Archive for August, 2015

ஸ்ரீ நாச்சியார் திரு மொழி -ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிச் செய்த தனியன் வியாக்யானம் / ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை அருளிச் செய்த அவதாரிகை –

August 31, 2015

திருக்கண்ண மங்கை ஆண்டான் அருளிச் செய்த தனியன் –
ஸ்ரீ நாதமுனிகள் சிஷ்யர் -நாச்சியார் திருமொழி தனியன் –
ஸ்வ வியாபாரத்தை விட்டார் என்று இவர் பெருமை உண்டே –

இதில் ஆண்டாளுடைய ஐஸ்வர்யம் தொடக்கமாக -ஆபிஜாத்ய பர்யந்தமான வைபவம் சொல்லுகிறது-
1-புருஷகாரத் தன்மை –
2-ஐஸ்வர்யம் –
3-சௌந்தர்யம் –
4-எம்பெருமான் உடன் உள்ள ஆநுரூப்யம் –
5-நல் குடிப் பிறப்பு -முதலிய
ஐந்து வைபவம் சொல்லுகிறது-

அல்லி நாள் தாமரை மேல் ஆரணங்கின் இன் துணைவி
மல்லி நாடாண்ட மட மயில் -மெல்லியலாள்
ஆயர் குல வேந்தன் ஆகத்தாள் தென் புதுவை
வேயர் பயந்த விளக்கு-

அல்லி நாள் தாமரை -இதழ்கள் உடைய அப்போது அலர்ந்த தாமரைப் பூவிலே
மேல் ஆரணங்கின் ஆர்-பொருந்தி இரா நின்ற -அணங்கின்-தெய்வப் பெண்ணான பெரிய பிராட்டியாருக்கு-
இன் துணைவி—இஷ்ட சகி  யாகவும்-
மல்லி நாடாண்ட மட மயில் -மல்லி நாட்டை குணத்தாலே ஈடுபடுத்தி ஆளா நின்ற அழகிய மயில் போன்றவளாயும்
மெல்லியலாள்-மென்மைத் தன்மையும் உடையவளுமான ஆண்டாள்
ஆயர் குல வேந்தன் ஆகத்தாள்-இடைக் குலத்துக்கு தலைவனான கண்ணபிரானுடைய திரு மேனியில் பொருத்தம் உடையவளாயும்
தென் புதுவை-அழகிய ஸ்ரீ வில்லி புத்தூரிலே
வேயர் பயந்த விளக்கு-வேயர் குலத்தில் உதித்தவரான பெரிய ஆழ்வாராலே பெறப்பட்ட விளக்கையும் இரா நின்றாள் –

அல்லி நாள் தாமரை மேல் ஆரணங்கின் இன் துணைவி-
தாதுவும் வண்டுவும் உடைய தாமரை நாட்பூவை வாஸஸ் ஸ்தானமாக உடையவளாய்
அப்ராக்ருத ஸ்வ பாவையான பெரிய பிராட்டியாருக்கு இஷ்டமான சகியாய்
மண் மகளும் திருவும் நிழல் போல்வனர் -திரு விருத்தம் -3-
உத்புல்ல பங்கஜ தடாக மிபோபயாநி -ஸ்ரீ ரெங்க ராஜ மிஹ தஷிண சவ்யசீம்நோ –
லஷ்மீம் விஹார ரசிகாமிவ ராஜ ஹம்சீம் –சாயா மிவாப் யுதயி நீ மவ நீஞ்ச தசா –ஸ்ரீ ரெங்க ராஜ ஸ்தவம் -1-63-
ஏவம் பூத பூமி நீளா நாயக -ஸ்ரீ சரணாகதி கத்யம் -5–என்னக் கடவது இறே-
ஆகையால் சம சகியாய் இருக்கை –
சாஷாத் ஸ்ரீ லஷ்மிக்கு சகியாய்த்து இவள் இருப்பது –
இத்தால் புருஷகார பூதை என்றது ஆயிற்று –

மல்லி நாடாண்ட மட மயில் –
அவளோட்டை சேர்த்தியாலே வந்த செல்வம் –
உடன் அமர் காதல் மகளிர் திருமகள் மண் மகள் ஆயர் மட மகள் –ஆளும் உலகமும் மூன்றே —
துணைவி -மயில் -என்கையாலே -ஒருத்திக்கு சகியுமாய் ஒரு தேசத்துக்கு சிகியுமாய் இருக்குமவள் என்றது ஆயிற்று –
இவள் தான் பேடை மயில் சாயல்  பின்னை -பெரியாழ்வார் -3-3-3–என்று சொல்லப் பட்டாள் அன்றோ
புன மயிலே -திருப்பாவை -11- என்கிற காட்டு மயிலாய் இருக்கை  அன்றிக்கே நாட்டு மயிலாய் இருந்தது –
தன்  குணத்தாலே -நாடாக ஈடுபடும் படி பண்ணி அத்தை ஆளுமவள் என்கை-
மயில் என்றது அளகபாரத்தையும் பெண்மையும் இட்டுப் பேசுகிறது –
இது தான் பராபிமானத்தில் ஒதுங்கி வளரும் இறே –
இவளும் பட்டர்பிரான் அபிமானத்தில் ஒதுங்கி வளருமவள் ஆயத்து-

மெல்லியலாள்-
மிருது ஸ்வ பாவை -என்றபடி –
கொங்கை மேல் குங்குமத்தின் குழம்பு அழியப் புகுந்து ஒரு நாள் தங்குமேல்
என்னாவி தங்கும்-8-7-என்னும்படி-விஸ்லேஷ அசஹமான மார்த்தவம் –

ஆயர் குல வேந்தன் ஆகத்தாள் –
அந்த மார்த்தவம் தான் -பொன்னாகம் புல்குதற்கு -8-4-ஸ்வ பாவத்தாலே பிரிவாற்ற மாட்டாமல்
ஆயர் குல வேந்தனான ஸ்ரீ கிருஷ்ணனுடைய பொன்னாகம் புல்கி இருக்குமவள் ஆயத்து –
கொம்மை முலைகள் இடர் தீர கோவிந்தனை -13-9-தழுவி முழுசி புகுந்து  என்னைச் சுற்றிச் சுழன்று  இருப்பது -13-5-

இனி ஆபிஜாத்யத்தாலும் அநு ரூபை என்கிறது-
தென் புதுவை வேயர் பயந்த விளக்கு-
வேயர் தங்கள் குலத்து உதித்த விட்டு சித்தன் கோதை இறே
வேயர் தங்கள் குலத்து உதித்த விட்டு சித்தன் -5-4-11
வேயர் புகழ் வில்லி புத்தூர் கோன் கோதை 6-11
விட்டு சித்தன் கோதை-14-10-
குல ப்ரதீபையாய் இருக்கை-
ஆயர் குலத்தினில் தோன்றும் அணி விளக்குக்கு-திருப்பாவை -5- அநு ரூபமாய் இறே வேயர் பயந்த விளக்கும் இருப்பது –
ஸ்ரீ கோப ஜென்மத்தை ஆஸ்தானம் பண்ணின குடி இறே
ஆகையால் குலத்திலும் சத்ருசையாய் இருக்கை

அல்லி நாள் தாமரை மேல் என்று தொடங்கி-இவளுடைய ஐந்து ஆகாரத்தையும் –
1-புருஷகாரத்வம் –
2-ஐஸ்வர்யம் –
3–சௌந்தர்யம் –
4-பிரிவாற்றாமை –
5-நல்  குடிப் பிறப்பு -சொல்லுகையாலே
இவளுடைய சத்ருச வைபவம் அனுசந்திக்கப் பட்ட்டதாயிற்று

முன்னவள் தென் புதுவை தெரிவை திருமகள்
தாரணி என்பவள் நாரணன் தன்  உருவுக்கு இனியவள்
ஊர் அரங்கம் என்னும் சீர்மையவள் பருவப் பணி மொழி
என்னைப் பணிந்து அருளே-என்ற முன்னோர் சந்தை இங்கே அனுசந்திக்கத் தக்கது-

1-தென் புதுவை தெரிவை திருமகள் –
2-தாரணி என்பவள் –
3-நாரணன் தன்  உருவுக்கு இனியவள் –
4-ஊர் அரங்கம் என்னும் சீர்மையவள் –
5-பருவப் பணி மொழி -என்னைப் பணிந்து அருளே-

——————————

ஸ்ரீ பொன்னடிக்கால் ஜீயர் அருளிச் செய்த தனியன் –

இதில் பகவத் ப்ரத்யா சன்னரைக் குறித்து –
1-தத் போக்யதையை பிரஸ்னம் பண்ணும் படியையும்-
2-தத் தேச வாசத்தால் உண்டான ப்ராசச்யத்தையும்-
3-பர்த்ரு வசீகரண ஹேதுவான வால்லப்யத்தையும்-சொல்லி
ஏவம் வித ஆகாரையான ஆண்டாள் திருவடிகளே அநந்ய கதிகளுக்குத் துணை என்கிறது

கோலச் சுரி சங்கை மாயன் செவ்வாயின் குணம் வினவும்
சீலத்தனள் தென் திரு மல்லி நாடி செழும் குழல் மேல்
மாலைத் தொடை தென்னரங்கர்கீயும் மதிப்புடைய
சோலைக் கிளி அவள் தூய நற் பாதம் துணை நமக்கே-

கோலச் சுரி சங்கை-
அழகையும் சுரியையும் உடைய ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தை நோக்கி
மாயன் செவ்வாயின் குணம் வினவும்-
ஸ்ரீ கண்ணபிரானுடைய சிறந்த திரு அதரத்தின்
அதிசயத்தை கேட்க்கும் சீலத்தனள்-தன்மை உடையவளும்-

தென் திரு மல்லி நாடி –
தென் திசையில் உள்ள திரு மல்லி நாட்டுக்குத் தலைவியும்

செழும் குழல் மேல்-
செழுமை தங்கிய தனது திருக் குழல் கற்றையிலே சூட்டப் பெற்ற

மாலைத் தொடை தென்னரங்கர்கீயும் –
மதிப்புடைய
கலம்பக மாலையை அழகிய மணவாளனுக்கு சமர்ப்பிக்கும் படியான
மேன்மை உடையவளும்

சோலைக் கிளி அவள் தூய நற் பாதம் துணை நமக்கே-
சோலையிலே வளரும் கிளி போலே இனிய மொழியையும் உடையவளான ஆண்டாளுடைய-
பாவனமும் போக்யமுமான திருவடி இணைகளே நமக்கு தஞ்சம்

கோலச் சுரி சங்கை-
கோலப் பெரும் சங்கே -7-3- என்றும்
சுரியேலும் சங்கும் -என்றும் –
சுரி சங்கு-திருவாய் -7-3-1- என்றும் சொல்லப் படுகிற
அழகையும் சுரியையும் உடைத்தான சங்கை —

மாயன் செவ்வாயின் குணம் வினவும் சீலத்தனள் –
பூங்கொள் திரு முகத்து மடுத்தூதிய சங்கு -9-9-ஆகையாலே
மது சூதன் வாயமுதம் பன்னாளும் உண்டு -7-5-இறே போருவது-
வெண் சங்கமூதிய வாய் –முதல் திரு -37-
சங்கம் வாய் வைத்தான் -பெரிய திருமொழி -6-7-8-என்னும் படி இறே சங்கு வாய் வைப்பது —
அத்தாலே வாய் விடாத சாதியைக் கேட்கிறாள் –

மாயன் செவ்வாயின் குணம் வினவுகையாவது –
கருப்பூரம் நாறுமோ கமலப் பூ நாறுமோ திருப் பவளச் செவ்வாய் தான்
தித்தித்து இருக்குமோ-7-1-என்னும் படியான குணம் –
பாலொடு நெய் தயிர் ஒண் சாந்தொடு செண்பகமும் பங்கயம் நல்ல கருப்பூரமும் நாறி வரக்
கோல நறும் பவளச் செந்துவர் வாய்-1-5-9- என்று
இறே இவள் திருத் தமப்பனார் அருளிச் செய்தது —

மாயன் -என்றது –
சௌந்தர்ய சீலாதிகளால் ஆச்சர்ய பூதனான ஸ்ரீ கிருஷ்ணன் என்றபடி –
ஆய மாயன் -திருவாய் -4-3-4-
ஆயன் மாயோன் -திருவாய் -9-9-2-என்றார் இறே

வினவுகை யாவது -விருப்புற்று கேட்கை -7-1-
சீலத்தினள் ஆவது -இதுவே ஸ்வ பாவமாய் இருக்கிறவள் -என்கை –
சர்வ கந்த சர்வ ரச -சாந்தோக்யம் -3-14-2-என்னும் வஸ்துவுடன் சர்வ கால அனுபவ
அபேஷை இவளுக்கு ஸ்வ பாவம் என்றபடி-

தென் திரு மல்லி நாடி –
இவளுக்கு இந்த ஸ்வ பாவம் நாட்டு நலத்தாலே வந்தது -கோசல தேசத்தில் உள்ளாருக்கு போலே-
திரு மல்லி நாடு -என்று அதுவே நிரூபகமாம் படியான அதிசயத்தை உடையவள் –

தென் திரு மல்லி நாடி —
தெற்குத் திக்கிலேயாய் –
தர்ச நீயமாய் இருக்கிற -திருமல்லி நாடு-
ஸ்ரீ வில்லி புத்தூரை அடுத்து அணித்தான நாட்டுக்கு திரு மல்லி நாடு என்று இறே திரு நாமம்-

இனி பர்த்ரு வால்லப்யத்தைச் சொல்லுகிறது
செழும் குழல் மேல் மாலைத் தொடை தென்னரங்கர்கீயும் -மதிப்புடைய சோலைக் கிளி -என்று
மாலைத்தொடை -பெரியாழ்வார் கட்டின கலம்பகன் மாலைத் தொடையை
தென்னரங்கர்கீயும் -மதிப்புடைய சோலைக் கிளி —
ராம சீதொப நீதங்களான– ஹேமாம் போஜைங்களை -ஸ்ரீ ரெங்க ராஜ ஸ்தவம் —
விரும்பிச் சாத்தி அருளும் அவர்க்கு –

பெரியாழ்வார் கட்டின மாலையை சூடிக் கொடுத்தது வட பெரும் கோயில் உடையானுக்கு அன்றோ –
பெரிய பெருமாளுக்கு அன்றே என்னில் –
ஆராமம் சூழ்ந்த அரங்கம் -சிறிய திருமடல் -70- என்றும்
தலை யரங்கம் -இரண்டாம் திருவந்தாதி -70-என்று
எல்லா திருப்பதிகளையும் அவயவமாக உடைத்தாய்-
அகில திவ்ய தேச பிரதானமாய் இருக்கையாலும்-
திரு மணம் புணர்ந்ததும் அழகிய மணவாளப் பெருமாளை யாகையாலும் –
இனித் தான் கண் வளர்ந்து அருளுகிற ஆகாரமும் ஒத்து போக ஸ்தானமாய் இருக்கையாலும்-
தர்மையைக்யத்தாலும் -அப்படிச் சொல்லலாம் இறே

ஸ்ரீ மாலா காரர் மகள் ஆகையாலே —
அரங்க மாலை -திருக் குறும் தாண்டகம் -12-என்னும் படியான மாலுக்கு மாலையை வழங்கினாள் –
இப்போதும் இது நம் பெருமாள் ஆறாம் திருநாள் ஆனை ஏற்றத்தின் அன்று அனுபவ சித்தம் –
அங்கு அவனோடும் உடன் சென்று அங்கு ஆனை மேல் -6-10- என்று இறே இவள் அபேஷை இருப்பது –

தென்னரங்கர்கீயும் -மதிப்புடைமை யாவது –
பொங்கோதம் சூழ்ந்த புவனியும் விண்ணுலகும் அங்காதும் சோராமே யாள்கின்ற எம்பெருமானான-
செங்கோல் உடைய திருவரங்கச் செல்வனார்க்கு -11-3-சூடிக் கொடுத்த மதிப்பு இறே –

ஸ்வோச்சிஷ்டாயாம் ஸ்ரஜி நிகளிதம் யா பலாத்க்ருத்ய புங்க்தே-என்று
சூடிக் களைந்தன சூடும் இத் தொண்டர்-திருப் பல்லாண்டு -9- படி யாய்த்து –
அண்டர்கோன் அணி யரங்கன் –அமலனாதி -10—படியும் —
அவன் தான் பரம பிரணயி இறே

மதிப்புடைய சோலைக் கிளி –
பெரியாழ்வார் திருமகள் -என்னும் மதிப்பை யுடைய கிளி –
கிளி மொழியாள்– திருவாய் -4-8-5- இறே
எல்லே இளம் கிளியே –திருப்பாவை -15-என்றாளே இவளும்
பெரியாழ்வார் -தேனும் பாலும் அமுதுமாய திருமால் திரு நாமத்தாலே வளர்த்து எடுத்த கிளி -பெரிய திரு -6-10-6-
மெய்ம்மை பெரு வார்த்தை -11-10-கற்ப்பித்தாரும் இவரே
திருமாலைப் பாடக் கேட்டு வளர்த்ததனால் பயன் பெற்றேன் வருக வென்று மடக் கிளியை
கை கூப்பி-வணங்கினாளே-திரு நெடும் தாண்டகம் -14–என்று
வளர்த்து எடுப்பார்க்கும் காலிலே வணங்க வேண்டும்படியான கிளி –
வியாசம் வசிஷ்ட நப்தாரம் சக்தே பௌத்ரமகல்மஷம்-பராசராத்மஜம் வந்தே ஸூக தாதம் தபோ நிதிம் -என்னுமா போலே-
பெற்றோர்களை விஞ்சி யாய்த்து ஸூகம் இருப்பது

சோலைக் கிளி –
ஆழ்வார் ஆஸ்ரமத்தில் கிளி —
இத்தால் பராபிமாநத்தே வளர்ந்தமை தோற்றுகிறது-

அவள் தூய நற் பாதம் -துணை நமக்கே-
ஏவம் வித ஆகாரையாய் -பாவநத்வ போக்யத்வங்களை யுடையவள் -திருவடிகள் –
அல்லியம்பூ மலர்க் கோதாய் அடி பணிந்தேன் -பெரியாழ்வார் -3-10-2- என்றும் –
செம்மை யுடைய திருக் கையால் தாள் பற்றி -6-8-என்றும்-
சேஷ சேஷிகள் இருவருக்கும் தாம் தாம் ஸ்வரூப அநு குணமாக-சேஷைத்வ பிரணியித்வ -குணமாக
இழியும் துறையை இருக்கும் திருவடிகள் –
அது தான் பாடகம் சேர் மெல்லடி -பெரிய திரு -4-8-7-யாய் இருக்கும்
பாடகக் காலிணை தானே பரம பதம் தருமே –

திருவடிகள் –
1-இங்கு இருக்கும் நாளைக்குத் துணையாய் –
2-மேலே வழித் துணையாய்
3-அதுக்கு மேலே கைங்கர்யத்துக்கு துணையாய் –
4-கைங்கர்ய வர்த்தகமுமாய் இருக்கும்-

பண்டு ஏனமாய் உலகை யன்று இடந்த பண்பாளா -என்று நின்று தொண்டானேன் திருவடியே
துணை அல்லால் துணை இலேன்-பெரிய திரு -7-4-6-
ஞாலப் பொன் மாது -திரு விருத்தம் -40-இறே
ஆகையால் கோலத் திருவடிகளோ பாதி ஞாலப் பொன் மாதான
ஆண்டாள் திருவடிகளும் உத்தேச்யம் என்றது ஆயத்து –

——————————————————————

ஸ்ரீ மத்  கிருஷ்ண சமாஹ்வாய நமோ யாமுன ஸூ நவே
யத் கடாஷைக லஷ்யாணாம் ஸூ லப ஸ்ரீ தரஸ் சதா

அவதாரிகை –

பிராப்ய ஸ்வீகாரமும் பண்ணி –
உன் தன்னைப் பிறவி பெரும்தனைப் புண்ணியம் யாமுடையோம் -28-என்று உபாயமாக எம்பெருமானைப் பற்றி
ப்ராப்யத்தையும் -நிஷ்கர்ஷித்தாராய் -நின்றார் கீழ் –

உனக்கே நாம் ஆட செய்வோம் -29- என்று அவன் உகப்புக்காக கைங்கர்யம் –
இப்பிரதி பத்தி இறே இத்தலைக்கு வேண்டுவது-
இத்தலையிலே கண்ணழிவு அற்று இருந்தது –
அவன் பக்கலிலே அபி நிவேசம் கரை புரண்டு இருந்தது

அநந்தரம்-
அபி நிவேச அநு ரூபமாக பெற்றுக் கொடு நிற்கக் கண்டது இல்லை
இத்தலையிலே ஒரு ஹேதுவை கொள்ளில் இறே -அது பக்வமாய் பெறுகிறோம் என்று ஆறி இருக்கலாவது-
அதுக்கு அங்கன் ஓன்று இன்றிக்கே இருந்தது –

இனி
பரிக்ரஹித்த சாதனம் –பலத்தோடு வ்யபிசாரம் இல்லாத படி சித்தமாய் இருந்தது –
இங்கனே இருக்கச் செய்தே பலிக்கக் காணாமையாலே யுக்த  அயுக்த நிரூபண ஷமம் அல்லாதபடி கலங்கி –
அபிமத விஷயத்தை பிரிந்தார் திரியட்டும் கூடுகைக்கு
மடல் எடுக்குமா போலே

பிரிந்தாரைக் கூட்டிப் போருகையே- ஸ்வ பாவமாக உடையான் ஒருவன் என்னும் இதுவே பற்றாசாக
காம சமாஸ்ரயணம் பண்ணிப் பெறுகையிலே உபக்ரமிக்கிறாள் –

பெருமாளை அல்லது அறியாத திரு அயோத்யையில் உள்ளார் அவருக்கு நன்மையை எண்ணி
ஸ்த்ரியோ வ்ருத்தாஸ் தருண் யஸ்ய சாயம் ப்ராதா சமாஹிதா -சர்வான் தேவான் நமஸ்யந்தி-
ராமஸ்யார்த்தே யசஸ் விந -அயோத்யா -2-52–என்று
தேவதைகள் காலிலே விழுந்தார்கள் இறே

இவ் வஸ்துவை தன்னை -பாவோ நான்யத்ர கச்சதி பர தசையிலும் வேண்டேன் என்ற திருவடி-
நமோஸ்ஸ்து வாஸஸ் பதயே -சுந்த -32-14-என்றான் இறே

கீழ் நாம் செய்து நின்ற நிலை இது -தவிர்ந்தது இது -என்று அறியாதபடி கலங்கினார் உடைய
வியாபாரம் இருக்கும் படி இறே இது-

யயௌ ச காசித் ப்ரேமாந்தா தத் பார்ஸ்வம் விலம்பிதம்-ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-3-19–என்கிற
பிரேமத்தால் வந்த மருட்சி படுத்துகிற பாடு இறே இது —

ரஜோ ராகாத்மகம் வித்தி த்ருஷ்ணா சங்க சமுத்பவம் -ஸ்ரீ கீதை -14-7-என்கிறபடியே
சத்வ நிஷ்டரான சாத்விகரோடே சேர்ந்து பகவத் சமாஸ்ரயணம் பண்ணக் கடவதாய் இருக்க
சாத்விக அக்ரேசரான பெரியாழ்வார் வயிற்றிலே பிறந்தவள்
ரஜோ குண பிரசுரரான தேவதைகள் காலிலே விழும்படி என்-என்னில் –
அநபாயிநியான பிராட்டி-தத் தஸ்ய சத்ருசம் பவேத் – பெருமாள் அளவில் உண்டான நித்ய சம்ச்லேஷ அர்த்தமாக
சர்வான் தேவான் நமஸ் யந்தி -என்று -எல்லா தேவதைகள் காலில் விழுந்தால் போலேயும்-

இவளுடைய திருத் தமப்பனாரான நம்மாழ்வார் அஞ்சு குடிக்கு ஒரு சந்ததி -உபதேசரத்ன மாலை -24–அபிமான புத்ரி தானே –
தெய்வங்காள் -என் செய்கேன் ஓர் இரவு ஏழு ஊழியாய் மெய் வந்து நின்று எனதாவி மெலிவிக்கும்-
கை வந்த சக்கரத்து என் கண்ணனும் வாரானால் தைவந்த தண் தென்றல் வெஞ்சுடரில் தான் அடுமே -5-4-8- என்று
தேவதைகளை முன்னிட்டால் போலேயும் –
இவளும் அயர்த்துக் கலங்கின படி –

இப்படிப் பட்ட கலக்கத்தாலே பிரிந்தாரைக் கூட்டும் என்னும் இதுவே கொண்டு காம சமாஸ்ரயணம் பண்ணுகிறாள்-
தன்  உடலை அழிய மாறி நின்று இறே இவன் தான் பிரிந்தாரைச் சேர்ப்பது-
இது தான் இவளுடைய ப்ராப்ய த்வரை இருக்கிற படி –

அதாவது பெரியாழ்வார் ப்ராப்ய ருசியாலே ஒரு கருமுகை மொட்டாகிலும் வட பெரும் கோயில் உடையானுடைய திருக் குழலிலே
வெடிக்க வேணும் என்று கருமுகையை ஸூஸ்ருஷையா நிற்பர் –
மத்த நன் நறு மலர் முருக்க மலர் கொண்டு -1-3-இவளுடைய பிராப்ய த்வரை இருக்கும் படி –
காமன் காலிலே ஒரு மத்த மலராகிலும் முருக்கம் மொட்டாகிலும் வெடிக்க வேணும் என்று
மத மத்தம் முருக்கு இவற்றை ஸூஸ்ரூஷியா நிற்கும் –
கடகர் உகந்ததே தேடி இட வேணும் இறே

தேசிகன் -பரமத பங்கம்–21 அத்யாயம் – -ரஹஸ்ய கிரந்தம்
சிருங்கார சமாதி அனுகுண கிருஷ்ண ரூபாந்தர விஷயம்
மன்மத-மதன கோபாலன் உபாசனை என்கிறார் –

பாவோ நாந் யத்ர என்ற திருவடியும் நமோஸ்து -ருத்ராதி -யமாதி அனைத்து தேவர்களையும் –
அபிமத சீதா தேவி தரிசனத்துக்கு
இந்த ஸ்லோகம் -காணாமல் போனவற்றைக் கிடைக்கச் செய்யும் ஸ்லோகம்

————————————————————————–

ஸ்ரீ கோயில்  கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர்  திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீபெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

அநிஷ்ட நிவ்ருத்தி -இஷ்ட பிராப்தி -ரஷணம் பற்றிய அருளிச் செயல்கள் ஸ்ரீ ஸூ க்திகள்–

August 30, 2015

மன்னர் மறுக மைத்துனன் மார்க்கு ஒரு தேரின் மேல் முன்னங்கு நின்று மோழை எழுவித்தவன் மலை
எண்ணுவார் இடரைக் களைவானே ஏத்தரும் பெரும் கீர்த்தியினானே நண்ணி நான் உன்னை நாள் தோறும் ஏத்தும் நன்மையே யருள் செய் எம்பிரானே
எம்பிரான் என்னை யாளுடைத் தேனே ஏழையேன் இடரைக் களையாயே
பாசங்கள் கழற்றி எயிற்றிடை மண் கொண்ட வெந்தை இராப் பகல் ஓதுவித்து என்னைப் பயிற்றிப் பணி செய்யக் கொண்டான் பண்டு அன்று பட்டினம் காப்பே
ஏதங்கள் ஆயின வெல்லாம் இறங்கல் விடுவித்து என்னுள்ளே பீதக வாடிப் பிரானார் பிரம குருவாகி வந்து
போதில் கமல வான் நெஞ்சம் புகுந்தும் என் சென்னித் திடரில் பாத விலச்சினை வைத்தார் பண்டு அன்று பட்டினம் காப்பே
மறு பிறவிதவிரத் திருத்தி உன் கோயில் கடைப் புகப் பெய் திருமால் இரும் சோலை எந்தாய்
அக்கரை என்னும் அனத்தக் கடலுள் அழுந்தி உன் பேர் அருளால் இக்கரை ஏறி இளைத்து இருந்தேனை அஞ்சேல் என்று கை கவியாய்
நீ என்னைக் கைக் கொண்ட பின் பிறவி என்னும் கடலும் வற்றிப் பெரும் பதம் ஆகின்றதால்
இறவு செய்யும் பாவக்காடு தீக்கொளீ இவேகின்றதால் அறிவை என்னும் அமுதவாறு தலைப் பற்றி வாய்க் கொண்டதே

———————————————————

மாற்றார் உனக்கு வலி தொலைந்து உன் வாசல் கண் ஆற்றாது வந்து உன் அடி பணியுமா போலே போற்றி யாம் வந்தோம்
திருத் தக்க செல்வமும் சேவகமும் யாம் பாடி வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய் –

————————————————————————

பழுதின்றி பார்க்கடல் வண்ணனுக்கே பணி செய்து வாழ

——————————————————————————
அச்சம் தன்னைத் தவிர்த்தனன் செங்கண் மால் அத்தனே அரங்கா என்று அழைக்கின்றேன் பித்தனாய் ஒழிந்தேன் எம்பிரானுக்கே
செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே நெடியானே வேங்கடவா நின் கோயிலின் வாசல்
அடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்தியங்கும் படியாய்க் கிடந்தது உன் பவள வாய் காண்பேனே
வாலியைக் கொன்று அரசு இளைய வானரத்துக்கு அளித்தவனே

———————————————————–
மின்னிறத் தெயிற்று அரக்கன் வீழ வெஞ்சரம் துரந்து பின்னவருக்கு அருள் புரிந்து அரசளித்த பெற்றியோய்
—————————————————————————–
தொழுவார் வினைச் சுடரை நந்துவிக்கும் வேங்கடமே வானோர் மனச் சுடரை தூண்டும் மலை –
பழுது ஒன்றும் வாராத வண்ணமே விண் கொடுக்கும் மண்ணளந்த சீரான் திருவேங்கடம்

———————————————————————–

இருள் திரிந்து நோக்கினேன் நோக்கி நினைந்தேன் ஒண் கமலம் ஓக்கினேன் என்னையும் அங்கு ஓர்ந்து

————————————————————–

இன்றே கழல் கண்டேன் ஏழ் பிறப்பும் யான் அறுத்தேன் பொன் தோய் வரை மார்பில் பூம் துழாய் அன்று திருக் கண்டு கொண்ட திரு மாலே –
மருந்தும் பொருளும் அமுதமும் தானே திருந்திய செங்கண் மால்

——————————————————————-

உவந்து எம்மைக் காப்பாய் நீ காப்பதனை யாவாய் நீ வைகுந்தம் ஈப்பாயும் எவ்வுயிர்க்கும் நீ
வேங்கடமே விண்ணோர் தொழுவதுவும் மெய்ம்மையால் வேங்கடமே மெய் வினை நோய் தீர்ப்பதுவும்
கூற்றமும் சாரா கொடு வினையும் சாரா தீ மாற்றமும் சாரா வகை அறிந்தேன்
ஆற்றங்கரைக் கிடக்கும் கண்ணன் கடல் கிடக்கும் மாயன் உரைக் கிடக்கும் உள்ளத்து எனக்கு
என் நெஞ்சமே யான் இருள் நீக்கி எம்பிரான்
ஆக்கை கொடுத்து அளித்த கோனே குணப் பரனே உன்னை விடத் துணியார் மெய் தெளிந்தார் தாம்
என்றேன் அடிமை இழிந்தேன் பிறப்பு இடும்பை ஆன்றேன் அமரர்க்கு அமராமை
ஆன்றேன் கடல் நாடும் மண்ணாடும் மேலை இட நாடு காண வினி

——————————————————————–

இந்நின்ற நீர்மை இனி யாம் உறாமை உயிர் அளிப்பான் என்நின்ற யோநியுமாய் பிறந்தாய்
தீ வினைக்கு அரு நஞ்சை நல வினைக்கு இன்னமுதினை பூவினை மேவிய தேவி மணாளனை –எஞ்ஞான்று தலைப் பெய்வனே –

—————————————————————————-

அழகும் அறிவோமே வல்வினையைத் தீர்ப்பான் நிழலும் அடிதாறும் ஆனோம்
பிறப்பின்மை பெற்று அடிக் கீழ் குற்றேவல் அன்று மறப்பின்மை யான் வேண்டும் மாடு

——————————————————-

செல்வம் மல்கு தென் திருக்குடந்தை அந்தணர் மந்திர மொழியுடன் வணங்க ஆடரவமளியில்
அறி துயில் அமர்ந்த பரம நின்னடி பணிவன் வரும் இடர் அகல மாற்றோ வினையே

———————————————————–

பேசுவார் தம்மை உய்ய வாங்கிப் பிறப்பு அறுக்கும் பிரானிடம் –திருவேங்கடம் அடை நெஞ்சே
மன்னா இம்மனிசப் பிறவியை நீக்கி தன்னாக்கித் தன இன்னருள் செய்யும் தலைவன் மின்னார் முகில் சேர் திருவேங்கடம் மேய
என்னானை என்னப்பன் என் நெஞ்சில் உளானே
இலங்கை மன் கதிர் முடியவை பத்தும் அம்பினால் அறுத்து அரசு அவன் தம்பிக்கு அளித்தவன் உறை கோயில் –நாங்கூர் வண் புருடோத்தமமே
உருத்தெழு வாலி மார்வில் ஒரு கணை உருவவோட்டி கருத்துடைத் தம்பிக்கு இன்பக் கதிர் முடியரசு
அளித்தாய் –நாங்கை காவளம் தண் பாடியாய் களை கண் நீயே
பண்டை நம் வினை கெட வென்று அடி மேல் தொண்டரும் அமரரும் பணிய நின்று –விண்ணகர் மேயவனே
சாதலும் பிறத்தலும் என்று இவற்றை காதல் செய்யாது உன் கழல் அடைந்தேன் \
ஆர்வச் செற்றமவை தம்மை மனத்து அகற்றி வெறுத்தேன் நின்னடைந்தேன் திரு விண்ணகர் மேயவனே
பிறவாமை பெற்றது நின் திறத்தேனா தன்மையால் திரு விண்ணகரானே
புண்ணியனே உன்னை எய்தி என் தீ வினைகள் தீர்ந்தேன் நின்னடைந்தேன் திரு விண்ணகரானே
ஆங்கு வென் நரகத்து அழுந்தும் போது அஞ்சேல் என்று அடியேனை ஆங்கே வந்து தாங்கு தாமரை யன்ன பொன்னாரடி
எம்பிரானை -உம்பர்க்கு அணியாய் நின்ற
வேங்கடத்து அரியை பரி கீறியை வெண்ணெய் உண்டு உரலினிடை யாப்புண்ட-தீங்கரும்பினை தேனை நன் பாலினை அன்றி என் மனம் சிந்தை செய்யாதே
அடும் துனியைத் தீர்த்து இன்பமே தருகின்ற ஓர் தோற்றத் தொன் நெறியை
கடியார் காளையர் ஐவர் புகுந்து காவல் செய்த அக்காவலை பிழைத்து குடி போந்து உன் அடிக் கீழ் வந்து புகுந்தேன் —
அடியேனைப் பணி யாண்டு கொள் எந்தாய் அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே
தந்தை காலில் விலங்கு அர வந்து தோன்றிய தோன்றல் பின் தமியேன் தன சிந்தை போயிற்று
நாட்டினாய் என்னை உனக்கு முன் தொண்டாக மாட்டினேன் அத்தனையே கொண்டு என் வல்வினையை
பாட்டினால் உன்னை என் நெஞ்சத்து இருந்தமை காட்டினாய் கண்னபுரத் துறை யம்மானே

————————————————————————

எவ்வ நோய் தவிர்ப்பான் எமக்கு இறை இன்னகைத் துவர்வாய் நிலமகள் செவ்வி தோய வல்லான் திரு மா மகட்கு இனியான்
நந்தா நரகத்து அழுந்தா வகை நாளும் எந்தாய் தொண்டரானவர்க்கு இன்னருள் செய்வாய்
சந்தோகா தலைவனே தாமரைக் கண்ணா அந்தோ அடியேற்கு அருளாய் உன்னருளே

—————————————————————————————

கை வளையும் மேகலையும் காணேன் கண்டேன் கன மகரக் குழை இரண்டும் நான்கு தோளும்
மகரம் சேர் குழையும் காட்டி என்னலனும் என்னிறைவும் என் சிந்தையும் என் வளையும் கொண்டு என்னை யாளும் கொண்டு –புனல் அரங்கம் ஊர் என்று போயினாரே

————————————————————————

வினையேன் வினை தீர் மருந்தானாய் –விண்ணோர் தலைவா கேசவா மனை சேர் ஆயர் குல முதலே மா மாயனே மாதவா
சார்ந்த விருவல் வினைகளும் சரித்து மாயப் பற்று அறுத்து தீர்ந்து தன பால் மனம் வைக்கத் திருத்தி வீடு திருத்துவான் ஆர்ந்த ஞானச் சுடராகி –நெடுமாலே
வழி நின்ற வல்வினை மாள்வித்து அழிவின்றி யாக்கம் தருமே
பிறவித் துயர் அற ஞானத்துள் நின்று துறவிச் சுடர் விளக்கம் தலைப் பெய்வார் அறவணை ஆழிப் படை அந்தணனை
மயர்வற வென் மனத்தே மன்னினான் தன்னை உயர் வினையே தரும் ஒன சுடர்க் கற்றையை
அழிப்போடு அளிப்பவன் தானே
அறியாமை வஞ்சித்தாய் எனதாவியுள் கலந்தே
செடியார் நோய்கள் கெடப் படிந்து குடைந்தாடி அடியேன் வாய் மடுத்துப் பருகிக் களித்தேனே
அமுதாய வானேற செய்குந்தா வரும் தீமை யுன்னடியார்க்குத் தீர்த்து அசுரர்க்குத் தீமைகள் செய் குந்தா நின் புகழ் குடைந்தாடிப் பாடிக் களித்து உகந்து உகந்து உள்ள நோய்கள் எல்லாம் துரந்து உய்ந்து போந்து இருந்தே
வெந்தீ வினைகளை நாசம் செய்து உனது அந்தமில் அடிமை அடைந்தேன் விடுவேனோ
மாறி மாறிப் பல பிறப்பும் பிறந்து அடியை யடைந்து உள்ளம் தேறி ஈறில் இன்பத் திரு வெள்ளம் யான் மூழ்கினன்
என்னுள் புகுந்து இருந்து தீ தவம் கெடுக்கும் அமுதம் செந்தாமரைக் கண் குன்றம்
நோய் வீய வினைகளை வேர் அறப் பாய்ந்து எந்நாள் யான் உன்னை இனி வந்து கூடுவனே
தொன் மா வல்வினைத் தொடர்களை முதலரித்து நின் மா தாள் சேர்ந்து நிற்பது எஞ்ஞான்று கொலோ
வேட்கை எல்லாம் விடுத்து என்னை உன் திருவடியே சுமந்து உழல கூட்டரிய திருவடிகள் கூட்டினை நான் கண்டேனே
தீரா வினைகள் தீர என்னை யாண்டாய் திருக்குடந்தை ஊரா
செடியார் வினைகள் தீர் மருந்தே திருவேங்கடத்து எம்பெருமானே
நீள் ஆலிலை மீது சேர் குழவி வினையேன் வினை தீர் மருந்தே
நாட்டை நலியும் அரக்கரை நாடித் தடிந்திட்டு நாட்டை யளித்து உய்யச் செய்து
ஓர் ஐவர்க்காய் தேசம் அறிய சாரதியாய்ச் சென்று சேனையை நாசம் செய்திட்டு நடந்த நல்வார்த்தை
பெரும் துன்பம் வேர் அற நீக்கித் தன தாளின் கீழ்ச் சேர்த்து அவன் செய்யும் சேமத்தை எண்ணி
ஒப்பிலாத் தீ வினையேனை உய்யக் கொண்டு செப்பமே செய்து திரிகின்ற சீர்
ஏர்விலா என்னைத் தன்னாக்கி என்னால் தன்னை சீர் பெற இன்கவி சொன்ன திறத்துக்கே
அமரர்தம் அமுதே அசுரர்கள் நஞ்சே என்னுடைய ஆர் உயிரேயோ
பாதம் அடைவதன் பாசத்தாலே மற்ற வன்பாசங்கள் முற்ற விட்டு
வளரும் சுடரும் இருளும் போல் தெருளும் மருளும் மாய்த்தோமே
தெருளும் மருளும் மாய்த்து தன திருத்து செம் பொற் கழல் அடிக் கீழ் அருளி இருத்தும் அம்மானாம்
பண்டை வினையாயின பற்றோடு அறுத்து தொண்டர்க்கு அமுது உண்ணச் சொல் மாலைகள் சொன்னேன்
அடியேனைப் பொருளாக்கி உன் பொன்னடிக் கீழ் புக வைப்பாய் –தென் திரு நாவாய் என் தேவே
திரு மோகூர் நாளும் மேவி நன்கு அமர்ந்து நின்று அசுரரைத் தகர்க்கும் –காள மேகத்தை யன்றி மற்று ஒன்றிலம் கதியே
கண்டேன் கமல மலர்ப்பாதம் காண்டலுமே விண்டே ஒழிந்த வினையாயின வெல்லாம்
தொண்டே செய்து என்றும் தொழுது வழி ஒழுக பண்டே பரமன் பணித்த பணி வகையே
பழ வினைகள் பற்று அறுத்து நாட்டாரோடு இயல் ஒழிந்து நாரணனை நல்கினமே
இன்று என்னைப் பொருளாக்கித் தன்னை என்னுள் வைத்தான்
உற்றேன் உகந்து பணி செய்து உனபாதம் பெற்றேன் ஈதே இன்னம் வேண்டுவது எந்தாய்
——————————————————

மருள் சுரந்த முன்னைப் பழ வினை வேர் அறுத்து ஊழி முதல்வனையே பன்னப் பணித்த
இராமானுசன் பரன் பாதமும் என் சென்னித் தரிக்க வைத்தான்
மன்னிய பேரிருள் மாண்டபின் கோவலுள் மா மலராள் தன்னோடு மாயனைக் கண்டமை காட்டும் தமிழ்த் தலைவன்
காண்டலுமே தொண்டு கொண்டேன் அவன் தொண்டர் பொற்றாளில் என் தொல்லை வெந்நோய் விண்டு கொண்டேன்
மதி மயங்கித் துயக்கும் பிறவியில் தோன்றிய வென்னை துயர் அகற்றி உயக் கொண்டு நல்கும் இராமானுச
என் தன மெய் வினை நோய் களைந்து நன் ஞானம் அளித்தனன் கையில் கனி என்னவே

———————————————————————————

கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
ஆசார்யர்கள் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

சாத்விக அஹங்காரம்–அருளிச் செயல் ஸ்ரீ ஸூ க்திகள்–

August 29, 2015

எங்கள் குழுவினில் புகுதல் ஓட்டம்
எங்கள் குழாம் புகுந்து கூடும் மனமுடையீர்கள் வரம்பு ஒழி வந்து ஒல்லைக் கூடுமினோ
எந்தை தந்தை தந்தை தந்தை தம் மூத்தப்பன்
-அபிமான துங்கன் செல்வனைப் போலே திருமாலே நானும் உனக்குப் பழ வடியேன்
———————————————–
என் மகன் கோவிந்தன் கூத்தினை இள மா மதி நின் முகம் கண்ணுளவாகில் நீ இங்கே நோக்கிப் போ
ஞாலத்துப் புத்திரனைப் பெற்றார் நங்கைமீர் நானே மற்றாரும் இல்லை
மன்னர் மறுக மைத்துனன் மார்க்கு ஒரு தேரின் மேல் முன்னங்கு நின்று மோழை எழுவித்தவன் மலை

—————————————————————————–
———————————
அபிமான பங்கமாய்-வந்து நின் பள்ளிக் கட்டில் கீழே
உன் தன்னோடு உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது
நீ குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது
———-
அவரைப் பிராயம் தொடக்கி என்றும் ஆதரித்து எழுந்த என் தட முலைகள் துவரைப் பிரானுக்கே சங்கற்பித்துத் தொழுது வைத்தேன்

——————————–

உன்ன பாதம் என்ன சிந்தை மன்ன வைத்து நல்கினாய்

——-

துளவத் தொண்டராய தொல்சீர்த் தொண்டர் அடிப்பொடி சொல் இளைய புன் கவிதை யேலும் எம்பிராற்கு இனியவாறே

—–

அடியார்க்கு என்னை ஆட்படுத்த விமலன்
திரு வயிற்று உதரபந்தம் என் உள்ளத்துள் நின்று உலாகின்றதே
செய்ய வாய் ஐயோ என்னைச் சிந்தை கவர்ந்ததுவே
நீல மேனி ஐயோ நிறை கொண்டது என் நெஞ்சினையே
என் உள்ளம் கவர்ந்தானை அண்டர் கோன் என் அமுதினை

——–

தென் குருகூர் நம்பி என்றக்கால் அண்ணிக்கும் அமுதூறும் என் நாவுக்கே
அன்னையாய் அத்தனாய் என்னை யாண்டிடும் தன்மையான் சடகோபன் என் நம்பியே

————————————————————–

எங்கள் ஈசன் எம்பிரானை இரும் தமிழ் நூல் புலவன்
எம் கார் வண்ணனை விண்ணோர் பரவும் பொழில் வேங்கட வேதியனை
வந்தாய் என் மனம் புகுந்தாய் மன்னி நின்றாய் நந்தாத கொழும் சுடரே எங்கள் நம்பீ
என் நெஞ்சம் என்பாய் –வேங்கட மலை கோயில் மேவிய ஆயர் நாயகற்கு இன்று அடிமைத் தொழில் பூண்டாயே
கற்பகத்தைக் கண்டது நான் கடல் மல்லைத் தல சயனத்தே
நின் தாள் நயந்து இருந்த -இவளை -உன் மனத்தால் என் நினைந்து இருந்தாய் –
என்தன் ஏந்திழை இவளுக்கு என் நினைந்து இருந்தாய் இடவெந்தை எந்தை பிரானே
திருக் கோவலூர் அதனுள் கண்டேன் நானே –
காழிச் சீராம விண்ணகர் என் செங்கண் மாலை –ஆலி நாடன் அருள்மாரி அரட்ட முக்கி அடையார் சீயம் கொங்கு மலர்
குழலியர் வேள் மங்கை வேந்தன் கொற்ற வேல் பரகாலன் கலியன் சொன்ன சங்க முகத் தமிழ் மாலை
என் சிந்தனைக்கு இனியாய் திருவே என்னாருயிரே –
என் பயலை நோய் உரையாயே
என்னுடைய கனவளையும் கவர்வானோ
காவியங்கண்ணி எண்ணில் கடிமா மலர்ப் பாவை ஒப்பாள் –
பவள வாயாள் என் மடந்தை பார்த்தன் பள்ளி பாடுவாளே
எந்தை தந்தை தம்மான் என்று என்று எமர் ஏழ் ஏழ் அளவும் வந்து நின்ற தொண்டரோர்க்கே வாசி வல்லீரால்
என் மகளைச் செய்தனகள் எங்கனம் நான் செப்புகேனே
பனி காத்த அம்மானை யான் கண்டது அணி நீர்த் தென்னரங்கத்தே –
அணியனாய் வந்து என் சிந்தையுள் வெந்துயர் அறுக்கும்
உன்னை என் மனத்தகத்தே திறம்பாமல் கொண்டேன் திரு விண்ணகரானே
என்தாதை தாதை அப்பால் எழுவர் பழ வடிமை வந்தார் என் நெஞ்சினுள்ளே வந்தாயைப் போகல ஒட்டேன்
தென் அழுதையில் மன்னி நின்ற தேவாதி தேவனை யான் கண்டு கொண்டு திளைத்தேனே
என் நெஞ்சிடர் தீர்த்து அருளிய என் நிமலன் காண்மின் –அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர் கோவே
சிறு புலியூர் சல சயனத்துள்ளும் எனது உள்ளத்துள்ளும் உறைவாரை உள்ளீரே
வெண் சங்கம் ஓன்று ஏந்திய கண்ண நின் தனக்கும் குறிப்பாகில் கற்கலாம் கவியின் பொருள் தானே
மாவளரும் மென்னோக்கி மாதராள் மாயவனைக் கண்டல் என்று –கண்ணபுரத்து அம்மானைக் கலியன் சொன்ன
வரை எடுத்த பெருமானுக்கு இழந்தேன் என் வரி வளையே
என்னையும் நோக்கி என்னல்குலும் நோக்கி எந்திளம் கொங்கையும் நோக்குகின்றார் –அச்சோ ஒருவர் அழகியவா
வேங்கடத்து உச்சியில் கண்டு போய் என்னை யாளுடை ஈசனை எம்பிரான் தன்னை யாம் சென்று காண்டும் தண் காவிலே
காதில் கடிப்பிட்டுக் கலிங்கம் உடுத்து தாது நல்ல தண்ணம் துழாய் கொடு அணிந்து போது மறுத்துப் புறமே வந்து
நின்றீர் ஏதுக்கு இதுவென் இதுவென் இது வென்னோ

—————————

புயல் வண்ணனாரை மருவி என் மனத்து வைத்து கரும்பினின் சாறு போலப் பருகினேற்கு இனியவாறே
அரங்க மா கோயில் கொண்ட கரும்பினைக் கண்டு கொண்டு என் கண்ணினை களிக்குமாறே

————————————————————

எந்தை தளிர் புரியும் திருவடி என் தலை மேலவே
என் நலனும் என்னிறைவும் என் சிந்தையும் என் வளையும் கொண்டு என்னை ஆளும் கொண்டு –புனல் அரங்கம் ஊர் என்று போயினாரே

————————————————————

ஆமே அமரர்க்கு அறிய அது நிற்க நாமே யறிகிற்போம் நல நெஞ்சே பூ மேய மாதவத்தோன் தாள் பணிந்த வாளரக்கன் நீள் முடியை பாதமத்தால் எண்ணினான் பண்பு –
எனக்காவார் ஆர் ஒருவரே எம்பெருமான் தனக்காவான் தானே மற்று அல்லால்

——————————————————–

நாரணற்கு ஞானத் தமிழ் புரிந்த நான்
என் நெஞ்சமேயான் என் சென்னியான் –உலகேத்தும் ஆழியான் அத்தியூரான் –
மாலே நெடியானே கண்ணனே –என் தன அளவன்றால் யானுடைய அன்பு

———————————————–

திருக் கண்டேன் –என் ஆழி வண்ணன் பால் இன்று
இன்றே கழல் கண்டேன் ஏழ் பிறப்பும் யான் அறுத்தேன்
எந்தை ஒரு வல்லித் தாமரையாள் ஒன்றிய சீர் மார்வன் திரு வல்லிக் கேணியான் சென்று

———————————————————————

யான் முகமாய் அந்தாதி மேலிட்டு அறிவித்தேன் ஆழ் பொருளை சிந்தாமல் கொண்மின் நீர் தேர்ந்து
நன்றாக நான் உன்னை அன்றி இலேன் நாரணனே நீ என்னை அன்றி இலை
அழல் உமிழும் பூங்கார ரவணையான் பொன் மேனி யாம் காண வல்லமே யல்லமே மா மலராள் வார் சடையான் வல்லரே யல்லரே
எனக்காவார் ஆர் ஒருவரே எம்பெருமான் தனக்காவான் தானே மற்று அல்லால் புனக்காயா வண்ணனே
உன்னைப் பிறர் அறியார் என் மதிக்கு விண் எல்லாம் உண்டோ விலை
என்றும் மறந்து அறியேன் என் நெஞ்சத்தே வைத்து நின்றும் இருந்தும் நெடுமாலை என்றும்
திரு விருந்த மார்பன் சிரீதரனுக்கு ஆளாய் கரு விருந்த நாள் முதலாக் காப்பு
இனி அறிந்தேன் ஈசற்கும் நான்முகற்கும் தெய்வம் இனி அறிந்தேன் எம்பெருமான் உன்னை இனி அறிந்தேன்
காரணன் நீ கற்றவை நீ கற்பவை நீ நற் கிரிசை நாரணன் நீ நன்கு அறிந்தேன் நான் –

—————————————————————
பெரும் கேழலார் தம் பெரும் கண் மலர்ப் புண்டரீகம் நம் மேல் ஒருங்கே பிறழ வைத்தார் இவ்வகாலம்
கடல் மண் எல்லாம் விலையோ வென மிளிரும் கண் இவள் பரமே திரு வேங்கடம் என்று கற்கின்ற வாசகமே
திருமால் தலைக் கொண்ட நங்கட்கு எங்கே வரும் தீ வினையே
ஞானப் பிரானை அல்லால் இல்லை நான் கண்ட நல்லதுவே

——————————————————–

ஒரு ஆலிலைச் சேர்ந்த எம்பெருமா மாயனை யல்லது ஒரு மா தெய்வம் மற்றுடையமோ யாமே –

———————————————————————-

முந்துற்ற நெஞ்சே இயற்றுவாய் எம்மோடு நீ கூடி –நற் பூவைப் பூ வீன்ற வண்ணன் புகழ் –
என்னின் மிகு புகழார் யாவரே
புவியும் இரு விசும்பும் நின்னகத்த நீ என் செவியின் வழி புகுந்து என்னுள்ளே அவிவின்றி
யான் பெரியன் நீ பெரியை என்பதனை யார் அறிவார் ஊன் பருகு நேமியாய் உள்ளு
இப்போதும் இன்னும் இனிச் சிறிது நின்றாலும் எப்போதும் ஈதே சொல் என்நெஞ்சே
எப்போதும் கை கழலா நேமியான் நம் மேல் வினை கடிவான் மொய் கழலே ஏத்த முயல்
———————————————————–

நும் மகளை நோய் செய்தான் ஆரானும் அல்லன் அறிந்தேன் அவனை நான் கூரார் வேல் கண்ணீர் உமக்கு அறியக் கூறுகேனோ
காரார் கடல் வண்ணன் பின் போன நெஞ்சமும் வாராதே என்னை மறந்தது தான்
நீராய் உருகும் என்னாவி
மற்று எனக்கு இங்கு ஆரானும் கற்பிப்பார் நாயகரே நான் அவனைக் காரார் திரு மேனி காணும் அளவும் போய் –ஊராது ஒழியேன் நான்

——————————————————————

திரு நறையூர் மா மலை போல் பொன்னியலும் மாடக் கவாடம் கடந்து புக்கு என்னுடைய கண் களிப்பா நோக்கினேன்
தன்னருளும் ஆக்கமும் தாராநெல் தன்னை நான் தன்னடியார் முன்பும் தாரணி முழுதாளும் –அறிவிப்பன்
உலகு அறிய ஊர்வன் நான் முன்னி முளைத்து எழுந்து ஓங்கி ஒளி பரந்த மன்னிய பூம் பெண்ணை மடல்

—————–
துயர் அறு சுடரடி தொழுது எழு என் மனனே –
மலர்மகள் விரும்பும் நம் அரும் பெறலடிகள்
என் விடு தூதாய் சென்றக்கால்
மாயப்பிரானை என் மாணிக்கச் சோதியை தூய வமுதைப் பருகிப் பருகி என் மாயப் பிறவி மயர்வு அறுத்தேனே
என் இசைவினை என் சொல்லி யான் விடுகேனோ
தானொட்டி வந்து என் தனி நெஞ்சை வஞ்சித்து
என்னுடைய நன்னெஞ்சம் தன்னை அகல்விக்கத் தானும் கில்லான்
வைகலும் வெண்ணெய் கை கலந்து உண்டான் பொய் கலவாது என் மெய் கலந்தானே
கண்ணபிரான் என்னமுதம் சுவையன் திருவின் மணாளன் என்னுடைச் சூழல் உளானே
என் அருகிலானே –
-ஒழிவிலன் என்னோடு உடனே
-என் நெஞ்சினுளானே
–என்னுடைத் தோளிணையானே
என்னுடைய நாவினுளானே
என் கண்ணினுளானே
என் நெற்றி உளானே
எனது உச்சி உளானே
ஒரு மாணிக் குறளாகி நிமிர்ந்த அக் கரு மாணிக்கம் என் கண்ணுளதாகுமே
மறப்பற என்னுளே மன்னினான் தன்னை மறப்பனோ இனி யான் என் மணியை
என்னாவி சேர் அம்மானுக்கு அந்தாம வாழ முடி சங்கு ஆழி நூல் ஆரமுள –
என் பொல்லாத் திருக்குறளா என்னுள் மன்னி வைக்கும் வைகல் தோறும் அமுதாய வானேறே
முடியாதது என் எனக்கேல் இனி முழு வேழ் உலகும் உண்டான் உகந்து வந்து அடியேனுள் புகுந்தான்
அடியை அடைந்து உள்ளம் தேறி ஈறில் இன்பத்து இரு வெள்ளம் யான் மூழ்கின
கேசவன் தமர் கீழ் மேல் எமர் ஏழு எழு பிறப்பும் மாசதிரிது பெற்று நம்முடை வாழ்வு வாய்க்கின்றவா –
எற்பரன் என்னை யாக்கிக் கொண்டு எனக்கே தன்னைத் தந்த கற்பகம் என்னமுதம் கார் முகில் போலும் வேங்கட நல் வெற்பன்
தேவாதி தேவபெருமான் என் தீர்த்தனே
யானே நீ என்னுடைமையும் நீயே வானே ஏத்தும் எம் வானவர் ஏறே
ஏற்கும் பெரும் புகழ் வானவர் ஈசன் கண்ணன் தனக்கு ஏற்கும் பெரும் புகழ் வ ண் குருகூர் சடகோபன் சொல்
ஏற்கும் பெரும் புகழ் ஆயிரத்துள் இவையும் ஓர் பத்து ஏற்கும் பெரும் புகழ் சொல்ல வல்லார்க்கு இல்லை சன்மமே
என் கண்ணா என் பரஞ்சுடரே
என் திருமகள் சேர் மார்வனே என்னும் என்னுடைய யாவியே என்னும்
முகில் வண்ணன் அடியை அடைந்து அருள் சூடி உய்ந்தவன்
என் நெஞ்சினூடே புள்ளைக் கடாகின்ற வாற்றைக் காணீர்
என் திரு மார்பன் தன்னை என் மலை மகள் கூறன் தன்னை என்றும் என் நா மகளை அகம் பால் கொண்ட நான்முகனை
ஆம் வண்ணம் இன்னது ஓன்று என்று அறிய வரிய வரியை ஆம் வண்ணத்தால் குருகூர்ச் சடகோபன் அறிந்து உரைத்த ஆம் வண்ண ஒண் தமிழ்கள் இவை
என் திரு வாழ் மார்வற்கு என் திறம் சொல்லார்
இருத்தும் வியந்து என்னைத் தன பொன்னடிக் கீழ்
அவன் என்னுள் இருள் தானற வீற்று இருந்தான்
என்னுடைய பந்தும் கழலும் –
என் நெஞ்சும் உயிரும் உள்கலந்து நின்றார் அறியா வண்ணம் என் நெஞ்சும் உயிரும் அவையுண்டு தானேயாகி நிறைந்தானே
திருமாலிரும் சோலை மலையே திருப் பாற்கடலே என் தலையே திருமால் வைகுந்தமே தண் திருவேங்கடமே எனதுடலே
இன்று வந்து இருப்பேன் என்று என் நெஞ்சு நிறையப் புகுந்தான்
உற்றேன் உகந்து பணி செய்து உணபாதம் பெற்றேன் ஈதே இன்னம் வேண்டுவது
என் பொல்லாக் கனிவாய்த் தாமரைக் கண் கரு மாணிக்கமே என் கள்வா
கோல மலர்ப் பாவைக்கு அன்பாகிய என் அன்பேயோ

——————————————–
இராமானுசன் தன பிறங்கிய சீர் சாரா மனிசரைச் சேரேன் எனக்கு என்ன தாழ் வினியே
என் தன சிந்தையுள்ளே நிறைந்து ஒப்பற விருந்தான் எனக்காரும் நிகர் இல்லையே

—————————————————————————
கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
ஆசார்யர்கள் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

– -திவ்யாயுதங்கள்-பற்றிய அருளிச் செயல் ஸ்ரீ ஸூ க்திகள் —

August 28, 2015

திருப்பல்லாண்டு
படை போர் புக்கு முழங்கும் அப்பாஞ்ச சன்னியமும் பல்லாண்டு -1-
தீயில் பொழிகின்ற செஞ்சுடராழி திகழ் திருச் சக்கரத்தின் கோயில் பொறியாலே யொற்றுண்டு நின்று குடிகுடியாட் செய்கின்றோம் –7-

பெரியாழ்வார் திருமொழி-

ஒரு காலில் சங்கு ஒரு காலில் சக்கரம் உள்ளடி பொறித்து அமைந்த இரு காலும் கொண்டு அங்கு எழுதினால் போல் இலச்சினை பட நடந்து -1-7-6-
சங்கு வில் வாள் தண்டு சக்கரம் ஏந்திய அங்கை களாலே வந்து அச்சோவச்சோ -1-8-2-
சுக்கிரன் கண்ணைத் துரும்பால் கிளறிய சக்கரக் கையனே அச்ச வச்ச சங்கம் இடத்தானே அச்சோவச்சோ –1-8-7-
மெச்சூது சங்கம் இடத்தான் நல்வேயூதி போய்ச் சூதில் தோற்ற பொறையுடை மன்னர்க்காய் –2-1-1-
திண்ணார் வெண் சங்குடை யாய் திருநாள் திருவோணம் இன்று ஏழு நாள் –2-3-9-
பற்றார் நடுங்க முன் பாஞ்ச சன்னியத்தை வாய் வைத்த போர் ஏறே !-பெரிய ஆழ்வார் திரு மொழி -3-3-5
நாந்தகம் சங்கு தண்டு நாண் ஒலிச் சார்ங்கம் திருச் சக்கரம் ஏந்து பெருமை யிராமனை–4-1-2-
வெள்ளை விளி சங்கு வெஞ்சுடர்த் திருச் சக்கரம் ஏந்து கையன் உள்ள விடம் –4-1-7-
உரக மெல்;லணையான் கையில் உறை சங்கம் போல் மட வன்னங்கள்–4-4-4-
உழுவதோர் படையும் உலக்கையும் வில்லும் ஒண் சுடர் ஆழியும் சங்கும் மழுவோடு வாளும் படைக்கலமுடைய மால் புருடோத்தமன் –4-7-5-
சாமிடத்து என்னைக் குறிக் கொள் கண்டாய் சங்கோடு சக்கரம் ஏந்தினானே-4-10-2-
சழக்கு நாக்கொடு புன்கவி சொன்னேன் சங்கு சக்கரம் ஏந்து கையானே –5-1-2-
உறகல் உறகல் உறகல் ஒண் சுடர் ஆழியே சங்கே அற வெறி நாந்தக வாளே அழகிய சார்ங்கமே தண்டே   -5-2-9-

திருப்பாவை
பாழி யம் தோளுடை பத்ம நாபன் கையில் ஆழி போல் மின்னிவலம் புரி போலே நின்று அதிர்ந்து -4
புள்ளரையன் கோயில் வெள்ளை விளி சங்கின் பேரரவம் கேட்டிலையோ -6
ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன -பாலன்ன வண்ணத்து உன் பாஞ்ச சன்னியமே போல்வன சங்கங்கள் போய்ப்பாடுடையனவே  -26

-நாச்சியார் திருமொழி-

ஊனிடை யாழி சங்குத் தமர்க்கென்று உன்னித் தெழுந்த என் தட முலைகள்
மானிடர்வர்கு என்று பேச்சுப்படில் வாழகில்லேன் கண்டாய் மன்மதனே –1-5-
வெள்ளை விளி சங்கு இடங்கையில் கொண்ட விமலன் எனக்கு உருக்காட்டான் -5-2-
குயிலே குறிக் கொண்டு இது நீ கேள் சங்கோடு சக்கரத்தான் வரக் கூவுதல் பொன் வலை கொண்டு தருதல்
இங்குள்ள காவினில் வாழக் கருதில் இரண்டத்து ஒன்றேல் திண்ணம் வேண்டும் -5-9-
மத்தளம் கொட்ட வரி சங்கம் நின்றூத -6-6-
கருப்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ திருப்பவளச் செவ்வாய் தான் தித்தித்து இருக்குமோ
மருப்பொசித்த மாதவன் தன வாய்ச் சுவையும் நாற்றமும் விருப்புற்றுக் கேட்கின்றேன் சொல்லாழி வெண் சங்கே –7-1-
கடலில் பிறந்து கருதாது பஞ்சசனனுடலில் வளர்ந்து போய் ஊழியான் தீய அசுரர் நடலை பட முழங்கும் தோற்றத்தாய் நல் சங்கே — 7-2
கோலப் பெரும் சங்கே -7-3
வளம் புரியே இந்திரனும் உன்னோடு செல்வத்துக்கு ஏலானே-7-4-
மது சூதன் வாயமுதம் பன்னாளும் உண்கின்றாய் பாஞ்ச சன்னியமே –7-5-
செங்கண் மால் தன்னுடைய வாய்த் தீர்த்தம் பாய்ந்தாட வல்லாய் வளம் புரியே –7-6-
வாசுதேவனுடைய அங்கைத் தலம் ஏறி அன்ன வசம் செய்யும் சங்கரையா உன் செல்வம் சால அழகியதே –7-7-
உண்பது சொல்லில் உலகளந்தான் வாயமுதம் கண் படை கொள்ளல் கடல் வண்ணன் கைத் தலத்தே
பெண்படையார் உன்மேல் பெரும் பூசல் சாற்றுகின்றார் பண் பல செய்கின்றாய் பாஞ்ச சன்னியமே –7-8-
பொதுவாக உண்பதனைப் புக்கு நீ யுண்டக்கால் சிதையாரோ உன்னோடு செல்வப் பெரும் சங்கே –7-9-
பாஞ்ச சன்னியத்தைப் பற்ப நாபனோடும் வாய்ந்த பெரும் சுற்றமாக்கிய வண் புதுவை ஏய்ந்த புகழ்ப் பட்டர் பிரான் –7-10-
பூங்கொள் திரு முகத்து மடுத்தூதிய சங்கொலியும் சார்ங்க வில் நாண் ஒலியும் தலைப்பெய்வது எஞ்ஞான்று கொலோ –7-9-
வேத முதல்வர் வளம் கையில் மெல் தோன்றும் ஆழியின் வெஞ்சுடர் போலச் சுடாது –10-2-
தாமுகக்கும் தம்கையில் சங்கமே போலாவோ யாமுகக்கும் எங்கையில் சங்கமும் ஏந்திழையீர்-11-1-
வெளிய சங்கு ஓன்று உடையானைப் பீதக வாடை யுடையானை அளி நன்குடைய திருமாலை ஆழியானைக் கண்டீரே –14-8-

இரு கரையர்களாக இருப்பார்கள் உனக்கு ஒப்பார்களோ-
-குற்றத்தையும் குணத்தையும் கணக்கு இட்டு செய்யும் அவர்கள் உனக்கு ஒப்பார்களோ  மாட்டார்கள் இறே–
கர்ம அனு குணமாக சிருஷ்டிக்கும் அவன் இறே அவன் 
கருதும் இடம் பொருது சக்கரம் -பாஞ்ச சன்யம் திரு ஆபரணம் மட்டும் இல்லை-

பெருமாள் திருமொழி –

கோலார்ந்த நெடும் சார்ங்கம் கூனற் சங்கம் கொலை யாழி கொடும் தண்டு கொற்ற ஒள் வாள்
காலார்ந்த கத்திக் கருடன் என்னும் வென்றிக் கடும் பரவையிவை யனைத்தும் புறம் சூழ் காப்ப –1-8-
அங்கையாழி அரங்கன் அடியிணை தங்கு சிந்தைத் தனிப் பெரும் பித்தனாம் கொங்கர் கோன் குலசேகரன் –3-9-

திரு வாய் மொழி
அருள் ஆழி அம்மானைக் கண்டக்கால் இது சொல்லி அருள் -1-4-5-
பொருமா நீள் படை ஆழி சங்கத்தோடு திரு மா நீள் கழல் ஏழுலகும் தொழ-1-10-1-
அந்தாமத் தன்பு செய்து என்னாவி சேர் அம்மானுக்கு அந்தாம வாண் முடி சங்கு ஆழி நூல் ஆரமுள-2-5-1-
மழுங்காத வைநநுதிய சக்கர நல வலத்தையாய் தொழும் காதல் களிறு அளிப்பான் புள்ளூர்ந்து தோன்றினையே–3-1-9-
சங்கு சக்கரத்தன் என்கோ சாதி மாணிக்கத்தையே –3-4-3
ஆளும் பரமனைக் கண்ணனை ஆழிப்பிரான் தன்னை -3-7-2-
அளிக்கும் பரமனைக் கண்ணனை ஆழிப்பிரான் தன்னை –3-7-6-
திசைப்பின்ற்றியே சங்கு சக்கரம் என்று இவள் கேட்க –4-6-2-
அப்பனே அடல் ஆழியானே ஆழ கடலைக் கடைந்த துப்பனே –4-7-5
வரி வளையால்  குறைவில்லா பெரு முழக்கால் அடங்காரை எரி அழலம் புக ஊதி இரு நிலம் முன் துயர் தவிர்த்த – 4 -8-8-
ஆட்செய்து ஆழிப்பிரானைச் சேர்ந்தவன் வண் குருகூர் நகரான் –4-10-11
கையார் சக்கரத்து என் கரு மாணிக்கமே -5-1-1-
அம்மான் ஆழிப்பிரான் அவன் எவ்விடத்தான் யான் ஆர் –5-1-7-
தேவர் கோலத்தோடும் திருச் சக்கரம் சங்கினோடும் ஆவா என்று அருள் செய்து அடியேனொடும் ஆனானே -5-1-9-
யாம் மடலூர்ந்தும் எம்மாழி யங்கைப் பிரானுடை தூ மடல் தண்ணம் துழாய் மலர் கொண்டு சூடுவோம் –5-3-10-
காயும் கடுஞ்சிலை என் காகுத்தன் வாரானால் –5-4-3-
மன்னின்ற சக்கரத்து எம் மாயவனும் வாரானால் -5-4-6-
தூப்பால வெண் சங்கு சக்கரத்தன் தோன்றானால்–5-4-8-
சந்கிநோடும் நேமியோடும் தாமரைக் கண்களோடும் செங்கனி வாய் ஒன்றினோடும் செல்கின்றது என் நெஞ்சமே –5-5-1-
வென்றி வில்லும் தண்டு வாளும் சக்கரமும் சங்கமும் நின்று தோன்றிக் கண்ணுள் நீங்கா நெஞ்சுள்ளும் நீங்காவே -5-5-3-
வளைவாய் நேமிப் படையாய் குடந்தைக் கிடந்த மா மாயா -5-8-8-
கை கொள் சக்கரத்து என் கனிவாய்ப் பெருமானைக் கண்டு கைகளைக் கூப்பிச் சொல்லீர் -6-1-1-
திரு வண் வண்டூர் உறையும் கறங்கு சக்கரக் கைக் கனிவாய்ப் பெருமானைக் கண்டு இறங்கி நீர் தொழுது பணியீர் -6-1-3-
திரு வண் வண்டூர் உறையும் ஆற்றல் ஆழி யங்கை அமரர் பெருமானைக் கண்டு மாற்றம் கொண்டு அருளீர் –6-1-6-
திரு வண் வண்டூர் கரு வண்ணம் செய்யவாய் செய்ய கண் செய்ய கால் செரு ஒண் சக்கரம் சங்கு அடையாளம் திருந்தக் கண்டே –6-1-7-
வென்றி நீள் மழுவா வியன் ஞாலம் முன் படைத்தாய் –6-2-10-
தவள ஒண் சங்கு சக்கரம் என்றும் தாமரைத் தடம் கண் என்றும் -6-5-1-
கோலச் செந்தாமரைக் கண்னற்கு என் கொங்கலரேலக் குழலி இழந்தது சங்கே –6-6-1-
சங்கு வில் வாள் தண்டு சக்கரக் கையற்கு –என் மங்கை இழந்தது மாமை நிறமே –6-6-2-
கறங்கிய சக்கரக் கையவனுக்கு என் பிறங்கிரும் கூந்தல் இழந்தது பீடே-6-6-3-
கூராழி வெண் சங்கு ஏந்திக் கொடியேன் பால் வாராய் ஒரு நாள் மண்ணும் விண்ணும் மகிழவே –6-9-1-
திரு நேமி வலவா தெய்வக் கோமானே –திரு வேங்கடத்தானே –உன்னடி சேர் வண்ணம் அருளாயே –6-10-2-\
அசுரர் வாணாள் மேல் தீ வாய் வாளி மழை பொழிந்த சிலையா திரு மா மகள் கேள்வா –திரு வேங்கடத்தானே —
பூவார் கழல்கள் அரு வினையேன் பொருந்துமாறு புணராயே –6-10-4-
மின்னு நேமியினாய் வினையேனுடை வேதியனே -7-1-2-
அடல் ஆழி ஏந்தி அசுரர் வன்குலம் வேர் மருங்கு அறுத்தாய் விண்ணுளார் பெருமானேயோ –7-1-5-
சங்கு சக்கரங்கள் என்று கை கூப்பும் தாமரைக் கண்ணன் என்றே தளரும் –7-2-1-
வட்ட நேமி வலங்கையா என்னும் வந்திடாய் என்று என்றே மயங்கும் –7-2-4-
வெய்ய வாள் தண்டு சங்கு சக்கரம் வில்லேந்தும் விண்ணோர் முதல் என்னும் -7-2-6-
வெள்ளைச் சுரி சங்கோடு ஆழி ஏந்தித் தாமரைக் கண்ணன் என் நெஞ்சினூடே புள்ளைக் கடாகின்ற வாற்றைக் கேளீர் –7-3-1-
சங்கோடு சக்கரம் கண்டு உகந்தும் தாமரைக் கண்களுக்கு அற்றுத் தீர்ந்தும் –7-3-3-
ஆழி எழச் சங்கும் வில்லும் எழ வாழி எழத் தண்டும் வாளும் எழ –7-4-1-
புக்க வரியுருவை அவுணன் உடல் கீண்டு உகந்த சக்கரச் செல்வன் தன்னை –7-6-11-
சித்திரத் தேர் வலவா திருச் சக்கரத்தாய் அருளாய் –7-8-3-
ஆர்வனோ ஆழி யங்கை எம்பிரான் புகழ் பார் விண் நீர் முற்றும் கலந்து பருகிலும் –7-9-8
வண் குடபால் நின்ற மாயக் கூத்தன் ஆடல் பறவை யுயர்த்த வெல் போர் ஆழி வலவனை யாதரித்தே -8-2-4-
ஆழி வலவனை ஆதரிப்பும் –8-2-5-
என் நெஞ்சு என்னை நின்னிடையேன் அல்லேன் என்று நீங்கி நேமியும் சங்கும் இரு கைக் கொண்டு —
குன்றம் வருவது ஒப்பான் நாள் மலர்ப்பாதம் அடைந்ததுவே –8-2-10-
கரணப் பல்படை பற்றறவோடும் கனல் ஆழி அரணத்தின் படை ஏந்திய ஈசற்கு ஆளாயே–8-3-2-
ஆளுமாளார் ஆழியும் சங்கும் சுமப்பார் தாம் வாளும் வில்லும் கொண்டு பின் செல்வார் மற்று இல்லை -8-3-3-
அணியார் ஆழியும் சங்கமும் எந்துமவர் காண்மின் –என் மனம் சூழ வருவாரே –8-3-6-
திருவாழ் மார்வற்கு என் திறம் சொல்லார் செய்வது என் உருவார் சக்கரம் சங்கு சுமந்து இங்கு உம்மோடு
ஒருபாடு உழல்வான் ஓர் அடியானும் உளன் என்றே -8-3-7-
இதுவோ பொருத்தம் மின்னாழிப் படையாய் –உன்னை எங்கே காண்கேனே–8-5-9-
செருக்கடுத்து அன்று திகைத்த வரக்கரை உருக்கெட வாளி பொழிந்த ஒருவனே –8-6-2-
கொண்டல் வண்ணன் சுடர் முடியன் நான்கு தோளன் குனி சாரங்கன் ஒண் சங்கதை வாள் ஆழியான் ஒருவன் அடியேன் உள்ளானே –8-8-1-
எங்கும் திகழும் எரியோடு செல்வது ஒப்பச் செழுங்கதிர் ஆழி முதல் புகழும் பொரு படை ஏந்திப் போர் புக்கு அசுரரைப் பொன்றுவித்தான்-8-9-3-
களிறு அட்ட பொன்னாழிக் கை என்னம்மான் –8-10-6-
அமர்கொள் ஆழி சங்கு வாள் வில் தண்டாதி பல் படையன்–8-10-9-
பூக்கொள் மேனி நான்கு தோள் பொன்னாழிக் கை என்னம்மான் -8-10-10-
திருப் புளிங்குடியாய் காய்சின வாழி சங்கு வாள் வில் தண்டு ஏந்தி எம்மிடர் கடிவானே -9-2-6-
திருமாலே வெய்யார் சுடர் ஆழி சுரி சங்கம் ஏந்தும் கையா உன்னைக் காணக் கருதும் என் கண்ணே -9-4-1-
ஆள்கின்றான் ஆழியான் ஆரால் குறைவுடையம் -10-4-3-
ஆழியான் ஆழி யமரர்க்கும் அப்பாலான் –10-4-8-
அருள் பெறுவார் அடியார் தம் அடியனேற்கு ஆழியான் அருள் தருவான் அமைகின்றான் அது நமது விதி வகையே –10-6-1-
கைந்நின்ற சக்கரத்தன் கருதுமிடம் பொருது -10-6-8-

இராமானுச நூற்றந்தாதி –

அடையார் கமலத்து அலர்மகள் கேள்வன் கை யாழி என்னும் படையோடு நாந்தகமும் படர் தண்டும் ஒண் சார்ங்க வில்லும்
புடையார் புரி சங்கமும் இந்தப் பூதலம் காப்பதற்கு என்று இடையே இராமானுச முனியாயின இந்நிலத்தே –33-
அடல் கொண்ட நேமியன் ஆருயிர் நாதன் அன்று ஆரணச் சொல் கடல் கொண்ட ஒண் பொருள் கண்டு அளிப்ப –36
கோக்குல மன்னரை மூவெழுகால் ஒரு கூர் மழுவால் போக்கிய தேவனைப் போற்றும் புனிதன் –56
மெய்ம்மை கொண்ட நல் வேதக் கொழும் தண்டம் ஏந்திக் குவலயத்தே மண்டி வந்தேன்றது வாதியர்காள் உங்கள் வாழ்வற்றதே–64
செய்த தலைச் சங்கம் செழுமுத்தமீனும் திருவரங்கர் கைத்தலத்து ஆழியும் சங்கமும் ஏந்தி நம் கண் முகப்பே மொய்த்தலைத்து
உன்னை விடேன் என்று இருக்கிலும் நின் புகழே மொய்த்தலைக்கும் வந்து இராமானுச என்னை முற்றும் நின்றே –75
என் பெரு வினையைக் கிட்டிக் கிழங்கோடு தன்னருள் என்னும் ஒள் வாள் உருவி வெட்டிக் களைந்த இராமானுசன் என்னும் மெய்த்தவனே –93

—————————————————–

கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
ஆசார்யர்கள் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

திருவாய் மொழி -ஈடு மகா பிரவேசம் –இரண்டாவது –ஸ்ரீ யபதி – த்வயமே — வாக்யார்த்தம் -/மூன்றாம் ஸ்ரீ யபதி -ஸ்ரீ பரத ஆழ்வான் நிலையுடன் ஒப்பு நான்கு பிரபந்தங்களும் —

August 27, 2015

ஸ்ரீ யபதியாய் -அவாப்த சமஸ்த காமனாய் -சமஸ்த கல்யாண குணாத் மகனான சர்வேஸ்வரன்
மாறி மாறி பல பிறப்பும் பிறந்து -என்கிறபடியே -2-6-8–ஜன்ம பரம்பரைகளிலே தோள் மாறித் திரிகிற இவரை
இவ்வர்த்த பஞ்சகத்தையும் விசத தமமாக அறிய வல்லராம் படி முதல் அடியிலே நிர்ஹேதுகமாக விசேஷ கடாஷம் பண்ணி அருளினான் –

நம்மாழ்வார் திருவாய் மொழி பிரபந்தத்தாலே த்வய விவரணம் பண்ணுகிறார் –
இதில் முதலிட்டு மூன்று பத்தாலே-உத்தரார்த்தத்தை விவரிக்கிறார்
மேலிட்டு மூன்று பத்தாலே பூர்வார்த்தத்தை விவரிக்கிறார் –
மேலிட்டு மூன்று பத்தாலே உபாய உபேய யோகியான குணங்களையும்
ஆத்மாத்மீயங்களில் தமக்கு நசை அற்ற படியையும்
அவனோடு தமக்கு உண்டான நிருபாதிக சம்பந்தத்தையும் அருளிச் செய்தார்
மேலில் பத்தாலே தாம் பிரார்த்தித்த படியே பெற்ற படியைச் சொல்லி தலைக் கட்டுகிறார் –

இதில் முதல் பத்தாலே -உயர்வற உயர்நலம் உடையவன் எவன் அவன் –அயர்வறும் அமரர்கள் அதிபதி எவன் அவன்
–துயர் அறு சுடரடி தொழுது எழு என் மனனே -1-1-1- என்று
சமஸ்த கல்யாண குணாத்மகனாய்-ஸூரி போக்யனானவன் திருவடிகளிலே கைங்கர்யமே புருஷார்த்தம் என்று நிர்ணயித்து
உக்தமான அர்த்தத்துக்கும் -வஹ்யமாணமான அர்த்தத்துக்கு பிரமாணம் -உளன் சுடர் மிகு அருத்தியுள் -1-1-7-என்று
நிர்தோஷமான சுருதியே பிரமாணம் என்றும்
ஏவம் விதனானவன் யார் என்ன —வண் புகழ் நாரணன் –1-2-10-என்றும் -திருவுடையடிகள் -1-3-8-என்றும் –
செல்வ நாரணன் -1-10-8-என்றும் -விசேஷித்து -தொழுது எழு என் மனனே -1-1-1–என்று உபக்ரமித்து –
அயர்ப்பிலன் அலற்றுவன் தழுவுவன் வணங்குவன் அமர்ந்தே -1-3-10-என்று த்ரிவித காரணங்களாலும் அடிமை செய்து
தலைக் கட்டுகையாலே பகவத் கைங்கர்யமே புருஷார்த்தம் என்று அறுதியிட்டார் –

இரண்டாம் பத்தால் -இந்த கைங்கர்யத்துக்கு விரோதியான பிரகிருதி சம்பந்தத்தையும் கழித்து –
ஒளிக் கொண்ட சோதி மயமாய் -2-3-10- இக் கைங்கர்யத்துக்கு தேசிகரான அடியார்கள் குழாங்களை
உடன் கூடுவது என்று கொலோ -என்று தாமும் பிரார்த்தித்து
நலமந்தம் இல்லாதோர் நாடு புகுவீர் -2-8-4- என்று பிறருக்கும் உபதேசிக்கையாலே
இவருக்கு பரமபதத்திலே நோக்காய் இருந்தது என்று ஈஸ்வரன் பரமபதத்தைக் கொடுக்கப் புக –
எம்மா வீட்டுத் திறமும் செப்பம் –2-9-1-என்று எனக்கு அதில் ஒரு நிர்பந்தம் இல்லை –
தனக்கேயாக எனைக் கொள்ளுமீதே -2-9-4-என்று உனக்கேயாய் இருக்கும் இருப்பே
எனக்கு வேண்டுவது என்று இப் புருஷார்த்தத்தை ஓட வைத்தார் –

மூன்றாம் பத்தால் -இவருக்கு கைங்கர்யத்தில் உண்டான ருசியையும் த்வரையும் கண்ட ஈஸ்வரன்
கைங்கர்யத்துக்கு ஏகாந்தமான திருமலையிலே நிலையைக் காட்டிக் கொடுக்கக் கண்டு
வழு விலா அடிமை செய்ய வேண்டும் -3-3-1- என்று பாரித்து
பாரித்த படியே பாகவத சேஷத்வ பர்யந்தமாக வாசிக அடிமை செய்து தலைக் கட்டுகிறார்

நான்காம் பத்தால் -இப் புருஷார்த்தத்துக்கு உபாயம் -திரு நாரணன் தாள் -4-1-1- என்றும் –
குடி மன்னு மின் ஸ்வர்க்கம் -4-1-10-என்றும்
எல்லாம் விட்ட இறுகல் இறப்பு -4-1-10-என்றும்
ஐம்கருவி கண்ட வின்பம் தெரிய அளவில்லா சிற்றின்பம் -4-9-10- என்று தாமும் அனுசந்தித்தார்

ஐஞ்சாம் பத்தால் இந்த இஷ்ட பிராப்திக்கும் அநிஷ்ட நிவ்ருத்திக்கும் –
ஆறு எனக்கு நின் பாதமே சரணாகத் தந்து ஒழிந்தாய் -5-7-10-என்று
தன திருவடிகளையே உபாயமாகத் தந்தான் என்றார் –

அவன் தந்த உபாயத்தை கடகரை முன்னிட்டு பெரிய பிராட்டியார் புருஷகாரமாக –
அலர்மேல் மங்கை உறை மார்பா –உன் அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே -என்று ச்வீகரித்தார் -ஆறாம் பத்தால் –

ஏழாம் பத்தால் -இப்படி சித்த உபாய ச்வீகாரம் பண்ணியிருக்கச் செய்தேயும் சடக்கென பலியாமையாலே
விஷண்ணராய்-கடல் ஞாலம் காக்கின்ற மின்னு நேமியினாய் –7-1-2-என்று தொடங்கி-உபாய உபேய யோகியான
குணங்களைச் சொல்லிக் கூப்பிட -கூராழி –வெண் சங்கு ஏந்தி —வாராய் -6-9-1-என்று இவர் ஆசைப் பட்ட படியே
வெள்ளைச் சுரி சங்கொடு ஆழி ஏந்தி வந்து -7-3-1–இது மானஸ அனுபவ மாத்ரமாய் -சம்ச்லேஷம் கிடையாமையாலே
விச்லேஷித்த படியை -பாமரு -7-6—ஏழை -7-7–திருவாய்மொழிகளில் -அருளிச் செய்தார்

எட்டாம் பத்தால் -கீழ்ப் பிறந்த சம்ச்லேஷம் பாஹ்ய சம்ச்லேஷ யோக்யம் அல்லாமையாலே –
உமருகந்துகந்த உருவம் நின்றுருவமாகி உந்தனக்கு அன்பரானார் அவருந்தமர்ந்த செய்கை உன் மாயை -8-1-4- என்று
இப்படி ஆஸ்ரித அதீன ஸ்வரூப ஸ்தித்யாதிகளை உடையவன் நமக்கு தன்னைக் காட்டி மறைக்கைக்கு அடி
ஆத்மாத்மீயங்களில் ஏதேனும் நசை யுண்டாக வேணும் -என்று அதிசங்கை பண்ணி
அவற்றில் நசை அற்ற படியை -8-2–அருளிச் செய்தார்

ஒன்பதாம் பத்தில் -நீர் என்றிய அதிசங்கை பண்ணிப் படுகிறீர் -ஒராரியமாய் -பாசுரம் -இப்படி -என்று
தன்னுடைய நிருபாதிக பந்தத்தையும் காட்டி –
நான் நாராயணன் -சர்வ சக்தி யுக்தன் -உம்முடைய சர்வ அபேஷிதங்களையும் செய்து தலைக் கட்டுகிறோம் -என்று
அருளிச் செய்ய –சீலம் எல்லையிலான் -9-3-11-என்று அவருடைய சீல குணங்களிலே ஆழம் கால் பட்டார் –

பத்தாம் பத்தில் ஆழ்வாருடைய ஆற்றாமையைக் கண்டு திரு மோகூரிலே தங்கு வேட்டையாக வந்து தங்கி
இவருக்கு அர்ச்சிராதி கதியையும் காட்டிக் கொடுத்து -10-9-
இவர் பிரார்த்தித்த படியே என் அவா அறச் சூழ்ந்தாய் -10-10-10–என்று
இவர் திருவாயாலே அருளிச் செய்யும்படி பேற்றைப் பண்ணிக் கொடுத்த படியை அருளிச் செய்கிறார்

————–

மூன்றாம் ஸ்ரீ யபதி -ஸ்ரீ பரத ஆழ்வான் நிலையுடன் ஒப்பு நான்கு பிரபந்தங்களும் –
பக்தி யோகத்தின் மேன்மையும் கூறும் பிரபந்தம் திருவாய் மொழி என்கிறார் –

ஸ்ரீ யபதியாய் -அவாப்த சமஸ்த காமனாய் -சமஸ்த கல்யாண குணாத் மகனான சர்வேஸ்வரன்
மாறி மாறி பல பிறப்பும் பிறந்து -2-6-8–என்கிறபடியே ஜன்ம பரம்பரைகளிலே தோள் மாறி -நித்ய சம்சாரியாய்ப் போந்த இவரை
அடிமை யடைந்து உள்ளம் தேறி ஈறில் இன்பத்து இருவெள்ளம் யான் மூழ்கினன் -2-6-8–என்று தம் திரு வாயாலே
அருளிச் செய்யலாம் படி -முதல் அடியிலேயே விசேஷ கடாஷத்தைப் பண்ணி அருளினான் –
முதல் தன்னிலே சித் ஸ்வரூபம் ஆதல் -அசித் ஸ்வரூபம் ஆதல் -ஈஸ்வர ஸ்வரூபம் ஆதல் அறியாதே இருக்கிற இவருக்கு
அசித் அம்சம் த்யாஜ்யம் என்னும் இடத்தையும்
சேதனன் உபாதேயம் என்னும் இடத்தையும்
தான் உபாதேய தமன் என்னும் இடத்தையும்
அவன் தானே காட்டிக் கொடுக்கக் கண்டு -அவனோட்டை அனுபவத்துக்கு இத்தேஹ சம்பந்தம் விரோதியாய் இருக்கையாலே
த்வத் அனுபவ விரோதியான இத்தேக சம்பந்தத்தை அறுத்து தந்து அருள வேண்டும் -என்று அர்த்தித்தார் -திரு விருத்தத்தில்
சம்சார சம்பந்தம் அற்று ஒரு தேச விசேஷத்திலே போனால் அனுபவிக்கக் கடவ
தம்முடைய மேன்மையையும் -நீர்மையையும் -வடிவு அழகையும் பரப்பற ஏழு பாட்டாலே அனுபவிக்க லாம்படி
இங்கேயே இருக்கச் செய்தே ஒரு தசா வைசயத்தைப் பண்ணிக் காட்ட -அவ வழகை அனுபவித்தார் திரு வாசிரியத்தில் –
இப்படி அனுபவித்த விஷயத்தில் விஷய அநுரூபமான ஆசை கரை புரண்ட படியைச் சொன்னார் பெரிய திருவந்தாதியில்
ஆமத்தை அறுத்து -பசியை மிகுத்து -சோறிடுவாரைப் போல
தமக்கு ருசியைப் பிறப்பித்த படியையும்
அந்த ருசி தான் -பர பக்தி பர ஞான பரம பக்தி களாய்க் கொண்டு பக்வமான படியையும்
பின்பு பிரகிருதி சம்பந்தமும் அற்று பேற்றோடு தலைக் கட்டின படியையும் சொல்லுகிறது திருவாய் மொழியிலே –

கைங்கர்ய மநோரதம் பண்ணிக் கொண்டு வரக் கொள்ள –
கைகேயி -ராஜன் -என்ற சொல் கேட்டு ஸ்ரீ பரத ஆழ்வான் பட்ட பாடு போல இருக்கிறதாயிற்று-திரு விருத்தத்தில் நிலை –
அவன் திருச் சித்திர கூடத்திலே பெருமாள் எழுந்து அருளி இருக்கிறார் என்று கேட்டு ஏபிச்ச சசிவைஸ் ஸார்த்தம் – என்கிறபடியே
என் ஒருவன் கண்ணில் கண்ணநீர் பொறுக்க மாட்டாதவர் இத்தனை பேர் ஆறாமை கண்டால் மீளாது ஒழிவரோ –
சிரஸா யாசிதோ மயா-என் அபிமதம் தன தலையாலே இரந்து செய்யக் கடவ அவர் நான் என் தலையாலே மறுப்பரோ
ப்ராதா -நான் தம் பின் பிறந்தவன் அல்லேனோ –
சிஷ்யச்ய -பின் பிறந்தவன் என்று கூறு கொள்ள இருக்கிறேனோ –
மந்திர சம்பந்தமும் தம்மோடே அன்றோ -தாச்யச்ய -சிஷ்யனாய் க்ரய விக்ரய அர்ஹன் அன்றிக்கே இருக்கிறேனோ
பிரசாதம் கர்த்தும் அர்ஹதி ஆனபின்பு -என் பக்கல் பிரசாதத்தைப் பண்ணி அருளீரோ -என்று
மநோ ரதித்துக் கொண்டு போகிற போதை தரிப்பு போல திருவாசிரியத்தில் நிலை
ஸ்ரீ நந்தி கிராமத்தில் ராமா கமன காங்ஷயா -என்கிறபடியே பதினாலு ஆண்டும் ஆசை வளர்த்துக் கொண்டு
இருந்தார் போல இருக்கிறது பெரிய திருவந்தாதியில்
மீண்டு எழுந்து அருளி –திரு அபிஷேகம் பண்ணி யருளி அவனும் ஸ்வரூப அநு ரூபமான பேறு பெற்றால் போல இருக்கிறது
-இவருக்கு திருவாய் மொழியில் பேறு –

திருவாய் மொழிக்காக சங்க்ரஹம் முதல் திருவாய் மொழி –
முதல் திருவாய் மொழியினுடைய சங்க்ரஹம் முதல் மூன்று பாட்டுக்கள்
முதல் மூன்று பாட்டினுடைய சங்க்ரஹம் முதல் பாட்டு
முதல் பாட்டினுடைய சங்க்ரஹம் முதல் அடி –என் போல் என்னில்
ரூசோ யஜூம்ஷி சாமாநி ததைவா தர்வணாநி ச சர்வம் அஷ்டாஷர அந்தஸ் ஸ்தம் யச்சான் யதபி வாங்மயம் -என்கிறபடியே –
சகல வேத சங்க்ரஹம் திரு மந்த்ரம்
அதினுடைய சங்க்ரஹம் பிரணவம்
அதினுடைய சங்க்ரஹம் அகாரம் ஆனால் போல –
மற்றும் பாரத ஸ்ரீ ராமாயணாதி களையும் சங்ஷேப விச்தரங்களாலே செய்தார்கள் இ றே

———-

ஈடு மஹா பிரவேசம் சம்பூர்ணம் –

—————————————————————————————-

கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
வடக்குத் திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

திருவாய் மொழி -ஈடு மகா பிரவேசம் –முதல் ஸ்ரீ யபதி -அர்த்த பஞ்சகமே திருவாய் மொழி வாக்யார்த்தம் –

August 27, 2015

ஸ்ரீ நாத முனிகள் அருளிச் செய்த தனியன் –

பக்தாம்ருதம் விஸ்வ ஜன அநு மோதனம்
சர்வார்த்தம் ஸ்ரீ சடகோப வாங்மயம்
சஹச்ர சாக உபநிஷத் சமாகமம்
நமாம் யஹம் திராவிட வேத சாகரம் –

ஸ்ரீ ஈஸ்வர முனிகள் அருளிச் செய்த தனியன்

திருவழுதி நாடென்றும் தென் குருகூர் என்றும்
மருவினிய வண் பொருநல் என்றும் அருமறைகள்
அந்தாதி செய்தான் அடியிணையே எப்பொழுதும்
சிந்தியாய் நெஞ்சே தெளிந்து

ஸ்ரீ சொட்டை நம்பிகள் அருளிச் செய்த தனியன் –

மனத்தாலும் வாயாலும் வண் குருகூர் பேணும் இனத்தாரை யல்லாது இறைஞ்சேன் –
தனத்தாலும் ஏதும் குறைவிலேன் எந்தை சடகோபன் பாதங்கள் யாமுடைய பற்று –

ஸ்ரீ அனந்தாழ்வான் அருளிச் செய்த தனியன்

ஏய்ந்த பெரும் கீர்த்தி இராமானுச முனிதன்
வாய்ந்த மலர்ப்பாதம் வணங்குகின்றேன் ஆய்ந்த பெரும்
சீரார் சடகோபன் செந்தமிழ் வேதம் தரிக்கும்
பேராத வுள்ளம் பெற

ஸ்ரீ பட்டர் அருளிச் செய்த தனியன் –

வான் திகழும் சோலை மதில் அரங்கர் வண் புகழ் மேல்
ஆன்ற தமிழ் மறைகள் ஆயிரமும் ஈன்ற
முதல் தாய் சடகோபன் மொய்ம்ம்பால் வளர்த்த
இதத்தாய் இராமானுசன்

மிக்க இறை நிலையும் மெய்யாம் உயிர் நிலையும்
தக்க நெறியும் தடையாகித் தொக்கியலும்
ஊழ் வினையும் வாழ் வினையும் ஓதும் குருகையர் கோன்
யாழினிசை வேதத்தியல்

——-

ஸ்ரீ நம்பிள்ளை தனியன்

வேதாந்த வேத்யாம்ருத வாரிராசேர்
வேதார்த்த சாராம்ருத பூரமர்க்யம்
ஆதாய வர்ஷந்தமஹம் ப்ரபத்யே
காருண்ய பூர்ணம் கலிவரி தாசம்-

ஸ்ரீ வடக்குத் திரு வீதிப் பிள்ளை அருளிச் செய்த தனியன்

ஸ்ரீ கிருஷ்ண பாத பாதாப்ஜே நமாமி சிரஸா சதா
யத் பிரசாத ப்ரபாவேன சர்வ சித்திர பூந்மம

———–

ஒரு படி -ஒரு கிரந்தம் -32 எழுத்துக்கள் -உயிர் எழுத்துக்களும் உயிர் மெய் எழுத்துக்களும் சேர்ந்து
ஆறாயிரப்படி -திருக் குருகைப் பிரான் பிள்ளான் -ஸ்ரீ விஷ்ணு புராணம் அளவு
ஒன்பதாயிரப்படி – நஞ்சீயர் -ஸ்ரீ பாஷ்யம் அளவு -நம்பூர் வரத ராஜர் பட்டோலை பண்ணி -காவேரி வெள்ளத்தில் தொலைத்து -வருந்தி
ஸ்ரீ ரெங்க நாதன் கனவில் தோன்றி உமது ஆசார்யாராய் நினைத்து நீரே பட்டோலை பண்ணும் -நான் உன் நினைவில் இருந்து அருளுவேன் என்று அருளி
அத்தைக் கண்ட நஞ்சீயர் மகிழ்ந்து ஆலிங்கனம் செய்து நம்பிள்ளை என்ற திரு நாமம் சூட்டி மகிழ்ந்தார்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் -பன்னீராயிரப்படி -ஸ்ரீமத் பாகவதம் அளவு
பெரியவாச்சான் பிள்ளை -நம்பிள்ளை கட்டளை பேரில் இருபத்து நாலாயிரப்படி -ஸ்ரீ ராமாயணம் அளவு
நம்பிள்ளை -கால ஷேபம் குறிப்புக்களை வைத்து வடக்குத் திரு வீதிப் பிள்ளை -ஈடு -முப்பத்தாறாயிரப்படி -ஸ்ருதப் பிரகாசிகை அளவு

—————

ஸ்ரீயபதியாய் -அவாப்த சமஸ்த காமனாய் -சமஸ்த கல்யாண குணாத் மகனான -சர்வேஸ்வரன் –
மாறி மாறி பலபிறப்பும் பிறந்து -2-6-8-என்கிறபடியே -ஜன்ம பரம்பரைகளிலே தோள் மாறி -நித்ய சம்சாரியாய்ப் போந்த இவரை
அடியை அடைந்து உள்ளம் தேறி ஈறில் இன்பத்து வெள்ளம் யான் மூழ்கினன்-2-6-8–என்று முதலிலே தம் திரு வாயாலே சொல்ல
வல்லராம்படியாக முதல் அடியிலே விசேஷ கடாஷம் பண்ணி அருளினான்
பிருந்தாவனம் பகவத் கிருஷ்ணே நாக்லிஷ்ட கர்மணா ஸூபேன மநஸா த்யாதம் கவாம் வ்ருத்தி மபீப்சதா -என்கிறபடியே
ஸ்ரீ பிருந்தா வனத்தை உத்பன்ன நவசஷ்பாட்யம் -என்னும்படி கடாஷித்தால் போலே தத்தவங்களை விசதமாக அறிய வல்லராம்படி கடாஷித்தான் –

இதர தர்சனங்களில் தத்தவங்களை பதினாறு என்பார் -ஆறு என்பாராய் பஹூ பிரகாரங்களாலே விப்ரதிபத்தி பண்ணுவர்கள் –
எங்கனே என்னில்- -லோகாயாதிகன் -ப்ருதிவ்யாதி பூதங்கள் நாலி னுடைய -மண் நெருப்பு காற்று அக்னி -கூட்டரவில் சைதன்யம்
என்று ஒரு தர்மம் பிறக்கும் -அதுக்கு உண்டான ஸூ க துக்கங்களே ஸ்வர்க்க நரகங்கள் -அவற்றினுடைய பிரிவிலே சைதன்யம் நசிக்கும் –
அவ்வருகு ஒன்றும் இல்லை -எனபது அவனுடைய சித்தாந்தம் –
ஆர்ஹதன் -என்னும் ஜைனன்–கார்ய காரண ரூபத்தாலே ஜகத் நித்ய அநித்யமும்-பின்ன அபின்னமும் -சத்ய அசத்தியமுமாய் இருக்கும் –
ஆத்மாக்கள் கர்ம அநு ரூபமான சரீரங்களுடைய பரிணாமத்தையே தனக்குப் பரிணாமாகக் கொண்டு இருக்கும் –
சம்சாரம் அநாதி -மல தாராணாதிகளாலும்-ஆத்ம ஜ்ஞானத்தாலும் -பிரகிருதி விநிர் முக்தராய்
ஊர்த்த்வ கதியை ப்ராபியா நிற்கை மோஷம் ஆகிறது -என்றான்

பௌத்த மதங்களில் வைத்துக் கொண்டு வைபாஷிகன் -பரமாணு சங்காதமாய்-ப்ரத்யஷ சித்தமாய் இருக்கும் ஜகத்து -(அந்த ஞானமே ஆத்மா -)
தத் விஷய ஜ்ஞானமும் ஷணிகம் வேறோர் ஆத்மா வில்லை -இதில் ஸ்திரத்வ புத்தி சம்சாரம் -ஷணிக புத்தி மோஷம் என்றான் –
சௌத்ராந்திகனுக்கு சித்தாந்தம் அதுவேயாய் இருக்கச் செய்தே -அநுமான சித்தம் ஜகத்து -என்றான் –அதுவே அவனுக்கு விசேஷம் –
யோகாசாரன் -ஜ்ஞாத்ரு ஜ்ஞேயங்கள் ப்ரமம் -ஜ்ஞானமே யுள்ளது -அதுவும் ஷணிகம் என்று இருக்கை மோஷம் -என்றான் –
மாத்யமிகன் -பிரமாணமும் பிரமேயமும் பிரமாதாவும் இவை யுண்டு என்று அறிகை ப்ரமம் –சூன்யத்தால் சூன்யம் என்று அறிகை மோஷம் என்றான்

நையாயிக வைசேஷிகர்கள் -ஜகத்துக்கு உபாதான காரணம் பரமாணுக்கள் -ஆநும நிகேச்வரன் நிமித்த காரணம் –
சம்சாரம் அநாதி -ஈஸ்வர உபாஸ்தியாலே ஸூக துக்க ஜ்ஞானங்கள் நசிக்கை மோஷம் என்றார்கள்
பாஸூபதன்-பரமாணுக்கள் உபாதான காரணம் -ஆகம சித்த ஈஸ்வரன் நிமித்த காரணம் -சம்சாரம் அநாதி –
ஆகம உக்தமான கர்ம அனுஷ்டானத்தாலே பசுபதி சாரூப்யத்தைப் பெறுகை மோஷம் -என்றான்
சாங்க்ய யோகிகள் -பிரகிருதியே ஸ்வ தந்த்ரமாய்க் கொண்டு ஜகத் காரணம் ஆகிறது -அந்த பிரகிருதியோடு
ஆத்மாவுக்கு உண்டான அநாதி சம்பந்தம் சம்சாரம் –பிரகிருதி புருஷ விவேகம் மோஷம் -என்றார்கள் –
பாட்ட ப்ரபாகரர்கள் –நித்யராய் அநேகராய் சர்வகதராய் அநாதி கர்மத்தாலே சம்சரிக்கிறார்கள் ஆத்மாக்கள் —
ஜகத்து பிரவாஹ ரூபேண நித்யம் -கர்ம அபூர்வமே ஆத்ம ப்ராப்தி ரூப மோஷ ஹேது -ஈஸ்வர சத்பாவம் இல்லை -என்றார்கள்
மாயாவதி -நிர்விசேஷ ( சஜாதீய விஜாதீய ஸ்வகத பேதங்கள் இல்லாமல் )சின் மாத்ரமே மாயா சபளமாய்க் கொண்டு –
( மாயையால் கலந்து )சம்சாரம் -தத் த்வமஸி-இத்யாதி வாக்ய ஜன்ய ஜ்ஞானத்தாலே அந்த ப்ரமம் போகை மோஷம் என்றான் –
பாஸ்கரீயன்-அந்த ப்ரஹ்மம் தானே -சத்ய உபாதி ( தேஹம் இந்த்ரியம் )மிஸ்ரமாய்க் கொண்டு பிரமிக்கை சம்சாரம் –
வர்ணாஸ்ரம தர்ம உபேதமாய்-வாக்ய ஜன்ய ஜ்ஞான பூர்வகமாய் யுள்ள உபாசன ஆத்மக ஜ்ஞானத்தாலேஉபாதி நசிக்கை மோஷம் என்றான்
யாதவ பிரகாசன் -அந்த ப்ரஹ்மம் தானே சத்யமான சித் அசித் ஈச்வராத்மகமாய்க் கொண்டு பிரமிக்கிறது –
அதுக்கு உண்டான பேத ஜ்ஞானம் சம்சாரம் -ஜ்ஞான கர்ம சமுச்சயித்தினாலே பேத ஜ்ஞானம் போகை மோஷம் -என்றான் –
ப்ரஹ்மம் ஜகத் காரணம் என்கிற வைதிக சித்தாந்தத்தில் காட்டில் ப்ரஹ்மத்தை கதி பய சக்தி
விசிஷ்டமாகக் கொண்டான் இத்தனை -அதுவே அவனுக்கு விசேஷம் –

நம் தர்சனத்துக்கு தத்வங்கள் மூன்று -அவையாவன -சித்தும் அசித்தும் ஈச்வரனுமாய் -பிரகார பிரகாரி ஐக்யத்தாலே ஓன்று என்னலாய்-
ஸ்வரூப பேதத்தாலே பல என்னலாய் இருக்கும் –
அசித் ஆகிறது -குண த்ரயாத்மகமாய் -நித்யமாய் -விபுவாய் -சத்த பரிணாமியாய் -ஹேயதயா ஜ்ஞாதவ்யமாய் இருக்கும் –
இப்படி இருக்கிற அசித்திலே போக்யதா புத்தி பண்ணி -சம்சாரத்தை த்ருடமாக்கிக் கொள்ள வேணும் என்று
இருக்கிறவனுக்கும் சர்வேஸ்வரனை ஆஸ்ரயிக்க வேணும் –
இது த்யாஜ்யம் என்னும் பிரபத்தி யுண்டாய் இத்தைக் கழித்துக் கொள்ள வேணும் என்று இருக்கும் அவனுக்கும் சர்வேஸ்வரனை
ஆஸ்ரயிக்க வேணும் –சம்சார பந்த ஸ்திதி மோஷ ஹேது –என்றும்
தைவீ ஹ்யேஷா குணமயீ மம மயா துரத்யயா மாமேவ யே ப்ரபத்யந்தே மாயா மேதாம் தரந்தி தே–ஸ்ரீ கீதை -7-14-என்றும் சொல்லுகிறபடியே
நான் பிணைத்த பிணை ஒருவரால் அவிழ்க்கப் போகாது -என்னையே கால் கட்டி அவிழ்த்துக் கொள்ள வேணும் -என்றான் இ றே
அது தன்னையே இவரும்-பொல்லா வாக்கையின் புணர் வினை அறுக்கலறா சொல்லாய் யான் உன்னைச் சார்வதோர் சூழ்ச்சி –3-2-3-என்றார் இ றே
ஒரு குருவி பிணைத்த பிணை ஒருவரால் அவிழ்க்கப் போகிறது இல்லை -சர்வ சக்தி கர்ம அநு குணமாக பிணைத்த பிணையை
அவனையே கால் கட்டி அவிழ்த்துக் கொள்ளும் இத்தனை காண்-என்று திரு நறையூர் அரையர் வார்த்தை –
சேதனன் நித்யமாய் -அணுவாய் -ஜ்ஞானானந்த லஷணனாய்-ஜ்ஞான குணகனாய்-ஏக ரூபனாய் -பகவத் சேஷ பூதனாய் இருக்கும் –
இப்படி இருக்கிற ஆத்மாவினுடைய வை லஷண்யத்தை அனுசந்தித்து -ஜரா மரண மோஷாயா -ஸ்ரீ கீதை 7-29-என்கிறபடியே
ஆத்ம அனுபவம் அமையும் என்று இருக்குமவனுக்கும் -சர்வேஸ்வரனை உபாசிக்கையும் -அந்திம ஸ்ம்ருதியும் வேணும் –
ஆத்ம அனுபவத்தை நெகிழ்ந்து சர்வேஸ்வரனுடைய குணாநுபவம்பண்ண வேணும் என்று இருக்குமவனுக்கும் அவன் தன்னையே உபாயமாகப் பற்ற வேணும் –

இவற்றில் ஒன்றை அறியிலும் -ஒண் தாமரையாள் கேள்வன் ஒருவனையே நோக்கும் உணர்வு -என்கிறபடியே
சர்வேஸ்வரன் அளவிலே பர்யவசித்து அன்று நில்லாது –
ஜ்ஞானமாகில் ஸ்ரீ யபதியைப் பற்றி அல்லது நில்லாது -பகவத் வ்யதிரிக்த விஷயங்களைப் பற்றிப் பிறக்கும் ஜ்ஞானம் எல்லாம் அஜ்ஞ்ஞான கல்பம்
தத்வ ஜ்ஞான மஜ்ஞானம நோன்யதுக்தம்-தத கர்ம யன்ன பந்தாய ச வித்யா யா விமுக்த்யே ஆயாசாயாபரம் கர்ம
வித்யான்யா சில்ப நை புணம்-ஸ்ரீ விஷ்ணு புராணம் -6-5-87-
என்கிறபடியே -பகவத் விஷயத்தை ஒழியக் கற்றவை எல்லாம் செருப்புக் குத்த கற்றவோபாதி –
இப்படி இருக்கிற சித் அசித் ஈச்வரர்கள் ஸ்வரூப ஸ்வ பாவங்களை அறியக் கடவார் ஒருவரும் இல்லை
-இவற்றை உள்ளபடி அறிவாரில் தலைவர் யாயிற்று இவ்வாழ்வார் –

இவருக்கு ஒப்புச் சொல்வார் -சம்சாரிகளிலும் இல்லை -நித்ய ஸூரிகளிலும் இல்லை -தம்படி தாமும் அறியார் –
சம்சாரிகளும் அறியார்கள் -சர்வேஸ்வரனும் அறியான் –
ஒரு சாதனத்தை அனுஷ்டித்து இந்த நன்மை நமக்கு வரும் என்று இருக்கிற வந்தது அல்லாமையாலே தாமும் அறியார்
இவரைப் போலே இருப்பாரை சம்சாரத்தில் காணாமையாலே சம்சாரிகளும் அறியார்கள்
தன குணங்கள் புறம்பு ஒரு வியக்தியிலே இப்படி பலிக்கக் காணாமையாலே சர்வேஸ்வரனும் அறியான் –
சம்சாரிகளில் வ்யாவர்த்தனோபாதி நித்ய ஸூ ரிகளிலும் வ்யாவ்ருத்தர் –

அடியார் நிலாகின்ற வைகுந்தமோ வையமோ நும் நிலையிடம் -திரு விருத்தம் -75–என்று உபய விபூதியிலும் அடங்காது இருப்பார்
விண்ணுளாரிலும் சீரியர் -திரு விருத்தம் -79-என்னும்படி யாயிற்று இவர் நிலை –
பகவத் அனுபவத்துக்கு பாங்கான தேசத்திலே இருந்து அனுபவிக்கிறவர்களைப் போல் அன்றே
அவ்வனுபவத்துக்கு மேட்டு நிலமானசம்சாரத்திலே இருந்து அனுபவிக்கிறவர்கள் –
கலௌ ஜகத் பதிம் விஷ்ணும் சர்வஸ்ரஷ்டாரமீச்வரம் நார்ச்ச யிஷ்யந்தி மைத்ரேய பாஷண்டோ பக்தா ஜனா -ஸ்ரீ விஷ்ணு புராணம் –
என்கிறபடியே கலி காலத்திலே பகவத் ருசி ஒருவருக்கும் பிறக்கிறது இல்லை
துர்லபோ மானுஷோ தேஹோ தேஹிதாம் ஷண பங்குர தத்ராபி துர்லபம் மன்யே வைகுண்ட ப்ரிய தர்சனம் -ஸ்ரீ மத பாகவதம்
என்கிறபடியே முதல் தன்னிலே மனுஷ்ய சரீரம் கிடையாது -பெற்றாலும் சர்வேஸ்வரனே பிராப்யன் என்று
அவனைப் பெறுகைக்கு அநு ரூபமாய் இருப்பதொரு உபாயத்தை பரிஹரிக்க வேணும் என்னும் ருசி ஒருவருக்கும் பிறவாது
இது உண்டாகிலும் உண்டாம் பாகவத சேஷத்வம் உண்டாகாது என்னும் இடம் சொல்ல வேண்டா வி றே
மனுஷ்யாணாம் சஹஸ்ரேஷூகச்சித்யததி சித்தயே-யததாமபி சித்தா நாம் கச்சின்மாம் வேத்தி தத்வத -ஸ்ரீ கீதை -7-3-
என்று சர்வேஸ்வரன் தானும் அருளிச் செய்தான் இ றே

இப்படி இருக்கிற சம்சாரத்தில் ஆழ்வார் வந்து அவதீர்ணரான இது சேதனர் பண்ணின ஸூ க்ருத பலமாயிற்று –
ததோகில ஜகத் பத்ம போதா யாச்யுதபாநுநா–ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-3-2-என்கிறபடியே சர்வேஸ்வரன் வந்து
அவதரித்தால் போலே யாயிற்று -ஆழ்வார் வந்து அவதரித்தபடி –
ஆதித்யன் பாஹ்யமான அந்தகாரத்தைப் போக்கும் -இவன் ஆந்தரமான அந்தகாரத்தை போக்கிக் கொண்டாயிற்று இருப்பது
அப்படியே இவரும் -ஊரும் நாடும் உலகமும் தன்னைப் போலே -6-7-2–என்றும்
மரங்களும் இரங்கும் வகை -6-5-9–என்றும்
பாலேய் தமிழர் இசைகாரர் பத்தர் பரவும் படியாகவும் -1-5-11-
கேட்டாரார் வானவர்கள் -10-6-11–என்றும்
பண்ணார் பாடலின் கவிகள் யானாய்த் தானைத் தான் பாடி தென்னா தென்னா என்னும் என் அம்மான் -10-7-5–என்னும்படி
தம்முடைய நன்மை எங்கும் உண்டான எல்லார்க்கும் உண்டாம் படி பண்ணிக் கொண்டாயிற்று இருப்பது –
ஹஸிதம் பாஷிதம் சைவ கதிர்யா யாச்ச சேஷ்டிதம் தத் தர்ம வீர்யேண யதாவத் சம்ப்ர பஸ்யதி-என்கிறபடியே
பிரம்மாவின் பிரசாதத்தாலே ஸ்ரீ வால்மீகி பகவான் சர்வத்தையும் சாஷாத் கரித்தால் போலே இவரும்
பகவத் பிரசாதத்தாலே சாஷாத் க்ருதமான பகவத் ஸ்வரூப ரூப குண விபூதிகளை உடையராய் இருப்பர் –

ஜ்ஞாநீ த்வாத்மைவ மே மதம் -ஸ்ரீ கீதை -7-18-ஐஸ்வர்யம் -ஆத்மலாபம் -ஏதேனும் ஒரு புருஷார்த்தம் ஆகவுமாம்
-நம் பக்கலிலே கொள்ளுமவர்கள் உதாரர்கள்
ஜ்ஞாநியானவன் எனக்கு தாரகன் -என்று சர்வேஸ்வரன் அருளிச் செய்த ஜ்ஞாநிகளுக்கு அக்ரேசராய் இருப்பவர்
பால்யாத் ப்ரப்ருதி ஸூஸ் நிக்தோ லஷ்மணோ லஷ்மி வர்த்தன -என்று பால்யம் தொடங்கி பெருமாள் திருத் தொட்டிலோடு அணைய
திருத் தொட்டில் இடாத போது பள்ளி கொள்ளாத இளைய பெருமாளைப் போலே இவரும் பருவம் நிரம்புவதற்கு முன்பே
பகவத் குணைக தாரகராய் இருப்பர் -அறியாக் காலத்துள்ளே அடிமைக் கண் அன்பு செய்வித்து -2-3-3-என்றும்
முலையோ முழு முற்றும் போந்தில பெருமான் மலையோ திரு வேங்கடம் என்று கற்கின்ற வாசகம் –திரு விருத்தம் -60-என்றும்
சொல்லுகிறபடியே– ந ச சீதா த்வயா ஹீ நா ந சாஹமபி ராகவ முஹூர்த்தமபி ஜீவாவோ ஜலான் மத்ஸ்யா விவோத்ருதௌ -என்று
உம்மை ஒழிந்த வன்று பிராட்டியும் இல்லை -அடியேனும் இல்லை -ஜீவித்தோமோ முஹூர்த்தம் -என் போலே என்றால்
ஜலாதுத்ருதமான மத்ஸ்யம் நீர் நசை யாரும் அளவும் ஜீவிக்குமா போலே நீர் நிறுத்திப் போகிறோம் என்கிற வார்த்தை
உம்முடைய திரு உள்ளத்திலே உண்டு என்று அறியும் அளவும் காணும் நாங்கள் ஜீவிப்பது -என்றார் இ றே –
அத்தலையிலே நினைவாலே இ றே இத்தலை ஜீவிப்பது -எத்தேவர் வாலாட்டும் எவ்வாறு செய்கையும் அப்போது ஒழியும் -நான் முகன் -திரு -38-
என்கிறபடியே அவன் நினைவு இல்லாத வன்று இவையும் இல்லை இ றே -அப்படியே இவரும் நின்னலால் இலேன் காண் -2-3-7- என்று இருப்பார் ஒருவர்

ந தேவ லோகாக்ரமணம் நா மரத்வ மஹம் வ்ருணே ஐஸ்வர்யம் வாபி லோகா நாம் காமயே ந த்வயாவி நா -என்று
வானவர்நாடு என்கிற பரம பதம் ஆத்ம லாபம் லோகாநாம் ஐஸ்வர்யம் -இவை இத்தனையும்
உமக்குப் புறம்பாய் வரும் அன்று வேண்டேன் என்ற இளைய பெருமாளைப் போலே -இவரும்
திருவோடு மருவிய இயற்க்கை மாயாப் பெரு விறல் உலகம் மூன்றினோடு நல வீடு பெறினும் கொள்வது என்னுமோ –திருவாசிரியம் -2-என்றும்
எம்மா வீட்டுத் திறமும் செப்பம் -2-9-1-என்றும்
பாவியேனைப் பல நீ காட்டிப் படுப்பாயோ –6-9-9-என்றும்
இதர புருஷார்த்த பரஸ்தாவத்திலே வெருவும் ஸ்வ பாவருமாய் இருப்பர்
அஹம் தவான் மகா ராஜே பித்ருத்வம் நோபா லஷயே ப்ராதா பர்த்தா ச பந்துச்ச பிதா ச மம ராகவ -என்று
பெருமாளையே எல்லா உறவுமாகப் பற்றின இளைய பெருமாளைப் போலே இவரும்
சேலேய் கண்ணியரும் பெரும் செல்வமும் நன் மக்களும் மேலாத் தாய் தந்தையரும் அவரே -5-1-8-என்று பகவத் ஐகாந்த்ய சீமையாய் இருப்பர்
அஹம் சர்வம் கரிஷ்யாமி ஜாக்ரதஸ் ஸ்வ பதச்ச தே பவாம்ஸ்து சஹ வைதேஹ்யா கிரி சாநுஷூ ரம்ச்யதே-என்று
இளைய பெருமாள் சர்வ வித கைங்கர்யங்களையும் செய்து அல்லது தரியாதாப் போலே இவரும்
ஒழிவில் காலம் எல்லாம் உடனே மன்னி வழு விலா அடிமை செய்ய வேண்டும் -3-3-1-என்று
எல்லா அடிமைகளையும் செய்து அல்லது தரியாத தன்மையராய் இருப்பர் –
விஸ்தரணோதமநோ யோகம் விபூதிஞ்ச ஜனார்த்தன ந ததர்ப்ப சமாயாந்தம் பச்யமாநோ நராதிப –ஸ்ரீ கீதை-10-18–என்றும்
சொல்லுகிற அர்ஜுன தசராதிகளைப் போலே
கால தத்வம் உள்ளதனையும் அனுபவியா நின்றாலும் அப்பொழுதைக்கு அப்பொழுது என்னாரா வமுதம் -2-5-4–என்கிறபடி மேன்மேல்
எனப் பெருகி வருகிற ஆராத காதலை யுடையராய் இருப்பர்

தர்மாத்மா சத்ய சௌசாதி குணா நாமா க்ரஸ் ததா உபமாநம சேஷாணாம் சாது நாம் யஸ் சதா அபவத் –ஸ்ரீ விஷ்ணு புராணம் -என்று
ஸ்ரீ பிரகலாத ஆழ்வானை சாதுக்களுக்கு எல்லாம் உபமானமா பூமியாகச் சொல்லுகிறாப் போலே
எல்லாருக்கும் தம்முடைய ஒரோ வகைகளாலே உபமான பூமியாய் இருப்பர்
அஹமஸ் யாவரோ ப்ராதா குணைர் தாஸ்யம் உபாகத -என்று குணங்களுக்குத் தோற்று அடிமை புக்க இளைய பெருமாளைப் போலே
இவரும் பகவத் குணங்களிலே தோற்று உயர்வற உயர்நலம் உடையவன் –துயர் அறு சுடர் அடி தொழுது எழு என் மனனே-என்றார்
இப்படி பகவத் ஸ்வரூப ரூப குண விபூதிகளை -விசத -விசத தர -விசத தமமாக -அனுபவித்து
அது உள்ளடங்காமை வழிந்து புறப்பட்ட சொல்லாயிற்று இப்பிரபந்தங்கள்-
விசதம் -பரபக்தி –விசத தரம் -பர ஜ்ஞானம் –விசத தமம் –பரம பக்தி –
இங்கனே யாகில் -இப்பிரபந்தங்களுக்கு பாட்டும் -சங்க்யையும் -பாட்டுக்கு நாலடி யாகையும்-அஷரங்கள் சமமாகையும் –
எழுத்து அசை சீர் பந்தம் அடி தொடை பாவினம் -என்றால் போலே சொல்லுகிற பிரபந்த லஷணங்கள் சேர விழுந்தபடி எங்கனே என்னில் —
சோக வேகத்தாலே பிறந்த மா நிஷாத -இத்யாதி ஸ்லோகமானது-மச்சந்தா தேவ -என்கிற ஸ்லோகத்தின் படியே
அத்திக்காயில் அறுமான் -கொசு -போலே -பகவத் விபூதியில் ஏக தேச ஸ்தானனான பிரம்மாவின் பிரசாதத்தாலே
சர்வ லஷணோபேதம் ஆனால் போலே
பகவத் பிரசாதம் அடியாகப் பிறந்த இப்பிரபந்தங்களுக்கு இவற்றில் கூடாதது இல்லை
இவை என்ன கோடியிலே அடைக்கப் பட்ட பிரபந்தங்கள் –
இவை பிறந்தபடி எங்கனே –
இவற்றுக்கு மூலம் என் –
ஒன்றை மூலமாகச் சொன்னால் அது மூலம் என்று அறியும் படி எங்கனே
இவை பிரமாணம் என்று அறிவது எத்தாலே
இவற்றுக்கு பிரதிபாத்யர் யார்
இப்பிரபந்தங்கள் கற்கைக்கு அதிகாரிகள் யார்
இவற்றுக்கு போக்தாக்கள் யார்
இவை எதுக்காகப் பண்ணப் பட்டன
என்று சில அவ்யுத்பன்னர் கேட்க –
இவை புருஷார்த்த ப்ரகாசகமான பிரபந்தங்களில் பிரதான பிரபந்தங்கள் –
பகவத் குண அனுபவ ஜனித ஹர்ஷ ப்ரகர்ஷ பலாத்காரம் சொல்லுவிக்கப் பிறந்தன –
பகவத் பிரசாத லப்தமான திவ்ய சஷூர் மூலமாகப் பிறந்தன வென்னும் இடம் ஸ்வர வசன வ்யக்திகளாலே அறியலாம் –
வேதாந்த வித்துக்களான சர்வ சிஷ்டர்களும் பரிக்ரஹிக்கையாலும் -சம்சாரத்தில் உத்வேகம் பிறந்தாருக்கும் ஜ்ஞாதவ்யமான வேதார்த்தங்களை இப்பிரபந்தங்களிலே காண்கையாலும்-இவை உத்க்ருஷ்ட தமமான பிரபந்தம் என்று அறியலாம்
எல்லாருக்கும் பரம பிராப்ய பூதனான ஸ்ரீ யபதி இப்பிரபந்தங்களுக்கு பிரதி பாத்யன்-
சம்சாரத்தில் ருசி யற்று -எம்பெருமான் திருவடிகளிலே எப்பேர் பட்ட அடிமைகளும் செய்ய வேணும் என்று இருக்குமவன் இவை கற்கைக்கு அதிகாரி
முமுஷூக்களும் -முக்தரும் -நித்தியரும் -எம்பெருமான் தானும் இவற்றுக்கு போக்தாக்கள்
பகவத் கைங்கர்யம் ஆகிற நிரதிசய புருஷார்த்தம் இன்னபடிப் பட்டு இருக்கும் என்று அறிவிக்கைக்காகப் பிறந்த பிரபந்தங்கள் இவை –
என்று சிரோ பாசித சத் வ்ருத்தராய் இருப்பார்கள் பரிஹரித்தார்கள் –

நிஷித்த பாஷை யாகையாலும் –இப்பிரபந்தங்களை வேதத்தில் அநதிகாரிகள் அப்யசிக்கக் காண்கையாலும்-
கலி காலத்தில் ஜ்ஞானத்துக்கு அடைவில்லாத சதுரத்த வர்ணத்திலே பிறந்தார் ஒருவராலே நிர்மிதங்கள் ஆகையாலும் –
தேசாந்தரங்களில் இன்றிக்கே ப்ராதேசிகங்கள் ஆகையாலும்
அவைதிகர் பரிக்ரஹிக்கையாலும்
ஸ்ருதி ஸ்ம்ருதி விருத்தமான காம புருஷார்த்தத்தை பல இடங்களிலே பேசுகையாலும்
ஸ்ருதி ஸ்ம்ருதி களிலே புருஷார்த்ததயா சொல்லப் படுகிற ஐஸ்வர்ய கைவல்யங்களைக் காற்கடைக் கொள்ளுகையாலும்
இப் பிரபந்தங்கள் பிரமாணம் ஆக மாட்டா என்று வைதிக கோஷ்டியில் பழக்கம் இல்லாதார் சில அறிவு கேடர் வந்து பிரத்யவஸ்தானம் பண்ண

மாத்ச்ய புராணத்திலே பாஷாந்தரத்தாலே பாடா நின்றுள்ள கைசிகாதிகளை தன நாட்டின் நின்றும் போக விட்ட ராஜாவைக் குறித்து
ஹரி கீர்த்திதம் வினைவாந்யத் ப்ராஹ்மணேந நரோத்தம பாஷாகா நம் காதவ்யம் தஸ்மாத் பாவம் த்வயா கருத்தும் -என்ற
யம வசனத்தின் படியே பாஷா நிஷேதம் பகவத் வ்யதிரிக்த விஷயங்களிலே யாகையாலும் -அங்கன் அன்றியே
பாஷா மாத்ர அவதியாகவிதி நிஷதங்களை அங்கீகரிக்கில் சமஸ்க்ருத பாஷையான பாஹ்ய சாஸ்த்ராதிகளை அப்யசிக்க வேண்டுகையாலும்
ஆழ்வார் தம்முடைய கிருபாதிசயத்தாலே வேதத்தில் அநாதிகாரிகளான ஸ்திரீ சூத்ராதிகளும் இழவாத படி வேதார்த்தை திராவிட பாஷையாக
அருளிச் செய்கையாலும் எதிர் சூழல் புக்கு அநேக ஜன்மங்கள் எம்பெருமான் தானே தொடர்ந்து விஷயீ கரிக்கைக்கு அடியான பாக்யத்தை யுடையராய்
நிரந்தர பகவத் கடாஷ பாத்ர பூதருமாய் -தத்வ ஹிதங்களிலே நிபுணராய்-அவற்றினுடைய உபதேசத்திலும் பிரவ்ருத்தராய்
விதுர சபர்யாதிகளிலே விலஷணரான ஆழ்வார் பக்கலிலே இப்பிரபந்தங்கள் பிறக்கை யாலும் -இப்பாஷை நடையாடி சிஷ்ட பிரசுரமான
தேசங்கள் எங்கும் உண்டாய் பாஷாந்தரங்களிலே பிறந்து வி லஷணராய் உள்ளாறும் இவற்றின் வைலஷண்யத்தைக் கேட்டு இவற்றை அப்யசிக்கைக்கு ஈடான
இப்பாஷை நடையாடும் தேசத்திலே பிறக்கப் பெற்றிலோமே என்று இருக்கையாலும் -இவற்றின் நன்மையைக் கண்டு வேதார்த்த ஜ்ஞானத்துக்கு
அடைவில்லாத அவைதிகரும் கூட பரிக்ரஹிக்கை ச்லாக்யாத ஹேது வாகையாலும் -வேதனம் என்றும் -உபாசனம் என்றும்
உபநிஷத்துக்களில் சொல்லுகிற பக்தியை இவற்றில் காமமாகச் சொல்லுகையாலும் -ஐஸ்வர்ய கைவல்யங்களை தூஷித்தது அல்ப
அச்த்ரத்வாதி தோஷத்தாலே யாகையாலும் ப்ரதிபாத்யனான எம்பெருமானுடைய மகாத்ம்யத்தாலும் -எம்பெருமானை ஸூ ஸ் பஷ்டமாக
பிரதிபாதிக்கையாலும் -பக்திக்கு உத்பாதகங்கள் ஆகையாலும் உத்பன்னையான பக்திக்கு வர்த்தகங்கள் ஆகையாலும் -ஸ்ரவணாதிகளிலே
அப்போதே நிரதிசய ப்ரீத்தி ஜனகங்கள் ஆகையாலும் இவற்றில் சொல்லுகிற அர்த்தங்களுக்கு வேதத்தில் பல இடங்களில் சாஷியாகச்
சொல்லுகையாலும் -ப்ரஹ்ம காரண வாதத்தாலும் ப்ரஹ்ம ஜ்ஞானான் மோஷத்தைச் சொல்லுகையாலும் புருஷார்த்த விஷயமான பிரபந்தங்கள்
எல்லா வற்றிலும் இப் பிரபந்தங்களை த்ருடதர பிரமாணங்களாக உப பாதித்து வைதிக கோஷ்டியில் அபியுக்தர் ஆனவர்கள் பரிஹரித்தார்கள்

பகவத் பிரசாதத்தாலே அவனை அனுபவித்து பரி பூரணராய் இருக்கிற இவருக்கு எம்பெருமானை பிரிகையும்
-பிரிவாலே நோவு பட்டுக் கூப்பிடுகையும் கூடின படி எங்கனே என்னில்
ஒரோ குணத்தை அனுபவித்தால் அநு பூத குணங்களில் உண்டான ப்ரியத்வ பிரகர்ஷம் -ஷூத்ர விஷயங்களிலே
வைராக்யத்தைப் பிறப்பித்து குணாந்தரங்களிலே ச்ப்ருஹையைப் பிறப்பிக்கும்
பரமாத்மாநி யோ ரக்தோ விரக்தோ பரமாத்மநி-என்றும் –
-மாற் பால் மனம் சுளிப்ப மங்கையர் தோள் கை விட்டு –மூன்றாம் திருவந்தாதி -14–என்றும் சொல்லுகிறபடியே
-பின்னை அக்குணங்களிலே க்ரம ப்ராப்தி பற்றாது -யாதொருபோது ஆசை மிக்கது -அப்போது ஆசைப் பட்ட பொருள் கிடையாமையாலும்
-பகவத் அனுபவ விரோதியான பிரகிருதி சம்பந்த ஸ்மரணாதி களிலுமாக பகவத் விஷயத்தில் அனுபவித்த அம்சத்தையும் இழந்து
எந்நாள் யான் உன்னை இனி வந்து கூடுவேன் -3-2-1–என்றும் –
பல நீ காட்டிப் படுப்பாயோ -6-9-9–என்றும் –
போர வைத்தாய் புறமே -5-1-5–என்றும் –
கூவிக் கொள்ளும் காலம் இன்னம் குறுகாதோ -6-9-9–என்றும் கூப்பிடா நிற்பார் –
அவனை அனுபவிக்கப் புக்கால் -அடியேன் அடைந்தேன் முதன் முன்னமே -2-3-6–என்றும்
பருகிக் களித்தேன் -2-3-9–என்றும்
உண்டு களித்தேற்கு உம்பர் என் குறை -10-8-7–என்றும்
தொண்டீர் எல்லீரும் வாரீர் தொழுது தொழுது நின்று ஆர்த்தும் -5-2-2–என்றும் –
எமர் கீழ் மேல் ஏழு பிறப்பும் மாசதிர் இது பெற்று நம்முடைய வாழ்வு வாய்க்கின்றவா -2-6-7–என்றும் –
தாமும் நம்முடைய சம்பந்தி சம்பந்திக்களுமாய் கூடக் களிப்பர்
இப்படி பஹூ குணனான எம்பெருமான் பக்கலிலே நிரதிசய பக்திமான்களாய்-தத் சம்ச்லேஷ விஸ்லேஷ ஏக ஸூக துக்கராய்
அவனை அல்லது அறியாதபடியாய்-பகவத் அனுபவ ஸூ கம மிக்க போது இதர பதார்த்தங்களும் எல்லாம்
நம்மைப் போலவே எம்பெருமானைப் பெற்று ஸூகிக்கின்றனவாகவும்-
விச்லேஷம் என்று ஒரு வகை உண்டு என்றும் அறியாத லோக யாத்ரையோடு ஒக்க மறந்து
விஸ்லேஷ வியசனம் மிக்கால்-சம்ச்லேஷ ரசம் உண்டு என்றும் அறியாத இதர பதார்த்தங்களும் எல்லாம்
நம்மைப் போலவே எம்பெருமானைப் பிரிந்து நோவு படுகின்றனவாகக் கொண்டு –
நீயும் திரு மாலால் நெஞ்சம் கோட்பட்டாயே-2-1-1-இத்யாதியாலே அவற்றுக்குமாக தாமும் நோவு படா நிற்பார் –
இவருக்கு பிரிய அப்ரியங்கள் ஒரு காலும் முடியாதே பர்யாயேண உண்டாய் இருக்கையாலே இவருக்கு
சிந்தயந்தி படி நித்யமாகச் செல்லுகையாலே இவரை தீர்க்க சிந்தயந்தி என்றாயிற்று நம் முதலிகள் அருளிச் செய்வது –
ஆனால் சேதனர்க்கு ஸ்திரீ அன்ன பாநாதிகளே தாரக போஷக போக்யங்களாகச் செல்லா நிற்க -இவரை பகவத் குண ஏக தாரகர்
என்னக் கூடுமோ என்னில் -திரு அயோத்யையிலும் -கோசல ஜன பதத்திலும் உள்ள ஸ்தாவர ஜங்கமங்கள் அடைய
ராக குண ஏக தாரகங்களாய் இருக்கும் படியை அனுசந்தித்து இதுவும் கூடும் என்று கொள்வது
இப்படி இருக்கிற இவருக்கு எம்பெருமானோடு சம்ச்லேஷமாவது ப்ரத்யஷ சாமாநா காரமான ஜ்ஞான சாஷாத்காரம் –
விச்லேஷமாவது -பாஹ்ய சம்ச்லேஷ அபேஷை பண்ணி அது பெறாமையாலே மானஸ அனுபவத்துக்கு வந்த கலக்கம் –
சர்வஜ்ஞனாய் -சர்வ சக்தனாய் சர்வ நியந்தாவாய் நிரவதிக கிருபாவானாய் இருந்த எம்பெருமான் இவருடைய அனுபவத்தை
முடிய நடத்தாதே -இவ்வனுபவத்தை விச்சேதித்தத்துக்கு பிரயோஜனம் என் என்னில் -இவருக்கு அனுபூத குணங்கள்
சாத்மிக்கைக்காகவும் –மேன்மேல் என திருஷ்ணை பிறக்கைக்காகவும்–எம்பெருமான் பக்கலிலே பிறந்த ஆசை முதிர்ந்து
-நினைந்தபடி பெறா விட்டவாறே சோக மோஹங்கள் பிறக்கும் -இப்படியுள்ள கலவியாலும் பிரிவாலும் ஆழ்வாருக்கு
வந்த தசை அந்யாபதேச பேச்சைப் பேசுவிக்கும்-

இப்பிரபந்தங்களில் -ஸூக்திகள் பிராப்யனான எம்பெருமானுடைய ஸ்வரூப பிரதிபாதன பரமாய் இருக்கும் -சில
-ஸ்வரூபம் -உயர்வற- திண்ணன் வீடு -அணைவது-ஒன்றும் தேவும் –
ப்ராப்தாவான பிரத்யகாத்ம விஷயமாய் இருக்கும் சில — –பயிலும் சுடர் ஒளி-ஏறாளும் இறையோன் -கண்கள் சிவந்து -கரு மாணிக்க மலை –
-ப்ராத்யுபாயத்தைச் சொல்லும் சிலநோற்ற நோன்பு -ஆராவமுது –மானேய் நோக்கு -பிறந்தவாறும் –
பலன் சொல்லும் திருவாய்மொழிகள் -எம்மா வீடு -ஒழிவில் காலம் எல்லாம் -நெடுமாற்கு அடிமை -வேய் மரு தோள் இணை –
இதற்குத் தடைகள் -வீடுமின் முற்றவும் -சொன்னால் விரோதம் -ஒரு நாயகமாய் -கொண்ட பெண்டிர் –
அவசிஷ்டமானவை- இவற்றுக்கு உபபாதகங்களாய் இருக்கும் –இவற்றில் உத்தேச்யம் பலம் –
ததார்த்தமாக மற்றுள்ள திருவாய் மொழிகளும் -நாலர்த்தமும் சொல்லுகிறது –
அர்த்த பஞ்சகத்தில் உத்தேச்ய பலம் கைங்கர்யமே -அதன் பொருட்டே மற்ற நான்கும் கூறப்படுகின்றன
இவற்றில் பிரதம பிரபந்தமான திரு விருத்தத்தில் -த்வத் அனுபவ விரோதியான சம்சார சம்பந்தத்தை
அறுத்துத் தந்து அருள வேணும் எம்பெருமானை அர்த்திக்கிறார்
திருவாசிரியத்தில் -நிவ்ருத்த சம்சாரருக்கு போக்யமான தன்னுடைய வடிவு அழகை-கலம்பகன் மாலையைப்
பணியாக எடுத்துக் காட்டுமா போலே -காட்டிக் கொடுக்க கண்டு அனுபவித்தார் பூரணமாக –
பெரிய திருவந்தாதியில் நிரதிசய போக்யனான-எம்பெருமானை அனுபவிக்கையாலே தத் அநு குணமாக
திருஷ்ணை பிறந்து த்ருஷ்ண அநு குணமாக பேசியும் நினைத்தும் தரிக்கிறார் –

திருவாய்மொழி யிலே –
இவருடைய த்ருஷ்ண அநு குணமாக -ஸ்ரீ யபதியாய் -சமஸ்த கல்யாண குணாத்மகனாய் –
தனக்குத் தகுதியான திவ்ய தேஹத்தை உடையானுமாய் -திவ்ய பூஷண பூஷிதனுமாய் -சங்க சகராதி திவ்யாயுதரனுமாய் –
பரமவ்யோமத்திலே -ஆனந்தமயமான திவ்ய ஆஸ்தான ரத்ன மண்டபத்திலே பெரிய பிராட்டியாரும் தானுமாய்
திவ்ய சிம்ஹாசனத்திலே ஏழுலகும் தனிக்கோல் செல்ல வீற்று இருந்து அருளி –அஸ்தானே பய சங்கிகளான அயர்வறும் அமரர்களாலே
அநவரத பரிசர்யமான சரண நளினனாய்க் கொண்டு -அங்கு அங்கனே செல்லா நிற்க –ஸ்வ சங்கல்பாயத்த -ஸ்வரூப ஸ்திதி பிரவ்ருத்தி
நிவ்ருத்திகமான ஸ்வ இதர சமஸ்தத்தையும் தனக்கு சரீரதயா சேஷமாக உடையனாய்
அந்தராத்மதயா-சேதன அசேதனங்களை வியாபித்து —தத் கத தோஷைரசம்ச்ப்ருஷ்டனாய்
நாராயணாதி நாமங்களை தனக்கு வாசகமாய் உடையனாய் –ஏவம்விதனாக-உளன் சுடர் மிகு சுருதியுள்-1-1-7- -என்கிறபடியே உபநிஷத் சித்தனுமாய்
இப்படி விசாஜாதீயனுமாய் இருந்து வைத்து -ஆஸ்ரித வாத்சல்யத்தாலே -தேவ மனுஷ்யாதி சஜாதீயனாய் வந்து தன்னுடைய
பரம கிருபையாலே திருவவதாரம் பண்ணும் ஸ்வபாவனுமாய்
தன்னுடைய ஆதாரங்களிலும் உதவப் பெறாத கர்ப்ப நிர்பாக்கியரும் இழக்க வேண்டாதபடி சர்வ அபராத சஹனாய்
பத்ர புஷ்பாதிகளாலே ஸ்வ ஆராதனாய்க் கொண்டு ஆஸ்ரிதற்கு அத்யந்த பரதந்த்ரனாய்
அவர்களுடைய இச்சா அநு குணமான போஜன சயநாதிகளை உடையனுமாய்
சமஸ்த கல்யாண குண பரிபூர்ணனான தானே ஆஸ்ரித ஸூலபத்வார்த்தமாக கோயில்களிலே வந்து நின்று அருளியும்
இப்படியுள்ள சர்வேச்வரத்துக்கும் ஆஸ்ரித அநுக்ரஹத்துக்கும் ஏகாந்தமான படிகளால் பரிபூர்ணனான எம்பெருமான்
தன்னை நிர் ஹேதுகமாகக் காட்டி அருளக் கண்டு அனுபவித்து -தம்முடைய பிரகிருதி சம்பந்தம் ஆகிற பிரதிபந்தகம் அற்று
எம்பெருமானைப் பெற்று முடிக்கிறார் -இனி சொல்ல வேண்டுமவை எல்லாம் -அவ்வவ திருவாய் மொழிகள் தோறும் சொல்லக் கண்டு கொள்வது –

முதல் திருவாய்மொழியில் சொல்லிற்றாவது –
நாநா ரத்ன பரிபூரணமாய் -அபரிச்சேத்யமான கடலை முந்துற திரளக் கண்டால் போலே
ஸ்வரூப ரூப குண விபூதிகளாலே பரிபூர்ணனாய் -எல்லாப்படியாலே எல்லாரிலும் மேம்பட்டு -சர்வேஸ்வரனாய்
ஸ்ரீ யபதியாய் அபௌருஷேயமான ஸூ த்ருடமான ஸ்ருதிகளாலே பிரதிபாதிக்கப் பட்டுள்ள எம்பெருமானை
பாஹ்ய குத்ருஷ்டிகளாலே அவிசால்யமாம் படி அவன் பிரசாதத்தாலே சாஷாத் கரித்து -அனுபவித்து
அவ்வனுபவ ஜனித ப்ரீதி உள்ளடங்காமை -அனுபவித்தபடியே சவிபூதிகனான எம்பெருமானைப் பேசி -ஏவம் விதனானவன்
திருவடிகளிலே -அடிமை செய்து உஜ்ஜீவி என்று தம் திரு உள்ளத்தைக் குறித்து அருளிச் செய்கிறார் –

கடலைத் திரளக் கண்டான் ஒருவன் அதிலுண்டான முத்து மாணிக்காதிகளையும் தனித் தனியே காணுமா போலே
முதல் திருவாய் மொழியிலே திரள அனுபவிக்கப்பட்ட எம்பெருமானுடைய குணங்களை ஒரோ வகைகளிலே
ஒரோ திருவாய் மொழியாகச் செல்லுகிறது இரண்டாம் திருவாய்மொழி தொடங்கி மேல் எல்லாம் –

இப்படிச் செய்தார் இவரே அல்லர் -பாரத ராமாயணாதிகளைப் பண்ணின வ்யாசாதிகளும்
சங்ஷேப விஸ்தரங்களாலே தங்கள் பிரபந்தங்களை ப்ரபந்தீ கரித்தார்கள் –

பர ஸ்வரூபம் -அகில ஹேய ப்ரத்ய நீகத்வத்தாலும் கல்யாணைகதா நத்வத்தாலும் -ஸ்வ இதர சமஸ்த வஸ்து விலஷணமாய்-
விபுத்வாத் தேசத பரிச்சேத ரஹிதமாய்–நித்யத்வாத் காலத பரிச்சேத ரஹிதமாய் –சர்வமும் தனக்கு பிரகாரமாய்
தான் பிரகாரியுமாய் -தனக்கு ஒரு ப்ரகார்யந்தரம் இல்லாமையாலே வஸ்து பரிச்சேத ரஹிதமாய் –
ஜ்ஞானா நந்த மயமாய் -ஜ்ஞான பல ஐஸ்வர்ய சீலாத்ய அனந்த கல்யாண குண கண மஹோததியாய் –
ஸ்ரீ யபதியாய் -ஸ்வ இதர சமஸ்தத்தையும் வியாபிக்கும் இடத்தில் அப்ராக்ருதமாய் -ஸூத்த சத்வ மயமாய் –
ஸ்வ அசாதாரணமாய் -புஷ்ப ஹாச ஸூ குமாரமுமாய் –புண்ய கந்த வாஸிதா நந்ததி கந்தராளமாய்-சர்வ அபாஸ்ரயமாய் இருந்துள்ள
திவ்ய விக்ரஹம் போலே வியாபித்து தரித்து நியமித்து –இப்படி சர்வ பிரகாரத்தாலும் ரஷகமாய்க் கொண்டு சேஷியாய் இருக்கும் –

பிரகிருதி ஸ்வரூபம் -மஹதாதி விகாரங்களை யுடையதாய் -நித்தியமாய் -த்ரிகுணத்மிகையாய் -சுக்ல கிருஷ்ண ரக்த வர்ணையாய்-
அநேக பிரஜைகளுக்கு பிரஜநந பூதையாய் -எம்பெருமானுக்கு சரீரதயா சேஷமாய் -சேதனர் கர்ம அநு குணமாக இச்சிக்க
இந்த இச்ச அநு குணமாக -பகவத் சங்கல்ப்பத்தாலே சதுர் விம்சதி தத்வமாய்க் கொண்டு விகரிக்கக் கடவதாய்
இப்படி எம்பெருமானுக்கு இஷ்ட விநியோக அர்ஹமாய் இருக்கும் –

ஆத்ம ஸ்வரூபம் -அணு பரிமாணமாய் -தேஜோ த்ரவ்யமாய் -ஜ்ஞாதாவாய் –ஜ்ஞாநானந்த குணகமாய் –
நித்யமாகையாலே -கால பரிச்சேத ரஹிதமாய் -ஜ்ஞான த்ரவ்யம் ஆகையாலே வஸ்து பரிச்சேத ரஹிதமாய் –
அப்ருதக் சித்த்யர்ஹ-ப்ருதங் நிர்தேசாநர்ஹ-அனந்யார்ஹ சேஷமுமாய் -பரசேஷதைகரஸமுமாய்-அத்யந்த பரதந்த்ரமுமாய்
இருக்கும் எம்பெருமானுக்கு -இத்தை-தத்வ த்ரயம் – உள்ளபடி அறிவாரில் தலைவர் ஆயிற்று இவர் –

இவ்வாழ்வார் திருவாய் மொழி பிரபந்தத்தால் செய்ததாயற்ற அர்த்தம் ஏது என்னில் –
முதல் திருவாய்மொழியில் -உயர்வற உயர்நலம் உடையவன் –1-1-1-என்று தொடங்கி —
உணர் முழு நலம் –மிகு நரையிலன் -1-1-2-என்றும்
நிலனிடை விசும்பிடை உருவினன் அருவினன் -1-1-3–என்றும்
ஆமவை ஆயவையாய் நின்ற அவர் –1-1-4-என்றும் சொல்லிக் கொடு போந்து
கர விசும்பு எரி வளி நீர் நிலம் இவை மிசை வரனவில் திறல் வலி அளி பொறையாய் நின்ற பரன்-1-1-11- -என்று தலைக் கட்டுகையாலே
நாராயணனே பரத்வம் என்கைக்காக நாராயண சப்தார்த்தத்தை அருளிச் செய்தார்
சர்வாதிகத்வமும் -சமஸ்த கல்யாண குணாத் மகத்வமும் உபய விபூதி நாதத்வமும் இ றே-நாராயண சப்தார்த்தம்
இதனுடைய சேஷம் இ றே ஒன்றும் தேவும் –4-10-திண்ணன் வீடும் -2-2-

அனந்தரத் திருவாய் மொழியிலே –இவ்வர்த்தத்துக்கு வாசகமான திரு நாமம் தன்னை -வண் புகழ் நாரணன் -1-2-10–என்று அருளிச் செய்தார் –
வ்யாபகாந்தரங்களிலும் இவ்வர்த்தத்தை அறியலாய் இருக்கும் இ றே -விஷ்ணு -வாசுதேவ நாராயண வ்யாபக மந்த்ரங்கள் –
அங்கன் அன்றிக்கே -இதுவே வாசகம் என்று தம் திரு உள்ளத்தில் அறுதியிட்ட ஆகாரம் தோற்ற –
செல்வ நாரணன் –1-10-8-என்றும்
திரு நாரணன் -4-1-1–என்றும் –
நாரணன் முழு ஏழ் உலகுக்கு நாதன் –2-7-2-என்றும் –
காராயின காள நன் மேனியினன் நாராயணன் –9-3-1-என்றும்
திண்ணன் நாரணன் -10-5-1–என்றும் -ஆதரித்திக் கொண்டு போந்து
-வாழ் புகழ் நாரணன் –10-9-7-என்று வழிப் போக்கில் -அர்ச்சிராதி மார்க்கத்தை அருளிச் செய்யும் இடத்திலும்
-வார்த்தையும் இதுவேயாய்த் தலைக் கட்டுகையாலே –இதுவே வாசகம் என்கிற நிர்பந்தத்தை அருளிச் செய்கிறார் –

இனி மலர்மகள் விரும்பும் நம் அரும் பெறலடிகள் -1-3-1- என்று தொடங்கி
திருவுடை யடிகள் -1-3-8- என்றும்
மைய கண்ணாள் மலர் மேல் உறை வாழ் மார்பினன் -4-5-2- என்றும்
நமக்கும் பூவின் மிசை நங்கைக்கு இன்பன் -4-5-8- என்றும்
கோலத் திரு மா மகளோடு என்னைக் கூடாதே –6-9-3- என்றும் -சொல்லிக் கொண்டு போந்து
திருவாணை-10-10-7- என்றும்
கோல மலர்ப் பாவைக்கு அன்பாகிய என் அன்பேயோ -10-10-7- என்றும் தலைக் கட்டுகையாலே
ஸ்ரீ மானான நாராயணனே பரதத்வம் என்றும் சொல்லிற்று –
இத்தால் நம் ஆச்சார்யர்கள் ரஹச்யத்தில் பத த்வயத்தாலும் அருளிச் செய்து கொண்டு போரும் அர்த்தத்துக்கு
அடி இவ்வாழ்வாராய் இருக்கும் என்றது ஆயிற்று –
ஆச்ரயண வேளையிலே -மலர்மகள் விரும்பும் நம் அரும் பெறலடிகள் -1-3-1- என்று தொடங்கி
போக வேளையிலே -கோல மலர்ப் பாவைக்கு அன்பாகிய என் அன்பேயோ -10-10-7- என்று சொல்லுகையாலே
ஆச்ரயண வேளையோடு போக வேளையோடு வாசி யற ஒரு மிதுனமே என்று சொல்லிற்று ஆயிற்று –

இப்படி பர ஸ்வரூபம் நிர்ணீதம் ஆயிற்று-பர ஸ்வரூப பிரதி சம்பந்தியான ஸ்வ ஸ்வரூபம் இருக்கும் படி என் என்னில்
உடன்மிசை உயிர் எனக் கரந்து எங்கும் பரந்து –1-1-7-என்று சரீராத்ம பாவத்தை தாம் அனுசந்தித்து பிறருக்கு உபதேசிக்கிற இடத்தில்
உம்முயிர் வீடுடை யானிடை –1-2-1-என்று அந்த சரீராத்ம பாவம் தன்னையே உபதேசித்து
இந்த சரீராத்ம பாவத்தால் பலிக்கிறது அனந்யார்ஹ சேஷத்வம் என்னும் இடத்தை –
தனக்கே யாக எனைக் கொள்ளுமீதே –2-9-4-என்றும்
அடியேன் உள்ளான் உடல் உள்ளான் -8-8-2- என்றும் சொல்லி
இது தத் சேஷத்வ அளவிலே நிற்பது ஓன்று அல்ல –
ததீய சேஷத்வ பர்யந்தம் ஆனால் ஆயிற்று தத் சேஷத்வ சித்தி என்னும் இடத்தை
பயிலும் சுடர் ஒளி -3-7- நெடுமாற்கு அடிமை -8-10-யிலே பரக்க அருளிச் செய்து –
அடியார்கள் குழாங்களை உடன் கூடுவது என்று கொலோ -2-3-10-என்று பிரார்த்தித்து
பிரார்த்தித்த படியே -அடியாரோடு இருந்தமை -10-9-1-என்று தலைக் கட்டுகையாலே
பாகவத சேஷத்வ பர்யந்தமான பகவத் சேஷத்வமே ஸ்வரூபம் என்னும் இடம் சொல்லிற்று –

ஸ்வரூப அநு ரூபமான புருஷார்த்தம் இருக்கும் படி என் என்னில்
தனக்கே யாக எனைக் கொள்ளுமீதே —2-9-4-என்று தொடங்கி
வழு விலா வடிமை செய்ய வேண்டும் நாம் –3-3-1-என்றும்
பணிமானம் பிழையாமே அடியேனைப் பணி கொண்ட -4-8-2-என்றும் –
முகப்பே கூவிப் பணி கொள்ளாய் -8-5-7- -என்றும் -இப்படிகளாலே அடிமையே புருஷார்த்தம் என்னும் இடத்தை நிர்ணயித்து
இது சாஸ்திர விஹிதம் என்று செய்யும் அளவு அல்ல
ஸ்வரூப பிராப்தம் என்று செய்யும் அளவல்ல -ராக பிராப்தம் -என்று சொல்லுகைக்காக
அடியிலே உயர்வற உயர்நலம் உடையவன் -1-1-1-என்று கொண்டு பிராப்யமான குணங்களைச் சொல்லி
சுவையன் திருவின் மணாளன் -1-9-1–என்றும்
தூய அமுதைப் பருகிப் பருகி -1-7-3–என்றும் குண விசிஷ்ட வஸ்துவினுடைய போக்யதையும் சொல்லி
அப்பொழுதைக்கு அப்பொழுது என்னாரா வமுதமே -2-5-4-என்றும்
ஆராவமுதம் –5-8-1-என்றும்
ஆராவமுதம் ஆனாயே -10-10-5–என்றும் இந்த போகத்தினுடைய நித்ய அபூர்வதையைச் சொல்லி
உகந்து பணி செய்து உணபாதம் பெற்றேன் –10-8-10-என்று குண அனுபவ ஜனித ப்ரீதி கார்ய கைங்கர்யமே
புருஷார்த்தம் என்னும் இடத்தைச் சொல்லி –இது தான் யாவதாத்மபாவியான புருஷார்த்தம் என்கைக்காக
ஈதே இன்னம் வேண்டுவது எந்தாய் –10-8-10-என்று தலைக் கட்டுகையாலே
பகவத் குண அனுபவ ஜனித ப்ரீதி காரித கைங்கர்யமே -புருஷார்த்தம் என்று அருளிச் செய்தார்

இப்புருஷார்த்ததுக்கு இடைச் சுவரான விரோதி வேஷத்தை இரண்டாம் திருவாய் மொழியிலே -வீடுமின் முற்றவும் -1-2-என்று கட்டடங்க சொல்லி
அது தன்னையே மேல் மூன்று திருவாய் மொழியாலே விஸ்தரித்து அருளிச் செய்தார் -அவை எவை என்னில்
அசேவ்ய சேவை த்யாஜ்யம் என்றார் -சொன்னால் விரோதத்திலே –3-9-
ஐஸ்வர்ய கைவல்யங்கள் த்யாஜ்யம் என்றார் ஒரு நாயகத்திலே -4-1-
சரீர சம்பந்த நிபந்தனமாக வரும் பரிக்ரஹங்கள் த்யாஜ்யம் என்றார் கொண்ட பெண்டிரிலே -9-1-
சாஸ்திர சித்தமான ஐஸ்வர்ய கைவல்யங்கள் புருஷார்த்தமாகத் தட்டு என் என்னில் -பரம புருஷார்த்த லஷண மோஷத்திலே அதிகரித்தவனுக்கு
ஐம்கருவி கண்ட இன்பம்-4-9-10- ஆகையாலும் -தெரிவரிதாய் -4-9-10-அளவிரந்ததே யாகிலும் பகவத் அனுபவத்தைப் பற்ற சிற்றின்பம் ஆகையாலும் முமுஷூவுக்கு இவை த்யாஜ்யம் என்றார் -ஆக த்யாஜ்ய வேஷத்தை அருளிச் செய்கிறார் –

த்யாகப் பிரகாரம் இருக்கும் படி எங்கனே என்னில் -த்யாஜ்யம் என்றால் விடும் அத்தனை அன்றோ -த்யாகப் பிரகாரம்
இருக்கும் படி அறிய வேணுமோ என்னில் -வேணும் –
விஷயங்களில் நின்றும் தான் கடக்க வர்த்திக்கவோ -அன்றியே விஷயங்களை நசிப்பித்து வர்த்திக்கவோ என்றால் -இரண்டும் ஒண்ணாது –
கடக்க வர்த்திக்க என்று நினைத்தால் லீலா விபூதிக்கு அவ்வருகே போக வேணும்
நசிப்பித்து வர்த்திக்கவோ என்றால் பகவத் விபூதியை அழிக்கையாய் விடும்
இரண்டும் ஒழிய விஷய சந்நிதியில் நின்றும் நிர்மானுஷ்யமான காட்டிலே வர்த்தித்தாலோ என்னில்
சர்வத்தையும் விட்டுக் காட்டிலே இருந்த ஆதிபரதனுக்கு மானின் பக்கலிலே சங்கம் உண்டாய் ஜ்ஞான பிரசம்சம் பிறந்தது
சௌபரி நீருக்கு உள்ளே முழுகிக் கிடக்கச் செய்தே அங்கே சில மத்ஸ்ய சஞ்சாரத்தைக் கண்டு விஷய பிரவணன் ஆனான்
ஆகையாலே த்யாக பிரகாரம் இவை யல்ல -ஆனால் ஏது ஆவது என்னில்
நீர் நுமது என்று இவை வேர் முதல் மாய்த்து -இறை சேர்மின் -1-2-3–என்று
தேஹத்தில் ஆத்ம புத்தியையும் -தேக அநு பந்திகளான பதார்த்தங்களில் மமதா புத்தியையும் தவிருகை த்யாக பிரகாரம் என்று
பிறருக்கு உபதேசித்தார் –யானே என்னை அறியகிலாதே யானே என் தனதே என்று இருந்தேன் -2-9-9—என்று தாமும் அனுசந்தித்தார்
நிவ்ருத்த ராகச்ய க்ருஹம் தபோவனம் -என்று நிவ்ருத்த ராகனாய் இருக்குமவனுக்கு தான் இருந்த தேசமே தபஸ் ஸூ க்கு
ஏகாந்த ஸ்தலம் என்றதாயிற்று -இப்படி எங்கே கண்டோம் என்னில் -ஸ்ரீ ஜனக ராஜன் பக்கலிலும் ஸ்ரீ குலசேகரப் பெருமாள் பக்கலிலும்
கண்டு கொள்வது –ஆகையாலே புத்தி த்யாகமே த்யாகம் என்றபடி –

இவ் விரோதி நிவ்ருத்திக்கும் புருஷார்த்த சித்திக்கும் உபாயம் ஏது என்னில்
தரை வர்ணிக அதிகாரமான பக்தி -அகிஞ்சன அதிகாரமான பிரபத்தி யும் என்று இரண்டும் இ றே வேதாந்த சித்தமான உபாயம்
இதில் பிரபத்தியே உபாயம் என்று நமக்கு சித்தாந்தம் என்னும் ஆகாரம் தோற்ற உபாய வேஷத்தை அருளிச் செய்கிறார்
நோற்ற நோன்பிலேன் –5-7-1-என்று தொடங்கி
ஆறு எனக்கு நின் பாதமே சரணாகத் தந்து ஒழிந்தாய்-5-7-10–என்றும்
உழலை என்பின் பேய்ச்சி முலையூடு அவளை உயிர் உண்டான் கழல்கள் அவையே சரணாகக் கொண்ட –5-8-11-என்றும்
நாமங்கள் ஆயிரமுடைய நம்பெருமான் அடிமேல் சேமம் கொள் தென் குருகூர்ச் சடகோபன் -5-9-11-என்றும்
நாகணை மிசை நம்பிரான் சரணே சரண் நமக்கு –5-10-11-என்றும் சொல்லிக் கொண்டு போந்து
ஆவிக்கு ஓர் பற்றுக் கொம்பு நின்னலால் அறிகின்றிலேன் -10-10-3-என்று தலைக் கட்டுகையாலே திருவடிகளே உபாயம் என்று அருளிச் செய்தார்

இத்தை பிறருக்கு உபதேசிக்கிற விடத்திலும் -திரு நாரணன் தாள் காலம் பெறச் சிந்தித்து உய்ம்மினோ -4-1-1-என்றார்
ஆறு எனக்கு நின் பாதமே -5-7-10-என்றும் –
கழல்கள் அவையே -5-8-11–என்றும்
சரணே சரண் –5-10-11-என்று அவதரிக்கையாலே உபாய பூர்த்தியை அருளிச் செய்தார்
இவ்வுபாயத்துக்கு அதிகாரிகள் யாவார் யார் என்னில் -மயர்வற மதி நலம் அருளினான் -என்ற இடத்திலே
எனக்கு அருளினான் என்கைக்கு தம்மைக் காணாமையாலே ஆகிஞ்சன்யத்தையே புரச்கரித்து
உபாய நிர்ணய வேளையிலே -நோற்ற நோன்பிலேன் நுண் அறிவிலேன் -5-7-1-என்று தரை வர்ணிக அதிகாரமான
உபாயாந்தரங்க ளிலே அநந்வய முகத்தாலே ஆகிஞ்சன்யத்தைப் பேசி
ஆசரயண வேளையில் -புகல் ஒன்று இல்லா அடியேன் -6-10-10-என்று சொல்லி
போக வேளையில் தமக்கு உண்டானது அடங்க பகவத் பிரசாத லப்த லப்தம் என்கைக்காக –
நீசனேன் நிறை ஒன்றும் இலேன் –3-3-4-என்று கரும் தரையைப் பேசி -ஒப்பிலாத தீவினைஎனை உய்யக் கொண்டு –7-9-4-என்று
சாபராத ஜந்துக்களுக்கும் புகுரலாம் என்று தோற்றுகையாலே-சர்வாதிகாரம் -என்றது ஆயிற்று –

அதிகாரியைப் பெற்றாலும் -உபாயம் சித்தமானாலும் -ச்வீகாரம் இல்லாத போது ஜீவிக்கை யாகாமையாலே அந்த ச்வீகார வேஷத்தை
கழல்கள் அவையே சரணாகக் கொண்ட -5-8-11- என்றும் –
இதனுடைய சாங்க அனுஷ்டான வேளையிலே -அடிக் கீழ் அமர்ந்து புகுந்தேன் –6-10-10-என்று அருளிச் செய்தார் –
இந்த ச்வீகார சித்தி தானும் அவனாலே என்னும் இடத்தை -நின் பாதமே சரணாகத் தந்து ஒழிந்தாய்-5-7-10-
அதுவும் அவனது இன்னருளே – 8-8-3–என்றும் அருளிச் செய்தார் –
இந்த ச்வீகர்த்தாவினுடைய அத்யவசாய வேஷத்தை -களைவாய் துன்பம் களையாது ஒழிவாய் களை கண் மற்றிலேன் –5-8-8-என்றும்
நாடொறும் ஏக சிந்தையனாய் -5-10-11–என்றும்
இவ்வுபாயத்தை பிறருக்கு உபதேசிக்கிற இடத்தில் -சிற்ற வேண்டா சிந்திப்பே அமையும் -என்று உபாய சௌகர்யத்தை அருளிச் செய்து
இது தன்னை சபிரகாரமாக அருளிச் செய்கிற இடத்தில் –இது பக்த்யங்கம் அன்று -ஸ்வதந்திர உபாயம் -என்கைக்காக
சரணமாகும் -9-10-5–என்று தொடங்கி-மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான் –9-10-5-என்று பிராப்தி பர்யந்தமாக
முடிய நடத்தும் -என்று அருளிச் செய்தார்
இவ்வுபாய அத்யவசாயம் பண்ணி இருக்குமவனுக்கு கால ஷேப பிரகாரம் இருக்கும் படி என் என்னில்
தொண்டர்க்கு அமுது உண்ண சொன்மாலைகள் சொன்னேன் –9-4-9-என்று திருவாய்மொழி தானே கால ஷேப பிரகாரம் என்று அருளிச் செய்தார்

இப்படி உபாயத்தை சுவீகரித்து -இதுவே போது போக்காக திரியும் அதிகாரிக்கு பல வேஷம் இருக்கும் படி என் என்னில்
ஜிதேந்த்ரியத்வம் -பிரதமமாய் -கைங்கர்ய சித்தி சரமமாய் இருக்கும் இத்தனையும் உபாய பலம் என்னும் இடத்தை அருளிச் செய்தார் –
பிரதமத்திலே இழியும் போது ஜிதேந்த்ரியனாய் கொண்டு இழிய வேண்டும் உபாசகனுக்கு –
ஜிதேந்த்ரியத்வமும் உபாயபலம் இவ்வதிகாரிக்கு எங்கனே என்னில் –
என்னைத் தீ மனம் கெடுத்தாய் -2-7-8-என்றும்
மருவித் தொழும் மனமே தந்தாய் –2-7-7-என்றும் -ஜிதேந்த்ரியத்வம் அவனாலே என்னும் இடத்தைச் சொல்லி
ஜிதந்த்ரியன் ஆனவாறே பகவத் அனுபவத்துக்கு உபகரணமான பக்த்யாதிகள் தனக்குத் தானே உண்டாகிறதோ என்னில் –
மயர்வற மதி நலம் அருளினான் -என்றும் -பக்தி ரூபாபன்ன ஜ்ஞானத்தையும் தானே தந்தான் என்கையாலே
பக்தியுத்பத்தியும் அவனாலே என்னும் இடம் சொல்லி நின்றது –
ஆனால் உத்பன்னையான பக்திக்கு வர்த்தகர் ஆர் என்னில் -காதல் கடல் புரைய விளைவித்த காரமர் மேனி நம் கண்ணன் –5-3-4-என்று அவனே வர்த்தகன் என்னும் இடம் சொல்லி
வ்ருத்திக்கு எல்லை ஏது என்னில் -அதனில் பெரிய அவா -10-10-10-என்று தத்வ த்ரயங்களையும் விளாக்குலை கொள்ளும் படி பெருகின படியைச் சொல்லி
என் அவா அறச் சூழ்ந்தாய் -10-10-10-என்று தம் திரு வாயாலே அருளிச் செய்கையாலே
சரீர சம்பந்தத்தை அறுத்து -தேச விசேஷத்தில் கொண்டு போய் சம்ச்லேஷித்து தலைக் கட்டினான் என்றது ஆயிற்று –

ஆக –இவ்வைந்து அர்த்தமுமே திருவாய் மொழியாலே பிரதிபாதிக்கிறது -அல்லாதவை ஆநு ஷங்கிக சித்தமாய் வந்தது இத்தனை -எங்கனே என்னில்
பரதத்வம் ஸ்ரீ மன் நாராயணன் -என்றும்
அனந்யார்ஹ சேஷத்வமே ஸ்வரூபம் -என்றும்
குண அனுபவ ஜனித ப்ரீதி காரித கைங்கர்யமே புருஷார்த்தம் -என்றும் –
அஹங்கார மமகாரங்கள் தத் விரோதி என்றும்
தந் நிவ்ருத்திக்கும் கைங்கர்ய சித்திக்கும் சர்வ ஸூ லபனான சர்வேஸ்வரன் திருவடிகளே உபாயம் என்றும்
ஜிதேந்த்ரியம் தொடக்கமாக கைங்கர்ய பர்யந்தமாக உபாய பலம் -என்றும் -சொல்லி நின்றது

ப்ராப்யச்ய ப்ரஹ்மணோ ரூபம் –ப்ராப்துச்ச பிரத்யகாத்மன -ப்ராப்த்யுபாயம் பலம் ப்ராப்தேஸ் ததா பிராப்தி விரோதி
ச வதந்தி சகலா வேதாஸ் ஹேதிஹாச புராணகா முனயச்ய மஹாத்மாநோ வேத வேதார்த்த வேதின —ஹாரித சம்ஹிதை -என்று
சகல வேத தாத்பர்யம் இவ்வர்த்த பஞ்சகம் என்னும் இடத்தை பெரிய வங்கி புரத்து நம்பி திருவாய் மொழிக்கு வாக்யார்த்தமாக அருளிச் செய்தார் –

—————————

கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
வடக்குத் திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

அருளிச் செயல்களில் -விளக்கு -விதி -சார்வு -பாக்கியம் -கதி -துணை -அருள் -போன்ற -பத பிரயோகங்கள் –

August 27, 2015

ஆயர் பாடிக்கு அணி விளக்கே அமர்ந்து வந்து என் முலை உணாயே
திருக் கோட்டியூர் நாதனை நரசிங்கனை நவின்று ஏத்துவார்கள் உழக்கிய பாத தூளி படுதலால் இவ்வுலகம் பாக்கியம் செய்ததே
திருக கோட்டியூர் கரும் தடா முகில் வண்ணனைக் கடைக் கொண்டு கை தொழும் பக்தர்கள் இருந்த ஊரில் இருக்கும் மானிடர் எத்தவங்கள் செய்தார் கொலோ
வண் கையினார்கள் வாழ் திருக் கோட்டியூர் கேசவா புருடோத்தமா கிளர் சோதியாய் குறளா என்று பேசுவார் அடியார்கள் எந்தம்மை விற்கவும் பெறுவார்களே
மது சூதனை மார்பில் தங்கவிட்டு வைத்து ஆவதோர் கருமம் சாதிப்பார்க்கு என்றும் சாதிக்கலாமே
இன்னவன் இனையான் என்று சொல்லி எண்ணி உள்ளத்து இருளற
கங்கை கங்கை யன்ன வாசகத்தாலே கடுவினை களைந்திடுகிற்கும்
போதில் கமல வன்னெஞ்சம் புகுந்தும் என் சென்னித் திடரில் பாதவிலச்சினை வைத்தார் பண்டன்று பட்டினம் காப்பே
உனக்குப் பணி செய்து இருக்கும் தவமுடையேன்
உன் பேர் அருளால் இக்கரை ஏறி இளைத்து இருந்தேன்
திருப் பொலிந்த சேவடி என் சென்னியின் மேல் பொறித்தாய்
என் மனம் தன்னுள்ளே வந்து வைகி வாழச் செய்தாய் எம்பிரான்
உனக்கு இடமாயிருக்க என்னை யுனக்கு உரித்தாக்கினையே
வடதடமும் வைகுந்தமும் மதிள் த்வாராபதியும் இடவகைகள் இகழ்ந்திட்டு என் பால் இட வகை கொண்டனையே
விட்டு சித்தன் மனத்தே கோயில் கொண்ட கோவலனை கொழும் குளிர் முகில் வண்ணனை ஆயர் ஏற்றை அமரர் கோவை அந்தணர் தம் அமுதத்தினை

————

ஆயர் குலத்தினில் தோன்றும் அணி விளக்கை
தூயோமாய் வந்து தூ மலர் தூவித் தொழுது வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க போய பிழையும் புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசாகும்
தூ மணி மாடத்து சுற்றும் விளக்கு எரிய தூபம் கமழத் துயில் அணை மேல் கண் வளரும் மாமன் மகளே
குத்து விளக்கு எரிய கோட்டுக் கால் கட்டில் மேல் மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேல் ஏறி
கொத்தலர் பூம் குழல் நப்பின்னை கொங்கை மேல் வைத்துக் கிடந்த மலர் மார்பா
உலகினில் தோற்றமாய் நின்ற சுடரே துயில் எழாய்
அங்கண் இரண்டும் கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல் எங்கள் மேல் சாபம் இழிந்தேலோ ரெம்பாவாய்
கோல விளக்கே கோடியே விதானமே ஆலின் இலையாய் அருளேலோ ரெம்பாவாய்
சிறு பேர் அழைத்தனவும் சீறி அருளாதே இறைவா நீ தாராய் பறையேலோ ரெம்பாவாய்
உன் தன்னைப் பிறவி பெரும் தனை புண்ணியம் யாமுடையோம்

——————————-

வித்தகன் வேங்கட வாணன் என்னும் விளக்கினில் புக வென்னை விதிக்கிற்றியே
துவரைப் பிரானுக்கே சங்கற்பித்துத் தொழுது வைத்தேன் ஒல்லை விதிக்கிற்றியே
கேசவ நம்பியைக் கால் பிடிப்பாள் என்னும் இப்பெறு எனக்கு அருள் கண்டாய்
விதியின்மையால் அது மாட்டோம் வித்தகப் பிள்ளாய் விரையேல் குதி கொண்டரவில் நடித்தாய்
வைகுந்தன் எனபது ஓர் தோணி பெறாது உழல்கின்றேன்
கதி என்றும் தானாவான் கருதாது ஓர் பெண் கொடியை வதை செய்தான் என்னும் சொல் வையகத்தார் மதியாரே
வில்லி புதுவை விட்டு சித்தர் தங்கள் தேவரை வல்ல பரிசு தருவிப்பரேல் அது காண்டுமே
கொம்மை முலைகள் இடர் தீரக் கோவிந்தற்கோர் குற்றேவல் இம்மைப் பிறவி செய்யாதே இனிப் போய்ச் செய்யும் தவம் தான் என்

—————————————–

தேனார் பூஞ்சோலைத் திரு வேங்கடச் சுனையில் மீனாய் பிறக்கும் விதியுடையேன் ஆவேனே
எம்பெருமான் ஈசன் எழில் வேங்கட மலை மேல் தம்பகமாய் நிற்கும் தவம் உடையேன் ஆவேனே
தென்னவென வண்டினங்கள் பண் பாடும் வேங்கடத்துள் அன்னனைய பொற் குவடாம் அரும் தவத்தேன் ஆவேனே
வெங்கதிரோன் குலத்துக்கோர் விளக்காயத் தோன்றி

————————

தோன்று சோதி மூன்றுமாய்த் துளக்கமில் விளக்கமாய்
வேங்கடம் அடைந்த மால பாதமே அடைந்து நாளும் உய்ம்மினோ
நின் இலங்கு பாதம் அன்றி மற்றோர் பற்றிலேன் எம்மீசனே
நின் தனக்கு அடைக்கலம் புகுந்த வெண்ணை அஞ்சல் என்ன வேண்டுமே
கடல் கிடந்த நின்னல்லால் ஓர் கண்ணிலேன் எம்மண்ணலே
ஐயிலாய ஆக்கை நோய் அறுத்து வந்து நின்னடைந்து உய்வதோர் உபாயம் நீ எனக்கு நல்க வேண்டுமே
நின்ன பாத பங்கயம் நிரந்தரம் நினைப்பதாக நீ நினைக்க வேண்டுமே
இயக்கறாத பல் பிறப்பில் என்னை மாற்றி இன்று வந்து உயக் கொள் மேக வண்ணன் நண்ணி என்னிலாய தன்னுளே
மயக்கினான் தன் மன்னு சோதி ஆதலால் என்னாவி தான் இயக்கெலாம் அறுத்து அறாத இன்ப வீடு பெற்றதே –

—————————————–

கத்திர பந்தும் அன்றே பராங்கதி கண்டு கொண்டான் –
சத்தியம் காண்மின் ஐயா சிலையினால் இலங்கை செற்ற தேவனே தேவன் ஆவான்
அவன் அல்லால் தெய்வம் இல்லை கற்றினம் மேய்த்த வெந்தை கழலினை பணிமின் நீரே
கருவிலே திருவிலாதீர் காலத்தைக் கழிக்கின்றீரே
ஐயப்பாடு அறுத்துத் தோன்றும் அழகனூர் அரங்கம் அன்றே
போதரே என்று சொல்லிப் புந்தியுட் புகுந்து தன்பால் ஆதாரம் பெருக வைத்த அழகனூர் அரங்கம் அன்றே
மேம்பொருள் போகவிட்டு மெய்ம்மையை மிக யுணர்ந்து ஆம்பரிசரிந்து கொண்டு ஐம்புலன் அகத்தடக்கி
காம்பறத் தலை சிரைத்து உன் கடைத்தலை இருந்து வாழும் சோம்பரை உகத்தி போலும் சூழ் புனல் அரங்கத்தானே

——————-

அளியன் என்று அருளி யுன்னடியார்க்கு யாட்படுத்தாய் பள்ளி எழுந்து அருளாயே –

———————————-

கோர மா தவம் செய்தனன் கொல் அறியேன் அரங்கத்தம்மான் திரு வாரமார்பதன்றோ அடியேனை யாட் கொண்டதே

——————————————-

கண்டு கொண்டு என்னைக் காரி மாறப் பிரான் பண்டை வல்வினை பாற்றி யருளினான்
எண் திசையும் அறிய வியம்புகேன் ஒன தமிழ் சடகோபன் அருளையே

அருள் கொண்டாடும் அடியவர் இன்புற அருளினான் அவ்வருமறையின் பொருள் அருள் கொண்டு
ஆயிரம் இன் தமிழ் பாடினான் அருள் கண்டீர் இவ்வுலகினில் மிக்கதே

அன்பன் தன்னை அடைந்தவர்கட்கு எல்லாம் அன்பன் தென் குருகூர் நகர் நம்பிக்கு அன்பனாய்
மதுரகவி சொன்ன சொல் நம்புவார் பதி வைகுந்தம் காண்மினே

————————————-

பன்றியாய் அன்று பாரகம் கீண்ட பாழியான் அருளே நன்று நான் உய்ய நான் கண்டு கொண்டேன் நாராயணா வென்னும் நாமம்

குலம் தரும் செல்வம் தந்திடும் அடியார் படு துயராயின வெல்லாம் நிலம் தரம் செய்யும் நீள் விசும்பு அருளும் அருளோடு பெரு நிலம் அளிக்கும்
வலம் தரும் மற்றும் தந்திடும் பெற்ற தாயினும் ஆயின செய்யும் நலம் தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன் நாராயணா வென்னும் நாமம்

தவம் புரிந்து உயர்ந்த மா முனி கொணர்ந்த கங்கையின் கரை மேல் வதரி யாச்சிராமத்துள்ளானே

உலகுக்கு எல்லாம் தேசமாய்த் திகழும் மலைத் திருவேங்கடம் அடை நெஞ்சமே

வந்தாய் என் மனம் புகுந்தாய் மன்னி நின்றாய் நந்தாத கொழும் சுடரே எங்கள் நம்பி சிந்தா மணியே
திரு வேங்கடம் மேய எந்தாய் இனி யான் உன்னை என்றும் விடேனே

இன்துணைப் பதுமத்து அலர்மகள் தனக்கும் இன்பன் நற்புவி தனக்கு இறைவன் தன் துணை ஆயர் பாவை நப்பின்னை தனக்கு இறை மற்றையோர்க்கு
எல்லாம் வன் துணை பஞ்ச பாண்டவர்க்காகி வாயுரை தூது சென்று இயங்கும் என் துணை எந்தை தந்தை தம்மானைத் திரு வல்லிக் கேணி கண்டேனே

எம்பெருமான் அருள் என்ன சந்தமல் குழலாள் அலக்கண் நூற்றுவர் தம் பெண்டிரும் எய்தி நூல் இழப்ப இந்திரன் சிறுவன்
தேர் முன் நின்றானைத் திருவல்லிக் கேணி கண்டேனே –

அன்னமும் மீனும் அமையும் அரியும் ஆய எம்மாயனே அருளாய் என்னும் இன் தொண்டர்க்கு இன்னருள் புரியும் இடவெந்தை எந்தை பிரானை
மன்னு மா மாட மங்கையர் தலைவன் மான வேல் கலியன் வாயொலிகள் பன்னிய பனுவல் பாடுவார் நாளும் பழ வினை பற்று அறுப்பாரே

கலைகளும் வேதமும் நீதி நூலும் கற்பமும் சொற் பொருள் தானும் மற்றை நிலைகளும் வானவர்க்கும் பிறர்க்கும்
நீர்மையினால் அருள் செய்து –அட்ட புயகரத்தேன் என்றாரே

தூவடிவின் பார்மகள் பூ மங்கையோடு சுடராழி சங்கு இருபால் பொலிந்து தோன்ற காவடியின் கற்பகமே போலே
நின்று கலந்தவர்கட்கு அருள் புரியும் கருத்தினானை –திருக் கோவலூர் அதனுள் கண்டேன் நானே

சங்கு தங்கு தடம் கடல் கடல் மல்லையுள் கிடந்தாய் அருள் புரிந்து இங்கு என்னுள் புகுந்தாய் இனிப் போயினால் அறையோ

நெடுமால் தன தாராய நறும் துளவம் பெரும் தகையேற்கு அருளானே –திருவாலி வயல் வாழும் கூர்வாய சிறு குருகே குறிப்பு அறிந்து கூறாயே

ஒ மண் அளந்த தாளாளா தண் குடைந்தை நகராளா வரை எடுத்த தோளாளா என் தனக்கு ஓர் துணை யாளனாகாயே

மாதவன் தன துணையா நடந்தாள் தடம் சூழ் புறவில் போது வண்டாடு செம்மல் புனலாலி புகுவர் கொலோ

என் துணை என்று எடுத்தேற்கு இறையேனும் இரங்கிற்று இலள் தன் துணையாய என் தன் தனிமைக்கும் இரங்கிற்று இலள்
வன் துணை வானவர்க்காய் வரம் செற்று அரங்கத்து உறையும் இன் துணைவனொடும் போய் எழில் ஆலி புகுவர் கொலோ

தாய் மனம் நின்று இரங்கத் தனியே நெடுமால் துணையா போயின பூம் கொடியாள் புனலாலி புகுவர் என்று —

எங்கள் தனி நாயகனே எமக்கு அருளாய் என்னும் ஈசன் அவன் மகிழ்ந்து இனிது மருவியுறை கோயில் –

அடியவர்கட்கு என்றும் அருள் நடந்து –வானோர் அமர்ந்து ஏத்த இருந்த இடம் –நாங்கூர் அரிமேய விண்ணகரம்

பெரு வரத்த இரணியனைப் பற்றி வாடாத வள்ளுகிரால் பிளந்து அவன் தன மகனுக்கு அருள் செய்தான் வாழும் இடம் –அரி மேய விண்ணகரம்

பேரணிந்த உலகத்தவர் தொழுது ஏத்தும் பேரருளாளன் எம்பிரானை —-நாங்கை நன்னடுவுள் செம்பொன் செய் கோயிலினுள்ளே
கண்டு கொண்டு உய்ந்து ஒழிந்தேனே

தூம்புடைத் பனைக்கை வேழம் துயர் கெடுத்து அருளி மன்னு காம்புடைக் குன்றம் ஏந்திக் கடு மழை காத்த எந்தை –நாங்கூர்த் திரு மணிக் கூடத்தானே

உருத்தெழு வாலி மார்வில் ஒரு கணை உருவவோட்டி கருத்துடைத் தம்பிக்கு இன்பக் கதிர்முடி யரசு அளித்தாய் –
–நாங்கை காவளம் தண் பாடியாய் களை கண் நீயே –

முனை முகத்து அரக்கன் மாள முடிகள் பத்து அறுத்து வீழ்த்து ஆங்கு அனையவற்கு இளையவற்கே அரசு அளித்து
அருளினானே–நாங்கை காவளம் தண் பாடியாய் களை கண் நீயே

எந்தாய் இந்தளூரீரே எம்மைக் கடிதாக் கருமம் அருளி ஆவா என்று இரங்கி நம்மை ஒரு கால் காட்டி நடந்தால் நாங்கள் உய்யோமே

குடிகுடியாகக் கூடி நின்று அமரர் குணங்களே பிதற்றி நின்று ஏத்த அடியவர்க்கு அருளி அரவணைத் துயின்ற ஆழியான்
அமர்ந்துறை கோயில் –வெள்ளியங்குடி யதுவே

அன்னமாகி அருமறைகள் அருளிச் செய்த அமலனிடம் –புள்ளம் பூதங்குடி தானே

நின் குரை கழல் தொழுவது ஓர் வகை எனக்கு அருள் புரியே —-வெள்ளறை நின்றானே

வசையில் நான்மறை கெடுத்த அம்மலர் அயற்கு அருளி முன் பரி முகமாய் இசை கொள் வேத நூல் என்று இவை
பயந்தவனே எனக்கு அருள் புரியே –திரு வெள்ளறை நின்றானே

எனக்கு அருள் புரியே –திரு வெள்ளறை நின்றானே

ஐவர்கட்கு அரசளித்த காம்பினார் திரு வேங்கடப் பொருப்ப நின் காதலை அருள் எனக்கு –திரு வெள்ளறை நின்றானே

நின்னடிமையை அருள் எனக்கு –திரு வெள்ளறை நின்றானே

ஏழை எதலன் கீழ் மகன் என்னாது இரங்கி மற்றவர்க்கு இன்னருள் சுரந்து –நின்னடி இணை அடைந்தேன் அணி பொழில் திருவரங்கத் தம்மானே

நஞ்சு சோர்வதோர் வெஞ்சின வரவம் வெருவி வந்து நின் சரண் எனச் சரணா நெஞ்சில் கொண்டு நின் அஞ்சிறைப் பறவைக்கு
அடைக்கலம் கொடுத்து அருள் செய்தது அறிந்து —நின்னடி இணை அடைந்தேன் அணி பொழில் திருவரங்கத் தம்மானே

போகம் நீ எய்திப் பின்னும் நம்மிடைக்கே போதுவாய் என்ற பொன்னருள் எனக்கும் ஆக வேண்டும் என்று
-அடி இணை அடைந்தேன் அணி பொழில் திருவரங்கத் தம்மானே

நின் திருவடி பிரியா வண்ணம் எண்ணிய பேரருள் எனக்கும் அன்னதாகும் என்று அடி இணை அடைந்தேன் அணி பொழில் திருவரங்கத் தம்மானே

ஏதலார் முன்னே இன்னருள் அவற்குச் செய்து உன் மக்கள் மற்றிவர் என்று கொடுத்தாய் ஆதலால் வந்து
உன் அடி இணை அடைந்தேன் அணி பொழில் திருவரங்கத் தம்மானே

துளங்கு நீண் முடி யரசர் தம் குரிசில் தொண்டை மன்னவன் திண் திறல் ஒருவற்கு உளம் கொள் அன்பினோடு இன்னருள் சுரந்து
அங்கோடு நாழிகை ஏழுடன் இருப்ப வளம் கொள் மந்திரம் மற்றவர்க்கு அருளிச் செய்தவாறு அடியேன்
அறிந்து உலகம் அளந்த பொன்னடியே அடைந்து உய்ந்தேன் அணி பொழில் திரு வரங்கத்தம்மானே

வானோர் புக்கு அரண் தந்து அருளாய் என்னப் பொன்னாகத்தானை நக்கரி யுருவமாகி
நகம் கிளர்ந்து இடந்துகந்த சக்கரச் செல்வன் தென் பேர்த் தலைவன் தாள் அடைந்து உய்ந்தேனே

தம்பியொடு தாம் ஒருவர் தன துணைவி காதல் துணையாக முன நாள் வெம்பி எரி கானகம் உலாவுமவர் தாம்
இனிது மேவு நகர் தான் –நந்தி புர விண்ணகரம்

நீ பணித்த அருள் என்னும் ஒள வாளுருவி எறிந்தேன் ஐம்புலன்கள் இடர் தீர எறிந்து வந்து செறிந்தேன் நின்னடிக்கே திரு விண்ணகர் மேயவனே

கதியேலில்லை நின்னருள் அல்லது எனக்கு நிதியே திரு நீர் மலை நித்திலத் தொத்தே -பதியே பரவித் தொழும்
தொண்டர் தமக்குக் கதியே உன்னைக் கண்டு கொண்டு உய்ந்து ஒழிந்தேனே –

தூயாய் சுடர் மா மதி போல் உயிர்க்கு எல்லாம் தாயாய் அளிக்கின்ற தண் தாமரைக் கண்ணா

என் நெஞ்சின் உள்ளே வந்தாயைப் போகலொட்டேன் அந்தோ என்னாருயிரே அரசே அருள் எனக்குநந்தாமல் தந்த எந்தாய் நறையூர் நின்ற நம்பியோ

தான் எனக்காய் நினைந்து அருள் செய்யும் அப்பனை

ஒரு தேரை ஐவர்க்காய் சென்று இரங்கி ஊர்ந்து அவர்க்கு இன்னருள் செய்யும் எம்பிரானை

ஏடிலங்கு தாமரை போல் செவ்வாய் முறுவல் செய்தருளி மாடு வந்து என் மனம் புகுந்து நின்றார் நின்ற ஊர் போலும் –அழுந்தூரே

என்னைம்புலனும் எழிலும் கொண்டு இங்கே நெருநல் எழுந்தருளி பொன்னம் கலைகள் மெலிவெய்தப் போன புனிதர் ஊர் போலும் –அழுந்தூரே

கோவானார் மடியக் கொலையார் மழுக் கொண்டருளும்
குன்றால் மாரி தடுத்தவனைக் குல வேழம் அன்று பொன்றாமை அதனுக்கு அருள் செய்த போரேற்றை
பன்னு கலை நாள் வேதப் பொருளை எல்லாம் பரிமுகமாய் அருளிய எம்பரமன் காண்மின் -அணி அழுந்தூர் நின்றுகந்த அமரர் கோவே

திருவுருவம் பன்றியாகி இலங்கு புவி மடந்தைதனை இடந்து புல்கி எயிற்றிடை வைத்தருளிய எம்மீசன் காண்மின்
எண்ணில் முனிவர்க்கு அருள் தரும் தவத்தை முத்தின் திரள் கோவையை பத்தராவியை –சென்று நாடிக் கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே

எங்களுக்கு அருள் செய்கின்ற ஈசனை –சென்று நாடிக் கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே

பேராயிரமுடைய பேராளன் பேராளன் என்கின்றாளால் –கண்ண புரத் தம்மானைக் கண்டாள் கொலோ

நந்தன் முதலை நிலமங்கை நல துணைவன் அந்த முதல்வன் அமரர்கள் தம் பெருமான்
ஆழியான் நமக்கு அருளிய அருளோடும் பகல் எல்லை கழிகின்றதால் தோழி நாம் இதற்கு என் செய்தும் துணையில்லை

முனி தன வேள்வியை கல்விச் சிலையால் காத்தானூர் கண்ணபுரம் தொழுதுமே

பெரும் தோள் வாணற்கு அருள் புரிந்து பின்னை மணாளனாகி முன் கருந்தாள் களிறு ஓன்று ஒசித்தானூர் கண்ணபுரம் நாம் தொழுதுமே

முதலை தன்னால் அடர்ப்புண்டு கொலையார் வேழம் நடுக்குற்றுக் குலைய அதனுக்கு அருள் புரிந்தான் –கண்ணபுரம் தொழுதுமே

கரு மா முகில் தோய் நெடுமாடக் கண்ண புரத்தெம் அடிகளை திரு மா மகளால் அருள் மாரி –கலி கன்றி மங்கை வேந்தன்

பேரருளாளர் கொல் யான் அறியேன் –அணி கெழு மா முகிலேயும் ஒப்பர் அச்சோ ஒருவர் அழகியவா

அரியுருவாய்க் கீண்டான் அருள் தந்தவா –புல்லாணி கை தொழுதேன்

பாம்பின் அணையான் அருள் தந்தவா –புல்லாணி கை தொழுதேன்

ஆதியுமானான் அருள் தந்தவா –புல்லாணி கை தொழுதேன்

பேரருளாளன் பெருமை பேசி –குருங்குடிக்கே என்னை உய்த்திடுமின்

என் நெஞ்சகம் கோயில் கொண்ட பேரருளாளன் —குருங்குடிக்கே என்னை உய்த்திடுமின்

அடியவர் தங்கள் தம் மனத்துப் பிரியாது அருள் புரிவான் –திருக் கோட்டியூரானே

பெற்றத்தலைவன் எங்கோமான் பேரருளாளன் மதலாய்

தளர்ந்திட்டு இமையோர் சரண் தா வெனத் தான் சரணாய் முரணாயவனை உகிரால் பிளந்திட்டு அமரர்க்கு அருள் செய்து உகந்த பெருமான் திருமால்

கரை சேர் பரும் தாள் களிற்றுக்கு அருள் செய்த செங்கண் பெரும் தோள் நெடுமாலைப் பேர் பாடி யாட

தம்மையே நாளும் வணங்கித் தொழுவார்க்கு தம்மையே ஒக்க அருள் செய்வாராதலால்

முன்னம் சேர் வல்வினைகள் போக முகில் வண்ணன் பொன்னம் சேர் சேவடி மேல் போதணியப் பெற்றோமே

மற்று எமக்கு சரண் இல்லை என்ன அரணாவான் என்னும் அருளால் –மீன மாலை மறவாது இறைஞ்சு என் மனனே

அந்தரம் ஏழினூடு செல உய்த்த பாதமது நம்மை யாளும் அரசே

சிலை மலி செஞ்சரங்கள் செலயுத்த நங்கள் திருமால் நமக்கு ஓர் அரணே

அன்னமதாய் இருந்து அங்கு அறநூல் உரைத்த அது நம்மை யாளும் அரசே

இணை மருது இற்று வீழ நடை கற்ற தெற்றல் வினை பற்று அறுக்கும் விதியே

ஆ ஆ வென்று தொண்டர்க்கும் அமரர்க்கும் முனிவர்க்கும் தான் அருளி உலகம் ஏழும் உண்டு ஒத்த திரு வயிற்றின்

அகம்படியில் வைத்து உம்மை உய்யக் கொண்ட கொண்டல் கை மணி வண்ணன் தண் குடந்தை நகர் பாடி யாடீர்களே

வேம்பின் புழு வேம்பு அன்றி யுண்ணாது அடியேன் நான் பின்னும் உன் சேவடி யன்றி நயவேன்

அணியார் பொழில் சூழ் அரங்க நகரப்பா துணியேன் இனி நின்னருள் அல்லது எனக்கு மணியே மணி மாணிக்கமே

மது சூதா பணியாய் எனக்கு உய்யும் வகை பரஞ்சோதி

நந்தா நரகத்து அழுந்தா வகை நாளும் எந்தாய் தொண்டர் ஆனவருக்கு இன்னருள் செய்வாய்

சந்தோகா தலைவனே தாமரைக் கண்ணா அந்தோ அடியேற்கு அருளாய் உன்னருளே

குன்றம் எடுத்து ஆ நிரை காத்தவன் தன்னை மன்றில் புகழ் மங்கை மன் கலி கன்றி சொல்
ஓன்று நின்ற ஒன்பதும் வல்லவர் தம் மேல் என்றும் வினையாயின சாரகில்லாவே

——————

நிதியினை பவளத் தூணை நெறிமையால் நினைய வல்லார் கதியினைக் கஞ்சன் மாளக் கண்டு முன் அண்டம் ஆளும்
மதியினை மாலை வாழ்த்தி வணங்கி என் மனத்து வந்த விதியினைக் கண்டு கொண்ட தொண்டனேன் விடுகிலேமே
தெள்ளியீர் தேவர்க்கு எல்லாம் தேவராய் உலகம் கொண்ட ஒள்ளியீர் உம்மை யல்லால் எழுமையும் துணையிலோமே
துளக்கமில் சிந்தை செய்து தோன்றலும் சுடர் விட்டு ஆங்கே விளக்கினை விதியின் காண்பார் மெய்ம்மையைக் காண்கிற்பாரே –

————————————-

கன்று மேய்த்து இனிது உகந்த காளாய் என்றும் –துன்று குழல் கரு நிறத்து என் துணையே என்றும் துணை முலை மேல் துளி சோரச் சோர்கின்றாளே

இன்றே சென்று திருக் கண்ண புரம் புக்கு என் செங்கண் மாலுக்கு என் காதல் என் துணைவர்க்கு உரைத்தி யாகில் இது ஒப்பது எமக்கு இன்பமில்லை

மின்னு மா மழை தவழும் மேக வண்ணா விண்ணவர் தம் பெருமானே அருளாய் என்று அன்னமாய் முனிவரோடு
அமரர் ஏத்த அருமறையை வெளிப்படுத்த அம்மான் தன்னை மன்னு மா மணி மாட மங்கை வேந்தன் மானவேல் பரகாலன் கலியன் சொன்ன
பன்னிய நூல் தமிழ் மாலை வல்லார் தொல்லைப் பழ வினையை முதலரிய வல்லார் தாமே –

———————————————–

ஒண் தாமரையாள் கேள்வன் ஒருவனையே நோக்கும் உணர்வு

மூப்புன்னைச் சிந்திப்பார்க்கு இல்லை திருமாலே நின்னடியை வந்திப்பார் காண்பர் வழி

பழுது ஒன்றும் வாராத வண்ணமே விண் கொடுக்கும் மண்ணளந்த சீரான் திருவேங்கடம்

நின்றான் இருந்தான் கிடந்தான் நடந்தானே என்றால் கெடுமாம் இடர்

ஓரடியும் சாடுதைத்த ஒண் மலர்ச் சேவடியும் ஈரடியும் காணலாம் என்நெஞ்சே

ஓரடியின் தாயவனைக் கேசவனைத் தண் துழாய் மாலை சேர் மாயவனையே மனத்து வை –

———————————–

கோல் தேடி ஓடும் கொழுந்தே போன்றதே மால் தேடி ஓடும் மனம்

வகையால் அவனி இரந்து அளந்தாய் பாதம் புகையால் நறு மலரால் முன்னே மிக வாய்ந்த
அன்பாக்கி ஏத்தி அடிமைப் பட்டேன் உனக்கு என் பாக்கியத்தால் இனி
பொருந்திய நின் பாதங்களை ஏத்திப் பணியாவேல் பல் பிறப்பும் ஏதங்கள் எல்லாம் எமக்கு

எமக்கு என்று இரு நிதியம் ஏமாந்து இராதே தமக்கு என்றும் சார்வம் அறிந்து நமக்கு என்றும்
மாதவனே என்னும் மனம் படைத்து ஓதுவதே நாவினால் ஒத்து

வென்று அடல் ஆழி கொண்ட அறிவனே இன்பக் கடல் ஆழி நீ யருளிக் காண்

வேம்பின் பொருள் நீர்மையாயினும் பொன்னாளி பாடென்று அருள் நீர்மை தந்த அருள்

அருள் புரிந்த சிந்தை அடியார் மேல் வைத்து

யானே தவம் செய்தேன் ஏழ் பிறப்பும் எப்பொழுதும் யானே தவமுடையேன் யானே

இரும் தமிழ் நன்மாலை இணை யடிக்கே சொன்னேன் பெரும் தமிழன் நல்லேன் பெரிது

ஆதிக் கண் நின்ற அறிவன் அடி இணையே ஓதிப் பணிவது உறும்

உறும் கண்டாய் நன்னெஞ்சே உத்தமன் நற்பாதம் உறும் கண்டாய் ஒண் கமலம் தன்னால்
உறும் கண்டாய் ஏத்திப் பணிந்து அவன் பேர் ஈரைஞ்ஞூறு எப்பொழுதும் சாத்தி யுரைத்தல் தவம்

தவம் செய்து நான் முகனே பெற்றான் தரணி நிவந்து அளப்ப நீட்டிய பொற் பாதம் சிவந்த தன கை
யனைத்தும் ஆரக் கழுவினான் கங்கை நீர் பெய்தனைத்துப் பேர் மொழிந்து பின்
பயின்றார் தம் மெய்த்தவத்தால் காண்பரிய மேக மணி வண்ணனை யான் எத்தவத்தால் காண்பன் கொல் இன்று
அன்று கருக் கோட்டியுள் கிடந்தது கை தொழுதேன் கண்டேன் திருக் கோட்டி எந்தை திறம்

—————————–\

ஓத வண்ணன் வரு நரகம் தீர்க்கும் மருந்து

மருந்தும் பொருளும் அமுதமும் தானே திருந்திய செங்கண் மால்

தாவிய நின் எஞ்சா வினை யடிக்கே ஏழ் பிறப்பும் ஆளாகி அஞ்சாது இருக்க அருள்

அருளாது ஒழியுமே ஆலிலை மேல் அன்று தெருளாத பிள்ளையாய்ச் சேர்ந்தான்
பைம்பொன் முடியான் அடியிணைக்கே பூரித்து என் நெஞ்சே புரி

அவனே கலங்கா பெரு நகரம் காட்டுவான் கண்டீர் இலங்கா புரம் எரித்தான் எய்து
விருப்புடைய வெக்காவே சேர்ந்தானை மெய்ம்மலர் தூய்க்கை தொழுதால் அக்காவே தீ வினைகள் ஆய்ந்து

ஏய்ந்த முடிப்போது மூன்று ஏழு என்று எண்ணினான் ஆர்ந்த அடிப் போது நங்கட்கு அரண்

தொட்ட படையெட்டும் தோலாத வென்றியான் அட்ட புயகரத்தான் அஞ்ஞான்று குட்டத்துக்
கோள் முதலை துஞ்சக் குறித்து எறிந்த சக்கரத்தான் தாள் முதலே நங்கட்குச் சார்வு

சார்வு நமக்கு என்றும் சக்கரத்தான் தண் துழாய்த் தார் வாழ வரை மார்பன் தான் முயங்கும்
காரார்ந்த வானமரு மின்னிமைக்கும் வண் தாமரை நெடும் கண் தேனமரும் பூ மேல் திரு –

—————————-

நன்றாக நானுன்னை அன்றி இலேன் கண்டாய் நாரணனே நீ என்னை யன்றி இல்லை

இல்லை துணை மற்று என் நெஞ்சே ஈசனை வென்ற சிலை கொண்ட செங்கண் மால் சேரா குலை கொண்ட
ஈரைந்தலையான் இலங்கையை ஈடழித்த கூரம்பன் அல்லால் குறை

நாராயணன் என்னை யாளி நரகத்துச் சேராமல் காக்கும் திருமால்
வேறாக ஏத்தியிருப்பாரை வெல்லுமே மற்றவரைச் சார்த்தி இருப்பார் தவம்

தவம் செய்து நான்முகனால் பெற்ற வரத்தை அவம் செய்த ஆழியான் அன்றே உவந்து எம்மைக் காப்பாய் நீ

நீயே தவத் தேவ தேவனும்

காகுத்தன் அல்லால் ஒரு தெய்வம் யானிலேன் பொல்லாத தேவரைத் தேவர் அல்லாரை திரு வில்லாத் தேவரைத் தேறேன்மின் தேவு

பை தெளிந்த பாம்பின் அணையாய் அருளாய் அடியேற்கு வேம்பும் கறியாகுமேன்று

இனி யறிந்தேன் ஈசற்கும் நான் முகற்கும் தெய்வம் இனி யறிந்தேன் எம்பெருமான் உன்னை இனி யறிந்தேன்
காரணன் நீ கற்றவை நீ கற்பவை நீ நற்கிரிசை நாரணன் நீ நன்கு அறிந்தேன் நான்

———-

வியலிடமுண்ட பிரானார் விடுத்த திருவருளால் உயளிடம் பெற்றுய்ந்தம்

நீண்ட வண்டத்து உழறலர் ஞானச் சுடர் விளக்காய் உயர்ந்தொரையில்லா அழறலர் தாமரைக் கண்ணன்

இனி யுன் திருவருளால் அன்றிக் காபரிதால் முறையோ அரவணை மேல் பள்ளி கொண்ட முகில் வண்ணனே

புவனியெல்லாம் நீர் ஏற்று அளந்த நெடிய பிரான் அருளா விடுமே

ஞானப் பிரானை யாழ்லாலில்லை நான் கண்ட நல்லதுவே

—————————-

யானும் என்நெஞ்சும் இசைந்து ஒழிந்தோம் வல்வினையைக் கானும் மலையும் புகக் கடிவான்

தானோர் இருள்ளன்ன மா மேனி இறையார் தந்த அருள் என்னும் தண்டால் அடித்து

ஓன்று உண்டு செங்கண் மால் யானுரைப்பது உன்னடியார்க்கு என் செய்வன் என்றே இருத்தி நீ
நின் புகழில் வைகும் தம் சிந்தையிலும் மற்று இனிதோ நீ யவர்க்கு வைகுந்தம் என்று அருளும் வான் –

கார் கலந்த மேனியான் கை கலந்த வாழியான் பார் கலந்த வல் வயிற்றான் பாம்பணையான் சீர் கலந்த
சொல் நினைந்து போக்காரேல் சூழ் வினையின் ஆழ துயரை எனநினைந்து போக்குவர் இப்போது

இப்போதும் இனிச் சிறிது நின்றாலும் எப்போதும் ஈதே சொல் என்நெஞ்சே எப்போதும்
கை கழலா நேமியான் நம் மேல் வினை கடிவான் மொய் கழலே ஏத்த முயல்

—————————————————–

அழுந்தூர் எழும் சுடரை –மூழிக் களத்து விளக்கினை

——————————

மயர்வற மதிநலம் அருளினன் யவனவன்

வண் புகழ் நாரணன் திண் கழல் சேரே

அருளாத நீரருளி அவராவிதுவராமுன் அருளாழிப் புள் கடவீர் அவர் வீதி ஒரு நாள் என்று
அருளாழி யம்மானைக் கண்டக்கால் இது சொல்லி யருள் ஆழி வண்டே –

அருளாத திருமாலார்க்கு என் பிழைத்தாள் திருவடியின் தகவினுக்கு

மிக்க ஞானச் சுடர் விளக்காயத் துளக்கற்ற அமுதமாய் எங்கும் பக்கம் நோக்கறியான் என் பைந்தாமரைக் கண்ணனே

எதிர் சூழல் புக்கு எனத்தோர் பிறப்பும் எனக்கே யருள்கள் செய்ய விதி சூழ்ந்ததால் எனக்கேல் அம்மான் திரிவிக்கிரமனையே

வேர் முதல் வித்தாய்ப் பரந்து தனி நின்ற கார் முகில் போல் வண்ணன் என் கண்ணனை நான் கண்டேனே

எய்தா நின் கழல் யான் எய்த ஞானக் கைதா காலக் கழிவு செய்யலே

ஐயார் கண்டமடைக்கிலும் நின் கழல் எய்யாது ஏத்த அருள் செய் எனக்கே

தனக்கேயாக எனைக் கொள்ளுமீதே எனக்கே கண்ணனை யான் கொள் சிறப்பே

மாலிரும் சோலை தொழக் கருதுவதே துணிவது சூதே

தெருள் கொள்ளச் சொன்ன ஓராயிரத்துள் இப்பத்து அருளுடையவன் தாள் அணைவிக்கும் முடித்தே

பரஞ்சோதி நின்னுள்ளே படருலகம் படைத்த எம் பரஞ்சோதி கோவிந்தா பண்புரைக்க மாட்டேனே

பொல்லா வாக்கையின் புணர் வினை யறுக்கலறா சொல்லாய் யானுன்னைச் சார்வதோர் சூழ்ச்சியே

சூழ்ச்சி ஞானச் சுடர் ஒளியாகி என்றும் ஏழ்ச்சிக் கேடின்றி எங்கனும் நிறைந்த வெந்தாய்
தாழ்ச்சி மற்று எங்கும் தவிர்ந்து நின் தாளிணைக் கீழ் வாழ்ச்சி யான் சேரும் வகை அருளாய் வந்தே

கலைப்பல் ஞானத்து என் கண்ணனைக் கண்டு கொண்டு நிலைப் பெற்றேன் என்நெஞ்சம் பெற்றது நீடுயிரே

நீசனேன் நிறை ஒன்றுமிலேன் என் கண் பாசம் வைத்த பரஞ்சுடர் சோதிக்கே

வேங்கடதுறைவார்க்கு நமவென்னலாம் கடமை அது சுமந்தார்கட்கே

நமன்று எழும் திருவேங்கடம் நங்கட்கு சமன் கொள் வீடு தரும் தடம் குன்றமே

திருவேங்கட மா மலை ஒன்றுமே தொழ நம் வினை ஓயுமே

கைம்மாவுக்கு அருள் செய்த கார் முகில் போல் வண்ணன் கண்ணன் எம்மான்

விழுமிய வமரர் முனிவர் விழுங்கும் கன்னற் கனியினை தொழுமின் தூய மனத்தராய் இறையும் நில்லா துயரங்களே

தயரதற்கு மகன் தன்னை யன்றி மற்றிலேன் தஞ்சமாகவே

சுடர் ஒளியாய் நின்ற தன்னுடைச் சோதியில் வைதிகன் பிள்ளைகளை உடலோடும் கொண்டு கொடுத்தவனைப் பற்றி ஒன்றும் துயர் இலனே

இன்புறும் இவ்விளையாட்டு உடையானைப் பெற்று ஏதும் அல்லல் இலனே

கிளர் ஒளி மாயனைக் கண்ணனைத் தாள் பற்றி யான் என்றும் கேடிலனே

திரு நாரணன் தாள் காலம் பெறச் சிந்தித்து உய்ம்மினோ

புரைப்பிலாத பரம் பரனே பொய்யிலாத பரஞ்சுடரே இரைத்து நல்ல மேன்மக்கள் ஏத்த யானும் ஏத்தினேன்

கைகள் ஆரத் தொழுது சொல் மாலைகள் ஏற்ற நோற்றேற்கு இனி என்ன குறை எழுமையுமே

ஏழ்மைப் பிறப்புக்கும் சேமம் இந்நோய்க்கும் ஈதே மருந்து ஊழ்மையில் கண்ணபிரான் கழல் வாழ்த்துமின் உன்னித்தே

மன்னப்படும் மறை வாணனை வண் துவராபதி பதி மன்னனை ஏத்துமின் ஏத்தலும் தொழுது ஆடுமே

மிக்க ஞான மூர்த்தியாய வேத விளக்கினை என் தக்க ஞானக் கண்களாலே கண்டு தழுவுவனே

வேட்கை எல்லாம் விடுத்து என்னை உன் திருவடியே சுமந்து உழல கூட்டரிய திருவடிகள் கூட்டினை நான் கண்டேனே

ஒண் தொடியாள் திருமகளும் நீயுமே நிலா நிற்ப கண்ட சதிர் கண்டு ஒழிந்தேன் அடைந்தேன் உன் திருவடியே

திருவடியை நாரணனைக் கேசவனைப் பரஞ்சுடரை திருவடி சேர்வது கருதிச் செழும் குருகூர்ச் சடகோபன்
திருவடி மேல் உரைத்த தமிழ் ஆயிரத்துள் இப்பத்தும் திருவடியே யடைவிக்கும் திருவடி சேர்ந்து ஒன்றுமினே

மெய்யே பெற்று ஒழிந்தேன் விதி வாய்க்கின்று காப்பாரார் ஐயோ கண்ணபிரான் அறையோ இனிப் போனாலே

அம்மான் ஆழிப்பிரான் அவன் எவ்விடத்தான் யான் ஆர் எம்மா பாவி யர்க்கும் விதி வாய்க்கின்று வாய்க்கும் கண்டீர்

கைம்மா துன்பு ஒழித்தாய் என்று கை தலை பூசலிட்டே மெய்ம்மாலாய் ஒழிந்தேன் எம்பிரானும் என் மேலானே

நிறைந்த சோதி வெள்ளம் சூழ்ந்த நீண்ட பொன் மேனியோடும் நிறைந்து என்னுள்ளே நின்று ஒழிந்தான் நேமி யங்கை யுளதே

குழுமித் தேவர் குழாங்கள் கை தொழச் சோதி வெள்ளத்தினுள்ளே எழுவதோர் உரு என் நெஞ்சுள் எழும் ஆர்க்கும் வறிவரிதே

கருளப் புட்கொடி சக்கரப்படை வான நாட என் கார் முகில் வண்ணா பொருள் அல்லாத என்னைப் பொருளாக்கி அடிமை கொண்டாய்

தெருள் கொள் நான்மறை வல்லவர் பலர் வாழ் சிரீவர மங்கல நகர்க்கு அருள் செய்து அங்கு இருந்தாய் அறியேன் ஒரு கைம்மாறே

தொல் அருள் நல வினையால் சொலக் கூடும் கொல் தோழிமீர் காள் தொல் அருள் மண்ணும் விண்ணும் தொழ நின்ற திரு நகரம்
நல்லருள் ஆயிரவர் நலன் ஏந்தும் திருவல்ல வாழ நல்லருள் நம் பெருமான் நாராயணன் நாமங்களே

சிறந்த வான் சுடரே உன்னை என்று கொல் சேர்வதுவே

என் கண்கட்குத் திண் கொள்ள ஒரு நாள் அருளாய் உன் திரு உருவே

இன்று இவ்வாயர் குலத்தை வீடுய்யத் தோன்றிய கரு மாணிக்கச் சுடர் நின் தன்னால் நலிவே படுவோம் என்றும் ஆய்ச்சியோமே

திரு விண்ணகர்ச் சேர்ந்த பிரான் பாவியேன் மனத்தே உறைகின்ற பரஞ்சுடரே

திருவிண்ணகர் மன்னு பிரான் கழல்கள் அன்றி மற்றோர் களைகண் இலம் காண்மின்களே

புகர் கொள் சோதிப்பிரான் தன் செய்கை நினைந்து புலம்பி என்றும் நுகர வைகல் வைகப் பெற்றேன் எனக்கு என் இனி நோவதுவே

அலகில் பொலிந்த அறிவிலேனுக்கு அருளாயே

சிந்தா மணிகள் பகரல்லைப் பகல் செய் திரு வேங்கடத்தானே அந்தோ அடியேன் உனபாதம் அகலகில்லேன் இறையுமே

சின்னமும் திரு மூர்த்தியும் சிந்தித்து ஏத்திக் கை தொழவே அருள் எனக்கு என்னம்மா என் கண்ணா இமையோர் தம் குலமுதலே

அடியடையாதாள் போல் இவள் அணுகி அடைந்தனள் முகில் வண்ணன் அடியே

இன் தமிழ் பாடிய வீசனை ஆதியாய் நின்ற என் சோதியை என் சொல்லி நிற்பனோ

என்னால் தன்னைப் பதவிய இன்கவி பாடிய அப்பனுக்கு எதுவும் ஒன்றும் இல்லை செய்வது இங்கும் அங்கே

வானுயர் இன்பம் மன்னி வீற்று இருந்தாய் அருளு நின் தாள்களை எனக்கே

தாமரை நீள் வாசத் தடம் போல் வருவானே ஒரு நாள் காண வாராயே

காண வாராய் கரு நாயிறுதிக்கும் கரு மாணிக்க நாள் நல் மலை போல் சுடர்ச் சோதி முடி சேர் சென்னி யம்மானே

பொருத்தமுடை வாமனன் தான் புகுந்து என் தன கருத்தை யுற வீற்று இருந்தான் கண்டு கொண்டே

பெரும் தாள் களிற்றுக்கு அருள் செய்த பெருமான் தரும் தான் அருள் தான் இனி யான் அறியேனே

தூய சுடர்ச் சோதி தனது என்னுள் வைத்தான் தேசம் திகழும் தன் திருவருள் செய்தே

தெருளும் மருளும் மாய்த்துத் தன் திருந்து செம் பொற் கழல் அடிக்கீழ் அருளி இருத்தும் அம்மானாம் அயனாம் சிவனாம் திருமாலால்
அருளப்பட்ட சடகோபன் ஓர் ஆயிரத்துள் இப்பத்தால் அருளி அடிக்கீழ் இருத்தும் நம் அண்ணல் கரு மாணிக்கமே

திருவருள் மூழ்கி வைகலும் செழு நீர் நிறக் கண்ணபிரான் திருவருள்களும் சேர்ந்தமைக்கு அடையாளம் திருந்த யுள

திருவருளால் அவன் சென்று சேர் தண் திருப் புலியூர் திருவருள் கமுகு ஒண் பழத்தது மெல்லியல் செவ்விதழே

திருப் புலியூர் நின்ற மாயப்பிரான் திருவருளாம் இவள் நேர் பட்டதே

வடமதுரைப் பிறந்தார்க்கு அருள் கொள் ஆளாய் உய்யல் அல்லால் இல்லை கண்டீர் அரனே

வடமதுரைப் பிறந்தவன் வண் புகழே சரண் என்று உய்யப் போகல அல்லால் இல்லை கண்டீர் சதிரே

வடமதுரைப் பிறந்தவன் வண் புகழே வீழ் துணையாப் போமிதனில் யாதுமில்லை மிக்கதே

வடிவிணை இல்லா மலர்மகள் மற்றை நிலமகள் பிடிக்கும் மெல்லடியை கொடு வினையேனும் பிடிக்க நீ ஒரு நாள் கூவுதல் வருதல் செய்யாயே

அரியை வணங்கி அறிந்தனர் நோய்கள் அறுக்கும் மருந்தே

மாக வைகுந்தம் காண்பதற்கு என் மனம் ஏகம் எண்ணும் இராப் பகல் இன்றியே

திருமாலே வெய்யார் சுடர் ஆழி சுரி சங்கம் ஏந்தும் கையா உன்னைக் காணக் கருதும் என் கண்ணே

தென் காட்கரை அப்பன் சிறிய வென்னாருயிர் உண்ட திருவருளே

திருவருள் செய்பவன் போல் என்னுள் புகுந்து உருவமும் உயிரும் உடனே உண்டான்

திருமாலே நாவாய் யுறைகின்ற நாரண நம்பீ ஆவா அடியான் இவன் என்று அருளாயே

அருளாது ஒழிவாய் அருள் செய்து அடியேனைப் பொருளாக்கி உன் பொன்னடிக் கீழ்ப் புக வைப்பாய்

வேத நாவர் விரும்பும் திருக் கண்ணபுரத்து ஆதியானை அடைந்தார்க்கு அல்லல் இல்லையே

திருக் கண்ணபுரம் சொல்ல நாளும் துயர் பாடு சாராவே

காள மேகத்தை யன்றி மற்று ஒன்றிலம் கதியே

இலம் கதி மற்று –திரு மோகூர் நலம் கழல் அவன் அடி நிழல் தடம் அன்றி யாமே

சார்வே தவ நெறிக்குத் தாமோதரன் தாள்கள் கார்மேக வண்ணன் கமல நயனத்தன்

கண்ணன் கழலினை நண்ணும் மனமுடையீர் எண்ணும் திரு நாமம் திண்ணம் நாரணமே

அருள் பெறுவார் அடியார் தம் அடியனேற்கு ஆழியான் அருள் தருவான் அமைகின்றான் அது நமது விதி வகையே

வாட்டாற்றான் வந்து இன்று விண்ணுலகம் தருவானாய் விரைகின்றான் விதி வகையே எண்ணின வாறாகா இக்கருமங்கள் என்நெஞ்சே

தென்னன் திருமாலிரும் சோலைத் திசை கை கூப்பிச் சேர்ந்த யான் இன்னும் போவேனோ கொலோ என் கொல் அம்மான் திருவருளே

என் கொல் அம்மான் திருவருள்கள் உலகும் உயிரும் தானேயாய் நன்கு என்னுடலம் கை விடான் ஞாலத்தூடே நடந்து உழக்கி

தென் கொள் திசைக்குத் திலதமாய் நின்ற திருமாலிரும் சோலை நாங்கள் குன்றம் கை விடான் நண்ணா அசுரர் நலியவே

அடி பரவ அருளை ஈந்த வம்மானே

குன்று என்னத் திகழ் மாடங்கள் சூழ் திருப் பேரான் ஓன்று எனக்கு அருள் செய்ய உணர்த்தல் உற்றேனே

வைகுந்தம் புகுவது மன்னவர் விதியே

விதி வகை புகுந்தனர் என்று நல் வேதியர் பதியினில் பாங்கினில் பாதங்கள் கழுவினர்

நீலக் கடல் கடைந்தாய் உன்னைப் பெற்று இனிப் போக்குவனோ

———————————–

அரங்கர் மௌலி சூழ்கின்ற மாலையைச் சூடிக் கொடுத்தவள் தொல் அருளால் வாழ்கின்ற வள்ளல் இராமானுசன் என்னும் மா முனியே

கூட்டும் விதி என்று கூடும் கொலோ

கண்ணனுக்கே ஆமது காமம் அறம் பொருள் வீடு இதற்கு என்று உரைத்தான் வாமனன் சீலன் இராமானுசன் இந்த மண் மிசையே

மா மலராள் நாயகன் எல்லா உயிர்கட்கும் நாதன் அரங்கன் என்னும் தூயவன் தீதில் இராமானுசன் தொல் அருள் சுரந்தே

தன் ஈண்டிய சீர் அருள் சுரந்து எல்லா உயிர்கட்கும் நாதன் அரங்கன் என்னும் பொருள் சுரந்தான் எம்மிராமானுசன் மிக்க புண்ணியனே

அங்கயல் பாய் வயல் தென்னரங்கன் அணியாகம் என்னும் பங்கய மா மலர்ப் பாவையைப் போற்றுதும் பத்தி எல்லாம்
தங்கிய தென்னத் தழைத்து நெஞ்சே நம் தலை மிசையே பொங்கிய கீர்த்தி இராமானுசன் அடிப் பூ மன்னவே –

——————————————-

எந்தை திருவாய் மொழிப் பிள்ளை இன்னருளால் வந்த உபதேச மார்க்கத்தைச் சிந்தை செய்து
பின்னவரும் கற்க உபதேசமாய்ப் பேசுகின்றேன் மன்னிய சீர் வெண்பாவில் வைத்து
இந்த உபதேச இரத்தின மாலை தன்னை சிந்தை தன்னில் நாளும் சிந்திப்பார்
எந்தை எதிராசரின் இன்னருளுக்கு என்றும் இலக்காகி சதிராக வாழ்ந்திடுவர் தாம்
மன்னுயிர்காள் இங்கே மணவாள மா முனிவன் பொன்னடியாம் செங்கமலப் போதுகளை
உன்னிச் சிரத்தாலே தீண்டில் அமானவனும் நம்மை கரத்தாலே தீண்டல் கடன்

—————————-

கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
ஆசார்யர்கள் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

அன்னம் -ஹயக்ரீவ -மத்ஸ்ய –கூர்ம-அவதார பரமான அருளிச் செயல்கள் –

August 27, 2015

அன்னமும் மீனுருவும் ஆளரியும் குறளும் ஆமையும் ஆனவனே
பன்றியும் ஆமையும் மீனமுமாகிய பாற் கடல் வண்ணா
ஆமையாய்க் கங்கையாய் ஆழ கடலாய் அவனியாய் அருவரைகளாய் நான் முகனாய் நான் மறையாய் வேள்வியாய் தக்கணையாய் தானும் ஆனான்
தேவுடைய மீனமாய் ஆமையாய் ஏனமாய் அரியாய் குறளாய் மூவுருவில் இராமனாய்க் கண்ணனாய் கற்கியாய் முடிப்பான் கோயில் –புனல் அரங்கமே

———————————————-

ஆமையாகி ஆழ கடல் துயின்ற ஆதி தேவ
பாசம் நின்ற நீரில் வாழும் ஆமையான கேசவா
அம்புலாவு மீனுமாகி ஆமையாகி ஆழியார் தம்பிரானுமாகி மிக்கது அன்பு மிக்கு –அதன்றியும் கொம்பராவு நுண் மருங்குல்
ஆயர் மாதர் பிள்ளையாய் எம்பிரானுமாய வண்ணம் என் கொலோ எம்மீசனே
கடைந்த அன்று அருவரைக்கு ஓர் ஆமையாய் உள்ள நோய்கள் தீர் மருந்து வானவர்க்கு அளித்த எம் வள்ளல்

————————————

அன்னமும் மீனும் ஆமையும் அரியும் ஆய எம் மாயனே அருளாய் என்னும் இன் தொண்டர்க்கு இன்னருள் புரியும் இடவெந்தை எந்தை பிரானை
துன்னி மண்ணும் விண்ணாடும் தோன்றாது இருளாய் மூடிய நாள் அன்னமாகி அருமறைகள் அருளிச் செய்த அமலனிடம் –புள்ளம் பூதங்குடி தானே
வசையில் நான்மறை கெடுத்த அம்மலர் அயற்கு அருளி முன் பரி முகமாய் இசை கொள் வேத நூல் என்று
இவை பயந்தவனே எனக்கு அருள் புரியே –திரு வெள்ளறை நின்றானே
பொங்கு நீள் முடி அமரர்கள் தொழுது எழ அமுதினைக் கொடுத்து அளிப்பான் அங்கு ஓர் ஆமையதாகிய ஆதி
நின்னடிமையை அருள் எனக்கு -திரு வெள்ளறை நின்றானே
முன் இவ் வேழ் உலகு உணர்வின்றி இருள் மிக உம்பர்கள் தொழுது ஏத்த அன்னமாகி அன்று அருமறை பயந்தவனே
எனக்கு அருள் புரியே –திரு வெள்ளறை நின்றானே
ஏன மீனாமையோடு அரியும் சிறு குறளுமாய் தானுமாய தரணித் தலைவன் இடம் –தென்னரங்கமே
கொழும் கயலாய் நெடு வெள்ளம் கொண்ட காலம் குலவரையின் மீதோடி அண்டத்தப்பால் எழுந்து இனிது
விளையாடும் ஈசன் எந்தை இணையடிக் கீழ் இனிது இருப்பீர்
முந்நீரை முன்னாள் கடைந்தானை மூழ்த்த நாள் அந்நீரை மீனாய் அமைத்த பெருமானை
முன் இவ் உலகு எழும் இருள் மண்டி யுண்ண முனிவரோடு தானவர்கள் திசைப்ப வந்து பன்னு கலை நால் வேதப் பொருளை
எல்லாம் பரி முகமாய் அருளிய எம் பரமன் காண்மின் –அணி அழுந்தூர் நின்றுகந்த அமரர் கோவே
பன்றியாய் மீனாகி அரியாய்ப் பாரைப் படைத்துக் காத்து உண்டு உமிழ்ந்த பரமன் –அணி அழுந்தூர் நின்ற கோவை
நீர் மலிகின்ற்றது ஓர் மீனாய் ஓர் ஆமையுமாய் சீர் மலிகின்றது ஓர் சிங்க வுருவாகி –கண்ணபுரத்து எம்பெருமான்
ஆமையாகி அரியாகி அன்னமாகி அந்தணர் தம் ஓமமாகி ஊழி யாகி -முன் காமற்பயந்தான் கருதுமூர் -கண்ண புரம் நாம் தொழுதுமே
வானோர் அளவும் முது முந்நீர் வளர்ந்த காலம் வலியுருவின் மீனாய் வந்து வியந்து உய்யக் கொண்ட தண் தாமரைக் கண்ணன்
ஆனாயுருவில் ஆனாயன் அவனை அம்மா விளை வயலுள் கானார் புறவில் கண்ண புறத்து அடியேன் கண்டு கொண்டேனே
மலங்கு விலங்கு நெடு வெள்ளம் மறுக்க அங்கு ஓர் வரை நட்டு இலங்கு சோதி யாரமுதம் எய்தும் அளவும் ஓர் ஆமையாய்
விலங்கல் திரியத் தடம் கடலுள் சுமந்து கிடந்த வித்தகனை கலங்கல் முந்நீர்க் கண்ண புரத்து அடியேன் கண்டு கொண்டேனே
மீனோடு ஆமை கேழல் அறி குரலாய் முன்னும் இராமனாய்த் தானே பின்னும் இராமனாய்த் தாமோதரனாய்க் கற்கியும் ஆனான் தன்னை
கண்ண புரத்து அடியன் கலியன் ஒலி செய்த தேனாரின் சொல் தமிழ் மாலை செப்பப் பாவம் நில்லாதே
வாதை வந்தடர வானமும் நிலனும் மலைகளும் அலை கடல் குளிப்ப மீது கொண்டுகளும் மீனுருவாகி –திருக் கண்ணன்குடியுள் நின்றானே
அன்னமும் கேழலும் மீனுமாய ஆதியை நாகை யழகியாரை
நிலையிடம் எங்குமின்றி நெடு வெள்ளம் உம்பர் வளநாடு மூட இமையோர் தலையிட மற்று எமக்கு ஓர் சரணில்லை என்ன -அரனாவான் என்னும் அருளாலே
அலை கடல் நீர் குழம்ப அகடாவோடி அகல் வானுரிஞ்ச முதுகில் மலைகளை மீது கொண்டு வரு மீனை மாலை மறவாது இறைஞ்சு என் மனனே
செருமிகு வாள் எயிற்ற அரவொன்று சுற்றித் திசை மண்ணும் விண்ணும் உடனே வெருவர வெள்ளை வெள்ளம் முழுதும் குழம்ப இமையோர்கள் நின்று கடைய
பருவரை யொன்று நின்று முதுகில் பரந்து சுழலக் கிடந்து துயிலும் அருவரையன்ன தன்மை யடலாமையான திருமால் நமக்கு ஓரரணே
முன்னுலகங்கள் ஏழும் இருள் மண்டி யுண்ண முதலோடு வீடுமறியாது என்னிது வந்ததென்ன இமையோர் திசைப்ப எழில் வேதமின்றி மறைய
பின்னும் வானவர்க்கும் முனிவர்க்கும் நல்கி இருள் தீர்ந்து இவ்வையம் மகிழ அன்னமதாய் இருந்து அங்கு அற நூலுரைத்த அது நம்மை யாளும் அரசே

———————

ஆனான் ஆயன் மீனோடு ஏனமும் தானானன் என்னில் தானாய சங்கே
மாவாகி ஆமையாய் மீனாகி மானிடமாம் தேவாதி தேவ பெருமான் என் தீர்த்தனே
சூதென்று களவும் சூதும் செய்யாதே வேதமுன் விரித்தான் விரும்பிய கோயில்
மாதுறு மயில் சேர் மாலிரும் சோலை போதவிழ் மலையே புகுவது பொருளே

————————————————————————————

கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
ஆசார்யர்கள் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

திருப்பாவையில் -பறை -நீராட்டம் -அடி -பாடி-நாராயணன் -உலகளந்த –கோவிந்தன் -நப்பின்னை -நந்தகோபன் – எம்பாவாய் –பத பிரயோகங்கள் —

August 26, 2015

பறை–10 -பிரயோகங்கள்

மார்கழி –நாராயணனே நமக்கே பறை தருவான் –
கீழ் வானம் –பாடிப் பறை கொண்டு
நோற்றுச் ஸ்வர்க்கம் –நம்மால் போற்றப் பறை தரும் புண்ணியனால்
நாயகனாய் நின்ற –அறை பறை மாயன் மணி வண்ணன் நென்னலே வாய் நேரந்தான்
ஒருத்தி –அருத்தித்து வந்தோம் பறை தருதி யாகில்
மாலே –சாலப் பெரும் பறையே பல்லாண்டு இசைப்பாரே
கூடாரை –பாடிப் பறை கொண்டு
கறவைகள் –இறைவா நீ தாராய் பறையேலோ ரெம்பாவாய்
சிற்றம் –இற்றைப் பறை கொள்வான் அன்ற காண் கோவிந்தா
வங்கக் –அங்கு அப்பறை கொண்ட வாற்றை –

—————————————————————–

நீராட்டம்–6-பிரயோகங்கள்

மார்கழி —நீராடப் போதுவீர் போதுமினோ
ஓங்கி –நம் பாவைக்குச் சாற்றி நீராடினால்
ஆழி –நாங்களும் மார்கழி நீராட மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்
புள்ளின் வாய் –குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே
முப்பத்து மூவர் –இப்போதே எம்மை நீராட்டேலோ ரெம்பாவாய்
மாலே –மார்கழி நீராடுவான்

—————————————————————

அடி–6 -பிரயோகங்கள்

வையத்து –பையத் துயின்ற பரமன் அடி பாடி
அம்பரமே –செம் பொற் கழல் அடி செல்வா பலதேவா
ஏற்ற –ஆற்றாது வந்து உன் அடி பணியுமா போலே –
அன்று இவ் உலகம் அளந்தாய் அடி போற்றி –
அன்று –கன்று குணிலா எறிந்தாய் கழல் போற்றி –
சிற்றம் –உன் பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய்

————————————————————-

பாடி- 18-பிரயோகங்கள்

வையத்து –பையத் துயின்ற பரமன் அடி பாடி
ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி –
மாயனை –தூ மலர் தூவித் தொழுது வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க
கீசு கீசு என்று –நாராயணன் மூர்த்தி கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ
கீழ் வானம் —பாடிப் பறை கொண்டு
தூ மணி –மா மாயன் மாதவன் வைகுந்தன் என்று என்று நாமம் பலவும் நவின்று
நோற்றுச் –நாராயணன் நம்மால் போற்றப் பறை தரும் புண்ணியனால்
கற்றுக் கறிவை –முகில் வண்ணன் பேர் பாட
கனைத்து இளம் —மனத்துக்கு இனியானைப் பாடவும் நீ வாய் திறவாய்
உங்கள் –பங்கயக் கண்ணானைப் பாடேலோ ரெம்பாவாய்
எல்லே –மாயனைப் பாடேலோ ரெம்பாவாய்
நாயகனாய் –துயில் எழப் பாடுவான்
உந்து –உன் மைத்துனன் பேர் பாட
ஏற்ற –போற்றி யாம் வந்தோம் புகழ்ந்தேலோ ரெம்பாவாய்
அன்று –என்று என்று உன் சேவகமே ஏத்திப் பறை கொள்வான்
ஒருத்தி –திருத் தக்க செல்வமும் சேவகமும் யாம் பாடி
கூடாரை –உன் தன்னைப் பாடிப் பறை கொண்டு
கறைவைகள் –உன் தன்னைச் சிறு பேர் அழைத்தனவும்
சிற்றம் –உன் பொற்றாமரை யடியே போற்றும் பொருள் கேளாய் –

——————————————————-

நாராயணன் -3- பிரயோகங்கள் –

மார்கழி —நாராயணனே நமக்கே பறை தருவான்
கீசு —நாராயணன் மூர்த்தி கேசவனைப் பாடவும்
நோற்றுச் –நாற்றத் துழாய் முடி நாராயணன் –

—————————————————

உலகளந்த – 3-பிரயோகங்கள் –

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி நமக்கே பறை தருவான் –
அம்பரமே –அம்பரமூடறுத்து ஓங்கி உலகளந்த உம்பர் கோமானே
அன்று இவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி –

——————————————————
கோவிந்தன் -3- பிரயோகங்கள் –

கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா
கறைவைகள் –குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா
சிற்றம் –இற்றைப் பறை கொள்வான் அன்று கான் கோவிந்தா

——————————————————

-நப்பின்னை -4- பிரயோகங்கள் –

உந்து –நந்த கோபாலன் மருமகளே நப்பின்னாய்
குத்து –கொத்தலர் பூம் குழல் நப்பின்னை கொங்கை மேல் வைத்துக் கிடந்த மலர் மார்பா
முப்பத்து —நப்பின்னை நங்காய் திருவே துயில் எழாய்
மாலே–கோல விளக்கே

———————————————

நந்தகோபன் -5- பிரயோகங்கள் –

மார்கழி –கூர் வேல் கொடும் தொழிலன் நந்த கோபன் குமரன்
நாயகனாய் நின்ற நந்த கோபனுடைய
அம்பரமே –எம்பெருமான் நந்த கோபாலா எழுந்திராய்
உந்து —நந்த கோபாலன் மருமகளே நப்ப்பின்னாய்
ஏற்ற —ஆற்றப் படைத்தான் மகனே அறிவுறாய்

——————————————————————

ஆராய்ந்து -2-பிரயோகங்கள் –

கீழ் வானம் –தேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால் ஆவா வென்று ஆராய்ந்து அருளேலோ ரெம்பாவாய்
மாரி- மலை முழைஞ்சில் —சீரிய சிங்காசனத்து இருந்து யாம் வந்த காரியம் ஆராய்ந்து அருளேலோ ரெம்பாவாய் –

————————————————————

புள்-4-பிரயோகங்கள் –

புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயில்
புள்ளின் வாய் கீண்டானை —புள்ளும் சிலம்பின காண் போதரிக் கண்ணினாய்

——————————————-

தூயோமாய்-3-பிரயோகங்கள் –

மாயனை —தூயோமாய் வந்து நாம் தூ மலர் தூவித் தொழுது வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க
நாயகனாய் —தூயோமாய் வந்தோம்
தூ மணி மாடத்து

———————————–

கறவை-3-பிரயோகங்கள் –

கற்றுக் கறவைக் கணங்கள் பல கறந்து
கனைத்து இளம் கற்று எருமை கன்றுக்கு இரங்கி
கறவைகள் பின் சென்று கானம் சேர்ந்து உண்போம்

————————————————-
எழுந்திராய் -19- பிரயோகங்கள் –

பிள்ளாய் எழுந்திராய்
பேய்ப்பெண்ணே –நாயகப் பெண் பிள்ளாய் –நீ கேட்டே கிடத்தியோ –
கோதுகலமுடைய பாவாய் எழுந்திராய்
உன் மகள் தான் ஊமையோ அன்றிச் செவிடோ அனந்தலோ ஏமப் பெரும் துயில் மந்திரப் பட்டாளோ
நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற வம்மனாய் –கும்பகர்ணனும் தோற்றும் உனக்கே பெரும் துயில் தான் தந்தானோ ஆற்ற அனந்தல் உடையாய் அரும் கலமே –
பொற்கொடியே புற்றரவல்குல் புனமயிலே –செல்வப் பெண்டாட்டி எற்றுக்கு உறங்கும் பொருள் –
நற்செல்வன் தங்காய்–நீ வாய் திறவாய் –ஈது என்ன பேர் உறக்கம்
போதரிக் கண்ணினாய் –பாவாய் –கள்ளம் தவிர்ந்து கலந்து
நங்காய் எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய்
எல்லே இளம் கிளியே இன்னம் உறங்குதியோ –
அடியார் இடம் உண்டான கலவியின் இன்பம் அறியாதகோபிகை /அந்த இனிமையை உணர்ந்தும் உணராத கோபிகை /கண்ணன் தனது தலையினால் தாங்கி ஆதரிக்கும் சீர்மை உடைய கோபிகை /எம்பெருமானே ரட்ஷகன் என்று உணர்ந்து மார்பில் கை வைத்து உறங்கும் கோபிகை /எம்பெருமான் தானும் தனக்கு தாரகமாய் அபிமானித்து இருக்கும் கோபிகை /எம்பெருமான் உடன் இடையறாத தொடர்பு உள்ள மஹா நீயர் குலத்தில் பிறப்புடைய கோபிகை /
கிருஷ்ணன் கைங்கர்யத்தில் ஈடுபட்டு தன் தர்மத்தை செய்ய மாட்டாமல் இருக்கும் செல்வனே இருக்கும் கோவலன் தங்கையான கோபிகை /ஞானம் பக்தி வைராக்யங்கள் நிறைந்த கோபிகை /நிறைவும் நிர்வாகத் தன்மையும் நிறைந்த கோபிகை /அடியார்கள் குழாங்களை ஓன்று சேர காணும் ஆசை உடைய கோபிகை -ஆகிய 10 கோபிகைகள்
நந்தகோபாலா எழுந்திராய்
யசோதா அறிவுறாய்
உம்பர் கோமானே உறங்காது எழுந்திராய்
பலதேவா உம்பியும் நீயும் உறங்கேல்
மலர்மார்பா வாய் திறவாய்
கலியே துயில் எழாய்
விமலா துயில் எழாய்
மகனே அறிவுறாய்
சுடரே துயில் எழாய்

——————————————–

எம்பாவாய் -30– பிரயோகங்கள் –

மார்கழி –படிந்தேலோ ரெம்பாவாய்
வையத்து –உகந்தேலோ ரெம்பாவாய்
ஓங்கி –நிறைந்தேலோ ரெம்பாவாய் —
ஆழி -மகிழ்ந்தேலோ ரெம்பாவாய் ——வையத்து –உகந்தேலோ ரெம்பாவாய் —உந்து –மகிழ்ந்தேலோ ரெம்பாவாய் –அங்கண்–மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்- ஒருத்தி –மகிழ்ந்தேலோ ரெம்பாவாய் -வங்கம் -இன்புறுவர் எம்பாவாய் -7
மாயனை –செப்பேலோ ரெம்பாவாய்
புள்ளும் –குளிர்ந்தேலோ ரெம்பாவாய் –கூடாரை –குளிர்ந்தேலோ ரெம்பாவாய் -2
கீசு –திறவேலோ ரெம்பாவாய்
கீழ் வானம் -அருளேலோ ரெம்பாவாய் —மாரி –அருளேலோ ரெம்பாவாய் –மாலே –அருளேலோ ரெம்பாவாய்–3
தூ மணி –நவின்றேலோ ரெம்பாவாய்
நோற்றுச் –திறவேலோ ரெம்பாவாய்
கற்றுக் –பொருளேலோ ரெம்பாவாய்
கனைத்து–அறிந்தேலோ ரெம்பாவாய்
புல்லின் –கலந்தேலோ ரெம்பாவாய் –
உங்கள் –பாடேலோ ரெம்பாவாய் —-மாயனை –செப்பேலோ ரெம்பாவாய் –தூ மணி –நவின்றேலோ ரெம்பாவாய் -எல்லே –பாடேலோ ரெம்பாவாய் -3
எல்லே –பாடேலோ ரெம்பாவாய்
நாயகனாய் –நீக்கேலோ ரெம்பாவாய்
அம்பரமே –உறங்கேலோ ரெம்பாவாய்
உந்து –மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்
குத்து –தகவேலோ ரெம்பாவாய்
முப்பத்து –நீராட்டேலோ ரெம்பாவாய்
ஏற்ற –புகழ்ந்தேலோ ரெம்பாவாய்
அங்கண்–மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்
மாரி –அருளேலோ ரெம்பாவாய்
அன்று –இரங்கேலோ ரெம்பாவாய்
ஒருத்தி –மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்
மாலே –அருளேலோ ரெம்பாவாய்
கூடாரை –குளிர்ந்தேலோ ரெம்பாவாய்
கறவைகள் –பறையேலோ ரெம்பாவாய்
சிற்றம் -மாற்றேலோ ரெம்பாவாய்
வங்கம் -இன்புறுவர் எம்பாவாய்

————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆசார்யர்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

திருப்பாவை — வங்கக் கடல் கடைந்த – வியாக்யானம் .தொகுப்பு –

August 26, 2015

அவதாரிகை –

நிகமத்தில் –
இப்பிரபந்தம் கற்றாருக்கு உண்டாகும்-பலத்தை சொல்கிறார்கள்-
இப்பிரபந்தம் கற்றார் —பிராட்டியாலும் எம்பெருமானாலும்–சர்வ காலமும்–விஷயீ கரிக்கப் படுவார்கள் -என்கிறார்கள் –
கற்றாருக்கு–அனுஷ்டித்தாரோபாதியும்–அனுகரித்தாரோபாதியும்–பலம் சித்திக்கும் -என்கை
கன்று இழந்த தலை நாகு–தோற்கன்றுக்கும் இரங்குமா போலே–இப்பாசுரம் கொண்டு புக நமக்கும் பலிக்கும் –என்று பட்டர் அருளிச் செய்வர்-

வேதம் அனைத்துக்கும் வித்து -சகல வேதார்தங்களும் அடங்கிய வித்து —நட்டு பரிஷ்காரம் செய்தால் சாகை சாகையாக பணைக்கும்-
சகல அர்த்தங்களும் உண்டே
வடபெரும் கோயில் உடையானை கண்ணன் சமகாலம் போலே நினைத்து-ஆண்டாள் -நம்முடைய பாவ விருத்தி இல்லை யாகிலும்
இப்பிரபந்தம் அனுசந்தானம் செய்தால் அதே பலன்-சம காலம் அநுஷ்டித்தார்-அனுகரிதவர் அனு சந்திப்பார் மூவரும் பெறுவார்
பட்டர் -கன்று இழந்த தலை நாகு தோல் கன்றுக்கு இரங்குமா போலே –

ஆண்டாள் பாவம் இல்லா விடிலும் திருப்பாவை சொல்லி அதே பலன் பெறுவோம்-கோபிமார் விஷயம் ஆச்ரயநீய விஷயம் கிருஷ்ணன் –
ஆச்ரயநீயம் பலபர்யந்தம் ஆவது பிராட்டி-அவளை பெற அவன் செய்த வியாபாரம் அமுதம் கடைந்த-அத்தை சொல்லுகிறார்கள் -இதில்
தயிர் கடைய வ்யாஜ்யமாய் கன்னிகை அடைவான்–செவ்வாய் துடிப்ப ஒல்லை நானும் கடையவன் என்று
அமரர்க்கு அமுது ஈன்ற ஆயர் கொழுந்தே–கண்ணன் தானே அமுதம்–ஷீராப்தி நாதன் கடைந்தால் அமுதம் வாராதே–கடைகிற குலம்-ஆய்க்குலம் தானே
பாற்கடலில் பைய துயின்றான் ஆரம்பித்து நிகமிக்கிறார்
கடல் கிடந்தது கடைந்த —கடல் கிடைந்த மாதவனை–அமுதம் கொண்ட பெருமான் திரு மார்பன்–அமுதினில் வரும் பெண் அமுது
ஆச்ரயநீயம் ஸ்ரீ–கைங்கர்யம் மாதா–ஆஸ்ரிதர் குற்றம் பொறுப்பித்து–மாதா முன்பு பிரஜைகள் குற்றம்

ஓங்கி உலகு அளந்த–வங்க கடல் -இரண்டும் பல சுருதி பாசுரங்கள்–நோன்புக்கு பலம் ஓங்கி -அருளி–உரைப்பார் பலம் இதில் -அருளி –
தேவதை -கோவிந்தன்- நாராயணன் இல்லை–ஆசமனம் -அச்சுதா அனந்த கோவிந்தா நம–கேவவாதி -கோவிந்தா மீண்டும் –
நாராயணன் -சௌலப்யம் பரத்வம் -நாரங்களுக்கு அயனம் நாரங்களில் உள்ளே —கோவிந்தா -பட்டாபிஷேகம் -இந்த்ரன் –
நாராயணன் சிறு பெயர் —கோவிந்தா கேட்டு ஆனந்தம் —சமுத்திர விருத்தாந்தம் இதில் தான் ஆண்டாள் –

வங்கக் கடல் கடைந்த மாதவனை கேசவனை
திங்கள் திருமுகத்து சேயிழையார் சென்று இறைஞ்சி
அங்கு அப்பறை கொண்ட வாற்றை யணி புதுவை
பைங்கமலத் தண் தெரியல் பட்டர்பிரான் கோதை சொன்ன
சங்கத் தமிழ் மாலை முப்பதும் தப்பாமே
இங்கு இப்பரிசு உரைப்பார் ஈரிரண்டு மால் வரைத் தோள்
செங்கண் திரு முகத்து செல்வத் திருமாலால்
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்

வியாக்யானம் –

வங்கக் கடல் கடைந்த
கடல் கடையா நிற்க–மரக்கலம் அலையாதபடி-கடைந்த நொய்ப்பம் —கடைந்த போது சுழன்று வருகையாலே-கடலடைய மரக்கலமாய் நின்றபடி -என்றுமாம் –
பிரயோஜனாந்த பரருக்கும் உடம்பு நோவ கடல் கடைந்து–அபேஷித சம்விதானம் பண்ணும் சீலவான் என்கை –
கிருஷ்ணனை யாகில் கவி பாடிற்று–ஷீராப்தி மதனம் பண்ணினவனை சொல்லுகை பின்னம் சேருமோ என்னில் –
விண்ணவர் அமுதுண்ண அமுதில் வரும் பெண்ணமுதம் உண்ட எம்பெருமானே -என்று-தேவ கார்யம் என்று ஒரு வியாஜ்யத்தை இட்டு
பெரிய பிராட்டியார் ஆகிற பெண் அமுதத்தை பெறுகைக்காக-கடல் கடைந்தபடி –
ஊரார் கார்யத்தை ஒரு வ்யாஜ்யமாக்கி-பெண்களைப் பெறுகைக்காக நோன்பிலே அன்வயிப்பித்த-கிருஷ்ணன் உடைய-ஸ்வ பாவத்தோடு சத்ருசமாய் இருக்கையாலே
சொல்லுகிறார்கள் –

மாதவனை –
ஆஸ்ரயணீயமுமாய் -போக்யமுமாய் -இருக்கும் தத்வம்–லஷ்மீ ஸநாதமாய் இருக்கும் –என்கை –
ஆஸ்ரயித்தார் குற்றத்தை பொறுப்பித்து–அபேஷிதங்களை செய்விப்பார் அருகே உண்டு -என்கை –

கடல் கடைந்த மாதவனை –
கடல் கடைந்து பிராட்டியை லபித்தவனை –
வங்கம் -இத்யாதி –
மரக்கலத்துக்கு ஒரு சலனம் பிறவாதபடி–பாற்கடலை–மந்தரத்தை மத்தாக நாட்டி–வாசுகியால் சுற்றி–தன் கையாலே கடைந்து
பிராட்டியை லபித்தால் போலே–சேதனர் பரிக்ரகித்த சரீரத்துக்கு ஒரு வாட்டம் வாராமல்–சம்சாரம் ஆகிற மகா சமுத்ரத்தை
தன் சங்கல்பம் ஆகிற மந்த்ரத்தை நாட்டி–கிருபையாகிற கயிற்றாலே சுற்றி–கடாஷம் ஆகிற கைகளால் கடைந்து
பிராட்டியிலும் பிரேம விஷயமான ஆத்ம வஸ்துவை லபித்தவன் –

கேசவனை –
விரோதி நிரசன ஸ்வ பாவனை —ஸ்த்ரீத்வ பிரயுக்தமாக ஸ்வாதந்த்ர்யத்தையும்–அந்ய சே ஷத்வத்தையும் போக்கினவனை —
கேசியை நிரசித்தாப் போலே–ஆத்மவஸ்துவை அனுபவிக்கும் போது-அவ்வனுபவ விரோதியாய் இச் சேதனனுக்கு பிறக்கும்
போக்ருத்வாதிகளுக்கு நிவர்தகனாவனை-

மாதவனை கேசவனை –
அலை கடல் கடைந்து அதனுள் கண்ணுதல் நஞ்சுண்ணக் கண்டவனே
விண்ணவர் அமுதுண்ண அமுதில் வரும் பெண்ணமுது உண்ட எம்பெருமானே -என்கிறபடியே
தான் சாஷாத் அம்ருதத்தை உண்டு ப்ரஹ்மாதிகளுக்கு கோதைக் கொடுத்தான் –என்று பட்டர் அருளிச் செய்வர் –
ஆயிரம் தோளால் அலை கடல் கடைவன்–பூம் குழல் தாழ்ந்து உலாவா -அவளுக்கும் இது போலே தயிர் கடையவே
ஆமையாகிய கேசவா சுமக்கும் பொழுதும் கேசம் ஆசிய–கேசி ஹந்தா–விரோதி போக்க வல்லவன்
மா மாயன் மாதவன்–கேசவனை பாடவும்–சொல்லியது போலே தலை கட்ட–கோதை ப்ரஹ்ம ருத்ராதிகளுக்கு கொடுத்து
கேசவா -இருவரையும் தாங்கும் -பட்டம் ருத்ரன் கொடுத்து -க்கா ஈசன் இருவரையும் உண்டாக்கி —தான் பிராட்டி பெற்று மாதவன் ஆனான்

திங்கள் திருமுகத்து-
கிருஷ்ண சம்ச்லேஷத்தாலே குளிர்ந்து -மலர்ந்த முகம் –கதிர் மதியம் போல் முகத்தான் -என்று அநபிபவ நீயத்வமும் உண்டு அங்கு –
அனுகூலர்க்கே ஆன முகம் ஆகையாலே -திங்கள் திரு முகம் -என்கிறார்கள் -இங்கு-இவனை அனுபவிப்பார் முகமும் இப்படி இ றே இருப்பது
மதி முக மடந்தையர் இ றே –

சேயிழையார் –
சூடகமே -இத்யாதியில்-தாங்கள் அபேஷித்த படியே –அவனும் அவளும் கூட இருந்து பூட்டின ஆபரணத்தை உடையவர்கள் –
கிருஷ்ண விஷயீ கார யோக்யதை ஆகிற ஆபரணத்தை உடையவர்கள் —
கிருஷ்ண விஷயீ காரத்தாலே புகுந்த புகராலே ஒரு படி ஆபரணம் பூண்டால் போலே இருப்பவர்கள் –

சென்று-
இவ் ஒப்பனை உடன் வரப் பார்த்து இருக்கும் அளவு அல்லாத த்வரையைச் சொல்லுகிறது –

இறைஞ்சி –
அன்று இவ் உலகம் அளந்தாய் அடி போற்றி -என்கிறபடியே-அவனுக்கு மங்களா சாசனம் பண்ணி –

அங்கு –
திருவாய்ப்பாடியிலே –

அப்பறை கொண்ட வாற்றை-
நாட்டுக்கு பறை -என்று ஒரு வியாஜ்யத்தை இட்டு-அடிமை கொண்ட படியை –

யணி புதுவை –
சம்சாரத்துக்கு நாயகக் கல்லான ஸ்ரீ வில்லி புத்தூர் –

திருவாய்ப்பாடியிலே
ஸ்ரீ நந்தகோபர் கோயிலிலே
நப்பின்னை பிராட்டி கட்டிலிலே
திவ்ய ஸ்தானத்திலே
திவ்ய சிம்ஹாசனத்திலே
இருந்த இருப்பிலே
ஆண்டாள் பெரியாழ்வார் வடபெரும் கோயிலுடையான் உள்ளதால் அணி புதுவை
பொன்னும் முத்தும் மாணிக்கமும் இட்டுச் செய்த ஆபரணம் போலே

பைங்கமலத் தண் தெரியல் –
பிராமணருக்கு–தாமரைத் தாரகையாலே சொல்லுகிறது –

பட்டர்பிரான் கோதை சொன்ன –
ஆண்டாள் அநுகார பிரகரத்தாலே அனுபவித்துச் சொன்ன —பராசர புத்திரன் -என்று ஆப்திக்கு சொன்னால் போலே
பெரியாழ்வார் மகள் ஆகையாலே–சொன்ன அர்த்தத்தில் அர்த்த வாதம் இல்லை –
தமிழ் -நிகண்டு இனிமையும் நீர்மையும் தமிழ் யென்னலுமாம்

சங்கத் தமிழ் மாலை –
குழாங்களாய்-என்னுமா போலே–திரள் திரளாக அனுபவிக்க வேண்டும் பிரபந்தம் –
பஞ்ச லஷம் குடியில் பெண்கள் திரள் திரளாக அனுபவித்த பிரபந்தம் இ றே

தமிழ் மாலை –
பிராட்டி ஆண்டாள் ஆனால் போலே–உபநிஷத் தமிழ் ஆனபடி –

மாலை –
பாவனமான அளவன்றிக்கே–போக்யமுமாய் இருக்கையும்–தலையாலே சுமக்க வேண்டி இருக்கையும் –
மாலை–பாவனம் போக்யத்வம்–தலையால் சுமக்க வேண்டும் சிரோ பூஷணம்
கோதை மாலை–மாலை கட்டின மாலை–மாலைக்கட்டின மாலை
நாயகம்-பத்தி–இரண்டு தலையும் தாள்-செவிப்பூ – இவள் செவிக்கு பூ அவன் கொடுக்க-கர்ண புஷ்பம் ஓன்று
இவள் மாலையே கொடுத்து-ஸ்லாக்கியமான மாலை-குழலில் மல்லிகை மாலை விலங்கிட்டு ஓதுவித்த மாலை

முப்பதும் தப்பாமே –
இதில் ஒரு பாட்டும் குறையாமே–விலை இல்லாத ரத்னங்களாலே செய்த ஏகாவலியிலே
ஒரு ரத்னம் குறைந்தாலும் -நெடும் பாழாய்-இருக்கும் இ றே –அப்படியே ஒரு பாட்டு குறையிலும் பேர் இழவாய் இருக்கும் –
இங்கு –
பிற்பட்ட காலத்திலே -என்னுதல்
சம்சாரத்திலே -என்னுதல்
இப்பரிசு உரைப்பார்-
இப்பாசுரம் மாத்ரத்தைச் சொல்லுவார்–திருவாய்ப்பாடியிலே பெண்கள் கிருஷ்ண அனுபவம் பண்ணிப் பெற்றார்கள்
ஆண்டாள் அனுகாரத்தாலே பெற்றாள்–ஆகையால் இந்த பிரபந்தம் கற்றார்க்கு இந்தப் பலம் கிடைக்கும் –

ஈரிரண்டு மால் வரைத் தோள்-
இவர்கள் அளவு பாராதே பண்டு பாடினவர்கள் சொல் வழியாலே–அனுசந்திக்கையாலே தோள்கள் பணைக்கும்-
உகவாதார்க்கு தோள்கள் இரண்டாய்த் தோற்றும்–இவர்களுக்கு தோள்கள் நாலாய்த் தோற்றும் இ றே –
ஈர் இரண்டு மால் வரைத் தோள்–அணைத்த பின்பு பணைத்த–உகவாதார் இரண்டாய் தோற்றும்–ஆசைப்பாட்டர் நாலையும் சேவிப்பார்
திருவடி-தோள்கள் நாலையும் கண்டிடப் பெற்றார்-சுந்தர தோள்-அல்லி மாதர் புளக நின்ற ஆயிரம் தோள் உடையான்

செங்கண் திரு முகத்து –
அலாப்ய பலத்தாலே சிவந்த கண்கள் -பிரிந்தால் ஜலம் இல்லா தாமரை செங்கண் திரு முகம்
நீரார் கமலம் போல் செங்கண்–கதிர் மதியம்

செல்வத் திருமாலால்
உபய விபூதி உக்தனான ஸ்ரீ ய பதியாலே —இப்பாட்டில் உபக்ரமத்திலே பிராட்டி சம்பந்தம் சொல்லி
முடிவிலும் சொல்லுகையாலே–த்வயத்தில் சொன்ன படியில் இங்கும் சொல்லிற்று என்கை –

எங்கும் திருவருள் பெற்று –
த்ருஷ்ட அத்ருஷ்டங்கள் இரண்டிலும்–பிராட்டியும் தானும் சந்நிஹிதமாம் படி–பிரசாதத்தைப் பெற்று

இன்புறுவர் எம்பாவாய் –
பகவத் சம்ச்லேஷத்தால் வந்த ஆனந்தம் பெறுவார் —விடிவோரை எழுந்திருந்து முப்பது பாட்டையும் அனுசந்தித்தல்
மாட்டிற்று இலனாகில் -சிற்றம் சிறுகாலே -என்ற பாட்டை அனுசந்தித்தல் —அதுவும் மாட்டிற்று இலனாகில் -நாம் இருந்த இருப்பை நினைப்பது –
என்று பட்டர் அருளிச் செய்வர் –

சந்தரனைப் போலே ஆஹ்லாத கரமான–திருமுக மண்டலம் உடையவர்களாய்–தத் ஏக விஷயமான ஞான பக்தி வைராக்ய பூஷிதராய்
அனந்யார்ஹரான பாகவதர்கள்-ஆற்றாமை யாலே அவனிருந்த இடத்தே சென்று–பூஜித்து
த்வாபர யுகத்திலே நாட்டாருக்கு -பறை -என்ற வ்யாஜ மாத்ரமாய்-தங்களுக்கு உத்தேச்யமான கைங்கர்யத்தை பரிக்ரஹித்த பிரகாரத்தை –
பூமிக்கு ஆபரணமான ஸ்ரீ வில்லி புத்தூரிலே எழுந்து அருளி இருக்கிற–விஸ்த்ருதமாய் குளிர்ந்துள்ள தாமரை மணிகளாலே
செய்யப் பட்ட மாலைகளை உடைய–பெரியாழ்வார் திரு மகளாரான சூடிக் கொடுத்த நாச்சியார் அருளிச் செய்த-
சங்கா நுபாவ்யமாய் -கூட்டம் கூட்டமாய் இருக்கிறதாய் —தமிழாலே செய்யப் பட்ட–மாலை போலே போக்யமாய்
சிரசாவாஹ்யமாய்–ஸ்லாக்கியமான இப்பிரபந்தத்தை–ஒரு பாட்டு குறையாதே–பிற்பட்ட காலத்திலே
இப்பிரபந்த ரூபமான பாரத்தை அனுசந்திக்கும் அவர்கள்–இப்பாசுர ஸ்ரவணத்தாலே
பணைத்து-பலிஷ்டமான-பெரிய மலை போலே இருக்கிற நாலு திருத் தோள்களை உடையவனாய்
வாத்சல்யத்தாலே சிவந்த திருக் கண்களை உடையவனாய்–விகசிதமான திரு முக மண்டலத்தை உடையனாய்
உபய விபூதி ஐஸ்வர்ய சம்பன்னனான–ஸ்ரீயபதியாலே
த்ருஷ்ட அத்ருஷ்டங்கள் இரண்டிலும்–பிறந்த ஞானத்துக்கு விச்சேதம் வாராதபடி–கிருபையை லபித்து–ஆனந்த நிர்பரராய் இருப்பார்கள்-

த்வயார்தம்
பூர்வ கண்டம் ஆச்ரயநீய வஸ்து ஸ்ரீ மன நாராயண சரனௌ சரணம் பிரபத்யே
மாதவன்
கடல் கடைந்த வாத்சல்யம் -தோஷம்–அண்ணல் செய்து ஸ்வாமித்வம்–அசுரர் தானும் சௌசீல்யம்
பெண்ணாகிய அமுதூட்டி சௌலப்யம்–ஆழ கடல் கடைந்த துப்பன் சாமர்த்தியம்
உபகரணங்கள் தேடி -ஞான சக்திகள்–நாராயண சப்தார்தம் சூசகம்–கேசவனை பிரசச்த கேசம் திரு மேனி திருவடி பர்யந்தம் விக்ரக யோகம்
சரணம் கேசவம் பிராணியி குடுமி பிடிக்கலாம் அடியையும் பிடிக்கலாம்–கேசவ நம்பியை கால் பிடிப்பாள் இவள் திரு நாமம்
பரமன் அடி பாடி தொடங்கி கேசவன்–பாதாதி கேசாந்தம் கிருஷ்ணன்–திருப்பாத கேசத்தை தாய பிராப்தம் பரம்பரை சொத்து
திங்கள் திரு முகத்து -அதிகாரி ஸ்வரூபம் வை லஷண்யம்–குளிர்ந்து மலர்ந்து–கதிர்மதியம் அவன் முகம்
இவர்கள் குளிர்த்தியே அமையும்–ஸ்வா தந்த்ர்யம் காருண்யம் கலந்த–நித்யம் அஞ்ஞானம் நிக்ரகம் பிராட்டி
திவளும் வெண் முகத்து போலே திரு முகத்து அரிவை–மதி முக மடந்தையர்–சகல கலா பூர்த்தி இவர்கள் திரு முகம்–குழையும் வான் முகம்
ஆசார்யர் சிஷ்யர் அக்னி ஆராதிக்க சொல்லி போனார் கதை–ப்ரஹ்ம உபதேசம் செய்யாமல் போக அக்னி ஆராதிக்க
சரத்தை பார்த்து அக்னி தேவனே உபதேசம் செய்ய–தேஜஸ் ப்ரஹ்ம வித்து ஆனதே–பிரகாசிக்க–அது போலே திங்கள் திரு முகத்து சேய் இழையார்

கிருஷ்ண விஷயீகார யோக்யதையால் தேஜஸ் மிக்கு–தூ மலர் தூவி–அடி போற்று–சென்று சேவித்து–செய்வது எல்லாம்–அங்கு
ஆராயநீய ஸ்தலம்–திவ்ய ஆஸ்தானம்–நப்பின்னை பிராட்டி கட்டிலே–திவ்ய சிம்ஹாசனத்திலெ
அப்பறை-நாட்டுக்கு சொன்ன பறை இல்லை எற்றைக்கு பறை—-கொண்ட–நீ தாராய்–அவன் தர இவர்கள் கொண்டவாற்றை
தப்புக்கு பொறை வளைப்பித்து–ஆச்ரயநீய கிராமம் பலம் பெற்ற–பட்டர் பிரான் கோதை–அணி புதுவை-சீர் மல்கும் ஆய்ப்பாடி நந்த கோபர் -கண்ணன் பற்றி
தனக்கு பெரியாழ்வார் உத்தேச்யம்-அவர் அபிமானம் ஸ்ரீ வில்லிபுத்தூர்-நந்த கோபன் கிருஷ்ணன் மட்டும்
இங்கு வடபெரும் கோயில் உடையான் -பெரியாழ்வார்-பிராட்டிக்கு மிதலை அயோதியை-பிறவியும் புக்க இடம் ஒரே இடம்
மதுரையார் மன்னனார் -அடி தொட்டு மன்னார் -ரெங்க மன்னர்-துவாராபதி மன்னனார் மன்னர்-அர்ச்சை ரெங்கன் விபவம் மன்னார் ஆசை பட்டாள்
கலந்து -சேவை —அரங்கர்க்கு -இன்னிசையால் பாடி கொடுத்தாள்–பொன்னும் முத்தும் மணியும் மாணிக்கமும் ஆபரணம் போலே
அணி புதுவை —பிரணவம் போலே–அகாரவாச்யன் உகாரவாச்யன் பிராட்டி மகார வாச்யன் பெரியாழ்வார் திருவடி -மூவரும் ஒரே சிம்காசனம்
மூவருக்கும் பிரதான்யம்–முப்புரி ஊட்டிய திவ்ய தேசம் அணி புதுவை
தண் அம் துழாய் அழல் போல் சக்கரத்து அண்ணல் -பராங்குச நாயகிக்கு கொதிக்கும்–திருத் துழாய் சூடு -தாமச குணம் பஸ்மம் ஆக்கும்
தாமரை குளிர்ச்சி–ச்வாதந்த்ர்யம் இல்லை–பிரிந்தவன் மாலை போலே இல்லையே சேர்ப்பவர் மாலை–பட்டர் பிரான் பிராமணருக்கு உபகாரகன்
வேதப்பயன்-தாத்பர்யம் அருளி-மறை நான்கும் முன் ஓதிய பட்டனுக்கு அரங்கமேய அந்தணன் -உபகாரம் -பட்டர் பிரான்

பராசாரய வசிஷ்ட நப்தாரம் -வியாசர் சொல்லுமா போலே–பெரியாழ்வார் வயிற்றில் பிறப்பு உத்கர்ஷ ஹேது
நந்தகோபன் மகன்–ஆழ்வார் சம்பந்தம் இவளுக்கு ஏற்றம்–விட்டு சித்தர் தங்கள் தேவர் -இவருக்கு தேவராய் நிறம் பெற்றான் அவனும்
இவர் மகளாய் ஒரு மகள் தன்னை உடையேன் -தமக்கு உத்கர்ஷம்–அவளை இட்டு இவருக்கு பெருமை –
சொன்ன–அனுகாரத்தால் அனுபவம் புற வெள்ளம் இட்டு–கோபிமார்–பாவனை ஆழ்வார்–பும்ச்த்வம் பெண்ணாக ஏறிட்டு
சுருதி சதா சிரஸ்–மேகம் பருகின சமுத்ராம்பு போலே இவர் வாயினவால் திருந்தி-வேதம் தான் தோன்றி
பிறப்பால் பெற்ற ஏற்றம்–ஷீராப்தி நாதன் விட ஒருத்தி மகனாய் வந்தவன் ஏற்றம்

பறை கொண்ட ஆற்றை -காட்டி அருளினான் —14 பதிகம் -நாச்சியார் திருமொழி -பெரியாழ்வார்–ஆசார்ய சம்பந்தமே பிரதானம்
குமரனார் சொல்லும் பொய்யானால் நானும் பிறந்தமை பொய்யன்றே–ஆசார்யர் சம்பந்தம் ஒன்றே ஏற்றம்
ராமானுஜ தாசன் –
சரம ஸ்லோகங்களை சொல் – பேச்சு -வார்த்தை என்று சொல்லி அருளி தள்ளி -ஆசார்ய அபிமானமே உத்தாரகம் -என்பதை காட்டி அருளினாள்
பந்த மோஷ ஹேது அவன்–ஆசார்யர்-நீ விட்டாலும் உன்னை நாம் விடோம் –
அச்சுத சேவிதாம் கிணற்றின் மேல் பூனை போலே-ஆசார்யர் -மோஷ ஏக ஹேதுவானவர்-ஆசார்ய அபிமானமே உத்தாராகம்
நல்ல என் தோழி –வல்ல பரிசு வருவிப்பரேல் அது காண்டுமே –விஷ்ணு சித்தன் கோதை -என்றே
தண் தெறியல் பட்டர் பிரான் கோதை சொன்ன –
ஆழ்வார் பிராட்டி பெருமாள் -வட பெரும் கோயில் ஆழ்வார் நாச்சியார் ஆழ்வார் -மூவரையும் சேவிக்கும் படி அணி புதுவை
ஹம்சம் போலே -வேத -அன்னமாய் அங்கு அருமறை பயந்தான் —
மென்னடைய அன்னம் பரந்து விளையாடும் வில்லிபுத்தூர் தனது திருத் தகப்பனாரை –ஆண்டாள் அருளி
விளையாட்டாகிய க்ரீடார்த்தம் சாஸ்திரமே தரமோ பரமோ மதக
மின்னனைய நுண் இடையாள் விரிகுழல் –மேல் நுழைந்த வண்டு -பெரியாழ்வார் ஆண்டாள் பற்றி அருளி ––கமல தண் தெரியல் –
துளசி மாலை -ஊர்த்த்வ புண்டர -ஸ்ரீ வைஷ்ணவ லஷணம்—திருஅருள் லஷ்மி கடாஷம் பெற்று இன்புறுவர்
இன்பக்கடலில் அழுந்துவார்–அம்ருத சாகரம் -கதய த்ரயம் கடைசியில் –

திருவருள் மாலை -சாற்றி அருளி சங்கத் தமிழ் மாலை முப்பத்தையும் நிகமித்து அருளுகிறாள்
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர்
ஸ்ரேயோ நஹ்ய ரவிந்த லோசன மன காந்தா பிரசாதத்ருதே சமஸ்ருத்யஷர வைஷ்ணவாத் வஸூ நருணாம் சம்பாவ்யதே கர்ஹிசித் -ஸ்தோத்ர ரத்னம்
பண்டை நாளாலே நின் திருவருளும் பங்கயத்தாள் திருவருளும் கொண்டு-
பங்கய மா மலர்ப் பாவையைப் போற்றுதும் -அமுதனார்
ஓங்கி -நோன்பு அனுஷ்டிப்பதால் பலன் சொல்லும்
இது -திருப்பாவை கற்றாருக்கு பலம் சொல்லும்
நாமாக பலனை விரும்பினால் சூத்திர பலன் விரும்புவோம்
நித்ய தம்பதி உடைய கிருபா லாபம் பிராட்டியே அருளிச் செய்த பிரபந்தம் –அந்தமில் பேர் இன்பம் நிஸ் சந்தேஹம் -தேறி இருக்கலாம்
திருவின் அருள்
திரு -சிறந்த அருள் என்றுமாம்
செல்வத் திருமாலால் -பிராட்டி சம்பந்தம் அங்கேயே அனுசந்தேயம்
ரகஸ்ய ரத்னாவளி –30 வார்த்தைகள் கொண்டவை
14 வார்த்தை – தேசிகன்
சர்வ ச்வாமிநியாய்-சர்வேஸ்வரனுக்கு சேஷமாய் -சஹ தர்ம சாரிணியான பெரிய பிராட்டியார்
இத்தலையில் வாத்சல்யாதி அதிசயத்தாலும்
அத்தலையில் வாலப்தி அதிசயத்தாலும்
புருஷகாரமாய் கொண்டு இஜ் ஜீவர்களுக்கு தஞ்சம் ஆகிறாள் –
புருஷகாரத்வமும் உபாயத்வமும் ஏக ஆஸ்ரயத்தில் கூடி இருக்க முடியாதே
திருவருளின் பிரஸ்தாவத்தினால் தலைக் கட்டி அருளுகிறோம் –

————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ தொட்டாசார்யர் சுவாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆயி சுவாமிகள் திருவடிகளே சரணம் சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பூர்வாசார்யர்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –