Archive for May, 2015

தென்னாச்சார்ய சம்ப்ரதாயம் –ஸ்ரீ .P.B.A.ஸ்வாமிகள்

May 31, 2015

ஸ்ரீ வரவர முனியடி வணங்கும் வேதியர்
திருவடி இணைகள் என் சிரம் மேல் சேர்க்கவே

நஹி நிந்த்யா நியாயம்
தென்கலை -தமிழ் வேதம் -ஊற்றம் உள்ள ஆசார்யர்கள் -தென்னாசார்யர்கள் –
அநு வ்ருத்தி பிரசன்னா சார்யர்கள் –
க்ருபாமாத்ரா பிரசனாச்சார்யர்கள் -பயன் நன்றாகிலும் பாங்கல்லராகிலும் செயல் நன்றாகத் திருத்திப் பணி கொள்வார்கள்
தமது பேறாக அனுக்ரஹித்து அருளுவார்கள் –
விசதவாக் சிகா மணி–பாஞ்சராத்ர சாஸ்திரம் –
நாஸிகா மூல மாரப்ய –ஹரே பாதத்வ்ய யாக்ருதிம்
உத்புல்ல கமலஸ்தாயி ஹரிபாத த்யாக்ருதிம் –நாஸிகா மூலத்தில் தாமரை மலர் இருப்பதாக
அஷ்டமீந்து கலாதார ஹரி பாதத்வயாக்ருதிம் –
நெற்றியுள் நின்று என்னையாளும் நிரை மலர்ப் பாதங்கள் -திருவாய் -1-9-10-
தர்மஜ்ஞ சமய பிரமாணம் வேதாச்ச -அவிகீத சிஷ்டாசாரமே பிரமாணம் முன்னோர் வழி செல்வதே -சால சிறந்தது –

சரீராத்மா பாவம் -திறவு கோல்
பத்ரம் புஷ்பம் பலம் தோயம் –
தொழுது மா மலர் நீர் சுடர் தூபம் கொண்டு எழுதும் இன்னுமிது மிகையாதலின் –
தொழக் கருதுவது துணிவது சூதே –
தே பூயிஷ்டாம் நம உக்திம் விதேம-உப நிஷத் –நம என்று வாயினால் சொல்வதும் மிகையே
அஞ்ஜலி பரம் வஹதே -பெரிய பழுவாகக் கருதுவான்-

நம என்னலாம் கடமை அது சுமந்தார்கட்கே
திரு உள்ளத்தில் இரக்கமே கார்யகரம் –
நெறி காட்டி நீக்குதியோ
காம்பறத் தலை சிரைத்து உன் கடைத்தலை இருந்து வாழும் சோம்பரை உகத்தி போலும் சூழ் புனல் அரங்கத்தானே
நம்முடையவர்கள் எம்பெருமானையே உபாயமாகப் பற்றா நிற்க அல்லாதார் அசேதன க்ரியா கலாபங்களைப் பற்றுவது போலே துரி யோதனன் நிலை -நம்பிள்ளை –
தேவரீர் கிருபைக்கு தண்ணீர் துரும்பாக ஏதேனும் பிரதஷண நமஸ்காராதிகள் பண்ணிற்று உண்டோ -நம்பிள்ளை
என் பிழைத்தால் திருவடியின் தகவினுக்கு -1-4-7- தூது விடும் பிரகரணம் –

செங்குறிஞ்சித் தாரார் நறு மாலை சாத்தற்கு தான் பின்னும் நேராதன வொன்று நேர்ந்தாள்-சிறிய திரு மடல்
தான் -வகுத்த விஷயத்தில் ஓர் அஞ்சலி பண்ணினால் அது சாதனத்தில் அந்வயிக்கில் செய்வது என் என்று இருக்கக் கடவ –தான் -பெரியவாச்சான் பிள்ளை –

———————————————————————————————————————————-

எம்பெருமானுடைய அருள் நிர்ஹேதுகம் –
எந்நன்றி செய்தேனோ என் நெஞ்சில் திகழ்வதுவே-
என் உணர்வினுள்ளே இருத்தினேன் அதுவும் அவனது இன்னருளே –
வெறிதே அருள் செய்வர்
ஸூ க்ருத விசேஷங்களைக் கற்ப்பித்துக் கொண்டு தானே அவற்றை ஓன்று பத்தாக்கி நடத்திக் கொண்டு போரும்
தேசிகரும் பரமபத சோபானத்தில்-
அஜ்ஞாத யாத்ருச்சிக ஆநு ஷங்கிக ப்ரா சங்கிக சாமான்ய புத்தி மூல ஸூ க்ருத விசேஷங்களை வியாஜமாகக் கொண்டு விசேஷ கடாஷம் பண்ணி அருளுவான் –
சம்சார தந்திர வாஹித்வாத் ரஷ்யாபேஷாம் ப்ரதீஷதே –
காசௌ புருஷகாரேண நசாப்ய அநயேன ஹேது நா கேவலம் ச்வேச்சயைவாஹம் பரேஷ கஞ்சித் கதாசன —
மருவித் தொழும் மனமே தந்தாய்
என்னைத் தீ மனம் கெடுத்தாய்
இத்தால் நிர்ஹேதுகத்வ பகவத் கிருபை நிரூபணம் ஆயிற்று –

—————————————————————————————————————————————–

2- பிரபத்தியும் அநுபாயத்வம்
த்வமேய உபாய பூதோ மே பவேதி ப்ரார்த்த நாமதி சரணா கதி
தேசிகரும் நியாய சிந்தாஞ்சனத்தில்
இயம் கேவல லஷ்மீ சோபாயத்வ பிரத்யயாத்மிகா
ஸ்வ ஹேதுத்வதியம் ருந்தே கிம்பு நஸ் சஹ காரிணாம்-
நியாச திலகத்தில் ஸ்ரீ தேசிகர் –ஹேதுர் வைத்தே விமர்சே -என்கிற ஸ்லோகத்தில் இதரா ந பேஷ உபாயத்வம் –
இசைவித்து என்னை யுன் தாளிணைக் கீழ் இருத்தும் அம்மானே –
ச்வீகாரம் தானும் அவனாலே வந்தது -சிருஷ்டி அவதார முகத்தாலே பண்ணின கிருஷி பலம்
ரத்னம் -அதிகாரி பேதத்தால் உபாயம் -வணிகனுக்கு  -போக்கியம் -ராஜாவுக்கு –
பகவத் பிரவ்ருத்தி விரோதி ஸ்வ பிரவ்ருத்தி நிவ்ருத்தியே பிரபத்தி
சசால சாபஞ்ச முமோச வீர
வனத்திடை ஏரியாம் வண்ணம் இயற்றும் இது வல்லால் மாரி யார் பெய்கிற்பார் மற்று –
உபபத்தேச்ச -3-2-4- ப்ரஹ்ம ஸூ தரம் /பலமத உபபத்தே -3-2-37
பிரபத்தி உபாயத்துக்கு இக்குற்றங்கள் இல்லை- மா முனிகள் வ்யாக்யானத்தில்-அருளிச் செய்வதால் வேறே -மற்றொரு குற்றம் உண்டு என்னும் இடம் தோற்றுகிறது
அதாவது ஆபாத ப்ரதீதியிலே உபாயத்வ பிரதிபத்திக்கு அர்ஹமாம் படி இருக்கை
உன் மனத்தால் என் நினைந்து இருந்தாய் –என்கிறபடியே பிரபத்திக்கு உபாயம் அவன் நினைவு
புழு குறித்தது எழுத்தாமாப் போலே
குணாஷர நியாயம் –அவனையே உபாயமாகச் சொன்னதே பிரபத்தி உபாயம் என்றது –

—————————————————————————————————————————————–

3- சேதன லாபம் ஈஸ்வரனுக்கே பேறு-
மன்மனா பவ -ஆஸ்ரித சம்ரஷணம் ஸ்வ லாபம் மத்வா ப்ரவர்த்ததே
பிராப்தாவும் ப்ராபகனும் பிராப்திக்கு உகப்பானும் அவனே –
அஹம் அன்னம் அஹம் அன்னம் அஹம் அன்னம்
அடுத்தபடியாக அஹம் அந்நாத அஹம் அந்நாத அஹம் அந்நாத-அவன் பசியைத் தீர்த்த பின் இவன் பசி தீரும்
அஹம் அன்னம் அன்ன மதந்த மத்மி–அவன் ஆனந்தம் கண்ட பின்பு தான் ஆனந்திக்கை
வாரிக் கொண்டு உன்னை விழுங்குவன் காணில் என்று ஆர்வுற்ற என்னை ஒழிய
என்னின் முன்னம் பாரித்து தான் என்னை முற்றப் பருகினான் -9-6-10-
பெரும் பாழில் ஷேத்ரஜ்ஞன் பெரும் செய் -ஆசார்ய ஹிருதயம் -2-10-
அபிஷிச்ய ச லங்கா யாம் ராஷ சேந்தரம் விபீஷணம் க்ருதக்ருத்யஸ் ததா ராமோ விஜ்வர ப்ரமுமோதஹ –
படியாய்க் கிடந்தது உன் பவளவாய்க் காண்பேனே
கதா ஹமை காந்திக நித்ய கிங்கர ப்ரஹர்ஷயிஷ்யாமி-ஆளவந்தார் –
தன்னுடைய அநு வ்ருத்தியால் ஈஸ்வரனுக்குப் பிறக்கும் ஹர்ஷமே இ றே சேதனனுக்கு பிராப்யம் –
பரம புருஷன் –ஜ்ஞாநினம் லப்த்வா -ச மஹாத்மா ஸூ துர்லப
ஜீவாத்மாவான சொத்து சைதன்யம் ஆகிற கல்மஷத்தோடே கூடி இருக்கையாலே
சிறிது தலை யாட்டவும் வாலாட்டவும் பெறுகிறது –
தன்னை நன்றாக உணர்ந்த போது தலை மடிந்து நிற்கிறது –

—————————————————————————————————————————————–

4-ஸ்வ கத ச்வீகாரமும் -பர கத சவீ காரமும் –
மர்க்கடகிசோர நியாயம் -மார்ஜாரகி சோர நியாயம் –
அநந்ய சேதாஸ் சத்தம் யோ மாம் ஸ்மரதி நித்யச–தச்யாஹம் ஸூ லப பார்த்த நித்யயுக்தச்ய யோகின -ஸ்ரீ கீதை -8-14-
ஜ்ஞா நீது ஆத்மைவ மே மதம் –
அதிகமான ப்ரீதியையும் தானே அளிப்பதாக –நாயமாதமா ஸ்ருதியும் -8-10/11 ஸ்லோகங்களும் சொல்லும்
இவன் அவனைப் பெற நினைக்கும் போது இந்த பிரபத்தியும் உபாயம் அன்று –
அவன் இவனைப் பெற நினைக்கும் போது பாதகமும் விலக்கு அன்று
மா முனிகள் -உடையவன் உடைமையைச் சென்று கைக் கொள்ளுமா போலே ஸ்வாமி யான அவன் தானே வந்து
அங்கீ கரிக்கக் கண்டு இருக்கக் கடவ -பரதந்த்ரனான இச் சேதனன்
தன ச்வீகாரத்தாலே ஸ்வ தந்த்ரனான அவனைப் பெற நினைக்கும் அளவில் அவன் நினைவு கூடாதாகில்
இப்படி விலஷணையாய் இருக்கிற பிரபத்தியும் தத் லாப சாத்தியம் ஆகாது என்றபடி
ஸ்வாமியாய் ஸ்வதந்த்ரனான அவன் ஸ்வமாய் பர தந்த்ரனாய் இருக்கிற இவனை
ஸ்வ இச்சையாலே பெற நினைக்கும் அளவில் பாதகமும் பிரதிபந்தகம் ஆக மாட்டாது -என்கை-
இவை இரண்டாலும் ஸ்வ கத ச்வீகார அநு பாயத்வமும்
பரகத ச்வீகார உபாயத்வமும் காட்டப் பட்டது
ஸ்ரீ கீதா பாஷ்யத்திலும் தத்வியோகம் அசஹமாந அஹமேவ தம் வ்ருணே -தான் வரிப்பதையும்
மத ப்ராப்த்ய அநு குண உபாசன விபாகம் அஹமேவ ததீமீத்யர்த்த —ஸ்வ கத ச்வீகார பற்றாசைக் கழிக்கிறது
த்வத் பாதமூலம் சரணம் பிரபத்யே -புகல் ஓன்று இல்லா அடியேன் உன்னடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே –என்றாலும்
நாம் பற்றுகிற பற்று இல்லை -அவனுடைய கிருஷி பலித்தது
நிவேதயத மாம் ஷிப்ரம் -என்றும் காட்டப் பட்டதே –

—————————————————————————————————————————————–

5-பிரபத்தியின் அபராத கோடி பிரவேசம் –
எனதாவி தந்து ஒழிந்தேன் -எனதாவி யார் யானார் தந்த நீ கொண்டாக்கினையே
தோள்களை ஆரத் தழுவி என்னுயிரை அறவிலை செய்தனன்
அஹம் அத்யைவ மா சமர்ப்பித-மம நாத யதஸ்தி யோச்ம்யஹம் சகலம் தத்தி தவைவ மாதவ
நியத்ச்வமிதி ப்ரபுத்ததீ அதவா கிம் நு சமர்ப்பயாமி தே –
ஆத்மா சமர்ப்பணம் செய்த உடனே அநு தபித்து அருளிச் செய்தார் ஆளவந்தார்
சர்வ அபராதங்களுக்கும் பிராயச்சித்தமான பிரபத்தி தானும் அபராத கோடியிலேயாய் ஷாமணம் பண்ண வேண்டும்படி நில்லா நின்றது இறே –
நெடு நாள் அந்ய பரையாய்ப் போந்த பார்யை லஜ்ஜா பயங்கள் இன்றுக்கே பர்த்ரு சகாசத்திலே நின்று
என்னை அங்கீ கரிக்க வேணும் என்று அபேஷிக்குமா போலே இருப்பது ஓன்று இ றே இவன் பண்ணும் பிரபத்தி
சம்சார பீதியாலே சமர்ப்பிக்கையும்
ஸ்வரூப யாதாம்ய ஜ்ஞானத்தாலே அநு சயிக்கையுமாக
இரண்டும் யாவான் மோஷம் அநு வர்திக்கக் கடவது –
கைங்கர்ய பிரார்த்தனையும் செய்து –
கைங்கர்ய பிரார்த்தனைக்கு பூர்வ பாவியாக ருசியையும் அபராத கோடியிலே பேசி அருளுவார் தேசிகரும்
ஒட்டுரைத்து இவ்வுலகு உன்னை புகழ்வெல்லாம் பெரும்பாலும் பட்டுரையாய் புற்கென்றே காட்டுமால் பரஞ்சோதி -திருவாய் -3-1-2-
கொண்டல் வண்ணா -கடல் வண்ணா -காயா வண்ணா -என்பார்கள்
புகழ்வோம் பழிப்போம் புகழோம் பழியோம்
அவிவிவேகியாய் ஆத்மசமர்ப்பணம் செய்வதும் -விவேகம் பெற்று அனுதபித்து ஸ்லோகம் செய்வதும்
நிரவதிக ப்ரீதியாலே அறிவு அழிந்து இவ்வாத்மா தன்னுடையது அன்று என்று நிரூபிக்க மாட்டாராய்
தம்மோடு கலந்த பெரு நல உதவிக்கு கைம்மாறாகத் தன்னுடைய
தம்முடைய ஆத்மாவை மீளாவடிமையாகக் கொடுத்து
பின்னையும் தம்முடைய ஸ்வரூபத்தை உள்ளபடி விவேகித்து –
த்வய உச்சாரண அநு உச்சாரணத்தாலே ப்ரபத்ய அனுஷ்டானம் பிறந்த பின்பு
த்வயத்தின் பொருள் நெஞ்சில் ஊற ஊற த்வ்யார்த்த பிரகாசகமான திருவாய்மொழி –ஆச்சார்ய ஸ்ரீ ஸூ க்திகள் நெஞ்சில் தேங்க
ஆத்ம சமர்ப்பணமாகத் தலைக் கட்டும் –

—————————————————————————————————————————————–

6-உபாயாந்தரங்களின் ஸ்வரூப விருத்த்வம் –
ஸ்வ ரஷணத்தில் ஸ்வ பிரயத்ன நாற்றத்தையும் சஹியாத ஸ்வரூப ஞானம் இல்லாதவர்களுக்கு உபாயம் –
யாதாம்ய ஞானம் உள்ளவர்களுக்கு அபாயமாகவே இருக்கும் –
நெறி காட்டி நீக்குதியோ -நெறி காட்டுகையும் நீக்குகையும் பர்யாய சந்தங்கள்
பரதந்த்ரமான வஸ்துவை ஸ்வ தந்திர க்ருத்யமான உபாய அனுஷ்டானத்திலே மூட்டி அசலாக்குகை
பொற் குடத்தில் தீர்த்தம் மத்ய பிந்துவின் கலப்பினாலே நிஷித்தம் ஆகிறாப் போலே
தானே கர்த்தா போக்கியம் என்கிற அஹங்கார கலப்பு –
ஸ்வ யத்ன  நிவ்ருத்தி பாரதந்த்ர்ய பலம் –
தேசிகர் நியாச திலகம் -உபாயான்தரம் ஸ்வரூப விருத்தம் என்று அருளுகிறார்-

—————————————————————————————————————————————–

7- எம்பெருமானுடைய வ்யாப்தி விஷயம் –
பரந்த தண் பரவையுள் நீர் தோறும் பரந்துளன் –1-1-10-
அத்புத சக்தி
அணோராணீயாம்சம்-
நூலில் ரத்னத் திரள் போலே -எம்பெருமானுக்கு அணு பதார்த்தங்களிலும் அந்தர் வ்யாப்தி அநபாயம் என்பதும்
ஒவ்வொரு பதார்த்தத்திலும் பரிசமாப்ய வர்த்தமா நத்வமும் அவ்யாஹதம் என்பதும் சித்தாந்திகளின் கொள்கையாக சித்தம்-

—————————————————————————————————————————————–

8- வாத்சல்ய குண விசாரம் –
எற்றே தன கன்றின் உடம்பின் வழு வன்றோ காதலிப்பது அன்று அதனை ஈன்றுகந்த ஆ –
அவிஜ்ஞாதா சஹாஸ்ராம்சு -அடியார்களின் தோஷங்களைக் காணாதவன் -பிரேம வசத்தினால் –
நிகரில் புகழாய் -என்றே நம்மாழ்வார்
தோஷ போக்யத்வத்தையே மங்க வொட்டு உன் மா மாயை-

—————————————————————————————————————————————-

9-பரதுக்க துக்கித்வ நிரூபணம் –
தயை பிறர் துக்கம் கண்டு தானும் துக்கிப்பதே தயை
நண்ணாதார் முறுவலிப்ப நல்லுற்றார் கரைந்து ஏங்க
பர துக்கங்களில் முறுவலிப்பது ஹேயம்-கரைந்து ஏங்குவது உற்றது
குண பரிவாஹா த்மா நாம் ஜன்ம நாம் -கல்யாண குணங்களைக் காட்டவே திருவவதாரங்கள்
மழுங்காத ஞானமே படையாக மலருலகில் தொழும்பாயர்க்கு அளித்தால் உன் சுடர்ச் சோதி மறையாதே
பஹவோ ந்ருப கல்யாண குண புத்ரச்ய சந்தி தே-
வ்யசநேஷூ மனுஷ்யாணாம் ப்ருசம் பவதி துக்கித
சோகம் பரார்த்த சோகம் -சம்ஜாத பாஷ்ப -வாலிக்காக பெருமாள் கண்ணீர் விட
விமான பபூவ -மனமும் விகாரம் அடைய
ராம கிருஷ்ணாதி அவதார குண சேஷ்டிதங்களில் நீர்ப்பண்டமாய் உருகும் ஆழ்வார்கள் ஆச்சார்யர்கள் –சத்ய மேதா -சத்யமான மேதையை யுடையவன் –
கழகம் ஏறேல் நம்பீ-பட்டர் -சமஸ்த கல்யாண குணாத்மகனாய் -சர்வ நியந்தாவாய் இருக்கிற சர்வேஸ்வரன்
நாலிடைப் பெண்கள் இருந்த விடத்தே புக்க அல்லது நிற்க மாட்டாதே செல்லாமை விளைய
அவர்கள் நீ இங்கே புகுராதே கொள் என்ன
விலங்கிட்டாப் போலே பேரவும் திரியவும் மாட்டாதே தடுமாறி நிற்கிறான் என்கிற சௌசீல்யம்
தங்களையும் இவர்களையும் ஒழிய ஆரறிந்து கொண்டாட
வ்யாசாதிகள் எழுதி இட்டு வைத்துப் போனார்களோ -என்று அருளிச் செய்வர்
நம்பிள்ளை –சர்வ நியந்தாவானவன் சிலருக்கு நியமிக்கலாம் படி எளியன் ஆனான் என்றால் இது மெய் என்று கைக் கொள்ளுவாரைக் கிடையாது இ றே
சாஸ்திரங்கள் எல்லாம் ஈசேசிதவ்ய விபாகம் பண்ணி ஒருங்க விடா நிற்க அத்தலை இத்தலையாக செல்லுகிறது இ றே இது
விகர்த்தா-திரு நாமம் இத்தையே சொல்லும்

—————————————————————————————————————————————–

10-பிராட்டி விஷயம் -அவதாரிகை –
உபாய பூதை/விபூத்வம் /ஜகத் காரணத்வம் /
பண்டை நாளாலே நின் திருவருளும் பங்கயத்தாள் திருவருளும் கொண்டு -சேம நிதி மிதுனத்தின் கடாஷங்கள்-தைவதம் தம்பதீ ந –
பட்டர் –ச்ரியம் த்வத்தோபி உச்சைர் வயமிஹ பணாம–என்றும்
தவ ஸ்பர்சா தீசம் ஸ்ப்ருசதி கமலே மங்கள பதம் –
தேசிகன் ஸ்ரீ – கோதா ஸ்துதியில் –வாசாலயந்தி வ ஸூ தே ரசிகாஸ் த்ரி லோகீம் ந்யூ நாதி கத்வசமதா விஷயைர் விவாதை
மூ வகையான வாதங்கள் மாலை மாற்றும் பொழுது எம்பெருமானை உயர்த்தியும் பிராட்டியை உயர்த்தியும் இருவரையும் சமானமாகவும் பேசி –சபத்நீ தஸ்ய சாம்ராஜ்யம் சர்வதா ஸூ ப்ரதிஷ்டிதம் –திரு உடைய தேவரே தேவராவார்
யாதவாப்யுதயம் –ஸ்ருங்கார லீலோபம விச்வக்ருத்யம் -மிதுனம் இட்டு ஸ்லோகம் -ஜன்ம ச்தேன பிரளய ரசனை பரம புருஷனுக்கே
வினித விவித  பூத வ்ராத ரஷைக தீஷை –
ரகஸ்ய த்ரய சாரம்-ப்ரஹ்ம அனுபவ அதிகாரம் –
சத்ர சமாராதிகள் போலே -ஜகத் காரணத்வ மோஷ ப்ரத்வ லஷ்மி சமேத -முடிவில் வைத்து அருளினார்
ஆதி முனி வாகன போகத்தில் –இக்காரணத்வமும் மோஷ பிரதத்வமும் சர்வ லோக சரண்யனுக்கே விசேஷ சிஹ்னங்கள்

—————————————————————————————————————————————–

11-உபாயத்வம் –

இருளும் ஒளியும் ஒரே இடத்தில் இருக்க மாட்டாது போலே புருஷகாரத்வமும் உபாயத்வமும் ஒரே வ்யக்தியிலே சேர்ந்து இருக்க மாட்டாதே
கொடுப்பித்தல் -புருஷகாரத்வம் -தானே கொடுத்தல் உபாயத்வம்
தேசிகன் ரகஸ்ய ரத்னா வளியில் -ஸ்ரீ மானான நாராயணன் ஒருவனுமே சர்வ ஜீவர்களுக்கும் தஞ்சம்
சர்வ ஸ்வாமிநியாய் -சர்வேஸ்வரனுக்கு சேஷமாய் -சஹதர்ம சாரிணியான பெரிய பிராட்டியார்
இத்தலையில் வாத்சல்யாதிசயத்தாலும் அத்தலையில் வாலப்ப்யாதிசயத்தாலும் புருஷகாரமாகக் கொண்டு இஜ் ஜீவர்களுக்குத் தஞ்சம் ஆகிறாள்
நிருபாதிக ஸ்வாமி தனது உடைமையை அடியவர்களுக்கு அளிப்பது போலே –பொன்னுலகு ஆளீரோ-புவனி முழுது ஆளீரோ –
திருநாட்டை அடியார் இட்ட வழக்காக்கி வைக்கிறான்
ஆச்சார்யர்கள் கட்டளையை எதிர்பார்த்தே அளிக்கின்றான் –தேசிகா தேச காங்ஷி சந்தத்தே –
அத்தானம் கொடுப்பது தன் தகவு என்னும் சரண் கொடுத்தே -இராமானுசர் மூலம் பெறுவதே சிறக்கும்
ஆயிரத்துள் இப்பத்தால் வேரி மாறாத பூ மேல் இருப்பாள் வினை தீர்க்குமே –
ஆயிரத்துள் இப்பத்தும் அரு வினை நீறு செய்யுமே
இவை பத்தும் கெடலில் வீடு செய்யும் கிளர்வார்க்கே
இப்பத்தும் வானின் மீது ஏற்றி அருள் செய்து
இப்பத்தும் மேலை வைகுந்தத்து இருத்தும்
எம்பெருமான் திரு உள்ளத்தில் சீற்றத்தை மாற்றி பிரசாதத்தை உண்டு பண்ணும் முகத்தாலே சாதனங்கள் என்றவாறு
பலன் அளிப்பவன் எம்பெருமான் ஒருவனே –
நிக்ரஹ உன்முகனாய் இருக்கும் காலத்தில் நிக்ரஹ இச்சையைத் தவிரப் பார்ப்பதும்
அனுக்ரஹ உன்முகனாய் இருக்கும் காலத்தில் அவன் அனுக்ரஹத்தை பெருகச் செய்வதும்
பிராட்டியின் புருஷகாரத்வ செயல்கள் என்றதாயிற்று –

—————————————————————————————————————————————–

12-ஜகத் காரணத்வம்
நிமித்த /உபாதான /சஹ காரி காரணத்வம்
சதேவ இதம் அக்ரே ஏகமேவ ஆஸீத் -உபாதானத்வத்தைச் சொல்லி
அத்விதீயம் -நிமித்தத்வமும் ப்ரஹ்மத்துக்கே சொல்லிற்று ஸ்ருதியும் –
தனது சங்கல்பம் மாதரத்தையே சஹகாரியாகக் கொண்டவன்
ஆண் மயில் ஸ்தானத்தில் எம்பெருமானையும் பெண் மயிலின் ஸ்தானத்தில் பிராட்டியையும் வைத்து
பெண் மயிலின் முகப்பே ஆண் மயில் சிறகை விரித்துக் கூத்தாடுமா போலே சிருஷ்டி கிரீடை செய்து அருளுகிறான் –
இத்தால் சிருஷ்டி பகவானுக்கே உள்ளது என்று நிரூபித்த தாயிற்று

—————————————————————————————————————————————–

13–விபுத்வம் –
போக்தா -போக்யம் -ப்ரேரிதா
பிரகிருதி மகான் போன்றவை போக்ய கோஷ்டி
பக்தர் முக்தர் நித்யர் போக்த்ரு கோஷ்டி
நியாமகன் ஒருவனே -உள்ளே புகுந்து நியமிக்கிறான்
வ்யாக்தி குணத்தாலே அன்று ஸ்வரூபத்தாலே
ஹிருதய பிரதேசத்தில் நின்றும் உத்க்ரமித்து போவது வருவது -ஆத்மா அணுவாக இருந்தும் சரீரம் எங்கும் ஒக்க சுக துக்கங்களை புஜிக்கும்
ஜ்ஞானம் எங்கும் ஒக்க வியாபித்து இருக்கும் படி
ஜீவ கோடியில் சேர்ந்த ஸ்ரீ மகா லஷ்மி அணு ஸ்வரூபத்வம்
லஷ்ம்யா ஜீவ அந்தர்பாவ பஷே து ந தோஷ –
ஸ்ரீ விஷ்ணு புராணம் -ப்ருகு பத்னி க்யாதி -தாதா விதாதா -என்னும் இரண்டு தேவதைகளையும்
நாராயண பத்னியான ஸ்ரீ மகா லஷ்மியையும் பெற்றதாக மைத்ரேயருக்கு ஸ்ரீ பராசரர் அருளி –
நித்ய அநபாயி நீம்
விக்ரஹ வ்யாப்தியே உண்டு ஸ்வரூப வ்யாப்தி இல்லை என்றதாயிற்று –

—————————————————————————————————————————————–

14- ஜாதியின விநாச நிரூபணம் –
வர்ணாஸ்ரமங்கள் சரக்கறுத்து பகவத் சம்பந்தமே உத்கர்ஷ ஹேது
இழி குலத்தவர்கள் ஏலும் எம்மடியார்கள் ஆகில் தொழுமினீர் கொடுமின் கொண்மின் என்று நின்னொடும் ஒக்க வழி பட அருளினாய்
குங்குமம் சுமந்த கழுதை போலே நான்கு வேதங்களை ஓதி எம்பெருமானை அறியாதவர்கள்
வெறும் தர்க்க பாண்டித்தியம் செருப்புக்குத்த கற்ற கல்வி போலே
ஷத்ரியனான விச்வாமித்ரனும் ப்ரஹ்ம ரிஷி யானான் இ றே
தான் பண்ணின தபோ விசேஷம் அடியாக வசிஷ்ட வாக்யத்தாலே ஷத்ரித்யத்வம் பின்னாட்டாத படி ப்ரஹ்ம ரிஷி யாய்விட்டான் இ றே
பெரிய உடையாருக்குப் பெருமாள் ப்ரஹ்மமேத சம்ஸ்காரம் பண்ணி யருளினார்
மாறனேர் நம்பிக்கு பெரிய நம்பி சரமக்ருத்யம் அனுஷ்டித்தவாறும்
தர்ம புத்ரர் அசரீரி வாக்யத்தையும் ஞானாதிக்யத்தையும் கொண்டு ஸ்ரீ விதுரரை ப்ரஹ்ம மேதத்தாலே சம்ச்கரித்தார்
தூஷ்ணீம் தஹனம் பண்ணவா என்ற சங்கை -யதியைப் போலே என்ற அசரீரி வசனத்தால் சங்கை தெளிந்தார்
வரம்பு அறுத்தார் ராமானுஜர் முலை கடுப்பாலே பீச்சும் தாய் பசு போலே
தாய்க்கும் மகனுக்கும் தம்பிக்கும் இவருக்கும் இவர் அடி பணிந்தாருக்கும்
ச்வபசோபி மஹீபால விஷ்ணு பக்தோ த்விஜாதிக விஷ்ணு பக்தி விஹீ நஸ்து யதிச்ச ச்வபசா தம –
ஆசி நோதி ஹி சாஸ்தரார்த்தான் ஆசாரே ஸ்தாபயத்யபி ஸ்வய மாசரதே யஸ்மாத் தச்மாதாசார்யா உச்யதே
நாபிதனுக்கும் வண்ணானுக்கும் மரியாதைகள் ஏற்படுத்தி -வாகனத்தின் மீது ஏறி -ராமானுஜர்
வர்ணாஸ்ரம தர்ம நியதிகள் அழியக் கூடாது என்பதில் உறுதி உண்டே
மிலேச்சனும் பக்தன் ஆனால் –பாவனா தீர்த்த பிரசாதனாம்
தத் பாதாம்பு அதுலம் தீர்த்தம் தஸ்ய உச்சிஷ்டம் ஸூ பாவனம் –

—————————————————————————————————————————————–

15-விஹித விஷய நிவ்ருத்தி தன்னேற்றம் –
பூத பாவோத் பவகரோ விசர்க்க கர்ம சம்ஜ்ஞித
ஸ்திரீ புருஷ சம்யோகம் என்பதே இங்கே கர்மம் -விடத்தக்கது
விஹித விஷய போகம் பிராப்தமே யானாலும் விசிஷ்ட அதிகாரிக்கு ஜூ குப்ஸ நீயமே

—————————————————————————————————————————————–

16- கைவல்ய விஷயம் –
போக அபவர்க்க தத் உபாயகதீ –ஸ்தோத்ர ரத்னம் -4-
கைவல்யம் -அபவர்க்கம் -பெரியவாச்சான்பிள்ளை
போகம் -தேசிகர்
கீதா பாஷ்யத்தில் -பஞ்சாக்னி வித்யா நிஷ்டனான கைவல்யனுக்கு ப்ரஹ்மாத்மக பிரகிருதி வியுக்த ஆத்ம ஸ்வ ரூப உபாசன த்தையும்
பிரகிருதி வியுக்த ஆத்ம ஸ்வரூபாவாப்தி ரூப பலத்தையும் அர்ச்சிராதி கதியினால் பரமபத பிராப்தியையும் புநரா வ்ருத்தி இல்லாமையையும் அருளிச் செய்துள்ளார் –
ஸ்ரீ பாஷ்யத்தில் கேவலனுக்கு ப்ரஹ்ம ப்ராப்தி யாகிற பலன் சொல்லி
இந்த பரஸ்பர விரோதம் போக்க ஆத்ம அனுபவத்தை அவாந்தர பலனாகவும் ப்ரஹ்ம அனுபவத்தை பிரதம பலனாகவும் கல்பித்து தேசிகர் அருளுகிறார்
முக்தா நாம் பரமா கதி -சஹச்ர நாமம் –
ஆத்ம அனுபவமே பிரதான பலன்
மகா பாரத மோஷ தர்மத்தில் ஆத்ம ப்ராப்தி காமனையும் ஸ்வய நதர்மா -ப்ரஹ்ம அனுபவத்தை இழந்தவன் என்கிறது

—————————————————————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ .P.B.A.ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் —

ஆழ்வார்கள் அருளிய தமிழ் அமுதம் –

May 30, 2015

முனைவன் மூவுலகாளி அப்பன் திருவருள் மூழ்கினளே -திருவாய்மொழி -8-9-5-
ஈறில் இன்பத்து இரு வெள்ளம் யான் மூழ்கினன் -திருவாய்மொழி -2-6-8-
தொண்டர்க்கு அமுது உண்ண சொல்மாலைகள் சொன்னேன்
என்அமுதினைக் கண்ட கண்கள் மற்று ஒன்றினைக் காணாவே
யானே தவம் செய்தேன் ஏழ் பிறப்பும் எப்பொழுதும்
யானே தவம் உடையேன் எம்பெருமான் -யானே
இரும் தமிழ் நன் மாலை இணை அடிக்கே சொன்னேன்
பெரும் தமிழன் நல்லேன் பெரிது -இரண்டாம் திருவந்தாதி -74

பெருகு மத வேழம் மாப்பிடிக்கு முன்னின்று
இரு கண் இள மூங்கில் வாங்கி -அருகு இருந்த
தேன் கலந்து நீட்டும் திரு வேங்கடம் கண்டீர்
வான் கலந்த வண்ணன் வரை -இரண்டாம் திருவந்தாதி -25
திருமலையின் மண் வாசனையால் கைங்கர்யத்துக்கு கை நீட்டுமே-காதல் பண்பும் அத்தாலே
மூங்கில் குருத்தும் தேனும் போலே மேகமு அவன் திரு நிறமும் கலந்த படி
மேகம் எனக் களிறு அவன் திருமலையில் நிற்பதால் -சஜாதீய யானையும் வருமே
இன்கவி பாடும் பரம கவிகளால்
தன்கவி தன்னைப் பாடுவியாது -இன்று
நன்கு வந்து என்னுடனாக்கி என்னால் தன்னை
வன்கவி பாடும் வைகுந்த நாதனே -திருவாய் மொழி -7-9-6-
த்வயம் மந்த்ரம் உபதேசிக்கும் ஆசார்யன் களிறு
பிடி சிஷ்யன்
பேத அபேத கடக சுருதி -கலந்து ஒருங்க விட்டார்
குணத்தை இட்டாயிற்று ஆழ்வாரை வணக்கு வித்தது -உயர் நலம் -தொழுது எழு

என்றைக்கும் என்னை உய்யக் கொண்டு போகிய
அன்றைக்கன்று என்னை தன்னாக்கி என்னால் தன்னை
இன்தமிழ் பாடிய ஈசனை ஆதியாய்
நின்ற என் சோதியை என் சொல்லி நிற்பனோ- திருவாய்மொழி -7-9-1-

அருள் கொண்டு ஆயிரம் இன் தமிழ் பாடினான்

பிடாத்தை விழ விட்டு தன வடிவு அழகைக் காட்டினான்
திருத்திரை எடுத்தால் கூப்பிடுமா போலே கூப்பிட்டார்
அது கவியாய் தலைக் கட்டிற்று –
ஆழ்வாருக்கு முன்னே மூடி முக்காடிட்டு வந்து நின்றான்
ஆழ்வார் கை எடுத்தும் முக்காட்டை முன் விளக்கி தன எழிலார் சோதியை வெளிப் படுத்தினான்
அந்த எழில் வெள்ளத்தில் அகப்பட்ட ஆழ்வார் மகிழ்ச்சி பெருக்காலே கோஷம் இட்டார்
தம்மை கருவியாக கொண்டு இன் தமிழ் அவனே பாடினான் என்கிறார் ஆழ்வார்
ஆ முதல்வன் இவன் என்று தன தேற்றி என்
நாமுதல் வந்து புகுந்து நல்லின்கவி
தூ முதல் பத்தர்க்குத் தான் தன்னைச் சொன்ன என்
வாய் முதல் அப்பனை என்று மறப்பனோ -திருவாய்மொழி -7-9-3-
என் வாய் முதல் அப்பன் -எனக்கு வாய்த்த –கவி பாட முதல் காரணன் -அவனே பின்னானார் வணங்கும் சோதி -அர்ச்சாவதாரம்
நண்ணா அசுரர் நலிவு எய்த நல்ல அமரர் பொலிவு எய்த
எண்ணா தன்கள் எண்ணும் நன்முனிவர் இன்பம் தலை சிறப்பப்
பண்ணார் பாடல் இன்கவிகள் யானாய்த் தன்னை தான் பாடி
தென்னா என்னும் என் அம்மான் திருமால் இரும் சோலையானே-திருவாய்மொழி -10-7-5-

இந்திரற்கும் பிரமற்கும் முதல்வன் தன்னை
இரு நிலம் கால் தீ நீர் விண் பூதம் ஐந்தாய்
செந்திறத்த தமிழ் ஓசை வடசொல்லாகி
திசை நான்குமாய் திங்கள் –திரு நெடும் தாண்டகம் -4
தமிழ் ஓசை -திருவாய்மொழி வடசொல் -ஸ்ரீ ராமாயணம்
அளப்பரிய ஆரமுது -அரங்கமேய அந்தணன் –
குலசேகரர் -அவனே என் கண்ணனை -குன்றம் ஏந்தி ஆவினை அன்று உய்யக் கொண்ட ஆயர் ஏறு -அமரர்கள் தலைவன் அம தமிழ் இன்ப பா –அவ்வட மொழி -அரங்கத்து அரவணையில் பள்ளி கொள்ளும் கோ –
இன்ப மாரியில் ஆராய்ச்சி வீட்டின்ப இன்பப் பாக்களில் த்ரவ்ய பாஷா நிரூபண சமம் -நாயனார்
நமல்ல்வார் -இன்ப மாரி
திருவாய்மொழி -இன்பப் பா
அர்ச்சா திருமேனி -வீட்டின்பம் –
எங்கள் கண் முகப்பில் –தமது சொல் வலத்தால் ஒவ் ஒருவராக பூசிக்கும் படி –
ஒருநாள் எழுந்து இருந்து வீற்று இருக்க வேண்டும் –
சொல் வளம் -பாமர மக்கள் இடையர்கள் வார்த்தை -பால் உண்பீர் பழம் உண்பீர் –
உனக்கு பணி செய்து இருக்கும் —புனத்தினை கிள்ளி புது அவி காட்டி
உன் பொன்னடி வாழ்க என்று இனக் குறவர் புதியது உண்ணும் –திரு மால் இரும் சோலை எந்தாய் -பெரியாழ்வார் திருமொழி -5-3-3-
ஆழ்வார் உன் சேவடி செவ்வி திருக்காப்பு -அருளுவது போலே இனக்குறவர்

வைரம் பெட்டியில் பொருத்திக் காட்டுவது போலே திவ்ய தேசத்துடன் தன்னை காட்டி அருளுகிறான்
கோயில் கொண்டான் தன திருக் கடித்தானத்தை
கோயில் கொண்டான் அதனோடும் என் நெஞ்சகம் -திருவாய் மொழி -8-6-5-
திருவருள் கமுகு -திருப் புலியூர் கமுகு மிதுனம் கடாஷம் அருளாலே வளர்ந்த திரு அருள் கமுகு
புள்ளுப் பிள்ளைக்கு இறை தேடும் புள்ளம் பூதம் குடி -பெரிய திருமொழி -5-1-2-
மென்மலர் மேல் களியா வண்டு கள்ளுண்ண காமர் தென்றல் அலர் தூற்ற
நளிர்வாய் முல்லை முறுவலிக்கும் நறையூர் நின்ற நம்பியே -பெரிய திருமொழி -6-7-4-
வண்டு கள்ளு குடிக்க -தென்றல் அலர் தூற்ற -முல்லை முறுவலிக்கும் –இது என்ன உலகு இயற்க்கை
பள்ளிக் கமலத்து இடைப்பட்ட பகுவாய் அலவன் முகம் நோக்கி
நள்ளி யூடும் வயல் சூழ்ந்த நறையூர் நின்ற நம்பியே -பெரிய திருமொழி -6-7-6-
பெண் அரசு நாடாயிற்றே -பட்டர்
பாலேய் தமிழர் இசைகாரர் பத்தர் பரவும் ஆயிரம் -திருவாய்மொழி –
பண் உள்ளாய் கவி தன உள்ளாய் பக்தியின் உள்ளாய் பரம் ஈசனே வந்து
என் கண் உள்ளாய் நெஞ்சு உள்ளாய் சொல் உள்ளாய் என்று சொல்லாயே – திருவாய்மொழி -7-1-6-
ஆழ்வார்கள் அருளிச் செயல் தமிழ் பெருக்காறு
இலக்கிய கலைஞர்
இன்னிசை கலைஞர்
பக்தி பெரும் செல்வர் -அனைவருக்கும் பொதுவான அமுத ஆறு –

——————————————————————————————————————————————————————-

பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

திருவாய்மொழியும் த்வயமும்-

May 30, 2015

திருவாய்மொழியும் த்வயமும்-

உயர்வற உயர்நலம் -ப்ரஹ்ம சப்த  விவரணம்

வண் புகழ் நாரணன் -என்று    அந்த அந்த ப்ரஹ்மம் நாரணன் என்கிறது இரண்டாம் பத்தால்

அவனே ஸ்ரீ மான் என்கிறது மூன்றாம் பத்தாலே

இதை அடி ஒட்டி ஸ்ரீ பாஷ்ய காரர் ப்ரஹ்மணி   ஸ்ரீநிவாசே

இதையே பத்துடை அடியவர்களுக்கு     எளியவன் -சௌலப்யம்

பிறர்களுக்கு அரிய வித்தகன் -பரத்வம்

இவை இரண்டுக்கும் அடி –

மலர்மகள் விரும்பும் நமரும்  பெற லடிகள் -ஸ்ரீ ய பதித்வமே அடி

என் அமுதம் சுவையன் திருவின்  மணாளன்  -ரஸ்ய ராசிக்யங்கள்  ஏற்பட அடியும் ஸ்ரீ ய பதித்வமே.

மேலும்

மலராள் மைந்தன் -1-5-9-

திருமகளார் தனிக் கேள்வன் -1-6-9-

பூமகளார் தனிக் கேள்வன் -1-9-3-

திருவின் மணாளன் என்னுடைச் சூழல் உளானே -1-9-1-

மலராள் மணவாளனை -1-10-4-

இப்படி ஸ்ரீ ய பதித்வமே அடி என்று காட்டி அருளுகிறார் எங்கும்

——————————————————————————————————————————————————————–

ஆழ்வார்கள் அருளிய தமிழ் அமுதம் -ஸ்ரீ   அரெங்கராஜன் சுவாமிகள்

முனைவன்  மூவுலகாளி அப்பன் திருவருள் மூழ்கினளே -8-9-5-

ஈறில்   இன்பத்து இருவெள்ளம் நான்  மூழ்கினன் -2-6-8-

ஆழ்வார்கள் எழில் நலத்திலும் அருள் பெருக்கிலும் மூழ்கினவர்கள்

நுகர்ச்சி உள் அடங்காது பொசிந்து வந்த சொல் மாலைகள்

தொண்டர்க்கு அமுது உண்ண சொல் மாலைகள்  சொன்னேன் –

என்     அமுதினைக் கண்ட கண்கள் மற்று ஒன்றினைக் காணாவே –

யானே தவம் செய்தேன் ஏழ் பிறப்பும் எப்பொழுதும்

யானே  தவமுடையேன் எம்பெருமான் -யானே

இரும்தமிழ் நன்மாலை இணை யடிக்கே சொன்னேன்

பெரும்  தமிழன் நல்லேன் பெரிது -இரண்டாம் திருவந்தாதி -74

பெருகு மத வேழம் மாப்பிடிக்கு முன்னின்று

இரு கண் இள மூங்கில் வாங்கி -அருகிருந்த

தேன் கலந்தூட்டும்   திருவேம்கடம் கண்டீர்

வான் கலந்த வண்ணன் வரை -75

மூங்கில்  குருத்தும் தேனும் கலந்தது போலே ஆயிற்று

மேகமும் அவன் திருநிறமும் கலந்து இருக்கிற படி –

மேகம் என களிறு சேரும்     திருமால் –

இன்கவி பாடும் பரமகவிகளால்

தன்கவி   தன்னை  பாடு  வியாது -இன்று

நன்கு வந்து என்னுடனாக்கி என்னால் தன்னை

வன்கவி பாடும் என்   வைகுந்த நாதனே -7-9-6-

இறை அருள் நுகர்ச்சியை எழுப்பியது அவன்    இறைவன் பண்புகளே

உயர் நலம் -கொண்டே மதி நலம்  அருளினான்

குணத்தை இட்டே இவரை எழுவித்துக் கொண்டது -இவர் இழிந்த துறை

என்றைக்கும் என்னை உய்யக் கொண்டு போகிய

அன்றைக்கு என்று என்னை   தன்னாக்கி என்னால் தன்னை

இன்தமிழ் பாடிய ஈசனை   ஆதியாய்

நின்ற என் சோதியை என் சொல்லி நான்  நிற்பானோ -7-9-1-

அருள் கொண்டு ஆயிரம் இன்தமிழ் பாடினான்

பிடாத்தை விழவிட்டு தனது வடிவு அழகை காட்டினான்

திருத்திரை எடுத்தால் கூப்பிடுமா போலே கூப்பிட்டேன்

அது கவியாய் தலைக் கட்டிற்று

வடிவு அழகை காட்டி யாயிற்று கவிக்கு உள்ளுறை கொடுத்தது

ஆமுதல்வன் இவன் என்று தன்  தேற்றி

என் நா முதல் வந்து புகுந்து நல்லின்கவி

தூமுதல்   பத்தர்க்குத் தான் தன்னைச் சொன்ன என்

வாய் முதல் அப்பனை என்று மறப்பனோ -7-9-3-

பின்னானார் வணங்கும் சோதியே பாடுவித்தான் என்கிறார்      அடுத்து

நண்ணா      அசுரர்   நலிவு எய்த நல்ல அமரர் பொலிவு எய்த

எண்ணாதனகள்      எண்ணும் நன் முனிவர் இன்பம் தலை சிறப்பப்

பண்ணார் பாடல்  கவிகள் யானாய் தன்னை தான் பாடி

தென்னா என்னும் என் அம்மான் திருமால் இரும் சோலை யானே -10-7-5-

இந்த்ரர்க்கும் பிரமற்கும் முதல்வன் -தன்னை -வாழலாம் மட நெஞ்சமே -திரு நெடும் தாண்டகம்    -4-

செந்நிறத்த தமிழ் ஓசை பண்  சுமந்த பாடல் -திருவாய்மொழி

வடசொல் ஸ்ரீ ராமா யணம்

அந்தரத்தில்     தேவர்க்கும் அறியலாக அந்தணன் -அளப்பரிய ஆரமுது அரங்க மேய அந்தணன்
-அவனே அந்தமிழ் இன்பப்பா -குலசேகர பெருமாள் -அரங்கத்து அரவிணையில்

பள்ளி கொள்ளும் கோவே இந்த இன்பப்பா என்று காட்டி அருளுகிறார்

இன்ப மாரியில்  ஆராய்ச்சி வீட்டின்ப இன்பப்பாக்களில் த்ரவ்ய பாஷா நிரூபண   சமம்

இன்ப மாரி -நம் ஆழ்வார்

இன்பப்பா -திருவாய்மொழி

– வீட்டின்பம் -அர்ச்சா திருமேனி

எங்கள் கண்     முகப்பே –இங்கு அம் கண் மா ஞாலத்து இதனுள்ளும் ஒரு நாள் இருந்திடாய்

வீற்றிடம் கொண்டே –

அரையர் வாயில் சாளக்ராமம் கொண்ட விருத்தாந்தம்

வங்கி புரத்து நம்பி இடையர் கோஷ்டியில் இருந்து ஜய விஷயீ பவ

அவர்களோ பால் உண்பீர் பழம் உண்பீர்

புது அவி காட்டி உன் பொன்னடி வாழ்க என்று இனக் குறவர் -பெரியாழ்வார் திருமொழி -5-3-3-

கோயில் கொண்டான் திருக் கடித்தானத்தை –அதனோடும் என்னெஞ்சகம் கோயில் கொள் –

திருவாய்மொழி -8-6-5-

திருவருள் கமுகு -நீராலே வளருகை அன்றி மிதுன கடாஷத்தாலே வளரும் கமுகு

புள்ளுப் பிள்ளைக்கு இறை தேடும்  புள்ளம் பூதம் குடி தானே -பெரிய திருமொழி -5-1-2-

ஆலவாய் உடையான் தமிழன் -பட்டர்    அருளி  ய தை -நினைவு படுத்துக

பாலேய்  தமிழர் இசை காரர் பத்தர் பரவும் ஆயிரம்

பண்ணுள்ளாய் கவி தன்னுள்ளாய்     பக்தியின் உள்ளாய் பரம்     ஈசனே வந்து என்

கண்ணுளாய்  நெஞ்சுளாய்          சொல்லு உளாய் என்று சொல்லாயே -7-1-6-

—————————————————————————————————————————————————————–

பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ வேதாந்த தேசிகர் அருளிச் செய்த -ஸ்ரீ சம்ப்ரதாய பரிசுத்தி –அஞ்சலி வைபவம் —

May 30, 2015

ஸ்ரீ மான் வேங்கட நாதர்யா கவிதார்கிக கேசரீ
வேதாந்தா சார்ய மே சந்நிதத்தாம் சதா ஹ்ருதி —

சீரொன்று தூப்பில் திரு வேங்கடமுடையான்
பாரொன்றச்சொன்ன பழ மொழியுள் –ஓரொன்று
தானே யமையாதோ தாரணியில் வாழ்வார்க்கு
வானேறப் போமளவும் வாழ்வு —

———————————————————————————————————————————————————————————————————————-

ஸ்ரீமத்  சம்ப்ரதாய பரிசுத்தி-

தம்பர  மென்றிரங்கித் தளரா மனந்தந்தருளால்
உம்பர் தோலும் திரு மாலுகந்தேற்குமுபாய மென்றால்
நம் பிறவித் துயர் மாற்றிய ஞானப் பெரும் தகவோர்
சம்பிரதாய மோந்ற்றிச் சதிர்க்குந்நிலை சார்ந்தனமே —

சதாசார்ய சம்பிரதாயத்தாலே அத்யாத்ம சாஸ்த்ரார்த்தவிசேஷ நிர்ணயம் பண்ண வேணும் –
என்னுமிடம் உப நிஷத்துக்களிலும் உப ப்ரும்ஹண்ங்களிலும் பிரசித்தம் —

சாஸ்த்ரார்த்த நிரூபணம் பண்ணும் இடத்தில் சக்தி இல்லாதவர்களுக்கு -உபதேசாத் ஹரீம் புத்த்வா –என்கிறபடியே சாஸ்த்ரஜ்ஞ சம்ப்ரதார்ய மாத்ரமும் அபேஷிதார்த்த நிர்ணயகமாம் —

சத்சம்ப்ரதாய ரஹிதமான சாஸ்த்ரத்தால்அர்த்த நிர்ணயம் துஷ்கரம் –ஸூ கரம் தானாகிலும் உபயுக்தமாகாது –

அத்யந்தாதீந்த்ரிய விஷயத்தில் சாஸ்திர மூலம் அல்லாத சம்ப்ரதாயமும் சம்ப்ரதிபன்ன சாஸ்திர விருத்தமான
சம்ப்ரதாயமும் பரம விப்ரலம்ப சம்பாவனை யுண்டாகையால் பாஹ்ய துல்யமாகையால் அவிஸ்வச நீயம்-

பரஸ்பர விருத்தமாக சதஸ்யமும் ரஹஸ்யமும் என்று சொல்லுமாவை இரண்டும் ஸ்வ வாக்யத்தாலே பாதிதங்கள் ஆம் –

திரளிலே சொல்லுமவை சதஸ்யம்-சில அர்த்தங்களை ஏகாந்தத்தில் சொல்ல விதிக்கையாலே அவற்றை ரஹஸ்யங்கள் என்கிறது –

பிரஜாபதி வாக்யம் முற்பட அஸூரேந்த்ரனான விரோசணனை மோஹிப்பைக்கைக்காகச் சொல்லப்பட்டு –
பிற்பட தேவந்த்ரனை பர்வக்ரமத்தாலே பரிசுத்தாத்ம விஷயத்திலே பிரதிஷ்ட்டித புத்தி யாக்குகிறது-

உபகோசல -வைச்வா நராதி வித்யைகளிலே முற்பட வேத்யோபா தேயங்களைப் பற்ற ஏகதேச உபதேசம் க்ரமேண சேஷ பூரணார்த்தம் —

சர்வேஸ்வரன் தானும் தான் உபதேசித்த ஜ்ஞானத்தைப் பின்னையும் –
வித்த்தி பிராணிபாதேன பரிப்ரச்நேன சேவயா –ஸ்ரீ  கீதை -4-34-என்று பல ஜ்ஞானிகள் பக்கலிலே கேட்க விதித்தான் இ றே-

இப்படிகளாலே சம்ப்ரதிபன்ன சாஸ்திர விரோதம் இன்றிக்கே சாஸ்திர மூல சம்ப்ரதிபத்தி யுண்டான சம்ப்ரதாயம் உப ஜீவ்யம் —

இப்படிப் பட்ட சத்சம்ப்ரதாயத்தில் தோற்றும் விரோதம் –தத்துவ விஷயமாகில் -தாத்பர்ய பேதத்தால் விரோத சாந்தி யுண்டாம்
அனுஷ்டான விஷயமாகில் அவ்வோ அதிகாரிக்கு அனுகுணமாக வ்யவச்த்திதாவ்ய வஸ்த்தித்த பிரக்ரியையாலே விகல்பமாம் —

நியாச உபாசனங்களிலே அதிகாரி பேதத்தையிட்டு வ்யவஸ்த்தித விகல்பம் என்பார்க்கும் -என்று பார்க்கிலும் —
பல சாம்யத்தையிட்டு துல்ய விகல்பம் என்பார்க்கும் விரோதம் இல்லை -என்று பார்க்கிலும் —

சர்வலோக ஹிதமான இந்த அத்யாத்ம சாஸ்திர சம்ப்ரதாயத்திற்கு பிரதம ப்ரவர்த்தகன் சர்வேஸ்வரன் –
மற்றுள்ளார் எல்லாரும் அவன் தானே யாதல் –சேதனாந்தர முகத்தாலே யாதல் -மயர்வற மதி நலம் அருள -ப்ரவர்த்திப்பிக்கிறவர்கள்-

இப்படி அநஸூயாதி குண யுக்தராய் -பரணீ பத்ய அபிவாதய ச -ஸ்ரீ விஷ்ணு புராணம் -இத்யாதிகளின் படியே
சம்யகுப சந்னரான அதிகாரிகளைப் பற்ற யதார்த்த தர்சிகளாய்-யதாத்ருஷ்டார்த்த வாதிகளான -வியாச போதாய நாதிகளாலே
யதாதிகாரம் ப்ரவ்ருத்த -ப்ரவர்த்தித –மான வேதாந்த சம்பிரதாயத்திற்கு இந்த யுகாரம்பத்திலே
ப்ரஹ்ம நந்த்யாதிகளுக்குப் பின்பு நம்மாழ்வார் ப்ரவர்த்தகரானார் –

ப்ராப்யம் ஜ்ஞானம் ப்ராம்ஹணாத் ஷத்ரியாத் வா வைச்யாத் சூத்ராத் வாசபி நீசாத பீஷணம் –சாந்தி பர்வம் -332-88-இத்யாதி
பரமான பலத்தாலே -மிக்க வேதியர் வேதத்தின் உட்பொருள் நிற்கப்பாடி என்நெஞ்சுள் நிறுத்தினான் –என்கிறது உபபன்னம் —

வேதாந்தார்த்த வைசத்ய  ஹேதுவாகையாலே பாஷாந்தரமும் உபஜீவ்யம் -தர்ம வாத துலா தாராதி வ்ருத்தாந்தங்களையும் இங்கே அனுசந்திப்பது —

சூத்ரயோ நௌ அஹம் ஜாதோ நாதோ அந்யத் வக்தும் உத்சஹி –உத்யோக பர்வத -40-5-என்கிறது விஷய பேதத்தாலே பரிஹ்ருதம்

மதுரகவி முதலான சம்பிரதாய பரம்பரையாலும் ப்ராதுர்ப்பாவ விசேஷத்தாலும் நாத முனி களுக்கு ஆழ்வார் ஆசார்யரானார் —

இவரைப் ப்ரபன்ன சந்தான கூடஸ்த்ததையாலே ஆளவந்தார் -ஆத்யஸ்ய ந குலபதே –5- என்று அருளிச் செய்தார் –

நாத முனிகள் தம்முடைய திருப் பேரனாரான ஆளவந்தாருக்கு  தாம் உபதேசியாதே தம்முடைய சிஷ்ய பிரசிஷ்யர்களை –
ஆகாங்ஷை பிறந்த போது உபதேசியுங்கள் -என்ற ஆஜ்ஞாபித்தது குரு புத்ர  பௌத்ராதிகளும் வித்யா பிரதானத்திற்கு
ப்ரசஸ்த பாத்ரங்கள் என்றும் -ஜ்ஞான சந்ததியாலே முற்பட்டவர்களும் குருக்களாக ஆதரணீயர் என்றும்
ஆகாங்ஷை இன்றிக்கே இருக்கச் செய்தே சொன்னால் சிஷ்ய புத்தியில் அர்த்தம் ப்ரதிஷ்டிதம் ஆகாது என்றும் தெளிவித்த படி –

மணக்கால் நம்பி ஆளவந்தாருக்கு நெடுநாள் பச்சையிட்டு ஒரு விரகாலே ஆகாங்ஷை உண்டாக்கி உபதேசித்தது
ஆசார்ய குலத்திற்குத் தாமொரு கிஞ்சித்காரம் பண்ணுகையாலும் பரமாச்சார்ய நியோகத்தை கடுகத் தலைக் கட்டுகையில் உண்டான த்வரை யாலும்
சிரகால பரீஷாதிகள் வேண்டாதபடி -போதனம் ச முஹூ க்ரமாத் –என்கிற யுக தர்மாநு சாரத்தாலும் உபபன்னம் —

ஆளவந்தார் தாம் நாத முனிகளை முன்னிட்டு ஸ்தோத்ரம் பண்ணிற்றும் -சரணம் பக்கதுவும் -தம்முடைய ஆசார்யருக்கு இது
பிரியதமம் என்றும் -தமக்கு ஆசார்யவத்தை முதலான சம்பத்துக்களுக்கும் அடி நாத முனி வம்சத்தில் பிறவி என்றும் தோற்றுகைக்காகவும்
ஆசார்யர் விஷயத்தில் போலே ப்ராசார்ய விஷயத்திலும் க்ருதஜ்ஞதாதிகள் வேணும் என்கைக்காகவும் என்று அறியப்படும் –

ஆசார்ய பங்க்தியில் சிலரை கிரந்தன்களிலே வ்யபதேசித்து அவர்களையும்  மற்று உள்ளவர்களையும் அனுசந்திப்பார்கள் –

ஆளவந்தாருடைய நியோகத்தாலே ஸ்ரீ பாஷ்யகாரரை அங்கீ கரித்த பூரணரான பெரிய நம்பி இவரைத் தமக்கு
ஸ ப்ரஹ்ம சாரிகளான திருக் கோட்டியூர் நம்பி பக்கலிலே அர்த்த சிஷை பண்ணவும்
திருமலை யாண்டான் பக்கலிலே திருவாய் மொழி கேட்கவும்
ஆழ்வார் திருவரங்கப் பெருமாள் அரையர் பக்கலிலே நல்வார்த்தை கேட்கவும் நியோகித்ததும்
பஹூப்ய ச்ரோதவ்யம் பஹூதாச்ரோதவ்யம் ஜ்ஞான வ்ருத்தா மயா ராஜன் பஹவ பர்யுபாசிதா –சபா பர்வம் -37-12-இத்யாதிகளையும்
சுகாதி வ்ருத்தாந்தங்களையும் பார்த்து சிஷ்ய பூதரை பஹூ முகமாகத் திருத்த வேண்டும் என்கிற அபிசந்தியாலே உபபன்ன தமம் —

இப்படி ஆசார்ய அபிமத விஷயத்தில் ஆசார்ய அனுஜ்ஞையாலே அபேஷித ஜ்ஞாநோப ஜீவனம் பண்ணுமது
சாஸ்த்ரார்த்தம் என்னும் இடம் அந்திம தசாவதியாக அத்யந்தாவஹிதராய்க் கொண்டு
சதாசார அனுபாலனம் பண்ணின ஸ்ரீ பாஷ்ய காரருடைய அனுஷ்டானத்தாலே சித்தம் –

அத்யாத்ம விஷயத்தில் பிரதான அப்ரதான அம்சங்களை ஒருவருக்குப் பலராக உபதேசிக்க -வேதாந்தந்களிலே பல இடங்களிலே கண்டோம் –

ஒராசர்யர் பக்கலிலே க்ருத்சன உபதேசம் மைத்ரே யாதிகளுக்குப் போலே சிலருக்கு யுண்டாம் –
பிரதான ஸ்ருதத்தினுடைய பிரதிஷ்டார்த்தமாக பலருபதேசித்தால்
அல்பம் வா பஹூ வா யஸ்ய ஸ்ருதஸ்யோபகரோதி ய தம  குரும் வித்யாத் ஸ்ருத உபக்ரியயா தயா –என்கையாலே
அவர்கள் பக்கலிலும் ஆசார்ய பிரதிபத்தி பண்ண ப்ராப்தம் –

அவ்யவஹித மோஷ உபாய வ்யவசாயம் பிறப்பிக்கை பிரதானாசார்ய க்ருத்யம் —

இது கலங்காதபடி பண்ணுகையும் பரிகர பூர்த்தி யுண்டாக்குகையும் ஆசார்ய அபிமத சிஷகாந்தர க்ருத்யம்-
ஆசார்ய சம்பந்தத்தை யுண்டாக்கினவர்களும் பிரபன்ன முகங்களாலே பரம்பரையாக உபகரித்தவர்களும் ஆதரணீ யர்
இவர்களில் பிரதானதமன் சர்வ பிரேரக்னான ஸ்ரீ யபதி இவன் ஒருவனுமே தனக்கோர் ஆசார்யன் இல்லாத பரமாசார்யன் –
ஸ்ரீ பாஷ்யகாரருடைய சிஷ்ய சம்ப்ரதாயங்களில் ஒன்றிலும் அர்த்த விரோதம் இல்லை -வாக்ய யோஜனா பேதமே யுள்ளது —
தேச கால அவஸ்தா விசேஷங்களாலே வரும் அனுஷ்டான வைஷம்யம் சாஸ்திர அனுமதம் –
சோரர் அபராதத்தை மாண்டவ்யன் பக்கல் ஆரோபித்தால் போலே -ஆதி பர்வம் -109-
ச்வேச்சைக்கு அனுகுணமாக அ நிபுணர் சொல்லுமது வக்தாக்களுக்கே தோஷமாம் —

திருமந்த்ரத்தில் பதார்த்த வாக்யார்த்தங்கள் எல்லாம் மூல பூத நிருக்தாதி வாக்ய விசேஷங்களாலே வந்தவை —
இதில் பதத்ரயத்திலுமாக வாதல் -பிரதம பதத்திலே யாதல் –பிரதம அஷரத்திலே யாதல் –
சங்ஷேப விஸ்தர க்ரமத்தாலே  சப்தார்த்த ஸ்வ பாவங்களைக் கொண்டும்  அர்த்த பஞ்சக அனுசந்தானம் பண்ணுமதுவும் அந்யோந்ய  விருத்தம் அன்று  –
இப்படி பிரதம த்விதீயஅஷரங்களாலே-ஆர்த்தமாகவாதல் சாப்தமாக வாதல் சரண்ய சஹதர்ம சாரிணீ பிரதிபாதனம் பண்ணுமதுவும் அவ்வோ வாக்ய விசேஷ மூலம் –
மத்யமாஷரம் பத்நீ பரம் -என்னும் நிர்வாஹத்தில் விசேஷ ஆபாதான பலத்தாலே அவதாரணம் அர்த்த சித்தம் –
இந்த அவதாரணத்தாலே-சரீர ஆத்ம பாவம் சித்திக்கிறது -என்பார்க்கு சேஷத்வ அவயோக வ்யவச்சேதத்திலே தாத்பர்யம் கொள்ளலாம் –

மகார்த்தோ ஜீவா -அஷ்டச்லோகீ-1-இத்யாதிகளில் படியே த்ருதீய அஷரம் ஜீவா சஜாதீய சர்வபரம் -என்பார்க்கும் இதில் ஸ்வ அனுசந்தானம் ஆர்த்தம் என்ன வேணும் –
அகாரார்த்தாயைவ ஸ்வம் அஹம் -அஷ்டச்லோகீ-3-என்று விசேஷித்து வியாக்யானம் பண்ணினவர்களுக்கு இவ்வனுசந்தானம் சர்வ ஜீவ சாதாரண ஆகார   விஷயம்-
பகவச் சேஷத்வம் தோற்றும் இடம் எல்லாம் பாகவத சேஷத்வ பர்யந்தமாக அனுசந்திக்க பிராப்தமாய் இருக்க
ஔசித்யாதி சயத்தாலே -மத்யம பதத்திலே இத்தை அனுசந்துக்குமது உபபன்னம் –
பிரதம த்விதீய சதுர்த்திகளுக்கு ஏகார்த்தத்வ பின்நார்த் தத்வங்களும் பரமான அணுகுண வாக்யார்த்த விவஷா பேதத்தாலே சொன்னவை-

த்வயத்தில் பூர்வாபர ஸ்ரீ மத் சப்தங்களிலும் -பூர்வாபர நாராயண சப்தங்களிலும் -சில ஆகார விசேஷங்களைப் பிரித்து
அனுசந்திக்குமது உபாய பல தசைகளுக்கு உபயுக்த தமாம்ச நிஷ்கர்ஷம் பண்ணின படி –
சரணங்களை உபாயம் என்கிறதுக்கு சரண சிசிஷ்ட வசீகார்யன் பக்கலிலே தாத்பர்யம் –
ஆகையால் சித்தோபாய பேதமும் சாத்தோபாய பாதமும் வாராது –

நமஸ்ஸூ நாநார்த்தமாகஅஹிர்புத்த்ய சம்ஹிதாதிகளில் நிருத்தம் ஆகையாலே பிரதம
த்விதீய ரஹச்யங்களில்
ம்த்யம சரம பதங்களுக்கு வாக்யார்த்த அனுகுணமாக அர்த்த பேதம் கொள்ளலாம் –
த்வதீயத்ரிதிய ரஹச்யங்க ளிலே  கிடக்கிற சரண சப்தம் உபாயபரமானதடியாக வசீகரணோ பாயத்துக்கு சிலர் பண்ணும்
திரஸ்கார -அதுவாதம் -எல்லாம் சித்தோபாய ப்ரதான்ய பரம்  –
ஸ்வ அனுசந்தான பரமாயும் விதி பரமாயும் நிற்கிற ஆக்க்யாதங்களில் ஆவ்ருத்திக்கு ஜ்ஞாபகம் இல்லாமையாலும்
அதாவ்ருத்திக்கு கண்டோக்தி யுன்டாகையாலும் வர்த்தமான வ்யபதேசம் அனுஷ்டான காலாபிப்ராயம் —

ப்ரபத்திக்கு யாவஜ் ஜீவா நுவ்ருத்தி சொல்லுவார்க்கும் -த்வயம் அர்த்தாநு சந்தாநேன சஹச தைவம் வக்தா –
சரணாகதி கத்யம் -இத்யாதிகளில் சொன்ன ஸூகாசிகையிலே தாத்பர்யம் கொள்ளலாம் —
நியாச பஞ்சாங்க சம்யுத -ஸ்ரீ லஷ்மி தந்த்ரம் –17-74-என்று சொன்ன பிரபத்த்யங்கங்களிலே
சிலர் கதிபா நாதரம் பண்ணுமது அங்கியினுடைய வைபவார்த்தம் –
விசேஷித்து கதிபயாங்க உபாதானம் பண்ணுமதுவும் அங்காந்த ரங்களில் காட்டில் இவ் வங்கங்க ளுடைய பிரசம்சார்த்தம் –

சரம ஸ்லோகத்தில் விதிக்கிற பிரபத்தி சகல பல சாதனம் ஆகையாலே அங்கமாகவும் ஸ்வதந்த்ரமாகவும்
வியாக்யானம் பண்ணின பாஷ்ய கத்யங்களுக்கு விரோதம் இல்லை –
சர்வ தர்ம சப்தத்தில் சங்குசீதா அசங்குசீதா வ்ருத்திகளைக் கொள்ளுமவர்களுக்கு பர பஷத்தில் போலே
சர்வ தர்ம ஸ்வரூப த்யாக விதி விவஷை இல்லாமையாலே ஸ்வ தந்திர அஜ்ஞான  அனுபாலனவிரோதம் இல்லை –
பரித்யஜ்ய -சப்தத்திலும் -ஏக -சப்தத்திலும் -மூல பிரமாண அனுகுணமாகச் சொல்லும் பல வர்த்தங்களிலும் பரஸ்பர விரோதம் இல்லை –
அவற்றில் புனருக்தி   வாராதபடி அனுசந்திக்குமதே வேண்டுவது-

சரண்யனுக்கு பிரபத்தி கர்மத் வத்தையும் மோஷ கர்த்ருத் வத்தையும் பிரதிபாதிக்கிற -மாம் -அஹம் –
என்கிற பதங்களிலே சர்வ ச்வீகார  உபய உக்தமான சௌலப்யமும் சர்வ கார்ய கரத்வ உபய யுகத பரத்வமும்
அனுசந்திக்கும் இடத்தில் அபேஷித விசேஷங்களைப் பிரித்து அனுசந்திக்குமது சேஷ வ்யவச்சேதார்த்தம்   அன்று –
வ்ரஜ -என்றும் தவா என்றும் அர்ஜூனனைக் குறித்திச்  சொன்னாலும் தாத்பர்ய விசேஷத்தாலே இது பிரபத்த்யதிகாரிகள் எல்லார்க்கும் வரும் –
சர்வ பாப மோஷ வசனத்தில் புத்தி பூர்வ உத்த ராகத்தையும் கூட்டுவாருக்கு
சரண்ய அபிப்ராய மூல பிரபத்த நாதி முகத்தாலே அவைகளுக்கு விநாசம் விவஷிதம் -ஆகையால் சாஸ்திர விரோதம் இல்லை –
மோஷயிஷ்யாமி என்கிற  சங்கல்ப்பத்தின் பலத்தை பிராரப்த கர்மாவசானத்திலே என்றவர்களுக்கும்
பிரபத்தி பண்ணினவன் கோலின காலத்திலே என்றவர்களுக்கும் ஆரத்தியில் தாரதம்யத்திற்கு ஈடாக
பல அனுபவத்தாலே யாதல் பிரபத்தி வைபாவத்தாலே யாதல் பிராரப்த கர்ம அவசானத்திலே மோஷம் துல்யம் –
அர்ஜுனனுக்கு சோக நிமித்தம் வேறே யாகிலும் -மா சுச -சம்பதம் தைவீம் -ஸ்ரீ கீதை -16-5-என்கிற இடத்தில் போலே
மோஷயிஷ்யாமி மா சுச -என்ற இடத்திலும் பிரகார அணுகுண நிமித்த   விசேஷ அனுசந்தானம் உசிதம் –

மற்றும் இப்படி வேதாந்த சித்தங்களான-தத்தவ ஹித புருஷார்த்தங்களில் பரஸ்பர விரோதமும்
பூர்வாபர விரோதமும் இல்லாத சுத்த சம்ப்ரதாய க்ரமத்தையும் சங்க்ரஹித்தனம் –
ஸூ வ்யாஹ்ருதானி மஹதாம் -உத்யோக  பர்வம் -33-34-இத்யாதிகளையும் இங்கே சங்க்ரஹித்துக் கொள்வது –

——————————————————————————————————————————————————————————————————————————————-

அஞ்சலி வைபவம் —

ஹிதாய சர்வ ஜகதாம் வ்யக்தம் யோ அஞ்ஜலி வைபவம்
ப்ராசீக சத்தம் தம் வந்தே அஹம் வேதாந்த யுக தேசிகம் —

1–ஆளவந்தார் -ஸ்தோத்ர ரத்னம் -27-ஸ்லோகத்தில்
பகவச் சரணாரவிந்தத்தில் போக்யதாதிசயத்தை அத்யவசித்தவனுக்கு
அதனுடைய துஸ்த்யஜதையாலே-

2–கண்டு கேட்டுற்று மோந்து உண்டு இலலும் ஐங்கருவி கண்ட இன்பம் தெரிவரிய அளவில்லாச் சிற்றின்பம் -திருவாய்மொழி -4-9-10-
என்றபடி ஐஸ்வர்ய கைவல்ய பிராப்யாந்தரங்களிலே இளைப்பாறுகை கூடாது என்று அருளிச் செய்தார் –
அடுத்த ஸ்லோகத்தில் அப்படிப்பட்ட அதிகாரிகளுக்கு திருவடிகள உத்தேசித்து உண்டான அல்ப அனுகூலங்களான வ்யாபாரங்களாலே
சர்வ அபேஷித சித்தி உண்டாம்படியான ஆஸ்ரயண சௌகர்யத்தாலும்
திருவடிகளுடைய துஸ்த்ய ஜாதியை அருளிச் செய்கிறார் –
த்வதங்க்ரி முக்திச்ய கதாபி கே நசித் -யதா ததா வா அபி சக்ருத் க்ருதோ அஞ்ஜலி
ததைவ முஷ்ணாதி அசூபான்ய சேஷத–ஸூ பாநி புஷ்ணாதி ந ஜாது ஹீயதே –ஸ்தோத்ர ரத்னம் —28-

3- இங்கு த்வதங்க்ரி முக்திச்ய -என்கிறது -சர்வ லோக சரண்யமாய் சர்வ போகய அதிசாயிகளான
தேவரீருடைய சரணார விந்தங்களை உபாயமாகவும் ப்ராப்யமாகவும் அபிசந்தி பண்ணி என்கிறபடி –

4-ப்ரஹ்மாணம் ஸிதி கண்ட்ட்டம் ச யா சான்யா தேவதா ஸ்ம்ருதா
பிரதிபுத்தா ந சேவந்தே யஸ்மாத் பரிமிதம் பலம் –சாந்தி பர்வ-357-36-

5-ஏ தௌ த்வௌ விபுத ஸ்ரேஷ்ட்டௌ பிரசாத க்ரோதஜௌ சம்ருதௌ
ததா தர்சித்த பந்த்தாநௌ சிருஷ்டி சம்ஹார காரகௌ-சாந்தி பர்வ -557-19-இத்யாதிகளில்
பரதந்திர சேதனராகச் சொல்லுகையாலே சாஷான் மோஷ பிரதானத்திற்கு சமர்த்தர் அல்லாத –

6-எருத்துக் கொடியுடையானும் பிரமனும் இந்த்ரனும் -பெரியாழ்வார் -5-3-9-முதலான
7-திருவில்லாத் தேவரைக் -கை விட்ட படியும் -நானுன் முகன் திருவந்தாதி -53-
8-அல்ப அஸ்திரத் வாதி தோஷ தூஷிதங்களான பிரயோஜனாந்தரங்களில் பற்று அற்ற படியும் சொல்லிற்று ஆயிற்று –
9-கதா அபி பஹூத்வாரஸ்ய தர்மஸ்ய -மோஷ தர்ம பர்வம் -359-2-என்கிறபடியே நாநா விதங்களான தர்மங்கள் எல்லாம் கால விசேஷங்களைப் பற்றி இருக்கும் –

10-எங்கனே என்னில் -அன்யேக்ருதயுகே தர்மா -மனு ஸ்ம்ருதி -1-85-இத்யாதிகளில் படியே
யுக பேதம் -அயன பேதம் -மாச பேதம் -பஷ பேதம் -திதி வார நஷாத்ரா பேதம் -ராத்திரி திவசாதி பேதம் -யாம பேதம் -ராசி பேதம் -முஹூர்த்த பேதம்
என்று இப்படிப்பட்ட கால பேதங்க ளிலே வ்யவச்திதங்களாய் இ ரே கர்ம விசேஷங்கள் இருப்பது
இந்த அஞ்சலி பந்த ரூபமான ஸூ கர்மத்திற்கு ருசி பிறந்த போதே காலம் – மற்றொரு கால விசேஷம் பார்த்து இருக்க வேண்டாம் -என்னும் இடத்தை -கதாபி -என்று  அருளிச் செய்கிறார் –

11-கேநசித் -வர்ண ஆஸ்ரம குண நிமித்த -அதிகாரி விசேஷங்களை பற்றி மாறும் தர்மங்கள் போலே அன்றிக்கே
சத்ய வசநாதிகளைப் போலே சாமான்ய தர்மம் இந்த அஞ்சலி -சர்வருக்கும் சாஸ்த்ரீய முகமாய் ஸூ கரமுமாய் இருக்கும் –

12–யதா ததா வா அபி –பிரகார விசேஷ நியமங்கள்  இல்லை -பராவர தத்தவ ஹித புருஷார்த்தங்களில் தெளிவு யுண்டாகவுமாம் இல்லை யாகவுமாம் –
மஸ்திஷ்க சம்புடாதிகளில் வேண்டினபடி யாககவுமாம் -மத்தகத்திடைக் கைகளைக் கூப்பி -பெரியாழ்வார் -4-5-2–தலைக்கு மேல் தூக்கி கூப்புவது
மஸ்திஷ்க ப்ரணாமம் –மார்பினிடையில் இரு கைகளையும் கூப்புவது சம்புட ப்ரணாமம் –
ஆதி சப்தம் -ப்ரஹ்வாங்க–முட்டி தரையில் பட கைகளை ஊன்றி குனிந்து வணங்குவது
பஞ்சாங்க –கால் விரல்கள் -முழங்கால்கள் -தலை இவை புவியில் பட தலை வணங்கி கை கூப்புவது –
ஷடங்க
-அஷ்டாங்க -மனம் அறிவு எண்ணம் இவைகளுடன் ஆமையைப் போலே இரு கை கால்களை தரையிலே பதிய வைத்து தலையால் வணங்குவது –
மார்பு -தலை -சொல் மனம் -கன்னங்கள் -கால்கள் -கைகள் -ஆகிய எட்டு அங்கங்கள் –
-ஸூ க்ருத -நெற்றி வயிறு முழந்தாள் கால்கள் மேல் தூக்கிய கைகள் இவற்றை தரையில் படிய வைத்து
வாஸூ தேவனை எண்ணிக் கொண்டு வணங்குவது
தண்டாங்க–கொம்பு கீழே விழுவது போலே உடலை படுக்க வைத்து கால்களையும் கைகளையும் புவியில் விரித்து வணங்குவது — போல்வன   –
வசம் செய்யும் கை இல்லாத போது வாக்காலும் மனசாலும் ஆகவுமாம் –எல்லாப் படிக்கும் இது சபலமாம் -என்பதை யதா ததா வா அபி என்று அருளிச் செய்கிறார் –

13- சக்ருத் க்ருத சாஸ்த்ரார்த்த-பூர்வ மீமாம்ஸா -11-1-22-என்கிற சாமான்யத்திற்கு அபவாதம் இல்லாமையாலே ஆவ்ருத்த்ய அபேஷை இல்லை என்னும் இடத்தை சக்ருத் க்ருத -என்று அருளிச் செய்கிறார் –
14-சர்வேஷா மேவ தர்மானாம் உத்தமோ வைஷ்ணவோ விதி
ரஷதே பகவான் விஷ்ணு பக்தான் ஆத்ம ஸ்ரீரவத் -ஆ நுசாச நிக பர்வ -36-24-இத்யாதிகளில்
தர்மாந்தரங்களில் காட்டில் அதிக பிரபாவங்களாக பிரசித்தங்களான-
15-சம்மார்ஜன உபலேபன மாலாகரண தீபாரோபண பிரதஷிண ப்ரணாம ஸ்துதி சங்கீர்த்தன ஜபாதிகளில் காட்டிலும் அதிகதமமாக
16-அஞ்சலி பரமா முத்ரா -விஷ்ணு தர்மோத்தரம் -3- 33-115-என்று சொல்லப்பட்ட இதன் ஸ்வரூபம் கை கூப்பும் அளவே என்று தோற்றுகைக்காக அஞ்சலி -என்கிறார் –
காலாந்தரத்திலே பலிக்கும் கர்மங்களைப் போல் அன்றிக்கே இங்கு -ஷிப்ரம் தேவ பிரசாதி நீ -விஷ்ணு தர்மோத்தரம் -3- 33-115-என்ற பிரபாவத்தை- ததைவ -என்று அருளிச் செய்கிறார் –

அஸூபங்களை நசிக்கும் என்கிற அர்த்தத்தை -முஷ்ணாதி அஸூபாநி-என்று அருளிச் செய்ய வேண்டிற்று என் -என்னில்
ஆஸ்ரிதன் ஆனவன் அநாதி வாசனைகள் மேலிட்டு சாம்சாரிக புண்ய பாப ரூபங்களான விலங்குகளை விடுவிக்க இசையாது ஒழியிலும்-
17-தமர்கள் கூட்ட வல்வினையை நாசம் செய்யும் சதிர் மூர்த்தி -திருவாய் மொழி -8-10-3-என்கிறபடியே
பாலனை உபச் சந்தானம் பண்ணி அபத்த்யத்தை பரிஹரிக்குமா போலே
ஒரு விரகாலே இவனுக்கு அனுகூலங்களாய்த் தோற்றும் –
18-பந்தகங்களைக் கழிக்கும் என்றபடி -இங்கு சொல்லுகிற அசுபங்கள் ஆவன -ப்ராப்தி விரோதங்களான கர்மங்கள் ஆதல் –
19-உபாயாதிகளை விரோதிக்கும் கர்மங்கள் ஆதல் என்று யதாதிகாரம் கண்டு கொள்வது –
20-க்ருச்ச்ர சாந்த்ராயணாதி கர்மங்கள் சில அஸூபங்களைக் கழிக்க வற்றாய் இருக்கும் –
இது அப்படி அன்றிக்கே சர்வ அநிஷ்டங்களைக் கழிக்க வற்று என்னும் இடத்தை -அசேஷத -என்று அருளிச் செய்கிறார்-

21–அநிஷ்டங்களைக் கழிக்கும் அளவே அன்று -அது முதலாகத் தோன்றி -தொல் மா வல்வினைத் தொடர்களை முதலரிந்து
நின் மா தாள் சேர்ந்து -திருவாய்மொழி -3-2-2-இத்யாதிகளில் படியே இஷ்ட ப்ராப்தி பர்யந்தமாகும் -என்னும் இடத்தை -ஸூ பாநி புஷ்ணாதி-என்று அருளிச் செய்கிறார் –
இங்கு ஸூ பங்களாவன-பரிபூர்ண பகவத் அனுபவமும் -அதன் உபாயமும் -அதன் பரிகரமும்-அதன் பிரகாரமும் –
அதன் அதிகாரமும் -க்ருத உபாயனுடைய ஸ்வயம் பிரயோஜன கைங்கர்யமும் –
இவற்றை புஷ்டமாக்குகை யாவது விலக்கறுத்துத்  தலைக் கட்டுகை-
இவ்வஞ்சலி தான் தன்னுடைய கர்த்தா ஒருவனுக்குமே பலம் கொடுத்து அவ்வளவிலே பர்யவசிக்கிறதன்று-
22- தொழுது எழு என் மனனே என்று தொடங்கி
எமர் ஏழ் எழு பிறப்பும் மா சதிர் இது பெற்று நம்முடை வாழ்வு வாய்க்கின்றவா -திருவாய் -2-7-1-என்றபடி
அஞ்சலி பண்ணினவனுடைய அனுபந்திகளுக்கும் அப்படியே உபகாரகமாம் என்னும் இடத்தை ந ஜாது ஹீயதே -என்று அருளிச் செய்தார் –
23- ஸ்வர்காதி பலன்களைப் போலே இதன் பலமான மீளா வடிமைப் பணி-திருவாய் -6-6-10-ஒரு காலும் அழியாது -என்று கருத்து ஆகவுமாம்
24- அங்கன் அன்றிக்கே -ஒரு கால் தொடங்கின அஞ்சலி பத்தாஞ்சலி புடா ஹ்ருஷ்டா நாம இத்யேவ வாதி ந -என்கிறபடியே –
25-பரம பதத்திலும் பல ரூபமான அஞ்சலியாய்ப் பரிணமித்து ஒரு காலும்
26-அழியாதது என்னவுமாம் –
27- இவ்வஞ்சலி -நோற்ற நோன்பிலேன் –திருவாய் -5-7-1-
28-புகல் ஒன்றில்லா அடியேன் -திருவாய் -6-10-10-
இத்யாதிகளில் படியே ஆகிஞ்சன்ய அநந்ய கதித்வாதி யோகத்தாலே பிரபத்தி யதிகாரியாய்
பரந்யாசம் பண்ணுகிறவனுடைய ஸ்வ ரஷணார்த்த ஸ்வ வியாபாரத்தில் கை முடங்குகிறபடியைக் காட்டுகிற முத்ரையாய் நின்ற போது
29-தாவதார்தி ததா வாஞ்ச்ச்சா தாவத் மோஹ ததா அஸூகம் யாவன் ந யாதி சரணம் த்வாம் அசேஷாக நாச நம் –ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-9-73-
இத்யாதிகளில் படியே இவ்வஞ்சலிக்கு உள்ளீடாய்க் கொண்டு சகல பல சாதனமாய் நிற்கிற
ப்ரபத்தியின் பிரபாவத்தைச் சொல்லுகையிலே தாத்பர்யம் ஆகையாலே
30-இங்கு ஒரு பிரமாண விரோதமும் வாராது -இப்படி பிரபன்னன் வாங்கின கைக்குப் பெருமாள் வைத்த கை உத்தரமாம் -எங்கனே என்னில்
பிரார்தநா பூர்வக பரந்யாசம் பண்ணின அகிஞ்சனனுடைய ஸ்வ ரஷணார்த்த ஸ்வ வியாபார நிவ்ருத்தி ரூப பல விசேஷ வ்யஞ்சக முத்ரை அஞ்சலி
பர ச்வீகாரம் பண்ணின ஸ்வ தந்திர காருணிகனுடைய நிரபேஷ ரஷண அபிப்ராய வ்யஞ்சக முத்ரை அபயஹஸ்தம்-
இவ்விடத்திலே -அஞ்சலி பரமா முத்ரா ஷிப்ரம் தேவ பிரசாதி நீ -பரத்வாஜ சம்ஹிதை -என்றும்
31-அந்தரேண் அஞ்சலும் பத்த்வா லஷ்மணச்ய  பிரசாத நாத் -கிஷ்கிந்தா -32-17- என்றும்
சொல்லுகிற படியே பிரசாதனமான அஞ்சலிக்கு பிரபத்தி பர்ப்பத்வம் சொன்னால் –
32-பிரசாத யஸ்வ தவம் சை நம் சரணாகத்வசலம்-ஸூந்தர -21-22-
33-ப்ரசாதயே த்வாம் அஹமீசமீட்யம் -ஸ்ரீ கீதை -11-44-
34-சரண முபகம்ய தத் பிரசாதோ பப்ரும்ஹித -மநோ வ்ருத்தி -ஸ்ரீ பாஷ்ய காரர் நித்யம் -இத்யாதிகளில் படியே
பிரபத்திக்கும் பிரசாதனத்வம் யுண்டாகையாலும்
பிரபத்தியால் நிக்ரஹ நிவ்ருத்தி ரூபமான பிரசாதம் பிறவாதாகில் இது நிஷ்ப்பலமாக பிரசங்கிக்கை யாலும்
பிரசாதனமாகச் சொன்ன அஞ்சலிக்கு பரந்யாச வ்யஞ்சக முத்ரா ரூபத்வம் சொன்னது விருத்தம் அன்று –
சஹஜ க்ருபா விசிஷ்டனான பகவான் யதாதிகாரம் பக்தியாலே யாதல் பிரபத்தியாலே யாதல் -பிரசாத நீயானாய் அவற்றாலே பிரசன்னனான பகவான் நிக்ரஹ பலபூத
35-பிரகிருதி சம்பந்தாதி விரோதி நிவர்த்தன  சங்கல்ப விசிஷ்டனாய்க் கொண்டு பக்தி நிஷ்டனுக்கும் பிரபத்தி நிஷ்டனுக்கும் மோஷ பிரதனாம்
இப் பிரபத்தியால் பிரசன்னனாம் அளவில் அல்ப வ்யாபாரத்தாலே அவிளம்பிதமாக ஆரப்த கார்யங்களும் அநாரப்த கார்யங்களுமான சாம்சாரீக புண்ய பாபங்கள்
இரண்டும் கழியும்படி இதில் உசிதாதிசயித பிரசாதம் பிறக்கும் -இதற்கு மூல காரணம் ஸ்வார்த்த நிரபேஷ பர துக்க நிராகரண இச்சா ரூபியான சஹஜ கிருபை –
36-ஆகையாலே -நின்னருளே புரிந்து இருந்தேன் -பெரியாழ்வார் -5-4-1- இத்யாதிகளில் படியே
இக்க்ருபையிலேயே ஊன்றினது தோன்றி இருக்கைக்காக
37-க்ருபா விசிஷ்டன் மோஷ ப்ரதன் -என்றும்
பக்தி நிஷ்டனுக்கு பிரசாத விசிஷ்டன் மோஷ ப்ரதன் -என்றும்
இது ஒரு பிரிவு போலே பேசுகிறார்கள் அத்தனை -அல்லது இவர்கள் பக்கல் கிருபா பிரசாதங்கள் பிரதி நியதன்கள் அல்ல –
ப்ரபன்னன் அளவில் பிரசாதாதிசயமே உள்ளது -அங்கன் அன்றிக்கே மாலா கரணாதி களான அல்லாத பகவத்
கர்மங்கள் போலே இவ்வஞ்சலியும் ஒரு சத்கர்ம விசேஷமாய் நின்றால் –
38-நேஹாபிக்ரம நா  சோஸ்தி-ஸ்ரீ கீதை -2-40-
39-சக்ருதுச் சரிதம் யேந ஹரிரித்யஷர த்வயம்
பத்த பரிகரச்தேந மொஷாய கமநம் பிரதி –ஸ்ரீ விஷ்ணு தர்மம் -70-84-இத்யாதிகளில் படியே
இட்டபடை கற்படையாய் பாப ஷயம் சத்வோன்மேஷம்  சம்யக்ஜ்ஞானம் பக்தி பிரபத்திகள் என்று
இப்பரம்பரையாலே மோஷ சாதா நத்வம் யுண்டாகையாலே கீழ்ச் சொன்ன
சர்வ அநிஷ்ட நிவ்ருத்திக்கும் சர்வ அபீஷ்ட சித்திக்கும் விரோதம் இல்லை –
இப்படி வழி யுண்டாய் இருக்க இது அதிவாதம் எங்கை உசிதம் அன்று –
ஒரு அதிகாரி விசேஷத்திலே இவ்வஞ்சலி ரூப க்ரியா மாத்ரம்  தானே சாஷான் மோஷ சாதனம் என்றால்
ப்ரதஷிண பிராணாமாதி க்ரியா மாத்ரங்களும் இப்படியே அவ்யவஹித மோஷ சாதனங்களாக பிரசங்கிக்கும்
40-அப்போது -பக்த்யா பரமயா வா அபி -இத்யாதி பிரமாணங்களோடு விரோதம் யுண்டாகும் –
41- பிரயோஜநாந்தர பரனுக்கு இவ்வஞ்சலி அவ்வோ பிரயோஜனாந்தரங்களை கொடுக்கும் –
42- அநந்ய பிரயோஜனனாய் -மற்றொரு தெய்வம்  தொழா-திருவாய் -4-6-10-என்று உள்ளவனுக்கு உகத பிரகாரத்தாலே
அவாவற்று வீடு பெரும் -திருவாய் -10-10-11-அவஸ்தை யோடு தலைக் கட்டும் –
இப்படி இவ்வஞ்சலியின் பிரபாவத்தை நினைத்து –
ஹஸ்தீச துக்க விஷ திக்க பலாநுபந்திநி
ஆ ப்ரஹ்ம கீடம் அபராஹத சம்ப்ரயோகே
துஷ்கர்ம சஞ்சயவசாத் துரதிக்ரமே ந
பிரத்யஸ்த்ரம் அஞ்சலி ரசௌ தவ நிக்ர ஹாஸ்த்ரே–ஸ்ரீ வரதராஜ பஞ்சாசத் -30- என்று சொன்னோம் —

இப்படி -த்வதங்க்ரி முத்திச்ய -என்கிற ஸ்லோகத்திலே
முமுஷூவான அதிகாரியினுடைய அநந்ய தேவதா கத்வமும்-அநந்ய பிரயோஜனத்வம்-இவற்றையும் –
இவன் சர்வ ஸ்வாமிதிருவடிகளை உத்தேசித்து பண்ணுகிற அஞ்சலிக்கு
கால நியமமும் -இத்தால் உப லஷிதமான தேச நியமமும் -வர்ணாஸ்ரமாதி அதிகாரி நியமமும்
பிரகார நியமமும் -ஆவ்ருத்தி நியமமும் என்ற இவை இல்லாத படியையும்
இதனுடைய ஆசுனாரித்வமும்
அசேஷ தோஷ நிவர்த்த கத்வமும் -அசேஷ கல்யாண காரணத்வமும் அனுபந்தி ரஷகத்வமும் அஷய பல பிரதத்வமும் பலரூப சஜாதீய பரிணதிமத்த்வமும் என்கிற பிரபாவங்களையும்
இது அநந்ய பிரயோஜனான பிரபத்தி நிஷ்டனுக்கும் பிரயோஜனாந்தர பரனுக்கும் நிற்கிற நிலைகளையும்
அனுசந்தித்தால் கைகளைக் கூட்டின இவ்வஞ்சலி ஒருவருக்கும் கை விட ஒண்ணாத படி நிற்கும் –
44- இங்கு சொன்ன அதிகாரியினுடைய பகவத் அனந்யார்ஹ சேஷத்வாத்யவசாயம் பாகவதர் அல்லாத
மாதா பித்ரு ப்ரப்ருதிகளை இட்டுத் தன்னை ஒருத்தன் வ்யபதேசிக்கும் அளவில்
ஏகாந்தீ வ்யபதேஷ்டவ்யோ நைவ க்ராம குலாதிபி
விஷ்ணு நா வ்யபதேஷ்டவ்ய தஸ்ய சர்வம் ச -ஏவ -ஹி-ஸ்ரீ விஷ்வக் சேன சம்ஹதை -என்று  தெளிந்து –
46-கண்ணபுரம் ஒன்றுடையானுக்கு அடியேன் ஒருவற்கு உரியனோ –பெரிய திரு மொழி -8-9-3-என்று சொல்லும் மறுமாற்றத்தாலே அறியலாம் –
46—1-பகவதே காந்தியான இவனுடைய அநந்ய தேவதா கதவம் அருகு இருந்தார் அபிப்ராயம் சொல்ல வேண்டும்படி
தான் அத்யந்த அவசன்னனான தசையிலும் தனக்காகத் தன உற்றாரும் மற்றொரு தெய்வம் தொழா -திருவாய் -4-6-10- என்றபடி இசையாத பிரகாரத்தாலே காணலாம் –
2-அநந்ய பிரயோஜனான இவன் அளவாகும் சிற்றின்பம் -திருவாய் -4-9-10-என்றபடி –
ஒழிந்தமை வைஷயிக ஸூ கார்த்த வியாபார அத்யந்த நிவ்ருத்தியாலே அறியலாம் –
3-சாரீரம் கேவலம் கர்ம குர்வன் நாப் நோதி கில்பிஷம் -ஸ்ரீ கீதை -4-21-என்கிறபடியே
துக்க நிவ்ருத்தி மாத்ரார்த்தமாய் சாஸ்திர அனுமதமான அசநாதி திருஷ்ட வியாபாரம் இவனுக்கு தோஷம்  ஆகாது –
4-அநந்ய உபாயனான இவனுடைய நிர்ப்பரத்வ அத்யவசாயம் பரந்யாசம் பண்ணின விஷயத்தில் ஸ்வ வியாபார ஆத்யந்திக நிவ்ருத்தியாலே அறியலாம் –
இந்நாலு ஆகாரம் உடையவர்க்கு நிதர்சனம் நாத முனிகள் முதலான ஆசார்யர்கள் –

48- கண்ணன் கழல் தொழக் கூப்பிய கையின் பெருமை தன்னை
எண்ணம் கடக்க யமுனைத் துறைவர் இயம்புதலால்
திண்ணம் இதுவென்று தேறித் தெளிந்த பின் சின் மதியோர்
பண்ணும் பணிதிகள் பாற்றிப் பழம்  தொழில் பற்றினமே –

49-நாளு நின்றடு நம் பழைமை யங்கொண்டு வினையுடனே
மாளும் ஓர் குறைவில்லை மனனக மலமறக் கழுவி
நாக்கு நம் திருவுடையடிகள் தம் நலம் கழல் வணங்கி
மாளும் ஓர்  இடத்திலும் வணக்கொடு மாள்வது வலமே–திருவாய்மொழி -1-3-8-அஞ்ஜலியின்  பெருமை நம்மாழ்வாரும்
50-வாயினால் நமோ நாரணா வென்று மத்தகத்திடை கைகளைக் கூப்பிப் போயினர் பின்னை
இத்திசைக்கு என்றும் பிணை கொடுக்கிலும் போக ஒட்டாரே –பெரியாழ்வாரும் அஞ்ஜலியின்  பெருமை வெளிட்டு அருளினார்கள் –

ஸ்ரீ மத் வேங்கட நாத ஸ்ரீ தர பத பத்ம சக்த சித்தா நாம் அஞ்ஜலி வைபவமகதயத் அநு ஸ்ம்ருதம் யாமுனாசார்யை —

ஸ்ரீ -அஞ்ஜலி வைபவம் முற்றிற்று —

———————————————————————————————————————————————————————

கடல் அமுதைக் கடைந்து சேர்த்த திருமாலடி காட்டிய நம் தேசிகர் தன்னிலை பற்றிச் சேர்ந்தோமே –

கவிதார்கிக சிம்ஹச்ய கல்யாண குணா சாலினே
ஸ்ரீ மதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம–

ஸ்ரீ வேதாந்த தேசிகன் திருவடிகளே சரணம் –
பெரிய பிராட்டியார் பெரிய பெருமாள் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருனானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

அருளிச் செயல்களில் அமுதம் சப்தங்கள் தொகுப்பு-

May 30, 2015

ஸ்ரீ சைல தயா பாத்ரம் தீ பக்த்யாதி குணார்ணவம்
யதீந்திர பிரவணம் வந்தே ரம்யஜா மாதரம் முநிம்–

லஷ்மி நாத சமாரம்பாம் நாத யாமுன மத்யமாம்
அஸ்மத் ஆசார்ய பர்யந்தாம் வந்தே குரு பரம்பராம் –

யோ நித்யம் அச்யுத பதாம் புஜ யுகம ருக்ம
வ்யாமோஹதஸ் ததிதராணி த்ருணாய மேந
அஸ்மத் குரோர் பகவதோஸ் யதயை கசிந்தோ
ராமானுஜச்ய சரனௌ சரணம் பிரபத்யே –

பூதம் சரசா மகாதாஹ்வைய பட்ட நாத
ஸ்ரீ பக்திசார குலசேகர யோகிவாஹான்
பக்தாங்க க்ரிரேணு பரகால யதீந்திர மிஸ்ரான்
ஸ்ரீ மத பராங்குச முநிம் பிரணதோஸ்மி நித்யம்

—————————————————————————————————————————————————–

பெரியாழ்வார் திரு மொழி –

சீதக் கடல் உள்ளமதன்ன தேவகி கோதிக் குழலாள் அசோதைக்கு-1-2-1-

எந்தொண்டை வாய்ச் சிங்கம் வா வென்று எடுத்துக் கொண்டு அந்தொண்டை வாயமுதாதரித்து -ஆய்ச்சியர்–1-2-14-

அழகிய வாயில் அமுத ஊறல் தெளிவுறா மழலை முற்றாத இளஞ்சொல்லால் உன்னைக் கூவுகின்றான் –1-4-4-

வானவர் தாம் மகிழ்வன் சகடமுருள வஞ்ச முலைப் பேயின் நஞ்சமுதுண்டவனே–1-5-4-

தன்னைப் பெற்றேர்க்குத் தன் வாயமுதம் தந்து என்னைத் தளிர்ப்பிக்கின்றான் –1-7-4-

வண்டுலாம் பூங்குழலினார் உன் வாயமுது உண்ண வேண்டி கொண்டு போவான் வந்து நின்றார் கோவிந்தா நீ முலை யுணாயே–2-2-7-

அங்கம் எல்லாம் புழுதியாக அளைய வேண்டா அம்ம -விம்ம அங்கு அமரர்க்கு அமுது அளித்த அமரர் கோவே முலை யுணாயே–2-2-9-

எண்ணத்துள் என்றும் இருந்து தித்திக்கும் பெருமானே எங்கள் அமுதே –2-3-11-

பொன்னேய் நெய்யொடு பாலமுதுண்டு ஒரு புள்ளுவன் பொய்யே தவழும் –3-1-1-

பொன் போல் மஞ்சனமாட்டி யமுதூட்டிப் போனேன் –3-1-2-

காரார் மேனி நிறத்து எம்பிரானைக் கடிகமழ் பூம் குழலாய்ச்சி ஆராவின்னமுது உண்ணத் தருவன் நான் – 3-1-11-

பன்னிரு திங்கள் வயிற்றில் கொண்ட வப்பாங்கினால் என்னிளம் கொங்கை அமுதூட்டி எடுத்து யான் –3-2-8-

ஆடி அமுது செய் அப்பனும் உண்டிலன் உன்னோடு உடனே உண்பான் –3-3-3-

அம்பரம் திரியும் காந்தப்பர் எல்லாம் அமுத கீத வலையால் சுருக்குண்டு நம்பரம் அன்று என்று நாணி மயங்கி நைந்து சோர்ந்து கை மறித்து நின்றனரே –3-6-6-

நேரா அவன் தம்பிக்கே நீள் அரசு ஈந்த ஆராவமுதனைப் பாடிப்பற அயோத்தியர் வேந்தனைப் பாடிப்பற –3-9-10-

மாலிரும் சோலை என்னும் மலையை யுடைய மலையை நாலிரு மூர்த்தி தன்னை நால் வேதக் கடல் அமுதை -4-3-11-

செஞ்சொல் மறைப் பொருளாகி நின்ற தேவர்கள் நாயகனே எம்மானே எஞ்சலில் என்னுடை இன்னமுதே எழுலகுடையாய் என்னப்பா –4-10-7-

முத்துத் திரைக் கடல் சேர்ப்பன் மூதறிவாளர் முதல்வன் பத்தர்க்கு அமுதன் அடியேன் பண்டு அன்று பட்டினம் காப்பே -5-2-2

கடல் கடைந்து அமுதம் கொண்டு கலசத்தை நிறைத்தால் போல் உடலுருகி வாய் திறந்து மடுத்துன்னை நிறைத்துக் கொண்டேன் –5-4-4-

ஆயர் ஏற்றை அமரர் கோவை அம்தனர் தம் அமுதத்தினை சாயை போலப் பாட வல்லார் தாமும் அணுக்கர்களே –5-4-11

———————————————————————————————————————————————————————-

நாச்சியார் திருமொழி —

சீதை வாய் அமுதம் யுண்டாய் -எங்கள் சிற்றில் நீ சிதைஎல் என்று வீதி வாய் விளையாடும் ஆயர் சிறுமியர் -2-10-

இன்னடிசிலொடு பாலமுதூட்டி எடுத்த வென் கோலக் கிளியை உன்னோடு தோழமை கொள்ளுவன் குயிலே -5-5-

உண்பது சொல்லில் உலகளந்தான் வாயமுதம் கண் படை கொள்ளில் கடல் வண்ணன் கைத்தலத்தே –7-8-

பதினாராமாயிரவர் தேவிமார் பார்த்திருப்ப மது வாயில் கொண்டால் போல் மாதவன் வாயமுதம்
பொதுவாக உண்பதனைப் புக்கு நீ யுண்டக்கால் சிதையாரோ உன்னோடு செல்வப் பெரும் சங்கே –7-9-

மந்தரம் நாட்டி அன்று மதுரக் கொழும் சாறு கொண்ட சுந்தரத் தோளுடையான் சுழலையில் நின்று உய்தும் கொலோ -9-1-

இன்று வந்தித்தனையும் அமுது செய்திடப் பேரில் நான் ஓன்று நூறாயிரமாகக் கொடுத்துப் பின்னும் ஆளும் செய்வன் –9-7-

எழிலுடைய அம்மனைமீர் என்னரங்கத்தின்னமுதர் குழல் அழகர் வாயழகர் கண்ணழகர் கொப்பூழில்
ஏழு கமலப் பூவழகர் எம்மானார் என்னுடைய கழல் வளையைத் தாமும் கழல் வளையே யாக்கினரே -11-2-

ஆராவமுதமனையான் தன அமுத வாயிலூறிய நீர் தான் கொடர்ந்து புலராமே பருக்கியிளைப்பை நீக்கீரே –13-4-

——————————————————————————————————————————————————————-

பெருமாள் திருமொழி –

கங்கையிலும் தீர்த்தமலி கணபுரத்தென் கரு மணியே எங்கள் குலத்தின்னமுதே இராகவனே தாலேலோ –8-2-

மலையதனால் அணை கட்டி மதிளிலங்கை யழித்தவனே அலைகடலைக் கடைந்து அமரர்க்கு அமுதமருளிச் செய்தவனே –8-8-

தில்லை நகரத் திருச் சித்ர கூடம் தன்னுள் எம்பெருமான் தன சரிதை செவியால் கண்ணால் பருகுவோம் இன்னமுதம் மதியோம் அன்றே –10-8-

——————————————————————————————————————————————————————–

திருச் சந்த விருத்தம் –

கள்ளதாய பேய் மகள் வீட வைத்த வெய்ய கொங்கை ஐய பாலமுது செய்து ஆடகக்கை மாதர் வாயமுதம் உண்டதென் கொலோ –36-

—————————————————————————————————————————————————————–

திருமாலை –

தண் துழாய் மாலை மார்பன் தமர்களாய்ப் பாடியாடி தொண்டு பூண்டு அமுதம் உண்ணாத் தொழும்பர் சோறு உகக்குமாறே –5-

தாவி யன்று உலகம் எல்லாம் தலை விளாக் கொண்ட வெந்தாய் சேவியேன் உன்னை அல்லால் சிக்கனச் செங்கண் மாலே
ஆவியே அமுதே என் தனாருயிரனைய வெந்தாய் பாவியேன் உன்னை யல்லால் பாவியேன் பாவிஎனே –35-

——————————————————————————————————————————————————————–

அமலனாதி பிரான்-

கொண்டால் வண்ணனைக் கோவலனாய் வெண்ணெய் யுண்ட வாயன் என்னுள்ளம் கவர்ந்தானை \
அண்டர்கோன் அணியரங்கன் என் அமுதினைக் கண்ட கண்கள் மற்று ஒன்றினைக் காணாவே –10

———————————————————————————————————————————————————————-

கண்ணி நுண் சிறுத் தாம்பு –

கண்ணி நுண் சிறுத் தாம்பினால் கட்டுண்ணப் பண்ணிய பெரு மாயன் என்னப்பனில்
நண்ணித் தென் குருகூர் நம்பி என்றக்கால் அண்ணிக்கும் அமுதூறும் என்னாவுக்கே –1-

——————————————————————————————————————————————————————

பெரிய திரு மொழி –

ஆவியே அமுதே என நினைந்துருகி அவரவர் பனை முலை துணையா
பாவியேன் உணராது எத்தனை பகலும் பழுது போய் ஒழிந்தன நாள்கள் -1-1-

பண்டு காமரானவாரும் பாவையர் வாயமுதம் உண்டவாறும் வாழ்ந்தவாறும் ஒக்க யுரைத்து இருமி
தண்டு காலா ஊன்றி ஊன்றித் தள்ளி நடவா முன் வண்டு பாடும் தண் துழாயான் வதரி வணங்குதுமே –1-3-5-

வெந்திறல் களிறும் வேலை யமுதம் விண்ணோடு விண்ணவர்க்கு அரசும் இந்திரற்கு அருளி எமக்கும் ஈந்தருளும் –1-4-7-

எந்தாய் சாபம் தீர் என்ன இலங்கு அமுது நீர் திரு மார்பில் தந்தான் சந்தார் பொழில் சூழ்ந்த சாளக்கிராமம் அடை நெஞ்சே –1-5-9-

சீரார் திருவேங்கட மா மலை மேய ஆராவமுதே அடியேற்கு அருளாயே –1-10-3-

உண்டாய் உறி மேல் நறு நெய் அமுதாக கொண்டாய் –1-10-4-

ஆதியை யமுதை என்னை யாளுடை யப்பனை ஒப்பவரில்லா மாதர்கள் வாழும் மாட மா மயிலைத் திரு வல்லிகேணிக் கண்டேனே –2-3-2-

வியந்து துதி செய்யப் பெண்ணுருவாகி அஞ்சுவை யமுதம் அன்று அளித்தானைத் திரு வல்லிக் கேணிக் கண்டேனே –2-3-3-

பவளத் தூணைப் படுகடலில் அமுதத்தைப் பரிவாய் கீண்ட சீரானை -2-5-1-

நண்ணாத வாளவுணர் இடைப்புக்கு வானவரைப் பெண்ணாகி அமுதூட்டும் பெருமானார் –2-6-1-

திவளும் வெண் மதி போல் திரு முகத்தரிவை செழும் கடல் அமுதினில் பிறந்த அவளும் நின்னாகத்து இருப்பதும் அறிந்தும் -ஆசை விடாளால் 2-7-1-

ஆங்கு அரும்பிக் கண்ணீர் சோர்ந்து அன்பு கூரும் அடியவர்கட்கு ஆரமுதானான் தன்னை –திருக் கோவலூர் அதனுள் கண்டேன் நானே –2-10-4-

தடம் கடலைக் கடைந்து அமுதம் கொண்டு உகந்த காளை-3-9-1-

அவனிகளும் எல்லாம் அமுது செய்த திரு வயிற்றன் அரன் கொண்டு திரியும் முண்டமது நிறைத்து அவன் கண் சாபமது நீக்கும் முதல்வன் –3-9-3-

வேல் நெடும் கண் ஆய்ச்சியர்கள் வைத்த தயிர் வெண்ணெய் உளம் குளிர அமுது செய்து இவ்வுலகாண்ட காளை –3-9-7-

அன்று குன்று கொடு குரை கடலைக் கடைந்து அமுதம் அளிக்கும் குரு மணி என்னாரமுதம் குலவி யுறை கோயில் –3-10-2

வஞ்சனையால் வந்தவள் தன உயிருண்டு வாய்த்த தயிருண்டு வெண்ணெய் அமுதுண்டு வலி மிக்க கஞ்சனது உயிரது உண்டு -3-10-9-

ஞாலம் எல்லாம் அமுது செய்து நான்மறையும் தொடராத பாலகனாய் ஆலிலையில் பள்ளி கொள்ளும் பரமனிடம் -4-1-6-

சீரார் பொழில் சூழ் திரு வெள்ளக் குளத்துள் ஆராவமுதே அடியேற்கு அருளாயே –4-7-8-

மஞ்சுலா மணி மாடங்கள் சூழ் திரு வெள்ளறை யதன் மேய அஞ்சனம் புரையும் திருவுருவனை ஆதியை அமுதத்தை –5-3-10-

அங்கண் மா ஞாலம் எல்லாம் அமுது செய்து உமிழ்ந்த எந்தை திங்கள் மா முகில் அணவு செறி பொழில் தென்திருப்பேர் எங்கள் மால் –5-9-2-

வெண்ணெய் தான் அமுது செய்ய வெகுண்டு மத்தாய்ச்சி யோச்சி கண்ணியார் குறுங்கயிற்றால் கட்டவெட்டென்று இருந்தான் –5-9-7-

உலகேழும் ஒழியாமை முன நாள் தம் பொன் வயிறார அளவுமுண்டு அவையுமிழ்ந்த தட மார்வர் –5-10-3-

விண்ணவர் அமுதுண அமுதில் வரும் பெண்ணமுதுண்ட எம்பெருமானே –6-1-2

கலங்க முந்நீர் கடைந்து அமுதம் கொண்டு இமையோர் துளங்கல் தீர நல்கு சோதிச் சுடராய வலங்கை யாழி இடங்கைச் சங்கம் உடையானூர் –6-1-5-

எனக்கு என்றும் தேனும் பாலும் அமுதுமாய திருமால் திரு நாமம் நானும் சொன்னேன் நமரும் உரைமின் நமோ நாராயணமே–6-10-6-

இனியாய தொண்டரோம் பருகு இன்னமுதாய கனியே உன்னைக் கண்டு கொண்டு உய்ந்து ஒழிந்தேனே –7-1-6-

தோயாவின் தயிர் நெய்யமுதுண்ணச் சொன்னார் சொல்லி நகும் பரிசே பெற்ற தாயால் ஆப்புண்டு இருந்து அழுது ஏங்கும் தாடாளா –7-7-6-

திரு மா மகள் மருவும் சிறு புலியூர்ச் சல சயனத்து அருமா கடலமுதே உனது அடியே சரணாமே –7-9-9-

அரும்பினை அலரை அடியேன் மனத்தாசையை அமுதம் பொதியின் சுவை கரும்பினைக் கனியைச் சென்று நாடிக் கண்ணமங்கையுள் கண்டு கொண்டேனே –7-10-1-

வாளரக்கன் கெடத் தோன்றிய நஞ்சினை அமுதத்தினை நாதனை நச்சுவாருச்சி மேல் நிற்கும் நம்பியை –7-10-8-

திருமாலை அம்மானை அமுதத்தைக் கடல் கிடந்த பெருமானை அடியேன் அடைந்து உய்ந்து பிழைத்தேனே–8-9-2-

வேலை யாலிலைப் பள்ளி விரும்பிய பாலை யாரமுதத்தினைப் பைந்துழாய் மாலை
ஆலியில் கண்டு மகிழ்ந்து போய் ஞானமுன்னியைக் காண்டும் நாங்கூரிலே –10-1-3-

துள்ளமில் சுடரை அவுணனுடல் பிளக்கும் மைந்தனைப் பேரில் வணங்கிப் போய்
அளப்பில் ஆரமுதை அமரர்க்கு அருள் விளக்கினை சென்று வெள்ளறைக் காண்டுமே –10-1-4-

நந்தன் பெற்ற நம்பி நானுகந்து உண்ணும் அமுதே எந்தை பெருமானே உண்ணாய் என்னம்மம் சேமம் உண்ணாயே–10-1-4-

நீள் நாகம் சுற்றி நெடு வரை நட்டு ஆழ் கடலைப் பேணான் கடைந்து அமுதம் கொண்டு உகந்த பெம்மானை –
பூணார மார்வனைப் புள்ளூரும் பொன் மலையை காணாதார் கண் என்றும் கண்ணல்ல கண்டோமே -11-7-1 –

தூயானைத் தூய மறையானை தென்னாலி மேயானை மேவாள் உயிருண்டு அமுதுண்ட
வாயானை மாலை வணங்கி அவன் பெருமை பேசாதார் பேச்சு என்றும் பேச்சல்ல கேட்டோமே –11-7-3–

———————————————————————————————————————————————————————

திருக் குறுந்தாண்டகம்-

இன்ப வாற்றினை அமுதம் தன்னை அவுணன் ஆருயிரை யுண்ட கூற்றினை -2-

வானோர்க்காய் இருந்து அமுதம் கொண்ட அப்பனை எம்பிரானை –3-

——————————————————————————————————————————————————-

திரு நெடும் தாண்டகம் –

முளைக்கதிரைக் குறுங்குடியுள் முகிலை மூவா மூவுலகும் கடந்து அப்பால் முதலாய் நின்ற
அளப்பரிய ஆரமுதை அரங்கம் மேய அந்தணனை அந்தணர் தம் சிந்தையானை –14-

——————————————————————————————————————————————————–

மூன்றாம் திருவந்தாதி —

மருந்தும் பொருளும் அமுதமும் தானே -திருந்திய செங்கண் மால் ஆங்கே –4

மாலவனே மந்தரத்தால் மா நீர்க்கடல் கடைந்து வானமுதம் அந்தரத்தார்க்கு ஈந்தாய் நீ யன்று –33-

———————————————————————————————————————————————————–

நான்முகன் திருவந்தாதி –

அன்பாவாய் ஆரமுதமாவாய் அடியேனுக்கு இன்பாவாய் எல்லாமும் நீயாவாய் –
பொன் பாவை கேள்வா கிளரொளி என் கேசவனே கேடின்றி ஆள்வாய்க்கு அடியேன் நானாள்–59-

———————————————————————————————————————————————————-

திருவாசிரியம் –

நேரிய காதல் அன்பிலின்பீன் தேறல் -அமுத வெள்ளத்தானாம் சிறப்பு விட்டு -2

————————————————————————————————————————————————————-

சிறிய திரு மடல் –

தேரார் நிறை கதிரோன் மண்டலத்தைக் கீண்டு புக்கு ஆரா வமுதம் அங்கு எய்தி -அதினின்றும் வாராது ஒழிவது ஒன்றுண்டே –7

————————————————————————————————————————————————————–

பெரிய திருமடல் –

அன்னவர் தம்மானோக்கமுண்டு ஆங்கணி முறுவல் இன்னமுதம் மாந்தியிருப்பர் -இதுவன்றே அன்ன வரத்தின் பயனாவது –36-

மலை திரித்து ஆங்கு இன்னமுதம் வானவரை யூட்டி –106-

அணி நீர் வயலாலி என்னுடைய வின்னமுதை எவ்வுள் பெரு மலையை -116-

திரு மேய்த்து இன்னமுத வெள்ளத்தை இந்தளூர் அந்தணனை –126-

—————————————————————————————————————————————————————-

திருவாய்மொழி –

அமுதம் அமரர்கட்கீந்த நிமிர் சுடராழி நெடுமால் அமுதிலும் ஆற்றவினியன் நிமிர் திரை நீள் கடலானே –1-6-6-

ஆயர் கொழுந்தாய் அவரால் புடையுண்ணும்மாயப்பிரானை என் மாணிக்கச் சோதியை
தூய வமுதைப் பருகிப் பருகி என் மாயப் பிறவி மயர்வருத்தேனே –1-7-3-

அமரர் முழுமுதல் ஆகியவாதியை அமரர்க்கு அமுதீந்த ஆயர் கொழுந்தை
அமர வழும்பத் துழாவி என்னாவி அமரத் தழுவிற்று இனி யகலுமோ –1-7-9-

தனிமுதல் எம்மான் கண்ண பிரான் என்னமுதம் சுவையன் திருவின் மணாளன் என்னுடைச் சூழல் உளானே –1-9-1-

தானும் யானும் எல்லாம் தன்னுள்ளே கலந்து ஒழிந்தோம் தேனும் பாலும் நெய்யும் கன்னலும் அமுதும் ஒத்தே –2-3-1-

கனிவார் வீட்டின்பமே என் கடல் படா வமுதே தனியேன் வாழ் முதலே –2-3-5-

முன் நல யாழ் பயில் நூல் நரம்பின் முதிர் சுவையே பன்னலார் பயிலும் பரனே பவித் திரனே
கன்னலே அமுதே கார் முகிலே என் கண்ணா நின்னலால் இலேன் காண் என்னை நீ குறிக் கொள்ளே –2-3-7-

தானும் யானும் எல்லாம் தன்னுள்ளே கலந்து ஒழிந்தோம் தேனும் பாலும் நெய்யும் கன்னலும் அமுதும் ஒத்தே –2-3-1-

கனிவார் வீட்டின்பமே என் கடல் படா வமுதே தனியேன் வாழ் முதலே –2-3-5-

முன் நல யாழ் பயில் நூல் நரம்பின் முதிர் சுவையே பன்னலார் பயிலும் பரனே பவித் திரனே
கன்னலே அமுதே கார் முகிலே என் கண்ணா நின்னலால் இலேன் காண் என்னை நீ குறிக் கொள்ளே –2-3-7-

மிக விரும்பும் பிரான் என்னும் எனது அக வுயிர்க்கு அமுதே என்னும் உள்ளம் உக வுருகி நின்று உள்ளுளே –2-4-6-

எப்பொழுதும் நாள் திங்கள் ஆண்டூழி யூழி தொறும் அப்பொழுதைக்கு அப்பொழுது என்னாரா வமுதமே –2-5-4-

அராவமுதமாய் அல்லாவியுள் கலந்த காரார் கருமுகில் போல் என்னம்மான் கண்ணனுக்கு –2-5-5-

என் கருமாணிக்கச் சுடரை நல்லவமுதம் பெறற்கரிய வீடுமாய் அல்லி மலர் விரையொத்து ஆணல்லன் பெண்ணல்லனே-2-5-9-

என்னுள் மன்னி வைக்கும் வைகல் தோறும அமுதாய வானேற –2-6-1-

கொந்தார் தண் அம துழாயினாய் அமுதே உன்னை என்னுள்ளே குழைத்த வெம்மைந்தா–2-6-9-

என்னுள் புகுந்து இருந்து தீ தவம் கெடுக்கும் அமுதம் செந்தாமரைக் கண் குன்றம் –2-7-3-

என்னை யாக்கிக் கொண்டு எனக்கே தன்னைத் தந்த கற்பகம் என்னமுதம் கார் முகில் போலும் வேங்கட நல் வெற்பன் –2-7-11-

வேதியர் முழு வேதத் தமுதத்தை தீதில் சீர்த் திரு வேங்கடத்தானையே –3-3-5-

நச்சு மருந்து என்கோ நலம் கடல் அமுதம் என்கோ -அச்சுவைக் கட்டி என்கோ அறு சுவை அடிசில் என்கோ –3-4-4-

கண்ணனை மாயன் தன்னைக் கடல் கடைந்து அமுதம் கொண்ட அண்ணலை அச்சுதனை அனந்தனை-3-4-9-

அமரர்கட்கு அருமை ஒழிய அன்று ஆரமுதூட்டிய வப்பனை பெருமை பிதற்ற வல்லாரைப் பிதற்றுமவர் கண்டீர் –3-7-5-

ஆவியே ஆரமுதே என்னை யாளுடை தூவியம் புள்ளுடையாய் சுடர் நேமியாய் -3-8-7-

மூவுலகுக்கு உரிய கட்டியை தேனை யமுதை நன்பாலைக் கனியைக் கரும்பு தன்னை –3-10-3-

தேனும் பாலும் கன்னலும் அமுதுமாகித் தித்திப்ப யானும் எம்பிரானையே ஏத்தினேன் யானுய்வானே –4-3-10-
வெறித் துளவ முடியானே வினையேனை உனக்கடிமை அறக் கொண்டாய் இனி என்னாரமுதே கூயருளாயே–4-9-6-

தேனே இன்னமுதே என்று என்றே சில கூத்துச் சொல்ல தானே வெம்பெருமான் அவன் என்னாகி ஒழிந்தான் –5-1-2-

கண்ண பிரானை விண்ணோர் கருமாணிக்கத்தை யமுதை நண்ணியும் நண்ண கில்லேன் நடுவே யொருடம்பிலிட்டு–5-1-5-

சென்னி நீள் முடியாதியாய உலப்பில் அணிகலத்தன் கன்னல் பால் அமுதாகி வந்து என் நெஞ்சம் கழியானே –5-5-9 –

ஆராவமுதே அடியேனுடலம் நின்பால் அன்பாயே நீராயலைந்து கரைய உருக்குகின்ற நெடுமாலே –5-8-1-

வாரா வருவாய் வருமென் மாயா மாயா மூர்த்தியாய் ஆராவமுதாய் அடிஎனாவி அகமே தித்திப்பாய் –5-8-10-

தண் திரு வல்ல வாழ கன்னலங்கட்டி தன்னைக் கனியை இன்னமுதம் தன்னை எந்நலம் கொள் சுடரை என்று கொல் கண்கள் காண்பதுவே –5-9-5-

கூடி நீரைக் கடைந்தவாறும் அமுதம் தேவர் உண்ண அசுரரை வீடும் வண்ணங்களே செய்து போன வித்தகமும் –5-10-10-

நல்குரவும் செலவும் நரகும் ச்வர்க்கமுமாய் வெல்பகையும் நட்பும் விடமும் அமுதமுமாய் –6-3-1-

குமுறுமோசை விழ வொலித் தொலை வில்லி மங்கலம் கொண்டு புக்கு அமுத மென் மொழியாளை நீருமக்கு ஆசையின்றி யகற்றினீர்-6-5-2-

மாய வம்மானே எண்ணம் புகுந்து தித்திக்கும் அமுதே இமையோர் அதிபதியே -6-10-3-

அடியேன் மேவி யமர்கின்ற வமுதே இமையோர் அதிபதியே –6-10-7-

செந்தாமரைக் கண் செங்கனி வாய் நால் தோள் அமுதே சிந்தா மணிகள் பகரல்லைப் பகல் செய் திரு வேங்கடத்தானே -6-10-9-

இமையோர்கள் ஏத்தும் உலகம் மூன்றுடை அண்ணலே அமுதே அப்பனே என்னை யால்வானே –7-1-1-

கன்னலே அமுதே கார்முகில் வண்ணனே கடல் ஞாலம் காக்கின்ற மின்னு நேமியினாய் வினையேனுடை வேதியனே-7-1-2-

இன்னமுதம் எனத் தோன்றி ஓரைவர் யாவரையும் மயக்க நீ வைத்த முன்ன மாயம் எல்லாம் முழு வேர் அறிந்து –7-1-8-

அந்திப்போது அவுணன் உடல் இடந்தானே அலைகடல் கடைந்த வாரமுதே சந்தித்து சரணம் சார்வதே வலித்த தையலை மையல் செய்தானே –7-2-5-

ஆறு மலைக்கு எதிர்ந்தோடுமொலி அர ஊறு சுலாய் மலை அப்பன் சாறுபட அமுதம் கொண்ட நான்றே –7-4-2-

பாவியேன் தன்னை யடுகின்ற கமலக் கண்ணது ஓர் பவளவாய் மணியே ஆவியே அமுதே அலைகடல் கடைந்த அப்பனே காணுமாறு அருளாய் –8-1-1-

தொண்டனேன் கற்பகக் கனியே பேணுவார் அமுதே பெரிய தண் புனல் சூழ் பெரு நிலம் எடுத்த பேராளா –8-1-2-

அமரர் தம் அமுதே அசுரர்கள் நஞ்சே என்னுடை யாருயிரேயோ –8-1-4-

கறந்த பால் நெய்யே நெய்யினின் சுவையே கடலினுள் அமுதமே அமுதில் பிறந்த இன் சுவையே சுவையது பயனே பின்னை தோள் மணந்த பெறாயா –8-1-7-

எங்கள் செல் சார்வுயாமுடையமுதம் இமையவர் அப்பன் என்னப்பன் –8-4-2-

தேனை நன்பாலைக் கன்னலை யமுதைத் திருந்துலகுண்ட வம்மானை –8-4-11-

தனி முதலை தேனும் பாலும் கன்னலும் அமுதுமாகித் தித்தித்து என் ஊனில் உயிரில் உணர்வினில் நின்ற வொன்றை யுணர்ந்தேனே–8-8-4-

அசுரர்கட்கு இடர் செய் கடு வினை நஞ்சே என்னுடையமுதே கலி வயல் திருப் புளிங்குடியாய்-9-2-10-

கடைவதும் கடலுளமுதம் என் மனம் உடைவதும் அவற்கே ஒருங்காகவே –9-3-6 –

தொண்டர்க்கு அமுது உண்ணச் சொல் மாலைகள் சொன்னேன் அண்டத்து அமரர் பெருமான் அடியேனே -9-4-9-

எனக்குத் தேனே பாலே கன்னலே யமுதே திரு மாலிரும் சோலை கோனே யாகி நின்று ஒழிந்தான் என்னை முற்றும் உயிர் உண்டே –10-7-2-

———————————————————————————————————————————————————————

இராமானுச நூற்றந்தாதி —

செந்தமிழ் ஆரணமே என்று இந்நீணிலத்தோர் அறிதர நின்ற இராமானுசன் எனக்காரமுதே –19

ஆரப் பொழில் தென் குருகைப் பிரான் அமுதத் திருவாய் ஈரத் தமிழின் இசை யுணர்ந்தோர்கட்கு இனியவர் –20-

பாரதப் போர் முடியப் பரி நெடும் தேர் விடும் கோனை முழுதுணர்ந்த அடியார்க்கு அமுதம் இராமானுசன் என்னை யாள வந்து –51

————————————————————————————————————————————————————–

திருவாய் மொழி நூற்றந்தாதி —

நோற்ற நோன்பாதியிலே நிந்தனை விட்டாற்ற கில்லேன் பேற்றுக்கு உபாயம் உந்தன் பேர் அருளே சாற்றுகின்றேன்
இங்கு எந்நிலை என்னும் எழில் மாறன் சொல் வல்லார் அங்கு அமரர்க்கு ஆராவமுது –46-

ஆராவமுதாழ்வார் ஆதரித்த பேறுகளை தாராமையாலே தளர்ந்து மிக தீராத
ஆசையுடன் ஆற்றாமை பேசி யலமந்தான் மாசறு சீர் மாறன் எம்மான் –48-

——————————————————————————————————————————————————————

ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

 

ஸ்ரீ ராமாயணம் தனி ஸ்லோகம் -பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் –

May 28, 2015

75 geetham

சுந்தர காண்டம் 21-9 ஸ்லோகம்

இஹ இந்த தேசத்திலே
சந்தோ ந இல்லையா வா சாந்தி இருக்கிறார்களா
சத்தொவா -ந அனுவர்திதி இருந்தாலும் நீ பின் பற்றாமல்
விபரீத புத்து தி புத்தி
ஆசார்யம் விட்டதால் புத்தி விபரீதமாக போனதே
இஹ -இந்த இலங்கையிலே
நல்லார் இருக்கிறார்களா
ஏழு அர்த்தம்
முதல் மூன்று சங்கை
மேலே நான்கும் இருக்கிறார்கள்
நல்லோர் நடை இட முடியாத ராஜாசர் உள்ள தேசம்
பள்ளர் பறையர் ஆஸ்திகம் ஆதரிக்காமல்
உள் படை வீடும் பெரும்படை வீடு உள்ள தேசம்
உண்பாரும் உடுப்பாரும் பூசுவாரும் முடிப்பாரும் வாழும் தேசம்
விவேகிகள் உள்ள தேசம்
அக்னி கோத்ரம் வேத வாக்கியம் ஒலி காதில் பட
வேத மரியாதை உள்ள தேசம்
பிராப்தம் தர்ம பலம்
தபோ பலத்தால் ராவணன் பெற்ற செல்வம்
ராஜா மந்த்ரிகள் சிட்டர் ப்ரோகிதர் உள்ள தேசம்
பாரிப்புக்கு இப்பொழுது வந்த குறை என்ன ராவணன் வார்த்தையாக
சங்கை
சதோவா ந -பதராக உள்ளார் சாரமாக இல்லையே

சார பூதரை காணவில்லையே
அசத்துக்கள் தான் இருக்கிறார்கள்
பிறருக்கு அநர்த்தம் விளைவிக்கும்
தப்பையே உபதேசிப்பவர்கள் உள்ளார்கள்
அஸ்தி பிரமேதி-செத்வேத அசந்னேவ பவதி- பகவத் ஞானத்தால்
தங்களும் உளராய் -பிறரையும் உண்டாக்குமவர்கள் இல்லையே
குலபாம்சம் என்று தள்ளி கதவு அடைத்தார்களே
சந்தோன-பகு வசனம் பலர் இருந்தால் இது நடந்து இருக்காதே
சார ஆசாரம் விவேகம் இன்றி
வா -பூர்வ பஷம் வ்யாவர்த்திக்கிறார்
இல்லை என்ன ஒண்ணாதே
சந்தி உண்டே
வா சந்தி ஒரு வேளை இருக்கிறார்கள்
விஜய சம்பந்தி உண்டே –
தரம் இருந்தால் தான் விஜயம் சம்பத் உண்டாகும்
கார்யம் நடக்க காரணம் இருக்க வேண்டுமே

சத்துக்கள் ஜாதி இல்லையே
நீதி பேசி நீதி செய்பவன் சத்து
நல்ல வார்த்தை சொல்லிய -அகம்பனன் -மாரீசன் -மால்யவான் -கும்பகர்ணன் -அமுதம் போன்றவன் ராமன்
விபீஷணன் போல்வார் உண்டே
சந்தி இருக்கிறார்கள் -சத்தை மட்டும் உண்டு ஆனால் கார்யகரம் இல்லை –
சத்தை உண்டாகில் உபதேசிக்க மாட்டார்களா
சொல்லவே மாட்டார்
சொன்னாலும் நீ கேட்க்க மாட்டாயே
நாபிருஷ்ட -அடி பணிந்து கேட்டால் தான் சொல்ல வேண்டும்
ஆசை உடையோர்க்கு எல்லாம் -ஆசை விதி உண்டே
தத் வித்தி -கீதையில் -வணங்கி காலத்தை எதிர்பார்த்து கேள்
ராவணா நீ அப்படி இல்லையே
தண் சேறை எம்பெருமான் தாள் தொழுவார் காண்மின் என் தலை மேலே
ஞாந விஞ்ஞானம் கூடி தர்மசாரிகள் விழுந்து சேவித்து
சதோவா நானுவர்ததே
இருந்தாலும் சொன்னாலும் கேட்க்க மாட்டாயே

அப்ரியச்ய -வக்தா ஸ்ரோதா -சொல்லவும் கேட்கவும் துர்லபம்
புழு பூச்சி பிறந்து மனுஷ்ய ஜாதி துர்லபம் -நல்லது சொல்லி கேட்பது மிகவும் அரிது
பூர்வ அவஸ்தையில்
உத்தர அவஸ்தையில் தீ மனம் கெடுத்தாய் உனக்கு என் செய்கேன் மருவி தொழும் மனமே தந்தாய்
கிருதஞ்ஞை காட்ட வேண்டும்
அறியாத அறிவித்த அத்தா
பராசரர் -மைத்ரேயர் பிரனிபத்யே அபிவாதனம் செய்து அனுவர்திக்க வேண்டும்

ஆசார்யாராய் முன்னாலே ஸ்தோத்ரம் செய்ய வேண்டும்
நீயோ நிந்தித்து இருக்கிறாயே
பேசிற்றே பேச வல்லாய்
பெரியோர் செய்து காட்டியதை பின் தொடர்ந்து செய்ய வேண்டும்

——————————————————————————————————————————————————

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ சீதா ராம ஜெயம் .
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார்  ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் அருளிச் செய்த — ஸ்ரீ தனி சரமம் —

May 25, 2015

ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர்  தனியன்  –

லோகாசார்யாய குரவே கிருஷ்ண பாதச்ய ஸூ நவே
சம்சார போகி சந்தஷ்ட ஜீவ ஜீவாதவே நம-

வாழி யுலகாரியன் வாழி யவன் மன்னுலகம்
வாழி முடும்பை என்னு மா நகரம் -வாழி
மனம் சூழ்ந்த பேரின்ப மல்கு மிகு நல்லார்
இனம் சூழ்ந்திருக்கும் இருப்பு —

————————————————————————————-

அவதாரிகை —

சர்வேஸ்வரன் ஜகத் ஸ்ருஷ்டி பண்ணி -வேத உபதேசத்தைப் பண்ணி யருளி -தத் த்வாரா
சேதனருடைய ருச்யநுகூலமாகப் புருஷார்த்தங்களையும் -தத் சாதனங்களையும் காட்டி -அவ் வழியாலே-
தானே சாத்யமும் சாதனமும் என்கிற சாஸ்திரத்தையும் உபதேசித்து விடுகை அன்றிக்கே
பர வியூஹ விபவ அர்ச்சாவதாரங்களினாலும் -அதி மாநுஷ சேஷ்டிதங்களாலும் 
தானே ரஷகன் என்னும் இடத்தைக் காட்டி –
இத்தனையும் செய்த விடத்திலும்-

ஆஸூரிம் யோநிமாபந்நா மூடா ஜன்மநி   ஜன்மநி
மாமப்ராப்யைவ கௌந்தேய ததோ யாந்த்யதமாம் கதிம் -ஸ்ரீ கீதை -16-20-என்று
ஆஸூர பிரக்ருதிகளாய்-இவ்வாத்மாக்கள் பிரகிருதி ப்ராக்ருதங்களையே புருஷார்த்தங்களாகவும்-
அவை சம்பாதிக்கும் இடத்திலும் தாங்களே சம்பாதித்துக் கொள்ளுவதாகவும் கோலி-
அவை பெற்ற போது ப்ரியப்பட்டும் -பெறாத போது வெறுத்தும்
இங்கனே அநு தாபப் படுகிற படியைக் கண்டு

க்ருபயா ப்ரயாச சவிஷ்டனாய்க் -அவர்கள் செய்தபடி செய்கிறார்கள் என்று தன் குணங்கள் தன்னை இருக்க
ஒட்டாமையாலே-நாம் செய்த குறை இறே சேதனர் நல் வழி வாராது ஒழிகிறது என்று பார்த்து
க்ருஷ்ணம் தர்மம் சநாதனம்-என்றும் –
பவித்ராணாம் ஹி கோவிந்த பவித்ரம் பரமுச்யதே
புண்யா நாமபி புண்யோ அசௌ மங்களா நாஞ்ச மங்களம்-பார -வன -88-27-என்று
இங்கனே தானே சாதனமும் சாத்யமும் என்கிற சாஸ்திரத்தைக் காட்டிக் கொடுப்போம் என்று பார்த்தருளி –

தர்ம சம்ஸ்தாபநார்த்தாய சம்பவாமி -என்றும்
ததோ அகில ஜகத் பத்ம போதாயாச்யுதபாநுநா-தேவகி பூர்வ சந்த்யாயாமா விர்ப்பூதம்
மஹாத்மாநா -ஸ்ரீ விஷ்ணு பிராணம் -5-3-2–என்றும் சொல்லுகிறபடியே
ஸ்ரீ மதுரையிலே திருவவதாரம் பண்ணி யருளி –
பூதநா சகட யமளார்ஜூ நாதிகள் ஆகிற பிரதிகூல வர்க்கம் மண்  உண்ணும் படியாகவும் –
அக்ரூர மாலாகாராத்ய நுகூல ஜனங்கள் வாழும்படியாகவும்
இப்படி சர்வாத்மாக்களினுடைய  பாஹ்யாப் யந்தர தமோ நிரசனம் பண்ணி வளர்ந்து அருளுகிற காலத்திலே

பாண்டவர்களுக்கும் துர்யோத நாதிகளுக்கும் பரஸ்பரம் பிறந்த வைரஸ்யத்தை யுத்த வ்யாஜத்தாலே
சமிப்பிப்பதாகப் பார்த்தருளி
யுத்தார்த்தமாக சர்வ லோகத்தையும் குரு ஷேத்ரத்திலே கூட்டி -அர்ஜூன சாரதியாய் நிற்க –
ஸே நயோ ருபயோர் மத்யே ரதம் ஸ்தாபய மே அச்யுத -ஸ்ரீ கீதை -1-21-என்று
உபய சேனையிலும் உள்ள தன் பந்து வர்க்கத்தைப் பார்த்து
இவர்களை ஹிம்சித்து நாம் ஜீவிக்கை யாவது என் என்று தளும்பின அர்ஜூனனுக்கு –
அவனுடைய தளும்பு நிமித்தமாக
பிரக்ருத்யாத்மா விவேகத்தையும் –
ஆத்மாவினுடைய நித்யத்வாதிகளையும் –
தத் பிராப்தியினுடைய போக்யதையும்
தத் பிராப்தி சாதனம் கர்ம ஜ்ஞானங்கள் என்னும் இடத்தையும் அருளிச் செய்ய –

அவனும் அவ்வளவிலே அசந்துஷ்டனாக –
ஏஷ து வா அதிவததி யஸ் சத்யேநாதி வத்தி -சாந்தோக்யம் -7-16-1-என்கிற ஸ்ருதி போலே –
தானே தன்னுடைய ஸ்வரூப ஸ்வ பாவங்களையும் –
தத் பிராப்தி வைலஷண்யத்தையும் –
தத் உபாயமான கர்ம ஜ்ஞான சாத்திய பக்தி யோக வைபவத்தையும் அருளிச் செய்ய –
கீழ் உக்தமான புருஷார்த்தத்தில் விளம்ப அசஹையான ருசியாலும்
தத் உபாயத்தினுடைய துஷ்கரதையாலும்
ஸ்வ ரஷணத்தில் ப்ராப்தி இல்லாத ஸ்வரூப பாரதந்த்ர்யத்தாலும் –
துஷ்கரமுமாய் -விளம்ப பல ப்ரதமுமாய் -ஸ்வரூப விருத்தமாய் -இருக்கிற உபாயத்தாலே எம்பெருமானைப் பெற
என்பது ஒன்றில்லை – இனி இழந்து போமித்தனை யாகாதே -என்று சோகித்த அர்ஜுனனைக் குறித்து

பரம காருணிகனான கீத உபநிஷதாசார்யன் வேதாந்த சித்தமாய் –
பரம ரஹஸ்யமுமாய் –
சர்வாதிகாரமுமாய் –
ஸூ சகமுமாய் –
அவிளம்ப்ய பலப்ரதமுமாய்
இருந்துள்ள பரம ரஹஸ்யமான சரம உபாயத்தை அர்ஜுன வ்யாஜத்தாலே சர்வாத்மாக்களுக்கும்
அருளிச் செய்து அருளினது சரம ஸ்லோகம் ஆகிறது –

பிரதம ஸ்லோகம் என்று கீழ் ஓன்று யுண்டாய் அத்தைப் பற்றச் சரம ஸ்லோகம் என்கிறதோ என்னில் -அதன்று –
சரமார்த்தத்தைச் சொல்லுகையாலே சரமம் என்னில் –
சக்ருதேவ -இத்யாதி களிலும் சரம ஸ்லோகத்வ பிரசங்கம் யுண்டாம் –
இங்கு கர்மாத் யுபாயங்களைச் சொல்லி அநந்தரம் இத்தைச் சொல்லுகையாலே இதுக்கு அவ்வருகு ஒரு உபாயம் இல்லாதபடியான
உபாய விசேஷத்தைச் சொல்லுகையாலே இத்தைச் சரம ஸ்லோகம் என்று ஆசார்யர்கள் சொல்லுவர்கள் –

மாஸூச -என்று சோக நிவ்ருத்தியைச் சொல்லுகையாலே
சோக ஹேது உண்டாக வேணும் -அதாவது என் என்னில் -கீழே –
ஏவ முக்த்வார்ஜுன சங்க்யே ரதோபஸ்த உபாவிஸத் விஸ்ருஜ்ய ஸஸரம் சாபம் 
சோக சம்விக் நமா நச -ஸ்ரீ கீதை -1-47-என்றதற்கு
மாஸூஸ -என்கிறதாய் -ஏக வாக்யம் ஆகிறது அல்ல –
அசோச்யா நன்வ சோச ஸ்தவம் பிரஜ்ஞாவாதாம் ஸ் ஸ பாஷசே
கதா ஸூநக தாஸூம்ஸ்ஸ  நாநு சோ சாந்தி பண்டிதா -ஸ்ரீ கீதை -2-11-என்று தொடங்கி-
ப்ரக்ருத்யாத்ம விவேகம் பண்ணுவித்து அருளின போதே அந்த தத்தவ விஷய சோகம் போயிற்று –

இனி கர்மாத் யுபாயங்களைப் பற்றி சோகிக்க-அந்த ஹித விஷய சோகத்தை பற்றச் சொல்லுகிறது இங்கு –
அதாகிறது –
புருஷார்த்த லாபத்தாலும் உபாய கௌரவாதிசயத்தாலும் நாம் அதிகாரிகளாய் இவ்வுபாயத்தை அனுஷ்டித்து
இப் புருஷார்த்தம் பெருகை என்பது ஓன்று இல்லை என்றும்
ஸ்வ ரஷணத்தில் ப்ராப்தி இல்லாத நமக்கு ஸ்வா தந்த்ர்ய கர்ப்பமான உபாயங்களை அனுஷ்டிக்க
ப்ராப்தி இல்லை என்றும் சோகிக்க-
உபாயாந்தர விதானம் பண்ணுகிறது என்றபடி –
ஆகையாலே ப்ரபத்திக்கு இவ்வளவு பிறந்து சோகித்தவன் அதிகாரி -என்கை-
இவ்வளவு பிறவாதவனுக்கு இவ்வர்த்தம் சொல்லுகையாகிறது பறிப்பான் கையிலே சிற்றரிவாள் கொடுக்குமோ பாதி –
என்று திருக் கோஷ்டியூர் நம்பி அருளிச் செய்வர் –

சர்வ தர்மான் -இத்யாதி –
ஸ்ருதி ஸ்ம்ருதி இதிஹாசாதி சோதிதமான நித்ய நைமித்திக காம்ய ரூபமான தர்மங்களையும்
மோஷ உபயோகி தர்மங்களையும் ச வாசனமாக விட்டு -என்னையே சஹாயாந்தர நிரபேஷமான உபாயமாகப் பற்று –
நான் உன்னை சோக விஷயமான சர்வ ஆபத்தில் நின்றும் விடுவிப்பேன் –
நீ சோகியாதே கொள் -என்றபடி-

வேதங்கள் தர்மங்களைச் சொல்லா நிற்க விடச் சொல்லுகிற இது வேதங்கள் எல்லாத்தோடும் விருத்தம் –
ஆதலால் இதுக்கு வேறொரு படி அர்த்தம் கொள்ள வேணும் என்று பார்த்து –
விஹித தர்மங்களை விட்டவனுக்கு பிராயச் சித்தமாக சரணா கதியை விதிக்கிறது என்றார்கள் –
அது கூடாது -எங்கனே என்னில் —
சாஸ்திர விரோதம் இல்லாமையாலே -அதாவது
யாகம் பண்ணும் போது மற்றை ஸ்நாநஹோமாதி கர்மங்களை விலக்கினால் போலே
சரணா கதிக்கு அங்கமாக மற்றை தர்மங்களை விலக்குகைக்கு விரோதம் இல்லை –
இவ்விதி மோஷார்த்த மாதலால் ஸ்வர்க்கார்த்தமான விதிகளோடு விரோதம் இல்லை –
அவற்றை இங்கு விலக்காமையால் மோஷார்த்தமான கர்ம ஜ்ஞான பக்திகளோடே விரோதம் இல்லை –
அவையாதல் -இதுவாதல் -என்கையாலும்-அர்ஜுனன் முன்பு தர்மங்களை விட்டு நின்றான் ஒருவன் அல்லாமையாலும்
அவனை நோக்கி பிராயச் சித்த விதியாகவும் கூடாது –

வேறே சிலர் தர்ம சப்தத்தாலே பலத்தைச் சொல்லுகிறதாக்கி-தர்மத்தை அனுஷ்டியா –
பலத்தில் இச்சை விடவே -அது மோஷத்துக்கு சாதனமாம் -என்றார்கள் -அதுவும் கூடாது –
தர்ம சப்தம் பலத்தைக் காட்டாமையாலும் -சரணா கதியோடு அதுக்கு சங்கதி இல்லாமையாலும் –
சோகியாதே கொள் என்கிற இது கூடாமையாலும் -அதுவும் பொருள் அன்று –

வேறே சிலர் தர்மத்தில் அதிகாரம் இல்லாத ஸ்திரீ ஸூத்ராதிகளுக்கு மோஷ உபாயமாக சரணா கதியை
விதிக்கிறது என்றார்கள் -அதுவும் கூடாது –
அவர்களுக்கு தர்ம பிராப்தி இல்லாமையாலே த்யாகம் விதிக்கக் கூடாமையாலும் –
அர்ஜுனனை நோக்கி அருளிச் செய்கையாலும் அதுவும் அர்த்தமன்று –

வேறே சிலர் தேவதாந்த்ரங்களைச் சொல்லுகிறதாக்கி -அவற்றை விட்டு எம்பெருமானையே ஆஸ்ரயிக்கை
மோஷ உபாயம் என்று ஐ காந்த்யம் விதிக்கிறது என்று சொன்னார்கள் -அதுவும் கூடாது –
தர்ம சப்தம் அப்படி பிரசித்தம் இல்லாமையாலும்
சரணா கதியாவது சமாஸ்ரயண மாத்ரம் அல்லாமையாலும் அதுவும் பொருள் அன்று –

வேறே சிலர் சரணா கதியோடு விரோதித்த தர்மங்களை விட்டு சரணா கதியைப் பண்ண அடுக்கும் என்று சொல்லுவர்கள் –
அப்படியாகில் சர்வ தர்மங்களையும் -என்னக் கூடாது -விரோதித்தவையை விடுகைக்கு ஒரு விதி வேண்டுவது இல்லை –
விரோதித்த தர்மம் என்கைக்கு ஒரு சப்தமும் இல்லை -ஆதலால் அதுவும் பொருள் அன்று –

இப்படி இவ்வாக்யத்தில் ஆகிலும் என்கிற சப்தம் இல்லாமையாலும் –
சோகியாதே கொள் என்கிற சப்தம் கூடாமையாலும் -இதுவும் பொருளாக மாட்டாது –

வேறே சிலர் ஜ்ஞானமே மோஷ சாதனமாவது -அதுக்கு விரோதி கர்மம் -ஆதலால் கர்மத்தை எல்லாம் விட்டு
ஆத்ம ஜ்ஞானத்தில் யத்னம் பண்ண அடுக்கும் என்று சொல்லுகிறது என்றார்கள் -அதுவும் கூடாது –
கர்மமும் மோஷ சாதனம் என்று பல சாஸ்திரங்களிலும் சொல்லுகையாலும் –
சரணம் வ்ரஜ -என்கிற சப்தம் ஆத்ம ஜ்ஞானத்தைக் காட்டாமையாலும்
மற்று இங்கு ஆத்ம ஜ்ஞானத்தை விதிக்கிற தொரு சப்தமும் காணாமையாலும்
ஆத்ம ஜ்ஞானத்தாலே மோஷம் பெருகிறவனை நோக்கி -நானுன்னை எல்லா பாபங்களினின்றும் முக்தன் ஆக்குகிறேன் –
என்று எம்பெருமான் தானே மோஷம் கொடுக்கிறானாகச் சொல் கூடாமையாலும் -அதுவும் பொருள் அன்று –

ஆகையால் இஸ் ஸ்லோகத்தால் தோற்றுகிற பொருள் ஒழிய மற்றச் சொல்லுகிற பொருள்கள் பொருள் அல்ல
என்னும் இடம் ப்ரஹ்ம புராணத்திலே தெளியச் சொல்லிற்று –
சரணம் த்வாம் பிரபன்னா யே த்யாந யோக விவர்ஜிதா -தேபி ம்ருத்யுமதிக்ரம்ய யாந்தி தத் வைஷ்ணவம் பதம் -என்று –
சரணா கதி மோஷ சாதனம் என்னும் இடம் ஸ்வேதாஸ்வதர உப நிஷத்திலும் சொல்லிற்று –
யோ ப்ரஹ்மாணம் விததாதி பூர்வம் யோவை வேதாம்ஸ்ஸ ப்ரஹிணோதி தஸ்மை —
தம் ஹ தேவமாத்மா புத்தி பிரசாதம் முமு ஷூ ர்வை சரணமஹம் ப்ரபத்யே –
யாவன் ஒருத்தன் பண்டு ப்ரஹ்மாவைப் படைத்தான் -யாவன் ஒருத்தன் அந்த ப்ரஹ்மாவுக்கு வேதங்களைக் கொடுத்தான் –
அந்த தேவனை என் புத்திக்குத் தேற்றத்தைப் பண்ணினவனை மோஷார்த்தியான நான் சரணம் புகுகிறேன் என்றவாறு –

தைத்ரீய உப நிஷத்திலே திரு நாராயணத்திலே இவ்வர்த்தம் சொல்லப் பட்டது –
சத்யம் தபோ தமஸ் சமோ தானம் தர்ம பிரஜன நமக் நயோ அக்னி ஹோத்ரம் யஜ்ஞோ  மானசம் நியாச-என்று
ஒன்றுக்கு ஓன்று ஸ்ரேஷ்டமாகச் சொல்லி மானச சப்தத்தாலே ஆத்ம ஜ்ஞான வைபவத்தைச் சொல்லி
எல்லாத்துக்கும் மேலாக நியாச சப்தத்தாலே சரணா கதியைச் சொல்லிற்று –

இவ்வர்த்தம் இதிஹாச புராணங்களிலே ஸூ ஸ்பஷ்டம் –
ஆகையாலே வேத விருத்தம் என்று சங்கிக்கைக்கு உபாயம் இல்லை –

இங்கே சிலர் இங்கனே சோத்யம் பண்ணினார்கள் – ஏதென்னில் –
தர்மங்களை எல்லாம் த்யஜித்து சரணா கதியைப் பண்ணவே மோஷம் பெறலாமாகில்
அநேக ஜன்மங்கள் கூடிப் பண்ண வேண்டி ஒருகால் செய்து முடிக்க ஒண்ணாத வருத்தங்களை யுடைத்தாய் இருந்துள்ள
மகா தபஸ்ஸூக்களாலும் வைராக்யத்தாலும் இந்த்ரிய ஜெயத்தாலும் யோகாப்யாசத்தாலும்
பிறந்த   ஜ்ஞானத்தால் பெற வேண்டுவதாக சொல்லுகிற மோஷ சாஸ்திரம் வேண்டாது ஒழியும்-
அற வெளியதாக சாதிக்கலாம் அர்த்தத்தை வருந்தி சாதிப்பாரும் இல்லை -ஆதலால் மோஷ உபாயமாகச் சொல்லுகிறது
பஹ்வாயாச சாஸ்திர சந்நிதா னத்திலே அல்ப யத்னமாய் இருக்கிற சரணா கதி சாஸ்திரம் ஜீவியாது என்றார்கள்

இதுக்கு உத்தரம் –
லோகத்தில் அர்த்தார்ஜனத்துக்கு சாதனமாக அல்ப யத்னமான ரத்ன வாணி ஜ்யாதிகளும்-
மஹா யத்னமான  க்ருஷ்யாதிகளும் உளவாகக் கண்டோம் –
மஹா யத்னங்களுக்கு அல்ப பலமாகவும் கண்டோம் -அல்ப யத்னங்களுக்கு மஹா பலமாகவும் கண்டோம் –
இவ்விடத்தில் தந்தாம் பூர்வ புருஷர்கள் செய்து வரும்படிக்கு தக்கபடியும்
தந்தாம் பாக்யத்துக்குத் தக்க ருசிகளாலும் அல்ப யத்னத்தாலே மஹா யத்ன பலம் பெறுவர்கள் சிலர் –
இப்படியே -வேதத்திலும் மஹா யத்னமான சத்ர யாகாதி களாலும் -தபஸ் சாந்த்ராயணாதி களாலும் –
பஸூ புத்ராதி களான அல்ப பலங்களைச் சிலர் கொள்ள –
சிலர் அவற்றினாலே யாதல் அத்யல்பயத்னமான கர்மாதிகளாலே மஹா பலமான மோஷத்தைப் பெறுவர்கள்-
அப்படியே தந்தாம் பாக்யத்துக்குத் தக்க ருசி பேதங்களாலே சிலருக்கு சரணா கதியே உபாயம் ஆகலாம் –
சிலர்க்கு யோகாப்யாசாதிகளே உபாயம் ஆகலாம் –
அந்த பிரகிருதி பேதங்களுக்குத் தக்க ருசி பேதங்கள் லோகத்திலே காண்பதும் செய்யா நின்றோம் –

சரணா கதி தானும் எல்லாரும் செய்யலாம் அத்தனை எளிதாமோ என்ன –
ஜன்மாந்தர சஞ்சித மஹா புண்யங்களை யுடையார் அல்லாதாருக்கு
இந்த ருசியும் மஹா விஸ்வாசமும் பிறக்க மாட்டாமையாலே எல்லார்க்கும் எளிதன்று –

சரணாகதி ஸ்வரூபம் -ஆநுகூல் யஸ்ய சங்கல்ப -ப்ராதிகூல் யஸ்ய வர்ஜனம் –ரஷிஷ்யதீதி விஸ்வாசோ-
கோப்த்ருத்வ வரணம் ததா -ஆத்ம நிஷேப கார்ப்பண்யே-ஷட்விதா சரணாகதி –

1-ஆநுகூல் யஸ்ய சங்கல்ப –
ஆநுகூல்யம் என்றது ப்ரியத்வம் -அதாவது —
ப்ரியோஹி ஜ்ஞானி நோத்யர்த்த மஹம் ஸ ஸ மம ப்ரிய-என்கிறபடியே அநந்ய பிரயோஜனன் ஆகை –
2-ப்ராதிகூல் யஸ்ய வர்ஜனம் —
என்றது அதி ப்ரவ்ருத்தி வ்யவசாய நிவ்ருத்தி
3-ரஷிஷ்யதீதி விஸ்வாசோ-
என்றது -த்ரிவித சங்கா ரஹிதமான பகவத் குண வத்தாத்யவசாயம்
4-கோப்த்ருத்வ வரணம் –
ஆவது அநிஷ்ட நிவ்ருத்தி பூர்வகமான இஷ்ட பிராப்திக்கு அவ்யவஹித உபாயமாக ஸ்வீகரிக்கை –
5–ஆத்ம நிஷேபம் -என்றது
ரஷ்யத் வேன சமர்ப்பிக்கை-அதாகிறது ஆத்ம ஆத்மீயமானநகில பர சமர்ப்பணம் –
6-கார்ப்பண்யம்-ஆவது க்ருபா ஜனன க்ருபண வ்ருத்தி நிரதத்வம்-

ஏவம் விதமான சரணா கதி தன்னையே ஸ்ருதி ஆத்ம யாகமாக வர்ணித்தது –

தச்யைவம் விதுஷோ யஜ்ஞஸ் யாத்மா யஜமானஸ் ஸ்ரத்தா பத்னீ சரீரமித் மமுரோ வேதிர்லோமானி
பர்ஹிர் வேதஸ் ஸிகா ஹ்ருதயம் யூப
காம ஆஜ்யம் மந்யு பஸூஸ்த போக்நிஸ் சமயிதா தஷிணா வாக்கோதா பிராண உத்காதா
சஷூரத் வர்யுர் மநோ ப்ரஹ்மா ஸ்ரோத்ரமக் நீத்
யாவத் த்ரியதே ஸா தீஷா யதஸ்நாதி யத்பிபதி ததச்ய சோம பாநம் யாத்ரா மாதே  ததுபசதோ
யத் சஞ்சரத்யு பாவி சத் யுத்திஷ்டதே ச ச ப்ரவர்க்யோ
யந்முகம் ததாஹவ நீயோ யதச்ய விஜ்ஞானம் தஜ்ஜூ ஹோதி யத்சாயம் ப்ராதர்த்தி தத் ஸ்மிதோ
யத் சாயம் ப்ரா தர்மத்யந்தி நஞ்ச நாதி சவநாதி
அஹோராத்ரே தே தார்ச பூர்ண மாசௌ யே அர்த்த மாசாஸ்  ச மாசாஸ் ச தே சாதூர் மாச்யானி யா ருதவச்தே
ப ஸூ பந்தா யே சம்வத்சராஸ் ச பரிவத்சராஸ் ச தே
அஹர்கணாஸ் சர்வ வேத சாம் வா ஏதத் சத்ரம் யன்மரணம் ததவப்ருத ஏதத் வை ஜராமர்யமக் நிஹோத்ரம் சத்ரம் ய ஏவம் 
வித்வானு தக யனே பிரமீயதே தேவா நாமேவ மஹிமா நங்க த்வாதி த்யச்ய சாயுஜ்யங்க ச்சத்யத
யோ தஷிணே பிரமீயதே பித்ருணாமேவ  மஹிமா நங்கத்வா
சந்த்ரமாச சாயுஜ்யங்க ச்ச த்யெதௌ வை ஸூ ரா சந்த்ரமசோர்மஹி மானௌ ப்ராஹ்மணோ விதவா நபி ஜயதி
தஸ்மாத் ப்ரஹ்மணோ மஹிமா நமாப்  நோதி தஸ்மாத் ப்ரஹ்மணோ மஹிமா நமித்யுபநிஷத் -என்று கொண்டு  

ஸ்ருதி சரணாகதியை ஒரு யஜ்ஞமாக சங்கல்பித்து
இதுக்கு வேண்டும் உறுப்புகளும் யஜமாணனும் பத்னியும் முதலாக உள்ளவற்றை சரணாகதன் பக்கலிலே உளவாகக் காட்டுகிறது –
யே அஹோராத்ரே -என்றவிடமே -தொடங்கி-யன்மரணம் என்கிற இதுக்கு கீழ் எல்லாம் சரணாகதி தன்னையே
எல்லா  யாகங்களுமாகச் சொல்லுகிறது –
யன்மரணந்தத வப்ருத -என்று சரணாகதி யாகிறது யாகத்துக்கு அவப்ருதமாக ஸ்மரணத்தைச் சொல்லுகிறது –
யா ஏவம் வித்வான் -என்கிற விடம் தொடங்கி இவன் போம் வழியே போனால் எம்பெருமானுடைய
பெருமை எல்லாத்தையும் அனுபவிக்கும் என்கிறது –
தச்யைவம் விதுஷோ யஜ்ஞச்ய -என்கிற இதுக்குக் கீழில் ஓரிடத்தில் ந்யாசம் என்கிற பேரால் சொன்ன சரணாகதியை
அறியும் வித்வானுடைய ஏற்றம் என்றபடி
ஆக சரணாகதி யாகிற யஜ்ஞத்துக்கு உறுப்புகள் இத்தனை என்றதாய்த்து –

ஏதம்  ஹ வாவ ன் தபதி கிமஹம் சாது நாகரவம் கிமஹம் பாபமகரவமிதி -தை -ஆன -5-9-என்று
சரணாகதி ஜ்ஞானம் யுடைய புருஷனையே எந்தப் புண்யம் பண்ணாது ஒழிகிறோமோ
எப்பாபம் பண்ணுகிறோமோ -என்கிற புத்தி பிடியாது –
தஸ்மான் நியாச மேஷாம் தபசாமதிரிக்தா மா ஹூ -என்று தான பர்யந்தமான எல்லாத்
தபஸ்ஸூ க்களிலும் ந்யாசம் அதிரிக்தம் -என்றபடி –
ந்யாசமாவது ஸ்ரீ மானான நாராயணன் திருவடிகளிலே பண்ணப்பட்ட ஆத்மாத்மீய அகில பர சமர்ப்பணம் –
ஆகையாலே ஸ்ரீ மானான நாராயணனையே  சர்வ யோக ஷேமாவஹனாக அனுசந்தித்து
நிர்பரத்வ அனுசந்தானம் சர்வதா பண்ண வேணும் –
ஸ்வ நிர்பரத்வ அனுசந்தான ப்ரீத்யுத்ததியாலே பண்ணப்பட்ட சன்மார்யாதாதி வர்த்தனம் உண்டாய்த்தாகிலும்
முன்பு பகவதி பண்ணின விச்வாசாதிசயத்தாலே திருட சித்தனாவான் என்று கொண்டு
ஆசார்ய பரம்பரா ப்ராப்தமான ரஹஸ்யம் –

இதம் தே நாதபஸ்காய நாபக்தாய கதாசன நசா ஸூஸ்ரூஷவே வாச்யம் நாசமாம் யோ அப்யஸூயதி  –ஸ்ரீ கீதை -18-67-என்று
இவ்வர்த்தம் சொன்னபடியே ரஷித்து அனுஷ்டித்து முடிக்கைக்கு ஈடான பாக்யம் இல்லாதார்க்கும்
குருவானவன் பக்கலிலே பக்தராய் இராதார்க்கும்
உனக்கு ஸூ ஸ் ரூஷை பண்ணாதார்க்கும் சொல்ல வேண்டா –
என் பக்கலிலே அசூயையை பண்ணு வார்க்கும் சொல்ல வேண்டா -என்கிறது

ய இதம் பரமம் குஹ்யம் மத பக்தேஷ்வபி தாஸ்யதி-பக்திம் மயி பராம் க்ருத்வா மாமேவைஷ்யத்ய சம்சய -என்று
இப்பரம குஹ்யமான அர்த்தத்தை என் பக்தர்  பக்கலிலே யாவனொருத்தன் சொல்லுகிறான் –
அவன் அதுவே காரணமாக தானும் என் பக்கலிலே
பரம பக்தியை யுடையனாய் ஒரு சம்சயம் இன்றியே என்னையே வந்தடையும் என்று இவ்வர்த்தம் சொல்லுகைக்கு
ஆகாத விஷயத்தையும் -யோக்யாபாத்ரத்திலே சொன்னால் யுண்டான நன்மையையும் சொல்லிற்று –

திருமந்திர முகத்தாலே ஸ்வரூப ஜ்ஞானத்தை யுடையராய் –
ஸ்வரூப அநுரூப புருஷார்த்தமான பகவத் கைங்கர்யத்திலே ருசி யுடையராய் –
விடப்பட்ட கர்ம ஜ்ஞான பக்தி யோகத்தையும் யுடையராய்
ஆநு கூல்யம் மாத்ரம் யுடையரான ஜந்துக்களைப் பார்த்து
பரம காருணிகனான சர்வேஸ்வரன் தானே
பாண்டு புத்ர வ்யாஜத்தாலே சதுர்த்த உபாயத்தை வெளியிட்டு அருளியது  -சரம ஸ்லோகம் ஆகிறது

—————————————————————————————

பிரதிபத வியாக்யான ஆரம்பம் –
1-சர்வ தர்மான் -இத்யாதி –
இஸ் ஸ்லோகத்துக்கு க்ரியாபதம் – மாஸூச என்கிறதாகையாலே
சோக நிவ்ருத்தி சொல்லுகையிலே தாத்பர்யம் –
இந்த ஸ்லோகம் தான் பிரபத்தி விதாயக வாக்யமாகையாலே இந்த சோகமும் ப்ரபத்திக்கு உபயுக்தமாகிறது –
எங்கனே என்னில் –

இப்பிரபத்திக்கு அதிகாரமும் பலமும் சொல்ல வேண்டுகையாலே –
சோகம் அதிகாரம் என்றும் –
சோக நிவ்ருத்தி பலம் என்றும் சொல்லுகிறது –

இதில் பூர்வார்த்தத்தாலே அதிகாரி க்ருத்யம் சொல்லுகிறது –
உத்தரார்த்தத்தாலே ஈஸ்வர க்ருத்யத்தையும்
அதிகாரி க்ருத்ய சேஷத்தையும் சொல்லுகிறது –

அதிகாரி க்ருத்யமாவது -இதர உபாய பூர்வகமான சித்த உபாய ஸ்வீகாரம் –
ஈஸ்வர க்ருத்யம் ஆவது அநிஷ்ட நிவ்ருத்தி பூர்வகமாக இஷ்டப் பிராப்தியைப் பண்ணிக் கொடுக்கை –
அதிகாரி க்ருத்ய சேஷமாவது-ஸ்வீக்ருத உபாயனான பின்பு யாவத் -பிராப்தி -அளவும்
நிஸ் சம்சயனுமாய் நிர்ப் பரனுமாய் அத  ஏவ ஹ்ருஷ்ட மானசனாய் இருக்கை-

வ்ரஜ -என்கிற விதியோபாதி -மாஸூச -என்கிறதும் விதியாகையாலே
ஸ்வீகரியாதவனுக்கு உபாய சித்தி இல்லாதவோ பாதி ஸ்வீகரித்த பின்பும் நிர்ப்பரனாய் இராதவனுக்கும்
பல சித்தி இல்லை -என்கை-
இத்தைப் பற்ற விறே-
த்யாகம் மேலிட்டு நரகம் வஸ்தவ்ய பூமியாதல் -ஸ்வீகரித்த உபாயம் மேலிட்டுப் பரம பதம் என் சிறு முறியாதல்
ஆம்படி காண் என் அதிகாரம் இருப்பது – என்று ஸ்ரீ நஞ்சீயர் அருளிச் செய்தது –

சித்த உபாய ஸ்வீகாரத்துக்கு இதர உபாய த்யாகம் அங்கமாகையாலே த்யாக விஷயமான
தர்மங்களைச்  சொல்லுகிறது -சர்வ தர்மான் -என்கிற இத்தாலே –

தர்மமாவது -சோத நா லஷணா அர்த்தோ தர்ம -என்கிறபடியே
சாஸ்த்ரங்களிலே-நித்ய நைமித்திக காம்ய ரூபமாய் அனுஷ்டேய தயா விஹிதமானது –
அது தான் –
1-வர்ணாஸ்ரம விஹித தர்மம் என்றும் –
2-பிரவ்ருத்தி தர்மம் என்றும் –
3-நிவ்ருத்தி தர்மம் என்றும் –
4-சித்த தர்மம் என்றும் -நாலு வகைப்பட்டு இருக்கும் –

வர்ணாஸ்ரம விஹித தர்மமாவது –
க்ரியமாணம் ந கஸ்மை சித்யதர்த்தாய பிரகல்பதே -அக்ரியாவத நர்த்தாய தத்து கர்ம சமாசரேத்-
ஏஷா சா வைதிகீ நிஷ்டா ஹ்யுபாயாபாய மத்யமா -ஸ்ரீ லஷ்மீ தந்த்ரம் -17-90/ 91-
என்கிறபடியே பண்ணினால் பிரயோஜனம் இன்றிக்கே பண்ணாத போது அனர்த்தத்தின் பொருட்டாய் இருக்குமது –

ஸ்ருணுத்வம் பரமம் கர்ம த்விவிதம் ததி ஹோச்யதே -ஏகம் ப்ரவர்த்தகம் ப்ரோக்தம் நிவர்த்தகமத பரம் ப்ரவர்த்த கஞ்ச
ஸ்வர்க்காதி பல சாதனமுச்யதே -நிவர்த்த காக்யம் தே வர்ஷே -விஜ்ஞேயம் மோஷ சாதனம் -என்கிறபடியே
ப்ரவ்ருத்தி தர்மமாவது -ஸ்வர்க்காதி பல சாதனமான ஜ்யோதிஷ்டோமாதிகள் –
நிவ்ருத்தி தர்மமாவது -மோஷ சாதனமான கர்ம யோகாதிகள் –

சித்த தர்மமாவது –
யே ச வேத விதோ விப்ராயே சாத் யாத்மவிதோ ஜனா – தே வதந்தி மஹாத்மானம் க்ருஷ்ணம் தர்மம் சனாதனம் –
என்கிறபடியே பரம தர்ம ஸ்வீகாரம் –
நியாச இதி ப்ரஹ்ம-என்றும் –
நியாச இத்யாஹூர் மநீஷிணோ ப்ரஹ்மாணம் -என்றும்
ஸ்வீகாரத்தில் உபாயத்வ பிரசங்கம் இல்லாமையாலே ஸ்வீ காரத்தையும் ஸ்வீ கார்யனாகச் சொல்லக் கடவது –

இவ்விடத்தில் மோஷ உபாய பிரகரணம் ஆகையாலே
ஸ்வர்க்காதி பல சாதனமான ஜ்யோதிஷ்டோமம்  அல்ல என்னும் இடம் சித்தம் -மேலே
சித்த தர்மம் ஸ்வீகார்யமாகச் சொல்லுகையாலே அதுவும் அன்று –
இனி இவ்விடத்தில் மோஷ உபாயமாய் வர்ணாஸ்ரம தர்மங்களை இதி கர்த்தவ்யமாக உடைத்தாய் –
சாத்யமாய் இருந்துள்ள நிவ்ருத்தி தர்மங்களைச் சொல்லுகிறது –

இது தான் –
தர்மமும் –
பஹூ வசனமும் –
சர்வ  சப்தமுமாய் த்ரிவிதமாய் இருக்கும் —

தர்ம சப்தத்தாலே மோஷத்துக்கு அவ்யவஹித சாதனத்தைச் சொல்லுகிறது -அதாகிறது –
பக்த்யா த்வ அந்யயா சகா அஹமேவம் விதோ அர்ஜுன -என்றும்
மத் பக்திம் லபதே பராம் -என்றும் சொல்லுகிற பர -பரம பக்தி –

பஹூ வசனத்தாலே அங்க சாதனங்களைச் சொல்லுகிறது -அதாகிறது –
ஜ்ஞானே பரி சமாப்யதே -என்றும்
கர்மணைவ ஹி சம்சித்தி மாச்திதா ஜனகாதய -என்றும் சொல்லுகிற கர்ம ஜ்ஞானங்களும் –
ஜன்ம கர்ம ச மே திவ்யம் ஏவம் யோ வேத்தி தத்த்வத -த்யக்த்வா தேஹம் புனர் ஜன்ம நிதி மாமேதி சோ அர்ஜுன -என்றும்
சொல்லுகிற அவதார ரஹஸ்ய ஜ்ஞானமும் –
ஏதத் புத்த்வா புத்திமான் ஸ்யாத் க்ருதக்ருத்யச்ச பாரத -என்று சொல்லுகிற புருஷோத்தம வித்தையும் –
தேசோ அயம் சர்வ காமதுக் -என்று சொல்லுகிற ஷேத்திர வாசமும் –
யாதி ப்ரஹ்ம சநாதனம் -என்று சொல்லுகிற திரு நாம சங்கீர்த் தனமும் –

இவை தன்னை பகவத் ப்ரபாவத்தாலே ஸ்வதந்திர உபாயம் என்றும் சொல்லுவார்கள் –
இவை தான் அங்க சாதனமாய் இருக்கச் செய்தே தர்ம சப்தத்தாலே சொல்லுகிறது –
இவை தானும் தனித்தனியே பல சாதனங்களாய் இருக்கையாலே சேதன பேதத்தோ பாதியும் போரும் இறே-
ருசி பேதத்தாலே உபாய பேதமும் -நெறி எல்லாம் எடுத்துரைத்த -4-8-6-என்னக் கடவது இறே-

சர்வ சப்தத்தாலே –
ஆஸ்ரமங்கள் பேதித்தாலும் பேதியாத சந்த்யா வந்தன பஞ்ச மகா யஜ்ஞம் உள்ளிட்ட தர்மங்களும் –
லோக சங்க்ரஹ தயா கர்த்தவ்யமான ஸ்ரேஷ்ட சமாசாரமும் –
பரார்த்தமாகப் புத்ராதிகளைக் குறித்து அனுஷ்டிக்கும் பும்ஸ்வ நாதி கர்மங்களையும் சொல்லுகிறது –

ஆக –
சர்வ சப்தத்தாலே
பிரத்யவாய பரிஹாரமுமாய் யோக்யதா பாதகங்களுமாய் இருந்துள்ள தர்ம விசேஷங்களைச் சொல்லுகிறது –
தர்ம த்யாகத்தைச் சொன்ன போதே யோக்யதா பாதகங்களுமாய் இருந்துள்ள தர்ம விசேஷங்களைச் சொல்லுகிறது –

சர்வ சப்தத்துக்கு –
சாகல்யம் பொருள் ஆனாலோ  -என்னில் –
பஹூ வசனத்திலே உபாயங்களை அடையச் சொல்லுகையாலும்
சர்வ சப்தத்துக்கு வேறே விஷயம் யுண்டாகையாலும்-சாகல்யா வாசி அன்று -ஆனால்

சாத்யாபாவே மஹா பாஹோ சாதனை கிம் பிரயோஜனம் -என்று
யோக்யதாபாதக தர்மங்களை ஒழிய பல சாதனங்களுக்கு உதயம் இன்றியிலே இருக்கையாலே
தர்ம த்யாகத்தைச் சொன்ன போதே யோக்யதா பாதக தர்மம் தூரதோ நிரச்தம் அன்றோ –
இதனுடைய த்யாகம் இப்போது சொல்ல வேணுமோ என்னில் –

சந்த்யா ஹீ நோ அஸூசார் நித்யம நர்ஹஸ் சர்வ கர்ம ஸூ -என்று
சந்த்யாஹீநானான அஸூசிக்கு ஒரு கர்மத்திலும் அதிகாரம் இல்லை என்கையாலே
இவ் வுபாயத்துக்கு இப்படி இருப்பதொரு நிர்பந்தம் யுண்டோ -என்னில்
இவ் வுபாயத்துக்கு இப்படி இருப்பதொரு யோக்யதா சாபேஷதை இல்லாமையாலே விசேஷித்து உபாதானம் பண்ணுகிறது –

உபாயத்துக்கு உபயுக்தம் அன்றாகிலும் –
விஹிதத்வாச்சாஸ் ராமகர்மாபி -என்கிறபடியே விஹிதத்வே நானுஷ்டேய மானாலோ வென்னில் –
யஜ்ஞத்தில் தீஷித்தவனுக்கு விஹிதாம்சமும் த்யாஜ்யமான வோபாதி இங்கு –
சர்வ தர்மான் பரித்யஜ்ய -என்கையாலே விஹிதாம்சமும் த்யாஜ்யம் –

இனி இவ் வுபாயத்துக்கு அதிகாரம்
அசக்தியும் –
அப்ராப்தியும்
விலம்ப அசஹத்வமும் –

இதம் சரணம் அஜ்ஞானம் இதமேவ விஜா நதாம்-இதம் திதீர்ஷதாம் பாரமிதமா நந்த்யமிச்சதாம்-என்றும் –
அவித்யாதோ தேவே பரிப்ருடதயா வா விதி தயா ஸ்வ பக்தர் பூ நா வா ஜகதி கதி மன்யாம விதுஷாம்
கதிர் கம்யஸ் சாலௌ ஹரிரிதி ஜுதந்தாஹ்வயமநோ ரஹஸ்யம் வ்யாஜஹ்ரே ஸ கலு பகவான் சௌநக முனி -என்றும்
சொல்லுகிறபடி -இப்படி அன்றாகில் இதுவும் அதிக்ருதாதிகாரமாம் இறே-
ஆக இத்தால் த்யாஜ்ய ஸ்வரூபம் சொல்லிற்று –

த்யாஜ்யமான தர்மம் தான் —
இதம் குரு இதம் மாகார்ஷீ -என்று விதி நிஷேதாத்மகமாய் இருக்கும் –
விஹித அனுஷ்டானத்தோ பாதி நிஷித்த பரிகாரமும் த்யாஜ்யமான போது அடைத்த கதவைத் திறந்தால்
நிஹீன பதார்த்தங்கள் புகுமா போலே நிஷித்த ப்ரவ்ருத்தி யுண்டாகாதோ என்னில் –
ஸ்வீகார்யமான உபாயம் ஒன்றையும் சஹியாது–
சாஸ்திர சித்தமான தர்மம் த்யாஜ்யம் ஆவது ஸ்வீகார்யமான உபாயம் ஒன்றையும் பொறாமையாலே இறே –
பொறுப்பது நிவ்ருத்தியை இறே –
இதுவும் நிவ்ருத்த அந்தர்கதம் ஆகிலும் ப்ரவ்ருத்தி ரூபமாய் இருக்கையாலே
உபாயம் சகா யாந்தரசஹம் அல்லாமையாலும் -நிஷித்த அனுஷ்டானம் இவனுக்கு கர்த்தவ்யம் அன்று –

நிஷித்த அனுஷ்டானம் ஈஸ்வர ஹ்ருதயத்துக்கு நிக்ரஹம் ஆகையாலும் –
இவனுக்கு ஈஸ்வரனை அதிசயிப்பிக்கை ஸ்வரூபம் ஆகையாலும் இவனுக்கு அவை அனுஷ்டேயம் அன்று –
ப்ராப்யம் இவனுக்கு அவனுடைய ப்ரீதியேயாய் இருக்கையாலே
இவ்வாகாரத்தாலும் அவை அனுஷ்டேயம் அன்று –

ஆகையால் உபாயத்தைப் பார்த்தாலும் ஆகாது –
ஸ்வரூபத்தைப் பார்த்தாலும் ஆகாது –
புருஷார்த்தத்தைப் பார்த்தாலும் ஆகாது –

ஆனால் சர்வ பிரகாரத்தாலும் இவனுக்கு த்யாஜ்யமாய் இருக்குமாகில் நிஷித்த பரிஹாரத்தை
தர்ம சப்தத்தில் பிரசங்கிக்கிறதுக்கு பிரயோஜனம் என் என்னில் –
இவனுக்கு விஹிதமாய் இருப்பது ஓன்று இல்லாமையாலே -அவீசமாய்ப் புகுந்தாலும் இவனுக்கு அவை பந்தகமாக மாட்டாது
என்னும் ஆகாரம் தோற்றுகைக்காகச் சொல்லுகிறது –
அதவா –
மோஷ உபாயத்வேன விதி நிஷேதாத்மகமான சகல தர்மத்தையும் சொல்லுகிறது என்றும் சொல்லுவார்கள் –

ஆகையால் நரகபதன ஹேதுவாய்-சகல  ஜந்துக்களுக்கும் த்யாஜ்யமுமாய் புத்தி பூர்வகமுமாய்
இருந்துள்ள பகவத் அபசாராதிகளும் பிராமஹத்த்யாதிகளும் பரிஹரணீயம் என்றது ஆய்த்து
சரணாகதி ப்ரபாவத்தாலே அவை பந்தகம் இன்றியிலே ஒழிந்தாலும்-
சரணா கதனுக்கு இவை கர்த்தவ்யம் அன்று என்னும் இடம் சொல்லிற்று ஆய்த்து –

—————————————————————–

2-பரித்யஜ்ய –
த்யாக பிரகாரத்தைச் சொல்லுகிறது -இதுவும் –
த்யாகமும்-
ல்யப்பும் –
உப சர்க்கமுமாய் -மூன்று பிரகாரத்தோடே இருக்கும் –

இங்குச் சொல்லுகிற த்யாகம் ஸ்வரூபேண த்யாகத்தைச் சொல்லுகிறதோ  –
உபாய புத்த்யா த்யாகத்தைச் சொல்லுகிறதோ –
பல த்யாகத்தைச் சொல்லுகிறதோ -என்னில் –

மா  பலேஷூ கதாசன -என்று கீழ் பல த்யாகத்தைச் சொல்லுகையாலே கேவலம் அதுவும் ஆகமாட்டாது –
இனி உபாய புத்தித்யாகம் ஆதல் ஸ்வரூபத்யாகம் ஆதலாகக் கடவது –

உபாய புத்தி த்யாகம் என்ற போது நிஜ கர்மாதி பக்த்யந்தம்  அவசியம் அனுஷ்டேயமாய் விடும் –
இப்படி  அனுஷ்டேயமாம் பஷத்தில்  பிரபத்தி ஸ்வ தந்திர உபாயமாக மாட்டாது –
ஆகையால் இவை ஸ்வரூபேண த்யாஜ்யமாகக் கடவது –

இனி இவற்றில் நம் ஆசார்யர்கள் அனுஷ்டிக்கிறவை-சிஷ்ய புத்ரர்களுடைய உஜ்ஜீவன அர்த்தமாக
ஆன்ரு சம்சயத்தாலே அனுஷ்டிக்கிறார்கள் இத்தனை –
இப்படி அனுஷ்டியாத போது பகவத் விபூதி பூதரான சேதனருக்கு நாஸ  ஹேதுவாகையாலே ஈஸ்வரனுக்கு அநபிமதராவர்-
ஆகையாலே யாதோரளவிலே லோக சங்க்ரஹம் பிறக்கும் –
யாதோரளவிலே சிஷ்ய புத்ரர்களுக்கு உஜ்ஜீவனம் யுண்டாம் -அவ்வளவும் அனுஷ்டேயம் என்றதாய்த்து –

ப்ரவ்ருத்தி தர்மம் தானே அபிசந்தி பேதத்தாலே நிவ்ருத்தி தர்மமானவோ பாதி –
நிவ்ருத்தி தர்மமும் ப்ராப்ய தர்மமாகக் கடவது –
இவ்விடத்திலே வர்ணாஸ்ர தர்மம் லோக சங்க்ரஹதயா அனுஷ்டேயமாய் இருக்கும்  –
வைஷ்ணவ தர்மம் ப்ராப்யதையா அனுஷடேய தமமாய் இருக்கும் –
இவ்விடத்தில் அகரணே பிரத்யவாயமும் -எம்பெருமானுடைய அநபிமதத்வமும்-தன்னுடைய புருஷார்த்த ஹானியுமாகக் கடவது –
ஆகையாலே விஹிதத்வாச்சாஸ்ரம கர்மாபி -சஹாகாரித்வேன ஸ -என்கிற உபய பிரகாரத்தாலும் அனுஷ்டிக்கிறார்கள் அல்லர் –

பரி -சப்தத்தாலே –
த்யாகத்தின் மிகுதியைச்   சொல்லுகிறது –
இப் பரி சப்தம் -பரி சாகல்யே-என்று சகலத்தையும் விடச் சொல்லுகிற தானாலோ-என்னில் –
அது சர்வ சப்தத்தில் உக்தமாகையாலே இவ்விடத்தில் வேறே அர்த்தமாக வேணும் —
அதாவது -சவாசந த்யாகத்தைச் சொல்லுகிறது –

சவாசநமாக விடுகை யாவது-
ஸூக்தி கையிலே ராஜதப்ரமம் போலே அனுபாயங்களிலே உபாய புத்தி பண்ணினோம் ஆகாதே -என்று
கொண்டு லஜ்ஜா புரஸ் சரமாக விடுகை –
இப்படி விடுகைக்கு ஹேது –
ஸ்வரூபத்தின் யுடைய பகவத் பாரதந்த்ர்ய அனுசந்தானத்தாலே -ஸ்வ ரஷணத்திலே தனக்குப் பிறந்த அனந்வயம்-
ஸ்வரூபத்தில் தன்னோடும் பிறரோடும் ப்ராப்தி யுண்டாம் அன்று ஆய்த்து -தானும் பற்றும் ரஷகராகைக்கு ப்ராப்தி உள்ளது –

இனி ஸ்வ ரஷணத்தில் இழிகை யாவது-
தாய் முலைப் பாலுக்கு கூலி கேட்குமா போலே –
தன்னுடைய சேஷத்வத்தையும் அழித்து-
அவனுடைய சேஷித்வத்தையும் அழிக்கை-

உபாயங்களை விடுகை யாகிறது –
இவை நமக்கு உபாயம் அன்று என்கிற நைராச்யம் –
நைராச்யத்துக்கு ஹேது
அசக்தியும்
அப்ராப்தியும் –

த்யஜ்ய -என்கிற ல்யப்பாலே –
ஸ்நாத்வா புஞ்ஜீத -என்கிறபடியே உபாய ஸ்வீகாரத்துக்கு உபாயாந்தர த்யாகத்தினுடைய அங்கத்வம் சொல்லுகிறது –
யாகத்தில் இழியுமவனுக்கு  தத் வ்யதிரிக்த சர்வ தர்ம த்யாகம் அங்கம் ஆகிறாப் போலே -இதுவும் ஆத்மயாகமாகையாலே
தத் வ்யதிரிக்த சர்வ தர்ம த்யாகம் அங்கமாகக் கடவது என்று முன்பே சொல்லிற்று –
இத்தால் சாஸ்திர வையர்த்தமும் பரிஹரிக்கப் பட்டது –

விட்டே பற்ற வேணுமாகில்-சர்வாதிகாரத்வ பங்கம் வாராதோ -என்னில் –
அசக்தனுமாய் அயோக்யனுமானவன் ஸ்வரூப ஜ்ஞான வைசத்யத்தாலே விட்டுப் பற்றக் கடவன் –
அல்லாதவர்களும் உக்த லஷணத்தாலே அசக்தராய் இருக்கும் அத்தனை போக்கி சர்வத்திலும் அசக்தராய் இருப்பார் ஒருத்தரும் இல்லையே –
அவர்களும் விக்ன விலம்பாதி பயமுடையராகில் யதாயோக்யம் விட்டுப் பற்றக் கடவர்கள் –
ஆகையாலே சர்வாதிகார பங்கம் வாராது
இப்படிக் கொள்ளாதே சர்வ உபாய ஸூந்யனுக்கு இது உபாயம் என்னும் பஷத்தில் –
சர்வ உபாய ஸூந்யராய் இருப்பார் ஒருத்தரும் இல்லை யாகையாலே அந்த பஷத்துக்கு இந்த தூஷணம் வரும் –
ஆகையாலே த்யாகம் அங்கம் என்கிற இது உபபன்னம் –

ஆக
இத்தால் த்யாக பிரகாரம் சொல்லிற்று –

இவ்விடத்திலே பிள்ளை யருளிச் செய்து போருவதொரு வார்த்தை யுண்டு -அதாவது –
பதர்க் கூட்டை விட்டுப் பர்வதத்தை அண்டை கொள்வாரைப் போலே பற்று -என்கிறான் -என்று –

அது எங்கனே என்னில் –
அவை சாத்யங்கள் ஆகையாலும் –
பலவாகையாலும் –
அசேதனங்கள் ஆகையாலும் -பதர்க் கூட்டு இறே –

இவன் ஸித்த ஸ்வரூபன் ஆகையாலும் –
ஒருவனாகையாலும் –
பரம சேதனன் ஆகையாலும் பர்வதம் –

—————————————————————————————-

3-அநந்தரம்
பற்றும் விஷயத்தையும் -பற்றும் பிரகாரத்தையும் சொல்லுகிறது -மாம் -என்று –
ஸ்வீகார்யமான உபாயத்தைச் சொல்லுகிறது –

உபாயமாவது –
இஷ்ட ப்ராப்த்ய அநிஷ்ட நிவ்ருத்தி சாதனமாய் இருக்கையாலே -இஷ்ட ப்ராப்த்ய அநிஷ்ட நிவ்ருத்த் யுப யோகியான –
பரத்வ  சௌலப்யங்கள் -மாம் -என்கிற பதத்திலே விவஷிதம் -எங்கனே என்னில் –
ஏஷ நாராயண ஸ்ரீ மான் ஷீரார்ணவ நிகேதன நாக பர்யங்க முத்ஸ்ருஜ்ய ஹ்யாகதோ மதுராம் புரீம் -என்கிறபடியே
மாம் -என்கிறவன் -ஸ்ரீ மானுமாய் -நாராயணனுமாய் இருக்கையாலே –

ஸ்ரீ யபதித்வ நாராயணத்வங்கள்-பரத்வ  சௌலப்ய ஹேது வாகிறபடி எங்கனே என்னில் –
ஸ்ரீ -யாகிறாள்
சர்வருடையவும் ஸ்வரூப ஸ்திதி ப்ரவ்ருத்தி சித்த்யர்த்தமாக ஆஸ்ரயணீயையாய் இருக்கையாலே  –
இவளுக்குப் பதி என்கையாலே பரத்வம் சொல்லிற்று –
ஸ்ரத்தயா தேவோ தேவத்வம் அஸ்நுதே -அப்ரமேயம் ஹி தத் தேஜோ யஸ்ய சா ஜனகாத்மஜா –
திருவுடையடிகள் –1-3-8-
திருமகளார் தனிக் கேள்வன் பெருமையுடைய பிரான் -1-6-9-என்னக் கடவது இறே –

ஸ்ரீ யாகிறாள் ஜகன் மாதாவாய் இருக்கையாலே -இவளுக்குப் பதி என்கையாலே சௌலப்யம் சொல்லிற்று –
மாதவோ பக்த வத்சலா –
கோல மலர்ப் பாவைக்கு அன்பாகிய என்னன்பேயோ -10-10-7- என்றும்

நாராயண சப்தத்துக்கு அர்த்தம் ஜகத் காரணத்வமும்-ஜகத் அந்தராத்மத்வமும் ஆகையாலே
ஜகத் காரணத்வ பிரயுக்தமான பரத்வமும் ஜகத் அந்தராத்மத்வ பிரயுக்தமான சௌலப்யமும் சொல்லப் பட்டது –

ஆக -மாம் என்று -ஸ்ரீ மானுமாய் நாராயணனுமாய் இருந்த என்னை -என்றபடி -இத்தால்
அனுஷ்டான வாக்யத்தில் ஸ்ரீ மச் சப்தத்தையும் நாராயண சப்தத்தையும் ஸ்மரிப்பிக்கிறது-
இதுக்கு ஹேது வித்யனுஷ்டானங்கள் இரண்டும் ஏகார்த்தமாக வேண்டுகையாலே –

ஆக இத்தால் -ஸ்ரீ மன் நாராயணனே சரண்யன் என்றதாய்த்து –
நாராயண சப்தம் தானே அவனைப் பரி பூர்ணனாக காட்டச் செய்தே
ஸ்ரீ மச் சப்தத்தாலே விசேஷித்தது-
இவர்கள் அஞ்சாதே சென்று ஆஸ்ரயிக்க வல்லராகைக்கும் –
அவன் இவர்களைத் தன் பேறாக ரஷிக்கைக்கும் உறுப்பாகச் சொல்லுகிறது –

ஆனால் ஸ்ரீ மச் சப்தம் தானே அவனைப் பரி பூர்ணனாக காட்டச் செய்தே -நாராயண சப்தத்தாலே விசேஷிக்கிறது-
பிராட்டி கை விடிலும் நிலமங்கை கை விடிலும் கைவிடாத ஸ்வ பாவன் என்னும் இடமும்
அந்ய நிரபேஷமாக சரணாகத பரிபாலனம் பண்ண வல்லன் என்னும் இடமும் சொல்லுகிறது –

ஆகையால்
இவ் விசிஷ்ட வேஷத்தில் ஆஸ்ரயித்தால் ஆய்த்து பல சித்தி யுள்ளது –
பிரிவில் ஆஸ்ரயிக்கை யாவது தேவதாந்தர சமாஸ்ரயண  துல்யமாம் –

அன்று -உன் முகம் காணில் முடிவேன் -என்கையாலே முகம் தோன்றாமல் நடத்தினேன் –
இன்று -உன் முகம் காணா விடில் முடிவேன் -என்கையாலே
முகம் தோற்ற நின்று நடத்தினேன் என்று தன் வ்யாபாராதிகளைக் காட்டுகிறான் –
அதாகிறது –
என் கையில் மடல் உன் கையிலே வரும்படியாகவும் –
என் தலையில் முடி உன் தலையிலே வரும்படியாகவும் வேணும் என்று ஆசைப்பட்டு
உன் கால் என் தலையிலே படும்படி-தாழ நின்றேன் -என்று தன் சௌலப்யத்தைக் காட்டுகிறான் -மாம் -என்று –

நீ சப்தாதி விஷயங்களிலே மண்டித் திரிகையாலே உன்னுடம்பில்   புகரைப் பாராய்
உன்னை விநியோகம் கொள்ளப் பெறாமையாலே உடம்பு வெளுத்து இருக்கிற என்னைப் பாராய் –
என்று தன் வ்யாமோஹ குணத்தை சட்டையை அவிழித்து விட்டுக் காட்டுகிறான் -என்றதாய்த்து –

இவ்விடத்தில் சரண்ய சரண்யதைக்கு உபயுக்தமாகப் பத்து குணங்கள் அனுசந்தேயங்கள்
மாம் -என்கிற வஸ்து சமஸ்த கல்யாண குணாத் மகமாய் இருந்ததே யாகிலும் –
உபாசிக்கும் இடத்து வித்யைகள் தோறும் சில குண விசேஷங்களுள் உபாஸ்யமாக குண யோகத்தில் நிஷ்கரிஷித்தால் போலே
பிரபத்தி வித்துக்களான நம்மாச்சார்யர்கள் சரண்யத்துக்கு உப யுக்தமாக பத்து குணங்களை அனுசந்தித்துப் போருவர்கள் –
அவையாவன –
1-சர்வஜ்ஞத்வ
2-சர்வசக்தித்வ –
3-பரம காருணிகத்வ –
4-பரம உதாரத்வ –
5-ஆஸ்ரீத வத்சல்த்வ –
6-அசரண்ய சரண்யத்வ –
7-அநாலோசித விசேஷ அசேஷ லோக சரண்யத்வ –
8-சர்வ ஸ்வாமித்வ-
9-ஸ்ரீ யபதித்வ –
10-நாராயண த்வங்கள்-

இத்தால் –
1-சர்வஜ்ஞத்வ -உன்னிலும் உன் கார்யம் அறிய வேணுமாய்
2-சர்வசக்தித்வ -உன்னிலும் உன் கார்யம் செய்ய ஷமனுமாய்
3-பரம காருணிகத்வ -உன்னிலும் உன் கார்யத்துக்கு உகப்பேனுமாய்-
4-பரம உதாரத்வ -உன் கார்யம் செய்யும் இடத்தில் என் காரியமாகச் செய்வேனுமாய் –
5-ஆஸ்ரீத வத்சல்த்வ -உன் குற்றம் காணாது இருப்பேனுமாய்-உன் குற்றம் போக்யமாய்  இருப்பேனுமாய் –
6-அசரண்ய சரண்யத்வ -உனக்குப் பற்று இல்லாத போதும் பற்றாய் இருப்பேனுமாய் –
7-அநாலோசித விசேஷ அசேஷ லோக சரண்யத்வ -உன் பேறு என் பேறாய் இருப்பேனுமாய் –
8-சர்வ ஸ்வாமித்வ-உன்னிலும் உன் கார்யம் செய்கைக்கு ப்ராப்தனுமாய் –
9-ஸ்ரீ யபதித்வ -உனக்கும் எனக்கும் தாரகையாய் இருந்துள்ள சர்வேஸ்வரிக்காக உன் கார்யம் செய்வேனுமாய்
10-நாராயண த்வங்கள்-நீரிலே நெருப்பு எழுந்தால்  போலே இவளே குற்றம் காட்டிலும் விட ஒண்ணாத
பந்தத்தை யுடையேனுமாய் இருக்கிற என்னை -என்றபடி –

அதவா –
மாம்- என்கிற விடத்திலே ஆஸ்ரயணத்துக்கு ஏகாந்தமான சில குணங்களையும் –
அஹம் -என்கிற விடத்தில் பல பிரதானத்துக்கு ஏகாந்தமான சில குணங்களையும்
அனுசந்தித்துப் போருவாரும் யுண்டு –

ஆஸ்ரயணத்துக்கு ஏகாந்தமான குணங்கள் ஆவன –
வாத்சல்யமும் -ஸ்வாமித்வமும்-சௌசீல்யமும் -சௌலப்யமும் –

1-வாத்சல்யம் ஆவது -அத்ய ஜாதமான வத்சத்தின் பக்கல் தேனுவுக்கு யுண்டான காமம் -அதாவது –
சுவடு பட்ட தரையிலே புல் தின்னாத பசு
அன்றீன்ற கன்றின் தோஷத்தை தோஷம் என்று கருதாதே தனக்கு போக்யமாகக் கொள்ளுமாப் போலே
ஆஸ்ரிதருடைய தோஷத்தைத் தன் பேறாகப் போக்கி தன் கல்யாண குணங்களாலே தரிப்பிக்கை –

2-ஸ்வாமித்வமாவது-இழவு பேறு தன்னதாம் படியான குடல் துடக்கு –

3-சௌசீல்யமாவது -அவாக்ய அநாதர-என்கிறபடியே  நிரவதிக வைபவத்தை யுடைய தன்னைத்
தாழ விட்டு  ஒரு நீராகக் கலக்கை-

4-சௌலப்யம் ஆவது -அதீந்த்ரியமான வடிவை இந்த்ரிய கோசரமாக்கிக் கொண்டு பவ்யனாகை-

இவை ஆஸ்ரயணத்துக்கு உபயுக்தம் ஆகிறபடி எங்கனே என்னில்
தன் தோஷம் கண்டு இறாயாமைக்கு வத்சலனாக வேணும் –
நம்மை ரஷிக்குமோ ரஷியானோ என்கிற அச்சம் கெடுகைக்கு ஸ்வாமியாக வேணும் –
தன் சிறுமை கண்டு பிற்காலியாமைக்கு ஸூசீலனாக வேணும் –
தூரஸ்தனாய் இருக்கும் என்று அஞ்சாமைக்கு ஸூலபனாக வேணும் –

இந்நாலு குணமும் ஆஸ்ரயண உப யோகி என்னும் இடத்தை -நம்மாழ்வார் சரணம் புகுகிற விடத்தில்
நிகரில் புகழாய் -உலகம் மூன்றுடையாய் -என்னை யாள்வானே-
நிகரில் அமரர் முனிக் கணங்கள் விரும்பும் திரு வேங்கடத்தானே -என்று அருளிச் செய்து அருளினார் –

மாம் -என்கிற நிலை தன்னிலே இவை எல்லாம் உண்டு –
எல்லாருடையவும் -கண்ணுக்கு இலக்காய்ப் பாண்டவர்களுக்கு பவ்யனாய் நிற்கிற சௌலப்யமும்
இவர்கள் அந்ய தமன் என்னலாம் படி சஜாதீயனாகக் கொண்டு நிற்கிற சௌசீல்யமும்
விஸ்ருஜ்ய சசரம் சாபம் -என்று கையில்  வில்லைப் பொகட்டு யுத்தாது பரனாய் குதிரைக் குட்டியான
அர்ஜுனனை யுத்தத்திலே மூட்டின பின்பு -அவனுடைய இழவு பேறு தன்னதாம் படியான ஸ்வாமித்வமும்-
மம ப்ராணா ஹி பாண்டவா -என்று அவர்களை ஒழியத் தனக்குச் செல்லாத படியான வாத்சல்யமும் தோற்ற நின்று வ்யாபரிக்கையாலே –

பல பிரதானத்துக்கு  உபயுக்தமான குணங்கள் ஆவன –
சர்வஜ்ஞத்வ -சர்வ சக்தித்வ -அவாப்த சமஸ்த காமத்வ -நிருபாதிக சேஷித்வ -பரம தயாளுத்வங்கள் –
இவை பல பிரதானத்துக்கு உபயுக்தம் ஆகிறபடி எங்கனே என்னில் –

சர்வஜ்ஞத்வம் ஆகிறது -சரணாகதனுடைய இஷ்ட அநிஷ்டங்களை அறிய வல்லனாகை –
சர்வ சக்தித்வம் ஆவது -நித்ய சம்சாரிகளை நித்ய ஸூரிகளோடு ஒரு கோவையாக்க  வல்லனாகை –
இது செய்யும் இடத்தில் பிரயோஜன நிரபேஷமாகச் செய்யும் போது அவாப்த சமஸ்த காமனாக வேணும் –
தன் பேறாகச் செய்யும் போதைக்கு  நிருபாதிக சேஷியாக வேணும் –
இக் குணங்கள் எல்லாம் சுவர்த் தலையில் பூனை போலே  சம்சரிப்பிக்கைக்கும் உறுப்பாய் இருக்கையாலே
இக்குணங்கள் இவனுடைய உஜ்ஜீவனத்துக்கு உறுப்பாம் போது பரம தயாளுவாக வேணும் –
ஆகையாலே க்ருபா சஹ்ருதமான ஜ்ஞான சக்த்யாதிகள் இவனுக்கு உஜ்ஜீவனம் என்றதாய்த்து –

விதி வாய்க்கின்று காப்பாரார்-5-1-1-என்றும் –
சேமம் செங்கோன் அருளே -திரு விருத்தம் -27- என்றும்
ஆழியான் அருளே -பெரிய திரு மொழி -1-1-4- என்றும் –
துணியேன் இனி நின்னருள் அல்லது எனக்கு -பெரிய திருமொழி -11-8-8- என்றும்
க்ருபயா கேவலமாத்ம சாத்குரு-என்றும் –
கேவலம் மதீயயைவ தயயா-என்றும்
ஆழ்வார்களோடு ஆசார்யர்களோடு வாசியற க்ருபா குணத்தினுடைய ப்ரதான்யம் அருளிச் செய்யப் பட்டது இறே-

க்ருபா சஹக்ருத ஜ்ஞான சக்த்யாதி குணங்கள் சரண்யதைக்கு உபயுக்தம் என்னும் இடத்தை –
சக்தேஸ் ஸூபசதத் வாச்ச க்ருபா யோகாச்ச -ஈசேசி தவ்ய சம்பந்தாத நிதம் பிரதமாதபி
ரஷிஷ் யத்ய நு கூலான்ன இதி யா ஸூ த்ருடாமதி  ஸ விச்வாசோ பவேச்சஆக்ரா சர்வ துஷ் க்ருத நாசன –
என்று பகவஸ் சாஸ்த்ரத்திலே சொல்லிற்று –

ஏவ மவஸ்தித ஸ்யாப் யர்த்தித்வ மாத்ரேண பரம காருணிகோ   பகவான் -ஸ்வ அனுபவ ப்ரீத்ய உப நீதைகாந்திகாத் யந்திக
நித்ய கைங்கர்யைகரதிரூப நித்ய தாஸ்யம் தாஸ்ய தீதி  விஸ்வாச பூர்வகம் பகவந்தம் நித்ய கிங்கரதாம் ப்ரார்த்தயே -என்று
ஸ்ரீஎம்பெருமானார் அருளிச் செய்து அருளினார் –
பாபீ யஸோபிசரணாகதி சப்த பாஜோ நோபேஷணம் மம தவோசித மீஸ்வரஸ்ய-
த்வஜ்ஞான சக்தி கருணா ஸூ சதீஷு நேஹ பாபம் பராக்ரமிது மர்ஹதி மாமகீனம் -என்று ஸ்ரீ ஆழ்வானும் அருளிச் செய்து அருளினான் –

கீழ் உக்தமான  குணங்கள் எல்லாம் சரண்யத்வ உபயுக்தங்களாய் இருக்கும் –
மாம் -அஹம் -என்கிற பதங்களில் பிரித்து அனுசந்திக்கைக்கு ஹேது –
மாம் -என்கிற பதத்திலே சொல்லுகிற குணங்கள்
வ்ரஜ -என்கிற இடத்திலே அதிகாரி க்ருத்யமான விஸ்வாச ஜனக மாத்ரமாய் இருக்கையாலும்
அஹம் -என்கிற இடத்தில் சொல்லுகிற குணங்கள் விஸ்வாச ஜனகங்களாய் இருக்கச் செய்தேயும்
உபாய க்ருத்யமான பாப விமோசனத்துக்கு பரிகரமாய் இருக்கையாலே
பாப விமோசனைச் சொல்லுகிற அஹம் சப்தத்திலே அனுசந்திக்க வேண்டுகையாலும்

கீழ் உக்தமான குணங்கள் எல்லாத்தாலும் –
வாரிக் கொண்டு உன்னை விழுங்குவன் காணில்  என்று
ஆர்வுற்ற வென்னை வொழிய என்னில் முன்னம் பாரித்துத் தான் என்னை முற்றப் பருகினான் -9-6-10-என்கிறபடியே 
ஒரு சேதனனைப் பெற்றானாகில் ஜீவித்தல் இல்லையாகில் நாவிலும் பல்லிலும் நீரற்றுக் கிடக்கும்படியான
அவனுடைய வ்யாமோஹ குணமே இவனுக்குத் தாரகம் –
உய்வுபாயம் மற்றின்மை தேறி -4-3-11-என்று அருளிச் செய்து அருளினார் இறே ஆழ்வார்-

நாட்டில் சரண்யரைக் காட்டில் இவனுக்கு விசேஷம் –
நிருபாதிக சம்பந்தமும் —
நிருபாதிக ரஷகத்வமும் –

இந்த குண விசேஷம் இவ்விடத்திலே த்வயத்திலே சரண சப்தத்தால் சொல்லப்பட்ட
விக்ரஹத்தையும் சொல்லுகிறது -அதாவது –
சேநா தூளி தூ சரிதமான திருக் குழலும் –
கையும் உழவு கோலும் –
பிடித்த சிறு வாய்க் கயிறும் –
தேருக்குக் கீழே நாற்றின திருவடிகளும் –
திருச் சதங்கையுமாயக் கொண்டு இருக்கும் இருப்பு –

இத்தால் சரண்ய வஸ்து–
சர்வ ரஷகமுமாய்-
சமஸ்த கல்யாண குணாத் மகமுமாய்
ஸ விக்ரஹமுமாய்-இருக்கும் என்றது ஆய்த்து-

ஸ்ரீ மன் நாராயண சரனௌ-என்று இ றே-சரணாகதி மந்த்ரம் –
அலர்மேல் மங்கை யுறை மார்பா -6-10-11- என்று தொடங்கி-
அடிக் கீழ்  அமர்ந்து புகுந்தேனே -என்று இறே அபியுக்தர் வார்த்தையும் –

இத்தால் சத்வாரமாக அவனை பஜிக்கும் உபாயாந்தரங்களில் வ்யாவ்ருத்தி சொல்லுகிறது –
உபாயாந்தரங்களில் காட்டில் இவ்வுபாயத்துக்கு ஐகாந்த்யம் யுண்டு என்னும் இடத்தை த்யோதிப்பிக்கிறது –
இத்தால் இவ்வுபாயம் ஸ்வரூபத்துக்கு அனுரூபமாகக் கடவது –

————————————————————————

4- ஏகம்-
இந்த ஏக சப்தத்தை சரண சப்தத்துக்கு விசேஷணம் ஆக்கி -அத்விதீயமான உபாயம் என்றபடியாய்-
அதாகிறது சமாப்யதிக தரித்ரம் என்று நம்மாசார்யர்களில் சிலர் நிர்வஹிப்பர்கள் –

நஞ்சீயர் இதுக்கு -அவதாரணத்தைச் சொல்லுகிறது -என்று அருளிச் செய்வர் –
எங்கனே என்னில் –
த்வமேவ உபாய பூதோ மே பவ -என்றும் –
தமேவ சரணம் கச்ச -என்றும் –
மாமேவ யே ப்ரபத் யந்தே -என்றும்
தமேவ சாத்தியம் புருஷம் ப்ரபத்யே -என்றும் ஸ்தான பிரமாண சித்தம் ஆகையாலே –

ஆனால் இவ்வதாரணத்துக்கு வ்யாவர்த்யம் ஆவது எது என்றால் –
கீழே உபாயாந்தரங்களைச் சொல்லுகையாலே அவற்றை வ்யாவர்த்திக்கிறது என்ன ஒண்ணாது –
மாம் -என்று அசாதாரண ஆகாரத்தைக் கீழே சொல்லுகையாலே தேவதாந்த்ரம் வ்யாவர்த்யம் என்ன ஒண்ணாது –

பின்னை ஏதாவது என்றால் –
இனி இங்கு  உள்ளது -ஸ்வீகார்யமும் -ஸ்வீகாரமும் – ஸ்வீ கர்த்தாவுமாக வேணும் இறே –
அதில் ஸ்வீகார்யன் -உபாயமாய் நின்றால் -இனி உள்ளது ஸ்வீகாரமும் ஸ்வீகர்த்தாயும் இறே –
அந்த ஸ்வீகர்த்தாவோபாதி ஸ்வீகாரமும் உபாயத்தில் புகாது என்கிறது -ஆவது என்-
உபாய உபேயத்வே ததி ஹ தவ தத்தவம் ந து குனௌ-என்கிறபடியே உபாயத்வம் நித்தியமே யாகிலும்
இவனுடைய ஸ்வீகார  அநந்தரம்-ஆகவன்றோ உபாயம் ஆகிறது –
யத் அநந்தரம் யத் பவதி தத் தஸ்ய காரணம் -என்கிறபடியே –
இந்த ஸ்வீகார அநந்தரம் ஆகவல்லது ஈஸ்வரனுடைய உபாய பாவம் சித்தியாமையாலே
இது உபாயமாதல் சஹ காரியதலாக வேண்டாவோ என்னில் –
மாமேகம் சரணம் வ்ரஜ -என்று உபாய ஸ்வீகாரமாகச் சொல்லுகையாலே சாஷாத் உபாயத்வம் இதுக்கு இல்லை –

இனி சஹகரிக்கை யாவது -உத்பத்தியில் சஹகரித்தல் -பல பிரதானத்தில் சஹ கரித்தல் ஆய்த்து –
பக்த்யுபாயம் கர்ம ஜ்ஞான சாத்தியம் ஆகையாலே உத்பத்தியிலே சேதன சாபேஷம் –
அசேதனம் ஆகையாலே பல பிரதானத்திலே ஈஸ்வர சாபேஷம் –
இவ்வுபாயம் சித்த வஸ்துவுமாய் நிருபாதிக சர்வ ஸூஹ்ருத்துமாய் இருக்கையாலே உத்பத்தி நிரபேஷம் –
சர்வஜ்ஞத்வாதி குண விசிஷ்டம் ஆகையாலே பல பிரதானத்தில் நிரபேஷம் –

ஆனால் -யத் யத் சாங்கம் தத் தத் சாதனம் -என்கிறபடியே உபாயம் சாங்கமாய் அன்றோ இருக்க வேணும் –
இவ்வுபாயம் சித்தமாய் இருக்கிற படி என் என்னில் –
உபாயமாகில் சாங்கமாய் இருக்க வேணும் என்கிற நிர்ப்பந்தம் இல்லை –
அவை சாத்யமுமாய் அந்ய சாபேஷைமுமாய் இருக்கையாலே சாங்கமாக வேண்டிற்று இத்தனை
இவ்வுபாயம் சித்தமுமாய் அந்ய நிரபேஷமுமாய் இருக்கையாலே நிரங்கமாய் இருக்கும் -ஆனால்
உபாயாந்தரங்களுக்கும் உபாயத்வ வ்யபதேசம் பண்ணுகிறது –பல ப்ரதைகளான தேவதைகளுக்கு 
ப்ரசாதகங்களான முகத்தாலே யன்றோ –

அவ்வோபாதி இவ்வுபாயமும் ஈஸ்வர பிரசாதகம் ஆனாலோ வென்னில் –
தேவதைகளில் சேதனற்கு பூர்வமே பலத்தைக் கொடுப்பதாக நினவின்றிக்கே இருக்கச் செய்தே
இச் சேதனருடைய க்ரியை யாய்த்து -அவர்கள் பிரசாதத்தை ஜநிப்பிக்கிறது
ஈஸ்வர விஷயத்தில் வந்தால் –
சர்வாத்மாக்களுக்கும் ஸ்வரூப ஆவிர்பாவத்தை உண்டாக்குவதாக பூர்வமேவ சிந்தித்து அவசர ப்ரதீஷனாய்ப் போருகையாலே
அவனுக்கு பிரசாத ஜனகமாகச் செய்ய வேண்டுவது ஓன்று இல்லை –
யுண்டு என்று இருக்கை யாகிறது தன் ஸ்வரூப பாரதந்த்ர்யத்தையும் அழித்து
அவனுடைய ரஷகத்வத்தையும் சோபாதிகம் ஆக்குகிறான் இத்தனை –

ஆனால் மோஷத்துக்குத் தன்னை ஒழிய உபாயாந்தரங்களை விதிப்பான் என் என்னில் –
இதை இவர்களுக்கு ஹிதமாய் விதிக்கிறான் அல்லன் –
அறத்தி வர்க்கத்தின் பெருமையாலே கோயிலங்காடியிலே எல்லாச் சரக்கும் பாரித்து வைக்கிறாப் போலே
த்ரை குண்ய விஷயா வேதா நிஸ்த்ரை குண்யோ பவார்ஜுன -என்றும் –
முத்திறத்து வாணியத் திரண்டில் ஓன்று நீசர்கள் மத்தராய் மயங்குகின்ற திட்டத்தில்
இறந்து போந்து -திருச் சந்த விருத்தம் -68-என்கிறபடியே –
சேதனருடைய ருச்யனு குணமாகத் தன் செல்லாமையாலே விதிக்கிறான் இத்தனை –

புருஷோத்தம வித்யையில் புருஷோத்தமத்வ வேதநத்தால் அல்லது வழி இல்லை என்கிற இதுவும் அவனிட்ட வழக்கு –
சரணம் என்கிற இதுவும் அந்த முக்ய அதிகாரிகளுக்கு – ருச்யனு குணமான சாதனங்களில்  இதல்லது போக்கி
அவ்யவஹித சாதனம் ஓன்று இல்லை என்று அல்லாத உபாயங்களில் காட்டில் இவ்வுபாயத்தினுடைய ஏற்றமும்
அல்லாத அதிகாரிகளில் காட்டில் இவ்வதிகாரியினுடைய ஏற்றமும் சொல்லுகிறது இத்தனை –

மாம் நயேத் யதி காகுத்ச்தஸ் தத் தஸ்ய  சத்ருசம் பவேத் -என்றும் –
முன் நின்றாய் என்று தோழி மார்களும் அன்னையரும் -5-5-9- என்றும்
நிறைந்த வன் பழி நம் குடிக்கு  இவள் -5-5-7- என்றும் –
இரு நிலத்தோர் பழி படித்தேன் -திரு நெடும் தாண்டகம் -12- என்றும் –
சோம்பரை யுகத்தி -திரு மாலை -38- என்றும் சொல்லுகிறபடியே பதி வ்ரதைக்கு  பதியை ஒழிய
தன் பாரதந்த்ர்ய ஸ்வரூபத்துக்கு பாதகமாக ஸ்வ யத்னத்தாலே அர்த்தம் ஆர்ஜித்து ஸ்வ தேக போஷணம்
பண்ணுமாகில் அது தன் ஸ்வரூபத்துக்கு சேராதே –
தன்னளவிலும் பர்யவசியாதே -தன் பர்த்தாவுக்கும் அவத்ய அவஹமாய் இருக்கும் –
தான் ஒன்றும் செய்யாதே -அவன் ரஷிக்க கண்டு இருக்குமாகில் -அது இருவர் ஸ்வரூபத்துக்கும்
நன்னிறம் யுண்டாக்க கடவது –

அப்படியே தன் ஸ்வரூபத்தை யுணர்ந்து தன் ஸ்வரூப அனுகுணமாக அவனையே ப்ராப்யமும் ப்ராபகமுமாய்
நினைத்து இருக்கும் அதிகாரிகளோடு அவர்களை சமராய்ச் சொல்லுகிறது அல்ல –
சத் கர்ம நிரதாஸ் ஸூ த்தாஸ் சாங்க்யயோக விதஸ்ததா -நார்ஹந்தி சரணஸ் தஸ்ய கலாம் கோடிதமீமபி-என்றும் –
விஷ்ணு உபாயோ யோ அந்ய பலஸ் ஸோ அதம பரிகீர்த்தித -அன்யோ பாயோ விஷ்ணு பலோ மத்யம பரிகீர்த்தித –
மாத வாங்க்ரித்வயோபாயோ மாத வாங்க்ரி ரயோஜன -யஸ்ஸ  ஏவோத்தம ப்ரோக்தோ
மாதவே நைவ தே நவை -என்னக் கடவது இறே-

ஆனால் -அவஸ்ய கர்த்தவ்யமான  உபாய ஸ்வீகாரத்துக்கு வேஷம் ஏது என்னில் –
அசித் வ்யாவ்ருத்தி லஷணமுமாய்-
பிரதி பந்தக நிவர்த்தகமுமாய் –
ஸ்வ சித்த சமாதானமுமாய்க் கிடக்கிறது –

பகவத் ப்ரவ்ருத்தி விரோதி ஸ்வ ப்ரவ்ருத்தி நிவ்ருத்தி -பிரபத்தி -என்று சோமாசி யாண்டான் அருளிச் செய்வர் –

இவ்வுபாயம் தான் ஒராகாரத்தாலே சாபேஷமுமாய்-
ஒராகாரத்தாலே நிரபேஷமுமாய் இருக்கும் -எங்கனே என்னில்
ஆஸ்ரயண காலத்தில் அதிகாரி சாபேஷமுமாய் -பல பிரதானத்தில் இதர நிரபேஷமுமாய் இருக்கும் –

ஆக –
எம்பெருமான் நிருபாதிக ரஷகன் ஆகையாலும்
ரஷண பலம் தன்னது ஆகையாலும்
ஆள் பார்த்து உழி தருவாய்  -நான் முகன் -60-என்கிறபடியே பூர்வமேவ ஸ்ருஷ்ட்யவதாரங்களைப்   பண்ணி
சேதனருடைய இச்சைக்கு அவசர ப்ரதீஷனாய் போருகிறவன் ஆகையாலும்
அவனுடைய நிர்ஹேதுகமான க்ருபா பிரசாதங்களே உபாயம் என்றதாய்த்து –

க்ருபயா கேவலமாத்மசாத் குரு-என்றும்
கேவலம்  மதீயயைவ தயா நிச்சேஷவி நஷ்டச ஹேதுக -என்றும் –
கேவலம் மதீயயைவ தயா அதிப்ரபுத்த -என்றும்
ஆளவந்தாரும் எம்பெருமானாரும் ஸ்தோத்ர கத்யங்களிலே இவ்வர்த்தத்தை அருளிச் செய்து அருளினார்கள் –

வ்ருத்த சேவைக்குப் பலம் அவதாரணார்த்தம் அறிகை என்று பிள்ளை அருளிச் செய்து அருளுவர் –

இத்தாலும் இவ்வுபாயம் ஸ்வரூபத்துக்கு அனுரூபமாய் இருக்கும் என்றதாய்த்து –

—————————————————————————————-

5- சரணம் -என்றது –
உபாயே க்ருஹ ரஷித்ரோஸ் சப்தஸ் சரணம் இத்யயம்-வர்த்ததே சாம் ப்ரதஞ்சைஷ உபாயார்த்தை க வாசக -என்கிறபடியே
சரண சப்தம் -உபாய வாசகமாய் –
அநிஷ்ட நிவ்ருத்தி பூர்வகமான இஷ்ட பிராப்திக்கு அவ்யவஹித உபாயம் -என்றபடி –
சரண சப்தம் அவ்யவஹித உபாயம் என்னும் இடத்தைக் காட்டுகிற படி தான் எங்கனே என்னில்
கீழே பகவத் வ்யதிரிக்த சாங்க சகல தர்மத்தையும் விடச் சொல்லுகையாலே –

—————————————————————————————-

6- வ்ரஜ -வ்ரஜ  -க தௌ-என்கிற தாதுவிலே
கத்யர்த்தமாய் -கத்யர்த்தா புத்த்யர்த்தா -என்கிறபடியே -அத்யவசி-என்கிறபடி –
அத்யவசாயமும் விஸ்வாசமும் பர்யாயம் ஆகையாலே விச்வாசத்தைச் சொல்லுகிறது
பிரதிபத்தி லஷண வாக்யத்திலே மஹா விஸ்வாச பூர்வகம் -என்று சொல்லுகையாலும்
அனுஷ்டான வாக்யத்திலும் உப சர்க்கத்தாலே மஹா விச்வாசத்தைச் சொல்லுகையாலும்
இங்கும் அந்த விச்வாசத்தையே விதித்ததாகக் கடவது –

மஹா விஸ்வாசம் ஆவது -சங்கா த்ரய ரஹிதமான விஸ்வாசம் –
சங்கா த்ரயமாவது-உபாய பல்குத்வமும் -உத்தேச்ய துர்பலத்வமும்-ஸ்வ க்ருத தோஷ தர்சனமும் –
இவை பரிஹ்ருதமாகிறது எத்தாலே என்னில் –
மாம் -என்கிற பதத்தில் சொல்லுகிற குண சம்பந்தங்களாலே-
சர்வஜ்ஞனுமாய் -சர்வ சக்தனுமாய் -பரம காருணிகனுமாய்-பரம உதாரனுமாய் -இருக்கும் என்கையாலே
பல கௌரவத்தால் வந்த சங்கை பரிஹ்ருதம் –
ஆஸ்ரித வத்சலன் என்கையாலே ஸ்வ க்ருத தோஷ தர்சனம் ஆகிற சங்கை பரிஹ்ருதம் –
அசரண்ய சரண்யனுமாய் அனலோசித விசேஷ அசேஷ லோக சரண்யனுமாய் இருக்கும் என்கையாலே
உபாய லாகவம் ஆகிற சங்கை பரிஹ்ருதம் –

ஆக இத்தனையாலும் குணவத்தாத்யவஸாயம் சொல்லிற்று –
இனி மேல் ஸ்வரூபாத்யவஸாயம் சொல்லுகிறது –
சர்வ ஸ்வாமி என்கையாலே உபாய லாகவம் ஆகிற சங்கை பரிஹ்ருதம் –
ஸ்ரீ மான் என்கையாலே ஸ்வ க்ருத தோஷ தர்சனம் ஆகிற சங்கை பரிஹ்ருதம்
நாராயணன் என்கையாலே பல கௌரவம் ஆகிற சங்கை பரிஹ்ருதம்

ஆக இத்தால்
தன்னுடைய ஸ்வரூப குண சித்த்யர்த்தமாகவே சரணாகத ரஷணம் பண்ணும்
என்கிற மகா விஸ்வாசம் பிரபத்தி என்றதாயிற்று –

இது தான் -பிரார்த்தனா கர்ப்பமாய்  இருக்கும் –
மஹா விஸ்வாச தத் ஏக உபாயதா யாச்ஞா பிரபத்திஸ் சரணாகதி -என்றும் –
த்வமேவ உபாயபூதோ மே பவதி ப்ரார்த்தநா மதி சரணாகதி -என்றும் –
லஷண வாக்யங்களில் சொல்லுகையாலே விசேஷேண சரணாகதியில் ப்ரார்த்தனம் ஆவது
அவனை உபாயத்வேந ஸ்வீகரிக்கை –
அதாகிறது -நமக்கு உபாயம் இவனே என்று இருக்கை-

ஆக –
கர்மமும் இன்றியிலே
கர்ம சாத்யமான ஜ்ஞானமும் இன்றியிலே –
ஜ்ஞான – பக்தியும் இன்றியிலே
இவற்றினுடைய த்யாக பூர்வகமுமாய் –
தான் உபாயமும் அன்றிக்கே உபேயமும் அன்றிக்கே அதிகாரிக்கு விசேஷணமாய் இருப்பதோர்
அத்யவசாயாத்மாக ஜ்ஞான விசேஷம் என்றதாய்த்து –
இனி வாசிக காயிகங்கள் யுண்டாகவுமாம்-இல்லை யாகவுமாம் என்கை-

இந்த விதி அனுஷ்டானத்துக்கு அவதி ஏது என்னில் –
சக்ருதேவ பிரபன்னச்ய நைவ அந்யதிஷ்யதே-என்றும்
பிரபத்திர் விஸ்வாச -என்றும் –
சக்ருத் பிரார்த்தனா மாத்ரேண அபேஷிதம் தாஸ்யதீதி விஸ்வாச பூர்வக ப்ரார்த்தனாம் இதி யாவத் -என்றும் சொல்லுகையாலே
இந்த விதி அனுஷ்டானம் ஆகிற உபாய ஸ்வீகாரம் சக்ருத் என்னும் இடம்
பிரபத்தி சாஸ்த்ரங்களாலும் பிரபத்தி வித்துக்களாலும்  நிஷ்கர்ஷிக்கப் பட்டது-

இந்த விதி சேஷமான மாஸூச -என்கிற விதி யாவத் பிராப்தி அளவும் அனுஷ்டேயம்-அதாகிறது –
இனி நமக்குக் கர்த்தவ்யாம்சங்கள் ஒன்றும் இல்லை –
பல சித்தியில் ஒரு குறையில்லை என்று விமர்ச தசையில் பிறக்கும் விஸ்வாசம் ஆகையாலே
உபாய அனுஷ்டானமும் அனுஷ்டித்த உபாய பரிபாலனமும் கர்த்தவ்யம்  என்றதாய்த்து –

பூயஸ்த்வம் ச்ருணு சங்ஷேபம் மநஸா தே அநஸூயா –ஸ்ருத்வா ச குரு யத்நேந ரஸா
சாப்யப்ரமாதி நீ -என்றும் சொல்லிற்று இறே-
ஆகையால் உபாய ஸ்வீகாரம் சக்ருத்  என்னும் இடமும்
ஸ்வீகார விசேஷணமுமான  விஸ்வாசம் யாவத் பிராப்தி யளவும்
விமர்ச தசையிலும் அனுவர்த்திக்க வேணும் என்னும் இடம் சொல்லிற்று ஆய்த்து-

ஸ்வர்க்க சாதனமான ஜ்யோதிஷ்டோமம் சப்தா ஹச்சிலே விஹிதமாய் இருக்கச் செய்தேயும்
அந்த யாகாந்தர் பூதமான அக்னி ஹோத்ரம் ஆப்ரயாணம் அஹரஹர அனுஷ்டேயமாம் போலே   –
இந்த அக்னி ஹோத்ரம் அனுஷ்டியாது ஒழிந்தால் பலத்துக்கு விலம்பமுண்டாய்-
அனுஷ்டித்தால் ப்ரதிபந்தகம் இன்றிக்கே விசேஷ பலம் யுண்டாய் இருக்குமா போலே
ஆவ்ருத்தி  ரூபமான விசுவாசமும் நிஷ்டா வான்களுக்கு நிஷ்டா பிரகாசகமுமாய்
கால ஷேபம் ஆகிற பலத்தையும் யுடைத்தாய் இருக்கும் –

விச்வாசத்தினுடைய ஆவ்ருத்திகள் கிணற்றுக்கு உள்ளே இருந்து உஜ்ஜீவிப்பாரைப் போலே -என்று
பிள்ளை அருளிச் செய்து அருளுவர் –

ஆக –
ஸ்வீகாரத்துக்கு உபாயாந்தர த்யாகம் அங்கம் என்னும் இடத்தையும்
த்யாக பூர்வகமான ஸ்வீகாரம் அதிகாரிக்கு விசேஷணம் என்னும் இடத்தையும் –
ஸ்வீக்ருதனான அதிகாரிக்கு குண விசிஷ்டனான ஈஸ்வரன் உபாயம் என்னும் இடத்தையும் சொல்லிற்று ஆய்த்து –

ஆகையாலே
த்யாக விசிஷ்டம் ஸ்வீகாரம்
ஸ்வீகார விசிஷ்டம் அதிகாரம்
குண விசிஷ்டம் உபாயம் -என்றது ஆய்த்து –

—————————————————————————

7-8-ஆக இதுக்குக் கீழே அதிகாரிக்கு கர்த்தவ்யம் சொல்லிற்று –
இனி ஈச்வரனுக்குக் கர்த்தவ்யம் சொல்லுகிறது -அஹம் த்வேத்யாதி –
மோஷயிஷ்யாமி-என்கிற உத்தமனுக்கும்
மாஸூச -என்கிற மத்யமனுக்கும் பிரதி சம்பந்தி தயா அஹம் த்வா -என்கிற சப்தங்கள் தன்னடையே வருவதாய் இருக்க
வாசிகமாகச் சொல்லுகிற இதுக்கு பிரயோஜனம் என் என்னில் –
சில அபிப்ராயத்தைப் பற்றச் சொல்லுகிறது –
இது தான் மாமேகம் சரணம் வ்ரஜ -என்கிற சரண்ய அனுவாதமும்
சரணாகதனுடைய அனுவாதமுமாய் இருக்கிறது -அதாகிறது –
உனக்கு உபாய பூதனான நான் – என்னையே உபாயமாகப் பற்றியிருக்கிற உன்னை -என்றபடி –

7-அஹம் –
தேஹாத்மா அபிமானி அஹம் என்றால் தேகத்தைக் காட்டும் –
பிரகிருதி புருஷ விவேகம் பண்ணினவன் அஹம் என்றால்
ப்ரக்ருதே பரனாய் பரம சேஷ பூதனான ஆத்மாவைக் காட்டும் –
ஈஸ்வரன் அஹம் என்றால் உள்ளது எல்லாத்தையும் காட்டும் இறே –

இந்த அஹம் சப்தம் -மாம் -என்கிறத்தோடே சேர்ந்து அஹமாய்த்து –
மாம் என்கிற விடம் அதிகாரி க்ருத்யமான மஹா விச்வாசத்துக்கு உறுப்பாக சொல்லிற்று –
அஹம் என்கிறவிடம் ஈஸ்வர க்ருத்யமான பாப விமோசனத்துக்கு உறுப்பாகச் சொல்லுகிறது –
அதாகிறது
பந்தகனான நானே விமோசகனானால் நிவாரகர் யுண்டோ என்கை-
அதாகிறது –
சமாப்யதிக தரித்திரன் என்றபடி –
இவ்விடத்திலே விசேஷித்து பல பிரதானத்துக்கு உபயுக்தமான குணங்கள் அனுசந்தேயங்கள் –

———————————–

8-த்வா-
கீழ்ச் சொன்னபடியே சகல தர்மங்களையும் விட்டு
என்னையே நிரபேஷ  சாதனமாகப் பற்றின உன்னை -என்றபடி –
இத்தால் மேல் சொல்லப் புகுகிற சோக விமோசன ஹேதுவைச் சொல்லிற்று –

————————————————–

அஹம் த்வா -என்கிற இரண்டு பதத்தாலும் ஸ்வீகார்யமான உபாய வேஷத்தையும் –
ஸ்வீகர்த்தாவான அதிகாரி வேஷத்தையும் சொல்லி நின்றது –
இனி மேல் ஸ்வீகார்யமான ஈஸ்வர க்ருத்யத்தையும்
ஸ்வீக்ருத உபாயனான அதிகாரி க்ருத்யத்தையும் சொல்லுகிறது –

9-சர்வ பாபேப்ய –
பாபமும் –
பஹூ வசனமும் –
சர்வ சப்தமுமாய் –
இதுவும் த்ரிவிதமாய் இருக்கும் –

பாபமாவது –
அநிஷ்டமான பலத்தைத் தருவதுமாய்-இஷ்ட பலத்துக்கு விரோதியுமாய் இருப்பதொன்று –
இங்குத்தை பாபம் ஆகிறது
அநிஷ்டமான சாம்சாரிக துக்கத்தை யுண்டாக்கக் கடவதாய் -இஷ்டமான மோஷத்துக்கு விரோதியுமாய் இருப்பதொன்று –

பஹூ வசனத்தாலே –
அவற்றினுடைய பாஹூள்யத்தை சொல்லுகிறது -அதாகிறது –
அவித்யா கர்ம வாசனா ருசி பிரகிருதி சம்பந்தங்கள் –
அவித்யை யாவது -அந்யதா ஜ்ஞானமும் -விபரீத ஜ்ஞானமும் -ஜ்ஞான அநுதயமும் –
கர்மமாவது -புண்ய பாபம் -மோஷத்தைப் பற்ற பாபத்தோபாதி புண்யமும் த்யாஜ்யம் –
புண்ய பாப்பா விதூய -என்னக் கடவது இறே-

வாசனை யாவது- அஜ்ஞான வாசனையும் -கர்ம வாசனையும் -பிரகிருதி வாசனையும் –
ருசியும் விஷய பேதத்தாலே பஹூ விதையாய் இருக்கும் –
பிரகிருதி சம்பந்தம் -ஆவது ஸ்தூல ஸூஷ்ம ரூபமாய்  இருந்துள்ள அசித் சம்பந்தம் –
இவ்வளவால் உபாசகனுக்கும் சாதாரணமாக ஈஸ்வரன் கழித்துக் கொடுக்கும் ஆகாரத்தைச் சொல்லிற்று –

இனி -சர்வ சப்தத்தாலே
பிரபன்னனுக்கு அசாதாரணமாகக் கழித்துக் கொடுக்குமவற்றைச் சொல்லுகிறது -அதாகிறது –
ததி திகம உத்தர பூர்வாக யோரஸ் லேஷ விநாசௌ-தத் வ்யபதேசாத் -என்றும் –
இதரஸ் யாப்யேவமவமஸ்ம் ஸ்லேஷ பாதே து -என்றும்
பூர்வ உத்தராகங்கள் ஆகிற புண்ய பாபங்களுக்கு அச்லேஷ விநாசம் சொல்லி –
போகேந த்விதரே ஷபயித்வாத சம்பத்யதே -என்று
பிராரப்தம் அனுபவ விநாஸ்யம் என்னும் இடம் சொல்லிற்று இறே

இங்கு அப்படி இருப்பதொரு சங்கோசம் இல்லாமையாலே -அதுவும் சோக ஹேது வாமாகில்
சர்வ சப்தத்திலே அந்தர்பூதமாகக் கடவது –
எங்கனே என்னில் -இதுக்கு சங்கோசமாய் இருப்பதொரு சப்தம் இங்கு இல்லாமையாலே –
பிரபத்தி பிராரப்த கர்மத்துக்கு விநாசிநி-என்னும் இடத்துக்கு பிரமாணம் என் என்று  எம்பெருமானாரை ஆண்டான் கேட்க
மாஸூச -என்றது இறே என்று அருளிச் செய்து அருளினார்-

இது தான் ப்ராரப்ததையும் போக்கும் என்னும் இடத்துக்கு கண்டோக்தமான பிரமாணங்களும் உண்டு –
சாதனம் பகவத் ப்ராப்தௌ ச ஏவேதி ஸ்திராமதி-சாத்ய பக்திஸ் ஸ்ம்ருதா சைவ பிரபத்திரிதி கீயதே
உபாயோ பக்திரேவதி தத் ப்ராப்தௌ யா து சா மதி -உபாய பக்தி ரே தஸ்யா பூர்வோக்தைவ கரீயசீ
உபாய பக்தி பிராரப்த வ்யதிரிக்தாக நாசி நீ -சாத்ய பக்திஸ் து சா ஹந்த்ரீ ப்ராரப்தஸ்யாபி  பூயசீ -என்று பிரபன்னனுக்கு
சரீராந்த ஹேதுவான பிராரப்த சேஷம் அனுபவிக்க வேண்டுகிறது –
பிராரப்த சரீரத்தில் சோகம் இல்லாமையாலே
ஆரப்த கார்யான்-என்று ப்ராரப்தமும் பிரபத்தியாலே ஷந்தவ்யம் என்று உடையவர் கத்யத்தில் அருளிச் செய்தார் –

உபாசகனுக்கு உத்தராகத்துச் சொல்லுகிற அஸ்லேஷமும் பிரமாதிக விஷயம் என்று உடையவர்
பாஷ்யத்தில் அருளிச் செய்து அருளினார் –
இப்படி அருளிச் செய்கைக்கு ஹேது –
நாவிரதோ துஸ் சரிதான் நாசாந்தோ நாசமாஹித -நாசாந்த மா நசோ வாபி ப்ரஜ்ஞாநேநைநமாப் நுயாத்-என்கிற
வாக்யங்களோடு விரோதியாமைக்கும் –
அபி சேத பாதகம் கிஞ்சித் யோகி குர்யாத் ப்ரமாதத–யோகமேவ நிஷேவேத நான்யம் யத்னம் சமாசரேத்-
என்று யோகிகளுக்கு பிராயச்சித்தத்தை விதிக்கையாலும் –
பிரபன்னனுக்கு உத்தராகத்தில் புத்தி பூர்வமும் சோக ஹேது வாமாகில் அந்த புத்தி பூர்வத்துக்கும் பரி ஹாரமாகக் கடவது –
அதாவது
சரீர சம்பந்தத்தோடு இருக்கையாலே -வாசனையாலும் -பிரபல கர்மத்தாலும் -காதாசித்கமாக புத்தி பூர்வகம் சம்பாவிதம் –
இவற்றையும் பொறுத்து அருள வேணும் என்று பூர்வமேவ பிரார்த்தித்தான் ஆகில் அவையும்
பூர்வ பிரபத்தி தன்னாலே ஷந்தவ்யமாகக் கடவது என்கை-
ஆகை இறே-வர்த்தமானம் வர்த்திஷ்ய மாணாஞ்ச-என்று உடையவர் கத்யத்தில் அருளிச் செய்தது –

புத்தி பூர்வகமாக உத்தராகத்தில் சோகித்து சரணம் புக்கான் என்னும் இடம் அறியும் படி எங்கனே என்னில் –
உத்தர பிரவ்ருத்தியில் அனுதாபம் நடக்கையும் பூர்வ ப்ரபத்தியை ஸ்மரித்து திருட சித்தனாகையும் –
இன்னமும் ஸ்ரேஷ்டராய் இருப்பார்க்கு சிஷ்ய புத்ரர்களைப் பற்ற வித்யதிக்ரமம் பண்ணி
அனுஷ்டிக்க வேண்டி வருவன சில பாபமுண்டு -அந்தப் பாபங்களையும் சொல்லுகிறது –
ஆன்ரு சம்சய பிரதானராய் அனுஷ்டித்தாலும் ஏறிட்ட சட்டி ஆகாசத்திலே நில்லாதாப் போலே அவையும் ஒரு பலத்தோடு
சம்பந்திக்கக் கடவது -ஆகையாலே அவையும் பாப சப்த வாச்யமாகக் கடவது –

—————————————————————————————–

10-ஆக கீழ் விரோதி வேஷம் சொல்லி நின்றது –
மோஷயிஷ்யாமி-என்று விரோதி நிவ்ருத்தி பிரகாரம் சொல்லுகிறது –
மோஷயிஷ்யாமி -இவற்றில் நின்றும் விடுவிப்பன்-
யிஷ்யாமி -என்கிற ணி ச்சாலே யாவையாவை
சில பாபங்களைக் குறித்து நீ பயப்படுகிறாய் -அவை தானே உன்னைக் கண்டு பயப்பட்டுப் போம்படி பண்ணுகிறேன் –

அவை தானே விட்டுப் போம்படி பண்ணுகையாவது-
இவை நமக்கு முன்புண்டாய் கழிந்தது என்று தோற்றாத படி போக்குகை-இதாகிறது –
இவை ஸ்ம்ருதி விஷயமானாலும் தன்னுடைய ஸ்வா பாவிக வேஷத்தைப் பார்த்து ஸ்வப்னம் கண்டால் போலே
இவை நமக்கு வந்தேறியாய்க் கழிந்தது என்று இருக்கையும் –
ஸ்ம்ருதியால் துக்கம் அனுவர்த்தியாது இருக்கையும் –

கீழ் இவனை உபாயமாகப் பற்றிற்று அநிஷ்ட நிவ்ருத்தி பூர்வகமான இஷ்ட ப்ராப்த்திக்காய் இருக்க –
அநிஷ்ட நிவ்ருத்தி மாதரத்தைப் பலமாகச் சொல்லுவான் என் என்னில் –
யதோதவா நகரணாத் க்ரியதே ந ஜலாம்பரம் -சதேவ  நீயதே வ்யக்தி மசதஸ் சம்பவ  குத-ததா ஹேய குணத் வம்சாதவ
போதா தயோ குணா -பிரகாஸ் யந்தே ந ஜன்யந்தே நித்யா ஏவாத்மா நோ ஹி தே-என்றும்
ஸ்வேன ரூபேணாபி நிஷ்பத்யதே -என்றும் –
மம சஹஜ கைங்கர்யவிதய -என்கிறபடியே
அநிஷ்ட நிவ்ருத்தி உண்டானால் இஷ்ட ப்ராப்தி தன்னடையே உண்டாம் இறே-

ஆனால் -அநிஷ்ட நிவ்ருத்தி மாத்ரத்துக்கு ஈஸ்வரன் உபாயமாக இருக்கிறானோ -என்னில்
இஷ்ட பிராப்தியாகிற அநவதிக  அதிசய ஆனந்த ப்ரஹ்ம அனுபவத்துக்கு அர்ஹதையே உள்ளது –
இனி ஈஸ்வரன் அனுபவிப்பிக்கும் போது ஆய்த்து-இவனுக்கு அனுபவிக்கலாவது –
ஆகை இறே கைவல்யம் ஆகிற மோஷத்துக்கு அநிஷ்ட நிவ்ருத்தி ஒத்து இருக்கச் செய்தேயும்
அனுபவ மாத்ரமாய் இருக்கிறது
இவ் வைஷம்யத்துக்கு ஹேது உபாசன தாரதம்யத்தாலே ஈஸ்வரனுக்கு உண்டான பிரசாத தாரதம்யத்தாலே
சேதனன் புருஷார்த்தத்தை பிரார்த்திக்கும் போது இஷ்ட பிராப்தி ரூபமான கைங்கர்யத்தை
ப்ரதான்யேந பிரார்த்திக்கக் கடவன் –

இவனுக்கு கைங்கர்யம் ஆகிற புருஷார்த்தம் சஹஜமாய் இருக்கையாலே –
தத் விரோதி நிவ்ருத்தி மாத்ரத்தையே உபாயமான ஈஸ்வர க்ருத்யமாகச் சொல்லக் கடவது –
ஆகையாலே அந்த ப்ராதான்யத்தைப் பற்ற இங்கு அருளிச் செய்கிறான் –
அநிஷ்ட நிவ்ருத்தியும் இஷ்ட பிராப்தியும் ஈஸ்வரனுடைய க்ருபா பிரசாத க்ருத்யமாக கத்யத்திலே
உடையவர் அருளிச் செய்து அருளினார் –
ஆகையால் -இப்படி சரண்யன் சொல்லுகைக்கு அடி
இஷ்ட ப்ராப்தி ரூபமான கைங்கர்யம் இவனுக்கு ஸ்வா பாவிகம் என்னும் இடம் தோற்றுகைக்காகவும்-
அநிஷ்ட நிவ்ருத்தி யுண்டான போதே சஹஜமான இஷ்ட ப்ராப்தியும் உண்டாம் என்றும் –
அநிஷ்ட நிவ்ருத்தியினுடைய ப்ராதான்யத்தைப் பற்ற அருளிச் செய்கிறான்-

—————————————————————————————-

11–கீழே -அஹம் என்று-உபாய க்ருத்யம் சொல்லி நின்றது –
மேல் -த்வா-என்று நிஷிப்த பரஞான அதிகாரி க்ருத்ய சேஷம் சொல்லுகிறது –
மாஸூச -சோகியாதே கொள் -என்றபடி –

வ்ரஜ -என்கிற விதியோபாதி–மா ஸூ ச -என்கிற இதுவும் விதியாகையாலே –
ஸ்வீகாரத்தோ பாதி சோக நிவ்ருத்தியும் கர்த்தவ்யம் -என்கை-
ஆகையாலே -பிரபன்னனுக்கு யாவத் பல பிராப்தி நிர் பரத்வ அனுசந்தானம் கர்த்தவ்யம் என்றதாய்த்து –
ஸ்வீக்ருத உபாயனான பின்பு சோகித்தானாகில்-பிரபத்தி நிஷ்டைக்கு ஹாநி யுண்டாய் –
அத்தாலே பல விலம்பம் யுண்டாகக் கடவது –

பலியாய்த்து பல அலாபத்தில் சோகிப்பான்-
உபாய கர்த்தாவாய்த்து -உபாயம் இல்லை என்று சோகிப்பான் –
இவ்வுபாயத்தில் பலித்வ  கர்த்ருத்வங்கள் இரண்டும் உனக்கு இல்லை –
இனி நானே பலியுமாய் நானே கர்த்தாவாயுமாய் இருக்கையாலே நீ சோகிக்க வேண்டா -என்கை –
சக்ருதேவ பரபன்னச்ய க்ருத்யம் நைவான்யதிஷ்யதே -என்கையாலே கர்த்தவ்யாம்சம் உண்டு என்று சோகிக்க வேண்டா –

மாம் -அஹம் -என்கையாலே உன் விலக்காமை பார்த்து இருக்கிறோம் சிலராகையாலும் –
விரோதி நிரசன சமர்த்தனாகையாலும் சோகிக்க வேண்டா –
ஆகையாலே –
உன்னைப் பார்த்தாலும் சோகிக்க வேண்டா –
என்னைப் பார்த்தாலும் சோகிக்க வேண்டா -நிர்ப்பரனாய் இரு -என்கை –

உடையவனாய்த்து கிருஷி பண்ணுவான் –
கர்ஷகனாயாய்த்து பலம் புஜிப்பான்-
பலியாய்த்து பல அலாபத்தில் சோகிப்பான் –
இவை இத்தனையும் உனக்கு இல்லாமையாலே சோகியாதே -என்றதாய்த்து –

இனி சோகித்தாயாகில்-உன் ஸ்வரூபத்தையும் அழித்து-என் ப்ரபாவத்தையும் அழித்தாயாம் இத்தனை –
முன்பு சோகித்ததில்லை யாகில் அதிகார சித்தி இல்லை -பின்பு சோகித்தாயாகில் பல சித்தியில்லை –

இத்தால் -அதஸ்த்வம் தவ தத்த்வதோ மத் ஜ்ஞான தர்சன ப்ராப்திஷூ 
நிஸ் சம்சயஸ் ஸூகமாஸ்ஸ்வ-என்றபடி –

துஷ்கரமுமாய் -ஸ்வரூப விரோதியுமான சாதனங்களை த்யஜிக்கையாலே சோகிக்க வேண்டா –
ஸ்வீ கரிக்கப் புகுகிற உபாயம் ஸூலபமாகையாலே சோகிக்க  வேண்டா –
அது தான் நிரபேஷமாகையாலே சோகிக்க வேண்டா –
மானஸ வியாபார மாத்ரமாகையாலே வாய் நோவ உடம்பு நோவ க்லேசிக்க வேணும் என்று சோகிக்க வேண்டா –
உபாயம் பல பிரதான சமர்த்தம் ஆகையாலே சோகிக்க வேண்டா –
இனி கர்த்தவ்யாம்சம் உண்டு என்று சோகிக்க வேண்டா –
விரோத்யம்சத்தில் சேஷிப்பது ஓன்று உண்டு என்று சோகிக்க வேண்டா –
விரோதி போமோ போகாதோ என்று சோகிக்க வேண்டா -என்கிறது –

————————————————————————

1–த்யாஜய  ஸ்வரூபம் சொல்லி –
2–த்யாக பிரகாரம் சொல்லி –
3–உபாய ஸ்வீகாரத்துக்கு த்யாகம் அங்கம் என்னும் இடம் சொல்லி –
4–ஸ்வீகரிக்கப் புகுகிற உபாயத்தின் யுடைய சீர்மை சொல்லி –
5–அச் சீரிய உபாயம் நிரபேஷம் என்னும் இடம் சொல்லி –
6–உபேயத்வம் நித்யம் -உபாயத்வம் ஔபாதிகம் என்னும் இடம் சொல்லி –
7–பற்றும் இடத்தில் மானஸ வியாபாரமே அமையும் என்னும் இடம் சொல்லி –
8–உபாயத்தினுடைய சீர்மையைச் சொல்லி –
9–அதிகாரியினுடைய அபூர்த்தி சொல்லி –
10–அவ்வதிகாரியினுடைய விரோதி பாப சமூஹத்தைச் சொல்லி –
11–விரோதிகளில் கிடப்பது ஒன்றும் இல்லை என்னும் இடம் சொல்லி –
12–அவையடையத் தானே போம் என்னும் இடம் சொல்லி –
13–நிர்ப்பரனாய் இரு -என்கிறான் –

———————————————————————–

ஆக -இத்தால் –
1–ஸ்வீகாரங்களையும் –
2–த்யாஜ்ய தர்ம விசேஷங்களையும் –
3–அந்த தர்மங்களினுடைய த்யாக பிரகாரத்தையும் –
4–அந்த தர்ம த்யாக பூர்வகமாகப் பற்றும் விஷயத்தினுடைய சௌலப்யாதி குண யோகத்தையும் –
5–தத் விசிஷ்ட வஸ்து வினுடைய சஹாய அசஹத்வ லஷணமான நைரபேஷ்யத்தையும்-
6–அந்த நிரபேஷ வஸ்துவினுடைய உபாய பாவத்தையும் –
7–அத்தை உபாயத்வேன ஸ்வீகரிக்கையும் –
8–ஸ்வீக்ருத உபாயத்தினுடைய ஜ்ஞான சக்த்யாதி குண யோகத்தையும் –
9–தத் விசிஷ்ட வஸ்துவில் ந்யஸ்த பரனான அதிகாரியையும் –
10–தத் விரோதி பாப சமூஹத்தையும் –
11–தத் விமோசன பிரகாரத்தையும் –
12–தத் விமோசனனைப் பற்றின அதிகாரியினுடைய நைர்ப்பர்யத்தையும் –
சொல்லிற்று ஆய்த்து-

பிரபத்தி நிர்ப் பரத்வ அனுசந்தான சிரஸ்கமாகையாலே
நிர்ப் பரத்வ அனுசந்தானம் -சர்வதா கர்த்தவ்யம் -என்றதாய்த்து -வ்ரஜ -என்கிற ஸ்வீ காரத்துக்கு –

ஸ்ரீ தனி சரமம் முற்றிற்று –

—————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் அருளிச் செய்த — ஸ்ரீ தனிப்ப்ரணவம் —

May 22, 2015

ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர்  தனியன்  –

லோகாசார்யாய குரவே கிருஷ்ண பாதச்ய ஸூ நவே
சம்சார போகி சந்தஷ்ட ஜீவ ஜீவாதவே நம-

———————————————————————————————————————————————————————–

சகல வேத தாத்பர்யமாய் –
சகல சாஸ்திர சங்க்ரஹமாய்-
சகல பல ப்ரதமாய்-
சகல மந்த்ரங்களிலும் அதிகமான திரு அஷ்டாஷரமான திரு மந்த்ரத்துக்கு நம் பூர்வாச்சார்யர்கள்
ஸ்வரூபம் சொல்லுகிறது என்றும் –
ப்ராப்யம் சொல்லுகிறது என்றும் –
இரண்டுபடி வாக்யார்த்தம் -என்று அருளிச் செய்வார்கள் –

இம்மந்த்ரம் தான்
ஓம் -என்றும்
நம- என்றும்
நாராயணாய -என்றும் –மூன்று பதமாய் இருக்கும் –

இதில் முதல்பதம் –
பிரணவம் என்று திருநாமமாய் –
அகாரம் – என்றும் –
உகாரம் -என்றும் –
மகாரம் -என்றும் -மூன்று பதமாய் இருக்கும்-

இம்மந்த்ரத்துக்கு நம்பிள்ளை அருளிச் செய்த தாத்பர்யம் –
1- ஆஸ்ரயியையும்-
2- ஆஸ்ரயியினுடைய வைசத்யையையும் –
3-ஆஸ்ரயத்தையும்-
4- ஆஸ்ரயத்தினுடைய வைசத்யையையும் –
5-ஆஸ்ரயணீய வைபவத்தையும் –
6- ஆஸ்ரயண பலத்தையும் -சொல்லுகிறது என்று –

இதில் ஆஸ்ரயி-என்கிறது -சேஷத்வத்தை -இது பிரதம அஷரமான அகாரத்திலே சொல்லுகிறது –
ப்ரஹ்ம வாசியான அகாரத்தை சேஷத்வ வாசியாக்கின படி என் என்னில் -இப்பதம் ப்ரஹ்ம பிரதானம் அன்றியிலே ஸ்வரூப பிரதானம் ஆகையாலே —
இங்கு ப்ரஹ்ம வாசகம் வந்தது -அந்த ஸ்வரூபத்துக்கு அந்தரங்க நிரூபகமான சேஷத்வம் பிரதி சம்பந்தி -சாபேஷமாகையாலே-
இதில் விபக்தியில் சேஷத்வம் சொல்லுகிறது -பதம் தன்னாலே பிரதி சம்பந்தியைச் சொல்லுகிறது –
பிரதி சம்பந்தி இருக்கும்படி என் என்னில் –
சகல ஜகத் காரணமுமாய்-
சகல ஜகத் ரஷகமுமாய் –
அகில ஹேய ப்ரத்ய நீகமுமாய் –
சமஸ்த கல்யாண குணாத்மகமுமாய்-
நிருபாதிக சர்வ சேஷியுமாய்-
ஸ லஷ்மீ கமுமாய் -இருக்கும் வஸ்து என்று –

இவ்வஷர  ஸ்வ பாவத்தாலும் –
தாது ஸ்வ பாவத்தாலும் –
இந்த தாத்வர்த்த ஸ்வ பாவத்தாலும் –
விபக்தி ஸ்வ பாவத்தாலும் –
இவ்வஸ்து ஸ்வ பாவத்தாலும் -சொல்லிற்று –

சகல ஜகத் காரணத்வம் இவ்வஷர ஸ்வ பாவத்தாலே சொல்லுகிறது -எங்கனே என்னில்
இந்த ப்ரஹ்ம வாசகமான அகாரம் சகல வாசகங்களுக்கும் காரணமாகையாலே -ப்ரஹ்மம் சகல வாசகங்களுக்கும்
காரணமாகக் கடவது என்று -வாக்ய வாசக சம்பந்தத்தாலே சொல்லிற்று –

இன்னமும் இவ்விடத்திலே காரணத்வம் அநுசந்திப்பதொரு வழியுண்டு -எங்கனே என்னில் –
வாசகங்களோடு வாச்யங்களோடு வாசியற -ஸ்வ வ்யதிரிக்த சமஸ்தத்துக்கும் இவ்வாகரம் ஆகிற வாசகமே காரணமாகக் கடவது என்றார்கள் –
ஆனபடி  என் என்னில்,-இவ்வாகாரமாகிறேன் நான் -என்று அவன் தானே அருளிச் செய்கையாலும்
இவ்வாசகம் காரணம் என்கிறவிடத்தில் வாசகங்களுக்கு காரணம் அன்று என்கிற நிஷேத விதி இல்லாமையாலும் –
இவ்வாசகமே காரணமாகவற்று என்னலாம் -இத்தால் வாசக பிரவானம் சொல்லிற்று ஆய்த்து-

இன்னமும் இவ்விடத்திலே காரணத்வம் அநுசந்திப்பதொரு வழியுண்டு -எங்கனே என்னில் –
இது ஈஸ்வர வாசகம் ஆகையாலும் –
ஈஸ்வரத்வம் ஆகிறது -ஆபத் ரஷணம் பண்ணுகையாலும்-
ஆபத் ரஷணத்தில் பிரதானம் –
அகரணரான சேதனரை ஸகரணர் ஆக்குகையும்  –
அசம்ஸ்தான ரூபமான அசித்தை சமஸ்தான ரூபமாக்குகையும் –
இத்தால் காரணத்வம் சொல்லிற்று ஆய்த்து –

ஈஸ்வரன் -என்ற போதே ஜகத் காரண வஸ்து என்றதாய்த்து -என்றார்கள் –
இத்தால்  வாச்ய லஷணம் சொல்லிற்று ஆய்த்து -எங்கனே என்னில் –
இவ்வாச்யமான ஈஸ்வரத்வம் மோஷப்ரத வஸ்துவுக்கு ஒழிய இல்லாமையாலும்
மோஷ ப்ரதத்வம் உள்ளது -ஜகத் காரண வஸ்துவுக்கே யாகையாலும் -ஈஸ்வரன் என்ற போதே சகல ஜகத் காரணம் -என்றார்கள்   –

இப்படி பிரமாண உபபத்திகளாலே இவ்வாகாரத்தில் சொன்ன காரணதவத்தை நம் ஆசார்யர்கள்
ஸ்தூல -ஸூஷ்ம-ரூபேண பல வகையாலும் அநு சந்தித்து உபதேசித்துப் போருவர்கள் –
அவைகள் எனை என்னில் –இக் காரணத்வம்   தான் –
1- ஔபாதிக காரணத்வம் -என்றும் –
2- நிருபாதிக காரணத்வம் -என்றும் –
3-சத்வாரக ஔபாதிக காரணத்வம் -என்றும் –
4-அத்வாரக  ஔபாதிக காரணத்வம் -என்றும் —
5- சத்வாரக நிருபாதிக காரணத்வம் -என்றும் –
6- அத்வாரக நிருபாதிக காரணத்வம் -என்றும் -ஆறுபடியாய் இருக்கும் –

1-இதில் ஔபாதிக காரணத்வம் ஆவது -பூர்வ பூர்வ யுகங்களிலே சேதனர் சரீரங்களாலே பண்ணின புண்ய பாபங்கள் ஹேதுவாக ஸ்ருஷ்டிக்கை –
2-நிருபாதிக காரணத்வம் ஆவது -அநாதியாக அசித் அந்தர்கதராய் அசரீரிகளாய்த் திரிகிற சேதனர்க்கு நிரவதிக கிருபையாலே சரீராதிகளைக் கொடுக்கை –
3- சத்வாரக ஔபாதிக காரணத்வம் ஆவது -புண்ய பாபங்களை நிறுத்து -அவற்றின் வழியே தேவாதி சதுர்வித சரீரங்களையும் ஸ்ருஷ்டிக்கை –
4- அத்வாரக ஔபாதிக காரணத்வம் ஆவது -புண்ய லேசமுடையவர்களுக்கும் சஹஜ காருண்யத்தாலே விலஷண ஸ்ருஷ்டியைப் பண்ணுகையும்
பாபமே யானவர்களையும் சத்தா ஹாநி பிறக்கும் அளவில் சம்பந்தமே பற்றாசாக அங்கீ கரித்து ஆபிமுக்ய ஜநகமான ஸ்ருஷ்டியைப் பண்ணுகையும் –
5- சத்வாரக நிருபாதிக காரணத்வம் ஆவது -இப்படி ஸ்ருஷ்டிப்பதாகப் புரிந்த ஈஸ்வரன் ப்ரஹ்மாதிகளைக் கொண்டு ஸ்ருஷ்டிக்கை –
6- அத்வாரக நிருபாதிக காரணத்வம் ஆவது -காருண்யாதிகளே காரணமாகத் தானே ஸ்ருஷ்டிக்கை –

இவ்வாகாரத்தால் -அப்படி ஜகத் காரணத்வம் சொன்ன போதே -இவனுடைய
சர்வ ஸ்மாத் பரமும் –
அத ஏவ -அகில ஹேய ப்ரத்ய நீகத்வமும் -அநு சந்தேயம் –

உடையவர்க்குத் திருக் கோட்டியூர் நம்பி காரணத்வம் அருளிச் செய்யச் செய்தே –
பெற்ற தாயை அறியாமல் பிறந்து வளருவாரைப் போலே இ றே -காரணத்வம் காணாமல் கண்டு அநு சந்திக்கும் தர்சன அர்த்தங்கள் எல்லாம் –
என்று அருளிச் செய்தாராம் –

பட்டர் நஞ்சீயர்க்கு இவ்வர்த்தம் அருளிச் செய்யச் செய்தே –
பகவத் காரணத்வ நிரூபணம் பண்ணுமவனுக்கு மோஷத்திலே ஒழிய  அந்வயம் இல்லை -என்று அருளிச் செய்தார் –

நம்பிள்ளை -பின்பழகிய பெருமாள் ஜீயர் மடத்திலே எழுந்து அருளி இருக்கச் செய்தே –
ஈஸ்வர பரத்வத்தை அநு சந்திக்கை யாவது -ஜகத் காரணத்வத்தை அநு சந்திக்கை -என்று அருளிச் செய்தாராம் –

ஆச்சான் பிள்ளை -நடுவில் திரு வீதிப் பிள்ளை பட்டரை -பகவத் குணங்கள் எல்லாம் சேர அநு சந்திக்கலாம் துறையேது-என்று கேட்க –
ஜகத் காரணத்வத்தை அநு சந்திக்கவே எல்லாக் குணங்களையும் அநு சந்தித்ததாம் –
என்று அருளிச் செய்தாராம் –

பிள்ளை எங்கள் ஆழ்வான்-நடதூர் அம்மாளுக்கு இவ்வர்த்தம் அருளிச் செய்யச் செய்தே –
ஜகத் காரண நிரூபணம் பண்ணினவனுக்கு நிஷித்த அநு ஸ்தானத்தில் அந்வயம் இல்லை –
என்று அருளிச் செய்தார்  –

ஆகையால் நம் பூர்வாச்சார்யர்கள் ஜகத் காரண நிரூபணமே நிரந்தரம் பண்ணா நிற்பர்கள்-

அநந்தரம்-ஜகத் காரண வஸ்துவினுடைய ரஷகத்வம் சொல்லுகிறபடி என் என்னில்
இது -அவ ரஷணே -என்கிற தாதுவை உடைத்தாகையால் சாப்தமாகச் சொல்லிற்று –
இன்னமும் இப்பதத்திலே ரஷகத்வம் அநு சந்திப்பதொரு பிரகாரம் யுண்டு -எங்கனே என்னில்
ஜகத் காரணத்வம் சொன்ன போதே ரஷகத்வம் சொன்னதாகலாம் -ஆகிறபடி என் என்னில் –
குடல் துடக்குடையவர்களை ரஷிக்கை குண பிரயுக்தம் -என்கிற ந்யாயத்தாலே –
ஜகத்தில்  குடல் துடக்குடையவர்கள் எல்லாம் ரஷிக்கிறார்களோ-என்னில்
ஜகத்தில் உள்ளார் அந்யோந்யம் அஸ்நேஹிகளுமாய்
-அஸ்வதந்த்ரருமாய் -அப்ராப்தருமாகையாலே ரஷிக்க மாட்டார்கள் -இங்கு ஜகத் காரண பூதன் –
ஸ்நேஹியுமாய் -ஸ்வ தந்த்ரனுமாய் -காருணிகனுமாய் -ப்ராப்தனுமாகையாலே
இவனை ஒழிய ரஷகர் இல்லை -என்கிற நியாயத்துக்கு குறையில்லை –
நம்பிள்ளை இவ்வர்த்தம் அருளிச் செய்யச் செய்தேஅயீற்றுப் பரவிக்குப் பொகடப் போம்  -என்று அருளிச் செய்தார் இ றே –
எங்கும் பரவியிருக்கும் பெருமானுக்கு உள்ள நெறி காட்டு நீக்கும் தன்மை -சேதனன் தான் ஏறிட்டுக் கொண்டு இருந்த ஸ்வ ரஷணத்தை
எம்பெருமானிடம் சமர்ப்பித்தால் போய் விடும் என்ற பொருளில் அருளிச் செய்தார் –

இன்னமும் இவ்விடத்தில் ரஷகத்வம் அநு சந்திப்பதொரு வழி யுண்டு -எங்கனே என்னில்
இப்பதம் விஷ்ணு வாசகமாகையாலும் -விஷ்ணு வாகிறான் வ்யாபன சீலனாகையாலும் -வ்யாப்தியாவது
ஸ்வ வ்யதிரிக்த சகலத்தினுடையவும் சத்தா சம்ரஷணம் ஆகையாலும் –
ரஷண பிரகாரத்தில் பிரதான ரஷணம் இதுவேயாகையாலும் இவ்வழியாலே வரும் ரஷகத்வத்துக்கும் குறையில்லை என்றார்கள் –

இன்னமும் இவ்விடத்தில் ரஷகத்வம் அநு சந்திப்பதொரு வழி யுண்டு -எங்கனே என்னில் –
இப்பதம் ஈஸ்வர வாசகமாகையாலும் -சமஸ்த ஜகத்துக்கும் தாரகனுமாய் நியந்தாவுமாய் இருக்கையாலும்
ஈஸ்வரன் என்ற போதே ரஷகத்வத்துக்குக் குறையில்லை என்பர்கள் நம் பூர்வாச்சார்யர்கள் –

இந்த ரஷகத்வம் தான்
-ஔபாதிக ரஷகத்வம் -என்றும்
– நிருபாதிக ரஷகத்வம் -என்றும்  த்விவிதம் –

இதில் ஔபாதிக ரஷகத்வம் தான் –
1- சத்வாரக ஔபாதிக ரஷகத்வம் -என்றும் –
2-சத்வாரக ஔபாதிக ரஷகத்வ பிரகாரம் -என்றும் –
3-அத்வாரக ஔபாதிக ரஷகத்வம்   என்றும் –
4-அத்வாரக ஔபாதிக ரஷகத்வ பிரகாரம் என்றும் –

நிருபாதிக ரஷகத்வம் தான் –
1- சத்வாரக நிருபாதிகரஷகத்வம் -என்றும் –
2-சத்வாரக நிருபாதிக ரஷகத்வ பிரகாரம் -என்றும் –
3-அத்வாரக நிருபாதிக ரஷகத்வம்   என்றும் –
4-அத்வாரக நிருபாதிக ரஷகத்வ பிரகாரம் என்றும் –
பலவகையாக இருக்கும் –

இதில் ஔபாதிக ரஷகத்வமாவது -எத்ர்த்தலையில் அபேஷை கண்டு ரஷிக்கை –
நிருபாதிக ரஷகத்வமாவது -அபேஷா நிரபேஷமாக ரஷிக்கை –

1- சத்வாரக ஔபாதிக ரஷகத்வம் -ஆவது –
ஏதேனும் அபேஷிக்க ஏதேனும் பலம் கொடுக்கை அன்றிக்கே அபேஷா பிரகாரங்களுக்குத் தகுதியாகப் பலம் கொடுக்கை –
2-சத்வாரக ஔபாதிக ரஷகத்வ பிரகாரம் -ஆவது –
தன்னை அபேஷித்தவர்களுக்கே அன்றிக்கே -தன் சரீரங்களான ப்ரஹ்ம ருத்ராதிகளை அபேஷித்தவர்களுக்கும்-அவர்களுக்குள்ளீடாய் நின்று அவ்வோ அபேஷித பலங்களைக் கொடுக்கை –
3-அத்வாரக ஔபாதிக ரஷகத்வம்   -ஆவது –
எதிர் தலையில் ஆபிமுக்யம் பற்றாசாக அபூர்ண உபாயர்க்கும் பூர்ண பலங்களைக் கொடுக்கை –
4-அத்வாரக ஔபாதிக ரஷகத்வ பிரகாரம்-ஆவது –
தன்னளவில் ஆபிமுக்யம் இன்றிக்கே கீழ்ச் சொன்ன தேவதைகள் பக்கலிலே ஆபிமுக்யம் பிறக்கிலும்
அவர்களுக்குள்ளீடாய் மின்று அவர்கள் அபேஷிதங்களைக் கொடுக்கை –

1-சத்வாரக நிருபாதிகரஷகத்வம் -ஆவது
பல சாபேஷை யுடையராய் -பலப்ரத விஷயம் அறியாதவர்களுக்கும் அத்வேஷமே பற்றாசாக தானே அறிந்து பல பிரதானம் பண்ணுகை-
2-சத்வாரக நிருபாதிக ரஷகத்வ பிரகாரம் -ஆவது –
துஷ்கரங்களுமாய்-ஸ்வரூப விருத்தங்களுமான உபாயாந்தரங்களிலே
மண்டினவர்களுக்கும் உபாய பூர்த்தியைப் பிறப்பித்து மோஷ பிரதானம் பண்ணுகை –
3-அத்வாரக நிருபாதிக ரஷகத்வம்   -ஆவது –
பல அபேஷை இல்லாதவர்களுக்கும் சம்பந்தமே பற்றாசாக ருசியை விளைத்துப் பலத்தைக் கொடுக்கை –
4-அத்வாரக நிருபாதிக ரஷகத்வ பிரகாரம் ஆவது –
தனக்கு நிலை நின்ற வடிவான மோஷ பிரதானம் பண்ணும் இடத்தில் -சேதனகத வியாபார சாபேஷனாய் இருக்கை அன்றிக்கே  -சேதன விஷய சாபேஷனாய்க் கொண்டு மோஷம் கொடுக்கை –
இத்தால் சேதனகத மான உபாய ச்வீகார ஸ்ம்ருதியும் சைதன்யக்ருத்யம் என்றதாய்த்து –
இத்தால் நிருபாதிக ரஷகத்வத்துக்கு லஷணம் சொல்லிற்றாய்த்து –
இந்த லஷணம் ஆகிறது -இப்படி ரஷியாத போது தன் சத்தை இல்லையாம் படியாய் இருக்கை இ றே –
ஆக
இவ்வாகாரம் விஷ்ணு வாசகமாகையாலே ஸ்வ வ்யதிரிக்த சமஸ்தத்துக்கும் சர்வ தேச சர்வ கால சர்வ அவஸ்தை களிலும்
சர்வ பிரகாரத்தாலும் சர்வ ரஷகன் என்று நிர்ணயித்தாய்த்து –
இவ்விடத்தில் இந்த ரஷகத்வ பிரயுக்தங்களான-
1- சர்வஜ்ஞத்வ –
2- சர்வ சக்தித்வ –
3-பரம காருணிகத்வ-
4- பரம உதாரத்வ –
5-ஆஸ்ரித வத்ஸலத்வ –
6-அசரண்ய சரண்யத்வ-
7- அநாலோசித விசேஷ அசேஷ லோக சரண்யத்வ –
8-நிருபாதிக சர்வ ஸ்வாமி த்வ-
9- ஸ்ரீ யபதித்வ –
10-நாராயணத்வங்கள் –
ஆகிற சமஸ்த கல்யாண குணங்களும் அநு சந்தேயம் –
என் செய்ய என்னில்
1- ரஷிக்கும் போது சர்வத்தையும் அறிய வேண்டுகையாலே சர்வஜ்ஞத்வம் சொல்லிற்று –
2-அசக்தனுக்கு ரஷகத்வம் இல்லாமையாலே சர்வ சக்தித்வம் சொல்லிற்று –
3-அகாருணிகனுக்கு ரஷகத்வம் இல்லாமையாலே பரம காருணிகத்வம் சொல்லிற்று –
4-லுப்தனுக்கு ரஷகத்வம் இல்லாமையாலே பர உதாரத்வம் சொல்லிற்று –
5-தோஷாஸஹனுக்கு ரஷகத்வம் இல்லாமையாலே ஆ ஸ்ரீ தா வாத்ஸல்யம் சொல்லிற்று –
6- தன்னை ஒழிய ரஷிப்பார் இல்லாமையாலே அசரண்ய சரண்யத்வம் சொல்லிற்று –
7-சிலரை ரஷிக்கிறோம் சிலரை ரஷியோம் -என்ன ஒண்ணாமை யாலே அநாலோசித விசேஷ அசேஷ லோக சரண்யத்வம் சொல்லிற்று –
8- ரஷிக்கை தன் பேறாகையாலே நிருபாதிக சர்வ ஸ்வாமி த்வம் சொல்லிற்று –
9- ரஷிக்கும் போது சேர விடுவார் வேண்டுகையாலே ஸ்ரீ யபதித்வம் சொல்லிற்று –
10- ரஷியாத போது தானில்லாமையாலே நாராயணத்வம் சொல்லிற்று –

இப்படி சர்வ ரஷகன் சமஸ்த கல்யாண குணாத்மகன் என்ற போதே -காரணத்வ யுபயுக்தமான அகில ஹேய  ப்ரத்ய நீகத்வம் சொல்லிற்று –
அகில ஹேய ப்ரத்ய நீகத்வம் ஆவது -தன்னை ஒழிய சகல சேதன அசேதனங்களோடு தான் இருக்கச் செய்தே –
சிறைக் கூடத்திலே சிறையனோடே கூடப் படையிலானும் வர்த்திக்கச் செய்தேயும் சிறையிலே துக்கம் படையிலானுக்கு வாராதாப் போலே
சரீரத்தில் ஆத்மாவோடு ஈஸ்வரனும் வர்த்தியா நிற்கச் செய்தேயும் ஆத்மாவினுடைய துக்கங்கள் ஈஸ்வரனுக்கு வாராது இருக்கை –
ஆக
காரணத்வ
ரஷகத்வ
ஆகிற உபய லிங்கதவமும் சொல்லிற்று

அநந்தரம் -இப்பதம் சதுர்த்யந்தம் ஆகையாலே நிருபாதிக சர்வ சேஷித்வமும் சொல்லிற்று –
இப்பதத்திலே லஷ்மீ சம்பந்தமும் அநு சந்தேயம் -எங்கனே -என்னில் –
1-சகல பிரமாணங்களும் லஷ்மீ -தர்மம் -ஈஸ்வரன் தரமி -என்று சொல்லுகையாலும் –
2-கீழ்ச் சொன்ன காரணத்வ ரஷகத்வங்களும் லஷ்மீ ப்ரேரிதங்கள் ஆகையாலும் –
3-இவனுடைய ஸ்வரூப நிரூபகங்களான சமஸ்த கல்யாண குணங்களிலும் பிரதானம் -லஷ்மீ ஸ்வரூபம் ஆகையாலும் –
4- இப்பத விவரணமான நாராயண பதத்தில் -நார பதத்திலே லஷ்மீ ஸ்வரூபம் வ்யக்தமாகச் சொல்லுகையாலும் –
5-மேற்சொல்லுகிற சேஷத்வத்துக்கு பிரதி சம்பந்தி ஒரு மிதுனமாக வேண்டுகையாலும் –
6- இவனுக்கு தேவதாந்திர வ்யாவ்ருத்தி லஷணங்களிலே பிரதானம்  லஷ்மீ பர்த்ருத்வம் ஆகையாலே
இவனுடைய ஸ்வரூப ரூப குண விபூதிகள் எல்லாம் இவளோட்டை சம்பந்தத்தாலே நிறம் பெறுகையாலும்-

ஆக -இப்படி இவளுடைய ஸ்வரூபம் ப்ருதக் ஸ்திதி ப்ருதங் நிர்தேச அனர்ஹமாய் யல்லாது இராமையால் இவ்விடத்திலே
பெரிய பிராட்டியாருடைய ஸ்வரூபம் ஆர்த்தமாக அநுசந்திக்க ப்ராப்தமாய் இருக்கக் கடவது என்று பிள்ளை அருளிச் செய்வர் –
இன்னமும் சில ஆசார்யர்கள் இங்கனே அருளிச் செய்வார்கள் -எங்கனே என்னில் –
அபத்நீகனுக்கு யாகத்திலே அந்வயம் இல்லாதாப் போலேயும் –
பிரதான மஹிஷீ வியதிரேகேண ராஜாவுக்கு  அபிஷேகம் இல்லாதாப் போலேயும்
இவனுடைய ரஷகத்வ சேஷித்வங்கள் லஷ்மீ வ்யதிரேகேண இல்லை -என்று –
நஞ்சீயர்  இவ்வர்த்தம் அருளிச் செய்தே
பிராட்டிக்கு சத்தா ஸ்திதி எம்பெருமானாலே -எம்பெருமானுக்கு நிரூபக சித்தி பிராட்டியாலே -என்று இ றே அருளிச் செய்தது –
ஆக –
இப்பதத்தில் –
சேஷத்வ பிரதிசம்பந்தியான சேஷி –
சகல ஜகத் காரண பூதனாய்-
சர்வ ஸ்மாத் பரனாய்-
அத ஏவ அகில ஹேய ப்ரத்ய நீகனாய்
சர்வ விஷய சர்வ பிரகார ரஷகனாய் –
சமஸ்த கல்யாண குணாத்மகனாய்-
நிருபாதிக சர்வ பிரகார சர்வ சேஷியாய்
ஸ்ரீ யபதியாய் –
இருக்கும் என்றது ஆய்த்து –

இவ்வாகாரத்தில் மிதுன சேஷத்வம் சொல்லுகிற சதுர்த்தீ விபக்தியை நிரூபித்த விடத்தில் லுப்தமாய்க் கிடந்தது –
லுப்தம் என்றது ஏறிக் கழிந்தது -என்றபடி –
ஆனால் கழிந்து போன விபக்தியை சதுர்த்தீ விபக்தி என்று அறிந்தபடி என் என்னில் –
இதனுடைய விவரணமான நாராயண பதத்திலே சதுர்த்தி ஏறிக் கிடைக்கையாலே அதினுடைய சங்க்ரஹமான இதிலும் சதுர்த்தியாகக் கடவது –
இச் சதுர்யர்த்தமான சேஷத்வம் தான் இருக்கும் படி என் என்னில் –
சிலர் க்ருஹ ஷேத்ர கர்ப்ப தாஸ புத்ராதிவத் சேஷம் என்றார்கள் –
சிலர் பார்யாவத் சேஷம் என்றார்கள்  –
சிலர் சரீரவத் சேஷம் என்றார்கள்  –
இவை இத்தனையும் பார்த்த இடத்தில் இது தாதர்த்த்ய சதுர்த்தி யாகையாலும் –
தாதர்த்யத்துக்கு அர்த்தம் ஸ்வ வ்யதிரிக்த சமஸ்தத்துக்கும் ப்ருதக் ஸ்திதி ப்ருதங் நிர்தேசத்துக்கு யோக்யதை இல்லை என்கையாலும்-
இங்கு சொன்ன க்ருஹ ஷேத்ர கர்ப்ப தாஸ புத்ர பாரா சரீரங்களுக்கு ப்ருதக் ஸ்திதி ப்ருதங் நிர்தேசத்துக்கு யோக்யதை யுண்டாகையாலும்
இவ்வோ சாமான்ய சேஷத்வம் தாதர்யத்துக்கு அர்த்தமாக மாட்டாது –
இனி இந்தத் தாதர்த்ய சதுர்த்திக்கு அர்த்தம் -தரமி விஷய தர்மவத் சேஷத்வமேயாகக் கடவது –
இத்தால்
அகார வாச்யனான பர ப்ரஹ்மம்
ஸூ ஷ்ம சித் அசித் விசிஷ்டமான போது-காரணமாயும் –
ஸ்தூல சித் அசித் விசிஷ்டமான போது -கார்யமாயும்
இருக்கும் என்றதாய்த்து –
இவ்வர்த்தம் இவ்விடத்தில் சொல்லுகிறபடி என் என்னில் –
ஸ்வ வ்யதிரிக்த சகலத்தினுடைய தர்மத்வமும் இங்கு சொல்லுகையாலே –
ஆக –
சதுர்த்தீ விபக்தியால் சேஷத்வ சித்தியும் சேஷத்வ லாபமும் -சொல்லிற்று ஆய்த்து-
இங்கு – சேஷத்வ சித்தி யாகிறது -பர அனர்ஹதையும்-ஸ்வ அனர்ஹதையும் –
சேஷத்வ லாபம் ஆகிறது -பகவத் வ்யதிரிக்த சகலத்துக்கும் சேஷத்வம் ஒழிய சத்தை இல்லையே இருக்கை-
ஆக -அகார்த்தம் தீர்ந்தது –

———————————————————————————————————

அநந்தரம்-
அவ்யயமாய் அவதாரணார்த்த மான -உகாரமும் –
கீழ் தாதர்த்ய சித்தமான சேஷத்வ லாபம் ஸ்வ லாபமோ பர லாபமோ என்கிற சங்கையிலே
ஸ்வ லாபம் அன்று -பர லாபம் -என்கிறது –
இவ் வதாரணார்த்தத்துக்குச் சொல்லும் பிரமாணங்கள் எல்லாம் அவனுக்கே என்று இ றே கிடப்பது –
இவ்விடத்திலே ததீய சேஷத்வமும் அனுசந்தித்துப் போருவாரும் யுண்டு -என்று அருளிச் செய்வார்கள் -எங்கனே என்னில் –
இப்பதம்
-1-சேஷத்வ வைசத்ய பிரதிபாதகம் ஆகையாலும் –
2-இஸ் சேஷத்வத்துக்கு வைசத்யம் ததீய பர்யந்தமேயாய் இருக்கையாலும் –
3-ததீய சேஷத்வ விதானம் பண்ணும் இடத்தில் இவ்வவதாரணார்த்த நிஷ்டன் பக்கல் கொள்ளும் சேஷத்வமே ஸ்வரூப பிரயுக்தமாய் இருக்கையாலும் –
4- மேல் பிரதிபாதிக்கப் படுகிற வஸ்து ஸூ த்த சேஷத்வத்துக்கு ஆஸ்ரயமாக வேண்டுகையாலும்
5- இப்பதம் தான் ததீய சேஷத்வ பிரதிபாதகமான மத்யமபத  சங்க்ரஹம் ஆகையாலும்
இவ்விடத்தில் ததீய சேஷத்வ ஸூ சகத்வம் சொல்லுகையில் சோத்யம் இல்லை

இப்பதம் சம்பந்த யாதாம்ய ஜ்ஞான பிரதிபாதகம் -என்று அருளிச் செய்வர்கள்-
இப்பதத்தில் பிரதம சரமங்களினாலே ஜீவ பரர்களைச் சொல்லி
நடுவே அவதாரணம் கிடைக்கையாலே இது சம்பந்த வாசியாகக் கடவது –
ஆக –
அவதாரணார்த்தமான உகாரத்தாலே –
ஸூ த்த சேஷத்வ லஷணமும்-
சேஷத்வ பூர்த்தியும் –
சேஷத்வ ஜ்ஞான யாதாத்யமும்
சொல்லிற்று ஆய்த்து –
அன்றியிலே –
சில ஆச்சார்யர்கள் இவ்வர்த்தம் இத்தனையும் –
தாதர்த்ய சித்தமேயாய்-
அவதாரணத்தை ஆர்த்தமாக்கி -இவ்வுகாரம் லஷ்மீ வாசகம் என்றார்கள் –
ஆக உகார்த்தம் தீர்ந்தது –

—————————————————————————————————————-

அநந்தரம் –
மகாரம் தாதர்த்ய சித்தமுமாய் –
அவதாரண சித்தமுமான சேஷத்வத்துக்கு ஆஸ்ரயமாய்
ப்ரதக்ருதே பரனாய் ஜ்ஞானானந்த ஸ்வரூபமான ஆத்மாவைச் சொல்லுகிறது –
இம்மகாரத்தில் ப்ரக்ருதே பரத்வமும்
ஜ்ஞானந்த ஸ்வரூபத்வமும் சொல்லுகிறபடி என் என்னில்
இம்மகாரத்தில் சொல்லுகிற பிரமாணங்களில் ப்ரக்ருதே பரத்வம் சொல்லிற்று –
இதில் தாதுவாலே -ஜ்ஞானானந்த   சொல்லிற்று –
இந்த தாது -மன-ஜ்ஞானே -என்று ஜ்ஞான மாத்ர பிரதி பாதகமாய் இருக்க ஜ்ஞாதாவைச் சொல்லுகிற படி என் என்னில்
குணத்தைச் சொன்ன போதே குணியையும் சொல்லிற்றாம்-என்று வேதாந்த ஸூ த்ரத்திலே நிர்ணயிக்கையாலே –
கீழ்ச் சொன்ன சேஷத்வம் -சேதன அசேதன சாதாரணமாய் இருக்க இங்கு சேதன ஏகாந்தமான மகாரத்தை பிரயோகிப்பான் என் என்னில் –
1- சேஷத்வ ஜ்ஞானம் பிறப்பது சேதனுக்கே யாகையாலும் –
2-சேஷத்வ ஜ்ஞான பிரதிபந்தகமான ஸ்வ அஹங்கார மமகார நிவ்ருத்தி யுள்ளதும் சேதனுக்கே யாகையாலும் –
3- சேஷத்வ ஜ்ஞானகார்ய அந்வயம் உள்ளதும் சேதனுக்கே யாகையாலும் –
4-தத் சாதன ஸ்வரூப சமர்ப்பண கர்த்ருத்வம்  உள்ளது சேதனுக்கே யாகையாலும்
5-தத் அனந்தரத்தில் ஸ்வரூப அநு சந்தானத்தாலே லஜ்ஜா பயங்கள் உண்டாவதும் சேதனுக்கே யாகையாலும் –
6-அகாரத்தில் சொன்ன ஸ்வாமித்வத்துக்கு பிரதி சம்பந்தியான தாஸத்வம் உள்ளதும் சேதனுக்கே யாகையாலும்
7- தத் அனந்தரத்திலே இப்பதம் தான் பிரணவத்துக்கு த்ருதீய அஷரமாக வேண்டுகையாலும் –
ஆக இப்படி சேஷத்வாஸ்ரய பிரதிபாதாக பதம் சேதன ஏகாந்தமான மகாரமாக வேணும் –

ஆனால் இங்கு அசித் சேஷத்வம் சொல்லுகிறபடி எங்கனே என்னில்
இவ்வாத்மாவைச் சொல்லுகிற போது ப்ரக்ருதே பரன் என்று அசித்தைச் சொல்லி அநந்தரம் சொல்லுகையால்
இப்பதங்கள் போலே சொன்னவிடத்திலே அசித்தையும் சொல்லிற்றாக கடவது –
ஆஸ்ரயியாய் ஆநநதத்தை முந்துறச் சொல்லுகிற நியாயத்தாலும் அசித் சேஷத்வமும் இவ்விடத்திலே சொல்லிற்றாகக் கடவது –
இத்தால் -அனந்யார்ஹதாஸ்ரயம்-ஜ்ஞான ஸ்வரூப ஜ்ஞான குணகனான ஆத்மா என்றதாய்த்து –
ஆஸ்ரயியான சேஷத்வத்தை முதல் சொல்லி ஆஸ்ரயமான ஜ்ஞானா நந்தத்தை பின்பு சொல்லுவான் என் என்னில் –
1- ஆஸ்ரயியான சேஷத்வத்தை ஒழிய ஜ்ஞானா நந்தம் அசந்நேவவாய்க் கிடைக்கையாலும்
2- புஷ்பத்துக்குப் பரிமளத்தாலே ஸ்லாக்யதை யானாப் போலே இவ்வாத்மாவுக்கும் ஔஜ்வல்யம் சேஷத்வத்தாலே யாகையாலும்
3-நெருப்புப் பட்ட அகத்திலே அகப்பட்டு நின்றவனை நீரைச் சொரிந்து கொண்டு புறப்பட படுத்துமா போலே
அஹங்காரம் ஆகிற அழலிலே அகப்பட்டு உருவழிந்து கிடக்கிற ஆத்மாவை அடியான் என்றே உணர்த்திக் கொண்டு இழிய-அறிய -வேண்டுகையாலும் –
4- தன்னுண்ணிப் பகைப் போல அந்தராயமான ஆத்ம அநுபவ மாத்ரமான படு குழியிலே விழாமைக்காகவும்-
ஆக –
இப்படி ஆஸ்ரயியான சேஷத்வத்தை ஒழிய –
ஆஸ்ரயமான ஜ்ஞான ஸ்வரூபனாய் –
ஜ்ஞான குணகனான ஆத்மாவுக்கு சத்தை இல்லாமையாலே
இவ்வந்தரங்கமான சேஷத்வத்தையே முற்படச் சொல்லிற்று –

இஸ் சேஷத்வ ஆஸ்ரயமான ஆத்மாவினுடைய ஸ்வரூபம் –
1- ஸ்வஸ்மை ஸ்வயம் பிரகாசமுமாய் –
2- ஆனந்தாத் மகமுமாய் –
3-சங்கோச விகாச அயோக்யமுமாய் –
4-அணுவாய் –
இருக்கும் என்னும் இடமும்
ஸ்வ பாவம் –
1- பரஸ்மை ஸ்வயம்  பிரகாசமுமாய் –
2-ஆனந்த ஜனகமுமாய் –
3-சங்கோச விகாச யோக்யமுமாய் –
4-விபுவாய் –
இருக்கும் என்னும் இடமும் இதனுடைய உப ப்ரும்ஹணங்களிலே கண்டு கொள்வது –
இக் குணங்கள் மற்றும் இவ்வாத்மாவுக்குச் சொல்லும் குணங்கள் எல்லாவற்றுக்கும் உப லஷணம்-
இதில் ஏக வசனம் -ஜாத்ய ஏக வசனமாய் -த்ரிவித ஆத்மா வர்க்கத்தையும் சொல்லுகிறது –
ஆக –
இம்மகாரத்தால் ப்ரக்ருதே பரனாய்
சேஷத்வ ஆஸ்ரயமாய்
ஜ்ஞானானந்த ஸ்வரூபனாய்
ஜ்ஞான குணகனான -ஆத்மாவைச் சொல்லுகிறது –

மூன்று எழுத்ததனை-பெரியாழ்வார் -4-7-10-இத்யாதிப் படியே அஷர த்ரயாத்மகமான பிரணவத்தில்,
பிரதம சரமங்களினாலே ஜீவ பரர்களைச் சொல்லி நடுவே அவதாரணத்தைச் சொல்லுகையாலே
ஜீவ பரர்கள் இருவரையும் ஏக தத்வம் என்னலாய் இருக்க  பிரியச் சொன்னபடி என் என்னில்
ஏக அஷரமான பிரணவத்தை அஷர த்ரயாத்மகமாக பிரமாணங்களில் பிரித்தால் போலே ஏக தத்வம் போலே இருக்கிற இவர்களையும் பிரமாணங்களாலே பிரிக்கக் கடவது  அத்தனை –

இப்படி ஸ்வ ஸ்வரூபத்தை பகவத் ப்ருதக் ஸித்த விசேஷணம் என்று இருக்கையே ஸ்வரூப ப்ராப்தம் –
இந்த ஜ்ஞானமே மோஷ விஷய யோக்யம்-

இத்தால் -ஸ்வரூப விஷய அந்யதா பிரதிபத்தி நிவ்ருத்தியைச்  சொன்னபடி –

இத்தால் -ஆத்ம சமர்ப்பணம் சொல்லிற்று ஆய்த்து -ராஜ பண்டாரத்து உள்ளறையிலே களவு கொண்டு உபகரிப்பாரைப் போலே இ றே –

இத்தால் -பழைய சௌர்யம் அழகியது  என்னும்படி இ றே ஆத்ம சமர்ப்பண பிரகாரம் இருக்கும் அடி –

ஆனால் சமர்ப்பணம் கூடும்படி என் என்னில் –
இருக்கிற சம்சாரத்தில் கொடுமையாலும்
பேற்றில் த்வரையாலும்
சமர்ப்பணம் பண்ணி அல்லது நில்லாது இ றே சைதன்ய ஸ்வ பாவம் –
ஆனால்  ஸ்வரூப விரோதமான சமர்ப்பணம் பண்ணினவன் ஸ்வரூப ஜ்ஞானம் பிறந்தால் பிராயச்சித்தம் பண்ண வேண்டாவோ என்னில்
வேண்டா -எங்கனே என்னில் –
அந்யதா பிரதிபத்தியான ஆத்ம அபஹாரம் பண்ணினவன் சர்வ பாபமும் பண்ணி தன்னையும் அழித்துக் கொண்டால் போலே யதாவத் பிரதிபத்தியான ஆத்ம சமர்ப்பணம் பண்ணினவனுக்கு சர்வ பிராயச் சித்தமும் கூடி சர்வ பிராயச் சித்தமும் பண்ணினானாகக் கடவன் –
அன்றியே
ஸ்வர்ணாபஹாரம் பண்ணினவன் அபஹரித்த தனத்தைக் கொடுக்கத் தான் யுண்டாகையாலே பிராயச் சித்தம் பண்ணலாம் –
இங்கு கொடுத்தது தன்னை யாகையாலே பிராயச் சித்தம் பண்ணுகைக்கு தான் இல்லாமையாலே –
சர்வ பிராயச் சித்தமும் ஸ்வரூப லாபமும் ஆத்ம சமர்ப்பணம் என்னும் இடமும் பிரமாணாந்தரங்களிலே கண்டு கொள்வது –
ஸ்வரூப லாபமே புருஷார்த்தம் ஆகையாலே இவ்விடத்திலே புருஷார்த்த ஸ்வரூபம் சொல்லிற்று ஆய்த்து-

ஆக –
பிரணவத்தால் ஆத்ம யாகம் சொல்லித் தலைக் கட்டிற்று-ஆத்ம யாகம் வந்தபடி என் என்னில் –
நிருபாதிக தேவதா பரமாத்மா
நிருபாதிகம் ஹவி -ஆத்மா
நிருபாதி கோ யாக -ஆத்ம சமர்ப்பணம்
நிருபாதி கபலம் -மோஷ -என்று  பிரமாணாந்தரங்கள் சொல்லுகையாலே –

ஆக –
பத த்ரயாத்மகமான பிரணவத்தால்-
அகார வாச்யமான பர ப்ரஹ்மத்துக்கு
மகார வாச்யமான ஜீவ ஸ்வரூபம்
அனந்யார்ஹ சேஷம்  என்றது ஆய்த்து-

இனி மந்திர சேஷமும் இப்பதத்திலே விவ்ருதம் –

ஸ்ரீ தனிப் பிரணவம் முற்றிற்று –

——————————————————————————————————————

ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திருவடிகளே சரணம் –
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் அருளிச் செய்த — ஸ்ரீ ஸ்ரீ யபதிப்படி —

May 21, 2015

ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர்  தனியன்  –

லோகாசார்யாய குரவே கிருஷ்ண பாதச்ய ஸூ நவே
சம்சார போகி சந்தஷ்ட ஜீவ ஜீவாதவே நம-

———————————————————————————————-

1-திருமந்திர பிரகரணம் –

உபோத்காதம்-

ஸ்ரீ யபதியாய் சர்வ ஸ்வாமியாய் இருந்துள்ள சர்வேஸ்வரனுடைய ஸ்வ ரூபத்தையும்
அவனுக்கு அநந்ய சேஷமான தந்தாமுடைய ஸ்வ ரூபத்தையும்
யதா வஸ்திதமாக பிரதிபத்தி பண்ணி –
நித்ய முக்தரைப் போலே ஸ்வ ரூப அநு ரூபமான பரிமாற்றத்திலே அந்வயித்து வாழப் பெறாதே
இவருடைய ஸ்வ ரூபத்தையும் விபரீதமாக பிரதிபத்தி பண்ணி
விபரீத வ்ருத்த பிரவ்ருத்தராய் -ஸ்வ ரூப விரோதியான ப்ராக்ருத போகத்திலே மண்டி
தாபத்ரய தப்தராய்ப் போருகிற பத்தாத்மாக்களில் ஆரேனும் ஒருவனுக்கு நிர்ஹேதுக பகவத் கடாஷம் அடியாக
அந்யதா ஜ்ஞான விபரீத ஜ்ஞான ஜநகமான ரஜஸ் தமஸ் ஸூ க்கள் தலை சாய்ந்து
யதா ஜ்ஞான ஜநகமான சத்த்வம் தலை எடுத்து -சத்த்வ கார்யமான  வெளிச் சிறப்புப் பிறந்து
த்யாஜ்ய உபாதேய ஜ்ஞானத்திலே கௌதுகம் யுண்டாய் –
அதடியாக சதாசார்ய உபசத்தி பிறந்து -அவனுடைய பிரசாதத்தாலே
மூல மந்திர லாபம் யுண்டானால்-
த்யாஜ்ய உபாதேய விபாகத்தை பரி பூரணமாக அறிவிக்கக் கடவதான
பிரதம ரஹஸ்யம் -பிரதமத்திலே அநு சந்தேயமாய் இருக்கும் –

உபாய அனுஷ்டானத்துக்கும் உபேய ப்ரார்த்த நைக்கும் முன்பே -அவற்றுக்கு ஆஸ்ரயமாய்
ஜ்ஞாதவ்யமான ஆத்ம ஸ்வரூபத்தைப் பூரணமாக அறிவிக்கையாலே இத்தை பிரதம ரஹஸ்யம் என்று சொல்லுகிறது –

இது தான் -த்ரி வர்க்கத்துக்கும் -கைவல்ய கைங்கர்ய ரூபமான அபவர்க்கத்வயத்துக்கும் –
ஸ்வ ரூப யாதாம்ய ஜ்ஞானத்துக்கும் -தெளி விசும்பில் போலே -9-7-5- இங்கே இருந்து பரிபூர்ண பகவத் அனுபவம் பண்ணுகைக்கும் அமோக சாதனமாய்
வ்யாபக வ்யதிரிக்தங்களிலும் வ்யாப காந்தரங்களிலும் வ்யாவ்ருத்தமாய் -வேத வைதிக ருசி பரிக்ருஹீதமாய் இருக்கும் –

இதுக்கு  அந்தர்யாமியான நாராயணன் -ரிஷி
தேவீ-காயத்ரீ –சந்தஸ் ஸூ —
பரமாத்வான நாராயணன் -தேவதை
பிரணவம் –பீஜம்
ஆய -சக்தி -ஸூ க்ல வர்ணம்
மோஷத்திலே– வி நியோகம் –

இது தான் -எட்டுத் திரு அஷரமாய்-மூன்று பதமாய் -இருக்கும் –
இதில் முதல்   பதமான பிரணவம் -மூன்று பதமாய் இருக்கும்
முதல் பதமான அகாரம் பகவத் வாசகம்
இரண்டாம் பதமான உகாரம் அவதாரண வாசகம்
மூன்றாம் பதமான மகாரம் ஆத்ம வாசகம் –

அகாரார்த்தம் —

அகாரம் -அவ ரஷணே -என்கிற தாதுவிலே பதமாய் முடிகையாலே ரஷகனான எம்பெருமானைச் சொல்லுகிறது –
ரஷணம்  தனக்கு சங்கோசம் இல்லாமையாலே -சர்வ தேச -சர்வ கால -சர்வ அவஸ்தை களிலும்
சர்வாத்மாக்களுக்கு சர்வ பிரகாரத்தாலும் பண்ணும் ரஷணத்தைச் சொல்லுகிறது –

ஜ்ஞான ஆனந்தங்களிலும் காட்டில் ஈஸ்வர ஸ்வ ரூபத்துக்கு அந்தரங்க நிரூபகம் ஆகையாலும்
மேல்  சொல்லுகிற சேஷத்வத்துக்கு விஷயம் மிதுனம் ஆகையாலும்
இதில் சொல்லுகிற ரஷணத்துக்குப் பிராட்டி சந்நிதி வேண்டுகையாலும்
இதிலே லஷ்மீ சம்பந்தம் அநு சந்தேயம் –

லுப்த சதுர்த்த்யர்த்தம் –
இதில் ஏறிக் கழிந்த சதுர்த்தி -தாத்ர்த்யத்தைச் சொல்லுகிறது –
விவரணம் சதுர்த்த் யந்தமாகையாலே இதுவும்  சதுர்த்த் யந்தமாகக் கடவது –
ப்ரஹ்மணே த்வா மஹச ஒமித்யாத்மாநம் யுஞ்ஜீத -தை நா -51-பரப் ப்ரஹ்மம் ஆகிய உன்னை
அடையும் பொருட்டு ஓம் என்ற மந்திரத்தை அநு சந்தித்து ஆத்ம சமர்ப்பணம் செய்யவும் -என்றபடி –

உகாரார்த்தம் –
அவதாரண வாசகமான உகாரம் -கீழ்ச் சொன்ன பகவச் சேஷத்வத்துக்கு விரோதியான அந்ய சேஷத்வத்தினுடைய நிவ்ருத்தியைச் சொல்லுகிறது –
ஒரு வஸ்து அநேகர்க்கு சேஷமாக லோகத்திலே காண்கையாலே
லோக திருஷ்டாந்த பிரக்ரியையாலே சந்கிதமான அந்ய சேஷத்வத்தினுடைய  நிவ்ருத்தியைச் சொல்லுகிறது –
தேவ போக்யமான அன்னத்துக்கு சவ ஸ்பர்சம் போலே ஈஸ்வர போக்யமான
ஆத்மவஸ்துவுக்கு தேவதாந்தா ஸ்பர்சம் -வானிடை வாழும் இத்யாதி — நாச்சியார் -1-5-

மகாரார்த்தம் –
த்ருதீய பதமான மகாரம் -மன ஜ்ஞாநே -என்கிற தாதுவிலே யாதல் –
மனு அவபோதநே -என்கிற தாதுவிலே யாதல் பதமாய் நிஷ்பன்னமாகையாலே ஜ்ஞாதாவாய் –
சென்று சென்று பரம் பரமாய் -8-8-5-என்கிறபடியே -தேக இந்த்ரியங்களில் காட்டில் விலஷணமான ஆத்மாவைச் சொல்லுகிறது-

அன்றிக்கே
-ககாராதி பகாராந்தமான இருபத்து நாலு அஷரமும் இருபத்து நாலு தத்வத்துக்கு வாசகமாய்
இருபத்து அஞ்சாம் அஷரமான மகாரம் இருபத்து அஞ்சாம் தத்வமான ஆத்மாவுக்கு வாசகம் ஆகையாலே மகாரம் ஆத்ம வாசகம் என்னவுமாம் –

சர்வாத்மாக்களும் ஈஸ்வரனுக்கு அனந்யார்ஹ சேஷ பூதராகையாலே ஆத்ம சமஷ்டியைச் சொல்லுகிறது –
சேதன பிரகாரமான அசித் தத்வமும் பகவச் சேஷமாக இப்பதத்திலே அநு சந்தேயம் -உகாரத்திலே என்றும் சொல்லுவார்கள்-

பிரணவம் தன்னில் ஆத்ம ஸ்வ ரூபத்தைச் சொல்லி பின்பு பகவச் சேஷத்வத்தைச் சொல்லாதே
முற்பட பகவச் சேஷத்வத்தைச் சொல்லி -பின்பு ஆத்ம ஸ்வ ரூபத்தைச் சொல்லுகையாலே
ந சாத்மா நம் -ஸ்தோத்ர ரத்னம் -57-என்கிறபடியே  சேஷத்வம் யுண்டான போது ஆத்மா உபாதேயனாய் அல்லாத போது
அநு பாதேயன் என்னும் இடத்தை பிரகாசிப்பித்தது நிற்கிறது –

ஆக
பிரணவம்
பகவச் சேஷத்வத்தையும்-
அந்ய சேஷத்வ நிவ்ருத்தியையும் –
சேஷத்வ ஆஸ்ரயமான வஸ்து ஸ்வரூபத்தையும்
சொல்லிற்று-

நம-பதார்த்தம் -கீழ்ச் சொன்ன ஸ்வா பாவிகமான பகவச் சேஷத்வத்தை அநாதி காலம் அபி பூதமாம் படி பண்ணின விரோதியினுடைய நிவ்ருத்தியைச் சொல்லுகிறது -நமஸ் ஸூ —
இது தான் -ந -என்றும் -ம- என்றும் இரண்டு பதமாய் இருக்கும் -ந-என்றது அன்று என்றபடி –ம-என்றது எனக்கு என்றபடி –
இரண்டும் கூட எனக்கு அன்று என்று -அநு ஷங்கத்தாலே அஹங்கார நிவ்ருத்தியைச் சொல்லுகிறது –
அஹங்காரம் கழி யுண்டவாறே அதடியாக வருகிற மமகாரமும் கழி யுண்ணும் –
அன்றிக்கே -இது தான் அத்யாஹாரத்தாலே மமகார நிவ்ருத்தியைச் சொல்லுகிறது என்னவுமாம் –
இப்படி அஹங்கார மமகார நிவ்ருத்தி மாத்ரமே யன்றிக்கே பகவச் சேஷத்வமும் அதினுடைய காஷ்டா பூமியான பாகவத சேஷத்வமும் இப்பதத்திலே அநு சந்தேயம் –
இதில் கீழில் அஹங்காரம் சேஷத்வ விரோதியான அஹங்காரம் அன்றிக்கே
ஈச்வரனே உபாயம் என்கிற பிரதிபத்திக்கு விரோதியான அஹங்காரமாய்-அது கழி யுண்டால் ஈச்வரனே உபாய உபேயம் என்கிற
பிரதிபத்தி பிறக்க கடவதாகையாலே -ஆர்த்தமாக ஈஸ்வரனுடைய உபாய பாவத்தை சொல்லுகிறது என்ன வுமாம் –
அன்றிக்கே ஏவ முகதாஸ் த்ரய பார்த்தா யமௌ ச பிருஷர்ஷபௌ-த்ரௌபத்யா சஹிதாஸ்  சர்வே  -நமஸ் சக்ருர் ஜநார்த்தனம் -பார -ஆர -192-56- என்கிறபடியே
ஸ்தான பிரமாணத்தாலே நமஸ் சப்தம் சரண சப்த பர்யாயமாய் -சாப்தமாக ஈஸ்வரனுடைய உபாய பாவத்தைச் சொல்லுகிறது என்ன வுமாம் –
மேல் சொல்லுகிற கைங்கர்யத்துக்கு விரோதியான அஹங்கார மமகார நிவ்ருத்தியும்
கைங்கர்ய ப்ரார்த்தநையும் இப்பதத்திலே அனுசந்தேயம் –
இது தான் அகார  நாராயண பதங்கள் போலே சதுர்த்யந்தம் அன்றிக்கே ஷஷ்ட்யந்தமாய் இருக்கையாலே
ஒரு பிரகாரத்தாலும் தன்னோடு தனக்கு அன்வயம் இல்லை என்கிறது –
அன்றிக்கே -இஸ் ஷஷ்டி  தனக்கு தாதர்த்தம் ஆக வுமாம் –

நாராயண -சப்தார்த்தம் –
சதுர்த் யந்தமான நாராயண பதம் -கீழ்ச் சொன்ன பகவத் அனந்யார்ஹ சேஷத்வத்துக்கும்-தத் ஏக உபாயத்வத்துக்கும்
-அநு குணமான கைங்கர்ய ப்ரார்த்த நத்தைச் சொல்லுகிறது –
அதில் பிரக்ருத்யம்சம் -கைங்கர்ய பிரதி சம்பந்தியைச் சொல்லுகிறது –
ப்ரத்யயம் கைங்கர்ய ப்ரார்த்தநையைச் சொல்லுகிறது-
இது தான் ஷஷ்டீ சமாசமாகவுமாம்  -பஹூவ்ரீஹி சமாசம் ஆக வுமாம் –
ஷஷ்டீ சமாசத்தில் நாரங்களுக்கு ஈஸ்வரன் அயநம் என்று அர்த்தம் –
பஹூவ்ரீஹி சமாசத்தில் நாரங்கள் தான் ஈஸ்வரனுக்கு அயநம் என்று அர்த்தம் –
நாரமாவது-நசியாத வஸ்துக்களினுடைய திரள் –
நர சப்தம் -நசியாத வஸ்துவைச்சொல்லுகிறது –
ர -என்றது ரிங்-ஷயே-என்கிற தாதுவிலே பதமாகையாலே -நர சப்தம் நசியாத வஸ்துக்களினுடைய திரளைச் சொல்லுகிறது
சமூஹ அர்த்தத்திலே அண் ப்ரத்யயம் ஆகையாலே நார சப்தம் நசியாத வஸ்துக்களினுடைய திரளைச் சொல்லுகிறது –
அதாகிறது –
ஜ்ஞானானந்த அமலத்வாதிகளும்
ஜ்ஞானசக்த்யாதி கல்யாண குணங்களும்
திவ்ய மங்கள விக்ரஹமும்
திவ்ய பூஷண-திவ்ய ஆயுத -திவ்ய மகிஷிகளும் –
சத்ர சாமராதி பரிச் சதங்களும்
நித்தியரும் முக்தரும் பரமபதமும்
பிரகிருதி புருஷ காலங்களும் —
அன்றிக்கே – நார சப்தம் -நித்யத்வத்தாலே யாதல் -நியந்த்ருத்வத்தாலே யாதல்
நைமித்திகத்வத்தாலே யாதல் –
நர சப்த வாச்யனான ஈஸ்வரன் பக்கலிலே நின்றும் பிறந்த வஸ்துக்களைச் சொல்லுகிறது என்ன வுமாம் –
அயநம் -என்றது -இருப்பிடம் என்றபடி -பிராப்யம் என்னவுமாம் -ப்ராபகம் என்ன வுமாம் –

வ்யக்த சதுர்த்த் யர்த்தம் –
இதில் சதுர்த்தி சர்வ தேச சர்வ கால சர்வ அவஸ்தை களிலும்
சர்வ பிரகாரத்தாலும் பண்ணும் கைங்கர்யத்தையும் அதினுடைய ப்ரார்த்தநத்தையும் சொல்லுகிறது –

அகாரத்திலும் நார சப்தத்திலும் -பிராட்டி ஸ்வரூபம் சொல்லிற்று
அகாரத்தில் ஆத்மாக்களுக்கு ஸ்வாமிநீ -என்றது -நார சப்தத்தில் ஈஸ்வரனுக்கு சேஷ பூதை என்றது –
அகாரத்திலும் அயன சப்தத்திலும் ஈச்வரனைச் சொல்லிற்று –
அகாரத்தில் ரஷகன் என்றது -அயன சப்தத்தில் தாரகன் என்றது
பத த்ரயத்தாலும் ஆத்மாவைச்  சொல்லிற்று –
பிரணவத்தில் அனந்யார்ஹ சேஷத்வத்தையும் -ஜ்ஞாத்ருத்வத்தையும் சொல்லிற்று
நமஸ் ஸில் ஸ்வாதந்த்ர்யா நிவ்ருத்தியைச் சொல்லிற்று –
மேல் பதத்தில் -நித்யத்வ பஹூத் வங்களைச் சொல்லிற்று-

நிகமனம் –
ஆக -திருமந்தரம் –
ஈஸ்வரனுக்கும் ஆத்மாவுக்கும் யுண்டான சம்பந்தத்தையும்
சம்பந்த அனுரூபமான உபாய ஸ்வரூபத்தையும்
இரண்டுக்கும் அநுகுணமான உபேய ப்ரார்த்தநத்தையும் –
சொல்லித் தலைக் கட்டுகிறது –

அகாரத்தாலே-சர்வ ரஷகத்வம் சொல்லிற்று -அதிலே ஏறிக் கழிந்த சதுர்த்தியாலே -அவனுக்கு சேஷம் என்னும் இடம் சொல்லிற்று –
உகாரத்தாலே -அவனை ஒழிந்தவர்களுக்கு சேஷம் அன்று என்றது –
மகாரத்தாலே இப்படி அனந்யார்ஹ சேஷமான வஸ்து ஜ்ஞான ஆஸ்ரயமான ஆத்மா வென்னும் இடம் சொல்லிற்று –
நமஸ் ஸாலே -சேஷத்வ விரோதியான அஹங்கார மமகார நிவ்ருத்தியையும் –
பகவத் சேஷத்வ பர்யந்தமான பாகவத சேஷத்வத்தையும்
ஈஸ்வரனுடைய உபாய பாவத்தையும் சொல்லிற்று
நார சப்தம் -வ்யாப்யங்களான சேதன அசேதனங்களை சொல்லிற்று
அயன சப்தம் -வியாபகமான பகவச் ஸ்வ ரூபத்தைச் சொல்லிற்று
சதுர்த்தி கைங்கர்ய ப்ரார்த்த நத்தைச் சொல்லித் தலைக் கட்டுகிறது –

விடை ஏழு அன்று அடர்த்து -பெரிய திருமொழி -8-9-3-என்கிறபாட்டு பிரணவ அர்த்தமாக அனுசந்தேயம் –
யானே -2-9-9-என்கிற பாட்டு நம பதார்த்தமாக அனுசந்தேயம்
எம்பிரான் எந்தை -பெரிய திரு -1-1-6-என்கிறபாட்டு நாராயண சப்தார்த்தமாக அனுசந்தேயம்
ஒழிவில் காலம் எல்லாம் -3-3-1- என்கிற பாட்டு சதுர்த்யர்த்தமாக அனுசந்தேயம்-

ஸ்வ ஸ்வ ரூபத்தை யதாவாக அனுசந்தியாமையாலே தாந்தி பிறக்கிறது இல்லை
புருஷார்த்தத்தை யதாவாக அனுசந்தியாமையாலே ருசி பிறக்கிறது இல்லை –
சாதனத்தை யதாவாக அனுசந்தியாமையாலே விஸ்வாசம் பிறக்கிறது இல்லை –
விரோதியை யதாவாக அனுசந்தியாமையாலே பயம் பிறக்கிறது இல்லை –

———————————————————————————————————–

2-சரம ஸ்லோக பிரகரணம் –

உபோத்காதம் –
சகல சாஸ்திர தாத்பர்ய  பூமியான திரு மந்த்ரத்தில் சொன்ன புருஷார்த்த ஸ்வ ரூபத்துக்கு அநு ரூபமான
சாதன விசேஷத்தை ஸபிரகாரமாக  பிரதிபாதிக்கிறது -சரம ஸ்லோகம் –
தேஹாத்மா அபிமானியான அர்ஜுனனைக்  குறித்து -அமலங்களாக விழிக்கும்-1-9-9-என்கிறபடியே
சகல பாப ஷபண நிபுணங்களான   திவ்ய கடாஷங்களாலும் –
அம்ருத நிஷ் யந்திகளான வசன விசேஷங்களாலும்
மோஷ ருசிக்கு விரோதியான சகல பிரதி பந்தகங்களையும் நசிப்பித்து
மோஷ ருசியை யுண்டாக்கி
மோஷ சாதனமான கர்ம ஜ்ஞான பக்திகளைப் பரக்க கிருஷ்ணன் அருளிச் செய்ய
அத்தைக் கேட்ட அர்ஜுனன் சர்ப்பாச்யகதமான ஜந்துவைப் போலே இருக்கிற தன்னுடைய துர்க்கதியையும்
விரோதி தன்னால் கழித்துக் கொள்ள ஒண்ணாதே இருக்கிற இருப்பையும்
விஹித உபாயம் துஸ்சகமாய் இருக்கிற இருப்பையும் அநு சந்தித்து
நாம் இவனை இழந்து போவோம் இத்தனை யாகாதே -என்று சோகிக்க
நான் முன்பு உபதேசித்த சாதனா விசேஷங்களை ஸ வாசனமாக விட்டு என்னையே நிரபேஷ சாதனமாகப் பற்று -நானே எல்லா  விரோதிகளையும் போக்குகிறேன் -நீ சோகியாதே கொள் -என்று அர்ஜுனனுடைய சோகத்தை நிவர்த்திப்பிக்கிறான் –

1-கீழ்ச் சொன்ன உபாயாந்தரங்கள் சோக ஜனகங்கள் அல்லாமையாலும் –
2-அவற்றை விடச் சொன்னால் சாஸ்த்ரங்களுக்கும் இஸ் சாஸ்த்ரத்தில் முன்புத்தை வசனங்களுக்கும் வையர்த்தம் வருகையாலும்
3-பிரபத்தி ஸ்வ தந்திர சாதனம் அல்லாமையாலும்
4-எளிய வழி யுண்டாய் இருக்க அரிய வழியை வத்சல  தரமான சாஸ்திரம் உபதேசிக்கக் கூடாமையாலும்
கீழ்ச் சொன்ன உபாயத்தை ஒழிய உபாயாந்தரத்தை விதிக்கிறான் என்கிற பஷம் சேராது என்று சிலர் சொன்னார்கள் –

1-உபாய அனுஷ்டானத்துக்கு அயோக்யமாம்படி ஆத்ம ஸ்வ ரூபத்தை அத்யந்தம் பரதந்த்ரமாக உபதேசிக்க கேட்கையாலும்
உபாயாந்தரங்களுக்கும் நானே ப்ரவர்த்தகன் என்று அருளிச் செய்யக் கேட்கையாலும்
இந்த்ரிய பிராபல்யத்தை அநு சந்தித்து அஞ்சிகையாலும்
எல்லா அவஸ்தை களிலும் ப்ரபத்தியை ஒழிய உபாயம் இல்லை என்னும் இடம் நிழல் எழும்படி அருளிச் செய்யக் கேட்கையாலும்
உபாயாந்தரங்கள் அநேக தோஷங்களோடே கூடி இருக்கையாலும் விரோதி தன்னால் கழித்துக் கொள்ள ஒண்ணாமை யாலும்
ஜ்ஞானவானாய் இருக்கிற இவனுக்கு சோகம் பிறக்கை சம்பாவிதம் ஆகையாலே உபாயாந்தரங்கள் சோக ஜனகங்கள் அன்று என்கிறது அர்த்தம் அன்று –
2-சாஸ்த்ராந்தரங்கள்-தன்னிலே உபாயாந்தரங்களை விட்டு பிரபத்தியைப் பண்ணுவான் என்று சொல்லுகையாலும்
இது தான் பின்நாதிகாரி விஷயம் ஆகையாலும் சாஸ்த்ராந்த ரங்களுக்கும் பூர்வ வசனங்களுக்கும் வையர்த்தம் இல்லை –
3-அநந்ய சாத்யே-அஹம் அஸ்ம்ய அபராதாநாமாலயா -இத்யாதி பிரமாணங்கள் மோஷ சாதனமாகச் சொல்லுகையாலே
பிரபத்தி ஸ்வ தந்திர சாதனம் அன்று என்கிற இதுவும் அர்த்தம் அன்று –
4-இவ் வுபாயம் தான் துஸ் சகமாய் இருக்கையாலும் சாஸ்திரம் இவன் நின்ற நின்ற அளவுகளுக்கு ஈடாக வல்லது உபதேசியாமையாலும்
அரிய வழியை உபதேசிக்கக் கூடாது என்று அர்த்தம் அன்று –

அர்ஜுனன் பிரதமத்திலே சரணம் புகுருகையாலும் -பக்தி யோகம் கேட்ட அநந்தரம் கண்ணும் கண்ண நீருமாய்
கையில் வில்லோடு கூடச் சோர்ந்து விழுகையாலே-அவனை யுளனாக்க வேண்டுமாகையாலும்
த்ரௌபதி குழலை முடித்துத் தன ஸ்வ ரூபம் நிறம் பெற வேண்டுகையாலும்
பரம ரஹஸ்யத்தை மறையாமல் வெளியிட்டான் –

பிரதமத்திலே இத்தை உபதேசியாதே உபாயாந்தரத்திலே பரந்தது இவன் நெஞ்சை சோதிக்கைக்காக –
இதுக்கு அதிகாரி -கேட்பதற்கு முன்பு அஞ்சுமவனும் பின்பு அஞ்சாதவனும்
இதில் பூர்வார்த்தம் -அதிகாரி க்ருத்யத்தைச் சொல்லுகிறது –
உத்தரார்த்தம் ஈஸ்வர க்ருத்யர்த்தைச் சொல்லுகிறது –

1-சர்வ தர்ம -சப்தார்த்தம் –
சர்வ தரமான் –எல்லா தர்மங்களையும் -தர்மங்களாவது-
சாஸ்திர விஹிதமுமாய் -பல சாதனமுமாய் இருப்பது ஓன்று –
இங்கு மோஷ பல சாதனமான சர்மா ஜ்ஞான பக்திகளைச் சொல்லுகிறது –
சர்வ சப்தம் -அவற்றுக்கு போக்யதா பாத கங்களான தர்மங்களைச் சொல்லுகிறது –
சாதன த்யாகத்திலே போக்யதா பாதக தர்ம த்யாகம் அந்தர் பூதமாய் இருக்கச் செய்தே தனித்துச் சொல்லுகிறது -பிரபத்திக்கு அவை வேண்டா என்று தோற்றுகைக்காக-
அல்லாத போது ஸ்திரீ ஸூ த்ராதிகளுக்கு அதிகாரம் இல்லையாம் இ றே-
பஹூ வசனத்தாலே அவதார ரஹஸ்யம்   -புருஷோத்தம வித்யை-தேச வாஸம்-திரு நாம சங்கீர்த்தனம் -தொடக்கமான வற்றைச் சொல்லுகிறது –

2-பரித்யஜ்ய -சப்தார்த்தம் –
பரித்யஜ்ய -விட்டு -பரி சப்தம் -வாசநா ருசிகளோடே கூட விட வேணும் என்னும் இடத்தைச் சொல்லுகிறது –
அவை கிடக்குமாகில் மேல் சொல்லுகிற சாதன விசேஷத்தில் அந்வயம் இன்றிக்கே ஒழியக் கடவது –
அநாதி காலம் அனுபாயங்களிலே உபாய புத்தி பண்ணினோம் என்று லஜ்ஜா புரஸ்  ஸரமான த்யாகத்தைச் சொல்லுகிறது என்று ஆழ்வான் பணிக்கும் –
த்யஜித்தோம் என்கிற புத்தியும் த்யாகத்தோடு ஒக்கும் –
ல்யப்பு -உபாயாந்தர த்யாகம் மேல் பற்றப் புகுகிற உபாயத்துக்கு அங்கம் என்னும் இடத்தைச் சொல்லுகிறது –
பிரபத்தி யாவது -ஒன்றை விட்டு ஒன்றைப் பற்றுகை -என்று அனந்தாழ்வான் வார்த்தை –

3–மாம் -பதார்த்தம் –
மாம் -என்னை -த்வயத்தில் பிரதம பதத்தில் சொல்லுகிற அர்த்த விசேஷங்கள் எல்லாம் இப்பதத்திலே அனுசந்தேயங்கள் –
அதாவது –
ஸ்ரீ யபதித்வமும்
வாத்சல்யாதி குண சதுஷ்ட்யமும்
திவ்ய மங்கள விக்ரஹமும் —
ஏஷ நாராயணஸ் ஸ்ரீ மான் -என்கையாலே -ஸ்ரீ யபதித்வம் அனுசந்தேயம் –
அதர்ம புத்தியாலே தர்மத்தில் நின்றும் நிவ்ருத்தனான அர்ஜுனன் குற்றம் பாராதே அபேஷித அர்த்தங்களை தானே அருளிச் செய்கையாலே வாத்சல்யம் அனுசந்தேயம் –
தன்னுடைய பரத்வத்தை பல காலும் அருளிச் செய்த அளவன்றிக்கே அர்ஜுனன் பிரத்யஷிக்கும் படி பண்ணுகையாலே ஸ்வாமித்வம் அனுசந்தேயம் –
ஹே கிருஷ்ண ஹே யாதவ -என்று அர்ஜுனன் தானே சொல்லும்படி அவனோடு கலந்து பரிமாறுகையாலே சௌசீல்யம் அனுசந்தேயம் –
அப்ராக்ருதமான திரு மேனியைக் கண்ணுக்கு இலக்காம்படி பண்ணுகையாலே சௌலப்யம் அனுசந்தேயம்
மாம்–என்று காட்டுகிறது சாரத்திய வேஷத்தோடு நிற்கிற நிலை யாகையாலே திவ்ய மங்கள விக்ரஹம் அனுசந்தேயம் –

4–ஏக -பதார்த்தம் –
ஏகம் -இவ்வுபாயத்தை சொல்லும் இடம் எல்லாம் அவதாரண பிரயோகம் உண்டாகையாலே ஸ்தான பிரமாணத்தாலே
உகாரம் போலே இதுவும் அவதாரண வாசகமாய் -வ்ரஜ -என்கிற பதத்தில் சொல்லப் புகுகிற ஸ்வீ காரத்தில் உபாய புத்தி நிவ்ருத்தியைச் சொல்லுகிறது –
உபாயாந்தர உபகார ஸ்ம்ருதியும் உபாய பரிக்ரஹமும் உபாயாந்தரத்தோடே ஒக்கும் –
ஏக சப்தம் -உபாய உபேயங்களினுடைய  ஐக்யத்தையும் உபாய பிரதான்யத்தையும் சொல்லுகிறது என்றும் சொல்லுவர்கள் –

5–சரண சப்தார்த்தம் –
சரணம் -உபாயமாக –உபாயம் ஆகிறது -அநிஷ்ட நிவாரகமும் இஷ்ட ப்ராபகமுமாய் இருக்குமது —

6-வ்ரஜ -சப்தார்த்தம் –
வ்ரஜ -புத்தி பண்ணு -இந்த புத்தி யாவது -த்யாஜ்ய கோடியிலும் அந்வயியாதே-
ப்ராபகாந்தர பரித்யாக பூர்வகமாய் பகவத் ரஷகத்வ அனுமதி ரூபமாய் இருப்பதொரு அத்யவசா யாத்மாக ஜ்ஞான விசேஷம் –
இது தான் உபாயாந்தரங்கள் போலே அசக்ருத் கரணீயம் அன்று
கன்யகா ப்ரதாநாதிகள் போலே சக்ருத் கரணீயம் -அல்லாத போது முன்புத்தையது கார்யகரம் இன்றிக்கே ஒழியும்-

7-அஹம் -பதார்த்தம் –
அஹம் -சர்வஜ்ஞத்வாதி குண விசிஷ்டனான நான் –
மாம் -என்கிற விடத்தில் வாத்சல்யாதி குணங்களைச் சொல்லிற்று –
இதில் ஜ்ஞான சக்த்யாதி குணங்களைச் சொல்லுகிறது –
வாத்சல்யாதி குணங்கள் இல்லாத போது உபாய பரிக்ரஹம் இன்றிக்கே ஒழிவது  போலே
ஜ்ஞான சக்த்யாதிகள் இல்லாத போது விரோதி நிவ்ருத்தி இன்றிக்கே ஒழியும் –
இங்குச் சொல்லுகிற சக்தியாவது -சேதனனுடைய அவிவாத ஜனனத்துக்கும் விரோதி நிவ்ருத்திக்கும் அடியான சாமர்த்தியம் –

8-த்வா பதார்த்தம் –
த்வா -உபாயாந்தரங்களை  விட்டு என்னையே உபாயமாகப் பற்றி இருக்கிற உன்னை –
கீழில் பதத்தில் ஜ்ஞான சக்திகளும் பிராப்தியும் நைர பேஷ்யமும் சொல்லிற்று –
இங்கு அஜ்ஞான அசக்திகளும் அப்ராப்தியும் ஆகிஞ்சன்யமும் சொல்லுகிறது –

9- சர்வ பாப சப்தார்த்தம் –
சர்வ பாபேப்ய -எல்லா பாபங்களில் நின்றும் -இங்கு பாபங்களாகச் சொல்லுகிறது -பகவல் லாப விரோதிகளை –
சார்ந்த விரு வல் வினைகளும் -1-5-10-என்று முமுஷூவுக்கு பாபத்தோ பாதி புண்யமும் த்யாஜ்யமாகச் சொல்லுகையாலே
புண்ய பாபங்கள் இரண்டையும் பாப சப்தத்தாலே சொல்லுகிறது –
பஹூ வசனத்தாலே -அவற்றினுடைய பன்மையைச் சொல்லுகிறது -அதாகிறது -அவித்யா கர்ம வாசனா ருசி பிரகிருதி சம்பந்தங்கள் –
சர்வ சப்தத்தாலே -கீழே த்யாஜ்யமாக விஹிதங்களாய்-போக்யதா புத்தியாலே அனுஷ்டேயமான
ஸ்வார்த்ததா பிரதிபத்தியையும் -உபாய புத்தியையும் -ஆவ்ருத்த பிரவ்ருத்தியையும் ப்ராரப்தத்தையும்
லோக சங்க்ரஹ அர்த்தமாக அனுஷ்டேயமான கர்மங்களில் ஸ்வா ர்த்ததா பிரதிபத்தியையும் -பகவத் பாகவத விஷயங்களிலே உபசார புத்த்யா பண்ணுகிற அபசாரங்களையும்
பரி என்கிற உப சர்க்கத்தாலும் ஏக சப்தத்தாலும் த்யாஜ்யமாகச் சொன்னவற்றினுடைய அநு வ்ருத்தியையும் –அவசிஷ்டமான உத்தராகத்தையும் சொல்லுகிறது –
இப்படி கொள்ளாத போது -மா ஸூ ச -என்கிற இது சேராது –
பாபங்களிலே சிறிது கிடப்பது அதிகாரி குறையாலே யாதல் ஈஸ்வரன் குறையாலே யாதல் இ றே-
த்யாக ஸ்வீ காரங்கள் பூர்ணம் ஆகையாலே அதிகாரி பக்கல் குறை இல்லை -ஜ்ஞான சக்திகள் பூர்ணம் ஆகையாலே ஈஸ்வரன் பக்கல் குறை இல்லை –

10–மோஷயிஷ்யாமியின் அர்த்தம் –
மோஷயிஷ்யாமி-முக்தனாம் படி பண்ணக் கடவேன் -சும்மெனாதே கை விட்டோடி -பெரியாழ்வார் -5-4-3- என்றும்
கானோ  –ஒருங்கிற்று கண்டிலமால் -பெரிய திரு -54-என்கிறபடியே -அநாதி கால ஆர்ஜிதமான கர்மங்கள் உன்னைக் கண்டு அஞ்சி
போன இடம் தெரியாதபடி தன்னடையே விட்டுப் போம்படி பண்ணுகிறேன் –
விரோதி நிவ்ருத்தியும் அபிமத பிராப்தியும் இரண்டும் பலமாய் இருக்க ஒன்றைச் சொல்லுவான் என் என்னில்
ஒன்றைச் சொன்னால் மற்றையது தன்னடையே வருகையாலே சொல்லிற்று இல்லை –
மாமே வைஷ்யசி -என்று கீழில் உபாயத்துக்கு சொன்ன பலம் ஒழிய இவ்வுபாயத்துக்கு வேறு பலம் இல்லாமையாலே சொல்லிற்று இல்லை என்னவுமாம் –
ஆனால் விரோதி நிவ்ருத்தி தன்னைச் சொல்லுவான் என் என்னில் அது அதிகம் ஆகையாலே சொல்லிற்று –
விரோதி நிவ்ருத்தி பிறந்தால் பலம் ஸ்வதஸ் சித்தம் ஆகையாலே தனித்துச் சொல்ல வேண்டா வி றே —

11- மா ஸூச -சப்தார்த்தம் –
மா ஸூ ச -சோகியாதே கொள் -உபாயாந்தரங்களை விடுகையாலும் -என்னையே உபாயமாகப் பற்றுகையாலும்
விரோதியை நேராகப் போக்குகிறேன் என்கையாலும் உனக்கு சோகிக்க பிராப்தி இல்லை –
உனக்கு கர்த்தவ்யம் இல்லாமையாலே உன்னைப் பார்த்து சோகிக்க வேண்டா –
எனக்கு ஜ்ஞான சக்தி கருணாதிகளில் வைகல்யம் இல்லாமையாலே என்னைப் பார்த்து சோகிக்க வேண்டா –
விரோதி யாகிறது என்னுடைய நிக்ரஹம் ஆகையாலும் -அதில் கிடப்பது ஓன்று இல்லாமையாலும் -அத்தைப் பார்த்து சோகிக்க வேண்டா –
அநாதி  காலம் சோகியாது இருந்தால் போலே இருப்பது ஓன்று -இப்போது நீ சோகிக்கை யாவது –
நீ சோகித்தாய் ஆகில் உன் கார்யத்திலே நீ அதிகரித்தாயாவுதி -சேஷ பூதனுடைய பேறு சேஷியது-
பேறுடையவனது இழவு-இழவு உடையவனுக்கு சோகம் உள்ளது –
ஆனபின்பு நீ சோகிகக் கடவையோ -தனத்தை இழந்தால் தனவான் அன்றோ சோகிப்பான்-தனம் தான் சோகிக்குமோ-
சர்வ பிரகாரத்தாலும் நான் உன்னைக் கை விடேன் -அச்சம் கெட்டிரு-என்று
வாரேற்று இள முலையாய் வருந்தேல் உன் வளைத் திறமே-திரு விருத்தம் -69-என்கிறபடியே அர்ஜுனன் கண்ணீரைத்   துடைக்கிறான் –

வார்த்தை அறிபவர் -7-5-10–என்கிற பாட்டும்
அத்தனாகி -திருச் சந்தவிருத்தம் -115-என்கிற பாட்டும்
இதுக்கு அர்த்தமாக அனுசந்தேயம் –

——————————————————————————————–

3–த்வ்யப்ரகரணம் –

உபோத்காதம்-
அபௌருஷேயமாய்-நித்ய -நிர்தோஷமாய்-இருந்துள்ள வேதத்திலும் வேதார்த்தத்தை உப ப்ரும்ஹிக்கக் கடவதான ஸ்ம்ருதி இதிஹாச புராணங்களிலும்
அவகீதமாக பிரசித்தமாய் -எம்பெருமானுடைய சர்வஸ்வம்மாய் -ஆழ்வார்களுடையவும் ஆச்சார்யர்களுடையவும் தனமாய்
பகவத் அனந்யார்ஹ சேஷபூதமான ஆத்ம ஸ்வரூபத்துக்கு அத்யந்தம் அநுரூபமாய் இருந்துள்ள
சாதன விசேஷத்தையும்  சாத்ய விசேஷத்தையும் அடைவே வாக்யத்வயமும் பிரதிபாதிக்கிறது –

பூர்வாச்சார்யர்கள் ரஹஸ்ய  த்ரயத்தையும் தங்களுக்கு தனமாக நினைத்துப் போருவர்கள் –
அதில் பிரதம ரஹஸ்ய  மான திரு மந்த்ரம் ஸ்வரூபத்தைப் பிரதிபாதிக்கிறது –
சரம ஸ்லோஹம் பிராபக ஸ்வ ரூபத்தைப் பிரதிபாதிக்கிறது –
அவை இரண்டிலும் ருசி யுடையனான அதிகாரி அவற்றை விசதமாக அநு சந்திக்கிற படியைச் சொல்லுகிறது த்வயம் –
இம்மூன்றையும் தஞ்சமாக நினைத்துப் போரா நிற்கச் செய்தேயும் -சர்வாதிகாரம் ஆகையாலும் -ஆசார்ய ருசி பரிக்ருஹீதம் ஆகையாலும்
இத்தையே மிகவும் தஞ்சமாக நினைத்துப் போருவர்கள் –
புத்தி பூர்வகமான அபசாரகங்களுக்கும் கர்மாவசாநத்தில் அன்றிக்கே சரீராவசா நத்திலே மோஷம் ஆகையாலும் இதுவே தஞ்சம் –

ரகு ராஷச சம்வாதம் –வயாக்ரா வாநர சம்வாதம் -நஹூஷப்ருஹச்பதி சம்வாதம் -கபோதோபாகயாநம் –
மறவன் முசல் குட்டியை விட்டுப் போந்தேன்-என்ன அது கேட்டு பட்டர் அருளிச் செய்த வார்த்தையும்
ஸ்ரீ பாஷ்யகாரர் சரம சமயத்திலே -எப்போதும் த்வயத்தை அநு சந்திக்கை எனக்குப் பிரியம் -என்று அருளிச் செய்த வார்த்தையும்
பெரிய கோயில் நாராயணரைக் குறித்து சபத புரஸ் சரமாக -த்வயம் ஒழியத் தஞ்சம் இல்லை -என்று அருளிச் செய்த வார்த்தையும் –
ஸசேல ஸ்நான பூர்வகமாக ஆர்த்தியோடே உபசன்னனான சிறியாத்தானுக்கு ஆஜ்ஞையிட்டு-த்வயம் ஒழியத் தஞ்சமில்லை -என்று எம்பார் அருளிச் செய்த வார்த்தையும் –
திருமந்த்ரத்திலே பிறந்து த்வயத்திலே வளர்ந்து த்வய நிஷ்டர் ஆவீர் -என்று நஞ்சீயரைக் குறித்து அனந்தாழ்வான் பிரசாதித்த வார்த்தையும்
தொடக்கமான பூர்வாசார்ய வசனங்கள் ருசி விச்வாசங்களுக்கு உறுப்பாக இவ்விடத்திலே அநு சந்தேயங்கள் –

இது தான் பூர்வ வாக்யம் மூன்று பதமும் -உத்தர வாக்யம் மூன்று பதமும் ஆக ஆறு பதமாய் இருக்கும் –
அதில் முதல் பதம் -புருஷகார பூதையான பிராட்டியுடைய நித்ய யோகத்தையும்
ஆஸ்ரயணீயனான எம்பெருமானுடைய குண விக்ரஹங்களையும் சொல்லுகிறது –
இரண்டாம் பதம் -அத்திருவடிகள் உபாயம் என்னும் இடத்தைச் சொல்லுகிறது –
மூன்றாம் பதம் அத்திருவடிகளை உபாயமாக பரிக்ரஹிக்கும் படியைச் சொல்லுகிறது –
நாலாம் பதம் -உபாய பரிக்ரஹ பலமான கைங்கர்யத்துக்கு விஷயம் மிதுனம் என்னும் இடத்தைச் சொல்லுகிறது –
அஞ்சாம் பதம் அவ்வஸ்து சர்வ ஸ்வாமி என்னும் இடத்தையும் கைங்கர்ய ப்ரார்த்த நையையும் சொல்லுகிறது –
ஆறாம் பதம் -கைங்கர்ய விரோதி நிவ்ருத்தியைச் சொல்லுகிறது –

1-ஸ்ரீ சப்தார்த்தம் –
அதில் பிரதம பதத்தில் -ஸ்ரீ சப்தம் -ஸ்ரீ யதே -ஸ்ரயதே -என்கிற வ்யுத்பத்தி த்வயத்தாலும் –
பிராட்டி சேதனனுக்கு ஆஸ்ரயணீயையாய் இருக்கும் இருப்பையும்
ஈஸ்வரனை எப்போதும் ஒக்க ஆஸ்ரயித்துக் கொண்டு இருக்கும் இருப்பையும் சொல்லுகிறது –
ஸ்ரீ யதே -என்றது ஆஸ்ரயிக்கப் படா நின்றாள் -என்றபடி –
ஸ்ரயதே -என்றது -ஆஸ்ரயியா நின்றாள் -என்றபடி
புருஷகாரமாம் போதைக்கு இருவரோடும் சம்பந்தம் யுண்டாக வேணும் –
சேதனரோடு மாத்ருத்வ சம்பந்தம் யுண்டாய் இருக்கும் –
ஈச்வரனோடே மஹிஷீத்வ சம்பந்தம் யுண்டாயிருக்கும்-

ஸ்ருணோதி –ஸ்ராவயதி-என்கிற நிருக்தி விசேஷங்களாலே -ஸ்ரீ யதே -ஸ்ரயதே -என்கிற வ்யுத்பத்தி த்வயத்தாலும் பளிதமான அர்த்தத்தைச் சொல்லுகிறது –
ஸ்ருணோதி -என்றது கேளா நிற்கும் -என்றபடி
ஸ்ராவயதி -என்றது கேட்பியா நிற்கும் என்றபடி –
ஆஸ்ரயிக்க இழிந்த சேதனன் -தன அபராதத்தையும் ஈஸ்வர ஸ்வா தந்த்ர்யத்தையும் நினைத்து அஞ்சி
இரண்டுக்கும் பரிகாரமாக பிராட்டியுடைய காருண்யாதி குணங்களையும் தன்னோடு அவளுக்கு யுண்டான சம்பந்த விசேஷத்தையும் முன்னிட்டுக் கொண்டு
ஈஸ்வரன் பக்கல் புகல் அறுத்துக் கொண்ட எனக்கு அசரண்ய சரண்யையான தேவரீர்  திருவடிகளை ஒழிய புகல் இல்லை என்று
இவன் விண்ணப்பம் செய்யும் வார்த்தைகளைக் கேளா நிற்கும் –
சர்வஜ்ஞனான ஈஸ்வரனையும் கூட நிருத்தனாம்படி பன்னவற்றான தன்னுடைய உக்தி விசேஷங்களாலும் -தன்னுடைய போக்யதா பிரகர்ஷத்தாலும்
மற்றும் யுண்டான உசித உபாயங்களாலும் இவள் இவன் அபராதங்களை அவன் திரு உள்ளத்திலே படாத படி பண்ணி இவன் விண்ணப்பம் செய்யும்
கேட்கும்படி பண்ணா நிற்கும் –
சேதனனுக்கு இருவரோடு சம்பந்தம் யுண்டாய் இருக்கச் செய்தேயும் மாத்ருத்வ நிபந்தனமான வாத்சல்யாதி ரேகத்தாலும்
ஈச்வரனோபாதி காடின்ய மார்த்த்வங்கள் கலந்து இருக்ககை அன்றிக்கே -இவள் பக்கல் உள்ளது மார்த்தவமேயாய்
இத்தலையில் கண் குழிவு காண மாட்டாத படி இருக்கையாலும் –
தன பக்கலிலே தீரக் கழிய அபராதத்தைப் பண்ணின ராவணனுக்கும் அகப்பட ஹிதோபதேசம் பண்ணும்படி குற்றங்கள் திரு உள்ளத்திலே படாத படி இருக்கையாலும்
ராஷசிகள் அபராதத்தில் நின்றும் மீளாது இருக்கச் செய்தே அவர்கள் அஞ்சின அவஸ்தையிலே -பவேயம் சரணம் ஹி வ -என்று
அபாய பிரதானம் பண்ணும்படி இருக்கையாலும்
திருவடியோடே மன்றாடி அவர்களை ரஷித்து தலைக் கட்டுகையாலும் –
நில்லென்ன பெருமாள் தாமே பிராட்டி முன்னிலையாக பற்றுகையாலே இளைய பெருமாளைக் கூடக் கொண்டு போருகையாலும்
ஸ்ரீ விபீஷணப் பெருமாள் குடும்பத்வாரா பிராட்டிக்கு ஆனுகூல்யத்தைப் பண்ணி பெருமாளை சரணம் புகுருகையாலும்
காகம் அபராதத்தைப் பண்ணி வைத்து பிராட்டி சந்நிதியாலே தலை பெற்றுப் போகையாலும்
அத்தனை அபராதம் இன்றிக்கே  இருக்க இவள் சந்நிதி இல்லாமையாலே ராவணன் தலை யறுப் புண்ணக் காண்கையாலும் மற்றும் இவை தொடக்கமான
ஸ்வ பாவ விசேஷங்கள் எல்லா வற்றாலும் ஈஸ்வரனை ஆஸ்ரயிக்கும் போது பிராட்டி புருஷகார பூதை யாகக் கடவள் –

2-மதுப்பின் அர்த்தம் –
மதுப்பு -புருஷகார பூதையான பிராட்டியுடைய நித்ய யோகத்தைச் சொல்லுகிறது –
அகலகில்லேன் இறையும்-6-10-10-என்கிறபடியே -இவள் என்றும் ஒக்க ஈஸ்வரனைப் பிரியாது இருக்கையாலே
ஆஸ்ரயிக்க இழிந்த சேதனனுக்கு இவள் சந்நிதி இல்லை என்று பிற்காலிக்க வேண்டாதே ருசி பிறந்த போதே ஆஸ்ரயிக்கலாம் படி இருக்கும் –

3-நாராயண பதார்த்தம் –
நாராயண பதம் -சேர்க்கக் கடவ பிராட்டி தானே சிதகுரைத்தாலும் -செய்தாரேல் நன்று செய்தார் -பெரியாழ்வார் -4-9-2-என்று
அவளோடு மறுதலித்து நோக்கும் எம்பெருமானுடைய வாத்சல்ய ஸ்வாமித்வ சௌசீல்ய  சௌலப்யங்கள் ஆகிற குணங்களைச் சொல்லுகிறது –
வாத்சல்யம் ஆவது -வத்சத்தின் பக்கல் தேநு இருக்கும் இருப்பு -அதாகிறது -அதினுடைய தோஷத்தைப் போக்யமாகக் கொள்ளுகையும்
ஷீரத்தைக் கொடுத்து வளர்க்கையும் -எதிரிட்டவர்களை கொம்பிலும் குளம்பிலும் கொண்டு நோக்குகையும் இ றே-
அப்படியே ஈஸ்வரனும் இவனுடைய தோஷத்தை போக்யமாகக் கொண்டு -பாலே போல் சீர் -பெரிய திரு -58-என்கிறபடியே
குணங்களாலே தரிப்பித்து -அபயம் சர்வ பூதேப்ய -என்கிறபடியே அனுகூல நிமித்தமாகவும் பிரதிகூலர் நிமித்தமாகவும் நோக்கும் –
ஸ்வாமித்வம் ஆவது -இவன் விமுகனான தசையிலும் விடாதே நின்று சத்தையை நோக்கிக் கொண்டு போருகைக்கு ஹேதுவாய்
இருப்பதொரு பந்த விசேஷம் -அதாகிறது -உடையவனாய் இருக்கும் இருப்பு -அத்வேஷம் தொடங்கி
கைங்கர்ய பர்யந்தமாக யுண்டான ஸ்வ பாவ விசேஷங்களை எல்லாம் உண்டாக்குகிறது இந்த பந்த விசேஷம் அடியாக வி றே –
சௌசீல்யமாவது-உபய விபூதி யோகத்தாலும் பெரிய பிராட்டியாரோட்டைச் சேர்த்தியாலும் நிரந்குச ஸ்வ தந்த்ரனாய்
இருக்கிற ஈஸ்வரனுடைய மேன்மையையும் தங்கள் சிறுமையையும் பார்த்து -அவன் எவ்விடத்தான் யானார் –5-1-7-என்று பிற்காலியாமே
எல்லாரோடும் ஒக்க மேல் விழுந்து புரையறக் கலக்கையும்-அது தன் பேறாக இருக்கையும் -எதிர்த் தலையிலே அபேஷை இன்றிக்கே இருக்கக் கலக்கையும் –
சௌலப்யம் ஆவது -கண்ணுக்கு  விஷயம் இன்றிக்கே இருக்கிற தான் கண்ணாலே கண்டு ஆஸ்ரயிக்கலாம் படி எளியனாகை-
அதினுடைய பூர்த்தி உள்ளது அர்ச்சாவதாரத்திலே இ றே –
மாம் -என்று காட்டின சௌலப்யம் பரத்வம் என்னும்படி இ றே அர்ச்சாவதார சௌலப்யம் இருக்கும் படி –
அர்ஜுனன் ஒருவனுக்குமே யாய்த்து அந்த சௌலப்யம் –
நீ எனக்கு வேண்டா என்கிறவர்களையும் விட மாட்டாத சௌலப்யம் இ றே
அது காதா சித்தம் -இது எப்போதும் உண்டு –

4- சரண -சப்தார்த்தம்
சரனௌ-திருவடிகளை -ருசி ஜனகமுமாய் ப்ராப்யமுமாய் இருக்கிறாப் போலே ப்ராபகமுமாய் இருப்பது திரு மேனி இ றே –
திரு மேனியைச் சொல்லுகிறதாகில் திருவடிகளுக்கு வாசகமான சப்தத்தாலே சொல்லுவான் என்-என்னில்
மேல் பிரபத்தி பண்ணப் புகுகிற அதிகாரி அனந்யார்ஹ சேஷத்வ ஜ்ஞானத்தை உடையவன் ஆகையாலே ஸ்வாமி சந்நிதியில் இவன்
பாசுரம் இப்படி அல்லாது இராமையாலே சொல்லுகிறது -திரு நாரணன் தாள் -4-1-1- என்றும்
திருவுடையடிகள் தம் நலம் கழல் -1-3-8-என்றும் -கழல்கள் அவையே சரணாகக் கொண்ட -5-8-11- என்றும்
நாகணை மிசை நம்பிரான் சரணே சரண் -5-10-11- என்றும் -அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே -6-10-10- என்று சொல்லுகிறபடியே திருவடிகள் இ றே உபாயமாய் இருப்பது –

5- சரண -சப்தார்த்தம் –
சரணம் -உபாயமாக -உபாயமாகிறது -அநிஷ்டத்தைப் போக்கி இஷ்டத்தைப் பண்ணித் தருமது –
அநிஷ்டம் ஆகிறது -அவித்யையும் -அவித்யா கார்யமான ராக த்வேஷங்களும் புண்ய பாப ரூபமான கர்மங்களும்
தேவாதி சதுர்வித சரீரங்களும் -ஆத்யாத்மிகாதி துக்க பரம்பரைகளும்
இஷ்டம் ஆகிறது -புண்ய பாப நிவ்ருத்தியும் -சரீர விச்லேஷமும் -அர்ச்சிராதி மார்க்க கமனமும் பரமபத பிராப்தியும் பரமாத்ம தர்சனமும் குணானுபவ கைங்கர்யங்களும்
அதில் பிரதானமாக இஷ்டமாய் இருப்பது கைங்கர்யம் -அதுக்கு உறுப்பாகையாலே இஷ்டங்களாய் இருக்கும் மற்றுள்ளவை-

6-ப்ரபத்யே -பதார்த்தம்
ப்ரபத்யே -பற்றுகிறேன் –பத கதௌ-என்கிற தாதுவுக்கு அர்த்தம் கதி -இங்கு கதியாக நினைக்கிறது புத்தி விசேஷத்தை –
இந்த புத்தி விசேஷம் ஆகிறது அனந்யார்ஹ சேஷத்வ ஜ்ஞான காரமாய் இதர உபாய வ்யாவ்ருத்தமாய் பகவத் ரஷகத்வ அனுமதி ரூபமாய்
சக்ருத அனுஷ்டேயமாய் வ்யபிசார விளம்ப விதுரமாய் -சர்வாதிகாரமாய் -நியம ஸூநயமாய்-அந்திம ஸ்ம்ருதி நிரபேஷமாய்-ஸூ சகமாய் –
யாச்ஞாகர்ப்பமாய் -த்ருடாத்யவசாய ரூபமாய் இருப்பதொரு ஜ்ஞான  விசேஷம் –
இந்த ஜ்ஞானத்தில் பிரயோஜனாம்சமாய் இருப்பது ஒரு விஸ்வாசம்-
உக்த்ய ஆபாச வசன ஆபாச பக்த்ய ஆபாசங்களாலும் ஈஸ்வர பரீஷை தொடக்கமான வற்றாலும்
இவ்வத்யாவசாய விசேஷம் குலையாது இருந்த போதாய்த்து பல சித்தி உள்ளது –
இங்குச் சொல்லுகிற பிரபத்தி கரண த்ரயத்தாலே யுண்டாகவுமாம்-ஏக கரணத்திலே யுண்டாக வுமாம் -பல சித்தியிலே குறை இல்லை –
இப்பதத்தில் வர்த்தமான நிர்தேசத்தாலே கால ஷேப ஹேதுவாகவும் போக ஹேதுவாகவும் ஈஸ்வர ப்ரீதி ஹேதுவாகவும்
யாவச் சரீர பாதம் இந்த புத்தி விசேஷம் அனுவர்த்திக்கும் என்னுமிடம் ஸூ ஸிதம் ஆகிறது –
சக்ருதேவ -என்கையாலே பலத்துக்கு ஒரு கால் அமையும் –

உத்தர வாக்யம் –
உத்தர வாக்யம் -பிரபத்தி கார்யமாய் -ஸ்ரீ யபதி விஷயமாய் இருந்துள்ள கைங்கர்யத்தை ப்ரார்த்திக்கிற படியைச் சொல்லுகிறது –
கீழ்ச் சொன்ன சாதனம் -பல சதுஷ்ட்ய சாதாரணமாய் இருக்கையாலே இவனுக்கு அபேஷிதமான பல விசேஷத்தை நியமிக்கிறது –

7-ஸ்ரீ மதே பதார்த்தம் –
இதில் பிரதம பதம் கைங்கர்ய பிரதி சம்பந்தி மிதுனம் என்னும் இடத்தைச் சொல்லுகிறது –
சேஷத்வ பிரதி சம்பந்தி மிதுனமானால் கைங்கர்ய பிரதி சம்பந்தியும் மிதுனமாய் இருப்பது –
கோலத் திரு மா மகளோடு உன்னைக் கூட -6-9-3-
ஒண்டொடியாள் திரு மகளும் நீயும் –4-9-10-
திருமாற்கு அரவு -முதல் திருவந்தாதி -53–என்கிறபடியே -தனித்து இவர்களுக்கு ப்ராப்யத்வம் இல்லை
அல்லி மா மலராள் தன்னோடும் அடியேன் கண்டு கொண்டு -பெரிய திரு -4-3-6-என்கிறபடியே
இச் சேர்த்தியிலே பற்றினால் இ றே ஸ்ரீ விபீஷண ஆழ்வானைப் போலே உஜ்ஜீவித்து போகலாவது –
அல்லாத போது ராவண சூர்பணாதிகளைப் போலே விநாசமே பலமாய் இருக்கும் –
பூர்வ வாக்யத்தில் மதுப்பு ஆஸ்ரயிக்குமவர்களை ஈச்வரனோடே சேர்க்கைக்காக பிரியாது இருக்கும் இருப்பைச் சொல்லுகிறது –
இந்த மதுப்பு இவன் பண்ணும் கைங்கர்யத்தை ஈஸ்வரன் திரு உள்ளத்திலே ஓன்று பத்தாகப் படுத்தி
கைங்கர்யம் கொள்ளுகைக்காக  பிரியாது இருக்கும் இருப்பைச் சொல்லுகிறது –

8- நாராயண பதார்த்தம் –
இரண்டாம் பதம் -கைங்கர்யம் வர்த்தமாக அநுபாவ்யமாய் இருந்துள்ள குண விக்ரஹ விபூதி யோகத்தைச் சொல்லுகிறது –
கீழ் உபாய பரிக்ரஹத்துக்கு ஏகாந்தமாகச் சொன்ன குணங்களும் -இங்கே ப்ராப்யத்வேன அநு சந்தேயங்கள் –
கீழில் மற்றை குணங்களிலும் காட்டில் சௌலப்யம் பிரதானமாய் இருக்கும் -இங்கு ஸ்வாமித்வம் பிரதானமாய் இருக்கும் –

9- சதுர்த்தியின் அர்த்தம் –
இதில் சதுர்த்தி கைங்கர்ய ப்ரார்த்த நத்தைச் சொல்லுகிறது –
ஒழிவில் காலம் எல்லாம் உடனாய் மன்னி வழு விலா அடிமை செய்ய வேண்டும் நாம் -3-3-1-என்கிறபடியே
இச் சேதனன் அபி நிவேசாதிசயத்தாலே
தேச கால அவஸ்தா பிரகார நியம விதுரமாக பிரார்த்திக்கக் கடவனாய் இருக்கையாலே
சர்வ தேச சர்வ கால சர்வ அவஸ்தை களிலும் சர்வ பிரகாரத்தாலும் பண்ணும் விருத்தி விசேஷத்தைச் சொல்லுகிறது –
சேஷத்வ ஜ்ஞான கார்யமான உபாய பரிக்ரஹத்துக்கு அநந்தரம் ப்ராப்தமாய் இருக்கையாலே இந்த சதுர்த்திக்கு தாதர்யம் அர்த்தமாக மாட்டாது –
உத்துங்க தத்வத்தைக் குறித்துப் பரதந்த்ரனான சேதனன் பண்ணுகிற விருத்தி விசேஷமாகையாலே
விஷய ஸ்வ பாவத்தாலும் ஆஸ்ரய ஸ்வ பாவத்தாலும் ப்ராத்தனையே அர்த்தமாகக் கடவது –

10- நமஸ்-சப்தார்த்தம் –
நிரதிசய போக்யமான பகவத் விஷயத்தை விஷயீ கரித்திருக்கையாலும் -நிரஸ்த சமஸ்த பிரதி பந்தகமான ஸ்வ ரூபத்தை
ஆஸ்ரயமாக யுடைத்தாயிருக்கையாலும் -அத்யர்த்த ப்ரியரூபமான கைங்கர்யத்தில் பார தந்த்ர்ய விரோதியான ஸ்வ பிரயோஜனத்வ
புத்தியை நிவர்த்திப்பிக்கிறது -நமஸ் ஸூ—
பகவத் திரு முக விகாஸ  ஹேதுவாகையாலே இது நமக்கு ஆதரணீயம் என்கிற பிரதிபத்தி ஒழிய
இதிலே போக்த்ருத்வ பிரதிபத்தியும் –மதீயத்வ பிரதிபத்தியும் நடக்குமாகில் அபுருஷார்த்தமாய் இ றே இருப்பது –
ஸ்வரூப விரோதி என்றும் சாதன விரோதி என்றும் ப்ராப்த விரோதி என்றும் ப்ராப்ய விரோதி என்றும் சதுர் விதமாயிருக்கும் விரோதி –
அதில் திரு மந்த்ரத்தில் உகாரத்தாலும் நமஸ் ஸாலும் ஸ்வ ரூப விரோதி நிவ்ருத்தியை பிரதிபாதிக்கிறது –
சரம ஸ்லோகத்தில் அர்த்த த்வயத்தாலும் சாதன விரோதி நிவ்ருத்தி யையும் ப்ராப்தி விரோதி  நிவ்ருத்தியையும் பிரதிபாதிக்கிறது –
ப்ராப்ய விரோதி நிவ்ருத்தியைச் சொல்லுகிறது இந்த நமஸ் ஸூ -அதாவது
ஏறாளும் இறையோனிற்படியே-4-8- அவனுக்கு உறுப்பல்லாத ஆத்மாத்மீயங்கள் த்யாஜ்யம் என்கை-
போக விரோதியான சேஷத்வ அநு சந்தானமும் ஆத்ம சமப்பணம் போலே ஸ்வரூப விருத்தம் –

ஆக –
புருஷார்த்த ஸ்வரூபத்தையும் –
உபாய ஸ்வரூபத்தையும் –
உபாய பரிக்ரஹத்தையும்-
கைங்கர்ய பிரதி சம்பந்தியையும் –
கைங்கர்யத்தையும் –
அதுக்கு விரோதியான அஹங்கார மமகாரங்களினிடைய நிவ்ருத்தியையும் –
சொல்லித் தலைக் கட்டுகிறது –

பூர்வ வாக்யத்துக்கு அர்த்தமாக -அகலகில்லேன் இறையும்-6-10-10- என்கிற பாட்டை அநு சந்திப்பது –
உத்தர வாக்யத்துக்கு அர்த்தமாக -சிற்றஞ்சிறுகாலே -திருப்பாவை -29-என்கிற பாட்டை அநு சந்திப்பது —

ஸ்ரீ ஸ்ரீ ரியபதிப்படி -முற்றிற்று –

———————————————————————————————-

ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திருவடிகளே சரணம் –
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் அருளிச் செய்த — ஸ்ரீ யாத்ருச்சிகபடி —

May 14, 2015

ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர்  தனியன்  –

லோகாசார்யாய குரவே கிருஷ்ண பாதச்ய ஸூ நவே
சம்சார போகி சந்தஷ்ட ஜீவ ஜீவாதவே நம-

———————————————————————————————————–

திரு மந்திர பிரகரணம் —

யாத்ருச்சிக பகவத் கடாஷத்தாலே
பகவத் ஆபிமுக்யம் பிறந்து –
சதாசார்யா சமாஸ்ரயணம் பண்ணின முமுஷூவுக்கு ரஹஸ்ய த்ரயமும் அநு சந்தேயம் –
அதில் ஸ்வரூப சோதநார்த்தமாக ப்ரவ்ருத்தம் ஆகையாலே பிரதமத்திலே அநு சந்தேயமான திருமந்தரம் –
ஸ்வரூபத்தையும் –
ஸ்வரூபமான –
புருஷார்த்தத்தையும் பிரதிபாதிக்கிறது –

அப்பரம புருஷார்த்தத்துக்கு அநு ரூபமான சரம சாதனா ஸ்வீ காரத்தை விதிக்கிறது சரம ஸ்லோகம் –

விஹித உபாய பரிக்ரஹத்தையும் ஸ பிரகார புருஷார்த்த   பிரகாரத்தையும் பிரதிபாதிக்கிறது -த்வயம் –

அதில் திருமந்தரம் –
எட்டுத் திரு அஷரமாய்
மூன்று பதமாய் இருக்கும்-
அதில் முதல் பதமான பிரணவம் -மூன்று பதமாய் இருக்கும் –
அதில் பிரதம பதமான அகாரம் -சர்வ தேச சர்வ கால சர்வ அவஸ்தை களிலும்
-சர்வ பிரகாரத்தாலும்  -சர்வாத்மாக்களையும் ரஷித்துக் கொண்டு போருகிற சர்வேஸ்வரனுக்கு சேஷம் என்கிறது –

இரண்டாம் பதமாய்  அவதாராணார்த்தமான உகாரம் -நேரே சிலர்க்கு சேஷம் அன்று என்கிறது –

மூன்றாம் பதமாய் -இருபத்தஞ்சாம்  அஷரமாய் -ஜ்ஞான வாசியாய் இருந்துள்ள மகாரம் –
கீழ்ச் சொன்ன அனந்யார்ஹ சேஷத்வத்துக்கு ஆஸ்ரயம் தேஹாதி விலஷணமான ஆத்மவஸ்து என்கிறது –

இரண்டாம் பதமான நமஸ் ஸூ- ந -என்றும் ம -என்றும் இரண்டு பதமாய் இருக்கும் –
ந -என்றது அன்று -என்றபடி –
ம் -என்றது -எனக்கு என்றபடி –
இரண்டும் கூடி எனக்கன்று என்றபடி –
எனக்கன்று என்கையாவது எனக்கு நான் கடவன் அல்லன் என்று இருக்கை-

மூன்றாம் பதமான -நாராயண பதம் –
சர்வே சேஷியான நாராயணனுக்கு நித்ய கைங்கர்யம் பண்ண வேணும் என்று பிரார்த்திக்கும் படியைச் சொல்லுகிறது –
நாராயணன் -என்றது நாரங்களுக்கு அயநம் -என்றபடி –
நாரங்கள் ஆவன -நசியாத வஸ்துக்களினுடைய திரள் –
அவையாவன -திவ்யாத்ம ஸ்வ ரூபத்தை ஒழிந்த சர்வ வஸ்துக்களும் –
அயநம் -என்றது-இவற்றுக்கு ஆஸ்ரயம் என்றபடி –
அங்கன் அன்றிக்கே –
இவை தன்னை ஆஸ்ரயமாக யுடையன் என்னவுமாம் –
இத்தால்
மேன்மையும் நீர்மையும் சொல்லிற்று ஆய்த்து-
இதில் சதுர்த்தி -சர்வ தேச சர்வ கால சர்வ அவஸ்தை களிலும்
சர்வ பிரகார கைங்கர்யங்களையும் கொண்டு அருள வேணும் -என்று பிரார்த்திக்கும் படியைச் சொல்லுகிறது —

ஆக
சர்வ ரஷகனான சர்வேஸ்வரனுக்கு அனந்யார்ஹ சேஷ பூதனாய்-
எனக்கு உரியன் அன்றிக்கே இருந்துள்ள நான் –
சர்வ சேஷியான நாராயணனுக்கே நித்ய கைங்கர்யம் பண்ணப் பெறுவேனாக வேணும் -என்று ப்ரார்த்ததாயிற்று –

—————————————————————————————————————-

சரம ஸ்லோக பிரகரணம் –

சர்வ தர்மான்
கர்ம ஜ்ஞான பக்திகளை ஸபிரகாரமாக உபதேசிக்கக் கேட்ட அர்ஜுனன்
அவற்றின் அருமையாலும் –
தன் ஸ்வரூபத்துக்குச் சேராமையாலும்-
சாத்ய லாப நிமித்தமாக சோகிக்க
நான் முன்பு உபதேசித்தவற்றை ஸவாஸநமாக  விட்டு –
என்னை ஒருவனையுமே உபாயமாகப் பரிக்ரஹி –
நான் உன்னுடைய சர்வ விரோதிகளையும் போக்குகிறேன்-
நீ சோகியாதே கொள்  -என்று
இவனுடைய சோகத்தை நிவர்த்திப்பிக்கிறான் –

சர்வ தர்மான் -எல்லா தர்மங்களையும் -கீழ்ச் சொன்ன ஸபரிகரங்களான எல்லா உபாயங்களையும் –
பரித்யஜ்ய -ருசி வாசனைகளோடு விட்டு
மாம் -உன் கார்யத்திலே அதிகரித்துக் கொண்டு நிற்கிற என்னை –
ஏகம்-ஒருவனையுமே –
சரணம் -உபாயமாக
வ்ரஜ -அத்யவசி
அஹம் -சர்வ சக்தியான நான்
த்வா -என்னை ஒழிந்த உபாய உபேயங்களை விட்டு இருக்கிற உன்னை
சர்வ பாபேப்ய -என்னைக் கிட்டுகைக்கு விரோதியாய் இருந்துள்ளவை எல்லா வற்றிலும் நின்றும்
மோஷயிஷ்யாமி-விடுவிக்கக் கடவேன் –
மா ஸூ ஸ -நீ சோகியாதே கொள் –

ஆக
சாங்கமான சர்வ உபாயங்களையும் ஸவாஸநமாக  விட்டு –
வாத்சல்யாதி கல்யாண குண விசிஷ்டனான என்னை ஒருவனுமே –
நிரபேஷ சாதனமாக ஸ்வீகரி –
சர்வ சக்தித்வாதி கல்யாண குண விசிஷ்டனான நான் –
என்னையே உபாயமாகப் பற்றி இருக்கிற உன்னை –
சமஸ்த பிரதி பந்தகங்களில் நின்றும் முக்தனாக்குகிறேன் –
நீ சோகியாதே கொள் –
என்று அர்ஜுனனுடைய சோகத்தை நிவர்த்திப்பிக்கிறான் –

———————————————————————————————————————-

த்வயப் பிரகரணம் –

த்வயம் –
உபாய பரிக்ரஹத்தையும் –
உபேய ப்ரார்த்த நத்தையும் –
பிரதிபாதிக்கிறது –
இரண்டு அர்த்தத்தையும் பிரதிபாதிக்கையாலே -இரண்டு வாக்யம் ஆயிற்று –
இரண்டு வாக்யம் ஆகையாலே த்வயம் என்று திரு நாமம் ஆயிற்று –
இதில் பூர்வ வாக்யம் மூன்று பதமாய்
உத்தர வாக்யம் மூன்று பதமாய்
ஆக ஆறு பதமாய் இருக்கும் –

இதில் முதல் பதம் –
பெரிய பிராட்டியாருடைய புருஷகார பாவத்தையும்
ஈஸ்வரனுடைய வாத்சல்யாதி குண சதுஷ்ட்யத்தையும்
திவ்ய மங்கள விக்ரஹ யோகத்தையும் சொல்லுகிறது –

இதில் –
ஸ்ரீ சப்தம் -ஸ்ரீ யதே ஸ்ரயதே -என்கிற வ்யுத்பத்தி த்வயத்தாலும் –
பெரிய பிராட்டியாருடைய மாத்ருத்வ பிரயிக்தமான பந்த விசேஷத்தாலே-இவர்கள் குற்றம் பாராதே எல்லார்க்கும் ஒக்க ஆஸ்ரயணீயையாய் இருக்கும் இருப்பையும் –
பத்நீத்வம் ஆகிற பந்த விசேஷத்தாலே ஸ்வரூப சித்த்யர்த்தமாகவும்
சேதன ரஷணார்த்தமாகவும் ஈஸ்வரனை ஆஸ்ரயித்துக் கொண்டு இருக்கும் இருப்பையும் சொல்லுகிறது –

மதுப்பாலே –
ஈஸ்வரனுக்கும் பிராட்டிக்கும் உண்டான நித்ய சம்பந்தத்தைச் சொல்லுகிறது –

நாராயண -சப்தம் –
பிராட்டி தானே அபராதங்களை இட்டு அகற்றப் பார்த்தாலும்
என்னடியாரது செய்யார் செய்தாரேல் நன்று செய்தார் -என்று நோக்கக் கடவனான
ஈஸ்வரனுடைய வாத்சல்ய ஸவாமித்வ சௌசீல்ய சௌலப்யங்களைச் சொல்லுகிறது –

சரண சப்தம் –
ஸ்வரூப குணங்களிலும் காட்டில் தானே கார்யம் செய்யக் கடவதான விக்ரஹ வைலஷண்யத்தைச் சொல்லுகிறது –

சரணம் –
உபாயமாக -உபாயம் ஆகிறது –
அநிஷ்ட நிவ்ருத்தியையும் இஷ்ட பிராப்தியையும் பண்ணித் தருமது –

ப்ரபத்யே –
பற்றுகிறேன் -பற்றுகை யாவது -மாநசாத்யவசாயம் –

ஸ்ரீ மதே –
பெரிய பிராட்டியாரோடு சம்ச்லிஷ்டனானவனுக்கு-
இத்தால் -கைங்கர்ய பிரதி சம்பந்தி மிதுனம் என்னும் இடத்தைச் சொல்லுகிறது —

நாராயணாய –
சர்வ சேஷியாய் இருந்துள்ள வனுக்கு -இத்தால் கைங்கர்யம் பண்ணுகைக்கு வகுத்த விஷயம் என்கிறது –
இதில் சதுர்த்தி -தேச கால அவஸ்தா பிரகார நியம விதுரமான நித்ய கைங்கர்ய ப்ரார்த்த  நத்தை பிரதிபாதிக்கிறது –

நமஸ் -சப்தம் –
கீழ்ச் சொன்ன கைங்கர்யத்தில் விரோதி நிவ்ருத்தியைச் சொல்லுகிறது –
கைங்கர்யத்துக்கு விரோதி யாகிறது -போக்த்ருத்வ பிரதிபத்தியும் மதீயத்வ பிரதிபத்தியும் –

ஆக –
ஸ்ரீ யபதியாய் –
சர்வ ஸூலபனான நாராயணன் திருவடிகளையே
அபிமத சித்திக்கும் -தத் விரோதி நிவ்ருத்திக்கும் உபாயமாக அத்யவசிக்கிறேன் –
ஸ்ரீ யபதியாய்-
சர்வ ஸ்வாமியான நாராயணனுக்கு
நித்ய கைங்கர்யம் பண்ணப் பெறுவேனாக வேணும் –
அதுக்கு விரோதியான அஹங்கார மமகாரங்களும் நிவ்ருத்தமாக வேணும் என்று
ஸபிரகார சாதன ஸ்விகார பூர்வகமாக
ஸ்வ ரூப அநு ரூபமான நித்ய கைங்கர்ய ப்ரார்த்தநத்தை பிரதிபாதிக்கிறது –

ஸ்ரீ யாத்ருச்சிகப் படி முற்றிற்று –

————————————————————————————————————————

ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திருவடிகளே சரணம் –
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –