Archive for March, 2015

பெரிய திருமொழி -திவ்யார்த்த தீபிகை -8-4-விண்ணவர் தங்கள் பெருமான் திரு மார்வன்-

March 31, 2015

இத் திருமொழியும் பிராட்டி அவஸ்தையாய் செல்லுகிறது –
தலையிலே பூ வாடி -மதுவும் சுவறிப் போய் இருந்தாலும் வண்டுகள் பழைய வாசனையால் வர
உனக்கு என்ன யுணவு யுண்டு இங்கு -பழையபடி பூவும் மதுவும் யுண்டாகும் படி செய்யப் பாராய்
திருக்கண்ண புரத்து எம்பெருமான் திரு அபிஷேகத்தின் மேல் சாத்திக் கொண்டு இருக்கிற திருத் துழாயிலே  படிந்து
அங்கு உள்ள பரிமளத்தை இங்கே கொண்டு வந்து ஊது –
பிறகு இங்கு உனக்கு உண்ணக் கிடைக்கும் என்கிறாள் பரகால நாயகி –
கெண்டை ஒண் கணும் துயிலும் என் நிறம் பண்டு பண்டு போல் ஒக்கும் மிக்க சீர்த் தொண்டர் இட்ட பூந்துவளின் வாசமே
வண்டு கொண்டு வந்து ஊதுமாகில் – 11-1-9- மேலே அருளிச் செய்வர்
அவன் சம்ச்லேஷம் கிடைக்கப் பெறா விடிலும் அவனுடைய சம்பந்தம் உடைய வஸ்து ஏதேனும் கிடைக்கப் பெற்றாலும் தரிப்புண்டாகுமே
மாணிக்க வாசகர் இத் திரு மொழி ஒற்றி -திருக் கோத்தும்பி -பதிகம் 20 பாடல்கள் கொண்டது பாடி இருக்கிறார்
அங்கு கோத்தூம்பீ -முடிவுடன் உள்ளது -இங்கே கோற்றும்பீ-என்று உள்ளது –

ஸ்வாபதேசம்
சப்தாதி விஷய நிஸ் சாரத்தையும் —பகவத் அனுபவ நிரதிசய சாரத்தையும்–சிஷ்யருக்கு அறிவிக்கிறார்

———————————————————————————————-

விண்ணவர் தங்கள் பெருமான் திரு மார்வன்
மண்ணவ ரெல்லாம்   வணங்கும் மலி புகழ் சேர்
கண்ண புரத் தெம்பெருமான் கதிர் முடி மேல்
வண்ண நறுந்துழாய் வந்தூதாய்  கோற்றும்பீ –8-4-1-

கோல் தும்பீ-கொம்புகளில் திரிகின்ற தும்பியே –
தும்பி-வண்டுகளில் ஒரு சாதி -மரக் கொம்புகளிலே மதுவுக்காகத் திரியும்
மது உண்ண விருப்பம் யுண்டாகில் எனக்கு சத்தையை யுண்டாக்கப் பார்
நித்ய சூரிகள் நிர்வாஹகன் -அணுக முடியுமா என்று கூசாதே -திரு மார்வன் –
புருஷகார பூதை அருகில் இருக்க கூசாதே சென்று புகுரலாம்
பரத்வ நிலைய விட்டு இங்கே சந்நிஹிதன் ஆனான் -அனைவரும் அணுகி அருள் பெறவே –
தெய்வத் தண் அம் துழாய் தாராயினும் தழை யாயினும் தண் கொம்பதாயினும் கீழ் வேராயினும்
நின்ற மண் ஆயினும் கொண்டு வீசுமினே -திருவிருத்தம் -52-
எவ்வகையாலும் தரிப்பும் உவப்பும் யுண்டாகுமே
வண்ண நறுந்துழாய் வந்தூதாய்  –
செவ்வி மாறாதே பரிமளத்தை உடைத்தாய் இருக்கிற திருத் துழாயிலே  படிந்து அங்குத்தை
பரிமளத்தை கொடுவந்து இங்கே ஊது –

———————————

வேத முதல்வன் விளங்கு புரி நூலன்
பாதம் பரவிப் பலரும் பணிந்தேத்தி
காதன்மை செய்யும் கண்ண புரத் தெம்பெருமான்
தாது நறுந்துழாய் தாழ்ந்தூதாய் கோற்றும்பீ -8-4-2-

கோலால் நிரை மேய்த்து ஆயனாய்க் குடந்தை கிடந்த குடமாடி
நீலார் தண் அம்  துழாய் கொண்டு என்னெறி மென் குழல் மேல் சூட்டீரே -நாச்சியார் -13-2-
தலையிலே சூட்ட அபேஷித்தாள் சூடிக் கொடுத்த சுடர் கொடி
இப்பரகால நாயகி அங்கன் அன்றிக்கே துழாயில் படிந்து வந்து ஊதினால் போதும் என்கிறாள்  –

————————-

விண்ட மலரெல்லாம் ஊதி நீ என் பெறுதி
அண்ட முதல்வன் அமரர்கள் எல்லாரும்
கண்டு வணங்கும் கண்ண புரத் தெம்பெருமான்
வண்டு நறுந்துழாய் வந்தூதாய் கோற்றும்பீ -8-4-3-

திறந்து கிடந்த வாசல் எல்லாம் நுழைந்து திரியுமாவை போலே விண்ட மலர்கள் தோறும்
ஊதித் திரிவதனால் என்ன பேறு பெறப் போகிறாய்
நித்ய சூரிகளும் வந்து வணங்கும் திருக் கண்ணபுரத்தில் சந்நிதி பண்ணி அருளும் பெருமான் திருத் துழாய் மாலையிலே
தங்கி இருந்து அங்கு உள்ள பரிமளத்தை இங்கு கொணர்ந்து ஊதுவாயாகில் ஸ்த்ரிமாயும் அநல்பமாயும் உள்ள மதுவைப் பருகலாமே-

வண்ணந்திரிவும் மனங்குழையும் மானமிலாமையும் வாய் வெளுப்பும்
உண்ணலுறாமையும் உள் மெலிவும் ஓத நீர் வண்ணன் என்பான் ஒருவன்
தண் அம்  துழாய் என்னும் மாலை கொண்டு சூட்டத் தணியும் -நாச்சியார் -12-7–என்று
சூட்டினால் தான் நோய்கள் தீரும் என்றால் சூடிக் கொடுத்த பிராட்டி
இங்கு அங்கன் அன்றிக்கே துழாயில் படிந்து வந்து ஊதினால் போதும் என்கிறாள் காண்மின்
அண்ட முதல்வன் -அண்டங்கட்கு முதல்வன் –
அண்டம் எனப்படும் பரம பதத்துக்கு முதல்வன் என்றுமாம் –

———————–

நீர் மலிகின்றதோர் மீனாய் ஓர் ஆமையுமாய்
சீர் மலின்ற தோர் சிங்க வுருவாகிக்
கார்மலி வண்ணன் கண்ண புரத் தெம்பெருமான்
தார்மலி தண்டுழாய் தாழ்ந்தூதாய் கோற்றும்பீ –8-4-4-

வானோர் அளவும் முது முந்நீர் வளர்ந்த காலம் வலியுருவின் மீனாய் வந்து வுயந்துய்யக் கொண்ட
தண் தாமரைக் கண்ணன் -விரஹப் பெரும் கடலில் வீழ்த்தி வருத்துகின்றான்
ஆமையாய் இருந்து மந்தர மலையைத் தாங்கி தேவர்களுக்கு அமுதம் அளித்தவன் எனக்கு
சோதி வாயமுதம் தராது வஞ்சனை செய்கின்றான்
நரசிம்ஹ மூர்த்தியாய் பேரருள் செய்த பிரான் எனக்கு சிறிதும் அருள் செய்கின்றிலன்
நான் உடம்பு வெளுத்து வருந்திக் கிடக்க காள மேகத்தில் காட்டிலும் பொலிந்து தோன்றுகின்றான்
இங்கே எளியனாய் சேவை சாதித்து அருளியும் பாவியேனான  என் திறத்தில் அந்த எளிமையை காட்டு கிறிலன்
என்னை துடிக்க விட்டு சர்வ ரஷகன் என்று தோற்றுமாறு தனித் திருத் துழாய் மாலை சாத்தி உள்ளான்
அதிலே படிந்து பரிமளத்தை முகர்ந்து ஊதுவாய் ஆகில் உய்ய விரகு யுண்டு-

—————————-

ஏரார் மலரெல்லா மூதி நீ என் பெறுதி
பாரார் உலகம் பரவப் பெரும் கடலுள்
காராமையான கண்ண புரத் தெம்பெருமான்
தாரார் நறுந்துழாய் தாழ்ந்தூதாய் கோற்றும்பீ -8-4-5-

தேவர்கட்கு இரங்கி கூர்மாவதாரம் செய்து அருளி அவர்களுடைய ஜீவனத்தை நிர்வஹித்து அருளினவன்
அத் தேவர்களைப் போலே பிரயோஜநாந்தரத்தை நெஞ்சாலும் நினையாதே
அவனைப் பரம பிரயோஜனமாக நினைத்து இருக்கிற என்னுடைய ஜீவனத்தை நிர்வஹியாது இருக்கின்றான் -இருக்கட்டும்
அவன் இங்கே இருக்கும் இருப்பிலே அணிந்து இருக்கும் மாலையில் உள்ள திருத் துழாயில் நீ சென்று படிந்து
அதன் பரிமளத்தை கொணர்ந்து ஊது
உய்யப் பெறுவேன்  -நீயும் வாழப் பெறுவாய்
ஏரார் மலர் எல்லாம் -கண்ட மலர்கள் -வெறும் நிறம் கண்டு பிரமிக்காமல் என்றபடி-

——————————–

மார்வில் திருவன்  வலனேந்து சக்கரத்தன்
பாரைப் பிளந்த பரமன் பரஞ்சோதி
காரில் திகழ் காயா வண்ணன் கதிர் முடி மேல்
தாரில் நறுந்துழாய் தாழ்ந்தூதாய் கோற்றும்பீ –8-4-6-

புகுவதற்கு அதிகாரியோ என்று மயங்காதே
பெரிய பிராட்டி நித்ய வாசம் செய்து சேர்ப்பாள்
பிராப்தி பிரதிபந்தகங்கள் இருந்தாலும் கை கழலா நேமியான் நம் மேல் வினை கடிவான் –
மகா வராஹமாகி பூமியை கோட்டால் குத்திக் கொணர்ந்த வீறுடையவன்
உதவுவதே ஸ்வரூபம்
உதவாதே இருந்தாலும் விட ஒண்ணாத வடிவு அழகை யுடையவன்
அவனுடைய ஆதி ராஜ்ய ப்ரகாசகமான திரு அபிஷேகத்தின் மேல் உள்ள செவ்வித் துழாயிலே படிந்து ஊது என்கிறாள்-

——————————–

வாமனன் கற்கி மதுசூதனன் மாதவன்
தார் மன்னு தாசரதியாய தட மார்வன்
காமன் தன தாதை திருக் கண்ண புரத் தெம்பெருமான்
தாம நறுந்துழாய் தாழ்ந்தூதாய் கோற்றும்பீ –8-4-7-

தன் உடைமையைப் பெற தானே யாசகனாய் சென்றவன்
விரோதிகளை கிழங்கு எடுக்க சங்கல்பித்துக் கொண்டவன்
கல்கி அவதாரம் செய்து மண்ணின் பாரம் நீக்கப் போகிறவன்
மது கைடபர் அசுரர்களை மாய்த்தவன்
இக் குணங்களுக்கு  அடி ஸ்ரீ யபதியாகையாலே
ரஷிதா ஜீவலோகச்ய ஸ்வ ஜனச்ய ச ரஷிதா -ரஷணத்துக்கு தனி மாலை சூடி இருப்பவன்
ஸ்ரீ ராம ஸ்ரீ கிருஷ்ண அவதார முகத்தாலும் ரஷகத்வத்தை வெளியிட்டு அருளி இங்கே
நித்ய சந்நிதி செய்து அருளி சர்வ ரஷகனாய் இருக்குமவன்
இப்பொழுது என்னுடைய ரஷணத்தில் சோர்வு அடைந்து உள்ளான் -இருக்கட்டும்
அவன் மாலையில் திருத் துழாயில் படிந்து ஊது
தாமம் -மாலை

——————————-

நீல மலர்கள் நெடு நீர் வயல் மருங்கில்
சால மலரெல்லாமூதாதே  வாளரக்கர்
காலன் கண்ண புரத் தெம்பெருமான் கதிர் முடி மேல்
கோல நறுந்துழாய் கொண்டூதாய் கோற்றும்பீ –8-4-8-

ராஷச குலத்துக்கு மிருத்யுவாய் திருவவதரித்து இலங்கை பாழாளாக படை பொருது அந்த வீரப்பாடு தோன்ற
நித்ய சந்நிதி பண்ணி இருப்பவனுடைய
திரு அபிஷேகத்தின் மேல் உண்டான திருத் துழாயிலே அவஹாகித்து வந்து ஊதாய்-

—————————-

நந்தன் மதலை நிலமங்கை நற் துணைவன்
அந்த முதல்வன் அமரர்கள் தம் பெருமான்
கந்தங்கமழ்  காயா வண்ணன் கதிர் முடி மேல்
கொந்து நறுந்துழாய் கொண்டூதாய் கோற்றும்பீ -8-4-9-

நந்தகோபன் திருக்குமாரன் -மண்ணின் பாரம் நீக்கி அருளி
துஷ்ட ஜனங்களை நிரசித்து
இனியாகிலும் பிறந்து நம்மை அடைவார்களோ என்னும் நப்பாசையால் மீண்டும் மீண்டும் சிருஷ்டித்து அருளி –
அயர்வறும் அமரர்கள் அதிபதியுமானவன்
சர்வ கந்த -நித்ய ஸூகந்த வாசிதன் -காயாம்பூ நிறம் யுடையவன்
அவன் கதிர் முடி மேல் கொந்து நறுந்துழாய் கொண்டு ஊது
கொந்து -கொத்து
கந்தம் கமழுதம்-காயாவுக்கு இட்ட விசேஷணம் அன்று -காயா வண்ணனுக்கு இட்டது-

—————————

வண்டமரும் சோலை வயலாலி நன்னாடன்
கண்ட சீர் வென்றிக் கலியன் ஒலி மாலை
கொண்டல் நிற வண்ணன் கண்ண புரத்தானைத்
தொண்டரோம் பாட நினைந்தூதாய்   கோற்றும்பீ -8-4-10-

தொண்டர்களுக்கு இத் திருமொழியைப் பாடுதலே ஸ்வயம்  பிரயோஜனம்
ஆழ்வார் தமது குறை தீரப் பெற்றால் தொண்டர்கள் எல்லாரும் தம் குறை தீரப் பெற்றதாக நினைப்பார்கள்
ஆதலால் அந்த மகிழ்ச்சியினால் இத் திரு மொழியை உவந்து பாடுவார்கள்
அப்படி  செய்விக்க வேணும் என்று தும்பி போலாரான பாகவதர்களை வேண்டுகிறபடி –
இவர் ஒருவரும் ஆஸ்வஸ்தர் ஆகவே எல்லாரும் ஆஸ்வஸ்தர் காணும் –

————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P .B .A .ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

பெரிய திருமொழி -திவ்யார்த்த தீபிகை -8-3-கரையெடுத்த சுரி சங்கும் கன பவளத்து எழு கொடியும்-

March 31, 2015

கீழே இரண்டு  திரு மொழிகள் திருத் தாயார் பாசுரமாக சென்றது –
இத் திருமொழி மகள் பாசுரமாக செல்கிறது -கை வளை கொள்வது தக்கதே -என்று தாயார் சொல்லக் கேட்டு
உணர்ந்து தனது கையிலே வளைகளை  காணாமல் வளை இழந்தனே என்று
ஒரு கால் சொன்னது போலே ஒன்பதின் கால் சொல்லி கதறுகின்றாள் –

கீழ் பிறந்த  மோஹமானது போய் அல்பம் அறிவு பிறந்து-அது தான் ஆஸ்வாசத்துக்கு உடலாகி தவிர்ந்து
தான் படுகிற வ்யசனத்தை அனுபாஷிக்கைக்கு உடலாக அத்தாலே இரவல் வாயாலே -தன் இழவைச் சொல்லுகை அன்றிக்கே
தானே தன் இழவுகளைச் சொல்லி கூப்பிடுகிறாளாய் இருக்கிறது –
சம்ஸ்லேஷித்து அனுபவிக்கப் பெறாமையால் பிரிவாற்றாமைக்கு   பரக்கப் பாசுரம் இடுகிற  படி –

————————————————–

கரையெடுத்த சுரி சங்கும் கன பவளத்து எழு கொடியும்
திரை எடுத்து வரு புனல் சூழ் திருக் கண்ண புரத்து உறையும்
விரையெடுத்த  துழாய் அலங்கல் விறல் வரைத் தோள் புடை பெயர
வரையெடுத்த பெருமானுக்கு இழந்தேன் என் வரி வளையே –8-3-1-

கரை எடுத்த சுரி சங்கும் -கோஷத்தை யுடைத்தாய் வளைந்த சங்குகளையும் –
காவேரி நன் நதி பாயும் கணபுரம் -சங்குகளையும் பவளக் கொடியையும் திரட்டிக் கொண்டு வருகின்றதாம்
பசுக்களை ரஷித்த கோபாலன் நம்மை கை விட மாட்டான் என்று அவன் பக்கல் ஆசை வைத்ததற்கு பலன் வளைகளை இழந்தது  தான்-

—————————————————-

அரி விரவும் முகில் கணத்தால் அகில் புகையால் வரையோடும்
தெரிவு அரிய மணி மாடத் திருக் கண்ண புரத் துறையும்
வரி அரவின் அணைத் துயின்று மழை மதத்த சிறு தறு கண்
கரி வெருவ மருப்பு ஒசித்தார்க்கு இழந்தது என் கன வளை –8-3-2-

அரி விரவும் முகில் கணத்தால்-கறுப்பானது கலந்து பரவப் பெற்ற மேகக் கூட்டங்களாலும்
சிறு தறு கண்  கரி -சிறுத்து வட்டணித்த கண்களை யுடைய குவலயா பீடம் –
வடிவிலே பெருமைக்கு ஈடாக பெருத்து இருக்கை அன்றிக்கே ஜாதி உசிதமாம் படி சிறுத்து
க்ரௌர்யம் எல்லாம் தோற்றும்படியாய் பார்க்கிற கண்களை உடைத்தாய் இருந்துள்ள குவலயா பீடம் -என்றவாறு
தறுகண்மை -அஞ்சாமைக்கு என்று கொண்ட ஒரு சொல்லாய் -செறு-என்று பாடம் கொள்ள வேண்டும்
ஏஷ நாராயண ஸ்ரீ மான் ஷீரார்ணவ நிகேதன –நாக பர்யங்கம் உத்ஸ்ருஜ்ய ஹ்யாகதோ மதுராம் புரீம் –
குவலயா பீடம் மருப்பு ஒசித்த அந்த  மிடுக்கு இன்றைக்கும் விளங்கும் படி நித்ய சந்நிதி
பண்ணி அருளுபவன் அன்றோ என்று ஆசை வைத்தேன் -நன்றாக வளைகள் இழக்கும் பலன் பெற்றேனே-

——————————————————

துங்க மா மணி மாட நெடு முகட்டின் சூலிகை போம்
திங்கள் மா முகில் துணிக்கும் திருக் கண்ண புரத் துறையும்
பைங்கண் மால் விடை அடர்த்துப் பனி மதி கோள் விடுத்துகந்த
செங்கண் மால் யம்மானுக்கு   இழந்தேன் என் செறி வளையே —8-3-3-

ரிஷபங்கள் ஏழையும் அடக்கி நப்பின்னை
சந்த்ரனுடைய ஷயரோகம் தீர்த்து அருளியவனும் இவனே
இன்னும் இது போன்ற அனுக்ரஹம் செய்து அருள இங்கே நித்ய சந்நிதி பண்ணி அருளும்
இவன் இடம் ஆசை கொண்டதுக்கே நான் பெற்ற பலன் -வளையல்களை இழந்ததே-

————————————————————–

கணம் மருவும் மயில் அகவும் கடி பொழில் சூழ் நெடு மறுகில்
திணம் மருவும் கன மதிள் சூழ் திருக் கண்ண புரத் துறையும்
மணம் மருவும் தோள் ஆய்ச்சி யார்க்கப்  போய் உரலோடும்
புணர் மருதம் இற   நடந்தாற்க்கு இழந்தேன் என் பொன் வளையே –8-3-4-

கட்டுண்டு  அசக்தனாய் இருந்து சௌலப்யம் காட்டி அருளினவன்
அப்படி கட்டுண்டு தளர் நடை இடும் பருவத்திலும் சகடாசுரர்களை-பொய் மாய மருதமான அசுரரை -என்றபடி  முடித்த வலிமை என்னே
என்று ஈடுபட்டு இருந்ததே காரணமாக வளையல்களை இழந்தேனே
மணமருவு  தோளாய்ச்சி -சர்வ கந்த வஸ்து அநவரதம் தோளைக் கட்டிக் கொண்டு கிடப்பான் இறே-

—————————————————————

வாய் எடுத்த மந்திரத்தால் அந்தணர் தம் செய் தொழில்கள்
தீ எடுத்து மறை வளர்க்கும் திருக் கண்ண புரத் துறையும்
தாய் எடுத்த சிறு கோலுக்கு உளைந்தோடி தயிர் உண்ட
வாய் துடைத்த மைந்தனுக்கு இழந்தேன் என் வரி வளையே-8-3-5-

தயிர் களவு கண்டு மறைக்கத் தெரியாமல் முகத்திலும் உடம்பிலும் தடவிக் கொண்ட மௌக்யத்துக்க்கு தோற்று வளை இழந்தேன்
உண்ட சுவட்டை நாவினால் நக்கி மறைத்துக் கொள்ளலாம்படி இருக்க களவு நன்கு வெளிப்படும் படி
தடவிக் கொண்டது பேதமையின் கார்யம் அன்றோ
என்று இக் குணத்தில் ஈடுபட்டு உள் குழைந்து வளை இழந்தாள் பரகால நாயகி –

—————————————

மடல் எடுத்த நெடும் தாளை மருங்கு எல்லாம் வளர் பவளம்
திடல் எடுத்து சுடர் இமைக்கும் திருக் கண்ண புரத் துறையும்
அடல் அடர்த்து அன்று இரணியனை முரண் அழிய வணி யுகிரால்
உடல் எடுத்த பெருமானுக்கு இழந்தேன் என் ஒளி வளையே–8-3-6-

ஆஸ்ரிதர்களைப் பரிந்து காத்து அருளுபவன் அன்றோ -இதற்காக அன்றோ இங்கே சந்நிதி பண்ணி அருளுவது
இவன் மேல் ஈடுபட்டு  ஸ்ரீ ப்ரஹ்லாத ஆழ்வான் போலே கிருபைக்கு ஆளாகாமல் வளை இழந்தேன் காண்மின் –
பவளங்கள் மேட்டு நிலங்களில் மூடப் படர்ந்து நெருப்பு போலே ஜ்வலிக்கின்றதாம் திருக் கண்ணபுரத்தில்-

————————————–

வண்டமரும் மலர்ப்புன்னை வரி நீழல் அணி முத்தம்
தெண்திரைகள் வரத் திரட்டும் திருக் கண்ண புரத் துறையும்
எண் திசையும் எழு சுடரும் இரு நிலனும் பெரு விசும்பும்
உண்டு உமிழ்ந்த பெருமானுக்கு இழந்தேன் என் ஒளி வளையே -8-3-7-

சகல பதார்த்தங்களையும் பிரளயம் கொள்ளாத படி திரு வயிற்றிலே வைத்து காத்து அருளினவன் இவன் அன்றோ
இப்படி ஆபத்துக்கு உதவுபவன் என்று நம்பி ஆசை வைத்து வளையல்கள் இழந்து நிற்கிறேன்
எழு கடலும் –என்ற பாடமே முந்துறக் கொள்ளப் பட்டது
எழு சுடரும் -பாடாந்தரம் -இதுவே எங்கும் வழங்கி வருகிறது-
எழு கடலும்-எழு வகைப் பட்ட கடல்களையும்
எழு சுடரும் -என்ற பாடமான போது எழா நிற்கிற ஆதித்யாதிகளையும் நினைத்தது ஆகிறது –

———————————————————

கொங்கு மலி கருங்குவளை கண்ணாகத் தெண் கயங்கள்
செங்கமல முகமலர்த்தும் திருக் கண்ண புரத் துறையும்
வங்கமலி தடங்கடலுள் வரி அரவின் அணைத் துயின்ற
செங்கமல நாபனுக்கு இழந்தேன் என் செறி வளையே —8-3-8-

ஆர்த்தருடைய கூக்குரல் கேட்டு கடுக வந்து ரஷிக்க ஷீராப்தி நாதனாக  கண் வளர்ந்து அருளுபவன் இவனே
திரு நாபி கமலம் கொண்டு சிருஷ்டித்து காத்து அருளும் பெருமான் நம்மைக் கை விடான் என்று
நம்பி ஆசை வைத்து பலனாக வளையல்கள் இழந்தேன்-

————————–

வாராளும்  இளங் கொங்கை  நெடும் பணைத் தோள் மடப்பாவை
சீராளும் வரை மார்பன் திருக் கண்ண புரத் துறையும்
பேராளன் ஆயிரம் பேர் ஆயிரம் வாய் அரவணை மேல்
பேராளர் பெருமானுக்கு இழந்தேன் என் பெய் வளையே –8-3-9-

பெரிய பிராட்டியார் நித்ய வாசம் செய்யப் பெற்ற ஸ்ரீ நிறைந்த மார்பன்
இங்கே வந்து சந்நிஹிதன் ஆனதால் ஸூலபன் ஆனவன்
சஹாச்ர நாமங்களால் ப்ரதிபாதிக்கப் பட்ட திவ்ய  குண சேஷ்டிதங்கள் யுடையவன்
நித்ய அனுபவ ஹர்ஷத்தால் ஆயிரம் வாய்களாகப் பணைக்கப் பட்ட திரு அநந்த ஆழ்வான் மீது சயனித்து அருளுபவன்
பெருமை யுடையார் என்ற பெயர் பெற்ற எல்லாரிலும் பெருமை பெற்றவன்
பெண்ணீர்மை  யீடழிக்கும் இது தமக்கோர் பெருமையே -நாச்சியார் -8-1-என்றதை கணிசியாமல்
தனது பெருமைகளுக்கு பொருந்தாத படி என் வளைகளை கவர்ந்தான் என்கிறாள்
பெய் வளை-அணிந்து கொண்டு இருந்தவளை
பேராளர் பெருமான் -பேராளர் -மகான்கள் -அவர்களுக்கும் மஹான் இவன் என்றபடி –

————————–

தேமருவு பொழில் புடை சூழ் திருக் கண்ண புரத் துறையும்
வாமனனை  மறி கடல் சூழ் வயலாலி வள நாடன்
காமரு சீர்க் கலிகன்றி கண்டுரைத்த தமிழ் மாலை
நா மருவி யிவை  பாட வினையாய நண்ணாவே -8-3-10-

ஸ்ரீ வாமநாவதார சௌலப்ய  சௌசீல்ய சௌந்தர்யாதிகளை  பிரகாசிப்பித்துக் கொண்டு
இங்கே நித்ய வாஸம் செய்து அருளி இருக்கும்
ஸ்ரீ சௌரி ராஜ பெருமாள் விஷயமாக அருளிச் செய்த இத் திரு மொழியை
ஓதி யுணருமவர்கள்-சர்வ பாப விநிர்முக்தர் ஆவார்-

———————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P .B .A .ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

பெரிய திருமொழி -திவ்யார்த்த தீபிகை -8-2-தெள்ளியீர் தேவர்க்கும் தேவர் திருத் தக்கீர்-

March 31, 2015

இத் திரு மொழியும் திருத் தாயார் பாசுரம் –
திருக் கண்னபுரத் தம்மானை நேராக பார்த்து தனது பரிதபாத்தை பேசி -சில பாசுரங்கள் தன்னில் 
தான் நொந்து கொண்டு பேசுவதாக செல்லும் –

ஆழ்வார் யுடைய அளவுகடந்த அபி நிவேசமும் -அவனைப் பிரிந்து மேனி மெலிந்த படியும் அன்யாபதேசத்தாலே அருளிச் செய்கிறார்-

—————————————–

தெள்ளியீர் தேவர்க்கும் தேவர் திருத் தக்கீர்
வெள்ளியீர் வெய்ய விழு நிதி வண்ணரோ
துள்ளுநீர் கண்ணபுரம் தொழுதாள் இவள்
கள்வியோ கை வளை கொள்வது தக்கதே –8-2-1-

ஸ்ரீ சௌரிப் பெருமாளை மடி பிடித்து கேட்கிறாள் திருத் தாயார்
தெள்ளியீர் -மகா விவேஹியாய் இருந்து -சர்வஜ்ஞ்ஞராய் இருந்து -அஜ்ஞ்ஞாநியான நான் உணர்த்த வேண்டி உள்ளதே
தேவர்க்கும் தேவா -உமது மேன்மைக்கு தகுமோ
திருத் தக்கீர் -ஒரு பெண்ணை விடாமல் மார்பில் கொண்டு இவள் கை வளையை கொள்ள வேண்டுமோ
வெள்ளியீர்-என்னை வெள்ளுயிர் ஆக்க வல்ல -பரம பவித்ரர் அன்றோ
யோர்த்தே சுசிஸ் சஹி சுசிர் ந ம்ருத்வாரி சுசிச் சுசி -பிறர் பொருளைக் கவராதவனே பரி சுத்தன்
மண்ணையும் நீரையும் கொண்டு பலகால் தேஹத்தை சுத்தி பண்ணுபவன் இல்லையே
வெய்ய -விரும்பத் தக்க -விழு -சிறந்த -வண்ணர் -தன்மை யுடையவர் அன்றோ
ஆசைப் பட்டார் அணைக்க அன்றோ உம்முடைய் திரு மேனி
நிதி அனைவருக்கும் சேம வைப்பு அன்றோ நீர்
தேவரீர் பிறர் உடைமையாய் இருக்க பிறர் உடைமையைக் கைக் கொள்ளலாமோ-ந தே நு ரூபா -ஸ்தோத்ர ரத்னம்

இவள் கள்வியோ -இல்லை இல்லை நீரே-

———————————————————

நீணிலா முற்றத்து நின்றிவள் நோக்கினாள்
காணுமோ கண்ண புரம் என்று காட்டினாள்
பாணனார் திண்ணம் இருக்க   வினி  யிவள்
நாணுமோ நன்று நன்று நறையூரர்க்கே –8-2-2-

ஆசார்ய  ஹிருதயம் -நிலா முற்றம் பிரஜ்ஞ்ஞா பிரசாதம் என்னும் எல்லை நிலம் –
மா முனிகள் வியாக்யானம் -நிலா முற்றம் ஆகிறது -உத்துங்கமாக நின்று சர்வத்தையும் தர்சிப்பைக்கு உறுப்பாக சொல்லப் படுவதாய்
அதிலே நின்ற தர்சித்த அளவிலே காணுமோ கண்ணபுரம் என்று காட்டினாள் என்கையாலே
ததீய விஷயமே பரம பிராப்யம் என்று பிறருக்கும் பிரகாசிக்கும்படி சரம அவதியான புருஷார்த்த ஜ்ஞானம் என்கை-
அவனைக் காட்டாமல் அவன் இருந்த தேசத்தைக் காட்டினதால் ததீய விஷயம் -என்றதாயிற்று
இதோ பாருமின் கை எடுத்து கும்பிடுமின் என்று பன்னி உரைக்க மாட்டாமல்
காணுமோ கண்ணபுரம் என்று மட்டும் சொல்லி மற்றதை ஹஸ்த முத்ரையால் பூரிக்கின்றாள்
காணும் ஒ -இது அன்றி கண் படைத்த பயன் இத்தையும் விலக்குவார் உண்டாவதே-

பாணன் -பாடுமவன்-பிரணய ரோஷம் தவிர்த்து சேர்ப்பிக்கும் ஆச்சார்யன்
நன்று நன்று நறையூர்க்கே-மீட்கப் பார்க்கும் நாம் தோற்றோம் -முதலிலே தனது வலையிலே அகப்படுத்திக் கொண்ட
நறையூர் நம்பி கார்யமே வென்றது-

———————————————-

அருவி சோர் வேங்கடம் நீர்மலை என்று வாய்
வெருவினாள் மெய்யம் வினவி இருக்கின்றாள்
பெருகு சீர்க் கண்ண புரம் என்று பேசினாள்
உருகினாள் உள் மெலிந்தாள் இது என் கொலோ -8-2-3-

திரு மலை திரு நீர்மலை திரு மெய்யம் திருக் கண்ணபுரம் என்றே வாய் வெருவிக் கொண்டே இருக்கின்றாள்
பேசினவாறே நீர்ப்பண்டமாய் உருகுகின்றாள்
நெஞ்சு தளர்கின்றாள்
இப்படி இவள் ஆவதற்கு என் பாபமே தவிர வேறு என்ன ஹேது  என்கிறாள் –

—————————————————-

உண்ணும் நாளில்லை உறக்கமும் தான் இல்லைப்
பெண்மையும் சால நிறைந்திலள்  பேதை தான்
கண்ணனூர் கண்ணபுரம் தொழுங்கார்க் கடல்
வண்ணர் மேல் எண்ணம் இவட்கு இது என் கொலோ -8-2-4-

பேதைப் பருவத்திலே உண்ணுவதும் உறங்குவதும் இல்லை
உறக்கமும் தான் இல்லை -என்றது உண்ணாமல் இருந்தாலும் உறங்காமல் இருப்பது அரிது என்பதால்
அஞ்சலி செய்வதே காயிக வியாபாரம்
திருமேநியைச் சிந்திப்பதே மானச வியாபாரம்-

————————————————

கண்ணனூர் கண்ணபுரம் தொழும் காரிகை
பெண்மை என் தன்னுடை யுண்மை யுரைக்கின்றாள்
வெண்ணெய் உண்டு ஆப்புண்டு வண்ணம் விளம்பினால்
வண்ணமும் பொன்னிறம் ஆவது ஒழியுமே –8-2-5-

பெண்மை என் தன்னுடை -பாடமே வ்யாக்யானத்துக்கு சேரும்
பெண்மையும் தன்னுடை -பாடம் சேராது
பெண்மை -ஸ்த்ரீத்வம்
அதாகிறது ஏதேனும் ஓர் அவஸ்தை பிறந்தாலும்
உயிர் தோழிக்கும் கூட மறைக்கும் படி இறே இருப்பது –
அவளும் இவளுடைய வ்யாபாரங்களைக் கண்டு –
இவளுக்கு ஓடுகிற தசை இதுவாகாதே -என்று அறியும் இத்தனை இறே
ஆயிருக்கப் பெற்ற தாயான எனக்கும் வாய் விடா நின்றாள்
இவளுக்கு என்ன பெண்மை -என்கிறாள் –
இவள் உண்மை உரைக்கின்றாள் பெண்மை என் -என்று அந்வயம்
வடவரை நின்றும் வந்து இன்று கணபுரம் இடம் கொள்வது யாம் என்று பேசினாள் – என்று மேல் பாட்டில் சொல்லுகையாலே –
வெறுப்புக்கு சொல்லிய வார்த்தைகள் எரு போலே ஆனதே
இத்தனை சௌசீல்ய சௌப்லய குணங்களா நன்றாகத்தான் ஆசைப் பட்டோம்
அவனுடன் சம்ஸ்லேஷம் கிடைக்கட்டும் இல்லாமல் போகட்டும் ஆசைப் பட்டதே பாக்கியம் என்று இருக்கிறாள் –
அது தன்னிலும் அகப்பட்டு கட்டுண்ணும்படி எளியனாகப் பெற்றோமே -என்ற
வ்யபதானங்களைக் கேட்ட மாத்ரத்திலே
அவ் உடம்போடு அணைந்தால் பிறக்கும் ஆஸ்வாசங்கள் அடைய பிறந்து சந்துஷ்டை யானாள் –
அவாப்த சமஸ்த காமனானவன்
ஒருத்தி உடைமையை ஆசைப் படுவதாம்
சர்வ சக்தனானவன் களவிலே இழிவதாம்
அது தன்னிலும் அகப்பட்டு கட்டுண்ணும்படி எளியன் ஆவதாம்
இனி நமக்கு ஒரு குறை உண்டோ -என்கிறாள் –

கற்றினம் மேய்க்கலும் மேய்க்கப் பெற்றான் —பாவிகாள் உங்களுக்கு ஏச்சுக் கொலோ –
திவ்ய கீர்த்தி செவிப்பட்ட மாத்ரத்திலே கலவி பெற்றாலே போலே உகக்கிறாள்-

—————————————————–

வடவரை நின்றும் வந்தின்று கணபுரம்
இடவகை கொள்வது யாம் என்று பேசினாள்
மடவரல் மாதர் என் பேதை யிவர்க்கிவள்
கடவதென் கண் துயில் இன்று இவர் கொள்ளவே -8-2-6-

அனுகாரத்தாலே அருளும் பாசுரம்
இவருக்கு இதுவும் அர்ச்சையிலே நடக்குமே
வடக்குத் திருமலையில் இருந்து கீழை வீடுக்கு வந்து நித்ய சந்நிதி பண்ணிய சௌரி ராஜ பெருமாள்  நானே
மிக சிறுமி -அழகி -இவளை இவன் இப்பாடு படுத்துவது தகுமோ -திருத் தாயார் அநு பாஷித்து பின் அருளுகிறாள்

————————————————-

தரங்க நீர் பேசிலும் தண் மதி காயினும்
இரங்குமோ வெத்தனை நாள் இருந்து எள்கினாள்
துரங்கம் வாய் கீண்டு கந்தானது தொன்மையூர்
அரங்கமே எனபது இவள் தனக்காசையே –8-2-7-

தரங்க நீர் பேசினும் -கடல் கோஷித்தாலும்
தண் மதி காயினும் -நிலா காய்தலும்
விரஹிகளுக்கு இளைப்பை யுண்டாக்குமாயினும் இவள் இளைக்க கில்லள்-எத்தனை நாள் உருண்டது எள்கினாள்
மடவரல் மாதர் என் பேதை என்றாலும் -பல பல ஊழிகள்  ஆயிடும் -ஒரு பகல் ஆயிரம் ஊழியாலோ -போலே –
அன்றிக்கே
இரங்குமோ -இரங்கும் -ஒ -அந்தோ எத்தனை நாள் இருந்து கடல் கோஷத்தாலும் மதி சுடுவதாலும் கஷ்டப் படுகிறாள் என்றுமாம் –
திருவரங்கத்தை வாய் வெருவிக் கொண்டே இருப்பதே இவள் ஆசை -என்கிறாள் திருத் தாயார்-

——————————————-

தொண்டெல்லாம் நின்னடியே தொழுது உய்யுமா
கண்டு தான் கண்ண புரம் தொழப் போயினாள்
வண்டுலாம் கோதை என் பேதை மணி நிறம்
கொண்டு தான் கோயின்மை செய்வது தக்கதே -8-2-8-

அப்ராப்த ஸ்தலத்திலே செங்கோல் நடாத்தும் அவன் அன்றோ
கார்க் கடல் வண்ணர் மேல் எண்ணம் இவட்கு இது  என் கொலோ -என்கையாலே இவள் சிந்தை அவன் பக்கம் என்றும்
கண்ணபுரம் என்று பேசினாள்  உருகினாள் -என்கையாலே பேச்சும் அவன் திறத்திலே-என்றும்
கண்ணபுரம் தொழும் -என்கையாலே காயிக வியாபாரமும்
ஆக -சிந்தையாலும்  சொல்லாலும் செய்கையாலும் அவரையே விஷயீ கரித்து இருக்கின்றாள்
நான்கு வகை அதிகாரிகளும் உபாசித்து பேறு பெற்றதை கண்ட இவள் தானும் தகுதியாக தொழுது உய்யலாம் என்று கண்ணபுரம் தொழுகிறாள்
வண்டுலாம் கோதை என் பேதை -மதுவின் நசையால் வண்டுகள் மலர் சூடிய இவள் கூந்தலில் மொய்க்க அஞ்சும் பருவம் -பேதை
மணி நிறம் கொண்டு தான் -தன்னையே வணங்குவாருக்கு தன்னையே ஒக்க அருள் செய்ய வேண்டி இருக்க இவளது மணி நிறம் கொள்வது தக்கதோ
கோயின்மை செய்வது தக்கதோ -அரசர்களே வழி பறிப்பார்களா
கோயின்மை -கேட்பார் அற்ற அநீதிச் செயல்-

—————————————————-

முள் எயிற்று ஏய்ந்திலக் கூழை முடி கொடா
தெள்ளியள்  என்பதோர்   தேசிலள்  என் செய்கேன்
கள்ளவிழ் சோலைக் கணபுரம் கை தொழும்
பிள்ளையை பிள்ளை என்று எண்ணப் பெறுவரே–8-2-9-

தாய்க்கு அன்பு மிகுதியால் இளமையாகவே தோற்றுகிறாள்
செய்ய நூலின் சிற்றாடை செப்பனுடுக்கவும் வல்லள்  அல்லள்-பெரியாழ்வார் -3-7-1-
வாயில் பல்லும் எழுந்தில மயிரும் முடி கூடிற்று இலள்–மாயன் மா மணி வண்ணன் மேல் இவள் மால் உறுகின்றாளே -பெரியாழ்வார் -3-7-2-
கொங்கை இன்னம் குவிந்து எழுந்தில -பெரியாழ்வார் -3-7-3-
முலையோ முழு முற்றும் போந்தில மொய்ப் பூங்குழல் குறிய கலையோ அரையில்லை நாவோ  குழறும்  -திருவிருத்தம் -60
என் செய்கேன் -நியமிப்பேனோ-அனுவர்த்திப்பேனோ-விண்ணுளாரிலும் சீரியள் -என்று கை கோப்பி வணங்குவேனோ
நியமிக்காமல் அனுவர்த்திப்பதே -கை தொழுவதே என்கிறாள்
விளக்கொளியை மரகதத்தை திருத் தண்காவில் வெக்காவில் திருமாலைப் பாடக் கேட்டு
வளர்த்ததனால் பயன் பெற்றேன் வருக என்று மடக் கிளியை கை கூப்பி வணங்கினாளே -திரு நெடும் தாண்டகம்
கூழை -தலை மயிர்
தெள்ளியள்  -தெளிந்து வார்த்தை சொல்ல வல்லவள்
எண்ணப் பெறுவரே -நெஞ்சாலே நினைத்தாலும் பிராயச் சித்தம் செய்து கொள்ள வேண்டும் -என்றவாறு-

—————————————-

கார்மலி கண்ண புரத்து எம் அடிகளை
பார்மலி மங்கையர் கோன் பரகாலன் சொல்
சீர்மலி பாடல் இவை பத்தும் வல்லவர்
நீர்மலி வையத்து நீடு நிற்பார்களே  -8-2-10-

நீர்மலி வையத்து நீடு நிற்பார்களே   –
கடல் சூழ்ந்த பூமியிலே சிரகாலம் வாழப் பெறுவார்கள்  –
இது கற்றார்க்கு பலம் சம்சாரத்தில் இருக்கையோ -என்ன
பரம பதத்தில் தெள்ளியீர் இல்லையே தெள்ளியீர் உள்ளது இங்கேயே அன்றோ
பாவோ  நான்யத்ர கச்சதி -என்று திருவடி ராம குணங்களைக் கேட்டு அத்தாலே பூர்ணனாய் –
அத்தேசத்தே இருந்தால் போலே தெள்ளியீரை இங்கே பாடக் கேட்டு பூரணராய் இருக்கப் பெறுவர்கள் –

—————————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P .B .A .ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

பெரிய திருமொழி -திவ்யார்த்த தீபிகை -8-1-சிலை இலங்கு பொன் ஆழி திண் படை தண்டு ஒண் சங்கம் என்கின்றாளால்-

March 31, 2015

கீழே இனிய பாசுரங்களால் அவனை அனுபவித்தார்

நினைத்த படியே -பாஹ்ய சம்ச்லேஷம் கிடைக்கப் பெறாமையாலே தளர்ந்து -திருத் தாயார் பாசுரமாக இத் திரு மொழி செல்லுகிறது –
திருக்கண்ண புரத்தானைக் கண்டு அதன்  அடியாக விளைந்து இருக்க வேண்டும் என்று வினவ வந்தார் இடம் சொல்கிறாள்-

திருக் கண்ணபுரத்தம்மான் யுடைய வைலஷண்யமும் -அது அடியாக ஆழ்வாருக்கு பிறந்த வைலஷண்யமும் காட்டும் இத் திருமொழி –

———————————————————–

சிலை இலங்கு பொன் ஆழி திண் படை தண்டு  ஒண் சங்கம்  என்கின்றாளால்
மலை இலங்கு தோள் நான்கே மற்று அவனுக்கு எற்றே காண் என்கின்றாளால்
முலை இலங்கு பூம் பயலை முன்போட அன்போடு இருகின்றாளால்
கலை இலங்கு மொழியாளர் கண்ண புரத்தம்மானை கண்டாள் கொலோ 8-1-1-

திவ்ய பூஷணங்கள் போலே திவ்ய ஆயுதங்கள் தோற்ற -நாயகி சொன்னதை தாயார் மீண்டும் சொல்கிறாள் –
அவன் மேல் அன்பு யுண்டான பின்பு பசலை நிறம் யுண்டாகவும் ஆகுமே
கலை இலங்கு மொழியாளர் -சாஸ்திரம் இவர்கள் பேச்சிலே விளங்கும்-

——————————————————

செருவரை முன்னா சறுத்த சிலையன்றோ கைத்தலத்து என்கின்றாளால்
பொருவரை முன் போர் தொலைத்த பொன்னாழி மற்றொரு கை என்கின்றாளால்
ஒருவரையும் நின்னொப்பார் ஒப்பிலா வென்னப்பா வென்கின்றாளால்
கருவரை போல் நின்றானைக் கண்ண புரத் தம்மானைக் கண்டாள் கொலோ  –8-1-2-

ஆசறுத்த -சீக்கிரமாக தொலைத்த –
சம்ஸ்லேஷத்துக்கு பிரதி பந்தகங்களை தொலைக்க பரிகரங்கள் கொண்டு இருந்தும் விஸ்லேஷப் படவோ –
அரையர் ஐதிகம்
ஒருவரையும் நின் ஒப்பார் ஒப்பிலா என்னப்பா என்கின்றாள் –
மின்னப் பொன் மதிள் சூழ் இரு விண்ணகர் சேர்ந்த வப்பன் தன் ஒப்பாரில்லா அப்பன் -திருவாய் மொழி
தாமரை போல் மின்னிடையாள் நாயகனை விண்ணகருள் பொன்மலையை -என்றும்
கணபுரத்து பொன் மலை போல் நின்றவன் -என்றும் பெரிய திரு மடல் -பொன் மலையாக இருவரையும் பேசிய நயம் –

———————————————————-

துன்னு மா மணி முடி மேல் துழாய் அலங்கல் தோன்றுமால் என்கின்றாளால்
மின்னு மா மணி மகர குண்டலங்கள் வில் வீசும் என்கின்றாளால்
பொன்னின் மா மணியாரம் அணியாகத் திலங்குமால் என்கின்றாளால்
கன்னி மா மதிள் புடை சூழ்  கண்ண புரத் தம்மானைக் கண்டாள் கொலோ –8-1-3-

சேஷித்வ ஸூசகமான திருத் துழாய் மாலை அணிந்துள்ளான்
திரு முக மண்டல ஸோபைக்கு கை விளக்கு -மணி மகர குண்டலங்கள்
கன்னி மா மதிள் புடை சூழ்  கண்ண புரத் தம்மானைக் கண்டாள் கொலோ –
சேமித்து வைத்த வஸ்துவை இவள் ஒருத்தியுமே அறிந்து கொண்டாள் போலே இருந்தது –
உள்ளிருக்கிற வஸ்துவின் சீர்மைக்குத் தக்கபடி அரணாகப் போரும்படி இருப்பதாய்
ஒருவராலும் அழிக்க ஒண்ணாத   படியான பெருமையை உடைய மதிளாலே
சூழப் பட்ட திருக் கண்ண புரததிலே வந்து சந்நிஹிதனானவனைக் கண்டாள் போலே இருந்தது –

—————————————————————–

தாராய தண் துளப வண்டுழுத வரை மார்பன் என்கின்றாளால்
போரானைக் கொம்பொசித்த புட்பாகன் என்னம்மான் என்கின்றாளால்
ஆரானும் காண்மின்கள் அம்பவளம் வாயவனுக்கு என்கின்றாளால்
கார்வானம் நின்றதிரும் கண்ண புரத் தம்மானைக் கண்டாள் கொலோ -8-1-4-

ஹிதம் சொல்லி விலக்கப் பார்க்கும் நீங்கள் அவனுடைய அழகிய பவளம் போன்ற திரு அதரத்தை
ஒரு கால் சேவித்த பின் சொல்மின்
அது கண்டார்க்கு விட்டுப் போகலாய் இருந்ததோ
நான் புரள வேண்டிய திரு மார்பிலே வண்டுகள் புரளுகின்றனவே –
அவற்றுன் பாக்கியம் என்னே  -என்னுடைய பாபம் என்னே –

————————————————-

அடித் தலமும் தாமரையே அங்கைகளும் பங்கயமே என்கின்றாளால்
முடித் தலமும் பொற் பூணும்  என் நெஞ்சத்து உள்ளகலாது என்கின்றாளால்
வடித்தடங்கண் மலரவளோ வரையாகத் துள்ளிருப்பாள்  என்கின்றாளால்
கடிக்கமலம் கள்ளுகுக்கும்கண்ண புரத் தம்மானைக் கண்டாள் கொலோ –8-1-5-

தாமரைப் பூக்கள் அவயவங்கள் -திரு அபிஷேகமும் அதில் சாத்தின திரு ஆபரணங்களும்
நெஞ்சை விட்டு அகலாமல் உள்ளனவே
புருஷகார பூதை நித்ய வாஸம் பண்ணி இருக்கவும் நான் இழக்கவோ
பிராட்டி மேல் விழுந்து நித்ய அனுபவம் பண்ணும் படியான பரம ரசிகன் அன்றோ
அவனையோ நான் இழப்பது –

—————————————————–

பேராயிரம் உடைய பேராளன் பேராளன் என்கின்றாளால்
ஏரார் கன மகரக் குண்டலத்தன் எண் தோளன் என்கின்றாளால்
நீரார் மழை முகிலே நீள் வரையே ஒக்குமால் என்கின்றாளால்
காரார் வயல்மருவும் கண்ண புரத் தம்மானைக் கண்டாள் கொலோ -8-1-6-

என் ஒருத்தியைக் கை விட்டு பெரியோம் என்ற திரு நாமம் இழக்கப் போகிறானே
அவனது வடிவு அழகு நம்மை மறந்து பிழைக்க விட வில்லையே
வெறும் புறத்திலே  ஆலத்தி வழிக்க வேண்டும்படியான திரு மேனி நீர் கொண்டு எழுந்த காள மேகமோ பச்சை மலையோ –

————————————————————————————————

செவ்வரத்த உடை ஆடை யதன் மேலோர் சிவ்ளிகைக் கச்சென்கின்றாளால்
அவ்வரத்த வடியிணையும் அங்கைகளும் பங்கயமே என்கின்றாளால்
மைவளர்க்கும் மணியுருவம் மரகதமோ மழை முகிலோ என்கின்றாளால்
கைவளர்க்கும் அழலாளர் கண்ண புரத் தம்மானைக் கண்டாள் கொலோ –8-1-7-

தாமரையே திரு அவயவங்கள் என்று மீண்டும் சொல்லி
திரு மேனி விஷயத்தில் சங்கை -மை வளர்க்கும் மணி யுருவம் மரகதமோ மழை முகிலோ –
அவனது உடை வாய்ப்பிலே தோற்று வாய் வெருவுகிறாள்
இங்கு உள்ளார் நித்ய அக்னி ஹோத்ரிகள் –

———————————————–

கொற்றப் புள் ஓன்று ஏறி மன்றூடே  வருகின்றான் என்கின்றாளால்
வெற்றிப் போர் இந்திரர்க்கும் இந்திரனே யொக்குமால் என்கின்றாளால்
பெற்றக்கால் அவனாகம் பெண் பிறந்தோம் உய்யோமோ என்கின்றாளால்
கற்ற நூல் மறையாளர் கண்ண புரத் தம்மானைக் கண்டாள் கொலோ -8-1-8-

வெள்ளைச் சுரி சங்கொடு ஆழி எனது தாமரைக் கண்ணன் என் நெஞ்சினூடே புள்ளைக் கடாகின்ற ஆற்றைக் காணீர் -நம் ஆழ்வாருக்கு –
இங்கே இவருக்கு திரு வீதியூடே கருடவாஹன   சேவை சாதித்து அருளுகிறான்
தாஹித்தவர்கள் இருந்த இடத்திலே சாய்கரம் கொண்டு சாய்ப்பாரைப் போலே வீதியூடே வந்து சேவை சாதிக்கிறான்
வெற்றிப் போர் -வெறும் போர் பாட பேதங்கள்
இந்திரர்க்கும்  இந்த்ரன் ஒக்கும்-வ்ருத்தாசுர வதம் பின்பு மகேந்தரன் பேர் பெற்றானே
பெண்ணாய் பிறந்தவர்கள் அணைந்து வாழ அன்றோ அவனுக்கு திரு மார்பு-

—————————————————

வண்டமரும் வனமாலை மணி முடி மேல் மண நாறும் என்கின்றாளால்
உண்டிவர் பால் அன்பு எனக்கு என்று ஒரு காலும் பிரிகிலேன் என்கின்றாளால்
பண்டிவரைக் கண்டறிவது எவ் ஊரில் யாம் என்றே பயில்கின்றாளால்
கண்டவர் தம் மனம் வழங்கும் கண்ண புரத் தம்மானைக் கண்டாள் கொலோ –8-1-9-

பாவனா முதிர்ச்சியால் பண்டு இவரை எங்கேயோ பார்த்தது போலே உள்ளதே எங்கே என்கிறாள் –
பண்டிவரைக் கண்டறிவது எவ் ஊரில் யாம் என்றே பயில்கின்றாளால்-
முதல் நாள் கண்டால் ஸ்வா பாவிகமான ஸ்வாமித்வத்தாலும் முகத்தில் தண்ணளி யாலும் ஆக
முன்பே கண்டறியும் முகமாய் இருந்ததீ   – எவ் ஊரில் தான் கண்டது -என்னும்படி இருக்கும் –
சிர பரிசயம் பிறந்தால் பின்பு -முன்பு ஓர் இடத்திலும் இவனைக் கண்டு அறியோம் – யென்னும்படியாய் இருக்கும் –
நித்ய அபூர்வமான விஷயம் -என்றபடி
சொன்ன இரண்டு அர்த்தத்தையும் அது  காட்டுமோ –
பயில்கின்றாளால் -என்றது கண்டாயே – எற்றைக்கும் இதுவே வார்த்தை அன்றோ – இப்படியாக வேண்டாவோ -என்று ஜீயர் –
அப்பொழுதைக்கு அப்பொழுது ஆராவமுதமான விஷயம் என்பதால்
கண்டவர் தமது மனத்தை தாமே வழங்கும்படி ஆகர்ஷகத்வம் யுடையவன்-

—————————————————————-

மாவளரும் மென்னோக்கி மாதராள் மாயவனைக் கண்டாள் என்று
காவளரும் கடி பொழில் சூழ் கண்ண புரத் தம்மானைக் கலியன் சொன்ன
பாவளரும் தமிழ் மாலை பன்னிய நூல் இவை ஐந்தும் ஐந்தும் வல்லார்
பூவளரும் கற்பகம் சேர் பொன்னுலகில் மன்னவராய் புகழ் தக்கோரே –8-1-10-

திரு நாட்டை ஆள வல்லார்  ஆவார் -பயன் சொல்லி நிகமிக்கிறார்
பூவளரும் கற்பகம் சேர் பொன்னுலகில் மன்னவராய் புகழ் தக்கோரே  –
உபரிதன லோகங்களுக்கு அடைய
கற்பகத்தை சிறப்பாகச் சொல்லக் கடவர்கள் –
பரமபதத்தில் -ஆண்மின்கள் -என்றபடியே
தாங்களே நிர்வாஹகராய் -இவ்வருக்கு உள்ளார் அடங்கலும் சாத்த்யர் ஆவார்கள் –
பொன்னுலகில் மன்னராகி -வான் இளவரசு வைகுண்ட குட்டன் வாசுதேவன் என்றபடியே
நித்ய முக்தர்களை தலைவராக்கி தான் இளவராசாய் இருப்பான்-

————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P .B .A .ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

பெரிய திருமொழி -திவ்யார்த்த தீபிகை -7-10-பெரும் புறக் கடலை யடல் எற்றினைப் பெண்ணை யாணை-

March 30, 2015

திருக் கண்ண மங்கை திருப்பதி மங்களா சாசன திருப்பதிகம் –

கீழ் திரு மொழியிலே -அருளாய் -அருள் புரியே -என்று பிரார்த்தித்த ஆழ்வாருக்கு
தன் படிகளை விசதமாகக் காட்டிக் கொடுத்து அருளி
ஆழ்வீர் திருக் கண்ண மங்கையிலே வாட்டும் பூர்ண அனுபவம் பண்ணலாம் -என்று நியமிக்க
அப்படியே அங்கே போந்து பரம ஆனந்தம் பொலிய பேசுகிறார் –

ஆருரோஹ ரதம்  ஹ்ருஷ்டஸ் சத்ருக்க்ன சஹிதோ பலீ  –
பெரிய ஆசை உடன் வந்த ஸ்ரீ பரத ஆழ்வானுக்கு
நினைத்து வந்த கார்யத்தில் செய்தது ஒன்றும் இல்லை –
ஆகிலும் மீண்டு போகிற போது ஹ்ருஷ்டனாய்ப் போனான் இறே-
அப்படியே யாய்த்து இவர் விஷயத்தில் சமாதானம் பண்ணின படியும் —
இத் திருமொழியின் போக்யத்வம் அனுபவ ரசிகர்களுக்கே அனுபவ போக்யமாகும்  –

————————-

பெரும் புறக் கடலை யடல் எற்றினைப் பெண்ணை யாணை எண்ணில் முனிவர்க்கு அருள்
தரும் தவத்தை முத்தின் திரட்கோவையைப் பத்தராவியை நித்திலத் தொத்தினை
அரும்பினை யலரை அடியேன் மனத்தாசையை அமுதம் பொதியின் சுவைக்
கரும்பினைக் கனியைச் சென்று நாடிக் கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே–7-10-1-

பெண்ணை -ஸ்திரீயைப் போலே பாரதந்த்ர்யமே வடிவாய் இருப்பவன்
பெரும் புறக் கடல் புறம் -இடம் -எல்லை இல்லா இடத்தை யுடைய –
அனைத்துக்கும் உறைவிடமாய் இருந்து கம்பீரமாய் –
புறம் -வெளிப்பட்டது என்று கொண்டு பூமியில் வெளிப்பட்ட கடல்களில் விலஷணமாய்-
கடல் போன்றவன் என்னாத கடலாகாவே சொன்னது உவமை ஆகுபெயர்
பெண்ணை ஆணை -அரசன் அந்தபுரத்தில் மனைவிக்கு விதேயனாய் இருந்தாலும்
சீரிய சிங்காசனத்தில் ஆண் புலியாய் இருப்பானே
ஆண் அல்லன் பெண் அல்லன் -என்றது  -திவ்ய ஆத்ம ஸ்வரூபத்தின் உண்மை நிலை –
இங்குச் சொல்வது குணத்தைப் பற்றி
எண்ணில் முனிவர்க்கு அருள் தரும் தவத்தை -முனிவருக்கு தன்னை சிந்திப்பார்க்கு என்றபடி
பத்தர் ஆவியை -பக்தர்களுக்கு தன்னை விட்டு ஜீவிக்க ஒண்ணாதபடி
திரு நின்ற ஊர் பெருமாள் திரு நாமமும் திருக் கண்ண மங்கை பெருமாள் திரு நாமமும் பத்தராவி பெருமாள் –
அரும்பினை யலரை –
இரண்டு அவஸ்தையும் ஒரு காலே சூழ்த்துக் கொடுக்கலாம்படி இருக்கிறவனை –
யுவா குமார –
திருவாய் மொழி -3-1-8- மலராது குவியாது -ஈடு வியாக்யானம் –
அரும்பினை அலறி என்னலாம் படியாய் இருக்கும் -யுவா குமார -என்கிறபடியே ஏக காலத்திலே
இரண்டு அவஸ்தையும் சொல்லலாய் இருக்கை
யௌவனமும் கௌமாரமும் -என்பர் -அது இல்லை –
யுவா அகுமாரா -கௌமாரம் இன்றியே யௌவன மாத்ரமெயாய் யுள்ளவனை
கௌமாரம் கழியத் தக்கதாய் -யௌவனம் வந்து குடி புகத் தக்க தான நடுப்பருவம் என்றபடி
அடியேன் மனத்தாசையை -நித்ய அனுபவமாய் இருந்தாலும் அப்பொழுதைக்கு அப்பொழுது ஆரா வமுதம் –
ஆசைப் பெருக்குக்கு விஷயமாய் இருப்பவன்
அமுதம் பொதி இன் சுவைக் கரும்பினை -அமுதமே நீராகப் பாய்ச்சி சுவை மிக்க கரும்பு போலே இனியன்
கனியை -அப்போதே நுகரலாம்படி பக்குவ பலமாய் இருப்பவன் –

—————————————-

மெய்ந்நலத் தவத்தைத் திவத்தைத் தரும் மெய்யை பொய்யினைக் கையிலோர் சங்குடை
மைந்நிறக் கடலை கடல் வண்ணனை மாலை ஆலிலைப் பள்ளிகொள் மாயனை
நென்னலைப் பகலை யிற்றை நாளினை நாளையாய் வரும் திங்களை யாண்டினைக்
கன்னலைக் கரும்பினிடைத் தேறலைக் கண்ண  மங்கையுள்  கண்டு கொண்டேனே –7-10-2-

மெய்ந்நலத் தவத்தை-விலஷண பக்தி யோகத்தை பிறப்பித்தவன் –
பக்தி யோகத்துக்கு விஷயமாகக் கூடியவன்
திவத்தைத் தரும் மெய்யை-பரமபதத்தை தரவல்ல பிரபத்தி யோகத்தை பிறவிப்பித்தவன் –
அதற்கு இலக்காமவன்
பொய்யினைக் -பக்தி பிரபத்தி இல்லாதார்க்கு ஸ்வரூப ஸ்வ பாவங்கள் அறிய ஒண்ணாது இருக்குமவன்
கையிலோர் சங்குடைமைந்நிறக் கடலை கடல் வண்ணனை-பக்தி பிரபத்தி நிஷ்டர்களுக்கு காட்சி கொடுப்பவன் 
கடல் போலே காம்பீரம் உள்ளவன்
மாலை-சர்வ ஸ்மாத் பரன்
ஆலிலைப் பள்ளிகொள் மாயனை-அகடிகட நா சமர்த்தன் –
நென்னலைப் பகலை யிற்றை நாளினை நாளையாய் வரும் திங்களை யாண்டினைக்-
முக்காலங்களிலும் போக்யதை குன்றாதே  -காலப் பகுதிகளுக்கும் நிர்வாஹகன்
கன்னலைக் கரும்பினிடைத் தேறலைக் -இனிமை தானே வடிவு எடுத்தவன்
கண்ண   மங்கையுள்   கண்டு கொண்டேனே –

——————————-

எங்களுக்கு அருள் செய்கின்ற வீசனை வாசவார் குழலாள் மலி மங்கை தன்னை
பங்கனைப் பங்கில் வைத்து உகந்தான் தன்னைப் பான்மையைப் பனிமா மதி யந்தவள்
மங்குலைச் சுடரை வடமா மலை யுச்சியைநச்சி நாம் வணங்கப் படும்
கங்குலைப்  பகலைச் சென்று   நாடிக் கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே -7-10-3-

ஈஸ்வர அபிமானியான ருத்ரனை திருமேனி ஒரு புறம் தனது பேறாக வைத்து அருளும் சீலவான்
வேறு புகல் அற்ற அடியார் திறத்தில் நிர்ஹேதுக கிருபை பண்ணி அருள்பவன்
சூர்ய சந்த்ரர்களுக்கும்  நியாமகன் -காலப் பகுதிகளுக்கும் நிர்வாஹகன்
திருவேங்கட திருமலையை இருப்பிடமாக கொண்டவன்-

———————————————–

பேய் முலைத்தள நஞ்சுண்ட பிள்ளையைத் தெள்ளியார் வணங்கப் படும் தேவனை
மாயனை மதிள் கோவலிடைக் கழி மைந்தனை யன்றி அந்தணர் சிந்தையுள்
ஈசனை யிலங்கும் சுடர்ச் சோதியை  எந்தையை எனக்கு எய்ப்பினில் வைய்ப்பினைக்
காசினை மணியைச் சென்று நாடிக் கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே –7-10-4-

அந்தர்யாமியாய் இருந்தும் தோஷங்கள் தட்டாமல் உஜ்ஜ்வலனாய் இருப்பவன்
இப்படிப்பட்ட தன்மையைக் காட்டி என்னை ஆட்கொண்டவன்-

தெள்ளியார் -தெளிவான அறிவு பெற்றவர்கள்

————————————————

ஏற்றினை இமயத்துள் எம் மீசனை இம்மையை மறுமைக்கு மருந்தினை
ஆற்றலை யண்டத்தப் புறத்து உய்த்திடும் ஐயனைக் கையில் ஆழி ஓன்று ஏந்திய
கூற்றினைக் குரு மா மணிக் குன்றினைக் நின்றவூர்  நின்ற நித்திலத் தொத்தினைக்
காற்றினைப் புனலைச் சென்று நாடிக் கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே–7-10-5-

திருப் பிரிதியில் எழுந்து அருளி இருக்கும்  ஸ்வாமியும் இவனே
காளை போலே மேணானித்து இருப்பவன்
குருமா மணி -ஸ்ரீ கௌஸ்துபம் -குருமா மணிப்பூண் குலாவித் திகழும் திரு மார்வு -பெரியாழ்வார்
காற்றினை புனலை -பஞ்ச பூதங்களுக்கும் அந்தர்யாமி-

காற்றினைப் -ஸ்வ ஸ்பர்சத்தால் வரும்ஸூகமாய் இருக்கிறவனை —புனலைச் -தாரகம் ஆனவனை –
சென்று நாடிக் கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே-

—————————————-

துப்பனைத் துரங்கம் படச் சீறிய தோன்றலைச் சுடர் வான் கலன் பெய்ததோர்
செப்பினைத் திருமங்கை மணாளனைத் தேவனைத் திகழும் பவளத்தொளி
யொப்பனை யுலகேழினை   யூழியை ஆழி ஏந்திய கையனை யந்தணர்
கற்பினைக் கழுநீர் மலரும் வயல் கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே –7-10-6-

துரங்கம் -குதிரை வடிவாய் வந்த அசுரன் -கேசி
துப்பன் -நினைத்த படி செய்ய வல்ல சமர்த்தன் -சத்ய சங்கல்பன் என்றபடி
செப்பினை -அணி கலன்கள்  வைக்கும் –
செங்கமலக் கழலில் சிற்றிதழ் போல் விரலில் சேர் திகழ் ஆழிகளும் கிண்கிணியும் அரையில்
தங்கிய பொன் வடமும் தாள நன் மாதுளையின் பூவொடு  பொன்மணியும் மோதிரமும் கிறியும்
மங்கல ஐம்படையும்   தோள் வளையும் குழையும் மகரமும் வாளிகளும் சுட்டியும்  -அணிகலன்கள் சீர்மை பெரும் இடம்
சுடர் வான் காலன் -பிராட்டியைச் சொல்லிற்றாக வுமாம் -விவரணம் -திரு மங்கை மணாளன்
தேவனை-பிராட்டியும் தானுமான சேர்த்தியிலே உண்டான ஒத்து மஞ்சளும் செம்பஞ்சிக் குழம்பும்
மாளிகை சாந்தின் நாற்றமுமாயக் கொண்டு திரு மேனியிலே புகர் தோன்ற நின்ற நிலை –

அந்தணர் கற்பினை -கற்பு -நீது நெறிக்கும் கல்விக்கும் பெயர்-

————————————————–

திருத்தனைத் திசை நான்முகன் தந்தையைத் தேவதேவனை மூவரில் முன்னிய
விருத்தனை விளங்கும் சுடர்ச் சோதியை விண்ணை மண்ணினைக் கண்ணுதல் கூடிய
அருத்தனை யரியைப் பரி கீறிய அப்பனை யப்பிலார் அழலாய் நின்ற
கருத்தனைக் களிவண்டு அறையும் பொழில் கண்ண மங்கையுள் கண்டேனே –7-10-7-

திருத்தன்  -பூர்ண திருப்தி யுள்ளவன் -அவாப்த சமஸ்த காமன்
திசைமுகன் –நான் முகன் –என்னாமல் திசை நான்முகன் தமிழ் வழக்கு
அப்பில் ஆர் அழலாய் நின்ற -தண்ணீரில் -படபாக்னி

———————————————

வெஞ்சினக் களிற்றை விளங்காய் வீழக்   கன்று வீசிய வீசனை பேய் மகள் துஞ்ச
நஞ்சு சுவைத்துண்ட தோன்றலைத் தோன்றல் வாளரக்கன் கெடத் தோன்றிய
நஞ்சினை அமுதத்தினை நாதனை நச்சுவார் உச்சியில் நிற்கும் நம்பியைக்
கஞ்சனைத் துஞ்சவஞ்சித்த வஞ்சனைக் கண்ண மங்கையுள் கண்டேனே –7-10-8-

ஆஸ்ரித விரோதிகள் திறத்தில் வெஞ்சினக் களிறு
இராவணன் போல்வாருக்கு விஷம் விபீஷணன் போல்வாருக்கு அமிர்தம்
விரும்பும் அன்பர்க்கு சென்னிக்கு மலர்ந்த பூ -நச்சுவார் உச்சி மேல்
என்னுடை சூழல் உளானே -என் அருகில் இலானே -என் ஒக்கலையானே-என் நெஞ்சினுளானே
என்னுடைத் தோள் இணையானே-என்னுடை நாவினுளானே -என் கண்ணினுளானே-என் நெற்றி உளானே –
என் உச்சி உளானே -திருவாய் -1-9-
தோன்றல் -சிறு பிள்ளையும் -பெரு வீரனும்

—————————————–

பண்ணினைப் பண்ணில் நின்றதோர் பான்மையைப் பாலுள் நெய்யினை மாலுருவாய்   நின்ற
விண்ணினை விளங்கும் சுடர்ச் சோதியை வேள்வியை விளக்கின் ஒளி தன்னை
மண்ணினை மலையை யலைநீரினை மாலை மா மதியை மறையோர் தங்கள்
கண்ணினைக் கண்கள் ஆர அளவும் நின்று  கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே –7-10-9-

பசு வேத்தி சிசுர் வேத்தி வேத்தி கான ரசம் பணி -பசுக்களும் குழந்தைகளும் பாம்பும் கூட அறியும் பண் -ஸ்ப்ருஹணீயம்
பாலுள் நெய்யினை -கரந்த பாலுள் நெய்யே போல் இவற்றுள் எங்கும்
கரந்த சில் இடம் தொறும் இடம் திகழ் பொருள் தொறும் கரந்து எங்கும் பரந்து உளன் –
மாலுருவாய் நின்ற விண்ணினை  -பரமபதம் -த்ரிபாத் விபூதி -நித்ய விபூதி நிர்வாஹகன் –
இந்த பரப்பைத் தெரிவிவிக்கும் விசேஷணம்
மண்ணினை -சர்வம் சஹா-செய்த குற்றங்களைப் பொறுப்பவன்
அலை நீரினை -குஹப் பெருமாள் விதுரர் மாலா காரர் போவார் இடம் பாயும் தண்ணீர் போன்றவன் –
மா மதியை -ததாமி புத்தி யோகம் தம் ஏனமாம் உபயாந்திதே
மறையோர் தங்கள் கண்ணினை -வேறு எங்கும் பட்டி புகாமல் தன்னையே இலக்காக கொண்டு
இருக்கும் படி கண்ணை விட்டுப் பிரியாதவன் –

—————————————————————————————–

கண்ண மங்கையுள் கண்டு கொண்டேன் என்று காதலால் கலிகன்றி யுரை செய்த
வண்ண ஒண் தமிழ் ஒன்பதோடு ஓன்று இவை வல்லராய் யுரைப்பார் மதி யந்தவழ்
விண்ணில் விண்ணவராய் மகிழ்வு எய்துவர் மெய்மை சொல்லில் வெண் சங்கம் ஓன்று ஏந்திய
கண்ண நின் தனக்கும் குறிப்பாகில் கற்கலாம் கவியின் பொருள் தானே –7-10-10-

விண்ணுலகத்தில் தேவர்களே விளங்கி மகிழ்வார்கள்
சொல்லின்பமும் பொருள் இன்பமும் எம்பெருமானையே வணங்கப் பண்ணுமே
கற்கலாம் கவியின் பொருள் தானே
ஸ்வதஸ் சர்வஞ்ஞனாய் இறுமாந்து இருந்தால் போகாது
என்னோடு அதிகரிக்கில் அறியலாம்
ஒரு வசிஷ்டனோடே
ஒரு சாந்தீபனோடே
தாழ நின்று அதிகரிக்கக் கடவ
அவனுக்கு திரு மங்கை ஆழ்வார் உடன் அதிகரிக்கை தாழ்வோ –
நீ கற்கலாம் -என்றும் பாடபேதம்-

——————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P .B .A .ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

பெரிய திருமொழி -திவ்யார்த்த தீபிகை -7-9-கள்ளம் மனம் விள்ளும் வகை கருதிக் கழல் தொழுவீர்-

March 30, 2015

திரு சிறு புலியீர் சல சயனப் பெருமாள் மங்களா சாசன திருப்பதிகம்
இதில் ஈடுபட்ட ஆழ்வார் பலரை நோக்கி -பாஹ்ய குத்ருஷ்டிகள் பக்கல் புகாமல் சிறு புலியூர் பெருமான் அடிகளையே
அடைந்து வாழ்ந்து போமின் என்று உபதேசிப்பதும்
அத்தை தாம் அனுஷ்டித்துக் காட்டுவதுமாக செல்லுகிறது இத் திரு பதிகம்-

———————————————–

கள்ளம் மனம் விள்ளும் வகை கருதிக் கழல் தொழுவீர்
வெள்ளம் முது பரவைத் திரை விரியக் கரையெங்கும்
தெள்ளும் மணி திகழும் சிறு புலியூர்ச் சல  சயனத்
துள்ளும் எனதுள்ளத் துள்ளும் உறைவாரை உள்ளீரே –7-9-1-

ஸ்வா தந்த்ர்யம் கூடாது பரதந்த்ரராக   இருக்க வேணும் என்று உபதேசித்து
அடுத்து அந்ய சேஷத்வம் கழித்து அவனுக்கே அற்றுத் தீர்ந்த அடியாராக உபதேசிக்க வேண்டுமே
மனம் கள்ளம் விள்ளும் மனம் கருதி -என்கிறார்
கள்ளம்  -தன்னை தனக்கே சேஷம் என்று கொண்டு இருக்கை
கழல் -யாரானும் ஒருவனுடைய பாதம்
அடுத்த யோஜனையில்
கள்ளம் -எம்பெருமானுக்கே உரிய ஆத்மவச்துவை தேவதாந்த்ரங்களுக்கு ஆக்குவது
கழல் -எம்பெருமானுடைய திருவடிகள்
சல சயனம் திவ்ய தேசத்திலும் என்னுடைய உள்ளத்திலும் பொருந்தி
நித்ய வாஸம் செய்து அருளும் எம்பெருமானை சிந்தனை பண்ணுமின் —

வியாக்ரபாதர் -என்னும் முனிவருக்கு பால சயனமாய் சேவை சாதித்த ஸ்தலம் என்பதால்
சிறு புலியூர் ஷேத்ரத்தின் திரு நாமம்
சல சயனம் -சலம் -மாயை -உறங்குவான் போல் யோகு செய்து அருளும் எம்பெருமான் –
சல சயனம் திருக் கோயிலின் திரு நாமம்
திருக்கடித்தானமும் என்னுடைச் சிந்தையும் ஒருக்கடித்து உள்ளே உறையும் பிரான் கண்டீர் -போலே
சிறு புலியூர் சல சயனத்துள்ளும் என் உள்ளத்துள் உள்ளும் உறைவாரை -என்கிறார்
உள்ளீர் -ஏவல் பன்மை வினை முற்று -உள்ளுதல் -த்யானம் பண்ணுதல்-

———————————

தெருவில் திரி சிறு நோன்பியர் செஞ்சோற்றோடு கஞ்சி
மருவிப் பிரிந்தவர்  வாய் மொழி மதியாது வந்து அடைவீர்
திருவில் பொலி மறையோர்  சிருபுலியூர்ச் சல சயனத்து
உருவக் குறளடிகள் அடி யுணர்மின் யுணர்வீரே –7-9-2-

சமண மதத்தில் ஒரு விரதம் உண்டு -பெரும் சோறு உண்ணுதல் -வெஞ்சோறு உண்ணுதல் –
வேகு சோறு உண்ணுதல் இப்படி சில சோறுகளைத்   தின்று தெருவில் திரிவார்களாம் –
தருக்கினால் சமண் செய்து சோறு தண் தயிரினால் திரளை மிடற்றிடை நெருக்குவர் -என்றார் -2-1- திருமொழியில்
இப்படிப் பட்ட பஹிஷ்டர்களின்  வாய் மொழிகளை திரஸ்கரித்து விட்டு வந்து உற்றது பற்றுமின் –
திருவில் பொலி மறையோர் -திரு -என்று ஐஸ்வர்யத்தை ஆகவுமாம் -ஸ்ரீ வைஷ்ணவ லஷ்மியை யாகவுமாம்
உருவக் குறள் அடிகள் -ஸ்ரீ வாமன மூர்த்தியாய் திரு அவதாரம் செய்து அருளினவனே இங்கே  நித்ய சந்நிதி பண்ணி அருளுகிறான் –
அடிகள் -ஸ்வாமி-

—————————————–

பறையும் வினை தொழுது உய்மின் நீர் பணியும் சிறு தொண்டீர்
அறையும் புனல் ஒரு பால் வயல் ஒரு பால் பொழில் ஒரு பால்
சிறை வண்டினம் அறையும் சிறு புலியூர்ச் சல சயனத்
துறையும் மிறையடி யல்லது ஓன்று இறையும் அறியேனே–7-9-3-

வகுத்த விஷயத்தில் தொண்டு படுமின் என்று உபதேசித்து
தமது அத்யவசாயத்தையும் வெளியிட்டு அருளி
நான் இருக்கிற படி கண்டு நீங்களும் அப்படியே இருந்து வாழ வேண்டாமோ -என்கிறார்
பணியும் சிறு தொண்டீர் -தகுதி அற்றவர்களை பணியும் நீசர்களே -என்றுமாம்
அத்தை தவிர்ந்து வகுத்த விஷயத்தில் பணிமின் என்றுமாம் –
தீர்த்தங்கள் மது உடன் பெருகுவதால் நசையால் வண்டுகள் வந்து மொய்த்து  ரீங்கரிக்கும் –
ஈக்கள் வண்டோடு மொய்ப்ப வரம்பிகந்து ஊக்கமே மிகுந்து உள் தெளிவின்றியே
தேக்கெறிந்து வருதலிற்றீம்புனல் வாக்கு தேனுகர் மாக்களை மானுமே -கம்பர் ஆற்றுப் படலம் -21-

—————————————-

வானார் மதி பொதியும் சடை மழுவாளி யொடு  ஒருபால்
தானாகிய தலைவனவன் அமரர்க்கு அதிபதியாம்
தேனார் பொழில் தழுவும் சிறு புலியூர் சல சயனத்
தானாயனது அடி அல்லது ஓன்று அறியேன் அடியேனே -7-9-4-

தம்முடைய உறுதியை வெளியிட்டு அருளுகிறார்
இது கேட்டு அவர்கள் திருந்தக் கூடும் என்று நினைத்து அருளிச் செய்கிறார் ஆகவுமாம்
ஏறாளும் இறையோனும் திசை மகனும் திரு மகளும் கூறாளும் தனியுடம்பன் -என்றும்
வலத்தனன் திரிபுரம் எரித்தனன் -என்றும்
இந்தரனுக்கு அந்தர்யாமியாய் இருந்து நிர்வஹிப்பவனும் இவனே
-மழுவாளி -தமப்பன் பிறர் என்று பாராதே கொல்லுகைக்கு பரிகரமான மழுவை உடைய ருத்ரனுக்கு
தன் திருமேனியிலே இடம் கொடுத்து கொடு நிற்கிற சீலத்தை உடைய சர்வாதிகன் –
சலசயனத்தானாய் உனது அடி அல்லது -தப்பான பாடம்
சலசயனத்து ஆனாயனது -என்றே வ்யாக்யானத்துக்குப் பொருந்தும் –
கிருஷ்ணாவதாரம் தீர்த்தம் பிரசாதித்தது என்று வெறுக்க வேண்டாதபடி -பிற்பாடருக்கும் அனுபவிக்கலாம் படி
அவ்வதாரத்தின் படியே வந்து சாய்ந்தவன் – அவன் திருவடிகள் அல்லது வேறு ஒன்றையும் அறியேன் –
அதுக்கடி அவன் சேஷ பூதன் ஆகையாலே –

————————————

நந்தா நெடு நரகத்திடை நணுகா வகை நாளும்
எந்தாய் என இமையோர் தொழுது ஏத்தும் இடம் எறிநீர்ச்
செந்தாமரை மலரும் சிறு புலியூர்ச் சலசயனத்து
அந்தாமரை யடியாய் உனதடியேற்கு அருள் புரியே -7-9-5-

நந்தா நெடு நரகத்திடை -நணுகா வகை உனது அடியேற்கு அருள் புரியே -என்று அந்வயம்-
-மாறி மாறி பல பிறப்பும் பிறந்து -என்றபடி புகாதபடி உனது அடியேனுக்கு அருள் புரிய வேணும்
ப்ரஹ்மாதிகளும் இங்கே-வந்து எந்தாய் என்று இறைஞ்சி துதிக்கும் இடம் –

—————————————

முழு ஆம்பலும் அலர் ஆம்பலும் அரவிந்தமும் விரவிக்
கழுநீரொடு மடவாரவர் கண் வாய் முக மலரும்
செழுநீர் வயல் தழுவும்  சிறுபுலியீர்ச் சலசயனம்
தொழு நீர்மை யது உடையார் அடி தொழுவார் துயர் இலரே –7-9-6-

சிறு புலியூரும் வேண்டா –
அங்கு உள்ள சல சயனத் திருக் கோயிலும் வேண்டா –
அதில் உள்ள பெருமானும் வேண்டா –
அத்திருக் கோயிலையே தொழுவதையே இயற்கையாக வுடைய ஸ்ரீ வைஷ்ணவர்கள் திரு வடிகளே சரணம்
என்று இருப்பாருக்கு துயர் எல்லாம் தொலைந்து விடும் -என்கிறார்
இங்கே வயலுக்கும் ஊருக்கும் வாசி இல்லை
நீலோற்பலங்கள் -பெண்களின் கண்கள்
அரக்கலாம்பல் -அவர்களின் அதரம்
தாமரைப் பூக்கள் -அவர்கள் முகங்கள்
ஆக உள் வீதிகளுக்கும் வெளி நிலங்களுக்கும் வாசி தெரிவரிதாம் –

—————————–

சேயோங்கு தண் திருமாலிரும் சோலை யுறையும்
மாயா வெனக்கு உரையாய் இது மறை நான்கினுளாயோ
தீயோம்புகை  மறையோர் சிறுபுலியூர்ச் சலசயனத்
தாயோ வுனதடியார் மனத்தாயோ வறியேனே –7-9-7-

சேய் ஓங்கு -மிகவும் உயர்ந்ததாய்
இத் தலத்து பெருமாளை திரு மால் இரும் சோலை மலை யுறையும் மாயா -என்பதால் இவனே அவன் என்கிறார்
நான்கு வேதங்கள் -திவ்ய தேசங்கள் -அடியார் மனம் -உறைபவன் இவனே
ப்ரத்யஷம் -திவ்ய தேச வாஸம்
வேத வாஸம் அடியார் மனச் வாஸம் -சாஸ்திர சித்தம்
உன் இருப்பிடம் இன்னது என்று நீயே சோதி வாய் திறந்து அருளிச் செய்ய வேண்டும்
சாஸ்திரம் கொண்டே அறிய வேண்டிய அப்ராக்ருத திவ்ய மங்கள விக்ரஹங்களையும்
கண்ணால் கண்டு அனுபவிக்கலாம் படியான அர்ச்சா ரூபங்களையும்
நெஞ்சாலே அனுபவிக்கலாம் படி அந்தர்யாமியாய் இருக்கும் வடிவங்களையும்
ஒரு காலே சேவை சாதிப்பித்த படியாலே கண்டு ஆச்சர்யப் படுகிறார் –

இத்தால் சொல்லிற்று ஆயத்து –சௌபரி பல வடிவு கொண்டால் போலே-இவ்வோ இடங்கள் தோறும்
இனி அவ்வருகு இல்லை என்னும்படி குறைவற வர்த்திக்கிற படியைக் காட்டிக் கொடுத்தான் –

————————————————-

மையார் வரிநீல மலர்க் கண்ணார் மனம் விட்டிட்டு
உய்வான் உன கழலே   தொழுது எழுவேன் கிளி மடவார்
செவ்வாய் மொழி பயிலும் சிறுபுலியூர்ச் சல சயனத்து
ஐவாய அரவணை மேல் உறை யமலா யருளாயே -7-9-8-

மாதர்களின் கண் அழகில் ஈடுபட்டு அழிந்து போகாமல் உன் திறத்தில் ஈடுபட்டு உய்வு பெற வேண்டி
உன்னைத் தொழுகின்றேன் -உபேஷியாமல் அருள் புரிய வேண்டும்
கிளி போன்ற சொற்களை யுடைய மடவார்
மடவார்களை கண்டு கிளி பயிலும் என்றுமாம்-

—————————————————-

கருமா முகிலுருவா கனலுருவா புனலுருவா
பெருமால் வரை  யுருவா  பிறவுருவா நினதுருவா
திருமா மகள் மருவும் சிறுபுலியூர்ச் சல சயனத்து
அருமா கடலமுதே யுனதடியே சரணாமே –7-9-9-

-இனிமை கனிந்த நெஞ்சினராலே அனுசந்திக்கும் பாசுரம் –
ஆழ்வார் திரு உள்ளம் விளங்க வாயாராக விளிக்கின்றார்
காணும் பொழுதே சகல தாபங்களும் தீரும்படி பெரிய காள மேகம் போன்ற திரு உருவத்தை யுடையவனே –
தீய புத்தி கம்சன் போல்வாருக்கு கிட்ட ஒண்ணாத படி நெருப்பு போன்றவனே
அக்ரூரர் விதுரர் மாலாகாரர் போல்வாருக்கு -மெய்யன்பர்களுக்கு தண்ணீர் போலே விரும்பத் தக்க ரூபத்தை யுடையவனே –
மலை போலே எல்லை காண ஒண்ணாத பிரகாரத்தை யுடையவனே
நீராய் நிலனாய்த் தீயாய் காலாய் நெடு வானாய்-சீரார் சுடர்கள் இரண்டாய் சிவனாய் அயனாய் –
தாயாய்த் தந்தையாய்  மக்களாய் மற்றுமாய் முற்றுமாய் -இத்யாதிப்படியே எல்லா வடிவும் ஆனவனே
இப்படி ஜகதாகாரானாய் இருப்பதும் தவிர கூராழி வெண் சங்கேந்தி -என்கிற
அசாதாராண வடிவுகளையும் யுடையவனே
பெரிய பிராட்டியார் நித்ய வாஸம் பண்ணப் பெற்ற சிறு புலியூர் சல சயனத்து பரம போக்யனே-
உன் திருவடிகளே சரணம் -என்கிறார் ஆயிற்று –

——————————

சீரார் நெடுமறுகில் சிறுபுலியூர்ச் சல சயனத்து
ஏரார் முகில் வண்ணன் தன்னை இமையோர் பெருமானைக்
காரார் வயல் மங்கைக்கு இறை கலியன் ஒலி மாலை
பாரார் இவை பரவித் தொழப் பாவம் பயிலாவே –7-9-10-

செல்வம் மிக்க திரு வீதிகள் –
பாரார் -பூமியில் பிறந்தார் எல்லாரும் இது கற்க அதிகாரிகள் -என்றது ஆயிற்று
இத் திருமொழியை வாயாலே சொல்லி  ஆஸ்ரயிக்கவே பாபங்கள் தாமாகவே
நமக்கு இவ்விடம் இருப்பல்ல -என்று விட்டுப் போம்-

—————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P .B .A .ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

பெரிய திருமொழி -திவ்யார்த்த தீபிகை -7-8-செங்கமலத் திருமகளும் புவியும் செம்பொன் திருவடியின் இணை வருட முனிவர் ஏத்த-

March 30, 2015

இதுவும் திரு அழுந்தூர் திருப்பதி  -நான்காவது -மங்களா சாசன திருப்பதிகம் –
திருப்பாற்கடலில் ப்ரஹ்மாதிகள் கூப்பீடு கேட்டு குறை தீர்க்க அன்றோ யோக நித்தரை செய்து அருளுகிறேன்
இந்த்ரியங்களுக்கு அஞ்சி கூக்குரல் இடும் உம்முடைய குறையைத் தீர்க்கேனோ  –
அதற்காக அன்றோ இங்கே திரு அழுந்தூரிலே   நின்று அருளுகிறோம் -என்று காட்டி அருள
திருப்தராய்
இவனே ஆஸ்ரயணீயன் -எல்லாரும் இவனையே ஆஸ்ரயித்து உய்யப் பாருமின் -காண்மின் என்று பாசுரம் தோறும் அருளுகிறார்-

——————————–

செங்கமலத் திருமகளும் புவியும் செம்பொன் திருவடியின் இணை வருட முனிவர் ஏத்த
வங்கமலி தடம் கடலுள் அநந்தன் என்னும்  வரி அரவின் அணைத் துயின்ற மாயோன் காண்மின்
எங்கும் மலி நிறை புகழ் நால் வேதம் ஐந்து வேள்விகளும் கேள்விகளும்   இயன்ற தன்மை
அங்கமலத் தயன் அனையார் பயிலும் செல்வத் தணி  யழுந்தூர் நின்றுகந்த வமரர்  கோவே -7-8-1-

இயன்ற தன்மை  -இயற்கையாகவே அறிந்துள்ள குணத்தை யுடையராய்
ஷீராப்தி நாதனே இங்கே சேவை சாதித்து அருளுகிறான்
அநந்தன் என்னும் மாயோன் -ஆதி சேஷனுக்கும்  பெருமாளுக்கும் பெயர் -தேச கால வஸ்து பரிச்சேதம்  இல்லாதவன்
மாயோன் -அகடிதகடநா சாமர்த்தியம்
அந்தணர்கள் தப வாய்மையால் ஸ்ருஷ்டிக்கவும் வேதம் ஓதவும் பிரமனுக்கு ஒப்பாவார்
அணி -ஆபரணம் போல என்றவாறே-

——————————————————–

முன்னிவ் வுலகேழும் இருள் மண்டி யுண்ண முனிவரோடு தாநவர்கள் திசைப்ப வந்து
பன்னு கலை நாலு வேதப் பொருளை எல்லாம்  பரிமுகமாய் அருளிய வெம்பரமன் காண்மின்
செந்நெல் மலி கதிர்க் கவரி வீசச் சங்க மவை முரலச் செங்கமல மலரை ஏறி
அன்னமலி  பெடையோடு மமரும் செல்வத் தணி யழுந்தூர் நின்றுகந்த யமரர் கோவே –7-8-2-

வேத பிரதானம் பண்ணி அருளிய ஸ்ரீ ஹயக்ரீவ பெருமானும் இவனே என்கிறார்
பன்னு கலை நால் வேதம் -சிஷை வியாகரணம் சந்தஸ் நிருத்தம் ஜ்யோதிஷம் கல்பம் -ஆறு அங்கங்கள் உடன் கூடிய வேதங்கள் என்றபடி
செந்நெல் கதிர்கள் -வெண் சாமாரம் வீச -சங்கங்கள் ஒலிக்க-அன்னப் பறவைகள் பேடைகள் உடன் செந்தாமரை மலர்களில் வீற்று இருக்கும்
சங்கம் -நீரில் வாழும் உயிர்களில்  ஓன்று
கதிர் கவரி -கதிர்க்க வரி -பாட பேதங்கள் -செந்நெல் பயிர்கள்  தங்கள் கதிர்களாகிய கவரியை வீச-

———————————————————–

குலத்தலைய மத வேழம் பொய்கை புக்குக் கோள் முதலை பிடிக்க வதற்கு அனுங்கி நின்று
நிலத்திகழும் மலர்ச் சுடரேய் சோதி யென்ன நெஞ்சிடர் தீர்த்து அருளிய வென் நிமலன் காண்மின்
மலைத் திகழ்  சந்தகில் கனக மணியும் கொண்டு வந்துந்தி வயல்கள் தோறும் மடைகள் பாய
அலைத்து  வரும் பொன்னி வளம் பெருகும் செல்வத் தணி யழுந்தூர் நின்றுகந்த வமரர் கோவே –7-8-3-

வேதத்தின் தாத்பர்யமான கைங்கர்யம் ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானுக்கு அருளியதை அருளுகிறார்
குலத்தலைய மத  வேழம்–நிலத்திகழும் மலர்ச் சுடரேய்-சரியான பாடம்
கொலைத்தலைய-நிலைத் திகழும் -லை எதுகைக்காக பாட பேதங்கள்
கொல்லும் தொழிலை  தன்னிடம் கொண்ட என்பது பொருள்
கோடு கைம்முதலா ஒன்பது உறுப்பினும் கோறல் வல்ல நீடுயிர் மா –
நான்கு கால்கள் -துதிக்கை இரண்டு தந்தம் மஸ்தகம் வால் ஒன்பதாலும் கொல்ல வல்லதே
நிலையாக விளங்கும் பரவுதலை உடைய ஒளி வடிவமானவனே-

மலைத்தலைய கடற்காவிரி புனல் பரந்து பொன் கொழிக்கும் -அதனாலே பொன்னி
எம்பெருமான் அன்பர்கள் உள்ள இடங்களில் வந்து ரஷிப்பது போலே காவிரியும் வெள்ளத்தால் வேண்டும்
இடங்களில் வந்து பாயும் என்றது ஆயிற்று-

—————————————————

சிலம்பு முதல் கலன் அணிந்தோர் செங்கற்குன்றம் திகழ்ந்தது எனத் திரு உருவம் பன்றியாகி
இலங்கு புவி மடந்தை தனை யிடந்து புல்கி எயிற்றிடை   வைத்து அருளிய வெம்மீசன் காண்மின்
புலம்பு சிறை வண்டு ஒலிப்பப் பூகம் தொக்கப் பொழில்கள் தொறும்   குயில் கூவ மயில்கள்  ஆல
அலம்பு திரைப் புனல் புடை சூழ்ந்து அழகார் செல்வத் தணி யழுந்தூர் நின்றுகந்த வமரர் கோவே –7-8-4-

கூப்பிட அறியாத பூமியை பிரளயத்தில் ரஷித்து அருளிய ஸ்ரீ வராஹ நாயானாரும் இவனே என்கிறார்
சிலம்பு முதற்கலன் அணிந்தோர் செங்கட் குன்றம் -சிறந்த ரத்னன்களை யுடைய மேரு மலை
ஆலுதல் -ஆரவாரித்தல்

————————————————————–

சின மேவும் அடல் அரியின் உருவமாகித் திறல் மேவும் இரணியனது ஆகம் கீண்டு
மன மேவும் வஞ்சனையால் வந்த பேய்ச்சி மாள வுயிர் வவ்விய   வெம்மாயோன் காண்மின்
இனமேவும் வரி வளைக்கை ஏந்தும் கோவை ஏய்வாய மரகதம் போல் கிளியின் இன்சொல்
அனமேவு நடை மடவார் பயிலும் செல்வத் தணி யழுந்தூர்  நின்றுகந்த வமரர் கோவே –7-8-5-

ஸ்ரீ கஜேந்திர ஆழ்வான் போலேயும் ஸ்ரீ பூமிப் பிராட்டி போலேயும் இல்லாத நம் போல்வார்  விரோதிகளையும் போக்கி அருளுபவனும் இவனே –
சிறுக்கனுக்கு உதைவி அருளினானே
பெரும் சீற்றமும் வலிமையையும் கொண்ட -சினமேவும் அடல் அரியன் உருவமாகி
கண்டும் பிற்காலியாத மிடுக்கன் -திறல் மேவும் இரணியன்
அன்பு மிக்க தாய் போலே மனசிலே கொடுமையை கொண்ட பூதனை -மன மேவு வஞ்சனையால் வந்த பேய்ச்சி
கிளி போன்ற இன் சொல்லையும் -அன்னப்பெடை போன்ற மென்னடையும் கொண்ட மடவார் –
அறிந்தும் அறியாதது போல் இருத்தல் மடப்பம்-

——————————–

வானவர் தம் துயர் தீர வந்து தோன்றி மாண் உருவாய் மூவடி மாவலியை வேண்டித்
தானமர வேழலகு மளந்த வென்றித் தணி முதல் சக்கரப் படை என் தலைவன் காண்மின்
தேனமரும் பொழில் தழுவும் எழில் கோள் வீதிச் செழு மாட மாளிகைகள் கூடம் தோறும்
ஆன தொல் சீர் மறையாளர் பயிலும் செல்வத் தணி யழுந்தூர்  நின்றுகந்த வமரர் கோவே -7-8-6-

பிரயோஜனாந்த பரர்களுக்கும் யாசகனாய் சென்று ரஷித்து அருளினவன் -சௌசீல்யன்-என்கிறார்
மாணுரு -மாணி யுரு-அன்றிக்கே மாட்சிமை தாங்கிய உரு என்றுமாம் -ஆலமர் வித்தின் அரும் குறள் ஆனான்
மூ வுலகத்தையும் ஈரடியால் அடக்க வல்ல பேருருவம் தன்னுள் அடக்கிக் கொண்டு இருந்த மாட்சிமை
தான் அறிந்த சம்பந்தமே ஹேதுவாக எல்லார் தலையிலும் வரையாதே திருவடிகளால் தீண்டி அருளினவன் -உதாரன்
தான் அளந்த -தானே நேரில் சென்று அளந்த -தேவர்களின் துயரத்தைக் கண்ட பின் -காருண்யம் பரத்வம் சௌலப்யம்-

————————————————————-

பந்தணைந்த மெல் விரலாள் சீதைக்காகிப் பகலவன் மீது இயங்காத இலங்கை வேந்தன்
அந்தமில் திண் கரம் சிரங்கள் புரண்டு வீழ அடு கணையால் எய்து உகந்த வம்மான் காண்மின்
செந்தமிழும் வடகலையும் திகழ்ந்த நாவர் திசை முகனே யனையவர்கள் செம்மை மிக்க
அந்தணர் தம் ஆகுதியின் புகையார் செல்வத் தணி  யழுந்தூர் நின்றுகந்த வமரர் கோவே -7-8-7-

சீதா -அயோநிஜத்வம்
இரு சுடர் மீதினியிலங்கா மும்மதிள் இலங்கை -திரு எழுக் கூற்று இருக்கை போலே
இங்கும் -பகலவன் மீதியங்காதா  இலங்கை
அந்தமில் திண் கரம் -இராவணன் பெருமாள் திருவவதாரம் முன்பு கொண்ட வலிமையால்
அந்தமில் திண் சிரங்கள் -மீண்டும் மீண்டும் முளைத்தனவாதளால்
புரண்டு வீழ -வீழ்ந்து புரள
எய்து உகந்த -பாகவத விரோதிகளை தொலைத்த ப்ரீதி யுண்டே
தமிழுக்கு செம்மை -செவிக்கு இனிய செஞ்சொல்-

——————————————–

கும்ப மிகு மத வேழம் குலைய கொம்பு பறித்து மழ  விடை யடர்த்துக்   குரவை கோத்து
வம்பவிழும் மலர்க் குழலாள் யாய்ச்சி வைத்த தயிர் வெண்ணெய் உண்டு உகந்த மாயோன் காண்மின்
செம்பவள மரகதம் நன் முத்தம் காட்டத் திகழ் பூகம் கதலி பல வளம் மிக்கு எங்கும்
அம் பொன் மதிள் சூழ்ந்து அழகார் செல்வத்து அணி அழுந்தூர் நின்று உகந்த வமரர் கோவே –7-8-8-

ஆஸ்ரித ஹஸ்த ஸ்பர்சம் கொண்ட த்ரவ்யத்தை அல்லது செல்லாத தன்மையான்
குரவைக் கூத்து ராச க்ரீடை
குரவை என்பது கூறும் காலைச் செய்தோர் செய்த காமமும் விறலும்
எய்தக் கூறும் இயல்பிற்று என்ப -என்றும் சிலப்பதிகாரத்திலும்
குரவை என்பது எழுவர் மங்கையர் செந்நிலை மண்டலக் கடகக்கை கோத்து
அந்நிலை கொட்ப நின்று ஆடலாகும் -அடியாருக்கு நல்லார் உரை
பாக்கு மரங்களில் -முதிர்ந்த பழங்கள் -பவளத்தையும் -பசும் காய்கள் மரகத ரத்னத்தையும் –
விரிந்த பாளைகள் வெண் முத்துக்களையும் காட்டுமே-

———————————————-

ஊடேறு கஞ்சனொடு வில்லும் மல்லும் ஒண் கரியும் உருள் சகடும் உடையச் செற்ற
நீடேறு பெரு வலித் தோளுடை வென்றி நிலவு புகழ் நேமி யங்கை நெடியோன் காண்மின் –
சேடேறு பொழில் தழுவும் எழில் கொள் வீதித் திரு விழவில்  மணியணிந்த திண்ணை தோறும்
ஆடேறு மலர்க் குழலார் பயிலும் செல்வத் தணி யழுந்தூர் நின்றுகந்த வமரர் கோவே –7-8-9-

சேடு ஏறு -இளமை மிக்கு தோன்றுகின்ற -சேடு -அழகு -இளமை -பெருமை
திரு ஆழியைப் போலே நம்மையும் கை விடாதே தரித்து அருளுவான்
நெடியோன் -ஆஸ்ரிதர் பக்கல் வ்யாமோஹம் மிக்கவன்
ஆடு  ஏறும் மலர்க் குழலார் -நறு மணம் மிக்க மலர்களை யுடைய கூந்தலை யுடைய மடவார் –
ஆடலில் வல்லார் இரு மருங்கிலும் ஏறி இருப்பப் பெற்ற திவ்ய தேசம் –

—————————————–

பன்றியாய் மீனாகி யரியாய் பாரைப் படைத்துக் காத்து உண்டு உமிழ்ந்த பரமன் தன்னை
அன்று அமரர்க்கு அதிபதியும் அயனும் சேயும் அடி பணிய அணி அழுந்தூர் நின்ற கோவை
கன்றி நெடு வேல்  வலவன் ஆலி நாடன் கலி கன்றி ஒலி செய்த இன்பப் பாடல்
ஒன்றினோடு நான்கும் ஓர்  ஐந்தும் வல்லார் ஒலி கடல் சூழ் உலகாளும் உம்பர் தாமே –7-8-10-

பகவத் கைங்கர்யத்துக்கு எல்லை நிலமான பாகவத கைங்கர்யத்துக்கு உறுப்பான ஐஸ்வர்யம் பெறப் பெறுவார்கள்
ஒன்றினோடு -வ்யூஹ மூர்த்தி
நான்கும் -2-4-5-10- விலங்கான ரூபமாகிய விபவ மூர்த்திகள் பாசுரங்கள்
ஓர் ஐந்தும் -கஜேந்திர ரக்ஷண /வாமன /ராம /கிருஷ்ண திரு வவதாரங்கள் பாசுரங்கள்-

——————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P .B .A .ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

பெரிய திருமொழி -திவ்யார்த்த தீபிகை -7-7-திருவுக்கும் திருவாகிய செல்வா தெய்வத்துக்கு அரசே செய்ய கண்ணா-

March 30, 2015

இது திரு அழுந்தூர்  திருப்பதி -மூன்றாவது -மங்களா சாசன திருப்பதிகம்
கீழே கண்டு கொண்டு நிறைந்தேனே -கண்டு கொண்டு களித்தேனே -என்றார்
இந்த பரமானந்தம்  நித்யமாக செல்லுமா என்று ஆராய்ந்து பார்த்தார்
பஞ்ச இந்த்ரியங்கள் உடன் இங்கேயே இருக்கக் காண்கையாலும்
இவை விஷயாந்தரங்களில் மூட்டி ஹிம்சிக்கக் காண்கையாலும்
திரு உள்ளம் நொந்து படும்பாட்டை போக்கி அருள வேணும் என்று சரணம் புகுகிறார்
திருவாய் மொழி ஏழாம் பத்தில் -உண்ணிலாவிய ஐவரால் குமை தீற்றி என்னை யுன் பாத பங்கயம்
நண்ணிலா வகையே நலிவான் இன்னம் எண்ணுகின்றாய் -என்று தொடங்கி அருளிச் செய்தது போலே –
இவரும் ஏழாம் பத்திலே இங்கனம் கூப்பிட்டு அருளுகிறார்

—————————————————-

திருவுக்கும் திருவாகிய செல்வா தெய்வத்துக்கு அரசே செய்ய கண்ணா
உருவச் செஞ்சுடராழி வல்லானே உலகுண்ட ஒருவா திரு மார்பா
ஒருவருக்கு ஆற்றி உய்யும் வகை அன்றால் உடன் நின்று ஐவர் என்னுள் புகுந்து ஒழியாது
அருவித் தின்றிட அஞ்சி நின்னடைந்தேன் அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே —7-7-1-

திருவுக்கும் திருவாகிய செல்வா –
ஸ்வ வ்யதிரிக்தருடைய சம்பத்துக்கு நிதான பூதையான பிராட்டிக்கு சம்பத் ஆனவனே -க ஸ்ரீ ஸ்ரீயா
தெய்வத்துக்கு அரசே –
அயர்வறும் அமரர்கள் அதிபதியே –
செய்ய கண்ணா-
புண்டரீகாஷனான சர்வேஸ்வரனே-அங்கண் இரண்டும் கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல் எங்கள் மேல் சாபம் இழிந்தேலோ
உருவச் செஞ்சுடராழி வல்லானே –
விரோதி நிரசனத்துக்கு பரிகரமாய்-அழகிய வடிவை யுடைத்தாய் -நிரதிக தேஜோ ரூபமான
திரு வாழியைக் கையிலே யுடைய சர்வேஸ்வரனே –
ஸ்ரீ லஷ்மீபதி என்னுதல்-நித்ய ஸூ ரிகளுக்கு எல்லாம் நிர்வாஹகன் என்னுதல் –
கை சலியாமல் திரு ஆழியைப் பிடிக்க வல்லவன் என்னுதல் -இவை இறே சர்வாதிகத்துவத்துக்கு லஷணம்
உய்யும் வகை என்றால்-பாடம் பொருந்தாது அன்றால் என்பதே சரியான பாடம் –
ஒருவருக்கு ஆடல் கொடுத்து உஜ்ஜீவிக்கும் படியாய் இருக்கிறது இல்லை -வ்யாக்யானத்துக்கு சேரும் இதுவே

——————————————–

பந்தார் மெல்விரலி நல் வளைத் தோளி பாவை பூ மகள் தன்னொடும் யுடனே
வந்தாய் என் மனத்தே மன்னி நின்றாய் மால் வண்ணா மழை போல் ஒளி வண்ணா
சந்தோகா பௌழியா தைத்ரியா சாமவேதனே நெடுமாலே
அந்தோ நின்னடி யன்றி மற்றறியேன் அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே-7-7-2-

பாவை பூ மகள் தன்னொடும் யுடனே வந்தாய் –
தாமரைப் பூவை இருப்பிடமாக பெரிய பிராட்டியாரோடு கூட வந்தாய் –
அரவத்து அமளியினோடும் அழகிய பாற் கடலோடும்   அரவிந்தப் பாவையும் தானும் -அகம்படி வந்து புகுந்து என்கிறபடியே
சபரிகரனாய்க் கொண்டாய்த்து வந்து புகுந்தது –
என் மனத்தே மன்னி நின்றாய் –
இவ்வரவாலே நெஞ்சை நெகிழப் பண்ணி விலக்காமை யுண்டான வாறே –
ஆவாசந்த்வஹம் இச்சாமி -என்கிறபடியே வந்து புகுந்தான் ஆய்த்து-

———————————————-

நெய்யார் ஆழியும் சங்கமும் ஏந்தும் நீண்ட தோளுடையாய் அடியேனைச்
செய்யாத வுலகத்திடைச் செய்தாய் சிறுமைக்கும் பெருமைக்கு முள் புகுந்து
பொய்யால் ஐவர் என் மெய் குடி ஏறிப் போற்றி வாழ்வதற்கு அஞ்சி நின்னடைந்தேன்
ஐயா நின்னடி யன்றி மற்று அறியேன் அழுந்தூர் மேல் திசை நின்ற வம்மானே -7-7-3-

செய்யாத செய்தாய் -உன் விஷயத்தில் ருசி விஸ்வாசாதிகளை உண்டு பண்ணிணவனே-
நெய்யார் ஆழியும் சங்கமும் ஏந்தும் நீண்ட தோளுடையாய் –
கடைந்து பற்றற நெய் இட்டு இருக்கிற திவ்ய ஆயுதங்களை யுடையவனே
நெய் -கூர்மை ஆர்தல் -மிகுதி — கூர்மை மிக்க திரு வாழி-
பூ ஏந்துமா போலே நின்று அருளி -அவற்றுக்குத் தகுதியான திருத் தோள்களை யுடையவனே –
அடியேனைச்-
தேவர்க்கு யோக்யனாய் இருக்கிற யுன்னை –
அடியேனாகவும் வைத்து இந்த்ரியங்களையும் வைக்க வேண்டுமா -என்ன
கண்டோம் கண்டோம் கண்டோம் கண்ணுக்கு இனியன கண்டோம்
அன்பாழியானை அணுக என்னும் நா அவன் தன் பண்பாழித் தோள் பரவி  எத்து என்னும்
முன்பூழி காணானை காண் என்னும் கண் செவி கேள் என்னும் பூணாரம் பூண்டான் புகழ்
பேரின்பம் பெருவிக்கவும் இவை வல்லன –
உலகத்திடைச் செய்யாதது செய்தாய் என்று அந்வயம்-

———————————

பரனே பஞ்சவன் பௌழியன் சோழன் பார் மன்னர் மன்னர் தாம் பணிந்து ஏத்தும்
வரனே மாதவனே மதுசூதா மற்றோர் நற்றுணை நின்னலால் இலேன் காண்
நரனே நாரணனே திரு நறையூர் நம்பீ எம்பெருமானும் பாராளும்
அரனே ஆதி வராஹ முன்னானாய் அழுந்தூர் மேல் திசை நின்ற வம்மானே-7-7-4-

மன்னர் மன்னர் -மன்னருக்கும் மன்னர்
திரு நறையூர் நம்பி 100 பாசுரங்களால் திருப்தி அடையாமல் மீண்டும் வந்து திரு முகம் காட்டி அருளினான்
திரு விண்ணகரிலே தொடங்கி-திரு நரையூர்த் தேனே வரு புனல் சூழ் திரு விண்ணகரானே – என்று பேசிச் சென்று
வழி விட்டுத் திரும்புகிறான் -என்று ரசமாக அருளிச் செய்வர்-

———————————-

விண்டான் விண் புக வெஞ்சமத்து அரியாய் பரியோன் மார்வகம் பற்றிப் பிளந்து
பண்டானுய்ய வோர் மால்வரை ஏந்தும் பண்பாளா பரனே பவித்திரனே
கண்டேன் நான் கலியுகத்ததன் தன்மைக் கருமமாவதும் என் தனக்கு அறிந்தேன்
அண்டா நின்னடியன்றி மற்று அறியேன் அழுந்தூர் மேல் திசை நின்ற வம்மானே–7-7-5-

கலியுகத் தன் தன்மை -கலியுகத்தின் ஸ்வ பாவத்தை –
பகவத் விஷயத்தை மறப்பித்து ஆத்மஹாநியை விளைப்பிப்பதே என்பதை அறிந்து கொண்டேன்
இப்படிப்பட்ட நிலைமையிலே உனது திருவடிகளை ஆஸ்ரயிப்பதே கருமம் என்று ஆராய்ந்து துணிந்து
வேறு ஒன்றையும் அறியாதவனாய் இருக்கிறேன்
விண்டான் பரியோன் -இரணியனை சொல்லும் சொற்கள் –
அண்டத்துக்கு நிர்வாஹகனானவனே
அன்றிக்கே இடையருக்கு நிர்வாஹகனானவனே என்றுமாம் –
நின்னடியன்றி மற்று அறியேன் அழுந்தூர் மேல் திசை நின்ற வம்மானே –
ஸ்ரீ ப்ரஹ்லாத ஆழ்வானுக்கும் இடையருக்கும் பசுக்களுக்கும் இங்கு வந்து நிற்கிறது —

—————————————————

தோயாவின் தயிர் நெய் அமுதுண்ணச் சொன்னார் சொல்லி நகும் பரிசே பெற்ற
தாயால் ஆப்புண்டு இருந்து அழுது எங்கும்  தாடாளா தரையோர்க்கும் விண்ணோர்க்கும்
சேயாய் கிரேத திரேத துவாபர  கலியுகமிவை நான்கும் ஆனாய்
ஆயா நின்னடியன்றி மற்று அறியேன் அழுந்தூர் மேல் திசை நின்ற வம்மானே –7-7-6-

கிருஷ்ணனாய் திருவவதரித்து சௌலப்ய குணம் வெளிப்படுத்தி வருந்தினவன் போலே அபி நயித்து விக்கி விக்கி அழுது இருந்தாலும்
ஸ்வ யத்னத்தால் ப்ரஹ்மாதிகளாலும் கிட்டவும் அறியமும் முடியாமல் தூரஸ்தன்
யுகங்களுக்கு எல்லாம் நிர்வாஹகன் -இருந்தும் என்னை கலி நலிய விடுவான் என்று உள் கருத்து
தோயா இன் தயிர் என்றும் தோய் ஆவின் தயிர் என்றும் பிரிக்கலாம் –

————————————————-

கறுத்துக் கஞ்சனை அஞ்ச முனிந்தாய் கார் வண்ணா கடல் போல் ஒளி வண்ணா
இறுத்திட்டான் விடை ஏழும்  முன் வென்றாய் எந்தாய் அந்தரம் ஏழுமும்  ஆனாய்
பொறுத்துக் கொண்டு இருந்தால் பொறுக்க ஒணாப் போகாமே நுகர்வான் புகுந்து ஐவர்
அறுத்துத் தின்றிட வஞ்சி நின்னடைந்தேன் அழுந்தூர் மேல் தின்ற வம்மானே–7-7-7-

துக்க அனுபவங்களையே நான் அடைந்தும்படி பஞ்ச இந்த்ரியங்கள் என்னுள் புகுந்து ஹிம்சிக்க
அந்த ஹிம்சைகளுக்கு அஞ்சி உன் திருவடிகளிலே வந்து புகுந்தேன்
நுகர்வான்  -நான் அனுபவிக்கும் படி செய்வதற்காக -என்றபடி –

———————————————-

நெடியானே கடியார் கலி நம்பீ நின்னையே நினைந்து இங்கு இருப்பேனைக்
கடியார் காளையர் ஐவர் புகுந்து காவல் செய்த அக் காவலைப் பிழைத்துக்
குடி போந்து உன்னடிக் கீழ் வந்து புகுந்தேன் கூறை சோறு இவை தந்து எனக்கு அருளி
அடியேனைப் பணி யாண்டு கொள் எந்தாய் அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே –7-7-8-

காளையர் -ஹிம்சிப்பதில் யுவான பருவம் கொண்டு வலியனவாய் –
நெஞ்சில் நன்மை இன்றிக்கே பிறரை நலிய நலிய இளகிப் பதியா நின்ற பருவத்தை யுடைய ஐவர்
ஆர்கலி -திருப்பாற் கடலை நினைக்கிறது
கூறை சோறு இவை எனக்குத் தந்து அருளி
உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணன்
கூறை சோறு இவை வேண்டுவது இல்லை
வாஸூதேவஸ் சர்வமிதி ச மகாத்மா ஸூ துர்லப –
த்யக்த்வா புத்ராம்ச தாராம்ச ராகவம் சரணம் கத -என்கிறபடியே
அவற்றைத் தப்பி உன் திருவடிகளிலே சரணம் புகுந்தேன்

அடியேனைப் பணி யாண்டு கொள் எந்தாய் –
வகுத்த ஸ்வாமியான நீ -ராஜ புத்ரனாய் பிறந்து முடி இழந்து போவாரைப் போலே ஆகாமே
அடியேனாய் இருக்கிற என்னை நித்ய கைங்கர்யத்தைக் கொண்டு அருள வேணும் –
அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே –
ஸ்ரீ விபீஷண ஆழ்வானுக்கு வந்து புகுரலாம் படி கடல்கரை வெளியிலே வந்து நின்றால் போலே
எனக்கு உறவுமுறையார் கை விட்ட அன்று வந்து கிட்டலாம் படி அன்றோ தேவரீர் இங்கே வந்து நிற்கிறது –

————————————————————–

கோவாய் ஐவர் என் மெய் குடி ஏறிக் கூறை சோறு இவை தா என்று குமைத்துப்
போவார் நானவரைப் பொறுக்க கில்லேன் புனிதா புட்கொடியாய் நெடுமாலே
தீவாய் நாகணையில் துயில்வானே திருமாலே இனிச் செய்வது ஓன்று அறியேன்
ஆவா வென்று அடியேற்கு இறை இரங்காய் அழுந்தூர் மேல் திசை நின்ற வம்மானே–7-7-9-

கோவாய் ஐவர் என் மெய் குடி ஏறிக்-
நீ சேஷியாமது தவிர்ந்து இவை எனக்கு நியாமகமாய்க் கொண்டு வந்து என் சரீரத்திலே குடி புகுந்தது –
கூறை சோறு இவை தா என்று குமைத்துப்  போவார்– நானவரைப் பொறுக்க கில்லேன்-
நான் கூறையும் சோறுமாக நினைத்து இருக்கும் அது ஒழிய வேறு சிலவற்றைத் தா வென்று
என்னை நெருக்கி ஒரு ஷணமும் கால் வாங்கு கிறிலர்கள் –
நான் அவர்களுடைய நலிவைப் பொறுக்க மாட்டு கிறிலேன் –

நெடுமாலே –
ஆஸ்ரிதர் பக்கலில் வ்யாமோஹத்தை யுடையவனே
தீவாய் நாகணையில் துயில்வானே-
ஆஸ்ரித சம்ச்லேஷ ஏக ஸ்வ பாவனே
உனக்கு என் வருகிறதோ என்று அஞ்ச வேண்டாத படி சத்ருக்கள் மேலே நெருப்பை உமிழ்கிற
திரு வநந்த ஆழ்வான் மேல் சாய்ந்து அருளினவனே –
ஆங்கு ஆரவாரம் அது கேட்டு அழல் உமிழும் பூங்காரரவு

—————————————————–

அன்னம் மன்னும் பைம் பூம் பொழில் சூழ்ந்த அழுந்தூர் மேல் திசை நின்ற வம்மானைக்
கன்னி மன்னு திண் தோள் கலிகன்றி ஆலி நாடன்  மங்கைக் குல வேந்தன்
சொன்ன இந் தமிழ் நன் மணிக் கோவை தூய மாலை இவை பத்தும் வல்லார்
மன்னி மன்னவராய் உலகாண்டு மான வெண் குடைக் கீழ் மன்னுவாரே–7-7-10-

அன்னம் மன்னும் பைம் பூம் பொழில் சூழ்ந்த –
அன்னங்கள் நித்ய வாசம்  பண்ணுகிற பரந்த பூவை யுடைத்தான பொழிலாலே  சூழப் பட்ட   –
அன்னங்கள் ஒன்றோடு ஓன்று கூடினால் உடம்போடு உடம்பு அணுகாதபடி கிடைக்கைக்கு வேண்டும்படி
பரப்பு போந்து இருக்குமாய்த்து பூவின் பெருமை –
அழுந்தூர் மேல் திசை நின்ற வம்மானைக் –
திரு அழுந்தூரில் மேற்கு பார்ச்வத்திலே நின்ற சர்வாதிகனான சர்வேஸ்வரனை
கன்னி மன்னு திண் தோள் -கலிகன்றி ஆலி  நாடன்  மங்கைக் குல வேந்தன்
ஒரு நாளும் அழியாத மிடுக்கை யுடைத்தான தோள்களை யுடைய ஆழ்வார் -திருவாலி நாட்டுக்கு நிர்வாஹகராய் உள்ளார்
திரு மங்கையில் உள்ளார்க்கு பழையதாக ராஜாக்களாய் யுள்ளார்
சொன்ன இந் தமிழ் நன் மணிக் கோவை தூய மாலை இவை பத்தும் வல்லார்-
சொன்ன இனிய தமிழான இந்த நல்ல ரத்ன மாலையை
லஷணங்களில் குறைவற்று இருக்கிற இப்பத்தையும் அப்யசிக்க வல்லார் –
மன்னி மன்னவராய் உலகாண்டு மான வெண் குடைக் கீழ் மன்னுவாரே–
சிரகாலம் ராஜாக்களாய் -லோகங்களை அடைய நிர்வஹித்து பெரிய முத்தின் குடைக்கீழே இருந்து நிரவதிக ப்ரீதி  யுக்தராய்ப் பெறுவார் –
இந்த்ரிய வஸ்தையை  அனுசந்தித்து அஞ்சின ஆழ்வார் இத்தை பலமாகச் சொல்லுவான் என் என்னில்
இவருக்கு அந்த ஐஸ்வர்யம் பாகவத சேஷமாக்குக்கைக்கு உடலாகையாலே அதுவும் புருஷார்த்தத்திலே
புக்குப் போய்த்து காண்-என்று பட்டர் அருளிச் செய்தாராம் –

———————————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P .B .A .ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

பெரிய திருமொழி -திவ்யார்த்த தீபிகை -7-6-சிங்கமதாய் அவுணன் திரளாகம் முன் கீண்டுகந்த-

March 29, 2015

திரு அழுந்தூர் திருப்பதி -இரண்டாவது -மங்களா சாசன திருப்பதிகம் –

சிங்கமதாய் அவுணன் திரளாகம் முன் கீண்டுகந்த
சங்கமிடத்தானைத் தழலாழி  வலத்தானைச்
செங்கமலத் தயனனை பார் தென் அழுந்தையில் மன்னி நின்ற
அங்கமலக் கண்ணனை யடியேன் கண்டு கொண்டேனே -7-6-1-

நரசிங்கமதாய் -என்னாமல்-சிங்கமதாய் -என்றது திரு முக மண்டலமே முக்கியம் என்பதால்
இங்கு உள்ள ஸ்ரீ வைஷ்ணவர்கள் ஓயாது வேதம் ஓதுவதில் -சிருஷ்டி நடத்தும் விஷயத்தில் அயனை ஒத்தவர்கள் –

ஆஸ்ரிதர் உடைய விரோதி தொலையப் பெற்றோம் என்று உகந்த –
திரு நகங்களுக்கே இரை போராமையாலே திரு வாழி திருச் சங்கு ஆழ்வார்கள் இருந்த படியே விளங்கப் பெற்றவன் –

————————————–

கோவானார் மடியக் கொலையார் மழுக் கொண்டு அருளும்
மூவா வானவனை முழு நீர் வண்ணனை யடியார்க்கு
ஆவா வென்று இரங்கித் தென் அழுந்தையில் மன்னி நின்ற
தேவாதி தேவனை யான் கண்டு கொண்டு திளைத்தேனே –7-6-2-

அடியார்க்கு ஆ ஆ என்று இரங்கி -நீர்மையால் -தயையால் –
பரதுக்க துக்கித்வம் –
சக்தி இருந்தாலும் அநியாயமாக குழந்தையைத் துக்கப்பட வைத்தோமே என்கிற தாயைப் போலே
காவல் சோர்வால் -திரௌபதிக்கு எல்லாம் செய்தாலும்  கடனாளி  போலே நெஞ்சில் புண்ணுடனே எழுந்து அருளிற்று
ஸ்ரீ கஜேந்திர  ஆழ்வான் உடைய கால் புண்ணை தனது திரு பரிவட்டத்தாலே வேது கொடுத்து குளிரத் தடவிக் கொடுத்து
அருளிய அவன் திரு உள்ளத்தில் துக்கம் வாசோ மகோசரம் அன்றோ
அவிகாராயா சுத்தாயா என்பதை மட்டும் கொண்டு அவனுக்கு துக்கம் இல்லை என்பது
அவனை காஷ்ட லோஷ்ட ப்ராயனாக இசைந்தமைக்கு பர்யாயம் அன்றோ
ஆஸ்ரித விச்லேஷத்தில் விகாரம் இல்லை என்றால் அவ் வஸ்துவை அணைய ஆசைப் பட வேண்டாவே-

—————————————

உடையானை யொலி நீர் உலகங்கள் படைத்தானை
விடையானோடே அன்று விறலாழி விசைத்தானை
அடையார் தென்னிலங்கை அழித்தானை யணி  யழுந்தூர்
உடையானை அடியேன் அடைந்து உய்ந்து போனேனே –7-6-3-

உடையான் -ஸ்வாமி
ஒலி நீர் -ஒலிக்கின்ற நீர் -கடல்
விடையான் -எருதை வாகனமாக யுடைய ருத்ரன் -பாணாசுர யுத்த விருத்தாந்தம்
அடையார் -தன்னை வந்து அடையாமல் இருப்பார்கள் -பகைவர் என்றபடி
பிரதிகூலங்களை குடியோடு களைந்து ஒழிப்பவன்-

———————————————–

குன்றால் மாரி தடுத்தவனைக் குல வேழம் அன்று
பொன்றாமை அதனுக்கு அருள் செய்த போர் ஏற்றை
அன்று ஆவின் நறு நெய் அமர்ந்து உண்ண வணி யழுந்தூர்
நின்றானை யடியேன் கண்டு கொண்டு நிறைந்தேனே –7-6-4-

ஆபத்துக்களை போக்க வல்ல ஆண் புலி –
பசு நெய்யை விரும்பி அமுது செய்யும் ஆ மருவி அப்பன் நித்ய வாசம் செய்ய கண்டு குறைகள் தீர்ந்தேன் –
திருவாய்ப்பாடி ஸ்தானத்திலே திரு அழுந்தூரைப் பற்றி நின்றான்
பொன்றாமை -பொன்றுதல் -அழிதல்
அதனுக்கு அருள் செய்த -தாமரைப் பூவைத் திருவடிகளில் சமர்ப்பிக்கப் பெற்றுக் கொள்வதாகிய அருள்-

————————————————

கஞ்சனைக் காய்ந்தானைக் கண்ண மங்கையுள்  நின்றானை
வஞ்சனப் பேய் முலை யூடு உயிர் வாய் மடுத்து உண்டானைச்
செஞ்சொல் நான் மறையோர் தென் அழுந்தையில் மன்னி நின்ற
அஞ்சனக் குன்றன் தன்னை அடியேன்  கண்டு கொண்டேனே-7-6-5-

அஞ்சன மலை நிற்பது போலே இங்கே நின்று சேவை சாதிப்பவனை அடியேன் சேவிக்கப் பெற்றேன்
ஆ மருவி அப்பன் இடம் ஆழ்வார் ஈடுபட்டு இருக்க திருக் கண்ணமங்கை எம்பெருமான் ஓடி வந்து
இங்கேயே சேவை சாதித்து அருளினான்
கண்ண மங்கையுள் நின்றானை -என்று அவனுக்கும் மங்களா சாசனம் செய்து அருளுகிறார்-

——————————————-

பெரியானை யமரர் தலைவற்கும் பிரமனுக்கும்
உரியானை உகந்தான் அவனுக்கும் உணர்வதனுக்கு
அரியானை அழுந்தூர் மறையோர்கள் அடி பணியும்
கரியானை அடியேன் கண்டு கொண்டு களித்தேனே -7-6-6-

சர்வ ஸ்மாத் பரன்-யாம் கடவுள்  என்று இருக்கும் எவ்வுலகில்  கடவுளர்க்கும் ஆம் கடவுள் நீ -திருவரங்க கலம்பகம்
உரியானை யுகந்தான் -யானை உரி உகந்தான் -யானை தோலை உகந்து தரிக்கின்ற  ருத்ரன்
நடனம் ஆடும் பொழுது யானை யுரியைப் போர்த்துக் கொண்டு நடனம் ஆடுவானாம்
ப்ரஹ்மாதிகளாலும் உள்ளபடி அறியப் படாத ஸ்வரூப ஸ்வ பாவங்கள் யுடையவன்
வைதிகர்கள் அடி பணிய நிற்பவன்
நீல மணி போன்றவன் -அவனை சேவிக்கப் பெற்ற பரம ஆனந்தம் பெற்றேன்-

—————————————-

திருவாழ் மார்பன் தன்னைத் திசை மண் எரி நீர் முதலா
உருவாய் நின்றவனை யொலி சேரும் மாருதத்தை
அருவாய் நின்றவனைத் தென் அழுந்தையில் மன்னி நின்ற
கருவார் கற்பகத்தைக் கண்டு கொண்டு களித்தேனே –7–6-7-

ஸ்ரீ யபதியாய் -அனைத்துக்கும் அந்தராத்மாவாய் –ஒலி சேரும் மாருதத்தை
வாயு ஆகாசத்தில் நின்றும் பிறந்ததால்
பூர்வ பூர்வ பூதங்களின் குணமும் உத்தர உத்தர பூதங்களின் காணலாம் என்கிற ரீதியில்
தனது குணமான ஸ்பர்சமும் ஆகாச குணமான சப்தமும் உண்டே காற்றுக்கு
பூநிலாய ஐந்துமாய் -பாசுரத்தில் சிறந்த கால் இரண்டுமாய் -என்றதும் அனுசந்தேயம்
கருவார் கற்பகம் -கரு -அடியைச் சொன்னபடி -ஸ்வர்க்க லோகத்தில் ஆலம்பனம் ஒன்றுமே
இல்லாத கற்பகத் தரு போலே இன்றிக்கே பூமியிலே வேர் பற்று உடைத்தான கற்பகமாம் எம்பெருமான் –

———————————————–

நிலையாளாக வென்னை உகந்தானை நிலமகள் தன்
முலையாள வித்தகனை முது நான்மறை வீதி தோறும்
அலையாரும் கடல் போல் முழங்கும் தென் அழுந்தையில் மன்னி நின்ற
கலையார் சொற்பொருளைக் கண்டு கொண்டு களித்தேனே –7-6-8-

நிலை ஆளாக -நிலை நின்ற அடியவனாக -அவனே உபாய உபேயமாக பற்றி ஒழிவில் காலம் எல்லாம்
உடனே மன்னி வழு  விலா அடிமை செய்யப் பெற்றவனாக்கி அருள் செய்தான்
நிலமகள் தன் முலையாள வித்தகன் -ஸ்ரீ பூமிப் பிராட்டியார் உடைய திரு முலைத் தடத்துக்கு
ஆனைக்கு குதிரை வைக்க வல்ல ஆச்சர்ய பூதனை –
பூமிப் பிராட்டிக்கு ஸ்ருங்கார ரசத்தில் தோலாதவன் என்றவாறு –
வேத கோஷம் மிக்க திவ்ய தேசம்
கலையார் சொற்பொருளை -சகல சாஸ்த்ரங்களில் சகல சப்தங்களுக்கும் அவனே பொருள்
சகல கலைகளிலும் புருஷார்த்தமாகப் பிரதிபாதிக்கப் படுபவன்
அலையார் கடல் -பாட பேதம்

———————————————————–

பேரானைக் குடந்தை பெருமானை இலங்கொளி சேர்
வாரார் வனமுலையாள் மலர்மங்கை நாயகனை
ஆராவின்னமுதைத் தென் அழுந்தையில் மன்னி நின்ற
காரர் கரு முகிலைக் கண்டு கொண்டு களித்தேனே –7-6-9-

திருப் பேர் நகரிலும்
திருக் குடந்தையிலும்
அரவணை மீது பள்ளி கொண்டு இருப்பவனும்
நித்ய யுவதியான பெரிய பிராட்டியாருக்கு  நாயகனும்
எப்பொழுதும் நாள் திங்கள் ஆண்டு ஊழி ஊழி தொறும் அப்பொழுதைக்கு அப்பொழுது ஆராவமுதம்
கார் காலத்து காள மேகம் போலே  இங்கே சேவை சாதித்து அருளுகிறான் -அவனைக் கண்டு களித்தேன் –

——————————————————–

திறல் முருகன் அனையார் தென் அழுந்தையில் மன்னி நின்ற
அறமுதல் ஆனவனை யணி யாலியர் கோன் மருவார்
கறை நெடுவேல்  வலவன் கலிகன்றி சொல் ஐ இரண்டும்
முறை வழுவாமை வல்லார் முழுதாள்வர் வானுலகே –7-6-10-

மருவார் -பகைவருடைய
கறை நெடு வேல் -தானுகந்த ஊர் எல்லாம் தன் தாள் பாடி -போது போக்காய் இருப்பதால்
ரத்தக் கறை கழுவதற்கு அவகாசம் இல்லை
பரம பதத்தை தாங்கள் இட்ட வழக்காக நிர்வஹிக்கப் பெறுவார்கள்-

————————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P .B .A .ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

பெரிய திருமொழி -திவ்யார்த்த தீபிகை -7-5-தந்தை காலில் பெரு விலங்கு தாள விழ நல்லிருள் கண் வந்த-

March 29, 2015

திருவழுந்தூர் திருப்பதி -முதலாவது-மங்களா சாசன திருப்பதிகம் –

உபரி சரவஸூ -முனிவர்களால் சபிக்கப் பட்டு -தேர் அழுந்தி -இப் பெயர் பெற்ற திவ்ய தேசம்
ஆ மருவி யப்பன் –

———————————————

தந்தை காலில் பெரு விலங்கு தாள விழ  நல்லிருள் கண்  வந்த
எந்தை பெருமானார் மருவி நின்ற ஊர் போலும்
முந்தி வானம் மழை பொழிய மூவா வுருவில் மறையாளர்
அந்தி மூன்று அனல் ஓம்பும் அணியார் வீதி அழுந்தூரே –7-5-1-

அத்யந்த அதிசய உக்தி யாகங்கள் செய்வதற்கு முன்னமே மழை பொழியும் என்றது
முந்து வானம் மழை பொழியும் -தவறான பாடம்– பொழிய என்பதே பிராசீன பாடம்
மூவா  வுருவின் – -சக்தி வாய்ந்த யௌவன சாலிகள் என்றபடி
அந்தி மூன்றும் -ப்ராதஸ் ஸ்வநம் -மாத்யந்தின ஸ்வநம் -சாயம் ஸ்வநம்-

—————————————————————–

பாரித்து எழுந்த படை மன்னர் தம்மை மாளப் பாரதத்துத்
தேரில் பாகனாயூர்ந்த தேவ தேவனூர் போலும்
நீரில் பணைத்த நெடு வாளைக்கு அஞ்சிப் போன  குருகினங்கள்
ஆரல் கவுளோடு அருகு அணையும் அணியார் வயல் சூழ் அழுந்தூரே–7-5-2-

குருகுகள் திரள் திரளாக மீன்களைப் பிடிக்க நீர் நிலைகளிலே வந்து இழிந்து
தம் வாய்க்கு அடங்கக் கூடிய சிறு மீனைப்-ஆரல்- பிடித்து கதுப்பிலே அடக்கிக் கொண்டு இருக்கச் செய்தே
வேறு ஒரு பெரிய மீன் -நெடு வாளை-வந்து தோற்ற அதைப் பிடிக்க அஞ்சி ஓடிப் போய் பின்னையும் ஆசையினால் வந்து கிட்டா நிற்கும்
இதன் உட்கருத்தை பெரிய வாச்சான் பிள்ளை -பாரத சமரத்திலே பீஷ்மாதிகள் -அதிரதர் மகா ரதர் -என்று இங்கனே
ஆண் பிள்ளைகளாகப் பேர் பெற்று ஜீவித்து இருந்தோம்
இப்போதாக பூசல் கோழைகளாக ஒண்ணாது -என்று
சாரதி பக்கலிலே வந்து கிட்டுவது
தேர் காலில் உழக்குண்டு போக ஒண்ணாது   -என்று  அகலுவதாய்க் கொண்டு
அவர்கள் படுவுற்றை படா நின்றன வாய்த்துக் குருகு இனங்களும் –

——————————————————————–

செம்பொன் மதிள் சூழ் தென்னிலங்கைக்கு இறைவன் சிரங்கள் ஐ இரண்டும்
உம்பர் வாளிக்கு இலக்காக வுதிர்த்த வுரவோனூர் போலும்
கொம்பிலார்ந்த மாதவி மேல் கோதி மேய்ந்த வண்டினங்கள்
அம்பராவும் கண் மடவார் ஐம்பால் அணையும் அழுந்தூரே –7-5-3-

வண்டுகள் குருக்கத்திப் பூக்களை விட்டு ஸ்திரீகளின் கூந்தல் கற்றைகளில் மது பானம் பண்ண எருகின்றனவாம்
ஐம்பால் -ஐந்து பண்புகள் கொண்ட கூந்தல் -சுருண்டு -நீண்டு -அடர்ந்து -கறுத்து-நறு மணம் கொண்டு இருத்தல் –

————————————————————————-

வெள்ளத்துள் ஓர் ஆலிலை மேல் மேவி யடியேன் மனம் புகுந்து என்
உள்ளத்துள்ளும் கண்ணுள்ளும் நின்றார் நின்ற ஊர் போலும்
புள்ளுப் பிள்ளைக்கு இரை தேடித் போன காதல் பெடையோடும்
அள்ளல் செறுவில் கயல் நாடு மணியார் வயல் சூழ் அழுந்தூரே –7-5-4-

பரிவர் யாரும் இல்லாமல் ஆலிலை துயின்றுள்ளானே என்ற சிந்தனையே காரணமாக என்னுள்ளம் புகுந்து அருளினான்
மானச அனுபவம் மாத்ரமே அன்றி கண்ணுக்கும் விஷயமாய் ஹிருதயம் வேறு ஒன்றிலும் போகாத படி
இங்கே நித்ய சந்நிதி பண்ணி அருளினவன்
பிள்ளைக்கு இரை தேடப் போகும் பொழுதும் பெடையுடன் செல்லுமாம் புள்ளு-

———————————————————–

பகலும் இரவும் தானேயாய்ப் பாரும் விண்ணும் தானேயாய்
நிகரில் சுடராய் இருளாகி நின்றார் நின்ற ஊர் போலும்
துகிலின் கொடியும் தேர்த் துகளும் துன்னி மாதர் கூந்தல் வாய்
அகிலின் புகையால் முகில் ஏய்க்கும் அணியார் வீதி அழுந்தூரே —-7-5-5-

சூர்ய சந்த்ரர்களுக்கு நிர்வாஹகன்
சங்கல்ப சக்தியால் பகலை இரவாக்கவும் இரவை பகலாக்கவும் வல்லவன்
உபய விபூதிக்கும் நிர்வாஹகன் -பாரும் விண்ணும் தானேயாய்
நிகரில் சுடராய் இருளாகி நின்றார் -சாத்விகர்களுக்கு ஜாயமான கடாஷம் அருளி ராஷசருக்கும்
தாமசருக்கும் தோன்றாமல்
இப்படி ஜகத் ரூபியாய் இருந்தாலும் அசாதாரண திவ்ய மங்கள விக்ரஹ விசிஷ்டனாக
இங்கே சேவை சாதித்து அருளுகிறான்-

காற்று தூள் மேகப்படலம்   கார் காலத்தில் இருக்குமே –
-கொடிகளில் கட்டிய துணிகளின் அலைச்சலால் காற்று
திரு வீதியில் செல்வத் தேர்கள் சஞ்சாரத்தால் தூள்
மாதர்கள் கூந்தல் பரிமளத்துக்கு அகில் புகைப்படலம்
நித்யமும் வர்ஷா காலமாய் தோற்றும் –

——————————————-

ஏடிலங்கு தாமரை போல் செவ்வாய் முறுவல் செய்தருளி
மாடு வந்து என் மனம் புகுந்து நின்றார் நின்ற ஊர் போலும்
நீடு மாடத் தனிச் சூலம் போழ்கக் கொண்டல் துளி தூவ
ஆடல் அரவத் தார்ப்போவா அணியூர் வீதி அழுந்தூரே –7-5-6-

என்னை பெறுகைக்கு நெடு நாள்  சமயம் பார்த்து பெற்றதால் அலாப்ய லாபம் பெற்றால் போலே சந்தோஷித்து
தாமரைப் பூ மலர்ந்தால் போலே திருப்பவளத்தை திறந்து ஸ்மிதம் செய்தருளி
அதிலே என்னை ஈடுபடுத்தி ஹிருதயத்திலே வந்து புகுந்து
இனி இவருக்கு போக்கு இல்லை என்று தோற்ற நின்றவர்
கண்ணுக்கு இலக்காக இங்கே சேவை சாதித்து அருளுகிறார் –

போழ்க-மேகத்தின் வயிற்றைக் கீண்ட அளவிலே
மாடங்களில் பாதுகாப்புக்கு உறுப்பாக சூலங்கள் நாட்டப்பட்டு இருக்குமே -ஒக்கம் சொன்ன படி –
சிலையிலங்கு மணிமாடத் துச்சிமிசை சூலம் செழும் கொண்டல் அகடிரிய -3-9-4–என்றார்
ஸ்ரீ வைகுண்ட விண்ணகர் திருப் பதிகத்திலும்-

மாதர்கள் ஆடும் ஆரவாரம் இடையறாது செல்லுகின்றதாம்-

——————————————-

மாலைப் புகுந்து மலரணை மேல் வைகி அடியேன் மனம் புகுந்து என்
நீலக் கண்கள் பனி மல்க நின்றார் நின்ற ஊர் போலும்
வேலைக் கடல்போல் நெடு வீதி விண்டோய் சுதை வெண் மணி மாடத்து
ஆலைப்  புகையால்  அழல் கதிரை மறைக்கும் வீதி அழுந்தூரே –7-5-7-

இது முதல் மேல் மூன்று பாசுரங்களிலும் ஆழ்வாருக்கு நாயகி பாவனை –
என்னுடன் கலவி செய்ய திரு உள்ளம் கொண்டு -மாலைப்  பொழுதிலே வந்து சேர்ந்து  -மென் மலர்ப் பள்ளியிலே தங்கி
அதிலே பொருந்தாமல் -திருப்தி படாமல் -என்னுடைய ஹிருதயத்திலே ஏக தத்வமாகப் புகுந்து
கலவி பிரிவுடனே சேர்ந்து அல்லது இருக்க மாட்டாமையாலே பிரிவை பிரஸ்தாபித்து
அவ்வளவிலே என் கண்களில் நீர் பெருக –
இப்பைப் பட்ட நாயகியை எங்கனம் பிரிவேன் என்று கலங்கி கால் பெயர்ந்து போக மாட்டாதே நின்றவர்
நித்ய வாசம் செய்து அருளும் இடம் இத் திவ்ய தேசம்
இங்கே திரு வீதிகளும் கடல் போலே விசாலமாய் பெருமை பொருந்தி இருக்கும்
சாந்திட்டு வெண்ணிறமாய் இருக்கும் மணி மாடங்கள் விண்ணுலகத்து அளவும் ஓங்கி இருக்கும் –
கரும்பாலைப் புகை சூர்ய கிரணங்களை மறைத்து எங்கும் நிழல் செய்யும் –

——————————————

வஞ்சி  மருங்கிலிடை நோவ மணந்து நின்ற  கனவகத்து  என்
நெஞ்சு நிறையக் கை கூப்பி நின்றார் நின்ற ஊர் போலும்
பஞ்சியன்ன மெல்லடி நற்பாவைமார்கள் ஆடகத்தின்
அஞ்சிலம்பின் ஆர்ப்போவா அணியார் வீதி அழுந்தூரே –7-5-8-

கனவிலே வந்து கலந்து -இடை நோவ -பூர்ண சம்ச்லேஷம் செய்து அருளி -பிரிந்து போனவர் மற்றுள்ள
அன்பரோடும் நனவிலே -ப்ரத்யஷமாக
கலவி செய்ய வந்து நிற்கிற இடம் இது
மருங்குல் இடை -இரட்டைச் சொற்கள்
மாதர்கள் அணிந்த பொன்மயமான நூபுரங்கள் சப்தம் ஓயாது இருக்கும் –

கை கூப்பி நின்றார் -நான் அஞ்சலி செய்யப் பெற்று நின்று கொண்டு இருந்தவர் -என்றபடி-

———————————————–

என் ஐம் புலனும் எழிலும் கொண்டு இங்கே நெருநல் எழுந்து அருளிப்
பொன்னங்கலைகள் மெலிவெய்தப் போன புனிதரூர் போலும்
மன்னு முது நீர் அரவிந்த மலர் மேல் வரி வண்டு இசை பாட
அன்னம் பெடையோடு உடனாடும் அணியார் வயல் சூழ் அழுந்தூரே-7-5-9-

என்னுடைய பஞ்ச இந்த்ரியங்களையும் தன வசமாக்கிக் கொண்டவர் -ஜிஹ்வே கீர்த்தய கேசவம் இத்யாதி
மேனி அழகையும் கொள்ளை கொண்டவர்
அரையில் பரியட்டம் தங்காத படி பண்ணிப் போந்தவர் -தலைவர் வாழும் இடம்
புனிதர் -எதிர்மறை லஷணம்-பெண்ணை படுகொலை பண்ணி -ப்ரணய ரோஷம் தோற்ற அருளிச் செய்கிறார்
வயல்களிலும் பாட்டும் கூத்தும் நடை பெறுகின்றன –

———————————————-

நெல்லில் குவளை கண் காட்ட நீரில் குமுதம் வாய் காட்ட
அல்லிக் கமலம் முகம் காட்டும் கழனி அழுந்தூர் நின்றானை
வல்லிப் பொதும்பில் குயில் கூவும் மங்கை வேந்தன் பரகாலன்
சொல்லில் பொதிந்த தமிழ் மாலை சொல்லப் பாவம் நில்லாதே –7-5-10-

குவளைக் கண்கள்
ஆம்பல் அதரம்
தாமரைப் பூக்கள் முக மண்டலம் –
ஓத வல்லார்கள் பாவங்கள் தொலைந்து போம்-

—————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P .B .A .ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-