Archive for September, 2015

அருளிச் செயல் சாற்றுமுறை —

September 28, 2015

அருளிச் செயல் சாற்றுமுறை
——————————————————————
முதல் நாள் சேவை சாற்றுமுறை –

முதல் திருவந்தாதி –

உளன் கண்டாய் நன்னெஞ்சே உளன் கண்டாய் உள்ளுவார் உள்ளத்து உளன் கண்டாய்
வெள்ளத்தின் உள்ளானும் வேங்கடத்து மேயானும் உள்ளத்தின் உள்ளான் என்று ஓர் –99-

ஓரடியும் சாடுடைத்த ஒண் மலர்ச் சேவடியும் ஈரடியும் காணலாம் என்நெஞ்சே ஓரடியின்
தாயவனைக்கேசவனைத் த ண் துழாய் மாலை சேர் மாயவனையே மனத்து வை -100

வையம் தலியா வார் கடலே நெய்யாக வெய்ய கதிரோன் விளக்காக
செய்ய சுடர் ஆழியான் அடிக்கே சூட்டினேன் சொல்மாலை இடர் ஆழி நீங்குகவே என்று -1-

திருவாய் மொழி -1-1-

மறுப்பும் ஞானமும் நான் ஓன்று உணர்ந்திலேன்
மறக்கும் என்று செந்தாமரைக் கண்ணோடு
மறப்பற என்னுள்ளே மன்னினான் தன்னை மறப்பனோ இனி யான் என் மணியே –1-10-10-

மணியை வானவர் கண்ணனைத் தன்னதோர் அணியை தென் குருகூர்ச் சடகோபன் சொல்
பணி செய் ஆயிரத்துள் இவை பத்துடன் தனிவிளர் கற்பறேல் கல்வி வாயுமே –1-10-11-

——————————————————————————-

இரண்டாம் நாள் சேவை சாற்று முறை –

பெரியாழ்வார் திருமொழி

தடவரை வாய் மிளிர்ந்து மின்னும் தவள நெடும் கொடி போல் சுடர் ஒளியாய் நெஞ்சின் உள்ளே தோன்றும் என் சோதி நம்பி
வடதடமும் வைகுந்தமும் மதிள் துவராபதியும் இடவகைகள் இகழ்ந்திட்டு என் பால் இடவகை கொண்டனையே –5-4-10-

வேயர் தங்கள் குலத்து உதித்த விட்டு சித்தன் மனத்தே கோயில் கொண்ட கோவலனைக் கோலும் குளிர் முகில் வண்ணனை
ஆயர் ஏற்றி அமரர் கோவை அந்தணர் தம் அமுதத்தினை சாயை போலப் பாட வல்லார் தாமும் அனுக்கர்களே –5-4-11-

இரண்டாம் திருவந்தாதி –

இறை எம்பெருமான் அருள் என்று இமையோர் முறை நின்று மொய்ம்மளர்கள் தூவ
அறை கழல சேவடியான் செங்கண் நெடியான் குறள் உருவாய் மாவடிவில் மண் கொண்டான் மால் –99

மாலே நெடியானே கண்ணனே விண்ணவர்க்கு மேலா வியன் துலாய்க் கண்ணியனே மேலால்
விளவின் காய் கன்றினால் வீழ்த்தவனே எந்தன் அளவன்றால் யானுடைய அன்பு –100-

அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக இன்புறுகி சிந்தை இடு திரியா
நன்புருகி ஜ்ஞானச் சுடர் விளக்கு ஏற்றினேன் நாரணற்கு ஜ்ஞானத் தமிழ் புரிந்த நான் –1

திருவாய் மொழி -2-10-

சூது என்று களவும் சூதும் செய்யாதே வேதம் முன் விரித்தான் விரும்பிய கோயில்
மாதுறு மயில் சேர் மாலிரும் சோலை போதவில் மலையே புகுவது பொருளே –2-10-10-

பொருள் என்று இவ்வுலகம் படைத்தவன் புகழ் மேல் மருளில் வண் குருகூர் வண் சடகோபன்
தெருள் கொள்ளச் சொன்ன ஓர் ஆயிரத்துள் இப்பத்து அருள் உடையவன் தாள் அணிவிக்கும் முடித்தே –2-10-11-

——————————————————————————

மூன்றாம் நாள் சேவை சாற்று முறை

நாச்சியார் திருமொழி -14-

நாட்டைப் படை என்று அயன் முதலாத் தந்த நளிர் மா மலர் உந்தி வீட்டைப் பண்ணி விளையாடும் விமலன் தன்னைக் கண்டீரே
காட்டை நாடித் தேனுகனும் களிறும் புள்ளும் உடன் மடிய வேட்டை யாடி வருவானை விருந்தாவனத்தே கண்டோமே –14-9-

பாரும் தாள் களிற்றுக்கு அருள் செய்த பரமன் தன்னை பாரின் மேல் விருந்தாவனத்தே கண்டமை விட்டு சித்தன் கோதை சொல்
மருந்தாம் என்று தம் மனத்தே வைத்துக் கொண்டு வாழ்வார்கள் பெரும் தாளுடைய பிரான் அடிக் கீழ்ப் பிரியாது என்றும் இருப்பாரே –14-10-

மூன்றாம் திருவந்தாதி –

தொட்ட படை எட்டும் தோலாத வென்றியான் அட்ட புயகரத்தான் அஞ்ஞான்று குட்டத்துக்
கோள் முதலை துஞ்சக் குறித்து எறிந்த சக்கரத்தான் தாள் முதலே நங்கட்குச் சார்வு –99-

சார்வு நமக்கு என்றும் சக்கரத்தான் தண் துழாய்த் தார் வாழ்வரை மார்பன் தான் முயங்கும்
காரார்ந்த வானமரும் மின்னிமைக்கும் வண் தாமரை நெடும் கண் தேனமரும் பூ மேல் திரு –100-

திருக் கண்டேன் பொன் மேனி கண்டேன் திகழும் அருக்கன் அணி நிறமும் கண்டேன்
செருக்கிளரும் பொன்னாழி கண்டேன் புரி சங்கம் கைக்கண்டேன் என்னாழி வண்ணன் பால் இன்று –1-

திருவாய்மொழி –3-30-

தளர்வின்றியே என்றும் எங்கும் பரந்த தனிமுதல் ஞானம் ஒன்றாய் அளவுடை ஐம்புலன்கள் அறியா வகையால் அருவாகி நிற்கும்
வளரொளி ஈசனை மூர்த்தியைப் பூதங்கள் இரு சுடரை கிளர் ஒளிமாயனைக் கண்ணனைத் தாள் பற்றி யான் ஒன்றும் கேடிலனே –3-10-10-

கேடில் விழுப் புகழ்க் கேசவனைக் குருகூர்ச் சடகோபன் சொன்ன பாடல் ஓர் ஆயிரத்துள் இவையும் ஒரு பத்தும் பிடற வல்லார்கட்கு
அவன் நாடும் நகரமும் நன்குடன் காண நலனிடை யூர்தி பண்ணி வீடும் பெறுத்தித் தன மூவுலகுக்கும் தரும் ஒரு நாயகமே –3-10-11-

—————————————————————–

நான்காம் நாள் சேவை சாற்று முறை –

பெருமாள் திருமொழி –

அன்று சராசரங்களை வைகுந்தத்து ஏற்றி அடல் அரவப் பகை ஏறி அசுரர் தம்மை வென்று இலங்கு மணி நெடும் தோள் நான்கும் தோன்ற
விண் முழுதும் எதிர் வரத் தன தாமம் மேவி சென்று இனிது வீற்று இருந்த அம்மான் தன்னைத் தில்லை நகரத் திருச் சித்ர கூடம் தன்னுள்
என்றும் நின்றான் அவன் இவன் என்று ஏத்தி நாளும் இறைஞ்சுமினோ எப்பொழுதும் தொண்டீர் நீரே –10-10-

தில்லை நகரத் திருச் சித்ர கூடம் தன்னுள் திறல்விளங்கு மாருதியோடு அமர்ந்தான் தன்னை எல்லையில் சீர்த் தயரதன் தன மகனாய்த் தோன்றிற்று
அது முதலாத் தன்னுலகம் புக்கதீரா கொல்லியலும் படைத்தானைக் கொற்ற ஒள வாள் கோழியர் கோன் குடைக் குலசேகரன்
சொற் செய்த நல்லியலின் தமிழ் மாலை பத்தும் வல்லார் நலம் திகழ் நாரணன் அடிக் கீழ் நண்ணுவாரே — 10-11-

நான்முகன் திருவந்தாதி –

ஏன்றேன் அடிமை இழிந்தேன் பிறப்பு இடும்பை ஆன்றேன் அமரர்க்கு அமராமை ஆன்றேன்
கடல் நாடும் மண்ணாடும் கைவிட்டு மேலை இட நாடு காண இனி –95

இனி யறிந்தேன் ஈசற்க்கும் நான் முகற்கும் தெய்வம் இனி யறிந்தேன் எம்பெருமான் உன்னை இனி யறிந்தேன்
காரணன் நீ கற்றவை நீ நற் கிரிசை நாரணன் நீ நன்கு அறிந்தேன் நான் –96-

நான் முகனை நாராயணன் படைத்தான் நான் முகனும் தான் முகனாய்ச் சங்கரனைத் தான் படைத்தான் யான் முகமாய்
அந்தாதி மேலிட்டு அறிவித்தேன் ஆழ் பொருளை சிந்தாமல் கொண்மின் நீர் தேர்ந்து –1-

திருவாய்மொழி -4-10-

உறுவதாவது எத்தேவும் எவ்வுலகங்களும் மற்றும் தன்பால் மறுவில் மூர்த்தியோடு ஒத்து இத்தனையும் நின்றவண்ணம் நிற்கவே
செறுவில் செந்நெல் கரும்போடு ஓங்கு திருக் குருகூர் அதனுள் குரிய மாண் உருவாகிய நீள் குடக் கூத்தனுக்கு ஆட்செய்வதே –4-10-10-

ஆட்செய்து ஆழிப் பிரானைச் சேர்ந்தவன் வண் குருகூர் நகரான் நாள் கமல் மகிழ் மாலை மார்பினன் மாறன் சடகோபன்
வேட்கையால் சொன்ன பாடல் ஆயிரத்துள் இப்பத்தும் வல்லார் மீட்சி இன்றி வைகுண்ட மா நகர் மற்றது கையதுவே –4-10-11-

—————————————————————–

ஐந்தாம் நாள் சேவை சாற்று முறை-

கண்ணி நுண் சிறுத் தாம்பு

பயன் நன்றாகிலும் பாங்கு அலற ஆகிலும் செயல் நன்றாகத் திருத்திப் பனி கொள்வான்
குயில் நின்றார் பொழில் சூழ் குருகூர் நம்பி முயல்கின்றேன் உன் தன மொய் கழற்கு அன்பையே –10

அன்பன் தன்னை அடைந்தவர்கட்கு எல்லாம் அன்பன் தென் குருகூர் நகர் நம்பிக்கு
அன்பனாய் மதுரகவி சொன்ன சொல் நம்புவார் பதி வைகுந்தம் காண்மினே –11

கண்ணி நுண் சிறுத் தாம்பினால் கட்டு உண்ணப் பண்ணிய பெரு மாயன் என்னப்பனில்
நண்ணித் தென் குருகூர் நம்பி என்றக்கால் அண்ணிக்கும் அமுதூரும் என்னாவுக்கே –1-

திரு விருத்தம் –

ஈனச் சொல்லாயினுமாக அறி திரை வையம் முற்றும் ஏனத்து உருவாய் இடந்த பிரான் இரும் கற்பகம் சேர்
வானத்தவர்க்கும் அல்லாதவர்க்கும் மற்று எல்லாயவர்க்கும் ஞானப் பிரானை யல்லால் இல்லை நான் கண்ட நல்லதுவே –99

நல்லார் நவில் குருகூர் நகரான் திருமால் திருப்பேர் வல்லார் அடிக் கண்ணி சூடிய மாறன் விண்ணப்பம் செய்த
சொல்லார் தொடையல் இந்நூறும் வல்லார் எழுந்தார் பிறப்பாம் பொல்லா வருவினை மாயவன் சேற்று அள்ளல் பொய்ன் நிலத்தே –100-

பொய் நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும் அழுக்கு உடம்பும் இந்நின்ற நீர்மை இனி யாம் உறாமை உயிர் அளிப்பான்
என்நின்ற யோநியுமாய்ப் பிறந்தாய் இமையோர் தலைவா மெய்ந்நின்று கேட்டு அருளாய் அடியேன் செய்யும் விண்ணப்பமே –1-

திருவாய் மொழி –5-10-

கூடி நீரைக் கடைந்த வாரும் அமுதம் தேவர் உன்ன அசுரரை வீடும் வண்ணங்களே செய்து போன வித்தகமும்
ஊடு புக்கு எனதாவியை உருக்கி யுண்டு இடுகின்ற நின் தன்னை நாடும் வண்ணம் சொல்லாய் நச்சு நாகனையானே –5-10-10-

நாகணை மிசை நம்பிரான் சரணே சரண் நமக்கு என்று நாள் தோறும் ஏக சிந்தையனாய்க் குருகூர்ச் சடகோபன் மாறன்
ஆக நூற்று அந்தாதி ஆயிரத்துள் இவையும் ஓர் பத்தும் வல்லார் மாக வைகுந்தத்து மகிழ்வு எய்துவர் வைகலுமே –5-10-11-

————————————————————————-

ஆறாம் நாள் சேவை சாற்று முறை

பெரிய திருமொழி –2-10-

தூவடிவின் பார்மகள் பூ மங்கையோடு சுடர் ஆழி சங்கு இருபால் பொலிந்து தோன்ற காவடியின் கற்பகமே போலே நின்று
கலந்தவர்கட்கு அருள் புரியும் கருத்தினானை சேவடி கை திருவாய் கண் சிவந்த ஆடை செம்பொன் செய் திரு வுருவமானான் தன்னை
தீவடிவின் சிவன் அயனே போல்வார் மன்னு திருக் கோவலூர் அதனுள் கண்டேன் நானே –2-10-9-

வாரணம் கொள் இடர் கடிந்த மாலை நீல மரகதத்தை மழை முகிலே போல்வான் தன்னை சீர் அணங்கு மறையாளர் நிறைந்த செல்வத்
திருக் கோவலூர் அதனுள் கண்டேன் என்று வார் அணங்கு முலை மடவார் மங்கை வேந்தன் வாள் கலியன் ஒலி ஐந்தும் ஐந்தும் வல்லார்
காரணங்காளால் உலகம் கலந்து அங்கு ஏத்தக் கரந்து எங்கும் பரந்தானைக் காண்பர் தாமே –2-10-10-

திருவாசிரியம்-

நளிர் மதிச் சடையனும் நான்முகக் கடவுளும் தளிர் ஒளி இமையவர் தலைவனும் முதலா யாவகை யுலகமும் யாவரும் அகப்பட
நிலம் நீர் தீ கால் சுடர் இரு விசும்பும் மலர் சுடர் பிறவும் சிரிதுடன் மயங்க ஒரு பொருள் புறப்பாடின்றி முழுவதும் அகப்படக் கரந்து
ஓர் ஆலிலைச் சேர்ந்த எம் பெரு மா மாயனை யல்லது ஒரு மா தெய்வம் மற்று உடையமோயாமோ -7-

திருவாய்மொழி –6-10-

அகலகில்லேன் இறையும் என்று அலற மேல் மங்கை யுரை மார்பா நிகரில் புகழாய் உலகம் மூன்று உடையாய் என்னை யால்வானே
நிகரில் அமரர் முனிக் கணங்கள் விரும்பும் திரு வேங்கடத்தானே புகழ் ஓன்று இல்லா அடியேன் உன்னடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே –6-10-10-

அடிக்கீழ் அமர்ந்து புகுந்து அடியீர் வாழ்மின் என்று என்று அருள் கொடுக்கும் படிக் கேழ் இல்லாப் பெருமானைப் பழனக் குருகூர்ச் சடகோபன்
முடிப்பான் சொன்ன ஆயிரத்துத் திரு வேங்கடத்துக்கு இவை பத்தும் பிடித்தார் பிடித்தார் வீற்று இருந்து பெரிய வானுள் நிலாவுவரே –6-10-11-

——————————————————————————-

ஏழாம் நாள் சேவை சாற்று முறை

பெரிய திருமொழி -4-10-

குடிகுடியாகக் கூடி நின்று அமரர் குணங்களே பிதற்றி நின்னேத்த அடியவர்க்கு அருளி அரவணைத் துயின்ற ஆழியான்
அமர்ந்து உறை கோயில் கடியுடைக் கமலம் அடியிடை மலரக் கரும்போடு மெரும் செந்நெல் அசைய வடியுடை அன்னம்
பெடையொடும் சேரும் வயல் வெள்ளியங்குடி யதுவே –4-10-9-

பண்டு முன் ஏனமாகி அன்று ஒரு கால் பார் இடந்து எயிற்றினில் கொண்டு தென் திரை வருடப் பாற் கடல் துயின்ற
திரு வெள்ளியங்குடியானை வண்டறை சோலை மங்கையர் தலைவன் மான வேல் கலியன் வாய் ஒலிகள் கொண்டு
இவை பாடும் தவம் உடையார்கள் ஆள்வர் இக் குரை கடலுலகே –410-10-

பெரிய திருவந்தாதி —

கார் கலந்த மேனியான் கை கலந்த ஆழியான் பார கலந்த வல் வயிற்றான் பாம்பணையான் சீர் கலந்த
சொல் நினைந்து போக்காரேல் சூழ் வினையின் ஆழ துயரை என் நினைந்து போக்குவர் இப்போது –86-

இப்போதும் இன்னும் இனிச் சிறிது நின்றாலும் எப்போதும் ஈதே சொல் என்நெஞ்சே எப்போதும்
கை கழலா நேமியான் நம் மேல் வினை கடிவான் மொய் கழலே ஏத்த முயல் –87-

முயற்றி சுமந்து எழுந்து முந்துற்ற நெஞ்சே இயற்றுவாய் எம்மோடு நீ கூடி நயப்புடைய
நாவின் தொடை கிளவி உள் பொதிவோம் நற் பூவைப் பூ வீன்ற வண்ணன் புகழ் –1-

திருவாய் மொழி –7-10-

சிந்தை மற்று ஒன்றின் திறத்ததல்லாத் தன்மை தேவபிரான் அறியும் சிந்தையினால் செய்வது தான் அறியாதன மாயங்கள் ஒன்றும் இல்லை
சிந்தையினால் சொல்லினால் செய்கையால் நிலத்தேவர் குழு வணங்கும் சிந்தை மகிழ் திருவாறன் விளை யுறை தீர்த்தனுக்கு அற்ற பின்னே –7-10-10-

தீர்த்தனுக்கு அற்ற பின் மற்றோர் சரண் இல்லை என்று எண்ணி தீர்த்தனுக்கே தீர்த்த மனத்தனாகிச் செழும் குருகூர்ச் சடகோபன் சொன்ன
தீர்த்தங்கள் ஆயிரத்துள் இவை பத்தும் வல்லார்களை தேவர் வைகல் தீர்த்தங்களே என்று பூசித்து நல்கி யுரைப்பர் தம் தேவியர்க்கே –7-10-11-

—————————————————————————————-

எட்டாம் நாள் சேவை சாற்று முறை –

பெரிய திருமொழி –7-10-

பண்ணினைப் பண்ணில் நின்றதோர் பான்மையைப் பாலுள் நெய்யினை மாலுறுவாய் நின்ற விண்ணினை விளங்கும் சுடர்ச் சோதியை
வேள்வியை விளக்கின் ஒளி தன்னை மண்ணினை மலையை அலை நீரினை மாலை மா மதியை மறையோர் தங்கள் கண்ணினை
கண்கள் ஆர அளவும் நின்று கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே –7-10-9–

கண்ண மங்கையுள் கண்டு கொண்டேன் என்று காதலால் கலிகன்றி யுரை செய்த வண்ண வொண் தமிழ் ஒன்பதோடு ஓன்று இவை
வல்லரே உரைப்பார் மதியம் தவழ் விண்ணில் விண்ணவராய் மகிழ்வு எய்துவர் மெய்ம்மை சொல்லின் வெண் சங்கம் ஓன்று ஏந்திய
கண்ண நின் தனக்கும் குறிப்பாகில் கற்கலாம் கவியின் பொருள் தானே –7-10-10-

சிறிய திருமடல் –

பெரும் தெருவே ஊரார் இகழிலும் ஊராது ஒழியேன் நான் வாரார் பூம் பெண்ணை மடல்

ஊராது ஒழியேன் உலகு அறிய ஒண் நுதலீர் சீரார் முலைத் தடங்கள் சேரளவும் பாரெல்லாம்
அன்று ஓங்கி நின்று அளந்தான் நின்ற திரு நறையூர் மன்று ஓங்க ஊர்வன் மடல்

திருவாய் மொழி –8-10-

வாய்க்க தமியேற்கு ஊழி தோர் ஊழி மாகாயாம் பூக்கொள் மேனி நான்கு தோள் பொன்னாழிக்கை என்னம்மான்
நீக்கமில்லா அடியார் தம் அடியார் அடியார் அடியார் எம் கோக்கள் அவர்க்கே குடிகளாய்ச் செல்லும் நல்ல கோட்பாடே –8-10-10-

நல்ல கோட்பாட்டு உலகங்கள் மூன்றினுள்ளும் தான் நிறைந்த அல்லிக் கமலக் கண்ணனை அம தண் குருகூர்ச் சடகோபன்
சொல்லப் பட்ட ஆயிரத்துள் இவையும் பத்தும் வல்லார்கள் நல்ல பதத்தால் மனை வாழ்வார் கொண்ட பெண்டிர் மக்களே –8-10-11-

—————————————————————————————–

ஒன்பதாம் நாள் சேவை சாற்று முறை –

பெரிய திருமொழி -10-10-

இன்னார் என்று அறியேன் என்னே ஆழியொடும்
பொன்னார் சார்ங்கம் உடைய அடிகளை இன்னார் என்று அறியேன் –10-10-9-

தொண்டீர் பாடுமினோ சுரும்பார் பொழில் மங்கையர் கோன்
ஒண் தார் வேல் கலியன் ஒலி மாலைகள் தொண்டீர் பாடுமினோ –10-10-10-

பெரிய திருமடல் –

மா முனிக்காத் தன்னுலகம் ஏற்றுவித்த திண் திறலும் மற்றிவை தான் உன்னி யுலவா வுலகரிய உஊர்வன் நான்
முன்னி முளைத்து எழுந்து ஓங்கி ஒலி பரந்த மன்னிய பூம் பெண்ணை மடல் –

என்னிலமை எல்லாம் அறிவித்தால் எம்பெருமான் தன்னருளாகமும் தாரானேல் பின்னைப் போய்
ஒண் துறை வேல் நீர் வேல் உலகறிய யூர்வன் நான் வண்டறை பூம் பெண்ணை மடல் –

திருவாய் மொழி –9-10 –

இல்லையல்லல் எனக்கேல் இனியென் குறை அல்லி மாதர் அமரும் திரு மார்பினன்
கல்லில் ஏய்ந்த மதில் சூழ் திருக் கண்ண புரம் சொல்ல நாளும் துயர் பாடு சாராவே –9-10-10-

பாடு சாரா வினை பற்றற வேண்டுவீர் மாட நீடு குருகூர்ச் சடகோபன் சொல்
பாடலான தமிழ் ஆயிரத்துள் இப்பத்தும் பாடியாடி பணிமின் அவன் தாள்களே –9-10-11-

——————————————————————————————

பத்தாம் நாள் சேவை சாற்று முறை –

பெரிய திருமொழி -11-8-

நந்தா நரகத்து யழுந்தா வகை நாளும் எந்தாய் தொண்டர் ஆனவருக்கு இன்னருள் செய்வாய்
சந்தோகா தலைவனே தாமரைக் கண்ணா அந்தோ அடியேற்கு அருளாய் உன்னருளே –11-8-9-

குன்றம் எடுத்து ஆ நிரை காத்தவன் தன்னை மன்றில் மலி புகழ் மங்கைமன் கலிகன்றி சொல்
ஓன்று நின்ற ஒன்பதும் வல்லவர் தம் மேல் என்றும் வினையாயின சார கில்லாவே –11-8-10–

திரு நெடும் தாண்டகம் —

அன்று ஆயர் குலமகளுக்கு அரையன் தன்னை அலை கடலைக் கடைந்து அடைத்த அம்மான் தன்னை
குன்றாத வலி யரக்கர் கோனை மாளக் கொடும் சிலை வாய்ச் சரம் துரந்து குலங்கள் ஐந்து வென்றானை
குன்று எடுத்த தோளினானை விரி திரை நீர் விண்ணகரம் மருவி நாளும் நின்றானை
தண் குடந்தைக் கிடந்த மாலை நெடியானை அடி நாயேன் நினைந்திட்டேனே –29-

மின்னு மா மழை தவழும் மேக வண்ணா விண்ணவர் தம் பெருமானே அருளாய் என்று
அன்னமாய் முனிவரோடு அமரர் ஏத்த அருமறையை வெளிப்படுத்த அம்மான் தன்னை
மன்னு மா மணி மாட மங்கை வேந்தன் மான வேல் பரகாலன் கலியன் சொன்ன
பன்னிய நூல் தமிழ் மாலை வல்லார் தொல்லைப் பழ வினையை முதலரிய வல்லார் தாமே –30-

திருவாய் மொழி -10-10-

சூழ்ந்து அகன்று ஆழ்ந்து உயர்ந்த முடிவில் பெரும் பாழேயோ சூழ்ந்த அதனில் பெரிய பர நல மலர்ச் சோதீயோ
சூழ்ந்த அதனில் பெரிய சுடர் ஞான வின்பமேயோ சூழ்ந்த அதனில் பெரிய என்னவா அறச் சூழ்ந்தாயே –10-10-10–

அவாவறச் சூழ் அரியை அயனை அலற்றி அவா வற்று வீடு பெற்ற குருகூர்ச் சடகோபன் சொன்ன
அவாவில் அந்தாதிகளால் இவை யாயிரமும் முடிந்த அவாவில் அந்தாதி இப்பத்து அறிந்தார் பிறந்தார் உயர்ந்தே –10-10-11-

உயர்வற வுயர்நலம் உடையவன் யவனவன் மயர்வற மதி நலம் அருளினன் யவனவன்
அயர்வறும் அமரர்கள் அதி பதி யவனவன் துயர் அரு சுடர் அடி தொழுது எழு என் மனனே–1-1-1-

கண்ணி நுண் சிறுத் தாம்பு –

வேறு ஒன்றும் நான் அறியேன் வேதம் தமிழ் செய்த மாறன் சடகோபன் வண் குருகூர் ஏறு எங்கள்
வாழ்வாம் என்று ஏத்தும் மதுரகவியார் எம்மை ஆள்வார் அவரே யரண்

கண்ணி நுண் சிறுத் தாம்பினால் –நண்ணித் தென் குருகூர்
நாவினால் நவிற்று –தேவு மற்று அறியேன்
திரி தந்தாகிலும் –பெரிய வ ண் குருகூர்
நன்மையால் மிக்க –அன்னையாய் அத்தனை
நம்பினேன் –செம்பொன் மாட
இன்று தொட்டும் –குன்றமாட
கண்டு கொண்டு என்னை –யே ண் திசையும்
அருள் கொண்டாடும் –அருள் கொண்டு
மிக்க வேதியர் –தக்க சீர்ச் சடகோபன்
பயன் நன்றாகிலும் –குயில் நின்றார் பொழில்
பயன் நன்றாகிலும் –குயில் நின்றார் பொழில்
அன்பன் தன்னை –அன்பனாய்
அன்பன் தன்னை –அன்பனாய்
கண்ணி நுண் சிறுத் தாம்பினால் –நண்ணித் தென் குருகூர் அண்ணிக்கும் அமுதூரும் என்னாவுக்கே –

இராமானுச நூற்றந்தாதி –

இருப்பிடம் வைகுந்தம் வேங்கடம் மாலிரும் சோலை என்னும் பொருப்பிடம் மாயனுக்கு என்பர் நல்லோர்
அவை தம்மோடும் வந்து இருப்பிடம் மாயன் இராமானுசன் மனத்து இன்று அவன் வந்து இருப்பிடம் என் தன இதயத்துள்ளே தனக்கு இன்புறவே –106-

இன்புற்ற சீலத்து இராமானுச என்றும் எவ்விடத்தும் என்புற்ற நோயுடல் தோறும் பிறந்து இறந்து எண்ணரிய
துன்புற்று வீயினும் சொல்லுவது ஓன்று உண்டு உன் தொண்டர்கட்கே என்புற்று இருக்கும் படி என்னை யாக்கி அங்கு ஆட்படுத்தே –107-

அங்கயல் பாய் வயல் தென்னரங்கன் அணியாகம் என்னும் பங்கய மா மலர்ப் பாவையை போற்றுதும் பத்தி எல்லாம்
தங்கிய தெப்பத் தளைத்து நெஞ்சே நம் தலை மிசையே பொங்கிய கீர்த்தி இராமானுசன் அடிப் பூ மன்னவே –108-

பூ மன்னு மாது பொருந்திய மார்பன் புகழ் மலிந்த பா மன்னு மாறன் அடி பணிந்து உய்ந்தவன் பல் கலையோர்
தாம் மன்ன வந்த இராமானுசன் சரணாரவிந்தம் நாம் மன்னி வாழ நெஞ்சே சொல்லுவோம் அவன் நாமங்களே –1-

திருப்பல்லாண்டு –

பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பல கோடி நூறாயிரம் மல்லாண்ட திண் தோள் மணி வண்ணா உன் சேவடி செவ்வி திருக் காப்பு
அடியோமோடும் நின்னோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு வடிவாய் நின் வலமார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு
வடிவார் சோதி வலத்துறையும் சுடர் ஆழியும் பல்லாண்டு படை போர் புக்கு முழங்கும் அப் பாஞ்ச சன்னியமும் பல்லாண்டே —

உபதேச ரத்ன மாலை –

முன்னம் திருவாய் மொழிப் பிள்ளை தாம் உபதேசித்த நேர் தன்னின் படியைத் தணவாத சொல் மணவாள முனி
தன்னன்புடன் செய் உபதேச இரத்தின மாலை தன்னை தன்நெஞ்சு தன்னில் தரிப்பவர் தாள் சரண் நமக்க்ர்

எந்தை திருவாய் மொழிப் பிள்ளை இன்னருளால் வந்த உபதேச மார்க்கத்தைச் சிந்தை செய்து
பின்னவரும் கற்க உபதேசமாய்ப் பேசுகின்றேன் மன்னிய சீர் வெண்பாவில் வைத்து –1-

முன்னோர் மொழிந்த முறை தப்பாமல் கேட்டு பின்னோர்ந்து தாமதனைப் பேசாதே
தன்னெஞ்சில் தோற்றினதே சொல்லி இது சுத்த உபதேச வர வாற்றது என்பர் மூர்க்கராவார் –71

பூருவாசாரியார்கள் போதம் அனுட்டானங்கள் கூறுவார் வார்த்தைகளைக் கொண்டு நீர் தேறி
இருள் தரு மா ஞாலத்தே இன்பமுற்று வாழும் தெருள் தரு மா தேசிகனைச் சேர்ந்து –72-

இந்த உபதேச ரத்தின மாலை தன்னை சிந்தை தன்னில் நாளும் சிந்திப்பார்
எந்தை எதிராசரின் இன்னருளுக்கு என்றும் இலக்காகி சதிராக வாழ்ந்திடுவர் தாம் –73

மன்னுயிர்காள் இங்கே மணவாள மா முனிவன் பொன்னடியாம் செங்கமலப் போதுகளை
உன்னிச் சிரத்தாலே தீண்டில் அமானவனும் நம்மை கரத்தாலே தீண்டல் கடன் –

திருவாய் மொழி நூற்றந்தாதி —

உயர்வே பரன்படியை உள்ளது எல்லாம் தான் கண்டு உயர் வேத நேர் கொண்டு உரைத்து
மயர்வேதும் வாராமல் மானிடரை வாழ்விக்கும் மாறன் சொல் வேராகவே விளையும் வீடு –1-

சூழ்ந்து நின்றமால் விசும்பில் தொல்லை வழி காட்ட ஆழ்ந்து அதனை முற்றும் அனுபவித்து வாழ்ந்து அங்கு
அடியார் உடனே இருந்தவற்றை யுரை செய்தான் முடி மகிழ் சேர் ஞான முனி –99

முனி மாறன் முன்புரை செய் முற்றின்பம் நீங்கி தனியாகி நின்று தளர்ந்து ‘
நனியாம் பரம பத்தியால் நைந்து பங்கயத்தாள் கோனை ஒருமை யுற்றுச் சேர்ந்தான் உயர்ந்து –100-

உயர்வே பரன்படியை உள்ளது எல்லாம் தான் கண்டு உயர் வேத நேர் கொண்டு உரைத்து
மயர்வேதும் வாராமல் மானிடரை வாழ்விக்கும் மாறன் சொல் வேராகவே விளையும் வீடு –1-

————————————————————————————–

இயல் சாத்து –

நன்றும் திருவுடையோம் நானிலத்தில் எவ்வுயிர்க்கும் ஒன்றும் குறையில்லை ஓதினோம்
குன்றம்
எடுத்தான் அடி சேர் இராமானுசன் தாள் பிடித்தார் பிடித்தாரைப் பற்றி –

வாழி திருக்குருகூர் வாழி திரு மழிசை வாழி திரு மல்லி வள நாடு வாழி
சுழி பொரித்த நீர்ப் பொன்னித் தென்னரங்கன் தன்னை வழி பறித்த வாளன் வலி

திருநாடு வாழி திருப் பொருநல் வாழி திரு நாட்டுத் தென் குருகூர் வாழி
திரு நாட்டுச் சிட்டத்தமர் வாழி வாழி சடகோபன் இட்டத் தமிழ்ப் பாவிசை

மங்கை நகர் வாழி வண் குறையலூர் வாழி செங்கையருள் மாரி சீர் வாழி
பொங்கு புனல் மன்னித்துறை வாழி வாழி பரகாலன் மண்ணில் தமிழ்ப் பாவிசை –

வாழியரோ தென் குருகை வாழியரோ தென் புதுவை வாழியரோ தென் குறையல் மா நகரம்
வாழியரோ தக்கோர் பரவும் தடம் சூழ் பெரும் புதூர் முக்கோல் பிடித்த முனி

மொழியைக் கடக்கும் பெரும் புகழான் வஞ்ச முக் குறும்பாம் குழியைக் கடக்கும் நம் கூரத் தாழ்வான் சரண் கூடிய பின்
பழியைக் கடத்தும் இராமானுசன் புகழ் பாடி எல்லா வழியைக் கடத்தல் எனக்கு இனி யாதும் வருத்தம் அன்றே

நெஞ்சத் திருந்து நிரந்தரமாக நிரயத் துய்க்கும் வஞ்சக் குறும்பின் வகை யறுத்தேன் மாய வாதியர் தாம்
அஞ்சப் பிறந்தவன் ஸ்ரீ மாதவன் அடிக்கு அன்பு செய்யும் தஞ்சத்தொருவன் சரணாம்புயம் என் தலைக்கு அணிந்தே

ஊழி தொறும் ஊழி தொறும் உலகம் உய்ய உம்பர்களும் கேட்டு உய்ய அன்பினாலே வாழி எனும்
பூதம் பேய் பொய்கை மாறன் மழிசையர் கோன் பட்டர் பிரான் மங்கை வேந்தன்
கோழியர் கோன் தொண்டர் துகள் பாணன் கோதை குலமுனிவன் கூறிய நூலோதி வீதி வாழி என
வருந் திரளை வாழ்த்துவர் தம் மலரடி என் சென்னிக்கு மலர்ந்த பூவே –

————————————————————————–

கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஆசார்யர்கள் திருவடிகளே சரணம்
ஆழ்வார்கள் திருவடிகளே சரணம் .
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ உபநிஷத் ஸ்ரீ ஸூ க்திகள்–

September 27, 2015

ஸ்ரீ ராமாயணத்தில் விசிஷ்டாத்வைதம் –
பகவான் நாராயணோ தேவா ஸ்ரீ மான் சக்ராயுத விபு
த்ரயாணாம் தவம் ஹிலோகா நாம் ஆதி கர்த்தா
ஜகத் சர்வம் சரீரம் தே

ஸ்ரீ விஷ்ணுபுராணம்
தத் சர்வம் வை ஹரேஸ் தநு -1-22-38
தாநி சர்வாணி தத் வபு -1-22-86-

நாராயணாத் ப்ரஹ்மம் ஜாயதே
நாராயணாத் ருத்ரோ ஜாயதே
நாராயணாத்இந்த்ரோ ஜாயதே
நாராயணாத் த்வாதச ஆதித்ய ருத்ரா வசவ –நாராயண உபநிஷத்

ஏகோ ஹைவ நாராயணா ஆஸீத் ந ப்ரஹ்மா நே சான -மகோ உபநிஷத்

தாமரைப் பூவினுள் பிறந்தோனும் தாதை நீ -பரிபாடல்

நான்முகனை நாராயணன் படைத்தான்

போது தங்கு நான்முகன் மகன் –வேத நூல் ஓதுகின்றது உண்மை அல்லது இல்லையே -திரு சந்த விருத்தம் -72
கள்வா–கழல் பணிந்து யேத்துவரே -திருவாய் மொழி -2-2-10

நாராயண பரம் ப்ரஹ்மம் தத்வம் நாராயண பர
நாராயண பரோ ஜ்யோதிராத்மா நாராயண பர
யுச்ச கிஞ்சித் ஜகத் யஸ்மின் த்ருச்யதே ஸ்ரூயதே அபிவா
அந்தர் பஹிச்ச தத் சர்வம் வ்யாப்ய நாராயண ஸ்தித -தைத்ரிய நாராயண வல்லி

ப்ரஹ்மா நாராயணா சிவஸ்ஸ நாராயணா –நாராயண ஏவேதம் சர்வம் -நாராயண உபநிஷத்

நாயமாத்மா ப்ரவசநேன லப்ய நமேதயா ந பஹூ நா ஸ்ருதேன யமேவைஷ வ்ருணுதே
தேன லப்ய தச்யைஷ ஆத்மா விவ்ருணுதே தநூம் ஸ்வாம் -முண்டோக உபநிஷத் -கடோ உபநிஷத்

யஸ்மாத்பரம் நபரமஸ்தி கிஞ்சித் —தே நேதம் பூர்ணம் புருஷேண  சர்வம் -ச்வேதாஸ் வதர உபநிஷத்

ஏஷ சர்வ பூத அந்தராத்மா அபஹதபாப்மா திவ்யோ தேவ எகோ நாராயணா -ஸூபால உபநிஷத்

தமேவம் வித்வாநம்ருத இஹ பவதி ந நான்ய பந்தா அயநாய வித்யதே -புருஷ ஸூ க்தம்-

சதேவ சோம்ய இதமக்ர ஆஸீத் ஏகமேவம் அத்விதீயம்-சாந்தோக்யம்

ததைஷதா பஹூஸ்யாம் ப்ரஜாயேய –சாந்தோக்யம்

அநேன ஜீவே நாதமா நா அநுப்ரவிஸ்ய நாம ரூபே வ்யாகரவாணி -சாந்தோக்யம்

அந்த பிரவிஷ்டஸ் சாஸ்தா ஜநாநாம் சர்வாத்மா -தைத்ரிய ஆரண்யகம்

அபிச யே நாஸ்ருதம் ஸ்ருதம் -சாந்தோக்யம்

யோ ப்ரஹ்மாணம் விததாதி பூர்வம் யோவை வேதாம்ச்ச ப்ரஹிணோதி தஸ்மை –ச்வேதாஸ் வதர உபநிஷத்

ஏகோ ஹைவ நாராயண ஆஸீத் ந ப்ரஹ்ம நே சாநோ நேம த்யாவா ப்ருதிவி -மகா உபநிஷத்

மநோ மய பிராணசரீரே பாருப சத்யகாம சத்யசங்கல்ப ஆகாசாத்மா சர்வகர்மா சர்வகாம சர்வகந்த சர்வரச சர்வமித மப்யாத்தோ அவாக்ய அநாதர-சந்தோக்யம்

ஜ்யோதீம்ஷி விஷ்ணு

வேதாஹமேதம் புருஷம் மஹாந்தம் ஆதித்ய வர்ணம் தம்ஸ பரஸ்தாத் தமேவம் விதவா நம்ருத இஹ பவதி நான்ய பந்தா வித்யதேய நாய சர்வே
நிமேஷா ஜஞ்ஜிரே வித்யுத புருஷா தாதி ந தச்யே சே கச்சன தஸ்ய நாம மஹத் யச யா ஏவம் விதுரம் ருதாஸ்தே பவந்தி –

தமீச்வராணாம் பரமம் மகேஸ்வரம்

பராஸ்ய சக்திர் விவிதைவச்ரூயதே

சந் மூலாஸ் சோம்யே மாஸ் சர்வே பிரஜாஸ் சதாயத நாஸ் சத் பிரதிஷ்டா

சர்வம் கல்விதம் ப்ரஹ்ம தஜ்ஜலான் இதி சாந்த உபாசீதா –

அந்தப் பிரவிஷ்ட சாஸ்தா ஜனா நாம் சர்வாத்மா –

யா பிருதிவ்யாம் திஷ்டன் பிரதிவா அந்தர யம் பிருத்வீ நவேத யஸ்ய பிருத்வி சரீரம் யா ப்ருத்வீ மந்த்ரோ யமயதி தை ஆத்மாந்த்ர்யாம்ம்ய யம்ருத —

–ய ஆத்மினி திஷ்டன் ஆத்ம நோந்தரோ யமாத்ம ந வேத யச்யாத்மா சரீரம் ய ஆத்மா நமந்தரோ யமதி சதா ஆத்மாந்தர் யாம்ருத –

ய பிருதிவி மாந்தரே சஞ்சரன் —யஸ்ய மறுத்துச் சரீரம் –யம் ம்ருத்யூர் ந வேத ஏஷ சர்வாந்தராத்மா அபஹத பாபமா திவ்யோ ஏக தேவ நாராயணா தத் ஸ்ருஷ்ட்வா ததேவா நு பிராவிசத் -தத நு பிரவிச்ய -சச்சத்யச் சாபவத் –

பதிம் விச்வச்யாத்மேச்வரம் சாஸ்வதம் சிவமச்யுதம் –
ஜஞாஜ்ஜௌ த்வாவஜாவீ ச நீ ஷு-
நித்யோநித்யாநாம் சேதனஸ் சேத நா நாம் ஏகோ பஹூ நாம் யோ விதாதி காமான்
போக்தா போக்யம் ப்ரேரிதா ரஞ்சமத்வா –
தயோர் அந்ய பிப்பலம் ஸ்வாத்வத்தி அனச்னன் அநந்யோ அபிசாக தீதி
ப்ருதகாத்மானம் பிரேரி தாரஞ்ச மத்வா ஜூஷ்டச் ததச்தே நாம் ருததவ மேதி
அஜா மேகாகம் லோகித சுக்ல கிருஷ்ணாம் பஹ்வீம் பிரஜாம் ஜனயந்தீம் ஸ்வரூபாம் அஜோ -ஹ்யேகோ ஜூஷமாணோ நுசேத
ஜஹாத் யே நாம் புக்த போகாம ஜோன்ய

யஸ் சர்வஜ்ஞஸ் சர்வவித் –என்றும் -ததை ஷத –
-சேயம் தேவதை ஷத -என்றும் -சாஷாத் லோகன் நுஸ்ருஜா இதி –
நித்யோ நித்யா நாம் சேதனஸ் சேதனா நாம் ஏகோ பஹூ நாம் யோவிததாதி காமான் -ஜ்ஞாஞ்ஜௌ த்வாவஜா வீச நீ சௌ–
தமீச்வராணாம் பரமம் மகேஸ்வரம் தம் தைவதா நாம் பரமஞ்ச தைவதம் பதிம் பதீ நாம் பரமம் பரஸ்தாத் விதாமதேவம் புவ நேச மீட்யம் –
நதஸ்ய கார்யம் கரணஞ்ச வித்யதே ந தத் சமஸ் சாப்யதிகஸ் சத்ருச்யதே —
பராச்ய சக்திர் விவிதை வத்ருச்யதே ஸ்வா பாவிகீ ஜ்ஞான பல கிரியாச –
ஏஷ ஆத்மா அபஹதபாப்மா –சத்ய சங்கல்ப

ம்ருத்யோஸ் சம்ருத்யும் ஆப் நோதிய இஹ நா நேவ பஸ்யதி -யஸ்மாத் ஷரம் அதீதோஹம் –யோ மாமேவசம் மூடோஜா நாதி புருஷோத்தமம் —
ப்ருதகாத்மானம் ப்ரேரிதா ராஞ்ச மத்வா ஜூஷ்டம் யதா பச்யத் அந்ய மீசம்
ப்ரஹ்ம கார்ய தயா -தத் அந்தர்யாமி கதயா –சோமயேமோ-சத்வா பிரஜா -சதா யதனா சந் மூலா சத் பிரதிஷ்டா —
மயிசர்வமிதம் ப்ரோதம் -ஸூ த்ரே மணி கணா—தத் ஸ்ருஷ்ட்வா தத் ஏவ அநு ப்ராவிசத் —
தே நேதம் பூர்ணம் புருஷேண சர்வம் — தஜ்ஜலான் —-தத் ப்ரத்ய நீக்க நாநாத்வமிதி -தத் ப்ரத்ய நீ கேதி-
நேஹ நா நாஸ்தி கிஞ்சன –ஏக தைவ அநுத் ரஷ்டவ்ய மிதி ஏகதா ஏக தயா —

கடத்வம் சே கடாக ஸோன பின்னோ நபசோ யதா –ப்ரஹ்மணா ஹேய வித்வம் சே விஷ்ண வாக்ய ந ததா புமான் –என்று ஸ்ரீ சௌ நக பகவான் வசனம் –
கடம் உடைந்து கடாகாசம் ஆகாசதுடன் ஒன்றுவது போலே ஜீவர்கள் ஹேயங்கள் நாசம் அடைந்த பின்பு ப்ரஹ்மத்துடன் ஒன்றி விடுகிறார்கள்
யத அக்னிர் அக்னௌ சம்ஷிப்த சமானத்வம் அனுவ்ரஜேத்-நெருப்பில் போட்டதைக் கொண்டு சாம்யம் ஆவது போலே -ஏகம் சமஸ்தம் யதி ஹாஸ்தி கிஞ்சித் தத் அச்யுதொ நாஸ்தி பரந்ததோ அந்யத்-
சர்வமேததாத்மா ஸ்வரூபம் இத்யே நே ந –அஹம் -தவம் -சர்வம் –மூன்றும் பிரகார ஐக்யம் சொல்வதில் நோக்கு –

உபயே பிஹி பேதே நை ந மதீயதே —
பேத வ்யபதே சாச்சன்ய-
அதி கந்து பேதே நிர்தேசாத் —இது முதலிய ஸூத்ரங்களிலும்
ய ஆத்ம நிதிஷ்டன் நாத்ம நோந்த ரோய மாத்மா நவேத யச்யாத்மா சரீரம் ய ஆத்மா நமந்த ரோயமாதி -என்று எவன் ஆத்மாவின் இடத்தில் இருக்கிறானோ
ஆத்மாவுக்குள் நிலை பெற்று இருக்கிறானோ -எவனை ஆத்மா அறிகிறான் இல்லையோ -எவனுக்கு ஆத்மா சரீரமோ -எவன் ஹிருதயகமலத்தில் இருந்து நியமிக்கிறானோ–ப்ராஜ்ஞே நாத்மநா சம்பரிஷ்வக்த -ஸூ ஷூப்தியில் ஆலிங்கனம் செய்து கொள்கிறான் -ஸ்வரூப ஐக்கியம் இல்லை

ஜகத்வ்யாபார வர்ஜனம் ப்ரகரணாத சந்நிஹிதத்வாச்ச —
போக மாத்ர சாம்ய லிங்காச்ச
முக்தோபஸ்ருப்ய -வ்யபதேசாச்ச –
ஜகத் வியாபார வர்ஜனம் சாமானோ ஜ்யோதிஷா –
தேவதா சாயுஜ்யாத சரீரஸ்யாபி தேவதாவத் சர்வார்த்தசித்திஸ் ஸ் யாத் —
ய இஹாத்மான மனுவித்ய வ்ரஜந்த்யே தாம்ச சத்யான் காமாம்ஸ் தேஷாம் சர்வேஷூ லோகேஷூ காம சாரோ பவதி –
ப்ரஹ்ம விதாப் நோதி பரம் -என்றும் -சோஸ்நுதே சர்வான் காமான் சஹ ப்ரஹ்மணா விபச்சிதா —
ஏதம் ஆனந்தமய மாதமா நமுப சங்க்ரம்ய-
-இமான் லோகன் காமான்ணீ காம ரூப்ய நு சஞ்சரன் -என்றும் ச தத்ர பர்யேதி –
-ரசோவைச ரசம்ஹ்யேவாயம் லப்த்வா நந்தி பவதீ -என்றும் -யதா நத்யசயந்தாமானாஸ் சமுத்ரே அஸ்தம் கச்சந்தி நாமே ரூபே விகாயா
ததா வித்வான் நாம ரூபாத் விமுக்த பராத்பரம் புருஷம் உபைதி திவ்யம் –
ததா வித்வான் புண்ய பாபே விதூய நிரஞ்சன பரமம் சாம்யம் உபைதி –

ஆனந்த தய பிரதானச்ய —
விகல்போ விசிஷ்ட பலத்வாத் –
–யுக்தம் தத் குண கோபாச நாத் –என்று பாஷ்யகாரர் வியாக்யானம்
யத்யபி சச்சித்த —
-ப்ரஹ்ம வேத ப்ரஹ்மைவ பவதி –
-நாம ரூபா விமுக்த பராத்பரம் புருஷம் உபைதி திவ்யம் –
– -ஷேத்ரஜ்ஞ கரணி ஜ்ஞானம் கரணம் தஸ்ய வைத்விஜ-நிஷ்பாத்ய முக்தி கார்யம் ஹி க்ருதக்ருத்யம் நிவர்த்த்தயேத்–
தத்பாவ பாவமன்ன ஸ் ததா சௌ பரமாத்மனா பவத்ய பேதீ பேதச்ச தஸ்யா ஜ்ஞான க்ருதோபவத்–தத் பாவம் -ப்ரஹ்மத்தின் உடைய பாவம் -ஸ்வ பாவம் -ஸ்வரூப ஐக்யம் அல்ல – —
ஆனந்த தயா பிரதானச்ய -விகல்போஸ் விசிஷ்ட பலத்வாத் –தத்பாவ பாவித்வாத் அதிகரணம்

-ஏக ஸ்வரூப பேதஸ்து பாஹ்ய கர்மவ்ருதி ப்ரஜ–தேவாதி பேதஸ் பத்வச்தே நாஸ்த்ய நா வரணோ ஹி ச
விபேத -ஜனகே அஜ்ஞ்ஞான நாசமாத் யந்திகம் கதே -ஆத்மனோ ப்ரஹ்மணோ பேதமசந்தம் க கரிஷ்யதி —
சௌ நகரும் -சதுர்விதோ அபி பேதோ அயம் மித்யா ஜ்ஞான நிபந்தன —
அவித்யா கர்ம சம்ஜ்ஞான்ய –ஷேத்ரஜ்ஞ்ஞாபி மாம் வித்தி —
ஈச்வரஸ் சர்வ பூதானாம் ஹிருத்தேசேர் அர்ஜுனா திஷ்டதி —
சர்வச்ய சாஹம் ஹ்ருதி சந்நிவிஷ்ட -என்றும் -அஹமாத்மா குடாகேசா சர்வ பூதா சயஸ் ஸ் தித —

———————————————————————————————————

கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஆசார்யர்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேத வியாசர் திருவடிகளே சரணம் .
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ கீதா பாஷ்யம் -சாரம் –

September 27, 2015

அறிவினால் குறை இல்லா –நெறி எல்லாம் எடுத்து உரைத்தான்
அர்ஜுனன்  வியாஜ்யம் -கன்றுக்கு கொடுக்கும் பால் நமக்கும்
சு கீதா -பெண் பால் சொல்
உபநிஷத் தேனு பெண்ணாகா
மாலை இசை உடன் தொடுத்த
இசைப்பா

சேயன் அணியன் -சிரியன் மிகப் பெரியன் ஆயன் துவரைக் கோனாய் நின்றான் -மாயன் -அன்று ஓதின வாக்கு –

கரும்பின் தோகை போலே கீதா சாஸ்திரம்
அவதாரம் வேர் போலே –
பால சேஷ்டிதம் -நாடு பாகம் -நிறைய அனுபவம்  -அருளிச் செயலில்

இரண்டும் கண் போலே
கீதை
விஷ்ணு சஹஸ்ரநாம அத்யாயம்

-சாரம் இரண்டும்
கீதை பொருளை சொல்ல வந்ததால் ஏற்றம் இதுக்கு
700 ஸ்லோகம்
பீஷ்ம பர்வம்
சேனைகள் நடுவில்
புருஷ சூக்தம் -வேதங்களில் போலே
தர்ம சாஸ்திரம் மனு தர்ம சாஸ்த்ரம்
பாரதம் -கீதை 125000 லஷம் ஸ்லோகங்கள் உள்ள பாரதத்தில் இது சாரம்
விஷ்ணு புராணம்
திரட்டு பால் போலே கீதை

பராசரர்  வியாசர் சுகர் -பரம்பரை -கை தொழும் பிள்ளையை பிள்ளை -தெள்ளியீர் பதிகம்
கிருஷ்ணன் கடைந்தது திருப் பாற் கடலை
கிருஷ்ண த்வை பாதாயநர் மதி மந்தர பர்வதம் நட்டு
கிருஷ்ண த்ருஷ்ணா தத்வம்   மறை பாற் கடல் நாக்கு பர்வதம்
பாம்பணை பள்ளியான் அன்பர் ஈட்டம் ஆனந்த பட -கழல் அன்னி சென்ம விடாய்க்கு நிழல் இல்லையே –

விராட பர்வம் அர்ஜுனன் சக்தி விசேஷம்
தசானன் கோ க்ருகணம் வன பங்கம்
எதுக்கு -அடியைப் பிடி பாரத பட்டா -நான்கு இல்லை கேட்பதே புருஷார்தம்
வைசம்பாயனர் –
சுகர் பரிஷித் உபதேசம் போலே

பரமன் அடி பாடி நெய் உண்ணோம் உண்ணார்க்கு உண்ண வேண்டாம் இ றே -பிரபந்த வை லஷண்யம்
கண்ணனே அருள்
அதி சுருக்கமும் இல்லை விஸ்தாரமும் இல்லை 700 ஸ்லோகம்
திரட்டு போலே
கங்கா கீதா காயத்ரி கோவிந்தா -நான்கு ககாரங்கள்

அனுஷ்டுப் சந்தஸ் வெண்பா போலே 32 எழுத்துகள் -கண்ணன் சொல்லி வேத வியாசர் எழுதி வைத்து என்பர் –

பொறாமை உள்ளவர் இடம் சொல்லாதே
பக்தி இல்லாதவன் இடம் சொல்லாதே
பரிட்சை வைக்காமல் கண்ணன் கொட்டி
த்ரௌபதி விரித்த குழலை காண முடியாமல் கொட்டி
பதன் பதன் என்று -பட்டர்

வக்தா ஸ்ரோதா வை லஷண்யம் –
சாஸ்திர அர்த்தங்கள்
குடாகேசன் தூக்கம் வென்ற அர்ஜுனன்-ஊர்வசி வந்தாலும் தாயைப் போலே பார்ப்பான்-கேசவச்ய ஆத்மா -சகா
ஒரே படுக்கை
தத்வ ஹித பரம் உபநிஷத் /ஸ்ம்ருதி /
பிரஸ்தான த்ரயம் இம் மூன்றும்
தத்வ ஹித புருஷார்த்தம் மூன்றையும் சொல்லும் கீதை
மூன்று ஆகாரம் அவனே பரதவ வேஷம் தத்வம்
போக்யதா விசிஷ்டன் புருஷார்த்தம்
ஹிதம் -பிரசாத விசிஷ்டன்

ஆளவந்தார் சம்ப்ரதாயம் கொண்டு வந்ததே ஸ்ரீ கீதா சாஸ்த்ரம்
எத் பதாம்-ஆரம்ப ஸ்லோகம் -வஸ்து ஆனதே இவரால்
கீதார்த்த சந்க்ரகம்

அருள் கொண்டு ஆயிரம் இன் தமிழ் பாடினான்
கண்கள் சிவந்து -தன்னைக் காட்டி ஆத்மாவின் சிறப்பை சொல்லி அருளி
ஸ்ரீயபதியாய் நிகில ஹேய ப்ரத்ய நீகனாய்
கல்யாண குணா ஏக தானனாய்
அகில -நிகில
அமலன் நிமலன் விமலன் நின்மலன்
சீரிய நான் மறைச் செம்பொருள் –தரிக்க வைத்த பாண் பெருமாள்
ஸ்வரூப ரூப குண விபூதி -பன்ன பன்ன பணித்து பரண் இவன் என காட்டி அருளி

உபய லிங்க விசிஷ்டன் அடையாளம்
உபய விபூதி –
ஸுவ இதர சமஸ்த வஸ்து விலஷணன்
ஒத்தார் மிக்கார் இலையாய மா மாயன்
தரித்திரன் –

ஞான ஆனந்த ஸ்வரூபமாய் –

பஞ்ச கோசம் -அன்னம் -பிராணன் -மநோ -விஞ்ஞானம் ஆனந்தம்
உணர் முழு நலம்
முழு உணர்
முழு நலம்
சர்வஞ்ஞ்த்வம்
அநந்த திரிவித பரிச்சேத ரஹீதன் காலம் -தேசம் -உருவம் வஸ்து
உத்தி –  சமுத்ரம் கல்யாண குண கடல்
ஸ்வா பாவிகம் இயற்க்கை வந்தேறி இல்லை
அநவதிக அள்ள அள்ள குறை இல்லாத ஆரா அமுதம்
அதிசய மாகாத்ம்யம்

குண ராசி சொல்லி அருளி
அடுத்த சூர்ணிகை திவ்ய மங்கள விக்ரகம்   -ஸ்வரூப குணங்கள் விட
வேதாந்தம் அப்படி அப்படி ஸ்வரூப குணங்களை காட்டும்
ஆழ்வார் ஆச்சார்யர் ரூப குணங்களையே சொல்லி நம்மை ஈர்க்கும்

அஸ்த்ர பூஷண அதிகாரம் பராசர மகரிஷி விஷ்ணு புராணம்
புருடன் மணி வரமாக கௌஸ்துபம்-ஸ்வரூப ரூபா குண விபூதி விளக்கி-

பர ப்ரஹ்மம்- சர்வ சாமானாதி காரண்யம்
புருஷோத்தமன் -சர்வ வை லஷ்ண்யம்
நாராயணன் – சர்வ அந்தராமி
சகல மனுஜ நயன-விஷயம் ஆக  அவதரித்து அருளி

பரம புருஷார்த்தமான கைங்கர்ய சாதனதயா பக்தி யோகம்அருளி
அர்ஜுனன்  வியாஜ்யம்
அங்கம் ஞான கர்ம யோகம்
அவதாரிகை

ச -அந்த பகவான் கல்யாண குணங்கள் மிக்க
சர்வேஸ்வர ஈஸ்வர -ஐந்து விரல்
அபுருஷன் அசித் தொடங்கி
புருஷோத்தமன் -எண்ணிலும் வரும்

உபய பிரதானம்
அர்ஜுனன் தேர் தட்டு
பிரணவம்
ராச கிரீடை
ஆழ்வார் ஆதி நாதர் திருக் கோயில்

சஜாதீய
விஜாதீய
சுவகத–மூன்றும்
பேதம் இல்லை -அத்வைதி நிர்குண நிர்விசேஷ ப்ரஹ்மம்
அநிர் வசநேயம்  -சின் மாத்திர ப்ரஹ்மம்
அறிவு  அறிவாளி அறியப் படும் பொருள் மூன்றும் இல்லை
அறிவு மட்டுமே
தந்தை -பிள்ளை உண்டே
சர்வேஸ்வரன் என்றாலே ஆத்மா வேற தான்
நியமிக்கப் பட வேண்டுமே
ஆத்மாக்கள் பலர்
விசிஷ்ட அத்வைதம் -பிரகாரி -பிரகாரம் –
கூடினது
அசித் சரீரம் -ஞான சூன்யம்
சைதன்யம் ஆத்மா
அத்வைதம் கொஞ்சம் கிட்டே
த்வைதம் ஆத்மா ஸ்வ தந்த்ரம் என்பதால்
சித்தி த்ரயம் சோழ தேசன் திருஷ்டாந்தம் ஆளவந்தார்
உனக்கே இல்லை எனபது இல்லை
உன்னைப் போலே இல்லை
பிரகாரி அத்வைதம்
பிரகாரத்திலும் அத்வைதி
நாமும் அவன் போலே
நம்முக்குள்ளும் வாசி உண்டே
இமே ஜனா பொது சொல் ஆத்மா -ஒரே சொல்லால் சொல்லலாம் ஆகாரம் ஒத்து இருக்கும்

லோகோ பின்ன ருசி –
சரீரத்தால் வேறு பாடு உண்டே
தேசிகன் பால் -ஒரே வர்ணம் பசு மாடுகள் பல நிறமாக இருந்தாலும் –
சரீரமும் கர்மாமும் வேறு படுத்தும்
சேஷ பூதன் ஆத்மா
புல்லாங்குழல் -ஸ்வரம் த்வாரம் வாசி போலே -ஒரே காற்று தான் –

பாரமார்த்திகம் -உண்மை
ஐக்கியம் இல்லை –
அவர் அவரே நாம் நாமே
கேசவ நம்பியைக் கால் பிடிப்பாள் அங்கும்

பாரமார்த்திக நித்ய தத்வ உபதேச சமயத்தில்
பேதமே சித்தாந்தம்
அனுப பந்தி
வேதாந்தம்
தர்க்க ரீதியாகவும் காட்டி அருளி
புலி விரட்டி -சிஷ்யர் –
அனைத்தும் பொய் –
ஔபாதிக
ப்ரஹ்மத்துக்கே  அஞ்ஞானம்
ஓன்று என்று அறிந்து மோஷம்
உபாதி பட்டு பிரதி பிம்பம் சந்தரன்
உபாதியும் பொய் -சங்கரர்
பாஸ்கரர் உபாதி உண்மை –
ப்ரஹ்மம் குணம் யாதவ பிரகாசர் ஒத்துக் கொண்டு
குரங்கின் ஆசன  வாயைப் போலே கண் என்றார் –

தேகம் வேறு பட்டதால் பகு வசனம் -சங்கரர்
மரம் கிளை மேலே இருந்து வேரை அறுப்பது போலே

கண்டு கேட்டு உற்று -ஒவ் ஒன்றுக்கும் ஒவ்வாமை காட்டி அருளி
உபதேசமே -பொய்யா -விகல்பம்
தாத்பர்ய சந்த்ரிகையில் விளக்கி ரஷித்து கொடுத்த சம்ப்ரதாயம் –
பாதித அனுவிருத்தி
தண்ணீர் குடிக்காமல்
புடைவை உடுத்தாமல்
அஞ்ஞானம் -கண் நோய்
அவித்யா கண் நோய் பலவாக காட்சி கொடுக்கும் –

நித்யம் சாமான்ய ஞானம் பிறந்து
கர்மம் அனுஷ்டித்து
த்ரிவித த்யாகம் உடன் அனுஷ்டித்து
அனுஷ்டானம் சித்த சுத்தி பெற்று
ஆத்மா சாஷாத்காரம் பெற படிக் கட்டுகள்
நத்வே –2-12 ஸ்லோகம்
நான் நேற்று இருந்தேன் அல்லேன் எனபது இல்லை
பவிஷ்யாம் நாளைக்கு இருப்போம் அல்லோம் என்பதும் இல்லை
பாதித அனுவ்ருத்தி -ஓன்று -அஞ்ஞானம்
த்வி சந்திர –கண்ணில் நோய் -இரண்டாவது விகல்பம் பார்த்தோம்
மகா வாக்கியம்
தத் த்வம் அஸி
ஸ்வேதகேது பிள்ளைக்கு  உத்தாலகர் வார்த்தை-

ஐக்கிய ஞானமும் -அத்விதீய ஞானம் -அபேத ஞானம் –
பேத ஞானமும் பொய் தானே
இரண்டும் அவித்யையால் பிறந்தது
ஆசார்ய சிஷ்ய பாவமும் ஒவ்வாதே
பிரதி பிம்பம் -கண்டு
நான் -என் பிரதி பிம்பம் -புத்தி சுவாதீனம் மூன்றும் அறிவோமே
பேச மாட்டோமே பிரதி பிம்பத்துடன் –
அவித்யையும் பொய் -அத்வைதம்
உபாதி இல்லையே –

ஸ்வரூப ஞானம் -சுயம் பிரகாசம்
தர்ம பூத ஞானம்
ஞான ஸ்வரூபமாய்
ஞான குணமாய் -இரண்டு ஆகாரம் உண்டே

வேத விசாரம் –
பெரிய சித்தாந்தம் -அனுபபத்தி ஏழும் ஸ்ரீ பாஷ்யம் அருளிஜிஞ்ஞாச அதிகரணம் அவதாரிகை
சப்த வித அனுபபத்தி ஒவ்வாமை
ஆஸ்ரய அனுப பத்தி
திரோதான
ஸ்வரூப
அநிர் வச நீயா
பிரமாண
நிவர்த்தாக
நிவ்ருத்தி

சத் பாவம் -அசத் பாவம்
தேகாந்தர  பிராப்தி -ஆத்மா சரீரம் பாவம் -ஷட் பாவ வேறு பாடு இல்லையே

நித்யம் -வ்யாபகத்வம்
ஏக ரூபம்
அவயவங்கள் கூட இருப்பதால்
போத்ருத்வம் -ஷேத்ரஞ்ஞன்
அப்ரமேயம் -அறியும் ஆத்மா

பஷ்யம் சாத்தியம் ஹேது அனுமானம்
மலை நெருப்பு புகை

தார்க்கிக் சிம்மம் தேசிகன் பர பஷ நிரசனம்

சப்த ஸ்பர்சாதிகள் அவயவம் இல்லா ஏக ரூபம்
பூநிலா ஐந்துமாய்–ஒன்றுமாய் – -இவை அநித்தியம்
மகான் அகங்காரங்கள் அப்படி -இவை அநித்தியம் வ்யாப்தி இல்லாமல்
இப்படி ஆஷேபம் செய்ய
த்ரவ்யம்
குணம் கோஷ்டி -சப்தம் ஸ்பர்சாதிகள்

இரண்டாம் அத்யாயம்
11-12-13 ஆத்மா நித்யத்வம் தேகம் அநித்தியம் –
11 -அவதாரிகை
12 நித்யம்
தேகம் அநித்தியம் 12
14–15- பொறுத்துக் கொள்ள சீத உஷ்ண சுகம் துக்கம் அநித்தியம்
16 25 ஆத்மா நித்யம் தேகம் அநித்தியம் விளக்கி தத்வ தர்சன
இது காறும் சொன்ன வற்றால் சோகம் படாதே
26 27 28 -பிரதி பஷ நிரசனம் -சாறு வாக மதம்
29 ஞானி பெருமை சொல்லி
கோடியில் ஒருவன் பார்க்கிறான்
அதிலும் கோடி யில் ஒருவன் பேச
அதிலும் கோடி யில் ஒருவன் உணர்கிறான்
30 சமமான ஆகாரம்
31-சு தர்ம அதர்ம வியாகுலம் தவிர்த்து
34 வரை
35 36 37 சிநேகம் எங்கே காட்ட வேண்டும்
அன்பை பார்க்க
யுத்தம் ஆரம்பம் ஆனபின்பு ஆஸ்தான சிநேகம்
38 கர்ம யோகம் -சுக துக்கம் லாபம் அலாபம்
யுத்தத்தின் பொருட்டு
போவான் போகின்றாரை
கர்த்தா அல்லை -அடுத்த விஷயம் ஆவலைத்தூண்ட
39 -கர்ம யோக மாகாத்ம்யம்,52 வரை இதே
53 54 -ஸ்தித பிரதிஞ்ஞன் ஞான யோகம் சொல்லி நிறுத்தி விட்டான்
அடுத்த விஷயம் ருசிக்க இதுவும்
கொண்டாடி -சொன்னதை கேட்டாய்
அசலஞ்சனமான புத்தி
ஞான யோகம் அத்தை விட
ஞான யோகி பற்றி
பெருமை சொல்லி அது போல ஆக தூண்டி
55-
58 நான்கு தசைகள்
அனுஷ்டிக்க இடையூறு
78 ஸ்லோகம் வரைஞான யோகம் விளக்கி
புத்தி மோஹம் செய்தாய்
ஸ்ரேயஸ் எது
இரண்டில் ஓன்று நிச்சயப் படுத்தி சொல்லு

சாங்க்யம் நித்யம் ஆத்மதத்வம் நித்யம் 30 ஸ்லோகம் வரை
கர்ம அனுஷ்டானம் மோஷ சாதனம் மேலே
உபாயம் அனுஷ்டிக்க அதிகாரம் தேவை

சாங்க்ய யோகம் இதுக்கு இதனால் பெயர்
மூன்றாவது கர்ம யோகம்

சர்வ கர்ம சமாராதனாய் -12 -அத்யாயம் -காண்டம் கர்ம பாகம்
அடுத்து சர்வ தேவதா -தேவ பாகம்
அந்தர்யாமி நாராயண -ப்ரஹ்ம பாகம்
ஆக 20 அத்யாயம் காண்டம் –

மனஸ் வேற புத்தி வேற
மகான் மூலம் புத்தி
அதனால் மமகாரம் அஹங்காரம் தொடர்பு

அவாந்தர பலங்களில் சம புத்தி
இறுதி பலத்தில் த்யாஜ்ய புத்தி
ஐவர் உண்டே ஆத்மா பிராணன் இந்த்ரியங்கள் மனஸ் பரமாத்மா கார்யம் செய்ய

பிரதான பல த்யாக
அவாந்தர புத்தி சமத்வ புத்தி
புத்தி யோகம் உடன் கூடிய கர்ம யோகம்  உத்கர்ஷம் -மோஷம் ஹேது -நிகில சாம்சாரிக்க துக்கம்
பரம புருஷார்த்த மோஷம் ஹேது

ஞானம் தான் சாதனமும்  பலமும்  கர்ம யோகத்துக்கு
சாமான்ய அறிவு
பரி பக்குவம் ஆனபின்பு
ஆத்மா ஞான மாயன்
சாமான்ய ஞானம் கொண்டு கர்மா யோகம் தொடங்கி
ஞான யோகம் அடைகிறோம்  –

பிரயத்ன தசை முதல் நிலை இந்த்ரியங்களை இழுத்து யஜமான சம்யா
வ்யதிரேகா சம்யா- வாசனை ஒட்டி இருக்கும் வேறுபடுத்தி அறிந்து கழுவி விட -அடுத்த நிலை
மனஸ் விலக்கியது அடுத்த
மனஸ் வாசனை விலக்குவது வசீகார சம்யா இறுதி நிலை
ஜித பிராஞ்ஞன் நான்கு பெயரையும் கண்ணன் பிடிக்கும் என்கிறார் –

நிர் அஹங்காரம் முதல் படி ஆத்மாசஷத்காரம் -நான் செய்தேன் என்கிற எண்ணம் இன்றி
நிர் மமகாரம் -என்னது என்ற எண்ணம் விட்டு
அப்படியானால் ஆசை போகுமே -பீத ராகம் இன்றி
பலம் ஆசை போனால் விஷயம் போகுமே
அப்புறம் ஆத்மசாஷ்ஹாத்காரம்
கூர்மம் போலே அஹங்காரம் இன்றி அடக்கி
விஷயான் வர்ஜ-
அவரோஹனம்
விஷய அனுபவம் தொலைய
ஆசை விட்டு
என்னுடைய மமகாரம் விட்டு
அஹங்காரம் விட்டு –

ஆத்மா தர்சனம் பக்திக்கு அங்கமே -ஹர்ஷம் சோகம் தவிர்த்து -பரவித்யை அங்கம் –
பிரத்யக் ஆத்மா ஸ்வரூபம் -தனக்கு தானே பிரகாசிக்கும் ஆத்மஞானம்
கடவல்லியிலேயும் இப்படி சொல்லிற்று
அத்தை விளக்கவே கீதா ஸ்லோகம்
ஒரே சப்தம் மாற்றி
ந ஜாயதே பிறப்பதும் இல்லை அழிவதும் இல்லை
ஆசை தூண்டி
அவனே பரமாத்மாவின் சரீரம்
அநூர் அணியான் -மகதோ மகியான் ஆத்மா குஹைக்குள் இருப்பவன் –

உபாசனம் சொல்லி –
யாரை வரிக்கிரானோ அவனுக்கு காட்டி
நாயமாத்மா சுருதி
ச்நேஹம் பூர்வ பக்தி
பிரீதியே சிநேகம்
தத் விஷ்ணோ பரமம் பதம்
விஞ்ஞானம் சாரதி
மனஸ் கடிவாளம் –
ஆறு வாக்யங்கள் கடவல்லியில் அங்கு அங்கு இருப்பதை சேர்த்து -ஸ்ரீ பாஷ்ய காரர் –
பர வித்யை கடைசி பலம் -7 அத்யாயம் பக்தி யோகம் அருளி
6 வரை ஆத்மா தர்சனம் சொல்லி

ஜனார்தனன் கேசவன் சப்தம் வைத்தான் அர்ஜுனன்
உன்னுட்டைய பிரயோஜனத்துக்கு என்னை உபயோகித்து

இஷ்டான் போகான் -தேவர்கள் தங்கள் இஷ்டமான போகங்களை ஆராதனதுக்கு அருள
அன்யதீயே தத் பிரயோஜநாயா -வஸ்து ஸு புத்தி பண்ணி ஸூ போஷணம்   செய்வது திருட்டு

அன்னம் சுழல் சக்கரம் -குரு பரம்பரை போலே  அன்ன பரம்பரை
ஆராமம் தோட்டம்
இந்த்ரியாராமன்
ஆத்மா ராமன்
ஈடுபாடு -திருப்தி- சந்தோசம் மூன்று நிலை

த்ரீ லோகேஷூ -மூன்று யோனி-ஸ்தாவாரம்-கண்டு பின் பற்றுவார்  இல்லையே
தர தமம் ஸ்ரேஷ்ட தமம் -சாஸ்திரம் அறிந்து அனுஷ்டித்து பிறர் புலந்து பின் பற்றும் படி
வாசுதேன் பிள்ளை -நம்பி பின் பற்றுவர்
அதானால் கர்மம் செய்து காட்டி அருளி

அசக்தி
லோக ரஷை
குணத்தின்
சர்வேஸ்வரன் தலையில் ஏத்தி
ஆளவந்தார் ஸ்லோக வாக்கியம் படி ஸ்ரீ கீதா ஸ்லோகங்களை பிரித்து அனுபவிக்க வேண்டும்

உக்தாயா -கர்ம யோகம் யுகத சமாச்ரையன்
கர்ம யோகம் நேராக
சமாசரண் நன்றாக நடத்திக் கொண்டு

கர்த்தா சாஸ்த்ராத்வத்வாத்-கர்த்தா அல்லன் குணங்கள் தூண்ட –
அதுவும் அவன் நிர்வாகம்  எனபது அடித்த நிலை –
பராரத்து-சூத்ரம்  -அந்தர் ஜுரம் நீக்கி விரோதம் தவிர்த்து –

குணங்கள்  தலையில் ஆரோபித்து
ந்யச்ய -திருவடிகளில் சமர்ப்பித்து -சரீரம் தயா -என்கிற புத்தி
கொல்லை அரக்கியை மூக்கரிந்திட்ட குமரனார்
சொல்லு வார்த்தை பேச்சு -மூன்று சரம ஸ்லோகங்கள்

கர்த்ருத்வம் பரார்த்தம் -து காரம் வேறு  பாடு தோற்ற   சுருதி சொல்லுகிற படியால்

ரத்னமணி போலே இறுதி 7 ச்லோஹங்கள் -37 ஸ்லோகம் முக்கியம்
-காமம் ஆசையே குரோதத்துக்கு காரணம்
எத்தனை தீனி போட்டாலும் நீங்காத ஆசை

அக்னி புகை
கண்ணாடி தூசி
கர்ப்பம்
மூன்று உதாரணங்கள்
பிரபலம் காமம் ஆத்மா சம்பந்தம் காட்ட
துர்லபம்
அனலம் போதாது பேராசை
அவனாலே தான் போக்கிக் கொள்ள முடியும் காட்ட

தர்ம பூத ஞான சுருக்கம்
ஆத்மஞானம் மறைத்து
விஷய ஞானம் மறைக்காமல்

பர பிரத்யனத்தில் இருந்த ஆழ்வாருக்கு
பரமாத்மாவை பற்றி அருளி
பின்பு ஜீவாத்மா பற்றி கண்கள் சிவந்து
இங்கே அர்ஜுனன் சுயத்ன த்தில் இருந்ததால்
ஆத்மா சாஷாத்காரம் சொல்லி பின்பு பரமாத்மா சாஷாத் காரம் அருளுகிறான்
நித்ய நிருபாதிக சம்பந்தம் -அவனது

ஏகத்வம் பிரகாசத்வம் அனுகூலத்வம் -ஸ்வரூப நிரூபிதக தர்மம் -இன்னது
நிரூபித்த ஸ்வரூப தர்மம் -இனியது
அணு மாதரம் கர்த்தா போல்வன

இந்த்ரியம்
மனஸ்
புத்தி
காமம்
விரோதிகள் படிக்கட்டு -விஷயங்கள் ஆத்மா பரமாத்மா
சேர்த்து கடோ உபநிஷத் -வசீகார பிரக்ரியை

அவதார ரகசியம் அறிந்த பக்தி யோக நிஷ்டனுக்கும் பிரபன்னன் போலே சரீர அவதானத்திலே பரம பிரா ப்தி
ஜன்ம கர்ம மே திவ்யம் -சங்கை இல்லாமல் அறிந்தவன்
ஐயம் திரிபுர -மறு ஜன்மம் அடைய மாட்டான்

பிறந்தவாறும் -இரண்டாவது ஆறு மாசம் மோகம்
கண்கள் சிவந்து மூன்றாவது
கிடந்த வாறும் நின்றவாறும் இருந்தவாறும்
அர்ச்சை –
விபவம்
தொட்டிலிலே

கர்ம -விகரம -அகர்ம-
முதல் பத்து ஞானம்
ஞான பலன் பக்தி இரண்டன் பத்து
பக்தி தூண்ட கைங்கர்யம் மூன்றாம் பத்து -கீதாசார்யன் அருள் கொண்டே அருளினான் மாறன்
பஸ்யதி-உணர்ந்து
மனஸ்
உறுதி
ஞானம்
புத்தி -தர்ம பூத ஞானம்
மனஸ் நினைவின் இருப்பிடம்
மனஸ் என்னுடையது அஹங்காரம்
நினைப்பது சித்தம்
மனஸ் உறுதி  கொண்டால் புத்தி
சித்தம் அடக்கி -நினைவு அடக்கி
அத்யவசாய -உறுதியான எண்ணம் புத்தி
அபிமானம் -அஹங்காரம் விட்டு
சிந்தனை
மூன்று நிலை மனஸ் –

போக்கியம்
போக உபகரணம்
போக ஸ்தானம்
மூன்றிலும் ஆசை இல்லாமல் -இங்கே –
பரம பதத்தில் மூன்றும் உத்தேச்யம் கதய த்ரயம்
புலன் அடக்கம்-

யத்ருச்சா லாப சந்துஷ்டா -கிடைத்ததை கொண்டு திருப்தி
துவந்தம் -சுகம் துக்கம் சீதம் உஷ்ணம் விகாரம் இல்லாமல்
மாத்சர்யம் இல்லாமல் அசூயை
சம புத்தி தோல்வியோ  ஜெயமோ
நான்கையும்   சொல்லி
கர்மாவை செய்தாலும் சம்சாரத்தில் ஒட்டா மாட்டான்
22 ஸ்லோகம் 4த் அத்யாயம்
ஞானாகாரமாக பார்ப்பவன்-

21-24 ஸ்லோகம் ஒரு பிரகரணம்
கர்மம் ஞானம் ஆகாராம் விளக்கி
ஆத்மா யாதாம்ய ஞானம் உடன் கர்மம் செய்து -ஞானாகாரம் ஆகும் –
கர்ம உபகரணங்கள் ப்ரஹ்மாத்மகம் என்ற ஞானம் கொண்டு செய்தாலும் -அதுவும் கர்மா ஞானாகாரம்

கர்ம யோகம் – பல வித  முறைகள் அடுத்த பிரகரணம்

25 ஸ்லோகம் தொடங்கி
ஊற்றம் ஒவ் ஒன்றிலும்
நாயனார் திவ்ய தேச குணங்கள் காட்டியது போலே
தெய்வ ஆராதனம் முதல் வகை
நித்ய திருவாராதானம் -சாஸ்திர வசப் பட்டு
யக்ஞம் செய்து ஹவிஸை கொடுத்து -சற்றுக் முதலான உபகரணங்களால் கொடுத்து ஹோமம் செய்வதில் ஊற்றம் –

பீதி இல்லாமல் ப்ரீதி உடன்
த்வாரகை திருவாராதனம் போலே

விஷயங்கள் இந்திரியங்கள் புலன் அடக்கம் மனஸ் ஆகுதி கொடுப்பது அடுத்து அடுத்த நிலை
ஆத்மா யாதாம்ய ஞானம் இதை தூண்ட

திவ்ய தேச வாசம்
வேத அத்யாயனம்
அர்த்தம் அறிய முயல்பவர்கள்
பிராயாணம்   –

லஷணம் -ஞானாகாரம் அறிந்து
13 -வகை -பேதம் -தேவ  ஆராதனம் -பிராணாயாமம் வரை -25-29-ஸ்லோகம்
புரிந்து கொண்டு
நித்ய நைமித்திய கருமங்களை பண்ணி ஆளுக்கு போக்கி ஊற்றம் உடன் கர்ம யோகம் செய்ய –
இனி ஞான பாக மகாத்மயம் அருளுகிறார் -33 ஸ்லோகம் தொடங்கி-ஞானச்ய மாஹாத்ம்யம் –

விசிஷ்ட வேஷம் -சரீரத்துடன் சேர்ந்து
நிச்க்ருஷ்ட  வேஷம் -ஆத்மா
ஞானா காரத்தால் சாம்யம் பரமாத்மாவுடன்-

கடல் கடக்க நாவாய்
ஆத்மா ஞானம் இல்லாதவன் கடலில் முழுகுவான்
ஓட்டை உள்ள ஓடம்
விறகு அடுப்பு உதாரணம்
அவசியம் அனுபவ நாச்யம்
ஞானம் என்னும் அக்னியில் எரித்து கொள்ளலாம் -37 ஸ்லோகம்

ஞானாக்னி கண்ணால் பார்க்க முடியாது
அத்தால் வரும் நிரதிசய ஆனந்தம் உணர்ந்தே அறிய முடியும்  –

ஒன்பது வாசல்
11 வாசல்
நாபி
101 நாடி உச்சி -பிராமரத த்வாரம்
ஏகாதச
எங்கும் சென்று எங்கும் வர –
ரராஜ புத்திரன் -ஆத்மா நிரதிசய ஆனந்த ரூபமாய் இருக்க
செய்வேனும் அல்லேன் செய்விப்பனும் அல்லேன்
சன்யாச அத்யாயம் ஐந்தாம்

கர்த்ருத்வம் பிரயத்ன ஆகாரம் ஞானம் கொண்டே முயல்கிறோம்
கர்த்தா சாஸ்த்ரத்வத்யாத் –

தேஷாம் -பகு வசனம் விசிஷ்டாத்வைதம்
உபக்கிரமம் பேசப் பட்டது விவரித்து –
பகுத்வம் உபாதி யாழ் ஏற்பட்டது அல்ல -அத்வைதி
உபாதியும் பொய் -சங்கர மதம்
யாதவ பிரகாசர் மதம்
அஞ்ஞானம் ஞானத்தால் மூடப் பட்டு
போன பின்பு தேஷாம் -இருப்பதால்

பிரியா பிரியங்கள் -சம நிலை முதல் நிலை
வெளி இந்த்ரியங்கள் அடக்கி -அடுத்த நிலை
தோஷ தர்சனம் பார்த்து மாற்றி
காம குரோத வேகம் குறைத்து
சமாதி நிலை யமம் அஷ்டாங்க யோகம்
போகம் போக  உபகரணம் போக ஸ்தானம் எல்லாம் ஆத்மாசாஷாத்காரம்
சர்வ பூதம் நல்லதே
அத்வேஷம் ஆபி முக்கியம்
விஷ்ணு கடாஷம்
யத்ருசா லாபம்
சாது சமாகம்
ஆறு படிக்கட்டுகள் போலே -விஜிதாத்மா -வந்து தலைப் பெய்தோம் –

ஆறாவது அத்யாயம்
ஐஞ்சு அர்த்தங்கள்
முதல் நான்கு முன்னுரை 28 ஸ்லோகம் வரை அப்யாசம்
அடுத்து 4 ச்லோககங்கள் வகை
அடுத்து 4
அடுத்து 8
இறுதியில் பக்தி ஒன்றே ஸ்ரேஷ்டம்
விஸ்வரூபம் காட்டுகிறான் சொல்ல வில்லை
சஷூஸ் கொடுத்து அருளினான் என்பர்

ஞானம்
விஞ்ஞானம்
அறிந்து அறிந்து தேறி தேறி
ஸ்வரூப நிரூபக தர்மம்
நிரூபித்த ஸ்வரூப விசெஷனங்கள் -ஸ்வரூபம் ஸ்வாபம் போலே

கூடஸ்தர்
கொல்லன் பட்டறை
மலை சிகரம்
சரீரங்கள் பிரவாஹம்
கூடஸ்த ஜீவாத்மா
சரீரம் விலக்கி பார்க்கும் குலம் கூடஸ்தர்

மண் கட்டி கல் ஸ்வர்ணம் சமமாகபார்க்கிறான்
அனுகூல ஞானம் ஆனந்தம் ஆகும்

ஆத்மா தனக்கு அனுகூலம்
தற்கொலை பண்ணுகிறவன் அணு கூலம் நினைத்தே செய்கிறான்
நினைவு தப்பாக இருக்கலாம்

சம தர்சனம் -சரீரம் தள்ளி பிரித்து  பார்த்தால் ஞான வடிவு தானே

முதல் ஒன்பது ஸ்லோகங்கள் கர்ம யோகி பற்றி சொல்லி
மேல் அப்யாசம் செய்வது சொல்லி
கூட்டம் இல்லா இடத்தில்
தர்ப்பம் மான் தோல் பட்டுத் துணி
சுத்த பவித்ரா தேசம்
ஆசனம் –
மனஸ் ஒரு நிலைப் படுத்து
சாமாஸ்ரைய –

-மச் சித்தா -அன்பு அவர் கண் வைத்து
மத பர -துளக்கமில் சிந்தை
13 ச்லோஹம்
பிரசாந்தா ஆத்மா -நிர்பயமாய் –

திருப் பாதம்
கமலபாதம் இரண்டும் மத சித்த மத்பர
ஆரா அமுதே-

பந்து -விபூதி
விபூதிமான் ஒரு கையிலும் விபூதி ஒரு கையிலும்
எப்படி சேர்ப்போம் என்கிற சிந்தனை பிராட்டிக்கு
சிந்தனை  -ஆத்மா சாஷாத் காரத்துக்கு அடிப்படை
மூளை முக்கியம் இல்லை
தர்மபூத ஞானம்தான் புத்தி
மனஸ் இந்த்ரியம்
புத்தி நல்லதை அறிவிக்க
மனஸ் நினைக்க
கர்மம் மூட

கர்மம் செயல்
செயல் கொண்டே போக்க வேண்டும்
கர்ம யோகம்
புத்தி  வளர
மனஸ் சுக்கு சொல்ல
அத்தால் கர்மம் போகும்
கர்ம யோகத்தின் முக்கியத்வம் மீண்டும் மீண்டும் சொல்ல
அது பாபம் தொலைத்து புத்தி வளர -ஆசார்ய உபதேசம் கிரந்தங்கள் மூலம்
அநிஷ்டம் தொலைத்து இஷ்டம் -வளர
சிந்தித்தால் தான் தொடர்பு தெரியும்
சூஷ்ம கட்டு -மயர்வற மதி நலம் அருளி
கட்டை கண்டு பயந்தால் தான் புத்தி நிலை நிற்கும்-

அகல்மஷம்-யோகம் பண்ண பண்ண வரும்
சாந்த மானசம் பெற்று
ப்ருஹ்ம பூதம் கிலேசம் தொலைந்து
ஞான விகாசம் பெற்று சுகம் அடைகிறான் –
கர்ம யோகம் -வேற -மூன்று வித த்யாகம் உடன் வர்ணாஸ்ரம கர்மங்கள் செய்வதுகர்ம யோகம்
யோகம் ஆத்மாவை தொடர்ந்து காண்கை யோகம்  –
குருவி கடல் -முட்டை இழுத்து போக
நாரதர் நடக்கும் சொல்லிப் போக -கருடனை உதவ சொல்லி –
சிறகு அடித்த வேகம் பயந்து முட்டைகளை திரும்பிகடல் கொடுக்க –
உறுதி ஒன்றே வேணும் –
முயற்சி வினையாக்கும் திரு அருள் இருந்தால்
முயற்சி  திரு வினை ஆக்கும் அர்த்தம் –
26 ச்லோஹம் -சுகமாக பலன் அடைகிறான்

எப்போதும்
எளிதில்
அளவற்ற
அழிவற்ற
யோகம் அடைகிறான்
யோக அப்யாச விதி இத்தால் முடிகிறது -28 ச்லோஹம் வரை –
மற்ற நான்கும் 20 ஸ்லோகங்களில் அருளி
யோகி சதுர்தா – நான்கு வித
யோகம் முற்றும் நிலை விபாக நிலை –
நான்கும் சமதர்சனத்தின் நான்கு நிலை
எத்தை எத்தொடே எதனாலே -நான்கு விதம்
ஞான ஆனந்தம் வடிவு தானே எல்லா ஜீவாத்மாக்களும் முதல் நிலை
ஏகம் சங்கரர் -சமம் நம் சித்தாந்தம்  -ஒன்றாக பார் வேற சமமாக பார்
சாம்யம் சித்தாந்தம் -ஐக்கியம் இல்லையே
தர்சனம் பேத ஏவச
சாம்யாபத்தி தான் பேச்சு
கர்மம் தொலைந்த நிலையில் பரமாத்மா போலே-அடுத்த நிலை
முக்த ஆத்மா ஸ்வரூபம் சரீரம் தொலைந்ததும்
ஞான விகாசம் ஏற்பட்டு
நிரஞ்சனா பரமம் சாம்யம் உபாதி
புண்ய பாபம் தொலைத்த பின்பு
இயற்க்கை நிலை ஆவிர்பாகம் ஞானம் விகாசம்
மூன்றாவது நிலை
கர்மம் கழிந்து எட்டு குணங்களில் சாம்யம் இரண்டாது
ஞான ஆனந்தம் மூன்றாவது நிலை
ஆத்மா ஒவோருத்தருக்கு சமம் மீண்டும் முதிர்ந்த நிலை
அவனுக்கு சரீரம் சேஷமாய் அபிரக்ருத சித்த சரீரம் என்கிற ஞானம்  ஏற்பட்டு
சரீரத்துடன் தொடர்பு இல்லை
ஞானம் வந்த பின்பு -இன்பம் துன்பம் தாக்காதே
வசிஷ்ட வாமனா தேவாதிகள் விட உயர்ந்த நிலை
புத்திர வ்யோஹம்  அழுதார்களே
இப்படி நான்கு நிலைகள்

ஞானத்தால் மோஷம்
உபாசனம்
வேதனம்
பக்தியால் மோஷம்
எல்லாம் ஒன்றே
பக்தி கேவல த்யானமா
உபாசனம் நாராயணன் மேல் தான்
கேள்விகளுக்கு
கர்ம ஞான சமுச்சயம் மோஷம்
தாத்பர்ய சந்த்ரிகை விரித்து அருளி
கட்டில் மெத்தை ஜமக்காளம் மேல் மாடியில் படுத்து கொண்டது போலே
எல்லாம் பக்தி
அறிக்கை -நீடித்து ஸ்மிர்தி
இடைவிடாமல் த்யானம்
அன்புடன் செய்து உபாசனனம்
பரம புருஷனுக்கு செய்வதே
பக்தி ஞான விசேஷம்  -தஸ்மின் திருஷ்ட
தர்சன சமானாகாரம் நிலை
பரமாத்மா பிராப்தி
படிக்கட்டு இவைகள்

ராம தர்சனம் எங்கும்
மரம் பார்த்தாலும் மாரீசன் -சொல்லி
பயத்தால் பரம பக்தன் போலே வ்யதிரேக திருஷ்டாந்தம்
நிறைந்து என் உள்ளே நின்று ஒழிந்தான் -ஜோதி ரூபம் ஆழ்வாருக்கு

உண்மை நிலை சு யாதாம்யம் எல்லாம் தன் சொத்து
சுவை முதலிய பொருள்கள் தானே சேஷி ஜகத் காரணன் சொல்லி முடித்தார் -7 அத்யாயம் 6-12 ஸ்லோஹம் சொல்லி
பிரகிருதி மறைக்கும் என்பதை மேல் 13 ஸ்லோகம் சொல்லி

நித்ய யுக்தா -கூடவே இருக்கும் ஆசை கொண்டவன் ஞானிகள் -நித்ய சூரிகள் போலே
சிறிது பிரிவும் பொறுக்காத
ஏக பக்தி
அத்யந்த பிரியன்
சச மம பிரிய -திரும்பி அவர்கள் போலே காட்ட முடிய வில்லை
பரம புருஷன் உத்தமன் -சொல்லிக் கொள்வானா செய்வது எல்லாம் சொல்லிக் கொள்ள மாட்டானே
சரணாகதி கத்யம் எடுத்துக் காட்டி அருளி –

14 ஸ்லோகங்கள் இனி ஞானி விசிஷ்யதே எதனால் எப்படி காட்டி அருளி

சிந்தனையை தவ நெறியை திருமாலை
பிராப்யம் பிராபகம் திருமால் என்பதால்
இதுவே சம்ப்ரதாயம் ஆழ்வார்கள்
ரகஸ்ய த்ரயம் போலே சப்த த்ரயம் இவை

ஆர் எனக்கு நின் பாதமே சரணாக தந்து ஒழிந்தாய்
கண்ணே உன்னைக் காண எண்ணே கொண்ட

அதிகார பிராபக பிராப்ய ஸ்வரூபம்
நாராயணனே நமக்கே பறை தருவான்

தேஷாம் ஞானி அவர்களுக்குள் ஞானி

ஞானி முதிர்ந்த நிலை ஞானவான்
பாரார்த்தமாக
அவன் ஆனந்தம் குறிக்கோள்
மற்றை நம் காமம் மாற்று நிலை அறிந்தவன் -பஹூ  நாம் புண்ய ஜன்மம் அந்தே –

பரம பிராப்யம்
பிராபகம் -ஓன்று தானே இருக்க முடியும்
உண்ணும் சோறு -எல்லாம்
பிதா எல்லாமும்

தேஷாம் ஞானி அவர்களுக்குள் ஞானி-ஞானவான்

அறிந்து ஆசை கொண்டு பிரயத்னம் செய்து

ப்ரஹ்ம-பிராப்யம்
அத்யாயம் -பிராபகம் –
கர்மா -செயல்கள்
அறிமுகம் செய்து 8 அத்யாயம் விளக்கி அருளுகிறான்
வேத்ய உபாதேய -அறிய வேண்டியவை –கை கொள்ள வேண்டியவை -த்யாஜ்யம் -மூவருக்கும்
அதி புக்தம் அதி தைவம் அதி யஞ்ஞம்,
ஐஸ்வர்ய
அஷர யாதாம்ய-கைவல்ய -அநித்திய வஸ்து இல்லாத முக்த ஆத்மா ஸ்வரூபம்
பகவத்  லாபார்த்தி மூவருக்கும்
28 ஸ்லோகங்கள் –
7 அத்யாயம் சுருக்கி விளக்கி அருளி
பரச்ர ப்ரஹ்மன வாசுதேவச்ய-பரத்வம் சௌலப்யம்
பிராமணீ ஸ்ரீனிவாசா போலே –
உபாச்யத்வம் உபாசனைக்கு விஷயம் என்பதையும்
காரனந்து  தேயாக
நிகில சேதன அசேதன சேஷித்வம் அருளி
காரணத்வம், ஆதாரத்வம் -இதம் சர்வம் சூத்ரே மணி கனா போல் கோர்க்கப் பட்டு
சர்வ சரீரதயா சர்வ பிரகாரதயா சர்வ சப்த வாச்யன்

குணம் சரீரம் ஆகாதே -பிரகாரம் எல்லாம் சரீரம் இல்லை அப்ருக்த் சித்த விசேஷணம்

8-10 -ஐஸ்வர் யார்த்தி
11-13-கைவல்யம்
14 பலவத் லபார்த்தி
பெரியாழ்வார் கிரமம் இல்லை

தத்வ புருஷார்த்த ஹித கேள்வி பீஷ்மர் இடம்
பதில் பிராபகம் நான்கும் சொல்லி
அப்புறம் பிராப்யம்
முதல் கேள்வி கடைசியில்

மகாத்மா மகா மனஸா
மாம் உபாச்ய
ஞானிகளையும் ஞான வான்களையும் சேர்த்து அருளுகிறான்

22 ஸ்லோகம் பிரபன்னம் விவரித்து
23/24 சொல்ல போவதை
ஆத்மா யாதாம்ய ஞானம் தெரிந்தவனுக்கு சாதாரண அர்ச்சிராதி கதி சொல்லி

கைவல்யம் பஞ்சாக்னி வித்யா
இரண்டும் சமன்வயப்படுத்தி தேசிகன் ஏக க்ரந்த சகல அச்வாரஸ்யம்
பிரகரணம் விரோதம்

மோஷ விரோதி போக்க பக்தி
பக்தி ஆரம்ப விரோதிபோக்க கர்ம யோகம்

ஞானம் பக்குவம் பட்டு பக்தி
9 அத்யாயம் கடைசி ஸ்லோஹம் பக்தி -முதல் ஸ்லோஹம் ஞானம் சொல்லுமே
ராஜ வித்யை ராஜ குஹ்யம் பவித்ரம் இதி உத்தமம் சூசுகம் கர்த்தவ்யம் –

அவ்யயம் அழியாது
பலம் கொடுத்த பின்பும்
அங்கேயும் பக்தி

1-7 ஈட்டில் கோலிய பலன்களை கொடுத்த பின்பும் ஒன்றும் செய்யாதவனாய்
இருக்கையாலே தான் முதல் அழியாது கிடக்கும்
போக ரூபமாயும் அழியாத பக்தி
சாதன தசையிலே இனிய
இத்தை விட்டு சூத்திர விஷயம் போகிறார்கள்
ஆஸ்ரயனியம் இனியது
என்று பிறவி துயர்  –மனத்து வைப்பாரே ஆழிப் படை அந்தணனை

ஸ்ரீ பாஷ்யம் -2-1-35
நைர்க்ரண்யம் வராது
ததாகீஉபனிஷத்சொல்லுகிர படியால்
சாதி பவதி பாவோகாரி பாவோ பவதி -கர்மம் பயனாக
அவன் தூண்டுவதில்லை
வைஷ்ண்யம் நைகர்ம்யம் வாராது ப்ரஹ்மத்துக்கு
அடுத்தசங்கை
சதேவசொம்யா சத்தாகவே ஒன்றாக இருந்தது
கர்மா இல்லையே
ந கர்ம அபிவிபாகாத் -சூத்ரம்
இதி சேத அப்படி சொன்னீர் ஆனால்
பூர்வ பாஷா சூத்தரம்

அநாதிவத்வாத்
உப லப்யதே ஒத்து போகும் உபநிஷத்தும் சொல்லுமே

9-24-ஸ்லோஹம்

அஹம் ஹி சர்வ யஞ்ஞானாம், போக்தா
செய்கை பயன் உண்பேனும் யானே என்னும் -அனைத்துக்கும் அந்தராத்மா யானே –
போக்தா ச –
செய்வேனும் யானே என்னும்
சகாரம்  ஹி இங்கு உம்மைத் தொகை  ஏவகாரம் இரண்டும் ஆழ்வார்

3-2-37 சாதனா
பலம் அதே உபபத்த்யே -பலம் கொடுக்கும்
போக மோஷங்கள்
அப்படி சுருதி சொல்வதால்
ஏஷ ஹேவ ஆனந்த வாகி
நாம் அனுஷ்டிக்க
அவன் நமக்கு அந்தராத்மா
தேவதைகள் பலம் கொடுக்கிறார்
தேவதைகளுக்கு அந்தராத்மா
அவனே பலம்
சமன்வயப் படுத்த கடக  சுருதி –

இவை என்ன விசித்ரம்
அஹோ -9-25 ஸ்லோஹம் கண்ணன் வார்த்தையே ஆழ்வார் ஸ்ரீ சூக்தி
சங்கல்ப பேதத்தால் பலன் வாசி உண்டே
ஒரே கர்மத்துக்கு
அஹோ மக வித ஆச்சர்யம்
சிறை-ரயில் தண்டவாளம் எடுத்தால்
சிலை சுதந்தரம் வாகி தந்தவர்க்கு  கதை போலே-

30-33 ஸ்லோகங்கள் ஆழ்ந்த கருத்து
அனைவருக்கும் முக்தி உண்டு
ராமானுஜர் தர்சனம்
தெளிவாக காட்டும் ஸ்லோகங்கள்
மத்-பராயனா
எப்படி பக்தி பண்ண வேண்டும் ஆனந்தமாக அருளி
சஜாதிய பக்தி
பக்தி சுழல்

———————————————————————————————————-

கந்தாடை அப்பன் ஸ்வாமி திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

தனியன்களும் கர்த்தாக்களும் —

September 27, 2015

பொதுத் தனியன்கள் –

ஸ்ரீ சைலேச –ஸ்ரீ அழகிய மணவாளன்
லஷ்மி நாத –ஸ்ரீ கூரத் ஆழ்வான்
யோ நித்யம் அச்யுத –ஸ்ரீ எம்பெருமானார்
மாதா பிதா -ஸ்ரீ ஆளவந்தார்
பூதம் சரஸ்ஸ–ஸ்ரீ பராசர பட்டர்

—————————————————

திருப்பல்லாண்டு / பெரியாழ்வார் திருமொழி –தனியன்கள் –

குருமுக –ஸ்ரீ நாத முனிகள்
மின்னார் தட மதிள்- / பாண்டியன் கொண்டாட –ஸ்ரீ பாண்டிய பட்டர்

————————————————

திருப்பாவை –

நீளா துங்கஸ்–ஸ்ரீ பராசர பட்டர்
அன்ன வயல் –ஸ்ரீ உய்யக் கொண்டார்
சூடிக் கொடுத்த—ஸ்ரீ உய்யக் கொண்டார்

———————————————————————-

நாச்சியார் திருமொழி –

கோலச் சுரி சங்கை –திருக் கண்ண மங்கை யாண்டான்
அல்லி நாள் தாமரை மேல் –முதல் வானமா மலை ஜீயர் ஸ்வாமி

——————————————————————————-

பெருமாள் திருமொழி —

இன்னமுதமூட்டுகேன்–ஸ்ரீ உடையவர்
ஆரம் கெடப் பரன் அன்பர் –ஸ்ரீ மணக்கால் நம்பி

———————————————————————–

திருச் சந்த விருத்தம் –

தருச் சந்தப் பொழில் –திருக் கச்சி நம்பி
உலகும் மழிசையும்–திருக் கச்சி நம்பி

——————————————————————————

திருமாலை –

மற்று ஒன்றும் வேண்டா –திருவரங்கப் பெருமாள் அரையர்

————————————————————————-

திருப் பள்ளி எழுச்சி –

தமேவ மத்வா பர வாஸூதேவம் –திருமாலை யாண்டான்
மண்டங்குடி என்பர் –திருவரங்கப் பெருமாள் அரையர்

————————————————————————-

அமலனாதி பிரான் –

ஆபாத சூட பெரிய நம்பிகள்
காட்டவே கண்ட பாத கமலம் –திருமலை நம்பிகள்

——————————————

கண்ணி நுண் சிறுத் தாம்பு –

அவிதித விஷயாந்தர –ஸ்ரீ நாத முனிகள்
வேறு ஒன்றும் நான் அறியேன் –ஸ்ரீ நாத முனிகள்

————————————————————————-

பெரிய திருமொழி -திருக் குறும் தாண்டகம் -திரு நெடும் தாண்டகம் –

கலயாமி கலித்வம்சம் –திருக் கோட்டியூர் நம்பி
வாழி பரகாலன் –ஸ்ரீ எம்பெருமானார்
நெஞ்சுக்கு இருள் கடி தீபம் –ஸ்ரீ கூரத் ஆழ்வான்
எங்கள் கதியே இராமானுச முனியே –ஸ்ரீ எம்பார்
மாலைத் தனியே வழி பறிக்க –ஸ்ரீ மணவாள மா முனிகள் /ஸ்ரீ சோமாசி யாண்டான் என்றும் சொல்வர் –

————————————————————————-

முதல் திருவந்தாதி –

கைதை சேர் பூம் பொழில் சூழ் –ஸ்ரீ முதலியாண்டான்

————————————————-

இரண்டாம் திருவந்தாதி –

என் பிறவி தீர இறைஞ்சினேன் –திருக் குருகைப் பிரான் பிள்ளான்

———————————————————

மூன்றாம் திருவந்தாதி –

சீராரும் திருக் கோவலூர் அதனுள் –ஸ்ரீ குருகைக் காவல் அப்பன்

————————————————————————–

நான் முகன் திருவந்தாதி –

நாராயணன் படைத்தான் நான்முகனை –ஸ்ரீ சீராமப் பிள்ளை

——————————————————————–

திருவிருத்தம் –

கருவிருத்தக் குழி நீத்த பின் –ஸ்ரீ கிடாம்பி ஆச்சான் –ஸ்ரீ சீராமப் பிள்ளை -ஸ்ரீ ஆளவந்தார் என்றும் சொல்வர்

———————————————————————————

திருவாசிரியம்

காசினியோர் தாம் வாழ –ஸ்ரீ அருளாளப் பெருமாள் எம்பெருமானார்

————————————————————

பெரிய திருவந்தாதி –

முந்துற்ற நெஞ்சே –ஸ்ரீ எம்பெருமானார் –

———————————————————————-

திரு வெழு கூற்று இருக்கை

வாழி பரகாலன் –ஸ்ரீ எம்பெருமானார்
சீரார் திரு வெழு கூற்று இருக்கை–ஸ்ரீ எம்பெருமானார்

—————————————————————–

சிறிய திருமடல் —

முள்ளிச் செழு மலரோ தாரான் -ஸ்ரீ பிள்ளை திரு நறையூர் அரையர்

————————————————————————————

பெரிய திருமடல்

பொன்னுலகில் வானவரும் பூ மகளும் –ஸ்ரீ பிள்ளை திரு நறையூர் அரையர்

———————————————————————————

திருவாய் மொழி –

பக்தாம்ருதம் –ஸ்ரீ நாத முனிகள்
திருவழுதி நாடு என்றும் –ஸ்ரீ ஈஸ்வர முனிகள்
மனத்தாலும் வாயாலும் –ஸ்ரீ சொட்டை நம்பிகள்
ஏய்ந்த பெரும் கீர்த்தி –ஸ்ரீ அனந்தாழ்வான்
வான் திகழும் சோலை –ஸ்ரீ பராசர பட்டர்
மிக்க விறை நிலையம் –ஸ்ரீ பராசர பட்டர்

—————————————————————————————–

இராமானுச நூற்றந்தாதி –

முன்னை வினை யகல –ஸ்ரீ வேதப் பிரான் பட்டர்

—————————————————————————————–

இயல் சாத்து –

நன்றும் திருவுடையோம் –ஸ்ரீ பிள்ளை யுறங்கா வில்லி தாசர்
வாழி திரு குருகூர் வாழி திரு மழிசை –ஸ்ரீ வகுளாபரண பட்டர்
திருநாடு வாழி –ஸ்ரீ பராங்குச தாசர்
மங்கை நகர் வாழி –ஸ்ரீ பரகால தாசர்
வாழியரோ தென் குருகை வாழியரோ தென் புதுவை –ஸ்ரீ பிள்ளை ராமானுஜதாசர்
மொழியைக் கடக்கும் பெரும் புகழான் –திருவரங்கதமுதனார்
நெஞ்சத்து இருந்து –ஸ்ரீ பிள்ளை அழகிய மணவாள தாசர்
ஊழி தொறும் ஊழி –ஸ்ரீ பின்பழகராம் பெருமாள் சீயர்

————————————————————————————–

உபதேச ரத்தின மாலை

முன்னம் திருவாய் மொழிப் பிள்ளை –ஸ்ரீ கோயில் கந்தாடை அண்ணன்

—————————————————————————–

திருவாய் மொழி நூற்றந்தாதி

அல்லும் பகலும் அனுபவிப்பார்
மன்னு புகழ் சேர் மணவாள மா முனிவன்

—————————————————————————–

ஸ்ரீ நாதமுனிகள் –திருப்பல்லாண்டு -பெரியாழ்வார் திருமொழி -/கண்ணி நுண் சிறுத்தாம்பு -/திருவாய்மொழி
ஸ்ரீ ஈஸ்வர முனி -திருவாய் மொழி
ஸ்ரீ உய்யக் கொண்டார் –திருப்பாவை –
திருக் குருகைப் பிரான் பிள்ளான் –இரண்டாம் திருவந்தாதி / மூன்றாம் திருவந்தாதி
ஸ்ரீ மணக்கால் நம்பி -பெருமாள் திருமொழி –
ஸ்ரீ ஆளவந்தார் -திருவிருத்தம்
ஸ்ரீ சொட்டை நம்பிகள் -திருவாய் மொழி
திருக் கச்சி நம்பி -திருச் சந்த விருத்தம்
திருவரங்கப் பெருமாள் அரையர் -திருமாலை /திருப் பள்ளி எழுச்சி
திருக் கண்ண மங்கை ஆண்டான் -நாச்சியார் திருமொழி
திருமாலை ஆண்டான் -திருப்பள்ளி எழுச்சி
திருமலை நம்பி -அமலனாதி பிரான்
திருக் கோஷ்டியூர் நம்பி -பெரிய திருமொழி
ஸ்ரீ எம்பெருமானார் –பெருமாள் திருமொழி -/திருவாய் மொழி / பெரிய திருவந்தாதி /பெரிய திருமொழி -திரு வெழு கூற்று இருக்கை –
ஸ்ரீ பிள்ளை திரு நறையூர் அரையர் –சிறிய திருமடல் /பெரிய திரு மடல்
ஸ்ரீ முதலியாண்டான் -முதல் திருவந்தாதி
ஸ்ரீ -கூரத் ஆழ்வான் -பெரிய திருமொழி
ஸ்ரீ எம்பார் -பெரிய திருமொழி
ஸ்ரீ சோமாசி ஆண்டான் -பெரிய திருமொழி
ஸ்ரீ அனந்தாழ்வான் -திருவாய் மொழி
ஸ்ரீ பராசர பட்டர் -திருப்பாவை / திருவாய் மொழி
ஸ்ரீ வேதப்பிரான் பட்டர் -இராமானுச நூற்றந்தாதி
ஸ்ரீ கோயில் கந்தாடை அண்ணன் -உபதேச ரத்ன மாலை

—————————————————————————–

கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஆசார்யர்கள் திருவடிகளே சரணம்
ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் ..

ஸ்ரீ பாஷ்யம்– 1-1-1– மஹா சித்தாந்தம் -நான்காம் பாகம் — -ஸ்ருத பிரகாசிக சுருக்கம் –

September 27, 2015

இந்த விஷயத்தில் சித்தாந்தம் கூறப்படுகிறது –அஹம் அஜ்ஞ மாமா நியஞ்ச ந ஜா நாமி -என்கிற இடத்தில் பிரத்யஷத்தினால் பாவ ரூபமான அஜ்ஞானம் அறியப் படுகிறது இல்லை -இந்த வாக்ய ஜன்ய ஜ்ஞானத்துக்கு ஜ்ஞான பிராபக பாவம் விஷயம் என்கிற பஷத்தில் சொல்லப் பட்ட விரோதம் பாபா ரூபா ஜ்ஞானத்திலும் சமானம் -விஷயமாகவும் ஆச்ரயமாகவும் இருந்து கொண்டு அஜ்ஞானத்துக்கு வ்யாவர்த்தகமாக பிரத்யக் வஸ்து நன்கு பாசிக்கிறதா -பாசிக்க வில்லையா –பாசிக்கிறது என்றால் பிரத்யக் வஸ்துவினது ஸ்வரூப ஜ்ஞானத்தால் நிரசிக்கப் படும் அஜ்ஞானம் எவ்வாறு நிலத்து இருக்கும் -பாசிக்கப் படாமல் இருந்தால் ஜ்ஞான சூன்யமான அஜ்ஞ்ஞானம் எவ்வாறு அனுபவிக்கப் படலாம்
விசதமான ஸ்வரூபத்தின் பிரகாசமே அஜ்ஞ்ஞான விரோதி ஜ்ஞான பிராக பாவம் கூட விசத ஸ்வரூபத்தை விஷயமாக உடையது -பாவ ரூபமான அஜ்ஞ்ஞானத்துக்கும் ப்ராகபாவ சித்தியில் போலே சாபேஷத்வம் இருக்கவே இருக்கிறது –
யானையைக் கண்டிராதவனால் இந்த நால் சந்தில் யானை இல்லை என்று எவ்வாறு சொல்ல இயலும்
உபபாதிக்கப் படுகிறது -அஜ்ஞ்ஞானம் எனபது ஜ்ஞான அபாவமா -அத்தைக் காட்டிலும் வேறு ஒன்றா -அதற்கு விரோதியா -மூன்றுக்கும் அதன் ஸ்வரூப ஜ்ஞான அபேஷை அவசியம் ஆச்ரயிக்கத் தக்கது –என்றாலும் -தமஸ் ஸின் ஸ்வரூபத்தை அறியும் விஷயத்தில் பிரகாசத்தின் அபேஷை இல்லை -எனினும் பிரகாசத்துக்கு விரோதி என்கிற ஆகாரத்தால் அந்த பிரதிபத்தியில் பிரகாசத்தின் உடைய அபேஷை இருக்கவே இருக்கும் -ஜ்ஞான பிராக பாவமே அஹம் அஜ்ஞ்ஞன் -அறிவில்லாதவன் -பிரமத்துக்கு அஜ்ஞ்ஞான அனுபவம் சம்பாதிக்கிறது இல்லை
மறைக்கப் பட்ட தனது ஸ்வரூபத்துடன் கூடி இருப்பது என்றால் என்ன -அது பிரகாசப் படுத்தப் படாத ஸ்வரூபத்துடன் கூடி இருத்தல் பொருத்தம் உள்ளதாக ஆகும் என்றால் -ஸ்வரூப நாசமே ஏற்படும் –
ப்ரஹ்ம ஸ்வரூபத்தை மறைக்க காரணமாக உள்ள அஜ்ஞ்ஞானம் -தான் அனுபவிக்கப் பட்டதாக இருந்து கொண்டு பிரமத்தை மறைத்து தான் அதன் அனுபவ விஷம் ஆகிறது என்பதனால் அந்யோந்ய ஆஸ்ரய தோஷம் வருகிறது -மறைக்கப் படாத ஸ்வரூபத்துடன் அஜ்ஞ்ஞானத்தை ப்ரஹ்மம் அனுபவிப்பதாக கொண்டால் திரோதான கல்பனை பிரயோஜனம் அற்றதாக ஆகும்
அவித்யையால் மறைக்கப் பட்டால் கொஞ்சமாவது பிரகாசம் உண்டா ப்ரஹ்மத்துக்கு -ஆகையால் விஷயம் அல்லாததும் விசேஷங்கள் இல்லாததும் பிரகாசம் மாத்ரமாயும் இருக்கிற ப்ரஹ்மத்தின் இடத்தில் ஸ்வரூபம் பிரகாசிக்கும் பொழுது விசேஷங்களின் பிரதீதி ரூபமான அவைச்த்யம் என்கிற அஜ்ஞ்ஞான கார்யம் சம்பவிக்கிறது இல்லை –
மேலும் அவித்யையின் காரயமாக இருக்கிற அவைசத்யமானது தத்வ ஜ்ஞானத்தின் உதயத்தால் விலகுகிறதா இல்லையா –விலகுகிறது இல்லை என்று சொன்னால் மோஷம் இல்லை விலகுகிறது என்று சொல்வாயே யாகில் வஸ்து எவ்வித ஸ்வரூபம் உள்ளது என்று பகுத்து அறியத் தக்கது -விசத ஸ்வரூபம் என்று சொல்வாயே யானால் அது முன் இருக்கிறதா இல்லையா -இருக்கிறது என்றால் அவித்யைன் கார்யமான அவைசத்யமும் அதின் நிவ்ருத்தியும் உண்டாக மாட்டாது -இல்லை என்பாயாகில் மோஷத்துக்கு அநித்யத்வம் ஏற்படும் -இதனால் சர்வ சூன்யத்வமே உண்டாகும் –
தீபத்தின் ஒளிக்கு பிரகாசிக்கப் பட்டிராத வஸ்துவை பிரகாசப் படுத்துண் தன்மை இல்லை -இந்த்ரியங்களுக்கு ஜ்ஞான உத்பத்தியில் ஹேதுத்வம் மாத்ரமே பிரகாசத்வம் கிடையாதே -விரோதியின் நிரசனமே பிரகாசத்வம் –வ்யவஹார யோக்யதா பாதனமோ ஜ்ஞானத்திற்கே -இத்தால் அனுமானத்தை தூஷிக்கிறார்
அஜ்ஞ்ஞானம் ப்ரஹ்மத்தை மறைக்கும் திறமை கொண்டது அல்ல -விஷயத்தையே மறைக்கும் -ஆதலால் அனுமானத்தாலும் பாவ ரூபமான அஜ்ஞ்ஞானம் சித்தி பெறுகிறது இல்லை –
மித்யையாய் இருக்கும் வஸ்துவுக்கு மித்யையான வஸ்துவே உபாதாநமாக இருக்கத் தகுதி -என்பதை -ந விலஷணத் வாத -அதிகரணம் சொல்லும்
எல்லா ஜ்ஞானங்களும் யதார்த்தங்கள் -எனபது பகவத் போதாயதனர் நாதமுனி மிஸ்ரர் போன்ற தத்வ தர்சிகளின் அபிமதம் –பஹூச்யாம் –தாஸாம் த்ருவ்ருத மேகைகாம் -த்ருவ்ருத்த கரணம் பஞ்சீ காரணத்திற்கு உப லஷணம்-
பிரத்யஷத்தாலே அறியலாம் -அக்னி -சிகப்பு நிறம் -தேஜஸ் /தண்ணீர் -வெண்மை நிறம் /பிருத்வி கருமை நிறம் /எல்லா வஸ்து ச்வரூபங்களும் எல்லா வஸ்துக்களிலும் காணலாம் பஞ்சீ கரணத்தால் -எந்த த்ரவ்யம் எந்த த்ரவ்யத்தின் ஓர் அம்சம் அடைந்து உள்ளதோ அந்த த்ரவ்யமே அதற்கு சத்ருசம் -வெள்ளி சிப்பி போலே -இதனால் சிப்பியை வெளி என்று பிரமிப்பது யதார்த்தம்
சிப்பியினுடைய அதிக அம்சம் குறைவு நிறைவுகளை அறிந்ததும் பிரமம் நீங்கும் -வெள்ளி பொய் சிப்பி மெய் என்கிற ஞானத்தால் இல்லையே
யதார்த்த க்யாதியே நம் சித்தாந்தம் –
இதே போலேவே ஸ்வப்ன திசையிலும் -தானே சங்கல்பித்து விசித்ரமான பதார்த்தங்களை உண்டு பண்ணா நின்று கொண்டு தூங்காமல் விழித்து இருக்கும் பரம புருஷன் ஜ்யோதிர்மயன் -மோஷத்தை அளிப்பவன்
சந்த்யே சிருஷ்டி ராஹஹி -என்றும்
நிர்மாதா ரஞ்சைகே புத்ராத யஸ்ஸ-என்றும் ஸூத்ரகாரர்
இந்த விசித்திர சிருஷ்டி ஈச்வரனுடையதே —தஸ்மின் லோகாஸ்ரிதாஸ் சர்வே தது நாதயேதி கச்சன-
பித்தத்தால் சங்கு மஞ்சள் நிறம் போலே தோன்றுமே பித்தத்தால் கெடுக்கப் பட்ட திருஷ்டி -ஸ்படிக மணி அருகில் உள்ள செம்பருத்தி பூவும் சிகப்பாக தோன்றுமே இதே போலே -கானல் நீர் தோற்றமும் இது போலே -கண்ணாடி பிரதி பலிப்பும் -இட வலம் மாறு பாடும் -திக் பிரமையும் கூட இதே போலே தோற்றம் -சந்திர பிரதி பலிப்பு தோஷம் -ஒரே சந்தரன் உண்டு ஞானத்தினால் விலகும் -யதார்த்த க்யாதி சமர்த்திக்கப் பட்டது -ஆதலால் விஜ்ஞான சாதம் அனைத்தும் யதார்த்தம் எனபது சித்தித்தது –

—————————————————————————————–

சாஸ்த்ரத்தாலே அறியத் தக்கவனும் -அகில ஹேய பிரத்ய நீக -கல்யாண குணாத் மகனான பர ப்ரஹ்மம் ஷேத்ரஜ்ஞர்களின் புண்ய பாப அனுகுணமாக சிருஷ்டித்து -அதில் பாத்ய பாதக பாவமானது அனைவரின் அனுபவ விஷயமாகவும் ஆகாமலும் இருப்பதாலும் பொருத்தம் உள்ளதாகிறது என்பதால் எல்லாம் சமஞ்ச்ஞசம்–
அஜ்ஞ்ஞானம் -அந்ரு தேன ஹி பிரத்யூடா –சுருதி வசனம் -அநிர்வச நீயம் பொருளில் அல்ல -அந்ருத சப்தம் ருதேதர -விஷயம் ருதம் என்கிறது கர்மாவைச் சொல்லும் -ருதம் பிபந்தௌ-கர்மபலத்தில் அபிசந்தி இல்லாத பர ப்ரஹ்ம ஆராதநா ரூபம் -பரம புருஷ பிராப்தியை பலமாகக் கொண்டதே -ருதம் –இதற்கு விரோதியே அந்ருதம் –
ஏதம் ப்ரஹ்ம லோகம் ந விந்தந்தி அன்ருதே ந ஹி பிரத்யூடா –என்கிற வசனத்தினால் -சத் அசத் இரண்டுக்கும் பிரளடத்தில் ஸூ சமமாக இருப்பதால் இரண்டுக்கும் சத் அசத் அநிர்வச நீயத்வம் உண்டாகும் -மாயா -விசித்திர சிருஷ்டியைச் சொல்லும்
அஸ்மான் மாயீ ஸ்ருஜ்யதே விச்வமேதத் தச்மிம்ச சான்யோ மாயயா சந்நிருத்த –மாயா -விசித்திர ஆச்சர்யம் -அஜ்ஞ்ஞதை அல்ல -அநாதி மாயயா ஸூ ப்தோ யதாஜீவ ப்ரபுத்யதே -என்றும் -இந்த்ரோ மாயாபி புருரூப ஈயதே-என்கிற இடத்திலும் விசித்திர சக்தியே சொல்லப் பட்டது
அதனாலே பூரி த்வஷ்டேவ ராஜாதி -மித்யா பூதமான வஸ்து பிரகாசியாது அன்றோ -மம மாயா துரத்தயயா–குணமயீ -பிரகிருதி சொல்லப் பட்டது -அஜ்ஞ்ஞானம் பிரதிபாதிக்கப் பட வில்லை –தத்வமஸி–அநேன ஜீவே நாத்மநா நு பிரவிச்ய நாம ரூபே வ்யாகரவாணி -என்று
எல்லா வஸ்துக்களும் பரமாத்மா ஈறாகவே நாம ரூபங்களை பெற்று இருத்தல் கூறப் படுகிறது -ஆதலால் ப்ரஹ்மத்துக்கு அஜ்ஞான பரிகல்பனம் இல்லை —
இதிஹாச புராணங்களிலும் ப்ரஹ்ம அஜ்ஞ்ஞான வாதம் ஓர் இடத்திலும் காண வில்லையே –ஜ்யோதீம்ஷி விஷ்ணு -ஜ்ஞான ஸ்வரூபோ பகவான் யதாசௌ-என்று ஜ்ஞான ஸ்வரூபம் அன்றோ ப்ரஹ்மம் -யதாது சுத்தம் நிஜரூபி –வஸ்த்வச்திகம் மஹீகடத்வம்–தாஸ்மான் ந -விஜ்ஞானம்ருதே -அஜ்ஞ்ஞானத்துக்கு மூலம் கர்மாவே என்று வெளிப்படுத்தி -ஜ்ஞானம் விசுத்தம் -என்று ப்ரஹ்மத்தின் ஸ்வரூபத்தை விசோதித்து-சத்பாவ ஏவம் பவதோ மயோக்த –புவனம் முதலியவற்றுக்கு சத்யத்வம் வ்யவஹாரிகம் –
சித் அசித் இரண்டும் வா ஸூ தேவனுக்கு சரீரம் -யதம் பு வைஷ்ணவ –காய ததோ விபரவ ஸூ நதரா பத்மாகாரா சமுத்பூதா பர்வதாப்யாதி –சம்யுதா -என்றபடி சரீராத்மா பாவமே காரணம் தானி சர்வாணி தத்வபு தத் சர்வம் வை ஹரேஸ் தநு ச ஏவ சர்வ பூதாத்மா விஸ்வ ரூபோ யதோவ்யய-சரீராத்மா பாவமான தாதாம்யமே ஜ்யோதீம்ஷி விஷ்ணு -என்கிற சாமா நாதி கரண்யத்தால் சொல்லப் படுகிறது –
ஜ்யோதி என்று சம்ஸ்ருஷ்ட ஜீவனையே உணர்த்தப் படுகிறது

அஸ்த்யாத்மகமாகவும் நாஸ்த்யாத்மகமாகவும் இருக்கிற வஸ்துக்கள் அனைத்தும் விஷ்ணுவின் சரீரம் என்பதால் விஷ்ண்வாத்மகம் -என்று கூறப் பட்டது -ஜ்ஞான ஸ்வரூபோ பகவான் யாதோ சௌ–சத் சப்தமாகவும் ப்ரஹ்மமே–கருமங்கள் நாசத்தால் தோஷம் அற்றதாகவும் -பரி சுத்தமாகவும் ஆனபின்பு -போகார்த்தங்களாக இருக்கும் வஸ்து பேதங்கள் வஸ்துக்களில் உண்டாகிறது இல்லை –
போக்தா போக்யம் ப்ரேரிதா–ரஞ்ச மத்வா –
அசித் நாஸ்தி சப்தத்தாலும் சித் அஸ்தி சப்தத்தாலும் சொல்லப்படுகிறது -தஸ்மாத் ந விஜ்ஞானம்ருதே —
ஆத்மாவோ என்றால் ஜ்ஞானத்தையே வடிவாக கொண்டு -கர்மத்தால் தேவாதி ரூபத்தால் தான் -ஸ்வரூபத்தால் இல்லை என்பதை -விஜ்ஞான மேகம் –சோகம் மோஹம் லோபம் சம்பந்தம் இல்லாதது -வருத்தி ஷயங்களுக்கு அநர்ஹமாய் இருப்பதால் ஒன்றாக இருக்கிறது -வா ஸூதேவாத்மகமாயும் இருக்கும்
ஸ்வரூப ஜ்ஞானத்துக்கு பிரயோஜனம் மோஷ உபாயத்தில் யத்னம் -ஜ்ஞான ஸ்வரூபமான ஆத்ம வஸ்து ஆதி மத்யம் அந்தம் இல்லாத ஒரே ஸ்வரூபத்துடன் கூடி இருப்பதால் ஸ்வரூபத்தாலேயே அஸ்தி சப்தத்தால் சொல்லப்பட்டது –

ஜ்யோதீம்ஷி விஷ்ணு -இது முதலிய சாமா நாதி கரண்யத்துக்கு நிர்தேசத்துக்கு -சரீராத்மா பாவமே –
ப்ரஹ்ம விஜ்ஞ்ஞானத்தாலேயே ஸ்ருதிகள் அவித்யையின் நிவ்ருத்தியைச் சொல்லுகின்றன –
வேதாஹமேதம் புருஷம் மஹாந்தம் ஆதித்ய வர்ணம் தம்ஸ பரஸ்தாத் தமேவம் விதவா நம்ருத இஹ பவதி நான்ய பந்தா வித்யதேய நாய சர்வே
நிமேஷா ஜஞ்ஜிரே வித்யுத புருஷா தாதி ந தச்யே சே கச்சன தஸ்ய நாம மஹத் யச யா ஏவம் விதுரம் ருதாஸ்தே பவந்தி –
ஆகாயத்துடன் கூடின புருஷனை அறிவதால் உபாசனம் என்றதாயிற்று -ச விசேஷ ப்ரஹ்ம ஜ்ஞானத்தாலே மோஷம் -தத் தவம் அஸி-என்பதிலும்
தத் தவம் இரண்டுமே விசேஷணங்கள் -தத் -சர்வஜ்ஞ்ஞன் –சத்ய சங்கல்பன் -ஜகத் காரணன் –ததைஷத பஹூச்யாம் -ப்ரஹ்மம்
த்வம் -அசித்துடன் கூடிய ஆத்மா –
சோயம் தேவதத்த -இவன் தான் முன்பு கண்ட அந்த தேவ தத்தன் -இதிலும் லஷணை இல்லை
பிரகாரத்வ்யா வஸ்திதம் -இரண்டு பிரகாரங்களுடன் கூடியது -ஜ்ஞான ச்வரூபச்ய சர்வஜ்ஞச்ய –இரண்டு விசேஷணங்களால் தர்ம பூதி ஜ்ஞானமும்
தர்ம பூத ஜ்ஞானமும் விலஷிக்கப் பட்டு இருக்கின்றன –

சிப்பி வெள்ளி -போலே வேடன் -என்ற பிரமம் அரசன் -என்ற ஆப்த வசனத்தால் போகும் -பிரகாசித்துக் கொண்டு உபதேசிக்கத் தக்கதாக இருப்பதால் பிரமத்தை நாசம் செயக் கூடிய தன்மை உள்ளதாக இல்லாததும் ஜீவனை சரீரமாகக் கொண்ட பிரமத்தையும் -ஜகத்துக்கு காரணமாக இருக்கும் ப்ரஹ்மத்தையும்முக்கிய வ்ருத்தியினால் இரண்டு பதங்களும் உணர்த்து கின்றன –இரண்டு பிரகாரங்கள் உடன் கூடிய வஸ்துவை பிரதிபாதிப்பதால் சாமா நாதி கரண்யமும் சித்தித்தது -ப்ரஹ்மத்துக்கு ஜீவாந்தர்யாமியாக இருக்கும் ஐஸ்வர்யமும் பிரதிபாதிக்கப் பட்டதாகிறது
ஏக விஜ்ஞானத்தால் சர்வ விஜ்ஞான பிரதிஜ்ஞையும்-ஸூ ஷ்ம சித் அசித் வஸ்துக்களை சரீரமாக கொண்ட ப்ரஹ்மமாகிய காரணமே ஸ்தூல சித் அசித் வஸ்துக்களை சரீரமாகக் கொண்டு ஜகத் ரூபா காரயமாக இருப்பதால் உபபன்னம் ஆகிறது –

தமீச்வராணாம் பரமம் மகேஸ்வரம் –ப்ரஹ்ம ருத்ராதிகளுக்கும் மகேஸ்வரன் -ஒத்தார் மிக்கார் இல்லாத தேவாதி தேவனை
பராஸ்ய சக்திர் விவிதைவச்ரூயதே -சர்வசக்தனது சக்தி ஸ்ருதியால் அறியப் படுகிறது –
அபஹத பாப்மா–சத்ய காம –சத்ய சங்கல்ப —
ஐததாம்ய மிதம் சர்வம் -உலகம் அனைத்தும் ப்ரஹ்மாத்மகம்
சந் மூலாஸ் சோம்யே மாஸ் சர்வே பிரஜாஸ் சதாயத நாஸ் சத் பிரதிஷ்டா -சத் எனப்படும் ப்ரஹ்மத்தை மூலமாக கொண்டவை –
அவனால் உண்டாக்கப் பட்டு -காப்பாற்றப் பட்டு -பிரளயத்தில் அவன் இடமே லயிக்கப் படுகின்றன –
சர்வம் கல்விதம் ப்ரஹ்ம தஜ்ஜலான் இதி சாந்த உபாசீதா -இத்தை அறிந்து சாந்தமாக அந்த ப்ரஹ்மத்தையே உபாசிக்கக் கடவன்
அந்தப் பிரவிஷ்ட சாஸ்தா ஜனா நாம் சர்வாத்மா –
யா பிருதிவ்யாம் திஷ்டன் பிரதிவா அந்தர யம் பிருத்வீ நவேத யஸ்ய பிருத்வி சரீரம் யா ப்ருத்வீ மந்த்ரோ யமயதி தை ஆத்மாந்த்ர்யாம்ம்ய யம்ருத —என்றும் –ய ஆத்மினி திஷ்டன் ஆத்ம நோந்தரோ யமாத்ம ந வேத யச்யாத்மா சரீரம் ய ஆத்மா நமந்தரோ யமதி சதா ஆத்மாந்தர் யாம்ருத -என்றும்
ய பிருதிவி மாந்தரே சஞ்சரன் —யஸ்ய மறுத்துச் சரீரம் –யம் ம்ருத்யூர் ந வேத ஏஷ சர்வாந்தராத்மா அபஹத பாபமா திவ்யோ ஏக தேவ நாராயணா தத் ஸ்ருஷ்ட்வா ததேவா நு பிராவிசத் -தத நு பிரவிச்ய -சச்சத்யச் சாபவத் –
போன்ற ஸ்ருதிகள் ப்ரஹ்மத்துக்கும் சித் அசித் களுக்கும் சரீராத்மா பாவத்தையே தாதாம்யம் என்று கூறுகின்றன –
இந்த இடத்திலும் -அநேக ஜீவேன ஆத்மா அநு பிரவிச்ய நாம ரூபே வ்யாகராணி -உள்ளுக்குள் பிரவேசித்து வஸ்துத்வமும் அந்த வாசக சப்தத்தினாலே ப்ரஹ்மம் உணர்த்தப் பட்டதே -சரீரமாக இருப்பதாலேயே வஸ்துத்வம் சித்த்ஹிக்கும் -ஐத தாத்ம்யம் இதம் சர்வம் -தத்வமஸி —
எனவே நிர்விசேஷ வஸ்துவுக்கு ஐக்யத்தை சொல்பவனுக்கும் ஔபாதிகமாகவும் ஸ்வா பாவிகமாயும் இருக்கிற பேத அபேத வாதிக்கும் பேதத்தை மாதரம் சொல்பவனுக்கும் -வையதி கரண்யத்தாலும்-சாமா நாதி கரண்யத்தாலும் ப்ரஹ்மாத்ம பாவ உபதேசங்கள் அனைத்தும் இழக்கப் பட்டவைகள் ஆகும் –
வசஸாம் வாச்யமுத்தமம் -ஹரிரகிலாபி ருதீர்யதே ததைக நதாச்ச்ம சர்வ வசஸாம் பிரதிஷ்டாயாத்ர சாஸ்வதீ–அதஸ் சர்வ சப்தா நாம் —

—————————————————-

ஜாதி குணங்கள் போலே த்ரவ்யங்களும் ப்ரஹ்மத்துக்கு சரீர பாவத்தால் விசேஷணம் ஆதலால் சாமா நாதி கரண்யம் முக்கியம் -பிரகாரத்வமே காரணம்
தண்டம் உள்ளவன் தண்டீ குண்டலம் உள்ளவன் குண்டலீ -தனித்து இருக்கவோ அறியவோ தகுதி அற்றவைகளுக்கு விசேஷத்வம் சாமா நாதி கரன்யத்தில் பர்யவசிக்கத் தக்கதே –
ஆன்மா வினைகளால் பசு மனிதன் தேவன் புருஷன் ஸ்திரீ நபும்சகன் -கோ கண்டம் முண்டம் சுக்ல பட கிருஷ்ண பட -ஜாதி குண வாசக சப்தங்கள் போலே –
மனுஷ்யன் ஆத்மா என்கிற சாமா நாதி கரண பிரயோகம் லா ஷணிகம் -முக்கியம் இல்லாதது -இது இவ் வண்ணம் அல்ல -சரீரங்கள் ஆத்மாவை ஆச்ரயித்து ஆஅத்மாவுக்கு பிரயோஜனமாகவும் ஆத்மாவுக்கு பிரகாரமாக இருப்பதும் -இதனால் தண்டம் குண்டலம் இவை போலே இல்லாமல் விசேஷணம் -மத்வர்த்தீய பிரத்யாயம் அபேஷை -மது பிரத்யாயம் இன் இக முதலியவை –ஆத்மா சஷூர் பிரத்யஷத்துக்கு விஷயம் அல்ல -சரீரத்தை கிரஹிக்கும் கண்ணால் ஆத்மா கிரஹிக்கப் படுகிறது இல்லை
பூமி -கந்தம் ரசம் -ஸ்வ பாவிக்க சம்பந்தம் உண்டானாலும் கண்ணால் கிரஹிக்கப் படுவது இல்லையே
ஆத்மாவுக்கு பிரகாரமாக இருப்பதே ஸ்வ பாவம் சரீரத்துக்கு -அப்ருதக் சித்த விசேஷணம் -மனுஷ்யாதி சப்தங்கள் ஆத்ம பர்யந்தமாக அர்த்தம் உணர்த்தும் திறமை வாய்ந்தவை -இதே போலே பரமாத்மா பர்யந்தமாக சப்தார்த்தம்
-ஆந் மேதி தூப கச்சந்தி க்ராஹய நதிச -என்று மேலே சொல்லப் போகிறார் –ஆத்மேத்ய வதுக்ருஹ்ணீயாத் -என்பர் வாக்யகாரர்
கங்கா யாம் கோஷ -கங்கை கரை -பிள்ளையை அழைத்து வா -என் பிள்ளை தொக்கி நிற்கும் –

அஸ்மான் மாயீ ஸ்ருஜதே விச்வமேதத் தச்மிம்ச்சான்யோ மாயயா சந்நிருத்த -மாயை -கர்ம பந்தத்தால் கட்டுப் பட்டு
மாயாந்து ப்ரக்ருதிம் வித்யான் மாயி யந்து மகேஸ்வரம் ஷரம் பிரதானம் ம்ருதாஷரம் -ஹர ஷராத்மான வீசதே தேவ ஏக –
அம்ருதாஷரம் ஹர -என்று -போக்தா நிர்தேசிக்கப் படுகிறான்
பிரதானத்தை போகய வஸ்துவாக சுவீகரிக்கும் ஜீவாத்மா ஹரன்
ச காரணம் கரணாதி பாதி பாதி போ ந சாஸ்ய கச்ஜிஜ்ஜனிதா ந சாதிப –
பிரதான ஷேத்ரஜ்ஞ்க்ன பதிர் குணேச –
பதிம் விச்வச்யாத்மேச்வரம் சாஸ்வதம் சிவமச்யுதம் –
ஜஞாஜ்ஜௌ த்வாவஜாவீ ச நீ ஷு-
நித்யோநித்யாநாம் சேதனஸ் சேத நா நாம் ஏகோ பஹூ நாம் யோ விதாதி காமான்
போக்தா போக்யம் ப்ரேரிதா ரஞ்சமத்வா –
தயோர் அந்ய பிப்பலம் ஸ்வாத்வத்தி அனச்னன் அநந்யோ அபிசாக தீதி
ப்ருதகாத்மானம் பிரேரி தாரஞ்ச மத்வா ஜூஷ்டச் ததச்தே நாம் ருததவ மேதி
அஜா மேகாகம் லோகித சுக்ல கிருஷ்ணாம் பஹ்வீம் பிரஜாம் ஜனயந்தீம் ஸ்வரூபாம் அஜோ -ஹ்யேகோ ஜூஷமாணோ நுசேத
ஜஹாத் யே நாம் புக்த போகாம ஜோன்ய
சாமானே வ்ருஷே புருஷோ நிமக்னோ அநீசயா சோசதி முஹ்யமான ஜூஷ்டம் யதா பசயத் யன்ய மீசமச்ய மஹிமா நமிதி வீத சோக
பகவத் கீதையிலும்
அஹங்கார இதே யம்மே பின்னா பிரகிருதி ரஷ்டதா அபரேய மிதஸ்தவ நயாம் பிரக்ருதிம் வித்திமே பராம் –
ஜீவா பூதாம் மஹா பாஹோ யயேதம் தார்யதே ஜகத் -சர்வ பூதானி கௌந்தேய பிரக்ருதிம் யாந்தி மாமிகாம் —
கல்பஷயே புனச்தானி கல்பாதௌ விஸ்ருஜாம் யஹம் ப்ராக்ருதீம் ஸ்வா மவஷ்டப்ய விஸ்ருஜாமி புன புன –
பூதக்ராமம் மிமம் க்ருதஸ் நமவசம் பிரக்ருதேர்வசாத்
மயாத்த்ய ஷேண பிரக்ருதிஸ் ஸூ யதே சசராசரமா –
ஹேது நா நே ந கௌந்தேய ஜகத்தி பரிவர்த்ததே ப்ரக்ருதிம் புருஷஞ்சைவ வித்த்யாநாதீ உபாவபி மமயோ நிர்மஹத் ப்ரஹ்ம தஸ்மின்
கர்ப்பம் ததாம் யஹம் சம்பவஸ் சர்வ பூதா நாம் ததோபவதி பாரத –என்று அருளிச் செய்கிறான்
அவயகதம் அஷரம் லீயதே அஷரந்தம் அஸி லீயதே –
சதேவ சோம்யே தமக்ர ஆஸீத் ஏகமேவ அத்விதீயம் -ததை ஷத பஹூச்யாம் பிரஜாயேயேதி தத் தேஜோ ஸ்ருஜத —சந்மூலாஸ் சோம்யே
மாஸ் சர்வா பிரஜாஸ் சதாயத நாஸ் சத் பிரதிஷ்டா -ஐததாத்மியதம் சர்வம் தத் சத்யம் ச ஆத்மா தத்வமஸி ஸ்வேத கேதோ —
சோகாமயத பஹூச்யாம் பிரஜா யே யே தி சன போதப்யத சதபச்தப்த்வா இதம் சர்வமஸ்ருஜத–சத்யஞ்சா நருதஞ்சா சத்யமபவத் –
ஹந்தா ஹமி மாச்திஸ்ரோ தேவதா அநேன ஜீவே நாத்மானா நுபிரவச்ய நாம ரூபே வ்யாகரவாணி —
தத் த்ருஷ்ட்வா ததேவா நுப்ரவசத்
தத நுபிரவச்ய சச்சத் யச்சாபவத் விஜ்ஞா நஞ்சா விஜ்ஞா நஞ்சா சத்யஞ்சா நருதஞ்சா சத்யமபவத் –
அநேன ஜீவே நாத்ம நனனுபிரவிச்ய
தத்தேதம் தர்ஹ்ய வ்யாக்ருத மாஸீத் தந் நாம ரூபாப்யயாம் வ்யாக்ரியத
காரணத்தைக் காட்டிலும் காரணமானது வேறான வஸ்து இல்லாதது பற்றி காரண ஜ்ஞானத்தால் கார்யம் ஆரியப் பட்டு இருப்பதால்
தனக்கு அபிமதமான ஏக விஜ்ஞானத்தால் சர்வ விஜ்ஞானம் எனபது நன்கு பொருந்தும் –

நான் இந்த எல்லா அசித் வஸ்துக்களுக்குள் என்னை ஆத்மாவாகக் கொண்ட ஜீவன் வாயிலாக பிரவேசித்து நாம ரூப வியாகரணம் செய்கிறேன் -திஸ்ரோ தேவதா -என்று எல்லா வஸ்துக்களையும் சொல்லி –அவைகளில் தன்னை ஆத்மாவாகக் கொண்ட ஜீவனுடைய அனுபிரவேசத்தால் -நாம ரூப வியாகரணம் சொல்லி இருப்பதால் -வாசக சப்தங்கள் அனைத்தும் பரமாத்மாவுக்கே வாசகங்கள் ஆதலால் -சாமா நாதி கரண்யமானது முக்கிய வருத்தம் –
ப்ரஹ்மமே காரியமும் காரனமுமாய் இருப்பதால் உபாதான காரணமும் ப்ரஹ்மமே -ஆனாலும் போக்த்ருத்வம் போக்யத்வம் நியந்த்ருத்வம் சாங்கர்யம் இல்லை
யஸ் சர்வஜ்ஞ்ஞஸ் சர்வவித பராஸ்ய சக்திர் விவிதைவ ச்ரூயதே ஸ்வா பாவிகீ ஜ்ஞான பல கிரியாச விஜ்ஞாதாரமரே கே ந விஜா நீயாத் -இது முதலிய ஸ்ருதிகள் ஜ்ஞாத்ருத்வத்தை அறிவிகின்றன -ப்ரஹ்மாத்மகவாக இல்லாத வஸ்துக்கள் இல்லை -ப்ரஹ்மாத்மகவாக உள்ள வஸ்துக்களின் நாநா பிராகாரத்வமும் நிஷேதிக்கப் பட வில்லை

இவ்வண்ணம் சித் அசித் ஈஸ்வரன் மூன்றுக்கும் ஸ்வரூப பேதத்தையும் -ஸ்வ பாவ பேதத்தையும் சொல்லுகிறவைகளும்-
கார்ய காரண பாவத்தையும் –கார்ய காரணங்கள் இரண்டுக்கும் அனந்யத்வத்தை -அபேதத்தை சொல்லுகிறவைக்களுமான எல்லா ஸ்ருதிகளுக்கும் அவிரோதமானது -சரீராத்மா பாவத்தையும் -சித் அசித் இரண்டுக்கும் காரண அவஸ்தையில் நாம ரூப விபாகங்களுக்கு அநர்ஹமான ஸூ ஷ்ம தசா பிராப்தியையும் -கார்ய தசையில் நாம ரூப விபாகங்களுக்கு தக்கதான ஸ்தூல தசா பிராப்தியையும் சொல்லுகிற ஸ்ருதிகளாலே அறியப் படுவதால்
ப்ரஹ்ம அஜ்ஞ்ஞான வாதம் -ஔபாதிகமான ப்ரஹ்ம பேத வாதம் -இவற்றுக்கு எவ்விததாலும் அவகாசம் காணப்படவில்லை -ஐக்கிய பிரதிபாதனமும் விருத்தம் அன்றோ –
ஆக்நேய யாகம் முதலிய ஆறு யாகங்களை -தர்ச பூர்ண மாசாப்யாம் -அதிகார வாக்கியம் பல காமனை உள்ளவனுக்கு செய்யத் தக்கதாக விதிக்கிறதோ -அப்படி வெவ்வேறு ஸ்வரூப ஸ்வ பாவங்களை உள்ள சித் அசித் ஈச்வரர்களை
ஷரம்-பிரதான மம்ருதாஷரம் ஹர -ஷராத்மா நாவீ சதே தேவ ஏக -பதிம் விச்வச்யாத்மேச்வரம் ஆத்மா நாராயணா பர -இது முதலிய வாக்யங்களால்
தனித் தனியாக பிரதிபாதித்து — யஸ்ய பிருத்வீ சரீரம் யஸ்ய ஆத்மா சரீரம் -யஸ்ய அவயகதம் சரீரம் யஸ்ய அசரம் சரீரம் ஏஷ சர்வபூத அந்தராத்மா அபஹதபாப்மா திவ்ய தேவ ஏகோ நாராயணா -இது முதலிய வாக்யங்களால் சித் அசித் இரண்டும் பரமாத்மாவுக்கு சரீரம் என்றும் பரமாத்மா அவற்றுக்கு ஆத்மா எனபதையும் பிரதிபாதித்து பரமாத்மாவைச் சொல்லும் சத் ப்ரஹ்ம முதலிய காரண அவஸ்தையுடன் கார்ய அவஸ்தையுடன் கூடிய பரமாத்மா ஒருவனே என்றும் வெவ்வேறாக அறியப் பட்டு இருக்கிற மூன்று வஸ்துக்களையும் –சதேவ சோம்யே தமக்ர ஆஸீத் ஐததாத்மியதம் சர்வம் –சர்வம் கல்விதம் ப்ரஹ்ம –இது முதலிய வாக்கியம் பிரதிபாதிக்கிறது –மனுஷ்ய பிண்ட சரீரம் உள்ள ஆத்ம விசேஷத்தை இந்த ஆத்மா சுகம் உள்ளவன் என்று சொல்லுவது போலே -இவற்றை சரீரமாக கொண்ட பரமாத்மாவை பரமாத்மா சப்தத்தால் சொன்னால் விரோதம் இல்லையே –
ப்ருஹத்த்வ குணம் உள்ள ஆத்மா ஓன்று என்கிற ஜ்ஞானத்தாலே அவித்யையின் அழிவு என்று சொல்வது பொருத்தம் அல்ல -கர்மங்களால் உண்டாகும் தேவாதி சரீரங்களில் பிரவேசம் -அதனால் பண்ணப்படும் சுக துக்க அனுபவம் -இப்படிப் பட்ட பந்தத்துக்கு எவ்வாறு மித்யத்வம் சொல்ல முடியும் –இப்படிப் பட்ட பந்த நிவ்ருத்தி பக்தி ரூபம் அடைந்த உபாசனத்தால் ப்ரீதி அடைந்த பர ப்ரஹ்மம் பிரசாதத்தினாலே அடையத் தக்கது என்று முன்பே சொல்லப் பட்டது
ஐக்ய ஞானம் மித்யாரூபம் -பந்தத்தின் விவ்ருத்தியே பலம்
ப்ரஹ்ம விஷயக ஞானமே மோஷ சாதனம்
உனக்கு அபிமதமாக இருக்கும் நிவர்த்தாக ஜ்ஞானமும் மித்யா ரூபமாதலால் அதற்கு நிவர்த்தகமாக வேறு ஒரு ஜ்ஞானம் உன்னால் தேடத் தக்கது -அதன் விநாசம் ப்ரஹ்மத்தின் ஸ்வரூபமே என்று சொல்லப் படுமேயானால் நிவர்த்தாக ஜ்ஞானத்தின் உத்பத்தியே ஏற்படாது -அதன் விநாசம் இருக்கும் பொழுது உத்பத்தி சம்பவியாதாதலால் –
ஜ்ஞானதிற்கு ஜ்ஞாதா யார் -ப்ரஹ்ம ஸ்வரூபமே ஜ்ஞானா என்றால் நமது பஷமே ஆகுமே
தேவதத்தனால் சேதிக்கப் பட்டது -என்றால் -சேத்தாவுக்கும் -வெட்டுகிறவனுக்கும் -சேதனக் கிரியைக்கும் சேதிக்கப் படாத வஸ்துவின் இடம் அனுபிரவேசத்தை சொல்லும் வசனம் போலே பரிஹசிக்கத் தக்கதாகும்
ஆகையால் பந்தம் -அநாதி கர்ம பிரவாஹ ரூபமான அஜ்ஞ்ஞானத்தின் அடியாக உண்டாய் இருப்பதால் அதன் நாசமானது கூறப் பட்டுள்ள ஜ்ஞானத்தினாலேயே -அந்த ஜ்ஞானத்தின் உத்பத்தி வர்ணாஸ்ரம தக்க கர்மங்களால் –
பலத்தை நோக்கி செய்யும் கர்மங்கள் அல்பம் அஸ்தரம் பலன்களையே கொடுக்கும் -பலத்தை கருதாமல் பரம புருஷனுடைய ஆராதன வேஷம் பூண்ட கர்மங்கள் உபாசன ரூபமான ஜ்ஞான உத்பத்தியின் வாயிலாக ப்ரஹ்ம யாதாம்ய அனுபவ ரூபமான அந்தமில் பேரின்பம் -சாஸ்வத பலன்களுடன் கூடியது என்பதும்
கர்ம ஸ்வரூப ஜ்ஞானம் இல்லாமல் அறியப் படுவது இல்லையே
கர்ம விசாரத்துக்கு பிறகு கர்மங்கள் அல்ப அஸ்த்ர பலன்கள் உள்ளவைகள் என்று நிச்சயிக்கப் பட்டு விட்ட படியால் ப்ரஹ்ம விசாரம் செய்யத் தக்கது என்று -அதாதோ ப்ரஹ்ம ஜிஜ்ஞாஸா -என்கிற ஸூ தரத்தினால் கூறப் பட்டது –

———————————————————————————-

பூர்வ பஷி நினைக்கிறான் -சப்தத்துக்கு போதகத்வ சக்தி நிச்சயம் சம்பவியாததால் -வ்யவஹாரம் கார்ய புத்தியை முன்னிட்டே இருப்பதால்
-வேதார்த்தம் கார்ய ரூபமே
சர்ப்பத்தின் இடம் பயந்தவனுக்கு இது சர்ப்பம் அல்ல கயிறு என்று கேட்டதும் பய நிவ்ருத்தியை காண்பதனால் சர்ப்பத்தின் அபாவ புத்தி ஹேதுத்வம்
நிச்சயம் அல்ல -அசைவு அற்று இருக்கிறது -விஷம் இல்லாதது -அசேதனம் -இது முதலிய அர்த்த ஜ்ஞானங்களே பய நிவ்ருத்திக்கு ஹேதுக்கள்-
கார்ய புத்தி பிரவ்ருத்தி இவ்விரண்டுக்கும் உள்ள வ்யாப்தி பலத்தினால் -எல்லா பதங்களும் கார்யார்த்த போதனத்திலே நோக்கு
இஷ்ட உபாயம் என்னுடைய பிரத்யத்னாதாலே சித்தி பெறப்படும் -சாதுர்மாஸ்ய யாஜினா ஸூ க்ருதம் பவதி முதலியவைகளால்
கர்மங்களுக்கே ஸ்திர பலன்கள் கிட்டும் எனவே ப்ரஹ்ம விசாரம் ஆரம்பமானது உக்தம் அல்ல -என்பர்
மாதா பிதா சந்தரன் பசு மிருகம் -சுட்டிக் காட்டி இதை அறிந்து கொள் பல தடவை சிஷிக்கப் பட்டே புத்தியின் உத்பத்தியைக் கொண்டு
சப்த பிரயோக போதகத்வ சக்தி காரணம் என்று நிச்சயிக்கிறார்கள்
ஆத்மாவாரே த்ரஷ்டவ்ய ச்ரோதவ்யோ மந்தவ்யோ நிதித்யாசி தவய சோன் வேஷ்டவ்ய ச விஜிஜ்ஞாசி தவய விஜ்ஞாயா பிரஜ்ஞாம் குர்வீத தஹோரோஸ் மினனந்தர-ஆகாச தசமின்ய தந்தச்த தன்வேஷ்டவ்யம் தத்வாவ விஜிஜ்ஞாசிதவ்யம் தத்ராபி தஹ்ரம் ககனம் விசோகஸ் தச்மின்ய தந்தச்த துபாசிதவ்ய —
உபாசன விஷய கார்யத்தில் அதிகாரம் உள்ளவனுக்கு ப்ரஹ்ம விதாப் நோதி பரம் -பலமாக சொல்வதால் -கார்யத்துக்கு
உபயோகியாய் இருப்பதால் சித்தி ஏற்படுவதால் உபாசன விஷய கார்யத்துக்கு உபயோகியாக இருப்பதால் -பலமாய் இருக்கிற ப்ரஹ்ம ஸ்வரூபத்திலும்-அதற்கு விசேஷமான குணம் முதலியதிலும்
விதி விரோதியான பலத்திலும் சம்சார ஹேதுத்வம் முதலியதிலும் விவஷையானது செய்யத் தக்கது என்று அர்த்தம் –
கார்யத்துக்கு க்ருதி சாத்யத்வம் இஷ்டத்வம் க்ருத்யுதேச்யத்வம் மூன்றும் அவன் மதத்தில் ஒப்புக் கொள்ளப் பட்டு இருக்கிறது
பரகத அதிசய அதானேச்சாய உபாதேயத்வமேவ யஸ்ய ஸ்வரூபம் ச சேஷ பரச் சேஷி -ஸ்ரீ பாஷ்யகாரர்
சேஷ -பராதர்த்தவாத் -அந்யனனுடைய பிரயோஜனமே எவனுக்கு பரம பிரயோஜனமோ அவன் செஷன் -அந்யன் சேஷி
இச்சை ச்வீகாரம் -இரண்டும் உண்டே
பலமத உபபத்தே -ஸூ தரம் -பரம புருஷனே பல சித்தி அளிப்பவன்
-கர்ம பலன்கள் அல்பம் அஸ்திரம் –ப்ரஹ்ம ஜ்ஞானமே அபரிமிதம் ஸ்திரபலம் அளிக்கும் -எனவே ப்ரஹ்ம விசாராம்பம் தக்கதே –

————————————————————————————————-

கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஸ்ருதி பிரகாசர் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ போதாயனர் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ பாஷ்யம்– 1-1-1– மஹா சித்தாந்தம் -மூன்றாம் பாகம் — -ஸ்ருத பிரகாசிக சுருக்கம் –

September 25, 2015

நிர்குண வாக்யங்களுக்கும் விரோதம் இல்லை –நிர்க்குணம் -நிரஞ்ஜனம் -நிஷ்களம் -நிஷ்க்ரியம் -சாந்தம் -இது முதலான அந்த வாக்யங்கள்
ப்ராக்ருதங்களாயும் ஹேயங்களுமாயும் உள்ள குணங்களை விஷயமாகக் கொண்டு இருப்பதால் –
ஜ்ஞானம் மாத்ரம் ஸ்வரூபம் எனக் கூறுகின்ற ஸ்ருதிகளும் ப்ரஹ்மத்துக்கு ஜ்ஞான ஸ்வரூபதையைச் சொல்லுகின்றன-
அவ்வளவினால் நிர்விசேஷ ஜ்ஞானம் மாத்ரமே தத்வம் ஆகாது -ஜ்ஞானத்துக்கு ஆச்ரயமாய் இருப்பவனே ஜ்ஞான ஸ்வரூபனாய் இருப்பதால் –
ஜ்ஞானத்தையே ஸ்வரூபமாய்க் கொண்டு இருக்கிற அந்த ப்ரஹ்மத்துக்கு ஜ்ஞான ஆச்ரயமானது ரத்னம் சூர்யன் தீபம் முதலிய வஸ்துக்களுக்கு
இருப்பது போலே உக்தமே என்று உரைக்கப் பட்டது –ஜ்ஞாத்ருத்வத்தையே யன்றோ எல்லா ஸ்ருதிகளும் கூறுகின்றன –
யஸ் சர்வஜ்ஞஸ் சர்வவித் –என்றும் -ததை ஷத -என்றும் -சேயம் தேவதை ஷத -என்றும் -சாஷாத் லோகன் நுஸ்ருஜா இதி -என்றும்
நித்யோ நித்யா நாம் சேதனஸ் சேதனா நாம் ஏகோ பஹூ நாம் யோவிததாதி காமான் -ஜ்ஞாஞ்ஜௌ த்வாவஜா வீச நீ சௌ–என்றும்
தமீச்வராணாம் பரமம் மகேஸ்வரம் தம் தைவதா நாம் பரமஞ்ச தைவதம் பதிம் பதீ நாம் பரமம் பரஸ்தாத் விதாமதேவம் புவ நேச மீட்யம் -என்றும்
நதஸ்ய கார்யம் கரணஞ்ச வித்யதே ந தத் சமஸ் சாப்யதிகஸ் சத்ருச்யதே -என்றும் –
பராச்ய சக்திர் விவிதை வத்ருச்யதே ஸ்வா பாவிகீ ஜ்ஞான பல கிரியாச -என்றும்
ஏஷ ஆத்மா அபஹதபாப்மா –சத்ய சங்கல்ப –இவை முதலிய ஸ்ருதிகள் –
ஜ்ஞான ஸ்வரூபமாகவே இருக்கிற பிராமதிற்கு ஜ்ஞாத்ருத்வம் முதலிய கல்யாண குணங்கள் ஸ்வ பாவ சித்தங்கள் என்று கூறுகின்றன –
சமஸ்த ஹேய குண ராஹித்யைத்தையும் சொல்லுகின்றன –
அபஹத பாபமா என்கிற பதத்தை முதலிலும் அபீபாச -என்கிற பதத்தை ஈற்றிலும் கொண்ட வாக்யத்தால் ஹேய குணங்களை நிஷேதித்து
சத்ய காம சத்ய சங்கல்ப என்று ப்ரஹ்மத்துக்கு கல்யாண குணங்களை விதிக்கிற இந்த சுருதியே நிர்குண வாக்யங்களுக்கும் ச குண வாக்யங்களுக்கும்
விஷயத்தை விவேசனம் செய்கிறது பற்றி ச குண நிர்குண வாக்யங்கள் இரண்டுக்கும் விரோதம் இல்லாமையால் இரண்டில் ஓன்று பொய்யான பொருளை உணர்த்துவதில் நோக்கு உள்ளது என்று சந்தேகப் படத் தக்கதல்ல –

ப்ராக்ருத –ஜ்ஞான மாத்ர –நதாவதா –ஜ்ஞாதுரே வஜ்ஞ்ஞா ந ஸ்வரூபத்வாத் –ஜ்ஞான ச்வரூபச்ய -ஜ்ஞாத்ருவ மேவஹி –
ஜ்ஞாதுரேவ ஜ்ஞான ஸ்வரூபத்வாத் இதி
ஜ்ஞான ஸ்வரூபச்யைவ–ஜ்ஞாத்ருமேவஹி –நதஸ்ய இதி –சமஸ்த ஹேய ரஹித தாஞ்ச –கல்யாண குணாத்
இதி சகுண நிர்குண வாக்யயோ ரீதி –அந்ய தரச்ய

——————————————————————————————- —

பீஷாஸ்மாத்-இத்யாதி ஸ்ருதிகளால் பிரம்மா குணங்களைத் தொடங்கி–தே யே சதம் -ஏக –என்று தொடர்ந்து க்ரமமாக ஷேத்ரஜ்ஞர்களுடைய
ஆனந்த அதிசயத்தைக் கூறி -யதோ வாசோ –வித்வான் — என்ற இந்த ஸ்ருதி ப்ரஹ்மத்தின் உடைய கல்யாண குணங்களின் அளவிறந்த
தன்மையை அதிக ஆதரத்துடன் கூறுகிறது –
அவன் சர்வஜ்ஞனனாய் இருக்கிற ப்ரஹ்மத்தோடு கூட எல்லா கல்யாண குணங்களையும் அனுபவிக்கிறான் —என்று ப்ரஹ்ம வேதன பலத்தை அறிவிக்கிற வாக்கியமானது சர்வஜ்ஞ்ஞனான பர ப்ரஹ்மத்தின் உடைய ஆனந்த்யத்தை சொல்லுகிறது -எல்லாம் அறிந்து ப்ரஹ்மத்தோடே கூட எல்லா காமங்களையும் நன்றாக அனுபவிக்கிறான் -காமங்கள் ஆவன -காமிக்கப் படுபவைகள் -கல்யாண குணங்கள் -ப்ரஹ்மத்துடன் கூட அதன் குணங்கள் அனைத்தையும் நன்றாய் அனுபவிக்கிறான் என்று அர்த்தம் – தஹர வித்யையில்–தஸ்மின் யதந்தா ததன் வேஷ்டவ்யம் -என்கிற வாக்யத்தைப் போலே குணா பிரதான்யத்தை சொல்லுவதற்க்காக -சஹ பிரகாரை கியம் –யதாக் ரதுரஸ் மின்லோக்கே புருஷோ பவதி ததேத பரேத்ய பவதி -என்கிற ஸ்ருதியினாலே சித்தம் –
எவனால் ப்ரஹ்மமானது புத்திக்கு விஷயம் ஆகாது என்று அறியப் பட்டு இருக்கிறதோ -அவனால் தான் ப்ரஹ்மம் அறியப் படுகிறது –
ப்ரஹ்மம் ஞான விஷயம் என்று அறிந்தவர்களால் அறியப் படுகிறது இல்லை எனப் ப்ரஹ்மத்துக்கு ஜ்ஞான விஷயத்வம் கூறப் பட்டு இருக்கிறது என்று சொல்லப் படுமே யானால் -ப்ரஹ்மத்தை அறிந்தவன் உத்தமமான பதவியை அடைகிறான் -ப்ரஹ்மத்தை அறிந்தவன் ப்ரஹ்மமே ஆகிறான் -என்ற ஜ்ஞானத்தினாலே மோஷ உபதேசமானது உண்டாகாமல் போகும் –ப்ரஹ்மம் இல்லை என்று அறிவானே யாகில் அவன் இல்லாதவனாகவே ஆகிறான் –ப்ரஹ்மம் இருக்கிறது என்று அறிவானே யாகில் அவனை அந்த ப்ரஹ்ம ஜ்ஞானத்தினாலே சத்தை உள்ளவனாக அறிகிறார்கள் என்று ப்ரஹ்ம விஷய ஜ்ஞானத்தின் சத்பாவ அசத் பாவங்களால் ஆத்ம நாசத்தையும் ஆத்ம சத்தியையும் ஸ்ருதி கூறுகிறது
ஆதலால் ப்ரஹ்ம விஷயமான வேதனமே மோஷ உபாயம் என்று எல்லா ஸ்ருதிகளும் விதிக்கின்றன -ஜ்ஞானமும் உபாசன ரூபம் –
உபாசிக்கத் தக்க ப்ரஹ்மமும் ச குணம் என்று கூறப் பட்டு இருக்கிறது -யதாவாசோ நிவர்த்தந்தே –அப்ராப்ய மனசா சஹ –என்று
முடிவற்றதும் அபரிச்சின்னமான குணங்களோடு கூடியதுமான ப்ரஹ்மத்துக்கு இவ்வளவு தான் என்று வாக்காலும் மனசாலும் அளவிடத் தகைமை
கேட்க்கப் படுவதனால் -ப்ரஹ்மமானது இவ்வளவு என்று ப்ரஹ்ம விஷயகமான பரிச்சேத ஜ்ஞானம் உள்ளவர்களுக்கு ப்ரஹ்மமானது அறியப் படாததும்
எண்ணப் படாததுமாக ஆகின்றது என்று கூறப் பட்டது ப்ரஹ்மமானது அபரிச்சின்னமாய் இருப்பதால் –
அங்கனம் இல்லா விடில் -யஸ்யா மதம் தஸ்ய மதம் –விஜ்ஞாதம் அவிஜா நாதம் -என்று மத்த அவிஜ்ஞாதத்த வசனங்கள் அவ்விடத்திலே விரோதிக்கும் –
ந த்ருஷ்தேர்த்ருஷ்டாரம் ந்மேதேர் மந்தாரம் -என்கிற சுருதியானது திருஷ்டி மதி இவ்விரண்டைக் காட்டிலும் வேறான த்ரஷ்டாவையும் மந்தாவையும்
நிஷேதிக்கின்றது என்று யாது ஓன்று கூறப் பட்டதோ அது ஆகந்துகமான சைதன்ய குண சம்பந்தம் உள்ளதாக இருப்பதால் ஜ்ஞாதாவான ஆத்மாவுக்கு குதர்க்கத்தால் சித்திக்கிற அஜ்ஞ்ஞாத ஸ்வரூபதையை நினைத்து –அவ்வாறு ஆத்மாவை பாராதே எண்ணாதே பின்னியோ த்ரஷ்டாவாயும் மந்தாவாயுமாய் இருக்கிற ஆத்மாவை திருஷ்டி மதி ரூபமாகவே பார் நினை என்று சொல்லுகிறது என்று பரிஹரிக்கப் பட்டது -அல்லது —திருஷ்டியினால் பார்ப்பவனும் மதியினால் எண்ணுகிற வனுமான ஜீவாத்மாவை நிஷேதித்து சர்வ பூத அந்தராத்மாவான பரமாத்மாவையே உபாசிப்பாயாக என்று வாக்யார்த்தம்
அப்படிச் சொல்லாவிடில் விஜ்ஞா தாரம் அரேகேந விஜா நீயாத் -இது முதலிய ஜ்ஞாத்ருத்வ பிரதிபாதாக ஸ்ருதி விரோதமும் வரும் —
ஆனந்தோ ப்ரஹ்ம -என்கிற ஸ்ருதியினால் ஆனந்த மாத்ரமே ப்ரஹ்ம ஸ்வரூபமாக அறியப்படுகிறது என்று எது கூறப் பட்டதோ-அது ஜ்ஞானாஸ்ரயமான ப்ரஹ்மத்துக்கு ஜ்ஞானம் ஸ்வரூபம் என்று சொல்லுகிறது என்று பரிஹரிக்கப் பட்டது -அநுகூலமான ஜ்ஞானமே ஆனந்தம் என்று கூறப் படுகிறது –
விஜ்ஞானம் ஆனந்தம் ப்ரஹ்ம -என்கிற ஸ்ருதியினால் ஆனந்த ரூபமாகவே இருக்கின்ற ஜ்ஞானம் ப்ரஹ்மம் என்று அர்த்தம் –
அதனாலே தான் ஜ்ஞானம் ஆனந்தம் இரண்டுக்கும் விஷய ஐக்கியம் இருப்பதினாலேயே உங்களுக்கு ஏக ரசதை சித்திக்கிறது –
ஜ்ஞான ஸ்வரூபமான இந்த ப்ரஹ்மத்துக்கே ஜ்ஞாத்ருத்வமும் அநேக ஸ்ருதிகளாலே நன்று அறியப் பட்டு இருக்கிறது என்று கூறப் பட்டது –
அப்படிப் போலவே -ச ஏகோ ப்ரஹ்மண ஆனந்த –ஆனந்தோ ப்ரஹ்மணோ வித்வான் –என்கிற வ்யதிரேக நிர்தேசத்தாலும் ஆனந்தம் மாத்ரம்
ப்ரஹ்மம் அல்ல -பின்னியோ ஆனந்தம் உள்ளது ப்ரஹ்மம் -ஜ்ஞாத்ருத்வம் அன்றோ ஆனந்தித்வம் –

கல்யாண குணா ஆனந்தம் இதி —ஆனந்தம் ப்ரஹ்மணோ வித்வான் —அத்யாதரேண — இயம் ஸ்ருதி
பரமே வ்யோமன் சோஸ்நுதே—-பிராப்தி சொல்லி -சர்வான் காமான் -பிராப்யம் சொல்லி —
பர சப்தம் என்பதைக் காட்ட பரஸ்ய விபஸ் சிதோ ப்ரஹ்மண-என்றும் — ப்ரஹ்ம விதாப் நோதிபரம –பல உபாசனயோ ஸ்ருத்யைவ –
யஸ்ய –ப்ரஹ்ம வித் –அசந்நேவ –அத -ஜ்ஞா நஞ்ச –உபாஸ் யஞ்ச –யதோ வாச –அனந்தசய –அபரிச்சின்ன குணச்ய —
அபரிச்சின்னத்வாத் ப்ரஹ்மண–அந்யதா –
யாத்து –நத்த்ருஷ்டே –தத்து –குதர்க்க -சித்தாம் -ஆகந்துக சைதன்ய குண யோகி தயா –அந்யதா —
ஆனந்த –தத் ஜ்ஞானாஸ்ரயச்ய –ஜ்ஞான மேவஹி–விஜ்ஞானம் -அசய -ஜ்ஞாத்ருத்வமேவஹி ஆனந்தித்வம் —

——————————————————————————————

எந்த நிலைமையில் ப்ரஹ்மத்தைக் காட்டிலும் பேதம் இருப்பது போலே ஏற்படுகிறதோ -இந்த பிரபஞ்சத்தில் -ப்ரஹ்மத்தைத் தவிர்ந்து வேறான
ஒரு வஸ்துவும் இல்லை —எவன் இந்த பிரபஞ்சத்தில் ப்ரஹ்மத்தை விட வேறாக வஸ்துக்கள் இருப்பது போல் காண்கிறானோ அவன்
அவித்யையின் நின்று அவித்யயை நாடுகிறான் –எப்பொழுது இவனுக்கு எல்லாம் ஆத்மாவாகவே ஆயிற்றோ அப்பொழுது எவன் எதனால் எதைப்
பார்ப்பான் -என்று பேத நிஷேதம் பலவாறாகக் காணப் படுகிறது என்று யாது ஓன்று கூறப் பட்டதோ -அது உலகம் அனைத்துக்கும் ப்ரஹ்ம காரயமாக இருப்பதாலும் ப்ரஹ்மத்தை அந்தர்யாமியாக கொண்டு இருப்பதாலும் ப்ரஹ்மாத்மகமாக இருப்பது பற்றி
ஒன்றாக இருப்பதால் அதற்கு விருத்தமான நாநாத்வம் நிஷேதிக்கப் படுகிறது –
ஸூர நர திர்யக் ஸ்தாவர ரூபமாக பல வஸ்துக்களாக ஆகக் கடவேன் –அதற்காக ஆகாசாதி ரூபமாக நான் உண்டாக்கக் கடவேன் என்ற
பகு பவன சங்கல்பத்தை –முன்னிட்ட ஸ்ருதி சித்தமான ப்ரஹ்மத்தின் நாநா பாவமானது நிஷேதிக்கப் படுகிறது இல்லை என்று பரிஹரிக்கப் பட்டது
நாநாத்வ விசேஷத்தினால் இந்த சுருதியானது அபரமார்த்த விஷயை என்று சொல்லப் படுமே யாகில் -அல்ல –
பிரத்யஷம் முதலிய சகல பிரமாணங்களால் அறியப் படாததும் எவ்விதத்தாலும் ஏற முடியாததுமான நாநாத் வத்தை ப்ரஹ்மத்துக்கு பிரதிபாதித்து
அதே பாதிக்கப் படுகின்றது என்கிற இந்த வசனம் பரிஹசிக்கத் தக்கது –

ம்ருத்யோஸ் சம்ருத்யும் ஆப் நோதிய இஹ நா நேவ பஸ்யதி -யஸ்மாத் ஷரம் அதீதோஹம் –யோ மாமேவசம் மூடோஜா நாதி புருஷோத்தமம் —
ப்ருதகாத்மானம் ப்ரேரிதா ராஞ்ச மத்வா ஜூஷ்டம் யதா பச்யத் அந்ய மீசம்
ப்ரஹ்ம கார்ய தயா -தத் அந்தர்யாமி கதயா –சோமயேமோ-சத்வா பிரஜா -சதா யதனா சந் மூலா சத் பிரதிஷ்டா —
மயிசர்வமிதம் ப்ரோதம் -ஸூ த்ரே மணி கணா—தத் ஸ்ருஷ்ட்வா தத் ஏவ அநு ப்ராவிசத் —
தே நேதம் பூர்ணம் புருஷேண சர்வம் — தஜ்ஜலான் —-தத் ப்ரத்ய நீக்க நாநாத்வமிதி -தத் ப்ரத்ய நீ கேதி-
நேஹ நா நாஸ்தி கிஞ்சன –ஏக தைவ அநுத் ரஷ்டவ்ய மிதி ஏகதா ஏக தயா —

—————————————————————————————-

யதாஹ் யேவைஷ ஏதஸ்மின் நுதர மந்தரம் -குருதே அத தஸ்ய பயம்பவதி –ப்ரஹ்மத்தின் இடம் கொஞ்சம் பேதத்தை பாராட்டுபவன் பயம் அடைவான் -என்று -ப்ரஹ்மத்தின் இடம் நாநா வத்தை பார்க்கிறவனுக்கு பயம் சம்பவிக்கும் -என்று உரைக்கப் பட்டது சரி அல்ல –
சர்வம் கல்விதம் ப்ரஹ்ம –தாஜ்ஜலான் இதி சாந்த உபாசீத —ப்ரஹ்மத்தின் இடம் உண்டாகி லயித்து அவனால் ரஷிக்கப் படுகிறது என்று அறிபவன்
சாந்தனாக உபாசிக்கக் கடவன் -என்று சாந்திக்கு ஹேது -உபதேசிக்கப் படுவதால் அத்தை உபபாதிக்கிறார் -ததாஹி -என்று
உலகம் அனைத்தும் அந்த ப்ரஹ்மத்தின் ஸ்திதி சிருஷ்டி லயங்களுக்கு கர்மாவாக இருப்பதால் அந்த ப்ரஹ்மாத்மக அனுசந்தானத்தால் –
சாந்தி விதிக்கப் படுகிறது –அபய பிராப்திக்கு ஹேது -என்பதால் பய ஹேதுத்வத்துக்கு பிரசங்கம் இல்லை –
இங்கனம் ஆகில் அதற்குப் பிறகு அவனுக்கு பயம் உண்டாகிறது என்று ஏன் சொல்லப் படுகிறது -இதோ மறுமொழி உரைக்கப் படுகிறது –
கண் முதலிய இந்த்ரியன்களால் கிரஹிக்கத் தகாதவனும் -சரீரம் இல்லாதவனும் -ஜாதி குணம் முதலியவைகளை சொல்லுகிற தேவாதி பதங்களால் வாச்யன் அல்லாதவனும் ஆதாரமும் இல்லாதவனுமான இந்த பரமாத்மாவின் இடத்தில் எப்பொழுது இவன் பயம் இல்லாமல் இருப்பதற்காக இடைவெளி இல்லாத சம்ருத்தி ரூபமான நிஷ்டையை அடைகிறானோ அப்பொழுது அபயத்தை பெற்றவனாக ஆகிறான் என்று
அபய பிராப்திக்கு ஹேதுவாக ப்ரஹ்மத்தின் இடத்தில் எந்த நிஷ்டை உரைக்கப் பட்டதோ அதற்கு விச்சேதம் வரில் பயம் உண்டாகிறது
என்று மகரிஷிகளால் இதற்கு சம்வாதம் கூறப் பட்டு இருக்கிறது -ஒரு முகூர்த்த காலமோ ஷண காலமோ வாஸூ தேவன் சிந்திக்கப் படாமல் போவானே யாகில் அது இஷ்ட ஹானி அது பெரிதான அநிஷ்ட பிராப்திக்கு அணுகி வருவதற்கு சந்து -அது அந்த பரமாத்மாவினால் உண்டு பண்ணப் பட்ட சித்த ஸ்தலனம்-
அந்த ஸ்வா தினத்தை இல்லாமையால் உள்ளபடி இராத அங்கங்களின் வியாபாரம் -இது முதலியவை -ப்ரஹ்மத்தின் இடத்தில் பிரதிஷ்டைக்கு அந்தரம் அவகாசம் விச்சேதமே – நஸ்தா நதோபி -என்கிற ஸூ த்ரத்தினில் ப்ரஹ்மமானது எல்லா விசேஷங்களாலும் விடுபட்டது என்று சொல்லப் போகிறார் -என்று யாதொன்று உரைக்கப் பட்டதோ -அது அப்படி அல்ல – ப்ரஹ்மமானது விசேஷங்களுடன் கூடியது என்றே அங்கு கூறப் போகிறார் -மாயா மாத்ரந்து–என்கிற ஸூ தரத்தினால் ஸ்வப்ன காலத்தில் அனுபவிக்கப் படுகிற பதார்த்தங்களுக்கு ஜாக்ரித அவஸ்தையில் அனுபவிக்கப் பட்டு இருக்கிற பதார்த்தங்களோடு ஒற்றுமை இல்லாமையால் மாயா மாத்ரத்வம் சொல்லப் படுகிறது என்பதனால் ஜாக்ரித அவஸ்தையில் அனுபவிக்கப் பட்ட பதார்த்தங்களுக்கு போலே பாரமார்த்திகத்வத்தையே சொல்லப் போகிறார் –
ஸ்ம்ருதி புராணங்களில் கூட நிர்விசேஷ ஜ்ஞான மாத்ரமே பரமார்த்தம் மற்றது அபார மார்த்திகம் -என்று அறியப் படுகின்றது என்று எது சொல்லப் பட்டதோ அது சரியல்ல —எவன் என்னை பிறப்பு இல்லாதவன் என்றும் ஆதி இல்லாதவன் என்றும் உலகங்களுக்கு மகேஸ்வரன் என்றும் அறிகிறானோ –
சராசரங்கள் அனைத்தும் என்னிடத்தில் நிலை பெற்று இருக்கின்றன -நான் அவைகளின் இடத்தில் அவைகளை ஆதாரமாக கொண்டு இருப்பவன் அல்ல
சரா சரங்கள் என் சங்கல்ப மாத்ரத்தாலே நிலை பெற்று இருக்கிறதே ஒழிய என்னிடத்தில் நிலை பெற்று இருக்க வில்லை
ஈஸ்வரனுக்கு அசாதாரணமாக இருக்கிற என்னுடைய சர்வ சக்தி யோகத்தைப் பார் -என் சங்கல்பமானது சராசரங்களை பரிக்கிறது -தாங்குகிறது -அவைகளில் நிலை பெற்று இருக்க வில்லை —பூதங்களுடைய சத்த அநு வர்த்தகம் -நான் எல்லா உலகங்களும் உண்டாவதற்கு காரணம் -அவ்வாறே நாசத்துக்கும் காரணம் -தனஞ்சய -என்னை விட மிக்க சிறப்புள்ள வேற வஸ்து ஒன்றும் கிடையாது —இவை அனைத்தும் நூலில் மணி கணங்கள் போலே என்னிடத்தில் இசைக்கப் பட்டு இருக்கிறது —நான் இந்த பிரபஞ்சகம் அனைத்தையும் சங்கல்பம் ஏக தேசத்தால் அதிஷ்டானாம் ஆக்கிக் கொண்டு நிலை பெற்று இருக்கிறேன் –
ஷர அஷர சப்த வாச்யங்களான சேதன அசேதனங்களைக் காட்டிலும் வேறாக இருப்பவனான உத்தம புருஷனோ என்றால் பரமாத்மா வென்று சொல்லப் பட்டு இருக்கிறான் -குறைவற்றவனும் நியந்தாவாகவும் இருக்கிற எவன் மூ வுலகங்களையும் உள்ளே பிரவேசித்து தரிக்கிறானோ
யாதொரு காரணத்தினால் நான் அழிதலை ஸ்வ பாவமாகக் கொண்ட அசேதனங்களை தாண்டினவனாகவும் அழிவற்றவைகளான சேதன வர்க்கங்களைக்
காட்டிலும் உத்தமனாகவும் இருக்கிறேனோ அதனால் உலகத்திலும் வேதத்திலும் புருஷோத்தமன் என்று பிரசித்தி பெற்று இருக்கிறேன்

ததசத் –சர்வம் –ததாஹி –சர்வச்ய –அத யதோக்தம் -ப்ரஹ்மணி–யதுக்தம்

யோமா மீதி –யோகம் ஐஸ்வர்யம் –பூதபருத் –அஹம் -மயி -விஷ்டாப்யஹம் –உத்தம –

——————————————————————————————–

ரிஷியே அவன் சர்வ பூதங்களுக்கும் மூல காரணமாக இருக்கிற பிரதானத்தையும் மஹத் அஹந்காரங்க ளையும் சத்வ ரஜஸ் தமஸ் குணங்களால் உண்டாகிற தோஷங்களையும் -தாண்டினவனாகவும் -எல்லா வித ஜ்ஞான சங்கோச த்தைக் கடந்தவனாகவும் -எல்லா வஸ்துக்களுக்கும் அந்தராத்மாவாகவும் இருக்கிற -உபவவிபூதி மத்யத்தில் எது இருக்கிறதோ அது எல்லாம் அவனால் வியாபிக்கப் பட்டு இருக்கிறது –
அந்த பரம புருஷன் சமஸ்த கல்யாண குணங்களை தரமி ஸ்வரூபமாக உடையவன் -தன்னுடைய சாமர்த்திய லேசத்தாலேயே தரிக்கப் பட்டு இருக்கிற கார்ய வஸ்து சமூஹத்தை உடையவன் –இச்சையினால் ஏற்றுக் கொள்ளப் பட்டும் தனக்கு அனுபவமுமாய் இருக்கிற பெரிதான தேஹங்களுடன் கூடியவன்
உலகங்களுக்கு ஹிதமான கார்யங்களைச் செய்து முடிப்பவன் தேஜஸ் பலம் ஐஸ்வர்யம் அபரிச்சின்ன மயமான ஜ்ஞானம் நல்ல வீர்யம் சக்தி முதலிய குணங்களின் குவியலாக இருப்பவன் -ப்ரஹ்ம ருத்ராதிகளிலும் மேம்பட்டவன் பராபர வஸ்துக்களுக்கு நியந்தாவாக இருக்கிற எந்த பரம புருஷன் இடத்தில் சமஸ்தங்களான கிலேசங்கள் முதலியவைகள் இல்லையோ -அவன் எல்லா உலகங்களுக்கும் நியந்தா -கார்ய காரண பாவ அவஸ்தை யுடன் கூடிய சேதன வர்க்கங்களை சரீரமாக உடையவன் -அவ்யக்தமான ஸ்வரூபத்துடன் உடையவன் பிரகாசிக்கிற ஸ்வரூபம் உடையவன் -எல்லா வற்றுக்கும் நியந்தா -ஸ்வரூபத்தாலும் பிரகாரத்தாலும் எல்லா வற்றையும் அறிந்தவன் -அவாப்த சமஸ்த காமன் –எல்லா வற்றையும் அப்ருதக் சித்த விசேஷணங்களாகக் கொண்டவன் -தனக்கு மேலாக ஒருவரும் இல்லாத ஈஸ்வரன் என்ற பெயர் உள்ளவன் -எந்த சாஸ்த்ர்யா ஜன்ய ஜ்ஞானத்தால் தோஷம் அற்றதும் சுத்தமாகவும் மிக்க நிர்மலமாயும் ஸ்திர ஸ்வ பாவமும் உள்ளது மான அந்த ப்ரஹ்மம் அறியப் படுகிறதோ -எந்த பரபக்தி ரூபமாயும் அனுபவ ரூபமாகவும் இருக்கிற ஜ்ஞானத்தால் அனுபவிக்கப் படுகிறதோ அது ஜ்ஞானம் -அதைக் காட்டிலும் வேறானது அஜ்ஞானம் என்று சொல்லப் பட்டு இருக்கிறது –

புராண வசனங்கள் -ஹேய ப்ரத்ய நீகத்வத்தையும் -சமஸ்த கல்யாண குணாத்மகத்தையும் -திவ்ய ஏக யோர்த்தவிவசனை கவச நே –சர்வேஸ்வர —

—————————————————————————

ஹே மைத்ரேய-சுத்தனாகவே இருப்பவனும் உபய விபூதி நாதன் என்று பெயர் உள்ளவனும் சர்வ காரணங்களுக்கும் காரணமாக இருப்பவனும்
பர ப்ரஹ்மம் என்று -சொல்லப் படுகிறவனுமான பரமாத்மாவினிடத்தில் பகவத் சப்தம் யோக ரூடமாக இருக்கிறது –
அகாரமானது பிரகிருதி புருஷ காலங்களை கார்ய உத்பத்தி யோக்யங்களாகச் செய்கிறான் -அப்படியே ஸ்வாமியுமாகவும் இருக்கிறான் என்கிற
இரண்டு அர்த்தங்களோடு கூடியதாக இருக்கிறது –ரிஷியே அவ்வாறாகவே ஸ்திதி கர்த்தா சம்ஹார கர்த்தா சிருஷ்டி கர்த்தா இந்த மூன்றும்
அகாரத்தின் அர்த்தம் –சமக்ரமான ஐஸ்வர்யம் வீர்யம் கீர்த்தி ஸ்ரீ ஜ்ஞானம் வைராக்கியம் இந்த ஆறுக்கும் பகம் -என்று பெயர் –
பூதங்களுக்கு ஆத்மாவாக இருப்பவனும் எல்லாவற்றையும் சரீரமாக கொண்டவனுமான அந்த பரமாத்மாவின் இடத்தில் சேதனங்களும் அசேதனங்களும் வசிக்கின்றன -அவனும் எல்லா வஸ்துக்களிலும் வசிக்கிறான் -என்பதினால் குறைவற்றவான பரமாத்மா அகாரத்தால் உணர்த்தப் படுகிறான் –
ஹேய குணங்களின் சம்பந்தம் இல்லாத ஜ்ஞானம் சக்தி பலம் ஐஸ்வர்யம் வீர்யம் தேஜஸ் இவைகள் அனைத்தைக்கும் பகவத் சப்தத்துக்கு வாசகங்கள் –
ஹே மைத்ரேய -இவ்வித ஸ்வ பாவம் உள்ள பகவான் என்கிற இந்த மஹா சப்தமானது பர ப்ரஹ்மமாக இருக்கிற வாஸூ தேவனை தவிர்த்து வேறு ஒரு தேவதையும் அணுகா -பூஜ்யங்களான அவயவார்த்தங்களான சக்தி ரூடி -இவைகளோடு கூடிய இந்த சப்தமானது அந்த ப்ரஹ்மத்தின் இடத்தில் முக்கியமாக வழங்கப் படுகிறதே ஒழிய ஔபசாரிகம் அல்ல -அந்த ப்ரஹ்மத்தைத் தவிர்த்த மற்றவர்கள் பக்கலில் உபசாரத்தால் அன்றோ பிரயோகிக்கப் படுகிறது
ராஜனே -எந்த ரூபத்தின் இடத்தில் இந்த சக்திகள் அனைத்தும் நிலை பெற்று இருக்கின்றனவோ அது எல்லா ரூபங்களை விட வி லஷணமான சந்நிவேசத்துடன்
கூடியதும் வேறானதும் இவ்விதம் உள்ளது என்று அளவிட நிச்சயிக்க முடியாததுமான ஹரியின் ரூபம் –திவ்ய மங்கள விக்ரஹம் –ஜனங்களுக்கு நியந்தாவாக இருப்பவனே –அந்த பரம புருஷன் தேவன் திர்யக் மனுஷ்யன் என்கிற பெயர்களுடன் சேஷ்டைகளுடன் கூடிய சமஸ்த சக்தி ரூபங்களையும் லோக உபகாரத்துக்காக தன லீலையினால் செய்கிறான் -லௌகிக பிரமாணங்களால் கண்டு அறிவதற்கு அசக்யனாய் இருக்கிற அந்த பரமாத்வாவின் உடையதான தேச
நியதம் இல்லாததும் -ப்ரதிபந்தகம் இல்லாததுமான அந்த சேஷ்டையானது கர்ம ரூபமான ஹேதுவினால் உண்டாகிறது அன்று -இவ்விதமான ஸ்வ பாவத்தின் உடன் கூடினதும் -விஷ்ணு என்கிற பெயர் உள்ளதுமான திவ்ய ஆத்ம ஸ்வரூபமானது -மலத்திற்கு பிரதிபடமானது -அழிவு இல்லாதது -ஸ்வ ரூபத்தால் வியாபகமாய் இருக்கிறது -தன் படியாகவே தர்மத்திலானிலும் விகாரம் இல்லாதது -எல்லா ஹேயங்க ளாலும் விடுபட்டது -ப்ரஹ்மாதிகளைக் காட்டிலும் சிறப்பு உள்ளவன் -மிக்கார் ஒருவரும் இல்லாதவன் -எல்லா தேசங்களையும் வியாபித்து இருப்பவன் –எல்லா வஸ்துக்களுக்கும் ஆத்மாவாக இருந்து இணை பிரியாமல் இருப்பவன் –ஜாதி ரூபம் ரசம் கந்தம் சொல்லுகிற சப்த ரூப விசேஷத்தால் விடுபட்டவன் –உண்டாகிறது பரிணமிக்கிறது வ்ருத்தி அடைகிறது அவயவங்கள் குறைகிறது நசிக்கிறது போன்ற ஷட்விதபாவ விகாரங்கள் அற்று எப்பொழுதும் சத்தாச்ரயன் என்று சொல்வதற்கு மாதரம் சகயமாக இருக்கிறவன்-
யாதொரு காரணத்தினால் எல்லா இடத்திலும் வசிக்கிறானோ -எல்லா வஸ்துக்களும் இவன் இடத்தில் வசிக்கிறதோ –அதனால் வா ஸூ தேவன் என்று கற்று அறிந்தவர்களால் கூறப் படுபவன் -அவனே நிகரில்லாத -மேல்பட்ட வஸ்து இல்லாத –ஸ்வரூபத்தாலும் குணத்தாலும் எல்லை இல்லாத மேன்மை வாய்ந்த -தாகவும் இருக்கிற ப்ரஹ்மம் -சாஸ்வதமாக இருப்பவன் -பிறப்பு அற்றவன் –அழிவற்றவன் -குறைவில்லாதவன் –வ்ருத்தி பரிமாணங்கள் இல்லாமல் ஒரே வித ஸ்வரூபத்துடன் கூடினவன் –ஹேய குணங்கள் இல்லாமல் நிர்மலமாய் இருப்பவன் -வ்யக்த அவ்யக்த ஸ்வரூபமாக இருக்கும் இந்த பிரபஞ்சம் அனைத்தும் அந்த ப்ரஹ்மமே-அவ்வாறே அந்த ப்ரஹ்மம் புருஷ ரூபமாகவும் கால ரூபமாகவும் இருக்கிறது –

சமஸ்த ஜகதாம் ஏவம் பிரகாரம் –பர பராணாம் –பரம –சர்வத்ர -தத் ப்ரஹ்ம –அஜம் அஷரம் அவ்யயம் ஏக ஸ்வரூபம் –ஹேயா பாவாச்ச நிர்மலம் —

—————————————————————

வ்யக்தமான பிரபஞ்ச ஸ்வரூபிணி யாகவும் -அவ்யக்தமான தமஸ் ஸ்வரூபிணி யாகவும் இருப்பதாக எந்த பிரகிருதி என்னால் முன்பு கூறப் பட்டதோ
அந்த பிரகிருதி புருஷம் இவ்விரண்டும் பரமாத்மாவின் இடத்தில் லயிக்கின்றன —பரமாத்மாவோ என்றால் எல்லா வஸ்துக்களுக்கும் ஆதாரமாய் இருப்பவன் –மேல் யாரும் இல்லாத சர்வேஸ்வரன் –வேதங்களிலும் வேதாந்தங்களிலும் விஷ்ணு என்று கோஷிக்கப் படுபவன் –
அவனுக்கு மூர்த்தம் அமூர்த்தம் இரண்டு ரூபங்கள் உண்டு -அவ்விரண்டு ரூபங்களும் எல்லா பூதங்கள் இடங்களிலும் ஷர அஷர ச்வரூபங்களாக நிலை பெற்று இருக்கின்றன -கர்ம பந்தத்தின் நின்றும் விடுபட்ட முக்தாத்மா ரூபம் அஷரம் என்று சொல்லப் படுகிறது -இவ்வுலகம் அனைத்தும் ஷரம் என்று சொல்லப் படுகிறது -அக்னியின் ஒளி நாலா பக்கமும் பரவுவது போலே ப்ரஹ்மத்தின் சக்தி உலகம் அனைத்தும் வ்யாபிக்கப் பட்டு -அந்த சக்தியே பரா எனப் படுகிறது
அவ்வாறே ஷேத்ரஜ்ஞ சம்ஜ்ஞை உள்ள சக்தி அபரா என்று சொல்லப் பட்டு இருக்கிறது -கர்மா என்ற பெயர் உள்ள அவித்யை மூன்றாவது சக்தி யாக இச்சிக்கப் படுகிறது -ராஜனே எல்லா வஸ்துக்களையும் அடைந்து இருக்கிற அந்த ஷேத்ரஜ்ஞ சக்தி எதனால் சுற்றப் பட்டு இருந்து கொண்டு மிகவும் தொடர்ச்சியாய் உள்ள சம்சார தாபங்களை அடைகிறதோ -பூமியைப் பாதுகாப்பவனே -அந்த ஷேத்ரஜ்ஞ சக்தி அவித்யையினால் மூடப் பட்டு கர்ம தாரதம்யத்துக்கு அனுகுணமாக ஜ்ஞான தார தம்யத்துடன் இருக்கிறது -மகா புத்தி உள்ளவனே -சர்வ பூதங்களையும் வியாபித்து இருக்கிற விஷ்ணு சக்தியினால் பகவானை விட்டு விலகி தனித்து இருத்தலை ஸ்வ பாவமாக கொண்டு இராதா பிரதானம் புருஷன் இவ்விரண்டும் கவரப் பட்டு இருக்கின்றன அந்த சக்தியே சம்சாரத்துக்கும் மோஷத்துக்கும்-காற்று ஜலபிந்துக்களை வஹிப்பது போலே விஷ்ணுவின் சக்தியும் பக்த முக்தாத்மாக்களை தாங்கிக் கொண்டு இருக்கிறது காரணம் -உலகம் அனைத்தும் ஜன்ம நாச விகல்பங்கள் உள்ளவை

இது முதலியதலால்-பர ப்ரஹ்மமானது ஸ்வ பாவத்தினாலேயே சமஸ்த தோஷங்களையும் நிரசித்தது என்றும் சமஸ்த கல்யாண குணாத்மகம் என்றும்
பிரபஞ்சத்தின் சிருஷ்டி ஸ்திதி சம்ஹாரம் உள்ளுக்குள் பிரவேசம் நியமனம் இவைகள் முதலியவற்றை லீலையாகக் கொண்டது என்றும் -பிரதிபாதித்து -எல்லா நிலைமைகளுடன் கூடி நிலை பெற்று இருக்கிற சித் அசித் வஸ்துக்கள் அனைத்தும் பாராமார்த்திகம் என்றும்
அவைகளே பரமாத்மாவுக்கு சரீரமாக இருப்பதால் அவைகளுக்கு ரூபத்வத்தை சரீர ரூப தனு அம்ச சக்தி விபூதி முதலிய சப்தங்களாலும் தத் சப்த சாமா நாதி கரண்யத்தாலும் சொல்லி -அந்த பர ப்ரஹ்மத்துக்கு விபூதியாக இருக்கிற சித் பதார்த்தத்துக்கு ச்வரூபத்தோடு இருப்பையும் அசித்துடன் சேர்ந்து இருப்பதால் ஷேத்ரஜ்ஞ ரூபமாக இருப்பையும் சொல்லி ஷேத்ரஜ்ஞ அவஸ்தையில் புண்ய பாபாத்மக கர்மரூப வித்யையினால் சுத்தப் பட்டு இருப்பதால் ஸ்வா பாவிகமான ஜ்ஞான ரூபத்வ அனுசந்தானமும் அசித் ரூபாகார்த்தமாக அனுசந்தானமும் பிரதிபாதிக்கப் பட்டதனால்
பர ப்ரஹ்மமானது ச விசேஷம் என்றும் அதின் விபூதியாக இருக்கிற ஜகத்தும் பாரமார்த்திகம் என்றே அறியப் படுகிறது –

தவே ரூப -ஷர அஷர ரூபே -அகில புவன -த்ரிபாத் நித்ய விபூதியும் லீலா விபூதியும் -பூப மூர்த்த அமூர்த்தஞ்ச –விஷ்ணு சக்தி -ப்ரதா நஞ்ச –இத்யாதி நா -சரீர ரூப தன் வம்ச —

——————————————————————————

ப்ரத்யஸ்தமித பேதம் -என்கிற இடத்தில் தேவ மனுஷ்யாதி பிரகிருதி பரிமாண விசேஷங்களோடு சேர்ந்து இருந்த போதிலும் -ஆத்மாவின் ஸ்வரூபமானது அந்த பிரகிருதி -பரிமாண விசேஷங்களை அடைந்து இருக்கிற பேதம் இல்லாமையாலே -அந்த பேதத்தைச் சொல்லுகிற தேவாதி சப்தங்களுக்கு அகோசரம் ஜ்ஞான சத்தையையே லஷணமாகக் கொண்டது -தன்னாலேயே அறியத் தக்கது -பிரக்ராந்தர யோகம் உள்ளவனுடைய மனதிற்கு கோசரம் அன்று எனக் கூறப் படுகிறது என்கிற இந்த கிரந்த சந்தர்ப்பத்தால் ப்ரபஞ்சாப லாபமில்லை -இது எப்படி அறியப் படுகிறது என்று வினவப் படுமே யாகில் அது சொல்லப்படுகிறது -இந்த பிரகரணத்தில் சம்சாரம் ஆகிற ரோகத்திற்கு முக்கியமான மருந்தாக யோகத்தைச் சொல்லி ப்ரத்யாஹாரத்தை ஈறாகக் கொண்ட யோகாவயவங்களையும் சொல்லி தாரணை சித்திப்பத்தின் பொருட்டு சுபாஸ்ரயத்தை சொல்லுவதற்கு பர ப்ரஹ்மமான விஷ்ணுவுடைய சக்தி சப்தத்தால் சொல்லத்தக்க இரண்டு ரூபங்களையும் மூர்த்தம் அமூர்தம் என்ற இரண்டு பாகு பாட்டுடன் பிரதிபாதித்து -மூன்றாவதான அவித்யை கர்மா சக்தி யாழ் சுத்தப் பட்டு இருக்கும் அசித் விசிஷ்டனான மூர்த்தம் எனப் பெயர் உள்ள ஷேத்ரஜ்ஞ்ஞனை மூன்று பாவனைகளின் சம்பந்தத்தால் அசுபன் என்று சொல்லி -இரண்டாவதாக இருப்பதும் கர்மா என்னும் அவித்யை விட்டு விலகியதும் அசித் சம்பத்தை அற்றதும் ஜ்ஞானத்தையே ஸ்வரூபமாக கொண்டதுமான அமூர்தம் என்கிற விபாகமானது
நிஷ்பன்ன யோகம் உள்ளவர்களால் தியானிக்கத் தக்கதாக இருப்பதாலும் ப்ராக்ராந்த யோகனுடைய மனதிற்கு ஆலம்பனம் இல்லாததாலும் ச்வத சுத்தி இல்லாமையாலும் அதற்கு சுபாஸ்ரயத்வத்தை நிஷேதித்து பரசக்தி ரூபமான இந்த அமூர்தம் என்ன -அபரசக்தி ரூபமான ஷேத்ரஜ்ஞ்ஞன் எனப் பெயர் வாந்த மூர்த்தம் என்ன –பரசக்தி ரூபனான ஆத்மாவுக்கு ஷேதரஜ்ஞதா பிராப்திக்கு ஹேதுவாய் இருக்கிற த்ருதீய சக்தி என்ற பெயர் உள்ள கர்ம ரூபா வித்யை என்ன
இப்படிப்பட்ட இம் மூன்று சக்திகளுக்கும் ஆச்ரயமாக இருப்பதும் -ஆதித்ய வர்ணம் இது முதலிய வேதாந்த வாக்யங்களால் பிரதிபாதிக்கப் பட்டு சித்து பெற்று இருப்பதுமான மூர்த ரூபமானது சுபாஸ்ரயம் என்று கூறப் பட்டது –
இந்த இடத்தில் பரிசுத்தாத்மா ஸ்வரூபத்திற்கு சுபாஸ்ரயதா நர்ஹதையைச் சொல்லுவதற்க்காக -பரயச்தமித பேதம்யத் -என்று சொல்லப் படுகிறது -இதை நிரூபிக்கிறார் ததாஹி என்று தொடங்கும் கிரந்தத்தினால் –ராஜன் -யோகிகளால் சிந்திக்கத்தக்கதும் -அனைத்திலும் சிறந்த -எல்லாராலும் அடையத் தக்க விஷ்ணு என்ற பெயர் உடைய பரமாத்மாவின் இரண்டாவது ரூபம் -அதை யோகத்தில் இழிகிறவனால் சிந்திக்க சகயம் அல்ல –
ராஜன் எந்த ரூபத்தில் எல்லா சக்திகளும் நிலை பெற்று இருக்கின்றனவோ அது எல்லா ரூபங்களைக் காட்டிலும் விஜாதீயமானதும் வேறானதுமான ஹரியினுடைய மகத்தான ரூபம் என்றும் சொல்லுகிறது -அப்படியே சதுர்முகன் சனகன் சனந்தனன் முதலியவர்கள் அவித்யையினால் சுற்றப் பட்டு இருப்பதால்
அவர்களுக்கு சுபாஸ்ரயாத அனர்ஹதையைச் சொல்லி பக்தர்களாகாவே இருந்து பிறகு யோகத்தினால் போதம் உண்டாகி ஸ்வரூபத்தை அடைந்தவர்களுக்கும் ச்வத சக்தி இல்லாமையாலே சுபாஸ்ரயத்வம் சௌநக பகவானால் நிஷேதிக்கப் பட்டது -ஜகதிற்குள் இருக்கிற ப்ரஹ்ம தேவன் முதல் தருணம் ஈறாக இருக்கிற பிராணிகள் யாதொரு காரணத்தினால் கர்மாவினால் உண்டு பண்ணப் பட்ட சம்சாரத்தினால் வசப் பட்டு இருக்கிறார்களோ அவர்கள் தியான விஷயத்தில் உபகாரகர்கள் அல்ல -அவர்கள் அனைவரும் அவித்யைக்கு உட்பட்டவர்களாயும் சம்சார கோசரரர் களாயும் இருக்கிறார்கள் அன்றோ
பிற்காலத்தில் போதம் உள்ளவர்களாக இருந்த போதிலும் கூட தியான விஷயத்தில் உபகாரகர்கள் அல்ல – -ஸ்வ பாவ சித்தமான போதம் கிடையாது
இயற்கையான ஞானம் உள்ள பர ப்ரஹ்ம ஸ்வரூபியான விஷ்ணுவுக்கே-அவனது அசாதாராண ஸ்வரூபமே – சுபாஸ்ரத்வம் கொண்டது –ஆதலால் இங்கு பேதாபலாபமானது அறியப் படுகிறது இல்லை –
ஜ்ஞான ஸ்வரூபம் என்கிற இடத்திலும் ஜ்ஞானத்தைக் காட்டிலும் வேறாக இருக்கிற அர்த்தங்கள் அனைத்துக்கும் மித்யாத்வம் பிரதிபாதிக்கப் படுகிறது இல்லை –
ஜ்ஞான ஸ்வரூபியான ஆத்மாவுக்கு தேவன் மனுஷ்யன் போன்ற தோற்றம் பிராந்தி என்று இவ்வளவு மாதரம் சொல்லப் பட்டு இருப்பதால் –
சிப்பி -ரஜதம் பிராந்தி தோற்றம் என்றதும் அனைத்து ரஜத சமூஹமும் மிதியை அல்லவே -ஜகத் ப்ரஹ்மம் இரண்டும் சாமா நாதி கரண்யத்தால் ஐக்யம் தோன்றுவதால் -ஜ்ஞான ஸ்வரூபமான ப்ரஹ்மத்துக்கு அர்த்தாகாரத்தை யானது பிராந்தி என்று சொன்னால் அர்த்த ஜாதம் அனைத்துக்கும் மித்யாத்வம் சொல்லப் பட்டதாகும் என்று வினவப் படுமாகில் அது சரியல்ல -பர ப்ரஹ்மமான விஷ்ணு அனைத்து அஜ்ஞ்ஞான சமூஹங்களையும் விலக்கி சமஸ்த கல்யாண குணாத் மகராகவும் மகா விபூதி உள்ளவர் என்றும் அறியப் படுவதால் -பிராந்தி தர்சனம் சம்பவியாதே –ஐக்ய பிரதி பாதனமும் பிராந்தி தர்சனம் சஹியாமையும் விருத்தம் அல்ல என்றே அடுத்து உபபாதிக்கப் படப் போகிறது -ஆகையால் இந்த ஸ்லோகமும் அர்த்த ஸ்வரூபத்துக்கு பாதகம் அன்று –
யதோவா இமானி பூதா நிஜயந்தே யேன ஜாதானி ஜீவநதி யத் பிரத்யந்த்யபி சம்விசந்தி தத் விஜிஜ்ஞாஸ் ஸ்வ தத் ப்ரஹ்ம -சுருதி வசனம் -ஜஜாஜ் ஜென்மாதி காரணம் ப்ரஹ்மம்
இதிஹாச புராணாப்யாம் வதம் சமுபப்ரும்ஹயேத்- பிபேத் அல்ப ஸ்ருதாத் வேதோ மா மாயம் பிரதர்ஷயிதி –வேத வாக்யங்களை சம்சயம் தீர்க்கவே இதிஹாச புராணங்கள் -அநந்தாவை வேதா –அல்ப சுருதி செவிப்பட்டு அறிய அசக்யம் என்பதால் நிச்சயம் உண்டாக இவை உதவும்

சத்வ புராணங்களே கொள்ளத் தக்கது -ஸ்ரீ விஷ்ணு புராணமே புராண ரத்னம்-
-அதில் புலச்ய வசிஷ்ட மகரிஷிகளின் வர பிரதானத்தால் அடையப் பட்டு இருக்கிற பரதேவதா பாரமார்த்த்யா ஜ்ஞானம் உள்ளவரான பகவானான பராசரர்
இடம் இருந்து-தன்னால் அறியப் பட்டு இருக்கிற வேதார்த்தின் உப ப்ருஹ்மணத்தை விரும்புவதாக மைத்ரேயர்
இச்சதி –ச்ரோதும் தவத்தோ யதா ஜகத் பபூவ –பூயச்சயதா மஹா பாக பவிஷ்யதி -யன் மயஞ்ச ஜகத் ப்ரஹ்மன்யதச்சை தச்சராச்சரம் –
–லீ நமாசீத் யதா யத்ர லயமேஷ்யதி யத்ரச — என்று கேட்டார் –
ப்ரஹ்மத்தின் ஸ்வரூப விசேஷம் -விபூதி பேதங்களின் பிரகாரங்கள் -ஆராதன ஸ்வரூபம் -பல விசேஷம் போன்றவை வினவப் பட்டன –
யதச்சை தச்சராசரம் –நிமித்தம் உபாதானம் இரண்டும் வினவப் பட்டன -யன் மயம் -சிருஷ்டி ஸ்திதி லயங்களுக்கு கர்மாவாக இருக்கிற ஜகத்தானது எதை ஆத்மாவாகக் கொண்டு இருக்கிறது என்று வினவப் பட்டது -ஜகச்சச -இதற்கு உத்தரம் -பொருந்தாதே –விஷ்ணு -தத் பிரக்ருத வசனே மயம் -பிரத்யயத்தால் -உலகம் அனைத்தும் பரமாத்மாவுக்கு சரீரம் –ஜகத்சச -ஜகத்துக்கும் ப்ரஹ்மத்துக்கும் சரீராத்மா பாவத்தைக் கொண்ட சாமா நாதி கரண்யம்
நிர்விசேஷ வஸ்து என்று கொண்டால் எல்லா பிரச்ன பிரதி வசனங்களும் பொருந்தாது – ஜகத் ப்ரஹ்மம் இரண்டும் ஒரே த்ரவ்யம் என்று கொண்டால் சத்யா சங்கல்பாதி கல்யாண குணத்வமும் அகில ஹேய பிரத்ய நீகதையும் பாதிக்கப்படும் -ப்ரஹ்மம் அசுபங்களுக்கும் ஆஸ்பதமாகவும் ஆக வேண்டியதாகும் -எனவே இந்த சாமா நாதி கரண்யம் ஆத்ம சரீர பாவத்திலே முக்ய வ்ருத்தம் என்று ஸ்தாபிக்கப் படப் போகிறது –
ஆதலால் -விஷ்ணோஸ் சகா சாதுத்பூதம் ஜகத் தத்ரைவச ஸ்திதம் ஸ்திதி சம்யமகர்தா சௌ ஜகதோச்ய ஜகச்சச —என்று சங்க்ரஹமாக அருளிச் செய்ததை -பர பராணாம்-என்று -தொடங்கி விஸ்தாரமாக சொல்ல –பர ப்ரஹ்மம் –ஆறு குணங்கள் நிறைந்த பகவான் – விஷ்ணு -அவிகாராய -இத்யாதி ஸ்லோகத்தால் பிரணாமம் சொல்லி -ஹிரண்ய கர்ப்பன் அவதாரமாக இருக்கும் மஹா விஷ்ணு சங்கரன் த்ரி மூர்த்தி ரூபமாகவும் -பிரதானம் காலம் ஷேத்ரஜ்ஞ்ஞர் களுடைய சமஷ்டி ரூபமாகவும் வ்யஷ்டி ரூபமாகவும் அவரையே நமஸ்கரிக்கிறார் –
நமஸ்கார விஷயமாக முதல் ஏழு ஸ்லோகங்கள் -ரஷார்த்தம் சர்வ பூதானாம் விஷ்ணுத்வ முபஜக்மிவான் –சஜாதீயஸ் தேஷாமிதி துவிப வாக்யமபி பஜன் –

அதில் ஜ்ஞான ஸ்வரூபம் என்கிற இந்த ஸ்லோகம் ஷேத்ரஜ்ஞ வ்யஷ்டி ரூபமாக இருக்கிற பரமாத்மாவினுடைய ஸ்வ பாவத்தைக் கூறுகிறது –ஆகையால் நிர்விசேஷ வஸ்துவுக்கு இவ்விடம் பிரதீதி இல்லையே -சாஸ்திரம் நிர்விசேஷ ஜ்ஞான ரூப ப்ரஹ்ம அதிஷ்டான ப்ரஹ்மத்தை பகர நோக்கு உள்ளதாகுமானால்
நிர் குணச்யா ப்ரேம யஸ்ய சுத்தஸ் யாப்ய மலாத் மன கதம் சர்காதி கர்த்ருத்வம் ப்ரஹ்மணோஹ் யுபகம்யதே -என்கிற சோத்யமும்-
சக்தயஸ் சர்வ பாவா நாம சிந்தய ஜ்ஞான கோசரா -யதோ அதோ ப்ரஹ்மணச் நாஸ்து சர்காத்யா பாவ சக்த்யா –பவந்தி தபதாம் ஸ்ரேஷ்ட பர்வ கண்யய தோஷ்ணதா -என்கிற பரிகாரமும் எவ்வாறு பொருந்தும் -நிர்குண ப்ரஹ்மத்துக்கு எவ்வாறு சர்க்கம் முதலியவற்றில் கர்த்ருத்வம் -ப்ரஹ்மத்துக்கு பாரமார்த்திக சர்க்கம் இல்லை பின்னையோ பிராந்தியினால் கல்பிக்கப் பட்டு இருக்கிறது என்று சோத்ய பரிஹாரங்கள் இரண்டும் இருந்து இருக்கும்
உத்பத்தி முதலிய கார்யமானது சத்வம் முதலிய குணங்களோடு கூடியவர்களும் அபரி பூர்ணர்களும் கர்ம வச்யர்களாக இருக்கும் சேதனர்கள் இடம் காணப் பட்டு இருப்பதால் சத்வாதி குணங்களால் விடுபட்டவனும் பரி பூர்ணனும் கர்ம வச்யனாக இராதவனும் கர்ம சம்பந்தத்துக்கு அனர்ஹனாயும் இருக்கிறவனுக்கு எவ்வாறு சர்காதி கர்த்தவ்யம் ஒப்புக் கொள்ளப் படுகிறது என்று சோத்யம் –
நேரில் காணப் படுகிற எல்லா வஸ்துக்களைக் காட்டிலும் விஜாதீயமாக இருப்பதும் கூறப் பட்ட வண்ணமான ஸ்வ பாவத்துடன் கூடியதுமாகவே இருக்கிற ப்ரஹ்மத்துக்கு ஜலம்-விட வேறு பட்ட அக்னி முதலியவற்றுக்கு ஔஷண்யம் முதலிய சக்தி சம்பந்தம் போலே எல்லா சக்திகளோடும் சம்பந்தமானது விருத்தம் ஆகாது என்று பரிஹாரம் –
மேல் உள்ள நான்கு ஸ்லோகங்களுக்கும் வியாக்யானம் இனி மேல்
பரமார்த்தஸ் த்வமேவ வைக-இவை முதலியதும் கூட ப்ரஹ்மத்தை தவிர்த்த மற்ற அனைத்துக்கும் அபாரமார்த்யத்தைச் சொல்லுகிறது இல்லை
பின்னையோ எல்லாம் ப்ரஹ்மாத்மகமாக இருப்பதால் -ப்ரஹ்மாத்மகமாக இராமல் ப்ரஹ்மத்தை விட தனித்து இருக்கும் வஸ்துக்களுக்கு அபார மர்த்யத்தைச் சொல்லுகிறது -அதையே உப பாதிக்கிறார் -தவைஷ் மஹிமா யே நவ்யாப்த மேதச் சராசரம் – உனது மகிமையால் தானே –உன்னை ஆத்மாவாகக் கொண்டதே -உன்னைவிட வேறு ஒன்றும் கிடையாது -நீ ஒருவனே பரமாத்மாக இருப்பவன் -அதனால் இது கூறப் படுகிறது -அப்படி இல்லா விடில்
ஜகத பதே தவம் -முதலிய பதங்களுக்கு லஷணையும் வேண்டி வரும் -மஹா வராஹ பகவான் லீலையால் உத்தாரணம் -ஸ்துதி பிரகரணத்துக்கும் விரோதி வரும் -உம்மை ஆத்மாவாகக் கொண்டு சகலமும் த்வதாத்மகம் என்கிற அனுபவத்துக்கு சாதனமான யோகம் இல்லாதவர்கள் இதை கேவல தேவ மனுஷ்யாதி ரூபம் என்றே பார்க்கிறார்கள் -ஜ்ஞான ஆகாரர்களான ஆத்மாக்களை தேவாதி அர்த்தாகாரமாக உள்ளவர்களாக பார்ப்பதும் பிரமம் –யதேதத் த்ருச்யதே –ஜ்ஞான ஸ்வரூபம் அகிலம் —

ஏகா தாகி நிச்சா சஹாயே –ஸூ த்ரம்
த்ரிபிர் குண மயைர் பாவை ரேபிஸ் சர்வமிதம் ஜகத் மோஹிதம் நாபி ஜா நாதி மா மேப்ய –பரமவ்யயம் —

——————————————————————————–

யேதுஜ்ஞான வித -ஞான ச்வரூபமகமாகவும் ப்ரஹ்மத்தின் சரீரமாக்கவுமே பார்க்கிறார்கள் -அங்கனம் இல்லாவிடில் ஸ்லோகங்களுக்கு
பௌ நக்ருதயமும் பதங்களுக்கு லஷணையும் அர்த்த விரோதமும் பிரகரண விரோதமும் சம்பவிக்கும் –
தச்யாத்மபரதேக ஷூ சதோபயேகமயம் –என்று ஆத்மாக்கள் ஞானைகராக ரர்களாக இருக்க தேவாதி பிரகிருதி பரிமாண விசேஷ ரூபமான
பேத தர்சனம் அதத்யம் என்று கூறப் பட்டது
சு நி சைவ ச்வபாகேச பண்டிதாஸ் சம தர்சன —நிர்தோஷம் ஹி சமம் ப்ரஹ்ம –ஸ்ரீ கிருஷ்ணனே அருளினான் –
தச்யாத்மபரதேக ஷூ சதோபி -என்று தேஹத்தை விட வேறாக உள்ள வஸ்துவின் இடத்தில் தான் அணியன் என்று விபாகம் கூறப் பட்டு இருப்பதால் -யத்ன்யோச்தி பர சோபி -என்கிற இடத்தில் ஆத்ம ஐக்யம் அறியப் படுகிறது இல்லை -யதி மத்த பர கோப் அந்ய-இங்கு பர சப்தம் தன்னைத் தவிர்த்த ஆத்மாவைச் சொல்லுகிறது -ஒரே அர்த்தத்தில் பர அந்ய சப்தம் கூடாததால் —
அந்ய சப்தம் அதற்கும் ஜ்ஞானைகாகாரத்வம் இருப்பதால் வேறு ஆகாரத்தின் பிரதி சேதத்தை பலமாகக் கொண்டது –

ப்ரஹ்ம அத்வைதம் -உண்டே ஒழிய -ஜீவ அத்வைதம் இல்லை பஹூத்வம் சுருதி சித்தம் -பக்தர்கள் முக்தர்கள் வ்யவஸ்தை-ஏகோ வ்ரீஹி -ஏக சஜாதீய வச்துவைச் சொல்வதில் நோக்கு பொருந்தாதே -நித்யோ நித்யானாம் சேதநஸ் சேதனானாம் ஏகோ பஹூனாம் யோ விததாதி காமான் –

இது சொல்லப் பட்டதாகிறது -அனைத்து ஆத்மாக்களும் ஞானாகாரமாக இருப்பதால் -வேணு ரந்தர விபே தேன-வேறுபாடு ஸ்வரூபத்தால் அல்ல –தேவாதி சரீர பிரவேசத்தாலே -இத்தால் ஆத்ம ஐக்யம் உபதேசிக்கப் படவில்லை -அநேக துவாரம் வழிய புறப்படும் வாயுவுக்கு ஸ்வரூப ஐக்யம் இல்லை –ஆகாரங்களின் சாம்யமே -உண்டு –ஷட்ஜம் போன்ற பெயர்கள் ஏற்படுகின்றன
தேஜோ மயம் ஜலமயம் பிருத்வி மயம் -இவற்றுக்கு த்ரவ்யத் தன்மையால் ஐக்யம் உண்டு -ஸ்வரூபத் தன்மையால் இல்லை -அதே போலே வாயுவைச் சேர்ந்த அம்சங்களுக்கும் ஸ்வரூப பேதம் விடத்தகாதது -அஹம் தவம் -ஜ்ஞானமே ஆகாரம் -தேவாதி சரீரத்தால் வந்த பேதமே –சர்வ மேத தாத்ம ஸ்வரூபம் -தத்யாஜபேதம் பரமார்த்த சிருஷ்டி -பிண்ட ப்ருதக் யத பும்ச சிர பாண்யாதி லஷணா –

கடத்வம் சே கடாக ஸோன பின்னோ நபசோ யதா –ப்ரஹ்மணா ஹேய வித்வம் சே விஷ்ண வாக்ய ந ததா புமான் –என்று ஸ்ரீ சௌ நக பகவான் வசனம் –
கடம் உடைந்து கடாகாசம் ஆகாசதுடன் ஒன்றுவது போலே ஜீவர்கள் ஹேயங்கள் நாசம் அடைந்த பின்பு ப்ரஹ்மத்துடன் ஒன்றி விடுகிறார்கள்
யத அக்னிர் அக்னௌ சம்ஷிப்த சமானத்வம் அனுவ்ரஜேத்-நெருப்பில் போட்டதைக் கொண்டு சாம்யம் ஆவது போலே -ஏகம் சமஸ்தம் யதி ஹாஸ்தி கிஞ்சித் தத் அச்யுதொ நாஸ்தி பரந்ததோ அந்யத்-
சர்வமேததாத்மா ஸ்வரூபம் இத்யே நே ந –அஹம் -தவம் -சர்வம் –மூன்றும் பிரகார ஐக்யம் சொல்வதில் நோக்கு –
விபேத ஜனகே ஜ்ஞானே -ஆன்மாக்களின் ஸ்வரூப ஐக்யம் சொல்வதில் கருத்து அல்ல –தேக -ஆத்மா –ஆத்மா -பர ப்ரஹ்மம் -ஸ்வரூப ஐக்யம் சம்பவிக்கிறது இல்லை -தவா ஸூ பர்ணா சயுஜா சாகாயா சாமாநம் வருஷம் பரிஷஸ்வ ஜாத–தயோர் அந்ய பிப்பலம் ஸ்வாத் வத்தி அனன்ச்ன் அனந்யோ அபி சாக தீதி –என்றும் -ருதம் பிபந்தௌ ஸூ க்ரு தஸ்ய லோகே குஹாம் ப்ரவிஷ்டௌ பரமே பரார்த்யே சாயாதபௌ ப்ரஹ்ம வயதோ வதந்தி பஞ்ச அக்நயோ யே ச திரிணா சிகேதா —என்றும் -அந்த பிரவிஷ்டஸ் சாஸ்தா ஜநா நாம் சர்வாத்மா -என்றும்-ஸ்ருதி வாக்யங்கள் –
பர ப்ரஹ்மம் -சர்வத்துக்கும் காரணம் -அவயகதம் மஹத்வம் விகாரங்களையும் முக்குணங்களையும் அவற்றின் காரியங்களான ஸூ கம் ஞானம் இவற்றையும் தாண்டி -அவித்யா முதலிய ஆவரணங்களையும் தாண்டி -அனைத்துக்கும் ஆத்மாவாக இருப்பவன் -எங்கும் வியாபித்து இருப்பவன் -அனைத்து கல்யாண குணங்களும் நிறைந்தவன் –பரா அவர தத்வங்களுக்கு நியந்தா –அவித்யை கர்மா -மூன்றாவது சக்தி -இது ஷேத்ரஜ்ஞ சக்தியை சுற்றப் பட்டு இருக்கிறது –
உபயே பிஹி பேதே நை ந மதீயதே —
பேத வ்யபதே சாச்சன்ய-
அதி கந்து பேதே நிர்தேசாத் —இது முதலிய ஸூத்ரங்களிலும்
ய ஆத்ம நிதிஷ்டன் நாத்ம நோந்த ரோய மாத்மா நவேத யச்யாத்மா சரீரம் ய ஆத்மா நமந்த ரோயமாதி -என்று எவன் ஆத்மாவின் இடத்தில் இருக்கிறானோ
ஆத்மாவுக்குள் நிலை பெற்று இருக்கிறானோ -எவனை ஆத்மா அறிகிறான் இல்லையோ -எவனுக்கு ஆத்மா சரீரமோ -எவன் ஹிருதயகமலத்தில் இருந்து நியமிக்கிறானோ–ப்ராஜ்ஞே நாத்மநா சம்பரிஷ்வக்த -ஸூ ஷூப்தியில் ஆலிங்கனம் செய்து கொள்கிறான் -ஸ்வரூப ஐக்கியம் இல்லை

————————————————————————————–

ப்ரஹ்மத்தைத் தவிர்த்த மற்ற எல்லா வஸ்துக்களும் மித்யை என்கிற ஜ்ஞானம் அஜ்ஞ்ஞான விரோதி என்று சொல்லப் படுமேயானால் அல்ல –இந்த ஜ்ஞானம் ப்ரஹ்மத்தின் யாதாம்ய ஜ்ஞான விரோதியா -பிரபஞ்ச சத்யத்வ ரூபமான அஜ்ஞானத்துக்கு விரோதியா –
ப்ரஹ்மம் அவித்யையினால் மறைக்கப் பட்டது என்றால் அஜடத்வதுக்கும் ப்ரஹ்மத்துக்கும் ஸ்வரூப ஐக்கியம் உண்டாகும்
முக்தனுக்கு -இதம் ஜ்ஞானம் உபாஸ்ரித்ய மமசாதர்ம்யமாகதா–சர்கேபி நோபஜாயந்தே பிரளயே நவ்ய தந்திச –ஆத்மபாவம் நயத்யே நம் தத் ப்ரஹ்மத்யாவி நம்முனே விகார்ய மாதமான சக்த்யாலோக மாகர்ஷகோயதா –நெருப்பு போலே தனது ஸ்வ பாவத்தை அடையச் செய்யும் -இழுக்கப் படும் வஸ்து இழுக்கும் வஸ்து ஐக்கியம் இல்லையே
ஜகத்வ்யாபார வர்ஜனம் ப்ரகரணாத சந்நிஹிதத்வாச்ச —
போக மாத்ர சாம்ய லிங்காச்ச
முக்தோபஸ்ருப்ய -வ்யபதேசாச்ச –
ஜகத் வியாபார வர்ஜனம் சாமானோ ஜ்யோதிஷா –
தேவதா சாயுஜ்யாத சரீரஸ்யாபி தேவதாவத் சர்வார்த்தசித்திஸ் ஸ் யாத் —
ய இஹாத்மான மனுவித்ய வ்ரஜந்த்யே தாம்ச சத்யான் காமாம்ஸ் தேஷாம் சர்வேஷூ லோகேஷூ காம சாரோ பவதி -என்றும்
ப்ரஹ்ம விதாப் நோதி பரம் -என்றும் -சோஸ்நுதே சர்வான் காமான் சஹ ப்ரஹ்மணா விபச்சிதா –என்றும்
ஏதம் ஆனந்தமய மாதமா நமுப சங்க்ரம்ய-என்றும் -இமான் லோகன் காமான்ணீ காம ரூப்ய நு சஞ்சரன் -என்றும் ச தத்ர பர்யேதி -என்றும் -ரசோவைச ரசம்ஹ்யேவாயம் லப்த்வா நந்தி பவதீ -என்றும் -யதா நத்யசயந்தாமானாஸ் சமுத்ரே அஸ்தம் கச்சந்தி நாமே ரூபே விகாயா ததா வித்வான் நாம ரூபாத் விமுக்த பராத்பரம் புருஷம் உபைதி திவ்யம் –
ததா வித்வான் புண்ய பாபே விதூய நிரஞ்சன பரமம் சாம்யம் உபைதி –என்றும் சுருதி வசனனங்கள்

————————————————————————————–

பர வித்தைகளில் எல்லாவற்றிலும் சகுண ப்ரஹ்மமே உபாச்யம் என்று நிச்சயிக்கப் பட்டு இருக்கிறது -பலமும் ஒரு விதம் -ஆகையால் வித்யா விகல்பம் என்று ஸூ த்ர காரராலேயே-ஆனந்த தய பிரதானச்ய — விகல்போ விசிஷ்ட பலத்வாத் -இது முதலியவைகளால் சொல்லப் பட்டு இருக்கிறது –யுக்தம் தத் குண கோபாச நாத் –என்று பாஷ்யகாரர் வியாக்யானம்
யத்யபி சச்சித்த —என்றும் -ப்ரஹ்ம வேத ப்ரஹ்மைவ பவதி -என்றும் -நாம ரூபா விமுக்த பராத்பரம் புருஷம் உபைதி திவ்யம் -என்றும் -கர்ம ப்ரஹ்ம உபய பாவனைகளையும் விட்டு ப்ராபநீயன் -பிரமத்தை அடைவிப்பிக்கத் தக்கவன் -ஷேத்ரஜ்ஞ கரணி ஜ்ஞானம் கரணம் தஸ்ய வைத்விஜ-நிஷ்பாத்ய முக்தி கார்யம் ஹி க்ருதக்ருத்யம் நிவர்த்த்தயேத்–சித்தி வரையில் அனுஷ்டிக்கத் தக்கது என்று சொல்லி தத்பாவ பாவமன்ன ஸ் ததா சௌ பரமாத்மனா பவத்ய பேதீ பேதச்ச தஸ்யா ஜ்ஞான க்ருதோபவத்–தத் பாவம் -ப்ரஹ்மத்தின் உடைய பாவம் -ஸ்வ பாவம் -ஸ்வரூப ஐக்யம் அல்ல – —
ஆனந்த தயா பிரதானச்ய -விகல்போஸ் விசிஷ்ட பலத்வாத் –தத்பாவ பாவித்வாத் அதிகரணம் -பக்த ஸ்வரூபம் சிந்திக்கத் தக்கது பூர்வ பாஷம் -முக்த ஸ்வரூபம் சிந்திக்கத் தக்கது சித்தாந்தம் -தத் பாவ பாவ சப்தத்தால் ப்ரஹ்ம சாம்யாபத்தி ஜ்ஞாபகதிற்காகவும்
விபேத ஜனகேஜ்ஞான –பேதம் இல்லாதவனாக ஆகிறான் ஒழிய தாதாம்யம் உள்ளவனாக ஆகிறான் அல்லன் –

ஞானத்தை வடிவாக கண்டு பரமாத்மா உடன் ஏக பிரகாரன் -தேவாதி ரூபங்களால் வேறுபாடு -அஜ்ஞ்ஞானம் அடியாகவே அன்றி ஸ்வரூபத்தால் இல்லை –
-ஏக ஸ்வரூப பேதஸ்து பாஹ்ய கர்மவ்ருதி ப்ரஜ–தேவாதி பேதஸ் பத்வச்தே நாஸ்த்ய நா வரணோ ஹி ச
விபேத -ஜனகே அஜ்ஞ்ஞான நாசமாத் யந்திகம் கதே -ஆத்மனோ ப்ரஹ்மணோ பேதமசந்தம் க கரிஷ்யதி —
சௌ நகரும் -சதுர்விதோ அபி பேதோ அயம் மித்யா ஜ்ஞான நிபந்தன —
அவித்யா கர்ம சம்ஜ்ஞான்ய –ஷேத்ரஜ்ஞ்ஞாபி மாம் வித்தி —
ஈச்வரஸ் சர்வ பூதானாம் ஹிருத்தேசேர் அர்ஜுனா திஷ்டதி -என்றும் –
சர்வச்ய சாஹம் ஹ்ருதி சந்நிவிஷ்ட -என்றும் -அஹமாத்மா குடாகேசா சர்வ பூதா சயஸ் ஸ் தித —
பூத சப்தத்தால் ஆத்மா பர்யந்தமான தேஹம் —ந்த தஸ்தி வினாயஸ்த்யாத் -அவன் அன்றி எந்த வஸ்து உண்டோ அந்த வஸ்து எங்கும் இல்லை
யத்யத் விபூதி மத சத்வம் ஸ்ரீ மதூர்ஜித மேவவா தத்த தேவாவா கச்ச தவம் மம தேஜோம் ச சம்பவம் –நியமன சக்தியின் ஏக தேசத்தால் உண்டானது
விஷ்டப்யாஹமிதம் க்ருத்சன மேகாம் சேந ஸ்திதோ ஜகத் –ஆகையால் சாஸ்த்ரங்களில் நிர்விசேஷ வஸ்து பிரதிபாதனம் இல்லை -உலகில் உள்ள எல்லா பதார்ந்தங்களும் பிராந்தி சித்தங்கள் என்று சொல்லப் பட்டு இருக்க வில்லை -சித் அசித் ஈஸ்வர மூன்று தத்வங்களுக்கும் ஸ்வரூப பேத நிஷேதமும் இல்லை —
அவித்யா -சத் என்றும் அசத் என்றும் நிர்வசனம் செய்யத் தகாதது -அநாதி –அவசியம் ஒப்புக் கொள்ளத் தக்கது
சத் அல்ல -பிராந்தி பாதம் இரண்டும் பொருந்தாமல் போக வேண்டியதால் -அசத்தும் அல்ல கியாதி பாதம் இரண்டும் பொருந்தாமல் போக வேண்டியதால்
அவித்யை ஜீவனை ஆச்ரயித்து பரமம் உண்டு பண்ணுவது இல்லை -ஜீவ பாவம் அவித்யையினால் ஏற்படுத்தப் படுவதால்
ப்ரஹ்மத்தை ஆச்ரயித்தும் பிரமம் உண்டு பண்ணுவது இல்லை -ப்ரஹ்மம் தனக்குத் தானே பிரகாசிக்கும் ஞான ஸ்வரூபமாய்
அவித்யைக்கு விரோதியாக இருப்பதால் –
ஜ்ஞான ரூபம் பர ப்ரஹ்மம் தந் நிவர்த்யம் ம்ருஷாத்மகம் அஜ்ஞ்ஞா நஞ்சேத் திரஸ் குர்யாத் க பிரபுஸ் தந் நிவர்த்தன -ஜ்ஞானம் ப்ரஹ்மேதி சேத
ஜ்ஞானம் அஜ்ஞானச்ய நிவர்த்தகம் -ப்ரஹ்மவத் தத் பிரகாசத்வாத் ததபிஹ்ய நிவர்த்தகம் ஜ்ஞானம் ப்ரஹ்மேதி விஜ்ஞான மஸ்தி சேத ஸ்யாத்
ப்ரமேயதா பிராமநோஸ் நனுபூதித்வம் த்வதுக்த்யைவ பிரசஜ்யதே —
ப்ரஹ்மம் ஞான ஸ்வரூபம் என்கிற ஜ்ஞானமே அவித்யைக்கு பாதகம் -ப்ரஹ்ம ஸ்வரூப ஜ்ஞானம் ப்ரஹ்ம விஷய ஜ்ஞானம் இரண்டும் அவித்யா விரோதி
அதனால் அவித்யை ப்ரஹ்மத்தை ஆச்ரயித்து இருக்க முடியாது சிப்பி போல்வன ஜ்ஞானாந்தரத்தை அபேஷிக்கும் -ப்ரஹ்மம் வேறு நிவர்த்தாக ஜ்ஞானத்தை அபேஷிக்கிறது இல்லை
அப்படிக்கின்றி ப்ரஹ்மத்தை தவிர்த்த மற்ற எல்லா வஸ்துக்களும் மித்தை என்ற ஜ்ஞானம் அஜ்ஞ்ஞா விரோதி என்றால் அல்ல –
இந்த ஜ்ஞானம் ப்ரஹ்மத்தின் யாதாம்ய ஞான விரோதியா -அல்லது பிரபஞ்சத்தின் சத்யத்வ ரூபமான அஜ்ஞானத்துக்கு விரோதியா –
இந்த ஜ்ஞானம் விஷயீ கரிக்காததால் ஜ்ஞானம் அஜ்ஞ்ஞானம் இரண்டுக்கும் விஷயம் ஒன்றாக இருந்தால் அல்லவோ விரோதம் ப்ரஹ்மம்
அவித்யையால் மறைக்கப் பட்டது என்பவனுக்கு ஸ்வரூப நாசமே ஏற்படும்–பிரகாசத்தின் திரோதானம் -பிரகாசத்தின் உத்பத்தியின் பிரதிபந்தம்

மேலும் விஷயம் இல்லாததும் ஆஸ்ரயம் இல்லாததும் தானாக பிரகாசிக்கும் ஸ்வ பாவம் உள்ளதுமான இந்த அநு பூதி தோஷ வசத்தினால் -இந்த தோஷம் உண்மையா அசத்த்யமா -உண்மையானது அல்ல -அப்படி ஒப்புக் கொள்ளாமையால் -அசத்தியமும் அல்ல -அப்படி ஒப்புக் கொண்டால் அது த்ர்ருஷ்ட்ரு-த்ருச்ய தருசி ரூபமாகவாவது -பார்ப்பவன் -பார்க்கத் தக்கது பார்வை -என்றபடி -மாத்யமிகன் சர்வ சூன்ய வாதி பஷம்-
அநிர்வசநீயத்வம் -சத் விலஷணம் -சத் அசத் ஆகாரமாக இருக்கும் வஸ்துவுக்கு சத் விலஷணம் விஷயம் ஆகாதே
ஆத்மக்யாதி -அசத்க்யாதி -அக்யாதி-அந்ய தாக்யாதி -அநிர்வச நீயக்யாதி -ஐந்து காதிகள் பூர்பஷி சொல்ல ராமானுஜ சித்தாந்தம் சக்யாதி ஒன்றையே சொல்லும்
ஆத்மக்யாதி -யோகாசாரன் வாதம் -ஆத்மாவுக்கு புத்திக்கு விஷய ரூபமான பிரதிபாசம் -இரசதம் புத்தியே ராஜாத ரூபமாக பாசிக்கிறது என்பர்
அசக்யாதி இல்லாததான ரஜதம்-மாத்யாமிகர் வாசஸ்பதி மிஸ்ரர் -வாதம் -சிப்பியில் வெள்ளி என்ற ஞானம் போலே
அக்யாதி மீமாம்சகன் -இதம் ரஜதம் என்றால் இதம் அம்சமே பிரத்யஷ பிரதீதிக்கு விஷயம்
அன்யதாக்யாதி -நையாயிக மதம் -ஒரு வஸ்து வேறு ஒன்றாக அறியப் படுவது
அநிர்வச நீயக்யாதி -மாயாவாதி வாதம் அபூதி -வாதம்
சத்க்யாதி வாதம் -ஜ்ஞான விஷயத்துக்கு சத்யத்வம் -இதுவே ராமானுஜ சித்தாந்தம்

அன்றிக்கே இவ்விதம் இருக்கலாம் -வஸ்துவின் ஸ்வரூபத்துக்கு திரோதானம் செய்கிறதும் -அனைத்துக்கும் உபாதான காரணம் சத் அசத் என்று நிர்வசனம் செய்யத் தகுதி அற்றதும் -அவித்யை அஜ்ஞ்ஞானம் போன்ற பதங்களால் சொல்லத் தக்கதும் -வஸ்துவின் உண்மையை அறிவதால் விலக்கத் தக்கதும் ஜ்ஞானத்தின் பிராக பாவத்தை விட வேறான பாவ ரூபமாக இருக்கிற வஸ்து பிரத்யஷம் அனுமானம் இவற்றால் அறியப் படுகிறது -அந்த வச்துவினால் மறைக்கப் பட்ட ப்ரஹ்மத்தை உபாதாநமாக உடையதும் விகாரம் இல்லாததும் தானே பிரகாசிக்கின்றதும் ஜ்ஞான மாதரத்தை உருவாகக் கொண்டதும் அந்த அத்யாச ஹேதுவாலே கல்பனையாலே மறைக்கப் பட்ட ச்வரூபத்துடன் கூடியதுமான பிரத்யகாத்மாவின் இடத்தில் தனித் தனியே பிரிக்கப் பட்டு இருக்கிற அஹங்காரம் ஜ்ஞானம் ஞேயம் என்கிற யாதொரு அத்யாசம் உண்டோ அந்த தோஷத்தின் உடையதாக இருக்கிற ஒரு சமயத்தில் உண்டாகும் அவஸ்தா விசேஷத்தினால் அத்யாச ரூபமான ஜகத்தில் ஜ்ஞானத்தினால் பாதிக்கப் பட்ட சர்ப்பம் ரஜதம் வஸ்துக்களும் அந்த அந்த வஸ்து விஷயக ஜ்ஞான ரூபமான அத்யாசமும் உண்டாகிறது
மித்யா ரூபமான அவை அனைத்துக்கும் தோஷமே உபாதானம் ஆத்மாவின் இடத்தில் ஜ்ஞான பாவத்தை விஷயீ கரிக்கிறது இல்லை –
இது சொல்லப் பட்டதாகிறது –
அஹம் அஜ்ஞ-என்ற இந்த அனுபவத்தில் -அஹம் -ஆத்மா அபாவ தர்மியாகவும் ஜ்ஞானம் பிரதியோகியாகவும் அறியப் படுகிறதா இல்லையா -அறியப் பட்டால் ஜ்ஞான அபாவ அனுபவம் சம்பவிக்கிறதில்லை-இல்லையானால் ஜ்ஞான அபாவ அனுபவம் மிகவும் சம்பவிக்கிறதில்லை-
அஜ்ஞ்ஞானம் பாவ ரூபமாகவே அறியப் படுகிறது
இந்த பாவ ரூபமான அஜ்ஞ்ஞானம் அனுமானத்தாலும் சித்திக்கிறது -இருட்டு பிரகாசத்தின் இன்மையே ரூப-தர்சனத்தின் இன்மையே
இரண்டுவித அபாவங்களைக் காட்டிலும் வேறு ஒரு த்ரவ்யம் இல்லை தமஸ் வேறு த்ரவ்யம் -தமஸ் த்ரவ்யம் என்பதே பாஷ்யகாரர் மதம்

—————————————————————————————————–
கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஸ்ருதி பிரகாசர் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ போதாயனர் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ பாஷ்யம்– 1-1-1– மஹா சித்தாந்தம் -இரண்டாம் பாகம் — -ஸ்ருத பிரகாசிக சுருக்கம் –

September 23, 2015

இது சொல்லப் பட்டதாகிறது -நிரூபிக்கிறார் -ஒரே தேஜஸ் ஸ்வரூப த்ரவ்யமானது பிரபா ரூபமாகவும் பரப்பை உள்ளதாகவும் இருக்கிறது என்றாலும்
பிரபையானது பிறப்பை உள்ள த்ரவ்யத்துக்கு அதீனமாக இருக்கிறது -ஆயினும் அது தேஜோ மயமான த்ரவ்யமே –
சௌக்ல்யம் முதலியது போலே குணம் அல்ல –
தனக்கு ஆதாரமாய் இருக்கிற வஸ்துவை விட்டு விலகி வேறு இடத்திலும் இருப்பதாலும் ரூபம் உள்ளதாக இருப்பதாலும் சௌக்ல்யம் முதலிய குணங்களோடு வேற்றுமை உடையதாக இருப்பதாலும் -பிரகாசம் உள்ளதாக இருப்பதாலும் தேஜோ த்ரவ்யமே -வேறு வஸ்து அல்ல – தன் ஸ்வரூபத்துக்கும் மற்றவைகளுக்கும் பிரகாசமாக இருப்பதால் -பிரகாசவத்வமும் –
இந்த பிரபைக்கு குணத்வ்ய வ்யவஹாரம் ஆனது எப்பொழுதும் அதை ஆஸ்ரயித்து இருத்தல் -அதற்கு சேஷமாக இருத்தல் -இவைகள் அடியாக உண்டானது –
ஒளிக்கு ஆஸ்ரயமான மணி முதலியவைகளின் அவயவங்களே நாற்புறங்களிலும் சிதறி சஞ்சரியா நின்றவைகளாக
பிரபை என்று வழங்கப் படுகின்றன என்று சொல்வது சரியல்ல -மணி சூரியன் முதலியவைகளுக்கு நாசம் வர வேண்டி வருவதால் –

ஏகமேவ –பிரகாசவத்வாத் –பிரகர்சவதீத் வஞ்ச –அச்யா மணி –
ஸூ ர்யா சந்திர மசௌ தாத்தா யதா பூர்வ மகல்பயத் –ந அக்நீஷோ மௌ ந ஸூ ர்ய —

————————————————————————————–

தீபத்திலும் அவய விபிரதிபத்தி யானது ஒரு பொழுதும் உண்டாகாது -சிததுலை ஸ்வபாவமாகக் கொண்ட அவயவங்களுடன் கூடின
தீபங்கள் நான்கு அங்குலங்கள் அளவு தவறாமல் பிண்டா காரங்களாக இருந்து கொண்டு மேலே கிளம்பி அதற்குப் பிறகு ஒரே சமயத்திலேயே
குறுக்காகவும் மேலாகவும் கீழாகவும் ஒரே மாதிரியாக சித்ரா நின்று கொண்டு நால் புறங்களிலும் பரவுகின்றன என்று சொல்வதற்கு சகயம் இல்லை
ஆகையால் சிறந்த காரணங்கள் வரிசைக் க்ரமமாக தோன்றும் தருணத்தில் உண்டாவதாலும் அவைகள் நாசம் அடையும் சமயத்தில் நசிப்பதாலும் பிரபையோடு கூடியவைகளாகவே தீபங்கள் ஷணம் தோறும் தோன்றி விநாசம் அடைகின்றன வென்று அறியப் படுகின்றது —
அக்னி முதலியதற்கு ஔஷ்ண்யம் முதலியது போலே பிரபைக்கு தனக்கு ஆஸ்ரிய வஸ்து சமீபத்தில் -பிரகாசாதிக்யம் உஷ்ணாதிக்யம் இது முதலியது உப லப்தியினால் வ்யவஸ்தை செய்யத் தக்கது –
இவ்வண்ணம் ஆத்மா சித் ரூபனாகவே இருந்து கொண்டு சைதன்ய குணம் உள்ளவன் -சித் ரூபயத்தை யன்றோ ஸ்வயம் பிரகாசதை-

உப பாதக ஸ்ருதிகள் ஆவன -எவ்வாறு உப்புக் கட்டியானது உள்ளிலும் வெளியிலும் -ரசத்தில் அல்லது ருசியில் வ்யத்சாம் இன்றி எல்லாம் ரசகனமாய் இருக்கிறதோ இவ்வண்ணமே
இந்த ஆத்மா உள்ளங்கம் வெளியங்கம் இன்றியே முழுவதும் பிரஜ்ஞ்ஞான கனனே விஜ்ஞ்ஞான் கனனே –
இந்த இடத்தில் இந்த புருஷன் ஸ்வயம் ஜ்யோதிசாக இருக்கிறான் –
விஜ்ஞாதாவான ஆத்மாவின் ஜ்ஞானத்துக்கு அழிவில்லை -எவன் இதை முகர்கின்றேன் என்று எண்ணுகிறானோ அவன் ஆத்மா
எவன் ஆத்மா -யாதொருவன் விஜ்ஞான மயனாக பிராணன் களிலும் ஹிருதயத்தினுள்ளும் ஜ்யோதிர்மய புருஷனாக இருக்கிறானோ
இவன் அன்றோ பார்ப்பவன் கேழ்ப்பவன் ருசி பார்ப்பவன் முகற்கிறவன்-மனனம் செய்கிறவன் -அறிகிறவன் -செய்கை யுடையவன்
விஜ்ஞான ஸ்வரூபியான புருஷன் -விஜ்ஞாதாவானா ஆத்மாவை எதினால் அறியலாம் -இந்தப் புருஷன் அறியவே அறிகிறான் –
பரம புருஷனைப் பார்ப்பவன் -சம்சாரத்தைப் பார்க்கிறது இல்லை -ரோகத்தையும் துக்கத்தையும் பார்க்கிறது இல்லை
அவன் உத்தமமான புருஷன் உத்பத்தி ஸ்திதி வினாசங்கள் உள்ள இந்த சரீரத்தை நினைக்கிறது இல்லை
இவ்வண்ணமே பரம புருஷ சாஷாத்காரம் பெற்று இருப்பவனான இந்த முக்தாத்மாவுக்கு முக்தி தசையில் பரம புருஷனை அடைந்து ஜீவனுடைய சங்கல்ப்பத்தைச் சார்ந்த ஸ்வரூப ஸ்திதி பிரவ்ருத்திகளுடன் கூடின இந்த பதினாறு கலைகள் -அதாவது
பிராணன் –ஸ்ரத்தை–ஆகாயம் –வாயு -ஜ்யோதிஸ் –ஜாலம் –பூமி –இந்த்ரியம் -மனஸ் –அன்னம் -வீர்யம் -தபஸ் –
மந்திரங்கள் -கர்மங்கள் -உலகங்கள் -உலகத்தில் உள்ள பெயர்கள் –ஆகிய இந்த பதினாறும் நாசம் அடைகின்றன –
அந்த இந்த மநோ மயனைக் காட்டிலும் விஜ்ஞான மயனாகவும் ஹிருதயத்தில் மத்யத்தில் இருப்பவனுமான ஜீவாத்மா வேறாக இருக்கிறான்
இது முதலியவைகள் ஸூ த்ரகாரரே சொல்லப் போகிறார் -ஜ்ஞ்ஞோ அத ஏவ -என்று –

தீ பேபி –நஹி –நஹி விசரண –அதஸ் சப்ரபாக ஏவ தீபா பிரதி ஷணம் உத்பன்னா –புஷ்கல காரண கரமோ பநிபாதாத்
தத் விநாசே விநாசாச்ச –தத் விநாசே விநாசாச்ச —
ப்ரபாயா -அக்நய ஆதீனம் –சித்ரூப ஏவ –சித்ரூப தாஹி –ததாஹி ஸ்ருதய–க்ருத்சன –விஜ்ஞான கன ஏவ –நவிஜ்ஞாது —
அதய -கதம -விஜ்ஞாதாரம் -ஜ்ஞாநாத் யேவாயம் –ந பஸ்ய-ச உத்தமம் -ஏவம் — தஸ்மாத் வா -வகஷ்யதிச

——————————————————————————

ஆகையால் ஸ்வயம் பிரகாசனான இந்த ஆத்மா ஜ்ஞானாஸ்ரயனே பிரகாச மாதரம் அல்ல –பிரகாச ஸ்வரூபனாக இருப்பதினாலேயே
தீபம் முதலியவற்றின் பிரகாசம் போலே ஒரு வஸ்துவினுடையதாகவே பிரகாசம் இருக்க வேண்டும் –
ஆதலால் சம்வித்தானது ஆத்மாவாக இருப்பதற்குத் தகுதி உள்ளது அல்ல –
சம்வித் -அநு பூதி -ஜ்ஞானம் – முதலிய சப்தங்கள் சம்பந்தி சப்தங்கள் என்றும் சப்தார்த்தங்களை அறிந்தவர்கள் நிர்ணயித்து இருக்கிறார்கள் –
உலகத்திலும் வேதத்திலும் கர்ம கர்த்தாக்கள் இல்லாத ஜ்ஞாநாதி முதலிய தாதுக்களின் பிரயோகம் முன் காணப் பட்டது இல்லை

அத பிரகாசத்வா தேவ -சம்வித அநு பூதி –நஹி லோக வேதயோ —

——————————————————————-
அஜடம் ஆதலால் சம்வித்தே ஆத்மா வென்று எது சொல்லப் பட்டதோ அந்த விஷயத்தில் இது கேழ்க்கத் தக்கது -எது அஜடத்வம்
என்று எண்ணப் பட்டு இருக்கிறது –
தன்னுடைய சத்தையினால் உண்டு பண்ணப் பட்ட பிரகாசத்துடன் கூடி இருத்தல் என்று சொல்லப் படுமே யானால்
அப்பொழுது தீபம் முதலியவைகளில் வ்யபிசாரம் வரும் -சம்வித்தைக் காட்டிலும் வேறான பிரகாச தர்மத்தை ஒப்புக் கொள்ளாமையால் –
அசித்தியும் விரோதமும் தவறாத பிரகாசம் உள்ள சத்தையோடே கூட இருத்தலும் ஸூ கம் முதலியவைகளில் வ்யபிசாரம் வருவதால் நிரசிக்கப் பட்டது

யச் சொக்தம் –அஜடத்வம் -கிமபிப்ரேதம் –ஸ்வ சத்தா – ததா சதி -சம்விததிரிக்த -அவ்யபிசரித –

————————————————

ஸூ கம் முதலியது தவறாத பிரகாசத்துடன் கூடியதாக இருந்த போதிலும் அந்யனுக்கு பிரகாசிக்கிற ஸ்வ பாவம் உள்ளதாக இருப்பதால்
கடம் முதலியது போல் ஜடமாதளால் ஆத்மா அல்ல என்று சொல்லப் படுமே யானால் -ஜ்ஞானம் தானாகட்டும் தனக்குப் பிரகாசிக்கிறதா –
அதுவும் நான் ஸூ கம் உள்ளவன் எனபது போலே நான் அறிவுள்ளவனாக இருக்கிறேன் என்று தன்னைக் காட்டிலும் வேறாக இருக்கிற அஹமர்த்தமான ஜ்ஞாதாவுக்கே பிரகாசிக்கிறது
ஆகயால் தனக்கு பிரகாசித்தல் என்கிற அஜடத்வமானது சம்வித்தில் அசித்தம் -ஆதலால் தன் ஆத்மாவைக் குறித்து தன் சத்தையினாலேயே சித்திக்கிற அஜடமான அஹமர்த்தமே ஆத்மா
ஜ்ஞானத்திற்கும் பிரகாசதையானது அந்த ஆத்மா சம்பந்தத்தைச் சார்ந்து இருக்கிறது
ஸூ கம் முதலியவற்றுக்குப் போலே ஜ்ஞானத்திற்கு தனக்கு ஆஸ்ரயமான சேதனனைக் குறித்து பிரகடத்வமும்
மற்றவனைக் குறித்து அபிரகடத்வமும் அந்த ஆத்மா சம்பந்தத்தால் அன்றோ உண்டு பண்ணப் பட்டு இருக்கிறது
அதனால் ஜ்ஞப்தி மாதரம் ஆத்மா வல்ல -பின்னியோ ஜ்ஞாதாவான அஹமர்த்தமே –

யத்யுச்சேத–ஜ்ஞானம் வா –ததபி –அஹம் –அத -தஸ்மாத் –
ஜ்ஞானச்யாபி –தத்க்ருதமே வஹி -அத

————————————————————————-

அதற்கு மேல் அநு பூத்தியானது உண்மையாகவே விஷயம் இல்லாததாகவும் ஆஸ்ரியம் இல்லாதாதவும் இருந்து கொண்டு
நிரதிஷ்டான ப்ரமம் பொருந்தாதலால்-சிப்பியானது வெள்ளியாகத் தோன்றுவது போலே ஜ்ஞாதாவாக தோன்றுகிறது என்று –
எது சொல்லப்பட்டதோ அது சரியல்ல –
அப்படியாகில் அனுபவத்தோடு சமாநாதிகரணமாக அனுபவிதாவான அஹமர்த்தமானது முன்னிலையில் இருக்கிற பிரகாசம் உள்ள
த்ரவ்ய ஸ்வரூபமாக வெள்ளி முதலியது போலே -அஹம் அநு பூதி -என்று அறியப் பட வேண்டி யதாக இருக்கும்
இவ்விடத்திலேயோ என்றால் இந்த அநு பூதியானது வேறாக தோன்றியதாகவே இருந்து கொண்டு
தண்டமானது தேவ தத்தனைப் போலே அர்த்தாந்தரமான அஹமர்த்தத்தை விசேஷிக்கிறது
இதை நிரூபிக்கிறார் -நான் அனுபவிக்கிறேன் என்று அன்றோ பிரதீதி உண்டாகிறது
ஆதலால் இவ்வண்ணம் அநு பூதி உடன் கூடியதாக அஸ்மாதர்த்தத்தை பிரகாசிப்பிக்கிற -நான் அனுபவிக்கிறேன் -என்ற ஜ்ஞானமானது
தண்ட மாதரத்தில் தண்டி தேவதத்த -என்கிற ஜ்ஞானம் போலே விசேஷணமாக இருக்கிற அநு பூதி மாதரத்தை அவலம்பித்து
எவ்வாறு பிரதிஜ்ஞை பண்ணப் படலாம்

அத யதுக்தம் -நிரதிஷ்டான -ததயுக்தம் -புரோவச்தித்த –அத்ர து -ததாஹி –ததேவம் -ப்ருதகவா பாச மா நா -அநு பூதி ரஹமிதி பிரதி ஏத-

—————————————————————————

நான் பருத்தவன் -என்கிற இது -என்கிற இது முதலிய வ்யவஹாரங்களில் தேஹத்தில் ஆத்மா அபிமானம் உள்ளவனுக்கே ஜ்ஞாத்ருத்வம் பிரதிபாசிப்பதால் ஜ்ஞாத்ருத்வம் கூட மிதியை என்று எது சொல்லப் பட்டதோ அது சரி யல்ல –
ஆத்மாவா அபிமானிக்கப் பட்டு இருக்கிற அநு பூதிக்கும் கூட மித்யத்வம் வர வேண்டியதாகும் -அநு பூதி உள்ளவனுக்கே பிரதீதி வருவதால்
தன்னைத் தவிர்த்த மற்ற எல்லா வற்றையும் நாசம் செய்கிற தத்வ ஜ்ஞானத்தால் பாதிக்கப் படாமல் இருப்பதால் அநு பூதிக்கு
மித்யாத்வம் இல்லை என்று சொல்லப்படுமே யாகில்
சந்தோஷம் இங்கனம் ஆகில் அதனால் பாதகம் இல்லாமையாலேயே ஜ்ஞாத்ருத்வமும் மித்யை யன்று
விக்கிரியை இல்லாத ஆத்மாவுக்கு ஜ்ஞானக்ரியா கர்த்ருத்வமான ஜ்ஞாத்ருத்வம் சம்பவிக்கிறது இல்லை
ஆதலால் ஜ்ஞாத்ருத்வம் -விக்ரியாத்மகம் ஜடம் விகாராச்பதமான அவ்யக்த பரிமாண அஹங்கார க்ரந்தியில் நிலை பெற்றது
ஆதலால் ஜ்ஞாத்ருத்வம் ஆத்மாவுக்கு இல்லை –பின்னையோ அந்த கரண ரூபமான அஹன்காரத்துக்கு கர்த்ருத்வம் முதலியது ரூபம் முதலியது போலே த்ருச்ய தர்மம் அன்றோ –
ஆத்மாவுக்கு கர்த்ருத்வமும் அஹம் பிரத்திய கோசரத்வமும் ஒப்புக் கொள்ளப் படும் பஷத்தில் தேஹத்துக்கு போலே அநாத்மத்வமும்-பராக்த்வம்
-ஜடத்வம் -முதலியதும் பிரசங்கிக்கும் -என்று யாதொன்று கூறப் பட்டதோ இது பொருந்தாது
அந்தக் கரண ரூபமான அஹங்கார திற்கு தேஹத்திற்கு போலே அசேதனத்வம் பிரகிருதி பரிமாணத்வம் த்ருச்யத்வம் பராக்த்வம் பரார்த்தத்வம்
முதலிய வற்றின் சம்பந்தத்தாலும் -ஜ்ஞாத்ருத்வம் சேதன சாதாரண ஸ்வ பாவம் ஆதலாலும் –

இது சொல்லப் பட்டதாகிறது —எவ்வாறு தேஹம் முதலியவை த்ருச்யம் பராக்த்வம் முதலிய ஹேதுக்களால் அவைகளுக்கு விரோதியான
த்ருஷ்ட்ருத்வம் -பிரத்யகத்வம் முதலியவையைக் காட்டிலும் வேறான ஓன்று என்று அறியப் படுகிறதோ
இவ்வண்ணம் அந்த கரண ரூப அஹங்காராமும் அந்த த்ரவ்யமாகவே இருத்தலாலேயே அதே ஹேதுக்களால் அதைக் காட்டிலும்
வேறு பட்டது என்று -அறியப் படுகிறது என்று -ஆதலால் த்ருசித்வத்திற்கு போலே -காணத் தக்கதுக்கு போலே -அஹங்காரத்துக்கு விரோதத்தாலேயே ஜ்ஞாத்ருத்வம் இல்லை
எவ்வாறு த்ருசித்வமானது அதின் கர்மாவான அஹங்காரத்துக்கு ஒப்புக் கொள்ளப் படுகிறது இல்லையோ அவ்வாறே ஜ்ஞாத்ருத்வமும்
அதின் கர்மாவுக்கு ஒப்புக் கொள்ளத் தக்கது அல்ல –
ஜ்ஞாத்ருத்வம் விக்ரியாத்மகம் அல்ல -ஜ்ஞாத்ருத்வம் எனபது ஜ்ஞானகுணாஸ்ரயத்வம் அன்றோ
நித்யனான இந்த ஆத்மாவுக்கு ஸ்வா பாவிகமான தர்மம் ஆதலால் ஜ்ஞானம் நித்யம் –
ஆத்மாவுக்கு நித்யத்வத்தை -நாதமா ஸ்ருதே -இது முதலிய ஸ்தலங்களிலே கூறப் போகிறார்
ஜ்ஞோதே ஏவ -என்கிற இடத்தில் ஜ்ஞ என்கிற வ்யபதேசத்தால் ஜ்ஞான ஆச்ரயத்வமும் ஸ்வா பாவிகம் என்று சொல்லப் போகிறார்
ஜ்ஞான ச்வரூபனாகவே இருக்கிற இந்த ஆத்மாவுக்கு மணி முதலியவைகளுக்கு பிரபாஸ்ரயத்வம் போலே
ஜ்ஞான ஆச்ரயத்வமும் அவிருத்தம் என்று உரைக்கப் பட்டது –

யதப்யுக்தம் –தத பாதாதே வேதி –யதப்யுக்தமவிக்ரி யஸ்ய –கர்த்ருத்வாதி -கர்த்ருத்வே –சந்தத் –தைரேவ ஹேதுபி தஸ்மாத் விவிச்யதே –த்ருசித்வவத் –யதா
நாசா ஜ்ஞாத்ருத்வம் ஹி–ஜ்க்னாஞ்சாச்ய –நித்யத்வஞ்ச –

——————————————————————————

ஸ்வயம் அபரிச்சின்னமாகவே இருக்கிற ஜ்ஞானமானது சங்கோச விநாசங்களுக்கு தகுதி உள்ளது என்று உபபாதிக்கப் போகிறோம்
ஆகையால் ஷேத்ரஜ்ஞா அவஸ்தையில் கர்மாவினால் ஸ்வரூபம் ஒடுங்கி அந்த அந்த கர்ம அனுகுணமான தரதம பாவத்தோடு இருக்கிறது –
அதுவும் இந்த்ரியங்கள் வாயிலாக வ்யவஸ்தை பண்ணப் பட்டு இருக்கிறது -அந்த அந்த இந்த்ரியங்கள் வழியாக உண்டாகிற ஜ்ஞான பிரசரத்தை அபேஷித்து உதயாச்தமைய வ்யபதேசம் பிரவர்த்திக்கிறது ஜ்ஞானப் பிரசரத்திலோ என்றால் கர்த்ருத்வம் இருக்கவே இருக்கிறது –
அதுவும் ஸ்வ பாவிகம் அல்ல -பின்னையோ கர்மாவினால் உண்டு பண்ணப் பட்டு இருக்கிறது
ஆதலால் ஆத்மா விகாரம் அற்ற ஸ்வரூபம் உள்ளவனே -இப்படிப்பட்ட ஸ்வரூபம் உள்ள விக்ரியாத்மகனான ஜ்ஞாத்ருவம் ஆனது ஜ்ஞான ச்வரூபனான ஆத்மாவுக்கே என்பதனால் ஒரு பொழுதும் ஜடமான அஹங்காரத்துக்கு ஜ்ஞாத்ருத்வம் சம்பவியாது –
அஹங்காரம் ஜட ஸ்வரூபமாக இருந்த போதிலும் கூட சித்தினுடைய சாமீப்யம் இருப்பது பற்றி அதின் சாயையானது இதில் தாக்குவதனால்
அந்த ஜ்ஞாத்ருத்வத்துக்கு சம்பவம் என்று கூறப்படுமே யானால் இந்த சிச்சயா பத்தி எனபது யாது -சம்வித்துக்கு அஹங்காரச் சாயாபத்தியா –அல்லது அஹங்காரத்துகு சம்வித் சாயாபத்தியாய் –சம்வித்துக்கு அஹங்காரச் சாயா பத்தி எனபது இல்லை -சம்வித்தில் ஜ்ஞாத்ருத்வம் ஒப்புக் கொள்ளாததால் அஹங்காரத்துக்கும் சம்விச் சாயா பத்தி இல்லை
முற்கூறப் பட்ட ஜடமான அதற்கு ஜ்ஞாத்ருத்வம் இல்லாமையாலும் -இரண்டும் சஷூர் இந்த்ரிய கோசரங்களாக இல்லாமையாலும்
அசரஷூ ஷங்களுக்கு சாயை காணப் பட்டது இல்லை யன்றோ
அப்படிக்கு அன்று அக்னியின் சேர்க்கையால் இரும்பு உண்டையில் ஔஷண்யம் போலே சித் சம்சர்க்கத்தால் ஜ்ஞாத்ருத்வத்துக்கு
உபலப்தி என்று சொல்லப் படுமே யாகில் இது சரி யல்ல
சம்வித்தில் வாச்தவ்யமான ஜ்ஞாத்ருத்வத்தை ஒப்புக் கொள்ளாததினாலேயே-அதின் சம்பந்தத்தால் அஹங்காரத்தில் ஜ்ஞாத்ருத்வமோ
அதின் உபலப்தியோ ஒன்றும் இல்லை
அசேதனமான அஹங்காரத்துக்கு ஜ்ஞாத்ருத்வ அசம்பாவத்தாலேயே அதன் சம்சர்க்கத்தால் சம்வித்தில் ஜ்ஞாத்ருத்வமோ அதின் உபலப்தியோ ஒன்றும் இல்லை –
இரண்டின் இடத்திலும் வாச்தவ்யத்தில் ஜ்ஞாத்ருத்வம் இல்லை -அஹங்காரமோ வென்றால் அநு பூதிக்கு அபிவயஞ்சநம் கண்ணாடி முதலியது
போல் அநு பூதியை தன்னிடத்திலே இருக்கிறதாகவ அபி வ்யஞ்சநம் செய்கிறது என்று எது உரைக்கப் பட்டதோ அது உக்தம் அல்ல –
ஸ்வயம் ஜ்யோதிசான ஆத்மாவுக்கு ஜட ரூபமான அஹங்கார அபி வ்யங்கயத்வம் பொருந்தாதலால் அது சொல்லப் பட்டு இருக்கிறது
சாந்தாங்கார-கரி – இவாதித்யம் அஹங்காரோ ஜடாத்மாக ஸ்வயம் ஜ்யோதிஷ மாத்மானம் வய நக்தீதி ந்யுக்திமத் –
எரிந்து தணிந்த தணல் ஆதித்யனைப் பிரகாசிப்பிக்கிறது எனபது போலே ஜட ஸ்வரூபியான அஹங்காரம் ஆனது ஸ்வயம் ஜ்யோதிசான
ஆத்மாவை பிரகாசிக்கச் செய்கிறது எனபது யுக்தி உள்ளது அல்ல –
எல்லா பதார்த்தங்களும் ஸ்வயம் பிரகாச அனுபவ ஆதீன சித்தி உள்ளவைகள் அன்றோ
அதில் அனுபவ ஆதீன பிரகாசம் உள்ள அசித்தான அஹங்காரம் ஆனது உதயாச்தமயம் அல்லாத பிரகாசம் உள்ளதும் அசேஷார்த்த சித்திக்கு
ஹேதுவாகவும் இருக்கிற அனுபவத்தை அபிவ யஞ்சனம் செய்கிறது என்பதை ஆத்மவித்துக்கள் பரிகசிக்கின்றார்கள்

ஸ்வயம் -அத ஷேத்ரஜ்ஞ- ஷேத்ரஜ்ஞ அவஸ்தாயாம் –தமீமம் –ஜ்ஞான பிரசரேது-தச்ச -அவீக்ரிய –ஏவம் ரூப விக்ரியாத்மகம் -ஜட –கேயம் –கிம் —
சம்விச்சாயா பத்தி ரஹாங்கா ரஸ்ய-ததாவத் –தாபி -த்யோரபி -நஹி -நைதத் சம்வித் -அஹங்காரஸ்யது –ஸூதராமிதி –
உபயத்ர வஸ்துத இதி -அஹங்கா ரஸ்து –ததயுக்தம் –ஆத்மா -ததுக்தம் –அநு திதா நஸ் தமித ஸ்வரூப பிரகாசம் -பரிஹசந்தி —

—————————————————————————————————
மேலும் அஹங்காரம் அனுபவம் இரண்டுக்கும் ஸ்வ பாவ விரோதித்தினாலும் அநு பூதிக்கு அநநுபூதித்வம் பிரசங்கிப்பதாலும்
வ்யங்க்ருத் வ்யங்க்ய பாவம் இல்லை —
இது சொல்லப் பட்டு இருக்கிறது -வ்யங்க்ருத் வ்யங்க்ய த்வம் அந்யோந்யம் நசஸ் யாத் ப்ராதிகூல்யதா -வ்யங்கத்வேன
அந அநுபூதித்வம் ஆத்மநி ஸ்யாத்யதா கடா –பிரதிகூல ஸ்வ பாவம் உள்ளதாக இருப்பதால் பரஸ்பரம் வ்யங்க்ருத் வ்யங்க்ய பாவம் சம்பவியாது –
வ்யங்க் யத்வத்தை ஒப்புக் கொண்டால் கடத்தில் போலே ஆத்மாவினிடத்தில் அநநுபூதித்வம் ஏற்படும் –
ஸூ ர்ய கிரணங்களுக்கு தன்னால் அபிவ்யஞ்ஜிக்கத் தக்க கர தலத்தினால் அபிவ்யங்க்யத்வம் போலே
சம்வித்துக்கும் சம்வித்தினால் அபிவ்யங்க்யமான அஹங்கார அபிவ்யங்க்யதவம் -என்று சொல்வது சரியன்று
அங்கேயும் ஸூ ர்ய கிரண சமூஹங்களுக்கு கரதல அபியங்க்யத்வம் இல்லாமையாலே
கரதலத்தால் தடைபட்ட கதிர்களுடன் கூடியவைகளாக வன்றோ ஸூ ர்யாச்மிகள் பகுளங்களாக தானே அதி ஸ்பஷ்டமாக அறியப் படுகின்றன –
ஆதலால் கரதலம் அந்த கிரணங்களின் பாஹூள்ய மாத்ர ஹேதுவே ஒழிய கிரண அபிவ்யஞ்சகம் அல்ல –
மேலும் இந்த சம்வித் ஸ்வரூபமான ஆத்மாவுக்கு அஹங்காரத்தால் ஏற்படுத்தத் தக்க அபிவ்யக்தியானது எவ்விதமானது –
உத்பத்தியன்று ச்வதஸ் சித்தமாக இருப்பது பற்றி மற்று ஒன்றினால் உண்டு பண்ணத் தக்க தன்மையினது இன்மை ஒப்புக் கொள்ளப் பட்டு
இருப்பதால் அதின் பிரகாசனமும் இல்லை -அந்த சம்வித்தானது அனுபவாந்தரங்களால் அநு பாவ்யம் அல்லாதலால் –
அதனாலேயே அஹங்காரத்துக்கு சம்வித அனுபவ சாதனா அனுக்ரஹம் இல்லை -அந்த அனுக்ரஹம் இரண்டு விதம் அன்றோ –
ஜ்ஞேயத்துக்கு இந்த்ரிய சம்பந்தத்தில் ஹேதுவாக இருத்தலாவது எப்படி ஜாதி முகம் முதலியவற்றை கிரஹிக்கும் விஷயத்தில்
வ்யக்தி தாபணம் முதலியவைகளுக்கு நயனம் முதலிய இந்த்ரிய சம்பந்த ஹேதுத்வமோ போக்தாவின் இடத்தில் உள்ள கல்மஷைத்தைப்
போக்குதலாவது எவ்வாறு பரதத்வாவ போதனத்துக்கு சாதனமான சாஸ்தரத்துக்கு சமதமாதியினால் இப்படியே சொல்லப் பட்டு இருக்கிறது
கரணா நாம பூமித் வான்ன தத் சம்பந்த ஹேதுதா –இந்த்ரியங்களுக்கு விஷயம் இல்லாதலா அந்த இந்த்ரிய சம்பந்த ஹேதுத்வம் இல்லை –என்று –

கிஞ்ச -அநு பூதேர ந நு பூதித்வா பிரசங்காச்ச –யதோக்தம்–
தத்ராபி –கரதல –நதாவத் –ஸ்வ தஸ் சித்த தயேதி -நாபி –
ஜ்ஞேயஸ்ய -யதோக்தம்

———————————————————————————————-

மேலும் அநு பூதிக்கு அநு பாவ்யத்வத்தை ஒப்புக் கொண்ட போதிலும் அஹம் அர்த்தத்தினால் அதின் அனுபவ சாதனஎளிதில் சொல்ல முடியாது – அனுக்ரஹம்
அந்த அனுக்ரஹமோ என்றால் அநு பாவ்யமான வஸ்துவின் அனுபவத்தின் உத்பத்திக்கு பிரதிபந்தத்தை நிரசிப்பதனால் உண்டாக வேணும்
எப்படி தீபம் முதலியவற்றால் கண்ணுக்கு ரூபம் முதலியவற்றின் ஜ்ஞான உத்பத்திக்கு விரோதியான இருள் விலக்கத்தாலோ –
இந்த இடத்தில் விலக்கத் தக்க அப்படிப் பட்ட வஸ்து ஒன்றும் சம்பவிக்கிறது இல்லை
சம்விதாத்மாவை அடைந்து இருக்கிறதும் -அந்த ஜ்ஞான உத்பத்தியை தடுக்கிறதும் -அஹங்காரத்தால் போக்கடிக்கத் தக்கதுமான வஸ்து ஒன்றும் இல்லை –
அஜ்ஞ்ஞானம் இருக்கிறது அன்றோ என்று சொல்லப் படுமே யாகில் -இல்லை -அஜ்ஞ்ஞாநத்துக்கு அஹங்காரத்தால் விலக்கத் தக்க தன்மை
ஏற்றுக் கொள்ளப் படாதலால் -ஜ்ஞானம் அன்றோ அஜ்ஞ்ஞாத்தை விலக்கும் தன்மை வாய்ந்து உள்ளது –

நஹி –யதா ரூபாதி –ந சே ஹி –நதாவத் –அஸ்தி ஹி –ஜ்ஞான மேவஹி —

————————————————————————————-

அஜ்ஞ்ஞானத்துக்கு சம்வித்தை ஆச்ரயித்து இருத்தல் சம்பவியாது அன்றோ -ஜ்ஞானத்தோடு சமானமான ஆஸ்ரயம் உள்ளதாக இருப்பதாலும்
அந்த ஜ்ஞானத்தோடு சமானம் விஷயம் உள்ளதாக இருப்பதாலும் -ஜ்ஞாத்ரு பாவம் -விஷய பாவம் –இவ்விரண்டுகளால் விடுபட்டு
சாஷியாக இருக்கிற ஜ்ஞான மாதரத்தில் அஜ்ஞ்ஞானமாவது உண்டாவதற்கு தகுதி உள்ளதாகா தன்றோ
எவ்வாறு ஜ்ஞானாஸ்ரயத்வ பராசக்தி இல்லாமையால் கடம் முதலியவற்றுக்கு அஜ்ஞ்ஞானாஸ்ரயத்வம் இல்லையோ அவ்வாறே –
ஜ்ஞான மாத்ரத்திலும் ஜ்ஞான ஆச்ரயத்வம் இல்லாமையால் அஜ்ஞ்ஞான ஆச்ரயத்வம் சம்பவியாது –
சம்வித்துக்கு அஜ்ஞ்ஞான ஆச்ரயத்வத்தை ஒப்புக் கொண்ட போதிலும் ஆத்மாவாக ஒப்புக் கொள்ளப் பட்டு இருக்கிற அந்த சம்விதிற்கு ஜ்ஞான விஷயத்வம் இல்லாமையாலே ஜ்ஞானத்தால் அதை அடைந்து இருக்கிற அஜ்ஞ்ஞாநத்திற்கு நிவ்ருத்தி இல்லை –
ஜ்ஞானமோ என்றால் தனக்கு எது விஷயமோ அதிலேயே அஜ்ஞ்ஞானத்தை நிவர்த்திப்பிக்கிறது -ரஜ்ஜூ முதலியதில் போலே
ஆகையால் சம்வித ஆச்ரயமான அஜ்ஞ்ஞானமானது ஒன்றினாலும் ஒருக்காலும் நாசம் செய்யப் படுகிறது இல்லை
சத் என்றும் அசத் என்றும் நிர்வசனம் செய்யத் தகாததான இந்த அஜ்ஞ்ஞானத்தினுடைய ஸ்வரூபமே நிரூபிக்க முடியாதது என்று மேலே சொல்லப் போகிறோம்
ஜ்ஞான ப்ராகபாவ ரூபமான அஜ்ஞ்ஞானத்துக்கு ஜ்ஞான உத்பத்தி விரோதித்வம் இல்லாமையாலே அதின் நிரசனத்தில்
அந்த அனுபவ சாதன அனுக்ரஹம் இல்லை -ஆகையால் ஒரு விதத்தாலும் அஹங்காரத்தால் அநு பூதிக்கு அபி வ்யக்தி இல்லை –

நாசா -ஜ்ஞான -ஜ்ஞாத்ரு பாவ –யதா –ஜ்ஞானாஸ்ரயத்வ ப்ரசந்தீதி–சம்வித –ஆத்மதயா–அப்யுபகதாயா –அசய –ஜ்ஞான பிராபக பாவ

—————————————————————————————–

அபிவ் யஞ்ஜ கங்களுக்கு தன்னிடத்தில் இருப்பதாக அபிவ் யங்க்யங்களை அபிவ் யஞ்ஜநம் செய்தல் ஸ்வ பாவம் அல்ல –
-ப்ரதீபம் முதலியவைகளில் காணப் படாமையால் –
ஜ்ஞானம் ஜ்ஞான ஸ்தானம் அனுக்ரஹகம் இம் மூன்றுக்கும் உள்ளபடி இருக்கிற பதார்த்த ஜ்ஞானதிற்கு அநு குணமான
ஸ்வ பாவம் இருப்பதால் அதுவும் ச்வத பிராமணிய நியாயத்தால் சித்தம்
கண்ணாடி முதலியது முகம் முதலியவற்றுக்கு அபிவ் யஞ்ஜகம் அல்ல -பின்னையோ சஷூஷதேஜசின் பிரதிபலன ரூப தோஷத்துக்கு ஹேது
அதில் விபரீதமான தோற்றமானது அந்த பிரதிபலன ரூப தோஷத்தால் உண்டு பண்ணப் பட்டு இருக்கிறது –
ஆலோகம் -ஸூ ர்ய பிரகாசம் முதலியவை அபிவ் யஞ்ஜகம் –
ஸ்வ பிரகாசையாக இருக்கிற இந்த சம்வித்தில் அவ்வண்ணம் அஹங்காரத்தால் அப்படிப் பட்ட தோஷத்தைப் போக்குதல் சம்பவிக்கிறது இல்லை
வ்யக்திக்கோ என்றால் ஜாதி யானது ஆகாரமாதலால் அந்த வ்யக்தியை ஆச்ரயித்ததாகவே ஜாதியானது அறியப் படுகிறது ஒழிய
வ்யக்தி வ்யன்க்யமாக ஆகிறது இல்லை
ஆகையால் வாச்தவத்தாலோ தோஷத்தாலோ அந்தக் கரண பூதமான அஹங்காரத்தில் இருப்பதாக சம்வித்தின் உபலப்திக்கு ஒரு காரணமும் இங்கு இல்லை
ஆகையால் அஹங்காரத் திற்கு ஜ்ஞாத்ருத்வமாவது அவ்வாறாக உபலப்தி யாவது இல்லை

தச -பிரதி பாதிஷூ –யதா வச்தித -தச்ச -அபிது –தன தோஷ –அபிவ் யஞ்ஜ கஸ்து –ந சே ஹ –வ்யக்தே -அத –
நஅஹங்காரஸ்ய ஜ்ஞாத்ருத்வம் ததோ பல திர்வேதி —

——————————————————————————————–

ஆகையால் தானாகவே ஜ்ஞாதாவாக சித்திக்கிற அஹம் அர்த்தமே பிரத்யகாத்மா -ஜ்ஞப்தி மாதரம் அன்று -அஹம் அபாவம் போய்
விடுமே ஆகில் ஜ்ஞப்திக்கும் கூட பிரத்யக்த சித்தி இல்லை என்று சொல்லப் பட்டது
தமோ குணம் அதிகரித்து ஆக்ரமிப்பதாலும் பிரகாரத்த அனுபவம் இல்லாமையாலும் அஹம் அர்த்தத்துக்கு தனித்து வ்யக்தமான பிரகாசம்
இல்லாமல் இருந்த போதிலும் விழிக்கிற வரையில் அஹம் என்று -ஒரே விதமாக ஆன்மாவுக்கு ச்பூர்த்தி இருப்பதால்
ஸூ ஷூப்தியில் கூட அஹம் பாவனை விலகுகிறது இல்லை –
உனக்கு அபிமதையான அநு பூதிக்கும் அவ்வாறே பிரசக்தி என்று சொல்லத் தக்கது
தூங்கி எழுந்து இருந்தவன் ஒருவனாவது அஹம் பாவத்தின் நின்றும் விடுபட்டதும் அர்த்தாந்தரங்களுக்கு விரோதியான ஆகாரத்துடன்
கூடியதுமான ஜ்ஞப்தி யாகிய நான் அஜ்ஞ்ஞான சாஷியாக இருக்கிறேன் என்று இவ்விதமான ஸ்வாப சமகாலையான அநு பூதியை
பராமர்சிக்கிறான் இல்லை – -ஸூ கமாக நான் தூங்கினேன் என்று இப்படி யல்லவோ தூங்கி எழுந்து இருந்தவனுக்கு பராமர்சம் வருகிறது
இந்த பராமர்சத்தால் அப்பொழுதும் கூட அஹம் அர்த்தமாகவே இருக்கிற ஆத்மாவுக்கே ஸூ கித்வமும் ஜ்ஞாத்ருத்வமும் அறியப் படுகிறது
எவ்வாறு இப்பொழுது ஸூ கம் உண்டாகிறதோ அவ்வாறு அப்பொழுது உறங்கினேன் எனபது இந்த பிரதிபத்தி என்று சொல்லத் தக்கதல்ல
-பிரதிபத்திக்கு அந்த ஸ்வரூபம் இல்லாமையாலே –

தஸ்மாத் –அஹம் பாவ விகமே -தம -அஹம் இத் ஏகா காரேண ஸ புரணாத்–பவதபிமாதாய அநு பூதோபி-
-நஹி –ஏவம் ஹி -அ நே ந—-நச -அதத்ருபாவாத் —

——————————————————————————
அஹம் அர்த்தமான ஆத்மா அஸ்திரம் ஆதலால் அப்பொழுது அஹம் அர்த்தத்துக்கு ஸூ கித்வ அனுசந்தானத்துக்கு அனுபபத்தி எனபது இல்லை
யாதொரு காரணத்தினால் ஸூ ஷுப்தி தசைக்கு முன் அனுபவிக்கப் பட்ட வஸ்துவை தூங்கி எழுந்து இருந்தவன்
என்னால் இது செய்யப் பட்டது -என்னால் இது அனுபவிக்கப் பட்டது நான் இதைச் சொன்னேன் என்று பராமர்சிக்கிறானோ
இவ்வளவு காலம் வரையில் நான் ஒன்றையும் அறிந்திலேன் என்று பராமர்சிக்கிறான் என்று கூறப் படுமே யானால் -அதினால் என்ன –
கிஞ்சித் என்று -எல்லாவற்றுக்கும் பிரதிஷேதம் என்று சொல்லப் படுமே யானால் -நான் அறிந்தேன் என்று வேதிதாவான
அஹம் அர்த்ததிற்கே அநு வ்ருத்தி இருப்பதால்
அறியத் தக்க வஸ்து விஷயம் அல்லவோ அந்த பிரதிஷேதம் – ந கிஞ்சித் என்கிற நிஷேதம் க்ருத்சன விஷயமாக இருக்குமே யானால்
உனக்கு அபிமதமான அநு பூதியும் நிஷேதிக்கப் பட்டதாக ஆகும்
ஸூ ஷுப்தி சமயத்திலோ என்றால் அனுசந்திக்கப் படா நின்ற அஹம் அர்த்தமாகவும் ஜ்ஞாதாவாகவும் இருக்கிற ஆத்மாவை அஹம் என்று
பராமர்சித்து -ந கிஞ்சித் வேதிஷம் -என்கிற இந்த பராமர்சித்தினாலேயே சாதிக்கிறவன்-அந்த இந்த அர்த்தத்தை தேவர்களுக்கே சாதிக்கட்டும்
என்னைக் கூட நான் அறிந்திலேன் என்று அஹம் அர்த்தத்துக்கு கூட அப்பொழுது அ நனுசந்தானம் அறியப் படுகிறது என்று சொல்லப் படுமே யாகில் தன அனுபவத்திற்கும் தன வசனத்துக்கும் உள்ள விரோதத்தைக் கூட நீங்கள் அறிகிறீர்கள் இல்லை –
அஹம் மாம் நஜ்ஞாதவான் -என்று அல்லவோ அனுபவ வசனங்கள் -மாம் என்பதனால் எது நிஷேதிக்கப் படுகிறது என்று
வினவப் படுகிறதே யானால் -உன்னால் நன்கு வினவப் பட்டது -அதற்கு உத்தரம் உரைக்கப் படுகிறது –
அஹம் அர்த்தாவான ஜ்ஞாதாவுக்கு அநு வ்ருத்தி இருப்பதனால் ஸ்வ ரூபம் நிஷேதிக்கப் படுகிறது இல்லை –
பின்னையோ விழித்துக் கொண்டு இருக்கும் சமயத்தில் அநு சந்திக்கப் படா நின்ற அஹம் அர்த்தத்தினுடைய வர்ணாஸ்ரமம்
முதலியவைகளோடு கூடி இருத்தல்
அஹம் மாம் நஜ்ஞாதா வான -என்கிற வசனத்தில் விஷயம் விவேசிக்கத் தக்கது –
ஜாகரித்த அவஸ்தையில் அநு சந்திக்கப் பற்றிருகிற ஜாதி முதலியவைகளோடு கூடி இருக்கும் அஹம் அர்த்தம் ஆனது மாம் என்கிற அம்சத்துக்கு விஷயம் –
ஸ்வா ப்யயா அவஸ்தையில்பிரசித்தமானதும் அவிசதமான ஸ்வ அனுபவத்தையே முக்கியமாகக் கொண்டதுமான
அஹம் அர்த்தமானது அஹம் என்கிற அம்சத்துக்கு விஷயம்
இங்கு தூங்கினவன் -இப்படிப்பட்டவன் நான் -என்று என்னையும் நான் அறிந்திலேன் -இப்படியே யன்றோ அனுபவத்தின் மாதிரி —

நச -யத -ஏதா வந்தம் –தத கிம் -ந கிஞ்சித் –ந -ஸூ ஷுப்தி சம்யேது–தேவா நா மேவ சாத யது -மாம்பி -ஸ்வ ச்னுபவ –
அஹம்- மாமீதி –ததுச்யதே -அஹம் மாம் –ஜாகரித-அதர –

———————————————————————

மேலும் ஆன்மா ஸூ ஷூப்தியில் அஜ்ஞான சாஷியாக இருக்கிறான் என்று அல்லவோ உங்களுடைய பிரக்ரியை –
சாஷித்வம் ஆவது -சாஷாத் ஜ்ஞாத்ருத்வமே –
அறியாதவனுக்கு சாஷித்வம் இல்லை யன்றோ –ஜ்ஞாதாவே யன்றோ உலகத்திலும் வேதத்திலும் சாஷி என்று சொல்லப் படுகிறான்
-ஜ்ஞானம் மாதரம் அல்ல -பகவானான பாணினியும் கூறி இருக்கிறார் -அந்த இந்த சாஷி யானவன் ஜா நாமி என்று அறியப் படா நின்ற அஸ்மத் அர்த்தமே என்பதனால் –எதினால் எப்பொழுது அஹம் அர்த்தமானது அறியப் பட மாட்டாது -தனக்குத் தானாக பாசிக்கிற ஆத்மாவானது அஹம்
என்றே பாசிக்கிறது ஆதலால் ஸ்வா பம் முதலிய அவஸ்தைகளில் கூட பிரகாசிக்கிற ஆத்மா அஹம் என்றே பாசிக்கிறது எனபது சித்தம் —

கிஞ்ச -ஆத்மனே ஸ்வயம் -ஸ்வா பாதி —

———————————————————————————————–

மோஷ தசையில் அஹம் அர்த்தம் அனுவர்த்திகிறது இல்லை என்று எது கூறப் பட்டதோ அது அழகல்ல -அப்படியானால் ஆத்ம நாசமே
மோஷம் என்று வேறு விதத்தால் பிரதிஜ்ஞை செய்யப் பட்டதாகும் -அஹம் அர்த்தம் தர்ம மாதரம் அல்ல —
எதனால் அது போன போதிலும் அவித்யா நிவ்ருத்தியில் போலே ஸ்வரூபம் மிஞ்சி இருக்குமோ -விபரீதமாக அஹம் அர்த்தமானது
ஆத்மாவுக்கு ஸ்வரூபமே ஜ்ஞானமே என்றால் அதனுடைய தர்மம் –
நான் அறிகிறேன் ஜ்ஞானம் -எனக்கு உண்டாயிற்று என்றும் அஹம் அர்த்தத்துக்கு தர்மமாக ஜ்ஞான ப்ரதீதி வருவதாலேயே –
மேலும் எவன் பரமார்த்தமாகவோ ப்ராந்தியானாலேயோ ஆத்யாத்மிகம் முதலிய துக்கங்களால் தன்னை துக்கம் உள்ளவனாக
அஹம் துக்கி என்று அனுசந்தானம் செய்கிறானோ -அவனே இந்த எல்லா துக்க சமுதாயங்களையும் மறுபடி உண்டாகாமல் துலைத்து
எவ்வாறு நான் கவலை அற்றவனாகவும் ச்வச்தனாகவும் ஆவேன் என்று மோஷ இச்சை பிறந்தவனாக அதை சாதிப்பதில் பிரவர்த்திக்கிறான் –
அவன் சாதன அனுஷ்டானத்தால் நானே இருக்கப் போகிறது இல்லை என்று எண்ணுவானே யாகில் அவன் மோஷ கதா பிரச்தாவத்தின் நின்று விலகவே விலகுவான்
பிறகு அதிகாரி இல்லாமையாலேயே மோஷ சாஸ்திரம் முற்றிலும் அப்ரமாணமாக ஆகும்
அஹம் உபலஷிதமான பிரகாசம் மாதரம் மோஷத்தில் இருக்கிறது என்று சொல்லப் படுமே யாகில் இதனால் என்ன -நான் நஷ்டமாய் போன
போதிலும் கூட ஓரான் ஒரு பிரகாசம் மாதரம் இருக்கிறது என்று எண்ணி புத்தி பூர்வகமாக கார்யம் செய்பவன் ஒருவனாவது பிரயத்னம் செய்ய மாட்டான்
ஆகையால் ஜ்ஞாதாவாக சித்திக்கிற அஹம் அர்த்தமே பிரத்யகாத்மா –அந்த பிரத்யகாத்மா முக்தியிலும் அஹம் என்றே பிரகாசிக்கிறான்
தன பொருட்டு பிரகாசிப்பதால் எவன் எவன் தன பொருட்டு பிரகாசிக்கிறானோ அவன் எல்லாரும் அஹம் என்றே பிரகாசிக்கிறான்
சம்சாரியான ஆத்மா ஏதோ ஒரு விதமாக பிரகாசிப்பவனாக இருப்பதாக உபய வாதிகளாலும் ஒப்புக் கொள்ளப் பட்டு இருக்கிறான்
எது நான் என்று பிரகாசிக்கிறது இல்லையோ அது தன பொருட்டு பிரகாசிக்கிறது இல்லை கடம் முதலியது போலே
இந்த முக்தாத்மா தன பொருட்டு பிரகாசிக்கிறான் -ஆகையால் அவன் அஹம் என்றே பிரகாசிக்கிறான் –

யத்து –ததா சதி —நச -அஹம் -அபிச -சர்வமேதத் –அ நாகுல ஸ்வ ஸ தோப வேய மிதி –ததஸ் அதிகாரி —
அஹம் உபலஷிதம் –அத -யோய –யா புன -ஸ்வச்மை –தஸ்மாத் –

————————————————————————————–

அஹம் என்று பிரகாசிப்பதனால் அவனுக்கு அஜ்ஞத்வம் சம்சாரித்வம் முதலிய ஹேய தர்மங்கள் பிரசங்கியாது-மோஷ விரோதத்தால்
அஹம் பிரத்யயமானது அஜ்ஞ்ஞாத் வாதிகளுக்கு ஹேது வல்ல –
அஜ்ஞ்ஞானம் எனபது ஸ்வரூப அஜ்ஞ்ஞானம் -அந்யதாஜ்ஞானம்-அல்லது விபரீத ஜ்ஞானம்
அஹம் என்றே ஆத்ம ஸ்வரூபம் பாசிப்பதால் ஸ்வரூப ஜ்ஞான ரூபமான அஹம் பிரத்யயமானது அஜ்ஞ்ஞாத்தை உண்டு பண்ணுகிறது இல்லை
அவ்வாறு இருக்க சம்சாரியாக இருக்கும் தன்மையை எவ்வண்ணம் உண்டாக்கும் -பின்னையோ இதற்கு விரோதியாக இருப்பதால்
அத்தை நாசம் செய்யும் அஹம் என்று பிரகாசிப்பதனால் அவனுக்கு அஜ்ஞத்வம் சம்சாரித்வம் முதலிய ஹேய தர்மங்கள் பிரசங்கியாது-
மோஷ விரோதத்தால் அஹம் பிரத்யயமானது அஜ்ஞ்ஞாத்வாதிகளுக்கு ஹேது வல்ல —
அஜ்ஞ்ஞானம் எனபது ஸ்வரூப அஜ்ஞ்ஞானம் அன்யதாஜ்ஞ்ஞானம் விபரரீதஜ்ஞ்ஞானம் –
அஹம் என்றே ஆத்ம ஸ்வரூபம் பாசிப்பதால் ஸ்வரூப ஜ்ஞான ரூபமான அஹம் பிரத்யயமானது அஜ்ஞ்ஞத்தை உண்டு பண்ணுகிறது இல்லை –
அவ்வாறு இருக்க சம்சாரியாக இருக்கும் தன்மையை எவ்வாறு எவ்வண்ணம் உண்டாக்கும் –பின்னியோ அதற்கு விரோதியாக
இருப்பதால் அதை நாசம் செய்யும் –ப்ரஹ்மாத்மபாவ அபரோஷ்யத்தினால் விலக்கப் பட்ட மிச்சம் இல்லாத அவித்யை உடையவர்களான வாம தேவர் முதலியவர்களுக்கு அஹம் என்றே ஆத்ம அனுபவம் காணப் பட்டு இருப்பதாலும் -ஸ்ருதியை இது விஷயத்தில் பிரமாணமாக உபன்யசிக்கிறார் –
தத்தை தத் பஸ்யன் ருஷிர் வாமதேவ பிரதிபேதே —அஹம் மனுரபவம் ஸூ ர் யஸ்ய —அஹமேவச வர்தாமி பவிஷ்யாமி -இது முதலிய வசன சமூஹம் –
சமஸ்தமான இதர அஜ்ஞ்ஞான விரோதியும் -சத் என்கிற சப்தத்தால் உண்டாகிற ப்ரத்யய மாதரத்துக்கு கோசரமாகவும் இருக்கிற பரப்ரஹ்மத்தின் வ்யவஹாரமும் இவ்வண்ணமே –
ஹந்தா ஹாமி மாஸ் திஸ் ரோ தேவதா –சிருஷ்டியில் நோக்கம் உள்ளவனான நான் இந்த பிருத்வி அப்பு தேஜஸ் என்கிற மூன்று தேவதைகளை –
பஹூச்யாம் பிரஜாயேய -நான் உலகில் அநேக வஸ்துக்களாக பரிணமிக்கக் கடவேன் –
ச சஷ தா லோகான்னுஸ்ருஜா –உலகங்களை சிருஷ்டிக்கக் கடவேன் என்று சங்கல்ப்பித்தான் –
யஸ்மாத் ஷரமதீதோ அஹம் அஷராதபி சோத்தம — அதோ அஸ்மி லோகே வேதேச பிரதித – புருஷோத்தம -என்று
யாதொரு காரணத்தால் அசேதன பதார்த்தங்களை அதிக்ரமித்தவனாகவும் அசர சப்தத்தால் வாச்யர்களான ஜீவா வர்க்கங்களைக் காட்டிலும்
உத்தமனாகவும் இருக்கிறேனோ -அதனால் நான் உலகத்திலும் வேதத்திலும் புருஷோத்தமன் என்று பிரசித்தி பெற்று இருக்கிறேன் –
அஹமாத்மா குடாகேச -குடில குந்தலங்களை உடைய வனான ஹி அர்ஜுனா -நான் உலகம் அனைத்தையும் வியாபித்து இருக்கிறேன்
நத்வேவாஹம் ஜாத நாசம் — நான் ஒரு பொழுதும் இல்லாமல் இருந்தேன் எனபது இல்லை –
அஹம் க்ருதஸ் நஸய ஜகத பிரபவ பிரளயஸ் ததா அஹம் சர்வச்ய ப்ரபவோ மத்தஸ் சர்வம் ப்ரவர்த்ததே தேஷா மஹம்
ச மத்தர்த்தா ம்ருத்யு சம்சார சாகராத் -அஹம் பீஜ பரத பிதா வேதாஹம் சமாதி தானி –
அனைத்து உத்பத்தி லயத்துக்கு காரணமும் நானே -காரண பூதனான நானே சம்சார சாகரத்தில் இருந்து எடுத்து அருளுகிறேன்
விதை போடுகிற தகப்பன் -சென்றவைகளை அறிவேன் -இது முதலியவைகளிலே அஹம் என்றே ஆத்மாவினுடைய ஸ்வரூபம் ஆகில் எவ்வாறு அஹங்காரத்துக்கு ஷேத்ரத்தில் அந்தர்பாவமானது பகவானால் உபதேசிக்கப் படுகிறது
மஹா பூதான் யஹங்காரோ புத்திர வ்யக்தமேவச -ஐந்து மஹா பூதங்கள் அஹங்காரம் மஹத்தத்வம் மூலபிரக்ருதி -என்று சொல்லப் படுகிறது
ஸ்வரூப உபதேசங்கள் அனைத்திலும் அஹம் என்றே உபதேசித்தாலும் அப்படியே ஆத்ம ஸ்வரூப பிரத்பத்தியினாலும்
அஹம் என்ற பிரத்யகாத்மாவின் ஸ்வரூபம் –

நாசா –மோஷ –அஜ்ஞ்ஞான நாம –அஹமித்யேவ –அஜ்ஞத்வாத்ய ஹேதுத் வாச்ச–குத்ஸ் சம்சாரித்வம் -ப்ரஹ்மாத்மபாவ-
-சகல இதர –பஹூச்யாம் –அஹமாத்மா -நத்வே வாஹம் –கதம் தரீஹி –உச்யதே ஸ்வரூப உபதே சேஷு —

————————————————————————————–

மூலபிரக்ருதியின் பரிமாண பேதமாகிய அஹங்காரத்துக்கு ஷேத்ரத்தில் அந்தர்பாவமானது பகவானாலேயே உபதேசிக்கப் படுகிறது —
அது ஆத்மா அல்லாத தேஹத்தில் அஹம் பாவத்தைச் செய்வதற்கு ஹேதுவாக இருப்பதால் அஹங்காரம் என்று சொல்லப் படுகிறது
இந்த அஹங்கார சப்தத்திற்கோ வேந்தரில் அபூததத் பாவத்தில் -சவி -பிரத்யயத்தை கல்பித்து வ்யுத்புத்தி பண்ணத் தக்கது –
இதே அஹங்காரமானது மேன்மை தங்கிய பெரியோர்களின் அவமானத்துக்கு ஹேதுவாய்-கர்மம் -என்கிற வேறு பெயர் வாய்ந்ததாக
சாஸ்த்ரங்களில் பெரும்பான்மையாக விடத் தக்கதாக பிரதிபாதிக்கப் படுகிறது
ஆகையால் பாதகம் இல்லாத அஹம் புத்தியானது சாஷாத் ஆத்ம கோசரையாகவே இருக்கிறது –
சரீர கோசரையான அஹம் புத்தியோ என்றால் அவித்தையே -பராசர பகவானால் இது விஷயமான பிரமாணம் கூறப் பட்டு இருக்கிறது –
ஸ்ரூய தாஞ்சாப்ய வித்யாயாஸ் ஸ்வரூபம் குல நந்தன அநாத்ம அனாத்ம புத்திர்யா-வம்சத்துக்கு பெருமை உண்டு பண்ணுகிறவனே-
அவித்யையின் ஸ்வரூபம் கேழ்க்கப் படலாம் -ஆத்மா வல்லாத வஸ்துவில் ஆத்ம புத்தி யாதொன்று உண்டோ -என்று –
ஜ்ஞப்தி மாதரம் ஆத்மாவாக இருக்குமே யானால் அப்பொழுது ஆத்மா வல்லாத ஆத்ம அபிமான விஷயமான சரீரத்தில்
ஜ்ஞப்தி மாதரத்துக்கு பிரதிபாசம் உண்டாக வேணும் ஜ்ஞாதாவுக்கு பிரதிபாசம் கூடாது -ஆகையால் ஜ்ஞாதா வான
அஹம் அர்த்தமே ஆத்மா -இது சொல்லப் பட்டு இருக்கிறது –
அத பிரத்யஷ சித்தயா துக்த ந்யாயாகமான் வயாத் அவித்யா யோகதஸ் சாதமா ஜ்ஞாதா ஹமிதி பாசதே -என்று
ஆகையால் பிரத்யஷ சித்தமாக இருப்பதாலும் முற்கூறப் பட்டு இருக்கிற நியாய சம்பந்தத்தாலும் -சாஸ்திர சம்பந்தத்தாலும் அவித்யா சம்பந்தத்தாலும்
ஆத்மாவானது நான் -ஜ்ஞாதா -என்று பாசிக்கிறது என்று -அவ்வாறே பிரமாணங்களும்
-தேக இந்த்ரிய மன பிராண தீப்யோ அன்யோ அநந்ய சாதனா நித்யோ வ்யாபீ பிரதிஷேத்ரமாத்மா பின்னஸ் ஸ்வ தஸ் ஸூகி -என்று -அநந்ய சாதனா ஸ்வயம் பிரகாசன் -வ்யாபீ -அதி ஸூ ஷ்மமாக இருப்பதனால் எல்லா அசேதனங்களுக்கு உள்ளும் வியாபிக்கும் ஸ்வ பாவம் உள்ளவன் –

அவ்யக்த –சாது –அஹங்காரம் பலம் தர்பம் -அயமேவது -தஸ்மாத் –யதோக்தம் -யதி -அநாத்மநி– தஸ்மாத் –ததுக்தம் -அதன்ய -அதி ஸூ ஷ்ம

————————————————————————– –

தோஷ மூலமாக இருப்பது பற்றி அன்யதா சித்தி சம்பாவனையால் சகல பேதங்களையும் அவலம்பித்து வருகிற பிரத்யஷமானது சாஸ்த்ரத்தினால்
பாதிக்கத் தக்கது என்று எது சொல்லப் பட்டதோ அந்த தோஷம் எது என்று சொல்லத் தக்கது
எந்த தோஷத்தை நீ மூலமாக கொள்வதனால் பிரத்யஷத்துக்கு அன்யதா சித்தி -ஏற்படுகிறதோ -அநாதி பேத வாசனையே தோஷம்
என்று சொல்லப் படுமே யாகில் பேத வாசனைக்கு திமிரம் முதலிய தோஷங்களுக்கு போலே உள்ளபடி இருக்கிற வஸ்துக்களின் விபரீத ஜ்ஞான ஹேதுத்வமானது வேறு இடத்தில் இதற்கு முன் உன்னால் அறியப் பட்டு இருக்கிறதா –
இந்த சாஸ்திர விரோதத்தினாலேயே அறியப் படப் போகிறது என்று சொல்லப் படுமே யாகில் அது சரி யன்று –
அந்யோந்ய ஆஸ்ரய தோஷம் வருவதால் சாஸ்தரத்துக்கு ஒரு விசேஷமும் இல்லாத வஸ்துவை உணர்த்தும் தன்மை நிச்சயிக்கப் பட்டால்
பேத வாசனைக்கு தோஷத்வ நிச்சயம் ஏற்படுகிறது —பேத வாசனைக்கு தோஷத்வ நிச்சயம் ஏற்பட்டால் தான் சாஸ்தரத்துக்கு
எல்லா விசேஷங்களையும் இழந்து இருக்கிற வஸ்துவை உணர்த்தும் தன்மை நிச்சயிக்கப் படுகிறது –

யதுக்தம் -தோஷ மூலத்வேன –சகல பேதா வலம்பி பிரத்யஷ்யச்ய -கோயம் -கோயம் தோஷம் இதி -வ்க்தவ்யமிதி –
-யன் மூலதயா –அநாதி -பேத வாசநாயா —
ஆறு தாத்பர்ய லிங்கங்கள் -உபக்கிரம உப சம்ஹாரங்கள் அப்யாசம் அபூர்வதா பலம் அர்த்தவாதம் உபபத்தி –

—————————————————————————————-

மேலும் பேத வாசனையை காரணமாகக் கொண்டு இருப்பதனால் பிரத்யஷத்துக்கு விபரீத அர்த்தத்தோடு கூடி இருத்தல் கூறப் படுமே யாகில் –
-சாஸ்திரமும் அந்த பேத வாசனா மூலமாக இருப்பதால் அவ்வாறே யாகும் -அப்படிக்கின்றி சாஸ்திரம் தோஷ மூலமாக இருந்த போதிலும்
பிரத்யஷமாக அறியப் பட்டு இருக்கிற சகல பேத நிரசன ஜ்ஞானத்துக்கு ஹேதுவாக இருப்பது பற்றி பிந்தியதாய் இருப்பதனால்
அந்த சாஸ்திரம் பிரத்யஷத்துக்கு பாதகமாக ஆகக் கூடுமே என்று உரைக்கப் படுமே யாகில் -அது சரி யன்று –
தோஷ மூலத்வம் அறியப் பட்டு இருக்கையில் -பரத்வம் -பிற்பட்டு இருத்தல் -எனபது பயன் அற்றது -ரஜ்ஜூவில் சர்ப்ப ஜ்ஞானத்தால் பயம் உண்டாய் இருக்கையில் இவன் -இவன் பராந்தன் என்று நன்கு அறிந்தவனான ஒருவனால் இது சர்ப்பம் அல்ல பயப்படாதே -என்று சொல்லப் பட்டப் போதிலும்
பயத்தின் நீங்காமை காணப் படுவதால் -சாச்த்ரத்துக்கும் தோஷ மூலத்வமானது சரவண வேளையிலே அறியப் பட்டு இருக்கிறது
மனனம் முதலியது ஸ்ரவணத்தால் அறியப் பட்டு இருக்கிற சமஸ்த மான பேதங்களையும் போக்குகின்ற ப்ரஹ்மாத்மைகதவ
விஜ்ஞானத்தின் ஆவ்ருத்தி ரூபமாய் இருத்தல் –

கிஞ்ச –அத –தன்ன -ரஜ்ஜூ சர்ப்ப –சாச்த்ரச்ய –ஸ்ரவணாகத

————————————————————–

மேலும் இது சாஸ்திரம் -இது தோஷ சம்பாவனை அற்றது -பிரத்யஷமோ சம்பவிக்கத் தக்க தோஷத்துடன் கூடியது என்று உன்னால்
எந்த காரணத்தால் அறியப் பட்டது –ஸ்வ தஸ் சித்தையாயும்-சகல விசேஷங்களும் அற்றதான அநு பூதியானது இந்த அர்த்தத்தை உணர்த்தத் திறமை உள்ளதாக ஆகாது –ஏன் என்னில் அது விஷயங்களின் நின்றும் விலகி இருப்பதாலும் -சாஸ்திர பஷபாதம் இல்லாமையாலும் இந்திரியங்களால் உண்டாகிற பிரத்யஷமும் இந்த அர்த்தத்தை உணர்த்த திறமை உள்ளதாக ஆகாது -தோஷ மூலமாய் இருப்பது பற்றி விபரீத அர்த்தத்தை உடையதாகையால் -அந்த தோஷத்தை மூலமாகக் கொண்டு இருப்பதினாலேயே மற்றவைகளும் பிரமாணங்கள் ஆகா
ஆகையால் தன பஷத்தை சாதிக்கத் திறமை உள்ள பிரமாணத்தை ஒப்புக் கொள்ளாமையால் தனக்கு சம்பந்தமாக இருக்கிற அர்த்தம் சித்தி பெறுகிறது இல்லை-
அய்யா வ்ய்வஹாரிகமான பிரமாண பிரமேய வ்யவஹாரம் எங்களுக்கும் இருக்கவே இருக்கிறது -இந்த வ்யவஹாரிகம் எனபது யாது –
ஆபாத ப்ரதீதியினால் சித்தி பெற்றதும் யுக்திகளால் நிரூபிக்கப் படுமே யாகில் அவ்வாறு நிலை பெற்று இராதது என்றும் சொல்லப் படுமே யாகில் அதனால் யாது பயன் –
பிரமாணமாக ஒப்புக் கொள்ளப் பட்டாலும் யுக்தியினால் உண்டான பாதத்தாலேயே பிரமாண கார்யம் இல்லாமையால் –

அபிச -நா தாவத் இதி -தஸ்யா–சாஸ்திர பஷ பாத விரஹாச்ச –நாபி -அத -நநு கோயம் –ஆபாத –கிம் நே ந -பிரமாண தயா —

—————————————————————————————-

மேலும் அப்படிக்கன்று சாஸ்திரம் பிரத்யஷம் இரண்டுக்கும் அவித்யா மூலத்வம் இருந்த போதிலும் பிரதிஷ விஷயத்துக்கு சாஸ்திரத்தால்
பாதமானது காணப் படுகிறது -சாஸ்திர விஷயமான சத் ரூபமான அத்விதீய ப்ரஹ்மதுக்கு-பிந்தின சாச்த்ரத்தால் பாதம் காணப் படாமையினால்
நிர்விசேஷமான அநு பூதி மாத்ரமான ப்ரஹ்மமே பரமார்த்தம் என்று சொல்லப் படுமே யாகில் -அது சரியல்ல –
அபாதிதமாக இருந்த போதிலும் கூட தோஷ மூலமான சாஸ்தரத்துக்கு அபாரமார்த்யயம் நிச்சயிக்கப் பட்டு இருப்பதால் இது சொல்லப் பட்டதாகிறது –
எவ்வாறு காசம் முதலிய கண் ரோகம் அற்ற சகல இதர புருஷர்களுக்கு எட்டாத மலையினுடைய குஹைகளில் வாஸம் பண்ணுகிறவர்களும் தம் கண்ணில் உள்ள திமிர ரோகத்தை அறியாதவர்க்களுமான -திமிர ரோகம் உள்ள எல்லா ஜனங்களுக்கும் திமிர தோஷம் சமானமாக இருப்பதனால் சந்தரன்
இரண்டு என்கிற ஜ்ஞானமானது பேதம் இன்றி உண்டாகிறது –அந்த இடத்தில் பாதக ஜ்ஞானமானது இல்லை எனபது பற்றி அந்த த்விசந்திர ஜ்ஞானமானது மித்யை யல்லாமல் போகாது என்பதினால் அந்த பரமாத்மக ஜ்ஞானத்துக்கு விஷயமாக உள்ள த்விசந்த்ரத்வமும் மித்யையே-
தோஷம் அன்றோ யதார்த்த ஜ்ஞானத்துக்கு ஹேது –அவ்வாறு ப்ரஹ்ம ஜ்ஞானம் அவித்யயை மூலமாகக் கொண்டு இருப்பதனால் பாதக ஜ்ஞானம் இல்லாவிடிலும் தனக்கு விஷயமாய் இருக்கிற ப்ரஹ்மத்தோடே கூட மித்யையே என்று –
இந்த விஷயத்தில் அநு மானங்களும் இருக்கின்றன –விவாத விஷயமான ப்ரஹ்மம் மித்யை –அவித்யை உள்ளவனுக்கு உண்டாய் இருக்கிற
ஜ்ஞானத்துக்கு விஷயமாக இருப்பதால் பிரபஞ்சகம் போலே ப்ரஹ்மமானது மித்யை ஜ்ஞான விஷயமாக இருப்பதால் -பிரபஞ்சம் போலே –
ப்ரஹ்மமானது மித்த்யை அசத்திய ஹேதுக்களால் உண்டான ஜ்ஞானத்துக்கு விஷயமாய் இருப்பதால் பிரபஞ்சம் போலவே —

அதோச்யேத–சாஸ்திர விஷயச்ய –தத் அயுக்தம் என்று -அபாதி தஸ்ய –ஏதத் உக்தம் -தோஷோஹி–ததா -பவந்தி —

————————————————————————————–

ஸ்வப்ன அவஸ்தையில் உண்டாகிற அசத்யமான கஜம் முதலியவற்றின் விஜ்ஞானத்துக்கு பரமார்த்தமான சுபாசுப பிரதிபத்தி ஹேதுத்வம் போலே –
அவித்யா மூலத்வம் இருப்பதால் அசத்யமான சாஸ்த்ரத்துக்கும் பரமார்த்தமான ப்ரஹ்ம விஷய பிரதிபத்தி ஹேதுத்வமானது விருத்தம் அல்ல
என்று உன்னால் சொல்லத் தக்கதல்ல –ஸ்வாப அஜ்ஞ்ஞானமானது அசத்தியம் இல்லாதலால் —
அந்த ஸ்வப்னத்தில் விஷயங்களுக்கு அன்றோ மித்த்யாத்வம் -அவைகளுக்கே அன்றோ பாதம் காணப் படுகிறது -ஜ்ஞானத்துக்கு பாதம்
காணப் படவில்லை -என்னால் ஸ்வப்ன வேளையில் அனுபவிக்கப் பட்ட ஜ்ஞானம் கூட இல்லை -என்று ஒருவனுக்காவது ஜ்ஞானம்
உண்டாகிறது அல்லை அன்றோ –தர்சனமோ இருக்கிறது -அர்த்தங்கள் இல்லை -என்று அல்லவோ பாதக பிரத்யயம்
மாயாவியினுடைய மந்த்ரம் ஔஷதம் முதலியவைகளால் சம்பவிக்கிற மாயாமயமான ஜ்ஞானமானது சத்தியமாகவே இருந்து கொண்டு
ப்ரீதிக்கும் பயத்துக்கும் காரணம் ஆகிறது–அவ்விடத்திலும் ஜ்ஞானத்துக்கு பாதகம் இல்லாமையால் -விஷயம் இந்த்ரியங்கள் முதலியவற்றின்
தோஷத்தால் உண்டாகிற –ரஜ்ஜூ முதலியவற்றில் சர்ப்பாதி விஜ்ஞானமானது சத்தியமாகவே இருந்து கொண்டு பயம் முதலியவற்றுக்கு ஹேதுவாக
இருக்கிறது -தான் சர்ப்பத்தால் கடிக்கப் படாமல் இருந்த போதிலும் கூட சர்ப்பத்தின் சந்நிதானத்தால் -நான் கடிக்கப் பட்டேன் -என்கிற புத்தியானது
சத்தியமாகவே உண்டாகிறது —சத்தியமாகவே இருக்கிற சங்கா விஷ புத்தியானது மரண ஹேது வாகிறது -ஜலம் முதலியவற்றில் வாஸ்தவமாகவே
இருக்கிற முகம் முதலியவற்றின் பிரதிபலனமானது வாஸ்தவமாய்–முகத்தை அடைந்து இருக்கிற விசேஷங்களை நிச்சயிப்பதற்கு ஹேதுவாகிறது
இந்த சம்வேதனங்கள் அனைத்தைக்கும் உத்பத்தி இருப்பதாலும் அர்த்தக்ரியா காரித்வம் இருப்பதாலும் சத்யத்வம் நிர்ணயிக்கப் படுகிறது –
ஸ்வப்னத்தில் அனுபவப்படுகிற யானை முதலியவைகள் இல்லாமல் இருந்த போதிலும் எவ்வண்ணம் அவைகளின் புத்திகளும் சத்தியங்களாக
ஆகின்றன வென்று வினவப் படுமே யாகில் அது அப்படி அன்று –புத்திகளுக்கு ஆலம்பன மாத்ரம் தவறாமல் இருக்க வேண்டிய தாதலால் –
அர்த்தத்தினுடைய பிரதிபாசமானத்வமே ஆலம்பன விஷயத்தில் அபேஷிக்கப் பட்டு இருக்கிறதன்றோ -தோற்றமோ எனில் தோஷ வசத்தால்
இருக்கவே இருக்கிறது -அது தத்வ ஜ்ஞானத்தால் பாதிக்கப் படும் காலத்தில் அசத்தியம் என்று நிச்சயிக்கப் படுகிறது
-அபாதிதையான புத்தியானது சத்யம் என்றே உரைக்கப் பட்டதன்றோ –

ச்வப்ன –தத்ர ஹி –தோஷாமேவ -நஹி –தர்ச நந்து –மாயாவி ந –விஷயேத்யாதி–வஸ்த்வீதி-ஏஷாம் -ஹச்த்ச்யாதீநாம் –
நை தத் அர்த்தச்ய –பிரதிபாசமா நத்வ மேவ ஹி ஆலம்ப நத்வே அபேஷிதம்–பிரதிபாச –தோஷவசாத் –சாது –அபாதிதா –

———————————————————————————————

மேலும் கோட்டினால் அஷர ஜ்ஞானம் வருகிற இடத்திலும் அசத்தியத்தினால் சத்ய புத்தி உண்டாகிறது இல்லை -ரேகையானது உண்மையாக இருப்பதால் –
ஐயா வர்ண ஸ்வரூபமாக அறியப் பட்டு இருக்கிற ரேகையானது வர்ண புத்திக்கு ஹேது வாக ஆகிறது -வர்ண ஸ்வரூபமாக இருக்கும் தன்மையோ என்னில் அசத்தியம் –இவ்வண்ணம் அல்ல அசாத்தியமாக இருக்கிற வர்ண ஸ்வரூபத்துக்கு உபாயத்வம் கூடாதலால் பிரமிதிக்கு அவிஷயமாக இருக்கிற
அசத்யத்துக்கு உபாயத்வம் ஆனது காணப் பட்டதும் இல்லை -பொருத்தம் உள்ளதும் அல்ல –அப்படிக்கின்றி -அதில் -ரேகையில் –
ஏறிடப் பட்டு இருக்கிற வர்ண புத்திக்கு உபாயத்வம் கூறப் படுமே யாகில் அப்பொழுது அசதியத்தினால் சத்ய புத்தி உண்டாகாது
ஏறிடப் பட்டு இருக்கிற புத்திக்கு சத்யத்வம் இருப்பதினாலேயே -உபாயம் உபேயம் இரண்டுக்கும் ஏகத்வமும் பிரசங்கிக்கும்
இரண்டுக்கும் வர்ண புத்தித்வம் விசேஷம் இன்றி இருப்பதால் -ரேகைக்கு அவித்யமானமான வர்ண ஸ்வரூபத்தால் உபாயத்வம் சொல்லும் பஷத்தில்
ஒரே ரேகையில் அவித்யமானமான சர்வ வர்ணாத் மகத்வம் ஸூ லபமாக இருப்பதால் ஒரு ரேகையின் தர்சனத்தினால் எல்லா வர்ணங்களின்
பிரதிபத்தியும் உண்டாகலாம் –அப்படிக்கின்றி பிண்ட விசேஷத்தில் தேவதத்தாதி சப்தங்களுக்கு சங்கேதம் ஏற்பட்டு இருப்பது போலே கண்ணால்
கிரஹிக்கத் தக்க வர்ண விசேஷ சங்கேச வசத்தால் ரேகா விசேஷம் வர்ண விசேஷ புத்திக்கு காரணம் என்று சொல்லப் படுமே யாகில் அப்பொழுது சத்யத்தினாலேயே சத்ய பிரதிபத்தி உண்டாகிறது –ரேகைக்கும் சங்கேதத்துக்கும் சத்யத்வம் இருப்பதால் சித்திரத்தில் வரையப் பட்டு இருக்கிற
ரேகா ரூபமான கவயத்தினால் கூட சத்யமான கவய மிருக புத்தி -பசு போன்ற மிருக புத்தி -உண்டாவதும் சாத்ருச்யத்தை காரணமாகக் கொண்டது -சாத்ருச்யமும் சத்தியமே –

ரேகயா–த நு –நைவம்–அனுபபன் நஞ்ச –அத -ஏவம் தர்ஹி – புத்தே –உபாய -உபயோ -ரேகாயா -அத –ரேகாயா –ரேகா கவயா தபி —

———————————————————————-

ஏக ரூபமான சப்தத்துக்கு நாத விசேஷத்தால் அர்த்த பேத புத்தி ஹேதுத்வம் கூறப் படும் பஷத்திலும் அசத்தியத்தினால் சத்ய பிரதிபத்தி உண்டாவது எனபது கிடையாது –
நாநாவித நாதங்களாலே பிரகாசிக்கின்ற ஒரே சப்தத்துக்கு அந்த அந்த நாதங்களால் அபிவ் யஞ்ஜனம்-ஸூ சனம் -செய்யத் தக்க ஸ்வரூபத்தால்
அர்த்த விசேஷங்களோடு கூட சம்பந்த காரணம் இருப்பதால் அர்த்த பேத விஷயகமான புத்தியின் உத்பத்திக்கு காரணத்வம் இருப்பதால்
சப்தத்துக்கு ஏக ரூபத்வமும் அவ்வளவு சிறந்தது அல்ல –ககாரம் முதலிய போதக வர்ணமே காதினால் கிரஹிக்கத் தக்கதாக இருப்பது பற்றி -சப்தமாகிற படியால் -ஆதலால் அசத்தியமான சாஸ்த்ரத்தினால் சத்ய ப்ரஹ்ம விஷய பிரதிபத்தியானது எவ்விதத்தாலும் உபபாதிக்க முடியாது

நசைக ரூபச்ய –நாநா நாத –ராமம் -ராமேண-ராமையா -ஹரயே-ஹரௌ-ஹரீன் –பாவம்
சப்தச்ய ஏகரூபத்வம் –

——————————————————————–

அய்யா சாஸ்த்ரமானது ஆகாயத் தாமரை மலர் போல் அசத்தியம் அல்ல -அத்வைத ஜ்ஞானம் உண்டாவதற்கு முன்பு சத் என்ற புத்தியினால்
அறியத் தக்கதாய் இருப்பதால் –தத்வ ஜ்ஞானம் உண்டானால் அன்றோ சாஸ்தரத்துக்கு அசத்யத்வம் -அப்போது சாஸ்த்ரமானது
–எல்லா பேதங்களும் நிரசிக்கப் பட்டு சின் மாத்ரமாய் இருக்கிற ப்ரஹ்ம ஜ்ஞானத்துக்கு உபாயம் அல்ல –
எப்பொழுது உபாயமோ அப்பொழுது சாஸ்திரம் உளதே -உண்டு என்கிற புத்தியினால் –
இவ்வண்ணம் அல்ல அசத்தான சாஸ்த்ரத்தில் -அஸ்தி சாஸ்திரம் -என்கிற புத்தியானது மித்யையாய் இருப்பதனால் அதனால் என்ன -அதனால் இது தான் –
மித்யா பூதமான சாஸ்த்ரத்தினால் உண்டாகிற ஜ்ஞானமும் மித்யை யானதால் அந்த ஜ்ஞானத்துக்கு விஷயமாய் இருக்கிற ப்ரஹ்மத்துக்கு
மித்யா பாவம் சித்திக்கிறது -எவ்வாறு புகை என்கிற புத்தியினால் கிரஹிக்கப் பட்டு இருக்கிற பனிப் புகையினால் உண்டாகிற வஹ்நிஜ்ஞானம்
மித்யை யானதால் அந்த ஜ்ஞானத்துக்கு விஷயமாய் இருக்கிற அஹ்நிக்கும் மித்யாத்வம் சித்திக்கிறதோ அவ்வாறு என்றபடி –
பிற்காலத்திய பாதத்தின் அதர்சனமும் சித்தியாது -சூன்யமே தத்வம் என்கிற சில பௌத்தர்களின் வாக்யத்தாலே அதற்கும் பாதம் காணப் படுவதால் –
அது பிராந்தி யடியாக வருகிறது என்று கூறப் படுமேயாகில் -இதுவும் -நிர்விசேஷ ப்ரஹ்மாதமைகத்வ ஜ்ஞானமும் -பிராந்தி மூலம் என்று உன்னாலேயே உரைக்கப் பட்டது -பிற்காலத்தில் உண்டாகிற ஜ்ஞானத்தினால் பாதம் காணப்படாமல் இருந்தாலோ என்னில் -சூன்யம் தத்வம் என்று சொல்லுகிற –அந்த ஜ்ஞானத்திற்கே என்று நிலை பெறாத குதர்க்கங்களைக் கொண்டு பரிஹசிப்பது போதும் –

ககநகு ஸூ மவத் –சத்புத்தி போத்யத்வாத் –உத்பன்னன் – ந ததா –யதா -பாசாத்ய -சூன்யம் – தத்து -யேததபி –பாச்சாத்ய –பிரபஞ்ச -சூன்யவாதி –
ஆதித்யோ யூப —

————————————————————————————–

வேதாந்த வாக்யங்கள் விசேஷங்கள் அற்றதும் ஜ்ஞானத்தையே ஸ்வ பாவமாக கொண்டதுமான வஸ்து ஒன்றையே ப்ரதிபாதிப்பதில் நோக்குள்ளவைகள் —
சதேவ சோம்யே தமக்ர ஆஸீத் –இது முதலியவைகள் என்று எது சொல்லப் பட்டதோ அது பொருத்தம் உள்ளது அல்ல —
ஒரு வஸ்துவை அறிவதனால் எல்லா வஸ்துக்களும் அறியப் படுகின்றன என்கிற பிரதிஜ்ஞ உபபாதனம் அடியாக சத் என்கிற சப்தத்துக்கு வாச்யமான
பர ப்ரஹ்மத்துக்கு ஜகத் உபா நத்வம் -ஜகன் நிமித்தத்வம் -சர்வஜ்ஞத்வம் -சர்வ சக்தியோகம் -சத்ய சங்கல்பத்வம் -சர்வாந்தரத்வம் —
சர்வாதரத்வம் -சர்வ நியந்த்ருத்வம் –இவை முதலிய அநேக கல்யாண குணங்களுடன் சேர்ந்து இருத்தலையும் உலகம் அனைத்துக்கும்
அந்த ப்ரஹ்மாத்மகத்வத்தையும் பிரதிபாதித்து இப்படிப்பட்ட ப்ரஹ்மாத்மகானாய் நீ இருக்கிறாய் என்று ச்வேதகேதுவைக் குறித்து உபதேசத்தின்
பொருட்டு பிரகரணம் பிரவ்ருத்தித்திருப்பதால் -இந்த அர்த்தம் வேதார்த்த சங்க்ரஹத்தில் விரித்து உரைக்கப் பட்டு இருக்கிறது
இந்த கிரந்தத்திலும் ஆரம்பணாதிகரணத்தில் நன்கு மிகத் தெளிவாக உபபாதிக்கப் படப் போகிறது –
அதபரா யயா-என்கிற சுருதியிலும் ப்ராதக்ருதங்களான ஹேய குணங்களை நிஷேதித்து பர ப்ரஹ்மதுக்கு நித்யத்வம் -விபூத்வம் -ஸூ ஷ்மத்வம்
-சர்வகதத்வம் -அவ்யயத்வம் -பூதயோ நித்வம் -சர்வஜ்ஞத்வம் முதலிய கல்யாண குணங்களின் சம்பந்தம் பிரதிபாதிக்கப் பட்டு இருக்கிறது –
சத்யம் ஜ்ஞானம் அநந்தம் ப்ரஹ்ம -என்கிற இடத்திலும் சாமா நாதி கரண்ய பதத்திற்கு அநேக விசேஷணங்கள் உடன் கூடின ஒரு அர்த்தத்தைக்
குறிப்பிட்டுச் சொல்லுதல் -என்கிற வ்யுத்புத்தியினால் நிர்விசேஷ வஸ்துவுக்கு சித்தி இல்லை -ஏன் எனில் -பிரவ்ருத்தி நிவ்ருத்திகளின் பேதத்தால்
பதங்களுக்கு ஒரு அர்த்தத்தில் வ்ருதித்வம் அல்லவோ சாமா நாதி கரண்யம் -அதில் சத்ய ஜ்ஞான முதலிய பதங்களுக்கு முக்ய அர்த்தங்களான குணங்களாலேயோ அந்த அந்த குணங்களுக்கு விரோதிகளான -ஆகாரங்களுக்கு ப்ரத்ய நீகாரங்களாலே யே ஒரு அர்த்தத்தில் பதங்கள் பிரவர்த்திக்கும் பொழுது அவைகளுக்கு நிமித்த பேதம் அவசியம் ஆச்ரயிக்கத் தக்கது -இவ்வளவு மாத்ரம் விசேஷம் –ஒரு பஷத்திலே பதங்களுக்கு முக்யார்த்தத்வம் -வேறு பஷத்திலோ அவைகளுக்கு லஷணை —அஜ்ஞானம் முதலியவைகளைக் காட்டிலும் வேறாய் இருத்தல் வஸ்துவின் ஸ்வரூபமே யல்ல -ஒரே பதத்தால் ஸ்வரூபமானது அறியப் பட்டு இருப்பது பற்றி -பதார்த்தங்களின் பிரயோகத்துக்கு வையர்த்த்யம் வருவதால் -அப்படி யாகில் சாமா நாதி கரண்யத்துக்கு அசித்தி வருகிறது –
ஒரு வஸ்துவில் வர்த்திக்கின்ற பதங்களுக்கு நிமித்த பேத ஆஸ்ரயணம் இல்லாமையால் -ஒரே அர்த்தத்துக்கு விசேஷண பேதத்தால் விசிஷ்டதா பேதம் வருவதால் பதங்களுக்கு அநேகார்த்தத்வமானது சாமா நாதி கரண்யா விரோதி யல்ல –
சாமா நாதி கரண்யமானது ஒரு வஸ்துவுக்கே அநேக விசேஷணங்கள் உடன் கூடி இருத்தலை பிரதிபாதிப்பதில் நோக்கு உள்ளதாகையாலே
பின்ன பிரவ்ருத்தி நிமித்தா நாம் சப்தா நாம் ஏகஸ்மின் அர்த்தே வ்ருத்திஸ் சாமா நாதி கரண்யம் -என்று அல்லவோ சாப்திகர்கள் கூறுகின்றனர்

யதுக்தம் -இத்யேவமாதீதி –ஏக விஜ்ஞான நே ந –வாசா ரம்பணம் –சதேவ சோமயே தமக்ரே –பிரபஞ்சித -அத்ராபி -அத பராயயா–ப்ராக்ருதான் —
சத்யம் ஜ்ஞானம் -சோதக வாக்யம் -கண்ட முண்ட பூர்ண ஸ்ருங்க கௌ–பிரவ்ருத்தி –தத்ர -இயான் -நசை கஸ்ய –பின்ன ப்ரவ்ருத்தி –

———————————————————————————-

ஏக மேவ அத்விதீயம் -என்கிற இடத்தில் -அத்விதீய பதமானது குணத்தினாலும் கூட இரண்டாவது வஸ்து உடன் கூடி இருத்தல் என்கிற தன்மையை சஹிக்கிறது இல்லை -ஆகையால் சர்வ சாகா பிரத்யய நியாயத்தால் காரண வாக்யங்களுக்கு அத்விதீய வஸ்துவை பிரதிபாதிப்பதில் நோக்கு
ஒப்புக் கொள்ளத் தக்கது -காரணமாக உப லஷிக்கப் பட்டு இருக்கிற அத்விதீயமான ப்ரஹ்மத்துக்கு சத்யம் ஜ்ஞானம் அநந்தம் -என்கிற இது
லஷணமாகக் கூறப் படுகிறது -ஆகையால் உப லஷணத்தாலே குறிப்பிட வேணும் என்று விரும்பப் பட்டு இருக்கிற ப்ரஹ்மமானது நிர்குணமே-
அங்கனம் இல்லாவிடில் நிர்குணம் நிரஞ்ஜனம் இது முதலிய வாக்யங்களுடன் விரோதம் வரும் என்று -யாதொன்று கூறப் பட்டதோ -அது பொருத்தம் உள்ளதாகாது -அத்விதீய பதமானது ஜகத் உபாதனமான ப்ரஹ்மத்துக்கு தன்னைக் காட்டிலும் வேறான வேறு அதிஷ்டாதாவை -நிவாரணம் செய்வதினால் விசித்திர சக்தி யோகத்தை பிரதிபாதிப்பதில் நோக்கம் உள்ளதாய் இருப்பதால் –அவ்வண்ணமே -ததை ஷத பஹூச்யாம் பிரஜாயேய தத் தேஜோ அஸ்ருஜத -இது முதலிய சுருதி வாக்யங்கள் விசித்திர சக்தி யோகத்தையே உணர்த்தி வைக்கின்றன –
விசேஷம் இன்றி அத்விதீயம் என்று சொல்லப் பட்டால் நிமித்தாந்தர மாதரத்துக்கு நிஷேதம் எவ்வண்ணம் அறியப் படுகிறது என்று கேட்க்கப் படுமே யானால்
உலகத்தை படைக்க எண்ணம் கொண்டு இருக்கிற ப்ரஹ்மத்துக்கு உபாதான காரணத்வம் ஆனது –சதேவ சோமயே தமக்ர ஆஸீத் ஏகமேவ -என்பதினாலேயே பிரதிபாதிக்கப் பட்டு இருக்கிறது –கார்ய உத்பத்தி ஸ்வ பாவத்தால் நிமித்தாந்தரம் புத்தியில் நிலை பெற்று இருப்பது பற்றி அந்த நிமித்தாந்தரமே அத்விதீய பதத்தினால் நிஷேதிக்கப் படுகின்றது என்று அறியப் படுகிறது –எல்லாவற்றையும் நிஷேதிக்கிறது என்று சொல்லில் தன்னால் ஒப்புக் கொள்ளப் பட்டு இருப்பவைகளும் சாதிக்க வேண்டும் என்று விரும்பப் பட்டவைக்களுமான –நித்யத்வம் முதலியவைகளும் நிஷித்தங்களாகும்
இவ்விடத்தில் சர்வ சாகா பிரத்யய நியாயமும் உனக்கு விபரீத பலத்தையே தரும்
எல்லா சாகைகளிலும் காரணத்தில் அன்வடித்து இருக்கிற சர்வஜ்ஞத்வம் முதலிய குணங்களுக்கு இங்கு உப சம்ஹார ஹேதுத்வம் இருப்பதால்
ஆதலால் காரண வாக்ய ஸ்வ பாவத்தாலும் -சத்யம் ஜ்ஞானம் அநந்தம் ப்ரஹ்ம -என்பதினால் ப்ரஹ்மம் ஆனது ச விசேஷம் என்றே
பிரதி பாதிக்கப் படுகின்றது என்று அறியப் படுகிறது –

யது உக்தம் –அத இதி –காரண தயா -உபலஷி தஸ்ய –அந்யதா -தத் அநு பபன்னம் –ஜகத் –ததைவ -விசித்திர சக்தி யோக மேவ –
-அவிசேஷேண–சிஸ்ருஷோ –சர்வசாகா -அத

—————————————————————————————-

கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஸ்ருதி பிரகாசர் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ போதாயனர் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ மணவாள முனிகள் வைபவம் —ஸ்ரீ பிரதிவாதி பயங்கர அண்ணா அருளிச் செய்த பாதாதி கேச மாலை -ஸ்ரீ மா முனிகள் விஷய ஸ்ரீ அமலனாதி பிரான் —

September 21, 2015

ஸ்ரீ ரெங்க நாச்சியார் -திருத்தாயார்
அழகு பொலிவு -திகழக் கிடந்தான் திரு நாவீறு உடைய பிரான் தாதர் அண்ணர் ஐயர் -திருத் தகப்பனார்
அழகிய மணவாளன் -சிக்கில் -கிடாரம் -தாய் மாமன் -க்ரஹத்தில் வாழ்ந்தாராம்
எம் ஐயன் இராமானுஜன் -திருக்குமாரர் –

எம் எம் பச்யதி எம் எம் ஸ்பர்சதி–அக்றிணை பொருள்களும் –
கிம் புன பாந்தவா ஜனகா -புளிய மரத்தை மோஷம் புக வைத்து அருளினார் –
பாகவதர் அபிமானத்தில் ஒதுங்கி மோஷம் பெறலாமே –
உடையவர் சரம காலத்தில் அருளிச் செய்த ஆறு வார்த்தைகளில் இறுதியானது –
அழகிய மணவாள நகர் -முத்தப்ப நகர் -பாண்டியன் சமர்ப்பித்த -நகர் –
அந்த பாண்டிய மன்னன் திரு மால் இரும் சோலை திருக்கோயில் புநர் நிர்மாணம் செய்தானாம் –
பட்டர் பிரான் ஜீயர் -கோவிந்த தாசர் -வடுக நம்பி பரம்பரை -என்பர் –

———————————————————————

போதச் சிவந்து பரிமளம் வீசிப் புதுக் கணித்த
சீதக் கமலத்தை நீரே ஏற ஓட்டிச் சிறந்து அடியேன்
ஏதத்தை மாற்று மணவாள யோகி இனிமை தரும்
பாதக் கமலங்கள் கண்டேன் எனக்குப் பயம் இல்லையே –1-

புதுக்கணித்த -அலங்கரித்த
செய்ய தாமரைத் தாளிணை வாழியே போல்

—-

வேழக் குருத்தின் அழகைப் பழித்து விரை மருவும்
வாழைப் பருவத்தின் ஆகாரம் கொண்டு வளம் புனைந்த
ஏழைக்கு இரங்கும் மணவாள யோகி இரு குறங்கைக்
கேழற்ற நெஞ்சில் வைப்பேற்கு ஒரு கோலமும் கேடில்லையே –2-

குறங்கு -தொடை
கேழற்ற-ஒப்பில்லாத

———–

தேனமர் மாலை மணவாள யோகி திரு மருங்கு
வீனமிலாத இளமையின் எழில் சகனம்
வானிலை உய்த்த துவராடை இன்று என் மனத்தை விட்டுத்
தான் அசலாமல் என்னை ஊழி காலமும் தாங்கியதே –3–

மருங்கு -இடை
சகனம்-தொடையின் உள் பாகம்
வான் -பெருமை
துவராடை -காவி யூட்டிய ஆடை

————

வந்திக்க வாழ்வித்து அருள் மணவாள முனி வடிவைச்
சிந்திக்கவும் அரிதாம் அழகாற்றில் திகழ் சுழி போல்
உந்திச் சுழி எனது உள்ளம் குறை கொண்டாயதென்றும்
சந்தித்தவர் கண்ணும் நெஞ்சும் கொள்ளா நிற்கும் தாம் இருந்தே –4–

சூறை- கொள்ளை

வலம் சுழித்து ஒழுகு நீர் வழங்கு நீர் கங்கையின்
பொலம் சுழி என்றலும் புன்மை பூவொடு
நிலம் சுழித்து எழு மணி யுந்தி நேர் இனி
இலஞ்சியும் போலும் வேறு உவமை யாண்டாரோ -கம்பர் —சுந்தர காண்டம் உருக்காட்டு படலம் -45-

———–

ஆறும் வணங்கு மணவாள மா முனி அம்புயமும்
காரும் சுரபியும் போலே வழங்கும் கைத் தாமரையில்
சேரும் திருத் தண்டும் சேவித்த மானிடர் தீ வினையால்
ஈரும் படிப் பிறவார் திரு நாட்டு இன்பம் எய்துவரே –5-

அம்புயம் -திருத்தோள்
கார் -மேகம்
சுரபி -காம தேனு
திருத்தண்டு -திருக்கையில் ஏந்தும் முக்கோல்
ஈரும் படி -அறும் படி

கையும் ஏந்திய முக்கோலும் வாழியே

————

தடம் கொண்ட கோயில் மணவாள மா முனி தாமரைத் தார்
வடம் கொண்ட மார்பினில் வண் புரி நூலும் எனது நெஞ்சில்
இடம் கொண்டு அடங்க எழுதி வைத்தேன் இனி வல் வினைகாள்
திடம் கொண்டு நீசர் தம் தேயத்தில் ஏசிடும் தீதறவே –6–

தார் –கிண்கிணி மாலை
வடம் -மணி வடம்
வண் புரி நூல் -முப்புரி நூல்
எழுதி வைத்தேன் -சுவர் வழி எழுதிக் கொண்டேன் -பெரியாழ்வார்

துய்ய மார்பும் புரி நூலும் வாழியே

————

மங்காது உலகை அருள் மணவாள மா முனி மருவார்
சிங்கார மாலைத் திருத் தோள்களும் அவற்றே திகழும்
சங்காழியும் தொழுது ஏத்தினேனால் தமியேனுடைய
பங்காளும் வல்வினை எங்கோ கணத்தினில் பாறியதுவே –7-

மங்காது -குறையாது
மருவார் -வாசனை நிரம்பிய
தமியேன் -கதி அற்றவன்

சுந்தரத் திருத் தோளிணை வாழியே

———–

பொழியும் தமிழ் புனையும் மணவாள முனி கருணை
பொழியும் திரு விழியும் மூக்கும் பொலி மறைகள்
செழி யன்பு கொண்டு உரைக்கும் திரு நாவும் திரு முகமும்
வழி யன்பு கொண்டு வழுத்தினேன் பேரின்பம் மற்று இல்லையே –8–

வழுத்தினேன் -தொழுதேன்

மாறன் திருவாய் மொழிப் பொருளை மா நிலத்தோர்
தேறும் படி உரைக்கும் சீர்

கருணை பொங்கிய கண்ணினை வாழியே

————

பொருநல் துறையில் அருளால் இருந்த நம் புங்கவர் கோன்
அருள் நல் தமிழ் உரை மா மணவாள வரு முனிவன்
திரு நெற்றியும் திரு நாமமும் நாலும் திருச் சிகையும்
வருணத்து எழிலும் மனத்துள்ளே நின்று வாழ்விக்குமே –9-

புங்கவர் கோன் –ஆச்சார்ய சிகா மணி
நாலும் திருச்சிகை -தாழ் முடி
வருணம் -நிறம்

————

வாழி செந்தாமரைத் தாள் துவராடை மருங்கு கொப்பூழ்
வாழி முந்நூலுறை மார்பு முக்கோல் அங்கை வாழி திண் தோள்
வாழி செவ்வாய் விழி வாழி பொன் நாம மருவு நுதல்
வாழி பொற் கோயில் மணவாள மா முனி வாழ் முடியே -10-

செய்ய தாமரை தாளிணை வாழியே
சேலை வாழி திரு நாபி வாழியே
துய்ய மார்பும் புரி நூலும் வாழியே
சுந்தரத் திருத் தோளிணை வாழியே
கையும் ஏந்திய முக்கோலும் வாழியே
கருணை பொங்கிய கண்ணினை வாழியே
பொய்யிலாத மணவாள மா முனி
புந்தி வாழி புகழ் வாழி வாழியே –
ஸ்ரீ பிரதிவாதி பயங்கர அண்ணா ஸ்வாமிகள் அருளிச் செய்த சாத்து முறைப் பாசுரத்துடன் ஒப்பு நோக்குக

————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிரதிவாதி பயங்கர அண்ணா ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ கோயில் கந்தாடை அண்ணன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் ..

ஸ்ரீ பாஷ்யம்– 1-1-1– மஹா சித்தாந்தம் -முதல் பாகம் — -ஸ்ருத பிரகாசிக சுருக்கம் –

September 19, 2015

கீழே கூறப் பட்ட இவ்விஷயம்
உப நிஷத்துக்களால் பிரதி பாதிக்கப் பட்டு இருக்கிற பரம புருஷனால்
வரிக்கத் தக்க தன்மைக்கு ஹேதுவான குண விசேஷங்கள் இல்லாதவர்களாயும்
அநாதியான பாப வாசனையினால் கெடுக்கப் பட்ட முழு அறிவுடையவர்களாயும்
பத வாக்யங்கள் உடைய ஸ்வரூபத்தையும்
அவைகளால் உணர்த்தப் பட்ட அர்த்தங்களின் உண்மையையும்
பிரத்யஷம் முதலான சகல பிரமாணங்களின் போதன ஸ்வரூபத்தையும்
அவைகளுக்கு அங்கங்களான சிறந்த நியாய மார்க்கங்களையும்
அறியாதவர்க்களுமான சில துர்வாதிகள் உடைய விகல்பத்தை
சஹியாததும் சாரம் அற்றதாக இருப்பதுமான பற்பல குதர்கங்களால் கல்பிதம் என்று
நியாயங்களால் உதவி புரியப் பட்டு இருக்கிற பிரத்யஷம் முதலிய எல்லா
பிரமாணங்கள் உடைய போதன க்ரமத்தையும்
உண்மையையும் அறிந்தவர்களால் ஆதரிக்கத் தக்கது அல்ல –

—————————————————————————————-

வரணீயதா ஹேது குண விசேஷ விரஹிணீம் -என்பதனால்
யமைவேஷ வ்ருணுதே தேன லப்ய -இஷ்டமான உபாய விசேஷம் கூறுதல் பலித்தது
ஜாயமானம் ஹி புருஷம் யம் பச்யேன் மது சூதன
சாத்விகஸ் சது விஜஞ்ஞேயசசவை மோஷார்த்த சிந்தக
பச்யத்யேனம் ஜாயமானம் ப்ரஹ்மா ருத்ரோ தவா புன
ரஜசா தமஸா சாஸ்யமாநஸம் சமபிப்லுதம் –
இத்தால் தத்தவார்த்த ஜ்ஞானம் பகவத் கடாஷத்தை அபேஷித்து இருக்கும் -என்று அறியப் படுகிறது –
த்வமபிஜானாசி பக்த்யா வேதமி –
பக்தி ரூபையான விதியை மோஷத்துக்கு சாதனம்
பக்தி சாஸ்திர ஜ்ஞானத்தை மூலமாகக் கொண்டது –
சாஸ்திர ஞானம் பக்தியை மூலமாக கொண்டது –
அன்யோன் யாச்ரயம் -வருமோ என்னில் அவ்வண்ணம் அல்ல
சரவணம் -பரமாத்மாவின் குணாதிகள் அறியப் படும் அளவில்
அனுகூல புத்தியை-வித்யா சப்தமும் -பக்தி சப்தமும் சொல்லும் –
அந்த அனுகூல புத்தியால் வாக்யார்த்தம் நன்கு புலப்படும்
பகவத் குணங்கள் சித்தத்துக்கு முதலில் அனுராகம் உண்டாக்குகிறது
இது சாஷாத்கார துல்யமான நிரந்தர த்யான ரூபையான பக்தி இல்லை
இதனால் அந்யோந்ய ஆஸ்ரயம் இல்லை –
சேமுஷீ -மோஷத்துக்கு உபயோகமான ஜ்ஞானம்

அர்த்தாபத்தி
பிரத்யஷம் முதலிய எட்டு பிரமாணங்களில் ஓன்று இது
அர்த்தத்தின் ஆப தாதி அர்த்தாபத்தி –
பீனோ தேவததத திவா ந புங்க்தே -தேவதத்தன் பருத்து இருக்கிறான் -பகலில் சாப்பிடுகிறது இல்லை –
அர்த்தாபத்தி பிரமாணத்தால் ராத்திரி போஜனம் சித்திக்கிறது –
அசேஷ விசேஷ பிரத்யநீக–சர்வே வேதாந்த ஆரப்யந்தே —

———————————————————————————————–

இந்த அர்த்தம் நிரூபிக்கப் படுகிறது –
நிர்விசேஷ வஸ்துவாதிகளால்-நிர்விசேஷ வஸ்து விஷயத்தில் -இது பிரமாணம் என்று
ஒன்றும் சொல்வதற்கு சக்யம் ஆகாது -எல்லா பிரமாணங்களும் விசேஷம் உள்ள வஸ்துக்களை விஷயீ கரிப்பதால் –
தன அனுபவத்தினால் சித்தம் என்று தன்னுடைய கோஷ்டியில் நிலை பெற்று இருக்கிற யாதொரு சங்கேதம் உண்டோ
அதுவும் ஆத்மா சாஷிகமான சவிசேஷ அனுபவத்தினாலேயே நிராகரிக்கப் பட்டது –
எல்லா அனுபவங்களும் –நான் இதைக் கண்டேன் -என்று யாதானும் ஒரு விசேஷத்தாலே விசிஷ்ட விஷயம்
உள்ளவைகளாகவே இருப்பதால்
அனுபவிக்கப் படுகிற அனுபவம் ஆனது சவிசேஷமாக இருந்த போதிலும்
ஏதோ ஒரு உக்தி ஆபாசத்தால் நிர்விசேஷம் என்று நிஷ்கர்ஷிக்கப் பட வேண்டுமாகில்
சத்தையை விட வேறாக இருப்பதும் தனக்கு அசாதாரனங்களாகவும் இருக்கிற ஸ்வபாவ விசெஷங்களால்
அது சவிசெஷமாகவே நிலை பெறுகிறது
ஆகையால் சில விசெஷங்களோடு கூடின தாகவே இருக்கிற வஸ்துவுக்கு
மற்ற விசேஷங்கள் நிரசிக்கப் படுகின்றன என்பதால்
ஓர் இடத்திலும் நிர்விசேஷ வஸ்து சித்தி பெறாது –

———————————————————————————————–

ஜ்ஞானதுக்கு விஷயங்களை பிரகாசப் படுத்தும் தன்மையும்
மற்று ஒன்றினால் பிரகாசிக்கப் படாமல் தனக்குத் தானே
பிரகாசிக்கும் தன்மையும் இயற்கையாகவே இருக்கிறது-ஏன் என்னில் –
அது தனக்கு ஆஸ்ரயமாக இருக்கும் ஆத்மாவுக்கு விஷயங்களை பிரகாசப் படுத்தும் ஸ்வபாவம் உள்ள தாகவே அறியப் படுவதால் –
நித்திரை மதம் மூர்ச்சைகளிலும் அனுபவம் சவிசெஷம் என்றே
அதை நிரூபிக்கும் தருணத்தில்
மிக்கத் தெளிவாக உபபாதிக்கப் போகிறோம்
தங்களால் ஒத்துக் கொள்ளப் பட்ட நித்யத்வம் முதலிய அநேக விசேஷங்கள் நிச்சயமாக இருக்கின்றன –
அவைகளும் வஸ்து மாதரம் என்று உபபாதிப்பதர்கு சாத்தியப் படாது
வஸ்து மாதரம் என்று ஒத்துக் கொண்டாலும் கூட அதன் பிரகார பதத்திலே விவாதம் காணப் படுவதாலும்
தனக்கு அபிமதமான அந்த பிரகார பேதங்களால் தன மதத்தை உபபாதனம் செய்ய வேண்டியதாக இருப்பதாலும்
ஆதலால் பிரமாணிகங்களான விசெஷங்களால் வஸ்து விசிஷ்டம் என்றே சொல்லத் தக்கது –

———————————————————————————————-

சப்ததிற்கோ என்றால் -விசேஷித்து சவிசேஷமான வஸ்துவின் இடத்திலேயே அபிதான சாமர்த்தியம்
பத வாக்ய ரூபமாக ப்ரவ்ருத்திப்பதால் பிரகிருதி பிரத்யய சம்பந்தத்தால் அன்றோ பதத்வம் சித்தி பெறுகிறது –
பிரகிருதி பிரத்யயம் இரண்டுக்கும் அர்த்தங்களின் வேற்றுமையினால் பதத்திற்கே விசிஷ்டார்த பிரதிபாதனம் விடத் தக்கது அன்று
பத பேதமும் அர்த்த பேதத்தைக் காரணமாகக் கொண்டது –
பத சங்காத ரூபமான வாக்யத்துக்கு அநேக பதார்த்த சம்சர்க்க விசேஷத்தை சொல்லுகிற
ஸ்வபாவம் இருப்பதால் நிர்விசேஷ வஸ்து பிரதிபாதனத்தில்
சாமர்த்தியம் இல்லாமையால்
நிர்விசேஷ வஸ்துவில் சப்தம் பிரமாணம் ஆகா –

———————————————————————————————–

அதிகரணத்தின் லஷணம்
விஷயோ விசயஸ் சைவ பூர்வ பஷ ஸ்ததோத்ரம் நிர்ணயசேதி
பஞ்சாங்கம் ப்ராஞ்ச அதிகரணம் விது –
பிரதிபாதிக்கத் தக்க விஷயம் –சம்சயம் –பூர்வ பஷம் –நிரசன மறுமொழி -சித்தாந்தம் –
பஹூ வ்ரீஹி சமாசம் -பீதாம்பர -பீதாம்பர ஆடை உடுத்தியவன்
-தத் புருஷ சமாசம் -பூர்வ காய -சரீரத்தின் முந்தின பாகம்

———————————————————————————————-

நிர்விகல்பம் -சவிகல்பம் -என்று வேறு பட்டு இருக்கிற பிரத்யஷதிற்கு நிர்விசேஷ வஸ்து விஷயத்தில் பிராமணியம் இல்லை –
சவிகல்பம் ஆனது ஜாதி முதலிய அநேக பதார்த்தங்கள் உடன் கூடிய வஸ்துக்களை விஷயீகரிப்பதினாலேயே
சவிசேஷ விஷயம் நிர்விகல்பமும் சவிசேஷ விஷயமும் தான்
சவிகல்பத்தில் தன்னிடத்தில் அனுபவவிக்கப் பட்டு இருக்கிற பதார்த்த விசிஷ்ட பிரதி சந்தானத்திற்கு ஹேதுவாக இருப்பதால்
நிர்விகல்பமாவது யாதோ சில விசேஷத்தால் விடுபட்டு இருக்கிற வஸ்து விஷயமான ஜ்ஞானம் –
சர்வ விசேஷங்களாலும் விடு பட்டு இருக்கிற வஸ்துவின் கிரஹணம் எனபது அல்ல –
அப்படிப் பட்ட வஸ்துவுக்கு ஒரு பொழுதும் கிரஹணம் காணப் படாததாலும்
அனுபபத்தி இருப்பதனாலும் எல்லா பிரதீதியும் ஏதோ ஒரு விசேஷத்தொடெ -இதம் இத்தம் -என்று அல்லவோ உண்டாகிறது
முக்கோண வடிவும் கழுத்தின் கீழாக தொங்கும் கம்பளம் போன்ற சதை முதலிய
அவயவங்களின் சமஸ்தான விசேஷம் இல்லாமல்
ஒரு பதார்த்ததுக்கும் க்ரஹனம் வாராதலால்
ஆகையால் நிர்விகல்பம் ஆவது ஏக ஜாதீய த்ரவ்யங்களில்
முதலாவாதான பிண்டத்தின் கிரஹணம்
இரண்டாவது தொடக்கமான பிண்டங்களின் கிரஹணம் ஆனது சவிகல்பம் என்று கூறப் படுகிறது

————————————————————————————————–

இனி -பிரத்யஷஸ்ய –நிர்விகல்பம் அபி –ச விகல்பக —
கோ -வ்யக்தியைப் பார்த்து –கோ என்ற ஞானம் உண்டாவது நிர்விகல்பகம் –இந்த ஞானத்தில் கோத்வ ஜாதி –
-கோ ரூபமான வ்யக்தி -இரண்டுக்கும் உள்ள பிரிக்க முடியாத சம்பந்தம் -இந்த மூன்றும் விஷயங்கள் –
நிர்விகல்பம் நாம -என்று எல்லா விசேஷங்களாலும் விடு பட்டு இருத்தலின்மையை உபபாதிக்கிறார் -ததா பூதஸ்ய -என்று
விகல்பித்து தர்சனம் சகல விசேஷ சூன்ய க்ரஹனத்துக்கு ஹேது வல்ல -என்று கதாசிதபி -என்று
கல்ப நத்தை நிரசிக்கிறார் -அனுப பத்தே -என்று
அனுப பத்தி என்றது நிர் விசேஷ ஜ்ஞானத்துக்கு பாதகமாகவே காணப் படுகிறது
அனுபபத்தியை விவரிக்கிறார் கிருகண யோகாத் என்று
முதலாவதான இந்த்ரிய சந்நிஹர்ஷத்தால் உண்டான -இந்த்ரிய விஷய சம்பந்த ஞானம் -ச விசேஷ விஷயம் உள்ளது
-ஜ்ஞானம் நிர்விகல்பிகம் எனபது சித்தம் -இதனால் நிர்விகல்பக சப்தத்துக்கு வருத்தி சங்கோசம் பலித்தது
இந்த சங்கோசம் எந்த விஷயத்தில் என்றால் சொல்லுகிறார் -அத -என்று –
சொல்லப்பட்ட அதற்சனம் அனுபபத்தி இவ்விரண்டுகளால் என்று அர்த்தம்
அங்கு முதலாவதான பிண்ட க்ரஹணத்தாலே கோத்வம் முதலியவைகள் அனுவ்ருத்தமான ஆகாரங்கள் உள்ளவைகளாக அறியப் படுகின்றன இல்லை –
இரண்டாவது தொடக்கமான பிண்ட க்ரஹணங்க ளிலேயே அனுவ்ருத்தி ப்ரதீதி உண்டாகிறது
முதலாவதான ப்ரதீதியாலே அனுசந்திக்கப் பட்ட கோ முதலிய வஸ்துக்களின் அவயவ சமஸ்தான ரூபமான கோத்வம் முதலியவற்றுக்கு
அனுவ்ருத்தி தர்ம விசிஷ்டத்வமானது இரண்டாவது தொடக்கமான பிண்ட க்ரஹணத்தாலே நிச்சயிக்கத் தக்கது என்பதனால்
இரண்டாவது தொடக்கமான பிண்ட க்ரஹணம் சவிகல்பகம்
வஸ்து இவ்வண்ணம் உள்ளது என்றே க்ரஹிக்கப் படுகிறது
ஆகையால் பிரத்யஷத்துக்கு ஒரு பொழுதும் நிர்விசேஷ விஷயத்வம் இல்லை
இத்தையே -தத்ர பிரதம ப்ரதீதி –நபுனஸ் சம்ஸ்தா நா க்ரஹணாத்- சமஸ்தான ரூப ஜாத்யாதே ரபி -ஐன்த்ரிய கதவா விசேஷாத்
–சம்ஸ்தா நே ந –பூமி -கந்தம் போலே பிரிக்க முடியாதது
பிரகார பிரகாரி பாவத்தால் க்ரஹணத்துக்கு உபபத்தி இருப்பதால்
தண்டம் குண்டலம் -விசேஷண விசேஷ்யங்கள் இரண்டுக்கும் தனித் தனியே க்ரஹணம் காணப் படுவதால்
அத த்வீத்யாதி -என்கிறார் -இரண்டு விதமான பிரத்யஷத்துக்கும் ச விசேஷ விஷயத்வத்தை நிகமனம் செய்கின்றார் -அத -என்று
அதனாலே எல்லா இடத்திலும் பின்னாபின்னத்வமும் நிரசிக்கப் பட்டது -இதம் இத்தம் என்கிற ப்ரதீதியில் இதம் இத்தம் பாவம்
இரண்டுக்கும் ஐக்கியம் எவ்வாறு அறிவதற்கு சகயம் ஆகும்
இத்தம் பாவம் -சாஸ் நாதி சமஸ்தான விசேஷம் -அதற்கு விசேஷ த்ரவ்யம் இதம் அம்சம் என்பதனால் இவ்விரண்டுக்கும் ஐக்கியம்
ப்ரதீதியினால் பாதிக்கப் பட்டதே
இதை உபபாதிக்கிறார் -முதலிலே வஸ்து ப்ரதீதி விஷயமாகும் தருணத்தில் சகலமான இதர வஸ்துக்களைக் காட்டிலும்
பேதம் உள்ளதாகவே அறியப் படுகிறது
வ்யாவ்ருத்தியும் கோத்வாதி சமஸ்தான விசேஷத்தொடு கூடியதாக -இவ்வண்ணம் -என்று ப்ரதீதி வருவதால் -நிச்சயிக்கப் படுகிறது
விசேஷண விசேஷ்ய பாவ ப்ரதீதியில் இரண்டுக்கும் அத்யந்த பேதம் மிக ஸ்பஷ்டம் -தண்டம் குண்டலம் –
தனித் தனியே சமஸ்தானங்கள் உடன் கூடி இருந்தும் தன்னிடம் பர்வசானம் உள்ளவைகள்
ஒரு சமயத்தில் ஒரு இடத்தில் வேறு த்ரவ்யங்களுக்கு விசேணங்களாக இருக்கும்
தண்டாதிகள் கோத்வாதிகள்–நைகஸ் மின்ன சம்பவாத்
அத ஏவ இதம் இத்தமிவ –
ஜாதி வ்யக்தி -ஒரே சப்தத்தால் இரண்டையும் சேர்த்தே அறிதல் –சாமா நாதி கரண பதங்களின் பிரயோகம் -சஹோபலம்ப நியமம் –
பேத அபேத சாதகங்கள் -சாமா நாதி கரண பதங்களின் பிரயோகம் -சஹோபலம்ப நியமம் –இவை இரண்டும்
ஜாதி வ்யக்தி -இவை இரண்டும் அபேத சாதகங்கள்
ததாஹி -பிரதமம் -சகல இதர வ்யாவ்ருத்தி -இத்தம் அர்த்தம்
சர்வத்ர விசேஷண விசேஷ்ய பர்வேதி
தத்ர உபயத்ர –ப்ரதீதி பிரகாரோஹி –ததே தத்
ஆகையால் பிரத்யஷம் ச விசேஷ விஷயம் உள்ளதாதலால் அனுமானமும் பிரத்யஷம் முதலியவற்றால் காணப் படுகிற
சம்பந்தத்தோடு கூடின விஷயம் உள்ளதாக இருப்பதால் ச விசேஷ விஷயம் உள்ளதே
ஒரு பிரமாணத்தாலும் நிர்விசேஷ வஸ்து சித்தியாது
வஸ்துவினுடைய ஸ்வ பாவ விசேஷங்களால் அதே வஸ்து நிர்விசேஷம் என்று சொல்பவன் தனது தாயார் மலடி என்கிற
சொல் விரோதத்தையும் அறிந்தவன் இல்லையே -இத்தையே -அத பிரமாண சங்க்யா வஸ்து கத -என்கிறார் –

————————————————————————-

பிரத்யஷம் சன்மாத்ரத்தை க்ரஹிக்கிற ஸ்வபாவம் உள்ளதாக இருப்பதால் பேதத்தை விஷயீ கரிக்கிறது இல்லை -பேதமும்
விகல்பத்தை சஹியாமல் இருப்பதால் -எவ்விதத்தாலும் நிரூபிக்க முடியாதது என்று எது உரைக்கப் பட்டதோ அதுவும் –
ஜாதி முதலியவைகளோடு கூடின தாகவே இருக்கிற வஸ்துவானது
பிரத்யஷ விஷயமாக ஆவதால் ஜாதி முதலியதே பிரதியோகியை அபேஷித்துக் கொண்டு வஸ்துவுக்கும் தனக்கும்
பேத வ்யவஹார ஹேதுவாக இருப்பதால் தூரத்தில் ஓட்டப் பட்டது
சம்வேதனம் போலவும் -ரூபம் முதலியது போலவும் தன்னை ஒழிய வேறு வஸ்துவினிடத்தில் வ்யவஹார விசேஷத்துக்கு
ஹேதுவாக இருக்கிற ஒரு வஸ்துவுக்கு -தன்னிடத்திலும் அப்படிப்பட்ட வ்யவஹார ஹேதுத்வம் உண்டு எனபது உங்களாலும்
ஒப்புக் கொள்ளப் பட்டு இருக்கிறது -அது பேதத்துக்கும் நிச்சயமாக சம்பவிக்கிறது -அதனாலே தான் அநவச்தையாவது
அந்யோந்ய ஆஸ்ரயமாவது இல்லை-பிரத்யஷ ஜ்ஞானம் ஒரு ஷணம் இருக்கிறதாக இருந்த போதிலும் -அதே ஷணத்தில்
வஸ்து பேத ரூபமான அதன் சமஸ்தான ஸ்வரூபமான கோத்வாதிகள் க்ரஹிக்கப் படுவதால் வேறு ஷணத்தில் கிரஹிக்கத்
தக்கது ஒன்றும் இங்கு இல்லை –

யத்து -முதலிய இரண்டு கிரந்தங்களால்-பிரமாண பிரமேய அனுபபத்திகள் அனுவதிக்கப் படுகின்றன —
தத் அபீதி -ஜாத்யா இதரே வேதி –தூரோத் சாரீதம் –சாமவேதநவத் -ரூபாதிவச்ச -அத ஏவ ஏக ஷண வர்த்தித்வேபி –
அவித்யைக் காட்டிலும் ப்ரஹ்மத்துக்கு பேதம் இருக்கிறதா இல்லையா -இல்லையாகில் ப்ரஹ்மத்துக்கு ஜடத்வம் முதலியது பிரசங்கிக்கும் –
இருக்கிரதானால் அந்த பேதம் ஸ்வரூபமா தர்மமா என்கிற விகல்பத்தில் தூஷண பரிஹார சாம்யம் காணத் தக்கது –
மேலும் ஸ்வரூப தர்ம விகல்ப தூஷண பரிஹாரங்கள் அபேதத்திலும் துல்யங்கள் –
அபேதமானது ஸ்வரூபம் ஆகில் பிரதியோகியை அபேஷியாத அபேத வ்யவஹாரம் பிரசங்கிக்கும் –
பரமாத்மா நா பவத்யபேதீ கடத்வம் சே கடாகாசோ ந்பின்னோ நபசாயதா -பரமாத்மாவோடு பேதம் இல்லாதவனாகிறான்
குடம் உடைந்து போனால் குடத்தில் இருந்த ஆகாயமானது -ஆகாயத்தோடு எவ்வாறு அபின்னமாகிறதோ -அது போலே
இது முதலிய இடங்களில் அபேதமானது பிரதியோகியுடன் கூடியது என்று அல்லவோ தீர்மானிக்கப் படுகிறது
ப்ரஹ்ம அத்விதீயம் இது முதலிய பதங்கள் பர்யாயங்களாக ஆக வேண்டியதாகும்
தர்மம் என்று கூறப் படுமே யாகில் ச விசேஷத்வம் ஏற்படும்-ஆதலால் அபசித்தாந்தம் –

——–

மேலும் பிரத்யஷம் சத் ஒன்றையே கிரஹிக்கிறது என்று சொல்லில் -குடம் இருக்கிறது -வஸ்த்ரம் இருக்கிறது -என்கிற விசிஷ்ட
விஷயமான ப்ரதீதியானது விரோதிக்கிறது -சத் ஒன்றைத் தவிர வேறான வஸ்துவின் சமஸ்தான ரூப ஜாத்யாதி ஸ்வரூபமான
பேதமானது ப்ரத்யஷத்தால் கிரஹிக்கப் படாமல் போமேயாகில் குதிரையில் விருப்பம் உள்ளவன் ஏன் எருமைக் கடாவைக் கண்டவுடன் விலகுகிறான் –
எல்லா ஜ்ஞானங்களிலும் சத் ஒன்றே விஷயம் என்று கூறப் படுமே யாகில் -அந்த அந்த பிரதிபத்தியானது -விஷயங்களோடு சேர்ந்து
கூடி இருக்கின்ற எல்லா சப்தங்களும் ஒவ்வொரு பிரதிபத்தியிலும் ஏன் நினைக்கப் படுகிறது இல்லை –
மேலும் குதிரையையும் யானையையும் விஷயீ கருத்துக் கொண்டு இருக்கிற இரண்டு ஞானங்களிலும் விஷயம் ஒன்றாகப் போனபடியால்
மேல் வருகிற ஜ்ஞானமானது ஏற்கனவே க்ரஹித்தத்தையே கிரஹிப்பதாக இருப்பதாலும் -விசேஷம் இல்லாமையாலும் ஸ்ம்ருதியில்
வேறுபாடு உண்டாகாது -சம்வேதனம் தோறும் விசேஷம் ஒப்புக் கொள்ளப் படுமே யாகில் பிரத்யஷத்துக்கு விசிஷ்டார்த்த விஷயத்வமே
ஒப்புக் கொள்ளப் பட்டதாக ஆகிறது -எல்லா சம்வேதனங்களுக்கும் விஷயம் ஒன்றே -என்று கூறப் படுமே யாகில் ஒரு
சம்வேதத்தினாலேயே எல்லாம் கிரஹிக்கப் படுவதால் -குருடன் செவிடன் முதலிய வ்யவஹார பேதங்கள் இல்லாமல் போக வேண்டி வரும்
அதற்கு ரூபத்தையும் ரூபம் உள்ள வஸ்துக்களையும் ரூபத்துடன் கூட ஒரு வஸ்துவினிடம் பிரிக்க முடியாத சம்பந்தத்தால் நிலை பெற்று இருக்கிற பதார்த்தங்களையும் கிரஹிக்கும் தன்மை இருப்பதால் -தவக் இந்த்ரியத்தாலும் சத் க்ரஹிக்கப் படுகிறது இல்லை -அது ச்பர்சமுள்ள வஸ்துக்களை விஷயமாகக் கொண்டு இருப்பதால் ச்ரோத்ரம் முதலிய இந்த்ரியங்களும் சன்மாத்ரத்தை விஷயீ கரிக்கிறது இல்லை
பின்னை சப்தம் ரசம் கந்தம் என்கிற விசேஷ விஷயங்கள் உள்ளவைகளே -ஆகையால் சத் ஒன்றை மாதரம் கிரஹிக்கிற பிரமாணம் இங்கு ஒன்றும் காணப்படுவது இல்லை -நிர்விசேஷமான சன்மாத்ரத்துக்கு பிரத்யஷத்தினாலேயே க்ரஹணம் வருமேயாகில் அந்த சன்மாத்ரத்தை விஷயமாகக் கொண்ட
சாஸ்த்ரமானது பிராப்த விஷயம் ஆதலால் அனுவாதமாகவே ஆகும் -சன்மாத்ர ப்ரஹ்மத்துக்கு ப்ரமேயத்வமும் வந்து விடும்
ஆகையால் ப்ரஹ்மத்துக்கு ஜடத்வம் நாசம் முதலியவைகள் சம்பவிக்கும் என்று உன்னாலேயே உரைக்கப் பட்டு இருக்கின்றன
ஸ்ம்ருதி வை லஷண்யம் நச்யாதிதி–பிரதிசம்வேதமிதி –ரூபைகார்த்த சம்வேதேதி -அத நிர்விசேஷ சன்மாத்ர ப்ரஹ்மண -தத

ஆகையால் பிரத்யஷம் ஆனது வஸ்துக்களின் சமஸ்தான ரூபமான ஜாத்யாதி ஸ்வரூப பேதங்களோடு கூடிய வஸ்துக்களையே விஷயீ கரிக்கிறது –
சம்ஸ்தானத்தைக் காட்டிலும் வேறாய் அநேகங்களிலே ஏக ஆகார புத்தியினால் அறியத் தக்க வஸ்து காணப் படாமையாலும்
அவ்வளவினாலேயே கோத்வாதி ஜாதி வ்யவஹாரம் பொருத்தமுள்ளதாக ஆவதாலும் இவை வேறே என்கிற வாதத்திலும் கூட
சமஸ்தானம் எல்லாராலும் நன்கு அறியப் பட்டு இருப்பதாலும் சம்ஸ்தானமே ஜாதி -சமஸ்தானம் ஆவது வ்யக்தியின் ஸ்வ அசாதாரண ரூபம் –
வஸ்துவுக்குத் தக்கபடி சமஸ்தானம் அனுசந்திக்கத் தக்கது –ஜாதி க்ரஹணத்தினாலேயே -பின்ன -என்கிற வ்யவஹாரம் சம்பவிப்பதாலும்
வேறு பதார்த்தம் காணப் படாமையாலும் அர்த்தாந்தரத்தைச் சொல்லுகிற வாதியினாலும் ஒப்புக் கொள்ளப் பட்டு இருப்பதானாலும்
-கோத்வம் முதலியவைகளே பேதம் –
ஜாதி ரூபம் சமஸ்தானம் -நிறம் -காடின்யம் மார்த்வம் –எண்ணிக்கை -பரிமாணம் –
ஜாதி க்ரஹணே நைவ பின்ன இதி வ்யவஹார சம்பவாத் –பதார்த்தாந்தரா தர்சநாத் -அர்த்தாந்தர —
ஜாதி முதலியவைகளே பேதமாகில் -அவைகள் கிரஹிக்கப் பட்டால் -அந்த ஜாதி வ்யவஹாரம் போலே பேத வ்யவஹாரமும் வர வேண்டும் -சத்தியமே
கோத்வம் முதலியத்தின் வ்யவஹாரத்தால் பேதமும் வ்யவகரிக்கவே படுகிறது -கோத்வம் முதலியதே அன்றோ சகல இதர வஸ்து வ்யாவ்ருத்தி –
-கோத்வம் முதலியது கிரஹிக்கப் பட்டால் சகல இதர சஜாதீய புத்தி வ்யவஹாரம் இரண்டும் நிவ்ருத்தி அடைவதால்
பேத கிரஹணத்தாலே யன்றோ அபேத நிவ்ருத்தி வருகிறது -இது இதைக் காட்டிலும் வேறு பட்டது -பின்ன -என்கிற வ்யவஹாரத்திலோ என்றால் பிரதியோகியின் நிர்தேசமானது அந்த வேத வ்யவஹாரத்தை ஆபேஷித்து இருப்பதால் பிரதியோகியின் அபேஷையினால்-பின்ன
என்கிற வ்யவஹாரம் சொல்லப் பட்டது -பிரமாண பிரமேய அனுபபத்திகள் பரிஹரிக்கப் பட்டன –

———————

கடம் முதலிய விசேஷங்கள் வ்யாவர்தமானங்கள் ஆதலால் மீளவும் அவைகளுக்கு அபாரமார்த்யம் சொல்லப் பட்டது எனபது யாது ஓன்று உண்டோ
அது பாத்ய பாவக பாவத்தையும் -வ்யாவ்ருத்தி அனுவ்ருத்தி விசேஷங்களையும் ஆலோசியாதவனுடைய பிராந்தி ஜ்ஞானத்தால் கல்ப்பிக்கப் பட்டுள்ளது

அனுமானத்தை அனுவாதம் செய்து தூஷிக்கிறார் -யத்புன -இத்யாதியால்

இரண்டு ஜ்ஞானங்களுக்கும் விரோதம் வந்தால் அன்றோ பாத்ய பாதக பாவம் பாதிக்கப் பட்டது ஏதோ அதற்கே வ்யாவ்ருத்தி –
இந்த இடத்தில் கடபடாதிகளில் தேச பேதத்தாலும் கால பேதத்தாலும் விரோதம் இல்லை
எந்த இடத்தில் எந்த காலத்தில் எந்த வஸ்துவின் இருப்பு அறியப் பட்டு இருக்கிறதோ அந்த இடத்தில் அந்த காலத்தில் அந்த வஸ்துவின் இன்மை
அறியப் படுமே யாகில் அங்கு விரோதம் ஏற்படுவதால் பலம் உள்ளதற்கு பாதகத்வமும் பாதிக்கப் பட்டதற்கு நிவ்ருத்தியும் வருகிறது –
வேறு இடத்திலும் வேறு காலத்திலும் சம்பந்தித்ததாக அனுபவிக்கப் பட்டு இருக்கிற வஸ்துவுக்கு
அதைக் காட்டிலும் வேறான இடத்திலும் காலத்திலும் அதன் இன்மை அறியப் படுமே யாகில் விரோதம் கிடையாது –
ஆதலால் எவ்வாறு இவ்விடத்தில் பாத்ய பாதக பாவம் –
விரோத பாத ஸ்தலத்தில் நிவ்ருத்தமான வஸ்துவுக்கு விரோத பாதங்கள் இல்லாத இடத்தில் எவ்வாறு நிவ்ருத்தி சொல்லக் கூடும்
ரஜ்ஜூ சர்பாதிகளோ என்றால் எந்த தேசத்தில் எந்த காலத்தில் எந்த வஸ்துவின் இருப்பு அறியப் பட்டு இருக்கிறதோ
அந்த தேசத்தில் அந்த காலத்தில் அந்த வஸ்துவின் அபாவமே ஜ்ஞான விஷயம் ஆதலால்
விரோதமும் பாதகத்வமும் வ்யாவ்ருத்தியும் சம்பவிப்பது பற்றி தேச காலாந்தர வ்யாவர்த்தமா நத்வம் மித்யாத்வ வ்யாப்தமாக காணப் படாமையால்
வ்யாவர்த்தமாநத்வம் மாதரம் அபாரமாத்யத்தில் ஹேது வாகாது –
அநுவர்த்த மானமாக இருப்பதால் சத் பரமார்த்தம் என்று எது சொல்லப் பட்டதோ அது சித்தமாகவே இருப்பதால் சாதிப்பதற்கு த்ச்குதி உள்ளது அல்ல –
ஆதலால் சந் மாத்ரமே வஸ்து அல்ல –
அநு பூதிக்கும் சத்ரூபமான விசேஷத்துக்கும் விஷய விஷி பாவத்தால் பேதம் பிரத்யஷ சித்தமாக இருப்பதாலும் -பாதிக்கப் படாமல் இருப்பதாலும்
-அநு பூதியே சதி என்பதும் நிரசிக்கப் பட்டது

தவயோ பாதிதஸ் யைவ வ்யாவ்ருத்தி ரிதி –அதர –யஸ்மின் –தி சாந்த்ர –அன்யத்ர –ரஜ்ஜூ சர்பாதி ஷூ –இதி தேச காலாந்திர –
-யத் புன –தவயோ -ரித்யாதி —
அதர அன்யத்ர –ரஜ்ஜூ இதி தேச காலாந்திர –அத -அநு பூதி –

அநு பூதிக்கு ஸ்வயம் பிரகாசத்வம் சொல்லப் பட்டது எனபது யாது ஓன்று உண்டு அது விஷய பிரகாசன வேளையில்
ஜ்ஞாதாவான ஆத்மாவுக்கு அப்படியே ஒழிய எல்லாருக்கும் எப்பொழுதும் அப்படியே என்கிற நியமம் இல்லை –
பர அனுபவம் ஆனது ஹாநம் உபாதானம் முதலியவற்றை லிங்கமாகக் கொண்ட அநு மான ஜ்ஞான விஷயம் ஆவதால்
சென்று போன ஸ்வ அநு பவத்துக்கும்-அறிந்தேன் -என்று ஜ்ஞான விஷயத்வம் காணப் படுவதாலும் –
ஆகையால் அநு பூதியாயே இருக்குமாகில் அது ஸ்வ தஸ் சித்தை என்று சொல்லுவதற்கு சகயம் ஆகாது

யத் தவ அநு பூதே–தத் விஷய பிரகாசன வேளாயாம் –பர அநு பவச்ய –சர்வ அநு பவச்யாபி

அநு பூதிக்கு அநு பாவ்யத்வம் வரும் பஷத்தில் அநு பூதித்வம் இல்லாமல் போக வேண்டி வரும் என்பதுவும் துஷ்டோக்தி –
தன்னை அடைந்துள்ள அனுபவங்களுக்கும் அனயர்களை அடைந்து இருக்கிற அனுபவங்களுக்கும் அநு பாவ்யத்வம் இருப்பது
பற்றி அனநு பூதித்வம் பிரசங்கிப்பதால் –
பர அநு பவ அநு மானத்தை ஒப்புக் கொள்ளாத பஷத்தில் சப்தார்த்தங்கள் உடைய சம்பந்த க்ரஹணம் இல்லாமையாலே
சமஸ்த சப்த வ்யவஹாரங்களுக்கும் அழிவு வர வேண்டியதாகும் –
ஆச்சார்யன் இடத்தில் இருக்கும் சிறந்த ஜ்ஞானத்தை அநு மானத்தால் கண்டு அறிந்து அவர்களுடைய பக்கலிலே சிஷ்யர்கள்
அணுகுகிறார்கள் -அதுவும் பொருந்தாது –
மற்று ஒன்றுக்கு விஷயமாக ஆனதினாலேயே அநு பூதிக்கு அனநு பூதித்வம் வந்து விடுகிறது என்பதுவும் சரி இல்லை –
அநு பூதித்வம் ஆவது வர்த்தமான தசையிலே தன சத்தையினாலேயே தனக்கு ஆச்ரயமான ஆத்மாவுக்கு பிரகாசித்தல் -அல்லது
தன சத்தையினாலேயே தன்னுடைய விஷயத்தை சாதித்தல் -வேறு அனுபவத்தால் அநு பாவ்யத்வம் இருந்த போதிலும் கூட
ஸ்வ அனுபவ சிந்தங்களான அவைகள் இரண்டும் அகலுகிறது இல்லை -ஆதலால் அநு பூதித்வம் போகாது
கடாதிகளுக்கோ என்றால் இந்த ஸ்வ பாவம் இல்லாமையாலே அனநுபூதத்வமே ஒழிய அநு பாவ்யத்தால் அல்ல –
அவ்வாறே அநு பூதிக்கு அநு பாவ்யத்வம் இல்லாமல் இருந்த போதிலும் கூட அனநுபூதத்வ பிரசங்கம் தடுக்க முடியாதது –
அனநுபாவ்யமான க்கான கு ஸூமாதிகளுக்கு அனநுபூதத்வம் ஆனது அசத்வத்தாலே ஏற்படுகிறதே ஒழிய அனநுபாவ்யத்தால்
அல்ல வென்று சொல்லப் படுமே யானால் -இவ்வண்ணமாகில் கடம் முதலியவைகளுக்கு அஜ்ஞ்ஞான விரோதித்வமே
அனநு பூதத்துக்கு ஹேது வே ஒழிய அனுபாவ்யத்வம் அல்ல என்று நிச்சயித்துக் கொள்ளலாம்
அநு பூதிக்கு அநு பாவ்யத்வம் வரும் பஷத்தில் அதற்குக் கடாதிகளுக்கு போலே அஜ்ஞ்ஞான விரோதித்வம் பிரசங்கிக்கும் என்று
சொல்லப் படுமே யானால் அனநுபாவ்யத்வம் இருந்த போதிலும் கூட க்கன குஸூமம் முதலியவைகளுக்கு போலே
அஜ்ஞ்ஞான விரோதித்வமும் தவறாமல் பிரசங்கிக்கும் ஆதலால் அநு பாவ்யத்வம் வரின் அனநுபூதித்வம் வரும் எனபது பரிஹசிக்கத் தக்கது

அநு பூதே -ஸ்வ கத -ஆசார்யச்ய –நச அந்ய–அநு பூதித்வம் –தேச –கடா தேஸ்து–தத் அநு பூதே — ஏவந்தர்ஹி -அநு பூதே -அநு பாவ்யத்வேபி –

ஸ்வதஸ் சித்தையாய் இருக்கிற சம்வித்துக்கு பிராகபாவம் முதலியது இல்லாமையாலே உத்பத்தியானது நிராகரிக்கப் படுகிறது எனபது
யாதொன்று உண்டோ -அது குருடனுக்கு பிறவிக் குருடனால் கோல் கொடுக்கப் படுவது போலே –
பராக பாவத்தை கிரஹிக்கிற பிரமாணம் இல்லாமையாலே அபாவமானது சொல்வதற்கு சகயம் ஆகாது என்று கூறப் படுமே யாகில் -அல்ல –
அநு பூதியினாலேயே கிரஹிக்கப் படுவதால் -அநு பூதியானது தான் இருந்து கொண்டு அப் பொழுதே தனக்கு விருத்தமான தன்னுடைய
அபாவத்தை எவ்வாறு அறிவிப்பிக்கும் என்று சொல்லப் படுமே யானால்
அநு பூதியானது தன்னோடு சம காலத்தில் இருக்கிற பதார்த்தத்தையையே விஷயீ கரிக்கிறது என்கிற நியமம் இல்லை அன்றோ –
அங்கனமாகில் சென்றதும் இனி வரப் போகிறதுமான அனுபவங்களுக்கு அவிஷயத்வம் பிரசங்கிக்கும்

யத்து– அந்தச்ய ஜாத்யந்தேன யஷ்டி ப்ரதீயதே –இதி –ப்ராக பாவச்ய –நஹ்ய நு பூதி –நஹி —

———-
சித்திக்கிற அநு பூதி பிராபக பாவம் முதலியதற்கு அந்த அநு பூதியின் ஸ்திதி காலத்துக்கு சமமான காலத்தில் சதி நியமம் இருக்க வேணும் என்று எண்ணுகிறாயோ
உன்னால் எந்த இடத்திலாவது இவ்வண்ணம் காணப் பட்டு இருக்கிறதா -எதனால் நியமமத்தைக் கூறுகிறாயோ -சந்தோசம்
அங்கனம் ஆகில் அந்த அநு பூதி காலத்தில் ஸ்திதி தர்சனத்தினாலேயே பிராபக பாவம் முதலியவை சித்திப்பதால் அதற்கு அலாபம் கூடாது –
அதின் பிராபக பாவம் அதோடு சம காலத்தில் இருக்கிறது என்று பைத்தியம் இல்லாதவன் எவன் தான் சொல்லுவான்
சமகால வர்த்தியான பதார்த்தை கிரஹித்தல்-என்கிற யாதொன்மை தன்மை உண்டோ
இந்த ஸ்வபாவ நியமமானது இந்த்ரியங்க ளால் உண்டாகுகிற பிரத்யஷத்துக்கு அல்லவோ -எல்லா ஞானங்களுக்கும்
பிரமாணங்களுக்கும் இந்த ஸ்வ பாவம் இல்லை –
ஸ்மரணம் அநு மானம் ஆகமம் பிரயோகம் யோகி பிரத்யஷம் முதலியவைகளில் காலாந்தரங்களில் இருப்பதையும் கூட கிரஹிக்கும்
திறமை காணப்படுவதால் -இதனாலே தானே பிரமாணங்களுக்கு ப்ரமேயங்களுடன் சேர்க்கை
பிரமாணத்துக்கு தனக்கு சம காலத்தில் இருக்கிற ப்ரமேயத்தொடு விலகாமல் சேர்ந்து இருத்தல் அர்த்த சம்பந்தம் அல்ல
பின்னையோ எந்த தேசம் காலம் முதலியதோடு சம்பந்தம் உள்ளதாக எந்த அர்த்தம் தோன் கிறதோ
அந்த அர்த்தத்தினுடைய அப்படிப்பட்ட ஆகாரத்தின் மித்யாத்வத்துக்கு ப்ரத்ய நீகை தான் அர்த்த சம்பந்தம் ஆதலால் இதுவும் நிரசிக்கப் பட்டது
ஸ்ம்ருதியானது பாஹ்ய விஷயங்களுக்கு உள்ளதல்ல அர்த்தம் நஷ்டமாக இருக்கும் பொழுது கூட ஸ்ம்ருதி காணப் படுவதால் –

அப்படிக்கின்றி சம்வித்ப்ராபக பாவமானது பிரத்யஷத்தினால் நிச்சயிக்கத் தக்கது அல்ல –நிகழ காலத்தில் இல்லாமையால்
வேறு பிரமாணங்களாலும் நிச்சயிக்க தக்கதல்ல -லிங்கம் முதலியவைகள் இல்லாமையாலே
சம்வித பிராபக பாவவ்யாப்தமான லிங்கம் இங்கே அறியப் படுகிறது இல்லை யன்றோ
அதுக்கு பிராபக பாவ விஷயமான சப்த பிரமாணமும் இதற்கு முன் காணப் பட்டு இருக்க வில்லை –
ஆகையால் அந்த அநு பூதியின் பிராபக பாவமானது பிரமாணம் இல்லாமையாலே சித்தி பெறாது என்று சொல்லப் படுமே யாகில்
இவ்வண்ணம் ச்வதஸ் சித்தத்தவ விபவத்தை விட்டு விட்டு பிரமாண அபாவத்தில் இரங்கு வாயே யாகில்
யோக்ய அநு பலப்தியினாலேயே அபாவம் சமர்த்திக்கப் பட்ட படியால் நீ தணிதலை அடைவாயாக –

அத மன்யசே–கிம் த்வயா –ஹந்த தர்ஹி -தத் பராக பாவஞ்ச -இந்த்ரிய ஜன்மன –
ந சர்வேஷாம் ஜ்ஞானானாம் பிரமாணா நாஞ்ச–ஸ்மரண அநு மான –அத ஏவ – ந ஹி பிரமாணச்ய –அபிது -மித்யரத்வ ப்ரத்ய நீகதா -ந ஹீத்யாதி
அத இதமபி–அதோச்யேத–நஹி அத இதி -யோக்ய அநு பல பத யைவ –

—————————————————–

மேலும் பிரத்யஷ ஜ்ஞானமானது தனக்கு விஷயமான கடம் முதலியவற்றை தான் இருக்கும் சமயத்தில் இருப்பு உள்ளதாக சாதியா நின்று கொண்டு
அதினுடைய சத்தையை எப்பொழுதும் அறிவிக்கின்றதாக காணப் படுகின்றது இல்லை என்பதனால்
கடாதிகளுடைய பூர்வ உத்தர கால சத்தை யானது அறியப் படுகிறது இல்லை –
அதின் அப்ரதீதியும் சம்வேதனத்துக்கு கால பரிச்சின்னமாக ப்ரதீதீ வருவதால் கடாதிகளை விஷயமாகக் கொண்ட சம்வேதனமே
காலா நவச்சின்னமாக அறியப் படுமே யானால்
சம்வேதனத்துக்கு விஷயமான கடம் முதளியதும் கால நவச்சின்னமாக அறியப் பட வேணும்
ஆகவே கடம் முதலியவை நித்யமாக ஆக வேண்டி வரும்
ச்வதஸ் சித்தமான சம்வேதனம் நித்யமாக இருக்குமே யாகில் நித்யம் என்றே அறியப் பட வேணும் -அப்படி அறியப் படுகிறது இல்லை
இவ்வண்ணமாக அநு மா நாதி சம்வித்துக்களும் காலா நவச்சின்னங்களாக அறியப் படுமே யாகில் தன விஷயங்களையும்
காலா நவச்சின்னங்களாக பிரகாசிப்பிக்கும் என்பதனால் -அவைகள் எல்லாம் காலா நவச்சின்னங்களாயும் நித்யங்களாயும் ஆக வேண்டி வரும் –
விஷயங்கள் சம்வித்துக்கு அநு ரூபமான ஸ்வரூபம் உள்ளவைகளாக இருப்பதால் நிர்விஷையான ஒரு சம்வித்தும் இல்லை
உபலப்தி இல்லாமையால் விஷய பிரகாசன ஸ்வ பாவம் உள்ளதாகவே உபலப்தி வருவதினாலேயே யன்றோ சம்வித்துக்கு ஸ்வயம்
பிரகாசத்வம் சமர்த்திக்கப் பட்டது –
சம்வித்துக்கு விஷய பிரகாசன ஸ்வ பாவம் இல்லாவிடில் ஸ்வயம் பிரகாசத்வம் சித்தியாதாலாலும்
அநு பூத்தியானது அநு பவ அந்தரத்தால் அனுபவிக்கத் தக்கதாக இல்லாததாலும் சம்வித்துக்கு துச்சத்துவமே சம்பவிக்கும்
நித்திரம் மதம் மூர்ச்சை முதலியவைகளில் சர்வ விஷய சூன்யையான தனித்த சம்வித்தே ச்புரிக்கிறது என்று சொல்லக் கூடாது –
யோக்ய அநு பலப்தியினால் பாதிக்கப் பட்டு இருப்பதால் அந்த தசைகளிலும் கூட அனுபவிக்கப் பட்டு இருக்குமே யானால்
அதற்கு பிரபோத சமயத்தில் அநு சந்தானம் வர வேணும் -அப்படி அநு சந்தானம் வரக் கண்டிலோம் –

கிஞ்ச –பிரத்யஷ –தத ப்ரதீதிஸ்ஸ –கடாதிவிஷயமேவ —-நித்யஞ்ச –எவம் சம்வித அநு ரூப -ஏவம் தச -அநு பலப்தே -சம்விதோவிஷய —
அநு பூத அநு பவாந்தர அனநுபாவ்யத் வாச்ச –யோக்யா – தாஸ்வபி-நச ததஸ்தி —

—————————————————————————————-
அய்யா -அனுபவிக்கப் பட்டு இருக்கிற பதார்த்தங்களுக்கு தவறாமல் ஸ்மரணம் காணப் பட்டு இருக்க வில்லை –
ஆதலால் ஸமரணத்தினது இன்மை எவ்வாறு அனுபவத்தின் இன்மையை சாதிக்கத் திறமை உள்ளதாகும்
உத்தரம் கூறப்படுகிறது –
எல்லா சம்ச்காரங்களுக்கும் நாசத்தை உண்டு பண்ணுகிற தேஹாபாயம் முதலிய பிரபலமான ஹேதுக்கள் இல்லாமல் இருக்கும் சமயத்தில்
கூட தவறாமல் இருக்கும் அச்மரணமானது அனுபவத்தின் அபாவத்தையே சாதிக்கிறது
அச்மரண நியமத்தினால் மாதரம் அனுபவ அபாவம் எனபது இல்லை -இவ்வளவு காலம் நான் ஒன்றும் அறிந்திலேன் -என்கிற
தூங்கி எழுந்து இருந்தவனுடைய பிரத்யவமர்சசித்தினாலேயே சித்திப்பதால் –
அனுபவம் இருந்த போதிலும் விஷய சம்பந்தம் இல்லாமையாலாவது அஹங்காரம் நீங்குதலால் ஆவது அந்த அச்மரண நியமம்
என்று சொல்வதற்கு சக்யமாகாது
அர்த்தாந்தர அநனுபவமும் அர்த்தாந்திர அபாவமும் அனுபவிக்கப் பட்டிருக்கிற அர்த்தாந்தரத்தின் அச்மரணத்துக்கு ஹேதுக்கள் ஆதலால்
அந்த தசைகளில் கூட அஹம் அர்த்தமானது தொடர்ந்து வருகிறது என்று சொல்லப் போகிறோம் –

தனு –உச்யேத–ந கேவலம் –சித்திரேதி–தாஸ்வபி —

—————————————————————————————-

ஐயா ஸ்வப்னம் முதலிய தசைகளிலும் கூட ச விசேஷ அனுபவம் இருக்கிறது என்று முந்தி சொல்லப் பட்டது -உரைத்தது உண்மை -அதுவோ ஆத்ம அனுபவம்
அதுவும் ச விசேஷம் என்றே ஸ்தாபிக்கப் படப் போகிறது
இவ்விடத்திலோ என்னில் -சகல விஷயங்களாலும் விடு பட்டதும் நிராஸ்ரயமாகவும் இருக்கிற சம்வித்தானது நிஷேதிக்கப் படுகிறது
தனித்த சம்வித்தே ஆத்ம அனுபவம் என்று கூறப் படுமானால் -அல்ல -அதுவும் ஆஸ்ரயத்தோடு கூடியது என்று உப பாதிக்கப் படப் போகிறது
ஆகையால் அநு பூதியானது தான் இருந்து கொண்டு தான் தன்னுடைய பிரகா பாவத்தை சாதிக்கிறது இல்லை என்பதனால் பிரகா பாவத்தின் அசித்தியானது சொல்வதற்கு சக்யம் ஆகாது
அநு பூதிக்கு அனுபவிக்கத் தக்க தன்மையின் சம்பவத்தை உப பாதித்ததினால் மற்றதினாலும் அசித்தியானது நிரசிக்க்கப் பட்டது
ஆகையாலே பிராக பாவாதிகளின் அசித்தியினால் சம்விதத்தினுடைய அனுத்பத்தியானது உபபத்தி உள்ளதாகாவாகாது –

தனு –சத்யமுக்தம் –கேவலைவ சம்வித ஆத்ம அனுபவ இதி சேத —சாச -அத அநு பூதே –

————————————————————————

இந்த அனுபூதிக்கு உத்பத்தி இல்லாமையால் ஒரு விதமான விகாரமும் இல்லை எனபது யாது ஓன்று உண்டோ அதுவும் பொருந்தாது
பிராபக பாவத்தில் வ்யபிசாரம் வருவதால் அந்த பிராபக பாவத்துக்கு உத்பத்தி இல்லாமல் இருந்த போதிலும் கூட விநாசம் காணப் படுகிறதன்றே
பாவேஷூ என்கிற விசேஷணம் கொடுக்கும் பஷத்தில் தர்க்க பாண்டித்தியம் வெளிப்படுத்தப் பட்ட தாக ஆகிறது
அப்பொழுது உன்னால் அபிமானப் பட்டு இருக்கிற அவித்யையானது உத்பத்தி இல்லாததாகவே பற்பல விகாரங்களுக்கு ஆஸ்பதமாகவும்
தத்வ ஜ்ஞானத்தின் உதயத்தினால் நாசம் உடையதாகவும் இருக்கிறது பற்றி அந்த அவித்தையில் வ்யபிசாரம் வருகிறது
அதின் விகாரங்கள் அனைத்தும் மித்யா பூதங்கள் என்று சொல்லப் படுமே யாகில் உனக்கு பரமார்த்த பூதமாகவும் ஓர் விகாரம் இருக்கிறதா
எதனால் இந்த விசேஷணம் பிரயோஜனம் உள்ளதாக ஆகுமோ அது ஒப்புக் கொள்ளப் படுகிறது இல்லை அன்றோ –

யதபி பராக பாவி –பாவேஷ் விதி –ததாச –தத் விகாரா –கிம் பவத —

————————————————————–

அநு பூதியானது உத்பத்தி இல்லாமையாலே தன்னிடத்தே வேறு பாட்டை சாஹிக்கிறது இல்லை என்று யாதொன்று கூறப் பட்டதோ அதுவும் பொருந்தாது –
உத்பத்தி இல்லாதாதவே இருக்கிற ஆன்மாவானது தேஹம் இந்த்ரியங்களைக் காட்டிலும் வேற்பட்டதாக இருப்பதால் அநாதி
என்று ஒப்புக் கொள்ளப் பட்டு இருக்கிற அவித்யைக்கு
ஆத்மாவைக் காட்டிலும் வேறுபாடு அவசியம் ஆஸ்ரயிக்க தக்கதாக இருப்பதால் -அந்த வேறுபாடானது மித்யா ரூபம் என்று
சொல்லப் படுமே யானால்
உத்பத்தி வ்யாப்தமான உண்மையான விபாகமானது உன்னால் காணப் பட்டு இருக்கிறதா
அவித்யைக் காட்டிலும் ஆத்மாவுக்கு உண்மையாக விபாகம் இல்லா விடில் உள்ளபடியே அவித்தையே ஆத்மாவாக ஆகும்
பாதிக்கப் படாத பிரதிபத்தியினால் சித்தமான த்ருச்ய பேதங்களின் சமர்த்தனத்தால் தர்சன பேதமும் நிச்சயமாக
சமர்த்திக்கப் பட்டது சேதிக்கத் தகுந்த வஸ்துக்களின் பேதத்தால் சேதன பேதம் போலே

யதபி –அஜச்யைவ -அவித்யாயா –ச விபாக -அவித்யாயா -அபாதித -ஹேத்ய பேதாத்

—————————————————————————————–

த்ருசி ரூபையான இந்த சம்வித்துக்கு த்ருச்ய தர்மம் ஒன்றும் இல்லை –த்ருச்யங்களாயே இருப்பதினாலேயே அவைகளுக்கு த்ருசி தர்மம் இல்லை என்று யாதொன்று கூறப்பட்டதோ
அந்த இரண்டும் தம்மால் ஒப்புக் கொள்ளப் பட்டு இருக்கிறதும் பிரமாண சித்தங்களுமான நித்யத்வ ஸ்வயம் பிரகாசத்வம் முதலிய தர்மங்களால் வ்யாப்தி சூன்யம் –
அவைகள் சம்வேதனம் மாதரம் அல்ல -ஸ்வரூப பேதம் இருப்பதால்
தன்னுடைய சத்தையினாலேயே தனக்கு ஆச்ரயமாக இருக்கிற ஆத்மாவைக் குறித்து ஒரு விஷயத்தை பிரகாசிக்கச் செய்வது அன்றோ சம்வேதனம்
ஸ்வயம் பிரகாசதையோ வென்றால் ஸ்வ சத்தையினாலேயே ஸ்வ ஆஸ்ரயத்தின் பொருட்டு பிரகாசித்தல்
பிரகாசம் எனபது சேதன அசேதன ரூபங்களான பதார்த்தங்கள் அனைத்துக்கும் சாதாரணமான வ்யவஹார அநு குண்யம்

யதபி -அநை காந்தி கமிதி –ஸ்வரூப பேதாத் –பிரகாசச்ச –

——————————————————————————————–

எக்காலத்திலும் இருத்தல் அன்றோ நித்யத்வம்
ஏகத்வம் ஓன்று என்ற எண்ணிக்கையினால் ஒரு வஸ்துவைக் குறித்தல்
அவைகள் ஜடத் வாத்ய பாவ ரூபங்களாக இருந்த போதிலும் கூட அப்படிப்பட்ட சைதன்ய தர்ம பூதங்களான
அவைகளால் அ நை காந்த்யம் பரிஹரிக்கத் தகாதது –
சம்வித்திலோ என்றால் ஸ்வரூபத்தை தவிர்த்து வேறாக ஜடத்வாதி ப்ரத்ய நீகத்வம் என்கிற அபாவ ரூபமாகவோ பாவ ரூபமாகவோ உள்ள தர்மம்
ஒப்புக் கொள்ளப் படா விட்டால் அந்த அந்த வஸ்துக்களின் நிஷேத வசனத்தினால் ஒன்றும் சொல்லப் பட்டதாக ஆகாது –

சர்வ –தேஷாம் –சம்விதுது –

————————————————————————

மேலும் சம்வித் சித்திக்கிறதா இல்லையா –சித்திக்கிறதே யானால் ச தர்மத்வம் வரும் -இல்லா விடில் ஆகாச புஷ்பம்
முதலியவைகளுக்கு போலே துச்சதை ஏற்படும்
சித்தியே சம்வித் என்றால் அது யாருக்கு எதைப் பற்றி என்று சொல்லத் தக்கது –ஒருவனுக்கும் ஒன்றைப் பற்றியும் இல்லை என்று
சொல்லப் படுமே யாகில் அப்பொழுது அது சித்தியாகாது –
சித்தியோ வென்றால் புத்ரத்வம் போலே ஒருத்தனுக்கு ஒருவனைக் குறித்து உண்டாகிறது
ஆத்மாவுக்கு என்று சொல்லப் படுமே யானால் இந்த ஆத்மா யார்
ஐயா சம்வித்தே ஆத்மா வென்று உரைக்கப் பட்டது அன்றோ –உண்மை உரைக்கப் பட்டது –
ஆனால் அந்த வசனம் தோஷம் உள்ளது -அதை உபபாதிக்கிறார்
ஒரு புருஷனுக்கு ஒரு அர்த்தத்தைக் குறித்து சித்தி ரூபையாக இருப்பதால் அந்த புருஷ சம்பந்தம் உள்ள அந்த சம்வித்தானது
தானே எவ்வாறாக ஆத்ம பாவத்தை அனுபவிக்கும்
இது சொல்லப் பட்டதாக ஆகிறது -அநு பூதி எனபது தனக்கு ஆஸ்ரயமான ஆத்மாவைக் குறித்து தன்னுடைய சத் பாவத்தினாலேயே
ஒரு வஸ்துவின் வ்யவஹார -அநு குணிய ஆபாதன ஸ்வ பாவம் உள்ளதாகவும்
ஜ்ஞானம் அவசதி சம்வித் என்று வழங்கப்படுவதுவும் கர்மாவோடு கூடியதும்
கடமஹம்- ஜாநாமி -இமமர்த்தம் -அவகச்சாமி — படமஹம் -சம்வேத்மி -என்று
எல்லாருக்கும் ஆத்மா சாஷிகமாகவும் பிரசித்த மாகவும் இருக்கிற அநு பவிதாவான ஆத்மாவின் தர்ம விசேஷம் –
இந்த ஸ்வ பாவம் உள்ளதாக இருப்பதினால் அன்றோ அதுக்கு ஸ்வயம் பிரகாசத்வம் உன்னாலும் உப பாதிக்கப் பட்டது
கர்மாக்களோடு கூடியதான இந்த கர்த்ரு தர்ம விசேஷத்திற்கு கர்மத்வம் போலே கர்த்ருத்வம் இசையாது

அபிச -சம்வித் -சித்திய திவா நவா –சித்தி ரேவ–கஸ்ய –யதி–சித்தா –ஆத்மன இதிசேத்–கோயமாத்மா
ந்னு சத்யமுக்தம் -தயாஹி –அர்த்த ஜாதம் –ஏதத் உக்தம் பவதி -ஏதத் ஸ்வா பவதயா

——————————————————————————————–
உபபாதிக்கிறார் – இந்த கர்த்தாவுக்கு ஸ்திரத்வமும் -கர்த்தாவின் தர்மமான சம்வேதனத்துக்கு ஸூக துக்காதி களுக்குப் போலே
உத்பத்தி ஸ்திதி விநாசங்களும் நேரில் காணப் படுகின்றன –
கர்த்தாவின் ச்தைர்யமோ வென்றால் -அதே இந்த வஸ்து முன்னால் என்னால் அனுபவிக்கப் பட்டு இருக்கிறது என்கிற பிரத்யபி
ஜ்ஞாப்ரத்யஷத்தால் -சித்தம்
நான் அறிகிறேன் -நான் அறிந்தேன் -ஜ்ஞாதா வாகவே இருக்கிற எனக்கு இப்பொழுது ஜ்ஞானம் நஷ்டமாகப் போயிற்று என்றும்
சம்வித்துக்கு உத்பத்தி முதலியவைகள் ப்ரத்யஷ சித்தங்களாக இருப்பதால் எதினால் அவைகளுக்கு ஐக்யம்-
இவ்வண்ணம் கரண பங்குரமான சம்வித்தை ஆத்மா வென்று ஒப்புக் கொள்ளும் பஷத்தில் -முதல் தினத்தில் இது என்னால் பார்க்கப் பட்டது
மறு தினத்திலும் இதை நான் கண்டேன் என்கிற பிரத்ய பிஜ்ஞையும் இசையாது
அன்யனால் அனுபவிக்கப் பட்ட வஸ்துவுக்கு வேறு ஒருவனுடைய ப்ரத்ய பிஜ்ஞா கோசரத்வம் சம்பவியா தன்றோ –

ததா கர்த்ரு ச்தைர்யம் தாவத் –அஹம் ஜாநாமி –அன்யேன –

———————————————————————-
மேலும் அநு பூதிக்கு ஆத்மத்வம் ஒப்புக் கொண்டால் -அது நித்யமாக இருந்த போதிலும் பிரதிசந்தானத்தின் -ஸ்மரண்த்தின் -இன்மை
அந்த நிலைமை உள்ளதே
பிரதிசந்தானமோ எனில் முற் காலத்திலும் பிற்காலத்திலும் ஸ்திரமாக இருக்கிற அநு பவிதாவை உறுதிப் படுத்து கிறது -நானே இதை
முந்தியும் அனுபவித்தேன் என்று அநு பூதி மாத்ரத்தை உப ஸ்தாபிக்கிறது இல்லை –
உனக்குக் கூட அநு பூதிக்கு அநு பவிதாவாக இருத்தல் இஷ்டம் அல்ல –அநு பூதி அநு பூதி மாத்ரமே –
நிராஸ்ரையாகவும் நிர்விஷயையாகவும் இருக்கிற சம்வித் என்கிற ஒரு பதார்த்தம் அத்யந்த அநு பலப்தியினால் சம்பவியாது என்று உரைக்கப் பட்டது
இருவர்களாலும் ஒப்புக் கொள்ளப் பட்டு இருக்கிற சம்வித்தே ஆத்மா என்கிற விஷயம் உபலப்தியினால் அடிக்கப் பட்டு விட்டது
அநு பூதி மாத்ரமே யதார்த்தம் என்பதற்கு நிஷ்கர்ஷங்களா ஹேத்வாபாசங்களும் நிராகரிக்கப் பட்டன –

கிஞ்ச –பிரதிசந்தானம் -அஹம் பவத -அநு பூதி -சம்வின்நாம-உபய -அநு பூதி மாதரம் —

———————————————————-
அஹம் ஜாநாமி என்கிற அஸ்மத் பிரத்யத்தில் யாதொரு அநிதமம்சம் உண்டோ பிரகாசத்தையே ஸ்வ பாவமாகக் கொண்ட சித் பதார்த்தம் -அது ஆத்மா –
அதில் ஜ்ஞான பலத்தால் பிரகாசிக்கப் பட்டு இருப்பதால் யுஷ்ம ததர்த்த லஷணமான-அஹம் ஜாநாமி -என்று சித்திக்கிற அஹம்
அர்த்தமானது சின் மாத்ரத்தை விட அதிகமாக இருப்பதால் யுஷ்மததர்த்தமே
இது இவ்வண்ணம் அல்ல –அஹம் ஜாநாமி என்கிற தரமி ஸ்வரூபமான பிரத்யஷ ப்ரதீதியின் விரோதத்தாலேயே –

தநுச–அ நிதமம்ச –பிரகாசை காச -தத்பல –நை ததே –அஹம் ஜாநாமி —

————————————————————————————–

மேலும் அஹம் அர்த்தமானது ஆத்மாவாக இல்லா விடில் ஆத்மாவுக்கு பிரத்யக்தவம் சம்பவியாது –
அஹம் புத்தியினால் பிரத்யகர்த்தமானது ப்ராகர்த்தத்தின் நின்றும் வேடு படுத்தப் படுகிறது அன்றோ
நான் விலக்கப்பட்டு இருக்கிறது சமஸ்த துக்கங்களுடன் கூடியனாகவும் முடிவில்லாத ஆனந்தத்தை அடைந்தவனாகவும் கர்மத்துக்கு வசப் படாதவனாகவும்
ஆகக் கடவேன் என்று மோஷத்தில் விருப்பம் உள்ளவன் ஸ்ரவணம் முதலியவற்றில் பிரவர்த்திக்கிறான்
அஹம் அர்த்த வி நாசமே மோஷம் என்று ஒருவன் எண்ணுவானே யாகில் அவன் மோஷகதா பிரஸ்தாவ கந்தத்தின் நின்றும் விலகி விடுவான்
நான் நாசம் அடைந்த போதிலும் என்னைக் காட்டிலும் வேறாக ஜ்ஞப்தி என்று ஒரு வஸ்து இருக்கிறது என்று எண்ணி அதை அடைவதின் பொருட்டு ஒருவனுக்கு முயற்சி உண்டாகாது –
இந்த ஜ்ஞப்திக்கு தன சம்பந்தினாலே அன்றோ சத்தையும் விஜ்ஞப்திதை முதலியதும்
தன் சம்பந்தமே விலகி விடுமே யாகில் ஜ்ஞப்தியே சித்தியாது –
வெட்டுகிறவன் வெட்டத் தக்க வஸ்து இவ்விரண்டும் இல்லா விடில் வெட்டுதல் முதலியது எவ்வாறு சித்தியாதோ அவ்வாறாக ஆகையால்
அஹம் அர்த்தமான ஜ்ஞாதாவே பிரத்யகாத்மா வென்று நிச்சயிக்கப் பட்டது
அரே விஜ்ஞாதாவை எதனால் நிச்சயமாக அறிகிறான் என்று சுருதி -இதை எவன் அறிகிறானோ அவனை ஷேத்ரஜ்ஞன்
என்று அறிந்தவர்கள் சொல்லுகிறார்கள் -என்று பகவத் கீதை
ஸூ த்ரகாரரும் -நாத்மாஸ்ருதே -என்று தொடங்கி-ஜ்ஞாத ஏவ –என்று ஜ்ஞான ஆச்ரயன் தான் ஆத்மா என்று சொல்லப் போகிறார்
ஆகையால் ஜ்ஞப்தி மாதரம் ஆத்மா அல்ல என்று நிர்ணயிக்கப் பட்டு இருக்கிறது

கிஞ்ச –நிரஸ்த –அஹம் அர்த்த விநாச–மயி நஷ்டேபி-ஸ்வ சம்பந்தி தயா -ஸ்வ சம்பந்த -சேத்து
அத விஜ்ஞ்ஞா தாரம் -ஞாநாத் ஏவ —

————————————————————————————–
அஸ்மத் தர்க்கதமானது அஹம் பிரத்யயத்தால் சித்தம் அன்றோ —
யுஷ்மத்தர்த்தம் யுஷ்மத் ப்ரத்யய விஷயம் அதில் அஹம் ஜாநாமி என்கிற வ்யவஹார பலத்தால் சித்திக்கிற
ஜ்ஞாதாவானவன் யஷ்மதர்த்தம் என்று சொல்லலுகிற வசனமானது –என் தாயார் மலடி -எனபது போலே வ்யாஹதமான அர்த்தம் உள்ளது
இந்த ஜ்ஞாதாவான அஹமர்த்தம் அன்யாதீன பிரகாசம் உள்ளது அன்று
ஸ்வயம் பிரகாசமாக இருப்பதால் சைதன்ய ஸ்வ பாவகை அன்றோ ஸ்வயம் பிரகாசதை எது பிரகாச ஸ்வ பாவம் உள்ளதோ
அது தீபம் போலே அனந்யாதீன பிரகாசம் உள்ளது –
தீபம் முதலியவற்றுக்கு தன்னுடைய ஒளியின் பலத்தினாலே பிரகாசிப்பிக்கப் பட்டு இருத்தலால் அப்பிரகாசத்வம் ஆவது
அன்யாதீன பிரகாசத்வம் ஆவது இல்லை யன்றோ
பினனையோ பிரகாச ஸ்வ பாவம் உள்ள தீபம் தானாகவே பிரகாசிக்கிறது –மற்றவைகளையும் தன்னுடைய ஒளியினால் பிரகாசிக்கச் செய்கிறது –

அஹம் பிரத்யய–நசா சௌ –ஸ்வயம் பிரகாசத்வாத் –சைதன்ய ஸ்வ பாவாஹி ஸ்வயம் பிரகாசதா –
யா பிரகாச ஸ்வ பாவ -நஹி அபிரகாசத்வம் அன்யாதீன பிரகாசவத் வஞ்சேதி–கிந்தர்ஹி தீப -அந்யா நபி
சைதன்ய ஸ்வ பாவ தாஹி
நஹி அந்யா நபி –

———————————————————————————————————-

366
—————————————————————————————-

கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஸ்ருதி பிரகாசர் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ போதாயனர் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

-அமலனாதி பிரான் – வியாக்யானங்களில் -அருளப்பெற்ற அமுத துளிகள் –

September 18, 2015

ஸ்ரீ யபதியான சர்வாதிக வஸ்துவினுடைய திவ்ய அங்கங்களை திருப்பாதம் தொடங்கி அனுபவித்த க்ரமம் சொல்லுகிறது
அயன் அலர் கொடு தொழுதேத்த -என்னும்படி -ஹம்ச வாஹனான சதுர முகன் பஹு முகமாக அனுபவித்தாப் போலே
முநி வாகநரான இவரும் ஏக முகமாக இரண்டு கண்ணாலும் கண்டு அனுபவித்தார் –
உவந்த உள்ளத்தார் ஆனார் —
சௌந்தர்ய சாகரத்திலே மக்நர் ஆனார் –
இவருக்கு அழகு அஜ்ஞ்ஞானத்தை விளைத்தது ஆய்த்து –
அத்ருஷ்டம் த்ருஷ்டம் ஆகையாலே த்ருஷ்டம் அத்ருஷ்டம் ஆய்த்து –
அணி அரங்கன் என்னமுதினைக் கண்ட கண்கள் மற்று ஒன்றினைக் காணாவே –
சிந்தை மற்று ஒன்றின் திறத்தலா –
பாவோ நாந்யாத்ர கச்சதி –
கட்கிலீ என்னும் வடிவை இறே கண்ணால் கண்டு அனுபவித்தது
காணாதவையும் கண்ட வஸ்துவிலே உண்டு இறே –
மைப்படி மேனியை அனுபவித்து மற்ற விஷயங்களை காணாக்  கண்ணாய் இருக்குமவர்-

இவர் அடியார் ஆகையால் அடியே தொடங்கி அனுபவிக்கிறார்
ப்ரஹ்மா அபிமானி ஆகையால் முடியே தொடங்கி -அனுபவித்தான் –

——

வீணையும் கையுமாய் சேவிக்கிற இவர் -சேமமுடை நாரதனாரும் ஒரு வைகைக்கு ஒப்பாகார்
பெரியாழ்வார் அவதாரத்தில் அனுபவம் இவருக்கு அர்ச்சாவதாரத்திலே
அவர் -பாதக்கமலம் என்றத்தை -இவர் திருக் கமல-பாதம் என்றார்
அவர்-பீதகச் சிற்றாடை யொடும் -என்றத்தை -இவர் -அரைச் சிவந்த வாடையின் மேல் -என்கிறார்
அழகிய உந்தியை —-அயனைப் படைத்த தோர்  எழில் உந்தி –
பழம் தாம்பால்  ஆர்த்த உதரத்தை —–திரு வயிற்று உதர பந்தம் –
குரு மா மணிப் பூண் குலாவித் திகழும் திரு மார்வை -திரு வார மார்வு என்றும்
அண்டமும் நாடும் அடங்க விழுங்கிய கண்டத்தை –முற்றும் உண்ட கண்டம் -என்றும்
நெய்த்தலை நேமியும் சங்கும் நிலாவிய கைத்தலத்தை -கையினார் சுரி சங்கு அனல் ஆழியர் -என்றும் –
செந்தொண்டை வாயை –செய்ய வாய் என்றும்
கண்கள் இருந்தவா –என்றத்தை -அப்பெரிய வாய கண்கள் என்றும்
உருவு கரிய ஒளி மணி வண்ணன் -என்றத்தை -எழில் நீல மேனி -என்றும்
குழல்கள் இருந்தவா -என்றத்தை -துளவ விரையார் கமழ் நீண் முடியன் -என்றும் அருளிச் செய்தார்-

கோவலனாய் வெண்ணெய்  உண்ட வாயன் இறே பெரிய பெருமாள் –
முனி ஏறி தனி புகுந்து –
இந்த மஹா போகத்திலே தாம் ஏகராய் உள் புகுந்து-பாட்டினால் —அநுபவத்துக்கு பாசுரம் இட்டுப் பேசின –
அமலனாதிபிரான் -என்கிற
பிரபந்தத்தின் பாட்டுக்களாலே —அண்டர் கோன் அணி அரங்கனைக் கண்டு வாழுமவர் யாய்த்து -இவர் –
பின்பு இவ் வநுபவத்துக்கு பட்டர் தேசிகர் ஆனார்-
கண்டு வாழும் –
காட்சியாக வாழ்ச்சியாக வாழுகிற
பாணர் தாள் பரவினோம்-

————————————————————————————————

பிரணவம் போலே அதி சங்குசிதமாய் இருத்தல்
வேதமும் வேத உபப்ரும்ஹணமான மஹா பாரதமும் போலே பரந்து துறுப்பு கூடாய் இருத்தல்
செய்யாதே பத்துப் பாட்டாய் -ஸூக்ரஹமாய் -சர்வாதிகாரமுமாய் இருக்கும்
திருவாய் -மொழியும்–அமர்சுவை -யாயிரம் -என்றும்–பாலோடு அமுதன்ன ஆயிரம் -என்றும் –
உரை கொள் இன் மொழி -என்றும் —ஏதமிலா ஆயிரமாய் இருந்ததே யாகிலும் –
அந்ய உபதேச ஸ்வா பதேசம் -என்ன–ஸாமாநாதி கரண்ய நிர்ணயகம் -என்ன —
த்ரி மூர்த்தி சாம்ய தத் உத்தீர்ண தத்வ நிஷேதம் -என்ன –
இவை தொடக்கமான அருமைகளை உடைத்தாய் இருக்கும் –

திரு நெடும் -தாண்டகமும்–பரப்பற்று முப்பது பாட்டாய் இருந்ததே யாகிலும்–அதுக்கும் அவ்வருமைகள் உண்டு –

திருமாலைக்கு–அவ்வருமைகள் இல்லையே யாகிலும்–தம்முடைய லாப அலாப ரூபமான
ப்ரிய அப்ரியங்களை–ப்ரதிபாதியா -நிற்கும்-
பிரணவம் போலே அதி சங்குசிதிமாய் -துர் ஞேயமாய் -இராமையாலே —
யதி ஹாஸ்தி ததத் அந்யத்ர யன்நே ஹாஸ்தி நத்க் வசிக் -என்கிறபடியே
ஆயிரத்தில் ஒன்றும் கடலில் குளப்படியும் போலே–புறம்பு இல்லாதவை எல்லாம் இதிலே உண்டாய்–
இதில் இல்லாதது ஒன்றும் புறம்பு இன்றியே இருக்கும் –

பர வியூஹ விபவங்களை பிரதிபாதிக்கை அன்றிக்கே —அர்ச்சாவதார ரூபேண வந்து அவதரித்து
திருவரங்கப் பெரு நகருள் தெண்ணீர் பொன்னி திரைக் கையால் அடிவருட–
பள்ளி கொள்ளும் கருமணியை கோமளத்தை கண்டு கொண்டு
மணத் தூணே பற்றி நின்று வாயார வாழ்த்துகிற பிரபந்தம் ஆகையாலே–
எல்லா பிரபந்தகளிலும் இதுக்கு வை லஷண்யம் உண்டு –

—————————————————————-

வேதம் போலே முதல் ஆழ்வார்கள் மூவரும் பரத்வத்திலே மண்டி அர்ச்சையும் தொட்டுக் கொண்டு போந்தார்கள் –
ஸ்ரீ வால்மீகி பகவானைப் போலே ஸ்ரீ குலசேகர பெருமாள் ராமாவதாரத்திலே ப்ரவணராய்
அர்ச்சாவதாரத்தையும் அனுபவித்தார் –
ஸ்ரீ பராசர பகவானையும் ஸ்ரீ வேத வியாச பகவானையும் போலே
நம்மாழ்வாரும் பெரியாழ்வாரும் ஆழ்வார் திருமகளாரும் கிருஷ்ணாவதாரத்தில் மண்டி
அர்ச்சாவதாரத்தை அனுபவித்தார்கள் –
திரு மழிசைப் பிரான் -தேவதாந்தர பரதவ நிரசனத்திலே தத் பரராய் இருந்தார் –

திருமங்கை ஆழ்வார் பரத்வத்தை காற்கடைக் கொண்டு அர்ச்சாவதாரத்திலே இழிந்து –

அது தன்னிலும் -தான் உகந்த ஊரெல்லாம் தன் தாள் -பாடி பரபரப்பாய் திரிந்தார் –
தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் -பெரிய பெருமாளை அனுபவியா நிற்கச் செய்தே
பரோபதேசம் -பண்ணுவது பரத்வ ஸ்தாபனம் பண்ணுவது –
இவர் பெரிய பெருமாளை பூரணமாக அனுபவிக்கிறார்
மற்ற ஆழ்வார்களுக்கு முன்புள்ள ஜன்ம பரம்பரைகளில் உண்டான துக்க அனுபவ
ஸ்மரணத்தாலும்  -ஸ்வரூப அநுரூபமான பகவத் போகத்தின் உடைய அலாபத்தாலும்
கிலேச அனுபவம் கலாசி நடவா நின்றது –
இவருக்கு பெரிய பெருமாள் அர்ச்சா ரூபியாய் இருக்கச் செய்தேயும் தம்முடைய சௌந்தர்யத்தை
சாகரத்தை ஆவிஷ்கரிக்க லாவண்யம் ஆகிற மரக்கலத்தாலே எங்கும் ஒக்க அனுபவிக்கிறார் –
பல்லாண்டு போற்றி என்று பாவிக்க வேண்டாமல் இவருக்கு ஜன்ம சித்தம் ஆய்த்து-

———————————————————–

பாவோ நாந்யத்ர கச்சதி -என்று என்னை மீட்டீராகிலும் என்னுடைய நெஞ்சை மீட்க்கப் போகாது
அந்யத்ர-என்கிறது —மற்று ஆரானும் உண்டு -என்பார் என்னுமாபோலே–
கொடுபோக நினைத்த தேசத்தின் பேரும் கூட  தனக்கு அசஹ்யமாய் இருக்கிறபடி –
இப்படி ராமாவதாரம் அல்லது அறியாத திருவடியைப் போலே ஆய்த்து இவரும்
இவர் தேவாரமான பெரிய பெருமாளை அல்லது பர வ்யூஹ விபவங்களை—அறியாதபடியும்
பெரிய பெருமாள் உடைய அழகும் ஐஸ்வர்யமும் பரம பதத்தில் முகிளிதமாய் இருக்கும்
அவதாரத்திலே ஈரிலை பெறும் -இங்கே வந்த பின்பு தழைத்தது
தன்னை உகந்தாரை தாம் அனுபவிக்கை அன்றிகே தான் என்றால் விமுகராய் இருப்பாரும்
கூட-அனுபவிக்கலாம் படி இருக்கையாலே நீர்மையால் வரும் ஏற்றம் இங்கே உண்டே
வேதங்களுக்கு எட்டாத சர்வேஸ்வரனை ஆற்றில் தண்ணீரோ பாதி ஆற்றுக்கு உள்ளே
கண்டு அனுபவிக்கலாம் படி இருக்கிற இடம் இறே –
மழைக்கு அன்று வரை முன் ஏந்தும் மைந்தனே மதுர வாறான அவ்வாறு இவ்வாறாய்த்து காணும் –

இவர் தமக்கு ப்ராப்யரும் ப்ராபகரும் ருசி ஜனகரும் விரோதி நிவர்த்தகமும் எல்லாம்
பெரிய பெருமாளே என்று இருப்பர் .
அனுபாவ்யரான பெரிய பெருமாள் தம்மைப் பார்த்தாலும் –பரத்வம் போலே தேச விப்ரக்ருஷ்டமாய் இருத்தல் –
வ்யூஹம் போலே தத் ப்ராயமால் இருத்தல் –விபவம் போலே கால விப்ரக்ருஷ்டமாய் இருத்தல் –
அந்தர்யாமித்வம் போலே அசஷூர் விஷயமாய் இருத்தல் –அர்ச்சாவதாரங்கள் போலே –
தெய்வம் அல்லால் செல்ல ஒண்ணாது இருத்தல் –
அங்கு வர்த்திக்கும் பேர் -சிலைக்கை வேடரேயாய் பயங்கரராய் இருத்தல் –பெரிய ஏற்றமேற வேண்டி இருத்தல் –
வருந்தி பெரும் கூட்டத்தோடு போய் ஏறினால் -கானமும் வானரமும் வேடுமேயாய்-மேலை வானவர் இன்றிக்கே இருத்தல் –
செய்கை அன்றிக்கே
இத் தேசத்தில் -இக்காலத்தில் -எல்லார் கண்ணுக்கும் விஷயமாய்க் கொண்டு-
பத்தர்களும் பகவர்களும் பழ மொழி வாய் முனிவர்களும் பரந்த நாடும்
சித்தர்களும் தொழுது இறைஞ்ச திசை விளக்காய் நின்ற திருவரங்கம் –என்கிறபடியே
எல்லார்க்கும் நின்ற நின்ற நிலைகளிலேயே ஆஸ்ரயிக்கலாம் படி-சர்வ சுலபருமாய்
வன் பெரு வானகம் -இத்யாதிப் படி -உபய விபூதியையும் நிர்வஹித்துக் கொண்டு-போருகிற மேன்மையை உடையராய் –
இப்படி சர்வாதிகாருமாய் -சர்வ சேஷியுமாய் -சர்வ ரஷகருமாய் -சர்வ சமாஸ்ரயணீ யருமாய் —
நிரதிசய போக்ய பூதருமாய் -இருப்பவர் –

———————————————————–

தாழ்ச்சி மற்று எங்கும் தவிர்ந்து –
கடைத் தலை யிருந்து வாழும் சோம்பராய் இருக்கிற லோக சாரங்க மஹா முனிகளை அருள் பாடிட்டு –
நம்பாடுவானை அழைத்துக் கொண்டு வாரும் -என்ன
அவரும் -அருள் பாடு அருள் பாடு -என்று சொல்ல –
இவரும் -அடிப் பாணன் அடிப் பாணன் -என்று இறாய்க்க –
அவரும் விடாதே தோள் மேலே எழுந்து அருளப் பண்ணுவித்து கொண்டு போக
வழியிலே ஒன்பது பாட்டு பாடி -திருப் பிரம்புக்கு உள்ளே பத்தாம் பாட்டு பாடித் தலைக் கட்டுகிறார்-
இதில் முதல் பட்ட மூன்று பாட்டுக்கு முதல் அஷரம் மூலமாகிய ஒற்றை எழுத்தின் முதல் -நடு -இறுதி யானவை-

———————————————————-

ஆகாசத்தின் நின்றும் சஹ்யத்தில் வர்ஷித்து -அங்கு நின்றும் காவேரி யாறாய் போந்து இழிந்து
கால்களாய் புகுந்து போய் நாட்டாருக்கு உபயுக்தமாம் போலே –
பரம பதம் ஆகிற பரம வ்யோமத்தின் நின்றும் -திருமலையிலே வந்து இழிந்து –
தெற்கு நோக்கி வந்து -பள்ள நாலியான கோயிலிலே தேங்கி
கீழ் மேலாக கண் வளர்ந்து அருளுகிற பெரிய பெருமாள் ஆகிற மதுர வாற்றின் இடை புகுந்து
ஓடுகிற காலை அனுபவிக்கிறார் –

அமலனாதிபிரான் அடியார்க்கு என்னை ஆட்படுத்த
விமலன் விண்ணவர் கோன் விரையார் பொழில் வேங்கடவன்
நிமலன் நின்மலன் நீதி வானவன் நீண் மதிள் அரங்கத்தம்மான் திருக்
கமல பாதம் வந்து என் கண்ணினுள்ளன ஒக்கின்றதே ——1-

அமலன் –
தன்னை வந்து கிட்டின போதும்
பெரிய பெருமாளுக்கு பிறந்த வைலஷண்யம் கண்டு
அவனுடைய ஹேய ப்ரத்ய நீகதையை முதலில் –
என் கண் பாசம் வைத்த பரம் சுடர் சோதி –
துயர் அறு சுடர் அடி -இறே-

ஆதி –
கல்யாண குண யோகம் –
பெற்ற பாவிக்கு விடப் போகுமோ –
தாம் அடியான் என்றும் ஆதி சப்தம் சொல்லும் –
என் பேற்றுக்கு முற்பட்டவன்
அழிந்த ஜகத்தை உண்டாக்கினாப் போலே ஸ்வரூபத்தை அழித்துக்கொண்ட  என்னை உண்டாக்கி-
ஆக-அமலன்-ஆதி -இரண்டு -பதத்தாலும் -ஹேய ப்ரத்யநீகத்வமும் கல்யாண குண யோகமும் சொல்லுகிறது

பிரான்
எனது நிகர்ஷம் பாராதே கீழ் செய்து அருளிய -மேலும் பண்ணப் புகுகிற உபகாரகன்

அடியாருக்கு என்னை ஆட் படுத்த -விமலன்
எனக்கும் என்றும் பிறருக்கு என்றும் திரிந்த என்னை
தனக்கும் தன் அடியாருக்கும் ஆக்கின பரி சுத்த ஸ்வபாவன்
தலையைப் பிடித்து கால் கீழே இட்டுக் கொண்டான் -வஸ்துவின் சீர்மையாலே
அடியார்க்கு ஆம் இத்தனை என்று –
அடியாருக்கு -சேஷத்வமே பிரதம நிரூபகம்
பாகவத சேஷத்தளவும் சென்றால் மீளப் போகாதே
சேஷித்வத்தின் எல்லையில் தான் நின்று சேஷத்வத்தின் எல்லையில் என்னை ஆக்கி அருளினான்
தம்மை வஹித்த அளவில் லோக சாரங்க முனிவருக்கு இவர் சேஷ பூதர் ஆனது
திருத் துழாய் திரு அபிஷேகத்தில் இருந்தாலும் சேஷத்வம் குலையாதே-

விண்ணவர் கோன்
த்ரிபாத் விபூதியாக தன்ன தாலாட்ட இருக்கிறவன் கிடீர்
கதிர் பொறுக்கி ஜீவிப்பாரைப் போலே நித்ய சம்சாரியாய் இருக்கிற என்னை
நித்ய சூரிகள் ஒக்க ஆம்படி விஷயீ கரித்தான் –
உடன் கூடுவது என்று கொலோ ஆசைப்பட வேண்டாதபடி அங்குத்தை குழாத்தையும் காட்டித் தந்தான் –
கோன் -அவர்களாலும் எல்லை காண முடியாது -இருப்பவன்-

விரையார் பொழில் வேம்கடவன்
அர்ச்சாவதாரத்துக்கு பொற் கால் பொலிய விட்ட இடம்
சர்வ கந்த -என்கிற வஸ்து போலியான பரிமளத்தை கண்டு கால் தாழ்ந்தான் –
பெரிய பெருமாளை அனுபவிக்க இழிந்தவர் -ஆற்றில் அமிழ்ந்துகிறவன் இங்கே –

ஆழம் காலிலே இளைப்பாற தேடுமா போலே -அது மடு வாகிறது அறியாமல் –
வரத்து சொல்லி கவி பாடுகிறார்

நிமலன் –
அர்த்தித்வம் இன்றிக்கே -நிர்ஹேதுகமாக -தானே பச்சை இட்டு உபகரிகையால் வந்த ஔஜ்வல்யம் –
நின்மலன்
தன் பேறாக செய்தான் –
உடையவன் உடைமையை பெற்றால் நமக்கு என்ன -ஆத்ம லாபம் தன்னதாம் படி –

நீதி வானவன் –
இப்படி புகுர நிறுத்துகைக்கு அடி -சேஷ சேஷித்வங்கள் மாறாத நித்ய விபூதி வாசனை
அங்கு கலங்குவாறும் இல்லை கலக்குவாறும் இல்லை –

அளப்பரிய ஆரமுதை யரங்கமேய அந்தணனை போலே
நீதி வானவன் நீள் மதிள் அரங்கத்து அம்மான் –
இப் பாசுரம் கேட்டுப் போலே காணும் திருமங்கை ஆழ்வார் திரு மதிள் செய்தது
ரஷகமாகப் போரும்படியான மதிளை உடைய பெரிய கோயில் –
அம்மான்
ஈரரசு தவிர்ந்தால் இறே சேஷித்வம் பூரணமாவது
திருமலை போக்யதை நிலம் அல்லாமையாலே கோயிலிலே புகுகிறார்
வெள்ளத்தை கள்ள மடையாலே பள்ளத்தே விடுமா போலே திருவேம்கடமுடையான்
வடக்கு திருவாசல் வழியே வந்து புகுந்தான்

திருக் கமல பாதம்
ஆதித்யன் சந்நிதியில் தாமரை அலருவது போலே
ஆஸ்ரிதர் சந்நிதியில் அலரும் திருவடிகள் –
தளிர் புரையும் திருவடிகள் –
அம்மான் திருக் கமல பாதம்
பிராப்யமும் பிராபகமும்-

வந்து
வந்து உனது அடியேன் மனம் புகுந்தாய் -வழி வந்தானும் தானே பற்றினானும் தானே –
உபாய பூர்த்தி சொல்லுகிறது-

என் கண்ணின் உள்ளன –
தொடர்ந்து வந்து செம்பளித்த கண்ணை யுறுத்து உள்ளே புகுந்து நிற்கையாலே –
கண்ணாலே பார்க்கை அவத்யம் என்று செம்பளித்தாலும் உள்ளே பிரகாசிக்க தொடங்கிற்று –

ஒக்கின்ற –
ப்ரத்யஷ சாமாநாகாரமாய் இருத்தல் –
பிரயோஜனம் இரண்டு தலைக்கும் ஒத்திரா நின்றது
அங்குத்தைக்கு சீல ஸித்தி -இங்குத்தைக்கு ஸ்வரூப ஸித்தி –

அமலன் -உயர்வற உயர் நலம் உடையவன்
ஆதி -யவன்
பிரான் -மயர்வற மதி நலம் அருளினன் –
அடியார்க்கு -பயிலும் சுடர் ஒளி
விண்ணவர் கோன் -அயர்வறும் அமரர்கள் அதிபதி
வந்து -அவர் தொழுது எழு -என்றார் இவர்க்கு அவை தானே வந்து நின்றன –

———————————————————————————————

அவன் இவரை விஷயீ கரித்து -தொடர்ந்து வந்து -தம் திரு உள்ளத்திலே ப்ரகாசித்த படியை சொல்லி
இனி தாம் மேல் விழுந்தபடி சொல்லுகிறார் –
வந்து உனதடியேன் மனம் புகுந்தாய் -புகுந்ததிற் பின் வணங்கும் என் சிந்தைனைக்கு இனியாய் –
தான் அறிந்து சேரில் விஷயத்தின் போக்யதைக்கு குற்றமாம் –
போக்யதை அளவு பட்டதும் அல்ல  -ஆசையும் அளவு பட்டது அல்ல –
கடலோதம் கிளர்ந்து அலைக்கப் புக்கால் -உள்ளே கிடந்த தோர் துரும்பு கடலை அளவிட்டு அல்லவே
ஈன்று அணித்தான நாகு -தன் கன்றுக்கு வாசனை இல்லாமையாலே முதலில் தானே தன்
முலையை அதின் வாயிலே கொடுக்கும் -பின்பு சுவடு அறிந்தால் கன்று தானே இது
காற் கடைக் கொள்ளிலும் மேல் விழும் இறே-

உவந்த உள்ளத்த்னாய் உலகம அளந்து அண்டமுற
நிவர்ந்த நீண் முடியன் அன்று நேர்ந்த நிசாசரரைக்
கவர்ந்த வெங்கணைக் காகுத்தன் கடியார் பொழில் அரங்கத்தம்மான் அரைச்
சிவந்த வாடையின் மேல் சென்றதாம் என சிந்தைனையே —-2-

உவந்த உள்ளத்தனாய் –
பிரஜை பால் குடிக்கக் கண்ட மாதாவைப் போலே உகக்கிறான் -ஆழ்வாரை
அகப்படுதுகையால் வந்த ப்ரீதி
சர்வேஸ்வரன் -அவாப்த சமஸ்த காமன் -ஸ்ரீயபதி -அவாக்ய -அநாதர -பூரணன் –

உலகம் அளந்த
கதா புன -என்றும் -படிக்களவாக நின் பாத பங்கயமே தலைக்கு அணியாய் -என்றும்
அபேஷியாய் இருக்க -பெரிய பிராட்டியார் கூசிப் பிடிக்கும் மெல்லடிகளால் -காடு மேடுகள்
என்று பாராதே -சேதன அசேதன விபாகம் பாராதே –
வசிஷ்ட சண்டாள விபாகம் பாராதே -ஸ்த்ரி பும்ஸ விபாகம் அற -ஞான அஞ்ஞான விபாகம் அற பரப்பினால்
இப்படி உபகரிப்பதே என்று உகக்க பிராப்தமாய் இருக்க -இவர்கள் அறிவு கேடே ஹேதுவாக -விலக்காது
ஒழியப் பெற்றோமே என்று இரட்டிக்கப் புகுந்த திரு உள்ளத்தனாய் –
உகக்க அறியாமை -வன் மாய வையம் -என்பதால் இறே
பக்திமான்களும் பாதகிகளும் ஒக்க வாழ்ந்து போகும்படி திருவடிகளை வைத்து
எதிர்தலை அறியாது இருக்க தானே வைக்கிறது வாத்சல்யம் இறே
உறங்குகிற பிரஜையை தாய் கட்டிக் கொண்டு கிடக்கிறது வாத்சல்யம் அன்றோ
இவற்றை பிரிந்தால் வ்யசனமும் தன்னதே இறே-

அண்டம் உற
அண்ட கடாஹம் வெடித்து அடி பிடிக்க வேண்டும்படி அபேஷிதம் பெற்று வளர்ந்த படி –
அண்டம் மோழை எழ –
நிவர்ந்த
பூ அலர்ந்தால் போலே
நீண் முடியன் –
உபய விபூதிக்கும் நிர்வாஹகன் என்று தோற்றும் படி தரித்த முடி
ஒரு காலும் காமரு சீர் அவுணன் உள்ளத்து எண் மதியும் கடந்து -என்று திருவடி
வளர்ந்ததை காட்ட இருக்க -திருவடி வளர்த்தி சொல்வது ப்ராப்தமான திருவடிகள் என்று தோற்ற –
அர்த்திதத்தை பெற்ற உகப்பு திரு உள்ளத்தில்
அவன் தான் அறிய உகக்க ஒண்ணாதே –
திருக்கையிலே நீர் விழுந்தவாறே அந் நீரே பற்றாசாக வளர்ந்து அளந்து கொண்டான்
நிகர்ஷம் பாராதே -அரவிந்தப் பாவையும் தானும் அகம்படி வந்து -புகுந்து
சித்தம் ராகாதி தூஷிதமாய் இருக்கையாலே கால் பொருந்தி இருக்க மாட்டானே
அந்த விரோதி போக்குபவனும் அவனே-

அன்று நேர்ந்த நிசாசரரை கவர்ந்த வெங்கணை -காகுத்தன்
கண்ட காட்சியிலே ஜிதம் என்று இருக்குமவன் -எதிரிட்ட பையல்களை முடிக்கைக்கு
செவ்விய சரத்தை உடையவன் –
விடும்  போது அம்பாய் படும் போது காலாக்னி போலே இருக்கை –
பெருமாள் கண் பார்க்கிலும் முடித்து அல்லாது நில்லாத வெம்மை –
அவன் தன்னைப் போலே ஆய்த்து அம்புகளும்
சரங்கள் ஆண்ட தண் தாமரைக் கண்ணனுக்கு அன்றி என் மனம் தாழ்ந்து நில்லாதே –
கோ குணவான் -சீலம் சொல்லி கச்ச வீர்யவான் -வீரத்தை சொன்னது போலே
மாம் அஹம் இரண்டையும் சொன்னார்
உலகம் -அளந்து திருவடிகள் விக்ரமித்தபடி
கவர்ந்த வெங்கணை காகுத்தன் -திருத் தோள்கள் ப்ராக்ரமித்த படி –
காகுஸ்தன் -குடிப்பிறப்பால் தரம் பாராதே விஷயீ கரித்ததும் வீர ஸ்ரீ காட்டி -அருளியதும்-

கடியார் -பொழில் அரங்கத்தம்மான்
உலகம் அளந்த ஸ்ரமமும் -ராஷச வாத ஸ்ரமமும் தீர பரிமளம்
சோலை உடைய கோயிலே அந்த திருவடிகளையும் திருத் தோள்களையும் நீட்டிக் கொண்டு சாய்ந்து அருளினான்
கொடியார் மாடக் கோளூர் அகத்தும் புளிங்குடியும்
மடியாது இன்னே நீ துயில் மேவி மகிழ்ந்தது தான்
அடியார் அல்லல் தவிர்த்த அசைவோ அன்றேல்
இப்படி தான் நீண்டு தாவிய அசைவோ பணியாயே –
கொடி கட்டிக் கொண்டு கிடக்க வேண்டுமோ என்று வயிர் பிடிக்க வேண்டாதபடி இவன் கண் வளர்ந்து அருளுகிற படி –
சர்வகந்த–கண் வளர்ந்து அருளுகையாலே கடியார் பொழில்
இத்தால் போக்யதை சொல்லிற்று-

என் சிந்தனை
திருவடிகளின் சுவடு அறிந்து பின்பு புறம்பு போக மாட்டாத நெஞ்சு
துறையிலே பிள்ளையைக் கெடுத்து திரு ஓலக்கத்திலே காண்பாரைப் போலே

முதல் -பாசுரம் -பாதம் -வந்து என்று சாதனா பாவம் சொல்லி -இதில்
சென்றதாம் -அதிகாரி ஸ்வரூபம் -தம் திரு உள்ளம் மேல் விழுந்ததாக சொல்கிறார்-

————————————————————

மந்தி பாய் வட வேங்கட மாமலை வானவர்கள்
சந்தி செய்ய நின்றான் அரங்கத்து அரவின் அணையான்
அந்தி போல் நிறத்தாடையும் அதன் மேல் அயனைப் படைத்த தோர் எழில்
உந்தி மேலதன்றோ அடியேன் உள்ளத்து இன்னுயிரே–3-

மந்தி பாய் –
வேரே பிடித்து தலை அளவும் பழுத்த பலா பழங்கள் தாவும் மந்தி போலே –
பெரிய பெருமாள் உடைய திவ்ய அவயவங்களிலே இவர் ஆழம் கால் படுவது -போலேயும்
பரமபதமும் திருமலையும் திரு அயோத்யையும் திருச் சோலையையும் இவனுக்கு ஒரு போகியாய் இருக்கிறபடி –
எங்கும் மாறி மாறி தங்குகை –

திரு பீதாம்பரத்தின் அழகின் மிகுதி திரு நாபீ கமலத்தில் வீச
தன்னுடைய மேன்மையும் அழகையும் காட்டி இவர் மனஸை தன் பக்கலிலே இழுத்துக் -கொள்ள
அனுபாவ்யதை எல்லை கண்டு மீளாமல் சாபல்யத்தால் இழுப்புண்கிறார்
அன்று ஞாலம் அளந்த பிரான் சென்று சேர் திருவேம்கடம் –
எந்நாளோ நாம் மண் அளந்த இணைத் தாமரைகள் காண்பதற்கு -என்று திருவேம்கடமுடையான் திருவடிகளைக்
காண பிரார்த்தித்து –
அடிக்கீழ் அமர்ந்து புகுந்து அடியீர் வாழ்மின் -என்று தன் திருக்கையால்
உலகம் அளந்த பொன்னடியைக் காட்டிக் கொடு நிற்கிறவனுமாய்
தானோங்கி நிற்கின்றான் த்ண் அருவி -வேம்கடம்
அவனே இங்கு வந்து கண் வளர்ந்து அருளுகிற பெரிய பெருமாள் என்கிறார்-

மா மலை
போக்யதையின் -மிகுதியை சொல்லுகிறது –
பரன்  சென்று சேர் -சேஷி ரஷகத்வ சித்த்திககவும்
முன்னம் -அடைமினோ -சேஷபூதர் ஸ்வரூப சிததிககாகவும்
வந்து சேரும் ஸ்லாக்யதையை சொல்லுகிறது ஆகவுமாம் –
சூரிகள் சீல குணம் அனுபவிக்க வரலாம்படி உயரத்தை சொல்லுகிறதாகவுமாம் –
உபய விபூதியும் ஒரு மூலையில் அடங்கும் என்றுமாம்-

அரங்கத்து அரவின் அணையான்
அங்கு நின்றும்  இங்கே சாய்ந்தபடி
பரம பதத்தின் நின்றும் அடி -ஒற்றினான் திருமலை அளவும் பயணம் உண்டாய் இருந்தது
அங்கும் நின்றும் வடக்கு திருவாசலாலே வந்து கோயிலிலே சாய்ந்தான்
இனி சம்சாரம் கிழங்கு எடுத்தால் அல்லது கிளம்பான் –
ராமாவதாரத்தே பிடித்து அடி ஒற்றினான் -ராவண வதம் பண்ணி தெற்குத் திரு வாசலாலே வந்து சாய்ந்தான்
ஆற்றாமையைக் காட்டி சரணம் புக்கு கிடக்குமவர் இவர்

அந்தி போல் நிறத்தாடை அரைச் சிவந்த ஆடை -என்றது பின்னாட்டுகிறது
சிவந்த ஆடை ஆபரணம் போலே கழற்ற முடியுமே -அந்தி போல் நிறத்தாடை  சஹஜம் என்கிறார் –

ஓர் எழில் உந்தி –
பிரசவ அந்தமான அழகு போல் இன்றி -பிரமனை உண்டாக்கிய பின்பு ஒளியும் அழகும் மிக்கது -இளகிப் பதிக்கை –
சௌந்தர்யம் ஆகிய பெரிய ஆறு -திருமுடி யாகிற மலைத்தலை யினின்றும்
அகன்ற திரு மார்பாகிற தாழ் வரையிலே வந்து குதி கொண்டு -அங்கே பரந்து கீழ் நோக்கி
இழிந்து -சிற்றிடை யாகையாலே அங்கே இட்டளப் பட்டு -பின்பு
திரு நாபியாய் சுழி யாறு பட்டது

அடியேன்
இந்த அழகுக்கு தோற்று அடியேன் என்கிறார் -பதிம் விச்வச்ய பிரமாணாத்தால் அல்ல –
குணைர்த் தாஸ்யம் உபாகத ராய் சொல்லு கிறாரும் அன்று

உயிர் -என்கிறது மனஸை
வடிவு அழகு ரசித்து போக்யமாய் இருக்கையாலே இன் உயிர் என்கிறார்
சிலரை உண்டாக்குகிறது கிடீர் என்னை அழிக்கிறது
ப்ரஹ்மாதிகளை உண்டாக்கும் நாபி -அடியேன் -என்று இருப்பாரை அழிக்கும்

——————————————

சதுரமா மதிள் சூழ் இலங்கைக்கு இறைவன் தலை பத்து
உதிர வோட்டி ஓர் வெங்கணை வுய்த்தவன் ஓத வண்ணன்
மதுர மா வண்டு பாட மா மயிலாட அரங்கத்தம்மான் திரு வயிற்று
உதர பந்தம் என்னுள்ளத்துள் நின்றுலாகின்றதே —-4-

நானும் என்னுடையது அன்று –
மற்றும் என்னுடையதாவன ஒன்றும் இல்லை -என்கிற நமஸ் ஸில் அர்த்தத்தை மறை பொருளாக
அனுசந்திகிறார்
மதுர மா வண்டு பாட –
வினை அற்றவாறே ஆடல் பாடலுக்கு இடம் கொடுத்த படி
சிலர் பாடினால் ஆடுவாரும் வேணுமே
மயில்கள் ஆடப் புக்கன
மா மயில் –
ஒரு மயில் தோகை விரித்தால் அத் திருச் சோலைக்கு அணுக்கன் இட்டாப் போலே இருக்கை
ருஷிகள் கொண்டைக் கோல் கொண்டு ஆடுகை தவிர்ந்து மயில்கள் ஆடப் புக்கன
குரங்குகள் கூத்தாட்டாதல் இவற்றின் கூத்தாட்டாதல் என்றும் திர்யக் யோநிகளுக்கு நிலமாகை-

வண்டு பாட மா மயில் ஆடு
ஸ்ரீ வைகுண்ட நாதன் பெரிய பெருமாள் ஆனவாறே
நித்யசூரிகளும் வண்டுகளும் மா மயில்களும் ஆனபடி
சர்வை பரி வ்ருதோ தேவைர் வாநரத்வ முபாகதை -என்னக் கடவது இறே
ராஜா வெள்ளைச் சட்டை இட்டால் அடியார் கறுப்புச் சட்டை இடும் இத்தனை இறே-

கோயிலிலே சோலைகள் நித்ய வசந்தமாய் மது ஸ்பீதமாய் இருக்கையாலே
அந்த மதுவை கழுத்தே கட்டளையாக பானம் பண்ணி
அந்த ஹர்ஷதுக்கு போக்கு வீடாக வண்டுகளானவை கல்வியால் வரும் அருமை இல்லாமையாலே
பாட்டை மதுரமாம் படியாக -தென்னாதெனா -என்று முரலா நிற்க
சிந்துக்கு ஆடுவாரைப் போலே ஸ்லாக்யமான மயில்கள் ஆனவை -இவ் ஊரில் சோலை
கொண்டல் மீது அணவும் சோலை யாகையாலே ஆலித்து ஆடா நிற்கும்-

என் உள்ளத்துள் நின்று உலாகின்றதே
அந்த திருப் பீதாம்பரத்திலும் செல்ல ஒட்டாதே -திரு நாபீ கமலத்தின் நின்றும் வர வீர்த்து
இதுக்கு ஆச்ரயமான திரு வயிற்றிலும் போக ஒட்டாதே தான் மேலே விழுந்து ரஷித்து
தன் ஏற்றம் அடைய தோற்றும்படி -மத்த கஜம் போலே செருக்காலே பிசகி நின்று உலவா நின்றது –

என்னுடைய பெரிய
ஹ்ருதயத்தில் நின்று அழகு செண்டேறா நின்றது

ப்ரஹ்மாதிகளை எல்லாம் அகம்படியிலே ஏக தேசத்திலே
வைத்து உய்யக் கொண்ட ஸ்ரீ மத்தையை உடைத்தான திரு வயிற்றின் உடைய
சிறுமை பெருமைகளால் உண்டான அகடி தகடநா சக்திகளுக்கு அடையவளைந்தான் போலே
யிருக்கிற உதர பந்தம் தம்முடைய சிறிய திரு உள்ளத்துக்கு உள்ளே வெளியில் போலே
இடம் கொண்டு உலவா நின்றது -இது ஒரு ஆச்சர்யம் என்கிறார்

————————————————————–

தம் திரு உள்ளம் திரு நாபீ கமலத்தில் சுழி யாறு படுகிற படியைக் கண்டு
திரு நாபீ கமலத்துக்கு ஆச்ரயமான திரு வயிறும் -இந்த திரு நாபீ கமலத்துக்கு
வெறும் ப்ரஹ்மா ஒருவனுக்கு இருப்பிடமான மேன்மையும் அழகும் அன்றோ உள்ளது –
இதுக்கு ஆச்ரயமான நம்மைப் பார்த்தால் –
பக்த முக்த நித்ய ரூபமான த்ரிவித சேதனருக்கும்
த்ரி குணாத் மகமாயும் சுத்த சத்வாதமகமாயும் -சத்வ சூன்யமுமாயும் உள்ள அசேதன வர்க்கத்துக்கும்
ஆரச்யமான மேன்மையும் -ஆஸ்ரிதர்க்கு கட்டவும் அடிக்க்கவுமாம் படி எளியோமான
சௌலப்ய நீர்மையையும் உடையோமான ஏற்றத்தாலே பட்டம் கட்டி அன்றோ நாம் இருப்பது
என்று தனக்கு திரு நாபீ கமலத்தில் உண்டான ஏற்றத்தையும் காட்டி -திரு நாபீ கமலத்தில்
ஆழங்கால் படுகிற் என்நெஞ்சை தன் பக்கலிலே வர இசிக்க -அத் திரு வயிற்றை ஆச்ரயமாகப்
பற்றி நிற்கிற திரு உதர பந்தநம் தன் பக்கலிலே வர ஈர்த்து மேலிட்டு நின்று தம் திரு உள்ளத்திலே
ச்வரை சஞ்சாரம் பண்ணுகிற படியைச் சொல்லுகிறார்-

சதுரமா மதிள் சூழ் இலங்கைக்கு இறைவன் தலை பத்து
உதிர வோட்டி ஓர் வெங்கணை வுய்த்தவன் ஓத வண்ணன்
மதுர மா வண்டு பாட மா மயிலாட அரங்கத்தம்மான் திரு வயிற்று
உதர பந்தம் என்னுள்ளத்துள் நின்றுலாகின்றதே —-4-

சதுர மா மதிள் சூழ் –
ஈஸ்வரன் நேர் நிற்கவும் எதிரிடப் பண்ணின மதிள் இறே
இவ்வழகையும் அரணையும் விஸ்வசித்து இறே பையல் பெருமாளோடே எதிரிட்டது
இது தானிட்ட மதிள் என்று அறிந்திலன்
அரணுக்கு உள்ளே இருக்கச் செய்தே பெருமாளோடே எதிர்க்கையாலே இது தான் அழிகைக்கு உடல் ஆய்த்து –
அவ்வரணை விட்டுப் பெருமாள் தோளையே அரணாகப் பற்றின ஸ்ரீ விபீஷண ஆழ்வான்
கச்த ஏவ வ்யதிஷ்டத -என்று ஆகாசத்திலே நிலை பெற்று நின்றான் இறே-

ஓத வண்ணன் –
ராவண வதம் பண்ணி -ஸ்ரீ விபீஷண ஆழ்வானுக்கு முடி கொடுத்து -க்ருதக்ருத்யனாய்
ப்ரஹ்மாதிகள் புஷ்ப வ்ருஷ்டியும் ஸ்தோத்ரமும் பண்ண -வீர ஸ்ரீ தோற்ற
ஸ்ரமஹரமான வடிவோடே நின்ற நிலை

ஓத வண்ணன் -என்று பெரிய பெருமாளை சொல்லுகிறது ஆகவுமாம் –
இத்தால் பிரதிகூலரை அம்பாலே அழிக்கும் -அநுகூலரை அழகாலே அழிக்கும் -என்கை-

ஓத வண்ணன் –
கண்டவர்களுடைய பாபத்தையும் தாபத்தையும் கழிக்க வற்றாம் சமுத்ரம் போலே ச்யாமளமான
திருமேனியை உடையவன் –

மதுர மா வண்டு பாட மா மயில் ஆட அரங்கத்தம்மான் –
ராவண வதம் பண்ணின வீர லஷ்மியுடனே நின்ற அழகைக் கண்டு
ப்ரஹ்மாதிகள் ஸ்தோத்ரம் பண்ண -அப்சரஸ் ஸூக்கள் மங்கள ந்ருத்தம் பணணினாப் போலே  –
ஆத்மாநாம் மாநுஷம் மன்யே -என்கிற பெருமாளுடைய பூமிகைக்கு அநுரூபமாக
முக்தரும் நித்தியரும் கூடி -ரூபாந்தரம் -கொண்டு வந்தார்கள் என்னலாம்படி
அதி மதுரங்களாய் -ஜஞாநாதி குண மகாத்தையும் உடையவையான வண்டுகள்
காலப் பண்கள் பாட -பாட்டுக்கு அநுகுணமாக குணாதிகங்களான நீல கண்டங்கள்
ந்ருத்தம் பண்ண -இக்கீத ந்ருத்தங்களாலே மங்களோத்தரமான கோயில் ஆழ்வாருக்கு
உள்ளே சர்வாதிபதியான படி தோற்றக் கண் வளருகிற பெரிய பெருமாள் உடைய

திரு வயிற்று உதர பந்தம் -என் உள்ளத்துள் உலாகின்றதே –
தாமோதரம் பந்த கதம் -என்கிறபடியே பந்தகதருக்கு மோஷ ஹேதுவான தாமோதரத்வத்தை
வெளி இடா நின்ற திரு வயிற்றில் -திரு உதர பந்தம் -என்று திரு நாமத்தை உடைத்தான
திரு வாபரணம் அதி ஷூத்ரனான என்னுடைய அதி ராக தூஷிதமான ஹ்ருதயதினுள்ளே
அதுவே நிவாஸ பூமி என்னும்படி நின்று -அளவற்ற போக்யதா ப்ரகாசக வ்யாபாரங்களைப்
பண்ணா நின்றது

இது திரு மந்த்ரத்திலும் திரு மேனியிலும் மத்யத்திலே வரும் அனுபவம் –

———————————————————

ஸ்ரீ நாராயண சப்தார்தம் உள்ளீடாகப்
பெரிய பிராட்டியார் உடைய நிவாஸத்தால் நிகரில்லாத திரு மார்பை அனுபவிக்கிறார் –

அந்த திரு வயிற்ருக்கு ஒரு கால விசேஷத்திலே காதா சித்கமாக சகல அண்டங்களையும்
வைத்ததால் உண்டான மதிப்பும் -ஒரு கால் யசோதைப் பிராட்டி கட்ட அத்தால் வந்த
சௌலப்யமும் இறே இருப்பது -அப்படி யன்றே திரு மார்பு –
ஸ்ரீ வத்ஸ ஸம்ஸ்தாந தரமநந்தேச சமாச்ரிதம் -ப்ரதாநம் –என்றும்
ஆத்மாநமஸ்ய ஜகதோ நிர்லேபம குணா மலம்
பிபர்த்தி கௌஸ்துப மணி ஸ்வரூபம் பகவான் ஹரி -என்றும் சொல்லுகிறபடியே
சர்வ காலமும் சேதன அசேதனங்களை ஸ்ரீ வத்ஸ கௌஸ்துப முகத்தாலே தரித்துக் கொண்டு இருக்கிற
பெரிய மதிப்பையும் -அவனுடைய ஸ்வரூபாதி களுக்கு நிரூபக பூதையாய் -நீர்மைக்கு
எல்லை நிலமாய் இருக்கிற பெரிய பிராட்டியாருக்கு கோயில் கட்டணமாய் இருக்கிற
ஏற்றத்தையும் உபய விபூதி நாதன் என்று இட்ட தனி மாலையை தரித்துக் கொண்டு இருக்கிற
ஆகாரத்தையும் உடைத்தாய் –
அக்கு வடமுடுத் தாமைத்தாலி பூண்ட வனந்த சயனன் -என்கிறபடியே யசோதை பிராட்டி
பூட்டின ஆபரணங்களையும் உடைத்தாய் இறே இருப்பது-
ஆகையாலே –
அந்த திரு மார்பானது -திரு வயிற்றில் காட்டில் தனக்கு உண்டான ஆதிக்யத்தையும்
சௌலப்யத்தையும் திருவாரம் உள்ளிட்ட ஆபரண சேர்த்தியால் வந்த அழகையும் உடையோம் நாம் அன்றோ –

பாரமாய பழ வினை பற்றறுத்து என்னைத் தன்
வாரமாக்கி வைத்தான் வைத்த தன்றி யென்னுள் புகுந்தான்
கோர மா தவம் செய்தனன் கொல் அறியேன் அரங்கத் தம்மான் திரு
ஆர மார்பதன்றோ அடியேனை யாட் கொண்டதே —–5-

பாரமாய –
மலக்கு நா வுடைய
நம்மாழ்வாரும் வகை சொல்ல மாட்டாதே -தொன் மா வல் வினைத் தொடர் -என்று திரளச்
சொன்னாப் போலே -இவரும் பாரமாய -என்கிறார் -கர்மத்தின் உடைய கனத்தினாலே

தன் வாரமாக்கி வைத்தான் –
தான் -என்றால் பஷ பதிக்கும்படி பண்ணினான் –
என் கார்யம் தனக்கு கூறாக என் பேரிலே தனக்கு இருப்பென்று தன் பேரிலே
எனக்கு இருப்பாக்கின படி –

வைத்ததன்றி –
இந்த நன்மைகளுக்கு மேலே –
என்னுள் புகுந்தான் –
பின்னையும் தன் ஆற்றாமையாலே விடாய்த்தவன் தடாகத்தை நீக்கி உள்ளே
முழுகுமா போலே -என் உள்ளம் புகுந்தான் -என் ஸ்வரூப ஜ்ஞானம் குலையாதபடி என் நெஞ்சிலே வந்து புகுந்தான்

கோர மா தவம் செய்தனன் கொல் அறியேன் –
அநாதி காலம் இழந்த வஸ்துவைப் பெறுகைக்கு அகர்ம வச்யனான ஈஸ்வரன் தானே –
அவதார ஷேத்ரமான அயோத்யையும் விட்டு –
ஆஸ்ரீதன் இருப்பிடமான லங்கையிலும் போகாதே –
கங்கையில் புனிதமாய காவிரி  நடுவு பாட்டிலே –
அதி கோரமாய் -அதி மஹத்தாய்  இருப்பதொரு தபஸை பண்ணினானோ -அறிகிலேன்
அவன் தானே நதீ தீரத்திலே கிடந்து தபஸ் ஸூ பண்ணினானோ அறிகிறிலேன் –

திரு வார மார்பதன்றோ –
பெரிய பிராட்டியாரையும் ஹாரத்தையும் உடைத்தான -மார்வன்றோ
தமக்கு பற்றாசாகத் தாய் நிழலிலே ஒதுங்குகிறார்
சிறையில் இருந்தே சேர விடப் பார்க்கிறவள்
மார்பிலே இருந்தால் சேர விடச் சொல்ல வேணுமோ

ஆள் கொண்டது –
இழந்த சேஷத்வத்தை தந்தது –
அடியேனை ஆள் கொண்டதே –
ராஜ்யம் இழந்த ராஜ புத்ரனை அழைத்து முடி சூட்டுமா போலே –
அழகிலே அழுந்தின என்னை -அவன் குணம் கிடீர் பிழைப்பிததது -என்கிறார் –
அழகிலே அழுந்தினாரை குணத்தைக் காட்டிப் பிழைப்பிக்கலாம் –
குணத்திலே அழுந்தினார்க்கு குணமே வேணும் –
நீரிலே அழுந்தினார்க்கு நீரை இட்டுப் பிழைப்பிக்க விடும் இத்தனை யன்றோ உள்ளது

இத்தால் -நிர்ஹேதுகமாக விஷயீ கரித்தான் என்றபடி –
தம்மையையும் தம் உடைமையையும் நமக்கு ஆக்கினவர்க்கு
நம்மையையும் நம் உடைமையையும் அவர்க்கு ஆக்கின முறை
முதுகு தோய்த்தோம் இத்தனை யன்றோ என்று எல்லாம் செய்தும் தான் ஒன்றும் செய்திலனாய்
இறே அவன் இருப்பது –

அடியார்க்கு என் செய்வன் என்றே இருத்தி  நீ -என்னக் கடவது இறே –
அறியேன் -என்றவர் தாமே
சர்வதா இக் கனத்த பேற்றுக்கு ஒரு ஹேது வுண்டாக வேணும் என்று விசாரித்து
அறிந்தேன் என்கிறார் மேல் –
அரங்கத்தம்மான் திரு வார மார்பதன்றோ வடியேனை யாட் கொண்டதே –
இவருடைய விரோதியைப் போக்கி
உஜ்ஜீவிப்பைக்கைக்காக வாய்த்து இங்கு வந்து சாய்ந்து அருளிற்று –
இவருடைய பேறு தன்னதாம்படி தாம் பண்ணுகைக்கு உண்டான ப்ராப்தியைச் சொல்லுகிறது
இப் பேற்றுக்கு ஆற்றங்கரையைப் பற்றிக் கிடந்து தபஸ் பண்ணினானும் அவனாய் இருந்தது –
இல்லையாகில் எனக்கு இக்கனவிய பேற்றுக்கு வேறு உபாயம் உண்டாக மாட்டாதே-

அடியேனை –
ஞான ஆனந்தங்களுக்கு முன்னே சேஷத்வம் பிரதம நிரூபகமான என்னை யன்றோ-

ஆள் கொண்டது –
இழந்த சேஷத்வத்தை தந்தது –
முடிக்கு உரியவனை முடி சூட்டுமா போலே -என்னுடைய
ஸ்வரூப -விரோதியையும் ஆஸ்ரயண விரோதியையும் -உபாய விரோதியையும்
உபேய விரோதியையும் -போக விரோதியையும் -போக்கி
ஸ்வரூப அநுரூபமான கைங்கர்யத்தைக் கொண்டது –
தன்னுடைய மேன்மையையும் அழகையும் -காட்டி -என்னை அநந்யார்ஹமாம் படி பண்ணி
பெரிய பிராட்டியாரை இடுவித்து -ந கச்சின்நா பராத்யதி -என்னப் பண்ணி
பெரிய பெருமாளை யிடுவித்து -என்னுடைய விரோதி பாபங்களை சவாசனமாகப்
போக்குவித்து -அவர் தம்முடைய போக்யதையை என் நெஞ்சிலே பிரகாசிப்பித்துக் கொண்டு
புகுரும்படி பண்ணி என்னுடைய ஸ்வரூப அநு ரூபமான கைங்கர்யத்தைக் கொண்டது அந்தத் திரு மார்பு அன்றோ

என்னைப் போலே இருப்பார் -வேறே சிலரைத் திருத்தி அடிமை கொள்ளுகைக்கு
பாயும் நீர் அரங்கம் தன்னுள் பாம்பணைப் பள்ளி கொண்ட மாயனார் திரு நன் மார்வும்
மரகத வுருவும் தோளும் தூய தாமரைக் கண்களும் துவர் இதழ்ப் பவள வாயும் ஆய சீர்
முடியும் தேசும் -என்று தாம் கிடக்கிற ஊருக்கு அலங்காரமான ஆற்றழகு தொடங்கி
காட்ட வேண்டிற்று -எனக்கு மார்பு ஒன்றுமே யமைந்தது –

ஈஸ்வரன் உடைய
இரக்கத்தின் ப்ராதான்யத்திலே தாத்பர்யமாகவுமாம்

இப்படி ஷூத்ரனான என் திறத்தில் இறங்கினவன் தான் –
தேற ஒண்ணாத -திருவில்லாத் தேவரில் ஒருவன் அல்லன் –
அகலகில்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை யுறை மார்பன் -என்னும் -இடத்தையும் –
சேஷபூதரான தமக்கு -ஸ்ரீ தரனே கைங்கர்ய பிரதிசம்பந்தி என்னும் இடத்தையும்
திறம்பாத சிந்தைக்கு சிக்கெனக் காட்டிக் கொடுக்கிறார் –

அரங்கத்தம்மான் திரு வார மார்பதன்றோ அடியேனை யாட் கொண்டதே –
சர்வருக்கும் அனுபவிக்கலாம்படி -சர்வ சாஹிஷ்ணுவாய்க் கொண்டு -கோயில் ஆழ்வாருக்கு
உள்ளே சௌலப்ய காஷ்டையோடு விரோதியாத ஸ்வாமித்வ காஷ்டையை உடையரான
பெருமாளுடைய சேஷித்வ பூர்த்திக்கு லஷணமான திருவையும்
அழகு வெள்ளத்துக்கு அணை கோலினால் போலே இருக்கிற ஹாரத்தையும் உடைத்தான
திரு மார்வன்றோ ஸ்வா பாவிக சேஷித்வ அநுபவ ரசிகனாய்
அதுக்கு மேலே குணைர் தாஸ்ய முபாகதனுமான என்னை ஸ்வரூப அநு ரூபமான
ஸ்தோத்ராதி சேஷ வ்ருத்தியிலே மூட்டி அதுக்கு இலக்காய்  நின்றது –

இப்பாட்டில்
பதங்களின் அடைவே
நாராயண சப்தத்தில் விவஷிதமான அநிஷ்ட நிவர்த்தகத்வமும்
இஷ்ட -ப்ராபகத்வமும் –
உள்ளும் புறமும் வியாபித்து நிற்கும் -படியும்
நித்ய -கிருபையும்
உபாயத்துக்கு பிரதானமான சௌலப்யமும்
ப்ராப்யத்துக்கு பிரதானமான ஸ்வாமிதவமும்
சர்வ அநு குணமான ஸ்ரீயபதித்வமும்
பூஷண அஸ்த்ர ரூபங்களாக புவனங்களை தரிக்கிற போக்ய தமமான விக்ரஹ யோகமும்
நார சப்தார்த்தமான தாஸ பூதன் ஸ்வரூபமும்
தாஸ்ய பலமாக பிரார்த்திக்கப்படும் கைங்கர்யமும்
அனுசந்தேயம்

————————————————————–

இப் பாட்டில் ஐஸ்வர்யார்த்திகளாருடைய ஐஸ்வர்ய விரோதியான
பிஷூ தசையை கழிக்கும் படியை உதாஹரிக்கிறார்-

சர்வ லோகத்தையும் அமுது செய்து அருளின கண்டத்தின் அழகு என்னை
உண்டாக்கிற்று -என்கிறார் –
திருமார்பின் அழகு திருக் கழுத்திலே ஏறிட்டது -என்னவுமாம்-

ஸ்ரீ பாஞ்ச ஜன்யம் போலே இருக்கிற திருக் கழுத்தானது-

இந்த திரு மார்புக்கு உள்ளது -அலர்மேல் மங்கை யுறை மார்பா -என்கிறபடியே
பெரிய பிராட்டியாருக்கு கோயில் கட்டணமாய் இருக்கிற -ஆகாரமும்
திருவாரத்தாலே அலங்க்ருதமான ஆகாரமுமே யன்றோ –
இவளைப் போலே -சங்கு தங்கு முன்கை நங்கையாய் இருப்பார் அநேகம் நய்ச்சிமார்
ஸாபரணமான தங்கள் கைகளால் அணைக்கை யாலே -அவ் வாபரணங்கள் அழுத்த
அவற்றாலே முத்ரிதராய் இருப்போமும் நாம் அல்லோமோ –
பிரளய ஆபத்து வர சகல அண்டங்களையும் தத் அந்தர்வர்த்திகளையும் ரஷித்தோமும்
நாம் அல்லோமோ -அது வும் கிடக்க பாண்டவர்கள் தூது விடுகிற போது கட்டிவிட்ட
மடக்கோலை இன்றும் நம் பக்கலிலே அன்றோ கிடக்கிறது –
அந்த ஹாரம் தனக்கும் தாரகம் நாம் அல்லோமோ –
என்றாப் போலே தன்னுடைய ஆபரண சோபையையும் -யௌவனத்தையும் -ஆபன் நிவாரகத்வத்தையும்
காட்டி என்னை சம்சாரம் ஆகிற பிரளயத்தின் நின்றும் எடுத்து உஜ்ஜீவிப்பித்தது என்கிறார் –

துண்ட வெண் பிறையன் துயர் தீர்த்தவன் அஞ்சிறைய
வண்டு வாழ் பொழில் சூழ் அரங்க நகர் மேய வப்பன்
அண்ட ரண்ட பகிரண்டத் தொரு மாநிலம் எழுமால் வரை முற்றும்
உண்ட கண்டம் கண்டீர் அடியேனை யுய்யக் கொண்டதே —-6-

துண்ட வெண் பிறையன் துயர் தீர்த்தவன் –
சலம் கலந்த செஞ்சடைக் கறுத்த கண்டன் வாச நீர் கொடுத்தவன் -என்கிறபடியே
தீர்த்த சேவையாலும் -தன் தபசாலும் -தன் சக்தி மத்தையாலும் போக்க ஒண்ணாத வலிய துயரை
பிராட்டி புருஷாகாரமாக தன் மார்பில் வாச நீரால் போக்கினது -தம்முடைய துயரை போக்கினதுக்கு
நிதர்சநமாய் இருக்கையாலே அவனை உதாஹரணம் ஆக்குகிறார் –

துண்ட வெண் பிறையன் துயர் தீர்த்தவன் -சந்த்ரனுடைய ஷயத்தைப் போக்கினான் என்றுமாம் –
அவனுடைய துயரத்தைப் போக்கினாப் போலே என்னுடைய துரிதத்தையும் போக்கும் என்று கருத்து-

பெரிய பெருமாளுக்கு ஆபரணமாய் ஊருக்கும் ஆபரணமாய் இருக்கும் சோலை
சோலைக்கு ஆபரணமாய் இருக்கும் வண்டுகள் –
வண்டுகளுக்கு ஆபரணமாய் இருக்கும் அழகிய சிறகு -என்கை

உண்ட கண்டம் -சேஷ பூதனுக்கு கைங்கர்யம் தாரகமாய் இருக்குமா போலே
இவற்றின் உடைய ரஷணம் தனக்கு தாரகமாய் இருக்கிறபடி
இப்பாட்டால் –
அந்தர்யாமி ப்ராஹ்மணத்தில் சொல்லுகிறபடியே சர்வ வ்யாபகத்வ சக்தியும் உண்டு என்கிறார் –

அண்ட ரண்ட பகிரண்டத் தொரு மாநிலம் எழுமால் வரை முற்றும்
உண்ட கண்டம் கண்டீர் அடியேனை யுய்யக் கொண்டதே-

அண்டாந்த வர்த்திகளான தேவாதி வர்க்கங்களையும் -அண்டங்கள் தன்னையும் –
அண்ட ஆவரணங்களையும் -அண்டங்களுக்கு உள்ளே பஞ்சாசதகோடி விச்தீரணையான
மஹா ப்ருதிவியாலும் குல பர்வதங்களாலும் உப லஷிதங்களான சர்வ கார்யங்களையும்
எல்லாம் திரு வயிற்றிலே வைத்து ரஷிக்கைக்காக விழுங்கின திருக் கழுத்து கண்டீர் –
ஸ்வரூபத்தை -உணர்த்தி என்னை ஸ்வ அனுபவத்தில் உஜ்ஜீவிப்பித்தது –
அண்டாதிகளைப் பற்ற சிறியலான குல பர்வதங்களை பிறியப் பேசுகையாலே
அவ்வளவு விழுங்குகையும் ஆச்சர்யம்

இவற்றைத் தனித் தனியே சொல்லுவான் என் என்னில்
தனியே சொல்லுகை போக்யமாய் இருக்கையாலே
பெரிய பெருமாள் திருக் கழுத்தைக் கண்டால் பிரளய ஆபத்தில் ஜகத்தை எடுத்துத்
திரு வயிற்றிலே வைத்தமை தோற்றா நின்றது ஆய்த்து –
அடியேனை உய்யக் கொண்டதே
முன்பு பெற்ற கைங்கர்யத்துக்கு விச்சேதம் பிறவாதபடி நோக்கிற்று
என்னை சம்சாரத்தில் ஒரு நாளும் அகப்படாதபடி பண்ணிற்று –
இப்பாட்டால்
ஆபத் ஸகனான சர்வேஸ்வரன் படியும் இங்கே உண்டு என்கிறார்

—————————————————-

திரு வதரத்திலே அகப்பட்ட படி சொல்லுகிறார் –
நீஞ்சாப் புக்குத் தெப்பத்தை இழந்தேன் என்னுமா போலே-

கையினார் சுரி சங்கனலாழியர் நீள் வரை போல்
மெய்யினார் துளப விரையார் கமழ் நீண் முடி யெம்
ஐயனார் அணி யரங்கனார் அரவின் அணை மிசை மேயனார்
செய்யவாய் ஐயோ என்னைச் சிந்தை கவர்ந்ததுவே ——-7-

கையினார் சுரி சங்கனலாழியர்–ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்துக்கு சுரி ஸ்வபாவமானாப் போலே திரு வாழி யாழ்வானுக்கும்
ப்ரதி பஷத்தின் மேலே அனல் உமிழுகை ஸ்வபாவம்
ஸ கோஷோ தார்த்தராஷ்ட்ராணாம் ஹ்ருதயா நிவ்ய தாரயத் -என்றும் –
தீய அசுரர் நடலைப்பட -முழங்கும் என்றும் சொல்லுகிறபடியே விரோதி வர்க்கத்தை
தன் த்வநியாலே தானே நிரசிக்க வல்ல ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தையும்
கருதுமிடம் பொருது -என்கிறபடியே விரோதி வர்க்கத்தை -கூறாய் நீறாய் நிலனாய் –
என்கிறபடியே அழியச் செய்யும் திரு வாழியையும் தரித்துக் கொண்டு இருக்கிறது
என்னுடைய அறுக்கலறாப் பாபங்களை போக்குகைக்கு அன்றோ –
திவ்யாயுத ஆழ்வார்கள் பெரிய பெருமாள் உடைய திருக்கைகளில் ரேகையில் ஒதுங்கிக் கிடந்தது –

நீள் வரை –
மலையை கடலை ஒப்பாக சொல்லும் இத்தனை இறே
நீட்சி போக்யதா ப்ரகர்ஷம் -பச்சை மா மலை போல் மேனி -அதுக்கு மேலே ஒப்பனை அழகு –
துளப விரையார் கமழ் நீண் முடி -பரிமளம் மிக்கு இருந்துள்ள திருத் துழாய் மாலையாலே
அலங்க்ருதமாய் ஆதி ராஜ்ய ஸூ சகமான திரு அபிஷேகத்தை உடையருமாய்
எம்மையனார் -உறவு தோற்றுகை -எனக்கு ஜனகரானவர்

அணி அரங்கனார் –
ப்ராப்த விஷயமாய் இருக்கக் கடக்க விராதே சம்சாரத்துக்கு ஆபரணமான
கோயிலிலே வந்து அண்ணியருமாய் இருக்கிற படி-

துளப விரையார் கமழ் நீண் முடி –
பெரியவர்கள் கார்யம் செய்தவன் உம்முடைய கார்யம்
செய்யப் புகுகிறானோ என்ன -வெறும் ப்ரஹ்ம ருத்ராதி களுக்கே சேஷி என்று அன்றே அவன்
முடி கவித்து இருக்கிறது -பிசு நயந் கில மௌளளி -பதிம் விச்வச்ய -என்றும் சொல்லுகிறபடியே
உபய விபூதி நாதன் அன்றோ –
துளப விரையார் கமழ்-
சர்வ கந்த வஸ்துவுக்கு தன் கந்தத்தாலே மணம் கொடுக்க வற்றாய்
மேன்மைக்கு உடலாய் இருக்கிறபடி –
நீண் முடி -என்னளவும் வந்து என்னை விஷயீ கரித்த முடி –
எம்மையனார் –
ருத்ரனனுக்கு பௌத்ரனாய் இருப்பதொரு பந்த விசேஷம் உண்டே -உமக்கு அது
இல்லையே என்று சொன்னதுக்கு உத்தரம் சொல்லுகிறார் -அவனுக்கு பௌத்ரத்வ நிபந்தநம்
ஒன்றுமே யன்றோ உள்ளது -மாதா பிதா ப்ராதா -இத்யாதிப் படியே சர்வவித பந்துத்வமும்
உள்ளது எனக்கே யன்றோ –
எம்மையனார் –
என்னைப் பெற்ற தமப்பனார்
பிரஜை கிணற்றிலே விழுந்தால் கூடக் குதிக்கும் தாயைப் போலே இங்கு வந்து சாய்ந்து அருளிற்று
மாதா பிதா ப்ராதா நிவாஸச் சரணம் ஸூ ஹ்ருத் கதிர் நாராயண -என்கிற பொது வன்று
திரு வரங்கத்துள் ஓங்கும் -இத்யாதிப் படியே பெரிய பெருமாள் தாமே என்கிறார்
அணி அரங்கனார் –
அலங்காரமான கோயிலிலே வந்து சாய்ந்தவர்
ஆபரணம் ஆனது பூண்டவனுக்கு நிறம் கொடுக்கிறது -இவ் ஊரும் ரஷகனுக்கு நிறம்
கொடுக்கிறது ஆகையாலே சொல்லுகிறது

அணி அரங்கனார் –
ப்ராப்த விஷயமாய் இருக்கக் கடக்க விராதே சம்சாரத்துக்கு ஆபரணமான
கோயிலிலே வந்து அண்ணியருமாய் இருக்கிற படி-

செய்ய வாய் –
ஸ்திரீகளுடைய  பொய்ச் சிரிப்பிலே துவக்குண்டார்க்கு இச் சிரிப்பு
கண்டால் பொறுக்க ஒண்ணுமோ
திருப் பவள செவ்வாயானது -உலகமுண்ட பெரு வாயன் -என்கிறபடியே
ஆபத் சகத்வத்திலும் முற்பாடர் நாம் அல்லோமோ -ஆஸ்ரித ரஷணத்துக்கு உறுப்பாக
சர்வ பூதேப்யோ ததாம் ஏதத் வ்ரதம் மம -என்றும் –
மித்ர பாவேன சம்ப்ராப்தம் ந த்யஜேயம் கதஞ்சந -என்றும் –
சர்வ பாபேப்யோ மோஷ யிஷ்யாமி -என்றாப் போலே -சொல்லுகிற மெய்ம்மைப் பெரு வார்த்தைக்கு
எல்லாம் ப்ரதான கரணம் நாம் அல்லோமோ –
ஓர் ஆபரணத்தால் இடு சிவப்பன்றிக்கே ஸ்வாபாவிக சௌந்தர்யம் உடையோமும் நாம் அல்லோமோ –
கருப்பூரம் நாறுமோ -கமலப் பூ நாறுமோ திருப்பவளச் செவ்வாய் தான் தித்தித்து இருக்குமோ
என்று தேசிகரைக் கேட்கும்படியான சௌகந்தய சாரச்யம் உள்ளிட்ட போக்யதையை
உடையோமும் நாம் அல்லோமோ -என்றாப் போலே தம்முடைய ஏற்றத்தைக் காட்டி
தம்முடைய திரு உள்ளத்தை அந்தக் கழுத்தின் நின்றும் தன் பக்கலிலே வர இசித்து துவக்க

ஸ மயா போதித ஸ்ரீ மான் -எல்லாருக்கும் ஒன்றிலே சாய்ந்தவாறே பொல்லாங்குகள் தெரியும்
இங்கு பழைய வழகுகளும் நிறம் பெறும்

மாயனார் –
அங்கன் அன்றிக்கே கிடந்ததோர் கிடைக்கை கண்டும் -என்கிறபடியே இன்று
நாமும் சென்று அனுபவிக்கப் பார்த்தாலும் -ஒருக்கடித்து என்ன ஒண்ணாதே -மல்லாந்து
என்ன ஒண்ணாதே யிருக்கிற ஆச்சர்யத்தை சொல்லிற்று ஆகவுமாம்
மாயனார் செய்ய வாயையோ என்னை சிந்தை கவர்ந்ததுவே
ஸ்வ நிகர்ஷ அனுசந்தானத்தாலே பிற்காலிக்கிற என்னை -ஸ்வா பாவிக சௌந்தர்யத்தையும்
போக்யதையும் உடைய திருப்பவளமானது தன்னுடைய் ஸ்மிதத்தைக் காட்டி
அருகே சேர்த்துக் கொண்டு என்னுடைய மனஸ்ஸை அபஹரித்தது
என்னை சிந்தை கவர்ந்ததுவே -உழக்கைக் கொண்டு கடலின் நீரை யளக்கப் புக்கு
அது தன்னையும் பறி  கொடுத்தேன்

என்னை -கல்லை நீராக்கி -நீரையும் தானே கொண்டது
இப்பாட்டில் ஸ்ரீ வைகுண்ட நாதன் படியும் இங்கே காணலாம் என்கிறார் –

————————————————————-

பரியனாகி வந்த அவுணன் உடல் கீண்ட அமரர்க்கு
அரிய வாதிப்பிரான் அரங்கத்து அமலன் முகத்துக்
கரிய வாகிப் புடை பரந்து மிளிர்ந்து செவ்வரி யோடி நீண்ட வப்
பெரிய வாய கண்கள் என்னைப் பேதைமை செய்தனவே —-8

செய்ய வாய் ஐயோ -என்று இவர் தாமே சொன்னார் –
அப்படியே சிவப்பால் வந்த அழகு ஒன்றுமே யன்றோ அந்த திரு அதரத்துக்கு உள்ளது
சிவப்பும் கருப்பும் வெளுப்புமான பரபாகத்தால் உள்ள அழகு உடையோமாம் இருப்போமும்
நாம் அல்லோமோ -மித்ர பாவேன சம்ப்ராப்தம் ந த்யஜேயம் -என்றாப் போலே சொல்லுகிற
வார்த்தைகள் எல்லாம் ஜீவிக்கை யாகிறது -ஜாயமாநம் ஹி புருஷம் யம் பச்யேத் -என்று
ஜாயமான தசையிலே நாம் கடாஷித்த பின்பு -சாத்விகனாய் -முமுஷுவான அளவிலே அன்றோ

அக வாயில் வாத்சல்யத்துக்கு பிரகாசமாய்
இருப்போமும் நாமும் அல்லோமோ -அது கிடக்க யதா கப்யாசம் புண்டரீகம் ஏவம் அஷிணீ -என்றும்
அனைத்து உலகும் உடைய அரவிந்த லோசனன் -என்றும் சொல்லுகிறபடியே மேன்மைக்கு
பிரகாசமாய் இருப்போமும் நானும் அல்லோமோ -அதுக்கு மேலே
புண்டரீகாஷா ரஷ மாம் -என்றும் –
புண்டரீகாஷா ந ஜாநே சரணம் பரம் -என்றும் சொல்லுகிறபடியே
தம்தாமுடைய ஆபன் நிவாரணத்துக்கு உபாயமாகப் பற்றுவதும் நம்மை புரஸ்கரிக்கையாலே
உபாய பாவத்தை பூரிக்கிறோமும் நாமும் அன்றோ –
தாமரைக் கண்ணனை விண்ணோர் பரவும் தலைமகனை -என்று அவனுக்கு போக்யதா பிரகர்ஷம் உண்டாகிறது நம்மோட்டை
சேர்தியால் யன்றோ -என்றால் போலே தங்களுடைய ஏற்றத்தை காட்டி –
அவ்வாய் யன்றி அறியேன் -என்று இருக்கிற தம்மை -தாமரைக் கண்களுக்கு அற்றுத் தீர்ந்து –
என்னும்படி பண்ணிக் கொண்ட படியைச் சொல்லுகிறார் –
செங்கனி வாயின் திறத்தாயும் செஞ்சுடர் நீண் முடித் தாழ்ந்தாயும் சங்கொடு சக்கரம் கண்டு உகந்தும் –
என்ற அளவும் சொன்னார் கீழ் -தாமரைக் கண்களுக்கு அற்றுத் தீர்ந்த படி சொல்லுகிறார் இதில்-

பகவத் பிரவணன் ஆக ஒட்டாதே விபரீதங்களை அனுஷ்டிப்பிக்க தேடின ஹிரண்யனை
தமோ ஹிரண்ய ரூபேண பரிணாம முபாகதம் -என்கிறபடியே தமோ குணம் ஹிரண்யன்
என்று ஒரு வடிவு கொண்டதாய் இறே -இருப்பது அப்படியே இருக்கிறவனை -அங்கு அப்பொழுதே
அவன் வீயத் தோன்றிய -என்கிறபடியே ந்ருசிம்ஹ ரூபியாய் வந்து தன் திருக்கையில்
உகிராலே கிழித்துப் பொகட்டாப் போலே -ஞானக் கையாலே என்னுடைய அவித்யையை
கிழித்துப் பொகட்டான் என்கிறார்

பரியனாகி வந்து –
பகவத்  குணங்களை அனுசந்தித்து நைந்து இராமே சேஷத்வத்தை அறிந்து மெலிந்து இராமே –
சர்வேஸ்வரனை ஆசைப்பட்டு தளர்ந்த உடம்பாய் ஒசிந்து இராமே –
பரிய –
நரசிம்ஹத்துக்கும் பிற்காலிக்க வேண்டும் படி இருக்கை -ஊட்டி இட்டு வளர்த்த
பன்றி போலே உடம்பை வளர்த்தான் இறே –
வந்த –
இப்போது தாம் வயிறு பிடிக்கிறார்-

அவுணன் உடல் கீண்ட -நரசிம்ஹத்தினுடைய மொறாந்த முகமும்-நா மடிக்கொண்ட
உதடும் -செறுத்து நோக்கின நோக்கும் -குத்த முறுக்கின கையும் கண்ட போதே பொசிக்கின
பன்றி போலே மங்கு நாரைக் கிழிக்குமா போலே கிழித்த படி-

பிரான் –
ப்ரஹ்லாதனுக்கு எளியனான நிலையும் ப்ரஹ்மாதிகளுக்கு அரியனான நிலையும்
இரண்டும் தமக்கு உபகாரமாய் இருக்கிறது
அரங்கத்தமலன் –
எல்லார்க்கும் உதவும்படி கோயிலிலே வந்து கண் வளர்ந்து அருளுகையாலே வந்த சுத்தி —
ஒரு கால் தோற்றிப் போதல் -அவதாரம் போலே தீர்த்தம் பிரசாதித்துப் போதல்
செய்யாமையாலே வந்த சுத்தி ஆகவுமாம்
முகத்து –
அவனுடைய முகத்து
கரியவாகி –
விடாய்த்தார் முகத்திலே நீர் வெள்ளத்தை வெட்டி விட்டாப் போலே இருக்கை-

இப்படி தேவர்களுக்கு அரியனாய் இருக்கிறவன் உமக்கு எளியனாய் இருக்கைக்கு அடி என் என்னில் –
ஆதி –
காரண பூதன் -பஹூ புத்ரனானவன் விகல கரணனான புத்திரன் பக்கலிலே போர
வத்சல்யனாய் இருக்குமா போலே -இவனும் ஜகத் காரணனாய் இருக்கச் செய்தேயும்
என்னுடைய அஞ்ஞான அசக்திகளை திரு உள்ளம் பற்றி என்னளவிலே போர வத்சல்யனாய் இருக்கும் –
ஆதி –
தான் முற்கோலி உபகரிக்குமவன்-

அமரர்க்கு அரிய ஆதிப் பிரான் –
தமக்கு உபகரித்த படியை நினைத்து பிரான் என்கிறார் அல்லர்
தேவர்களுக்கு கிட்ட அரியனாய் இருக்கச் செய்தே ப்ரஹ்லாதனுடைய விரோதியை முற் பாடனாய்ச்
சென்று போக்கின உபகாரத்தை நினைத்துச் சொல்லுகிறார்
ஆதிப் பிரான் –
ப்ரஹ்லாதன் -சர்வ காரணம் -என்ன ஹிரண்யன் அதுக்கு பொறாமல் –
இந்தத் தூணில் உண்டோ அந்த காரண பூதன் -என்று துணைத் தட்டி கேட்க –
ப்ரஹ்லாதனும் சர்வ அந்தராத்மான் காண் அவன் -ஆகையால் இதிலும் உண்டு -என்ன –
அங்கு அப்பொழுதே -என்கிறபடியே அவன் தட்டின தூணிலே வந்து நரசிம்ஹ ரூபியாய் தோன்றி
அவன் தட்டின கையைப் பிடித்து -பொன் பெயரோன் வாய் தகர்த்து மார்பிடந்தான் -என்கிறபடியே
அவனைக் கதுப்பிலே அடித்து -அவன் மார்பைக் கிழித்து ப்ரஹ்லாதனுடையப்ரதிஜ்ஞா வாக்யத்தை க்ரயம் செலுத்தி
தன்னுடைய காரணத்வத்தையும் ஈச்வரத்வத்தையும் நிலை நிறுத்தின உபகாரத்தைப் பற்றி சொல்லுகிறார் ஆகவுமாம் –
அரங்கத்தம்மான் –
நரசிம்ஹ வ்யாவ்ருத்தி -அதாவது -ஒரு கால விசேஷத்திலே -ஒரு தூணின்
நடுவே வந்து தோன்றி ப்ரஹ்லாதன் ஒருவனுக்கு வந்த விரோதியைப் போக்கின வளவு இறே அங்கு உள்ளது –
இங்குக் கிடக்கிற கிடை-எல்லாக் காலத்திலும் எல்லாருடைய விரோதிகளையும் போக்குகைக்கு
அணித்தாக வந்து இரண்டு தூணுக்கும் நடுவே கிடக்கிற கிடையாகையாலே வ்யாவ்ருத்தமாய் இருக்கும் இறே-

புடை பரந்து –
கடலைத் தடாகம் ஆக்கினாப் போலே இடம் உடைத்தாய் இருக்கை
மிளிர்ந்து –
திரை வீசிக் கரையாலும் வழி போக ஒண்ணாது இருக்கை
செவ்வரி யோடி –
ஸ்ரீ ய பதித்வத்தாலும் வாத்சல்யத்தாலும் சிவந்து இருக்கை
நீண்ட -செவி யளவும் அலை எறிகை
அப்பெரிய வாய கண்கள் –
பின்னையும் போக்தாவின் அளவன்றிக்கே இருக்கையாலே
அப்பெரிய வாய கண்கள் -என்கிறார் –
இது என்ன ஒண்ணாதே பரோஷ நிர்த்தேசம் பண்ண வேண்டும்படி இருக்கை –

ஸ்ரீ பெரிய பெருமாள் உடைய திருக் கண்கள் ஆனவை திருச் செவி யளவும் செல்ல நீண்டு
இருக்கிறபடிக்கு ஒரு நினைவு உண்டு என்கிறார் ஸ்ரீ பட்டர் -அதாவது –
ஸ்ரீ பெரிய பெருமாள் உடைய திருக் கண்கள் ஆனவை மீனுக்குத் தண்ணீர் வார்ப்பாரைப் போலே நித்ய ஸூரிகளுக்கு
முகம் கொடுத்து கொண்டு இருக்கிற ஸ்ரீ வைகுண்ட நாதனுக்கும் கண்கள் இரண்டாய்
ஸ்ரீ ராம ஸ்ரீ க்ருஷ்ணாத்யவதாரம் பண்ணி குஹாதிகள் விதுராதிகள் தொடக்கமானார் சிலர்க்கு அல்ப காலம்
முகம் கொடுத்து விஷயீ கரித்து வந்தாப் போலே வெறும் கையோடே போனவர்களுக்கும் கண் இரண்டாய்-
சம்சாரம் கிழங்கு எடுத்தால் அல்லது எழுந்திரேன் என்று கோயிலிலே அர்ச்சா ரூபியாய்
அவ்வவர் நிகர்ஷங்களைப் பாராதே முகம் கொடுத்துக் கொண்டு இருக்கிற ஸ்ரீ பெரிய பெருமாளுக்கும்
கண் இரண்டாய் இருக்கவோ -இவருடைய க்ருபையை பார்த்தால் உடம்பு எல்லாம் கண்ணாக
வேண்டாவோ என்று பார்த்து -எல்லா மண்டலங்களும் தங்களுக்கே ஆக வேணும் என்று
இருக்கிற ராஜாக்கள் முற்படத் தங்களுக்கு ப்ரத்யாசன்னரான வன்னியரை அழியச் செய்யுமா போலே
ஸ்ரீ பெரிய பெருமாளுடைய அவயவாந்தரங்கள் அடைய நாமேயாக வேணும் என்று பார்ஸ்வ
ஸ்தங்களாய் இருக்கிறன திருச் செவிகள் ஆகையாலே அவற்றை வென்று அவ்வருகே
போவதாக முற்பட அவற்றுடனே அலை எறிகிறாப் போலே யாய்த்து திருக் கண்கள் செவிகள் அளவும் நீண்டு இருக்கிறபடி –
அப்பெரியவாய கண்கள் –
பின்னையும் போக்தாவின் அளவன்றிகே இருக்கையாலே
அப்பெரியவாய கண்கள் -என்கிறார் –

பேதைமை செய்தனவே –
ஸ்ரீ ராம சரம் போலே முடிந்து பிழைக்க வொட்டுகிறன வில்லை –
மதி எல்லாம் உள் கலங்கும்படி பண்ணிற்று –
என்னைப் பேதைமை செய்தனவே -அவன் அக் கண்களாலே -அமலங்களாக விழிக்கும் –
என்று இருந்த கடாஷங்களுக்கு இலக்கானார்க்குத் தெளிவைப் பிறப்பிக்க கடவதாய்  இருக்க
எனக்குள்ள அறிவு தன்னையும் அழித்தது -இனி தாமரைக் கண்களால் நோக்காய் -என்பார்க்கு
எல்லாம் அழகிதாக ப்ரார்த்திக்கலாம்
என்னைப் பேதைமை செய்தனவே -இவ் வநுபவ ரசத்திலே அமிழ்ந்த என்னை அல்லாததொரு
ஜ்ஞான அனுஷ்டானங்களுக்கு அநர்ஹனாம் பண்ணிற்றன –

இத்தால் ஸ்ரீ நரசிம்ஹ அவதாரத்தின் படியும் இங்கே வுண்டு என்கிறார் –

————————————————————-

ஊரழி பூசல் போலே  திரு மேனியின் நிறமானது எல்லாவற்றையும் கூடக் கொண்டு வந்து
என் நெஞ்சைக் கொள்ளை கொண்டது என்கிறார்-
இவர் கலம்பகன் மாலை சூடுவாரைப் போலே இந்த அவயவங்களுக்கு
ஆச்ரயமான நம்மை அவற்றோடே கூட அனுபவிக்க பெற்றிலரே –
இனி மற்றை ஆழ்வார்களைப் போலே பரக்க பேசி நின்று அனுபவிக்கவும் அல்லர்
ஆன பின்பு இந்த அவயவங்களோடும் ஆபரணங்களோடும் சேர்ந்த சேர்த்தியால் வந்த அழகும்
ஸ்வாபாவிக சௌந்தர்யத்தால் வந்த அழகுமான நம்முடைய சமுதாய சோபையை
இவரை அனுபவிப்பிக்க  வேணும் என்று பார்த்து -ராஜாக்கள் உறு பூசலாய் கொலையிலே
பரந்து தங்களுடைய சதுரங்க பலத்தையும் சேர்த்துக் கொண்டு அணி அணியாகச் சிலர் மேலே ஏறுமா போலே –
இந்த திரு மேனியானது -அவயவங்களையும் -ஆபரணங்களையும்
சேர்த்துக் கொண்டு தன்னுடைய சமுதாய சோபையைக் காட்டி -உய்விட மேழையர்க்கும்
அசுரர்க்கும் அரக்கர் கட்கும் எவ்விடம் -என்று கொண்டு மேல் விழுந்து தம்முடைய
திரு வுள்ளத்தைக் தன் பக்கலிலே இழுத்துக் கொள்ள தாம் அதிலே யகப்பட்டு நெஞ்சு இழிந்த படியைச் சொல்லுகிறார் –

ஆல மா மரத்தினிலை மேலொரு பாலகனாய்
ஞால மேழுமுண்டா னரங்கத் தரவினணையான்
கோல மா மணி யாரமும் முத்துத் தாமமும் முடிவில்லதோ ரெழில்
நீல மேனி ஐயோ நிறை கொண்ட தென் நெஞ்சினையே —–9-

ஒரு பாலகனாய் –
யசோதாள் தநந்தயனான ஸ்ரீ கிருஷ்ணனனும் முரணித்து இருக்கும்படி
இவனுடைய பால்யம் செம்பால் பாயா நிற்கும்
பிரளயத்தில் தன் அகடிதகடநத்தோடு ஒக்கும் -என்னை அகப்படித்தன படியும்-
ஆலம் தளிரிலே கண் வளர்ந்து இந்த ஜகத்தை அடைய ரஷித்தருள அந்த அகடிதகடநா
சமர்த்யமுடைய வனுக்கு என்னுடைய விரோதியைப் போக்கி எனக்கு ஜ்ஞானத்தைப்
பிறப்பித்த விது சால அகடிதமாய் இருந்ததோ என்கிறார்-

அரங்கத்தரவினணையான் –
சம்சார பிரளயத்தின் நின்றும் எடுக்கக் கிடக்கிற படி
அந்த ஆலின் இலையில் நின்றும் இங்கே வரச் சருக்கின வித்தனை காணும்
அந்த உறவு ஒன்றுமே இவர் அச்சம் கெடுக்கிற வித்தனை காணும்
இப்ப்ரமாதத்தோடே கூடின செயலை செய்தான் என்று பயப்படுமவர்கள் அச்சம் கெடும்படி கிடக்கிற விடம்
அரவின் அணையான் –
பிரளயத்தில் தன் வயிற்றில் புகா விடில் ஜகத்து ஜீவியாதது போலே
சம்சாரிகள் தன் முகப்பே விழியா விடில் தனக்குச் செல்லாதான படி-

நிறை கொண்டது என் நெஞ்சினையே –
எனக்கு அகவாயில் காம்பீர்யத்தைப் போக வடித்தது
ஐயோ –
பச்சைச் சட்டை இட்டுத் தனக்கு உள்ளத்தைக் காட்டி எனக்கு உள்ளத்தை அடைய கொண்டான் –
நான் எல்லாவற்றையும் அநுபவிக்க வேணும் என்று இருக்க எனக்கு
அநுபவ பரிகரமான என் நெஞ்சைத் தன் பக்கலிலே இழுத்துக் கொள்வதே -ஐயோ -என்கிறார் –
ஐயோ நிறை கொண்டது என் நெஞ்சினையே –
தனித்தனியே திவ்ய அவயவங்களை அநுபவித்த
என் நெஞ்சை சமுதாய அனுபவத்தாலே முன்புற்ற பூர்ணத்வ் அபிமான கர்ப்பமான காம்பீர்யத்தை
கழித்து இப்பூர்ண அனுபவத்துக்கு விச்சேதம் வரில் செய்வது என் -என்கிற அதி சங்கையாலே
பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு -என்று நித்ய சாபேஷம் ஆம்படி பண்ணிற்று-

இப் பாட்டால் வட தள சயநமும் பெரிய பெருமாள் பக்கலிலே உண்டு -என்கிறது –

—————————————————————————-

நைச்யத்தாலே அங்குப் போக மாட்டாதே –
தம்முடைய நைச்யத்தாலே இங்குப் புகவும் மாட்டாதே ஆந்த ராளிகராய் –
உத்தரம் தீர மாசாத்ய கச்த ஏவ வ்யதிஷ்டத -என்ற ஸ்ரீ விபீஷண ஆழ்வானைப் போலே –
அக மகிழும் தொண்டர் வாழும்படி
அன்பொடு தென் திசை நோக்கிக் கொண்டு கண் வளருகிற பெரிய பெருமாளுடைய
த்ருஷடி பாதமான தென் ஆற்றங்கரையைப் பற்றி நின்றார்-

அந்த விபீஷணன் ராஜ்ய காங்ஷியாய் இருக்கையாலே அருகு நிற்கிற இளைய பெருமாள் நிற்க
ராஜ்ய காங்ஷியாய்-ஹரிச்ரேஷ்டரான மஹா ராஜரை இட்டு அழைத்துக் கொண்டாப் போலே
சென்றதாம் என சிந்தனையே –
அடியேன் உள்ளத்தின் இன்னுயிரே –
என்னுளத்துள் நின்று உலாகின்றதே –
நிறை கொண்டது என் நெஞ்சினையே -என்றாப் போலே இவை மனந பரராய் இருக்கையாலே
மனந பரராய் ஸ்ரேஷ்டராய் இருப்பார் ஒருவரை இட்டு அழைப்பித்துக் கொள்ள வேண்டும் என்று பார்த்து
அருகே சேவித்து இருக்கிற லோக சாரங்க மஹா முநிகளைப் பார்த்து -ஆநயைநம் -என்று திரு உள்ளமாக

அவரும் எப்போதும் பெரிய பெருமாளை சேவித்து இருக்கையாலே பெரிய பெருமாள்
அபிஜன வித்யா வருத்தங்களால் பூரணராய் இருப்பாரைப் பார்த்தருளி -ஏகாந்தங்களிலே
இழி குலத்தவர்கள் ஏலும் எம் அடியார்கள் ஆகில் தொழுமினீர் கொடுமின் கொண்மின் -என்று
உபதேசிக்கக் கேட்டு இருக்கையாலும் –
நின் திருவெட்டு எழுத்தும் கற்று நான் உற்றதும் உன் அடியார்க்கு அடிமை -என்றும் –
ஆர் எண்ணும் நெஞ்சுடையார் அவர் எம்மை யாள்வாரே -என்றும் –
பங்கயக் கண்ணனைப் பயிலும் திரு உடையார் எவரேலும் அவர் கண்டீர்
பயிலும் பிறப்பிடை தோறும் எம்மை யாளும் பரமரே -என்றாப் போலே
ஆழ்வார்கள் அருளிச் செய்ய கேட்டு  இருக்குமவர் ஆகையாலே கடுகப் போய் அவரை
அருள் பாடிட்டுத் தாம் சிரஸா வஹித்துக் கொண்டு வர

கடலிலே குழப்படி உண்டாமா போலே -பூர்ணம் -என்கிறபடியே பெரிய பெருமாள் பாடே
எல்லாம் இல்லையோ -ஆன பின்பு எனக்குப் பெரிய பெருமாளை ஒழிய வேறு ஒருவரை
அனுபவிக்க ச்ரத்தை யில்லை -எனக்கு உண்டானாலும் அவரை யநுபவித்த என் கண்கள்
மற்று ஒன்றினைக் காணாவே -என்கிறார் –

கொண்டல் வண்ணனைக் கோவலனாய் வெண்ணெய்
உண்ட வாயன் என்னுள்ளம் கவர்ந்தானு
அண்டர் கோன் அணி யரங்கன் என் அமுதினைக்
கண்ட கண்கள் மற்று ஒன்றினைக் காணாவே —10-

கொண்டல் வண்ணனை –
தாபத் த்ரயத்தாலே விடாய்த்த தம் விடாய் தீரும்படியாய் –
அத்ரௌசயாளுரில சீதள காளமேக என்கிறபடியே வர்ஷூகமான காளமேகம் மேகம் போலே
இருக்கிற திரு நிறத்தை வுடையவனை –
பன்னீர்க்குப்பி போலே உள்ளுள்ளவை எல்லாம் புறம்பே நிழல் இட்டபடி-
கொண்டல் வண்ணனை-
தம்முடைய பர வ்யூஹ விபவ அர்ச்சாவதாரங்களை இவர் அனுபவிப்பதாக திரு உள்ளத்தில்
பாரிக்கிறபடியை அனுசந்தித்து இது என்ன ஔதார்யம் என்று அந்த ஔதார்ய குணத்தை
நினைத்து -கொண்டல் வண்ணன் -என்கிறார் –
அங்கன் இன்றிக்கே –
சாம்சாரிகமான தாப த்ரயத்தாலே விடாய்த்த விடாய் தீரும்படியாக
அத்ரௌ சயாளு ரிவ சீதள காள மேக -என்கிறபடியே வர்ஷுகமான காளமேகம் போலே
இருக்கிற நிறத்தை உடையவன் -என்கிறார் ஆதல்
ஸ்ரமஹரமான வடிவை நினைத்து -கொண்டல் வண்ணன் -என்கிறார் ஆதல் –
வண்ணம் -என்று ஸ்வபாவம் ஆதல் -நிறம் ஆதல் –
நம் ஆழ்வாரும் -முகில் வண்ணன் அடியை அடைந்து அருள் சூடி வுய்ந்தவன் -என்றார் இறே-

கோவலனாய் வெண்ணெய் வுண்ட வாயன் –
இடையனாய் வெண்ணெய் உண்ட திருப் பவளத்தை உடையவனை –
சக்ரவர்த்தித் திருமகன் ஆகில் வெண்ணெய் உண்ண ஒட்டார்கள் என்று கருத்து –
கோவலன் –
ஆபிஜாத்யம் -பெருமாளுக்கு கட்டுண்பது அடி வுண்பதாகக் கிடைக்குமோ –
வெண்ணெய் வுண்ட வாயன் -களவு கண்டு ஒளித்து வந்து கிடக்கிறவன்
பெரிய பெருமாள் கொறுட்டை மோந்து பார்த்தால் இப்போதும் வெண்ணெய் நாறா நிற்கும்-

கோவலனாய் வெண்ணெய் வுண்டாப் போலே -கொண்டல் வண்ணனாய் என்னுள்ளம் கவர்ந்தானை
யசோதைப் பிராட்டி வுடைய நெஞ்சிலே பண்ணின ச்ரத்தையை என் நெஞ்சிலே பண்ணி புஜித்தவனை
அந்த திருவாய்ப்பாடியிலே பெண்கள் உறிகளிலே வெண்ணெயை வைத்து கள்ளக்
கயிறு உருவி இட்டு வைத்துப் போவர்கள் அந்த உறிகளின் குறி அழியாது இருக்க
அந்த வெண்ணெய்களை வெறும் தரை யாக்கினாப் போலே யாய்த்து -அரங்கம் தன்னுள்
கள்வனார் நான் குறி அழியாது இருக்க என்னுடைய சிந்தையை அபஹரித்த படி-

என் உள்ளம் கவர்ந்தானை –
வைத்த குழி அழியாது இருக்க -வெண்ணெய் விழுங்கி வெறும் கலம் ஆக்கினாப் போலே
என்னுடைய சரீரம் குறி அழியாது இருக்க என்னுடைய மனஸை அபஹரித்தான் –
கலம் இருக்க வெண்ணெய் குடி போனாப் போலே யாய்த்து -இவர் உடம்பு இருக்க அகவாய் குடி போன படி –

என் உள்ளம் கவர்ந்தானை-என் நெஞ்சை அபஹரித்தவனை –
கோவலனாய் வெண்ணெய் வுண்டாப் போலே கொண்டல் வண்ணனாய் என் உள்ளம் கவர்ந்தவனை
யசோதைப் பிராட்டி வுடைய வெண்ணெயிலே பண்ணின ச்ரத்தையை என் நெஞ்சிலே பண்ணி புஜித்தவனை –
வைத்த குறி அழியாது இருக்க வெண்ணெய் குடி போனாப் போலே
யாய்த்து இவர் உடம்பு இருக்க அகவாய் குடி போன படி-

கண்ட கண்கள் –
என்கிற இதிலே- என் கண்கள் -என்னாமையாலே நிர்மமத்வம் தோற்றுகிறது -இப்படி
பாதித அநுவ்ருத்தி யில்லாதபடியான தத்வ ஜ்ஞானம் பிறந்து சர்வத்திலும் நிர்மமராய்
இருக்கிற இவர் முன்பு –
என் கண் –என்றும்
என் சிந்தனை -என்றும் –
அடியேன் உள்ளம் -என்றும்
என் உள்ளம் -என்றும்
மமகாரம் பின் துடர்ந்தது தோன்றப் பேசுவான் என் என்னில் –
ஸ்வதந்திர ஸ்வாமியான ஈஸ்வரன் சர்வ சேஷ பூதமான சேதன அசேதனங்களிலே
ஸ்வார்த்தமாக ஒன்றை ஒன்றுக்கு சேஷமாக அடைத்து வைத்தால் -அவன் அடைத்தபடி
அறிந்து பேசுவார்க்கு நிர்மமத்தோடே சேர்ந்த இம்மமகாரம் அநபிஜ்ஞர்  மமகாரம் போலே தோஷம் ஆகாது
பிரதானமான அனுபவத்திலே இழிந்த படியினாலே
ஸ்ரீ யபதிக்கு பிரகாரமாக வல்லது மற்று ஒன்றையும் தாம் அநுபவியாத படியிலே தாத்பர்யம் ஆகவுமாம்
ஸ்ரீ பெரிய பெருமாள் திரு மேனியிலே ஸ்ரீ திருமலை முதலாக ஸ்ரீ கோயில் கொண்ட அர்ச்சாவதாரங்களிலும்
ஸ்ரீ ராம ஸ்ரீ க்ருஷ்ண ஸ்ரீ வாமன ஸ்ரீ வட பத்ர சயநாதிகளிலும் உள்ள போக்யதை எல்லாம் சேர
அநுபவித்து இவ்வாபி ரூப்யத்திலே ஈடுபட்ட என் கண்கள் மற்றும் பர வியூஹ விபவாதிகளான
திருமேனிகளை எல்லாம் சேரக் காட்டினாலும் ஸ்தநந்தயத்துக்கு போக்யாந்தரங்கள் ருசியாதாப் போலே –
பாவோ நாந்யாத்ர கச்சதி -என்கிறபடியே அவை ஒன்றும் ருசியாது என்கிறார் ஆகவுமாம்
இது இவருடைய அநந்ய பிரயோஜனத்வ காஷ்டை யிருக்கிறபடி-

கண்ட கண்கள் மற்று ஒன்றினைக் காணாவே
அம்ருத பானம் பண்ணினாரை பாலையும் சோற்றையும் தீற்றப் போமோ –
இந்தக் கண்கள் புறம்பே சிலவற்றை காண வேண்டுவது இங்கே சில குறை வுண்டாகில் அன்றோ
இவர் பக்கல் ஔதார்யம் இல்லை என்று போகவோ –
வடிவில் பசை இல்லை என்று போகவோ –
சௌசீல்யம் இல்லை என்று போகவோ –
நெஞ்சுக்கு பிடித்து இருந்தது இல்லை என்று போகவோ –
மேன்மை இல்லை என்று போகவோ –
சௌலப்யம் இல்லை என்று போகவோ –
போக்யதை இல்லை என்று போகவோ –
அனுபவத்தில் குறை உண்டு என்று போகவோ –

இப்பாட்டில் கிருஷ்ணனுடைய படியும் இங்கே உண்டு என்கிறார் –

—————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேதாந்த தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருப்பாண் ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .