பின்னானார் வணங்கும் சோதி என்று
பரத்வத்தில் ஈஸ்வரத்வம் ஆகிற அழல் விஞ்சி இருக்கும் -ஆகையாலே
அர்ச்சாவதார ஸ்தலமே முக்யமாகக் கடவது

(பொன்னானாய் பொழில் ஏழும் காவல் பூண்ட
புகழானாய் இகழ்வாய தொண்டனேன் நான்
என்னானாய் என்னானாய் என்னால் அல்லால்
என்னறிவேன் ஏழையேன் உலகமேத்தும்
தென்னானாய் வடவானாய் குடபாலனாய்
குணபால மதயானாய் இமையோர்க்கு என்றும்
முன்னானாய் பின்னானார் வணங்கும் சோதி
திரு மூழிக் களத்தனாய் முதலானாயே–திரு நெடும் தாண்டகம்–10-)

பிள்ளை திரு நறையூர் அரையர் பட்டர் ஸ்ரீ பாதத்திலே தெண்டன் இட்டு
தஞ்சமாய் இருப்பதொரு வார்த்தை அருளிச் செய்ய வேணும் என்ன
பொய்யே யாகிலும் அவன் உகந்து அருளின திவ்ய தேசங்களிலே புக்குத் திரிவார்க்கு
அந்திம தசையிலே கார்ய கரமாம் -என்று அருளிச் செய்தார்

ஏரார் முயல் விட்டுக் காக்கைப் பின் போவதே –
ஸ்தல சஞ்சாரியை விட்டு சாகா சஞ்சாரியைப் பற்றுவதே –
என்று ஆச்சான் பிள்ளை அருளிச் செய்வர்

(அர்ச்சாவதார கைங்கர்யமே பரம புருஷார்த்தம் -என்றவாறே )

அழகர் திரு ஓலக்கத்திலே பிள்ளை அழகப பெருமாள் வந்து புகுந்து
பெரியாண்டானைப் பார்த்து பரமபதம் இருக்கும் படி என் என்று கேட்க –
இப்படி இருக்கும் என்ன –
ஆனால் இத்தை விட்டு அங்கு போவான் என் என்ன –
இங்கு இருந்தால் முதுகு கடுக்கும்
அங்குப் போனால் செய்யாது என்று அருளிச் செய்தார்

இப்படிக் கொத்த ஸ்தலங்களிலே அடிமை செய்து போருகை
இவனுக்கு பகவத் பிராப்தி யாவது
விரோதி கழிந்தால் கைங்கர்யம் ஸ்வரூப பிராப்தம் என்று
சோமாசி யாண்டான் அருளிச் செய்வர்

சம்பந்தம் சம்பாத்தியம் அன்று –
தடை விடுகை சம்பாத்தியம் என்று பிள்ளான் பணிக்கும்

(ஒழிக்க ஒழியாத சம்பந்தம் –
நானும் உனக்கு பழ அடியேன் –
நவ வித சம்பந்தம் இயற்க்கை -விலக்காமையே வேண்டுவது
தடை நீக்கியவர் உண்டார் ஆவார்
நெய் பால் தேட்டமாக்காதே )

பரமன் அடி பாடி நெய் உண்ணோம் பால் உண்ணோம்
உண்டார்க்கு உண்ண வேண்டா வென்று நம்பிள்ளை அருளிச் செய்வர்

இக் கைங்கர்ய போகம் யாதாம்யபாவி
ஐஸ்வர்யானந்தத்தில் விலஷணமாய் இருக்கும்

இத்தால்
சர்வ காலத்திலும் உண்டு என்னும் இடம் தோற்றுகிறது

இது ப்ரஹ்ம போகம் ஆகையாலே
சங்குசிதமான கைவல்ய அனுபவத்தில் விலஷணமாய் இருக்கும்

இத்தால்
சர்வ தேசத்திலும் உண்டு என்னும் இடம் தோற்றுகிறது

இது கொண்ட சீற்றம் இத்யாதியாலே
ஈஸ்வர ஆனந்தத்திலும் விலஷணமாய் இருக்கும்

(கடி கொள் பூம் பொழில் காமரு பொய்கை* வைகு தாமரை வாங்கிய வேழம்*
முடியும் வண்ணம் ஓர் முழு வலி முதலை பற்ற* மற்று அது நின் சரண் நினைப்ப*
கொடிய வாய் விலங்கின் உயிர் மலங்கக்* கொண்ட சீற்றம் ஒன்று உண்டு உளது அறிந்து* உன
அடியனேனும் வந்து அடி இணை அடைந்தேன்* அணி பொழில் திருவரங்கத்து அம்மானே.

கோபஸ்ய வசம் – க்ரோதம் ஆஹாரதோ தீவ்ரம் -ஜிதக்ரோதா -கோபம் அடக்குபவனாய் இருந்தும்
வரவழைத்துக் கொள்வான் அடியார் விரோதிகள் மேல் -ஆகவே கொண்ட அடைமொழி )

அந்தரங்க
பஹிரங்க பாவத்தாலே
சர்வ அவஸ்தையிலும் உண்டாய் இருக்கும்

இது சர்வ விதம் ஆகையாலே
பிராட்டியினுடைய ஆனந்தத்திலும் விலஷணமாய் இருக்கும்

(பிராட்டிக்கு கோபம் இல்லை
இருந்தாலும் நம்மது மிதுன கைங்கர்ய போகம்
அத் திரு அவனையே பற்றும்
இத் திரு இருவரையும் பற்றும் )

கைங்கர்யமாவது –
தோளிணை மேலும் நன் மார்பின் மேலும் சுடர் முடி மேலும் தாளிணை மேலும் புனைந்த தண்ணம்
துழாய் உடை அம்மான் -என்கிறபடியே
திருத் துழாய் யோபாதி இஷ்ட விநியோஹ அர்ஹமாய் இருக்கும்

ஆளும் பணியும் படியும் அடியேனைக் கொண்டான் –பின்னும் ஆளும் செய்வன் -என்று பிரமாணம்

தான் உகந்ததும் கைங்கர்யம் அல்ல –
தானும் அவனும் உகந்ததும் கைங்கர்யம் அல்ல –
அவன் உகந்ததே கைங்கர்யம் என்று நஞ்சீயர் அருளிச் செய்வர்

தனக்கே யாக எனைக் கொள்ளுமீதே –
உனக்கே நாம் ஆட் செய்வோம் -என்று பிரமாணம்

(எனக்கே யாட்செய் எக்காலத்தும் என்று என்
மனக்கே வந்து இடை வீடின்றி மன்னி
தனக்கேயாக எனைக் கொள்ளுமீதே
எனக்கே கண்ணனை யான் கொள் சிறப்பே –2-9-3-)

(சிற்றம் சிறுகாலே வந்து உன்னைச் சேவித்து உன்
பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய்
பெற்றம்மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்து நீ
குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாதே
இற்றைப் பறை கொள்வான் அன்று காண் கோவிந்தா
எற்றைக்கும் ஏழு ஏழு பிறவிக்கும் உன் தன்னோடு
உற்றோமே யாவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம்
மற்றை நம் காமங்கள் மாற்றேலோ ரெம்பாவாய்)

————

(இனி உபேயே யாதாத்ம்யம் அருளிச் செய்கிறார் )

கைங்கர்யம் ததீய கைங்கர்யம் பர்யந்தமாக வேணும்

பகவத் குண அனுபவத்துக்கு படிமா
பெரியாண்டானும்
எம்பாரும்

பாகவத கைங்கர்யத்துக்கு படிமா
எண்ணாயிரத்து எச்சானும்
தொண்டனூர் நம்பியும்

ஆச்சார்ய கைங்கர்யத்துக்கு படிமா
வடுக நம்பியும்
மணக்கால் நம்பியும்

ஸ்ரீ ராமாயணத்தாலும்
ஸ்ரீ மஹா பாரதத்தாலும்
ஸ்ரீ விஷ்ணு புராணத்தாலும்
மூன்று அதிகாரிகளுடைய ஏற்றம் சொல்லுகிறது
எங்கனே என்னில்

ஸ்ரீ ராமயணத்தாலே-சபரியினுடைய ஏற்றம் சொல்லுகையாலே உபேய ஏற்றம் வெளியிடுகிறது
மஹா பாரதத்தாலே த்ரைபதியினுடைய ஏற்றம் சொல்லுகையாலே உபாய வைபவம் வெளியிடுகிறது
ஸ்ரீ விஷ்ணு புரானத்தாலே சிந்த யந்தியினுடைய ஏற்றம் சொல்லுகையாலே உபாய விஸ்லேஷத்தில் தரியாமையை
வெளியிடுகின்றது என்று நம்பிள்ளை அருளிச் செய்வர்

ஆசார்ய விஸ்வாசத்துக்கு படிமா பொன்னாச்சியார்
எங்கனே என்னில்
பிள்ளை உறங்கா வல்லி தாசர் உடையவருடைய வைபவம் பரப்பிக்க
அவரை இரு கரையர் என்றாள் –
அதுக்கடி என் என்னில்
பாஷ்ய காரரை ஒழியவும் பெருமாளைச் சரண் புக்குப் போருவர் என்றாள் இறே

உபாய வ்யாவசாயத்துக்கு படிமா
கூரத் தாழ்வான்
ஆண்டாள் –
எங்கனே என்னில் பட்டர்
ஒரு ஆர்த்தி விசேஷத்தில்
பெருமாளே சரணம் என்ன வேண்டி இரா நின்றது என்ன
இக்குடிக்கு இது தான் என்றாள்

(ஆழ்வான் சம்பந்தம் எம்பார் சம்பந்தம் நினைக்கவே அமையும்
உபாயத்தில் கண் வைக்காமல் உபேயத்திலே கண் வைக்க வேண்டும் )

———

(இனி மேல் கீழ் அருளிச் செய்த நான்கு பிரகரணங்களையும்
ஒரு சேரப் பிடித்துத் தொகுத்து அருளிச் செய்கிறார் )

ஆக வைஷ்ணத்வ ஜ்ஞானம் பிறக்கை யாவது
ஜ்ஞானா நந்தங்களும்
புற இதழ் என்னும் படி
பகவத் சேஷத்வமே ஸ்வரூபமாயப் போந்த இவனுக்கு
அந்தப் பகவச் சேஷத்வம்
புற இதழ் என்னும் படி
பாகவத் சேஷத்வமே ஸ்வரூபம் என்று இருக்கை

(அடியேன் உள்ளான் அறிவது முதல் நிலை
பாகவத சேஷத்வமே கைங்கர்யமே ஸ்வரூபம் என்று இருக்கை அடுத்த மேல் நிலை என்றவாறு )

இது (வைஷ்ணத்வ ஜ்ஞானம்) பிறவாது இருக்கை யாவது
ஒரு பாகவத விஸ்லேஷத்திலே நெஞ்சு நையாது இருக்கிறதுக்கு மேலே
வருந்தி
ஒரு பாகவதனோடு சம்ஸ்லேஷிக்க இழிந்து அவனுடைய தோஷ தர்சனம் பண்ணுகை-

உபாயத்துக்கு முற்பாடன் ஆகையாலும்
உபேயத்துக்கு எல்லை நிலம் ஆகையாலும்
இருந்த நாளைக்கு உசாத் துணை யாகையாலும்
பேராளன் பேரோதும் பெரியோரை ஒருகாலும் பிரிகிலேன் என்று
பட்டருக்கு எம்பார் அருளிச் செய்வர்

தேராளும் வாளரக்கன் தென்னிலங்கை வெஞ்சமத்துப் பொன்றி வீழ,
போராளும் சிலையதனால் பொருகணைகள் போக்குவித்தாய் என்று, நாளும்
தாராளும் வரைமார்பன் தண்சேறை எம்பெருமா னும்ப ராளும்,
பேராளன் பேரோதும் பெரியோரை ஒருகாலும் பிரிகி லேனே.

ஆகையால்
அன்பர் கூடிலும் நீங்கிலும் யாம் மெலிதும்-என்று
பிரதமாச்சார்யர் அனுசந்தித்து அருளிற்றதும்

பலபல வூழிக ளாயிடும், அன்றியோர் நாழிகையைப்
பலபல கூறிட்ட கூறாயிடும்,கண்ணன் விண்ணனையாய்
பலபல நாளன்பர் கூடிலும் நீங்கிலும் யாம் மெலிதும்
பலபல சூழலுடைத்து,அம்ம! வாழி யிப் பாயிருளே.

(போதயந்த பரஸ்பரம்
கூடும் பொழுது -நாழிகை சீக்கிரம் கழிந்து போகிறது என்று மெலிகிறாள்
கூடாத பொழுது நேரம் நெடுகி போவதால் மெலிகிறாள்
ஆற்றாமையால் சொல்லி அழுவேனை
அகாரத்துக்கும் ஆகாரத்துக்கும் உஸாத் துணை வேண்டுமே
ஈஸ்வரஸ்ய ஸுஹார்த்தம் தொடங்கி
சாது சமாகமம் பின்பு தானே ஆச்சர்ய சம்பந்தம்
இப்படி உபாயத்துக்கு முற்பட்டு
ஆச்சார்யர் பாகவத கைங்கர்யம் பண்ண நம்மை அனுப்பி
உபேயத்துக்கு எல்லை
அவன் அடியார்க்கு அடியார் உடன் கூடும் இது அல்லால் வேண்டாமோ
இப்படி ஆரம்பமும் முடிவும் -மண்டல அந்தாதி போல் பாகவதர்கள் -)

ஒரு பாகவதனுடைய நியமனத்தை வெறுத்தல் பொறுத்தல் செய்கை யன்றிக்கே
விஷய பிரவணனுக்கு படுக்கைத் தலையிலே
விஷய பாரூஷ்யம் போக்யமாம் போலே யாகிலும் போக்யம் என்று இருக்கை
என்று திருக் கோட்டியூர் நம்பி அருளிச் செய்வர்

(வெறுக்கவும் கூடாது
பொறுக்கவும் கூடாதே
தப்பு என்று நெஞ்சில் பட்டால் தானே பொறுமை
நானே தான் ஆயிடுக
போலே யாகிலும்-பகவத் விஷயத்தில் விஷயாந்த்ர ப்ராவண்யமான
அளவாக வைக்க வேண்டும் என்றவாறு -இதுவே முதல் நிலை )

ஆர்த்த பிரபத்தி பண்ணி இக்கரைப் படுக்கையிலே ஒருப்பட்டு இருக்கச் செய்தேயும்
மாதா பிதாக்களும் கூட அநாதரிக்கும் படியான
ஆர்த்தியை உடைய ஸ்ரீ வைஷ்ணவனைக் கண்டால்
அவனுடைய ரஷணத்துக்கு உறுப்பாக இங்கேயே இருக்கையிலே ஒருப்படுகை
என்று திருக் கோட்டியூர் நம்பி அருளிச் செய்வர் –

(இக்கரை-ஸ்ரீ வைகுண்டமே இக்கரை –
அக்கரைப் பட்டு அநர்த்தம் சூழ அன்றோ இருந்தோம்
இங்கேயே-சம்சாரத்திலேயே
பர துக்க அஸஹிஷ்ணுத்வம் வேண்டுமே )

வைஷ்ணவனுக்கு ஜ்ஞான அனுஷ்டானங்கள் இரண்டும் வேணும் –
அனுஷ்டான ஹீனமான ஜ்ஞானம் சரண ஹீனனான சஷூஷ் மானோபாதி-
ஜ்ஞான ஹீனமான அனுஷ்டானம் அங்க்ரி சஹிதனான அந்தகனோபாதி-
என்று நம்பிள்ளை அருளிச் செய்வர்

(கால் -அனுஷ்டானம் -செயல்
கண் -ஞானம் -என்றவாறு )

அனுஷ்டானம் இல்லாத ஜ்ஞானமும்
கிஞ்சித்காரம் இல்லாத ஸ்வரூபமும் குமர் இருக்கும் (வீண் )
என்று ஆச்சான் பிள்ளை அருளிச் செய்வர்

————

இனி ஆசார்ய வைபவ ஜ்ஞானம் பிறக்கை யாவது
அந்தகன் ஆனவனுக்கு திருஷ்டியைத் தந்தவன் –
இருட்டு அறையில் கிடக்கிற என்னை வெளிநாடு காணும் படி பண்ணின மஹா உபகாரகன்

செறிந்த இருளாலே வழி திகைத்த எனக்கு கை விளக்கு காட்டுமோ பாதி
அஜ்ஞ்ஞான திமிர உபஹதனான எனக்கு மந்திர தீபத்தைக் காட்டி
நல்ல தசையிலே சிநேக பூர்வகமாக அதுக்கு பாத்ரமாக்கி
சேஷத்வ ஜ்ஞானம் பிறவாமையாலே உருமாய்ந்து கிடக்கிற எனக்கு
ரஷகத்வ சேஷித்வங்கள் எம்பெருமானுக்கு ஸ்வரூபம் என்னும் இடத்தையும்
ரஷ்யத்வ சேஷத்வங்கள் எனக்கு ஸ்வரூபம் என்னும் இடத்தையும்
தோற்றக் கடவ சரீராத்மா பாவத்தையும் வெளியிட்டு
சரீரிக்கு ரஷகத்வமாய்
சரீரத்துக்கு இல்லாதவோபாதி ஸ்வ ரஷண நிவ்ருத்தியையும் பண்ணி
சரீர சம்ஸ்காரம் சரீரிக்கு ஆமோபாதி போக்த்ருத்வம் தத் அதீநமாம் படி பண்ணி

இப்படி
சேஷத்வத்தில் கர்த்ருத்வம்
ஜ்ஞாத்ருத்வத்தில் கர்த்ருத்வம் –
கர்த்ருத்வத்தில் கர்த்ருத்வம் –
போக்த்ருத்வத்தில் கர்த்ருத்வம் இவற்றை
நிவர்த்திப்பிக்கக் கடவனாய் -எங்கனே என்னில்

சேஷத்வத்தில் கர்த்ருத்வம் ஆவது –
ராஜ ஆசக்தியை (நெருக்கத்தை ) யிட்டு ராஜ்யத்தைப் பிடிக்கும்(பீடிக்கும் ) மந்த்ரிகள் போலே
பகவத ஆசத்தியை யிட்டு சதார்யனை நெகிழுகை-
அதாவது
சப்தாதி விஷய ஸ்பர்சத்தில் அச்சம் பிறவாது இருக்கையும்
பகவத் பாகவத கைங்கர்யத்தில் அநாதாரம் பிறக்கையும்
(ஸ்பர்சம் வந்தாலும் வந்ததே என்ற அச்சம் பிறக்க வேண்டுமே
தட்டிக் கேட்க ஆள் இல்லை என்று தப்பான கார்யம் செய்வது )

தந் நிவ்ருத்தியாவது –
ப்ராமாதிகமாகவும் விஷய ஸ்பர்சம் இன்றியிலே இருக்கையும் –
பகவத் பாகவத கைங்கர்யத்தில் அத்யாதரம் நடக்கையும் –

ஜ்ஞாத்ருத்வத்தில் கர்த்ருத்வமாவது –
நாம் ஜ்ஞாதா வாகையாலே யன்றோ நம்மை அங்கீ கரித்தது என்று
பஹூ மானம் பண்ணுகை

தந் நிவ்ருத்தி யாவது
தேஹாத்மா அபிமாநிகளிலும் கடையாய் அசித் ப்ராயனான என்னை
இரும்பைப் பொன் ஆக்குவாரைப் போலே
ஆத்ம ஜ்ஞானத்தைத் தந்து அங்கீ கரித்தான் என்று க்ருதஜ்ஞனாய் இருக்கை –
அந் நலனுடை ஒருவனை நணுகினம் நாமே -என்று பிரமாணம்

இலனது வுடையனி தென நினை வரியவன்
நிலனிடை விசும்பிடை உருவினன் அருவினன்
புலனொடு புலனலன் , ஒழிவிலன், பரந்த அந்
நலனுடை யொருவனை நணுகினம் நாமே.

கர்த்ருத்வத்தில் கர்த்ருத்வம் ஆவது –
நிஷித்தங்களை விட்டு விஹிதங்களைப் பற்றின வாறே இறே நம்மை அவன் அங்கீ கரித்தான்
என்று தன்னைப் போரப் பொலிய நினைத்து இருக்கை –

தந் நிவ்ருத்தி யாவது
மரப்பாவையை ஆட்டுவிக்குமா போலே
நிஷித்தங்களையும் தானே நிவ்ருத்திப்பித்து
விஹிதங்களையும் பற்றுவித்தான் என்று இருக்கை

அஹம் மத் ரக்ஷண பரோ மத் ரக்ஷண பலம் ததா |
ந மம ஸ்ரீபதேரேவேதி ஆத்மநம் நிக்ஷிபேத் புத :|| – ஸ்ரீ ந்யாஸ தசகம்

ஸ்வாமீ ஸ்வசேஷம் ஸ்வவசம்
ஸ்வ பரத்வேந நிர்ப்பரம் |
ஸ்வதத்த ஸ்வதியா ஸ்வார்த்தம்
ஸ்வஸ்மின் ந்யஸ்யதி மாம் ஸ்வயம் ||-ஸ்ரீ ந்யாஸ தசகம்

போக்த்ருத்வத்தில் கர்த்ருத்வமாவது –
நாம் அவனுக்கு அடிமை செய்கிறோம் என்று இருக்கை –

தந் நிவ்ருத்தியாவது
தன் கையாலே தன் மயிரை வகிர்ந்தால் அன்யோன்ய உபகார ஸ்ம்ருதி வேண்டாவோபாதி
சரீர பூதனான ஆத்மா சரீரிக்கு அடிமை செய்கிறான் என்று இருக்கை –

இப்படி கர்த்ருத்வத்தை யதாவாக உபகரித்த ஆசார்யன்
மஹா உபாகாரகன் என்று இருக்கை

ஸ்வ அனுவ்ருத்தி பிரசன்னாச்சார்ய அங்கீ காரத்துக்கு ஒழிய உபேய சித்தி இல்லை
என்று முதலி யாண்டான் நிர்வஹிப்பர்

க்ருபா மாத்திர பிரசன்னாசார்ய அங்கீ காரத்துக்கு ஒழிய உபேய சித்தி இல்லை
என்று ஆழ்வான் பணிப்பர்

தன்னாசார்யன் திறத்தில் செய்த அடிமையை மறந்து
செய்யப் பெறாத அடிமைக்கு இழவாளனாய் இருக்கை
அதாவது
ஆசார்யன் திரு உள்ளத்தைப் பின் சென்ற அனந்தாழ்வானைப் போலேவும்
ஆசார்யன் நியமித்த படி செய்த நடாதூர் அம்மாளைப் போலவும்
ஆசார்யன் திரு உள்ளத்தில் அநாதரம் தமக்கு அநர்த்தம் என்று
தம்மை தாழ விட்டு அடிமை செய்த எச்சானைப் போலவும் இருக்கை

(எங்கள் ஆழ்வான் இவர் ஆச்சார்யர் -தாயாதிகள் தொல்லை தாங்காமல் –
இவரைக் கூட்டிக் கொண்டு -கொல்லம் கொண்டானுக்கு சென்று
யார் இடம் சொல்லாதீர் -அந்திம சம்ஸ்காரம் நீரே செய்ய வேண்டும் -என்ற ஆணை
புத்ர க்ருத்யம் செய்தார் )

(அஷ்ட சஹஸ்ரம் க்ராமம் -செஞ்சி அருகில் -பருத்திக் கொல்லை அம்மாள் – ஆண் -இவர் –
பாகவத கிஞ்சித் காரம் சத்கரித்தார் -யஜ்ஜேஸர் -எச்சான்-அலட்சியம்
சின்ன பிள்ளைகள் -இப்படி போனால் ரஜோ குணம் உள்ள அவர் வீடு
அந்தப் பக்கம் போனால் சாத்விகர் வீடு என்று காட்ட
இவர் மனைவிக்கு வஸ்திரமும் சாதித்த வ்ருத்தாந்தம்
அஹங்காரம் -ரஜோ குணம் -வண்ணானாக அவர் இடம் கைங்கர்யம் செய்து –
ஆச்சார்யர் திரு உள்ளம் அநாதாரம் கூடாது என்று கைங்கர்யம் செய்தார் அன்றோ )

——-

இனி உபாய விசேஷ ஜ்ஞானம் பிறக்கை யாவது –
சாத்தியமான சகல உபாயங்களையும் சாங்கமாகவும் மறுவல் இடாதபடி விட்டு
ஸ்வ இதர சமஸ்த நிரபேஷமாக சித்த உபாயம் ச்வீகாரம் என்று இருக்கை

இவ்வுபாய நிஷ்டை யாவது
பிரபத்தி பிரகாரமும்
பிரபத்தி பிரபாவமும் நெஞ்சிலே படுகை

பிரபத்தி பிரகாரம் நெஞ்சிலே படுகையாவது
பிரவ்ருத்தி நிவ்ருத்திகள் ஸ்வ ஆதீனம் என்று இராதே ஒழிகை

பிரபத்தி பிரபாவம் நெஞ்சிலே படுகை யாவது
பிரபத்தி நிஷ்டனுடைய பிரக்ருதியில் பிரகிருதி நிரூபணம் பண்ணாது ஒழிகை

அபிரூபையான ஸ்திரீக்கு அழகு வர்த்திக்க வர்த்திக்க (அழுக்கு போகப்போக )
அபி ரூபவானாய் ஐஸ்வர்யவனான புருஷன் ஆந்தரமாக ஆழம் கால் படுமோபாதி
அஜ்ஞனான சேதனன் அழுக்கு அறுக்க அறுக்க
ஈஸ்வரன் திரு உள்ளம் அத்யாசன்னமாய்ப் போரும் என்று நம்பிள்ளை அருளிச் செய்வர்

சிறியாச்சான் அமுதனாரைப் பார்த்து
உம்முடைய அனநுஷ்டானம் பேற்றுக்கு இலக்காகும் போது காணும் என்னுடைய
அனுஷ்டானம் பேற்றுக்கு சாதனம் ஆவது என்றார்

ஸ்வீகாரத்தில் அந்வயம் இல்லாத போது
ஸ்வதஸ் சர்வஜ்ஞ்ஞன் ஸ்வத பிரசாதத்தாலே சேர விடான்
சோக நிவ்ருத்தி பிறவாத போது சுமை எடுத்துவிடும்
என்று திருக் கோட்டியூர் நம்பி அருளிச் செய்வர்
(மாஸூச -கேட்டாலும் சோகப் பட்டால் பேறு கிட்டாதே -இதுவும் விதியே )

சித்த உபாயத்தில் நிலை தாமரை ஓடையில் அன்னம் இறங்குமோபாதி-
சாத்திய உபாயங்களில் நிலை அவ் வோடையிலே யானை இறங்குமோ பாதி என்று
இளைய யாழ்வாரான திருமாலை யாண்டான் அருளிச் செய்வர்

நல்லார் நவில் குருகூர் நகரான்,* திருமால் திருப் பேர்-
வல்லார்* அடிக் கண்ணி சூடிய* மாறன் விண்ணப்பம் செய்த-
சொல் ஆர் தொடையல் இந் நூறும் வல்லார் அழுந்தார் பிறப்பு ஆம்*
பொல்லா அருவினை* மாய வன் சேற்று அள்ளல் பொய்ந் நிலத்தே.–திருவிருத்தம்

இவ்வுபாயம் எய்ப்பினில் வைப்பு என்று தப்தனுக்கு வைத்த தண்ணீர் பந்தலோபாதி
என்று பெரிய பிள்ளை யருளிச் செய்வர்

——

இனி உபேய யாதாம்ய ஜ்ஞானம் ஆவது –

பரபக்தி யுக்தனாய் சேஷ பூதனான தான் தர்மமாகவும்
சேஷியான ஈஸ்வரன் தர்மியாகவும் அறிந்து
தர்ம தர்மிகளோபாதி தனக்கும் அவனுக்கும் அவிநாபூதம் ஆவதொரு படி
விசிஷ்ட விசேஷத்தில் அவனேயாய்த்
தான் இல்லையாம் படி
ஐக்யம் பிறந்து
(கச்சதாம் மாதுல குலம் -உடை வாள் போல் சத்ருக்கனன் )

தன் சைதன்யத்துக்கு அனுகூலமாம் படி
அவனுடைய ஸ்வரூப ரூப குண விபூதிகளை பிரிகதிர் படாதபடி அனுபவித்து
அவ்வனுபவத்துக்கு போக்குவீடாக
அவனுக்கே அபிமதமான சர்வ வித கைங்கர்யங்களையும் பண்ணி
(உடை வாள் -கைங்கர்யம் பண்ணாதே -கைங்கர்யம் சேதனனாக -இருப்பதன் பயன் )
அவ்வளவிலே நில்லாமல்
ததீய கைங்கர்யமே ஸ்வரூப அனுரூபமான பரம பிராப்யம் என்று இருக்கை –
(கோதில் அடியார் ஆக வேண்டுமே )

ஸ்வீகரத்தில் உபாயத்வ புத்தியும்
பேற்றில் சம்சயமும் ப்ரதிபந்தகம்
என்று திருக் கோட்டியூர் நம்பி அருளிச் செய்வர்

———–

வைஷ்ணவத்வம் நெஞ்சில் பட்டதில்லை யாகில்
ஸ்வரூப நாசகரையும்
ஸ்வரூப வர்த்தகரையும் அறிந்திலனாகக் கடவன்

ஆசார்ய வைபவம் நெஞ்சில் பட்டது இல்லையாகில்
ஜாத்யந்தனோபாதி யாகக் கடவன் (பிறவிக்குருடன் )

உபாய வைபவம் நெஞ்சிலே பட்டதில்லை யாகில்
மரக் கலத்தை விட்டு சுரைப் பதரைக் கைக் கொண்டானாகக் கடவன்

உபேய யாதாத்ம்யம் நெஞ்சிலே பட்டது இல்லையாகில்
ராஜ புத்ரனாய் பிறந்து உஞ்ச வ்ருத்தி பண்ணுமோபாதியாகக் கடவன்

———————————————

யாமுன கவி வாதீந்திர ஸூந்தரஸ்ய புரோஹித
பிரமேய ரத்ன மகரோத் சர்வேஷாம் ஜ்ஞான சம்பதே –

——————————————-

திருமாலை ஆண்டான்-திருக் குமாரர் -ஸூந்த்ரத் தோளுடையார் -திருக் குமாரர் -இளைய யாழ்வார்
இவர் புத்ரர் யமானாசார்யர் -இந்நூல ஆசிரியர்
இவர்கள் அனைவரும் காஸ்யப கோத்தரத்தினர்

கோவிந்த பெருமாள் சிறிய கோவிந்த பெருமாள் சகோதரர்கள்
கிடாம்பியாச்சான் கிடாம்பி பெருமாள் சகோதரர்கள் அருளாள பெருமாள் எம்பெருமானார் -அலங்கார வேங்கடவர் சகோதரர்கள்
மாருதிப் பெரியாண்டான் மாருதிச் சிறியாண்டான் சகோதர்கள்
கோமடத் தாழ்வான் கோமத்து சிறியாழ்வான் சகோதரர்கள் -போலே
பெரியாண்டன் சிறியாண்டான் சகோதரர்கள் 74 சிம்ஹாசனபதிகளில் ஒருவர்
பெரியாண்டான் திருக்குமாரர் மாடபூசி -மாடங்களுக்கே பூஷணமாக இருப்பாராம் –
பெரியாண்டான் தன் சைதன்யம் குலையும்படி அழகர் இடத்தில் பேர் அன்பு பூண்டவர்
இவர் திருத் தோரணம் கட்டி அழகர் திருவடிகள் அறுதியாக பத்தெட்டு திவசம் தெண்டன் இட்டு கிடப்பர்
ராத்ரி மனுஷ்யர் போகும் போது ஆண்டான் கிடக்கிறாரோ பஸூ கிடக்கிறதோ வழி பார்த்து போங்கோள் என்னும் படி
சலியாமல் பகவத் அனுபவம் பண்ணுவாராம்

——–

ஸ்ரீ மாலாதர வம்ச மௌக்திக மணி கண்டீரவோ வாதி நாம்
நாம்நா யமுனா தேசிக கவிவர பாதாஞ்சலே பண்டித –யோக சாஸ்திரத்தில் சிறந்தவர் -வாதிகளுக்கு ஸிம்ஹம் போன்றவர்

ஆக்யாய யாமுனாசார்ய ஸும்ய ராஜ புரோஹித
அரீ ரசதி தம் பும்ஸாம் பூஷணம் தத்வ பூஷணம் –

ஸ்ரீ திருமாலை ஆண்டான் திருக் குமாரர் -ஸ்ரீ சுந்தரத் தோளுடையான்-என்னும் ஸ்ரீ பெரியாண்டான் –
அவர் திருக் குமாரர் -இளையாழ்வார் -என்று எம்பெருமானார் திருநாமம் சாத்த –
இவர் உடைய பௌத்ரர் ஸ்ரீ யமுனாசார்யர் –
இவர் வாதிகேசரி அழகிய மணவாள சீயர் உடைய சிஷ்யர்-

இவர்-
ஸ்ரீ ப்ரமேய ரத்னம் –
ஸ்ரீ தத்வ பூஷணம் –
ஸ்ரீ ரஹஸ்ய த்ரய சாரம் (இது தற்போது கிடைக்க வில்லை ) -மூன்று நூல்களை இயற்றி அருளி உள்ளார் –

——————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகாசார்யர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ யாமுனாசார்யர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ யாமுனாசார்யர் அருளிச் செய்த ஸ்ரீ ப்ரேமேய ரத்னம் -மூன்றாம் பிரகரணம் –உபாய வைபவம்-

November 24, 2015

ஸ்ரீ மங்கள ஸ்லோகம்
பிரமேய ரத்னம் ரமணீய பஹோ புரோதசா யாமுநே தேசிகேந
உத்த்ருத்ய வேதாம்பு நிதேரபாராத் ப்ரோக்தும் மநோ லங்க்ருதயே முமுஷோ –

ரமணீய பாஹு ப்ரோஹிதர் -யமுனா தேசிகன் -யாமுனாச்சார்யார்
ஸூந்தர தோளுடையானுக்கு -கைங்கர்யம்
கூரத்தாழ்வான் அரங்கனுக்கு போல் இவர் அழகருக்கு கைங்கர்யம்
திருமாலை ஆண்டான் மூலம் இவருக்கு வந்த கைங்கர்யம் இது
உத்த்ருத்ய அபாரமான வேதாம்பு வேதக்கடலில் இருந்து உத்தரித்து அருளினார்
ப்ரமேய ரத்னம் முமுஷுக்களுக்கு அலங்காரமாக எழுதுகிறேன்

பாற் கடலைக் கடைந்து அமுதம் பெண் அமுதம்
மறைப்பால் கடலைக் கடைந்து நா பர்வதம் போல் திருவாய் மொழி
இவர் வேதாம்பு வேதக்கடலில் இருந்து உத்தரித்து அருளினார்

ஸூந்தர தோளுடையான் உடைய புரோஹிதரான யாமுனாசார்யராலே
வேதக் கடலிலே இருந்து முமுஷூவுக்கு
மனஸ்ஸூக்கு அலங்க்ருதமாக அருளிச் செய்யப் பட்டது -என்றவாறே –

யாமுன கவிவா தீந்திர ஸூந்தரஸ்ய புரோஹித
பிரமேய ரத்ன மகரோத் சர்வேஷாம் ஜ்ஞான சம்பதே –

இவர் மூன்றாவது யமுனாச்சார்யர்
ஸ்ரீ ஆளவந்தார் முதலிலும்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை உடைய திருத்தகப்பனார் இரண்டாவது யமுனாச்சார்யர் –

——-

மூன்றாம் பிரகரணம் –உபாய வைபவம்

அநந்தரம் உபாய வைபவம் பிரதிபாதிக்கப் படுகிறது –
எங்கனே என்னில்

சதுர் தச வித்யா ஸ்தானங்களாலும் அறுதியிட்ட உபாயம் நாலு வகையாய் இருக்கும்
1-கர்மம் என்றும்
2-ஜ்ஞானம் என்றும்
3-பக்தி என்றும்
4-பிரபத்தி என்றும் –

(வேதங்கள் நான்கு
அங்கங்கள் ஆறு
1. சிஷா – எழுத்துக்களின் உருவாக்கம் மற்றும் உச்சரிப்பைக் கற்க
2. சந்தஸ் -செய்யுள்களி்ல் எழுத்துக்களின் அளவு மற்றும் தன்ஸமகளைப் பயில
3. வ்யாகரணம்- ஒரு சொல்லின் பகுதிகளையும் அவற்றின் பொருள்களையும் அறிய
4. நிருக்தம் -வேதத்திலிருக்கும் கடினமான பதங்களுக்குப் பொருள்கள் தெரிய
5. கல்பம்–வைதிக வேதிக கர்மங்களைச் செய்யும் முறை புரிய
6. ஜ்யோதிஷம்–வைதிக கர்மங்கஸளச் செய்ய வேண்டிய காலத்தை நிர்ணயிக்க
உப அங்கங்கள்
வேதங்களுக்கு எட்டு உபாங்கங்கள் உள்ளன
1. புராணங்கள் – நற்பண்புகளை வளர்க்க
2. ந்யாயம் – பொருள்களின் தன்மைகளை அறிய
3. மீமாம்ஸை – வேதங்கஸை ஆராய
4. தர்ம சாஸ்த்ரம் –ஆசாரம் கடைப்பிடிக்க
5. ஆயுர்வேதம் – உடலைப் பராமரிக்க
6. தநுர்வேதம் – அரசர்கள் நாட்டைக் காக்க
7. காந்தர்வ வேதம் – மனசை சாந்தமாக்க
8. அர்த்த சாஸ்த்ரம் – அரசர்கள் ராஜ்யம் செய்ய

காந்தர்வ ஆயுர் தனுர் அர்த்த சாஸ்திரம் உப அங்கங்கள் நான்கையும் விட்டு 14-என்றவாறு )

இதில் கர்மம் ஆவது
நித்ய
நைமித்திக
காம்யம் என்று மூன்று வகையாய் இருக்கும்

நித்யமாவது சந்த்யா வந்தனம் துடக்கமானவை –

நைமித்திகமாவது -க்ருஹ தஹ நாதிக்கு ப்ரோஷணாதி-

காம்யமாவது பலத்தைக் கோலி அனுஷ்டிக்குமாவை –

(ஆஜ்ஞா கைங்கர்யங்கள் இவை -செய்யா விடில் பாபங்கள் வரும் –
மேல் அவன் ப்ரீதிக்கு உறுப்பாக )

இன்னமும்
யஜ்ஞம் தானம் தபஸ்ஸூ-தீர்த்த யாத்ரை என்று துடங்கி
உண்டானவை பல வகையாய் இருக்கும்

ஜ்ஞானமும்
சத் வித்யை
தஹர வித்யை
அந்தராதித்ய வித்யை என்று துடங்கி
பஹூ வித்யை (ப்ரஹ்ம வித்யைகள் -32 )ரூபமாய் இருக்கும்

இதில் சத்வித்யை யாவது (ப்ரஹ்ம) ஸ்வரூப உபாசன ஜ்ஞானம் –

தஹர வித்யை யாவது -குண உபாசன ஜ்ஞானம்

அந்தராதித்ய வித்யை யாவது -ஆதித்ய மண்டல அந்தர்வர்த்தியாக த்யானம் பண்ணி உபாசிக்கிற ஜ்ஞானம்

இனி பக்தியும் பஹூ விதமாய் இருக்கும் –
த்யானம்
அர்ச்சனம்
ப்ரணாமம்
பிரதஷினம்
ஸ்தோத்ரம் துடங்கி உண்டான வற்றாலே

பக்தி தான் மூன்று வகையாய் இருக்கும் —
1-பக்தி என்றும் –
2-பர பக்தி என்றும் –
3-பரம பக்தி என்றும்

(பர ஞானம் இதில் சேர்க்க வில்லை
ஞான தர்சன பிராப்தி பொதுவாகச் சொல்வோம்
அதுக்குப் பதிலாக ஆரம்ப தசையான பக்தியை எடுத்துக் கொண்டார் )

இதில் பக்தி யாவது
ஸ்வாமி யான நாராயணன் பக்கல் தாஸ பூதனான
இச் சேதனனுடைய ஸ்நேஹம் அடியான வ்ருத்தி

பர பக்தியாவது
சம்ஸ்லேஷத்தில் சௌக்யமும் விஸ்லேஷத்தில் துக்கமும்

பரம பக்தியாவது
பகவத் விஸ்லேஷத்தில் சத்தா நாசம் பிறக்கும் படியான அவஸ்தை

இவ் வுபாயம் இரண்டும் உபாசன நாத்மகம் ஆகில் பேதம்
என் என்னில்
பய பரிபாக தசை போலே பக்தி –
அதனுடைய விபாக தசை போலே ஜ்ஞானமும்

(பாலை சுண்ட காய்ச்சிய தசை
திரட்டுப்பால் போல் -அத்யாவசிய ரூபம்
பக்திஸ் ச ஞான விசேஷம்
சாதன பக்தி
சாத்ய பக்தி
ஸஹஜ பக்தி –மூன்றும் உண்டே )

(ஞானான் மோக்ஷம் -அந்யத் -என்று ஸ்ருதி சொல்லுமே
கர்ம ஞானம் அங்கமாக உள்ள பக்தி உபாசனம் த்யானம்
ஸ்நேஹ பூர்வம் -பக்திஸ் ஸ ஞான விசேஷம்
எண்ணெய் ஒழுக்கு போல் இடையறா த்யானம் –
பக்தி -ஞானத்தை உள் அடக்கியதே -முதிர்ந்த நிலை
உபாயம் -பலத்துக்கு அருகில் கூட்டிச் செல்வது
பக்தியால் முக்தி என்றால் பக்தி காரணம் சாதனம் உபாயமா என்றால்
பலம் அவனே கொடுப்பான் -கொடுக்காத தூண்டும் -இனிமை பெற்று கருணையால் அளிப்பான்
ஆகவே சாதன பக்தி -இது ஒரு நிலை
மேல் ஸாத்ய பக்தி –
அவனே உபாயம் -சித்தமாக இருக்க -ஆனை தானே அமர்ந்து நாம் அதில் மேல் உட்கார்வது போல் –
இங்கும் பக்தி வேண்டுமே -அனுபவத்துக்கு -ரசிக்க -வேண்டிய அன்பே பக்தி –
அடுத்த நிலை ஸஹஜ பக்தி –
சாக்கியம் கற்றோம் –இத்யாதிகளால் மற்ற ஆழ்வார்களை விட நம்மாழ்வாருக்கு ஏற்றம்
பட்டத்துக்கு உரிய யானையும் அரசனும் செய்தவை ஆராய முடியாதே
வெறிதே அருள் செய்வார் செய்வார்கட்கே )

மயர்வற மதி நலம் அருளினன் – என்று ஆழ்வாருக்கும்
பக்தி ரூபா பன்ன ஜ்ஞானத்தை இறே சர்வஜ்ஞ்ஞனான சர்வேஸ்வரன் பிரகாசிப்பித்தது

இவ் வுபாய த்ரயமும் அந்யோந்யம்
ஓன்று அங்கியாய்
இரண்டு அங்கங்களாய் இருக்கும் –

இதில் ஜ்ஞான பக்திகளோடு கூடின கர்மத்தாலே
ஜனகாதிகள் முக்தரானார்கள் (ஆதி கேகேய ராஜா அர்த்தபதி போல்வார் )

கர்ம பக்திகளோடு கூடின ஜ்ஞானத்தாலே
பரதாதிகள் முக்தரானார்கள்

கர்ம ஜ்ஞானன்களோடு கூடின பக்தியாலே
ப்ரகலாதிகள் முக்தரானார்கள் (ஆதி ஸூகர் வாமதேவர் போல்வார் )

இதுக்கு ஹேது அதிகாரிகளுடைய அபி சந்தி பேதம்

இதில் சாஸ்திர ஜன்ய ஜ்ஞானமாய் இருக்கும் ஜ்ஞானம் –
விவேக ஜன்ய ஜ்ஞானமாய் இருக்கும் பக்தி என்று
ஜீயர் அருளிச் செய்வர்

(சாதன சப்தகம்
1-விவேகம் -சரீரத்தின் தூய்மை
2-விமோகம் -காமத்தில் குரோதத்தில் அநபிஷ்வங்கம்..
3-அப்யாசம்-த்யான ஆலம்பனமான வஸ்துவிலே பலகாலம் பரிசீலனம் பண்ணுகை –
4-க்ரியா -பஞ்ச மகா யஜ்ஞாத்ய அனுஷ்டானம்
5-கல்யாணம் -சத்யம், ஆர்ஜவம் ,தயை தானம் ,அஹிம்சை,அனபித்யை – ஆகிற இவை கல்யாணம் எனப்படும் –
6-அநவதாச -தேச கால வைகுண்யத்தாலும்(குணக் கேட்டினாலும் ) சோக ஹேதுவாயும் பய ஹேதுவாயுமாய் உள்ள வஸ்துக்களில்
அனுசம்ருதியால் உண்டான தைன்யமாகிற மனசினுடைய அபாஸ்ரத்வம் ,அவசாதம் ஆகையாலே ,அதனுடைய விபர்யயம்
7-அநுத்கர்ஷம் -பாஸ்வரம் -விளக்கம் -தெளிவு /அபாஸ்வரம் -தெளிவின்மை /தைன்யம் -வறுமைத்தன்மை )
(பகவத் விஷய சம்ச்லேஷத்தில் தரிக்கையும் விஸ்லேஷத்தில் தரியாமையும் தானே வேண்டும் –
லௌகிக விஷ உணர்ச்சி கொந்தளிப்பு கூடாது என்றபடி )

பத்துடை அடியவர்க்கு எளியவன் என்று இருக்கை
முடவனுக்கு ஆனை வளைந்து கொடுக்குமா போலே என்று
நடுவில் திரு வீதிப் பிள்ளை அருளிச் செய்வர் –

அனந்தர உபாயம்
பிரபதனமாய் இருக்கும்
கீழ்ச் சொன்ன உபாயங்கள் சாஸ்திர ஜன்யங்கள் –
இந்த உபாயம் உபதேச சித்தம் என்று நம்பிள்ளை அருளிச் செய்வர்

(சாஸ்த்ர ஞானம் பஹு கிலேசம்
உபதேசத்தால் -ரகஸ்ய த்ரய ஞானம் )

கீழ்ச் சொன்ன உபாயங்கள் சாத்யங்களாய் இருக்கும் –
இது சித்தமாய் இருக்கும்

அவை அசேதனங்களாய் இருக்கும் –
இது அத்விதீயமாய் இருக்கும்
(பரம சேதனன் தானே ஓத்தார் மிக்கார் இலையாய மா மாயன் தானே )

அவை த்யாஜ்யங்களாய் இருக்கும் –
அது த்யாக விசிஷ்டமாய் இருக்கும் -என்று ஆழ்வான் பணிப்பர்

அவ்வுபாயங்களுடைய த்யாஜ்யத்வத்தையும்
இவ்வுபாயத்தினுடைய ஸ்வீகார்யத்தையும் பிரதமாச்சார்யர் அருளிச் செய்தார்

நோற்ற நோன்பிலேன் நுண்ணறிவிலேன் இனி உன்னை விட்டு ஒன்றும் ஆற்ற கின்றிலேன் -என்றும்
நாகணை மிசை நம்பிரான் சரணே சரண் நமக்கு என்றும்
சிற்ற வேண்டா சிந்திப்பே அமையும் -என்றும் -அருளிச் செய்தார் இறே

இவ்வர்த்தத்தை ஸ்ரீ தொண்டர் அடிப் பொடி ஆழ்வாரும் அனுசந்தித்து அருளினார்
குளித்து மூன்று அனலை ஓம்பும் குறிகொள் அந்தணமை தன்னை ஒளித்திட்டேன்–
என் கண் இல்லை நின் கணும் பக்தன் அல்லன்
அளித்து எனக்கு அருள் செய் கண்டாய் என்று –

இவ்வர்த்தத்தை நாய்ச்சியாரும் அனுசந்தித்து அருளினார் –
நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய் –(10)
சிற்றாதே பேசாதே –
போற்றியாம் வந்தோம் புகழ்ந்து -என்று –

அவ்வுபாயங்கள் அசக்ருத் கரணீயங்கள் –
இவ்வுபாயம் சத் க்ருணீயம் என்று எம்பார் அருளிச் செய்வர்

இதில் வர்த்தமானம் தத் கால அனுஷ்டான பிரகாசகம் என்று
பிள்ளை அருளிச் செய்வர்
(இதில்-த்வயத்தில் பிரபத்யே
மந்த்ர ரத்னம் வேறு அல்ல -ஸித்த உபாயம் வேறு அல்ல -இதுவே நம் சம்ப்ரதாயம் )

அவை அதி க்ருதாதிகாரம் –
இது சர்வாதிகாரம்

(அதி க்ருதர் -தகுதி படைத்தவர்
பிள்ளை பிறந்து கருத்த தலையுடன் உள்ளவரே யாகம் செய்யலாம் ஸ்ருதிகள் சொல்லுமே
வேத அத்யயனம் செய்தவர்களுக்கே
சாந்தி தாந்தி இருக்கிறவர்
பிறப்பாலும் பண்பாலும் தகுதி )

உத்தம புருஷனாலே ஆஷிப்ப்தனான கர்த்தா இன்னான் என்று தோற்றாமையாலே
என்று பெரிய பிள்ளை அருளிச் செய்வர்

(நான் பற்றுகிறேன் -நான் உத்தம புருஷன்
அனுமானிக்கப் பட்ட கர்த்தா இன்னான் என்று சொல்ல வில்லையே )

பிராப்தாவும் உபாயம் அல்ல –
பிரபத்தியும் உபாயம் அல்ல –
பிரபத்தவ்யனே உபாயம் என்று இளையாழ்வாரான திருமாலை யாண்டான் அருளிச் செய்வர்

(விடுகையும் உபாயம் அல்ல
பற்றுதலும் உபாயம் அல்ல
விடுவித்திப் பற்றுவிக்கும் அவனே உபாயம்

முமுஷு -பக்தன் -ப்ரபன்னன்
வசீகரித்து மோக்ஷம் பெற வேண்டும் பக்தன்
ஸ்வ தந்த்ரனான சாத்தனாந்தர நிஷ்டன் பக்தன் –
அத்யந்த பரதந்த்ர ஞானம் வரவில்லையே இவனுக்கு
ப்ரபன்னனுக்கு ஒன்றுமே செய்யாமல் -புருஷகாரமாய் பிராட்டியே நமக்காக வசீகரித்து பேற்றை அருளுகிறாள்
கோல மலர்ப் பாவைக்கு அன்பாகிய என் அன்பேயோ

பேறு பிராட்டியால் -த்வயம் -ஸ்ரீ வைஷ்ணவ சம்ப்ரதாயம்
தேகத்தாலே பேறு -வேதம்
ஆத்மாவால் பேறு திரு மந்த்ரம்
ஈஸ்வரனால் பேறு சரம ஸ்லோகம் )

வ்யவசாயாத்மாக ஜ்ஞான விசேஷம் பிரபத்தி என்று
பெரியாண்டான் அருளிச் செய்வர்

(உன்னால் அல்லால் இத்யாதி -த்வம் ஏவ-இத்யாதி )

பேற்றுக்கு பிரபத்தி ஒரு கால் பண்ண அமையும் –
புன பிரபத்தி பண்ணுகிறது கால ஷேப ஸூக ரூபம் என்று
பாஷ்ய காரர் அருளிச் செய்வர்
(ஜப்தவ்யம் குரு பரம்பரையும் த்வயமும்
உதடு துடித்துக் கொண்டே இருக்குமே பூர்வர்களுக்கு
மருந்தும் விருந்தும் இதுவே )

உபாயங்கள் அநர்த்த பயத்தாலே த்யாஜ்யங்கள் என்று
திருக் கோஷ்டியூர் நம்பி அருளிச் செய்வர்

(சோம சர்மா தப்பாக பண்ணி -ப்ரஹ்ம ரஜஸ்ஸு ஆனதே
நம் பாடுவானால் பேறு )

ஆர்த்தனுக்கு ஆஸூவாக பலிக்கும் –
த்ருப்தனுக்கு தேக அவசானத்திலே பலிக்கும் என்று
பெரிய நம்பி அருளிச் செய்வர்

கரண த்ரயமும் கூடுகை ஆர்த்த லஷணம்-
இதில் ஓன்று கூடுகை த்ருப்த லஷணம் –
தத்தத் பிராயச் சித்தங்களாலே நிவர்த்த நீயமான சகல பாப நிவர்த்திக்கு
தத் ஏக உபாய வ்யவசாயம் பிரபத்தி என்று
பெரிய முதலியார் அருளிச் செய்வார்

பக்தி பிரபத்திகள் இரண்டும் பகவத் பிரசாதங்களாய் இருந்ததே யாகிலும்
அதிசயேன பிரசாத மூலம் பிரபதனம் என்று
மணக்கால் நம்பி அருளிச் செய்வர்

(வாய் புரண்டு சரணம் சொல்ல வைத்ததே அவன் அனுக்ரஹத்தாலே
பக்தி கிருபா ஜனகம்
இது கிருபா ஜன்யம் )

பக்தி நிஷ்டனுக்கு கர்ம அவசானத்திலே பிராப்யம் என்று
உய்யக் கொண்டார் அருளிச் செய்வர்

(தேஹ அவசான முக்தி பிரபன்னனுக்கு-
தேவப்பெருமாள் ஆறு வார்த்தைகளில் ஓன்று அன்றோ )

பூர்வ வாக்யம் சர்வ பல சாதாரணம் –
உத்தர வாக்யம் பகவத் ஏக பிரயோஜனமாயே இருக்கும் என்று
நாத முனிகள் அருளிச் செய்வர்

(இது-உத்தர வாக்யம்- நாம் அவனுக்கு மாஸூச சொல்வது அன்றோ
ஸர்வ தேச ஸர்வ கால ஸர்வ அவஸ்தா ஸர்வ கைங்கர்ய பிரார்த்தனை )

பிள்ளை திரு நறையூர் அரையர் பூர்வ வாக்ய நிஷ்டர்
ஆட் கொண்ட வில்லி ஜீயர் உத்தர வாக்ய நிஷ்டர்

(குருவி கட்டிய கூட்டையே பிரிக்க முடியாது
அவன் காலைக் கட்டி விடுவித்திக் கொள்ள வேண்டும் என்றாரே -பிள்ளை திரு நறையூர் அரையர்
பாகவத நிஷ்டை பெறவில்லையே என்று வருந்தினார் -ஆட் கொண்ட வில்லி ஜீயர் )

1-விக்ரஹத்துக்கு ஸூபாஸ்ரயத்வம் –
2-ஆஸ்ரித கார்ய ஆபாத்கத்வம் ஜ்ஞான சக்திகளுக்கு –
3-ஆஸ்ரயண சௌகர்ய ஆபாகத்வம் வாத்சல்யாதிக்கு
4-புருஷகாரத்வம் வடித் தடம் கண் மலராளான பிராட்டிக்கு –
5-உபாயத்வம் உள்ளது ஈஸ்வரனுக்கு
என்று பட்டர் அருளிச் செய்வர்

இவ் வுபாய விசிஷ்டனுக்கு
1-அபராத பூயஸ்த்வம்
2-உபாய பல்குத்வம்
3-பல குருத்வம் என்கிற
சங்கா த்ரயமும் கழிய வேணும் என்று நஞ்சீயர் அருளிச் செய்வர்

அல்லாத உபாயங்கள் பதர்க் கூடு-
இது சர்வ சக்தியை அண்டை கொண்டால் போலே
என்று நம்பிள்ளை அருளிச் செய்வர்

சரண த்வித் வத்தாலே அனபாயிநீயான பிராட்டியையும் சஹியாதபடி இறே
உபாயத்தினுடைய சுணை யுடைமை இருக்கும் படி
என்று ஆச்சான் பிள்ளை அருளிச் செய்வர்

(இரண்டு திருவடிகளை மட்டும் சொன்னது
அவளும் விட்டுப் பிரியாமல் இருக்க
அவனது சூடு சுரணை யாலே தானே
மாம் ஏகம் என்றவர் தானே -மாம் என்று பிராட்டியைத் தொட்டுக் கொண்டே )

எம்பெருமானாலே எம்பெருமானை பெரும் இத்தனை யல்லது
ஸ்வ யத்னம் கொண்டு பெற நினையாதார்கள் ஸ்வரூபஜ்ஞ்ஞர் –
அது என் போல் என்னில்

சாதகமானது வர்ஷ தாரையைப் பேரில் பானம் பண்ணியும்
பூ கத ஜல ஸ்பர்சம் பண்ணாதாப் போலேயும் –
பிரபன்னஸ் சாதகோயத்வத் பிரபத்தவ்ய கபோதவத் -என்று பிரமாணம்

(ஒண் தாமரையாள் கேள்வன் ஒருவனையே நோக்கும் உணர்வு அன்றோ
கபோதவத்-புறா கதை அறிவோம்
ஹரி-விரோதியைக் கூட பிராணான் பரித்யஜ்ய ரஷிதவ்வய உயிரை விட்டே ரக்ஷிக்க வேண்டுமே
அவன் இப்படி இருக்க நாம் சாதகப்பறவை போலே இருக்க வேண்டாமோ )

தான் தனக்குப் பார்க்கும் நன்மை காலன் கொண்டு மோதிரம் இடுமா போலே –
எம்பெருமானாலே வரும் நன்மை மாதா பிதாக்கள் பொன் பூட்டுமா போலே

(தனக்கு தான் தேடும் நன்மை தீமையோபாதி விலக்காய் இருக்கும் -ஸ்ரீ வசன பூஷணம் –சூரணை -160-)

தான் தனக்குப் பார்க்கும் நன்மை ஸ்த நந்த்ய பிரஜையை தாய் மடியினின்றும் பறித்து
ஆட்டு வாணியன் கையிலே கொடுக்குமா போலே என்று
திருக் குருகைப் பிரான் பிள்ளான் பணிப்பர்

(தன்னால் வரும் நன்மை விலைப் பால்-போலே
அவனால் வரும் நன்மை முலைப் பால் போலே—என்று பிள்ளான் வார்த்தை -ஸ்ரீ வசன பூஷணம்-சூரணை –177-

அவனை ஒழிய தான் தனக்கு நன்மை தேடுகை யாவது –
ஸ்தநந்தய பிரஜையை மாதா பிதாக்கள் கையில் நின்றும் வாங்கி
காதுகனான ஆட்டு வாணியன் கையிலே காட்டி கொடுக்குமா போலே –
இருப்பது ஓன்று –-ஸ்ரீ வசன பூஷணம் –சூரணை -178-)

பிறரால் வரும் உன்னையும் வேண்டேன் –
என்னால் வரும் உன்னையும் வேண்டேன் –
உன்னால் வரும் உன்னை வேண்டுவேன் என்று இருக்க
வேண்டேன் என்று இருக்கிறது அத்யந்த பார தந்த்ர்யத்தாலே
ஸ்வாமி ஏதேனும் செய்து கொள்ளட்டும் என்னும் நிலை

திவி வா புவி வா -என்று பிரமாணம்

உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன் -என்று பிரதமாசார்யரும் அனுசந்தித்து அருளினார்

(உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன்
நானும் அந்யதமரில் அந்ய தமர் தானே
யாவராலும் என்று கர்மாதிகளை சேதன சமாதியால் )

களைவாய் துன்பம் களையாது ஒழிவாய் களை கண் மற்றிலேன் -என்றே எம்பார் அனுசந்தானம்

புணைவன் பிறவிக்கடல் நீந்துவார்க்கே என்று சம்சார சாகரத்துக்கு உத்தாரகன் அவனே

துன்பக் கடல் புக்கு வைகுந்தன் என்பதொரு தோணி பெறாது உழல்கின்றேன் என்று
நாய்சியாரும் இவ்வர்த்தத்தை அனுசந்தித்து அருளினார் –

இவ்வுபாயத்தினுடைய ஸ்வரூபம் இதர உபாய அசஹத்வம் –
எங்கனே என்னில்

இதர உபாய ஸ்பர்சத்தில் அபாய சம்சர்க்கத்தோ பாதி பிராயச் சித்தம் பண்ண வேணும்
இவ்வதிகாரி பிராயச் சித்தம் பண்ணும் அளவில் புன பிரபத்தி யாகக் கடவது

(வர்த்ததே மே மகத் பயம் -என்கையாலே பய ஜநகம்-
மா ஸூச -என்கையாலே சோக ஜநகம்-ஸ்ரீ வசன பூஷணம்-சூரணை -120-

இப்படி கொள்ளாத போது ஏதத் பிரவ்ருத்தியில்
பிராயச் சித்தி விதி கூடாது -ஸ்ரீ வசன பூஷணம்–சூரணை -121-

முன் செய்த சரணாகதியை நினைப்பதே மீண்டும் சரணாகதி –
எல்லா தப்புக்களுக்கும் பண்ணின சரணாகதியை நினைப்பதே பிராயாச்சித்தம் -என்றவாறு )

ஆனால் அசக்ருத் கரணத்துக்கு தோஷம் வாராதோ என்னில் –
பெருக்காற்றில் பிரபலன் கையைப் பிடித்து நீந்தினால் சுழல்கள் இறுகப் பிடிக்குமோ பாதி
அர்த்த பராமர்ச வ்யவசாயமே உள்ளது –
ஆகையால் தோஷம் வாராது என்று நஞ்சீயர் அருளிச் செய்வர்

அதிகாரி சர்வ உபாய தரித்ரனாய் இருக்கும் –
அவன் சமாப்யதிகார தரித்ரனாய் இருக்கும் என்று
நடுவில் திரு வீதிப் பிள்ளை அருளிச் செய்வர்

பக்தி பிரபக்திகள் இரண்டும் துல்ய விகல்பங்கள் என்று ஆழ்வான் பணிக்கும்
பக்திக்கு ஆயாச கௌரவம் உண்டாகிறவோ பாதி
பிரபத்திக்கும் விஸ்வாச கௌரவம் உண்டு

பித்தோபஹதனுக்கு ரஸ்ய பதார்த்தம் திக்தமாமோ பாதி
பாக்ய ஹீனருக்கு பிரபத்தியில் விஸ்வாச கௌரவம் பிறவாது
என்று பெரியாண்டான் அருளிச் செய்வர்

பக்தி பிரபக்திகள் இரண்டுக்கும் ஈஸ்வர உபாயத்வம் ஒத்து இருந்ததே யாகிலும்
பக்தியில் பல பிரதானத்தாலே வருகிற உபாயத்வமே உள்ளது –
பிரபத்தியில் கரண ரூபத்தால் வருகிற சாத நத்வத்தாலே சாஷாத் பகவத் உபாயத்வம் பிரகாசிக்கை யாலும்
பிராரப்த பங்க ரூபமான பலாதிக்யத்தாலும்
பக்தியைக் காட்டில் பிரபத்தி விசிஷ்டையாகக் கடவது என்று நஞ்சீயர் அருளிச் செய்வர்-

(உபாயம் -உப ஈயதே அநேந இதி உபாய -பலத்துக்கு சமீபத்தில் எத்தால் அழைத்துச் செல்லப் படுகிறானோ அது உபாயம்
பக்தி யோகம் பக்தனுக்கு
ப்ரபன்னனுக்கு அவனே –
நாடீ பிரவேசம் தொடங்கி -கைங்கர்ய பர்யந்தம் -இருவருக்கும் அவனே
பக்தனுக்கு சாந்தி தாந்தி ஆத்ம குணங்கள் கர்ம ஞான பக்தி யோகத்தால் வளர வேண்டும்
உபேயம் உப ஈயதே அஸ்மின் அத்ர எதைக் குறித்து அழைத்துச் செல்லப்படுகிறோமோ
கர்மணி உத்பத்தி
கரணே உத்பத்தி உபாயம்
கர்த்தாவே இரண்டும்
நான் பழத்தை நறுக்கினேன் –
பிராப்பகம் இதனால் அடைகிறோம்
ப்ராப்யம் அடையப்படுகிறது இது
நாரா அயனம் -நாரங்களுக்கு உபாயம் ஈயதே அநேந -இத்தால் அழைத்துச் செல்லப்படுகிறோம்
நாரா ஈயதே இதம் -இவனை அடைகிறோம் –
ஆல் மூன்றாம் வேற்றுமை உபாயம்
ஐ இரண்டாம் வேற்றுமை உபேயம்
சரணாகதி -பிரபதனம் -நன்றாகக் பற்றுதல் -முக்கரணங்களால் )

ஸ்வ விஷய சாந்த்யர்த்தமான பிரபதனமும் ஸ்வரூப ஹானி –
இதர விஷய சாந்த்யர்த்தமான சாங்க பிரபதனமும் ஸ்வரூப ஹானி என்று பிள்ளை யருளிச் செய்வர்

(ஸ்வ விஷய சாந்த்யர்த்தமான-நமது பாபங்களை போக்கவும்
இதர விஷய சாந்த்யர்த்தமான-பிறரது பாபங்களை போக்கவும் )

ஸ்வீக்ருத உபாய பூதனாகை யாவது
ஸ்வீகார விஷய பூதனாகை –
அதாவது
ஸ்வ கத ஸ்வீகாரத்தில் உபாய புத்தியை விட்டு
பர கத ஸ்வீகாரத்துக்கு விஷய பூதனாகை என்று ஆச்சான் பிள்ளை அருளிச் செய்வர்

உய்யக் கொண்டாருக்கு உடையவர் பிரபத் யார்த்தத்தை அருளிச் செய்ய –
அர்த்தம் அழகியது –
வசன பாஹூள்யத்தாலே பக்தியை விட்டு இத்தைப் பற்ற வேண்டும் விஸ்வாசம் பிறக்கிறது இல்லை என்ன
புத்திமான் ஆகையாலே அர்த்த பரிஜ்ஞ்ஞானம் பிறந்தது –
பகவத் பிரசாதம் இல்லாமையாலே ருசி விளைந்தது இல்லை என்று அருளிச் செய்வர்

(நாத முனி சிஷ்யர் உய்யக்கொண்டார் வேறே
இவர் ராமானுஜர் சிஷ்யர் )

பதி வ்ரதை யானவள் ராத்திரி தன பார்த்தாவோடு சம்ஸ்லேஷித்து
விடிந்தவாறே கூலி தர வேணும் என்று வழக்கு பேசுமா போலே
பக்தியை உபாயம் ஆக்கிக் கொள்ளுகை என்று திருக் குருகைப் பிரான் பிள்ளான் பணிப்பர்

(பர்த்ரு போகத்தை வயிறு வளர்க்கைக்கு
உறுப்பு ஆக்குமா போலே இருவருக்கும் அவத்யம்–ஸ்ரீ வசன பூஷணம் -சூரணை -126-–)

சமாவர்த்தனம் பண்ணின பிள்ளை பிதாவான ஆசார்யனுக்கு தஷிணை கொடுக்கப் புக்கால்
அவன் கொடுத்த வற்றை எல்லாம் கொடுக்குமா போலே கொடுத்தாலோ என்னில்
அது எல்லாம் கொடுத்து முடியாமையாலே அவனே உபாயமாக வேணும்

ப்ராஹ்மணானவன் வைதிகன் ஆகையாலே அஹிம்சா ப்ரதமோ தர்ம என்று இருக்க
சாஸ்திர விஸ்வாசத்தாலே யஜ்ஞத்தில் பசுவை ஹிம்சியா நின்றான் இறே
அவ்வோபாதி இவ்வுபாயத்துக்கும் விஸ்வாசம் பிரதானம் ஆக வேணும்
என்று நம்பிள்ளை அருளிச் செய்வர்

நம் பூர்வர்கள் பூர்வ வாக்யத்தை ஒருக்கால் உபதேசித்து
உத்தர வாக்யத்தை ஒருக்கால் உபதேசித்துப் போருவர்கள்
அவ்வதிகாரி பாகத்துக்கு ஈடாக அவ்வதிகாரிகளிலே பலாந்தரங்களைக் கொள்வாரும் உண்டு –
எங்கனே என்னில்

த்ரௌபதி சரணா கதிக்கு பிரயோஜனம் ஆபன் நிவாரணம்
காகா சரணா கதிக்கு பிரயோஜனம் பிராண லாபம்
விபீஷண சரணா கதிக்கு பிரயோஜனம் கார்ய சித்தி

இனி சரண்ய சரணா கதியும் பலிப்பது எங்கனே என்னில்
சக்கரவர்த்தி திருமகன் பக்கலிலே கண்டு கொள்வது
(பலிக்காது என்று கண்டோமே கடல் அரசன் இடம் )

பிரபத்தி யாகிற தனம் இருக்க
இப்படி அறவைகளாய் -உதவி அற்றவைகளாய்- திரிவதே
என்று ஆச்சான் பிள்ளை அருளிச் செய்வர்

ஸ்வீகாரத்தை உபாயமாக்கிக் கொள்ளுகிறது
பக்தியோபாதி
என்று ஜீயர் அருளிச் செய்வர்

அந்த ஸ்வீகாரம் சைதன்ய க்ருத்யம் –
சித்த சமாதா நாரத்தமாக
என்று ஆச்சான் பிள்ளை அருளிச் செய்வர்

பக்தி ஆனைத் தொழிலோ பாதி
பிரபத்தி எலுமிச்சம் பழம் கொடுத்து ராஜ்ஜியம் கொள்ளுமோ பாதி
என்று திருக் குருகைப் பிள்ளான் பணிப்பர்

இதர உபாயங்கள் ஈஸ்வரனுடைய ரஷகத்வத்தை குமர் இருக்கும் படி பண்ணும் –
இவ்வுபாயம் அவனுடைய ஜீவனத்தை அவனுக்கு ஆக்கிக் கொடுக்கும்
என்று நம்பிள்ளை அருளிச் செய்வர்

இதர உபாயங்கள் ஸ்வரூப ஹானி
இவ்வுபாயம் ஸ்வரூப அனுரூபம் என்று நஞ்சீயர் அருளிச் செய்வர்

பொற் குடத்திலே தீர்த்தத்தை நிறைக்க அதில் ஸூர பிந்து பதிதமானால்
அத்தடைய அபஹத மாமோபாதி இந்த உபாயங்கள் ஸ்வ தந்த்ர்ய கர்ப்பங்களாய் இருக்கும் —
இந்த உபாயம் ஸ்வ தந்த்ர்ய நிவ்ருத்தி பூர்வகமான பகவத் பார தந்த்ர்ய யுக்தமாய் இருக்கும்
என்று எம்பார் அருளிச் செய்வர்

(திரு குருகைப் பிரான் பிள்ளான் பணிக்கும் படி –
மதிரா பிந்து மிஸ்ரமான சாத கும்பமய கும்பகத தீர்த்த சலிலம் போலே
அஹங்கார மிஸ்ரமான வுபாயாந்தரம்–-ஸ்ரீ வசன பூஷணம்-சூரணை-122-
இத்தால் சொல்லிற்று ஆய்த்து என் என்னில் -ஸூவர்ண பாத்திர கதமான தீர்த்த ஜலம்-
பாத்திர சுத்தியும் உண்டாய் தானும் பரிசுத்தமாய் இருக்க -ஸூரா பிந்து மிஸ்ரதையாலே நிஷித்தம் ஆம் போலே –
ஸ்வதா நிர்மலத்வாதிகளாலே பரிசுத்தமான ஆத்மா வஸ்து கதையாய் -பகவத் ஏக விஷய தயா பரிசுத்தை யாய் இருக்கிற பக்தி தான் –
ஸ்வ யத்ன மூலமான அஹங்கார ஸ்பர்சத்தாலே-ஞானிகள் அங்கீகாராதாம் படி நிஷித்தையாய் இருக்கும் என்றது ஆய்த்து )

அவை சிரகால சாத்யங்களுமாய்-
அபராத பாஹூள்யங்களுமாய் இருக்கையாலே
துஷ் கரங்களுமுமாய் இருக்கும் –

இது சக்ருத் க்ருத்யமுமாய் –
நிரபாயமுமாகையாலே
ஸூகரமுமாய் இருக்கும் என்று
இளைய ஆழ்வாரான திருமாலை ஆண்டான் அருளிச் செய்வர்

இவ்வுபாய விசேஷமும் மகா விஸ்வாச பூர்வகமான
தத் ஏக உபாயத்வ பிரார்த்தனா விசிஷ்டமாய் இருக்கும்
ராத்ரி கருவுலகத்தில் ராஜ மகேந்தரன் படியை அபஹரித்து
விடிந்தவாறே அத்தை திரு ஓலக்கத்திலே உபகரிக்குமா போலே
இவனுடைய சமர்ப்பணம் என்று நஞ்சீயர் அருளிச் செய்வர்

(பிரார்த்தனா மதி சரணாகதி
நன்றாகப் படித்தால் நல்ல மதிப்பெண் வாங்கலாம் அறிந்தால் மட்டும் போதாதே
படிக்கவும் வேண்டுமே
அதே போல் பிரார்த்திக்கவும் வேண்டுமே )

தாய் முலைப் பாலுக்கு கூலி கொடுக்குமா போலே ஆகையாலே கொடுக்கைக்கு பிராப்தி இல்லை
கொடுக்கைக்கு பிராப்தி இல்லாதா போலே பறிக்கவும் பிராப்தி இல்லை –
பறிக்கை யாவது பிரமிக்கை –
கொடுக்கை யாவது பிரமம் தீருகை
என்று திருக் குருகைப் பிரான் பிள்ளான் பணிப்பர்

(ரத்னத்துக்கு பலகறை போலேயும் ராஜ்யத்துக்கு எலுமிச்சம் பழம் போலேயும்
பலத்துக்கு சத்ருசம் அன்று -ஸ்ரீ வசன பூஷணம்–சூரணை -123-
தான் தரித்திரன் ஆகையாலே தனக்கு கொடுக்கலாவது ஒன்றும் இல்லை –சூரணை -124-
அவன் தந்த அத்தை கொடுக்கும் இடத்தில் – அடைவிலே கொடுக்கில் அநு பாயமாம் –
அடைவு கெட கொடுக்கில் களவு வெளிப்படும்-ஸ்ரீ வசன பூஷணம்-சூரணை -125- )

பாதிரிக் குடியிலே பட்டர் எழுந்து அருளின அளவிலே
வேடனுடைய க்ருத்யங்களைக் கேட்டு
ஒரு காதுகன் திர்யக் யோநி பிரபதனம் பண்ண இரங்கின படி கண்டால் –
ஸ்வ காரண பூதனான பரம காருணிகன் ஒரு சேதனன் பிரபதனம் பண்ணினால் இரங்கும் என்னும்
இடத்தில் ஆச்சர்யம் இல்லை இறே என்று அனுசந்தித்து அருளினார் –

ஆக –
இவ்வுபாய விசேஷம்
1-சாதநாந்தர வ்யாவ்ருத்தமாய் இருக்கும் –
2-தேவ தாந்திர வ்யாவ்ருத்தமாய் இருக்கும்
3-பிரபன்ன வ்யாவ்ருத்தமாய் இருக்கும் –
4-பிரபத்தி வ்யாவ்ருத்தமாய் இருக்கும் –

(நம்பிக்கை பிரார்த்தனை ஒன்றுமே வேண்டியது
திண் கழல் சேர -எப்போதும் ஸித்தமாய் இருக்குமே)

(ஸ்வாமின் ஸ்வ சேஷம் ஸ்வ வசம் ஸ்வ பரத்வேன நிர் பரம் ஸ்வ தரத்த ஸ்வ கீயாத்
ஸ்வார்த்தம் ஸ்வஸ்மின் யஸ்யிஸி மாம் ஸ்வயம் – ஸ்வாமி தேசிகன்)

———————————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகாசார்யர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ யாமுனாசார்யர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ யாமுனாசார்யர் அருளிச் செய்த ஸ்ரீ ப்ரேமேய ரத்னம் –இரண்டாம் பிரகரணம் –ஆசார்ய வைபவம் –

November 24, 2015

ஸ்ரீ மங்கள ஸ்லோகம்
பிரமேய ரத்னம் ரமணீய பஹோ புரோதசா யாமுநே தேசிகேந
உத்த்ருத்ய வேதாம்பு நிதேரபாராத் ப்ரோக்தும் மநோ லங்க்ருதயே முமுஷோ –

ரமணீய பாஹு ப்ரோஹிதர் -யமுனா தேசிகன் -யாமுனாச்சார்யார்
ஸூந்தர தோளுடையானுக்கு -கைங்கர்யம்
கூரத்தாழ்வான் அரங்கனுக்கு போல் இவர் அழகருக்கு கைங்கர்யம்
திருமாலை ஆண்டான் மூலம் இவருக்கு வந்த கைங்கர்யம் இது
உத்த்ருத்ய அபாரமான வேதாம்பு வேதக்கடலில் இருந்து உத்தரித்து அருளினார்
ப்ரமேய ரத்னம் முமுஷுக்களுக்கு அலங்காரமாக எழுதுகிறேன்

பாற் கடலைக் கடைந்து அமுதம் பெண் அமுதம்
மறைப்பால் கடலைக் கடைந்து நா பர்வதம் போல் திருவாய் மொழி
இவர் வேதாம்பு வேதக்கடலில் இருந்து உத்தரித்து அருளினார்

ஸூந்தர தோளுடையான் உடைய புரோஹிதரான யாமுனாசார்யராலே
வேதக் கடலிலே இருந்து முமுஷூவுக்கு
மனஸ்ஸூக்கு அலங்க்ருதமாக அருளிச் செய்யப் பட்டது -என்றவாறே –

யாமுன கவிவா தீந்திர ஸூந்தரஸ்ய புரோஹித
பிரமேய ரத்ன மகரோத் சர்வேஷாம் ஜ்ஞான சம்பதே –

இவர் மூன்றாவது யமுனாச்சார்யர்
ஸ்ரீ ஆளவந்தார் முதலிலும்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை உடைய திருத்தகப்பனார் இரண்டாவது யமுனாச்சார்யர் –

——-

இரண்டாம் பிரகரணம் –ஆசார்ய வைபவம்

(பிரதம -மத்யம -சரம பர்வ நிஷ்டைகள் -ஆச்சார்ய அபிமானம் உத்தாரகம் –
பாகவதரும் ஆச்சார்யரும் உபாயாந்தர கோடியில் இல்லையே-
கையயைப் பிடித்துக் கார்யம் கொள்வது அது
காலைப் பிடித்துக் கார்யம் கொள்வது இது
திண் கழல் -தப்பாத உபாயம் –
பிரபத்தி வேறாகவும் ஆச்சார்ய அபிமானமும் ஒன்றாம் இல்லாமல் பஞ்சம உபாயம் என்பது ஏன் எனில்
அவனது அவதாரமே ஆச்சார்யரும் என்றபடி
இதனால் ஒன்றும் என்றும் வேறாகவும் இவ்வாறு சொல்லலாமே
மக்நான் உத்தரதே லோகான் காருண்யாத் ஸாஸ்த்ர பாணிநா -பிரமாணம் உண்டே –
அவன் ஸ்வ தந்த்ரன் -சம்சயம்
அவனே அவதரித்து பாரதந்த்ரம் காட்டின இடங்கள் உண்டே
தானே ஏறிட்டுக் கொண்ட பாரதந்தர்யம்
ததிபாண்டன் இடம் அப்படி இருந்து தத்தி பாண்டத்துக்கும் பேற்றை அருளினான் அன்றோ )

அநந்தரம் -ஆசார்ய வைபவம் பிரதிபாதிக்கப் படுகிறது –
எங்கனே என்னில் –

ஆசரித்துக் காட்டுமவன் -ஆசார்யன் –

சாரம் -நடத்தை
(ஆசாரம் -நல் நடத்தை
ஆசினோதி சாஸ்த்ர அர்த்தம் கற்று
ஆசாரத்தில் நம்மையும் ஸ்தாபித்து
ஸ்வயம் ஆசரதே -தானும் அனுஷ்டித்துக் காட்டி இருப்பவரே ஆசார்யன் )

விசேஷ தர்மங்களைக் குறித்து உபதேசிக்கிறான் யாவன் ஒருவன்
அவன் ஆசார்யன் ஆகிறான்

1-அஜ்ஞ்ஞானத்தை அகலும்படி பண்ணி –
2-ஜ்ஞானத்தைப் புகுரும்படி பண்ணி –
3-ருசியைக் கொழுந்தோடும் படி பண்ணுகை
ஆசார்யன் க்ருத்யம் என்று எம்பார் அருளிச் செய்வர்
(பரமாத்மான ரக்த-ஆசை -இதர விரக்தி உண்டாக்கி )

ஆசார்ய பதம் என்று தனியே ஓன்று உண்டு –
அது உள்ளது எம்பெருமானார்க்கே என்று
திருக் குருகைப் பிரான் பிள்ளான் பணிப்பர்

(பர வ்யூஹ விபவ அந்தர்யாமி அர்ச்சைக்கு மேல் இது ஆறாவது என்றவாறு
பரகால பராங்குச யதிவராதிகள்-யதீந்த்ர ப்ரவணரான நம் பெரிய ஜீயர் வரை எம்பெருமானார் என்பதிலே உண்டே
உத்தாராக ஆச்சார்யர் -உபகாரக ஆச்சார்யர் அஸ்மத் ஆச்சார்யர் )

சிஷ்யாசார்ய க்ரமத்துக்கு சீமா பூமி கூரத் தாழ்வான்
எங்கனே என்னில்
தம்மளவிலே உடையவர் நிக்ரஹம் பண்ணினார் என்று கேட்டு
இவ் வாத்மா அவருக்கே சேஷமாய் இருந்ததாகில்
விநியோக பிரகாரம் கொண்டு கார்யம் என் என்று
அருளிச் செய்கையாலே சிஷ்யருக்கு சீமா பூமி –

(ஞாத்ருத்வம் முன்னாகவா -சேஷத்வம் முன்னாகவா -விவாத வ்ருத்தாந்தம் )

சாபராதனான நாலூரானை நான் பெற்ற லோகம் நாலூரானும் பெற வேணும்
என்கையாலே ஆச்சார்யர்களுக்கு சீமா பூமி

அதிகாரியினுடைய ஆர்த்தியைக் கண்டு ஐயோ என்னுமவன் ஆசார்யன்

(நன்மையால் மிக்க நான்மறையாளர்கள் புன்மையாகக் கருதுவர் ஆதலின் –
அதுவே பற்றாசாகக் கைக் கொண்டாரே )

அர்ச்சாவதாரத்தின் உடைய உபாதான த்ரவ்ய நிரூபணம் பண்ணுகையும் –
ஆசார்யனை மனுஷ்ய ஜன்ம நிரூபணமும்
நரக ஹேது என்று சாஸ்திரம் சொல்லும் –

மந்த்ரத்திலும் –
மந்திர ப்ரதிபாத்யனான ஈஸ்வரன் பக்கலிலும் –
மந்திர பிரதானான ஆசார்யன் பக்கலிலும்
எப்போதும் ஒக்க பக்தியைப் போர பண்ண வேணும்

(மந்த்ரத்திலும் மந்த்ரத்துக்கு உள்ளீடான வஸ்துவிலும் மந்திர பிரதனனான ஆசார்யன் பக்கலிலும்
ப்ரேமம் கனக்க உண்டானால் கார்ய கரமாவது –ஸ்ரீ முமுஷுப்படி-சூரணை -4
மந்த்ரே-தத் தேவதாயாம் ச ததா மந்த்ரே பிரதே குரௌ த்ரிஷூ பக்திஸ் சதா கார்யா ச ஹி பிரதம சாதனம் – பிரமாணம்-)

ஆசார்யனையும் எம்பெருமானையும் பார்த்தால் ஆசார்யன் அதிகன் –
எங்கனே என்னில்
ஈஸ்வரன் தானும் ஆசார்ய பதம் ஏற ஆசைப்பட்டான்

பீதகவாடைப் பிரானார் பிரம குருவாகி வந்து என்றும் –
சிஷ்யஸ் தே அஹம் சாதி மாம் த்வாம் பிரபன்னம் -என்று சொல்லும் படி
அர்ஜுனனுக்கு ஸ்ரீ கீதா உபதேச முகத்தாலே ஆசார்ய பதம் நிர்வஹித்தான் –

(லஷ்மீ நாத சமாரம்பம் குரு பரம்பரையில் இடம் கொண்டான் அன்றோ )

த்ருவனுக்கு ஸ்ரீ பாஞ்ச ஜன்ய முகத்தாலே ஜ்ஞான உபதேசம் பண்ணினான் –
ஆகையால் ஆசார்ய பதம் நிர்வஹித்தான்

ஈஸ்வரன் அபிமானம் அன்றியே ஆசார்ய அபிமானத்தாலே மோஷ சந்தி உண்டு –
இது கண்டா கர்ணன் பக்கலிலே காணலாம்

(தான் உண்ணும்- நவ சவம் இதம் புண்யம் என்று சமர்ப்பித்து தம்பிக்கும் –
அவன் என்னை விரோதியாக நினைத்தாலும் -தான் அவன் மேல் அபிமானித்து இருக்கிறேன் –
என்ற காரணத்தால் அவனும் பேற்றைப் பெற்றான் )

(தன் குருவின் தாள் இணைகள் தன்னில் அன்பு ஓன்று இல்லாதார்
அன்பு தன்பால் செய்தாலும் அம்புயை கோன்-இன்பமிகு
விண்ணாடு தான் அளிக்க வேண்டி இரான் ஆதலால்
நண்ணா ரவர்கள் திரு நாடு ——ஸ்ரீ உபதேச ரத்ன மாலை -———60-)

ஆசார்ய அபிமானமே (அங்கீ காரமே )உத்தாரக ஹேது என்னும் இடம்
பாபிஷ்டனுக்கு தலையான ஷத்ர பந்துவின் பக்கலிலே காணலாம்

(மொய்த்தவல் வினையுள் நின்று மூன்றெழுத் துடைய பேரால்
கத்திர பந்து மன்றே பராங்கதி கண்டு கொண்டான்
இத்தனை யடிய ரானார்க் கிரங்கும்நம் மரங்க னாய
பித்தனைப் பெற்று மந்தோ பிறவியுள் பிணங்கு மாறே–-திருமாலை-4-)

புண்யோத்தமாருக்கு தலையான புண்டரீகன் உடன் ஒக்கப் பெறுகையாலே

(கண்டாகர்ண புண்டரீக புண்ய க்ருத் சாஸ்த்ரா வாக்கியம் இருப்பதால் இங்கு அத்தையும் காட்டுகிறார்
புண்டரீகருக்கு புண்யமும் ஹேது அல்ல கண்டாகர்ணனுக்கு தோஷமும் விலக்கு அல்ல
ஆச்சார்ய அபிமானம் உத்தாரகம் )

சஷூஷ்மான் அந்தகனை அபிமத தேசத்திலே நடப்பிக்குமோ பாதியும் –
பங்குவை நாவிகனானவன் ஓர் இடத்திலே வைத்து அக்கரைப் படுத்துமோ பாதியும்
ராஜ வல்லபனான புருஷன் அவன் பக்கல் பெற்ற ஐஸ்வர் யத்தை இவனை அறியாத புத்திர மித்ராதிகளைப் புஜிக்குமா பாதியும்

(ராஜா போல் பகவான்
ராஜசேவகன் போல் ஆச்சார்யர்
ராஜாவை அறியாத அஸ்மதாதிகள்
நாமும் பேற்றைப் பெறுவோம் ஆச்சார்யர் போலவே -ராஜசேவகன் பத்னி புத்திரர்கள் போல்
கண் த்ருஷ்டாந்தம் -ஞானம்
கால் நடை த்ருஷ்டாந்தம் -அனுஷ்டானம் அடுத்து
மூன்றாவது பக்தி
இத்தால் கர்மா ஞான பக்தி மூன்றையும் சொன்னவாறு )

வைராக்யத்தில் விஞ்சின லாபம் இல்லை –
ஜ்ஞானத்தில் விஞ்சின ஸூகம் இல்லை -(அநுகூல ஞானமே ஆனந்தம் )
சம்சாரத்தில் விஞ்சின துக்கம் இல்லை -(அவி விவேக திங்முகம்-ம்ருகாந்தரம் )
அப்படியே ஆசார்யானில் விஞ்சின ரஷகர் இல்லை

நவ த்வார புரியான இலங்கையில் ராஷசிகளாலே ஈடுபடா நிற்க
பிராட்டிக்குத் திருவடியினுடைய தோற்றரவு போலே
நவ த்வார புரமான தேஹத்திலே தாபத் த்ரயங்களால் ஈடு படா நிற்க
சேதனனுடைய ஆசார்யனுடைய தோற்றரவு
என்று எம்பார் அருளிச் செய்வர்
(முதலியாண்டான் வார்த்தையாகவும் இவற்றைச் சொல்வார்கள் )

அவன் கொடுத்த திரு வாழி மோதிரத்தைக் கொண்டவள் ஆஸ்வச்தையுமோ பாதி
இவ்வாச்யார்யன் பிரதி பாதிக்கும் மந்திர ரத்னத்தாலே இவ்வதிகாரியும் ஆஸ்வச்தனாகா நிற்கும்

விஞ்சின ஆபத்து வந்தாலும் ஆசார்யனுடைய வார்த்தையே தாரகமாகக் கடவது
ஜ்ஞாதம் மயா வசிஷ்டே ந புரா கீதம் மஹாத்ம நா -மஹத்யாபதி சம்ப்ராப்தே ஸ்மர்த்தவ்யோ பகவான் ஹரி -என்று பிரமாணம் –

(இது திரௌபதி வார்த்தை
வசிஷ்டர் முன்பு உபதேசம் செய்து அருளினார்
ஹரியை நினைக்க -உபதேசம் -இதனால் தானே கோவிந்த புண்டரீகாக்ஷன் என்று கதறினாள் )

ஆழ்வார்கள் எல்லாரும் உத்தேச்யராய் இருக்க பிரதமாசார்யர் ஆகையாலே இறே
நம்மாழ்வார் என்று பேராகிறது

ஸ்ரீ பூமி ப்ரப்ருதிகளான நாய்ச்சிமார் எல்லாரும் ஒத்து இருக்க
பிராட்டிக்கு ஏற்றம் குரு பரம்பரைக்குத் தலை யாகை இறே

ஆசார்ய பூர்த்தி உள்ளது பிராட்டிக்கு –
எங்கனே என்னில் –
பகவத் விமுகனாய் சாபராதனுமான ராவணனுக்கு பகவத் உபதேசம் பண்ணுகையாலே –
விதி தஸ் சஹி தர்மஜ்ஞ்ஞஸ் சரணாகத வத்சல-தேன மைத்ரீ பவது தே யதி ஜீவிதுமிச்சசி -என்று பிரமாணம்

(கையைப் பிடித்து நண்பனாக ஆக்கிக் கொள்
சரணாகதி வத்சலன் -உபதேசித்தாள் அன்றோ –
கார்யகரம் ஆகாமல் இருந்தது இவன் ப்ரக்ருதியாலேயே)

இப்படி தோஷம் பாராமல் ஹித ப்ரவர்த்தகத்வம் உள்ளது
பிராட்டிக்கும்
கூரத் ஆழ்வானுக்கும் இறே

ஒரு ஸ்ரீ வைஷ்ணவர் ஆச்சான் பிள்ளையை ஆசார்ய லஷணம் எது என்று கேட்க
தத்தவ உபதேசத்தில் ஸூத்த சம்ப்ரதாய பிரவர்த்தகம் –
அது உள்ளது
நம்பிள்ளைக்கும்
நஞ்சீயருக்கும் என்று அருளிச் செய்தார்

(ஆச்சான் பிள்ளை-பெரியவாச்சான் பிள்ளை திருக்குமாரர்
தாயம் -போதிக்கப்படும்
ப்ரதாயம் -யதாக்ரமமாக மரபு மாறாமல் போதனை
ஸம் ப்ரதாயம் -நிஷ்டாயுக்தமாக லக்ஷணம் குறையாமல் ஆச்சார்ய சிஷ்டைகள் மாறாமல்
ஸூத்த ஸம் ப்ரதாயம் -கலப்படம் இல்லாத
இப்படி நான்கும் )

நம் பிள்ளை திருமாளிகைக்கு
நடுவில் திரு வீதிப் பிள்ளை பட்டர் செங்கல் சுமந்து வர
ஆசார்யர் ஆகும் போது ஆசரித்துக் காட்ட வேண்டும் இறே என்று அருளிச் செய்தார்

அஷர சிஷகன் ஆசார்யன் அன்று –
ஆம்நாய அத்யாபகன் ஆசார்யன் அன்று –
சாஸ்திர உபதேஷ்டா ஆசார்யன் அன்று
மந்த்ரார்த்த உபதேஷ்டா ஆசார்யன் அன்று –
சாதா நாந்தர உபதேஷ்டா ஆசார்யன் அன்று –
த்வய உபதேஷ்டாவே ஆசார்யனாகக் கடவன்

(அஷர-எழுத்து அறிவித்தவன் இறைவன் என்கிறோமே )

பாஷ்ய காரரும் ஆழ்வான் தேசாந்தரத்திலே நின்றும் வரக் கண்ட ப்ரீதி யதிசயத்தாலே
மீண்டும் த்வயத்தை உபதேசித்து அருளினார் –

நம்பிள்ளை புருஷகாரமாக ஒருத்தன் ஜீயரை ஆஸ்ரயிக்க வர
அவனுக்கு பூர்வ வாக்யத்தை உபதேசிக்க –
இடையன் எறிந்த மரமே ஒத்திராமே யடைய அருளாய் என்று பிள்ளை விண்ணப்பம் செய்ய
உத்தர வாக்யத்தை உபதேசித்து அருளினார்

(ப்ராப்யம் தான் முக்கியம்
அது சொல்லாமல் இருபதுக்கு இது த்ருஷ்டாந்தம்

படை நின்ற பைம்தாமரையோடு அணி நீலம்
மடை நின்று அலரும் வயலாலி மணாளா
இடையன் எறிந்த மரமே ஒத்து இராமே
அடைய வருளாய் எனக்கு உன்தன் அருளே –11-8-6-)

(ஆட்டுக்காக வெட்ட ஓர் இடம் பச்சை -சம்பந்தம் மாறாமல் ஓர் இடம் உலர்ந்து வெட்டியதால் இருக்குமே
ஞான பலம் இருந்தாலும் ஸம்ஸார பயம் இருக்குமே
அம்மரத்தின் உலர்ந்த அம்சமும் தன்னிலே ஒன்றிப் பச்ச்சையாம் படி பண்ண வேணும் –
அது பின்னை செய்யப் போமோ என்னில்
வேர் பறிந்தவையும் புகட்டிடத்தே செவ்வி பெறும்படி பண்ணும் தேசத்தில் அன்றோ நீ வர்த்திக்கிறது
முதல் பறிந்ததுக்கு செவ்வி பெறுத்த வல்ல உனக்கு உள்ளத்துக்கு ஒரு பசுமை பண்ண தட்டு என் –
தய நீயனான எனக்கு கொள்வர் தேட்டமான உன் அருளை அருள வேணும் )

திரு மந்த்ரத்தில் பிறந்து த்வயத்தில் வளர்ந்து த்வையேக நிஷ்டர் ஆவீர் என்று இறே
அனந்தாழ்வான் வார்த்தை

ஆழ்வாருக்கும் ஆசார்யத்வ பூர்த்தி திருவாய் மொழியை வ்யாஜி கரித்து
த்வயத்தை அருளிச் செய்கையாலே
என்று இளைய ஆழ்வாரான திருமாலை யாண்டான் அருளிச் செய்வர் –
ஆகையால் இறே திரு வாய் மொழி தீர்க்க சரணாகதி என்று பேராகிறது

விசேஷித்து பிரபத்தியினுடைய அர்த்தத்தை
நோற்ற நோன்பு
ஆராவமுது
மானேய் நோக்கு
பிறந்தவாறு இவற்றிலே வெளியிட்டார் இறே

சரணாகதியும் திருவாய் மொழி யுமாகிய இரண்டும் இறே த்வயம் என்று போருகிறது
என்று பெரியாண்டார் அருளிச் செய்வர்

பிரபத்தியில் பூர்வ வாக்ய உத்தர வாக்ய பேதத்தோ பாதி இறே
த்வயத்துக்கும் திருவாய் மொழிக்கும் உள்ள வாசி என்று
எம்பார் அருளிச் செய்வர்

திருவாய் மொழியினுடைய அர்த்தத்தை பிரதிபாதிக்கிறான் யாவன் ஒருவன்
அவன் த்வயார்த்த பிரதிபாதகன் என்று பெரிய பிள்ளை அருளிச் செய்வர்

இவ்விரண்டு அர்த்தத்தையும் பிரதிபாதிக்கிறான் யாவன் ஒருவன்
அவனுக்கு இறே ஆசார்ய பூர்த்தி உள்ளது என்று ஜீயர் அருளிச் செய்வர்

பாஷ்யகாரருக்கு இவை இரண்டுக்கும்
சப்த பிரதிபாதிகர் இருவரும்
அர்த்த பிரதிபாதகர் இருவரும் –
ஆர் என்னில்
பெரிய நம்பி த்வயத்தை உபதேசித்து அருளினார் –
த்வயார்த்தத்தை அருளிச் செய்தார் திருக் கோட்டியூர் நம்பி –
ஆழ்வார் திருவரங்கப் பெருமாள் அரையர் திருவாய் மொழி ஓதுவித்து அருளினார்
திருவாய் மொழியினுடைய அர்த்தத்தை அருளிச் செய்தார் திருமாலை யாண்டான்

இவை இரண்டுக்கும் ப்ரவர்த்தகர் ஆவார்கள் இறே ஆசார்ய பதம் ஏறிப் போந்தவர்கள்
அவர்கள் ஆர் என்னில்
நாத முனிகள்
உய்யக் கொண்டார்
மணக்கால் நம்பி
ஆளவந்தார்
உடையவர்
எம்பார்
பட்டர்
நஞ்சீயர்
நம்பிள்ளை –

இவர்களில் வைத்துக் கொண்டு சப்த பிரதனான ஆசார்யனிலும்
அர்த்த பிரதானவன் அதிகன் –

அவ்வாச்சார்யனுடைய ஏற்றம் இவன் பிரதிபாதிக்கையாலே ஆசார்யர்கள் எல்லாரும் சேர இருந்து
எங்கள் சிஷ்யர்கள் உம்மை சேவிக்கைக்கு அடி என் என்று
ஆச்சான் பிள்ளையைக் கேட்டருள

உங்களுக்கு போகாதே இருப்பது ஒன்றுமாய்
இவர்களுக்கு அபேஷிதமாய் இருப்பதொரு அர்த்தம் எனக்கு போம்
எங்கனே என்னில்

த்வயத்தை உபதேசித்து பெருமாளுடைய ஏற்றத்தையும் அருளிச் செய்திகோள் நீங்கள்
உங்களுடைய ஏற்றம் உங்களுக்குப் போகாது –
அது நான் சொல்ல வல்லேன் என்று அருளிச் செய்தார் –

(திருக்குறுங்குடி நம்பி இடம் எம்பெருமானார் அருளிச் செய்தது போல்
இங்கு இவரும் உங்கள் ஏற்றம் நானே சொல்ல வல்லேன் என்றார் )

1-கரும் தறையிலே உபதேசிக்கிற ஆசார்யன் திரு விளையாட்டாமாம் படி
திரு வாழிக் கல்லு நாட்டினானோ பாதி
2-இவர்களைத் திருத்துகிற ஆசார்யன் திரு விளையாட்டத்தை திரு நந்தவனமாக்கி
அதிலுண்டான திருப்படித் தாமத்தை பகவத் ஏக போகமாம் படி பண்ணுகிறவனோ பாதி
என்று பெரியாண்டான் அருளிச் செய்வர் –

(அறியாதவனுக்கு அறிவித்து -பிறப்பித்த தாய் போல்
மேல் வளர்க்க வேண்டுமே -இதத்தாய் போல்
இதற்காக இருவர் இங்கு
தேவதான்யமாக கொடுக்கப்பட்ட மான்ய பூமி போல்-ஸூ தர்சனம் நாட்டி -திரு ஆழிக்கல்
எல்லைக்கால் மண்டபம்
திருவானைக்கால் வரை நாட்டி இருப்பது போல் –
பகவான் சொத்து ஆக்கி வளர்ப்பது போல் –

போதரே என்று சொல்லி புந்தியில் புகுந்து
தன் பால் ஆதாரம் செய்து வைத்த அழகன் இரண்டையும் பண்ணினான் அவன் அன்றோ )

1-கரும் தறையில் உபதேசிப்பவனே ஆசார்யன்
2-ஸ்வரூப வர்த்தகனான ஆசார்யன் உபகாரகன் என்று
ஆச்சான் பிள்ளை அருளிச் செய்வர் –

ஸ்வ ஆசார்ய வைபவத்தை வெளியிடுகையே ஆசார்ய க்ருத்யம் —
எங்கனே என்னில்

நடுவில் திருவீதிப் பிள்ளை
உன்னோடு உடனே ஒரு கடலில் வாழ்வாரை இன்னார் இணையார் என்று எண்ணுவார் இல்லை காண்-(நாச்சியார் 7-5)
என்கிற பாட்டை அருளிச் செய்த அளவிலே
கூர குலத்தில் பல பிள்ளைகள் பிறந்து இருக்கச் செய்தேயும்
நம் பிள்ளையை சேவித்த ஏற்றம் எனக்கு உண்டானாப் போலே என்று அருளிச் செய்தார்

(உன்னோடு உடனே ஒரு கடலில் வாழ்வாரை
இன்னார் இனையார் என்று எண்ணுவார் இல்லை காண்
மன்னாகி நின்ற மதுசூதன் வாய் அமுதம்
பன்னாளும் உண்கின்றாய் பாஞ்ச சன்னியமே-–7-5-)

தெற்கு ஆழ்வான் பட்டர் -நம்பிள்ளை ஸ்ரீ ராமாயணத்தை கேட்டுப்
பெருமாள் திரு ஓலக்கத்திலே வாசிக்கச் செய்தே
நம் பிள்ளை கொண்டாட
நட்டுவனார் தாமே கொண்டாடுமோ பாதி
நம் பிள்ளை என்னைக் கொண்டாடுகிறபடி என்று அருளிச் செய்தார்

ஒரு கிணற்றிலே விழுந்தான் ஒருத்தனை இரண்டு பேராக எடுக்குமோ பாதி இறே-
பாஷ்யகாரரும் எம்பாருமாக என்னை
உத்தரித்தபடி என்று பெரியாண்டான் அருளிச் செய்தார்

பாஷ்ய காரர் ஆளவந்தாருக்கு நான் ஏகலவ்யனோபாதி என்று அருளிச் செய்வர் –
எங்கனே என்னில்
பாஷ்ய காரர் திருமாலை யாண்டான் பக்கலிலே திருவாய் மொழி கேட்கிற நாளிலே –
அறியாக் காலத்துள்ளே அடிமைக் கண் அன்பு செய்வித்து -என்கிற பாட்டை
அருளிச் செய்த அளவிலே யதான்வயமாக நிர்வஹிக்க –

பாஷ்யகாரர் இது அநுசிதம் என்று அன்வயித்துப் பொருள் உரைக்க
உம்முடைய விச்வாமித்ர ஸ்ருஷ்டீ விடீர்
நாம் பெரிய முதலியார் பக்கல் கேட்ட அர்த்தம் இதுவே காணும் என்று
இவர்க்கு திருவாய் மொழி அருளிச் செய்யாமல் இருக்க

பின்பு ஒரு காலத்திலே திருக் கோட்டியூர் நம்பி இளையாழ்வார் திருவாய் மொழி
கேட்டுப் போரா நின்றாரோ என்று திருமாலை யாண்டானைக் கேட்டருள –
அங்குப் பிறந்த வ்ருத்தாந்தத்தை அவரும் அருளிச் செய்ய

பெரிய முதலியார் திருவாய்மொழி இரண்டாமுரு அருளிச் செய்கிற போது
பாஷ்யகாரர் உக்தி க்ரமத்திலே என்று திருக் கோட்டியூர் நம்பி அருளிச் செய்ய

பாஷ்யகாரரை அழைத்து ஆளவந்தார் திரு உள்ளத்திலே பிரகாசிக்கும் அதுவே ஒழிய
இவர்க்கு பிரகாசிக்குமா வென்று திருமாலையாண்டான் அருளிச் செய்ய
பாஷ்ய காரர் ஆளவந்தார்க்கு நான் ஏகல்வயனோபாதி என்று அருளிச் செய்தார்

(ஆ முதல்வன் இவன் என்று முன்பே கடாக்ஷித்து
பேர் அருளாளன் இடம் சரணாகதி அடைந்து
அப்பொழுதே ஜெகதாச்சார்யர் ஆக தானே பொறுப்பு எடுத்து செய்து அருளினார் அன்றோ
இதுவே ஆச்சார்ய க்ருத்யம் என்கிறார் -)

ப்ரவர்த்தகனை வலிய அழைத்தாகிலும் இவ்வர்த்தத்தை உபதேசிக்கை-ஆசார்ய க்ருத்யம் –
எங்கனே என்னில்

குளப்படியில் நீரைத் தேக்கினால் நின்று வற்றிப் போம் –
வீராணத் தேரியில் தேக்கினால் நாட்டுக்கு உபகாரகமாம்
ஆகையால் இவ்வர்த்தத்தை ஆளவந்தார்க்கு உபதேசியும் என்று
உய்யக் கொண்டாரைப் பார்த்து நாதமுனிகள் அருளிச் செய்தார்

ஆளவந்தாரும் ஸ்தோத்ரத்தை அருளிச் செய்து பெரிய நம்பி கையிலே கொடுத்து
பாஷ்யகாரர் பக்கல் ஏறப் போக விட்டு அருளினார்

ஆக ஆசார்யர்கள் பிரதம உபதேஷ்டமான ஆசார்யனிலும்
ஸ்வரூப வர்த்தகனான ஆசார்யன் அளவிலே நிரந்தர சேவை பண்ணிப் போருவர்கள்

அவர்கள் ஆர் என்னில்

எம்பார்
திருமலை நம்பி ஸ்ரீ பாதத்திலே ஆஸ்ரயித்து
பாஷ்யகாரர் பக்கலிலே ஜ்ஞான உபஜீவனம் பண்ணினார்

(ஞானம் ஆகிய உப ஜீவனம்
தாய் நாடும் கன்று போல் இவர் மீள
விற்ற மாட்டுக்குப் புல் இடுவார் இல்லை என்றாரே )

வங்கி புரத்து நம்பி திருமாலை ஆண்டான் ஸ்ரீ பாதத்திலே ஆஸ்ரயித்து
பாஷ்யகாரர் பக்கலிலே ஜ்ஞான உபஜீவனம் பண்ணினார்

நாலூராண்டான் ஆளவந்தார் ஸ்ரீ பாதத்திலே ஆஸ்ரயித்து
திருமாலை யாண்டான் பக்கலிலே ஜ்ஞான உபஜீவனம் பண்ணினார்

பெரியாண்டான்
பாஷ்யகாரர் ஸ்ரீ பாதத்திலே ஆஸ்ரயித்து
எம்பார் பக்கலிலே ஜ்ஞான உபஜீவனம் பண்ணினார்

பெரிய பிள்ளை-
இளைய ஆழ்வாரான திருமாலை யாண்டான் ஸ்ரீ பாதத்திலே ஆஸ்ரயித்து
நம்பிள்ளை பக்கலிலே ஜ்ஞான உப ஜீவனம் பண்ணினார்

ஸ்ரீ சேனாபதி ஜீயர் –
நஞ்சீயர் பக்கலிலே ஆஸ்ரயித்து
நம்பிள்ளை பக்கலிலே ஜ்ஞான உப ஜீவனம் பண்ணினார்

ஆகையாலே ஸ்வரூப வர்த்தகனான ஆசார்யன் பக்கலிலே
விசேஷ பிரதிபத்தி நடக்க வேணும்

ஆகை இறே
நம் ஆழ்வாரோ பாதி நம்பிள்ளை என்று பேராகிறது-
அவரை பிரதம ஆசார்யர் என்னுமோ பாதி இவரை லோகாசார்யர் என்று போருகிறது
அவரை திரு நா வீறுடைய பிரான் என்னுமோ பாதி இவரை நா வீறுடைய பிரான் என்று போருகிறது

ஆகையாலே ஆசார்யன் இவ்வதிகாரியினுடைய ஆத்ம யாத்ரைக்கு கடவனாய்ப் போரும்-
ஆசார்யனுடைய தேக யாத்ரை சிஷ்யனுக்கு ஆத்ம யாத்ரையாய்ப் போரும்

இவ்வாச்சார்ய பரந்யாசம் பண்ணினவர்களுக்கு எல்லை நிலம்
நாய்ச்சியாரும் -மதுர கவிகளும் –
எங்கனே என்னில்

விட்டு சித்தர் தங்கள் தேவரை வருவிப்பரேல் அது காண்டும் என்று நாய்ச்சியார் –
ஈஸ்வரன் முழங்கை தண்ணீர் வேண்டியது இல்லை

பெரியாழ்வார் தாளத்தை தட்டி அழைக்கவுமாம் –
சாண் தொடையைத் கட்டி அழைக்கவுமாம் என்று அவர் பக்கலிலே பரந்யாசம் பண்ணினார்

(1-நல்ல வென் தோழி –
2-மாறாய தானவனை – என்கிற பாட்டுக்களையும் –
3-ஸ்தோத்ர ரத்னத்தில்-முடிந்த ஸ்லோகத்தையும் –
4-பசுர் மனுஷ்ய -என்கிற ஸ்லோகத்தையும் –
இதுக்கு பிரமாணமாக அனுசந்திப்பது –சூரணை -460-
ஆசார்ய அபிமானம் ஆகிற இந்த பரகத ஸ்வீகார உபாயத்துக்கு பிரமாணமாக அநு சந்திப்பது -என்றபடி –)

ஸ்ரீ மதுர கவி ஆழ்வாரும் ஆழ்வார் பக்கல் பரந்யாசம் பண்ணினார்
ஆசார்யரான ஆழ்வாரையே-
சேஷி –
சரண்யர் –
ப்ராப்யர் –
பிராபகர் -என்றே அனுசந்தித்தார்

பெரிய வண் குருகூர் நகர் நம்பிக்கு ஆள் உரியனாய் -என்றும்
பண்டை வல் வினை பாற்றி அருளினான் என்றும்
தென் குருகூர் நகர் நம்பிக்கு அன்பனாய் என்றும்
பரம குரும் பகவந்தம் பிரணம்யம் என்றும்-
பரமாச்சார்ய பூதரான ஈஸ்வரனில் காட்டிலும் ஆசார்யன் அதிகன்

ஆசார்யன் பாரம்பர்யத்தில் ஸ்வ ஆசார்யன் அதிகன்

அவ் வாச்சார்யானில் காட்டில் தன் வைபவ பிரதிகாதகனுமாய்
இவனுக்கு பிரகாரனுமாய்
ஸ்வரூப வர்த்தகனான ஆசார்யன் அதிகன்

ஆக ஏவம் ரூபமாய் இருக்கும்
ஆசார்ய வைபவம் –

——————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகாசார்யர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ யாமுனாசார்யர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ யாமுனாசார்யர் அருளிச் செய்த ஸ்ரீ ப்ரேமேய ரத்னம் –முதல் பிரகரணம் -வைஷ்ணத்வம் –

November 24, 2015

ஸ்ரீ மங்கள ஸ்லோகம்
பிரமேய ரத்னம் ரமணீய பஹோ புரோதசா யாமுநே தேசிகேந
உத்த்ருத்ய வேதாம்பு நிதேரபாராத் ப்ரோக்தும் மநோ லங்க்ருதயே முமுஷோ –

ரமணீய பாஹு ப்ரோஹிதர் -யமுனா தேசிகன் -யாமுனாச்சார்யார்
ஸூந்தர தோளுடையானுக்கு -கைங்கர்யம்
கூரத்தாழ்வான் அரங்கனுக்கு போல் இவர் அழகருக்கு கைங்கர்யம்
திருமாலை ஆண்டான் மூலம் இவருக்கு வந்த கைங்கர்யம் இது
உத்த்ருத்ய அபாரமான வேதாம்பு வேதக்கடலில் இருந்து உத்தரித்து அருளினார்
ப்ரமேய ரத்னம் முமுஷுக்களுக்கு அலங்காரமாக எழுதுகிறேன்

பாற் கடலைக் கடைந்து அமுதம் பெண் அமுதம்
மறைப்பால் கடலைக் கடைந்து நா பர்வதம் போல் திருவாய் மொழி
இவர் வேதாம்பு வேதக்கடலில் இருந்து உத்தரித்து அருளினார்

ஸூந்தர தோளுடையான் உடைய புரோஹிதரான யாமுனாசார்யராலே
வேதக் கடலிலே இருந்து முமுஷூவுக்கு
மனஸ்ஸூக்கு அலங்க்ருதமாக அருளிச் செய்யப் பட்டது -என்றவாறே –

யாமுன கவிவா தீந்திர ஸூந்தரஸ்ய புரோஹித
பிரமேய ரத்ன மகரோத் சர்வேஷாம் ஜ்ஞான சம்பதே –

இவர் மூன்றாவது யமுனாச்சார்யர்
ஸ்ரீ ஆளவந்தார் முதலிலும்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை உடைய திருத்தகப்பனார் இரண்டாவது யமுனாச்சார்யர் –

ஸ்ரீ மாலாதர வம்ச மௌக்திக மணி கண்டீரவோ வாதி நாம்
நாம்நா யமுனா தேசிக கவிவர பாதாஞ்சலே பண்டித –யோக சாஸ்திரத்தில் சிறந்தவர் -வாதிகளுக்கு ஸிம்ஹம் போன்றவர்

ஆக்யாய யாமுனாசார்ய ஸும்ய ராஜ புரோஹித
அரீ ரசதி தம் பும்ஸாம் பூஷணம் தத்வ பூஷணம் –

——-

ஸ்ரீ ஸூந்தரத் தோளுடையான்

ஸ்ரீ திருமாலை ஆண்டான் உடைய திருக்குமாரர்
இவருக்கு ஸ்ரீ பெரியாண்டான் என்ற திரு நாமமும் உண்டாம்
காஸ்யப கோத்ரம்
சித்திரை மாதம் சித்திரை நக்ஷத்ரம் திரு அவதாரம்
திருமாலிருஞ்சோலை ஸ்ரீ அழகர் திருக்கோயில் புரோகிதர்

இவர் தனியன்
மாலா தார குரோ புத்ரம் ஸுந்தர்ய புஜ தேசிகம்
ராமாநுஜார்ய ஸத் ஸிஷ்யம் வந்தே வர கருணா நிதிம்

இவருடைய மூதாதையர்களில் ஒருவர் -கண்ணுக்கு இனியான் -திருமாலிருஞ்சோலை அழகரை
ரக்ஷணம் பண்ணியதால் இந்த வம்சத்துக்கு ஆண்டான் பட்டப்பெயர் வந்தது
இவர் திரு சகோதரர் சிறியாண்டான்
இவர் வம்சத்தில் வந்த ஸ்ரீ யமுனாச்சார்யர் -ஸ்ரீ ப்ரமேய ரத்னம் கிரந்தம் சாதித்து அருளி உள்ளார்
இவர் ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயரின் சிஷ்யர்
யோக சாஸ்திரத்தில் மேதாவி –

ஸ்ரீ திருமாலை ஆண்டான் -இவர் திருக்குமாரர் ஸ்ரீ ஸூந்தர தோளுடையான்-
இவர் பௌத்ரர்-ஸ்ரீ இளையாழ்வார்
உடைய பௌத்ரர் ஸ்ரீ யமுனாசார்யர் –
இவர் மூன்றாம் யாமுனாச்சார்யர் -இந்நூல ஆசிரியர்
இவர் காஸ்யப கோத்தரத்தினர்
இவர் வாதிகேசரி அழகிய மணவாள சீயர் உடைய சிஷ்யர்

தத்வ பூஷணம் -ரஹஸ்ய த்ரய விவரணமும் சாதித்துள்ளார் இவர்

———

முதல் ஸ்ரீ யாமுனாச்சார்யர் –

ஸ்ரீ ஆளவந்தார் (ஆடி உத்தராடம்)
யத் பதாம் போருஹ த்யாந வித்வஸ்தாசேஷ கல்மஷ: |
வஸ்துதாமுபயா தோஹம் யாமுநேயம் நமாமிதம் ||

அசத்தாய்க் கிடந்த எனக்கு ஆத்மாவைக் காட்டி, சத்தை தந்து எல்லா அஞ்ஞானங்களையும் த்வம்சம் செய்து
என்னை ஒரு பொருளாக உளவாக்கிய ஸ்ரீ யாமுனாசார்யரின் திருவடிகளை த்யாநிக்கிறேன்.

——-

ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை (ஆவணி ரோஹிணி)

ஸ்ரீமத் க்ருஷ்ண ஸமாஹ்வாய நமோ யாமுந ஸூநவே |
யத் கடாக்ஷைக லக்ஷ்யாணாம் ஸுலப: ஸ்ரீதரஸ் ஸதா ||

ஸ்ரீ யாமுனாசார்யர் குமாரரும், எவர் க்ருபையினால் ஸ்ரீ எம்பெருமானை எளிதில் அடைய முடியுமோ
அந்த ஸ்ரீ கிருஷ்ணர் எனும் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளையைத் துதிக்கிறேன்.

ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருத்தகப்பனார் ஸ்ரீ யாமுனாசார்யர்-இவருக்கும் ஆளவந்தார் போல் அதே திரு நாமம்

————

ஸ்ரீ நாயனாராச்சான் பிள்ளை

ச்ருத்யர்த்த ஸார ஜநகம் ஸ்ம்ருதி பாலமித்ரம்
பத்மோல்லஸத் பகவதங்க்ரி புராண பந்தும்
ஜ்ஞாநாதி ராஜம் அபய ப்ரதராஜ ஸூநும்
அஸ்மத் குரும் பரம காருணிகம் நமாமி

——–

ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் –ஆனி ஸ்வாதி-

ஸ்ரீ நரசிம்மர் ஸ்ரீ பெரியாழ்வார் திரு நக்ஷத்ரம் இதுவே

30 வயசு வரை -ஞானம் இல்லாமல் -கேலியாக உலக்கை கொழுந்து -முசலை கிலசம் -நீராட்டுவித்து பண்டிதர் ஆக்கி
பன்னீராயிரப்படி -பத உரை யுடன் விளக்கி அருளி

ஸூந்தர ஜாமாத முனி சரணாம் புஜம் பிரபத்யே
ஸம்ஸார ஆர்ணவ ஸம்மக்ந ஜந்து சம்சார போதகம்

சம்சாரக் கடலைக் கடக்கும் கப்பல் -நம்மை இதில் ஆழ்ந்த ஐந்து என்கிறார்
நமக்கு தாண்டி விட கப்பல்
நாவாய் முகுந்தன்
வைகுந்தன் என்னும் தோணி பெறாமல் உழல்கின்றோமே
அழுந்தி உள்ள சேதனரை -சம்சார ஆர்ணவ சம் மக்ன ஜந்து சம்சார போதகம்- அக்கரைப் படுத்துவர்
திருவடித் தாமரைகளை வணங்குகிறேன்-

——————————————————————————–

சமஸ்த கல்யாண குணாம்ருதோதியான சர்வேஸ்வரனுடைய
நிர்ஹேதுக கிருபையாலே –
சத்வ உன்மேஷம் பிறந்து
அதடியாக சதாசார்ய வரணம் பண்ணியவனாலே சம் லப்த ஜ்ஞானனான சாத்விகனுக்கு
ஜ்ஞாதவ்யமான அர்த்த பிரமேயம் நான்கு

அவையாவன –
1-வைஷ்ணத்வமும் –
2-ஆசார்ய வைபவமும் –
3-உபாய விசேஷமும் —
4-உபேய யாதாம்யமும் –

———————–

முதல் பிரகரணம் -வைஷ்ணத்வம்

காமயே வைஷ்ணத்வம் து -என்று சனகாதிகள் பிரார்த்திக்கிறார்கள் –

(ஜிதந்தே ஸ்தோத்ர ஸ்லோகம் இது
எத்தனை பிறவிகளிலும் இதுவே வேணும்
உலக விஷய ப்ராவண்யம் நீக்கி உனது திருவடி ஸ்தானமான ஸ்ரீ வைஷ்ணவ பக்தனாக –
சர்வ ஜென்மங்களிலும் இதுவே வேண்டும்
நின் கண் அன்பு மாறாமையே வேண்டும் பிரகலாதன் போல் –
வைஷ்ணவ ஜென்மம் து -பிரசித்த அர்த்தம் து சப்தம் -)

அறியக் கற்று வல்லார் வைட்டவணர் ஆழ் கடல் ஞாலத்துள்ளே –என்று
பிரதமாச்சார்யரும் அருளிச் செய்தார் இறே

(திருக்குறுங்குடி பாதிக நிகமன பாசுரம் –
நம்பியும் வைஷ்ணவ நம்பி யாக ஆசைப்பட்டான் )

பவ நேஷ் வஸ்த்வபி கீட ஜன்ம மே (ஸ்தோத்ர ரத்னம் )-என்று யமுனாசார்யர் இத்தையே அபேஷித்தார்-

தவ தாஸ்ய மஹர சஞ்ஞ-என்று
ஆழ்வான் அனுசந்தானம்

ஆச்சான் பிள்ளை முக்த போகாவளியைப் பண்ணி பெரியவாச்சான் பிள்ளைக்கு காட்ட –
எனக்கு சரமத்திலே பிறந்த ஜ்ஞானம்
உனக்கு பிரதமத்திலே பிறந்தது ஆனாலும்
என்னோடு வைஷ்ணவத்தை கற்க வேணும் என்று அருளிச் செய்தார் –

வைஷ்ணத்வம் ஆவது குறிக் கோளும் சீர்மையும்
(லஷ்யமும் நேர்மையும் என்றவாறு
லஷ்யம் ப்ராப்யம் இலக்கு
நேர்மை -அதுக்கு உபாயம் -)

அதாவது –
1-தனக்கு ஆச்சார்யன் தஞ்சமாக அருளிச் செய்த நல் வார்த்தைகளில் அவஹிதனாய்ப் போருகையும்
2-அவ்வைஷ்ணவதவ லஷணத்தை யாதாவாக அறிகையும்
3-தந் நிஷ்டர் பக்கல் உத்தேச்ய பிரதிபத்தியும் –

(வார்த்தை அறிபவர் -வராஹ ராம கிருஷ்ண சரம ஸ்லோகம் -மாயவர்க்கு ஆள் அன்றி ஆவரோ
அதுவும் பொய்யானாலும் நான் பிறந்தமையும் பொய்யாகுமோ -நாச்சியார்
ஆச்சார்ய அபிமானமே உத்தாரகம் )

அந்த நல் வார்த்தைகள் ஆவன –
எட்டு நல் வார்த்தைகள் காட்டி அருளப் போகிறார் இதில்

1-திருஷ்ட அத்ருஷ்டங்கள் பகவத் அதீனங்களாக இருக்கும்
2-ஈஸ்வரனுக்கு சர்வ ரஷகத்வம்
3-வைஷம்ய நைர்க்ருண்யே ந சாபேஷ்வாத்-கர்மம் அடியாக செய்வதால் –
4- -பகவத் பாரதந்தர்யம்
5-பாகவத பாரதந்தர்யம்
6-பரதந்த்ர ஞானம் வந்த பின்பே நாம் சத்தாகி பிறந்தோம் ஆகிறோம்
7-ஈஸ்வரன் செய்த அம்சத்திலே க்ருதஜ்ஞதையும் -செய்ய வேண்டிய அம்சத்தில் அபேஷையும் நடக்க வேணும்
8-இந்த்ரிய வஸ்யத்தை-இந்திரியங்களை ஹ்ருஷீகேசன் இடம் சமர்ப்பிக்க வேண்டுமே

———

(முதல் நல் வார்த்தை-திருஷ்ட அத்ருஷ்டங்கள் பகவத் அதீனங்களாக இருக்கும் -)

திருஷ்ட அத்ருஷ்டங்கள் பகவத் அதீனங்களாக இருக்கும் –
அத்ருஷ்டம் அபேஷிக்க வரும் –
த்ருஷ்டம் உபேஷிக்க வரும்
என்று ஆச்சான் பிள்ளை அருளிச் செய்வர்

(அத்ருஷ்டம் ஆத்ம யாத்ரை -பலம் பிரார்த்திக்க வேண்டும் –
புருஷனால் ஆர்த்திப்பதே புருஷார்த்தம் ஆகும்
த்ருஷ்டம்-தேகத்தை வெய்யில் வைத்து ஆத்மாவை நிழலிலே வைக்க வேண்டுமே )

நின்னையே தான் வேண்டி நீள் செல்வம் வேண்டாதான் தன்னையே
தான் வேண்டும் செல்வம் (பெருமாள் திருமொழி )-என்று பிரமாணம்

த்ருஷ்டம் அபேஷித்தால் வராது –
அத்ருஷ்டம் உபேஷித்தால் வாராது என்று நம்பிள்ளை அருளிச் செய்வர்

(கூவிக்கொள்ளும் காலம் இன்னும் குறு காதோ என்று
இனி இனி என்று மாக வைகுந்தம் போக ஏகம் எண்ண வேண்டுமே )

த்ருஷ்டத்தையும் ஈஸ்வரன் தலையிலே ஏறிடுவார் சில சாஹசிகர்கள் –
அவர்கள் யார் என்னில்
1-ஸ்ரீ கஜேந்த்திரன்
2-பிரஹலாதன்
3-பிள்ளை பிரபன்னரும் –

(இவர்கள் சிறந்த ஸ்ரீ மான்களாக நாம் நினைத்து இருந்தாலும்
அத்ருஷ்டமே குறிக்கோளாக இல்லாமல் இருந்தார்களே
பிள்ளை பிரபன்னர் -கல்லுக்கு உள்ளே இருக்கும் தேரை ரஷிப்பவன் எனக்கு தினப்படி உணவு கொடுக்க வேண்டும்
என்றவர் -ராமானுஜர் சிஷ்யர் இவர்
பெருமாள் பொறுப்பு கழிந்தது என்று இவர் திரு நாட்டுக்குப் போனதும் ராமானுஜர் மகிழ்ந்தார் )

இவர்கள் மூவருக்கும் மூன்று ஆபத்தை நீக்கினான் ஈஸ்வரன் என்று
ஆச்சான் பிள்ளை அருளிச் செய்வர்

இவர்கள் மூவரும் ஈஸ்வரனுடைய சௌகுமார்யத்தில் அநபிஜ்ஞ்ஞர்
(ரக்ஷகத்வம் அறிந்தவர்கள்
அழகும் மென்மையும் அறியாதவர்கள் )

ஆஸ்ரயண வேளையில் ரஷகனான ஈஸ்வரனும் –
அதிகாரி பூர்த்தியில் ரஷ்ய கோடியிலாம் படி அபூர்ணனாய் இருப்பது
ஆகை இறே பெரியாழ்வார் பல்லாண்டு பல்லாண்டு என்று காப்பிட்டதும்
ஸ்ரீ நந்த கோபரும் ஸ்ரீ கிருஷ்ணனுக்கு –ரஷது த்வாம் இத்யாதியால் ரஷை இட்டதும்

ஆஸ்ரயண வேளையில் ஈஸ்வரனுக்கு அதிகாரி ரஷ்யன்
அதிகாரி பூர்த்தியில் ஈஸ்வரன் தான் குழைச் சரக்கு என்று
பெரியாண்டான் அருளிச் செய்வர்

(கோவிந்த பெருமாள் சிறிய கோவிந்த பெருமாள் சகோதரர்கள்
கிடாம்பியாச்சான் கிடாம்பி பெருமாள் சகோதரர்கள்
அருளாள பெருமாள் எம்பெருமானார் -அலங்கார வேங்கடவர் சகோதரர்கள்
மாருதிப் பெரியாண்டான் மாருதிச் சிறியாண்டான் சகோதர்கள்
கோமடத் தாழ்வான் கோமத்து சிறியாழ்வான் சகோதரர்கள் -போலே
பெரியாண்டன் சிறியாண்டான் சகோதரர்கள் 74 சிம்ஹாசனபதிகளில் ஒருவர்

பெரியாண்டான் திருக்குமாரர் மாடபூசி ஆழ்வான் -மாடங்களுக்கே பூஷணமாக இருப்பாராம் –
பெரியாண்டான் தன் சைதன்யம் குலையும்படி அழகர் இடத்தில் பேர் அன்பு பூண்டவர்
இவர் திருத் தோரணம் கட்டி அழகர் திருவடிகள் அறுதியாக பத்தெட்டு திவசம் தெண்டன் இட்டு கிடப்பர்
ராத்ரி மனுஷ்யர் போகும் போது ஆண்டான் கிடக்கிறாரோ பஸூ கிடக்கிறதோ வழி பார்த்து போங்கோள் என்னும் படி
சலியாமல் பகவத் அனுபவம் பண்ணுவாராம்)

——–

(இரண்டாம் நல் வார்த்தை -ஈஸ்வரனுக்கு சர்வ ரஷகத்வம் )

ஆனால் திருஷ்ட அத்ருஷ்டங்கள் பகவத் அதீநமாம் படி என் என்னில்
த்ருஷ்டத்தை கர்ம அனுகுணமாக நிர்வஹிக்கும்
அத்ருஷ்டத்தை க்ருப அனுகுணமாக நிர்வஹிக்கும் என்று
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் அருளிச் செய்வர்
(கர்மமும் கிருபையும் பேற்றுக்கு இழவுக்கும் காரணம் -ஸ்ரீ வசன பூஷணம் )

முக்தரை போக அனுகுணமாகவும் (பகவத் அனுபவ ப்ரீதி கார்ய கைங்கர்யம் வேண்டுமே )
முமுஷூக்களை ஸ்வரூப அனுகுணமாகவும்
(பரதந்த்ரன் என்று அறிந்து லௌகிக விஷயம் காட்டாமல்
தனது அனுபவமே காட்டி அருளி காதலை வளர்ப்பான் அன்றோ )
பத்தரை கர்ம அனுகுணமாகவும் ரஷிக்கும் என்று எம்பார் அருளிச் செய்வர்

ஆக இத்தால் இறே ஈஸ்வரனுக்கு சர்வ ரஷகத்வம்

(கோவிந்த ஸ்வாமி சரித்திரம் திருமங்கை ஆழ்வார் –
லௌகிக அனுபவம் ஆசை அற்ற பின் மோக்ஷம் வர அருளினார் அன்றோ இவருக்கு
ஒரு துளி ஆசை இருந்தாலே பத்தர் தான்
ஆசா லேசமும் இல்லாமல் இருந்தால் தான் முமுஷு )

ஆனால் ஒருவனுக்கு புத்ரர்கள் ஒத்து இருக்க
ஒருத்தனை இந்திர பதத்தில் வைத்து
ஒருத்தனை ரௌத்ராதி நரகத்திலே தள்ளுமோ பாதி

சர்வ ரஷகனான ஈஸ்வரனுக்கு சகல சேதனரோடும் நாராயண த்வ்ரா பிரயுக்தமான
குடல் துடக்கு (ஒழிக்க ஒழியாத ஸம்பந்தம் -கர்ப்ப சம்பந்தம் ) ஒத்து இருக்க
(அந்தர்யாமித்வம் -எப்போதும் போகாதே -ஏஷ சர்வ பூத அந்தராத்மா -குடல் துவக்கு அறாதே -இங்கு
உள்ளே இருந்தாலும் அவனே தாரகன் -ஆலிலை மேல் இருந்தாலும் அதுக்கும் இவனே தாரகன் )

ஒருத்தனை தெளி விசும்பான அந்தமில் பேரின்பத்திலே இனிது இருக்க
ஒருத்தன் இருள் தரும் மா ஞாலத்திலே இருந்தால்
ஈஸ்வரனுக்கு வைஷம்ய நைர்க்ருண்யங்கள் வாராதோ என்னில்

(தெளி விசும்பு திரு நாடு
அந்தமில் பேர் இன்பத்து அடியாரோடு
இருள் தரும் மா ஞாலத்திலே
ஆழ்வார் பாசுர பிரசுரமாகவே இப்பிரபந்தம் )

ராஷசன் திருவடி வாலிலே நெருப்பை இட
பிராட்டி சங்கல்பத்தாலே மயிர்க் கால் வழியிலே நீர் ஏறிக் குளிர்ந்தால் போலே
சராசரத் மகமான சமஸ்த பதார்த்தங்களிலும் சத்தா தாரகனான ஈஸ்வரனுடைய
இச்சா ரூபமான சௌஹார்த்தம் அனுஸ்யூகமாகையாலே
நைர்க்ருண்யம் இல்லை

(சீதோ பவ ஹநுமதா -நெருப்பு சுடாமல் இருக்கட்டும் என்றாளே ஒழிய
நெருப்பு எரிய வேண்டாம் என்று சொல்ல வில்லையே
நீரை மேலே கொட்டி அக்னியை அணைக்க வில்லையே
துன்பம் மேலோட்ட நெருப்பு போல்
இச்சா ரூபமான ஸுஹார்த்தம் -நீர் போல் குளிர்ந்து
அன்பு -விருப்பம் வடிவமானதாகவே இருக்கும்
அதனாலே ஒன்றி ஒன்றி சோம்பாது உலகைப் படைக்கிறான்
அனைவருக்கும் ஸம்ஸாரம் தொலைய வேண்டும் -அவன் விருப்பமே ஸுஹார்த்தம்
இது தான் வெல்லும் -கர்மா ஜெயிக்காது என்ற நம்பிக்கை வேண்டும் நமக்கு
நெருப்பும் நீரும் இருக்குமா போல் சம்சார துன்பமும் ஈஸ்வர ஸுஹார்த்தமும் –
இதுவே திட அத்யாவஸ்யம் என்பர்
தரு துயரம் -பெருமாள் திரு மொழி –பதிகம் போல் –
ஷேம க்ருஷீ பலன் -அநந்யார்ஹத்வம் )

——

(மூன்றாம் நல் வார்த்தை -வைஷம்ய நைர்க்ருண்யே ந சாபேஷ்வாத்-கர்மம் அடியாக செய்வதால் )

இந்த சௌஹார்த்தம்
நித்யர் பக்கல்
அஸூத்தி பிரசங்கம் இல்லாமையாலே ஸ்புரித்து இருக்கும்

பத்தர் பக்கல்
அநாதி கர்ம திரோதான ரூபையான அஸூத்தியாலே
சம்சார தந்திர வாஹியான அவனுடைய அந்த சௌஹார்த்தம்
நித்ய பக்தர் போலே பிரகாசிக்கப் பெறாதே
ஹித பரத்வ ரூபமான கர்ம அனுகுண ரஷகம் நடக்கையாலே வைஷம்யம் இல்லை

(சம்சார தந்திர வாஹிதவம் ஈஸ்வர நாயகத்வம் -ஜன நாயகத்வம் போல் இல்லையே
ருசி வளர்த்து தானே அங்கு கூட்டிப் போக வேண்டுமே
ஆகவே கர்மா அனுகுணமாக ஸம்ஸார நிர்வாகத்வம்
கிருபா அனுகுணமாக அருளுவான் என்ற விசுவாசம் இருக்க சோகம் போகுமே
கர்மா அனுகுணமாக சம்சாரத்திலே அழுத்தி இருப்பான் என்றாலே சோகம் தானே
இதுவே மாஸூ ச
பிரஹலாதன் நரசிம்மனை நேராக சாஷாத் குறித்த பின்பும் 32000 வருஷம் இங்கேயே இருந்தானே
துருவனும் நேராக சேவித்தாலும் சிம்ஸூப பதவி மாத்ரம் பெற்றான்
அவன் அருளிச் செய்த சாஸ்திரம் படியே நடத்துவேன் என்பான்
இது வேண்டாம் என்றால் சரணாகதி செய்து என்னையே பற்றி என்னை அடைந்து
என்னை அனுபவி என்றும் அதே சாஸ்திரம் சொல்லுமே
சமோஹம் சர்வ பூதேஷு என்று அன்றோ இருப்பான்
ஆத்ம தேவர் -குழந்தை பெற பழம் -கோ கர்ணன் -தந்தைக்கு உபதேசம் –
ருசி மாற்றி -மோக்ஷம் பெற்றான் -ஸ்ரீ பாகவத மஹாத்ம்யத்தில் சொல்லுமே
ஆற்ற வல்லவன் மாயன் கண்டீர் அது அறிந்து அறிந்து ஓடுமினே ஆழ்வார் )

ஆகை இறே வைஷம்ய நைர்க்ருண்யே ந சாபேஷ்வாத்-என்று
ஸூத்ர காரரும் சொல்லிற்று –
இத்தாலே ஈஸ்வரனுடைய சர்வ ரஷகத்வத்துக்குக் குறை இல்லை

———-

(சர்வஞ்ஞன் சர்வேஸ்வரன் ஸதா காருணிகன் அபி சன் -சம்சார தந்த்ர வாஹித்வாத்
ரக்ஷிக்க அபேக்ஷை பிரதீஷதே–சம்ஹிதா வாக்கியம் -பிரார்த்தனையை எதிர்பார்க்கிறார்
இது அதிகாரி விசேஷம்
இரக்கமே உபாயம்
கீழே மூன்று நல் வார்த்தைகள் பார்த்தோம் இதில்
நான்காவது நல் வார்த்தை -பகவத் பாரதந்தர்யம் பற்றியது )

ஏக ஏவ ராஜா ஆகாதோ தேவ ரூப–ஈசதே தேவ ஏக -திவ்ய நாராயண –
பொங்கோதம் சூழ்ந்த புவனியும் விண்ணுலகும் அங்காதும் சோராமே ஆள்கின்ற எம்பெருமான் -என்கிறபடியே
ஸ்வ தந்த்ரன் அவன் ஒருவனே
அவனை ஒழிய உபய விபூதியில் உள்ளார் அவனுக்கு பர தந்த்ரர்
தாஸ பூதாஸ் ஸ்வதஸ் சர்வேஹ் யாத்மந பரமாத்மந-என்று பிரமாணம்
(ஒருவனுக்கு அனைவரும் இயற்கையில் அடியவர்கள் -ஆகையால் அஹம் அபி தாஸன் )

இப்படி பார தந்த்ர்யம் ஸ்வரூபமாய் இருக்கச் செய்தே
பிரம்ம ருத்ராதிகள் அவன் கொடுத்த ஐஸ்வர்ய விசேஷத்தாலே அஹங்ருதராய்ப் போருவர்கள்
(அவன் கொடுத்த–எண்ணம் மிகுந்தால் பாரதந்த்ரம்
ஐஸ்வர்ய விசேஷத்தாலே-எண்ணம் மிகுந்தால் ஸ்வா தந்தர்யம் )

தேவாதிகள் போக ஆபாசத்தாலே அஹங்க்ருதர் –

ரிஷிகள் தபோ பலத்தால் அஹங்க்ருதர்

மற்றுள்ளார் அஜ்ஞ்ஞானத்தாலே அஹங்க்ருதர்
(ஞானம் வந்தால் தானே -தாஸ பூதாஸ் ஸ்வதஸ் சர்வேஹ் யாத்மந பரமாத்மந- என்று உணர்வோம் )

இவர்களுக்கு ஒரு காலும் பாரதந்த்ர்யம் நடவாது –
அது உண்டாயிற்றாலும் மின் போலே ஷண பங்குரம்-
(நரகாசூர ஆபத்து வந்தால் பாரதந்த்ரம் அறிந்து ரக்ஷிக்க வேண்டி
பின்பு உடனே பாரிஜாதம் கொடுக்க மறுத்து ஸ்வாதந்தர்யம் மூண்டதே )

அது நிலை நிற்பது நித்ய ஸூரிகளுக்கு –
அவர்கள் இந்த பார தந்த்ர்யத்தை இட்டு ஒருங்கப் பிடித்தது என்னலாம் படி
பகவத் அபிமானமே வடிவாக இருப்பார்கள்

அது என் போலே என்னில்
மத்யாஹன காலத்தில் புருஷன் சாயை அவன் காலுக்கு உள்ளே அடங்குமா போலே –

ஒருவனுக்கு பூஷணாதிகள் ஸ்வம்மாக உண்டானால்
பூணவுமாம்-
புடைக்கவுமாம் –
அற விடவுமாம் –
ஒத்தி வைக்கவுமாம் –
தானம் பண்ணவுமாம்-போலே
சர்வ வித விநியோக யோக்யமாய் அவனுக்கேயாய் இருக்குமா போலே பகவத் பாரதந்த்ர்யம்

——-

(ஸாஸ்த்ர ஞானம் படு கிலேசம் –
ஆச்சார்யர் உபதேச கம்ய ஞானமும்
ஆச்சார அனுஷ்டான சீலர் அனுஷ்டான கம்ய ஞானமும் ஸூலபம்
தத்வ தர்சினி வசனத்துக்கு ஏற்றம் உண்டே -அவனது வார்த்தை
எனவே நல்ல வார்த்தைகள் இவையே
இவற்றையே இங்கு அருளிச் செய்து கொண்டு வருகிறார் )

(பாகவத பாரதந்தர்யம் –ஐந்தாவது நல் வார்த்தை
பிரியா அடியார் சயமே அடியார் கோதில் அடியார் போல் )

ஒருவருக்கு ஒருவர் பாரதந்த்ரராய் இருக்க அவரது திருவடியும் பாதுகையும் உத்தேசியமாய் இருக்க வேண்டுமே
பாகவதருக்கும் பரதந்த்ரராய் இருக்க வேண்டுமே

எம் தம்மை விற்கவும் பெறுவார்கள் -என்றும் –

அடியார்க்கு என்னை ஆட்படுத்த விமலன் -என்றும்
பிரமாணங்கள்

இப்படிக்கொத்த பாரதந்த்ர்யம் இல்லாமையாலே தேவதாந்த்ர்யங்கள் உத்தேச்யம் அன்று
பார தந்த்ர்யர்கள் உடையவர்களே உத்தேச்யம் –

இவ்வர்த்தத்தை திரு மங்கை ஆழ்வார் அருளிச் செய்தார் இறே –
மற்றுமோர் தெய்வம் உளது என்று இருப்பாரோடு உற்றிலன் உற்றதும் உன் அடியார்க்கு அடிமை (8-10 )-என்றும்

திருவடி தன் நாமம் மறந்தும் புறம் தொழா மாந்தர் (திரு மழிசைப்பிரான் )-என்றும்

திருவில்லா தேவரைத் தேறேல்மின் (திரு மழிசைப்பிரான் )-என்றும்

தாழ்ச்சி மற்று எங்கும் தவிர்ந்து நின் தாளிணைக் கீழ் வாழ்ச்சி -என்றும் சொல்லுகிறபடியே
(உபய விபூதியும் திருவடிக்கீழ் இருந்தாலும் -அடங்கினவன் என்று உணராமல் வேறே பற்றுவாரும் உண்டே )

தேவதாந்த்ரங்களுக்கு இழி தொழில்கள் செய்யக் கடவேன் அல்லேன்

ந அந்யத் ஆயதநம் வசேத்-என்கிறபடியே
அவர்களுடைய ஆலயங்களிலே வசிக்கக் கடவன் அல்லன்

ந அந்யம் தேவம் நிரீஷயேத் – என்கிறபடியே
அவர்களைக் கண் கொண்டு காணக் கடவன் அல்லன் –

இவர்கள் பகவத் சரீர பூதர்களாக இருந்தார்களே யாகிலும்
அஹங்கார பிசாச விசிஷ்டர்கள் ஆகையாலே உபேஷணீயர்
பிரதிபுத்தரானவர்கள் தேவதாந்தரங்களை சேவியார் என்று சாஸ்திரம் சொல்லிற்று

பகவத் விஷயங்களை விட்டு தேவதாந்த்ரங்களைப் பற்றுகை யாவது
த்ருஷார்த்தனானவன்
கங்கை பெருக்காக ஓடா நிற்க
அதன் கரையிலே ஊற்றுக்கு அள்ள ( தோண்ட ) துர்புத்தியைப் போலே –

பகவத் சமாஸ்ரயணீயம் பண்ணினவனை தேவதாந்த்ரங்கள் தான் அனுவர்த்திப்பார்கள்
பிரணமந்தி தேவதா -என்று பிரமாணம் –

(ஆழி மழைக் கண்ணா பாசுர வியாக்யானம் -பர்ஜன்ய தேவன் கோபிகளை அனுவர்த்தித்தானே –
பகவத் பக்த தாஸ பூதராக ஆசைப்படுவார்கள் அன்றோ
தேவதைகள் அநு வர்த்திப்பதாக சொல்லப்படுகிற ஸர்வேஸ்வரன் அவதரித்து
நோன்புக்கு சொல்லிற்று செய்யக் கடவனான பின்பு பர்ஜன்யன் கிஞ்சித் கரித்து சத்தை பெறக் கடவன் இறே
ஈஸ்வரன் பக்கல் கிஞ்சித் கரித்தவர்களுக்கு பல சித்தி இவர்களாலே யானால்
இங்கு கிஞ்சித் கரித்தவர்களுக்கு சொல்ல வேண்டா விறே
அவை தான் ஸ்ரீ வைஷ்ணவர்களை அனுவர்த்தியாது ஒழிவது என் -என்று கேளாய் -என்று ஆழ்வான் –)

மயிரைப் பிளக்க வலிக்கச் சொல்லுகிற யமனும் –
ப்ரபுரஹம் அந்ய நருணாம் ந வைஷ்ணவா நாம் -என்றான் இறே –
ஆகையால் இவர்களுக்கு ஒரு காலும் யம விஷயத்தை அடைகை இல்லை –
அப்படிக்கு ஸ்ருதியும் ஓதிற்று
ந கலு பாகவதா யம விஷயம் கச்சந்தி —

ஆனால் இவனுக்கும் அநீதி உண்டானால் யம தர்சனம் பண்ண வேண்டாவோ என்னில்
கிண்ணகப் பெருக்கில் துரும்பு கொள்ள ஒண்ணாத வோபாதி
அவனுக்கு பகவத் கிருபை ஏறிப் பாய்கையாலே யமாதி தர்சனம் பண்ண வேண்டா

(யமாதி- சப்த்ததாலே யமன் சுவர்க்கம் நரகம் ஸம்ஸாரம் முதலானவை
மெய்யே பெற்று ஒழிந்தேன் விதி வாய்க்கின்றது காப்பார் யார்
கிருபா வெள்ளத்தில் துரும்பு நிற்குமோ )

அவர்கள் தான் இவர்களுக்கு கள்ளர் பட்டது படுவார்கள்
வள்ளலே உன் தமர்க்கு என்றும் நமன் தமர் கள்ளர் போலே
நாவலிட்டு உழி தருகின்றோம் நமன் தமர் தலைகள் மீதே -என்னும் படி இறே இவர்களுடைய பிரபாபம் இருக்கும் படி

இப்படிக்கொத்த பார தந்த்ர்யத்தாலே பகவச் சரீர பூதராய் இறே இருப்பது

———–

(இனி ஆறாவது விஷயம் சாதிக்கிறார்
பரதந்த்ர ஞானம் வந்த பின்பே நாம் சத்தாகி பிறந்தோம் ஆகிறோம்
யானே என்னை அறிகிலாதே யானே என் தனதே என்று இருந்தோம் முன்பு )

பகவத் ஆஸ்ரயணத்துக்கு முன்பு அசத் பிராயமாய்
பின்பு இறே தங்களை உண்டாகவாக நினைப்பது

அன்று நான் பிறந்திலேன் பிறந்த பின்பு மறந்திலேன் -(திருமழிசைப்பிரான் )-என்று பிரமாணம்

பகவத் ஆஸ்ரயணத்துக்கு
முன்பு காளராத்ரி–
பின்பு ஸூப்ரபாதம்

தாய் மடியிலே கிடந்து உறங்குகிற பிரஜை ஸ்வப்னத்திலே புலியின் கையிலே அகப்பட்டு
க்லேசித்துக் கூப்பிடுமா போலே எம்பெருமானை உணராத தசை
தாய் மடியிலே கிடந்து உறங்குகிற பிரஜை கண் விழித்து தாய் முகத்தைப் பார்த்து நிர்ப்பயமாய் இருக்குமா போலே
எம்பெருமானை உணர்ந்த தசை என்று
திருக் குருகைப் பிரான் பிள்ளான் பணிப்பர்

(அநாதி மாயயா ஸூப்தா -போல் இங்கு உறங்கி –
ஸம்பந்த ஞானம் இல்லாமல் பயம் —
ஞானம் -தட்டி எழுப்பி ஆச்சார்யர் உயர்த்த அபயம் பிறக்குமே )

————

(இது அடுத்த ஏழாவது -நல்ல வார்த்தை )

இவ் வதிகாரிக்கு
1-ஈஸ்வரன் செய்த அம்சத்திலே க்ருதஜ்ஞதையும்
2-செய்ய வேண்டிய அம்சத்தில் அபேஷையும் நடக்க வேணும்

பெற்றதும் பிறவாமை (8-9-8)-என்று செய்த அம்சத்தில் க்ருதஜ்ஞை-

கண்ணாரக் கண்டு கொண்டு களிக்கின்றது இங்கு என்று கொலோ(8-9-9) -என்று
செய்ய வேண்டும் அம்சத்தில் அபேஷை நடக்க வேணும்

(கற்றார் பற்று அறுக்கும் பிறவிப் பெரும் கடலே
பற்றா வந்து அடியேன் பிறந்தேன் பிறந்த பின்னை
வற்றா நீர் வயல் சூழ் வயலாலி யம்மானைப்
பெற்றேன் பெற்றதுவும் பிறவாமைப் பெற்றேனே —8-9-8-

கண்ணார் கண்ண புரம் கடிகைகடி கமழும்
தண்ணார் தாமரை சூழ் தலைச் சங்க மேல் திசையுள்
விண்ணோர் நாண் மதியை விரிகின்ற வெஞ்சுடரை
கண்ணாரக் கண்டு கொண்டு களிக்கின்றது இங்கு என்று கொலோ —8-9-9-)

———

(எட்டாவது வார்த்தை இந்த்ரிய வஸ்யத்தை வேண்டுமே
காவலில் புலனை வைத்து -இத்யாதி
மேம்பொருள் இத்யாதி
பட்டி மேய விடாமல் அவன் மேலே வைக்க வேண்டுமே
பல ஆழ்வார்கள் ஸ்ரீ ஸூக்திகளை ஒருங்கே சேரப் பிடித்து அருளிச் செய்கிறார் )

(யயாதி வ்ருத்தாந்தம் -இந்திரியங்களுக்கு சுகம் மேலே மேலே கொடுத்து அடக்க முடியாதே
விஷயாந்தரங்களில் இருந்து விலக்க வேண்டுமே
பட்டினி போட்டாலும் பட்டி மேய்ந்தாலும் கெட்டப் போகுமே
இந்திரியங்களை ஹ்ருஷீகேசன் இடம் சமர்ப்பிக்க வேண்டுமே
ஸூ பாஸ்ரய திருமேனி இடம் ஐந்து இந்திரியங்களுக்கும் மனஸ்ஸுக்கும் நல்ல தீனி உண்டே )

(பிள்ளை உறங்கா வல்லி தாசர் கண் அழகுக்காக பொன்னாச்சியாருக்கு குடை பிடிக்க
காரியவாகி –நீண்ட அப் பெரிய வாய கண் அழகைக் காட்ட
இருவரும் ஸம் ப்ரதாயத்துக்கு ஸீமா பூமி ஆனார்களே
அப்போது ஒரு சிந்தை செய்து மடை மாற்றி அருளினார் அன்றோ நம் ஸ்வாமி -)

மெய்யில் வாழ்க்கையை மெய்யெனக் கொண்டு
உண்டியே உடையே உகந்தோடி
மாரனார் வரி வெஞ்சிலைக்கு ஆட் செய்து
அன்னவர் தம் பாடல் ஆடல் அவை ஆதரித்து
சதிரிள மடவார் தாழ்ச்சியை மதித்து
அவர் தம் கல்வியே கருதியோடி
ஐவர் திசை திசை வலித்து எற்றும் படி இந்த்ரியங்களுக்கு இரை தேடி இடாதே ஐம்புலன் அகத்திடுக்குகை

இந்த்ரியங்களைப் பட்டினி கொள்ளவும் ஆகாதே -பட்டி புக விடவும் ஆகாதே
ஆகையாலே இவற்றை ஹ்ருஷீகேச சமர்ப்பணம் பண்ணி —

கேட்பார்கள் கேசவன் கீர்த்தி யல்லால் மற்றும் கேட்பாரோ
என்று எப்போதும் பகவத் விஷயத்தை கேட்டும்

குட்டன் வந்து என்னைக் புறம் புல்குவான் கோவிந்தன் என்னைப் புறம் புல்குவான் -என்று
பகவத் விக்ரஹத்தோடு சம்ஸ்லேஷித்தும்

கண்டேன் கன மகரக் குழை இரண்டும் நான்கு தோளும்-என்கிறபடியே
கண்கள் வவ்வல் இடும்படி குளிர்ந்து
(கை வளை-தேக அனுபவம் மேகலை ஆத்ம அனுபவம் இரண்டையும் விட்டு பகவத் அனுபவம் பெற்றார் )

வாயவனை யல்லது வாழ்த்தாதே -என்று
வாயார ஸ்தோத்ரம் பண்ணியும்

பகவத் விக்ரஹ தர்சனம் பண்ணியும் –

கையுலகம் தாயவனை அல்லது தாம் தொழா-என்று
எப்பொழுதும் அஞ்சலி பந்தனம் பண்ணியும்

வலம் செய்து நாளும் மருவுதல் வழக்கே -என்று
கால் கொண்டு பகவத் ஷேத்ரங்களை பிரதஷிணம் பண்ணியும்

ப்ரீயாய மம விஷ்ணோச்ச -என்கிறபடியே
பகவத் ப்ரீணா நார்த்தமாக வர்ணாஸ்ரம தர்மங்களை
வழுவாதபடி அனுஷ்டித்தும்

ப்ராமாதிகமாக நழுவினாலும்
அப்ரீதி விஷயம் அன்றிக்கே க்ருபா விஷயமாய் விடும் என்றும்

வஸ்தவ்ய பூமி
கோயில் திருமலை தொடங்கி உண்டான அர்ச்சா ஸ்தலங்கள் என்றும்

அந்த ஸ்தல வாசம் தான் சரீரபாத பர்யந்தமாகக் கடவது என்றும்

யாவச் சரீர பாதம் அத்ரைவ ஸ்ரீ ரங்கே ஸூக மாஸ்வ-
என்று ஸ்ரீ பாஷ்ய காரரும் அருளிச் செய்தார்

இந்த அரங்கத்து இனிது இரும் என்று பெரிய பெருமாள் அருளிச் செய்ததை
பாஷ்ய காரர் தானே காட்டி அருளினார் கத்யத்தில்

இப்படி பிராப்ய ஸ்தலங்கள் இல்லாத போது வைஷ்ணவ சஹவாசம் பண்ணிப் போரவும்
இவை இரண்டும் இல்லாத போது பிரேத பூமி வாசத்தோ பாதியாக நினைத்து இருக்கவும்
என்று துடங்கி உண்டான நல் வார்த்தைகள் –

(சம்சார விஷ வ்ருஷத்துக்கு பக்த பக்தியே வேண்டும்
அது இல்லாத போது
கேசவ பக்தி பண்ணிப் போக வேண்டும்
இரண்டும் இல்லாத போது )

———

எட்டு நல் வார்த்தைகள் காட்டி அருளிய பின் இவை துடங்கி உண்டான நல் வார்த்தைகள் –
என்று ஸ்ரீ வார்த்தா மாலை ஸ்ரீ வசன பூஷணம் இத்யாதிகளில் உள்ள அனைத்தையும் நாம் அனுசந்திக்க வேண்டும்

1-திருஷ்ட அத்ருஷ்டங்கள் பகவத் அதீனங்களாக இருக்கும்
2-ஈஸ்வரனுக்கு சர்வ ரஷகத்வம்
3-வைஷம்ய நைர்க்ருண்யே ந சாபேஷ்வாத்-கர்மம் அடியாக செய்வதால் -இச்சா ரூபமான ஸுஹார்த்தம் உண்டே அவனுக்கு
4-பகவத் பாரதந்தர்யம்
5-பாகவத பாரதந்தர்யம்
6-பரதந்த்ர ஞானம் வந்த பின்பே நாம் சத்தாகி பிறந்தோம் ஆகிறோம்
7-ஈஸ்வரன் செய்த அம்சத்திலே க்ருதஜ்ஞதையும் -செய்ய வேண்டிய அம்சத்தில் அபேஷையும் நடக்க வேணும்
8-இந்த்ரிய வஸ்யத்தை-இந்திரியங்களை ஹ்ருஷீகேசன் இடம் சமர்ப்பிக்க வேண்டுமே

———-

(பாற் கடலைக் கடைந்து அமுதம் பெண் அமுதம்
மறைப்பால் கடலைக் கடைந்து நா பர்வதம் போல் திருவாய் மொழி
இவர் வேதாம்பு வேதக்கடலில் இருந்து உத்தரித்து அருளினார் )

(குறிக்கோள் -லஷ்யம் மாறாமல் இருக்க வேண்டுமே
இத்துடன் இருப்பவன் வைஷ்ணவன்
இத்தை நினைவு படுத்திக்க கொண்டு இதன் படி மட்டும் இல்லாமல்
குறிக்கோள் கொண்ட முன்னோர் அனுஷ்டானம் சீர்மை
அவற்றைப் பார்த்து அறிந்து கொள்ள வேண்டுமே
இதுவே நேர்மை –
ராமானுஜர் ஆளவந்தார் கடாக்ஷத்தின் சீர்மையாலே அவஸ்துவாக இருந்த நான்
வஸ்துவானேன் என்று அருளிச் செய்தார் வன்றோ
பாகவத நிஷ்டை லஷ்யம் மாறாமல் இருக்க வேண்டுமே –
இதுவே சீர்மை )

ஸ்ரீ பாகவத சிஹ்னங்கள் ஆவன –
1-பகவத் சம்பந்த நாமதேயங்கள் –
2-திரு நாமம் -திரு இலச்சினை துடக்கமானவை
3-த்வய உச்சாரணம்
4-பகவத் பிரசாத தாரணம்
5-அருளிச் செயல் துடக்கமான அனுசந்தானங்கள்

(பகவத் சம்பந்த நாமதேயங்கள் –பிராட்டி ஆழ்வார் ஆச்சார்யர்களை சேர்க்கவே சம்பந்த சப்த பிரயோகம் –
பஞ்ச ஸமாச்ரயணம் இவை பெறுவோமே
மந்த்ர ராஜா -திருமந்திரத்தில் பிறந்து -ஞானம் வந்த அன்றே பிறந்தோம் ஆவோம்
மந்த்ர ரத்னம் த்வயத்திலே வளர்ந்து இருக்க வேண்டுமே -உதடு துடித்துக் கொண்டே இருக்க வேண்டுமே
பகவத் பிரசாத தாரணம்
உடுத்துக் களைந்த நின் பீதகவாடை –துழாய் -தரித்து -பிரசாதம் ஸ்வீ கரித்து –
வாயைக் கொப்பளித்து துப்பாமல் அத்தையும் ஸ்வீ கரிக்க வேண்டும் -பூரி ஜெகந்நாத பெருமாள் -பிரசாத பண்டாரம் )

ரங்கம் ரங்கமிதி ப்ரூயாத் -என்கிறபடியே
1-தும்பினால் திரு வரங்கம் என்கையும்
2-இது ஒழிய ஸ்தலாந்தரங்களை சொல்லாது ஒழிகையும்

அதுக்கடி என் என்னில்
பெரிய திருமலையிலே வர்த்திப்பான் ஒரு வைஷ்ணவன் பட்டர் கோஷ்டியிலே வந்து தும்ப –
திரு வேங்கடம் என்ன
அவரார் கருவிலே திருவிலாதார் என்று அருளிச் செய்தார்

இது கேட்டு அனந்தாழ்வான்
வெருவாதாள் வாய் வெருவி வேங்கடமே வேங்கடமே என்றாளோ திருவரங்கம் என்றாளோ என்று
பட்டருக்குச் சொல்லி வரக் காட்ட
அவர் கனாக் கண்ட படி என் கொண்டு –செவ்வடி குத்துகிறாரோ என்று அருளிச் செய்தார்

(தாயார் வார்த்தையே இது -மகள் திருவரங்கம் சொல்ல அவள் கேட்க்காமல்
இப்படி சொல்லி இருப்பாள் என்று எண்ணி பேசியதை அறியாமல்
அனந்தாழ்வான் கனாக் கண்டு சொல்லி விட்டு இருக்கிறார் என்றவாறு )

பட்டர் திருவரங்கம் என்பாரையும் நாக்கறுக்க வேணும்
திரு வரங்கம் என்னாதாரையும் நாக்கு அறுக்க வேணும் என்று அருளிச் செய்வார்
எங்கனே என்னில்
கோயிலுக்கு போகிறோம் என்னாமல் திருவரங்கத்துக்கு போகிறோம் என்பாரையும் நாக்கு அறுக்க வேணும்
தும்பி திருவரங்கம் என்னாதாரையும் நாக்கு அறுக்க வேணும் என்று அருளிச் செய்தார்

(எவ்வளவு -கோயில் -என்று பரகால நாயகி )

——–

(இனி தேக யாத்திரை இருக்க வேண்டிய நியமங்களை அருளிச் செய்கிறார் )

தனக்கு யோக்யமாக விநியோகம் கொள்ளும் பதார்த்தங்கள் யாவை சில
அவை எல்லாம் பகவன் நிவேதிதமாக ஆக்கிக் கொள்ள வேண்டும்
யதன்ன புருஷா பவதி தத் அநநாஸ் தஸ்ய தேவதா -என்று பிரமாணம் –

(சித்ர கூடம் இங்கித பிண்ட பிரதானம் பெருமாள் செய்த பொழுது வசிஷ்டர் கைகேயியைத் தேற்றி அருளிச் செய்த வார்த்தை
நாம் உண்ணும் பொருளை தேவதைக்கு சமர்ப்பிக்க வேண்டும்
அரிசிச் சோறு கூட சாப்பிடாமல் இருக்கிறாரே என்று அதுக்கும் பெத்த மனம் மீண்டும் துடித்ததே )

அந்த பதார்த்தங்கள் தான் நியாயார்ஜிதமாக வேணும் –
பாஹ்யங்கள் ஆகாது –
குத்ருஷ்டிகள் உடைய பதார்த்தங்கள் ஆகாது
அபிமான தூஹிதருடைய பதார்த்தங்கள் ஆகாது
நாஸ்திகர் உடைய பதார்த்தங்கள் ஆகாது –
ஸ்ராத்தாதிகளால் வரும் பதார்த்தங்கள் ஆகாது

ஒருவனுக்காகப் பண்ணும் பகவத் ஸ்தோத்ரம் மந்திர ஜபம்
திரு அத்யயனம் துடங்கி உண்டான வற்றால் வரும் பதார்த்தங்கள் ஆகாது

ஒதுவித்துக் கூலி வாங்குதல்
ஸ்ருத்யர்த்தமான அபியுக்தருடைய பிரபந்தங்களை கூலிக்காக வோதுவிக்கலாவது –

ஒருவன் சோற்றுக்காக பிரபன்ன பாஷையும் பண்ணிப் போருவன்
என்று ஆச்சான் பிள்ளை அருளிச் செய்வர்

தனியே பிரபன்னர் என்று ஒரு ஜாதியும்
பிரமேயம் என்று ஒரு பாஷையுமாய் இறே இருப்பது

(அ காரமும் அவன்
ஆ போல் நாம் அவனை அண்டியே இருக்க வேண்டும்
இச்சை தானே உபாயம்
ஈய்வான் என்ற அத்யாவசிய
இதுவே நமக்கு அரிச்சுவடியாக இருக்க வேண்டும் )

சத்வ நிஷ்டன்
சாத்விகனை நெருக்காமல்
சம்சாரிகள் பக்கல் சாபேஷன் அல்லாமல்
யதோபாத்தம் கொண்டு ஜீவிக்கக் கடவன்
என்று நம்பிள்ளை அருளிச் செய்வர்

சாதா நாந்தர நிஷ்டனை விசேஷ திவசத்திலே காணலாம்
பிரபன்னனை ஷாம காலம் வந்த வாறே காணலாம்
என்று நஞ்சீயர் அருளிச் செய்வர் –

(காலம் கெட்டால் உறுதி போகுமே இவனுக்கு -பஞ்சம் இல்லாத காலம் விசேஷ திவசம்
அப்பொழுதும் விசுவாசம் குலையாமல் இருப்பானே ப்ரபன்னன்
காட்டு மார்க்கம் பட்டர் போக ஸஹஸ்ர நாமம் சொல்லி ரக்ஷிக்க கூடாது என்ற உறுதி )

பிரக்ருத்யாத்ம விவேகம் பிறந்தவனை ஷாம காலம் வந்தவாறே காணலாம் –
பிரபன்னனை விசேஷ திவசங்களிலே காணலாம்
அநந்ய பிரயோஜனனை விரஜைக் கரையிலே காணலாம்
என்று ஆச்சான் பிள்ளை அருளிச் செய்வர்

(பிரக்ருத்யாத்ம விவேகம் பிறந்தவனை-ஜடபாரதர் சரித்திரம் அறிவோமே
பிரபன்னனை விசேஷ திவசங்களிலே காணலாம்
உத்ஸவாதி திவசங்களிலே மைனஸூ குலைந்து இருப்பார்களே
இடையாற்றுக்குடி நம்பி சரித்திரம்
திரு மேனி நோவு சாத்தி ஆறாம் திரு நாள் -திரு நாட்டுக்கு நித்ய ப்ரஹ்மத்துக்கு உத்சவம் கலந்தார் அன்றோ )

1-மனனக மலமறக் கழுவி என்றும் மனசில் உண்டான அஷ்ட மலங்கள் அற்று இருக்கவும்
(காம க்ரோத ஆறும் அகங்கார மமகாரங்கள் இப்படி எட்டு )
2-ஸ்திதி மனசம் தமேவி ஹி விஷ்ணு பக்தம் -என்று ஸூத்த மனவாய் இருக்கவும்
3-சர அசரமான பூதங்கள் அடைய பகவத் விக்ரஹம் என்று இருக்கையும் (ஜகத் சர்வம் சரீரம் தே )
4-சர்வ பூத தயை பண்ணுகையும்(அஷ்ட வித -அஹிம்சா பிரமம் -ஸத்யம் சர்வ பூத தயை -இத்யாதி )
5-பர துக்க துக்கியாய் இருக்கையும் –
6-பர சம்ருத்தி பிரயோஜனமாய் இருக்கையும்
7-நியாய உபபாத்மமான த்ரவ்யத்தை சாத்விகர் அளவிலே சம விபாகம் பண்ணிப் போருகையும்
8-பகவத் விமுகரான அசாத்விகர் அளவிலே வ்யாபியாது இருக்கையும்
9-தனக்கு சேஷமான க்ருஹ ஷேத்திர க்ராமாதிகளோடு புத்ராதிகளோடு மற்றும் உள்ள உபகரணங்களோடு வாசி யற
பகவத் நாமதேயங்களும்
பகவன் முத்ரைகளும் தரிப்பிக்கவும்
(இதனாலே நமது கிரஹங்களிலும் பெருமாள் பாத்திரங்களிலும் திரு நாமங்கள் சங்கு சக்கர லாஞ்சனை பண்ணுகிறோம் -)
10-பகவத் விமுகர் இடத்தில் சம்லாப தர்சனம் துடங்கி யுண்டான சர்வத்தையும் த்யஜிக்கவும்
11-தெரித்து எழுது வாசித்தும் கேட்டும் வணங்கி வழி பட்டும் பூசித்தும் போக்கினேன் போது என்கிறபடி கால ஷேபமாகவும்

இப்படிக்கொத்த அர்த்தங்களிலே அவஹிதனாய் போருகை இறே
குறிக்கோள் ஆவது
(இதுவே நமக்கு லஷ்யம் -அறியக் கற்று வல்லாரே வைஷ்ணவர் ஆவார் என்றவாறு )

—————

சீர்மை யாவது –
இப்படிப் பட்ட அர்த்த நிஷ்டன் பக்கல் உத்தேச்ய பிரதிபத்தி பண்ணுகை-
எங்கனே என்னில்

(ஸ்ரீ வைஷ்ணவ லக்ஷணம் சொல்லி -இப்படி இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்களைக் கண்டு
ஏற்றம் அறிந்து உகந்து இருப்பது மிக துர்லபம் –
பயிலும் திரு உடையார் எவராலும் அவர் கண்டீர் -ஜென்ம நிரூபணம் பண்ணாமல்
அவன் நிழலில் ஒதுங்க ஆசை வேண்டுமே –
மிலேச்சனும் பக்தனானால் -நாயனார் அருளிச் செய்தார் அன்றோ
எல்லாருக்கும் அண்டாதது அது அன்றோ )

தண் சேறை எம்பெருமான் தாள் தொழுவார் காண்மின் என் தலை மேலாரே -என்கிறபடியே
சிரஸா வாஹ்யரும் அவர்களே

எப்பொழுதும் என் மனத்தே இருக்கின்றாரே என்கிறபடியே
அந்தர்யாமியும் அவர்கள்

கொண்டாடும் நெஞ்சுடையார் அவர் எங்கள் குல தெய்வமே -என்கிறபடியே
குல நாதரும் அவர்களே

சேஷிகளும் அவர்கள் –
சரண்யரும்-
பிராப்யரும் அவர்களேயாய் இருக்கும்

(அந்தமில் பேர் இன்பத்து அடியாரோடு இருந்தமை அங்கும் –
அத்ர பரத்ர ச அபி )

ப்ரபவோ பகவத் பக்தா –என்றும்
வைஷ்ணவ சம்ஸ்ரயா -என்றும் –
சாத்யாஸ் சாந்தி தேவா -என்றும் –
ஜ்ஞானத்தின் ஒளி உருவை நினைவர் என் நாயகரே -என்றும்
வணங்கு மனத்தாரவரை வணங்கு என் தன மட நெஞ்சே -என்றும்
அடியவர்கள் தம்மடியான் என்றும் பிரமாணம்

எம்பெருமானில் தாழ்ந்தான் ஒரு வைஷ்ணவன் இல்லை என்று
எம்பார் அருளிச் செய்வார்

(சச பூஜ்ய மம -எனது அளவிலாவது பாகவதர்களைப் பூஜிக்க வேண்டும் என்று அவன் வார்த்தை )

பட்டருக்குக் கை கொடுத்து போனான் ஒரு ஸ்ரீ வைஷ்ணவன் –
ஒரு ஸ்ரீ வைஷ்ணவனை காலை முடக்கு என்ன –
ஆழ்வார் திருத் தாள் என்று பாடினார் –இவன் கால் என்பான் என்று அவனை விட்டு அருளினார்

ஸ்ரீ வைஷ்ணவர்களைக் கண்டால் உலாவுகின்ற கோயில் ஆழ்வார் என்று இருக்க வேணும்
என்று நஞ்சீயர் அருளிச் செய்வார்
ஜங்கம ஸ்ரீ விமாநாநி -என்று பிரமாணம்

வைஷ்ணவனுக்கு ஒரு வைஷ்ணவனே உசாத் துணை என்று
நம்பிள்ளை அருளிச் செய்வார்

வருகிறவன் வைஷ்ணவன் ஆகில்
இருக்கிறவனும் வைஷ்ணவனாய் இருக்க வேணும்
என்று ஆச்சான் பிள்ளை அருளிச் செய்வர்

பெரிய நம்பி சரமத்திலே கூரத் ஆழ்வான் மடியிலே கண் வளர –
கோயிலும் ஸ்ரீ பாஷ்ய காரரும் இருக்க –
இங்கே சரீர அவசானம் ஆவதே என்று வெறுக்க
ஒரு பாகவதன் உடைய மடியில் காட்டில்
கோயில் உத்க்ருஷ்டம் அன்று என்று அருளிச் செய்தார்

(தஞ்சாவூர் அம்மா பேட்டை அருகில் பசுபதி கோயில் அருகில் இது நடந்தது
பெரிய நம்பி திருவரசு இன்று அங்கு உண்டே )

இதில் ஜாதி நிரூபணம் இல்லை –
பயிலும் திரு உடையார் யவரேனும் அவரே -என்று பிரமாணம் –

இவர்கள் ஜாதி நிரூபணம் பண்ணுகை யாவது அசஹ்ய அபசாரம் ஆவது –
எங்கனே என்னில் –
1-பகவத் அபசார –
2-பாகவத அபசாரம் –
3-அசஹ்யாத அபசாரம் என்று மூன்று –

இதில்
பகவத் அபசாரமாவது –
ஸ்வ யதன சாத்யன் எம்பெருமான் என்று இருக்கை

பாகவத அபசாரமாவது –
ஸ்ரீ வைஷ்ணவனோடு ஒக்க தன்னையும் சமான பிரதிபத்தி பண்ணுகை

அசஹ்ய அபசாரமாவது
அர்ச்சாவதாரத்தின் உடைய த்ரவ்ய நிரூபணம் பண்ணுதல் –
ஸ்ரீ வைஷ்ணவனுடைய ஜாதி நிரூபணம் பண்ணுதல் என்று ஜீயர் அருளிச் செய்வர்

பெரிய நம்பி மாறனேர் நம்பியை சம்ஸ்கரித்தார்-
பட்டர் பிள்ளை உறங்கா வல்லி தாசரை சம்ஸ்கரித்தார் –
பாஷ்யகாரர் நீராட எழுந்து அருளும் போது மிளகு ஆழ்வான் கையைப் பிடித்துக் கொண்டு எழுந்து அருளுவார் –
மீண்டு எழுந்து அருளும் போது பிள்ளை உறங்கா வல்லி தாசர் கையைப் பிடித்துக் கொண்டு எழுந்து அருளுவார்

—————

சத்கார யோக்யர் சஹவாச யோக்யர் என்று இரண்டு –
சாதநாந்தர நிஷ்டன் -சத்கார யோக்யன் –
பிரபத்தி நிஷ்டன் -சஹவாச யோக்யன் -என்று ஆச்சான் பிள்ளை அருளிச் செய்வர்

(பராசரர் உபாயாந்தர நிஷ்டர் -அவர் திரு நாமம் சூட்டலாம் -பக்தி உடன் இருக்க வேண்டும்
இருந்தாலும் பராங்குச பரகால போல் திருமேனி எழுந்து அருளிப் பண்ணி –
மாதா பிதா இத்யாதி இவர்களே என்று பிரதிபத்தி பண்ணி இருக்க வேண்டுமே
இதுவே சத் கார -ஸஹ வாஸ யோக்யர் வாசி
நம்பிள்ளை வான மா மலை தாசர் திருவடி ஸ்பர்சமே க்ருஹ ப்ரவேச சுத்தி என்று இருந்தாரே
விசேஷ அனுபவ பாத்ரர்கள் ஸஹ வாசர் யோக்யர் )

ம்ருகாந்தரத்திலே தண்ணீர் பந்தலோபாதி
சம்சாரத்தில் வைஷ்ணவ சஹவாசம் என்று பெரியாண்டான் அருளிச் செய்வர்
(பாலை வனத்தில் சோலை வானம் போல் )

ஷாம காலத்தில் அறச்சாலையோபாதி விபரீத பூயிஷ்ட தேசத்திலே வைஷ்ணவ சஹவாசம் என்று
இளையாழ்வாரான திருமாலை யாண்டான் அருளிச் செய்வர்

ஒரு வைஷ்ணவனுக்கு உண்டான திருஷ்ட சங்கோசம்
நாடு மாறாட்டத்தோ பாதியும்
கதிர் காணப் பசியோ பாதியும்
அபிஷேகப் பட்டினியோபாதியும் என்று பெரிய பிள்ளை அருளிச் செய்வர்

(யஸ்ய அனுக்ரஹம் இச்சாமி அவன் இடம் செல்வம் விலகச் செய்கிறேன் -கீதை
சாதாரணமான வைஷ்ணவனுக்கு இப்படி என்றால்
மேலே ப்ரபன்னனுக்கும்
ஏகாந்திக்கும்
பரமைகாந்திக்கும்
சொல்ல வேண்டாவா அன்றோ -)

அம்ருத பானத்தாலே ஜரா மரண நாசம் உண்டாமோபாதி
வைஷ்ணவ க்ருஹத்தில் அம்பு (தீர்த்த )பானத்தாலே சகல பாபங்களும்
நசிக்கும் என்று பிள்ளை யருளிச் செய்வர்

(மஹத் பாத ரஜஸ்ஸு—பாகவதர் அடிப் பொடியே பாவனம் ஜடாபாரதர் ரைக்குவருக்கு உபதேசம் )

———

(ஆச்சார்யர் அபிமானத்துக்கு பீடிகை வைக்கிறார் இதில் )

ஸ்வரூப நாசகரோடு சஹவாசம் பண்ணுகையும் அநர்த்தம்-
ஸ்வரூப வர்த்தகரோடு சஹவாசம் பண்ணாது ஒழிகையும் அநர்த்தம் -என்று ஜீயர் அருளிச் செய்வர் –

நள்ளேன் கீழாரோடு உய்வேன் உயர்வந்தரோடு அல்லாலே (பொய்கையார் )-என்று பிரமாணம்

இதில் ஸ்வரூப நாசகராவர் –
1-விழி எதிர்ப்பார் –
2-சுவர் புறம் கேட்பார் –
3-சம்ப்ரதாயம் அற ஸ்வ புத்தி பலத்தாலே சொல்லுவார் –
4-ஒருத்தன் பக்கலிலே கேட்டு அங்குக் கேட்டிலோம் என்பார் –
5-ஆசார்யன் பக்கலிலே அர்த்தத்தைக் கேட்டு அதில் பிரதிபத்தி பண்ணாது இருப்பார் –
6-அவன் அளவிலே க்ருதஜ்ஞ்ஞன் அன்றிக்கே க்ருதக்னனாய்ப் போருவார் –
7-க்யாதி லாப பூஜைக்காக கேட்பார் இவர்கள் –

(ஆச்சார்யர் பக்கம் இருந்து கேட்க வேண்டும் நேராக இருந்து சாம்யா புத்தி உடன் கூடாதே
பிரஸ்ன காலம் ப்ரதீக்ஷதயா இருக்க வேண்டுமே
ஸ்ரோத்ரியம் ப்ரஹ்ம நிஷ்டம் ஸமித் பாணிம்
பணிவுடன் -அனுமதி பெற்றே கேட்க வேண்டும்
பிரத்யஷயே குரு -நேராகவே புகழ வேண்டுமே )

ஸ்வரூப வர்த்தகராவார் –
சதாசார்யர் பக்கல் பரார்த்தம் அன்றியே ஸ்வார்த்தமாக-ஏற்ற கலங்கள் -என்னும் படி
1-அர்த்த ஸ்ரவணம் பண்ணுவாராய்-
2-அர்த்தத்திலே விஸ்வஸ்தருமாய்-
3-அந்த ஆசார்யன் பக்கலிலே க்ருதஜ்ஞருமாய்
4-சரீரம் அர்த்தம் பிராணன் என்று துடங்கி உண்டான சர்வத்தையும் ஆசார்ய சமாஸ்ரயணம் பண்ணிப் போருவர் சிலராய்
5-த்ரிவித கரணங்களாலும் ஆசார்யனைச் சாயை போலே பின் செல்லக் கடவர்களாய்-
6-பிரகிருதி சங்கமுடைய பித்ராதிகளே யாகிலும் ததீய விஷய ஞானம் இல்லை யாகில் அவர்களை அனுவர்த்தியாதே இருப்பாருமாய்
7-அவர்களோட்டை ஸ்பர்சம் உண்டாயிற்றதாகில் -ஷூத்ர ஸ்பர்சத்தோ பாதி சசேல ஸ்நானம் பண்ணிப் போரக் கடவராய்
(சசேல ஸ்நானம்-ஆடையுடன் ஸ்நானம் தீட்டுப் போகச் செய்வோமே -)
8-அபிஜன வித்யா வ்ருத்தங்கள் ஆகிற படு குழி அற்ற ததீய விஷயத்தில் எப்போதும் போரக் கடவராய்

அவைஷ்ணவனை அனுவர்த்திக்கையும் அநர்த்தம் –
வைஷ்ணவனை அனுவர்த்தியாது ஒழிகையும் அநர்த்தம்
அவைஷ்ணவ நமஸ்காராத்–என்று பிரமாணம் –

9-உண்ணும் சோறுண்டு போரக் கடவராய்
10-பிரசாத தீர்த்தங்களும் பிராப்த விஷயங்களிலே பிரதிபத்தி பண்ணிப் போரக் கடவராய்
11-உண்ணா நாள் பசியாவது ஓன்று இல்லை -என்கிறபடியே
பகவத் விஷயத்தை ஒழிந்த போது உபவாசத்தோ பாதி என்று நினைத்து
இருக்குமவர்கள் ஸ்வரூப வர்த்தகராவார்

(வைசம்பாயனர் இடம் ஜனமேஜயன் -தர்மம் அர்த்தம் காமம் மோக்ஷம் நான்குமே புருஷார்த்தம் அல்ல
நீர் சொல்ல சொல்ல கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும்
பரிக்ஷித்தும் ஸூ காச்சார்யார்
உண்டாருக்கு உண்ண வேண்டாம் இறே
இதுவே ஸ்வயம் பிரயோஜனம்
முயல்கிறேன் உன் தன் மொய் கழற்கு அன்பையே
பயன் அன்று ஆகிலும் பங்கலர் ஆகிலும் செயல் நன்றாகத் திருத்திப் பணி கொள்வார் அன்றோ –
மாம் மதியம் சேதனம் சேதநாஞ்ச -எல்லாம் சமர்ப்பித்து
த்வய பிரசாத்துக்கு எதுவும் சாம்யம் இல்லையே
வைகுந்த மா நகர் மற்றது கையதுவே
சாயை போலே பாட வல்லார் தாமும் அணுக்கர்களே )

பெரியாண்டான் திருத் தோரணம் துடங்கி அழகர் திருவடிகள் அறுதியாக
பத்தெட்டு திவசம் தண்டன் இட்டுக் கிடப்பர்
ராத்திரி மனுஷ்யர் போகும் போது ஆண்டான் கிடக்கிறாரோ -பசு கிடக்கிறதோ
வழி பார்த்துப் போங்கோள் என்னும் படி இறே
சலியாமல் பகவத் அனுபவம் பண்ணும் படி –

———-

இனி தீர்த்த பிரசாதங்களும் போஜனங்களும் நிரூபித்துக் கொள்ள வேணும்
(நிரூபித்துப் பார்த்து ஸ்வீ கரிக்க வேண்டும் என்றவாறு )

ஆழ்வானும் ஆண்டாளும் கோயில் நின்றும் தேசாந்தரத்துக்குப் போய் மீண்டு வருகிற அளவிலே வழியில்
அவசரிக்க இடம் இல்லாமல்
கோயிலுக்கு அணித்தாக உபவாசத்தோடு வந்து புகுந்த தொரு மௌஷ்டிகன் வாசலிலே சடக்கென அமுது செய்தார்

ஆண்டாளை அழைத்து பிரசாதம் கூடச் சொன்ன அளவில்
அவருடைய ரூப நாமம் கொண்டு அமுது செய்தீர் –
அவர் எதிலே நிஷ்டர் என்று தெரியாது -நான் அது செய்வது இல்லை என்றாள்

ஆழ்வான் -உம்முடைய வ்யவசாயத்தை பெருமாள் எனக்குத் தந்து அருள வேணும் –
என்று வேண்டிக் கொண்டார்

(உருகுமால் நெஞ்சம் -காலஷேபம் -ஆழ்ந்து இருக்கும் கூரத்தாழ்வான் நிஷ்டை
எனக்கு இல்லையே என்று உடையவர் சொல்லிக் கொள்ள
அவர் இங்கு ஆண்டாள் நிஷ்டை பெருமாள் பிரசாத்தால் வேண்டிக் கொள்கிறாரே )

ஆகையாலே கேவல நாம ரூபமுடையாரான சாதநாந்திர நிஷ்டர் அகங்களிலே
பிரசாதப் படுவான் அன்று –
மந்த்ராந்தரங்களைக் கொண்டு பண்ணின சமாநாரதத்தில் தீர்த்த பிரசாதாதிகளும்
பிரசாதப் படுவான் அன்று

ஸ்ரீ பாத தீர்த்தம் தான் த்விதம் என்று ஜீயர் அருளிச் செய்வர் –
இதர உபாய நிஷ்டர்களுடைய தீர்த்த பிரசாத்யாதி அங்கீ காரமும் ஜ்ஞான மாந்த்ய ஹேது
பகவத் உபாசன நிஷ்டருடைய தீர்த்த பிரசாத்யாதி அங்கீ காரமும் ஜ்ஞான மாந்த்ய ஹேது
என்று பெரியாண்டான் அருளிச் செய்வார்

வசிஷ்டனுக்கும் விச்வாமித்ரனுக்கும் உள்ள வாசி போரும்
பாகவத தீர்த்தத்துக்கும்
பகவத் தீர்த்தத்துக்கும் என்று
இளையாழ்வாரான திருமாலை யாண்டான் அருளிச் செய்வர்

கரும்புக்கும்
கட்டிக்கும் உண்டான வாசி போரும்
என்று பிள்ளை அருளிச் செய்வர்

(திருவேங்கடமுடையான் கரும்பு
தயா தேவி சாறு
அதுவே திருமலை )

கூட்டத் தேனுக்கும்
படித் தேனுக்கும் உள்ள வாசி போரும் என்று
நடுவில் திரு வீதிப்பிள்ளை அருளிச் செய்வர்

இப்படி ததீய விஷயத்தை பண்ணிக் கொண்டு போருகை சீர்மை யாவது

—–

ஆகையால் இப்படி
1-குறிக்கோளும் –
2-சீர்மையும் –
உண்டாய்ப் போருகை வைஷ்ணத்வம் ஆவது

———————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகாசார்யர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ யாமுனாசார்யர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ யதிராஜ விம்சதி -17-18-19-20– ஸ்லோஹங்கள் –ஸ்ரீ ஸூத்த சத்வம் தொட்டாசார்யா ஸ்வாமிகள் வியாக்யானம்–

November 17, 2015

அவதாரிகை –

நீர் இப்படி நம்மை நிர்பந்திக்கிறது என் –
அநிஷ்ட நிவ்ருத்திக்கும் இஷ்ட பிராப்திக்கும் ஈஸ்வரன் அன்றோ கடவன் -அது நமக்கு பரமோ என்ன
அவனும் தேவரீருக்கு சொல்லிற்று செய்யும்படி வச்யனாய் யன்றோ இருப்பது –
ஆகையாலே தேவரீரே சக்தர் என்கிறார் —
ஸ்ருத் யக்ரவேத்ய நிஜ திவ்ய குண ஸ்வரூப-இத்யாதியாலே

ஸ்ருத் யக்ரவேத்ய நிஜ திவ்ய குண ஸ்வரூப
ப்ரத்யஷ தாமு பக தஸ்த்விஹா ரங்க ராஜ
வச்யஸ் சதா பவதி தே யதிராஜ தஸ்மாத்
சக்தஸ் ஸ்வகீய ஜன பாப விமோசநே த்வம்–17-

ஸ்ருத் யக்ர –
என்றும் ஒக்க சர்வராலும் குரு முகேன கேட்க்கப் படா நின்ற ஸ்ருதிகள்
ஸ்ருதிகள் யாவன –
ருக் யஜூஸ் சாம அதர்வண ரூபேண நாலு வகைப் பட்டு இருந்துள்ள வேதங்கள்
அவைகளுடைய அக்ரங்கள் உண்டு -வேதாந்தங்கள் –
அவை யாவன -புருஷ ஸூக்த-நாராயண அனுவாகாதிகள் -அவற்றாலே
சஹச்ர சீர்ஷா புருஷ சஹஸ்ராஷஸ் சஹச்ர பாத் -என்றும்
புருஷ ஏவேதம் சர்வம் -என்றும் –
அணோர் அணீயான் மஹதோ மஹீயான் ஆத்மா குஹாயாம் நிஹி தோஸ்ய ஜந்தோ -என்றும்
தம்ஸ பரமோ தாத்தா சங்க சக்ர கதா தரா-என்றும்
ஏஷ சர்வ பூத அந்தராத்மா அபஹத பாபமா திவ்யோ தேவ ஏகோ நாராயணா -என்றும்
சத்ய காமஸ் சத்ய சங்கல்ப -என்றும்
பாதோஸ்ய விஸ்வா பூதானி த்ரிபாதஸ் யாம்ருதம் திவி -என்றும்

தோள்கள் ஆயிரத்தாய் முடிகள் ஆயிரத்தாய் துணை மலர்க் கண்கள் ஆயிரத்தாய் தாள்கள் ஆயிரத்தாய்
பேர்கள் ஆயிரத்தாய் -8-1-10- என்றும்
ஆமவை யாயவை நின்றவர் அவரே –1-1-4-என்றும்
பரந்த தண் பரவையுள் நீர் தொறும் பரந்துளன் -1-1-10- என்றும்
அடியேன் உள்ளான் உடல் உள்ளான் அண்டத்தகத்தான் புறத்துள்ளான் – 8-8-2-
கரந்த சில் இடம் தொறும் இடம் திகழ் பொருள் தொறும் கரந்து எங்கும் பரந்துளன் -1-1-10- என்றும்
சூழ்ந்து அதனில் பெரிய சுடர் ஞான இன்பமேயோ -10-10-10- என்றும்
மூ வுலகும் வயிற்றில் கொண்டு நின்று ஒழிந்தார்-8-7-9- -என்றும்
அவை முழுதுண்ட பரபரன் -1-1-8–என்றும்
குனி சார்ங்கன் ஒண் சங்கதை வாள் ஆழியான் ஒருவன் -8-8-1- என்றும்
அயர்வறும் அமரர்கள் அதிபதி -1-1-1- என்றும்
அமரர்கள் ஆதிக் கொழுந்தை -1-7-4- என்றும்
படர் பொருள் முழுவதுமாய் யவை யவை தொறும் உடன் மிசை உயிர் எனக் கரந்து எங்கும் பரந்துளன் -1-1-7- என்றும்
பரிவதில் ஈசனை -1-6-1- என்றும்
பரஞ்சோதி -3-1-3- என்றும்
எண்ணில் தொல் புகழ் வானவர் ஈசன் -3-3-3- என்றும்
வண் புகழ் நாரணன் -1-2-10- என்றும்
வாழ் புகழ் நாரணன் –10-9-1- என்றும்
அடங்கு எழில் சம்பத்து அடங்கக் கண்டு ஈசன் அடங்கு எழில் அஃது -1-2-7-இத்யேவ மாதிகளாலே —

வேத்ய –
அறியத் தக்கவைகளாய்-வேதைஸ் ச சர்வைர் அஹமேவ வேதே -ஸ்ரீ கீதை -15-15- என்னக் கடவது இறே
இத்தால் வேதங்கள் நிர்விசேஷ சின் மாத்ர ப்ரஹ்ம பரங்கள் என்கிற பஷம் நிரஸ்தம்

நிஜ –
தொல் புகழ் -3-3-3- என்றும்
ஸ்வாபாவகீ ஜ்ஞான பல க்ரியா ச –என்றும்
ஸ்வா பாவிக அநவதிக அதிசய அசங்க்யேய கல்யாண குண கனௌக மஹார்ணவ-என்கிறபடியே ஸ்வ கீயங்களாய்-
இத்தால் உபாசன தசையில் குணங்கள் ப்ரஹ்ம நிஷ்டங்களாய்த் தோற்றுகிறது இத்தனை போக்கி
ஸ்வத ப்ரஹ்மத்தில் குணங்கள் இல்லை என்கிற பஷம் வ்யுதஸ்தம்

திவ்ய –
ஹேய ப்ரத்ய நீகங்களான-என்னுதல் –
ஸ்வரூப விக்ரஹ பிரகாசகங்கள் என்னுதல்

குண ஸ்வரூப –
இவ்விரண்டும் மற்றை இரண்டுக்கும் உப லஷணமாய்-ஸ்வரூப ரூப குண விபூதிகளை உடையனாய் என்கிறது

குணங்களாவன –
ஜ்ஞானானந்த அமலத்வாதிகளும் -ஜ்ஞான சக்த்யாதிகளும் வாத்சல்ய சௌசீல்யாதிகளும் –
சௌந்தர்ய சௌகுமார் யாதிகளும் –

ஸ்வரூபம் ஆவது
குண விக்ரஹ விபூதிகளுக்கு அபாஸ்ரயமாய்-
பரம் ஜ்யோதி ரூப சம்பத்ய -என்றும் -பரஞ்சோதி நீ பரமாய் -3-1-3- என்றும் சொல்லுகிறபடியே
நிரவதிக தேஜோ ரூபமான திவ்யாத்ம ஸ்வரூபம்

விக்ரஹங்கள் ஆவன –
அஜாய மா நோ பஹூதா விஜாயதே -என்றும்
ச உஸ்ரேயான் பவதி ஜாயமான -என்றும்
இச்சாக்ருஹீதாபி மதோரு தேக -ஸ்ரீ விஷ்ணு புரா-6-7-84- என்றும்
பிறப்பிலியாய் -திரு நெடும் -1- என்றும்
சன்மம் பல பல செய்து -3-10-1- என்றும்
சூழல் பல பல வல்லான் -1-9-2- என்றும் சொல்லுகிறபடியே
கர்மத்தால் அன்றியே தம் திரு உள்ளத்தாலே பரிக்ருஹீதங்களான அப்ராக்ருத திவ்ய சம்ஸ்தானங்கள்

விபூதிகள் ஆவன –
போக லீலா அசாதாரணங்களான நித்ய விபூதியும் லீலா விபூதியும்

ஸ்ருத் யக்ரவேத்ய நிஜ திவ்ய குண ஸ்வரூப–என்கையாலே பரத்வம் சொல்லப் பட்டது –
வேதாந்த வேத்யன் இறே பரனாகிறான்

ப்ரத்யஷ தாமுபகத –
என்றும் ஒக்க ஓலைப் புறத்தில் கேட்டுப் போகை யன்றிக்கே கண்ணாலே கண்டு ஆஸ்ரயிக்கலாம் படி
கண்ணுக்கு விஷய பூதனான
உபகத -என்கையாலே
தூரத்தில் சமுதாய தர்சனம் யாகாமல் யாவதவயவ சோபையையும்-தனித் தனியே கண்டு அனுபவிக்கும் படி
சந்நிஹிதனாய் கண்ணுக்கு விஷயமான படியைச் சொல்லுகிறது
இது தான் பரம சாமா பன்னரான நித்ய ஸூ ரிகளுக்கோ என்னில்

இஹ –
இருள் தரும் மா ஞாலமான இத் தேசத்திலே -கிடீர் அவன் சகல மனுஜ நயன விஷய தாங்கதனான படி -என்கிறார்
இத்தால் சௌலப்யமும் வாத்சல்யமும் சௌசீல்யமும் சொல்லப் படுகிறது
இன்னார்க்கு என்று விசேஷியாமை யாலே இத் தத்வம் சர்வ சமாஸ்ரயணீயம் என்கிறது –

பிரத்யஷதாம் உபக தஸ்து
வேதாந்த வேத்யனாய் -சர்வ ஸ்மாத் பரனானவன் காணும் இத் தத்வத்துக்கு சௌலப்யமே நிரூபகம் என்னும் படி
அனைவரும் கண்டு ஆஸ்ரயிக்கலாம் படி ப்ரத்யஷ விஷயமானது என்கிறார்

ரங்க ராஜ –
பரம பதத்தில் நின்றும் சம்சாரி சேதனர்க்கு காட்சி கொடுக்கைக்காக -அவர்கள் கண்ணாலே கண்டு ஆஸ்ரயிக்கலாம் படி
ஸூ லபனாய் திரு வரங்கத்திலே சாய்ந்து அருளுகையாலே வந்த புகரை உடையவன் என்னுதல் –
ரங்க ராஜ –
அவன் ஒன்றை அபிமாநிப்பது தனக்கு நிரூபகம் என்னலாம் படி காணும் என்கிறார் –
ரங்க ராஜ –
பெரிய பெருமாள் ஆனவர்

வச்யஸ்-
சஞ்ஜோஹம் த்வத் பிரதீ ஷோஸ்மி-என்கிறபடி சொல்லிற்றுச் செய்கையாலே -க்ருத சங்கல்பனாய் –
எதிர்த்தலையில் நியமனத்தை எதிர்பார்த்துக் கொண்டு இருக்கும் படி காணும் வச்யராகிறார்

சதா –
இது தான் ஒரு கால விசேஷத்திலே அன்றிக்கே சர்வ காலமும் என்கிறார்

பவதி –
இப்படி வச்யராய் இருக்கை அவருக்கு சத்தை பெற்றால் போலே காணும் இருப்பது என்கிறார் –

வச்யஸ் சதா பவதி –
இவ்வச்யதைக்கு ஷண கால விச்சேதம் வரிலும் அவனுக்கு சா ஹானி இத்யாதியில் சொல்லுகிறபடியே சத்தை
குறையும்படி காணும் இருப்பது என்கிறார் -பக்தா நாம் -ஜிதந்தே -1- என்று இ றே அவன் இருப்பது
இது தான் ஆருக்கு என்னில்

தே -யதிராஜ தஸ்மாத் –
மற்றை யாரேனுக்கும் யானால் அடியேனுக்கு பிரயோஜனம் என்
உலகோர்கள் எல்லாம் அண்ணல் இராமானுசன் வந்து தோன்றிய அப்பொழுதே
நண்ணறு ஞானம் தலைக் கொண்டு நாரணற்கு ஆயினர் –41-என்கிறபடியே
ஸ்வ அவதார மாத்ரத்தாலே சகல சேதனரையும் பவதீயர் ஆக்க வல்ல சக்தியை உடைய தேவரீர்க்கு என்னுதல்
தர்ச நாதே வ சாதவ -இ றே -அ நாரத்தம் ஆர்த்ரம் -என்றது ததீய அவதாரத்துக்கும் ஒக்கும் இறே
ஜ்ஞாநீத்வாத் மைவ மே மதம் -ஸ்ரீ கீதை -7-18- என்கிறபடியே
எம்பெருமானாலே தமக்கு தாரகராக அபிமானிக்கப்பட்ட தேவரீர்க்கு என்னுதல்

ரங்க ராஜஸ்து தே வஸ்யோ பவதி –
முன்பு எல்லாம் பரத்வாதிகளை இட்டு நிரூபிக்கலாம் படி இருந்தவன் -இப்போது தேவரீர்க்கு வச்யனாகிறது
முன்பும் இவனுக்கு இதுவே ஸ்வரூபம் என்னும் படி காணும் என்கிறார்
அன்றிக்கே –
தே -என்று சதுர்தியாய் இவன் இப்படி வச்யனாகிறது ஸ்வார்த்தம் அன்றிக்கே
தேவரீர் முக விகாசமே பிரயோஜனமாக என்னுமாம் –

யதி ராஜ
அவனுடைய ராஜத்வம் போலேயோ தேவரீருடைய ராஜத்வம் –
அவனுடைய ராஜத்வம் ரங்க நிரூபிதம் –தேவரீருடைய ராஜத்வம் ஜிதேந்த்ரிய நிரூபிதம் -அன்றிக்கே
யதி ராஜ
இதுவன்றோ தேவரீர் இந்த்ரிய ஜயத்தால் பெற்ற ராஜத்வம் –

நிரபேஷம் முநிம் சாந்தம் நிர்வைரம் சம தர்சனம்
அநு வ்ரஜாம் யஹம் நித்யம் பூயயே தங்கரி ரேணுபி-என்கிறபடியே
இதர விஷயத்தில் ஸ்ப்ருஹை இல்லாதவனாய் -அத ஏவ பகவத் விஷய மனன சீலனாய் –
அத ஏவ சப்தாதி விஷய பிரவண ரஹிதனாய்-
நிரபேஷம் -சாந்தம் என்கிற இரண்டு விசேஷணங்களாலும்
அந்தர இந்த்ரிரிய பாஹ்ய இந்த்ரிய நிக்ரஹங்களைச் சொல்லுகிறது
அத ஏவ குரோத ரஹிதனாய் வா ஸூ தேவஸ் சர்வம் -ஸ்ரீ கீதை -7-19-என்கிறபடியே
ததீயத்வேன ப்ரஹ்மாதி ஸ்தம்ப பர்யந்தமான சமஸ்த வஸ்துக்களிலும் சம தர்சனம் உடையானாய் இருக்கும் அதிகாரியை –
அவனுடைய திருவடிகள் சம்பந்திகளான பராகங்களாலே தான் பவித்ரனாகக் கடவேன் என்று
சர்வ நியந்தாவான தான் என்றும் ஒக்க அனுசரித்து நடவா நின்றேன் என்று அவன் தானே சொல்லும் படி
அவனை வசீகரிக்கும் படியாய் இருக்கை

தஸ்மாத்
சர்வ ஸ்மாத் பரனான பெரிய பெருமாள் உபய விபூதி ஐஸ்வர்யத்தையும் தேவரீருக்குக் கொடுத்து
பரவா நஸ்மி -ஆரண்ய -15-7- என்கிறபடியே தேவரீருக்கு பர தந்த்ரராய் இருக்கும் படியாலே

சக்த –
சமர்த்தராகிறார்
தேவரீருக்கு சக்தி இல்லாமையாலே தவிர வேண்டுவது இல்லை என்று கருத்து -எதிலே என்னில்

ஸ்வகீய ஜன பாப விமோசநே –
தேவரீர் திரு உள்ளத்தாலே மதீயன் என்று அபிமானிக்கப் பட்ட ஜனத்தினுடைய ப்ராப்தி பிரதிபந்தக
சகல பாப விமோசனத்தில் -என்கிறார்
தேவரீர் மதீயன் என்று அபிமானிக்க -தேவரீருக்கு பவ்யனான ஈஸ்வரன் இவன் இடத்தில் மிகவும்
அனுக்ரஹத்தை பண்ணுமாகையாலே-
தந் நிக்ரஹ ரூபமான பாபம் தன்னடையே போம் –
தேவரீர் அபிமானியா விடில் செய்வது என் என்று கருத்து –
குருணா யோ அபி மன்யேத குரும் வா யோபிஸ் மந்யதே தாவு பௌ பரமாம் சித்திம்
நியமாதுப கச்சத -என்னக் கடவது இ றே

த்வம்-
க்ருபயா நிஸ் ச்ப்ருஹ-என்கிறபடியே க்யாதி லாப பூஜா நிரபேஷராய்-க்ருபா பிரதானரான தேவரீர் கிருபை
இல்லா விடில் செய்வது என்-என்று கருத்து

த்வம் பாப விமோசனே சக்த –
கடாதி பதார்த்தங்களுக்கு கம்பு க்ரீவாதி மத பதார்த்தங்களிலே சக்தி யாகிறாப் போலே தேவரீருக்கு
பாப விமோசனத்திலே இறே சக்தி
குருரிதி ச பதம் பாதி நான் யத்ர-என்னக் கடவது இறே –
இத்தால் இவருக்கு பாப விமோசகத்வம் ஸ்வரூபம் என்கிறது

தஸ்மாச் சக்தஸ் ஸ்வகீய ஜன பாப விமோசநே த்வம் –
சக்தி இல்லாமையை இட்டுத் தவிர ஒண்ணாது –
ஸ்வரூபம் இல்லாமையை இட்டுத் தவிர ஒண்ணாது –
கிருபை இல்லாமையை இட்டுத் தவிர ஒண்ணாது –
ஆகையாலே அடியேனுடைய சப்தாதி விஷய அனுபவ ருசியைப் போக்கி –
தேவரீர் சம்பந்தி சம்பந்திகளுடைய சரமாவதி தாஸ்ய ருசியை உண்டாக்கித் தர வேணும் -என்கிறார் –

———————————————————————————-

அவதாரிகை –

சாஸ்திரங்கள் எல்லாம் ஒரு தலையாக சாபராத சேதனரக்கு-பகவத் ஷமை ஒழிய மற்றொரு புகலிடம் இல்லை
என்று சொல்லா நிற்க நீர் நம்மை அபராதங்களைப் போக்கி தர வேணும் என்றும்
தேவரீர்க்கு அதில் சக்தி உண்டு என்றும் நிபந்தியா நின்றீர் இது சங்கதமோ என்ன –
அந்த ஷமை தானும் தேவரீருடைய ப்ரார்த்தநா சித்தமாய் தேவரீர் சம்பந்திகளுக்கு ரஷகமாய்
இருக்கையாலே சங்கதம் என்கிறார்–
கால த்ரேய அபி கரண த்ரய நிர்மிதாதி –இத்யாதியாலே

கால த்ரேய அபி கரண த்ரய நிர்மிதாதி
பாப க்ரியஸ்ய சரணம் பகவத் ஷமைவா
சா ச த்வயைவ கமலாரமணே அர்த்தி தாயத்
ஷேமஸ் ஸ ஏவ ஹி யதீந்திர பவச்ச்ரிதா நாம் –18-

கால த்ரேய அபி –
பூத பவிஷ்யத் வர்த்தமான ரூபேண-மூன்று வகைப் பட்டு இருந்துள்ள கால த்ரயத்திலும்
கரண த்ரய –
மநோ வாக் காய ரூபேண மூன்று வகைப் பட்டு இருந்துள்ள கரண த்ரயத்தாலே
நிர்மிதாதி பாப க்ரியஸ்ய –
செய்யப்பட மஹா பாதக உபபாதங்களை உடையவனுக்கு
கால த்ரேய அபி –
ஒரு காலம் இல்லா ஒரு காலத்திலே யாகிலும் -சாதன அனுஷ்டானம் இன்றிக்கே எல்லாக் காலத்திலும்
பாபங்களையே யாய்த்து இவன் செய்வது
கரண த்ரய –
அது தான் ஒவ்வொரு கரணத்தால் அன்றிக்கே கரண த்ரயத்தாலும் யாய்த்து பாபங்களைச் செய்வது

நிர்மிதாதி
சங்கல்பித்து விடுகை யன்றிக்கே அனுஷ்டான பர்யந்தமாகச் செய்வது -அன்றிக்கே
ஆரம்பித்து விடுகை யன்றிக்கே முட்ட முடிய வாய்த்துச் செய்வது

அதி பாப க்ரியஸ்ய-
பிராயச் சித்த அனுபவ விநாச்யங்களான பாபங்களை செய்கை மாதரம் அன்றிக்கே —
அவற்றால் நசியாத பாபங்களையும் யாய்த்துச் செய்வது
பிராயச் சித்த அனுபவ விநாச்யம் இல்லாத பாபம் உண்டோ என்னில்
கோக் நே சைவ ஸூ ராபே ஸ ஸ்தேய பக்ந வ்ரதே ததா -நிஷ்க்ருதிர் விஹிதா சத்பி கருதக் நே நாஸ்தி நிஷ்க்ருதி -என்றும்
யத் ப்ரஹ்ம கல்ப நியுதா நு பவேப்ய நாச்யம் -என்றும் சொல்லுகையாலே உண்டு –
அதில் க்ருதக் நதையாவது –
பிராயச்சித்த நாச்யம் யன்றிக்கே அனுபவ ஏக நாச்யமாய் இருக்கும் –

இனி பிராயச் சித்த அனுபவ நாச்யம் அல்லாததாய் –
புண்ய பாபங்களுடைய அனுஷ்டானத்துக்கு காரணமாய் உபாசக பர்யந்த
அனுதாவனமாய் இருப்பதொரு பாபம் உண்டு -அப்பாபத்தையும் யாய்த்து இவன் செய்வது –

கரண த்ரய என்கையாலே
இவன் செய்த குற்றம் எல்லாம் புத்தி பூர்வகம் என்கிறது —
நிர்மித என்கிறது பூத காலத்துக்கு சேருமே யாகிலும் -வர்த்தமான பவிஷ்ய காலங்களுக்கும் உப லஷணமாகக் கடவது –
கருதான் க்ரியமாணான் கரிஷ்யமாணாம்ச-என்று இறே ஸ்ரீ பாஷ்ய காரரும் அருளிச் செய்தது –
அன்றிக்கே –
பூத கால அபராதங்கள் போலே வர்த்தமான பவிஷ்யத் பாபங்களும் இன்னபடி செய்யக் கடவோம் என்று சங்கல்ப்பித்து
வைத்தவையாய் அவைதான் பாவன பிரகர்ஷத்தாலே அனுஷ்டித்தவை போலே தோற்றுகையாலே-நிர்மித -என்கிறார்
அதுவும் அன்றிக்கே –
ந நிந்திதம் கர்ம ததஸ்தி லோகே சஹச்ர ஸோ யன்னமயா வ்யதாதி -ஸ்தோத்ர ரத்னம் -23-என்றும்
பூர்வம் யத் சமபூத்ததேவ ஹி புநர் —பவேத் -என்றும் சொல்லுகிறபடியே
வர்த்தமான பவிஷ்யத் பாபங்களும் பூத காலத்தில் பண்ணின பாபங்களுக்கு சஜாதீயங்கள் யாகையாலே –
நிர்மித -என்கிறார் ஆகவுமாம் –
அங்கன் அன்றிக்கே –
கால த்ரயமாவது -ப்ராதர் -மத்யந்தி ந சாய்ந்த ரூபமான காலமாய் –
அபி -சப்தம் அநுக்த சமுச்சாயகமாய்
காலத் த்ரேயேஅபி என்று பஞ்ச காலத்திலும் என்னவுமாம் –
ப்ராஹ்மே முஹூர்த்தே ஸோத்தாய சிந்தயேத் ஆத்மனோ ஹிதம் -என்றும் –
ப்ராதர்த்யூத பிரசங்கே ந மத்யாஹ்னே ஸ்திரீ பிரசங்கே தாராத் ரௌ சோர பிரசங்கே ந என்றும் –
யத்சாயம் ப்ராதர்மத் யந்தி நம் ச -என்றும்
இத்யேவ மாதிகளாலே பகவத் த்யான ஆராதன குண அனுபவாதிகளுக்கு உபயுக்ததயா சாஸ்த்ர விஹிதமான
ப்ராதர் மத்யந்தி ந சாய்ந்த ரூபமான கால த்ரயத்திலே -என்னுமாம் –

பரேத் யுபச்சிமே யாமே யாமின்யாஸ் சமுபஸ்தி தோ பிரபுத்ய சரணம் கதவா பரம் குரு பரம்பராம் -என்று தொடங்கி
தத் ப்ரத்யுஷ சிஸ் நாத்வா க்ருத்வா பௌர்வாஹ்ணி கீ க்ரியா யதீந்திர சரணத் வந்தவ ப்ரவணே நைவ சேதஸாம்
அத ரங்க நிதிம் சமயக் அபிகம்ய நிஜம் பரப்பும் ஸ்ரீ நிதானம் சனைச் தஸ்ய சோதயித்வா பதத்த்வயம் ஆராத்ய ஸ்ரீ நிதிம்
பஸ்சாத் அனுயாகம் விதாய ச ததஸ் சேதஸ் சமாதாய புருஷே புஷ்கரே ஷணே உத்தம் சித கரத் வந்தவம் உபவிஷ்ட முபஹ்வரே
ததஸ் ஸூ பாஸ்ரயே தஸ்மின் நிமக்னம் நிப்ருதம் மன யதீந்திர பிரவணம் கர்த்தும் யதமானம் நமாமி தம் -என்றும்
சாய்ந்த நம் தத க்ருத்வா சம்யகாராதனம் ஹரே -என்றும் இப்படி இறே இவர் விஷயமான தினசரியிலே
அப்பா பஞ்ச கால பராயணத்வத்தை அருளிச் செய்தது –
இத்தால் -அக்ருத்ய கரணம் மாதரம் அன்றிக்கே க்ருத்ய அகர்ண ரூப பாபமும் உண்டு என்கிறது –

அங்கனும் அன்றிக்கே –
தேஹாத்மா அபிமானியாய் இருக்கும் காலமும் -ஸ்வஸ்மிந ஸ்வா தந்த்ர்ய அபிமானியாய் இருக்கும் காலமும்
அந்ய சேஷமாய் இருக்கும் காலமும் என்று கால த்ரைவித்யம் சொல்லவுமாம்
அப்போது இம் மூன்று காலத்திலும்
தத்தத் அபிமான அனுகுணமாக சாத்திய சாதனங்களிலே ஸ்வயமே பிரவர்த்திக்கை நிஷ்க்ருஷ்ட ஸ்வரூப விரோதி யாகையாலும் –
தத்தத் அதிகார அணுகுண சாஸ்திர அதிக்கிரமம் வருகையாலும் பாபம் உண்டு என்று கொள்ள வேணுமாம்

அன்றிக்கே
தமக்கு பூர்வ காலத்திலும் சம காலத்திலும் தமக்கு உத்தர காலத்திலும் உள்ள சாபராத சேதனருக்கு என்றும் ஒக்க
பகவத் ஷமையே இஷ்ட அநிஷ்ட ப்ராப்தி பரிஹாரங்களுக்கு உபாயம் என்று அனுசந்திக்கிறார் ஆகவுமாம்

இப்படி இன்றிக்கே -கால த்ரயமாவது –
நாஸ்திகனாய்-சாஸ்திர வச்யன் அன்றிக்கே இருக்கும் காலமும்
ஆஸ்திகனாய் சாஸ்திர வச்யனாய் இருக்கும் காலமும் –
ஜ்ஞானாதிகனாய் ஸ்வரூப வச்யனாய் இருக்கும் காலமும் -என்று காலத்தை பேதித்து
இம்மூன்று வகைப்பட்டு இருந்துள்ள காலத்திலும் என்றும் சிலர் சொல்லுவார்கள் –

அவர்கள் பஷத்தில் நாஸ்திகனான தசையில் விதி நிஷேதங்களை அதிக்ரமித்து வர்த்திக்கையாலும் –
ஆஸ்திகனான தசையில் விதி பரதந்த்ரனாய் ஸ்வரூப விருத்தங்களைச் செய்கையாலும்
ஸ்வரூப வச்யனான தசையிலும் சாஸ்திர விசயத்தை இல்லாமையாலே விதி நிஷேதங்களை அதிக்ரமித்து வர்த்திக்கையாலும்
அபராதம் உண்டு என்பார்கள் -அது கூடாது –
ஸ்வரூப வச்யனான தசையில் சாஸ்திர வச்யதை இல்லாமையாலே விதி நிஷேத அதிக்கிரமம் பாபமாக மாட்டாது
அத ஏவ துஷ்க்ருதா சரணத்தால் அனுதாபம் பிறந்து ஸ்வரூப வச்யன் ஆகையாலே ஸ்வரூப விருத்தங்களைச் செய்து
அனுதபிக்க விரகு இல்லை –
சாஸ்திர வச்யனுக்கு சாமான்ய விசேஷ ந்யாயத்தாலே ஸ்வரூப விருத்தமான விதி அதிக்கிரமம் கூடும்
இவன் தனக்கு விதி நிஷேத அதிக்கிரமம் ஸ்வரூப விரோதியாய் ராக பிராப்தம் ஆகையாலே தவிர விரகு இல்லை

ஸ்வரூப வச்யனுக்கு சாஸ்திர வச்யதை இல்லை என்கிறதும் கூடாது -ஸ்வரூப வச்யனுக்கு பிரவ்ருத்தி நிவ்ருத்திகள் உண்டு இறே-
அவர்களுக்கு விஷயம் பகவத் இஷ்ட அநிஷ்டங்கள் என்று கொள்ளும் அளவில் அவற்றை நேர் கொடு நேரே அறியப் போகாமையாலே
சாஸ்திர முகமாகவே அறிய வேண்டும் -அப்போது சாஸ்திர வச்யதை தன்னடையே உண்டாமாகையாலே
நாஸ்திகத் வாதிகளை இட்டு கால த்ரைவித்யம் சொல்லுகை அசங்கதம்-
சாஸ்திர வச்யதை உண்டாகில் இறே விசேஷ சாஸ்திர வச்யதை உண்டாவது
ஸ்வரூப வச்யனுக்கும் விதி பாரவச்யம் உண்டு -ஆகை இறே த்யஜ -வ்ரஜ -என்று த்யாக சவீ காரங்களை விதித்தது

அனுகூலங்களாக தோற்றுகையாலே ராக பிராப்தங்களாய் இருக்கும் -ஆகையாலே நாஸ்திகத் வாதிகளை இட்டு காலத்தைப் பிரிக்கும் போது
இரண்டு என்றே கொள்ள வேணும் -ஆகையாலே கால த்ரேயேபி என்றதுக்கு கீழ்ச் சொன்ன படியே பொருளாகக் கடவது –
பவிஷ்யத் காலம் சரணாகத யுத்தர காலமாகையாலே அதில் புத்தி பூர்வகம் கொள்ளும் அளவில் சாஸ்திர விரோதம் வாராதி என்னில் -வாராது
பூர்வம் மானசமாக சங்கல்பிதமான வற்றுக்கே உத்தர காலத்தில் ப்ராமாதிக அனுஷ்டானம் கூடுகையாலே –
அன்றிக்கே –
ஜாதேபி -கௌடில்யே சதி சிஷ்யாப்ய நகையன் -தத்வ சாரம் -என்கிறபடியே புத்தி பூர்வகமாக உத்தராகத்திலே
பிரவ்ருத்திக்கும் படி மாத்ருச கடின சித்தரும் உண்டாகையாலே பவிஷ்ய காலத்திலும் புத்தி பூர்வாகம் உண்டு என்னுமாம் –
அது ஷமா விஷயம் அன்றிக்கே சிஷா விஷயமாய் யன்றோ சொல்லப் படுகிறது என்னில் –
அந்த சிஷை தானும் -லகுர் தண்ட பிரபன்னச்ய ராஜ புத்ர அபராதவத் -என்கிறபடியே –
கல்ப கோடி சதே நாபி ந ஷமாமி வ ஸூ ந்தரே -என்னும்படியான பாபத்தை இஸ் சரீரத்தோடு அல்ப காலத்தில் அனுபவிக்கும் படி
பண்ணுகையாலே ஷமா கார்யமாகக் கடவது -ஆக கால த்ரயத்தாலும் சாபராதியான இச் சேதனனுக்கு

சரணம்
அநிஷ்ட நிவ்ருத்திக்கும் -இஷ்ட பிராப்திக்கும் தப்பாத உபாயம் –

பகவத் ஷமைவ-
ஆஸ்ரித கார்ய கரத்வோபயோகிகளான ஜ்ஞான சக்த்யாதி கல்யாண குணங்களை யுடையனான சர்வேஸ்வரன் உடைய
பொறுத்தோம் என்கிற ஷமை தானே –
ஏவ காரத்தாலே மற்று ஓன்று இல்லை என்கிறது –சரணாகதி தானும் ஷமாவ்யஞ்சகம் இறே –
இத்தை இறே ஷாம் யஸ்யஹோ ததபி ஸந்தி விராம மாத்ராத் -ஸ்ரீ வைகுண்ட ஸ்தவம் -61-என்று ஆழ்வான் அருளிச் செய்தது

சா ச –
எப்பேர்பட்ட அபராதங்களுக்கும் புகலிடமாக பிரசித்தமான அந்த ஷமை தானும்

த்வயைவ
சம்சாரிகள் துர்கதி கண்டு பொறுக்க மாட்டாதே -இவர்கள் துர்கதியில் நின்றும் நிவ்ருத்தராய் ஸ்வரூப அனுரூபமான
தாச்யத்திலே அன்வயித்து வாழும்படி எங்கனே என்று கரை புரண்ட கிருபையை உடைய தேவரீராலேயே
ஏவ காரத்தாலே
இன்று ஒருவன் அறிவுடையவனாய் பிரார்த்திக்க வேண்டாத படி ஸ்வ ஆஸ்ரித சகல சேதன விஷயமாக
தேவரீராலே பிரார்த்திக்கப் பட்டது என்கிறது

இத்தால் ஸ்ரீ எம்பெருமானார் தாமே ஸ்வ சம்பந்தி சர்வ சேதன விஷயமாக பிரபத்தி செய்து அருளுகையாலே
தனித்து ஒருவர் பிரபத்தி பண்ண வேண்டா என்கிறது –
இவ்வர்த்தம் ஸ்ரீ எம்பெருமானார் தம் சரம தசையிலே ஸ்ரீ பெரிய பெருமாள் திரு முன்பே சென்று சேவித்து நிற்க அவ்வளவிலே
ஸ்ரீ பெரிய பெருமாளும் அருளப் பாடிட்டு ஓன்று சொல்வான் போலே இருந்தாயீ-என்ன
நாயந்தே அடியேன் சம்பந்தி சம்பந்திகளும் தேவரீர் சாமிக்கு விஷயராய் உஜ்ஜீவிக்கும் படி கிருபை செய்து அருள வேணும் என்ன
ஸ்ரீ பெருமாளும் அப்படியே யாகக் கடவது என்று அனுக்ரஹித்தார் என்று பிரசித்தம் இறே
நாம் பிரார்த்தமை யுண்டு -அவன் ஸ்வா தந்த்ர்யத்தால் செய்யா விடில் செய்வது என் என்ன –

கமலா ரமேண-
தேவரீர் சொல்லிற்றை மறுக்கும் விஷயத்திலேயோ தேவரீர் பிரார்த்தித்து
அவன் தேவரீர் பிரார்த்த படி செய்யா விடில் ஸ்ரீ பெரிய பிராட்டியார் அவனுக்கு முகம் கொடுப்பாளோ என்னுதல்
தேவரீர் பிரார்த்தனையை செய்விக்கும் சாஷி உண்டு என்னுதல் -கமலத்தில் திரு வவதரிக்கையாலே கமலை என்று
திரு நாமம் உடைய ஸ்ரீ பெரிய பிராட்டியாருக்கு வல்லபனான ஸ்ரீ எம்பெருமான் இடத்திலே என்னுதல்
கஸ்ஸ மஸ்ஸ கமௌ கமௌ லாதீதி கமலா என்று வ்யுத்பத்தியாய் அத்தாலே ஸூக பிரதனான ஸ்ரீ ஈஸ்வரனையும்
ஜ்ஞான பிரதனனான சேதனனையும் உபதேசத்தாலும் சௌந்தர்யாதி களாலும் -ஸ்வ வசமாக்கிக் கொள்ளும்
ஸ்ரீ பெரிய பிராட்டியாருக்கு வல்லபனான ஸ்ரீ எம்பெருமான் இடத்திலே என்னுதல் –

அர்த்திதா
மநோ வாக் காயை -என்கிற சூர்ணிகையாலே பிரார்த்திக்கப் பட்டது

இதியத் –
என்கிறது யாதொன்று உண்டு

ச ஏவ
லிங்க வ்யத்யயம்-விதேய பிரதான்யத்தாலே ஸ்வ சம்பந்தி சர்வ சேதன விஷயமாக தேவரீர் –
மநோ வாக் காயை -என்று தொடங்கி-
க்ருதான் க்ரியமாணான் கரிஷ்ய மாணாம்ச சர்வா ந சேஷாத ஷமஸ்வ -என்று
இருவருமான சேர்த்தியிலே பிரார்த்தித்த பிரார்த்தனை தானே

ஷேம
ரஷை-ரஷையாவது -ஸ்வ சம்பந்திகளுக்கு சர்வ அநிஷ்டங்களையும் போக்கி ரஷகமாம் போலே தேவரீருடைய பிரார்த்தனையும்
தேவரீர் சம்பந்திகளுக்கு சர்வ அநிஷ்டங்களையும் போக்கி தானே ரஷகம் ஆகிறது –

பவச்ச்ரிதா நாம் –
ஸ்வ அனுவ்ருத்தி நிரபேஷராய் கிருபா மாத்திர பிரசன்னாசார்யாரான தேவரீரை ஆஸ்ரயித்தவர்களுக்கு -என்னுதல்
தேவரீர் சம்பந்தி பரம்பரையும் உஜ்ஜீவிக்கும் படி பகவத் விஷயீ காரம் பெற்ற தேவரீரை ஆஸ்ரயித்தவர்களுக்கு என்னுதல்
இத்தால் ஸ்ரீ எம்பெருமானார் சம்பந்தம் உண்டாகவே பகவத் ஷமை இவன் பிரார்த்திக்க வேண்டாத படி தன்னடையே யுண்டாம் என்கிறது –
இத்தால் ஈஸ்வர சம்பந்திகளுக்கு ஸ்வ அபராதங்களை ஈஸ்வரன் ஷமிப்பனோ ஷமியானோ என்று சம்சயிக்கவும் கூடும்
அஸ் சம்சயமும் இல்லை எம்பெருமானார் சம்பந்திகளுக்கு என்கிறது –
ஏவ காரத்தாலே இதா நீந்தனை பிரார்த்தனை ரஷகம் என்கிறது

ஹி
இவ்வர்த்தம் அடியேன் விண்ணப்பம் செய்ய வேணுமோ
அர்வாஞ்ச இத்யாதியால் பிரசித்தம் அன்றோ என்கிறார்
இத்தால் ஆசார்ய அபிமானமே உத்தாரகம் என்கிறது
இப்படி இவர் விண்ணப்பம் செய்த வாறே நம்முடைய யத்னம் சபலமாய்த்து என்று திரு உள்ளம் உகந்தபடி இருக்கக் கண்டு
ஸ்ரீ யதீந்திர
என்கிறார்
பவாச்ச்ரிதா நாம்
ஸ்வ யத்னமே ஸ்வ ஆஸ்ரிதர் ரஷகமாம் படி இருக்கிற தேவரீர் சம்பந்திகளுக்கு என்னவுமாம் –

————————————————————————————

அவதாரிகை –

கீழ் அல்பாபி தொடங்கி இவ்வளவும் வர தம்முடைய தோஷ பூயஸ்வத்தையும்-
ஆகிஞ்சன்ய அநந்ய கதித்வங்களையும்
பாப நிவ்ருத்தி பூர்வக பிராப்தி லாபத்தில் அபேஷையையும்-
பாபத்தைப் போக்கி அபேஷிதம் செய்கைக்கு அத்தலையில் சக்தி விசேஷத்தையும்
நிரபேஷ உபகாரகத்வத்தையும் விண்ணப்பம் செய்தவாறே திரு உள்ளம் உகந்து உமக்கு வேண்டுவது என் என்ன

நித்யம் யதீந்திர -என்கிற ஸ்லோஹத்தில் பிரார்த்தித்தபடியே நிரதிசய கைங்கர்யத்தைத் தர வேணும் -என்ன
அது முன்பே ஸ்ரீ திருமலை ஆழ்வார் உமக்கு தந்து அருளினாரே என்ன –
ஆகிலும் அத்தை தேவரீர் அநு தினமும் அபிவிருத்தமாம் படி செய்து அருளி
அதுக்கு விரோதியான யாவத் விஷய ப்ராவண்யமும் போக்கி யருள வேணும் என்கிறார் –

தாஸ்யத்தை அபிவிருத்தம் ஆக்குகையாவது -ததீய பர்யந்தம் ஆக்குகை
இத்தை இறே -உன் தொண்டர்கட்கே அன்புற்று இருக்கும் படி என்னை யாக்கி
அங்கு ஆட்படுத்தே -107-என்று அமுதனார் பிரார்த்தித்தது
ஆகில் -நித்யம் என்கிற ஸ்லோஹம் போம் வழி என் என்னில் –
வாசா -என்கிற ஸ்லோஹத்தில் தாம் பிரார்த்தித்த ததீய சேஷத்வம் தமக்கு அப்போதாக சித்தியாமையாலே
அதுக்கு மூலமான தச் சேஷத்வமும் போனதாகக் கொண்டு அத்தை பிரார்த்தித்தார் இத்தனை போக்கி
அதில் பர்யாப்தராய் அன்று –
இப்படிக் கொள்ளாத போது-தத் தாஸ தைக ரசதா அவிரதாம மாஸ்து-என்றதோடு விரோதிக்கும் இறே
ஆனால் இது புநர் உக்தமன்றோ என்னில்
ததீய சேஷத்வம் தச் சேஷத்வ வருத்தி ரூபம் என்கையாலும்
இது தமக்கு கேவலராக பிராப்தம் அன்றிக்கே சம்ப்ரதாய பிராப்தம் என்கையாலும்
புநர் உக்தம் அன்று ப்ராப்யத் வித்வமும் இல்லையாம் –

ஸ்ரீ மன் யதீந்திர பவ தீய-(தவ திவ்ய)- பதாப்ஜ ஸேவாம்
ஸ்ரீ சைல நாத கருணா பரிணா மதத்தாம்
தாமன்வஹம் மம விவரதய நாத தஸ்யா
காமம் விருத்த மகிலஞ்ச நிவர்த்தய த்வம் –19-

ஸ்ரீ மன்
ஸ்வ சம்பந்த மாத்ரத்தாலே சர்வ அபராதங்களையும் பொறுத்து சர்வ சேதனரையும் சர்வேஸ்வரன் –
செய் தலைச் சங்கம் -75- என்கிற படியே அனுவர்த்திக்கும் படி
பகவத் விஷயீ காரம் பெருகையாலே வந்த ஸ்ரீ யை உடையவரே என்னுதல்

ஸ்ரீ ராமானுஜாய நம இதய சக்ருத் கருணீ தேயோ மா நமத் சர மதஸ்மர தூஷீ தோபி பிரேமாதுர
ப்ரியதமாம பஹாய பத்மாம் பூமா புஜங்க சய நஸ்த ம நு பிராதி -என்கிறபடியே
தம் திரு நாமத்தைச் சொன்ன மாத்ரமே கொண்டு
ஸ்ரீ யபதியானவன் அவள் தன்னையும் விட்டு எத்தனையேனும் தண்ணியரையும்
அனுவர்த்திக்கும் படி பகவத் விஷயீ காரத்துக்கு விஷயமான ஸ்ரீ மானே என்னுதல் –

அன்றிக்கே –
ஷேமஸ் ச ஏவ ஹி யதீந்திர பவச்ச்ரிதா நாம் -என்று இவர் விண்ணப்பம் செய்தவாறே –
இப்படி ஸ்வ பிரவ்ருத்தி சாமான்யத்தை விட்டு பர பிரவ்ருத்தி யேதங்கம் என்று இருப்பான் ஒரு அதிகாரி உண்டாவதே
என்று தம்மிடத்திலே ப்ரேமம் கரை புரண்டு இருக்கும் படியைக் கண்டு ஸ்ரீ மன் என்கிறார்
ஆசார்யனுக்கு சிஷ்ய விஷயத்தில் ப்ரேமம் இறே பரமமான சம்பத்து –
சிஷ்யனைக் கண்டால் அபிமத விஷயத்தைக் கண்டால் போலேயும் -என்று இறே பிள்ளை லோகாசார்யர்
ஸ்ரீ வசன பூஷணத்தில் அருளிச் செய்தது

யதீந்திர
தேவரீர் ஜிதேந்த்ரியரில் தலைவராய் இருந்தமையால் யன்றோ இவ் விஷயீ காரம் பெற்றது
ஜிதேந்த்ரியரில் தலைமை யாவது –
தமக்கு உண்டான இந்த்ரிய ஜெயம் ஸ்வ சம்பந்தி பரம்பரைக்கும் போரும்படி இருக்கை
இவ்வர்த்தம் –
ஸ்ரீ ராமானுஜாங்க்ரி சரணோஸ்மி -ஸ்ரீ வராத ஸ்தவம் -102–
பிதா மஹம் நாத முனி விலோக்ய -ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னம் -65- இத்யாதிகளிலே ஸூஸ்பஷ்டம்
இவர் இப்படி சம்போதித்த வாறே உமக்கு செய்ய வேண்டுவது என் என்ன

பவ தீய பதாப்ஜ ஸேவாம்
தேவரீர் சம்பந்திகளான திருவடித் தாமரைகளுடைய நித்ய கைங்கர்யத்தை பிரசாதித்து அருள வேணும் என்கிறார்
பவதீய
புண்யம் போஜ விகாசாய -என்கிறபடியே சர்வ பாப மூலமான அஹங்காரத்தைப் போக்கி –
ஸ்ரீ கௌஸ்துப ஸ்தாநீயரான ஆத்ம வஸ்துக்களை பவ தீயராக்கி அவன் திரு முக மண்டலத்தை விகசிப்பிக்கையே
பிரயோஜனமாக அவதரித்த தேவரீர் சம்பந்திகள் என்னுதல்
பரம பிராப்யரான தேவரீர் சம்பந்திகளான -என்னுதல்

பிராப்யத்துக்கு பரமத்வமாவது ஸ்வ அபேஷ அதிசயித ப்ராப்யத்வம் அன்றிக்கே இருக்கை –
பகவத் பிராப்யத்வம் அதிசயிதம் அன்றோ என்னில் அதுவும் இதிலே அந்தர்கதம் இறே

தவ திவ்ய
என்ற பாடமான போது தவ என்றதுக்கு முன்பு சொன்னதே அர்த்தமாய் திவ்ய என்கிற பதத்துக்கு ஸ்வ ஆஸ்ரிதரை
நழுவ விடாமையாலே வந்த புகரை உடையவைகள் என்ற அர்த்தமாகக் கடவது

பதாப்ஜ
சௌகந்தியாதிகளாலே தாமரை போன்ற திருவடிகளுடைய

ஸேவாம்
கைங்கர்யத்தை

பவதீய பதாப்ஜ -என்கிற போது
பிராப்தங்களாயும் போக்யங்களாயும் இருக்கும் திருவடிகள் என்கிறது

ஆக பிராப்தங்களுமாய் போக்யங்களுமாய் இருக்கிற தேவரீர் திருவடித் தாமரைகள் உடைய
கைங்கர்யத்தை பிரசாதித்து அருள வேணும் என்கிறார்

ஸ்ரீ சைல நாத கருணா பரிணா மதத்தாம்
ஆகில் இது முன்பே ஸ்ரீ திருமலை யாழ்வார் என்கிற திரு நாமம் உடைய ஸ்ரீ திருவாய் மொழிப் பிள்ளை தம் பரம
கிருபையாலே பிரசாதிக்கப் பட்டதன்றோ -என்ன
கருணா பரிணாம -என்கையாலே
அர்த்தித்த்வ நிரபேஷமாக தம் கிருபையாலே பிரசாதித்து அருளினார் என்னும் இடமும்
ஸ்ரீ சைல நாத -என்கையாலே
தான் தோன்றி யன்றிக்கே ஸ்வ ஆசார்யரால் தரப் பெற்றது என்னுமதுவும் தோற்றுகிறது

தாம்
மம மத் பக்த பக்தேஷூ ப்ரீதிரப்யதி காபவேத் -என்கிறபடியே
பகவத் கைங்கர்யம் சரமாவதியாக பிரசித்தமான என்னுதல் –
ஆச்சார்யா தீநோ பவ -என்றும்
குற்றம் இன்றி குணம் பெருக்கி குருக்களுக்கு அனுகூலராய் -பெரியாழ்வார் -4-4-2-இத்யாதி
பிரமான பிரசித்தமான என்னுதல் –
கைங்கர்யத்தின் போக்யதையைப் பார்த்தால் இயத்தா நவச்சின்னமாகையாலே தாம் என்கிறார் ஆதல்

ஆக -பிரமாண பிரசித்தமாய் பரம போக்யமாய் பகவத் கைப்ங்கர்ய ஸீமா பூமியாய்
சம்ப்ரதாய பரம்பரா ப்ராப்தமான தேவரீர் உடைய திருவடித் தாமரைகளில் -கைங்கர்யத்தை –

அன்வஹம் –
சர்வ காலத்திலும் -இங்கு அஹஸ் சை இட்டுக் காலத்தைச் சொல்கிறது -திருப் பள்ளி எழுச்சி முதலாக திருக் கண் வளர்த்தி
அளவாக உள்ள கைங்கர்யங்கள் எல்லாம் தமக்கு உத்தேச்யம் ஆகையாலே -அதில் ஒன்றும் குறையாமல்
அநு தினமும் நடக்க வேணும் என்னும் அபிப்ராயத்தாலே –
அன்வஹம் என்கையாலே தேச அவஸ்தைகளும் உப லஷிதங்கள்-

ஆக -சர்வ தேச சர்வ கால சர்வ அவஸ்தைகளிலும் என்கிறார் -கைங்கர்யம் தமக்கு நிரூபகம் ஆகையாலும்
போக்யமாகையாலும் இதர விஷய அனுபவத்துக்கு இடம் கொடாமைக்காகவும் -அன்வஹம் -என்கிறார் ஆகவுமாம் –

மம –
அக்கைங்கர்யமே நிரூபகமான அடியேனுக்கு -என்னுதல்-
அதில் ஆசை உடைய அடியேனுக்கு என்னுதல் -விஷய சபலனான அடியேனுக்கு என்னுதல்

விவரதய –
அதுவே தாரக போஷாக போகயங்கள் -வாழ் முதல் வளர் முதல் மகிழ் முதல் -ஆகும் படி
செய்து அருள வேணும் என்னுதல்
அபிவ்ருத்தமாம் படி செய்து அருள வேணும் என்னுதல் –
அபிவ்ருத்தம் ஆக்குகையாவது ததீய பர்யந்தம் ஆக்குகை-இந் நிர்பந்தத்துக்கு நிதானம் என் என்னில்

நாத
தேவரீர் ஸ்வாமி யன்றோ -அடியேன் கார்யம் செய்யாமைக்கு என்கிறார்
நாத
யாசித்து பிறர் கார்யம் செய்யுமவர்க்கு பிரார்த்தனை மிகை யன்றோ என்கிறார்
ஸ்ரீ கண்ணனும் ஸ்ரீ நம்பி மூத்த பிரானும் ஸ்ரீ மாலா காரரை யாசித்து பூ சூடிற்று -அவன் ஸ்வரூபம் நிறம் பெறுகைக்காக இறே-
அப்படியே செய்கிறோம் –நீர் விஷய பிராவண்யத்தைத் தவிரும் என்ன -அர்த்த ஜரதீய நியாயம் ஆகாமே
அத்தையும் தேவரீரே போக்கி அருள வேணும் என்கிறார்
தஸ்யா-காமம் விருத்த மகிலஞ்ச நிவர்த்தய த்வம் -இத்யாதியாலே

தஸ்யா-
அடியேனுக்கு ஸ்வரூப பிராப்தமாய் போக்யமாய் த்வதீய பர்யந்தமான த்வத் கைங்கர்யத்துக்கு
விருத்தம்
தனக்கு போக்யதயா அப்ராப்தங்கள் ஆகையாலே விருத்தமான
காமம்
சப்தாதி விஷய பிராவண்யத்தை
அகிலம் நிவர்த்தய
சிறிது அனுகூலம் என்று வையாதே நிஸ் சேஷமாக போக்கி அருள வேணும் என்கிறார் –
பிரதம பர்வத்தில் காமமும் சரம பர்வதத்துக்கு விரோதி இறே –
அ நக -என்றது இறே ஸ்ரீ சத்ருகன ஆழ்வானை
த்ருணீக்ருத விரிஞ்சாதி -என்னக் கடவது இறே
த்வம் –
இஷ்டம் செய்கைக்கு கடவரான தேவரீரே அநிஷ்டமான காமத்தையும் போக்கி அருள வேணும் -என்கிறார்

ஆக -உன் இணை மலர்த் தாள் என்தனக்குமது இராமானுசா இவை ஈந்தருளே –76-என்கிறபடியே
த்வத் கைங்கர்ய ரூப-பரம பிராப்யத்துக்கு -தேவரீரே உபாயமாக வேணும் என்று
விண்ணப்பம் செய்யா நின்று கொண்டு –
கீழ் ஸ்ரீ வத்ஸ சிஹ்ன சரணம் -என்று ப்ரஸ்துதமான உபாயத்வத்தை
இஸ் ஸ்லோஹத்தாலே நிகமித்தாராய்த்து –

———————————————————————————-

அவதாரிகை –

நிகமத்தில்
தாம் அன்வஹம் மம விவர்த்தய நாத தஸ்யா காமம் விருத்தம் அகிலஞ்ச நிவர்த்த்ய த்வம் -என்ற இவர்
தம்முடைய உபய வித அபேஷிதத்தை விண்ணப்பம் செய்தவாறே
இவர் அபேஷிதம் செய்து அல்லது நிற்க ஒண்ணாத படியான கிருபை கரை புரண்டு இருக்கும் இருப்பைக் கண்டு
இப்பிரபந்த ரூபமான அடியேன் விண்ணப்பத்தை தேவரீர் திரு உள்ளம் பற்றி அருள வேணும் என்று விண்ணப்பித்தவாறே
இப்பிரபந்தத்தை நிகமித்து அருளுகிறார் —
விஜ்ஞாபனம் யதிதமத் யது மாம கீ நம்–இத்யாதியாலே –

விஜ்ஞாபனம் யதிதமத் யது மாம கீ நம்
அங்கீ குருஷ்வ யதிராஜ தயாம்பு ராஸே
அஜ்ஞோ அயம் ஆத்ம குண லேச விவர்ஜி தஸ்ச
தஸ்மாத் அநந்ய சரணோ பவதீதி மத்வா –20-

விஜ்ஞாபனம் யதிதம்
அநாதி காலமே பிடித்து விஷய சபலராய்ப் போந்த தம்மையும் எத்தனையேனும் அதிசயித ஜ்ஞானிகள்
தங்களுக்கு வகுத்த விஷயத்தில் செய்யக் கடவதான இவ் விஜ்ஞாபநத்தையும் பார்த்து
தமக்குக் கிடையாதது கிடைத்தது என்று -யதிதம் விஜ்ஞாபனம்-என்கிறார்
அன்றிக்கே –
யச் சப்தம் பிரசித்த பராமர்சி யாகையாலே -கிரந்த ரூபேண பிரசித்தமான இவ் விஜ்ஞாபநத்தை -என்கிறார் –

இதம் விஜ்ஞாபனம்
இப்பிரபந்த ரூபமான விஜ்ஞாபநத்தை —
மற்று ஒரு விஜ்ஞாபனம் உண்டாகிலும் -அதுக்கு மேல் எழுத்து இல்லை இறே
கையோலை செய்து கொடுத்தது இவ் விஜ்ஞாபநத்தை இறே
இதம்
பாட்யே கே யே ச மதுரம் ப்ரமாணைஸ் த்ரிபி ரந்விதம்-பால -4-8- என்று ஸ்வ கர்த்ருகமான ஸ்ரீ ராமாயணத்தை
ஸ்ரீ வால்மீகி பகவான் கொண்டாடினால் போலே
இவரும் இப் பிரபந்தம் தமக்கு போக்யமாய் இருக்கையாலே -இதம் -என்று கொண்டாடுகிறார்
இது தான் எப்போது உண்டாய்த்து என்னில்

அத் யது-
கீழ் கழிந்த காலம் போலே விஷய அனுபவத்துக்கும் தத் அலாபத்தால் உண்டான துக்க அனுபவத்துக்கும் போந்திருக்கை யன்றிக்கே
தேவரீர் திருவடிகளிலே கைங்கர்யத்தினுடைய லாப அலாபங்களிலே மோத கேதங்கள் உண்டாம் படியான இக்காலத்திலே என்கிறார்
அத் யது-
தம்மையும் பார்த்து காலத்தையும் பார்த்தவாறே -இதுவும் தமக்கு அலாப்ய லாபம் என்று தோற்றி -அத்யது -என்கிறார் –
அன்றிக்கே –
கீழ் கழிந்த காலம் போலே பழுதே பல பகலும் போயின -முதல் திரு -16–என்று நிந்தா விஷயமாக வன்றிக்கே-
அத்யமே சபலம் ஜன்ம -ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-17-3- என்று ஸ்லாக நீயமான இக் காலத்திலே என்னுமாம் –
விஜ்ஞாபனம் தான் யார் செய்கிறது என்னில்

மாம கீ நம் –
அநாதி காலமே பிடித்து விஷய சபலனாய்ப் போந்த அடியேன் -அதில் சாபலம் அற்று
தேவரீர் திருவடிகளிலே கைங்கர்யத்திலே ப்ரேமம் தலை எடுத்துப் பண்ணுகிறது
மாமகீ நம்
தாம் முன்னிருந்த இருப்பையும் இப்போது இருக்கும் இருப்பையும் பார்த்து -நாம் இப்படி யானோமே யாகாதே -என்று
தந் யோஹம் -என்னுமா போலே தம்மைத் தாமே கொண்டாடுகிறார்
அன்றிக்கே -து -சப்தம் ஏவ காரார்த்தமாய் -அத்யைவ -என்கிறார் ஆக வுமாம் –
உத்தர ஷணத்திலே நிலையாய் இருக்குமோ இராதோ என்று கருத்து
இதுக்கு அடி என் என்னில்

மாமகீ நம் –
அடியேன் சம்பந்தி யாகையாலே என்கிறார் -சப்தாதி போக நிரதர் இறே தாம் -ஆகில் செய்ய வேண்டியது என் என்ன

அங்கீ குருஷ்வ –
இத்தை ஓர் அவயவி யாக்கித் தர வேணும் என்கிறார் –
அவயவி யாக்குகை யாவது சபலமாக்குகை -அதாவது அப்படி செய்கிறோம் என்று திரு உள்ளம் பற்றுகை
குருஷ்வ என்கையாலே
அங்கீ காரத்தால் வரும் பலமும் அத்தலைக்கே-என்கிறார் –
அத்தலைக்கு உகப்பாக இறே கைங்கர்யம் செய்வது

மாமகீ நம் அங்கீ குருஷ்வ
த்வத் தாஸ தாஸ சரமாவதி தாசனான அடியேன் செய்கிற விண்ணப்பம் ஆகையாலே தேவரீரால் தவிரப் போகாது என்கிறார் –
இவர் இப்படி விண்ணப்பம் செய்த வாறே அப்படியே செய்து அருளுவதாகத் திரு உள்ளம் பற்றி

யதிராஜ –
என்று சம்போதிக்கிறார்-ஆஸ்ரித கார்யம் செய்கையில் சங்கல்பம் தேவரீருக்கு புகர் என்கிறார் ‘
அன்றிக்கே –
தாம் இப்படி விண்ணப்பம் செய்த வாறே திரு உள்ளத்தை தம்மிடத்தில் நின்றும் சலிக்க ஒண்ணாத படி பண்ணி
தமக்கு ரஜ்ஞ்கராய் இருக்கையாலே யதிராஜ -என்று சம்போதிக்கிறார் ஆக வுமாம்
நீர் சொன்ன படியே செய்கிறோம் உம்மிடத்தில் குணம் ஏது என்ன

தயாம்பு ராஸே
தேவரீர் தயா சமுத்ரம் யன்றோ -அடியேன் இடத்தில் குணம் ஒன்றும் இல்லை –
கேவலம் தேவரீர் கிருபையாலே செய்து அருள வேணும் என்கிறார் –
ஆகில் நீர் தய நீயரோ என்ன ஆம் என்கிறார் மேல்

அஜ்ஞோ அயம் –
அஜ்ஞ்ஞானமே நிரூபகமாய் இருப்பான் ஒருவன் இவன் -அயோக்யனாய் இருந்து வைத்து யோக்யர் பிரார்த்திக்கும்
புருஷார்த்தத்தை ப்ரார்த்திக்கை அஜ்ஞ்ஞதை இறே -என்கிறார்
அஜ்ஞ-
சாஸ்திர ஜன்ய ஞானம் இல்லாதவன் என்னுதல் –
நம்மை ஒழிய புறம்பே ஒரு விஷயம் அறியாதவன் என்னுதல்

ஆத்ம குண லேச விவர்ஜி தஸ்ச –
அறிவு இல்லா விடிலும் ஆத்ம குணங்களான சமதாதிகளில் ஏதேனும் ஓன்று உண்டாகலாமே –
அதுவும் இல்லாதவன் ஒருவன் இவன் என்கிறார் –
ச காரத்தாலே அநாத்ம குண பரி பூரணன் -என்கிறார் –

தஸ்மாத்
ஜ்ஞானமும் -தந் மூலமான ஆத்ம குணங்களும் இல்லாதான் ஒருவன் ஆகையாலே

அநந்ய சரணோ பவதீதி –
பரம தயாளுவான தேவரீரை ஒழிய மற்றொரு புகலிடம் இல்லாதவன் என்று

மத்வா —
திரு உள்ளம் பற்றி -மாமகீ நம் விஜ்ஞ்ஞாபனம் அங்கீ குருஷ்வ -என்று
மனனமும் அங்கீ காரமும் ஏக கர்த்ருகமாகத் தோற்றுகையாலே
இத்தலையிலே ஸ்வ அயோக்ய அனுசந்தானமும் இல்லை -என்கிறது

அஜ்ஞோ அயம் ஆத்ம குண லேச விவர்ஜி தஸ்ச -என்கையாலே தய நீயதை சொல்லப் பட்டது –
தய நீயர் ஆகிறார் துக்கிகள் இறே –
அஜ்ஞ்ஞானத்துக்கு மேற்பட துக்கம் இல்லை
அன்றிக்கே –
அஜ்ஞோ அயம் ஆத்ம குண லேச விவர்ஜி தஸ்ச -இவர் தயாம்பு ராஸே -என்றவாறே —
ஆகில் தயை உண்டாகும் போது செய்கிறோம் என்ன-
தேவரீர் தயை பண்ணுகைக்கு இங்கு ஏதேனும் பிரதி பந்தகம் உண்டோ என்கிறார் அஜ்ஞோ இத்யாதியாலே –

அஜ்ஞ- என்கையாலே ஜ்ஞான யோகமும் தத் விசேஷமான பக்தி யோகமும் இல்லை என்கிறார் –
ஆத்ம குண லேச விவர்ஜி தஸ்ச -என்கையாலே கர்ம யோகமும் இல்லை என்கிறார்
அது எங்கனே என்னில் சமதமாதிகள் இந்த்ரியங்களுடைய விஷயோபரதி ரூபங்கள் ஆகையாலே
அவ்வுபரதி ரஜஸ் தமோ நிவ்ருத்தியால் அல்லது கூடாமையாலே ரஜஸ் தமோ நிவர்த்தகம்
தர்மேண பாபமவ நுததி -என்றும்
கஷாய கர்மபி பக்வே -என்றும் சொல்லுகிறபடியே பாப நிவ்ருத்தி த்வாரா தர்ம விசேஷமான
கர்ம யோகம் ஆகையாலே ஆத்ம குண ஹானி கர்ம யோக அபாவத்தைக் காட்டுகிறது
ச காரத்தாலே பிரபத்தியும் இல்லை என்கிறது –
அகிஞ்சனனுக்கு புகலிடம் பிரபத்தி இறே –

ஆக சர்வ உபாய ஸூந்யன் என்றபடி –
இவற்றிலே ஏதேனும் உண்டாகில் இறே தேவரீர் தயை பண்ணாது இருக்கலாவது

தஸ்மாத்
தேவரீர் தயை பண்ணுகைக்கு பிரதிபந்தகங்களாய் இருப்பதின் கந்தம் இல்லாதவன் ஒருவன் ஆகையாலே தேவரீர் தயை ஒழிய
ஸ்வ யத்னமாதல் -பகவத் யத்னமாதல் -மற்றொரு புகலிடம் இல்லாதான் ஒருவன் என்று திரு உள்ளம் பற்றி
இப்பிரபந்த ரூபமான விண்ணப்பத்தை அங்கீ கரித்து அருள வேணும் -என்கிறார் –

பகவத் யத்னம் சர்வாதிகாரம் யன்றோ -அத்தையும் கழிக்கலாமோ என்னில் –
அது விஸ்ரம்ப-பாஹூள்ய-சாபேஷம் ஆகையாலே -அது இல்லாதவனுக்கு அது தன்னடையே நழுவும் இறே
இதுவும் இன்றிக்கே
பகவத் யத்னம் ஸ்வா தந்த்ர்ய அனுகூலமாய் -நிக்ரஹ அனுக்ரஹங்களுக்கு பொதுவாய் இருக்கும்
ஆசார்ய அபிமானம் இவ்விரண்டு தோஷமும் இன்றிக்கே இருக்கும் -ஆகையால் இறே
ஸ்வ தந்த்ரனை தான் உபாயமாகப் பற்றும் போது இறே இப்பிரசங்கம் தான் உள்ளது -ஸ்ரீ வசன பூஷணம் -410- என்று
ஸ்ரீ பிள்ளை லோகாசார்யர் அருளிச் செய்தது

ஆக இப்பிரபந்தத்தாலே சர்வ உபாய ஸூந்யராய்-பகவத் விஷயத்துக்கும் அநாதிகாரிகளான சேதனர்க்கு
ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம் என்றதாய்த்து
இந்தப் பிரபந்த ரூபமான விஜ்ஞ்ஞாநபத்தை திரு உள்ளம் பற்ற வேணும் என்கையாலே
ஸ்ரீ எம்பெருமானார்க்கு பிரசாத ஜனகமும் இப்பிரபந்தம் என்றதாயிற்று

———————

க்ருபயா யதி ராஜஸ்ய முநேர் வர வரஸ்ய ச
பிரவ்ருத்தேயம் க்ருதிஸ் ஸத்பிஸ் சாதரம் சமுதீஷ்ய தாம்
ஸூத்த சத்த்வ மஹாசார்ய க்ருதிநா குண பூதி நா
யதீஸ விம்சதி வியாக்யா லலிதா கலிதா பலௌ-

———————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஸூத்த சத்வம் தொட்டாசார்யா ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .