Archive for January, 2015

ஸ்ரீ இராமாயண -அபய பிரதான சாரம் -தனி ஸ்லோக- வியாக்யானம் -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை அருளிச் செய்தது -தமஹம் ஹேதுபிர் -யுத்த -17-12/ஸ ஸ ந ப்ரதி ஜக்ராஹ -யுத்த -17-13/ஸோ அஹம் –யுத்த -17-14/நிவேதயத மாம் ஷிப்ரம் -யுத்த -17-15-

January 28, 2015

தமஹம் ஹேதுபிர் வாக்யைர் விவிதைஸ் ஸ ந்யதர்சயம்
சாது நிர்யாத்யதாம் ஸீதா ராமயேதி புந புந -யுத்த -17-12-

தமஹம் -தம் அஹம் -அவனைக் குறித்து நான்
ஹேதுபிர் வாக்யைர் விவிதைஸ் -பலவிதமான வசனங்களாலும் காரணங்களாலும்
ந்யதர்சயம் -அறிவித்தேன்
சாது -நன்றாக
நிர்யாத்யதாம் – கொடுக்கப் படட்டும்
ஸீதா -ஸீதா பிராட்டியானவள்
ராமயேதி புந புந -ராம பிரானிடம் –

அவதாரிகை
இத்தால் உனக்கு என் என்னில்
இவன் பண்ணின அபராதத்தைக் கண்டால் நெருப்புப் பட்ட அகத்தில் நின்றும் புறப்படுமா போலே
அப்போதே புறப்பட பிராப்தமாய் இருக்க
அவனுக்கும் ஹிதம் சொல்லி மீட்டு உஜ்ஜீவிப்பிக்க விருந்த பாபிஷ்டன் நான் -என்கிறான் –
தம் –
முதல் ஸ்லோகத்திலே தச் சேஷத்வத்தால் வந்த தோஷம் இ றே சொல்லிற்று
அவ்வளவன்றே இது சஹஸ்ரந்து பிதுர் மாதா கௌரவேணாதிரிச்யதே -பால -4-30- என்று
சர்வேஸ்வரனில்   காட்டில் சஹச்ர குணம் அநு வர்த்த நீயையாய் -சர்வ லோக ஜனனீ யான பிராட்டி திறத்திலும்
ஸ மகாத்மா ஸூ துர்லப -ஸ்ரீ கீதை -7-9-என்றும்
த்விதீயம் மேந்தராத் மானம் -அயோத்யா -4-43- என்றும்
தம் திரு உள்ளத்தில் நினைத்து இருக்கும் பெரிய யுடையார் திறத்திலும் அபசார பரம்பரைகளை பண்ணினவனை –
அஹம் –
இப்படி பாபிஷ்டன் என்னும் இடத்தை அறிந்து வைத்து
அவனை அநாதரியாதே
ஹிதம் சொல்லி இருந்த நான் –
ஹேதுபிர் வாக்யைர் விவிதைர் –
சாம பேதாதி முகத்தாலே நாநாவித வாக்யங்களாலும்
அர்த்தத்த்க்கு அநு ரூபமாய் இருந்துள்ள
கர தூஷண கபந்த வாலி வத முகமான நாநா நித லிங்கங்களாலும்
ந்யதர்சயம் –
அபோதயம் –
உறங்குமவனை உணர்த்துமா போலே உணர்த்திச் சொன்னேன்
போதிதமான அர்த்தம் இன்னது என்கிறது மேல்
சாது நிர்யாத்யதாம் –
நிர்யாதனம் ஆகிறது பிரதானம்
நிர்யாதனம் விதரணம் ஸ்பர்சனம் பிரதானம் -கொடுத்தல் தொடுதல் ஒப்படைத்தல் -நிகண்டு -எண்ணக் கடவது இ றே
சாது த்வமாவது-அநு தப்தனாய் ஆகிஞ்சன்யத்தைப் புரச்கரித்து-சரணம் புக்குக் கொடுக்கை –
ஸீதா-
அவன் உடைமையை அவனுக்கு கொடுக்க வேண்டுமது ஒழிய நீ ஒன்றைக் கொடுக்க வேண்டியது இல்லை –
தம்முடைமைத் தமக்குக் கொடுத்தாலும் அபஹரித்த அம்சத்தை பொறுத்து
இவனாலே பெற்றோம் என்னும் குணாதிகர்  -என்ன
தம்முடைமையை நம்மாலே பெற்றோம் என்று இருந்தாலும் நம்முடைய அபராதத்தைப் பொறுக்கக் கூடுமோ என்ன
ராமாய –
ஸ தம் நிபதிதம் பூமௌ சரண்ய சரணாகதம்
வதார்ஹமபி காகுத்ச்த க்ருபா பர்யபாலயத் -சுந்தர -38-34-
என்கிறபடி காகாபராதத்தைப் பொறுத்து ரஷித்தவர் அன்றோ  –
இதி புந புந –
அவனுக்கு அபேஷிதம் இன்றிக்கே இருக்கச் செய்தேயும்
இவன் செய்யுமே என்கிற நசையால் பலகாலும் அறிவித்தேன்
ஒருவன் சாபராதனுமாய் அபேஷையும் இன்றிக்கே ஜ்யேஷ்டனுமாய் இருக்குமவனுக்கு ஹிதம் சொல்லுகை யுக்தமோ என்ன
ஆகேசக்ர ஹணான் மித்ரம் -என்றும் அபி சந்தேஷ்டும் யுக்தம் -என்றும்
துர்க்கதியைக் கண்டால் ஹிதம் சொல்லுகை யுக்தம்
ஆனால் ஒருகால் சொல்ல அமையும்
பலகால் சொன்ன இடம் அவனைத் திருத்தி உஜ்ஜீவிப்பிக்கையில் யுண்டான நசையாலே இ றே –

———————————————————————————————————————————————————————–

ஸ ஸ ந ப்ரதி ஜக்ராஹ ராவண கால சோதித
உச்யமாநம்  ஹிதம் வாக்கியம் விபரீத இவௌஷதம்-யுத்த -17-13-

ஸ -அந்த
ஸ ந ப்ரதி ஜக்ராஹ ராவண -ராவணனும் ஏற்றுக் கொள்ள வில்லை
கால சோதித-யமனால் தூண்டப் பட்டவனாய்
உச்யமாநம்  ஹிதம் வாக்கியம்-சொல்லப் பட்ட நன்மையான வாக்யத்தை
விபரீத இவௌஷதம்-சாக இருப்பவன் மருந்தைப் போலே-

அவதாரிகை –
மரண உன்முகனானவன் பிஷக்கின் வார்த்தையைக் கொள்ளாதாப் போலே
சாதாரமாக நான் சொன்ன வார்த்தையை ம்ருத்யு ப்ரேரிதனாய்க் கொண்டு பரிக்ரஹித்தான் அல்லன் -என்கிறான் –
ஸ ஸ ந ப்ரதி ஜக்ராஹ –
கார்யம் செய்திலனே யாகிலும்
சொன்ன வார்த்தைக்குச் செவி தாழ்க்கலாமே -அதுவும் செய்திலன்
ராவண –
ப்ராதாவாய் ஹிதஷையான என் வார்த்தையை கால் கடைக் கொண்டு
புதியனாய் சத்ருவாய் இருந்துள்ள காலன்  சொன்ன வழியே போகைக்கு ஹேது
அபதே பிரவ்ருத்தனாய் போந்த துஷ் பிரகிருதி யாகையாலே
கால சோதித-
அதுக்கு ஹேது கால சோதிககனாகையாலே கைக் கொண்டிலன்
உச்யமாநம்   வாக்கியம்-
த்வாம் து திக் குல பாம்சனம் -யுத்த -16-15-என்று கால் கடைக் கொள்ளா நிற்கச் செய்தேயும்
ஆத்மானம் சர்வதா இஷா -யுத்தம் -16-25-என்று
அவனுடைய உஜ்ஜீவன மாகச் சொன்ன வார்த்தையை –
ஹிதம் வாக்கியம்-
நான் சொல்லிலும் அஹிதமாகில் விடலாம் இ றே
தன்னுடைய உஜ்ஜீவனத்தில் இது ஒழிய உபாயான்தரம் இல்லை
இந்தப் பரம ஹிதமான வார்த்தையை
எது போலே என்னில்
விபரீத இவௌஷதம்-
முமூர்ஷூ வானவன் சமயக் பிஷக்காலே சொல்லப் பட்ட வார்த்தையை கால் கடைக் கொள்ளுமா போலே
முமூர்ஷவ பரேத கல்பா ஹி கதாயுஷோ ஜ நா-யுத்தம் -16-26-என்றான் இ றே கீழே இவன் –
அபராதம் பண்ணிப் போந்த சமயத்தில் விட்டுப் போந்து ஸ்வரூபம் பெற்றேன் அல்லேன்
நான் சொன்ன வார்த்தைக்கு செவி தாழ்த்து மீளப் பெற்றேன் அல்லேன்
அவனை திருத்தி ஜீவிக்க இருந்த எனக்கு ஸ்வரூப ஹாநியே பலித்தது என்று கருத்து –

—————————————————————————————————————————————————

ஸோ அஹம் பருஷித ஸ்தேந தாஸ வச்சாவ மா நித
த்யக்த்வா புத்ராம்ஸ்ஸ  தாராம்ஸ்ஸ ராகவம் சரணம் கத –யுத்த -17-14-

ஸோ அஹம் -அப்படிப்பட்ட நான்
பருஷித -கடுமையாகப் பேசப்பட்டவனும்
ஸ்தேந தாஸ வச்சாவ மா நித -அவனாலே வேலைக்காரன் போலே அவமதிக்கப் பட்டவனுமான
த்யக்த்வா புத்ராம்ஸ்ஸ  தாராம்ஸ்ஸ -பிள்ளைகளையும் மனைவியையும் விட்டு
ராகவம் சரணம் கத -ஸ்ரீ ராம பிரானை சரணம் அடைந்தேன்-

அவதாரிகை –
நான் சொன்ன வார்த்தையை சவீ கரியாமை அன்றியே
ஹிதம் சொன்னதுவே ஹேதுவாக
தானும் பருஷித்து
தன் பரிகரத்தாலும் அவமானம் பண்ணு விக்கையாலே
மற்றும் உள்ள ஔ பாதிகன்களை விட்டு
பெருமாள் திருவடிகளிலே சரணம் புகுந்தேன் -என்கிறான் –

ஸோ அஹம் –
இவன் விமுகனாய் இருக்க
இவன் அனர்த்தத்தையே பார்த்து ஹிதம் சொன்ன நான்
ப ருஷத –
ஹிதம் சொன்னதே ஹேதுவாக வாக் வஜ்ரத்தாலே நெஞ்சு புண் படும்படி பண்ணினான்-

தேந –
நான் சொன்ன ஹிதத்தை அநாதரித்த அளவேயன்றிக்கே
ம்ருத்வின் வார்த்தையை ஹிதம் என்று பரிக்ரஹித்தவனாலே –
தாஸ வச்சாவ மா நித-
நான் சொன்னது அஹிதமானால் ஜ்யேஷ்டனான தான் பரிபவித்து விடும் அளவின்றிக்கே
தன்னடியான ப்ரஹச்தனை இடுவித்தும்
தாத க நிஷ்ட வாக்யம் அனர்த்தகம்-யுத்தம் -15-2-என்று கொண்டு இந்த பிரகாரத்தாலே பாலனான இந்த்ரஜித்தை விடுவித்தும் உச்சிஷ்ட போஜிகளானஅடியாரை அவமானம் பண்ணுமா போலே அவமானம் பண்ணப் பட்டேன்
இத்தால் பாபிஷ்டனான ராவணனுக்கும் ஆகாதான் ஒருத்தன் -என்கை-
பிரத்யாசன்னனான ப்ராதாவினுடைய பந்த விபாகம் இதுவாகையாலே அல்லாதாருடைய அளவும் இவ் விழுக்காடு இ றே என்று சோ பாதிதரான பந்துக்களை விட்டு
நிருபாதிக பந்துவான பெருமாளையே பற்றினேன் என்கிறான் உத்தரார்த்தத்தாலே
த்யக்த்வா புத்ராம்ஸ்ஸ –
நிரய நிஸ்தாரகரான புத்ரர்களையும்
இத்தால் பிரபத்தி பண்ணுமவனுக்கு ப்ராப்ய ஆபாசங்களும் பிராபக ஆபாசங்களும் த்யாஜ்யம் என்னும் இடம் தோற்றுகிறது
த்யக்த்வா –
கதவா பிரத்யயத்தாலே பண்ணுகிற ப்ரபத்திக்கு த்யாகம்அங்கம் என்னும் இடம் சொல்லுகிறது –
தாராம்ஸ்ஸ ராகவம் சரணம் கத-
ப்ராதா ச பந்துச்ச பிதா ச மம ராகவ -அயோத்யா -58-31-என்கிறபடியே
விட்ட உறவு எல்லாம் தாமாக வல்லவரைப் பற்றினேன்
அன்யேபி சந்த்யேவ ந்ருபா ப்ருதிவ்யாம் மாந்தாத ரேஷாம் தனயா பிர ஸூதா
கிந்த்வர்த்தம்  நாமர்த்தி ததா நதி ஷா க்ருதவ்ரதம் ஸ்லாக்யமிதம் குலம் தே-ஸ்ரீ விஷ்ணு புராணம் -4-2-78-என்கிறபடியே
ஆ ஸ்ரீ தருடைய சர்வ அபேஷிதங்களையும் கொடுக்கும் குடிப் பிறப்பை யுடையவனைப் பற்றினேன் -என்றுமாம் –

———————————————————————————————————————————————————————————

நிவேதயத மாம் ஷிப்ரம் விபீஷணம் உபஸ்திதம்
சர்வ லோக சரண்யாய ராகவாய மஹாத்மநே  -யுத்த -17-15-

நிவேதயத மாம் ஷிப்ரம்-என்னை விரைவில் அறிவியுங்கோள்
விபீஷணம் -விபீஷணன் என்னும் பெயரை யுடைய
உபஸ்திதம்-அவரை வந்து அடைந்து இருக்கிற
சர்வ லோக சரண்யாய -எல்லா உலகோராலும் சரணம் அடையத் தக்கவராய்
ராகவாய-ஸ்ரீ ராம பிரான் பொருட்டு
மஹாத்மநே  -பெரும் குணவாளரான-

அவதாரிகை –
என் துர்க்கதியைக் கண்டு பெருமாள் விஷயீ கரிக்கும் படியாக சடக்கென என்
வரவை விண்ணப்பம் செய்ய வேணும் -என்கிறான் –
நிவேதயத மாம் ஷிப்ரம் –
மாம் உபஸ்திதம் நிவேதயத -என்ன வேண்டி இருக்க
பிரதமத்தில் நிவேதயத-என்கிறது -தன்னுடைய த்வரையாலே –
மாம் –
பிரச்யுதோ வா அஸ்மால் லோகாதாகதோ தேவலோகம் -என்கிறபடியே முன்பு பற்றி நின்ற பரிக்ரஹத்தை விட்டு
உத்தேச்யரான பெருமாள் திருவடியில் புகுரப் பெறாதே
ஆகாஸ ஸ்தானனாய்
காண வாராய் என்று என்று கண்ணும் வாயும் துவர்ந்து நிற்கிற என்னை -திருவாய் -8-5-2
ஷிப்ரம் –
வந்தவனுடைய குணாகுண நிரூபணம் பண்ணி அறிவிக்க வேண்டாவோ -என்னில்
நீங்கள் நிரூபணத்தில் இழிவதற்கு முன்பே நான் முடிவன் –
உங்களுக்கு பழி வாராதபடி சடக்கென அறியுங்கோள்
நீ ஓர் அதிகாரியாய் அறிவிக்க வேண்டாவோ -என்னில்
ராகவாய –
சர்வ அபாஸ்ரயமான ரகு குலத்தில் பிறந்தவர்களுக்கு ஓர் அநதிகாரிகள் உண்டோ
மஹாத்மநே  –
ரகு குலத்தார்க்கு ஒரு அநாதிகாரிகள் யுண்டே யாகிலும்
எதிர்தலையில் சிறுமை பாராதே தம் அளவில் விஷயீ கரிக்கும் பெருமாளுக்கு ஆகாதார் யுண்டோ
ராமோ ராமோ ராம இதி -யுத்த 131-10- என்றும்
திர்யக் யோநிக தாஸ் சான்யே-உத்தர -109-33-என்றும்
அன்று சரா சரங்களை வைகுந்தத்து ஏற்றி -பெருமாள் திரு -10-10-என்றும் சொல்லக் கடவது இ றே-
இத்தால்
பர வ்யூஹாத்ய வஸ்தாந்தரங்களில் காட்டில் ராமவதாரத்துக்கு யுண்டான நிரவதிகா கஸ்மிக ஸூஹ்ருத்வத்தைச் சொல்லுகிறது
சர்வ லோக சரண்யாய –
லோக்யந்த இதி லோகா -என்று லோகச்தான புருஷர்களை நினைக்கிறது
இருந்ததே குடியாக எலாருக்கும் சரண வரணார்ர்ஹர் அன்றோ பெருமாள் –
ராவண பந்தத்தாலே த்யாஜ்யனாக நினைத்து இருக்கிற என்னுடைய அளவேயோ
த்விதா பஜ்யேயமப் யவம் ந நமேயம் து கச்யசித் -யுத்த -36-11-என்றவன் வந்தாலும் விடாதவர் அன்றோ –
நீங்கள் என்னை விடில் என்னோபாதி பெருமாளை விடேன் என்று இருக்கத் தட்டுண்டோ
மதம் சபூ தோ ராம -சர்வ சப்தம்  தேக வர்ஜிதமாயோ இருப்பது
விபீஷணம்-
நீங்கள் தான் என்னோடு ஒப்புதி கோளோ
புறம்பு ஒருவருக்கும் ஆகாதவனை பெருமாள் விஷயீ கரித்தார் என்கிற ஏற்றம் அவர்க்கு கொடுக்க வந்தேன்  அல்லேனோ
உபஸ்திதம்
இலங்கையிலே நின்று சரணம் என்றேனாலும் இலங்கை தான் மதுக்கரை பட்டது பட வேண்டாவோ
நாலடி வந்தவிடம் பெருமாள் கார்யம் செய்தேன் அன்றோ –

————————————————————————————————————————————————————–

தனி ஸ்லோக- வியாக்யானம்-

அவதாரிகை
கீழ் ஸ்லோகத்திலே பெருமாள் திரு உள்ளத்துக்கு பிரியமாகவும் ராவணனுக்கு அநபிமதமாகவும் சில வார்த்தைகளைச் சொன்னேன்
இப்படி சொன்னால்
பிரத்யஷே குரவ ஸ்துத்யா-என்றும்
என்னைத் தீ மனம் கெடுத்தாய் உனக்கு என் செய்கேன் -திருவாய் -2-7-8- என்றும்
அறியாதன அறிவித்த அத்தா நீ செய்தன -திருவாய் -2-3-2-என்றும் க்ருதஜ்ஞ்ஞானாய் கீழே ப்ராப்தமாய் இருக்க
அவன் துஷ்ப்ரக்ருதி யாகையாலே த்வாம் திக் குல பாம்சனம் -யுத்தம் -16-15-என்று ப்ருஷித்து
அஸ்மின் முஹூர்த்தே ந ஜீவேத் -என்று தன்னடியார் குற்றம் செய்தால் சொல்லுமா போலே வெட்டி வையாது ஒழிந்தேன் என்று அவமானம் பண்ணுவதாக
ஜ்யேஷ்டன் ஆகையாலே அவன் வேண்டிற்று  செய்கிறான்என்று இருந்தேன் –
அவ்வளவே அன்றிக்கே தன வயிற்றிலே பிறந்த சிறு பையலை இட்டு
கிம் நாம தே  தாத க நிஷ்ட வாக்கியம் அனர்த்தகம் சைவ ஸூ பீதவச்ச
அஸ்மின் குலே யோ அபி பவென்ன சாதோ சோபீத்ருசம்  நைவ வதேன்ன  குர்யாத் -யுத்த -15-2-என்று
பரிபவிப்பித்தும் செய்வான்
அத்தாலே அநு கூலரே ஆகிலம் அவன் அடியாக வந்த பந்த பாரா புத்ராதிகளை விட்டு
சேலேய் கண்ணியரும் பெரும் செல்வமும் நன் மக்களும் அவரே இனி யாவரே -திருவாய் 5-1-9-என்கிறபடியே
விட்ட உறவு முறை எல்லாம் பெருமாளே யாம்படி திருவடிகளிலே வந்தேன் என்று
நாட்டாரோடு இயல் ஒழிந்து நாரணனை நண்ணி நின்றான் -திருவாய் -10-6-2- கீழ்
இனி ராஜ நீதி மரியாதையில் ஒரு சத்ருவின் தம்பி பொய்யே சரணம் என்று  வரும் காலத்தில் கைக் கொள்ள இருந்தார்களோ போகாய்-என்று உதறி இருந்தார்கள் முதலிகள்
இவர்களைப் பார்த்து நீங்கள் உதறுகிறது ஸ்வாமி  காரயமாக அன்றோ
ராஷசரால் நலிவு பட்டு சரணம் என்று வந்தவர்களுக்கு புகலாக ரகு குலத்திலே பிறந்த பெருமாளுக்கு ராவணன் தம்பி விபீஷணன் சரணம் புகுந்தான்
என்று அறிவிக்க தானும் ஒரு ஸ்வாமி கார்யம்
ஆனபின்பு தலைக் காவலிலே நிற்கிறவர்கள் அறிவித்திலர் என்று முனிவதற்கு முன்பே சடக்கென விண்ணப்பம் செய்யுங்கோள்-என்றான்
தர்சன மரியாதையில் விதித ச ஹிதர்மஜ்ஞ சரணாகத வத்சலர் -சுந்தர -21-20-என்னும் இடம் கேட்டறியாயோ-நீரே சொல்ல மாட்டாயோ என்ன
அப்படி வழி கெடப் போவான் ஒருவனோ நான் –
தவ பரோஹமகாரிஷி தார்மிகை -என்றும்
வேதம் வல்லார்களைக் கொண்டு விண்ணோர் பெருமான் திருப் பாதம் பணியுமவன் -திருவாய் -4-6-8- காணும் கோள் நான்
ஆனபின்பு நீங்கள் புருஷகாரமாகப் பெருமாள் திருவடிகளிலே காட்டிக்  கொடுங்கோள் என்கிறான் ஆகவுமாம் –

1- நிவேதயத மாம் –
யாம் பிரஜாபதிர் வேத ச புண் யோ  பவதி -என்று அவர் திரு உள்ளத்தில் பட்ட போதாயிற்று
இத்தலைக்கு ஸ்வரூபம் ஜீவிப்பது
அத்தனையும்  உங்களாலே பெற்றேனாக வேணும்
2- நிவேதயத –
உபதேஷ்யந்தி தே ஜ்ஞானம் என்றும்
தைச் சோக்தம் புருகுத்சாய -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-2-8- என்றும்
அவனை எங்களுக்கு அறிவிக்கிற மாதரம் எங்களையும் அவனுக்கு அறிவிக்க வேணும்
எதேனுமாக அறிவிக்கை உங்களுக்கு படி அன்றோ
3- நிவேதயத –
ஸ்வ ரேண மஹதா மஹான்-யுத்த -17-9-என்று நானும் பெரு மிடறு செய்து கூப்பிட்ட போதே பெருமாள் திரு உள்ளம் பற்றுவர் –
நீங்களும் அறிவித்தி கோளாய் ஒரு ஸ்வரூபம் பெறப் பாரும் கோள்
4- நிவேதயத  –
அறிவியாதே போதே பாகவத அபசாரம் பண்ணுவாரைப் போலே உங்களுக்கு ஸ்வரூப ஹாநி-
அறிவித்தால் கூவுதல் வருதல் செய்திலராகில் -திருவாய் -9-2-10- சரணாகத பரித்யாகியான அவருக்கு ஸ்வரூப ஹாநி
இரண்டு தலையும் இப்படியான போது-பரக்கத அதிசய ஆதானம் பண்ணுகை சேஷத்வ லஷணம் ஆனால்
அத்தலைக்கு அவத்யவஹனாகையாலே சேஷ பூதனான எனக்கு ஸ்வரூப ஹாநி
இவை இத்தனையும் வாராமல் அறிவித்துச் சேர விடும் கோள்
5- நிவேதயத
வயாக்ர வானர சம்வாதம் கேட்டு அறியீர்களா –
இப்படி சரணாகதி ரஷணம் பண்ணின ஜாதியில் பிறந்த நீங்கள் சரணாகதனை அறிவியுங்கோள்
6- நிவேதயத –
என்னை நிர்வேதிப்பியாதே வருத்தாதே பெருமாளுக்கு அறிவியுங்கோள்
7-நிவேதயதே-
நிப்ருதம் வேதயத-இப்படிக்குஒரு மூர்க்கனோ என்று திரு உள்ளம் பற்றும்படி உத்படமாக பற்றி அறிவியாதே –
அறியச் சென்று உரையாய் -பெரிய திருமொழி -3-6-4-என்னுமா போலே உங்களுடைய சவிநயகதிபிரசக்திகளாலே இப்படிக்கு ஒரு சாத்விகனோ அவன் என்னும்படி நிப்ருதமாக விண்ணப்பம் செய்யுங்கோள்-
8-நிவேதயதே–
நிதராம் வேதயத-அதாவது மந்திர வ்யாபாராதிகளில் பராக்கான பெருமாள் திரு உள்ளத்திலே படும்படியாக ஊன்ற விண்ணப்பம் செய்யுங்கோள்-
9- நிவே தயதே –
ஒரு பெரும் திரளாய் இருந்தால் ஒருவர் இல்லாது ஒருவர் அறிவிக்க லாகாதே –
10- நிவே தயதே –
ப்ரார்த்த  நாயாம் லோடாய்-அன்னம் செல்வீரும் வண்டானம் செல்வீரும் தொழுது இரந்தேன்-திரு விருத்தம் -30-என்னுமா போலே
நீங்களும் ருஷவா கோலான்கூலங்கள் ஆகிற அநேக ஜாதியாய் இருந்தீர் கோள் –
உங்களை இரக்கிற நான்    நிற்கிற நிலையை விண்ணப்பம் செய்ய வேணும்
11- நிவே தயதே –
ஒருவனைக் குறித்துச் சொல்லாதே சமுதாயத்தில் சொல்லுகிறான் –
இத்திரளில் இதற்கு முன் பரிச்சயம் இல்லாமையாலே சாதகர் இன்னான் என்று அறியாமையாலே –
அன்றியிலே –
12- நிவே தயதே –
தாத்ரா பாகவதா சர்வே ச்லாக்யா பூஜ்யாச்ச பாரத -என்று ராம சம்பந்தம் எல்லார்க்கும் ஒக்கும் ஆகையாலே
அடைய நமக்கு கௌரவ்யர் அன்றோ என்று சமுதாயத்தில் சொல்லுகிறான் ஆகவுமாம் –
அன்றிக்கே –
13- நிவே தயதே –
லோகோ பின்ன ருசி -என்றும்
வேறு வேறு ஞானமாகி –திருச் சந்த விருத்தம் -2-என்றும்
மதி விகற்பால் பிணங்கும் சமயம் பல பல -திருவிருத்தம் -96–என்றும் சொல்லுகிறபடியே
பலராய்- பின்ன புத்திகளாய் இருக்கையாலே
ஒட்டேன் என்று ஒருவன் விடேன் என்று ஒருவன் கட்டென் என்று ஒருவன் -கட்டென்னப் புகுரலாகாதோ என்று ஒருவன்
அறிவிக்கிறேன் என்று ஒருவன் ஜீவிக்கலாவது என் என்று ஒருவன் என்னும் சமுதாயத்தில் சொல்லுகிறான் ஆகவுமாம் –
அன்றியிலே
14- நிவே தயதே –
குருஷூ பஹூ வசனம் -இப்படிக்கு எல்லாம் நிர்வாஹகராய் ராஜாவாய் இருக்கிற மஹா ராஜரை நோக்கிச் சொன்னான் ஆகவுமாம் –
அன்றியிலே –
15- நிவே தயதே –
என்று ராவண கோஷ்டியிலே தூத வதம் ஆகாது என்று நல வார்த்தை சொல்லி க்ருத உபகாரகன் ஆகையாலே
திருவடியை ஹ்ருதயீ  கரித்து
ப்ரதீகோபாதானம் பண்ணி  ஒருவனைச் சொன்னால் மற்றவர்கள் விபரீதம் பண்ணுவார்கள்  என்று சாமான்யமாகச் சொன்னான் ஆகவுமாம் –
அன்றியிலே –
16- நிவே தயதே –
பெருமாள் உங்களிடம் என்னிடை யாட்டமாகக் கேட்பார் –
அப்போது பேசாதே -சங்க நீயன் -என்றாகவுமாம் -விஸ்வ நீயன் என்றாகவுமாம்-சங்க்ராஹ்பன் என்றாகவுமாம்- நிக்ராஹ்பன் என்றாகவுமாம்-
எதேனுமாக தோற்றினார் தோற்றினபடி ஸ்வ மதங்களை அறிவியுங்கோள் என்றாகவுமாம்- –
அன்றியிலே –
17- நிவே தயதே –
வித் ல் லாபே -என்கிற தாதுவிலேயாய் -ச மஹாத்மா ஸூ துர்லப -ஸ்ரீ கீதை -7-19-என்று நேராக நெஞ்சாரல் பட்டுக் கிடக்கிற பெருமாளுக்கு ஒரு ஆத்மலாபம் பண்ணிக் கொடுங்கோள்-
அன்றியிலே
18 -நிவே தயதே –
வித சத்தாயாம் -என்று சத்தையிலே யாய்
அப்யஹம் ஜீவிதம் ஜஹ்யாம்-ஆரண்ய -10-19-என்று என்னைப் பெறாத போது அழிகிற பெருமாளுக்கு சத்தை யுண்டாக்கி விடுங்கோள் –
அன்றியிலே –
19- நிவே தயதே
வித விசாரேண-என்று விசா ரணத்திலே யாய்
அங்கத சரப ஜாம்பவத் பிரமுகர் அடைய விசாரியுங்கோள்-என்றுமாம் –

இப்படிச் சொன்னவாறே -ஆகிறது -விண்ணப்பம் செய்கிறோம்
சோஹம் ப்ருஷித் தஸ்தேந -யுத்த -17-4- என்றும்
ராகவம் சரணம் கத -யுத்த -17-4- என்றும் இரண்டு அர்த்தத்தைச் சொன்னாயாகில்
ராவணன் ப்ருஷித்த படியை முற்படக் சொல்லவோ
சரணாகதனான உன்னை அறிவிக்கவோ -என்ன
1- மாம் நிவே தயதே –
அவனுடைய பாருஷ்யத்துக்கு பிரதிகிரியை பண்ணுவது நான் அந்தரங்கன் ஆனால் அல்லவோ
ஆனபின்பு முற்பட என்னை விண்ணப்பம் செய்யுங்கோள்-
நீ வைக்கும் பொற்குடம் ஏதோ உன்னை அறிவிக்கைக்கு -என்ன –
2- மாம் –
இங்கு உம்மோடு ஒரு பாடு உழல்வான் ஓர் அடியானும் உளன் -திருவாய் -8-3-7-என்கிறபடியே
நாக பாச பிரம்மாஸ்த்ரங்களால்  நலிந்த அன்றைக்கும் உடன் கேடனாய் விடாதே நிற்கைக்கு ஓர் அடியான் வந்தான் என்று விண்ணப்பம் செய்யுங்கோள் –
இதுக்கு முன் செய்தது அன்றோ மேல் செய்வது என்ன
3- மாம் –
ப்ரதீயதாம்  தாசரதர் மைதிலீ-யுத்த -14-3-என்று இங்குற்றைக்கு நல் வார்த்தை சொன்ன என்னை –
நுனி நாக்காலே ஒரு வார்த்தை சொன்னாய் ஆகில்  இத்தால் பெற்றது என்
அதுவோ பிராட்டி இங்கே எழுந்து அருளி வந்தது -என்ன
4-மாம் –
யாவந்ன க்ருஹ்ணந்தி சிராம்சி பானா ராமேரிதா ராஷச புங்க வா நாம் -யுத்த -14-4- என்றும்
வித மேச்ச புரீம் லங்காம் -சுந்தர -26-21- என்றும்
ராவணன் முன்னே பெருமாள் பெருமைகளைச் சொல்லி
ருக் சாம சகேஷ்நௌ-சாந்தோக்யம் -1-8-  என்று அரசு புலவர்களான வேதங்களோ பாதி பெருமாள் கீர்த்தி படஹமான என்னை –
இதுவும் குருத்வாத்  ஹித மிச்சதா -யுத்த -16-24-என்று ராவண ச்நேஹத்தாலே பிரத்யவாய புரச்சரமாக ஹிதம் சொன்ன அச்த்தனை அன்றோ
இப்படி ராவண பக்தனான உன்னையோ அறிவிக்கிறது -என்ன
5- மாம் -பருஷிதஸ் தேந அவமானி தச்ச-யுத்த -17-14-என்று இவ் உத்கர்ஷம் பொறாமையாலே பருஷித்துத் தள்ளி விடப்பட்ட என்னை
ஜ்யேஷ்டோ மான்ய பித்ரு சம -யுத்த -16-17-என்று நீ தான் சொல்லிற்று இல்லையோ –
தமையன் ஒரு வார்த்தை சொன்னான் ஆகில் இது என்ன தப்பாக வந்தாய் -என்ன –
6- மாம் –
த்யக்த்வா புத்ராம்ச்ச தாராம்ச்ச என்று பாருஷ்யம் பொறுக்க மாட்டாமையாலே –
ஆத்மாவை புருஷஸ்ய தாரா -என்றும்
ஆத்மா வை புத்ர நாமாசி -என்றும்
என்னோபாதியான இவர்களை உட்பட விட்டு அவனோடு துவக்கற்ற என்னை –
நீ அவனோடு துவக்கற்றால் லாபம் என் -இத்தலையில் ஒரு பற்றாசு இல்லையோ -என்ன –
7- மாம் –
ராகவம் சரணம் கத -யுத்தம் -17-14-என்று
தயரதற்கு மகன் தன்னை யன்றி மற்றிலேன் தஞ்சமாகவே -திருவாய் -3-6-8-என்று இருக்கிற என்னை
8- மாம் –
ஆத்மானம் சர்வதா ரஷ புரீம் சேமாம்  ச ராஷசாம் -யுத்த -16-25-என்று பருஷிக்கிற
ராவணன் உடனும் அவனோடு சேர்ந்தாரோடும் வாசி அற ஹிதம் சொல்லுகையாலே
ஆநு கூல்யமிதி ப்ரோக்தா சர்வ பூத அநு கூலதா -லஷ்மி தந்த்ரம் -17-66- என்கிற ஆநு கூல்ய சங்கல்ப்பமும்
ஜாதக்ரோதோ விபீஷண-யுத்த -16-17-என்றும்
க்ருத்தோ ஹன்யாத் குரூ நபி -சுந்தர -55-5-என்றும்
ராவணனைக் கொல்ல பிராப்தமாய் இருக்க
உத்பபாத கதா பாணி -யுத்த -16-16-என்று கையிலே கதை இருக்க கொல்லாதே போந்தவன் ஆகையாலே
ப்ராதி கூல் யஞ்ச பூதா நாம்  சர்வேஷாம்  ந சமா ரேத்-லஷ்மி தந்த்ரம் -17-67- என்கிற ப்ராதி கூல்ய வர்ஜனமும்
ஸூ க்ரீவச்சாபி ஷே சித-யுத்த -17-66-என்று சோதாஹரணமாகக் கண்டு நம்மை ரசிப்பார் என்று அறுதி இடுகையாலே
ரஷிஷ்யத் யநு  கூலான் ந  இதி யா ஸூ த்ருடா மதி ச விஸ்வாஸே பவேத்  -லஷ்மீ தந்த்ரம் -17–71-ப்ரசன சம்ஹிதை -54-26/27 என்கிற ரஷிஷ்யதீதி விஸ்வாசமும்
பவந்தம் சரணம் கத -யுத்த -19-5-என்று உம்மையே ரஷகராகப் பற்றின்னேன் என்கையாலே
கோபாயிதா பவேத்யேவம் மே ராஜ்யஞ்ச  ஜீவிதஞ்ச சூ கா  நி ச -லஷ்மீ தந்த்ரம் -17-72/73–ப்ரசன சம்ஹிதை -54-28/29 என்கிற கோப்த்ருத்வ வரணமும்
பவத்கதம்  மே ராஜ்யஞ்ச ஜீவிதஞ்ச ஸூ கா நி ச-யுதட -19-6- என்று பல பர ந்யாசம் பண்ணுகையாலே
பலே ஸ்வாம் யவியுக்ததம் கேசவார்ப்பண பர்யந்தா ஹயாத்ம நிஷேப உச்யதே -லஷ்மி தந்த்ரம் -17-74- ப்ரசன சம்ஹிதை 54-30 என்கிற ஆத்ம நிஷேபமும்
தேந சாஸ்ம்யவமாநித -யுத்த -19-4- என்று பரிபூதனாய்க் கையைத் தூக்கி   விடுகையாலே
இதி யா பூர்வ ஹாநிஸ் தத் தைந்யம் கார்ப்பண்யம் உச்யதே -லஷ்மி தந்த்ரம் -17-67/69- ப்ரசன சம்ஹிதை 54-24–26–என்கிற கர்ப்பண்யமும்
ஆக இப்படி சரணாகதியினுடைய ஷட்பிரகாரமும் குறையாதபடி பண்ணின என்னை –
9- மாம் –
அஹம் அஸ்ம யபரா தாநாம் ஆலயோ ஆகிஞ்சன அகதி
தவம் ஏவ உபாய பூதோ மே பவதி பிரார்த்தனா மதி -அஹிர் புத்ன்ய சம்ஹிதை -37-30 என்கிறபடியே
விபீஷணனாய்
துர்வ்ருத்த ராவண ப்ராதா வாகையாலே
அபராதாநாம் ஆலயமாய் -உபாயான்தரம் இல்லாமையாலே அகிஞ்சனனாய்
ராவணனும் அகப்படத் தள்ளி விட்ட படியாலே அநந்ய கதியாய் பெருமாளை உபாயமாகப் பண்ணின படியாலே
த்வம் ஏவ உபாய பூதே மே பவதி பிரார்த்தனா மதியை யுடையனான என்னை –
10-மாம் –
உத்தரம் தீரமா சாத்ய-யுத்த -17-8-என்கையாலே
அக்கரை என்னும் அனத்தக் கடலுள் அழுந்தி உன் பேரருளால் இக்கரை ஏறி இளைத்து இருந்தேனை -பெரியாழ்வார் -5-3-7-என்னை
11- மாம் –
பர்த்யக்தம் மயா லங்காம்  இத்ராணி ச தநா நிச -யுத்தம் -19-5-என்று
அங்குள்ள பற்றாசை எல்லாம் போக்கிட்டு
கஸ்ய ஏவ வ்யதிஷ்டத -யுத்த -17-8- என்று ஆகாசத்திலே  தடுமாறுகிற என்னை
12- மாம் –
ஸோ அஸ்வன பாரமாப் நோதி தத் விஷ்ணோ பரமம் பதம் -கடக்க -1-3-9-என்று வரும் வலி எல்லாம் வந்து
விஷ்ணு பதத்தைப் பற்றின என்னை –
13- மாம் –
பிரச்யுதோ வா அஸ்மால் லோகாதாகதோ தேவ லோகம் -என்றும்
அங்குற்றேன் அல்லேன் இங்குற்றேன் அல்லேன் -திருவாய் -5-7-2-என்றும் சொல்லுகிறபடியே
ராவண கோஷ்டியி நின்றும் புறப்பட்டு ராம கோஷ்டியில் புகுரப் பெறாதே
ஆந்தரா ளிகனாய் இருக்கிற என்னை
14- மாம் –
இழை நல்ல வாக்கையும் பையவே புயக்கற்றது -திருவாய் -9-5-10-என்கிறபடியே
நீங்கள் அறிவித்தால் அது யுண்டாய் அறிவியாத பொது இல்லையாம் படியாய் இருக்கிற என்னை –

ஆகிறது உன் அபேஷையை அறிவித்தாய் ஆகில் விண்ணப்பம் செய்கிறோம் -என்ன
1- ஷிப்ரம் –
ஒண்ணாது -இப்போதே வேணும் -இப்படிப் பதறுகிறது என் என்ன –
2- ஷிப்ரம் –
விரையும் கார்யம் தூங்கேல் தூங்கும் கார்யம் விரையேல் -என்னுமது சொல்லக் கேட்டும் அறியீர்களோ
விரையும் கார்யமான படி என் என்ன
3- ஷிப்ரம் –
சஞ்சலம் ஹி மன -ஸ்ரீ கீதை -6-34-என்றும்
சலா ஹி பிராணி நாம் மதி -அயோத்யா -4-20- என்றும்
நின்றவா நில்லா நெஞ்சாய்-பெரிய திரு -1-1-4-அன்றோ எல்லாரும் இருப்பது
ஆனபின்பு எனக்குப் பிறந்த ஆநு கூல்யம் பிரிவதற்கு முன்னே விண்ணப்பம் செய்யுங்கோள்-
4- ஷிப்ரம் –
ஷிப்ரம் ராமாய சம்சத்வம் சீதாம் ஹரதி ராவண -ஆரண்ய -48-30-என்று பிராட்டி சொன்ன போதே
தேவதைகள் அறிவியாமையாலே கண்டீர்களோ ரஜநீசரன் வசத்திலே அகப்பட்டாள் –
அப்படியே நானும் மநோ ரஜ நீசரன் வசத்திலே அகப்படுவதற்கு முன்னே அறிவியுங்கோள் –
5- ஷிப்ரம் –
வந்து ஒல்லைக்   கூடுமினோ -திருப் பல்லாண்டு -5-என்றும்
ஒல்லை நீ போதாய் -திருப்பாவை -15-என்றும்
சடக்கென வா என்று நீங்கள் அழைக்க ப்ராப்தமாய் இருக்க நான் அபேஷிக்கும் படியாவதே
6- ஷிப்ரம் நிவே தயதே-
ஜீவந்தீம் மாம் யதா ராமஸ் சம்பாயதி  கீர்த்தி மான் தத் த்வயா ஹனுமன் வாச்ய -சுந்தர -39-9- என்கிறபடியே
என் சத்தை கிடக்கிற போதே அவர் கைக் காண்டாராய்ப் புகழ் படைக்கும் படி அறிவித்து கொள்ளுங்கோள்  –
7- ஷிப்ரம் நிவே தயத் –
த்யக்த்வா புத்ராம்ச்ச தாராம்ச்ச -யுத்த -17-14-என்னும் படி
மாதரார் கயல் கண் என்னும் வலையுள் பட்டு அழுந்துவேனைப் போதரே என்று சொல்லிப் புந்தியில் புகுந்து தன்பால் ஆதரம் பெருக வைத்தார்
ஆனபின்பு தத் தமஸ் யாயம் -யுத்த -18-35- என்று முற்படுவதற்கு முன்னே நீங்கள்  முற்படுங்கோள் –
8- ஷிப்ரம் நிவே தயதே –
என் ஆற்றாமையால் இன்னம் ஒரு கால் சரணாகதி பண்ணி
தத் த்வயம் சக்ருத் உச்சாரோ பவதி -த்வய உபநிஷத் என்றும்
சக்ருதேவ பிரபந்நாயா -யுத்த -18-33- என்றும்
சக்ருத் பிரயாகமே அமைந்து இருக்கிற பிரபத்தி ஸ்வரூபத்திற்கு ஹாநி வருவதற்கு முன்னே அறிவியுங்கோள் –
9- ஷிப்ரம் நிதே யத் –
உபாயோ சதுர்த்தச்தே ப்ரோக்த சீகர பல ப்ரத-லஷ்மி தந்த்ரம் -17-75-என்றும்
தாவ தார்த்திஸ் ததா வாஞ்சா தாவன் மோஹஸ் ததா அவகம்  யாவண்ண யாதி சரணம் -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-9-73-என்றும் சொல்லுகிற
உபாய ஸ்வ பாவத்தாலே பலித்துக் கொண்டு நிற்கவாயிற்றுப் போகிறது
அதற்கு முன்னே நீங்களும் ஆநு கூல்யம் பண்ணுவார்களாக அறிவியுங்கோ
10- ஷிப்ரம் மாம் நிவேதயத –
பெருமாள் யதி வா ராவண ஸ்வயம் -யுத்த -18-35- என்று ராவணனைத் தேடித் பிடிக்க வாயிற்று புகுகிறது
அதுக்கு முன்னே சடக்கென என்னை அறிவியுங்கோள்-
11- மாம் நிவே தயதே-
தமேவ சரணம் கச்ச -ஸ்ரீ கீதை -18-62-என்று சரண்யனை அறிவிக்கிற நீங்கள் ஒரு சரனாகதனை அறிவியுங்கோள் –

ஆகிறது -இப்படி சடக்கென அறிவிக்கிறது ஆருக்கு –
இலங்கையிலே பரிசிதரான திருவடிக்கோ
படைக்கு எல்லாம் நிர்வாஹகரான மகா ராஜர்க்கோ -என்னில்
1- ராகவாய –
இஷ்வா கூ ணாமியம் பூமிஸ் ச சைல வன  கான நா -கிஷ்கிந்தா -18-6-எண்டு
அத்திருவடியோடும் மகாராஜரோடும் மால்யவானோடும் சித்ரா கூடத்தொடும் வாசி அற ரஷகராய்
பொங்கோதம் சூழ்ந்த புவனியும் விண்ணுலகும் அங்காதும் சோராமே ஆளுகிற பெருமாளுக்கு –
2- ராகவாய –
சரணாகத ரஷகரான குடியிலேபிறந்த பெருமாளுக்கு சரணாகதனான என்னைச் சொல்லுகோள் –
3- ராகவாய –
சக்ருதேவ பிரபன்னாய –அபயம் ததாமி –ஏதத் வரதம் மம -யுத்த -18-33-என்று சரணாகத த்ராணத்திலே காப்புக் கட்டின வரிடம்  சொல்லுங்கோள் –
4- ராகவாய –
ராக வாணாம யுக்தோயம் குலச்யாச்ய விபர்யய -பால -21-2- என்றும்
அப்ய ஸூ பிரணயி நாம் ரகோ குலே ந வ்ய ஹன்யத கதாதர்த்தி தா -ரகுவம்சம் -11-2- என்றும்
அபேஷித்தார் அபேஷித ப்ரதா -பிறந்து படைத்த தலைவர்க்குச் சொல்லுங்கோள்   –
5- ராகவாய –
அப்யஹ ஜீவிதம்  ஜஹ்யாம் ஹி பிரதிஜ்ஞாம் சம்சருத்ய -ஆரண்ய -10-19-என்று
தம்மை அளித்தும் ஆஸ்ரீ தரஷணம் பண்ணும் அவருக்கு சொல்ல்லுங்கோள்-
6- ராகவாய மாம் நிவே தயதே –
மாறில் போரரக்கன் மதிள் நீர் எழச்  செற்றுகந்த  ஏறு சேவகனாருக்கு என்னை அறிவியுங்கோள் –
7-ராகவாய மாம் ஷிப்ரம் நிவே தயதே –
ராகவச்ய யசோ ஹீயோ -சுந்தர -37-57-என்று ஆர்ஷ பரிஷத்  ஸூ க்ரீவ காக  பிரமுகரை ரசித்து தேடித் படைத்த புகழ் எல்லாம்
என்னை ரஷியாத படியாலே இழக்க வாயிற்றுப் புகுகிறது
அதற்கு முனே சடக்கென அறிவியுங்கோள் –

சதி தர்மிணி தர்மா -என்று அவர் தம்மைப் பெற்றால் அன்றோ புகழ வேண்டுவது –
ப்ராப்த சத்ருரதர்க்கித -யுத்த -17-26–என்று சத்ருவை இருக்கிற உன்னை அறிவிக்கை யாவது என் -என்ன –
விபூதியாக சத்ருக்கள் ஆனாலும் ஒரு பொல்லாங்கு நினைக்க ஒண்ணா தாய்க் காணுங்கோள் அவர் பெருமை இருப்பது –
1- மஹாத்மநே –
மர்த்யா நாம் மரணாத் பயம் -என்கிற உங்களைப் போலே அன்றியிலே
உத்தமா நாந்து மர்த்யா நாமவமா நாத் பரம் பயம் -என்று சரணாகத ரஷணம் பண்ணிற்றிலோம் என்று கர்ஹிக்கில்
செய்வது என் என்று பயப்படும்படியான பெருமையை யுடைய பெருமாளுக்கு அறிவியுங்கோள் –
2- மஹாத்மநே –
ஆத்மன் சப்த வாசியாய் ததேவ அநு ப்ராவிசத் தத் அநு பிரவிச்ய சச்ச த்யாச் சாபவத் -தை ஆனா -6-என்று தாழ்ந்து வந்தால்
வர ஒண்ணாது என்று ஏற்கவே புகுந்து கலந்து ஜ்ஞான ஸ்வரூபன் என்று அவனைச் சொல்லும் சொல்லாலே தம்மைச் சொல்லலாம் படி ஜீவாந்தர்யாமியாய் இருக்கிறவருக்கு என்னை அறிவியுங்கோள் –
3- மஹாத்மந-
ஆத்மன் சப்தம் -த்ருதி-  வாசியாய் –
ஆபத்யபி சவ காரஎஷூ கர்த்தவ்யத் ஸ்திதிர் த்ருதி -என்று சத்ரு தேசம் ஆகையாலே
சாபாயமாய் இருந்ததே யாகிலும் ரஷகனான தம்முடைய க்ருத்யத்தில் நிலையுடையவர் காணுங்கோள் -என்றானாகவுமம்
அன்றியிலே –
4- மஹாத்மந-
ஆத்மன் சப்தம் தேக வாசியாய் -மஹா தேஹாயா -என்கிறபடி -அதாவது
தத் விஸ்வரூப வைரூப்யம் ரூபம் அந்யத ஹரேர் மஹத்-ஸ்ரீ விஷ்ணு புராணம் -6-7-70- என்றும்
ந தஸ்ய ப்ராக்ருதா மூர்த்திர் மாம்ச மே தாஸ்தி  சம்பவா -ஸ்ரீ வராஹ -14-41/வாயு -34-4- என்றும்
நித்யம் நித்யாக்ருதி தரம் -சாஸ்வதம் -என்றும் சொல்லுகிறபடியே யாரேனும் ஏதேனும் செய்யிலும் கல் கடித்து பல் முறித்து தங்களோடு போம்படி அத்ய விலஷண விக்ரஹராய் கானுங்கோள் இருப்பது-
5- மஹாத்மந   –
ஆத்மன் சப்தம் ஸ்வ பாவ வாசியாய் ஆ ஸ்ரீ த விஷயத்தில் அநிஷ்ட நிவ்ருத்தி இஷ்ட ப்ராப்திகள் பண்ணி இருக்கை அவருக்கு
வந்தேறி அன்றிக்கே
ஸ்வ பாவமாய் யுடையராய்க் காணுங்கோள் இருப்பது –
6- ராகவாய மஹாத்மன் –
ஆத்மன் சப்தம் பரமாத்மா வாசியாய் -ரகுகுல குமாரராய் -தம்மைத் தாழ விட்டாரே ஆகிலும்
அதுக்கு இப்பால் தான் பரமாத்மாவாய்க் காணுங்கோள் இருப்பது
யானுமோர் நிலைமையன் என அறிவரிய எம்பெருமானே ஆகிலும் யாருமோர் நிலைமையன் என அறிவெளிய எம்பெருமானாய்-திருவாய் -1-3-4-யாயிற்று இருப்பது
வேத  புருஷனும் சம் பாஹூப்யாம் நமதி சத்பதத்ரை -தை நா -1-12- என்றும்
வேதாஹ மேதம் புருஷம் மஹாந்தம் -புருஷ ஸூ க்தம்-என்றும்
இப்படி ஸூ லபனாய் இருக்கிற வஸ்து தான் அபெரிய வஸ்து என்று சொன்னான் இ றே-
வைதிக புருஷனான விஸ்வாமித்பால -19-14-என்று சொன்னான் இ றே
அவனைச் சொல்ல வேணுமோ
அயம் ச காகுத்ச்த இதி பிரஜஜ்ஞே -கிஷ்கிந்தா -24-28-என்றும்
த்வம் அப்ரமேயச்ச -கிஷ்கிந்தா -24-31-என்றும்
தாரை என்னும் ஒரு கிம் பெண்டாட்டி யகப்பட அறிந்ததும் உங்களுக்குத் தெரிகிறது இல்லையா –
7- மஹாத்மந –
ஆத்மன் சப்தம் அர்க்க அக்நி வாசியாய்
ராம திவாகர சத்ரு ரஷோமயம் தோயம் உபசோஷம் நயிஷ்யதி -சுந்தர -17-18- என்றும்
அபிதபாவ கோபமம் -அயோத்யா -99-26-
முளைக் கதிரை -திரு நெடு -14-என்றும்
கஞ்சன் வயிற்றில் நெருப்பு அன்ன நின்ற நெடுமாலே -திருப்பாவை -25–என்றும்
சத்ருக்களுக்கு தாஹகமாய் அன்றோ அவர் இருப்பது
நீங்கள் அஞ்சாதே அவருக்கு அறிவியுங்கோள் –
8- மஹாத்மந –
ஆத்மன் சப்தம் மதி வாசியாய் நீங்கள் மேல் எழுந்த சாகாசாரிகள் இத்தனை சாகார்த்த விசாரிகள் அல்லீர் கோளே-
தேவோ வை த்வஷ்டார மஜிகாம்சன் ச பத்னீ ப்ராபத்யாத தம ந பிரதி ப்ராயச்சன்
தஸ்மாதபி வத்யம் பிரபன்னம் ந பிரதி பிரயச்சந்தி –யஜூஸ் சம்ஹிதை -6-5-29- என்றும்
சரணாகத அரி பிராணான் பரித்யஜ்ய ரஷிதவ்ய க்ருதாத்மாநா   -யுத்த -18-28- என்றும் சொல்லுகிறபடியே
வேத வைதிக வசனங்களில் நிலவராய்-சத்ருவே யாகிலும் சரணாகதனைத் தன்னை அழிய மாறியும் ரஷிக்கக் கடவது என்கிற
பேர் அறிவாளராய் இருக்கிரவருக்குச் சொல்லுங்கோள் –
அன்றியிலே
9- மஹாத்மந –
என்று வாத வாசியாய் தஸ்மை வாதாத்மநே நம-ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-14-31-என்றும்
காலாய் தீயாய்  -திருவாய் -6-9-1- என்றும்
சொல்லுகிறபடியே
சத்ருக்களுக்கு நாசகராய்
சரணாகதருக்கு ஆஸ்வாச காரராய் இருக்கும் -என்றுமாம் –

அழகியது -நீ தானே -மஹாத்மநே -என்று அவன் பெருமையைச் சொன்னாய் இ றே
அப்படிக்கு-நாகணை மிசை நம்பரர்  செல்வர் பெரியர் சிறு மானிடர் நாம் -நாச் -10-11-என்றும்
அம்மான் ஆழிப்பிரான் அவர் எவ்விடத்தான் யானார் -திருவாய் -5-1-7-என்றும் பர்வதத்துக்கும் பரமாணு போலே
இருக்கிற நாம் அவ்வஸ்துவை அணுகவும் சரண வரணம் பண்ணவும் போமோ என்னில்
1- சர்வ லோக சரண்யாய –
பெருமாள் நீர்மைக்கு ஆகாதார் உண்டோ –
2- சர்வ லோக சரண்யாய –
லோக பார்த்தாராம் –சுந்தர -38-56-போலே -அந்த சர்வ லோகத்தில் நானும் ஒருவன் அன்றோ
இவற்றின் புறத்தாள் என்ற எண்ணோ -திருவிருத்தம் -33
3- சர்வ லோக சரண்யாய –
நீசனேன் நிறை ஒன்றுமிலேன் என் கண் பாசம் வைத்த பரஞ்சுடர் சோதி -திருவாய் -3-3-4-என்று
எத்தனையேனும் தீர அபராதம் பண்ணினாரையும் அங்கீ கருத்து அத்தாலே தேஜஸ் விகளாய் இருக்கிறவருக்கு
4- சர்வ லோக சரண்யாய –
சர்வ லோகைக வீரஸ்ய தச கண்ட குலத் விஷ -என்று
பூர் புவஸ் ஸூ வர் மஹர் ஜனஸ் தபஸ் சத்யம் -என்கிற சப்த லோகத்துக்கும் புகலானவருக்கு
5- சர்வ லோக சரண்யாய
அவ்வளவே அன்றிக்கே பூர்ப் புவராதிகளோடும் அதல விதல ஸூதல  தலாதல மகாதல ரசாதல பாதாளங்கள் உடன் வாசி அறச்
சதுர்தச லோகங்களுக்கும் புகலானவர்க்கு
அன்றியிலே –
6- சர்வ லோக சரண்யாய –
என்று பொன்னுலகு ஆளீரோ புவனி முழுதும் ஆளீரோ -என்றும்
புவனியும் விண்ணுலகும் அங்காதும் சோராமே ஆள்கின்ற -என்றும்
ஹிரண்ய மயே பரெ லோகே -என்றும்
அஸ்மின் சாம் பரதம் லோகே -என்றும் சொல்லுகிறபடியே உபய விபூதிக்கும் ப்ராப்யர் ஆனவருக்கு
7- சர்வ லோக சரண்யாய –
மஞ்சா க்ரோசந்தி போலே  லோகாந்த வர்த்தி ஜந்துக்களை லஷிக்கிறது
அன்றியிலே
8- சர்வ லோக சரண்யாய
லோகஸ்து–புவனே ஜானே -என்று ஜன வாசி ஆகவுமா
9- சர்வ லோக சரண்யாய
சர்வ வித லோகம்-அதாவது -தேவ யோநி களாயும் திர்யக் யோநி களாயும் மனுஷ்ய யோநி களாயும் ஸ்தாவர யோநிகளாயும்
தர்மார்த்தி களாயும் அர்த்தார்த்தி களாயும் காமார்த்தி களாயும் மோஷார்த்தி களாயும்
அநு கூலராயும் பிரதி கூலராயும் உத்க்ருஷ்டராயும் அபக்ருஷ்டராயும்
இப்பத் அநேக வித ரானவர்களுக்கு எல்லாம் புகலானவர் அன்றோ
அவனை இப்படி எங்கே கண்டோம் என்னில்
மஹிஷ்ட பல ப்ரதா நை கோநய  பிரஜா பஸூபதீ-ஸ்தோத்ர இத் -13-என்று தேவர்களான ப்ரஹ்மாதி களுக்கு இழந்த பதம் கொடுத்தவர் –
விஷ்ணு பக்தி பரோ தேவ -ஸ்ரீ விஷ்ணு தர்மம் -109-74-என்கிறபடியே
பெருமாளுக்கு நல்லேன் ஆகையாலே தேவனான நான் இழந்த ராஜ்ஜியம் தாராரோ
ஸூ க்ரீவம்ஏவ தத் ராஜ்யே ராகவ ப்ரத்ய பாத யத் -பால -1-70-என்று
திர்யக்குகளான ஸூ க்ரீவாதிகளுக்கு இழந்த ராஜ்ஜியம் கொடுத்தவர்
ஜ்ஞா நே ந ஹீன ப ஸூ பிஸ் சமா ந -நரசிம்ஹ புராணம் -16-13-என்று அறிவில்லாமையாலே திர்யக்கான நான் இழந்த ராஜ்ஜியம் தாராரோ –
அத்யசதே  சீரப்ருதோ யதாஸ்வம் சிரோஜ்ஜி தான்யாச்ரம மண்டலா நி -ரகு வம்சம் -13-22-என்று
மனுஷ்ய சரீரர்களான ஜன ஸ்தான வாசிகள் இழந்த தேசம் கொடுத்தவர்
மானுஷ்யம் கொண்டாடி உளவாய் வந்த நான் இழந்த தேசம் தாராரோ
சைல ரூபம் பரித்யஜ்ய  பிரபேதே ஸ்வகாம் தநும்  -என்று ஸ்தாவர ரூபமான அஹல்யையைத் தன பிரகிருதியோடு கூட்டினவர்
கச்த ஏவ வ்யதிஷ்டத -யுத்த -17-8-என்று ஸ்தாவர ப்ரதிஷ்டையாய் நிற்கிற என்னை ஏன் பிரக்ருதியோடே கூட்டாரோ –
ரஷி தவ்யா சச்வத் கர்ப்ப பூதாஸ் தபோத நா -ஆரண்யம் -1-21-என்று அனுஷ்டானத்தாலே தர்மார்த்திகளான ரிஷிகளுக்கு புகலானவர் –
விபீஷணஸ்து தர்மாத்மா -ஆரண்ய -17-24-என்ற எனக்குப் புகலாகாதோ –
ருதன் ராஜ் மயா சதா -சுந்தர 33-24- என்று அர்த்த பலமான ராஜ்யத்தை இரந்த சக்கரவர்த்திக்கு கொடுத்தவர்
ராஜ்ய காங்ஷியான எனக்குத்-ராஜ்ய காங்ஷி ச ராஷச -யுத்த -18-13-தாராரோ –
தாரா உமைகளை விரும்பி காம பரவசரான மஹா ராஜர்க்கு தாரங்களைக் கொடுத்தவர்
த்யக்த்வா புத்ராம்ச்ச தாராம்ச்ச -யுத்த -17-14- என்று பிராட்டி பக்கல் ஆனுகூல்யம் பண்ணின தர்ம தாரங்களை இழந்த எனக்குத் தாராரோ –
கச்ச லோகாநா  நுத்தமான் -ஆரண்ய -66-30-என்றும்
ஆவஹத் பரமாம் கதிம் -என்றும் ஜடாயு வாலிகளுக்கு மோஷம் கொடுத்தவர் எனக்கு மோஷம் தாராரோ
மங்களாநி பிரயுஜ்ஞாநா-ஆரண்ய -1-12-என்று அநு கூலரான ரிஷிகளுக்கு புகலானவர்
ஆநு கூல்ய சங்கல்பாதிகளைப் பண்ணின எனக்குப் புகலாகாரோ –
கபந்தம்   நாம ரூபேண விக்ருதம் கோர தர்சனம் -தம் நிஹத்ய மஹா பா ஹூர்  ததாஹ் ஸ்வர்க்க தச்ச-பால -1-55-என்றும்
விததான் ஸ்த நாந்தரே-சுந்தர  -8-23- என்றும்
பிரதிபெதே ஸ்வ மாலையம் -சுந்தர -38-38-என்றும்
பிரதி கூலானான கபந்தனுக்கு சாப ஜன்யமான விரோதி சரீரத்தைப் போக்கி ஸ்வ தேசத்தையும் கொடுத்து
பிரதி கூலனான காகத்துக்கு விரோதியைப் போக்கி ஸ்வ தேசத்தைக் கொடுத்தவர்
ப்ராப்த சத்ரு ரதர்க்கித -யுத்த -17-26-என்னும்படி பிரதிகூலனான எனக்கு ஸ்வ தேசம் தாராரோ
தம ப்ருவன் ஸூ ரர சர்வே  சமபிஷ்டூய சந்னதா-பால -15-17-என்று உத்க்ருஷ்டரான தேவர்களுக்கு புகலானவர்
பிரபன்னன் ஆகையாலே உத்க்ருஷ்டனான எனக்குப் புகலாகாரோ –
கபித் வஞ்ச பிரதர்சிதம் -சுந்தர -55-16- என்றும்
பாஷாண கௌதம  வதூவபுராப்தி ஹேது -என்றும்
அப்க்ருஷ்டங்களான திரைக் ஸ்தாவரங்களுக்கு ஆபன் நிவாரகர் ஆனவர்
ப்ரக்ருத்யா ராஷசோ ஹ்யேஷா -யுத்த -16-23- என்று அபக்ருஷ்ட்னான எனக்கு ஆபன் நிவர்த்தகர் ஆகாரோ
இவ் உதாஹரணங்களிலே  கண்டு கொள்வது –

ஆகிறது ஆரை அறிவிக்கிறது -என்ன
1- விபீஷணம்-
பராசர பராங்குசாதி சப்தம் போலே -விரோதி விபீஷணன் என்றாய்
ராவணாதிகளை பயப்படுத்துவேன்   என்ற நினைத்து இருங்கோள்
விவிதம் பீஷயதீதி  விபீஷண-அவயவ சக்தி தான் ஆகிளுமாம் –
2- விபீஷணம்-
பீஷாஸ்மாத் -பீஷோ தேதி ஸூ ர்ய-என்றும் -பயம் பா நாம்ப ஹாரிணி -என்றும் -பர  பயங்கரமாய்
ஆ ஸ்ரீ தா பயங்கரருமான பெருமாள் பரிகரத்த்க்கு வேறு ஒருவருக்கும் பயப்பட வேணுமோ
3- விபீஷணம் –
ஆணையும் செங்கோலையும் நடத்துகைக்கு -கதா பாணி -என்று ஒரு தடிக்காரன் என்று சொல்லுங்கோள்
4- விபீஷணம்-
அநு கூலன் என்று அறிவிக்க மாட்டீர்  கோளாகில்-கதா பாணி -என்று கையும் தடியுமாய் ஒருத்தன்
விழும்படி நின்றான் என்றாகிலும் சொல்லுங்கோள் –
5- விபீஷணம் –
நிதா நஜ்ஞனான பிஷக்கின் முன் வியாதி க்ரஸ்தன் தான் பண்ணின அபத்யங்களைச் சொல்லி
அதுக்கு
பரிஹரித்துக் கொள்ளுமா போலே
நிர்வாணம் பேஷஜம் பிஷக் -என்றும்
மருத்துவனாய் நின்ற மா மணி வண்ணன் –பெரியாழ்வார் -5-3-6-என்றும் பேசப்படும் சர்வஜ்ஞன் முன்பு சம்சாரி ஸ்வ தோஷத்தை முன்னிட்டு ரஷித்துக் கொள்ளும் அத்தனை போக்கி
நன்மை முன்னிடுகைக்கு ஒன்றும் இல்லை இ றே-ஆகையாலே
6- விபீஷணம் –
ந நிந்திதம் கர்ம ததஸ்தி லோகே சஹாச்ரசோ  நே மயா வயதாயி -ஸ்தோத்ர ரத்னம் -25-என்றும்
கொன்றேன் பல்லுயிரைக் குறிக்கோள் ஓன்று இலாமையினால் -பெரிய திரு -1-9-3-என்றும்
என்னுடைய வ்ருத்த ஜ்ஞானங்கள் இவை என்னுங்கோள்
7- விபீஷணம் –
சத்ருசம் வ்யசனம் ப்ராப்தம் ப்ராப்தம் ப்ராதரம் யா பரித்யஜேத்-யுத்த -18-5- என்றும்
உவர்த்த நீர் போலே என்தன் உற்றவருக்கு ஒன்றும் இலேன் -திருமாலை -31-என்றும்
சோதரனான ராவணன் அகப்பட வெறுவும்படி பண்ணின தோஷ துஷ்டன் என்னுங்கோள் –

உன்னுடைய வ்ருத்த ஜ்ஞானங்கள் இவை யாகில் பெருமாள் திரு முன்பே அறிவிக்கும் படி என் -என்னில்
1- உபஸ்திதம் -வந்து நிற்பவனை –
துராசரோ அபி சர்வாசீ க்ருதக் நோ நாஸ்திக -சமாஸ்ரயேதாதி தேவம் ஸ்ரத்தயா சரணம் யதி
தோஷம் வித்தி தம் ஜந்தும் -என்கிறபடியே அப்படியே யாகிலும் பகவ தாஸ்ரயணம் பண்ணின தோஷனாய் ஆயிற்று இருப்பது
அப்படிக்குத் தூயோமாய் வந்து நின்றோம் என்றும் சொல்லுங்கோள் –
2-விபீஷணம் உபஸ்திதம் –
முன்னே வந்து நிற்றேன் என்னுங்கோள் –
நாலடியும் வந்து பெருமாளுக்கு உபகரித்தேன் என்று சொல்லுங்கோள் –
வாராதே இலங்கையிலே இருந்து சரணம் என்றேன் ஆகில் கடல் கரை மடுவின் கரை பட்டது படும்
அரை குலைய தலை குலைய அவர் வந்து விழ வேண்டா –
3- உபஸ்திதம் –
எல்லைக்கு உள்ளே வந்த பின்பு ஸ்திதோ  அஸ்மி  கத சந்தேக -ஸ்ரீ கீதை -18-73-என்று நிலை பெற்றேன்
4- உபஸ்திதம் நிவேதயத –
ஏவரி வெஞ்சிலையானுக்கு என் நிலைமை யுரையாய் -பெரிய திரு -3-6-1-என்க்ரபடியே
என்னுடைய வ்யவஸ்திதியை அறிவியுங்கோள்
5- உபஸ்திதம் நிவேதயத –
மதியாத் தனமாக அடுத்துக் கொடு புகுராதே திரு உள்ளம் பார்த்து புகுர வேணுமே என்று உங்கள் அருகே நிற்கிற நிலையைச் சொல்லுங்கோள் –
6- உபஸ்திதம் நிவேதயத –
எதிர் சூழல் புக்குத் திரியாத படி உடுத்தி இருக்கும் -அடுத்து அணியாக வந்தபடி சொல்லுங்கோள் –
7- உபஸ்திதம் நிவேதயத –
தம் தாமைக்கு தேடிக் கொடுக்கச் செய்தேயும்
ஜக்மூர் கிரி தடாத் தஸ்மாத் அநயம் சிகர முத்தமம் -கிஷ்கிந்தா -2-7-என்றும்
ஓடினேன் ஓடி -பெரிய திரு -1-1-1-என்றும்
பிறகிட்டுப் போமவர்களை அறிவித்த  நீங்கள் இருந்த இடம் தேடி நானே வந்த என்னை அறிவிக்கலாகாதோ
8- விபீஷணம் உபஸ்தித நிவேதயத-
ராவணன் தம்பியாய்  நடுவே ஓர் இடத்திலே இருந்து ஆள் வரவிட்டு
சந்தி விக்ரஹம் பண்ணி செய்யலாம் படிக்குப் பிடியாள் கொண்டு பின்னை வருகை அன்றிக்கே
உன்னை எய்தி என் தீ வினைகள் தீர்ந்தேன் -பெரிய திரு -6-3-4-என்றும்
பொன்னடியே அடைத்து உய்ந்தேன் -பெரிய திரு மொழி -5-8-9-என்றும்
ஆலின் மேலால் அமர்ந்தான் அடியிணைகளே நண்ணித் தொழுது எழுமினோ -திருவாய் -9-10-1- என்றும் சொல்லுகிறபடியே
பலம் பின்னே பட்டதும் படப் புகுந்து கொடு நின்ற நிலையை விண்ணப்பம் செய்யுங்கோள் –
ஆக -இத்தால் –
பகவத் சமாஸ்ரயணம் பண்ணுவார்க்கு பாகவதர் முன்னிலையாகப்   பெற வேணும் என்னும் அர்த்தம் சொல்லிற்று ஆயிற்று –

——————————————————————————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ இராமாயண -அபய பிரதான சாரம் -தனி ஸ்லோக- வியாக்யானம் -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை அருளிச் செய்தது -சீக்ரம் வ்யாதிச –யுத்த -17-7-/தேஷாம் சம்பாஷமாணா-யுத்த -17-8/உவாசஸ மகாப்ராஜ்ஞ-யுத்த -17-9-/ராவணோ நாம துர்வ்ருத்தோ -யுத்த -17-10-/தோ ஸீதா ஜனஸ்தாநாத் –யுத்த -17-11–

January 26, 2015

சீக்ரம் வ்யாதிச  நோ ராஜன் வதாயைஷாம் துராத்மா நாம்
நிப தந்து ஹதா யாவத் தரண்யா மலப தேஜஸ–யுத்த -17-7-

சீக்ரம் வ்யாதிச -விரைவாக ஆணையிடும்
ந ராஜன் -எங்களை -அரசனான சுக்ரீவனே
வதாயைஷாம் துராத்மா நாம் -துஷ்டர்களுடைய அழிவின் பொருட்டு
நிப தந்து-விழட்டும்
ஹதா யாவத் தரண்யா -இருப்பவர்கள் எல்லாம் எங்களால் அழிக்கப் பட்டவர்களாய் பூமியில்
மலப தேஜஸ–தாழ்ந்த பலமுள்ள இவர்கள்-

அவதாரிகை –
எதிரியான ராவணனுக்குப் பரிபவமாகப் பிடித்துக் கட்டியிட்டு வைத்தல்
இவனைத் தொடுத்த அம்போடு விடுதல் செய்யக் கடவோம் அல்லோம்
வதத்திலே அனுமதி பண்ணீர் என்கிறார்கள்-

சீக்ரம் வ்யாதிச-
இவர்கள் கொலை யுண்டார்கள் அத்தனை –
அனுமதி விளம்பிக்கும் ஆகில் ஸ்வ தந்த்ரராய்க் கொன்றோம் எனும் ஸ்வரூப ஹாநி வரும் –
அது வாராதபடி சடக்கென ஏவ வேணும் –
ந  -சால அனுத்யம்ய  சைலாம்ச்ச -என்று வதத்திலே உத்யுக்தரான எங்களை
வதத்திலே உத்யோகித்தி கோளாகில் நம் அனுஜ்ஞை என் என்னில்
ராஜன் –
ராஜா ஆஜ்ஞையை அனுவர்த்திதோம் ஆகைக்காக
வதாய-
உயிர் உடன் பிடித்துக் கட்டி வைத்தாலும் இங்கே இருந்து சில அனர்த்தங்களை விளைக்க ஒண்ணாது –
வதார்த்தமாக அனுமதி பண்ண வேணும் என்கை
ஏஷாம் துராத்மா நாம்-
இவர்களுடைய துர் மநோ ரதம் வடிவிலே தோற்றுகிறது இல்லையோ
நிப தந்து ஹதா யாவத் –
எல்லாரும் பட்டு விழுந்தார்களாக புத்தி பண்ணும் –
யாவத்தா வச்ச சாகலே -அமர கோசம் -3-3-246-
தரண்யாம் –
ஆகாசத்தில் தொடுத்த அம்போடு போக விடோம்
பூமியிலே பட்டு விழும்படி பண்ணக் கடவோம் –
யுத்தத்தில் ஜெயா பஜயங்கள் பாஷிகம் அன்றோ என்னில்
அல்ப தேஜஸ-
அல்பபலர்
நம்முடைய பலத்துக்கு இவர்கள் ஆனைவாய்க் கீரை அன்றோ -என்கை

———————————————————————————————————————————————————–

தேஷாம் சம்பாஷமாணா நாமான் யோந்யம் ஸ விபீஷண
உத்தரம் தீரம் ஆசாத்ய கச்த ஏவ வ்யதிஷ்டத –யுத்த -17-8-

தேஷாம் சம்பாஷமாணா நாம் -அவர்கள் பேசிக் கொண்டு இருக்கும் போது
ஸ விபீஷண-அந்த விபீஷணன்
அந்யோந்யம் -ஒருவருக்கு ஒருவர்
உத்தரம் தீரம் -கடலின் வடகரையை
ஆசாத்ய கச்த ஏவ வ்யதிஷ்டத –அடைந்து ஆகாயத்தில் நின்றவனாக நிலை நின்றான்-

அவதாரிகை –
தன்னுடைய நிரசனத்திலே வார்த்தை சொல்லுகிற முதலிகளுடைய வார்த்தையை அனாதரித்து
தாய் முலையைக் கணிசித்துச் செல்லும் கன்று போலே
பெருமாள் சந்நிதியிலே உத்தேச்யமான வடகரையை அடைந்து தரித்தான் -என்கிறது –

தேஷாம் –
தன்னுடைய நிரசனத்திலே விரைந்தவர்களுடைய
அநாதரே சஷ்டி –
ஸம்பாஷமாணா நாமான் யோந்யம் -அந்யோந்யம் சம்பாஷமாணா நாம் –
தன்னுடைய வத்யத்வ அநு கூலமாக அந்யோந்யம் வார்த்தை சொல்லா நிற்க
இதுக்கு சம்யக்த்வமாவது -நிர்வாஹகரான மகா ராஜரோடு நிர்வாஹ்யரான முதலிகளோடு வாசியற ஏக கண்டராய் சொல்லும்
தன்னுடைய வதத்தில்உத்யுக்தரானவர்களுடைய
வார்த்தையை அநாதரிக்கைக்கு ஹேது சொல்லுகிறது
ஸ விபீஷண-
பாவ சுத்தியையும் த்வரையையும் உடையவன் என்கை
சுத்தியாவது அவர்ஜ நீயமான சம்பன்னம் உண்டானாலும் பிரதி கூலனான ராவண கோஷ்டியில் பொருந்தாமையும்
பாதகரானாலும் விட மாட்டாத தார்மிகரான ராம கோஷ்டியில் பொருத்தமும்
த்வரையாவது-ஆஜகாம முஹூர்த்தேந-யுத்த -17-1-என்று வந்தவன் தரிக்க மாட்டாத பதற்றம்
உத்தரம் தீரம் ஆசாத்ய –
பெருமாளைக் காட்டில் அக்கரை உத்தேச்யம் என்று இருக்கிறான் –
இலங்கையிலே இருந்து முடி சூடி இருப்பதில் காட்டில் பெருமாள் எல்லையில் போய்க் கொலை யுண்டு போனால் போரும் என்று இருக்கிறான்
திரு வாழிக் கல்லுக்கு உள்ளே -ஸூ தர்சன ஆழ்வானால் ரஷிக்கப் படும் பிரதேசத்தின் எல்லை -வருகையாலே
பய ஸ்தானத்தில் நின்றும் ஒரு கணையத்துக்கு உள்ளே புகுந்தால் போலே யும்
காட்டுத் தீயின் நின்றும் ஒரு கடலிலே புகுந்தால் போலேயும் நினைத்து இருக்கிறான்
கச்த ஏவ வ்யதிஷ்டத –
முதலிகள் விஷயீ காரம் பெற்று கரையிலே கால் பாவுவதற்கு முன்னே ஆகாசத்தில் தரித்தமை தோற்ற நின்றான்
இவர்களுடைய விஷயீ காரத்துக்கு உடலாக தன வெறுமையே ஆலம்பனமாக நின்றான் -என்று பிள்ளான் நிர்வாஹம் –

————————————————————————————————————————————————————————————

உவாசஸ மகாப்ராஜ்ஞ ஸ்வரேண மஹதா மஹான்
ஸூ க்ரீவம் தாம்ஸ்ஸ சம்ப்ரேஷ்ய கச்த ஏவ விபீஷண -யுத்த -17-9-

உவாசஸ-ஒருவார்த்தையும் சொன்னான் -மகாப்ராஜ்ஞ -நல்ல புத்திமானாய்
ஸ்வரேண -குரலோடு
மஹதா -உரத்த
மஹான்-பெரியோனான
ஸூ க்ரீவம் – ஸூ க்ரீவனையும்
தாம்ஸ்ஸ -வானரர்களையும்
சம்ப்ரேஷ்ய -பார்த்து
கச்த ஏவ விபீஷண-ஆகாசத்தில் நின்றானாகவே விபீஷணன்-

அவதாரிகை –
தன்னுடைய நிரசனத்திலே உத்யோகித்த மகாராஜரையும் பரிகரத்தையும் குறித்து
தன் ஆர்த்தி எல்லாம் மிடற்றோசையிலே தோற்றும் படியாக வார்த்தை சொல்லுவதும் செய்தான்-
உவாசஸ –
பெருமாளிடைய விஷயீ காரத்துக்கு தன் வரவு அமைந்து இருக்கச் செய்தே
ஒரு வார்த்தையும் சொன்னான் என்கிறான் -ரிஷி
அர்ச்சிதாஸ் சைவ ஹ்ருஷ்டாச்ச பவதா சர்வதா வயம்
பத்ப்யாமாபி கமாச்சைவ சிநேக சந்தர்ச நே ண் ஸ -அயோத்யா 50-41-
என்று வரவு தானும் மிகை என்று இருக்குமவர் –
அதுக்கு மேலே வார்த்தை சொல்லுகை வரண ஷாரம் போலே இ றே-
மகாப்ராஜ்ஞ-
ஜ்ஞானனாகை யாவது -ஹேய உபாதேய விபாக ஜ்ஞானாகை
ப்ராஜ்ஞனாகை யாவது-ஹேய த்யாக பூர்வகமாக உபாதேயம் இன்னது என்று அறிகை
மஹா பிரஜ்ஞானாகை வாவது -ஹேய த்யாக பூர்வகமான  உபாதேய லாபத்துக்கு சரதமான உபாயத்தை அறிகை -அதாவது ராவணன் தண்மையையும் -பெருமாள் பெருமையையும் அறிகையும்
அவனை விட்டே எம்பெருமானைப் பற்ற வேண்டும் என்று இருக்கையும்
அவர் லாபத்துக்கு அவர் திருவடிகளே சரதமான உபாயம் என்று இருக்கையும் –
ஸ்வரேண மஹதா-
ஸ்வரத்துக்கு மஹத்தை யாவது -மரங்களும் இரங்கும் வகை மணி வண்ணாவோ என்று கூவுமால் -திருவாய் -6-5-9- என்கிறபடியே
த்வணியைக் கேட்ட போதே சரண்யனுக்கே அன்றி வழிப் போக்கரும் இரங்க வேண்டும் படி மிக்க ஆர்த்தியை யுடைத்தாய் இருக்கை
மஹான்-
ஸ்வரத்தாலே தோற்றுகிற ஆர்த்தி அளவன்றிக்கே ஆஸ்ரயத்தில்ஆர்த்தி அபரிச் சிந்தையாய் இருக்கை –
ஆஸ்ரய ஆர்த்திக்கு அசைவு என்கை –
மஹா மநா -என்னவுமாம்
வாசு தேவஸ் சர்வமிதி ஸ மஹாத்மா ஸூ துர்லபம் -ஸ்ரீ கீதை -7-19-என்கிறபடியே
பெருமாள் திருவடிகளே சர்வவித பந்துவாய் இருக்கை
ஸூ க்ரீவம் தாம்ஸ்ஸ சம்ப்ரேஷ்ய –
அஸ்மான் ஹந்தும் ந சம்சய –யுத்த -17-6- என்கிற மகாராஜரையும்
சால  நுத் யம்ய சைலாம்ச்ச -யுத்த -17-6-என்று தன்னுடைய வத உத்யரான முதலிகளையும் பஹூமானமாகப் பார்த்து –
அதறக்கடி என் எனில் -பெருமாள் பக்கல் பரிவர்தமக்கு உத்தேச்யர் ஆகையாலும்
அவர்களே தமக்கு புருஷகாரமாக வேண்டுகையாலும்
ஆஸ்ரயிக்கிறவன் ஏதேனும் குற்றவாளனே ஆகிலும்
ஜ்ஞா நீ த்வாத்மை மே மதம் -ஸ்ரீ கீதை-7-18-என்று தனக்கு தாரகராகச் சொல்லுமவர்களுடைய
வார்த்தையை மறுக்க மாட்டாமையாலே
கச்த ஏவ விபீஷண
நின்ற இடத்திலே நின்று வார்த்தை சொன்னான் –

——————————————————————————————————————————————————————————

ராவணோ நாம துர்வ்ருத்தோ ராஷசோ ராஷ சேஸ்வர
தஸ்யா ஹமநுஜோ ப்ராதா விபீஷண இதி ஸ்ருத -யுத்த -17-10-

ராவணோ நாம-ராவணன் என்று பிரசித்தி பெற்றவன்
துர்வ்ருத்தோ -கெட்ட நடத்தை யுடையவனாய்
ராஷசோ-அரக்கனாய்
ராஷ சேஸ்வர-அரக்கர்களுக்கு அரசனாய்
தஸ்யா ஹமநுஜோ-அவனுக்கு பின் பிறந்தவனாய்
ப்ராதா விபீஷண இதி ஸ்ருத -விபீஷணன் என்று பெயர் பெற்ற தம்பி யாவேன் –

அவதாரிகை –
அநந்தரம்-
சரணாகதிக்கு அங்கமான
ஸ்வ நிகர்ஷத்தையும்
பரிக்ரஹ பரித்யாகத்தையும் –
சொல்லி சரணம் புகுகிறான் மேல் ஐந்து ஸ்லோகத்தாலே
இதில் -முதல் ஸ்லோகத்தால் –
பிரதிகூல சேஷத்வத்தால் வந்த நிகர்ஷமும்
பிரதிகூலனோடு அவர்ஜ நீய சம்பந்தத்தால் உண்டான நிகர்ஷமும்
ஸ்வரூபேண வந்த நிகர்ஷமும்
உண்டு என்கிறான் –
ராவணோ நாம –
ராவயதி இதி ராவண -சர்வ லோகங்களும் கூப்பிடும்படி ஹிம்சகன் ஆகையாலே ராவணன் என்னும் குண நாமம் –
நாம -என்று ப்ரசித்தியாய் பர கோஷ்டியிலும் ஹிம்சகன் என்னும் இடம் பிரசித்தம் அன்றோ என்கை –
துர்வ்ருத்தோ –
வ்ருத்தமாவது ஆசாரம் –
துர்வ்ருத்தம் ஆவது -ஆகார நித்ரா பயம் மைதுன நாதிகளிலே வரையாமை –
நிஹீ நாசாரோஹம் ந்ருப ஸூ -ஸ்தோத்ர ரத்னம் -என்றார் ஆளவந்தார் –
புத்தி ராசார வர்ஜிதா -சுந்தர -21-9-என்றாள் பிராட்டி
ராஷசோ –
உக்தமான தோஷங்கள் ஜாதி பிரதியுக்தம் ஆகையாலே தோஷம் என்றுசொல்லி நிவர்திப்பிக்க ஒண்ணாது ஒழிகை
அபிஜாதனுக்கு யுண்டான வ்ருத்தஹாநி ஜென்மத்தை யுணர்த்தி நிவர்திப்பிக்கலாம்
நிஹீன ஜாதிக்கு அது குல தர்மம் ஆகையாலே அபரிஹரணீயம் இ றே  –
ராஷ சேஸ்வர-
ஸ்வ தந்த்ரன் ஆகையாலே ஒருத்தன் ஹிதம் சொன்னால் செவி தாழ்க்குமவன் அல்லன்
சஜாதீரர் பண்ணும் பாபத்துக்கும் ப்ரவர்த்தகன் என்றுமாம் –
வழி யடித்து மூலை யடியே நடப்பார்க்கு எல்லாம் ஒதுங்க நிழலாய்  இருப்பவன் -என்கை –
அத்தால் உனக்கென்-என்கிற சங்கையிலே சொல்லுகிறது உத்தரார்த்தம்
தஸ்யா ஹம் –
சேஷ ஷஷ்டி –அவனுக்கு அதிசயத்தை விளைக்கை இ றே சேஷ பூதனுக்கு ஸ்வரூபம்
ராஜ்யஞ்சா ஹஞ்ச ராமஸ்ய -அயோத்யா -82-12- என்று ஸ்வரூப ப்ராப்தமான சேஷத்வத்தை ராவணன் பக்கல் பண்ணிப் போந்தேன்
அநுஜோ ப்ராதா –
அவனால் தூஷிதமான குடலிலே கிடந்தான் ஒருவன்
ப்ராதா ஸ்வா மூர்த்திராத்மந -மனு -2-226-என்னும்படி சரீரம் போலே அவனுடைய அநீதிக்கு எல்லாம் உபகரண பூதன் என்கை
விபீஷண இதி ஸ்ருத –
ராவண சம்சர்க்கத்தாலே வந்த தோஷத்து அளவன்றிக்கே
விவிதம் பீஷயதீதி விபீஷண -என்கிறபடியே -பஹூ பிரகார பயங்கரனாக லோகபிரசித்தம் –
அவனுக்கு தன்னால் வந்த தோஷமே உள்ளது
எனக்கு ஸ்வ தோஷத்து அளவன்றிக்கே அவநோட்டை சம்சர்க்கத்தால் வந்த தோஷமும் யுண்டு என்கை
விபீஷணஸ்து தர்மாத்மா -ஆரண்ய -1-24-என்று லோக பிரசித்தனாய் இருக்கச் செய்தேயும் தன்னைத் தான் அனுசந்தித்த படி -இ றே –

————————————————————————————————————————————————————————-

தோ ஸீதா ஜனஸ்தாநாத் த்ருதா ஹத்வா ஜடாயுஷம்
ருத்தா ஸ விவஸா தீ நா ராஷசீ பிஸ் ஸூ ரஷிதா –யுத்த -17-11

தேந -அந்த ராவணனாலே
ஸீதா ஜனஸ்தாநாத் த்ருதா -ஜனஸ்தானத்தில் இருந்து அபஹரிக்கப் பட்ட ஸீதா தேவி
ஹத்வா ஜடாயுஷம் -ஜடாயுவைக் கொன்று
ருத்தா -அசோகவனத்தில் -சிறையிடப் பட்டாள்
ஸ விவஸா தீ நா -பரா தீனியாய் -வருந்தத் தக்கவளாய்
ராஷசீ பிஸ் ஸூ ரஷிதா –ராஷசிகளால் நன்றாக ரஷிக்க பட்டவளாய்-

அவதாரிகை –
கீழ்ச் சொன்ன தோஷங்கள் பிராயச்சித்த சாத்தியங்கள்
மத்பக்தம் —ந ஷமாமி -வராஹ புராணம் என்கிறபடியே துஷ் பரிகரமான பாகவத அபசாரமும் யுண்டு என்கிறான்
துர்வ்ருத்த -என்று பிராட்டி பக்கல் பண்ணின அபசாரம் ப்ரஸ்துதம் ஆஹையாலே அத்தை விவரிக்கிறதாகவுமாம்-

தேந ஹ்ருதா –
உகத சகல தோஷங்களுக்கும் ஆகாரனாய் இருந்துள்ளவனாலே
இவ்வதிக்ரமத்தில் இழியும் போது அப்படி பாப பிரசுரனாக வேணும் இ றே
ஹ்ருதா –
அனந்யா ராகவே ணாஹம்-சுந்தர -21-15-என்றும்
ஜலான் மத்ஸ்யாவிவோத் த்ருதௌ-அயோத்யா -53-31-என்றும்
பிரியப் படாதவள் பிரிக்கப் பட்டாள் –
ஸீதா ஹ்ருதா –
கர்ப்ப வாசாதி க்லேசமும் இன்றிக்கே
பரமபதத்தில் இருக்கும் சௌகுமார்யம் குலையாத படி பிறந்த ஸூ குமாரியைப் பிரித்தான்
ஜனஸ்தாநாத் ஹ்ருதா –
திரு அயோத்யையில் இருப்பு சிறை என்னும்படி புஷ்பாப சயாதி போகங்களுக்கு ஏகாந்தமான
ஜனஸ்தானத்தில் நின்றும் ஹரிக்கப் பட்டாள்
ஹ்ருதா –
மா நிஷாத பிரதிஷ்டாம் த்வமகம சாச்வதீ சமா யத் க்ரௌஞ்ச மிது நா தே கமவதி காம மோஹிதம் -பால -2-15- என்று
வீத ராகர்க்கும் அசஹ்யமானவற்றை இ றே செய்தது
உஷையையும் அநிருத்த ஆழ்வானையும் கூட்டிச் சிறையிலே வைத்தால் போலே
இருவரையும் கூட்டு வைத்தானாகிலும் ஆம் இ றே –
ராஜ குமாரர்களை மாரீச மாயையாலே பிரித்து இ றே நலிந்தது
ஜடாயுஷம் ஹத்வா ஹ்ருதா –
மம ப்ராணா ஹி–பார- உத் -91-27- என்றும்
ஜ்ஞா நீ த்வாத்மைவ மே மதம் -ஸ்ரீ கீதை -7-18- என்னும்படி
அபிமதரான பெரிய யுடையாரை மீட்கலாம் படி சிறை செய்யும் அளவன்றிக்கே அந்வய விநாசத்தை பண்ணி இ றே பிரித்தது
சக்கரவர்த்தி திருமகநோடே ஆழவிருந்த பகை கொள்ளுகையாலே
சபரிகரனாகத் தான் நசிக்கும் படி சூழ்த்துக் கொண்டான் -என்கை –
ருத்தா ஸ –
இப்படி பிரித்தாலு ம் அநு தாபம் பிறந்து மீள விடலாம் இ றே
துஷ் ப்ராபமான அசோகா வநிகையிலே மூச்சு விட ஒண்ணாத படி ருத்தை யானாள்
விவஸா –
இட்ட கால் இட்ட கைகளாய் -திருவாய் -7-2-4-என்னும்படி
பெருமாளைப் பிரிந்த இழ வு எல்லாம் தோற்றப் பரவசையாம் படி இருந்தது –
தீ நா-
இவ்வளவில் நமக்கு ஆஸ்வாசகர் ஆரோ வென்று தன்னுடைய பலஹாநி தோற்றப் பரவசையாம் படி இருந்தது –
பெருமாளோ ட்டை போக பரம்பரையாலே ஹ்ருஷ்டையாய் இருக்குமவளை
இவ்விருப்பு இருக்கும் படி பண்ணினான் -என்கை –
ராஷசீ பிஸ் ஸூ ரஷிதா —
விக்ருத பயங்கர  வேஷ வசோ வ்ருத்தைகளான  ஏகாஷ்யேக கரணே ப்ரப்ருதிகளான ராஷசிகளாலே

ஆஸ்வாச கரான  திருவடிக்கும் செல்ல ஒண்ணாத படி நெருக்குண்டாள்-

ஆக
இரண்டு ஸ்லோகத்தாலும்
சகல வாங் மநஸா  கோசரமான மஹா பாபங்களைப் பண்ணினவர்களுக்கும்
பகவத் ப்ராப்தியில் அதிகாரம் யுண்டு என்னும் இடம்
அகில வேதார்த்த தர்சியான ஸ்ரீ வால்மீகி பகவானாலே ஸூசிதமாயிற்று  –
சரணம் த்வாம் பிரபன்னா நாம் த்வாஸ் மீதிச யாசதாம்
பிரசாதம்  பித்ரு சந்த்ரூணாம் அபி குர்வந்தி சாதவ -ஸ்ரீ விஷ்ணு தர்மம் -106-53-என்றும்
குயோ நிஷ்வபி சஞ்ஜாதோ யஸ் சக்றுச் சரணம் கத
தம் மாதா பித்ரு ஹந்தாரம் அபி பாதி பவார்த்திஹா -சனத்குமார சம்ஹிதை -என்றும்
துராசாரோபி சர்வாசீ கருதக்நோ நாஸ்திக புரா
சமாஸ்ரயேதாதி தேவம் ஸ்ரத்தயா   சரணம் யதி
நிர்தோஷம் வித்தி  தம் ஜந்தும் பிரபாவாத் பரமாத்மன -சாத்வாத சம்ஹிதை -16-23- என்றும்
தேவா வை யஜ்ஞாத் ருத்ர மந்தராயன் ஸ ஆதித்யா நன்வாக்ரமத
தேத்விதை வத்யாத் ப்ராபத் எந்த தான்  ந பிரதிப்ராயச்சன்
தஸ்மாதபி வத்யம் பிரபன்னம் ந பிரதி யச்சந்தி -யஜூஸ் சம்ஹிதை -6-5-20- என்றும்
தேவேன த்வஷ்ட்ரா சோமம் பிபேத்யாஹ
த்வஷ்டா வை ப ஸூ நாம் மிதுனா நாம் ரூபக்ருத் ரூபமேவ ப ஸூ ஷூ ததாதி
தேவா வை த்வஷ்டார மஜி காம்சன் ஸ பத்னீ ப்ராபத்யத
தம் ந பிரதிப்ராயச்சன் தஸ்மாதபி வத்யம் பிரபன்னம் ந பிரதி ப்ரயச் சந்தி -யஜூஸ் சம்ஹிதை -6-5-29-என்றும் சொல்லக் கடவது இ றே –

—————————————————————————————————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ இராமாயண -அபய பிரதான சாரம் -தனி ஸ்லோக- வியாக்யானம் -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை அருளிச் செய்தது -தம் ஆத்ம பஞ்சமம் த்ருஷ்ட்வா–யுத்த -17-3-/சிந்தயித்வா முஹூர்த்தந்து–யுத்த -17-4-/ஏஷ சர்வாயுதோ பேதஸ்–யுத்த -17-5-/ஸூக்ரீவஸ்ய வச ஸ்ருத்வா-யுத்த -17-6/

January 26, 2015

தம் ஆத்ம பஞ்சமம் த்ருஷ்ட்வா ஸூ க்ரீவோ வாநராதிப
வாநரைஸ் சஹ துர்த்தர்ஷஸ் சிந்தயாமாச புத்தி மான் -யுத்த -17-3-

தம்-அந்த விபீஷணனை
ஆத்ம பஞ்சமம் -துணைவரான நால்வரோடு கூடி -தாம் ஐந்தாமவனாயும்   இருக்கிற
த்ருஷ்ட்வா-பார்த்து
ஸூ க்ரீவோ -ஸூ க்ரீவன்
வாநராதிப-குரங்கரசனும்
வாநரைஸ் சஹ -வானவர்களோடு கூட
துர்த்தர்ஷஸ் -ஒருவரால் வெல்ல ஒண்ணாத வனும்
சிந்தயாமாச -ஆலோசனை செய்தான் –
புத்தி மான்-நுண்ணிய அறிவை யுடையவனாயும் இருக்கிற –

அவதாரிகை –
பெருமாள் பக்கல் பரிவாலே வந்தவனுடைய ஆனு கூல்யம் நெஞ்சில் படாதே
இவன் ஆரோ என்கிற அதி சங்கையிலே இழிந்து
மகா ராஜர் முதலிகளோடே மந்த்ரத்திலே இழிந்தார் -என்கிறது தம் ஆத்ம -இத்யாதியாலே –
தம் –
பெரிய  அபி நிவேசத்தோடே வந்து அல்லது தரிக்க மாட்டாதபடி வந்த அநு கூலனைக் கிடீர் -அவன் சங்கித்தது -என்கை-
ஆத்ம பஞ்சமம்-
ஸ்ரீ விபீஷண பெருமாள் சங்க்யாபூரகரான மாத்ரமே –
அவர்களோடு சம பிரதானராய் இருக்கை-அதாவது அந்யோந்யம்உண்டான பவ்யதையும் செறிவும் –
அதிஷ்டானம் ததா கர்த்தா கரணம் ச ப்ருதக்விதம்
விவிதா ச ப்ருதக் சேஷ்டா தைவம் சைவாத்ர பஞ்சமம் -ஸ்ரீ கீதை -18-14-என்கிறபடியே
அவர்களுடைய சத்தை ஸ்வ அதீனையாம் படியான பிரதான்யத்தைச் சொல்லிற்று ஆகவுமாம் –
த்ருஷ்ட்வா ஸூ க்ரீவோ –
இவர் கண்டு துணுக என்று தலை எடுத்துப் பார்த்த போது
க்ரீவா சோபை -கழுத்து அழகு -இருந்த படி ஏன் என்று ரிஷி கொண்டாடுகிறான் -என்று பிள்ளை திரு நறையூர் அரையர் பணிப்பர் –
ஸூ க்ரீவன் -அழகிய கழுத்து யுடையவன் அர்த்தமும் உண்டே –
வாநராதிப-
துணுக என்னுகைக்கு அடி  வானர சேனையை அடைய தமக்கு குழைச் சரக்காக  யுடைய ராகையாலே –
ராஜ குமாரர்கள் பக்கல் பரிவு -ராகவார்த்தே பராக்ராந்தா ந ப்ராணே குருதே தயாம்-யுத்த -27-1-
என்கிறவர்கள் அளவும் செல்லக் கடவது இ றே
துர்த்தர்ஷஸ்-
சரணம் புகுந்தவனுக்கும் பிற்காலிக்க வேண்டும் படி
அநபிவ நீயராய்  இருந்தார் -என்கை
சிந்தயாமாச –
அதாகிறது தம்முடைய அநபவ நீயம் தோற்றாதேகூச்சமே மேற்பட்டு சிந்தையிலே இழிந்தார் என்கை –
புத்தி மான் வானரைஸ் சஹ சிந்தயாமாச –
தாமே சிந்திக்க ஷமராய் இருக்க
கார்ய கௌரவத்தாலே முதலிகளையும் கூட்டிக் கொண்டு சிந்தித்தார் –
புத்திமான் சிந்தயாமாச –
தூதனோ
ஆர்த்தனோ
எதிரியோ –
என்று சிந்தித்தார் –
பிரசச்த புத்திகளாகையாலே சிந்தித்தார் என்றுமாம் –
வருகிறவனுடைய முக விகாராதி லிங்க அங்கங்களாலே கண்ட போதே

ஆநு கூல்ய ப்ராதிகூல்யமுக விகாராதி லிங்க அங்கங்களாலே கண்ட போதே ஆநு கூல்ய ப்ராதிகூல்யங்களை நிர்ணயிக்க வல்ல

பிரசஸ்தி புத்திகளாய் இருக்கச் செய்தே
ஸ்வாமிபக்கல் பரிவாலே கலங்கிச் சிந்தையிலே இழிந்தார் -என்றுமாம் –
பிரசஸ்தி புத்தி யாகையாலே சிந்தித்தார் என்றுமாம்
ஸ்வாமிக்கு என் வருகிறதோ என்கை இ றே  பிரசச்த புத்தி என்கிறது
சம்ச்ப்ருசன் நாசனம் சௌரேர் மகாமதி ருபாவிசத் -பார -உத் -என்னக் கடவது இ றே
மகா புத்திமானான விதுரர் தடவிப் பார்த்தார் இ றே –

———————————————————————————————————————————————————————–

சிந்தயித்வா முஹூர்த்தந்து வாநராம் ஸ்தாநுவாச ஹ
ஹநூமத ப்ரமுகான் சர்வாநிதம் வசனமுத்தமம் -யுத்த -17-4-

சிந்தயித்வா -முடிவு கட்டி
முஹூர்த்தந்து -சீக்கிரத்திலேயே
வாநராம் ஸ்தாநுவாச ஹ -அவர்கள் அனைவரையும்
ஹநூமத ப்ரமுகான் -ஆஞ்சநேயர் முதலான
சர்வாநிதம் வசனமுத்தமம் -இந்த மிகச் சிறந்த சொல்லை உரைத்தான் கிடீர்-

அவதாரிகை –
ஸ்ரீ விபீஷண ஆழ்வான் சபரிகரராய் கொண்டு சடக்கென கிட்டிக் கொண்டு புகுகையாலே
மந்த்ரத்திலே விளம்பிக்கக் கடவோம் அல்லோம் என்று பார்த்து
சடக்கென நிர்ணயித்து முதலிகளைக் குறித்து நிர்ணயித்த  அர்த்தத்தை சொல்ல்லுகிறான்-

சிந்தயித்வா-
சிந்தை நிர்ணயாந்தம் ஆகையாலே இவ்விடத்தில் சிந்தா சப்தம் நிர்ணயத்தைச் சொல்லுகிறது –
சாரனும் அல்லன் -தூதனும் அல்லன் -பாதகன் -என்று நிர்ணயித்து –
முஹூர்த்தம் –
எதிர்த் துறையிலே அரண் மிக்க இலங்கை
அரண் இல்லாத வெளி நிலத்தில் பெருமாள் என்று இவனை நலிய வரக் கிட்டினான் –
மந்த்ரத்தில் விளம்பிக்கில் பையல் மேலிடும் என்று சடக்கென நிர்ணயித்தார் -என்கை
து-
எதிரி என்று நிர்ணயித்த பின்பு கூச்சத்தாலே
பூர்வ அவஸ்தையில் காட்டில் வந்த வேறுபாடு
தான் வாநரா நுவாச ஹ-
மகா ராஜர் காண வந்த சோழர் என்னும்படி பரிவில் பிரதான ரானவர்களை குறித்துச் சொன்னார்
ஹ –
ஒரு ஸ்வாமியும் பரிகரமும் இருக்கும் படி என் -என்று ரிஷி கொண்டாடுகிறான் –
ஹநூமத ப்ரமுகான்-
பழைமை பார்க்கில் ஜாம்பவத் ப்ரமுகான் -என்ன வேணும்
பரிய்ட்ட முறை பார்க்கில் அங்கத ப்ரமுகான் -என்ன வேணும்-
ஆபத்துக்களில் திருவடியின் திறமையைப் பற்ற ஹநுமத ப்ரமுகான் -என்கிறான்
சர்வாந-
பெருமாள் பக்கல் பரிவிலே பிரதானாரோடு அப்ரதானாரோடு வாசி இல்லாமையாலே சர்வான் -என்கிறது –
இதம் வசனம் –
அர்த்த விதுரமாக ரிஷி வசன சந்நிவேசத்தை கொண்டாடுகிறான் –
உத்தமம்-
அர்த்தத்தைப் பார்த்தால் சர்வ உத்க்ருஷ்டமானதை உடைத்தாய் இருக்கும் என்கை -அதாவது
சர்வ உத்க்ருஷ்டமான கலக்கத்தை  அர்த்தமாகயுடைத்தாய் இருக்கும் என்கை-
வந்தவன் அநு கூலன் அல்ல பிரதி கூலன் என்று கலங்குகை உத்க்ருஷ்டம்
வந்தவன் நம் அளவு அறிந்து போக  வந்தவன் என்னும் அளவன்றிக்கே
நம்மைக் கொல்ல வந்தான் -என்று தம்மைப் பாராதே கலங்குகை உத்க்ருஷ்ட தரம்
பரிகர பூதரான நம் அளவன்றிக்கே சரேணை கேந ராகவ -பால -1-69-என்று
ஓர் அம்பாலே வாலியை அழியச் செய்த பலத்தை விஸ்மரித்து
நமக்கு எல்லாம் வேர்ப் பற்றான பெருமாளை நலிய வந்தான் என்னுமது உத்க்ருஷ்ட தமம் –

———————————————————————————————————————————————————–

ஏஷ சர்வாயுதோ பேதஸ் சதுர்ப்பிஸ் சஹ ராஷசை
ராஷசோ அப்யேதி பச்யத் வமஸ்மான் ஹந்தும் ந சம்சய -யுத்த -17-5-

ஏஷ -இந்த
சர்வாயுதோ பேதஸ்-எல்லா ஆயுதங்களோடும் கூடின
சதுர்ப்பிஸ் சஹ ராஷசை -நாலு ராஷசர்களோடு கூட
ராஷசோ அப்யேதி -அரக்கனான விபீஷணன் எதிர் நோக்கி வருகிறான்
பச்யத்வம் -காணுங்கள்
அஸ்மான் ஹந்தும் -நம்மைக் கொல்ல –
ந சம்சய -சந்தேகம் இல்லை —

அவதாரிகை –
சிந்தயித்வா முஹூர்த் தந்து -என்று நிர்ணயித்த பிரகாரத்தை
சோப பத்திகமாக வெளியிடுகிறான்-

ஏஷ –
பாதகத்வத்துக்கு ஏகாந்தமான உள்வாயில் க்ரௌர்யம் இவன் வடிவிலே தோற்றுகிறது இல்லையோ –
சர்வாயுதோ பேதஸ் –
நெஞ்சில் க்ரைர்ய அநு கூலமான ஹிம்சா பரிகரங்களாலும் பூரணன் -என்கை
உத்பபாத கதா பாணி -யுத்த -16-18-என்று ஒரு தடியைக் கொண்டு வந்தான் என்னச் செய்தே சர்வாயுதா பேத -என்பான் என் என்னில்
அநு கூலனை பிரதி கூலனாய் சங்கித்தால் போலே ஓர் ஆயுதமே பல ஆயுதமாக தோற்றலாம் இ றே
தோடு  வாங்கின காது தோடு இட்ட காது என்னுமாபோலே
கையும் ஆயுதமும் பொருந்திய படியாலே
சர்வ ஆயுதங்களிலும் சரமம் யுண்டு என்கிறான் -என்னவுமாம் –
பெருமாளை நலிக்கைக்கே நேரே பிரம்மாஸ்திரமான சரணா கதியும் இவன் கையிலே உண்டு என்கிற
நினைவாலே -சர்வாயுதோ  பேத  -என்கிறார் என்னவுமாம் –
சதுர்ப்பிஸ் சஹ ராஷசை-
சர்ப்ப ஜாதிரியம் க்ரூரா-ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-7-71-என்கிறபடியே
கீழ் சொன்ன க்ரௌர்யம் ஜாதி பிரயுக்தம் என்கை –
இவனுடைய யுத்த கௌசலம் கண்டிலி  கோளோ-
பெரும் படையோடு செல்லில் கால் கட்டு படுவுதோம்
தனியே வரில் மீண்டு போக ஒண்ணாது -என்று பரிமித பலனாய் வந்த படி கண்டிலி கோளா-
தன் கௌர்யத்தைப் பின் செல்லும் சஜாதீயரையே கொண்டு வந்தான் -என்கை –
ராஷசோ அப்யேதி –
பிற்காலியாதே தன் நிலத்தில் புகுருமா போலே மதியாதே புகுந்த படி
இத்தால் சடக்கென பரிஹரிக்க வேண்டும்படி வந்தான் என்கை –
பச்யத்வம் –
உபதேசிக்க வேணுமோ –
உங்கள் முகத்திலும் கண் இல்லையோ
அஸ்மான் ஹந்தும்-
நம்மில் சிலரை அவியில்அல்லாதார்க்குப் பிழைக்கலாம்
நமக்கு எல்லாம் வேர்ப்  பற்றான பெருமாளை நலிய வந்தான் –
அவர் உளராகில் நாம் எல்லாம் இல்லை யாகிலும் உண்டாக்க வல்லார் –
ந சம்சய-
சர்வாயுதனாய் சபரிகரனாய் வருகையாலே பாதகன் என்னும் இடத்தில் சந்தேகம் இல்லை
தூதராயிருப்பார் சாயுதராய் பரிகரராய் இன்றிக்கே இ றே வருவது –

——————————————————————————————————————————————————————

ஸூக்ரீவஸ்ய வச ஸ்ருத்வா சர்வே தே வாநரோத்தமா
சாலா நுத் யம்ய சைலாம்ஸ் ச இதம் வசனமப் ருவன் –யுத்த -17-6-

ஸூக்ரீவஸ்ய வச ஸ்ருத்வா -ஸூ க்ரீவனுடைய வார்த்தையைக் கேட்டு
சர்வே தே வாநரோத்தமா -அந்த சிறந்த வானவர் அனைவரும்
சாலா நுத் யம்ய சைலாம்ஸ் ச-மரங்களையும் மலைகளையும் எடுத்துக் கொண்டு
இதம் வசனமப்ருவன் -இந்த வார்த்தைகள் உரைத்தனர் –

அவதாரிகை –
மகா ராஜர் -அஸ்மான் ஹந்தும் ந சம்சய -என்று கூசி வார்த்தை சொன்ன படியைக் கேட்டு
அவருடைய கூச்சம் தீர
முதலிகள் பரிகரத்தோடே ஸ்ரீ விபீஷண ஆழ்வானை நலிவார்களாக  வ்ருஷாதிகளைக் கையிலே கொண்டு இவ்வார்த்தையை சொன்னார்கள் –

ஸூக்ரீவஸ்ய வச ஸ்ருத்வா –
தங்கள் துணிவிலே நிர்வாஹகரான மகா ராஜருடைய அனுமதியும் பெற்றார்கள் -என்கை
சர்வே தே வாநரோத்தமா-
இவர்களுடைய வத உத்சாஹத்திலே பிரதானரோடு அப்ரதனாரோடு வாசி அற்று இருந்த படி –
தே -என்றது –
அவர்கள் என்னும் இத்தனை போக்கி அவர்களுடைய உத்சாஹத்தைப் பரிச்சேதிக்க ஒண்ணாது என்கை
வானரோத்தமா-
பெருமாள் பக்கல் பரிவில் மகாராஜரிலும் அதிக்ரமித்து இருந்த படி
உத்கர்ஷ அபகர்ஷங்களில் சேஷித்வ சேஷத்வங்கள் அல்ல பிரயோஜகம் சாஷாத் உத்கர்ஷ ஹேதுவான ராம பக்தியே -என்கை
சாலா நுத் யம்ய சைலாம்ஸ் ச –
மலையோடு மரங்களோடு வாசி அறக் கைக்கு எட்டினவை அடங்க எடுத்தார்கள்
இவர்களுடைய வதத்தில் தங்களுக்கு யுண்டான ஆதர அதிசயத்தாலே தனித் தனியே உபய பரிகர யுக்தரானார்கள் -என்கை –
பெருமாளுடைய அநு கூல வ்ருத்தியிலே இளைய பெருமாள் சத்திர சாமர பாணியானாப் போலே
இவர்களைக் கொல்லுகை ராம கைங்கர்யம் என்று இவர்கள் இருக்கிறார்கள் –
இதம் வசனம் -தங்களுடைய சேஷத்வ சித்திக்காக இவருடைய அனுமதி அபேஷிதமாய் இருக்க
அத்தை ஒழியவே அவர்களுடைய வத நிச்சையோ பாதகமான வார்த்தையை –
அப்ருவன்-
குண பிராதன பாதகமும் ஔ சித்யமும் பாராதே திரளாகச் சொன்னார்கள் –

————————————————————————————————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ இராமாயண -அபய பிரதான சாரம் -தனி ஸ்லோக- வியாக்யானம் -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை அருளிச் செய்தது -ஸூநிவிஷ்டம் ஹிதம்-யுத்த -16-1/இத்யுக்த்வா பருஷம் வாக்யம் –யுத்த -17-1-/தம் மேரு சிகராகாரம்-யுத்த -17-2-/

January 25, 2015

தௌது மேதாவி நௌ த்ருஷ்ட்வா வேதேஷூ பரிநிஷ்டிதௌ
வேத உபப்ரும்ஹணார்த்தாய தாவக் ராஹயாத பிரபு -பால -4-6-என்று
வேத உபப்ரும்ஹணார்த்தமாக பிரவ்ருத்தமான பிரபந்தம் ஆகையாலே ஜகத் காரண பூத பரவஸ்து பிரதிபாதகமான
அத்ப்யச் சம்பூத ப்ருதிவ்யை ரசாச்ச -புருஷ ஸூ  கதம் -உத்தர அநுவாகம் -இத்யாதி வாக்யங்களையும்
அந்த வஸ்துவினுடைய அவதார உபபாதகமான
அஜாயமா நோ பஹஊதா விஜாயதே -புருஷ ஸூ  கதம் -உத்தர அநுவாகம் -இத்யாதி வாக்யங்களையும்
அவதார பிரயோஜனமான சாது பரித்ரான துஷ்க்ருத் விநாசங்களைக் சொல்லுகிற
யோ தேவேப்ய ஆதபதி யோ தேவா நாம் புரோ ஹித -புருஷ ஸூ  கதம் -உத்தர அநுவாகம் –என்னும்
எவமாதி வாக்யங்களையும் உபப்ரும்ஹிக்கிறது ஸ்ரீ ராமாயணம் –

அது தான் என் என்னில்
வ்யக்தமேஷ மஹா யோகி பரமாத்மா ஸநாதநம் -யுத்த -114-14- என்றும்
பவான் நாராயணோ தேவ ஸ்ரீ மான் சக்ராயுதோ விபு -யுத்த -120-13-என்றும்
அர்த்திதோ மானுஷே லோகே ஜஜ்ஞே விஷ்ணு ஸநாதந -அயோத்யா -1-7- என்றும்
பரதத்வம் ராமாத்மநா அவதரித்தது என்னும் இடம் கண்டோம் –

விச்வாமித்ராத் வரத்ராணம்-ஸ்ரீ தண்ட காரண்யவாசிகளான ரிஷிகளுடைய சம்ரஷணம்-
ராவணாதிகள் உடைய வாரபல புஜ பலங்களாலே நோவு பட்ட இந்த்ராதிகளுடைய பரிபாலனம்
இவை தொடக்கமான வற்றாலே சாமான்ய ரஷணத்தையும்
ராமோ ராமோ ராம இதி பிரஜா நாம பவன் கதா ராம பூதம் ஜகத்பூத் ராமே ராஜ்யம் பிரசாசதி -யுத்த -131-122-என்றும் –
திர்யக் யோநிக தாஸ் சாபி   சர்வே ராமம் அநு வ்ரதா-உத்தர -109-22- என்றும்
தம்முடைய அழகாலும் சீலத்தாலும் தம்மை ஒழியச் செல்லாத படி திருத்தி மோஷ பிரதானம் பண்ணினார் என்று சாஷாத் அவதார பிரயோசனமான விசேஷ ரஷணத்தையும் சொல்லுகையாலும்
சாது பரித்ரானம் கண்டோம்
தத் விரோதிகளான தாடகா தாடகேய பிரமுகர் என்ன
கர தூஷண திரிசிரஸ் ஸூ க்கள் என்ன
ராவண கும்பகர்ண ப்ரப்ருதிகள் என்ன இவர்களுடைய வதத்தாலே துஷ்க்ருத் வி நாசமும் கண்டோம்
பித்ரு வசன பரிபாலனமும் ரிஷி தேவதாத்ய அநு வர்த்தனம்
சிறியதை பெரியது நலியாதபடி ரஷித்த ஷாத்ரமான தர்மம் சாமான்யமான தர்மங்களையும்
ஸூ க்ரீவம்  சரணம் கதா -கிஷ்கிந்தா -4-19- என்றும்
சமுத்ரம் ராகவோ ராஜா சரணம் கந்தும் அர்ஹதி யுத்தம் -19-31-என்று விசேஷ தர்மத்தையும்
மர்யாதா நாம் லோகஸ்ய கர்த்தா காரயிதா ஸ ஸ -சுந்தர -35-11-என்றும்
ஸ்வே ஸ்வே தரமே நியோஷ்யதி -பால-1-96- என்றும்
பிறரை அனுஷ்டிப்பைக்காக அனுஷ்டித்த படியாலே தர்ம சம்ஸ்தாபனம் பண்ணக் கண்டோம் –
இப்படி வேத இப ப்ரும்ஹணமானஸ்ரீ ராமாயணத்துக்கு பிரதான ப்ரமேயமான
நயாச இத்யாஹூர் மநீஷிணோ ப்ரஹ்மணம்-தஸ்மான் நியாச மேஷாம்  தபஸா மதிரிக்த   மா ஹூ -தைத் நா -என்று
தர்மங்களில் பரம தர்மமாகச் சொல்லப் பட்ட சரணாகதி தர்மத்தை உப ப்ரும்ஹிக்கிறான் ஸ்ரீ வால்மினி பகவான் –
இது பிரதான பிரமேய மானபடி என் -என்னில்
இந்த பிரபந்தத்தில் சக்ரவர்த்தி திருமகனைக் குறித்து சொல்லுகிற பரத்வமும்
சம்சாரி சஜாதீயராய் தன மேன்மை பாராதே குஹ சபரீ ஸூக்ரீவ ப்ரப்ருதிகளோடே ஒரு நீராகக் வந்த சீலாதிகளும்
சாது பரித்ராணம் தர்ம சம்ஸ்தாபனம் துஷ்க்ருத் வி நாசனம் என்று
முக பேதன சொல்லப் படுகிற் சர்வ ரஷகத்வமுமாக இவை இ  றே சரண்ய ஸ்வ பாவம் ஆவது
ஆகையாலே இப்பிரபந்த க்ரமம் அடைய விபீஷன வ்ருத்தாந்தத்தில் சொல்லுகிற சரணாகதியினுடைய பிரதி சம்பந்தி ஸ்வ பாவ பிரதிபாதகம் ஆகையாலே சரணா கதி பிரதான பிரமேயம் –

இப்பிரகரணத்தில் சரண்யனுக்கு சரணாகத ரஷணத்தில் யுண்டான நிர்ப்பந்தத்தையும்
சரணாகத ரஷண காலத்திலும் ஆஸ்ரீதபராதீ நனாய் இருக்கும் என்னும் இடமும்
தத் விஷயத்தில் ஆ ஸ்ரீ தருடைய பரிவையும்
இந்த சரணாகதிக்கு அவயமான ஸ்வ பாவங்களையும் பிரதி பாதியா நின்று கொண்டு
சரணாகதி வைபவத்தை பிரதிபாதிக்கிறான் –

————————————————————————————————————————————————————————————–

ஸூநிவிஷ்டம் ஹிதம் வாக்ய முக்த வந்தம் விபீஷணம்
அப்ரவீத் ப்ருஷம் வாக்யம் ராவண கால சோதித -யுத்த -16-1-

ஸூநிவிஷ்டம் -செவிக்கு இனியதாகவும்
ஹிதம் வாக்ய முக்த வந்தம் -நன்மை பயப்பதான சொல்தொடரை சொன்னவனான
விபீஷணம் -விபீஷண னைக் குறித்து
அப்ரவீத் ப்ருஷம் வாக்யம் -கடுமையான வாக்யத்தை சொன்னான்
ராவண கால சோதித -ராவணன் யமனால் தூண்டப் பட்டவனாய் —

அவதாரிகை –
முதல் ஸ்லோகத்தாலே-ஆண் பிள்ளையான சக்ரவர்த்தி திருமகனோடே வைரம் பிறந்து நின்ற தசையிலே
இத்தை நிஸ்தரிக்கலாம் படி ப்ராதாவானவன் பரம ஹிதத்தை உபதேசிக்க
இத்தைக் கால் கடைக் கொண்டு
நாசகனான காலனுடைய வார்த்தையைக் கேட்டு அவன் பின் போவதே -என்று ரிஷி வெறுக்கிறான்-

ஸூநிவிஷ்டம் –
அர்த்தத்தளவும் செல்ல வேண்டாதே -சம்ஸரவே மதுரம் -ஆம்படி அழகிய சந்நிவேசத்தை யுடைத்தாய் இருக்கும் வார்த்தையை –
அதாகிறது –
அநபிமதம் ஆனாலும்  விட ஒண்ணாது இருக்கை –
அன்றிக்கே –
ஸூநிவிஷ்டம் -முக்த வந்தம் -என்று க்ரியா விசேஷணம் ஆகவுமாம் –
வார்த்தை அழகியதானாலும் நெஞ்சில் படா விடில் கால் கடைக் கள்ளலாம் இ றே
அங்கன் அன்றிக்கே நெஞ்சிலே அழகியதாக நிவிஷ்டமாம் படி சொன்னான் -என்கை-
ஹிதம் –
வெறும் செவிக்கு இனிதாய் இருக்கை அன்றிக்கே துர்த்தசையை நிஸ்தரிக்கலாம் படி பத்தியமாய் இருக்கும் வார்த்தையை –
அநபிமதம் ஆனாலும் விட ஒண்ணாது இருக்கும் வாக்ய சந்நிவேசத்தைப் பார்த்தால் –
சரவண கடாரம் ஆனாலும் விட ஒண்ணாது பத்யதையைப் பார்த்தால்
இது ஒருவனுக்கு அசஹ்யம் ஆவதே -என்கை-

வாக்யம்-
சொல்ல வேண்டும் ஹிதம் பரிபூரணமாய் இருக்கை-
வாக்யமாவது அர்த்தத்தைப் பரிபூரணமாகச் சொல்லுமது இ றே
உக்தவந்தம் –
நா சம்வத்சரம் வாசினே ப்ரப்ரூயாத் -என்று அத்யாதரம் பண்ணில் கால் கடையிலே துவளுவார்க்குச் சொல்லும் வார்த்தையை
இவன் துர்க்கதி கண்டு தன செல்லாமையாலே சொன்னவனை –
விபீஷணம்-
தூரஸ்தன் சொன்ன வார்த்தையாகில் ஆப்தாமோ அநாப்தாமோ என்று சந்கித்துக் கை விடலாம் –
ப்ராதா ஸ்வா மூர்த்திராத்மான -மனு -2-226-என்கிறபடியே ஹிதம் சொன்னவன் ப்ரத்யா சன்னன் என்கை-

ப்ருஷம் வாக்யம் அப்ரவீத் –
சரவண சம நந்தரம்-ஸ்திதோ அஸ்மி கத சந்தேக –ஸ்ரீ கீதை -18-73- என்று கலக்கம் தீர்ந்து ஸ்திதனாதல்-
த்வத்தோஹாய்  வேதாத்யயனம்-ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-1-2- என்று உபகார ச்ம்ருதியாலே புகழுதல்
என்னைத் தீ மனம் கெடுத்தாய் -திருவாய் -2-7-8-என்று பிரத்யுபகாரம் காணாமையாலே தெகடாடுதல் செய்ய வேண்டும் அளவிலே
சத்ருக்களைச் சொல்லும் வார்த்தையைச் சொன்னான் –
வாக்யம் –
அவன் சொல்ல வேண்டும் ஹிதங்களை பரக்கச் சொன்னால் போலே ப்ருஷங்களிலும் இனிச் சொல்லலாவது இல்லை என்னும்படி சொன்னான் –
ப்ருஷம் அப்ரவீத்
அவன் ஹிதம் சொன்ன போது ஸூ நிவிஷ்டமாம்படி சொன்னால் போலே இவனும் நெஞ்சிலே புண்படும்படி அவ்யக்தமாக ப்ருஷித்தான்
இதுக்கு ஹேது சொல்லுகிறது மேல் பதத் த்வயம் –
ராவண –
ராவயதி ரோதயாதி -என்று பர ஹிம்சை யாலே நாட்டைக் கூப்பிடப் பண்ணுதல் –
அஸ்தானே காலிட்டுக் கொண்டு தானும் கூப்பிடக் கடவனாய் இருக்கை
இத்தால் தனக்கும் பிறர்க்கும் -ஹிதம் அறியாதவன் -என்கை-
கால சோதித –
ப்ராதா சொன்ன வார்த்தை செவி படாதபடி ப்ரத்யா சன்னனான காலன் பிடரி தள்ள அவன் பின் போனான் –
ப்ராதா -பெருமாள் திருவடிகளில் சரணம் புகு -என்றான் –
காலன் -அது கடவது அல்ல -என் வழியே போ -என்றான் –
ப்ராதாவின் வார்த்தை -த்விதா பஜ்யேய மப் யேவம் ந ந்மேயம் -யுத்த -36-11-என்ற தன பிரக்ருதிக்குச் சேராமையாலே காலன் வழி போனான் -என்கை –

—————————————————————————————————————————————————————————————

இத்யுக்த்வா பருஷம் வாக்யம் ராவணம் ராவணா நுஜ
ஆஜ காம முஹூர்த்தேன யத்ர ராம ச லஷ்மண -யுத்த -17-1-

இத்யுக்த்வா பருஷம் வாக்யம்-இப்படியாக கடுமையாக சொல் தொடரை சொல்லி
ராவணம் -ராவணனைக் குறித்து
ராவணா நுஜ-ராவணனுக்கு தம்பியான விபீஷணன்
ஆஜ காம முஹூர்த்தேன-விரைவாக வந்தார் –
யத்ர ராம ச லஷ்மண –எவ்விடத்திலே ஸ்ரீ ராம பிரான் லஷ்மணன் உடன் கூடியவராய் எழுந்து அருளி இருக்கிறாரோ -அங்கே-

அவதாரிகை –
ராவணன் அதிக்ரமத்தில் கை வளர்ந்து இருக்கச் செய்தேயும்
நமக்கு கர்த்தவ்யம் ஏது  என்று மந்த்ரத்திலே இழிந்த இதுவே அவகாசமாக
இந்த துர்க்கதியை நிஸ்தரிக்கலாம் படியான பரம ஹிதத்தை சொல்லச் செய்தே
இவனுக்கு அசஹ்யமாய் இருக்கக் கண்டவாறே
இவன் இருந்த தேசமும் நமக்கு த்யாஜ்யம்
பரம தார்மிகரான பெருமாள் இருந்த தேசமே நமக்கு பிராப்யம் என்று புறப்பட்டு
வேகிற அகத்தின் நின்றும் துடித்துக் கொண்டு புறப்படுவாரைப் போலே போந்தான் என்று
இவனுடைய தர்ம ருசியைக் கண்டு கொண்டாடுகிறான் ரிஷி –

இத்யுக்த்வா பருஷம் வாக்யம்-
இதி -என்று ப்ரதீயதாம் தாசரதாய மைதலீ-யுத்த -14-3-என்று கர்த்தவ்யத்தினுடைய சௌகர்யத்தையும் –
யாவன் நக் ருஹ்ணந்தி சிராம்சி பாணா-யுத்த -14-4- என்று அகரணே பிரத்யவாயத்தையும் சொன்ன பிரகாரத்தை சந்தோஷத்தாலே அநு வதிக்கிறான் ரிஷி
பருஷம் –
சர்வ ஆஸ்வாச கரமான தென்றல் ச்ரு காலத்துக்கு அசஹ்யமாப் போலே
ஆஸ்ரய தோஷத்தால் இந்தப் பரம ஹிதம் ராவணனுக்கு பருஷமாயிற்று
வாக்யம் –
ஹிதோபதேசம் பரிபூரணமாய் இருக்கை
உக்த்வா –
ஹித ஜ்ஞனுமாய் ப்ராதாவாயும் இருக்கிறவன் இந்த துர்க்கதியிலே கை விட்டுப் போனான் என்கிற குறை தீர
சொல்லும் வார்த்தை அடைவே சொல்லி அவன் பக்கல் அவகாசம் இல்லாமையாலே போந்தான்
இவ் வநு பாஷணத்துக்கு பிரயோஜனம்  -ராவணனுடைய அதிக்ரமத்தைக் கண்ட போதே கால் வாங்க ப்ராப்தமாய் இருக்க
ஹிதம் சொல்லி மீட்கலாமோ என்று இவனுக்கு உண்டான வழி அடையச் சொல்லுகை  –

சொன்ன ஹிதம் பருஷமாகைக்கு ஹேது சொல்லுகிறது
ராவணம் –
வர புஜ பலங்களாலே பிரபலரோடு துர்ப்பலரோடு   வாசி அற எல்லோரையும் நலிந்து போந்தவனுக்கு –
எதிரிகளுடைய பலம் சொன்னால் பருஷம் என்னும் இடம் சொல்ல வேணுமோ –
ராவணா நுஜ-
அவன் கிடந்த குடலிலே சஹவாசம் பண்ணிப் போந்தவன் கிடீர் சத்வோத்தரன் சொல்லும் ஹிதத்தைச் சொல்லுகிறான்
என்று ஸ்ரீ விபீஷண ஆழ்வான் உடைய ஏற்றத்தைச் சொல்லுகிறான் ரிஷி
ஹிதம் சொல்லும் இடத்தில் ஜ்யேஷ்டக நிஷ்ட விபாகம் இல்லை
அறியுமவன் அறியாதவனுக்கு சொல்லும் இத்தனை -என்றுமாம்-

ஆஜ காம-
ஜ காம -என்ன அமைந்து இருக்க ஆஜ காம என்றது
ராவண கோஷ்டியில் தனக்கு சம்பந்தம் இல்லாமையும்
ராம கோஷ்டி தன்னிலமாய் இருக்கிற படியையும் தோற்றச் சொல்ல்லுகிறான் ரிஷி –
முஹூர்த்தேன-ந சௌரி சிந்தா விமுக ஜன வாசவை சசம்  வரம் ஹூதவ  ஜ்வாலா பஞ்சராந்தம் வ்யவஸ்திதி-காருட பூர்வ -என்கிறபடியே
நெருப்புப் பட்ட அகத்தில் கால் வாங்குமல்லது நிற்க மாட்டாதாப் போலே
ராவண கோஷ்டியில் தரிக்க மாட்டாத படியைச் சொல்லுதல்
கட்டி நின்ற கன்றை விட்டால் தாய் முலையில் வாய் வைத்து அல்லது தரிக்க மாட்டாதாப் போலே
ராம கோஷ்டியில் புகுந்து அல்லது தரிக்க மாட்டாதானாய்ப் புகுந்தான் -என்னுதல்
வத்சோ காமிவ மாதரம் -என்றும்
தாய் நாடு கன்றே போல் தண் துழாயான் அடிக்கே போய் நாடிக் கொள்ளும் புரிந்து -முதல் திரு -3-என்றும் சொல்லக் கடவது இ றே-
யத்ர ராம –
ராம சம்பந்தத்தைக் காட்டில் ராம சம்பந்த தேசமே உத்தேச்யம் -என்கை –
யத்ர பூர்வே சாத்யா சந்தி தேவா -புருஷ ஸூ க்தம் -என்றும்
ஸூ பக்ஸ் சித்ர கூடோ அசௌ-அயோத்யா -98-12-என்றும் சொல்லக் கடவது இ றே –
ச லஷ்மண-
இளைய பெருமாள் பெருமாளுக்கு நிரூபகராய் இருக்கிற படியைச் சொல்லுகிறது
இத்தால் -ஆ ஸ்ரீ தனுக்கு ஆஸ்ரயணீயனை ஒழியச் செல்லாது என்கை –
அபூர்வர் என்று இருக்க வேண்டாதபடி செல்லுகிறவனுக்கு அங்கே புருஷகாரம் உண்டு என்னவுமாம்
மகாராஜர் வத்யதாம் -யுத்த -17-29- என்ன
லஷ்மணம் புண்ய லஷணம்-யுத்த -18-7-பெருமாள் இவனைக் கைக் கொள்ளுவது காண் என்று தன திரு உள்ளத்திலே தண்ணளி தோற்ற இருந்தான் இ றே
தன சொல் ஜீவியாத ராவண கோஷ்டியில் வர்த்தித்த நெஞ்சாறல் தீரத்
தம்பியிட்ட வழக்கான ராம கோஷ்டியில் புகுந்தான் -என்னவுமாம் –

இச் ஸ்லோகத்தாலே
பகவத் ருசி யுடையவனுக்கு
தத் விமுகரிருந்த இடமும் த்யாஜ்யம் என்னும் இடமும்
பகவத் சந்நிதி யுண்டான இடமே ப்ராப்யம் என்னும் இடமும்
சொல்லிற்று ஆயிற்று –

——————————————————————————————————————————————————————————————-

தம் மேரு சிகராகாரம் தீப்தாமிவ சதஹ்ரதாம்
கக நச்தம் மஹீஸ் தாஸ் தே தத் ருஸூர் வாநராதிபா -யுத்த -17-2-

தம் -அவ விபீஷணனை
மேரு சிகராகாரம் -மேரு மலையின் முடி போன்ற தன்மையை யுடையவனாய்
தீப்தாமிவ சதஹ்ரதாம் -பற்றி எரிகின்ற மின்னலைப் போன்று
கக நச்தம் -ஆகாயத்தில் நிற்கிறவனான
மஹீஸ் தாஸ்-பூமியில் நிற்கிற
தே தத் ருஸூர் வாநராதிபா -அவ்வானரர்   தலைவர்கள் கண்டனர் –

அவதாரிகை –
ராவண கோஷ்டியில் நின்றும் கிளம்பி ஆகாசஸ் தனான போதே
இவனை முதலிகள் கண்டார்கள் -என்கிறான்-

தம்-
காட்டுத் தீயைத் தப்பினவன் மடுவிலே விழுமா போலே
தன அபி நிவேசம் எல்லாம் தோற்ற வந்தவனை –
மேரு சிகராகாரம் –
பிரதிபஷத்தை விட்டுப் பேரப் பெறுகையாலே  ஸ்திரனான படியும்
ஒளி பெற்ற படியும்
பாரதந்த்ர்யம் தோற்ற வந்த படியுமாகிற
இஸ் ஸ்வ பாவன்களாலே மேரு சிகராகாரம் -என்கிறான் –
இத்தலை பிரதான அவயவமான ஸ்ருங்கம் பெற்றது என்றும்
ராவணனுக்கு ஒரு ஸ்ருங்க பங்கம் பிறந்தது என்றும் நினைக்கிறான் –
தீப்தாமிவ சதஹ்ரதாம்-
முதலிகளுடைய பரிவைக் கண்டு பெருமாளை திருவடி தொழ ஒண்ணாது ஒழிகிறதோ என்கிற நடுக்கமும்
புகுந்து அல்லது தரிக்க மாட்டாத தவறையும் தோற்றி இருக்கை –
இவனுடைய ஒளிக்கு மின்னலானது திருஷ்டாந்தம் ஆகப் போராமையாலே தீப்தாம் -என்கிற விசெஷனம் அபூதோபமை-பற்றி எரிகிற மின்னல் இல்லையே –
இத்தால் நேரு சிகராகாரம் என்கிற பதத்தில் ஆர்த்தமாக நினைத்த தீப்தியை இங்கே  சாப்தம் ஆக்கினான்
கக நச்தம் –
இலங்கையில் நின்றும் கால் வாங்கின போதே கண்டார்கள் -என்கை
மஹீஸ் தாஸ் –
பூமியில் காவலுக்கு அடைத்தவர்கள் தாம்தாம் அதிகரியாத ககன ரஷணத்திலும் அவஹிதரானார் என்று
அவர்களுடைய காவல் குறிக்கோள் சொல்லுகிறது
தே தத் ருஸூர்-
ஒருத்தர் கண்டுஒருத்தருக்கு சொன்னாலும் எல்லாரும் கண்டாராவார் இ றே
அங்கன் அன்றிக்கே
எல்லாரும் ஒக்க கண்களால் கண்டார்கள் என்கை –
வாநராதிபா –
காவல் அடைப்புண்ட முதலிகளுக்கு முன்பே
காவல் அடைத்த முதலிகள் விட்ட இடத்தே இருந்து கண்டார்கள் என்கிறது –
பெருமாள் பக்கல் இவர்களுக்கு யுண்டான பரிவு ஆளிட்டு அந்து தொழுமது அன்றிக்கே
காவல் தான் இவர்களுக்கு உஜ்ஜீவனமாய் இருக்கிறபடி –
வாநராதிபா —
இவர்கள் பரிவிலே அவஹிதரான படி கண்டு ரிஷி கொண்டாடுகிறான் -என்னவுமாம் –

இஸ் ஸ்லோகத்தாலே
ப்ரதிகூலர் சமூஹத்தில் நின்றும் வரப் பெற்ற லாபத்துக்கு மேலே
அனுகூலர் கடாஷத்துகும் விஷயமானான் -என்று கருத்து-

——————————————————————————————————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ இராமாயண தனி ஸ்லோக வியாக்யானம் -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை அருளிச் செய்தது -ஸ்வப்நேபி யதயஹம் வீரம் ராகவம்-சுந்தர –34-23-/ஸ பித்ரா ஸ பரித்யக்த -சுந்தர -38-33-/ஸத்யம் ராஷஸ ராஜேந்திர-சுந்தர -51-38—

January 25, 2015

ஸ்வப்நேபி யதயஹம் வீரம் ராகவம் சஹ லஷ்மணம்
பச்யேயம யதி ஜீவேயம் ஸ்வப்நே அபி மம மத்ஸரீ -சுந்தர –34-23-

ஸ்வப்நேபி-கனவு கூட
யதயஹம் -நான்
வீரம் ராகவம் -வீரரான ஸ்ரீ ராம பிரானை
சஹ லஷ்மணம் -லஷ்மணனோடு கூடிய
பச்யேயம யதி ஜீவேயம் -காண்பேனே யானால் பிழைத்து இருப்பேன்
ஸ்வப்நே   அபி-கனவிலேயாவது
மம மத்ஸரீ -எனக்கு எதிரியாய் இருந்தது –

ஸ்வப்நேபி யதயஹம் வீரம் –
ஸ்வப்னத்திலே கண்டாலும் துக்க நிவர்த்தகராக வல்லார் ஆயிற்று –

ராகவம் சஹ லஷ்மணம்-
பிரிகிற போது இருவரையும் கூடப் பிரிகையாலே
காணும் இடத்திலும் இருவரையும் கூடக் காண வேணும் என்று இ றே ஆசைப்படுவது
அப்போது இருவரும் பிரிகையாலே தங்களில் கூடினார்களோ இல்லையோ என்றும் அதி சங்கை பண்ணி இருக்குமே –

பச்யேயம யதி ஜீவேயம் ஸ்வப்நே அபி மம மத்ஸரீ –
என் அவஸ்தை அறிந்து முகம் காட்டாமைக்கு அவரே அன்றிக்கே
இதுவும் என்னை நலிய வேணுமோ என்றாள் இ றே –

———————————————————————————————————————————————————-

ஸ பித்ரா ஸ பரித்யக்த ஸூ ரைச்ச சமஹர்ஷிபி
த்ரீன் லோகன் சம்பரிக்ரம்ய தமேவ சரணம் கத –சுந்தர -38-33-

ஸ -அந்த காகா ஸூ ரன்
பித்ரா ஸ -தந்தையாலும் தாயாலும்
பரித்யக்த -நன்கு கை விடப் பட்டவனாய்
ஸூ ரைச்ச சமஹர்ஷிபி -மகாரிஷிகளோடே கூடி இருக்கிற தேவர்களாலும்
த்ரீன் லோகன் சம்பரிக்ரம்ய -மூ வுலகங்களையும் நன்றாகச் சுற்றித் திரிந்து
தமேவ சரணம் கத –அந்த ஸ்ரீ ராமனையே உபாயமாகப் பற்றினான் –

அவதாரிகை –
சித்திர கூடத்து இருப்பச் சிறு காக்கை முலை தீண்ட அத்திரமே கொண்டு எறிய அனைத்து யுலகும்
திரிந்தோடி வித்தகனே இராமாவோ நின்னபயம் என்று அழைப்ப -பெரியாழ்வார் -3-10-6-என்கிறபடியே
பிராட்டி திறத்திலே தீரக் கழிய  அபராதத்தைப் பண்ணி சாபராதனான காகத்தைக் குறித்துப் பெருமாள் ப்ரஹ்மாஸ்த்ரத்தை பிரயோகித்து அருள
அவனும் அதுக்கு அஞ்சித் தனக்குப் புகலாம் இடம் எல்லாம் போய்த் தட்டித் திரிந்து போக்கற்று
எங்கும் போய்க் கரை காணாது எரி கடல் வாய் மீண்டேயும் வங்கத்தின் கூம்பேறும்  மாப்பறவையாய் -பெருமாள் திரு -5-5-
விஷ்ணு போதமான பெருமாள் திருவடிகளிலே வந்து விழுந்த படியைச் சொல்லுகிறது –

சம்சார ஆராணவம் மக்நாநாம் விஷயாக் ராந்த சேதஸாம் விஷ்ணு போதம் விநா நாந்யத் கிஞ்சித சதி பராயணம் -ஸ்ரீ விஷ்ணு தர்மம் -1-59-

வியாக்யானம் –
1-ஸ-
சாபராதர் பிழைகளைப் பொறுப்பிக்கைக்குப் புருஷகார பூதையான பிராட்டி திறத்திலே
அபராதம் பண்ணி நேராக வத்யனாய் இருக்கிறவன் –
2- ஸ –
பாகவத அபசாரம் பண்ணி – ந ஷமாமி க்கு இலக்காய் இருக்கிறவன்
மத்பக்தம் ச்வபதம் வாபி நிந்தாம் குர்வந்தி யே நரா பத்மகோடி சதேநாபி  ந ஷமாமி வஸூ ந்தரே -ஸ்ரீ வராஹ புராணம் –
3- ஸ –
பரம புருஷார்த்தத்தை விட்டு
தாரயன் ஸ சமாம் காகஸ் தத்ரைவ பரிலீயதே ந சாப்யுபரமன் மாம்சாத் பஷ்யார்த்தீ பலி போஜன -சுந்தர -38-16-என்று
சூத்திர புருஷார்த்ததைப் பற்றி
அரு நரகத்து அழுந்தும் பயன் படித்தேன் -பெரிய திரு -6-3-4- என்றபடி இருக்கிறவன் –
4- ஸ –
அபராதம் பண்ண சங்கல்ப்பித்த போதே  தேவத்வம் போய் காகமாய் ஸ்வரூப ஹாநி பிறந்து இருக்கிறவன்
5-ஸ –
ந கைஸ் சருதி ரை-சுந்தர -38-28-என்கிறபடியே ஆர்த்த அபராதனாய் உதிரக் கையனாய் இருக்கிறவன்  –
6-ஸ –
தராந்தர சர -சுந்தர -38-28- என்று இதுக்கு முன்பு எல்லாம் பொதும்புகளிலே அடங்கி வாழ்ந்து இப்போது அபராதம் பண்ணின படியாலே
பவனச்ய கதௌ சம -சுந்தர -38-29-என்று ஆகாசத்திலே காற்று போலே திரிகிறவன் –
7-ஸ-
பந்துச்ச பிதா ஸ மம ராகவ -அயோத்யா -58-31-என்று நிருபாதிக பந்துவாய் இருக்கிற பெருமாள் கை விட்ட படியாலே
ஸோ பாதிக்க பந்துக்களும் கைவிடும்படி இருக்கிறவன் –

ஸோ பாதிக்க பந்துக்கள் கை விட்டபடி எங்கனே என்னில்
1-பித்ரா ஸ பரித்யக்த ஸூ ரைச்ச சமஹர்ஷிபி-
கொண்டான் -ஸ்வாமியின்-விளிவைக் கண்டார் விளித்து அடையக் கை விட்டார்கள்
உள் மனிதர் புற மனிதர் எனும் வாசி யுண்டோ என்னில் –
2-பித்ரா ஸ பரித்யக்த-
முற்பட உள் மனிதர் கை விட்டார்கள் என்கிறது –
3- பித்ரா ஸ பரித்யக்த-
பிரஹ்மாஸ்திரம் துடர்ந்து முடுக்கின படியாலே பெற்ற தகப்பன் ரஷிக்குமோ என்று அங்கே போனான் –
அவனும் கை விட்டான் –
த்ரை லோக்யாதிபதயாய் இருக்கிற அவன் கைவிடுகைக்கு அடி என் என்னில்
4- பித்ரா
இந்த்ரோ மஹேந்த்ரஸ் ஸூ ர நாயகோ வா தராதும் ந சக்தா யுதி ராமவத்யம் -சுந்தர -51-45-என்று
பெருமாள் முனிந்தவர்களை ரஷிக்கைக்கு தனக்கு சக்தி இல்லாமை யாலே கை விட்டான் –
அன்றிக்கே
5-பித்ரா  பரித்யக்த-
ஹித பரனான படியாலே இவன் செய்த அவி நயத்துக்கு அத்தனையும் வேணும் என்று கை விட்டான் என்றுமாம்
6-பித்ரா –
அன்றிக்கே -பிரஷ்ட ஐஸ்வர்யனான தன்னை லாபத ஐஸ்வர்யன் ஆக்கினாள் நாச்சியார் ஆகையாலே –
த்வயா தேவி பரித்யக்தம் சகலம் புவன த்ரயம் விநஷ்ட பராயம பவத் த்வயேதா நீம் சமேதிதம் -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-9-123-என்றபடியே
அந்த க்ருதஜ்ஞதை யாலே அவ்விஷயத்தில் அபராதம் பண்ணின படியாலே கை விட்டான் என்றுமாம் –
7-பித்ரா –
சர்வேஷா மேவ லோக நாம் பிதா –பார ஆற -189-52- என்றும்
தேவதேவோ ஹரி பிதா-ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-9-126-என்றும்
சகல ஜகத் பிதாவான பெருமாள் கை விட்ட படியாலே
இவன் பிதாவும் கை விட்டான் என்றுமாம் –
8- பித்ரா –
அன்றிக்கே
விஷ்ணோ புத்ரத்வமா கச்ச -பால -15-20- என்று அபேஷித்தவன் அவதார ரஹஸ்யத்தை அறியுமவன் ஆகையாலே
புத்திர ச்நேஹத்திலும் -தேசே தேசே ஸ பாந்தவா -யுத்த -102-12-
பிராத்ரு ச்நேஹம் -தம் து தேசம் ந பச்யாமி யத்ர ப்ராதா சஹோதர -யுத்த -102-12- என்றபடி
கனவியதாகையாலே கை விட்டான் என்றுமாம் –
8-பித்ரா –
அன்றிக்கே பெருமாளாலே தன் குடியிருப்பும் பெற்று பரிபவமும் தீரத் தேடுகிறவன் ஆகையாலே அவ்விஷயத்திலே அபராதம் பண்ணின படியாலே கை விட்டான் என்றுமாம் –
9-பித்ரா –
அன்றிக்கே -மாம் உபாஸ் ஸ்வ -கௌ ஷீதகீ -என்று தன்னை பகவத் பர்யந்தமாக அனுசந்திக்கும் ஜ்ஞானவான் ஆகையாலே –
கடல் ஞாலம் செய்தேனும் யானே என்னும் -திருவாய் -5-6-1- ஆழ்வாரைப் போலே
பகவத் த்ரோஹி என்று கை விட்டான் ஆகவுமாம்
கை விட்ட படி தான் மேல் எழவோ  என்னில் –
10- பரித்யக்த
லோக யாத்ரைக்காக அன்றிக்கே புத்தி பூர்வகமாகக் கை விட்டான் –
11-பரித்யக்த –
இவன் தன் அளவன்றிக்கே இவனைச் சூழ்ந்த பார்யா புத்ராதிகளையும் அகப்படக் கை விட்டான்

ஹித பரனாகையாலே இவன் கை விடுகிறான்
ப்ரியபரையான தாயார் செய்தபடி என் என்னில்
சகாரத்தாலே அவளும் கை விட்டாள்-என்கிறது
சகாரம் அநுக்த சமுச்சாயகம்
இவள் கை விடுகைக்கு அடி என் என்னில்
சீதா  நாரீ ஜனஸ் யாச்ய யோக ஷேமம் விதாச்யதி -அயோத்யா -48-19-என்று
பெண் பிறந்தார்க்கு ரஷகையான பிராட்டி திறத்திலே அபராதம் பண்ணிய படியாலே கை விட்டாள்
ஸ –
மாத்ராச பரித்யக்த
த்வம் மாதா சர்வ லோகா நம் -ஸ்ரீவிஷ்ணு புராணம் -1-9-126-என்று சர்வ லோகமாதாவான பிராட்டி கை விட்ட படியாலே
இவன் மாதாவும் கை விட்டாள் –

இவள் இப்படி கை விட்ட அளவில் புறம்பு புகலானோர் யுண்டோ என்னில்
1- ஸூ ரை –
சஜாதீயரான தேவர்கள் பக்கலிலே சென்றான்
அவர்களும் தள்ளினார்கள் –
இவர்கள் தள்ளுகைக்கு அடி என் என்னில்
கஸ்ய பிப்யாதி தேவாச்ச சாத ரோஷஸ்ய சம்யுகே -பால -1-4- என்று பெருமாள் கண் சிவந்தால் பயப்படுமவர்கள் ஆகையாலே கை விட்டார்கள்
2- ஸூ ரை –
கல்லிட்டுக் கொட்டினாலும் சாவாமைக்கு அம்ருத பானம் பண்ணினவர்கள் –
ஆகையாலே பெருமாள் திருச் சரத்தாலே முடிந்து போகிறோமோ என்று பயத்தாலே கை விட்டார்கள் ஆகவுமாம் –
3- ஸூ ரை –
தேவை -விஷ்ணு பக்தி பரோ தேவ -ஸ்ரீ விஷ்ணு தர்மம் -109-74-என்று
அனுகூல பிரகிருதிகள் ஆகையாலே பிரதிகூலனான இவனைக் கை விட்டார்கள் ஆகவுமாம் –

பூர்வ அவஸ்தைக்கு சஜாதீயரான தேவர்கள் கை விட்டார்கள்
இப்போதைக்கு சஜாதீயங்களான பஷிகள் செய்தபடி என் என்ன
சகாரத்தாலே
1-பஷிகளும் கை விட்டன -என்கிறது -அவை கை விடுகைக்கு அடி என் என்னில்
பஷிணோ அபி ப்ரயா சந்தே சர்வ பூதா நுகம்பிநம் -அயோத்யா -45-31-என்றும்
பறவையின் கணங்கள் கூடு துறந்து வந்து சூழ்ந்து படுகாடு கிடப்ப -பெரியாழ்வார் -3-6-8- என்றும்
பஷிகளும் பெருமாள் பக்கலிலே பஷபாதிகள் ஆகையாலே கை விட்டன
அன்றியிலே
2-பறவை யரையா -பெரியாழ்வார் -5-2-9-என்றும்
புள்ளரையன் -திருப்பாவை -6-என்றும்
தங்களுக்கு நியாமகனான பெரிய திருவடி நாயனார்க்கு வெறுப்பாம் என்று கை விட்டன என்றுமாம் –
அன்றிக்கே
3-அன்னமாய் அன்று அங்கு அருமறை பயந்தான் -பெரிய திரு -5-7-3-என்றும்
அன்னமாய் நூல் பயந்தாற்கு -பெரிய திரு -9-4-2-என்றும்
தங்களுக்கு எல்லாம் கூடஸ்தமாய் இருப்பதொரு பஷி விசேஷத்துக்குக் குற்றம்  செய்தபடியாலே
சஜாதீயங்கள் எல்லாம் கை விட்டன என்றுமாம் –
அன்றிக்கே
4-விஷ்ணு பதத்தைப் பற்றித் திரிகிறவை யாகையாலே –
விஷ்ணுவின் திருவடியை -வியத் விஷ்ணு பதம் ப்ரோக்தம் என்கிறபடி ஆகாசத்தை –
பெருமாள் திருவடிகளிலே அபராதம் பண்ணினான் என்று கை விட்டன ஆகவுமாம் –

இவை இப்படிச் செய்தால் ஆன்ரு சம்சய பிரதானரான ரிஷிகள் செய்த படி என் என்னில்
1-ஸ மஹர்ஷிபி –
தேவர்கள் கை விடுகிற இடத்திலே ரிஷிகளோடு ஒக்கக் கை விட்டார்கள் -என்னும்படி விட்டார்கள்
தார்மிகரான இவர்கள் கைவிடுகைக்கு அடி என் என்னில்
ரிஷிகள் ஆகிறார் காண வல்லவர்கள்
மஹா ரிஷிகள் ஆகிறார் தூரக் காண வல்லவர் கள்
அதாவது
இத்தால் நாம் இவனைக் கைக் கொண்டால் இவன் தானும் இவனோடு சம்சர்க்கித்த நாமும் நசிப்போம் என்றும்
நான் கை விட்டால் இது ஒரு அநந்ய கதியே என்று பெருமாள் தானே இரங்குவார் என்றும்
அவ்வளவும் செல்லக் காண வல்லவர்கள் ஆகையாலே கை விட்டார்கள் –
2- ஸ மஹர்ஷிபி –
யோ விஷ்ணும் சததம் த்வேஷ்டி தம் வித்யா தந்தய ரேதசம் -விஹகேந்திர சம்-24-11- என்று பகவத் த்ரோஹிகள் சண்டாளர் எண்டு அறியுமவர்கள் ஆகையாலே
சண்டாள பஷிணாம் காக -என்கிற சண்டாளன் இங்குப் புகுரலாகாது என்று கை விட்டார்கள் ஆகவுமாம் –
3- ஸ மஹர்ஷிபி –
ரிஷிகள் ஆகிறார் கேவலம் பகவத் வைபவம் அறியுமவர்கள்
மஹ ரிஷிகள் ஆகிறார் -ஒண் தாமரையாள் கேள்வன் ஒருவனையே நோக்கும் உணர்வு -முதல் திரு -67-என்கிற

இந்த வைபவம் உணர்ந்து இருக்குமவர்கள்
ஆகையாலே புருஷகார விஷயத்திலே அபராதம் பண்ணின படியாலே கை விட்டார்கள் ஆகவுமாம் –

இவர்கள் இப்படி கை விட்டது அவன் தங்கள் பக்கல் வாராமையோ -என்னில் –
1-த்ரீன் லோகன் சம்பரிக்ரம்ய –
இருந்த இடம் தோறும் செல்லச் செல்லச் தள்ளினார்கள் -என்கிறது
2-த்ரீன் லோகன்-
அனைத்துலகும் திரிந்தோடி -பெரியாழ்வார் -3-10-6-என்கிறபடியே கண்ணுக்கு எட்டின இடம் எல்லாம் போனான்
3- த்ரீன் லோகன்-
பூம் யந்தரிஷ ச்வர்க்கங்கள் ஆகிற தேசம் அடைய திரிந்தான்
பூமி எங்கும் தட்டித் திரிந்த அளவில் -மஹர் ஷிபி பரித்யக்த -என்று மஹர் ஷிகள் கை விட்டார்கள் –
அந்தரிஷம் அடையத் தட்டித் திரிந்த அளவில் ஆகாச சாரிகளான பஷிகளும் கை விட்டன
ஸ்வர்க்க லோகம் அடையத் தட்டித் திரிந்த அளவில் மாதா பிதாக்களும் தேவர்களும் கைவிட்டார்கள் –
ஸம் பரிக்ரம்ய-
ஒரு கால் தட்டித் திரிந்த இடத்திலே ஒன்பது கால் தட்டித் திரிந்தான்
அகமுடையவர்கள் அறியாதபடி கைப் புடைகளிலே ஒதுங்கிக் கிடப்பதும் செய்தான் –

இப்படித் திரிந்த விடத்திலே மேல் செய்தது என் என்னில்
1-தமேவ சரணம் கத-
இவன் தஞ்சம் என்று பிரமித்துப் போனவர்களிலும் காட்டில் கொள்ள நின்ற பெருமாள் முகம் தானே குளிர்ந்து இருந்தது –
அவர் தம்மையே பற்றினான் –
2- தமேவ –
யதி வா ராவண ஸ்வயம் –யுத்த -18-33- என்று சரணாகதனான விபீஷணன்  இருக்க
ப்ராதி கூல்யம் பண்ணினவனை விரும்பக் கடவரான அவர் தம்மையே பற்றினான்
3- தமேவ –
சரணாகத வத்சலா -சுந்தர -21-21-என்று சரணாகதிக்கு எல்லையானவர் தம்மையே பற்றினான்
அசரண்யரானவர்களை பற்றித் திரிந்த நெஞ்சாறல் தீர சர்வ லோக சரண்யர் ஆனவர் தம்மையே பற்றினான்
4- தமேவ –
தன்னடியார் திறத்தகத்துத் தாமரையாள் ஆகிலும் சிதகுரைக்குமேல் என்னடியார் அது செய்யார் செய்தாரேல் நன்று செய்தார் என்பர் போலும் -பெரியாழ்வார் -4-9-2- என்று
பிராட்டி குற்றம் சொல்லிலும் மன்றாடி ஏறிட்டுக்க் கொண்டு ரஷிக்கும் அவர் தம்மையே பற்றினான்
5- தமேவ் சரணம் கத –
சரணாகதனான கந்தர்வனையும் பாணனையும் காட்டிக் கொடுத்தவர்களைப் போல் அன்றிக்கே
தோஷோ யத்யபி ந த்யஜேயம் -யுத்த -18-3-என்று தோஷமே பற்றாசாகக் கைக் கொள்ளும் அவர் தம்மையே பற்றினான்
6-சரணம் கத –
உபாய புத்த்யா பற்றினான் அல்லன் –
கண்டவிடம் எங்கும் தட்டித் திரிந்தவன் ஆகையாலே கால் முறிந்து ஒதுங்க நிழல் தேடி வந்தான்
அவ்விடம் நிவாஸ வருஷமாய் இருந்தது
அல்லது
பூ மௌ நிபதிதம் -சுந்தர -38-34-என்று தறையிலே தலையும் மடியிலே காலுமாய் விழுந்தவன் சரணாகதி பண்ணினான் அன்று இ றே –

இத்தால்
சர்வேஸ்வரன் ரஷிக்கைக்கு முதல்
அபராத பூயிஷ்டதையும்
அநந்ய கதித்வமும்
என்று சொல்லிற்று ஆயிற்று –

————————————————————————————————————————————————————————————

ஸத்யம் ராஷஸ  ராஜேந்திர குருஷ்வ வசனம் மம
ராம தாஸஸ்ய தூதஸ்ய வானரஸ்ய விசேஷத -சுந்தர -51-38-

ஸத்யம் -உண்மையான
ராஷஸ  ராஜேந்திர -ராஷச ராஜாக்களுக்கு ஸ்வாமியே
குருஷ்வ -அனுஷ்டிப்பாயாக
வசனம் மம -என்னுடைய சொல்லை –
ராம தாஸஸ்ய -ஸ்ரீ ராம பிரானுக்கு அடியவனாய்
தூதஸ்ய-தூதனாய்
வானரஸ்ய -குரங்கான
விசேஷத -விசேஷித்து –

அவதாரிகை –
ஸூ ஜாத மஸ்யேதி ஹாய் சாது புத்தே -சுந்தர -9-73-என்று
நொந்தாரைக் கண்டால் ஐயோ என்னும் சத் பிரகிருதி யாகையாலும்
யக்சீல ஸ்வாமீ தச் சீலா பிரகிருதி -என்று
பரம காருணிகரான பெருமாள் அடிமை யாகையாலும்
ராவணனுடைய அனர்த்தம் கண்டு அவனுக்கு ஹிதோ பதேசம் பண்ணுகிறான் –

வியாக்யானம் —
1-ஸத்யம்-
சத்ரு பஷத்தில் நின்றும் வந்த இவன் சொல்லுகிற வார்த்தை விப்ரலம்ப கரம் என்று நினைத்திராதே
உண்மை என்று நினைத்திரு
2- ஸத்யம் –
சதைக ரூபம்
சிறிது நாள் ஒரு படியாய் பிறகு வேறு ஒரு படியாகை யன்றிக்கே
ஒருபடிப் பட நடக்கும் என்று நினைத்திரு
3-ஸத்யம் –
வெறும் உனக்கே  யன்றிக்கே
எங்களுக்கும் கார்யகரம் ஆகையாலே பொய்யாய் இராது காண்
4- ஸத்யம் –
ராம கோஷ்டியில் வாசனையாலே நான் சொல்லுகிறது சத்தியமாய் அல்லது இராது காண்
வார்த்தையில் பொய்யில்லை யாகிலும் அநபிமதமாய் இருக்குமோ என்னில்
5- சத்யம் –
சத்யம் பூத ஹிதம் ப்ரோக்தம் -என்கிறபடியே
சர்வ பிராணிகளுக்கும் ஹிதமாய்க் காண் இருப்பது –

நாட்டார்க்கு ஹிதம் சொல்லப் போந்தோமோ என்ன
1-ராஷஸ  ராஜேந்திர –
இத்தனை பேருக்கு கடவனான உனக்கு அவர்களுடைய ஹிதம் செய்ய வேண்டாவோ –
அன்றியிலே –
2-ராஷஸ  ராஜேந்திர —
இப்படிகொத்த உண்மையான வார்த்தை கேட்டன்றோ இவ் வைச்வர்யம் உனக்கு உண்டாயிற்று
3- ராஷஸ  ராஜேந்திர —
அளவுபட்ட ஐஸ்வர்யம் அன்றோ உன் ஐஸ்வர்யம்
நாட்டில் ராஷசராய்ப் பிறந்தார்க்கும்
ராஜாக்களாய் பிறந்தார் எல்லார்க்கும் மேலானவன் அன்றோ நீ
4- ராஷஸ  ராஜேந்திர –
ராசாச ராஜாக்கள் உன் காலி
5- ராஷஸ  ராஜேந்திர —
இதி பரம ஐஸ்வர்யே -இ றே
ராஷச ராஜாக்கள் ஐஸ்வர்ய யுகதர்
நீ பரம ஐஸ்வர்ய யுகதன் –

நம்மை இப்படி இப்போது உபச்லோக்கிகிறது என் -என்ன
1-குருஷ்வ –
நான் சொல்லுகிற வார்த்தையை அனுஷ்டிப்பாயாக வேணும்
2- குருஷ்வ –
செய்வேனோ தவிருவேனோ என்று விசாரித்தல் தவிர்த்தல் செய்ய ஒண்ணாது
பத்தும் பத்தாய் அனுஷ்டிக்க வேணும் –
3- ஸத்யம் குருஷ்வ –
ப்ரஹச்தாதி ஸ்வ பஷம் அல்லன் இவன்
பரபஷம்
வசிஷ்டாதி ஜ்ஞாதா அல்லன்
இவன் ஒரு குரங்கு ஆகையாலே அனாப்தம் என்று நினைத்து இராதே என்றான்
உண்மையாகச் சொல்லுகிற வார்த்தையை நீ இசைய வேணும்
4- ராஷச ராஜேந்திர குருஷ்வ –
உன் கீழே ஒதுங்கின பிராணிகளை ரஷிக்கும் போது இத்தனையும் செய்ய வேணும் காண் –

இப்படிச் செய்யச் சொல்லுகிறது தான் ஏது என்னில்
1-வசனம்-
நான் சொல்லுகிற வார்த்தையை
2- வசனம் –
அர்த்தம் வக்தீதி வசனம் என்று பாசுரப் பரப்பற்று அர்த்த கர்ப்பமான வார்த்தையை –
நீ சொல்லுகிற பாசுரத்தை நான் அனுபாஷிக்கவோ -என்ன
3- வசனம் –
வாக் வியாபாரமான வ்ருத்தி அல்ல
அந்த வாக் பிரதிபாத்யார்த்தத்தை –

யாருடைய வாக்  பிரதிபாத்யம் என்ன –
1-மம-
தூம் ராஷாதி வார்த்தை போலே துக்க கரமாகை அன்றியே
பரதுக்க அசஹிஷ்ணு வான என்னுடைய வார்த்தை –
2- மம –
முன்பு அசோக வநிகையில்  வாளை யுருவிப் பிராட்டியை நலியப் புக்கவற்றை அகப்படக் கண்டு கார்யப் பாட்டாலே அதைப் பொறுத்துப் போந்த என்னுடைய
3- மம –
அஹோ ரூபமஹோ வீர்யம் -சுந்தர -49-17-என்றும்
புநச்ச ஸோ அசிந்ய தார்த்த ரூப -சுந்தர -49-18- என்றும்
உன்னுடைய யோக்யதையைக் கண்டு ஆச்சர்யப் பட்டும் உன்னுடைய அனர்த்தத்தைக் கண்டு வெறுத்தும் இருக்கிற என்னுடைய
4- மம –
சர்வ ஆத்மாக்களுக்கும் பிராண பூதனான வாயு புத்ரனாய் வைத்து
நீ அனுகூலிக்கும் பஷத்தில் உன்னுடைய பிராண ஹானியைச் சொல்லுவேனோ
5- மம –
ஐந்தர வ்யாகரணத்தை அதிகரித்து ஆதித்ய சிஷ்யனாய் என்னுடைய வார்த்தையும் பொய்யாமோ
6- மம –
பிங்கா தி பதேரமாத்யம் -சுந்தர -31-19- என்று
காட்டரசனான மஹா ராஜரையும் அகப்பட ஈடேற்றும் படி
ஒரு ராஜாவுக்கு மந்த்ரியான என்னுடைய வார்த்தையும் பொய்யாமோ –
உன்னைக் கண்டு வைத்தன்றே நான் சந்தேஹிக்கிறது ஆயிருக்க
– மம வசனம் -என்று இது ஒரு ஹேதுவாகச் சொல்லுவான் என் என்னில்
வானரமான ஆகாரம் உனக்கு சாமான்யமாக இருந்ததாகில் என் வார்த்தை விசவஸ  நீயம் ஆகைக்கு  ஹேதுக்களைச் சொல்லுகிறேன்
1-ராம தாஸஸ்ய தூதஸ்ய வானரஸ்ய விசேஷத-
இவற்றில் ஓர் ஒன்றே போரும்
இவை மூன்று ஆகாரம் யுடைய என் வார்த்தை பொய்யாகாது காண்
2-ராம தாஸஸ்ய தூதஸ்ய வானரஸ்ய –
என்னுடைய ஆப்தத்வம் முப்புரியூட்டினதாய் அன்றோ இருக்கிறது
3-விசேஷதோ ராம தாஸஸ்ய –
பொய் சொல்லாமைக்கு நானே போரும்
விசேஷித்துப் பெருமாள் அடியானும் பொய் சொல்ல்லுமோ
4- ராம தாஸஸ்ய-
ராமோ த்விர் நாபி பாஷதே -அயோத்யா -18-30 என்றும்
சத்யா வாதி ஸ ராகவ -அயோத்யா -2-32- என்றும்
சத்யவாதியான பெருமாளோடு வாசனை பண்ணின என் வார்த்தையும் பொய்யாமோ –
5- ராம தாஸஸ்ய-
ராமயதீதி ராம -என்று எல்லாரோடும் பொருந்துகிற பெருமாள் அடியானாய் இருக்கிற நான் வெறும் வார்த்தை சொல்லுவேனோ
6- ராம தாஸஸ்ய-
யதி வா ராவண ஸ்வயம் -யுத்த -18-33- என்னும்படியான பெருமாள் திரு உள்ளம் அறியும் என்னுடைய வார்த்தை அன்றோ
7- ராம தாஸஸ்ய-
நான் இங்கே பொய் சொன்னேன் -என்று பெருமாள் கேட்டு அருளினால் என்னை தலையைச் சிரைத்து விலங்கு இடாரோ
8- ராம தாஸஸ்ய-
ஏதேனுமாகப் பரோபதேசம் பண்ணி ஆச்சார்யபதம் நிர்வஹிப்பார்க்குத் திரு நாமம் போலே வேண்டி இருந்தது இ றே -தாஸ்ய நாமம் –

இப்படி உரிய அடியனாய் உன் நாயன் பக்கல் பரிவாலே புரட்டிச் சொல்லுகிற வார்த்தையை மெய் என்று இருப்பேனோ -என்ன
1- தூதஸ்ய –
இப்படிக்குரிய அடியானே யாகிலும் ஏறிட்டுக் கொண்ட அதிகாரத்துக்கு ஈடாக நடக்க வேண்டாவோ –
2-தூதஸ்ய –
தூதன் ஆவான் -அத்தலைக்குப் பொருந்த வார்த்தை சொல்லி ஸ்வாமி நினைவைத் தலைக் கட்டுமவன் இ றே
அப்படிக்கு உன்னோடு குளிர வார்த்தை சொல்லிப் பிராட்டியைக் கொண்டு போக வந்த என்னுடைய வார்த்தை
3- தூதஸ்ய –
தூதன் ஆவான் அங்குச் சொன்ன வார்த்தையை இங்கே சொல்லி
இங்குச் சொன்ன வார்த்தையை அங்கே சொல்லி உக்தார்த்த -யதார்த்த -வாதியாம்  இத்தனை போக்கி இட்டுச் சொல்லுவானோ
4- தூதஸ்ய —
அங்கு கட்டின ஓலைத் தாலியை இங்கே பொகட்டு இங்கே கட்டின ஓலைத் தாலியை அங்கே
பொகட்டுத் -திரிகிற எனக்கும் ஒரு கௌ டில்யம் வஞ்சனை உண்டோ –

அதுவோ நீ ஓலை தூதனாய் அபிமதனாய் ஆ ஹூதனாய் வந்தது
தோப்பை முறித்து சேனாபதிகளைக் கொல்லுவது மந்த்ரி ஸூ தரைக் கொல்லுவது
குமாரனைக் கொல்லுவதாய் நீ செய்யாத் தீம்புகள் உண்டோ
உன் வார்த்தையை விஸ்வசிக்கலாமோ என்ன
1-வானரஸ்ய  –
அதுவோ ஜாதி பிரயுக்தமான வார்த்தை
குரங்காட்டம் இத்தனை போக்கி
தௌத்யத்துக்குக் குறை யன்று காண்
கையிலே பழத்தைக் கொடுக்கிலும் உறும்பிப் பறிக்கை குரங்குகளுக்கு ஸ்வ பாவம் அன்றோ –
2- வானரஸ்ய  —
தோப்பை முறிப்பது சாகாம்ருகமாகையாலே
பணை யோடு பணை  தாவித் திரிந்தேன்
மரங்கள் துர்ப் பலங்கள் ஆகையாலும்
மஹா கபே என்னும்படி  நான் பலவான் ஆகையாலும்
என்னைப் பொறுக்க மாட்டாமல் முறிந்தது இத்தனை
சேனாதிபதி பிரமுகரும் பிரதம அபகாரம் பண்ணி நலிந்தார்கள்
என்னை நோக்குகைக்காக சில வ்யாபரித்தேன்
பின்னையும் நாடோடியான குரங்கு போல் அன்றியே என்னுடைய அத்புதா பதானங்களைக் கண்டு அஞ்சினார்கள்
அஞ்சினாரை இரங்கி ஓரறை அடித்துப் பொகட்டேன் அத்தனை -என் மேல் குறை இல்லை
3-வானரஸ்ய –
விவேகிகளா ன மனுஷ்ய ஜாதி அல்லேன்
ராஷச ஜாதி அல்லேன்
அறிவில்லாத திர்யக்  ஜாதியான என்னுடைய வார்த்தையில் யுண்டோ பொய்
4-வானரஸ்ய –
வ்யாக்ரவா நர சம்வாதம் கேட்டறியாயோ
பாதகனான வேடனுக்கு அகப்பட ரஷகமான ஜாதியிலே பிறந்த என்னுடைய வாக்கியம் பாதகமாமோ –

ஆக இத்தால்
மம வசனம் சத்யம் -என்று வாத மா மகன் -பெரிய திரு -5-8-2-என்கிறபடியே
தேவ யோநிஜனான என் வார்த்தை பொய்யாகாது என்று சாமான்ய வசனம் சொல்லி
விசேஷதோராம தாஸஸ்ய தூதஸ்ய வானரஸ்ய வசனம் சத்யம் -என்று
ருஜூக்களான பெருமாள் அடியான் ஆவது
உக்தார்த்த வாதியான தூதனாவது
இட்டுச் சொல்லுகைக்கு அடியான விவேகம் இல்லாத திர்யக்காவதாய்
இருக்கிற என்னுடைய வார்த்தை அன்றோ  என்று
விசேஷ  ஹேதுக்களையும் சொல்லி
நீ தான் ஒரு பெரியோன் ஒருத்தனுமாய்
உனக்கு ரஷணீயமான குழைச் சரக்கும் உண்டாய் இருந்தது
ஆனபின்பு
நான் சொன்னபடியே அனுஷ்டிக்கப் பாராய் -என்கிறான் –

——————————————————————————————————————————————————————————

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ சீதா ராம ஜெயம் .
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார்  ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ இராமாயண தனி ஸ்லோக வியாக்யானம் -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை அருளிச் செய்தது -இஹ சந்தோ ந வா ஸந்தி-சுந்தர -21-9-/சா திர்யகூர்த்வஞ்ச ததாப்யத-சுந்தர -31-19—

January 24, 2015

இஹ சந்தோ  ந வா ஸந்தி  ஸதோ வா நா நுவர்த்தஸே
ததாஹி விபரீதா தே புத்தி ராசார வர்ஜிதா -சுந்தர -21-9-

இஹ -இந்த இலங்கையில்
சந்தோ  ந -நல்லோர்கள் இல்லையோ –
வா -அல்லது
ஸந்தி -இருக்கிறார்களோ –
ஸதோ வா நா நுவர்த்தஸே-இருக்கும் நல்லோர்களைத்   தான் நீ அநு வர்த்திப்பது இல்லையோ
ததாஹி -என் எனில்
விபரீதா தே புத்திர்  -உன்னுடைய அறிவு சாஸ்திர முறைக்கு மாறுபட்டதாயும்
ஆசார வர்ஜிதா -நன்னடைத்தையோடு கூடி இராததாயும் இருக்கிறது –

அவதாரிகை –
பிராட்டி ராவணன் தன்னை நோக்கிப் பிதற்றின பரப்பைக் கேட்டு
கோப கிருபைகள் பிறந்து
ஹிதம் சொன்னால் மீண்டான் ஆகில் -அங்கு ஆகாது என்று விலக்குவார் இல்லையோ –
அவர்கள் இரங்கும்படி அநு வர்த்தியாயோ –
அப்படி இருந்தது காண் உன் புத்தியும் அனுஷ்டானமும் -என்கிறாள் –

வியாக்யானம் –
1-இஹ –
நல்ல மனிதர் நடையாடாதபடி ராஷச பூயிஷ்டமான இந்த தேசத்திலே
2-இஹ –
பள்ளரும் பறையருமாய்ப் பத்துக் கோடி பிரஜா வர்க்கம் நடையாடுகிற இத் தேசத்தில்
3- இஹ -உட்படை வீடும் புறப்படை வீடும் படங்கும் பாளையுமுமாய்ப் பெரும் பரப்பான இத் தேசத்தில்
4- இஹ –
உண்பாரும் உடுப்பாரும் பூசுவாரும் முடிப்பாரும் நல்லது தீயது அறிந்து இருக்கிற இத் தேசத்தில்
5-இஹ –
அக்னி ஹோத்ராச்ச வேதாச்ச ராஷசா நாம் க்ருஹே  க்ருஹே -என்றும்
சுஸ்ராவ  ப்ரஹ்ம கோஷாம்ச்ச விராத்ரே ப்ரஹ்ம ரஷ ஸாம்-சுந்தர -18-2-என்றும்
ஓதுவார் ஒத்துச் சொல்லுவாராய் வேத வைதிக மர்யாதை நடத்துகிறதாக பாவிக்கிற இத் தேசத்திலே
6-இஹ –
தபஸ் சந்தா பலப் தஸ்தே சோயம் தர்ம பரிக்ரஹ -சுந்தர -51-25-என்றும்
ப்ராப்தம் தர்மபலம் தாவத் பவதா -சுந்தர -51-29-என்றும்
தபஸ் சந்தப்த பலமும் அறிந்து நடத்துகிற இத் தேசத்தில் –
7-இஹ –
ராஜாக்களும் மந்த்ரிகளும் புரோஹிதரும் சடங்கிகளும் சிஷ்டர்க்களுமாய்ப்
பாரிப்புண்டான இத் தேசத்திலே

இப்பாரிப்புக்கு இப்பொது வந்த குறை என் -என்னில்
1-சந்தோ  ந -நல்லோ இல்லை –
பதர்க்கூடு  உண்டத்தனை போக்கி சார பூதரைக் கண்டிலோமே –
2- சந்தோ ந -நல்லோர் இல்லை –
பரா நர்த்த பரரான ப்ரஹச்த தூம் ராஷ வஜ்ரதம்ஷ்ட்ர பிரமுகரான  அசத்துக்களைக் கண்டோம் இத்தனை –
பரஹித பரராய் சத்தை யுண்டாக்குகிற சத்துக்களைக் கண்டிலோம் –
3-சந்தோ ந ஸந்தி -உள்ளவர் இல்லை –
அஸ்தி ப்ரஹ்மேதி  சேத வேத சந்தமே நம் ததோ விது -தை -ஆனா -6-என்று
பகவத் ஜ்ஞானத்தாலே தாங்களும் உளராய் பிறரையும் உண்டாக்குமவர்கள் இல்லையாய் இருந்தது –
4-சந்தோ ந -நல்லோர் இல்லையா –
ஒரு சத்து உண்டானால் த்வாம் து திக் குல பாம்சனம் -யுத்த -16-15-என்று எண்ணித் தள்ளிக் கதவை யடைப்பார்களோ
பலர் உண்டாகில்   இ றே ஈடேறலாவது-
அப்படிக்குப் பலர் இல்லையாய் இருந்தது –
தம் சந்த ச்ரோ துமர் ஹந்தி சதசத் வ்யக்தி ஹேதவ -ரகுவம்சம் -1-10-என்று
சார அசார விவேகிகள் இல்லையோ –

சிறிது நிரூபியா -வா என்று -அல்லது -என்று பூர்வ பஷத்தை வ்யாவர்த்திப்பிக்கிறாள்
வா -இல்லை என்ன ஒண்ணாது-
இல்லை என்ன ஒண்ணா தாகில்   சொல்லும்படி என் என்னில்
ஸந்தி -உண்டே
1-ஸந்தி –
இப்படை வீட்டிலே இத்தனை விஜய சம்பத் புத்ராதி சம்ருத்தி யுண்டாகையாலே
இதுக்கடியான தர்ம அனுஷ்டானமும்
அதுக்கு உபதேஷ்டாக்களான சத்துக்களும் உண்டாக வேணும் –
அப்படி ஆகாத போது அகாரண கார்யோத்பத்தி பிரசங்கம் வரும்
2-ஸந்தி –
சத்துக்கள் என்று சில ஜாதி அன்றே –
அநீதியைச் சொல்லுதல் – செய்தல் -செயலில் போந்து இ றே அசத்துக்கள் ஆவது
சதர்த்தோ பதேசம் பண்ணின போது சத்துக்கள் இ றே
ஆகையாலே அவனுக்கு நல் வார்த்தை சொன்ன
அகம்பன -மாரீச -மால்யவத் -கும்பகர்ண -விபீஷண-ப்ரப்ருதிகள் உண்டாகையாலே சத்துக்கள் உண்டே
3- ஸந்தி
சத்தா மாத்ரமே உள்ளது
கார்யகரத்வம் இல்லை —
சத்தை யுண்டாகில் உபதேசியார்களோ -என்ன –
1-ஸதோ வா நா நுவர்த்தஸே-நல்லோருக்கு சுஸ்ருஷை செய்வது இல்லையா –
உண்டானாலும்
நா ப்ருஷ்ட கஸ்யசித் ப்ரூயாத் -மனு -2-110-என்றும் –
ப்ரணி பாதேன பரி ப்ரச் நே ந சேவயா உபதேஷ்யந்தி -ஸ்ரீ கீதை -4-34- என்றும்
ப்ரணிபாத ப்ரச்நாத் யநுவர்த்த நம் பண்ணிக் கேட்டால் இ றே அவர்கள் சொல்லுவது
அப்படிக்கு அநு வர்த்தி யாகாதே –
2-ஸதோ வா நா நுவர்த்தஸே-
த்ரிவர்ஷ பூர்வ ச்ரோத்ரி யோ அபிவாத ந மர்ஹதி -ஆபஸ்தம்ப -1-14-13-என்றும்
ஜ்ஞான விஜ்ஞான சம்பன்னா பக்தி மந்தோ ஜநாரத்தநே
ப்ரண ந்தவ்யா விசேஷேண சாத்விகைர் தர்ம சாரிபி -என்றும்
தண சேறை எம்பெருமான் தாள் தொழுவார் காண்மின் என் தலை மேலாரே -பெரிய திருமொழி -7-4-1-என்றும்
யோகா அநு வர்த்தனம் விஹிதமாய் இருக்க அது செய்யாய் ஆகாதே -என்கிறாள் –
3- ஸதோ வா நா நுவர்த்தஸே-
அப்ரியஸ்ய து பத்யஸ்ய வக்தா ச்ரோதா ஸ துர்லப -யுத்த -26-21- என்றும்
துர்லபோ மாநுஷோ   தே யாவது
பெற்று வைத்து அழைக்கிறாய் ஆவது ஆகாதோ –
4-ஸதோ வா நா நுவர்த்தஸே–
பூர்வ அவஸ்தையில் இரங்கும்படி ப்ரணி பத்யாபி வாத்ய ஸ -ஸ்ரீ விஷ்ணு  -1-1-1- என்று அநு வர்த்திக்க வேணும்
உத்தர அவஸ்தையில் க்ருதஜ்ஞனாகையாலே
த்வத்தோ ஹி வேதாத்யய நமதீ தமகிலம் – ஸ்ரீ விஷ்ணுபுராணம் -1-1-2-என்றும்
என்னைத் தீ  மனம் கெடுத்தாய்  உனக்கு என் செய்கேன் -திருவாய் -2-7-8-என்றும் அனுவர்த்திக்க பிராப்தம் -அது செய்யாகாதே –
5-நா நுவர்த்தஸே–
ப்ரத்யஷ குரவே ஸ்துத்யா-என்று ஸ்தோத்ரம் பண்ண வேண்டி இருக்க
சோஹம் பருஷிதஸ்  தேன தாசவச்சாவ மா நித –யுத்தம்-17-16-என்று நிந்திப்பாயாகாதே –
அன்றியிலே
-6-நா நுவர்த்தஸே-
பிரணி பாதாதிகளை ஒழிய -யதாதே தேஷு வரத்தே ரந்ததா தேஷு வர்த்தேதா -தைத்சீஷா -11- என்றும்
யத் யதா சரதி ஸ்ரேஷ்டஸ் தத் ததே வேதரே ஜநா -ஸ்ரீ கீதை -3-21- என்றும்
பேசிற்றே பேசலல்லால் -திருமாலை -22- என்றும்
கௌரவர் சொன்ன வார்த்தையும் -அஞ்செய்-அழகியது -என்று
நாடி அப்படிக்கே செய்யா யாகாதே என்றுமாம் –
7-சதோ வா நா நுவர்த்தஸே-
அவர்கள் சத்தை யுண்டானபோது சொல்லி அல்லது நில்லார்கள் –
நீ அனுஷ்டியாகாதாய் இருந்தது –

நேற்று வந்து நின்றாள் -அநு வர்த்திப்பனோ அநு வர்த்தியானோ என்று அறிந்த படி என் -என்ன
1-ததாஹி –
அப்படி இருந்தது காண்-ஸூ பிரசித்தம் –
2- ததாஹி –
சம்ப்ரதிபத்திலேயாய் இவ்வர்த்தத்தில் விப்ரதிபத்தி யுண்டோ
சர்வ லோக பிரதிபன்னம் அன்றோ -ஹி-அனைவருக்கும் உடன்பாடு
3- ததாஹி –
ஹி தேஹ தௌவா தேதாத் வாத -என்று அநு வர்த்தியாய் என்கிற சாத்தியத்துக்கு ஹேது சொல்லுகிறாள் ஆகவுமாம் –
4- ததாத்வாத் –
அப்படி யாகையாலே -ததாத்வாத் -என்று தச் சப்தம் பிரக்ருத பராமர்சியாகையாலே கீழ்ச் சொன்ன சாத்தியத்தை பராமர்சித்து
அநு வர்த்தியாமையால் -என்றபடி இ றே
அப்போது அநு வர்த்தியாமல் என்ற ஹேது சாத்யாவிசிஷ்டம் ஆகாதோ என்னில் ஆகாது
பிரக்ருத பராமர்சத்துக்கு குறை இல்லை
பிரகிருதம் தான் உகதம் என்றும் புததுச்தம் என்றும் இரண்டு –
1-விபரீதாதே புத்தி -என்று லஷ்யமாணமாயே புத்திஸ்திதையாய்
பிரக்ருதத்தைப் பராமர்சிக்கையாலே ஒரு குறை இல்லை
எங்கனே என்னில்
அநு வர்த்த நாபாவ சாத்யமாயும் புத்திவை பரீத்ய ஹேதுவாயும் இருக்கையாலே சாத்யாவிஷிஷ்டம் ஆகாது
ததாத்வாத் -தனக்குப்   பொருளாய் வைத்தது என் என்னில்
உன்னுடைய அநு வர்த்தனத்துக்கு சாதனமாய் இருப்பதொரு ஹேதுவை உடைத்தாகையால் -என்றபடி –
ததாத்வாத் என்று புத்திஸ்தத்தை அருளிச் செய்தது இத்தனை அன்றோ -அந்த ஹேது ஏது என்னில்
2-விபரீதாதே புத்தி
உன்னுடைய புத்தி விபரீதையாய் இரா நின்றதே
நதி பூரத்தைக் கண்டு பர்வத பர்சரத்தில் வ்ருஷ்டியை அநு மிக்குமா போலே
தவ புத்திவை பரீத்யாத் -என்று காவ்யா லிங்கா நு மானம் சொல்லுகிறாள் –
3- விபரீத புத்தி –
சாஸ்திர விஹித பிரகாரத்துக்கு விருத்தமாய் இரா நின்றது
4- விபரீதா –
பரதார பரத்ரவ்ய பர ஹிம்சாதிகள் நிஷித்தமாய் இருக்க
அவை கர்த்தவ்யங்கள் என்று நினைவு நடவா நின்றதே –
5- விபரீதா புத்தி –
புத்த்யா ஹ்யஷ்டாங்கயா யுகத -கிஷ்கிந்தா -54-2-
சுஸ்ருஷா சரவணம் சைவக்ரஹணம் தாரணம் ததா ஊஹா போஹார்த்த விஜ்ஞானம் தத்தவ ஜ்ஞானம் சதீ குணா -அங்கதன் அறிவின் எட்டு குணங்கள் –
புத்திமான் மதுரா பாஷீ-அயோத்யா -1-13- என்றும்
உத்தாரக ஸூ ச்ரூஷாதிகளால் சம்பன்னை அன்றிக்கே இருந்ததே –
6- விபரீதா
புத்தி நாஸாத் ப்ரணச்யதி -ஸ்ரீ கீதை -2-63-என்று அநர்த்த ஹேதுவாயே இருந்தது
7-விபரீதா –
ப்ரீதம் துதிநம் ப்ரோக்தம் -என்று நாளாய் விஹதமான தினத்தை யுடையதாய் இருந்தது
அதாவது ஆயுர் ஹாநியை யுடைத்தாய் இருந்தது -என்கை-
8-தே புத்தி –
அறிவுடையாரை அநு வர்த்தியாதே இருக்கிற உன்னுடைய புத்தி
நீதிமான் புத்தி சமபன்னோ தீரோ தஷ ஸூ சிர் ந்ருப -என்று ராஜாக்கள் ஆகில் ஏவம் குண யுத்தராய் ப்ராப்தராய் இருக்க -அவை இல்லாத புத்தி –
9- தே புத்தி விபரீதா –
பிரக்ருதயா ராஷசோ ஹ்யேஷ-யுத்த -17-25- என்றும்
தவிவிதோ பூத சர்க்கஸ்து தைவ ஆசூர ஏவச விஷ்ணு பக்தி பரோ தேவோ  விபரீதச் ததா சூர –  ஸ்ரீ விஷ்ணு தர்மம் -109-74-என்றும்
புத்தி வைபரீத்யத்துக்குத் தகுதியான ஜன்மம் உடைய உன்னுடைய புத்தி –

என்னுடைய புத்தி விபரீதை என்று அறிந்த படி என் -அந்தர்யாமி யன்றே அறிவதற்கு -என்ன
1-ஆசார வர்ஜிதா –
அதுவும் கார்ய கல்ப்யம் அன்றோ என்கிறான் –
2- ஆசார வர்ஜிதா –
ஆசாரம் ஆவது -சுருதி சம்ருத்தி விஹித வர்ணாஸ்ரம நிஷ்டா நுஷ்டானம்
அது உன் பக்கல் கண்டிலோமே
3- ஆசார வர்ஜிதா –
இது முற்பட இல்லை என்ன ஒண்ணாது
பர தார பர தேவதா த்ரோஹாத்ய நாசாரம் ப்ரத்யஷ சித்தமே
4-புத்திராசார வர்ஜிதா -என்னா நின்றாய்
புத்தியாவது ஆந்திர வியாபாரம்
ஆசாரமாவது பாஹ்ய காயிக வியாபாரம்
ஆனால் சாமா நாதி கரண்யம் கூடுமோ என்னில்
யத்தி மநஸா த்யாயதி தத் கர்மணா கரோதி -என்றும்
ஜ்ஞாதே ஹீச்சா இஷ்டே ஹி ப்ரவ்ருத்தி -என்றும்
புத்தியை ஒழியக் கர்மம் கூடாமையாலும்
புத்தி பிறந்து அல்லது நில்லாமையாலும்
இவ்வவிநாபாவ சம்பந்தத்தை நினைத்து சம்பந்த ஹாநியை வர்ஜிதா -என்கிறது
5- புத்திராசார வர்ஜிதா –
பரதாராபஹாரம் காண்கையாலேஇதுக்கடியான புத்தி கண்டோம் இத்தனை
உன் புத்தியிலே சதாசாரம் இல்லை என்கிறாள்
ஆக இத்தால் துராசாரம் கொண்டு துர்ப்புத்தியை அநு மித்தேன்
புத்தியைக் கொண்டு சத்புத்தி ஜனகரான சத்துக்களை அநு வர்த்தியாய் என்னும் இடம் அநு மித்தேன் என்கிறாள்
6- ஆசார வர்ஜிதா –
நை நம் சூர்ய பிரதிபதி பார்ச்வே வாதி ந மாருத
ஜலோர்மிசாலீ தம த்ருஷ்ட்வா சமுத்ரோபி ந கம்பதே -பால -15-10-என்றும்
தரச்யதயபி புரந்தர -யுத்த -14-3- என்றும்
பிறந்தவன்று தொடங்கி சகல தேவதை களும் நிலை குலையும்படி இருக்கையாலே
முதலுக்கு இவ்வாஸ்ரயத்தில் ஆசாரம் புகுந்தமையும் இல்லை
என்றும் ப்ராக பாவமே இருந்தது
7- ஆசார வர்ஜிதா
ப்ராக பாவம் என்றால் மேல் ஒரு காலாகிலும் வரக் கூடும்  இ றே
அங்கன் இன்றியிலே ஆசாராத யந்த பாவமே யாய் இருந்தது
அத்யந்த பாவமாம் படி ஏன்
ப்ரஹ்மாவை நோக்கித் தபஸ் சைப் பண்ணுவது
ருத்ரனை நோக்கித் தபஸ் சைப் பண்ணுவதாய் சதாசாரம் பண்ணிற்றிலனோ என்னில்
8- புத்திராசார வர்ஜிதா –
சைத்யம் ஹியத சா பிரக்ருதிர் ஜலச்ய -என்று ஜல தத்வத்துக்கு சைத்யம் சவ பாவமாய் இருக்கச் செய்தே

உஷ்ண ஜலம் என்று அக்னி ஸ்பர்சத்தாலே ஔ ஷ்ண்யம் ஔ பாதிகமாமாப் போலே
இவனுக்கும் ஐஸ்வர்ய அவத்ய த்வாயுதாத்ய பேஷயா ஔபாதிகமா கசதாசாரம் வந்தேறி  இத்தனை
இவன் புத்திக்கு சதா சார ஹாநி ஸ்வத ப்ராப்தமே -என்கிறது
சந்த்ருஷ்டே திஸ்ருணாம் புராமாபிரி பௌ கண்டூலதோர்  மண்டல க்ரீடா க்ருத்த புன புரரூட சிரசோ வீரஸ்ய லிப்சோர்வரம்
யாச்ஞா சைதன்ய பிராஞ்சி யஸ்ய கலஹா யந்தே மிதஸ் த்வம் வ்ருணுத்வம்

வருண் விதபிபி தோ முகா நி சதா சக்ரீவ கதம் கதயதே -அனர்க்க ராகவம் -3-41-என்று
தபஸ் ஸூ பண்ணி சாந்தனாய் இருக்கிற போதகப்பட
பரா பேஷா தசையில் ஒரு முகத்துக்கு ஒரு முகம் தோஷ கலுஷிதமாய் விப்ரதிபத்தி பண்ணிற்று இ றே –

—————————————————————————————————————————————————————————————–

சா திர்யகூர்த்வஞ்ச ததாப்யத ஸ்தாத் நிரீஷமாணா  தம சிந்த்ய புத்திம
ததர்ச பிங்காதி   பதேர மாத்யம் வாதாத் மஜம் ஸூர்யமிவோத யஸ்தம் –சுந்தர -31-19-

சா -அந்த சீதா பிராட்டி
திர்யகூர்த்வஞ்ச ததாப்யத ஸ்தாத் -திர்யக்  ஊர்த்வம் ததா அத ஸ்தாத் அபி -பக்கங்களிலும் மேலும் அப்படியே கீழும்
நிரீஷமாணா  -பார்ப்பவளாய் இருந்து கொண்டு
அசிந்த்ய புத்திம-மனத்தால் எண்ணத் தகாத புத்தி யுடையவளாயும்
ததர்ச -பார்த்தாள்
பிங்காதி   பதே-வானவர் அரசனுடைய
அமாத்யம் -மந்த்ரியாயும்
தம வாதாத் மஜம்-வாயுவின் புத்ரனமாயுமுள்ள அந்த அனுமானை
ஸூர்யமிவோத யஸ்தம்-உதயஸ்தம் ஸூ ர்யம் இவ -உதய கிரியில் உள்ள   சூரியனைப் போலே-

அவதாரிகை —
அஸோக வநிகா மத்திய கதையான பிராட்டி ராவண ப்ரேரிதை களான ராஷசிகள் உடைய தர்ஜன பர்த்ச நாத்ய சஹாதையாலும்
ராம விரஹ வ்யசன அதிசயத்தாலும்
பிராண த்யாக வ்யவசித மனஸ் சையாய்
சிம்சூபா சாகி சாகா வலம்பி நியாய எழுந்து அருளி நின்ற சமயத்திலே திருவடி கண்டு
முன்பு பெருமாள் அருளிச் செய்த வை லஷ்ண்ய ஜாதங்களை  முழுக்கத் திரு மேனியிலே காண்கையாலே பிராட்டி என்று அறுதி இட்டு
அர்த்தகதி சம்பாஷிக்கில் பீத்யா சத்தா நாசம் பிறக்கும்
சம்பாஷியாதே மீண்டிடில் அவிதித வ்ருத்தாந்தை யாகையாலே சரீர விச்லேஷம் பண்ணக் கூடும் என்று
ஐ ந்த்ர வியாகரண பண்டிதன் ஆகையாலே தன் நெஞ்சாலே தர்க்கித்து
க்ரமச பொறுப்பிப்போம்-என்று நிர்ணயித்து
வாதோபஹதனைக் கீழே வைத்து தான் உன்னத பிரதேசத்திலே இருந்து தாரை பொழியுமா போலே
சிம்சூபா வருஷத்தின் மேலே இருந்து
ராஜோ தசரதோ நாம -சுந்தர -31-2-என்று தொடங்கி கதா சரீரத்தை அம்ருத தாரை யாக வர்ஷிக்க
சிரகாலம் அவநதியாலே ஸ்தப்தமான திருக் கழுத்தை மஹதா பிரயாசேன உன்னமித்து
பிராட்டி திருவடியைத் திருக் கண் சாத்தின படியைச் சொல்லுகிறது இஸ் ஸ்லோகம்
ஸ்லோகத்துக்கு வாக்யார்த்தம்
அவள் திருக் கழுத்தை இருமருங்கும் புரட்டி
மேலும் கீழும் பார்த்து
மீ ண்டு மேலே நோக்கிப் பாரா நின்று கொண்டு
உதயகிரி சிகரஸ்தனான ஸூ ர்யனைப் போலே
ஸூ கரீவ சசிவனான மாருதாத் ம்ஜனைக் கண்டாள் -என்கிறது-

1-சா –
பூர்வ ஷணத்திலே சரீர விநியோக அத்யவசாயம் பண்ணினவள்
2- சா –
மாரீச பரிப்ரமம் தொடங்கி உபரிதந  வ்ருத்தாந்தா நபிஜ்ஞையாகையாலே அத்யந்தம் விஷண்ணையாய் உள்ளவள் –
3-சா –
அருகே ஒரு சருகு இலை ஒசைப்படிலும் ஹ்ருதயம் குலைந்து பறை யறையா நிற்குமவள்-
4- சா –
ராவண கரருஹீதையான அன்று துடங்கி செம்பளித்த கண் விழிக்க அறியாதவள் –
திர்யக்-
திருக் கழுத்தை இருமருங்கும் புரட்டிப் பார்த்தாள்-
சிரகாலம் சேஷ்டியாக கழுத்தாகையாலே இப்போது  இருமருங்கும் விதேயமாக்கினாள்-
நம்முடைய அத்யவசாயத்தைக் கண்டு முலை எழுந்தார் வ்யசனம் முலை எழுந்தார்க்குப் பொறுக்க ஒண்ணாமை யாலே
திக் அங்கனைகள் சொன்ன வார்த்தையோ என்று இருமருங்கும் புரிந்து பார்த்தாள்-
ஊர்த்வம் –
சசி பரப்ருதிகளும் நம்மைப் போலே அகப்பட்டு பிராண த்யாக அத்யவசாயம் பண்ணி
மீண்டும் ஸ்வ ஸ்வ பர்த்தாக்களை ப்ராபித்தவர்கள் ஆகையாலே
இப்போது நம்முடைய அத்யவசாயம் தவரிக்கைக்காக அவர்கள் சொன்ன வார்த்தையோ -என்று மேலே பார்த்தாள் –
2- ஊர்த்வம் –
எழுந்த சப்தத்தின் யுடைய முழக்கத்தாலே
ஆகாச குண சப்த -என்கிறபடியே சப்த குணகமான ஆகாசம் செவிக்கு இனிதாகப் பழுத்துக் கொடுத்த பழமோ என்று பார்த்தாள் –

ச-காரம்
சமுச்சயார்த்தமாம் போது வஷ்யமாணமான திக் அந்தரங்கள்சேரச் சொல்ல வேண்டாவாகையாலே
பூர்வம் நிரீஷித்த பாகங்களைப் புநர் நிரீஷணம் பண்ணினாள் சம்பரமத்தாலே –

1-ததாப்யத ஸ்தாத் –
அப்படியே கீழும் -பார்த்தாள் –
தன் கால் அடியிலே இருந்து சிலர் ஒரு வார்த்தை சொல்ல சம்பாவனை இன்றிக்கே இருக்க
கீழே பார்க்கைக்கு உபபத்தி சொல்லுகிறது ததா சப்தம் –
க்ருத்ரரும் மஹா பூதங்களும் சொல்லக் கடவதாக முற்படவே கற்பித்தார்கள் -அந்த வாசனையாலே பார்த்தாள் –
அவேஷ மாணாம் பஹூசோ வைதேஹீம் தரணி தலம் -ஆரண்ய -52-45-
ககோத்தம வாநச்பதி கத ஸ்ரீ மான்  வ்யாஜஹார சுபாம் கிராம் -ஆரண்ய -50-2-
இதி சர்வாணி பூதானி கணச பர்யதே வயன் -ஆரண்ய -52-42-
2-அதஸ்தாத்-
தன்னுடைய கிலேச  அதிசயத்தைக் கண்டு ஆச்சி தன் வயிறு எரிச்சலாலே சொன்னாளோ என்று பார்த்தாள் –

அபி –
மீண்டு மேலே பார்த்தாள் –
கீழே சொன்னவற்றுக்கு சமுச்சயம் ஆனாலோ என்னில்
நிரீஷமாணா  என்கிற மேலோடு கடியாது
கண்டது கீழே யல்லாமையாலே-

நிரீஷமாணா  –
என்கிற வர்த்தமானத்தாலே சாதாராதிசயமாக வைத்த கண் வாங்கிற்று இலள்-என்கிறது
நிரீஷ மாணா ததர்ச -இத் யந்வய-

தம் –
என்கிற பதம் திருவடியினுடைய சர்வ அனுபவத்தையும் சொல்லுகிறது –

அசிந்த்ய புத்திம்-
திரு யுள்ளத்தில் இடமுடைமை திரு மேனியிலே நிழல் எழுகை –

ததர்ச –
சமுத்திர லங்கா நாத் யாயாசம் எல்லாம் போம்படி
ஸ்ரீ மத கடாஷத்தாலே பூரணமாகப் பார்த்தாள் –

பிங்காதி   பதேர மாத்யம் –
ஒரு மஹா ராஜாவினுடைய ஆணைக்கு கீழே இருந்தான் ஒரு மந்த்ரி என்னும் இடத்தை
அவன் தானாய் இருந்த இருப்பு கோட் சொல்லிக் கொடுத்தது
யாவன் ஒருவனாலே மஹா ராஜாவினுடைய பிங்காதி  பத்யமும்
தன்னுடைய அமாத்யத்வமும் பெருமாள் உடைய பிரதம கடாஷத்தினாலே உண்டாக்கப் பட்டது -அவனை –

வாதாத் மஜம் –
கண்டகத பிராணையான பிராட்டிக்கு திருவடி திருமேனி பொறுப்பித்த படியாலே
ரிஷி தென்றல் கன்று -காமதேனுவின் கன்று -என்கிறான் –

ஸூர்யமிவ-
பிரதிபஷம் கண்டு வெருவும்படி வீர்யம் புறப்பட்டுப் பரம்புகையாலே அந்த காரத்தில் ஆதித்யனைக் கண்டதுபோலே என்கிறான் –

வாதாத் மஜம் –
மகன் என்று சட்டை இட்டு வாராதே
காற்று தானே வந்ததாகில் கண் வைக்க ஒண்ணாதே
ரூபம்   அற்றும் -விரஹிதிகள் பொறுக்க ஒண்ணாது -காற்று –

உதய யஸ்தம்-
அபூதோபமை-
பழைய ஆதித்யனைப் போலே அன்றியிலே உதயகிரியிலே உதித்து
ராவணனுக்கு அஞ்சி செல்லா நில்லாதே உதயகிரியிலே காலூன்ற வல்லான் ஒரு ஆதித்யனைப் போலே திருஷ்டாந்தம் சொல்லலாம் –

——————————————————————————————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ இராமாயண தனி ஸ்லோக வியாக்யானம் -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை அருளிச் செய்தது –மித்ரமௌபயிகம் கர்த்தும்–சுந்தர – 21-19-/

January 23, 2015

மித்ரமௌபயிகம் கர்த்தும் ராம ஸ்தாநம் பரீப்ஸதா
வதம் சா நிச்சதா கோரம் த்வயாசௌ புருஷரஷப –சுந்தர – 21-19-

மித்ர மௌ பயிகம் கர்த்தும்-மித்ரம் கர்த்தும் ஔ பயிகம் -நண்பனாகச் செய்து கொள்ளத் தகுந்தவர் –
ராம -ஸ்ரீ ராம பிரான்
ஸ்தாநம் பரீப்ஸதா-உன் குடியிருப்பை விரும்புகிறவனாயும்
வதம் சா நிச்சதா கோரம் -கோரம் வதம் அ நிச்சதா -பயங்கரமான சாவை விரும்பாதவனாயும் இருக்கிற
த்வயா -உன்னாலே
அசௌ புருஷரஷப -இந்த புருஷ ஸ்ரேஷ்டரான-
அவதாரிகை –
அசோகவ நிகையிலே எழுந்து அருளி இருக்கிற பிராட்டி சந்நிதியிலே ராவணன் சென்று
தன்னுடைய அபி ஜன வித்யா விநோதங்களில் நாட்டாரைக் காட்டில் தனக்குள்ள மினுக்கத்தைச் சொல்லியும்
பஹூ விதமான ஷேத்ர தன தான்ய ரத்ன வஸ்த்ர பூஷண பரிகர பரிபர்ஹா   தாச தாசிகளைத் தருகிறேன் என்றும்
பிராட்டி நிலை பேர்க்கலாமோ என்று ஏற்றி வார்த்தை சொல்ல
பிராட்டியும் இவன் சொல்லுகிறவை ஒன்றையும் பாராதே இவனுடைய அனர்த்தத்தையே பார்த்து
இவனுக்கு ஒரு நல் வார்த்தை சொல்லுவார் இல்லாமை இ றே இவன் இப்படி பிதற்றுகிறது என்று
ஆசார்ய பரம்பரா வதியாய் பரமாசார்ய பூதை யாகையாலே இவனுக்கு ஹிதம் சொல்லுகிறாள்
சொல்லுகிற இடத்தில்
த்ருண மந்தரத க்ருத்வா -சுந்தர -21-3-என்று
1-பரபுருஷ முகம் பார்த்து வார்த்தை சொல்லக் கடவதல்ல என்னும் மர்யாதையாலே யாதல்
2-த்ருணத்தோ பாதியும் அவனை மதியாமையாலே யாதல்
3-அசேதனமான இத்துரும்பு  பிரதிபத்தி பண்ணினால் அன்றோ நான் சொன்ன வார்த்தையை இவன் பிரதிபத்தி பண்ணுவது என்னும் நினைவாலே யாதல்
4-யம் தவம் தேவி நிரீஷசே ஸ குலீன ஸ புத்தி மான் -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-9-என்று தான் பார்த்தவர்கள் புத்தி யுக்தர்ஆவார்கள் என்னும் நினைவாலே யாதல்
5- பெருமாள் துரும்பைக் கொண்டு காகத்தை ஓட்டினால் போலே இவளும் இத்துரும்பைக் கொண்டு இவனை ஓட்ட வேணும் என்னும் நினைவாலே யாதல்
6-ஸ்ருகாலசசம் போலே பசு பிராப்யனான நரி முயல் போலே -பிராணியை ஒத்த -உனக்குப் போக்யம் இது அன்றோ என்னும் நினைவாலே ஆதல்
7-சீதோ பவ ஹனூமத -என்று தாஹகமான அக்னியை சீதளமாகப் பண்ணப் புகுகிறாப்   போலே  -அசேதனமான துரும்பை சேதனமாகப் பண்ணுவோம் என்னும் சங்கல்பத்தாலே ஆதல்
8-ஆசன்னமாய் -அருகில் இருக்கும் இவனுக்கும் நமக்கும் ஒரு வ்யவதானம் -தடை -வேணும் என்னும் நினைவாலே ஆதல்
9-துரும்பைத் தூணாக்கி அத்தூணில் நின்றும் ராகவ சிம்ஹத்தைப் புறப்படுவிக்க வேணும் என்னும் நினைவாலே யாதல்
10-மித்ர மௌ பயிகம் -அநிச்சதா-என்று சொல்லப் புகுகிற இவள் வீர பத்நியாகையாலே இப்புல்லைக் கவ்வி
அவ்வாண் பிள்ளை காலிலே விழ என்னும் நினைவாலே யாதல்
11- என்னைப் போரப் பொலியச் சொன்ன உன்னையும் நீ அடுக்கின தன தான்ய ரத்ன வஸ்த்ராதிகளையும் இத் துரும்போ பாதி காண் நினைத்து இருப்பது
என்னும் நினைவாலே யாதல்
துரும்பை முன்னே பொகட்டு
நாஹ மௌபயிகீ பார்யா பர பார்யா சதீ தவ -சுந்தர -21-6-என்று
இத்துர் புத்தி உனக்கு ஆகாது காண்
ஸ்வேஷூ தாரேஷூ ரம்யதாம் -சுந்தர -21-8-என்று உனக்கு வகுத்த பெண்டுகள் வயிறு எரியாதபடி அவர்களோடு பொருந்தி  வர்த்திக்கப் பாராய் -என்று சொல்லி
இஹ சந்தோ நவா ஸந்தி-சுந்தர -21-9-என்று
பள்ளரும் பறையருமாய்ப் பெரும் பரப்பான இத்தேசத்துக்கு உள்ள ஒருவன் அனர்த்தப் பட்டால்
இங்கனே செய்யல் ஆகாது காண் என்று ஹிதம் சொல்லி மீட்கைக்கு ஒரு நன் மனிதர் இல்லை யாகாதே –
வா ஸந்தி ஸ்ரீ விபீஷண ஆழ்வான் தொடக்கமான பரம தார்மிகர் உண்டாகையாலே சத்துக்கள் இல்லை என்ன ஒண்ணாது –
உண்டு
சதோ வா நா நுவர்த்த சே – என்றும்
பிரணி பாதேன பரி பிரஸ்நேந சேவயா உபதேஷ் யந்தி -ஸ்ரீ கீதை -4-84-என்று
தங்கள் காலிலே குனிந்து அனுவர்த்திக்கிறவர்களுக்கு இ றே அவர்கள் நல்லது சொல்வது
அப்படிக்கு அவர்கள் காலிலே குனிந்து அறியாயோ
அடியே தொடங்கிநீ இவ் ஊரில் இருந்தவள் அல்ல -நேற்று வந்த நீ குனியேன் என்று அறிந்த படி என் என்ன
ததாஹி விபரீதா தே புத்தி -உன் புத்தியின் பொல்லாங்கு தானே அதைச் சொல்லுகிறது காண் என்ன
புத்தியின் பொல்லாங்கு அறிக்கைக்கு நீ அந்தர்யாமி அன்றே -என்ன
ஆசாரவர்ஜிதா -உன்னுடைய அனுஷ்டானத்தாலே அநு மித்தேன் காண் என்று
ஹிதம் சொல்லுமவர்கள் சொல்லாத படியான இவனுடைய துராசாரத்தைக் கண்டு வெறுத்து
இனி ஒருவரையும் அநு வர்த்திக்க வேண்டா –
அனுவர்த்தன நிரபேஷமாக நான் உனக்கு ஹிதம் சொல்லுகிறேன்
நான் சொன்னபடியே அனுஷ்டிக்கப் பாராய் -என்கிறாள் –

வியாக்யானம் –
ஆமாகில் அனுஷ்டிக்கிறேன் -அந்த ஹிதம் தன்னைச் சொல்லல் ஆகாதோ -என்ன
1-மித்ரமௌபயிகம் கர்த்தும் ராம –
பெருமாளோடு உனக்கு விரோதம் பண்ணினால் பலியாது
அவரோடு உறவு பண்ணக் காண் அடுப்பது -என்கிறாள் –
2-மித்ரமௌபயிகம் கர்த்தும் ராம –
தீரக் கழிய அபராதம் பண்ணின உனக்கு அவர் திருவடிகளிலே சரணம் புக வேணும் காண்
மித்ரம் என்னா நிற்கச் செய்தே சரணம் என்பான் என் என்னில்
மேல் ஸ்லோகத்தில்
விதித சஹி தர்மஜ்ஞ  சரணாகத வத்சல தேந மைத்ரி பவது தே -சுந்தர -21-20-என்று
அவர் சரணாகத வத்சலர் காண் ஆனபின்பு நீயும் சரணம் புகை என்ற அர்த்தத்திலே மைத்ரி சப்த பிரயோகம் பண்ணுகையாலே –
சரண சப்த பர்யாயமாகக் கடவது –
அர்ச்சனம் வந்தனம் தாஸ்யம் சகயம் ஆத்மநிவேதனம் -பாகவத -7-5-23-என்று
சக்யத்தை பக்தி பிரகாரமாகவும் சொல்லிற்று இ றே
ஆகையாலே அவரை சரணம் புகை -என்கிறாள் –
தமேவ சரணம் கச்ச சர்வ பாவென பாரத -ஸ்ரீ கீதை -18-62-என்று பிராட்டியைப் போலே தார்மிகராய் இருப்பார் வேறு சிலரும் இப்பாசுரம் சொன்னார்கள் இ றே
ஆனால் நேர் கொடு நேர் சரணம் என்னாதே -மித்ரம் என்பான் என் என்னில்
ஷூத்ரரைப் போலே தம்தாமை உயரப் பார்த்து பிறரை தண்ணியராகசொல்லும்படியான புன்மை இல்லாத பிராட்டி நீர்மையாலே சொல்ல்லுகிறாள்
இவள் அன்றே இப்படி சொன்னாள்-
பெருமாள் தாமும் ராஷசனை மித்ர பாவேன-யுத்தம் -18-3-என்றும்
ஒரு குரங்கை சகா ஸ மே-என்றும்
ஒரு ஒட்டையோடக் காரனை ஆத்மசக சகா -யுத்தம் -128-4 என்றும்
உகந்த தோழன் நீ -பெரிய திரு -5-8-1- என்றும் அருளிச் செய்தார் இ றே
இன்னம் ஒரு ஆகாரத்தாலே மித்ர சப்தம் சொல்லுகிறாள்
அது என் என்னில்
ந நமேயம் -யுத்த -36-13-என்று வணங்கமில் அரக்கனை துர்மாநியான இவனை சரணம் புகை என்றால் இசையான் என்னுமத்தாலே தோழமை கொள்ளாய் என்கிறாள்
3-மித்ரமௌபயிகம் கர்த்தும்-
மிதாத் த்ராயத இதி மித்ரம் -என்று-ஞிமிதா சிநேக நே –என்கிற தாதுவிலேயாய்
பெருமாளுக்கு த்வேஷ விஷயம் ஆகாதே சிநேக விஷயமாகை அழகிது காண்
நேராக இவருக்கு சத்ருவுமாய் பிரபலனுமாய் இருக்கிற நான்
சாபேஷனாய் பெருமாளுக்கு த்வேஷ விஷயமாகாதே இவர் பக்கல் உறவு கொண்டாடப் புகுகிறேனோ -என்ன
4-மித்ரமௌபயிகம் கர்த்தும்-
இப்படி ப்ராதி கூல்யம் பண்ணின உனக்கு பத்தும் பத்தாக உறவு செய்தற வேணும் காண்
இது பண்ணினால் பிரயோஜனம் என் என்ன
5-மித்ரமௌபயிகம் கர்த்தும்-
உன் பிராண ரஷணத்தில் விநியோகம் கொள்ளலாம்
ஔ பயிகம் -உபாய
இம்மித்ர கரணம் உன்னுடைய உஜ்ஜீவனத்துக்கு உபாயம்
உபாயாத் ஹ்ரச்வத் வஞ்ச -என்று உபாய சப்தம் உபய சப்தமாய் ஸ்வார்த்தே டக்காய் இகா தேசமாய் ஆதி வ்ருத்தியாய் அகாரலோபமாய் ஔ பதிகம் என்று பதம் ஆகிறது
இப்படிக்கு இது உபாயம் என்னும் இடம்
ஸ்தானம் பரீப்சதா வதஞ்சா நிச்சதா -என்று மேலே பலம் சொல்லுகையாலே ஸ்பஷ்டம் இ றே

ஆனால் நான் உறவுக்கு இசையைக் கொள்ள முகம் தாராதே பிரதாபிகளாய் உதறிலோ -என்ன
1- ராம -வரையாதே பொருந்தும்படியான நீர்மை  யுடையவர் காண்
2- ராம –
கை வர்த்தரோடும் காகத்தோடும் குரங்கோடும் உறவு செய்கிறவர் இத்தனை யோக்யதை யுடைய உன்னை விடுகிறாரோ
3- ராம –
நீ அல்லேன் என்னிலும்
யதி வா ராவண ஸ்வயம்  ஆநயைநம் -யுத்த -18-25- என்று அழைத்து விடுவது
ஆபத்து முடுகினவாறே
கச்ச -யுத்த -59-143 என்று விட்டு அடிப்பதாகிற பெருமாள்
இத்தனை நீ இசைவாய் ஆனால் விடுகிறாரோ
4- ராமோ மித்ரம் கர்த்தும் ஔ பபிகம் –
துர் ஹ்ருதயராய்துர்  உபதேஷ்டாக்க்களுமான ப்ரஹச்தாதிகளை விட்டு
ஸூ ஹ்ருதம் சர்வ பூதா நாம் –ஸ்ரீ கீதை -5-29- என்றும்
நிவாச சரணம் ஸூ ஹ்ருத்  -ஸூ பால -என்றும் சொல்லுகிற
சர்வ பூத ஸூ ஹ்ருத்தான பெருமாளோடு உறவு செய்யப் பார்
5- ராம –
ராமயதீதி ராம
நேய மஸ்தி புரி லங்கா ந யூயம் ந ஸ ராவண -சுந்தர -43-25-என்று
உன்னை விட்டு அகன்று நிற்கிற உன்னுடைய ஊரும் உறவு முறையும் உன்னுயிரும் உன் பக்கலிலே
பழைய படியே பொருந்தும்படி பண்ண வல்லர் காண்

பண்டே என்னதாய் இருக்கிற வற்றை இவர் பொருந்தும்படி தரிக்கப் பண்ண வேணுமோ என்ன
1-ஸ்தாநம் பரீப்ஸதா வதம் சா நிச்சதா –
இதுக்கு முன்பு உன்னதே யாகிலும்
உன் குடி இருப்பும் பிராணனும் மேலும் வேண்டி இருந்தாய் ஆகில் அவரைப் பற்ற அடுக்கும் –
2-ஸ்தாநம் பரீப்ஸதா-
ஸ்தானம் -ஆவாச -இருப்பிடம்
அபி ஷிச்ய ஸ லங்கா யாம் ராஷா சேந்தரம் விபீஷனம் -பால -1-85-என்று
உன் தம்பிக்கு இப்படை வீடு கொடுக்க வாயிற்று புகுகிறார்
அது செய்யாதபடி
நீயே இப்படை வீடு ஆளவேண்டி இருந்தாய் ஆகில் -என்றுமாம்
3-ஸ்தாநம் பரீப்ஸதா-
ஸ்தானம் -ஸ்திதி -நிலை நிற்பது
தரீன் லோகன் சம்பரிக்ரம்ய- சுந்தர -38-33- என்று
காக்கை போலே கண்ட இடம் எங்கும் பரந்து திரியாதே நிலை கொள்ள வேண்டி இருந்தாய் ஆகில் -என்றுமாம் –
4-ஸ்தாநம் பரீப்ஸதா
ஸ்தானம் -சமஸ்தானம் அதாவது சதுரங்க பரிகரமும் நீயும்
கோப்புக் குலையாமல் இருக்க வேண்டி இருந்தாய் ஆகில் -என்றுமாம் –
5- ஸ்தாநம் பரீப்ஸதா-
ஸ்தானம் -அதிஷ்டானமாய் -ஆஸ்ரயம் –
ஸவாம்ய மாத்ய ஸூ ஹ்ருத் கோசாதி யாகிற
ப்ரஹச்தாதி மந்த்ரி வர்க்கமும் கும்பகர்ண இந்த்ரஜித் பிரமுகரான பிராத்ரு புத்ராதி வர்க்கமும்
தேடித் படைத்த அர்த்தமும்
இது நெடும் காலம் குடியாக்கின படை வீடும் ஆகிற இவ் வதிஷ்டானம் குலையாமல் இருக்க வேண்டி இருந்தாய் ஆகில் என்றுமாம்
படை வீடும் அதிஷ்டானமும் பார்த்து இருக்கிறேனே
வேறே ஓர் இடத்தில் போயிருக்கிறேன் என்ன
ஸ்தானம் பரீப்சதா –
பரித ஸ்தானம் ஈப்சதா -என்றும்
ரசாதலம் வாப்ரவிசேத பாதாளம் வாபி ராவண -பிதாமஹச காசம் வா ந மே ஜீவன் ஹி மோஷ்யதே-யுத்த -19-20-என்று
பூமி தன்னிலும் மலை மு ழைஞ்சுகளிலும் போகவுமாம்
உனக்கு ஜன்ம பூமியான பாதாளத்திலே போகிலுமாம்
உன்னை இப்படி வரம் தந்து வாழ்வித்த பிரம்மா லோகத்திலே போகிலுமாம்
அவ்வோ இடங்களில் உனக்கு உயிர் கொண்டு நிற்க ஒண்ணாது
சுற்றிலே போய் இருக்கப் பார்த்தாயாகிலும் அவர் உறவாக வேணும் காண்-

பிரசித்த ஸ்தலங்களிலே போயிருக்கிற போதன்றோ அவர் வேண்டுவது
அஜ்ஞாத வாசமாக ஓரிடத்திலே மறைய இருக்கிறேன் என்ன
1-வதம நிச்சதா –
உன்னை உயிர் உடன் விடில் அன்றோ நீ ஒளிந்து இருப்பது
அப்படி சாகாமல் இருக்கைக்கு வேண்டி இருந்தாய் ஆகிலும் அவரைப் பற்ற வேணும் –
2-வதம நிச்சதா –
ஒரு வ்யாத்யாதிகளால் பிறக்கிற மரணமொழிய ஒரு சத்ரு பலத்தினாலே புகுந்து தலை அறுப்புண்டாய் என்கிற பரிபவம் வாராதே ஒழிய வேண்டி இருந்தாய் ஆகில் என்றுமாம்
வீரனுக்கு சத்ருவின் கையில் படுகை அன்றோ தரம் -என்கிறாய் ஆகில் –
3- கோரம் வதம் நிச்சதா –
நாட்டாரைப் போலே சாமாறு சாம் போதும் அவரைப் பற்ற வேணும் காண்
4- கோரம் வதம் –
உன்னைக் கொல்லும் போதும் எளிதாக விடுவாரோ -ஆளை வரவிட்டு நிலை நாட்டி அந்த தூதனைக்
கொண்டு தறைக்கீடாகத் தோப்பை முறித்து உன் பசலைத் திருகி உன் ஓலக்கத்திலே மதியாதே புகுந்து
தன் நாயன் பெருமையையும் உன் தாழ்வையையும் சொல்லி
உன் படை வீடு பொறியும் புகை எழும்படி சுட்டுக் கரிக் கூடாக்கி மீண்டு வந்து விசேஷம் சொல்லும்படி பண்ணி
அனந்த பரிகரத்தை யுடைத்து
காண்பாரைக் காண்பித்துக் கொண்டு உன் ஆழிய நெஞ்சிலே கழித்தால் போலே உனக்கு நீர்ச் சிறையான கடலிலே
கல்லிட்டு அடைத்து பெரு வழி யாக்கி -குரங்குகளை கால் நடையே அக்கரைப் படுத்தி
உன் படை வீட்டை அடை மதிள் படுத்தி நீ ஆண்ட பரிகரம் அடைய வெறும் த்றையாக்கி
உன் உறவு முறையாரை மூக்கை அறுப்பது தோளைத் துணிப்பது காலைத் தறிப்பது தலையை அறுப்பதாய்
பனம் கனி உதிர்த்தால் போலே உன் தலைகளை உதிர்ப்பது
தோள்களை கழிப்பது உடலைத் துளைப்பது
இவ் வுதிரக்கு கூறையை உன் பெண்டுகளுக்கு கட்டுவதாக
கச்ச –யுத்தத் -59-143-என்று விட்டு அடிப்பதே
இப்படி சித்ரவதம் பண்ணிக் காண் உன்னை அவர் கொல்லுவது
இப்படிக்குக் கொடும் கொலை வேண்டிற்றிலை யாகில் அவரைப் பற்று என்றாகவுமாம் –

இவர் வெறுத்த மனிதர் இதற்கு முன் இப்படிப் பட்டார் உண்டோ -என்ன
1- த்வயா –
இப்படி வேறு ஒருவர் இத்தனை அபராத பண்ணினாரும் இல்லை
இப்படி பட்டவர்களும் இல்லை
ஆததாயியாய் அசஹ்ய அபசாரம் பண்ணிச் சித்ரவத ப்ராப்தனான உனக்கு இத்தனையும் வேணும்
2- ஸ்தானம் பரீப்சதா வதஞ்சா நிச்சதா த்வயா –
நீ இருக்குமாறு இருக்கும் போதும் அவர் வேணும்
நீ சாமாறு சாமபோதும் அவர் வேணும்

அவர் தாம் இங்கே சந்நிஹிதராக வேண்டாவோ -என்ன
1- அசௌ-
இந்தா இங்கே
இத்தால் இங்கே நிற்கிறார் -என்கிறாள்
2- அசௌ –
ராமமேவா நு பச்யதி -சுந்தர -16-25- என்றும்
ராமேதி ராமேதி சதிவ புத்தா விசிந்தய -சுந்தர -32-11- என்றும் எப்போதும் பெருமாளையே பாவிக்கையாலே
உரு வெளிப் பாடாய்த் தனக்கு எப்பொழுதும் சந்நிஹிதராய் இருக்கையாலே இவர் -என்று காட்டுகிறாள்
இவனுக்கு இதுக்கு முன் அவரோடு வாசனை இல்லாமையாலும்
சிநேக பூர்வா நுத்யானம் இல்லாமையாலும்
அந்ய பரநாகையாலும் தோற்றாது இ றே
பிரதி கூலனான மாரீசனுக்கு வாசனை யுண்டாகையாலே-வ்ருஷே வ்ருஷே ஹி பச்யாமி -ஆரண்யம் -39-14- என்று
பார்த்த பார்த்த இடம் எங்கும் பெருமாளாய்த் தோற்றிற்று இ றே-
ராவணன் தானும் பூசலிலே வாசனை பண்ணின பின்பு திருச் சரங்கள் நெஞ்சிலே பட்டு
ஸ்மரன் ராகவ பாணா நாம் – யுத்தம் -60-3- என்று நினைத்துக் கொண்டு பட்டான் இ றே –
3- அசௌ-உவர் –
சந்நிஹித தேச வர்த்த கால சம்பந்தியை இ றே -அயம் -இங்கே -எனபது
இங்கு புத்தியில் அதூரத்வத்தாலும் தேச கால விப்ர கர்ஷத்தாலும் அதூர விப்ர கர்ஷ வாசி யான அத-ச்ச் சப்தத்தாலே சொல்லுகிறாள் –
4-அசௌஇவர்
அச்யா தேவ்யா மனஸ் தஸ்மின் தஸ்ய சாஸ்யாம் ப்ரதிஷ்டிதம் -சுந்தர -15-52-என்றும்
உன்னைக் கொண்டு என்னுள் வைத்தேன் என்னையும் உன்னிலிட்டேன் -பெரியாழ்வார் -5-4-8- என்றும் சொல்லுகிறபடியே
இருவர் திரு உள்ளமும் இருவர் பக்கலிலே தட்டு மாறிக் கிடக்கையாலே பிராட்டிக்கு ஒரு போகியாகத்   தோற்றக் குறை இல்லைஇ றே –

ஆசன்னராக்கி அவரைப் பெறும்போது நான் பண்ணின விரோதங்களை நினைத்து விக்ருதரராய் இருக்கிறவர் என்னைக் கைக் கொள்ளுவாரோ -என்ன
1- புருஷர்ஷப –
செய்தார் செய்த குற்றங்களை நினைத்து இருக்குமவர் அல்லர்
பிழை அறியாத பெருமாள் கான் –
2- புருஷர்ஷப –
அவிஜ்ஞாதா -என்றும்
ந ஸ்மரத் யப காராணாம் சதமப்யாத் மவத்தயா -அயோத்யா -1-11- என்றும்
அபராதா நபிஜ்ஞ  சந் சதைவ குருதே தயாம் -என்றும் கவி பாட்டுக் கொண்டவர் காண்-
3- புருஷர்ஷப –
பிழை யறியாத வாழவே யல்ல
தோஷோ யத்யபி தஸ்ய ஸ்யாத்-யுத்த -18-3- என்றும்
குன்றனைய குற்றம் செயினும் குணம் கொள்ளும் -முதல் திரு -11-என்றும்
செய்த குற்றம் நற்றமாகவே கொள் ஞால நாதனே -திருச்சந்த -111-ளும் படியான உத்தம புருஷர் காண் –
பிழை அறியுமவன் -அதமன் -பிழை அறியாதவன் மத்யமன் -பிழையை நன்மையாக கொள்ளுமவன் உத்தமன் –
4- புருஷர்ஷப –
யதிவா ராவண ஸ்வயம் -யுத்த -18-33-என்றும்
கச்சா நு ஜா நாமி -யுத்தம் -59-143-என்றும்
பிரதிகூல தசையிலே யகப்பட உன்னை ரஷிக்கைக்கு அழைத்து விடுவது -போக விடுவதாகப் புகுகிறவர்
நீயும் அனுகூலித்தால் விடுவரோ –
5- புருஷர்ஷப –
நீ புருஷர்களில் அதமனாய் இருக்குமாபோலே காண்
அவரும் புருஷர்களில் உத்தமனாய் இருக்கும் படி –
6- புருஷர்ஷப –
புருஷோத்தம -என்றபடி
அதமனாகிறான் -செய்த குற்றத்தை நினைத்து இருக்க்குமவன்
மத்யமனாகிறான் -குற்றத்தை நாளோட்டத்தோடே பொறுக்குமவன்-
உத்தமன் ஆகிறான் குற்றம் காண்பான் என் மறப்பான் என் என்று முதலுக்குக் காணாதவன்
6- புருஷர்ஷப –
இப்படி அனுகூலியாத பஷத்தில்  அவருடைய சாரங்க வ்யாபாரத்தாலே  உனக்கு வ்யாபாதனம் என்று நினைத்து இரு –
7- புருஷர்ஷப –
அவருடைய கொம்பாலே உனக்குக் கொலை என்று நினைத்திரு –

இத்தால்
இவனுக்கு இப்படி உபதேசம்  பண்ணும் படியான பிராட்டியினுடைய
நீர்மையின் ஏற்றமும்
இப்படிப்பட்ட இந்த நீர்மையை யகப்படக் கை தப்பும் படியான
ராவணனுடைய பாப ப்ராசுர்யமும் சொல்லிற்று ஆயிற்று –

——————————————————————————————————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ இராமாயண தனி ஸ்லோக வியாக்யானம் -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை அருளிச் செய்தது –த்ருணமந்தரத க்ருத்வா–சுந்தர -21-3/

January 22, 2015

த்ருணமந்தரத க்ருத்வா பிரத்யுவாச ஸூ சிஸ்மிதா
நிவர்த்தய மநோ   மத்த ஸ்வ ஜநே ப்ரீயதாம் ம்ந  -சுந்தர -21-3-

த்ருணம் -புல்லை
அந்தரத -தனக்கும் ராவணனுக்கும் இடையிலே
க்ருத்வா -இருக்கும்படி செய்து
பிரத்யுவாச -பிராட்டி பதில் சொன்னாள்
ஸூ சிஸ்மிதா-பரி சுத்தமான புன்சிரிப்பை யுடையவளாய்
நிவர்த்தய-திருப்பிக் கொள்
மநோ -மனத்தை
மத்த -என்னிடத்தில் இருந்து
ஸ்வ ஜநே-உன் மனைவியர் இடத்தில்
ப்ரீயதாம் ம்ந-ப்ரீதி பண்ணட்டும்

த்ருணம் மந்தரத க்ருத்வா பிரத்யுவாச ஸூ சிஸ்மிதா
நிவர்த்தய மநோ   மத்த ஸ்வ ஜநே ப்ரீயதாம் ம்ந
அவதாரிகை –
ஸ்ரஸ்தா மால்யாம் பரதரோ வைதேஹீ மநு சிந்தயன் ப்ருசம் நியுக்தஸ் தச்யாஞ்ச மத நேந மதோத் கட -சுந்தர -18-4-என்று
உறங்கி உணர்ந்து எழுந்து இருந்த ராவணன் மதன பரவசனாய்
தீபிகா காஞ்ச நீ காச்சித் -சுந்தர -18-10-11-12-13-14-என்று
கனக தீபிகா களா சீ வாலவ்யஜன தாள வ்ருந்த  ப்ருங்கார சாமார ரமணீ யத்வஜ சத்ராதி பரி பர்ஹங்களைக் கொண்டு அங்க நா சதம் சேவிக்க
ராவணஸ் யோத்தமா ஸ் த்ரிய-சுந்தர -18-15-என்று பிரதான மகிஷிகளிலே சிலர் பின் செல்ல நிதர அசேஷ மந்த கதியாய்க் கொண்டு அசோகா வநிகையில் செல்ல

க்ருபாளுவான பெருமாளுக்கு -ராமஸ்ய வ்யவஸா யஜ்ஞா -சுந்தர -38-35-என்று கருத்து அறிந்த மகிஷி யாகையாலும்
தவம் மாதா சர்வ லோகா நாம -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-9-126-என்றும்
அகில ஜகன் மாதரம் -சரணாகதி கத்யம் -என்றும்
உபாய பூதஸ்ய வல்லபா ப்ராப்தி யோகி நீ -பாஞ்சராத்ரம் -என்றும்
லஷ்மீ புருஷ காரத்வே நிர்திஷ்டா பரமர்ஷிபி -பாஞ்சராத்ரம் -என்றும்
விசேஷித்து புருஷகாரம் ஆகிற சம்பந்தத்தாலும்
தன பரி பவங்கள் கிடக்க இவ்வநர்த்தத்தைக் கண்டு பிராட்டியும் இவன் சொன்னவற்றுக்கு பிரதி வசனமும்
ஹிதமும்
சொல்லுகிறார் இஸ் சர்க்கத்தாலே-

காமயே த்வாம் விசாலாஷி -சுந்தர -20-3- என்றும்
யத் யத் பச்யாமி தி காதரம் சீதாம் ஸூ சத்ருசா  நநே
தஸ்மின் தஸ்மின் ப்ருது ஸ்ரோணி சஷூர் மம நிபத்யதே -சுந்தர -20-15-என்றும்
ஸ்வ சாபலம் சொன்னவற்றுக்கு
நிவர்த்தய மநோ மத்த -21-3- என்றும்
சாது தர்ம மவே ஷஸ்வ ஸாது ஸாது வ்ரதம  சர – சுந்தர -21-7- என்றும்
பொல்லாங்குகளைத் தவிர்த்து நன்மைகளை ஆசரி என்று உத்தரம் சொல்லியும்
புங்க்க்ஷ்வ போகான் யதா ஸூ கம் -சுந்தர -20-35- என்றும்
ஏக வேணி தாரா சய்யா த்யானம் மலி நம்பரம் அஸ்தா நேப்யுபவாசச்ச நைதான் யௌபயிகா நி தே-சுந்தர -20-8- என்றும் சொன்னதற்கு
அகார்யம் ந மயா கார்யமேக பத்ன்யா விகர்ஹிதம்
குலம் சம்ப்ராப்தயா புண்யம் குலே மஹதி ஜாதயா-சுந்தர -21-4-என்றும்
நாஹம் ஔபயிகீ பார்யா பரபார்யா சதீ தவ  -சுந்தர -21-6 என்றும் உத்தரம் சொல்லியும்
அசக்ருத் சம்யுகே பக்நா நா  மயா விமருதி தத வஜா
அசக்தா ப்ரத்ய நீ கேஷூ ஸ்தாதும் மம ஸூ ரா ஸூ ரா -சுந்தர -20-20- என்று
தன் ஆண் பிள்ளைத் தனம் சொன்னதற்கு
ஜனஸ் தானே ஹதஸ் தானே நிஹதே ரஷ சாம்பலே
அசக்தேன த்வயா ரஷ கருதமேதத சாதுவை
ஆஸ்ரமம து தயோ ஸூ ந்யம் பிரவிச்ச நரசிம்ஹயோ
கோசரம கதயோர் ப்ராதரோ ரபா நீதா த்வயாதமா
நஹி கந்த முபாக்ராய ராம லஷ்மண யோஸ் த்வயா
சகயம் வந்தர்சனே ஸ்தாதும் ஸூ நா சார்தூல யோரிவ -சுந்தர -21-29/30/31-என்றும்
பெருமாள் கண் வட்டத்திலே நிற்கும் நீ தப்புவையோ
புலி முன்னே நிற்கும் நாய் போலே
பதினாலாயிரம் பேரைத் தனியே நின்று கொன்று சூறை யாடின -கூறை யாடின -தனி வீரத்துக்கு
பிரதிக்ரியையாக மாரீசனைக் கொண்டு நீ பண்ணின க்ருத்ரிமத்திலே கண்டிலோம்
அவ வாண் பிள்ளைகள் நாற்றம் கேட்டு நின்றால் பின்பன்றோ உன்னுடைய வெற்றியும் ஆண் பிள்ளைத் தனமும் காணலாம் -என்று
பெருமாளுடைய பிள்ளைத் தனமும் பேசி உத்தரம் சொல்லியும்
லோகேப்யோ யா நி ரத் நானி சம்ப்ரமத்யா ஹ்ருதா நி மே
தானி தே பீரு சர்வாணி ராஜ்யம் சைததத ஹஞ்ச தே -சுந்தர -20-18-என்றும்
யானி வைஸ்ரவணே  ஸூ ப்ரூ ரத் நானி ச தாநானி ச -சுந்தர -20-33-என்றும்
ராஜ்ய ரத்ன தான தான்ய பத்த நாதிகளைத் தருகிறேன் -என்று ப்ரலோபித்தற்கு
சக்பா லோபயிதும் நா ஹமைச் வர்யேண தநேந வா
அனந்யா ராக வேணாஹம் பாஸ்கரேண  பிரபா யதா -சுந்தர -21-15–என்றும்
யம் த்வம் தேவி நிரீஷசே ச ச்லாக்ய ச குணீ தன்ய ச குலீன ச புத்திமான் -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-9-131- என்றும்
மஹா தனத்தைப் பிரியாதே இருக்கிற என்னையா நாலு காசிட்டு வசீ கரிக்கத்தேடுதி -என்று உத்தரம் சொல்லியும்
பஹூ மன்ய ஸ்வ மாம் -சுந்தர -20-3- என்றும்
மாஞ்ச புங்ஷ்வ யதா ஸூ கம் -சுந்தர -20-33- என்றும் என்னையும் ஆதரித்துக் கொண்டு அணைய வேணும் காண் என்றதற்கு
உபதாய புஜம் தஸ்ய லோகா நா தஸ்ய சதக்ருதம் கதம் நாமோ பதாஸ்யாமி புஜமன் யஸ்ய கஸ்ய சித் -சுந்தர -21-16- என்று
அணிமிகு தாமரைக் கையை யந்தோ அடிச்சியோம் தலை மிசை நீ யணியாய்-திருவாய் -10-3-5- என்று
எல்லாரும் தலையாலே சுமக்கும் படியான உலகுடைய பெருமாள் தோளிலே தலைவைத்த நான்
வேறு ஒரு ஷூ த்ரனைத் தீண்டுவதோ -என்று உத்தரம் சொல்லியும்
பஹூ மன்யஸ்வ மாம் -சுந்தர -20-3-என்றும்
நஹி வைதே ஹி ராமச் த்வாம் த்ரஷ்டும் வாப்யுபலப்ச்யதே -சுந்தர -20-27- என்றும்
ந சாபி மம ஹஸ்தாத் த்வாம் ப்ராப்து மர்ஹதி ராகவ -சுந்தர -20-28- என்றும்
என் கையிலே அகப்பட்ட உன்னைப் பெருமாள் காணவும் கிட்டவும் வல்லரோ-என்பதற்கு
அப நேஷ்யதி மாம் பார்த்தா தவத்த சீக்ரமரிந்தம-
அ ஸூ ரேப்ய ஸ்ரீ யம் தீப்தாம் விஷ்ணுஸ் தரிபிரிவ க்ரமை-சுந்தர -21-28-என்று
அ ஸூரா பஹ்ருத ஸ்ரீ யை மீட்டால் போலே    உன்னெதிரே என்னையும் மீட்கப் புகுகிற படி பார் -என்று உத்தரம் சொல்லியும்
ருத்தும் மமா நு பசய த்வம் ஸ்ரீ யம் பதரே யசச்ச மே -சுந்தர -20-25- என்று
என் ஐஸ்வர்ய சம்பத் கீர்த்திகளைப் பாராய் -என்றதற்கு
சம்ருத்தா நி வினச்யந்தி ராஷ்ட்ராணி ந கராணி ச
ததேயம் த்வாம் சமா சாத்ய லங்கா  ரத்னௌ க சங்குலா  அபராதாத் தவை கஸ்ய நசிராத வின சிஷ்யதி -சுந்தர -21-12-என்று
நசியாத இவை யடைய நசிக்கப் புகுகிறபடி பார் -என்று உத்தரம் சொல்லியும்
நிஷிப்த விஜயோ ராமோ கத ஸ்ரீர் வன கோசர வ்ரதீ ஸ்தண்டி லசாயீ ச சங்கே ஜீவதி வா ந வா -சுந்தர -20-26-என்று
ப்ரஷ்டைச்வர்யராய் சத்தை தன்னிலே யகப்பட சந்தேஹிக்கும் படி இருக்கிறார்  -என்று சொன்னதற்கு
ஷிப்ரம் தவ ச நாதோ   மே ராம சௌமித்ரிணா  சஹ
தோய மல்பமிவாதித்ய ப்ராணா நா தாஸ்யதே சரை -சுந்தர -21-33- என்று
அவர் தம்பியும் தாமுமாக உன் தலையை அறுத்து ஸூகமாய் இருக்கப் புகுகிறபடி பாரீர் -என்று உத்தரம் சொல்லியும்
ந ராமஸ் தபஸா தேவி ந பலேன ந விக்ரமை
ந தா நே ந மயா துல்யஸ் தேஜஸா யசசாபி வா -சுந்தர -20-34- என்று
புஜ பல விக்ரமதந தேஜ கீர்த்திகளாலே நமக்கு ஒரு தரம் போராது என்று சொன்னதற்கு
வர்ஜயேத் வஜ்ர முத்ஸ்ருஷ்டம் வர்ஜயே தந்த கச் சிரம்
த்வத் விதம் ந து சங்க்ருத்தோ லோகா நா தஸ் ச ராகவ
ராமஸ்ய தனுஷ சப்தம் ச்ரோஷ்யசி த்வம் மஹாஸ்வ நம
இஷவோ நிபதி ஷயந்தி ராம லஷ்மண லஷணா -சுந்தர -21-23/24/26-என்று
பெருமாள் ஆண்மைக்கு நீ தோற்றினால் உன்னை உயிர் உடன் விடுவாரோ
அவர் தாம் வேணுமோ
அவருடைய வில்லில் சிறு நாண் ஒலி யைக் கேட்டுப் பொறுத்தால் அன்றோ
திரு நாமம் சாத்தின அம்புகள் அன்றோ காட்டு காட்டு என்று சொல்லுகின்றன -என்று உத்தரம் சொல்லியும்
இப்படி இவனை மீட்கலாமோ என்று பார்க்கிறாள் இஸ் சர்க்கத்தாலே –

முதல் ஸ்லோகத்திலே
தஸ்ய தத வசனம் ச்ருத்வா ஸீதா ரௌத்ரச்ய ரஷச ஆர்த்தா தீநஸ் வரா தீ நம பிரத்யுவாச ச நைர் வாச -சுந்தர -21-1- என்று
கொடியானான பையல் வார்த்தையைக் கேட்டுத் தான் சில வார்த்தை சொன்னாள்-என்கிறது
இரண்டாம் ஸ்லோகத்திலே –
துக்கார்த்தா ருததீ ஸீதா வேபமா நா தபஸ்விநீ சிந்த யந்தி வராரோஹா பதிமேவ பதிவ்ரதா -சுந்தர -21-2- என்று
பதிரேகா கதிஸ் சதா -என்றும்
கதி என்றும் தானாவான் -நாச் திரு -8-9-என்றும்
எல்லா அவஸ்தையிலும் ரஷகர் பெருமாள் ஆகையாலே நீ இப்படி படாத படி ரஷித்துக் கொள்ளீ-என்றாள்-
இந்த ஸ்லோகத்திலே
அவர் தூரஸ்தர் வந்து ரஷிக்கும் தனையும் இவனுக்கு ஹிதம் சொல்லி மீட்கலாமோ என்னும் நினைவாலே
கிடந்த துரும்பை முன்னே பொகட்டு என் பக்கல் நின்றும் உன் நெஞ்சை மீட்டு
வகுத்த உன் பெண்களோடு பொருந்தி வர்த்திக்கப் பார் -என்கிறாள்-

வியாக்யானம் –
1-த்ருணமந்தரத க்ருத்வா பிரத்யுவாச
வார்த்தை சொல்லுகிற இடத்தில் துரும்பை முன்னே பொகட்டுச் சொன்னாள் –
வார்த்தை சொல்லுவார்க்கு எல்லாம் அங்கன் அன்றே துரும்பு போடுகை-
இதுக்கு வாசனை என் என்னில்
ஆசனம் அன்னம் உதகம் தேயம் -ஆபஸ்தம்ப -2-4-1-என்று ராஜாக்களுக்கு   ஆசனம் இடுகை விஹிதம் ஆகையாலும்
உபசரித்தாள் தான் பிரசன்னனாய் மீளுமோ என்கிற சங்கை யாலும்
அபாவே பூமிருதகம் தருணா நி -ஆபஸ்தம்ப -2-4-14-என்கிற மர்யாதையாலே ஆசனம் இட்டாள்  ஆகவுமாம்
2-த்ருணமந்தரத க்ருத்வா –
ருஜூ ப்ரணாம க்ரியயைவ தன்வீ ப்ரத்யாதி தேச -ரகுவம்சம் -6-25-என்று
நெஞ்சில் இருக்கிறதற்கு அந்ய வதுபசரித்தால் -இவள் விரக்தை என்று நிராசனாமோஎன்கிற நினைவாலே ஆகிலுமாம் –
அன்றியிலே –
3-த்ருணமந்தரத க்ருத்வா –
சமீபமுபா சங்க்ராந்தம்-சுந்தர -18-25-ஏற்று அணுக விடாதே ராவணன் ஆசன்னனாகப் புகுந்த படியாலே வ்யவதானம் வேண்டி தா அபி ஜாயதே -என்கிற ந்யாயத்தாலே துரும்பை நடுவே  பொகட்டாள் ஆகவுமாம் –
அன்றியிலே –
4-த்ருணமந்தரத க்ருத்வா –
ந பரமுக நிரீஷணம் நாபி சம பாஷணம்-என்று
ஸ்திரீகளுக்குப் பர புருஷ நிரீ ஷணம் பண்ணுதல் -வார்த்தை சொல்லுதல் செய்யலாகாது
ஆகையாலே தருணத்தை முன்னே பொகட்டு அத்தை வ்யாஜீ கரித்து அவன் உபஸ்ரோதா வாகைக்கு ஆகிலுமாம்
அன்றியிலே –
5-த்ருணமந்தரத க்ருத்வா —
பத்ய முக்தம் விசஷணை ராஷசா நாம பாவாய த்வம் வா ந பிரதிபத்யசே -சுந்தர -21-10- என்று
பண்டும் ஹித பரரான அகம்பன மாரீச மால்யவத் பிரமுகர் சொன்ன வார்த்தையும் கேட்டிலை
இப்போது இத் துரும்பு பிரதிபத்தி பண்ணில் இ றே நீ பிரதிபத்தி பண்ணுவது என்று
நிதர்சன ம்  சாராணாம் லகுர் பஹூ தருணம் நர -மாகம் -2-50-என்று
த்ருஷ்டாந்தீ கரித்துப்  பொகட்டாள் ஆகவுமாம் –
6-த்ருணமந்தரத க்ருத்வா –
அருமந்த அர்த்தத்துக்கு பிரதிபத்தாவாக வேணும் என்று
ச குலீன ச புத்தி மான் -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-9-131- என்று
தான் பார்த்தவை   புத்தி யுக்தங்கள் ஆகையாலே ப்ரதிகூலியாத தருணத்தை சேதனம் ஆக்குவோம் என்னும் நினைவாலே யாகவுமாம்
7- த்ருணமந்தரத க்ருத்வா –
தருணத்தை சேதனம் ஆக்கி ஸ்வ சக்தியை இட்டு இந்த வைபாவத்தாலே பீதனாய் மீளுமோ என்கிற நினைவாலே ஆகவுமாம் –
8- த்ருணமந்தரத க்ருத்வா –
அஜ்ஞனாய் இருக்கிற உன்னை
த்ருணமிவ லகு  மே நே -என்று இத் த்ருணத்தோ பாதியாக நினைத்து இருப்பது என்று பொகட்டாள் ஆகவுமாம் –
9- த்ருணமந்தரத க்ருத்வா –
ஹ்ருதயே க்ருத்வா -அந்தர சப்தம் -நெஞ்சைக் குறிக்கும் -என்று கொண்டு
பிரதிகூலா சரணம் பண்ணாத இவ்வளவாலே தருணத்தை குவாளாக நெஞ்சில் கொண்டு
ந த்வா த்ருணத்வம் மன்யே -ந த்வா த்ருணாய மன்யே மஹா பாஷ்யம் -2-13-17-என்னுமா போலே
உன்னை இத் துரும்போ பாதியாகவும் நினைத்து இரேன் காண் -என்றாகவுமாம்
10- த்ருணமந்தரத க்ருத்வா –
அஜ்ஞனாய் இருக்கிற நீ
ஜ்ஞா நே ண ஹீந ப ஸூபி சமா ந-நரசிம்ஹ -16-13-என்று
இப்புல்லைத் தின்கிற பசு அன்றோ என்று பொகட்டாள் ஆகவுமாம்
11-த்ருணமந்தரத க்ருத்வா —
த்வம் நீஸ் சசவத் ஸ்மிருத -சுந்தர -22-16- என்றும்
யதந்தரம் சிம்ஹாஸ் ருகாலயோர் வ நே -ஆரண்யம் -47-45-என்றும்
திர்யக் ஜாதீயனான உனக்கு போக்யம் புல்லன்றோ-
நாஹ மௌபயிகீ பார்யா பரபார்யா சதீ தவ -என்கிற நான் ஆமோ என்று பொகட்டாள் ஆகவுமாம் –
12- த்ருணமந்தரத க்ருத்வா —
விசித்ராணி ச மால்யாநி  சாந்த நான்ய கரூணி ச
விவிதானி ச வாஸாம்சி திவ்ய அந்ய ஆபரணாநிச -சுந்தர -20-33- என்றும்
யாநி வைஸ்ரவணே  ஸூ ப்ரூ ரத்நானி ச தநா நி  ச -சுந்தர -20-33- என்றும் -என்றும்
நீ அடுக்கின வற்றை இத் த்ருணத்தோ பாதியாகக் காண் நினைத்து இருப்பது என்று பொகட்டாள் ஆகவுமாம் –
13-த்ருணமந்தரத க்ருத்வா —
தாரயத் யாத்மா நோ தேஹம் தத் சமாகம காங்ஷிணீ -சுந்தர -16-24-என்று
அவர் வருவாரோ என்கிற நசையாலே இருந்தேன் அத்தனை
உத்பத்ய வேண் யுத்க்ரத நே ந ஸீ கிராமஹம் கமிஷ்யாமி யமச்ய மூலம் -சுந்தர -28-17- என்றும்
தருணம் ஸூ ரஷ்ய ஜீவிதம் -என்றும்
த்ருணத்தோபாதி உயிரில் சரக்கில்லை காண் முடியப் காண் புகுகிறேன் என்று  பொகட்டாள் ஆகவுமாம்-
14-த்ருணமந்தரத க்ருத்வா —
லங்கா  ரத்னௌ கே சங்குலா  அபராதாத் தவை கஸ்ய நசிராத் வின சிஷ்யதி -சுந்தர -21-22-என்று
உன் குற்றத்தாலே இலங்கை நசிக்கப் புகுகிறது
அப்போதைக்கு இத்துராலைத் திரட்டி ஒரு குடிலைப் பண்ணிக் கொள்ள வல்லீ-என்று பொகட்டாள் ஆகவுமாம் –
15-த்ருணமந்தரத க்ருத்வா —
தருண  உலப ந்யாயத்தாலே சாமான்ய விசேஷ ரூபமான கார்யங்களை உபதேசிக்கிறேன் காண் -என்றுமாம் -உலபம் -கொடி
16-த்ருணமந்தரத க்ருத்வா —
நீ உபதேசிப்பது அவர் என் குற்றங்களைப் பொறுக்கில் அன்றோ -என்று நினைக்கிறானாக கருதி
கடலிலே இத்துரும்பைப் பொகட்டால் இது நடுக்  கிடவாதாப் போலே
அவர் திரு உள்ளத்திலே கிடவாது காண் –
ந  ச்மரத்யப காராணாம் சதமப்யாத்மவத்தயா – அயோத்யா -1-4- என்று பிழை அறியாத பெருமாள் காண் -என்கிற நினைவாலே யாகிலுமாம்
17-த்ருணமந்தரத க்ருத்வா —
நடுக் கிடந்த துரும்பை எடுத்துப் பொகட்டு இப்படியே
ஈர்ஷ்யா ரோ ஷௌபஹிஷ்க்ருத்ய -அயோத்யா -27-7-என்று நெஞ்சில் ரோஷாதிகளைப் பொகட்டு அவரைப் பற்று என்றாள் ஆகவுமாம்
18-த்ருணமந்தரத க்ருத்வா —
மித்ர மௌபயிகம் கர்த்தும் ராம ஸ்தானம் பரீப்சதா வதஞ்சா நிச்சதா கோரம் -சுந்தர -21-19-என்று
உன் குடியிருப்பும் உன் உயிரும் வேண்டி இருப்பதாகில் இப்புல்லைக் கவ்வி
அவ வாண் பிள்ளை காலிலே விழாய் என்று பொகட்டாள் ஆகவுமாம்
19-த்ருணமந்தரத க்ருத்வா —
துரும்பை தூணாக்கி அத தூணிலே ராகவ சிம்ஹத்தை புறப்பட விட்டுப் பொல்லாங்கு நினைத்த
நெஞ்சைப் பிளப்பிக்கும் நினைவாலே ஆகிலுமாம்
20-த்ருணமந்தரத க்ருத்வா —
தருண லோஷ்டாதிகளை முன்னே முடி எறிந்து பிரதிஜ்ஞை பண்ணக் கடவது இ றே
அந்த மர்யாதயாலே துரும்பை முன்னே எறிந்து
ஷிப்ரம் தவ ச நா தோ மேராம சௌமித்ரிணா சஹ
தோய மல்பமிவாதி தய ப்ராணா நாதாஸ் யதே ஸ்ரை-சுந்தர -21-83-என்று
உன் உயிரைத் தீண்டார் -கோலிட்டுக் குத்தி எடுத்துப் போகப் புகுகிற படியைப் பார் என்று பிரதிஜ்ஞை பண்ணுகிறாள் ஆகவுமாம்
21-த்ருணமந்தரத க்ருத்வா —
கிள்ளி-என்று கொண்டு-ந சாபி மம ஹஸ்தாத் த்வாம் ப்ராப்தும் அர்ஹதி ராகவ -சுந்தர -20-28- என்ற உன் முன்னே
அப நேஷ்யதி மாம் பார்த்தா தவத்த சீக்ரமரிந்தம-சுந்தர -21-28-என்று உன்னைத் தலை அறுத்துக் கொண்டு போகப் புகுகிறபடி பாராய் என்றாகவுமாம்
22-த்ருணமந்தரத க்ருத்வா —
விப்ர பீடாகரம் சேத்தியா மங்கம் ப்ராஹ்மணஸ்யது-என்று சாஸ்திரம் சொல்லுகையாலே
ப்ருங்கார தாரா ரோத்து ச்ச சூ க்ரச்யாஷி ச தஷிணம் பவித்ரஸ்ய சிரோக்ரேண ஷோபயாமாச வாமன -என்றும்
சுக்கிரன் கண்ணைத் துரும்பால் கிளறிய -பெரியாழ்வார் -1-8-7-என்றும்
துரும்பாலே சுக்கிரன்  கண்ணைக் கலக்கினால் போலே
தஸ்மின் தஸ்மின் ப்ருச்ரோனி சஷூர் மம நிபதயதே -சுந்தர -20-15-என்று
பரதார தர்சனம் பண்ணின உன் கண்ணைத் துரும்பை இட்டுக் கலக்குகிறேன் -என்றாகவுமாம்
23-த்ருணமந்தரத க்ருத்வா —
ச தர்ப்பம் சம்ச்தராத் க்ருஹ்ய -சுந்தர -38-30-என்றும்
ஹி நச்து ஸ்ம ச தஷிணம் -சுந்தர -38-37- என்று
தர்ப்பத்தை இட்டுக் கண்ணறையனான காகத்தைக் கண்ணரை யாக்கினால் போலே
இத் துரும்பை இட்டு உன் கண்ணைக் கலக்குவிக்கிறேன் -என்று  பொகட்டாள் ஆகவுமாம் –
24-த்ருணமந்தரத க்ருத்வா —
நர நாராயணர்களில் நாராயணன் இஷீகத்தைக் கொண்டு டம்போத் பாவனை கொன்றால் போலே இத்துரும்பை இட்டு உன்னைக் கொல்லுகிறேன்-என்று  பொகட்டாள் ஆகவுமாம் –
25-த்ருணமந்தரத க்ருத்வா —
சீதாயாஸ் தேஜஸா தகதாம் -சுந்தர -51-36-என்றும்
ந த்வா குர்மி த சக்ரீவ பாச்ம பச்மார்ஹா தேஜஸா -சுந்தர -22-20- என்றும்
என் பாதி வ்ரத்ய தேஜஸ் ஸிலே இத்தூரலை இட்டு மூட்டி உன்னைச் சுடுகிறேன் என்று  பொகட்டாள் ஆகவுமாம் –
26-த்ருணமந்தரத க்ருத்வா —
க்ருதி சேத நே -என்கிற தாதுவிலேயாய் கிடந்த துரும்பை நடுவே கிள்ளிப் பொகட்டு
இப்படியே அங்குள் யக்ரேண தான்ஹன்யாம் -யுத்தம் -18-24- என்றும்
பொல்லா  அரக்கனைக் கிள்ளிக் களைந்தானை -திருப்பாவை-13- என்றும் சொல்லுகிறபடியே
உன் தலையைக் கிள்ளிப் போக்குவிக்கிறேன் -என்று  பொகட்டாள் ஆகவுமாம் –
ஆக இப்படி துரும்பைப் பொகட்டு மேல் செய்தது என் என்னில்
1-பிரத்யுவாச –
பிரதி வசனம் பண்ணினாள்
2- பிரத்யுவாச
கேட்ட வார்த்தைக்கு உத்தரம் சொன்னாள்
அவன் சொன்ன வற்றுக்கு இசைந்து ஓம் என்றாலும் உத்தரமாம் இ றே
அப்படியோ என்னில்
3- பிரத்யுவாச –
பிரத்யாக்யானம் பண்ணினாள் -மறு வார்த்தை
அதாவது -நாஹம் ஔபயிகீ பார்யா-சுந்தர -21-6-என்றும்
ந மாம ப்ரார்த்தயிதும் யுக்தம் ஸூ சித்திமிவ பாபக்ருத் அகார்யம் ந மயா கார்யம் -சுந்தர -21-4-என்றும் பிரதி ஷேதித்துச் சொன்னாள்
4- பிரத்யுவாச –
நிஷேதித்த அளவன்றிக்கே பிரதி கூலமாகவே சொன்னாள் -அதாவது
ப்ராணா நாதாஸ் யதே சரி -சுந்தர -21-33- என்றும்
ராஷ சேந்திர மகா சர்ப்பான் ச ராம கருடோ மகான் உத்தரிஷ்யதி வேகேன-சுந்தர -21-27- என்றும்
அவனுக்கு பருஷமாகவே சொன்னாள் -பொறுக்க ஒண்ணாத படி வார்த்தை சொன்னாள் –
உவாச –வசபரிபாஷணே- பரக்கச் சொன்னாள் -ஒரு வார்த்தை சொன்னாள் ஆகை அன்றிக்கே
பரித-
பரக்க விட்டு வார்த்தை சொன்னாள் -அதாவது –
சாது தர்ம மவே ஷஸ்வ சாது சாது வ்ரதம் சர -சுந்தர -21-7- என்றும்
யதா தவ ததான் யேஷாம்தாரா ரஷ்யா நிசாசர-சுந்தர -21-14- என்றும் பொறுமை சொல்லியும்
ஏவம் த்வாம்  பாப கர்மாணம் வஷ்யந்தி நிக்ருதா ஜனா
திஷ்ட்யைதத் வ்யசனம் ப்ராப்தோ ரௌத்ர இத்யேவ ஹர்ஷிதா -சுந்தர -21-14-என்று
ஹ்ருதய பேதம் பிறக்கும் படி சொல்லியும்
மாஞ்சாச்மை பூத்வா நிர்யாதயிதுமர்ஹசி -சுந்தர -21-22- என்றும்
விதித சஹ தர்மஜ்ஞ சரணாகத வத்சலா தேன மைத்ரீ பவது -சுந்தர -21-20- என்று
ஜ்ஞான தானம் பண்ணியும்
அந்யதா த்வம் ஹி குர்வாணோ வதம் ப்ராப்ச்யசி -சுந்தர -21-33 என்றும்
ப்ராணா நாதச்யதே சரை- -சுந்தர -21-33 என்றும் தண்டம் சொள்ளையும்
இப்புடைகளிலே
சாம
பேத
தான
தண்ட
ரூபமான சதுர் உபாயங்களையும் சொன்னாளே-

இப்படிக்கன்றி சொல்லுகிற போது முக விகாசம் இருந்த படி என் என்னில்
1-ஸூ சிஸ் மிதா –
எதிரி கனவியனாகில்-தர்மம் வீர்யம் பலம் இவற்றால் கணத்தவனாக -இருந்தால் அன்றோ  இ றே
சம்ரம்பம் பண்ண வேண்டுவது – கோபம் போன்றகுணன்களைக் காட்ட வேண்டியது
அநீதி யாலே தன்னடியே  நசிக்கப் புகுகிற இவன் இ றே இப்படிச் சொல்லுகிறான் -என்று சிரித்தாள்
2- ஸூ சிஸ் மிதா —
ஹ சந்நிவ ந்ருபோ ஹந்தி -என்று ராஜாக்கள் குற்றவாளரை வெட்டி வைக்கச் சொல்லும் போதும் சிரித்து இ றே சொல்லுவது –
இவள் தானும் -அபிஜ்ஞா ராஜ தர்மாணாம்-அயோத்யா -26-4- என்று ராஜ மரியாதை அறியுமவளாய் ராஜ புத்ரியுமாய் ராஜ மஹிஷியுமாய் இ றே இருப்பது
அவன் தருகிறேன் என்ற தான தான்ய ரத் நாதிகளைக் கேட்டு ஸ்திரீ சாபல்யத்தாலே உகந்து சிரித்தாளோ என்னில்
3- ஸூ சிஸ் மிதா –
அர்த்த சாப்ள நிபந்தனம் அல்ல வைராக்ய நிபந்தனம் என்கிற பாவ சுத்தி சிரிப்பின் படியிலே காணலாய் இருந்தது
4-ஸூ சிஸ் மிதா —
ஆஸ்ரமம் து தயோ ஸூ ந்யம் பிரவிச்ய நரசிம்ஹயோ கோசரம் கதயோர் ப்ராத்ரோர்ப நீதா த்வயாதம -சுந்தர -21-30- என்று
அவ் வாண் பிள்ளை முன்னேறித் தோற்பித்து என்னைச் சிறை கோலமாட்டாத அபாலன் தான் கிடீர்  –
ந ராமஸ் தபஸா தேவி ந ப லேந ந விக்ரமை
ந த நேந மயா துல்ய -சுந்தர -21-33-என்று
பெருமாளைத் தரம் அல்லர் என்கிறான் என்று சிரித்தாள்
5-ஸூ சிஸ் மிதா –
வதம் ப்ராப்ச்யசி -சுந்தர -21-23- என்று கழுகும் பருந்தும் கவ்வக் கிடக்கிறவன் தான் கிடீர்
சங்கே ஜீவதி வா ந வா -சுந்தர -20-26- என்று பெருமாள் திரு மேனிக்குத் தீங்கு சொல்லுகிறான் -என்று சிரித்தாள் –
6-ஸூ சிஸ் மிதா –
விபீஷண  விதேயம் ஹி இலங்கைச் வர்யமிதம் க்ருதம் – யுத்த -116-13- என்றும்
ஸ்ரீ மதா ராஜ ராஜேன லங்காயா ம்பி ஷேசித -யுத்த -28-27-என்று
விபீஷணனுக்குப் பெருமாள் கொடுத்த ஐஸ்வர்யத்தை இ றே
ருத்திம் மமா நு பஸ்ய த்வம் ஸ்ரீ யம் பத்ரே  -சுந்தர -20-25- என்று தன்னதாக பிரமித்துப் பிதற்றுகிறான் என்று சிரித்தாள் ஆகவுமாம்
7-ஸூ சிஸ் மிதா –
உபதாய புஜம்  தஸ்ய லோக நாதச்ய சதக்ருதம் கதம் நாமோ பதாஸ் யாமி -சுந்தர -21-16- என்று இருக்கிற என்னை இ றே இப்பையல்
மாஞ்ச புங்ஷவ -சுந்தர -20-33- என்று பிதற்றுதல் -என்று சிரித்தாள் ஆகவுமாம்
8-ஸூ சிஸ் மிதா –
குசலீ யதி காகுத்ச்த கிந்நு  சாகர மேகலாம்  மஹீம் தஹதி -சுந்தர -36-13-என்று பெருமாள் குறி யசங்கா தே இருக்க நானோ இவ்விருப்பு இருப்பேன் என்று
தத சா ஹ்ரீமதீ -சுந்தர -36-6-போலே வ்ரீளா ஸ்மிதம் பண்ணினாள் ஆகவுமாம் –
அன்றியிலே
9-ஸூ சிஸ் மிதா –
ததோ மலிந சம்வீதாம் -சுந்தர -15-18-என்றும்
மாசுடை யுடம்போடு தலை யுலறி வாய்ப்புறம் வெளுத்து -நாச் திரு -1-8-என்றும்
விரஹ விஷண்ணை  யாய் இலையமுது செய்யாமை யாலே ஸ்மிதம் பண்ணின போது
வெளுத்த திரு முத்து ஒளியை உடையளாய் இருந்தாள் என்றுமாம்
10-ஸூ சிஸ் மிதா –
என்று பிராட்டியை அபஹரித்தான் என்று கேட்ட போது
க்ருதம் கார்யமிதி  ஸ்ரீ மான் வ்யாஜஹார பிதா மஹா -ஆரண்ய -52-13-என்று
இனி ராவணன் பட்டான் என்று ப்ரஹ்மா பிரியப் பட்டால் போலே இவளும் இவன் அபராதம் பண்ணின போதே பட்டான் என்று
ப்ரீதி ஸ்மிதம் பண்ணினாள் ஆகவுமாம் –

இப்படி ஸ்மிதம் பண்ணிச் சொன்ன பாசுரம் ஏன் என்னில்
நிவர்த்த யேத்யாதி-
அக்ருத்யங்களை தவிர்த்து
க்ருத்யங்களை அனுஷ்டி -என்கிறாள் –
1-நிவர்த்தய மந-
மநோ வியாபாரம் ஆத்மா தீனம் அன்றோ -ஆனபின்பு நெஞ்சை மீள் -என்கிறாள்
2- மநோ நிவர்த்தய –
நல்ல குதிரை யாட்கள் குதிரையைக் கசை தாங்குமா போலே
மந  ப்ரவாஹத்தை மீட்கப் பார் –
3- மநோ நிவர்த்தய –
மநோ ஹி ஹேது சர்வேஷாம் இந்த்ரியாணாம் ப்ரவர்த்தநே  என்கிறபடியே –
கொத்து முதலியான மனஸை மீட்கவே பாஹ்ய இந்த்ரியங்களும் மீளும் காண்
4-நிவர்த்தய ம ந –
உன் நெஞ்சை மீட்டு பிராணன்களை மீட்டுக் கொள்ளாய்-
4- நிவர்த்தய ம் ந –
ஆத்மைவ ஹ்யாத்மாநோ பந்து ராத்மைவ ரிபுராத் மந -ஸ்ரீ கீதை -6-5-என்று நித்ய சத்ருவை ஜெயிக்கப் பாராய்
5-மநோ நிவர்த்தய –
நாட்டில் வேகவத் பதார்த்தங்களுக்கு மநோ ஜவம் என்று திருஷ்டாந்தம் சொல்லலாம் படி
கடுவிசையாய் ஆயிற்று இருப்பது -கை கழிந்தால்   மீட்க ஒண்ணாது
கரணாதிபனான நீ மீட்கப் பார்
மம த்வச்சா நிவ்ருத் தஸ்ய ந ப்ராவர்த் தந்த வர்த்தம நி -அயோத்யா -59-1- என்று
அஸ்வ ஹ்ருதயம் அறியும் ஸூ மந்தரன் தப்பச் சொன்னான்  இறே-

கிடக்கிற ராஜ கார்ய மேடு பள்ளமும் மந பிரவ்ருத்தியைத் தவிரப் போமோ -என்ன –
1-மத்தோ நிவர்த்தய –
புறம்புள்ளவற்றை  தவிரச் சொன்னேனோ -என் பக்கலில் நின்றும் மீள்
2-மத்தோ நிவர்த்தய –
பஞ்சாஸ் யாமிவ பன்னகீம் -சுந்தர -51-23-என்று விஷவத் பதார்த்தங்கள் போலே உனக்கு விநாச ஹேதுவான என் பக்கல் நின்றும் மீள்
3- மத்தோ நிவர்த்தய –
நயந்தி நிக்ருதி ப்ரஜ்ஞம் பரதாரா பராபவம் -சுந்தர -21-9- என்று
எப்படியும் பரிபவ  சீலைகளாய் யாயிற்று பரதாரம் இருப்பது
ஆனபின்பு என் பக்கல் நின்றும் மடை மாறாய்-

உன்பக்கல் நின்றும் மாறினால் மனஸ் ஸூ நிர் விஷயமாய் இருக்குமோ என்னில்
1-ஸ்வ ஜநே ப்ரீயதாம் –
வகுத்த விஷயத்திலே உகக்கும் படி பாராய்
2-ஸ்வ ஜநே ப்ரீயதாம் –
ஸ்வேஷூ தாரேஷூ ரதிம்  நோபலபாம் யஹம் -சுந்தர -20-30- என்கிற நினைவை மாறி
ஸ்வேஷூ தாரேஷூ ரம்யதாம் -சுந்தர -21-8- என்கிறபடியே
அக்னி சாஷிகமாகக் கைப்பிடித்த தர்ம தாரங்களை ரமிக்கப் பார்
3-ஸ்வே ஷூ தாரேஷூ-
விஜாதீயரான மனிதரை விட்டு
சஜாதீயர்களான ராஷச ஸ்திரீகளோடே புஜிக்கப் பார் –
ப்ரீயதாம் -என்று ராக ப்ராப்தமாக வருமத்தை பலத்திலே ச்நேஹிப்பிக்கலாமோ என்னில்
ப்ரீயதாம் என்று பிரசாதிக்கிறாள்
மந ப்ரீயதாம் –
நீ பிரியப் பட்டாய் ஆகில் மனஸ் ஸூ தான் பிரியப் படுவதாக –
ஸ்வ ஜநே -என்று விஷய சப்தமி -ஏழாம் வேற்றுமை -யாகை அன்றிக்கே
அதி கரண சப்தமி யாக்கி ஸ்வ ஜனத்தில் வர்த்திக்கிற மனஸ் ஸூ பிரியப் படுவதாக என்று பொருளாம் –
அதாவது -தாஸ்த்வாம் பரிசரிஷ் யந்தி -சுந்தர -20-32- என்றும்
யாவத்யோ மம சர்வாசாம் ஐஸ்வர்யம் குரு ஜானகி -சுந்தர் -20-31-என்றும்
என்னை அவர்கள் சேவிக்கும் படி சொன்ன படியாலே அவர்கள் வெறுத்தாயிற்று இருப்பது
அது தவிர்ந்து உன்னளவிலே அவர்கள் நெஞ்சு குளிரும்படி பண்ணு என்றுமாம் –
4-ஸ்வ ஜநே மந ப்ரீயதாம் –
ஸ்வ ஜனத்தில் மனஸ் ஸூ பிரியப் படுவதாக
ஸ்வ ஜனத்தினுடைய மனஸ் ஸூ என்றபடியே
பரி பூதா விஷண்ணா சேத பார்யா பர்த்தா விநச்யதி -என்று
நீ பண்ணின பாராமையாலும் உபேஷையாலும் அவர்கள் வெறுத்தால் உனக்கு அநர்த்தம் வரும்
அது வாராதபடி அவர்கள் நெஞ்சு குளிரும்படி நிவர்த்தய -என்றாகிலுமாம்-

மத்தோ மநோ நிவர்த்தய
த்யேயோ நாராயணஸ் சதா -பாரதம் -ஆநு -என்றும்
த்யேயஸ் சதா சவித்ரு மண்டல மத்ய வர்த்தீ நாராயண -நாரசிம்ஹ புராணம் என்றும்
ச்ம்ருதோ யச்சதி சோபநம்  -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-17-78-என்றும்
ராமேதி ராமேதி சதைவ புத்த்யாவி சிந்தய -சுந்தர -33-11- என்றும்
ஜகாம மநஸா ராமம் -சுந்தர -15-54- என்றும்
நினைந்து இருந்தே சிரமம் தீர்ந்தேன் -பெரியாழ்வார் -5-4-8-என்றும்
அடிகள் தம் அடியே நினையும் அடியவர் -பெரிய திரு -2-6-10-என்றும்
உஜ்ஜீவனமான விஷயத்தை அநவரத பாவனை பண்ண ப்ராப்தம் அத்தனை போக்கி
அநர்த்த ஹேதுவாக என்னை நினையாதே காண்
நிவர்த்தய
ப்ரவ்ருத்தி தர்மம் ஒருகாலும் ஆகாது
நிவ்ருத்தி தர்மமே உத்தாரகம் காண் –
மநோ நிவர்த்தய –
நிவ்ருத்திக்கு விஷயம் நிஷித்தம்
பிரவ்ருத்திக்கு விஷயம் சம்சாரம்
ஆனபின்பு நிஷித்தங்களை விட்டு விஹிதங்களிலே ப்ரவர்த்திக்கப் பார் –

ஆக
இந்த ஸ்லோகத்தாலே
ஸ்வ அநர்த்தம் கிடக்க -பர அநர்த்தம் பொறுக்க மாட்டாத பிராட்டியுடைய
நீர்மையும்
கிருபையும்
சொல்லுகிறது –

————————————————————————————————————————————————————

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ சீதா ராம ஜெயம் .
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார்  ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

 

ஸ்ரீ இராமாயண தனி ஸ்லோக வியாக்யானம் -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை அருளிச் செய்தது –துஷ்கரம் க்ருதவான் ராமோ-சுந்தர -15-23-/ராமஸ்ய வ்யவஸா யஜ்ஞா-சுந்தர -16-4-/ஹிமஹத நளி நீவ நஷ்ட சோபா –சுந்தர -16-30-

January 22, 2015

துஷ்கரம் க்ருதவான் ராமோ ஹீநோ யத நயா ப்ரபு
தாரயத் யாத்மநோ தேஹம் ந சோகே நா வசீததி-சுந்தர -15-23-

துஷ்கரம் க்ருதவான் ராமோ -ஸ்ரீ ராமபிரான்  செயற்கரிய செயலை செய்தார்
ஹீநோ யதநயா ப்ரபு -அநயா ஹீ ந -ப்ரபு -இந்த சீதா தேவியைப் பிரிந்து இருந்த போதிலும் பிறர் வருத்தம் அறியாத ப்ரபுவாய்
தாரயத் யாத்மநோ தேஹம் -ஆத்மந   தேஹம் -தாரயதி யத் -தன் திருமேனியைத் தரிக்கிறார் என்பதுவும்
ந சோகே நாவசீததி-சோகேந ந அவசீததி யத் -துன்பத்தால்-நசிக்க வில்லை என்பதும் செயற்கரிய செயல் –

அவதாரிகை –
அந்யத்ர பீஷ்மாத் காங்கேயா  தந்யத்ர ச ஹநூமத -ஹரிணீ குரமாத்ரேண சர்மணா மோஹி தம் ஜகத் -என்று
பீஷ்மனோடு ஒக்க மான் குளப்படியோடு ஒத்த ஸ்திரீயின் அவயவ விசேஷத்தில் அகப்படாதே
அத்யந்த விரக்தனான திருவடி அகப்பட பிராட்டியைத் திருவடி தொழுது
பிராட்டி வை லஷண்யத்தையும்
இவள் எழுந்து அருளி இருக்கிற தைன்யத்தையும் கண்டு
இவளை இப்படி இருத்துவதே -என்று
பெருமாளை சிஷ்ட கர்ஹை பண்ணுகிறான் –

துஷ்கரம் க்ருதவான் ராமோ-
நாம் பெரிய கடலைக் கடந்து அரும் தொழில் செய்தோமாக நினைத்து இருந்தோம் –
பெருமாள் நம்மிலும் அரும் தொழில் செய்தாராய் இருந்தது –
1-ராம –
ஏக தார வ்ரதராய்
பிராட்டியை ஒழிய வர்த்தியாத பெருமாளுக்கு துஷ்கரம் பிரணயிகளாய்ப் பிறந்தாராகச் செய்ய அரிது ஒன்றைச் செய்தார்
துஷ்கரம் –
காட்டுக்குப் போகிற போது அகப்பட கூடக் கொண்டு போன பெருமாள் தமக்கும்
இதுக்கு முன்பு செய்ய வரிது
இஸ் சாஹசத்தைச் செய்யக் கோலி தவிர்ந்தாரோ என்னில்
க்ருதவான்
பத்தும் பத்தாக அனுஷ்டித்திலரோ
இப்படி இவர் செய்தது தான் ஏது என்னில்
2-ராம –
பிராட்டியைப் பிரிந்து குறி அசங்காமல் இருந்தார்
3-ராம –
பிராட்டியைப் பிரிந்தால் புகர் அழிந்து எழில் குலைந்து முகம் வெளுத்து உடம்பு இளைத்து
இட்ட கால் இட்ட கைகளாய் -திருவாய் -7-2-4-இருக்க வேண்டாவோ –
இத்தைப் பற்ற இ றே பிராட்டியும்
கச்சினன தத்தேம சமாந வர்ணம் தஸ்யா நநம் பத்ம சமாந கந்தி -சுந்தர -37-28-என்று
அம்முகத்தில் ஒளியும் மணமும் மாறாதே  -பொன் போல ஒளியும் -தாமரை போலே மணமும் -செல்லா நின்றதோ என்று கேட்டது
4- ராம –
பொடி மூடு தணலாய் இருந்தார்
வடிவில் பச்சையைக் காட்டித் துவக்குக் கொண்டு போய் நடுக் காட்டிலே தள்ளுவதே –

கர்மத்தாலே அபஹ்ருதை யானாள் அல்லது இவர் தள்ளினாரோ -என்ன
இவளைக் கண்டு வைத்தால் அவர் தாம் அகலப் பெறுவாரோ
1-ஹீநோ யத நயா-
இவர் இவளை விட்டு மான் பின்னே போகப் பட்டன்றோ இவ்வபஹாரம் தான் பிறந்தது –
2-அநயா ஹீந –
இறையும் அகலகில்லேன் -திருவாய் 6-10-10–என்கிற இவளையா பிரிவது
3-அநயா ஹீந –
மதுப்பினுடைய நித்ய யோகத்தையும் குலைத்திலரோ
4-அநயா ஹீந —
அநந்ய பாவாம நு ரக்த சேத நாம் த்வயா விஹீ நாம் மரணாய நிச்சிதாம் -அயோத்யா -27-22-என்று
சொன்ன இவளை யன்றோ பிரிவது
5- அநயா ஹீந —
ச்ரத்தயா தேவோ  தேவத்வமச்நுதே -யஜூ காட -3-3-என்றும்
அப்ரமேயம் ஹி தத்தேஜோ யஸ்ய சா ஜனகாத்மஜா -ஆரண்ய -37-18-என்றும்
அனந்யா ராகவேணாஹம பாஸ்கரேண ப்ரபாயதா -சுந்தர -21-16-என்றும்
எல்லாப் படியாலும் தனக்கு மினுக்கம் உண்டாக்குகிற இவளையா விடுவது-
1-ப்ரபு-
ஒன்றும் அறியாதாரே இருந்தார் –
ப்ரபுத்வமாவது அறியாத்தனம் இ றே-
2- ப்ரபு –
மேன்மை யுண்டு இத்தனை போக்கி நீர்மை இல்லையே இருந்தது
3- ப்ரபு –
ஆனை குதிரை கட்டவும்
படையாளவும்
கணக்குக் கேட்கவும்
ஆயுதம் வஹிக்கவும்
கற்றார் இத்தனை போக்கி பிரணயித்வத்தில் புதியது உண்டிலராய் இருந்தது
4-ப்ரபு –
பெண்ணின் வருத்தம் அறியாத பெருமான் -நாச் திரு -13-1-என்றும்
பஹூதா விஜாயதே -புருஷ ஸூ க்தம் -என்றும்
ப ஹூநி மே வ்யதீதாநி ஜன்மாநி -ஸ்ரீ கீதை -4-5-என்றும்
பிறப்பில் பல்பிறவிப் பெருமான் -திருவாய் -2-9-5-என்றும்
பிறக்கிற பிறவி வெள்ளத்தில் ஒரு பெண் பிறவி பிறந்தானாகில்  இ றே
இவ்வினையாளனாய் பெண் பிறந்தார் எய்தும் பெரும் துயர் அறிவது-

இப்படி பிரபுக்களாய் இவர் செய்ததுஎன் என்னில்
1-தாரயத் யாத்மநோ தேஹம் –
பிராட்டியைப் பிரிந்த பெருமாள் கடலிலே புக்காராய் முடிந்தார் என்று பேர் படைக்க வேண்டாவோ
2-தாரயதி –
தரித்து இருப்பதே
இத்தனை போது சத்தை அழிய வேண்டாவோ
நித்தியமான ஸ்வரூபத்தை அழிக்கப் போமோ -என்ன
3-ஆத்மா நோ தேஹம் –
நித்தியமான ஸ்வரூபம் இருக்க
இச்சா க்ருஹீதாபி மதோருதேக-ஸ்ரீ விஷ்ணு புராணம் -6-5-84-என்று
வந்தேறியான உடம்பை விடலாகாதோ –
நித்யம் நித்யாக்ருதிதரம் -சாத்வதம் -என்று  -ஸ்வரூபத்தோபாதி ரூபமும் நித்யம் அன்றோ என்ன
4-ராம ஆத்மா நோ தேஹம் –
அப்ராக்ருதமான சரீரத்தைச் சொன்னேனோ –
ஆதி அஞ்சோதி வுருவை அங்கு வைத்து இங்குப் பிறந்த படியை விட்டால் ஆகாதோ
5- ஆத்மா நோ தேஹம –
தாம் ஒரு பிராட்டி யாய்-
பராதீ நா ஸ்த்ரிய சர்வா -என்றும்
மாயும் வகை அறியேன் வல்வினையேன் பெண் பிறந்தே -திருவாய்-5-4-3-என்றும்
பரத்ரவ்யமாய் நோக்கி  இருக்கிறாரோ
தம்மைத்தான உடம்பைப் போக விட்டால் ஆகாதோ
6- ஆத்மா நோ தேஹம்
தம்முடம்பு தம்மதோ
பக்தா நாம் -ஜிதந்தே -1-5-என்று பிறரது அன்றோ
பிறர் உடம்பை என் செய்யச் சுமக்கிறார் –

அவர் செய்வது என் முடிக்கைக்கு கருவி இல்லை யாகில் -என்ன
1-ந சோகே நா வசீததி-
சோகம் இருக்க வேறு கருவி வேணுமோ –
2- ந சோகே நா வசீததி-
சோகாக்நி பிரதஷ்யதி -என்று சோகம் ஆகிற பெரு நெருப்பு இருக்க வேறு கேட்க வேணுமோ –

—————————————————————————————————————————————————————

ராமஸ்ய வ்யவஸா யஜ்ஞா லஷ்மணஸ்ய ச தீ மத
நாத்யர்த்தம் ஷூப்யதே தேவீ கங்கேவ ஜலதாகமே -சுந்தர -16-4-

ராமஸ்ய -ஸ்ரீ ராமபிரானுடைய
வ்யவஸா யஜ்ஞா -உறுதியை அறிந்தவளான
லஷ்மணஸ்ய ச -லஷ்மணனுடையவும்
தீ மத -பக்திமானான
நாத்யர்த்தம் ஷூப்யதே தேவீ கங்கேவ -அத்யர்த்தம் கங்கா இவ ந ஷூப்யதே -மிகவும் கங்கா நதி போலே கலங்குகிறாள் அல்லள்
ஜலதாகமே -மழைக்   காலத்தில்-

ராமஸ்ய வ்யவஸா யஜ்ஞா –
ஏதத் வரதம் மம-யுத்தம் -18-33-என்றும்
அவகாஹ்யார்ண வம் ஸ்வப்ஸ்யே-யுத்த -5-9- என்றும்
சொல்லுகிற படியை அறிந்து இருக்குமவள் ஆகையாலே தரித்து இருந்தாள்
ஆசாலேசம் உடையாரை ஒரு நாளும் விடேன் என்றும்
அவர்களை விட வேண்டிற்று ஆகில் நான் உளேன் ஆகேன் என்றும் இ றே

-ந ஜீவேயம் ஷணம் அபி -சுந்தர -66-30–அவர் சொல்லி வைப்பது

அப்யஹம் ஜீவிதம் ஜஹ்யாம் த்வாம் வா
சீதீ ச லஷ்மணாம் ந து பிரதிஜ்ஞாம் சம்ஸ்ருத்ய  ப்ராஹ்மணேப்யோ விசேஷத்த -ஆரண்ய -10-19-என்றும் இருக்கும் அவர் இ றே

லஷ்மணஸ்ய ச தீ மத-
அவர் தம்முடைய ஏவலாலே மாயாமிருகத்தின் பின்னே
அது மாயை என்று அறியாதே பிடிக்க ஒருப் பட்ட போதும்
இது மாயாமிருகம் என்று சொல்லும்படி
அவ்வளவிலும் தெளிந்து இருக்கும் இளைய பெருமாள் படியை அறிந்து இருக்கையாலும்-

நாத்யர்த்தம் ஷூ ப்யதே தேவீ
அவர் தலையாலே சுமக்கும் படி வல்லபையாய் போந்தவள் ஆகையாலே
ஷோப ஹேதுக்கள் உண்டாய் இருக்கச் செய்தேயும் ஷூபிதையாயிற்று இலள்-

கங்கேவ ஜலதாகமே –
நிரந்தரமாக வர்ஷதாரை விழா நிற்கச் செய்தேயும் கங்கை தெளிந்து இருக்குமா போலே-

——————————————————————————————————————————————————————————

ஹிமஹத நளி நீவ நஷ்ட சோபா வ்யசந பரம்பரயாதி பீட்யமாநா
சஹ சரரஹி தேவ சக்ரவாகீ ஜனக ஸூதா க்ருபணாம் தசாம் பிரபன்னா –சுந்தர -16-30-

ஹிமஹத நளி நீவ-பனியினால் வாடிய தாமரை போலே
நஷ்ட சோபா -அழகு இழந்தவளாய்
வ்யசந பரம்பரயா -அடுத்து அடுத்து வரும் துன்பத் தொடர்களாலே
அதி  பீட்யமாநா-மிகவும் துன்புறுத்த பெற்றவளாய்
சஹ சரரஹி தேவ சக்ரவாகீ -ஆண் துணையை இழந்த சக்ரவாகப் பஷியைப் போலே
ஜனக ஸூதா -ஜனக ராஜன் திரு மகளான பிராட்டி
க்ருபணாம் தசாம் பிரபன்னா -வருந்தத் தக்க நிலையை அடைந்தாள்-

அவதாரிகை –
பெருமாளைப் பிரிந்த ஆற்றாமை தோற்ற எழுந்து அருளி இருந்த பிராட்டிக்குப் போலி சொல்லுகிறார்-

ஹிமஹத நளி நீவ நஷ்ட சோபா-
நாற்றம் மென்மை -மேன்மை-குளிர்த்தி செம்மை செவ்வி விகாசம் என்கிற ஸ்வ பாவங்களை யுடைத்தாய் –
வைத்த கண் வாங்காத படி தர்ச நீயமாய் –
முன்பு அழகியதாய் இருந்த தாமரைப் பூவானது பனியிலே நோவு பட்டு இருக்கிறாப் போலே இவளும் நோவு பட்டு இருக்கிறபடி –

வ்யசந பரம்பரயாதி பீட்யமாநா-
இது தான் பிரகிருதியாக மேல்வரும் வ்யசந பரம்பரைகள்
ஆஸ்ரயத்த அளவன்றிக்கே
நோவு படுத்தா நின்றது-
சஹ சரரஹி தேவ சக்ரவாகீ –
நின் அஞ்சிறைய சேவலுமாய் -திருவாய் -1-4-1-என்கிறபடியே
பிரிவு பொறாத பிரகிருதியைக் கொண்டு தனியே இருந்தாள்-

ஜனக ஸூதா –
துக்கங்களுக்கு ஈடுபடாத பிறப்பை யுடையவள் கிடீர் இப்படி நோவு படுகிறாள்
ஜனக ஸூ தா –
பெருமாளைக் கைப்பிடித்த செல்வம் அன்று
பிறப்பினுடைய செல்வம்-

க்ருபணாம் தசாம் பிரபன்னா-
படக் கடவதில் ஒன்றும் குறையாமல் பட்டாள்-

—————————————————————————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

 

ஸ்ரீ இராமாயண தனி ஸ்லோக வியாக்யானம் -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை அருளிச் செய்தது –பத்மகேசர சம்ஸ்ருஷ்டோ-கிஷ்கிந்தா -1-71-/பத்ம சௌகந்தி கவஹம்-கிஷ்கிந்தா -1-115-/த்வம் -அப்ரமேயச்ச -துராச தச்ச-கிஷ்கிந்தா -24-31-/நாந் ருக்வேத விநீதஸ்ய -கிஷ்கிந்தா -3-28- – —

January 21, 2015

பத்மகேசர சம்ஸ்ருஷ்டோ வ்ருஷாந்தர விநிஸ் ஸ்ருத
நிச்வாச இவ ஸீதாயா வாதி வாயுர் மநோ ஹர –கிஷ்கிந்தா -1-71-

பத்மகேசர சம்ஸ்ருஷ்டோ -தாமரைப் பூவின் தாதுக்களோடு கலந்ததாய்
வ்ருஷாந்தர விநிஸ் ஸ்ருத -மரங்களின் நடுவே இருந்து வெளிவருவதாய்
நிச்வாச இவ -மூச்சுக் காற்று போலே
ஸீதாயா-ஸீதா தேவி யினுடைய
வாதி -வீசுகிறது
வாயுர் -காற்று
மநோ ஹர -மனசை அபஹரிப்பதாய்-

அவதாரிகை –
சர்வ பிராணிகளுக்கும் பிராணந ஹேதுவான காற்றுத் தானே
நம்மை சர்வ ஸ்வாபஹாரம் பண்ணா நின்றதீ -என்கிறார் –

1-பத்மகேசர சம்ஸ்ருஷ்டோ –
இக்காற்றின் கார்யம் தூளி எழுந்து செல்லா நின்றது –
2-பத்மகேசர சம்ஸ்ருஷ்டோ –
தாமரையாள் கை விட்ட படியாலே தாமரைத் தாதுவும் பிரதி கூலித்தது-
3-பத்மகேசர சம்ஸ்ருஷ்டோ –
பாதா ருந்தத மேவ பங்கஜ ரஜ-ஸ்ரீ குணரத்ன -42-என்று
அவள் தனக்கும் அகப்பட பாதகமானது நமக்கு பாதகமாகச் சொல்ல வேண்டா வி றே-
4-பத்மகேசர சம்ஸ்ருஷ்டோ –
இதனுடைய ராஜசம்-ரஜோ குணம் -தாமரை உடன் கூடியது -இரண்டு பொருளில் -இருக்கிறபடி என்-நம்மையும் மதிக்கிறது இல்லையே –
5-பத்மகேசர சம்ஸ்ருஷ்டோ –
இதுக்கடி கண்டகிகளோட்டை சம்சர்க்கம் இ றே -துன்புருத்துவதான -முள் நிரம்புஇயதான -இரண்டு பொருளில் –
6-பத்மகேசர சம்ஸ்ருஷ்டோ –
இத்தைக்காற்று என்று இருந்தோம்
இது கேசரியாய் இருந்ததீ-சிம்ஹமாய் -கேசரங்களோடு கூடியதாய்
7-பத்மகேசர சம்ஸ்ருஷ்டோ –
தனக்கு மேலே கூட்டுப் படையும் தேடி வாரா நின்றது
ரூபவான்கள் இ றே அசஹாய சூரராய் இருப்பர்
இது ரூபஹீனம் ஆகையாலே துணை தேடும் இ றே –

இப்படி பாதகமாய் வந்ததாகில் அறிந்து ஏற்கவே பரிஹரிக்க தட்டென்-என்ன –
1-வ்ருஷாந்தர விநிஸ் ஸ்ருத-
தூரத்திலே கண்டு பரிஹரிக்க ஒண்ணாதபடி
குன்றூடு பொழில் நுழைந்து -பெரியாழ்வார் -4-8-9-என்கிறபடியே
மரங்களிலே வந்து பதி கிடந்து நடுவே புறப்படக் கண்டது இத்தனை –
2-வ்ருஷாந்தர விநிஸ் ஸ்ருத-
செல்வப் பிள்ளைகள் வெய்யில் பொறாமல் நிழலிலே வருமா போலே இதுவும் மரத்தின் நிழலிலே வாரா நின்றது –
3-வ்ருஷாந்தர விநிஸ் ஸ்ருத-
கீழே -பத்ம கேசர சம்ஸ்ருஷ்ட -என்று சௌ ரப்யம்-நறு மணம் -சொல்லிற்று
மரத்திலே தங்கி இடைவெளியாலே ஒழுகப் புறப்படுகையாலே மாந்த்யம் -மென்மை-சொல்லிற்று –
மரத்தின் நிழலில் வருகையாலும்
தாமரையில் உள்ள தேனை அளாவி வருகையாலும் -சைத்யம் -குளிர்ச்சி -சொல்லிற்று
ஆக
சௌ ரப்யமும்
மாந்த்யமும்
சைத்யமும்
சொல்லிற்று
4-வ்ருஷாந்தர விநிஸ் ஸ்ருத-
விடாய்த்த நம்மை மரத்தடியில் ஒதுங்க ஒட்டுகிறது இல்லை –

இப்படி  பாதகமாய் வந்தால் தம்மைக் கொண்டு அகலும் இத்தனை யன்றோ என்ன –
1-நிச்வாச இவ ஸீதாயா –
முகம் பழகினால் போலே இருக்கையாலே அதுவும் செய்யப் போகிறது இல்லை –
2-நிச்வாச இவ ஸீதாயா –
மைதிலியினுடைய மூச்சுக் காற்று போலே இருக்கையாலே
அவள் தான் மரத்தடியிலே ஒளிந்து நின்று வருகிறாளோ
என்கிற நசையினால் போகப் போகிறது இல்லை –
3–நிச்வாச இவ ஸீதாயா –
ஆமோத முபஜிக் ரந்தௌ ஸ்வ நிச்வாஸா நு  காரிணம்-ரகுவம்சம் -1-43- என்று
நிச்வாசத்துக்கு பரிமளம் உண்டாகச் சொல்லக் கடவது   இ றே-
4–நிச்வாச இவ ஸீதாயா –
ஸ்பார்ச நமாய் நலிகிறதுக்கு மேலே ஸ்மாரகமாயும் நலியா நின்றது-

இப்படிக்கு ஒத்த காற்று தோன்றின அளவோ -என்னில்
1-வாதி –
வீசுகிறது -காடுதான் பரப்பும் தானாம் படி உலவா நின்றது
அன்றியிலே
2- வாதி –
என்று பாதகம் என்று கொண்டு போக ஒண்ணாத படி தான் சம்பாதித்த கந்தத்தாலே துவக்கா நின்றது
இதுதான் கந்த வாஹம் இ றே-

இப்படி பாதகமாக வந்து தோற்றி உலாவுகிறது தான் எது என்னில்
1-வாயு –
சர்வ உஜ்ஜீவன ஹேதுவான காற்று கிடீர் இப்படி பாதகம் ஆகிறது
2- வாயு –
பீஷாஸ் மாத் வாத பவதே -என்று இவருக்கு அஞ்சித் திரிகிற காற்று இ ரே இவர் தம்மை அஞ்சப் பண்ணித் திரிகிறது-

இப்படி அஞ்சப் பண்ணுகிற படி என் என்னில்
1-மநோஹர –
மேல் எழுந்தது அன்றியிலே உள்ளுள்ள பதார்த்தம் அகப்பட அபஹரியா நின்றது
2- மநோஹர –
இனியாரைப் போலே இன்னாப்புச் செய்யா நின்றது-

இது லோகத்திலே ஒரு வழி பறிக்காரர்  சமாதியாய் நடக்கிறது –
பத்ம கோசர சம்ஸ்ருஷ்ட -என்கையாலே -தங்களை இன்னார் என்று அறியாமைக்கும்
கண்டால் பயப்படுகைக்காகவும்  –
அவர்கள் உத்தூளனம் பண்ணி வருகிறாப் போலே இருக்கிறது
வ்ருஷாந்தர விநிஸ்சருத-என்கையாலே -அவர்கள் வழிப் போகிறவர்கள் வரும்தனையும் மரத்தடியில் பத்தி கிடந்தது
அவர்கள் அணுக வந்தவாறே புறப்படுமா போலே இருக்கிறது
நிச்வாச இவ ஸீதா யா -என்கையாலே -அவர்கள் கை கழியப் போகாமே துவக்கும்படி -பண்டு கண்டு அறியுமா போலே இருந்தது
உம்முடைய ஊர் சொல்லீர் -பேர் சொல்லீர் -என்றால் போலே முகம் அறிவு சொல்லி உகப்பிக்குமா போலே இருக்கிறது –
வாதி -என்கையாலே கார்யம் கை புகுரும் தனையும் அவர்கள் நின்ற இடத்திலே நிலவாதே
பரகு பரகு என்று சஞ்சரிக்குமா போலே இருக்கிறது –
வாய்-என்கையாலே -யாரேனும் தொடர்ந்து பிடிக்கப் புக்கால் உடம்போடு உடம்பு தாக்கா நிற்கச் செய்தேயும்
கைக்குப் பிடி கொடாதே இருக்கும் படியைச் சொல்லுகிறது
மநோஹர -என்கையாலே மேல் எழுந்த கிழிச் சீரை அன்றியிலே உள்ளுள்ளது அடைய அபஹரிக்கும் படியைச் சொல்லுகிறது –

————————————————————————————————————————————————————————-

பத்ம சௌகந்தி கவஹம் சிவம் சோக விநாசநம்
தன்யா லஷ்மண சேவந்தே பாம்போ   பவன மாருதம் -கிஷ்கிந்தா -1-115-

பத்ம சௌகந்தி கவஹம் -தாமரை ஆம்பல் ஆகிய புஷ்பங்களின் மணத்தை தரித்து நிற்பதும்
சிவம் -பரிசுத்தம் ஆனதும்
சோக விநாசநம் -துன்பத்தை துடிப்பதையும்
தன்யா -பாக்யவான்களே
லஷ்மண-லஷ்மணா
சேவந்தே -அனுபவிக்கிறார்கள்
பாம்போ   பவன மாருதம் -பம்பா சரஸ்சின் கரையில் உள்ள தோட்டத்தில் இருந்து வீசுகிற காற்றை-

பத்ம சௌகந்தி கவஹம் –
கலம்பகன் சூடுவாரைப் போலே
சிவம்
இதன் அத்தனை நன்மை யுடையார் ஒருவரும் இல்லை
சோக விநாசநம்
நம்மைசித்ரவதம் பண்ணாது
சோகம் மறுவலிடாத படி பண்ணும் போலே இரா நின்றது
தன்யா
தனமுடையார் ஷாமத்துக்கு பஞ்சத்துக்கு அஞ்சார்கள்  இ றே
லஷ்மண
சேவந்தே
அஞ்சாமை அன்றிக்கே
இத்தை அனுபவிக்கைக்கு ஏகாந்தமான ஸ்தலம் தேடா நிற்பர்கள்
பாம்போ   பவன மாருதம்
ஆகாரத்தில் நெருப்பு என்னுமாப் போலே -நெருப்புச் சட்டியில் நெருப்பு என்னுமா போலே-

————————————————————————————————————————————————————

த்வம் -அப்ரமேயச்ச -துராச தச்ச-ஜிதேந்த்ரியச்ச உத்தமதார்மிகச்ச –
அஷய்ய கீர்த்திச்ச -விசஷணச்ச -ஷிதி ஷமாவான் -ஷத ஜோபமாஷ-கிஷ்கிந்தா -24-31-

த்வம் -நீர்
அப்ரமேயச்ச -அளவிட ஒண்ணாத வராயும்
துராச தச்ச-கிட்ட ஒண்ணாத வராயும்
ஜிதேந்த்ரியச்ச -ஜெயிக்கப் பட்ட இந்த்ரியங்களை யுடையவராயும்
உத்தமதார்மிகச்ச -சிறந்த தர்மத்தை யுடைவராயும் –
அஷய்ய கீர்த்திச்ச -அழிவற்ற புகழை யுடையவராயும்
விசஷணச்ச -அதி சமர்த்தராகவும்
ஷிதி ஷமாவான் -பூமியைப் போன்ற பொறுமை யுடையவராயும்
ஷத ஜோபமாஷ-ரத்தம் போலே சிவந்த கண்களை யுடைய  ஸ்ரீ ராம பிரானே -இருக்கின்றீர்-

அவதாரிகை –
தத சரேணாபி ஹதோ ராமேண ரண கர்க்கச –
பபாத சஹஸா வாலீ நிக்ருத்த இவ பாதப -கிஷ்கிந்தா -17-1-என்கிறபடியே
பெருமாள் திருக்கையில் அம்பாலே-
நினைவன்றியிலே மறுபாடுருவ ஏவுண்டு தரைப்பட்ட வாலியானவன் குபிகனாய் –
ஜானே பாப சமாசாரம் த்ருணை கூப மிவாபரம் சதாம வேஷகரம் பாபம் பிரச்சனன மிவ பாவகம் – கிஷ்கிந்தா -17-1–என்று
கிட்டினாரை விழப் பண்ணுகைக்கு புல்மூடு கிணறாய் இருந்தீர்
அணுகினாரை முடிக்கைக்கு பொடிமூடு தணலாய் இருந்தீர் –
இப்படி பிரசன்ன பாபரான நீர் -பரம பாவனமாய் ஜடா வல்கல ரூபமான இத் தாபச வேஷத்தை என் செய்யக் கட்டி யுடுத்தீர் -என்று தொடங்கி
விஷயே வா புரே வா தே யதா நாப கரோ மயஹம் -கிஷ்கிந்தா -17-22-என்று
உம்மோடு எங்களுக்குக் காணித்தாயம்-சிறு நிலத்  தகராறு -பூமித் தாயம் -பெரு நிலத் தகராறு -எல்லை மயக்கம் இல்லை
மந்திர வழக்காட்டமும்  -வீட்டைப் பற்றின வழக்கும் இல்லை
வான்பகை வழிப்பகை-நீண்ட கால விரோதமோ நடுவில் வந்த விரோதமோ -ஏற்பட்டது  இல்லை –
ஜ்ஞாதிப் பகை-குடிப்பகை -தாயாதிக் காய்ச்சலோ -பாம்பு கீரி போல குல விரோதமோ -இல்லை
பசு மறித்தல்-நிரை சாய்த்தல் -செய்தது இல்லை
ஊர்ப் பிணக்கு நீர்ப் பிணக்கு இல்லை
பெண் பிணக்கு மண் பிணக்கும் இல்லை
ந ச த்வாம் -பிரதிஜா நே அஹம் கஸ்மான்மாம் ஹம்ச்ய கில்பிஷம்  -கிஷ்கிந்தா -17-23- என்று
நான் தான் உம்மை இன்னார் என்று அறியேன்
இப்படி இருக்க நிரபரா தரான நாங்கள் இருக்கிற இடத்திலே நீர் தாமே இடறிக் கொண்டு வந்து என் செய்யக் கொன்றீர் –
மாமிஹாப்ரதியுத் யந்த மன்யேன ச சமாகதம் –தர்ம லிங்க பிரதிச் சன்ன க்ரூரம்   கர்ம சமாசரேத்-கிஷ்கிந்தா -17-24/25-என்று
உம்மோடு பொர வந்தேன் அல்லேன்
வேறு ஒருவனோடு போருகிரவன்
இப்படி இருக்கிற என்னைச் சடுதியிலே புகுந்து கொன்று கொடும் தொழில் செய்தீர் –
வயம் வநசரா ராம ம்ருகா மூலபலாச நா ஏஷா பிரகிருதி ரஸ்மாகம் புருஷ சத்வம் நரேச்வர -கிஷ்கிந்தா -17-28- என்று
நாங்கள் காடர் -நீங்கள் நாடார்
நாங்கள் மிருகங்கள் நீங்கள் மனுஷ்யர்
நாங்கள் தின்பது காயும் கிழங்கும் நீங்கள் தின்பது செந்நெல் சோறு
நாங்கள் குடிமக்கள் நீங்கள் ராஜாக்கள் -என்றும்
அதார்யமா சர்ம மே சத்பீ ரோமாண யஸ்தி விவர்ஜிதம் -அபஷ்யாணி சமாம்சானி த்வத் விதிர் தர்ம சாரிபி -கிஷ்கிந்தா -17-37-என்று
வேட்டையாட வந்தீர்கள் ஆகில் கலைத்தோல் புலித்தோல் போலே எங்கள் தோல் யஜ்வாக்களுக்கு உறுப்பு தோலுக்கு உறுப்பு ஆகிறது அல்ல –
எங்களுடைய ரோமாச்திகள் சவாரி சாமரங்கள் போலவும்
யானைக் கொம்பு புலியுகிர் போலவும் விநியோக யோக்கியம் அல்ல
எங்களுடைய மாம்சம் முட்பன்றி மான் உடும்பு ஆமை இவற்றின் மாம்சங்கள் போலே போஜ்யங்கள் அல்ல -நிஷித்தம்
ராஜ ஹா பரஹ்மஹா கோக்ந  சோர ப்ராணிவதே ரத நாஸ்திக பரிவேத்தா ச சர்வே நிரயகாமி ந -கிஷ்கிந்தா -17-35-என்று
ராஜ வதாதிகள் பண்ணினார்க்கு நரகமே காணும் கதி என்றால் போலே
இப்புடைகளிலே ஒரு கோடி பருஷங்களைச் சொல்லி
அதி ஷிப்த ச்ததா ராம பச்சாத் வாலி நமப்ரவீத்
தர்மமர்த்தஞ்ச காமஞ்ச சமயஞ்சாபி லௌகிகம்
அவிஜ்ஞாய கதம் பாலான் மாமிஹாத்ய விகர்ஹசே -கிஷ்க்ந்தா -18-4-என்று
இப்படிப் பாராமல் சொல்லப்பட்ட பெருமாளும் -நீ ஒரு விவேகியாய் வைதிக புருஷார்த்தம் அறிகிறாய் இல்லை –
லௌகிகமான வழக்கும் அறிகிறாய் இல்லை
உன் அறிவு கேட்டால் நியாய அனுஷ்டானம் பண்ணின நம்மைப் பழிக்கிறாய் இத்தனை –
காணித்தாயம் பூமித்தாயம் இல்லை என்றாய் –
இஷ்வாகூ ணாமியம் பூமி ச சைல வந காநநா -கிஷ்கிந்தா -18-6- என்று மலை முழைஞ்சில் களோடு  -சிறு காட்டோடு -பெரும் காட்டோடு -வாசி அற இந்த பூமி அடைய எங்களதன்றோ-
பூமி ஷேதாம கள தரஞ்ச  -என்று எங்கள் காணியூராகிறது இது வன்றோ
எல்லை மயக்கமில்லை மந்திர வழக்காட்டம் இல்லை -என்றாய்
தவம் வயஸ்யச்ச ஹ்ருத்யோ மே ஹ்யேகம்துக்கம் ஸூ கஞ்ச நௌ-கிஷ்கிந்தா -5-18- என்று
சமான ஸூ க துக்க ராம்படி மகாராஜரோடே சகயம் பண்ணினோம்
ஆனபின்பு -தே நா ஹம பிரதி ஷித்தச்ச ஹ்ருதராஜ்யச்ச -கிஷ்கிந்தா -10-27-என்னும்படி
எல்லை மாறாட்ட மாத்ரம் அன்றிக்கே  நேராக ராஜ்யத்தை பறித்தும்
பரிகரத்தை நாலு பேர் ஒழியச் சேர்த்துக் கொண்டும் செய்தாய்
வான் பகை வழிப் பகை இல்லை என்றாய் –
யதா வச்சாப்ய வாதயம் உக்தாச்ச நா சிஷஸ் தே ந -கிஷ்கிந்தா -9-23- என்று
அவன் காலிலே குனிந்த அளவிலும் அங்கீ கரியாதே-
வஸ்த்ரே ணை கே ந வானர ததா வித்ரா வ்யாமாச வாலீ -கிஷ்கிந்தா -10-26-என்று
ஒற்றை யுடையோடே ஓட அடித்திலையோ –
ஜ்ஞாதிப் பகை குடிப்பகை இல்லை -என்றாய்
அயம் ப்ராதா ஸூ தாருண–கிஷ்கிந்தா -10-25-என்று நீயே சொன்னாயே
அப்படிக்கு ஒத்த தம்பியோடு வெறுத்தி அல்லையோ
பசு மறித்தல் நிரை சாய்த்தல் செய்தது இல்லை ஊர்ப் பிணக்கு இல்லை -என்றாய் –
அவன் க்ருஷி கோ ரஷண  வாணிஜ்ய முகத்தாலே அர்த்தார்ஜனம் பண்ணுகிற ஸூ ரபி முத்திறமும் -பசு ஆடு எருமை –
பட்டமாக எழுகிற குடிக் காடுகளும் குளங்களும் வாங்கிக் கொண்டே அல்லையோ
பெண் பிணக்கு மண் பிணக்கும் இல்லை -என்றாய்
ப்ராதுர் வர்த்தசி பார்யாயாம் -கிஷ்கிந்தா -18-18-என்று அனுஜ பார்யாபஹாரமும் கிஷ்கிந்தாபஹாரமும் பண்ணிற்று இலையோ –
நான் தான் உம்மை இன்னார் என்று அறியேன் -இப்படி இருக்க நிர பராதரான  எங்களை இருந்த இடத்திலே நீர் தாமே இடறிக் கொண்டு வந்து என் செய்யக் கொன்றீர் -என்றாய் –
தாம் பாலயதி தர்மாத்மா பரதஸ் சத்தியவாக்ருஜூ
தஸ்ய தர்ம க்ருதாதே ஸாத் வயமன்யே ச பார்த்தி வா
சராமோ வஸூ தாம  க்ருத்ச்நாம்-கிஷ்கிந்தா -18-7/9- என்றும்
த்வாஞ்ச தர்மாததி க்ராந்தம் கதம் சக்யம் உபேஷிதும்-கிஷ்கிந்தா -18-24- என்றும்
நாங்கள் ராஜா பரதனுடைய தர்ம நிதேசகாரிகளாய்-துஷ்ட நிக்ரஹம் பண்ணித் திரிகிறவர்கள்
நீ குற்றம் செய்தவாறே நீ இருந்த இடம் தேடி வந்து உன்னை தண்டித்தோம்
உம்மோடு பொர வந்தவன் அல்ல -வேறு ஒருவனோடு பொருகிறவன் -இப்படி இருக்கிற என்னைக் கொன்றீர் -என்றாய்
வத் யந்தி விமுகாம்ச்சாபி ந ச தோஷாத்ர வித்யதே அயுத்யன் பிரதியுத் யனவா யச்மாச்சாகா ம்ருகோ ஹ்யசி -கிஷ்கிந்தா -18-40/42/என்று
நம்மோடு பொராது ஒழியவுமாம்-கெட்டே ஓடவுமாம் – உன்னைக் கொன்றால் ஒரு தோஷமும் இல்லை
நீயோ ஒரு குரங்கு அன்றோ ராஜாக்கள் சொல்லுமாப் போலே சொன்னாய்
நாங்கள்   காடர் நீங்கள் நாடார்-நாங்கள் மிருகங்கள் நீங்கள் மனுஷ்யர்கள்
நாங்கள் பலமூலாசிகள் நீஞ்சல் ராஜான்ன போக்தாக்கள்
நாங்கள் குடிமக்கள் நீங்கள் ராஜாக்கள் என்றால் போலே அப்ரயோஜகமாகச் சொன்னாய்
பாரத காம வருத்தா நாம நிக்ரஹே  பர்யா வச்தித-கிஷ்கிந்தா -18-25-என்றும்
ம்ருக பஷி மனுஷ்யாணாம் நிக்ரஹப்ரக் ரஹாவபி -கிஷ்கிந்தா -18-6- என்றும்
எங்கேனும் திரியிலுமாம் -ஏதேனும் சாதியாகிலுமாம்- ஏதேனும் தின்னிலுமாம்-
இப்படி பவ்யராகிலுமாம்-துஷ்ட நிக்ரஹம் ராஜாக்களுக்கு அடுத்தது காண்
எங்களுடைய ரோமாஸ்தி மாம்சங்கள் நிஷித்தங்கள்-இப்படியிருக்க நிஷ் பிரயோஜன வ்யாபாத நம் பண்ணினீர் -என்றாய் –
வாகு ராபிச்ச பாசைச்ச கூடைச்ச விவிதைர் நரா
பிரதிச்ச ந்நாச்ச த்ருச்யாச்ச நிக் நந்தி ஸ்ம பஹூன் ம்ருகான்-கிஷ்கிந்தா -18-39-என்று
ராஜாக்கள் ஆனவர்கள் ரோமாஸ்தி மாம்சாதிகள் ஆகிற பிரயோஜனங்களை   ஒழியவும்
ம்ருகங்களாலே நாடு அழியப் புக்கால் ஜனபத ஹிதார்த்தமாகவும் வேட்டையாடுவதாயும்
வலைகட்டி வளைத்தும் -கன்னி கட்டிப் பிடித்தும் ஊட்டிச் சதித்தும்
பார்வை மாள வைத்தும் ஒழித்து நின்றும் கொல்லக் கடவர்களாய்க் காண் இருப்பது
ராஜாவதம் பண்ணினார்க்கு நரகமே காணும் கதி -என்றாய்-
ஔ ரசீமா பகி நீம் வாபி பார்யாஞ்சாப்ய நுஜச்ய யா
பிரசரேத் வானர காமாத் தஸ்ய தண்டோ வாத ஸ்ம்ருத-கிஷ்கிந்தா -18-23- என்று
ராஜாவதம் பண்ணினால் அன்றோ குற்றம் உள்ளது
நீ ஒரு குரங்கு
அனுஜ பார்யாபஹாரம் பண்ணினாய் ஆகையால் தண்ட்யன்
ராஜா த்வாச நாத் பாபம் தத வாப் நொதி கில்பிஷம் -கிஷ்கிந்தா -18-33- என்று
உன்னை தண்டியாத போது நமக்குப் பாபம் வரும் இத்தனை -என்று
இப்புடைகளிலே திருத்தமாக சில வார்த்தைகளை அருளிச் செய்ய
வாலியும் -பிரத்யுவாச ததோ வாசிம ப்ராஜ்ஞலிர் வானரேச்வர
யத்த்வமாத்த நரஸ்ரேஷ்ட ததே தந் நாதார சம்சய -லிஷ்கிந்தா -18-47-என்று உடன்பட்டு வாந்தனாக
இப்படி பூஜை பலத்தாலும் வாக்யுத்தத்தாலும் வாலியைச் சென்று கொன்று வென்றி கொண்டு பெருமாள் நிற்கிறவளவிலே
பர்த்ருவத ஜநிதமான சோகக் ரோதங்களாலே விக்ருதையாய்
என் ஆண் மகனைக் கொன்றவனை வாயார வைய வேணும்
என்று கட்டி யுடுத்து வந்த தாரையானவள்
சா தம சமா சாத்ய வி ஸூ த்த சத்வா -கிஷ்கிந்தா -24-30-என்று
பெருமாளைக் கண்டு தத் சந்நிதி மகாத்ம்யத்தாலே கோபம் தணிந்து சத்வம் தலை எடுத்து
சத்வாத் சஞ்ஜாயதே ஜ்ஞானம் -ஸ்ரீ கீதை -14-17-என்று சத்வ கார்யமான ஜ்ஞானம் பிறந்து
தெளிவுற்ற சிந்தையள்   ஆகையாலும் -அவ்வஸ்துவை ஒரு போகியாக சாஷாத் கரித்து நிர்ணயம் பண்ணி
வையப் புக்க வாயாலே வாழ்த்துகிறாள்
தஸ்மின் த்ருஷ்டே பராவரே பித்யதே ஹ்ருதயக் ரந்திச் சித் யந்தே சர்வ சம்சயா -ஷீ யந்தே சாஸ்ய கர்மாணி -முண்டக -2-2-9-என்று
பகவத் சாஷாத் காரம் பிறந்தால் ப்ரதிபந்தகம் போய் தத்வ அனுபவம் பண்ணக் குறையில்லை இ றே-

ஸ்ரீ வால்மீகி பகவான் -அல்லாத ரிஷிகளையும் வேதங்களையும் போலே
ஆலோட்ய சர்வ சாஸ்த்ராணிவிசார்யா ச புன புன
இதமேகம் ஸூ நிஷ் பன்னம் த்யேயோ நாராயணஸ் சதா -பார-ஆநு -178-11- என்றும்
வேத சாஸ்த்ராத் பரம் நாஸ்தி ந தைவம் கேசவாத் பரம் -நாராதீய புராணம் -18-33- என்றும்
நாஸ்தி நாராயண சமோ  ந பூதோ ந பவிஷ்யதி -ஹரி வம்சம் -3-32- என்றும்
ந த்வத் சமோச்த்ய ப்யதிக குதோன்ய-ஸ்ரிகீதை -11-43- என்றும்
அக்னிர்வை தேவா நாம வமோ விஷ்ணு பரம –தை சம்-5-1- என்றும்
ந தத சமச்சாப்யாதி கச்ச த்ருச்யதே -சவே -6-என்றும்
யஸ்மாத் பரம் நா பரமஸ்தி கிஞ்சித் -தை நா -10-20- என்றும் –
ந தச்யேச கச்ச ந -தை நா -1-9- என்றும்
இத்யாதிகளாலே தாம் தாம்பகவத்  பரத்வ உபபாதனம் பண்ணத் தொடங்கி
நமோ ஹிரண்ய கர்பாய ஹரயே சங்கராய ச -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-2-2-என்றும்
ருத்ராணாம் சங்கரச்சாஸ் மி -ஸ்ரீ கீதை -10-23- என்றும்
ச ப்ரஹ்மா ச சிவ்ஸ் சேந்திர-தை ணா -11- என்றும்
வாச நாந்தரங்களாலே சாம்ய சங்கை பண்ணும்படி யாவது
விச்வாதிகம் ருத்ரம் ப்ரஹ்ம காரணகாரணம் -என்றும்
விச்வாதி கோ ருத்ரோ மகாஷி -தை ணா -10-19-என்றும்
ந கிரிந்திர த்வதுத்தரோ ந ஜ்யாயோ அஸ்திவ்ருத்ரஹந -ருக்சம் அச்-3- என்றும்
ஆகாச  யேப்யோ ஜ்யாயான் ஆகாஸ் பராயணம் -சாந்தோக்யம் -1-9-1- என்றும்
சிவா ஏகோ த்யேய சிவங்கர -அதர்வசிகை -2-20-என்றும் இத்யாதிகளாலே
தேவதாந்த்ரங்கள் உடைய ஆதிக்ய சங்கை பண்ணும்படி யாவது இதுக்கு பூர்வா பரங்களும்
தரமி க்ராஹக பிரமாணமும் கொண்டும்
சமா நாதி கரண வாக்யங்களுக்கு அந்தர்யாமி பர்யந்த அனுசந்தானத்தாலே என்றும்
அவ்வோ தேவதைகளைச் சொல்லுகிற பிரதேசங்கள் தானும்
க்ரய்யேயம் கௌ பஹூ ஷீரா ஸாத் வீச -என்று விலைபசுவை போரப் பொலியச் சொல்லுமா போலே தத்வ பரமன்று -பிரசம்சா பரம் என்றும்
ஆகாச பிராண வாம தேவந்திர ப்ரஹ்லாதி களுக்குப்  பரத்வம் வரில் யாயிற்று ருத்ராதிகளுக்கு பரத்வம் வருவது என்கிற
துல்ய நியாயத்தாலும் உபபாதிக்க வேண்டி க்லேச பஹுளமாய் இராதபடி
சர்வாணி ஹ வா இமானி பூதானி பிராண மேவாபி சம்வி சாந்தி -சாந்தோக்யம்-1-11-5–பிராண பரம் -என்றும்
அஹம் மநூபவம் ஸூ ர்யச்ச -ப்ருஹ-3-4-10-வாம தேவ ரிஷி பரம் -என்றும்
மாம் உபாஸ் ஸ்வ –மாமேவ விசா நீஹி -கௌஷீதகீ -இந்திர பரம் -என்றும்
மத்தஸ் சர்வம் அஹம் சர்வம் -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-19-89- ப்ரஹ்லாத பரம் -என்றும்
கடல் ஞாலம் செய்தேனும் யானே -திருவாய் மொழி -5-6-1- என்றும் ஸ்ருதி வாக்யங்கள் உண்டே –

ஆஸ்த்ரீபாலம் பிரசித்தவைபவர் பெருமாள்  என்று அறிவிக்கைக்காக தார அங்கதாதிகளை இட்டுத் தத்வ நிர்ணயம் பண்ணுகிறான் –

இதில் –
ஸூ சம்வருதம் பார்த்திவ லஷணைச் சதம் சாரு நேத்ரம் ம்ருக சாப நேத்ரா
அதருஷ்ட பூர்வம் புருஷம் ப்ரதா நமயம் ச காகுத்ச்த இதி ப்ரஜஜ்ஞே -கிஷ்கிந்தா -24-28-என்று
இற்றைக்கு முன்பு கண்டு அறியாது இருக்கச் செய்தேயும்
திருமேனியில் ஸ்வயம் வரித்துக் கிடக்கிற ராஜ லஷணங்களாலும்
ராம கமல பத்ராஷ-சுந்தர -35-8- என்று அசாதாரணமான கண் அழகாலும்
என்னுடைய பர்த்தாவைக் கொன்ற பெருமாள் இவர் என்று அறிந்தாள்-என்று சௌலப்யத்தில் ஒரு யோஜனையும்
ஸூ சம்வருதம் பார்த்திவ லஷணைச் -கிஷ்கிந்தா -24-28-என்று சௌலப்ய சிஹ்னங்களாலே மறைந்து இருக்கச் செய்தேயும்
சகார -உம்மைத் தொகையால் -ஸூ சிதமான பரத்வ குணங்களாலும்
யதா புண்டரீக மேவமஷிணீ-சாந்தோக்யம் -2-6-7-என்று பரத்வ ஸூ சகமான திருக் கண்களாலும்
கண்ட வாற்றால் தனதே உலகென நின்றான் -திருவாய் -4-5-10-என்று
நிழல் எழுகிற புருஷ பிரதான்யத்தாலும்
அயம் ச காகுத்ச்த இதி பிரஜாஜ்ஞே -கிஷ்கிந்தா -24-28-என்று
ஆயர் புத்திரன் அல்லன் அரும் தெய்வம் -பெரியாழ்வார்-1-1-7- என்று
இச் சக்ரவர்த்தி திருமகனார் அப்பர வஸ்து தான் என்று அறிந்தாள் என்று பரத்வத்திலே ஒரு யோஜனையும் இ றே –
அவ்விரண்டையும் சேர்த்து யோஜிக்கிறது-

வியாக்யானம் –
1-த்வம் –
இவளுடைய பர்த்ரு பக்தி இருக்கிறபடி
ராஜாக்களையும் அகப்பட த்வங்கரிக்கிறாள்
-தெய்வம்  தொழாள் கொழுநன் தொழுது எழுவாள் -அரசனையும் நீ என்கிறாள்
2-த்வம் –
மேலே அப்ரமேயச்ச என்று தொடங்கி ஏறப் புகுகிற குணபாரத்துக்கு அதிஷ்டானம் யுன்டாம்படி ஆச்ராயம் தன்னைப் பாரிக்கிறாள்
3-த்வம்  –
குணா நாமாகரோ மஹான்-கிஷ்கிந்தா -15-21- என்கிறபடியே
அநவதிக அதிசய அசங்க்யேய கல்யாண குணகணங்கள் அடைய ஒரு சிறாங்கை யாம்படியான ஸ்வரூபத்தின் கனம் இருந்தபடி  என்-
4- த்வம் –
ராவண துந்துபி ப்ரப்ருதிகளை அகப்பட தலை அழித்த வாலியைக் கொன்று வென்றி கொண்டு ஒன்றும் செய்யாதாரைப் போலே நின்ற நிலை என் தான் –
5- த்வம் –
வாலிக்கு அஞ்சிக் கிடம் கடைந்து கிடந்த மகா ராஹருக்கு அகப்பட வெற்றி  கொடுத்து சரணாகத வத்சலரான நீர்
6- த்வம் –
ஸ்திரீ பாலர்களான நாங்களும் அகப்பட மதியாதே வந்து கிட்டும்படியான நீர்
7- த்வம் –
வஸ்துவை வஸ்த்வந்தரம் ஆக்குமா போலே வாயார வைய வந்த என்னை வாழ்த்தும்படி பண்ணி வைத்த நீர்-

நீ வாழ்த்துகைக்கு ஒருப்பட்டாய் ஆகில் அது தன்னைத் தொடங்கல் ஆகாதோ -என்ன –
1-அப்ரமேய –
உம்மையும் அறியாதே என்னையும் அறியாதே முகம் கொள்ளலாமோ என்று பார்த்தேன்
அது முகம் கொள்ள ஒண்ணா தாய் இருந்தது
2-அப்ரமேய –
நானே அன்று
வேதாஹம் -புருஷ ஸூ க்தம்-என்று தொடங்கின வேதம் அகப்பட மஹாந்தம் -என்றும்
க இத்தா வேத -கடக்க -2-25- என்றும் மீளும் படி அன்றோ உம்முடைய அபரிச்சேத்யத்வம் –
3- அப்ரமேய –
ப்ரமா விஷயம் பிரமேயம் -இ ரே
ப்ரமேயம் ஆகிறது தான் சமயக நுபவம் இ றே
அதாவது -ப்ரத்யஷ அநு மான ஆகம ஜன்ய ஜ்ஞானம் இ றே –
அவை மூன்றுக்கும் விஷயம் அல்லீராய் இருந்தீர்
ந சந்தருசே   திஷ்டதி ரூபமஸ்ய ந சஷூஷா பச்யதி கச்ச நை நம-தை நா -1-10- என்றும்
கட்கிலீ -என்றும் சொல்லுகிறபடியே ப்ரத்யஷ ஜ்ஞான விஷயம் அல்லீராய் இருந்தீர்
த்ருஷ்ட அநு மானத்தில் வ்யாப்தி க்ரஹணத்துக்கு ப்ரத்யஷ யோக்கியம் அல்லாமையாலும்
ந தத் சமச்சாப்யாதி கச்ச த்ருச்யேதே-என்றும்
ஒத்தார் மிக்கார் இலையாய மா மாயா -என்றும்
திருஷ்டாந்தம் இல்லாமையாலும்
சாமான்யதோ த்ருஷ்ட அநு மானத்தில் வ்யாப்தி க்ரஹண தசையில்
சர்வ கர்தரநுகதமாகக்  கர்ம வச்யத்வ துக்கித்வ ஆயாசித்வ அப்ரயோஜன த்வ கின்னத்வாதியான
அபுருஷார்த்தங்கள் வ்யாப்தி பலம் தன்னால் வருகையாலும்
பஷதர்மதா பலத்துக்கு நித்ய நிர்த் தோஷ தர்மி க்ராஹக சுருதி பலத்தாலே த்ரிவித காரணமுமாய்
சகல இதர விலஷணமுமாக அந்ய தைவ சித்திக்கையாலும்  அனுமான ஜ்ஞான விஷயம் அல்லீர்
யதோ வாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மனஸா சஹ -தை ஆனா -9- என்றும்
நேதி நேதி -என்றும் யதோ ந வேத மநஸா  சஹை நம நு ப்ர விஸநதி  ததைவ மௌ நம -என்றும்
வேதங்கள் பரிச்சேதிக்க மாட்டாமையாலே ஆகம ஜன்ய  ஜ்ஞானத்துக்கும் விஷயம் அல்லீர் –
4-அப்ரமேய –
பிரமாணங்களுக்கு விஷயம் அல்லீர் என்னும் இடம் சொல்ல வேணுமோ
அப்ரமேயச்ச -சோ அங்க வேத யதி வா ந வேத -என்றும்
தனக்கும் தன் தன்மை அறிவரியானை -என்றும்
ஸ்வதஸ் சர்வஜ்ஞரான தேவர் தமக்குத் தான் பரிச்சேதிக்க விஷயமோ –
5-அப்ரமேயச்ச  –
நித்யத்வாத் கால பரிச்சேதம் இல்லை
விபுத்வாத் தேச பரிச்சேதம் இல்லை
கார்யந்தராபாவாத் வஸ்து பரிச்சேதம்-த்ரிவித சேதனர்க்கும்-த்ரிவித கரணங்களாலும் -த்ரிகாலத்திலும் பரிச்சேதிக்க ஒன்னாதவர் அன்றோ –
6-தவம் அப்ரமேய –
முன்னே வந்து நிற்கும் என் கைக்கும் எய்தா நின் கழல் -திருவாய் -2-9-2-என்கிறபடியே
என் கண் முகப்பே நிற்கச் செய்தேயும் எட்டப் போகிறது இல்லை
7- தவம் அப்ரமேய –
அயம் -என்னும்படி சந்நிஹித தேச வர்த்தமான கால சம்பந்தியாய் இருக்கச் செய்தேயும் -ச -அவன் என்னும்படி விப்ரக்ருஷ்ட தேச காலாந்திர வர்த்திகளைப் போலே அளவிடப் போகிறது இல்லை
8-தவம் அப்ரமேய –
கண்ணிட்டுப் பார்த்த வாறே எளியீராய் இருந்தீர்
நெஞ்சிட்டுப் பார்த்த வாறே அரியீராய் இருந்தீர்
ந சஷூஷா க்ருஹ்யதே  மநஸா து விஸூத்தேந -வியாச ஸ்ருதி-என்கிற பிரமாணம் பொய்யாய் இருந்தது –
9- தவம் அப்ரமேய –
அவஷ்டப்ய ச திஷ்டந்தம் ததர்ச தனுரூர்ஜிதம் -கிஷ்கிந்தா -19-25- என்று
கையும் வில்லுமாய் எளியீராய் இருக்கிற நீர்
தம்ஸ பரமோ தாதா சங்க சக்ர கதாதர -யுத்த -114-15-என்று
கையும் சங்க சக்கரங்களுமான பர வஸ்துவாய் இருந்தீர் –
10-தவம் அப்ரமேய –
பரத்வம் எட்ட ஒண்ணாதது   என்று இருந்தோம் –
சௌ  லப்யம் தானும் எட்டப் போகிறது இல்லை
11- தவம் அப்ரமேய –
ஒரு பரிகரமும் இன்றிக்கே தனிமை பட்டால் போலே இருக்கிற நீர்
அநு பாவ விசேஷாத் து சேனா பரிவ்ருதாவிவ -ரகு வம்சம் -1-37-என்கிறபடியே
அபரிமித பரிகரரைப் போலே உட்கொள்ள ஒண்ணாத படியாய் இருந்தீர்
12-தவம் அப்ரமேய –
பித்ரு நியோகத்தாலே தாபசராய் வன வாசம் பண்ணப் போந்தீர்
விராத கர கபந்த வாலி ப்ரப்ருதிகளைக் கொன்று திரியா நின்றீர்
உம்முடைய நினைவும் செயலும் அறுதி இடப் போகிறது இல்லை-

அந்த கரணத்துக்கு எட்ட ஒண்ணாது என்று ஒழிந்தால் பாஹ்ய கரணம் தனக்கு எட்டலாமோ என்று இருந்தோம் –
1- துராசதச்ச –
அதுவும் செய்ய ஒண்ணாத படியாய் இருந்தது
மனசால் கிட்ட ஒண்ணாததையோ சரீரத்தால் கிட்டலாவது
2- துராசத –
விஷ்ணு ராராத்யதே பந்தா -ஸ்ரீ விஷ்ணு புராணம் -3-8-9- என்றும்
மகா ஜனோ யேன கதஸ் ச பந்தா -பார ஆற -314-19-என்றும் சொல்லுகிற நல் வழியே போவார்க்கு கிட்டலாம் அத்தனை போக்கி
பதஸ் கலிதம் -சம்சார மழை இருளில் வழி தவறின என்னால் -ஸ்தோத்ர ரஹ்னம் -49-என்றும்
பாவியேன் பலகாலம் வழி திகைத்து அலமருகின்றேன்-திருவாய்-3-2-9-என்றும்
வழி கெட்டு நின்றவர்களுக்கு ஒரு காலும் கிட்ட ஒண்ணாததாய் இரா நின்றது
3- துராசத –
ஷத்லு விசாரண கத்ய வசாத நே ஷூ -தாது பாடம் படி
ஸூ ஸூஷ்மம் -முண்ட -1-1-6-என்று ஸூ ஷ்ம த்ரவ்யம் ஆகையாலே ஸ்தூல பதார்த்தம் போலே பொடியாக்க ஒண்ணாது
கதியாய் -நின்ற இடத்திலும் கடக்க வடிக்க என்று பார்த்தால்
விபும் என்று எங்கும் பரந்து உஅன் ஆகையாலே கடக்க வடிக்கப் போகாது
அவசாதனமாய் முடிக்க என்று பார்த்தால்  நித்யம் என்று சர்வ கால சத்தாகையாலே காதா சித்கமான நாசம் பண்ண ஒணாது
ஆக நித்யம் விபும் சர்வகதம் ஸூ ஸூ ஷ்மம் -என்று இருக்கையாலே
இவை மூன்றும் -போடியாக்குவது -தூரத்தில் தள்ளுவது -அளிப்பதோ -செய்ய முடியாது என்றுமாம் –
வாலிவத குபிதரானவர்களும் வந்து அடர்த்து பிரதிக்ரியை பண்ணலாமோ என்று இருந்தோம்
4-துராசத –
அப்படி வருவார்க்கு அணுகவும் கூட ஒண்ணாத படியாய் இருந்தீர் என்றுமாம் –
பாஹ்ய குத்ருஷ்டிகளுடைய குதர்க்கங்களாலே தூஷிக்கலாமோ என்னில்
5- துராசத –
தரக்கோ அப்ரதிஷ்ட ஸ்ருதயோ விபின் நா ந சான்ருஷேர் தர்ச நமஸ்தி கிஞ்சித்  தர்மஸ்ய தத்வம் நிஹிதம் குஹாயாம் -பார ஆர -314-19- என்றும்
உளன் சுடர் மிகு சுருதியுள் -திருவாய் -1-1-7- என்றும்
வேத குஹையில் ஸூ ரஷிதமாகையாலே
தர்க்காபா சங்களாலே யாதல்
ஒருதலை மாற்றமான சுருதி ஸ்ம்ருதி களாலே யாதல்
அவிசால்யராய் இருந்தீர் -என்றுமாம் –

இப்படி அப்ரமேயத்வ துர்த்தர்ஷத் வங்களாலே த்ருப்தராய்
பரதா ராஜ்யங்களைப் பறித்து ஆளுவதாகக் கொன்றீர் என்று இருந்தோம் –
1- ஜிதேந்த்ரியச்ச –
அப்படி அன்றியிலே மகா ராஜார்க்கு கொடுத்த படியாலே விஷய சபாலர் அன்றியிலே இருந்தீர் –
2- ஜிதேந்த்ரிய –
இந்த்ரியங்களும் அடங்காதே கண்ட விஷயங்களிலே சபலங்களாகை அன்றிக்கே
அவை உம்முடைய கீழே அடங்கும்படி அமுக்கி ஆள வல்லீராய் இருந்தீர்
3-ஜிதேந்த்ரிய –
யாதேனும் ஒரு புருஷனும் ஏதேனும் ஒரு ஸ்திரீயைக் கிட்டினால் ஏறிட்டுப் பார்க்கக் கடவதாய் இ re இருப்பது
அப்படி இருக்க
ந ராம பரதா ராமச்ச சஷூர்ப் யாமபி பச்யதி -அயோத்யா -72-49-என்கிறபடியே
இத்தனைப் போது நான் நிற்கிற விடத்தில் முகம் எடுத்துப் பாராதே நிற்பதே -என்ன விரக்தியோ இவர் -என்கிறாள்
4-ஜிதேந்த்ரியச்ச –
பச்யத்ய சஷூஸ் ஸ்ருணேத்ய கர்ண -அயோத்யா -72-49- என்றும்
அபாணி பாதோ ஜவனோ க்ருஹீதா -சவே -3-19- என்றும்
சர்வேந்த்ரியை ரபி வினா சர்வத்ர பச்யதி -என்றும்
நாட்டோபாதிக்கு அவை படைத்தீர் அத்தனை போக்கி நாட்டாரைப் போலே இந்த்ரியாதீ நப்ரவ்ருத்தி இன்றியிலே இருந்தீர் என்றுமாம்
துர்க்ரஹம் மநசாப் யந்தைரிந்த்ரியைரபி துர்ஜயம் -என்றும்
மனன் உணர்வளவிலன் பொறி யுணர்வவையிலன்-திருவாய் -1-1-2- என்றும் சொல்லுகிறபடியே
நாட்டாருடைய பாஹ்யாந்தர கரணங்களுக்கு  எட்ட ஒண்ணாத படியாய் இருந்தீர் -என்னவுமாம் –
5-தவம் ஜிதேந்த்ரிய –
அஹல்யாயை ஜாரஸ் ஸூ ரபதிர பூதாத்மத நயாம் பிரஜா நாதோயா சீத பஜத குரோ ரிந்துரபலாம் -பிரபோத சந்த்ரோதய நாடகம் -இத்யாதிப் படியே
எங்கள் மாமனாரான இந்த்ரன் அஹல்யா ஜாரனானான்
அவனுக்கு மேலான ப்ரஹ்மா ஸூ தாபி லாஷம் பண்ணினான்
பிரகாசகனான சந்தரன் குரு தாரத் ரோஹியானான்
ஆதித்ய புத்ரரான மஹா ராஜரும் இந்திர புத்ரரான வாலியும் என்னளவில் பட்ட பாடு இது –
விஸ்வாமித்திரன் மேனகா சபலனானான்
இப்படியே நாடு இருந்ததே குடியாக அகப்படா நிற்க -நீர் ஒருவருமே காணும் விரக்தராய் இருந்தீர் –
இந்த்ரியை காமவ்ருத்த சண் க்ருஷ்யசே மனுஜேச்வர-கிஷ்கிந்தா -17-33-என்கிறபடியே
ராஜ்ய தாரங்களை விட்டிருக்கிற நீர் அந்த நசையாலே வந்தீரோ என்று இருந்தோம்
6- ஜிதேந்த்ரிய
அவற்றில் நேராக   நிஸ் ப்ருஹராய் இருந்தீர் –

இப்படி விரக்தராய் இருக்கிறவர் நம்மை நலிவான்   என்-அதார்மிகரோ என்றிருந்தோம் –
1-உத்தம தார்மிக
இந்த வியாபாரம் எல்லாம் பரார்த்தமாக உபகரிக்கை யாய் இருந்தது –
2- உத்தம தார்மிக –
தனக்கு என்று செய்யுமவன் அதார்மிகன் –
தனக்கும் பிறர்க்கும் என்று செய்யுமவன் மத்யமதார்மிகன்
பிறர்க்கு என்று செய்யுமவன் உத்தம தார்மிகன் –
அன்றிக்கே
தார்மிக -உத்தார்மிக -உத்தர தார்மிக -உத்தம தார்மிக
தார்மிகர் ஆகிறார் -தர்ம சம்பந்திகள் -அதாவது
வர்ணாச்ரமா சாரவதா -ஆராத்யதே -ஸ்ரீ விஷ்ணு புராணம் -3-8-9-என்று வர்ணாஸ்ரம தர்ம சமாராத்யர் ஆகை-
உத்தார்மிகர் ஆகையாவது -தமேவம் வித்வான் அம்ருத இஹ   பவதி நான்ய பந்தா -புருஷ ஸூகதம் -என்கிறபடியே
பக்தி மார்க்கத்தாலே பஜ நீயராய் இருக்கை
உத்தர தார்மிகர் ஆகையாவது -சரணமஹம் ப்ரபத்யே -ச்வே-6-18- என்கிறபடியே சர்வ லோக சரண்யர் ஆகை
உத்தம தார்ம்கர் ஆகையாவது
தே நா நுக்ரு ஹீதோ பர்மா லோகம் கச்சதி -என்றும்
உபாயோ குருரேவ ஸ்யாத்-என்றும் புருஷகார வசீயராகை
தார்மிகத்வம் ஆவது சாமான்ய தர்ம நிஷ்டத்வம்
உத்தம தார்மிகத்வம் ஆவது -அசாதாரண நிஷ்டத்வம்
சாமான்ய தர்மம் ஆவது -ஆன்ரு சம்சயம் பரோ தர்ம -சுந்தர -38-14-என்று நொந்தாரைக் கண்டால் ஐயோ என்று இருக்கை
அசாதாரண தர்மம் ஆவது -குலோசிதமிதி ஷாத்ரம் தர்மம் ஸ்வம் பஹூ மந்யதே -அயோத்யா -1-16- என்றும்
வதச்ச தர்ம யுத்தேன ஸ்வ ராஜ்ய பரி பந்தி நாம் -ஷத்ரியாணாமயம் தரமோ யத் பிரஜா பரிபாலநம் -என்ற
தன்னை அடைந்தவர்களுக்கு ஓர் ஆபத்து யுன்டானால் மார்பிலே அம்பேற்று பரிஹரித்துக் கொடுக்கை
ஆகையாலே வாலியோடு பொருது மகா ராஜரை ரஷிக்கையாலே தர்மிகர் ஆனவளவன்றிக்கே
உத்தம தார்மிகராய் இருந்தீர் -என்றுமாம்
3-உத்தம தார்மிக –
ஆர்த்தரான மகா ராஜரை ரஷித்து
ராஜபிர்த் ருதண்டாச்து க்ருத்வா பாபா நி மானவா -கிஷ்கிந்தா -18-32- என்றும்
தஸ்ய தண்டோ வத ஸ்ம்ருத -கிஷ்கிந்தா -13-23-என்று
வத தண்டத்தால் பூதனாக்கின படியாலே உத்தம தார்மிகராய் இருந்தீர் -என்றுமாம் –

ஒரு ஸ்ரேயஸ் சாதனமான தர்மமேயாய் பல பர்யந்தம் அன்றோ -என்று இருந்தோம்
1-அஷய்ய கீர்திச்ச –
தஸ்ய நாம மஹத்யச-தை ணா -1-9- என்றும்
நிகரில் புகழாய் -திருவாய் -6-10-10- என்றும் சொல்லுகிறபடியே மன்னு பெரும் புகழாய் இருந்தீர்
2- அஷய்ய கீர்திச்ச –
ஒருவராலும் அழிக்க ஒண்ணாத புகழை யுடையீராய் இருந்தீர்
அதாவது  பிரபலனான வாலியைக் கொன்று தேடித் படைத்த புகழுக்கு மறைந்து நின்று கொன்றீர் -என்றும்
நிரபராத திரியக் வதம் பண்ணினீர் -என்றும்
நிஷ் பிரயோஜன வ்யாபாதனம் பண்ணினீர் என்றும்
இப்புடைகளில் அநேகம் கண்ணழிவும் சொல்லி அழிக்க லாமோ என்று பார்த்தோம்
ராஜாக்களுக்கு வேட்டையும் மறைந்து  நின்று கொல்லுகையும் நீதி என்றும்
ஸூ ஹ்ருத்துமாய் சரணாகதனானவன் பக்கலிலே குற்றம் செய்கையாலே சாபராத வதம் பண்ணினோம் என்றும்
ஜனபத ஹிதார்த்தமாக துஷ்ட மிருக வதம் பண்ணுகையாலே சப்ரயோஜன வ்யாபாதனம் பண்ணினோம் என்றும்
இத்திக்கு களிலே நிருத்தரமாக உத்தரம் சொல்லிப் பரிஹரித்த படியாலே எங்களாலும் அழிக்க ஒண்ணாத புகழை யுடையீராய் இருந்தீர்-

இப்படி மாறாத புகழ் படைக்கைக்கு அடியென்-என்று இருந்தோம் –
1-விசஷணச்ச -அதி சமர்த்தர் –
அதுக்கடியான கார்யங்களில் முன்னடி பார்த்துச் செய்யும்படியான நிரூபகருமாய் இருந்தீர் –
2- விசஷணச்ச –
யஸ் சர்வஜ்ஞ சர்வவித் -முண்ட -1-1-10- என்றும்
ஸ்வா பாவிகீ ஜ்ஞான பால க்ரியா ச  -ச்வே -6-என்று
சஹஜ சர்வஜ்ஞரான உமக்கு இது ஏற்றமோ –
3- விசஷணச்ச –
நீர் சொன்னவற்றுக்கு நாங்கள் குற்றம் சொன்னால்
உத்தரோத் தர யுக்தௌச வக்தா வாசஸ்பதிர் யதா -அயோத்யா -1-17-என்கிறபடியே
அவை ஒழிய மேலே மேலே வார்த்தை சொல்லும்படியான பேர் அறிவாளராய் இருந்தீர்
4- விஷஷண-
சஹஜ சாத்ருச்யத்தாலே இலக்கு மாறாடி ஆஸ்ரித வதம் பிரவாதபடி கழுத்திலே மாலை கட்டி விடுவதே -இது என்ன கூர்மை தான் –
5-விஷஷண–
நீர் தாம் அப்ரமேயராய் அறிய ஒண்ணாதபடி இருந்தீர் ஆகிலும் நீர் தாம் எல்லாம் அறிவீராய் இருந்தீர் –
6-விஷஷண–
ஏகாரிமைத்ரியாகையாலே மஹா ராஜர்  நமக்குத் துணையாவார் என்றும்
ராவண மைத்ரியாலே வாலி துணை யாகான் என்றும் நிச்சயித்து
இவரைக் கூட்டி -அவனை அழித்த படியினாலே
நல்லார் அறிவீர் தீயார் அறிவீர் இவ்வுலகத்து எல்லாம் அறிவீராய் இருந்தீர்  -பெரிய திருமொழி -4-9-6-

இப்படி விசஷணர் ஆனால்
சத்ரோ சேஷம் ந சேஷயேத்-என்றும்
சபுத்ர பௌத்ரம் சாமாத்யம் சமித்ரஜ்ஞாதி பாந்தவம் ஹத்வா -பால -15-27-என்றும் சொல்லுகிறபடியே
வசநா நு ரோதம் பண்ணி ஒட்டின அங்கதாதிகளும்  நிரந்வயமாக முடிப்பிக்கிறீரோ என்று இருந்தோம்
1-ஷிதி ஷமாவான் – புவிப் பொறை யாளர் –
பொறுமையிலும் பூமியாய் இருந்தீர்
வாலியைக் கொன்ற  சீற்றம் மாறாதே நிற்கிற நிலையிலே நானும் அங்கதனும் நெற்றியில் பேன் போலே
முன் வந்து நின்றால் குடிக் கொலையாக அறுக்க ப்ராப்தமாய் இருக்க
எங்களைப் பொறுப்பதே
2-ஷிதி ஷமாவான் –
ஷமயா ப்ருதிவீ சம -பால -1-18/சுந்தர -35-90-என்கிறபடியே
பஞ்சாசத் கோடி விச்தீர்ணையான பூமிப் பரப்பில் உள்ள பொறை எத்தனையும் உம ஒருவர் பக்கலிலுமாய் இருந்தது
3- ஷிதி ஷமாவான் –
முற்பட நெஞ்சில் குற்றம் கிடந்தது பின்பு பொறுத்த தாகை யன்றிக்கே
பொறுமையே நிரூபகையான பூமியின் போரையே இருந்தது
4- ஷிதி ஷமாவான் –
பூமிப் பரப்புக்காகப் பண்ணக் கடவ பொறுமையை என் ஒருத்தி அளவிலும் பண்ணுவதே என்றுமாம் –
5- ஷிதி ஷமாவான் –
பூமார்த்தத்திலே மதுப்பாய் என் ஒருத்தி அளவிலே பண்ணின பொறுமை பூமிக்காகப் பொறுமை இருந்தது என்றாகவுமாம்-

என்னளவில் இப்படி பொறுமை பண்ணுகைக்கு அடி என்-என்று இருந்தோம் –
1-ஷத ஜோபமாஷா  -ரத்தத்தில் சிவந்த கண்கள் –
உயிர்க்கு எல்லாம் தாயாய் அளிக்கின்ற தண் தாமரைக் கண்ணன் -பெரிய திரு -7-2-9-என்று
சர்வ ரஷகத்வ ஸூ சகமான இக்கண்ணின் வை லஷண்யம் இருந்த படி என் தான் –
2-ஷத ஜோபமாஷா-
வாலியைக் கொன்ற பொது சீற்றத்தால் பிறந்த சிவப்பு இன்னமும் மாறாதே இருக்க -என்னை முனியாதே பொறுப்பதே -என்கிறாள் –
சர  ஏணைகேந -பால -1-69-என்று வாலியை ஓர் அம்பாலே கொன்றீர் என்று கேட்டோம் –
அங்கன் அன்றியிலே-
ராமோ ரக்தாந்த லோசந -யுத்த -21-13- என்று -கடைக் கண் சிவந்து இத்தனையாய் இருந்தீர் –
3- ஷத ஜோபமாஷா-
ரக்தாஸ்ய நேத்ர பாணி -என்றும் -த்ரிதாம்ர-சுந்தர 35-17- என்றும்
கண்ணில் சிவப்பும் சாமுத்ரிக லஷணமாய் இருந்தபடியால்
இன்னமும் மேல் சார்வ பௌம ராய் ஆள்வீர் என்று தோற்றி இரா நின்றது –
4-ஷத ஜோபமாஷா-ஷதத்தாலே -ஆயுதத்தாலே -பிறந்தது இ றே ஷதஜம் ஆகிறது
அப்படியே யதா கப்யாசம் புண்டரீகமேவ மஷிணீ-சாந்தோக்யம் -1-7-என்று
ஸூ ப்ரசன்னதா வளமான உம்முடைய கண்ணுக்கு சிவப்பு ஸ்வா பாவிகம் அல்ல
கோபத்தாலே வந்தேறி என்று தோற்றி இருந்தது -என்றுமாம் –
5-ஷத ஜோபமாஷா-
இக்கண் பிராட்டி பிரிவாலே வந்த சோகச்ருபத நத்தாலே சிவந்ததோ
மஹா ராஜர் பக்கல் வாத்சல்யத்தாலே சிவந்ததோ
இத்தனை யாலும் சிவந்ததோ -தெரிகிறது இல்லை –

இதிலே
அப்ரமேயச்ச -துராசதச்ச -ஜிதேந்த்ரியச்ச -என்று தொடங்கி
பதம் தோறும் சகாரம் இட்டாள்-அது என் என்னில் –
இவற்றில் ஓர் ஒரு குணங்களே இவருடைய பெருமைக்குப் போந்திருக்க
இத்தனை குணங்களும் சேர்ந்து இருந்தால் சொல்ல வேணுமோ என்கைக்காக –
அன்றிக்கே
இச் சகாரங்களால் புறம்பு ஓர் ஒரு குணம் ஓர் ஆஸ்ரயம் தனக்குக் கிடையாதே இருக்க
இத்தனை குணங்களும் இவ் வாஸ்ரயத்திலே சேரக் கிடப்பதே -என்கிறாள் ஆகவுமாம் –

ஆனால் –
அநேக பதங்களிலே சகாரம் இட்டாள் –
ஷிதி  ஷமாவான் -ஷதஜோபமாஷ-என்கிற பதங்களிலும் சகாரம் இட வேண்டாவோ
இடாத போது ரீதி  பங்கம் என்று குற்றம் ஆகாதோ என்னில் ஆகாது –
கீழ்ப் பதங்களிலே அப்ரமேயத்வாதி குண ததாஸ்ரய சம்பந்த மாத்ர விவஷையாலே சொன்னாள்-
ஷிதி  ஷமாவான்-என்கிற பதத்தில் பஞ்சாசத் கோடி விச்தீரணை யான பூமிப் பரப்பில் யுள்ள ஷமா குணம் அடைய இது ஒரு ஆஸ்ரயத்தில் அடங்கிற்று என்றும்
மதுப்பிலே பூமார்த்தத்தாலும் ஆஸ்ரயத்தில் அடங்காத படியான குண ப்ராசுர்யத்தை அநு சந்தித்த படியாலே –
இனி இவ் வாஸ்ரயத்தில் குணாந்தரங்களுக்கும் இடம் இல்லை என்று அறுதி இட்டு பூர்வோத்தர குணங்களை மறந்த படியாலே சமுச்சயித்தில் இளல் என்றாககவுமாம்-
அன்றியிலே
ஷமாவான் -என்று பெருமாளுடைய பொறையுடைமையை அநு சந்தித்த வாறே நாட்டார் பொறுப்பார்கள் என்று நிர்ப்பந்தி யாதே போனால் ஆகவுமாம் –

இது அப்படி ஆகிறது
-ஷதஜோபமாஷ-இதில் சகாரா ஹானிக்கு செய்யும் படி என் என்னில்
-ஷதஜோபமாஷ–என்று
சரீர குணமாய் பிந்நாதி கரணமாகையாலே சமுச்சயிக்க வேண்டுவது இல்லை என்று பரிஹாரம் ஆககவுமாம் –
அன்றிக்கே
த்வம் அப்ரமேயச்ச -துராசதச்ச -ஜிதேந்த்ரியச்ச -உத்தம தார்மிகச்ச -அஷய்ய கீர்த்திச்ச -விசஷணச்ச-என்று பிரதமா விபக்தியாய் -முதல் வேற்றுமையாய்
பரோஷ  நிர்தேசமாய் -படர்க்கையாய் –
ஏக ரீதியாகையாலே ஒருபடிப்பட்டு இருக்கையாலே சகாரா பேஷை உண்டு
இங்கு
த்வம் -ஒபாதி ஷத ஜோபமாஷை -என்று சம்புத்த் யந்தமாய் முன்னிலையாலே ரீத் யந்திரம் ஆகையாலே சமுச்சய அபேஷை இல்லை என்றாகவுமாம் –

த்வம் அப்ரமேயச்சேத்யாதி –
ஸ்ரீ வால்மீகி பகவான் ஜ்ஞான சக்தி பலைச் வர்ய வீர்ய தேஜாம் ஸ்யசேஷதே -ஸ்ரீ விஷ்ணு புராணம் -6-5-79-என்று
பரத்வ அநு பந்தியான ஷட் குண்யத்துக்கு எதிர் தட்டாக கீழே
ஆன்ரு சம்சயம நுக்ரோசா ஸ்ருதம் சீலம் தம சம ராகவம் சோபா யந்த்யே தே ஷட்  குணா புருஷோத்தமம் –அயோத்யா -33-12-என்று
சௌ லப்ய அநு பந்தியாக ஒரு ஷட் குண்யம் காட்டினான் –
பிறரை ஹிம்சிக்காமை -இரக்கம் -ஆர்த்த  நாதம் கேட்கை-சௌசீல்யம்-வெளி இந்த்ரியங்கள் அடக்குகை-மனத்தை அடக்குகை -என்ற ஆறும் -காட்டினான் –
இப்போது அபஹத பாப்மத்வாதி குணா ஷட்கத்துக்கு எதிர் தட்டாக அப்ரமேயத்வாதியாலே ஒரு குணாஷ்டகம் காட்டுகிறான் –
அபஹத பாப்மா–விஜரோ–விம்ருதயு -விசோக-விஜிகத்ச -அபிபாச -சத்யகாம -சத்ய சங்கல்ப -ஆகிய எட்டு குணங்களுக்கு எதிர் தட்டான எட்டும் காட்டுகிறான் –

———————————————————————————————————————————————————————————————-

நாந் ருக்வேத விநீதஸ்ய நாயஜூர்வேத தாரிண
நா சாமவேத விதுஷ சக்யமேவம் ப்ரபாஷிதும் –கிஷ்கிந்தா -3-28-

அந் ருக்வேதவி நீ தஸ்ய-ருக் வேதத்தில் சிஷிதன் ஆகாதவனுக்கு
அயஜூர் வேத தாரிண-யஜூர் வேதத்தை தரித்து நில்லாதவனுக்கும்
ந -முடியாது
அ சாமவேத விதுஷா-சாம வேதத்தை அறியாதவனுக்கும்
ந -இப்படி பேச முடியாது
ந  சக்யம் -முடியாது
ஏவம் -இப்படி
ப்ரபாஷிதும் -பேசுவதற்கு-

நாந் ருக்வேத விநீதஸ்ய –
அனுஷ்டேயார்த்த ப்ரகாசகமான ருக்வேதம் சிஷிதன் ஆனவனுக்கு அல்லது இப்படி வார்த்தை சொல்ல ஒண்ணாது-

நாயஜூர்வேத தாரிண-
யஜூர் வேதம் பாடதாரணம் தானே அரிது
அத்தை அறிந்தவனுக்கு அல்லது இவ்வார்த்தை சொல்ல ஒண்ணாது –

நா சாமவேத விதுஷ-
சாமவேதம் காந விசேஷங்கள் அறிய வரிது-
அது அறிந்தவனுக்கு அல்லது இப்படி வார்த்தை சொல்ல முடியாது

சக்யமேவம் ப்ரபாஷிதும் –
இத்தை எல்லா வற்றையும் அதிகரித்தவனுக்கு அல்லது
நம் முன்னே இப்படி வார்த்தை சொல்லல் ஆமோ
என்றார் இ றே பெருமாள் –

—————————————————————————————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்