திருப் பொலிந்த ஆகத்தான் பாதம் நினைமின் என்றாரே –
அனந்தரம் அது தான் தமக்கு யுடலாகத் தன திரு உள்ளத்தைக் குறித்து
ஸ்ரமஹரமான வடிவழகை யுடையவனை நீ முந்துற முன்னம் மறவாதே கிடாய் -என்கிறார்-
பொருளால் அமருலகம் புக்கியல லாகாது
அருளால் அறம் அருளும் அன்றே –அருளாலே
மா மறையோர்க்கு ஈந்த மணி வண்ணன் பாதமே
நீ மறவேல் நெஞ்சே நினை –41-
பதவுரை
அமருலகம்–சுவர்க்க லோகத்தை
பொருளால்–‘இதுவும் ஒரு புருஷார்த்தம்’ என்கிற எண்ணத்துடன்
புக்கு இயலல் ஆகாது–போய்ச் சேர முயல்வது தகாது;
அருளான்–பரம தயாளுவான எம் பெருமான்
அறம்–புண்யத்தின் பயனான சுவர்க்க லோகத்தை
அருளும் அன்றே–தன் க்ருபையாலே கிடைக்கச் செய்வனாம்;
அருளாலே–கிருபையினாலே
மா மறை யோர்க்கு–மஹர்ஷிகளுக்கு
ஈந்த–முக்தி யளித்த
மணி வண்ணன் பாதமே-நீலமணி நிறத்தவனான எம்பெருமானது திருவடிகளையே
நெஞ்சே நீ மறவேல்–நெஞ்சே! நீ மறவாதே
நினை–தியானித்துக் கொண்டிரு.
பொருளால் அமருலகம் புக்கியல லாகாது –
அர்த்த புருஷார்த்தத்தை சாதனமாகக் கொண்டு
ஸ்வரூப அனுரூபமான ப்ராப்ய பூமியிலே புக ஒண்ணாதே -என்னுதல்
அன்றிக்கே –
வஸ்துத்வ புத்தி பண்ணி ப்ரஹ்மாதி லோகங்களிலே புகுவதாக அர்த்திக்க யத்நிக்கலாகாது –
ஆகாது என்றது
கடவது என்றபடி –
ஸூர புரீயத் கச்சதோ துர்கதி -ஸ்ரீ குணரத்ன கோசம் -21-
பிராமணர்க்கு புறச் சேரி யருகு வழி போகாதாப் போலே
அருளால் அறம் அருளும் அன்றே —
என் தான் ஆகாது ஒழிவான் என் என்னில் –
சர்வேச்வரனானவன் நிரவதிக க்ருபாவானாகையாலே இவன் தான் இழந்து போகிறது என்
பெற்றிடுவானுக்கு என்று கொண்டு இவன் கண் குழிவு காண மாட்டாத கிருபையாலே இவற்றைத் தரிலும் தரும்
இவன் குரவத் ரூப கரணங்கள் உடையவன் ஆகையாலே அத்தை ஆசைப் பட்டால் தர்மத்தை பண்ணென்று விட்டிலும் விடும்
மண் தின்னக் கொடுக்கும் தாயைப் போலே –
கோவிந்த சுவாமியைப் போலே போகம் நீ எய்திப் பின்னும் நம்மிடைக்கே போதுவாய்-என்னிலும் என்னும்
அறம் என்கிறது
தர்ம பலமான ஸ்வர்க்கத்தை என்னுதல்-அது பெறில் ஸ்வரூப விரோதமாய் விடும்
கீழ்ச் சொன்னவை பெறும் போதும்
அவன் அருள் வேணுமான பின்பு அவ்வருள் தன்னையே கொண்டு அவனைப் பெற அமையாதோ என்னும் –
அருளாலே மா மறையோர்க்கு ஈந்த-
தன்னுடைய கிருபையாலே தன்னைக் கொடுக்குமவன் திருவடிகளை
மா மறையோர்க்கு ஈந்த –
சம்சாரத்தில் விரக்தராய் உன் திருவடிகளைப் பெற வேணும் என்று கொண்டு அபேஷித்த
ஸூக வாம தேவாதிகளுக்கு மோஷத்தைக் கொடுத்தான் ஆயிற்று
ஸூ கோமுக்த வாம தேவோ முக்த – என்னும்படி
தன்னுடைய கிருபையாலே மோஷத்தைக் கொடுத்து அருளின படி யாகவுமாம்
மா மறையோர்க்கு என்று
றகார ஒற்றான போது மார்க்கண்டேயனுக்கு அநித்யத்வம் கொடுத்தபடி ஆகிறது
அன்றிக்கே
ஸ்ரீ தண்ட காரண்யத்தில் ருஷிகள் என்றுமாம்
ரூப சம்ஹாநனம் லஷ்மீம் சௌகுமார்யம் ஸூ வேஷதாம் தத்ரு ஸூ விச்மிதாகார ராமஸ்ய வன வாசின -ஆர -1-13-என்றபடி-
ரூப சம்ஹா நனம் -ஸ்வா பாவிகமான அழகு
லஷ்மீம் -காந்தி
சௌகுமார்யம் -பார்க்கப் பொறாமை –
ஸூ வேஷதாம் -ஜடையும் வல்கலையும் படி சாத்தினாப் போலே இருக்கை
தத்ரு ஸூ விச்மிதாகார ராமஸ்ய வன வாசின-ஆர் காணும் காட்சியை எங்கே கிடந்தார் காண்கிறார்
சதா பச்யந்தி -இங்கே யாவதே –
மணி வண்ணன் பாதமே –
அவர்களுக்கு அனுபவிக்கக் கொடுத்தது அவ் வடிவு அழகைப் போலே காணும்
நீல மணி போலே ஸ்ரமஹரமான வடிவு அழகை உடையவன் திருவடிகளையே நெஞ்சே நீ மறவாதே கொள்
நீ மறவேல் நெஞ்சே நினை ––
ஜ்ஞான பிரசுர த்வாரமான நீ உனக்க அடைத்த விஷயத்தை விஸ்மரியாதே கொள்
நெஞ்சே உனக்கு உபதேசிக்க வேண்டாவே –
இத்தை ஒலக்க வார்த்தையாக புத்தி பண்ணாதே கொள் –
இவ்விஷயத்தில் மறப்பாகிறது-கீழ்ச் சொன்னவற்றோடே வ்யாப்தமாய் இருப்பது ஓன்று இறே
அது வாராமைக்காக நீ மறவேல் என்று உணர்த்துகிறார் –
————————————————————————–
இவ்வருகு யுண்டான சம்சார போகங்களில் விரக்தராய் கொண்டு அவனை ஸ்மரிக்கும் அவர்கள் இறே
ஜன்மங்களிலே பிரவேசியாதார் ஆகிறார் -என்கிறார் –
நினைப்பன் திருமாலை நீண்ட தோள் காண
நினைப்பார் பிறப்பொன்றும் நேரார் -மனைப்பால்
பிறந்தார் பிறந்து எய்தும் பேரின்பம் எல்லாம்
துறந்தார் தொழுதாரத் தோள்–42–
பதவுரை
திருமாலை–லக்ஷ்மீ நாதனான எம்பெருமானை
நீண்ட தோள் காண நினைப்பான்–(அவனது) சிறந்த திருத்தோள்களைக் கண்டு அநுபவிப்பதற்காக நினைக்கின்றேன்.
நினைப்பார்–இப்படி நினைப்பவர்கள்
ஒன்று பிறப்பும் நேரார்–ஒருவகை யோனிப் பிறப்பையும் அடைய மாட்டார்கள்
அத்தோள்–அந்தத் திருத்தோள்களை
தொழுதார்–தொழுமவர்கள்
மனைப்பால் பிறந்தார் பிறந்து எய்தும் பேர் இன்பம் எல்லாம துறந்தார்–ஸம்ஸாரத்தில் பிறந்தவர்கள் ஜன்ம மெடுத்ததனால்
அடையக் கூடிய சிற்றின்பங்களை யெல்லாம் வெறுப்பவராவர்.
நினைப்பன் திருமாலை –
என்றும் ஸ்ம்ருதி விஷய பூதனாவான் ஸ்ரீ யபதி போலே –
தாயையும் தமப்பனையும் சேர நினைப்பாரைப் போலே –
தேசாந்தரம் போன பிரஜை நினைக்குமா போலே –
அத்ரி பகவான் ஆஸ்ரமத்திலே இருவரும் கூட இருந்தாப் போலே நினையா நின்றேன் –
திரு இடை கழியிலே கண்டாப் போலே –
ப்ராதா பார்த்தா த பந்துஸ் ச பிதா ச மம ராகவ -அயோத்ய -8-31-என்னும் விஷயத்தை
இப்படி நினைக்கிறது தான்
ஒரு பிரயோஜனதுக்காக மடி ஏற்கைக்கு அன்று –
நீண்ட தோள் காண-
பிராட்டியைப் பிரிந்து உறாவின தோள் அன்றிக்கே –
அவளோட்டை சேர்த்தியாலே பணைத்து வளர்ந்த திருத் தோள்களைக் காண –
அவளோட்டை கலவியாலே போக்யதை அளவிறந்த தோள் காண –
ஸ்வர்க்காதிகளுக்கு அன்று -ஸ்ம்ருதிக்கு விரோதத்தைப் பண்ணும் ஜன்மங்களைச் செய்வது என் -என்றால் –
நினைப்பார் பிறப்பொன்றும் நேரார் –
இப்படி அனுசந்திக்கும் அவர்கள் ஒரு நாளும் ஒரு ஜென்மத்தைக் கிட்டார் –
அன்றிக்கே –
பிறப்பொன்றும் நேரார் -என்ற பாடம் ஆய்த்தாகில் –
பிறப்பு என்று பேரை உடைத்தானது ஒரு காலமும் இவர்களை வந்து சேராது -என்கிறது –
மனைப்பால்-
மனையிடத்து –
பிறந்தார் பிறந்து எய்தும் –
ஒரோ க்ருஹங்களில் பிறக்கக் கடவரானவர்கள் பிறந்து ப்ராபிக்கும் –
பேரின்பம் எல்லாம்-
இந்த ஸூகம் எல்லாம் பேரின்பம் என்கிறது
இந்நாள் வரையளவும் பகவத் விஷயத்தில் வர ஒட்டாத கனத்தைக் கொண்டு –
துறந்தார் தொழுதாரத் தோள்–துறந்தார் தொழுதார் அத்தோள்-
இத்தை எல்லாம் த்யஜித்தவர்கள் இறே
அத் தோள்கள் தொழுவார் ஆகிறார் –
அங்கன் அன்றிக்கே
ஒரு ஸ்ம்ருதி மாத்ரத்தாலே அவன் தான் தன்னைக் கொடு வந்து காட்டில் காட்டும் அத்தனை போக்கி –
யார் தான் இவற்றை விட்டுத் தோளைத் தொழுதார் -என்னுதல்-
————————————————————————–
நம்மால் அது துறக்கவும் போகாது -நினைக்கவும் போகாது –
அவன் தானே தன்னை யுகந்தார் உடைய விரோதிகளைப் போக்கும்
ஸ்வ பாவத்தில் ஈடுபட்டு இருக்குமவர்கள் திருவடிகளே நமக்கு உத்தேச்யம் -என்கிறார் –
எனக்கு அவன் தோள் தொழ வேண்டா -தொழு வாரைத் தொழ அமையும் –
அத் தோளைத் தொழு வார்களைத் தொழும் அத்தனை -என்கிறார் –
தோள் இரண்டும் எட்டு ஏழும் மூன்றும் முடி அனைத்தும்
தாள் இரண்டும் வீழச் சரம் துணிந்தான் -தாள் இரண்டும்
ஆர் தொழுவார் பாதம் அவை தொழுவது அன்றே என்
சீர் கெழு தோள் செய்யும் சிறப்பு —43-
பதவுரை
தோள் இரண்டு எட்டு ஏழும் மூன்றும்–இருபது தோள்களும்
வீழ–முடியும்படி
சரம் துரந்தான்–அம்புகளைச் செலுத்தின பெருமானுடைய
தாள் இரண்டும்–இரண்டு திருவடிகளையும்
தொழுவார் ஆர்–தொழுகிறவர்கள் எவரோ (அவர்களது)
முடி அனைத்தும்–(பத்தாகிய) எல்லாத் தலைகளும்
தாள் இரண்டும்–இரண்டு கால்களும்
பாதம் அவை–திருவடிகளை
தொழுவது அன்றே–ஸேவிப்பதன்றோ
என் சீர் கெழு தோள் செய்யும் சிறப்பு–எனது அழகிய தோள்கள் (எனக்குச்) செய்யும் உபகாரமாம்.
தோள் இரண்டும் எட்டு ஏழும் மூன்றும் –
இரண்டு எட்டு -பத்து -ஏழு மூன்று பத்து -ஆக இருபது தோள்களையும்
முடி அனைத்தும்-
அறுக்க வறுக்க முளைக்கையாலே ஒரு சங்க்யை சொல்ல ஒண்ணாத படியான தலைகளையும் –
தாள் இரண்டும் வீழச் –
இவை எல்லா வற்றுக்கும் ஆதாரமான தாள் இரண்டையும் விழும்படிக்கு ஈடாக
சரம் துணிந்தான் –
இந்த க்ரம விவஷையால் பிரயோஜனம் –
திருச் சரத்துக்குப் போது போக்குண்டாம் படி பண்ணுகையைச் சொல்லுகை –
திருச்சரம் விளையாடின க்ரமம்-
இத்தால்
ஆஸ்ரித விரோதி யாகையாலே நம்மாலே ஸ்ருஷ்டன் என்று பாராதே முடியச் செய்த படி –
சரம் துறந்தான் தாள் இரண்டும்-
சக்ரவர்த்தி திருமகன் தாள் இரண்டும் -சரண்ய லஷணம் தான் இருக்கும் படி இதுவாகாதே –
அவன் திருவடிகள் இரண்டையும் –
ஆர் தொழுவார்-
ஏதேனும் ஜன்ம வ்ருத்தங்கள் ஆகவுமாம் –
ஏதேனும் ஞானம் ஆகவுமாம் –
இந்தத் தொழுகை யாகிற ஸ்வ பாவம் உண்டாம் அத்தனையே வேண்டுவது
ஒருவனுக்கு உத்கர்ஷ அபகர்ஷங்கள் ஆகிறன இது யுண்டாகையும்இல்லை யாகுமையும் இறே –
ஆரேனுமாக வமையும் -தொழுகையே பிரயோஜனம் –
பாற் கடல் சேர்ந்த பரமனைப் பயிலும் திரு வுடையார் யாவரேலும் அவர் கண்டீர் -திருவாய் -3-7-1-
ஆர் –
ராஷசனாக அமையும் –
குரங்குகளாக அமையும் –
ஷத்ரியனாக -அர்ஜுனன் -அமையும் –
பிசாசாக -கண்டகர்ணன் -அமையும் –
பாதம் அவை தொழுவது அன்றே –
தொழும் அவர்கள் ஆரேனுமாமாப் போலே அவர்கள் பக்கலிலும் திருவடிகள் உத்தேச்யம் -என்கிறார் –
அவன் தன்னை ஆஸ்ரயிக்கை ஆகிறது –
ஒருவன் கையைப் பிடித்துக் கார்யம் கொண்டவோபாதி –
வைஷ்ணவர்கள் முன்னாகப் பற்றுகை யாகிறது
மறுக்க ஒண்ணாத படி ஒருவன் காலைப் பிடித்துக் கார்யம் கொண்ட மாத்ரம் –
பாதமவை தொழு தென்றே –
அவர்களோடு ஒப்பூண் உண்ண வல்ல –
என் சீர் கெழு தோள் செய்யும் சிறப்பு —
புருஷார்த்தம் தர வந்த தோள் செய்யும் உபகாரம் –
அழகு சேர்ந்த தோளானது எனக்குப் பண்ணும் தரமாகிறது –
சீர் கெழு தோள் –
அவர்களில் தமக்கு உள்ள வாசி –
இத் தோளைத் தொழ வமையும் இனி -புருஷார்த்த உபாயமாகத் தோற்றின சரீரம் இறே –
பாதமவை தொழுவதன்றே –
ததீயர் அளவும் வந்து நிற்கப் பெற்ற லாபத்தாலே
சீர் கெழு தோள் -என்கிறார் –
————————————————————————–
இப்படி அசலைக் காக்கும்படி பண்ண வல்ல விஷயத்தை ஆஸ்ரயியாதே மறந்து இருக்குமவர்கள்
சேதனர் அல்லர் கிடீர் என்கிறார் –
பாகவதர் உத்தேச்யர் ஆனவோ பாதி அபாகவதரும் த்யாஜ்யராக கடவது இறே
பகவத் சம்பந்தம் யுடையாரே வஸ்து பூதர் -அவர்கள் எனக்கு நாதர் என்கிறார் –
இதில் எம்பெருமானை யறியாதார் அவஸ்துக்கள்-எனக்கு அவர்களோடு சம்பந்தம் இல்லை -என்கிறார் –
சிறந்தார்க்கு எழு துணையாம் செங்கண் மால் நாமம்
மறந்தாரை மானிடமா வையேன் –அறம் தாங்கும்
மாதவனே என்னும் மனம் படைத்தது மற்றவன் பேர்
ஓதுவதே நாவினால் உள்ளு ——-44-
பதவுரை
சிறந்தார்க்கு–ஸ்ரீவைஷ்ணவோத்தமர்களுக்கு
எழு துணை ஆம்–உஜ்ஜீவந ஹேதுவான துணையாகின்ற
நாமம்–திருநாமத்தை
மறந்தாரை–மறப்பவர்களை
மானிடம் ஆ–மநுஷ்ய யோனியிற் பிறந்தவர்களாக
வையேன்–என்னெஞ்சில் கொள்ள மாட்டேன்
அறம் தாங்கும் மாதவனே என்னும் மனம் படைத்து–“தர்ம ஸ்தாபநம் பண்ண வல்ல திருமாலே!“ என்று
கூவி யழைக்கும்படி யான அத்யவஸாயங்கொண்டு
செம் கண்மால்–செந்தாமரைக் கண்ணனான பெருமானுடைய
மற்று–மேலும்
அவன் பேர்–அவனது திருநாமத்தை
நாவினால் ஓதுவதே–நாவினால் சொல்லுவதையே
உள்ளு–(ப்ராப்தமென்று) அநுஸந்தித்திரு. (நெஞ்சமே! என்று விளி வருவித்துக் கொள்க)
சிறந்தார்க்கு-
தன் திருவடிகளுக்கு அனுரூபமாக ஆஸ்ரயித்தவர்களுக்கு-
ஜ்ஞா நீத்வாத்மைவ மே மதம் –ஸ்ரீ கீதை -7-18-என்னுமவர்களுக்கு –
எழு துணையாம் –
அவர்கள் அவி ச்ம்ருதர் ஆகைக்கு வழித் துணையாம் –
தன் திருவடிகளை ஆஸ்ரயித்தவர்களுக்கு ப்ராக்ருதங்களிலே அருசியைப் பண்ணித்
தன் பக்கலிலே ருசியையும் பண்ணி
உத்க்ரமண தசையிலே ஆதி வாஹிகர்க்கு முன்னே தானே துணையாகக் கொண்டு போமவனை –
நயாமி பரமாம் கதிம் -என்கிறபடியே
தானே கைத் தொடானாய்க் கொடு போய் அவ்வருகே வைக்கும் –
செங்கண் மால்-
அதுக்கடியான ஆஸ்ரித வாத்சல்யத்தாலே சிவந்த கண்களை யுடையனுமாய்
வ்யாமுக்தனுமாய் இருக்கையாலே
வாத்சல்யத்தாலே குதறிச் சிவந்த கண்களை யுடைய சர்வேஸ்வரன் -என்னவுமாம் –
இத்தால்
தங்கள் விஷயத்தில் மறக்க மாட்டாதாருக்கு இருக்கிறவன் என்கையும்-
நமக்கு மறவாமைக்கு பிராப்தியும் சொல்லுகிறது –
நாமம் மறந்தாரை –
அவனுடைய திரு நாமத்தை மறந்தவர்களை –
மானிடமா வையேன் —
மனுஷ்யராக புத்தி பண்ணி இரேன்-முதலிலே நினையாதாரைக் குறையாக நினையேன் –
அஜ்ஞரை சர்வஜ்ஞர் என்று நினைப்பன்-
அதாகிறது
அவர்களுக்கு மேல் நினைக்கைக்கு யோக்யதை யுண்டே
சாஸ்திர அதிகாரத்துக்கு யோக்யதை உள்ள மனுஷ்ய ஜன்மத்திலே பிறந்து வைத்து
அவன் சுவட்டையும் அறிந்து பின்னை மறந்தவன் மனுஷ்யர்க்கு உடல் அல்லன் இறே –
துர்மேதாஹ்யசி பாண்டவ -என்றான் இறே கீதையை மறந்த அர்ஜுனனை –
மானிடமா வையேன் –
இவர் தம் திரு உள்ளத்தால் மனுஷ்யராக நினையாதவர்கள் மனுஷ்யர்கள் அல்லர்கள் ஆகாதே தான் –
குருவிந்தக் கல்லை -கூழாங்கல்லை -மாணிக்கம் என்று நினைத்து இருந்தால் அது ரத்னமாக மாட்டாது இறே-
ரத்ன பரீஷகன் ரத்னம் என்று அறிந்தது இறே ரத்னம் ஆவது –
அப்படியே தம்முடைய நெஞ்சிலே மனிச்சர் என்று வைக்கப் பட்டவர்களே மனுஷ்யர் ஆவார் என்கிறார் –
மானிடவர் அல்லர் என்று என் மனத்தே வைத்தேனே -பெரிய திருமொழி -11-7-9-என்னக் கடவது இறே –
ஜ்ஞாநேந ஹீ ந பஸூபிஸ் சமாந -நரசிம்ஹ புராணம் -16-13-
ஜ்ஞானம் ஆவது –
ஒண் தாமரையாள் கேள்வன் ஒருவனையே நோக்கும் யுணர்வு -முதல் திரு -67-
மானிடமா வையேன் –
கல்லிலும் செம்பிலும் வெட்டிற்று என்கிறார் –
அதாகிறது –
சர்வேஸ்வரனால் திருத்த ஒண்ணாது என்று கை விட்டவர்களையும்
திருத்தப் பார்க்கும் இவர் கை விட்டால் பின்னைப் புகல் இல்லை இறே-
பின்னை மனிச்சராகக் கொள்வார் இல்லையே –
அறம் தாங்கும் மாதவனே என்னும் மனம் படைத்து –
தன்னுடைய ஆன்ரு சம்ச்யத்தாலே ரஷிப்பான் அவனே என்னுதல்-
ஜகத் ரஷணம் ஆகிற தர்மத்தை தரிப்பான் ஸ்ரீ யபதி என்னுதல் –
அவளாலே ப்ரேரிதனாய் அவள் உகக்கும் என்று ஆய்த்து ஜகத் ரஷணம் பண்ணுவது –
மாதவனே என்னும் மனம் படைத்து –
இப்படியே இருப்பான் ஸ்ரீ யபதியையே என்னும் புத்தியை யுண்டாக்கி –
அன்றிக்கே –
மனசை அழைத்துக் கொண்டு –
நெஞ்சே இப்படி ரஷகனானவன் திரு நாமங்களை
நாவினால் ஒதுகையிலே உள்ளு -அனுசந்தி -என்கிறார் ஆகவுமாம் –
அன்றிக்கே –
உள்ளில் மனமானது -ஹ்ருதயத்தில் மநோ ரதமானது-
அறம் தாங்கும் மாதவனே –
அறத்தை தரிக்கும் ஸ்ரீ யபதி பக்கலிலே
நாவினால் மற்றவன் பேர் ஓதுவதே
ஸ்ரீ யபதித்வத்துக்கு வாசகமான திரு நாமத்தைச் சொல்லுவதே யாவது த்வயத்தைச் சொல்லுகை –
நாவினால் –
நாவால் உள்ளப் பிரயோஜனம் பெற
உள்ளு –
அனுசந்தி –
————————————————————————–
இப்படி பகவத் பஜனம் பண்ணி இருக்குமவர்கள் இதர விஷயங்களின் யுடைய லாப அலாபங்களால் வரும்
சோக ஹர்ஷங்களை யுடையர்கள் அல்லர் கிடீர் -என்கிறார் –
நித்ய ஸூரிகளுக்கு ஸ்ப்ருஹணீயனாவனுடைய திருவடிகளைப் பயிலும் அவர்கள்
அர்த்தத்தின் யுடைய லாப அலாபங்களுக்கு ஈடு படார் -என்கிறார்-
உளது என்று இறுமாவார் உண்டு இல்லை என்று
தளர்தலதனருகும் சாரார் -அளவரிய
வேதத்தான் வேங்கடத்தான் விண்ணோர் முடி தோயும்
பாதத்தான் பாதம் பயின்று —45-
பதவுரை
அளவு அரிய வேதத்தான்–அளவிட முடியாதபடி அந்நதமாயுள்ள வேதங்களினால் பிரதிபாதிக்கப்படுபவனும்
வேங்கடத் தான்–திருமலையிலே வந்து நிற்பவனும்
பயின்று–பழகி (இருக்குமவர்கள்)
உளது என்று இறுமாவார்–தமக்குச் செல்வமுள்ள தென்று செருக்குக் கொள்ள மாட்டார்கள்
உண்டு இல்லை என்று–(செல்வம்) நேற்று இருந்து இன்று அழிந்த போயிற்றென்று
விண்ணோர் முடிதோயும் பாதத்தான்–நித்ய ஸூரிகளின் முடிகள் பணியப் பெற்ற திருவடிகளை யுடையனுமான எம்பெருமானுடைய
பாதம்–திருவடிகளிலே
தளர்தல் அதன் அருகும் சாரார்–தளர்ச்சி யடையும் ஸ்வபாவத்தின் கிட்டவும் செல்ல மாட்டார்கள்.
உளது என்று இறுமாவார் –
ஜன்ம தரித்ரனாய்ப் போருகிறான் ஒருவன் இங்கனே சஞ்சரியா நிற்கச் செய்தே ஒரு நிதி வந்து காலிலே தட்டுவது –
அநந்தரம்-
அத்தால் வந்த கர்வத்தால் சிலருக்குத் திரிய ஒண்ணாத படி அதிர நடப்பர்கள் ஆய்த்து –
தன்னுடைய பூர்வ அவஸ்தையை அறியாதே நடுவே நாலு நாள் இது உண்டானதுவே அடியாக
மாதா பிதாக்களையும் ஆச்சார்யனையும் அவமானம் பண்ணுவது –
உத்க்ருஷ்ட ஜன்மங்களை அவமானம் பண்ணுவது –
பர லோக கதை சொன்னார் யுண்டாகில் சிரிப்பதுமாய் திரியும் ஆய்த்து –
சர்வேஸ்வரனைப் பற்றி இருக்குமவர்கள் இப்படி இருப்பது ஓன்று யுண்டாகில் அத்தை ஒன்றாக மதித்து இராமையாலே
அது உண்டு என்னும் இடம் தோற்றி இரார்கள் –
உண்டு இல்லை என்று தளர்தலதனருகும் சாரார் –
உளதென்று இறுமாவார் என்றால்
அதுக்கு எதிர்த்தலை -இல்லை என்று தளரார் என்னும் இத்தனை யாய்த்து உள்ளது –
நடுவு -உண்டில்லை என்கிறதுக்கு பிரயோஜனம்
நெடு நாள் – தாரித்ரியத்தோடு முகம் பழகிப் போந்தவனுக்கு
பின்பும் அத் தாரித்யமே யானால் அது சாத்மித்துப் போம் அத்தனை போக்கி –
அதுக்கு உடையக் கடவது அன்றிக்கே இருக்கும்
அங்கன் அன்றிக்கே –
நடுவே சில நாள் ஜீவித்துப் போந்தவனுக்கு பின்பு ஒரு வறுமை வந்தால் அது மிகவும் தளர்த்திக்கு யுடலாய் இருக்கும்
அதாகிறது
அன்று இங்கனே யுண்டாய்த்து-இன்று இங்கனே இல்லையாய்த்து என்னும்
இவ் வனுசந்தானம் ஆய்த்து தளர்த்திக்கு அடி –
இப்படி வரும் தளர்த்தியை யுடையர் அன்றிக்கே இருப்பார்கள்
ஒரு நாள் யுண்டாய் இல்லை யானவாறே பாவியேன் பண்டு ஸூகமே ஜீவித்தோம் இப்போது மிடிபடா நின்றோம் -என்று
மிகவும் தளர்த்திக்கு யுடலாமே –
அர்த்தார்த்தி யானால் கிடையா விடில் சோகம் இல்லை -ஆர்த்தனுக்கு இறே சோகம் உள்ளது –
பகவத் விஷயத்தில் பேறும் பிரிவும் அனர்த்தமாம்
பகவத் விஷயத்தில் பிரிவும் உத்தேச்யமோ என்னில் –
அழு நீர் துளும்ப அலமருகின்றன வாழியரோ -திரு விருத்தம் -2-என்னக் கடவது இறே
கிமர்த்தம் தவ நேத்ராப்யாம் -வாரி ஸ்ரவதி சோகஜம் -சுந்தர -33-4-
சம்சாரியில் காட்டில் ஜ்ஞானவானுக்கு வாசி விச்லேஷத்தில் துவட்சி யன்றோ
இத்தை அன்றோ உண்ணும் சோறில் முற்கூறும் துவளில் மா மணியும் சொல்லுகிறது –
முன்னம் நோற்ற விதி கொலோ முகில் வண்ணன் மாயம் கொலோ -திருவாய் -6-5-7-
நான் பண்ணின ஸூஹ்ருதமோ-அவன் தன்னுடைய கிருபையோ –
நிர்குண பரமாத்மா சௌ தேஹம் தே வ்யாப்ய திஷ்டதி -பீம சேனன் அனுமன் உடலில் துவட்சி கண்டு சொன்னான் இறே –
இத்யாதிகளால் பிரிவும் உத்தேச்யம்
இன்னம் இவ்வளவே அன்றிக்கே -அதனருகும் சாரார் –
இப்படிப் பட்ட ஜீவனத்தை இழந்தோம் என்னும் தளர்த்தி இல்லாத ஜ்ஞானவானுக்கும்
அவ் விழவாலே வருவதொரு அனுதாபம் யுண்டாய் இருக்கும் இறே
அங்கனே வருவதோர் அனுதாபமும் இன்றிக்கே இருப்பார்கள் இவர்கள் –
அத்தை ஒரு வஸ்துவாக புத்தி பண்ணும் அன்று இறே அத்தை இழந்ததாலே வருவதோர் அனுதாபத்தை யுடையராய் இருப்பது
ஸ்திரம் என்று நினைத்து பின்னை அஸ்திரம் என்று இருக்கும் அவர்கள் அன்றே –
ஸ்திரமானது அஸ்திரமாய்த்து என்னில் அன்றோ சோகம் உள்ளது
என் தான் இவடினுடைய லாப அலாபங்களில் நாட்டார்க்கு வரக் கடவதான
சோக ஹர்ஷங்கள் இவர்களுக்கு இன்றிக்கே இருப்பான் என் என்னில்
இவர்கள் பற்றி இருக்கும் விஷயத்துக்கு அவை இரண்டும் இல்லை -அத்தாலே -என்கிறது மேல் –
அளவரிய வேதத்தான் –
கீழ்ச் சொன்னது போலே ஒரு நாள் வரையிலே இல்லை யாமதாய் இருப்பதொரு வஸ்து அன்றிக்கே
தான் ஆபாசமுமாய்-பிரத்யஷமான பிரமாணங்களாலே தர்சிப்பக்கப் படுமதாய் இருப்பதும் இன்று அன்றே –
அபௌரு ஷேயமுமாய் –
அசங்க்யேயமுமாய் –
நித்தியமாய் இருந்துள்ள –
நிர்தோஷ பிரமாணங்களாலே பிரதிபாத்யனாய் யுள்ளான் –
வேதைக சமதி கம்யனாய் யுள்ளான் –
அளவரிய வேதத்தான் –
அபரிச்சின்ன மான வேதத்தாலே பிரதிபாதிக்கப் படுமவன் –
அஷயமான நிதி என்றபடி –
நிதியினை -திருக் குறும் தாண்டகம் -1-என்னக் கடவது இறே-
ஐஸ்வர்ய கைவல்யங்கள் ஆகிற வெளிறு கழிந்த தனம் –
ஆனால் இங்கு யுண்டானவற்றுக்குச் சொல்லும் ஏற்றம் ப்ரத்யஷ விஷயமாய்
ஈச்வரனுக்குச் சொல்லும் உத்கர்ஷம் பிரமாணங்களிலே கண்டு போமதாய் இருக்கும் அத்தனையோ –
கண்ணாலே காண ஆசைப் பட்டவனுக்கு வேத பிரதிபாத்யன் என்றால் என்ன பிரயோஜனம் என்னில் –
வேங்கடத்தான் –
அப்படிப்பட்ட இயற்றியை யுடையவன் தானே கண்ணுக்கு விஷயமாம் படி
சர்வ ஸூலபனாய்த் திருமலையிலே புகுந்து நின்று அருளினான் –
ஆனாலும் ஐஸ்வர்யம் உள்ளது பிரமாணகம்யமான விடத்தேயாய்-
இங்கு நிற்குமது இதர சமானமாய் இருக்கும் அளவன்றோ –
ஆனால் எங்களுடைய அர்த்தத்தோ பாதி உம்முடைய வர்த்தமும் ப்ரத்யஷ விஷயமாய்த்து இறே என்னில்
விண்ணோர் முடி தோயும் பாதத்தான் –
நித்ய ஸூரிகளும் தாம் பட்டது படுவார்கள் —ஆனால் ஏற்றம் எல்லாம் இங்கே யுண்டு –
அஸ்ப்ருஷ்ட சம்சார கந்தரான நித்ய ஸூரிகள் இந்நீர்மையை அனுசந்தித்து எழுதிக் கொடுத்து
தங்கள் தலைகளைக் கொடு வந்து சேர்த்து -அடிமை செய்யும்படியான திருவடிகளை யுடையவன் –
நித்ய ஸூரிகளுக்கு ஸ்ப்ருஹணீயன் ஆனவன் –
அவனுடைய சத்பாவத்துக்கு இசைந்தால் அவர்களும் கூட ஸ்ப்ருஹணீ யனாவனே
இங்கே வந்து நின்றான் என்று ஆதரிக்க வேண்டாவோ -ப்ராமாணிகர் ஆகில் –
வேதத்தான் வேங்கடத்தான் –
யோ வேத நிஹிதம் குஹாயாம் பரமே வ்யோமன் -தைத் ஆன -1-4- என்று
சஞ்சிதமான தனம் யுண்டு என்று செப்பேட்டிலே கண்டு போகாமே
அந்நிதி வெளிப்பட்ட இடம் ப்ராமாணிகர்க்குப் பரம நிதிகள் ஆகிறன-உகந்து அருளின திருப்பதிகள் –
விண்ணோர் முடித்தோயும் பாதத்தான் பாதம் பயின்று உளதென்று இறுமாவார்-
இப்படிப் பட்ட உள்ளவனுடைய திருவடிகளைக் கிட்டின இவர்களுக்கு வேறு ஒன்றை நினைக்க அவசரம் யுண்டோ –
பயின்று உளதென்று இறுமாவார் –
அங்கே நெருங்குகையினாலே இவற்றால் வரும் லாப அலாபங்களை புத்தி பண்ணார்கள் –
இவர்களுக்கு இறுமாக்கவும் தளரவும் அவசரம் இல்லை –
வேறையும் ஒன்றை நினைக்கும்படியாய் அன்று இறே இவ்விஷயம் தான் இருப்பது –
உளதென்று இறுமாவார் –
விதயாமதோ தனமத –இத்யாதிகள்
அசத்துக்களை மேலிட்டுக் கொள்ளும் -சத்துக்கள் இவை தன்னை மேலிடுவார்கள்-
அறுக்கும் சாரார் –
நாமே பரித்யக்தா மயா லங்கா மித்ராணி ச தா நாநி ச -யுத்த -19-5-என்று
விட வேண்டி இருக்க –
தானே விடப் பெற்றோம் என்று ப்ரீதராய் இருப்பார்கள் –
————————————————————————–
இவர்கள் அவனைப் பற்றி ப்ராக்ருத போகங்களைக் கை விட்டார்கள் என்றது கீழ் –
இப் பாட்டில் அவன் அப்ராக்ருத போகத்தை விட்டு இவர்களைப் பற்றின படி சொல்லுகிறது –
எம்பெருமானுக்குப் புறம்பு லாபாலாபம் இன்றிக்கே இருக்கிறபடி –
இவன் -பரித்யக்தா மயா லங்கா -என்றால் –
அவனும் -அப்யஹம் ஜீவிதம் ஜஹ்யாம் த்வாம் வா சீதே ச லஷ்மணாம் ந து பிரதிஜ்ஞாம் சம்ஸ்ருத்ய
ப்ராஹ்மணேப்யோ விசேஷத்த -ஆரண்ய -10-19-என்று
இவனை எல்லாமாகப் பற்றும் அத்தனை இறே –
அவன் பயிற்றி இறே இவனைப் பயிலப் பண்ணுவது –
சர்வேஷாம் ஹி ச தர்மாத்மா வர்ணா நாம் குருதே தபாம் சதுர்ணாம் ஹி வயஸ்தானாம்
தேன தே தம நுவ்ரதா-அயோத்யா -17-18-என்றபடி –
சௌபரி பல வடிவு கொண்டு நின்று புஜித்தாப் போலே யாய்த்து
இவனும் பல திரு மேனியைக் கொண்டு புஜிக்கிற படி –
அவன் பிரசாதம் அடியாக இவன் இத்தன வடிவு கொள்ள வல்லனானால் –
இச்சாதீனமாகப் பல வடிவு கொள்ள அவனுக்குச் சொல்ல வேண்டாக் இறே –
இவர்களை அப்படி பயிலப் பண்ணுகைக்கு இவர்கள் பட்டதன்று –
அவன் பட்டது என்கிறது
ஆஸ்ரிதர்க்காக உகந்து அருளின திருப்பதிக்கு எல்லை இல்லை -என்கிறார் –
பயின்றது அரங்கம் திருக்கோட்டி பன்னாள்
பயின்றதுவும் வேங்கடமே பன்னாள் -பயின்ற
தணி திகழும் சோலை யணி நீர் மலையே
மணி திகழும் வண் தடக்கை மால் —46-
பதவுரை
மணி திகழும்–நீல மணிபோல் விளங்குமவனும்
வண் தடக்கை–உதாரமாய் நீண்ட திருக்கைகளை உடையனுமான
மால்–எம்பெருமான்
பயின்றது–நித்ய வாஸம் செய்தருளுமிடம்
அரங்கம் திருக்கோட்டி–திருவரங்கமும் திருக்கோட்டியூருமாம்
பல் நாள்–அநாதி காலம்
பயின்றதுவும்-நித்ய வாஸம் செய்யுமிடமும்
வேங்கடமே–திருமலையாம் (பல்நாள் பயின்றதுவும்)
அணி திகழும் சோலை–அழகு விளங்குகின்ற சோலைகளை யுடைத்தாய்
அணி–இந் நிலவுலகுக்கு அலங்காரமான
நீர்மலை–திருநீர்மலையாம்.
பயின்றது அரங்கம் –
அவதாரங்கள் போலே தீர்த்தம் பிரசாதியாதே -என்றும் ஒக்க
உகந்து நித்ய வாசம் பண்ணுகிற இடம் கோயில்
திருக்கோட்டி –
அங்கும் அப்படியே -இங்கு பயிலும் போது புறம்பு விட வேண்டாவே –
பன்னாள் பயின்றதுவும் வேங்கடமே-
சிரகாலம் வர்த்திக்கிறதும் திருமலையிலே -முந்துற பொற்கால் பொலிய விட்ட தேசம் –
பன்னாள் -பயின்றதணி திகழும் சோலை யணி நீர் மலையே-
இப்படி நின்று அருளுகிறவன் தான் ஆர் என்னில்
மணி திகழும் வண் தடக்கை மால் —4
நீல மேனி போலே ஸ்ரமஹரமான வடிவையும்
உதாரமாகச் சுற்றுடைத்தான திருக் கைகளையும் -யுடையனான சர்வேஸ்வரன் –
தன்னை சம்சாரிகளுக்குக் கொடுக்கையால் வந்த ஔதார்யமும் சௌலப்யமும்-
எனக்கு தன்னைத் தந்த கற்பகம் -திருவாய் -2-7-1-
விட்டிலங்கு செஞ்சோதி-திருவாய் -2-7-5-
மால்
சர்வாதிகன் -பிச்சன் என்றுமாம்-
————————————————————————–
அவன் இப்படி விரும்பின பின்பு நீங்களும் அவன் உகந்த படி பரிமாறப் பாருங்கோள்-என்கிறார் –
மாலை யரி உருவன் பாத மலர் அணிந்து
காலை தொழுது எழுமின் கைகோலி-ஞாலம்
அளந்து இடந்து உண்டு உமிழ்ந்த அண்ணலை மற்று அல்லால்
உளம் கிடந்த வாற்றால் உணர்ந்து ———47-
பதவுரை
ஞாலம்–பூமி முழுவதையும்
அளந்து–ஒரு கால் அளந்தும்
இடந்து–மற்றொருகால் (வராஹமாகி) இடந்தும்
உண்டு–(பிரளயத்தில்) திரு வயிற்றினுள் வைத்தும்
உமிழ்ந்த–பிறகு வெளிப்படுத்தியும்
இப்படி யெல்லாம் (ரக்ஷணத் தொழில்) செய்த
அண்ணலை–ஸர்வ ஸ்வாமியான எம்பெருமானை
மற்று அல்லால்–கீழ்ச்சொன்ன வகையான ரக்ஷணத் தொழில்கள் தவிரவும்
உளம் கிடந்த ஆற்றல்–(அன்பருடைய நெஞ்சை உருக்கிக் கொண்டு அவர்களுடைய) நெஞ்சிலே கிடக்கும் விதங்களோடுகூட
உணர்ந்து–அநுஸந்தித்து, (முன்பொருகால் ப்ரஹ்லாதனுக்கருள் செய்வதற்காக)
மாலை–மாலைப் பொழுதிலே
அரி உருவன்–நரசிங்க மூர்த்தியாய்த் தோன்றின அப்பெருமானுடைய
பாதம்–திருவடிகளை
மலர்–புஷ்பங்களாலே
அணிந்து–அலங்கரித்து
காலை–சிற்றஞ சிறு காலையில்
கைகோலி தொழுது–கைகூப்பி வணங்கி
எழுமின்–உஜ்ஜீவியுங்கள்
மாலை யரி உருவன் பாத மலர் அணிந்து-
அழகிய செவ்விப் பூ மாலைகளைக் கொண்டு ஆஸ்ரிதர்க்காக கொண்ட வடிவே தனக்கு வடிவாக
நினைத்து இருக்குமவன் உடைய செவ்வித் திருவடிகளிலே சேர்த்து –
அரி யுருவன் –
அழகியனாய் -ஸூகுமாரானவன் திரு வடிகளிலே
காலை தொழுது எழுமின் கைகோலி-
ஆஸ்ரயணத்துக்கு ஏகாந்தமான சத்வோத்தர காலத்திலேயே –
ப்ரஹ்ம மூஹூர்த்தத்திலே -என்றபடி
அஞ்சலியைப் பண்ணி உஜ்ஜீவியுங்கோள் –
கை கோலி என்றது –
இப்படி பாரித்துக் கொண்டு ஆஸ்ரயியுங்கோள் என்னுதல் –
கையைக் கூப்பிக் கொண்டு அஞ்சலியைப் பண்ணி -என்னுதல்-
நினைத்த வகைகளிலே ஆஸ்ரயிக்கலாம் படி தொழுகைக்கும் அணிகைக்கும்
பல முகங்கள் உண்டாக்கி வைத்தான் ஆய்த்து-
ஞாலம் அளந்து இடந்து உண்டு உமிழ்ந்த அண்ணலை-
சர்வ வித ரஷகனானவனை -இப்படி உள்ள குண சேஷ்டிதங்களை யுடைய சர்வேஸ்வரனை –
அவை யாகிறன –
ஞாலம் அளந்து –
பூமி பரப்பு அடங்கலும் அளந்து இத்தால் கை கூப்பாதார் தலையிலும் காலை வைக்கும் என்றபடி –
இடந்து –
பிரளயம் கொண்ட விடத்து மஹா வராஹமாய் எடுத்து –
இத்தால் ஆபத்தே பச்சையாக நோக்கும் என்றபடி –
உண்டு உமிழ்ந்த –
பின்பும் பிரளயம் வரும் என்று வயிற்றிலே வைத்து நோக்கி –
வெளி நாடு காண உமிழுவன்-
இத்தால்
பிரளயங்களில் எடுத்துப் பழகினவன் -என்கிறது
அண்ணலை –
இவ்வோ செயல்களாலே தானே ஸ்வாமி என்று தோற்றி இருக்கிறவனை –
சேதனர்க்கு அனுபாவ்யமான குணங்களை உடைய சேஷியை-
அண்ணல் –
கீழ்ச் சொன்ன வற்றுக்கு அடியான சம்பந்தம் –
அரஷகனாலும் விட ஒண்ணாத ப்ராப்தி இருக்கும் படி –
மற்று அல்லால் உளம் கிடந்த வாற்றால் உணர்ந்து –
மற்று நீங்கள் இவை ஒழிய அனுசந்தித்து இருக்கும் படி எல்லாவற்றையும் உணர்ந்து
இப்படிப் பொதுவாகப் பண்ணின வியாபாரங்களை ஒழியவே
ஆஸ்ரிதர்க்கு அனுசந்தித்தால் இது என்ன நீர்மை என்று கொண்டு
நெஞ்சுருக் கிடக்க வேண்டும்படி செய்தனவும் சில உண்டாய் இருக்கும் –
கீழ்ச் சொன்னவற்றை ஒழிய அல்லாத குண சேஷ்டிதங்கள் ஹ்ருதயத்தில் கிடக்கும் அவற்றின் யுடைய
பிரகாரங்களை அனுசந்தித்து தம்மைப் போல-என்று இருக்கிறார் –
ஞாலம் அளந்து இடந்து உண்டு உமிழ்ந்த அண்ணலை மற்று அல்லால் உளம் கிடந்த வற்றால்
உணர்ந்து அரி யுருவன் பாதமலர் மாலை யணிந்து கை கோலி காலை தொழுது எழுமின்
————————————————————————–
நீர் இப்படி மறக்க ஒண்ணாத படி அனுசந்திக்கைக்கு ஆஸ்ரிதர்க்காக வந்து செய்தன
ஏதேனும் உண்டோ என்ன
தேவர் பண்ணின யுபகாரம் ஓர் அளவிலேயோ என்கிறார் –
கீழே சொன்ன மற்றல்லால் -என்கிறது இருக்கும் படி –
உணர்ந்தாய் மறை நான்கும் ஓதினாய் நீதி
மணந்தாய் மலர்மகள் தோள் மாலே -மணந்தாய் போய்
வேயிரும் சாரல் வியலிரு ஞாலம் சூழ்
மா யிரும் சோலை மலை——48-
பதவுரை
மாலே–ஸர்வேச்வரனே!
மறை நான்கும்–நான்கு வேதங்களையும்
உணர்ந்தாய்–(பிரளயந்தோறும்) ஞாபகத்தில் வைத்துக் கொண்டிருந்து பிறகு வெளியிடுகின்றாய்
நீதி–அந்த வேதங்களின் பொருளை விவரிக்க வல்ல ஸ்ம்ருதி முதலிய உபப்ரும்ஹண நூல்களையும்
ஓதினாய்–(மநு முதலிய மஹர்ஷிகள் முகமாக) அருளிச் செய்கின்றாய்
மலர் மகள்–பூவிற்பிறந்த பெரிய பிராட்டியாருடைய
தோள்–திருத் தோளோடே
மணந்தாய்–கூடி வாழ்கின்றாய்
வேய் இரும் சாரல்–மூங்கில்கள் நிறைந்த தாழ்வரையை யுடையதும்
இரு ஞாலம் சூழ்–பரந்த இப் பூமியிலுள்ளவர்களால் பிரதக்ஷிணஞ் செய்யப்படுவதுமான
மாயிருஞ் சோல மலை போய்–திருமாலிருஞ் சோலை மலையிலே வந்து
மணந்தாய்–திருவுள்ளமுவந்து வாழ்கின்றாய்
உணர்ந்தாய் மறை நான்கும் –
நாலு வகைப்பட்ட வேதங்களையும் ஸ்மரித்தாய்-
பிரளய காலத்திலே இவை இழந்து கிடக்கிறபடி திரு உள்ளத்திலே பட்டு
இவற்றை அடித் தொட்டும் யுண்டாக்க வேணும் என்று கோலி யருளி
ஸூப்த பிரபுத்த ந்யாயத்தாலே
மறந்தவன் நினைத்தால் போலே -உறங்கினவன் உணர்ந்தாப் போலே -மறைந்து கிடந்த வேதங்களையும் யுண்டாக்கினாய்-
அந்த ஆனுபூர்வி தப்பாதபடி ஸ்மரிக்கையாலே-
அபௌ ருஷேயத்வமும் நித்யத்வமும் எல்லாம் சித்தித்தது ஆய்த்து வேதத்துக்கு –
வாக்யத்துக்கு பத நியதியோபாதியும் போருமாய்த்து -பதங்களில் வர்ண நியதியும் –
வேதங்களும் தன்னோடு ஒக்க நித்யமாய்ப் பழையதாய் இருக்கையாலே
பண்ணினான் என்னாதே
உணர்ந்தான் என்கிறது
பூர்வே பூர்வேப்யோ வாச எத தூசு -காட்டகம் -3-9-50-
உளன் சுடர் மிகு சுருதியுள் -என்றும் முது வேத முதல்வன் -திருவாய் 1-6-2-
செப்பெட்டைக் கையிலே கொடுத்து நிதியைக் காட்டுமாப் போலே –
ஓதினாய் நீதி-
அதுக்கு ப்ராஹ்மணமான -ஸ்ம்ருதி இதிஹாச புராணங்களையும் யுண்டாக்கி –
திரு முகத்துக்கு படியெடுத்துக் காட்டினாப் போலே –
மணந்தாய் மலர்மகள் தோள் –
வேதிப் பிரதிபாத்யையான பெரிய பிராட்டியார் யுடைய தோளோடு சம்ச்லேஷித்தாய் –
தனக்குப் பிரதிபாதகமான பிரமாணங்களை யுண்டாக்கின அவ்வளவே அன்றிக்கே
ப்ரதிபாத்யனான தான் ஒரு தேச விசேஷத்திலே பெரிய பிராட்டியாரோடு நித்ய சம்ச்லேஷ யுக்தனாய்க் கொண்டு
இருக்கும் இருப்பைச் சொல்லுகிறது –
அச்யே சா நா ஜகதோ விஷ்ணு பத் நீ-என்றும் –
ஹ்ரீச்ச தே லஷ்மீச்ச பத்ன்யௌ-என்றும்
ஈசாநா தேவீ புவனச்ய பத்னீ -என்றும் –
சரத்தா தேவோ தேவத்வம் அஸ்நுதே -என்றும்
ஈச்வரீம் சர்வ பூதானாம் -என்றும்
பும்ப்ராதாநேச்வர ஈச்வரீம் -என்றும்
அப்ரமேயம் ஹி தத்தேஜ-என்றும்
காவ்யம் ராமாயணம் க்ருத்ச்னம் சீதாயாஸ் சரிதம் மஹத் -என்றும் சொல்லுகிறபடியே
வேதமாகிறது இருவரையும் புணர்த்த நித்தியமான புணர்ப்பு —
வேத பிரதிபாத்யத்வமும் ஸ்ரீ யபதித்வத்தோ பாதி –
மாலே
நீயும் அவளும் இருக்கும் இருப்பைச் சிலராலே பரிச்சேதிக்கலாய் இருந்ததோ –
மணந்தாய் போய்-வேயிரும் சாரல் வியலிரு ஞாலம் சூழ் மா யிரும் சோலை மலை-
வேத ப்ரதிபாத்யனாகில் பரம பதத்திலே இறே ஓலைப் புறத்திலே கண்டுப்போம் விஷயத்தை
சம்சாரிகளுக்கு அனுபவிக்கலாம் படி கண்ணுக்கு விஷயமாக்கி திரு மலையை விரும்பினாய்
இப்படி அபரிச்சின்னனானவன் வேய்களினுடைய பெரிய சோலை சூழ்ந்த பர்யந்தங்களை யுடைத்தாய்
விஸ்மய நீயமான பெரிய சம்சாரத்திலே உள்ளாராலே ஆஸ்ரயிக்கப் பட்டுள்ள திரு மலையை உகந்தாய்
மாலே -என்கிற இத்தால்
திருமலையில் வந்து சந்நிஹிதன் ஆகைக்கு அடியான வ்யாமோஹத்தைச் சொல்லிற்று ஆகவு மாம் –
————————————————————————–
நெஞ்சே அவன் இப்படித் திருமலையிலே வந்து சந்நிஹிதனான பின்பு
நமக்கு ஒரு ப்ரதிபந்தகம் யுண்டு என்று அஞ்ச வேண்டா –
ஆன பின்பு ஜகத்தடங்கலும் அதிரும்படி அவனைச் சொல்லிக் கூப்பிடு -என்கிறார் –
மலை ஏழும் மா நிலங்கள் ஏழும் அதிர
குலை சூழ் குரை கடல்கள் ஏழும் -முலை சூழ்ந்த
நஞ்சுரத்த பெண்ணை நவின்று உண்ட நாவன் என்று
அஞ்சாதே என்நெஞ்சே அழை—49-
பதவுரை
என் நெஞ்சே–எனது மனமே!
மலை ஏழும்–ஸப்த குல பர்வதங்களும்
மா நிலங்கள் ஏழும்–ஸப்த த்வீபங்களும்
குலை சூழ் குரை கடல்கள் ஏழும்–கரையாலே சூழப்பட்டு ஒலி செய்கிற ஸப்த ஸாகரங்களும்
அதிர–அதிரும்படியாக
நாவன் என்று-திருப்பவளத்தை யுடையவளே!“ என்று சொல்லி
முலை சூழ்ந்த நஞ்சு உரத்து பெண்ணை–“முலையில் வியாபித்த விஷத்தாலுண்டான கொடுமையை யுடைய (பூதனை யென்னும்) பேய் மகளை
நவின்று–(முலை யுண்ணும் போது) இடையிடையே மழலைச் சொற்கள் சொல்லிக் கொண்டே
உணட–உண்டு முடித்த
அஞ்சாது–கூசாமல்
அழை–வாய் விட்டுக் கூப்பிடு-
மலை ஏழும்-
பூமிக்கு ஆணி அடித்தால் போலே இருக்கிற சப்த குல பர்வதங்களும் –
மா நிலங்கள் ஏழும் –
சப்த த்வீபங்களும் –
குலை சூழ் குரை கடல்கள் ஏழும் –
அதில் அங்கியாதே கரைக்கு உள்ளே நின்று கோஷிக்கிற சப்த சமுத்ரங்களும்
அதிர-
இவை எல்லாம் அதிரும்படிக்கு ஈடாக கீழ்ப் படும்படி –
முலை சூழ்ந்த நஞ்சுரத்த பெண்ணை –
முலை எங்கும் வியாபித்த நஞ்சால் யுண்டான மிடுக்கை யுடைய பூதனையை –
நவின்று உண்ட நாவன் என்று-
முலை தந்த க்ருதஜ்ஞதை தோற்ற நடுவே சில முக்த ஜல்பிதங்களை அவள் முகத்திலே சொல்லி
முலை யுண்டு முடித்த நாவை யுடையவன் என்று –
அஞ்சாதே என்நெஞ்சே அழை-
நம்முடைய பிரதிபந்தகங்களை நினைத்து அஞ்சாதே கூப்பிடு
பிரதிபந்தகங்களைச் செய்வது என் என்னில் -அப் பூதனை பட்டது படும் அத்தனை –
அஞ்சாதே என் நெஞ்சே அலை –
விரோதி போக்குகைக்கு நமக்கு அஞ்ச வேண்டா -அனுபவிக்க அமையும் –
அங்கன் அன்றிக்கே –
அஞ்சாதே என்றது அயோக்யன் என்று அஞ்ச வேண்டா
பேய்க்கும் தீண்டலாய் இருக்கிற விஷயம் என்றுமாம் –
அது செய்யும் இடத்தில் ஜகம் அதிரும்படி கூப்பிடு –
————————————————————————–
திரு உள்ளத்தைக் கூப்பிடு என்றாரே -அநந்தரம்-
திரு வாய்ப்பாடியில் உள்ள பெண்கள் அவன் திரு நாமங்களைச் சொல்லப் புகத்
தளர்ந்து தலைக் கட்ட மாட்டாதே சொல்லுமா போலே
தாம் சொல்லிக் கூப்பிடத் தொடங்கினார்-
அழைப்பன் திருமாலை ஆங்கு அவர்கள் சொன்ன
பிழைப்பில் பெரும் பெயரே பேசி -இழைப்பரிய
வாயவனே யாதவனே என்றவனை யார்முகப்பும்
மாயவனே என்று மதித்து —50-
பதவுரை
இழைப்பு அரிய–ஆராய்வதற்கு அருமையான ஸ்வரூப ஸ்வபாவங்களையுடைய
ஆயவனே என்றும்–கோபால க்ருஷ்ணனே!என்றும்
மாயவனே என்றும்–(குண சேஷ்டிதங்களினால்) ஆச்சரிய பூதனே என்றும்!
மதித்து–அநுஸந்தித்துக் கொண்டு
ஆங்கு அவர்கள் சொன்ன–அத் திருவாய்ப் பாடியிலுள்ளவர்கள் சொல்லி யழைத்த யது குலத்தில்
யாதவனே என்றும்–(வஸுதேவர் மகனாய்த்) தோன்றினவனே என்றும்!
பிழைப்பு இல்பெரு பெயரே பேசி–குற்றமற்ற சிறந்த திருநாமங்களையே பேசி
யார் முகப்பும்–எல்லாரெதிலும்
திருமாலை அவனை–திருமாலாகிய அப்பெருமானை
அழைப்பன்–கூப்பிடா நின்றேன்.
அழைப்பன் திருமாலை-
ஸ்ரீ யபதியைக் காண என்றாய்த்து இவர் கூப்பிடுவது –
அபரிச்சேத்யமான விஷயத்தை கூசாதே பேசுவேன் –
சிந்தை கலங்கித் திருமால் என்று அழைப்பன் -திருவாய் -9-8-10-
ப்ராஹ்மண பிரஜை பிச்சேறினாலும் ஒத்துச் சொல்லும் அத்தனை இறே –
விக்ரேது காமா கில கோப கன்யா முராரி பாதார்ப்பித சித்தவ்ருத்தி தத்யாதிகம்
மோஹவசாத் கோவிந்த தாமோதர மாதவேதி -கிருஷ்ண கர்ணாம்ருதம் -2-59-
எவ் வழியாலே இவர் தான் கூப்பிடுவது என்னில்
ஆங்கு அவர்கள் சொன்ன-
ஆங்கு அவர் யுண்டு -திரு வாய்ப்பாடியில் உள்ளார்
திரு வாய்ப்பாடியில் உள்ளவர்களைப் பார்த்து நம்முடைய பக்கலிலேயே இரங்குவர் என்று அவர்கள் சொன்ன –
சிறியாத்தான் -த்வயத்தில் ஆநு பூர்வி பிரதானம் -அவைகளை நினைத்து பிரசன்னனாம் –
அர்த்தம் விட சொற்களே முக்கியம் -அவற்றை கேட்டே எம்பெருமான் மகிழ்வான் -என்றபடி –
பிழைப்பில் பெரும் பெயரே பேசி –
தான் இரண்டு மூன்று அஷரமாய் இருக்கச் செய்தே
தங்கள் தளர்த்தியாலே அளவிட ஒண்ணாத படியான பிரபாவத்தை யுடைத்தான திரு நாமங்களைச் சொல்லி –
பிழைப்பில் –
ரிஷிகள் கோஷ்டியில் -ய படேத் ராமசரித்ரம் சர்வ பாபி ப்ரமுச்யதே -பால -1-97- என்று
பாவனமாய் இருக்கும்
ஆழ்வார்கள் கோஷ்டியில் அது நச்சுப் பொய்கை –
உயிர்க்கு அது காலன் என்று இரந்தேற்க்கு நீர் குயில் பைதல்காள்
கண்ணன் நாமமே குழறிக் கொன்றீர் – திருவாய் -9-5-8-என்னக் கடவது இறே-
பெரும் பெயர் –
ஏகாஷரியாய் கரை காண ஒண்ணாதே இருக்கை-
இழைப்பரிய-
ஒருவருக்கும் ஸ்வ யத்னத்தால் அணுக அரியையான –
அன்றிக்கே –
நினைக்கை அரியதாம் படி பெண்களைப் படுத்தும் க்லேசத்தை யுடைய -என்றும்
ஆயவனே யாதவனே என்று அவனை –
கிருஷ்ணனே ஸ்ரீ வஸூ தேவர் திரு மகனே என்று இரண்டும் சொல்லிக் கூப்பிடுவார்கள் போலே காணும் அவர்கள் —
இடைத்தனத்தோபாதி ஸ்ரீவஸூ தேவர் மகனானதுவும் ஆகர்ஷகமான படி –
இரண்டு அவதாரத்துக்கும் பிரயோஜனம் ருக்மிணீ நீளைகளை ப்ராபிக்கை –
இப்படியானவனை –
யார் முகப்பும் –
எல்லாருடைய முகப்பும் -உகப்பார் முன்னோடு உகவாதார் முன்னோடு வாசி யற எல்லார் முன்னும் –
மாயவனே என்றும் மதித்து –
ஆச்சர்ய பூதன் என்றும் புத்தி பண்ணி
ஆங்கு அவர்கள் சொன்ன பிழைப்பில் பெரும் பெயரே பேசி அழைப்பன் –
திருமாலைச் சொல்லிக் கூப்பிடா நிற்பன் –
————————————————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பூதத் ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.