அவதாரிகை
ஸ்ரீ ராமாயணத்தாலும்
ஸ்ரீ மஹா பாரதத்தாலும்
ஸ்ரீ விஷ்ணு புராணத்தாலும்
பிராட்டியினுடையவும்-தத் தஸ்ய சத்ருசம் பவேத் -சுந்தர -39-30-என்றும்
த்ரௌபதி யினுடையவும்–
சிந்தயந்தி யினுடையவும் –
தத் பிராப்தி மஹா துக்க விலீ நாசேஷ பாதகா -தச் சித்த விமலாஹ்லாத ஷீண புண்ய சயா ததா
சிந்தயன்தீ ஜகத் ஸூ திம் பரப்ரஹ்ம ஸ்வரூபிணம்-நிருச்ச்வசதயா முக்திம் கதான்யா கோப கன்யகா-ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-13-21/22-என்றும்
அத்யாவசாயத்தைப் பிரதி பாதிக்கையாலே இறே இவை பிரபல பிரமாணம் ஆயிற்று –
இதில் மஹா பாரத உக்தமான த்ரௌபதியினுடைய சரணாகதி நிஷ்டையை வெளியிடுகிறது இஸ் ஸ்லோகம் –
அதாவது
சர்வேஸ்வரன் ரஷிக்கைக்கு பரிகரமான அத்யவசாயத்தைச் சொல்லிற்று ஆயிற்று –
அப்படியே இறே-
ஜ்ஞாதம் மயா வசிஷ்டே ந புராகீதம் மஹாத்ம நா
மஹாத்யாபதி சம் ப்ராப்தே ஸ்மர்த்தவ்யோ பகவான் ஹரி -பார -சபா -90-42-என்றதும்
இவ் வத்யவசாயத்தைக் கொண்டு
பொய்ச் சூதில் தோற்ற பொறையுடை மன்னர்க்காய் -பெரியாழ்வார் -2-1-1- என்றபடி
சபா மத்யத்திலே துச்சாசன க்ருஷ்டயாய் –
அதினாலே பரிபூதையான தான் –
அரஷகரான பர்த்தாக்கள் முதலானவர்களை ரஷகராக கூப்பிட்ட இழவு தீர
சர்வ ரஷகன் ஆனவன் தன்னை ரஷகனாகத் துணிந்து
அவனுடைய ரஷகத்வ உபயோகியான குணங்களைச் சொல்லி சரணம் புகுகிறாள் –
———–
த்ரௌபதி சரணாகதி ஸ்லோகம் –
சங்க சக்ர கதா பாணே த்வாரகா நிலயாச்யுத
கோவிந்த புண்டரீகாஷா ரஷமாம் சரணா கதாம் –ஸ்ரீ மஹா பாரதம் -சபா பர்வம் -9- அத்யாயம் -43 –
சங்க சக்ர கதா பாணே –
கைப்படியில்லாதனையோ நான் கை கூப்பிற்று –
த்வாரகா நிலய-
ஓர் இருப்பிடம் இல்லாதானையோ நான் நேர்ந்தது –
அச்யுத –
தன்னை அடைந்தாரை நழுவ விடுமவனையோ நான் அடைந்தது –
ந ச்யவந்தே யஸ்மாதி த்யச்யுத –
கோவிந்த-
தன் ஆ ஸ்ரீ தரை நோவு பட விட்டிருக்குமவனையோ நான் ஆஸ்ரயதித்தது-
காவ விந்தந்த்யேனம்-கா விந்ததி –
புண்டரீகாஷ-
கண்ணில்லாதவனையோ நான் காலைக் காட்டிற்று –
கண் இரக்கம் –
ரஷமாம் –
ருசி இல்லாதேயோ நான் சரணம் புகுந்தது –
சரணா கதாம் –
ஆகையாலே பல சித்தியில் கண்ணழிவு வர ஹேது இல்லை என்று துணிகிறாள் –
1-சங்க சக்ர கதா பாணே –
நீ ஆயுத பாணியாய் இருக்க -நான் அம்பரத்தைப் பறி கொடுத்தேன் –
2-சங்க சக்ர கதா பாணே —
சுவர் விடும் ஐம்படை அங்கியுள் அமர்ந்தனை -திரு எழு கூற்றிருக்கை -என்கிறபடியே –
நீ சதா பஞ்சாயுதங்களைத் தரித்து இருக்கிறது சரணாகத ரஷணத்துக்கு அன்றோ –
சகல ஆபன் நிவ்ருத்திக்கும் ஹேது உன் கை தானே –
ஸூதர்சனம் சிந்தித்த மாத்ரமாஸூ -தச்யாக்ர ஹச்தம் ஸ்வயம் ஆருரோஹா -பார -பீஷ்ம -59-58-என்று
நீ கை வந்த சக்கரத்தென் கண்ணனாய் -திருவாய் -5-4-8- இருக்க
காப்பாரார் இவ்விடத்து -திருவாய் -5-4-6/7-என்று
நான் கை விரிப்பது என் –
நான் கை விட்டு இருக்க நீ கைக் கொண்டு இருப்பதற்கு பிரயோஜனம் வேண்டாவோ
பஞ்சாயுதங்களையும் தரிக்கிறது பரிபவத்தில் நொந்தாரை ரஷிக்க அன்றோ
3- சங்க சக்ர கதா பாணே –
நான் கை விட்ட படியே -அவன் படை தொட்டான்
அங்கனம் தொட்ட படி இறே
மழுங்காத வைந்நுதிய சக்கர நல் வலத்தையாய்-தொழும் காதல் களிறளிப்பான் புள்ளூர்ந்து தோன்றினையே -திருவாய் -3-1-9-
அப்படியே கூராராழி வெண் சங்கேந்தி -திருவாய் -6-9-1-வந்தருளி தனக்கு முகம் காட்ட வேணும் என்று கருத்து
பின்பு இவளுக்காக இறே –
ச பாஞ்ச ஜன்ய அச்யுத வக்த்ரவாயு நா -பார -த்ரோ -73-58-என்றும்
ச கோஷோ தார்த்தராஷ்ட்ராணாம் ஹ்ருதயா நி வ்யதாரயத்-ஸ்ரீ கீதை -1-19-என்றும்
கழல் மன்னர் கலங்கச் சங்கம் வாய் வைத்ததும் -பெரிய திரு -6-7-8- என்றும்
ஆழி கொண்டு அன்று இரவி மறைப்ப -பெருயால்வார் -1-4-8- என்று செய்து அருளியதும்
கொல்லா மாக்கோல் கொலை செய்து பாரதப் போர் எல்லாச் சேனையும் இருநிலத்து அவித்ததும் -திருவாய் -3-2-3-என்றபடி
4- சங்க சக்ர கதா பாணே-
அருளார் திருச் சக்கரத்தால் அகல் விசும்பும் நிலனும் இருளார் வினை கெடச் செங்கோல் நடாவுதிர் ஈங்கோர் பெண்பால்
பொருளோ எனும் இகழ்வோ இவற்றின் புறத்தாள் என்று எண்ணோ தெருளோம் அரவணையீர்-திரு விருத்தம் -33-
5- சங்க சக்ர கதா பாணே –
துளிக்கின்ற வான் இந்நிலம் சுடராழி சங்கேந்தி அளிக்கின்ற மாயப்பிரான் -திருவாய் -2-3-10- என்றபடி
இருக்கிற உனக்கு அபலையை ரஷிக்கை பணியோ-
நான் அழகுக்கு இட்ட வலை போல் ஆயிற்றே நீ இட்ட பத்திரம் –
இனி அவன் நிலை கலங்கி வரும்படி அவன் நிலையைச் சொல்லிக் கூப்பிடுகிறாள்
1-த்வாரகா நிலயாச்யுத-
நீ -வண்டுவராபதி மன்னாய் -திருவாய் -5-3-6-
நழு வதல் இன்றிக்கே நாட்டாளாய் நிற்க
நான் பிடித்தார்க்கு எல்லாம் பெண்டிர் ஆகவோ –
2-த்வாரகா நிலயாச்யுத-
பரமபத நிலையனையோ நான் கூப்பிடுகிறது
சாது பரித்ராணம் பண்ண வந்த இடத்தே யன்றோ
அயர்வறும் அமரர்களுக்கு முகம் கொடுத்த இடம் அன்றே நான் அர்த்தித்தது
அபலைகளுக்கு முகம் கொடுத்த இடம் அன்றோ –
பல்லாயிரம் பெறும் தேவிமாரோடு பௌவம் எறிதுவரை எல்லாரும் சூழச் சிங்கா சணத்திலே -பெரியாழ்வார் -4-1-6- இருக்கும் இடம் அன்றோ –
ஏகஸ்மி னநேவ கோவிந்த காலே தாஸாம் மஹா முனே
ஜக்ராஹவிதிவத் பாணீன் ப்ருதக்கே ஹீஷூ தர்மத் -ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-31-17-
ஆஸ்ரிதையான ஒருத்தியை உபேஷித்தால் அபிமதர்களானவர்கள் பலர் முகம் உமக்குப் போக வேண்டாவோ –
3- த்வாரகா நிலயாச்யுத –
நீயும் என்னைப் போலே நிலை இழந்து இருக்கிறாயோ –
அவர் ஒருநிலை நின்றது என்பரேல்-
திரைபொரு கடல்சூழ் திண் மதிள் துவரை வேந்து தன்மைத்துனன் மார்க்காய்
அரசினையவிய அரசினையருளும் அரி புருடோத்தமன் -பெரியாழ்வார் -4-7-8-என்கிறபடியே
அரசினை யவிய அரசினை அருளும் ஆழியான் ஆயிற்றே –
4-த்வாரகா நிக்லயாச்யுத
ஆராய்ச்சியைத் தவிர்ந்த அதர்மமான சபை போல் ஆயிற்றே உன் தர்ம சபையும்
5- அச்யுத –
என்று அவனை அல்லாதாரை என்றும் தன்னை நழுவாமல் நோக்கும்படியான பெயரைச் சொல்லுகிறாள்
அச்சுதன் இறே அடியவர் வினை கெடுப்பான்
அச்யுதாஹம் தவாச்மி-என்கிறாள்
மித்ர பாவத்திலே -ந த்யஜேயம்-யுத்த -18-3- என்கிற நீ
சரணாகதியான என்னை சத்ருக்கள் நலியும்படி காட்டிக் கொடுத்து இருப்பதே –
அவசன்னையாய் அநாதையாய் இருக்கிற என்னை நெகிழுகையே ப்ராப்தாமோ
நீயும் உன் ஸ்வ பாவத்தில் நெகிழில் அன்றோ என்னுடை நெகிழ வேண்டுவது
6-சங்க சக்ர கதா பாணே த்வ்ரகா நிலயாச்யுத –
தமசா பரமோ தாதா சங்க சக்ர கதாதர -யுத்த -114-15-என்றாள் ஒருத்தி -மண்டோதரி —
இவளும் இப்படியே பேசுகிறாள்
ஜாதோ அஸி தேவ தேவேச சங்க சக்ர கதாதர -ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-3-1- என்னக் கடவது இறே –
பிராகார சர்வ வ்ருஷ்ணீ நாம் -பார -சபா -36-12-என்று இருக்கும் நீ
இவர்களுக்கு கடலை அரண் செய்து கொடுத்து சத்ருக்கள் கையில் காட்டிக் கொடாமல்
காக்கும் இயல்வினனாய் இருக்கிற உனக்கு சத்ருக்கள் கையிலே அகப்படுவது என் செய்வது என்
பின்பு -ரதம் ச்தாபாய மே அச்யுத -ஸ்ரீ கீதை -1-21- என்னும்படி இறே இவளுக்காக சாரதியாய் வ்யவஸ்திதன் ஆனதும்
நீ கை கழலா நேமியானாய் இருக்க
என் மொய் குழல்கள் இரண்டும் விழும்படி யாவதே என்று
பொற் சக்கரத் தரியினை யச்ச்தனைப் பற்றுகிறாள் –
1-கோவிந்த-
இனி அரை குலையத் தலை குலைய அலமாக்கும்படியான முடி சூடின பேரைச் சொல்லிக் கூப்பிட்டு முறையிடுகிறாள்
கோவிந்தேதி யதா க்ரந்தத் கிருஷ்ணா மாம் தூர வாசி நாம் –
ருணம் பிரவ்ருத்தமிவ மே ஹ்ருதயான் நாப சர்ப்பத்தி -பார -உத் -47-39-என்று
அவன் திரு உள்ளம் புண்படும்படி உயர்நிலையிலே ஒன்றைச் சொல்லிற்று –
2- கோவிந்த –
நீ கோவித்த அபிஷேகம் பண்ணி கோப்தாவாய் இருக்க
இவ்விடம் அராஜகமாய் ஒருவர் கூறை எழுவர் உடுக்கும்படி இருப்பது என் –
இவளுக்கு புடவை சுரக்கும் திரு நாமம் இருக்கும் படி
3- கோவிந்த –
நீ ஆஸ்ரீத ரஷணத்தில் தீஷித்து இருக்க
க்ருஷ்ணாஸ்ரய-பார த்ரோண -183-24-என்று இருக்கிற என்னை
கிருபை பண்ணாது ஒழிவது என்
நாராயணா என்று உன் சிறு பெயரையோ நான் சொல்லிற்று
நாமைதத்தவ கோவிந்த நாம த்வத் தஸ் சதாதிகம் -என்று
உன்னிலும் அதிகமான உன் பேரை அன்றோ நான் சொல்லிற்று
சக்ருத் சம்ருதோ அபி கோவிந்த ந்ருணாம் ஜன்மசதை க்ருதம்-பாபராசிம் தஹத்யா ஸூ தூலராசி மிவா நல -என்று
சகல ப்ரவ்ருத்தி பண்ண வற்றானது உன் திரு நாமம் அன்றோ –
4- கோவிந்த –
நான் குழல் பேணாமல் இருக்க –
நீ குழல் இருண்டு சுருண்டு ஏறிய குஞ்சிக் கோவிந்தன் -பெரியாழ்வார் -3-6-11-என்றபடி
கோவிந்தனாய் மயிர் பேணி இருப்பதென் –
5- கோவிந்த
நீ முடி சூடிவித்திருக்க நான் –
சாஹம் கேசக்ரகாம் ப்ராப்தா த்வயி ஜீவத்யபி பிரபோ -பார உத் 81-24-என்னும்படி யாவது என்
என்று சொல்லி –
கோவிந்தன் குணம் பாடி ஆவி காத்து -நாச் -8-3- என்றபடி
குண ஜ்ஞானத்தாலே நிர்ப்பரை யானாள்-
பின்பு இறே மைத்துனன் மார் காதலியை மயிர் முடிப்பித்ததும்
6- கோவிந்த –
ஜகத்திதார்த்தமாக -வந்து அவதரித்தவன் அல்லையோ –
7- த்வாரகா நிலய கோவிந்த –
துவாராபதிக் காவலன் கன்று மேய்த்து விளையாடும் கோவலனை -நாச் -4-8-கூறுகிறாள்
8- கோவிந்த –
கோவிந்தன் -பசு மேய்த்தவன் -என்றபடி
கோமளவான் கன்றைப் புல்கிக் கோவிந்தன் மேய்த்தன என்னும் -திருவாய் -4-4-5-
நீ பசு மேய்க்கக் கற்ற வத்தனை யல்லவோ
பரிபவத்தில் ரஷிப்பது உனக்குப் பணியாய் இருப்பது என்
9- கோவிந்த –
என்னுடைய ரஷணத்துக்கு மலை எடுக்க வேணுமோ
கண்ணாலே நோக்க அமையாதோ
கோவிந்தம் கோபதிம் தேவம் சந்ததம் சரணம் வ்ரஜ -என்கிறது
இவள் அனுஷ்டானத்தை பின் செல்லும்படியாய் இறே இருப்பது
விதயச்ச வைதிகா த்வதீய கம்பீர மநோ நு சாரிண-ஸ்தோத்ர ரத் -20-
1- புண்டரீகாஷ-
பாஞ்சால்யா பத்மா பத்ராஷ்யா –
நான் கமலக் கண் முத்தம் சோரா இருக்க
கிமர்த்தம் நேத்ராப்யாம் –சுந்தர 33-4-என்கிறபடியே
உன் சோதி வாய் திறந்து உன் தாமரைக் கண்களால் நோக்காது ஒழிவது என்
2- புண்டரீகாஷ-
என்னுடைய ஆபத்துக்கு
அவலோக நாத –நே ந போயோ பாலயாச்யுத -ஸ்ரீ விஷ்ணு பிராணம் -1-20-16-
நம் அன்றோ அபேஷிதம்-
3- கோவிந்த புண்டரீகாஷ
க்ருஷ்ணம் கமல பத்ராஷம் -என்னக் கடவது இறே-
சம்ப்ரமைஸ் துஷ்ய கோவிந்த ஏதன்ன பரமம் தனம் -அந்யதா
ஹி விசேஷணே கஸ்த்வா மர்ச்சிதும் அர்ஹதி -பார -உத் -91-44
என்ற அனந்தரம்
பீஷ்மத் ரோண அதிக்ரம்யா மாஞ்சைவ மது ஸூ தன –கிமர்த்தம் புண்டரீகாஷ புக்தம் வ்ருஷள போஜனம் -என்றான் துரியோதனன் இறே –
4-புண்டரீகாஷ
நான் கண் கலங்கி இருக்க நீ கண் வளர்த்தியோடே இருப்பது என்-
5-புண்டரீகாஷ –
நீ கண் யுடையவனாய் இருக்க நான் கண்டார் கண் பார்வைக்கு இலக்காய்க் கண் கலங்குவது என் –
6- புண்டரீகாஷ –
நான் கண் சிவந்து இருக்க
நீ உன் முகத்தன கண்கள் அல்லவே -நாச் -2-5-இருப்பது என் –
7-புண்டரீகாஷ –
அவன் கண் செம்பளித்து இருந்தான்
பின்பு கண்ணாலே அலர விழித்ததும் இவளைக் குளிர நோக்கிற்றும் –
க்ருத்வா பாராவதரணம் ப்ருதிவ்யா ப்ருது லோசன –
மோஷயித்வா தநும் ப்ராப்த கிருஷ்ண ச்வஸ்தா நமுத்தமம் -பார மௌசல-9-34-இத்யாதி
அனுகூல ரஷண்த்துக்கும் பிரதிகூல நிரசனத்துக்கும் பரிகரம் ஒன்றே யாயிற்று –
8- புண்டரீகாஷ –
தாமரைக் கண்ணாவோ தனியேன் தனியாளாவோ -திருவாய் -7-6-1- என்கிறாள்
9-புண்டரீகாஷ -அச்யுத –
தாமரைக் கண்ணா அச்யுதா -என்கிறாள்
10- அச்யுத புண்டரீகாஷ –
வீவிலின்பம் மிக வெல்லை நிகழ்ந்த நம் அச்சுதன் வீவில் சீரன் மலர்க் கண்ணன் -திருவாய் -4-5-3–என்கிறாள் –
11- புண்டரீகாஷா –
கப்யாசம் புண்டரீக மேவ மஷிணீ-சாந்தோக்யம் -1-7- என்கிற
சுருதி அர்த்தம் இவளுக்குக் கையாளாய் இருக்கும் படி –
12-புண்டரீகாஷ-
ஜிதந்தே புண்டரீகாஷ -ஜிதந்தே -என்று
இவள் முக்த அனுபாவ்யமான கண்களிலே ஜிதையாய் இருக்கும்படி
13-புண்டரீகாஷ –
ச ஏஷ ப்ருது தீர்க்காஷா சம்பந்தி தே ஜனார்த்தன -பார -வன -192-51-என்று
இவள் பேசினபடி கேட்டுக் கொண்டு இருக்குமே –
வழி பறிக்கும் தசையிலே தாய் முகத்திலே விழிக்க ஆசைப்படுவாரைப் போலே
தாயாய் அளிக்கின்ற தண் தாமரைக் கண்ணனைக் காண வாயிற்று இவள் ஆசைப்படுகிறது
14-சங்க சக்ர கதா பாணே புண்டரீகாஷ –
சங்கு சக்கரங்கள் என்று கை கூப்பும் தாமரைக் கண்ணன் என்றே தளரும் -திருவாய் -7-2-1- என்கிறாள் –
15- புண்டரீகாஷ சங்க சக்ர கதா பாணே-
பங்கயக் கண்ணன் என்கோ —சங்கு சக்கரத்தான் என்கோ -திருவாய் -3-4-3-என்கிறாள்
16-புண்டரீகாஷ –
பாஹி மாம் புண்டரீகாஷ ந ஜாநே சரணம் பரம் -ஜிதந்தே -8-என்கிறாள்
ரஷமாம் —
1-ரஷ அபேஷை யுடைய என்னை –
2- அநாதையான என்னை –
3-அபலையான என்னை –
4-ஆ ஸ்ரீ தையான -பலமற்ற -என்னை
4-அநந்ய சரணையான என்னை
ரஷமாம் –
ரஷிக்கை யாவது
விரோதியைப் போக்குகையும் –
அபேஷிதங்களைக் கொடுக்கையும் –
அலமன்னு மடல் சுரி சங்கம் எடுத்து அடலாழியினால் அணியாருருவின்
புலமன்னு வடம்புனை கொங்கையினாள் பொறை தீர முனாள் அடுவாள் அமரில்
பல மன்னர் படச் சுடர் ஆழியினைப் பகலோன் மறையப் பணி கொண்டு அணி சேர்
நிலா மன்னனுமாய் உலகாண்டவனுக்கு இடம் மா மலையாவது நீர் மலையே –பெரிய திரு -2-4-3-
1-சரணாகதாம்-
சரணம் அடைந்த இவளுக்காக இறே-பண்டு நூற்றுவரை மரணம் அடைவித்ததும் –
இவளுக்கு வஸ்த்ர வர்த்தநமும்
சத்ரு சம்ஹாரமும் அபேஷிதம்
ரஷாபேஷாம் ப்ரதீஷதே -என்று
தொழுது மாமலர் நீர் சுடர் தூபம் கொண்டு எழுதும் என்னுமிது மிகையாதலின் -திருவாய் -9-3-9-என்றபடி –
அத்தலைக்கு மிகையாய் இறே இருப்பதும்
2-சரணாகதாம் –
சத்ருவாகிலும் விட ஒண்ணாதே ரஷிக்க வேண்டும்படியான சரணாகதி தர்மத்தை அனுஷ்டித்தேன்
தஸ்மாதபி வைத்தியம் பிரபன்னம் ந பிரதிப்ரயச்சந்தி -என்றும்
சரணாகத அரி ப்ரானான் பரித்யஜ்ய ரஷிதவ்ய -யுத்த -18-28-என்றும் சொல்லக் கடவது இறே
காதுகனான வேடன் விஷயத்திலே திர்யக்கான பட்ஷி தன்னை அழிய மாறி ரஷித்தபடி கண்டால் –
சரணாகத வத்சலனான -சுந்தர -21-21-நீ
சரணாகதையான என் விஷயத்தில் என்ன செய்ய வேண்டும்
இவன் இப்படியே நாதிஸ் வஸ்த மநா -என்று இழவோடே எழுந்து அருளிற்றும்
3-சரணாகதாம் –
ஆண் பிறந்தார்க்கு எல்லாம் அடைக்கலமாய் இருக்க பெண் பிறந்தார் அடைக்கலம் புகுந்தால்
அஞ்சேல் என்னாது இருப்பது என்-
மாஸூசா -என்று ஒரு வார்த்தை அன்றோ அருளிச் செய்ய வேண்டுவது –
சங்க சக்ர கதா பாணே –சரணாகதாம் –
1-நீ ரஷண பரிகரங்களை யுடையனாவது –
2-ஆசன்னன் ஆவது –
3-ஆ ஸ்ரீ தரை நழுவ விடாடதவனாவது –
4-ஆ ஸ்ரீதரஷணத்திலேதீஷித்து இருக்குமவனது
5-கண் யுடையவனாவது
6-நான் ரஷக அபேஷை யுடையவளாய் சரணம் புகுவது
ஆகையாலே ரஷிக்கக் குறை என் –
சங்க சக்ர கதா பாணே -என்கையாலே –
ஜ்ஞான சக்த்யாதி யோகத்தைச் சொல்லி
த்வாரகா நிலய அச்யுத கோவிந்த புண்டரீகாஷ -என்கையாலே
வாத்சல்ய சௌசீல்ய சௌலப்யாதி குணங்களைச் சொல்லி
ரஷமாம் -என்கையாலே
அகிஞ்சன அதிகாரி என்னும் இடம் சொல்லி
சரணாகதம் -என்கையாலே
உபாய அத்யவசாயம் சொல்லித் தலைக் கட்டுகிறது –
இத்தால்
லஜ்ஜா புரச் சரமாக இதர உபாய த்யாகம் சொல்லி
சித்த உபாய ச்வீகாரம் பண்ணுகை அதிகாரி க்ருத்யம்-என்றது ஆயிற்று –
—————————————————————————————–
ஹா கிருஷ்ண த்வாரகா வாஸின் க்வாசி யாதவ நந்தன
இமாமவஸ்தாம் சம் ப்ராப்தாம நாதாம் கிம் உபேஷஸே
கோவிந்த த்வாரகா வாஸின் கிருஷ்ண கோபீ ஜன ப்ரிய
கௌரவை பரி பூதாம் மாம் கிம் ந ஜாநாசி கேசவ
ஹே நாத ஹே ரமா நாத வ்ரஜ நாதார்த்தி நாசன
கௌரவார்ணவ மக்நாம் மஹா யோகின் விச்வாத்மன் விஸ்வ பாவன
பிரபன்னான் பாஹி கோவிந்த குரு மத்யே அவசீததீம் -பார -சபா -90-44/45/46/47-
மனக் குறை வெளியிட்டு பற்பல திரு நாமங்களை அனுசந்திக்கிறாள் –
வன வாசத்தின் போது ஸ்ரீ கண்ணபிரான் பாண்டவர்களைப் பார்க்க இரண்டு தடவை வருகிறான் –
அதில் முதல் தடவை வந்த போது
நைவ மே பதய சந்தி நபுத்ரா ந பாந்தவா ந ப்ராதரோ ந ச பிதா நைவ த்வம் மது சூ தன —
யே மாம் விப்ரக்ருதாம் ஷூத்ரைரு பேஷத்வம் விசோகவத்-ந ச மே சாம்யதே துக்கம் கர்ணோ யத் ப்ராஹசத் ததா -பார -ஆர -12-128/129–
யாரும் இல்லை -சரணாகதி பலன் கிட்ட வில்லை என்கிறாள்
உபாய அபாய சம்யோக நிஷ்டயா ஹீயதே அனயா-அபாய சம்ப்லவே சத்ய ப்ராயச்சித்திம் சமாசரேத்-
ப்ராயச்சித்திரியம் சாஸ்திர யத் புன சரணம் வ்ரஜேத்-உபாயாநாம் உபாயத்வ சவீ காரேப் ஏவ மேவ ஹி-ஸ்ரீ லஷ்மி தந்த -17-92/93/94-
மீண்டும் சத்தியபாமை பிராட்டி யோடு எழுந்து அருளி –
மார்கண்டேய பகவானையும் தர்ம உபதேசம் -செய்யத் தூண்ட -அவரும்
சர்வேஷாமேவ லோகா நாம் பிதா மாதா ச மாதவ
கச்ச த்வமேநம் சரணம் சரண்யம் புருஷர்ஷபா -பார ஆர -192-56–என்ன
ஏவமுக்தாச்ச தே பார்த்தா யமௌ ச பிருஷர்ஷபௌ-
த்ரௌபத்யா சாஹிதா சர்வே நமச்சக்ருர் ஜனார்த்தனம் -பார -ஆர -192-57- என்று சரணம் அடைய
ச சைதான் புருஷவ்யாக்ர சாம்நா பரம வல்குநா
சாந்த வயாமாச மாநார்ஹோ மன்யமாநோ யதா விதி -பார -ஆர -192-58-என்று
திரு நாம சங்கீர்தனத்தால் தடை பட்ட சரணாகதி பிராயச் சித்தம் செய்யப் பட்டதும் தடை நீங்க –
சாஸ்திர விதியை நினைத்து சமாதானம் அடைந்தான்
இத்தையே பெரியவாச்சான் பிள்ளை பல கால் பின்பு பின்பு என்று அருளிச் செய்கிறார்-
இவளுக்கு புடவை சுரந்தது திரு நாமம் இறே-
நம் பேர் தன கார்யம் செய்தது இத்தனை போக்கி
நாம் இவளுக்கு ஒன்றும் செய்திலோம் இ றே -என்று இருந்தான் -ஈட்டு ஸ்ரீ ஸூ க்திகள்-
முமுஷூப்படி -அவன் தூரஸ்தன் ஆனாலும் இது கிட்டி நின்று உதவும்
ஸ்ரீ வசன பூஷணம் -திரௌபதிக்கு பலம் வஸ்த்ரம் -த்ரௌபதி வஸ்த்ரார்த்தமாக பிரபத்தி பண்ணுகையாலே -மா முனிகள்
உபாய புத்தி யுடன் திரு நாம சங்கீர்த்தனம் கூடாது இறே
ஸ்ரீ கண்ணபிரான் விளம்பித்து மீதி பலன்களை அளித்தது ஸ்ரீ கீதா சாஸ்திர அவதரணம் முதலியவற்றைக் கருதியே
திரௌபதிக்கு வந்து கழிந்த உபாயாந்தர சம்பந்தம் ஏற்பட்டது என்றே கொள்ள வேண்டும் –
திரு நாமம் சொல்லுவதும் பிரபத்தியும் ஒன்றாக பூர்வர்கள் கருத வில்லை
பெரிய திருவந்தாதி -53 வ்யாக்யானத்தில் –
தன் பேர் சொன்னவளுக்கு திரு உள்ளத்திலே தனிசு பற்றது இருக்குமா போலே -என்று
பெரியவாச்சான் பிள்ளை அருளிச் செய்கிறார் –
கோவிந்தேதி யதாக்ரந்தத் கிருஷ்ணா மாம் தூர வாஸி நம் -பார -உத் -47-39-
த்ரௌபதி சரணம் செய்ததுக்கும் புடவை சுரந்ததுக்கும் இடையில் உள்ள சில கணங்களிலே
ஆபத்தால் கலங்கி அவனிலும் விஞ்சிய கோவிந்த நாமமாவது நம் மானத்தைக் காப்பாற்றாதா என்னும் நினைவுடன் –
உபாய புத்தியால் -உச்சரித்து விட்டாள்
இதுவே எம்பெருமான் திரு உள்ளத்தில் புண் பட காரணம்
இந்த உபாயாந்தர சம்சர்க்கம் பரம ஆபத்தினால் விளைந்தது ஒன்றே –
அதனால் தோஷமாக கொள்ள வில்லை-
வாச்ய பிரபாவம் போல் அன்று வாசக பிரபாவம் -உத்க்ருஷ்டம் சொல்ல வந்தது
புஷ்ப பிரபாவம் போல் அன்று பரிமள பிரபாவம்
பிஷக்கின் பிரபாவம் போல் அன்று பேஷஜத்தின் பிரபாவம் போலே –
குளிர்ந்து சேர்த்து ஏலமிட்ட தண்ணீரை விடாயர்க்கு வார்க்காதே நிரபேஷர்க்கு வார்க்குமா போலே
புண்டரீகாஷா -இக்கடாஷம் கொண்டு நித்ய ஸூரிகளை நோக்க இருக்கிறாயா -என்று எல்லாம் சொன்னாளே –
பின்பே கலங்கினாள்-
நாராயண சப்தார்த்தத்தில் ஏக தேசத்துக்கு கோவிந்த சப்தார்த்தத்துக்கு -செய்த படி கண்டால்
இதன் பிரபாவம் கிம்பு நர்ந்யாய சித்தம் இறே -மா முனிகள் திரு மந்திர பிரபாபம் சாதிக்கிறார்
————————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ சீதா ஸ்ரீ ராம ஜெயம் .-ஸ்ரீ ருக்மிணி ஸ்ரீ சத்யபாமா சமேத ஸ்ரீ கிருஷ்ணன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பூமிப் பிராட்டி சமேத ஸ்ரீ வராஹ நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .-
Leave a Reply