Archive for July, 2015

ஸ்ரீ பாசுரப் படி ஸ்ரீ கிருஷ்ணாவதாரம் –8–கோவர்த்தன உத்தாரண லீலை –பால சேஷ்டிதங்கள—– அருளிச் செயல்கள் —

July 31, 2015

மலையை எடுத்து மகிழ்ந்து கன்மாரி காத்துப் பசு நிரை மேய்த்தாய்
தடம் பெரும் தோளினால் வானவர்கோன் விட வந்த மழை தடுத்து ஆநிரை காத்தானால்
குன்று எடுத்து ஆநிரை காத்த பிரான் கோவலனாய்
கோவலர் இந்திரற்கு காட்டிய சோறும் கறியும் தயிரும் கலந்து உடன் உண்டாய் –வாட்டமிலாப் புகழ் வாசுதேவா –
மாரிப் புகை புணர்த்த பொறு மா கடல் வண்ணன் பொறுத்த மலை –கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே –
வானவர் கோன் வலிப்பட்டு முனிந்து விடுக்கப்பட்ட மழை வந்து எழு நாள் பெய்து மாத தடுப்ப
மதுசூதனன் எடுத்து மறித்த மலை–கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே –
அம்மைத் தடம் கண் மட வாய்ச்சியரும் ஆனாயரும் ஆணிரையும் அலறி எம்மைச் சரண் என்று கொள் என்று இரப்ப
இலங்கு ஆழிக் கை எந்தை எடுத்த மலை –கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே –
அடிவாயுறக் கையிட்டு எழப் பறித்திட்டு அமரர் பெருமான் கொண்டு நின்ற மலை –கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே –
ஏனத்துருவாகிய ஈசன் எந்தை இடவன் எழ வாங்கி எடுத்த மலை –கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே –
செப்பாடுடைய திருமாலவன் தன செந்தாமரைக் கைவிரல் ஐந்தினையும் கப்பாக மடுத்து மணி நெடும் தோள் காம்பாகக் கொடுத்துக் கவித்த மலை –கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே –
தடங்கை விரல் ஐந்தும் மலர வைத்துத் தாமோதரன் தாங்கு தடவரை–கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே –
நாராயணன் முன் முகம் காத்த மலை –கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே –
தாமோதரன் தாங்கு தடவரை –கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே –
கொடியேறு செந்தாமரைக் கை விரல்கள் கோலமும் அழிந்தில வாடிற்றில வடிவேறு திருவுகிர் நொந்துமில
மணி வண்ணன் மலை –கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே –
மேகம் சல சல பொழிந்திடக் கண்டு மலைப் பெரும் குடையால் மறைத்தவன் மதுரை மால் புருடோத்தமன்
குன்று எடுத்து ஆநிரை காத்த வாயா கோ நிரை மேய்த்தவனே எம்மானே –
வண்ண மால் வரையே குடையாக மாரி காத்தவனே -மது சூதா -கண்ணனே –

குன்று குடையா வெடுத்தாய் குணம் போற்றி –
கோவர்த்தனனைக் கண்டக்கால் கொள்ளும் பயன் ஓன்று இல்லாத கொங்கை தன்னைக் கிழங்கோடும்
அள்ளிப்- பறித்திட்டவன் மார்வில் எறிந்து என்னழலைத் தீர்வேனே

குன்றினால் குடை கவித்ததும் –
-வென்று சேர் பிள்ளை நல்வினையாட்டம் அனைத்திலும் அங்கு என்னுள்ளம் குளிர –காணுமாறு இனி உண்டு எனில் அருளே –

வெற்பு எடுத்து மாரி காத்த மேக வண்ணன் அல்லையே —
அன்று குன்றம் ஒன்றினால் ஆனை காத்து –

———————————————————

கன்றி மாரி பொழிந்திடக் கடிந்து ஆநிரைக்கு இடர் நீக்குவான் சென்று குன்றம் எடுத்தவன்
இந்திரனுக்கு என்று ஆயர்கள் எடுத்த எழில் விழவில் பழ நடை செய் மந்திர விதியில் பூசனை பெறாது மழை பொழிந்திடத் தளர்ந்து
ஆயர் எந்தம்மோடு இனவா நிறை தளராமல் எம்பெருமான் அருள் என்ன அந்தமில் வரையால் மழை தடுத்தானைத் திரு வல்லிக் கேணி கண்டேனே
மஞ்சுயர் மணிக் குன்றம் ஏந்தி மா மழை காத்து
அடல் மழைக்கு நிரை கலங்கிட வரை குடை எடுத்தவன் நிலவிய இடம் —-திரு வயிந்திர புரமே
மழை மா முது குன்று எடுத்து ஆயர் தங்கள் கோவாய் நிரை மேய்த்து உலகுண்ட மாயன் –திருச் சித்ர கூடம்
ஆயர் ஆ நிரைக்கு அன்று இடர் தீர்ப்பான் கூடிய மா மழை காத்த கூத்தன் என வருகின்றான் –சித்ர கூடத்து உள்ளானே
குன்றதனால் மழை தடுத்துக் குடமாடு கூத்தன் குலவும் இடம் –நாங்கூர் அரிமேய விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே
மன்னு காம்புடைக் குன்றம் ஏந்திக் கடுமழை காத்த எந்தை –திரு மணிக் கூடத்தானே
குன்றால் குளிர் மாரி தடுத்து உகந்தானே –
குடையா விலங்கல் கொண்டு ஏந்தி மாரி பழுதா நிரை காத்து
ஆயனாய் அன்று குன்றம் ஓன்று எடுத்தான் அரங்க மா நகர் அமர்ந்தானே
குடையா வரையால் நிரை முன் காத்த பெருமாள்
குன்று குடையா எடுத்த அடிகளுடைய திரு நாமம் நன்று காண்மின் தொண்டீர் சொன்னேன் நமோ நாராயணமே
கடுங்கால் மாரி கல்லே பொழிய அல்லே எமக்கு என்று படுங்கால் நீயே சரண் என்று ஆயர் அஞ்ச அஞ்சா முன்
நெடும் காற் குன்றம் குடை யொன்று ஏந்தி நிறையைச் சிரமத்தால் நடுங்கா வண்ணம் காத்தான் நாமம் நமோ நாராயணமே —
குன்றால் மாரி தடுத்தவனை —
விறல் வரைத் தோள் புடை பெயர வரை எடுத்த பெருமானுக்கு இழந்தேன் என் வரி வளையே
குன்றால் மாரி பழுதாக்கி
புயலுறு வரை மழை பொழிதர மணி நிரை மயலுற வரை குடை எடுவிய நெடியவர்
ஆ நிரைக்கு அழிவென்று மா மழை நின்று காத்து
உகந்தான் நில மா மகட்கு இனியான் –திருக் கோட்டியூரானே
ஆயர் அன்று நடுங்க ஆநிரை காத்த ஆண்மை கொலோ –முன்கை வளை கவர்ந்தாயே
குன்றம் ஓன்று எடுத்து ஏந்தி மா மழை அன்று காத்த அம்மான்
குன்றம் எடுத்து மழை தடுத்து –மால் என்னை மால் செய்தான் –
குன்றம் எடுத்து ஆ நிரை காய்ந்தவன் தன்னை
கல் எடுத்துக் கல் மாரி காத்தாய் என்றும் –
குன்று எடுத்த தோளினானை –அடி நாயேன் நினைந்திட்டேனே —

———————————

மலையால் குடை கவித்து –கார்க்கோடு பற்றியான் கை
வரை குடை தோள் காம்பாக ஆ நிரை காத்து ஆயர் நிரை விடை யேழ் செற்றவாறு என்னே –
குன்று எடுத்துப் பாயும் பனி மறைத்த பண்பாளா –
குன்றம் குடையாக ஆ காத்த கோ –
அவனே அருவரையால் ஆ நிரைகள் காத்தான்
குன்றம் ஒன்றால் புயல்வாயின நிரை காத்த புள்ளூர்த்தி
மால் வரியைக் கிளர்ந்து மரிதரக் கீண்டு எடுத்தான்
குன்று குடையாக ஆ காத்த கோவலனார்
ஆராலே கன்மாரி காத்தது தான்

—————————————————-

வெற்பை ஓன்று எடுத்து ஒற்கம் இன்றியே நிற்கும் அம்மான் சீர் கற்பன் வைகலே
பெரு மலை எடுத்தான் பீடுறை கோயில் –மாலிரும் சோலை திருமலை
குன்றம் ஏந்திக் குளிர் மழை காத்தவன் –பரன் சென்று சேர் திரு வேங்கடமா மலை ஒன்றுமே தொழ நம் வினை ஓயுமே –
மலையை எடுத்துக் கல் மாரி காத்துப் பசு நிரை தன்னை தொலைவு தவிர்த்த பிரானைச் சொல்லிச் சொல்லி –
குன்றம் ஒன்றால் மழை காத்த பிரானைச் சொல் மாலைகள் நன்று சூட்டும் விதி எய்தினம் என்ன குறை நமக்கே –
திறம்பாமல் மலை எடுத்தேனே என்னும்
இன வேய் மலை ஏந்தினேன் யானே என்னும்
இனவா நிரை காத்தேனும் யானே என்னும்
வண்ண மால் வரையை எடுத்து மழை காத்ததும் –எண்ணும் தோறும் என்னெஞ்சு எரிவாய் மெழுகு ஒக்கும் நின்றதே
குன்றம் ஓன்று ஏந்தியதும் –மாய வினைகளையே அலற்றி இரவும் நன்பகலும் தவிர்கிலம் என்ன குறை வெனக்கே
குன்று ஏந்திக் கோ நிரை காத்தவன் என்னும் –திருவரங்கத்தாய் என் செய்கேன் என் திரு மகட்கே –
மேய் நிரை கீழ் புக மா புரள சுனை வாய் நிறை நீர் பிளிரச் சொரிய இன ஆ நிரை பாடி அங்கே யொடுங்க அப்பன் தீ மழை காத்துக் குன்றம் எடுத்தானே –
குன்றம் எடுத்த பிரான் அடியரொடும் ஒன்றி நின்ற சடகோபன்
காத்த எங்கூத்தாவோ மலை ஏந்திக் கல்மாரி தன்னை பூத் த்ண் துழாய் முடியாய் –உன்னை எனக்குத் தலைப் பெய்வனே
குன்றம் எடுத்த பிரான் முறுவல் எனது ஆவி அடும்
பாழியம் தோளால் வரை எடுத்தான் பாதங்கள் வாழி என் நெஞ்சே மறவாது வாழ் கண்டாய் –

————————————————-

கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
ஆசார்யர்கள் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ முதலியாண்டான் அந்தாதி -41-61-பாசுரங்கள்–ஸ்ரீ உ -வே -திரு நகரி நல்லான் சக்கரவர்த்தி ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள் இயற்றி அருளிய திவ்ய பிரபந்தம் –

July 30, 2015

அருங்கலை யார் களி யாசான் அடியின்று அருள் புரியின்
நெருங்கலை யார் கலி செய்ய இனி யருள் நேடிடிலோ
மருங்கலை யார்கலி வாய்ந்து வழிப்பட வல்லுநர் யார்
இருங்கலை யார்கலி காயமதி யாண்டான் இதயமிதே –41-

அருங்கலை யார் களி யாசான் -அருமைக் கல்விக் கடலான ஆசார்யன்
அடியின்று -காரணம் இன்றி -நிர்ஹேதுகமாக
அன்றி இன்றி என் வினை எஞ்சிகரம் தொடர்பினுள் உகரமாய்வரின் இயல்பே -நன்னூல் -173- எனபது காண்க
அருள் புரியின்
நெருங்கலை யார் கலி செய்ய –கலி நெருங்குலை செய்ய யார் -கலி புருஷன் நெருங்க முடியாது -என்றபடி -நெருங்கலை -நெருங்குதலை
இனி யருள் நேடிடிலோ-அநு வர்த்த நத்தால் ஏற்படும் கிருபையைக் காணக் கருதிடிலோ –
மருங்கலை யார்கலி வாய்ந்து -மருங்கு அலையார் கலி வாய்ந்து -குருவின் பக்கத்தில் -பிரிந்து போகாதவர்களாய்-உத்சாஹம் வாய்ந்து
வழிப்பட வல்லுநர் யார் -அநு கூலராய் குருவிற்கு வசப்பட்டு நடப்பதற்கு சாமர்த்தியம் உடையவர்கள் யார் -எவரும் இல்லை -என்றபடி
இருங்கலை யார்கலி காயமதி -இரும் கலை ஆர் -மகா சாஸ்திர ஞானம் நிறைந்த -கலிகாய்-பாபத்தைப் போக்கும் -மதி -புத்தியை உடைய
யாண்டான் இதயமிதே –இதயம் -திரு உள்ளம் -ஆசான் அடி இன்றி அருள் புரியின் கலி நெருங்கலை ல்செய்ய யார் –
இனி அருள் நேடிடிலோ வல்லுநர் யார் -இது ஆண்டான் இதயம் -என்று முடிக்க –

ஆசார்யானது நிர்ஹேதுக கிருபைக்கு ஆலையின் கலியினாலும் நம்மைப் பாதிக்க முடியாது -இனி நாமாக ஆசார்யானது கிருபையைப் பெற
முற்படின் அது ஆராலும் ஆகாததே -ஆதலின் -சரம பர்வ நிஷ்டர்ராகிய மதுரகவி காட்டிய வழியே நமக்கு ஏற்றது எனபது –
ஆண்டான் திரு உள்ளம் ஆயிற்று -என்க –

————————————————————————————————————

இதக்கலை கற்ற எனக்கு நிகரார் என வெதிர்த்து
மதக்களிறு என்ன வருமிள காழ்வான் மடங்க வென்று
மதிக்க மிசையிருந்தாண்டான் வகித்து வணங்கினற்குக்
கதிக்கிதம் காண் என்று எதிமன் கழல் இணை காட்டினனே –42-

இதக்கலை -ஹிதத்தை உணர்த்தும் சாஸ்த்ரங்களை
மதக்களிறு என்ன -மதம் பிடித்த யானை என்னும்படி –
மடங்க -பங்கம் அடைய
வகித்து -சுமந்து
வணங்கினற்கு -அருளுமாறு வணங்கின மிளகு ஆழ்வானுக்கு
கதிக்கிதம் -மோஷத்திற்கு ஹிதம் -சாதனம் –
ஆண்டான் மடங்க வென்று மதிக்க மிசை ஏறி இருந்து -வகித்து வணங்கினற்கு -கதிக்கு இதம் காண் என்று எதிமன் -உடையவர் -கழல் இணை காட்டினான் -எனக் கூட்டுவது

மிளகு ஆழ்வான் கல்விச் செருக்குடன் ஆண்டானை வலுவில் வாதுக்கு அழைத்தார் -ஆண்டான் -நீ தோல்வி அடைந்தால்
என்ன செய்வாய் -என அவரை வினவினார்
தோற்றால் உம்மைச் சுமந்து திரிகிறேன் -என்று மிளகு ஆழ்வான் கர்வத்துடன் துணிந்து பதில் அளித்தார் –
தர்க்கம் நடந்தது -மிளகு ஆழ்வான் தோற்றார் -பேசின முதலியாண்டான் ஸ்ரீ பாதம் தாங்கித் திரிந்தார் -பின்னர்
செருக்கு அடங்கிப் பணிந்து தம்மை ஏற்குமாறு விண்ணப்பித்துக் கொண்ட மிளகு ஆழ்வானுக்கு
எம்பெருமானார் திருவடிகளே தஞ்சம் என்று இரும் -என்று அவற்றைக் காட்டிக் கொடுத்தார் எனபது வரலாறு —

—————————————————————————————————-

காட்டும் படியில் இராமானுசன் தன் கழல் இணைகள்
கூட்டும் படியில் குறைவறும் செல்வம் கொடிய வினை
வீட்டும் படிமின் முதலி யாண்டான் அடி வேற்ற்டம் பற்
காட்டும் படி என்ன வந்தது உமக்குக் கழறுதீரே –43–

படியில் -ஒப்பில்லாத
கூட்டும் -சேர்க்கும்
படியில் -பூமியில்
வீட்டும் -அழிக்கும்
படிமின் -வணங்குகள்
பற்காட்டும்படி–கெஞ்சும்படி
கழறுதீர் சொல்லுங்கோள்

கழல் இணைகளைக் காட்டும் –
செல்வத்தைக் கூட்டும் –
கொடிய வினையை வீட்டும் –
முதலி யாண்டான் அடி படிமின்
வேறு இடம் பற்காட்டும்படி உமக்கு என்ன வந்தது –
கழறுதீர் -என்று கூட்டி முடிப்பது —

——————————————————————————————-

கழறலை யாண்டான் பெயரைக் கழறலை கன்மவளிச்
சுழறலை யாண்டா யினந்தோ சுழலலை தொல் பிறப்பாம்
அழறலை யாண்டாண்டு அலைதி நீ யாறலைப் பெய்தி தண் பூம்
கழறலை யாண்டான் அணியில் கழலும் கடும் பவமே–44-

கழறலை யாண்டான் -கழல் தலை ஆண்டான் -கழலினைத் தலையில் வைத்து ஆண்டவனாகிய த்ரி விக்ரமன்
இனி கழல் தலை எனப் பிரிக்காது -கழறு அலை -எனப் பிரித்து
நூல்களில் சொல்லப் படுகின்ற சமுத்ரம் எனப் பொருள் கொண்டு திருப் பாற் கடல் நாதனைச் சொல்லலுமாம்-
பெயரைக் கழறலை -பெயரைச் சொல்ல வில்லை
கன்மவளிச்-கன்மமாகிற காற்றினுடைய
சுழறலை -சுழல் தலை -எனப் பிரித்து -சுழலில் -என்றபடி -தலை -ஏழன் உருபு-
யாண்டா யினந்தோ சுழலலை -யாண்டு ஆயின் சுழலலை அந்தோ -எங்கே யானால் சுழலாது இருப்பாய் -அந்தோ -இரங்கல் குறிப்பு
அழறலை -அழல் தலை -நெருப்பில்
யாண்டாண்டு -எப்பொழுதும்
அலைதி நீ -அலைகின்றாய்
யாறலைப் பெய்தி -ஆறு அழைப்பு எய்தி -வழிப் பறித் துன்பத்தை படுகின்றாய்
தண் பூம் கழறலை யாண்டான் அணியில் கழலும் கடும் பவமே–முதலி யாண்டான் தனது அழகிய திருவடிகளால்
தலையில் அலங்கரித்தால் கொடிய சம்சாரம் நீங்கும் –

எம்பெருமான் திரு நாமத்தை நீ சொல்லவில்லை -அந்தோ
கன்மப் புயலில் எங்குப் போனால் சுழலாமல் இருப்பாய் –
பிறப்பு என்னும் நெருப்பிலே இருப்புக் கொள்ளாது அலைகிறாய் -வழிப் பறி யுண்டு துன்பப் படுகிறாய்
தலையில் தன் பூம் கழலை யணிந்து முதலி யாண்டான் ஆட்கொண்டால் உனக்கு இந்த சம்சாரத் தொல்லை நீங்கும்
என ஒருவனை முன்னிலைப் படுத்தி கூறியவாறு –

———————————————————————————–

கடும் தாபம் ஆற்றும் இராமானுசானாம் கதிர் ஒளியை
அடைந்தார் அமுதினை யூட்டு மருங்கலை யார்ந்துலகம்
நடந்தான் மனத்தளி போல் வரும் ஆண்டான் நளிர் மதிகை
விடும் தாழ்வில தெப் பொழுதும் மறுவினை மேவலதே –45

இது முதல் மூன்று செய்யுட்கள் ஆண்டானைச் சந்த்ரனாக உருவகம் செய்து அதனின்று வேற்றுமைப் படுத்துகின்றன

ஆண்டான் என்னும் நளிர் மதி கடுமையான தாபத்தைப் போக்கும் -ராமானுஜ திவாகரன் இடமிருந்து ஒளியை -ஞானத்தை அடைந்து
அருமையான அமுதத்தை -பகவத் அனுபவத்தை -ஊட்டும் -அருமையான கலை -சாஸ்திரம் -கள் நிறைந்து உலகை அளந்த
விஷ்ணுவின் அவனது தண்ணளி போலே குளிர்ந்து தோன்றும் –
ஆண்டான் விஷ்ணுவின் மனத்தின் கண் உள்ள தண்ணளி போலே அவதரிப்பர்–ஆயின் -பிரசித்த சந்தரன்
கை ஒழுக்கத்தை -விடும் தாழ்வு -குறை உடையது -மறுவினை -குற்றத்தை மேவுவது –
ஆண்டான் எனும் சந்த்ரனோ எப்பொழுதும் கை விடும் தாழ்வு இல்லாதது -எப்பொழுதும் மறுவினை மேவாதது -என்றபடி
–எப்பொழுதும் -என்பதை முன்னும் பின்னும் கூட்டுக –
சந்தரன் இயற்கை ஒளி அற்றது -சூரியன் ஒளியினாலே அது பிரகாசிக்கிறது -அது தேவர்களுக்கு அமுதினை ஊட்டலும்
விஷ்ணுவின் மனத்தே தோன்றலும் வேதத்தில் கண்டவை -குரு தாரகமனம் செய்து ஒழுக்கம் கேட்டது புராண வரலாறு –

———————————————————————————————————–

மேவி விளங்கிடும் மேலவர் சென்னி விபுதருக்கு
நாவில் வழங்கிடும் நல்லமு தீயும் நவை கொளிருள்
தாவ விழுங்கிடும் ஆண்டான் எனும் ஒரு தண் மதி வேள்
பூவில் உளம் கெடும் பூதலம் காத்துப் புரந்திடுமே –46-

ஆண்டான் என்னும் தண் மதி -மேலவர் சென்னி மேவி விளங்கிடும்-ஆண்டான் என்னும் மதி பாதுகை யாதலின்
இராமானுசனைத் தொழும் பெரியோர் சென்னியில் மேவி உள்ளது –
மேம்பாடு உடைய மகா தேவன் சென்னியில் மதி மேவி உள்ளதும் காண்க –
ஆண்டான் என்னும் மதி -விபுதற்கு -அறிஞர்க்கு நாவில் வழங்கிடும் -வ்யவஹரிக்கப் படும்
நல்லமு தீயும் -நல்ல அமுதம் போன்ற உபதேசத்தையும் ஈயும் –
விபுதர்க்கு -தேவர்களுக்கு அம்மதி நாவில் வழங்கிடும் -கொடுத்திடும் -நல்ல அமிருதத்தை ஈயும் –
இம்மதி அறியாமை இருளைக் கபளீ கரித்து விடும் -அம்மதி குற்றமுள்ள இருள் தாவ -கெட -விழுங்கி விடும்
ஆயின் அம்மதி – வேள்-மன்மதன் -பூவில் -புஷ்ப பாணத்தினால் -உளம் கெடும் பூதலத்தை மேலும் கெடுக்கும் –
ஆண்டான் என்னும் தண் மதியோ அங்கனம் கெடுக்காது காத்து -தடுத்துப் பரி பாலிக்கும் -என்றபடி –

———————————————————————————————————

இடுமுறை யாரொளி யானுள் ளிறுகிய கல்லுருக்கி
விடுமிரிந்தோடிட வேறாம் ஒளி மிகும் வெண்மையிப்பார்
படருறப் போர்த்திடு மாண்டான் பனிமதி மித்திரனை
விடலரும் பண்பின தேறும் திருவினை மேவினுமே –47-

இடுமுறை யாரொளி யானுள் ளிறுகிய
பனி மதி கல்லுருக்கி விடும் -அந்தப் பனிமதி இடும் -கொடுக்கும் -உரை ஆர் -கீர்த்தி நிறைந்த நிலாவினால் உள்ளே இறுகிய
சந்திர காந்தக் கல்லையும் உருக்கி விடும் –
இந்தப் பனி மதி ஆண்டான் இடும் -உபதேசிக்கும் -உரை -வார்த்தையில் -ஆர்ந்த ஞான ஒளியினால் உள் மனம் ஆகிற
கல்லையும் உருக்கி விடும் –
அது வேறாம் -நஷத்ரம் முதலிய -ஒளி இரிந்து -கேட்டு -ஓடிட மறைய -ஒளி மிகும்
இது வேறு ஞான பரகாசங்கள் மறைய ஒளி மிகும் –
அது வெண்மை யிப்பார் படருறப் -பரவப்-போர்த்திடும் -இது வெண்மை -தூய்மை -சத்துவ குணம் -இப்பார் படருறப் போர்த்திடும்
ஆயின் அது ஏறும் திருவினை மேவும் மித்திரனை விடும் பண்பினது -அதாவது திரு -கலை -ஏற ஏற மித்திரனை -சூரியனை -விடும் பண்புடையது
இதுவோ அங்கனம் மித்திரனை -அநு கூலனை விட முடியாத பண்பு உடையது -என்றபடி –

கலை ஏற ஏற சுக்ல பஷத்தில் மித்திரனை விட்டு விலகுவதும் குறையக் குறைய கிருஷ்ண பஷத்தில் மித்திரனைக் கூடுவதும் சந்த்ரனது இயல்பு –
முற்றும் குறைந்த அமாவாசை அன்று மித்திரனை நன்கு கலந்து விடுகிறான் சந்தரன் -என்பர் –

——————————————————————————————————————–

உமக்குத் தயக்கம் என் ஏறு மினுங்கள் அனைவரையும்
சுமக்கும் துயம் எனும் தூய விரும்பு நெறி பிறழாது
இமைக்கும் பொழுதில் எதிமன் பதமாம் எழில் நகர் போய்
நிமிர்க்கும் துயரற ஆண்டான் எனும் ஒரு நீள் சக்டே –48-

இது முதல் மூன்று பாடல்கள் ஆண்டானைப் புகை வண்டியாக உருவகம் செய்கின்றன –

துயம் எனும் -த்வயம் எனும் மந்திரம்
தூய விரும்பு நெறி பிறழாது -சுத்தமான விரும்பப்படும் வழி -இரும்புப் பாதை எனத் தோற்றுவதும் காண்க –
இமைக்கும் பொழுதில் எதிமன் பதமாம் எழில் நகர்-எம்பெருமானார் திருவடி யாகிய அழகிய நகரம் –
யதி சக்ரவர்த்தி பதபத்ம பத்த நம் -என்றார் ஸ்ரீ வேதாந்த தேசிகரும்
நிமிர்க்கும் -பூர்ணர் ஆக்கும் -துயர் அற நிமிர்க்கும் -என்க
நீள் சக்டே-நீண்ட புகை வண்டி –
நீள் சகடு நெறி பிறழாது இமைக்கும் பொழுதில் எழில் நகர் போய் துயர் அற நிமிர்க்கும் -உங்கள் அனைவரையும்ம் சுமக்கும் -உமக்குத் தயக்கம் என் ஏறுமின்-என்று கூட்டி முடிக்க –

எத்தனை பேராயினும் சரி -த்வயம் கூறும் வழியில் எம்பெருமானாரோடு அனைத்துக் குறைவறுத்து உய்விப்பர் -முதலி யாண்டான் -எனபது கருத்து –
விஷ்ணுச் சேஷீ ததீயச் சுப குண நிலயோ விக்ரஹச் ஸ்ரீசடாரி ஸ்ரீ மான் ராமாநுஜார்ய பத கமல யுகம் பாதி இமயம் ததீயம் –
நாராயணன் சேஷி -அவனது நல் குணங்கட்கு இடமான திரு மேனி நம்மாழ்வார் –
திரு ஆரும் எம்பெருமானார் அவரது அழகிய இணை யடிகளாக விளங்குகிறார் -என்றபடி
நாராயண சரணங்களாக எம்பெருமானாரைக் கொண்டால் த்வயம் கூறும் வழியில் எம்பெருமானாரோடு இணைதல் காணலாம் –

———————————————————————————————————-

கடுவினை தள்ளும் எதிமன் கழல் இணை காண்பதற்கு
வடுவினை விள்ளு நம் ஆண்டான் எனு நெடும் வண்டி வழிப்
படுமனை யள்ளல் படுகிலிர் ஏறுதிர் பாருலகீர்
கடுவினில் உள்ள புழு எனக் காலம் கழிப்பது என்னே –49-

கடுவினை தள்ளும் -கடுமையான வினைகளைப் போக்கும்
எதிமன் கழல் இணை காண்பதற்கு
வடுவினை விள்ளும்-தோஷத்தை நீங்கச் செய்யும் -குற்றமற்ற -என்றபடி
வழிப்படும்–புறப்படும்
மனை யள்ளல்-மனை வாழ்க்கைச் சேற்றில்
கடுவினில் -விஷத்தில்
உள்ள -இருக்கிற

பாருலகீர் -ஆண்டான் எனும் நெடும் வண்டி வழிப்படும் -எதிமன் கழலினை காண்பதற்கு -அதில் ஏறு திர –
மனை அள்ளல் படுகிலிர் -கடுவினில் உள்ள புழு வெனக் காலம் கழிப்பது என்னே என்று கூட்டிப் பொருள் கொள்க –

விஷ கிருமி போலே சம்சாரத்தில் வீணே காலத்தைக் கழிப்பதில் பயன் இல்லை -பரம புருஷார்த்தமான எம்பெருமானாரது
லாபத்துக்கு ஆண்டானைப் பற்றல் வேண்டும் எனபது கருத்து –

——————————————————————————————————-

கழி பெரு நல்லவர் அல்லவர்த் தாங்கிக் கனத்த நன்மை
பழி தரும் அல்லல் விலங்கல் துளைத்துப் பரமபத
வழி வரும் வண்ணம் உடையவர் வண்ண மலரடி போம்
தொழலுறும் அண்ணல் முதலி யாண்டான் இத் தொடர் வண்டியே –50-

கழி பெரு நல்லவர் -மிகவும் நல்லவர்
அல்லவர்த் தாங்கிக் கனத்த நன்மை -அல்லவர் -அதற்கு மாறுபட்டவர் -கனத்த நன்மை -பெரும் புண்ணியம் –
பழி தரும் அல்லல் விலங்கல் -பழியை உண்டு பண்ணுகிற -துன்பத்திற்கு ஹேதுவான பாபம்-ஆகு பெயர்
விலங்கல் -மலை –நன்மை அல்லல்கள் ஆகிய விலங்கல் -என்க –
முமுஷூவுக்கு புண்ணிய பாபங்கள் இரண்டுமே தடை யாதலின் இங்கனம் உருவகம் செய்யப் பட்டது –
மலையைக் குடைந்து புகை வண்டி போவது கண் கூடு –
பரமபத வழி வரும் வண்ணம்-அர்ச்சிராதி மார்க்கம் கிடைக்கும் படி –
உடையவர் வண்ண மலரடி போம் தொழலுறும் அண்ணல் முதலி யாண்டான் இத் தொடர் வண்டியே —
வண்ணம் -அழகிய
போம் -போகும் -செய்யும் என் முற்று
தொழல் உறும் -ஆஸ்ரயிக்கத் தக்க –

முதளியாண்டானாகிற இத் தொடர் வண்டி நல்லாரையும் பொல்லாரையும் எத்தனை புண்ய பாபங்கள் குறுக்கிட்டாலும்
உடையவர் திருவடிகளில் சேர்த்து முக்தி வழியில் செலுத்தியே தீரும் -என்றபடி
பேற்றுக்கு நன்மை ஹேதுவும் அன்று -தீமை விலக்கும் அன்று -ஆண்டானை முன்னிட்டு உடையவரோடு
கொள்ளும் உறவே அர்ச்சிராதி கதியில் செலுத்திப் பேறு பெறுவிக்கும் எனபது கருத்து –

———————————————————————————————————————-

தொடர்வினை வன் காற்று அறையச் சுழலுறு தொல் பிறப்பு
படுதலின் வீணே சுழன்று உருமாயும் இப்பாரிடத்தீர்
திட மனம் கொள்மின் எதிமன் திருத் தாள் நிலை என்னும்
வடிவனை யாண்டான் தனை ஒரு நாள் வலம் வந்திடற்கே —51–

தொடருகின்ற வினையாகிய பலத்த காற்று வீசுதலினால்-சுழலுகின்ற பண்டைப் பிறப்பு எனப்படும் சக்கிரதிற்கு உட்பட்டு
ஒரு பயனும் இன்றிச் சுழன்று ஸ்வரூப நாசம் அடையும் உலகத்தீரே —
எம்பெருமானாரது திருவடி நிலை என்று சொல்லப்படும் வடிவம் வாய்ந்த முதளியாண்டானை ஒரு நாள் பிரதஷிணம்
செய்வதற்குத் திடமான எண்ணம் கொள்ளுங்கோள் -என்றவாறு —
முதளியாண்டானை ஒரு நாள் சுற்றி வர நினைத்த மாத்ரத்திலேயே வீணே சுழன்று உருமாயும் நிலைமை ஓயும் எனபது குறிப்பு –
தமது பாதுகையை ஒரு நாள் வலம் வரக் கருதுபவருக்கு எம்பெருமானார் வீடு அருளுவர் எனபது கருத்து –

———————————————————————————————————–

வந்தெழு மோகம் எனும் அலை மோத மெய் வங்கமதில்
நந்தலில் நோயாம் சுமைகள் நசுக்க நவை பிறப்பாம்
அந்தமிலார் கலி வல்வினை யோட்ட அலைந்து உழல்வீர்
வந்திடிர் ஆண்டான் எனும் பெயர் வாய்ந்த நல் வான் கலமே –52-

இது முதல் மூன்று பாடல்கள் ஆண்டானை நாவாயாக உருவகம் செய்கின்றன –

மெய் வங்கமதில் -சரீரம் ஆகிய நாவாயில்
நந்தலில் -அழிவு இல்லாத
அந்தமிலார் கலி -முடிவு இல்லாத கடல்
வந்திடிர் -வந்து விடுங்கள்
வான் கலம் -பெரும் கப்பல்
மெய் வங்கமதில்
நவை பிறப்பாம்
அந்தமிள் ஆர் கலியில் மெய் வங்கமதில் வந்தெழு மோகம் எனும் அலை மோத-நந்தலில் நோயாம் சுமைகள் நசுக்க
வல்வினை யாகிய மாலுமி யோட்ட அலைந்து உழல்வீர்
ஆண்டான் எனும் பெயர் வாய்ந்த நல் வான் கலம் வந்திடிர்-எனக் கூட்டி முடிக்க –

குற்றமுள்ள பிறவிப் பெரும் கடலின் கண் உடல் எனும் வங்கம் ஏறி வந்து வீசும் மோகம் என்னும் அலைகள் மோத
அழியாது என்றும் உள்ள நோய்கள் என்னும் சுமைகளால் நசுக்குண்டு பலமிக்க வினை என்னும் மீகாமன் தனது இஷ்டப்படி ஓட்ட
அலைந்து உழல்கின்றவர்களே -ஆண்டான் எனும் பெயர் வாய்ந்த நல்ல பெரிய கலத்திற்கு வந்து விடுங்கள் -என்றவாறு –
வல்வினை ஓட்ட -என்ற இடத்து ஏகதேச உருவகம் -வான் கலம் என்றது மெய் வங்கத்தினும் வேறுபாடு தெரித்தற்கு -அது மேலைப் பாட்டில் தெளிவு –

————————————————————————————————-

கலன் அணி கஞ்ச மலர்வரும் காரிகை காதலனார்
நலனுடை யின்னருள் மாலுமி உய்த்தலின் நன்னெறியே
மலமறு பண்பு வகித்தெழு மாலலை வாதையின்றிச்
செலுமது தீரம் கடிதின் ஆண்டான் எனும் சீர் வங்கமே –53-

கலன் அணி -அணி கலங்கள் பூண்ட
கஞ்ச மலர்வரும் காரிகை -காதலனார் -தாமரைப் புஷ்பத்தில் அவதரித்த பிராட்டி கேள்வனார்
நலனுடை -நன்மை பயக்கும்
யின்னருள் மாலுமி உய்த்தலின் -செலுத்துதலினால்
நன்னெறியே செலுமது -என இயையும்
மலமறு -குற்றம் அற்ற
பண்பு வகித்து -குணங்களை தாங்கி
தெழு மாலலை-எழும் மயக்கம் ஆகிற அலைகளால்
வாதையின்றிச் -பாதை -கஷ்டம் -இல்லாமல் –
செலுமது தீரம் கடிதின் -விரைவில் கரை செலுமது –

ஆண்டான் எனும் சீர் வங்கம் -காதலனார் இன்னருள் ஆகிய மாலுமி உய்த்தலின் பண்பு வகித்து வாதை இன்றி
நன்னெறியே கடிதின் தீரம் செலுமது -எனக் கூட்டி முடிக்க –
நன்மை பயக்கும் மாதவனது திருவருள் ஆகிய மாலுமி நடத்துவதால் ஆண்டான் எனும் சீர் வங்கம் ஆத்ம குணங்களுடன்
மோக அலையினால் ஏற்படும் இடரின்றி விரைந்து கரை சேர்ந்து விடும் -என்றபடி –
முன் செய்யுளில் சொன்ன மெய் வங்கத்திலும் ஆண்டான் எனும் வங்கத்தினும் ஆண்டான் எனும் வங்கத்திற்கு உண்டான சிறப்பு இங்கே கூறப்படுகிறது –
அதனை ஓட்டுபவன் -வினை மாலுமி –இதனை ஓட்டுபவன் இன்னருள் மாலுமி –
அது வழிப் படராது -இது நல் வழிப் படரும்
அது நோய்கள் சுமக்கும் -இது பண்புகள் சுமக்கும்
அது மோக அலையினால் வாதைப் படும் -இது அங்கன் படாது –
சேதனர்கள் கடிதில் கரை ஏறத் திருமால் திருவருளால் இவ்வுலகில் திருவவதரித்தவர் ஆண்டான் எனபது கருத்து –

—————————————————————————————–

வங்கம் திருமால் எனும் பெயர் வாய்ந்தது மெல்ல வந்து
தங்கும் திருவெனும் தீவிலும் ஆன்மா தனி இனிக்கும்
மங்கும் துறையிலும் ஆண்டான் எனும் ஒரு வான் காலமோ
எங்கும் நிலாமல் விரைந்திடும் இன்பத் துறை முகமே –54-

வங்கம் திருமால் எனும் பெயர் வாய்ந்தது -திருமால் எனும் பெயர் வாய்ந்தது -ஆகிய -வங்கம் -என மாற்றுக
விஷ்ணு போதம் –வைகுந்தன் என்பதோர் தோணி –என்பன காண்க —
திரு எனும் தீவிலும் -ஐஸ்வர்யம் எனும் சம்சாரத்து இடைப்பட்ட தீவிலும் -ஆன்மா தனி இனிக்கும் –
-சேதனன் தன்னைத் தானே அனுபவித்து இன்பம் காணும்
மங்கும் துறையிலும் -மின்மினி போன்ற அற்பமான ஆத்ம அனுபவம் ஆகிய துறையிலும்
இன்பத் துறை முகமே-மஹா நந்த ரூபமான மோஷம் எனும் துறை முகம் –

திருமால் எனும் பெயர் வாய்ந்தது வங்கம் -திரு வெனும் தீவிலும் -ஆன்மா தனி இனிக்கும் மங்கும் துறையிலும் மெல்ல வந்து தங்கும்
ஆண்டான் எனும் ஒரு வான் காலமோ
எங்கும் நில்லாமல் இன்பத் துறை முகம் விரைந்திடும் –என்று கூட்டுவது –
இதில் திருமால் எனும் வங்கத்திற்கும் ஆண்டான் எனும் காலத்திற்கும் உள்ள வேற்றுமை காட்டப் படுகிறது –
திருமால் வங்கம் மெல்லச் செல்லும் –ஆண்டான் கலம் விரைந்திடும்
தேபு நந்த்யுருகாலேந தர்சநா தேவ சாதவ -என்று தேவரை விட சாதுக்கள் விரைவில் புனிதர் ஆக்குவர் என்றது காண்க –
ஐஸ்வர்யம் என்னும் தீவிலும் கைவல்யம் என்னும் துறையிலும் தங்குவது அது –இது அவைகளில் தங்காது அப்பால் பட்ட முக்தி என்னும்
பெரும் துறை முகத்திலேயே தங்குவது -அதனால் வான் கலம் ஆயிய்று –
ஐஸ்வர்யம் கைவல்யம் பகவல்லாபங்கள் எனப்படும் மூன்று புருஷார்த்தங்களையும் அவரவர் ருசிக்கு ஏற்பத் தந்து அருளுவன் எம்பெருமான் –
ஆண்டானோ அங்கன் அன்றி மோஷம் ஒன்றையே தந்து அருளுவர் -என்றபடி –
அற்பப் பலன்களையும் அழிக்கும் எம்பெருமானை விட பர புருஷார்த்தம் ஒன்றையே அழிக்கும் ஆண்டான் மிகச் சீரியர் என்று கருத்து –

———————————————————————————————-

துறவியர் கோன் தரு ஞானம் செயல் எனும் தூவியின் மண
பிறிவுற மால் பதம் என்னும் பெரு நெறி பெற்று உயர்ந்து
பிறவியாம் ஆழ்கடல் தாவிப் பெறுத்திட மேலை நிலம்
இறைவிடாது ஏகிடும் ஆண்டான் எனும் ஒரு விண் பொறியே–55 —

ஆகாய விமானமாக ஆண்டானை இச் செய்யுளும் அடுத்த செய்யுள்ளும் உருவகம் செய்கின்றன –

துறவியர் கோன் தரு ஞானம் செயல் எனும் தூவியின் -எம்பெருமானார் –ஞானம் அனுஷ்டானம் -சிறகுடன்
மண-பூமி -அங்கு உள்ளாரையும் ஆகு பெயரால் கொள்க –
பிறிவுற -பிரியும்படி –
பிரிந்தேன் பெற்ற மக்கள் -பெரிய திரு மொழி -6-2-4-/செறிந்தாரையும் பிரிந்தாரையும் -கரன் வதைப் படலம் -90-என்னும் பிரயோகங்கள் காண்க
மால் பதம் என்னும் பெரு நெறி -விஷ்ணு பதம் -ஆகாயம் -ஆகிய பெரிய வழி க்கு திருமால் திருவடி யாகிய பெரிய சாதனம் -என்பதும் கொள்க –
பெற்று உயர்ந்து -மேல் ஏறி -சிறப்புற்று என்றுமாம் –
பிறவியாம் ஆழ்கடல் தாவிப் பெறுத்திட -பெறும்படி செய
மேலை நிலம் -மேனாடு -பரம பதம் -என்பதும் கொள்க -மேலை நிலம் பெறுத்திட என மாறும் –
இறைவிடாது -சிறிதும் விடாமல் -தங்குதல் இல்லாமல் -ஆகாயத்தில் போகாது சிறிதும் நிற்க முடியாதன்றோ –
ஈஸ்வரனை விடாது -என்பதும் கொள்க –
செழும் பறவை தானேறி வான் ஏற வழி தருதலின் இறைவனை விட முடியாதன்றோ
ஏகிடும் ஆண்டான் எனும் ஒரு விண் பொறியே–விண் பொறி -ஆகாயத்தில் பறக்கும் யந்திரம் -ஆகாய விமானம் -என்றபடி —

ஆகாய விமானம் இரண்டு சிறகுகள் கொண்டது -ஆண்டான் எனும் விண் பொறியும் எம்பெருமானார் திருவருளால் வந்த

ஞானம் அனுட்டானம் என்னும் இரண்டு தூவி கொண்டது –
அது பூமியை விட்டுப் பிரிவது -இது நாட்டாரோடு இயல் ஒழிவது -அதாவது பூமியில் உள்ளாரோடு ஓட்டத்றுப் பிரிந்து நிற்பது –
தூ மனத்தார்க்கு உண்டோ பல கற்றும் தம்முடம்பைப் பார்த்து அபிமாநிக்கும் உலகத்தாரோடு உறவு -ஞான சாரம் -13-என்றது காண்க –
அது விஷ்ணு பத -ஆகாயப் பெரு நெறியைப் பெற்று உயர்வது -இது விஷ்ணு பத -திருமால் திருவடிப் பெரு நெறியை -சிறந்த சாதனத்தைப் பெற்று உயர்வது
ஏனைய சாதனங்கள் போல் அல்லாமல் சித்தமாய்த் தாமதம் இன்றி உடனே பயனை அளித்தே தீருதலின் விஷ்ணு பதம் பெரு நெறி ஆயிற்று -என்க –
ந அர்ஹந்தி சரணசத் தஸ்ய கலாம் கோடிதமீம் அபி -என்றபடி ஏனைய சாதனங்களைப் பற்றினோர்
விஷ்ணு பதத்தைப் பற்றினோர்க்குக் கோடியில் ஒரு பங்கு கூட ஈடாக மாட்டாத உயர்வு -சிறப்பு -உள்ளமை காண்க –
அது கடல் தாவிப் போவது -இது பிறவிக் கடல் தாவிப் போவது –
சம்சாரமிவ நிர்மம-என்று மமதை யற்றவன் சம்சாரக் கடலைத் தாண்டுவதைக் காளிதாசன் உவமித்துக் காட்டுவது கண்டு அறியத் தக்கது –
அது மேலை நிலம் -மேனாடு -தேசாந்தரம் -என்றபடி -பெறும்படி செய்வது -இது மேலை நிலம் -மேம்பட்ட பரமபதம் -பெறும்படி செய்வது
இரண்டும் இடை விடாதவைகளாய் ஏகுவன –
இதனால் சேதனரையும் ஈஸ்வரனையும் சேர்ப்பித்தல் என்னும் ஆசார்ய க்ருத்யம் ஆண்டான் இடம் அமைந்துள்ளமை காட்டப் பட்டதாயிற்று –

—————————————————————————————–

விண்ணில் புகும் பொறி ஆண்டானை மேவி மிகுத்து எழுந்தால்
கண்ணில் படுவன யாவும் கடுகெனும் காட்சியவாம்
எண்ணில் படும் இரு ஞாலம் இரைக்கு என்று இயங்குதல் போல்
மண்ணில் படிந்து இனி மாசுறலேனிம் மலருலகே –56-

ஆண்டான் ஆகிய விண்ணில் புகும் பொறி யை -என்க
மேவி -பொருந்தி –
மிகுந்து எழுந்தால் -மிகவும் உயரச் சென்றால் -மிகவும் பெருமை உற்றால் –
எண்ணில் படும் -நினைவில் தோற்றும் –
இரு ஞாலம் இரைக்கு என்று இயங்குதல் போல் எண்ணில் படும்-என இயையும் –

ஆண்டான் எனும் விமானத்தில் ஏறி மிகவும் உயருவோம் -மேன்மை யடைவோம் -அங்கன் உயர்ந்தால் நம் கண்ணில் படும் எல்லாப் பொருள்களும்
கடுகு என்னும் படி மிகவும் சிரியவைகளாகக் காட்சி யளிக்கும் -ஆண்டானைப் பற்றினார்க்கு பிரமன் முதலியோரும் அற்பர்களாகவே தோற்றுவர் -என்றபடி
மேலே நாம் செல்லும் போது இவ்வுலகம் ஓடுவது போலத் தோற்றம் அழிக்கும் -அது போலே ஆண்டானைப் பற்றினாருக்கு இம்மண்டலம் உண்டியே உடையே
உகந்து ஓடுவது போன்று தோன்றும் -இங்கனம் மிகுந்து எழும் சந்தர்ப்பத்தை விட்டு இவ்வுலகம் -உலகத்தவர் -மண்ணில் -சம்சாரத்தில் -படிந்து அழுக்கு அடைவது என்ன பயன் கருதியோ -என்றவாறு –
ஆண்டானை அண்டி மாசற்ற உயர் வாழ்வு கொண்டிடாது இம்மண்டலத்தையே உலகம் மண்டி வீணே மாசுருவதே -என இரங்கிக் கூறியபடி –
ஆண்டானை ஆஸ்ரயித்து மாசு நீங்கிப் பிறவிப் பயன் பெறுக எனபது கருத்து –

———————————————————————————————————————-

மலை நின்று மற்றை மலை மிசை தாண்டு மடங்கலுடல்
நிலை நின்ற சீவன் எனப்பவம் தாண்டவு நீத்தவர் கோன்
உலைவின்றி நின்ற உறவினில் தாண்டி நாம் உய்தும் எனக்
கலை யொன்றி நின்ற முதலி யாண்டான் சொல் கழறினனே –57-

மலை நின்று மற்றை மலை மிசை தாண்டு மடங்கலுடல்
நிலை நின்ற சீவன் எனப்பவம் தாண்டவு நீத்தவர் கோன்
உறவினில் தாண்டி நாம் உய்தும் எனக்
கலை யொன்றி நின்ற முதலி யாண்டான் சொல் கழறினனே –57

மடங்கல் -சிங்கம்
உடல் நிலை நின்ற சீவன் என-பிரியாது உடலில் நிலை பெற்றுள்ள பிராணிகள் போலே
சீவன் -சாதியொருமை
பவம் -சம்சாரம்
நீத்தவர் கோன் -எம்பெருமானார் -நீத்தவர் கோன் பாவம் தாண்டவும் -என மாறும்
உலைவின்றி நின்ற -உலைந்து போகாமல் இறுகி நின்ற
உறவின் -சம்பந்தத்தால்
உய்தும் -உஜ்ஜீவிப்போம்
கலை ஒன்றி -சாஸ்திரம் பயின்று
நின்ற -அதற்குத் தக அனுஷ்டித்தலை உடைய
கழறினனே-அருளிச் செய்தாரே

ஒரு சிங்கம் ஒரு மலையில் இருந்து மற்று ஒரு மலைக்குத் தாண்டும் போது அதன் உடலில் ஒட்டிக் கொண்டு இருக்கும் ஜீவா ராசிகளும்
ஒரு சிறிது முயற்சியும் இன்றித் தாமே தாண்டி விடுவது போலே எம்பெருமானார் சம்சாரத்தைத் தாண்டியதும் அவருடன் உலையாத
உறவு படைத்த நாமும் தாண்டி உய்வு பெறுவோம் -என்று -கற்று அறிந்து நடக்கும் முதலியாண்டான் அருளிச் செய்தார் -என்றபடி –
ஒரு மலையினின்றும் ஒரு மலையிலே தாவும் சிம்ஹ சரீரத்தில் ஜந்துக்களைப் போலே பாஷ்யகாரர் சம்சார லங்கணம் -தாண்டுதல் -பண்ண
அவரோடு உண்டான குடல் துவக்காலே -சம்பந்தத்தாலே -நாம் உத்தீர்ணர் -தாண்டினவர் -ஆவுதோம் என்று முதலி யாண்டான் அருளிச் செய்த பாசுரம்
என்று ரகஸ்ய த்ரய சார ஸ்ரீ ஸூ க்திகள் இங்கே அநு சந்திக்கத் தக்கவை –

————————————————————————————————

கழறினது என்னை கவின் அரங்கன் முன் கலந்திடைப் பெண்
குழுவுடன் என்று வினவ வங்கிப் புரக் கோன் குறித்த
மொழி விஜ யஸ்வ எனுமது கேட்டு முருட்டு வட
மொழியினை விட்டிலை அங்கும் என்று ஆண்டான் மொழிந்தனனே –58-

கழறினது என்னை -சொன்னது என்ன –
கவின் அரங்கன் முன் -அழகிய நம் பெருமாள் எதிரே
கலந்திடைப் பெண் குழுவுடன் என்று
வினவ -கேட்ப
வங்கிப் புரக் கோன் -வங்கி புரத்து நம்பி
இடைப்பெண் குழுவுடன் கலந்து கழறினது என்னை என இயைக்க –
முருட்டு வட மொழி–விஜ யஸ்வ என்னும் சமஸ்க்ருத மொழி
அங்கும் -பெண்கள் குழுவுடன் நிற்கும் போதும்
க கவின் அரங்கன் முன் இடைப் பெண்
குழுவுடன் கலந்து ழறினது என்னை-என்று ஆண்டான் -வினவ
அதற்கு வங்கிப் புரக் கோன் பதிலாக குறித்த
விஜ யஸ்வ எனும் மொழி யது கேட்டு அங்கும்
முருட்டு வட மொழியினை விட்டிலை என்று ஆண்டான் மொழிந்தனனே-எனக் கூட்டிப் பொருள் கொள்வது –

வங்கி புரத்து நம்பி ஒரு கால் இடைப் பெண்கள் அண்டையில் இருந்து பெருமாளை சேவித்துக் கொண்டு இருப்பதை ஆண்டான் கண்டு
ப்ராப்யமான ஸ்ரீ வைஷ்ண சமுதாயத்தை விட்டு அவர்கள் அண்டையில் நிற்பான் என் -எனக் கேட்ப
ஏதும் அறியாத இடைப் பெண்களுடன் இருந்தால் பெருமாள் திருவருள் அப்பள்ள மடியிலே பாயும் என்று இருந்தேன் என்று நம்பி பதில் கூறவும்
அவர்கள் சொன்னது என்ன -தேவரீர் அருளிச் செய்தது என்ன -என ஆண்டான் வினவி அருள
அவர்கள் நூறு பிராயம் புகுவீர் பொன்னாலே பூணூல் இடுவீர் -என்றால் போலே சொல்லினர்
அடியேன் -விஜயஸ்வ -என்றேன் -என நம்பி பதில் இருக்க
ஆண்டான் -அங்கே போயும் முருட்டு சம்ஸ்க்ருதம் விட்டீர் இல்லையே -எங்கு இருந்தாலும் நாம் நாம் காணும்
-இங்கே எழுந்து அருள்க -என்று அருளிச் செய்தார் எனபது ஐ திஹ்யம் –
வழுத்தி வழிபடுதல் அவரவர் தகுதிக்கு ஏற்ப அமையும் -பழகும் தமிழில் குழைந்து கூறும் பாவையர் அண்டையில்
நின்றும் நம்பி முருட்டு சமஸ்க்ருதத்தை விட்ட பாடில்லை –
ஏதும் அறியாத அடியேன் பழகும் தமிழில் வழுத்தும் இல்லாத இவ்வந்தாதி தகுதிக்கு ஏற்ப அமைந்து இருப்பது கண்டு
ஆண்டான் அகம் மகிழ்ந்து அருள் புரிவார் -எனபது ஒரு தலை –

———————————————————————————————————-

மொழியும் பெருமை முதலியாண்டான் பத மொய்ம்மலர் மேல்
குழையும் பரிவுள்ளடங்க கிலாது குதித்து எழுந்தே
இழையும் இனிய தமிழனில் ஏய்ந்த வந்தாதி யிதை
மொழியும் படி செய்திடும் ஒல்லை மூங்கையன் என்னையுமே –59-

மொழியும் பெருமை -பேசிப் புகல வேண்டிய பெருமை படைத்த
குழையும் பரிவு-குழைந்து போம்படி செய்யும் பக்தி
ஏய்ந்த அமைந்த

மொழியும் படி செய்திடும்
ஒல்லை -சீக்கிரமாக
மூங்கையன் -ஊமை போன்றவன்
மூங்கையன் என்னையுமே ஒல்லை மொழியும்படி செய்திடும் -என இயையும்

முதலியாண்டான் பத மொய்ம்மலர் மேல் -உள்ளடங்க கிலாது குதித்து எழுந்தே -இழையும் இனிய தமிழனில்
ஏய்ந்த வந்தாதி யிதை
மூங்கையன் என்னையுமே ஒல்லை மொழியும்படி செய்திடும்-என முடிக்க
பேசும் திறன் இன்மையின் மூங்கையன் எனப் பட்டது -என்னையுமே -இழிவு குறித்த ஏகாரம்
வருணிக்க வேண்டிய மகிமை வாய்ந்த முதலி யாண்டானது திருவடித் தாமரை மீது உண்டாகிய குழையும் படியான பக்தி
உள் அடங்க மாட்டாது குதித்து எழுந்து இழைகின்ற இனிய தமிழில் வாய்ந்த இவ்வந்தாதியை
ஊமை போன்ற என்னையுமே விரைவில் மொழியும் படி செய்து விட்டது -என்றபடி –
பேசும்படி செய்யும் பெருமை படைத்த ஆண்டான் மீது உண்டான பக்தி இந்த அந்தாதியைப் பாடுவித்ததே யன்றி
என் திறமையினால் இது பாடினேன் அல்லேன் -எனபது கருத்து –

———————————————————————————

என் பெரு நெஞ்சில் எதிபதி இன்னருள் பாய்ச்சியின்று
தன்புதம் தாங்கு முதலியாண்டான் பால் தனித்தமைந்த
அன்பினை வித்தித் தமிழ்க் கவி என்னும் அறும் கனியில்
வன் பெரு வையம் மகிழ்ந்திட வள்ளல் வழங்கினனே –60-

வள்ளலாகிய எதிபதி -எனது உள்ளமாகிய ஷேத்ரத்தில் தனது இனிய அருளாகிய நீரைப் பாய்ச்சி தனது திருவடி நிலையான
முதலி யாண்டான் மீது தனிப்பட்டு அமைந்த அன்பாகிற வித்தை விதைத்து -இந்தத் தமிழ்க் கவியாகிற அருமையான கனிகளை
இந்தக் கடிதான பெரிய உலகமும் மகிழுமாறு வழங்கினான் -என்றவாறு

ஆண்டான் பக்திக்கு அடி சொல்லுகிறது இப்பாட்டு -எம்பெருமானார் விதைத்த இப்பக்தி
கவிதைக் கனியாக மாறி இவுலகிற்குப் பயன்படுகிறது -என்க –

—————————————————————————————————————————————————–

வள்ளல் வழங்கினும் பூமா தமுதம் வலுவிலன்பன்
எள்ளவலேற்கும் இராமுசன் இதற்கு ஏற்ப வின்சொல்
அள்ளி யளிப்பினும் ஆன்றவர் ஆண்டான் அடி நசையே
கொள்ளும் திருமலை நல்லான் குளறல் கொளல் அழகே –61-

பூ மாது -ருக்மிணி
அன்பன் -குசேலன்
எள் அவல் -இகழப்படும் அவல் -வினைத்தொகை –
ஏற்கும் -ஏற்றுக் கொள்ளும் -வினை முற்று -வலுவில் ஏற்கும் என இயையும்
இராமானுசன் -பலராமன் தம்பி கண்ணன் -எம்பெருமானார்
இரட்டுற மொழிதலால் இதனை முன்னும் பின்னும் கூட்டி முன்னர் கூட்டியதற்கு கண்ணன் என்றும் பின்னர் கூட்டியதற்கு
எம்பெருமானார் என்றும் பொருள் கொள்க
இதற்கு ஏற்ப -இங்கனம் அவலைக் கொண்டதற்கு இசைய
ஆன்றவர் -பெரியார்
ஆண்டான் அடி -ஆண்டான் என்கிற திருவடி நிலை
நசை -ஆசை –

உருக்குமிணி சீருடை அமுதத்தை வழங்கினாலும் வள்ளல் இராமானுசன் அன்பானது இகழத் தகும் அவலை வலுவில் ஏற்றுக் கொண்டான்
இதற்கு ஏற்ப வள்ளல் இராமானுசன் ஆன்றவர் இன்சொல் அள்ளி அளிப்பினும் ஆண்டான் எனும் அடி நிலை நசையே கொள்ளும் அன்பன்
திருமலை நல்லானது இன்னாத குழறலைக்கொள்வது அழகியதே -என்றவாறு -கொளல் -கொள்ளுதல்
எள்ளவல் -என்பதற்கு ஏற்பச் சீர் அமுதம் எனவும் இன் சொல் என்பதற்கு ஏற்ப இன்னாத குளறல் எனவும் கொள்க
அன்புடையாறது கிடைத்தற்கு அறிதாதலின் வள்ளலும் எர்கின்றணன் என்க
தன் பால் அன்புடையாரத்தை இராமானுசன் எற்குமாயின் தன் அடி நிலையின்பால் நசை உடையாரத்தை ஏற்கக் கேட்க வேணுமோ
தம் திருவடி நிலையைப் புகழ்வதான இந்த அந்தாதியை அனுசந்தித்தால் எம்பெருமானார் மனம் உவந்து ஏற்று இன்னருள் புரிவர்
அவ்வின்னருளுக்கு இலக்காகி இதனை அனுசந்திப்பார் சதிராக வாழ்ந்திடுவர் என்று இதற்குப் பலம் கண்டு கொள்க —

வாழ்க அடி நிலை –வாழ்க இன்னருள் –வாழ்க எதிராசர் –

————————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அண்ணன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஆழ்வார் திருநகரி நல்லான் சக்கரவர்த்தி ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ முதலியாண்டான் திருவடிகளே சரணம் –
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ முதலியாண்டான் அந்தாதி -21-40-பாசுரங்கள்–ஸ்ரீ உ -வே -திரு நகரி நல்லான் சக்கரவர்த்தி ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள் இயற்றி அருளிய திவ்ய பிரபந்தம் –

July 29, 2015

விடிந்தது ஞாலம் விளிந்தது வெங்கலி மேவலருட்
படிந்தது பாயிருள் பண்டிதர் ஞானத் துறை படிய
நடந்தது நல்லாறு எதிபதி நாயிறு காய் கதிரே
படர்ந்தது போன்று படிமிசை யாண்டான் பரந்ததுமே –21

பாயிருள்-பரந்த இருள்
நல்லாறு-சத் சம்ப்ரதாயம்
எதிபதி நாயிறு காய் கதிரே -எம்பெருமானார் ஆகிய சூரியனது காய்கின்ற கிரணம்
படர்ந்தது -பரவினது
பரந்ததும் -பிரசித்தி யடைந்ததும் –

———————————————————————————————-

பரந்த நன் ஞான முதலியாண்டான் சிரி பாடியத்தைத்
தருந்தவன் ஏவலின் சிந்தையின் ஆவலின் தானடந்து
திருந்திட மேவலர் ஐந்திடம் நாரணர் சீர் அனைத்தும்
பொருந்திட நாட்டினன் பூங்கழல் போக்கும் பொருந்தவமே–22-

சிரி பாடியத்தைத் தருந்தவன் -ஸ்ரீ பாஷ்யத்தை அருளிச் செய்த முனிவராகிய எம்பெருமானார்
ஏவலின் சிந்தையின் -திரு உள்ளம் போலே
மேவலர் -மற்றை மதத்தவர்
ஐந்திடம் -தழைக்காடு, தொண்டனூர் ,கதுகலம் ,விஜயாபுரம் , பேலூர் -என்னும் ஐந்து இடங்களில்
நாரணர் -முறையே -கீர்த்தி நாராயணன் ,ஸ்ரீ மண் நாராயணன் ,வீர நாராயணன் ,விஜய நாராயணன் ,கேசவ நாராயணன் -என்னும் ஐந்து நாராயணர்களை
சீர் அனைத்தும் பொருந்திட நாட்டினன் -சிறப்புக்கள் எல்லாம் நிரந்தரமாய் நடக்கும் படி பிரதிஷ்டை செய்தவர் -வினையால் அணையும் பெயர்
பொருந்தவமே–பொருந்தும் அவன் -எனப் பிரிக்க –

சிரி பாடியத்தைத் தரும் தவன் -ஏதலின் ஆவலின் சிந்தையின் தானடந்து
மேவலர் திருந்திட நாரணர்ஐந்திடம் சீர் அனைத்தும்
பொருந்திட நாட்டினன்
பரந்த நன் ஞான முதலியாண்டான்
பூங்கழல் பொருந்து அவம் போக்கும் -என்க —

எம்பெருமானார் நியமனத்தால் எழுந்து அருளி ஐந்து இடங்களில் அங்கு உள்ளாரைத் திருத்தி
முதலி யாண்டான் பஞ்ச நாராயண பிரதிஷ்டை செய்து அருளினார் -எனபது வரலாறு –

—————————————————————————————————–

அவமே பிறப்பைக் கழிக்கும் அளியத்த மாநிடங்காள்
நவமேய் வியப்புப் பொறி பல கண்டும் நவையில் நைந்தீர்
பவமே கடத்தும் பெருங்கலன் ஆண்டான் பரிந்து அருளின்
திவமே எடுத்துச் செலும் பொறி சீரெதி சேகரனே –23-

நவமேய் வியப்புப் பொறி -புதுமை பொருந்திய வியக்கத் தக்க யந்திரங்கள்
நவையில் நைந்தீர் -குற்றம் மெலிந்தீர்
பவம் -சம்சாரம்
பெருங்கலன் -பெரிய கப்பல்
ஆண்டான் பரிந்து அருளின்
திவம் -பரமபதம்
எடுத்துச் செலும் பொறி -ஆகாய விமானம் –

மாநிடங்காள் கண்டும் நவையின் நைந்தீர் ஆண்டான் பரிந்து அருளின் சீர் எதிசெகரன் பெரும் கலனும் பொறியும் ஆவான் -எனக் கூட்டுக –
பெரும் கலன் என்பதற்கு ஏற்ப -பவம் எனபது சம்சார சமுத்ரம் எனக் கொள்க -இஃது ஏகதேச உருவகம்
கடத்தும் என்றமையின் அநிஷ்ட நிவ்ருத்தியும்
எடுத்துச் செலும் பொறி -என்றமையின் இஷ்ட பிராப்தியும் சொல்லப் பட்டன –
இப்பெரும் கலனும் பொறியும் கொண்டு நவை நீங்குமின் -எனபது குறிப்பு எச்சம் –

——————————————————————————————————

கரம் காலில் சாடிக் கடியவும் ஆண்டான் கருணை நின்பால்
வரும் காறும் வாடிப் பசியினுன் வாசலில் மாழ்கி நிற்கும்
அரும் காதல் நம்பி வழுதி வள நாட்டு அடியரைப் போல்
மருங்கு ஆதரத்தொடு அழைத்து நாயேற்கும் வழங்கு அருளே –24–

கரம் காலில் சாடிக் கடியவும் -கையினாலும் காலினாலும் கோபிக்கவும்
வரும் காறும் -வருகிற வரையிலும்
வாடிப் பசியினுன் வாசலில் -பசியின் வாடி உன் வாசலில் -என மாற்றுக
மாழ்கி நிற்கும் -வருந்தி இருக்கும்
அரும் காதல் -பக்தி யுடன்
நம்பி வழுதி வள நாட்டு அடியரைப் போல் -நம்பி திரு வழுதி வளநாடு தாசர்
மருங்கு -பக்கத்தில்
வழங்கு -கொடுக்க -வேண்டற்பொருள் வியங்கோள்

நம்பி திரு வழுதி வளநாடு தாசரை முதலி யாண்டான் கோபித்துக் கையாலும் காலாலும் துகைத்து இழுத்தவாறே
அவர் திண்ணையில் பட்டினியாய் ஒரு நாள் முற்றும் வேறே எங்கும் போகாதே கிடந்தார் –
ஆண்டான் மறு நாள் பட்டினியாய் வாசலில் கிடப்பதை அறிந்து அழைத்து -நீ போகாதே கிடந்தது -என் என்று கேட்ப
அதற்கு அவர் ஒரு நாள் பிடி சோறு இட்டவன் எல்லாப் படியாலும் நிந்தித்தாலும் வாசல் விட்டுப் போகிறதில்லை நாய்
-நான் எங்கே போவது -என்றார் எனபது ஐதிஹ்யம் –

———————————————————————————————-

அருளாரும் ஆசான் அளித்திடும் ஆணைக்கு அநு குணமாத்
தெருளாரும் சீடன் செயலின் தருமக் கிழத்தி நேர்வான்
உருவாவன் உள்ளமது எண்ணிய வண்ணம் ஒழுகுதலால்
அரு அறமாம் நினைப்பாய் என ஆண்டான் அருளினனே –25-

அருளாரும் ஆசான் அளித்திடும் ஆணைக்கு -அருள் நிறைந்த ஆசாரியன் உத்தரவுக்கு
அநு குணமாத்-தக்கவாறு
தெருளாரும் சீடன் செயலின் தருமக் கிழத்தி நேர்வான் -தெளிவு நிறைந்த சீடன் தருமா பத்தினிக்கு சமமாவான்
உருவாவன் -சரீரமாவான் –
உள்ளமது எண்ணிய வண்ணம் ஒழுகுதலால் அரு அறமாம் -நினைத்த படி -நினைவு ரூபமாய் இருந்து உருவற்ற ஸூஷ்ம தர்மமும் ஆவான்
நினைப்பாய் என ஆண்டான் அருளினனே -இப்படி அருளிச் செய்தார் –

சீடன் ஆசான் அளித்திடும் ஆணைக்கு அநு குணமாகச் செயலின் தருமக் கிழத்தி நேர்வான்
சீடன் ஆசான் உள்ளமது எண்ணிய வண்ணம் ஒழுகுதலால் உரு ஆவான் –
சீடன் நினைப்பாய் அரு அறம் ஆம் என ஆண்டான் அருளினான் –

——————————————————————————————-

அருளி ராமானுசன் ஆசான் அடியார் இளம் பெருமாள்
மருளி ராமானசன் ஆண்டான் மருவு நன் கூற மன்னன்
மருவி ராமானுசன் கைச் சுகம் கண்டவன் மைந்தன் இங்கே
ஒருவிரா மாண்பில் நஞ்சீயரும் வாய் மொழி ஒதினரே –26-

ஆண்டான் -கருணை நிறைந்த எம்பெருமானார் உமக்கு ஆசார்யர்
இளைய பெருமாள் என்பவர் உம்முடைய சீடர்
மதி மயங்காத மனம் படைத்த கூரத் தாழ்வான் பழகும் நண்பர்
எம்பெருமானார் தம் கையில் வைத்துக் கொண்டாடின படியால் அவர் கைச் சுகம் கண்டவன் மைந்தன் –
நீங்காத மதிப்புடைய நஞ்சீயரும் இங்கே திருவாய்மொழி ஓதினர் –
அடியார் -சீடர்
மருள் இரா -மயக்கம் இல்லாத
மா நசன் -மனம் உடையவன்
மருவு நன் -பழகுபவன்
மருவு -பொருந்துகிற
ஒருவு இரா -நீங்குதல் இல்லாத -ஒருவு -தொழில் பெயர் -இரா ஈறு கெட்ட எதிர்மறைப் பெயர் எச்சம்

முதலியாண்டான் திருக் குமாரர் கந்தாடை யாண்டான் -அவரைக் குழந்தைப் பருவத்தில் எம்பெருமானார்
கட்டில் அடங்காத பிரேமத்துடன் கையிலே எடுத்துக் கொண்டாடி அருளினார் எனபது வரலாறு –
நஞ்சீயர் திருவாய் மொழி யோதியது ஆண்டான் இடம் எனபது ஐதிஹ்யம் -கந்தாடை யாண்டான் இடம் என அரும் பதங்கள் கூறுகின்றன –

—————————————————————————————–

ஒதினார்க்கு ஆண்டான் ஒருமுறை யுன்பால் உணர்கிலராய்
ஓதினர் மீளவும் மந்திரம் எம்பார் உனை யடைந்தே
ஏதம் என்பாலது நீ பொறுக்கு என்ன இருவரும் கை
ஈதலின் ஏறல் எளிது எனல் ஆர்க்கும் எளிதலதே –27-

ஒரு முறை உன்பால் ஒதினருக்கு -என இயையும்
ஆர்க்கும் -சிறப்பு உம்மை
எளிது அலது -சுலபம் ஆனதன்று
முன்னரே ஆண்டான் இடம் மந்திர உபதேசம் பெற்று இருந்த ஒருவர்க்கு அதனை அறியாது மீண்டும் மந்திர உபதேசம் செய்து விட்டார் எம்பார் –
பின்னர் விஷயம் அறிந்து ஆண்டான் இடம் எழுந்து அருளி அடியேனது குற்றத்தை மன்னித்து அருளால் வேண்டும் என வேண்டினார்
அதற்கு ஆண்டான் -கிணற்றில் விழுந்த ஒருவனை இருவர் கை கொடுத்து எடுத்தால் ஏறுமவனுக்கும் எடுப்பவருக்கும் சுலபமாய் இருக்குமே
நீர் மந்திர உபதேசம் செய்ததில் என்ன தவறு இருக்கிறது -என்று அமைதியாகப் பதில் அளித்தார் எனபது ஐதிஹ்யம் –

————————————————————————————————————-

அலர் நங்கை தங்கும் அரங்கனைப் பல்லிளித்து அண்டி நின்று
பலனங்கை யாண்டான் படைத்தது என் கூரப் பதியொடு எனும்
வலனங்கை முத்தண்டு ஒளிர் வடிவேயுள் வடுக நம்பி
கலன் எங்கன் ஆண்டான் கழித்தன கொண்டு களித்தனனே –28-

அலர் நங்கை தங்கும் அரங்கனைப் பல்லிளித்து அண்டி நின்று பலனங்கை யாண்டான் படைத்தது என் கூரப் பதியொடு –
ஆண்டான் கூரப் பதியொடு -திருமகள் தங்கு அரங்கனை அண்டி நின்று-பல்லிளித்து அம் கை பலன் படைத்தது என் -என இயையும்
எனும் -என்று கூறும் -இதனை வடுக நம்பியோடு சேர்க்க –
வலனங்கை -வலத்திருக்கை –
முத்தண்டு ஒளிர் வடிவேயுள் வடுக நம்பி -த்ரி தண்டம் பிரகாசிக்கிற எம்பெருமானார் திவ்ய மங்கள விக்ராஹத்தையே நினைக்கின்ற வடுக நம்பி -வினைத் தொகை –
கலன்-பாண்டங்கள் –
எங்கன் ஆண்டான் கழித்தன -முதலி யாண்டான் உபயோகித்து விடப்பட்டன -பலவின் பால் பெயர் –
எனும் வடுக நம்பி ஆண்டான் கழித்தன கலன் எங்கன் கொண்டு களித்தனன் என்று கூட்டி முடிப்பது கொண்டு களித்தனனே –

மோஷத்திற்கு உட்பட எம்பெருமானாரே உடையவர் ஆதலின் அவர் தாராதது இல்லை –
ஆழ்வானும் ஆண்டானும் அரங்கனை யண்டிப் பல்லிளித்துப் கெஞ்சிப் பெற்ற பயன் யாது –என்று வடுக நம்பி பரிஹசித்தாராம்
வடுக நம்பி ஆழ்வானையும் ஆண்டானையும் இருகரையர் என்பர் -என்னும் ஸ்ரீ வசன பூஷண ஸ்ரீ ஸூ க்தியும்
அதன் வியாக்யானமும் இங்கு அனுசந்திக்கத் தக்கன –
வடிவே -ஏகாரம் பிரிநிலைக் கண் வந்தது -முக்கோல் ஏந்திய உடையவர் வடிவை யன்றிச் செங்கோல்
உடைய வடிவை -திருவரங்கச் செல்வனை -மனத்தில் கொள்ளார் -என்றபடி
தேக பந்துக்கள் சிலர் சின்னாள் தம் திரு மாளிகையில் இருந்து பின்னர் ஊர் சென்றனராக வடுக நம்பி தம் திரு மாளிகையைத்
தூய்மைப் படுத்தி ஆண்டான் ஆண்டு களித்த பழைய பாண்டங்களைக் கொணர்ந்து உபயோகித்துக் குறை தீர்ந்து மகிழ்ந்தார் -என்ப
-விலஷணமான ஆசார்ய சம்பந்தம் வாய்ந்தவர் ஆண்டு கழித்தன பழையன வேனும் தூயனவே எனபது வடுக நம்பி திரு உள்ளம் –
ஏதோ ஒருகால் அரங்கன் முன் பல்லிளித்தாலும் எம்பெருமானார் உறவே ஆண்டான் இடம் உறைந்து உள்ளது என்பதை உணர்க —

——————————————————————————————-

களி வண்டு அறைகின்ற தண் துழாய்க் கண்ணி யரங்கன் என்னும்
தெளி தண்டுறை நின்று தீர்த்தமது ஆடத் துயம் எனும் பேர்
ஒளி கொண்டுரை நின்ற மந்திரமுட் செல்படி எனத் தண்
ணளி மண்டுறைகின்ற ஆண்டான் அகமதில் கொண்டனனே –29-

அறைகின்ற -சப்திக்கின்ற
ஒளி -ஞானம் –
உரைநின்ற -கீர்த்தி நிலை பெற்ற
தண்ணளி -கிருபை
மண்டுறைகின்ற -மண்டு உறைகின்ற -என்க-மண்டு -மண்டுதளாக -நிறைந்து -என்றபடி –
அகமதில் -திரு உள்ளத்தில்

களிக்கும் வண்டுகள் முரலும் திருத் துழாய் மாலையை யணிந்த
திருவரங்கம் எனப்படும் தெளிந்த குளிர்ந்த துறையில் இருந்து நீராடுவதற்கு
த்வயம் என்னும் பெரிய ஞானப் பிரகாசத்துடன் கீர்த்தி பெற்ற மந்த்ரத்தை அத்துறையுள் இறங்குவதற்கு உரிய படி என்று
தண்ணளி நிறைந்து உறைகின்ற முதலியாண்டான் திரு உள்ளத்தில் கொண்டார் என்றவாறு –
மந்திர ரத்னம் எனப்படும் த்வயத்தைக் கொண்டு திரு வரங்க நாதரை அனுபவிப்பார் -என்றபடி –
பிரமாணத்தில் சிறந்தது த்வயம் –ப்ரமேயத்தில் சிறந்தது அர்ச்சை எனபது கருத்து –

———————————————————————————————————–

கொண்டலை யாண்ட விராமானுசன் அருள் கூர்ந்து ஒகுகால்
பண்டலை யாண்ட பழ மறையாம் எழுத்தின் பொருளை –
மண்டலை யான்டாற்க்கு அருளிட மைந்தன் மருவியதை –
மண்டலை யாண்டு அறிந்து அன்னது -வாங்கினர் பட்டருமே -30-

கொண்டலை யாண்ட -மேகத்தை ஒத்த -விராமானுசன் அருள் கூர்ந்து ஒகுகால்
பண்டலை யாண்ட பழ மறையாம் -பண்ணைத் தன்னிடம் உபயோகிக்கும் பழைய வேதம்
பழ மறையாம் எழுத்தின் பொருளை -பண்டைய வேதமாக விரியும் எழுத்து -பிரணவம் -ஓங்கார பிரபவா வேதா -என்றது காண்க –
மண்டலை யான்டாற்க்கு -பூமியில் தலைவரான முதலி யான்டானுக்கு
அருளிட மைந்தன் மருவியதை -கந்தாடை யாண்டான் -அதை மருவி
மண்டலை -நன்றாய் அனுபவித்தலை -தொழில் பெயர் –
யாண்டு -அங்கு
அறிந்து அன்னது -அப்படிப்பட்ட எழுத்தின் பொருளை –
வாங்கினர் பட்டருமே –

இராமானுசன் அருள் கூர்ந்து எழுத்தின் பொருளை ஆண்டாற்கு அளிப்ப –
மைந்தன் அதை மருவி மண்டலை அறிந்து பட்டரும் ஆண்டு அன்னது வாங்கினர் -எனபது –
எம்பெருமானார் ஒருகால் உகந்து அருள் கூர்ந்து பிரணவ அர்த்தத்தை ஆண்டானுக்கு அளிக்க
அதனை அவர் மைந்தன் பெற்று அனுபவிப்பதை அறிந்து
அவ்வரும் பொருளை அவர் இடம் இருந்து பட்டர் பெற்றார் எனபது ஐதிஹ்யம் –

—————————————————————————————————–

பட்டரைப் பூத்திடும் நம் பெருமாளின் பதமலரே
மட்டறு மா மகிழ் வேய்ந்திட வாய்ந்த வழி வடிவம்
நெட்டுறு நற்பேறு உடையவர் நீங்கின் உசாத் துணையாம்
விட்டில ஐம்படை என்று எமதாண்டான் விளம்பினனே –31-

பட்டரைப் பூத்திடும் -அரை பட்டு பூத்திடும் -என மாற்றுக -திருவரையிலே புஷ்பித்தது போலே பட்டு நம்பெருமாளுக்குப் பொருந்தி அழகு தருதல் காண்க
மட்டறு -அளவு இல்லாத
-ஏய்ந்திட -பொருந்த
வழி -உபாயம்
நெட்டுறு நற்பேறு -நீண்ட பெரிய நல்ல பலன் –
நீங்கின் உசாத் துணையாம் -பிரிந்து இருந்தால் பேசிப் பழகும் துணையாம்
விட்டில ஐம்படை -நீங்காதனவாகிய ஐம்படை -ஐம்படை உசாத் துணையாம் -என இயைக்க –

ஒரு கால் நம்பெருமாள் ஆயிரக்கால் மண்டபத்தில் கோடை கொண்டாடி உலாவி அருளும் போது வினவிய ஆழ்வானை நோக்கி
அனுபவ ஆனந்தத்தின் பெருக்காய் அமைந்த உபாயமாக நம் பெருமாள் திருவடி மலர்களையும் –
உபேயமாகத் திரு மேனியையும்
எம்பெருமானார் இல்லாத காலத்து உசாத் துணையாக நம்பெருமாள் ஏந்திய ஐம்படை களையும் கொண்டு இருப்பேன் –
என்று முதலியாண்டான் அருளிச் செய்ததாகக் கூறப்படுகிறது –

—————————————————————————————————————–

விளம்பிடும் ஐந்து நிலையினும் பண்பின் மிகுதியினால்
உளம்படு மன்பர்கள் உன்னும் வண்ணம் உருக் கொளலால்
வளம்படு வானம் வருதிரை வாரிதி மன்னு நிலை
இளம்படி யர்ச்சைக்கு அமிசம் என்று ஆண்டான் இயம்பினனே –32-

விளம்பிடும் ஐந்து நிலையினும் பண்பின் மிகுதியினால் -சாஸ்த்ரங்களில் சொல்லப்படும் பரத்வம் வ்யூஹம் விபவம் அந்தர்யாமித்வம் அர்ச்சாவதாரம்
என்று ஐந்து நிலைகளிலும் -குண உத்கர்ஷம் -இருட்டறையிலே விளக்குப் போலே வாத்சல்யாதி குணங்கள் அர்ச்சையிலேயே மிக்கு விளங்குகின்றன –
உளம்படு மன்பர்கள் -மனத்தில் உண்டான பக்தியை உடையவர்கள்
உன்னும் அவ வண்ணம் -நினைத்த படியே
உருக் கொளலால் -வடிவம் எடுத்துக் கொள்ளுதலால்
வளம்படு வானம் -செழிப்பு உடைய பரம பதம்
வருதிரை வாரிதி -அலை வீசும் ஷீராப்தி
மன்னு நிலை
இளம்படி யர்ச்சைக்கு -இன்று எழுந்து அருளப் பணிய இளைய -புதிய -திவ்ய மங்கள விக்ரஹத்தை உடைய அர்ச்சை நிலை க்கு –அமிசம் என்று ஆண்டான் இயம்பினனே –

எம்பெருமான் பக்தர்களுக்காக ஐந்து நிலைகள் கொள்கிறான் -அவற்றுள் எல்லாக் குணங்களும் புஷ்கலங்களாய் இருப்பதாலும்
பக்தர்கள் விரும்பிய படி எல்லாம் வடிவும் எடுப்பதாலும் உயர்ந்தோர் தாழ்ந்தோர் என்று அல்லாமல் எல்லாரும் கண்டு களிக்கும் அர்ச்சையே முக்கியமானது –
பரதவ வ்யூஹாதிகளை இன்று எழுந்து அருளப் பண்ணிய அர்ச்சையின் ஒரு பகுதியாகவே கொள்ளல் வேண்டும் -என்றபடி –
இங்கு -அங்குத்தைக்கு -பரமபத நாதனுக்கு உகந்து அருளின இடத்தை -அர்ச்சாவதாரத்தை -விபூதியாக சேஷமாக நினையாதே
இங்குத்தைக்கு -அர்ச்சாவதாரத்துக்கு அவ்விடத்தை விபூதியாக நினையுங்கோள்-என்று பணிக்கும் ஆண்டான் -ஈட்டு ஸ்ரீ ஸூ கதிகள் காணத் தக்கது –

———————————————————————————————–

இயம்பரும் அன்பினர் ஆண்டான் எதிரும எம்பார் இவர்கள்
பயம் பெறப் பல்கும் திரு நாட குழுவினுள் பட்டு நின்று இந்
நயம் பெரு நாளுள் புகுதலில் தப்பினர் நம்பெருமாள்
சயம் பெறுக என்று வழுத்தித் தழுவினர் தண்டன் இட்டே –33-

இயம்பரும் அன்பினர் –இயம்பரும் -சொல்ல முடியாத -இயம்ப அரும் அன்பராகிய
ஆண்டான் எதிரும எம்பார் இவர்கள் -எதிரும் -சந்திக்கும்
பயம் பெறப் பல்கும் -அச்சம் அடையும்படி பெருகும்

ஆண்டானும் எம்பாரும் ஆகிய இவர்கள் –
பயம் பெறப் பல்கும் திரு நாட குழுவினுள் பட்டு நின்று இந்
நயம் பெரு நாளுள் புகுதலில் -நாளில் உள்புகுதலின் -தப்பினர் நம்பெருமாள்
சயம் பெறுக என்று வழுத்தித் தழுவினர் தண்டன் இட்டே –என்று கூட்டி முடிக்க –

நம்பெருமாள் உத்சவம் கொண்டாடி அருளி தீர்த்தவாரியாகி உள்ளே எழுந்து அருளின வன்று மாலை ஆண்டானும் எம்பாரும் சந்தித்து
அஹங்கார மமகார தூஷிதராய் இருப்பார் பத்துக் கோடிப் பேர் நடுவே அதி ஸூ குமாரமான திரு மேனியைக் கொண்டு பத்து நாள்
எழுந்து அருளி நம் பெருமான் -அபாயம் இன்றி ஆஸ்தானத்துக்கு எழுந்து அருளித் தப்பின படி கண்டீரே -என்று
ஒருவரை ஒருவர் தண்டன் இட்டு தழுவிக் கொண்டதாக ஐதிஹ்யம் –

—————————————————————————————

தண் திருக்கில் மனத்து ஆச்சானோடு மன்னி தண் திருப்பேர்
வண்டு இருக்கும் திருக் கோயிலில் மண்டலின் கண் துயிலைக்
கொண்டு இருக்கும் குணக் கொண்டலை யண்டி நீ கண்டிலை கைக்
கொண்டிருக்கும் அந் நடை கொண்டிலை யாண்டான் குண திசைக்கே –34-

தண் திருக்கில் மனத்து -குளிர்ந்த குற்றம் அற்ற மனமுடைய -தண் மனம் -திருக்கு இல் மனம் -என்று இயையும்
ஆச்சானோடு மன்னி தண் திருப்பேர் -ஆச்சானுடன் பொருந்தி குளிர்ந்த திருப்பேர் என்னும் திருப்பதியின் கண் உள்ள
வண்டு இருக்கும் திருக் கோயிலில் -பூக்கள் மாறாது இருத்தலின் என்றும் வண்டுகள் வாஸம் செய்யும் சந்நிதி அழகிலேயே
மண்டலின் -நன்கு அனுபவிப்பதனால்
கண் துயிலைக் கொண்டு இருக்கும் குணக் கொண்டலை -கண் துயிலைக் கொண்டு இருக்கும் நற்குணம் வாய்ந்த மேகம் போன்ற
எம்பெருமானை -வண்டு இருக்கும் திருக் கோயில் ஆதலின் அப் பூம் சோலையில் கொண்டல் வந்து படிந்தது -என்க
யண்டி -நெருங்கி
நீ கண்டிலை -உல் புகுந்து சேவித்திலை-
கைக் கொண்டிருக்கும் -ஏற்றுக் கொண்டு இருக்கும் -கை -தமிழ் உபசர்க்கம் –
அந் நடை கொண்டிலை யாண்டான் குண திசைக்கே –நடை -யாத்ரை -குண திசை -கீழ் திசை –
குண திசைக்குக் கைக் கொண்டு இருக்கும் நடை கொண்டிலை -என இயையும் –

ஆச்சானும் ஆண்டானும் ஸ்ரீ ரங்கத்தில் இருந்து கீழ் திசை நோக்கி எழுந்து அருளும் போது திருப் பேரைக் கண்டு உட்புக்குத் திருவடி
தொழவும் மாட்டாதே -அதனை விட்டு மேலும் கிழக்கே போகவும் மாட்டாதே திகைத்து நின்றனர் -என்பது ஐதிஹ்யம் –
பூவியல் பொழிலும் கோயிலும் கண்டு ஆவி உள்குளிர அப்படியே எதுவும் செய்ய மாட்டாது நின்றனர் -எனபது கருத்து –

—————————————————————————————–

மற்றது என் பேச மதிக்கும் தவமுனி மன்னிரவில்
உற்றதும் பள்ளி யொருமுறை ஒண் தமிழ்ப் பாவுரைப்ப
நற்றவன் ஆண்டான் உருகினன் நைதலின் நான் மறையே
சொற்ற விப்பா வெனத் தோன்றிடும் என்றவன் சொல்லிடினே –36-

தவமுனி மன்னிரவில் உற்றதும் பள்ளி -எம்பெருமானார் பள்ளி உற்றதும் -படுக்கை அடைந்ததும் –
நற்றவன் ஆண்டான் -நல்ல பாக்யசாலி
உருகினன் -முற்று எச்சம் –
சொற்ற -சொன்ன
அவன் -அந்த எம்பெருமானார் –
மதிக்கும் தவ முனிவன் இரவில் பள்ளி உற்றதும் ஒண் தமிழ்ப் பா உரைப்ப –
அதனைக் கேட்டு -நல் தவன் ஆண்டான் உருகினன் நைதலின்
சொற்ற இப்பா நான் மறையே வெனத் தோன்றிடும் என்றவன் சொல்லிடின் மற்றது என் பேச -எனக் கூட்டுவது

எம்பெருமானார் இரவில் திவ்ய ப்ரபந்தம் அனுசந்திப்பது வழக்கம் -ஒரு நாள் பள்ளிக் கட்டிலில் ஒரு பாட்டை அனுசந்திப்பதைக் கேட்டு
முதலியாண்டான் பரவசராய் ஈடுபட்டு உருகினார் -அதனைக் கண்ட எம்பெருமானார் -வேதம் வால்மிகி வாயிலாக ஸ்ரீ ராமாயனமாய் வந்தது போலே
ஆழ்வார் வாயிலாகத் திருவாய் மொழியாய் அது வந்து திருவவதரித்தது -அதனால் அன்றோ இவர் பரவசரானார் -என்று அருளிச் செய்தார் எனபது வரலாறு –
திருவாய் மொழியை வேதம் எனத் தீர்மானிப்பதற்கு எம்பெருமானாரே இவர் பரவசமானதைக் காரணமாகக் காட்டுவாராயின்
நம் போன்றவர் இவர் பெருமை பற்றிப் பேச என்ன இருக்கிறது என்க –

——————————————————————————–

சொல்லரும் பாவலர் நங்கை துணைவன் துணை யடிமேல்
பல்லரும் பாவலர் நா வீறுடைய பராங்குசன் தன்
நல்லரும் பாவலரும் கொள் கருத்தை நனியினிப்பச்
சொல்லரும் பாவலன் தொல் புகழ் ஆண்டான் துணை நமக்கே –37-

சொல்லரும் பாவலர் நங்கை துணைவன் வருணிக்க முடியாத -பாவு அலர் நங்கை -பரந்த மலரிலே வசிக்கும் திருமகள் –
துணை யடிமேல் –கேள்வனுடைய இரண்டு திருவடிகள் விஷயமாக
பல்லரும் -பல் அரும் பா -பழ அருமையான பாடல்கள்
பாவலர் நா வீறுடைய பராங்குசன் தன்-அலர் -விரியும் -நா வீறு -வாக்கு வன்மை
நல்லரும் பாவலரும் -நல்ல அருமையான பாக்களில் வல்ல புலவர்களும் -இனி -நல்லவர்களும் என்னவுமாம் –
கொள்-ஏற்கும் –
சொல்லரும் பாவலன் -சொல் அரும்பு ஆவலன் -சொல்லுவதில் அரும்புகின்ற ஆவலை உடையவன் -சொல்லுகிற அரிய பாவலன் -என்னவுமாம்

சொல்லரும் -என்று வருணிக்க இயலாமையை அலர் நங்கை துனைவனுக்குச் சேர்க்க –
திருமாலவன் கவி -யாதலின் -நங்கை துணைவன் -எனப்பட்டது –
முகில் வண்ணன் அடி மேல் சொன்ன ஆயிரம் -ஆதலின் -அடிமேல் –பா -எனப் பட்டது
பராங்குசன் தன் கருத்தை என இயையும் -அக்கருத்து நல்லரும் பாவலரும் கொள்வது -என்க

பராங்குசன் கருத்தைச் சொல்வதில் ஆவல் பூண்டு பேர் படைத்த முதலி யாண்டானே திரு வாய் மொழியின்
கருத்தை அரிய நமக்குத் துணையாவார் எனபது கருத்து –
ஆண்டான் இனிப்பச் சொல்லும் கருத்துக்களை அடுத்த இரண்டு பாடல்களில் காண்க –

————————————————————————————————–

நமக்கருள் கூர் குருகூர்ச் சடகோபர் நமன் தமரால்
தமக்கலைப் பூணுணும் அவ்வல்லல் கண்ணன் தவிர்த்தனனா
அமைக்கும் அவ்வல்லல் அவன் கரம் விட்டதாகக் கொண்டடியார்
தமக்கும் தகும் என ஆண்டான் அமைவுரை சாற்றினனே –38-

நமன் தமரால் -யம தூதரால்
அலைப் பூணுணும் அவ்வல்லல் -அலைப் பூண் உணும் அவ்வல்லல் -அலைப்புண்டுபடும் அந்தத் துன்பம்
தவிர்த்தனனா -போக்கினனாக
அமைக்கும் அவ்வல்லல் -அருளிச் செய்து வைத்த அந்தத் துன்பம்
அவன் -அந்தக் கண்ணன்
கரம் விட்டதாகக் கொண்டடியார் தமக்கும் -கை விட்டதாகக் கொண்டு பாவித்து பாகவதர்களுக்கும் பொருந்தும் –

நமன் தமரால் நேரும் அல்லல் பாகவதர்களுக்கு இல்லை என நூல்கள் சொல்லும் -அங்கன் இருக்க -நம்மாழ்வார் அவ்வல்லலைத் தமக்குக் கண்ணன்
தவிர்த்ததாகக் கூறுவது எங்கனம் பொருந்தும் -என்ற கேள்விக்கு ஆண்டான் இருத்த விடை இப்பாடளில்கூரப் படுகின்றது

பகவத் சம்பந்தம் உடையாருக்கு அவ்வல்லல் இல்லை எனபது உண்மையே -ஆனால் கண்ணனைப் பிரிந்து வருந்தும் நம்மாழ்வார் ஆற்றாமை
மீதூர்ந்து ஸ்வ தந்த்ரனான சர்வேஸ்வரன் தம்மைக் கை விட்டதாகவே நினைத்து விட்டார் –
விடவே பகவத் சம்பந்தம் நீன்கினமையினால் நமன் தமரால் நேரும் அல்லலும் வந்தது தான் என்று அவர் பாவித்தார் –
கண்ணன் வந்து கலக்கவே -வந்ததாகப் பாவித்த அவ்வல்லலைக் கண்ணன் அகற்றி விட்டதாகக் கூறுவது பொருந்தும் எனபது ஆண்டான் அருளிய விடை –
இங்கு -தலைப் பெய்காலம் -என்ற திருவாய் மொழிப் பாசுரமும் -பகவத் அலாபமேயான பின்பு யம வச்யதையும் வந்ததே யன்றோ -என்று
அந்த யம வச்யதை போம்படியாக -என்று ஆண்டான் நிர்வஹிக்கும் படி -என்ற ஈடு வியாக்யானமும் அறிதற்கு உரியன –

————————————————————————————————————————

சாற்றிடும் ஒத்தல் எம் பெம்மான் தனக்குளம் ஒத்திருத்தல்
மாற்றொரு பற்றறும் தன்மை கண் வானத்து வைத்தல் அன்பர்
ஆற்றலை மாற்றல் அழகினில் உற்றார் அழிப்பெனவும்
மாற்றுரை யாண்டான் மகிழ வழங்கி யருளினனே –39-

சாற்றிடும் -சொல்லப்படும் -எம் பெம்மான் தனக்கு -எனபது முன்னும் பின்னும் கூட்டக் கடவது –
எம் பெம்மான் தனக்கு ஒத்தல் -எம் பெம்மான் தனக்கு உளம் ஒத்திருத்தல் -என்றதாயிற்று
எம் பெம்மானோடு ஒத்தே -திருவாய் மொழி -8-8-6-என்னும் இடத்து ஒத்தலாவது உளம் ஒத்து இருத்தல் எனவும்
கண் வானத்து வைத்தல் -மற்று ஒரு பற்று அறும் தன்மை -அதாவது ஆகாசத்தை நோக்கி அழுவன் -திருவாய் மொழி -5-8-4- என்னும் இடத்து –
ஆகாசத்தை நோக்குதலாவது -வேறு பற்று அற்ற தன்மையை நினைத்தால் -நிராலம்ப நதையைப் பார்த்தல் -எனவும்
உற்றார் அழிப்பு -அழகினில் அன்பர் ஆற்றலை மாற்றல் -அதாவது -உற்றார்களை அழிப்பேனும் யானே என்னும் -திருவாய் மொழி -5-6-7-என்னும்
இடத்து உற்றார்களை சௌந்தர்யாதிகளால் அழித்தல்-வழி இழந்து ஈடு படச் செய்தல் -எனவும்
மாற்றுரை ஆண்டான் மகிழுமாறு அருளினார் -எனபது –
ஆண்டான் அருளும் மாற்றுரையின் விளக்கத்தை வல்லார் வாய்க் கேட்டு மன மகிழ்க -இங்கு விரிப்பில் பெருகும் –

———————————————————————————————–

அருந்தவன் ஆண்டான் புதுவை மன் சொல்லை அறைந்து குரு
தரும் தவறில் நலத்தார்க்கு விண் என்னலும் தானியல்பாய்
வரும் தவலில் லருள் வாயும் குருவே மதுர கவி
இருந்த வழி என ஆழ்வான் இயம்பி அருளினனே –40-

புதுவை மன் சொல்லை அறைந்து குரு-பெரியாழ்வார் -குற்றம் இன்றிக் குணம் பெருக்கிக் குருக்களுக்கு அநு கூலராய் -என்னும் திரு வாக்கை -பிரமாணமாகச் சொல்லி
தரும் தவறில் நலத்தார்க்கு -குற்றம் இல்லாத நன்மையாளரான சிஷ்யர்களுக்கு
குரு தவறு இல் நலத்தார்க்கு விண் தரும் -என இயைக்க –
தரும் -செய்யும் என் வினை முற்று -விண் -மோஷம் -என்னலும் -என்று சொன்ன அளவிலே
தானியல்பாய் வரும் -தானே இயற்கையாக உண்டான -நிர்ஹேதுகமான -என்றபடி –
தவலில் -தவழ இல் -கேடு இல்லாத எஞ்ஞான்றும் உள்ள
அருள் வாயும் குருவே -க்ருபா மாத்திர பிரசன்னா ஆசார்யனே
மதுர கவி
இருந்த -முடிவு கட்டிக் கைக் கொண்டு இருந்த
வழி -முக்தி சாதனம் –
என ஆழ்வான் இயம்பி அருளினனே —

புதுவை மன் சொல்லை அறைந்து குரு தவறு இல் நலத்தார்க்கு விண் தரும் என்னலும் ஆழ்வான் தான்
இயல்பாய் வரும் தவல் இல் அருள் வாயும் இல் நலத்தார்க்கு விண் தரும் என்னலும்
ஆழ்வான் தான் இயல்பாய் வரும் தவல் இல் அருள் வாயும் குருவே மதுரகவி இருந்த வழி என இயம்பி யருளினன் -என்று கூட்டி முடிக்க –

பெரியாழ்வார் ஸ்ரீ ஸூ க்திப்படி குருக்கள் அநு கூலராய் நடப்பவர்க்கே முக்தி அருளுவர் என்ற ஆண்டானைப் பார்த்து
மதுரகவி காட்டும் தொல் வழியில் செல்லும் நமக்கு நிர்ஹேதுக கிருபை உடைய ஆசார்யனே முக்தி சாதனம் என்று ஆழ்வான் அருளிச் செய்தார் என்ப –

அனுவர்த்தன பிரசன்ன ஆசார்யனாலே மோஷம் எனபது ஆண்டான் திரு உள்ளம் –
க்ருபா மாத்திர பிரசன்ன ஆசார்யனாலே மோஷம் எனபது ஆழ்வான் திரு உள்ளம் –
அதனை ஏற்று அருளினார் ஆண்டான் -அதுவே அடுத்த பாசுரத்தில் பேசப் படுகிறது –

————————————————————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அண்ணன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஆழ்வார் திருநகரி நல்லான் சக்கரவர்த்தி ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ முதலியாண்டான் திருவடிகளே சரணம் –
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ முதலியாண்டான் அந்தாதி -1-20-பாசுரங்கள்–ஸ்ரீ உ -வே -திரு நகரி நல்லான் சக்கரவர்த்தி ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள் இயற்றி அருளிய திவ்ய பிரபந்தம் –

July 29, 2015

பூவில் தொடக்கி -மங்களம் என்பதால் -காப்பு செய்யுள் –
வண்டு -ஷட்பத நிஷ்டர்கள் -ஆச்சார்யர்கள் -தேக குணங்களும் ஆதரிக்கத் தக்கன ஆதலால் -ரமிய பொறி வண்டு -என்கிறார்

பூதூர முந்துறப் போந்திழி யாண்டான் புகழ் களிறும்
பூதூர வந்தமிழ் அந்தாதிப் பாவினில் போற்றிடற்குப்
பூதா ரமியப் பொறி வண்டு பாடிப் புகழ் செய் பெரும்
பூதூரன் புண்ணியன் பூம் கழல் சென்னிப் புணர்த்துவனே-

பூதூர முந்துறப் போந்திழி யாண்டான் –
பூ-பூமி தூரம் முந்துற -வெகு தூரம் முன்னேறும்படி போந்து -வந்து -இழி -திருவவதரித்து அருளிய -ஆண்டான் -முதளியாண்டனுடைய
புகழ் களிறும் -புகழ்கள் -சீர்மைகளை –
இறும் பூதூர -ஆச்சர்யம் உண்டாம்படி
வந்தமிழ் அந்தாதிப் பாவினில் போற்றிடற்குப்
பூதா ரமியப் பொறி வண்டு பாடிப் புகழ் செய் –
பூ -புஷ்பங்களில் -தூ -சிறகுகளை யுடைய ரம்யா -அழகான -பொறி -புள்ளிகளையுடைய வண்டு -வண்டுகள் பாடிப் புகழ் செய் -இசை பாடிப் பரவும்
பெரும் பூதூரன் புண்ணியன் -ஸ்ரீ பெரும் பூதூரில் திரு வவதரித்தவரும் -உபாய ஸ்வரூபமான எம்பெருமானாரின்
பூம் கழல் சென்னிப் புணர்த்துவனே-
அழகிய திருவடிகளை எனது தலையில் சேர்விப்பன்-

———————————————————————-

திருமகள் கேள்வன் திருவடி நிலையாகிய ஸ்ரீ சடகோபரின்
ஸ்ரீ பாதத்திற்கு ரஷையாய் அமைந்த ஸ்ரீ ராமானுஜரின்
ஸ்ரீ பாதுகையாகிய முதலி யாண்டானது திருவடியை முதலில் சூடுவோம்
எனக் குரு பரம்பரை ஒருவாறு அனுசந்திக்கப் பட்டுள்ளமை -காண்க –பாதுகா பரம்பரை கூறப்பட்டமையும் கவனிக்க –

அழகு அறிந்தவராய் வல்வினை கெட அம்புயத்தாள்
கொழுநன் அடிநிலை யாம் சடகோபர் குளிர் நளினக்
கழலின் அரணாம் இராமானுசர் திருக் கால் நிலையாய்த்
தொழு நல குலன் அம் முதலியாண்டான் அடி சூடுவமே -1-

அழகும் அறிவோமாய் வல்வினையைத் தீர்ப்பான்
நிழலும் அடி தாறுமானோம் சுழலக்
குடங்கள் தலை மீது எடுத்துக் கொண்டாடி அன்று அத்
தடம் கடலை மேயார் தமக்கு –பெரிய திருவந்தாதி-31-பாசுரத்தின் உட்கருத்தைக் கொண்டு முதல் இரண்டு அடிகள்

அழகு -உபாயம் -கர்மத்தினால் அன்றி சர்வேஸ்வரனால் பாபத்தைப் போக்குகை இங்கே அழகு என்னப்பட்டது
வல்வினை கெட அழகு அறிந்தவராய் -எனவே இப்பொருள் தோன்றுவதை உணர்க –
வல்வினை கெட அழகும் அறிந்தவராய் -என மாற்றுக
அறிந்தவராய் -என்னும் எச்சம் -அடிநிலை யாம் -என்னும் இடத்தில் உள்ள ஆம் -என்னும் வினை கொண்டு முடிந்தது -ஆம்-ஆகும்
அம்புயத்தாள் கொழுநன் -திருமகள் கேள்வன் –
அடிநிலை -பாதுகை
கழலின் அரணாம்-ஸ்ரீ பாத ரஷையாம்
தொழு நல் குலன் -தொலைத் தகுந்த நல்ல திரு வம்சத்திலே திருவவதரித்தவர் –
சூடுதல் -தலைக்கு அணியாகக் கொள்ளுதல் –
சூடுதல் கூறவே அடி எனபது மலர் ஆயிற்று –
முதலியாண்டான் திருவடி நம் சென்னிக்கு மலர்ந்த பூ -என்க-

திருமகள் கேள்வனது ஸ்ரீ பாதுகை -ஸ்ரீ சடகோபன்
ஸ்ரீ சடகோபர் ஸ்ரீ பாதுகை -ஸ்ரீ ராமானுஜன் –
ஸ்ரீ ராமானுஜன் ஸ்ரீ பாதுகை -ஸ்ரீ முதலியாண்டான் –ஸ்ரீ வைஷ்ண சம்ப்ரதாய ஸ்ரீ பாதுகா பரம்பரை –

————————————————————————————————–

சூட்டுயர் மாடங்கள் தோன்றும் அயோத்தியர் கோன் புதல்வன்
காட்டில் இளையவன் புரி பணி இன்பம் கருதலால்
மீட்டும் இடைக்குடிக்குப் பின்னவனாயினும் வெல்கிலனாய்
வீட்டுக் குரியன் முதலியாண்டான் என மீண்டனனே–2-

வீட்டுக் குரியன் -பரம புத்தத்துக்கு உரிமை பூண்டவன்
புதல்வன் கருதலால் மீட்டும்– இடைக்குடிக்குப் பின்னவனாயினும் வெல்கிலனாய் முதலியாண்டான் என மீண்டனனே–என்று கூட்டிப் பொருள்
வெல்கிலனாய்-கார்யத்தில் வெற்றி பெறாதவனாய் –

—————————————————————————————————

மீண்டவன் முத்தண்டு அதிபதி தாளிணை மேவி நின்று
வேண்டிய நற்பணி பண்ணி விளங்கினன் வெங்கலியில்
ஆண்டதன் பாதுகம் என்னவும் அன்னவன் வென்று அரங்கம்
மீண்டு அருளும் தனை மேலுற வைணவம் ஆண்டனனே –3-

மீண்டவன் முத்தண்டு அதிபதி தாளிணை மேவி நின்று -அங்கனம் மீண்ட ஸ்ரீ முதலி யாண்டான் எம்பெருமானார்
வேண்டிய-விரும்பிய -நிறைய என்னவுமாம்
வெங்கலியில்-நற்பணி பண்ணி விளங்கினன்
ஆண்டதன் பாதுகம் என்னவும் -ஸ்ரீ பரத ஆழ்வான் இடம் கொடுக்கப் பட்ட தனது பிரதிநிதியாக ஆண்ட பாதுகை என்று சொல்லும்படியாகவும்
பிற்பட்டுப் பணி புரிதலோடு ஸ்ரீ பாதுகையே ஆளவும் மீண்டனன் -என்றும் சொல்லும் படியாக என்றதாயிற்று
அ ன்னவன் வென்று அரங்கம் -அந்த எம்பெருமானார் திக் விஜயம் செய்து ஸ்ரீ ரெங்கத்துக்கு
மீண்டு அருளும் தனை மேலுற வைணவம் ஆண்டனனே –
மீண்டும் எழுந்து அருளுகிற வரையிலும் ஸ்ரீ வைஷ்ணவ சாம்ராஜ்யம் ஆண்டனன் –
இளையனாய் இலக்குவன் போலே பணி புரிய விரும்பி மீண்டு பலராமனுக்குத் தம்பியாயினும் பணி இன்பம் கண்டிடாத ஸ்ரீ ராமன்
கொடிய கலி காலத்திலே முதலி யாண்டானாய் எம்பெருமானாருக்கு நற்பணி புரிந்து அடிமை இன்பம் கண்டு விளங்கினான் -முதல்
இரண்டு அடிகளில் கூறப்பட்ட பொருள்
மேலும் தான் இல்லாத காலத்தில் அழகுற அரசாண்ட தனது ஸ்ரீ பாதுகை போலவும் ஆக ஆசைப் பட்டனனாம் ஸ்ரீ ராம பிரான்
அக்குரையையும் எம்பெருமானார் ஸ்ரீ ரெங்கத்தை விட்டுத் திக் விஜயத்திற்கு எழுந்து அருளி இருக்கும் போது அவருக்குப் பதிலாக
முதலி யாண்டானாய் ஸ்ரீ வைஷ்ணவ சாம்ராஜ்யத்தை நன்கு நிர்வஹித்துத் தீர்த்துக் கொண்டான் -எனபது
பின்னிரண்டு அடிகளில் கூறப்பட்ட பொருள் –

—————————————————————–

ஆண்டவன் பாதுகம் ஆழ் கடல் வையம் திருத்தொணாது
மீண்டிடும் மாறன் அடி நிலை மேதினி யொண் பொருளே
காண்டலை வேண்டும் கவினுறு கோலேதி காவலன் தாள்
பூண்டிடும் அந்த முதலி யாண்டான் தனிப் போற்றுவமே –4-

ஆண்டவன் பாதுகம் ஆழ் கடல் வையம் திருத்தொணாது மீண்டிடும்
ஸ்ரீ சடகொபனே ஆண்டவன் பாதுகம் -அகலிடத்தை ஆராய்ந்து அது திருத்தல் ஆவதே -என்று திருத்த ஒண்ணாது மீண்டமை காண்க –
மாறன் அடி நிலை -ஸ்ரீ ராமானுஜர்
மேதினி -பூமி -ஆகு பெயராய் பூமியில் உள்ளோரைக் கூறும்
யொண் பொருளே -அவ் வொண் பொருள் கொண்டு அவர் பின் படரும் குணன் -என்றபடி ஸ்ரீ ராமானுஜர் உலகத்தார் மஹார்த்தத்தைத் தெரிந்து கொள்வதை விரும்புதல் காண்க
கவினுறு கோலேதி காவலன் தாள் -கவின் உரு கோல் எதி காவலன் -அழகிய முக்கோல் ஏந்தும் எதிராஜர்
பூண்டிடும் அந்த முதலி யாண்டான் தனிப் போற்றுவமே அப்படிப்பட்ட -அதாவது -எதி காவலன் திருவடிகளை அணியாகக் கொண்ட –
இனி -திருவடிகட்கு அணியாய் -அழகு செய்கிற என்றலுமாம் -மற்றும் சொல்ல முடியாத பெருமை உடைய என்னளுமாம் —

எம்பெருமானார் ஸ்ரீ பாதுகை உலகைத் திருத்த முடியாததாயிற்று –
ஆழ்வார் பாதுகையோ உலகினர்க்குப் பொருள் தெரிவிப்பதிலேயே இருப்பதாயிற்று
எம்பெருமானார் ஸ்ரீ பாதுகையோ முதலியாகும்படி ஆண்டு வருகிறது –
ஆதலின் ஒப்பற்ற அப்பாதுகையாகிய முதலி யாண்டானைப் போற்றல் வேண்டும் -என்றபடி –

—————————————————————————————-

போற்றுவம் வம்மின் முதலி யாண்டானைப் புவியில் உள்ளீர்
நாற்றிசையும் புகழ் நண்ணும் இராமானுசன் அடிக் கீழ்
ஏற்றுயர் வாழ்வு மற்று எங்கணும் தாழ்வு தவிர்ந்த வற்காம்
பேற்றினை எய்தலின் பாதுக மா நிலை பெற்றதற்கே –5-

போற்றுவம் வம்மின் முதலி யாண்டானைப் புவியில் உள்ளீர்
நாற்றிசையும் புகழ் நண்ணும் இராமானுசன் அடிக் கீழ்
ஏற்றுயர் வாழ்வு-உயர் வாழ்வு ஏற்று -என மாறுக
மற்று எங்கணும் -வேறு எந்த இடத்திலும்
தாழ்வு தவிர்ந்த வற்காம் பேற்றினை -தாழ்வு தவிர்ந்து அவர்க்கு ஆம் பேற்றினை -அந்த ஸ்ரீ ராமானுகற்கு உபயோகப்படும் பயனை
பெற்றுதற்குப் போற்றுவம் -என இயைக்க –
புவியில் உள்ளீர்-மற்று எங்கணும்-தாழ்வு தவிர்ந்து
நண்ணும் இராமானுசன் அடிக் கீழ் -உயர் வாழ்வு ஏற்று
அவர்க்கு ஆம் பேற்றினை
எய்தலின் பாதுக மா நிலை பெற்றதற்கே
முதலி யாண்டானைப் போற்றுவம் வம்மின்-என்று கூட்டிப் பொருள் கொள்க –
தாளிணைக் கீழ் அன்றி மற்று எங்கும் பாதுகைக்குத் தாழ்வு தானே –
தாழ்ச்சி மற்று எங்கும் தவிர்ந்து நின் தாளிணைக் கீழ் வாழ்ச்சி -என்ற ஸ்ரீ நம் ஆழ்வார் திருவாக்கை நினைக்க –

————————————————————————

பெற்றவன் சீரெதி நாயகன் பேரருள் நூல்கள் எலாம்
கற்றவன் காமுறு நல் ஒழுக்கத்தினன் கைப்ப்படுமோர்
நற்றவன் நானிலத்தீர் எம தாண்டானளிரடியே
உற்றவம் நீங்குமின் உங்கட்கு இல்லை மற்றுறு துணையே –6-

நற்றவன் -நல்ல தவத்தை உடையவன் -தவம் -சரணா கதி
நளிர் அடி -குளிர்ந்த திருவடி
உற்று -ஆஸ்ரயித்து
அவம் -வீணாதல்
அவம் நீங்கல் -பயன் பெறல் –

———————————————————————————————————-

உறு துணை யாண்டான் ஒருவன் செய் தீங்கின் உடையவர் காண்
நெறி படர் காலத் தடியிணை நீழலின் நீங்கலர் ஊண்
பெறுகிலர் வாடப் பெரிது நீ கொங்கிற் பிராட்டியகத்து
அறு சுவை யுண்டி அடி நிலை யாகி அளித்தனையே –7

ஒருவன் -சோழ அரசன் -பெயர் சொல்லவும் நாக்கூசசதலின் ஒருவன் என்றது
வாய் விட்டுச் சொல்ல ஒண்ணாத் தீங்கு ஆதலின் அடை கெடாது தீங்கு எனப்பட்டது –
நீங்கலர் -வினையால் அணையும் பெயர் -ஊண் பெறுகிலர் -முற்று எச்சம் -பெரிதும் வாட என மாறுக –

சோழ அரசனால் துன்புறுத்தப் பட்ட ஸ்ரீ ராமானுஜர் பரிவாரத்தோடு காட்டின் வழியே நடந்து கஷ்டப்பட்டு கொங்கில் பிராட்டி
திரு மாளிகையை நடந்தார் –அப்பொழுது பசியால் வாடிய அடியார்கள் கொங்கில் பிராட்டி காட்டிய ஸ்ரீ ராமானுஜர் பாதுகையால்
ஐயம் தீர்ந்து அந் நல்லாள் இல்லத்தில் அமுது செய்து பசியாறினர் எனபது வரலாறு –
உடையவர் அடி நிழலை விட்டு நீங்காதவர்கள் பசியால் வாட -அவ்வடியைத் தாங்கும் பாதுகை அன்னார் பசி வாட்டத்தைப் போக்கி
உறு துணையாவது என்க-பாதுகைக்கும் முதளியாண்டானுக்கும் அபேதம் கருதி இது கூறியது என்று உணர்க –

——————————————————————————————————

அளித்தனை யாண்டான் எதிபதி யாணையின் அன்று ஒரு கால்
துளித்தனை யன்பும் செலுத்தலர் தூய நெறிப் படரார்
களித்தனை வோரும் நலநெறி காணக் கழல் இணைகள்
குளித்தனை சாளக் கிராமப் படித்துறை கூடி நின்றே –8

கழல் இணைகள் குளித்தல் -திருவடிகளை நனைத்தல் –
குளித்தனை -குளித்தவனாய் -முற்று எச்சம் –அளித்தனை என்பதோடு முடிந்தது –
ஆண்டான் எதிபதி ஆணையில் அன்று ஒரு கால் சாளக் கிராமப் படித்துறை கூடி -சேர்ந்து -நின்று துளித்தனை –
யன்பும் செலுத்தலர் தூய நெறிப் படரார் கள்
அத்தனை வோரும் நலநெறி காணக் கழல் இணைகள்
குளித்தனை -அளித்தனை -என்று கூட்டி முடிக்க

உடையவர் மேலை நாடு எழுந்து அருளும் வழியில் சாளக் கிராமத்தில் உள்ளார் திருந்துமாறு அவர்கள் தீர்த்தம் கொள்ளும் துறையில்
எம்பெருமானார் நியமனத்தால் ஆண்டான் திருவடி விளக்கினாராக -அனைவரும் திருவடிகளை ஆச்ரயித்து உய்ந்தனர் எனபது வரலாறு –

———————————————————————————————

கூடலர் வெல்லும் குறை கழல் மன்னவர் முன்னருளை
நாடுநர் சென்னி நயந்தவர் தாள் நிலை தாங்குதல் போல்
ஏடுறு கீர்த்தி இராமானுசன் முன்னடி நிலையாம்
பீடுறு செம்மல் முதலியாண்டான் தனைப் பேணுவமே -9-

கூடலர் -பகைவர் –
நாடுநர் -எதிர்பார்ப்பவர்கள் -ந-பெயரிடை நிலை
ஏடு உறு கீர்த்தி -நூல்களில் குறிப்பிடத் தக்க புகழ்
அருளை நாடுநர் மன்னவர் முன் அவர் தாள் நிலை நயந்து சென்னி -தலையில் -தாங்குதல் போலே நாமும் இராமானுசன் முன்
அடி நிலையாம் பீடுறு செம்மல் முதலியாண்டான் தனைப் பெனுவம் என்று கூட்டுக –

மன்னவர் அருளை வேண்டுபவர் அவர் எதிரே பாதுகையைத் தாங்குவது போலே யதிராஜர் அருளை நாடும் நாமும்
அவர் எதிரே பாதுகையான முதலி யாண்டானைப் பேணல் வேண்டும் -என்க –
இதனால் ஆசார்யன் முன்னிலையில் சிஷ்யராகிய ஆண்டானைப் புகழ்தல் தக்கதே எனச் சமர்த்தித்த வாறாம்-

—————————————————————————————————————————–

பேணலம் மாற்புணர் வின்பும் பிரிவித் துயருமலால்
காணலர் கண்ணனின் காதலர் காயக் கலப்பினரைப்
பேணலர் ஆண்டான் துறவியர் பெம்மான் பெரும் பரிவன்
பேணலம் நின் வயிற் காண்பதி யாதெனப் பேசெனெக்கே–10-

பேண நலம் மால் புணர்வு இன்பம் -பேணத் தக்க நன்மையை உடைய எம்பெருமானோடு கலந்த ஆனந்தமும் –
பேணலம்-பேண நலம் -பேணும் அன்பு
காயக் கலப்பினர் -தேக பந்துக்கள்
துறவியர் பெம்மான் -எம்பெருமானார்
பெரும் பரிவன் -பரம பக்தர் –

ஆண்டான் கண்ணனின் காதலர் -பக்தர் -மாலுடன் புணர்வு இன்பமும் பிரிவுத் துயருமலால் வேறு இன்ப துன்பங்களைக் காண மாட்டார்கள் –
தேக பந்துக்களைப் பேணவும் மாட்டார்கள் -ஆயின் பெரும் பக்தரான எம்பெருமானாரோ தேக பந்துவான உம்மைப் பேணும் படியான
நலமும் கொண்டார் -அங்கனம் நும் வின் கண்ட அவரது நலத்தை யாது -எப்படிப் பட்டது -என்று அடியேனுக்கு அருளிச் செய்ய வேணும் -என்றபடி
எம்பெருமானார் தம்பால் புரியும் பரிவு ஆண்டானாலும் பேச இயலாதது எனபது கருத்து –
இனி பேணலம் என்பதற்குப் பேணத் தக்க நலம் -நன்மை -பக்தி -எனப் பொருள் கொண்டு ஆண்டானிடம் உள்ள நலம்
எம்பெருமானாரும் பேணும்படி அமைந்து இருத்தலின் அதனை ஆண்டானாலும் எடுத்து இயம்ப ஒண்ணாது என்னலுமாம்-
பக்தி இல்லாத ஏனைய சம்சாரிகளின் உறவு போல் அன்றி நலத்தால் மிக்க ஆண்டானோடு உண்டான உடல் உறவு விடல் அரிதாயிற்று என்று உணர்க
பாகவதர்கள் விஷயத்திலே ஏற்படும் கூடல் இன்பமும் பிரிவுத் துன்பமும் கண்ணன் இன்ப துன்பங்களை விட
வேறல்ல வாதலின் ஆண்டானை விடுதல் துன்பம் தருதலால் விடுகிலாது அவரை எம்பெருமானார் பேணினார் என்க –

————————————————————————————————

பேசினன் கண்ணன் பிறருறு மின்பமுபேரிடரும்
வீசில மற்றவர்க்கு அவ்வித மின்பிடர் மேவிடினும்
மாசிலன் யோகியர் மன்னன் என்றான் ஆண்டான் மனமருவும்
நேசன் என் நீங்கலன் நின்தனை நீத்தவர் நாயகனே –11

கண்ணன் கீதையில் பிறர் உறும் இன்பமும் பேரிடரும் மற்றவர்க்கு -வேருபட்டவர்க்கு -அதாவது சம்பந்தம் இல்லாதவர்க்கு -வீசில –
அவ்விதம் யோகியர் மன்னன் இன்பு இடர் மேவிடினும் மாசிலன் என்று பேசினன் –
ஆயின் நீத்தவர் நாயகன் மனமருவும் நேசனாய் நின்தனை என் நீங்கலன் -என்று கூட்டுவது
வீசில -பரவவில்லை -நீத்தவர் -துறந்தார் -நீத்தவர் நாயகன் -எம்பெருமானார்
இறை நிலை உணர்ந்த பரம பக்தரான எம்பெருமானாரும் பேணும் படியான பெருமை பேசப்பட்டது கீழே –
இங்கே தம் நிலை -ஸ்வ ஸ்வரூபம் உணர்ந்து எதிலும் தமக்குத் தொடர்பின்மை கண்டு முற்றும் துறந்த முனிவரான
எம்பெருமானாரும் தொடர்பு அறுத்து நீங்க முடியாத பெருமை கூறப்படுகிறது –
கண்ணன் பேசினது இது -ஆத்மௌபம் யேந சர்வத்ர சமம் பச்யதி யோ அர்ஜூன
ஸூகம்வா யதிவா துக்கம் ச யோகீ பரமோ மத -என்று
தனக்கு நேரும் மாகப் பேறு இழவுகளால் வரும் இன்ப துன்பங்களைப் பிறருக்கு நேர்ந்தவை போலே என்னுமவனே
பரம யோகி என்று இதற்கு எம்பெருமானார் பாஷ்யம் இட்டு அருளினார்
ஒருவனுக்கு நேரும் இன்ப துன்பங்கள் பிறரைப் பாதிப்பது இல்லை -ஏன்-அவர்களுக்கு இதில் சம்பந்தம் இல்லை –
அவ்விதமே தன்னை உணர்ந்த சிறந்த யோகி தனக்கு நேரும் ஸூ க துக்கங்களால் பாதிக்கப் படுவது இல்லை -ஏன் –
அறிவு வடிவனான அவனுக்கு இடையே கன்மத்தால் வந்த ஸூ க துக்கங்களில் யாதொரு சம்பந்தமும் இல்லை என்பதை அவன் உணருகிறான்
ஆகவே தொடர்பு இன்மை கொண்டு நிலை குலையாதவன் பரம யோகி என விளக்கம் காண்க –
ஆண்டான் அத்தகைய பரம யோகியான நீத்தவர் நாயகனே உம்மிடம் மனமருவும் நேசனாய் உம்மை ஏன் துறக்க வில்லை -என்றபடி –
வெறும் உடல் உறவு மாத்ரமன்றி பகவானோடு வேறுபடாத பாகவதர் ஆதலின் ஆத்ம சம்பந்தமும் கலந்து இருத்தலின்
ஆண்டான் உறவு எம்பெருமானார்க்கு விடற்கு அரியதாயிற்று-என்று அறிக –
ஆண்டான் எம்பெருமானாருக்கு சஹோதரி புதல்வர் -சந்யசிக்கும் போது ஆண்டானைத் தவிரத் தாம் சந்யசித்தத்தாகக் எம்பெருமானாரே
அருளிச் செய்வர் -மனமருவு நேசத்துக்கு அடி -பகவத் பாகவத கைங்கர்யத்துக்கு உறு துணை யாதல் -அது அடுத்த பாட்டினால் விளங்கும் –

——————————————————————————————————————————

நாயக நாண் மலர் நங்கை தமர் பணி நண்ணிடவும்
ஆயகன் ஞானம் அருமறை காணவும் அந் தமிழில்
வாயாக வுள்ளுறை உட்கொளவும் மீதி மன்னனுக்குத்
தீயகல் கேள்வி முதலி யாண்டான் உறு சீர் துணையே –12

ஆய் அகல் ஞானம் -ஆராயும் விசாலமான ஞானம்
அருமறை காணல்-உப நிஷாத்தின் உட்பொருளைத் தெரிதல் –
அகம் -தமிழுக்குத் தனிச் சிறப்பாய் அமைதலின் அந் தமிழில் வாய் அகம் -எனப்பட்டது -வாய்த்து இருக்கிற அகம் -என்க -வினைத்தொகை –
தீ அகல் கேள்வி -தீமை நீங்கிய கேள்வி யறிவு –

பகவத் பாகவத கைங்கர்யத்துக்கும் -அதனைப் பயனாகக் கொண்ட உபய வேதாந்த நிர்வாஹத்துக்கும்
எம்பெருமானாருக்கு முதலி யாண்டான் உறு துணை -என்றதாயிற்று –

——————————————————————————————————————

துணை என்று உறவினர் சொத்துப் பறித்திடச் சூழ்ந்து நிற்பர்
அணை என்று அணுகுவர் அல்லல் படுத்திட ஆயிழையார்
துணை என்று எதிபதி கோல் போற்றுறவாத் தர முடையோன்
புணை என்று அடைதிர் முதலியாண்டானைப் புகும் இன்பமே –13

முதல் துணை சஹாயத்தையும் -இரண்டாம் துணை நண்பனையும் குறித்தன -கோல் போல் துணை என்று எதிபதி
துரவாத் தரமுடையோன் ஆகிய முதலி யாண்டான் என்க –
துறவிகட்கு கோல் சகாவாகக் கூறப்படுதல் காண்க –
த்ரி தண்டத்தை விடில் அன்றோ நம் முதலி யாண்டானை விடுவது -என்று எம்பெருமானார் அருளிச் செய்தமை பிரசித்தம் –
புணை -தெப்பமாய் -பற்றுக் கோடு இங்கே குறிக்கப் படுகிறது –

————————————————————————————————————————-

இன்பங்கண் நேரினும் இன்னல்கள் ஏறினும் இந்நிலத்தீர்
என் பங்கம் எந்தை இராமானுசன் அடியேய் நிலையாம்
அன்பங்கண் ஆர்ந்த முதலி யாண்டான் என் முடி யமர
மன் பங்கயத்தாள் வழங்கு நற் பங்கயத்தாள் உடனே –14

ஏறினும் -அதிகமானாலும்
என் பங்கம் -என்ன குறை
அம கண் அன்பு ஆர்ந்த என இயையும்
அம கண் -அழகிய கண் -ஆர்ந்த -நிறைந்த
மன் -மால்
பங்கயம் தாள் -தாமரை போன்ற திருவடிகளை -பங்கயத் தாளுடன் -ஸ்ரீ லஷ்மீ தேவியுடன் –
வழங்கும் -கொடுக்கும் —செய்யும் என் -வினை முற்று –
இராமானுசன் அடியேய் நிலையாம் முதலி யாண்டான் என் முடி அமர மன் பங்கயத்தாள் உடன் பங்கயத்தாள் வழங்கும் –
இந் நிலத்தீர் இனி இன்பங்கள் நேரினும் இன்னல்கள் ஏறினும் பங்கம் என் -என்று கூட்டுக
பெற வேண்டியதைப் பெறுதலால் இடையே வரும் இன்ப துன்பங்களுக்கு இடைய வேண்டா -எனபது கருத்து –

——————————————————————————————————–

உடன் உறைந்து எம்பெருமானார் கரமதிலுள் அடங்கித்
திடமுடை வைணவம் வாய்ந்து பவித்திரம் சேர்ந்து எதிக்கும்
விடலரும் தன்மையின் மால் என நூல்கள் விளம்புதலின்
படர் புகழ் ஆண்டான் த்ரிதண்டு எனச் சொற் படைத்தனனே –15

மால் என -விஷ்ணு என்று –சொல் -பேர்
எம்பெருமானாருக்கு ஆண்டான் த்ரி தண்டமாகவும் ஆழ்வான் பவித்ரமாகவும் கொள்ளப் படுவர் –
அதில் ஆண்டான் த்ரி தண்டமாகக் கொள்ளப் படுவதன் கண் உள்ள பொருத்தம் காட்டப் படுகிறது இப்பாட்டில் –
த்ரி தண்டம் எதிராசர் கூடவே இருப்பது -ஆண்டானும் எதிராசருடன் உறைபவர் –
த்ரி தண்டம் கைக்குள் அடங்குவது -ஆண்டான் எம்பெருமானார் கைக்குள் -வசத்தில் -இருப்பவர் –
த்ரி தண்டம் திடமான வைணவம் -மூங்கில் மூங்கில் சம்பந்தம் வாய்ந்தது –ஆண்டான் -திடமான வைணவம் ஸ்ரீ வைஷ்ணவத் தன்மை வாய்ந்தவர் –
த்ரி தண்டம் -ஜல -பவித்ரத்தோடு சேர்ந்தது -ஆண்டான் பவித்ரம் -பரி சுத்தம் சேர்ந்தவர் –
த்ரி தண்டம் எதிக்கு விட முடியாதது -ஆண்டான் எதியாகிய எம்பெருமானாருக்கு விட முடியாதவர்-
த்ரிதண்டம் விஷ்ணு ஸ்வரூபம் -விஷ்ணு ரூபம் த்ரி தண்டாக்க்யம் சர்வதா தாரயேத் எதி -என்ற பிரமாணம் காண்க –
முதலியாண்டான் ஸ்ரீ ராமனுடைய திரு வவதாரம் ஆதலின் விஷ்ணு ஸ்வரூபர்-
இனி -அஹமேவ த்விஜஸ்ரேஷ்ட நித்யம் பிரசன்ன விக்ரஹ-பகவத் பக்த ரூபேண லோகான் ரஷாமி சர்வதா -என்றபடி
பக்தராகிய ஆண்டான் விஷ்ணு ஸ்வரூபம் என்னலுமாம் –

———————————————————————————————-

படைத்தவன் வேள்வி வரும் பரன் பண்ணில் பரவசனாய்க்
கொடுத்தவர் கோயில் விரைந்து உழி கூரத் தவருடன் நீர்
கிடைத்தவர் ஆயினீர் ஆண்டான் கிளர் நீர் அரங்கற்கு மண்
ணிடைத் தவராசன் எனின் மனத்து ஏறுவீர் மூவிருமே –16-

படைத்தவன் -பிரமன் -வேள்வி வரும் பரமன் -தேவப் பெருமாள் –
பிரமன் செய்த வேள்வியில் தேவப் பெருமாள் தோன்றியதாகக் காஞ்சி ஸ்தல புராணம் கூறும்
பண்ணில் -திருவரங்கப் பெருமாள் அரையர் பாடின இசையில்
பரவசனாய்க் கொடுத்தவர் -ஈடுபட்டு மெய் மறந்த படையால் கொடுக்கப் பட்ட எம்பெருமானார்
கோயில் விரைந்து உழி -ஸ்ரீ ரங்கத்திற்கு விரைவாக எழுந்து அருளும் போது
கூரத் தவருடன் நீர் கிடைத்தவர் ஆயினீர் -ஆண்டான் கிளர் நீர் அரங்கற்கு -ஸ்ரீ கூரத் தாழ்வான் உடன் அரங்கற்குக் கிடைத்தவர் ஆயினீர் என இயையும்
மண்ணிடைத் தவராசன் எனின் -உலகத்தில் எதிராசன் என்றால் எம்பெருமானார் ஆழ்வான் ஆண்டான் என்ற மூன்று பெரும் நினைப்பில் வருதல்
மனத்து ஏறுவீர் மூவிருமே –

திருவரங்கத்திற்கு எதிராசரை அழைத்து வரும்படி அனுப்பப் பட்ட திருவரங்கப் பெருமாள் அரையர் பாடிய பண்ணில்
பரவசராய்த் தேவப் பெருமாள் எதிராசரை அரையரிடம் கொடுத்து அனுப்பினார்
தமது மடத்துக்கு கூடப் போகாதே சந்நிதியிலே இருந்தே கோயில் நோக்கி உடனே விரைந்தார் எதிராசர்
-அவரை ஆழ்வானும் ஆண்டானும் பின் தொடர்ந்தனர்
எதிராசர் ஒருவரை வேண்டினான் அரங்கன் -அதருஷ்ட சாலியான அவனுக்கு மூவர் கிடைத்தனர் -அது சரி தான்
தாண்டும் பவித்ரமும் சேராமலா எதிராசர் தோன்றுவார் -ஆண்டானும் ஆழ்வானும் இல்லாமலா எம்பெருமானார் தோன்றுவார்
-ஆக பெயர் அளவிலே மூவரே தவிர மூவரும் சேர்ந்து ஒருவரே என்றதாயிற்று –

———————————————————————————————————-

மூவா முதல்வன் முது நீர் அரங்கன் கொளுமமுதை
ஆய்வான் அமர்ந்தருள் ஆண்டான் அரும்பால் அளித்த பின்னீ
ஆர்வாய்க் கனிந்த நாவற்பழம் தந்தது அறிந்து முக்கோல்
கோவா குலமாய் மருந்து கொடுத்ததும் கூறு எளிதே –17-

மூவா முதல்வன் -முதுமை யுராத காரண பூதன் – கொளும்-கொள்ளும் –
அமுதை ஆய்வான் -அமுது செய்வதைக் கவனிப்பதற்காக
நாவற்பழம் தந்தது -நாவற்பழத்தை அமுது செய்யப் பண்ணியது -உம்மை தொக்கது
முக்கோல் கோ -முனி -எம்பெருமானார்
ஆகுலம் -கலக்கம் -எளிதே -எளிதன்று என்றபடி
கூறு -அருளிச் செய்க –
கூற எளிதே -என்பதன் தொகுத்தல் விகாரமாகக் கொண்டு கூறுதற்கு எளிதன்று என்றபடி யாகவுமாம்-ஏ-எதிர்மறை குறிப்பது –
கோயிலில் பெருமாள் அமுது செய்வதைக் கவனிக்கும் படி எம்பெருமானார் முதலி யாண்டானை நியமித்து அருளினார் –
ஒரு கால் பெருமாளுக்குப் பாலமுது சமர்ப்பித்த பிறகு நல்லன நாவற்பழங்களை யமுது செய்வித்தார் ஆண்டான் –
அதை யறிந்து எம்பெருமானார் பெருமாளுக்கு என்ன வாகுமோ என்று கலங்கி மருந்து அமுது செய்வித்து அருளினார் எனபது வரலாறு –
பாலமுது செய்த பிறகும் நல்ல பழங்களை கண்ட முதலி யாண்டான் அவற்றை யமுது செய்வித்தார் –
அதற்குக் காரணம் ஆர்வம் உடைமையே -அது நல்லனகள் காணில் கண்ணனுக்கு என்று ஈரியாய்-இருக்கச் செய்கிறது
எம்பெருமானாரது பரிவோ கலங்கி மூவா முதல்வனுக்கும் என்ன நேருமோ என்று மருந்து கொடுத்துப் பரிஹரிக்கும் படி செய்கிறது
இத்தகைய மனோ பாவத்தைப் பற்றி என் போன்றவர் என்ன கூற இருக்கிறது –

——————————————————————————————————

எளிவரும் கண்ணன் இயம்பிய வார்த்தை யரும் பொருளை
அளிமுரலார் திருக் கோட்டியூர் நின்றறு திங்களின் பின்
தெளிவுறலால் திருக் கோட்டிய நம்பி திருப்பியதும்
களிவர ஆண்டான் உனக்கு எதி காவலன் காட்டினனே -18-

எளிவரும் கண்ணன் -எளிமை யுடைய கண்ணன்
இயம்பிய வார்த்தை -சரம ஸ்லோகம்
யரும் பொருளை
அளிமுரலார் -வண்டுகளின் ஒலி நிறைந்த
திருக் கோட்டியூர் நின்று -திருக் கோட்டியூரில் இருந்து
இதனைத் திருப்பியதும் -என்பதோடு இயைக்க
திருப்பியதும் -திருப்பி அனுப்பியதும்
தெளிவுறலால் -கலக்கம் தீர்ந்து தெளிந்தமையால்
திருக்கு -குற்றம்
களிவர -ஆனந்தம் உண்டாக
வார்த்தை யரும் பொருளை எதி காவலன் உனக்குக் காட்டினனே -என்க –

ஆண்டான் அறு திங்களின் பின்-தெளிவுறலால்-
திருக்கு ஒட்டிய –அளிமுரலார் கோட்டியூர் நம்பி
திருக் கோட்டியூர் நின்று திருப்பியதும்
எதி காவலன் களிவர உனக்கு எளிவரும் கண்ணன் இயம்பிய வார்த்தை யரும் பொருளை காட்டினனே -என்று கூட்டி முடிக்க –

முதலி யாண்டான் சரம ஸ்லோக அர்த்தம் பெறுவதற்காக ஆறு மாதங்கள் காத்துக் கிடந்தது தெளிவுற்று திருக் கோட்டியூர் நம்பியால்
ஸ்வரூப சிஷை செய்யப் பெற்று -மீண்டு வந்து எம்பெருமானார் இடம் அதனைப்பெற்றார் எனபது வரலாறு –

———————————————————————————————–

காட்டி யரங்கன் கழல் இணை காணக் களித்தடிமை
பூட்டும் புனிதன் இராமானுசனத் துழாய் முகத்தின்
வாட்டம் தணிய வழங்கலும் சீதன மாதென நீ
வீட்டுப் பணிகளும் ஆண்டான் விரும்பினை வெள்கிலையே-19-

கழல் இணை காணக் காட்டி என இயைக்க –
சீதன மாது -ஸ்திரீ தனமாகக் கொடுக்கப் பட்ட பணியாட்டி
வீட்டுப் பணிகளும் -வீட்டு வேலைகளும்
விரும்பல் -செய்ய ஆசைப் படுதல்
வெள்கிலை -கூச்ச முற்றிலை-

பெரிய நம்பி திருமகள் அத்துழாய் எம்பெருமானார் இடம் -ஆற்றுக்குப் போகத் துணை வேண்டுமானால் உன் சீதன
வெள்ளாட்டியை அழைத்துச் செல் -என்று மாமியார் கடிந்து கூறியதாக வருத்தத்துடன் கூற –
அவர் ஆண்டானைச் சீதன வெள்ளாட்டியாகக் கொடுத்து அனுப்பினார் –
ஆண்டான் சிறிதும் கூசாது ஆற்றுக்குத் துணையாகச் சென்று வீட்டு வேலைகளும் செய்ய முற்பட்டார் எனபது வரலாறு –

———————————————————————————————————

வெள்ளுரை வீணர்க்கு மேன்மேல் விளம்புவர் மேவலர் மெய்
உள்ளலர் கூசலர் ஊமைக் குளறுவா யொத்து நின்றே
ஒள்ளறி வோங்கிய ஆண்டான் உறவும் ஒளிந்தனர் வாய்
விள்கிலர் கூகை போல் அஞ்சி நடுங்கி விடிந்த பின்னே –20-

வெள்ளுரை -அர்த்தம் அற்ற பேச்சு
வீணர்க்கு மேன்மேல் விளம்புவர்
மேவலர் -புற மதத்தவர்
மெய் உள்ளலர் -சத்தியத்தை நினையாதவர்களாய்-முற்று எச்சம்
கூசலர் -கூசாதவராய் -முற்று எச்சம்
உளறுவாய்-வாயினர்க்காகி வந்தது
விள்கிலர்-திறவாதவராய்-முற்று எச்சம்
கூகை -கோட்டான் –

மேவலர் மெய் உள்ளலர் ஊமைக்கு உளறுவாய் ஒத்து நின்று வீணர்க்கு வெள்ளுரை மேன்மேல் விளம்புவர்
ஒள்ளறி வோங்கிய ஆண்டான் உறவும் -அவர்கள் விடிந்த பின் கூகை போல் அஞ்சி நடுங்கி வாய் விள்கிலர் ஒளிந்தனர் -என்று கூட்டுவது –

———————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அண்ணன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஆழ்வார் திருநகரி நல்லான் சக்கரவர்த்தி ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ முதலியாண்டான் திருவடிகளே சரணம் –
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

பூ மன்னு மாது மார்பன் போன்ற அருளிச் செயல் ஸ்ரீ ஸூ க்திகள்–

July 28, 2015

ஸ்ரீ பெரியாழ்வார் -ஸ்ரீ ஸூக்திகள் –

1-வடிவாய் நின் வல மார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு
2–குலாவித் திகழும் திரு மார்பு இருந்தவா காணீரே
3-என் தம்பிரானார் எழில் திரு மார்வர்க்கு
4-எழிலார் திரு மார்பிற்கு
5-செய்யவள் நின்னகலம் சேமம் எனக் கருதி
5-என் முகில் வண்ணன் திரு மார்வன்
6-திரு மலிந்து திகழு மார்வு
7-திருவுடையாள் மணவாளா திருவரங்கத்தே கிடந்தாய்
8-தூ மலராள் மணவாளா
9-திருவுடைப்பிள்ளை
10-இங்கே போதராயே கோயில் பிள்ளாய் தெண்டிரை சூழ் திருப் பேர் கிடந்த திரு நாரணா இங்கே போதராயே
11-தாமரையாள்
12-பேடை மயில் சாயல் பின்னை மணாளா
13-என் சிற்றாயர் சிங்கமே சீதை மணாளா
14-இரு நிலம் புக்கு இடந்து வண்ணக் கரும் குழல் மாதரோடு மணந்தான்
15-திருக் கோட்டியூர் திருமாலவன் திரு நாமங்கள்
16-மார்வம் என்பதோர் கோயில் அமைத்து மாதவன் என்னும் தெய்வத்தை நாட்டி
17-சித்தம் நன்கு ஒருங்கித் திருமாலைச் செய்த மாலையிவை பத்தும்
18-திருவரங்கம் என்பதுவே என் திருமால் சேர்விடமே
19-திருவாளன் திருப்பதி மேல் திருவரங்கத் தமிழ் மாலை
20-திருவாளன் இனிதாகத் திருக் கண் வளர்கின்ற திருவரங்கமே
21-அரவத்து அமளியினோடும் அழகிய பாற் கடலோடும் அரவிந்தப் பாவையும் தானும் அகம்படி வந்து புகுந்து

————————————–

ஸ்ரீ ஆண்டாள் -ஸ்ரீ ஸூக்திகள் –

1-மா மாயன் மாதவன் வைகுந்தன் என்று என்று நாமம் பலவும் நவின்று
2-நப்பின்னை கொங்கை மேல் வைத்துக் கிடந்த மலர் மார்பா
3-வங்கக் கடல் கடைந்த மாதவனைக் கேசவனை
4-கள்ள மாதவா கேசவா உன் முகத்தன கண்கள் அல்லவே –
5-மன்னிய மாதவனோடு வைகுந்தம் புக்கு இருப்பாரே –
6-மன்னு பெறும் புகழ் மாதவன் மா மணி வண்ணன் மணி முடி மைந்தன்
7-பூ புனை கண்ணிப் புனிதனோடு
8-திரு மங்கை தங்கிய சீர் மார்வற்கு –

———————————

ஸ்ரீ குலசேகர பெருமாள் ஸ்ரீ ஸூக்திகள் –

1-திருமாது வாழ் வாட்டமில் வனமாலை மார்வனை –
2-மா மலர் மங்கை தோளிணை தோய்ந்ததுவும்
3-நறும் துழாய் மாலை யுற்றாரைப் பெறும் திருமார்வனை மலர்க் கண்ணனை
4-அல்லி மலர் மங்கை நாதன் அரங்கன்
5-அந்தாமரைப் பேதை மா மணவாளன்
6-அல்லி மலர்த் திருமங்கை கேள்வன்
7-மைதிலி தன் மணவாளா
8-தம்பிக்கு அரசும் ஈந்து திருமகளோடு இனிது அமர்ந்த செல்வன்

——————————————–

ஸ்ரீ திருமழிசைப் பிரான் ஸ்ரீ ஸூக்திகள் –

1-பின்னை கேள்வன் என்பர் உன் பிணக்கு உணர்ந்த பெற்றியோர்
2-பின்னை கேள்வ மன்னு சீர் பொன்னிறத்த வண்ணனாய் புண்டரீகன் இல்லையே
3-ஆயனாகி ஆயர் மங்கை வேய தோள் விரும்பினாய்
4-மன்னு மா மலர்க் கிழத்தி வைய மங்கை மைந்தனாய் பின்னும் ஆயர் பின்னை தோள் மனம் புணர்ந்த தன்றியும்
5-அற்புதன் அனந்தசயனம் ஆதி பூதன் மாதவன் நிற்பதும் இருப்பதும் கிடப்பதும் என் நெஞ்சுளே
6-போதில் மங்கை பூதலக் கிழத்தி தேவி அன்றியும் போது தங்கு நான் முகன் மகன் அவன் மகன் சொல்லில் மாது தங்கு கூறன்
7-செய்ய போதில் மாது சேரும் மார்ப நாதனே
8-திருக்கலந்து சேறு மார்ப தேவ தேவனே
9-பண்ணை வென்ற வின்சொல் மங்கை கொங்கை தங்கு பங்கயக் கண்ண

———————————-

ஸ்ரீ தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் ஸ்ரீ ஸூக்திகள் –

1-திரு மறு மார்ப நின்னைச் சிந்தையுள் திகழ வைத்து

—————————-

ஸ்ரீ மதுரகவி யாழ்வார் ஸ்ரீ ஸூக்திகள் –

1-தேவபிரானுடை கரிய கோலத் திரு உருக் காண்பன் நான்

—————————————-

ஸ்ரீ திருப்பாண் ஆழ்வார் ஸ்ரீ ஸூக்திகள் –

1-திரு ஆர மார்வதன்றோ அடியேனை ஆட்கொண்டதே –

————————–

ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் ஸ்ரீ ஸூக்திகள் –

1-அலர்மகள் அவளோடும் அமர்ந்த நல் இமயத்து
2-தேனுடைக் கமலத்து திருவினுக்கு அரசே
3-அல்லி மாதர் புல்க நின்ற ஆயிரம் தோளன்
4-மற்றேல் ஓன்று அறியேன் மாயனே எங்கள் மாதவனே
5-பந்திருக்கும் மெல்விரலாள் பாவை பனி மலராள் வந்திருக்கும் மார்வன்
6-இன் துணைப் பதுமத்து அலர்மகள் தனக்கும் இன்பன் நற் புவி தனக்கு இறைவன் தன் துணை ஆயர் பாவை நப்பின்னை தனக்கு இறை
7-அன்றாயர் குலக் கொடியோடு அணி மா மலர் மங்கையோடு அன்பளவி
8-நில மகள் தோள் தோய்ந்தானை -ஈரிரண்டு மால் வரைத் தோள் அம்மான் தன்னை
9-பார் வண்ண மட மங்கை பனி நன் மலர்க் கிழத்தி நீர் வண்ணன் மார்வகத்தில் இருக்கையை முன் நினைந்தவனூர்–கடல் மல்லைத் தல சயனம்
10-ஏனத்தின் உருவாகி நில மங்கை எழில் கொண்டான்
11-திவளும் வெண் மதி போல் திரு முகத்தரிவை செழும் கடல் அமுதினில் பிறந்தவளும் நின்னாகத்து இருப்பது அறிந்தும் ஆகிலும் ஆசை விடாளால்
12-உருகும் நின் திரு உரு நினைந்து
13-மலராள் தரணி மங்கை தாம் இருவர் அடி வருடும் தன்மையான்
14-தூ வடிவின் பார்மகள் பூ மங்கையோடு சுடர் ஆழி சங்கு இரு பால் பொலிந்து தோன்ற
15-செய்யவள் உறை தரு திரு மார்பன்
16-திரு மார்பனைப் சிந்தையுள் வைத்தும் என்பீர்
17-திருமால் திருமங்கையோடாடு தில்லைத் திருச் சித்ர கூடம்
18-பூ மங்கை தங்கிப் புலமங்கை மன்னிப் புகழ் மங்கை எங்கும் திகழ
19-தெய்வத் திரு மா மலர் மங்கை தங்கு திரு மார்பனைச் சிந்தையுள் வைத்தும் என்பீர்
20-மா நில மா மகள் மாதர் கேள்வன் இவன் என்றும் வண்டு உண் பூ மகள் நாயகன் என்றும்
21-ஏழு உலகும் தொழுது ஏத்த ஒரு மகள் ஆயர் மடந்தை ஒருத்தி நிலமகள் மற்றைத் திருமகளோடும் வருவான் சித்திர கூடத்துள்ளானே
22-கறை தங்கு வேல் தடம் கண் திருவை மார்பில் கலந்தவன் தாள் அணை கிற்பீர்
23-மாதவன் தன் துணையா நடந்தாள்–புனலாலி புகுவார் கொலோ
24-அலர்மகட்க்கும் அரற்கும் கூறாகக் கொடுத்து அருளும் திரு உடம்பன்
25-திருமடந்தை மண் மடந்தை இருப்பதாலும் திகழ
26-பின்னை செவ்வித் தோள் புணர்ந்து உகந்த திருமால்
27-மலர்மகளோடு மண் மகளும் உடன் நிற்ப
28-நில மடந்தை தன்னை இடந்து புல்கிக் கோட்டிடை வைத்து அருளிய எம் கோமான்
29-மடவரல் மங்கை தன்னை மார்வகத்து இருத்தினானே
30-பூவார் திரு மா மகள் புல்கிய மார்பா
31-அல்லி மாரதர் அமரும் திருமார்வன் அரங்கத்தை
32-சொல்லாய் திரு மார்பா
33-மின்னொத்த நுண் மருங்குல் மெல்லியலை திரு மார்வில் மன்னத்தான் வைத்துகந்தான்
34-அம்புருவ வரி நெடுங்கண் அலர் மகளை வரை யாக்லத்து அமர்ந்து
35-திருவாழ் மார்வன் தன்னை
36-திரு மா மகள் மருவும் சிறு புலியூர்ச் சல சயனத்து அருமா கடலமுதே
37-வடித் தடம் கண் மலரவளோ வரையகத்துள் இருப்பாள்
38-வாராளும் இளம் கொங்கை நெடும் பனைத் தோள் மடப்பாவை சீராளும் வரை மார்பன் திருக் கண்ணபுரத் துறையும் பேராளான்
39-மார்வில் திருவன்
40-மடமகள் குயமிடை தடவரை அகலமதுடையவர்
41-சேடன் திரு மறு மார்பன் கிடந்தது திருவடியால் மலை போல் ஓடும் சகடத்தைச் சாடிய பிள்ளை
42-முற்றாரா வனமுலையாள் பாவை மாயன் மொய்யகலத்துள் இருப்பாள் அஃது கண்டும் அற்றாள்

————————————————————————————————————

ஸ்ரீ நம்மாழ்வார் ஸ்ரீ ஸூக்திகள் –

1-மானேய் நோக்கி மடவாளை மார்பில் கொண்டாய் மாதவா புணர்த்த திருவாகித் தன் மார்வில் தான் சேர் புணர்ப்பன்
2-மாது வாழ் மார்பினாய் என் சொல்லி யான் வாழ்த்துவனே
3-மடந்தையை வண் கமலத் திரு மாதினை தடம் கொள் தார் வைத்தவர்
4-ஏறாளும் இறையோனும் திசை முகனும் திருமகளும் கூறாளும் தனியுடம்பன்
5-மணிமாமை குறைவில்லா மலர் மாதுருறை மார்பன்
6-மறுத் திரு மார்வனவன் தன் பூதங்கள் கீதங்கள் பாடி
7-திருவுருவு கிடந்தவாறும்
8-என் திரு மார்வற்கு என்னை இன்னவாறு இவள் காண்மின் என்று மந்திரத்து ஓன்று உணர்த்தி யுரையீர்
9-அலர் மேல் மங்கை யுறை மார்பா
10-என் திரு மார்பன் தன்னை
11-என் திருமகள் சேர் மார்பனே என்னும் என்னுடைய ஆவியே என்னும்
12-வருவார் செல்வார் வண் பரிசாரத்து இருந்த என் திரு வாழ் மார்வற்கு என் திறம் சொல்லார் செய்வது என்
13-மையார் கரும் கண்ணி கமலா மலர் மேல் செய்யாள் திரு மார்வினில் சேர் திருமாலே
14-அல்லி மாதர் அமரும் திரு மார்பினன்
15-திகழ்கின்ற திரு மார்பில் திரு மங்கை தன்னோடும் திகழ்கின்ற திருமாலார் சேர்விடம் தண் வாட்டாறு
16-மாயம் செய்யேல் என்னை உன் திரு மார்வத்து மாலை நங்கை வாசம் செய் பூம் குழலாள் திருவாணை நின்னாணை கண்டாய் –

———————————————————————————————————————–

இயற்பா ஸ்ரீ ஸூ க்திகள்

1-கார் வண்ணத்து ஐய மலர்மகள் நின் ஆகத்தாள்
2-திருப் பொலிந்த ஆகத்தான் பாதம் அறிந்தும் அறியாத போகத்தால் இல்லை பொருள்
3-மணந்தாய் மலர்மகள் தோள் மாலே –
4-முன் காட்டும் திருமாலை நங்கள் திரு
5-மா மலராள் செவ்விப் படிக் கோலம் கண்டு அகலாள்
6-நரம் கலந்த சிங்கமாய்க் கீண்ட திருவன் அடி இணையே அங்கண் ஞாலத்து அமுது –
7-செங்கண் நெடுமால் திரு மார்பா
8-திருக் கண்டேன் பொன் மேனி கண்டேன்
9-பொன் தோய் வரை மார்பில் பூந்துழாய் அன்று திருக் கண்டு கொண்ட திருமாலே –
10-ஒரு வல்லித் தாமரையாள் ஒன்றிய சீர் மார்வன் திரு வல்லிக் கேணியான்
11-பூ மகளும் பான் மணிப்பூண் ஆரம் திகழும் திரு மார்பன்
12-மாதுகந்த மார்வு
13-பொலிந்து இருண்ட கார் வானில் மின்னே போல் தோன்றி மலிந்து திருவிருந்த மார்வன் –
14-சார்வு நமக்கு என்றும் சக்கரத்தான் தண் துழாய்த் தார் வாழ் வரை மார்பன் தான் முயங்கும் -காரார்ந்த வானமரும்
15-மின்னிமைக்கும் வண் தாமரை நெடுங்கன் தேனமரும் பூ மேல் திரு
16-திருவில்லாத் தேவரைத் தேறேல் மின் தேவு
17-திருவிருந்த மார்பன் சிரீதரன்
18-நெடுமாலை என்றும் திருவிருந்த மார்பன் சிரீதரனுக்கு ஆளாய் கருவிருந்த நாள் முதலாக் காப்பு
19-பூவினும் மேவிய தேவி மணாளனை
20-பூ மேய செம்மாதை நின் மார்வில் சேர்வித்து பார் இடந்த அம்மா நின் பாதாத்தருகு

21-அங்கயல் பாய் வயல் தென்னரங்கன் அணி யாகம் மன்னும்
பங்கய மா மலரிப் பாவையைப் போற்றுதும் பத்தி எல்லாம்
தங்கிய தென்னத் தழைத்து நெஞ்சே நம் தலை மிசையே
பொங்கிய கீர்த்தி இராமானுசன் அடிப்பூ மன்னவே –

22-மையார் கண் மா மார்பில் மன்னும் திருமாலை
கையாழி சந்குடனே காண எண்ணி மெய்யான
காதலுடன் கூப்பிட்டுக் கண்டு உகந்த மாறன்
பேர் ஓத வுய்யுமே இன்னுயிர்

————————————————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அண்ணன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ கோயில் கந்தாடை வாதூல தேசிக குல அண்ணன் குமார வேங்கடாசார்யா ஸ்வாமி-அண்ணாவிலப்பன் ஸ்வாமிகள் -சஷ்டி யப்த பூர்த்தி -1972-மலர்

July 28, 2015

தர்க்கா பிரதிஷ்டா நாத்–ஸ்ரீ ப்ரஹ்ம -ஸூதரம் –
மிது நாயநிகர் -விசிஷாட்த்வைதிகள்
ஸ்ரீ வைஷ்ணவன் -ஸ்ரீ பகவத் அனுபவ ப்ரீதிகாரித்த கைங்கர்யம் பரம புருஷார்த்தம் –
த்வயோ பாவ -த்விதா –த்திதைவ த்வைதம் -நத்வைதம் அத்வைதம் –விசிஷ்டம்ச விசிஷ்டம்ச விசிஷ்டே –விசிஷ்டம்ச தத் அத்வைதம் ச விசிஷ்டாத்வைதம் -விக்ரஹம்
விசேஷணங்களுக்கு பேதமும் விசிஷ்டங்களுக்கு பேதமும் பொருள்
மிதுனம் அயனம் -வ்யுத்புத்தி பண்ணி -ஸ்ரீ உடன் கூடிய நாராயணனே ப்ராப்யம் -மிது நாயநிகர் விசிஷ்டாத்வைதிகள்
சதேவசோம் ஏதமக்ர ஆஸீத்
ஏகே ரஹவை நாராயண ஆஸீத்
ந ப்ரஹ்மா நேசான
-காரணந்து திய
யா ப்ருதிவ்யாம் திஷ்டன்
தத் தவம் அஸி
சத்ரி குண்டலி தேவதத்த -குடை குண்டலம் உடைய தேவதத்தன் போலே
விசேஷணங்களுக்கு பேதம் விசேஷ்யமான ப்ரஹ்மத்துக்கு அபேதம்
ஹரே அநுபாவ நந்தஸ்து-அவனைக் கிட்டி கைங்கர்யம் பெற்று அவன் முகோல்லாசத்தை அனுபவிப்பதே பரம புருஷார்த்தம்

—————————————————————————————————–

சர்வ சாகாப்ரத்யய ந்யாயம்-சர்வ வேதாந்த ப்ரத்யய ந்யாயம் -சாமான்ய விசேஷ ந்யாயம் -சாக பசு ந்யாயம் –
காரண வாக்யங்கள் நிர்குண பரங்கள் அத்வைதிகள்-
வேதம் -வேயதீதி வேத -வ்யுத்புத்தி -ஸ்வார்த்த பிரகாசம் -ஆஸ்திகருக்கு-
ய ஆத்மன பரோவேதய தம் விஷ்ணும் வேத யந்தியத் தத்வேதா நாம் ஹி வேதத்வம் யஸ்தம் வேத சவேதவித் -பிரமாணம்
சாஸ்திரம் விட உபதேசமே எளியது -சாஸ்திர ஞானம் பஹூ க்லேசம் புத்தேச்சலா காரணம் -உபதேசாத்தரிம் புத்வா விரமேத் சர்வ கர்ம ஸூ –கற்றலில் கேட்டல் நன்று நிவ்ருத்தி தர்மமே சிறந்தது -அல்லன நீக்கி நல்லன ஆக்குமவன் -சித்த உபாயமானவன் –
சர்வ கர்மங்கள் -சாஸ்திர அப்யாசாதி கர்மங்கள் -உபயுக்ததமான சாராம்சத்தைக் கடுக சரவணம் பண்ணி கிருஷி பண்ணாதே உண்ண விரகுஉடையவன் கிருஷி சிந்தையை விடுமா போலே
விரிவு கற்கைக்கு ஈடான சாஸ்திர அப்யாசாதி கர்மங்களில் உபரதனாய்க் கடுக்க மோஷ உபாயத்தில் மூல ப்ராப்தம் -தேசிகன் திருவாக்கு
இதனாலே சாஸ்திர ஞானம் -ஸ்வயம் ஆர்ஜிதம் -திரு மந்தரத்தால் பிறக்கும் ஞானம் பித்ருக்க தனம் -பிள்ளை லோகாசார்யார்
ஸ்வ ஜ்ஞானம் பிராபக ஜ்ஞானம் ப்ராப்ய ஜ்ஞானம் முமுஷூப்பி ஜ்ஞான த்ரயம் உபாதேயம் ஏதத் அந்யன்ன கிஞ்சன –ஸ்வரூப உபாய உபய ஞானங்கள் -மூன்றையும் ரகஸ்ய த்ரயம் காட்டும்
தானோருருவே தனி வித்தாய் -வேர் முதல் வித்தாய் -பஹூச்யாம் –சங்கல்ப விசிஷ்டன் -நிமித்த காரணம்
ஸூ ஷ்ம சிதசித் விசிஷ்ட பிரமம் –உபாதான காரணம்
ஜ்ஞான சக்த்யாதி விசிஷ்டன் -சஹ காரி காரணம் -ஆதி சப்தம் காலத்தையும் குறிக்கும்
மனஸ் ஏவ ஜகத் சிருஷ்டி –எல்லையில் ஞானத்தன் ஞானம் அகத்தே கொண்டு எல்லாக் கருமங்களும் செய் எல்லையில் மாயனை –ஞானத்தை சாதனமாகக் கொண்டு சிருஷ்டி
உப சம்ஹாரதர்ச நாதி கரணம் –சத்ய சங்கல்பம் பரிகரமாகும் என்பதை வலியுறுத்தவே -சுருதி பிரகாசிகை
பயோம்புவச் சேத தத்ராபி -ஸூ தரம்
ப்ரஹ்ம வனம் ப்ரஹ்ம சவ்ருஷ மாசீத் -சுருதி பிரமம் சஹகாரி காரணம்

—————————————————————————————————————————————–

மேகம் பருகின சமுத்திராம்பு போலே நூற் கடல் சொல் இவர் வாயனவாய் திருந்தினவாறே சர்வதா சர்வ உப ஜீவ்யமாமே -நாயனார்
பரத்வம் -வேதம் -சுகாதிகள்முதல் ஆழ்வார்கள் பரத்வத்திலே ஊன்றி இருப்பார்கள்
ஷீராப்தி வ்யூஹம் -பாஞ்சராத்ரம்
ஹார்த்தம் அந்தர்யாமி -ஸ்ம்ருதிகள் -சனகாதிகள் -திரு மழிசைப் பிரான் -அந்தர்யாத்மதையிலே ஊன்றி இருப்பார்கள்
விபவம் -இதிஹாச புராணங்கள் -வால்மீகாதிகளும் குலசேகரப் பெருமாளும் ராமாவதாரத்திலும் பராசராதிகளும் நம்மாழ்வாரும் கிருஷ்ணாவதாரத்திலும் ஊன்றி இருப்பார்கள்
அர்ச்சை -திவ்ய பிரபந்தங்கள்
அதவா வேத வேத்ய நியாயத்தாலே பரதவ பர முது வேதம் வியூக வியாப்தி அவதரணங்களில் ஓதின நீதி கேட்ட மனு படு கதைகளாய் ஆக மூர்த்தியில் பண்ணிய தமிழ் ஆனவாறே வேதத்தை த்ராவிடமாகச் செய்தார் -நாயனார்
கிருஷ்ண த்ருஷ்ணா தத்வம் –செய்ய தாமரைக் கண்ணனாம் -திருவாய்மொழி -அர்ச்சாவதார சௌலப்யம்
அன்று தேர் கடவிய பெருமான் கனை கழல் காண்பது என்று கொல் கண்களே
சௌலப்யத்தை அர்ச்சாவதார பர்யந்தமாக அருளிச் செய்து அனந்தரம் தன் துறையான கிருஷ்ணாவதாரத்திலே போய் நாம் கண்ணாலே கண்டு அனுபவிக்கப் பெறுவது என்றோ
என்னும் அனவாப்தியோடே தலைக் கட்டுகிறார் –அருமையும் எளிமையும் பாரார்கள் இ றே-ஒரோ விஷயங்களிலே ப்ராவணராய் இருப்பார் –
பரத்வத்துக்கு உத்கர்ஷம் உண்டாய் போவாரும் பலர் உண்டாய் இருக்கச் செய்தேயும் பாவே நான்யாத்ரா கச்சதி என்றான் இ றே திருவடி –
அப்படியே கிருஷ்ணாவதாரத்தில் காட்டில் அர்ச்சாவதாரத்துக்கு நீர்மை மிக்கு இருந்ததே யாகிலும் இவர் எத்திறம் என்று ஆழம் கால் பட்டது கிருஷ்ணாவதாரத்திலே ஆயிற்று
ஸ்வரூபக்ருத தாஸ்யம் -குண க்ருத தாஸ்யம் -கடியன் கொடியன் நெடியமால் உலகம் கொண்ட அடியன் அறிவரு மேனி மாயத்தான் ஆகிலும்
கொடிய என்நெஞ்சம் அவன் என்றே கிடக்கும் எல்லே துடி கொல் இடைமடத் தோழீ அன்னை என் செய்யுமே -5-3-4-
அச்சேத்யோயம்-அதாஹ்யோயம்-அக்லேத்ய -அசோஷ்ய ஏவச வெட்டவோ எரிக்கவோ நனைக்கவோ உலர்த்தவோ முடியாது
சிவனோடு பிரமன் வண் திருமடந்தை சேர் திரு ஆகம் என் ஆவி ஈரும் -9-9-5-
வேம் எமதுயிர் அழல் மெழுகில் உக்கு வெள் வளை மேகலை கழன்று வீழ தூ மலர் கண் இணை முத்தம் சோர துணை முலை பயந்து என் தோள்கள் வாட -10-3-7-
காரியம் நல்லநகல் அவை கானில் என் கண்ணனுக்கு என்று ஈரியாய் இருப்பாள் -6-7-9-
வாயும் திருமால் மறைய நிற்க ஆற்றாமை போய் விஞ்சி மிக்க புலம்புதலாய் ஆய அறியாதவற்றோடு அணைந்து அழுத மாறன் –
அச்சேத்யோயம்- என்னுமது ஈரும் வேம் ஈ ரியாய் உலர்த்த என்னப்பட –காற்றும் கழியும் கட்டி அழக கொண்ட பெரும் காதலுக்கு பத்திமை நூல் வரம்பில்லையே –நாயனார்

மறைப் பாற் கடலைத் திரு நாவின் மந்தரத்தால் கடைந்து
துறைப்பால் படுத்தி தமிழ் ஆயிரத்தின் சுவை அமிர்தம்
கறைப் பாம்பணைப் பள்ளியான் அன்பர் ஈட்டம் கழித்து அருந்த
நிறைப்பான் கழல் அன்றி சன்ம விடாய்க்கு நிழல் இல்லையே

ஸ்ரீ கிருஷ்ண த்ருஷ்ணா தத்வம்-மாறன்
மாறன் அடி பணிந்து உய்ந்தவர் நம் இராமானுசன்
இராமானுசன் பொற் பாதுகையாம் நம் முதலியாண்டான்-

—————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அண்ணன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ அண்ணாவிலப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேளுக்குடி வரதாச்சார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஆழ்வார் திருநகரி நல்லான் சக்கரவர்த்தி ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பாசுரப் படி ஸ்ரீ கிருஷ்ணாவதாரம் –7—பால சேஷ்டிதங்கள—ஆயர் புத்திரன் -ஆநிரை மேய்த்தவன்- அருளிச் செயல்கள் —

July 27, 2015

ஆயர் புத்திரன் அல்லன் அரும் தெய்வம் –
வேயின் குழலூதி வித்தகனாய் நின்ற ஆயன் –
அரவணையாய் ஆயர் ஏறே
நந்தகோபன் அணி சிறுவா
ஆயர்பாடிக்கு அணி விளக்கே
திரு வாயர் பாடிப் பிரானே தலைநிலாப் போதே யுன் காதைப் பெருக்காதே விட்டிட்டேன் குற்றமே யன்றே
ஆநிரை மேய்க்க நீ போதி -அருமருந்தாவது அறியாய் -கானகம் எல்லாம் திரிந்து உன் கரிய திரு மேனி வாட —தேனில் இனிய பிரான்
அஞ்சன வண்ணனை ஆயர் கோலக் கொழுந்தினை
குடையும் செருப்பும் கொடாதே தாமோதரனை நான் உடையும் கடியான ஊன்று வெம் பரற்களுடை கடிய வென்காநிடைக்
காலடி நோவக் கன்றின் பின் கொடியனேன் பிள்ளையைப் போக்கினேன் எல்லா பாவமே
என்றும் எனக்கு இனியானை என் மணி வண்ணனை கன்றின் பின் போக்கினேன் என்று அசோதை கழறிய
சீலைக் குதம்பை யோருகாது ஒரு காத்து செந்நிற மேல் தோன்றிப்பூ கோலப் பனைக் கச்சும் கூறையுடையும் குளிர்முத்தின் கோடாலமும் காளிப்பின்னே வருகின்ற கடல் வண்ணன்
தென்னரங்கம் மன்னிய சீர் மது சூதனா கேசவா பாவியேன் வாழ்வுகந்து உன்னை இளங்கன்று மேய்க்கச் சிறு காலே
யூட்டி ஒருப்படுத்தேன் என்னில் மனம் வலியாள் ஒரு பெண்ணில்லை என் குட்டனே முத்தந்தா –
காடுகளோடு போய்க் கன்றுகள் மேய்த்து மறியோடி கார்க்கோடல் பூச் சூடி வருகின்ற தாமோதரா கற்றுத் தூளி காண் உன்னுடம்பு
நீ யுகக்கும் குடையும் செருப்பும் குழலும் தருவிக்கக் கொள்ளாதே போனாய் மாலே கடிய வெங்கா னிடை கன்றின் பின்
போன சிறுக் குட்டச் செங்கமல வடியும் வெதும்பி உன் கண்கள் சிவந்தாய் அசைந்திட்டாய் நீ எம்பிரான்
என் சிற்றாயர் சிங்கமே சீதை மணாளா –கற்றாயரோடு நீ கன்றுகள் மேய்த்து கலந்துடன் வந்தாய் –
சுரிகையும் தெறி வில்லும் செண்டு கோலும் மேலாடையும் தோழன மார் கொண்டோட ஒரு கையால் ஒருவன் தன் தோளை யூன்றி
ஆநிரையினம் மீளக் குறித்த சங்கம் வருகையில் வாடிய பிள்ளை கண்ணன் மஞ்சளும் மேனியும் வடிவும் கண்டாள்
கன்றுகள் மேய்த்துத் தன் தோழரோடு கலந்துடன் வருவானைத் தெருவில் கண்டு என்றும் இவனை ஒப்பாரை நங்காய் கண்டு அறியேன்
யசோதை நல் ஆய்ச்சி தன புத்திரன் கோவிந்தனை கற்றினம் மேய்த்து வரக் கண்டு உகந்து –தென் புதுவை விட்டு சித்தன் சொல் கற்றிவை பாட வல்லார் கடல் வண்ணன் கண்ணன் கழல் இணை காண்பர்களே
சுற்றி நின்று ஆயர் தலைகள் இடச் சுருள் பங்கி நேத்திரத்தால் அணிந்து பற்றி நின்று ஆயர் கடைத் தலையே பாடவும் ஆடக் கண்டேன்
ஆயரோடு ஆலித்து வருகின்ற வாயப்பிள்ளை அழகு கண்டு என் மகள் அயர்கின்றதே
இந்த்ரன் போல் வரும் ஆய்ப்பிள்ளை
ஆயர்பாடியில் வீதியூடே கண்ணன் காலிப் பின்னே எழுந்து அருளக் கண்டு இளவாய்க் கன்னிமார் காமுற்ற வண்ணம்
ஆயர்களோடு போய் ஆநிரை காத்து –ஆயர்கள் எற்றினைப் பாடிப்பற -ஆநிரை மேய்த்தானைப் பாடிப்பற

கோ நிரை மேய்த்தவனே எம்மானே அன்று முதல் இன்று அறுதியா ஆதியம் சோதி மறந்து அறியேன் –
ஆயர்கள் ஏற்றினை யச்சுதனை அரங்கத்து அரவணைப் பள்ளியானை
ஆயர் குலத்தினில் தோன்றும் அணி விளக்கு -தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனை –
பெற்றம் மேய்த்து உண்ணும் குளத்தில் பிறந்து நீ குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது –
கற்றினம் மேய்க்கலும் மேக்கப் பெற்றான் காடு வாழ் சாதியுமாகப் பெற்றான்
அல்லல் விளைத்த பெருமானை ஆயர் பாடிக்கு அணி விளக்கை
பட்டி மேய்ந்ததோர் காரேறு பல தேவற்கோர் கீழ்க் கன்றாய்
இட்டமான பசுக்களை இனிது மறித்து நீரூட்டி விட்டுக் கொண்டு விளையாட விருந்தாவனத்தே கண்டோமே –
ஆவினை யன்று உய்யக் கொண்ட வாயர் ஏற்றை அமரரர்கள் தம் தலைவனை யம் தமிழ் இன்பப் பாவினை அவ்விட மொழியை
ஆதியாயன் அரங்கன் அம்தாமரை பேதை மணாளன் தன் பித்தனே
ஆயனே அரங்கா என்று அழைக்கின்றேன் பேயனாய் ஒழிந்தேன் எம்பிரானுக்கே –
ஆயனாகி ஆயர் மங்கை வேய தோள் விரும்பினாய் ஆய நின்னை யாவர் வல்லர் அம்பரத்தொடு இம்பராய் மாய மாய மாயை கொல்
ஆயர் தம் கொழுந்தே
கற்றினம் மேய்த்த எந்தை கழல் இணை பணிமின் நீரே
கொண்டல் வண்ணனைக் கோவலனாய் வெண்ணெய் யுண்ட வாயன் என்னுள்ளம் கவர்ந்தானை அண்டர் கொண் அணி அரங்கன் என் அமுது
ஆயர் கொல் மாயம் அறிய மாட்டேன் -வெஞ்சுடர் ஆழியும் சங்கும் ஏந்தி வேதம் முன் ஓதுவார் நீதி வானத்து அஞ்சுடர் போன்று இவர் ஆர் கொல் என்ன அட்ட புயகரத்தேன் என்றாரே
தேன் வாய வரி வண்டே திருவாலி நகராளும் ஆனாயற்கு என்னுறு நோய் அறியச் சென்று உரையாயே
தேராரும் நெடு வீதித் திருவாலி நகராளும் காராயன் என்னுடைய கனவளையும் கவர்வானோ –

————————————————————————————————————

ஆநிரை மேய்த்து அவை காத்தவன் உகந்து இனிது உறை கோயில் –வண் புருடோத்தமமே —
கோலால் நிரை மேய்த்த எம் கோவலர் கோவே –
ஆநிரை மேய்த்து அன்று அலைகடல் அடைந்திட்டு அரக்கர் தம் சிரங்களை யுருட்டி கார் நிரை மேகம் கலந்ததோர் உருவக் கண்ணனார் கருதிய கோயில் –திரு வெள்ளி யாங்குடி யதுவே
கற்றா மறித்து –பொற்றாமரையாள் கேள்வன்
ஆ மருவி நிரை மேய்த்த அணி யரங்கத்து அம்மானை
ஆயர் கோவாய் நின்றான்
தண் தாமரைக் கண்ணா ஆயா அலை நீருலகு ஏழும் முன்னுண்ட வாயா
தாய் நினைந்த கன்றே யோக்க என்னையும் தன்னையே நினைக்கச் செய்து தான் எனக்காய் நினைந்து அருள் செய்யும் அப்பனை
அன்று இவ்வையகம்உண்டு உமிழ்ந்திட்ட வாயனை மதிள் கோவலிடைக் கழி யாயனை அமரர்க்கு அரி ஏற்றை என் அன்பனை அன்றி ஆதரியேனே
கூந்தலார் மகிழ் கோவலனாய் வெண்ணெய் மாந்து அழுந்தையில் கண்டு மகிழ்ந்து போய்
உங்கள் தம் ஆநிரை எல்லாம் வந்து புகுதரும் போது வானிடைத் தெய்வங்கள் காண அந்தியம் போது அங்கு நில்லேல் ஆழி யங்கையனே வாராய் –
கற்றக் குழாத்து இளங்கோவே தோன்றிய தொல் புகழாளா கற்றினம் தோறும் மறித்துக் கானம் திரிந்த களிறே
இரு நிலத்து எங்கள் தம் ஆயர் அழக அடிகள் அரவிந்தவாயவனே
மற்றாரும் அஞ்சப்போய் வஞ்சப் பெண் நஞ்சுண்ட கற்றாயனே
வன் பேய் முலை வாங்கி யுண்ட அவ்வாயன் நிற்க இவ்வாயன் வாய் எங்கு வேய்ங்குழல் என்னோடாடும் இளமையே
அறியாதார்க்கு ஆனாயனாகிப் போய் ஆய்ப்பாடி உரியார் நறு வெண்ணெய் உண்டுகந்தான்
கன்று மேய்த்து இனிது உகந்த காளாய் என்றும்
ஆ மருவி நிரை மேய்த்த வமரர் கோமான் –

—————————————————————————————————————————–

தள வேழ் முறுவல் பின்னைக்காய் வல்லானாயர் தலைவனாய்
மனைசேர் ஆயர் குலமுதலே மா மாயனே மாதவா
ஆயர் கொழுந்தாய் அவரால் புடையுன்னும் மாயப்பிரானை என் மாணிக்கச் சோதியை தூய வமுதைப் பருகி பருகி என் மாயப்பிறவி மயர்வறுத்தேனே
அயர்வில் அமரரர்கள் ஆதிக் கொழுந்தை என் இசைவினை என் சொல்லி யான் விடுவேனோ
அமரர்க்கு அமுதீந்த ஆயர் கொழுந்தை
ஆனான் ஆயன் மீனோடு ஏனமும் தானான் என்னில் தானாய சங்கே
ஏபாவம் ஏழுலகும் ஈபாவம் செய்து அருளால் அளிப்பாரார் மா பாவம் விட அரற்குப் பிச்சை பேய் கோபால கோளரி எறன்றியே
ஓயும் மூப்புப் பிறப்பு இறப்புப் பிணி வீயுமாறு செய்வான் திரு வேங்கடத்து ஆயன் நாள் மலராம் அடித்தாமரை வாயுள்ளும் மனத்துள்ளும் வைப்பார்கட்கே –
பொரு சிறைப் புள்ளைக் கடாவிய மாயனை ஆயனைப் போர் சக்கரத்து தரியினை அச்சுதனைப் பற்றி யான் இறையேனும் இடர் இலனே
இனவான் கன்று மேய்த்தேனும் யானே என்னும் -இனவா நிரை காத்தேனும் யானே என்னும் -இன வாயர் தலைவனும் யானே என்னும்
காலி மேய்க்க வல்லாய் எம்மை நீ கழறேலே
இவ்வாயர் குலத்தை வீடுய்யத் தோன்றிய கரு மாணிக்கச் சுடர் நின்றன்னால் நலிவே படுவோம் என்றும் ஆய்ச்சியோமே –
நிரை மேய்த்ததும் –மற்றும் பல மாயக் கோலப் பிரான் தன செய்கை நினைந்து மனம் குழைந்து நேயத்தோடு கழிந்த போது எனக்கு எவ்வுலகம் நிகரே
அங்கு ஓர் ஆய்க்கூலம் புக்கதும் –ஈண்டு நான் அலற்றப் பெற்றேன் எனக்கு என்ன விகல் உளதே
நிரைகள் மேய்த்ததுமே பிதற்றி நெடும் கண்ணீர் மல்க நிற்குமே
என்னுடைக் கோவலனே என் பொல்லாக் கரு மாணிக்கமே
ஏற்றரும் வைகுந்தத்தை அருளும் நமக்கு ஆயர் குலத்து ஈற்றிளம் பிள்ளை ஒன்றாய்ப் புக்கு மாயங்களே இயற்றி –ஆற்றல் மிக்கான் பெரிய பரஞ்சோதி புக்க வரியே
மாய மயக்கு மயக்கான் என்னை வஞ்சித்து ஆயன் அமரர்க்கு அரியேறு எனதம்மான் தூய சுடர்ச் சோதி தனது என்னுள் வைத்தான் தேசம் திகழும் தன திருவருள் செய்தே
ஆயர்கள் ஏறே அரியே எம்மாயோன்
ஆ புகு மாலையும் ஆகின்றாலோ யாமுடை யாயன் தன் மனம் கல்லாலோ
கோவிந்தா நின் தொழுத்தனில் பசுக்களையே விரும்பித் துறந்து எம்மையிட்டவை மேய்க்கப் போதி
நின் பசு நிரை மேய்க்கப் போக்கு வேம் எமது உயிர் அழல் மெழுகில் உக்கே –
ஆ மகிழ்ந்து அங்கவை மேய்க்கின்று உன்னோடு அசுரர்கள் தலைப் பெய்யில் எவன் கொல் ஆங்கே
திவத்திலும் பசு நிரை மேய்ப்பு உவத்தி செங்கனி வாய் எங்கள் ஆயர் தேவே
அங்கு அவன் பசு நிரை மேய்ப்பு ஒழிப்பான் உரைத்தன இவையும் பத்து

——————————————————————————————————————

நமன் தமரால் ஆராயப்பட்டு அறியார் கண்டீர் அரவணை மேல் பேராயற்கு ஆட்பட்டார் பேர்
கோவலனாய் ஆநிரைகள் மேய்த்துக் குழலூதி மா வலனாய்க் கீண்ட மணி வண்ணன் –
அவனே –ஆநிரைகள் காத்தான் –அவனே கலங்காப் பெரு நகரம் காட்டுவான் கண்டீர்
சேயன் அணியன் சிரியன் மிகப் பெரியன் ஆயன் துவரைக் கோனாய் நின்ற மாயன் அன்றோதிய வாக்கதனைக் கல்லார் உலகத்தில் ஏதிலராம் மெய்ஜ்ஞானமில்
ஊரா நிரை மேய்த்து ஊலகெல்லாம் உண்டு உமிழ்ந்தும் ஆராத தன்மையனாய்

——————————————————————————————————-
ஆயர் புத்திரன் அல்லன் அரும் தெய்வம் –
வேயின் குழலூதி வித்தகனாய் நின்ற ஆயன் –
அரவணையாய் ஆயர் ஏறே
நந்தகோபன் அணி சிறுவா
ஆயர்பாடிக்கு அணி விளக்கே
திரு வாயர் பாடிப் பிரானே தலைநிலாப் போதே யுன் காதைப் பெருக்காதே விட்டிட்டேன் குற்றமே யன்றே
அஞ்சன வண்ணனை ஆயர் கோலக் கொழுந்தினை
சீலைக் குதம்பை யோருகாது ஒரு காத்து செந்நிற மேல் தோன்றிப்பூ கோலப் பனைக் கச்சும் கூறையுடையும் குளிர்முத்தின் கோடாலமும் காளிப்பின்னே வருகின்ற கடல் வண்ணன்
-காடுகளோடு போய்க் கன்றுகள் மேய்த்து மறியோடி கார்க்கோடல் பூச் சூடி வருகின்ற தாமோதரா கற்றுத் தூளி காண் உன்னுடம்பு
என் சிற்றாயர் சிங்கமே சீதை மணாளா –கற்றாயரோடு நீ கன்றுகள் மேய்த்து கலந்துடன் வந்தாய் –
சுரிகையும் தெறி வில்லும் செண்டு கோலும் மேலாடையும் தோழன மார் கொண்டோட ஒரு கையால் ஒருவன் தன் தோளை யூன்றி
ஆநிரையினம் மீளக் குறித்த சங்கம் வருகையில் வாடிய பிள்ளை கண்ணன் மஞ்சளும் மேனியும் வடிவும் கண்டாள்
கன்றுகள் மேய்த்துத் தன் தோழரோடு கலந்துடன் வருவானைத் தெருவில் கண்டு என்றும் இவனை ஒப்பாரை நங்காய் கண்டு அறியேன்
யசோதை நல் ஆய்ச்சி தன புத்திரன் கோவிந்தனை கற்றினம் மேய்த்து வரக் கண்டு உகந்து –
சுற்றி நின்று ஆயர் தலைகள் இடச் சுருள் பங்கி நேத்திரத்தால் அணிந்து பற்றி நின்று ஆயர் கடைத் தலையே பாடவும் ஆடக் கண்டேன்
ஆயரோடு ஆலித்து வருகின்ற வாயப்பிள்ளை அழகு கண்டு என் மகள் அயர்கின்றதே
இந்த்ரன் போல் வரும் ஆய்ப்பிள்ளை
ஆயர்பாடியில் வீதியூடே கண்ணன் காலிப் பின்னே எழுந்து அருளக் கண்டு இளவாய்க் கன்னிமார் காமுற்ற வண்ணம்
ஆயர்களோடு போய் ஆநிரை காத்து –ஆயர்கள் எற்றினைப் பாடிப்பற -ஆநிரை மேய்த்தானைப் பாடிப்பற

ஆநிரை மேய்க்க நீ போதி -அருமருந்தாவது அறியாய் -கானகம் எல்லாம் திரிந்து உன் கரிய திரு மேனி வாட —தேனில் இனிய பிரான்
குடையும் செருப்பும் கொடாதே தாமோதரனை நான் உடையும் கடியான ஊன்று வெம் பரற்களுடை கடிய வென்காநிடைக்
காலடி நோவக் கன்றின் பின் கொடியனேன் பிள்ளையைப் போக்கினேன் எல்லா பாவமே
என்றும் எனக்கு இனியானை என் மணி வண்ணனை கன்றின் பின் போக்கினேன் என்று அசோதை கழறிய
தென்னரங்கம் மன்னிய சீர் மது சூதனா கேசவா பாவியேன் வாழ்வுகந்து உன்னை இளங்கன்று மேய்க்கச் சிறு காலே
யூட்டி ஒருப்படுத்தேன் என்னில் மனம் வலியாள் ஒரு பெண்ணில்லை என் குட்டனே முத்தந்தா
நீ யுகக்கும் குடையும் செருப்பும் குழலும் தருவிக்கக் கொள்ளாதே போனாய் மாலே கடிய வெங்கா னிடை கன்றின் பின்
போன சிறுக் குட்டச் செங்கமல வடியும் வெதும்பி உன் கண்கள் சிவந்தாய் அசைந்திட்டாய் நீ எம்பிரான்
கோ நிரை மேய்த்தவனே எம்மானே அன்று முதல் இன்று அறுதியா ஆதியம் சோதி மறந்து அறியேன் –
ஆயர்கள் ஏற்றினை யச்சுதனை அரங்கத்து அரவணைப் பள்ளியானை
ஆயர் குலத்தினில் தோன்றும் அணி விளக்கு -தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனை –
பெற்றம் மேய்த்து உண்ணும் குளத்தில் பிறந்து நீ குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது –
கற்றினம் மேய்க்கலும் மேக்கப் பெற்றான் காடு வாழ் சாதியுமாகப் பெற்றான்
அல்லல் விளைத்த பெருமானை ஆயர் பாடிக்கு அணி விளக்கை
பட்டி மேய்ந்ததோர் காரேறு பல தேவற்கோர் கீழ்க் கன்றாய்
இட்டமான பசுக்களை இனிது மறித்து நீரூட்டி விட்டுக் கொண்டு விளையாட விருந்தாவனத்தே கண்டோமே –
ஆவினை யன்று உய்யக் கொண்ட வாயர் ஏற்றை அமரரர்கள் தம் தலைவனை யம் தமிழ் இன்பப் பாவினை அவ்விட மொழியை
ஆதியாயன் அரங்கன் அம்தாமரை பேதை மணாளன் தன் பித்தனே
ஆயனே அரங்கா என்று அழைக்கின்றேன் பேயனாய் ஒழிந்தேன் எம்பிரானுக்கே –
ஆயனாகி ஆயர் மங்கை வேய தோள் விரும்பினாய் ஆய நின்னை யாவர் வல்லர் அம்பரத்தொடு இம்பராய் மாய மாய மாயை கொல்
ஆயர் தம் கொழுந்தே
கற்றினம் மேய்த்த எந்தை கழல் இணை பணிமின் நீரே
கொண்டல் வண்ணனைக் கோவலனாய் வெண்ணெய் யுண்ட வாயன் என்னுள்ளம் கவர்ந்தானை அண்டர் கொண் அணி அரங்கன் என் அமுது
ஆயர் கொல் மாயம் அறிய மாட்டேன் -வெஞ்சுடர் ஆழியும் சங்கும் ஏந்தி வேதம் முன் ஓதுவார் நீதி வானத்து அஞ்சுடர் போன்று இவர் ஆர் கொல் என்ன அட்ட புயகரத்தேன் என்றாரே
தேன் வாய வரி வண்டே திருவாலி நகராளும் ஆனாயற்கு என்னுறு நோய் அறியச் சென்று உரையாயே
தேராரும் நெடு வீதித் திருவாலி நகராளும் காராயன் என்னுடைய கனவளையும் கவர்வானோ –
ஆநிரை மேய்த்து அவை காத்தவன் உகந்து இனிது உறை கோயில் –வண் புருடோத்தமமே —
கோலால் நிரை மேய்த்த எம் கோவலர் கோவே –
ஆநிரை மேய்த்து அன்று அலைகடல் அடைந்திட்டு அரக்கர் தம் சிரங்களை யுருட்டி கார் நிரை மேகம் கலந்ததோர் உருவக் கண்ணனார் கருதிய கோயில் –திரு வெள்ளி யாங்குடி யதுவே
கற்றா மறித்து –பொற்றாமரையாள் கேள்வன்
ஆ மருவி நிரை மேய்த்த அணி யரங்கத்து அம்மானை
ஆயர் கோவாய் நின்றான்
தண் தாமரைக் கண்ணா ஆயா அலை நீருலகு ஏழும் முன்னுண்ட வாயா
தாய் நினைந்த கன்றே யோக்க என்னையும் தன்னையே நினைக்கச் செய்து தான் எனக்காய் நினைந்து அருள் செய்யும் அப்பனை
அன்று இவ்வையகம்உண்டு உமிழ்ந்திட்ட வாயனை மதிள் கோவலிடைக் கழி யாயனை அமரர்க்கு அரி ஏற்றை என் அன்பனை அன்றி ஆதரியேனே
கூந்தலார் மகிழ் கோவலனாய் வெண்ணெய் மாந்து அழுந்தையில் கண்டு மகிழ்ந்து போய்
உங்கள் தம் ஆநிரை எல்லாம் வந்து புகுதரும் போது வானிடைத் தெய்வங்கள் காண அந்தியம் போது அங்கு நில்லேல் ஆழி யங்கையனே வாராய் –
கற்றக் குழாத்து இளங்கோவே தோன்றிய தொல் புகழாளா கற்றினம் தோறும் மறித்துக் கானம் திரிந்த களிறே
இரு நிலத்து எங்கள் தம் ஆயர் அழக அடிகள் அரவிந்தவாயவனே
மற்றாரும் அஞ்சப்போய் வஞ்சப் பெண் நஞ்சுண்ட கற்றாயனே
வன் பேய் முலை வாங்கி யுண்ட அவ்வாயன் நிற்க இவ்வாயன் வாய் எங்கு வேய்ங்குழல் என்னோடாடும் இளமையே
அறியாதார்க்கு ஆனாயனாகிப் போய் ஆய்ப்பாடி உரியார் நறு வெண்ணெய் உண்டுகந்தான்
கன்று மேய்த்து இனிது உகந்த காளாய் என்றும்
ஆ மருவி நிரை மேய்த்த வமரர் கோமான் –
தள வேழ் முறுவல் பின்னைக்காய் வல்லானாயர் தலைவனாய்
மனைசேர் ஆயர் குலமுதலே மா மாயனே மாதவா
ஆயர் கொழுந்தாய் அவரால் புடையுன்னும் மாயப்பிரானை என் மாணிக்கச் சோதியை தூய வமுதைப் பருகி பருகி என் மாயப்பிறவி மயர்வறுத்தேனே
அயர்வில் அமரரர்கள் ஆதிக் கொழுந்தை என் இசைவினை என் சொல்லி யான் விடுவேனோ
அமரர்க்கு அமுதீந்த ஆயர் கொழுந்தை
ஆனான் ஆயன் மீனோடு ஏனமும் தானான் என்னில் தானாய சங்கே
ஏபாவம் ஏழுலகும் ஈபாவம் செய்து அருளால் அளிப்பாரார் மா பாவம் விட அரற்குப் பிச்சை பேய் கோபால கோளரி எறன்றியே
ஓயும் மூப்புப் பிறப்பு இறப்புப் பிணி வீயுமாறு செய்வான் திரு வேங்கடத்து ஆயன் நாள் மலராம் அடித்தாமரை வாயுள்ளும் மனத்துள்ளும் வைப்பார்கட்கே –
பொரு சிறைப் புள்ளைக் கடாவிய மாயனை ஆயனைப் போர் சக்கரத்து தரியினை அச்சுதனைப் பற்றி யான் இறையேனும் இடர் இலனே
இனவான் கன்று மேய்த்தேனும் யானே என்னும் -இனவா நிரை காத்தேனும் யானே என்னும் -இன வாயர் தலைவனும் யானே என்னும்
காலி மேய்க்க வல்லாய் எம்மை நீ கழறேலே
இவ்வாயர் குலத்தை வீடுய்யத் தோன்றிய கரு மாணிக்கச் சுடர் நின்றன்னால் நலிவே படுவோம் என்றும் ஆய்ச்சியோமே –
நிரை மேய்த்ததும் –மற்றும் பல மாயக் கோலப் பிரான் தன செய்கை நினைந்து மனம் குழைந்து நேயத்தோடு கழிந்த போது எனக்கு எவ்வுலகம் நிகரே
அங்கு ஓர் ஆய்க்கூலம் புக்கதும் –ஈண்டு நான் அலற்றப் பெற்றேன் எனக்கு என்ன விகல் உளதே
நிரைகள் மேய்த்ததுமே பிதற்றி நெடும் கண்ணீர் மல்க நிற்குமே
என்னுடைக் கோவலனே என் பொல்லாக் கரு மாணிக்கமே
ஏற்றரும் வைகுந்தத்தை அருளும் நமக்கு ஆயர் குலத்து ஈற்றிளம் பிள்ளை ஒன்றாய்ப் புக்கு மாயங்களே இயற்றி –ஆற்றல் மிக்கான் பெரிய பரஞ்சோதி புக்க வரியே
மாய மயக்கு மயக்கான் என்னை வஞ்சித்து ஆயன் அமரர்க்கு அரியேறு எனதம்மான் தூய சுடர்ச் சோதி தனது என்னுள் வைத்தான் தேசம் திகழும் தன திருவருள் செய்தே
ஆயர்கள் ஏறே அரியே எம்மாயோன்
ஆ புகு மாலையும் ஆகின்றாலோ யாமுடை யாயன் தன் மனம் கல்லாலோ
கோவிந்தா நின் தொழுத்தனில் பசுக்களையே விரும்பித் துறந்து எம்மையிட்டவை மேய்க்கப் போதி
நின் பசு நிரை மேய்க்கப் போக்கு வேம் எமது உயிர் அழல் மெழுகில் உக்கே –
ஆ மகிழ்ந்து அங்கவை மேய்க்கின்று உன்னோடு அசுரர்கள் தலைப் பெய்யில் எவன் கொல் ஆங்கே
திவத்திலும் பசு நிரை மேய்ப்பு உவத்தி செங்கனி வாய் எங்கள் ஆயர் தேவே
அங்கு அவன் பசு நிரை மேய்ப்பு ஒழிப்பான் உரைத்தன இவையும் பத்து
நமன் தமரால் ஆராயப்பட்டு அறியார் கண்டீர் அரவணை மேல் பேராயற்கு ஆட்பட்டார் பேர்
கோவலனாய் ஆநிரைகள் மேய்த்துக் குழலூதி மா வலனாய்க் கீண்ட மணி வண்ணன் –
அவனே –ஆநிரைகள் காத்தான் –அவனே கலங்காப் பெரு நகரம் காட்டுவான் கண்டீர்
சேயன் அணியன் சிரியன் மிகப் பெரியன் ஆயன் துவரைக் கோனாய் நின்ற மாயன் அன்றோதிய வாக்கதனைக் கல்லார் உலகத்தில் ஏதிலராம் மெய்ஜ்ஞானமில்
ஊரா நிரை மேய்த்து ஊலகெல்லாம் உண்டு உமிழ்ந்தும் ஆராத தன்மையனாய்

——————————————————————————————————–

கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
ஆசார்யர்கள் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பாஷ்யம்— –1-1-3- -ஸ்ரீ ஆழ்வார் சுவாமிகள் —

July 26, 2015

சாஸ்திர யோநித்வாதிகரணம் -1-1-3-

ஸாஸ்த்ர யோநித்வாத் – சூத் 1-1-3.

அவதாரிகை:
ராமாயணம், பகவத் கீதை போன்ற பவித்ரமான புத்தகங்களை தரையில் வைக்காமல்
வியாச பீடம் என்று சொல்லப் படுகிற உயரமான பலகையிலோ, மணையிலோ வைப்பது போல ,
உபன்யாசகர் ஸ்ரோதாவினுடைய புத்தி கிரகிக்கும் அளவாக விஷயத்தை சங்கிரஹித்துச் சொல்வது அவதாரிகையாகும்.

முதல் சூத்ரத்தால் வேதாந்த வாக்கியங்களைக் கொண்டு பிரஹ்மத்தை அறியலாம் என்பதும்
குறிப்பாக எந்த வாக்யத்தால் பிரஹ்ம ஞானம் ஏற்படும் என்பதற்கு 2 வது சூத்ரதால்
”யாதோ இமாநி பூதாநி . . . .” என்கிற காரண வாக்கியம் காட்டப்பட்டது.

பிரத்யக்ஷம், அனுமானம், சப்தம் என்கிற கிரமத்தில் , பிரத்யக்ஷத்தால் பிரஹ்மத்தை அறிய முடியாத போது ,
அனுமானப் பிரமாணத்தை விட்டு சப்த பிரமாணம் வரை ஏன் செல்ல வேண்டும் என்கிற கேள்வி வர,
புழக்கடை மூலிகை இருக்க, பர்வதத்தை நாடவாருண்டோ? அதுபோல சுலபமான அனுமான பிராமணத்தை விட்டு
கஷ்டமான வேதாந்த வாக்கியங்களைத் தேடி ஏன் பிரஹ்ம ஞானத்தைப் பெறவேண்டும் என்பது கேள்வி. பதிலாக வருவது 3 வது சூத்ரம்.

சூத்ரம்:
ஸாஸ்த்ரயோநித்வாத் = ஸாத்ரம் யோநிஹி யஸ்ய ஸக என்பது பஹூரீஹி ஸமஸ்த பதம் (single compound word).
பஹூரீஹி உ.ம். பீதாம்பர: = பீதம் + அம்பரம் யஸ்ய ஸக
சித்ர குஹோ = வேறு வேறு வர்ணங்கள் கொண்ட பசுமாடுகளை உடையவன்.
வாக்கியார்த்தம் :
சாஸ்திரைவ பிரஹ்மத்யைவ போதயத் ஏவ = சாஸ்திரம் ஒன்றினாலேயே ஆறியப் படுமவன்.
வேதைச்ச ஸர்வை : அஹமேவ வேத்ய : என்பது கிருஷ்ண கீதை .
வேதாஸ் சாஸ்திரம் பரம் நாஸ்தி ந தெய்வம் கேசவாத் பரம்

முதல் நான்கும் -சேர்ந்து முன்னுரை -பீடிகா -போலே
சாஸ்திரமே பிரமாணம் -அதீந்த்ர்யம்
ஜகத் ஜென்மாதி காரணம் -அவதாரிகை –
ஸூத்ரம் அவதாரிகை -பீடிகா -உப ஆசனம் அருகே வர -உதவும்
அதிகரண சங்கதி ஸூத்ர சங்கதி
அவாந்தர சங்கதி -பிரம்மா ஞானம் வேதாந்த வாக்கியம் கொண்டே –
தேன் வேண்டியவன் -இங்கேயே இருக்க மலைக்கு போவது எதற்காக –
அனுமானம் பிரமாணம் எளியது -சப்தம் வேதம் சர்வாதிகாரம் இல்லையே -வேதாந்த பிரதிபாத்யம் –
ஜகத் காரணம் -அறிந்து -அனுமானத்தாலே சித்தம் -இருக்க வேதம் சாஸ்திரம் போக வேண்டுமா –
அவாந்தர சங்கதி -சப்த விசேஷ ரூப–வேதாந்தம் சப்தத்தில் விசேஷம் –

அத்யந்த அதீந்திரயம்–சாஸ்திரம் ஒன்றாலே -சாஸ்திரம் என்றாலே வேதாந்தம் –
சாஸ்திரம் ஏவைக ப்ரஹ்மம்- வேதைக சர்வம் அஹம் ஏவ -ஏவகாரம் எங்கும் கூட்டி அர்த்தம்
பல ஜ்யோதிஷம் தர்ம சாஸ்திரம் தர்க்க சாஸ்திரம் வ்யாகரண சாஸ்திரம் -மீமாம்ச சாஸ்திரம்
குமாரில பட்டர் –பிரவ்ருத்தி நிவ்ருத்தி நித்யம் உபாயம் -அநித்தியமாகவும் இருக்கலாம் பும்ஸாம் வேதம் உபதேசிக்கும் தத் சாஸ்திரம் –
அஹரக சந்த்யா -உபாசீயா தினம் சந்தா வந்தனம் செய் -போன்றவை
சாசனம் விதிக்கும் -காக்கவும் செய்யும் -சாசனம் பட்டும் இல்லை -வேதத்யயனம் செய்பவனை -ரஷிக்கவும் செய்யும் –
குரு-அந்தகாரம் -கு சப்தம் -ரு சப்தம் அதன் விரோதி -பரஞ்சோதி ஸ்வரூபம் காட்டி அருளுவதால் –
ஆசார்யனால் பகவல் லாபம் பகவானால் ஆசார்ய லாபம்-
வேதாத் சாஸ்திரம் பரம் நாஸ்தி -வேதமே பிரதானமான சாஸ்திரம் -யாருடைய சாசனம் -சூரியன் உதிப்பதும் -சாசனம் அடியாக –
சிருஷ்டி நியமம் -சாஸ்திரம் நாம சிருஷ்டி நியமம் என்பர் –
ப்ரத்யஷம் ஐந்து ஞான இந்த்ரியங்கள் மனச் மூலம் அறிவது -மானச பிரத்யஷம்
அனுமானம் பர்வதத்தில் புகை நெருப்பு –கருப்பு மேகம் மழை-பக்ஷம் சாத்தியம் ஹேது திரிஷ்டாந்தம்
சாபத போகம்
உபய லிங்கம் -ஸ்வரூப நிரூபிக தர்மம் நிரூபித்த ஸ்வரூப விசேஷணம் இரண்டு உண்டே
கோத்வம்-பசு மட்டுமே -அசாதாராண லஷணம்-
ப்ரஹ்ம வஸ்து -ஜகத் காரணத்வம்-ஸ்வரூப நிரூபித தர்மம் -உபய லிங்கம் -நிரூபித ஸ்வரூப விசேஷணம்
ப்ருகு வல்லி-யதோ வாயோ இமானி பூதானி -பிரத்யஷமாக காட்டி இந்த அனைத்தையும் -ஆனந்த வல்லி ப்ரஹ்ம வித்து ஆப்நோதி –
சத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்ம -என்று காட்டி ஸ்வரூப நிரூபக தர்மம் -தோஷங்கள் இல்லை என்று காட்டி இரண்டுக்கும் சம்பந்தம்
சத்வித்யா சாந்தோக்யம் -ஔதார்யம் -சரளா -அஜ்ஞ்ஞானிக்கு சுகம் ஆராத்ய -சுகதரம் ஆராதனை யும் எளியது –
அரை குறை ஞானிக்கு ப்ரஹ்மாவே வந்தாலும் தெளிவிக்க முடியாது ஸூ பாஷிதம் –
ஜகத் ரூபமாக பரிமாணம் –
ப்ரஹ்ம சப்தமே காட்டுவதால் பூர்வ பிரதிபன்னாகாரம் இல்லை
இருவர் கோவிந்தனை பற்றி பேச கோவிந்தனை அறியாதவன் கேட்க புரியாமல் விழிப்பான்
அது போலே இல்லை வ்யக்தி பற்றி அதுவே காட்டிக் கொடுக்கும் –
ப்ரஹ்மம் மட்டுமே சத்யம் மற்றவை மித்யா என்றது மற்றவை அவனை சார்ந்து இருப்பதால் –
ப்ரஹ்மம் மட்டுமே independant சத்யம் –
சரீராத்மா பாவம் -உபாதானம் -ஜகத் அசித்தும் சித்தும் ஜீவாத்மா நித்யம் நித்யம் அநி த்யானானாம்
ஸ்வரூபம் ஸ்வ பாவம் -எப்படி உண்டாகும் -நித்தியமான வஸ்துவாக இருந்தால்
காட்டுத் தீ -பொறி -அக்னி ரூபம் அஷரம் சப்த வாச்யன் -சத் வஸ்துக்கள் உண்டாகி லயம் அடைந்து -அத்வைதம் இல்லை ஐக்யம் இல்லை –
பிரஜாயந்தே -ஜீவாத்மாவுக்கும் உத்பத்தி உண்டே –
மூல பிரகிருதி -ப்ரஹ்மம் இடம் இருக்க ஞானம் இல்லாமல் -தோஷம் எப்படி வரும் –
காரணத்திலோ இல்லாதது கார்யத்தில் வராதே உபாதான காரணம் –

2-2- தர்க்க பாதம் -இத்தை விசாரிக்கும் -த்ருஷ்யதேது -விலஷண வஸ்து -தர்க்க அப்ரதிஷ்டானம் என்பதும் தர்க்கம் என்பர்
சில அளவு தர்க்கம் கார்யம் பண்ணும் அதற்கு தர்க்கம் அவசியம் வேண்டும் –
விதி -வைதம் -வேத -தாது -சாஸ்திரம் –
அநு மானம் -அநு -பிறகு மானம் ஞானம் -பிரத்யஷம் அப்புறம் தான் அநு மானம் -inferance
பக்ஷ தர்மதா ஞானம் -பர்வதம் பஷம்-
சாத்யம்-வன்கி–நெருப்பு -ஹேது பூமக -புகை -புகை ஞானம் கொண்டு நெருப்பு -அனுமானம் –
வ்யாப்தி ஸ்மரணம் ஏக சம்பந்தி ஞானம் -அபர சம்பந்தி ஸ்மாரகம்
யானை யானைப்பாகன் -தனியாக வந்தால் -இன்னொன்று எங்கே கேட்போம்
நியத சாதர்யம் –சேர்ந்தே இருப்பவை –எதிர்பதம் -ஆகஸ்மிக சாதர்யம் தார் செயலாக சேர்த்தி –
பரமார்த்தா -வ்யாப்தி ஸ்மரணம் வந்ததும் சாத்யம் பலிக்கும் நியத சம்பந்தம் சாதர்யம் நினைவுக்ஜ்கு வர -இப்படி மூன்று வழிகள்-
பிரமாணம் யோக்யம் பிரமேயம் -யாருக்கு பிரமாதா
பிரா -யதார்த்தம் -பிரமிதி -ஞான திரிபுடி –
இந்த்ரியார்த்த சந்நிதிகர்தம் பிரத்யஷம் பிரமாணம் பிரமிதி இரண்டும் ஒன்றே இங்கே
ஆப்த்ய வாக்கியம் சப்தம் சாபத ஞானம் போதகம் -தர்க்க சாஸ்திரம் புரிந்து கொள்ள வேண்டும் -சாஸ்திர யோநித்வாத் அறிய
ஸ்வார்த்த அனுமானம் பரார்த்த அனுமானம் -இரண்டு வகை -ஸ்வ பாவம் கேள்வி கேட்க முடியாது -யானை யானைப் பாகன் -சம்பந்தம் அறிந்து –
தனியாக வந்தால் கேட்ப்போம் -புகை நெருப்பு -போலே நியதம் -வ்யாப்தி ஸ்மரணம் -நியத சாதர்யம் -அனுமதி உத்பத்தி பிரக்ரியை –
வாசஸ்பதி மிஸ்ரர் சங்கரர் வாத கதை -ச்தோத்ரியன்-கிளி -வினயம் -தொனி-ஸ்வ தஸ் பிரமாணம் பரகஸ் பிரமாணம் கிளிகளே வாதம் பண்ண –
பாமதி -மனைவி -சங்கர பாஷ்யம் பெயரும் பாமதி பெயரில் -தர்க்க சாஸ்திரம் பிராவண்யம் கொண்டவர்கள் –
யானை பார்த்து -பிளிறு சப்தம் கேட்டா அனுமானிக்க வேண்டும்
பிரத்யஷமாக -தெரிந்தும் அனுமானம் பார்ப்பார்களோ வாசஸ்பதி வசனம் அவி விரோதம் –
அவிநா பாபம் -நெருப்பு இல்லாமல் புகை இருக்காது
அன்வய வ்யாப்தி வ்யதிரேக வ்யாப்தி -நெருப்பு இல்லாமல் புகை இருக்காது -நெருப்பு இருந்தால் புகழ் இருக்கும் –
இரண்டும் இருந்தால் நிச்சயம் அனுமானத்தில் தோஷம் இருக்காது
அன்வய வ்யதிரேக –திருஷ்டாந்தம்
சித்தாந்தம் விருத்தம் இல்லாத அனுமானம் ஒத்துக் கொள்கிறோம்
பஞ்சாவவயம் வாக்ய பிரயோக -பரார்த்தானுமானம் –
பிரதிஜ்ஞ்க்ன –மலையில் தீ இருக்க வேண்டும்
ஹேது -மலையில் புகை
உதாரணம் சமையல் அறையில்
உபநய -மலையிலும் புகை உள்ளது
நிகமனம் -அதனால் மலையில் நெருப்பு இறந்தே ஆக வேண்டும் –
இந்த ஐந்தும் -மற்றவருக்கும் அனுபவம் உண்டாக்க –பஞ்ச அவயவ வாக்கியம் –
பௌத்தர்உதாரணம் உபநய இரண்டும் ஓதும் என்பர்
மீமாம்சம் பிரதிக்பா ஹேது நியமனம் மூன்றும் போதும் –
எப்படி கேள்வி -வந்த பின்பு –சில மீமாம்சகர் -உதாரணம் சொல்லி –
வாதம் –ஜல்பம் -விதண்டா -மூன்று விதம் -வாதி பிரதிவாதி மத்தியஸ்தர் -சந்நிதியில் -சமயபந்தம் -நிக்ரஹ ஸ்தானம் –
வித்ராண்யம் வாதி வேதான்ப்த தேசிகர் மத்யச்தகர் அஷோப்ய முனி -பிரதி வாதி கௌதம மகரிஷி நியாய சாஸ்திரம்
எல்லாம் அநு மான ரூபம் -அநு மான ஆகாரம் -புரிந்து கொள்ள வேண்டும் -ஒவ் ஓன்று அதிகரணத்துக்கும் உண்டே

வேத வசன விரோதம் -எந்த பிரகரணத்தில் சொல்லிற்று என்று விசாரித்து அமன்வயப்படுத்த வேண்டும்
ரகுவம்சம் -கார்த்தவீர்யார்ஜுனன் -பல புராணங்களில் -அடி நுனி நடு மேல் அறிந்து –
ஹேத்வாபாச – -தோஷங்கள் -சௌயபிசாரம்-மலையில் குளம் இருக்க -பாத ஹேத்வாபாசம்-
ஸ்வரூப சித்தி ஆபாசம் -தர்க்க சாஸ்திரம் -தத்வ சிந்தாமணி –
தத்வ நிர்ணயம் அறிய இந்த ஹேது தோஷங்கள் அறிய வேண்டும் –
விஜய பிரயோகத்துக்கும் அறிய வேண்டும் -வாதம் ஜல்பம் விதண்டா வாத முறைகள்
gas stove heated metal -ஹேத்வாபாசம் -நெருப்பு புகை இல்லாமல் இருக்கலாம் –
every day is not sunday every sunday is day
இடி சப்தம் கேட்டு -மேகம் மழை பொழியும் சொல்வது அனுமானம்
துணி -நூல் நெசவாளி -சாமான்ய அனுமானம்
விசேஷ அனுமானம் –
குண்டு தேவதத்தன் பகலில் உண்பதை பார்க்க வில்லை என்றால் இரவில் உண்பான் என்று அனுமானிக்கிறோம் –
-அர்த்தாபத்தி பிரமாணம் -என்பர் மீமாம்சகர் -நாம் இதுவும் ஒரு வகை அனுமானம் -என்போம்
பீஜா -விதை போட்டு நீர் விட்டு -வளருவது நம் கையில் இல்லை சங்கல்பம் இருந்தால் வரும்
ஈஸ்வரன் -சிருஷ்டி கர்த்தா -அஸ்மாதாதி அகர்க்கத்த கர்த்தும் -by detection பர ப்ரஹ்மம் -இதர சஜாதீயன் -அனுமானிக்கிறோம்
அஹம் அஸ்மா அமிர்தோ பவதி மிருத்யு பதம் இல்லை
யதாத்ம்ய அதிகரம -தாத்பர்யம் -ஜீவ பர யாதாம்ய ஞானம் இருந்தபடியே உணர்வது
ஆத்மா -பல அர்த்தங்கள் உண்டே அமர கோசத்தில்
அன்வய வ்யாப்தி இல்லை எதிரேக வ்யாப்தி உண்டு தேவதத்தன் இரவில் உண்பதில் -ஈஸ்வர பாதக அனுமானம் –
பூமி அங்குரம் ஆதி -ஈஸ்வர கர்த்ருத்வம் அது போலே -அஸ்மாதாதிகள் பண்ண வில்லை என்பதால் -அன்வய த்ருஷ்டாந்தம்ம் காட்ட முடியாது
ஆதி -சப்தம் எல்லாம் பஷத்தில் அடங்கும் -அன்வய வ்யாப்தி காட்ட முடியாது -வ்யதிரேக வ்யாப்தி மட்டும் காட்ட முடியும்
குட்டித்வம் சாது -எங்க அப்பா வீட்டில் இல்லை என்று சொல்லச் சொன்னார் -நல்ல பாம்பு குட்டி விஷம் மிக்கது –
குட்டித்வம் என்றாலே சாதுத்வம் இல்லை -பாம்பு குட்டி பின்னத்வம் -இரண்டும் சொல்லி ஹேது –
பிரத்யஷம் பரோக்தம் -எதிர்மறை -அபரோக்த ஞானம் அறிந்தவன் தான் கர்த்தா –
கர்த்தும் இச்சாவும் இருக்க வேண்டும் -உத்யுக்தனாகவும் இருக்க வேண்டும்
பிரயோகம் -ஞானம் இச்சா கருதி -ஞான இச்சா பிரத்யந்கங்கள் மூன்றும் இருக்க வேண்டும் –
கார்யோபதானம் -கார்யம் செய்ய மூலப் பொருள் -அபரோக்த ஞானம் -இச்சா -பிரயத்னம் –
சேர்ந்தால் தான் பொருள் உண்டாகும் -கர்த்ருத்வம்
ஜகத் கர்த்தா ஈஸ்வரன் -நிமித்த உபாதான காரணம் ப்ரஹ்மம் -தன்னைத் தானே ஜகத் ரூபமாக ஆக்கிக் கொள்கிறான் –
அபரோக்த ஞானம் உண்டு -பஹூச்யாம் ப்ரஜா யே ய -இச்சையும் யுண்டு
தர்க்க சாஸ்திரம் -உபாதான காரணம் பரமாணுக்கள் என்பர் -COSMOOLOGY –
பரமாணு -நித்ய வஸ்து அதற்கு கர்த்தா வேண்டாம் -ஜனன மரணம் இல்லாதது –
ச வித்யா யா விமுக்த்யா -மோஷ ஹேது ஒன்றே வித்யை ஆகும் —
கர்ம யோக -தபஸ் தீர்த்த தான கீரத்த யஜ்ஞாதி-ஆளவந்தார் -யஜ தேவ பூஜாயாம் – பஞ்ச மகா யஜ்ஞங்கள் ஆதி -இடவை போன்ற
ஞான யோகம் இத ச்வாந்தம் மனசை கட்டுப்படுத்தி -பரிசுத்தாத்மா -பக்தி ரூபாபன்ன ஞானம்
பக்தி யோகம் -ஒன்றே மார்க்கம் -பரை ஏகாந்த பிரீத்யா த்யானாதி — தைல தாராவதி அவிச்சின்ன -ஆதி சப்தம் –
சாஸ்திர சரவணம் அத்யயனம் மனனம் சிந்தனம் -பரஸ்பரம் போதயந்த -ரம்யதாம் –
மந்தனம் -வெண்ணெய் கடைந்து –free will pre detretmined –
கர்ம அனுகுன்மமாக -பிரதம பிரவ்ருத்தி -உணர்ந்தே அனுபவிக்கிறோம்
ஈஸ்வர அனுமானம் -பார்த்து வருகிறோம் –உத்பத்தி விநாசம் பூமியில் செடிகள் -கர்த்தா உண்டு-
கார்யம் -கர்த்ரு -ஜன்யம் -கார்யத்வாத் -கார்யத்வம் ஹேது வைத்து சாத்தியம் –
வ்யாப்தி ஞானம் –அஸ்தித்வம் சித்தம் -ஹேத்வாபாசம் முன்பே பார்த்தோம் –சப்ரதிபட்ஷம் -ஒரு விதமான ஹேத்வாபாசம் –
வாதி பிரதிபாதி வாதங்கள் கேட்டு -நெருப்பு மலை மேல் புகை இருப்பதால் -ஒருவன் சொல்லி -இருக்கவே முடியாது –
பாறைகளே இருப்பதால் -எதிர்வாதம் —
இரண்டுமே சரியாக இருக்க வாய்ப்பு உண்டே -குளம் நெருப்பு நித்ய தோஷம் -அநித்திய தோஷம் –

சரீரம் கொண்டே குயவன் பானை செய்கிறான் -மீமாம்சகர் சொல்ல –
சுய சரீரம் பிரேரனனம் பண்ண சரீரம் வேண்டாமே -பதில் -அஹம் ஆத்மா தான் கர்த்தா -செயல் செய்கிறதே -கட படாதிகளை -போலே இல்லை –
மத்தியஸ்தர் இரண்டையும் கேட்டு -மீமாம்சகர் வாதம் தோற்றது என்ற முடிவே -சொல்ல வேண்டும் -தார்க்கிகர் வாதம் வெல்லும்

ஆளவந்தார் -எம்மை ஆள வந்தீரோ -அக்கி ஆழ்வான்-ஆஸ்தான வித்வான் —
ஜல்ப கதை வாதம் -ராஜ பத்னி பதி வரதா -ந பதி வரதா நிரூபிக்க வேண்டும் –
ராஜா தார்மிகா – ந தார்மிகன் -என்று நிரூபிக்க வேண்டும் -தவ மாதா ந வந்தா -வந்தா மலடி என்று நிரூபிக்க வேண்டும் –
விஜிகீத்வா பிரசனம் வெற்றி கொள்ள கேட்ட கேள்விகள் -சோம பிரதம -கந்தர்வ திரிதிய அக்னி -அப்புறம் மனுஷ்ய -பதி –
ராஜா -விஷ்ணு போலே -காலமும் மாற்ற முடியும் -சபிரதிபட்ஷம் -சாத்தியத்தை நேராக எதிர்த்து –

அப்ரயோஜக சங்கை இருவர் மேலும் -கொண்டு –ஹேது -இருப்பதால் சாத்தியம் இருக்க வேண்டுமா –
புகை -இருந்தால் நெருப்பு இருக்க வேணுமா –
அநு கூல தர்க்கம் -வ்யாப்யா ஆரோபக வ்யாபக ரூபக தர்க்கம் –
விஷம் புஞ்சவா சத்ரு க்ருஹி ந புஞ்சவா -சப்த பிரமாணம் தர்க்கம் -தந்தை பிள்ளையை விஷம் உன்ன சொல்ல மாட்டாரே -என்பதால் –
சர்ப்பம் கயிறு –நகராமல் இருப்பதால் -பிரதிஷ பிரமாணம் -தர்க்கம் கொண்டு முடிவு –
தர்க்கம் சுதந்த பிரமாணம் இல்லை அனைத்துக்கும் உபயுக்தமாக இருப்பது –
ஆர்ஷம் தர்மம் உபதேசம் -ரிஷிகள் -வேத சாஸ்திர அவிவிரோதமாக இருந்து தர்க்கம் கொண்டு –
மனு நீதி -சத் தர்க்கமாக இருக்க வேண்டும் -பௌத்தர்கள் துஷ் தர்க்கம் குத்ருஷ்டிகள் —
தர்க்கம் கொஞ்சம் தடைகளும் உண்டு -பரமாத்மா வஸ்து லாஜிக் தாண்டி –பூர்ணஸ்ய –பூர்ணம் -கழித்தாலும் பூர்ணம் –
பிரதானமான ஸ்தானம் தர்க்கத்துக்கு -அங்க பஞ்சகங்கள் தேசிகன் -தர்க்க சாஸ்திரம் ஆயுர் வேதம் போன்ற பல இடங்களில் உபயோகம் உண்டு
சரீரம் மூலம் கார்யங்கள் செய்கிறோம் –சரீரம் கொண்டே கர்த்தா -அங்குரம் sprout -சரீரம் கொண்டா பரமாத்மா செய்கிறான் மீமாம்சகர் வாதம் -கர்த்தா இல்லை –
அப்ரயோஜக சங்கை -இருவர் மேலும் -கர்த்தா இருக்க வேண்டும் என்று என்ன நிர்பந்தம் -கர்த்தரு ஜன்யத்ம் இல்லை என்றால் கார்யம் இருக்காதே -பதில்
தண்ட சக்கர மண் நீர் இருந்தும் குயவன் முழித்து இருந்தால் தான் பானை வரும் –
புஸ்தகம் கால் முளைத்து போகுமா -கர்த்தா இருந்து தான் ஆக வேண்டும் –
கர்த்தாவால் பண்ணப் பட்டது சரீரம் கொண்டே
அனுமாமனத்தால் ஈஸ்வரன் அஸ்தி என்று நிரூபணம்
அனுமானத்தாலே சித்திக்கும் -ஜென்மாதி அதிகரணம் வேதாந்த வேத்தியம் -அது அயுக்தம்-
அனுமானத்தாலே சித்திக்கும் -வேதாந்த சாஸ்த்ஹ்ரம் வேண்டியது இல்லை என்றால் -சாஸ்திர யோநித்வாத் –
பிரத்யஷம் அனுமானம் இரண்டும் பௌத்தர்கள் கொள்வார்கள் –அவர்களுக்கும் ஈஸ்வரன் அஸ்தி என்று காட்ட இது —
கிமர்த்தம் பர்வதம் -மது இங்கேயே இருக்க மலைக்கு போவான் எதற்கு -புழக்கடையிலே இருக்க –
புல்லிங்கம் -பரமாத்மா போன்ற சப்தங்கள்
ப்ரஹ்ம நபுசிங்க லிங்கம் பரமாத்மாவாசி –
பிரம்மா புல்லிங்கம் சதுர முகன்
புருஷ சப்தம் பரமாத்மா ஒன்றையே குறிக்கும் புருஷோத்தமன் புருசு நகரம் -எங்கும் வசிப்பவன்
பரமாத்மா வஸ்து சங்கல்பம் பண்ணிற்று சொல்லும் -விசாரம் பண்ண நிறைய விஷயம் -லிங்க நியமம் இல்லை சமஸ்க்ருதம்
பேரி ஸ்திரீலிங்கம் துந்துபி புல்லிங்கம்
பார்யா களத்ரம் தாரா -ஸ்திரீலிங்கம் நபுச லிங்கம் மூன்றும் ப்ரத்யயம் பொறுத்து லிங்கம் வஸ்துவை கொண்டு இல்லை
சீதா ராமா தாராகா -நித்ய பஹூ வசனம் -தாரகா சொல்லக் கூடாது -ஆத்மவான் -ராமனுக்கு சொல்லி –
ஒத்த சமதர்ம சாரிணி -பரமாத்மா சாஷாத்காரம் எற்பட்டவள்-
களத்ரம் -நகுபும்சத்வ லிங்கம் -அசித் போலே –
கௌசிகம் -விஸ்வாமித்ரர் -விச்வச்ய மித்ரர் -விச்வமித்ரர் ஆக வேண்டும் -ரிஷிக்கு தீர்க்கம் சேர்த்து -விஸ்வாமித்ரர் –
காயத்ரி மந்த்ரம் கொடுத்து அளித்தவர் ப்ரஹ்மம் காயத்ரி கொடுத்து அளித்த பெருமை –

சாஸ்திரம் -ப்ரஹ்மத்தை காட்டும் வேதமே சாஸ்திரம்
அத்யந்த அதீந்த்ரத்யேன-ப்ரஹ்மம் -ஞான மனச் இந்த்ரியன்களால் கிரஹிக்க முடியாத
அவிஷயதயா ப்ரஹ்மம்
சாஸ்திரம் ஒன்றே பிரமாணம் -உப லஷணம் தர்க்க சாஸ்திரம் போல்வன –
எதோ வா இமானி பூதானி போன்ற ஸ்ருதி வாக்யங்களால் தான் அறிய முடியும்
பூர்வ பஷம்–ஆஷேபம் –ப்ரமாணாந்திர வேத்தியம் உண்டே -அப்ராப்தே சாஸ்திரம் -அர்த்தவதி –பிரயோஜனம் –
வேறே எந்த பிரமானத்தாலும் கிடைக்காமல் இருக்கும் -பிரயோஜனமாகவும் இருக்கும் –
அப்ராப்தம் -அர்த்தவதிம் இரண்டும் உண்டே சாஸ்திர வசனத்துக்கு –
ஸ்நாத்வா புஞ்சீத ஸ்நானம் பண்ணி போஜனம் -புங்க்தே ரஷிப்பவன்-இரண்டு அர்த்தம் புந்தீதே-
சாப்பிடச் சொல்ல வில்லை -ஸ்நானம் பண்ணியே -சாப்பிடுவது ராகதையா பிராப்தம் -பிபாசா தாகம் தீர்க்க -பசி போக்கக –
ஸ்நாத் ஏவ புஞ்சீத -ஸ்நான விதி போஜன விதி இல்லை -அபார கர்மங்கள் தான் குளிக்காமல் உண்ணலாம் –
சாசனாது சாஸ்திரம் –பிரமாணாந்தர வேத்தியம் -ஒரு வாதம்
அடுத்து -கிம் -கேள்வி கேட்டு அடுத்த பூர்வ பஷி
சுத பிரகாசரர் வியாக்யானம் -சுதர்சன ஸூரி என்பவர் -காலஷேபம் இவருக்காக ஆசார்யர் தாமதமாக –
குருப்யோ அர்த்தோ-ஆசார்யர் உபயோகித்த சப்தத்தையே உபயோகித்து -அருளினார்
ராமானுஜர் காலத்துக்கு நெருங்கியவர் -2/3 தலைமுறைகள் பின்பே -ஆந்தரங்க அபிப்ராயம் அறிந்தவர் –
தர்க்க பூயிஷ்டமான அதிகரணங்கள்-
நனு -அத -ஆஷேபம் –
கேள்வி கேட்டவர் யார் -சுத பிரகாசர் வியாக்யானம் கொண்டே அறிய முடியும்
தஸ்மின் பூர்வ பஷே –மீமாம்சகர் -சித்தாந்தி எகதேசர் -பூர்வ மீமாம்சகர் பூர்வ பஷி -தான் நமக்கு -உத்தர மீமாம்சகர் நாம் –
கர்மம் மீமாம்சகர் -ப்ரஹ்ம மீமாம்சகர் —
ஈஸ்வர அனுமான -நிராசேன– ஏக தேசம் எனபது எதனால் என்று காட்டி அருளுகிறார் –
ஆஸ்திக தர்சகர் –நியாய தர்சனம் -சாங்க்ய யோக தர்சனம் கபிலர் பதாஞ்சலி -பூர்வ உத்தர மீமாம்சகர் –
சார்வாக பௌத்தர் ஜைனர் நாஸ்திக தர்சனம் –
பரமாதமான ஸ்வாகா பர ப்ரஹ்மமமே ஸ்வாகா நாராயணா ஸ்வாக சொல்ல வில்லை
மீமாம்சகர் கர்மங்களே பலன் கொடுக்கும் அபூர்வம் கல்பனை செய்து பகவானை ஒத்துக் கொள்ளாமல்
சாங்க்ய யோக மார்க்கமும் அப்படியே -பான்ஜாக்னி தபஸ் செய்து பலன் பெறுவார்கள்
வேத பிராமாண்யம் ஒத்துக் கொள்வதால் தான் இவர்கள் ஏக தேசிகள்-இதனால் நாம் வேதம் மேல் கொண்ட பெருமை விளங்கும் –
ஈஸ்வரன் ஒத்துக் கொள்ள வில்லை இருந்தாலும் அனுமானம் ஒத்துக் கொள்ளாமல் வேத சாஸ்திரம் ஒத்துக் கொள்வதால் -ஏக தேசிகள்
சுத ப்ரதீபிகா சுருக்கமாக அருளி உள்ளார்
ரெங்க ராமானுஜர் வியாக்யானம்
ஸ்ரீ பாஷ்ய தர்ப்பணம் உத்தம சுவாமிகள் வியாக்யானம் –
இந்த்ரிய சம்பவம் பாஹ்ய இந்த்ரியாணி -ந பிராமாண்யம்
எந்த பிரமாணங்களாலும் அறிய முடியாது என்பர் மீமாம்சிகர் -ஞானம் போதகம் இந்த மூன்றாலும் தான் வர வேண்டும் –
பிரத்யஷம் -லௌகிக அலௌகிக-இரண்டு வகை –இந்த்ரியங்கள் -அஹம் அஹம் சுக துக்க அனுபவம் உண்டே -மனஸ்-
ப்ரஹ்மம் ரூபம் வண்ணம் இல்லை -பாஹ்ய பிரத்யஷ விஷயம் ஆக மாட்டான் -மானஸ பிரத்யஷம் —
ஸுய ஆத்மா ஸுய மேவ ப்ரத்யஷம் -ஆந்தர ப்ரத்யஷம் முடியாதே –
இந்த இரண்டும் லௌகிக பிரத்யஷம்
அலௌகிக பிரத்யஷம் -யோகி பிரத்யஷம் –தர்க்க சாஸ்த்ரத்தில் இத்தை அலௌகிக பிரத்யஷம் என்பர்
பாவனா பிரகர்ஷ-சாஷாத்காரம் பெற்றவர்கள் கொஞ்சமே -சிலர் க்யாதி லாப பூஜைகளுக்காக சாஷாத்காரம் ஆனது போலே நடிப்பார்கள்
யோகி பிரத்யஷம் இப்படி பல வகைகள் உண்டே -மனுஷ்யாணாம் சஹஸ்ரேஷூ ஆயிரத்தில் ஒருவருக்கே முயற்சி –
செய்ய அதில் ஆயிரத்தில் ஒருவருக்கே – சித்திக்கும் –
அப்படியே புரிபவர்கள் பூரணமாக அறிந்தவர்கள் அதிலும் சிலர் அம்சம் பகுதி மட்டுமே அறிபவர் மீதி உள்ளவர்
குருவி ஓட்ட பிரம்மாஸ்திரம் வேண்டுமா -பூர்வ பஷ வாதங்களை மதித்து பகவத் ராமானுஜர் வலிமையாக
அவற்றை மதித்து வித்வத் சதஸ் போலே தனக்கு சமமாக கருதி அருளிச் செய்கிறார்
நயன விஷயதா -கண்ணுக்கு கிட்டாமல் -அவனே வ்யூஹம் விபவம் அர்ச்சாவதாரம் வந்து தன்னைக் காட்டி அருளுகிறான் –
ஆலோக்யம் சரீரத்தில் போலே புத்தியிலும் சோம்பல் வரும்
ஆழ்வார்கள் ஆசார்யர்கள் இரண்டு கோஷ்டியிலும் நம் ஆழ்வார் மட்டுமே
திருமுடி திருவடி சம்பந்தம் ஸ்வாமி க்கு மட்டுமே -நாஸ்திகர் களையும் ஆஸ்திகர்களாக்கி-
ஆசிநோதி சாஸ்த்ராணி புரியும்படி சொல்லி அருளி -ஆசார்யே ஸ்தாபயாதி-ஆசாரம் பஞ்ச இந்த்ரேண-தேகச்ய சுத்தி –
புத்திக்கு மனசுக்கு சுத்தி –புத்தி வேற மனஸ் வேற –
அந்தர் இந்த்ரியம் மனஸ் -சுக துக்கம் அனுபவம் –
இந்த்ரியம் -மனஸ் -புத்தி -ஆத்மா கட உபநிஷத் –பர மேலே மேலே கூட்டி -த்ரவ்ய தேச
தேரோட்டி -ஆத்மா சரீரம் தேர் -சரீரிக்கு -யஜமானன் ரதி –
புத்தி சாரதி -போலே மனஸ் ப்ரக்ரஹம் -கடிவாளம் -இந்த்ரியங்கள் குதிரைகள் –
போக்தா -ஜீவாத்மா -இந்த்ரியங்கள் ஐவர் வலி வலி இழுக்க -மனஸ் பின் செல்ல –
ஆசி நோதி சாஸ்த்ராணி தர்ம சாஸ்திரம் ஸ்ம்ருதிகள் உபநிஷத்கள் -ஆசார ஸ்தாபயாதி -சுத்தி ஏற்படுத்தி –
முதல் அடி சுத்தி தானே -நாக்கு ஆசாரம் அலம்புவது இல்லை –
த்ரவ்யங்கள் சுத்தம் -தேச சுத்தி -கிரியைகள் சுத்தி —
ஸ்வயம் ஆசரதே -தானே அனுஷ்டித்து காட்டி –
பரம பிரேம ரூப பக்தர் ஸ்வாமி -உக்தி வாதம் பண்ணவும் அறிந்தவர் -சேர்த்தி அபூர்வம் -அனைவர்களையும் புரிய வைக்கும் சாமர்த்தியம் சுவாமிக்கு மட்டுமே
அனுமானத்தாலும் கிரஹிக்க முடியாது என்பவர் மீமாம்சகர் -நெருப்பு தீ அறிந்தவன் தான் அனுமானிக்க முடியும்
ப்ரஹ்மத்தை அறியாதவன் அனுமானிக்க முடியாது -ஜன்மம் இருந்தால் மறைவான் ஆவான் பொது விதி இதற்கும் உள்படாதவன் ப்ரஹ்மம் –
அனுமானத்தாலும் முடியாது -என்பர் பூர்வ பஷி -ஜீவாத்மா மட்டுமே கொள்ளலாம் என்றும் சொல்வர் -அவனே சிருஷ்டி கர்த்தா என்றும் கொள்ளலாம் என்பர்
நெஞ்சு என்னும் உட் கண்ணால் காணும் உணர்வு நம் ஆழ்வார் -மயர்வற மதிநலம் அருளப் பெற்றவர் –
மனஸ் புத்தி -வாசி அறிவது கஷ்டம் -psycolagikal -மற்றவர் உபதேசம் கொண்டே அறியமுடியும் –
ஸூ ஷ்மமான விஷயம் -அசிந்த்யம் -பூர்த்தியாக புரிந்து கொள்ள முடியாது
கங்கா நதி -தெரியுமா -தீர்த்தம் ஆடி உள்ளோம் –உத்பத்தி வரும் வழிகள்-நம் அளவுக்கு புரிந்து கொள்வது போலே
ப்ரஹ்மமும் அப்படியே –
சிந்தனை -தீர்மானம் -சாரதி கடிவாளம் இழித்து பண்ணுவது போலே மனசை புத்தி கட்டுப்படுத்த முடியும் –
இரண்டு தோஷங்கள் -அலபஜ்ஞ்ஞன் கர்மபரவசன் -கர்த்தா என்றால் -லோகம் படைத்தவன் –உதாரணம் திருஷ்டாந்தம் –
அது போன்ற -யோக அர்த்தம் ரூடி அர்த்தம்
பங்கஜம் -கமலம் -யோகரூடி அர்த்தம் -யோகிக்க ரூடம் ஒரே அர்த்தம் -பங்கஜாதி பதங்கள் –
அங்குரம் -ஊர்த்த்வம் – நியாய சாஸ்திர கர்த்தா கௌசிக மகரிஷி
ஆபால கோபாலம் -குழந்தை முதல் மாடு மேய்ப்பவன் வரை ஆபண்டித பாலகன் புரியும் படி –
திருஷ்டாந்தம் -திருஷ்ட அந்தகம் -குயவன் போலே ப்ரஹ்மா என்றால்
அனுபபத்தி -அவாப்த சமஸ்த காமன் ப்ரஹ்மம் -ஜீவனத்துக்கு பண்ணும் குயவன் -சத்ய சங்கல்பன் சத்ய காமன் இல்லையே –
ஜகத் கார்யமே இல்லை என்பாரும் உண்டு -பூ பூதரம் மலைகள் -கார்யம் என்பாரும் உண்டு ச அவயவாத் -என்பதால்
அநித்தியம் -உத்பத்தி விநாசகங்கள் உண்டு
திருஷ்டாந்தம் அனைத்தையும் கொள்ளக் கூடாது –
சில அம்சங்கள் தான் உக்தம் திருஷ்டாந்தத்தில் -சந்திர இவ முகம் -உபமானம் உபமேயம் –பாவங்கள் –
ஏத உக்தம் பவதி -ஸ்வாமி அடிக்கடி அருளிச் செய்வார் -தொகுத்து அருளிச் செய்வார் –
கார்ய உபாதான காரணம் -உத்பத்திக்கு உண்டான ஞானம் போதும் -சத்ய நாராயண பூஜை பூனை கட்டிய கதை —
கடம் படம் பண்ணும் ஞானம் மட்டுமே போதும் –
சர்வதா சாம்யம் வேண்டாம் -அனுமானம் சித்திக்கும் –
இதுக்கும் சித்தாந்தம் மேலே வரும் பூர்வபஷா உக்திகளையும் இவ்வளவு விவரமாக அருளிச் செய்து ஸ்வாமி சித்தாந்தம் ஸ்தாபிக்கிறார்
சாஸ்திர யோநித்வாத் –
பாவக -கருத்து ஞானம் -அர்த்தம் இல்லை கடச்ய பாவக –தஸ்ய பாவகா சாஸ்திர யோநித்வம்
தவா -வார்த்தை விவரணம் -அசாதாராண தர்மம் -கோத்வம் கோவுக்கு போலே
சாஸ்தரத்துக்கு காரணம் -எத்தை கொண்டு பரமாத்வாவை அறியலாமோ -சாஸ்திர சாரமே ப்ரஹ்மம் வேத சாரமே ப்ரஹ்மம் –
-அறிய காரணம் -அறிதல் -வார்த்தை இல்லாத பொழுது பிரமாணங்கள் இவ்வளவு விஸ்தாரமாக அருளிச் செய்ய என்ன காரணம் –
சத தூஷணி -தேசிகன் -அருளிச் செய்து -அதிகார வாதம் -வைதண்டிகர்கள் -அதிகாரம் இல்லை -வாதம் ஜல்பம் விதண்டா
தத்வம் புரிந்து கொள்ள ஆசை வேண்டுமே தத்தவ புபு ஸூ க்கள் -தத்வம் -வஸ்துவை ததஸ்த சத்பாவம் -இல்லாததை இல்லை என்று புரியவும் -ஆசை
reality -அறிய ஆசை உள்ளவர்களே அதிகாரிகள் -மத்தியஸ்தர் உண்டு -விதண்டா -சு பஷம் இல்லாமல் எதிர்த்து கண்டனம் செய்பவர் -quacks
-கண்டன கண்டன கிரந்தம் வித்யாரணயர்-அத்வைத காவ்யம் இல்லை -32 வருஷம் தான் சங்கரர் இருந்ததுக்கு இதில் உண்டு ஆதாரம் இல்லாமல் –
எல்லாரும் சொல்லி சொல்லி இதையே நம்பும்படி ஆயிற்று -தார்கிகர் வாதம் பூர்வ பஷமாக இறுதியில் நிற்கிறது –
ஈஸ்வர -சர்வேஸ்வர -பரப்ரஹ்மம் -அனுமானம் -உபாதான நிமித்த காரணம் -கர்த்தாவுக்கு சரீரம் வண்ணம் வேண்டும் -இரண்டு அனுபபத்திகள் –
விசித்திர அவயவ சந்நிவேசம் -புண்ய பாப பரவச ஷேத்ரஜ்ஞ்ஞன் பண்ண முடியாது -பரிமித ஞானம் சக்திகள் கொண்டதாலும் –
நிகில புவன நிர்மாண அசிந்த்ய அபரிமித ஞானம் சக்தி ஐஸ்வர்யம் கொண்டவனே -அசரீரியாய் இருப்பவனே கர்த்தாவாக இருக்க முடியும்
சங்கல்ப மாத்ரத்தாலே கர்த்ருத்வம் செய்து -அனந்த விஸ்தார விசித்திர பிரபஞ்ச புருஷ விசேஷ ஈஸ்வரன் -செய்ததை அனுமானத்தாலே நிரூபிக்கிறார்கள் -பூர்வபஷிகள் –
கிஞ்ச -கிம் -ச -தூஷணான்தரம்-மண் குயவன் உபாதான நிமித்த ஒன்றாக இல்லை -சஹகாரியும் உண்டு –பகவானே இரண்டும் என்பதும் ஒரு அனுபபத்தில் என்பர்
தத் ஆத்மானம் ஸ்வயம் -தன்னைத் தானே ஜகமாக ஆக்கிக் கொள்கிறான் சித்தாந்தம் -அபிபின்ன நிமித்த உபாதேய காரணத்வம்
மேலே சித்தாந்தம் ஸ்தாபிக்கிறார்-ஏவம் பிராப்ய ப்ரூமகா –
யதோக்த லஷணம் ப்ரஹ்ம -ஈஸ்வர சப்தம் இல்லை ஸூ ஷ்மமான விஷயம் -சு கம்பீரா அவிச்தாரா ஸ்ரீ ஸூ க்திகள்-
அனுமானம் சொல்லும் பொழுது ஈஸ்வர -சித்தாந்தம் ஸ்தாபிக்க ப்ரஹ்ம –
சாஸ்த்ரைக பிரமாணம் -குடம் குயவன் ஒப்புமை கொஞ்சம் அம்சம் தான் பொருந்தும்
பாதரயணர் குரு ஜைமினி சிஷ்யர் இருவரும் இரண்டு பெயர் ஸ்ரீ சூக்திகளை மேற்கோள் காட்டுவார்கள் –மீமாம்ச சித்தாந்தம் அப்படியே ஜைமினி அருளிச் செய்வதால் –
யஜ்ஞ்க்ன பிரக்ரியையில் பரமாத்மா ஸ்வாகா சொல்ல வில்லை -பர ப்ரஹ்மம் அவசியம் இல்லை -குமாரில பட்டர் -ஈச்வரன் நிராகரணம் பண்ண வில்லை –
நியாயம் நீதி -இரண்டு பதங்களும் -நீயதே தாது -விலஷணமான அர்த்த சித்தி நியாயம் -நீதி -வேறே –
வேதம் ஈஸ்வரன் -அந்யோந்ய ஆஸ்ரயம் ஓன்று சித்தித்தால் மற்று ஓன்று சித்திக்கும் -பௌத்தர் வேதம் அப்ரமாணிகம் என்பர் மீமாம்சகர் அவர்களை வாதம் செய்து வெல்ல
நியாய குசுமாஞ்சலி கிரந்தம் -அஸ்தி ஈஸ்வரன் -அதற்கு மேலே மேலே வேதாந்தம் வந்து -படிப்படியாக -உயர வேண்டும் -தர்க்கம் மட்டும் இல்லாமல் சாஸ்திரம் கொண்டே
நியாய சாஸ்திரம் ஒத்துக் கொள்கிறோம்

ப்ரூமக உத்தம புருஷ பஹூ வசனம் -சித்தாந்தம் ஸ்தாபிக்கிறார் –சாஸ்திரம் ஒன்றே பிரமாணம் -வேதாந்த சித்தாந்தம் –
பூ பூமாதி –கர்த்ரு ஜன்யத்வம் அஸ்மதாதி விலஷண ஈஸ்வர கர்த்ரு -அனுமான ஆகாரம் -கடபடாதி -திருஷ்டாந்தம்
பூ பூமி பூதரம் -பர்வதங்கள் போல்வன -ஏக கர்த்ரு ஜன்மமா அநேக கர்த்ரு ஜன்யமா -கேள்வி -விவசாரம் தோஷம் ஏற்படும் –
தேவதத்வ பிராமணன் மனுஷ்யத்வாத் -உதாரணம் யத்ர யத்ர மனுஷ்யத்வம் தத்ர தத்ர பிராமணத்வம் —
அர்ஜுனன் பீமா சேனன் ஷத்ரியன்-உண்டே -மனுஷ்யத்வம் எல்லாம் பிராமணன் இல்லை வ்யபிசார தோஷம் –
சாத்தியம் இல்லாமல் உள்ள இடத்திலும் ஹேது இருப்பதால்
அனுமானம் தப்பாகுமே -அதே போலே தோஷம் இங்கும் உண்டே -அநேகாந்த்யம் வேறு பெயரில் இத்தையே சொல்லுவார்கள் –
ஏக கர்த்ரு ஜன்யத்வம் என்று கொண்டு –க்ருஹம் பலரால் செய்யப்பட்டது -கார்யத்வம் ஹேது உண்டு
ஏக கர்த்ரு ஜன்யத்வம் இல்லையே –சாத்தியம் இல்லா இடத்தில் ஹேது உள்ளதே -வ்யபிசார தோஷ துஷ்டம் –
பூர்வமே இல்லாத பொது உத்தரம் சொல்லியவை எல்லாம் தோஷமே
இன்னும் பல தோஷங்கள் தர்க்க பூயிஷ்டமாக அருளிச் செய்கிறார் –
புத்தி அந்த அளவு கொண்டவனால் சிருஷ்டி செய்யப் பட்டது என்று சொன்னால் சித்த சாதனா தோஷம் வரும் –
த்வம் மூர்க்கா -சித்த சாதனம் தோஷா கதை -வேதாந்திகள் ஒத்துக் கொண்ட கார்யத்வம் புத்திமான் -சித்த சாதனம் தோஷம் -வருமே –
விகல்பம் தோஷம் –
ப்ரஹ்ம யஜ்ஞம் -நமோ ப்ரஹ்மணே வரும் -பூர்வ பாகம் ப்ரஹ்ம சப்தம் -வேதம் குறிக்கும்
ப்ரஹ்மசாரி -வேத அத்யயனம் பண்ணக் கூடியவன் -சம்ஹிதை -வேத யஜ்ஞம் குறிக்கும் –
அஸ்மாதாதி விலஷண புருஷன் பர ப்ரஹ்மம் –

முக்தாத்மாவுக்கு கர்த்ருத்வம் இல்லை -பிரயோஜனம் இல்லையே -அதனால் சிருஷ்டிக்க மாட்டான் -ஜகத் வியாபாரம் வர்ஜனம்
முக்தாத்மா சரீரம் எடுத்துக் கொண்டு கைங்கர்யம் செய்கிறான் –ஈஸ்வரன் அகர்த்தா சரீரம் இல்லை என்பதால் -பூர்வ பஷி -தர்க்கி –
ஆர்ஷம் தர்ம உபதேசம் -ரிஷிகள் -வேத சாஸ்திரம் அவிரோத -விரோதம் இல்லாத தர்க்கம் கொண்டு –ஸ்தாபிப்பார்கள் –
மனு -தர்க்க ரூபம் -ஒத்துக் கொள்ளப்பட்டதே-
பஞ்சமி விபக்தி -சாஸ்திர யோநித்வாத் –
வேத சாஸ்திர விரோத தர்க்கம் -குதர்க்கம் -பௌத்தர்கள் வாதம்
சாஸ்திரம் ஒன்றாலே பர ப்ரஹ்மம் அறிவோம் -சமஸ்த வஸ்து விஜாதீயம் -வி லஷணமானது–
அகில ஹேய ப்ரத்ய நீக ஸ்வரூபம் பர ப்ரஹ்மம் பிரதிபாதிக்கும்

அவாப்த சமஸ்த காமன் -கர்ம வச்யன் இல்லை -இதர சமஸ்த வஸ்து விலஷணன் –
பிரயோஜனம் லீலைக்காக பின்னால் வரும் –
ஒரே வஸ்து நிமித்த உபாதான காரணம் ஆக முடியாது பூர்வ பஷி –பிரபஞ்சம் உதாரணங்கள் பர ப்ரஹ்மத்துக்கு ஒவ்வாதே
தனக்காக பண்ணுகிறான் என்றால் அவாப்த சமஸ்த காமத்வம் தோஷம் வரும் –
குடம் படம் சோறு குலுக்கை தேவதத்தன் கொண்டே பலவற்றையும் சாதிப்பார்கள் –
1-அத்யாயம் 4 பாதம் கடைசி அதிகரணம் -விரிவாக காட்டி அருளுவார் –
2-அத்யாயம் 3பாதம் முதல் அதிகரணம் -அங்கும் விரிவாக காட்டுவார் –
அங்கே சொல்வோம் என்று இங்கே காட்டி-ஜென்மாதி -காட்டிய பர ப்ரஹ்மம் –பிரமாணாந்தர அகோசரம் –என்று –
சித்தாந்தம் நிகமிக்கிறார் –

———————————————————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஆழ்வார் ஸ்வாமிகள்  திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஸ்ருதி பிரகாசர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ போதாயனர் -வ்ருத்தி காரர் – ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பாதராயணர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ யபதியின் கல்யாண குணங்கள் -ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்–

July 26, 2015

அருளிச் செயலிலே பொழுது போக்கும் நம்பிள்ளை போல்வார் -பெரியவாச்சான் பிள்ளை
வாதம் நியாய சாஸ்திரம் தர்க்கம் வியாகரணம் மீமாம்சம் எல்லாம் வேதாந்த அர்த்தம் ஸ்தாபிக்கத் தான் -மற்றைப் பொழுது கல்யாண குணங்களில் பொழுது போக்கும் –
பயம் போக்க –ஆனந்தம் திருப்தி கிட்டும் -நம்மை நினைத்து பயம் தானே வரும் –
எப்பொழுதும் நாள் திங்கள் ஆண்டு ஊழி அப்பொழுதைக்கு அப்பொழுது ஆராவமுதம்
அசந்கேய அநவதிக அதிசய- எண் பேருக்கு அந் நலத்து -ஈறில-
அகில ஹேய ப்ரத்ய நீகத்வம் -கல்யாணைக–ஸ்தானம் -தோஷம் அற்ற குணக் கடல் –உபய லிங்கம்
சமுத்ரைவ காம்பீரம் -அசைக்க மாட்டாத ஹிமாலயம் -ஆழம் கடல் -பொறுமைக்கு பூமி -வால்மீகி –
பரத்வம் சௌசீல்யம் –ஒவ் ஒன்றும் முத்தும் பவளமும் -குண பிரவாகம் -உபய காவேரி -நடுவில் குணா பிரவாகம் –
வைகுந்தத்து அமரரும் முனிவரும் வியந்தனர் -கைங்கர்ய பரர குண அனுபவர் -இரண்டு கோஷ்டி-
உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும் —
உடம்பு பெற்ற பயன் மனஸ் பெற்ற பயன் இரண்டும் –தத் உபாசிதவ்யம் -தஸ்மின் யதந்த -உள்ளே இருக்கும் அந்தர்யாமி -ஹிருதய தாமரை -தகர ஆகாசம் –
பரமாத்மாவுக்குள் இருப்பதை உபாசிப்பாய் -கல்யாண குணங்கள் -ஜகத் காரணத்வம்-ஒரு குணம் -அத்தை உபாசிப்பாய் –
கணக்கு இல்லாத அசந்கேயம் -எல்லை அற்ற -ஒவ் ஒன்றும் —
பாசுரங்கள் கணக்கு –நாக்கு பாட எல்லை -புத்தி அளவு பட்டவை -ராம ராவண வதம் 7 நாள் -ஆகாயத்தில் அம்பு விட இடம் இல்லை -எனபது அல்ல தலைகள் இல்லை –
அவனை விட்டு பிரியாத குணங்கள் -குண விசிஷ்ட ப்ரஹ்மம்
ஸ்ரீ ராமன் விட்டு குணங்கள் பேசி பிரிந்து சேர்ந்த கதை—கோன் வஸ்மி -குணவான் – –

யதோ வா இமானி -ஜாயந்தி –ஹீவந்தி யத் பிராந்தி -முக்காரணங்கள் —சிருஷ்டி ஸ்திதி சம்ஹாரம் –மோஷம் கொடுப்பவன் ப்ரஹ்மம் -நான்கையும் -செய்து அருள
குணங்கள் தேவை
திருவவதாரங்களுக்கும் குணங்கள் வேணும் –
நிர்விசேஷ சின் மாதரம் ப்ரஹ்மம் அத்வைதி நிர்குணம் ப்ரஹ்மம் –குணமுடையவன் குணம் -நானே ஞானம் நான் ஞானம் உடையவன் –
கோல மலர்ப்பாவைக்கு அன்பாகிய எண் அன்பேயோ -அன்பாகவே உள்ளான் –
அன்னம் ப்ரஹ்மம் -அன்னமயம் பிராணமயம் ஆனந்தமே ப்ரஹ்மம் ஆனந்தோ ப்ரஹ்மம் -அனுபவம் உடைய ப்ரஹ்மம் சொல்லாமல் -அதன் மயமாகவே –
யானி நாமானி கௌனானி– குணங்களை கூறும் திரு நாமங்கள் –விக்யாதானி -ஜகத் பிரசித்தம் -ரிஷிகள் சாத்தினவை
சிற்றின்பம் ஐ ஹிக பலனுக்கு சகுண ப்ரஹ்மம் -மோஷ பலனுக்கு நிர்குண ப்ரஹ்மம் ஒருவாதம்
jஸ்தூலம் காட்டி ஸூ ஷமம் காட்டுவது போலே-சகுணம் ப்ரஹ்மம் சொல்லி நிர்குண ப்ரஹ்மம் ஒரு வாதம்
பூர்வம் பூர்வம் துர்லபம் -சகுண ப்ரஹ்மம் முன்னாள் சொல்லி -பின்னால் சொன்னதை கொள் -மற்று ஒரு வாதம்
சம பிரதானம் வேத பேத அபேத ஸ்ருதிகளுக்கு -விரோதி பரிகாரங்கள் செய்து அருளவே அந்தர் ஜூரம் போக்கி அருள ஸ்ரீ பகவத் ராமானுஜர் திருவவதாரம்
பிரகாசம் பிரசுர ஸூ ரியன்–தயா சாகர -தாவி -வையம் கொண்ட தடம் தாமரைகட்கே -தாமரை போன்ற அடிகள் -என்ற பொருளில் -கிருஷ்ண த்ருஷ்ணா தத்வம் -கண்ணன் காதலே ஆழ்வார் –
நல்ல குணங்கள் உண்டு -தீய குணங்கள் இல்லை -ஆனந்த குணம் ஒன்றை அளக்க -மனுஷ்ய ஆனந்தம் -தேவ இந்த்ரன் ப்ரஹச்பதி பிரஜாபதி பிரம்மம் நூறு நூறாக உயர்ந்தி -அப்பால் பட்டது எட்ட வில்லை –
அப்படி ஓன்று இல்லை என்று சொல்லவா இவ்வளவும் -ஸ்தாபித்தத்தையே நிஷேபிப்பார் -தவறாக –
ஸ்வா பாவிக ஞான பலாதி கல்யாண குணங்கள் கொண்டவன் -விசிஷ்ட ப்ரஹ்மம் -சத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்மம் -நித்யம் -சத்யத்வம் –
அதீத ஞானம் -சர்வஜ்ஞன் சர்வவித் -அநந்தம் அந்தம் அற்றது தேச கால ரூப வஸ்து பரிச்சேதம் இல்லாதவன் –

ஸ்வரூபம் ரூபம் குணம் எல்லாம் நித்யம் -பக்த –ஜீவாத்மா -ஸ்வரூபம் மட்டுமே நித்யம் ஸ்வ பாவம் அநித்தியம் -அசித் ஸ்வ பாவமும் மாறும் –
நித்யர் -அவனது ஆதீனத்தால் -நித்ய குணங்கள் கொண்டு இருப்பார்
ஸ்வாபாவிகம் அவனுக்கு மட்டுமே –ஸ்வ இதர சமஸ்த வஸ்து விலஷணன் –அவன் இடம் இருப்பதால் குணங்கள் சிறப்படையும் –
அவனுடன் சம்பந்தம் கொண்டதால் நல்லதாகும் –
குண்ம் இல்லை என்பவர் -ஆத்மா தேகம் அறியாமல் -விபூத் அபகாரிகள் -மூன்று வித திருடர்கள் பர மதஸ்தர்

குனானுசந்தானமே உயர்ந்தது —
உன் அடியார்களுக்கு என் செய்வன் என்று இருத்தி நின் புகழில் வைகும் சிந்தையிலும் மற்று இனிதோ நீ வைகுந்தம் என்று கொடுக்கும் வான் –

இருக்கும் நாள் உகந்து அருளின நிலங்களில் பிரவணராய் குணம் கைங்கர்யங்களில் பொழுது போக்க வேண்டும் -பிள்ளை லோகாச்சார்யர் –
சோஸ்நுதே சர்வான் காமான் -ப்ரஹ்மனா சகா -விபஸ்திதா –கூடி இருந்து கல்யாண குணங்கள் அனுபவிக்கிறான் அங்கும் –
கூட -சாப்பிடுகிறேன் -வடையுடன் கூட சாப்பிடுகிறேன் -இரண்டு வகை கூட –கல்யாண குணங்களுடன் கூடிய ப்ரஹ்மத்தை அனுபவிக்கிறான் –
அவிபாகேன த்ருஷ்டத்வா அதிகரணம் -பிரியாமல் அனுபவம் –
உயர்வற உயர்நலம் உடையவன் -மத் சித்தா –மத் கத ப்ராணா –போத எந்த பரஸ்பரம் –
பக்தி பிறக்க -பக்தி வளர -குணங்கள் ஐஸ்வர்யம் -நினைக்க நினைக்க –ஹந்தா -எந்நாளும் சொல்ல முடியாதே என்னது அல்லாதது எதுவும் இல்லை
அலகிலா விளையாட்டுடையவன் -அகில புவன ச்தேம பங்காதி லீலே -பகவான் -ஞானாதி ஷட் குணங்கள்

பகவான் -ஞான பல –ஐஸ்வர்ய வீர்ய சக்தி தேஜஸ் -ஆறும் -குணலேசம் உள்ளாரையும் -உபசார உக்தி -வால்மீகி பகவான் வியாச பகவான் போலே –
சம்ஹாரம் -ஞானம் பலம் -சங்கர்ஷணன் -சர்வஞ் மகா தபா -/ஞானம் தானே தபஸ் –சர்வவித் -சர்வ ககா -பிரளயம் அனைத்தையும் தாங்கும் சக்தி வேண்டுமே –
ஒன்றும் தேவும் -யாதும் இல்லாத அன்று –ஸூ ஷ்ம விசிஷ்ட ப்ரஹ்மம்-ஸ்தூல விசிஷ்ட ப்ரஹ்மம் -விரியாது சுருங்காதே
அனைத்தையும் மயிர்க்காலாலே தாங்கு கிறேன் என்கிறான்
சிருஷ்டி -ஐஸ்வர்ய வீர்யம் –பிரத்யும்னன் -சர்வவித் -பானு -சொத்தை அடைய -நாம ரூபம் கொடுத்து -அனுபவிக்க –விகாரம் இல்லாத வீர்யம் பானு –
வீர்யம் பராக்கிரமம் -தபிக்க வைப்பித்து தான் தபிக்காதா ஸூ ரின் போலே
அவிகாராயா சுத்தாயா நித்யாய பரமாத்மானே சதைக ஏக ரூப ரூபாயா –
ஸ்திதி -சக்தி தேஜஸ் -அநிருத்யன் -விஷ்வக்சேன -ஜனார்த்தன -எல்லா திசைகளிலும் விரிந்த சேனை -பாலான சாமர்த்தியம் –
எங்கும் சேனை எதிலும் சேனை -தொட்ட படை எட்டும் தோலாத தோளன்-காக்க படை நலம் வேண்டும் -தேஜஸ் சக்திக்கு மேலே
தடைகளை தகர்த்து -பர அபிபாவனா சாமர்த்தியம் -ரஷிக்க வரும் பொழுது பிசாசான் –கந்தர்வான் அங்குள் அக்ரேன -விரல் நுனி போதுமே
123-144- வ்யூஹ -பரமான திருநாமங்கள் –
123/128- -இந்த ஆறும் -மகா தபா –ஜனார்த்தனா -வரை -அழித்து -படைத்து காத்து -இந்த வரிசையில் அடையாளம் சொல்லும் பொழுது –

பரத்வமே முதலில்
பரத்வம் ஆறாக வ்யூஹம்
விபவம் அவதார தசைகள் -சௌலப்யம் மேலோங்கி உள்ள நிலை
அர்ச்சையில் சௌலப்யமே -விஞ்சி -அதி மானுஷ சீல வ்ருத்த வேஷை
குணம் அனுஷ்டானம் சேஷ்டிதங்கள் வேஷம் உருவங்கள் -அதி வ்ருத்த விக்கிரம பிரதாப தேவர்களையும் விஞ்சி -சர்வ லோக சாம்யம் -ஒத்தார் மிக்கார் இலையாய மா மாயன் –
சௌசீல்யம் -அவதாரத்துக்கு முதல் காரணம்-கீழே விழுந்த குய்ளைந்தையை எடுக்க விழுந்து காக்கும் தாய் -ரஷகத்வம்
இத்தைக் காட்ட –சௌந்தர்யம் மாதுர்யம் அழகு பரத்வம் -நித்ய முக்தர்கள் அனுபவிக்கலாம்
சௌசீல்யம் -ஷமை -சௌலப்யம் -கருணை கிருபை -போன்றவை அங்கு காட்ட முடியாதே -பகல் விளக்கு பட்டு இருக்கும் –
ச ஏகாகி ந ரமேத -உண்டது உருக்காட்டாதே –சம்சாரி பக்கலிலே திரு உள்ளம் குடி போய்-முமுஷூத்வம் ஆசை வளர்க்கவே திருவவதாரம் –
அன்று சராசராங்களை வைகுந்தத்து ஏற்றி -தூங்கும் குழைந்தையை தாய் கட்டி அணைத்து- மார்த்வம் மிருதுவான தன்மை -காட்ட
நெருக்கு உகந்த -மகாத்மாக்கள் விரஹம் சஹியாத மார்த்வம் – களத்திலே கூடு பூரிக்கும் -திரு மூழிக் குளம்
அஜாயதமானோ பஹூதா விஜாயதே -பிறப்பில் பல் பிறவிப் பெருமான் -அஹம் வேத சர்வாணி -அறிவேன்
பணைத்தாள் அணை களிறு அட்டவன் பாதம் பணிமினோ
பருந்தால் களிற்றுக்கு அருள் செய்த பரமன்
கண்ணன் கழல் இணை பணிமின் –
கற்றுக் கறவை கணங்கள் பல போலே கல்யாண குணங்கள் –
பரத்வம் -சௌலப்யம் கணம் -பிரித்து -தஸ்மின் த்ருஷ்டே பர அவர -மென்மையும் எளிமையும் -சீமா பூமி எல்லை -பராவரே
-தத்வதீபிகா -பரர்களை அவரர்களாக ஆக்கும் மேன்மை கொண்டவன்
மனிசர்க்கு தேவர் போலே தேவர்க்கும் தேவா உயர்வற உயர் நலம் உடையவன் –
நமக்குள் ஒருத்தன் தானே -தீண்டாமல் இருப்போம் என்பதால் பரத்வமும் காட்ட வேண்டும்

குப்ஜா மரம் -என்நின்ற யோனியுமாய் பிறந்தாய் இமையோர் தலைவா –
மாலே மணி வண்ணா -ஆலின் இலையாய் அருளாய் –ஆஸ்ரித வத்சலன் -பித்து -அழகன் -கொய்சலத்தில் ஆளும்படி எளியவன் -அகதி தகட நா சமர்த்தன் பரத்வம் –
மூன்றும் சேர்ந்த பசும் கூட்டம் -காட்டில் எறியும் நிலா ஆகாமல் -கண்ணுக்கு காட்டி அருள -மணியை வானவர் கண்ணனை தன்னதோர் அணியை வண் துவராபதி மன்னன் –
-கோகுல கண்ணன் எளிமை –அழகன் -த்வராபதி ஈசன் மேன்மை
சுந்தரத் தோளுடையான் –அழகன் -பராத்பரன் -கள்ளழகர் -மூன்றையும் காட்டி அருளி –
மத்ஸ்ய மூர்த்தி -ஒரு கொம்பு -படகு -பிரளயம் ரஷிக்க -காக்கும் இயல்விணன் கண்ணபிரான் -பாலான சாமர்த்தியம் -ரசாக சர்வ சித்தாந்த -லஷ்மி சகாயா -கண்ணாலே கடாஷித்தே காத்து அருளி
கூர்மாவதாரம் -உபகாரத்வம் -பாச நின்ற நீரில் வாழும் ஆமையான கேசவா –பிரான் -பொலிந்து நின்ற பிரான் -ஆதிப்பிரான் -அமலனாதி பிரான் -பிரான் பெரு நிலம் கீண்டவன் –
ஜகத் காரணாதி உபக்ஜார பரம்பரைகளைக் காட்டிக் கொடுத்து ஸ்ருஷ்டியாதி பரம்பரைகள் உபகார பலன்கள் கிருஷி பலன் –
சிருஷ்டித்து -அந்தர்யாமியாகி -சாஸ்திரங்கள் -அவதாரம் -ஆழ்வார்கள் ஆசார்யர்கள் -பக்தி விதை விதைத்து கடல் புரைய விளைவித்த காதல் –
காமனார் –பண்டு காமன் ஆனவாறும் மங்கையர் வாய் அமுதம் உண்டவாறும் -நெடியானை அடி நாயேன் நினைந்திட்டேனே –
கோட்டங்கை வாமனனாய் செய்த -வஞ்சனையால் -மூன்று அடி மண் கொண்டது போலே -கருத்தில் வீற்று இருந்து -மாற்றி -அடிக் கீழ் கொண்டு -இசைவித்து தாள் இணைக் கீழ் இருத்தி
உபகாரம் பிரத்யுபகாரம் -சமர்ப்பிக்க –
வராக -நான் கண்ட நல்லதுவே -ஈனச் சொல் –ஞானப் பிரானை அல்லால் இல்லை நான் கண்ட நல்லதுவே -ஏழை சொல் அம்பலம் ஏறாது -ஈஸ்வர கிருபா கடாஷம் –
எங்கும் பக்க நோக்கு அறியான் -சர்வ லோக சரண்யன் -பற்றத்தக்கவன் பிரளயம் கொண்ட பூமியை எடுத்து ரஷித்த-
அநாலோசித விசேஷ அசேஷ லோக சரண்யன் -ஆலோசிக்காமல் -பற்றிலார் பற்ற நின்றான் -வேறு புகழ் இல்லாதார்
-அசரண்ய சரண்யன் -வடகலையும் தென்கலையும் ஒரே அர்த்தம் காட்டி அருவிஜிதாத்மா விஜிதாத்மா அவிதேயாத்மா –
=விதேயாத்மா -கட்டுப் படுகிறவன் பட்டர் -எள்கு நிலையம் -தொழுகையும் -யசோதைக்கு -கட்டுண்ணப் பண்ணிய பெரு மாயன்
பாண்டவ தூதன் -சகாதேவன் –
பிரம்மா பக்தன் வரம் படியும் -அவனுக்கும் பராதீனன் சாச்த்ரத்துக்கும் பராதீனன் -அழகியான் தானே அரி உருவம் தானே –
ஆழ்வார்களுக்கும் பராதீனன் –அடியார்க்கு அடங்கி -கோபம் தணிக்கவும் பிரகலாதன் –
வாமன திரிவிக்கிரம -சமத்தவம் -இந்த்ரன் கார்யம் -செய்து பிரயோஜனாந்தர பரன்-ஆராவமுதத்தை உப்புச்சாறு கொடுக்க கார்யம் செய்யச் சொல்லி -சமோகம் சர்வ பூதேஷு –
பரசுராமர் தண்டஹரத்வம் –
சீறி அருளாதே -சீருதலும் அருள் குணம் தானே காம குரோதங்கள் முதலை மேல் சீறி -கொண்ட கோபம் உண்டே
ரோஷ ராம கருணா காகுஸ்த -ஆர்ஜவம் ராமர் -சௌசீல்யம் சரணாகத வத்சலன்
பலராமன் -தேஷாம் சத்த யுக்தாநாம் -ராம கிருஷ்ணம் ஆகாதம் -விட்டே பிரியாமல் இருக்கும் குணம் -காட்டி அருள -தீர்த்த யாத்ரை -மகா பாரதம் -முடிந்து –
எனக்கே ஆட செய் எக்காலத்து என்று -ஆட செய் -எனக்கு ஆட செய் -எனக்கே ஆட்சி -எக்காலத்தும்
ஆஸ்ரித பஷபாதன் கண்ணன் -திருவடி பற்றிபவர்கள் அனைவரும் சமம் –பாண்டவர்கள் -சிகண்டி கொண்டு பீஷ்மர் -அச்மத்தாமா -ஆழி கொண்டு இரவி மறைத்து —
கல்கி -தர்ம சம்ஸ்தாபனம் பிரவர்த்தகம் -குணம் -கிருத யுகம் ஸ்தாபித்து -திரியும் கலி யுகம் நீங்கி பெரிய கிருத யுகம் –

ஆஸ்ர்யண சௌகர்ய ஆபாதாக கல்யாண குணங்கள் -ஆஸ்ரித கார்ய ஆபாதாக கல்யாண குணங்கள் —2வகைகள் -4 நாள்
மோஷ பரதத்வம் -அந்தர்யாமி குணங்கள் -5 நாள்
அர்ச்சாவதார குணங்கள் -6 நாள் பார்ப்போம் –

சாஸ்திரம் -உபநிஷத் எல்லை தத்வம் -திருப்பாற்கடல் நாதன் -த்வயம் மந்த்ரமே ஷேம கர மருந்து -தேசிகன் –
நிவேதயதே –மாம் ஷிப்ரம் —சர்வ லோக சரண்யாயா -மகாத்மணா ராகவாயா -இன்னது சொல்ல சொல்ல வில்லை
-விபீஷணன் வந்து இருக்கான் வார்த்தை மட்டுமே போதும்
வேறு ஒன்றுமே வேண்டாமே -பற்றிலார் பற்ற நின்றவன் அன்றோ –
பரத்வமும் சௌலப்யமும் இருந்தால் தான் சர்வ லோக சரண்யன் ஆக முடியும் தேவானாம் -தானவானாம் சாமான்யம் அதி தெய்வதம்
மண்ணோருக்கும் விண்ணோ ருக்கும் கண்ணாவான்-

திரு மந்த்ரம் -நாராயண –த்வயம் ஸ்ரீ மன் நாராயண ஸ்ரீ மதே நாராயண -சரம ஸ்லோகம் -மாம் அஹம் -இவை காட்டும் குணங்கள் –
ஆஸ்ரயம் ஆதாரம் –பரத்வம் -நாரங்களுக்கு இருப்பிடம்
நரங்களுக்குள் இருப்பவன் -உள்ளே இருந்து நியமிக்கிறார் வ்யாபகத்வம் -நீக்கமற –எளிமை -நியந்த்ருத்வம் அந்தர்யாமித்வம் தாரகத்வம் -நிரந்குச ஸ்வ தந்த்ரன்
பத்துடை அடியவர்க்கு எளியவன் -பிறர்களுக்கு அறிய வித்தகன் –
பிராட்டி புருஷகாரமாம் அல்லது ஈஸ்வரன் கார்யம் செய்யான்
புருஷன் வேண்டும் புருஷகாரம் வேண்டுமே கார்யகரம் ஆவதற்கு -தலை சாயுமாம் சவா தந்த்ர்யம் தலை எடுக்குமாம் -கல்யாண குணங்கள் -சாம்பல் போலே –
வாத்சல்யம் சௌசீல்யம் ஸ்வாமித்வம் சௌலப்யம் –ஆஸ்ர்யண சௌகர்ய ஆபாதாக கல்யாண குணங்கள் –நான்கும் ஸ்ரீ மன் நாராயண –
கையிலே பிடித்த திவ்யாயுதங்களும் -வைத்த அஞ்சேல் என்ற திருக்கைகள் –குற்றம் கண்டு வெருவாமைக்கு-வாத்சல்யம் -தோஷ போக்யத்வ கல்யாண குணம் –
கவித்த முடி நீண்ட கிரீடம் – –கார்யம் செய்யும் என்று துணிகைக்கு-ஸ்வாமித்வம்-பாரளந்த பேரரசே ஓரசே எம்மரசே –
முகமும் முறுவலும் -ஸ்வாமித்வம் கண்டு அகலாமைக்கு சௌசீல்யம் -மந்த ஸ்மிதம் மதுரேன வீஷணேன
ஆசன பத்மத்திலே அழுத்தின திருவடிகளும் –கண்டு பற்றுகைக்கு சௌலப்யம் –
நான் கை விட்டாலும் ஸ்ரீ லஷ்மி விட மாட்டாள் அவள் விட்டாலும் விடாத அழுத்தின திருவடிகள் திண் கழல் சேரே –
மாமின் அர்த்தம் இவை-
ஆஸ்ரய கார்ய -ஆபாதாக கல்யாண குணங்கள் –அஹம் -அர்த்தம் -தவம் சர்வ பாபேப்யோ மோஷயிஷ்யாமி
சர்வஞத்வம் –வைத்யோ நாராயணோ ஹரி –நானும் வேண்டாம் நீயும் வேண்டாம் தன்னைடையே போம் -மறைக்காமல் மறுக்காமல் -மறக்காமல் –
சர்வ சக்தித்வம் -அறிந்தால் மட்டும் போறாதே நீக்கும் சக்தி வேண்டுமே -வல்லமை –
பிராப்தி -பெற்ற பாவிக்கு விடப் போகாதே –
-ஒழிக்க ஒழியாத நவ வித -சம்பந்தம் -மாதா பிதா சுக்ருத் கதி நாராயான -தாயாய் தந்தையாய் -மக்களாய் மற்றுமாய் முற்றுமாய் -சேலே ய் கண்ணியரும்
உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன்
பூர்த்தி -அவாப்த சமஸ்த காமன் -குறை இல்லாத கோவிந்தா -சமர்ப்பித்து சத்தை பெறவே –
அகலகில்லேன் இறையும் –உறை மார்பா
நிகரில் புகழாய் -வாத்சக்ல்யம் -அஞ்சேல் என்ற திருக்கையும்
உலகம் மூன்றுடையாய் -ஸ்வாமித்வம் -அகிலாண்ட கொடு பிரம்மாண்ட நாயகன் -கவித்த முடியும்
என்னை ஆள்வானே -சௌசீல்யம் -முகமும் முறுவலும்
திருவேங்கடத்தானே -சௌலப்யம்-கண்டு பற்றுகைக்கு ஆசன பத்மத்திலில் அழுந்துந்தின திருவடிகள் –
ஸ்வாமி சொத்தை கை விட மாட்டார் –ஸ்வாமித்வம் கீழ் வாக்ஜ்யம் -சொத்து ஸ்வாமி பாவம்
கைங்கர்யம் -தாசன் -ஸ்வாமிக்கு -தானே -இது உத்தர வாக்கியம் –தாசன் ஸ்வாமி

ஸ்வரூபம் ரூப குணங்கள் –
மோஷ பரதத்வம்
அர்ச்சாவதார குண அனுபவம் இனி பார்ப்போம்

ஸ்ரீ யபதித்வம் -அகில ஜகத் காரனத்வம் அத்புத காரண நிஷ் காரணத்வம்—அனுபிரவேசித்து -முமுஷூ வாக பக்தி பிரபத்தி மார்க்கங்களை காட்டி அருளி –
சிருஷ்டிக்கு பயனே கர்மங்களைத் தொலைத்து அவனை அடைந்து அனுபவிக்க –கர்ம அனுகுணமாக -சிருஷ்டித்து
அந்தர்யாமியாக இருப்பதே நம்மை நியமித்து கர்மங்களை கழித்து முமுஷூ வாக்கி அர்ச்சிராதி கதி காட்டி மோஷம் அளிக்கவே —
ஜகத் வியாபாரம் வர்ஜம்-ஸ்ரீ ப்ரஹ்ம ஸூ த்ரம்-வேத வியாசர் – சாம்யாபத்யம் மோஷம் -ஐக்கியம் இல்லை -அபகதபாப்மாதி அஷ்ட குணங்களில் சாம்யம்
மாலே மணி வண்ணா -சாம்யாபத்தி கேட்ட பாசுரம் –
மம சாதர்மம் ஆகாதா –சரீரங்கள் பல எடுத்து ஸ்தோத்ரம் வாசிக காயிக மானஸ கைங்கர்யம்
மோஷப்ரதத்வம் -கருவரை போல் நின்றானை -கண்ணபுரம் சரணமுகுந்தத்வம் –முக்தனார் முகுந்தனார் புகுந்து நம்முள் மேவினார் எத்தினால் இடர் கடல் கிடத்தி –செய்குந்தா
உத்பலாவதக -மாம்சத்தில் விருப்பம் ஒழித்தவர்கள் -அவர்களுக்கு முக்தி அளிப்பவன் -சரணமாகும் தான தாள் அடைந்தார்கட்கு எல்லாம் மரணமானால் வைகுந்தம் தரும் பிரான்
ஜடாயு -மனுஷ்ய பிறவி இல்லாமல் –பிராமணனாலே கொள்ளப் பட்டு -தடை மோஷம் செல்ல வேறே -மோஷம் அருளி
சபரிக்கு அனுமதி-மதங்க முனிவர் -ராம லஷ்மணன் கைங்கர்யம் பண்ணி வா -ஆளுக்கு நீங்க -கடாஷம் பெற்று
வேடுவச்சி
பஷி வேடன் -அன்று சராசரங்களை வைகுந்தத்து ஏற்றி –
நாக பழக் காரி -சங்கு சக்கர லாஞ்சனை கண்டு -வலக்கை சங்கு -மாறுளதோ ஆழ்வார்
ததிபாண்டன் -இங்கு இல்லை என்றவனுக்கும் எங்கும் உளன் என்றவனுக்கும் மோஷம் -இருவரும் கண்ணன் என்றார்கள் –
பாண்டத்துக்கும் முக்தி அசித் பதார்த்தம் -முக்தி பெற்றது அன்றோ தயிர் தாளியும் –
சிந்தயந்தி ஒரே ஷணத்தில் -யாரும் ஒரு நிலைமையான அறிவு எளிய எம்பெருமான் –
நம் ஆழ்வார் மோஷம் பெற்ற விதம் –
9-9-திருக்கண்ணபுரம் -/10-1 வழித்துணை பெருமாள் ஆப்தன் -காளமேகம் தெளித்து கொண்டு தாபத் த்ரயம் ஆற்ற /10-6-ஆதி கேசவ திரு வாட்டாற்று -பெருமான் -வானேற வழி தந்த வாட்டாற்றான் –
10-7- வஞ்சக் கள்வன் -மா மாயன் கள்ள அழகர் –இருள் தரும் மா ஞாலத்தில் இவ்வளவு பக்தியா -த்யஜ்ய தேக வியாமோகம்
ஸ்வா தந்த்ர்யம் உண்டே எனக்கு -நிரந்குச ஸ்வா தந்த்ர்யம் -நான் விரும்பியபடி உள்ள நீர் விரும்பிய படி -விதி -வகையே -அவா அற்று வீடு பெற்ற குருகூர் சடகோபன் –
கல்யாணக் கடலில் மூழ்கி ஆனந்த சாகரம் -ஆதி சேஷ பர்யந்தம் -கோசி பிரஹ்மாஸ்மி உனது சரீரம் திரு மார்புடன் அணைத்துக் கொண்டு ஆனந்தம் நச புன ஆவர்த்ததே

உகந்து அருளின நிலங்களிலே ப்ரவணராய் -குணா அனுபவ கைங்கர்யங்களே பொழுது போக்காக கொள்ளுகை ஸ்ரீ வைஷ்ணவ லஷணம்
தனது பூர்த்தியை குறைத்துக் கொண்டு – நிரந்குச ஸ்வா தந்த்ர்யம் விட்டுக் கொடுத்து அர்ச்சக பராதீனன் ஆகி -நமக்காக -நம்மை எதிர்பார்த்து -குணங்களின் எல்லை நிலம்
86 திவ்ய தேசங்கள் திருமங்கை ஆழ்வார் –47 இவர் மட்டுமே அருளி -ஆடல் மா குதிரை -காரார் திருவேங்கடம் –ஆராமம் சூழ்ந்த திருவரங்கம் –மண்டினார்க்கு உய்யல் அல்லால் மற்றை யாருக்கு உய்யலாமே
திவ்ய தேசங்களிலே ஆழ்வார்கள் சரணாகதி –
38 திவ்ய தேசங்கள் நம் ஆழ்வார் மங்களா சாசனங்கள் -தாளம் கொடுத்து பாடல் பெற்று போனார்கள் -குணம் வெளிப்படுத்தி
வாத்சல்யம் உஜ்வலம் -திருவேங்கடம்
பரத்வம் திருக் குருகூர் –

தேவ பெருமாள் குணங்கள் காட்டி அருளியவற்றை அனுபவிப்போம் -சி நிதிம் -சர்வ பூதம் சுஹ்ருதம் -ஹஸ்திகிரீசன் -பேர் அருளாளப் பெருமான் -ஸ்ரீ வரதராஜன் –
நெருப்பு வடுக்களுடன் சேவை -அஸ்வமேத யாகத்தில் தோன்றி அருளி –ஸ்ரீ வராத ராஜ ஸ்தவம்
அசந்கேயாய -குணங்கள் -எல்லை அற்ற எண்ணிக்கை அற்ற பிரணவ ஜனங்களுக்காக -பூஷணங்கள் ஆயுதங்கள் எல்லாம் அடியார்களுக்காக
ஜிதந்தே ந தே ரூபம் பக்தாநாம் பிரசாத்தே-நாம் அனுபவித்து உஜ்ஜீவனம் அடையவே குணங்கள் –
–தயா ஷாந்தி ஔதார்ய மென்மை பிரேம ஆஜ்ஞ்ஞா ஆஸ்ரித சுலப சௌந்தர்யம் -12 குணங்கள்
ஹிதஜ்ஞ்ஞன் சர்வஜ்ஞ்ஞன் -தயை இன்றியமையாதது தயா சதகம் -யாதவ பிரகாசர் -விந்திய மலை -எம்பார் -மூலம் வேடன் வேடுவச்சியாக வந்து ரஷித்து அருளி தயை காட்டி –
-ஆவாரார் ஆர் துணை என்று அலை நீர் கடலுள் —அழுந்தும் நாவாய் போல் பிறவிக் கடலுள் –
நின்று நான் துளங்க தேவர் கோலத்தோடும் -திருச் சக்கரம் சங்கி னோடும் ஆவா வென்று அருள் செய்து அடியேனோடும் ஆனானே -தீர்த்த கைங்கர்யம்

சத்யவ்ரத ஷேத்ரம் -தயாளு -தயா சாகரம் -தாயைக சிந்தோ ராமானுஜர் வாங்கின படியால் அவரும் அப்படியே
ஷாந்தி -காஞ்சி -பிரம்மாவால் தொழப்பட்ட -கஜேந்திர ஹஸ்தி தொழுததால் -ஹஸ்த நஷத்ரம்
-உத்தர வேதிகை ஹோமம் -தீபப் பிரகாசர் -திரு வேளுக்கை -திரு அஷ்ட பூஜா பெருமாள் -ஸ்ரீ வேகா சேது வெக்கா-
ஹவிர்பாவம் விஷ்ணுவுக்கு புண்ய கோடி விமானம் ஹஸ்திகிரி மஸ்த சேகரர் அத்தியூரான் –முத்தீ மறையாவான் –நம் கண்களுக்கு -பொறுமை உடன் நெருப்பையும் நமது அபசாரங்களையும் பொறுத்து
உத்சவம் -வெய்யிலிலே -ஆச்சர்யமான கோஷ்டி -3.5 மைல் -போக பூமி ஸ்ரீ ரெங்கம் த்யாகேசன் இவன்
ஔதார்யம் -எங்கும் தாமரை வரம் ததாதி -அப்பைய தீஷிதர் வரதராஜ சத்வம் வேண்டிற்று எல்லாம் தரும் நீ வரத ஹஸ்தம் இல்லாமல் -அபய ஹஸ்தம் பிரசித்தம் –
வேண்டிற்று எல்லாம் தரும் கோதிலா வள்ளல் திருமங்கை ஆழ்வாருக்கு வேகவதி ஆற்றில் -மண்ணை அளந்து கொடுத்து பொன் பெற்றான் இஹ லோக ஐஸ்வர்யம்
பிரம்மாவுக்கு தன்னையே கொடுத்த ஔதார்யம் -ராமானுஜரை ஸ்ரீ அரங்கனுக்கு -சேராது உளவோ பெரும் செல்வனாருக்கு -பதின்மர் பாடும் பெருமாள்
ஆழ்வார்கள் ஆசார்யர்கள் எங்கு அவதரித்தாலும் வளர்ந்தது ஸ்ரீ ரங்கத்தில்
ஸ்தவ்ய ஸ்தவ்யப்ரதன் ஸ்தோத்ரம் பண்ணி தப்பைச் சொன்னோம் பெரும்தேவி தவிர போல சொல்லாமல் விட்டோம்
பிறந்த வளர்ந்த புகுந்த வீடு ஸ்ரீ பெரும் புதூர் காஞ்சி ஸ்ரீ ரெங்கம்
ஞானம் -அருளி 18 நாள் வாத போர் யஜ்ஞ்ஞ்மூர்த்தி -சித்தி த்ரயம் சொல்லி அருளி -காஷாய சோபை பார்த்து திருவடியில் விழுந்தார் திருக் கோலம் கண்டதும் –
மென்மையான திரு மேனி மனச் -திருமேனி இரண்டுக்கும் –

மகாத்மாக்கள் விரஹம் சஹியாத மார்த்வம் வளத்தில் களத்தே கூடு பூரிக்கும் திரு மூழிக் களம்
திருக் கச்சி நம்பி ஆலவட்டம் -கச்சிக்கு வாய்த்தான் மண்டபம் -பேசும் பெருமாள் -விக்ரக சமாதி குலைத்து அத்தனை மிருதுவான ஸ்வ பாவம்
65சமதா -சமமான தன்மை -பக்தனை தனக்கு சமமாக கொள்ள வேண்டும் -மிலேச்சனாக இருந்தாலும் -சமோகம் சர்வ பூதேஷு —
அருளால பெருமாள் எம்பெருமானார் -தேவ பெருமாள் எம்பெருமானார் இருவர் திரு நாமங்களையும் சேர்த்து யஜ்ஞமூர்த்திக்கு -இதிலே சாம்யம் -காட்டி
6-சௌஹார்த்தம் -சுஹ்ருதம் சர்வ பூதானாம்
தயா ஷமை ஔதார்யம் மார்தவம் சமதா சௌஹார்த்தம்
உறங்குவான் போல் யோகு செய்ததால் முனியே –
நாலூரானுக்கும் முக்தி அளித்து இத்தை காட்டி அருளினான் –
வெள்ளை சாத்து உத்சவம் -சிவாத் பராத்பரம் நாஸ்தி –
உபகார கௌரவம் பெருமாளுக்கு உபகார வஸ்து கௌரவம் ஆச்சார்யர்களுக்கு
7- த்ருதி உறுதி -ஆஸ்ரித ரஷணத்தில் –ராமானுஜர் சம்ப்ரதாயத்தில் -ஊற்றம் -பிங்கள வருஷம் 1017 மட்டும் அல்ல -கலியும் கெடும் நம் ஆழ்வார் திரு உள்ளத்தில் காட்டி அருளி -பவிஷ்யத் ஆசார்யர்
படிக்கும் பொழுதே திருப்புட் குழி -இளையாழ்வார் மாறுகிறார் -தேவப் பிரான் அருளால் -ஆளவந்தார் திருச் செவிக்கு கப்யாசம் விருத்தாந்தம் கேட்டு
ஆ முதல்வன் இவன் என்று -ஆளவந்தார் கடாஷித்து தேவதேவம் சரணம் -அத்தை உறுதியுடன் நடத்தி –
8-பிரசாதம் -அருள் பேர் அருளாளன் -வையம் கண்ட வைகாசி திரு நாள் -ஆசைப் பட்டார் -பிரதம சதகே விஷய வரதம் அயர்வறும் அமரர்கள் அதிபதி இமையோர் தலைவா –
நெஞ்சுக்கு உபதேசம் பண்ணும் தொழுது எழு என் மனனே -காட்டி -அருளி –
அஞ்சிறைய –பறவை தூது விட்டு -அருளாத நீர் –வண்டை தூது விட்டு -பட்ட பெயர் பேர் அருளாளனுக்கு -புட் கடவீர் ஒரு நாளாவது வீதியார -அவர் ஆவி துவரா முன் –அருளாழி புட் கடவீர் –
பாவமே செய்தவர் -கவாட்ஷம் மூலம் பார்க்க -இன்று வரை நம் ஆழ்வார் திருச் சுற்று வந்து -அருளிக் கொண்டு கருட சேவை இன்றும் –
9-பிரேம-ஆசை -ஆகார த்ரய சம்பன்ன -பெரும் தேவி கேட்டருளாய் தீர்க்க சுமந்களில் -அணைப்பில் இருந்து -கனக வளைய முத்ரா -விஸ்வரூபம் சேவை –
இந்திரா லோக மாதா -தேசிகன் -இரட்டை புறப்பாடு நிறைய காஞ்சியில் –
மலைக்கு எழுந்து அருளும் பொழுது மாலை மாற்று என்றும் ஆண்டாளுக்கு —
-நடாதூர் அம்மாள் -வாத்ச்ய வராதாச்சார்யர் -எங்கள் ஆழ்வான் -பரிந்து பால் காய்ச்சி பவளத்துக்கு சரியான உஷ்ணத்துடன் கொடுத்து -பரிந்து
நம் அம்மாள் நீரே பிரேமத்தைக் காட்டி அருளி -தாத்தா பெரிய திருமலை நம்பி எதிராஜரை சம்பத் குமாரர் அப்பா –
அம்மாள் ஆச்சார்யன் எங்கள் ஆழ்வான் இன்றும்
10- ஆணை -ஆறு வார்த்தை -அஹம் ஏவ –பரம் தத்வம் -தர்சனம் பேத ஏவச -உபாயேஷூ பிரபத்தி
அந்திம ஸ்ம்ருதி வர்ஜனம் -தேக முடிவில் முக்தி தேக அவாசானே -பெரிய நம்பியை ஆச்சார்யராக கொள்ளும்
11- ஆஸ்ரித சுலபன் -தொட்டாசார்யர் -சேவை ஸ்ரீ நிவாச மகா குரு-சண்ட மாருதம் -கிரந்தம் -தட்டான் குளம் -அக்காரக் கனி –
தொட்டை பெரியவர் ஸ்ரீ நிவாச மகாசார்யர் -கன்னடம் –
12-ரூப குணம் -இது வரை ஸ்வரூபம் சொல்லி சௌந்தர்யம் அங்கம் அங்கமாக -ஆதி ராஜ்ய ஆயிரம் ஸூ ர்யர் போலே -கிரீடம் லலாடம் -உஊர்த்த்வ புண்டரம் மேலே தூக்கி விட
மட்டுயர் கற்பகத்தின் வல்லியோ கொழுந்தோ அறியேன் மூக்கு அருளை பறை சாற்றும் திருக் கண்கள் –
குண்டலங்கள் பக்தனுக்கு ஆபரணம்
விரல்கள் பத்து சந்த்ரங்கள் போலே -ஆறு அழகு -சுழல் அகன்ற தோள்கள் சிறுத்த இடையில் சுழி நாபி கமலம் –
யசோதை கட்டிய பட்டம் உதர பந்தம் -பிரதம பூஷணம் இது தான் தாமோதரன் –
சிவந்த -தவழ்ந்ததாலா -சாட்டை சிறு கோலால் ஆநிரை ஓட்டியதா -குதிரை கடிவாளம் பட்டதாலா -எனது மனம் பக்தி சிகப்பு ஏரிற்றா
காண் தகு தோள் அண்ணல் தென் அத்தியூர் -எல்லை இல்லா குணங்கள் -ஒவ் ஒன்றும் சொல்லி முடியாதே –

———————————————————————————————————————————————————————————————————————-

ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பிராட்டியார் சமேத பேரருளாளன் திருவடிகளே சரணம்
பெரிய பிராட்டியார் பெரிய பெருமாள் ஆண்டாள் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ பாசுரப் படி ஸ்ரீ கிருஷ்ணாவதாரம் –6—பால சேஷ்டிதங்கள—கன்று கொண்டு விளங்கனி எறிந்த சேஷ்டிதம் — அருளிச் செயல்கள் —

July 25, 2015

கானக வல் விளவின் காயுதிரக் கருதிக் கன்றது கொண்டு எறியும் கரு நிற வென் கன்றே –
கற்றினம் மேய்த்துக் கனிக்கு ஒரு கன்றினை பற்றி எறிந்த பரமன்
பாற்கடல் வண்ணா யுன் மேல் கன்றின் உருவாகி மேய்ப்புலத்தே வந்த கள்ளவசுரர் தம்மை சென்று பிடித்துச் சிறுக் கைகளாலே
விளங்காய் எறிந்தாய் போலும் என்றும் என் பிள்ளைக்குத் தீமைகள் செய்வார்கள் அங்கனம் ஆவார்களே
கரும்பார் நீள் வயல் காய் கதிர்ச் செந்நெலைக் கற்றாநிரை மண்டித்தின்ன விரும்பாக் கன்று ஓன்று கொண்டு விளங்கனி வீழ வெறிந்த பிரானே –
கன்று குணிலா வெறிந்தாய் கழல் போற்றி
உலங்குண்ட விளங்கனி போலே உள் மெலியப் புகுந்து என்னை நலம் கொண்ட நாரணற்கு
கன்றினால் விள வெறிந்ததும்–ஒன்றும் கண்டிடப் பெற்றிலேன் அடியேன் காணுமாறு இனி யுண்டு எனில் அருளே

———————————————————————————————————————————————-

விளங்கனி முனிந்தாய் வஞ்சனேன் அடியேன் –வந்து உன் திருவடி யடைந்தேன் நைமிசாரணியத்துள் எந்தாய்
விளங்கனியை இளங்கன்று கொண்டு உதிர எறிந்து –யுலகுண்ட காளை உகந்து இனிது நாடொறும் மருவி யுறை கோயில் –நாங்கூர் வைகுண்ட விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே –
கன்றதனால் விளவெறிந்து கனியுதிர்த்த காளை காமருசீர் முகில் வண்ணன்
அம்புருவ வரி நெடும் கண் அலர்மகளை வரையகலத்து அமர்ந்து மல்லல் கொம்புருவ விளங்கனி மேல் இளங்கன்று கொண்டு எறிந்த கூத்தர்

————————————————————————————————————————————————————————————–

கனிந்த விளவுக்குக் கன்று எறிந்த கண்ணபிரானுக்கு என் பெண்மை தோற்றேன்

——————————————————————————————————————————

குழக்கன்று தீ விழாவின் காய்க்கு எறிந்த –திருமாலே –
தாழ்ந்த விளங்கனிக்குக் கன்று எறிந்து வேற்று உருவாய் ஞாலம் அளந்து அடிக் கீழ்க் கொண்டவன்
கற்றுக் குணிலை விளங்கனிக்குக் கொண்டு எறிந்தான் வெற்றிப் பணிலம் வாய் வைத்துகன்ற்ஹான் பண்டு-

———————————————————————————————————————————————————————————————

கற்றினம் மேய்த்துக் கனிக்கு ஒரு கன்றினை பற்றி எறிந்த பரமன்
கரும்பார் நீள் வயல் காய் கதிர்ச் செந்நெலைக் கற்றாநிரை மண்டித்தின்ன விரும்பாக் கன்று ஓன்று கொண்டு விளங்கனி வீழ வெறிந்த பிரானே –
கன்று குணிலா வெறிந்தாய் கழல் போற்றி
உலங்குண்ட விளங்கனி போலே உள் மெலியப் புகுந்து என்னை நலம் கொண்ட நாரணற்கு
குழக்கன்று தீ விழாவின் காய்க்கு எறிந்த –திருமாலே –
தாழ்ந்த விளங்கனிக்குக் கன்று எறிந்து வேற்று உருவாய் ஞாலம் அளந்து அடிக் கீழ்க் கொண்டவன்
கற்றுக் குணிலை விளங்கனிக்குக் கொண்டு எறிந்தான் வெற்றிப் பணிலம் வாய் வைத்துகன்ற்ஹான் பண்டு

கன்றதனால் விளவெறிந்து கனியுதிர்த்த காளை காமருசீர் முகில் வண்ணன்
அம்புருவ வரி நெடும் கண் அலர்மகளை வரையகலத்து அமர்ந்து மல்லல் கொம்புருவ விளங்கனி மேல் இளங்கன்று கொண்டு எறிந்த கூத்தர்

விளங்கனியை இளங்கன்று கொண்டு உதிர எறிந்து –யுலகுண்ட காளை உகந்து இனிது நாடொறும் மருவி யுறை கோயில் –நாங்கூர் வைகுண்ட விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே –

கானக வல் விளவின் காயுதிரக் கருதிக் கன்றது கொண்டு எறியும் கரு நிற வென் கன்றே –
கன்றினால் விள வெறிந்ததும்–ஒன்றும் கண்டிடப் பெற்றிலேன் அடியேன் காணுமாறு இனி யுண்டு எனில் அருளே

பாற்கடல் வண்ணா யுன் மேல் கன்றின் உருவாகி மேய்ப்புலத்தே வந்த கள்ளவசுரர் தம்மை சென்று பிடித்துச் சிறுக் கைகளாலே
விளங்காய் எறிந்தாய் போலும் என்றும் என் பிள்ளைக்குத் தீமைகள் செய்வார்கள் அங்கனம் ஆவார்களே

கனிந்த விளவுக்குக் கன்று எறிந்த கண்ணபிரானுக்கு என் பெண்மை தோற்றேன்
விளங்கனி முனிந்தாய் வஞ்சனேன் அடியேன் –வந்து உன் திருவடி யடைந்தேன் நைமிசாரணியத்துள் எந்தாய்

———————————————————————————————————————————————————————————————

கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
ஆசார்யர்கள் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –