ஸ்ரீ மான் வேங்கட நாதார்ய கவிதார்க்கிக கேசரீ
வேதாந்தாசார்ய வர்யோமே சந்நிதத்தாம் சதா ஹ்ருதி —
சீரொன்று தூப்புல் திருவேங்கடமுடையான்
பாரொன்றச் சொன்ன பழ மொழியில் ஓரொன்று
தானே அமையாதோ தாரணியில் வாழ்வார்க்கு
வானேறப் போமளவும் வாழ்வு –
———————————————————————
அதிகாரம் -9-உபாய விபாக அதிகாரம்-
உபாய ஸ்வ ப்ராப்தே உபநிஷத் அதீத ஸ பகவான்
ப்ரசத்த்யை தஸ்ய உக்தே பிரபதன நிதித்யாசன கதீ
ததாரோஹ பும்ஸ ஸூஹ்ருத பறி பாகேண மஹதா
நிதா நம் தத்ர அபி ஸ்வயம் அகில நிர்மாண நிபுணா —
(பகவானை அடைவதற்கான உபாயம் அவனே –இதை உபநிஷத்துக்கள் சொல்கின்றன.
பகவானின் க்ருபையைப் பெற இரண்டு மார்க்கங்கள்
ஒன்று பக்தி ,மற்றொன்று ப்ரபத்தி. இந்த வழிகளில், இழிவதற்கு, பூர்வ ஜன்ம புண்யம் தேவைப்படுகிறது.
இருந்தாலும், அனைத்துக்கும் யஜமானனான பகவானே காரணம்.)
இவர்களுக்கு கர்தவ்யமான உபாயமாவது ஒரு ஜ்ஞான விகாச விசேஷம் –
இத்தாலே சாத்யமாய் ப்ராப்தி ரூபமான உபேயம் ஆவது ஒரு ஜ்ஞான விகாச விசேஷம் –
இவற்றில் உபாயம் ஆகிற ஜ்ஞான விகாச விசேஷம்
கரண சாபேஷமுமாய் -சாஸ்திர விஹிதமுமாய்- சத்யத் வாதிகளான ஸ்வரூப நிரூபக தர்மங்கள் அஞ்சோடு கூடின
அவ்வோ வித்யா விசேஷ பிரதி நித்ய குணாதிகளிலே நியத ப்ரஹ்ம விஷயமுமாய் இருக்கும் –
(ஆனந்தவல்லி என்கிற ப்ரஹ்ம வள்ளி ( வாருணீ உபநிஷத் ) சொல்கிறது—
ப்ரஹ்மவிதா” ப்னோதி பர”ம்-ப்ரஹ்மத்தை அறிந்தவன் ப்ரஹ்மத்தை அடைகிறான்
ப்ரஹ்மம் ,ஸத்யம் ஜ்ஞானம் , அனந்தம் —இந்த ப்ரஹ்மம், ஹ்ருதய குகையில் பரமாகாசத்தில் இருக்கிறது.
இது ப்ரஹ்மத்தையே குறியாகக் கொண்டுள்ளது.
இப்போது சொன்ன ஸத்யம் முதலான தன்மைகள் அந்த ப்ரஹ்மத்தின் ஸ்வரூபத்தைச்
சொல்கிறது.தவிரவும் பல ப்ரஹ்ம வித்யைகளில் சொல்லியுள்ள தன்மைகளும் உள்ளன.)
உபேயம் ஆகிற ஞான விகாச விசேஷம்
கரண நிரபேஷமுமாய்-ஸ்வ பாவ ப்ராப்தமுமாய் -குண விபூத் யாதிகள் எல்லா வற்றாலும்
பரி பூர்ண ப்ரஹ்ம விஷயமுமாய் இருக்கும் –
உபாசித குணா தேர்யா ப்ராப்தாவப்யவ ஹிஷ்க்ரியா
ஸா தத்க்ரதுநய க்ராஹ்யா ந ஆகாராந்தர வர்ஜனம் –
(தத்க்ரதுந்யாயம் என்று சொல்கிறார்கள். இது, பகவானை அனுபவிக்கும் சமயத்தில் த்யானம் முதலியவை அப்படியே
உள்ளன என்பதைச் சொல்கிறது. வேறு எதையும் விடச் சொல்லவில்லை.
தத்க்ரதுந்யாயம்
இவ்வுலகில் முமுக்ஷு, பகவானை எவ்வித குணம் உள்ளவனாக உபாஸிக்கிறானோ த்யானம் செய்கிறானோ,
அவ்வித குணம் உள்ளவனாகவே ,சரீரத்தை விட்டு பகவானை அடையும்போதும் அநுபவிக்கிறான் .
இது சாந்தோக்யத்தில் சொல்லப்படுகிறது
இங்கு உபாஸிக்கப்படும் / த்யானிக்கப்படும் பகவானின் குணங்கள் மோக்ஷ தசையில் அவச்யம் அனுபவிக்கப்படுகிறது
என்பதுதான் ,இந்த ”ந்யாயத்”துக்குத் தாத்பர்யம். இங்கு உபாஸிக்கப்படாத / த்யானிக்கப்படாத குணாதிகள் அங்கு
அனுபவிக்க உரியன அல்ல என்றோ அனுபவிக்க இயலாது என்றோ தாத்பர்யமல்ல.)
பிராப்தி ரூபமான இவ் வனுபவத்தினுடைய பரீவாஹமாய்க் கொண்டு கைங்கர்யம் உபேயம் –
இவ் வுபாய ரூபமாயும் ப்ராப்தி ரூபமாயும் இருக்கிற ஜ்ஞானத்துக்கு விஷயமாகக் கொண்டு
பல பிரதந்த்வ போக்யத்வாதி வேஷத்தாலே ஈஸ்வரனுக்கு உபாயத்வமும் உபேயத்வமும்-
இவ் வீச்வரனுடைய உபாயத்வம்
அத்வாரக ப்ராப்தி நிஷ்டன் பக்கல் உபாயாந்தர ஸ்தானே நிவேசத்தால் விசிஷ்டமாய் இருக்கும் –
மற்ற அதிகாரிக்கும் கர்ம யோகம் ஆரம்பம் முதலாக உபாசன பூர்த்தி பர்யந்தமாக நடுவுள்ள
கர்த்தவ்யங்களில் அத்யந்த அசக்த்யமான நேர்களிலே
இப் பிரபத்தி வசீக்ருதனான ஈஸ்வரன் புகுந்து நின்று அந்த துஷ்கர கர்த்தவ்யங்களாலே வரும் பாப நிவ்ருத்தியையும்
சத்வ உன்மேஷாதி களையும் உண்டாக்கிக் கொடுத்து அவ் உபாசனம் ஆகிற உபாயத்தை பல பர்யந்தமாக்கிக் கொடுக்கும் –
(ஆக , பக்திநிஷ்டனுக்கும் ,ப்ரபத்தி தேவை. இப்படிப் பல ப்ரபத்திகளை,
பக்தியோகத்துக்காகச் செய்கிறான்.ஆதலால், பக்தியோகத்தை விடமாட்டான்.)
அங்கு கர்ம யோகமாவது –
சாஸ்த்ரத்தாலே ஜீவ பரமாத்ம யாதாத்ம ஜ்ஞானம் பிறந்தால் தனக்கு சக்யங்களாய் பல சங்காதி ரஹீதங்களான
காம்ய கர்மங்களோடும் நித்ய நைமித்திகங்களோடும் கூட ஸ நியமமாக பரிக்ருஹீதமாய் இருக்கும் கர்ம விசேஷம் –
அதன் அவாந்தர பேதங்கள்
தைவமே வபரே யஜ்ஞம்-ஸ்ரீ கீதை -4-25- என்று தொடங்கிச் சொல்லப்பட்ட
தேவார்சன தபஸ் தீர்த்த தான யஜ்ஞாதிகள் –
(தைவமேவாபரே யஜ்ஞம் யோகிந : பர்யுபாஸதே |
ப்ரஹ்மாக் நாவபஸே யஜ்ஞம் யஜ்ஜேநைவோ பஜுஹ்வதி ||
சில கர்மயோகிகள், தேவதாராதனமென்றுயஜ்ஞம் செய்கிறார்கள்.வேறுசிலர்
ப்ரஹ்மமாகிய அக்நியில் யஜ்ஞத்தால் யஜ்ஞத்தையே ஹோமம் செய்கிறார்கள்.)
அதிகாரி பேதத்தாலே பிரபத்தி தானே பக்தியை இடையிட்டும் இடையிடாதேயும் மோஷ ஹேது வானால் போலே
இக் கர்ம யோகம் ஜ்ஞான யோகத்தை இடையிட்டும் இடையிடாதேயும்
ச பரிகரமான யோகத்தைக் கொண்டு ஆத்ம அவலோகன-(ஜீவாத்ம தர்ஸநம் ) சாதனமாம் —
ஜ்ஞான யோகமாவது –
கர்ம யோகத்தாலே அந்த கரண ஜெயம் பிறந்தவனுக்கு பிரக்ருதியாதி விலஷணமாய் ஈஸ்வரனைப் பற்ற
ஆதேயத்வ விதேயத்வ சேஷத்வங்களாலே சரீர தயா பிரகாரமான தன் ஸ்வரூபத்தை நிரந்தர சிந்தனம் பண்ணுகை-
இக் கர்ம ஜ்ஞான யோகங்களாலே யோக முகத்தாலே ஆத்ம அவலோகனம் பிறந்தால்
வைஷயிக ஸூக வைத்ருஷ்ண யாவஹமான ஆத்ம அனுபவ ஸூகம் ஆகிற ஆகர்ஷகத்தில் அகப்பட்டிலன் ஆகில்
பரம புருஷார்த்தமான பகவத் அனுபவத்துக்கு உபாயமான பக்தி யோகத்திலே இழியும் போது
உள்ளிருக்கிற ரத்னம் காண்கைக்கு கிழிச் சீரை கண்டால் போலே அந்தர்யாமியைப் பார்க்கும் போதைக்கு அவனுடைய
சரீர பூதனான ஜீவாத்மாவினுடைய தர்சனம் உபயுக்தமாய்க் கொண்டு பக்தி யோகத்துக்கு அதிகாரி கோடியிலே ஏறிட்டுக் கிடக்கும்
(கிழிச்சீரை —துணி— ரத்னத்தை மூடிக்கொண்டிருக்கும் . ரத்னம், துணி அல்லது செப்புப் பெட்டியில் இருக்கும்.
முதலில் தெரிவது, கிழிச்சீரை. பிறகே அதனுள் இருக்கும் ரத்னம் தெரியும். அதைப்போல,முதலில் தன் ஆத்ம தர்ஸனம்
இது கிழிச்சீரையைப்போல. பிறகு, அந்தர்யாமியான பரமாத்ம தர்ஸனம் .இது ரத்னத்தைப்போல.
ஐச்வர்ய பல அநுபவம் .ஸூக்ஷ்ம ஆத்ம விஷயத்தில் அநுபவம் .இதில் இவனுடைய வைராக்யத்தைப் பரீக்ஷை செய்து ,
ஈச்வரன் பக்தி யோகத்தில் இழியச் செய்கிறான்.ஜீவாத்ம அந்தர்யாமியாக, பரமாத்மாவை த்யானிக்கிறான்.
இரண்டும் வேறாக இருந்த போதிலும் ஒன்றோடு ஒன்று சேர்ந்து காண வேண்டிய போது
ஒன்றின் தர்ஸனம் மற்றொன்றின் தர்சநத்துக்குக் காரணம் ஆகிறது.)
பக்தி யோகமாவது
அநந்ய நிஷ்டனாய் அநந்ய கதியினாய் அநந்ய சேஷ பூதனான பகவானுடைய
ஸ்வரூபாதிகளை விஷயமாக உடைத்தாய் நிரதிசய ப்ரீதி ரூபமான த்யான விசேஷம்
அது தான் தைல தாரை போலே நிரந்தரமான ஸ்ம்ருதி ரூபமாய் -சாஷாத்கார துல்யமான வைசத்யத்தை யுடைத்தாய்
பரம பதத்துக்கு பிரயாணம் பண்ணும் திவசம் அறுதியாக நாள் தோறும் அனுஷ்டிக்க வளர்ந்து வருவதாய்
அந்திம ப்ரத்யய அவதியான ஜ்ஞான சந்ததி விசேஷம் –
இதுக்கு வர்ணாஸ்ரம தர்மங்கள் ஜ்ஞான விகாச ஹேதுவான சத்வாதி வ்ருத்திக்கு களையான
ரஜஸ் தமஸ் ஸூக்களுக்கு மூலமான பாபங்களைக் கழித்துக் கொண்டு இதி கர்த்தவ்யதையாய் இருக்கும்
இப் பக்தி யோகம் தானே
பிரத்யயார்த்தம் ஸ மோஷச்ய சித்தய சம்ப்ரகீர்த்திதா -ஸத்வத ஸம்ஹிதை-
(மோக்ஷம் என்கிற பலன் விஷயத்தில், நம்பிக்கை வருவதற்காக ஐச்வர்யாதி பலன்களும் கூறப்பட்டன.
ஸாரப்ரகாஸிகா —-ஸாராஸ்வாதிநி இவற்றில் பகவான் தானாக அளிக்கும் அஷ்டஸித்திகளைக் கொள்ளாமல் ,
ஐச்வர்யாதி பலன்களுக்காக இதை விதித்தது நம்பிக்கைக்காக என்று விளக்கமுள்ளது
வேதத்தில் நம்பிக்கை ஏற்பட , சத்ருவைக் கொல்ல அபிசார ஹோமம் உள்ளது.
ஸுக்ரீவனுக்கு நம்பிக்கை வருவதற்காக, ஏழு மராமரங்களை ராமபிரான் ஒரே பாணத்தால் வீழ்த்தினான் ) என்கிறபடியே
இள நெஞ்சரைத் தேற்றுகைக்கு இட்ட விரகான வழியாலே காமநா பேதத்தாலே
ஐஸ்வர் யாதிகளுக்கும் சாதனம் என்னும் இவ்வர்த்தம் சதுர்விதா பஜந்தே மாம் -என்று சொல்லப்பட்டது –
அவ்விடத்தில்
தேஷாம் ஞாநீ நித்ய யுகத ஏக பக்திர் விசிஷ்யதே -ஸ்ரீ கீதை -7-17–
(சதுர்விதா பஜந்தேமாம் ஜநா : ஸுக்ருதிநோர்ஜூந |
ஆர்த்தோ ஜிஜ்ஞாஸுரர்தார்த்தீ ஜ்ஞாநீ ச பரதர்ஷப ||
அர்ஜுனா —துயரம் உள்ளவன் ,பகவத் தத்வத்தை அறிய விழைபவன் பொருளை விரும்புபவன் பகவத் தத்வ ஜ்ஞானம் உள்ளவன் –
என்று நான்கு வகையான மநுஷ்யர்கள் என்னையே துதிக்கிறார்கள்) என்று தொடங்கிச் சொன்ன ஞானியினுடைய ஏற்றத்தை
(தேஷாம் ஜ்ஞாநீ நித்ய யுக்த ஏகபக்திர் விசிஷ்யதே |
ப்ரியோ ஹி ஜ்ஞாநிநோத்யர்த்த மஹம்ஸ ச மம ப்ரிய : ||
இந்த நால்வருள், எப்போதும் என்னிடம் பக்தி செய்பவன் ,என்னையே த்யானம் செய்பவன் —இவன் –ஞாநி —-இவன் உயர்ந்தவன்,
அவனுக்கு நான் ப்ரியமானவன். அதைப்போல எனக்கும் அவன் மிக ப்ரியமானவன்
உடையவர் வ்யாக்யானம் —-ஞாநிக்கு , நான் ப்ரியமானவன் என்று பகவான் சொல்கிறார்; எவ்வளவு ப்ரியம் என்பதை,
அவனாலேயே அளவிட்டுச் சொல்லமுடியாது;இத்தனைக்கும் பகவான் , ஸர்வஜ்ஞன் -ஸர்வ ஸக்தன் —-)
சதுர்விதா மம ஜநா பக்தா ஏவ ஹி தே ஸ்ம்ருதா
ஏஷாமே காந்தின ஸ்ரேஷ்டா தே சைவா நன்ய தேவதா
அஹமேவ கதிஸ் தேஷாம் நிராசீ கர்ம காரிணாம்
யே து சிஷ்டாத்ரயோ பக்தா பலகாம ஹி தே மாதா
சர்வே ஸ்யவன தர்மாண ப்ரதி புத்தஸ்து மோஷபாக்–மஹா பாரதம் சாந்தி பர்வத்தில்
(என்னுடைய பக்தர்கள் நான்குவகைப்படுவர்.அவர்களில் மற்ற தேவதைகளை நாடாமல், என்னிடமே பக்தி செலுத்துபவர்கள் சிறந்தவர்.
இவர்கள் தங்கள் கர்மாக்களை எவ்வித ப்ரதிபலனையும் எதிர்பாராமல் செய்கின்றனர்.என்னை அடைவதே இவர்களின் லக்ஷ்யம் .
மற்ற மூன்று வகைப்படுபவரும் உலக இன்பங்களைப் பலனாகக் கோருகிறார்கள் .அதனால், முக்கிய லக்ஷ்யத்தை நழுவ விடுகிறார்கள்.
என்னை மட்டுமே ஆச்ரயிப்பவன் புத்திமானாக ,என்னையே அடைகிறான் )என்று தானே வெளியிட்டு அருளினான்
இப்படி மோஷ உபாயமாக விதித்த பக்தி யோகம் பர பக்தி என்று பேசப் பட்டது –
இதினுடைய ஹேதுவாய் சாத்விக பரிசீல நாதிகளாலே வந்த
பகவத் விஷயத்தில் ப்ரீதி விசேஷம் சர்வேஸ்வரனை தெளிய அறிய வேணும் என்னும்
அபி நிவேசத்துக்கு காரணமாய் பக்தி என்று பேர் பெற்று இருக்கும் –
(மோக்ஷத்துக்கு உள்ள பக்தியோகம் ”பரபக்தி ” எனப்படுகிறது.ஸாத்விகர்களுடன் சகவாஸம், பகவானிடம் அளவு கடந்த ப்ரேமை ,
இவற்றால் ஏற்படும் பரபக்தியே பக்தியாகும். இதனால்,பகவானை மேலும் மேலும் அனுபவிக்க ஆவல் பெருகும்)
இத்தாலே சுத்த பாவம் கதோ பக்த்யா சாஸ்த்ராத் வேதிந ஜனார்த்தனம் = மஹாபாரதம்
(பகவான் மற்றும் ஆசார்யன் மீது உள்ள பக்தி காரணமாக என்னுடைய ஸ்வரூபத்தை உணர்ந்தேன்.
சாஸ்த்ரம் மூலமாக, ஜனார்த்தனனை அறிகிறேன்) என்கிறபடியே
சாஸ்திர ஜன்ய தத்வ ஜ்ஞான கர்ம யோகாதி பரம்பரையாலே பிறந்த
பரபக்தி யானது
சாஷாத் கரிக்க வேணும் என்ற அபி நிவேசத்தை உண்டாக்கி –
யோகேஸ்வர ததோ மே த்வம் தர்ச யாத்மா நமவ்யயம்
(மந்யஸே யதி தச்சக்யம் மயா த்ரஷ்டுமிதி ப்ரபோ |
யோகேச்வர ததோ மே த்வம் தர்சயாத்மாநமவ்யயம் ||-ஸ்ரீமத் பகவத் கீதை ( 11–4 )
ஜ்ஞானம் முதலிய குணங்களுக்கு இருப்பிடமான க்ருஷ்ணா —— நான் பார்க்கலாம் என்று எண்ணினால்
அழிவில்லாத உன் திருவடியை எனக்குக் காட்டி அருள்வாயாக) -என்றும்
காணுமாறு அருளாய் –
(தேவிமாராவார் திருமகள் பூமி ஏவ மற்று அமரர் ஆட்செய்வார்
மேவிய உலகம் மூன்று அவை ஆட்சி வேண்டு வேண்டுருவம் நின்னுருவம்
பாவியேன் தன்னை அடுகின்ற கமலக்கண் அது ஓர் பவளவாய் மணியே !
ஆவியே !அமுதே! அலைகடல் கடந்த அப்பனே ! காணுமாறு அருளாய் !-திருவாய்மொழி -8–1–1)என்றும் –
ஒரு நாள் காண வாராய் –
(தளர்ந்தும் முறிந்தும் சகடவசுரர் உடல் வேறா
பிளந்தும் வீயத் திருக்காலால் ஆண்ட பெருமானே !
கிளர்ந்து பிரமன் சிவன் இந்திரன் விண்ணவர் சூழ
விளங்கவொருநாள் காணவாராய் விண்மீதே–6–9–4
பூமிக்கு வர இஷ்டமில்லையாகில் ,ஆகாயத்தில் வந்து நிற்கலாமே ! நீ, எனக்காகப் பரமபதத்திலிருந்து
கிளர்ந்து விரைவில் வந்தால் கஜேந்த்ர ஆழ்வானுக்காக நீ அரை குலைய தலை குலைய வந்து அருளியபோது,
”நாஹம் நாஹம் ந சாஹம் ந ச பவதிபுன :தாத்ருஸோ மாத்ரேஷு ” என்று தாங்கள் ஆதிமூலம் இல்லை
என்று ப்ரம்மா சிவன் இந்த்ரன் விண்ணவர் எல்லோரும் உன்னை ஆகாயத்தில் சூழ்ந்து இருந்தனர்.
பூமிக்கு வர இஷ்டமில்லையாகில் இவர்கள் சூழ , நீ, விண்ணில் நின்றால் உன் ப்ரகாசத்தால் உலகம் எல்லாம் விளங்கும்.
நானும் உன்னைத் தர்ஸிப்பேன்—வந்து அருள்க ! )
(மாயக்கூத்தா ! வாமநா ! வினையேன் கண்ணா !கண்கைகால் ,
தூய செய்ய மலர்களாச் சோதிச் செவ்வாயமுகில் அது ஆ
சாயல் சாமத் திருமேனி தண் பா சடையா தாமரைநீள்
வாசத்தடம்போல் வருவானே ! ஒருநாள் காணவாராயே !–8–5–1 )
என்றும் விலபிக்கும் படி பண்ணி இவ் அபேஷம் மாத்ரம் அடியாக வந்த
பகவத் பிரசாத விசேஷத்தாலே தத் கால நியதமான பரி பூர்ண சாஷாத் காரத்தை உண்டாக்கும் –
இச் சாஷாத் காரம் பர ஜ்ஞானம் என்று பேசப் பட்டது –
இப்படி நிரதிசய போக்யமான பகவத் ஸ்வரூபத்தை சாஷாத் கரித்த வாறே
பெரு விடாய்ப் பட்டவன் தடாகத்தைக் கண்டால் போலே பிறந்த ப்ரீதி அதிசயம்
பரம பக்தி –
இது முனியே நான்முகனில் படியே
(முனியே ! நான்முகனே ! முக்கண்ணப்பா !என்பொல்லாக்
கனிவாய்த் தாமரைக்கண் கருமாணிக்கமே ! என்கள்வா !
தனியேனாருயிரே ! என்தலைமிசையாய் வந்திட்டு
இனிநான் போகலொட்டேன் ஒன்றும் மாயம் செய்யேல் என்னையே-10-10-1-)சங்கோசம் அற அனுபவித்து அல்லது
தரிக்க ஒண்ணாத அபி நிவேசத்தை உண்டாக்கி மறுக்க ஒண்ணாத திரு வாணை இட்டு வளைத்துக் கூப்பிடுகையாலே
(மாயம் செய்யேல் என்னை உன் திருமார்வத்துமாலைநங்கை
வாசஞ்செய் பூங்குழலாள் திருவாணை நின் ஆணைகண்டாய்
நேசஞ்செய்து உன்னோடு என்னை உயிர் வேறு இன்றி ஒன்றாகவே
கூசஞ்செய்யாது கண்டாய் ! என்னைக் கூவிக்கொள்வாய் வந்து அந்தோ !-10-10-2-) இவனுக்கு
கடுகப் பிராப்தியைக் கொடுக்கும் படி
சர்வேஸ்வரனுக்கு த்வரை அதிசயத்தை உண்டாக்கி இவனை அவா அற்று வீடு பெறப் பண்ணும் –
இப் பக்தி யோகம் த்ரை வர்ணிகர் ஒழிந்தார்க்கும் த்ரை வர்ணிகர் தங்களில்
ஜ்ஞானத்திலே ஆதல் சக்தியிலே யாதல் இரண்டிலும் ஆதல் குறை யுடையாருக்கும்
பல விளம்பம் பொறுக்க இசையாத தீவ்ர சம்வேகம் உடையார்க்கும் யோக்யம் அல்லாமையாலே
தங்கள் அளவுகளைத் தெளிந்து அத்வாரமாக பிரபத்தியை மோஷ உபாயமாகப் பற்றுமவர்களுக்கு
சர்வ பல சாதனமான பிரபத்தி தானே பரபக்தி ஸ்தானத்திலே சோதிதை யாகையாலே
உபாசகனுக்கு பரபக்திக்கு மேல் வரும் அவஸ்தைகள் போலே இஸ் ஸ்வ தந்திர பிரபத்தி நிஷ்டனுடைய
கோலுதலுக்கு ஈடாக இப் பிரபத்திக்கு மேல் வரும் அனுகூல அவஸ்தைகள் இதின் பலமாய் இருக்கும் –
இப்படி பிரபத்திக்கு பக்திக்கும் அதிகாரி விசேஷத்தைப் பற்றி துல்ய பலத்வம் உண்டாகையாலே விகல்பமாகக் கடவது
இவற்றுக்கு நாநா சப்தாதி பேதாத் -என்கிற-3-3-56- அதிகரணத்திலே
(ப்ரஹ்ம வித்யைகள் வெவ்வேறாக இருப்பதைப்போல, அவற்றின் பெயர் முதலியனவும் வெவ்வேறானவை.) பேதம் சித்தம்
விகல்போ அவிசிஷ்ட பலத்வாத் -என்கிற-3-3-57-அதிகரணத்திலே
(ப்ரஹ்ம வித்யைகள் அனைத்துக்கும் மோக்ஷம் ஒன்றே பலன் . ஆதலால்,அந்த வித்யைகளில், எதில் ஈடுபாடு உள்ளதோ
அதைச் செய்யலாம்.) விகல்பமும் சித்தம் –
(உதாரணம் =32 வித்யைகளும்,ப்ரபத்தியும் மோக்ஷத்துக்கு என்று உள்ளன.
அவற்றுள், மோக்ஷத்துக்கு என்பதாக ஏதாவதொன்றை அநுஷ்டிப்பது சாஸ்த்ர ஸம்மதம் .
இப்படி, இங்குள்ள பலன்களில் வித்யாஸம் இருந்தாலும் மோக்ஷரூப முக்ய பலனில் வித்யாஸமில்லை .
ஒரு யோகத்தில் இழிந்தவன் ,வேறொரு பக்தி யோகத்தைச் செய்யாமல் இருப்பதைப்போல ,
ப்ரபத்தியில் இழிந்தவனும் வேறு உபாயம் தேடவேண்டியதில்லை
ப்ரஹ்ம வித்யைகள் 32—இவை,
1.சாந்தோக்யம் 2.முண்டகோபநிஷத் 3.ப்ரஹதாரண்ய உபநிஷத் 4.தைத்திரீயம் 5.சுபாலோபநிஷத்
6.ஸ்வேதாஸ்வர உபநிஷத் 7.ஈசாவாச்யம் 8.கேநோபநிஷத் என்கிற எட்டு உபநிஷத்துக்களில் விளக்கப்பட்டுள்ளன
இவை உபாஸனா மார்க்கங்கள்
1.அக்நி வித்யை
2.அக்ஷர வித்யை
3.ஆனந்த வித்யை
4.அபிம்ருத்யுபாஸன வித்யை
5.பாலாகி வித்யை
6.பூமி வித்யை
7.ப்ரஹ்ம வித்யை
8.சாண்டில்ய வித்யை
9.தஹர வித்யை
10.ஜ்யோதிர் வித்யை
11.கோஸவிஜ்ஞான வித்யை
12.மது வித்யை
13.மைத்ரேயி வித்யை
14.கௌரக்ஷஜ்யோதிர் வித்யை
15. ந்யாஸ வித்யை
16.பஞ்சாக்னி வித்யை
17.பரவித்யை
18.பர்யங்க வித்யை
19.ப்ரஜாபதி வித்யை
20.ப்ராண வித்யை
21.ப்ரதர்ன வித்யை
22.புருஷ வித்யை
23.புருஷாத்ம வித்யை
24.ரைக்வ வித்யை
25.புருஷோத்தம வித்யை
26. ஸத் வித்யை
27.ஸர்வ பரவித்யை
28.ஷோடஸகல ப்ரஹ்ம வித்யை
29. உத்கீத வித்யை
30. உபகோஸல வித்யை
31.வைஷ்ணவ வித்யை
32.வைச்வாநர வித்யை )
உபாசனத்தில் விசேஷங்கள் போலே சாகா பேதங்களிலும் பகவச் சாஸ்திர சம்ஹிதா பேதங்களிலும் சொல்லும்
நியாச வித்தையில் மந்த்ராதி விசேஷங்களைக் கண்டு கொள்வது –
நமஸ்காரம் வாசிகம் மானசம் காயிகம் என்று பிரிந்தால் போலே
பிரபத்தியிலும் ஓர் ஒன்றை முன்னிட்டு இவ் விபாகங்கள் சொல்லப்பட்டன
இவை மூன்றும் பொருந்தின போது பூர்ண நமஸ்காரம் ஆனால் போலே
பூர்ண பிரபத்தி யாகக் கடவது என்றவர்கள் பாசுரங்களுக்கும்
வாசிக காயிகங்களான வியாபார விசேஷங்கள் பரீவாஹமாம் படியான மானச பிரபத்தியினுடைய பூர்தியிலே
தாத்பர்யமாகக் கடவது
யதாதிகாரம் இவை எல்லாம் பல ப்ரதங்கள் என்னும் இடம் முன்பே சொன்னோம்
நின்ற நிலைக்கு உற நிற்கும் கருமமும் நேர் மதியால்
நன்று என நாடிய ஞானமும் நல்கும் உள் கண் உடையார்
ஒன்றிய பத்தியும் ஒன்றும் இலா விரைவார்க்கு அருளால்
அன்று பயன் தரும் ஆறும் அறிந்தனர் அந்தணரே —
(க்ஷத்ரிய ,ப்ராம்மண , வைச்ய வர்ணாச்ரமத்தில் இருப்பவர்கள், அந்தந்த தர்மத்துக்கு ஏற்றபடி கர்மயோகம் செய்தல்,
ஞானயோகத்தை அதன் பலனை முழுவதுமாகத் தெரிந்த ஞானத்துடன் செய்தல்,
பக்தியோகத்தை ஆத்ம ஸாக்ஷாத்காரத்துடன் செய்தல், இவற்றுக்கெல்லாம் தகுதி இல்லாதவர்கள்,
மோக்ஷம் பெறுவதில் தாமதத்தைப் பொறுக்காதவர்கள், ஆகியோருக்கு, பகவானின் க்ருபையால் , விரைவாகப்
பலனளிக்கும் ப்ரபத்தி –இவற்றை அறிந்தவர்கள் வேதம் முற்றும் கற்ற அந்தணர்
கர்ம ஞானம் உபாசனம் சரண வ்ரஜ்யா இதி ஸ அவஸ்தி தான்
சன்மார்க்கான் அபவர்க்க சாதன வித்யௌ சத்வாரக அத்வாரகான்
ஏகத்வி ஆக்ருதி யோக சம்ப்ருத ப்ருதக்பாவ அநு பாவான் இமான்
சமயக் ப்ரேஷ்ய சரண்ய சரதி கிராமந்தி ரமந்தி புதா —
கர்ம , ஞான ,பக்தி யோகங்கள், மற்றும் சரணாகதி –இவை நான்கும் மோக்ஷத்துக்கான உபாயங்கள் —
இவற்றில் சில நேராகவே மோக்ஷம் அளிக்கும். சில மறைமுகமாக மோக்ஷமளிக்கும் .
கர்ம ,ஞான யோகங்கள் மறைமுகமாகவும் பக்தியோகம் நேரிடையாகவும் மோக்ஷபலன் அளிப்பவையாகும்.
ப்ரபத்தி தானாகவே நேராக மோக் ஷபலனை அளிக்கும். பக்தி யோகத்தைத் தூண்டி மறைமுகமாகவும் பலனளிக்கும் .
இப்படி, இரண்டு வழிகளிலும் மோக்ஷமளிக்க வல்ல உபாயமாக இருப்பது ப்ரபத்தி .
இந்த மேன்மையையும் உண்மையையும் அறிந்தவர்கள் ப்ரபத்தி அநுஷ்டிக்கிறார்கள்
——————————————————————
அதிகாரம் -10- பிரபத்தி யோக்ய அதிகாரம் –
அர்த்தித்வேந சமர்த்ததா த்ரிகதநு சம்பிண்டிதா அதிக்ரியா
ச சாஷ்டாங்க ஷடங்கயோகா நியதாவஸ்தா வ்யவஸ்தாபிதா
ச்ரோதீ சர்வ சரண்யதா பகவத ஸ்ம்ருத்யா அபி சத்யா பிதா
சத்யா திஷூ இவ நைக மேஷூ அதிக்ருதி சர்வ ஆஸ்பதே சத்பதே —
(ஒருபலனைப் பெற மிக ஆவல் இருந்து, அதை அடைவதற்கான உபாயத்தில் ஈடுபட தகுதி வேண்டும்.
முதலாவது, அந்தப் பலனில் ,அளவில்லா ஆவல் இருக்கவேண்டும்அடுத்து, மூன்று விதமான தகுதிகள் வேண்டும்.
1.ஜ்ஞானம்–2.சக்தி–3. யோக்யதை இந்தத் தகுதிகளைப் பொறுத்தே உபாயத்துக்கான வழியில் ,ஒரு முமுக்ஷு ஈடுபடுகிறான்.
ஆனால், பக்தி யோகத்துக்கு எட்டு அங்கங்கள் ; ப்ரபத்தி அனுசரிக்க ஆறு அங்கங்கள்.
எல்லா ஜீவராசிகளுக்கும், பகவானே சரணமளிக்கிறான் என்பதை ஸ்ருதிகள் கூறுகின்றன; ஸ்ம்ருதிகள் உறுதி செய்கின்றன.
உண்மையை மட்டுமே பேசு என்று வேதங்கள் சொல்வது,எல்லோருக்கும் பொருந்துவதைப்போல, ப்ரபத்தியும் யாவருக்கும் பொருந்துகிறது
ப்ரபத்திக்கான ஆறு அங்கங்கள்
1.ஆநுகூல்ய ஸங்கல்பம் =இன்று முதல் அநுகூலனாக வர்த்திக்கக்கடவேன் என்கிற ஸங்கல்பம்
2.ப்ராதிகூல்யவர்ஜநம் =ப்ரதிகூலம் செய்யமாட்டேன் என்கிற ஸங்கல்பம்
3. கார்ப்பண்யம் =கர்ம ,ஞான,பக்தி யோகங்கள் செய்யச் சக்தியில்லை என்று ப்ரார்த்தித்தல்
4. மஹாவிச்வாஸம் =பகவானின் திருவடிகளைப் பற்றினால் , பகவான் நிச்சயம் அருளுவான் என்கிற திடமான நம்பிக்கை
5.கோப்த்ருவ வரணம் = எதுவும் சக்தியில்லாத எனக்கு, நீயே உபாயமாக இருந்து, பலனளிக்கவேண்டும் என்று வேண்டுவது
6. ஸாத்விகத்யாகம் = மோக்ஷத்தை உத்தேசித்துச் செய்த ப்ரபத்திக்கு –பலத்யாகம் அதாவது, இந்த ஆத்மாவை ரக்ஷிக்கிற
பர ஸமர்ப்பணத்தை பகவானே, தன்னுடைய ப்ரீதிக்காக, தானே, தன்னைச் சேர்ந்த என்னைக்கொண்டு
செய்துகொள்கிறான் /செய்துகொண்டான் இதனால் வரும் பலன் பகவானுக்கே என அர்ப்பணித்தல்)
இப்படி அபிமத பலனுக்கு உபாயாந்தர நிஸ்ப்ருஹனாய் நியாச வித்யையிலே இழியும் அவனுக்கு
இவ் வித்யைக்கு அதிகார விசேஷம் முதலானவை இருக்கும்படி அறிய வேணும்
அதிகாரமாவது அவ்வோ பல உபாயங்களிலே பிரவ்ருத்தனாம் புருஷனுக்கு
பலத்தில் அர்த்தித்வமும் –
உபாயத்தில் சாமர்த்தியமும் —
இவற்றில் சாமர்த்தியம் ஆவது
சாஸ்த்ரார்த்தத்தை அறிகையும்-
அறிந்த படி அனுஷ்டிக்க வல்லனாகையும் –
சாஸ்திர அநுமத ஜாதி குணாதி யோக்யதையும் –
இவ் வதிகாரம் முன்பே சித்தமாய் இருக்கும் –
இது உடையவனுக்கு பிரயோஜனமாகக் கொண்டு சாத்யமாக அனுவதிக்கப் படுவது பலம் –
ததார்த்தமாக சாத்யமாக விதிக்கப் படுமது உபாயம் –
இங்கு முமுஷூத்வம் உண்டாய் ஸ்வ தந்திர பிரபத்தி ரூப மோஷ உபாய விசேஷ நிஷ்டனுக்கு
சாஸ்திர ஜன்ய சம்பந்த ஞானாதிகள் உபாசகனோடு சாதாரணமாய் இருக்க
விசேஷித்த அதிகாரம் தன்னுடைய -ஆகிஞ்சன்யமும் –அநந்ய கதித்வமும் —
ஆகிஞ்சன்யமாவது உபாயாந்தர சாமர்த்ய அபாவம் –
அநந்ய கதித்வமாவது பிரயோஜனாந்தர வைமுக்யம் -சரண்யாந்தர வைமுக்யமுமாம் –
இது பிரயோஜனாந்தர வை முக்யத்தாலும் அர்த்த சித்தம் –
இவ் வர்த்தம் –
ப்ராஹ்மணம் சித்தி கண்டம் ச யான்சான்யா தேவதா ஸ்ம்ருதா —
பிரதிபுத்தா ந ஸ்வந்தே யஸ்மாத் பரிமிதம் பலம் -மஹாபாரதம் சாந்திபர்வம் ( 350–36 -இத்யாதிகளிலே கண்டு கொள்வது –
(அறிவிற் சிறந்த முமுக்ஷுக்கள் ,ப்ரம்மன் ருத்ரன் போன்றவர்களை ஆச்ரயிப்பதில்லை .
ஏனெனில் அவர்கள் அருளும் பலன்கள் மிக அற்பமானவை என்பதை அறிந்துள்ளனர்)
தீவ்ரதமான முமுஷூத்வம் இன்றிக்கே தேக அனுவ்ருத்தியாதி பிரயோஜனாந்தர சக்தனானவன்
மோஷார்த்தமாக பிரபத்தியைப் பற்றினால் அவ்வோ பிரயோஜனாந்தரங்களின் அளவுக்கு ஈடாக மோஷம் விளம்பிக்கும் –
இவ் ஆகிஞ்சன்யத்துக்கும் அநந்ய கதித்வத்துக்கும் நிபந்தனம்
உபயாந்தரங்களில் இவ் வதிகாரியினுடைய அஜ்ஞான அசக்திகளும் பல விளம்ப அசஹத்வமும் —
இதில் சரண்யாந்தர வைமுக்யத்துக்கு நிபந்தனம் –
யதா வாயோஸ் த்ருணாக்ராணி வசம் யாந்தி பலீயச-தாதுரேவ வசம் யாந்தி
சர்வ பூதானி பாரத-மஹாபாரதம் உத்யோக பர்வம் ( 26–29 )
(ஹே –பாரத —-பலமான காற்றின் வசத்தில் ,புல்லின் நுனிகள் இருப்பதைப்போல எல்லாப் பிராணிகளும் ,
உலகைப் படைக்கிற பகவானின் வசத்தில் இருக்கின்றன) -என்கிறபடியே
தனக்கும் பிறருக்கும் ஒத்து இருக்கிற பகவத் ஏக பாரதந்த்ரயாத் யவசாயமும் -பிரயோஜனாந்தர வைமுக்யமும்
இப் பிரபத்தி அதிகாரி விசேஷம்
ச பித்ரா ச பரித்யக்தஸ் ஸூரைச்ச ச மகார்ஷிபி தரீன் லோகன் சம்பரிக்ரம்ய தமேவ சரணம் கத
(இந்த்ரனின் பிள்ளையானவன் ,காக்கை ரூபத்தில் ஸீதா பிராட்டியிடம் அபசாரப்பட்டு, ஸ்ரீ ராமபிரான் அஸ்த்ரம் ஏவ, தப்பிப்பிதற்காக
தேவர்கள்,ரிஷிகள்,தனது தந்தையான இந்த்ரன் யாவராலும் கைவிடப்பட்டுக் கடைசியில் ராமபிரானையே சரணமடைந்தது.) -என்றும்
அஹமஸ்ம்ய அபராதானாம் ஆலய அகிஞ்சன அகதி -அஹிர்புத்ந்ய ஸம்ஹிதை —- ( 37—30 )-என்றும்
(நாரதர் கேட்கிறார் மஹேஸ்வரனே —-”ந்யாஸம் ” என்பதை விளக்கிச் சொல்லவேண்டும் .
அஹிர்புத்ந்யர் ——நாரதா—இது தேவர்களும் அறியாத பரம ரஹஸ்யம் . உபநிஷத்துக்களில் சொல்லப்பட்டுள்ளது.
விரும்பிய பலனை உடனே தரவல்லது .அனைத்துப் பாபங்களையும் போக்கச் சக்தி உள்ளது. இதை எல்லோருக்கும் சொல்லி விடக்கூடாது.
பக்தி இலாதவனுக்குச் சொல்லவே கூடாது. நீர், ஆழ்ந்த பக்தி உள்ளவராதலால் உமது க்ஷேமத்தை விரும்பி இதைச் சொல்கிறேன் .
பலவித விருப்பங்களை அடைய விரும்புபவன் ,யாரால், மற்ற உபாயங்களால் விரைவில் அடைய முடியாதோ, மோக்ஷத்தை விரும்புபவன் பக்தியோகம்
செய்து அதை எப்போது அடைவோம் என்று அறிய இயலாதோ , எங்கு சென்றால் திரும்பவும் ஜனனம் என்பதே கிடையாதோ
அப்படிப்பட்ட ”பரமபதம் ”, ந்யாஸத்திலே கிடைக்கும். இதனால், புருஷோத்தமனான பரமபுருஷனை அடையலாம்.
அடியேன் குற்றங்களுக்கெல்லாம் இருப்பிடம் ;கைமுதல் ஏதும் இல்லாதவன்; உம்மைத் தவிர அடியேனை ரக்ஷிக்க யாருமில்லை ;
தேவரீரே , அடியேனுக்கு உபாயமாக இருக்கவேண்டும்; என்கிற ப்ரார்த்தனை வடிவான ஜ்ஞானம் —ஸரணாகதி /ந்யாஸம் .
கார்பண்யம் ( ஆகிஞ்சன்யம் —கர்ம , ஞான ,பக்தி யோகங்கள் செய்யச் சக்தியில்லாதவன் ; அநந்யகதித்வம் —உன்னைத் தவிர ரக்ஷகன் இல்லை;)
கார்பண்யம் இவையிரண்டும் சேர்ந்தது.ஆத்மாவை ,பகவானுக்குச் சமர்ப்பிக்கும்போது , ஒரு உபாயத்தைக் கொண்டு சமர்ப்பிக்கவேண்டும்.
அப்படி, ஏதும் ,அடியேனிடம் இல்லை.ஆதலால்,தேவரீர் ”பக்தி ” என்கிற உபாயமாக இருந்து ரக்ஷிக்கவேண்டும் .
இப்படி,நிறைய விஷயங்களைச் சொல்கிறார்.))
ஆகின்ஜன அநந்ய கதி -சரண்ய–என்றும் –
(ந தர்ம நிஷ்ட்டோஷ்மி ந சாத்ய வேதீ
ந பக்திமான் த்வச் சரணாரவிந்தே |
அகிஞ்சநோ நந்ய கதிஸ் சரண்ய
த்வத்பாத மூலம் சரணம் ப்ரபத்யே ||-(ஸ்தோத்ர ரத்னம் ( 22 )
முதலில், ஸாத்விக த்யாகம் . பிறகு, கீதையில் சொன்ன தேவ அர்ச்சனை போன்ற கர்மயோகம் இதில் ஒன்று. வெகு காலம்
இப்படிச் செய்து, மனஸ் சுத்தமானால் ஜீவாத்ம தத்வ சிந்தனை என்கிற ஜ்ஞான யோகம். இப்படிப் பலகாலம் செய்து,
ஜீவனை சாக்ஷாத்காரம் செய்தபிறகு ,பகவானிடம் பக்தியோகம் . பகவானின் திருவடியை அடைய, கீதையில் க்ருஷ்ணன் சொன்னது.
இவற்றில் ஒன்றும் செய்யவல்லேன்
த்வத்பாதமூலம் –உன் திருவடியின் உட்புறத்தைச் சரணமாகப் பற்றுகிறேன் . வெளிப்புறம் பற்றி ,வேறு பலன் பெற்றுப் போகமாட்டேன்.
உன் திருவடியின் உட்புறத்தில் மறைந்தாலல்லாது , எனது பாபங்கள் —வினைகள்—என்கிற யமகிங்கரர்கள் விடமாட்டார்கள்.
கர்மயோகம் செய்வதற்கும் ,ஜ்ஞானம் வேண்டும் .
ந பக்திமான்—நாத்ம வேதீ —ந தர்ம நிஷ்ட்ட : செய்யாவிட்டாலும் செய்ய முயற்சிக்கலாமே என்றால் அதற்குச் சக்தியில்லை -அகிஞ்சந 🙂
(உபாயச் ச சதுர்த்தஸ்தே ப்ரோக்த : சீக்ரபலப்ரத |பூர்வேத்ரய உபாயஸ்தே பவேயு ரமமநோஹரா : ||
சதுர்த்த மாச்ரயந் ஏவம் உபாயம் சரணாச்ரயம் —–லக்ஷ்மி தந்த்ரம் –
நான்குவித உபாயங்கள் இருந்தாலும் , மூன்று உபாயங்கள் ( கர்மா, ஞான, பக்தி ) பலகாலம் செய்யவேண்டும்.
இதற்கே பற்பல ஜன்மங்கள் எடுக்கவேண்டும். எல்லா ஜன்மங்களிலும் , உபாயத்துக்கான லக்ஷ்யம் எண்ணெய் ஒழுக்கு போல
இருக்கவேண்டும். ஆதலால், நான்காவதான சரணம் ஆச்ரயம் என்கிறது.)
அநாகதாநந்தகால சமீஷயாப்யத்ருஷ்ட சந்தாரோபாய தத் ப்ராப்த்யே ச தத் பதாம் புஜத்வய பிரபத்தேரன்யன்ன மே
கல்பகோடி சஹஸ்ரேணாபி சாதனமஸ்தீதி மனவான – -ஸ்ரீ வைகுண்ட கத்யம்-என்றும்
(பகவானை அடைவதற்கு, அவனுடைய திருவடித்தாமரைகளில் ப்ரபத்தி செய்வதைத் தவிர வேறு உபாயம் , ஆயிரம்
கல்பகோடிக் காலம் சென்றாலும் அடியேனுக்கு இல்லை என்கிற எண்ணமுடைய நான்——-)
புகல் ஒன்றும் இல்லா அடியேன் –
(அகலகில்லேன் என்று உறையும் அலர்மேல் மங்கையுறை மார்பா !
நிகரில் புகழாய் ! உலகம் மூன்றுடையாய் ! என்னை ஆள்வானே !
நிகரில் அமரர் முனிக்கணங்கள் விரும்பும் திருவேங்கடத்தானே !
புகல் ஒன்று இல்லா அடியேன் உன்னடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே !–6-10-10-)
என்று இவை முதலான பிரமாண சம்ப்ரதாயங்களாலே சித்தம் —
இவ்வளவு அதிகாரம் பெற்றால் பிரபத்திக்கு ஜாத்யாதி நியமம் இல்லாமையாலே சர்வ அதிகாரத்வம் சித்தம் –
அந்தணர் அந்தியர் எல்லையில் நின்ற அனைத்து உலகும்
நொந்தவரே முதலாக நுடங்கி அனன்னியராய்
வந்து அடையும் வகை வன் தகவு ஏந்தி வருந்திய நம்
அந்தமில் ஆதியை அன்பர் அறிந்து அறிவித்தனரே –
பக்த்யாதௌ சக்தி அபாவ பிரமிதி ரஹிததா சாஸ்த்ரத பர்யுதாச
காலஷேப அஷபத்வம் த்விதி நியதிவசாத் ஆபதப்தி சதுர்பி
ஏக த்வி த்ரி ஆதியோக வ்யதிபிதுர நிஜ அதிக்ரியா சம்ஸ்ரயந்தே
சந்த ஸ்ரீ சம் ஸ்வதந்திர பிரபதன விதி நா முக்த்யே நிர்விசங்கா–
(பக்தியோகம் போன்ற உபாயங்களை அநுஷ்டிக்க சக்தியில்லாமை , இவற்றைப்பற்றிய ஞானமில்லாமை , இவற்றையெல்லாம்
அநுஷ்டிக்கத் தகுதியில்லை என்று சாஸ்த்ரங்களால் விலக்கி வைப்பது,மோக்ஷமடைய நேரும் காலதாமதத்தைப் பொறுத்துக்கொள்ள இயலாமை—
இவற்றில் ,ஒன்றோ , இரண்டோ, மூன்றோ அல்லது நான்கோ அல்லது யாவுமோ அமைவது , பூர்வ கர்மபலனால் நேரும்.
இவை, லக்ஷ்மிநாயகனான எம்பெருமானை ப்ரபத்தி மூலமாக அடைவதற்கான தகுதிகள் . இவற்றை அறிந்தவர்,இவ்வுபாயங்களைக்
கொண்டு மோக்ஷம் அடைவதில் எவ்வித சந்தேகமுமின்றி எம்பெருமானை அண்டியுள்ளனர்.)
————————————————————————
அதிகாரம் -11-பரிகர விபாக அதிகாரம் –
இயான் இத்தம் பூத சக்ருத் அயம் அவசியம் பவ நவான்
தயா திவ்ய அம்போதௌ ஜகத் அகிலம் அந்த யமயதி
பவ தவம்ச உத்யுக்தே பகவதி பர நியாச வபுஷ
பரபத்தே ஆதிஷ்ட பரிகர விசேஷ சுருதி முகை —
(கருணைக்கடல் என்றால் இவனையே குறிக்கும்படியான கருணைக்குக்குச் சிறந்த ஸமுத்ரமாகவும் ,எல்லா ஜீவராசிகளுக்கும்
ஹ்ருதயத்தின் உள்ளே இருந்து நியமிக்கும் பரமாத்மாவாகவும் ,ஸம்ஸார நாசகனாகவும் இருக்கிற பகவானிடம் பொறுப்பை
ஸமர்ப்பிக்கிற ப்ரபத்தியின் அங்கங்களின் விசேஷம், வேதம் இவற்றால் இது என்றும் இத்தனை என்றும் ,
இவைகளின் ஸ்வரூபம், உபயோகம் இவற்றைப் பற்றியும் ,ப்ரபத்தி செய்யும் போது
இந்த அங்கங்கள் அனுஷ்டிக்கப்படவேண்டும் என்று நியமிக்கப்பட்டிருக்கிறது.)
இவ்வித்யைக்கு பரிகரமாவது-
ஆநு கூல்ய சங்கல்பமும் பிரதிகூல்ய வர்ஜனமும் கார்பண்யமும் மஹா விஸ்வாசமும் கோப்த்ருத்வ வர்ணமும் —
(பகவானைத் தவிர வேறு உதவியில்லை என்று இருத்தல் –கார்பண்யம்
பகவான் தான் ரக்ஷிக்க வேண்டும் என ப்ரார்த்திப்பது — கோப்த்ருவ வரணம்)
இவ்விடத்தில்
ஆநு கூல்யச்ய சங்கல்ப பிரதிகூல்யச்ய வர்ஜனம்
ரஷிப்யதீதி விஸ்வாசோ கோப்த்ருத்வ வர்ணம் ததா
ஆத்ம நிஷேப கார்பண்யே ஷட்விதா சரணாகதி -அஹிர்புத்ந்ய ஸம்ஹிதை சொல்கிறது ( 37 வது அத்யாயம் —28, 29 பகுதிகள் )-
இத்யாதிகளில் சொல்லுகிற ஷாட் வித்யமும் –
(நாரதர், ருத்ரனை—பரமேஸ்வரனை , ந்யாஸத்தைப் பற்றிக் கேள்வி கேட்கிறார் —
பிரபத்தியையும் உள்பட ஷாட் விதியை என்றது
அஷ்டாங்க யோகம் என்னுமா போலே அங்க அங்கி சமுச்சயத்தாலே -ஆகக் கடவது என்னும் இடமும் —
சமாதி நிலையையும் சேர்த்து அஷ்டாங்க யோகம் என்றால் போலே
இவற்றில் இன்னது ஒன்றுமே அங்கி இதரங்கள் அங்கங்கள் என்னும் இடமும்
நிஷேபா பர பர்யாயோ நியாச பஞ்சாங்க சம்யுத சந்ந்யாச சத்யாக இத்யுக்த சரணாகதி ரித் யபி -ஸ்ரீ லஷ்மீ தந்த்ரம் -017-74—
என்கிற ஸ்லோகத்தாலே நியாய நிரபேஷமாக சித்தம் –
இவ் விடத்தில் –
சாச்வதீ மம சம்சித்திரியம் ப்ரஹ்ம விபவாமி யத் புருஷம் பரமுதிச்ய ந மே சித்திரித அன்யதா
இதி யங்கமுதிதம் ஸ்ரேஷ்டம் பலேப்சா தத் விரோதி நீ –என்று
அஹிர்புத்ன்ய (52 வது அத்யாயம் —-பகுதிகள் 13 மற்றும் 14)உக்தமான
பல த்யாக ரூப அங்காந்தரம் மோஷார்த்தமான ஆத்ம நிஷேபத்தில் நியதம் —
பல சங்க கர்த்ருத்வாதி த்யாகம் கர்ம யோகம் முதலாக நிவ்ருத்தி தர்மங்கள் எல்லா வற்றிலும் வருகையாலே
இவ் வனுசந்தானம் முமுஷூவுக்கு சாங்க சமர்ப்பண தசையிலே கர்த்தவ்யம் –
(அஹிர்புத்ந்யர் சொல்கிறார் —
உலகத்தில் தாழ்ந்தவன் என்கிற வரிசையில் எல்லா ஜீவர்களும் அடங்குவர் .
உயர்ந்தவன் எம்பெருமான் ஒருவனே. ஜீவன்கள் நமஸ்கரிக்கிறார்கள் ; எம்பெருமான் வணங்கப்படுகிறான் ;அவனே வணங்கப்படுபவன் .
ஸம்பந்தம் எந்தப் பலனையும் கருதியது அல்ல . நமஸ்கரித்தலே , ப்ரபத்தி . இதுவே புருஷார்த்தம் .
”நம ” என்கிற ஸப்தம் ப்ரபத்தி என்கிற அர்த்தத்தை நிரூபிக்கிறது. பரமபுருஷனைக் குறித்து , நான் நமஸ்கரிக்கிறேன்
என்பது எதுவோ அதுவே எனக்கு நிலையான புருஷார்த்தம் அல்லது ஸ்வாபாவிக கார்யம்.
இதைவிட வேறான பலனானது எனக்கு வேண்டாம் இதுவே சிறந்த அங்கம் .மோக்ஷம் அடைய ஆத்ம ஸமர்ப்பணமான ஸரணாகதி –ப்ரபத்தி –
இதற்கு கர்மங்களை நாமே செய்கிறோம் என்கிற எண்ணமும்,பலன்களில் பற்றும் அறவே கூடாது.)
இங்கு பரிகரங்கள் ஆனவற்றில் ஆநு கூல்ய சங்கல்பத்துக்கும் பிரதி கூல்ய வர்ஜனத்துக்கும் நிபந்தனம்
சர்வ சேஷியான ஸ்ரீயபதியைப் பற்ற
பிரவ்ருத்தி நிவ்ருத்திகளாலே அபிமத அனுவர்த்தனம் பண்ண வேண்டும்படி இவனுக்கு உண்டான பாரார்த்த்ய ஜ்ஞானம் –
இத்தாலே
ஆநு கூல்யே தராப்யாம் து வி நிவ்ருதிரபாயத-லக்ஷ்மீ தந்த்ரம் ( 17–76 )-என்கிறபடியே அபாய பரிஹாரம் சித்தம் –
(பகவானுக்கு விருப்பமானதைச் செய்தல், அவன் விரும்பாதவற்றைச் செய்யாதொழிதல் –என்பதன் மூலமாக,
அவனது கட்டளைகளை மீறாமல் இருக்கும் நிலை ஏற்படுகிறது.)
கார்ப்பண்யம் ஆவது முன்பு சொன்ன ஆகிஞ்சன்யாதிகளுடைய அனுசந்தானம் ஆதல் –
அதடியாக வந்த கர்வ ஹானி யாதல் -க்ருபா ஜனக க்ருபண வ்ருத்தி யாதலாய் நின்று
சரண்யனுடைய காருண்ய உத்தம்ப நார்த்தமுமாய் –
கார்ப்பண்யே நாப்யுபாயா நாம் வி நிவ்ருத்தி ரிஹேரிதா லக்ஷ்மீ தந்த்ரம்
(மற்ற எந்த உபாயத்தையும் நாடாமலிருப்பதே கார்ப்பண்யம்)-என்கிறபடியே பின்பும்
அநந்ய உபாயதைக்கும் உபயுக்தமாய் இருக்கும் –
மஹா விஸ்வாசம் ரஷிஷ்ய தீதி விஸ்வாசாத் அபீஷ்ட உபாய கல்பனம் -லக்ஷ்மீ தந்த்ரம் : –
(பகவான் நிச்சயம் ரக்ஷிப்பான் என்கிற மஹா விச்வாஸத்தால்
பகவானை உபாயமாகப் பற்றுதல் என்கிற பலன் ஏற்படுகிறது ) என்கிறபடியே
அணியிடாத அனுஷ்டான சித்தர்த்தமுமாய் -பின்பு நிர்பரதைக்கும் உறுப்பாய் இருக்கும் –
ஸ்வரூப அனுசித புருஷார்த்தங்கள் போலே ஸ்வரூப ப்ராப்தமான அபவர்க்கமும் புருஷார்த்தமாம் போது
புருஷன் அர்த்திக்கக் கொடுக்க வேண்டியதாலே இங்கே கோப்த்ருத்வ வர்ணமும் அபேஷிதம்-
நன்றாய் இருப்பது ஒன்றையும் இப் புருஷன் அர்த்திக்கக் கொடாத போது புருஷார்த்தம் கொடுத்தான் ஆகாது இறே-
ஆகையாலே இறே அப்ரார்த்திதோ ந கோபாயேத்-லக்ஷ்மீ தந்த்ரம் —17—72-
(வேண்டுதல் இல்லாமல், எந்த ரக்ஷத்வமும் செய்யப்படுவதில்லை)என்றும்
கோப்த்ருத்வ வர்ணம் நாம ஸ்வ அபிப்ராய நிவேதனம் -லக்ஷ்மீ தந்த்ரம் —17–78
(நமது மனத்தில் உள்ளதை பகவானிடம் சொல்வதே கோப்த்ருவ வரணம்)என்றும் சொல்லுகிறது
இப்படி இவ்வைந்தும் இவ்வித்ய அனுஷ்டான காலத்தில் உப யுக்தங்கள் ஆகையாலே இவை
இவ்வாத்ம நிஷேபத்துக்கு அவிநா பூத ஸ்வ பாவங்கள் –
இவ்வர்த்தம் பிராட்டியை சரணமாகப் பற்ற வாருங்கோள்-என்று
சாத்விக பிரக்ருதியான த்ரிஜடை ராஷசிகளுக்கு சொல்லுகிற வாக்யத்திலும் காணலாம் –
ததலம் க்ரூ ஸ்வாக் யைர்வ–(நீங்கள் பேசும் குரூர வார்த்தைகளை நிறுத்துங்கள் )என்று பிரதிகூல வர்ஜனம் சொல்லப் பட்டது
சாந்த்வமே வாபிதீயதாம் (சாந்தத்தை /சமாதானத்தை உண்டாக்கும் சொற்களைப் பேசுங்கள் என்பதால்) என்கையாலே
மன பூர்வகம் அல்லது வாக் பிரவ்ருத்தி இல்லாமையாலே ஆநு கூல்ய சங்கல்பம் ஆக்ருஷ்ட்யம் ஆயிற்று
ராகவாத்தி பயம் கோரம் ராஷசா நாமுபஸ்திதம்–(ராமபிரான் மூலமாக , அரக்கர்களுக்கு பெரிய பயம் ஏற்பட்டது )என்று
போக்கற்று நிற்கிற நிலையைச் சொல்லுகையாலே
அதிகாரமான ஆகிஞ்சன்யமும்
அதனுடைய அனுசந்தான முகத்தாலே வந்த கர்வ ஹந்த்யாதி ரூபமாய் அங்கமான கார்ப்பண்யமும் சொல்லிற்று ஆயிற்று
அலமேஷா பரித்ராதும் ராஷச்யோ மஹதோ பயாத்-(த்ரிஜடை சொல்கிறாள். அரக்கிகளே , ராமன் மூலமாக நமக்கு ஏற்படும்
பயத்திலிருந்து இவள் –சீதை நம்மைக் காப்பாற்றுகிற சக்தி உடையவள்
ப்ரணிபாத ப்ரஸன்னாஹி மைதிலீ ஜனகாத்மஜா |
அலமேஷா பரித்ராதும் ராக்ஷஸ்யோ மஹதோ பயாத் ||
மிதிலா நகரைச் சேர்ந்தவள் ,ஜனக மஹா ராஜாவின் புத்ரியான ஸீதை , நமது நமஸ்காரத்தால் கோபம் தணிந்தவளாக ஆகிவிடுவாள்
ராக்ஷஸிகளே —பெரிய பயத்திலிருந்து நம்மைக் காப்பதற்கு ,இவள் சக்தி வாய்ந்தவள் .
த்ரிஜடை இப்படிச் சொன்ன போது, ராக்ஷஸிகளுக்கு , ஸீதை ரக்ஷிப்பாள் என்கிற மஹாவிச்வாஸம் ஏற்பட்டது.) என்கையாலும்
இத்தை விவரித்துக் கொண்டு
அலமேஷா பரித்ராதும் ராகவாத் ராஷசீ கணம் –
(மேற்கூறிய த்ரிஜடையின் பேச்சை , ஹநுமானும், ராமனிடமிருந்து அரக்கிகளைக் காக்கும் சக்தி உடையவள் )என்று
திருவடி அனுவதிக்கையாலும்
பெருமாள் ஒருத்தனை நிக்ரஹிக்கப் பார்க்கிலும் இவர் சீற்றத்தை ஆற்றி இவள் ரஷிக்க வல்லவள் ஆகையாலே –
ரஷிஷ்யதீதி விஸ்வாசம் சொல்லப்பட்டது –
அபியாசாம வைதேஹீம் ஏதத்தி மம ரோசதே பர்த்சிதாமபி யாசத்வம் ராஷச்ய கிம் விவஷயா
(ஸீதையிடம் , நாம், அபயம் என்று வேண்டுவோம் .இதுவே எனக்குச் சரியாகப் படுகிறது என்று த்ரிஜடை ,அரக்கிகளிடம் சொல்கிறாள்.
நீங்கள் ஸீதையைப் பயமுறுத்தி இருந்தாலும் அவளைப் பிரார்த்தியுங்கள் -அவள் காப்பாற்றுவாளோ என்கிற சந்தேகமே வேண்டாம் )
என்கையாலே கோப்த்ருத்வ வர்ணம் சொல்லிற்று ஆயிற்று –
இவ் வைந்துக்கும் அங்கியான ஆத்ம நிஷேபம் –
ப்ரணிபாத பிரசன்நா ஹி மைதிலீ ஜனகாத்மஜா –
(நீங்கள் ஸீதையிடம் செய்த ப்ரபத்தியால் , அவள் உங்களுக்குக் கருணை புரிபவளாக இருக்கிறாள்)என்று
பிரசாத காரண விசேஷத்தைச் சொல்லுகிற ப்ரணிபாத சப்தத்தாலே விவஷிதம் ஆயிற்று –
ஆகையாலே நியாச பஞ்சாங்க சம்யுத -லக்ஷ்மீ தந்த்ரம் -என்கிற சாஸ்த்ரார்த்தம் இங்கே பூர்ணம-
இப்படி உபதேசிக்க ராஷசிகள் விலக்காத மாட்டே பற்றாசாக பிராட்டி தன் வாத்சல்யாதி அதிசயத்தாலே –
பவேயம் சரணம் ஹி வ என்று அருளிச் செய்தாள்-
இப் பாசுரம் சஹ்ருதமாய் பல பர்யந்தமான படியை –
மாதர் மைதிலீ ராஷசீ த்வயி ததைவ ஆர்த்ரா பராதா த்வயா -ரஷந்த்யா பவ நாத்மஜாத் லகுதரா
ராமஸ்ய கோஷ்டீ க்ருதா-என்று அபியுக்தர் வெளியிட்டார்கள் –
(மாதர் மைதிலீ ! ராக்ஷஸீ த்வயி ததை வார்த்ராபராதாஸ் த்வயா
ரக்ஷந்த்யா பவனாத்மஜாத் லகுதரா ராமஸ்ய கோஷ்ட்டீ க்ருதா |
காகம் த விபீஷணம் ”சரணம்” இத்யுக்தி க்ஷமெள ரக்ஷத :
ஸாந : ஸாந்த்ரமஹாகஸ : ஸுகயது க்ஷாந்திஸ் தவாகஸ்மிகீ ||–ஸ்ரீகுணரத்னகோசம் ( 50 )
இவ் விடத்தில் த்ரிஜடையுடைய ஆத்மாத்மீய பர சமர்ப்பணத்திலே அவர்களுக்குப் பிறவித் துவக்காலே
நம்மவர்கள் என்று கண்ணோட்டம் பிறக்கும் ராஷசிகளும் அந்தர் பூதைகள் –
அப்படியே ஸ்ரீ விபீஷண ஆழ்வானோடு கூட வந்த நாலு ராஷசரும் அவனுடைய உபாயத்திலே அந்தர்பூதர் –
அங்குற்ற அபய பிரதான பிரகரணத்திலும் இவ் வங்க அங்கி வர்க்கம் அடைக்கலாம்-எங்கனே என்னில் –
ப்ராதி கூல்யத்தில் வ்யவஸ்திதனான ராவணனுக்கும் கூட –
ப்ரதீயதாம் தாசரதாய மைதிலீ சீதாம் ச ராமாய நிவேத்ய தேவீம் வசேம ராஜன் நிஹ வீத சோகா -என்று
ஹிதம் சொல்லுகையாலே ஆநு கூல்ய சங்கல்பம் தோற்றிற்று –
(பூரா ஸரத்ஸூர்ய மரீசி ஸன்னிபான் நவான்
ஸுபுங்கான் ஸுத்ருடான் ந்ருபாத்மஜ |
ஸ்ருஜத்யமோகான் விஸிகான் வதாய தே
ப்ரதீயதாம் தாஸரதாய மைதிலீ ||-யுத்த காண்டம் ( 9–22 )
த்யஜஸ்வ கோபம் ஸுகதர்ம நாஸனம்
யஜஸ்வ தர்மம் ரதிகீர்தி வர்தனம் |
ப்ரஸீத ஜீவேம ஸுபுத்ர பாந்தவா :
ப்ரதீயதாம் தாஸரதாய மைதிலீ ||
யாவன்ன லங்காம் ஸமபித்ரவந்தீ வலீமுகா : பர்வத கூடமாத்ரா : |
தம்ஷ்ட்ராயுதாஸ்சைவ நகாயுதாஸ்ச ப்ரதீயதாம் தாஸரதாய மைதிலீ ||
யாவன்ன க்ருஷ்ணந்தி ஸிராம்ஸி வாணா ராமேரிதா ராக்ஷஸ புங்கவானாம் |
வஜ்ரோபமா வாயு ஸமான வேகா : ப்ரதீயதாம் தாஸரதாய மைதிலீ ||
ராமனிடம் ஸீதையை ஒப்படைத்துவிடு என்றும்,ஸீதையை , ராமனிடம் ஒப்படைத்துவிட்டு ,
நாம் இந்த லங்காராஜ்யத்தில் வருத்தமில்லாமல் வாழலாம் — என்றெல்லாம் விபீஷணன் சொல்கிறான்—)
இந்த ஹித வசனம் பித்த உபஹதனுக்கு பால் கைக்குமா போலே அவனுக்கு உத்வேக ஹேதுவாயிற்று-
த்வாம் து திக் குல பாம்சனம் -என்று திக்காரம் பண்ணின பின்பு இனி இவனுக்கு உபதேசிக்கவும் ஆகாது –
இவனோடு அனுபந்தித்த விபூதிகளும் ஆகாது -இவன் இருந்த இடத்திலே இருக்கவும் ஆகாது என்று அறுதியிட்டு
த்யக்த்வா புத்ராம்ச்ச தாராம்ச்ச பரித்யக்தா மயா லங்காம் மித்ராபி ச தநாநி ச-என்று
ஸ்வ வாக்யத்தின் படியே அங்கு துவக்கு அற்று போருகையாலே பிரதிகூல்ய வர்ஜன அபிசந்தி தோற்றிற்று –
ராவணோ நாம துர்வ்ருத்தா -என்று தொடங்கி சர்வஜித்தான ராவணனோட்டை விரோதத்தாலே
தாம் போக்கற்று நிற்கிற நிலையைச் சொல்லுகையாலும் பின்பும்
அநுஜோ ராவணஸ்யாஹம் தேன சாச்ம்யவமாநித-பவந்தாம் சர்வ பூதா நாம் சரண்யம் சரண்யம் கத -என்கையாலும்
கார்ப்பண்யம் சொல்லிற்று –
அஞ்சாதே வந்து கிட்டி -சர்வ லோக சரண்யாய ராகவாய மகாத்மனே -என்று சொல்லும் படி
பண்ணின மஹா விஸ்வாசம் விபூஷணோ மஹா ப்ராஜ்ஞா என்று காரண முகத்தாலே சொல்லப் பட்டது –
ப்ராஜ்ஞதையை விசேஷிக்கிற மஹச் சப்தத்தாலே விஸ்வாசாதி அதிசயம் தானே விவஷிதம் ஆகவுமாம்-
ராவணம் சரணம் கத என்கையாலே உபாய வர்ண அந்தர் நீதமான கோப்த்ருத்வ வர்ணம் சொல்லிற்று ஆயிற்று –
உபாய வர்ண சப்தத்தாலே வ்யாஜிதம் ஆகிற அளவு அன்றிக்கே
நிவேதயத மாம் ஷிப்ரம் விபீஷனம் உபாஸ்திதம்-என்கையாலே கடக புரஸ்சரமான ஆத்ம நிஷேபம் சொல்லிற்று
இப் பிரகரணத்தில் நிவேதன சப்தம் விஜ்ஞாபன மாத்ர பரமானால் நிஷ் பிரயோஜனம் –
இப்படி மற்றும் உள்ள பிரபத்தி பிரகரணங்களிலும்-
லௌகிக த்ரவ்ய நிஷே பங்களிலும் சம்ஷேப விஸ்தர பிரக்ரியையாலே இவ் வர்த்தங்கள் காணலாம் –
தான் ரஷிக்க மாட்டாதொரு வஸ்துவை ரஷிக்க வல்லான் ஒருவன் பக்கலிலே சமர்ப்பிக்கும் போது
தான் அவன் திறத்திலே அனுகூல அபிசந்தியை யுடையவனாய்
பிரதிகூல அபிசந்தியைத் தவிர்ந்து -இவன் ரஷிக்க வல்லவன் -அபேஷித்தால் ரஷிக்கவும் செய்யும் என்று தேறி
தான் ரஷித்துக் கொள்ள மாட்டாமையை அறிவித்து -நீ ரஷிக்க வேணும் என்று அபேஷித்து-
ரஷ்ய வஸ்துவை அவன் பக்கலிலே சமர்ப்பித்து
தான் நிர்பரனாய் பயம் கெட்டு மார்பிலே கை வைத்துக் கொண்டு கிடந்தது உறங்கக் காணா நின்றோம் இறே
இக் கட்டளைகள் எல்லாம் க்ரியாமாணார்த்த பிரகாசகமான த்வயாக்ய மந்த்ரத்திலே அனுசந்திக்கும்படி எங்கனே என்னில்
சர்வஜ்ஞ சர்வ சக்தி உக்தனாய் -கர்ம அநுரூப பலப்ரதனாய் -சர்வ உபகார நிரபேஷனாய்-
ஷூத்ர தேவதைகளைப் போலே ஷிப்ரகாரி யன்றிக்கே இருப்பானாய்-
ஸ்சேமாதிக தரித்ரனான சர்வேஸ்வரன் அநந்த அபராதங்களை யுடையார்க்கு அபிகம்யன் ஆகையும்-
பிராப்தி விரோதியான அநந்த அபராதங்களை உடையார்க்கு
அளவில்லாத பலத்தை தருகையும் -அல்ப வியாபாரத்துக்கு தருகையும் -தாழாதே தருகையும் -தரம் பாராதே தருகையும்
கூடுமோ என்கிற சங்கைகளுக்கு நிவர்த்த கங்களுமாய் யதா சம்பவம் –
உபாயத்வ ப்ராப்யத்வ உப உக்தங்களுமாய் இருந்துள்ள புருஷகார சம்பந்த குண வியாபார பிரயோஜன விசேஷங்கள் ஆகிற
சேஷியினுடைய ஆகாரங்களைப் பொதிந்து கொண்டு இருக்கிற
ஸ்ரீ மச் சப்தத்திலும்
நாராயண சப்தத்திலும்
ஆர்தமாக அநு கூல்ய சங்கல்பமும் பிரதிகூல வர்ஜனமும் அனுசந்தேயமாகக் கடவது –
இப்படி விசிஷ்டனான ஸ்வாமியைக் காட்டுகிற சப்தங்கள் ஔசித்யத்தாலே அவன் திறத்தில் பிராப்தமான
அபிமத அனுவர்த்தன சங்கல்பத்தையும் அநபிமத நிவர்த்தனத்தையும் பிரகாசிப்பிக்கின்றன –
இப்புருஷகாராதிகள் அஞ்சுக்கும் விசேஷங்கள் ஆவன –
மறுக்க ஒண்ணாமையும்
ஒழிக்க ஒழியாமையும்
நிருபாதிகம் ஆகையும்
சஹகாரியைப் பார்த்து இருக்க வேண்டாமையும்
தண்ணியரான பிறருடைய பேறே தன் பேறாகையும் –
இவ் விசேஷங்கள் அஞ்சாலும் சங்கா பரிஹாரம் பிறந்த படி எங்கனே என்னில்
சர்வஜ்ஞனாய் சர்வ சக்தனாய் இருந்தானே யாகிலும் மறுக்க ஒண்ணாத புருஷகார விசேஷத்தாலே
அந்தப்புர பரிஜன விஷயத்தில் போலே
அபிகந்தவ்யதா விரோதிகளான அபராதங்களை எல்லாம் ஷமித்து இவற்றில் அவிஜ்ஞாதா என்னும் படி
நின்று அபிகந்தவ்யானாம் –
கர்ம அநுரூப பலப்ரதனே ஆகிலும் -இப் பிரபத்தி ரூப வ்யாஜத்தாலே பிரசன்னனாய்
ஸ்வாமித்வ தாசஸ்த்வ சம்பந்தோ போதிதமாய்
தாயம் போலே ஸ்வத பிராப்தமான அளவில்லாத பலத்தையும் தரும் –
அவாப்த சமஸ்த காமதை யாலே சர்வ உபகார நிரபேஷனே யாகிலும்
அல்ப வ்யாஜத்தாலே வசீகார்யனான ஸூஜன சார்வ பௌமனைப் போலே
காருண்யாதிகளாலே இவன் செய்கிற சிலவான வியாபாரத்தைத் தனக்கு பரிபோகாரமாக ஆதரித்துக் கொண்டு
க்ருதஜ்ஞனாய் கார்யம் செய்யும் –
ஷூத்ர தேவதைகளைப் போலே ஷிப்ரகாரி அன்றாகிலும் –
மற்றுள்ள சாஸ்த்ரார்த்தங்களுக்கு விளம்பித்து பலம் கொடுத்தானே யாகிலும்
அநந்ய சரண்யனுடைய ப்ரபத்திக்கு ஔதார்யாதி குண சஹிதமாய்
சஹகார்யந்தர நிரபேஷமான தன் சங்கல்ப மாத்ரத்தாலே
காக விபீஷணாதிகளைப் போலே இவன் கோலின காலத்திலே அபேஷிதம் கொடுக்கும்
சமாதிக தரித்ரனேயாகிலும் ஸ்வாதந்த்ர்யாதி குண விசிஷ்டனாய் தன் பிரயோஜனமாக
ஆஸ்ரிதர்க்கு அபேஷிதம் செய்கிறான் ஆகையாலே
கோசல ஜன பதத்தில் ஜந்துக்களுக்குப் போலே குமாரனோடு ஒக்கத் திர்யக்கான கிளிக்கு பாலூட்டும்
கணக்கிலே தரம் பாராதே கொடுக்கும் –
இப்படி யதா லோகம் பிறந்த சங்கைகளுக்கு யதா லோகம் பரிஹாரம் உண்டாகையாலே
யதா சாஸ்திரம் பிரபத்தி அபேஷித சாதனமாகக் குறை இல்லை –
இவ் விசிஷ்டமான புருஷகாராதிகள் அஞ்சையும் சதாசார்ய கடாஷ விசேஷத்தாலே தெளிந்தவனுக்கு அல்லது
மஹா விஸ்வாசம் பிறக்காது -எங்கனே என்னில் –
ஈஸ்வரன் அபிமுகன் அல்லாமையாலே கர்ம யோகாதிகளுக்கு அனர்ஹனாம் படியான
மஹா பாதங்களை உடையவனாய்
திகசுசி மவிநீதம் என்கிற ஸ்லோகத்தின் படியே எட்ட அரிய பலத்தை
கணிசிக்கும் படியான சாபலத்தையும் உடையனாய் –
(திகசுசிமவிநீதம் நிர்ப (த )யம் மாமலஜ்ஜம்
பரமபுருஷ யோஹம் யோகிவர்யாக்ரகண்யை : |
விதிசிவ ஸநகாத்யைர் த்யாது மத்யந்ததூரம்
தவபரிஜந பாவம் காமயே காமவ்ருத்த : ||ஸ்தோத்ர ரத்னத்தில் (47)
சாஸ்த்ரங்களில் சொல்லியபடி ஸாத்விக ஆகாரங்களை உண்டு ,இந்த்ரியங்களை அடக்கி , மனத்தையும் ஸாத்விகமாக்கி
பெரியவர்களிடம் அடக்க ஒடுக்கமாக அவர்களுக்குப் பணிவிடை செய்து பூர்ண புருஷாகாரம் இருந்தாலும்
உன்னிடம் நெருங்க அஞ்சுகிறார்கள் .
யோக்யதை இருந்தாலும் பெரியோர்கள் கோஷ்டியில் சேர வெட்கப்பட்டு , அநுஷ்டானபரர்களும் நெருங்கப் பயப்படுகிறார்கள் .
ப்ரஹ்ம ருத்ராதிகளும் ஸநகாதி முனிவர்களும் உன்னை அண்டவே அஞ்சுகிறார்கள் .அப்படி அஞ்சாமல் உன்னிடம் மோக்ஷத்தைக்
கேட்டிருந்தால் எப்போதோ மோக்ஷம் அடைந்திருப்பார்கள்.
நானோ ஒருவித சக்தியுமில்லாதவன் எவ்வித சிக்ஷையும் பெறாதவன் .துணிந்து வெட்கமின்றிப் ப்ரார்த்திப்பது தகாதுதான் .
ஆனால், நான் காமவ்ருத்தன் ; எல்லா சாஸ்திரங்களையும் மீறி நடந்ததைப்போல ,மோக்ஷம் வேண்டுவதற்கான
சாஸ்த்ரங்களையும் மீறி இருக்கிறேன்.துணிந்து கேட்கிறேன், மோக்ஷம் . இதனை ஆராய்ந்தால் நானே என்னை வெறுத்து
ஒதுக்கவேண்டியவன் ஆவேன்
திகசுசிமவிநீதம் =தூய்மை வெட்கம் தயை போன்றவை இல்லாதவனை நிந்திக்க வேண்டியது தான் நியாயம்.
ஆனால், அடைய இயலாத ஒன்றுக்கு முயற்சி செய்து சுலபமான உபாயத்தைச் செய்கிறான் )
இப் பலத்துக்கு அனுஷ்டிக்கப் புகுகிற உபாயம் காயக்லேச அர்த்தவ்யய கால தைத்ர்த்யாதிகள்
ஒன்றும் வேண்டாத தொரு சக்ருத அனுசந்தானம் ஆதல்
சமுதாய ஜ்ஞான பூர்வக சக்ருத் உக்தி மாதரம் ஆதலாய் -இந்த லகு தர மான உபாயத்தைக் கொண்டு
அந்த குரு தரமான பலத்தை தான் கோலின காலத்திலே ஆசைப்பட்டு
இப் பலத்துக்கு சுநமிவ புரோடாச-பாத்ம ஸம்ஹிதையில்-
(புரோடாசம் என்பது ஹோம த்ரவ்யம் –இது தேவர்களுக்கு உரியது, அதை ஏற்கும் தகுதி நாய்க்கு இல்லை—)என்கிறபடியே
ஜன்ம வ்ருத்தாதிகளாலே தான் அனர்ஹனாய் வைத்து
தன் அனுபந்திகளையும் கொண்டு இப் பேறு பெறுவதாக ஒருத்தனுக்கு மஹா விஸ்வாசம் பிறக்கையில்
அருமையை நினைத்து கல வெள்ளக் கட்டுப் போய் கல எண்ணெய் ஆயிற்று என்று எம்பார் அருளிச் செய்தார் இறே
கர்ம யோகத்துக்கே தகுதி இல்லாதவன் இந்த பிரபத்தியில் மஹா விஸ்வாசம் கொள்ள நினைப்பது
என்ற பொருளில் அருளிச் செய்தார் –
(ஒரு வாணியனின் –எண்ணெய் விற்பவனின்— செக்கு —எண்ணையை ஆட்டும் மரத்தாலான சாதனம்—-பழுதுபட ,
வாணியன் ,கானகத்துக்குச் சென்று செக்குக்கான ஒரு மரத்தை வெட்ட முயன்றான். அப்போது அந்த மரத்தில் குடியிருந்த ஒரு பிசாசு,
”மரத்தை வெட்டாதே—-உனக்குப் பிழைப்பதற்கு தினமும் ஒரு மூட்டை எள்ளையே தருகிறேன்;எள்ளை விற்றுப் பிழைத்துக்கொள் —” என்க ,
வாணியனும் சம்மதிக்க, அந்தப் பிசாசு, தினமும் ஒரு மூட்டை எள் கொடுத்துவந்தது.சிறிதுநாள் கழித்து,அந்த மரத்தினடியே
வந்த மற்றொரு பிசாசு, விஷயத்தைக் கேள்விப்பட்டு,முதல் பிசாசிடம் , நான் அந்த வாணியனைக்
கொன்றுவிட்டு வருகிறேன் என்று சொல்லி, வாணியனின் வீட்டுக்கு வந்தது.
அந்தச் சமயத்தில், வாணியன் , தனது பிள்ளையிடம் , முரண்டு பிடிக்கும் இரண்டாவது காளை மாட்டைக் காட்டி ,
” மகனே—அந்த இரண்டாவது பிசாசைப் பிடித்துக் கட்டு –” என்றான். வாணியனைக் கொல்ல வந்த பிசாசு ,நடுங்கிப்போய் ,
”ஐயா —நான் உனக்கு தினமும் எண்ணெயாகவே கொடுக்கிறேன் –என்னை —” என்று சொல்லி ஓடிப் போயிற்று.
இதைக் கேள்வியுற்ற முதல் பிசாசு, சிரித்ததாம் .
இதைப் போன்றே மஹா விச்வாஸம் , பக்தி யோகத்தைக் காட்டிலும் சிரமமானது என்பர்.
ஒருபிடி எள்ளையே , கொடுக்க இயலாதவனிடம் ,ஒரு பாத்திரம் நிரம்ப எண்ணெய் கேட்பது போல—கர்மயோகத்துக்கே
தகுதி இல்லாதவன் மஹாவிச்வாஸம் கொள்ள நினைப்பது உள்ளது –என்றும் பொருள் கொள்ளலாம் )
இவ்விடத்தில் சர்வேஸ்வரனுடைய பரத்வ மாத்ரத்தை அறிந்து அகலுகையாலே நாரதமன் என்று
பேர் பெற்ற பிறந்து கெட்டானில் காட்டில்
இடைச்சிகளைப் போலே விவேகம் இல்லையே யாகிலும் சௌலப்யத்தை அறிந்து
அந்நலன் உடை ஒருவனை நணுகுமவனே பரம ஆஸ்திகன் என்று அப்புள்ளார் அருளிச் செய்யும் பாசுரம் –
இப்படி புருஷகாராதி ஜ்ஞானத்தாலே பிறந்த விஸ்வாச மஹத்வமும் விஸ்வாச ஸ்வரூபமும் கார்ப்பண்யமும்
ப்ரபத்யே -என்கிற க்ரியா பதத்தில் உப சர்க்கத்திலும்
சரண சப்தோ பலிஷ்டமான தாதுவிலும்
உத்தமன் தாது பொருளிலும்
அனுசந்தேயங்கள்
இதில் உத்தமனில் விவஷிதத்தை -அநந்ய சரண்ய-என்று கத்யத்திலே எம்பெருமானார் வியாக்யானம் பண்ணி அருளினார் –
இவ்விடத்தில் உபாயத்வ அத்யவசாய வாசக சப்தத்திலே கோப்த்ருத்வ வரணம் அந்தர் நீதம் –
அஹம் அஸ்மி அபராதா நாம் ஆலயோ அகிஞ்சனோ அகதி
த்வம் ஏவ உபாய பூதோ மே பவதி பிரார்த்தனா மதி –அஹிர்புத்ந்ய ஸம்ஹிதை-37-30-என்றும்
சரணாகதி ரித்யுக்தா சா தேவ அஸ்மின் பிரயுஜ்யதாம் -37-31–என்றும்
உபாயோ க்ருஹ ரஷித்ரோ சப்த சரணமித்யயம்
வர்த்ததே சாம்ப்ரதம் உபாயார்த்த ஏக வாசக 37–29 )-என்றும் சொல்லுகிறபடியே
உபாயாந்தர அசக்தனுக்கு சர்வேஸ்வரன் சர்வ சாஸ்த்ரார்த்த சாதரணமான ரஷகத்வத்திலே மாத்ரம் நிற்கை அன்றிக்கே
ஸ்வீக்ருத பரனாய்க் கொண்டு உபாயாந்தர ஸ்தானத்திலே நிவேசிக்கையாலும் –
ந்யஸ்த பரனான இவ்வதிகாரிக்கு பின்பு அநந்ய உபாயத்வம் நிலை நிற்கைக்காகவும்
உபாயத்வ அத்யவசாயம் இவ்விடத்திலே விவஷிதமாயிற்று –
உபாயம் என்றால் ஒரு விரகு என்ற மாத்ரம் ஆகையாலே
இவ் உபாயத்வம் சேதன அசேதன சாதாரணமாய் இருக்கையாலும்
ரஷிஷ்யதீதீ விஸ்வாசோ கோப்த்ருத்வ வரணம் ததா -என்றும்
சர்வஜ்ஞ அபி ஹி விச்வேசா சதா காருணிகோ அபிசன்
சம்சாரதந்திர வாஹித்வாத் ரஷாபேஷாம் ப்ரதீஷதே -லக்ஷ்மீ தந்த்ரம்–என்றும் சொல்லுகிறபடியே
சேத நை காந்தமான கோப்த்ருத்வ வரணம் அனுசந்தேயம் ஆகையாலும் கோப்த்ருத்வ வரணம் இங்கே விவஷிதம்
அதி சரண சப்தம் ஒரு பிரயோகத்திலே இரண்டு அர்த்தத்தை அபிகா நம் பண்ண மாட்டாமையாலே இவ்வதிகாரிக்கு
அசாதாரணமான உபாய அத்யவசாயம் இவ்விடத்தில் சப்தமாய் சர்வாதிகாரி சாதாரணமான
கோப்த்ருத்வ வரணம் அர்த்தமாகக் கடவது
அறிவித்தனர் அன்பர் ஐயம் பறையும் உபாயம் இல்லாத்
துறவித் துனியில் துணையாம் பரனை வரிக்கும் வகை
உறவு இத்தனை இன்றி ஒத்தார் என நின்ற உம்பரை நாம்
பிறவித் துயர் செகுப்பீர் என்று இரக்கும் பிழை அறவே —
பக்தியோகம் போன்றவற்றை அனுசரிக்க இயலாத நிலையில் இருப்போருக்கும்-இவை பலன்தருமோ என்று
சந்தேகப்படுவோருக்கும் இவர்களது கதியற்ற நிலையை உணர்ந்த எம்பெருமான் நம்மைக் காக்கத் திருவுள்ளம் கொண்டான்.
உபாயமாக அவனையே வேண்டி,அவனையே அடைய அன்புகொண்ட ஆசார்யர்கள் -அதற்கான வழியை உபதேசித்தார்கள்
இதன் மூலமாக,நம்மைப்போன்றே கர்மவினைகளால் பீடிக்கப்படும் மற்ற தெய்வங்களை நாடி , நமக்குச் சிறிதும் தொடர்பில்லாத
அவர்களிடம் என்னை இந்த ஸம்ஸார பந்தத்திலிருந்து விடுவிக்கவேண்டும் என்று இத் தெய்வங்களிடம்
கையேந்தும் தவறைச் செய்யமாட்டோம்
பிரக்யாத பஞ்சஷ அங்க சக்ருத் இதி பகவச் சாசநை ஏஷ யோக
தத்ர த்வாப்யாம் அபாயாத் விரதி அநிதர உபாயதா ஏகேந போத்யா
ஏகேந ஸ்வாந்ததார்ட்யம் நிஜ பர விஷயே அன்யேன தத் சாத்யதா இச்சா
தத்வஜ்ஞான பிரயுக்தா து இஹ ச பரிகரே தாததீன்ய ஆதி புத்தி —
பாஞ்சராத்ர ஆகமத்தில் ப்ரபத்தி யோகம் ஐந்து அங்கங்களைக் கொண்டது என்றும் ஒரே ஒருமுறை செய்யப்பட வேண்டும்
என்று கூறப்பட்டது.
(மோக்ஷத்துக்காகச் செய்யப்படும் ப்ரபத்தியில் ”ஸாத்விக த்யாகம் ”ஆறாவது அங்கம் )
ஏனைய பலன்களைக் கோரிச் செய்யப்படும் ப்ரபத்தியில் இந்த அங்கம் இல்லை.
எம்பெருமானின் கட்டளையை மீறுதல் என்பதை மாற்ற,ஆநுகூல்ய ஸங்கல்பம் , ப்ராதிகூல்ய வ்ரஜநம் இரண்டு அங்கங்களும் ,
பகவானை அல்லாது வேறு உபாயத்தைப் பற்றாததை கார்ப்பண்யம் என்கிற அங்கமும் , தன்னைக் காப்பாற்றிக் கொள்ளும்
விஷயத்தில் வேறு உபாயங்களை நாடாமல் பகவானை நம்பியிருப்பது மஹா விச்வாஸத்தையும் , விரும்பும் பலனை அளிக்கிறேன்
என்கிற பகவானின் ஸங்கல்பத்தை கோப்த்ருத்வவரணம் என்கிற அங்கமும் ஏற்படுத்துகிறது .
இப்படியாக உள்ள ப்ரபத்தியில் ,இவை யாவும் பகவானாலேயே என்கிற எண்ணமும் சாஸ்த்ர ஞானத்தால் மட்டுமே உண்டாகிறது .
————————————————————————————————————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்