Archive for April, 2015

ஸ்ரீ பராசர பட்டர் அருளிச் செய்த ஸ்ரீ குணரத்ந கோசம் –ஸ்ரீ திருமலை நல்லான் இயற்றிய ஸூவர்ண குஞ்சிகா -ஸ்லோகங்கள்-15/16/17/18/19/20–

April 30, 2015

மேல் நான்கு ஸ்லோகங்களால் உலகில் உள்ள நல்லன யாவும் பிராட்டி கடாஷம் பெற்றவை –
அல்லன பெறாதவை என்கிறார் –
இங்கனம் ஸ்ருதி பிரமாணத்தால் அறியப்படும் பிராட்டியினுடைய கடாஷத்தின் யுடைய
லவ லேசத்திற்கு  வசப்பட்டவை சிறந்த பொருள்கள் யாவும் -என்கிறார் –

ஆகு க்ராம நியாமகா தபி விபோரா சர்வ நிர்வாஹகாத்
ஐஸ்வர்யம் யதிஹ உத்த ரோத்தர குணம் ஸ்ரீ ரங்க பர்த்து ப்ரியே
துங்கம் மங்கள முஜ்ஜ்வலம் கரிமவத் புண்யம் புன பாவனம்
தன்யம் யத் தததச்ச விஷண  புவஸ் தே பஞ்சஷா விப்ருஷ –15-

ஆகு க்ராம நியாமகா தபிவிபோரா சர்வ நிர்வாஹகாத் –
சிறிய ஊரை ஆளுகின்றவன் தொடங்கி எல்லாவற்றையும் நிர்வஹிக்கின்ற விபுவான
பிரமன் வரையிலும் இவ் உலகத்திலே –

ஐஸ்வர்யம் யதி ஹோத்த ரோத்தர குணம் ஸ்ரீ ரங்க பர்த்து ப்ரியே-
உத்தர உத்தர குணம் -மேன்மேலும் சிறப்பு வாய்ந்த -யாதொரு ஐஸ்வர்யம் உண்டோ –

துங்கம் மங்கள முஜ்ஜ்வலம் கரிமவத் புண்யம் புன பாவனம் –
துங்கம் -மேரு முதலிய உயரமான பொருளும்
மங்களம் -புஷ்பம் முதலிய மங்களப் பொருளும்
கரிமவத் -இமயம் முதலிய கனத்த பொருளும்
புண்யம் -வேள்வி முதலிய அறமும்
புனர் -மேலும்
பாவனம் -காவிரி முதலிய தூய்மைப் படுத்தும் பொருளும் –

தன்யம்யத் தததச்ச விஷண  புவஸ் தே பஞ்சஷா விப்ருஷ —
தான்யம் பாக்யத்தைப் பெற்ற பொருளும் என்கிற
யத் ஐஸ்வர்யம் -யாதொரு ஐஸ்வர்யம் உண்டோ –
தத் -அந்த ஆளுகின்ற ஐஸ்வர்யமும்
அதச்ச -இந்த துங்கம் முதலிய ஐஸ்வர்யமும்
தே -நினது
வீஷண  புவ -பார்வையில் யுண்டான
பஞ்ச ஷா விப்ருஷ -ஐந்தாறு திவலைகள் –

சிற்றூர் மன் முதலாகச் செக மனைத்தும் திறம்பாமல் நடாத்துகின்ற இறைவன் காறும்
பெற்றுள்ள செல்வமும் ஈங்கு அரங்க நாதன்  பேரன்பே மேன் மேலும் பெருக்கமாக
மற்றோங்கி வளர்ந்தனவும் கனத்தனவும் மங்களமும் இலங்குனவும் பாக்கியத்தைப்
பெற்றனவும் பாவனமும் அறமும் நின்ன பெரும் கருணை நோக்கின் துளி ஐந்தாறாமே–15-

————————————————————————

பிராட்டியின் கடாஷம் ஐஸ்வர்யத்துக்கு காரணமாதல் போலே
வறுமைக்கு அவள் கடாஷம் இன்மையே ஹேது -என்கிறார் –

ஏகோ முக்த ஆதபத்ர ப்ரசல மணி கணாத்காரி மௌளிர் மநுஷ்ய
த்ருப்யத் தந்தாவளஸ்தோ ந கணயதி ந தான்யத் ஷணம் ஷோணி பாலான்
யத் தஸ்மை திஷ்டதேன்ய க்ருபணம சரணோ தர்சயன் தந்த பங்க்தீ
தத் தே ஸ்ரீ ரங்கராஜ பிரணயிநி நயன உதஞ்சித ந்யஞ்சிதாப்யாம் –16-

ஏகோ-ஒரு மனுஷ்யர்
முக்தாத பத்ர ப்ரசல மணி-முத்துக் குடையில் அசைகின்ற ரத்னங்களாலே
கணாத்காரி மௌளிர்-உராய்தலினால் கண கண என்று ஒலிக்கின்ற கிரீடம்  ஏந்தினவனாய்க் கொண்டும்

மநுஷ்ய -த்ருப்யத் தந்தாவளஸ்த-மனிதன் களிப்புக் கொண்ட யானை மீது இருந்து கொண்டும்

தோ ந கணயதி ந தான் யத் ஷணம் ஷோணி பாலான் –
வணங்கின  அரசர்களை சிறிது நேரம் கூட மதிப்பது இல்லை என்பது யாது ஓன்று உண்டோ –

யத் தஸ்மை திஷ்டதேன்ய க்ருபணமசரணோ தர்சயன் தந்த பங்க்தீ-அதுவும் மற்றொரு மனிதன் வேறு புகல் அற்றவனாய்
தன் ஏழைமை தோற்ற பல் வரிசைகளை காண்பித்துக் கொண்டு அந்த யானை மீது இருப்பவனுக்கு

திஷ்டதேயத் -தன் கருத்தைப் புலப்படுத்தி நிற்கிறான் எனபது யாதொன்று உண்டோ

தத் தே ஸ்ரீ ரங்கராஜ பிரணயிநி நயன உதஞ்சித ந்யஞ்சிதாப்யாம் —
அதுவும் உனது கண்களினுடைய உதஞ்சித -திறத்தலாலும்-நயஞ்சிதாப்யாம் -மூடுதலாலும்-உண்டாகின்றன –

அந்வய வ்யதிரேகங்கள் இரண்டையும் காட்டினார் ஆயிற்று –
ஐஸ்வர்ய எல்லையை முதல் இரண்டு அடிகளாலும்
வறுமையின் எல்லை நிலையை மூன்றாம் அடியில் காட்டி
நான்காவது அடியில் அவற்றுக்கு காரணம் காட்டி அருள்கிறார் –

திஷ்டதே -பிரகாசன  ஸ்தேயாக்யயோச்ச -என்ற இலக்கணப் படி
தன் கருத்தை வெளிப்படுத்தி நிற்றல் எனபது பொருள் –

ஒரு முத்துக் குடை மணிகளுரச மௌலி ஒலிப்ப கண கண வென்றே ஒரு மானிடனார்
கருமத்தக் கரிமிசை வீற்று இருந்தே சற்றும் காவலரே வணங்கிடுனும் கணிசியாமை
இருபத்திப் பல் வரிசை யிளித்து முன்னே இன்னோருவன் புகலின்றி ஏங்கும் தன்மை
புரிவித்ததற் கிவை முறையே திறக்குமூடும் பொன்னரங்கர் காதலி நின் கண்கள் தாமே –16

———————————————————————–

பிராட்டியின் கடாஷத்தினால் தாமே பெருகி  வரும் நன்மைகளை யடுக்குகிறார் –

ரதிர் மதி சரஸ்வதீ த்ருதி சம்ருத்தி ஸ்த்தி ஸ்ரிய
ஸூதா சகி யதோ முகம் சிசலிஷேத் தவ ப்ரூலதா
ததோ முக மதேந்திரே பஹூமுகீ மஹம் பூர்விகாம்
விகாஹ்ய ச வசம்வதா பரிவஹந்தி கூலங்கஷா –17-

ரதிர் மதி சரஸ்வதீ த்ருதி சம்ருத்தி ஸத்திச்ரிய-
ப்ரீதியும் அறிவும் கல்வியும் தைரியமும் செழிப்பும் கார்ய சித்தியும் செல்வமும் –

ஸூதா சகி யதோ முகம் சிசலிஷேத் தவ ப்ரூலதா-
அமிழ்தின் துணைவியான இலக்குமியே நினது கொடி போன்ற புருவம் யாரை நோக்கி அசைய விரும்புமோ-

ததோ முக மதேந்திரே பஹூமுகீ மஹம் பூர்விகாம் –
அவரை நோக்கி -பலவாறு நான் முன்பு நான் முன்பு என்ற எண்ணத்தை-

விகாஹ்ய ச வசம்வதா பரிவஹந்தி கூலங்கஷா —
அடைந்து அடங்குவனவும் கரை புரள்வனவுமாய் முழுதும்  வெள்ளம் இடுகின்றன –

பொருந்திய தேசமும்  பொறையும் திறலும்–சேரும் எங்கள் இராமானுசனை அடைபவர்க்கே –

யஸ்யாம் யஸ்யாம் திசி விஹாதே தேவி திருஷ்டிஸ் த்வதீயா தஸ்யாம் தஸ்யாம் அஹமஹமிகாம்
தன்வதே சம்பதோகா-ஸ்ரீ வேதாந்த தேசிகர்

ஸூதா சகி–உலகை உய்விப்பதாலும் இனிமையாலும் -அமுதினில் வரும் பெண் அமுதன்றோ –

கடாஷம் பெற இன்னார் இனியார் வரையறை இல்லாமை பற்றி யதா முகம் -என்கிறார்

ப்ரூலதா -விரும்பும் பொழுதே இங்கனம் வெள்ளம் இடுமாயின் நேரே நோக்கின் பேசும் திறமோ –

அஹம் பூர்விகாம் விகாஹ்ய -நான் நன்மையாக வேணும் என்று போட்டியிட்டுக் கொண்டு வந்து பெருகுகின்றன

பெருகும் முறை பல -என்பதால் பஹூ முகீம் -என்கிறார்

பரிவஹந்தி கூலங்கஷா-நாற்புறங்களிலும் வெள்ளம் இடுகின்றன
சம்பந்த  சம்பந்திகளுக்கும் நன்மைகள் வந்து சேரும்

ரதி மதி –பிராட்டியின் புருவ நெறிப்புக்கு ஏற்ப பணி புரியும் பணிப் பெண்கள்
எனத் தோற்றும் சமத்காரம் பெண் பாலாக அருளி –

ரதி பக்தி
மதி ஞானம்
சரஸ்வதீ இவ் விரண்டையும் பற்றிய வாக்கு
த்ருதி  ஆனந்தம்
சம்ருத்தி அடிமை வளம்
சித்தி ஸ்வரூப லாபம்
ஸ்ரீ அதற்கு அனுகூலமான ஐஸ்வர்யம் -என்னவுமாம் –

நின் புருவங்களார் மேல் நெளிந்திட விரும்பும் ஆங்கே
அன்பறி வாக்கம் தீரம் அருங்கலை செழிப்பு சித்தி
என்பன பலவாறு எங்கும் இரு கரை மோதும் செல்வி
இன்ப அமுதனையாய் முந்தி முந்தி  என்று ஏற்குமாறே-17-

—————————————————————–

உலகின் கண் உள்ள எல்லாப் பொருள்களின் உடைய ஏற்றத் தாழ்வுகள் யாவும்
பிராட்டியின் கடாஷத்தைப் பெறுதலையும் பெறாததையும் பொறுத்தன -என்கிறார் –

சஹ ஸ்திர பரித்ரஸ வ்ரஜ விரிஞ்சந அகிஞ்சனை
அநோகஹ ப்ருஹஸ்பதி பிரபல விக்ல பப்ரக்ரியம்
இதம் சதசதாத்மநா நிகிலமேவ நிம் நோந்தனம்
கடாஷ ததுபேஷயோஸ் தவ ஹி லஷ்மி தத் தாண்டவம் –18-

சஹ ஸ்திர பரித்ரச வ்ரஜ விரிஞ்சந அகிஞ்சனை –
ஸ்தாவர ஜங்கமங்களின் சமூஹம் என்ன
பிரமன் என்ன
பிரமனுக்கு எதிர்தட்டாக அகிஞ்சனன்-

அநோகஹ ப்ருஹஸ்பதி பிரபல விக்ல பப்ரக்ரியம் –
மரம் என்ன -லோகே வனஸ்பதி ப்ருஹஸ்பதி தாரதம்யம் -கூரத் ஆழ்வான்
குரு என்ன -அறிவின் உயர்வு எல்லை ப்ருஹஸ்பதி சப்தம்
பலிஷ்டன் என்ன
துர்பலன் என்ன -இவர்களின் பிரகாரத்தை யுடையதான –

இதம் சதசதாத்மநா நிகிலமேவ நிம் நோந்தனம்
இவ்வுலகம் முழுதுமே
நல்லது கெட்டது என்ற வடிவத்தாலே
மேடு பள்ளமாய் இருப்பதொரு யாதொன்று உண்டோ –
நிகிலமேவ -இதில் அடங்காதது ஒன்றுமே இல்லை என்றவாறு

கடாஷ ததுபேஷயோஸ் தவ ஹி லஷ்மி தத் தாண்டவம் —
அது உன்னுடைய நோக்கினுடைய அதின்மையினுடையவும் நாட்டியமும் அன்றோ –
ஏற்றத் தாழ்வுகள் எல்லாம் லீலா கார்யம் -தாண்டவம்-

சஹ -சகித்துக் கொள்ளும் பொருள்
ஸ்திர -நிலை நிற்கும் பொருள்
பரித்ரச -பயப்படும் பொருள் -சஹ பொருளுக்கு எதிர்மறை
வ்ரஜ -அழியும் பொருள்  -ஸ்திர பொருளுக்கு எதிர்மறை என்றுமாம் –

பெயர்வன பெயர்கிலாத பிரமனே செல்வ மில்லான்
உயர் குரு மரனே மற்றும் உறு பல முற்றோர் அற்றோர்
உயர்வான தாழ்வான யாவும் நல்ல தீயனவா யுன் கண்
அயர்வினின் அருளின் நோக்கத் தாடு தாண்டவம் அணங்கே –18-

—————————————————————-

இங்கனம் ஜகத் சமஸ்தம் யத பாங்க சம்ச்ரயம்-என்றபடி உலகம் பிராட்டியின் கடாஷத்தைப் பற்றி
நிற்பதாகக் கூறுவது பொருந்துமோ –
இறைவன் இட்ட வழக்கன்றோ உலகம் எனின்
உலகம் இவளது விளையாட்டிற்காகவே இறைவனால் படைக்கப் பட்டது ஆதலின்
இவள் கடாஷத்தைப் பற்றியே யது நிற்கும் என்னும் கருத்தினராய்
பிராட்டியின் விளையாட்டிற்காகவே இறைவன் இவ்வுலகைப் படைத்தான் என்கிறார் –

காலே சம்சதி யோக்யதாம் சிதசிதோ ரன்யோன்ய மாலிங்கதோ
பூதா ஹங்க்ருதி புத்தி பஞ்சகரணீ ஸ்வாந்த ப்ரவ்ருத் தீந்த்ரியை
அண்டா நாவரணைஸ் சஹஸ்ர மகரோத் தான் பூர் புவஸ் ஸ்வர வத
ஸ்ரீ ரங்கேஸ வர  தேவி தே விஹ்ருதயே சங்கல்பமாந ப்ரிய —-19-

காலே -படைத்ததற்கு முந்திய காலம்
சம்சதி யோக்யதாம் -தகுதியை அறிவிக்கும் சமயத்தில் -பருவ காலம்  வந்தவாறே –
சிதசிதோ ரன்யோன்ய மாலிங்கதோ-ஜீவ பிரகிருதி தத்வங்கள் ஒன்றுக்கு ஓன்று கலந்து இருக்கும் பொழுது

சங்கல்பமாந ப்ரிய-நின் அன்பன் படைப்பதாக சங்கல்பம் செய்து கொண்டு-
பஹூச்யாம்-மனசைவ  – ஜகத் ஸ்ருஷ்டிம் -நினைத்த
எல்லாப் பொருள்களுக்கும் வித்தாய் -முதலில் சிதையாமே மனம் செய் ஞானத்து உன் பெருமை -என்னக் கடவது இறே

ஸ்ரீ ரங்கேஸ வர  தேவி-தே விஹ்ருதயே -பெரிய பிராட்டியாரே – உனது விளையாட்டிற்காக
பூதா ஹங்க்ருதி புத்தி பஞ்சகரணீ ஸ்வாந்த ப்ரவ்ருத் தீந்த்ரியை-
ஐம் பூதங்கள் என்ன
அஹங்கார தத்வம் என்ன
புத்தி -மஹத் தத்வம் என்ன-புத்தி –துணிபு -உறுதி -மஹான்வை புத்தி லஷண –
பஞ்சீ கரணீ-ஐந்து ஞான இந்த்ரியங்கள் என்ன
ஸ்வாந்த -மனம் என்ன
ப்ரவ்ருத் தீந்த்ரியை–கர்ம இந்த்ரியங்கள் என்ன

ஐம் புலன்களை இங்கு கூறாது விட்டது அடுத்த ஸ்லோகத்தில் விசேஷித்துக் கூறுதற்கு என்க-

அண்டா நாவரணைஸ் சஹஸ்ர மகரோத் தான் பூர் புவஸ் ஸ்வரவத
ஏழு ஆவரணங்களுடன்-தான் -பிரசித்தங்களான-பூ புவர் ஸ்வர்க்க லோகங்கள் இவற்றை யுடைய –
சஹஸ்ரம் அண்டான் -பக அண்டங்களை
அகரோத் -படைத்தான் –
அண்டா நாந்து சஹாஸ்ராணாம் சஹாஸ்ராண் யயுதா நிச ஈத்ருசா நான் தத்ர கோடி கோடி சதா நிச –

கலந்த வுயிர் சடப் பொருளை யாக்கக் காலம் கருதும் கால் ஐம் பூத  மாநாங்காரம்
புலன் உள்ளம் கன்மேந்த்ரியங்களாலே பூர்ப் புவச் சுவர் லோகமுடைய வண்டம்
பல வாயிரங்கள் மதிள்  ஏழி னோடும் படைத்தனனாற் சங்கல்ப்பித்து உனது கேள்வன்
இலங்ரு திருவரங்க நகர்க்கு இறைவன் தேவி இன்புற்று நீ விளையாட்டயர்வதற்கே–19-

———————————————————————

இந்த பிரக்ருதியினாலேயே சேதனர்களை கலக்கி இறைவன் பிராட்டிக்குப்
பரிஹாச ரசம் விளைவிக்கிறார் என்கிறார்-

சப்தாதீன் விஷயான் பிரதர்சய விபவம் விஸ்மார்யா தாஸ்யாத்மகம்
வைஷணவ்யா குண மாய யாத்ம நிவ ஹான் விப்லாவ்ய பூர்வ புமான்
பும்ஸா பண்யவதூ விடம்பி வபுஷா தூரத்தா நிவா யாசயன்
ஸ்ரீரங்கேஸ்வரி கலப்பதே தவ பரீஹாசாத் மநே  கேளயே–20-

சப்தாதீன் விஷயான் பிரதர்சய விபவம் விஸ்மார்யா தாஸ்யாத்மகம்
ஒலி முதலிய நுகரும் பொருள்களை காட்டி -அடிமை வடிவான-கைங்கர்ய தநம் –
அடிமைச் செல்வத்தை மறக்கச் செய்து -செவி முதலிய புலன்களால் நுகரப் படும்

ஓசை ஊறு ஒளி சுவை நாற்றம் என்னும் இவற்றை
சப்த ஸ்பர்ச ரூப ரச கந்தம் -போன்றவை சப்தாதி விஷயங்கள் –
பல நீ காட்டிப் படுப்பயோ –

நுகர்வித்து என்னாமல்
காட்டி -பிரதர்சய என்று கொடுமையைக் காட்டியபடி –

இழக்கும்படி செய்து என்னாமல்
மறக்கும்படி செய்து -விச்மார்ய-என்றது
ஆத்மாவுக்கு உரிய செல்வம் தாஸ்யம்

ஆவிஸ்ஸ்யுர் மம சஹஜ கைங்கர்ய விதய -என்று அஷ்ட ஸ்லோகியில் அருளிச் செய்கிறார் –
மறந்தேன் உன்னை முன்னம் -என்பர் –

பூர்வ புமான் -ஆதி புருஷனான ஸ்ரீ ரங்க நாதன் –

வைஷணவ்யா குண மாய யாத்ம நிவ ஹான் விப்லாவ்ய –
விஷ்ணுவான தன்னைச் சேர்ந்த முக் குணங்கள் வாய்ந்த பிரக்ருதியினாலே ஆத்மா வர்க்கங்களை கலக்கி –
குணமாயா சமாவ்ருத -ஜிதந்தே -குணமாய் மம மாயா -ஸ்ரீ கீதை –
ஆத்மா நிவஹான் –புமான் –த்ரிபிர் குண மயைர் பாவை ரேபிஸ் சர்வமிதம்  ஜகத் மோஹிதம்-யாவரும் மயங்குவார் –
ப்ருஹ்மாத்யாஸ்  சகலா தேவா மனுஷ்யா பசவஸ்  ததா விஷ்ணு மயா மஹாவர்த்த மோஹாந்த தமஸா வ்ருதா-ஸ்ரீ விஷ்ணு புராணம் –
சூது நான் அறியா வகைச் சுழற்றி ஓர் ஐவரைக் காட்டி யுன் னடிப் போது நான் அணுகா வகை செய்து போதி  கண்டாய்-

பும்ஸா பண்யவதூ விடம்பி வபுஷா தூரத்தா நிவா யாசயன்
பண்யவதூ -விலை மாதரை
விடம்பி -ஒத்த
வபுஷா -வேஷம் அணிந்த
பும்ஸா -புருஷனாலே
தூர்த்தான் இவ -காமுக புருஷரைப் போலே
ஆயாசயன் -வருத்தமுறச் செய்து கொண்டு –

பெரிய திருமொழி -1-6-1-வ்யாக்யானத்தில்
ஆண் பிள்ளைச் சோறாள்வியை-ஸ்திரீ வேஷம் கொண்ட புருஷனை -ஸ்திரீ என்று பின் தொடருமா போலே
இருப்பதொன்று இறே
சப்தாதி விஷயங்களில் போக்யதா புத்தி பண்ணி
பின் தொடருகை யாகிற இது -பெரியவாச்சான் பிள்ளை –

கொடுத்த சைதன்யம் தான் பொதுவாய் ருசி பேதத்தாலே வழி விலகிப் போய்
அனர்த்தத்தை விளைவித்துக் கொண்டு இருக்கிற படியைக் கண்டு –
நாம் ஒன்றை நினைத்துச் செய்ய இவை ஒன்றைச் சூழ்த்துக் கொண்டபடி கண்டாயே –
என்று பிராட்டி திரு முகத்தைப் பார்த்து ஸ்மிதம் பண்ண
அது கோல் விழுக்காட்டாலே லீலா ரசமாய்த் தலைக்கட்டும் -என்ற ஈட்டின் ஸ்ரீ ஸூ க்திகள்-

ஸ்ரீரங்கேஸ்வரி கலப்பதே தவ பரீஹாசாத் மநே  கேளயே–
நினது பரிஹாச ரூபமான விளையாட்டிற்கு வல்லவன் ஆகிறான் –

பொல்லாத புலன் ஐந்தும் நன்கு காட்டிப் பொன்னடிமைத் திறத்தினையே மறக்கச் செய்து
தொல்லாதி புருடனுயிர்களை மயக்கி விண்டு குண மாயையினால் பொது வென் சொல்லார்
நல்லார் போல் நய வடிவம் பூண்ட ஆணால் நயக்கின்ற காமுகரைப் போல் வருத்தி
வல்லானாய் நினது நகைச் சுவை யாட்டத்தில் வளர ரங்க நாயகியே விளங்குகின்றான் -20-

———————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திரு மலை நல்லான் ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பராசர பட்டர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பராசர பட்டர் அருளிச் செய்த ஸ்ரீ குணரத்ந கோசம் –ஸ்ரீ திருமலை நல்லான் இயற்றிய ஸூவர்ண குஞ்சிகா -ஸ்லோகங்கள்-9/10/11/12/13/14–

April 29, 2015

தமது வேண்டுகோளின் படியே சிறந்த கவிதா சக்தியைப் பெற்ற ஆசிரியர்
ஸ்ரீ ரங்க நாதனை நோக்கி
நின்னிலும் சிறப்புடையவளாக ஸ்ரீ பிராட்டியைக் கூறுகின்றோம் –
நன்கு கேட்டு மகிழ்ந்து அருள்க -என்கிறார் —

ஸ்ரீயஸ் ஸ்ரீஸ் ஸ்ரீ ரங்கேச தவச ஹ்ருதயம் பகவதீம்
ஸ்ரீரியம் த்வத்தோப்யுச் ஐஸ்வர்யமிஹ பணாமச் ஸ்ருணுதராம்
த்ருசௌ தேபூயாஸ்தாம் ஸூக தரளதாரே ஸ்ரவணத
புனர் ஹர்ஷோத் கர்ஷாத் ஸ்புடது புஜயோ கஞ்சுக சதம் –9-

ஸ்ரீயஸ் ஸ்ரீஸ் -திருவுக்கும் திருவே -அவளுக்கும் சிறப்பு தருபவன் நீயே என்று சமாதானம் அருள்கிறார் இத்தால்
பார்த்தா நாம பரம் நார்யா பூஷணம் பூஷணா தபி –
ஸ்ரீ யஸ் ஸ்ரீ ச்ச பவே தகர்யா -ஸ்ரீ ராமாயணம்
திருவுக்கும் திருவாகிய செல்வா –
கஸ் ஸ்ரீஸ் ஸ்ரீரிய –த்வாஞ்ச ஸ்ரீ யஸ் ஸ்ரீ ரிய முதாஹூ ருதாரவாச -ஆளவந்தார் –

ஸ்ரீ ரங்கேச-ஸ்ரீ ரங்கத்தில் பள்ளி கொண்டு அருள்பவனே –
திருவுக்கும் திரு என்று பரத்வம் சொல்லி
இங்கே சௌலப்யம் ஸ்ரீ ரங்கேச என்கிறார்
அரவணைத் துயிலுமா கண்டு உடலுருகலாம்படியான போக்ய பூதன் நீ –
உனக்கும் போக்ய பூதை அவள் –

தவச ஹ்ருதயம் பகவதீம் -ஸ்ரீரியம்-நினக்கும் கூட திரு உள்ளத்துக்கு பிடித்த நற் குணங்கள் வாய்ந்த
பிராட்டியை -அகலகில்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை உறை  மார்பன் அன்றோ –

த்வத்தோப்யுச் ஐஸ்வர்யமிஹ பணாம-நின்னிலும் மேலாக யாம் இங்கு கூறுகின்றோம் –
வயம் -பிராட்டி கடாஷம் பெற்ற ஹர்ஷத்தால் பன்மையில் –
ஆளவந்தார் போன்ற பரமாச்சார்யர்களையும் சேர்த்து அருளுகிறார் என்றுமாம்-

இஹ -இந்த பிரபந்தத்தில் -இவ்விடத்தில் -நினது முன்னிலையிலே –

ஸ்ருணுதராம்-நன்கு கேட்டருளுக-
இத்தைக் கேட்டதும் மெய் மறந்து இருக்க
கேளாய் -என்கிறார் –

த்ருசௌ தேபூயாஸ்தாம் ஸூக தரளதாரே ஸ்ரவணத-கேட்பதாலேயே நினது திருக்கண்கள் ஸூகத்தாலே பிறழ்கிற
கரு விழிகளை யுடையனவாய் ஆயிடுக –

புனர் ஹர்ஷோத் கர்ஷாத் ஸ்புடது புஜயோ  கஞ்சுக சதம் -மேலும் ஹர்ஷத்தின் மிகுதியாலே பூரித்த திருத் தோள்களிலே
பல அங்கிகள் வெடித்திடுக-
புனர் -மேலும்
அடிக்கடி என்னவுமாம் -கர்ம சம்பந்தத்தால் -மலராத  குவியாத திருமேனி
ஹர்ஷத்தாலே விகாரம் தவிர்க்க ஒண்ணாது இறே-

இருவருமான சேர்த்தியிலே இந்த ஸ்தோத்ரம் விண்ணப்பம் செய்யப் படுவதாக தெரிகிறது –
ஸ்ரீ ரங்கேசய-விளி-புஜயோ-ஹ்ருதயம் -என்பதால் பிராட்டியைப் பற்றிய ஸ்லோகம் என்றதாயிற்று –
தனது ஸ்திதியை விட அவளது ஸ்துதியை விரும்பிக் கேட்பான் அன்றோ –

ஹ்ரீஸ்சதே லஷ்மீஸ்ச பத்ன்யௌ-ஈஸ்வரீம் சர்வ பூதாநாம் —
அஸ்யேசாநா ஜகதோ விஷ்ணு பத்நீ –
திருவாய்மொழி -5-9-3- ஸ்ரீ  ஸூக்திகளும் இங்கே அனுசந்தேயம்-

திருவுக்கும் திருவே ஸ்ரீ அரங்கில் பள்ளி சேர்வோனே நினக்கு மனக்கு இனியளான
திரு மகளைப் பகவதியை நினக்கும் மேலாச் செப்புகின்றோம் யாமிங்கு நன்கு கேளாய்
கரு விழிகள் பிறழ்ந்திடுக நினது கண்ணில் காது கொடுக்கும் சுகத்தால் கஞ்சுகங்கள்
இரு புயமும் பொருமி மிக வுவகை கூர எண்ணில் அடங்காது வெடி படுக மேலும் –9

————————————————————————————

கீழ்ப் பிரதிஜ்ஞை செய்த படி பிராட்டியத் ஸ்துதிக்க கருதி
அவளது ஸ்வரூபாதிகள் உடைய சித்திக்கு
இதிஹாசாதிகளுடன் கூடிய ஸ்ருதியே பிரமாணம் -என்கிறார்-

தேவி ஸ்ருதிம் பகவதீம் பிரதமே புமாம்ச
த்வத் சத் குனௌக மணி கோச க்ருஹம் க்ருணந்தி
தத் த்வார பாடந படூ நிசச இதிஹாச
சம் தர்க்கண ஸ்ம்ருதி புராண புரஸ் ஸராணி –10-

பிரதமே புமாம்ச   –முன்னோர்களான புருடர்கள் -வால்மீகி பராசராதிகள் –
ப்ரபன்ன குல  முன்னோர் -நம்மாழ்வார் பூர்வாச்சார்யர்கள்
பராங்குசாத்யா ரதமே புமாம்ச -என்கிறார் -ஸ்ரீ ரெங்கராஜ  ஸ்த்வத்திலும்-

மணி கோச க்ருஹம் -ரத்னக் குவியலின் இல்லங்கள்
சுருதி -ஓதி ஓதுவித்து ஆதியாய் வரும் வேதங்கள் –மாநாதிநாமேய சித்தி

தத் த்வார பாடந படூ நிச -அதன் வாயிலைத் திறப்பதில் திறமை உள்ளவைகளாகவும்
க்ருணந்தி-கூறுகிறார்கள் –
த்வத் வத் குனௌக மணி கோச க்ருஹம் க்ருணந்தி-பிராட்டியின் சம்பந்தத்தாலே குணங்கள் நன்மை பெறுகின்றன –

குணங்களை என் கூறுவது கொம்பினைச் சேர்ந்தவை உய்யப் பிணங்குவன -கம்பர் –
குனௌக-கல்யாண குணக் கூட்டங்கள் திரள் -அநந்தம்
போக்யமாதாலானும்
ஜ்வலிப்பதனாலும்
மங்கள கரமாதலானும் -இவற்றை ரத்னமாகவும்
ஸ்ருதியை பொக்கிஷமாகவும்-இவற்றை கூடமாய் வைக்கப் பட்டமையால் -உருவகப் படுத்தி அருள்கிறார் –

மேதாவிகளே கண்டு எடுத்து அனுபவிக்க முடியும் –
கோச க்ருஹம்-ஸ்ரீ குண ரத்ன கோசம் -ஒருவாறு தோன்றுமே இப்பிரபந்த திரு நாமமும் –

ஸ்ருதியின் தேர்ந்த பொருளே இப் பிரபந்தமாக அமைந்தது –
கர்ம ஞான பாகம் இரண்டுமே பிராட்டியைப் பற்றியதே –
மேன்மை பாரதந்த்ர்யம் இவளுக்கே உண்டான தனிப் பெரும் கல்யாண குணங்கள்
ஏகைவ வர்த்ததே பின்னா ஜ்யோத்ஸ்நேவ ஹிமதீதிதே -நிலாவையும் ஒளியையும் போலே பிரிக்க முடியாத மிதுனம் இறே-

பொக்கிஷத்தின் உள்ள புக கதவைத் திறக்க வேண்டுமே –
அதற்கு திறவு கோல்கள் இதிகாசாதிகள் என்கிறார் மேல் –
தத்த்வார பாடந படூ நிச சேதிஹாச சம் தர்க்கண ஸ்ம்ருதி புராண புரஸ் ஸராணி –
சம் தர்க்கணம்-நேர்மையான தர்க்கம் -மீமாம்சை போல்வன
ஸ்ம்ருதி -மனு முதலியன
புராணம் ஸ்ரீ விஷ்ணு புராணாம் போல்வன
இவைகளை முன்னிட்டவை என்றது திவ்ய பிரபந்தங்களை –

இதிஹாச புராணாப்யாம்  வேதாந்தார்த்த பிரகாச்யதே –
ப்ராயேண பூர்வபாகார்த்த பூரணம் தர்ம சாஸ்த்ரத –
யஸ் தர்க்கேன அநு சந்தத்தே சதர்மம் வேத நே-தா –
செய்ய தமிழ் மாலைகள் நாம் தெரியவோதி தெளியாத மறை நிலங்கள் தெளிகின்றோமே –

இறைவனை வெளிப்படையாக சொல்லி யாராலே அவன் பர ப்ரஹ்மமாக ஆயினானோ
அவள் பெருமையையே இவை சொல்லும் –
அபாங்க பூயாம்ச ஸ்லோகம் இத்தை விவரிக்கும்-
வேதோப ப்ருஹ்மணார்த்தாய தவாக்ராஹயத பிரபு என்ற ஸ்ரீ ராமாயணம் சீதாயாச்சரிதம் மஹத் என்று
சிறை இருந்தவள் ஏற்றம் கூறுகிறது
இறைவனைக் கூறின பொழுதே பிராட்டியையும் கூறினதாகும் –
விட்டுப் பிரியாத குணங்கள் போலே விசேஷணமாக இருப்பதால் –

புருடர்கள் புகல்வர் தொல்லோர் புன்மைகள் சிறிதும் புல்லாச்
ஸ்ருதியைத் தேவி நின்ன சுப குண மணி  வீடு என்றே
செறி புதா திறக்கும் சீர்மை கெழுமிய திறவு கோலே
தருக்க நல் லிதிகாசங்கள் தரும நூல் புராணமாதி -10

——————————————————————————

இப்படி பிரமாணங்கள் இருந்தும் உண்மையை அறியாதாராய்
சம்சாரத்தில் உழன்று இழந்து இருக்க காரணம்
பிராட்டியின் கடாஷத்துக்கு   சிறிதும் இலக்காமையே -என்கிறார் –

ஆஹூர் வேதாந் அமாநம் கதிசன கதிச அராஜகம் விஸ்வமேதத்
ராஜன்வத் கேசிதீசம் குணி நமபி குணைஸ் தம் தரித்ராண மன்யே
பிஷா வந்யே ஸூராஜம்பவ மிதிச ஜடாஸ் தே தலாதல் யகார்ஷூ
யே தே ஸ்ரீ ரங்க ஹர்ம்யாங்கண கன கலதே ந ஷணம் லஷ்யமாசன் –11  –

ஸ்ரீ ரங்க ஹர்ம்யாங்கண கன கலதே-ஸ்ரீ ரங்க விமானத்தினுடைய முற்றத்தின் கண் உள்ள தங்கக் கொடியே-
யே தே -லஷ்யம் -எவர்கள் உன்னுடைய -கடாஷத்துக்கு இலக்காக
ந  ஆசன்-ஆக வில்லையோ
தே ஜடா கதி சன -அந்த அறிவிலிகளான சிலர்
ஆஹூர் வேதாந் அமாநம் -வேதான் அமானம் -ஆஹூ -வேதங்களை பிரமாணம் அல்ல என்று சொல்லினார் –
கதிச -மற்றும் சிலர்
ஏதத் விஸ்வம் அராஜகம் -இந்த உலகத்தை இறைவன் அற்றதாக சொல்லினர் –
கேசித் ராஜன்வத் -வேறு சிலர் நல்ல இறைவனை யுடையதாகச் சொல்லினார்
அன்யே -மற்றையோர்
தம் ஈசம் குணி நம் அபி -குனி தரித்ராணாம் -அந்த நல்ல இறைவனை நியமிப்பவனாயும் குணம் உள்ளவனாயும் இருந்தாலும்
குணங்களாலே சூன்யனாக சொல்லினார்
அன்யே பிஷௌ ஸூ ராஜம்பவம் -வேறு திறத்தோர் பிச்சை எடுப்பவனிடம் நல்ல இறைமையை சொல்லினர்
இத்திச தலாதலி அகார்சா -இவ் வண்ணமாகவும் கையினால் அடித்துக் கொள்ளும் சண்டையை செய்தனர் –

சிலர் -என்று அநாதாரம் தோற்ற பாஹ்ய குத்ருஷ்டிகளை அருளிச் செய்கிறார்
அனுமானத்தால் அறியலாம் -பரமாணுவே காரணம் என்பர் கணாத மதத்தார்
நிர்குணன் என்பர் அத்வைதிகள் –
அனைவரையும் சேர்த்து ஜடர் என்கிறார் –
தங்களுக்குத் தாங்கள் அடித்துக் கொள்கிறார்கள் -நிரசிக்க வேண்டியது நமது பணி அல்ல –

பொற் கொடியாக  கூறி -ஒளி  யுடைமை -எழில் உடைமை -சிறிது கடாஷம் பெற்றாலும் ச பண்டிதர் ஆவார்களே –
உண்மை அறிவு பெற்று இருப்பார்கள் –

வேதங்கள் பிரமாணம் அல்ல என்பார் வியனுலகுக்கு இறையவனே இல்லை என்பார்
நாதன் உண்டு இவ்  யுலகிற்கு நல்லன் என்பார் நலனுடைய   வவன் தனை நிர்க் குணனே என்பார்
ஏதம் கொள் இரப்பாளன் இறைவன் என்பார்  இப்படியே மதி கேடர் அடித்துக் கொள்வர்
போது இறையும் அரங்கத்து விமான முற்றப் பொலங்கொடியே இலக்கு நினக்கு ஆகாதாரே -11

பொலங்கொடி-தங்கக் கொடி-

————————————————————————

பிராட்டியின் கடாஷத்திற்கு இலக்கான பாக்யவான்களே
வேதாந்தத்தின் புதை பொருளாகிய பிராட்டி யுடைய
மஹிமையைக் கண்டு அனுபவிக்க இட்டுப் பிறந்தவர்கள் -என்கிறார் –

மனஸி விலச தாஷ்ணா பக்தி சித்தாஞ்ஜநேந
ஸ்ருதி சிரஸி நிகூடம் லஷ்மி தே வீஷமாணா
நிதி மிவ மஹிமாநம் புஞ்ஜதே யேபி தன்யா
ந நு பகவதி தைவீம் சம்பதந்தே பிஜாதா –12-

உட்கண்ணில் பக்தி என்னும் சித்தாஞ்சம் இட்டுக் கொண்டே மலை-மறை  உச்சி போன்ற இடங்களில்
ஒளித்து வைக்கப் பட்டுள்ள பிராட்டி மகிமை என்னும் புதையலை கண்டு அனுபவிக்கப் பெறுகின்றனர் –

அஷ்ணா -ஞானக் கண்ணாலே
வீஷமாணா -பார்க்கப் பெற்றவர்களாய்
புஞ்ஜதே -அனுபவிக்கிறார்கள்
நி கூடம் -நன்றாக மறைக்கப் பட்டுள்ள –

தே தைவீம் சம்பத ம்பி ஜாதா ந நு – -அவர்கள் தேவ சம்பந்தம் பெற்ற சம்பத்தைக் குறித்து பிறந்தவர்கள் அல்லவா
யேபி தன்யா -தனம் -பாக்யத்தை ப்ராப்தா எய்தினவர் தன்யா பாக்யவான்கள் –
கடாஷத்துக்கு இலக்காகியே பாக்கியம் அபி -அளவிட முடியாத அவர்கள் சிறப்பைக் காட்டும் –

தைவீம் சம்பதம் தேபி ஜாத-தைவ சம்பத் ஆசூர சம்பத் -சாஸ்திரம் பின் செல்வாரும் மீறுவாரும்-
மோஷ நரக ஹேதுக்கள்-சம்பதம் தைவீம் அபிஜாத -ஸ்ரீ கீதை

என் நெஞ்சினால் நோக்கிக் காணீர் -பக்தியாலே அறிந்து அடைகின்றான் –
த்ரஷ்டும் ப்ரவேஷ்டும் அபி பக்தித ஏவ சக்ய-கூரத் ஆழ்வான்-
ஆளவந்தார் –நைவாஸூர ப்ரக்ருத்ய பிரபவந்தி போத்தும்-என்றும் –
பச்யந்தி கேசி தநிசம்  த்வத நன்ய பாவா -என்றும் -அருளிச் செய்தாது போலே
கூரத் ஆழ்வானும்-ஸ்ருத்யர்த்த மர்த்தமிவ பாநு கரைர் விபேஜ த்வத்  பக்தி  பாவித்த விகல்மஷ சேமுஷீகா-என்றும்
யேது த்வதங்க்ரி சரசீருஹ பக்தி ஹீநா தேஷா மமீபிரபி நைவ யதார்த்த போத -என்றும் –
அருளிச் செய்தாது போலே –

நோக்கிக் காணும் பக்தி சித்தாஞ்ஜனத்தை இடுகிறார் அஞ்சாம் பத்தில் -என்று
அருளிச் செய்கிறார் ஆசார்ய ஹ்ருதயகாரர்–

பத்தி சித்தாஞ்சனத்தால் பகவதி மறையில் முடி
வைத்த நின் மகிமை கண்டு மனக் கணின்   நிதியே போலத்
துய்த்திடுவோர்கள் செல்வி துகளறு பாக்கியத்தால்
மெய்த் திருவான தெய்வப் பிறவியே மேயார் அன்றே –12

மெய்த் திரு -உண்மைச் சம்பத்து
தெய்வப் பிறவி -தைவீ சம்பத் -உள்ளவர்கள்
மேயார் -மேவியார் -மேயான் வேங்கடம் -எனபது போலே –

——————————————————————————–

உப ப்ருஹ்மணங்களோடு கூடிய வேதம் பிராட்டியைப் பற்றியது என்று
கீழ் -தேவிக்ருதம் -என்ற
ஸ்லோகத்தில் கூறியதை விளக்குகிறார்
மேல் இரண்டு ஸ்லோகங்களால்-

அஸ்யேசா நா ஜகத இதிதே தீ மஹே யாம் சம்ருத்திம்
ஸ்ரீஸ் ஸ்ரீ ஸூக்தம் பஹூ முக்யதே தாஞ்ச சாகா நுசாகம்
ஈஷ்டே கச்சிஜ் ஜகத இதி ய பௌருஷே ஸூ க்த உக்த
தஞ்ச த்வத்கம் பாதிமதி ஜகா யுத்தரச் சாநுவாக –13-

சம்ருத்திம் -ஐஸ்வர் யத்தை
அதீமஹே-ஒதுகின்றோமோ –
அஸ்யேசாநா ஜகத-பூர்வ காண்டத்தில் உள்ள ஸ்ருதி வாக்யத்தை அப்படியே கையாளுகிறார்
சாகா நுசாகம் -இதம் ஹி பௌருஷம்ஸூ க்தம் சர்வ வேதேஷூ பட்யதே-போலே ஸ்ரீ ஸூக்தமும் சாகைகள் தோறும் உள்ளது
பஹூ முக்யதே சாகா நுசாகம் -மேலும் மேலும் பல்கிப் பரி பூரணமாக -என்றபடி –
ஈஷ்டே கச்சிஜ் ஜகத இதி ய பௌருஷே ஸூ க்த உக்த-இவ் வனைத்தும் புருஷனே என்றது புருஷ ஸூக்தம் –
அம்ருதத்வத்திற்கு -மோஷத்திற்கு -ஈச்வரனே என்று ஸ்பஷ்டமாகவும் கூறுகிறது என்பதை ஈஷ்டே கச்சிஜ் ஜகத -என்கிறார்
தாம்ச -புருஷ ஸூ க்தத்தில் சொல்லப் பட்டவனையும் நாராயண அனுவாகாதிகளிலே சொல்லப் பட்டவனையும் -என்றபடி

யுத்தரச் சாநுவாகச்ச -அத்ப்யஸ் ஸ்ம் பூத -என்று தொடங்கும் அடுத்த அனுவாகம்
உம்மை -லஷ்மி ஸ்ரத்தையால் தேவன் தேவத் தன்மையை அடைகிறான் எனபது போன்ற வாக்யங்கள் –
அந்தப் புருஷனை யான் அறிகின்றேன் -புருஷ ஸூக்தம் நாராயண அனுவாகம் மனுவாகத்திலும்
வாக்யங்கள் ஒற்றுமை உற்றுக் காணப்படும்
பிராட்டிக்கு பிரதானம் கொடுத்து பேசுகிறார் –
சேஷித்வே பரம  புமான் பரிகராஹ் யேதே தவ ஸ்பாரணே-என்று மேலேயும் அருளிச் செய்வார் –

இறைவி இவ் உலகத்திற்கு என்று ஒதுகின்றமை தன்னை
நெறி பல விரித்து மேன் மேல் நிகழ்த்துமே திரு நின் ஸூக்தம்
இறை எனப் புருட ஸூக்தத்து இயம்பிய ஒருவனைப் பின்
மறை யநுவாக முன் தன் மகிழ்நன் என்று ஓதும் அன்றே   –13-

——————————————————————

மறை முடிகளுக்கு மாத்திரமன்றி
ஸ்ரீ இராமாயணம் முதலிய உபப் ருஹ்மணங்களும்
நினது மகிமையிலே நோக்கம் -என்கிறார் —

உத்பாஹு: த்வாம் உபனிஷத் அஸௌ ஆஹ ந ஏகா நியந்த்ரீம்
ஸ்ரீமத் ராமாயணம் அபி பரம் ப்ராணிதி த்வத் சரித்ரே
ஸ்மர்த்தார: அஸ்மத் ஜநநி யதமே ஸேதிஹாஸை: புராணை:
நிந்யு: வேதா ந அபி ச ததமே த்வந் மஹிம்நி ப்ரமாணம்.–ஸ்லோகம் –14 –-

அஸ்மத் ஜநநி -எமது அன்னையே –
உத்பாஹூஸ்த்வா முபநிஷதஸா வாஹநைகா நியந்தரீம்-
ஸ்ரீ ஸூக்தாதி உபநிஷத் மட்டும் கையை உயர்த்திக் கொண்டு உன்னை இறைவியாக கூறவில்லை –
சத்யம் சத்யம் புனஸ் சத்யம் உத்த்ருத்ய புஜ முச்யதே -முக்காலும் உண்மை -பிராட்டியே உலகிற்கு இறைவி என்று
உபநிஷத் சத்யம் செய்கின்றனவாம்
அசௌ-என்று முன் ஸ்லோகத்தில் குறிப்பிட்ட ஸ்ரீ ஸூக்தத்தைச் சுட்டியது

பின்னையோ எனின் –
ஸ்ரீ மத் ராமாயணமபி பரம் ப்ராணிதி த்வச் சரித்ரே-ஸ்ரீ மத் ராமாயணமும் கூட
நினது அறிதர விஷயமாக மிகவும் பேசி ஜீவித்து இருக்கின்றது –
சாஹி ஸ்ரீ என்று செல்வமாகக் கூறப்படும் வேதங்களில் சொன்ன பயன் இராமாயணத்திலும்
உண்டாதலின் அதனை ஸ்ரீமத் என்று விசேஷிக்கிறார்

பரம் -விசேஷணம்-இதிஹாச ஸ்ரேஷ்டமான ஸ்ரீ ராமாயணம் -த்வத் சரித்ரே பரம் என்று கூட்டி உரைக்கலுமாம்-
பிராட்டி சரித்ரத்தாலேயே ஸ்ரீமத் இராமாயணம் ஜீவித்து இருக்கிறது –
ஜீவிதம் வயங்க்ய வைபவம் உள்ளுறை பொருள் சீதாயாச் சரிதம் மஹத் -புருஷகார வைபவமே பிராட்டியின் சரித்ரம்
கிருபை பாரதந்த்ர்யம் அனன்யார்ஹத்வம்-மூன்றையும் மூன்று பிரிவுகளால் வெளியிட்டு  அருளினாள்

ஸ்மர்த்தாரோஸ் மஜ் ஜநநி யதமே சேதிஹாசை புராணை-எவர்கள் ஸ்ம்ருதி காரர்களோ
அவர்களும் வேதங்களை இதிஹாசங்களோடு கூடிய புராணங்களைக் கொண்டு –

நிந்யூர் வேதா நபிஸ ததமே தவன் மஹிம்நி பிரமாணம் -நினது மஹிமையில்
மேற்கோளாக நயப்பித்தனர் -நிரூபித்தனர் –

உயர்த்தி புயமீசுவரியாக வுன்னை உபநிடத மாத்திரமே யுரைக்க லில்லை
உயர்த்தி யுடைச் சீ ராமாயணமும் கூட உயிர் உறுவது உனது நனி சரித்ரத்தால்
உயிர்த் திரளுக்கு ஒரு தாயே மேற் கோளாக உன்னுடைய மகிமையினுக்கு உபபாதித்தார்
செயிர்த் தினையுமில் மறையை மிருதிகாரர் சீர் இதிகாசத்துடனே புராணம் கொண்டே –14–

உயர்த்தி புயம் -புயம் உயர்த்தி என்று மாற்றி
செயிர்- குற்றம்
உப பாதித்தார் -நிரூபித்தார்-

———————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திரு மலை நல்லான் ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பராசர பட்டர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பராசர பட்டர் அருளிச் செய்த ஸ்ரீ குணரத்ந கோசம் –ஸ்ரீ திருமலை நல்லான் இயற்றிய ஸூவர்ண குஞ்சிகா -ஸ்லோகங்கள்-5/6/7/8/–

April 28, 2015

கீழ் இரண்டு ஸ்லோகங்களில் இவர் வேண்டினபடியே பிராட்டி குளிரக் கடாஷித்து அருள
ஸ்வரூபாதிகளை நேரே சாஷாத் கரித்து-
பிரமன் முதலியோரும் துதிக்க அரிய இந்த வைபவத்தையோ நான் துதிப்பது –
அழகிது வாழ்க என் சிறந்த வாக்கு  என்று தம்மையே தாம் பரிஹசித்துக் கொள்கிறார் –

யத் யாவத் தவ வைபவம் ததுசித ஸ்தோத்ராய தூரே ஸ்ப்ருஹா
ஸ்தோதும்கே வயமித்ய தச்ச ஜக்ருஹூ ப்ராஞ்சோ விரிஞ்ச்யாத்ய
அப்யே வந் தவ தேவி வாங்மனஸ் யோர் பாஷா நபிஹ்ஞம் பதம்
காவாச ப்ரயதா மஹே கவயிதம் ஸ்வஸ்தி ப்ரசச்த்யை கிராம்—5-

யத் யாவத் தவ வைபவம் ததுசித  ஸ்தோத்ராய தூரே ஸ்ப்ருஹா –
யத் -என்ன ஸ்வரூபம் உடையது -யாவத் -என்ன அளவுடையது -என்றபடி
தவ   வைபவம் -இறைவனது வைபவத்திலும் வேறுபாடு தோன்ற உனது வைபவத்தை –
வேதங்கள் அவன் வைபவத்தை பேச முயன்று திரும்ப -எதோ வாசோ நிவர்த்தந்தே -தவ வைபவம் —

தூரோ ஸ்ப்ருஹ–
ஸ்ப்ருஹ-விருப்பம் -முயன்று என்னாமல்-விரும்பத் தக்க பலம் -முக்தியை விட இத்தை அன்றோ விரும்புவார்கள் –
இன்னாருக்கு  விருப்பம் என்னாமல் -இது சர்வருக்கும் விரும்புகை அரிது –
யஸ் யாஸ்தே மகிமான மாத்மன இவத்வத் வல்லபொபி ப்ரபு-நாலம் மாது மியத்தயா நிரவதிம் -ஆளவந்தார் –
தேவி தவன் மஹிமாவதிர் நஹரிணா நாபித்வையா ஞாயதே -கூரத் ஆழ்வான் –
தூரோ நடுவில் வைத்து ஸ்தோத்ரத்துடன் ஸ்ப்ருஹையை சேர ஒட்டாமல் -அமைந்த அழகு
பொருளில் மட்டும் அன்றி சொல்லிலும் சேர ஒட்டாமல் அமைந்துள்ளதே-

ஸ்தோதும்கே வயமித்யதச்ச  ஜக்ருஹூ ப்ராஞ்சோ விரிஞ்ச்யாத்ய –
ப்ராஞ்ச-நீண்ட கால அறிவும் அனுபவமும் வாய்க்கப் பெற்ற-
விரிஞ்சி -படைப்பவன் -பிரமன் -என்றபடி சகாரம் அவன் முதலாக அனைவராலும் –
அத -சுட்டுச் சொல் -இதம் -ஏதத் அத தத் -நான்கு சுட்டுச் சொற்கள்
கண் எதிரில் நெருங்கி உள்ளதை -இதம் -என்றும் -மிகவும் நெருங்கி உள்ளதை ஏதத்-என்றும் –
தொலைவில் உள்ளதை அத -என்றும் -கண்ணுக்குத் தெரியாததை தத் -என்றும் சுட்ட வேண்டும்
பிராட்டியுடைய வைபவம் ப்ரஹ்மாதிகளுக்கும் ஸ்துதிக்க அரிதாம் படி தொலைவில் உள்ளதால் -அத -என்கிறார்
நதே வர்ணயிதம் சக்தா குணான் ஜிஹ்வாபி வேதச -ஸ்ரீ விஷ்ணு புராணம் –
ப்ரஹ்மாதிகள்-பிரமன் ருத்ரன் சனகாதிகள் -சர்வபிதா மஹாத்யை-விதிசிவ சனகாத்யை-என்று
ஒரு கோவையாக பிறர் எடுத்தமை உண்டே –

அப்யே வந்ததவ தேவி வாங்மனஸ் யோர்  பாஷா நபிஹ்ஞம் பதம்-
அப்யேவம்-ஏவம் அபி
பாஷா -பேசுதல் -இலக்கணையால் பழகுதல் –
பதம் -பத்யத இதி பதம் -பெற்று அனுபவிக்கத் தகும் -பிராட்டியினது வைபவம் –

காவாச ப்ரயதா மஹே கவயிதம் ஸ்வஸ்தி ப்ரசச்த்யை கிராம்-
ப்ரயதா மஹே-விடாப்பிடியாக முயல்கின்றோம் –சாபலத்தால் முயல்வதால் ப்ர விசேஷணம்-
கவயிதும் -பிராட்டியின் வைபவத்தை உள்ளது உள்ளபடி சொல்லி விடுகை அன்றிக்கே இல்லாததும் புனைந்து
கவிஞர் போல் வருணிக்கவும் புகுந்தேன் –
தத்த்வேன யஸ்ய மகிமார்ண வசீகராணு-ஸ்தோத்ர ரத்ன ஸ்லோகத்தை அடி ஒற்றியது இது –

பிராட்டி மகிழ்ந்து புகர் பெற்று தனது ஸ்வரூபாதிகளை நேரே காட்டிக் கொடுத்தருள –
தேவி -என்று விளித்து
நினது என்று முன்னிலைப் படுத்தி அருளிகிறார் –

தேவி நின வைபவம் அத்தனைக்கும் சேரும்
திறந்தன வாந் துதி விழைதல் அரிதே யன்றோ
யாவரது துதித்திடற்கு யாம் என்றார்கள்
யாத் தசகத்தான் முதலா முன்னோர் கூட
நா வலிமை இல்லாதேம் நாமானாலும்
நா மனங்கள் பழகலா நின் வைபவத்தைப்
பா வரிசை பாடிடவே முயல்கின்றேமால்
பா வனங்களின் சிறப்பு வாழ்க மாதோ –5

—————————————————————————-

பிரமன்  முதலியோரும் ஸ்துதிக்க அறிய பிராட்டியினது வைபவத்தை
ஸ்துதிக்க நானே உரியேன்  -என்கிறார் –

ஸ்தோதாரன் தம் உசந்தி தேவி கவையோ  யோ விஸ்த்ருணீதே குணான்
ஸ்தோதவ்யஸ்ய ததச்சதே ஸ்துதி துரா மய்யேவ விஸ்ராம்யதி
யஸ்மா தஸ்ம தமர்ஷணீய பணிதி ஸ்வீகார தஸ்தே குணா
ஷாந்த் யௌதார்ய தயாதயோ பகவதி ஸ்வாம் ப்ரஸ்து வீரன் ப்ரதாம்–6-

ஸ்தோதாரன் தம் உசந்தி-உசந்தி -விரும்புகிறார்கள்
தேவி கவையோ -கவய -அறிஞர்கள்
யோ விஸ்த்ருணீதே குணான் ஸ்தோதவ்யஸ்ய -ஸ்துதிக்கத் தக்கதனுடைய குணங்களை விவரிகின்றானோ –
ததச்சதே-ஆகையினாலே உன்னைக் குறித்து
ஸ்துதி துரா மய்யேவ விஸ்ராம்யதி-ஸ்துதிக்கும்   பொறுப்பு என்னிடமே முடிவடைகிறது –
யஸ்மா தஸ்ம தமர்ஷணீய பணிதி ஸ்வீகார -ஏன் எனில் எமது பொறுக்க ஒண்ணாத  சொற்களை ஏற்பதனால்
தஸ்தே குணா ஷாந்த் யௌதார்ய தயாதயோ பகவதி ஸ்வாம் ப்ரஸ்து வீரன் ப்ரதாம்-நினது பொறுமை கொடை தயவு
முதலிய குணங்கள் பிரசித்தியை வெளியிடும் –

என்னைப் போன்ற புன்சொல் யுடையார் வேறு யாரும் இலராதலின் யானே பிராட்டியைத் ஸ்துதிப்பிக்க அதிகாரி ஆயினேன் –
மய்யேவ என்று கீழே ஒருமையில் சொல்லி அஸ்மத் என்று பன்மையில்  தமது இழவு தோற்ற அருளுகிறார் –
நம் போன்ற அனுசந்திப்பவர்களையும் சேர்த்துக் கொள்கிறார் என்றுமாம் –
தே குணா -பகவான் குணம் போன்ற ஸ்வாதந்த்ரம் கலசாத திருக் குணங்கள் –
ஷாந்தி ஔதார்ய தயாதய-ஆதி சப்தத்தால் வாத்சல்யாதி குணங்களும் அனுசந்தேயம் –

ஷாந்தி சொற்களில் உள்ள பிழைகளை பொறுத்தல் –
ஷாந்திஸ்துதே ஸவிஷயா மம துர்வசோபி-கூரத் ஆழ்வான்-

தன்னை ஸ்துதிக்க விஷயம் ஆக்கியதால் ஔதார்யம் வெளிப்படும் –
நாவலர் பா மருவி நிற்கத் தந்த பான்மையே வள்ளலே -நம் ஆழ்வார்

ஸ்துதிக்க முடியாமல் படும் ஸ்ரமத்தைக் கண்டு தயை வெளிப்படும் –
கிஞ்சைஷ சக்தி யதிசயேன ந்தேநுகம்ப்ய ஸ்தோதாபிது ஸ்துதி க்ருதேன பரிஸ்ரமேண-ஆளவந்தார் –

புன் சொல்லையும் இன் சொல்லாக ஏற்பதால் வாத்சல்யம் விளங்கும் –
இளைய புன்கவிதை ஏலும் எம்பிராற்கு இனியவாறே -தொண்டர் அடிப்பொடி ஆழ்வார் –

பகவதி -இப்படி பல குணங்கள் உடைமை பற்றி -குற்றம் இன்றிக் குணமுடையவள் என்றபடி –
குற்றம் இல்லாமை -ஷாந்தி ஔதார்யம் தயை மூன்றும் உபேஷியாமைக்கு ஹேது
குணமுடைமை -வாத்சல்யம் ஏற்றலுக்கு ஹேது –
உபேஷியாமைக்கு ஹேது தயா சாந்திகள் –
பச்சையாகக் கொள்ளுகைக்கு ஹேது வாத்சல்யம் -மணவாள மானிகள் ஸ்ரீ ஸூக்திகள்
ஆஸ்ரயண உந்முக சேதன  கதங்களான-என்றதால் ஔதார்யமும் சேரும் –

பகவதி -பூஜிக்கத் தக்கவள்  பற்றியும் -என்றுமாம் –
தோளிணை மேலும் நன் மார்பின் மேலும் –புனைந்த தண்ணம் துழாயுடை யம்மான் -என்னுமிடத்து
பட்டர் பெருமாளே பிராட்டியைப் பூஜிப்பதாக விசேஷ அர்த்தம் காட்டி அருளினார்-

சப்தோயம் நோபசாரேண ஹ்யன்யத்ரஹ்  யுபசாரத –
பகவான் சொல்லுக்கு இறைவனே முக்யப் பொருள் –
அதற்ககடியான இவள் பகவதி என்னத் தட்டில்லையே –
ஸ்வ தச் ஸ்ரீ ஸ்தவம்–தத்  ஏவைஷ பகவான் -மேலே அருளிச் செய்வார் இவரே –

ப்ரஸ்து வீரன் பாடமே சரி- ப்ரஸ்நுவீரன்-பிழையான பாடம் —

துதித்திடுவோன் துதி படுவதன் கணுள்ள
தூய குணங்களை விரிப்போன் என்பர் மேலோர்
துதித்திடு நற் பொறுப்பதனால் எந்தன் மீதே
சுமந்து விடும் ஏன் என்னில் பொறுக்க ஒணாத
அதிப் பிழைகள் படும் எமது சொற்கள் ஏற்ப
தரிதேனும் பகவதி நீ ஏற்றுக் கொள்வாய்
இதிற் பல நின் பொறை கொடை தண்ணளி முன்னான
இயற் குணங்கள் தேவி நனி விளங்கும் அன்றே –6

————————————————————————–

பொறுக்க ஒணாத எனது சொல்லை ஏற்பதை விட
நல்ல கவிதையாகத் தனது ஸ்துதியை
பிராட்டியே பூர்த்தி செய்து கொள்வாளாக -என்கிறார்-

ஸூக்திம் சமக்ரயது நஸ் ஸ்வயமேவ லஷ்மீ
ஸ்ரீ ரங்கராஜ மஹிஷீ மதுரை கடாஷை
வைதக்ய வர்ண குண கும்பந கௌரவைர் யாம்
கண்டூல கர்ண குஹரா கவையோ தயந்தி –7 –

ஸூக்திம் சமக்ரயது நஸ் ஸ்வயமேவ லஷ்மீ ஸ்ரீ ரங்கராஜ மஹிஷீ மதுரை கடாஷை –
ஸ்ரீ ரங்கராஜனுடைய பட்டத்தரசியான ஸ்ரீ ரங்க நாச்சியார்
இனிய கடாஷங்களினால் நமது நல் வாக்கை தானே பூர்த்தி செய்து கொள்வாளாக –

வைதக்ய வர்ண குண கும்பந கௌரவைர் -பொருள் திறம்   என்ன எழுத்துக் குணங்கள் என்ன
சேர்த்திச் சிறப்பு என்ன இவைகளினாலே –
யாம்  கண்டூல கர்ண குஹரா கவையோ தயந்தி –அறிஞர்கள் தினவெடுத்த காதின் தொளைகளை
உடையவர்களாய் குடிக்கின்றார்களோ –

இவரின் தாய் தானே ஸ்ரீ ரங்க நாச்சியாரும் –
சமஸ்த லோக ஜநநீம் த்வாம் ஸ்தோதுமீஹா மஹே யுக்தாம் பாவய பாரதீம் -கூரத் ஆழ்வான் பிரார்த்தித்தது போலே –
ஸூக்திம் சமக்ரயது -லஷ்மியின் கடாஷத்தால் வாக்கு நல்லதாகவும் பூர்த்தியாகவும் அமையும் என்பதால் ஸூக்திம் என்கிறார்
வகுத்த விஷய ஸ்திதி என்பதாலும் –
சமாபயது -முடித்துக் கொடுத்திடுக -என்னாது -சமக்ரயது -நிறைத்துக் கொடுத்திடுக –
எந்த அம்சமும் குறைவின்றி நிறையும்படி செய்தருள வேணும் –

ஸ்வயமேவ -என் தொடர்பு இல்லாமலே -என்னால் தன்னை இன் தமிழ் பாடிய ஈசனை -நம்மாழ்வார் –
அது போலே என்னை உபகரணமாகக் கொள்ளக் கூடாது –
ஆழ்வார் மயர்வற மதி நலம் அருளப் பெற்றவர் -நானோ அறிவிலி –
சிறு பிரஜை எழுதிடப் புக்கால் தானே ஏதேனும் ஒருபடி இட்டுத் தலைக் கட்டும் –
பிதாவாதல் உபாத்யாயன் ஆதல் இடப் புக்கால் தானே எழுத்தாய் இருக்கும்
அங்கன் இன்றிக்கே அவன் கையைப் பிடித்து இடுவிக்கப் புக்கவாறே இவன் ஓர் இடத்தே இழுக்க -குதறிக் கொட்டியாய்
ரூபம் அழிந்து சித்தரிப்போம் -எம்பெருமானார் ஸ்ரீ ஸூக்திகள் -என்றைக்கும் திருவாய்மொழி ஈட்டில்-

இந்த வேண்டுகோள் செய்ய சௌலப்யமும்-அதனை நிறைவேற்றப் பரத்வமும் தேவை என்பதால்
ஸ்ரீ ரங்க ராஜ மகிஷி -லஷ்மீ -லஷணம் உள்ளவள் –
மதுரை கடாஷை -சீதலீக்ரியதே தாபோ யேன தம் மதுரம் ஸ்ம்ருதம் -தாபம் தணித்து குளிரச் செய்யும் கடாஷம்
முன்னுரு செய்து அருளிய திருவாய்மொழி போலே இல்லாமல் கடாஷமே போதும் —
யம் த்வம் தேவி நிரீஷசே –சச பண்டித-என்னக் கடவது இறே

வைதக்ய வர்ண குண கும்பந கௌரவைர்-
வைதக்யமாவது அணி சுவை முதலிய பொருள் திறம் -சாமர்த்ய்மாக என்றுமாம் –
வர்ண -எழுத்து குணங்கள் -தெளிவு மென்மை இனிமை
கும்பந கௌரவம் -சொற் கோப்பின் சிறப்பு-

யாம்  கண்டூல கர்ண குஹரா கவையோ தயந்தி-கேட்கப் பேராவல் கொண்டவர்கள் என்றபடி –
குடிக்கின்றார்கள் என்றதால்
அமுதம் போன்ற இனியது என்றதாயிற்று-

நல்லதா முற்றத் தானே நடத்துக நமது சொல்லை
செல்வி சீர ரங்க ராசன்  தேவி தனது குளிர்ந்த நோக்கால்
சொல்லியை பருத்தச் சீர்மை தொகுப்புறும் குணங்களோடு
வல்லுநர் செவியின் வாஞ்சை மாறிடப் பருகுமாறே –7–

————————————————————————-

கீழ் சொன்னதையே விவரித்து அபேஷிக்கிறார்-

அநாக்ராத அவத்யம் பஹூ குண பரீணாஹி மனசோ
துஹாநம் சௌஹார்த்தம் பரிசுத மிவாதாபி கஹநம்
பதாநாம் சௌப்ராத்ரா தநிமிஷ நிஷேவ்யம் ஸ்ரவணயோ
த்வமேவ ஸ்ரீர் மஹ்யம் பஹூமுகய வாணீ விலஸிதம் –8-

அநாக்ராதாவத்யம் -அ நாக்ராத அவத்யம் –தோஷ கந்தமே இல்லாததும்
பஹூ குண பரீணாஹி -பல கல்யாண குணங்களின்  பெருக்கத்தை யுடைய
மனசோ-துஹா நம் சௌஹார்த்தம்-ரசிகர்களின் மனதிற்கு களிப்பை காப்பதும்
பரிசுதமிவ-பழகியது -அர்த்தம் தெரிந்தது போன்றதும்
அதாபி கஹ நம் -ஆயினும் ஆழ் பொருளை உடையதும் –
பதா நாம் சௌப்ராத்ரா தநிமிஷ நிஷேவ்யம் ஸ்ரவணயோ-சொற்களின் சேர்க்கையினாலே செவிகளுக்கு இமை கொட்டாமல் கேட்கத் தக்கதுமான
த்வமேவ ஸ்ரீர் மஹ்யம் பஹூமுகய வாணீ விலஸிதம் –வாக் விலாசத்தை எனக்கு நீயே பல வாயிலாகப் பெருக்க வேணும் –

ருத்ர பட்டர் -யோ ஹேது காவ்யசோபாயா ச சோலங்கார பிரகீர்த்தயதே குணோபி தாத்ருசோ ஜ்ஞேய தோஷஸ் ஸ்யாத் தத்விபர்யய-
சோபைக்கு ஹேது அலங்காம் -குணமும் அத்தகைத்தே -இதற்கு மாறுபட்டது தோஷம் –
தததோஷௌ சப்தார்தௌ சகுணா வநலங்குருததீ -காவ்ய பிரகாசிகை –
பரிசுதமிவாதாபி கஹநம்-பொருள் விளங்குவதாய் இருப்பினும் உள்ளுறை பொருளால் ஆழமுடைத்தாய் இருத்தல் வேண்டும் –
த்வநி ப்ரதானதா யத்ர ததுத்தம முதாஹ்ருதம் –
பரிசிதம என்பதால் தெளிவும் கஹநம் என்பதால் காம்பீர்யம்
கீழ் ஸ்லோகத்தில் அருளிய வைதக்த்யம் வர்ண குணம் விவரிக்கப் பட்டது-

பதா நாம் சௌப்ராத்ரா தநிமிஷ நிஷேவ்யம் ஸ்ரவணயோ-இதனால் கும்பந கௌரவத்தை விவரிக்கிறார் –
சௌப்ராத்ரம்-சொற்களின் இயைபைச் சொன்னபடி
கவனமாய் கேட்டல் -ஆச்சாரமாக கேட்டல் –

த்வமேவ ஸ்ரீர் மஹ்யம் பஹூமுகய வாணீ விலஸிதம் -அர்த்தோ விஷ்ணுரியம் வாணீ -வாக் பிராட்டியின் விபூதி
என்பதால் நீயே எனது வாக் விலாசத்தைப் பெருக்க வேணும் என்கிறார்
அகிலம் வாங்மயம் யத் விபூதி -சரஸ்வதி தேவியும் பிராட்டியின் அடியாள்
சாபாரதீ பகவதீது யதீய தாஸி-கூரத் ஆழ்வான் –

த்வயா ஜூஷ்டா ஜூஷமாணா துருக்தான் ப்ருஹத் வதேம விததே ஸூ வீரா -உன்னால் விரும்பப் பட்ட
புன் சொல்லாளர் ஆகிய யாம் பெரிதாகப் பேசக் கடவோம்
என்ற மேதா ஸூக்தத்தை அடி ஒற்றி இந்த பிரகரணம் அமைந்த அழகு கண்டு மகிழ்க –

குற்றத்தின் வாடை யற்றுக் குணம் பல பல்கி நெஞ்சில்
குற்ற வின்பத்தை நல்கி உள்ளுற்று ஆழ்ந்து எளிய தேனும்
சொற்றச் சொல்லியைப் பெற்றுச் சுருதிகள் இமையாது   ஏற்கும்
பெற்றிய வாணி லீலை பெருக்குக திருவே நீயே –8–

———————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திரு மலை நல்லான் ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பராசர பட்டர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பராசர பட்டர் அருளிச் செய்த ஸ்ரீ குணரத்ந கோசம் –ஸ்ரீ திருமலை நல்லான் இயற்றிய ஸூவர்ண குஞ்சிகா -ஸ்லோகங்கள் –2/3/4—-

April 28, 2015

ஸ்ரீ ஹரியுடைய படைத்தலை ஏற்பது மாத்ரம் அன்றி
படைப்பதற்கு ஹேதுவாவதும்
பிராட்டியின் கடாஷமே எனக் கூறி மீண்டும் பிராட்டியை வணங்குகிறார் –

உல்லாஸ பல்லவித பாலித ஸப்த லோகீ
நிர்வாஹ கோரகித நேம கடாக்ஷ லீலாம்
ஸ்ரீரங்க ஹர்ம்ய தல மங்கள தீப ரேகாம்
ஸ்ரீரங்கராஜ மஹிஷீம் ஸ்ரியம் ஆஸ்ரயாம:–ஸ்லோகம் – 2-

உல்லாச -ஏழு உலகத் தோற்றத்தால் –தனது மலர்ச்சியை சொல்லுகிறதாகவுமாம்-கடாஷ லீலை விகாசம்
பல்லவித-தளிர்த்ததும் -உத்பத்தி -பட்ட மரம் தளிர்ப்பது போலே உலகங்களின் உத்பத்தி
பாலித சப்த லோகீ -ஆளப்படும் ஏழு லோகங்களையும்
நிர்வாஹ -தாங்குவதனால்
கோரகித -அரும்பியதுமான
நேம கடாஷ-சிறிய நோக்கத்தின் –
லீலாம் –விளையாட்டுடையவளும்
ஸ்ரீ ரங்க ஹர்ம்யதல -திருவரங்கத்தில் உள்ள விமானத்திற்கு
மங்கள தீப ரேகாம் -மங்கள விளக்கு ஜ்வாலை போன்றவளும்
ஸ்ரீ ரங்கராஜ மஹிஷீம் ஸ்ரியமாஸ்ரயாம –ஸ்ரீ ரங்கராஜனுடைய பட்ட மகிஷியுமான ஸ்ரீ ரங்கநாச்சியாரை வணங்குகிறோம்

தளிர்ப்பதும் அரும்புவதும் கூறப் படுவதால் கடாஷ லீலை ஒரு கொடி போன்றதே –
அந்த கொடியின் தளிரே ஏழு உலகங்கள் தோற்றம் –
நிர்வாஹம் அதன் அரும்பு
பிராட்டியின் கடாஷமே ஸ்ருஷ்டி ஸ்திதி என்றது ஆயிற்று-

ஈஷத்த்வத் கருணா நிரீஷண் ஸூதா சந்துஷணாத் ரஷ்யதே நஷ்டம் ப்ராக் ததலாபத்தஸ் த்ரிபுவனம்
சமப்ரத்ய நந்தோதயம்–ஸ்ரீ ஆளவந்தார் ஸ்ரீ ஸூக்திகள்-

யஸ்யா கடாஷ ம்ருது வீஷண தீஷணேந ச்தயஸ் சமுல்லசித பல்லவ முல்லலாச விச்வம் விபர்யய சமுத்த
விபர்யயம் ப்ராக் தாம் தேவதேவ மஹிஷீம் ஸ்ரியமாஸ்ரயம –ஸ்ரீ கூரத் ஆழ்வான் ஸ்ரீ ஸூக்திகள் –

இவள் கடாஷத்தாலேயே புருஷோத்தமன் விரிந்து உலகம் ஸ்ருஷ்டிக்கிறான் –
சிருஷ்டியில் இவளுக்கு சம்பந்தம் -அந்வயம்-உண்டோ என்று பிரச்னம் பண்ணின
நடாதூர் அம்மாளுக்கு கிடாம்பி ஆச்சான் –
இவ்வர்த்தத்தில் சந்தேஹம் உண்டோ –
ஆவாப்யாம் கர்மாணி   கர்த்தவ்யாநி பிரஜாச்ச உத்பாதயிதவ்யா  –பிரமாணம் சொல்லுகையாலே
சஹ தர்ம சாரிணியான இவளுக்கும் அந்வயம் உண்டு என்று அருளிச் செய்தார்-

ஸ்ருஷ்டியே  லீலை தான் –
தனித்து விளையாடுவது இன்பம் பயக்காதே-
க்ரீடேயம் கலு  நான்ய தாஸ்ய ரச தாஸ்யாத்-கூரத் ஆழ்வான் –
ஸ்ரத்தயா தேவோ தேவத்வம் அஸ்நுதே -ஸ்ருதி
ஆநீதவாதம் ஸ்வதயா ததேகம் -சம்ஹாரத்திலும் ஸ்வதா -அவள் கூடவே உள்ளாள்-ஸ்வதா தவம் லோகபாவி நீ –
ஏகோ  வித்யா சஹாயஸ்த்வம் யோகீ  யோக முபாகத -ஸ்ரீ ஹரி வம்சம்
சர்வே நிமேஷா ஜ்ஞ்ஞிரே வித்யூத புருஷா ததி-ஸ்ருதி –
மின்னல் நிறம் கொண்ட புருஷோத்தமனே ஸ்ருஷ்டிக்கிறான் –
திருக் கண்டேன் பொன் மேனி கண்டேன் –
அநு சிகிநி சிகீவ க்ரீடசி ஸ்ரீ சமஷம் -ஸ்ரீ ரெங்கராஜ ஸ்தவம் -பெண் மயிலின் சமீபத்திலே ஆண் மயில் தோகை
விரித்தாடும் என்றார் இவரும்-படைப்பவன் அவனே -படைக்குமாறு தூண்டுபவள் இவள்  –

ஸ்ரீ ரங்க தீபரேகாம்-
ஷீராப்தேர் மண்டலாத்பாநோ யோகி நாம் ஹ்ருதயாதபி ரதிம் கதஸ் சதா யத்ர தத்ரங்கம் முனயோ விது —
திருப் பாற் கடல் –
ஸூர்ய மண்டலம் –
யோகிகளிடைய ஹிருதயம் –
இவைகளை விட விரும்பி உகந்து அருளி உறைகின்றான் ஸ்ரீரங்க ஹர்ம்யதலம்-

ராஜ மகிஷி வசிக்கும் உடம் -ஹர்ம்யதலம் -செல்வர் வசிக்கும் இடம் -ஹர்ம்யாதிர் தநிமாம் வாஸ -நிகண்டு –
ஸ்ரீ ரங்க ஹர்ம்யதல -வேற்றுமைத் தொகையாக கொண்டு இவ்வர்த்தம்
பண்புத் தொகையாக கொண்டு -விமானத்து விளக்கு -குன்றத்து விளக்கு என்னவுமாம் –
நல் விளக்கு -மங்கள தீபரேகாம் –தன்னையும் காட்டி அருளி அவனையும் நம்மையும் சேர்த்து அருளுபவள் –
மாமேகம் தேவதேவச்ய மஹிஷீம் சரணம் ச்ரயேத் -மஹிஷீ -அநந்த நாமதேயாச சக்தி சக்ரச்ய நாயிகா –
இவளே தலைவி -சக்தி சக்ரம் -மனைவியரின் திரள் –
சேஷ சேஷாச நாதி சர்வ பரிஜனம் பகவதஸ் தத்ததவஸ் தோசித பரிசர்யாயாம் அக்ஞாபயந்த்யா-எம்பெருமானார்
ஸ்ரீ கத்யத்தில் அருளிச் செய்தது போலே  –

ச்ரியம்-ஸ்ரீ யதே -ஆஸ்ரயிக்கப் படுகிறவள் –
உல்லாச -ஸ்ரீ ரங்க ஹர்ம்யதல -ஸ்ரீ ரங்க ராஜ மஹிஷீம் -என்பதால்
இவள் அவனை ஆஸ்ரயிக்க நிலையையும் அருளுகிறார் –

ச்ரியம் ஆச்ரயாம -எல்லாராலும் ஆஸ்ரயிக்கப் படுகிறவளை நாமும் ஆஸ்ரயிக்கிறோம்-
சர்வலோக சரண்யனை ஸ்ரீ விபீஷணன் பற்றியது போலே –
இத்தால் பிராட்டியின் மேன்மையையும் எளிமையையும் சொல்லிற்று ஆயிற்று-

உதித்திடத் தளிர்த்த லோடாள் உலகங்கள் ஏழும் தாங்கும்
விதத்தினில் முகிழ்க்கும் அற்ப விழி விளையாட்டினானைப்
பதித் தலை யரங்க மாடத் தலத் தணி தீபம் என்ன
மதித் திடும் அரங்க ராசன் மகிடியாம் திருவைச் சார்வாம் —2

உதித்திடத் தளிர்த்த லோடாள்-உதித்திட தளிர்தலோடு ஆள் -ஆளப்படுகிற என்றபடி-

—————————————————————————–

கீழ் இரண்டு ஸ்லோகங்களாலும்
நமஸ்கார ரூபமான மங்களம் கூறி  வணங்கி
அதன் மேல் கடாஷத்தை செலுத்தி அருள
ஆசீர்வாத ரூபமான மங்களத்தை மீண்டும் அருளிச் செய்கிறார் –

அநுகல தநு காண்ட ஆலிங்க நாரம்ப சும்பத்
ப்ரதி திச புஜ சாக ஸ்ரீஸக அநோகஹ ருத்தி:
ஸ்தந நயந குளுச்ச ஸ்பார புஷ்பத் விரேபா
ரசயது மயி லக்ஷ்மீ கல்ப வல்லீ கடாக்ஷாந் -ஸ்லோகம் – 3-

அநுகல -ஷணம் தோறும்
தநு காண்ட -கொள் கொம்பு போன்ற திருமேனியை
ஆலிங்க நாரம்ப -தழுவத் தொடங்கும் போது
சும்பத் -விளங்குகின்ற
ப்ரதி திச புஜ சாக -நான்கு பக்கங்களிலும் கிளை போன்ற கைகள் கொண்ட –
ஸ்ரீ சகா நோகஹர்த்தி-ஸ்ரீ சக அநோகஹா ருத்தி – -மரம் போன்ற திருமாலினுடைய செழிப்பை உடையவளும் –
ஸ்தன நயன குளுச்ச ஸ்பார புஷ்பத் விரேபா-பூங்கொத்து  போன்ற கொங்கைகளும் –
மலர்ந்த பூவின் கண் உள்ள வண்டு போன்ற கருவிழிகளும் உடையவளுமான –
ரசயது மயி லஷ்மீ கல்ப வல்லி கடாஷான்–கற்பகக் கொடி போன்ற திருமகள் அருள் கடாஷங்களை  என் மீது புரிந்திடுக –

கற்பக வ்ருஷத்திற்குக் கற்பகக் கொடி ஏற்புடைமையது அன்றோ –
உனக்கேற்கும் கோல மலர்ப்பாவை -நம்மாழ்வார் –
சதா தவை வோசித யா தவ ச்ரியா–ஆளவந்தார் –

அநுகல தநு காண்ட ஆலிங்க நாரம்ப சும்பத் ப்ரதிதிச புஜசாக ஸ்ரீ சகா நோகஹா   ருத்தி –
இவளும் இறைவனது திருமேனியை
யயள வஷஸ் ஸ்தலம் ஹரே -என்றபடி
சென்று அணைந்து கொள்கிறாள் –

தநு காண்டம் -காண்டம் போன்ற திருமேனி -பிரகாண்டம் அடித் தண்டு –
திருப் பாதங்கள் -வேர் –
மேல் உள்ள திருமேனி -காண்டம் –
கொடியுடன் சேர்ந்த மரமே சோபிக்கும் –

அநோகஹா –சும்பத் பிரகாசிக்கும் –
அநு கல –சும்பத் -ஷணம் தோறும்  பிரகாசிக்கும் என்றுமாம் –

பிராட்டியின் தழுவதல் -அடியாக பிறந்த ஹர்ஷத்தால் -திசைகள் தோறும் –
அல்லி மாதர் புல்க நின்ற ஆயிரம் தோளுடையான் –
பிரதிசக புஜசாக –
தோள்கள் ஆயிரத்தாய்

இவளை அனுபவிக்க பாரித்து அநந்த பாஹூம் -ஸ்ரீ கீதையின்படி விஸ்வரூபம் கொண்டான் என்றுமாம் –

செழிப்பு ஆவது –
ஞானம் சக்தி முதலிய ஆத்ம குணங்களும்
அழகு ஒளி போன்ற திருமேனி கல்யாண குணங்களும் -பிராட்டி சம்பத்தாலே என்கை-

ஹர்ஷத்தால் ஏற்பட்ட திமிர் பற்றி மரம் போலே என்ற உவமை –
வ்ருஷ இவ ஸ்தப்தோ திவி திஷ்டத்யேக-ஸ்ருத
சம்சார வெக்கைக்கு ஒதுங்கும் நிழல் –
சாயா வ்ருஷ மிவாத்வகா -காளிதாசன் –
வாஸூதேவ தருச்சாயா –
நிவாச வ்ருஷஸ் சாது நாம் –

அநோகஹ–பொதுப்பட அருளினாலும்
கற்பக வருஷம் என்று விசேஷித்து பொருள் கொள்ள வேண்டும்
ஸ்ரீ நிவாச -திவ்ய வல்யா
இவ கல்பத்ரும தஸ்யா நித்யோபக்ன -கற்பகக் கொடிக்கு கற்பக வருஷம் போலே
லஷ்மிக்கு எப்போதும் உள்ள கொள் கொம்பு சஹச்ர நாம ஸ்ரீ பாஷ்யம் –

ஸ்தன நயன குளுச்ச ஸ்பார புஷ்பத் விரேபா-
பூவின் கண் உள்ள வண்டு -நயனம் கருவிழியைக் குறிக்கும் –
மலர் போன்ற திருக்கண்கள் -ஸ்பாரம் -விசாலமானது
லஷ்மீ  கல்பவல்லீ -பிராட்டியுடைய பாரதந்த்ர்யம் ஸ்வாபாவிகம், -வந்தேறி அன்று
இவள் பாரதந்த்ர்யமும் அவனது விருப்பமும் நித்யம் –
கற்பகக் கொடி -சர்வகாம பிரதாம் -நிருபாதிகமான பெண்மையும் வண்மையும் தோன்றும் –

ரசயது மயி லஷ்மீ கல்ப வல்லி கடாஷான்-
மயி -துதிக்கப் புகுந்த என் மீது -கடாஷ லஷணம்-
யத் கதாகத விஸ்ராந்தி வைசித்ர்யேண விவர்த்தனம் தாரகாயா கலாபிக்ஞா தம் கடாஷம் பிரசஷதே —

இன்பம் பயக்குமாறு இங்கும் அங்குமாக கரு விழிகள் பிறழ்தலே கடாஷம் —
வண்டு என்றதே இதனால் –

கடாஷான் -பன்மையால்
மீண்டும் மீண்டும் இலக்காக பாரித்தமை தோன்றும் –

இந்த ஸ்லோகத்தில்
முற்கூற்றால் திருமேனி அழகும்
பிற்கூற்றால் அவயவ அழகும் கூறப்பட்டன –

கணம் தொறும் மேனி கலந்ததும் கவினுற்று எங்கும்
பணைக் கிளைக் கரத்து மாலாம் பாதவம் செழிப்பச் சேர்ந்தே
இணர் முலை கொத்தும் கண்கள் எழில் மலர் வண்டு மான
அணங்கு கற்பகத்தின் வல்லி அடியனேற்கு அருள்க நோக்கே –3

பாதவம் -மரம் –
இணர் -நெருங்கிய
கவினுற்று -அழகு பெற்று

———————————————————————–

பிராட்டியினது ஜகத் காரணத்வம் இத் தகைத்து என்று காண்பித்து –
மேலும் பிராட்டிக்கு சில சிறப்புக்கள் கூறி
மீண்டும் திருக் கடாஷத்தை அபேஷிக்கிறார்–

யத் ப்ரூ பங்கா பிரமாணம் ஸ்திர சர ரசநா தாரதம்யே முராரே
வேதாந்தாஸ் தத்வ சிந்தாம் முரபிதுரசி யத் பாத சிஹ்நைஸ் தரந்தி
போகோ போத்காத கேளீ சுளுகித பகவத் வைஸ்வரூப் யாநு பாவா
ஸா நஸ் ஸ்ரீர் ஆஸ்த்ருணீதா மம்ருதலஹரிதீ லங்கநீயை ரபாங்கை –4–

யத் ப்ரூ பங்கா-எவளுடைய புருவங்களின் நெறிப்புக்கள்
ஸ்திர சர ரசநா தாரதம்யே முராரே-இறைவனுடைய -தாவர ஜங்கம-பொருள்களையும் படைத்தலின் ஏற்றத் தாழ்வில்
பிரமாணம் –வழிகாட்டியோ –
வேதாந்தாஸ் -மறை முடிகள்
தத்வ சிந்தாம் -பரம் பொருளைப் பற்றிய ஆராய்ச்சியை
முரபிதுரசி-முரபித் உரசி -இறைவனது மார்பகத்தில்
யத் பாத சிஹ்நைஸ் -எவளுடைய திருவடிகளின் அடையாளங்களினாலே –
தரந்தி-முடிகின்றனவோ
போகோ போத்காத கேளீ சுளுகித பகவத் வைச்வரூப் யாநு பாவா-
போக உபோத்காத கேளீ சுளுகித பகவத் வைஸ்வ ரூப்ய அநு பாவா –
அனுபவத்தின் தொடக்கத்தில் விளையாட்டாக சிறாங்கை யளவாகச் செய்யப்பட இறைவனது விஸ்வரூபத்
தன்மையின் மகிமையை எவள் உடையவளோ –
ஸா -அத்தகைய
நச்-நம்மை
ச்ரீ -ஸ்ரீ -பிராட்டி
ஆஸ்த்ருணீதாம் -மறைத்திடுக
மம்ருதலஹரிதீ லங்கநீயை -அமுத அலை என்னும் அறிவினால் அறியத் தக்க –
அபாங்கை-கடைக் கண் நோக்கங்களாலே-

தத் இங்கித பாரதீநோ விதத்தேகிலம் -ஸ்ரீ கூரத் ஆழ்வான்
புருவக் குறிப்பாலே ஏற்றத் தாழ்வுகள் –
கருமத்துக்கு தகுந்தபடி பிராட்டி குறிப்பால் உணர்த்துவதால் நைர்க்ருண்யங்கள் இல்லை –

ப்ரூபங்கா பிரமாணம் –
வேத பிரமாணம் போலே -கண் இழந்தேன் தனம் இழந்தேன் -போலே
க்ரீடேயம் கலு நான்ய தாஸ்ய ரசதா ஸ்யாத்-விளையாட்டு இவள் வசப்பட்டு செய்யா விடில் இன்பம் பயக்காதே
இவள் கல்வியால் கீழ் சொன்ன படி மரம் போலே மெய்ம் மறந்து இருப்பானே –
தூண்டியேயாக வேண்டும்
அவளும் தனக்கு ஈடுபட்ட அவனது நிலை கண்டு மிகவும் ஊக்கம் கொண்டனள் –
தன்னைக் குறித்து தோற்ற தோல்வியாகவே சேவலின் மிடுக்கும் இதன் மேலே வந்தேறும்  இறே
முரன் அசுரனை நிரசித்தவன் முராரி -உபேஷையாய் இருந்து விடுவாள் அழிக்கும் பொழுது –
நம ஸ்ரீ ரங்க நாயக்யை யத்ப்ரூ விப்ரம பேதத ஈசேசிதவ்ய வைஷம்ய நிம்நோன்நத மிதஞ்ஜகத் -ஸ்ரீ ரங்க ராஜ ஸ்தவம் –

வேதாந்தாஸ் தத்வ சிந்தாம் முரபிதுரசி யத் பாத சிஹ்நைஸ் தரந்தி-
திருவில்லாத் தேவரை தேவர் என்ன மாட்டார்களே –
லஷ்மி பத லாஷைக லஷணம்-ஸ்ரீ ரெங்க ராஜ ஸ்தவம் –
பூர்ணம் தேஜஸ் ஸ்புரதி பவதீ பாத லாஷார சாங்கம் -ஸ்ரீ வேதாந்த தேசிகர் –
சிஹ்நை  -செம்பஞ்சுக் குழம்பின் அடையாளங்கள் –
ஸ்ரீ யபதித்வ லிங்கத்தாலும் நாராயண சப்தத்தாலும் இறே ஸ்ருதிகளில்
பரதத்வ விசேஷ நிர்ணயம் பண்ணப்பட்டது –
தம் த்ருஷ்ட்வா சத்ரு ஹந்தாரம் –பபூவ ஹ்ருஷ்டா வைதேஹீ –பிராட்டி மகிழ்ந்து மார்பகத்தே
நடமாடியதை முரபித் உரசி யத்பாத சிஹ்நை-

போகோ போத்காத கேளீ சுளுகித பகவத் வைச்வரூப் யாநு பாவா-
அவன் விஸ்வரூபம் எடுத்து அனுபவிக்கப் புக்காலும் போதாது இவளுடைய போக்யதை –

போகம் -ஸ்வரூப ரூப குணங்களை நேரே சாஷாத்காரம் செய்தல் –
அநேக பாஹூ தர வக்த்ர நேத்ரம் -தச சத பாணி பாதவத நாஷி முகைரநிலை –
தம் திறத்தில் நித்ய முக்தர்கள் படும் பாட்டை பிராட்டி திறத்தில் இவன் படுவதே

ஸ்வ வைஸ்வ ரூப்யேண சதா அநுபூத யாப்ய பூர்வவத் விஸ்மய மாததா நயா-ஆளவந்தார் –

ஸா நச் ச்ரீ ராஸ்த்ருணீதா மம்ருதலஹரிதீ லங்கநீயை ரபாங்கை-
லங்க நீயை-அடையத்தக்கவை -கத்யர்த்தா புத்யர்த்தா –
அமுத அலையில் புத்தி செல்லாதபடி அதனிலும் இனிய  கடாஷங்கள்
இறைவனை ஏவிக் காரியம் கொள்ளும் வால்லப்யமும்-நிரூபகத்வமும் போக்யதையில் சிறப்பும் கூறப்பட்டுள்ளன –
மஹீஷீ பாவம்
ஏற்புடைமை
ஏவிற்றுச் செய்யும்படி அவனுக்கு பிடித்தமாய் இருத்தல்
மார்பை விட்டு அகலாமை
நிரூபகத்வம்
போக்யதையின் சிறப்புக்கள் போன்றவை பிராட்டியின் ஆதிக்யத்துக்கு ஹேதுக்கள்
அதனால் இவளே புருஷாகாரமாக பற்றத் தக்கவள்-லஷ்மி புருஷகாரத்வே நிர்திஷ்டா பாமர்ஷிபி
மற்ற தேவிமார்களுக்கு இவள் சம்பந்தத்தாலே வந்தது -இயல்பானது அல்லை இவளைப் போலே –

நிற்பனவும் திரிவனவும் ஏற்றத் தாழ்வாய் நிருமித்தான் எவள் புருவ  நெறிப்புக்கு ஏற்ப
மற்பகர் தோளவன் மார்பில் எவள் காற்சின்னம் மறை முடியில் பரம் பொருளின் சங்கை தீர்த்த
பற்பல பாரித்து இறைவன் விஸ்வரூபத் துடன் இழியில் பரியாது போகத்தின் முன்
அற்பமதாய்க் கரத்தடக்கும் அவ் வணங்கே அமுதவலைக் கடைக் கணிப்பால் அணைக்க எம்மை –4

பரியாது -வருத்தமின்றி –

————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திரு மலை நல்லான் ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பராசர பட்டர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பராசர பட்டர் அருளிச் செய்த ஸ்ரீ குணரத்ந கோசம் –ஸ்ரீ திருமலை நல்லான் இயற்றிய ஸூவர்ண குஞ்சிகா -தனியன் -அவதாரிகை -முதல் ஸ்லோகம் –

April 28, 2015

ஸ்ரீ பராசர பட்டார்யா ஸ்ரீ ரங்கேச புரோஹித
ஸ்ரீவத் சாங்க ஸூதஸ் ஸ்ரீ மான் ஸ்ரேயசே மேஸ்து பூயஸே –ஸ்ரீ நஞ்சீயர் அருளிச் செய்த தனியன் –

ஸ்ரீ பராசர பட்டார்யா -ஸ்ரீ பராசர பட்டர் என்ற பெரியார்
ஸ்ரீ ரங்கேச புரோஹித – ஸ்ரீ ரெங்க நாதனுக்கு  புரோஹிதரும் –
எம்பெருமானார் திருவரங்கத்தமுதனார் இடம் கூரத் ஆழ்வானுக்கு வாங்கித் தந்த புரோஹிதம் –
ஸ்ரீ மான் -திருவாளருமான-ஸ்ரீ வைஷ்ணவ லஷ்மி -தனமாய தானே கைகூடும் -கருவிலே திருவாளர் -எம்பெருமானார் சம்பந்தமே சிறந்த செல்வம் –
ஜாதோ லஷ்மண மிச்ர சம்ஸ்ரய தாநாத் ஸ்ரீ வத்ஸ சிஹ்நாத் ருஷே -எம்பெருமானை ஆஸ்ரயித்ததல் ஆகிய செல்வம் படைத்த
ஆழ்வான் ருஷியின் குமாரர் என்று தாமே ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாம பாஷ்யத்தில் அருளியது போலே –
ஸ்ரீவத் சாங்க ஸூதஸ் -ஸ்ரீ கூரத் தாழ்வான் யுடைய திரு மைந்தரும் -ராஜகுமாரன் என்றால் போலே –
ஸ்ரேயசே- மேஸ்து பூயஸே –மே பூயஸே ஸ்ரேயஸே  – அஸ்தே -எனக்கு அதிகமான -நன்மையின் பொருட்டு -ஆயிடுக-

தனக்கேயாக எனைக் கொள்ளுமீதே -என்றபடி ஆசார்யர் அபிமானத்தில் ஒதுங்கி
ஆசார்யன் தரக் கொள்ளும் ஸ்ரேயசே சிறந்தது என்பதால் பூயஸ அடைமொழி-

ஸ்ரீ ஆளவந்தார் திரு உள்ளத்தின் படி இடப்பட்ட திரு நாமம் -பராசரர் -பட்டர் -சாஸ்திரம் அறிந்தவர் -ஆர்யர் -சிறப்புடையவர் –
அதத்த்வேப்ய தூராத் யாதா புத்தி யேஷாம் தே ஆர்யா -ஸ்ரீ வேதாந்த தேசிகர் –
அண்ணிக்கும் அமுதூரும் -சொலப்புகில் வாயமுதம் பரக்கும்-ஆசார்யன் திரு நாமம் –
ஸ்ரீ ரெங்க நாதன் -இயற்பெயர் –

சீரார் பராசர பட்டர் திருவரங்கத்
தூரானுக்குக் குற்ற புரோகிதனாம் -கூரத்தின்
ஆழ்வான் புதல்வன் அருஞ்செல்வன் எற்குயர்ந்த
வாழ்வாக வாய்க்க மகிழ்ந்து –
எற்கு -எனக்கு என்றபடி-

——————————————————————–

முதல் நான்கு ஸ்லோகங்கள் -மங்கள ஸ்லோகங்கள் –
மேலிரண்டு ஸ்லோகங்களால்  ஸ்துதிக்க    தகுதி இல்லை யாகிலும் தமது புன் சொற்களால்
பிராட்டியுடைய நற்குணங்கள் வெளிப்படுமே -என்கிறார்
7/8- ஸ்லோகங்களால் புன் சொற்கள்   ஆவான் என் பிராட்டி தானே கவியை நிறைவேற்றி அருள்வாள் -என்கிறார்
9-ஸ்லோகத்தால் ஸ்ரீ ரெங்க நாதனை நோக்கி உன்னிலும் சிறப்புடையாளாக ஸ்துதிப்பேன் கேட்டு மகிழ்க என்கிறார்
10-14- ஸ்லோகங்களில் வேத பிரமாணத்தாலும் உப ப்ரஹ்மணங்களாலும் பிரதான பிரமேயம் பிராட்டி என்கிறார்   –
15-18-ஸ்லோகங்களில் -மங்களகரமான பிராட்டி யுடைய கடாஷமே நல்லன -அல்லன தீயன -என்கிறார்
19/20-ஸ்லோகங்களில் -லீலா விபூதியில் பரிஹாச ரசம் அனுபவிக்கும் படியைக் காட்டினார்
21-ஸ்லோகத்தில் -இவள் போகத்துக்கு ஏற்பட்டதே நித்ய விபூதி என்கிறார்
22- ஸ்லோகத்தில் -உபய விபூதியும் -அவனும் உட்பட பிராட்டியின்  பரிகரங்களே என்கிறார் –
23-25-ஸ்லோகங்களில் அவனுடன் கூடி இருந்து போகம் அனுபவிக்கும் பிரகாரத்தைக் காண்பிக்கிறார்
26-ஸ்லோகத்தில் -அல்லாத தேவிமார் இவளுக்கு அவயவ மாத்ரமே -என்கிறார் –
27-ஸ்லோகத்தில் -இறைவனோடு கைங்கர்யத்தை ஏற்கும் நிலையைக் கூறினார் –
28-ஸ்லோகத்தில் இவளே அவனுக்கு ஸ்வரூப நிரூபக தர்மம் என்கிறார் –
29-31-ஸ்லோகங்களில் அவனது பெருமையும் இவள் அடியாகவே -என்கிறார் –
32/33 ஸ்லோகங்களில் இருவருக்கும் பொதுவான குணங்களைக் கூறுகிறார்  –
34/35-ஸ்லோகங்களில் -சிறப்பான குணங்களைக் காண்பிக்கிறார் –
36-38 -ஸ்லோகங்களில் திவ்ய மங்கள விக்ரஹத்தை வர்ணிக்கிறார் –
39-ஸ்லோகத்தில்  அந்த அழகுக்கு தோற்று திருவடிகளில் விழுகிறார் –
40/41 ஸ்லோகங்களில் திருக் கண்களின் கடாஷத்தை அருளுகிறார் –
42-44- ஸ்லோகங்களில் -திவ்ய மங்கள விக்ரக திருக் குணங்கள் -மென்மை இளமை சௌந்தர்யம் முதலியன என்கிறார் –
45- சம்ஸ்லேஷ இன்பம் சொல்கிறார்
46-47-ஸ்லோங்களில் திரு ஆபரணச் சேர்த்தி அருளுகிறார்
48-ஸ்லோஹத்தில் திரு அவதார திவ்ய மங்கள விக்ரஹத்தையும்
49- ஸ்லோஹத்தில் திருப் பாற்கடலில் தோன்றினதையும் கூறுகிறார் –
50 ஸ்லோகத்தில் புருஷகாரம் ஆவதற்கு வேண்டிய பொறுமையின் சிறப்பை காண்பிக்கிறார்
51- ஸ்லோகத்தில் -புருஷகாரம் செய்யும் முறையைக் காண்பிக்கிறார் –
52- ஸ்லோகத்தில் இவளை முன்னிட்டே அவனைப் பற்ற வேண்டுவதை சொல்கிறார்
53-ஸ்லோகத்தில் திருவவதரித்து மனிசர்க்காக படாதனபட்டு கருணையையும் ஸ்வா தந்த்ர்யத்தையும் சிந்தனை செய்கிறார் –
54-ஸ்லோகத்தில் அவன் இவளுக்காக அரியனவும் செய்வான் என்கிறார்
55- ஸ்லோகத்தில் -அவனும் மூழ்கும் போக்யதையைக் காண்பிக்கிறார்
56 -ஸ்லோகத்தில் எப்பொழுதும் புருஷகாரமாம் படி ஸ்ரீரங்கத்தில் நித்ய வாஸம் செய்து அருளும்படியைப் பேசுகிறார்
57-ஸ்லோகத்தில் -அர்ச்சாவதார சிறப்பைக் கூறுகிறார்
58-ஸ்லோகத்தில் அவளது அருளின் சிறப்பைக் கூறுகிறார்
59-60 ஸ்லோகங்களால் நைச்ச்யாநுசந்தானம் செய்து பிராட்டியே புருஷகாரம் ஆனதைப்  பேசுகிறார்
61 -ஸ்லோகத்தால் இம்மை மறுமைகளை ஸ்ரீ ரெங்க நாச்சியாரே தந்து அருள வேணும் என்று
பிரார்த்தித்து தலைக் கட்டி அருளுகிறார்  –

ஸ்ரீ ராமாயணம் போல அன்றி மிதுனமாக இருவராலும் கேட்க்கப் பட்ட சீர்மை இதற்கு யுண்டே –
திருமாலவன் கவியை விட திருவின் கவிக்கு  ஏற்றம் யுண்டே –
த்வயம் போலே சுருங்கச் சொல்லாமல் விவரித்து  சொல்லும் சீர்மையும் இதற்கு யுண்டே –
பெரிய பிராட்டியார் அகில ஜகன் மாதாவாக இருந்தும் இவருக்கு விசேஷ தாயார் -ஆகையால் பிள்ளைச் பேச்சு -இது-
ஸ்ரீ சதுஸ் ஸ்லோகீ போன்றவையும் கூட இத்தைப் போலே பிராட்டியை மகிழ்விக்க முடியாதே
இதனால் பிரபந்த வைலஷ்ணயமும் பிரபந்த கர்த்தாவின் வைலஷ்ணயமும் சிறப்பானவை விளங்கும் –

————————————————————————–

ஸ்ரீயை சமஸ்த சிதசித் விதாந வ்யசனம் ஹரே
அங்கீகாரிபி ராலோகை ஸார்த்தயந்த்யை க்ருதோஞ்சலி–1-

ஹரே -இறைவனது
சமஸ்த சிதசித்-எல்லா சேதனர்களையும் அசேதனர்களையும்
விதாந வ்யசனம் -படைத்ததால் யுண்டான பிரயாசத்தை
அங்கீகாரிபி ராலோகை-ஏற்கின்ற பார்வைகளால்
ஸார்த்தயந்த்யை-பயன் பெறச் செய்யும்
ஸ்ரீயை -பெரிய பிராட்டியாருக்கு
க்ருதோஞ்சலி-அஞ்சலி க்ருத-தொழுகை செய்யப்பட்டது-

ஹரியின் விதாநத்தை – படைத்தலை- தனது  கடாஷத்தால் பயனுறச் செய்து அருளியது போலே
எனது கவிதையையும் பயனுறச் செய்த்து அருள வேணும் -என்கிறார்

ஸ்ரீ -திரு நாமமே தலை சிறந்தது என்பதால் அத்தையே கைக் கொள்ளுகிறார்
ஸ்ரீ ரெங்கநாயகி குண ரத்ன கோசம் என்னாமல்
ஸ்ரீ குணரத்ன கோசம் என்பதால் இத் திருநாமத்தில் இவரது ஈடுபாடு விளங்குமே

ஸ்ரீஆளவந்தாரும் -ஸ்ரீ ரீரித்யேவச நாமதே பகவதி ப்ரூம கதம் த்வாம் வயம் –
ஸ்ரீ ரிதி ப்ரதமம்  நாம லஷ்ம்யாஸ் தன்நிர்வச க்ரமை
தத் ஸ்வ பாவ விசேஷாணாம் யாதாத்ம்ய மவகம்யதே –

எல்லாராலும் ஆஸ்ரயிக்கப் படுபவள் -தான் அவனை ஆஸ்ரயிப்பவள்
ஆஸ்ரித்தவர் குறைபாடுகளை கேட்பவள் -ஆஸ்ரிதர் தோஷங்களைப் போக்குமவள்-
அவர்களை ஏற்குமாறு அவனிடம் கூறுபவள் -அங்கன் கூறுபவைகளை அவனைக் கேட்ப்பிக்குமவள்-
இப்படி ஆறு வகை யுண்டே –

புருஷகாரம் -என்பதே அவனையும் ஜீவர்களையும் இணைத்து வைப்பதே
அஞ்சலி செய்து ஆசரிக்கும் பிரகரணம் ஆதலால் –
இங்கே எல்லாராலும் ஆஸ்ரயிக்கப் படுபவள் என்பதிலே நோக்கு –

சமஸ்த சித் விதானம் –
சிருஷ்டி -உயிர்களை உடலோடும் கருவியோடும் புணர்க்கை –
சமஸ்த -பத்தர் முத்தர் நித்யர்

அசித் விதானம் –
பிரக்ருதியை மகான் அஹங்காரம் முதலிய தத்வங்களாக பரிணமிக்கை-
சமஸ்த சுத்த சத்வம் -மிச்ர சத்வம் -சத்வ ஸூந்யம்-

கடாஷம் இல்லையாகில் வீண் -விசனமாயே முடியுமே -வ்யசனம் என்கிறார்

ஹரி -பிரமனும் இல்லை ஈசனும் இல்லை நாராயணன் இவனே இருந்தான் -ஸ்ருதி-பூதானாம் ப்ரபவோ ஹரி
ப்ருஹ்மாணம் இந்த்ரம்  ருத்ரஞ்ச யமம் வருணமேவச
ப்ரஹச்ய ஹரதே யஸ்மாத் தஸ்மாத் தரிரி தீர்யதே –

ஹரிர் ஹரதி பாபானி -ஆற்றல் தயை பொறை -யுடைமை
உபஹரதீதி ஹரி -சிருஷ்டிக்கும் ஜகத்தை இவளுக்கு காணிக்கையாக சமர்ப்பிப்பவன்-
பார்வையினாலே ஏற்றுக் கொள்கிறாள் —

கடாஷ லாபாய கரோதி லோகன் பராக்ரமந்தே பரிரம்பணாய
முதே ச முக்திம் முரபித் ரமே தத் கதம் பலாபாவ கதாஸ்ய கர்த்து-என்றபடி –
பார்த்தாலே பயன் பெற்றது –
படுகின்ற பாடு எல்லாம் இவள் பார்வைக்காகவே –

அஞ்சலி க்ருத -கை தொழுது-காயிக கார்யம் –
செய்யப் பட்டது என்று சொல்வதால் வாசிக நமஸ்காரம் –
நினைத்தே தான் சொல்வதால் மானஸ நமஸ்காரம்
அஞ்சலி செய்யப் பட்டது-அனைவருக்கும் அதிகாரம் என்பதால் செயப்பாட்டு வினை

அஞ்சலி -ஒருமை –
ஒரு காலே செய்தாலே அமையும் –
நிகமத்திலும் அஞ்சலி பரம் வஹதே என்பர்

செய்யப்பட்டது -இறந்த கால பிரயோகம் -பண்டே செய்தது போலே தோற்ற –
இயல்பான சேஷத்வத்தை உணர்ந்த –
அடியேன் அடைந்தேன் முதன் முன்னமே-நம் ஆழ்வார் –

பிராட்டியை இறைவனது படைப்பை ஏற்கும் சேதனையாக சொல்லி –  –
அசேதனங்களான சத்தை அஹந்தை மூல பிரக்ருதியே  லஷ்மி என்பாரை நிரசிக்கிறார்

படைக்கும் தொழிலை ஏற்பதால் இறைவனே இலக்குமி என்பாரையும் நிரசிக்கிறார் –

இறைவனே காரணம் இவள் ஊக்குவிப்பவள்-என்றதாயிற்று
அவன் செயலை பயனுறச் செய்வதால் பரத்வமும்
யாமும் ஆஸ்ரயிக்கும்படி சௌலப்யமும் கொண்டவள்

ஹரிர் ஹரதி பாபானி -நமது பாபத்தைப் போக்கும்
அவனது விசனத்தைப் போக்குமவள் -பெரிய பிராட்டியாரே –
நமக்கு என்றும் சார்வு –

அரியின தனைத் துயிர் அல்லவைகளும்
தருமரும் தொழிலினைத் தனது நோக்கினால்
பெரும் பயன் எய்திட ஏற்கும் பெற்றியாள்
திருவினுக்கு அஞ்சலி செய்குவாமரோ–

————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திரு மலை நல்லான் ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பராசர பட்டர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாம ஸ்தோத்ரம் -951-1000–மும்மத விளக்கம் —

April 26, 2015

ஆதார நிலயோ தாதா புஷ்பஹாச ப்ரஜாகர
ஊர்தவகஸ் சத்பதாசார பிராணத பிரணவ பண –102-
பிரமாணம் பிராண நிலய பிராண த்ருத் பிராண ஜீவன
தத்வம் தத்வ விதேகாத்மா ஜன்ம ம்ருத்யுஜ ராதிகா —103-
பூர்ப்புவஸ் ஸ்வஸ் தருஸ் தாரஸ் சவிதா ப்ரபிதாமஹ
யஜ்ஞோ யஜ்ஞபதிர் யஜ்வா யஜ்ஞாங்கோ யஜ்ஞவாஹன–104-
யஜ்ஞப்ருத் யஜ்ஞக்ருத் யஜ்ஞீ யஜ்ஞபுக் யஜ்ஞசாதன
யஜ்ஞாந்தக்ருத் யஜ்ஞகுஹ்யம் அன்ன மன்னாத ஏவ ச –106-
ஆத்மயோ நிஸ் ஸ்வ யஜ்ஞாதோ வைகா நஸ் சாமகாயன
தேவகீ நந்தஸ் ஸ்ரஷ்டா ஷிதீச பாப நாசன –107
சங்கப்ருத் நந்தகீ சக்ரீ சார்ங்கதன்வா கதாதர
ரதாங்கபாணி ரஷோப்யஸ் சர்வ ப்ரஹரணாயுத –108-

ஸ்ரீ சர்வ ப்ரஹரணாயுத ஓம் நம இதி

—————————-

ஜகத் வியாபாரம் –946-992——–47 திருநாமங்கள் –
திவ்யாயூத தாரீ —993-1000——-8- திரு நாமங்கள்

———————-

951-தாதா –
தாமே தர்மத்தை உபதேசித்தும் அனுஷ்டித்தும் உலகைத் தாங்குபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

அதாதா -தம்மைத் தவிர வேறு ஆதாரம் அற்றவர் -தாதா -சம்ஹார காலத்தில் எல்லா பிராணிகளையும் விழுங்குபவர்-ஸ்ரீ சங்கரர் –

தாங்குவதும் போஷிப்பதும் செய்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

——————————————

952-புஷ்பஹாச –
தம் ஸ்வரூபத்தை அனுபவிக்கும் சக்தி உடையவர்களுக்கு மாலை வேளையில் பூ மலர்வது போலே
தாமே மலர்ந்து மிகவும் இனியவராக இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

புஷ்பம் மலர்வது போல் பிரபஞ்ச ரூபமாக மலர்பவர் -ஸ்ரீ சங்கரர் –

மல்லிகை போன்ற புன்முறுவலை உடையவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-

——————————————-

953-ப்ரஜாகர-
பயிர் இடுபவன் பயிரைக் காப்பது போலே இரவும் பகலும் தூங்காமல் பக்தர்களைக் காப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

எப்போதும் விழித்துக் கொண்டு இருப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

நன்கு விழித்து இருப்பவர்-படைக்கும் பொழுது பிரஜைகளை வயிற்றில் இருந்து வெளிப்படுத்துபவர்
உலகங்களை உண்டாக்குபவர்   -திருவேங்கடம் முதலிய திரு மலைகளில் மகிழ்பவர் -சத்ய சந்தர் –

————————————————

954-ஊர்த்வக-
ஏன் தூங்காதவர் எனில் எல்லாவற்றிலும் உயர்ந்த தன்மையை உடையவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

எல்லாவற்றிற்கும் மேலே இருப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

மேல் உலகமாகிய ஸ்ரீ வைகுண்டத்தில் இருப்பவர் -ஸ்ரீ வைகுண்டத்தை அடைவிப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

—————————————————-

955-சத்பதாசார –
பக்தர்களைத் தமக்கு அடிமை செய்வதாகிய நல்வழியில் செல்லும்படி செய்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

சாதுக்களின் வழியாகிய நல்லாசாரங்களைத் தாமும் அனுஷ்டிப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

நஷத்ரங்களில் சஞ்சரிப்பவர் -யோக்யர்களை நல் வழியில் செலுத்துபவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

————————————————————

956-பிராணத-
சப்தாதி விஷயங்களாகிய விஷம் தீண்டி மயங்கித் தம்மை மறந்து ஆத்மநாசம்  அடைந்தவர்களுக்கு
ஆத்மா உய்வதாகிய உயிர் அளிப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

இறந்து போன பரீஷித் போன்றவர்களைப் பிழைப்பிப்பவர்-ஸ்ரீ சங்கரர் –

உயர்ந்த கதியைக் கொடுப்பவர் -சப்த ரூபமான வேதங்களை நான்முகனுக்கு நன்கு கொடுப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

——————————————————

957-பிரணவ –
தமக்கும் ஜீவன்களுக்கும் உள்ள தொடர்பை பிரணவத்தினால் அறிவித்து அவர்களைத் தமது
திருவடிகளில் வணங்கச் செய்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

ஓங்காரம் ஆகிய பிரணவ ரூபியாக இருப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

பிரணவம் விஷ்ணுவின் திரு நாமம் -விழித்து இருக்கும் நிலை முதலியவற்றைத் தருபவர் –
முக்தர்களை நடத்துபவர் -ஸ்ரீ சத்ய  சந்தர் –

—————————————————–

958-பண –
தம் அடியவர்களுக்காக தாம் அடிமையாக இருந்து அத்தொடர்பை மாற்றுபவர் -ஸ்ரீ பராசர பட்டர்-

படைதவற்றிற்குப் பெயர்களைக் கொடுப்பவர் –
புண்ய கர்மங்களைப் பெற்றுக் கொண்டு அவற்றின் பலன்களைத் தருபவர் -ஸ்ரீ சங்கரர்-

ஜனங்களால் போற்றப் பெறுபவர் -ஜனங்களுடன் பேசுபவர் -ஸ்ரீ சத்ய சந்தர்

————————————————————-

959-பிரமாணம் –
வேதங்களின் ரஹச்யமாகிய தத்வார்த்தங்களை ஐயம் திரிபின்றி -ஸ்ரீ பராசர பட்டர் –

ஞான ரூபியாக இருப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

மேன்மையான அறிவி உடையவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

———————————————————-

960-பிராண நிலய –
பறைவைகள்  கூட்டை அடைவது போலே ஆத்மாக்கள் அடையும் இடமாக இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

ஜீவர்கள் லயிக்கும் இடமாக அல்லது ஜீவர்களை சம்ஹரிப்பவராக இருப்பவர் -இந்த்ரியங்களுக்கும்
பிராணம் அபானம் முதலான வாயுக்களுக்கும் ஆதாரமான ஜீவாத்மாக்களுக்கும் ஆதாரமானவர் -ஸ்ரீ சங்கரர் –

வாயுவிற்கு அடைக்கலமாக இருப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

———————————————————————

961-பிராணத்ருத்-
அவ்வாத்மாக்களைத் தாய் போலே தாங்குபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

உயிர்களை அந்தர்ப்பியாகப் போஷிப்பவர் -ப்ராணப்ருத்-என்ற பாடம் -ஸ்ரீ சங்கரர் –

பிராணன்களை அல்லது இந்த்ரியங்களைத் தாங்குபவர் -பிராண ப்ருத்-எனபது பாடம் -ஸ்ரீ சத்ய சந்தர் –

—————————————————————————

962-பிராண ஜீவன –
அவ்வாத்மாக்களை உணவு போலே பிழைப்பிப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர்-

பிராண வாயு ரூபியாக பிராணிகளை ஜீவிக்கச் செய்பவர் -ஸ்ரீ சங்கரர் –

முக்ய பிராணனால் ஜீவர்களை வாழ்விப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-

———————————————————————–

963-தத்தவம் –
தயிர் பால்களில்  போல் சேதன அசேதனங்கள் ஆகிய பிரபஞ்சத்தில் வியாபித்து இருக்கும் சாராம்சமானவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

உண்மையான வஸ்துவாக இருப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

குணங்களால் பரவியிருப்பவர் -எல்லோர்க்கும் நன்மை அளிப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

——————————————————————-

964-தத்த்வவித் –
தமது இவ்வுண்மையை அறிந்து இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

தம் ஸ்வரூபத்தை உள்ளபடி அறிந்து இருப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

தம் தன்மையை அறிந்தவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

—————————————————–

965-ஏகாத்மா-
சேதன அசேதனங்கள் அனைத்திற்கும் ஒரே ஸ்வாமியாகவும்-அனுபவிப்பவராகவும் அபிமானியாகவும் இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

ஒரே ஆத்மாவாக இருப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

முக்யமான தலைவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

————————————————

966-ஜன்ம ம்ருத்யுஜராதிக –
சேதன அசேதனங்கள் இரண்டைக் காட்டிலும் வேறு பட்டவராய் பிறப்பு இறப்பு மூப்புக்களைக் கடந்தவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

பிறப்பு இறப்பு மூப்பு முதலிய ஆறு விகாரங்களைக் கடந்தவர் -ஸ்ரீ சங்கரர் –

பிறப்பு இறப்பு மூப்பு முதலிய தோஷங்களுக்கு அப்பாற்பட்டவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

———————————————————————-

967-பூர்புவவதரு-
பூ லோகம் புவர்லோகம் ஸூவர்லோகம் ஆகிய மூ வுலகங்களிலும் உள்ள பிராணிகள் பறவைகள்
பழுத்த மரத்தை அடைவது போல் தம்மை அடைந்து வாழும்படி இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

பூ புவர் ஸூ வர் லோகங்களையும்  மரம் போலே வியாபித்து இருப்பவர் -பூ புவ ஸவ என்கிற  வேத சாரங்கள் ஆகிய
மூன்று வ்யாஹ்ருதி ரூபங்களால் செய்யப்ப்படும் ஹோமம் முதலியவற்றால் மூ வுலகங்களையும் நடத்துபவர் ஸ்ரீ சங்கரர் –

பூ -நிறைந்தவர் -புவ -செல்வத்தால் சிறந்தவர் -ஸ்வ-அளவற்ற சுகமுடையவர் -தரு -தாண்டுபவர் -அல்லது –
ஸ்வஸ்தரு -கற்பக மரம் போன்றவர் -மூன்று திரு நாமங்கள் -ஸ்ரீ சத்ய சந்தர் –

——————————————————————

968-தார –
அவர்கள் சம்சாரத்தைத் தாண்டும்படி செய்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

பிறவிக் கடலைத் தாண்டுவிப்பவர் -பிரணவ ரூபி -ஸ்ரீ சங்கரர் –

ஓங்காரமாக இருப்பவர் -அறியப்படுபவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

———————————————————————

969-சவிதா –
எல்லாவற்றையும் தாமே உண்டாக்குபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

எல்லாவற்றையும் உண்டாக்குபவர் -ஸ்ரீ சங்கரர் –

படைப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

—————————————————————–

970-ப்ரபிதாமஹ-
பிதாமஹரான பிரமனுக்கும் தந்தையானவர் -ஸ்ரீ பராசர பட்டர்-

பிதாமஹரான பிரமனுக்கும் தந்தை -ஸ்ரீ சங்கரர் –

நான் முகனுக்குத் தந்தையானவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

——————————————————————

971-யஜ்ஞ-
தம்மை ஆராதிப்பதற்கு உரிய புண்யம் இல்லாமல் தம்மை ஆராதிக்க விரும்புவர்களுக்கு
தாமே யஜ்ஞமாக இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

யஜ்ஞ  ஸ்வரூபி  யானவர் -யாகம் செய்பவர்களுக்கு அதன் பலன்களைச் சேர்ப்பிப்பவர்-ஸ்ரீ சங்கரர் –

யஜ்ஞங்களை அனுபவிப்பவர் -அல்லது யஜ்ஞங்களுக்குத் தக்கவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

——————————————————-

972-யஜ்ஞபதி –
தம் ஆராதனத்திற்குப் பலனை அளிப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

யஜ்ஞங்களைக் காப்பவர் -தலைவர் -ஸ்ரீ சங்கரர் –

யஜ்ஞங்களைக் காப்பவர் அல்லது தலைவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

—————————————————–

973-யஜ்வா –
சக்தி அற்றவர்களுக்குத் தாமே யஜமான ரூபியாக யாகம் செய்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

யாகம் செய்யும் யஜமானராக இருப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

யாகம் செய்பவர் -ஸ்ரீ சத்ய சந்தரர் –

——————————————–

974-யஜ்ஞாங்க –
சக்தி யுள்ளவர்கள் செய்த யாகங்கள் மேற்கூறிய தம் யாகத்திற்கு அங்கமாகக் கீழ்ப் பட்டு இருக்கும் படி செய்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

யாகங்களே அங்கமாக உடைய வராஹ மூர்த்தியாக இருப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

யஜ்ஞத்தால் உத்தேசிக்கப் படுபவர் -பயனாக விரும்பப் படுபவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

—————————————————-

975-யஜ்ஞவாஹன –
யஜ்ஞம் செய்பவர்க்கு சக்தியும் ஸ்ரத்தையும் அதிகாரமும் கொடுத்து யாகத்தை நடத்துபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

பலத்தைக் கொடுக்கும் யஜ்ஞங்களை நடத்துபவர் -ஸ்ரீ சங்கரர் –

செய்பவர்களை வழி நடத்துபவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

—————————————-

976-யஜ்ஞப்ருத்-
யஜ்ஞம் குறைவு பட்டாலும் தம்மை தியானிப்பதனாலும் பூர்ணா ஹூதியினாலும் அதை நிரம்பச் செய்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

யஜ்ஞங்களைத் தாங்குபவர் -அல்லது காப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

யஜ்ஞத்தைத் தாங்குபவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

————————————————–

977-யஜ்ஞக்ருத் –
உலகங்களின் நன்மைக்காக ஆதியில் யஜ்ஞத்தை உண்டாக்கியவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

ஆதி காலத்தில் யஜ்ஞத்தைப் படைத்து பிரளய காலத்தில் யஜ்ஞத்தை அழிப்பவர்-ஸ்ரீ சங்கரர் –

யஜ்ஞத்தைச் செய்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

———————————————————

978-யஜ்ஞீ-
எல்லா யஜ்ஞங்களுக்கும் தலைவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

யஜ்ஞங்கள் தமக்கு ஆராதனங்கள் ஆகையால் யஜ்ஞங்களுக்குத் தலைவர் -ஸ்ரீ சங்கரர் –

யஜ்ஞத்தை யுடையவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

———————————————————-

979-யஜ்ஞபுக் –
அந்த யஜ்ஞங்களை அனுபவிப்பவர் -அல்லது காப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

யஜ்ஞங்களை அனுபவிப்பவர் -காப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

யஜ்ஞத்தை உண்பவர் -தேவர்களை உண்பிப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

—————————————————————

980-யஜ்ஞசாதன –
யஜ்ஞங்களே ஞானத்தின் வழியாகத் தம்மை அடைவதற்கு உபாயங்களாக இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

தம்மை அடைவதற்கு யஜ்ஞங்களை ஞானம் மூலம் சாதனமாக உடையவர் -ஸ்ரீ சங்கரர்-

யஜ்ஞத்தின் ச்ருக் ஸ்ருவம்-கரண்டிகள் -மந்த்ரம் -முதலியவற்றைக் கொடுப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

——————————————————-

981-யஜ்ஞாந்தக்ருத் –
யாகத்தின் பலனாகிய தம்மைப் பற்றிய தத்வ ஞானத்தை உண்டாக்குபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

யஜ்ஞத்தின் முடிவாகிய பலத்தைக் கொடுப்பவர் -ஸ்ரீ வைஷ்ணவீ ருக்கைச் சொல்லுவதாலும் பூர்ணா ஹூதி செய்வதனாலும்
யஜ்ஞத்தை நிறைவேற்றுபவர் – -ஸ்ரீ சங்கரர் –

யஜ்ஞத்தை நிச்சயிப்பவர்   -ஸ்ரீ சத்ய சந்தர் –

———————————————-

982-யஜ்ஞகுஹ்யம் –
எதையும் எதிர்பாராதவராக இருந்தும் எதிர்பார்ப்பவர் போல் யாகத்தில் அளிக்கும் புரோடாசம் முதலியவற்றை உண்டு
திருப்தி அடைந்து யாகம் செய்தவரைப் பலன்களால் திருப்தி செய்வித்து யாகத்தின் ரஹஸ்யமாக இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

யஜ்ஞங்களுள் ரஹஸ்யமாகிய ஞான யஜ்ஞமாக இருப்பவர் -பலனைக் கருதாது செய்யப்படும் யஜ்ஞமாக இருப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

யஜ்ஞத்தின் ரஹஸ்யமான விஷ்ணு என்னும் நாமத்தை உடையவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

—————————————————————–

983-அன்னம் –
இப்படித் தம்மால் அளிக்கப் பட்ட சக்தியைப் பெற்றவர்களால் அனுபவிக்கப் படுபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

எல்லோராலும் அனுபவிக்கப் படுபவர் -பிராணிகளை சம்ஹரிப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

எல்லோருக்கும் உய்விடம் -எல்லாவற்றையும் உண்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

——————————————————————-

984-அந்நாத-
தம்மை அனுபவிப்பவர் களைத் தாமும் அனுபவிப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

எல்லா உலகங்களையும் சம்ஹார காலத்தில் உண்பவர் -உலகம் அனைத்தும் போக்த்ரு ரூபமாகவும் -உண்பவராகவும் –
போக்ய ரூபமாகவும் உண்ணப் படுபவை யாகவும் -இருத்தலை ஏவ என்ற சொல் காட்டுகிறது -உலகனைத்திலும் உள்ள சொற்கள்
அனைத்தும் சேர்ந்து பரமாத்மாவைக் குறிக்கின்றன என்பதை -சகாரம் காட்டுகிறது -ஸ்ரீ சங்கரர் –

அன்னத்தை உண்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

——————————————————–

985-ஆத்மயோனி-
பாலுடன் சக்கரையைச் சேர்ப்பது போல் தம்மை அனுபவிப்பவர்களைத் தம்மிடம் சேர்ப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

தாமே உலகுக்கு எல்லாம் உபாதான காரணமாக இருப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

பிரமனுக்கு அல்லது ஜீவர்களுக்கு காரணமாக இருப்பவர் -தம்மைத் தாமே அனுபவிப்பதனால் ஆதயோனி -ஸ்ரீ சத்ய சந்தர் –

—————————————————————-

986-ஸ்வயம்ஜாத-
ஒருவருடைய பிரார்த்தனையையும் எதிர்பாராமல் தாமே திருவவதரிப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

நிமித்த காரணமும் தாமேயாக இருப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

தம்மிடமிருந்து தாமே தோன்றுபவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

—————————————————————

987-வைகான –
திருவவதரித்த பின் அடியவர்களுக்கு சம்சார துக்கத்தைப் போக்குபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

ஹிரண்யாஷனைக் கொல்வதற்கு பூமியை நன்கு தோண்டியவர் -ஸ்ரீ சங்கரர் –

விசேஷமான இந்த்ரிய பிராணன்களை உடைய -முக்தி அடைந்தவர்களுக்குத் தலைவர் –
ஸ்ரீ வராஹ ரூபத்தில் பூமியை இடந்து எடுத்தவர் –ஸ்ரீ சத்ய சந்தர்-

——————————————–

988-சாமகாயன –
பிறவி நீங்கி முக்தி அடைந்தவர்கள் தம்மை அடைவதாகிய மது பானத்தினால் மயங்கி
ஹாவு ஹாவு என்று சாமகானம் செய்யும்படி இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

சாமாங்களைப் பாடுபவர் -ஸ்ரீ சங்கரர் –

சாமத்தை கானம் செய்பவர் -சாம கானத்திற்கு தஞ்சமாக இருப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-

————————————————–

989-தேவகி நந்தன –
பர ஸ்வரூபத்தில் மட்டும் அன்றி தேவகியின் புத்திரராக திருவவதரித்த ஸ்ரீ கிருஷ்ணாவாதாரத்திலும்
இவ்வளவு பெருமை பொருந்தியவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

தேவகியின் மைந்தர் -ஸ்ரீ சங்கரர் –

தேவகியை மகிழ்விப்பவர் -ஸ்ரீ லஷ்மி தேவியை கங்கையை மகிவிப்பவர் என்றுமாம் –
பாகரீதியை மகளாகப் பெற்றவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

——————————————————-

990-ஸ்ரஷ்டா –
ஸ்ரீ பர வாஸூதேவரும் தாமேயாக இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
எல்லா உலகங்களையும் படைப்பவர் -ஸ்ரீ சங்கரர் –
படைப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

——————————————————-

991-ஷிதிச –
எல்லாவற்றிற்கும் ஈஸ்வரர் ஆயினும் பூமியின் துயரத்தை நீக்குவதற்காக திருவவதரித்தால் பூமிக்கு ஈஸ்வரர் -ஸ்ரீ பராசர பட்டர் –

தசரத புத்ரனே திருவவதரித்தவர் -ஸ்ரீ சங்கரர் –

பூமிக்கு அரசர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

———————————————————–

992-பாப நாசன –
தயிர் வெண்ணெய் திருடியது -ராசக்ரீடை செய்தது முதலிய கதை அமுதத் கேட்பவர்களுடைய எல்லா பாபங்களையும் போக்கி –
திரு வவதாரங்களிலும் தம் அடியவர்க்கு உள் வெளி பகைவர்களைப் போக்குபார் -ஸ்ரீ பராசர பட்டர் –

தம்மைக் கீர்த்தனம் பூஜை தியானம் செய்வதனாலும் நினைப்பதனாலும் பாவங்களைப் போக்குபவர் -ஸ்ரீ சங்கரர் –

பாவங்களைப் போக்குபவர் -பாப காரியங்களைச் செய்யும் அசுரர்களை அழிப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர் —

———————————————————–

993-சங்கப்ருத்-
தமக்கே சிறந்த அடையாளமான ஸ்ரீ பாஞ்ச ஜன்யம் என்னும் ஸ்ரீ சக்கரத் தாழ்வானை தம் திருப்பவளத்தின்
அமுதத்தினால் போஷிப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

அஹங்கார ரூபமாகிய ஸ்ரீ பாஞ்ச ஜன்யம் என்னும் ஸ்ரீ சங்கத்தை தரிப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

ஸ்ரீ பாஞ்ச ஜன்யம் என்னும் ஸ்ரீ சங்கத்தை அல்லது ஸ்ரீ சங்க நிதி எனப்படும் நிதியை தரிப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

—————————————————————–

994-நந்தகீ –
என்னை இது மகிழ்விக்க வேண்டும் என்று தாமும் விரும்பும் ஸ்ரீ நந்தகம் என்னும் திரு வாளுடன்
எப்போதும் சேர்ந்து இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

வித்யா ரூபமாகிய ஸ்ரீ நந்தகம்  என்னும் திரு  வாளை உடையவர் -ஸ்ரீ சங்கரர் –

ஸ்ரீ நந்தகம்  என்னும் திரு வாளை உடையவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

———————————————————————-

995-சக்ரீ –
தம் அடியவர்களான தேவர்களுக்கு விரோதிகளான அசூர ராஷசர்களைக் கொன்று அவர்கள் ரத்தத்தினால் சிவந்த
ஜ்வாலையோடு கூடிய ஸ்ரீ ஸூதர்சன ஆழ்வாரை உடையவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

மனஸ் தத்த்வமாகிய ஸ்ரீ ஸூ தர்சனம் உடையவர் -அல்லது சம்சார சக்கரமானது தம் ஆணையினால் சுழலும்படி  செய்பவர் -ஸ்ரீ சங்கரர் –

ஸ்ரீ ராம -ஸ்ரீ கிருஷ்ண திருவவதாரங்களில் சேனைச் சக்கரத்தை -கூட்டத்தை பெற்று இருந்தவர் -ஸ்ரீ ஸூ தர்சனம் உடையவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

———————————————————————–

996-சாரங்க தந்வா-
நாண் ஓசையினாலும் சரமாரி பொழிவதனாலும் பகைவர்கள் என்னும் பெயரையே ஒழிக்கும்-
தமக்கு தகுதியான ஸ்ரீ சார்ங்கம் என்னும் திரு வில்லை உடையவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

இந்திரியங்களுக்கு காரணமாகிய சாத்விக அஹங்காரத்தின் வடிவாகிய ஸ்ரீ சார்ங்கம் என்னும் திரு வில்லை உடையவர் -ஸ்ரீ சங்கரர் –

ஸ்ரீ சார்ங்கம் என்னும் திரு வில்லை உடையவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

————————————————————–

997-கதாதர –
பிரளய கால அக்னி போலே நான்கு புறமும் பொறிகளைச் சிதறிப் பகைவர்களை அழித்து உலகை மகிழ்விப்பதனால்
ஸ்ரீ கௌமோதகீ   என்ற பெயருடைய திருக் கதையை ய்டையவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

புத்தி தத்வ ரூபமாகிய ஸ்ரீ கௌமோதகீ என்னும் திருக் கதையை யுடையவர் -ஸ்ரீ சங்கரர் –

ஸ்ரீ கௌமோதகீ என்னும் திருக் கதையைத் தரித்தவர் -ஸ்ரீ சத்ய சந்தர்

————————————————————

998-ரதாங்க பாணி –
ஸ்ரீ சக்ராயுதத்தை கையிலே உடையவர் -சக்ரீ என்பதனால் ஸ்வாமி சொத்து சம்பந்தம் சொல்லி இங்கு எப்போதும்
திருச் சக்கரம் எனது இருப்பது கூறப்படுவதால் புநர் உக்தி தோஷம் இல்லை -ஸ்ரீ பராசர பட்டர் –

ரதாங்கம் என்னும் திருச் சக்கரத்தைக் கையில் யுடையவர் -ஸ்ரீ சங்கரர் –

ரதாங்கம் எனப்படும் திருச் சக்ராயுதத்தைக் கையிலே யுடையவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

———————————————

999-அஷோப்ய-
சரணம் அடைந்தவர்க்கு அபயம் கொடுப்பது என்ற உறுதியான விரதத்தில் இருந்து எப்போதும் அசைக்க முடியாதவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

இந்தச் சக்ராயுத உடைமையினால்  யாராலும் கலக்க முடியாதவர் -ஸ்ரீ சங்கரர் –

கலக்க -துன்புறுத்த -முடியாதவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

—————————————————–

1000-சர்வ ப்ரஹரணா  யுத-
தம் அடியவர்களுக்கு எல்லா அநிஷ்டங்களையும் வேரோடு களையத் தக்கனவும் -அளவற்ற சக்தி உள்ளனவும் –
தமக்குத் தக்க திவ்ய ஆபரணம் என்று நினைக்கத் தக்கனவும்-அடியவர்களைக் காப்பதாகிய யாகத்தில் தீஷை பெற்றுக் கொண்ட
தமது பாரத்தை வகிக்கும் எண்ணிறந்த திவ்ய ஆயுதங்களை யுடையவர் –
இந்த   தோஷங்களுக்கு எல்லாம் எதிர்தட்டாய் உபாதி எண்ணிக்கை எல்லை இவைகளைக் கடந்தவைகளாய்
மிகவும் உயர்ந்த மங்களமாய் விளங்கும் ஸ்வரூபம் ரூபம் குணம் விபவம் சேஷ்டிதம் தடையற்ற செல்வங்கள் சௌசீல்யம் இவற்றை உடையவராய் –
பிரார்த்திப்பவர்களுக்கு கற்பகம் போன்றவராய்-சரணாகதி அடைந்தவர்களுக்கு ஜீவாதுவாய் திருமகள் கேள்வனாய்
பகவானான புருஷோத்தமனை அடைந்தவர்களுக்கு எல்லாச் செல்வங்களும் கிடைக்கும் –ஸ்ரீ பராசர பட்டர் –

இவை மட்டும் இன்றி மற்றும் பலவிதமான திவ்ய ஆயுதங்களை யுடையவர் –
திவ்ய ஆயுதங்களாக நினைக்கப் படாத திரு நகம் முதலியவையும் ஸ்ரீ நரசிம்ஹ திரு வவதாரத்தில் திவ்ய ஆயுதங்கள் ஆயின –
முடிவில் சர்வ ப்ரஹரணா யூதர் ஏற்றது சத்யா சங்கல்பர் ஆதலின் இவர் சர்வேஸ்வரர் என்பதைக் காட்டுகிறது -ஸ்ரீ சங்கரர் –

எல்லா விரோதிகளையும் அழிப்பதற்கு திவ்ய ஆயுதங்களை யுடையவர் -எண்ணிக்கையில் ஆயிரம் என்று கூறப்பட்டாலும்
அதிகமான திரு நாமங்கள் உள்ளன –
அனுஜ்ஞா சூத்ரத்தில் சததாஹம் சஹாஸ்ரதாஹம் அதிகமான ருக்குகள் இருப்பது போலே –ஸ்ரீ சத்ய சந்தர் –

——————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பராசர பட்டர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாம ஸ்தோத்ரம் -901-950–மும்மத விளக்கம் —

April 25, 2015

சநாத் சநாத நதம கபில கபிரவ்யய
ஸ்வஸ்தி தஸ் ஸ்வ ஸ்திக்ருத் ஸ்வஸ்தி ஸ்வஸ்தி புக் ஸ்வஸ்தி தஷிண –96
அரௌத்ர குண்டலீ சக்ரீ விக்ரம் யூர்ஜித தசாசன
சப்தாதிகஸ் சப்தசஹஸ் சிசிரஸ் சர்வரீகர –97
அக்ரூர பேசலோ தஷோ தஷிண ஷமிணாம் வர
வித்வத்தமோ வீதபய புண்ய  ஸ்ரவண கீர்த்தன–98
உத்தாரணோ துஷ்க்ருதஹா புண்யோ  புண்யது ஸ்வப்ன நாசன
வீரஹா ரஷணஸ் சந்தோ ஜீவன பர்யவச்தித–99
அநந்த ரூபோ அநந்த ஸ்ரீர் ஜிதமன்யூர் பயபஹ
சதுரஸ்ரோ கபீராத்மா விதிஸோ வ்யாதிசோ திஸ–100-
அநாதிர் பூர்ப்புவோ லஷ்மீஸ்  ஸூ வீரோ ருசிராங்கத
ஜநாநோ ஜனஜன்மாதிர் பீமோ பீமபராக்ரம–101-
ஆதார நிலயோ தாதா புஷ்பஹாச ப்ரஜாகர
ஊர்தவகஸ் சத்பதாசார பிராணத பிரணவ பண –102-

———————————-

மோஷ ப்ரதத்வம்———871-911—-41 திரு நாமங்கள்
ஸ்ரீ கஜேந்திர வரதன் —-912-945—-34 திரு நாமங்கள்
ஜகத் வியாபாரம் ——–946-992—-47 திரு நாமங்கள்

———————————————

901-ஸ்வஸ்தித-
இப்படி மங்களத்தைக்  கொடுப்பவர் -ஸ்ரீ பரசார பட்டர் –

பக்தர்களுக்கு மங்களத்தை அளிப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

பக்தர்களுக்கு மங்களத்தை அருள்பவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

—————————————-

902-ஸ்வஸ்திக்ருத் –
தம்மைக் குணங்களுடன் அனுபவிக்கும் படி முக்தர்களை ஆசீர்வதிப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

மங்களத்தை செய்பவர் -ஸ்ரீ சங்கரர் –

நல்லதை உண்டு பண்ணுபவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

————————————————-

903- ஸ்வஸ்தி –
தாமே மஹா மங்கள மூர்த்தி -ஸ்ரீ பராசர பட்டர் –

பரமானந்த ரூபமான மங்கள ஸ்வரூபி –ஸ்ரீ சங்கரர் –

எல்லா இடம் காலங்களிலும் சுகமாக இருப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

————————————————–

904-ஸ்வஸ்தி புக் –
எல்லா மங்களங்களையும் அழியாமல் காப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

பக்தர்கள் மங்களத்தை அனுபவிக்கும்படி செய்பவர் -மங்களத்தை அனுபவிப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

சுகத்தை அனுபவிக்கும்படி  செய்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

———————————————————-

905-ஸ்வஸ்தி தஷிண –
தம் அடியார்களுக்குத் தமக்குக் கைங்கர்யம் செய்யத் தகுதியாக திவ்ய சரீரம் சக்தி முதலிய பல நன்மைகளை
தஷிணையாக அளிப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

மங்கள ரூபமாக விருத்தி அடைபவர் -மங்களத்தைக் கொடுக்கும் திறமை உடையவர் –
தஷிண -விரைவு பொருளில் மங்களத்தை மிக விரைவாக அளிப்பதில் வல்லவர் -என்றுமாம் ஸ்ரீ சங்கரர் –

தஷிண -வலது பாகத்தை அலங்கரித்து இருப்பதால் தஷிணா என்று பெயருள்ள ஸ்ரீ லஷ்மியை அடைந்து இருப்பவர் –
மங்களத்தைச் செய்வதில் திறமை உடையவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

———————————————————–

906-அரௌத்ர-
எல்லாவற்றிற்கும் மேலான செல்வம் இருந்தாலும் திவ்ய கல்யாண குணக் குளிர்ச்சியால் குளிர்ந்து இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

எல்லாம் அடைந்து  இருப்பவர் -ஆதலின் ஆசை வெறுப்பு முதலியவை இல்லாதவர் -கொடிய செய்கை காமம் கோபம்  ஆகிய
மூன்று கொடுமைகளும் இல்லாதவர் -ஸ்ரீ சங்கரர் –

கொடியவர் அல்லாதவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

———————————————

907-குண்டலீ-
தம் திருமேனிக்குத் தகுதியான குண்டலம் முதலிய திவ்ய பூஷணங்களை உடையவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

ஆதி சேஷ ரூபி -சூர்யன் போலே பிரகாசிக்கும் குண்டலங்கள் உடையவர் –
சாங்க்யம் யோகம் ஆகிய இரண்டு மகர குண்டலங்களை உடையவர் –  ஸ்ரீ சங்கரர் –

மகர குண்டலம் உடையவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

—————————————-

908-சக்ரீ-
அதே போலே ஸ்ரீ சக்கரத் ஆழ்வான்  முதலிய திவ்ய ஆயுதங்களை உடையவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

உலகைக் காப்பதற்காக மனஸ் தத்வ ரூபமான ஸ்ரீ ஸூதர்சன சக்ரத்தை தரித்து இருப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

ஸ்ரீ சுதர்சனம்  என்னும் சக்கரத்தை உடையவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

——————————————————

909-விக்ரமீ-
தம் பெருமைக்கு உரிய திவ்ய சேஷ்டிதங்களை உடையவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

சிறந்த நடை உள்ளவர் -சிறந்த பராக்கிரமம் உடையவர் -ஸ்ரீ சங்கரர் –

பராக்கிரமம் உடையவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

——————————————–

910-ஊர்ஜித ஸாசன-
பிரமன் இந்திரன் முதலானவர்களாலும் கடக்க முடியாத உறுதியான கட்டளையை உடையவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

வேதம் தர்ம சாஸ்திரம் ஆகியவைகள் ஆகிய உறுதியான கட்டளைகளை உடையவர் -ஸ்ரீ சங்கரர் –

உறுதியான ஆணை உடையவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

————————————————

911-சப்தாதிக –
ஆதி சேஷனுடைய அநேக நாவாலும் வேதங்களின் அநேக கிளைகளாலும் சரஸ்வதியினாலும் சொல்ல முடியாத
மகிமை உடையவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

சப்தத்தினால் சொல்வதற்கு உரிய ஜாதி   முதலியவை இல்லாதபடியால் சப்தத்தைக் கடந்தவர் -ஸ்ரீ சங்கரர் –

சப்தத்தைக் கடந்து இருப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

———————————————————-

912-சப்த  சஹ –
கஜேந்திர மோஷம் -விலங்குகளின் தெளிவற்ற சப்தத்தையும் பெரிய பாரம் போலே பொறுப்பவர் -ஸ்ரீபராசர பட்டர் –

எல்லா வேதங்களாலும் தாத்பர்யமாகச் சொல்லப் படுவதனால் எல்லா சப்தங்களையும் தாங்குபவர் -ஸ்ரீ சங்கரர்-

பிருகு முனி முதலிய பக்தர்களின் மிரட்டல் ஒலி மற்றும் உதைத்தல் முதலியவற்றைப் பொறுப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

————————————————————–

913-சிசிர-
துன்பத்தில் இருப்பவரின் கூக்குரல் கேட்டதும் விரைந்து செல்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

தாப த்ரயங்களால் வருந்துபவர்க்குக் குளிர்ந்த இடமாக இருப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

மிகவும் சுகத்தை அனுபவிப்பவர் விஷயத்தில் மகிழ்பவர் -பக்தர்கள் தம்மிடம் ஓடிவரும்படி இருப்பவர் –
என்ற பாடமானால் -சந்த்ரனிடம் மகிழ்பவர் என்று பொருள் -அசுரர்களை அழிப்பவர் – -ஸ்ரீ சத்ய சந்தர் –

————————————————————-

914-சர்வரீகர –
அப்போது பகைவரைப் பிளக்கும் பஞ்சாயுதங்களையும் கையில் கொள்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

சம்சாரிகளுக்கு இரவாகிய ஆத்ம ஸ்வரூபத்தையும் ஞானிகளுக்கு இரவைப் போலே சம்சாரத்தையும் செய்பவர் -ஸ்ரீ சங்கரர் –

இரவில் சந்த்ரனுக்கு  உள்ளிருப்பவராய்க் கிரணங்களைப் பரப்புபவர் -இரவை உண்டாக்குபவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

—————————————————-

915-அக்ரூர –
யானையைக் காக்கும் பொருட்டு கையில் ஆயுதங்களை எடுத்தும் முதலையையும் கொல்ல மனமில்லாமல்
பொறுத்து இருந்தவர் -ஸ்ரீபராசர பட்டர் –

கோபம் இல்லாதவர்–க்ரௌர்யம்-உள் தாபம்  -மநோ தர்மம் -அவாப்த சமஸ்த காமர் என்பதால்
காமம் கோபம் இல்லாதவர்  ஸ்ரீ சங்கரர் –

குரூரத் தன்மை இல்லாதவர் -அக்ரூரருக்குப் பிரியமானவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

———————————————————-

916-பேசல –
கஜேந்த்ரனைக் காப்பாற்றுவதில் உள்ள வேகத்தினால் கலைந்த ஆடை ஆபரணங்களினால் அழகாகத் தோன்றியவர் -ஸ்ரீபராசர பட்டர் –

செய்கையிலும் மனத்திலும் வாக்கிலும் வடிவத்திலும் அழகாக இருப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

மனத்தைக் கவர்பவர்-ருத்ரனை பக்தனாக ஏற்றுக் காப்பாற்றுபவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

———————————————————–

917-தஷ –
விரைவாக வந்தவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

முழுமை சக்தி விரைவாக செயல்படுதல் ஆகிய மூன்றும் உள்ளவர் -ஸ்ரீ சங்கரர் –

சாமர்த்தியம் உள்ளவர் -விரைவில் சென்று விரோதிகளை அழிப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

—————————————————-

918-தஷிண –
அப்படி வேகமாக வந்தும் ஐயோ உனக்கு தூரத்தில் இருந்தேனே -என்று தேற்றி கஜேந்த்ரனிடம்
அன்பு பாராட்டியவர் -ஸ்ரீ பராசர பட்டர்-

செல்பவர் அல்லது அழிப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

திறமை உள்ளவர் -உதார குணம் உள்ளவர் மூத்தவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

———————————————————–

919-ஷமிணாம்வர-
ஸ்ரீ கஜேந்த்ரனைக் கண்ட பின்பே தம் இருப்புப் பெற்றவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

எல்லாவற்றையும் பொறுக்கும் யோகிகளையும் பூமி முதலியோரையும் காட்டிலும் மிக உயர்ந்தவர் -உலகம் அனைத்தும் தாங்கியும்
பூமியைப் போலே பாரத்தினால் சிரமம் அடையாமல் மிக உயர்ந்தவர் -சக்தி உள்ளவர்கள் அனைவரிலும் சிறந்தவர் -ஸ்ரீ சங்கரர் –

பொறுப்பவர்களில் சிறந்தவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

——————————————-

920-வித்வத்தம –
ஸ்ரீ கஜேந்த்ரனுக்கு சிகித்ஸை அளிக்கத் தெரிந்தவர்-ஸ்ரீ பராசர பட்டர் –

பிறருக்கு இல்லாதன எல்லாவற்றையும் எப்போதும் அறியும் மிக உயர்ந்த ஞானம் உடையவர் -ஸ்ரீ சங்கரர் –

மிக்க ஞானம் உள்ளவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

—————————————————–

921-வீதபய –
தாம் வந்த வேகத்தைக் கண்டதாலேயே ஸ்ரீ கஜேந்த்ரனுக்கு பயத்தை நீக்கியவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

சம்சாரம் ஆகிய பயம் அற்றவர் -ஸ்ரீ சங்கரர் –

அச்சம் அற்றவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

———————————————-

922- புண்ய ஸ்ரவண கீர்த்தன –
ஸ்ரீ கஜேந்திர மோஷத்தைக் கேட்டல் நினைத்தல் உரைத்தளால் எல்லாப் பாவங்களையும் நீக்குபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

தம்மைப் பற்றிக் கேட்பதும் உரைப்பதும் புண்ணியம் தருவதாக இருப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

தம்மைப் பற்றிக் கேட்பதும் பாடுவதும் புண்ணியம் தருவதாக இருப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-

——————————————————

923–உத்தாரண –
யானையையும் முதலையையும் குளத்தில் இருந்து கரையேற்றியவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

உலக வாழ்க்கையாகிய கடலில் இருந்து கரையேற்றுபவர் -ஸ்ரீ சங்கரர் –

மேம்படுத்துபவர் -துறவிகளுக்குச் சுகம் தருபவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

—————————————————————

924-துஷ்க்ருதிஹா –
துஷ்டமான முதலையைக் கொன்றவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

பாவங்களைப் போக்குபவர் -ஸ்ரீ சங்கரர் –

பாபிகளை அழிப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

——————————————————————-

925-புண்ய –
இப்புண்ணிய சரிதிரத்தினால் நம்மைப் போன்றவர்களின் பாவங்களைப் போக்குபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

தம்மை நினைப்பது முதலியன செய்பவர்களுக்குப் புண்ணியத்தைத் தருபவர்–
ஸ்ருதி ஸ்ம்ருதி களால் எல்லோருக்கும் புண்யத்தையே கூறுபவர் – ஸ்ரீ சங்கரர் –

புண்ணியத்தைத் தருபவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

—————————————–

926-துஸ் ஸ்வப்ன நாசன –
என்னையும் உன்னையும் இத் தடாகத்தையும் நினைப்பவர்க்குக் கெட்ட கனவு நீங்கும் -என்று கூறி உள்ளதால்
கெட்ட கனவை நீக்குபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

தம் தியாகம் துதி பேர் சொல்லுதல் பூஜித்தல் ஆகிய வற்றால் கெடுதலுக்கு அறிகுறியான கெட்ட கனவுகளைப்
பயன் அற்றதாக்குபவர் -ஸ்ரீ சங்கரர் –

கெட்ட கனவுகளை அழிப்பவர் –கெட்ட கனவுகளின் தீய பலன்கள் நிகழாமல் தடுப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

—————————————————

927-வீரஹா –
யானைக்கு விரோதியைப் போக்கியவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

பலவிதமான சம்சார கதிகளைக் கெடுத்து முக்தி அழிப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

லிக மது அருந்துபவரை அழிப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

——————————————————–

928-ரஷண-
தொட்டும் தழுவியும்  தேற்றியும் கஜேந்த்ரனைக் காத்தவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

சத்வ குணத்தை மேற்கொண்டு மூவுலகங்களைக் காப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

காப்பவர் –அரஷண-அதிகமான உத்சவங்களை உடையவர் -ஸ்ரீ சத்ய சந்தர் —

——————————————————–

929-சந்த-
இப்படி அடியவர்களை வளர்ப்பவர் -அவர்களிடம் இருப்பவர் -அவர்களுக்கு வேண்டியதைக் கொடுப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

நல் ஒழுக்கம் உடைய சாதுக்களின் உருவமாக கல்வியையும் பணிவையும் வளர்ப்பவர் -ஸ்ரீ சங்கரர்-

நல்லவர் -எங்கும் உள்ளவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

————————————————

930-ஜீவன –
தம் திருக் கையால் கொள்ளப் பட்டதால் முதலையையும் கந்தர்வனாக்கி ஜீவிக்கச் செய்தவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

பிராண வாயு வடிவில் அனைவரையும் வாழச் செய்பவர் -ஸ்ரீ சங்கரர் –

வாழ்விப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

———————————————-

931-பர்யவச்தித-
அன்பின் காரணமாக கஜேந்த்ரனைச் சுற்றிச் சுற்றி வந்தவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

உலகம் முதுவதும் வியாபித்து இருப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

காப்பதற்காக எல்லாப் பக்கமும் இருப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

———————————————–

932-அநந்த ரூப-
இப்படி பக்தர்களைக் காக்க அப்போதைக்கு அப்போது எண்ணிறந்த உருவங்களைக் கொள்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

உலகம் முதலிய எண்ணற்ற உருவங்களாக இருப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

அளவற்ற அழிவற்ற உருவங்களை உடையவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

——————————————————

933-அநந்த ஸ்ரீ –
பக்தர்களுக்குக் கொடுப்பதற்காக தம்மை அடைவது வரை எண்ணற்ற செல்வங்களை உடையவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

அளவற்ற சக்திகளை உடையவர் -ஸ்ரீ சங்கரர் –

அழிவில்லாத தன்மை கொண்ட லஷ்மியாகிய ஸ்ரீ யை உடையவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

————————————————————

934-ஜிதமன்யு –
சரணா கதனான ஸ்ரீ கஜேந்த்ரனுக்கு விரோதியான முதலைக்கும் நற்கதி அளித்து கோபத்தை வென்றவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

கோபத்தை வென்றவர் -ஸ்ரீ சங்கரர் –

அசுரர்கள் விஷயத்தில் கோபம் அடைபவர் -யஜ்ஞங்களை உண்டாக்குபவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

————————————————————-

935-பயாபஹ-
தம் வாத்சல்யத்தினால் நம் போன்றவர்க்கும் நாதன் இல்லை என்ற பயத்தைப் போக்குபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

பக்தர்களுக்கு சம்சார பயத்தை போக்குபவர் -ஸ்ரீ சங்கரர் –

பயங்களைப் போக்குபவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

—————————————————————–

936-சதுரச்ர-
தம் பெருமைக்குத் தக்க கூக்குரல் இட்ட யானைக்காக ஆடை ஆபரணங்களும் பூ மாலைகளும் கலையும்படி சென்றும் –
முதலையின் மேல் கோபம் கொண்டு இருந்தும் அந்தப் பரபரப்பிலும் செய்ய வேண்டிய செயல்களைப்
பழுது இல்லாமல் செய்தவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

அவரவர் வினைகளுக்கு ஏற்ப -தர்ம அர்த்த காம மோஷங்கள் ஆகிய நான்கு வித பலன்களைக்
கொடுக்கின்ற படியால் நியாயத்தோடு   கூடியவர் -ஸ்ரீ சங்கரர் –

திறமையுடன் செல்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

—————————————————————-

937-கபீராத்மா –
பிரமன் முதலியோர்க்கும் ஆழம் காண முடியாத ஸ்வரூபம் உள்ளவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

அளவிட முடியாத ஆழமான ஸ்வரூபம் உள்ளவர் -ஸ்ரீ சங்கரர் –

ஆழம் காண முடியாத மனம் உள்ளவர் –அகபீராத்மா -மழையினால் ஏற்பட்ட பயத்தை கோவர்த்தன மலையை எடுத்துப் போக்கியவர் –
யமளார்ஜூன மரங்களுக்கு பயத்தை உண்டாக்கியவர் -ஆத்மா வாக இருப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

———————————————

938-விதிச –
அவர்கள் வணங்கித் தழு தழுத்து மெய்ம்மறந்து   செய்யும் துதிகளுக்கும் எட்டாத மகிமை உடையவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

அந்தந்த அதிகாரிகளுக்குத் தகுந்த விதவிதமான பலன்களைக் கொடுப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

ஞானிகளுக்கு ஸூகத்தைத் தருபவர் -ஆச்சர்யப் பட வைப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

—————————————————

939-வ்யாதிச –
அவர்கள் விரும்பும் பலன்களை உண்டாக்கித் தருபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

இந்திரன் முதலியவர்களையும் பலவித அதிகாரங்களில் நியமிப்பவர் -ஸ்ரீ சங்கரர்-

கருடன் முதலியவர்களுக்கு ஸூ கத்தை தருபவர் -விசேஷமாகக் கட்டளை இடுபவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

————————————————

940-திஸ –
ஸ்ரீ கஜேந்த்ரனைப் போல் அவர்களை அந்தரங்கனாகக் கொள்ளாமல் அவரவர் செயல்களில் ஆணையிடுபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

வேதங்களில் கூறப்பட்டபடி அனைவர்க்கும் பலன்களைத் தருபவர் -ஸ்ரீ சங்கரர் –

தர்மம் முதலியவற்றில் கொடுப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

————————————————

941-அநாதி –
இப்படி விலங்கான கஜேந்த்ரனுக்கும் வசப்பட்டு பிரம்மாதிகளுக்கும் அற்ப பலன்களையே கொடுப்பவர்
-வேறு பலன்களை விரும்பும் அவர்களால் ஸ்வாமியாக அறியப் படாதவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

எல்லாவற்றிற்கும் தாம் காரணமாக இருப்பதால் தமக்கொரு காரணம் இல்லாதவர் -ஸ்ரீ சங்கரர் –

முக்ய பிராணனை உயர்ந்த பக்தனாகக் கொண்டவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

—————————————————

942-பூர்ப்பூவ –
பகவானுக்கு அடிமைப் பட்டவன் என்ற ஞானம் உடைய பக்தனுக்குத் தாமே இருப்பிடமாக இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

எல்லாவற்றிற்கும் ஆதாரமான  பூமிக்கும் ஆதாரமானவர் -ஸ்ரீ சங்கரர் –

பூ -நிறைவானவர் -புவ -உலகத்திற்குக் காரணம் ஆனவர் -இரண்டு திரு நாமங்கள் –

———————————–

943-லஷ்மீ-
தம்மைச்  சேர்ந்தவர்களுக்கு எல்லாச் செல்வங்களும் தாமேயாக இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

உலகத்திற்கு ஆதாரமாக மட்டும் அல்லாமல் சோபையாகவும் இருப்பவர் -அல்லது -பூ புவ லஷ்மீ -என்று
பூ லோகம் புவர் லோகம் ஆத்மவித்யை யாகவும் இருப்பவர் –
அல்லது பூர் புவோ லஷ்மீ -என்று பூமிக்கும் ஆகாயத்திற்கும் சோபையாக இருப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

புண்யம் செய்தவர்களைப் பார்ப்பவர் -புண்யம் செய்தவர்களால் பார்க்கப் படுபவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

—————————————————

944-ஸூ வீர –
அந்த பக்தர்களுக்கு அபாயத்தை போக்குபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

பலவகை நல்ல கதிகளைக் கொடுப்பவர் –பலவகையாக செயல் படுபவர் -ஸ்ரீ சங்கரர் –

முக்ய பிராணனைச் சிறந்ததாக ஆக்குபவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

——————————————-

945-ருசிராங்கத –
அவர்கள் தமது திவ்ய மங்களத்  திரு மேனியைக் கண்டு களித்து அனுபவிக்கும் படி செய்பவர் -ஸ்ரீ பராசர பட்டர்-

அழகிய தோள் வளைகள் உடையவர் -ஸ்ரீ சங்கரர் –

அழகான தன்மை கொண்ட உடலை அளிப்பவர்-அழகிய  தோள்வளைகளை உடையவர் –
அருசிராங்கத-அழகற்ற மனத்தைக் கவராத லிங்க தேகத்தை அழிப்பவர்-ஸ்ரீ சத்ய சந்தர் –

—————————————————-

946-ஜனன –
பக்தர் அல்லாதவர்களும் தம்மை அனுபவிப்பதற்கு உரிய உடல் இந்திரியங்கள் முதலியவற்றோடு பிறக்கும் படி செய்பவர் —
பிறகு அவனுடைய எல்லா செயல்களுக்கும் பலன் கூறப்படுகிறது ஸ்ரீ பராசர பட்டர் –

பிராணிகளைப் படைப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

ஜனங்களைப் பிறக்கச் செய்பவர் -நடத்துபவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

——————————————————–

947-ஜன ஜந்மாதி-
அப்படிப்பட்ட ஜனங்களின் பிறப்பிற்குத் தாமே பயனாக இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர்-

ஜனங்களின் உற்பத்திக்குக் காரணமானவர் -ஸ்ரீ சங்கரர் –

ஜீவர்களின் பிறப்புகளை உண்டாக்குபவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

————————————————————-

948-பீம-
தம்முடைய இந்த அனுக்ரஹத்தை விரும்பாதவர்களுக்கு கர்ப்ப வாஸம் நரகம் முதலிய துன்பங்களைக் கொடுத்து பயமுறுத்துபவர்
தமக்கு அடிமையாகி உய்யாதவர்களை ஹித புத்தியின் காரணமாக விரோதிகளாக நினைக்கின்றவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

பயத்திற்குக் காரணமானவர் -ஸ்ரீ சங்கரர் –

பயங்கரமானவர் -பிராணனுக்கு ஆதாரமானவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

————————————————————-

949-பீம பராக்ரம-
உலகிற்குத் தீங்கு விளைக்கும் இரணியன் முதலியவர்களுக்கு அச்சத்தைத் தருபவர் -பயப்படுத்துவதும் அனுக்ரஹமே யாகும் –
பித்துப் பிடித்தவனை விலங்கிட்டு வைப்பது அவனுக்கும் அவனால் பாதிக்கப்படும் மற்றவர்களுக்கும்
நன்மையைச் செய்வது அன்றோ -ஸ்ரீ பராசர பட்டர் –

அசுரர்களை அச்சமுறுத்தும் பராக்ரமத்தை அவதாரங்களில் கொண்டவர் -ஸ்ரீ சங்கரர் –

த்ரௌபதியின் கணவனான பீமன் அல்லது ருத்ரனுடைய பராக்ரமத்திற்குக் காரணம் ஆனவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-

————————————————————-

950-ஆதார நிலய-
தர்மிஷ்டர்கள் ஆதலால் உலகைத் தாங்குகின்ற ப்ரஹ்லாதன் விபீஷணன் பாண்டவர்கள் முதலியோர்க்கு
ஆதாரமாக இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

எல்லாவற்றையும் தாங்கும் பஞ்ச பூதங்களுக்கும் ஆதாரமாக இருப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

அசுரர்களின் கூட்டங்களுக்கு நரகம் போல் உள்ளவர்  -இந்த்ரன் பொழிந்த மழையால் வருந்திய கோபாலர்களுக்கு
கோவர்த்தன மலையைக் குடையாகப் பிடித்து அடைக்கலம் அளித்தவர் – -ஸ்ரீ சத்ய சந்தர் –

—————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பராசர பட்டர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாம ஸ்தோத்ரம் -851-900–மும்மத விளக்கம் —

April 25, 2015

பாரப்ருத் கதிதோ யோகீ யோகீசஸ் சர்வ காமத
ஆஸ்ரமஸ் ஸ்ரமண ஷாமஸ் ஸூபர்ணோ வாயு வாகன –91-
தநுர்த்தரோ தநுர்வேதோ தண்டோ தமயிதா தம
அபராஜிதஸ் சர்வ சஹோ நியந்தா நியமோ யம –92
சத்வவான் சாத்விகஸ் சத்யஸ் சத்ய தர்ம பராயண
அபிப்ராய ப்ரியார்ஹோ அர்ஹ ப்ரியக்ருத் ப்ரீதிவர்த்தன –93
விஹாயசகதிர் ஜ்யோதிஸ் ஸூ ருசிர் ஹூ தபுக்விபு
ரவிர் விரோச  ஸூர்யஸ் சவிதா ரவிலோசன –94
அநந்த ஹூத புக்போக்தா ஸூ கதோ நைகதோ அக்ரஜ
அநிர்விண்ணஸ் சதா மர்ஷீ லோகாதிஷ்டான மத்புத –95
சநாத் சநாத நதம கபில கபிரவ்யய
ஸ்வஸ்தி தஸ் ஸ்வ ஸ்திக்ருத் ஸ்வஸ்தி ஸ்வஸ்தி புக் ஸ்வஸ்தி தஷிண –96-

—————————————————–

அஷ்ட சித்திகள் -838-870—33 திரு நாமங்கள்
மோஷ ப்ரதத்வம்-871-911—41 திரு நாமங்கள்

—————————————————–

851-பாரப்ருத் –
ஆத்மாக்களுக்கு சம்சார விலங்கை அறுத்து அவர்கள் அவர்கள் தம் ஸ்வரூபம் விளங்கித்
தம்மைச் சேரும் பொறுப்பைத் தாங்குபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

ஆதி சேஷன் முதலிய உருவங்களினால் உலக பாரத்தைத் தாங்குபவர் -ஸ்ரீ சங்கரர் –

பாரமானதான பிரம்மாண்டத்தை ஸ்ரீ கூர்ம ரூபியாகத் தாங்குபவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

————————————————————-

852-கதித-
சொல்லப்பட்ட சொல்லப் படுகின்ற குணங்கள் நிரம்பியவராக எல்லாச் சாஸ்திரங்களிலும் கூறப்பட்ட்டவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

வேதம் முதலியவற்றில் தாம் ஒருவரே பரம் பொருளாகக் கூறப் பெற்றவர் —
வேதங்கள் அனைத்தாலும் கூறப் படுபவர்-ஸ்ரீ சங்கரர் –

நல்ல ஆகமங்களால் -வேதங்களால் -நிலை நாட்டப் பெறுபவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

—————————————————————-

853-யோகீ –
கூடாதவற்றையும் கூட்டுவதாகிய சிறந்த பெருமை எப்போதும் உள்ளவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

யோகம் எனப்படும் தத்வ ஜ்ஞானத்தினாலேயே அடையப் பெறுபவர் –
தம் ஆத்ம ஸ்வரூபத்தை எப்போதும் பார்த்துக் கொண்டு இருப்பவர் -ஸ்ரீ சங்கரர்-

உபாயம் உள்ளவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

———————————————————————

854-யோகீச –
சம்சாரிகளுள் யோகிகளுக்கும் சனகர் முதலிய யோகிகளுக்கும் யோகத்தை நிறைவேற்றுபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

மற்ற யோகிகளைப் போல் இடையூறுகளால் தடைப் படாமையால் யோகிகளுக்குத் தலைவர் -ஸ்ரீ சங்கரர்-

யோகிகளுக்கும் ஸ்ரீ லஷ்மி தேவிக்கும் சுகத்தை அளிப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

——————————————————————-

855-சர்வகாமத –
யோகத்தில் தவறியவர்களுக்கும் அணிமா முதலிய பலன்களை மேன்மேல் யோகத்திற்கு இடையூறான
பலன்களாகக் கொடுப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

எல்லாப் பலன்களையும் கொடுப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

பக்தர்களின் எல்லா விருப்பங்களையும் நிறைவேற்றுபவர் -மன்மதனை அழிக்க சிவனுக்கு அருள் புரிந்தவர் -ஸ்ரீ சத்ய சந்தர்

———————————————————————

856-ஆஸ்ரம –
அப்படி திரும்பி வந்தவர்களை ஸ்ரீ வைஷ்ணவ குலத்தில் பிறப்பித்து அவர்கள் சிரமத்தை ஆற்றுபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

சம்சாரம் என்னும் காட்டில் திரிபவர்களுக்கு ஆஸ்ரமம் போலே இளைப்பாறும் இடமாக இருப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

துன்பம் அற்றவர்களான முக்தர்களுக்குத் தலைவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

————————————————————————

857-ஸ்ரமண –
முற் பிறவியில் தொட்ட யோகத்தை மறு பிறவியில் எளிதாக அப்யசிக்கும்படி செய்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

விவேகம் இல்லாதவர்களை வருத்துபவர் -ஸ்ரீ சங்கரர் –

சன்யாசிகளை தமக்கு தாசர்களாக உடையவர் -விரதங்களால் சுகம் கிட்டும்படி செய்பவர் —
விரோதிகளுக்கு சிரமத்தை உண்டாக்கி அடியவர்களுக்கு சிரமத்தைப் போக்குபவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

——————————————————————————-

858-ஷாம –
யோகத்தில் தவறியவர்களும் தம்மை தியானம் செய்யத் தொடங்கியவுடன் அவர்கள் முக்தராகும்படி செய்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

எல்லா பிரஜைகளையும் சம்ஹார காலத்தில் அழிப்பவர்-ஸ்ரீ சங்கரர் –

எதையும் தாங்கும் சக்திக்கு ஆதாரமாக இருப்பவர் -பிரளய காலத்தில் எல்லாவற்றையும் அழிப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

——————————————————-

859-ஸூ பர்ண-
சமாதியை அனுஷ்டிப்பவர்களை சம்சாரக் கடலின் கரை சேர்ப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

சம்சார -மாற ரூபமான தாம் வேதங்களாகிய அழகிய இலைகளை உடையவர் -ஸ்ரீ சங்கரர் –

அழகிய ஆலிலையைப் படுக்கையாக உடையவர் -பறவை உருவத்தில் இருப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

——————————————————–

860-வாயு வாஹன-
அவர்கள் கீழே விழுந்தாலும் வாயு வேகம் உள்ள கருடனைக் கொண்டு அவர்களைத் தூக்கி விடுபவர் –
பரம பாகவதரான வஸூ என்பவர் -பரம ரிஷி சாபத்தால் தாழ்ந்து போக நேரிட கருடனைக் கொண்டு மீண்டும்
அவர் உயர்ந்த நிலையை அடையும்படி செய்தார் -ஸ்ரீ பராசர பட்டர் –

காற்றும் தம்மிடம் அச்சத்தினால் அனைத்து உயிர்களையும் தாங்கும்படி இருப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

வாயுவைத் தூண்டுபவர் -மேலானவர் -ஜீவனின் உடலை விட்டுப் போகும் போது வாயுவை வாகனமாக உடையவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

————————————————————-

861-தநுர்த்தர-
தம்மை உபாசிப்பவர்களுக்கு இடையூறுகளை ஒழிப்பதற்காக எப்போதும் வில்லைத் தாமே உடையவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

ஸ்ரீ ராமாவதாரத்தில் வில்லை தரித்து இருப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

வில்லைத் தாங்குபவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

—————————————————————-

862-தநுர் வேத-
இந்திரன் அரசர் முதலியவர்களும் வில்வித்தை முதலியவற்றைத் தம்மிடம் உபதேசம் பெறும்படி
எல்லாச் சாஸ்திரங்களையும் வெளிப்படுத்தியவர் -ஸ்ரீ பராசர பட்டர்-

அந்த ஸ்ரீ ராமபிரானாகவே தனுர் வேதத்தை அறிந்து இருப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

அகஸ்த்யர் முனிவர் மூலம் இந்திரனுடைய வில்லை ஸ்ரீ ராமாவதாரத்தில் பெற்றவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-

——————————————————————–

863-தண்ட –
அரசர்களைக் கொண்டு தண்டனையைச் செய்து துஷ்டர்களை அடக்குபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

துஷ்டர்களை அடக்கும் தண்டமாக இருப்பவர் -ஸ்ரீ சங்கரர்-

தண்ட -அசுரர்களை தண்டிப்பவர் -அதண்ட -பிறரால் சிஷிக்கப் பெறாதவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

——————————————————————–

864-தமயிதா –
தாமே நேராகவும் ராவணன் போன்றவர்களை அடக்குபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

வைவஸ்வத மனு முதலிய அரசர்களாக இருந்து பிரஜைகளை அடக்குபவர் -ஸ்ரீ சங்கரர் –

அசுரர்களை அடக்குபவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

————————————————————–

865-அதம –
தாம் யாராலும் அடக்கப் படாதவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

தண்டத்தினால் உண்டாகும் அடக்கமாகவும் இருப்பவர் -தம என்ற பாடம் -ஸ்ரீ சங்கரர் –

தானம் செய்பவருக்கு செல்வத்தை அளிப்பவர் -ஆத்ம -என்ற பாடம் —
அதம என்ற பாடத்தில் ஸ்ரீ கிருஷ்ணாவதாரத்தில் புலன் அடக்காதவர் போலே தோற்றம் அளித்தவர் என்றுமாம் -ஸ்ரீ சத்ய சந்தர் –

————————————————————–

866-அபராஜித –
எங்கும் உள்ள எல்லாவற்றையும் நடத்தும் தம் கட்டளை எக்காலத்திலும் எங்கும் எதனாலும் தடை படாதவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

பகைவர்களால் வெள்ளப் படாதவர் -ஸ்ரீ சங்கரர் –

தம்மைக் காட்டிலும் மேம்பட்டவர் இல்லாதவர் -எவராலும் தோற்கடிக்கப் படாதவர் –
மற்றவர்களால் காக்கப் படாதவர் -ஒளியுடன் திகழ்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

———————————————————–

867-சர்வ சஹ –
குறைந்த அறிவு உள்ளவர்கள் ஆராதிக்கும் மற்ற தேவதைகளையும் தாமே தாங்குபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

எல்லாக் காரியங்களிலும் சமர்த்தர் -எல்லாப் பகைவர்களையும் தாங்கும் திறமை உள்ளவர் –
பூமி முதலிய உருவங்களினால் எல்லாவற்றையும் தாங்குபவர் -ஸ்ரீ சங்கரர் –

எல்லாவற்றையும் பொறுப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

——————————————————————

868-நியந்தா –
பல தேவதைகளுடம் பக்தி வைத்து இருக்கும் பலரை அவரவர் விருப்பப்படி தாமே நடத்துபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

எல்லோரையும் தத்தம் கார்யங்களில் நிலை நிறுத்துபவர் -ஸ்ரீ சங்கரர் –

கட்டளையிடுபவர் -ஸ்ரீ சத்ய சந்தரர் —

—————————————————————

869-நியம –
அவர்களுக்குப் பலனாக உயர்குலம் ஆயுள் போகம் முதலியவற்றை அத்தேவதைகள் மூலமாகவே வழங்குபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

அநியம-என்ற பாடம் -தம்மை அடக்குபவர் -யாரும் இல்லாதவர் –
யம நியம -என்று கொண்டு யோகத்திற்கு அங்கங்களான யம நியமங்களால் அடையபடுபவர் -ஸ்ரீ சங்கரர் –

நன்றாகக் கட்டளை இடுபவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

————————————————————–

870-யம –
விரும்பிய வரங்களைக் கொடுக்கும் தேவதைகளையும் நடத்துபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

மரணம் இல்லாதவர் -அயம-என்ற பாடம் -ஸ்ரீ சங்கரர் –

பிரளய காலத்தில் எல்லாவற்றையும் அழிப்பவர்-ஸ்ரீ சத்ய சந்தர் –

——————————————————————-

871-சத்வ வான் –
மோஷத்திற்கு காரணமான சுத்த சத்வத்தை அடைந்து இருப்பவர் -இவ்வாறு ரஜஸ் தமஸ் ஸூக்கள்
அடைக்கியதை  கூறப் பட்டது -இனி சத்வத்தை வளர்க்கும் அடி கூறுகிறது – -ஸ்ரீ பராசர பட்டர் –

சௌர்யம் வீர்யம் முதலிய பராக்கிரமம் உள்ளவர்-ஸ்ரீ சங்கரர் –

ஜீவன் பலம் நல்ல தன்மை இவற்றை உடையவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

—————————————————-

872-சாத்விக –
தர்ம ஞான வைராக்யத்தாலும் ஐஸ்வர்யம் ஆகிய பல நியமனத்தாலும் சத்வ குணமே குடி கொண்டு இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

சத்வ குணத்தை பிரதானமாக உடையவர் -ஸ்ரீ சங்கரர் –

தூய நற் குணத்தை உடைய நான்முகனை அடியவனாக உடையவர் -ஸ்ரீ சத்ய சந்தர் —

—————————————————————-

873-சத்ய –
சாத்விக சாஸ்த்ரங்களில் சொல்லப்படுவதால் உண்மையான பெருமை உடையவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

சாதுக்களுக்கு உபகாரம் செய்பவர் -ஸ்ரீ சங்கரர் –

சுதந்திரமானவர் -அழியாத நற்குணங்களால் பரவியிருப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

———————————————————

874-சத்ய தர்ம பராயண –
வேறு காரணம் இல்லாமல் சாஸ்திர விதி ஒன்றாலேயே சாத்விகர்கள் செய்யும் உத்தமமான நிவ்ருத்தி தர்மத்தை
மிகப் பிரியமாக அங்கீ கரிப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

சத்ய வாக்யத்தையும் சாஸ்த்ரன்களால் விதிக்கப் பட்ட தர்மத்தையும் முக்கியமாக உடையவர் -ஸ்ரீ சங்கரர் –

சத்யமாகிய தர்மத்தில் நிலையாக உள்ளவர்களுக்கு புகலிடமாக இருப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர் —

——————————————————————–

875-அபிப்ராய –
சாத்விக தர்மத்தை அனுஷ்டிக்கும் அடியார்களால் வேறு பலன்களை விரும்பாமல்
தாமே பலனாக விரும்பப் படுபவர் -ஸ்ரீ பராசர பட்டர்-

புருஷங்களை விரும்புபவர்களால் பிரார்த்திக்கப் படுபவர் –
சம்ஹார காலத்தில் உலகம் அனைத்தும் தம்மிடம் வந்தடையும் படி இருப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

விருப்பங்களை நிறைவேற்றும் திருமகளை மகிழ்விப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

———————————————————-

876-ப்ரியார்ஹ-
இப்படி அநந்ய பக்தியுடன்  வந்தடையும் ஞானியை அனுக்ரஹிப்பதற்கு உரியவர் —
அநந்ய பக்தர்கள் இடம் ஸ்வாபாவிக பிரியம் கொள்கிறான்
ஐஸ்வர் யார்த்தி  கைவல்யார்த்தி போன்றார்களுக்கும் அவற்றைத் தந்து வலிந்து அன்பைக் கொள்கிறான் – ஸ்ரீ பராசர பட்டர் –

மனிதர்கள் தமக்கு விருப்பமான பொருள்களை சமர்ப்பிபதற்கு உரியவர் -ஸ்ரீ சங்கரர் –

விசேஷமான சுகத்திற்கு உரியவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

——————————————————————————

877-அர்ஹ-
வேறு ஒன்றிலும் விருப்பம் இல்லாத பக்தர்களுக்குத் தாமே விரும்பத் தகுதி உள்ளவராக இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

நல் வரவு ஆசனம் புகழ்தல் அர்க்யம் பாத்யம் துதி நமஸ்காரம் முதலியவற்றால் பூஜிக்கத் தக்கவர் -ஸ்ரீ சங்கரர் –

பூஜைக்கு உரியவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

——————————————————–

878-ப்ரியக்ருத் –
வேறு பயன்களைக் கருதும் அன்பர்களுக்கும் அவரவர் விருப்பங்களை நிறைவேற்றித்
தம்மையே விரும்பும்படி செய்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

பூஜிப்பதற்கு உரியவராக இருப்பது மட்டும் அல்லாமல் தம்மை பஜிப்பவர்களுக்கு விருப்பத்தைச் செய்பவர் -ஸ்ரீ சங்கரர் –

விசேஷமான சுகத்தை தருபவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

——————————————————————————–

879-ப்ரீதிவர்த்தன –
பக்தர்களுக்குத் தம் குணங்களை மேன்மேலும் வெளியிடுவதால் அவர்களுடைய பக்தியை
மேலும் மேலும் அதிகப் படுத்துபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

பக்தர்களுக்குத் தம்மிடத்தில் அன்பை வளரச் செய்பவர் -ஸ்ரீ சங்கரர் –

பக்தர்கள் இடத்தில் அன்பை வளர்ப்பவர் -பக்தர்களை அன்புடன் வளர்ப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

—————————————————————

880-விஹாயச கதி –
இப்படி பகதியினுடைய முடிவான நிலையில் ஏறப் பெற்றவர்கள் பரமபதம் செல்வதற்கும் தாமே உபாயமாக இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

ஆகாயத்தில் அதாவது ஸ்ரீ விஷ்ணு பதத்தில் இருப்பவர் -அல்லத்து ஆகாயத்தில் இருக்கும் சூரியனாக இருப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

கருடன் மீது அமர்ந்து செல்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

———————————————————————————-

881-ஜ்யோதி –
பக்தர்கள் பரமபதத்தில் ஏறுவதற்கு அர்ச்சிராதி மார்க்கத்தில் முதற்படியான ஒளியாக இருப்பவர் -உபாசகனை
ஆதி வாஹிகர்களை நியமித்து அர்ச்சிராதி மார்க்கத்தில் அழைத்துக் கொண்டு செல்ல நியமிக்கிறான்-ஸ்ரீ பராசர பட்டர் –

ஸ்வயமாகவே பிரகாசிப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

ஒளியுள்ளவர்-ஸ்ரீ சத்ய சந்தர் –

————————————————————————–

882-ஸூ ருசி –
ஸூர்யோதத்தினால் பிரகாசிப்பதாகிய இரண்டாம் படியான சிறந்த பகலை நடத்துபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

சிறந்த ஒளி உள்ளவர் -சிறந்த சங்கல்பம் உள்ளவர் -ஸ்ரீ சங்கரர் –

மங்களகரமான விருப்பம் உள்ளவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

——————————————————–

883-ஹூதபுக்விபு –
அமுதமாகப் பரிணமிக்கும் சந்தரன் வளர்வதான வளர் பிறையாக -மூன்றாம் படியாக இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

ஹூத புக் -எல்லாத் தேவதைகளைக் குறித்தும் செய்யப்படும் ஹோமங்களைப் புசிப்பவர்  –
விபு -எங்கும் நிரம்பி இருப்பவர் -இரண்டு திரு நாமங்கள் -ஸ்ரீ சங்கரர் –

ஹோமம் செய்பவைகளை உண்பவர் -பக்தர்களை மேன்மை கொண்டவர்களாக ஆக்குபவர் -இரண்டு திரு நாமங்கள் -ஸ்ரீ சத்ய சந்தர் –

———————————————————-

884-ரவி –
மேல் ஏறிப் பிரகாசிப்பதனால் உயர்ந்த உத்தராயணமாக நான்காம் படியாக இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

சூர்யனாக இருப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

தன்னைத் தானே அறிந்து கொள்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

—————————————————-

885-விரோசன –
இரண்டு அயனங்களில் ரதம் செல்லும் சம்வத்சரமாக ஐந்தாம் படியாக இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

பல விதமாகப் பிரகாசிப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

விலோசன -அர்ஜூனனுக்கு திவ்ய சஷூஸ் ஸைத் தந்தவர் -விரோசன -சூரியனுக்கு ஒளியைத் தருபவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

————————————————-

886-ஸூர்ய-
எப்போதும் சஞ்சரிக்கும் வாயுவாக ஆராம்படியாக இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

எல்லாவற்றையும் உண்டாக்குபவர் -செல்வத்தைக் கொடுப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

அசைபவர் -உலகங்களைச் செயல்களில் தூண்டுபவர் -ஸூ ரிகளால் அடையப் பெறுபவர் -ஸ்ரீ சத்ய  சந்தர் –

——————————————————-

887-சவிதா –
ஏழாம் படியான சூரியனால் மழை பயிர் முதலியவற்றை உண்டாக்குபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
உலகங்கள் அனைத்தையும் உண்டாக்குபவர் -ஸ்ரீ சங்கரர் –
படைப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

————————————————

888-ரவி லோசன –
சூர்ய கிரணங்களால் -எட்டு ஒன்பது பத்தாம் படிகளான சந்திரன் மின்னல் வருணன் ஆகியோரைப்
பிரகாசிக்கச் செய்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

சூரியனைக் கண்ணாக உடையவர் -ஸ்ரீ சங்கரர் –

சூரியனைக் கண்ணாக உடையவர் -அரவிந்த லோசன என்று கொண்டு நரசிம்ஹ அவதாரத்தில்
குகையுடன் சம்பந்தம் உள்ளவர் -என்றுமாம் -ஸ்ரீ சத்ய சந்தர் –

———————————————————————

889-அனந்த ஹூத புக் போக்தா –
யாகங்களில் ஹோமம்  செய்வதை உண்பவனான -பதினோராம்படி -இந்த்ரனையும் பிரஜைகளைக்
காப்பவனான -பன்னிரண்டாம் படி -பிரமனையும் உடையவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

அனந்த -தேச கால வஸ்து பேதங்களால் அளவுபடாதவர் –
ஹூதபுக் -ஹோமம் செய்வதை உண்பவர் –
போக்தா -பிரகிருதியை அனுபவிப்பவர் -உலகைக் காப்பவர் -மூன்று திரு நாமங்கள் -ஸ்ரீ சங்கரர் –

அனந்த -பந்தம் இல்லாதவர் -முடிவில்லாதவர் –
ஹூதபுக் -ஆஹூதியை நன்கு உண்பவர் –
போக்தா-உண்பவர்-மூன்று திரு நாமங்கள் -ஸ்ரீ சத்ய சந்தர் –

————————————————————–

890-ஸூ கத –
பதிமூன்றாம் படியான அமானவ திவ்ய புருஷனாக ஸ்பர்சித்து சம்சார வாசனைகளை ஒழித்துத் தம்மை
அடைவதாகிய சுகத்தைத் தருபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

ஸூ கத -பக்தர்களுக்கு மோஷ ஸூ கத்தைக் கொடுப்பவர் -அல்லது -அஸூ கத -துக்கங்களைப் போக்குபவர் -ஸ்ரீ சங்கரர் –

சுகத்தைத் தருபவர் -மங்களகரமான இந்த்ரியங்களைத் தருபவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

—————————————————

891-நைகத-
எண்ணற்ற பூ மாலை மை ஆடை முதலிய பிரஹ்ம அலங்காரங்களைக் கொடுத்து இந்த முக்தனை தம்மிடம்
சேர்ப்பிக்கும் அப்சரஸ் ஸூ க்களை உடையவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

தர்மத்தைக் காப்பதற்காகப் பல அவதாரங்களை எடுப்பவர் -நை கஜ -எனபது பாடம் -ஸ்ரீ சங்கரர் –

தாமரையில் உதித்த ஸ்ரீ லஷ்மிக்கு மணவாளர் -தாமரை அடர்ந்து இருக்கும் வனத்தில் தோன்றியவர் –
எவரிடமிருந்தும் பிறவாதவர் -நைகஜ எனபது பாடம் -ஸ்ரீ சத்ய சந்தர்-

———————————————-

892-அக்ரஜ-
இப்படி அந்தடைந்த முக்தர்கள் அனுபவித்து மகிழும்படி பர்யங்க வித்தையில் கூறியது போல் எல்லாச் செல்வங்களும் நிரம்பி
மிக ஸூக கரமாகப் பிரகாசிப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர்-

எல்லாவற்றிற்கும் முன்னே இருப்பவர் -ஸ்ரீ சங்கரர்-

படிப்பதற்கு முன்னர் தோன்றுபவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

——————————————

893-அநிர் விண்ண-
இப்படித் தம்மை அடைந்தவனை சம்சாரம் என்னும் படு குழியில் இருந்து கரையேற்றிய பிறகு
அவனைப் பற்றிய கவலை யற்று இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

விரும்பியவை எல்லாம் நிரம்பி இருப்பதாலும் ஒன்றும் கிடைக்காமல் இருக்கக் காரணம் இல்லாமையாலும்
வருத்தம் அற்று இருப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

துன்பம் அடையாதவர் -உலகப் படைப்பு முதலிய செயல்களில் சலிப்பு அடையாதவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

——————————————

894-சதா மர்ஷி –
அது முதல் எல்லாக் காலத்திலும் முக்தன் செய்யும் கைங்கர்யங்களை  பொறுத்துக் கொண்டும்
நிறைவேற்றிக் கொண்டும் இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

நற் காரியங்கள் செய்து அநு கூலமாக இருப்பவர்களின் குற்றங்களைப் பொறுப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

அசுரர்களிடம் எப்போதும் கோபம் உள்ளவர் -நல்லோர்கள் விஷயத்தில் மன்னிக்கும் தன்மை உள்ளவர் –
ஸ்ரீ நந்தகோபனைக் காக்க வருணனிடன் சென்றவன் –ஸ்ரீ சத்ய சந்தர் –

———————————————

895-லோகாதிஷ்டானம் –
முக்தர்களினால் எப்போதும் பற்றப்படுபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

மூன்று உலகங்களுக்கும் ஆதாரமானவர் -ஸ்ரீ சங்கரர் –

உலகிற்குப் புகலாக இருப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

—————————————-

896-அத்புத –
எக்காலமும் எல்லோராலும் எல்லா வகைகளாலும் அனுபவிக்கப் பட்டு இருந்தும் ஆச்சர்யப் படத் தக்கவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

தம் உருவம்   சக்தி செய்கை ஆகியவற்றால் அற்புதமானவர் -ஸ்ரீ சங்கரர் –

ஆச்ச்சர்யமான உருவம் உடையவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

————————————————————-

897-ஸ நாத் –
முக்தர்களால் பங்கு போட்டுக் கொண்டு அனுபவிக்கப் படுபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

அநாதியான கால ரூபியாக இருப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

லாபத்தை அடையும்படி செய்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

—————————————————-

898-ஸநாதநதம –
மிகத் தொன்மையான வராயினும் அப்போது தான் புதிதாகக் கிடைத்தவர் போல் அனுபவிக்கத் தக்கவர் -ஸ்ரீ பராசர பட்டர்-

எல்லோருக்கும் காரணம் ஆகையால் பிரமன் முதலியோருக்கும் பழைமையாக இருப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

மிகவும் தொன்மையானவர் -லாபத்தைக் கொடுப்பவளான லஷ்மி தேவியைத் தம்மிடம் உடையவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

—————————————————

899-கபில –
சுற்றிலும் மின்னிக் கொண்டு இருக்கும் மின்னலின் நடுவில் உள்ள மேகம் போல் நிறமுடையவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

கபில நிறமுள்ள வடவாக்னியாக கடலில் இருப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

ஸ்ரீ அனுமனை ஏற்றுக் கொண்டவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

———————————————————-

900-கபிரவ்யய-
மாறுதல் அற்ற நித்ய ஸூகத்தைக் காப்பாற்றி அனுபவிப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

கபி -சூரியன் வராஹம் அப்யய -பிரளயத்தில் உலகம் அடங்கும் இடமாக இருப்பவர் -இரண்டு திரு நாமங்கள் -ஸ்ரீ சங்கரர் –

கபி சுகத்தைப் பருகுபவர் -அப்யய -பிரளயத்தில் உலகம் லயிக்கும் இடமாக இருப்பவர் -இரண்டு திரு நாமங்கள் –
அவ்யய-என்ற பாடத்தில் காக்கப் பட வேண்டியவர்களிடம் செல்பவர் என்றுமாம் – -ஸ்ரீ சத்ய சந்தர் –

——————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பராசர பட்டர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாம ஸ்தோத்ரம் -801-850–மும்மத விளக்கம் —

April 24, 2015

உத்பவஸ் ஸூ ந்தரஸ் ஸூ ந்தோ ரத்ன நாபஸ் ஸூ லோசன
அரக்கோ வாஜஸ நிஸ்  ஸருங்கீ  ஜயந்தஸ் சர்வ விஜ்ஜயீ–85
ஸூ வர்ண பிந்து ரஷோப்யஸ் சர்வ வாகீஸ் வரேஸ்வர
மஹா ஹ்ரதோ மஹா கர்த்தோ மஹா பூதோ மஹா நிதி –86-
குமுத குந்தர குந்த பர்ஜன்ய பாவனோ அநல
அம்ருதாசோ அம்ருதவபுஸ் சர்வஜ்ஞஸ் சர்வதோமுக –87
ஸூ லபஸ் ஸூ வ்ரதஸ் சித்தஸ் சத்ருஜித்  சத்ரூதாபன
ந்யக்ரதோ அதும்பரோஸ் வத்தஸ் சானூரார்ந்த நிஷூதன -88
சஹாரார்ச்சிஸ் சப்த ஜிஹ்வஸ் சல்தைதாஸ் சப்த வாஹன
அமூர்த்தி ர நகோ அசிந்த்யோ பயக்றுத் பய நாசன –89
அணுர்  ப்ருஹத் க்ருசஸ் ச்தூலோ குணப்ருன் நிர்குணோ மஹான்
அத்ருதஸ் ஸ்வ த்ருதஸ் ஸ்வாஸ்ய ப்ராக்வம்சோ வம்சவர்த்தன –90 –

———————————————————

ஸ்ரீ புத்தாவதாரம் ——————–787-810—-24 திரு நாமங்கள்

சாஸ்திர வச்யர்களை அனுக்ரஹித்தல் -811-827—–17 திரு நாமங்கள்
பிற விபவங்கள் ——————–828-837—–10 திரு நாமங்கள்
அஷ்ட சித்திகள்———————838-870—–33 திரு நாமங்கள்

——————————————————————

801-அர்க்க-
மஹாத்மா என்றும் மிக்க தர்மிஷ்டரஎன்றும் அவ்வசுரர்களால் புத்தாவதாரத்தில் துதிக்கப் பெறுபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

பூஜிக்கத் தக்கவர்களான பிரமன் முதலியோரால் துதிக்கப் பெறுபவர் -ஸ்ரீ சங்கரர்

மிகுந்த ஸூக ரூபமான ஸ்வரூபன் உடையவர் -பூஜிக்கப் படுபவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

——————————————————————

802-வாஜஸநி –
நாத்திக வாதம் செய்து இம்மைக்கு உரிய சோறு முதலியவற்றையே பெரிதாக அடைந்து அனுபவிப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

அன்னம் வேண்டியவர்களுக்கு அன்னத்தைக் கொடுப்பவர் -வாஜஸந-என்ற பாடம் -ஸ்ரீ சங்கரர் –

உணவைத் திரட்டுபவர் -வாஜஸந-என்ற பாடம் -ஸ்ரீ சத்ய சந்தர் –

———————————————————————–

803-ஸ்ருங்கீ –
அஹிம்சையைக் காட்டுவதற்காக மயில் இறகைக் கையில் கொம்பு போல் வைத்து இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

பிரளயக் கடலில் மீனாக அவதாரம் எடுத்தவர் -ஸ்ரீ சங்கரர் –

கோவர்த்தன மலைச் சிகரங்களை உடையவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

——————————————————————-

804-ஜயந்த -ஞானமே ஆத்மா என்றும் உலகம் பொய் என்றும் வீண் வாதம் செய்து ஆத்திகர்களை வெல்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

பகைவர்களை நன்கு வாழ்பவர் -அல்லது வாழ்வதற்கு காரணம் ஆனவர் -ஸ்ரீ சங்கரர் –

வெற்றி பெறுபவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

——————————————————————

805-சர்வ விஜ்ஜயீ-
எப்படிப் பிரமாணங்களுக்கு விரோதமான வாதங்களால் நம்ப வைக்கக் கூடும் என்னில்
எல்லாம் அறிந்தவர்களையும் வெல்லும் திறமை யுள்ளவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

எல்லாம் அறிந்தவரும் காமம் முதலிய உட்பகைகளையும் ஹிரண்யாஷன் முதலிய வெளிப்பகைகளையும் வெல்பவருமானவர்-ஸ்ரீ சங்கரர் –

எல்லாம் அறிந்தவராகவும் வெற்றியை அடைபவராகவும் உள்ளவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

————————————————————-

806-ஸூ வர்ண பிந்து –
எல்லாம் வல்லவராதலின் எழுத்து சொற்சுத்தம் உள்ள பேச்சு ஆகியவற்றினால் நாஸ்திகர்களைக் கண்டிப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

பொன் போன்ற அவயவங்களை யுடையவர் –
நல்ல அஷரமும் பிந்து என்னும் அநு ஸ்வாரமும் கூடிய பிரணவ மந்த்ரமாக இருப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

மங்களகரமான புகழ் உள்ள வேதங்களை அறிந்தவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

—————————————————————-

807-அஷோப்ய-
ஆழ்ந்த கருத்துள்ளவர் ஆதலால் யாராலும் கலக்க முடியாதவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

காமம் முதலியவற்றாலும் சப்தாதி விஷயங்களாலும் -அசுரர்களாலும் -கலக்க முடியாதவர் -ஸ்ரீ சங்கரர் –

கலக்க முடியாதவர் -பொன் புள்ளிகளை உடைய மாயமானாக வந்த மாரீசனை பயப்படும்படி செய்தவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

——————————————————————-

808-சர்வ வாகீஸ் வரேஸ்வர-
வாதம் செய்யும் திறமை உள்ளவர்களுக்கு எல்லாம் மேலானவர் -ஸ்ரீ பராசர பட்டர்-

வாகீச்வரர்களான பிரம்மா முதலியவர்களுக்கும் ஈஸ்வரர் -ஸ்ரீ சங்கரர் –

வாக்குக்களுக்கு எல்லாம் ஈச்வரனான ருத்ரனுக்கும் ஈஸ்வரர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

——————————————————————-

809-மஹாஹ்ரத-
பாவம் செய்தவர்கள் மேற் கிளம்பாமல் அமிழ்ந்து போகும்படியும் புண்யம் செய்தவர்கள் அடிக்கடி ஆழ்ந்தும்
போதும் என்று தோன்றாமல் இருக்கும்படியும் பெருமடுவாக இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

யோகிகள் முழுகி இளைப்பாறி சுகமாகத் தங்கி இருக்கும் ஆனந்த வெள்ளம் நிரம்பிய மதுவாக இருப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

காளிய மர்த்தன காலத்தில் அல்லது சமுத்ரத்தில் சயனித்து இருந்த போது பெரிய நீர் நிலை ஜலம் உள்ளவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

————————————————————————-

810-மஹாகர்த்த-
இப்படி நாத்திக வாதங்களால் கெட்டுப் போனவர்களை ரௌரவம் முதலிய நரகக் குழிகளில் தள்ளுபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

கடக்க முடியாத மாயை என்னும் படு குழியை வைத்து இருப்பவர் -அல்லது மஹா ரதர் -ஸ்ரீ சங்கரர் –

சேஷாசலம் முதலிய பெரிய மலைகளில் இருப்பவர் -இதய குஹையில் இருப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர் —

————————————————————————–

811-மஹா பூத –
மேலானவர்களை தம் அடியாராகக் கொண்டவர் -சாஸ்த்ரங்களை மீறும் அசுரர்களை நிக்ரஹிப்பத்து கூறப் பட்டது –
இனி சாஸ்த்ரங்களை பின்பற்றும் தேவச் செல்வம் உள்ளவர்களை அனுக்ரஹிப்பது கூறப்படுகிறது -ஸ்ரீ பராசர பட்டர்-

முக்காலத்திலும் அளவிட முடியாத ஸ்வரூபம் உள்ளவர் -ஸ்ரீ சங்கரர் –

ஆகாயம் முதலிய பூதங்களை உண்டாக்குபவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

—————————————————————-

812-மஹா நிதி –
அவ்வடியவர்களை நிதி போலே அன்புடன் கருதுபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

எல்லாப் பொருளும் தம்மிடம் தங்கும்படி பெரிய ஆதாரமாக இருப்பவர்-ஸ்ரீ சங்கரர்-

தம்மை அடைவது நிதியை அடைந்தது போலே மகிழ்ச்சியை உண்டாக்குபவர்–ஸ்ரீ சத்ய சந்தர் –

——————————————————————

813-குமுத –
இவ் வுலகிலேயே அவர்களுடன் சேர்ந்து மகிழ்பவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

பூமியின் பாரத்தை ஒழித்து பூமியை மகிழ்விப்பவர்  -ஸ்ரீ சங்கரர் –

உலகில் மகிழ்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

———————————————————

814-குந்தர –
பரமபதத்தை யளிப்பவர் -குந்தமலர் போல் அழகியவர் -பரதத்வ ஞானம் அளிப்பவர் –பாவங்களைப் பிளப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

குருக்கத்தி மலர் போல் சுத்தமான தர்ம பலன்களைக் கொடுப்பவர் -பெறுபவர் என்றுமாம் –
ஸ்ரீ வராஹ ரூபத்தால் பூமியைக் குத்தியவர் -ஸ்ரீ சங்கரர் –

அடியவர்களால் சமர்ப்பிக்கப்படும் குந்த புஷ்பங்களால் மகிழ்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

————————————————————-

815-குந்த –
ஞான பக்தி வைராக்கியம் ஆகிய முதற்படி ஏறியவர்களுக்கு மேற் படிகளாகிய
பரபக்தி பரஜ்ஞான பரம பக்திகளைக் கொடுப்பவர் -சகல பாபங்களையும் பாவத்தைச் சோதிப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

குந்த மலர் போல் அழகிய ஸ்படிகம் போல் தெளிவான அங்கம் உடையவர் -ஸ்ரீ பரசுராமாவதாரத்தில் பூமியை
கச்யபருக்குக் கொடுத்தவர் -பூமியை ஷத்ரியர்கள் இல்லாமல் போகும் படி கண்டித்தவர்  சங்கரர் –

ஒலியைச் செய்பவர் – பூமியை இந்த்ரனுக்குக் கொடுப்பவர் -கெட்டவற்றை அழிப்பவர்-ஸ்ரீ சத்ய சந்தர் –

———————————————————————

816-பர்ஜன்ய –
தம்முடைய ஸ்வரூபததைத் தெரிவித்து மூன்று தாபங்களைப் போக்குபவர் -ஸ்ரீ பாராசர பட்டர் –

விரும்பியவற்றைப் பொழிபவர் –மேகம் போலே ஆத்யாத்மிக தாப த்ரயத்தைப் போக்குபவர் -ஸ்ரீ சங்கரர் –

உயர்ந்தவைகளை உண்டாக்குபவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

———————————————————–

817-பாவன-
தாமே பக்தர்களிடம் செல்லுபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

தம்மை நினைத்த மாத்திரத்திலே புனிதப் படுத்துபவர் -ஸ்ரீ சங்கரர் –

அரசர்களைக் காப்பவர் -புனிதப் படுத்துபவர் -வாயுவின் தந்தை -ஸ்ரீ சத்ய சந்தர் –

—————————————————————

818-அநில-
பக்தர்களை அனுக்ரஹிப்பதற்குத் தம்மைத் தூண்டுபவர் வேண்டாதவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

தமக்குக் கட்டளை இடுபவர் யாரும் இல்லாதவர் -எப்போதும் தூங்காத ஞான ஸ்வரூபி –
பக்தர்களுக்கு அடைவதற்கு எளியவர் -ஸ்ரீ சங்கரர் –

வாயு பக்தர்களை ஏற்பவர் -ஸ்ரீ சத்ய  சந்தர் –

———————————————————–

819-அம்ருதாச –
பக்தர்களுக்குத் தம் குணங்கள் என்னும் அமுதத்தை உஊட்டுபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

ஆத்மானந்தம் என்னும் அமுதத்தை உண்பவர் -தேவர்களுக்கு அமுதம் அளித்து தாமும் உண்பவர் –
பலன் அழியாத ஆசை உள்ளவர் –ஸ்ரீ சங்கரர் –

முக்தர்களால் விரும்பப் படுபவர் -அம்ருதன் என்ற பெயருடைய வாயு தேவனுக்கு சுகத்தை உண்டாக்கும் பாரதீ தேவியை அளித்தவர்-
அம்ருதாம்ச என்ற பாடத்தில் அழியாத மிக்க புகழ் கொண்ட மத்ஸ்யாதி அவதாரங்களைக் கொண்டவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

———————————————————————

820-அம்ருதவபு –
தமது திரு மேனியும் அமுதம் போன்று இனிமையாக இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

அழியாத திருமேனி யுடையவர் -ஸ்ரீ சங்கரர் –

அமுதம் தருவதற்காக நாராயணீ அஜித தன்வந்தரி ரூபங்களைக் கொண்டவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

——————————————————————

821-சர்வஜ்ஞ-
பக்தர்களின் சக்தி அசக்தியையும் அவர்களால் சாதிக்கக் கூடியது கூடாததையும் முற்றும் உணர்ந்தவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

எல்லாம் அறிந்தவர்-ஸ்ரீ சங்கரர் –

எல்லாவற்றையும் அறிந்தவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

—————————————————–

822-சர்வதோமுக-
பக்தர்களுக்கு இன்ன வழியில் தான் அடையலாம் இன்ன வழியில் அடைய முடியாது என்ற நிர்ப்பந்தத்தைப் போக்கி
எவ்வழி யாலும்   எளிதில் அடையக் கூடியவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

எங்கும் கண்களும் தலைகளும் முகங்களும் உள்ள  ஸ்வரூபம் என்று
ஸ்ரீ கீதையில் சொல்லிய படி எங்கும் முகங்களுடையவர் -ஸ்ரீ சங்கரர் –

எல்லா திசைகளிலும் முகம் உள்ளவர் -எல்லா இடத்திலும் ஜலத்தைப் புகலிடமாகக் கொண்டவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

——————————————————–

823-ஸூ லப-
விலையில்லாத உயர்ந்த பொருளாக இருந்தும் அற்பமான பொருள்களால் எளிதில் அடையக் கூடியவர் –
கூனி சந்தனம் கொடுத்து கண்ணனால் அருளப் பட்டாள்-ஸ்ரீ பராசர பட்டர் –

இலை பூ முதலியவற்றை பக்தியுடன் சமர்ப்பித்ததனால் மட்டுமே எளிதாக அடையப் படுபவர் -ஸ்ரீ சங்கரர் –

தேவதைகளில் பிரகாசிப்பவர் -எளிதில் அடையக் கூடியவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

————————————————————-

824-ஸூ வ்ரத-
தம்மை அடைந்தவர்களை எவ்வகையாலும் காப்பாற்றும் உறுதியான வ்ரதமுடையவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

சிறந்த போஜனம் உள்ளவர் -போஜனத்தில் இருந்து நிவர்த்திப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

தம்மை அடைவதற்கு மங்களமான விரதங்கள் உள்ளவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

———————————————————-

825-சித்த –
தமது உண்மைத் தன்மையை  அறிந்தவர்க்கு முயற்சி இல்லாமல் கிடைப்பவர் –
ஸ்வா பாவிக சர்வ ரஷகர் அன்றோ இவன் –  ஸ்ரீ பராசர பட்டர் –

தமக்குக் காரணம் ஏதுமின்றி சித்தமாகவே இருப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

மங்களத்தை அல்லது சாஸ்த்ரத்தைத் தருபவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

——————————————————–

826-சத்ருஜிச் சத்ருதாபன –
தம் திவ்ய சக்தியினால் பூரிக்கப்பட்டு விரோதிகளை வென்றவர்களான ககுத்ஸ்தர் புருகுத்சர் முதலியோரைக் கொண்டு
பகைவரை வருத்துபவர் –இதுவரை அவன் நேரில் காக்கும்படி கூறப் பட்டது –
இனி மறைந்து இருந்து காக்கும்படி கூறப் படுகிறது -ஸ்ரீ பராசர பட்டர் –

சத்ருஜித் -தேவ சத்ருக்களான அசுரர்களை வெல்பவர் –
சத்ரு தாபன -சத்ருக்களைத் துன்புறுத்துபவர் -இரண்டு திரு நாமங்கள் -ஸ்ரீ சங்கரர் –

சத்ருஜித் -சத்ருக்களை வெல்பவர் –சூரியனுக்குள் இருப்பவர் –
சத்ருதாபன -சத்ருக்களை -அசுரர்களை தவிக்கும்படி அழியச் செய்பவர்-இரண்டு திரு நாமங்கள் –

—————————————————————

827-ந்யக்ரோ தோதும்பர –
கீழே நின்று வணங்குபவர்கள் -தங்களுக்கு அருளும்படி தடுத்து நிறுத்தப் படுபவராகவும் மிக உயர்ந்த பரமபதத்தையும் திருமகள்
முதலிய செல்வங்களையும் அடைந்தவராகவும் இருப்பவர் —
மிக உயர்ந்தவராயினும் மிகத் தாழ்ந்தவராலும் அணுகக் கூடியவர் – ஸ்ரீ பராசர பட்டர் –

ந்யக்ரோத -கீழே முளைப்பவர் -பிரபஞ்சத்திற்கு எல்லாம் மேல் இருப்பவர் —
எல்லாப் பிராணிகளையும் கீழ்ப்படுத்து தமது மாயையால் மறைப்பவர் –
உதும்பர -ஆகாயத்திற்கு மேற்பட்டவர் -எல்லா வற்றிற்கும் காரணம் ஆனவர் –
அன்னம்  முதலியவற்றால்  உலகைப் போஷிப்பவர் – இரண்டு திருநாமங்கள் -ஸ்ரீ சங்கரர் –

ந்யக்ரோத -எல்லோரையும் காட்டிலும் மேம்பட்டு வளர்பவர் -உதும்பர -ஆகாயத்தில் இருந்து மேலே எழுபவர் –
ஔ தும்பர -என்ற பாடமானால் -ஜீவர்களைத் தன பக்தர்களாக ஏற்கும் ஸ்ரீ லஷ்மி தேவிக்குத் தலைவர் –
இரண்டு திரு நாமங்கள் -ஸ்ரீ சத்ய சந்தர்

——————————————————————–

828-அஸ்வத்த –
இன்றுள்ளது -நாளை இல்லை என்னும்படி அநித்யமான பதவிகள் பெற்ற இந்த்ரன் சூர்யன் முதலானவர்களுள் அனுப்ரவேசித்து
எல்லாவற்றையும் நடத்துபவர் –
பிறகு தமக்கு அங்கமாக உள்ள தேவதைகளால் உலகை நிர்வகிப்பது கூறப் படுகிறது -ஸ்ரீ பராசர பட்டர் –

நாளை நில்லாத அநித்ய வஸ்துவாகவும் இருப்பவர் -அரசமரம் போல் இருப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

குதிரையைப் போல் இருப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

———————————————————————–

829-சாணூராந்த்ர நிஷூதன-
அவர்கள் விரோதியான சாணூரன் என்னும் மல்லனை அழித்தவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

சாணூரன் என்னும் அசுரனைக் கொன்றவர் -ஸ்ரீ சங்கரர் –

துர்யோதனன் முதலியவர்களையும் சாணூரனையும் அழித்தவர் -சாணூராந்த நி ஷூதன -என்று பாடம் -ஸ்ரீ சத்ய சந்தர் –

———————————————————————

830-சஹாஸ்ரார்ச்சி –
உலகில் பொருள்களைப் பரிணாமம் செய்தல் -உலர்த்தல் உஷ்ணத்தையும் ஒளியையும் உண்டு பண்ணுதல்
முதலியவற்றைச் செய்யும் அநேக கிரணங்களை சூர்யனிடம் வைத்து இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

அளவற்ற கிரணங்களை யுடையவர் -ஸ்ரீ சங்கரர் –

ஆயிரம் கிரணங்களை யுடையவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

————————————————————————-

831-சப்த ஜிஹ்வ –
தேவர்களை மகிழ்விக்கும் ஆஹூதிகளை காளீ கராளீ முதலிய ஏழு நாக்குகளை உடைய
அக்னியாய் இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

ஏழு நாக்குகளை உடைய அக்னி ரூபியாக இருப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

ஏழு நாக்குகள் உள்ள அக்னியின் உள்ளிருப்பவர் -அல்லது ஜடைகளை உடைய
ஏழு ரிஷிகளைத் தமது நாக்காகயுடையவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

———————————————————————–

832-சப்தைதா –
ஒவ் ஒன்றும் ஏழாக உள்ள விறகு பாகம் ஹவிஸ் சோமசம்ஸ்தை ஆகியவற்றை பிரகாசிக்கச் செய்யும் கிரியைகள்
எல்லாவற்றையும் அடைபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

ஏழு ஜ்வாலைகள் உடைய அக்னியாக இருப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

ஏழு ரிஷிகளை வளரச் செய்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

—————————————————————————–

833-சப்த வாஹந-
காயத்ரீ முதலிய ஏழு சந்தஸ் ஸூக்களோடு கூடிய வேத மந்திரங்களுக்கு  அதிஷ்டான தேவதைகளான சூர்யனுடைய
ஏழு குதிரைகளை வாகனமாக யுடையவர் -ஏழு வாயுச் கந்தர்களைத் தாங்குபவர் என்றுமாம்   –ஸ்ரீ பராசர பட்டர் –

ஏழு குதிரைகளை உடைய அல்லது சக்த என்னும் ஒரு தேர்க் குதிரையை உடைய சூரியனாக இருப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

ஏழு குதிரைகளை யுடைய சூரியனை நடத்துபவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

——————————————————————-

834-அமூர்த்தி –
பஞ்ச பூதமான ரூபத்தைக் காட்டிலும் வேறுபட்ட ரூபமுடையவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

தேஹம் இல்லாதவர் –அசைவனவும் அசையாதவையுமான பொருள்களின் வடிவம் சரீரம் அது இல்லாதவர் -ஸ்ரீ சங்கரர் –

ப்ராக்ருதமான மேனி அற்றவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

—————————————————————————-

835-அநக –
கர்மத்திற்கு வசப் படாதவராதலின் கர்ம வசப் பட்ட ஜீவர்களைக் காட்டிலும் விலஷணமானவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

பாவமும் துக்கமும் இல்லாதவர் -ஸ்ரீ சங்கரர் –

பாவம் அற்றவர்-ஸ்ரீ சத்ய சந்தர் –

——————————————————————————-

836-அசிந்த்ய –
முக்தர்களை உவமையாகக் கொண்டும் நிரூபிக்க முடியாதவர் -ஸ்ரீ பராசர பட்டர்-

எல்லா வற்றுக்கும் சாஷி -ஆதலின் எப் பிரமாணங்களுக்கும் எட்டாதவர் -விலஷணர்-
இத்தகையவர் என்று நினைக்க ஒண்ணாதவர் – ஸ்ரீ சங்கரர் –

சிந்தைக்கு எட்டாதவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

———————————————————————————-

837-பயக்ருத்-
தம் கட்டளைகள் ஆகிற சாஸ்த்ரங்களை மீறுபவர்களுக்கு பயம் உண்டாக்குபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

பக்தர்களுக்கு பயத்தைப் போக்குபவர் –தீய வழிகளில் நடப்பவர்களுக்கு பயத்தை ஏற்படுத்துபவர் -ஸ்ரீ சங்கரர் –

பக்தர்களுக்கு அபயம் அளிப்பவர் -அபயக்ருத் -என்பது பாடம் -ஸ்ரீ சத்ய சந்தர் –

———————————————————————————–

838-பய நாசன –
தம் கட்டளைகள் ஆகிற சாஸ்திரங்களைப் பின்பற்றுபவர்களுக்கு பயத்தைப் போக்குபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

வர்ணாஸ்ரம தர்மத்தை பின்பற்றுபவர்களுடைய பயத்தைப் போக்குபவர் -ஸ்ரீ சங்கரர் –

அச்சத்தைப் போக்குபவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

—————————————————————————-

839-அணு –
மிகவும் நுண்ணிய ஹ்ருதயாகசத்தில் அதிலும் நுண்ணிய ஜீவாத்மாவினுள் பிரவேசித்து இருக்கும் திறமையால்
அணிமா -உடையவர் -பிறகு அணிமை முதலிய வற்றின் அதிஷ்டானங்களான அஷ்டைச்வர்யம் கூறுகிறது – ஸ்ரீ பராசர பட்டர் –

மிக ஸூஷ்மமாக இருப்பவர் -ஸ்ரீ சங்கரர்-

அணுவான சிறிய வற்றிற்குத் தங்கும் இடமாக இருப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

————————————————————————–

840-ப்ருஹத் –
மிகப் பெரிய பரமபதத்தையும் உள்ளங்கையில்  அடக்குவது போல் தமது ஏக தேசத்தில் அடக்க
வியாபித்து இருக்கும் மஹிமா உடையவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

பெரிதாயும் பெருமை உள்ளதையும் இருக்கும் ப்ரஹ்மமாயும் இருப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

குணங்களால் நிறைந்தவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

—————————————————————————–

841-க்ருச-
பஞ்சு காற்றினும் லேசானவராக எங்கும் தடை இன்றிச் செல்பவர் ஆதலின் லகிமா உடையவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

பார்க்க முடியாதவர் -ஸ்ரீ சங்கரர் –

அசுரர்களை அழிப்பவர்-ஸ்ரீ சத்ய சந்தர் –

———————————————————————————

842-ஸ்தூல –
ஓர் இடத்தில் இருந்தே எல்லாப் பொருளையும் நேரில் தொடும் திறமையால் பூமியில் இருந்தே சந்திரனைத் தொடும்
ப்ராப்தி என்னும் சக்தியை உடையவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

எல்லாமாக தாம் இருப்பதால் ஸ்தூல -பெரிய உருவம் உள்ளவர் -என்று உபசாரமாகக் கூறப் பெறுவார் -ஸ்ரீ சங்கரர் –

மிகப் பெரியவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

——————————————————————————————-

843-குணப்ருத்-
தம் சங்கல்ப்பத்தினாலே எல்லாப் பொருள்களையும் தமது குணம் போலே தம்மிடம் வைத்துத் தாங்கும்
ஈசித்வம் என்னும் சக்தி உடையவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

ஸ்ருஷ்டி ஸ்திதி சம்ஹாரங்களுக்குக் காரணங்கள் ஆகிய சத்வ ரஜஸ் தமோ குணங்களை வகிப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

ஆனந்தம் முதலிய குணங்களை உடையவர் –
அப்ரதாநர்களான-முக்கியம் அல்லாதவர்களான -ஜீவர்களைத் தாங்குபவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

———————————————————————————————-

844-நிர்க்குண –
உலகியல் குணங்கள் ஒன்றும் தம்மிடம் ஒட்டாமல் இருக்கும் வசித்வம் என்னும் சக்தியோடு மிகச் சுதந்திரர் -ஸ்ரீ பராசர பட்டர் –

உண்மையில் குணங்கள் அற்றவர் -ஸ்ரீ சங்கரர் –

சத்வம் முதலிய முக்குணங்கள் அற்றவர் -ஸ்ரீ சத்ய சந்தரர்-

————————————————————————

845-மஹான்-
நீரில் போலே நிலத்திலும் முழுகுவது வெளிவருவது முதலிய நினைத்த வெல்லாம் தடையில்லாமல் செய்யும்
ப்ராகாம்யம் என்னும் சக்தியை யுடையவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

சப்தாதி குணங்கள் இல்லாமையாலும் மிக ஸூ ஷ்மமாக இருப்பதாலும் நித்யத்வம் -சுத்த சத்வம் -சர்வ கதத்வம் -ஆகிய
மூன்று தர்மங்களிலும் தடையில்லாதவர் -ஸ்ரீ சங்கரர் –

உயர்ந்தவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

———————————————————-

846-அத்ருத –
இப்படிப்பட்ட விஸ்வரூபமாய் இருக்கும் மேன்மையினால் ஒன்றிலும் கட்டுப் படாதவர் –
பிறருடைய நிழலில் புகுந்து அவர் உள்ளத்தை வசீகரித்தல் -தன்னை தியானிப்பவர் உள்ளத்தில் இருத்தல் –
ஜீவனுடன் கூடினதும் ஜீவன் இல்லாததுமான உடலிலே பிரவேசித்தல் -இஷ்டாபூர்த்தம் என்னும் யாகத்தில் அதிஷ்டித்து இருத்தல் ஆகிய
நான்கு விதமான அவருடைய யாதொன்றிலும் கட்டுப் படாத தன்மை கூறப்படுகிறது —
இதனால் நினைத்த படி எல்லாம் செய்ய வல்ல அவனுடைய பெருமை கூறப்பட்டது  –
பரமபததுக்குப் போகத் தகுதி இல்லாமல் இருந்தும் வைதிகன் பிள்ளைகளை பரம பதத்துக்குப் போக விட்டது மட்டும் அல்லாமல் –
திரும்பி வருதல் அல்லாத அவ்விடத்தில் இருந்தும் மறுபடியும் அவர்களை இந்த உலகிற்கு வரச் செய்தார் –
சித்தையும் அசித்தையும் அவற்றின் ஸ்வரூபத்தையும் கூட மாறுபடும்படி செய்ய வல்லவராக இருந்தும்
ஏதோ ஒரு காரணத்தால் அப்படி மாறுபடுத்துவது இல்லை -ஸ்ரீ பராசர பட்டர் –

எல்லா வற்றிற்கும் ஆதாரமான பூமி முதலிய வற்றையும் தாங்குவதால் ஒன்றாலும் தாங்கப் படாதவர் -ஸ்ரீ சங்கரர் –

எவராலும் தாங்கப் படாதவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

—————————————————-

847-ஸ்வ த்ருத-
தம்மாலேயே தாம் தாங்கப்படும் தன்மை இயற்கையாக அமைந்தவர் –மந்த்ரம் ஓஷதி தவம் சமாதி இவைகள் சித்திக்கப் பெற்ற
பத்த சம்சாரிகளுடைய அணிமை முதலிய அஷ்ட ஐஸ்வர் யங்களைக் காட்டிலும்
இவருடைய ஐஸ்வர் யத்துக்கு உண்டான பெருமை கூறப் படுகிறது –
இந்த ஐஸ்வர் யங்கள் இவருக்கு சமாதி முதலிய காரணங்களால் வந்ததல்ல –
ஸ்வா பாவிகமாகவே உள்ளவைகள் ஆகும் – ஸ்ரீ பராசர பட்டர்-

தம்மாலேயே தரிக்கப் படுபவர் -ஸ்ரீ சங்கரர் –

தம்மாலேயே தாம் தாங்கப் பெறுபவர் -தனத்தைத் தாங்குபவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

————————————————————————–

848-ஸ்வாஸ்ய-
மிகச் சிறந்த இருப்பை யுடையவர் -முக்தர்களுடைய செல்வம் கூறப்படுகிறது –
அவித்யையினால் சம்சாரத்தில் ஐஸ்வர்யம் மறைக்கப் பட்டு இருக்கும் –
பகவானுடைய ஐஸ்வர்யம் எப்போதும் மறைக்கப் படாமல் உள்ளபடியால் வந்த ஏற்றம் சொல்கிறது -ஸ்ரீ பராசர பட்டர்-

தாமரை மலர் போலே அழகிய திரு முகம் உள்ளவர் –புருஷார்த்தங்களை உபதேசிக்கும் வேதம்
வெளிப்பட்ட திரு முகத்தை யுடையவர் ஸ்ரீ சங்கரர் –

மங்கலமான வேதங்களை வாயில் யுடையவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

——————————————————————-

849-ப்ராக்வம்ச –
அநாதி முக்தர்களான நித்யர்களின் ஆவிர்பாவத்தைத் தம் இச்சையினால் உடையவர் —
பிறகு நித்யர்களுடைய ஐஸ்வர்யம் -எல்லாம் எல்லா விதத்தாலும்
அவனுடைய விருப்பத்தைப் பின் செல்வதாக இருப்பது என்பதில் எந்த விவாதமும் இல்லையே -ஸ்ரீ பராசர பட்டர் –

தம் வம்சமான உலகம் பிற்பட்டதாகாமல் முற்பட்டதாக உடையவர் -ஸ்ரீ சங்கரர் –

அநாதி காலமாக முது எலும்பு போலே ஆதாரமாக உள்ளவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

——————————————————————-

850-வம்ச வர்த்தந-
வம்சம் எனப்படும் நித்ய ஸூரி வர்க்கத்தை -கைங்கர்ய ரசத்தைப் பெருகச் செய்து -வளர்ப்பவர் –
நித்ய ஸூ ரிகளைக் காட்டிலும் இவனுக்கு உண்டான ஏற்றத்தின் காரணம்  சொல்கிறது -ஸ்ரீ பராசர பட்டர் –

வம்சம் என்னும் பிரபஞ்சத்தை பெருகச் செய்பவர் -அல்லது அழியச் செய்பவர் -ஸ்ரீ சங்கரர் –

பரீஷித்தைப் பிழைப்பித்ததனால் பாண்டவர்களின் வம்சத்தை வளர்த்தவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பராசர பட்டர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாம ஸ்தோத்ரம் -751–800—–மும்மத விளக்கம் —

April 24, 2015

ஸூ வர்ண வர்ணோ ஹே மாங்கோ வராங்கஸ் சந்த நாங்கதீ
வீரஹா விஷமஸ் ஸூ ந்யோ க்ருதாஸீ ரசலஸ் சல –79
அமாநீ மாநதோ மான்யோ லோக ஸ்வாமீ த்ரிலோகத்ருத்
ஸூ மேதா மேதஜோ தன்யஸ் சத்யமேதா தராதர –80-
தேஜோ வ்ருஷோ த்யுதி தரஸ் சர்வ சஸ்திர ப்ருதாம்வர
ப்ரக்ரஹோ நிக்ரஹோ வ்யக்ரோ நைகஸ்ருங்கோ கதாக்ரஜ–81
சதுர்மூர்த்தி சதுர்பாஹூஸ் சதுர்யூஹஸ் சதுர்கதி
சதுராத்மா சதுர்பாவஸ் சதுர்வேத  விதேகபாத் –82-
சமா வரத்தோ நிவ்ருத்தாத்மா துர்ஜயோ துரதிக்ரம
துர்லபோ துர்கமோ துர்கோ துராவாசோ துராரிஹா
ஸூ பாங்கோ லோக சாரங்கஸ் ஸூ தந்துஸ் தந்து வர்த்தன –84
இந்த்ரகர்மா மஹா கர்மா க்ருதகர்மா க்ருதாகம
உத்பவஸ் ஸூ ந்தரஸ் ஸூ ந்தோ ரத்ன நாபஸ் ஸூ லோசன
அரக்கோ வாஜஸ நிஸ்  ஸருங்கீ  ஜயந்தஸ் சர்வ விஜ்ஜயீ–85-

—————————————————–

ஸ்ரீ கிருஷ்ணாவதாரம் -697-786—-90 திரு நாமங்கள்

ஸ்ரீ புத்தாவதாரம் -787-810——–24 திரு நாமங்கள்

———————————————————

751-அசல –
துர்யோதனன்  முதலிய துஷ்டர்களால் அசைக்க முடியாதவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

ஸ்வரூபம் சக்தி ஞானம் முதலிய குணங்கள் எப்போதும் மாறாதவர் -ஸ்ரீ சங்கரர் –

அசையாதவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

————————————————–

752-சல –
அடியவர்களான பாண்டவர் முதலியோருக்காக தம் உறுதியையும் விட்டு விலகுபவர் -ஆயுதம் எடுப்பது இல்லை
என்ற பிரதிஜ்ஞை செய்து இருந்தும் சக்ராயுதத்தால் பீஷ்மரை தாக்கச் சென்றவர் அன்றோ – -ஸ்ரீ பராசர பட்டர் –

வாயு ரூபத்தினால் சஞ்சரிப்பவர் -ஸ்ரீ சங்கரர்-

அசைபவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

———————————————————-

753-அமாநீ-
பக்தர்கள் விஷயத்தில் தம் உயர்வை நினையாதவர் -அதனால் அன்றோ தயக்கமின்றித் தூது சென்றது -ஸ்ரீ பராசர பட்டர் –

ஆத்மா அல்லாதவற்றை ஆத்மாவாக நினையாதவர் -ஸ்ரீ சங்கரர் –

விஷயங்களில் பற்று  இல்லாதவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

————————————————————————–

754-மா நத-
அர்ஜூனன் உக்ரசேனன் யுதிஷ்ட்ரன் முதலியோர்க்கு தாம் கீழ்ப் பட்டு இருந்து கௌரவத்தை அளித்தவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

தம் மாயையினால் எல்லோருக்கும் ஆத்மா அல்லாதவற்றை ஆத்மாவாக நினைக்கும்படி செய்பவர் -பக்தர்களுக்கு கௌரவம் தருபவர் –
அதர்மம் செய்தவர்களின் கர்வத்தை  அழிப்பவர்-தத்தம் அறிந்தவர்களுக்கு ஆத்மா அல்லாதவற்றை
ஆத்மாவாக நினைக்கும் மயக்கத்தைப் போக்குபவர் – ஸ்ரீ சங்கரர் –

ஸ்ரீ லஷ்மிக்கு வாயுவைப் பிள்ளையாகத் தந்தவர் -கட்டுப் பாட்டை ஏற்படுத்தியவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

———————————————————–

755-மாந்ய-
அடியவர்களுக்கு  கீழ்ப் பட்டு இருப்பதையே தம் பெருமையாக கொள்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

சர்வேஸ்வரர் ஆதலின் எல்லோராலும் பூஜிக்கப் பெறுபவர் -ஸ்ரீ சங்கரர் –

ஸ்ரீ லஷ்மி மற்றும் ஜீவ ராசிகள் இடமிருந்து வேறுபட்டவர் -அசைக்க முடியாதவர் -ஸ்ரீ லஷ்மி தேவியைத் தூண்டுபவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

——————————————————————–

756-லோக ஸ்வாமீ-
இப்படிச் செய்பவர் யார் என்னில் உலகுக்கு எல்லாம் தலைவர் -ஸ்ரீ பராசர பட்டர்

பதினான்கு உலகங்களுக்கு எல்லாம் ஈஸ்வரர் –

ஸ்ரீ வைகுண்டம்  முதலிய உலகங்களில் உள்ளவர்க்குத் தலைவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

—————————————————————–

757-த்ரிலோகத்ருத் –
அனைவரையும் தரித்து வளர்த்துக் காப்பவர் -மிகவும் உயர்ந்தவர் தாழ்ந்தவர்களுடன் இதனாலே சேர்ந்தார் -ஸ்ரீ பராசர பட்டர் –

மூ வுலகங்களையும் தரிப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

மூ வுலகங்களையும் சுமப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

———————————————————————–

758-ஸூ மேதா –
தம்மை ஆராதிப்பவர்களுக்கு நன்மை தருபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

சிறந்த ஞானம் உள்ளவர் -ஸ்ரீ சங்கரர் –

சிறந்த ஞானம் உள்ளவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

—————————————————————————–

759-மேதஜ-
தேவகியின் யாகத்தின் பயனாகத் திரு வவதரித்தவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

யாகத்தில் யுண்டாகுபவர் -ஸ்ரீ சங்கரர் –

யாகத்தில் யுண்டாகுபவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

———————————————————————–

760-தன்ய-
இப்படி திருவவதரிப்பதை தன் லாபமாக நினைப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

எல்லாவற்றையும் பெற்று இருப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

புண்ய சாலிகள் யுடையவர் -ஸ்ரீ சத்ய சந்தர்

———————————————————————-

761-சத்ய மேதா-
ஆயர்கள் வஸூதேவர் முதகியோரைச் சேர்ந்தவர் தாம் எனபது வெறும் நடிப்பாக அல்லாமல் உண்மையாக இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

உண்மையான ஞானம் உள்ளவர் -ஸ்ரீ சங்கரர் –

உண்மையான உலகின் விஷயத்தில் ஞானம் உள்ளவர் -உண்மையான ஞானம் உள்ளவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

———————————————————————–

762-தராதர –
ஸ்ரீ கோவர்த்தன மலையை தரித்தவர் -ஸ்ரீ பராசர பட்டர்-

ஸ்ரீ ஆதிசேஷன் முதலிய தன் அம்சங்களால் பூமி முழுவதும் தாங்குபவர் -ஸ்ரீ சங்கரர் –

பூமியைத் தாங்குபவர் –மேரு மந்த்ரம் முதலிய மலைகளை நன்கு தாங்கும்படி செய்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

———————————————————————-

763-தேஜோ வ்ருஷ –
இப்படி அடியவரைக் காப்பதில் தம் சக்தியைப் பொழிபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

ஸூர்ய ரூபியாக ஜலத்தை ஒளியைப் பொழிபவர் -ஸ்ரீ சங்கரர் –

ஒளி மயமான சூரியன் முதளியவர்களில் சிறந்தவர் —
தேஜஸ்சை யுடைய ஸூர்யனைக் கொண்டு மழை பொழியச் செய்பவர்-ஸ்ரீ சத்ய சந்தரர் –

————————————————————————

764-த்யுதிதர –
ஸ்ரீ கிருஷ்ணாவதாரத்தில் இளமையிலும் இந்திரனைத் தோற்கச் செய்யும் அதி  மானுஷ சக்தியை உடையவர் -ஸ்ரீ பராசர பட்டர்-

தேக ஒளியை தரிப்பவர் -ஸ்ரீ சங்கரர்-

ஒளியைத் தாங்குபவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

——————————————————————–

765-சர்வ சஸ்த்ரப் ருதாம் வர –
நரகன் ஜராசந்தன் ஆகியோருடனான போரில் அஸ்தரம் பிடித்த எல்லோரிலும் சிறந்து விளங்கியவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

ஆயுதம் தரித்தவர் -ஸ்ரீ சங்கரர் –

அனைத்து ஆயுதங்களைப் போலுல்லவர் -ஆகாயத்தைத் தாங்குபவர் -சர்வ சஸ்திர ப்ருதம்பர  -என்று பாடம் -ஸ்ரீ சத்ய சந்தர்-

————————————————————————

766-ப்ரக்ரஹ –
தாம் சாரதியாக இருந்து கொண்டு அர்ஜூனனைக் கடிவாளம் போல் இழுத்துப் பிடித்துத் தம் சொற்படி அவனை நடத்தியவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

பக்தர்களால் சமர்ப்பிக்கப்படும் இலை பூ முதலியவற்றை ஏற்றுக் கொள்பவர் –விஷயங்கள் என்னும் காடுகளில் ஓடும்
இந்த்ரியங்கள் ஆகிற குதிரைகளைக் கடிவாளம் பிடித்து இழுப்பது போல் அடக்குபவர் -ஸ்ரீ சங்கரர் –

சிறந்த நவ க்ரஹங்களை உடையவர் -சிறந்த சோம பாத்ரங்கள் உள்ளவர் -சிறந்தவர்களை ஏற்றுக் கொள்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

———————————————————————-

767-நிக்ரஹ –
அர்ஜூனனது வீரத்தை எதிர்பாராமல் தாம் செய்த சாரத்யத்தினாலேயே எதிரிகளை அடக்கியவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

எல்லாவற்றையும் தம் வசத்தில் அடக்கி வைத்து இருப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

அசுரர்களை அழிப்பவர்-ஸ்ரீ சத்ய சந்தர் –

———————————————————————-

768-வ்யக்ர-
அர்ஜூனன் விரோதிகளை அடக்குவதில் அவன் யுத்தம் செய்யும் வரை  பொறுத்திராதவர்-ஸ்ரீ பராசர பட்டர் –

பக்தர்கள் வேண்டுவனவற்றைக் கொடுப்பதில் துடிப்பு உள்ளவர் –அழிவில்லாதவர்-ஸ்ரீ சங்கரர் –

அவ்யக்ர-கலக்கம் இல்லாதவர் -வ்யக்ர -தம் முன்னே கருடனை உடையவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

————————————————————–

769-நைக ஸ்ருங்க –
புத்தியினால் வழி சொல்வது -சாரதியாக இருப்பது -ஆயுதம் எடுப்பது இல்லை என்று சொல்லி எடுப்பது -முதலிய பல
வழிகளால் பகைவர்களுக்குப் பல துன்பங்களை ஏற்படுத்தியவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

நான்கு வேதங்களைக் கொம்பாக உடையவர் -ஸ்ரீ சங்கரர் –

ஸ்ரீ வ்ருஷ ரூபத்தில் அநேக கொம்புகள் உள்ளவர் –
ஸ்ரீ வராஹ திருவவதாரத்தில் ஒரே கொம்புள்ள பரம புருஷனாக இருந்தவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

——————————————

770-கதாக்ரஜ-
கதன் என்பவனுக்கு முன் பிறந்தவர் -கண்ணன் -ஸ்ரீ பராசர பட்டர் –

மந்த்ரத்தினால் முன்னே ஆவிர்ப்பவிப்பவர் —
நிகதம் -மந்த்ரங்களை விளக்கமாக ஓதுவது -நி கேட்டு கத அக்ரஜர்-மந்த்ரத்தினால் முன்னே ஆவிர்ப்பவிப்பவர் – -ஸ்ரீ சங்கரர் –

ஸ்ரீ கிருஷ்ணாவதாரத்தில் கதன் என்பவனுக்கு முன் பிறந்தவர் —
அகதாக்ராஜா -என்று அந்தணர்களுக்கு ரோகம் இல்லாமல் செய்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

——————————————————————

771-சதுர்மூர்த்தி –
பலராமன் -வஸூ தேவன் பிரத்யும்னன் அநிருத்தன் என்று யதுகுலத்திலும் நான்கு மூர்த்திகளை உடையவர்
-ஸ்ரீ கண்ணனாகிய விபவத்திலும் அதற்கு மூலமான வ்யூஹத்தை நினைவு ஊட்டுகிறார்- ஸ்ரீ பராசர பட்டர் –

வெண்மை செம்மை பசுமை கருமை ஆகிய நான்கு நிறங்களோடு கூடிய மூர்த்திகள் உள்ளவர் -விராட்
ஸ்வரூபம் ஸூ த்ராத்மா -அவ்யாக்ருதம் துரீயம் என்கிற நான்கு உருவங்களுடன் இருப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

விஸ்வ தைச்ச ப்ராஜ்ஞ திரிய என்னும் நான்கு ரூபங்கள் உள்ளவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

—————————————————————–

772-சதுர்ப்பாஹூ-
வ்யூஹத்திற்கு மூலமான பர ஸ்வரூபம் ஆகிய நான்கு திருக் கைகளோடு தேவகியிடம் பிறந்தவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

நான்கு கைகள் உள்ளவர் -என்ற திரு நாமம் வாஸூ தேவருக்கே உரியது-ஸ்ரீ சங்கரர் –

நான்கு தோள்கள் உள்ளவர் -முக்தி அடைந்தவர்களை நான்கு தோள்கள் உள்ளவர்களாகச் செய்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-

———————————————————–

773-சதுர் வ்யூஹ-
விபவத்திலும் வ்யூஹத்தில் போலே ஆறு குணங்களும் நிரம்பியவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

நான்கு பிரிவுகளை உடைய வ்யூஹத்தை உடையவர் -ஸ்ரீ சங்கரர் –

நான்கு வித வ்யூஹங்கள் உள்ளவர் -கேசவன் முதலிய இருபத்து நான்கு ரூபங்களுள் கேசவன் முதலிய ஆறு –
த்ரிவிக்ரமன் முதலிய ஆறு -சங்கர்ஷணன் முதலிய ஆறு -நரசிம்ஹன் முதலிய ஆறு ஆக நான்கு வகை வ்யூஹங்கள் கொண்டவர் –
சதுர் பாஹூச் சதுர் வ்யூஹ -என்ற ஒரே திருநாமம் என்றும் சொல்லுவர் – -ஸ்ரீ சத்ய சந்தர் –

—————————————————————————-

774-சதுர் கதி –
உபாசிப்பவர்கள் செய்யும் பக்தியின் ஏற்றத் தாழ்வுகளுக்கு ஏற்ப நான்கு வகை பயன்களைக் கொடுப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

நான்கு வர்ணங்களுக்கும் நான்கு ஆச்ரமங்களுக்கும் ஆதாரமாக இருப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

ஆர்த்தன் -ஜிஜ்ஞாஸூ -அர்த்தார்த்தி -ஞானி -என்ற நான்கு வகை அதிகாரிகளால் பற்றப் பெறுபவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-

——————————————————————

775-சதுராத்மா –
உபாசகர்களின் ஏற்றத் தாழ்வுகளுக்கு ஏற்ப ஜாக்ரத் ஸ்வப்ன ஸூஷுப்தி துரீயம் என்னும் நான்கு நிலைகளிலும்
நான்கு உருவங்களாக ஸ்தூலமாகவும் ஸூஷ்மமாகவும் விளங்குபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

ஆசை வெறுப்பு முதலியவை இல்லாமையினால் சிறந்த மனம் உள்ளவர் –
மனம் புத்தி அஹங்காரம் சித்தம் ஆகிய நான்கு உருவங்களாக இருப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

ஜீவர்கள் அவரவர் யோக்யதைக்கு ஏற்றபடி தர்ம அர்த்த காம மோஷங்களில் மனம் செல்லும்படி தூண்டுபவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

————————————————————

776-சதுர் பாவ –
இந் நான்கு வ்யூஹங்களிலும் உலகத்திற்கு பிரயோஜனமான நான்கு செய்கைகள் உள்ளவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

தர்மம் அர்த்தம் காமம் மோஷம் என்னும் நான்கு புருஷார்த்தங்களுக்கும் காரணமாக இருப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

பிராமணர் ஷத்ரியர் வைஸ்யர் சூத்ரர் ஆகிய நான்கு வர்ணங்களை உண்டாக்குபவர் -ஸ்ரீ சத்ய சந்தர் —

————————————————————

777-சதுர் வேதவித் –
நான்கு வேதங்களை அறிந்தவர்களுக்கும் தம் மகிமை என்னும் பெரும் கடலில் ஒரு துளி அளவே தெரியும்படி இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

நான்கு வேதங்களின் பொருள்களை உள்ளபடி அறிந்தவர்-ஸ்ரீ சங்கரர் –

நான்கு வேதங்களை அறிந்தவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

——————————————————-

778-ஏகபாத்-
இந்த யதுகுலத்தில் பிறந்த கண்ணன் பகவானின் ஓர் அம்சத்தின் அவதாரம் -என்றபடி
ஒரு பாகத்தினால் திருவவதரித்து இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

உலகனைத்தும் தம் ஒரு பாகத்தில் அடங்கி இருக்கப் பெற்றவர் -ஸ்ரீ சங்கரர் –

பிரதான ரஷகனாய் எப்போதும் அசைவுள்ளவர்-
அனைத்து பூதங்களையும் தம்மில் ஒரு அம்சமாகக் கொண்டவர் என்றும் கூறுவார் -ஸ்ரீ சத்ய சந்தர் –

—————————————————-

779-சமாவர்த்த –
வ்யூஹ அவதாரங்களாகவும் விபவ அவதாரங்களாகவும் பலமுறை திரும்பி வந்து கொண்டு இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

சம்சார சக்கரத்தை நன்கு சுழற்றுபவர் -ஸ்ரீ சங்கரர் –

எல்லா இடத்திலும் சமமாக இருப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

—————————————————–

780-நிவ்ருத்தாத்மா –
கிருபையினால் இப்படி உலகோடு சேர்ந்து இருந்தாலும் இயற்கையில் எதிலும் சேராத தனித்த மனமுடையவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

அநிவ்ருத்தாத்மா -எங்கும் நிறைந்து இருப்பவர் ஆதலின் ஒர் இடத்திலும் இல்லாமல் போகாதவர் –
நிவ்ருத்தாத்மா -விஷயங்களில் இருந்து திருப்பட்ட மனமுடையவர் -ஸ்ரீ சங்கரர் –

அநிவ்ருத்தாத்மா -அழியாத தேஹம் உள்ளவர் -அயோக்யர் செய்யும் யஜ்ஞங்களில் இருந்து விலகிய மனமுடையவர் —
நிவ்ருத்தாத்மா -அனைத்து விஷயங்களிலும் மனத்தைச் செலுத்துபவர் — ஸ்ரீ சத்ய சந்தர் –

———————————————————

781-துர்ஜய –
தேவரும் மனிதரும் தம் சாமர்த்தியத்தினால் வசப்படுத்த முடியாதவர் –துர்லபமாய் இருத்தல் -ஸ்ரீ பராசர பட்டர்-

வெல்லப்பட முடியாதவர் -ஸ்ரீ சங்கரர் –

வெல்ல முடியாதவர் -துக்கத்தை வெல்ல அருள் புரிபவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

———————————————————–

782-துரதிக்ரம-
அவருடைய திருவடிகள் அன்றி வேறு கதி இல்லாமையினால் யாருக்கும் தாண்டிப் போக முடியாதவர்-ஸ்ரீ பராசர பட்டர் –

பயம் காரணமாக சூரியன் முதலியோர் தம் கட்டளையை மீற முடியாதபடி இருப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

துக்கத்தைத் தாண்ட உதவுபவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

——————————————————————–

783-துர்லப –
வேறு ஒன்றில் மனம் வைத்தவனுக்கு ஜனார்த்தனர் கிடைப்பது அரிது -என்றபடி கிடைப்பதற்கு அரியவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

கிடைக்க வரிதான பக்தியால் அடையப் பெறுவர்-ஸ்ரீ சங்கரர் –

கிராமப்பட்டு அடைய வேண்டியவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

———————————————————————

784-துர்கம-
கண்ணில் குறை உள்ளவர்கள் மத்யான்ன சூர்யனைக் கண் கொண்டு பார்க்க முடியாதது போல் அடைவதற்கு அரியவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

சிரமப்பட்டு அறியப் பெறுபவர் -ஸ்ரீ சங்கரர் –

துர்கம -அடைவதற்கு அரியவர் -அதுர்கம -தமோ குணம் அற்றவர்களால் அறியப் பெறுபவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

—————————————————————-

785-துர்க-
அவித்யை முதலிய மறைவுகள் கோட்டை போலே மூடிக் கொண்டு இருப்பதனால் பிரவேசிக்க முடியாதவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

பல இடையூறுகள் இருப்பதால் அடைவதற்குக் கடினமாக இருப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

அசுரர்களுக்குத் துன்பத்தை அளிப்பவர்-ஸ்ரீ சத்ய சந்தர் –

—————————————————————

786-துராவாச –
அவித்யை முதலியவற்றின் மறைவினால் தம் இருப்பிடம் யாருக்கும் எட்டாதாக இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

யோகிகளால் யோகத்தில் மிகவும் சிரமத்தோடு மனத்தில் தரிக்கப் பெறுபவர் -ஸ்ரீ சங்கரர் –

தீய ஒலி உள்ளவர்களை இருட்டில் தள்ளுபவர் -ஸ்ரீ சத்ய சந்தரர் –

————————————————————–

787-துராரிஹா –
புத்தாவதாரம் -கெட்ட வழியில் செல்பவர்களை வேத மார்க்கத்தில் செல்லாமல் தடுப்பது முதலிய வழிகளால் கெடுத்தவர் –
இவனை அடைய வேண்டும் என்ற எண்ணம் இல்லாத பாவிகள் விஷயத்தில் என்பதை தெரிவிக்க புத்தாவதாரம் -ஸ்ரீ பராசர பட்டர் –

கெட்ட வழியில் செல்லும் அசுரர் முதலியவர்களை அழிப்பவர்-ஸ்ரீ சங்கரர் –

தீய பகைவர்களை நன்கு அழிப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

—————————————————————-

788-ஸூ பாங்க –
இவர் நம்பத் தகுந்தவர் என்று அசுரர்கள் ஏமாறுவதற்காக மயக்கும் அழகிய இருவம் கொண்டவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

அழகிய அங்கங்கள் உடையவராக தியானிக்கப் பெறுபவர் -ஸ்ரீ சங்கரர் –

மங்களகரமான அங்கங்கள் உள்ளவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

—————————————————————-

789-லோக சாரங்க –
உலகோர் கொண்டாடும் வகையில் போகம் மோஷம் ஆகிய இரண்டு வழிகளையும் அறிந்து உபதேசம் செய்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

உலகங்களிலுள்ள சாராம்சங்களை க்ரஹிப்பவர்-ஸ்ரீ சங்கரர் –

ஸ்ரீ வைகுண்டம் முதலிய உலகங்களை அளிப்பவர் -அறிவாளிகள் விளையாடும் இடமாக இருப்பவர் –
லோக சாரமான தன்னைக் கொடுப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

————————————————-

790-ஸூ தந்து-
சாந்த வேஷத்தை ஏறிட்டுக் காண்பிப்பதாகிய அசுரர்களைக் கவரும்  வலையை யாரும் தாண்ட முடியாத
உறுதி யுள்ளதாக வைத்து இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

விஸ்தாரமான உலகத்தை உடையவர் -ஸ்ரீ சங்கரர் –

நான்முகன் முதலான மங்கள கரமான சந்ததி உள்ளவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

—————————————————-

791-தந்து வர்த்தன-
இப்படிப் பாவப் பற்றுகள் என்னும் சிறு நூல் இழைகளினால் சம்சாரம் என்னும் கயிற்றைப் பெருகச் செய்பவர்-ஸ்ரீ பராசர பட்டர் –

பிரபஞ்சத்தை விருத்தி செய்பவர் -அழிப்பவர்-ஸ்ரீ சங்கரர் –

த்ரௌபதிக்காக நூல் இழைகளாலான வஸ்த்ரத்தைப் பெருகச் செய்தவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

————————————————————-

792-இந்த்ர கர்மா –
சரண் அடைந்த இந்திரன் முதலியோருக்காக இச் செயல்களைச் செய்தவர் -ஸ்ரீ பராசர பட்டர்-

இந்திரனைப் போன்ற செய்கையை உடையவர் -உலகங்களுக்கு ஈஸ்வரர் -ஸ்ரீ சங்கரர் –

விருத்திரனை அழித்தது-முதலிய இந்திரனுடைய செயல்களுக்குக் காரணமானவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

—————————————————————–

793-மஹா கர்மா –
சரண் அடைந்தவர்களைக் காப்பதற்கும் துஷ்டர்களைத் தண்டிப்பதற்கும் பரம காருணிகரான தாம் இப்படிச்
செய்ததனால் இம் மோசச் செயல்களும் சிறந்தவைகளாக இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர்

ஆகாயம் முதலிய மஹா பூதங்களைப் படைப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

உலகப் படைப்பு முதலிய பெரிய செயல்களை உடையவர் -ஜீவனாக இல்லாதவர் -விதிக்கு வசம் ஆகாதவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

——————————————————————

794-க்ருதகர்மா –
அசுரர்கள் ஏமாறுவதற்காக அவர்களுடைய நாஸ்திக ஆசாரங்களைத் தாமும் அனுஷ்டித்தவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

செய்ய வேண்டியதைச் செய்து முடித்தவராதலின் ஆக வேண்டுவது ஒன்றும் இல்லாதவர் –
தர்மம் என்னும் கர்மத்தைச் செய்தவர் -ஸ்ரீ சங்கரர் –

பூரணமான செயல் உள்ளவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

———————————————————–

795-க்ருதாகம –
அந்தச் செயல்களை ஸ்திரப் படுத்துவதற்க்காக புத்தாகமம் ஜைனாகமம் நுதலிய சமய நூல்களைச் செய்தவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

வேதத்தை வெளிப்படுத்தியவர் -ஸ்ரீ சங்கரர் –

வேதங்களைப் படைத்தவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

——————————————————

796-உத்பவ –
மோஷத்தை உபதேசம் செய்பவர் போல் காட்டிக் கொண்டதால் உலகைக் கடந்தது போல் இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

சிறந்ததான அவதாரங்களைத் தமது விருப்பத்தினால் செய்பவர் –எல்லாவற்றுக்கும் காரணம் ஆதலால் பிறப்பு இல்லாதவர் -ஸ்ரீ சங்கரர் –

சம்சாரத்தை அல்லது படைப்பைத் தாண்டியவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

———————————————————

797-ஸூந்தர –
அதற்காக கண்ணைக் கவரும் அழகுடையவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

எல்லோரைக் காட்டிலும் பேர் அழகு உள்ளவர் -ஸ்ரீ சங்கரர் –

அழகு உள்ளவர் -அழகிய சங்கு உள்ளவர் -ஸூந்தன் என்னும் அசுரனை உபஸூந்தன் என்பனைக் கொண்டு அழித்தவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

——————————————————–

798-ஸூ ந்த –
அவ்வடிவு அழகினால் அசுரர்களுடைய மனங்களை நன்கு மெதுப்படுத்துபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

ஈரம் தயை உள்ளவர் -ஸ்ரீ சங்கரர் –

சுகத்தைக் கொடுப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தரர் –

————————————————————-

799- ரத்ன நாப –
புலமையை நடிப்பதற்காக திரண்ட வயிறும் ரத்தினம் போலே அழகிய நாபியும் யுடையவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

ரத்னம் போல் அழகிய நாபி உள்ளவர் -ஸ்ரீ சங்கரர் –

ரத்ன நாப -புருஷ ரத்னமான பிரமனை நாபியிலே உடையவர் –
அரத்ன நாப -பகைவரான அசுரர்களை துன்புறுத்துபவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-

—————————————————————

800- ஸூ லோசன –
இதயத்தை மயக்கும் அழகிய திருக் கண்கள் உள்ளவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

அழகிய கண் அல்லது ஞானம் உள்ளவர்-ஸ்ரீ சங்கரர் –

அழகிய இரு கண்கள் உடையவர் –மேன்மையான பார்வை யுள்ளவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

———————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பராசர பட்டர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –