Archive for November, 2014

ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி -திருவாய் மொழிப்பிள்ளை அருளிச் செய்த ஸ்வாபதேச வியாக்யானம் —1-4-தன் முகத்துச் சுட்டித் தூங்கத் தூங்கத் தவழ்ந்து போய்

November 30, 2014

தன் முகத்து -பிரவேசம் –

கீழே யசோதை -அழேல் அழேல் -என்ன -அழுத படியாலே அழுகை ஆற்றுகைக்காக
நிலா முற்றத்தே கொண்டு புறப்பட்டு அம்புலி அம்மானைக் காட்ட
அழுகையை மறந்து -அத்தை பிடித்துத் தா -என்ன –
இவன் கன்றாமைக்காக -இப்போதே பிடித்துத் தருகிறேன் -என்று இவள் -அம்புலி வா -வா -என்று
பலகாலும் அழைத்த பாசுரத்தாலே
அவன் அவதாரத்தில் மெய்ப்பாடு தோன்ற லீலா ரசம் கொண்டாடுகிற பிரகாரத்தைக் கண்டு
நாம் வேண்டாம் என்று நியமிப்போம் ஆகில் இவன் கன்றும் –
இவன் தன்னை உளனாக்கிக் கொள்ளவும் வேணுமே

உளனாம் போது மேன்மையும் நீர்மையும் நடக்க வேணுமே – என்று
இவனுடைய லீலா ரசத்தை அனுமதி பண்ணி
விண் தனில் மன்னிய மா மதீ-என்று –
மங்களா சாசன பரராய்
சூழ்ந்து இருந்து ஏத்துகிறவர்களையும் அழைக்கிறார் –

மா மதீ -என்றால்
மதியை யுடையவர்களை காட்டுமோ என்னில்
விஜ்ஞானம் யஞ்ஜம் தநுதே-
தத் குண சாரத்வாத் தத் வ்யபதேச –
என்கிற ந்யாயத்தாலே காட்டும் இறே –

(மதி மட்டும் இருந்தால் அவனை ரக்ஷிக்க பிரார்த்திப்பார்கள்
மா மதி -அவனுக்கு பொங்கும் பரிவால் மங்களா ஸாஸனம் செய்பவர்
மதி -ஞானம் -தானே -ஞானம் உடையவர்களைக் காட்டுமோ என்னில்
தைத்ர்யம் -ஞானம் தபஸ்ஸைப் பண்ணும் விஞ்ஞாதனைச் சொல்லுமே
தத் குண சாரத்வாத் தத் வ்யபதேச –
கோல மலர்ப் பாவைக்கு அன்பாகிய என் அன்பேயோ -கிருஷ்ண த்ருஷ்ணா தத்வம் போல் – )

மங்களா சாசன பரராய் இருக்கும் திருவடியும் பெருமாள் திரு உள்ளம் கன்றாமைக்காக
இவ் வஸ்துவை யுண்டாக்கிப் பரிய வேணும் என்று திரு உள்ளத்திலே ஓடுகிறது அன்றோ கார்யம்
கடுக அழைத்து அருளீர் என்றான் இறே
மங்களா சாசனம் தான் அவன் யாதொன்றில் உற்ற காலத்து
அங்கு ரசிக்கவும் வேணுமே
அது கார்யம் அன்றாகில் விலக்கவும் வேணும்
கார்யம் அன்று என்ன ஒண்ணாதே
இது அவதாரத்தில் மெய்ப்பாடு ஆகையாலே

(கடல் அரசனைக் கூப்பிட்டது ராமாவதாரம்
கடலில் பிறந்த சந்த்ரனைக் கூப்பிட்டது கிருஷ்ணாவதாரம் )

மன்னிய மா மதியைப் பிடித்துத் தா -என்று அவன் சொல்லி ஆசரிக்கையாலே
ஆச்சார்ய முகத்தாலே ஆர்க்கும் ஜ்ஞானம் யுண்டாக வேணும் -என்று காட்டுகிறது என்னவுமாம்

ஆச்சார்யன் தானும் மன்னிய மா மதி யுடையவர்களையும் அழைத்துக் காட்டும் இறே –

——————————————

நான் யுனக்கு அம்புலி யம்மானைப் பிடித்துத் தருகிறேன் என்று
ஸ்தாலாந்தரத்திலே கொண்டு போய் வைக்க
அங்கு புழுதியைக் கண்டவாறே
அத்தை அளைந்து விளையாடுவது –
பூர்வ ஸ்ம்ருதியாலே -அத்தைப் பிடித்துத் தர வேணும்
என்பதான பிரகாரத்தை அருளிச் செய்கிறார் –

தன் முகத்துச் சுட்டித் தூங்கத் தூங்கத் தவழ்ந்து போய்
பொன் முகக் கிண் கிணி யார்ப்ப புழுதி அளைகின்றான்
என் மகன் கோவிந்தன் கூத்தினை யிள மா மதீ
நின் முகம் கண்ணுளவாகில் நீ இங்கே நோக்கிப் போ –1-4-1-

பதவுரை

இள–இளமை தங்கிய
மா மதி–அழகிய சந்திரனே!
தன் முகத்து–தன் முகத்தில் (விளங்குகிற)
சுட்டி–சுட்டியானது
தூங்க தூங்க–பல காலும் தாழ்ந்து அசையவும்
பொன் முகம்–அழகிய முகத்தை யுடைய
கிண் கிணி–சதங்கைகளானவை
ஆர்ப்ப–கிண் கிண் என்றொலிக்கவும்
தவழ்ந்து போய்–(முற்றத்தில்) தவழ்ந்து போய்
புழுதி–தெருப் புழுதி மண்ணை
அளைகின்றான்–அளையா நிற்பவனும்
என் மகன்–எனக்குப் பிள்ளையுமான
கோவிந்தன்–கண்ண பிரானுடைய
கூத்தினை–சேஷ்டைகளை
நின் முகம்–உன் முகத்தில்
கண் உள ஆகில்–கண் உண்டேயானால்
நீ இங்கே நோக்கி போ–நீ இங்கே பார்த்துப் போ.

தவழுகையால் உச்சி மணிச் சுட்டி முன்னே தூங்கத் தூங்க
தவழ்ந்து போகையாலே திருவரையிலே சாத்தின கிண்கிணி த்வனிக்க
புழுதி அளைகின்ற பிரகாரத்தைக் கண்டு பிரியப் பட்டு
எம் மகன் கோவிந்தன் -என்று இவன் விளையாடுறதை
நோக்கிப் போ நோக்கிப் போ என்ன

அவன் நோக்காமையாலே
உன் முகத்தில் கண் உளவாகில் கண் படைத்த பிரயோஜனம் பெற நீ இங்கே நோக்கிப் போ என்கிறார் –
நோக்காமைக்கு அடி உன்னுடைய அத்யந்த சைசவம் இறே

கதிர் ஜ்ஞான மூர்த்தியினாய் -திருவாய் -6-2-8-
உனக்கு ஓன்று உணர்த்துவான் நான் -திருவாய் -6-2-5-என்னுமா போலே
நித்ய விபூதியிலும் திருதிய விபூதியிலும்-உண்டான ஜ்ஞான விசேஷங்கள்
தமக்கு விதேயம் ஆகையாலே அவற்றை அழைத்து இவனுக்கு உணர்த்துகிறார் –

(நித்ய விபூதியில் உள்ள ஞானமும் திவ்ய தேச ஞானமும் ஆழ்வார் சொன்னபடி கேட்க்கும்
திரு வாய்ப்பாடி திருதிய விபூதி
லீலா விபூதியில் உள்ளார் தானே உண்டியே உடையே என்று உகந்து ஓடுவார்
அவனுக்கே உபதேசம் இப் பாட்டுகளில் -)

(கழறேல் நம்பி! உன் கை தவம் மண்ணும் விண்ணும் நன்கறியும்; திண் சக்கர
நிழறு தொல் படையாய்! உனக்கு ஒன்று உணர்த்துவன் நான்;
மழறு தேன் மொழியார்கள் நின்னருள் சூடுவார் மனம் வாடி நிற்க, எம்
குழறு பூவையொடும் கிளியோடும் குழகேலே–6-2-5-)

(பிணக்கி யாவையும் யாவரும் பிழையாமல் பேதித்தும் பேதியாதது ஓர்
கணக்கில் கீர்த்தி வெள்ளக் கதிர் ஞான மூர்த்தினாய்!
இணக்கி எம்மை எம் தோழி மார் விளையாடப் போது மின் என்னப் போந்தோமை
உணக்கி, நீ வளைத்தால், என் சொல்லார் உகவாதவரே?–6-2-8-)

அழைக்கை யாவது –
அங்குத்தை படிகளை தம்முடைய திரு உள்ளத்திலே சேர்த்து உபதேசிக்கை இறே
அன்றிக்கே
அவதாரத்திலே மெய்ப்பாடு தோன்ற
அவன் நடத்துக்கிற லீலா ரசத்தை தாமும் கொண்டாடுகிறார் என்னவுமாம் –

—————————————————————————

என் சிறுக்குட்டன் எனக்கோர் இன்னமுது எம்பிரான்
தன் சிறுக் கைகளால் காட்டிக் காட்டி அழைக்கின்றான்
அஞ்சன வண்ணனோடு ஆடலாட வுறுதியேல்
மஞ்சில் மறையாதே மா மதீ மகிழ்ந்தோடி வா –1-4-2-

பதவுரை

மா மதீ !
எனக்கு–(தாயாகிய) எனக்கு
ஓர் இன் அமுது–விலக்ஷணமாய் மதுரமாயிருப்பதொரு அம்ருதம் போன்றவனாய்
எம்பிரான்–எனக்கு உபகாரகனான
என் சிறுக் குட்டன்–என் மகனான கண்ணன்
தன் சிறு கைகளால்–தன்னுடைய சிறிய கைகளால்
காட்டிக் காட்டி–பலகாலும் (உன்னையே) காட்டி
அழைக்கின்றான்–அழையா நின்றான்;
அஞ்சனம் வண்ணனோடு–மை போன்ற வடிவை யுடைய இக் கண்ண பிரானோடு
ஆடல் ஆட–விளையாட
உறுதியேல்–கருதினாயாகில்
மஞ்சில்–மேகத்திலே
மறையாது–சொருகி மறையாமல்
மகிழ்ந்து ஓடி வா–உகந்து ஓடி வா.

என்னுடைய சிறுப்பிள்ளை
எனக்கோர் இன்னமுது -அந்த அமிருதத்தில் வ்யாவருத்தி
எம்பிரான் -எனக்குப் புத்திரனாய் -என் மலடு நீங்க திருவவதரித்த மகா உபகாரகன் –
தனக்குத் தகுதியான சிறுக் கைகளாலே பல காலும் சுட்டிக் காட்டி அழைக்கின்றான்

என் சிறுக் குட்டனான அஞ்சன வண்ணன் ஆடலோடு
மாமதி யான நீயும் விளையாட அறுதி இட்டாய் ஆகில்
மஞ்சில் மறையாதே –
மேகத்தில் சொருகாதே

(அவர் விளையாட்டில் நாம் கை கொடுக்காமல் ஆத்மா ராமன் –
இந்திரிய வசங்களில் சிக்கிக் கொள்கிறோம் )

மா மதீ
முற்பட இள மதி என்று இப்போது மா மதீ என்கையாலே
காலக்ருத பரிணாமம் தோற்றுகிறது-

அபிமத விஷயத்திலே ஓடிச் செல்லுமா போலே
மகிழ்ச்சியோடு ஓடி வா -என்கிறார் –

—————————————————-

பிள்ளை முகத்தில் குளிர்ச்சிக்கு
சந்தரன் குளிர்ச்சி ஒவ்வாது -என்கிறார் –

சுற்றும் ஒளி வட்டம் சூழ்ந்து சோதி பரந்து எங்கும்
எத்தனை செய்யிலும் என் மகன் முகம் நேர் ஒவ்வாய்
வித்தகன் வேங்கட வாணன் உன்னை விளிக்கின்ற
கைத் தலம் நோவாமே யம்புலீ கடிதோடிவா–1-4-3-

பதவுரை

அம்புலி–சந்த்ரனே! (உன்னுடைய)
ஒளி–ஒளி பொருந்திய
வட்டம்–மண்டலமானது (எப்போதும்)
சுற்றும் சூழ்ந்து–நாற்புறமும் சுழன்று
எங்கும்–எல்லாத் திசைகளிலும்
சோதி பரந்து–ஒளி நிரம்பி யிருக்குமாறு
எத்தனை செய்யிலும்–இப்படி உன்னை எவ்வளவு அழகு செய்து கொண்டாலும்
என் மகன்–என் மகனான கண்ண பிரானுடைய
முகம்–திருமுக மண்டலத்துக்கு
நேர் ஒவ்வாய்–பூர்ணமாக ஒப்பாக மாட்டாய்;
வித்தகன்–ஆச்சர்யப் படத் தக்கவனாய்
வேங்கடம்–திருவேங்கடமலையிலே
வாணன்–நின்றாக வாழுமவனான இக் கண்ண பிரான்
உன்னை விளிக்கின்ற–உன்னை அழைக்கிற
கை தலம்–திருக் கைத் தலத்தில்
நோவாமே–நோவு மிகாத படி
கடிது ஓடி வா–சீக்கிரமாய் ஓடிவா.

ப்ரபாவானான ஒளி வட்டம் சற்றும் எங்கும் சோதி பறந்து சூழ்ந்து
உயரத்தில் நின்று போக்கு வரத்து செய்து திரியிலும்
என் மகன் முகத்தில் குளிர்ச்சிக்கும் பிரசந்ததைக்கும் நேர் ஒவ்வா

சாமர்த்தியமும் சர்வ காரணத்வமும் யுடையவன்
(அழகு குண சேஷ்டிதம் -மா முனிகள்
இங்கு சர்வ சக்தித்வம் சர்வ காரணத்வம்
ஒன்றை அறிந்தால் அனைத்தையும் அறியலாம் -ஏக விஞ்ஞானம் சர்வ விஞ்ஞானம் -இங்கு )

திருமலையிலே நித்ய வாசம் செய்து அருளும் ஸூலபன்
கானமும் வானரமுமாயின வற்றுக்கு முகம் கொடுத்து
உன்னை அநாதரித்து இறே
அவன் வாய் திறவாது இருக்கிறது

இப்படியாயிருக்க
நீ அவன் அழைக்கவும் பெற்று வாராது இருக்கிறாயே
உன்னைக் குறித்து அழைக்கிற திருக் கைத்தலம் நோவாதே
அம்புலீ கடித்து ஓடி வா –

————————————————————

சக்கரக் கையன் தடம் கண்ணால் மலர விளித்து
ஒக்கலை மேலிருந்து யுன்னையே சுட்டிக் காட்டும் காண்
தக்கது அருதியேல் சந்திரா சலம் செய்யாதே
மக்கள் பெறாத மலடன் அல்லையேல் வா கண்டாய் –1-4-4-

பதவுரை

சந்திரா—சந்திரனே!
சக்கரம்–திருவாழி ஆழ்வானை
கையன்–திருக்கையிலணிந்த கண்ணபிரான்
ஒக்கலை மேல்–(என்) இடுப்பின்மேல்
இருந்து–இருந்து கொண்டு
தட கண்ணால்–விசாலமான கண்களாலே
மலர் விழித்து–மலரப் பார்த்து
உன்னையே–உன்னையே
சுட்டிகாட்டும்–குறித்துக் காட்டுகின்றான்;
தக்கது–(உனக்குத்) தகுதியானதை
அறிதியேல்–அறிவாயாகில் (அன்றியும்)
மக்கள் பெறாத–பிள்ளை பெறாத
மலடன் அல்லையேல்–மலடன் அல்லையாகில்
சலம் செய்யாதே–கபடம் பண்ணாமல்
வா கண்டாய்–வந்து நில்கிடாய்.

திருக்கையிலே -கருதும் இடம் பொருது -திருவாய்மொழி -10-6-8-திரு வாழியை யுடையவன் –
இடமுடைத்தான திருக் கண்களாலே முழு நோக்காகப் பார்த்து
மத்யம அங்கத்திலே இருந்து
உன்னையே குறித்துக் காட்டும்

தக்கது அருதியேல்
கண் படைத்தாய் ஆகில் இத்தைக் காண்
கண்ணுக்குத் தகுதி இவனைக் காண்கை காண்
சந்திரா சலம் செய்யாதே

எல்லாருக்கும் ஆஹ்லாத கரனாய் இருக்கிற நீ
இவனுக்கு வெறுப்புச் செய்யாதே

நபும்சகத்வமும் மலடும் அல்லையேல் வா
ஓன்று பெற்று மலடு ஆவாரும் உண்டு போலே காணும்-

(சந்திரனுக்கு புதன் பிள்ளை -தனி மரம் தோப்பு ஆகாதே
என் தாய் மலடி அல்லள் -ஆளவந்தார் மூன்று கேள்விகளில் ஓன்று )

——————————————————————

அழகிய வாயில் அமுத ஊறல் தெளிவுறா
மழலை முற்றாத இளம் சொல்லால் உன்னைக் கூவுகின்றான்
குழகன் சிரீதரன் கூவக் கூவ நீ போதியோல்
புழை யிலவாகாதே நின் செவி புகர் மா மதீ–1-4-5-

பதவுரை

புகர்–தேஜஸ்வியாய்
மா–பெருமை பொருந்தி யிரா நின்ற
மதீ–சந்திரனே!
அழகிய வாயில்–அழகிய திருப் பவளத்திலே
ஊறல்-ஊறுகின்ற ஜலமாகிய
அமுதம்–அம்ருதத்தோடே கூடி
தெளிவுறா–உருத் தெரியாததாய்
மழலை முற்றாத–மழலைத் தனத்துக்குள்ள முற்றுதலுமில்லா திருக்கிற
இளஞ் சொல்லால்–இளம் பேச்சாலே
உன்னை கூவுகின்றான்;
குழகன்–எல்லோரோடும் கலந்திருப்பவனாய்
சிரீதரன்–ச்ரிய: பதியான இக் கண்ண பிரான்
கூவக் கூவ-(இப்படி) பலகாலுமழையா நிற்கச் செய்தோம்
நீ போதியேல்–நீ போவாயேயானால்
நின் செவி–உன் காதுளானவை
புழை இல–துளை யில்லாதவையாக
ஆகாதே–ஆகாதோ?
(ஆகவே ஆகும்)

அழகு விளங்கா நின்றுள்ள திருப் பவளத்திலே
ஊறா நின்ற வாக் அம்ருதத்தோடே கூடி –
உருத் தெரியாததாய்
முற்றா மழலையான இளம் சொல்லாலே உன்னை அழைக்கின்றான்

கொடுத்தார் கொடுத்தார் முலைகளும் உண்டு
எடுத்தார் எடுத்தாரோடு எல்லாம் நீர்மை தோன்ற சிரித்து
உறவாடி இருப்பானான
சர்வாதிகன் அழைக்க அழைக்க நீ போவுதியாகில்

புழை யிலவாகாதே நின் செவி-
புழை -ஸூ ஷிரம்
உன்னுடைய ஸ்ரவண இந்த்ரியத்துக்கு பிரயோஜனம் இல்லை யாகாதோ

புகர் மா மதீ-
உன்னுடைய பிரகாசம் லோகப் பிரசித்தம் அன்றோ –

—————————————————————–

தண்டோடு சக்கரம் சார்ங்கம் ஏந்தும் தடக்கையன்
கண் துயில் கொள்ளக் கருதிக் கொட்டாவி கொள்கின்றான்
உண்ட முலைப்பால் ஆறா கண்டாய் உறங்கா விடில்
விண் தனில் மன்னிய மா மதீ விரைந்தோடி வா –1-4-6-

பதவுரை

விண் தனில்–ஆகாசத்திலே
மன்னிய–பொருந்திய
மா மதீ!–பெருமை தங்கிய சந்திரனே!
தண்டொடு–‘கௌமோதகி’ என்னும் கதையையும்
சக்கரம்–திருவாழி யாழ்வானையும்
சார்ங்கம்–ஸ்ரீசார்ங்கமென்னும் வில்லையும்
ஏந்தும்–ஏந்தி யிரா நின்றுள்ள
தட–விசாலமான
கையன்–கைகளை யுடைய இக் கண்ண பிரான்
கண் துயில் கொள்ள கருதி–திருக் கண் வளர்ந்தருள நினைத்து
கொட்டாவி கொள்கின்றான்–கொட்டாவி விடாநின்றான்.
உறங்காவிடில்–(இப்போது இவன்) உறங்காதொழிந்தால்
உண்ட–அமுது செய்யப் பட்டிருக்கிற
முலைப்பால்–ஸ்தந்யமானது
அறா–ஜரிக்கமாட்டாது; ஆகையால்
விரைந்து ஓடிவா

ஆயுத கோடியிலும்
ஆபரண கோடியிலுமாய் இருக்கிற பஞ்ச ஆயுதங்களை
இடமுடைத்தான திருக் கையிலே யுடையவன்

ஏந்தும் -என்கையாலே –
போக ரூபமாய்
பூ ஏந்தினால் போலே இருக்கை-

நித்தரை கொள்வானாக கருதினதுக்கு ஸூசகம் இறே கொட்டாவி
எல்லாருடைய கருத்துக்களையும் குலைத்து வருகிற நித்தரை இவன் கருதலலின் வசம் ஆகையாலே
இவன் வியாபாரங்கள் எல்லாம் இப்படி இறே
நான் வந்து முகம் காட்டும் அளவும் உறங்காமல் நோக்க ஒண்ணாதோ -என்று நினைத்து இருக்கிறாய் ஆகில்
உண்ட முலைப் பால் ஜரிக்கும் போது உறங்க வேணும் இறே

ஜரிக்கை யாவது –
நம்முடைய வசன பரிபாலனம் செய்யார்கள் ஆகில் சங்கல்பம் தன்னிலே கிடக்கிறார்கள் -என்று
இழவோடே நசை அறுகை இறே
(ஸ்ருஷ்டித்து திருத்தலாம் நப்பாசை போய் பிரளயம் -தான் ஜரிக்கை )

உறக்கம் ஆவது
லீலா வியாபாரங்களில் நிர் பரத்வம் இறே
அனஸ்னன் -என்றால்
இவன் ஒன்றை இங்கே புஜிக்க கூடுமோ என்னில்
அஸ் நாமி -கீதை -9-26- என்று சொன்னான் இறே

(மரம் – இரண்டு பறவைகள் -உண்ணாமல் ஒளி விஞ்சி -இருக்குமே -என்னில்
இங்கு உண்ட முலைப்பால் –
பத்ரம் பலம் தோயம் இத்யாதிகள் பக்தி உபஹ்ருதம் -இருந்தால் உண்ணுவானே -)

சம்சாரிகளுடைய போக வியாபாரங்களில் அவன் ஸ்வ கரண நியமனம் செய்து இருக்கிறாப் போலே
நாமும் அவனுடைய லீலா வியாபாரங்களை கண்டு அனுபவிக்க வாருங்கோள் என்று
த்ரி பாத் விபூதியிலே ஒருப் பட்ட ஜ்ஞானம் உடையவர்களை அழைக்கிறார் –

மா மதீ -என்றது பக்தியை
ஜ்ஞான சப்த வாச்யையுமாய் இறே பக்தி தான் இருப்பது
(மதி ஞானம்
மா மதி ஞானம் முற்றிய பக்தி )

பிள்ளை உறங்கா வல்லி தாசரை மகா மதிகள் என்று இறே எம்பார் போல்வார் அருளிச் செய்வது

விரைந்தோடு வாருங்கோள்

மா மதீ -என்றது
ஜாதி ஏக வசனம்

——————————————————————————–

உறங்கக் கருதினவன் உறங்கிய போதே உணர்ந்து
பூர்வ ஸ்ம்ருதியாலே-அம்புலியைப் பிடித்துத் தா -என்ன
பல காலும் அழைக்க நீ வாராமையாலே
கோபிக்கவும் கூடும்
கடுக வா என்கிறாள் –

பாலகன் என்று பரிபவம் செய்யேல் பண்டு ஒரு நாள்
ஆலினிலை வளர்ந்த சிறுக்கன் இவன்
மேல் எழப் பாய்ந்து பிடித்துக் கொள்ளும் வெகுளு மேல்
மாலை மதியாதே மா மதீ மகிழ்ந்தோடி வா –1-4-7-

பதவுரை

மா மதீ!
பாலகன் என்று–‘இவனொரு சிறு பயலன்றோ’ என்று
பரிபவம் செய்யேல்–திரஸ்கரியாதே;
பண்டு ஒருநாள்–முன்பொரு காலத்திலே
ஆலின் இலை–ஆலந்தளிரிலே
வளர்ந்த–கண் வளர்ந்தவனாகப் புராணங்களிலே சொல்லப் படுகிற
சிறுக்கனவன்–அந்த சிறுப் பிள்ளை யானவன்
இவன்–இவனாகிறான் காண்;
வெகுளும் ஏல்–(இவன்) சீறினானாகில்
மேல் எழப் பாய்ந்து–(உன் மேல்) ஒரு பாயலாகப் பாய்ந்து
பிடித்துக் கொள்ளும்–(உன்னைப்) பிடித்துக் கொள்வான்;
மாலை–இம் மஹா புருஷனை
மதியாதே–அவ மதியாமல்
மகிழ்ந்து ஓடி வா–.

பாலகன் என்று பரிபவம் செய்யேல் –
சிறுப் பிள்ளை என்று பரிபவித்து விஷ்ணு படராலே நலிவு படாதே கொள் –
பல விடங்களிலும் உன் பரிபவத்தை போக்கினவன் அன்றோ இவன் –
அவன் யாதொரு ஜன்மத்திலே தாழ நின்றாலும்
உனக்கு உத்தேச்யரான ப்ரஹ்ம ஈஸாநாதிகளுக்கும்
வர வேண்டி இறே இருப்பது இவன் அழைத்தால் –

பண்டு ஒரு நாள் ஆலினிலை வளர்ந்த சிறுக்கன் இவன் –
முன்பே ஒரு காலத்தில் வடதள சாயி யுடைய அகடிதம் கேட்டு அறியாயோ –
அவன் என்று அறியாய் இவனை –

மேல் எழப் பாய்ந்து பிடித்துக் கொள்ளும் வெகுளு மேல் –
இவன் கோபிக்குமாகில் உனக்கு மேலே எழப் பாய்ந்து உன்னையும் கைக் கொள்ளும்
இதில் சம்சயம் இல்லை –

ஒண் மிதி இத்யாதி -திரு நெடும் தாண்டகம் –
அடி பட்டது கைப் பட அரிதோ –

மாலை மதியாதே மா மதீ மகிழ்ந்தோடி வா –
இவனுடைய வ்யாமோஹத்தை பாராதே நீ
ஆஜ்ஞா பரிபாலனம் பண்ணுகிற கர்த்ருத்வத்தாலே தாழ்ந்து வருகிறோம் –
(அவன் இட்ட பணி -வேலையை முடித்து பின்பு காலம் தாழ்ந்து வருகிறேன்) என்னாதே
அவன் வ்யாமோஹத்துக்கு ஈடாக –
நம்மை அழைக்கப் பெற்றோம் என்று மகிழ்ந்து கடுக ஓடி வா –

————————————————————————-

சிறியன் என்று எண்ணி இளம் சிங்கத்தை இகழேல் கண்டாய்
சிறுமையின் வார்த்தையை மாவலி இடைச் சென்று கேள்
சிறுமைப் பிழை கொள்ளில் நீயும் உன் தேவைக்கு உரியை காண்
நிறை மதீ நெடுமால் விரைந்து உன்னைக் கூவுகின்றான் –1-4-8-

பதவுரை

நிறை மதி–பூர்ண சந்திரனே!
என் இள சிங்கத்தை–எனக்குச் சிங்கக் குருகு போன்ற கண்ண பிரானை
சிறியன் என்று–(உபேக்ஷிக்கைக்கு உறுப்பான) சிறுமையை யுடையவனாக நினைத்து
இகழேல்–அவமதியாதே;
சிறுமையில்–(இவனுடைய) பால்யத்தில் நிடந்த
வார்த்தையை–செய்கையை
மாவலி இடை சென்று கேள்–மஹாபலியிடம் போய்க் கேட்டுக்கொள்;
(இப்படி யுள்ளவன் விஷயத்தில்)
சிறுமை பிழை கொள்ளில்–சிறுமை நினைத்தலிது மஹா அபாரதம் என்று நினைத்தாயாகில்
(அப்போது) நீயும்;
உன் தேவைக்கு–(அஜன் விஷயத்தில்) நீ பண்ணக் கூடிய அடிமைக்கு
உரியை–தகுந்தவனாவாய் ;
(அதெல்லாமப்படி நிற்க;)
நெடு மால்–ஸர்வ ஸ்மாத் பரனான இவன்
விரைந்து உன்னை கூவுகின்றான்
(‘மகிழ்ந்து ஓடி வா’ என்று வருவிக்க. )

சிறியன் என்று எண்ணி இளம் சிங்கத்தை இகழேல் கண்டாய் சிறுமையின் வார்த்தையை மாவலி இடைச் சென்று கேள்
இதற்கு முன்பு சிறியனான நிலைகளிலே எழப் பாய்ந்தது உண்டோ -என்று நினைக்கிறாய் ஆகில்
அவன் சிறுமைப் பெருமை அறிந்திலை –
மகா பலி பாதாள லோகத்தில் கர்ம பாவனையாலே வந்த ஔதார்ய செருக்குப் போய்
ப்ரஹ்ம பாவனையோடு இருக்கிறான் –
அங்கே சென்று கேட்டுக் கொள் –
என் இளம் சிங்கத்தை சிறியேன் என்று இகழாதே கொள் –

சிறுமைப் பிழை கொள்ளில்-
அவன் சிறியனாக வேண்டிற்று நம்முடைய பெருமையாலே
வந்த அபராதத்தாலே -என்று கொள்ளுவுதியாகில் –

நீயும் உன் தேவைக்கு உரியை காண்-நிறை மதீ-
நானும் தேவைக்கு உரியேனோ-என்று நினைக்கிறாய் ஆகில்
உனக்கும் பராதீன கர்த்ருத்வம்
விஹிதமாய் இருக்கிலும்
அது தானும் ஆஜ்ஞா ரூப கைங்கர்யமாய் இருக்கும் –
அத்தை தர்சி

நிறை மதி அன்றோ நீ
ஆஜ்ஞா ரூப கைங்கர்யத்தில் நீ அறியாதது உண்டோ
பீதி மூலமாகவும் வர வேணும் காணும்
என்று தான் ஸ்வ அதீனனாய் இருந்தாய் –

(பூரணமான ஞானம் உடையவன் அன்றோ –
நற் செல்வன் -அந்தரங்க சேவை செய்ய நித்ய கைங்கர்யம் தள்ளி வைக்கலாமே
பீஷாஸ்மாத் இத்யாதி -பீதி மூலமும் உண்டே
என்றுமே பராதீனன் அன்றோ
ஆஸ்ரித பாரதந்த்ரம் தானே ஏறிட்டுக் கொள்வான் அவனே )

நெடுமால் விரைந்து உன்னைக் கூவுகின்றான் –
உன்னளவே இல்லை காண்
அவனுடைய ஸ்வா தந்த்ர்யத்தால் வந்த வ்யாமோஹம்
அந்த வ்யாமோஹத்துக்கு ஈடாக கடுக வா –

—————————————————————————

தாழியில் வெண்ணெய் தடங்கை ஆர விழுங்கிய
பேழை வயிற்று எம்பிரான் கண்டாய் யுன்னைக் கூவுகின்றான்
ஆழி கொண்டு யுன்னை எறியும் ஐயற வில்லை காண்
வாழ வுறுதியேல் மா மதீ மகிழ்ந்தோடி வா –1-4-9-

பதவுரை

மா மதீ!;
தாழியில்–தாழியிலே (சேமித்திருக்கிற)
வெண்ணெய்–வெண்ணெயை
தட–பெரிதான
கைஆர–கை நிறைய (அள்ளி)
விழுங்கிய–அமுது செய்த
பேழை வயிறு–பெரு வயிற்றை யுடையவனான
எம்பிரான்–என் கண்ணபிரான்
உன்னை கூவுகின்றான்;
(இப்படி அழைக்கச் செய்தேயும் நீ வாராதிருந்தால் உன் தலையை அறுக்கைக்காக)
ஆழி கொண்டு–திருவாழியாலே
உன்னை எறியும்–உன்னை வெட்டி விடுவேன்;
ஐயுறவு இல்லை–ஸம்சயமே யில்லை;
(இதில் நின்றுந் தப்பி)
வாழ உறுதியேல்–வாழக் கருதினாயாகில்
மகிழ்ந்து ஓடிவா

தாழியில் வெண்ணெய்-
நெடுமால் உன்னைக் கூவுகின்றான் -என்கிற வ்யாமோஹம் –
நிரந்குச ஸ்வா தந்த்ர்ய கார்யமாய் இருக்குமோ -என்று நினைக்கிறாய் ஆகில்
இது சாஷாத் வ்யாமோஹம் அன்று –
அது தான் எது என்னில்
தாழியில் வெண்ணெய் -என்றது தேக குணத்தால் வந்த தன்னேற்றம்

சிறு மா மனிசர் –திருவாய் -8-10-3-என்னுமா போலே-
அன்ன பானாதிகளாலே தரிக்கிற தேஹத்தால் வந்த சிறுமை-
பெருமையாம்படி ஆத்ம குணத்தால் ஸூரிகளோடு ஒக்க வந்த மகத்வம்-
விண்ணுளாரிலும் சீரியர் -திரு விருத்தம் -73-என்கிற மகத்வத்தையும் உடையவர்கள் இறே –
வெண்ணெய் -என்கிறது -வெண்ணெய் இருந்த பாத்ரம் இறே தாழி யாகிறது —

சம்சாரிகள் உடைய ஆத்ம குணம் தேக குணத்தை பின் செல்லும் –
(ஆக்கையின் வழி உழல்வார்கள் )
முமுஷூக்களுடைய தேக குணம் ஆத்ம குணத்தை பின் செல்லும் –
மயர்வற மதி நலம் அருளப் பெற்ற ஆழ்வார்களும் முமுஷூக்களாய் இருந்தார்களே யாகிலும்
இவர்களுடைய ஆத்ம குணம் தேக குணத்தை பின் செல்லும்-
(பெருமாளுடைய திவ்ய மங்கள விக்ரஹ குணத்தை பின் தொடர்ந்து
ஆழ்வார்களின் ஆத்ம குணங்கள் பின் செல்லுமே
கண்ணனுக்கே ஆமது காமம் -என்று இருப்பவர்கள் )

தாழியில் வெண்ணெய் -என்றது
ஆத்ம குணம் தேக குணத்தை பின் செல்லுகிற ஆழ்வார்களை —
இவர்கள் விரும்புகை இறே சாஷாத் வ்யாமோஹம் ஆவது

தடங் கை –
பருவத்துக்குத் தக்க கை அன்றோ -என்னும்படி
வெண்ணெயைக் கண்டவாறே கைகள் விரிந்த படி –

ஆர விழுங்கிய –
வயிறார விழுங்கிய –

பேழை வயிற்று எம்பெருமான் –
முலைப்பால் ஜரிக்குமது அன்றே –
உண்டொத்த திரு வயிற்றன்-பெரிய திருமொழி -11-6-9-என்னவும் ஒண்ணாதே
வயிறு பிள்ளை பரமன்றே -பெரிய திருமொழி -10-7-5-என்கையாலே
புக்க த்ரவ்யத்துக்கு தக்கபடி உதைத்துக் காட்டுமே –
பேழை -பெருமை –

எம்பிரான் –
எங்கள் குலத்துக்கு மகா உபகாரகன் ஆனவன்
அவன் கூவுகிறது தன் குறை தீர வன்று காண்
உன் குறை தீர
உன் குறை தீர தன் குறை தீரும் காண் –
(நம் துயர் அறுத்து தன் துயர் அறுத்துக் கொள்ளுமவன் அன்றோ )
கண்டாய் யுன்னைக் கூவுகின்றான் –

ஆழி கொண்டு யுன்னை எறியும் ஐயற வில்லை காண் வாழ வுறுதியேல் மா மதீ மகிழ்ந்தோடி வா –
ஆதித்யனை மறைத்து பகலை இரவாக்கின ஆழ்வானை ஏவி விடுமாகில்
இரவைப் பகலாக்கவும் கூடும் என்றும் இராய்
முன்பே பாரத யுத்தத்துக்கு நாளிட்ட போது நீ நின்ற நிலையைப் பாராய்
அது ஒரு கார்யப் பாட்டாலே ஒரு கால் செய்தான் ஆகில் அந்த ஹேது எனக்கு உண்டோ –என்று சந்தேஹிக்க வேண்டா –
அது தான் வேண்டிற்றும் அவர்கள் வச வர்த்தி யாகாமை யன்றோ
அது உனக்கும் இல்லையோ –
அத்தை தர்சியாய்

வாழ -இத்யாதி –
வாழுகையாவது-
நீ இப்போ நிற்கிற நிலை தன்னிலே -கரிஷ்யே வசனம் தவ –கீதை -18-73- என்கை இறே –
த்யஜ த்யஜ்ய -என்ற உன் முற்பட்ட நிலையை குலைத்து
அவன் மீண்டும் அதிலே நிறுத்தினால் அது பழைய நிலையாமோ
தவ -வசனம் -என்ற போதே மற்று ஒன்றிலே நிறுத்திலும் நிற்க வேணும் இறே
பழைய நிலையில் -மாஸூச என்ன ஒண்ணாதே

(முற்பட்ட நிலை -சாஸ்த்ரா ஆஜ்ஜைப்படி செய்வது
வா கூப்பிட ஓடுவது –இப்பொழுது நிலை
ஆசையுடன் திருவடியில் சேர்த்துக் கொள்ள கூப்பிட போகாமல் இருந்தால்
மீண்டும் பழைய நிலை ஆகாதே )

வாழ வுறுதியேல்-
வாச வர்த்தியாய் வாழ வேணும் என்று இருந்தாய் ஆகில்

மா மதி இத்யாதி –
அறிவுடையார்க்கு எல்லாம் வேணும் காண்
இந்த பாரதந்த்ர்யத்தாலே வந்த மகிழ்ச்சி –

———————————————————————-

நிகமத்தில்
இந்த திருமொழி கற்றாற்கு பலம் சொல்லித் தலைக் கட்டுகிறார் –

மைத் தடம் கண்ணி யசோதை தன் மகனுக்கு இவை
ஒத்தன சொல்லி யுரைத்த மாற்றம் ஒளி புத்தூர்
வித்தகன் விட்டு சித்தன் விரித்த தமிழிவை
இத்தனையும் சொல்ல வல்லவர்க்கு இடம் இல்லையே –1-4-10-

பதவுரை

மை–மை யணிந்த
தட–விசாலமாயிரா நின்ற
கண்ணி–கண்களை யுடையளான
அசோதை–யசோதை யானளவள்
தன் மகனுக்கு–தன் மகனான கண்ணனுக்கு
ஒத்தன சொல்லி–நினைவுக்கும் சொலவுக்கும் சேர்ந்திருப்பவற்றைச் சொல்லி
உரைத்த–(சந்திரனை நோக்கிச்)சொன்ன
இவை மாற்றம்–இப் பாசுரத்தை
ஒளி–ஒளி பொருந்திய
புத்தூர்–ஸ்ரீவில்லிபுத்தூரில் உதித்தவராய்
வித்தகன்–(மங்களாசாஸந) ஸமர்த்தரான
விட்டு சித்தன்–பெரியாழ்வாராலே
விரித்த–விரித்து அருளிச் செய்யப்பட்ட
தமிழ்–த்ராவிட பாஷா ரூபமான
இவை–இப் பாசுரங்கள் பத்தையும்
எத்தனையும்–ஏதேனுமொரு படியாக
சொல்ல வல்லவர்க்கு–ஓத வல்லவர்களுக்கு
இடர் இல்லை–துன்பமொன்று மில்லை.

மைத் தடம் கண்ணி யசோதை –
ஒப்பனைக்கு உப லஷணம்-

தன் மகனுக்கு இவை ஒத்தன சொல்லி யுரைத்த மாற்றம் –
பிள்ளை சீறாமல் ஒப்பித்து -தன் மகன் -என்கிறார் –

அவன் நினைவுக்கும் சொலவுக்கும் ஒத்தன சொல்லி –
அதாவது
அதி தூரத்தில் ஓடுகிற அம்புலியை பிடித்துத் தர வேணும் என்ன –
அவனுக்கு பிடித்து தருகிறேன் -என்று சொல்லி –
பிடிக்கை தனக்கு அசக்யமாய் இருக்கையாலே பல காலும் வர வேணும் என்று இவள் உரைத்தாள் இறே –
அம்புலியை இவள் உரைத்த மாற்றத்தை –

ஒளி புத்தூர் வித்தகன் விட்டு சித்தன் விரித்த தமிழிவை –
அந் நில மிதி தானே ஜ்ஞான பிரகாசத்தை யுண்டாக்குகையாலே-ஒளி புத்தூர் -என்கிறார் –
திரு மாளிகைக்கு ஸ்ரீ வில்லி புத்தூர் -என்ற திரு நாமம் இறே
(ஸ்ரீ நாச்சியார் திரு மாளிகை இத் திவ்ய தேசம்
ஸ்ரீ நாச்சியார் கோயில் ஸ்ரீ திரு நறையூர் )

வித்தகன் -சமர்த்தன் –
மயர்வற நதி நலம் பெறுவதற்கு முன்பே திரு நந்தவனம் செய்து
திருத் துழாயை பறித்து -திருமாலை சாத்தின சாமர்த்தியம் இறே
அன்றிக்கே
மங்களா சாசன பிரேமத்தை திரு உள்ளத்திலே யுடையவர் -என்னுதல்-

விட்டு சித்தன் –
இவருடைய நிலை வடபெரும் கோயில் யுடையான் திரு உள்ளத்திலே கிடைக்கையாலே யாதல் –
அரவத் தமளிப்படியே அவன் தான் இவர் திரு உள்ளத்திலே எப்போதும் கிடைக்கையாதலாலே யாதல் –

(அறிவார் உயிர் ஆனாய்
வாஸூ தேவ சர்வம் என்று இருப்பார்களே எனக்கு ஆத்மா என்னும் அவன் –
சர்வாத்மாவாக தானே இருந்தும் )

விரித்த தமிழிவை
என்று இவை தன்னை யசோதை பிராட்டி சொன்ன பாசுரங்களை வியாஜமாக கொண்டு
சகல சாஸ்திரங்களையும் மங்களா சாசன பர்யந்தமாக விரித்தது -இறே
தமிழ் -என்று
தேசியான பாஷையாலே அருளிச் செய்தது இவர் கிருபை இறே –

இத்தனையும் சொல்ல வல்லவர்க்கு இடம் இல்லையே —
இத்தனையும் -என்றது –
அநந்த வேத சாஸ்த்ரங்களில் சொல்லுகிற
அர்த்தங்கள் எல்லாம் ஓதி அறியப் பெற்றிலோம் -என்கிற கிலேசம்
இவர் அபிமானத்திலே ஒதுங்கி இப் பத்து பாட்டையும் பாவ பந்தத்தோடு சொல்ல வல்லவர்களுக்கு
எங்கனே கிலேசம் யுண்டாவது-
அது இல்லை -என்கிறார் –

———————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருவாய்மொழிப் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி -ஸ்ரீ திருவாய் மொழிப்பிள்ளை அருளிச் செய்த ஸ்வாபதேச வியாக்யானம் —1-3-மாணிக்கம் கட்டி வயிரம் இடைக் கட்டி –

November 29, 2014

பிரவேசம் –

கீழே -சீதக் கடலிலே திவ்ய அவயவங்களை யசோதை பிராட்டி அனுபவித்த பிரகாரங்களை
தத் காலம் போலே மிகவும் விரும்பி அனுபவித்தாராய் நின்றார்
இனி மேல்
அவள் பிள்ளையை தொட்டிலே வளர்த்தி தாலாட்டின பிரகாரத்தை
தத் காலம் போலே மிகவும் விரும்பி அருளிச் செய்கிறார் –
சர்வ ஸ்மாத் பரனாய்-அவாப்த சமஸ்த காமனாய் -சர்வ பிரகார நிரபேஷனாய்-நாராயண சப்த வாச்யனான -சர்வேஸ்வரன்
யாதொரு இடத்திலே யாதொரு திரு மேனியோடு அவதரித்தாலும்
அவனுடைய ஸ்திதி கமன சயநாதிகளை கண்டால் மிகவும் விரும்பி
தங்களால் ஆனவளவும் கிஞ்சித் கரித்தன்றி நிற்க ஒண்ணாது இறே ப்ரஹ்ம சனகாதிகளுக்கும் –
இத்தை யசோதை பிராட்டி மநோ ரதித்துக் கொண்டாளாக
அவள் தாலாட்டின பிரகாரத்தை தாமும் பிரத்யஷமாகக் கண்டருளி
மிகவும் விரும்பி -அவனுடைய நீர்மையையும் மேன்மையையும் அருளிச் செய்து தாலாட்டுகிறார் –

————————————————————

ப்ரஹ்ம கிஞ்சித் கரித்த திருப் பள்ளித் தொட்டிலை
அங்கீ கரித்து வர்ணிக்கிறார் –

மாணிக்கம் கட்டி வயிரம் இடைக் கட்டி
ஆணிப் பொன்னால் செய்த வண்ணச் சிறுத் தொட்டில்
பேணி யுனக்குப் பிரமன் விடுதந்தான்
மாணிக் குறளனே தாலேலோ வையம் அளந்தானே தாலேலோ –1-3-1-

பதவுரை

மாணிக்கம்–மாணிக்கத்தை
கட்டி–(இரண்டருகும்) கட்டியும்
இடை–நடுவில்
வயிரம்–வயிரத்தை
கட்டி–கட்டியும்
ஆணிப் பொன்னால்–மாற்றுயர்ந்த பொன்னால்
செய்த–செய்யப்பட்ட
வண்ணம்–அழகிய
சிறு தொட்டில்–சிறிய தொட்டிலை
பிரமன்–சதுர்முகனானவன்
பேணி–விரும்பி
உனக்கு–உனக்கு
விடு தந்தான்–அனுப்பினான்
மாணி குறளனே–ப்ரஹம்சாரி வாமநாவதாரம் பண்ணின கண்ணனே!
தாலேலோ!
வையம் -உலகங்களை
அளந்தானே–(த்ரிவிக்ரமனாய்) அளந்தவனே!
தாலேலோ!

ஷோடஸ வர்ணியான ஆணிப் பொன்னாலே
நாநா வர்ணமாகவும்
பிள்ளைக்குத் தகுதியாகவும்
சமைத்த தொட்டிலிலே பதித்த
மாணிக்க ஒழுங்குக்கு நடுவே வயிரம் முதலான நவ ரத்னங்களையும் பதித்து
ப்ரஹ்மா வானவன் விரும்பி வர விட்டான் என்கிறார் –

அருளப் பாடிட்டால் அல்லது வரவும் அரிது இறே அவர்களுக்கு –
அவர்கள் -வர விட்டவர்களுக்கு -உபஹாரத்தோடே வரும் போதாகிலும் வரலாம் போலே காணும் –
ஸ்வாதந்த்ர்ய காமரிலும் காட்டிலும் -தத் சேஷ பூதர்களுக்கு உள்ள ஏற்றம் பாரீர் –

விடு தந்தான் -என்றது
தன் பக்கலில் நின்றும் அங்குத்தைக்கே ஆகும் என்று நீக்கி
விட்டுத் தந்தான் -என்கிறது

மாணி -என்றும் -சிறுமை –
குறள் என்றும் -சிறுமை –
சிறுமை பெரிதாம்படியான குறளாய் இறே மகாபலி யஞ்ஞ வாடத்தில் சென்று இரந்தது –
கௌரவம் யாசித அந்தமாய் இறே இருப்பது

வையம் அளந்தானே –
இரப்பு பெற்றவாறே -பூரித்து -திரி விக்ரமன் ஆனானிறே-
அளந்த போதை ஸ்வா தந்த்ர்ய நிவ்ருத்தி ஸ்மரணத்தாலே இறே ப்ரஹ்மா வர விட்டதும் –

———————————————————–

இவ் வளவேயோ
ருஷப வாகனனும் வர விட்டான் -என்கிறார் –

உடையார் கனமணியோடு ஒண் மாதளம் பூ
இடை விரவிக் கோத்த வெழில் தெழ்கினோடும்
விடையேறு காபாலி ஈசன் விடு தந்தான்
உடையாய் அழேல் அழேல் தாலேலோ உலகம் அளந்தானே தாலேலோ –1-3-2-

உடை ஆர்–திருவரைக்குச் சேரும்படியான
கனம் மணியோடு–பொன் மணியையும்
இடை–நடு நடுவே
விரவி–கலந்து
கோத்த–கோக்கப் பட்ட
எழில்–அழகிய
தெழ்கினோடும்–இடைச் சரிகையையும்
ஒண் மாதளம்பூ–அழகிய மாதளம் பூக் கோவையான அரை வடத்தையும்
விடைஏறு–ரிஷப வாஹகனாய்
காபாலி–கபால தாரியாய்
ஈசன் விடுதந்தான்–ஸ்வ வ்யூஹத்துக்கு நியாமகனான ருத்ரன் விடு தந்தான்-;
உடையாய்–ஸ்வாமியான கண்ணனே!
அழேல் அழேல்–அழாதேகொள், அழாதேகொள்
தாலேலோ
உலகம் அளந்தானே! தாலேலோ!

உடையார் கன மணியோடு ஒண் மாதளம் பூ
உடையிலே ஆர்ந்த பொன் மணி முதலான ரத்னங்களோடே
அலங்க்ருதமாகவும்
மிக்க பிரகாசத்தையும் யுடைத்தான மாதளம் பூ முதலான பூத் தொழில்களையும் சேர்த்து

இடை விரவிக் கோத்த வெழில் தெழ்கினோடும் –
எழில் தெழ்கு-விலங்கா நின்ற இடைச் சேரி

விடையேறு காபாலி ஈசன் விடு தந்தான் –
ருஷப வாகனனாய்
கபால நிரூபகனாயும்
ஸ்வ கோஷ்டிக்கு நியந்தாவாயும்
இருக்கிற ருத்ரன் விடு தந்தான் –

உடையாய் அழேல் அழேல் தாலேலோ உலகம் அளந்தானே தாலேலோ-
இவை எல்லாம் வர விடுவதற்கு முன்னேயும்
இவர்கள் தங்களையும் யுடையாய் -என்கிறார்

அழேல் அழேல் –
மாரோதீ மாரோதீ -என்று தாலாட்டுகிறார்
(மாரோதீ-மருத் கணங்கள் -அழாதே அழாதே என்றால் போல் )

தாலாட்டுதல் -நா அசைத்தல்
ஏல் -பொருத்தம்

லோகத்தை அளக்கிற போது-என் தலையிலே மிதியாதே கொள் -என்றார் இல்லை இறே
அறிந்தார்கள் ஆகில் தலை கீழாக நிற்கவும் கூடும் இறே –

(அவ்வளவு ஸ்வா தந்திரம் உடையவர்கள் அன்றோ நாம் அனைவரும் –
கால் மேல் இருந்து அபசாரம் பட்டுள்ளோம் )

———————————————————————–

என் தம்பிரானார் எழில் திரு மார்வற்குச்
சந்தம் அழகிய தாமரை தாளற்கு
இந்திரன் தானும் எழிலுடைக் கிண்கிணி
தந்து உவனாய் நின்றான் தாலேலோ தாமரைக் கண்ணனே தாலேலோ –1-3-3-

பதவுரை

எம் தம் பிரானார்–எமக்கு ஸ்வாமியாய்
எழில்–அழகிய
திரு மார்வார்க்கு–திருமார்பை யுடையாய்
சந்தம் அழகிய–நிறத்தாலழகிய
தாமரை தாளர்க்கு–தாமரை போன்ற திருவடிகளை யுடையரான தேவர்க்கு
இந்திரன் தானும்–தேவேந்த்ரனானவன்
எழில் உடை–அழகை யுடைய
கிண் கிணி–கிண் கிணியை
தந்து–கொணர்ந்து ஸமர்ப்பித்து
உவனாய் நின்றான்–அதோயிரா நின்றான்
தாலேலோ! தாமரைக் கண்ணனே! தாலேலோ–

என் தம்பிரான் ஆனாய் –
எழில் விளங்கா நின்றுள்ள திரு மார்பை யுடையவனுக்கு

சந்தம் -இத்யாதி
சமுதாய சோபைக்கு தகுதியாய்
செவ்வித் தாமரை போலே இருக்கிற திருவடிகளை யுடையவனுக்கு

இந்த்ரன் தானும்
அவர்களோடு சமனான தானும் -என்றபடி

எழிலையும் ஓசையையும் யுடைத்தான கிங்கிணியையும் தந்துவனாய் நின்றான்
அதூர விப்ரக்ருஷ்டனாய் வந்து நின்றான் தாலேலோ –

————————————————————————–

இவ்வளவேயோ
தேவர்கள் எல்லாரும் உப ஹார பாணிகளாய் வந்தார்கள் -என்கிறார்

ரிக்த பாணிஸ்து நோபேயாத் ராஜா நாம் தைவதம் குரும் -என்கையாலே
ராஜாவும் தெய்வமும் குருவும் இவனே யாகையாலே
உபஹார பாணிகளாய் கொண்டு வந்தார்கள் -என்கிறார் –

சங்கின் வலம்புரியும் சேவடிக் கிண்கிணியும்
அங்கைச் சரிவளையும் நாணும் அரைத் தொடரும்
அங்கண் விசும்பில் அமரர்கள் போத்தந்தார்
செங்கட் கரு முகிலே தாலேலோ தேவகி சிங்கமே தாலேலோ –1-3-4-

பதவுரை

சங்கில்–சங்குகளில்(சிறந்த)
வலம் புரியும்–வலம்புரிச் சங்கையும்
சே அடி–செவ்விய திருவடிகளில் (சாத்தத் தகுந்த)
கிண்கிணியும்–சதங்கையையும்
அம் கை–அழகிய கைகளுக்கு உரிய
சரி–முன் கை வளைகளையும்
வளையும்–திருத் தோள் வளைகளையும்
நாணும்–பொன்னரை நாணையும்
அரை தொடரும்–அரை வடத்தையும்
அம் கண்–அழகியதாய் விசாலமான
விசும்பில்–ஸ்வர்க்கத்திலுள்ள
அமரர்கள்–தேவர்கள்
போத்தந்தார்–அனுப்பினார்கள்
செம் கண்–சிவந்த கண்களை யுடையையாய்
கரு முகிலே–காள மேகம் போன்ற வடிவை யுமுடையையான கண்ணனே!
தாலேலோ!
தேவகி–தேவகியின் வயிற்றிற்பிறந்த
சிங்கமே–சிங்கக் குருகே!
தாலேலோ!

சங்கின் வலம்புரியும்-
சங்குகளில் வைத்துக் கொண்டு நன்றான வலம்புரியானதும்-

சேவடிக் கிண்கிணியும் –
பாதச் சதங்கைகளும் –

அங்கைச் சரிவளையும் –
அழகிய திருக் கைக்குத் தகுதியான சரிகளும் -வளைகளும் –

நாணும் அரைத் தொடரும் –
திரு வரை நாணும்
அரை வடமும்-

அங்கண் விசும்பில் அமரர்கள் போத்தந்தார்
அழகியதாய்
இடமுடைத்தான விசும்பில்
அமரர்கள் போக விட்டார்கள் –

செங்கட் கரு முகிலே தாலேலோ –
சிவந்த திருக் கண்களை யுடைய
நீல மேகம் போன்றவனே -தாலேலோ
(அபூத உவமை )

தேவகி சிங்கமே தாலேலோ–
தேவகி புத்திரன் என்கிற பிரசத்தியாலே -சொல்லுகிறார்
இது தான் ஸ்ருதி சோதிதமுமாயும் இறே இருப்பது –
ஆழ்வார் அருளிச் செய்தார் என்கிற இது இறே ஏற்றம் –

———————————————————————-

எழிலார் திரு மார்வுக்கு ஏற்கும் இவை என்று
அழகிய ஐம்படையும் ஆரமும் கொண்டு
வழுவில் கொடையான் வயிச்சிராவணன்
தொழுதுவனாய் நின்றான் தாலேலோ தூ மணி வண்ணனே தாலேலோ –1-3-5-

பதவுரை

எழில் ஆர்–அழகு மிக்கிருந்துள்ள
திரு மார்பிற்கு–வக்ஷஸ் ஸ்தலத்துக்கு
இவை ஏற்கும் என்று–இவை பொருந்தும் என்று
அழகிய–அழகியவையான
ஐம்படையும்–பஞ்சாயுதங்களையும்
ஆரமும்–முத்து வடத்தையும்
கொண்டு–எடுத்துக் கொண்டு,
வழுஇல்–குற்றமற்ற ( பரிவால் சமர்ப்பித்ததால் குற்றம் அற்ற தானம் )
கொடையான்–ஔதார்யத்தை யுடையனான
வயிச்சிரவணன்–குபேரானானவன் ( விச்வரஸ் பிள்ளை )
தொழுது–(இவற்றைத் திருவுள்ளம் பற்ற வேணுமென்று) அஞ்ஜலி பண்ணிக் கொண்டு
உவனாய் நின்றான், தாலேலோ!
தூ மணி–பழிப்பற்ற நீல மணி போன்ற
வண்ணனே–வடிவை யுடைய கண்ணனே!
தாலேலோ!

எழிலார் திரு மார்வுக்கு –
எழில் விளங்கா நின்ற திரு மார்புக்கு

ஏற்கும் இவை என்று –
சேரும் இவை என்று –

அழகிய ஐம்படையும் ஆரமும் கொண்டு –
அழகிய ஸ்ரீ பஞ்சாயுதமும் –
திரு முத்து வடமும் ஆதல் –
திருக் கழுத்துக்கு தகுதியான திரு ஆபரணம் ஆதல் –

வழுவில் கொடையான் வயிச்சிராவணன் –
கொடுத்துக் கொள்ளில் இறே வழு வாவது
வழு வற்ற கொடையான் -வைஸ்வரணன்

தொழுதுவனாய் நின்றான் தாலேலோ –
இத்தை அங்கீ கரிக்க வேணும் என்று பிரபதனம் பண்ணி
அதூர விப்ரக்ருஷ்டனாய் நின்றான்
த்ரவ்ய சாத்யமான வஸ்து வல்ல விறே –
அஞ்சலி சாத்யம் இறே –

தூ மணி வண்ணனே தாலேலோ-
இவன் த்ரவ்ய சாத்யன் அல்லன் என்று அறிந்து
தொழுத பின்பு திரு மேனியில் யுண்டான பிரகாசம் சொல்லுகிறது –
நீல ரத்னம் போன்ற நிறத்தை யுடையவன் –

———————————————————————

ஓதக் கடலில் ஒளி முத்தின் ஆரமும்
சாதிப் பவளமும் சந்தச் சரி வளையும்
மாதக்க வென்று வருணன் விடு தந்தான்
சோதிச் சுடர் முடியாய் தாலேலோ சுந்தரத் தோளனே தாலேலோ –1-3-6-

பதவுரை

ஓதம்–அலை யெறிப்பை யுடைய
கடலில்–ஸமுத்ரத்தில் (உண்டாய்)
ஒளி–ஒளியை யுடைத்தாய்
முத்தின்–முத்துக்களால் கோக்கப்பட்ட
ஆரமும்–ஹாரத்தையும்
சாதி–நல்ல ஜாதியிலுண்டான
பவளமும்–பவழ வடத்தையும்
சந்தம்–அழகு பொருந்திய
சரி–முன் கை வளைகளையும்
வளையும்–தோள் வளைகளையும்
மா தக்க என்று–விலையில் சிறந்து தகுதியாயிருந்துள்ளவை என்று
வருணன் விடு தந்தான்–வருண தேவனானவன் விடு தந்தான்
சோதி சுடர்–மிக்க ஜ்யோதிஸ்ஸை யுடைய (மீமிசை சப்தம் )
முடியாய்–கிரீடத்தை யணிந்த கண்ணனே!(ஆதி ராஜ்ய ஸூ சகம் –ஆதி ராஜ்ய ஜல்பிகா)
தாலேலோ. . !
சுந்தரம் தோளனே–அழகிய திருத் தோள்களை யுடைய கண்ணனே!
தாலேலோ. . !

அத்யந்தம் அகாதமாய்
அலை எறியா நின்றுள்ள சமுத்ரத்தில்
நீர்மையை யுடைத்தான முத்துக்களாலே சேர்க்கப் பட்ட ஒளியை யுடைத்தான ஹாரமும் –
முத்தாரம் -என்றபடி –
முத்தின் இடையிலே நிழல் எழும்படி கலந்து கோத்த சாதியான பவளமும்
அழகு விளங்கா நின்றுள்ள சரியும் வளையும்

மாதக்க வென்று-
மகத்துவமும்
தகுதியையும் -இருக்கும் என்று
வருணன் கொண்டு வந்தான்

ஆதி ராஜ்ய ஸூசகமுமாய்-சேஷித்வ பிரகாசகமுமாய் –
மிக்க பிரபையை யுடைத்தான திரு அபிஷேகத்தையும்
அதுக்குத் தகுதியாக அழகு விளங்கா நின்றுள்ள திருத் தோள்களையும் யுடையவனே தாலேலோ

———————————————————–

கானார் நறும் துழாய் கை செய்த கண்ணியம்
வானார் செழும் சோலைக் கற்பகத்தின் வாசிகையும்
தேனார் மலர் மேல் திரு மங்கை போந்தந்தாள்
கோனே அழேல் அழேல் தாலேலோ குடந்தைக் கிடந்தானே தாலேலோ –1-3-7-

பதவுரை

தேன் ஆர்–தேன் நிறைந்துள்ள
மலர்மேல்–(செந்தாமரை) மலரிலுறைகின்ற
திருமங்கை–பெரிய பிராட்டியார் (யுவதிஸ்ய குமாரிணி -மங்கை -பெருமையால் பெரிய பிராட்டியார் )
கான் ஆர்–காட்டிலுண்டான
நறு துழாய்–பரிமளம் மிக்க துளசியாலே
கை செய்த–தொடுத்த
கண்ணியும்–மாலையையும்
வான் ஆர்–சுவர்க்க லோகத்தில் நிறைய வளர்ந்துள்ள
செழு–செழுமை தங்கிய
சோலை–சோலையாய்த் தழைத்த
கற்பகத்தின்–கல்ப வ்ருக்ஷத்தின் பூக்களால் தொடுத்த
வாசிகையும்–திரு நெற்றி மாலையையும்
போத்தந்தாள்–அனுப்பினாள்
கோனே–ஸர்வ ஸ்வாமியான கண்ணனே!
அழேல் அழேல் தாலேலோ!
குடந்தை–திருக்குடந்தையிலே
கிடந்தானே–கண் வளந்தருளுகிற ஸ்ர்வேச்வானே!
தாலேலோ!

தன் நிலத்திலே வளர்ந்து
தழைத்து-பரிமள பிரசுரமான –
திருத் துழாயாலே கட்டப் பட்ட திரு மாலையும்

வானிலே ஆர்த்திருந்த கற்பகம் போலே செழுமை குன்றாமல்
பல மரங்களும் யுண்டாய் இருக்கச் செய்தேயும்
ஒரு மரமே ஒரு தோப்பாக பணைப்பதான கற்பகப் பூவாலே சமைத்த திரு வாசிகையும்

தேன் மாறாத செந்தாமரை மேலே நித்ய வாசம் பண்ணுகிற பெரிய பிராட்டியார் வர விட்டாள்
திரு மங்கை -என்கையாலே யுவதிஸ்ஸ குமாரிணீ-என்கிற படி பருவத்தால் இளையவள் இறே –
இவள் இறே வராவிட்டாள்
இவள் வர விடுமது எல்லாம் அப்ராக்ருதமாய் இறே இருப்பது
அப்ராக்ருதர் கையிலே இறே வரவிடுவதும்

கோனே -என்றது
உபய விபூதிக்கும் நிர்வாஹகன் -என்னுதல்
ஆயர் குலத்த்க்கு நிர்வாஹகன் -என்னுதல்
அழலே அழலே -தாலேலே

குடந்தைக் கிடந்தானே
உபய விபூதியையும் நிர்வஹிப்பது திருதிய விபூதியிலே கண் வளர்ந்து போலே காணும் –

———————————————————————–

கச்சொடு பொற் சுரிகைக் காம்பு கனகவளை
உச்சி மணிச் சுட்டி ஒண் தாள் நிறைப் பொற் பூ
அச்சுதனுக்கு என்று அவனியாள் போந்தந்தாள்
நச்சு முலை யுண்டாய் தாலேலோ நாராயணா அழேல் தாலேலோ –1-3-8-

பதவுரை

கச்சொடு–கச்சுப் பட்டையையும்
பொன்–பொன்னாற்செய்த
சுரிகை–உடை வாளையும்
காம்பு–கரை கட்டிய சேலையையும்
கனம்–கநக மயமான
வளை–தோள் வளைகளையும்
மணி–ரத்நமிழைத்துச் செய்யப்பட்டதாய்
உச்சி–உச்சியிலே சாத்தத் தக்கதான
சுட்டி–சுட்டியையும்
ஒண் தாள்–அழகிய காம்புகளை யுடைத்தாய்
நிரை–ஒழுங்கான
பொற்பூ–பொற்பூவையும்
அச்சுதனுக்கு என்று–‘கண்ணபிரானுக்கு (க்கொடுங்கோள்)’ என்று
அவனியாள்–பூமிப்பிராட்டியானவள்
போத்தந்தாள்–அனுப்பினாள்;
நஞ்சு–விஷமேற்றின
முலை–பூதனையின் முலையின் பாலை
உண்டாய்–உண்ட கண்ணனே!
தாலேலோ;
நாராயணா! அழேல்! தாலேலோ

சாத்தின சிறுக் காம்பன் சேலையின் மேலே கட்டின கச்சிலே சொருகின பொன்னாலே சமைத்த சிறுச் சுரிகையும்
திருக்கையிலே சாத்த ஸ்ப்ருஹணீயமான வளையும்
உச்சியிலே சாத்த ரத்ன அலங்க்ருதமான சுட்டியும்
அழகிய திருவடிகளிலே ஒழுங்கு படச் சாத்துகைக்கு பொற் பூ

அன்றியே
ஒள்ளிய தாள யுடைத்தான பூ என்னுதல்

ஒண்டார் -என்ற பாடமான போது –
ஒழுங்கு பட திரு முடியில் சாத்த
ஒள்ளிய தாரை யுடைத்தான பொற் பூவும்

ஆஸ்ரிதரை ஒரு காலும் நழுவ விடாதவன் -என்னுதல்
தன் படிகளில் ஒன்றும் நழுவ விடாதவன்-என்னுதல்

அவனியாள் –
ஸ்ரீ பூமிப் பிராட்டி வர விட்டாள் –

வெறும் புறத்திலே பேய்ச்சி முலை என்ன அமையும் இறே
அதன் மேலே
நஞ்சு ஏற்றின முலையை இறே அமுது செய்தது

நாராயணா என்கையாலே இறே
ப்ரஹ்ம சனகாதிகள் உபஹார பாணிகளாய் வந்ததும் –
அழலே அழலே தாலேலோ –

———————————————————————–

மெய்தி மிரு நானப் பொடியோடு மஞ்சளும்
செய்ய தடம் கண்ணுக்கு அஞ்சனமும் சிந்துரமும்
வெய்ய கலைப்பாகி கொண்டு உவளாய் நின்றாள்
ஐயா அழலே அழலே தாலேலோ அரங்கத்து அனையானே தாலேலோ –1-3-9-

பதவுரை

மெய்–திரு மேனியிலே
திமிரும்–பூசுகைக்குரிய
நானம் பொடியோடு–கஸ்தூரி, கருப்பூரம், சந்தநம் முதலிய ஸூகந்தப் பொடிகளையும்
மஞ்சளும்–மஞ்சள் பொடியையும்
செய்ய–சிவந்ததாய்
தட–விசாலமாயுள்ள
கண்ணுக்கு–கண்களில் (சாத்த)
அஞ்சனமும்–மையையும்,
(திரு நெற்றியில் சாத்துகைக்கு)
சிந்தூரமும்–ஸிந்தூரத்தையும்
வெய்ய கலைப் பாகி–கொடிய ஆண் மானை வாஹநமாகவுடைய துர்க்கை யானவள்
கொண்டு–எடுத்துக் கொடு வந்து
உவளாய் நின்றாள்–அதோ இரா நின்றாள்;
ஐயா–ஸ்வாமியான கண்ணனே!
அழேழ் அழேழ் தாலேலோ;
அரங்கத்து–ஸ்ரீரங்கத்திலே
அணையானே–(திருவனந்தாழ்வானைப்) படுக்கையாக வுடையவனே!
தாலேலோ.

திரு மேனியிலே மர்திக்கைக்காக ( ஈசுவதற்கு )
சந்தன கஸ்தூரி கர்ப்பூரப் பொடி யோடு மஞ்சள் பொடியும்
சிவந்து புடை பரந்து நீண்ட திருக் கண்களுக்கு தகுதியாக சாத்துகைக்கு அஞ்சனமும்
திரு நெற்றி அழகு பெறச் சாத்துகைக்கு சிந்தூரமும்

ஸ்வா தந்த்ர்ய நிபந்தனமான கலைகளை நாவிலே நின்று நடத்துகையாலே -வெய்ய -கலைப்பாகி -என்றது
(நன்றாக படித்து பாரதந்தர்யம் பர்யந்தம் இல்லாமல் மேலாகப் படிக்க ஸ்வா தந்தர்யமே மிக்கு இருக்குமே )
அன்றியே
வெவ்விய கலையை வாகனமாக யுடைய விஷ்ணு துர்க்கை -என்னவுமாம் –
வெம்மை -அவளுடைய ஸ்வா தந்த்ர்யம் ஆகவுமாம் –
ஐயா அழலே அழலே தாலேலோ

அரங்கத்து அனையானே தாலேலோ –
அவதார கந்தமான -உரக மெல்லணை யானான அரங்கத் தரவணை யான் -இறே
தேனார் திருவரங்கம் தென் கோட்டி -மூன்றாம் திருவந்தாதி -62-என்னக் கடவது இறே –

———————————————————————

நிகமத்தில் இத் திருமொழி கற்றார்க்கு
பலம் சொல்லித் தலைக் கட்டுகிறார் –

வஞ்சனையால் வந்த பேய்ச்சி முலை யுண்ட
அஞ்சன வண்ணனை யாய்ச்சி தாலாட்டிய
செஞ்சொல் மறையவர் சேர் புதுவை பட்டன் சொல்
எஞ்சாமை வல்லவர்க்கு இல்லை இடர் தானே –1-3-10-

பதவுரை

வஞ்சனையால் வந்த–வஞ்சக வேஷத்தோடே வந்த
பேய்ச்சி–பூதனையினுடைய
முலை உண்ட–முலையை அமுது செய்தவனாய்
அஞ்சனம் வண்ணனை–மை போன்ற நிறத்தை யுடையவனான கண்ண பிரானை
ஆய்ச்சி–யசோதைப் பிராட்டி
தாலாட்டிய–தாலாட்டின படிகளை
செம் சொல் மறையவர்–செவ்விய சொற்கள் நிறைந்த வேதங்களில் வல்லவரான ஸ்ரீவைஷ்ணவர்கள்
சேர்–நித்ய வாசம் பண்ணப் பெற்ற
புதுவை–ஸ்ரீவில்லிபுத்தூரிலவதரித்த
பட்டன்–பெரியாழ்வார் (அருளிச் செய்த)
சொல்–இப் பாசுரங்கள்
எஞ்சாமை–குறைவு படாமல்
வல்லவர்க்கு–ஓத வல்லவர்க்கு
இடர் இல்லை–துன்பம் ஒன்றுமில்லையாம்.
தான் ஏ – அசை

சன்ன ரூபையான பேய்ச்சி முலையை தாய் முலை போலே யுண்ட
(ப்ரஸன்ன -எதிர்மறை சன்ன -மறைத்த )
விரோதி போகப் பெற்றோம் என்று திரு மேனி அஞ்சனம் போலே நிறம் பெற்ற படி
யசோதை பிராட்டி தாலாட்டின பிரகாரத்தை

இவர் தத்வ நிர்ணயம் பண்ணின பின்பு
திரு மாளிகையில் உள்ளார்க்கு அத்யந்தம் அதி குஹ்யமாய் இருக்கிற வேத சாஸ்திரம் எல்லாம் செவ்விதாய்த் தோற்றி
இவர் திரு உள்ளத்தோடு அவர்களும் சேர்கையாலே-செஞ்சொல் -மறையவர் -என்கிறது

பட்டன் சொல் -ஆப்த வாக்கியம்

சாபிப்ராயமாக வல்லவர்க்கு

எஞ்சல் -சுருங்கல்

இடர் இல்லை -என்னாதே-இல்லை இடர் -என்கிறார்
த்ருஷ்டா சீதா -என்னுமா போலே
(ந ம -அல்லேன் -எனக்கு உரியவன் -நிஷேதம் முதலில் என்றால் போல் )

இடராவது –
இவர் அபிமானத்திலே ஒதுங்காமை இறே
தானே போகையாலே இல்லை என்கிறார் —

—————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருவாய்மொழிப் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி -ஸ்ரீ திருவாய் மொழிப்பிள்ளை அருளிச் செய்த ஸ்வாபதேச வியாக்யானம் —1-2-சீதக்கடல் உள்ளமுதன்ன தேவகி–

November 29, 2014

பிரவேசம்
கீழ்த் திரு மொழியிலே
திருக் கோட்டியூர் கண்ணன் கேசவன் நம்பி பிறந்தினில் -என்று தொடங்கி-
திருக் கோட்டியூர் மன்னு நாரணன் நம்பி பிறந்தமை -என்று
திரு வவதார வியாபாரத்தை எல்லாம் அனுபவ பூர்வகமாக அருளிச் செய்தார் –

இனிமேல்
திருவடிகளில் நின்றும்
திரு முடி அளவாக அனுபவித்து
அனுபவித்த பிரகாரத்தை யசோதை பிராட்டி பாசுரத்தாலே விருப்பம் தோற்ற அருளிச் செய்கிறார் –

(விருப்பம் தோற்ற-பவள வாயீர் வந்து காணீரே –1-2-1
ஒண் நுதலீர் வந்து காணீரே –1-2-2-
காரிகையீர் வந்து காணீரே –1-2-3-
இவற்றுக்கு உள் கருத்து ஸ்வாபதேச அர்த்தங்கள் உண்டே )

————————————————————————————-

சீதக்கடல் உள்ளமுதன்ன தேவகி
கோதைக் குழலாள் அசோதைக்குப் போத்தந்த
பேதைக் குழவி பிடித்துச் சுவைத்து உண்ணும்
பாதக் கமலங்கள் காணீரே பவள வாயீர் வந்து காணீரே –1-2-1-

பத உரை
சீதக் கடலுள்  அமுதன்ன = குளிர்ந்த கடலில் உள்ள அமுதாக பிறந்த பிராட்டியோடு ஒத்த
தேவகி = தேவகி பிராட்டி
கோதை =பூ மாலையால் அலங்கரிக்கப்பட்ட
குழலாள் = கேச பாசத்தை உடைய
அசோதைக்கு =யசோதை பிராட்டிக்கு
போத்தந்த = போக விட்ட
பேதை குழவி =பேதைமை உடைய சிசுவானது
பிடித்து = திருக் கைகளால் பிடித்து
சுவைத்து = ஆச்வாதித்து
உண்ணும் = திருப் பவளத்தில் வைத்து புஜியா நின்றுள்ள
பாதக் கமலங்கள் = திரு வடித்தாமரைகளை
வந்து காணீர் = வந்து காணும் கோள்
பவள வாயீர் = பவளம் போல் சிவந்த அதரத்தை உடைய பெண்டிர்காள்
வந்து காணீர் -கடுக வந்து பாரும் கோள்
காணீரே என்றதை இரட்டித்து சொன்னதால் ஆதரத்தின் மிகுதி தோற்றுகிறது-

சீதக்கடல் உள்ளமுதன்ன தேவகி
அகாதம் ஆகையாலே குளிர்ச்சி மாறாது இருக்கும் சமுத்ரத்தில் –
கடலுள் அமுது -என்கையாலே புறவமுது தோன்றிற்று இறே-
விண்ணவர் அமுதுண்ண அமுதில் வரும் பெண்ணமுது -பெரிய திருமொழி -6-1-2-
பர உபகார சிந்தை பண்ணுகையாலே இந்த தேவகியும் பர உபகாரமாக ஈஸ்வரனை
திருவாய்ப்பாடி முதலாக எல்லார்க்கும் உபகரித்தாள்-இறே

இந்த உபகாரம் கம்ச பீதி மூலம் ஆகையாலே –
உள் அமுது அன்ன தேவகி -என்கையாலே
வைதர்ம்யத்திலே ஏக தேச திருஷ்டாந்தமாகக் கடவது –
பிறப்பிக்கப் பிறந்த அம்ருத துல்யையான சாது ஜனங்களுக்கு அக்ரேசரையான தேவகியார்-
(வைதர்ம்யத்திலே-நேர் எதிர்மறை -புற அமுது உள் அமுது
அமுதம் கடைய தானே பிறந்தது -பிறப்பிக்க பிறந்த அம்ருத )

கோதைக் குழலாள் அசோதைக்குப் போத்தந்த
புஷ்பாதிகளாலே அலங்க்ருதமான குழலை யுடைய யசோதைப் பிராட்டிக்குப் போக விட்ட
போத்து -என்றது -போக்கின -என்றபடி –
அந்த -என்றது -சுட்டு ஆகவுமாம் –
அன்றிக்கே
போத்தந்த -என்று ஒரு சொல்லாய் கிடக்கிறதாய்-அத்தாலும் போக விட்டு -என்றபடி

பேதைக் குழவி –
பேதை -பருவத்துக்குத் தக்க அறிவில்லாமை –
குழவி -பருவம் –

பிடித்துச் சுவைத்து உண்ணும் –
திருக் கையாலே திருவடிகளைப் பிடித்து –
தேனே மலரும் திருப்பாதம் -திருவாய்மொழி -1-5-5-என்று
தன் திருவடிகளிலே விழுந்தவர்கள் சொல்லக் கேட்கையாலே
இது பரீஷிக்க வேணும் -என்று திருப்பவளத்திலே வைத்தான் -என்னுதல்
அழும் குழவி -பெருமாள் திருமொழி-5-1- -போல்வார் விரும்புகையால் தானும்
தாரக போக்யங்களாக விரும்பினான்-என்னுதல் –
(அவன் பேதைக் குழவி -ஸ்வாமி
ஆழ்வாராதிகள் அழும் குழவி -தாஸர் )

அன்றிக்கே
அந்தர்கதமான வையம் ஏழுக்கும் சிறைச் சோறு ஆக்கினான் ஆதல் –
இவை புறப்படாமல் திரு விரலாலே கண் செறி இட்டான் ஆதல்
இவர் அவதாரத்தில் மெய்ப்பாடு எல்லாம் தோற்றி அனுபவிக்கிறார் இறே-

பாதக் கமலங்கள் காணீரே –
வேதம் வல்லார்களைக் கொண்டு விண்ணோர் பெருமான் திருப் பாதம் பணிய -திருவாய் மொழி -4-6-8-வேண்டுகையாலே
இவர் காட்டக் காணும் வேணும் இறே
(இதுவே ஸ்வாப தேசம்
யசோதை -ஆச்சார்ய ஸ்தானம் –
நாயகனாய் நின்ற –நீ நேச நிலைக் கதவம் நீக்கு போல் )
வேதப் பயன் கொள்ள வல்லார் -பெரியாழ்வார் -2-8-10-இவர் இறே
திருவடித் தாமரைகளை வந்து காணுங்கோள்-என்கிறார்
அறிவுடையார் காட்டக் காணும் வேணும் இறே-

பவள வாயீர் வந்து காணீரே –
என்று பின்பும் அருளிச் செய்கையால்
ப்ரபத்தியின் மேல் ஏறின பக்தியையும்
பவ்யதையும் யுடையவர்கள் நின்ற நின்ற நிலைக்குள்ளே
யுள்ளே புகுந்து தர்சிக்க யோக்யர் -என்கிறார் –

(தந்த பந்தி வெளுப்பு -பிரபத்தி நேர்மை
பக்தி ராகம் -சிகப்பு -பவள வாயீர்
பக்தி உபாயம் -ஸ்ரீ கீதை -இதுக்கு பிரபத்தி அங்கம் -பிரபன்னர் படி இல்லை
பாதகமலம் தான் உபாயம் -பிரபத்தி -இவர்களுக்கும் பக்தி வேண்டும்
கைங்கர்ய ருசிக்கு -ஸாத்யமான பக்தி -மேல் உள்ள காலத்துக்கு -பிரபத்திக்கு மேல் ஏறின பக்தி இதுவே –
வந்து காணீரே -பவ்யதை -சொன்னபடி கேட்க வேண்டும்
அடுத்து அடுத்த நிலைக்கு சென்று அனுபவிக்க வேண்டுமே
பரபக்தி -பரஞானம் -பரம பக்தி அவஸ்தைகளைச் சொன்னவாறு -)

———————————————————————

திருவடிகளில்
அகவாயில்
அழகை அனுபவித்தாராய் நின்றார் கீழ் –
இப்பாட்டில் திருவடிகளில் திரு வுகிருடனே திரு விரல்களை அனுபவிக்கிறார் –

முத்தும் மணியும் வயிரமும் நன் பொன்னும்
தத்திப் பதித்துத் தலைப் பெய்தாற் போல் எங்கும்
பத்து விரலும் மணி வண்ணன் பாதங்கள்
ஒத்திட்டு இருந்தவா காணீரே ஒண் நுதலீர் வந்து காணீரே –1-2-2-

பத உரை
முத்தும் மணியும் =முத்துக்களையும் ரத்னங்களையும்
வயிரமும் = வயிரத்தையும்
நன் பொன்னும் =நல்ல பொன்னையும்
தத்திப் பதித்து = மாறி மாறி பதித்து
தலை பெய்தாற் போல் =சேர்த்தாப் போல்
எங்கும் = எங்கும்
மணி வண்ணன் = மணி போன்ற வர்ணத்தை உடைய கண்ணனுடைய
பாதங்கள் =திருவடிகளில் உள்ள
பத்து விரலும் =விரல்கள் பத்தும்
ஒத்திட்டு = தன்னிலே சேர்ந்து
இருந்த ஆ = இருந்த படியை
காணீர் = காணும் கோள்
ஒண் நுதலீர் =அழகிய நெற்றியை உடைய பெண்டிர்காள்
வந்து காணீர் = வந்து பாரும் கோள்
ஏ -அசை

திருவடிகளுக்கு செம் பஞ்சு இட்டாள் ஆகையாலே
திரு விரல்களுக்கும்
மாறி மாறி ஒன்பது விரல்களுக்கும் நவ ரத்ன வர்ணத்தையும்
மற்றை ஒரு விரலுக்கு ஸ்வர்ண வர்ணத்தையும் இட்டு அலங்கரித்து
அவள் அனுபவித்த பிரகாரம் இவர் திரு உள்ளத்திலே பிரகாசித்து
அனுபவிக்கிற இவர்க்கு தாத் காலிகமாய்த் தோற்றுகிறது –

முத்தும் மணியும் வயிரமும் நன் பொன்னும்-தத்திப் பதித்துத் தலைப் பெய்தாற் போல்
என்றது -நவ ரத்னத்துக்கும் உப லஷணம்
ரத்னத்து அளவு அன்றிக்கே தன் பிரேமத்தால் முத்தை முற்பட இட்டு மாணிக்கத்தை இடுகையாலே –
தத்திப் பதித்து -என்கிறது –

தத்தி-என்றது -தத்தவாய் -மாறப் பதித்து என்றபடி
வணங்கி -என்றது வணங்க என்றால் போலே
தலைப் பெய்தாற் போலே என்கையாலே
நீளமுடைத்தான பத்து நீல ரத்னத்தின் அக்ரத்திலே
நவ ரத்ன வர்ணத்தையும்
பொன்னின் வர்ணத்தையும் சேர்த்தால் போல் இருந்தது என்கை

எங்கும் பத்து விரலும் மணி வண்ணன் பாதங்கள் ஒத்திட்டு இருந்தவா காணீரே –
ஓர் ஆபரணத்திலே நவரத்னத்தையும் முத்தையும் அழுத்திச் சேர அனுபவிப்பாரைப் போலே அனுபவித்து
இவை உபமானம் போராமையாலே
மணி வண்ணன் பாதங்கள் பத்து விரலும் ஒத்திட்டு இருந்தவா காணீரே -என்கிறார்

ஒண் நுதலீர் வந்து காணீரே –
ஒளியை யுடைத்தான நெற்றியை யுடையவர்கள் -என்றபடி
நுதல் -நெற்றி
ஒண் நுதல் -என்கையாலே
பிரபத்தி பிரகாசகமான தாந்தியை யுடையவள் என்றபடி-

(சாந்தி -தாந்தி
சமம் தமம்
பிரபத்தி -வெளிச்சமாக காட்டும் -புலன் அடக்கம் –
அவனே நிர்வாஹகன் என்று உணர்ந்தவர்கள் )

————————————————————

திரு உகிரை அனுபவித்து
திருக் கணைக் காலை அனுபவிக்கிறார் –

பணைத் தோள் இளவாய்ச்சி பால் பாய்ந்த கொங்கை
அணைத்து ஆர வுண்டு கிடந்த விப் பிள்ளை
இணைக் காலில் வெள்ளித் தலை நின்றிலங்கும்
கணைக்கால் இருந்தவா காணீரே காரிகையீர் வந்து காணீரே –1-2-3-

பத உரை –
பணை = மூங்கில் போன்ற
தோள் = தோள்களை உடையளாய்
இள ஆய்ச்சி = இளைமை பருவத்தை உடையளான ஆய்ச்சியின்
பால் பாய்ந்த கொங்கை =பால் சொரிகிற முலையை
அணைத்து = திருக் கைகளால் அணைத்து
ஆர = திரு வயிறு பூரணனாம் படி
உண்டு = அமுது செய்து
கிடந்த = களித்து கிடந்த
இப்பிள்ளை = இந்த கிருஷ்ணனுடைய
இணை = சேர்த்தி அழகையுடைய
காலில் = திருவடிகளில்
வெள்ளி தளை நின்று = வெள்ளி தண்டை நின்று
இலங்கும் = விளங்கா நிற்கிற
கணை கால் இருந்த ஆ = கணைக் கால் இருந்த படியை
காணீர் = பாரும் கோள்
காரிகையீர் வந்து காணீர் = அழகிய பெண்களே வந்து காணும் கோள்
ஏ-அசை-

பசுத்த மூங்கில் போலே இருக்கிற தோளை யுடையவளுமாய்
பருவத்தால் இளையவளுமான ஆய்ச்சி
இப்போது இவளை வர்ணிக்கிறது –
பர்த்ரு சம்ச்லேஷ யோக்யமான காலங்களிலும் பிள்ளையை அணைக்கையாலே
பிள்ளையை அணைத்து
பிள்ளை வாய் வைப்பதற்கு முன்னே நெறித்துப் பாய்ந்த முலையைக் கொடுக்க
வயிறார யுண்டு

நிர்ப் பரனாய் கிடந்தது கண்டு
இப் பிள்ளை -என்று –சமுதாய சோபையை அனுபவிக்கப் புக்கு –
ஒன்றுக்கு ஓன்று ஒப்பான திருவடிகளிலே பிரகாசிக்கிற வெள்ளித் தளை
சித்த அபஹாரம் பண்ணச் செய்தேயும்
அத்தை ஒழித்து –
அது மிகையான திருக் கணைக் காலை அனுபவித்து
இது இருந்த பிரகாரத்தை அனுபவ யோக்யரான நீங்களும் வந்து காணுங்கோள்-என்கிறார்

காரிகையீர் -என்கிறது
காம தந்திர ந்யாயத்தாலே வடிவு அழகில் வாசி அறிந்து
ஸ்நேஹிகளுமாய்
அவயவாந்தரத்தில் போக மாட்டாத யுவதிகளை அழைத்து
காணி கோள் காணி கோள்-என்கிறார்

காரிகையீர் -என்கையாலே
பக்தி பாரவஸ்யம் யுடையாரை அனுபவிக்க அழைக்கிறார் –
(அழகு –அவன் -பர-வசப்பட்டு- தன் வசம் இல்லாமல் இருப்பதே அழகு )

—————————————————————

திருக் கணைக் காலை அனுபவித்த அனந்தரம்
திரு முழம் தாளின் அழகை அனுபவிக்கிறார் –

உழந்தாள் நறு நெய் யோர் தடா வுண்ண
இழந்தாள் எரிவினால் ஈர்த்து எழில் மத்தின்
பழந்தாம்பால் ஓச்சப் பயத்தால் தவழ்ந்தான்
முழந்தாள் இருந்தவா காணீரே முகிழ் முலையீர் வந்து காணீரே –1-2-4-

பத உரை –
உழந்தாள் = ஸ்ரமப் பட்டு தடாவில் சேர்த்தவளுடைய
நறும் நெய் = மணம் மிக நெய்யை
ஒரோ தடா = ஒவ்வொரு தடாவாக
உண்ண = அமுது செய்த அளவில்
இழந்தாள் = பிள்ளையை இழந்தாளாக நினைத்த தாய்
எரிவினால் = வயிற்று எரிச்சலாலே
ஈர்த்து = கையை பிடித்து இழுத்து
எழில் மத்தின் =அழகிய மத்திலே
பழம் தாம்பால் = சுற்றி கடைந்து பழகின தாம்பாலே
ஒச்ச = அடிப்பதாக ஓங்க
பயத்தால் = அச்சத்தாலே
தவழ்ந்தான் = அத்தை தப்பி போவதாக தவழ்ந்தவனுடைய
முழம் தாள் = முழம் கால்கள்
இருந்த ஆ = இருந்த படியை
காணீர் = காணும் கோள்
முகிழ் முலையீர் = முகிழ்ந்த முலையை உடைய பெண்களே
வந்து காணீர் –

ஆயாசித்து கடைந்து ஒரோ தடாக்களிலே சேர்த்து வைத்த நெய்யை உண்ணக் கண்டு
உண்ட நெய் பிள்ளைக்கு சாத்மியாது என்று
பிள்ளையை இழந்தாளாக நினைத்து பயப்பட்ட உழற்றியாலே –

ஈர்த்து -என்றது இழுத்து என்றபடி

எழில் மத்து -என்று
எயிறு விளங்கா நின்ற மத்து
மத்திலே சுற்றிக் கடந்த பழந்தாம்பால் -என்றபடி –

நல்ல தாம்பு தேடும் பொது இவனை விட வேணுமே
அத்தாலே கண்டதோர் கயிற்றை எடுக்கை இறே உள்ளது
தாம்பாலே ஓங்கின அளவிலே
அடித்தாளாக நினைத்து
பயத்தாலே தவளப் புகுந்தவாறே
கோபத்தை மறந்து –
தவழ்ந்தான் -தவழ்ந்தான் -என்று

தவழ்ந்து கன்றின் பின்னே போன முழந்தாளை
வெறும் புறத்திலே அவள் அனுபவித்த பிரகாரத்தை தாமும்
அனுபவித்து
அனுபவ யோக்யரை காணீர் காணீர் -என்று காட்டுகிறார்

முகிழ் முலையீர் -பக்த்யங்குரம்-
(முலை -பக்தி -கண் -ஞானம் -இடை வைராக்யம் )

——————————————————————————-

திரு முழந்தாளை விட்டுத் திருத் துடையை அனுபவிக்கிறார்-

பிறங்கிய பேய்ச்சி முலை சுவைத்து உண்டிட்டு
உறங்குவான் போலே கிடந்த விப்பிள்ளை
மறம் கொள் இரணியன் மார்வி முன் கீண்டான்
குறங்குகளை வந்து காணீரே குவிமுலையீர் வந்து காணீரே –1-2-5-

பத உரை –
முன் = முற்காலத்திலே
மறம் கொள் = த்வேஷம் கொண்ட
இரணியன் = ஹிரணியன் உடைய
மார்வை = மார்வை
கீண்டான் = பிளந்தவனாய்
பிறங்கிய =கொடுமையால் வந்த பிரகாசத்தை உடைய
பேய்ச்சி = பூதனையின்
முலை = முலையை
சுவைத்து = பசி அறும்படி ஆச்வாசித்து
உண்டிட்டு = புசித்து
உறங்குவான் போல் =ஒன்றும் அறியாதவன் படி உறங்குமவன் போல்
கிடந்த இப்பிள்ளை =கிடந்த இப்பிள்ளையின்
குறங்குகளை = திருத் தொடைகளை
வந்து காணீர் = வந்து காணுங்கோள்
குவி முலையீர் = குவியா நின்ற முலைகளை உடைய பெண் காள்
வந்து காணீர்
ஏ -அசை

பிறங்கிய பேய்ச்சி முலை சுவைத்து –
விபரீத பிரகாசகையான பேய்ச்சி யுடைய முலையைச் சுவைத்து

உண்டிட்டு-
ஆஸ்வாசித்து –
அமுது செய்திட்டு –

உறங்குவான் போலே கிடந்த விப்பிள்ளை-
கண் வளருவாரைப் போலே ஆடப் பார்த்துக் கிடந்த
பிரகாரத்தைக் கண்டு
இப்பிள்ளை -என்கிறாள் –

மறம் கொள் இரணியன் மார்வி முன் கீண்டான்-
பிள்ளையைச் சீறி வெகுண்ட மறத்தாலே இறே ஹிரண்யனைப் பிளந்தது

குறங்குகளை வந்து காணீரே குவிமுலையீர் வந்து காணீரே
இப்படி பிளந்தவன் உடைய திருத் துடைகளை
ரத்த ஸ்பர்சத்தோடே காணீர் என்றால் போலே இருக்கிறது
இப்போது இது சொல்லுகிறது விருத்தி நிரசன சாமர்த்தியத்தாலும்
தரமி ஐக்யத்தாலும் இறே
அன்றிக்கே
ஸ்வாபாவிகமாக தழுவுகிற போதை திருக் குறங்குகளை வந்து காணீர் -என்கிறார் -என்றுமாம் –
குவி முலையீர் -என்று பக்தி வர்த்தகர் ஆகிறவர்களை அழைக்கிறார் –

————————————————————————

திருத் துடையை அனுபவித்து
திருக் கடிப் பிரதேசத்தை அனுபவிக்கிறார் –

மத்தக் களிற்று வசுதேவர் தம்முடை
சித்தம் பிரியாத தேவகி தன் வயிற்றில்
அத்தத்தின் பத்தா நாள் தோன்றிய வச்சுதன்
முத்தம் இருந்தவா காணீரே முகிழ் நகையீர் வந்து காணீரே –1-2-6-

பதவுரை

மத்தம்–மதத்தையுடைய
களிறு–யானைகளை நிர்வஹிக்குமவரான
வசுதேவர் தம்முடை–ஸ்ரீவஸுதேவருடைய
சித்தம் பிரியாத–மனத்தை விட்டுப் பிரியாத
தேவகி தன்–தேவகியினுடைய
வயிற்றில்–வயிற்றிலே
அத்தத்தின் பத்தாம் நாள்–ஹஸ்த நக்ஷத்ரத்துக்குப் பத்தாவதான திரு நாளிலே
தோன்றிய–திருவவதரித்த
அச்சுதன்–கண்ண பிரானுடைய
முத்தம் இருந்த ஆ–சண்ணமிருந்த படியை
காணீர்!!
முகிழ் நகையீர்–புன் சிரிப்பை யுடைய பெண்காள்!
வந்து காணீர்!!

மத்தக் களிற்று வசுதேவர் தம்முடை சித்தம் பிரியாத தேவகி தன் வயிற்றில் –
மதித்த ஆனைகளின் உடைய ஸ்ரீ வஸூதேவர்
தம்முடைய ஹிருதயத்துக்கு தகுதியாக பரிமாறுகிற தேவகியுடைய திரு வயிற்றிலே –

அத்தத்தின் பத்தா நாள் தோன்றிய வச்சுதன்-
திருவவதரித்த நஷத்ரத்தை
மங்களா சாசன பரராகையாலே
மறைத்து அருளிச் செய்கிறார்

தோன்றிய என்கையாலே
தேவகீ பூர்வ சந்த்யாயாம் -ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-3-2-என்கிறபடியே
சேதனனைப் போலே கர்ம நிபந்தம் இன்றிக்கே
அனுக்ரஹத்தாலே ஆவிர்பவித்தான் -என்கிறது –

அச்சுதன் என்கிறது
ஆஸ்ரிதரை எல்லா தசையிலும் நழுவ விடாதவன் -என்றபடி –

முத்தம் இருந்தவா காணீரே முகிழ் நகையீர் வந்து காணீரே –
முத்தம் -சண்ணம்
முகிழ் நகை -மந்த ஸ்மிதம் –

————————————————————————–

திருக் கடிப் பிரதேசத்திலே நின்றும் போந்து
திரு மருங்கின் அழகை-அனுபவிக்கிறார் –

இருங்கை மத களிறு ஈர்க்கின்றவனைப்
பருங்கிப் பறித்துக் கொண்டு ஓடும் பரமன் தன்
நெருங்கு பவளமும் நேர் நாணும் முத்தும்
மருங்கும் இருந்தவாறு காணீரே வாள் நுதலீர் வந்து காணீரே –1-2-7-

பதவுரை

இரு கை மத களிறு–பெரிய துதிக்கையை யுடைய மத்த கஜமான குவலயாபீடத்தை
ஈர்க்கின்றவனை–தன் வசமாக நடத்தா நின்றுள்ள பாகனை (அம்பத்தன் -பாகனின் பெயர் )
பருங்கி–கொன்று
பறித்துக் கொண்டு–(யானையின் கொம்புகளை) முறித்துக் கொண்டு
ஓடு–(கம்ஸனிருக்குமிடத்தைத் தேடிக்கொண்டு) ஓடின
பரமன் தன்–பரம புருஷனான கண்ணனுடைய
நெருங்கு–செறியக் கோத்த
பவளமும்–பவள வடமும்
நேர் நாணும்–அழகிய அரை நாணும்
முத்தும்–முத்துவடமும் (இவற்றோடே சேர்ந்த)
மருங்கும் இருந்த ஆ–திருவரையும் இருந்தபடியை
காணீர்!
வாள் நுதலீர்–ஒளி பொருந்திய நெற்றியை யுடைய பெண்காள்!
வந்து காணீர்!!

இருங்கை மத களிறு ஈர்க்கின்றவனைப் பருங்கிப் பறித்துக் கொண்டாடும் பரமன் தன் –
பெரிதான கையையும்
மதத்தையும் யுடைத்தாய் இருக்கிற –
குவலயா பீடத்திலே கொலை கருதி வந்த பாகனைக் கொன்று
ஆனையையும் நிரஸித்து
கொம்பைப் பறித்துக் கொண்டு
கம்சன் இருந்த உயர்ந்த இடத்தில் ஓடிச் சென்று குதித்த பரமன் -என்னுதல் –

ஊரில் இடைப்பிள்ளைகள்-மதம் பட்டது -என்று இழுத்துக் கொண்டு விளையாடுகிற களிறுகளை
அவர்களை விழத் தள்ளிப் பறித்துக் கொண்டு ஓடுகிற பரமன் என்னுதல் –

இங்கு -பரமன் -என்றது
ஓட்டத்தில் மிக்கவன் என்ற படி –
பரமன் தன்னுடைய –

நெருங்கு பவளமும் நேர் நாணும் முத்தும் மருங்கும் இருந்தவாறு காணீரே வாள் நுதலீர் வந்து காணீரே –
செறியக் கோத்த பவளமும்
நேரிதான பொன் நாணும்
முத்து வடங்களையும்
யுடைத்தான திருவரைக்கு மேலான
திரு மருங்குலை -அனுபவிக்கிறார் –

வாள் நுதல் -பிரகாசத்தை யுடைய தாந்தி –

————————————————————-

திரு மருங்குலின் நின்றும் திரு வுந்தியிலே போருகிறார்-

வந்த முதலைக் குழாத்தை வலி செய்து
தந்தக் களிறு போல் தானே விளையாடும்
நந்தன் மதலைக்கு நன்றும் அழகிய
உந்தி இருந்தவா காணீரே ஒளி இழையீர் வந்து காணீரே –1-2-8-

பதவுரை

வந்த–(தன்னோடு விளையாட) வந்த
மதலை குழாத்தை–சிறு பிள்ளைகளின் கூட்டத்தில்
வலி செய்து–தன் வல்லமையைக் காட்டிக் கொண்டு
தந்தம் களிறு போல்–கொம்பு முளைத்த யானைக் குட்டி போல்
தானே–தானே முக்கியனாய் நின்று
விளையாடும்–விளையாடுமவனாய்
நந்தன்–நந்தகோபர்க்கு
மதலைக்கு–(விதேயனான) பிள்ளையாகிய கண்ணனுடைய
நன்றும் அழகிய–மிகவுமழகிதான
உந்தி இருந்த ஆ–நாபி இருக்கிறபடியை
காணீர்!
ஒளி–ஒளியால் விஞ்சின
இழையீர்–ஆபரணங்களணிந்த பெண்காள்!
வந்து காணீர்!!

வந்த முதலைக் குழாத்தை வலி செய்து தந்தக் களிறு போல் தானே விளையாடும் –
தன்னோடு விளையாட வந்த
தன்னேராயிரம் -3-1-1- பிள்ளைகளான முதலைக் குழாத்தை
தானும் மதலையாய் இருக்கச் செய்தே
வலி செய்து-
கொம்பு முகிழ்த்த இள வானைக் கன்று போலே
தானே ப்ரதாநநாய் ஓடி விளையாடா நிர்பானாய் –

நந்தன் மதலைக்கு
ஸ்ரீ நந்தகோபரைக் கண்டால் விநயம் தோன்ற நிற்கையாலே
நந்தன் மதலை -என்கிறது –
(யசோதை இளம் சிங்கம் நந்தகோபன் குமரன் )

நன்றும் அழகிய உந்தி இருந்தவா காணீரே ஒளி இழையீர் வந்து காணீரே –
இம் மதலைக்கு மிகவும் அழகியதாய் இருக்கிற
திரு வுந்தி இருக்கிற பிரகாரத்தைக் காட்டுகிறார் –

ஒளி இழை-என்றது ஆத்ம பூஷணம்
(சூடகமே –பராவரர் சூடும் ஆத்ம பூஷணம் -தாஸ்யம் -பாரதந்தர்யம் -சம தமங்கள் )

————————————————————–

திரு வுதரத்திலே பெருகுகிறார்

அதிரும் கடல் நிற வண்ணனை யாச்சி
மதுர முலையூட்டி வஞ்சித்து வைத்துப்
பதரப் படாமே பழந்தாம்பால் ஆர்த்த
உதரம் இருந்தவா காணீரே ஒளி வளையீர் வந்து காணீரே -1-2-9-

பதவுரை

அதிரும்–கோஷிக்கின்ற
கடல்நிறம்–கடலினது நிறம்போன்ற
வண்ணனை–நிறத்தை யுடைய கண்ணனுக்கு
(அடங்காப் பிள்ளைக்கு த்ருஷ்டாந்தம் )
ஆய்ச்சி–யசோதை யானவள்
மதுரம் முலை ஊட்டி–இனிய முலைப் பாலை ஊட்டி,
வஞ்சித்து வைத்து–(மேல், தான் இவனைக் கட்டப் போகிறதை இவனறிய வொண்ணாதபடி) ஏமாத்தி
பதறப் படாமே–தன் எண்ணம் தப்பாதபடி
பழ தாம்பால்–பழகின கயிற்றாலே
ஆர்த்த–கட்டி வைத்த
உதரம் இருந்த ஆ–வயிறு இருந்தபடியை
காணீர்!
ஒளி வளையீர்–ஒளி மிக்க வளையை யுடைய பெண்காள்!
வந்து காணீர்!!

(உரவிடை ஆப்புண்டு
இடைக் குறையாக உதர இடை -என்றும் –
நெஞ்சுடன் -அவளுடன் சேர்த்துக் காட்டினாள்
வரத வலி த்ரயம் சலேன
தாமோதரனை அறிய ஆமோ தரம்
பிரேமத்தால்-தழும்பு மாறாமல் )

அதிரும் கடல் நிற வண்ணனை யாச்சி –
கடல் நிற வண்ணன் -என்ன அமைந்து இருக்கச் செய்தே
அதிரும் கடல் -என்று விசேஷிக்கையாலே
இவனுடைய அடங்காமையும் தோற்றுகிறது-
இப்பிள்ளையை ஆச்சியானவள் –
(அடங்காமையும்-உம்மைத் தொகையால் -நீல நிற வண்ணமும் சேர்த்து இதுவும் )

மதுர முலையூட்டி வஞ்சித்து வைத்துப் பதரப் படாமே பழந்தாம்பால் ஆர்த்த
கட்ட நினைத்தவள் ஆகையாலே
இவன் அறிந்து ஓடாதபடியாக நினைத்து
முலை கொடுத்தாள் ஆதல் –

அன்றிக்கே –
கட்ட நினைத்தவள் ஆகையாலே
தான் கட்டவிழ்க்கும் அளவும் பிள்ளைக்கு தாரகமாக
அவன் அறியாமல் முலை கொடுத்தாள் ஆதல்
வஞ்சித்து வைத்து
பழந்தாம்பாலே கட்டின திரு வுதரத்தைக் காட்டுகிறாள் –

பிள்ளைக்கு ரசிக்க வேணும் என்று
தான் ரசவத் பதார்த்தங்களை புஜிக்கையாலே
இவள் முலைப் பாலும் மதுரம் -என்கிறது

பதரப் படாமே -தப்பாமே

உதரம் இருந்தவா காணீரே ஒளி வளையீர் வந்து காணீரே –

ஒளி வளை–என்று
பிரகாசகமான அனன்யார்ஹ சிஹ்னம் –

—————————————————————–

திரு வுதரத்தில் நின்றும் திரு மார்பிலே பெருகுகிறார் –

பெருமா வுரலில் பிணிப்புண்டு இருந்து அங்கு
இருமா மருதம் இறுத்த இப்பிள்ளை
குரு மா மணிப் பூண் குலாவித் திகழும்
திரு மார்வு இருந்தவா காணீரே சேயிழையீர் வந்து காணீரே –1-2-10-

பதவுரை

பெரு மா உரலில்–மிகப்பெரிய உரலோடு
பிணிப்புண்டு–கட்டுண்டிருந்து இருந்து
அங்கு–அந்த நிலைமையிலே
இரு மா மருதம்–இரண்டு பெரிய மருத மரங்களை
இறுத்த–முறித்தருளின
இ பிள்ளை–இக் கண்ண பிரானுடைய,
குரு மா–மிகவும் சிறந்த
மணி பூண்–கௌஸ்துபாபரணமானது
குலாவி திகழும்–அசைந்து விளங்கா நின்றுள்ள
திருமார்வு இருந்த ஆ காணீர்!
சே இழையீர்–செவ்விய ஆபரணங்களை யுடைய பெண்காள்
வந்து காணீர்!

மிகவும் பெரிய உரலோடே
கட்டுண்டு இரா நிற்கச் செய்தே
இரண்டு பெரிய மருதுகளையும் தவழ்ந்து முறித்தது

முறித்த ஓசையிலே
புரிந்து பார்த்து சிரித்த படி கண்டு -இப்பிள்ளை என்றது
இப்பிள்ளை யுடைய ஸ்ரீ கௌஸ்துபம் போலே விளங்கா நின்ற நீல ரத்னம் -என்னுதல்

ஏதேனும் ஒரு ரத்னம் ஆகிலும்
திரு மேனியின் பிரபையாலே நீலம் ஆய்த்து என்னுதல் –
ஏவம் பிரகாரமான திரு மார்பைக் காணீர் -என்கிறார்

சேயிழை -என்று
பக்தி பிரகாசகமான ஆத்ம பூஷணம்-

————————————————————————–

திரு மார்பில் நின்றும் திருத் தோளிலே பெருகுகிறார் –

நாள்களோர் நாலைந்து திங்கள் அளவிலே
தாளை நிமிர்த்துச் சகடத்தைச் சாடிப்போய்
வாள் கொள் வளை எயிற்று ஆருயிர் வவ்வினான்
தோள்கள் இருந்தவா காணீரே சுரி குழலீர் வந்து காணீரே –1-2-11-

பதவுரை

நாள்கள்–(கண்ணன் பிறந்த பின்பு சென்ற) நாட்கள்
ஓர்நாலு ஐந்து திங்கள் அளவிலே–ஒரு நாலைந்து மாதத்தளவிலே
தாளை நிமிர்ந்து–காலைத் தூக்கி
சகடத்தை–சகடாஸுரனை
சாடிப்போய்–உதைத்துவிட்டு,
வாள் கொள்–ஒளிகொண்டதாய்
வளை–வளைந்திராநின்றுள்ள
எயிறு–கோரப்பற்களையுடைய பூதனையினது
ஆர் உயிர்–அரிய உயிரை
வவ்வினான்–முடித்த கண்ணனுடைய
தோள்கள் இருந்த ஆ காணீர்!
சுரி குழலீர்–சுருண்ட கேசத்தையுடைய பெண்காள்!
வந்து காணீர்!!

நாள்களோர் நாலைந்து திங்கள் அளவிலே
திருவவதரித்த நாள் தொடங்கி சென்ற மாசத்தை
நாலு என்பது
ஐந்து என்பது
ஒன்பது என்பது
இருபது என்பதாக காலத்தை மயக்குகிறது –
காலக்ருத பரிணாம சக்தி இல்லாமை இறே
அன்றிக்கே
இது தன்னை திருஷ்டி தோஷ பரிஹார்த்தமாகவும் மயக்கி அருளிச் செய்கிறார் ஆகவுமாம்-

தாளை நிமிர்த்துச் சகடத்தைச் சாடிப் போய்
கண் வளருகிற இடத்திலே சகடாசூரன் வந்து கிட்டுகிற அளவில்
முலை வரவு தாழ்த்துச் சீறித் திருவடிகளை நிமிர்க்க
ப்ரதிகூலித்து கிட்டினவன் ஆகையாலே
அவன் முடிந்தமை தோன்றச் சாடினான் -என்கிறார் –

சாடிப்போய் -என்றது –
சாடி விட்டு -என்றபடி –

வாள் கொள் வளை யேயிற்று ஆருயிர் வவ்வினான்
இதுக்கு முன் செய்ததை பின்னை அருளிச் செய்தது
முன்புள்ள யுகங்களும் பிரகாசித்த படியாலே யாதல் –
அன்றியிலே
அந்வயத்தை நினைத்தாதல் –
ஒளியையும் வளைவையும் யுடைத்தான எயிற்றை யுடைய பேச்சி யுடைய –

ஆருயிர் வவ்வினான் –
முடித்தற்கு உரிய உயிரை வவ்வினான் –

தோள்கள் இருந்தவா காணீரே சுரி குழலீர் வந்து காணீரே-
தோள்கள் இருந்த பிரகாரத்தை வந்து காணீர் -என்கிறார்
வவ்வுதல் -வாங்குதலாய்-அப்போது நெளித்த தோள்கள் இறே

சுரி குழல் –
தாந்த ரூப பிரபத்தி –
(சமம் தமம் -புலன் அடக்கம் -மன அடக்கம் )

———————————————————————–

திருத் தோள்களில் நின்றும்
திருக் கைத் தலத்தில் போகிறார் –

மைத்தடம் கண்ணி யசோதை வளர்க்கின்ற
செய்த்தலை நீல நிறத்துச் சிறுப்பிள்ளை
நெய்த்தலை நேமியும் சங்கும் நிலாவிய
கைத்தலங்கள் வந்து காணீரே கனம் குழையீர் வந்து காணீரே –1-2-12-

பதவுரை

மை–மை யணிந்த
தட–பெரிய
கண்ணி–கண்களை யுடைய
அசோதை–யசோதைப் பிராட்டியாலே
வளர்க்கின்ற–வளர்க்கப் படுகின்றவனாய்
தலைசெய்–உயர்ந்த க்ஷேத்ரத்திலே (அலர்ந்த)
நீலம் நிறம்–கரு நெய்தல் பூவினது போன்ற நிறத்தை யுடையவான
சிறுபிள்ளை-(இந்த) பால க்ருஷ்ணனுடைய
நெய்–கூர்மை பொருந்திய
தலை–நுதியை யுடைய
நேமியும்–திரு வாழியும்
சங்கும்–திருச் சங்கும்
நிலாவிய–அமைந்திரா நின்றுள்ள
கைத்தலங்கள்–உள்ளங்கைகளை
வந்து காணீர்!
கனம்–பொன்னால் செய்த
குழையீர்–காதணிகளை யுடைய பெண்காள்!
வந்து காணீர்!!

மைத்தடம் கண்ணி யசோதை வளர்க்கின்ற –
ஒப்பனைக்கு உப லஷணம்-
வளர்ப்பார் பலர் உண்டாய் இருக்கச் செய்தேயும்
தானே இறே வளர்ப்பாள்

செய்த்தலை நீல நிறத்துச் சிறுப்பிள்ளை –
பூ சாரம் உள்ள ஷேத்ரத்திலே அப்போது அலர்ந்த
நீலம் போலே இருக்கிற நிறத்தை யுடைய –

சிறுப் பிள்ளை –
இவனுடைய அதி மானுஷங்களைக் கண்டாலும்
சிறுப் பிள்ளை யாக விறே இவள் நினைத்து இருப்பது –

நெய்த்தலை நேமியும் சங்கும் நிலாவிய
1-கூரிய தலையை யுடைத்தான நேமி -என்னுதல்
2-அவன் நினைவை அறிகையாலே
கருதும் இடம் பொருது திருக் கையிலே நிற்கிற கூர்மை யாதல்
3-ஆயுத சாமான்யத்தாலே நெய் என்னவுமாம் –
4-திருக் கைகளோட்டை ஸ்பர்சம் ஆகவுமாம் –
கையெல்லாம் நெய் -பெரிய திருமொழி -10-7-3-என்னக் கடவது இறே

சங்கும் நிலாவிய-
ஆழ்வானைப் போலே போக்கு வரத்துச் செய்யாதே
இருந்த இடத்திலே இருந்து
கருதும் இடம் போர வல்ல
ஓசையை யுடைய ஸ்ரீ பாஞ்ச ஜன்யம் இறே

இவை தன்னை இவன் தான் ஒவ்வொரு போது காட்டக் காணும் இறே
அப் பூச்சி காட்டுகிறான் -என்று இவற்றை இறே எம்பார் அருளிச் செய்தது –

நிலாவுதல் -வர்த்தித்தல்

கைத்தலங்கள் வந்து காணீரே கனம் குழையீர் வந்து காணீரே –
இப்படி இருக்கிற திருக் கைத் தலத்தை அனுபவிக்க வாருங்கோள் என்கிறார்-

கனம் குழை -என்றது –
காதுப் பணியாய்-ஸ்ரோத்தாக்களைச் சொல்லுகிறது –

———————————————————————

திருக் கைத் தலத்தில் நின்றும்
திருக் கழுத்திலே பெருகுகிறார் –

வண்டமர் பூம் குழல் ஆய்ச்சி மகனாக
கொண்டு வளர்க்கின்ற கோவலர் குட்டற்கு
அண்டமும் நாடும் அடங்க விழுங்கிய
கண்டம் இருந்தவா காணீரே காரிகையீர் வந்து காணீரே –1-2-13-

பதவுரை

வண்டு அமர்–வண்டுகள் படிந்திருக்கிற
பூ குழல்–பூ அணிந்த குழலை யுடையளான
ஆய்ச்சி–யசோதைப் பிராட்டியானவள்
மகனாக கொண்டு–(தன்) புத்ரனாக ஸ்வீகரித்து
வளர்க்கின்ற–வளர்க்கப் பெற்றவனாய்
கோ வலர்–ஸ்ரீநந்தகோபருடைய
குட்டற்கு–பிள்ளையான கண்ண பிரானுடைய,
அண்டமும்–அண்டங்களையும்
நாடும்–(அவற்றினுள்ளே கிடக்கிற) சேதநாசேதநங்களையும்
அடங்க–முழுதும்
விழுங்கிய–(ப்ரளயகாலத்தில்) கபளீகரித்த
கண்டம் இருந்த ஆ–கழுத்திருந்த படியை

வண்டமர் பூம் குழல் ஆய்ச்சி மகனாக கொண்டு வளர்க்கின்ற கோவலர் குட்டற்கு –
பிள்ளை சீறாமல் நாட
பூவைப் பல காலும் முடிக்கையாலே
வண்டுகளுக்கு வஸ்தவ்ய பூமி இவள் குழல் இறே –
தன் மகனாக ஸ்நேஹித்துக் கொண்டு வளர்க்கிற ஸ்ரீ நந்தகோபர் மகனுக்கு –
இவர் அடி அறிந்தவர் ஆகையால் -மகனாக -என்றது -இவள் அபிமானம் -என்கிறார் –

அண்டமும் நாடும் அடங்க விழுங்கிய கண்டம் இருந்தவா காணீரே காரிகையீர் வந்து காணீரே –
அண்டங்களும்
அண்டம் அந்தர் கதமான சேதன அசேதனங்களும்
திரு வயிற்றிலே ஒரு புடையிலே அடங்கும்படி
இடமுடைத்தான கண்டம் -என்கிறார்

காரிகையீர் -என்று –
பக்தி பாரவச்யம் யுடையாரை அழைக்கிறார்-

———————————————————————–

திருக் கண்டத்தில் நின்றும்
திருப் பவளத்தில் பெருகுகிறார் –

எந்தொண்டை வாய்ச் சிங்கம் வா என்று எடுத்துக் கொண்டு
அந்தொண்டை வாய் அமுது ஆதரித்து ஆய்ச்சியர்
தந்தொண்டை வாயால் தருக்கிப் பருகுமிச்
செந்தொண்டை வாய் வந்து காணீரே சேயிழையீர் வந்து காணீரே –1-2-14-

பதவுரை

ஆய்ச்சியர்–இடைப்பெண்கள்
தொண்டை–‘‘கொவ்வைக் கனி போன்ற
வாய்–அதரத்தை யுடைய (கோவை வாயாள் பொருட்டு போல் )
எம் சிங்கம்–எமது சிங்கக் குருவே!
வா என்று–(எம் பக்கல்) வா’’ என்று
எடுத்துக் கொண்டு–(இடுப்பில்) எடுத்துக் கொண்டு
அம் தொண்டை–அழகிய கொவ்வை போன்ற
வாய்–(கண்ணனுடைய) அதரத்தில்
அமுது–(ஊறுகிற) அம்ருதத்தை
ஆதரித்து–விரும்பி,
தம்–தங்களுடைய
தொண்டை வாயால்–கோவை வாயை
தருக்கி–(கண்ணன் வாயோடே நெருக்கி)
பருகும்–பானம் பண்ணப்பெற்ற
இ செம் தொண்டை வாய்–இந்தச் சிவந்த கோவை வாயை
வந்து காணீர்!
சேயிழையீர்! வந்து காணீர்!!

ஆ தொண்டை போலே இருக்கிற திருப் பவளத்தை யுடையனாய்
சிம்ஹக் கன்று போலே கர்வத்தையும் யுடையனாய் இருக்கிற பிள்ளையை

என் பிள்ளை என்று அணைத்து எடுத்துக் கொண்டு
இடைப் பெண்கள் எல்லாம்
அழகியதாய் இருக்கிற

தொண்டை வாயில் ஊருகிற அமிர்தத்தை ஆதரித்து
தங்கள் கோவை வாயாலே இவனுடைய திருப் பவளத்தை நெருக்கி பருக பருக

பின்னையும் செந் தொண்டை வாயாய் இருக்கிற ஆச்சர்யத்தை வந்து காணீர் -என்கிறார்

சேயிழை –
பக்தி பிரகாசகமான ஆத்ம பூஷணம்

——————————————————————-

திருப் பவளத்தில் நின்றும் போந்து
திருமுக மண்டலத்தில் சமுதாய சோபையை அனுபவிக்கிறார் –

நோக்கி யசோதை நுணுக்கிய மஞ்சளால்
நாக்கு வழித்து நீராட்டும் இந் நம்பிக்கு
வாக்கு நயனமும் வாயு முறுவலும்
மூக்கும் இருந்தவா காணீரே மொய்குழலீர் வந்து காணீரே –1-2-15-

பதவுரை

அசோதை–யசோதைப்பிராட்டி
நோக்கி–(கண்ணபிரான் திருமேனியின் மென்மைக்குத் தக்க படி) பார்த்து ஆராய்ந்து
நுணுக்கிய–அரைத்த
மஞ்சளால்–மஞ்சட்காப்பாலே,
நாக்குவழித்து – ;
நீராட்டும்–ஸ்நாநம் செய்விக்கப் பெறுகின்ற
இ நம்பிக்கு–இக் கண்ணபிரானுடைய
வாக்கும்–திரு வாக்கும்
நயனமும்–திருக் கண்களும்
வாயும்–அதர ஸ்புரணமும்
முறுவலும்–புன் சிரிப்பும்
மூக்கும் இருந்த ஆ–மூக்குமிருந்தபடியை
காணீர்!
மொய்குழலீர்–செறிந்த குழலை யுடைய பெண்காள்! வந்து
காணீர்!

பிள்ளையை திரு மஞ்சனம் செய்விப்பதாக உபக்ரமித்து
திரு மேனிக்குத் தகுதியாக
மஞ்சள் காப்பும் நேராக அரைத்து
மற்றும் வேண்டும் உபகரணங்களும் சேர்த்து வைத்து
திரு மேனிக்குத் தகுதியோ என்று இவற்றையும் பார்த்த
அசோதை இம் மஞ்சளாலே திரு நாவும் வழித்து
நீராட்டுகிற போது அவளுக்கு வச வர்த்தியான குணங்களை
யுடையவன் ஆகையால் பூர்ணனுக்கு -என்கிறது –

மாதா முதலானாரை நாம க்ரஹணம் பண்ணுகிற வாக்கும்
என்னைப் பாரீர் என்னைப் பாரீர் என்கிறவர்களை கடாஷிக்கிற திரு நயனங்களும்
மந்த ஸ்மிதம் பண்ண உபக்ரமிக்கிற திரு வதர ஸ்புரத்தையும்
அந்த ஸ்புரத்தை யோடு கூடின மந்த ஸ்மிதமும்
ஒரு விசேஷணம் இட்டுச் சொல்ல வேண்டாத திரு மூக்கின்
அழகு மிகுந்த பிரகாரத்தை அனுபவிக்க அழைக்கிறார்

மொய் குழலீர் –
கைங்கர்யத்துக்கு பூர்வ ஷண வர்த்தியாய் பிரார்த்தனா ரூபையான பிரபத்திகள் –

———————————————————————

சமுதாய சோபையில் அனுசந்தித்த திருக் கண்களின் அழகு
பின்னாட்டுகையாலே
மீண்டும் அது தன்னையே அனுபவிக்கிறார் –

விண் கொள் அமரர்கள் வேதனை தீர முன்
மண் கொள் வசுதேவர் தம் மகனாய் வந்து
திண் கொள் அசுரரைத் தேய வளர்கின்றான்
கண்கள் இருந்தவா காணீரே கன வளையீர் வந்து காணீரே -1-2-16–

பதவுரை

விண் கொள்–ஸ்வர்க்காதி லோகங்களை இருப்பிடமாகக் கொண்ட
அமரர்கள்–தேவதைகளுடைய
வேதனை தீர–துன்பங்கள் தீரும்படி
முன்–முன்னே
மண் கொள்–பூமியை இருப்பிடமாகக் கொண்ட
வசுதேவர் தம்–வஸுதேவர்க்கு
மகனாய் வந்து–பிள்ளையாய் வந்து பிறந்து
திண் கொள்–வலிமை கொண்ட
அசுரர்–அஸுரர்கள்
தேய–க்ஷயிக்கும்படி
வளர்கின்றான்–வளரா நின்ற கண்ணனுடைய
கண்கள் இருந்த ஆ காணீர்!
கனம் வளையீர்–கநக கங்கணத்தை யுடைய பெண்காள்
வந்து காணீர்!!

விண் கொள் அமரர்கள் வேதனை தீர முன் மண் கொள் வசுதேவர் தம் மகனாய் வந்து –
அவதாரங்களுக்கு ஹேது சாது பரித்ராணாதிகள் இறே –
விண்ணைத் தங்களுக்கு வஸ்தவ்ய பூமியாய் கொண்டு இருக்கிற அமரர்களுக்கு
வந்த கிலேசம் தீர்க்கும் போது
அவர்கள் அடியாக மண் கொள் வசுதேவருக்கு வந்த கிலேசமும்
தீர்க்க வேணும் என்று இறே
அவருக்கு புத்ரனாக முற்பாடு வந்து திரு வவதரித்தது
அவர்கள் தங்கள் கிலேசம் தீர்த்தாராய் இருப்பதும் இவர் கிலேசம் தீர்த்தால் இறே

திண் கொள் அசுரரைத் தேய வளர்கின்றான் கண்கள் இருந்தவா காணீரே கன வளையீர் வந்து காணீரே –
பின்பு திரு வாய்ப்பாடியிலே -கம்சாதிகள் தேய -வளர்ந்தது
தன் கிலேசம் தீருகைக்காக விறே

திண்மை யாவது கம்சன் முதலானோர் உடைய ஆசூர பாவத்தாலும்
ஜன்மத்தாலும் நெஞ்சில் வலி -அதாவது
மாதா வென்றும் பிதா வென்றும் ஸ்வ ஸஹா வென்றும் பந்துக்கள் என்றும்
பாராமல் கல்லிடை மோதியும்
அல்பம் கிருபை பிறவாத கம்சன் முதலான அசூரர்களை
வயிற்று எரி கொளுந்தி ஷயிக்கும் படியாக விறே

திருவாய்ப் பாடியிலே போய் வளர்ந்து அருளுகிறதும்
வளருகின்றவனுடைய கடாஷம் தான்
அனுகூல வர்க்கம் தழைக்கவும்
பிரதிகூல வர்க்கம் முடியவுமாய் இறே இருப்பது

கன வளை –
ஸ்ப்ருஹா வஹமுமாய் -மமதா விசிஷ்டமுமான அனன்யார்ஹ சிஹ்னம் –

———————————————————————-

திருக் கண்களில் நின்றும்
திருப் புருவத்தில் பெருகுகிறார் –

பருவம் நிரம்பாமே பாரெல்லாம் உய்ய
திருவின் வடிவொக்கும் தேவகி பெற்ற
உருவு கரிய வொளி மணி வண்ணன்
புருவம் இருந்தவா காணீரே பூண் முலையீர் வந்து காணீரே -1-2-17-

பதவுரை

பருவம்–வயது
நிரம்பாமே-முதிருவதற்கு முன்னமே
பார்எல்லாம்–பூமியிலுள்ளார் எல்லாரும்
உய்ய–உஜ்ஜீவிக்கும்படியாக
திருவின் வடிவு ஒக்கும்–பிராட்டியின் வடிவு போன்ற வடிவை யுடையளான
தேவகி–தேவகிப் பிராட்டியாலே
பெற்ற–பெறப் பட்டவனாய்
உருவு கரிய–உருவால் கறுத்ததாய்
ஒளி–உஜ்ஜவலமான
மணி–மணி போன்ற
வண்ணன்–வடிவை யுடையனான கண்ண பிரானுடைய
புருவம் இருந்த ஆ காணீர்
பூண் முலையீர்–ஆபரணம் பூண்ட முலையை யுடைய பெண்காள்!
வந்து காணீர்!!

பருவம் நிரம்பாமே பாரெல்லாம் உய்ய திருவின் வடிவொக்கும் தேவகி பெற்ற –
திருவின் வடிவு ஒக்கும் தேவகி
பருவம் நிரம்பி ரஷகனாய் இருக்கச் செய்தேயும்
பாரெல்லாம் உஜ்ஜீவிப்பதாக நோற்றுப் பெற்ற

உருவு கரிய வொளி மணி வண்ணன் புருவம் இருந்தவா காணீரே பூண் முலையீர் வந்து காணீரே –
மிக்க பிரகாசத்தை யுடைய நீல ரத்னம் போலே
இருக்கிற திரு மேனியை யுடைய
கிருஷ்ணனுடைய திருப் புருவங்களின் அழகைக் காணீர் -என்கிறார்

கீழ் -அமுதன்ன தேவகி -என்றத்தை
திருவின் வடிவொக்கும் தேவகி -என்று சாப்தமாக அருளிச் செய்கிறார் –
திருவின் வடிவு ஒக்குகையாவது -வை தர்ம்யத்தில் ஏக தேச திருஷ்டாந்தம் –

(ஹேது கர்ப்ப விசேஷணம்
தேவகிக்கு விசேஷணம் -உள் அமுது -திரு
அடைமொழி -என்றும் எடுத்துக்காட்டு
காரணத்தை உள்ளடக்கிக் கொண்டு இருக்கிற அடைமொழி
லோகம் உய்யப் பெற்றது -காரணம் -உலகம் உஜ்ஜீவனம் ஹேது இரண்டு இடத்திலும் பொருந்தும்
ஏக தேச த்ருஷ்டாந்தம் -முகம் சந்திரனைப்போல் )

பூண் முலை -என்றது
பக்தி பிரகாசகமான ஆத்ம பூஷணம் –
அதாவது பராவர குருக்கள் பிரகாசிப்பித்தது இறே-

(துளசி -திருமுடிக்கு ஆபரணம்
நெற்றிக்சுற்று -வணங்கு
குண்டலம் -ஸ்ரவணம்
கங்கணம் -அஞ்சலி
ஆச்சார்யர் முதலில் -ரஹஸ்ய த்ரயம் அருளுவது பர குரு
மேல் மேல் அடுத்த ஆபரணங்கள் தாத்பர்யம் -அபர குரு -அவரே )

—————————————————————–

திருப் புருவத்தின் நின்றும்
திரு மகரக் குழையிலே போகிறார் –

மண்ணும் மலையும் கடலும் உலகு எழும்
உண்ணும் திறத்து மகிழ்ந்து உண்ணும் பிள்ளைக்கு
வண்ணம் எழில் கொள் மகரக் குழை இவை
திண்ணம் இருந்தவா காணீரே சேயிழையீர் வந்து காணீரே–1-2-18-

பதவுரை

மண்ணும்–பூமியையும்
மலையும்–மலைகளையும்
கடலும்–கடல்களையும்
உலகு எழும்–ஸப்தலோகங்களையும்
உண்ணுந்திறந்து–திருவயிற்றிலே வைக்கிறவளவில்
மகிழ்ந்து–உகந்து
உண்ணும்–திருவயிற்றிலே வைத்த
பிள்ளைக்கு–(இக்) கண்ணபிரானுடையதான
எழில் வண்ணம் கொள்–அழகிய நிறங்கொண்ட
மகரம் குழை இவை–இம்மகர குண்டலங்களின்
திண்ணம் இருந்த–திண்மை இருந்தபடியை
காணீர்! சேயிழையீர்! வந்து காணீர்!!

மண்ணும் மலையும் கடலும் உலகு எழும் –
சர்வ ஆதாரமான பூமியும்
பூதரங்களும்
பூமிக்கு ரஷகமாக சூழ்ந்த சமுத்ரங்களும்
மேலும் கீழுமான பதினான்கு லோகங்களும் –

உண்ணும் திறத்து மகிழ்ந்து உண்ணும் பிள்ளைக்கு –
மகிழ்சியாவது -சம்சாரிகள் உடைய பாப கரணங்கள் ஒடுங்கப் பெற்றோம் -என்கை-

வண்ணம் எழில் கொள் மகரக் குழை இவை -திண்ணம் இருந்தவா காணீரே-
அழகிய நிறத்தை யுடைத்தாய்
கண்டவர்களுடைய சித்தத்தை அபஹரித்தால்
வாங்க ஒண்ணாத திண்மை இறே –

சேயிழையீர் வந்து காணீரே –
பூர்வவத் —

——————————————————————-

திரு மகரக் குழையில் நின்றும்
திரு நெற்றியில் பெருகுகிறார்

முற்றிலும் தூதையும் முன் கைம்மேல் பூவையும்
சிற்றில் இளைத்துத் திரி தருவோர்களைப்
பற்றிப் பறித்துக் கொண்டாடும் பரமன் தன்
நெற்றி இருந்தவா காணீரே நேரிழையீர் வந்து காணீரே–1-2-19-

பதவுரை

சிற்றில்–சிறு வீடுகளை (மணலினால்)
இழைத்து–செய்து கொண்டு
திரிதருவோர்களை–விளையாடித் திரியும் சிறு பெண்களை
பற்றி–(வலியக்) கையைப் பிடித்துக்
கொண்டு (அவர்களுடைய)
முற்றிலும்–(மணல் கொழிக்கிற)சிறு சுளகுகளையும்
தூதையும்–(மணற்சோறாக்குகிற)சிறு பானைகளையும்
முன் கை மேல்–முன் கை மேல் (வைத்து கொண்டு பேசுகிற)
பூவையும்–நாகண வாய்ப் புள்ளையும்
பறித்துக்கொண்டு–அபஹரித்துக் கொண்டு
ஓடும்–ஓடுகின்ற
பரமன் தன்–(தீம்பில்) சிறந்தவனான
கண்ண பிரானுடைய
நெற்றி இருந்த ஆ காணீர்!
நேர்–நேர்த்தியை யுடைய
இழையீர்–ஆபரணங்களணிந்த பெண்காள்!
வந்து காணீர்!

ஊரில் பெண்களாய்
கொட்டகம் எடுத்து விளையாடித் திரிகிறவர்கள் உடைய சிறு சுளகும்
மணல் கொழித்து சோறு இடுகிற சிறு பாத்ரங்களையும்
அவர்கள் பேச்சுக் கொண்டு விளையாடுகிற கிளி பூவைகளுமான லீலா உபகரணங்களை
இவர்கள் கையைப் பிடித்து பறித்து கொண்டு
பிடி கொடாமல் ஓடுகிற பரமன் தன்னுடைய
நெற்றி இருந்த பிரகாரத்தை காணி கோள்-என்கிறார்

நேரிழை-என்கையாலே –
சம்ஸ்லேஷத்திலும் கழற்ற வேண்டாத ஆபரணங்கள்
அதாவது
அத்யந்த ஸூஷ்ம ரூப ஜ்ஞானமான ஆத்ம பூஷணம் –

—————————————————————–

திரு நெற்றியில் நின்றும்
திருக் குழலிலே பெருகுகிறார் –

அழகிய பைம்பொன்னின் கோலம் கைக் கொண்டு
கழல்கள் சதங்கை கலந்து எங்கும் ஆர்ப்ப
மழ கன்றினங்கள் மறித்துத் திரிவான்
குழல்கள் இருந்தவா காணீரே குவி முலையீர் வந்து காணீரே —1-2-20-

பதவுரை

அழகிய–அழகியதும்
பைம் பொன்னின்–பசும் பொன்னால் செய்யப்பட்டதுமான
கோல்–மாடு மேய்க்குங் கோலை
அம் கை–அழகிய கையிலே
கொண்டு–பிடித்துக் கொண்டு
கழல்கள்–(கால்களிலுள்ள) வீரக் கழல்களும்
சதங்கை–சதங்கைகளும்
கலந்து–தன்னிலே சேர்ந்து
எங்கும் ஆர்ப்ப–போமிடமெல்லா மொலிக்க
மழ–இளமை பொருந்திய
கன்று இனங்கள்–கன்றுகளின் திரள்களை
மறித்து–(கை கழியப் போகாமல் மடக்கி)
திரிவான்–திரியுமவனான கண்ண பிரானுடைய
குழல்கள்–திருக் குழல்களானவை
இருந்த ஆ காணீர்!
குவி முலையீர்! வந்து காணீர்!!

ஷோடா ச வர்ணியான பொன்னாலே சமைக்கப் பட்ட அழகிய கோலை
(16 கலை பூர்ண சந்திரன் போல் –24-carat -பூர்ண ஸ்வர்ணம் -)
அழகிய திருக் கையிலே பிடித்து

திருவடிகளிலே சாத்தின வீரக் கழல் -சிலம்பு -சதங்கை –
இவை முதலான வற்றின் த்வனி எங்கும் பிரகாசிக்க

துள்ளிப் போன இளம் கன்றுகளும் த்வனி வழியே வரும்படியாக
மறித்து சஞ்சரிக்கிற போது

திருவடிகளை அதிர விட்டு ஒடுகையாலே
அசைந்து கவர்கிற திருக் குழல்களை காணீர் என்கிறார்
பிரசச்த கேசன் இறே

குவி முலை
பூர்வதத்

காணீர் காணீர் -இருபது பிரகாரமும்
முடிச் சோதி -திருவாய் -3-1- பிரகாரம் போலே இருக்கச் செய்தேயும்
பாதாதி கேசமாக அனுசந்தித்து
ப்ராப்ய அனுரூபம் ஸ்வரூபமாகவும்
ஸ்வரூப அனுரூபம் பிராப்யமாகவும்
அனுசந்தித்து இறே
இவை யுடையவர்களை அழைத்து
இரு கால் காணீர் காணீர் -என்றது

அவனுடைய உபேய பாவமும்
உபாய பாவமும்
அறியுமவர்களை என்னவுமாம் –

இப்படிக் காட்டக் கண்டால் இறே
மங்களா சாசன பரிபாகம் ஆவது -பரிகாரமாவது-

——————————————————————

நிகமத்தில் இத்திருமொழி கற்றாருக்கு பலம் சொல்லித் தலைக் கட்டுகிறார்

கருப்பார் குழலி யசோதை முன் சொன்ன
திருப்பாத கேசத்தை தென் புதுவைப் பட்டன்
விருப்பால் உரைத்த விருபதொடு ஒன்றும்
உரைப்பார் போய் வைகுந்தத்து ஒன்றுவார் தாமே–1-2-21-

பதவுரை

சுருப்பு ஆர்–வண்டுகள் படிந்து நிறைந்த-(சுரும்பு ஆர் -சுருப்பு ஆர்)
குழலி–கூந்தலை யுடையளான
அசோதை–யசோதைப் பிராட்டியால்
முன்–க்ருஷ்ணாவதார ஸமயத்திலே
சொன்ன–சொல்லப்பட்ட
திருப்பாத கேசத்தை–பாதாதிகேசாந்த வர்ணநப் பாசுரங்களை
தென் புதுவை பட்டன்–அழகிய ஸ்ரீவில்லிபுத்தூருக்கு (நிர்வாஹகரான) அழ்வார்
விருப்பால்–மிக்க ஆதரத்தோடு ( யசோதா பிராட்டி விட மிக்க )
உரைத்த–அருளிச்செய்த
இருபதோடுஒன்றும்–இவ்விருபத்தொரு பாட்டுக்களையும்
உரைப்பார் தாம்–ஓதுமவர்கள்
போய்–(இம் மண்டலத்தைக் கடந்து) போய்
வைகுந்தத்து–ஸ்ரீவைகுண்டத்திலே
ஒன்றுவர்–பொருந்தப் பெறுவார்கள்

பிள்ளை சீறாமல் நாட
பூ முடிக்கையாலே வண்டுகள் மாறாமல் செல்லும் இறே

இப்படிப் பட்ட யசோதை
பிள்ளையைக் கொண்டாடி
பலர்க்கும் காட்டி

அவன் தான் ஸ்ரீ மதுரையில் அவதரித்து
திருவாய்ப்பாடியிலே போந்தால் போலே இறே
இவர் தாமும் திருப் புத்தூரிலே திருவவதரித்து
திரு மாளிகையிலே போந்த படி

பட்டன் -ப்ராஹ்மண உத்தமன்
யசோதை விரும்பினால் போலே அன்று இறே
இவர் விரும்பி உரைத்தபடி

பூர்வ பூர்வ உச்சாரண க்ரமத்தாலே உரைப்பார்
சாபிப்ப்ராயமாக யுரைப்பார்
இவருடைய அபிமானத்தாலே சூழ்ந்து இருந்து ஏத்துவர் பல்லாண்டே
என்கிற தேசத்திலே போய்
அவர்களோடு மங்களா சாசனம் பண்ணப் பெறுவார்-

(அவனை அனுபவித்து
மங்களா சாசனம் பண்ணி
இருக்கும் படி உபகரித்து அருளினார் இவர் என்றபடி
வை குண்டம் -குறைவு அற்ற -ஞானம் பக்தி ப்ரேமம் பூர்ணம் -ஒன்றி இருக்கப் பெறுவோம் – )

————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருவாய்மொழிப் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி -ஸ்ரீ திருவாய் மொழிப்பிள்ளை அருளிச் செய்த ஸ்வாபதேச வியாக்யானம் —அவதாரிகை -/1-1–வண்ண மாடங்கள் சூழ் திருக் கோட்டியூர்—

November 28, 2014

(ஸ்வாபதேசம்
அந்யாபதேசம்
உள்ளுறைப் பொருள்
ஸ்ரீ கிருஷ்ண தத்வம் -பிறந்தவாறும் வளர்ந்தவாறும் –
அபதேசம் இவை
பர உபதேசம் -ஸூவ உபதேசம் நெஞ்சுக்கு சொல்வது போல் )

அவதாரிகை —

ஸ்ரீ யபதியாய் -அவாப்த சமஸ்த காமனாய் –சமஸ்த கல்யாண குணாத்மகனாய் -சர்வ ரஷகனாய் -சர்வ நியந்தாவாய் –
இருக்கிற சர்வேஸ்வரனை
ரஷ்யமாக நினைத்து திருவவதார விசேஷங்களுக்கு மங்களா சாசனம் பண்ணினார்
திருப் பல்லாண்டிலே-

அந்தியம் போதில் அரியுருவாகி அரியை அழித்தவனை–பல்லாண்டு பாடுதும் -என்றும்
இராக்கதர் வாழ் இலங்கை பாழாளாக படை பொருதானுக்கு பல்லாண்டு கூறுதுமே -என்றும்
ஸ்ரீ நரசிம்ஹ ப்ராதுர்பாவத்துக்கும்
ஸ்ரீ ராமாவதாரத்துக்கும் மங்களா சாசனம் பண்ணி இருக்கச் செய்தேயும்

மாயப் பொரு படை வாணனை -என்றும்
ஐந்தலைய -இத்யாதிகளால்
ஸ்ரீ கிருஷ்ணாவதாரத்துக்கு பிரசுரமாக மங்களா சாசனம் பண்ணுகையாலும்

இவ் வதாரத்துக்கு ஹேதுவாக படுத்த பைந் நாகணைப் பள்ளி கொண்டு அருளின ஸ்ரீ பெரிய பெருமாள்
ஆல மா மரத்தின் இலை மேல் ஒரு பாலகனாய் ஞாலம் எழும் உண்டான் அரங்கத்து அரவின் அணையான்-என்றும்
வையம் யுண்டு ஆலிலை மேவு மாயன் மணி நீண் முடிப் பை கொள் நாகத் தணையான்-பெரிய திருமொழி -5-4-2-என்றும்
ஸ்ரீ கோயிலில் நின்றும் திரு மாளிகைகளில் புகுந்து
(நாச்சியார் திரு மாளிகை -ஸ்ரீ வில்லுபுத்தூர் –
நாச்சியார் கோயில் -திரு நறையூர் )
ஸ்ரீ வடபெரும் கோயிலுடையானாக கண் வளர்ந்து அருளுகையாலும்-

பயின்றது அரங்கம் திருக்கோட்டி -(பூதத்தாழ்வார் )-என்று ஸ்ரீ கோயிலில் நின்றும் தங்கு வேட்டையாக எழுந்து அருளி ஸ்ரீ திருக் கோட்டியூரிலே
உரக மெல்லணையனாய்க் -பெரியாழ்வார் -4-4-4- கண் வளர்ந்து அருளுகையாலும்
அணி கோட்டியூர் அபிமானத் துங்கன் செல்வனைப் போலே இத்யாதி படியே
இவ் வாழ்வாருக்கு மங்களா சாசனத்துக்கு சஹகாரியான ஸ்ரீ செல்வ நம்பியுடன் ஸ்ரீ திருக் கோட்டியூர் ப்ரஸ்துதம் ஆகையாலும்

ஸ்ரீ திருக் கோட்டியூரானே-பெரிய திருமொழி -9-10-1-என்றும்
கன்று கொன்று விளங்கனி எறிந்து -பெரிய திருமொழி -9-10-7-என்றும்
அவனே இவன் என்று ஆழ்வார்கள் ஸ்ரீ கிருஷ்ணாவதார கந்தமாக ஸ்ரீ திருக் கோட்டியூரை அருளிச் செய்கையாலும்
செந்நாள் தோற்றி சிலை குனித்த திரு மதுரையில் காட்டிலும் ஸ்ரீ திருக் கோட்டியூர் உத்தேச்யம் ஆகையாலும்

ஸ்ரீ கிருஷ்ணாவதாரம் ஒருத்தி மகனாய் பிறந்து ஓர் இரவில் ஒருத்தி மகனாய் ஒளித்து வளரச் செய்தேயும்
கஞ்சனும் காளியனும் களிறும் மருதும் எருதும் மடிய வஞ்சனையில் வளர்ந்த மணி வண்ணன் -பெரியாழ்வார் -4-3-2-என்று
ஈஸ்வரத்வம் நடையாடுகையாலும்

மற்ற அவதாரங்களுக்கு காலமும் நன்றாய் தாமும் ராஜ குலத்தில் அவதரிக்கையாலும்
பந்துக்களும் ராஜாக்களுமாய் பலவான்களுமாய் ஆகையாலும்
ஸ்ரீ கிருஷ்ணாவதாரத்துக்கு காலமும் த்வாபர அந்தமாய்
பந்துக்களும் சாதுக்களான ஆயராய்
முளைப்பது எல்லாம் தீப்பூண்டு களாகையாலே
மங்களா சாசனம் வேண்டுவது ஸ்ரீ கிருஷ்ணாவதாரத்துக்கே ஆகையாலும்
அந்த ஸ்ரீ கிருஷ்ணன் அர்ச்சாவதாரமாக நின்றவிடத்தில் அர்ச்சாவதாரம் அர்ச்சக பராதீன சமஸ்த வ்யாபாரமாய்ப் போருகையாலே
மங்களா சாசனம் மிகவும் வேண்டுவது அர்ச்சாவதாரம் ஆகையாலும்
சென்னியோங்கு அளவும் இவர்க்கு அர்ச்சாவதார பர்யந்தமாக மங்களா சாசனம் நடக்கும் இறே-

(3-6- வரை கிருஷ்ண அவதாரம் அனுபவம்
4-2- தொடங்கி அர்ச்சாவதார அனுபவம் )

(வக்த்ரு -விஷய -பிரபந்த -வை லக்ஷண்யம்
ப்ரவேசத்தால் -எத்திறம் -இத்யாதிகளால் விக்த்ருதராம் படி -ஸ்ரீ கிருஷ்ண -விஷய வை லஷ்ண்யம்
ஆழ்வார்களை விட பொங்கும் பரிவு -வக்த்ரு வை லக்ஷண்யம்
பிரேமத்தால் யசோதை வார்த்தைகளால் -பிரபந்த வை லக்ஷண்யம் )

——————————————————————

(இருட்டை சேவிப்பாரே -வாழி கனை இருளே -பிள்ளை உறங்கா வல்லி தாசர்
பிருஸ்னி ஸூதபா
அதிதி கஸ்யபர்
வசுதேவர் தேவகி -மூன்று தடவை )

முதல் பாட்டு -அவதாரிகை –
ஸ்ரீ கிருஷ்ணாவதார கந்தமான ஸ்ரீ திருக் கோட்டியூரிலே அர்ச்சாவதார பர்யந்தமாக
மங்களா சாசனம் பண்ணுகிறார் -வண்ண மாடத்தால் –

வண்ண மாடங்கள் சூழ் திருக் கோட்டியூர்
கண்ணன் கேசவன் நம்பி பிறந்தினில்
எண்ணெய் சுண்ணம் எதிர் எதிர் தூவிட
கண்ணன் முற்றம் கலந்து அளறு ஆயிற்றே –1-1-1-

பதவுரை
வண்ணம்–அழகு பொருந்திய
மாடங்கள்–மாடங்களாலே
சூழ்–சூழப்பட்ட
திருக்கோட்டியூர்–திருக்கோட்டியூரில் (எழுந்தருளியுள்ள)
கேசவன்–கேசவனென்ற திருநாமமுடையனாய்
நம்பி–கல்யாண குண பரிபூர்ணனான
கண்ணன்–ஸ்ரீக்ருஷ்ணன்
இன் இல்–(நந்த கோபருடைய) இனிய திரு மாளிகையிலே
பிறந்து–திரு வவதிரித்தருளின வளவிலே,
(திருவாய்ப்பாடியிலுள்ளார்)
எண்ணெய்–எண்ணெயையும்
சுண்ணம்–மஞ்சள் பொடியையும்
எதிர் எதிர் தூவிட–(ஸந்தோஷத்தாலே ஒருவர்க்கொருவர்) எதிர்த்துத் தூவ,
கண்–விசாலமாய்
நல்–விலக்ஷணமான
முற்றம்–(நந்தகோபர் திருமாளிகையில்) திருமுற்றமானது
கலந்து–(எண்ணெயும் மஞ்சள் பொடியும் துகையுண்டு) தன்னிலே சேர்ந்து
அளறு ஆயிற்று–சேறாய் விட்டது.

வண்ண நன் மணியும் -பெரியாழ்வார் -4-4-3-இத்யாதிபடியே
நாநா ரத்னங்களாலே சமைந்து அழகும் நிறமும் உடைத்தாகையாலே
தர்ச நீயங்களான மாடங்களாலே சூழப் பட்ட திருக் கோட்டியூரிலே

கண்ணன் –
கண்ணில் கூர்மை உடையராய் நிபுணராய் இருப்பாராலே பரிக்ராஹ்யமான
தேவகி புத்ர ரத்னம் திருஷ்டி கோசரம் ஆகையால் கண்ணன் என்கிறார்
(கண் -ஸூஷ்ம தர்சீ களுக்குக் காட்சி கொடுத்து அருளுபவர் -ஞானக் கண்ணால் அறியப்படுபவன்
பத்திமை -பக்தி அஞ்சனம் -ஞாதும் த்ரஷ்டும் பிராப்தி -)

கேசவன் நம்பி
அவனுடைய சர்வ காரணத்வத்தையும்
விரோதி நிரசனத்தையும் தாம் ஏறிட்டுக் கொள்ளுகையாலே
அவன் போக்யதைக்கு மங்களா சாசனம் பண்ணி
பிரசச்த கேசன் -கல்யாண குண பூரணன் -என்கிறார்

(ப்ரஸஸ்த கேசன்
கேசி அசுரனைக் கொன்றதால் -கேசவன் -விரோதி நிரசன சீலன்
க ஈஸா நியந்தா-சர்வ காரணத்வம்
நம்பி -கல்யாண குண பூர்ணன் –
பெரியாழ்வார் தாமே ஏறிட்டுக் கொண்டாரே -)

பிறந்தினில்
இன் -இல்-பிறந்து
ஸ்ரீ மதுரையில் சிறைக் கூடம் போல் பொல்லாங்கு இல்லாதபடியாலே
திரு வாய்ப்பாடியிலே பிறப்பை இனிய இல்லிலே பிறந்தான் என்கிறார்-
திருக் கோட்டியூரிலே வ்யாவ்ருத்தி சொல்ல மாட்டாரே
ஆகையால் சிறைக் கூடத்தில் வ்யாவ்ருத்தி திருவாய்ப் பாடிக்கு உண்டு என்கிறார்

எண்ணெய் சுண்ணம் இத்யாதி
எள்ளில் நெய்யையும் மஞ்சள் பொடியையும் ஒருவர் மேலே ஒருவர் தூவி என்னுதல்
ஒருத்தருக்கு பிரீதியாக ஒருவர் தூவி என்னுதல் –

கண்ணன் முற்றம்
ஸ்ரீ கிருஷ்ணன் அவதரித்தே போதே க்ருஹ நிர்வாஹகன் பிள்ளையாக ஸ்ரீ நந்த கோபர் நினைக்கையாலே
கண்ணன் முற்றம் என்னுதல்
இடமுடைத்தான தர்ச நீயமான முற்றம் என்னுதல் (கண் நல் முற்றம் )

கலந்து அளறு ஆயிற்றே
இவை தம்மிலே சேர்ந்து சேறாயிற்று -என்கிறார்

————————————————————————-

இரண்டாம்பாட்டு -அவதாரிகை –
இவ்வளவிலே யன்றி
தம் திரு உள்ளத்துக்குப் பொருந்த
திருவாய்ப்பாடியில் உள்ளார் ப்ரியம் கண்டபடியாலே
ஸ்லாகிக்கிறார்-

ஓடுவார் விழுவார் உகந்து ஆலிப்பார்
நாடுவார் நம்பிரான் எங்குற்றான்  என்பார்
பாடுவார்களும் பல்பறை கொட்ட நின்று
ஆடுவார்களும் ஆயிற்று ஆய்ப்பாடியே–1-1-2-

உகந்து-ஒவ்வொன்றிலும் அந்வயிக்க வேண்டும்
உகந்து ஓடுவார்
உகந்து விழுவார்
உகந்து ஆலிப்பார்-

பதவுரை
ஆய்ப்பாடி–திருவாய்ப்பாடியானது,
ஓடுவார்–(ஸ்ம்ப்ரமித்து) ஓடுவாரும்
விழுவார்–(சேற்றிலே வழுக்கி) விழுவாரும்
உகந்து–உகப்புக்குப் போக்குவீடாக
ஆலிப்பார்–கோஷிப்பாரும்
நாடுவார்–(பிள்ளையைத்) தேடுவாரும்
நம் பிரான்–நமக்கு உபகாரகனான கண்ணன்
எங்கு உற்றான் என்பார் –எங்கு தான் என்பார்–எங்கே தான் (இரா நின்றான்) என்பாரும்
பாடுவார்களும்–பாடுவார்களும்
பல் பறை–பலவகை வாத்யங்கள்
கொட்ட–முழங்க
நின்று–அதற்குப் பொருந்த நின்று
ஆடுவார்களும்–கூத்தாடுவாருமாக
ஆயிற்று–ஆய்விட்டது.

ஓடுவார் விழுவார் உகந்து ஆலிப்பார்
ப்ரீதி பிரகர்ஷத்தாலே
ஒரு பிரயோஜனம் கருதாமல் ச சம்ப்ரமமாக ஓடுவார் –
ஓடச் செய்தே அளற்றிலே வழுக்கி விழுவார்
பிரியப் பட்டு கர்விப்பார்

நாடுவார்-
பிள்ளை எங்கே -தேடுவார்
நம் பிரான் எங்குற்றான் என்பார் –
ராஜ புத்திரன் ஆகையாலே -எங்களுக்கு ஸ்வாமி யானவன் எங்கே என்பார் -கண்டிருக்கச் செய்தேயும்

பாடுவார்களும்
ப்ரீதிக்கு போக்கு விட்டுப் பாடுவார்களும்

பல் பறை கொட்ட நின்று ஆடுவார்களும்
நாநா விதமான வாத்தியங்களைக் கொட்டுவார்களும்
கொட்டுக்குப் பொருந்து நின்று ஆடுவார்களும்

அன்றியே
சிலர் தங்களுக்கு தோற்றினபடி கொட்ட
சிலர் அனந்வயமாக கூத்தாட என்னுதல் –

ஆயிற்று ஆய்ப்பாடியே
இப்படி திருவாய்ப்பாடியிலே பஞ்ச லஷம் குடியில் உள்ளாரில்
ஒருத்தரும் விக்ருதர் ஆகாமல் இருந்தார் இல்லை –

(சாதன ஸப்தகம்
அநவசாதம் அனு ஹர்ஷம் -கூடாது அப்ராப்த விஷயத்தில்
இங்கு கிடைக்க விடில் அழுதும்
கிட்டினால் ஹர்ஷமும் -ப்ராப்த விஷயம் என்பதால் -உகந்து -அனைத்திலும் உண்டே -)

————————————————————————–

பேணிச் சீருடைப் பிள்ளை பிறந்தினில்
காணத் தாம் புகுவார் புக்குப் போதுவார்
ஆண் ஒப்பார் இவன் நேரில்லை காண் திரு
வோணத்தான் உலகாளும் என்பார்களே–1-1-3-

பதவுரை

சீர் உடை =ஸ்ரீமானான குணங்களை உடைய
பிள்ளை=பிள்ளையான கிருஷ்ணன்
பேணி =கம்சாதிகள் கண் படாதபடி தன்னைக் காத்து வந்து
பிறந்தனில்=பிறந்த அளவில்
தாம் =ஆய்ப்பாடி ஆயர்கள்
காண =பிள்ளையை காண ஆசைப் பட்டு
புகுவார் =உள்ளே நுழைவாரும்
புக்கு =உள்ளே போய் கண்டு
போதுவார் =புறப்படுவாரும்
ஆண் ஒப்பார் =பும்ஸ்த்வம் உடையாரில்
இவன் நேர் இல்லை காண் =இவனோடு ஒத்தவர் இல்லை காண்
இவன்
திரு வோணத்தான் =சர்வேஸ்வரனுடைய
உலகு ஆளும் -லோகங்களை  எல்லாம் ஆளக் கடவன்
என்பார்கள் -என்று சொல்லுவாருமாக ஆனார்கள் –

பேணிச் சீருடைய பிள்ளை –
சீருடைப் பிள்ளை பேணிப் பிறந்தினில் –
சீருடைய பிள்ளை என்று சிறைக் கூடத்தில் திரு வவதரித்த போதை திவ்ய சேஷ்டிதத்தைக் கண்டு
கம்ச பயத்தாலே பயப்பட மாதா பிதாக்கள் -உபசம்ஹர -ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-3-13-என்ற போதே
உகவாதார் காணாத படி மறைக்கையாலும்
ஸ்ரீ ராமாவதாரம் போலே வளர்ந்த பின்பு பித்ரு வசன பரிபாலனம் பண்ணுகை யன்றி அப்போதே பேணிப் போருகையாலும்

பிறந்தினில்
வழியில் உள்ள வ்யசன பாஹூள்யத்தை அறிந்தவர் ஆகையால் கம்சனுக்குப் பிழைத்து திருவாய்ப்பாடி புகுந்த பின்
திருவவதாரமாக பிரதிபத்தி பண்ணி -பிறந்தினில் -என்கிறார்

காணத் தாம் புகுவார்-
தாம் காணப் புகுவார் -அக் காலத்தில் பிள்ளை பெற்றவர் தாங்களும் ஹர்ஷ அதிசயத்தாலே
தம்தாம் புத்ர முகம் -பிள்ளைகளை -காணும் காட்டில் பிள்ளையைக் காணப் புகுவார்

புக்குப் போதுவார் –
சோபனம் சொல்ல வேணும் என்கிற த்வரையாலே புகுந்து சொல்லியும் சொல்லாதும் போதுவார்

போதுவார்
பும்ஸாம் த்ருஷ்டி சித்த அபஹாரிணம் -அயோத்ய -3-29-இது என்ன அருமை தான் –
(கண்டவர் தம் மனம் வழங்கும் கண்ண பிரான் அன்றோ -)

ஆண் ஒப்பார் இவன் நேரில்லை காண் திரு வோணத்தான் உலகாளும் என்பார்களே-
சாமுத்ரிகா லஷணம் -போவான் இவனைப் பார்த்து புமான்களில் இவனுக்கு சத்ருசம் இல்லை -என்பார்களும்
திருவோணத்தான் உலகாளும் -என்பார்களுமாய்
ப்ரீதி வ்யவஹாரம் பண்ணினார்கள் என்று ஹ்ருஷ்டர் ஆகிறார்

திருவோணம் ஸ்ரீ வைஷ்ணவ நஷத்ரம் ஆகையால் திருவோணத்தான் உலகு என்று
உபய விபூதியையும் ஆளும் -என்கிறார்கள் என்றபடி
(வாமனன் -திரிவிக்ரமன் -உலகு அளந்து ஸ்வாமித்வம் காட்டினான் )

———————————————————————

உறியை முற்றத்து உருட்டி நின்றாடுவார்
நறு நெய் பால் தயிர் நன்றாகத் தூவுவார்
செறி மென் கூந்தல் அவிழத் திளைத்து எங்கு
மறி வழிந்தனர் ஆய்ப்பாடி யாயரே –1-1-4-

பதவுரை
ஆய்ப்பாடி–திருவாய்ப்பாடியிலுள்ள
ஆயர்–இடையர்கள்
உறியை–(பால் தயிர் சேமித்து வைத்த)உறிகளை
முற்றத்து–முற்றத்திலே
உருட்டி நின்று–உருட்டிவிட்டு
ஆடுவார்–கூத்தாடுவார் சிலரும்,
நறு–மணம்மிக்க
நெய் பால்தயிர்–நெய்யையும் பாலையும் தயிரையும்
நன்றாக–நிச்சேஷமாக
தூதுவார்–தாநம் பண்ணுவார் சிலரும்,
செறி மென்–நெருங்கி மெத்தென்றிருக்கிற
கூந்தல்–மயிர்முடியானது
அவிழ–அவிழ்ந்து கலையும்படி
திளைத்து–நர்த்தநம்பண்ணுவார் சிலருமாக,
எங்கும்–சேரியடங்கலும்
அறிவு அழிந்தனர்–தங்களூடைய விவேகம் ஒழியப் பெற்றனர்-
(கிருத்ய அக்கருத்ய விவேக சூன்யர் ஆனார்கள்)

உறியை முற்றத்து உருட்டி நின்றாடுவார் நறு நெய் பால் தயிர்
உறியின் மேலே வைத்த நறு நெய்யும் பாலும் தயிரும் உடனே த்ரவ்ய கௌரவம் பாராதே
அறுத்துக் கொண்டு போந்து முற்றத்திலே உருட்டி நின்றாடுவார்

நன்றாகத் தூவுவார்
க்ருத ஷீர தத்யாதிகளை -பிள்ளைக்கு நன்மையாக வேணும் -என்று தானம் செய்வார்

செறி மென் கூந்தல் அவிழத் திளைத்து –
செறிந்து மெல்லிதான குழல்கள் கட்டு அவிழும்படி ஸ்திரீகள் புறப்பட்டு ஆடி லீலா போகிகளாக

எங்கு மறி வழிந்தனர் ஆய்ப்பாடி யாயரே —
திருவாய்ப்பாடியில் திருவாயர் முழுக்க
க்ருதக்ருத்ய விவேக சூன்யர்கள் ஆனார்கள் –
(மதுவனம் அழித்த முதலிகள் போல் )

ஆய்ப்பாடி ஆயர் –
வளர்ப்பும் மேய்ப்பும் அன்றியே ஜாதி ஆயர் -என்றபடி-
(பிறப்பாலே ஆயர் என்றபடி )

————————————————————————–

கொண்ட தாளுறி கோலக் கொடு மழு
தண்டினர் பறியோலைச் சயனத்தர்
விண்ட முல்லை அரும்பன்ன பல்லினர்
அண்டர் மிண்டிப் புகுந்து நெய்யாடினார் –1-1-5-

பதவுரை
தான்கொண்ட–கால் நெருக்கத்தையுடைய
உறி–உறிகளையும்
கோலம்–அழகிய
கெரடு–கூர்மையான
மழு–மழுக்களையும்
தண்டினர்–தடிகளையுமுடையராய்
பறி–(தாழைமடலினின்றும்) பறிக்கப்பட்ட
ஓலை-ஓலைகளினாற்செய்த
சயனத்தர்–படுக்கையையுடையராய்
விண்ட–விசஹித்த
முல்லை அரும்பு அன்ன–முல்லையரும்பு போன்ற
பல்லினர்–பற்களையுடையவரான
அண்டர்–இடையரானவர்கள்
மிண்டி–(ஒருவருக்கொருவர்) புகுந்து
நெய் ஆடினார்–நெய்யாடல் ஆடினார்கள்.

கொண்ட தாளுறி -இத்யாதி
தாள் கொண்ட என்று கால் நீண்ட உறிகளை தங்கள் கையிலே தூக்கி நின்றாடுவார்
பரிசுண்டாய் –கூரியதான மழுக்களையும்
அளவுண்டாய் -நன்றான தடிகளையும்
மடலில் நின்றும் பறிக்கப் பெற்ற ஓலையாலே கோத்து சமைக்கப் பட்ட சய்யையும் உடையராய்க் கொண்டு
முல்லை யரும்பு விண்டால் போலே இருக்கிற பல்லு தோன்ற ரச விவாத கோலாகலராய்
நெருங்கிப் புகுந்து நெய்யாடினார் இடையர் எல்லாரும் –

விண்டின் முல்லை என்ற பாடமான போது -விண்டு என்று குன்றாய்
குன்றில் முல்லை நெருங்கப் பூத்தால் போலே தோற்றுப் பல்லர் என்னவுமாம்

இடைக் கூத்தாடுவார்க்கு தோற்றுப் பல்லாய் இறே இருப்பது
அண்டர் -என்று தேவ ஜாதிகளுக்கும் பெயர் –
(இங்கு இடையரைச் சொல்லிற்று )

————————————————————————–

கையும் காலும் நிமிர்த்துக் கடார நீர்
பைய வாட்டிப் பசும் சிறு மஞ்சளால்
ஐய நா வழித் தாளுக்கு அங்காந்திட
வையம் ஏழும் கண்டாள் பிள்ளை வாயுளே –1-1-6-

பதவுரை
கையும்–திருக்கைகளையும்
காலும்-திருவடிகளையும்
நிமிர்த்து–(நீட்டி) நிமிர்த்து
கடாரம்–கடாரத்தில் (காய்ச்சின)
நீர்–திருமஞ்சனத் தீர்த்தத்திலே
பசு சிறு மஞ்சளால்–குறுங்கண்ணான பசு மஞ்சளால்
பைய–திருமேனிக்குப் பாங்காக
ஆட்டி–ஸ்நாநம் செய்வித்து
ஐய-மெல்லிதான
நா–நாக்கை
வழித் தாளுக்கு–வழித்தவளான யசோதைக்காக
அங்காந்திட-(கண்ணன்) வாயைத்திறக்க, (யசோதையானவன்)
பிள்ளை–கண்ணபிரானுடைய
வாயுள்–வாயினுள்ளே
வையம் ஏழும்–உலகங்களையெல்லாம்
கண்டாள்–ஸாக்ஷத்கரித்தாள்.

வடதள சாயிக்கு அல்லாதது எல்லாம் உண்டாக சொல்லா நின்றது இறே –
கடாரத்தில் மருந்துகளும் பரிமளத் த்ரவ்யங்களும் இட்டு
ஸூ கந்தவத்தாய்க் காய்ந்த நீரிலே
திருக்கைகளையும் திருவடிகளையும் நிமிர்க்க வேணும் என்று தானே பிரார்த்துத்
தான் நிமிர்ந்து நிமிர்ந்தான் என்று கொண்டாடி –
மெள்ளத் திரு மஞ்சனம் செய்தருளி
குறும் கண்ணான பசு மஞ்சளை திரு மேனியிலே சாத்தி கையிலே மஞ்சளை எடுத்து
மெல்லிதான நாவை நீட்டி அருள வேணும் என்று பிரார்த்திக்க
இங்கேயும் மாத்ரு வசன பரிபாலனம் பண்ணி அருள வேணும் என்று
நாக்குக்கும் வாய்க்கும் வாசி அறியாத பிள்ளைகளை போலே அங்காந்து காட்டின நாவை வழித்தவளுக்கு
திவ்ய சஷூஸ் சைக் கொடுத்து விஸ்வரூபம் காட்டினால் போலே
இவளுக்கு திருப் பவளத்துக்கு உள்ளே சமஸ்த லோகங்களையும் காட்ட இவளும் கண்டாள் இறே
வடதள சாயி திரு வயிற்ருக்கு உள்ளே அகடித பிரமாண சித்தமானது இறே இவள் கண்டது-

—————————————————————————

வாயுள் வையம் கண்ட மட நல்லார்
ஆயர் புத்திரன் அல்லன் அரும் தெய்வம்
பாய சீருடைப் பண்புடைப் பாலகன்
மாயன் என்று மகிழ்ந்தனர் மாதரே –1-1-7-

பதவுரை

வாய் உள =பிள்ளை  உடைய வாயின் உள்ளே –
வையகம் = உலகங்களை
கண்ட =பார்த்த
மட நல்லார் =மடப்பத்தையும் நன்மையையும் உடைய மாதர் =கோப ஸ்திரீகள்
இவன்
ஆயர் புத்திரன் அல்லன் =கோப குமாரன் அல்லன்
அரும் தெய்வம் -பெறுவதற்கு அரிய தெய்வம்
பாய சீருடை =பரம்பின குணங்களை உடையனாய்
பண்புடை =நீர்மையை உடையனான
பாலகன் =இந்த சிறு பிள்ளை
மாயன் =ஆச்சர்ய சக்தி யுக்தன்
என்று = என்று சொல்லிக் கொண்டு
மகிழ்ந்தனர் =மிகவும் ஆனந்தித்தார்கள்
ஏ-அசை

இனி மேல் கண்டவள் வார்த்தை இறே
இப்படிக் கண்டு பவ்யதையையும் ஸ்நேஹத்தையும் உடையவள் அன்றியே
மட நல்லார் -என்று இவன் காட்ட கண்டவர்களும் உண்டு என்று தோற்றுகிறது-

இவன் -ஆயன் புத்திரன் அல்லன் -என்றும்
ஸ்வ யத்னத்தால் பேர் நினைப்பார்க்கு நிர்தேசிக்கவும் கூட அரியன் -என்றும்
வ்யதிரேகத்தில் நிர்ணயமும்-(ஆயன் புத்திரன் அல்லன்)
நிர்தேசத்தில் அருமையும் -(அரும் தெய்வம்)
நடவா நிற்கச் செய்தேயும்
பரந்த சீரையும் பண்பையும் உடைய பாலகன் -என்று நிர்ணயித்து

பின்னையும் மாயன் என்கையாலே
ஆச்சர்ய சக்தி உக்தன் என்று இவள் சொல்லுகையாலே
திருவாய்ப்பாடியிலே ஸ்த்ரீ வர்க்கம் முழுக்க மாயன் ஆகையாலே
ஸ்வ லாப சித்திக்கு ஹேது பூதன் என்று மகிழ்ந்தார்கள் இறே
(அவனே அவனை அடைய உபாயம் -மாயம் இதுவே -மம மாயா துரத்யயா -இத்யாதி -இதுவே ஸ்வாபதேசம் )

———————————————————————-

பத்து நாளும் கடந்த விரண்டா நாள்
எத் திசையும் சயமரம் கோடித்து
மத்த மா மலை தாங்கிய மைந்தனை
உத்தானம் செய்து உகந்தனர் ஆயரே –1-1-8-

பத்து நாளும் கடந்த =பத்து நாளும் கழிந்த
இரண்டாம் நாள் = இரண்டாம் நாளான நாம கரண தினத்திலே
எத்திசையும் =எல்லா திக்குகளிலும்
சய மரம் = ஜய சூசுகமான தோரணங்களை
கோடித்து = நாட்டி அலங்கரித்து
மத்த மா மலை = மதித்த யானைகளை உடைய -கோவர்த்தனம் -என்னும் மலையை
தாங்கிய = தரித்து கொண்டு நின்ற
மைந்தனை = மிடுக்கனான கண்ணனை
ஆயர் = இடையர்கள்
உத்தானம் செய்து = கைத்தலத்திலே வைத்து கொண்டு
உகந்தனர் =சந்தோஷித்தார்கள்
ஏ -அசை  —

பத்து நாளும் கடந்த விரண்டா நாள்
இவர் மங்களா சாசன பரர ஆகையாலே அவதரித்த நாளை ஒழித்து
பன்னிரண்டாம் நாள் என்கிறார்

எத் திசையும் சயமரம் கோடித்து-
எல்லா திக்குகளிலும் ஒருவருக்கு ஒருவர் மேலாக வேணும் என்று வெற்றி கொண்டு
ஒன்றுக்கு ஓன்று மேலாக தோரணங்கள் நாட்டி கோடித்து கொடி கட்டி

மத்த மா மலை தாங்கிய மைந்தனை –
மத்த கஜங்கள் முதலானவை மறிந்து விழும்படியாக மலையைத் தாங்கின மைந்தன் என்றது
யுகே யுகே சம்பவாமி படியே
மைந்து -மிடுக்கும் பிள்ளையும்

உத்தானம் செய்து உகந்தனர் ஆயரே
ஒருவருக்கு ஒருவர் கைகளிலே எடுத்து ஆயர்கள் எல்லாரும் உகந்து செல்லா நின்றார்கள் –

——————————————————————–

பருவத்துக்குத் தக்க அல்லாத சேஷ்டிதங்களை அனுசந்தித்து –
திருத்தாயார் -சந்நிஹிதர் ஆனவர்களுக்கு சொன்ன பாசுரத்தை –
அவளான பாவனையிலே தாம் அனுபவித்து -இனியர் ஆகிறார்

கிடக்கில் தொட்டில் கிழிய வுதைத்திடும்
எடுத்துக் கொள்ளில் மருங்கை இறுத்திடும்
ஒடுக்கிப் புல்கில் உதரத்தே பாய்ந்திடும்
மிடுக்கிலாமையால் நான் மெலிந்தேன் நங்காய் –1-1-9-

நங்காய் =பூர்ணைகளான ஸ்திரீகளே
கிடக்கில் = இப்பிள்ளை தொட்டிலில் கிடந்தானாகில் –
தொட்டில் = தொட்டிலானது
கிழிய = சிதில மாம் படி
உதைத்திடும் -உதையா நிற்கும்
எடுத்து கொள்ளில் -இப்பிள்ளையை இடுப்பில் எடுத்து கொண்டால்
மருங்கை = இடுப்பை
இறுத்திடும் =முறியா நிற்கும்
ஒடுக்கி =வியாபார ஷபன் அல்லாதபடி செய்து
புல்கில் = மார்வில் அணைத்து கொண்டால்
உதரத்து -வயிறறிலே
பாய்ந்திடும் = பாயா நிற்கும்
மிடுக்கு = இந்த சேஷ்டைகளை பொறுக்க வல்ல சக்தி
இல்லாமையால் -பிள்ளைக்கு இல்லாமையால் –
நான் = தாயான நான் –
மெலிந்தேன் = மிகவும் இளைத்தேன்
ஏ -அசை

கிடக்கில் என்கையாலே ஓர் இடத்தில் கிடவாமை தோற்றுகிறது
தொட்டில் கிழிய உதிக்கும் -என்கையாலே
திருவடிகளில் மார்த்வத்துக்கு பயப்படுகிறார் –
தளிர் புரையும் திருவடிகள் இறே

எடுத்துக் கொள்ளில் மருங்கை முறியும்படி நோவப் பண்ணுகையாலே
இந் நோவு பிள்ளைக்கு மிக வுண்டாம் என்று பிள்ளையுடைய சேஷ்டிதங்களை அமைத்து
மார்போடு அணைக்கில் வயிற்றில் பாயா நிற்கும்
முக்த சேஷ்டிதங்கள் பல வாகையாலே இவற்றை எல்லாம் பொறுக்க வல்ல சக்தி
பிள்ளைக்கு போராது என்று போர இளைத்தேன்

நங்காய் -என்கிறது ஜாதி ஏக வசனத்தாலே
நீங்கள் எல்லாம் பருவத்துக்கு தக்க சேஷ்டிதங்களை யுடைய பிள்ளையை வளர்த்து போருகிற பூர்ணைகள் இறே-

—————————————————————————-

செந்நெலார் வயல் சூழ் திருக் கோட்டியூர்
மன்னு நாரணன் நம்பி பிறந்தமை
மின்னு நூல் விட்டு சித்தன் விரித்த விப்
பன்னு பாடல் வல்லார்க்கு இல்லை பாவமே–1-1-10-

செம் நெல்  =செந்நெல் தான்யமானது
ஆர் =நிறைந்து இருக்கிற
வயல் =கழனி  களாலே
சூழ் = சூழப் பட்ட
திரு கோட்டியூர் =திரு கோட்டியூரிலே
மன்னு = நித்ய வாசம் பண்ணுகிற
நாரணன் = நாராயண சப்த வாச்யனாய்
நம்பி = குண பூர்ணனான கண்ணன்
பிறந்தமை = அவதரித்த பிரகாரத்தை
மின்னு நூல் = விளங்கா நின்ற யஜ்ஜோபவீதத்தை உடைய
விட்டு சித்தன் =பெரிய ஆழ்வார்
விரித்த = பரப்பி அருளி செய்ததாய்
இப்பன்னு பாடல் = ஜ்ஞானிகள் அநவரதம் அனுசந்திக்கும் படியான இப் பாசுரங்களை
வல்லார்க்கு = கற்கும் அவர்களுக்கு
பாவம் இல்லை = பாபம் இல்லை
ஏ -அசை

இத்திருமொழி கற்றாருக்கு பலன் சொல்லித் தலைக் கட்டுகிறார்
செந்நெலாலே நிறைந்த வயலாலே சூழப் பட்ட திருக் கோஷ்டியூரிலே நித்ய வாசம் பண்ணுகிற
திருக் கோட்டியூர் கண்ணன் கேசவன் நம்பி என்று தொடங்கி
மன்னு நாரணன் நம்பி -என்று நியமிக்கையாலே
சாதாரண அசாதாரண வ்யாவ்ருத்தமான வாக்ய த்வய குண பூர்த்தியை
மன்னு நாரணன் நம்பி -என்று அருளிச் செய்கிறார்

(ஆத்ம குணங்களை ஸ்வரூப குணங்களை சொல்லாமல் திருமேனி குணங்கள்
சரணவ்-திருவடி -திரு மேனி அழகு -பூர்வ உத்தர வாக்கியம் -திருமேனிக்கு கைங்கர்யம்
ஆகவே ஆழ்வாருக்கு திருமேனியில் பரிவு தோற்ற அருளிச் செய்கிறார் )

பிறந்தமை –
பிறந்த பிரகாரத்தை என்றது
முற்பட்ட பிறவியை ஒளித்து தாம் தொடங்கின திருவாய்ப் பாடியில் பிறப்பை
கம்ச நகரியில் நின்றும் போரப் பெறுகையாலே மறு பிறப்பாக நிகமிக்கிறார்
புனர்ஜாதம் -பால காண்டம் -77-5-என்னக் கடவது இறே
(பெருமாள் -மீண்டும் உயிர் பெற்றார் -பரசுராமன் வந்ததும் மயங்கி எழுந்து -தசரதர் வார்த்தை போல் )

பட்டர் பிரான் ஆகையால் -மின்னு நூல் -என்கிறார் ஆதல்
வேதப் பயன் கொள்ள வல்ல விட்டு சித்தன் -2-8-10-என்று
இவருடைய விஷ்ணு சப்தமும் அசாதாரணமாக சகல சாஸ்த்ரங்களாலும் பிரகாசிக்கையாலே –
மின்னு நூல் என்கிறார் ஆதல்

விஷ்ணு சித்தன் -என்று
விஷ்ணுவை தன திரு உள்ளத்திலே உடையவர் ஆகையாலே மற்று ஓன்று அறியாதவர்

விரித்த -என்கையாலே
சகல சாஸ்திரங்களையும் மங்களா சாசன பர்யந்தமாக விரித்து அருளிச் செய்தார் என்கிறது
இம் மங்களா சாசன தார தம்யம் பலருக்கும் உண்டாகையாலே
இப் பன்னு பாடல் -என்று வ்யாவர்த்திக்கிறது

வல்லார்க்கு -என்கிறது
சாபிப்ராயமாக வல்லார்க்கு என்றபடி
அதாவது
இவ் வபி மானத்தில் ஒதுங்கினார்க்கும்-
இப் பிள்ளையுடைய ஸ்திதி கமன சயநாதிகளாலே
இவரைப் போலே வயிறு மருக வேண்டும் பாபமும் இல்லை என்கிறது

————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருவாய்மொழிப் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிச் செய்த ஈடு தனியன் வியாக்யானம் –

November 28, 2014

திரு வாய் மொழியின் ஈட்டின் சம்ப்ரதாயத்தை –
நாதம் பங்கஜ நேத்ர-என்கிற தனியனிலும்-
திருவருள் மால் -என்கிற திரு நாமத்திலும் –
அடியே தொடங்கி திருவாய்மொழிப் பிள்ளை அளவும் தர்சிப்பித்தபடி சொல்லுகிறது –
நமோ அஸ்மத் ஆச்சார்ய பரம்பராப்யா –
வந்தே குரு பரம்பராம் -என்கிறபடியே -நாதாதியாக தேவாதி பரன் அளவும் உண்டானவர்களை
வந்தே -என்று குரு பங்க்தி நமஸ்காரத்தை சொல்லுகிறது-

நாதர் ஆகிறார் -ஸ்ரீ ரெங்க நாதர் -என்னும் நாமதேயத்தை யுடையராய்
ஆத்யாய குலநாதாயா -என்னும்படியான ஆழ்வாரை நாதராக யுடையவராய்
வ்யோம்ன பரஸ்மாத் சவிதம் சமேத்ய லஷ்ம்யா நியோகாத் குருகாதி ராஜ
சமந்தரராஜ த்வயமாஹ யஸ்மை நாதாய தஸ்மை முனயே நமோஸ்து -என்று
திருமாலால் அருளப் பட்ட சடகோபன்
அருள் கொண்டு ஆயிரம் இன்தமிழ் பாடினான் -என்கிறபடியே அந்த ஆழ்வாருடைய அருள் பெற்ற நாத முனி என்கை-
ஆழ்வாரை திருப் புளி யடியிலே மயர்வற மதி நலம் அருளி விசேஷ கடாஷம் பண்ணினாப் போலே
அவ்விடம் தன்னிலே ஆழ்வாரும் விசேஷ கடாஷம் -செய்து அருளினார் –
தாம் மயர்வற மதிநலம் பண்ணி யருளி பஜனத்தில் சேர்க்கிறார் -என்னக் கடவது இ றே
ஆழ்வார் உடைய பக்தியோடு விகல்பிக்கலாம் படியான -அகாத பகவத் பக்தி – இ றே இவரது
இத்தால் -முனிவரை இடுக்கியும் -என்னும்படி சத்வார பகவத் பிரசாதம் அடியாக நடந்து வந்த சாஸ்த்ரங்களில் காட்டிலும்
அத்வாரக பகவத் பிரசாதம் அடியாக ஆழ்வாராலே அவதரித்த ஏற்றத்தை யுடைய திருவாய் மொழியை
அவர் பிரசாதம் அடியாக பெற்ற ஏற்றத்தை சொல்லுகிறது
சாஸ்திர ப்ரவர்த்தனத்துக்கு அடி -வியாச பிரசாதம் ஆகையாலே ஆர்ஷமூலமாய் இருக்கும் -அது –
நாதேன யாமுனம் வ்யாசம்-என்றது இ றே
ப்ரஹ்ம ருத்ராஜூன வியாச -என்று அனுபாச்யராக எடுக்கப் பட்டது இ றே அவர்களை
அதின் தாத்பர்யமான இதுக்கு -திருவருள் மால் சேனை முதலி சடகோபன் -என்கையாலே சர்வேஸ்வர பிரசாத சாஷாத்க்ருத ஜ்ஞானரான ஆழ்வார் அடியாக இருக்கும்
ஆகையால் இ றே லஷ்மி நாத சமாரம்பாம் -திருவருள் மால் -என்று அடியிலே எடுத்து அருளிற்று
நாதமுனிகள் தாம் தண் தமிழ் கண்ணி நுண் சிறுத் தாம்பை பண்டை யுருவால் பன்னீராயிரம் உரு உரை செய்ய
ஒண் தமிழ் மாறன் திரு உள்ளம் உகந்து திவ்ய ஜ்ஞானம் நாதமுனிக்கு நயந்து அருள் புரிந்தார் இ றே –

பங்கஜ நேத்ரர் ஆகிறார் -சீர் உய்யக் கொண்டார் -என்னும்படியான சீர்மையை யுடையவர் –
அவர்தாம் புண்டரீகாஷர் இ றே
புண்டரீகத்ருசே நம -என்று யாயிற்று அருளிச் செய்தது -அவருக்கு சீராவது -சரணாகதிக்கும் -தீர்க்க சரணாகதிக்கும் ப்ரவர்த்தகராம் படியான பெருமை –
ஸா ஹி ஸ்ரீ ரம்ருதா சதாம் -என்னக் கடவது இ றே
பரம யோகிகளான ஸ்ரீ மன் நாத முனிகள் குருகைக் காவல் அப்பனை யோக ரஹஸ்யத்தில் ஊன்று வித்து
இவரை பிரவர்த்தி பிரவர்த்தநததிலே நியோகித்து அருளினார் இ றே-

ராமர் ஆகிறார் -ஸ்ரீ ராம மிஸ்ரர் -அவர்தாம்
சமா த்வாதச தத்ராஹம் ராகவஸ்ய நிவேசனே -என்னும்படி பன்னிரண்டு ஆண்டு ஆச்சார்யர் திரு மாளிகையில் சேவை பண்ணி
படியாய் கிடந்தது -மணக்கால் நம்பி -என்னும் -திரு நாமத்தை உடையவர் -என்கை –

யமுனாவஸ்தவ்யர் ஆகிறார் –
தூய பெரு நீர் யமுனைத் துறைவன் திரு நாமத்தை -இங்கே நம்முடைய பேரனை -யமுனைத் துறைவனை -என்று உம்முடைய அருளாலே உகந்து சாத்தும் என்று
நாத முநிகளால் நாம நிர்த்தேசம் பண்ணப் பெற்று அவரை –
ஜன்மநா வித்யயாச -பிதா மஹராக யுடையவர் -என்கை
அவரும் பிதாமஹம் நாத முநிம் விலோக்ய -என்றார் –
இப்படி அவராலே சாத்தப்பட்ட திரு நாமம்
எதிகட்கு இறைவன் யமுனைத் துறைவன் -என்று பின்பும் பேர் பெற்றது –
அடியார்க்கு இன்ப மாரியும்-
நாதமுனி நாம ஜீமூதிமமும் வர்ஷித்தால்
தூய பெரு நீர் யமுனைத் துறைவன் என்னும்படியான யாமுனா தீர்த்தம் எல்லார்க்கும் அவஹாக்கிலாம் இ றே
யாமு நார்யா ஸூ தாம் போதி மவகாஹ்ய –
ஜ்ஞானத் துறை படிந்தாடி -என்னக் கடவது இ றே
இவரும்-நாதாய நாத முனயே அத்ரபரத்ர சாபி நித்யம் யதீய சரனௌ சரணம் மதீயம் -என்றும்
ஆத்யஸ்ய ந குலபதேர் வகுளா பிராமம் ஸ்ரீ மத ததங்கரி யுகளம் ப்ரணமாமி மூர்த்த்நா -என்றும்
உபகார ஸ்ம்ருதி அதிசயத்தாலே திருவடி தொழுகையால் அடி யுடையார் இ றே இருப்பது-
யமுனாவாஸ் தவ்யர்-என்றத்தை -மணக்கால் நம்பி சென்றாம் ஆளவந்தார் -என்கிறது
மணக்கால் நம்பி சென்றாம் ஆளவந்தார்-ஆவது வாதத்திலே
ஆக்கி யாழ்வான் வாயை அடக்குகையாலே -ஆளவந்தார் -என்ற திரு நாமத்தை யுடையராய்
தர்சனத்தை ஆளவந்தாராய் இருக்கையாலே –
இத்தை மணக்கால் நம்பி கேட்டு இவர் பாடு பலகால் நடந்து பச்சை இட்டு இ றே இவரை
பச்சை மா மலை போல் மேனியிலே மூட்டிற்று
ஆகையால் அவர் யதன விசேஷத்தாலே ஆனவர் -என்றபடி -பூர்வதனமிது -புகுந்து அனுபவியும் -என்று -ஆறு புடை சூழ் அரங்கனைக் காட்டினார் இ றே
அவரும் -மதிள் அரங்கர் வண் புகழ் மேல் ஆன்ற தமிழ் மறைகள் ஆயிரமும் -என்னும்படி
திருவாய்மொழி முதலானவற்றையும் திருமாலை யாண்டான் -முதலானார்க்கு பிரசாதித்து அருளினார்
நடமினோ நமர்கள் உள்ளீர் -என்று அபிநயிக்கும் படி இ றே அக்காலத்தில் நடந்து போந்தது-

மாலாதரர் ஆகிறார் -குரு மாலாதரர் -என்னும்படி யான திருமாலை யாண்டான்
குருமாலாதரர் -என்கிற விசேஷணம்-திருவாய் மொழி பிரவர்த்தனத்தால் யுண்டான குருத்வத்தை சொல்கிறது –
உடையவருக்கு திருவாய் மொழி யின் அர்த்தத்தை உபதேசித்தார் இ றே இவர் தாம் –
இது அறியா காலத்திலே அறியலாம் –
மாலாதரர் என்று -நாடகமழ் மகிழ் மாலை மார்வரான ஆழ்வார் திரு நாமம் ஆயிற்று –
செந்தொடைக்கு அதிபர் -என்று இ றே பர்யாய நாமம் இருப்பது -சொல் மாலைகள் சொல்லும்படி மாலை இட்ட படி –
யோகீந்த்ரம் குருகேச சந்திர ஜலதிம் -அதாவது -குருகைப் பிராற்கு அன்பாம் எதிராசர் -என்றபடி
திருக் குருகைப் பிரான் பிள்ளானை ஆழ்வார் திரு நாமம் சாத்துகையாலும்
புத்ரீ க்ருதோ பாஷ்யக்ருதா ஸ்வயம் வ -என்கிறபடியே குமாரராக அபிமானித்து அருளுகையாலும் –
யதிராஜாப்தி சந்த்ரமா – என்று அவரைக் கண்டபோது எல்லாம் சந்திர உதயத்தில் மஹோததி போலே ப்ரீதி பிரகர்ஷத்தை யுடையராய் இ றே உடையவர் தாம் இருப்பது –
மாறன் அடி பணிந்து உய்ந்தவன் -உறு பெரும் செல்வமும் இத்யாதி –அறிதர நின்ற இராமானுசன் இ றே
வளர்த்த இதத்தாய் இராமானுசன் ஆகையால்
ஆழ்வார் திருவடிகளில் தமக்கு யுண்டான சம்பந்தம் பிள்ளான் அளவும் வெள்ளம் இட்டது –
இப்படி திருவாய் மொழியின் அர்த்தத்தை இவர் இடத்திலே நோக்கின படியையும்
அது அப்பால் புற வெள்ளம் இட்ட படியையும்
தெள்ளாரு ஞானத் திருக் குருகைப் பிரான் பிள்ளான் எதிராசன் பேரருளால் -என்று தொடங்கி
அன்று யுரைத்த இன்பமிகும் ஆறாயிரம் -என்று அருளிச் செய்தார் இ றே
சமஸ்க்ருத திராவிட வேதங்களான உபய வேதாந்தத்துக்கும் ப்ரவர்த்தகர் ஆயிற்று இவர் தாம்
ஆகையால் இ றே -குருகேச்வர பாஷ்ய க்ருதௌ–என்றது –

கோவிந்த கூராதிபராகிறார் –கோவிந்தர் -கூரேசர் -என்னும்படி தர்சனத்துக்கு திருஷ்டி பூதர் ஆனவர்களாய்
உடையவருக்கும் அத்தாலே அத்யந்த அபிமத விஷயம் ஆனவர்கள் –
இவர்களை யாயிற்று பிரபத்தி சாஸ்திர ப்ரவர்த்தகராக கற்பித்து அருளிற்று –
ஸ்ரீ பாஷ்ய சிம்ஹாசனத்துக்கு நடாதூர் ஆழ்வானை இ றே அதிஷ்டாதாவாய் ஆக்கி அருளிற்று –
ஆழ்வான் திவ்ய ஸூ க்திகள் எல்லாம் பிரபத்தி யார்த்த ப்ரகாசகமான ஆழ்வார்கள் திவ்ய பிரபந்தங்களை அடி ஒற்றியாயிற்று இருப்பது –
இங்கு இவ்விருவரையும் இடுக்கிச் சொன்னது -இருவரும் பட்டருக்கு ஆச்சார்யர்கள் ஆகையாலே
பட்டருக்கு திருவாய் மொழியில் ஆழ்வானோடு உண்டான சம்பந்தம் -எண் பெருக்கு அன்னலத்து-ஏட்டிலே கண்டு கொள்வது
எம்பார் பட்டருக்கு பகவச் சரண வரண அனுஷ்டான ப்ரகாசகமான த்வய உபதேச முகேன
ஆச்சார்யர் என்னுமது -மத் விஸ்ர மஸ்தலீ-என்கிற அவர் ஸ்ரீ ஸூ க்தியிலே காணலாம்
பட்டர் ஆழ்வான் திருவடி களிலே ஆஸ்ரயித்து எம்பார் பக்கலிலே ஜ்ஞான உபஜீவனம் பண்ணினார் -என்றும்
பிரமேய ரத்னத்தில் பேசிற்று
பட்டர் தாம் எம்பார் பாடு ரஹச்யம் கேட்டாராய் இ றே இருப்பது -என்று தனித் த்வயத்தில் அருளிச் செய்தார்
இவருக்கு அவர் பக்கல் திருவாய்மொழி அந்வயம் உண்டு என்னுமதுக்கு
பூவியல் பொழிலும் தடமுமவன் கோயிலும் கண்டு ஆவியுட்குளிர -என்கிற விடத்துக்கு
வியாக்யானம் செய்து அருளுகையில் சீராமப் பிள்ளை அருளிச் செய்த வார்த்தையை ஸ்மரிப்பது-
அது தோன்ற -ஸ்ரீ வசன சிஹ்ன மிஸ்ரேப்ய
ராமானுஜ பதாச்சாயா
என்ற இரண்டு ஸ்லோகத்தையும் சஹபடித்து அருளிற்று
பட்டார்யாய பிரபத்திம் ஹ்யதி சததவரம் திராவிடம் நாய மௌ ளே ரர்த்தம்
ஸ்ரீ பாஷ்யம் அந்யா நபி ச யதிவராதேஸ தோர்த்தான் ரஹச்யான்
யச்சோக்தோ தேசிகேந்த்ரோ யதிவர சரணச்சாய நாமார்யா வர்யச்தம் கோவிந்தார்யா
மச்மத் குலகுரு மமிதஜ்ஞான வைராக்யமீடே -என்னக் கடவது இ றே-

பட்டார்யம் -அவர் ஆகிறார் -பட்டர் -என்னும்படியான ஸ்ரீ பராசர பட்டர் -என்னும் அபிதானத்தை யுடையவராய்
ஸ்ரீ ரெங்க ராஜ கமலாபத லாலிதத்வம் -என்னும்படி
பெரிய பெருமாளுக்கும் ஸ்ரீ ரெங்க நாயகியார்க்கும் குமாரராய்
அதுக்கு மேலே யுடையவரும் -இவனை நம் யுடையார் எல்லாரும் நம்மைக் கண்டால் போலே கண்டு வாருங்கோள்-என்று பெருமாள் சந்நிதியில் விசேஷ அபிமானம் பண்ணும்படியான பெருமையை யுடையவர் -என்கை –
இவர் தாம் -அஜஸ்ரம் சஹச்ர கீத அனுசந்தான தத்பரராய் பகவத் திருக் குணங்களை அனுபவித்துக் கொண்டு
திரு நெடும் தாண்டகத்திலும் மண்டி இ றே இருப்பது
இவருடைய திவ்ய ஸூ க்திகளும் அருளிச் செயலை அடி ஒற்றி இ றே இருப்பது
அருளிச் செயல் நாலாயிரத்துக்கும் பட்டர் நிர்வாஹமே இ றே அதிசயித்து இருப்பது-

நிகமாந்த யோகி யாகிறார் -வேதாந்த முனியான -வேதாந்தி நஞ்சீயர் என்கை -நமோ வேதாந்த வேத்யாய -என்னக் கடவது இ றே
பட்டர் நெடும் தூரம் சென்று தேடித் திருத்தி எடுத்த விஷயமாயிற்று இவர் தாம்
ஏவம் விதமான இவர் பட்டர் நல்லருளாலே யாயிற்று ஒன்பதினாயிரமாக திருவாய்மொழிக்கு வியாக்யானம் செய்தருளி
நூறுரு திருவாய் மொழியை நிர்வஹித்து அத்தாலே சதாபிஷேகமும் செய்து அருளினார் -எனபது ஜகத் பிரசித்தம்-இ றே-

ஜகதாச்சார்யர் ஆகிறார் -துன்னு புகழ் கந்தாடைத் தோழப்பர் -இத்யாதிப்படியே உண்டான திருநாம ஏற்றத்தை யுடையரான
இரு கண்ணர்க்கு அன்புடைய நம்பிள்ளை என்கை
நம்முடைய பிள்ளை திருக் கலி கன்றி தாசர் -என்று இ றே நஞ்சீயரால் இவர் நாம நிர்த்தேசம் பண்ணப் பட்டது –
காருண்ய பூர்ணம் கலிவைரிதாசம் -என்னக் கடவது இ றே
இவர் தோற்றி இ றே திருவாய் மொழி முதலான திவ்ய பிரபந்தங்களுக்கு எல்லாம் வியாக்யானம் உண்டாயிற்று –
இவர் தாம் ஆழ்வார் அவதாரம் என்னுமது தோற்ற கார்த்திகையில் கார்த்திகை திரு நஷத்திரம் நாள்
கலியன் திருமங்கை ஆழ்வார் திரு வீதி எழுந்து அருளும் போது
திருக் கலிகன்றி தாசரான இவர் திரு மாளிகை வாசலிலே திருக் காவணம் இட்டு அலங்கரிக்க
அங்கே எழுந்து அருளி திருப் பணியாரம் வகைகளும் அமுது செய்து அருளி ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு பிரசாதித்து
அவரை அத்யாபி உபலாலித்து-அவ்வருகே எழுந்து அருளுவர் என்று பெரியோர்கள் அருளிச் செய்து அருள்வார்
ஆகையால் இ றே நம் ஆழ்வார் என்னுமோபாதி நம்பிள்ளை என்று போருகிறது
அவரை பிரதம ஆச்சார்யர் -என்னுமோபாதி
இவரை லோகாச்சார்யர் -என்ற்றும்
அவரை -திரு நா வீறுடைய பிரான் -என்னுமோபாதி
இவரை வீறுடையார்-என்றும் போருகிறது
ஆழ்வார் தம்முடைய அவதாரம் போலே ஓர் அவதார விசேஷமாய் பெருமாளுக்கு பிராணபூதரான நம்பிள்ளையை -என்று
இ றே ஜ்ஞானாதிகையான தோழப்பர் தேவிகளும் அருளிச் செய்தது
வார்த்தோஞ்ச வ்ருத்யாபி –என்று தொடங்கி
தஸ்மை நமஸ் ஸூக்தி மஹார்ணாய-என்று இ றே நம்பிள்ளை வைபவம் இருப்பது-

சக்ருஷ்ண த்வயௌ–அவர்கள் ஆகிறார் -இரு கண்ணர்-என்னும்படி சௌ ப்ராத்ரத்தை யுடையராய்
நம்பிள்ளைக்கு நயன த்வயம் -என்னலாம் படி -ஸூஷ்ம தர்சிகளாய் இருக்கிற
பெரியவாச்சான் பிள்ளை -வடக்குத் திரு வீதிப் பிள்ளை -என்கை
இரு கண்ணர்க்கு அன்புடைய நம்பிள்ளை -என்கையாலே -ச்நேஹேன க்ருபயா வாபி -என்கிறபடியே –
சிநேக பூர்வகமான கிருபையாலே யாயிற்று சகல அர்த்தங்களையும் பிரசாதித்து அருளிற்று
இவர்களும் அப்படியே -மாறன் மறைப் பொருளைச் சொன்னது இருபத்து நாலாயிரம் –
நன்குரைத்த ஈடு முப்பத்தாறாயிரம் –
என்னும்படி இ றே திருவாய் மொழிக்கு வியாக்யானமும் ஈடும் அருளிச் செய்தது –
அத்தைப் பற்ற -ஸ்ரீ கிருஷ்ண த்வய பாதாப்ஜே பஜே யதநுகம்பயா -விபாதி விசதம் லோகே திராவிட ப்ரஹ்ம சம்ஹிதா -என்று அனுசந்தித்தார்கள்
பெரியவாச்சான்பிள்ளை பின்புள்ளவைக்கும் -என்னும்படி மற்ற மூவாயிரத்துக்கும் வியாக்யானம் செய்து அருளினார் இ றே
திருவாய்மொழிக்கு வடக்குத் திரு வீதிப் பிள்ளையிலும் பிரதம ப்ரவர்தகர் ஆச்சான் பிள்ளை யாகையாலே
ஸ்ரீ மத் கிருஷ்ண சமாஹ்வாய
ஸ்ரீ கிருஷ்ண பாத பதாப்ஜே
என்ற இரண்டு தனியனும் அடைவே இவருக்கு உண்டாயிற்று
அது தோன்ற முந்தின தனியன் ஆச்சான் பிள்ளையது என்று அருளிச் செய்வர்கள்-
பெரியவாச்சான்பிள்ளை தெள்ளார் வடக்குத் திரு வீதிப் பிள்ளை -என்று இ றே எடுத்து அருளிற்று
ஆச்சான் பிள்ளை சந்நிதியிலே தாம் சில அர்த்த விசேஷங்கள் கேட்டதாகவும் அருளிச் செய்தார் இ றே வடக்குத் திரு வீதிப் பிள்ளை –
ஆசார்யசம்மதி -என்கிற ரஹஸ்யத்திலே-

அங்கன் இன்றிக்கே
முந்தின தனியன் வடக்குத் திரு வீதிப் பிள்ளையதாகவும்
மற்றைத் தனியன் -ஆச்சான் பிள்ளையதாகவும் -அருளிச் செய்வார்கள் –
திருவாய் மொழியில் ஈட்டின் பிரதான்யத்தாலும்
வடக்குத் திரு வீதிப் பிள்ளை செய்து அருளின ஆச்சார்ய சம்மதியினடியிலும்
ஸ்ரீ மத் கிருஷ்ண சமாஹ்வாய -என்று எழுதி இருக்கையாலும் இத்தை வடக்கு திரு வீதிப் பிள்ளை தனியனாகவும்
ஸ்ரீ கிருஷ்ண பாத பாதாப்ஜே -என்கிறது ஆச்சான் பிள்ளை யதாகவுமே சித்தாந்தம்
அப்போது -சர்வ சித்திர பூந்மம-என்கிறது சரசமமாய் இருக்கும் –
அவர் ரஹஸ்ய பிரபந்தங்களின் அடியில் எழுதி இருக்குமத்தும் அப்படியே-

மாதவ பத்ம நாபர்கள் ஆகிறார் -இவர் ஈடு அளித்ததற்கு ஏய்ந்த மாதவர் பற்பநாபர்-என்கை
இவர்களில் ஸ்ரீ மாதவர் -ஆகிறார் -சி மாதவன் அடிக்கு அன்பு செய்யும் தஞ்சத் தொருவன் -என்றும்
மாதவ சிஷ்யா பாதௌ-என்றும் சொல்லும்படியான நம் பிள்ளை
தம்முடைய ஆச்சார்யரான நஞ்சீயர் திரு நாமம் சாத்தும்படியான பெருமையை யுடையவராய்
அவருக்கு அத்யந்தம் ப்ரீதி விஷயமாய் இருக்கிற
ஈ யுண்ணிச் சிறியாழ்வான் பிள்ளை -என்ற நிரூபகத்தை யுடையரான ஸ்ரீ மாதவர் என்கை
யத் வசஸ் சகலம் சாஸ்திரம் யத்க்ரியா வைதிகோ விதி
யத் கடாஷோ ஜகத் ரஷா தம் வந்தே மாதவம் முநிம் -என்றும்
ஸ்ரீபராசர பட்டார்யா சம்ச்ரய தநாய ஸ்ரீ மாதவ மீஸ்ராய நம -என்றும் சொல்லக் கடவது இ றே
ஏவம் விதரான இவருக்கு ஈடு வந்த வரலாற்றை -சீரார் வடக்குத் திரு வீதிப் பிள்ளை -என்று தொடங்கி -அருளிச் செய்தார் இ றே
வரதார்யா தயா பாத்ரம் ஸ்ரீ மாதவ குரும் ஸ்ரயே
குருகாதீச வேதாந்த சேவோன் மீலித வேதனம் -என்கிற தனியனும் உண்டாயிற்று –

பற்பநாபர் ஆகிறார் –
ஆங்கு அவர் பால் பெற்ற சிறியாழ்வான் பிள்ளை தாம் கொடுத்தார் தம் மகனார் தம் கையில் -என்றும்
மாதவாத் மஜஸ்ய -என்றும் பேசும்படி ஸ்ரீ மாதவ பெருமாள் குமாரரான ஸ்ரீ பற்பநாபப் பெருமாள் -என்கை
இப்படி நம்பிள்ளை யாலே மகா ஐஸ்வர்யமான திருவாய் மொழியின் ஈட்டை ப்ராப்தரான ஸ்ரீ மாதவர்
தம் குமாரரான பத்ம நாபர்க்கு ஈட்டை பிரசாதித்து
நம்பிள்ளை நியமனத்தின் படியே ஓராண் வழியாக உபதேசித்து போரும்படி உபதேசிக்க
அவரும் அப்படியே அனுசந்தித்து ஸ்ரீ கோசத்தை கோயில் ஆழ்வாரிலே திருவாராதனமாக எழுந்து அருளப் பண்ணி
நிதியை நோக்குமா போலே நோக்கிக் கொண்டு போந்தார் இ றே
பெருமாள் கோயிலிலே பட்டர்கள் திரு வீதியிலே திரு மாளிகையிலே
யேநாவகாஹ்ய விமலோஸ்மி சடாரி ஸூ ரேர் வாணீ கணார்த்த பரிபோத ஸூ தாபகாயாம்
ஸ்ரீ மன் முகுந்த சரணாப்ஜ மது வ்ரதாய ஸ்ரீ பற்பநாப குரவே நம ஆஸ்ரய -என்று இ றே கோலாலாபம் இருப்பது –

ஸூ மனே கோலேச தேவாதி பான்-
கோலேசர் ஆகிறார் -கோல வராஹப் பெருமாள் என்ற திரு நாமத்தை உடையரான நாலூர் பிள்ளை -என்கை
இவர் அருளாளர் திருவடி ஊன்றியவர் என்று இ றே இவருக்கு நிரூபகம் –
அதாவது பத்ம நாபப் பெருமாள் திருவடிகளை ஆஸ்ரயித்து
அவரை ப்ரணிபாத நமஸ்கார பிரிய வாக்குகளாலே
குருக்களுக்கு அநு கூலராய் மிகவும் உகக்கப் பண்ணி
இப்படி பலசாதன சிஸ்ருஷை யை யுடையராய் இருக்கிற நாலூர் பிள்ளைக்கு
ப்ரணிபாத பிரசன்னராய் இருக்குமவர் ஈட்டை இவர் ஒருவருக்குமே ஓராண் வழியாக முன்பு நடந்து போந்த படியே பிரசாதிப்பதாக இவரை பேரருளாளப் பெருமாள் திரு முன்பே கொண்டு புக்கு
பிரமாண புரஸ் சரமாக சூழறவு கொண்டு சொல்ல வேணும் -என்று ஸ்ரீ சடகோபனை அர்ச்சக முகேன இவர் திரு முடியிலே ஊன்றுவிக்க
அத்தை இவர் வெளியிடாமைக்கு ஊன்று விக்கிற ஆகாரத்தை பாவஞ்ஞாரான இவர் அறிந்து
பெருமாள் திரு முக மண்டலத்தைப் பார்த்து
தம் திரு முடியிலே வைத்த ஸ்ரீ சடகோபனை -அருளாளர் திருவடி ஊன்றினவர் -என்னும்படி
தம் திருக்கையாலே ஊன்றி சம்ஞ்ஞை பண்ண
அது சர்வஞ்ஞரான திரு உள்ளத்திலே உற்று
இத்தை நீர் எல்லாருக்கும் பிரகாசிப்பியும் -என்று அர்ச்சக முகேன திவ்ய ஆஞ்ஞையை இட்டு அருள
அத்தைக் கேட்ட பத்மநாபரும் எண்ணின வாறாகாமையாலே-திரு உள்ளமான படி -என்று பின்பு உகப்புடனே பிரசாதித்து அருளினார் -என்கை
பாங்குடனே நாலூர் பிள்ளைக்கு அவர் தாம் -என்னக் கடவது இ றே-

இவர் இத்தை எல்லாம் வெளியிட வேணும் -என்கிற தம்முடைய பர சம்ருத்ய ஏக பிரயோஜனதா ரூபமான திரு உள்ளக் கருத்தாலே
பேரருளாள பெருமாளைக் குறித்து பிரதஷிண நமஸ்காராதிகளைப் பண்ணியும்
அநதிக்ரமண ஹேதுவான சரண க்ரஹணத்தை பண்ணியும் யாயிற்று இவர் அர்த்தித்தது –
அவரும் -அர்த்திதார்த்த பரிதான தீஷிதராம் படி செய்து அருளினார்
இப்படி வகுள பூஷண வாக் அமிர்தம் மாத்ரம் அன்றிக்கே
ஸ்ரீ வசன பூஷணத்துக்கும் பிரவர்த்தகர் பேரருளாளப் பெருமாள் இ றே –
நாலூர் பிள்ளை தான் இப்படி ஈட்டை அர்த்தித்துப் பெற்ற படியாலே -ஸூ மன கோலேசா -என்று விசேஷணமாக அருளிச் செய்தது
சதுர்க்ராமோத்பவம் ஸ்ரீ மத் ராமாவரஜ கிங்கரம்
சர்வதா த்வய சந்நிஷ்டம் கோலாஹ்வயமஹம் பஜே -என்றும்
ஸ்ரீ மத் ராமானுஜ தாஸ பாதயுக்ம முபாஸ்மஹே
சடகோபார்யா வாணீ நாமர்த்த தாத்பர்ய சித்தயே-என்று இ றே இவர் விஷயத்தில் தனியன்கள் இருப்பது
இப்படி திருவாய் மொழிக்கு பிரவர்த்தகர் மாத்ரம் அன்றிக்கே
பெரியாழ்வார் திருமொழி பெரிய திருமொழி முதலிய வற்றுக்கும் சப்தார்த்த வியாக்யானமும் செய்து அருளினார்
அதில் ஸ்ரீ வசன பூஷண வாக்யத்தையும் சம்மதியாக எடுத்து அருளினார்
யா பத்ம நாப குருதஸ் சடஜிந் முநீந்திர ஸ்ரீ ஸூ க்தி பாஷ்ய மதிகம்ய சம்ருத்த போத
தத் தேவராஜ குரவே ஹ்யதி சச்சதுஷ் பூர்வாசேத்த கோலவர தேசிகம் ஆஸ்ரயே தம் –
என்று இ றே இவர் சம்ப்ரதாய க்ரமம் இருப்பது-

தேவாதிபராகிறார் -தேவப் பெருமாள் –அவர் தாம் ராமானுஜ தாஸ ஸூ தரான தேவராஜர் –
நாலூர் பிள்ளை தாம் தம்முடைய திரு உள்ளக் கருத்தின் படியே பெருமாள் தலைக் கட்டி அருளுகையாலே பெற்றுப் பேரிடும்படியான அந்த உபகாரத்துக்கு
தமக்கு திருக் குமாரர் திரு வவதரித்த உடனே -தேவப் பெருமாள் -என்று திரு நாமம் சாத்த
இப்படி பேர் பெற்று -சகல கலா பூரணராய் வளர்ந்து போருகிற குணசாலியாய்
நல்ல மகனாரான நாலூர் ஆச்சான் பிள்ளைக்கு -இத்தை வர்த்தித்துக் கொண்டு போரும் என்று ஈட்டை பிரசாதித்து அருளினார்
ஸூ தம் கோல வராஹச்ய குருகாதீச பூர்வஜம்
சாந்தம் சத்வ்ருத்த நிரதம் தேவராஜ மஹம் பஜே -என்றும்
நமோஸ்து தேவராஜாய – என்னும்படி இ றே நாலூர் ஆச்சான் பிள்ளை வைபவம் இருப்பது –
அன்றிக்கே
இவர் அருளாளர் திருவடி ஊன்றினவர் -என்கிறதுக்கு
இவர் என்று கீழ் ப்ரஸ்துதமான பத்ம நாபரைச் சொல்லி
அருளாளர் -என்று அவருடைய அருளை உடையவர் என்று நாலூர் பிள்ளையைச் சொல்லி
திருவடி ஊன்றின தேவப்பெருமாள் என்று ஈட்டை பிரகாசிக்கும்படி
பேர் அருளாளப் பெருமாளாலே திருவடி ஊன்ற பெற்ற நாலூர் ஆச்சான் பிள்ளையை சொல்லி
அப்படி திருவடி ஊன்றின தேவப் பெருமாள் கைக் கொண்டு அருளும் திருமலை ஆழ்வார் என்று திருவாய் மொழிப் பிள்ளையை சொல்லுகிறது
என்றும் அருளிச் செய்து போருவர்கள் –
இந்த யோஜனையே -மேலோர்க்கு ஈந்தார் அவரே மிக்கு -என்கிறதுக்கு மிகவும் சேர்த்தியாய் இருக்கும்
தேவாதிபான் -என்கிற பஹூ வசனத்தாலே -கீழ் உக்தமானவர்கள் எல்லாரையும் சொல்லுகிறது
திருமலை ஆழ்வார் பதங்கள் முன்பு என்னுள் சேர்ந்தனவே -என்னக் கடவது இ றே-

நாதம் பங்கஜ நேத்ர -என்கிற தனியனும்
திருவருள்மாலை என்கிற தமிழ் திரு நாமத் தனியனும்
ஈட்டுக்கும் மற்ற அருளிச் செயல் வ்யாக்யானங்களுக்கும் தனியனாக
முப்பத்தாறாயிரப் பெருக்கரான பெரிய ஜீயர் அனுசந்தித்துப் போருமதாய் இருக்கும் –
நாதம் -என்று தொடங்கி
திருவருள் மால் –திருமலை ஆழ்வாரிலே சாற்றும் படியாய் இருக்கும்
ரஹஸ்யங்களின் உடைய வரலாற்றையும்
லோக குரும் குருபி -என்று தொடங்கி
தீப்ர சயான குரும் ஸ பஜேஹம்-என்று தலைக் கட்டின தனியனாலே அனுசந்தித்து அருளினார் –
தேவாதிபான் -என்று சொல்லுகிற இடத்தில் ஈட்டில் அர்த்தத்துக்கு உபயுக்தமாக
வகுள பூஷண சாஸ்திர சாரமான ஸ்ரீ வசன பூஷணம்
த்வயார்த்தம் தீர்க்க சரணாகதி என்றது சார சங்க்ரஹத்திலே-என்னும்படியான சார சங்க்ரஹம் முதலானவற்றை அருளிச் செய்த
லோகாச்சார்ய குருவும்
திருவாய்மொழி வியாக்யானம் இருபத்து நாலாயிரத்துக்கு ப்ரவர்த்தகரான அபய பரதராஜ புத்ரரும்
அவர் சிஷ்யராய் திருவாய் மொழிக்கு உரை பன்னீராயிரமாக அருளிச் செய்த ஸூ ந்தரராஜ மாத்ரு முனியும்
திராவிடம் நாயக ஹ்ருதய தர்சியான ஸூ ந்தர ஜாமாத்ரு தேவரும் ஸூ சிதர்
ஆகையால் இ றே இவர்கள் தனியங்களை அனுசந்திக்கிறது-
இவர்களுக்கு மேலாக வாயிற்று
நமோஸ்து தேவ ராஜாய
நமஸ் ஸ்ரீ சைல நாத –
என்று நடத்திப் போருவது
தேவாதிபரான நாலூர் ஆச்சான் பிள்ளை மேலோர்க்கு ஈகையாவது
கீழில் அவர்களைப் போலே ஓராண் வழியாக ஆழ்வாரை திருப் புட்குழியிலே கைக் கொண்டு அருளி
அங்கு நின்றும் திரு நாராயண புரத்தில் எழுந்து அருளி
அவர் தொடக்கமாக ஆயி -பிள்ளை -உள்ளிட்டாருக்கும்
பிரசாதித்து அருளின படி என்கை –

கோலாதிபாத் பிதுரவாப்ய சஹச்ர கீதேர் பாஷ்யம் ஹி பூர்வதர தேசிக வர்ய குப்தம்
த்ரேதா ப்ரவர்த்ய புவி ய ப்ரத யாஞ்சகர தம் தேவராஜ குருவர்ய மஹம் ப்ரபத்யே -என்றும்
ஸ்ரீ சைல நாத குருமாத்குரு ரூத்த மாப்யாம் ஸ்ரீ ஸூ க்தி தேசிக வரேண ஸ யஸ் த்ரி தைவம்
வ்யக்தஸ் சடாரிகிருத் பாஷ்ய ஸூ சம்ப்ரதாயோ விஸ்தாரமேதி சஹி வைஷ்ணவே புங்க வேஷூ –என்றும்
தேவாதிபாத் சமதிகம்ய சஹச்ர கீதே பாஷ்யம் நிகூடமதய ப்ரத யாஞ்சகார
குந்தீ புரோத்பவமும் சரணம் பஜே தம் ஸ்ரீ சைல முரு பக்தி பருத்தும் சடாரௌ-என்றும்
தேவாதி பாதாதி கதம் பாஷ்யம் பராங்குச ஸ்ருதே
ப்ராவர்த்தயத் யச்சேவ தம் சடஜித் ஸூ க்தி தேசிகம் -என்றும்
ஸ்ரீ தேவ ராஜ குருதோ த்ரவிடாக மாந்த பாஷ்யம் ஹ்வவாப்ய புவி ய ப்ரத யாஞ்சகார
தம் யாதவாத்ரிபதி மாலய சமர்ப்பணைக நிஷ்டம் பஜேய ஜநநீ குரு மஸ்மாதார்யம்-என்றும்
சொல்லக் கடவது இ றே-

இப்படி நடந்து போருகிற ஈட்டின் வரலாற்றை
சீரார்
ஆங்கு அவர்பால்
என்கிற இரண்டு பாட்டாலும் விசதமாக அருளிச் செய்து அருளினார் இ றே பெரிய ஜீயர் –
அவ்வளவும் அன்றிக்கே
திருவாய் மொழிக்கும் மூவாயிரத்துக்கும் திருவாய் மொழிப் பிள்ளைக்கு நாலூர் ஆச்சான் பிள்ளை அர்த்தம் பிரசாதித்து அருளினதுக்கு த்யோதகமாக
மாற்றுத் தாய் -என்கிற பாட்டின் வ்யாக்யனத்திலே பெரிய ஜீயர் தாமே ஸூ சிப்பித்து அருளினார்
பிள்ளை செய்து அருளின பெரியாழ்வார் திரு மொழி வ்யாக்யானத்தில் பல இடங்களிலும் நாலூர்ப் பிள்ளை பிரசாதித்ததாக ஆச்சான் பிள்ளை அருளிச் செய்வர் என்று இ றே அருளிச் செய்தது
பிதா புத்ரார்களுக்கு திருவாய் மொழி முகேன உண்டான சிஷ்யார்ச்சார்யா சம்பந்தம்
கூராதி பட்டார்யர்கள் இடங்களிலும்
அபய பரதராஜ தத் புத்ரர்கள் இடத்திலும்
கிருஷ்ண பாத லோகாச்சார்யர் இடங்களிலும்
மாதவ பத்ம நாபர் இடங்களிலும்
கோலேச தேவாதிபர் இடங்களிலும் தர்சிக்கலாய் இருக்கும் –

இப்படி தேவாதிபராலே அதிகத பரமார்த்தரான ஸ்ரீ சைலாதீச தேசிகரும்
ஸ்ரீ சைல நாத முரு பக்திப் ப்ருதம் சடாரௌ -என்னும்படி ஆழ்வார் திருவடிகளில் அதி பிரவணராய்
பிரசாத லப்த பரம ப்ராப்ய கைங்கர்ய சாலினே-என்று சொல்லுகிறபடியே ஆழ்வார் திருவடிகளிலே அசேஷ சேஷ வ்ருத்தியிலும் அன்வயித்து
அவருடைய அமுத மென்மொழியான திருவாய் மொழியே தமக்கு தாரகாதிகள எல்லாமுமாக அனுபவித்துக் கொண்டு வாழ்ந்து போரா நிற்க
அப்படி அனுபோக்தாவான அந்த திருவாய் மொழிப் பிள்ளை மாதகவால் வாழும் மணவாள மா முனிவன் -என்றும்
ஸ்ரீ சைல தயா பாத்ரம் -என்றும் பேசும்படி
பெரிய ஜீயரும் அவர் திருவடிகளை ஆஸ்ரயித்து
அஸி ச்ரயதயம் பூய ஸ்ரீ சைலாதீச தேசிகம்
அசேஷ நஸ்ருணோத் திவ்யான் பிரபந்தான் பந்த நச்சித -என்கிறபடியே
திருவாய்மொழி முதலான அசேஷ திவ்ய பிரபந்த தாத்பர்யத்தையும் அவர் உபதேச முகத்தாலே லபித்து அருளினார் இ றே-

பின்பு சர்வ லோக பிரசாரம் உண்டாம்படி இ றே இவர் ஈட்டை நடத்தி அருளிற்று –
அதுக்கு மேலே இவருக்கு பெருமாள் அருள் பாடிட்டு அருளி தம் திருவடி ஊன்றுவித்து இ றே
திருவாய் மொழியின் ஈட்டை பிரவர்த்திப்பித்ததும் –
சரணாப் ஜ சமர்பணாத் தர்சயன் துர்க்ரஹா நர்த்தான் த்ரமிட உபநிஷத் கிராம் -என்னக் கடவது இ றே
அதனால் முப்பத்தாறாயிரப் பெருக்கர் என்றாயிற்று இவர் பேர் பெற்றது –
ஆர்யாச்ச் ஸ்ரீ சைல நாதா திகத சட ஜித் ஸூ க்தி பாஷா மஹிம் நா யோகீந்தரஸ் யாவதாரோ அயமிதி ஸ கதிதோ யோ ரஹச்ய பிரபந்தான்
வ்யாக்யாத் வா நாதரி யோகி பரவர வராத நாராயணாத் யைஸ் ஸ்வ சிஷ்யைஸ் சாதா நீத்
சம்ப்ரதாயம் வரவர முநிபம் நௌமிதம் துங்க போதம் -என்னும்படி இ றே பெரிய ஜீயர் பிரபாவம் இருப்பது
பின்பும் –
யோ அவாப்ய சௌ ம்ய வர யோகி வராச் சடாரி ஸ்ரீ ஸூ க்தி பாஷ்ய மத தத் பிரதிதம் விதேநு
தான் –பட்ட நாத முனி வான மஹாத்ரியோகி வாதூல வமச்ய வரதார்யா முகன் பஜாமா -என்னும்படி
சௌ ம்ய ஜாமாத்ரு முனி வர்யர் சம்ப்ரதாயம் நடந்து போரும்படி இதுவாயிற்று-

தான் பட்ட நாத முனி என்று இவர்களில் பிரத பாத்ரரான பட்டர் பிரான் ஜீயரும் சகல திவ்ய பிரபந்த வ்யாக்யானங்களையும் ஸ்வாச்சார்யா முகேன லபித்து அதுக்கு த்யோதகமாக
அத்தை ஸ்வ பிரபந்தமான அந்திம உபாய நிஷ்டையில்
பணிமானம் பிழையாமே அடியேனைப் பனி கொண்ட மாயன் -என்கிற இடத்தில் கிடாம்பி ஆச்சான் கதையையும்
பொன்னுலகு ஆளீரோ -என்கிற பாட்டின் ஈட்டில் அருளாள பெருமாள் எம்பெருமானார் கதையையும்
நாவ காரியம் -என்கிற பாட்டின் வ்யாக்யானத்தில் திருக் குருகைப் பிரான் பிள்ளான் -வடுக நம்பி இவர்கள் அருளிச் செய்த வார்த்தைகளையும்
அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் அருளிச் செய்த திருப் பாவை வ்யாக்யானத்தில்
நஞ்சீயர் ஸ்ரீ பாதத்தை அகன்று போவான் ஒருவன் வைஷ்ணவன் விஷயமாக தத் சம்பந்தம் உடையாராய் இருப்பார் ஜ்ஞானாதிகரைக் குறித்து ஜ்ஞானாதிகையான அம்மையார் அருளிச் செய்த வார்த்தையும்
நம் ஆழ்வாரை பகவத் அவதாரமாக ஆளவந்தார் அருளிச் செய்து போருவர் -என்னுமது திரு விருத்த வ்யாக்யானத்தில் ஸூ ஸ்பஷ்டம் -என்றும்
நம்புவார் பதி வைகுந்தம் -என்கிற இடத்தில்
கூரத் ஆழ்வான் திரு மகனார் அவதரித்த பின்பு சம்சாரத்துக்கும் பரமபததுக்கும் இடைச் சுவர் தள்ளி ஒரு விபூதி யாயிற்று -என்றும்
கண்ணி நுண் சிறுத் தாம்பு வ்யாக்யானத்தில் திரு வழுதி வளநாடு தாசர் அருளிச் செய்த வார்த்தையும்
அவர் பாசுரம் கொண்டு அறுதி இடக் கடவோம் என்று பிள்ளை லோகாச்சார்யார் தாம் அவதார விசேஷம் என்னுமத்தை
ஸ்வ ஆச்சார்யர் ஸ்ரீ வசன பூஷண வியாக்யான பிரவேசத்திலே பிரதிபாதித்த படியையும்
வர்ண தர்மிகள் தாஸ வ்ருத்திகள் -என்கிற இடத்துக்கு திரு நாராயணபுரத்தில் ஆயி அருளிச் செய்த ஸ்ரீ வில்லி புத்தூர் பகவர் துறை வேறிட்ட கதையையும்
மற்றும் தாம் ஐதிஹ்யமாக அருளிச் செய்யும் அசேஷ ரஹச்ய வாக்யங்களையும் அஸ்மத் ஆச்சார்யா உக்தம் என்று பிரகாசிப்பித்தது அருளினார் இ றே-

ஏவம் விதமான அர்த்த விசேஷங்கள் எல்லாவற்றையும் தம் திருவடிகளை ஆஸ்ரயித்து திருவடிகள் அல்லது ஒரு தெய்வம் அறியாத
மதுரகவி தாசர் அண்ணன் முதலானோர்க்கு பிரசாதித்து அருளினார்
அவரும் -பூயோ தீர்ணமிவ சௌ ம்யவரம் முநீந்த்ரம் -என்னும்படி வரவரமுனிவர் யாபராவதாரமாய் -தன்நாமபாஜனராய் தமக்கு சப்ரஹ்ம சாரிகளான அழகிய மணவாளச் சீயருக்கு திருவாய் மொழி ஒழிந்த அனைத்து ஆழ்வார்கள் அருளிச் செயல் மூவாயிரத்துக்கு வியாக்யானமும்
ஆச்சார்யர்கள் திவ்ய ஸூ க்திகளான அசேஷ ரஅச்ய வியாக்யானமும் தாமே பிரசாதித்து அருளினார்
பெரிய திரு மொழிக்கு அண்ணன் மேல் நாட்டிலே எழுந்து அருளி இருந்த காலத்திலே அவர் சந்நிதியிலே அர்த்தம் அனுசந்தித்து அருளினார் -என்று அஸ்மத் ஆச்சார்யர் உக்தம் –

அநந்தரம் -வான மஹாத்ரி யோகி -என்று ப்ரஸ்துதரான வானமா மலை ஜீயரும் தம்முடைய ஸ்ரீ பாதத்தை
ஆஸ்ரயித்த ராமானுஜன் பிள்ளைக்கும்
கோயில் பெரிய கந்தாடை அண்ணன் ஸ்ரீ பாதத்தில் ஆஸ்ரயித்த ஸூ த்த சத்வம் அண்ணனுக்கு
ஈடு முதலான திவ்ய பிரபந்த வ்யாக்யானங்களை பிரசாதித்து அருள
அவர்களும் அப்படியே தாம்தாம் சிஷ்ய புத்ரர்களுக்கு ப்ரவர்த்தகராம் படி பிரசாதிக்க
அத்தாலே அத்யாபி நடந்து செல்கிறது
இனி ருசிர ஜாமாத்ரு யோகீந்திர பாதாஸ்ரயராய்
வாதூல வம்ச வரதார்யரான பெரிய அண்ணனும்
ஆச்சார்யா நியமனத்தின் படியே ஆச்சார்யா பௌத்ரரான நாயனாரை அனுவர்த்தித்து திருவாய் மொழியின் ஈடு பிரசாதித்து அருளினார்

வேதாந்தசார்யராய் -பின்பு ஸ்ரீ வைஷ்ணவ தாசர் -என்று பெரிய ஜீயரால் நிரூபகத்தை யுடையரான பிரதி வாத பயங்கர அண்ணாவும்
பட்டர் பிரான் ஜீயர் ஸ்ரீ பாதத்திலவராய் -அழகிய மணவாள பெருமாள் நாயனார் -என்ற திரு நாமத்தை யுடையவரான
திருப்பதி அழகிய மணவாள சீயர்
முதலானோர்க்கு ஈட்டையும் ஸ்ரீ பாஷ்யத்தையும் பிரசாதித்து அருளி
திருவாய் மொழி நாயனார் என்னுமதுவே நிரூபகமாம் படி ஜீயரை விசேஷ அபிமானம் பண்ணி அருளினார்
முன்பு திருவாய் மொழியின் ஈடு ஏகமுகமாய்
அநந்தரம் த்ரேதாயாவாய்
பெரிய ஜீயரால் ப்ராக்சதுர்த்தாவாய்
அநந்தரம் சஹச்ர முகமாய் ப்ரவஹிக்கும் படியாயிற்று
மற்றும் உண்டான ஆச்சார்யர்கள் சம்ப்ரதாயமும் அவ்வவ சம்ரதாயஸ்தர் உபதேச மூலமாகவும் கண்டு கொள்வது –
இப்படி உபதேச மாலையாய்
துறையுண்டு வருகிற இத் தனியன்கள் இரண்டையும்
திருவாய் மொழி முதலான திவ்ய பிரபந்த வியாக்யானம்
ஆரம்ப வேளையிலும் அவை சாற்றும் சமயத்திலும்
அனுசந்தித்துக் கொண்டு போரும்படி அருளிச் செய்தார் ஆயிற்று –
இந்தத் தனியனில்
நிகமாந்த யோகி ஜகதாச்சார்யௌ சகிருஷ்ண த்வயௌ -என்று
நஞ்சீயரையும்
நம் பிள்ளையையும்
பெரிய வாச்சான் பிள்ளையையும்
வடக்குத் திரு வீதிப் பிள்ளையையும்
எடுத்து இருக்கச் செய்தேயும்
இனிமேல் பிரத்யேகமாகவும் இவர்கள் தனியங்களை அனுசந்திக்கிறதுக்கு கருத்து
நஞ்சீயர் ஒன்பதினாயிரப்படி அருளிச் செய்கையாலும் நம்பிள்ளை ஈடு முப்பத்தாறாயிரத்துக்கு ப்ரவர்த்தகர் ஆகையாலும்
பெரிய வாச்சான் பிள்ளை இருபத்து நாலாயிரப்படி வியாக்யானம் அருளிச் செய்கையாலும்
வடக்குத் திரு வீதிப் பிள்ளை இந்த நாடு அறிய மாறன் மறைப் பொருளை நன்கு உரைத்த ஈடு முப்பத்தாறாயிரப் படி யாலும் –

———————————————————————————————————————————————————-

பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
வாதிகேசரி அழகிய மணவாள சீயர் திருவடிகளே சரணம்
வடக்குத் திரு வீதிப் பிள்ளைதிருவடிகளே சரணம்
பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
நம் பிள்ளை திருவடிகளே சரணம்
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ திரு எழு கூற்று இருக்கை —தனியன்-ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் வியாக்யானம் —

November 27, 2014

ஸ்ரீ யபதியான எம்பெருமானுக்கு திரு மதிள் போல் -அரணாய் -ரஷகமாய் இருப்பவையான
பெரிய திருமொழி
திருக் குறும் தாண்டகம்
திரு வெழு கூற்றிருக்கை
சிறிய திருமடல்
பெரிய திரு மடல்
திரு நெடும் தாண்டகம்
என்கிற ஆறு பிரபந்தங்கள் அருளிச் செய்த ஆழ்வார் உடைய
திரு நாமங்கள் பலவற்றையும் சொல்லி
அவருக்கு மங்களா சாசனம் செய்கிறது இத் தனியனிலே –

ஆச்சார்யர்கள் நேரில் ஸ்துதிக்கத் தக்கவர்கள் -என்று பிரமாணம் கூறுகின்றது –
இவ் வாழ்வாரும் அர்ச்சாவதாரமாய் திவ்ய தேசங்களில் பிரத்யஷமாய் எழுந்து அருளி இருக்கிறார் –
அத்தகைய இவருக்கு பல்லாண்டு கூறுகிறது இத்தனியன் –

—————-

ஸ்ரீ எம்பெருமானார் அருளி செய்த தனியன்–

வாழி பரகாலன் வாழி கலி கன்றி
வாழி குறையலூர் வாழ் வேந்தன் வாழியரோ
மாயோனை வாள் வலியால் மந்திரம் கொள்
மங்கையர்கோன் தூயோன் சுடர் மான வேல்–

——————-

வாழி பரகாலன்-
பகவத் த்விட்டுக்களான பிரதிகூலருக்கு காலனானவன் வாழி

வாழி கலி கன்றி-
கலி தோஷ நிவாரகர் வாழி

வாழி குறையலூர்
திருக் குறையலூரை அவதார ஸ்தலமாக யுடையராய்
அது வாழும்படிக்கு அத்தை நோக்குகிற ராஜா என்னுதல் –
அங்கே வாழுகிறவர் -என்னுதல்

வாழ் வேந்தன்-சுடர் மான வேல் வாழியரோ
வாழியரோ -என்று-
ஆழ்வாரையும்-
அவர் திருக்கையில் வேலையும் ஒரு காலே ஆஸாசித்த படி

மாயோனை –
கடி அரங்கத்து அரவணைப் பள்ளி கொள்ளும் மாயோனை இறே
வாள் வலியால் மந்திரம் கொண்டது-தென்னரங்கன் தன்னை வழி பறித்த வாள் இறே –

வாள் வலியால் மந்திரம் கொள்-
கைப்பொருள்கள் முன்னமே கைக் கொண்டவர் இடத்தில்
இறே மந்திரப் பொருளைக் கைக் கொண்டது

வாழி சுழி பொறித்த நீர்ப் பொன்னி தென்னரங்கன் தன்னை வழி பறித்த வாளன் வாழி-இயல் சாத்து

கைப் பொருள்கள் முன்னமே கைக் கொண்டார் காவேரி நீர் செய் புரள ஓடும் திருவரங்கச் செல்வனார் -நாச்சியார் திருமொழி -11-6-

மந்திரத்தை -அந்தணர் மாட்டு அந்தி வைத்த மந்திரம் -திருநெடும் -4-பற்றி இறே மந்திரம் கொண்டது –

மங்கையர் கோன்-
மங்கை மன்னன் இறே-திரு மங்கை நாட்டுக்கு மன்னன் அன்றோ இவர்

தூயோன் –
தூய்மை என்னும் பாஹ்யாப் யந்தர ஸூத்தியை யுடையவர்
அநந்யார்ஹ சேஷத்வம்
அநந்ய சரண்யத்வம்
அநந்ய போக்யத்வம்
போன்ற அகத் தூய்மைகள்

பஞ்ச சம்ஸ்காரம் புறத் தூய்மை

அங்கமலத் தட வயல் சூழ் ஆலிநாடன் அருள்மாரி யரட்டமுக்கி யடையார் சீயம்
கொங்கு மலர்க் குழலியர் கோன் மங்கை வேந்தன் கொற்ற வேல் பரகாலன் கலியன் -3-4-10-

சுடர் மான வேல்
சுடர் -தேஜோ ரூபமான
மான -பெரிய
பிரகாசத்திலும் பெருமையிலும் மிக்க வேல்-
திருமங்கை மன்னன் எடுக்கும்படியான வேல் –

தூயோன் வேல் வாழியரோ
இத்தால்
ஆழ்வாரோபாதி ஆயுதமும் ஆசாஸ்யம் -என்றபடி

நின் கையில் வேல் போற்றி -என்னக் கடவது இறே

இது தான் கொற்ற வேல் -3-4-10-ஆகையாலே வெற்றி வேலாக இருக்கும்

அத்தாலே-
பொங்கும் பரிவாலே –
இதன் விஜயத்தை வேண்டுகிறது –

————————————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ-பூதம் சரஸ்ய மஹதாஹ்வய பட்ட நாத தனியன் –ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் வியாக்யானம் –

November 27, 2014

ஸ்ரீ பட்டர் திருக் கோஷ்டியூரிலே எழுந்து அருளி இருக்கச் செய்தே
நஞ்சீயர் புருஷகாரம் பிறக்க
அவர்க்காக ஆழ்வார்களை அனுசந்தித்ததாய் இருக்கும் இஸ் ஸ்லோகம் –

ஆண்டாளை -நீளா-என்று தனித்து சரணம் புகுகிறதாய் இருக்கும் அஸ் ஸ்லோகம்

ஆழ்வார்கள் தம் செயலை விஞ்சி இறே அவள் வைபவம் இருப்பது

நிரவதிக பகவத் பிரேம யுக்தரான ஆழ்வார்கள் பதின்மரையும்
அவர்களுக்கு சேஷபூதரான மதுரகவி யதிவரர்கள் இருவரையும் தாம் நித்ய சேவை பண்ணும் படியை அருளிச் செய்கிறார்

மேவினேன் அவன் பொன்னடி மெய்ம்மையே -என்னுமவர் ஆகையாலே ஆழ்வாரைச் சொன்ன போதே அதிலே அவரும் அந்தர்பூதர் –

—————————————————————————————————————————————–

பூதம் சரஸ்ய மஹதாஹ்வய பட்ட நாத ஸ்ரீ பக்தி சார குலசேகர யோகி வாஹான்
பக்தாங்க்ரி ரேணு பரகால யதீந்திர மிஸ்ரான் ஸ்ரீ மத் பராங்குச முநிம் பிரணாதோஸ்மி நித்யம்-

பூதம் –
பூதர் ஆகிறார் –மாதவன் பூதம் -என்று நிரூபிக்கும் படியான மஹத்தையை யுடையராய்
மா மல்லையில் -மாதவி குஸூமத்தில் அவதரிக்கையாலே
கடல் மலை பூதத்தார் -என்று நிரூபகம் ஆனவர் -என்கை –

சரஸ்ய –
மல்லையாய் மதிட் கச்சி ஊராய் -என்கிறபடி மல்லைக்கு அனந்தர பாவியாக எடுப்பதான
கச்சி வெக்காவில் பொய்கையிலே
பூவில் நான் முகனைப் படைத்த -என்கிறபடி பொற்றாமரைப் பூவில் அவதரித்த பொய்கையார் -என்றபடி –

மஹதாஹ்வய –
மகாதாஹ்வயர்-ஆகிறார் -மாடங்கள் சூழ்ந்து அழகாய கச்சி -என்னும்படியான அத்தேசத்துக்கு சமமாய் இருந்துள்ள
மாட மா மயிலையில் –
மா வல்லிக் கேணியில்
செவ்வல்லிப் பூவிலே அவதரித்து

யானுமோர் பேயன் –
பித்தர் என்றே பிறர் கூர
என்று பேசும்படியான பெயர் –

இவர்கள் மூவரும் பர விஷயத்தில் பர பக்தி பர ஞான பரம பக்திகளை யுடையராய் இறே இருப்பது
அதில் சரம தசையான பரம பக்தியை இறே இவர் ப்ராப்தர் ஆனது –

பட்ட நாத –
பட்ட நாதர் ஆகிறார் –வேதாந்த விழுப் பொருளின் மேலிருந்த விளக்கை விட்டு சித்தன் விரித்தனன் –என்கிறபடியே
வித்துவக் கோஷ்டியிலே சென்று
அவர்களை வென்று பரத்வ நிர்ணய முகேன பட்டர் பிரான் என்று பேர் பெற்றவர் என்கை –

இவரும்-சோராத காதல் பெரும் சுழிப்பால் தொல்லை மாலை ஒன்றும் பாராதவனைப் பல்லாண்டு என்று காப்பிடும் –என்னும்படி
நிரவதிக பகவத் பிரேம யுக்தராய் இறே இருப்பது

ஸ்ரீ –
பட்ட நாத -ஸ்ரீ -என்று பின்ன பதமாய்
லஷ்மி துல்யையான ஆண்டாள் என்னுதல்-

அன்றிக்கே
பட்ட நாத ஸ்ரீ -பெரியாழ்வாருக்கு ஸ்ரீ யான ஆண்டாள் -என்று அனுசந்திக்க்கவுமாம்
திரு மகள் போல் வளர்த்தேன் என்றார் இறே –

பக்தி சார
பக்தி சாரர் –
அன்றிக்கே ஸ்ரீ பக்தி சாரர் –
பெறர்க்கு அரிய நின்னபாதியான பத்தியான பாசனம்

பிறர்க்கு அரிய மாயனே எனக்கு நல்க வேண்டும் -என்று பிரார்த்தித்து பக்தியைப் பெற்று
பக்திசாரர் -என்று நிரூபகமாவர் என்கையைப் பற்ற வாயிற்று –

பொன்னி சூழ் அரங்க மேய பூவை வண்ண -என்று இறே இவருடைய முடிந்த அவாவுக்கு விஷயம் இருப்பது –

குலசேகர –
குலசேகரர் ஆகிறார் –அங்கை யாழி அரங்கன் அடி இணைத் தங்கு சிந்தை தனிப் பெரும் பித்தன் -என்னும்படி
பெரிய பெருமாள் விஷயத்தில் நிரவதிக பிரேமத்தை யுடையரான ஸ்ரீ குலசேகரப் பெருமாள் –

மாலடி முடி மேல் கோலமாம் குலசேகரன் இறே –
எம்பெருமான் தன் சரிதை செவியால் கண்ணால் பருகுவோம் இன்னமுத மதியோமன்றே -என்று இறே
பெருமாள் விஷயத்திலும் இவர் ப்ரேமம் இருப்பது-

யோகி வாஹான்-
யோகி வாஹர் ஆகிறார் முனி வாஹரான பாண் பெருமாள்

இவரும் –இலங்கைக்கிறைவன் தலை பத்துதிர ஒட்டி ஓர் வெங்கணை உய்த்தவன் ஓத வண்ணன் அரங்கத் தம்மான் -என்றும்
அணி அரங்கன் என்னமுதினைக் கண்ட கண்கள் மற்று ஒன்றினைக் காணாவே –என்றும்
அவ்விஷயத்தில் அஸ்மித அந்ய பாவராய் இருக்கும்படி யாயிற்று இவர் பக்தியும்-

பக்தாங்க்ரி ரேணு –
எல்லையில் அடிமைத் திறத்தினில் என்றும் மேவு மனத்தனனாம் -என்றும்
அடியார்க்கு என்னை ஆட்படுத்தாய் -என்றும் சொல்லுகிறபடியே
ததீய சேஷத்வமே நிலை நின்ற ஸ்வரூபம் என்று அறுதியிட்டு
அதுவே நிரூபகமான தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் -என்கை –

துளவத் தொண்டாய தொல் சீர் தொண்டர் அடிப்பொடி –
தொடையொத்த துளவமும் கூடையும் பொலிந்து தோன்றிய தோள் தொண்டர் அடிப்பொடி -என்றும்
தாமே அருளிச் செய்தார் இறே

இவர் தாம் –தன் பால் ஆதாரம் பெருக வைத்த அழகன் –என்று பேசுகையாலே பகவத் பிரசாதயத்த பக்தியை யுடையவர் என்னுமது தோற்றுகிறது –

பரகால-
பரகாலர் ஆகிறார் –மருவலர் தமுடல் துணிய வாள் வீசும் பரகாலன் -என்கிறபடியே
பகவத் விட்டுக்களான பாஹ்யர்கள் கேளார்கள் ஆகையால்
அவர்களை தோள் வலியாலும் நிரசித்து
அதுக்கும் மேலே சாஸ்த்ரிய மார்க்க பிரவர்த்தகராய் வந்த சத்ருக்களை ஸ்வ உக்தி சஸ்த்ரங்களாலும் நிரசித்து
ரங்க புரே மணி மண்டப வப்ரகணான் விதனே பரகால கவி -என்னும்படி காயிக கைங்கர்யங்களையும்

அரங்க மாலைச் சொல்லினேன் தொல்லை நாமம்
என்னுடைச் சொற்கள் என்னும் தூய மாலை கொண்டு சூட்டுவன் தொண்டனேன் -என்று
வாசிக கைங்கர்யங்களையும் செய்து போந்தவர் என்கை –

காம்பினார் திரு வேங்கட பொருப்ப நின் காதலை அருள் எனக்கு -என்று பிரார்த்தித்து
பத்திமைக்கு அன்புடையேனாவதே பணியாய் எந்தாய் -என்னும்படி ஆசை தான் பெரிதாய் ஆயிற்று
அரங்கம் என்பது இவள் தனக்கு ஆசை -என்னக் கடவது இறே –

ததீய சேஷத்வத்திலும்-நின் திரு எட்டு எழுத்தும் நன் உற்றதும் உன் அடியார்க்கு அடிமை -என்று இறே இருப்பது –

யதீந்திர மிஸ்ரான் –
சம்சேவிதஸ் சமயமி சப்த சத்யா -என்னும்படி யதிகளாலே சேவிக்கப்படும்-எதித்தலை நாதனான எம்பெருமானார் என்கை –
மிஸ்ர சப்தம் –பூஜ்ய வாசி –ராமானுஜாச்சார்யார் என்னுமா போலே
மிஸ்ரான் -என்கிற பஹூ வசனம் எல்லாரையும் சொல்லுகிறதாய்
இதிலே அனுக்தரான மதுரகவிகளையும் கூட்டி அனுசந்திக்கிறதாகவுமாம் –
மதுரகவி யாழ்வார் எதிராசராம் இவர்கள் -என்று இறே சேர்த்தி இருப்பது

அன்றிக்கே
மிஸ்ர சப்தம் பெரியோரைச் சொல்லுகிறதாய் -அத்தாலே
சடகோபனை சிந்தை யுள்ளே பெய்தற்கு இசையும் பெரியவரான ம்துரகவிகளை சொல்லுகிறது என்னுதல்

அன்றிக்கே
இவரும் பொன்னரங்கம் என்னில் மயலே பெருகும் இராமானுசனாய் ரங்கேச கைங்கர்ய துரந்தரராய் இறே இருப்பது
அச்யுத பதாம் புஜ யுகம ருக்ம வ்யாமோஹம் இவருக்கும் உண்டு இறே-

ஸ்ரீ மத் பராங்குச முநிம் –
யதீந்திர மிஸ்ரான் -என்று கீழ் உக்தமானவர்கள் எல்லாம் ஒரு தட்டும்
ஸ்ரீ மத் பராங்குச முனி -என்கையாலே ஆழ்வார் ஒருவரும் ஒரு தட்டு என்னுமது தோற்றுகிறது
எல்லாரையும் அவயவ பூதராய் உடையராய் இறே ஆழ்வார் தாம் இருப்பது –

ஸ்ரீ மத் -என்கையாலே -ஒழிவில் காலம் எல்லாம் -பிரார்த்த கைங்கர்ய சம்பத்தை யுடையவர் -என்கை –

பராங்குசர் -என்கையாலே -மதாவலிப்தர்க அங்குசம் இட்டு -என்னும்படி இருக்கை –

வித்யா மதோ தன மத ச்த்ருதீயோ அபி ஜனான் மத -என்று சொல்லப் படுகிற முக்குறும்பை அறுக்கும் அங்குசமாய் இறே இவர் இருப்பது

ஓதி யுணர்ந்தவர் முன்னா என் சவிப்பார் மனிசர் -என்றும்
தத் ராஹித்யம் யுடையவர்களை முழுதுணர் நீர்மையினார் –என்றும்
கொள்ளென்று கிளர்ந்து எழுந்த பெரும் செல்வம் நெருப்பாக கொள்ளென்று தமம் மூடும் -என்றும்
பெரும் செல்வமும் அவரே -என்றும்
பரமனைப் பயிலும் திரு யுடையார் எவரேலும் -என்றும்
சண்டாள சண்டாளர்கள் ஆகிலும் வலம் தாங்கு சக்கரத் தண்ணல் மணி வண்ணற்கு ஆள் என்று உள் கலந்தார்
அடியார் தம் அடியார் எம்மடிகள் -என்றும்
இப்படி ஸ்வ ஸூகத அங்குசத்தாலே அஜ்ஞ்ஞருடைய மும்மதங்களை
அருள் என்னும் தண்டால் தமித்து ஒட்டின படி

அன்றிக்கே
பராங்குசர் என்று
நிரந்குச ஸ்வ தந்த்ரனான ஈஸ்வரனை ஸ்வ ஸூக்தி அங்குசத்தாலே வசீகரிக்க வல்லவர் -என்னவுமாம்
வலக்கை யாழி இடக்கைச் சங்கம் இவை யுடைய மால் வண்ணனை மலக்கு நா யுடை யேற்கு-என்று தாமும் அருளிச் செய்தார்
சக்ர ஹச்தேப சக்ரம் -என்று பின்புள்ளாரும் பேசினார்கள்-

முனி -சப்தத்தால்
மனன சீலர் -என்கிறது
எண்ணாதன்கள் எண்ணும் நன் முனிவர் இறே
பர ரஷணமே யாயிற்று இவர் சிந்தா மூலத்திலே சிந்தித்து இருப்பது
சர்வேஸ்வரன் யுடையவும் சம்சாரிகள் யுடையவும் சம்ரஷணத்திலே யாயிற்று இவர் திரு உள்ளம் உற்று இருப்பது

ஆளுமாளார்
தனிமையும் பெரிது யுனக்கு
அவத்தங்கள் விளையும் என் சொற்கொள்
உலகினது இயலவே
இவை என்ன உலகு இயற்க்கை –என்றும்
இவர்கள் துர்கதியைக் கண்டு
மற்று ஓன்று இல்லை சுருங்கச் சொன்னோம் மா நிலத்து எவ்வுயிர்க்கும் -என்றும் உபதேசித்து திருத்திப் போருமவர் இறே

இவரும் –மதிநலம் அருளப் பெற்று ஆராத காதலை யுடையராய் இறே இருப்பது

பரகால யதீந்திர மிஸ்ரான் ஸ்ரீ மத் பராங்குச முனி என்கையாலே
கலியும் கெடும் கண்டு கொண்மின் -என்று ஆழ்வாரேலே இருவரும் ஸூ சிதர் என்னுமதுவும்
பராங்குச பரகால யதிவராதிகள் -என்கிற பிரபன்ன ஜன கூடஸ்தவமும் தோற்றுகிறது

திருவிக்ரமன் அடி இணை மிசை -என்றும்
எந்நாளே நாம் மண் அளந்த இணைத் தாமரை -என்றும் நிர்தேசித்து
உன் அடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே -என்றும்
உலகம் அளந்த பொன்னடியே அடைந்து உய்ந்தேன் -என்றும்
லோக விக்ராந்த சரனௌ சரணம் தேவ்ரஜம் விபு என்றும் இறே இவர்கள் பிரபத்தி பண்ணும் க்ரமம் இருப்பது

இந்த க்ரமம் ஆழ்வார்கள் எல்லாருக்கும் ஒக்கும் இறே
த்ரிவிக்ரம க்ரமாக்ராந்த –
இவர்கள் தாம் சர்வேஸ்வரன் பக்கல் தாங்கள் கற்றதை இறே பேசி ஓதச் சொல்கிறது

பேசுமின் திரு நாமம் எட்டு எழுத்தும்
மனமுடையீர் மாதவன் என்று ஓதுமின்
த்வயம் அர்த்த அனுசந்தாநேன சஹச தைவம் வக்தா -என்று
உடையவரும் பெரிய பெருமாள் இடம் கேட்டு உபதேசித்தும்
பாருலகில் ஆசை யுடையீர்க்கு எல்லாம் ஆரியர்காள் கூறும் –என்று பேசியும் வரம்பு அறுத்து செய்து அருளினார் இறே

உடையவர் தாம் த்வயத்தை ஞானாதிகர்க்கு ப்ரீதி அதிசயத்தாலே புன புன உபதேசிக்கையும்
அஜ்ஞ்ஞர்க்கு அவர்கள் அனர்த்த தர்சனத்தாலே அருள் விஞ்சி பிரசாதிக்கையும் ஆகிற ஆகார த்வயமும் உண்டு இறே
எட்டும் இரண்டும் அறிவித்த எம்பெருமானார் இறே-

யதீந்திர மிஸ்ரான் ஸ்ரீ மத பராங்குச முநிம்-என்கையாலே
திருவாய் மொழி முதலிய திவ்ய பிரபந்தங்களாலும்
ஸ்ரீ பாஷ்யாதி ஸ்ரீ ஸூ க்தியாலும் தர்சனத்தை நடத்திப் போருமவர்களாய்
ஆழ்வாருக்கு சரணவத் பரதந்த்ரராய்
மாறன் அடி பணிந்து உய்ந்தவன் –என்றும் –
சடகோபத் தே மலர் தாட்கு ஏய்ந்து இனிய பாதுகமாம் எந்தை இராமானுசனை -என்றும்
ஆழ்வார் திருவடிகளுக்கு அத்யந்தம் அந்தரங்கமான ஆகாரத்தை பற்ற அண்மையாக அருளிச் செய்தது –

ஆழ்வானும்-ராமானுஜச்ய சரனௌ சரணம் ப்ரபத்யே -என்று அருளிச் செய்து அடுத்த ஸ்லோகத்திலே
தத் சம்சரயேம வகுளாபரண அங்க்ரி யுக்ம-என்று ஆழ்வாரை அனுசந்தித்து அருளினார் –
யதீந்த்ராய சடத்விஷே -என்று இறே சேர்த்தி இருப்பது –

பூதம் சரஸ்ய -என்று தொடங்கி-ஆழ்வார்களோடு அவர்களையும் –யதீந்திர மிஸ்ராம் ஸ்ரீ மத பராங்குச முநிம் -என்று சஹபடித்தது -இவர்கள் பாரதந்த்ர்யம் தோற்ற –
யோ நித்யம் -மாதா -என்று இரண்டு தனியனாலும் விசேஷித்து ஆச்சார்யர்களை அனுசந்தித்தார்கள்
குரு பரம்பரையிலும் த்வயத்திலும் எம்பெருமானை அனுசந்திக்குமா போலே –

அதிலும் உடையவர் பிரதான்யத்தாலே -யோ நித்யம் -முற்பட இருக்கும்

ஆகையால் யதிவரசரமராய் அவரோடும் தசமரான தேசிகர்களையும் தேசிக குல கூடஸ்தரான சடரிபு சரணங்களையும் பிரணாதோச்மி நித்யம் என்று
நித்ய சேவை பண்ணும்படி சொல்லுகிறது

உபகாரத்துக்காகில் –தஸ்மை நம-என்று ஒரு கால் அனுசந்திக்குமதே உள்ளது –
ப்ராப்ய புத்த்யா சதா விறே –
பராங்கு சாத்யைர் பக்தை ரப்யாசார்யைஸ் ஸமுப ஸ்திதம்
அத்ர பத்ரசாபி –என்று அங்கும் அநு வர்த்தகம் உண்டாக இறே அருளிச் செய்தது –
பிரணதோஸ்மி -என்று ததீய விஷயத்தில்
நிப்ருத ப்ரணத ப்ரஹ்வ-என்கிறபடியே த்ரிவித கரண ப்ரவணதையாலே ப்ரணாமம் பண்ணுகிறேன் -என்கிறார்

இத்தால்
பக்தி பாரவச்ய பிரபன்னரான ஆழ்வார்களும்
அவர்களோடு விகல்ப்பிக்கும் படியான ஸ்ரீ பாஷ்ய காரரும்
சர்வதா பஜ நீயர் என்றது ஆயிற்று –
சடரிபு கலிஜித் சரோ பூத வேதாள கோதா குரூன் முனி வஹ குலசேகரௌ பக்த பத்ரேணு பக்த்யர்ணவௌ
மதுரகவி மாதோ யதீந்த்ரம் ததா அன்யான சேஷான் குரூன் ஸ்ரீ யம்பி வஸூ தாஞ்ச நீளாஞ்ச வைகுண்ட நாதம் ஸ்ரேயே-
என்று இறே ஆழ்வார்களை தொடங்கி சேவிக்கும் க்ரமம் இருப்பது –

(1. பூதம் (பூதத்தாழ்வார்) -ஆழ்வார் திருமுடி
2. ஸரஸ்யர் (பொய்கையாழ்வார்) 3. மஹதாஹ்வயர் (பேயாழ்வார்) -ஆழ்வாருடைய திருக்கண்கள்
4. பட்டநாதர் (பெரியாழ்வார்) -ஆழ்வாருடைய திரு வாய்
5. பக்திசாரர் (திருமழிசையாழ்வார் -ஆழ்வாருடைய திருக்கழுத்து
6. குலசேகரர் (குலசேகராழ்வார்) 7. யோகிவாஹர் (திருப்பாணாழ்வார்) –ஆழ்வாருடைய திருக்கரங்கள்
8. பக்தாங்க்ரி ரேணு (தொண்டரடிப்பொடியாழ்வார்) -ஆழ்வாருடைய திருவயிறு
9. பரகாலர் (திருமங்கையாழ்வார்) – 10. யதீந்த்ரமிச்ரர் (எதிராசர்) -ஆழ்வாருடைய திருவடி இணைகள்
11. ஶ்ரீமத் பராங்குசமுநி (நம்மாழ்வார்).

—————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பராசர பட்டர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ-மாதா பிதா யுவதயஸ் தனயா விபூதிஸ்தனியன் -ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் வியாக்யானம் –

November 27, 2014

ஸ்ரீ ப்ரஹ்ம ஜ்ஞானம் அதிக்ருதாதிகாரமாய் போகாமே சர்வாதிகரமாம் படி த்ராமிடியான ப்ரஹ்ம சம்ஹிதையை
மயர்வற மதி நலம் -என்கிற பக்தியாலே வாசிகமாக்கி
மரங்களும் இரங்கும் வகை என்கிற தம்முடைய ஆகர்ஷகமான ஈரச் சொல்லாலே அருளிச் செய்கையாலும்
பெரிய முதலியாருக்கு இந்த ஜ்ஞானத்துக்கு உபாதானம் ஆழ்வார் ஆகையாலும் அவர் திருவடிகளிலே விழுகிறார்
உரலினோடு இணைந்து இருந்து ஏங்கிய எளிவு எத்திறம் -என்றும்
நெய்யுண் வார்த்தையுள் அன்னை கோல் கொள்ள -என்றும்
எல்லாம் கண்ணன் -என்றும்
பெரிய முதலியாரையும் ஸ்ரீ பராசர பகவானையும் போலே கிருஷ்ண வித்தராய் இருக்கும் படியையும் நினைந்தது ஆழ்வார் திருவடிகளில் சரணம் புகுகிறார்

—————————————————————————————————————————————–

மாதா பிதா யுவதயஸ் தனயா விபூதிஸ் சர்வம் யதேவ நியமேன மத் அந்வயாநாம்
ஆத்யஸ்ய ந குலபதேர் வகுளாபிராமம் ஸ்ரீ மத் தத் அங்க்ரி யுகளம் ப்ரணமாமி மூர்த்நா —

மாதா –
உத்பத்திக்கு முன்னே வரம் கிடந்தது
பெறுகைக்கு வருந்தி
பத்து மாசம் கர்ப்ப தாரணம் பண்ணி
பிரசவ வேதனையை அனுபவித்து
அசூத்திகளையும் மதியாதே பால்ய தசையில் ஆதரித்து வளர்த்து
பக்வனானால் பின்பு ப்ருஷபாஷணம் பண்ணினாலும் அவற்றைப் பொறுத்து
அகல இசையாதே
இவன் பிரியத்தையே வேண்டி இருக்கும் மாதாவைப் போலே உபகாரராய் இருக்கை –

பிதா –
அவன் பாத்ரமாத்ரம் என்னும்படி உத்பாதகனாய்
என்றும் ஒக்க ஹிதைஷியான பிதா பண்ணும் உபகாரத்தை பண்ணுமவர் என்கை
கரியான் ப்ரஹ்மத பிதா –

யுவதயஸ் –
இவ்விருவரையும் மறந்து விரும்பும் யுவதிகளைப் போலே
நெஞ்சுக்கு இனியராய் இருக்கை –

தனயா-
அவர்களுடைய யௌவனத்தை அழிய மாறி பெற்றவராய்
பால்யத்தில் ஸூககரராய்
பக்வ தசையில் ரஷகராய்
நிரய நிஸ்தாரகரான புத்ரர் பண்ணும் உபகாரத்தை பண்ணுமவர் என்கை

விபூதிஸ் –
விபவம் இல்லாத போது இவை எல்லாம் அசத்சமம் ஆகையாலே
இவை எல்லா வற்றையும் நன்றாக்கும் ஐஸ்வர்யம் போலே உத்தேச்யராய் இருக்குமவர் -என்கை –

சர்வம்-
அனுக்தமான சர்வ ஐஹிகங்களுமாய் இருக்கை –
அதாவது மோஷ உபாயமும்
முக்த ப்ராப்யமும் –

யதேவ —
அவதாரணத்தால்-
சேலேய் கண்ணியரும் பெரும் செல்வமும் நன்மக்களும் மேலாத் தாய் தந்தையும் அவரே -என்று இருக்கும் ஆழ்வார் நினைவுக்கே –

நியமேன –
என்றும் ஒக்க –
அவருக்கு பிரியம் என்று போமது ஒழிய ப்ராமாதிகமாகவும்
புறம்பு போகக் கடவது அன்றிக்கே இருக்கை –

மத் அந்வயாநாம் –
வித்யயா ஜன்மனா வா -என்ற உபய சந்தான ஜாதர்க்கு –

ஆத்யஸ்ய ந –
ஸ்ரீ வைஷ்ணவ சந்தானத்துக்கு பிரதம ஆச்சார்யர் -என்கை –

குலபதேர் –
ஸ்திரீக்கு பர்த்ரு குலம் போலே
கோத்ர ரிஷியும் அவரே –

வகுளாபிராமம் –
திரு மகிழ் மாலையால் அலங்க்ருதமாய் உள்ளத்தை
இத்தால் -திருவடிகளில் பரிமளத்தால் வந்த போக்யதையை சொல்லுகிறது
திருத் துழாயால் அலங்க்ருதமான பகவத் சரணார விந்தங்களை வ்யாவர்த்திக்கிறது –
நல்லடி மேலணி நாறு துழாய் –

ஸ்ரீ மத் –
ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ யுடன் நித்ய சம்யுக்தமாயிருக்கை
அந்தரீஷகத ஸ்ரீ மான்
ச து நாகவரஸ் ஸ்ரீ மான்
என்று பகவத் ப்ரத்யா சத்தியை ஐஸ்வர் யமாக சொல்லக் கடவது இ றே –
என்னுடைய சம்பத்துக்கு ஊற்றான ஐஸ்வர் யத்தை யுடையவர் என்னவுமாம் –

தத் அங்க்ரி யுகளம் –
அது என்னுமது ஒழிய பேசி முடிய ஒண்ணாது -என்கை

யுகளம் –
சேர்த்தியால் வந்த அழகை   யுடைத்தாய் இருக்கை –

ப்ரணமாமி மூர்த்நா —
ஆழ்வார் உடைய படிகளை நினைத்தவாறே
நம-என்று நிற்க மாட்டாதே
அவர் திருவடிகளில் தலையை சேர்க்கிறார் –

கீழ் உபகாரகரை ஆஸ்ரயித்த இத்தால் செய்தது ஆயிற்று –
முமுஷூவுக்கு உபகாரகர் சேஷித்வ பிரதிபத்தி விஷய பூதரும் ஸ்துத்யரும் என்னும் இடம் சொல்லுகிறது
ஒருவனுக்கு சேஷிகள் இருவராம்படி எங்கனே என்னில் –
க்ருதி சேஷித்வம் யாகாதிகளுக்கும் புரோடாசாதிகளுக்கும் உண்டாமா போலே
ஈஸ்வரன் பிரதான சேஷியாய்-பாகவதர் த்வார சேஷிகளாம் இடத்தில் விரோதம் இல்லை –
அதவா –
ஈஸ்வரன் நிருபாதிக சேஷியாய் -தத் சம்பந்தம் அடியாக வந்தது ஆகையால் பாகவத சேஷத்வம் ஒவ்பாதிகம்  -என்றுமாம் –
தமக்கு ஸ்தோத்ர ஆரம்ப ஹேதுவான பக்த்யாதிகள் பிதா மஹோபாத்த தனம் –என்கைக்காக
முதலிலே பெரிய முதலியாருடைய ஜ்ஞான பக்திகள் உடைய ஆதிக்யம் சொன்னார்
நாலாம் ஸ்லோகத்தாலே –இவ்வர்த்தம் த்ரைவித்ய வ்ருத்தாநுமதம் -என்கிறது –
அஞ்சாம் ஸ்லோகத்தாலே இந்த ஜ்ஞானம் இவர்க்கு ஆழ்வாரால் வந்தது என்கை –

அக்ர்யம் யதீந்திர சிஷ்யாணாம் ஆதயம் வேதாந்த வேதி நாம் -என்று ஆழ்வான் அக்ர கண்யர் ஆகையாலே –அஸ்மத் குரோர் என்றார் –
அப்படிப் பட்ட பாரதந்த்ர்யத்தை -இவ்வாத்மவஸ்து அவர்க்கு சேஷம் ஆகில் அவருடைய விநியோக பிரகாரம் கொண்டு கார்யம் என்-என்றார் –
ஏவம் வித ஸ்வரூபர் ஆகையால் உடையவரும் -ஒரு மகள் தன்னை யுடையேன் -என்றார்
இப்படி ஸ்வாச்சார்ய விஷயத்தில் பாரதந்த்ர்யத்தாலும்
நான் பெற்ற யோகம் நாலூரானும் பெற வேணும் -என்று பிரார்திக்கையாலும்
சிஷ்யாச்சார்யா க்ரமத்துக்கு சீமா பூமி கூரத் ஆழ்வான் -என்றார்கள்
ஆச்சார்யா வர்வ விபவச்ய ச சிஷ்யஸ் வ்ருத்தேஸ் சீமேதி தேசிகவரை பரிதுஷ்யமாணம்-என்னக் கடவது இ றே –
அத்தைப் பற்ற உடையவரும் –யத் சம்பந்தாத் –என்று பிரார்த்தித்து அருளினார்
நூற்றந்தாதியிலும் மொழியைக் கடக்கும் பெரும் புகழான் அடியாக விரும்பி அருளினார்
மற்றையரான இவ்வருகில் உள்ளாறும் அல்லா வழியைக் கடப்பது அவர்களாலே இ றே
அவர்கள் தான் –யோ நித்யம் -த்ரைவித்யாதிகள் அடியாக அடியுடையராய் இருப்பார்கள்
மாறன் அடி பணிந்து உய்ந்தவன்
ராமானுஜ அங்க்ரி சரணஸ்மி இத்யாதி
மதுரகவிகள் அடிப்பாட்டில் நடக்கிற க்ருபாமாத்ரா பிரசன்னாச்சார்யர்கள் ஆழ்வான் அடியாய் இருப்பார்கள்
ஸ்ரீ வத்ஸ சிஹ்ன பவதி -இத்யாதி
ஆரியர்காள் கூறும் -என்கிற எழுபத்து நான்கு முதலிகளும் உடையவர் அடியான ஆசார்யத்வம்
அதில் முக்கியம் ஆழ்வான் சம்பந்தம் –
பட்டர் அடியாக இ றே அஷ்ட ஸ்லோகீ முகேன ரஹச்ய த்ரய அர்த்த சம்பந்தம் –
திருவாய்மொழியும் அடியாய் இருக்கும்
ஒன்பதினாயிரம் பன்னீராயிரத்தில் பர்யவசித்தது
பெரிய பட்டர் உடைய பிரசிஷ்யரான நம்பிள்ளை திருவடிகளிலே இ றே நடுவில் திரு வீதிப் பிள்ளை பட்டர் ஆஸ்ரயித்தது
அவரும் ராமானுஜ நாமா வி றே
அஷ்டாஷர தீபிகை அவர் அடியாக இருக்கும்
நம்பிள்ளை குமாரரும் ராமானுஜன் இ றே
அவரும் சார சங்க்ரஹம் அருளிச் செய்து அருளினார்
தத் வம்ச்யரும் கோயில் யுடையவருக்கு சிறிது கைங்கர்யங்களும் செய்தார்கள்
வடக்குத் திரு வீதிப் பிள்ளை குமாரரான பிள்ளை லோகாச்சார்யரும்
வகுள பூஷண சாஸ்திர சாரமான ஸ்ரீ வசன பூஷ்ணாதி ரகஸ்ய பிரபந்த கர்த்தாவாய்
தம்முடைய பிரதான சிஷ்யரான – கூர குலோத்தம தாசர் -என்று திரு நாமம் சாத்தினார்
என்னாரியனுக்காக எம்பெருமானாருக்காக -என்று இ றே அக் கோஷ்டியில் பரிமாற்றம் இருப்பது

———————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆளவந்தார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ-யோ நித்யம் அச்யுத பதாம்-தனியன் -ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் வியாக்யானம் –

November 27, 2014

ஸ்ரீ ராமாவரஜா முநீந்திர லப்த போதராய் –ஸ்ரீ வத்ஸ சிஹ்னர்-என்ற நிரூபகத்தை உடையரான கூரத் ஆழ்வான்
ஸ்ரீ ராமானுஜ தர்சனத்தை ரஷிக்க வேண்டி ராஜ கோஷ்டியில் சென்று –
நாராயண பரம் ப்ரஹ்மம் -என்றும்
நாராயண பரா வேதா -என்றும்
நாரணனைக் காட்டிய வேதம் -என்றும்
நாராயண த்வயி ந ம்ருஷ்யதி வைதிக கே -என்றும்
நாரணனே யாவதீது அன்று என்பாறார் -என்றும்
அந்யாயம் அந்யாயம்-என்று அறை கூவி வென்று
கலையறக் கற்ற மாந்தர் காண்பரோ கேட்பாரோ தான் -என்னும்படி அவர்கள் தர்சனம் அசஹ்யமாய்
அத தர்சனத்தை வேண்டாதே மீண்டு எழுந்து அருளி தர்சன ப்ரவர்தகரான எம்பெருமானார் தர்சனத்தை அபேஷித்துக் கொண்டு எழுந்து அருளி இருக்க
அவரும் –இனி அறிந்தேன் ஈசற்கும் நான்முகற்கும் தெய்வம் –நற்கிரிசை நாரணன் நீ –என்றும்
திரு வில்லா தேவர்க்கும் எல்லாருக்கும் மேலாக மேல் நாட்டிலே திரு நாரணனை ஸ்தாபித்து மீண்டு எழுந்து அருளி
அரங்கன் அல்லால் தெய்வம் இல்லை -என்று அறுதியிட்டு
அரங்கனுக்கு ஆட்செய்து கொண்டு இருக்கிறவர்
ஆழ்வான் கண் அழிவு கண்டு கண் கலங்கி அருளி
பேரருளாளர் நேத்ர புத்ராதிகளான ஐஹிக புருஷார்த்தத்தையும்
பெரிய விசும்பு ஆகிற ஆமுஷ்மிக புருஷார்த்தத்தையும் கொடுக்குமவர் ஆகையாலே
நேத்ர விஷயமாக ஒரு ஸ்தோத்ரத்தை செய்யும் என்று நியமிக்க
அப்படியே -அஸ்தி -என்று சம்மதி பூர்வகமாக ஸ்தவம் பண்ணுகிறவர் –
நேத்ர சாத்குரு க்ரீச சதாமே -என்றும்
க்ரீசே பச்யேம பரச்சதம் சமா -என்றும்
அங்குத்தையில் அனுபவ பரிகரமான அப்ராக்ருத சஷூஸ் சை அபேஷிக்க
அப்படியே பேரருளாளரான பெரிய பெருமாளும்
பஸ்யந்தி ச சதா தேவம் நேத்ரைர் ஜ்ஞாநேனவ அமரா -என்றும்
சர்வம் ஹ பஸ்ய பஸ்யதி-எண்ணும்படியான இமையாத கண்ணை இவர் பெறும்படி பெரிய வீட்டுக்கு விடை கொடுத்து அருள
அவரும் அதிப்ரீதராய் ஆழ்வார் திருவரங்க பெருமாள் அரையர் திரு மாளிகையிலே புறவீடு விட்டு இருக்க
இத்தை எம்பெருமானார் கேட்டருளி -அறப் பதறினார் -என்றவாறு பதறிக் கொண்டு இவர் இருந்த இடத்தே எழுந்து அருள
அவரும் –பரம் தாமம் என்னும் திவம் தருகைக்காக அவருக்கு மறுக்க ஒண்ணாதபடி அவர் விஷயத்திலே பிரபத்தியான இஸ் ஸ்லோகத்தை
ராமானுஜச்ய சரனௌ சரணம் ப்ரபத்யே--என்று விண்ணப்பம் செய்து திருவடிகளில் விழ
அவரும் இவர் அபிப்ராயம் அறிந்து தம்முடைய ஸ்வம்மான ப்ரபத்தியை
திரு நாரணன் தாள் காலம் பெறச் சிந்தித்து உய்மினோ என்னும்படி
ஸ்ரீ மன்  நாராயண தவ சரணார விந்த யுகளம் சரணமஹம் பிரபத்யே -என்று குறைவற அவர் வலத் திருச் செவியில் பிரசாதித்து அருளினார் இ றே
அதடியாக ஸ்ரீ வைகுண்ட கத்யத்திலே அவர் பிரார்த்தித்து அருளின பேற்றை இவரும் ஸ்ரீ வைகுண்ட ஸ்தவத்திலே பிரார்த்தித்து பேற்றோடு தலைக் கட்டினார்
அப்பேறு தான் ஆச்சார்யா ஆதீனம் ஆகையால் அவரை அடியிலே சரணம் புகுகிறார் –

———————————————————————————————————————-

யோ நித்யம் அச்யுத பதாம் புஜ யுக்ம ருக்ம
வ்யோமோஹதஸ் ததிதராணி த்ருணாய மே நே
அஸ்மத் குரோர் பகவதோஸ் அஸ்ய தயைக சிந்தோ
ராமானுஜச்ய சரனௌ சரணம் ப்ரபத்யே –கூரத் ஆழ்வான்-

யோ நித்யம் –
இதில் பக்தி விரக்தி ஜ்ஞப்தி குருத்வ அனுகம்பாதிக்ய குணத்தாலே முக்தி ப்ரதித்வ சக்தியை யுடைய உடையவர் திருவடிகளை உபாயமாக பற்றுகிறார் –
யோ நித்யம்
திசை அனைத்தும் ஏறும் குணன் -என்று சொல்லப்படுகிற குணவத்தா ப்ரதையை யுடையராய்
நாள்தோறும் ஆஸ்ரிதரை நழுவுதல் இன்றிக்கே ரஷித்துக் கொண்டு போருகிற சர்வேஸ்வரனுடைய
சரணாரவிந்த யுகள வ்யாமுக்ததையாலே
தத் வ்யதிரிக்த சமஸ்த வஸ்துக்களையும் த்ருணவத் பிரதிபத்தி பண்ணி இருப்பவராய்
அடியேனுக்கு அஜ்ஞ்ஞா தஜ் ஞாபனம் பண்ணும் ஆச்சார்யராய்
அதுக்கடியான ஜ்ஞானாதிக்யத்தை யுடையவராய்
அகதிகள் விஷயத்தில் ஐயோ என்று இறங்கும் ஆன்ரு சம்சயத்தை யுடையவருமாய்
ச- ரூபியாய் முன் வந்து நிற்கிற இந்த ராமானுசனுடைய சரணங்களை சரணமாக அடைகிறேன் -என்கிறார் –

யோ நித்யம்
-என்று வைதிகோத்தமர் என்னும் பிரசித்தியைப் பற்றச் சொல்லுகிறது-
அச்யுத பதாம் புஜ யுக்ம ருக்ம வ்யோமோஹதஸ் –என்று
சர்வேஷூ தேச காலேஷூ சர்வ அவஸ்தா ஸூ சாச்யுத கிங்கரோச்மி-என்றும்
அச்யுத பக்திதத்வ ஜ்ஞானாம் ருதாப்தி -என்றும் சொல்லுகிறபடியே
பிரணதார்த்தி ஹராச்யுதரான பேரருளாளர் ஸ்ப்ருஹணீயமான திருவடித் தாமரைகளிலே நிரவதிக பிரேமத்தாலே
த்வத் பாத கமலா தன் அந்யமே என்கிறபடியே –திருவடிகளுக்கு அசலான அனைத்தையும் த்ருண சமமாக எண்ணி இருப்பார் என்கிறது
நிரஸ்த இதர போகாசோ வரதம் சரணங்கத -என்றும்
தென் அத்தியூர் கழலிணைக் கீழ் பூண்ட அன்பாளன் இராமானுசன் -என்றும் வரத நாராயணனை யாயிற்று
யோ நித்யம் சத்தம் த்யாயேத் நாராயணம் அந்ய தீ -என்று
நிரவதிக பிரேமத்துடன் நித்ய திருவாராதனமாக நடத்திப் போருவது
அந்த பக்தி ஐஸ்வர் யத்தாலே
த்ருணீ க்ருதா நுத்தம புக்தி முக்திபி –
கொள்வது எண்ணுமோ தெள்ளியோர் குறிப்பு -என்னும்படி பண்ணி இருப்பார் ஆயிற்று –
கதாஹம் பகவத் பாதாம் புஜ த்வய பரிசர்யா சயா நிரஸ்த சமஸ்தே தர போகாச அபக்த சமஸ்த சாம்சாரிக்க ஸ்வ பாவ –
என்று ஆயிற்று இவர் ஸ்ரீ ஸூ க்தியும் இருப்பது
திக்குற்ற கீர்த்தி இராமானுசன் -என்று பிரசித்தம் ஆனவர்
நித்யம் -நாடொறும்

அச்யுத பதாம் புஜ யுக்ம ருக்ம வ்யோமோஹதஸ்-
அச்யுதனாகை யாவது
குண விக்ரஹ விபூதிகளை நழுவுதல் இன்றிக்கே இருக்குமவன் என்னுதல் –
ஆஸ்ரிதரை நழுவ விடாதவன் -என்னுதல்
ஆஸ்ரித ரஷணத்தில் நின்றும் நழுவாதவன் என்னுதல் –
வீவில் இன்பம் மிக வெல்லை நிகழ்ந்த நம் அச்சுதன் வீவில் சீரன் மலர்க்கண்ணன் விண்ணோர் பெருமான் -என்றும்
ஆதுமில் காலத்து எந்தை யச்சுதன் அமலன் -என்றும்
அயர்வாங்கு நமன் தனக்கு அரு நஞ்சினை அச்சுதன் தன்னை -என்றும்
நத்ய ஜேயம்-என்றும் சொல்லப் படுகிற குணங்களிலே யாயிற்று இவர் ப்ரவணராய் இருப்பது
அந்த அச்யுத பதாம்புஜ யுகம ருக்ம வ்யாமோஹம்-அர்ச்சாவதாரம் தொடங்கிபர பர்யந்தமாக எங்கும் நித்யமாக யுண்டாய் இ றே இவருக்கு இருப்பது
அது எங்கனே என்னில்
அத்திகிரி பச்சை நிறத்தனுடைய பதாப் ஜங்களிலும்
வேங்கடத்து அச்சுதனனுடைய தங்கு தாமரை அன்ன பொன்னார் அடியிலும்
அரங்கமா நகர் அச்சுதன் உலகம் அளந்த பொன்னடியிலும்
நண்ணித் தொழுமவர் நச்சுவார் முன்னிற்கும் நாராயணன் அச்சுதன் உடைய துளங்கு சோதித் திருப் பாதத்திலும்
தயரதற்கு மகனான அச்சுதன் காடுறைந்த பொன்னடியிலும்
கோவிந்தன் அச்சுதன் பொற்றாமரை அடி என்று பேசும்படியாய் கானில் கன்றின் பின் போன பொன்னடியிலும்
அச்சுதன் அனந்த சயனன் செம்பொற் திருவடி இணையிலும்
வீவிலின்பம் மிக வெல்லை நிகழ்ந்த நம் அச்சுதனான விண்ணோர் பிரானார் மாசில் மலரடி யிலுமாயிற்றுஇவர் மயல் கொண்டு இருப்பது-

இது தான் -ஆர்வமோடு நிச்சல் நினைவார் என்னும் படி இ றே நித்ய இச்சை நடந்து செல்லுவது
தென்னத்தியூர் கழல் இணைக் கீழ் பூண்ட அன்பாளன் –என்றும்
அரங்கன் கழல் சென்னி வைத்து தானதில் மன்னும் -என்றும்
பஞ்சித் திருவடி பின்னை தன் காதலன் பாதம் நண்ணா –என்றும்
நின்ற வண் கீர்த்தியும் நீள் புனலும் நிறை வேங்கடப் பொற் குன்றமும் வைகுந்த நாடும் குலவிய பாற கடலும் உன்தனக்கு எத்தனை இன்பம் தரும் -என்னக் கடவது இ றே –
அவர் தாமும்
பிரணதார்த்திஹர -என்றும்
ப்ரஹ்மணி ஸ்ரீ நிவாசே -என்றும்
ஸ்ரீ ரெங்க சாயிநம் –என்றும்
ஆத்மா நஞ்ச சாரதிம் -என்றும்
காகுஸ்த -என்றும்
சேஷிணே சேஷ சாயினே என்றும்
ஸ்ரீ வைகுண்ட நாத -என்றும் இ றே அருளிச் செய்தது
ஆகையால்
பூவார் கழல்களிலும்
கண்ணன் கழல் இணையிலும்
காகுத்தன் தன்னடியிலும்
பாற்  கடலுள் பையத் துயின்ற பரமன் அடியிலும்
வைகுந்த சேவடியிலும்
சர்வாந்தர்யாமியான நாராயணன் சரணங்களிலும் ஆயிற்று வ்யாமுக்தராய் இருப்பது
இப்படி பஞ்ச அவஸ்தா வஸ்திதனான சர்வேஸ்வரனுடைய சரணாரவிந்த யுகள மகரந்த ரசாச்வாத மதுவ்ரதமாய் அனுபவித்து
அதிலே மக்னராய் –
ததிதராணி த்ருணாய மே நே –
அத்தாலே தத் இதரங்களாய் –ஆ விரிஞஞாத மங்களமான பாஞ்ச பௌதிக விஷய பஞ்சகத்தையும்
அதுக்கு மேலான ஆத்மாவனுபவத்தையும் த்ருணவத் பிரதிபத்தி பண்ணி இருப்பார் யாயிற்று
இப்படி பக்தி விரக்தி யுடைய இவர் திருவடிகளை தாமும் அப்படி பரத்வாதிகள் எல்லாமாக அறுதியிட்டு அடையப் பார்க்கிறார்-
அஸ்மத் குரோர் –
கீழ் சொன்ன அச்யுத பக்தியாலே தத் இதரங்களை த்ருணவத் கரிக்கையாலும் யாயிற்று இவரை ஆச்சார்ய வர்ணம் பண்ணுகிறது –
சிதசித் பரதத்வா நாம் தத்வ யாதாம்ய தாயினே -என்னும்படி தத்வ த்ரயத்தையும் உபதேசிக்கையாலே அலகலகாக ஆராய்ந்து –
போகா இமே விதி சிவாதி பதஞ்ச கிஞ்ச ஸ்வாதம அநுபூதிரிதி யா குல முக்திருக்தா
சர்வம் ததூஷ ஜல சோஷ மஹம் ஜூ ஷேய -என்று தத்வத்வய விஷய வைராக்யத்தையும்
தவ தாஸ்ய மகா ரசஜ்ஞ -என்று தத்வ ஏக விஷய பக்தியை
யும் யுடையவர் ஆகையாலே
தமக்கு அநு குணமாக –அஸ்மத் குரோர் -என்கிறார்
ஜ்ஞான தீபப்ரதே குரௌ-என்றும்
அந்தகார நிரோதித்வாத் குருரித்யபி தீயதே -என்றும்
இவர்க்கும் இரண்டுக்கும் அடி எம்பெருமானார் இ றே
ஸ்ரீ மத் ராமானுஜார்யாத் சமதிகத சமஸ்தாத்மா வித்யா -என்று ஆயிற்று இருப்பது
இவரை யாயிற்று பிரதான சிஷ்யராக பிரதமம் பெரிய திரு மந்த்ரம் முதலான ரஹச்யங்களை பிரசாதித்து அபிமானித்து அருளிற்று
நர நாராயண அவதாரம் என்னலாம் படி இ றே ராமானுஜ கூராதிபர்கள் கூட்டர விருப்பது
எல்லாரும் ஒரு தட்டும் இவர் ஒரு தட்டுமாக வி றே எம்பெருமானார் எண்ணி இருப்பது
அத்தைப் பற்ற -ஒரு மகள் தன்னை யுடையேன் -என்றார் இ றே
இப்படி அத்விதீயமாயிற்று இரண்டு விஷயமும் இருப்பது —

கலையறக் கற்ற மாந்தர் -என்னலாம் படியான இவருக்கு சகலார்த்தமும் பிரசாதிக்கும் படியான ஜ்ஞான வைபவத்தை சொல்கிறது
பகவதோஸ் -என்று –
சொல்லார் தமிழ் ஒரு மூன்றும் ஸ்ருதிகள் நான்கும் எல்லை இல்லா அற நெறி யாவையும் தெரிந்தவன் –
உண்மை நன் ஞானம் உரைத்து
இராமானுசன் மெய்ம்மதிக் கடல் –என்னும் படி இ றே ஜ்ஞான வைபவம் இருப்பது –
சர்வ கல்யாண சம்பூர்ணம் சர்வ ஜ்ஞான உபப்ரும்ஹிதம்
ஆசார்யம் ஆஸ்ரயேத் தீமான் ஸ்ரேயோர்த்தி ஸூ சமாஹின பூ -என்னக் கடவது இ றே
பகவச் சப்தம் -சர்வ கல்யாண குணங்களையும் பரி பூர்ண ஜ்ஞானத்தையும் சொல்லுகையாலே -அவற்றால் குறைவற்ற விஷயமாய் இருக்கை
இத்தால் தமக்கு அஜ்ஞ்ஞாதஞாபனம் பண்ணுகைக்கு உடலான ஜ்ஞான வைபவத்தை பேசினார்-
இனி தாமுடைய துர்க்கதி கண்டு இரங்கும்படி –தயா பூர்த்தியை அருளிச் செய்கிறார்
அஸ்ய தயைக சிந்தோ-ராமானுஜச்ய –
அஸ்ய தயைக சிந்தோ -அஸ்ய ராமானுஜச்ய -என்று மேலில் பதத்தோடு சேர்த்தி
தயைக சிந்து -கேவல கிருபா மாத்திர பிரசன்னாச்சார்யர் -என்றபடி –
பயன் நன்றாகிலும் பாங்கலர் ஆகிலும் செயல் நன்றாக திருத்திப் பணி கொள்வான் குயில் நின்றார் பொழில் சூழ் குருகூர் நம்பி -என்று இ றே இருப்பது –
பாடினான் அருள் கண்டீர் இவ்வுலகினில் மிக்கதே -என்றும்
எண்டிசையும் அறிய இயம்புகேன் ஒண் தமிழ் சடகோபன் அருளையே -என்னுமா போலே
நிகரின்றிநின்ற என்நீசதைக்கு உன் அருளின் கண் இன்றி புகல் ஒன்றும் இல்லை -அருட்கும் அக்தே புகல் -என்றும்
உன் பெரும் கருணை தன்னை -என்றும்
வண்மையினாலும் தன் மாதகவாலும் -என்றும் இ றே இவர் கிருபையின் பெருமை இருப்பது –
அருளாழி யம்மானாய்-
தயா சிந்தோ பந்தே -என்னும்படியான சர்வேஸ்வரன் கிருபை மறுத்த காலத்திலும் ஒதுங்கலாம் படியான கிருபை
அவன் கை விட்ட சம்சாரிகளையும் வ்ருதைவ பவதோ யாதா பூயசீ ஜன்ம சந்ததி
தஸ்யா மன்யதமம் ஜன்ம சஞ்சிந்த்ய சரணம் வ்ரஜ -என்று உபதேசித்து திருத்துமவர் இ றே-

கீழ்ச் சொன்ன ஜ்ஞான பக்தி வைராக்கியம் நிரவதி கதையாகிற இந்த குணங்கள் எல்லாம் கேட்டே போகாமே கண்ணாலே கண்டு அனுபவிக்கலாம் படி
பிரத்யஷமாய் முன் வந்து நிற்கும்வரை -அஸ்ய ராமானுஜச்ய -என்று அனுபவிக்கிறார் -இந்த ராமானுஜனுடைய -என்று
இவர்க்கு ஈடுபாட்டுக்கு விஷயம் இருக்கிறபடி -ராமானுஜச்ய சரனௌ சரணம் ப்ரபத்யே —
நாராயண சரனௌ சரண வர்ணத்தில் காட்டிலும் ராமானுஜ சரனௌ சரண வர்ணம் ஸ்வரூப அநு குணமாய் அமோகமாய் இருக்கையாலே அவர் திருவடிகளை சரணமாகப் பற்றுகிறார்
பழுதாகாது ஓன்று அறிந்தேன் -இத்யாதி
மாறாயதானவனை–வேறாக வேத்தி இருப்பாரை வெல்லுமே மற்று அவரைச் சாத்தி இருப்பார் தவம் –
பாற்கடலும் உன்தனக்கு எத்தனை இன்பம் தரும்
செழும் திரைப் பாற்கடல் கண் துயில் மாறன் திருவடிக் கீழ் விழுந்து இருப்பார் இ றே
வளர்ந்த வெங்கோபம் அடங்க லொன்றாய் அன்று வாழ் அவுணன் கிளர்ந்த பொன்னாகம் கிழித்தவன் கீர்த்திப் பயிர் எழுந்து விளைந்திடும் சிந்தை
இராமானுசனைக் கண்டு இரைஞ்சி மற்றவரைச் சாத்தி இருக்கப் பார்க்கிறார்
எம்பெருமானார் தவம் -தபஸ் சப்த வாச்யையான பிரபத்தி
இவர் தவம் -எம்பெருமானார் திருவடிகளே சரணம் -என்னும் ஆச்சார்யாபிமானம்
ராமாநுஜார்ய விஷயீக்ருதம் -என்றாரே
அவர் தவத்தைக் காட்டிலும் இவர் தவம் வென்றதாயிற்று
அவர்க்கு முன்னே இ றே இவர்க்கு பேறு சித்தித்து
சித்திர் பவதி வா நேதி சம்ராயோ அச்யுத சேவிதாம்
நிஸ் சம்சயமஸ்து தத் பக்த பரிசர்யா ரதாத்மா நாம் –
நம்புவார் பதி வைகுந்தம் காண்மினே -என்னும்படி வைகுண்ட பிரிய தர்சனம் பண்ணினார்-

இந்த ராமானுஜ பிரபத்தியிலே நாராயண பிரபத்தி அர்த்தம் எல்லாம் அனுசந்தேயம் –
கீழ் பக்தி விரக்தி ஜ்ஞப்தி த்ருணிதை யாகிய இவை –முக்தி பரத சக்தி சாதனங்களாய் இருக்கும்
இது இ றே புருஷகார பாவத்துக்கு அநு குணமான ஸ்ரீ மத் பதார்த்தமும்
இவையும் ஈஸ்வர வசீகரண ஹேதுவான குணம் இ றே
புருஷகாராந்தர நிரபேஷமாய் இ றே இவ்விஷயம் இருப்பது
இனி –வாத்சல்ய ஸ்வாமித்ய சௌசீல்ய சௌலப்யாதிகள்
சௌகர்ய ஆபாதகங்களாய் இருக்கும் நாராயண பதத்தில் போலே –
மாதா பிதா ப்ராதா நிவாசஸ் சரணம் ஸூ ஹ்ருத் கதிர் நாராயண -என்று
இஸ் சம்பந்தத்தாலே வாத்சல்யாதிகள் அனுசந்தேயம் அங்கு
இதத் தாய் இராமானுசன்
எந்தை இராமானுசன்
எம்மையன் இராமானுசன்
ஏலப்புனைந்து என்னைமார் -ஆணுடன் பிறந்தவர்கள் என்னுமா போலே
இங்கு எல்லார் உடன் உண்டான சௌப்ராத்ரம்
கோயில் அண்ணன் இராமானுசன்
அடியேனுக்கு இருப்பிடம்
இராமானுசன் சரண்
இராமானுசன் சரணே கதி –
என்கையாலே தோஷ போக்யத்வம் ஆகிற வாத்சல்யமும்
ஸ்வத்தினுடைய லாபாலாபம் ஸ்வாமியதாம் படியாய்
ஸ்வத்தை நோக்குகிற ஸ்வாமித்வம் ஆகிற இவை ராமானுஜ பதத்தாலும் அனுசந்தேயம் –
தாழ்ந்தவர்களோடே தன் பேறாக கலக்கையாகிற சௌசீல்யமும்
ஆஸ்ரயிப்பார்க்கு திருஷ்டி கோசரமாய் புரோவர்த்தயாய் நிற்கிற சௌலப்யமும்-

ஜ்ஞானமாவது -ஆஸ்ரிதர்க்கு த்யாக ச்வீகாரங்களுக்கு உறுப்பான இஷ்டாநிஷ்டங்களை அறிக்கைக்கு உடலான அறிவு
சக்தியாவது -அநிஷ்டங்களைப் போக்குகைக்கும் இஷ்டங்களைக் கொடுக்கைக்கும் உடலாய் -அசக்தரானவர்களை அக்கரை ஏற்ற வல்ல சக்தி
பூர்த்தியாவது -இவன் இட்டது கொண்டு த்ருதனாக வேண்டாத பூர்த்தி
ப்ராப்தி யாவது -தன் பேறாகச் செய்து தலைக் கட்டுகைக்கு உடலான சம்பந்தம்
காருணிகத்வம் ஆவது -சம்பந்தம் இல்லா விடிலும் -குருடன் குழியிலே விழுந்தால் எடுக்கைக்கு சம்பந்தம் வேண்டாதது போலே
பிறர் நோவு கண்டால் ஐயோ என்ன வேண்டும்படியான தயை –
அந்த பதன்நபி ச்வப்ரே கேவலந்த்வ நுகம்பவச -என்னக் கடவது இ றே
ஔதார்யம் ஆவது -கொள்வாரைத் தேடிக் கொடாவிடில் தரிக்காமல் கொடுக்கும் கொடை யுடைமை
இந்த சௌகர்ய ஆபாத குண சதுஷ்டயமும்
கார்ய ஆபாதக குண சாதகமும்
இங்கே அனுசந்தேயம் -அது எங்கனே என்னில்
இப்படியைத் தொடரும் இராமானுசன் -என்னும்படி அவர் பின் படரும் குணனாய்
தீம்பன் இவன் என்று நினைத்து என்னை இகழார் எதிராசர் அன்று அறிந்து அங்கீ கரிக்கையால் -என்கிற வாத்சல்யமும்
அண்ணல் இராமானுசன் -என்னும்படி உடையவர் ஆகையால்
பல்லுயிர்க்கும் வீடு அளிப்பானாய் விண்ணின் தலை நின்றும் மண்ணின் தலத்து உதித்த படியாலே-
வைத்து இருந்த இடத்தே வந்து வந்து நோக்கும் படியான ஸ்வாமித்வமும்
என்னருவினையின் திறம் செற்று இரவும் பகலும் விடாது என் தன் சிந்தை யுள்ளே நிறைந்து ஒப்பற இருந்தான் -என்னும்படி
ஒரு நீராக கலந்த சௌசீல்யமும்
என் கண்ணுள்ளும் நெஞ்சுள்ளும் நின்ற -தென்று சொல்லும்படி சௌலப்யமும்
மெய்ஞானத்து இராமானுசன் -கதி இராமானுசன் -உண்மை நன்ஞானம் உரைத்த இராமானுசன் -என்று
அறியாதன அறிவிக்கைக்கும் அவர்களுக்கு செய்ய வேண்டுமதுவும் தவிர்க்க வேண்டுமதுவும் அறிக்கைக்கும் ஈடான ஜ்ஞானமும்
நிலத்தை செறுத்து யுண்ணும் நீசக்கலியை நினைப்பரிய பலத்தைச் செறுத்தும் என் பெய்வினை தென் புலத்தில்
பொறித்தவப் புத்தகச் செம்மை பொறுக்கியும் போருகிற பாப விமோசகத்வ சக்தியும் –
சலியாப் பிறவிப் பவம் தரும் தீவினை பாற்றித் தரும் பரம் தாமம் என்னும் திவம் தரும் -என்னும்படி
விரோதி நிவ்ருத்தி பூர்வகமாக பகவத் பிராப்தியை உண்டாக்கிக் கொடுக்கும்தான சக்தியும்
பகவத் விஷயத்தை அண்டை கொண்ட பூர்த்தியும்
எந்தை இராமானுசன் வந்து யெடுத்தனன் இன்று என்னை -என்கிற பிராப்தியும்
காரேய் கருணை என்கிற காருணிகத்வமும்-
கொண்டலனைய வண்மைஉன்னுடைய கார் கொண்ட வண்மைஉன் வண்மை என் பால் என் வளர்ந்ததுவே -என்று
அபேஷா நிரபேஷமாக உபகரிக்கும் ஔதார்ய ஸ்வ பாவமும் ஆகிற
ப்ரபத்ய அபேஷித குணங்கள் எல்லாம் –குணம் திகழ்  கொண்டல் இராமானுசன் இடத்திலே  கண்டு அனுபவிக்கலாம் படி இருக்கும் இ றே –

இப்படி கோடி த்வய குண யுக்தரான இராமானுஜருடைய சரணங்களை உபாயமாக ச்வீகரிக்கும்படி சொல்லுகிறது
ராமானுஜச்ய சரனௌ சரணம் பிரபத்யே -என்று –
குலம் தரும் நலம் தரும் சொல்லான நாராயணா என்னும் நாலு எழுத்து போலே
சகல புருஷார்த்த சாதனம் அன்றிக்கே கேவலம் மோஷைக ஹேதுவாயாய் யாயிற்று இ றே இந்த சதுர அஷரி இருப்பது
சதுரா சதுர அஷரீ -என்றாரே இவர் தாமே
யதா நாராயணா எதி ஜகதா சதுரஷரம் -நாராயணா ராமானுஜ என்று இ றே விகல்ப்பிக்கலாய் இருப்பது
இத்திரு நாமம் தான் உகம் தோறும் உண்டாய் இருக்குமாயிற்று
இளைய பெருமாள் இடத்திலும் –நம்பி மூத்த பிரானுக்கு தம்பியான கிருஷ்ணன் இடத்திலும் -இப்போது இளையாழ்வாரான இவர் இடத்திலும் பேர் பெற்று இ றே இருப்பது ஏதத் பூர்வ அவதார த்வயமும் சாது பரித்ராணத்துக்கும் துஷ்க்ருத வினாசத்துக்கும் உடலாய் இருக்கும்
இவ்வவதாரமும் வைதிக மார்க்கத்தை ஸ்தாபிக்கைக்கும்
அவைதிக மார்க்கத்தை நிரோதிக்கைக்கும்
பிரபத்தி மார்க்கத்தை பெருக்கி வளர்க்கைக்கும் உடலாய் இருக்கும்
அவ்வவதாரங்களிலும் அப்படியே –
ச ப்ராதுஸ் சரனௌ காடம்
மாமேகம் சரணம் விரஜ
நிரஸ்த இதர போகாசோ வரதம் சரணம்கத –என்று இ றே இவர்கள் பிரபத்தியை வர்த்திப்பது
அவர் ஸ்ரீ நாராயண விஷயத்திலே பிரபத்தியை கத்ய  முகேன வெளியிட்டு அருளினார்
இவர் ராமானுஜ விஷயத்தில் பிரபத்தியை இப்பத்ய முகேன வெளியிடுகிறார்
அங்கு பிரமேய பூதர் வெளியிட்டார்கள்
இங்கு பிரமாதாவனவர் வெளியிட்டார் -ராமானுஜச்ய சரனௌ சரணம் பிரபத்யே -என்று -அஸ்ய ராமானுஜச்ய சரனௌ -என்று
இராமானுசன் பரன் பாதமும் என் சென்னித் தரிக்க வைத்தான் -என்னும்படி திருவடிகளிலே தலையை மடுத்து சிரசா யாசிக்கிறார்
ராம சரணாகதி -சிரசா யாசதஸ் தஸ்ய வசனம் ந க்ருதம் மயா-என்று பலித்ததில்லை
ராமானுஜ சரணாகதி அவ்யபி சரிதமாகப் பலிக்கும் இ றே-

ச ப்ராதுஸ் சரனௌ -என்னும்படி –ராமானுஜச்ய சரனௌ -என்று வேறு த்வயம் வேண்டாதே –அடியே த்வயமாய் இருக்கை –
லோக விக்ராந்த சரணம் போலே மாறி நடப்பன வாய் இ றே இராமானுசன் தன் இணை யடி இருப்பது
நாராயண சரணங்கள் அளவும் செல்ல வேண்டாத பூர்த்தி –
விக்ரஹ ஏக தேசத்தைச் சொன்னது விக்ரஹத்துக்கும் உப லஷணமாக –
கையில் கனி என்னக் கண்ணனைக் காட்டித் தரிலும் உன் தன் மெய்யில் பிறங்கிய சீர் அன்றி வேண்டிலன் யான் –யென்னும்படியாய் இருக்கும்
சரனௌ சரணம் –இராமானுசன் நம்மை நம் வசத்தே விடுமே சரணம் என்றால் –என்கிற உபாயத்வ அத்யாவச்யத்தை சொல்லுகிறது
ப்ரபத்யே -என்று உபாய ச்வீகாரம் சொல்லுகிறது
நையும் மனம் யுன் குணங்களை யுன்னி என்னாவிருந்து எம்மையன் இராமானுசன் என்று அழைக்கும் அருவினையேன் கையும் தொழும்-
வாசா யதீந்திர மனசா வபுஷாச யுஷ்மத் பாதாரவிந்த யுகளம் பஜதாம் குருணாம் கூராதி நாத -என்னும்படி
த்ரிவித கரணத்தாலும் பற்றுகிறார்
இராமானுசனை உன்னும் திண்மை -என்று எல்லார்க்கும் மானஸ அத்யாவசாயம் ஆகலாம்
இவர் பூர்ண அதிகாரி ஆகையாலே த்ரிவித கரணத்தாலும் பூர்ண பிரபத்தி பண்ணுகிறார்
இந்த ச்வீகாரம் பிராப்யம் ஆகையாலே
ஏய்ந்த பெரும் கீர்த்தி இராமானுச முனி தன் வாய்ந்த மலர்ப்பாதம் வணங்குகின்றேன் -என்று வர்த்தமானமாய் நடக்கின்றது-

இவர் தீர்க்க பந்து ஆகையாலே எல்லார்க்கும் தாம் பண்ணின பிரபத்தியே தஞ்சமாம் படி கொழுந்து விட்டுப் படரும்படி பண்ணுகிறார்
அத்தைப் பற்ற இ றே –பிரயாண காலே ராமானுஜார்யம் நமத -என்றது
இத்தால் –இவர் சரம காலத்திலே பண்ணின சரம பிரபத்தி யே
இவர் சரண் கூடின சரமபர்வ நிஷ்டர்க்கு எல்லாம்
அவ்யபிசரிதமான உபாயமாக பேற்றோடு தலைக் கட்டும் என்றதாயிற்று
பிரபன்ன ஜன கூடஸ்தரான எம்பெருமானார் தம்முடைய பெருகிப் போருகிற பெரும் கருணையினால்
பெரிய பெருமாள் திரு முன்பே சென்று பெரிய பிராட்டியாரை முன்னிட்டு
பிரபன்ன ஜனங்களான பெரியோர்கள் இடத்திலே பேதைகளானவர்கள் செய்யும் பெரும் பிழைக்கும் பிரபத்தியே
இவர் சரண் கூடின சரம பரவ நிஷ்டர்க்கு எல்லாம் பிராயச் சித்தமாக கடவது -என்று பிரார்த்திக்க
புருஷகார பலத்தாலே பொறுத்தோம் என்ன
இந்த பிரார்த்தனா பிரகாரத்தை
இராமானுசனைத் தொழும் பெரியோரான கூரத் தாழ்வான் ஏகாந்தத்திலே சேவித்து அனைவருக்கும் தஞ்சமாக
நசேத் இத்யாதி ஸ்லோகத்தை அருளிச் செய்தார் என்று பெரியோர்கள் அருளிச் செய்வர்
வாதிகேசரி அழகிய மணவாள சீயரும்
பகவந்தம் யதிவரம் ப்ரணிபத்திய யதீந்திர அங்கீ கரியான் வயரானார் -அத்தைப் பற்றப் பின்புள்ளாரும்
பிரசாதாத் ஸ்ரீ சஸ்ய-என்றார்கள்
ஈட்டுக்கு பிரவர்த்தகரான ஈயுண்ணி மாதவப் பெருமாள் பிரசிஷ்யரான நாலூர்ப் பிள்ளையும் ராமானுஜ தாசர் இ றே-
யதிவர புனர் அவதாரமாய் யதீந்திர பிரவணரான ஜீயரும் தம் சிஷ்ய புத்ரர்களுக்கு ராமானுஜ நாமத்தை உண்டாக்கி நடத்தியும்
நூற்றந்தாதியை அனுகரித்து அருளிச் செய்த யதிராஜ விம்சதியில் ஸ்ரீ வத்ஸ சிஹ்னர் அடியாக
வாசா மகோசர மகா குண தேசிகாக்ர்யா கூராதி நாத –என்றும்
குரூத்தம கூர நாத பட்டாக்ய தேசிகவர –என்றும்
ஸ்ரீ சைல நாதர் இடத்திலே சேகரித்தது
ஏவம்வித சம்பந்த யுக்தராய் குருகுல துல்யரான பெரிய ஜீயர் சம்பந்தம் இ றே பிரபலம்
இத்தால்
விசிஷ்ட பஷத்தில் ஊன்றின சிஷ்டராய் -அத்தாலே ஸ்ரேஷ்டருமாய் சர்வ பிரகாரத்தாலும் அஹங்கார ரஹீதமான ஆச்சார்யர்கள் சம்பந்தமே ஆதரணீயம் என்றது ஆயிற்று –

—————————————————————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ கூரத் ஆழ்வான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

 

ஸ்ரீ லஷ்மி நாத சமாரம்பாம் -தனியன் -பிள்ளை லோகம் ஜீயர் வியாக்யானம் –

November 26, 2014

ஸ்ரீ லஷ்மி நாத சமாரம்பாம் நாத யாமுன மத்யமாம்
அஸ்மத் ஆச்சார்யா பர்யந்தாம் வந்தே குருபரம்பராம் -கூரத் ஆழ்வான்-

சர்வ ஆத்மா ஹிதைஷியாய் -ஆப்ததமராய் -குரூத்தமரான கூரத் ஆழ்வான்
அனைவருக்கும் குரு பரம்பர அநு சந்தானத்தாலே உஜ்ஜீவனம் உண்டாம் படி அருளிச் செய்ததாய் இருக்கும் –
ஆகையால் இறே சர்வ சிஷ்யர்களும் இத்தை அங்கீகரித்து அனுசந்தித்துக் கொண்டு போருகிறது –

லஷ்மி நாத சமாரம்பாம் –
அதில் முற்பட –ஸ்ரீ ரீதராயாதி குரவே -என்று
ரஹச்ய த்ரய பிரதிபாதகத்வத்தாலே –பிரதம குரு ஸ்ரீயபதியான எம்பெருமான் ஆகையாலே முற்பட அருளிச் செய்கிறார் –
நர நாரணனனாய் உலகத்து அறநூல் சிங்காமை விரித்தவன்-என்றும்
தன்னடியார் திறத்தகத்து தாமரையாள் ஆகிலும் சிதகுரைக்குமேல் என் அடியார் அது செய்யார் செய்தாரேல் நன்றே செய்தார் என்பர் -என்றும்-
பார்த்தனுக்கு அன்று அருளி பாரதத்து ஒரு தேர் முன் நின்று -என்றும்
பண்டே பரமன் பனித்த பணிவகை என்றும் சொல்லக் கடவது இ றே
குரு ஸ்தவமேவ-
குருரபி
பக்த முக்தக முக்தாஹாரம் மம குரும்
பீதகவாடைப் பிரானார் பிரம குருவாக வந்து
அறியாதன அறிவித்த அத்தா
என்னைத் தீ மனம் கெடுத்தாய்
மருவித் தொழும் மனமே தந்தாய் –
என்று ஆயிற்று அனுசந்தித்துப் போருவது
பெரிய பிராட்டியாருக்கு முற்பட வாயிற்று சர்வேஸ்வரன் ஸ்ரீ விஷ்ணு லோகத்தில் த்வயத்தை அருளிச் செய்தது –
தவத்த ஏக மயா ஸ்ருத -என்றாளே-
அவன்தானும் -புரா மந்திர த்வயம் ப்ரஹ்மன் விஷ்ணு லோகே மகா புரே
தஸ்மின் நந்தபுரே லஷ்ம்யை மயா தத்தம் சனாதனம் -என்று அருளிச் செய்தான் இ றே
அத்தாலும்
கடகத்வத்திலே முற்பாடு உடையவள் ஆகையாலும்
மற்றையார்க்கு கடகத்வம் அவள் அடி ஆகையாலும்
லஷ்மி நாத சமாரம்பாம் -என்று மிதுனச் சேர்த்தியாக  அருளிச் செய்தது –
இறையும் அகலகில்லேன் -என்று இருக்கையாலே பிரிந்து நிலை இல்லை
லஷ்மிக்கு லஷ்மிதந்த்ரத்திலே பிரபத்தி பிரவர்த்தகத்வம் உண்டு இறே-

சமாரம்பாம் என்று இவர்கள் தொடக்கமாக குரு பரம்பரையைச் சொல்லுகையாலே
ஸ்ரீ விஷ்வக்சேன சம்ஹிதையிலே பகவானால் பிரபத்தி உபதேசம் பண்ணப் பட்டதாய் சொல்லப் படுமவருமாய்
தத்தத்த வச்தோசித பரிசர்யாயாம் ஆஜ்ஞா பயந்த்யா-என்று
பூ வளரும் திரு மகளாலே யருள் பெற்று –அத்தாலே
ஸ்ரீ மதி விஷ்வக்சேன -என்னும்படி கைங்கர்ய ஸ்ரீயையுடைய சேனை முதலியாரும்
திருமாலால் அருளப் பட்ட சடகோபன்
திரு மா மகளால் அருள் மாரி
என்னும்படியான பிரபன்ன ஜன கூடஸ்தரும் ஸூசிதர்
சேனை முதலியாரும் -விஷ்வக்சேன சம்ஹிதை யாதிகளிலே கஜா நநாதிகளுக்கு ப்ரபத்தியை வெளியிட்டு அருளினார் இ றே
இப்படி வெளியிட்ட பிரகாரத்தை இத்யுக்தவான் ஜகன் நாதோ த்விரதா நனமாம் பிரதி -என்று தாமே அருளிச் செய்தார் -அத்தைப் பற்ற வாயிற்று –
நமஸ் சேநாதிபதயே ஜ்ஞான யாதாம்ய தாயினே -என்று அத்யாத்மசிந்தையிலே அருளிச் செய்தது
அவ்வளவன்றிக்கே ஆழ்வார் அவதார வைபவத்தை சனத்குமாரர் மார்கண்டேய புராணத்தில் ஒரு அத்யாயம் எல்லாம் சேர
அருளிச் செய்தார் ஆகையாலே இவர்கள் அளவும் விவஷிதம் –

நாத யாமுன மத்யமாம் –
இந்த குரு பரம்பரையில் ஆதி மத்ய அவசானங்களை அருளிச் செய்கிறவர் ஆகையாலே
நாத யாமுனர்களை மத்யம பதஸ்தராக அருளிச் செய்கிறார் –
நாத முனிகளும் யாமுன முனிகளும் -அவர்கள் தான் பரம ஹம்சர் இ றே
நாத யாமுனர் போல்வாரை அன்னம் என்றும் -என்று இ றே ஆச்சார்யஹிருதயத்தில் அருளிச் செய்தது –
அவனும் அன்னமாய் இ றே அருமறைகளை அருளிச் செய்தது –
ஏவம்விதரான இவர் தான் மதுர கவிகளின் உடைய திவ்ய பிரபந்த அனுசந்தானத்தாலே
ஆழ்வார் உடைய –அருள் பெற்ற நாதமுனி யானார் –
அந்த நாதமுனி அருளாலே இ றே யமுனைத் துறைவர் அவதரித்து-தர்சனத்தை ஆள வந்தார் ஆனது –
நாதோ பஜஞம் ப்ரவ்ருத்தம் பஹூபி ருபசிதம் யாமு நேய பிரபந்தை -என்னக் கடவது இ றே
அவ்வளவு அன்றிக்கே
விஷ்ணு பக்தி பிரதிஷ்டார்த்தம் சேநேசோ அவதரிஷ்யதி -என்று
ஸ்ரீ சேனாபதி ஆழ்வார் அவதாரமாக நம் ஆழ்வாரைச் சொல்லிற்று இ றே
ஆளவந்தாருக்கு பிரபத்தி அர்த்த உபதேசம் பண்ணுகைக்கு அடியான உய்யக் கொண்டாரும்
மணக்கால் நம்பியும் இவர்கள் இடையிலே அடைவு படக் கடவராய் இருப்பார்கள்
நாத யாமுன மத்யமாம் -என்று ஆழ்வான் அனுசந்தான க்ரமமாயிற்று இது
இவரை ஒழிந்த மற்றையார் –அஸ்மத் குரு சமாரம்பாம் யதிசேகர மத்யமாம்
லஷ்மி வல்லப பர்யந்தாம் வந்தே குரு பரம்பராம் -என்றும் இ றே அனுசந்திக்கப் போருவது-
உடையவர் தான் குருபரம்பரைக்கு நடுநாயகம் இ றே
அவர்தாம் ஆழ்வானுக்கு சதாச்சார்யர் ஆகையால் அஸ்மத்சார்ய பர்யந்தம் என்கிறது –
அஸ்மத் குரோர் பகவதோ அஸ்ய தயைக சிந்தோ ராமானுஜச்ய -என்னக் கடவது இ றே
ராமானுஜாங்க்ரி சரணோ அஸ்மி -என்றும் அனுசந்தித்தார் –
இதிலே யமுனைத் துறைவன் இணை அடியாம் கதி பெற்று உடைய இராமானுசன் ஆகையாலே
ஆளவந்தாருக்கு சரணத்வயம் என்னலாம்படியான பெரிய நம்பியும் ஸூ சிதர்
இளையாழ்வாரை விஷயீ கரித்த அனந்தரத்திலே-
இளையாழ்வீர் பெருமாள் ஸ்ரீ தண்ட காரண்யத்துக்கு எழுந்து அருளும் போது-மரவடியை தம்பிக்கு வான் பணையம் வைத்து போய் வானோர் வாழ எழுந்து அருளினாப் போலே
மேலை வானோர் வாழ இவரும் தமக்கு அடியேனான அடியேனை அப்படியும் யுமக்கு வைத்து திரு நாட்டுக்கு எழுந்து அருளினார் -என்று அவர் அருளிச் செய்தார்
அத்தைப் பற்ற யமுனைத் துறைவன் இணை அடியாம் கதி பெற்றுடைய இராமானுசன் என்று அமுதனார் அருளிச் செய்தார் -என்று
திரு நாராயண புரத்தில் திருவாய்மொழி யாச்சார்யர் அருளிச் செய்தார் –
உடையவரை குரு பங்க்தி ஹார நாயகமாக நடுவே அனுசந்திக்க வேண்டி இருக்க
யதா பாடம் எல்லாம் அனுசந்திக்கிறது –ஆழ்வான் திவ்ய ஸூ க்தி என்னுமது அறிக்கைக்காக —

இதில் ஆச்சார்யா அபிமான யுக்தராய் இவ்வருகிலும் யுண்டான அனைவரும் ஸ்வாச்சார்ய பர்யந்தமாக அனுசந்திக்கும் போது
நாத யாமுனர்களை நடுவாக சொன்னது யதிவரர்க்கும் உப லஷணம் ஆகிறது என்று கண்டு கொள்வது
அஸ்மத் ஆச்சார்யா பர்யந்தாம் வந்தே குருபரம்பராம் -என்கிற இத்தால்
ராமானுஜார்ய திவ்யாஞ்ஞா வர்த்ததாம் அபி வர்த்ததாம் -என்று எம்பெருமானார் திவ்ய சங்கல்ப்பத்தாலே வர்த்தித்துக் கொண்டு போருகிற
ஆச்சார்ய பரம்பரையானது ஸ்வாச்சார்ய பர்யந்தம் சேவிக்கப்படுமது என்கிறது –
எம்பெருமானைக் காட்டிலும் குருபரம்பரை அதிகம் -குரு பரம்பரையில் காட்டிலும் ஸ்வாச்சார்யன் அதிகன் -என்னக் கடவது இ றே
அஸ்மத் தாச்சார்யபர்யாந்தம் -என்கையாலே இவ்வருகுள்ளார்க்கு உத்தேச்யராய் –பிரபத்தி மார்க்க பிரவர்த்தகரான
கூரத் ஆழ்வான் -அவர் செல்வத் திருமகனாரான ஸ்ரீ பட்டர் -நஞ்சீயர் -நம்பிள்ளை -வடக்குத் திருவீதிப் பிள்ளை
பிள்ளை லோகாச்சார்யார் -கூர குலோத்தம தாச நாயன் –
திருவாய்மொழிப் பிள்ளை -பெரிய ஜீயர் -முதலாக –
சர்வ குரூப்ய-என்னும் அவர்கள் எல்லாரும் அனுசந்தேயராம்படி ஸூ சிதர் –

வேதாந்தச்சார்யரான அண்ணாவும்
பத்யு ஸ்ரீய பதாப் ஜாப்யாம் பிரயுஞ்ஜா நாய மங்களம்
ஸ்ரீய க்ருபாமய ஸூ தா சிந்து ஸ்ரோதோவகா ஹி நே
ஆஸ்து மங்கள மார்யாய ரம்ய ஜாமாத்ரு யோகி நே -என்று தொடங்கி
யதீந்திர ப்ரவணா யாஸ் மத்குரவே குணசாலினே
பிரயுஞ்ஜே மங்களம் ம்ய ஜாமாத்ரு வர யோகி நே-என்று நடுவாகவும்
பூர்வா சார்யேஷூ சர்வேஷூ பூர்ணப்ரேமா நுபத்னனே
மங்களம் ரம்ய ஜாமாத்ரு முநீந்தராய தயாளவே
பஸ்ய ஸ்ரீ சைல நாதார்ய பரிபூர்ண க்ருபாஜூஷே
ரம்ய ஜாமாத்ரு முனயே மகாபாகாய மங்களம் –என்று
ஸ்ரீ யபதியைத் தொடங்கி
ஸ்ரீ மத்  ராமானுஜார்யர் நடுவாகவும்
ஸ்ரீ சைல தயா பாத்ரரான பெரிய ஜீயர் அளவும் சேகரிக்கையாலே-இதுவே ஸூத்த சம்ப்ரதாயம்
மநு விபரீதம் போலே இதுக்கு புறம்பானது அசம்ப்ரதாயம்
உபாயாந்தர உபதேஷ்டாக்கள் ஸ்வரூப நாசகரான குருக்கள்
ஆகையால் இ றே –குரூன் சர்வ தர்மாம்ச சந்த்யஜ்ய -என்றது
சாஷாத் பலைக லஷ்யத்வ பிரதிபத்தியாலே மந்திர ரத்னத்தை உபதேசிக்குமவர்கள் இ றே -சத் குருக்கள் ஆகிறார் –
த்வயத்தின் உடைய அர்த்தத்தையும் -திருவாய்மொழியின் அர்த்தத்தையும் உபதேசிக்கிறான் யாவன் ஒருவன்
அவனுக்கே இ றே ஆச்சார்யத்வ பூர்த்தி உள்ளது என்று பிரமேய ரத்னத்திலே அருளிச் செய்தார்
ஏவம் விதமான குரு பரம்பரை இ றே சேவ்யம் என்கிறது-

மேலும் குருகுல துல்யரான வரவர முனிவருடைய பரம்பரயா-அச்மதாச்சார்யபர்யந்தாம் -என்று நடந்து செல்லுவது –
அஸ்மத் குரும் பரமகாருணிகம் நமாமி -என்று தொடங்கி
சௌம்யோ பயந்த்ருமுனிம்-என்று இ றே தலைக் கட்டி அருளினார்
நமஸ் த்வஸ் மத குருப்யச்ச -என்று தொடங்கி
நமோ ராமானுஜா யேதம் பூர்ணாய மஹதே நம-என்று நடுவாகவும்
ஸ்ரீ தராயாதி குரவே நமோ பூயோ நமோ நம -என்று எம்பெருமான் அளவாகவும்
வாக்ய குருபரம்பரா க்ரமத்தாலே வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் அருளிச் செய்தது
இந்த க்ரமத்தை –முந்தை வினையகல முன்னருளும் ஆரியனால் எந்தை எதிராசர் இன்னருள் சேர்ந்து
அந்தமில் சீர் பொற்பாவை தன்னருளால் பொன்னரங்கர் தாள் பணிந்து நற்பால் அடைந்து உய்ந்தேன் நான் -என்றும்
அஸ்மத் குருதயா யாஸ்து யதீந்த்ராங்கி க்ரியான்வய
லபேயே லப்த விஜ்ஞானோ லஷ்மீபதி பதத்வயம் -என்று
விவரண மாலையின் அடியிலும் தத்வதீபாதியிலும் அருளிச் செய்தார்

இந்த க்ரமம் –ஆச்சார்யாணாம் அசாவசாவித்யா பகவந்த ச சாசார்யவம் சோஜ்ஞே –என்கிற ஸ்ருதியையும்
குரு பரம்பரயா பரம குரும் பகவந்தம் ப்ரணம்ய -என்கிற ஸ்ரீ பாஷ்யகாரர் வசனத்தையும் பற்றி இருக்கிறது –
ஆச்சார்யா நச்மதீ யாநபி பரமகுருன் சர்வமாச்சார்யா வர்க்கம் ஸ்ரீ மத ராமானுஜார்யம் முனிம் அகில ஜன உத்தாரண ஆவதீர்ணம்
பூர்ணார்யம் யாமுநேயம் முனி வரம்த தௌ ராம ராஜீவநேத்ரௌ வந்தே நாதம் முநீந்த்ரம் வகுளதரசமூ நாத லஷ்மி முகுந்தன் -என்னக் கடவது இ றே

லஷ்மி நாத சமாரம்பாம் -என்கிற இத்தனியனில் குருபரம்பரா க்ரமத்தையும்
தென் அரங்கனாரும் திரு மகளும் ஆதியா அன்னவயல் பூதூர் மன் ஆங்கிடையா என்னை அருள்
ஆரியனே தானளவா அன்ன குருமுறையின் சீரிய தாள் சேர்ந்து உய்ந்தேனே -என்றும் அவர் தாமே அருளிச் செய்தார்
இந்த க்ரமம் -திருவருள் மால் சேனை முதலி சடகோபன் –
நாதம் பங்கஜ நேத்ர -என்கிற தனியன்களிலும்
ஆதி முதல் மாயன் மலர் மங்கை சேனைத் தலைவன் -என்றும்
சேனைநாதன் அருள் மாறன் நாதமுனி தாமரைக் கண்ணி ராமர் வாழ் சீர் சிறந்த யமுனைத் துறைக்கு இறைவர்-செந்தொடைக்கு அதிபர் அருளினால் தானமர்ந்த எதிராசர் கூரம் வரு தலைவர் நீதி புனை பட்டர்பின்-தலைமைய மாவதச் சீயர் நம்பிள்ளை தழைத்த கண்ணர் இருவகையினர்-ஈனமின்றி அருள் உலகாசிரியன் இனிய கூர குல தாதருக்கு இன்பமேவு திருவாய் மொழிப் பிள்ளை இவர்க்குத்-தான் அடிமையாகவே ஆனவாழ்வு பெற அருளுவர் கோல மணவாள மா முனிவன் –என்று சொல்லிற்று இ றே-
இப்படி ஆரோஹா அவரோஹா க்ரமங்கள் இரண்டாலும் குரு பரம்பரையை அனுசந்திக்கக் குறை இல்லை
ஈச்வரஷ்ய ச சௌஹார்த்தம் -இத்யாதியாலே எம்பெருமான் செய்த ஆச்சார்ய சம்பந்த பர்யந்தமான உபகார பரம்பரையை அனுசந்தித்தால்
குரு பரம்பரைக்கு தலையான எம்பெருமானை முந்துற பற்ற அடுக்கும்
ஆத்மனோ ஹயாதி நீசச்ய -இத்யாதியாலும்
நாராயணன் திரு மால் -இத்யாதியாலும்
ஆச்சார்யன் பண்ணின பகவத் சம்பந்த கௌரவத்தை அனுசந்தித்தால்
அஸ்மத் குருப்யோ நம -என்று ஆச்சார்யனை முந்துற அனுசந்திக்க அடுக்கும்
குரு பரம்பரையை முன்னிடவே சரணாகதன் குறை தீரும்
பிராட்டியை முன்னிடவே சரண்யன் குறை தீரும் -என்று இ றே
ஆச்சான் பிள்ளை மாணிக்க மாலையில் அருளிச் செய்தது
ஜப்தவ்யம் குரு பரம்பரையும் த்வயமும் -என்று இ றே அருளிச் செய்தது-
குரு பரம்பரா பூர்வகம் அல்லாத த்வய அனுசந்தானமும் நாவ கார்யம் இறே
இப்படி ஆதி மத்ய அவசான சாஹிதையான சத்குரு சந்ததி சர்வ சத்துக்களாலும் சதா அனுசந்தேயம் என்றது ஆயிற்று-

—————————————————————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ கூரத் ஆழ்வான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்