ஸ்ரீ இராமாயண தனி ஸ்லோக வியாக்யானம் -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை அருளிச் செய்தது -இஹ சந்தோ ந வா ஸந்தி-சுந்தர -21-9-/சா திர்யகூர்த்வஞ்ச ததாப்யத-சுந்தர -31-19—

இஹ சந்தோ  ந வா ஸந்தி  ஸதோ வா நா நுவர்த்தஸே
ததாஹி விபரீதா தே புத்தி ராசார வர்ஜிதா -சுந்தர -21-9-

இஹ -இந்த இலங்கையில்
சந்தோ  ந -நல்லோர்கள் இல்லையோ –
வா -அல்லது
ஸந்தி -இருக்கிறார்களோ –
ஸதோ வா நா நுவர்த்தஸே-இருக்கும் நல்லோர்களைத்   தான் நீ அநு வர்த்திப்பது இல்லையோ
ததாஹி -என் எனில்
விபரீதா தே புத்திர்  -உன்னுடைய அறிவு சாஸ்திர முறைக்கு மாறுபட்டதாயும்
ஆசார வர்ஜிதா -நன்னடைத்தையோடு கூடி இராததாயும் இருக்கிறது –

அவதாரிகை –
பிராட்டி ராவணன் தன்னை நோக்கிப் பிதற்றின பரப்பைக் கேட்டு
கோப கிருபைகள் பிறந்து
ஹிதம் சொன்னால் மீண்டான் ஆகில் -அங்கு ஆகாது என்று விலக்குவார் இல்லையோ –
அவர்கள் இரங்கும்படி அநு வர்த்தியாயோ –
அப்படி இருந்தது காண் உன் புத்தியும் அனுஷ்டானமும் -என்கிறாள் –

வியாக்யானம் –
1-இஹ –
நல்ல மனிதர் நடையாடாதபடி ராஷச பூயிஷ்டமான இந்த தேசத்திலே
2-இஹ –
பள்ளரும் பறையருமாய்ப் பத்துக் கோடி பிரஜா வர்க்கம் நடையாடுகிற இத் தேசத்தில்
3- இஹ -உட்படை வீடும் புறப்படை வீடும் படங்கும் பாளையுமுமாய்ப் பெரும் பரப்பான இத் தேசத்தில்
4- இஹ –
உண்பாரும் உடுப்பாரும் பூசுவாரும் முடிப்பாரும் நல்லது தீயது அறிந்து இருக்கிற இத் தேசத்தில்
5-இஹ –
அக்னி ஹோத்ராச்ச வேதாச்ச ராஷசா நாம் க்ருஹே  க்ருஹே -என்றும்
சுஸ்ராவ  ப்ரஹ்ம கோஷாம்ச்ச விராத்ரே ப்ரஹ்ம ரஷ ஸாம்-சுந்தர -18-2-என்றும்
ஓதுவார் ஒத்துச் சொல்லுவாராய் வேத வைதிக மர்யாதை நடத்துகிறதாக பாவிக்கிற இத் தேசத்திலே
6-இஹ –
தபஸ் சந்தா பலப் தஸ்தே சோயம் தர்ம பரிக்ரஹ -சுந்தர -51-25-என்றும்
ப்ராப்தம் தர்மபலம் தாவத் பவதா -சுந்தர -51-29-என்றும்
தபஸ் சந்தப்த பலமும் அறிந்து நடத்துகிற இத் தேசத்தில் –
7-இஹ –
ராஜாக்களும் மந்த்ரிகளும் புரோஹிதரும் சடங்கிகளும் சிஷ்டர்க்களுமாய்ப்
பாரிப்புண்டான இத் தேசத்திலே

இப்பாரிப்புக்கு இப்பொது வந்த குறை என் -என்னில்
1-சந்தோ  ந -நல்லோ இல்லை –
பதர்க்கூடு  உண்டத்தனை போக்கி சார பூதரைக் கண்டிலோமே –
2- சந்தோ ந -நல்லோர் இல்லை –
பரா நர்த்த பரரான ப்ரஹச்த தூம் ராஷ வஜ்ரதம்ஷ்ட்ர பிரமுகரான  அசத்துக்களைக் கண்டோம் இத்தனை –
பரஹித பரராய் சத்தை யுண்டாக்குகிற சத்துக்களைக் கண்டிலோம் –
3-சந்தோ ந ஸந்தி -உள்ளவர் இல்லை –
அஸ்தி ப்ரஹ்மேதி  சேத வேத சந்தமே நம் ததோ விது -தை -ஆனா -6-என்று
பகவத் ஜ்ஞானத்தாலே தாங்களும் உளராய் பிறரையும் உண்டாக்குமவர்கள் இல்லையாய் இருந்தது –
4-சந்தோ ந -நல்லோர் இல்லையா –
ஒரு சத்து உண்டானால் த்வாம் து திக் குல பாம்சனம் -யுத்த -16-15-என்று எண்ணித் தள்ளிக் கதவை யடைப்பார்களோ
பலர் உண்டாகில்   இ றே ஈடேறலாவது-
அப்படிக்குப் பலர் இல்லையாய் இருந்தது –
தம் சந்த ச்ரோ துமர் ஹந்தி சதசத் வ்யக்தி ஹேதவ -ரகுவம்சம் -1-10-என்று
சார அசார விவேகிகள் இல்லையோ –

சிறிது நிரூபியா -வா என்று -அல்லது -என்று பூர்வ பஷத்தை வ்யாவர்த்திப்பிக்கிறாள்
வா -இல்லை என்ன ஒண்ணாது-
இல்லை என்ன ஒண்ணா தாகில்   சொல்லும்படி என் என்னில்
ஸந்தி -உண்டே
1-ஸந்தி –
இப்படை வீட்டிலே இத்தனை விஜய சம்பத் புத்ராதி சம்ருத்தி யுண்டாகையாலே
இதுக்கடியான தர்ம அனுஷ்டானமும்
அதுக்கு உபதேஷ்டாக்களான சத்துக்களும் உண்டாக வேணும் –
அப்படி ஆகாத போது அகாரண கார்யோத்பத்தி பிரசங்கம் வரும்
2-ஸந்தி –
சத்துக்கள் என்று சில ஜாதி அன்றே –
அநீதியைச் சொல்லுதல் – செய்தல் -செயலில் போந்து இ றே அசத்துக்கள் ஆவது
சதர்த்தோ பதேசம் பண்ணின போது சத்துக்கள் இ றே
ஆகையாலே அவனுக்கு நல் வார்த்தை சொன்ன
அகம்பன -மாரீச -மால்யவத் -கும்பகர்ண -விபீஷண-ப்ரப்ருதிகள் உண்டாகையாலே சத்துக்கள் உண்டே
3- ஸந்தி
சத்தா மாத்ரமே உள்ளது
கார்யகரத்வம் இல்லை —
சத்தை யுண்டாகில் உபதேசியார்களோ -என்ன –
1-ஸதோ வா நா நுவர்த்தஸே-நல்லோருக்கு சுஸ்ருஷை செய்வது இல்லையா –
உண்டானாலும்
நா ப்ருஷ்ட கஸ்யசித் ப்ரூயாத் -மனு -2-110-என்றும் –
ப்ரணி பாதேன பரி ப்ரச் நே ந சேவயா உபதேஷ்யந்தி -ஸ்ரீ கீதை -4-34- என்றும்
ப்ரணிபாத ப்ரச்நாத் யநுவர்த்த நம் பண்ணிக் கேட்டால் இ றே அவர்கள் சொல்லுவது
அப்படிக்கு அநு வர்த்தி யாகாதே –
2-ஸதோ வா நா நுவர்த்தஸே-
த்ரிவர்ஷ பூர்வ ச்ரோத்ரி யோ அபிவாத ந மர்ஹதி -ஆபஸ்தம்ப -1-14-13-என்றும்
ஜ்ஞான விஜ்ஞான சம்பன்னா பக்தி மந்தோ ஜநாரத்தநே
ப்ரண ந்தவ்யா விசேஷேண சாத்விகைர் தர்ம சாரிபி -என்றும்
தண சேறை எம்பெருமான் தாள் தொழுவார் காண்மின் என் தலை மேலாரே -பெரிய திருமொழி -7-4-1-என்றும்
யோகா அநு வர்த்தனம் விஹிதமாய் இருக்க அது செய்யாய் ஆகாதே -என்கிறாள் –
3- ஸதோ வா நா நுவர்த்தஸே-
அப்ரியஸ்ய து பத்யஸ்ய வக்தா ச்ரோதா ஸ துர்லப -யுத்த -26-21- என்றும்
துர்லபோ மாநுஷோ   தே யாவது
பெற்று வைத்து அழைக்கிறாய் ஆவது ஆகாதோ –
4-ஸதோ வா நா நுவர்த்தஸே–
பூர்வ அவஸ்தையில் இரங்கும்படி ப்ரணி பத்யாபி வாத்ய ஸ -ஸ்ரீ விஷ்ணு  -1-1-1- என்று அநு வர்த்திக்க வேணும்
உத்தர அவஸ்தையில் க்ருதஜ்ஞனாகையாலே
த்வத்தோ ஹி வேதாத்யய நமதீ தமகிலம் – ஸ்ரீ விஷ்ணுபுராணம் -1-1-2-என்றும்
என்னைத் தீ  மனம் கெடுத்தாய்  உனக்கு என் செய்கேன் -திருவாய் -2-7-8-என்றும் அனுவர்த்திக்க பிராப்தம் -அது செய்யாகாதே –
5-நா நுவர்த்தஸே–
ப்ரத்யஷ குரவே ஸ்துத்யா-என்று ஸ்தோத்ரம் பண்ண வேண்டி இருக்க
சோஹம் பருஷிதஸ்  தேன தாசவச்சாவ மா நித –யுத்தம்-17-16-என்று நிந்திப்பாயாகாதே –
அன்றியிலே
-6-நா நுவர்த்தஸே-
பிரணி பாதாதிகளை ஒழிய -யதாதே தேஷு வரத்தே ரந்ததா தேஷு வர்த்தேதா -தைத்சீஷா -11- என்றும்
யத் யதா சரதி ஸ்ரேஷ்டஸ் தத் ததே வேதரே ஜநா -ஸ்ரீ கீதை -3-21- என்றும்
பேசிற்றே பேசலல்லால் -திருமாலை -22- என்றும்
கௌரவர் சொன்ன வார்த்தையும் -அஞ்செய்-அழகியது -என்று
நாடி அப்படிக்கே செய்யா யாகாதே என்றுமாம் –
7-சதோ வா நா நுவர்த்தஸே-
அவர்கள் சத்தை யுண்டானபோது சொல்லி அல்லது நில்லார்கள் –
நீ அனுஷ்டியாகாதாய் இருந்தது –

நேற்று வந்து நின்றாள் -அநு வர்த்திப்பனோ அநு வர்த்தியானோ என்று அறிந்த படி என் -என்ன
1-ததாஹி –
அப்படி இருந்தது காண்-ஸூ பிரசித்தம் –
2- ததாஹி –
சம்ப்ரதிபத்திலேயாய் இவ்வர்த்தத்தில் விப்ரதிபத்தி யுண்டோ
சர்வ லோக பிரதிபன்னம் அன்றோ -ஹி-அனைவருக்கும் உடன்பாடு
3- ததாஹி –
ஹி தேஹ தௌவா தேதாத் வாத -என்று அநு வர்த்தியாய் என்கிற சாத்தியத்துக்கு ஹேது சொல்லுகிறாள் ஆகவுமாம் –
4- ததாத்வாத் –
அப்படி யாகையாலே -ததாத்வாத் -என்று தச் சப்தம் பிரக்ருத பராமர்சியாகையாலே கீழ்ச் சொன்ன சாத்தியத்தை பராமர்சித்து
அநு வர்த்தியாமையால் -என்றபடி இ றே
அப்போது அநு வர்த்தியாமல் என்ற ஹேது சாத்யாவிசிஷ்டம் ஆகாதோ என்னில் ஆகாது
பிரக்ருத பராமர்சத்துக்கு குறை இல்லை
பிரகிருதம் தான் உகதம் என்றும் புததுச்தம் என்றும் இரண்டு –
1-விபரீதாதே புத்தி -என்று லஷ்யமாணமாயே புத்திஸ்திதையாய்
பிரக்ருதத்தைப் பராமர்சிக்கையாலே ஒரு குறை இல்லை
எங்கனே என்னில்
அநு வர்த்த நாபாவ சாத்யமாயும் புத்திவை பரீத்ய ஹேதுவாயும் இருக்கையாலே சாத்யாவிஷிஷ்டம் ஆகாது
ததாத்வாத் -தனக்குப்   பொருளாய் வைத்தது என் என்னில்
உன்னுடைய அநு வர்த்தனத்துக்கு சாதனமாய் இருப்பதொரு ஹேதுவை உடைத்தாகையால் -என்றபடி –
ததாத்வாத் என்று புத்திஸ்தத்தை அருளிச் செய்தது இத்தனை அன்றோ -அந்த ஹேது ஏது என்னில்
2-விபரீதாதே புத்தி
உன்னுடைய புத்தி விபரீதையாய் இரா நின்றதே
நதி பூரத்தைக் கண்டு பர்வத பர்சரத்தில் வ்ருஷ்டியை அநு மிக்குமா போலே
தவ புத்திவை பரீத்யாத் -என்று காவ்யா லிங்கா நு மானம் சொல்லுகிறாள் –
3- விபரீத புத்தி –
சாஸ்திர விஹித பிரகாரத்துக்கு விருத்தமாய் இரா நின்றது
4- விபரீதா –
பரதார பரத்ரவ்ய பர ஹிம்சாதிகள் நிஷித்தமாய் இருக்க
அவை கர்த்தவ்யங்கள் என்று நினைவு நடவா நின்றதே –
5- விபரீதா புத்தி –
புத்த்யா ஹ்யஷ்டாங்கயா யுகத -கிஷ்கிந்தா -54-2-
சுஸ்ருஷா சரவணம் சைவக்ரஹணம் தாரணம் ததா ஊஹா போஹார்த்த விஜ்ஞானம் தத்தவ ஜ்ஞானம் சதீ குணா -அங்கதன் அறிவின் எட்டு குணங்கள் –
புத்திமான் மதுரா பாஷீ-அயோத்யா -1-13- என்றும்
உத்தாரக ஸூ ச்ரூஷாதிகளால் சம்பன்னை அன்றிக்கே இருந்ததே –
6- விபரீதா
புத்தி நாஸாத் ப்ரணச்யதி -ஸ்ரீ கீதை -2-63-என்று அநர்த்த ஹேதுவாயே இருந்தது
7-விபரீதா –
ப்ரீதம் துதிநம் ப்ரோக்தம் -என்று நாளாய் விஹதமான தினத்தை யுடையதாய் இருந்தது
அதாவது ஆயுர் ஹாநியை யுடைத்தாய் இருந்தது -என்கை-
8-தே புத்தி –
அறிவுடையாரை அநு வர்த்தியாதே இருக்கிற உன்னுடைய புத்தி
நீதிமான் புத்தி சமபன்னோ தீரோ தஷ ஸூ சிர் ந்ருப -என்று ராஜாக்கள் ஆகில் ஏவம் குண யுத்தராய் ப்ராப்தராய் இருக்க -அவை இல்லாத புத்தி –
9- தே புத்தி விபரீதா –
பிரக்ருதயா ராஷசோ ஹ்யேஷ-யுத்த -17-25- என்றும்
தவிவிதோ பூத சர்க்கஸ்து தைவ ஆசூர ஏவச விஷ்ணு பக்தி பரோ தேவோ  விபரீதச் ததா சூர –  ஸ்ரீ விஷ்ணு தர்மம் -109-74-என்றும்
புத்தி வைபரீத்யத்துக்குத் தகுதியான ஜன்மம் உடைய உன்னுடைய புத்தி –

என்னுடைய புத்தி விபரீதை என்று அறிந்த படி என் -அந்தர்யாமி யன்றே அறிவதற்கு -என்ன
1-ஆசார வர்ஜிதா –
அதுவும் கார்ய கல்ப்யம் அன்றோ என்கிறான் –
2- ஆசார வர்ஜிதா –
ஆசாரம் ஆவது -சுருதி சம்ருத்தி விஹித வர்ணாஸ்ரம நிஷ்டா நுஷ்டானம்
அது உன் பக்கல் கண்டிலோமே
3- ஆசார வர்ஜிதா –
இது முற்பட இல்லை என்ன ஒண்ணாது
பர தார பர தேவதா த்ரோஹாத்ய நாசாரம் ப்ரத்யஷ சித்தமே
4-புத்திராசார வர்ஜிதா -என்னா நின்றாய்
புத்தியாவது ஆந்திர வியாபாரம்
ஆசாரமாவது பாஹ்ய காயிக வியாபாரம்
ஆனால் சாமா நாதி கரண்யம் கூடுமோ என்னில்
யத்தி மநஸா த்யாயதி தத் கர்மணா கரோதி -என்றும்
ஜ்ஞாதே ஹீச்சா இஷ்டே ஹி ப்ரவ்ருத்தி -என்றும்
புத்தியை ஒழியக் கர்மம் கூடாமையாலும்
புத்தி பிறந்து அல்லது நில்லாமையாலும்
இவ்வவிநாபாவ சம்பந்தத்தை நினைத்து சம்பந்த ஹாநியை வர்ஜிதா -என்கிறது
5- புத்திராசார வர்ஜிதா –
பரதாராபஹாரம் காண்கையாலேஇதுக்கடியான புத்தி கண்டோம் இத்தனை
உன் புத்தியிலே சதாசாரம் இல்லை என்கிறாள்
ஆக இத்தால் துராசாரம் கொண்டு துர்ப்புத்தியை அநு மித்தேன்
புத்தியைக் கொண்டு சத்புத்தி ஜனகரான சத்துக்களை அநு வர்த்தியாய் என்னும் இடம் அநு மித்தேன் என்கிறாள்
6- ஆசார வர்ஜிதா –
நை நம் சூர்ய பிரதிபதி பார்ச்வே வாதி ந மாருத
ஜலோர்மிசாலீ தம த்ருஷ்ட்வா சமுத்ரோபி ந கம்பதே -பால -15-10-என்றும்
தரச்யதயபி புரந்தர -யுத்த -14-3- என்றும்
பிறந்தவன்று தொடங்கி சகல தேவதை களும் நிலை குலையும்படி இருக்கையாலே
முதலுக்கு இவ்வாஸ்ரயத்தில் ஆசாரம் புகுந்தமையும் இல்லை
என்றும் ப்ராக பாவமே இருந்தது
7- ஆசார வர்ஜிதா
ப்ராக பாவம் என்றால் மேல் ஒரு காலாகிலும் வரக் கூடும்  இ றே
அங்கன் இன்றியிலே ஆசாராத யந்த பாவமே யாய் இருந்தது
அத்யந்த பாவமாம் படி ஏன்
ப்ரஹ்மாவை நோக்கித் தபஸ் சைப் பண்ணுவது
ருத்ரனை நோக்கித் தபஸ் சைப் பண்ணுவதாய் சதாசாரம் பண்ணிற்றிலனோ என்னில்
8- புத்திராசார வர்ஜிதா –
சைத்யம் ஹியத சா பிரக்ருதிர் ஜலச்ய -என்று ஜல தத்வத்துக்கு சைத்யம் சவ பாவமாய் இருக்கச் செய்தே

உஷ்ண ஜலம் என்று அக்னி ஸ்பர்சத்தாலே ஔ ஷ்ண்யம் ஔ பாதிகமாமாப் போலே
இவனுக்கும் ஐஸ்வர்ய அவத்ய த்வாயுதாத்ய பேஷயா ஔபாதிகமா கசதாசாரம் வந்தேறி  இத்தனை
இவன் புத்திக்கு சதா சார ஹாநி ஸ்வத ப்ராப்தமே -என்கிறது
சந்த்ருஷ்டே திஸ்ருணாம் புராமாபிரி பௌ கண்டூலதோர்  மண்டல க்ரீடா க்ருத்த புன புரரூட சிரசோ வீரஸ்ய லிப்சோர்வரம்
யாச்ஞா சைதன்ய பிராஞ்சி யஸ்ய கலஹா யந்தே மிதஸ் த்வம் வ்ருணுத்வம்

வருண் விதபிபி தோ முகா நி சதா சக்ரீவ கதம் கதயதே -அனர்க்க ராகவம் -3-41-என்று
தபஸ் ஸூ பண்ணி சாந்தனாய் இருக்கிற போதகப்பட
பரா பேஷா தசையில் ஒரு முகத்துக்கு ஒரு முகம் தோஷ கலுஷிதமாய் விப்ரதிபத்தி பண்ணிற்று இ றே –

—————————————————————————————————————————————————————————————–

சா திர்யகூர்த்வஞ்ச ததாப்யத ஸ்தாத் நிரீஷமாணா  தம சிந்த்ய புத்திம
ததர்ச பிங்காதி   பதேர மாத்யம் வாதாத் மஜம் ஸூர்யமிவோத யஸ்தம் –சுந்தர -31-19-

சா -அந்த சீதா பிராட்டி
திர்யகூர்த்வஞ்ச ததாப்யத ஸ்தாத் -திர்யக்  ஊர்த்வம் ததா அத ஸ்தாத் அபி -பக்கங்களிலும் மேலும் அப்படியே கீழும்
நிரீஷமாணா  -பார்ப்பவளாய் இருந்து கொண்டு
அசிந்த்ய புத்திம-மனத்தால் எண்ணத் தகாத புத்தி யுடையவளாயும்
ததர்ச -பார்த்தாள்
பிங்காதி   பதே-வானவர் அரசனுடைய
அமாத்யம் -மந்த்ரியாயும்
தம வாதாத் மஜம்-வாயுவின் புத்ரனமாயுமுள்ள அந்த அனுமானை
ஸூர்யமிவோத யஸ்தம்-உதயஸ்தம் ஸூ ர்யம் இவ -உதய கிரியில் உள்ள   சூரியனைப் போலே-

அவதாரிகை —
அஸோக வநிகா மத்திய கதையான பிராட்டி ராவண ப்ரேரிதை களான ராஷசிகள் உடைய தர்ஜன பர்த்ச நாத்ய சஹாதையாலும்
ராம விரஹ வ்யசன அதிசயத்தாலும்
பிராண த்யாக வ்யவசித மனஸ் சையாய்
சிம்சூபா சாகி சாகா வலம்பி நியாய எழுந்து அருளி நின்ற சமயத்திலே திருவடி கண்டு
முன்பு பெருமாள் அருளிச் செய்த வை லஷ்ண்ய ஜாதங்களை  முழுக்கத் திரு மேனியிலே காண்கையாலே பிராட்டி என்று அறுதி இட்டு
அர்த்தகதி சம்பாஷிக்கில் பீத்யா சத்தா நாசம் பிறக்கும்
சம்பாஷியாதே மீண்டிடில் அவிதித வ்ருத்தாந்தை யாகையாலே சரீர விச்லேஷம் பண்ணக் கூடும் என்று
ஐ ந்த்ர வியாகரண பண்டிதன் ஆகையாலே தன் நெஞ்சாலே தர்க்கித்து
க்ரமச பொறுப்பிப்போம்-என்று நிர்ணயித்து
வாதோபஹதனைக் கீழே வைத்து தான் உன்னத பிரதேசத்திலே இருந்து தாரை பொழியுமா போலே
சிம்சூபா வருஷத்தின் மேலே இருந்து
ராஜோ தசரதோ நாம -சுந்தர -31-2-என்று தொடங்கி கதா சரீரத்தை அம்ருத தாரை யாக வர்ஷிக்க
சிரகாலம் அவநதியாலே ஸ்தப்தமான திருக் கழுத்தை மஹதா பிரயாசேன உன்னமித்து
பிராட்டி திருவடியைத் திருக் கண் சாத்தின படியைச் சொல்லுகிறது இஸ் ஸ்லோகம்
ஸ்லோகத்துக்கு வாக்யார்த்தம்
அவள் திருக் கழுத்தை இருமருங்கும் புரட்டி
மேலும் கீழும் பார்த்து
மீ ண்டு மேலே நோக்கிப் பாரா நின்று கொண்டு
உதயகிரி சிகரஸ்தனான ஸூ ர்யனைப் போலே
ஸூ கரீவ சசிவனான மாருதாத் ம்ஜனைக் கண்டாள் -என்கிறது-

1-சா –
பூர்வ ஷணத்திலே சரீர விநியோக அத்யவசாயம் பண்ணினவள்
2- சா –
மாரீச பரிப்ரமம் தொடங்கி உபரிதந  வ்ருத்தாந்தா நபிஜ்ஞையாகையாலே அத்யந்தம் விஷண்ணையாய் உள்ளவள் –
3-சா –
அருகே ஒரு சருகு இலை ஒசைப்படிலும் ஹ்ருதயம் குலைந்து பறை யறையா நிற்குமவள்-
4- சா –
ராவண கரருஹீதையான அன்று துடங்கி செம்பளித்த கண் விழிக்க அறியாதவள் –
திர்யக்-
திருக் கழுத்தை இருமருங்கும் புரட்டிப் பார்த்தாள்-
சிரகாலம் சேஷ்டியாக கழுத்தாகையாலே இப்போது  இருமருங்கும் விதேயமாக்கினாள்-
நம்முடைய அத்யவசாயத்தைக் கண்டு முலை எழுந்தார் வ்யசனம் முலை எழுந்தார்க்குப் பொறுக்க ஒண்ணாமை யாலே
திக் அங்கனைகள் சொன்ன வார்த்தையோ என்று இருமருங்கும் புரிந்து பார்த்தாள்-
ஊர்த்வம் –
சசி பரப்ருதிகளும் நம்மைப் போலே அகப்பட்டு பிராண த்யாக அத்யவசாயம் பண்ணி
மீண்டும் ஸ்வ ஸ்வ பர்த்தாக்களை ப்ராபித்தவர்கள் ஆகையாலே
இப்போது நம்முடைய அத்யவசாயம் தவரிக்கைக்காக அவர்கள் சொன்ன வார்த்தையோ -என்று மேலே பார்த்தாள் –
2- ஊர்த்வம் –
எழுந்த சப்தத்தின் யுடைய முழக்கத்தாலே
ஆகாச குண சப்த -என்கிறபடியே சப்த குணகமான ஆகாசம் செவிக்கு இனிதாகப் பழுத்துக் கொடுத்த பழமோ என்று பார்த்தாள் –

ச-காரம்
சமுச்சயார்த்தமாம் போது வஷ்யமாணமான திக் அந்தரங்கள்சேரச் சொல்ல வேண்டாவாகையாலே
பூர்வம் நிரீஷித்த பாகங்களைப் புநர் நிரீஷணம் பண்ணினாள் சம்பரமத்தாலே –

1-ததாப்யத ஸ்தாத் –
அப்படியே கீழும் -பார்த்தாள் –
தன் கால் அடியிலே இருந்து சிலர் ஒரு வார்த்தை சொல்ல சம்பாவனை இன்றிக்கே இருக்க
கீழே பார்க்கைக்கு உபபத்தி சொல்லுகிறது ததா சப்தம் –
க்ருத்ரரும் மஹா பூதங்களும் சொல்லக் கடவதாக முற்படவே கற்பித்தார்கள் -அந்த வாசனையாலே பார்த்தாள் –
அவேஷ மாணாம் பஹூசோ வைதேஹீம் தரணி தலம் -ஆரண்ய -52-45-
ககோத்தம வாநச்பதி கத ஸ்ரீ மான்  வ்யாஜஹார சுபாம் கிராம் -ஆரண்ய -50-2-
இதி சர்வாணி பூதானி கணச பர்யதே வயன் -ஆரண்ய -52-42-
2-அதஸ்தாத்-
தன்னுடைய கிலேச  அதிசயத்தைக் கண்டு ஆச்சி தன் வயிறு எரிச்சலாலே சொன்னாளோ என்று பார்த்தாள் –

அபி –
மீண்டு மேலே பார்த்தாள் –
கீழே சொன்னவற்றுக்கு சமுச்சயம் ஆனாலோ என்னில்
நிரீஷமாணா  என்கிற மேலோடு கடியாது
கண்டது கீழே யல்லாமையாலே-

நிரீஷமாணா  –
என்கிற வர்த்தமானத்தாலே சாதாராதிசயமாக வைத்த கண் வாங்கிற்று இலள்-என்கிறது
நிரீஷ மாணா ததர்ச -இத் யந்வய-

தம் –
என்கிற பதம் திருவடியினுடைய சர்வ அனுபவத்தையும் சொல்லுகிறது –

அசிந்த்ய புத்திம்-
திரு யுள்ளத்தில் இடமுடைமை திரு மேனியிலே நிழல் எழுகை –

ததர்ச –
சமுத்திர லங்கா நாத் யாயாசம் எல்லாம் போம்படி
ஸ்ரீ மத கடாஷத்தாலே பூரணமாகப் பார்த்தாள் –

பிங்காதி   பதேர மாத்யம் –
ஒரு மஹா ராஜாவினுடைய ஆணைக்கு கீழே இருந்தான் ஒரு மந்த்ரி என்னும் இடத்தை
அவன் தானாய் இருந்த இருப்பு கோட் சொல்லிக் கொடுத்தது
யாவன் ஒருவனாலே மஹா ராஜாவினுடைய பிங்காதி  பத்யமும்
தன்னுடைய அமாத்யத்வமும் பெருமாள் உடைய பிரதம கடாஷத்தினாலே உண்டாக்கப் பட்டது -அவனை –

வாதாத் மஜம் –
கண்டகத பிராணையான பிராட்டிக்கு திருவடி திருமேனி பொறுப்பித்த படியாலே
ரிஷி தென்றல் கன்று -காமதேனுவின் கன்று -என்கிறான் –

ஸூர்யமிவ-
பிரதிபஷம் கண்டு வெருவும்படி வீர்யம் புறப்பட்டுப் பரம்புகையாலே அந்த காரத்தில் ஆதித்யனைக் கண்டதுபோலே என்கிறான் –

வாதாத் மஜம் –
மகன் என்று சட்டை இட்டு வாராதே
காற்று தானே வந்ததாகில் கண் வைக்க ஒண்ணாதே
ரூபம்   அற்றும் -விரஹிதிகள் பொறுக்க ஒண்ணாது -காற்று –

உதய யஸ்தம்-
அபூதோபமை-
பழைய ஆதித்யனைப் போலே அன்றியிலே உதயகிரியிலே உதித்து
ராவணனுக்கு அஞ்சி செல்லா நில்லாதே உதயகிரியிலே காலூன்ற வல்லான் ஒரு ஆதித்யனைப் போலே திருஷ்டாந்தம் சொல்லலாம் –

——————————————————————————————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Advertisement

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: