Archive for October, 2014

திருவாய் மொழி – திவ்யார்த்த தீபிகை–நல்குரவும் செல்வமும்–6-3-

October 31, 2014

வைகல் பூங்கழி வாயில் தூது விட்டு தாமதித்து வந்ததால்
பிரணய ரோஷம் தலை எடுத்து ஊடி
ஊடலுக்கு பின் கூடல் என்பதை நின்றிலங்கு முடியினாய் -பாசுரத்தால் ஸூ சகமாக அருளினார்
எவ்விதமும் கூடேன் ஏற்றாரை கூட வைத்து அருளி இவனுடைய வலிமை என்னே
என்று விஸ்மயபட்டு இருந்த ஆழ்வாருக்கு
தன்னுடைய அகடிதகட நா சாமர்த்தியத்தை நன்கு காட்டிக் கொடுத்து
அத்தன்மையனான தான் திரு விண்ணகரிலே நித்ய சந்நிதி
பண்ணி அருளுவதையும் காட்டிக் கொடுக்க
அது தன்னைப் பேசி இனியராகிறார் இத் திருவாய் மொழியிலே —

—————————————————————————————————————————————————————

நல்குரவும் செல்வமும் நரகும் சுவர்க்கமுமாய்
வெல்பகையும் நட்பும் விடமும் அமுதமுமாய்
பல்வகையும் பரந்த பெருமான் என்னை யாள்வானை
செல்வம் மல்குத் திரு விண்ணகர்க் கண்டேனே –6-3-1-

ஏழ்மையும் ஐஸ்வர்யமும் உண்டு பண்ணுவனாகை-குசேலர் –
கண்டா கர்ணனை ச்நேஹன் ஆக்கிக் கொண்டான்
சீமாலி கனவனோடு தோழமை கொள்ளவும் வல்லாய் சாமாறு
அவனை நீ எண்ணிச் சக்கரத்தால் தலை கொண்டாய்
வெல்பகை
சமாதானத்தாலே மீளுமது அன்றியிலே
வென்றே விட வேண்டும் பகை -ஈடு
அரணுக்கு விஷமும் அமரர்களுக்கு அமுதமும் அளித்தாய்
இத்தால் விபூதி விஸ்தாரம் காட்டி அருளினார்
யாவராய் நிற்கின்றது எல்லாம் நெடுமாம் என்று ஓராதார் கற்கின்றது எல்லாம் கடை -திரு மழிசைப் பிரான்
சர்வம் விஷ்ணு மயம்ஜகத் -என்று இருப்பார்க்கு
நல்குரவு விடம் வெல்பகை தாழ்வு என்றும்
செல்வம் சுவர்க்கம் அமுதம் உயர்வு என்றும் நினையார்
எல்லாம் ஒரு நிகராகவே தோன்றும்
தன்னொப்பாரிலப்பன்
ஒருவரையும் நின் ஒப்பார் ஒப்பிலா என்னப்பா -திருமங்கை ஆழ்வார்-

——————————————————————————————————————————————————————–

கண்டவின்பம் துன்பம் கலக்கங்களும் தேற்றமுமாய்
தண்டமும் தண்மையும் தழலும் நிழலுமாய்
கண்டு கோடற்கரிய பெருமான் என்னை ஆள்வானூர்
தெண்டிரைப் புனல் சூழ் திரு விண்ணகர் நன்னகரே –6-3-2-

கல்ப கோடி சதே நாபி ந ஷமாமி வசூந்தரே
ஷிபாம்ய ஜஸ்ரம சுபான் ஆசூரீஷ்வேவ யோ நிஷூ
என்னடியார் அது செய்யார் செய்தாரேல் நன்று செய்தார் என்பர் –
ஒன்றே என்னின் ஒன்றேயாம் பலவென்று உரைக்கில் பலவேயாம் –நமக்கு இங்கு என்னோ பிழைப்பம்மா -கம்பர்

——————————————————————————————————————————————————————————-

நகரமும் நாடுகளும் ஞானமும் மூடமுமாய்
நிகரில் சூழ் சுடராய் இருளாய் நிலனாய் விசும்பாய்
சிகர மாடங்கள் சூழ் திரு விண்ணகர்ச் சேர்ந்த பிரான்
புகர்கொள் கீர்த்தி யல்லால் இல்லை யாவர்க்கும் புண்ணியமே –6-3-3-

விருத்த விபூதிகன்
திரு விண்ணகர் சேர்ந்த பிரானுடைய
நிரவதிக காருண்யம் அல்லது -மற்று உஜ்ஜீவன உபாயம் இல்லை என்று -தமக்கு உஜ்ஜீவன
உபாயமான காருண்ய குணத்தை அனுபவிக்கிறார் -ஆறாயிரப்படி
கீர்த்தி -சாமான்ய சப்தத்தை விசேஷித்து உரைத்து அருளினபடி
புகர்கொள் –பரமபதத்தில் போல் இங்கு இங்கே நிறம் பெறுமே
விஷய நியமம் ஆவது
குண பூர்த்தி உள்ள இடமே விஷயமாகை
பூர்த்தி உள்ளதும் அர்ச்சாவதாரத்திலே -ஸ்ரீ வசன பூஷணம்-

——————————————————————————————————————————————————————————————-

புண்ணியம் பாவம் புணர்ச்சி பிரிவு என்று இவையே
எண்ணமாய் மறப்பாய் உண்மையாய் இன்மையாய் அல்லனாய்
திண்ண மாடங்கள் சூழ் திரு விண்ணகர்ச் சேர்ந்த பிரான்
கண்ணன் இன்னருளே கண்டு கொள்மின்கள் கைதவமே –6-3-4-

ஏஷ ஏவசாது கர்ம காரயதி யமேப்யோ லோகேப்ய உன்நீஷதி
ஏஷ ஏவ அசாது கர்மகாரயதி யமதொ நிநீஷதி
எல்லாம் இவன் இட்ட வழக்கு
சகல பதார்த்த அந்தர்யாமிதயா
வ்யாப்தனாய் இருந்து வைத்தே
தத்கத தோஷை அசம்ச்ப்ருஷ்டனாய் -ஆறாயிரப்படி
இன்னருளே -புண்ய பாபாதிகளாய்க் கொண்டு
அவனுக்கு விபூதியாய் தோற்றுகிறவை எல்லாம்
அவனுடைய கிருபையாலே உண்டாயிற்று -ஈடு
கைதவமே -ஏகாரம் எதிர்மறையில் -கைதவம் அன்று -சத்யமான விஷயம் என்கை
அன்றிக்கே -கைதவம் க்ருதகம் என்றபடியே
பண்ணப் பட்டவை அடங்கலும் அவனுடைய
நிர்ஹேதுக விஷயீ காரத்தாலே -ஈடு-

————————————————————————————————————————————————————————-

கைதவம் செம்மை கருமை வெளுமையுமாய்
மெய் பொய் இளமை முதுமை புதுமை பழமையுமாய்
செய் திண் மதிள் சூழ் திரு விண்ணகர்ச் சேர்ந்த பிரான்
பெய்த காவு கண்டீர் பெரும் தேவுடை மூவுலகே –6-3-5-

கைதவம் -வக்ரத்வம் -செம்மை -ருஜூ
பாண்ட விவரே ஹஸ்தம் கிமர்த்தம் நயதா-வெண்ணெய் குடத்தில் ஏன் கை விட்டாய்
மாதா கஞ்சன வத்சகம் ம்ருகயிதும் -அம்மா கன்று குட்டி சிதறி ஓடிப் போயிற்று- இங்கே இருக்கிரதி தேட கை விட்டேன் –
சூர்பணகை இடம் பெருமாள் ருஜூ புத்திதயா சர்வம் ஆக்க்யாதுமுபசக்கரமே –
கருமை வெளுமை
கண்ணன் கரிய கோலத் திருவுரு
நம்பி மூத்தபிரான் முன்னம் பெற்ற வளை வண்ண நன் மா மேனி
முன்னலோர் வெள்ளிப் பெரு மலைக் குட்டன் மொடு மொடு விரைந்தோட
பின்னர்த் தொடர்ந்தோர் கருமலைக் குட்டன் பெயர்ந்து அடியிடுவது –
மெய் பொய்
சத்யேன லோகன் ஜயதி -சத்யம் வீறு பெற ஒரு திருவவதாரம்
பொய்ந்நம்பி புல்லுவன் கள்வம் பொதியறை
பொய்யா யுன்னைப் புறம் பல பேசுவ புத்தகத்துக்குள் கேட்டேன் -அசத்தியம் வீறு பெற ஒரு திருவவதாரம்
பொய்யர்க்கே பொய்யனாகும் –மெய்யர்க்கே மெய்யனாகும்
இளமை முதுமை
பேதைக் குழவி
எந்தை தந்தை தந்தை தந்தை தந்தைக்கும் முந்தை
புதுமை பழைமை
பழைய அனுபவமாய் இருந்தும்
எப்பொழுதும் நாள் திங்கள் –ஆராவமுதமே
அப்போதப்போது புதுமைக்கும் குறை இல்லாமல் இருக்குமே
பெய்த காவு கண்டீர் பெரும் தேவுடை மூவுலகே-ப்ரஹ்மாதிகள் முதல் பீபீலிகை வரை அவனுடைய ரஷ்ய வர்க்கம் –

————————————————————————————————————————————————————————————————–

மூ வுலகங்களுமாய் அல்லனாய் உகப்பாய் முனிவாய்
பூவில் வாழ் மகளாய் தௌவையாய்ப் புகழாய்ப் பழியாய்
தேவர் மேவித் தொழும் திரு விண்ணகர்ச் சேர்ந்த பிரான்
பாவியேன் மனத்தே உறைகின்ற பரஞ்சுடரே –6-3-6-

தௌவை–மூதேவி என்கிற அலஷ்மி -சேட்டை தம்மடி யகத்துச் செல்வம் பார்த்து இருக்கின்றீரே
அவன் மாயையால் தேவதாந்தர பஜனம் பண்ணி கெட்டு போவார்களும் உண்டே
பக்தர்களால் புகழப் பெறுவதும் சிசுபாலாதிகளால் பழிக்கப் பருவத்தும் உண்டே
கற்றினம் மேய்க்கலும் மேய்க்கப் பெற்றான்
காடுவாழ் சாதியையும் ஆகப் பெற்றான்
பற்றி உரலிடை ஆப்பும் உண்டான் –
பாவியேன்
நித்ய சூரிகள் தன பக்கலிலே வந்து மேல் விழ
அத்தைத் தள்ளி
தான் என் பக்கலிலே வந்து மேல் விழா நிற்கக் கிடீர்
நான் அல்லேன் என்றது -ஈடு
பிரணய ரோஷத்தால் கதவடைத்து தள்ளி திரஸ்கரித்த பாவியேன் -என்கிறார்

—————————————————————————————————————————————————————————————————————-

பரஞ்சுடருடம்பாய் அழுக்குப் பதித்த உடம்பாய்
கரந்தும் தோன்றியும் நின்றும் கைதவங்கள் செய்தும் விண்ணோர்
சிரங்களால் வணங்கும் திரு விண்ணகர்ச் சேர்
வரங்கொள் பாதம் அல்லால் இல்லை யாவர்க்கும் வன் சரணே –6-3-7-

அப்ராக்ருத அசாதாராண திவ்ய மங்கள விக்ரஹம்
ஜகத் சர்வம் சரீரம் தே
கரந்தும் -இரா மடம் ஊட்டுவாரைப் போலே
உள்ளே பதி கிடந்தது சத்தையைப் பிடித்து
நோக்கிக் கொண்டு போரும் -என்றும்
கண் காண நிற்கில் ஆணையிட்டு விலக்குவார்கள்
என்று கண்ணுக்கு தோற்றாத படி நின்றும்
காண வாராய் என்று கண்ணும் வாயும் துவர்ந்து இருப்பார்க்கு ராம கிருஷ்ணாதி அவதாரங்களை செய்து அருளியும்
கைதவம் -க்ருத்ரிமம்
அவதரித்து நிற்கச் செய்தே
தன் படிகள் சிசுபாலாதிகளுக்கு தோற்றாத படி பண்ணியும்
ஆஸ்ரிதர்க்கு தோற்றும் படி பண்ணியும் -ஈடு
ப்ரஹ்மாதிகள் தலை பெற்ற பயன் பெற வணங்கி
வரங்கொள் பாதம்-
வரங்களை இரந்து பெற்றுக் கொள்ளும்படியான திருவடிகள்
வரம் -ஸ்ரேஷ்டம் ஸ்ரேஷ்டத் தன்மை கொண்டு இருக்கும் திருவடிகள் என்னவுமாம்
யாவர்க்கும்
எத்தனையேனும் கிழாய் கிழா யார்க்கும் -ஈடு
பெரும் பெருத்தவர்களுக்கும் என்றபடி
வன் சரணே
பிராட்டியும் அவனும் விடிலும் திருவடிகள் விடாது
திண் கழலாய் இருக்கும் -முமுஷூப்படி-

—————————————————————————————————————————————————————————————————

வன் சரண் சுரர்க்காய் அசுரர்க்கு வெங்கூற்ற முமாய்
தன் சரண் நிழல் கீழ் உலகம் வைத்தும் வையாதும்
தென் சரண் திசைக்குத் திரு விண்ணகர்ச் சேர்ந்த பிரான்
என் சரண் என் கண்ணன் என்னை யாளுடை என் அப்பனே -6-3-8

முப்பத்து மூவர் அமரர்க்கு முன் சென்று கப்பம் தவிர்க்கும் கலியே -தன்னை அம்புக்கு இலக்காகி ரஷிப்பவன்
தேவானாம் தாநவாநாஞ்ச ச சாமான்யம் அதி தைவதம் -என்றும்
சமோஹம் சர்வ பூதேஷு ந மே த்வேஷ்யோச்தி ந ப்ரிய -என்றும்
விட்டில் பூச்சி போலே விளக்கில் விழுவார்களே
காதம் பலவும் திரிந்து உழன்றேற்கு அங்கோர் நிழல் இல்லை நீர் இல்லை
உன் பாத நிழல் அல்லால் மற்றோர் உயிர் ப்பிடம் நான் எங்கும் காண்கின்றிலேன் –
சகல தாபங்களும் தீரும்படி நிழல் கொடுத்து அருளும்
தென் திசைக்கு திலதமான திரு விண்ணகர்
சர்வாத்மனா புகல்-சரண்யன் -விதேயன் -அடிமை கொண்ட உபகாரகன் –

————————————————————————————————————————————————————————————–

என்னப்பன் எனக்கு ஆய் இகுளாய் என்னைப் பெற்றவளாய்
பொன்னப்பன் மணியப்பன் முத்தப்பன் என்னப்பனுமாய்
மின்னப் பொன் மதிள் சூழ் திரு விண்ணகர்ச் சேர்ந்த வப்பன்
தன் ஒப்பார் இல்லப்பன் தந்தனன் தன் தாள் நிழலே –6-3-9-

ஆய் இகுளாய் -செவிலித் தாயாய் -தாய்க்கு தோழி
இகுளை என்று தோழிக்கு பெயராய் அத்தை குறைத்து இகுள் என்று கிடக்கிறது -ஈடு
வாசூதேவ தருச்சாயா நாதி சீதா நகர்மிதா நரகாங்காரசம நீ சா கிமர்த்தம் ந சேவ்யதே-
தானே தனது திருவடிகளைத் தந்து அருளின மகா உபகாரகன் –
ப்ராப்தா நாம் பாத மூலம் ப்ரக்ருதி மதுரயா ச்சாயயா தாபஹ்ருத் வ -ஸூ தர்சன சதகம்
பொன்னப்பன் மணியப்பன் முத்தப்பன் என்னப்பனுமாய்
முத்தினை மணியை மணி மாணிக்க வித்தினை -என்றும்
முத்தே மணி மாணிக்கமே முளைக்கின்ற வித்தே –
ஒப்பிலியப்பன் –

—————————————————————————————————————————————————————————————-

நிழல் வெய்யில் சிறுமை பெருமை குறுமை நெடுமையுமாய்
சுழல்வன நிற்பன மற்றுமாய் யவையல்லனுமாய்
மழலைவாய் வண்டு வாழ் திரு விண்ணகர்ச் சேர்ந்த பிரான்
கழல்கள் அன்றி மற்றோர் களைகண் இலம் காண்மின்களே–6-3-10-

பாட்டுக்கு கிரியையும்
பத்துக்கு கருத்தும் போலே
நூற்றுக்கு உபதேசப் பத்து -இத் திருவாய் மொழி உபதேசபரம்
மற்றோர் களைகண் இலம் காண்மின்களே-என்று அருளிச் செய்கையாலே
உபதேசித்து முடிக்கிறார் -பன்னீராயிரப்படி
காண்மின்களே -இத்தை நீங்களும் நிரூபித்து கொள்மின்

————————————————————————————————————————————————————————–

காண்மின்கள் உலகீர் என்று கண் முகப்பே நிமிர்ந்த
தாள் இணையன் தன்னைக் குருகூர்ச் சடகோபன் சொன்ன
ஆணை யாயிரத்துத் திரு விண்ணகரப் பத்தும் வல்லார்
கோணை இன்றி விண்ணோர்க்கு என்றும் ஆவர் குரவர்களே –6-3-11-

ஆணை யாயிரம் -பவத் ஆஞ்ஞா ரூபமான ஆயிரம் -ஸ்ருதிஸ் ஸ்ம்ருதிர் மமை வாஜ்ஞா
கோணை இன்றி -மிறுக்கு இல்லாமல்
காண்மின்கள் உலகீர் என்று கண் முகப்பே நிமிர்ந்த தாள் இணையன்-என்று
தன்னைக் குறித்து அருளிச் செய்ததாகும்
மா வலியை வடிவு அழகாலும் பேச்சின் இனிமையாலும் மயக்கினது போலே
ஊடலில் நின்ற ஆழ்வாரை மயக்கி தனது கார்யம் சாதித்து கொண்டவன்
நித்ய சூரிகளுக்கு குரவர்கள் ஆவார்கள் -பலன் சொல்லி தலைக் கட்டுகிறார்
சம்சாரத்தே இருந்து வைத்தே
நம்படி ஒருவனுக்கு உண்டாவதே என்று
நித்ய சூரிகள் கொண்டாடி இருப்பார்கள் -ஈடு

—————————————————————————————————————————————————————–

திருவாய்மொழி நூற்றந்தாதி –

நல்ல வலத்தால்நம்மைச் சேர்த்தான் முன் நண்ணாரை
வெல்லும் விருத்த விபூதியன் என்று எல்லை யறத்
தானிருந்து வாழ்த்தும் தமிழ் மாறன் சொல் வல்லார்
வானவர்க்கு வாய்த்த குரவர் –53

———————————————————————————————————————————————————–

ஸ்ரீ P.B.A,ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருவாய் மொழி – திவ்யார்த்த தீபிகை-மின்னிடை மடவார் நின்னருள்–6-2-

October 31, 2014

ஆழ்வார் உடைய படி பலவகைப் பட்டு இருக்கும்
இதில் பரம விலஷணமாய் இருக்கும்
என்றும் ஒருநாள் அழியாமை யான் இரந்தால் ஒன்றும் இரங்கார் உருக்காட்டார் -என்றும்
ஒரு நாள் காண வாராய் -என்றும்
பல காலும் கூப்பிட்ட ஆழ்வார்
இதில் எம்பெருமான் வந்து நிற்க -இங்கே ஏதுக்கு வந்தாய் -என்று கதவடைத்து -பிரணய கலஹம் -நடத்துவார் இதில் –
பிதா ச ரஷகச் சேஷி பர்த்தா ஜ்ஞேயோ ரமாபதி ச்வாம்யாதாரோ மமாத்மா ச போக்தா ச ஆத்யம நூதித
நவவித சம்பந்தங்களும் உண்டே
பர்த்ரு பார்யா சம்பந்தத்தால் பிரணய கலஹம்
கீழே தூது விட
அரை குலைய தலை குலைய எம்பெருமான் ஓடிவர
ஆழ்வார் பிரணய ரோஷம் தலை எடுத்து
கதவடைத்து தள்ளுகிறார்
காதில்கடிப்பிட்டு
ஏர்மலர்ப் பூங்குழல்
இதே நடையில் அவதரித்த அருளிச் செயல்கள் –

——————————————————————————————————————————————————————————-

மின்னிடை மடவார் நின்னருள் சூடுவார் முன்பு நானதஞ்சுவன்
மன்னுடை இலங்கை அரண் காய்ந்த மாதவனே
உன்னுடைய சுண்டாயம் நானறிவேன் இனியது கொண்டு செய்வதென்
என்னுடைய பந்தும் கழலும் தந்து போகு நம்பீ–6-2-1-

பந்தே நாயகி பேசாவிட்டாலும் நீயாவது பேசுவாய் அன்றோ
கழலே -நாயகி கிடைக்கா விட்டாலும் நீயாவது கிடைத்தாயே
வ்யாமோஹ அதிசயத்தை வெளிக்காட்ட பேசத் தொடங்குகிறாள்
முன்பு மின்னிடை அழகு இருந்த படி என்று சொல்லுவனே
சீறி மின்னிடை மடவார் நான் அல்லேன்
நின்னருள் சூடும் மின்னிடை மடவார் வேறே யுண்டு -என்கிறாள் –
முன்பு நான் அது அஞ்சுவன் –
நீ இங்கே வந்து செய்கின்ற பிரணய விலாச சேஷ்டிதங்கள்
உன்னுடைய இப்போது மின்னிட மடவார்கள் அறிய வந்தால்
உன்னை மாத்ரம் இல்லாமல் என்னையும் சேர்த்து தண்டிப்பார்கள் -என்று அஞ்சுகிறேன் –
மன்னுடை இலங்கை அரண் காய்ந்த மாதவனே -மாயவனே உயரான விளி
உண்ணாது உறங்காது ஒலி கடலை யூடறுத்து பெண்ணாக்கை யாப்புண்டு தாமுற்ற போது-என்று
பெண் பிறந்தார் சொல்லும்படி சீதா பிராட்டிக்காக நீ செய்த செயலும் -வலையில் விழ வைக்கவே
ஒரு துறையிலே மெய் பரிமாறா விடில்
நமக்கு மேல் உள்ளது எல்லாம் ஒரு தொகையிலே அகப்படாது என்று செய்தாய்
அத்தனை அன்றோ
அபலைகளை அகப்படுத்திக் கொள்ள இட்ட வழி அன்றோ -ஈடு
உன்னுடைய சுண்டாயம் நானறிவேன்-சுண்டாயம் -ஸ்வார்த்தபரத்வம்
இனியது கொண்டு செய்வதென் -உன்னுடன் உறவு கொள்வேன் அல்லேன்
புறப்பட -போகட்டும் என்று இருப்பவள் அல்லவே
கொடிய வென்னெஞ்சம் அவன் என்றே கிடக்கும் எல்லே
வார்த்தைபாடு வளர்க்க -என்னுடைய பந்தும் கழலும் தந்து போகு நம்பீ-என்கிறாள்
பிணக்கு செய்ய இடம் தந்தபடி

————————————————————————————————————————————————————————————————

போகு நம்பீ யுன் தாமரை புரை கண்ணினையும் செவ்வாய் முறுவலும்
ஆகுலங்கள் செய்ய அழிதற்கே நோற்றோமேயாம் –
தோகை மா மயிலார்கள் நின்னருள் சூடுவார் செவியோசை வைத்தெழ
ஆ கள் போக விட்டுக் குழலூது போயிருந்தே –6-2-2-

கீழே போகு என்னவும் போகாதே சில பிணக்கு செய்து அணுகி வந்தான்
என் பந்தும் கழலும் என்றாயே ஸ்திரீ ஸ்வா தந்த்ர்யம் கொண்டு பேசலாமோ
என் கண் இணையில் எனக்கு உனது மேல் உள்ள அன்பு தெரிய வில்லையா
என்றவாறு பேசி புன்முறுவல் செய்து அருகே வந்தான் –
போகு நம்பீ யுன் தாமரை புரை கண்ணினையும் செவ்வாய் முறுவலும் ஆகுலங்கள் செய்ய அழிதற்கே
இந்த அழகை காட்டி என்னை அழிக்கிறாய்
அழிவதற்கு பெண்ணாக பிறந்தோமே அல்லது அனுபவிக்க இல்லையே என்கிறாள்
முகம் காட்டாமல் திருக்க குழல் கற்றை அழகு இருந்தபடி என் என்ன
வேணு கானம் செய்தும் வசப்படுத்த தொடங்க
அப்பா நான் அல்ல கூந்தல் அழகி
உனது திரு அருளுக்கு பாத்திர பூதைகள் கூந்தல் அழகிகள் பலர் உண்டே
அங்கே சென்று பசுக்களை மேயவிட்டு வேணு கானத்தை செய்தாய் ஆகில் அவர்கள் உகப்பார்
அங்கே சென்று ஊதப் பாராய் -என்கிறாள் –

————————————————————————————————————————————————————————————————-

போயிருந்து நின் புள்ளுவம் அறியாதவர்க்கு உரை நம்பீ நின் செய்யவாய்
இரும் கனியும் கண்களும் விபரீதம் இந்நாள்
வேயிருந்த தடம் தோளினார் இத்திருவருள் பெறுவார் யவர்கொல்
மாயிரும் கடலைக் கடைந்த பெருமானாலே –6-2-3-

காதலி இருந்த இடத்தில் அன்றோ குழல் ஊதுவது -போன்ற வார்த்தைகளை சொல்லி நெருங்கி வர
போயிருந்து நின் புள்ளுவம் அறியாதவர்க்கு உரை நம்பீ-என்கிறாள்
உனது பொய் என் பக்கல் விலை செல்லாது
அது கேட்ட அவன்
உனது வாயமுதம் பருக எண் செய்ய வாய் துடிக்கிறது கண்டாயே
அதி கிடைக்கா விடிலும் கண்கள் ஆர நின்று காண கண்கள் துடிக்கின்றன பாராய் -சொல்ல
நோக்கினாள்
முந்தையைக் காட்டிலும் பரம விலஷணமாக இருக்கவே
நின் செய்யவாய் இரும் கனியும் கண்களும் விபரீதம் இந்நாள் –
விபரீதம் -மாறுபட்டு இருந்தன -விலஷணமாய் பரம போக்யமாய் இருக்கின்றன
உன்னுடைய திருக் கண்களினுடையவும்
திருப் பவளத்தினுடையவும் அழகு இருந்த படி என்
கண்டும் கேட்டும் அறியாத ஒரு படியான இவ்வழகு
திருப்பாற் கடலிலே அம்ருத மதன சமயத்திலே
அவதீர்ணையான –பெரிய பிராட்டியாரோடு
அன்று கலந்த கலவியாலும் பிறந்தது இல்லை
இப்படி பெரிய பிராட்டியாரில் காட்டிலும் உனக்கு
அபிமதைகளாய்
உன்னைப் புஜிக்க பிறந்தவர்கள் யாரோ -என்கிறாள் -ஆறாயிரப்படி
இந்த பரிபூர்ண அனுபவம் நமக்கு கிடைக்க பெற வில்லையே
கிடைக்கப் பெரும் புண்ணியவதிகள் யாரோ
என்று உள்ளுக்குள்ளே விஸ்மயப் படுகின்றபடி
மாயிரும் கடலைக் கடைந்த பெருமானாலே–பெரிய பிராட்டியாரைப் பெற பெரிய கார்யம் செய்தானே -அவளும் ஒரு பாக்யவதியே

———————————————————————————————————————————————————————————————————-

ஆலி நீளிலை யேழுலகுமுண்டு அன்று நீ கிடந்தாய் உன் மாயங்கள்
மேலை வானவரும் அறியார் இனி எம்பரமே
வேலினேர் தடம் கண்ணினார் விளையாடு சூழலைச் சூழவே நின்று
காலி மேய்க்க வல்லாய் எம்மை நீ கழறேலே–6-2-3-

விபரீதமோ மாயமோ என்னிடம் இல்லை உங்கள் இடம் தான் என்றான்
ஆலி நீளிலை யேழுலகுமுண்டு அன்று நீ கிடந்தாய் உன் மாயங்கள் மேலை வானவரும் அறியார் இனி எம்பரமே-என்கிறாள்
பாலன் தனதுருவாய் ஏழுலகுண்டு ஆலிலையின் மேலன்று நீ வளர்ந்த மெய் என்பர்
ஆலன்று வேலை நீருள்ளதோ விண்ணதோ மண்ணதோ
சோலை சூழ் குன்று எடுத்தாய் சொல்லு –
உன் மாயத்தை நீயே அறிய வேண்டும் என்கிறாள்
தாமதமாக வந்தேன் என்று இப்படியா
தாய் தந்தைக்கு பரதந்த்ரன் அன்றோ என்ன
வேலினேர் தடம் கண்ணினார் விளையாடு சூழலைச் சூழவே நின்று காலி மேய்க்க வல்லாய்
வ்யாஜ்யமாக கண் அழகிகள் விளையாடும் இடங்களில் திருவது அன்றோ உன் பணி
உள்ளபடி அறிந்தார்களே
வருந்தி அர்த்தம் இல்லா வார்த்தைகளை சொல்ல
எம்மை நீ கழறேலே
நீ மேலிட்டு வார்த்தை சொல்லும் இடம் இது வன்று
வேலினேர் தடம் கண்ணினார் விளையாடு சூழலைச் சூழவே நின்று சொல்லாய் -என்றபடி-

——————————————————————————————————————————————————————————————————–

கழறேல் நம்பீ உன் கைதவம் மண்ணும் விண்ணும் நன்கறியும் திண் சக்கர
நிழறு தொல் படையாய் உனக்கு ஓன்று உணர்த்துவன் நான்
மழறு தேன் மொழியார்கள் நின்னருள் சூடுவார் மனம் வாடி நிற்க
எம் குழறு பூவையொடும் கிளியோடும் குழகேலே –6-2-4-

நீ வஞ்சகம் செய்வது விண்ணுலகிலும் பிரசித்தம் அன்றோ
சூட்டு நன் மாலைகள் -இத்யாதி
உன் கையிலே சாஷி உண்டே
ஆயுதம் எடேன் – எடுத்தும் /பகலை இரவாக்கியும் -திண் சக்கர
நிழறு தொல் படையாய்
கவிழ் தலை இட்டு இருக்க
சர்வஞ்ஞனுக்கும் ஓன்று உணர்த்துவதாக சொல்ல
உங்கள் மொழி சாமான்யம் இல்லை தேன் போலே உள்ளதே என்றானாம்
நாங்கள் அல்ல -மழறு தேன் மொழியார்கள் நின்னருள் சூடுவார்-வேறு சிலர் உண்டு -சொல்லி மறைய நிற்க
பூவைகள் கிளிகள் உடன் லீலாரசம் அனுபவிகிக்க
எம் குழறு பூவையொடும் கிளியோடும் குழகேலே-
அவர்கள் மனம் வாடுவார்கள் -நீ இங்கனம் குழக வேண்டாம்
பூவை -புஷ்பம் -பஷி விசேஷம்
பூவைப் பூ வண்ணா
பூவையும் காயாவும் நீலமும் பூக்கின்ற
நீ யலையே சிறு பூவாய் நெடுமாலார்க்கு என் தூதாய்
பூவை பைங்கிளிகள்
பூவைகள்காள் குயில்காள் மயில்காள் –

—————————————————————————————————————————————————————————————

குழகி எங்கள் குழமணன் கொண்டு கோயின்மை செய்து கன்மம் ஒன்றில்லை
பழகியாம் இருப்போம் பரமேயித்திருவருள்கள்
அழகியார் இவ்வுலகு மூன்றுக்கும் தேவிமை தகுவார் பலருளர்
கழகமேறேல் நம்பீ உனக்கும் இளைதே கன்மமே –6-2-5-

குழமணன் -மரப்பாச்சி
விலாச சேஷ்டிதங்கள் பல செய்தான்
கச்சோடு பட்டைக் கிழித்து காம்புதுகிலவை கீறி
பந்து பறித்து துகில் பற்றி கீறிப் படிரன்படிறு செய்யும் -போன்ற கேட்பார் அற்ற செயல்களை செய்யவே
குழகி எங்கள் குழமணன் கொண்டு கோயின்மை செய்து கன்மம் ஒன்றில்லை-என்கிறார்கள்
கோ இன்மை -அராஜகமான செய்கை
கன்மம் ஒன்றும் இல்லை -லாபம் ஒன்றும் இல்லை -நிறக்கேடாகும்
வெட்டி வார்த்தை சொல்லுவதா நீங்கள் அல்லால் நான் இல்லையே என்ன
பழகியாம் இருப்போம்
கேட்டதும் என் குறும்புகள் உங்களுக்கு பரம போக்கியம் தானே
மிகைத்து அல்லல் படுத்த – பரமேயித்திருவருள்கள் -என்கிறார்கள்
குறும்பு செயல்களையே -திருவருள்கள் -என்கிறார்கள்
என் கொல் அம்மான் திருவருள்கள் -பத்தாம் பத்திலும் வரும்
இவை எங்களால் பொறுக்க முடியாது
த்ரிலோக சுந்தரிகள் என்று பலர் உண்டே
அழகியார் இவ்வுலகு மூன்றுக்கும் தேவிமை தகுவார் பலருளர்
தக்கார் பலர் தேவிமார் சால யுடையீர் -திருமங்கை ஆழ்வார்
நீங்கள் தான் எனக்கு ஏற்ற தேவிமார்கள் ஆணை இட்டு சொல்லுகிறேன் என்று சொல்லி அணுக
கழகமேறேல் நம்பீ என்கிறார்கள்
மேல் விழுந்து தீண்டாதே -கழகம் -கோஷ்டி –

இவ்விடத்தே பட்டர் அருளிச் செய்வதொரு வார்த்தை உண்டு
சமஸ்த கல்யாண குணாத்மாகனாய்-உபய விபூதி உக்தனாய் -சர்வாதிகனாய்- சர்வ நியந்தாவாய் இருக்கிற
சர்வேஸ்வரன்
நாலிடைப் பெண்கள் இருந்த விடத்தே புக்க அல்லது
நிற்க மாட்டாத செல்லாமை விளைய
அவர்கள் நீ இங்குப் புகுராதே கொள் என்ன
விலங்கிட்டால் போலே பேரவும் திரிய மாட்டாதே
தடுமாறி நின்றான் என்கிற சௌசீல்யம்
தங்களையும் இவர்களையும் ஒழிய ஆர் அறிந்து கொண்டாட
வ்யாசாதிகள் எழுதி இட்டு வைத்துப் போனார்களா -என்று அருளிச் செய்வர்
சர்வ நியந்தா வானவர் சிலருக்கு நியமிக்கலாம் படி
எளியன் ஆனான் என்றால்
இது மெய்யென்று கைக் கொள்ளுவாரைக் கிடையாது இ றே
சாஸ்திரங்கள் எல்லாம் ஈசேசிதவ்யம் விபாகம் பண்ணி ஒருங்க விடா நிற்க
அத்தலை இத்தலையாக சொல்லுகிறது இ றே இது -ஈடு

கழகமேறேல் நம்பீ -என்றால் நம்புவானோ மேன் மேலும் உட்புகுந்து தீம்பு செய்ய வன்றோ இவர்கள் ஆசைப்படுகிறார்கள்
என்பதை அறிவான் அன்றோ
உனக்கும் இளைதே கன்மமே–என்கிறார்கள்
அநீதியான செயல் நீசத் தனம் என்று நாங்கள் சொல்ல வேண்டுமா
உன் திரு உள்ளத்துக்கும் தெரியுமே -என்றபடி

—————————————————————————————————————————————————————————————————————————————

 

கன்மம் அன்று எங்கள் கையில் பாவை பறிப்பது கடல் ஞாலம் உண்டிட்ட
நின்மலா நெடியாய் உனக்கேலும் பிழை பிழையே
வன்மமே சொல்லி எம்மை நீ விளையாடுதி அதுகேட்கில் என் ஐமார்
தன்மம் பாவம் என்னார் ஒரு நான்று தடி பிணக்கே –6-2-6-

மேல் மேலும் பிணக்குக்கு இடம் கொடுக்க அல்ப வஸ்துக்கள் என்றும் பாராமல்
கையில் உள்ள லீலா உபகரணங்களை வலிய பிடித்து கொண்டு செல்ல
இது கன்மம் அன்று -செய்ய தகுந்த கார்யம் இல்லை என்னும் பொருளில் சொல்ல
உன்னால் முடிந்தால் பார் -என்றதாக கொண்டு
எனக்கு அசக்யமானது ஓன்று உண்டோ
பாலகன் என்று பரிபவம் செய்யேல்
பண்டொருநாள் ஆலினிலை வளர்ந்த சிறுக்கன் இவன் -என்று
தாய் பலகால் சொல்ல கேட்கவில்லையா
அப்பா உனக்கு அசக்யம் ஒன்றும் இல்லை அறிவோம்
கடல் ஞாலம் உண்டிட்டவனும் நீயே
நிர்மலன் -நெடியாய் -நீ
இச்ச்செயல்கள் செய்வது உனக்கு பிழை என்றோம் -உனக்கேலும் பிழை பிழையே -என்ன
இங்கனம் மேலும் இவர்கள் உத்தரம் உரைக்கும் பாடி காதிலே வந்து காகா குர் -போன்ற மர்மமான வார்த்தைகளை சொன்னான்
வன்மமே சொல்லி எம்மை நீ விளையாடுதி-என்றார்கள்
தப்பாக சொல்ல வில்லையே -உரக்க சொல்ல யத்தனித்தான்
உடனே அது -வாயால் சொல்லாமல் சுட்டு-அது கேட்கில் என் ஐ மார் தன்மம் பாவம் என்னார் -என்றார்கள்
பேதை பாலகன் அதாகும் -போல
தன்மம் -தர்மம்
ஆளுக்கு ஒரு தடி கொண்டு வந்து தகர்ப்பார்கள் –
குத்தும் பூசலுமாய் அன்றோ தலைக்கட்டும் -என்றபடி-

———————————————————————————————————————————————————————————————

கன்மம் அன்று எங்கள் கையில் பாவை பறிப்பது கடல் ஞாலம் உண்டிட்ட
நின்மலா நெடியாய் உனக்கேலும் பிழை பிழையே
வன்மமே சொல்லி எம்மை நீ விளையாடுதி அதுகேட்கில் என் ஐமார்
தன்மம் பாவம் என்னார் ஒரு நான்று தடி பிணக்கே –6-2-7-

மேல் மேலும் பிணக்குக்கு இடம் கொடுக்க அல்ப வஸ்துக்கள் என்றும் பாராமல்
கையில் உள்ள லீலா உபகரணங்களை வலிய பிடித்து கொண்டு செல்ல
இது கன்மம் அன்று -செய்ய தகுந்த கார்யம் இல்லை என்னும் பொருளில் சொல்ல
உன்னால் முடிந்தால் பார் -என்றதாக கொண்டு
எனக்கு அசக்யமானது ஓன்று உண்டோ
பாலகன் என்று பரிபவம் செய்யேல்
பண்டொருநாள் ஆலினிலை வளர்ந்த சிறுக்கன் இவன் -என்று
தாய் பலகால் சொல்ல கேட்கவில்லையா
அப்பா உனக்கு அசக்யம் ஒன்றும் இல்லை அறிவோம்
கடல் ஞாலம் உண்டிட்டவனும் நீயே
நிர்மலன் -நெடியாய் -நீ
இச்ச்செயல்கள் செய்வது உனக்கு பிழை என்றோம் -உனக்கேலும் பிழை பிழையே -என்ன
இங்கனம் மேலும் இவர்கள் உத்தரம் உரைக்கும் பாடி காதிலே வந்து காகா குர் -போன்ற மர்மமான வார்த்தைகளை சொன்னான்
வன்மமே சொல்லி எம்மை நீ விளையாடுதி-என்றார்கள்
தப்பாக சொல்ல வில்லையே -உரக்க சொல்ல யத்தனித்தான்
உடனே அது -வாயால் சொல்லாமல் சுட்டு-அது கேட்கில் என் ஐ மார் தன்மம் பாவம் என்னார் -என்றார்கள்
பேதை பாலகன் அதாகும் -போல
தன்மம் -தர்மம்
ஆளுக்கு ஒரு தடி கொண்டு வந்து தகர்ப்பார்கள் –
குத்தும் பூசலுமாய் அன்றோ தலைக்கட்டும் -என்றபடி-

————————————————————————————————————————————————————————————————————————————-

பிணக்கி யாவையும் யாவரும் பிழையாமல் பேதித்தும் பேதியாததோர்
கணக்கில் கீர்த்தி வெள்ளக் கதிர் ஞான மூர்த்தியினாய்
இணக்கி எம்மை எந்தோழிமார் விளையாடப் போதுமின் என்னப் போந்தோமை
உணக்கி நீ வளைத்தால் என் சொல்லார் உகவாதாரே –6-2-8-

மல்லரை மாட்டிய தேவாதி தேவன்
என் சரக்கை காட்டித் தீருவேன்
நாங்கள் அறிவோம் என்ன
சொல்லீர் பார்ப்போம்
உ ன் மூல கந்தமே அறிவோம்
சகல சேதன அசேதனங்களையும் நாம ரூப விபாக ரஹிதமாம் படி கலசி-சம்ஹரித்து –
சிருஷ்டி சமயத்தில் ஒருவர் கருமம் மற்று ஒருவருக்கு தட்டாதபடி பிரித்து -பிழையாமல் –
பலவகைப்பட்ட சிருஷ்டி உண்டே -பேதித்தும்
தனக்கு ஒரு தோஷம் இன்றிக்கே இருக்கிற தனி ஒரு மூர்த்தி என்று அறிவோம் -பேதியாதோர்கணக்கில் கீர்த்தி வெள்ளக் கதிர் ஞான மூர்த்தியினாய் –என்றார்கள்
சோகாமயாத பஹூச்யாம் ப்ரஜாயேயேதி சதா போதப்யத சதபச்தப்த்வா இதம் சர்வம் ஸ்ருஜத யதிதம் கிஞ்ச –

நாங்களாக வரவில்லை தோழி மார் விளையாட கூப்பிட வந்தோம்
பந்தும் கழலும் கொண்டு விளையாட வந்தோம்
உனது விளையாட்டு -அகில புவன ஜன்ம ச்தேம பங்காதி லீலே –
நளிர் மா மலருந்தி வீட்டைப் பண்ணி விளையாடும்
உமக்கும் எங்களுக்கும் என்ன சேர்த்தி உண்டு -உம் கார்யம் நீர் பாரும் -பாராமுகம் காட்ட
வழி மடக்கி குறுக்கே படுக்க
உணக்கி நீ வளைத்தால் என் சொல்லார் உகவாதாரே-
இது ரசமே வடிவெடுத்த பேச்சு
உன்னை உகந்து இருக்கும் எங்களுக்கு இவ்வளைப்பு பரம போக்யமே –
இதற்கு எங்கள் உள்ளம் மெய்யே குழைகின்றது காண்
உகவாத பாவிகள் இத்தைக் கண்டால்
அது கண்டு இவ் ஊர் ஓன்று புணர்க்கின்றதே -என்னுமா போலே
ஏதேனும் தொடுப்பார்கள் என்று அஞ்சுகிறோம் –

—————————————————————————————————————————————————————————————————————————

உகவையால் நெஞ்சம் உள்ளுருகி உன் தாமரைத் தடம் கண் விழிகளின்
அகவலைப்படுப்பான் அழித்தாய் யுன் திருவடியால்
தகவு செய்திலை எங்கள் சிற்றிலும் யாமடு சிறு சோறும் கண்டு நின்
முக ஒளி திகழ முறுவல் செய்து நின்றிலையே –6-2-9-

அவன் வளைத்தாலும் அந்ய பறைகலாய் அவனை நோக்காமல் சிற்றில் இழைத்து சிறு சோறு அட்டி விளையாடி இருக்க
இவர்கள் கடாஷமே தாரகம் என்று இருப்பான் ஆகையால் திருவடிகளால் உதைக்க
உன்பக்கல் பிரேம விசேஷத்தால் அழித்தாய்
கால் படைத்த பிரயோஜனம்பெற்றாய்
கண் படைத்த பிரயோஜனம் பெறவில்லையே
நாங்கள் சிற்றில் இட்டு விளையாடும் கோலம் காண பெறவில்லையே
அந்ய பரராய் உண்டு உடுத்து உகந்து திரிந்தாலும் திருவடி பலத்தால் பகவத் விஷயீ கரம் பெறுவது உள்ளுறை பொருள்
ஊடல் முடிந்து கூடல் அணித்தாகையாலே அழித்தாய் உன் திருவடியால் -என்பதற்கு
சிற்றிலை அழித்தாய் எனபது பொருள் அன்று
உன்னுடன் கூடம் என்று இருக்கும் அத்யாவசியம் அழித்தாய்
கூடாரை வெல்லும் கோவிந்தா -என்கிறார்கள் -சேதன லாபம் ஈஸ்வரனுக்கு -என்றதால் –முக ஒளி திகழ முறுவல் செய்து நின்றிலையே-
நம்மை அகப்படுத்திக் கொள்ள இரண்டு வலைகள் உண்டே
மாதரார் கயற்கண் என்னும் வலையுள் பட்டு –
உன் தாமரைத் தடம் கண் விழிகளின் அகவலை-இங்கு
அகவலை என்பதால் இது அந்தரங்க வலை
அது பஹிரங்க வலை –

————————————————————————————————————————————————————————————————————————————-

நின்றிலங்கு முடியினாய் இருபத்தோர் கால் அரசுகளை கட்ட
வென்றி நீண் மழுவா வியன் ஞாலம் முன் படைத்தாய்
இன்று இவ்வாயர் குலத்தை வீடுய்யத் தோன்றிய கரு மாணிக்கச் சுடர்
நின்றன்னால் நலிவே படுவோம் என்றும் ஆய்ச்சியோமே –6-2-10-

காலால் அழித்தது சிற்றிலை அன்றே
இவர்கள் நெஞ்சில் மறத்தை இ றே
அந்த மறம் போனவாறே மேல் நோக்கி
பாதாதி கேசமாகப் பார்த்தார்கள்
தங்களை ஜெயிக்கையால் உண்டான ஹர்ஷம்
வடிவிலே தோற்றும்படி நின்றான்
அவ்வடிவில் பிறந்த வேறு பாட்டைச் சொல்கிறார்கள் -ஈடு

ஜய ஸூ சகம் -நின்றிலங்கு முடியினாய் -முன்பு வெறும் தலைச்சுமை -இன்று அணிவது தான் ஏற்றம் -எங்கள் மறத்தை போக்கிய பின்பு
மிடுக்கரான ராஜாக்களை வென்ற உனக்கு அபலைகளான எங்களை வென்றது ஒரு பணியோ
வியன் ஞாலம் முன் படைத்தாய் -பிரளயம் கொண்ட பூமியை உண்டாக்கினால் போலே
பிரணய ரோஷத்தால் அழிந்த எங்களை உண்டாக்கி
விரஹ பிரளயம் கொண்ட எங்களை உத்தாரணம் செய்து அருளினாய்
பழைய புராணம் எதுக்கு
எங்களை அடியோங்கள் அடிக்குடில் வீடு பெற்று உய்ந்தது காண் -என்னும்படி
சகுடும்பமாய் உஜ்ஜீவனப் படுத்தி அருள
ஒருத்தி மகனாய் பிறந்து ஓர் இரவில் ஒருத்தி மகனாய் ஒழித்து வளர்ந்து –
இன்று இவ்வாயர் குலத்தை வீடுய்யத் தோன்றிய கரு மாணிக்கச் சுடர் -என்கிறார்கள்
உன்னைப் பிரிந்து நாங்கள் பட்ட பாடு அறிவோம்
உன்னோடு கூடுவது மறுபடியும் பிரிந்து துக்கப் படவே என்று அறிவோம்
நின்றன்னால் நலிவே படுவோம் என்றும் ஆய்ச்சியோமே-என்கிறார்கள்
துக்கத்தை சஹித்துக் கொண்டு கூடுகிறோம் –

————————————————————————————————————————————————————————————————————————————

ஆய்ச்சியாகிய வன்னையால் அன்று வெண்ணெய் வார்த்தையுள் சீற்றம் உண்டு அழு
கூத்தவப்பன் தன்னைக் குருகூர்ச் சடகோபன்
ஏத்திய தமிழ் மாலை ஆயிரத்துள் இவையுமோர் பத்திசையொடும்
நாத்தன்னால் நவில வுரைப்பார்க்கு இல்லை நல்குரவே –6-2-11-

பிரணய ரோஷத்தால் கண்ணனுக்கு உண்டான துக்கம்
மத்துறு கடை வெண்ணெய் களவினில் உரவிடை ஆப்புண்டு உரலினோடு இணைந்து இருந்து ஏங்கின படிக்கு -ஒக்கும்
அன்று யசோதை பிராட்டி அழப் பண்ணினது அதி சிநேக கார்யம்
இன்று காதலிகள் அழப் பண்ணினது அதி பிரணய கார்யம்
ஊரிலே வெண்ணெய் களவு போயிற்று என்றார்கள்
அவ்வளவிலே நாம் இ றே இதுக்கு இலக்கு என்று அழப் புக்கான்
மடம் மெழுகுவார் ஆர் என்ன அச்ரோத்ரியன் -என்றார்கள்
இப்பரப்பு எல்லாம் என்னால் மெழுகப் போமோ -என்றான் அது போலே -ஈடு
வெண்ணெய் களவு பிரசங்க மாதரத்தில் அழுத கண்ணன்
தன்னுடைய களவை தானே வெளியிட்டுக் கொண்டான்
ஏத்திய தமிழ் மாலை ஆயிரத்துள் இவையுமோர் பத்திசையொடும்
ஊடுதலும் ஏத்துவதில் ஒரு பிரகாரம் தானே
பக்தியானது பிரணயமாக மாறி பிரணயத்தின் பரிவாஹா ரூபம் இது
நல்குரவு -தாரித்ரியம்
சோறு கூறைகள் எல்லாம் சம்ருதியாக கிடைக்கும்
உண்ணும் சோறு –எல்லாம் கண்ணன் -பகவத் அனுபவம் குறைபாடின்றி பூரணமாக கிட்டும்

————————————————————————————————————————————————————————————————————-

திருவாய்மொழி நூற்றந்தாதி –

மின்னிடையார் சேர் கண்ணன் மெத்தென வந்தான் என்று
தன்னிலை போய் பெண்ணிலையாய்த் தான் தள்ளி உன்னுடனே
கூடன் என்றூடும் குருகையர் கோன் தாள் தொழவே
நாடோறும் நெஞ்சமே நல்கு –52

———————————————————————————————————————————————————————————————————–

ஸ்ரீ P.B.A,ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருவாய் மொழி – திவ்யார்த்த தீபிகை–வைகல் பூங்கழிவாய்–6-1-

October 31, 2014

ஆழ்வார் நான்கு திருவாய் மொழிகளிலும் சரணாகதி பண்ணியும் பலிக்காதது
நமது பாக்யமே
மேலும் மேலும் திருவாய் மொழி கிடைக்கப் பெற்றோமே
உலகத்தை வாழ்விக்க திரு உள்ளம் பற்றியே சரணாகதியை நிஷ்பலமாக்கினான் –
உன்னை என்று கொல் சேர்வதுவே -என்றும்
உன்னை என்று தலைபெய்துவனே -என்றும்
உன்னை என்று கொல் கூடுவதே -என்றும்
பலகாலும் கதறி எம்பெருமான் பக்கலில் கடுக சேரப் பாரித்த ஆழ்வார்
திரு வண் வண்டூர் சந்நிதி பண்ணி இருக்கும் படியை நோக்கி
தாம் அங்கே சென்று சேர மாட்டாத தம் தசையை
அவ் வெம்பெருமானுக்கு தெரிவிக்கும்படி தூது விடுகிறார் –

அஞ்சிறைய மட நாராய் -வ்யூஹ நிலையில் தூது
இத்திரு வாய் மொழி -வைகல் பூங்கழிவாய் – விபவத்தில் தூது
பொன்னுலகு ஆளீரோ – பரத்வத்திலும் அந்தர்யாமித்வத்திலும் தூது
எம் கானல் அகம் கழிவாய் -அர்ச்சாவதார தூது –

தம் பிழையும் சிறந்த செல்வமும் படைத்த பரப்பும்
தமரோட்டை வாசமும்
மறப்பித்த
ஷமா தீஷா சாரச்ய சௌந்தர்யங்களை
யுணர்த்தும்
வ்யூஹ விபவ பரத்வத்வய அர்ச்சைகள்
தூது நாளுக்கும் விஷயம் –

இத் திருவாய் மொழி விபவத்தில் தூது என்பதை
வைகல் திரு வண் வண்டூர் வைகும் இராமனுக்கு -மணவாள மா முனி அருளிச் செய்கிறார்
திரு வண் வண்டூரில் தூது ஆனால் அர்ச்சாவதார தூது ஆகாதோ என்னில்
மாறில் போரரக்கன் மதிள் நீர் எழச் செற்று உகந்த ஏறு சேவகனார்க்கு என்னையும் உளன் என்மின்களே -10 பாசுரம்
அமைந்து இருக்கும் படியை- நோக்கி
அர்ச்சாவதார தூது வேறு ஒரு பதிகம் இருப்பதையும் நோக்கி
பூர்வர்கள் இவ்வாறு வகையிட்டு அருளினார்கள் –

——————————————————————————————————————————————————————————–

வைகல் பூங்கழிவாய் வந்து மேயும் குருகினங்காள்
செய்கொள் செந்நெல் உயர் திரு வண் வண்டூருறையும்
கைகொள் சக்கரத்து என் கனிவாய்ப் பெருமானைக் கண்டு
கைகள் கூப்பிச் சொல்லீர் வினையாட்டியேன் காதன்மையே –6-1-1-

கடலை அடுத்த நீர்பரப்பு -கழி-பூங்கழி -மநோஹரமாய் இருக்கும் –
வைகல் வந்து மேயும் -எப்பொழுதும் உங்கள் உணவை மாத்ரமோ நோக்குவது
அவன் பிரிந்தாலும் என் கண் வட்டத்தில் வாழா நின்றீர்கள்
குருகினங்காள் -தூ விரிய மலர் உழக்கித் துணையோடும் பிரியாதே –
உங்கள் உணவு அங்கு கொள்ளை கொள்ளையாக கிடைக்கும் -செய்கொள் செந்நெல் உயர் –
கீழே பிறந்தவாறும் கிருஷ்ணாவதாரம் அனுசந்தித்து
ஜாதோசி தேவதேவேச சங்க சக்ர கதா தர -கைகொள் சக்கரத்து என் கனிவாய்ப் பெருமானைக் கண்டு –
கோகுலத்தில் வளர்ந்து ஆயர் பெண்டிர்க்கு அணுக்கனாய்
கொவ்வைக் கனிவாய் கொடுத்து கூழமை செய்த படிகள் அனுசந்தித்தவாறே -கனிவாய் -அடையாளமும் சொல்லி
இங்கே கலந்த பொழுது அடியேன் குடியேன் குழைச்சல்கள் காட்டி சௌசீல்யம் தோன்ற இருந்தான்
இப்பொழுது பரத்வம் பாராட்டி நிற்கையால் -கைகள் கூப்பிச் சொல்லீர் –
வினையாட்டியேன் காதன்மை
பராங்குச நாயகி காதல் -லோக விலஷணம் அன்றோ

வன்னெஞ்சர் காதல் போல் அன்று இ றே
மென்னெஞ்சர் காதல்
மெல்லியலார் காதல் அளவில்லாத என் காதல் சொல்லீர்
சொல்லுவார் தாழ்வே
வரவு தப்பாது -என்று இருக்கிறாள் -ஈடு

ஆசறுதூவி என்னும் பாஹ்ய அபயந்தர சுத்தி உடன் -நாயனார் –
தங்களை பிரியில் தரியாத பிரேமம் உடைய சிஷ்யர்கள் உடன் மனத்துக்கு இனிய கால ஷேப கூடங்களில்
பகவத் குணாநுபவம் பண்ணும்
சுத்த சத்வ ஆச்சார்யரை விளித்து
பகவத் சம்ச்லேஷம் பண்ணுவிக்க பிரார்த்தனை ஸ்வாபதேசம் –

————————————————————————————————————————————————————————————————-

காதல் மென்பெடையோடு உடன் மேயும் கரு நாராய்
வேத வேள்வி யொலி முழங்கும் தண் திரு வண் வண்டூர்
நாதன் ஞாலம் எல்லாம் உண்ட நம் பெருமானைக் கண்டு
பாதம் கை தொழுது பணியீர் அடியேன் திறமே–6-1-2-

ஆஸ்ரித ரஷண தீஷை கொண்டு இருக்கும் எம்பருமானைக் கண்டு
வேத ஒலி வேள்வி ஒலி காதாரக் கேட்டுக்கொண்டு தீஷை மறந்து அங்கே தங்கி இருக்கிறான்

கரு நாராய் -நாரைக்கு வெண்மை பிரசித்தம் -மேனியில் புகரைச் சொல்கிறது இங்கே
பிரிவுக்கு பிரசங்கம் இல்லாமையினாலே
தன்னிறம் பெற்று இருக்கும்படி
பிரியாதார்க்கு உடம்பு வெளுக்காது ஆகாதே
தான் உடம்பு வெளுத்துக் கிடக்கிறாள் இ றே -ஈடு –

காதல் மென்பெடையோடு உடன் மேயும்
ஆழ்வான் அனந்தாழ்வான் போன்ற க்ருஹச்த ஆச்ரமிகளின் பெருமை சொல்லும்
அன்றிக்கே சிஷ்யர்கள் உடன் கூடி பகவத் குணாநுபவம் பண்ணும் ஆச்சார்யர்களின் பெருமை சொல்லும்
வேத கோஷமும்
யாகத்தில் சஸ்த்ராதி கோஷமும்
சமுத்திர கோஷம் போலே இருக்கிற
ஸ்ரமஹரமான ஊர் -ஈடு
சஸ்த்ரம் -மந்திர விசேஷம் –
ஸ்தோத்ரம் கான விசிஷ்ட மந்திர உச்சாரணம்
சஸ்த்ரம் -கான ரஹிதம் ஏக சுருதி ரூபா உச்சாரணம் -வேதார்த்த சங்க்ரஹ தாத்பர்ய தீபிகை
அறப் பெரியவன் பக்கல் கிட்டப் போமோ என்ன
நீர்மையே வடிவு எடுத்தவன் -ஞாலம் எல்லாம் உண்ட –
ஆபத்து வருவதற்கு முன்பே ரஷிப்பவன்-

பணியீர் அடியேன் திறமே-
அவன் திறம் போல் அன்று
என்னிடையாட்டத்தைச் சொல்லுங்கோள்
சொல்லில் ஒரு மகாபாரதத்துக்கு போருமாகாதே -ஈடு

————————————————————————————————————————————————————————————————

திறங்களாகி எங்கும் செய்களூடு உழல் புள்ளினங்காள்
சிறந்த செல்வம் மல்கு திரு வண் வண்டூருறையும்
கறங்கு சக்கரக்கைக் கனிவாய்ப் பெருமானைக் கண்டு
இறங்கி நீர் தொழுது பணியீர் அடியேன் இடரே –6-1-3-

திறங்களாகி-திரள் திரளாக
கறங்கு-சுழன்று வருகிற -விரோதிகளை நிரசிக்க வேண்டிய விரைவாலே சுழன்று வாரா நிற்கும்
இறங்கி தொழுது -தாழ்ந்து தொழுது -தாள விழுந்து வணங்கி என்னுடைய விரஹ வேதனையை தெரிவியுங்கோள்
பறவைகள் திரள் திரளாக உழல்வது உணவு தேட அன்று
பராங்குச நாயகிக்காக போலும்
அவன் மறந்து உறையும் காரணம் -சிறந்த செல்வம் மல்கும் -திரு வண் வண்டூர் என்பதால்

———————————————————————————————————————————————————————————————–

இடரில் போகம் மூழ்கி இணைந்தாடும் மட வன்னங்காள்
விடலில் வேதவொலி முழங்கும் தண் திரு வண் வண்டூர்
கடலின்மேனிப் பிரான் கண்ணனை நெடுமாலைக் கண்டு
உடலம் நைந்து ஒருத்தி உருகும் என்று உணர்த்துமினே —6-1-4-

போகத்துக்கு இடர் இடையில் விச்சேத ப்ரசக்தி -அது இல்லாத இடரில் போகம்
ஸ்வா பதேசம் -இடைவிடாத பகவத் அனுபவத்தில் அவஹாகித்து
போகத்தில் வழுவாத புதுவையர் கோன் -போலே

இணைந்து ஆடும் –
குரு சிஷ்ய கிரந்த விரோதங்களை
பரமதாதிகளாலே பரிஹரியாமல்
செந்தமிழ் இன்கவி பரவி அழைக்கும் என்று
அந்யோந்யம் கொண்டாடி
பேசிற்றே பேசும் ஏக கண்டர் -நாயனார்
ஆச்சார்யர்களுக்கு உண்டான ஐகமத்யம் தெரிவிக்கப் படுகிறது

புறப்பட்டவாறே வேத கோஷம் வழி காட்டும் -விடலில் வேத ஒலி முழங்கும்
கடல் மேனிப்பிரான் -இசை இன்பம் நோக்கி கடலின் மேனிப்பிரான்
ஒருத்தி உருகும் என்று உணர்த்துமினே-ஒருத்தி மதி எல்லாம் உள் கலங்கி மயங்குமால் என்னீரே -போலே-

——————————————————————————————————————————————————————————————————-

உணர்த்தல் ஊடல் உணர்ந்து உடன் மேயும் மட வன்னங்காள்
திணர்த்த வண்டல்கள் மேல் சங்கு சேரும் திரு வண் வண்டூர்
புணர்த்த பூந்தண்டுழாய் முடி நம்பெருமானைக் கண்டு
புணர்த்த கையினராய் அடியேனுக்கும் போற்றுமினே –6-1-5-

போக பிரகாரம் தான் மூன்று வகைப் பட்டாய் இ றே இருப்பது
அவையாவன
ஊடல் -உணர்தல் -புணர்தல் -இவை மூன்றும் காமத்தால் பெற்ற பயன்
என்று மூன்றையும் பிரயோஜனமாகச் சொன்னார்கள் தமிழர்
இதில் ஊடல் -எதிர் தலையோடு கூடினால் அஹேதுகமாக விளைவது ஓன்று
அது தான் -என்னை ஒழியக் குளித்தாய் -என்னை ஒழிய பூவைப் பார்த்தாய் -உன் உடம்பு பூ நாறிற்று –
உணர்த்தல் ஆவது -உனக்கு என்று குளித்தேன் யென்கையும்
உனக்கு ஆம் -என்று பார்த்தேன் யென்கையும்
உன் வரவுக்கு ஒப்பித்தேன் என்றால் போலே சொல்லுமவை
இவை இரண்டின் அனந்தரத்தே வருவது -கலவி -ஈடு

உணர்தல் உணர்த்தல் -பர்யாய சொல்
உணர்த்தல் ஊடல் உணர்ந்து-என்று இருந்தாலும்
அர்த்தக்ரமம் வலித்து என்கிற நியாயத்தால்
ஊடல் உணர்தல் உணர்ந்து -ஊடல் –பிரணய ரோஷம் –
புணர்த்த பூந்தண்டுழாய் முடி நம்பெருமானைக் கண்டு-அவன் ஆஸ்ரித ரஷணத்துக்கு தனிமாலை இட்டு இருக்கும்படி -கூசாதே காணலாம்
அடியேனுக்கும் போற்றுமினே-திவ்ய தேசம் செல்லும் யாத்ரை செல்வார்களை நோக்கி அந்த பாக்கியம் இல்லாதவர் வார்த்தை-

————————————————————————————————————————————————————————————————————–

போற்றி யான் இரந்தேன் புன்னை மேலுறை பூங்குயில்காள்
சேற்றில் வாளை துள்ளும் திரு வண் வண்டூருறையும்
ஆற்றல் யாழி யங்கை அமரர் பெருமானைக் கண்டு
மாற்றம் கொண்டு அருளீர் மையல் தீர்வதொரு வண்ணமே –6-1-6-

மங்களா சாசனம் பண்ணி –
தூது செல்வார் இரப்பது ஸ்ரீ ராமாயணாதிகளிள் பிரசித்தமாய் இருக்க நான் இரக்க வேண்டி உள்ளதே
புன்னை மேலுறை பூங்குயில்காள்-வளர்த்ததனால்பயன் பெற்றேன் –
ஆச்ரியர் பக்கலிலே வளருமவர்கள் குயில் ஸ்வா பதேசத்தில் –
வன ப்ரிய பரப்ருத கோகில பிக -வடமொழியில் ப்ரப்ருத -குயில்
பரனான ஆச்சார்யனால் போஷிக்கப் பட்டு வளரும் குருகுல வாசிகள்
புன்னை மேலுறை என்றது கீழுறை என்றபடி -ஆழ்வார்கள் ஆச்சார்யர்கள் திருப் புன்னை மரத்தில் ஈடுபட்டு –
புந்நாக தல்லஜமஜச்ர சஹஸ்ரகீதி சே கோத்த திவ்ய நீஜ சௌர பமாம நாம -ஸ்ரீ ரெங்கராஜ ஸ்தவம்
அன்றியே
மாம் பொழில் தளிர் கோதிய மடக்குயில் வாயது துவர்ப்பு எய்தத் தீம் பலங்கனி தேனதுநுகர் –
சாமான்ய சாஸ்த்ரங்களில் வாய் வைத்து
பின்பு விசேஷ ஆத்யாத்ம சாஸ்த்ரங்களில் இன்பமாக பொது போக்கும் ஆச்சார்யர்கள் -குயில்
ஆற்றல் யாழி யங்கை அமரர் பெருமானைக் கண்டு -இங்கு ஆற்றல் ஆழிக்கும் பெருமானுக்கும் விசேஷணம்
ஆஸ்ரிதர்க்கு ஆத்மதானம் பண்ணினாலும்
ஒன்றும் செய்யாது இருக்கும் ஸ்வ பாவனாய் -ஆராயிரப்படி
ஆற்றல் -நோவுபாடு இங்கு
ஆழிக்கு -ஆற்றல் மிடுக்கு
மாற்றம் கொண்டு அருளீர் மையல் தீர்வதொரு வண்ணமே-மாற்றம் -அனுகூலமோ பிரதி கூலமோ
பாவி நீ என்று ஓன்று சொல்லாய் பாவியேன் காண வந்தே -என்றும்
மெய்ம்மை சொல்லி முகம்நோக்கி விடை தான் தருமேல் மிக நன்றே-அத்தலையில் வார்த்தை என்பதே வேண்டுவது

————————————————————————————————————————————————————————————————————-

ஒரு வண்ணம் சென்று புக்கு எனக்கு ஒன்றுரை யொண் கிளியே
செரு வொண் பூம்பொழில் சூழ் செக்கர் வேலைத் திரு வண் வண்டூர்
கரு வண்ணம் செய்யவாய் செய்ய கண் செய்ய கை செய்ய கால்
செறு வொண் சக்கரம் சங்கு அடையாளம் திருந்தக் கண்டே –6-1-7-
ஒரு வண்ணம் சென்று புக்கு–
இதுக்கு இரண்டு படியாக அருளிச் செய்வர்
இத்தலையில் தனிமை நினையாதே போய் நிற்கையாலே
போர முதலிகளாய் இருப்பார்
மேன் மேல் எனப் பிரம்புகள் விழும்
அத்தைப் பொறுத்துப் போய் புகுங்கோள்
அன்றிக்கே
வழி எங்கும் நெஞ்சை அபஹரிக்கும் போக்யதை யுடைத்து
அதில் கால் தாழாதே வருந்தி ஒருபடி சென்று புக்கு -ஈடு –

செரு வொண் பூம்பொழில்-செரு -யுத்தம்
பொழில் களில் யுத்தம் ஆவது பறவைகளும் ப்ரணய ரோஷத்தால் சீறு பாறு என்று இருத்தல்
செக்கர் வேலை -பொழில் களிலே உதிர்ந்த தாதுக்களால் சிவந்த பக்கங்கள்
கடற்கரை ஆகையால் சிவந்த மணலீடு

சொல்லிற்று சொல்லுமாம் கிளிப்பிள்ளை -என்னுமா போலே
முன்னோர் மொழிந்த முறை தப்பாமல் கேட்டுப் பின்னோர்ந்து தாமதனைப் பேசும் ஏக கண்ட ஆசார்யர்கள் -கிளி

———————————————————————————————————————————————————————————————————-

திருந்தக் கண்டு எனக்கு ஓன்று உரையாய் ஒண் சிறு பூவாய்
செருந்தி நாழல் மகிழ் புன்னை சூழ் தண் திரு வண் வண்டூர்
பெரும் தண் தாமரைக் கண் பெரு நீண் முடி நால் தடம் தோள்
கரும் திண் மா முகில் போல் திரு மேனி யடிகளையே –6-1-8-

செருந்தி நாழல் மகிழ் புன்னை-சுரபின்னை-ஞாழல் -மகிழ மரம் -புன்னை மரம் –
திருந்தக் கண்டு -காண்கை இரண்டு விதம் -தமது மனசுக்கு -பிறருக்கு விசதமாக யெடுத்து சொல்ல
திவ்ய அவயவங்களை திருந்தக் கண்டு
அவற்றின் அதிசயங்களை சொல்லி
என்னை தரிப்பிக்க வேண்டும்
தூதுவர் செய்யும் கார்யங்களில் இதுவும் ஒன்றே
அடிகள் -ஸ்வாமி

————————————————————————————————————————————————————————————————-

அடிகள் கை தொழுது அலர்மேல் அசையும் அன்னங்காள்
விடிவை சங்கு ஒலிக்கும் திரு வண் வண்டூருறையும்
கடிய மாயன்தன்னைக் கண்ணனை நெடுமாலைக் கண்டு
கொடிய வல்வினையேன் திறம் கூறுமின் வேறு கொண்டே –6-1-9-

திருவடிகளை சிக்கென பிடித்துக் கொண்டு -என்பதற்கு அடிகள் கை தொழுது -என்கிறாள்
அநதி க்ரமணீயம் ஹி சரண க்ரஹணம் -திருவடிகளை பிடித்தால் மறுக்கப் போகாதே –
கடிமாயன் -ஆஸ்ரித விரோதி நிரசனத்தில் ஆச்சர்ய செயல்களை செய்பவன்
கண்ணன் -ஆஸ்ரிதற்கு கையாளாக நின்று தன்னையே கொடுப்பவன்
நெடுமால் -இத்தனையும் செய்தும் ஒன்றும் செய்யப் பெற வில்லையே குறையாளனாக போம் வ்யாமோஹன்
வேறு கொண்டு -ஏகாந்தமாக கிட்டி
பிராட்டியும் தானுமாய் இருக்கும் இருப்பிலே

—————————————————————————————————————————————————————————————————–

வேறு கொண்டு உம்மை யான் இரந்தேன் வெறி வண்டினங்காள்
தேறு நீர்ப் பம்பை வடபாலைத் திரு வண் வண்டூர்
மாறில் போரரக்கன் மதிள் நீர் எழச் செற்று உகந்த
ஏறு சேவகனார்க்கு என்னையும் உளன் என்மின்களே -6-1-10-

வேறு கொண்டு -விலஷண பிரபத்தி பண்ணி
திக்குகள் தோறும் முதலிகளை
போக விடா நிற்கச் செய்தே
திருவடி கையிலே திருவாழி மோதிரம்
கொடுத்து விட்டால் போலே காணும் -ஈடு –
விசேஷேண து சூக்ரீவோ ஹானுமத்யர்த்தம் உக்தவான் ச ஹி தஸ்மின் ஹரிஸ்ரேஷ்ட நிச்சயதார்த்த சாதனே -வால்மீகி
பெண் பிறந்தார் கார்யம் எல்லாம் தலைக் கட்டி விட்டோம் என்று இருப்பார்
ரஷ்ய வர்க்கத்தில் நானும் ஒருத்தி இருக்கிறதாகச் சொல்லுங்கோள்
என்னையும் உளன் என்மின்களே
இன்னமும் பிழைத்து இருக்கிறேன் என்று சொல்லுமின் பொருள் கொள்ளலாயினும்
அப்பொருளில் சுவை இல்லை எனபது எம்பெருமானார் திரு உள்ளம் –

———————————————————————————————————————————————————————————————————————–

மின்கொள் சேர் புரி நூல் குறளாய் அகல் ஞாலம் கொண்ட
வன்கள்வன் அடிமேல் குருகூர்ச் சடகோபன் சொன்ன
பண்கொள் ஆயிரத்துள் இவை பத்தும் திருவண் வண்டூர்க்கு
இன்கொள் பாடல் வல்லார் மதனர் மின்னிடை யவர்க்கே –6-1-11-

எம்பெருமானுக்கும் அவன் அடியவர்க்கும் விரும்பத் தக்கவர் ஆவார்
உபமான மாதரம் சொல்லி -மதனர் மின்னிடை யவர்க்கே –
திரு நாட்டில் உள்ள திவ்ய அப்சரஸ் ஸூ க்களை சொன்னதாகவுமாம்
நிதியும் நற் சுண்ணமும் நிறை குட விளக்கமும் மதிமுக மடந்தையர் ஏந்தினர் வந்தே –
இன்கொள் பாட வல்லார் -தப்பான பாடம்

————————————————————————————————————————————————————————————————

திருவாய்மொழி நூற்றந்தாதி –

வைகல் திரு வண் வண்டூர் வைகும் இராமனுக்கு என்
செய்கை தனைப் புள்ளினங்காள் செப்புமென கை கழிந்த
காதலுடன் தூது விடும் காரி மாறன் கழலே
மேதினியீர் நீர் வணங்குமின் –51-

———————————————————————————————————————————————————————————————-

ஸ்ரீ P.B.A,ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருவாய் மொழி – திவ்யார்த்த தீபிகை–பிறந்தவாறும் வளர்ந்தவாறும்—5-10-

October 30, 2014

கீழ் திருவாய் மொழியில் திரு வல்ல வாழ் சென்று சேர்ந்து அங்கு உறையும் பெருமாள் உடன் பரிமாற்ற மநோ ரதித்து
கால்நடை தாராமல் நடு வழியில் விழுந்து கிடந்து கூப்பிட்டார்
கோவிந்தன் குணம் பாடி –ஆவி காத்து இருப்பேனே -என்று தரிக்கப் பார்த்தார்
அது தானும் அரிதாய் சைதில்யத்தை விளைப்பிக்க
பிரானே உன்னைப் பிரிந்து நோவு பட்டாலும்
தரித்து நின்று குணாநுபவம் பண்ண வல்லனாம் படி
பண்ணி அருள வேண்டும் என்று அவன் திருவடிகளிலே சரணம் புகுகிறார் இத் திருவாய் மொழியில்

அர்ச்சாவதாரங்களில் தமது அபேஷிதம் பெற ஆசைப் பட்டவர்
அந்த ஆசை நிறைவேறப் பெறாமையாலே விபவ அவதாரங்களில் செல்லுகிறார்
அர்ச்சாவதாரத்தில் குளிர நோக்குதல் வினவுதல் அணைத்தல்
செய்யலாகாது என்று சங்கல்பித்து இருக்கையாலே
சத்யசங்கல்பன் சங்கல்பம் குலையும்படிஅதிக நிர்பந்திக்கக் கடவோம் அல்லோம்
என்று கை ஒழிந்தார்
விபவ அவதாரங்களில் அப்படி ஒரு நிர்பந்தம் இல்லை யாகையாலும்
சம்ப்ருச்ய ஆக்ருஷ்ய ஸ ப்ரீத்யா ஸூ காடம் பரிஷச்வஜே -என்கிறபடி
அக்ரூறார் முதலானோர்க்கு சர்வ ஸ்வதானம் பண்ணின படி அனுசந்திக்கையாலும்
அது கால விப்ரக்ருஷ்டம் என்பதிலே புத்தி செலுத்தாமல் அங்கே போகிறார்

ஆழ்வார்கள் எல்லாரும் கிருஷ்ணாவதாரம் என்றவாறே போர மண்டி இருப்பார்கள்
இதுக்கு ஹேது என் என்று பட்டரைக் கேட்க –
ஒருவருக்கு துக்கம் சில நாள் கழிந்தால் பொறுக்கலாம்
அணித்தானால் ஆறி இருக்கப் போகாது இ றே
அப்படியே அல்லாத அவதாரங்களைப் போல் அன்றிக்கே
சமகாலம் ஆகையாலே
ஒரு செவ்வாய் கிழமை முற்பட பெற்றிலோம்
பாவியேன் பல்லிலே பட்டுத் தெறிப்பதே -என்னும் இழவாலே
வயிறு எரித்தலேயாய் இருக்கும் -ஈடு

———————————————————————————————————————————————————————————————————

பிறந்தவாறும் வளர்ந்தவாறும் பெரிய பாரதம் கை செய்து ஐவர்க்குத்
திறங்கள் காட்டியிட்டுச் செய்து போன மாயங்களும்
நிறந்தனூடு புக்கெனதாவியை நின்று நின்று உருக்கி யுண்கின்ற இச்
சிறந்த வான் சுடரே உன்னை என்று கொல் சேர்வதுவே –5-10-1-

கை செய்து -சேனைகளை அணி வகுத்து
நிறந்தனூடு புக்கு -நிறம் தன் ஊடு புக்கு -மருமமான ஹ்ருதய பிரதேசத்தின் உள்ளே புகுந்து
தரித்து உன்னை அனுசந்திக்க முடியவில்லையே
பிறந்தவாறும்
கிருபாவச்யனாய் கர்ப்ப வாசம் பண்ணி பிறக்க வேண்டுமா -ஆறு மாசம் மோஹித்தார்
வளர்ந்தவாறும்
ஒருத்தி மகனாய் பிறந்து ஓர் இரவில் ஒருத்து மகனாய் வளர்ந்தவாறு என்னே
கஞ்சனும் காளியனும் களிறும் மருதும் எருதும் வஞ்சனையின் மடிய வளர்ந்தவாறு என்னே –
எதிரிகள் உயிர் நிலைமை காட்டிக் கொடுத்தமை -திறங்கள் காட்டி –

———————————————————————————————————————————————————————————————–

வதுவை வார்த்தையுள் ஏறு பாய்ந்ததும் மாய மாவினை வாய் பிளந்ததும்
மதுவையார் குழலார் குரவை பிணைந்த குழகும்
அது விது வுது வென்னலாவன வல்ல யென்னை யுன் செய்கை நைவிக்கும்
முதுவை முதல்வா உன்னை என்று தலைப் பெய்வனே –5-10-2-

விவாஹ பிரச்தாபத்திலே-தன்னைப் பேணாதே பாய்ந்தபடி
நீ செய்த செயல் -என்னும் அளவே போதுமானது
எல்லாம் யென்னை சிதிலம் ஆக்கா நின்றன
பிரளயத்தில் அழிந்த ஜகத்தை உண்டாக்கினால் போலே
யென்னை தரிப்பித்து உன்னை அனுபவிக்க வல்லனாம் படி அருள வேணும்
இங்கிதம் நிமிஷ தஞ்ச தாவகம் ரம்யம் அத்புதம் அதி ப்ரியங்கரம் -ஸ்ரீ ஸூ ந்தர பாஹூ ஸ்தவம்

———————————————————————————————————————————————————————————————

பெய்யும் பூங்குழல் பேய் முலையுண்ட பிள்ளைத் தேற்றமும்
பேர்ந்தோர் சாடிறச் செய்ய பாதம் ஒன்றால் செய்த நின் சிறுச் சேவகமும்
நெய் யுண் வார்த்தையுள் அன்னை கோல் கொள்ள நீ யுண் தாமரைக் கண்கள் நீர் மல்க
பையவே நிலையும் வந்து என் நெஞ்சை யுருக்குங்களே–5-10-3-

தாய் போலே வந்த பூதனை முலையைச் சுவைத்து
உண்ட இளமைத் தெளிவும்
அசூராவேசம் கொண்ட
சகடம் பேர்ந்து போம்படி
சிவந்த திருவடி ஒன்றால் -அழுகிற பாவனையாலே
தூக்கின திருவடிகளால் -செய்து அருளின
உன்னுடைய இள வீரமும்
நெய் யுண்ட விஷயம் பிரஸ்தா
வத்திற்கு வந்த அளவில்
தாயானவள் கையிலே கோலை எடுத்துக் கொள்ள
எல்லாரையும் நியமிக்க பிறந்த நீ
திருக்கண்கள் நீர் நிரம்ப
அஞ்சி நடுங்கி நிற்கும் நிலையும்
இப்பது என் நெஞ்சிலே வந்து தோன்றி
என் உள்ளத்தை உருக்குகின்றன-

———————————————————————————————————————————————————————————————-

கள்ள வேடத்தைக் கொண்டு போய்ப் புறம் புக்கவாறும் கலந்தசுரரை
உள்ளம் பேதம் செய்திட்டு உயிருண்ட வுபாயங்களும்
வெள்ள நீர்ச் சடையானும் நின்னிடை வேறலாமை விளங்க நின்றதும்
உள்ளமுள் குடைந்து என்னுயிரை யுருக்கி யுண்ணுமே –5-10-4-

யதாஹி சோரஸ் து ததா ஹி புத்த -ஜாபாலியை நோக்கி பெருமாள் அருளியதை உட்கொண்டு கள்ளவேடம் -என்கிறார்
எம்பெருமான் புத்த முனி வேஷம் அசுரர்கள்
பட்டணங்களில் புகுந்த படியை புரம் புக்கவாறும் -என்கிறார்
அவைதிக மதத்தை உபன்யசித்து வைதிக ஸ்ரத்தையைப் போக்கி
அவ்வழியாலே கொன்று ஒலித்த படியை -கலந்து அசுரரை -இத்யாதி
விஷ்ணுராத்மா பகவதோ பவச்யாமித தேசச -ருத்ரனுக்கும் அந்தராத்மாவாக -புரம் ஒரு மூன்று எரித்து -அருளினான்
அத்தையே -வெள்ள நீர்ச் சடையானும் நின்னிடை வேறலாமை விளங்க நின்றதும் -என்கிறார்

——————————————————————————————————————————————————————————————————-

உண்ண வானவர் கோனுக்கு ஆயர் ஒருப்படுத்த வடிசில் உண்டலும்
வண்ண மால் வரையை யெடுத்து மழை காத்ததும்
மண்ணை முன் படைத்து உண்டு உமிழ்ந்து கடந்து இடந்து மணந்த மாயங்கள்
எண்ணும் தோறும் என்நெஞ்சு எரி வாய் மெழுகு ஒக்கும் நின்றே –5-10-5-

அட்டுக்குவி சோற்றுப் பருப்பதமும் தயிர் வாவியும் நெய் யளருமாகச் சேமித்து வைத்த
அஹம் கோவர்த்தநோச்மி-

———————————————————————————————————————————————————————————————-

நின்றவாறும் இருந்தவாறும் கிடந்தவாறும் நினைப்பரியன
ஒன்றலாவுருவாய் அருவாய் நின் மாயங்கள்
நின்று நின்று நினைக்கின்றேன் உன்னை எங்கனம் நினைகிற்பன் பாவியேற்கு
ஓன்று நன்குரையாய் உலகமுண்ட வொண் சுடரே –5-10-6-

லங்கத்வாரத்தில் கையும் வில்லுமாக நின்றவாறும்
வாலிவதம் பண்ணி கையும் வில்லுமாக நின்றவாறும்
திருச் சித்ர கூடத்தில் பர்ணசாலையில் வீற்று இருந்தவாறும்
கடற்கரையில் கிடந்த கிடை

கோவர்த்தனம் எண்ணும் கொற்றக் குடையை யெடுத்து ஏந்தி நின்ற நிலை
ராசக்ரீடைக்கு முன்பாக பெண்கள் உடன் கழகம் இருந்த இருப்பு
ஓரோர் மடிகளிலே சாய்ந்த படி

நிற்பதும் ஓர் வெற்பகத்து இருப்பது விண் கிடப்பதும் நற்பெரும் திரைக் கடலுள் -என்றபடி
திருமலையில் நின்றபடியும்
பரம பதத்தில் இருந்தபடியும்
திருப்பாற் கடலிலே கண் வளர்ந்த படியையும்

நின்ற வெந்தை யூரகத்து இருந்தது எந்தை பாடகத்து அன்று வெக்கணை கிடந்தது

புளிங்குடி கிடந்தது வரகுணமங்கை இருந்து வைகுந்தத்துள் நின்று

நின்றும் இருந்தும் கிடந்தும் –என் நெஞ்சு அகலான் –

ஆழ்வார் என்கிற அரையர் இப்பாசுரம் பாடுகையில் -இவை எல்லாம் தொட்டிலிலே செய்து அருளியதாக -எம்பெருமானார் அருளிச் செய்தாராம்
தொட்டில் பழுவைப் பிடித்துக் கொண்டு நின்று
தரிக்க மாட்டாமல் விழுந்து இருந்து
அது தானும் பொறுக்க மாட்டாமல் சாய்ந்து கிடந்த படி

இவை எல்லாம் என்றைக்கோ செய்து அருளி இருந்தாலும் நினைப்பார்க்கு குறை இல்லை
தமக்கு நினைக்கப் போகாமை -நினைப்பு அரியன -என்கிறார்
ஒன்றா இரண்டா
பல்லாயிரம் படிகள் அன்றோ
நெஞ்சு சிதிலமாகாமல் இருந்தால் அன்றோ நினைக்க முடியும்
நீயே உபாயம் சொல்லி அருள வேண்டும் –

——————————————————————————————————————————————————————————————————————-

ஒண் சுடரோடி இருளுமாய் நின்றவாறும் உண்மையோடு இன்மையே வந்து என்
கண் கொளாவகை நீ கரந்து என்னைச் செய்கின்றன
எண் கொள் சிந்தையுள் நைகின்றேன் என் கரிய மாணிக்கமே என்
கண்கட்குத் திண் கொள்ள வொரு நாள் அருளாய் யுன் திருவுருவே –5-10-7-

ஒண் சுடரோடி இருளுமாய் நின்றவாறும்-உண்மையோடு இன்மையே வந்து-
ஸ்வ விஷயத்திலும் கொள்ளலாம்
ஆஸ்ரித நாஸ்ரித விஷயத்திலும் கொலோளலாம்
ஸ்வ விஷயத்தில் -மானச அனுபவத்தில் உண்மையோடு ஒண் சுடராய்
பாஹ்ய அனுபவத்தில் -இன்மையோடு இருளாய் நிற்கும்
ஆஸ்ரிதர் களுக்கு தன்படிகளில் ஒன்றும் குறையாமல் காட்டிக் கொடுத்து அருளும்
அநாஸ்ரிதர் களுக்கு ஒன்றும் தெரியாதபடி பண்ணும்
உனது வடிவு அழகாய் புஜிக்கத் தந்து அருளின நீ
நான் திடமாக காணலாம் படி கண்களுக்கு உன்னுடைய திரு வுருவை
ஒரு நாளாகிலும் அருள வேணும் –

—————————————————————————————————————————————————————————————————

திருவுருவு கிடந்தவாறும் கொப்பூழ்ச் செந்தாமரை மேல்
திசைமுகன் கருவில் வீற்றிருந்து படைத்திட்ட கருமங்களும்
பொருவிலுன் தனி நாயகமவை கேட்கும் தோறும் என் நெஞ்சம் நின்று நெக்கு
அருவி சோரும் கண்ணீர் என் செய்கேன் அடியேனே –5-10-8-

காரணமான ஏகார்ணவ ஜலத்திலே
அழகிய திருமேனி உடன் கண் வளர்ந்து அருளினது -ஸ்ருஷ்டிக்காக
பிறகு அந்த திருமேனியில் உண்டான திரு நாபி கமலத்தில் உண்டான
நான்முகனை அதிஷ்டித்து நின்று சத்வாரமாக சகல சிருஷ்டியும் செய்து அருளின படி
உன்னுடைய பரத்வ பிரகாசமான இவற்றை வேதாந்திகள் சொல்லக் கேட்கும் பொது எல்லாம்
நெஞ்சு கட்டுக் குலைந்து நெகிழ்ந்து நின்று கண்ணீர் அருவியாக பெருக
தரித்து இருக்க மாட்டாத அடியேன் என்ன பண்ணுவேன்-

———————————————————————————————————————————————————————————————————

அடியை மூன்றை யிரந்தவாறும் அங்கே நின்று ஆழ் கடலும் மண்ணும் விண்ணும்
முடிய ஈரடியால் முடித்துக் கொண்ட முக்கியமும்
நொடியுமாறவை கேட்கும் தோறும் என் நெஞ்சம் நின் தனக்கே கரைந்து உகும்
கொடிய வல் வினையேன் உன்னை என்று கொல் கூடுவதே –5-10-9-

நொடிதல் -சொல்லுதல்

——————————————————————————————————————————————————————————————-

கூடி நீரைக் கடைந்தவாறும் அமுதம் தேவர் உண்ண அசுரரை
வீடும் வண்ணங்களே செய்து போன வித்தகமும்
ஊடு புக்கென தாவியை உருக்கி யுண்டிடு கின்ற நின் தன்னை
நாடும் வண்ணம் சொல்லாய் நச்சு நாகணையானே–5-10-10-

மோகினி -ஸ்திரீ வேஷ பரிக்ரஹம் பண்ணிப் போன விஸ்மயநீய ஆகாரமும்
திரு வநந்த ஆழ்வான் உன்னோடு நித்ய சம்ச்லேஷம் பண்ணுமா போலே
நான் தரித்து நின்று உன்னைப் பூரணமாக அனுபவிக்கும் விரகு சொல்லி அருள வேணும் –

—————————————————————————————————————————————————————————————–

நாகணை மிசை நம்பிரான் சரணே சரண் நமக்கென்று
நாடொறும் ஏக சிந்தையனாய்க் குருகூர்ச் சடகோபன் மாறன்
ஆக நூற்ற வந்தாதி ஆயிரத்துள் இவையுமோர் பத்தும் வல்லார்
மாக வைகுந்தத்து மகிழ்வெய்துவர் வைகலுமே –5-10-11-

பரமபதத்தில் ப்ரஹ்மானந்த பிராப்தி பலன்
சரணம் புகுந்தவர்களை எம்பெருமானே உபேஷித்தாலும் உபேஷிக்க ஒட்டாதே
விஷயீ கரிக்க பண்ணும் இயல்வினன் திரு வநந்த ஆழ்வான்
அந்த சேஷ சாயீயே நமக்குத் தஞ்சம் ஸ்திரமான அத்யாவசாயம் கொண்ட ஆழ்வார் அருளிச் செய்த
இப்பத்தையும் வல்லார் நெஞ்சம் சிதிலம் அடையாமல்
தரித்து நின்று நித்ய அனுபவம் பண்ணப் பெறுவார்
மஹாகம்-பரம ஆகாசம் -மாக -விகாரம் –கம் -ஆகாசம் –

—————————————————————————————————————————————————————————————-

த்ரமிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி –

5-10-1-ப்ரா துர்ப்பாவாதி வ்ருத்தை–பிறந்தவாறும் வளர்ந்தவாறும்
5-10-2-வருஷ கண தம நாத் -வதுவை வார்த்தையுள் ஏறு பாய்ந்ததும்
5-10-3-பூதநா சாத நாத்யை -பெய்யும் பூங்குழல் இத்யாதி
5-10-4-மோஹார்த்தம் பௌத்த க்ருதியை -கள்ள வேடத்தைக் கொண்டு போய் -இத்யாதி
5-10-5-கிரிவர பஜன ச்வீக்ருதே -உண்ண வானவர் -இத்யாதி
5-10-6-ஸ்தான பேதை -நின்றவாறும் இருந்தவாறும்
5-10-7-தேஜோ த்வாந்தாதி பாவாத் -ஒண் சுடரோடு இருளுமாய் -இத்யாதி
5-10-8-ஜல நிதி சய நாத் -திருவுருவு கிடந்தவாறும்
5-10-9-த்ரிபத்யா பிஷணாத்யை-அடியை மூன்றை யிரந்தவாரும்
5-10-10-பீயூஷ ஸ்பர்ச நாத்யை -கூடி நீரை -இத்யாதி
சிதிலயதி ஹரி ஸ்ளீய ஹ்ருச் சேத்யதோசே

——————————————————————————————————————————————————————————

இத்தம்
5-1-காருண்ய நிக்னம் -கையார் சக்கரத்தில் காருணிகத்வம்
5-2-துரித ஹர ஜனம் -பொலிக பொலிக பொலிக -ஸ்வ கீய ஜனங்களால் துரிதங்கள் போக்குமவன்
5-3-தீவரம் பிரேம துஹானம் -மாசறு சோதியில் மடல் எடுக்க துணிந்த ப்ரேமம் விளைவித்தவன்
5-4-லோகா நாம் ரஷிதாரம் -ஊரெல்லாம் துஞ்சி -ஜகத் ரஷண ஜரகரூகன்
5-5-ஸ்ம்ருதி விஷயம் எங்கனேயோ -விஸ்லேஷ சமயத்திலும் மறக்க ஒண்ணாமை
5-6-அஹம் பாவநா கோசரம் -கடல் ஞாலம் -அஹம் புத்தியால் அனுபாவ்யன்
5-7- தீ நாநாம் சசரண்யம் -நோற்ற நோன்பில் அசரண்ய சரண்யன்
5-8-ஸ்வ ரச க்ருத நிஜப்ரேஷ்ய தாவாஞ்சம் -ஆராவமுதில் – ஸ்வ ரசமாக தாஸ்ய ரசம் பெருக்குமவன்
5-9-ப்ராப்தம் -மானேய் நோக்கில் பிராப்தன் என்கிறது
5-10-சக்தி ப்ரதம் -பிறந்தவாறு -மன சைதில்யம் போக்கி சக்தி கொடுப்பவன்
ஸ்ரீ பதி விஹ சதகே ச்ரேயஸா மேக ஹேதும்

————————————————————————————————————————————————————————–

அர்ச்சாஞ்ச மௌந நிய தர்ம பஹாய சேளரே
ஆலாபயோக்ய விபவே புன ராகதோ சௌ
சித்தச்ய தத் குணகண ஸ்மரேண நிஜச்ய
சைதில்ய விக் நசமன தமயா சதா ந்த்யே

—————————————————————————————————————————————————————–

திருவாய் மொழி நூற்றந்தாதி –

பிறந்து உலகம் காத்து அளிக்கும் பேரருட் கண்ணா உன்
சிறந்த குணத்தால் யுருகும் சீலம் திறம் தவிர்ந்து
சேர்ந்து அனுபவிக்கும் நிலை செய்யென்ற சீர் மாறன்
வாய்ந்த பதத்தே மனமே வைகு–50

———————————————————————————————————————————————————————————–

ஸ்ரீ P.B.A,ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருவாய் மொழி – திவ்யார்த்த தீபிகை-மானேய் நோக்கு –5-9-

October 30, 2014

கீழ்த் திருவாய் மொழியில் திருக் குடந்தையில் தளர்ந்தார் –
அங்கு நின்றும் திரு வல்ல வாழ் ஏறப் போக ஒருப்பட்டு
அங்குப் போகவும் முடியாமல்
அருகிலிருந்த ஊரில் சோலைகளும்
அங்கு இருந்து பரிமளத்தை கொய்து கொண்டு புறப்படுகிற தென்றலும்
வண்டுகளின் இனிதான மிடற்று ஓசைகளும்
வைதிக அனுஷ்டான கோலா ஹலங்களும்
மற்றும் உண்டான சம்ப்ரமங்களும்
எல்லாம் தம்மை மிகவும் நலிய
அவற்றால் உண்டான நோவுபாட்டை தோழி மாரைக் குறித்து
தலைவி சொல்லும் பாசுரமாக பேசுகிறது இத் திருவாய்மொழி –

——————————————————————————————————————————————————————————

மானேய் நோக்கு நல்லீர் வைகலும் வினையேன் மெலிய
வானார் வண் கமுகும் மது மல்லிகை கமழும்
தேனார் சோலைகள் சூழ் திரு வல்ல வாழுறையும்
கோனாரை அடியேன் அடி கூடுவது என்று கொலோ –5-9-1-

தலைவியின் அவஸ்தா விசேஷத்தை தோழிகள் கோர்க்கப் பார்த்து கொண்டு இருக்க -மானேய் நோக்கு நல்லீர்-என்கிறார்
மெலிய -வானார் -யென்னை மெலியச் செய்யவே கமுகுகள் ஓங்கி உள்ளன
மெலிய -உறையும் -மெலியச் செய்ய கோனார் இங்கே உறைகிறார்

———————————————————————————————————————————————————————————

என்று கொல் தோழி மீர்காள் எம்மை நீர் நலிந்து என் செய்தீரோ
பொன் திகழ் புன்னை மகிழ் புது மாதவி மீதணவி
தென்றல் மணம் கமழும் திரு வல்ல வாழ் நகருள்
நின்ற பிரான் அடி நீர் அடியோம் கொண்டு சூடுவதே –5-9-2-

மாதவி -குருக்கத்திகள்
எனக்கு பிரியமானவற்றைச் சொல்லி தேற்ற வேண்டி இருக்க நலிவது எதற்காக
உங்கள் வழியில் மீறுவேன் என்ற என்னமோ
தென்றல் மணம் திரு வல்ல வாழ் நோக்கி யென்னை இழுக்க உங்கள் வழியில் வர ப்ரசக்தி உண்டோ
அவனது பாதாரவிந்த ரேணுவை சிரஸா வக்கக ஆவல் கொண்டுள்ளேன் –

———————————————————————————————————————————————————————————-

சூடு மலர்க்குழலீர் துயராட்டியேனை மெலிய
பாடு நல்வேத வொலி பரவைத் திரை போல் முழங்க
மாடுயர்ந்த ஓமப்புகை கமழும் தண் திரு வல்ல வாழ்
நீடுறைகின்ற பிரான் கழல் காண்டும் கொல் நிச்சலுமே –5-9-3-

நீங்கள் ஆசைப்பட்டத்தை சூடி இருப்பது போல
நானும் ஆசைப் பட்டதை சூட வேண்டாமா
சாமவேத ஒலியும்
ஹோம தூமங்களின் பரிமளமும்
யென்னை அவ்வழியே இழுக்க
அவன் திருவடிகளையே அநவரதம் கண்டு கொண்டே இருக்கும் காதல் வளர
அந்த காதல் நிறைவேற வழி சொல்ல வல்லீர்கள் ஆகில் சொல்லுமின் –

————————————————————————————————————————————————————————————–

நிச்சலும் தோழி மீர்காள் எம்மை நீர் நலிந்து என் செய்தீரோ
பச்சிலை நீள் கமுகும் பலவும் தெங்கும் வாழைகளும்
மச்சணி மாடங்கள் மீதணவும் தண் திரு வல்ல வாழ்
நச்சரவின் அணை மேல் நம்பிரானது நன்நலமே –5-9-4-

என்னுடைய நற்சீவன் அவனதாகி விட்டதே
எனது அதீநம் இல்லை
உங்கள் பேச்சு விலை செல்லும் அளவன்றே
உய்ந்த பிள்ளை அரையர் இசை பாடும் பொழுது
பச்சிலை நீள் கமுகும்
பச்சிலை நீள் பலவும்
பச்சிலை நீள் தெங்கும்
பச்சிலை நீள் வாழைகளும்
என்று கூட்டிக் கூட்டிப் பாடுவாராம்
திரு வல்ல வாழ் பெருமான் நின்ற திருக் கோலம் தான்
நச்சரவின் அணை மேல் நம்பிரானது-என்றது பொது விசேஷணம்-அத்தலத்து ஸ்திதியைச் சொன்ன படி அன்று
அத்தியூரான் –அணி மணியின் துத்தி சேர் நாகத்தின் மேல் துயில்வான் -போலே

———————————————————————————————————————————————————————————

நன்னலத் தோழி மீர்காள் நல்ல வந்தணர் வேள்விப்புகை
மைந்நலம் கொண்டு உயர் விண் மறைக்கும் தண் திரு வல்ல வாழ்
கன்னலம் கட்டி தன்னைக் கனியை இன்னமுதம் தன்னை
என் நலம் கொள் சுடரை என்று கொல் கண்கள் காண்பதுவே –5-9-5-

உங்கள் குணங்கள் கண்டு அன்றோ நான் பழகி உள்ளேன்
தாய்மார் போலே பகையாளிகள் அன்றே
வேள்விப்புகை யென்னை ஈர்க்க
அவனுடைய அளவிறந்த போக்யதை யென்னை ஆத்மாபஹாரம் பண்ணி அருள
அவனைக் கண்ணால் காணப் பெற்றால் போதும் என்று இருக்கும் எனக்கு
அது என்றைக்கு கை கூடும் –

—————————————————————————————————————————————————————————————-

காண்பது எஞ்ஞான்று கொலோ வினையேன் கனிவாய் மடவீர்
பாண் குரல் வண்டினோடு பசும் தென்றலுமாகி எங்கும்
சேண் சினை யோங்கு மரச் செழும் கானல் திரு வல்ல வாழ்
மாண் குறள் கோலப் பிரான் மலர்த் தாமரைப் பாதங்களே –5-9-6-

எனது வாய் உலர்ந்து கிடக்க
தாம்பூலம் அருந்தி செவ்வி பெற்று -கனிவாய் மடவீர் -ஷேபிக்கிறாள்
அன்றிக்கே
ஏகம் துக்கம் ஸூ கஞ்ச நௌ-என்றபடி அவர்களும் தன்னைப் போல் இருக்கையாலே
கனிவாய் உடன் காணப் பெறுவது என்றோ -என்கிறாள்
முன்னிருந்த தன்மையை இட்டு-கனிவாய் மடவீர் – விளிக்கிறாள்
வண்டுகள் மிடற்று ஓசையும் இளம் தென்றலும்
வாமனன் சௌந்தர்யத்தை நினைப்பூட்டிக் கொண்டு சேவை தந்து அருளா நிற்கும்
எம்பெருமான் உடைய திருவடித் தாமரைகளை நாம் காண்பது என்றைக்கு –

————————————————————————————————————————————————————————————–

பாதங்கள் மேலணி பூந்தொழக் கூடும் கொல் பாவை நல்லீர்
ஓத நெடும் தடத்துள் உயர் தாமரை செங்கழுநீர்
மாதர்கள் வாண் முகமும் கண்ணும் ஏந்தும் திரு வல்ல வாழ்
நாதன் இஞ்ஞாலம் உண்ட நம்பிரான் தன்னை நாடொறுமே –5-9-7-

ஓத நெடும் தடத்துள்-கடல் போன்ற பெரிய தடாகங்களுக்குள்
பாவை நல்லீர் -உகந்து விளிக்கிறாள்
தன் மநோ ரதத்தை நிஷேதியாமையால்
தோழிமாரை உகந்து சம்போதிக்கிறாள் -ஆராயிரப்படி
இவளை நிஷேதிக்கைக்கு ஷமைகள் அன்றிக்கே
ஸ்திமிதைகளாய் இருந்தபடி –
எழுதின பாவை போலே இருந்தார்கள் –ஈடு
தாமரைப் பூக்களும் செங்கழு நீர் பூக்களும்
ஸ்திரீகளின் அழகிய முகங்களோடும் கண்களோடும் ஒக்கும் படி
சகல ஜகத்துக்கும் ரஷகன்
திருவடிகளில் சாத்தின புஷ்பத்தை யாகிலும் சேவிக்கப் பெறுமோ –

————————————————————————————————————————————————————————————–

நாடொறும் வீடின்றியே தொழக் கூடும் கொல் நன்னுதலீர்
ஆடுறு தீங்கரும்பும் விளை சென்னெலுமாகி எங்கும்
மாடுறு பூந்தடம் சேர் வயல் சூழ் தண் திரு வல்ல வாழ்
நீடுறைகின்ற பிரான் நிலம் தாவிய நீள் கழலே –5-9-8-

ஆடுறு தீங்கரும்பும்-ஆலையில் இட்டு ஆடுதற்கு உரிய இனிமையான கரும்புகள்
மாடுறு பூந்தடம்-பக்கங்களில் நெருங்கிய பூத்த தடாகங்கள்
நன்னுதலீர்-
நீங்கள் புருஷகாரம் பண்ணி அவன் எழுந்து அருள
திருவடிகளில் தெண்டனிட்டு
அதனால் நெற்றிக்கு அலங்காரமாக பெரும் ஸ்ரீ பாத ரேணுவை தரித்து உங்களை காண்பேனோ
அவன் வந்த உபகாரத்துக்கு
அவன் திருவடிகளிலே விழுந்து
ப்ரணாம பரம் ஸூ ல பரார்த்ய லலாடைகளாய்
உங்களைக் காண வல்லேனோ -ஈடு
அனுக்ரஹ சீலனாய் நித்ய வாசம் பண்ணும்
எம்பெருமான் உடைய சௌசீல்யமே வடிவெடுத்த திருவடிகளை
இடைவிடாமல் தொழும்படியான பாக்கியம் கிட்டுமோ –

—————————————————————————————————————————————————————————————–

கழல் வளை பூரிப்ப யாம் கண்டு கை தொழக் கூடும் கொலோ
குழல் அன்ன யாழும் அன்னக் குளிர் சோலையுள் தேன் அருந்தி
மழலை வரி வண்டுகள் இசை பாடும் திரு வல்ல வாழ்
சுழலின் மலி சக்கரப் பெருமானது தொல்லருளே -5-9-9-

சுழலின் மலி சக்கர-சுழற்சி பொருந்திய திரு வாழி
தொல் அருள் -ஸ்வா பாவிகமான இயற்கையான அருள்
வேணு கானமோ வீணா கானமோ -என்று சந்தேகிக்கும் படி வண்டுகள் இசை பாட
கையும் திரு ஆழியுமாக சேவை சாதிக்கும் எம்பெருமான் திரு அருளாலே
நாம் காணப் பெற்று கை தொழ நேருமோ
பிரிவாற்றாமையால் கை வளைகள் கழலும்
கலவி இன்பத்தால் மேனி தடித்து கை வளைகள் பூரிக்கும்
அருளே -எழுவாயாக வைத்து
அருளானது நாம் கை தொழும்படி கூடும் கொலோ -என்னவுமாம்

————————————————————————————————————————————————————————–

தொல்லருள் நல்வினையால் சொலக் கூடும் கொல் தோழிமீர்காள்
தொல் லருள் மண்ணும் விண்ணும் தொழ நின்ற திரு நகரம்
நல்லருள் ஆயிரவர் நலனேந்தும் திரு வல்ல வாழ்
நல்லருள் நம் பெருமான் நாராயணன் நாமங்களே –5-9-10-

அர்ச்சாவதாரம் –
பின்னானார் வணங்கும் இடமாய் -அருளே வடிவு எடுத்தது ஆதலால்
தொல் லருள் மண்ணும் விண்ணும் தொழ நின்ற திரு நகரம்-என்கிறார்
உபய விபூதியில் உள்ளாறும் தொல் அருளை அனுபவிக்கும் இடம் அர்ச்சாவதாரம் என்றவாறு
அர்ச்சாவாதர சாமான்யத்தில் அன்வயிக்கும் விசேஷணம்
அன்றிக்கே
மண்ணில் இது போல் நகரில்லை என வானவர்கள் தாம் மலர்கள் தூய்
நண்ணி உறைகின்ற நந்தி புர விண்ணகரம் போலே
இவ்விடத்துக்கு விசேஷித்து கொண்டாடும் அருள் என்னவுமாம்
நல்லருள் ஆயிரவர் நலனேந்தும்
அவனைக் காட்டிலும் அருள் மிக்கார் மங்களா சாசனம் பண்ணிக் கொண்டு வாழும் இடம்
அவனுடைய கருணை ஆகிற ஸூ க்ருத விசேஷத்தால் நாம் சொல்லி வாழக் கூடுமோ
நலன் ஏத்தும் -பாட பேதம்

—————————————————————————————————————————————————————————————–

நாமங்கள் ஆயிரமுடைய நம்பெருமான் அடிமேல்
சேமம் கொள் தென் குருகூர்ச் சடகோபன் தெரிந்துரைத்த
நாமங்கள் ஆயிரத்துள் இவை பத்தும் திரு வல்ல வாழ்
சேமம் கொள் தென்னகர் மேல் செப்புவார் சிறந்தார் பிறந்தே –5-9-11-

சேமம் கொள்-திண்ணிய அத்யாவசாயம் உடையவரான
சேமம் கொள் -அரண் அமைந்த
சம்சாரிகளாய் இருக்கச் செய்தேயும் மற்றவர்கள் காட்டில் சிறந்தவர் ஆவார் -பகவத் அனுபவம் ஆகிற சிறப்பு –
சஹச்ர நாமம் போலே பகவத் குண விபூதிகளை ஒழுங்கு படத் தெரிவிக்கும் திருவாய் மொழி
பேராயிரம் உடையன் திருவடிகளில் ஷேம பாரங்களை வைத்த ஆழ்வார்

———————————————————————————————————————————————————————————————-

த்ரமிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி –

5-9-1-ஸ்வாமித்வாத்-திருவல்லவாழ் உறையும் கோனாரை
5-9-2-/3-சம்ச்ரிதா நாம் உபகரண ரசாத் -நின்ற பிரான் -நீடுறைகின்ற பிரான்
5-9-4-ச்வேஷ்ட சம்ச்லேஷ கத்வாத் -நச்சரவணை மேல் நம்பிரான்
5-9-5-சர்வாஸ் வாதத்வ பூம் நா -கன்னலம் கட்டி தன்னை கனியை இன்னமுதம் தன்னை
5-9-6-கபடவடுதயா – மாண் குறள் கோலப்பிரான்
5-9-7-தாருணாபத் சகத்வாத் -இஞ்ஞாலம் உண்ட பிரான் நம்பிரான் தன்னை
5-9-8-திவ்ய ஸ்தாநோப சத்த்யா–ஆடுறு தீம் கரும்பு இத்யாதி
5-9-9-ப்ரமத் அரி பரணாத்-சுழலின் மலி சக்கரப் பெருமான் –
5-9-10- நாராயணத் வாத்-நல்லருள் நம்பெருமான் நாராயணன்

——————————————————————————————————————————————————————————————-

திராவிட உபநிஷத் சங்கதி –

அநயம் முனி பிரதிஹதஸ் தத ஏவ கேதாத்
கந்தும் ப்ரவ்ருத்த மனஸாபி து திவ்யதேசம்
தத் போக்யதாம் அபிததத் தத் ஈச பாதௌ
யாயம் கதேத்ய கதயன் நவமே ஸ தைந்யம்

—————————————————————————————————————————————————————————————–

மா நலத்தால் மாறன் திரு வல்ல வாழ் புகப் போய்
தான் இளைத்து வீழ்ந்து அவ் ஊர் தன்னருகில் மேல் நலங்கித்
துன்பமுற்றுச் சொன்ன சொலவு கற்பார் தங்களுக்கு
பின்பு பிறக்க வேண்டா பிற –49-

மா நலத்தால் -மிகுந்த பிரேமத்துடன்
மேல் நலங்கித்-அதற்கு மேலே தோழி மார் உடைய நிஷேத வசனங்களாலும் நலிந்து
பின்பு பிறக்க வேண்டா பிற-பின் -இனிமேலும் –பிற -வேறு பிறப்புகள் -பிறக்க வேண்டா
முக்தி சாம்ராஜ்யம் கிட்டும் –

—————————————————————————————————————————————————————————————–

ஸ்ரீ P.B.A,ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருவாய் மொழி – திவ்யார்த்த தீபிகை-ஆராவமுதே–5-8–

October 30, 2014

கீழ் திருவாய் மொழியில் மிக பெரிய ஆர்த்தி உடன் வானமா மலை எம்பெருமான் திருவடிகளில் வேர் அற்ற மரம் போல்
சரணம் புகுந்தார்
திரு முகம் காட்டிற்றிலன்
இன்னார்க்கு இன்ன இடத்தில் முகம் காட்ட திரு உள்ள கொண்டு இருப்பானே
திருக் குடந்தையில் முகம் காட்டுவதாக அவன் நினைப்பு இருக்கக் கூடுமே
ஆழ்வாரும் அப்படியே கருதினார்
கனக்க பாரித்து திருக் குடந்தையிலே சென்று புகுந்தார்
சித்ரகூட மலைச் சாரலில் ஸ்ரீ பரத ஆழ்வான் நினைத்தபடி பரிமாற்றம் பெறாதாப் போலே

ஆழ்வாரும் புக்க இடத்தில் திருக் கண்களை அலர விழித்து குளிர நோக்கி அருளுதல்
திருப் பவளத்தை திறந்து ஒரு வார்த்தை அருளிச் செய்தல்
அணைத்தல்
ஒன்றும் செய்யக் கண்டிலர்
அக்ரூரர் மாம் அக்ரூரேதி வஷ்யதி -என்று பாரித்து மனோரதித்த படியே பெற்றார் இ றே
அப்படி பெறாமையாலே வருந்தி தளர்ந்து
ஸ்த நந்த்ய பிரஜை தாய் பக்கலில் கிட்டி முகம் பெறாமல் அலமந்து நோவு படுமா போலே
அவன் சந்நிதியிலே தளர்ந்து கிடந்தது கூப்பிட்டு
இன்னும் எத்தனை திரு வாசல் தட்டித் திரியக் கடவேன் -என்னும் ஆர்த்தி உடன் தலைக் கட்டுகிறார் –

————————————————————————————————————————————————————————————————————–

ஆராவமுதே யடியேன் உடலம் நின்பால் அன்பாய
நீராய் அலைந்து கரைய வுருக்குகின்ற நெடுமாலே
சீரார் செந்நெல் கவரி வீசும் செழுநீர் திருக் குடந்தை
ஏரார் கோலம் திகழக் கிடந்தாய் கண்டேன் அம்மானே –5-8-1-

இத் திருவாய் மொழியில் நம் பூர்வர்கள் போரவும் ஈடுபட்டு இருப்பார்கள் –
உத்தர பூமியிலே லோக சாரங்க மகா முனிகள் வர்த்தியா நிற்க
இங்குத்தையான் ஒருவன் அங்கு ஏறச் செல்ல
பிள்ளாய் –தஷிண பூமியில் விசேஷம் என் -என்று கேட்க –
திருவாய் மொழி என்கிற பிரபந்தம் அவதரித்து
சிஷ்டர்கள் பரிக்ரஹித்து
போரக் கொண்டாடி கொடு போரா நின்றார்கள் -என்ன
அதிலே உனக்கு போவதொரு சந்தை சொல்லிக் காண் என்ன
ஆராவமுதே -என்கிற இத்தனையும் எனக்குப் போம் என்ன
நாராயணாதி நாமங்கள் கிடக்க இங்கனே ஒரு நிர்த்தேசம் உண்டாவதே –
இச்சொல் நடையாடுகிற தேசத்தே ஏறப் போவோம் என்று அப்போதே புறப்பட்டுப் போந்தார் –ஈடு –

யடியேன் உடலம் நின்பால் அன்பாய-அடியேன் என்றது தம்முடைய ஸ்வ ரூபம் உள்ளபடியை நினைத்து சொல்லுகிறது அன்று
ஆராவமுதே -என்று பேசி அனுபவித்த போக்யதைக்கு தோற்று –
உடலம் அன்பாய்
அசேதன சரீரம் பகவத் விஷய அன்பே கொண்டு வடிவு எடுத்தால் போலே
உடலகம் ஆத்மதர்மம் கொள்ள -என்கிறார் நாயனார் இப்பாசுரம் கொண்டே
நீராய் அலைந்து
உடலம் அன்பாகி -அன்பு நீராகி அலையா நின்றது
இப்படி செய்து அருளின எம்பெருமான் நிலைமை என்என்னில் -நெடுமாலே
ஆழ்வார் உடைய வ்யாமோஹம் அல்பம் என்னும்படி அவனுடைய வ்யாமோஹம் -பெரிய பித்துக் கொள்ளி -ஆனானே –

சீரார் செந்நெல்
நெல்லுக்கு சீர்மை -ஆராவமுத ஆழ்வாருக்கு அமுதுபடி யாகிற சீர்மை -நம்பிள்ளை

ஏரார் கோலம் திகழ –
நாட்டார் உலாவித் திரியும் போது அவயவங்களில் உண்டான பொல்லாங்குகள் மறைந்து ஓன்று போலே இருக்கும்
ஓர் இடத்தில் இருத்தல் கிடத்தல் செய்தவாறே வைரூப்யம் தோற்றி
கண் கொண்டு பார்க்க ஒண்ணாத படி இருப்பார்கள்
இங்கு அங்கன் இன்றிக்கே கிடந்த கிடைக்கு ஆலத்தி வலிக்க வேண்டும் படி இருக்கை-
இவன் உணரில் செய்வது என் என்று வயிறு பிடிக்க வேண்டும் படி இருக்காய் -ஈடு –

——————————————————————————————————————————————————————————————————————

எம்மானே என் வெள்ளை மூர்த்தி என்னை யாள்வானே
எம்மா வுருவம் வேண்டுமாற்றால் ஆவா யெழில் ஏறே
செம்மா கமலம் செழு நீர் மிசை கண் மலரும் திருக் குடந்தை
அம்மா மலர்க்கண் வளர்கின்றானே என் நான் செய்கேனே –5-8-2-

கண்டேன் எம்மானே -என்றார்
உலகோர் காணுவது போல காண வில்லை
எனக்காக எழுந்து இருத்தல்
உலாவுதல்
குசலப்ரசனம் பண்ணி அருளுதல்
அணைத்தல் –
செய்து அருள வேண்டாவோ என்று கேட்பதாம்
அசையாது கிடந்தது இருக்க மீண்டும் கூப்பிடுகிறார் –
உபகாரமே வடிவாய் இருந்து அருளுகிற நீ
திருக் கண்களை திறந்து கடாஷித்து அருளுதல் போருமே
போலியான கமலங்கள் மலர்ந்து இருக்க -செம்மா கமலம் செழு நீர் மிசை கண் மலரும் திருக் குடந்தை –
வன் காற்றறைய ஒருங்கே மருந்து கிடந்தது அலர்ந்த
மென் கால் கமலத் தடம் போல் பொலிந்த எம்பிரான் தடம் கண்கள்
இப்படி மலர வேண்டாவோ என்று துடிக்கிறேனே –
இந்த துடிப்பைத் தவிர்க்க வேண்டாவோ
என் வெள்ளை மூர்த்தி ஸ்வரூப ஸ்வ பாவங்களை காட்டி அருளினாய்
என்னை ஆள்வானே -அஞ்சிறைய மட நாராய் தொடங்கி ஆற்றாமைகளை போக்கி அருளினவனே
எம்மா வுருவம் வேண்டுமாற்றால் ஆவாய்-திரு உள்ளம் ஆனபடியே எப்படிப் பட்ட அவதார விக்ரஹங்களையும் பரிக்ரஹிப்பவனே
இச்சா க்ருஹீத அபிமத ஒரு தேஹ
எழில் ஏறே -நம்மைப் போல் கர்மம் அடியாக இல்லையே
கருணை அடியாகஎன்பதால் ஒளி மல்கி பெருகும்படி
என்னான் செய்கேன்
திருக் கண்கள் மலர்ந்தால் அன்றி தரிக்க கில்லாத அடியேன்
இப்படியே பட்டினி கிடந்தது போக வேண்டியது தானோ –

———————————————————————————————————————————————————————————————————————-

என் நான் செய்கேன் யாரே களை கண் என்னை என் செய்கின்றாய்
உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன்
கன்னார் மதிள் சூழ் குடைந்தைக் கிடந்தாய் அடியேன் அரு வாழ் நாள்
சென்னாள் எந்நாள் அந்நாள் உன தாள் பிடித்தே செலக் காணே–5-8-3-

என் தலையில் ஏதேனும் கார்யம் எறிடுவதாக எண்ணி இருக்கிறாயோ
பிறரை ரஷகராக தேடி ஓடும்படி செய்ய நினைத்து இருக்கிறாயோ
நீயே செய்வதாக நினைத்து இருக்கிறாயோ -நீ உன்னைத் தரப் பார்த்தாயா
அன்றி உபாயாந்தரங்களைக் காட்டி அகற்றப் பார்த்தாயா
என் நான் செய்கேன் -எந்நாள் ஒன்றும் செய்ய முடியாதே கையை விரிக்கிறார்

என்னான் செய்கேன் என்ற இடத்தில் இம் மூன்றும் உண்டு -ஸ்ரீ வசன பூஷணம்
எம்பெருமான் தம்முடைய ஆர்த்தியைக் கண்டு இரங்கக் காணாமையாலே
தன்னைப் பெறும் இடத்தில் சில சாதனானுஷ்டானம் பண்ண வேணும் என்று
இருந்தானாகக் கொண்டு உபாயாந்தர அனுஷ்டானத்துக்கு யோக்யதை இல்லாத படி
அஜ்ஞ்ஞனான நான் என் செய்கேன் –
ஜ்ஞானம் தந்தோமே என்னில்
நீ தந்த ஜ்ஞானத்தாலே ஸ்வரூப பார தந்த்ர்யத்தை உணர்ந்து
சாதனானுஷ்டானம் அபிராப்தம் என்று இருக்கிற நான் என் செய்கேன்
ஸ்வரூபத்துக்கு சேராதது ஆகிலும் உன்னைப் பெறலாம் ஆகில் அது தன்னை அனுஷ்டிக்கலாம் இ றே
ஜ்ஞானம் மாத்ரத்தையும் தந்தாய் ஆகில்
பக்தி ரூபாபன்ன ஜ்ஞானத்தைத்தி தருகையாலே ஒன்றையும் அடைவு பட அனுஷ்டிக்க
ஷமன் இல்லாதபடி
பக்தி பரவசனான நான் என் செய்கேன் –
என்று இம் மூன்றும் ஆழ்வாருக்கு விவஷிதம் -மணவாள மா முனிகள்

உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன்
உபாயமும் உபேயமும் ஒன்றாய் இருக்கை
யாவையாலும் என்னாதே யாவராலும் என்கிறது
உபாய பாவம் ஒரு சேதனனாலே என்று இருக்கையாலே
எந்த க்ரியா கலாபமும் உபாயமாக வேண்டிற்று இல்லை

கன்னார் மதிள் -பரிவுடையார் அஞ்ச வேண்டாதபடி
அடியேன் அரு -உருவம் இல்லாததால் -அடியேனாகிய ஆத்மா வஸ்து என்றபடி
சென்னாள் எந்நாள் அந்நாள் -யாவதாத்மபாவி – -நித்யமாக ஆத்மாவுக்கு அழிவு இல்லாமையால் –

———————————————————————————————————————————————————————————————————————

செலக் காண்கிற்பார் காணும் அளவும் செல்லும் கீர்த்தியாய்
உலப்பிலானே எல்லா வுலகுமுடைய வொரு மூர்த்தி
நலத்தால் மிக்கார் குடந்தை கிடந்தாய் உன்னைக் காண்பான் நான்
அலப்பாய் ஆகாசத்தை நோக்கி அழுவன் தொழுவனே –5-8-4-

தமக்கு உதவாமையாலே நீ படைத்த புகழ் எல்லாம் பாழாக போகிறதே -வயிறு பிடிக்கிறார்
கரை கட்டா காவேரி போலே பெருகிச் செல்லும் கீர்த்தி உண்டே
உலப்பு -முடிவு
கீர்த்தி -விக்ரஹம் –திவ்ய மங்கள -வடிவு அழகை எல்லா பிராணிகளையும் ஈடுபடுத்திக் கொள்ள வல்லவனே
கீர்த்தி – -ஐஸ்வர்யம் -என்றுமாம் -சகல லோகங்களையும் நிர்வஹிப்பவனே
நலத்தால் மிக்கார் -இத்யாதி
ஸ்ரீ வைகுண்டத்தில் காண ஆசைப்படுகிறேனா
திருப் பாற்கடலில் காண ஆசைப்படுகிறேனா
ராம கிருஷ்ணாதி அவதாரங்களில் காண ஆசைப்படுகிறேனா
அன்பர்களை விட மாட்டாத திருக் குடந்தையில் அன்றோ ஆசைப் படுகிறேன்
கிடையாமை அலமந்து ஆகாசத்தை நோக்கி அழுது தொழுது
ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானுக்கு உதவினது போலே வருவாய் நப்பாசை
சிறுவர்கள் போலே அழுது
பெரியவர்கள் போலே தொழுது
காண்கை இவருக்கு நம்மைப் போலே அல்லவே
குளிர நோக்குதல்
வினவுதல்
தழுவுதல்
எல்லாம் செய்யப் பெறுகையே காண்கை இவருக்கு –

———————————————————————————————————————————————————————————————-

அழுவன் தொழுவன் ஆடிக் காண்பான் பாடி யலற்றுவன்
தழுவல் வினையால் பக்கம் நோக்கி நாணிக் கவிழ்ந்து இருப்பன்
செழு வொண் பழனக் குடந்தைக் கிடந்தாய் செந்தாமரைக் கண்ணா
தொழுவனேனை யுனதாள் சேரும் வகையே சூழ் கண்டாய் –5-8-5-

சிறுவர் அழுகையால் சாதிப்பார்
அறிவுடையார் தொழுகையால் சாதிப்பார்
இருவர் படியும் ஏறிட்டுக் கொண்டேன்
இத்தனை சோறிடுகிறோம் ஆடு என்பரே -ஆடியும் பார்த்தேன்
சித்த பிரமம் கொண்டவன் ஆடியும் பாடியும் அலற்றுவதும் செய்வதுபோலே அவற்றையும் செய்யா நின்றேன்
தழு வல்வினை -தழுவி விடாதே நிற்கும் காதல் -வல்வினை இங்கே காதலை சொல்கிறது
நீ வருவாய் என்று பக்கங்களை பார்த்து வராமையால் லஜ்ஜித்து தலை கவிழ்ந்து நிற்பன்
எனக்கு ஜீவனமான திருக் கண்கள் கொண்டவனே
புறம்பு புகல் அற்று உன்ன்பால் அல்லால் செல்லாதபடி அருளிய நீ
உனது திருவடிகளைக் கிட்ட விரகு ஆலோசித்து அருள வேணும் –

———————————————————————————————————————————————————————————–

சூழ் கண்டாய் என் தொல்லை வினையை யறுத்து உன்னடி சேரும்
ஊழ் கண்டிருந்தே தூராக் குழி தூர்த்து எனை நாள் அகன்று இருப்பன்
வாழ் தொல் புகழார் குடந்தைக் கிடந்தாய் வானோர் கோமானே
யாழினிசையே யமுதே அறிவின் பயனே அரியேறே–5-8-6-

கரும பந்தங்கள் கழியப் பெற்றவர்கள் வாழும் திருக்குடந்தை –
இங்கு இருந்தும் அந்த கீர்த்தியை எனக்கு விளைக்காது ஒழியத் தகுமோ
வானோர் கோமானே -நித்ய முக்தர் போலே அடிமை அடியேனையும் கொள்ள வேண்டாமோ
யாழின் இசையே அமுதே -உன்னுடைய போக்யதையை அறியப் பெறாது இருந்தால் துடிப்பேனோ
நீயே என்னுடைய அமுதம்
அறிவின் பயனே -ந போதாத் அபாரம ஸூ கம் -ஸூ கமே வடிவுடையவனே
அரி ஏறே -சிங்கம் ரிஷபம் -சிறப்புக்கு வாசகங்கள் இரண்டும் –
புருஷ சிம்ஹம் புருஷ ரிஷபம் –

———————————————————————————————————————————————————————————-

அரியேறே என்னம் பொற்சுடரே செங்கண் கரு முகிலே
எரியே பவளக் குன்றே நால் தோள் எந்தாய் யுனதருளே
பிரியா வடிமை என்னைக் கொண்டாய் குடந்தைத் திருமாலே
தரியேன் இனி யுன் சரணம் தந்து என் சன்மம் களையாயே –5-8-7-

எரியே பவளக் குன்றே-எரி ஏய் பவளக் குன்றே -நஷத்ர மண்டலத்து அளவும் ஓங்கின பவள மலை போன்றவனே
உகவாதாருக்கு அனுபவிக்க ஒண்ணாமை
உகந்தார்க்கு பரம போக்கின் என்றவாறு
செங்கண் கரு முகிலே-வாத்சல்யம் ஆகிற அமிர்தம் வர்ஷிக்கும் திருக் கண்கள்
நால் தோள் எந்தாய்-கற்பக தரு பணைத்தால் போல்
அருமறை துணிந்த பொருள் முடிவையின் சொல் அமுது ஒழுகுகின்ற தமிழினில் விளம்பி அருளிய
சடகோபர் சொல் பெற்று உயர்ந்தன அழகிய மணவாளர் கொற்றப் புயங்களே -திருவரங்க கலம்பகம்
திரு வாக்கில் வந்து விலஷணமான பெருமை பெறும்
தரியேன் இனிதிருமாலே –
இந்த சேர்த்தி அழகைக் கண்ட பின் ஆறி இருக்க விரகு உண்டோ
மாதா பிதாக்கள் அருகே இருக்க
அவர்கள் ஸ்ரீ மான்களும்
உதாரருமாய் இருக்க
பிரஜை பசித்து தனித்து இருக்க முடியுமோ
யுன் சரணம் தந்து என் சன்மம் களையாயே -பிரஜைகளின்
வாயிலே முலையைக் கொடுத்து சிகித்சை பண்ணுமா போலே
முன்னம் திருவடிகளைத் தந்து
பின்பு ஜன்ம சம்பந்தம் அறுக்க வேணும் -என்கிறார் போலும்

———————————————————————————————————————————————————————————————

களைவாய் துன்பம் களையாது ஒழிவாய் களை கண் மற்றிலேன்
வளைவாய் நேமிபடையாய் குடந்தைக் கிடந்த மா மாயா
தளரா வுடலம் எனதாவி சரிந்து போம் போது
இளையாதுன தாள் ஒருங்கப் பிடித்துப் போத விசை நீயே –5-8-8-

ஆகிஞ்சன்யம் அநந்ய கதித்வம் -இரண்டும் குலையாமல் இருக்க வேண்டுமே
திண்ணிய அத்யாவசியம் -ரஷித்த போதொடும் ரஷியாத போதொடும் வாசி அற
சர்வ பாபேப்யோ மோஷயிஷ்யாமி-என்றி பிரதிஞ்ஞை செய்தபடி செய்தாலும் இல்லாவிடிலும்
வளைவாய் நேமிபடையாய்-
நம் மேல் வினை கடிவான் -கை கழலா நேமியான் -என்றன்றோ நம் போல்வார் உடைய உறுதி
உன் கையில் திவ்யாயுதம் இருந்தும் களையாது இருத்தல் தகுமோ
குடந்தைக் கிடந்த மா மாயா
ஆச்சர்யமான அழகோடு கிடக்கை எதற்காக
தளரா வுடலம் -தளர்ந்து என்றபடி
கட்டுக் குலைந்து பிராணன் முடிந்து போம் அளவு ஆயிற்று
உனது திருவடிகளை நெகிழாமல் பண்ணி அருள வேணும்
ஒருங்க -நிரந்தரமாக -என்றபடி

—————————————————————————————————————————————————————————————————-

இசைவித்து யென்னை யுன் தாளிணைக் கீழ் இருத்தும் அம்மானே
அசைவில் அமரர் தலைவர் தலைவா ஆதிப் பெரு மூர்த்தி
திசைவில் வீசும் செழு மா மணிகள் சேரும் திருக்குடந்தை
அசைவில் உலகம் பரவக் கிடந்தாய் காண வாராயே –5-8-9-

கண்ணாலே காணலாம் படி வர வேணும் என்கிறார் –
மதியால் இசைந்தோம் என்னும்
அனுமதி இச்சைகள் இருத்துவம் என்னாத யென்னை
இசைவித்து என் இசைவினது –நாயனார் –
வைத்தேன் மதியாதே எனது உள்ளகத்தே -அனுமதி இருப்பதாக சொல்லி இருக்கும்இந்த -அனுமதியும் –
யானும் என் நெஞ்சும் இசைந்து ஒழிந்தோம் -என்கிற இசைவும்
பகவத் விஷயீ காரத்தைக் குறித்து ஹேதுவானாலோ என்னில் -ஆகாது
அவையும் எம்பெருமான் உடைய கிருஷி பலம்
யானொட்டி என்னுள் இருத்துவம் என்றிலன் -என்றும்
இசைவித்து யென்னை யுன் தாளிணைக் கீழ் இருத்தும் அம்மானே -என்றும்
என்னிசைவினை -என்றும் அருளும் அருளிச் செயல்களாலே விளங்கும்
இசைவித்து -வருத்தி இசைவித்தமை ஸ்பஷ்டம்
திசைவில் வீசும் செழு மா மணிகள் சேரும் திருக்குடந்தை-திரு மழிசை ஆழ்வார் போல்வாரைச் சொளிகிறது -என்று சம்ப்ரதாயம்
திசைகள் தோறும் பரந்த புகழை யுடைய மகா ஜஞாதாக்கள் சேரும் இடம்
ஆராவமுதாழ்வார்-திருமழிசைப் பிரான் போல்வார்
புருஷ ரத்னங்கள் சேரும் திருக் குடந்தை என்று
நிர்வஹிப்பர்கள் -ஈடு-

———————————————————————————————————————————————————————————————————

வாரா வருவாய் வருமென் மாயா மாயா மூர்த்தியாய்
ஆராவமுதாய் யடியேனாவி அகமே தித்திப்பாய்
தீரா வினைகள் தீர வென்னை யாண்டாய் திருக் குடந்தை
யூரா உனக்காட்பட்டும் அடியேன் இன்னம் உழல்வேனோ –5-8-10-

வாரா அருவாய் வரும் –
கண்ணுக்கு விஷயமாகாதே அரூபி த்ரவ்யமாய் வருகிறவனே-
மறந்து பிழைக்கவும் ஒண்ணாத படி அந்தரங்கத்தில் அரூபியாக கொண்டு பிரகாசிக்கும் ஆச்சர்ய பூதனே
மாயா மூர்த்தியாய் -கருமம் அடியாக இல்லாமல் அனுக்ரஹ அடியாக விளையும் விகாரம் சாஸ்திர வரம்புக்கு கட்டுப் பட்டது அன்றே
ஆராவமுதாய் யடியேனாவி அகமே தித்திப்பாய் -எல்லார் வாயாலும் வருகிறாப் போலேயோ
உளம் கனிந்து இருக்கும் அடியவர் தங்கள் உள்ளத்துள்ளூறிய தேனை -என்று
அந்தரங்கம் அகப்பட தித்திக்குமே
இன்னும் எத்தனை திருப்பதிகள் தட்டித் திரிய கடவேனாக திரு உள்ளம்-

———————————————————————————————————————————————————————————————————

உழலை யென்பின் பேய்ச்சி முலையூடு அவளை யுயிருண்டான்
கழல்கள் அவையே சரணாகக் கொண்ட குருகூர்ச் சடகோபன்
குழலின் மலியச் சொன்ன ஓர் றாயிரத்துள் இப்பத்தும்
மழலை தீர வல்லார் காமர் மானேய் நோக்கியர்க்கே –5-8-11-

உழலை யென்பின்-உழல் தடி போன்ற எலும்புகளை உடைய
மழலை தீர -தமது அறியாமை தொலையும்படி
காமிநிகளுக்கு காமுகர் போலே ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு போக்யர் ஆவார்
தூரா குழி தூரத்து எனை நாள் அகன்று இருப்பன் -என்றவர் இத்தை உவமையாக காட்டி அருளினது இத்தனை
தாவி வையம் கொண்ட தடம் தாமரைகட்கே போலே -முற்று உவமை
அன்றிக்கே
திரு நாட்டில் அப்சரஸ் ஸூ க்களால் விரும்பி ஆதரிக்கப் படுவர் -என்றுமாம் —

—————————————————————————————————————————————————————————————————–

த்ரமிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி –

5-8-1-நிஸ் சௌஹித்ய அம்ருதத்வாத் -ஆராவமுதே
5-8-2-ஸ்வ வாச ஜனி தயா -எம்மா வுருவும் வேண்டுமாற்றாலாவாய் –
5-8-3- அநந்ய பாவ பிரதாநாத் -உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன்
5-8-4-மர்யாதா தீத கீர்த்யா -செலக் காண்கிற்பார் காணும் அளவும் செல்லும் கீர்த்தியாய்
5-8-5-நளின நயன தா -செந்தாமரைக் கண்ணா
5-8-6-ஸூ ராணாம் நாயகத்வாத் -வானோர் கோமானே
5-8-7-சர்வஸ்ரைஷ்ட்யாதி யோகாத் -அரி ஏறே -ஆதி சப்தம் -அம்பொற்சுடர்
5-8-8–அநிதர கதிதா த்யாவஹா சன்ன பாவாத் -களைவாய் துன்பம் -அநந்ய கதித்வம்
5-8-9-ஆதி -சப்தத்தால் – இசைவித்து தாளிணைக் கீழ் இருத்துகை
5-8-10-ஆசந்த பாவாத் -திருக்குடந்தையூராய்

——————————————————————————————————————————————————————————————————-

ஆராவமுதாழ்வார் ஆதரித்த பேறுகளைத்
தாராமையாலே தளர்ந்து மிகத் -தீராத
ஆசையுடன் ஆற்றாமை பேசி அலமந்தான்
மாசறு சீர் மாறன் எம்மான் -48

ஆராவமது -ஆழ்வார் ஆதரித்த பேறுகளை தாராமையாலே -என்று தப்பாக சிலர் பிரிப்பர்
ஆராவமுதாழ்வார் -என்றே சம்ப்ரதாய திரு நாமம் –

————————————————————————————————————————————————————————————————–

ஸ்ரீ P.B.A,ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருவாய் மொழி – திவ்யார்த்த தீபிகை-நோற்ற நோன்பிலேன்–5-7-

October 30, 2014

திருமால் போலே அனுகரித்து கொஞ்சம் தரித்தார்
சிறிது ஆர்த்தி உண்டானாலும் கடுக்க வந்து முகம் காட்டி அருளும் ஸ்வ பாவன் தனக்கு
இன்னும் முகம் காட்டாமல் உபேஷையாய் இருக்க ஹேது
கர்ம ஞான பக்தி யோகம் உண்டா என்று பார்த்தோ
அன்றிக்கே
உபாயாந்தரங்களில் அந்வயித்து இருக்கிறார் என்றோ
திரு உள்ளம் என்னது என்று அறியாமல் தடுமாறி
தன்னுடைய அநந்ய உபாயத்வம் முதலானவற்றை விண்ணப்பம் செய்து
வானமா மலைப் பெருமாள் திருவடிகளில் வேர் அற்ற மரம் போலே விழுந்து சரணம் புகுகிறார்
ஸ்ரீவர மங்கை -ஸ்ரீவர மங்கலம் –
வான மா மலையே அடியேன் தொழ வந்து அருளே -எம்பெருமானுக்கே அந்த திரு நாமம்
அத்தை இட்டு திவ்ய தேசத்துக்கும் அதே பெயர்
பாதமே சரணமாக்கும்
ஔதார்யம்
வானமாமலையிலே கொழுந்து விடும் -நாயனார்

—————————————————————————————————————————————————————————————————————

நோற்ற நோன்பிலேன் நுண்ணறிவிலேன்ஆகிலும் இனி யுன்னை விட்டு ஒன்றும்
ஆற்ற கிற்கின்றிலேன் அரவின் அணை யம்மானே
சேற்றுத் தாமரை செந்நெலூடு மலர் சிரீவரமங்கல நகர்
வீற்று இருந்த வெந்தாய் உனக்கு மிகையல்லேன் அங்கே–5-7-1-

நோன்பிலேன் -கர்ம யோகம் இல்லை
நோற்ற நோன்பிலேன் -ஒருபடியாலும் கர்ம யோகம் இல்லை -என் கைப்பாடாகச் செய்த தொரு கர்மமும் இல்லை
யாத்ருச்சிகம் ப்ராசங்கிகம் ஆநுஷங்கிகம் -போன்ற சில ஸூக்ருதங்கள் இல்லை என்னப் போமோ
நுண் அறிவிலேன் -ஸ்வ ஸ்வரூபத்தை அறிந்து அதிலும் நுட்பமான பர ஸ்வரூபம் அறிவது நுண் அறிவு -அது இல்லாமையை சொன்னபடி
இவை இரண்டும் சொன்னது பக்தி யோகமும் இல்லாமைக்கு உப லஷணம்
ந தர்ம நிஷ்டோச்மி ந சாத்மவேதீ ந பக்திமான் தவச் சரணாரவிந்தே -ஆளவந்தார் –

இனி
உன்னையும் அறியாதே
என்னையும் அறியாதே
இருந்த அன்று இழந்தது அமையாதோ
உன் நிறைவும் என் குறைவும் அறிந்த இன்றும்
இழக்க வேணுமோ
என் கையிலும் ஓன்று உண்டாய் அது சமையும் தனையும்
ஆறி இருக்கிறேனோ —
அநாதி காலம் மெய் மறந்து இழந்த காலம் போராதோ
நான் மெய்யாக இசைந்த இன்றும் இழக்க வேணுமோ –ஈடு

யுன்னை விட்டு ஒன்றும் ஆற்ற கிற்கின்றிலேன்-உன்னை
நிர்பந்திப்பதே எனக்கு பணியாகி விட்டது
உன்னை மறந்து பிழைக்க மாட்டிற்று இலேன் –
அரவின் அணை அம்மானே -சென்றால் குடையாம் -அவன் எங்களில் ஒருவனே அன்றோ
அவனைப் போலே என்னையும் அடிமை கொண்டு அருள வேணும்
அரவின் அணை யம்மானே ஒன்றும் ஆற்ற கிற்கின்றிலேன்-நான் படுக்கையில் கண் உறங்கப் பெறாதே
உள்ளம் சோர யுகந்து எதிர் விம்மி உரோம கூபங்களாய் கண்ண நீர்கள்
துள்ளம் சரத் துயில் அணை கொள்ளேன் -கிடவா நிற்க
நீ மெல்லிய பஞ்சனை பார்த்து கண் உறங்குவதை காண ஆற்றகில்லேன்
சேற்றுத் தாமரை -இத்யாதி
பரமபதத்தையும் மறக்கும்படி அன்றி இத்தளத்தின் வாய்ப்பு
உனக்கு மிகை அல்லேன் -ரஷ்ய வர்க்க சேதனர்களில் நான் புறம்பு பட்டவன் அல்லேனே

——————————————————————————————————————————————————————————————————————————

அங்குற்றேன் அல்லேன் இங்குற்றேன் அல்லேன் உன்னைக் காணும் அவாவில் வீழ்ந்து நான்
எங்குற்றேனும்அல்லேன் இலங்கை செற்ற வம்மானே
திங்கள் சேர் மணி மாட நீடு சிரீ வர மங்கல நகர் உறை
சங்கு சக்கரத்தாய் தமியேனுக்கு அருளாயே –5-7-2-

நித்ய முக்தர்கள் போலே பலன் கை புகுந்தவன் அல்ல
சாதனானுஷ்டானம் செய்யும் இங்குள்ளோர் போலேவும் அல்ல
மேலும் சாதனானுஷ்டானம் பண்ணும் யோக்யதை உண்டோ என்னில்
உன்னைக் காணும் அவாவில் வீழ்ந்து நான் எங்குற்றேனும்அல்லேன்-
வடிவு அழகில் ஈடு பட்டு தளர்ந்து கிடக்கிறேன்
இருந்த இடத்தில் கிட்டி அனுபவிக்கிறேன் அல்லேன்
உன்னை மதியாத சம்சாரிகள் திரளில் சேர்ந்தவன் அல்லேன்
உன்னை ஒழியவும் தரித்து இருக்கும் திரளில் சேர்ந்தவன் அல்லேன்
இலங்கையை கிழங்கு எடுத்து அருளிய உன்னால்
என்னை சம்சாரத்தில் இருந்து கிழங்கு எடுத்தல் அரிதோ
துணை அற்ற எனக்கு உறுதுணையாய் இருந்து அருள் செய்து அருள வேணும்

————————————————————————————————————————————————————————————————————————–

கருளப் புட்கொடி சக்கரப்படை வானநாட வெங்கார் முகில் வண்ணா
பொருள் அல்லாத வென்னைப் பொருளாக்கி அடிமை கொண்டே
தெருள் கொள் நான்மறை வல்லவர் பலர் வாழ் சிரீ வர மங்கல நகர்க்கு
அருள் செய்து அங்கு இருந்தாய் அறியேன் ஒரு கைம்மாறே –5-7-3-

அபாதார்த்தமாய் கிடந்த என்னை
ஸ்வ ரூபம் பெற்றவனாம் படி அங்கீகரித்து
திருவாய்மொழி பாடுகை யாகிற இக் கைங்கர்யத்தை
என் பக்கலிலே திரு உள்ளம் பற்றினாய்
இந்த மகா உபகாரகத்துக்கு கைம்மாறு அறியேன் –
கருடபுள்ளைக்-கொடியாகக் கொண்டும் -அடியவர்கள் இடம் சென்று அருளுவாய் -கருட -கருள என்றாயிற்று
கருதுமிடம் பொருது கை வந்த சக்கரத்தன்-போக விட்டு அடியார் வினை கெடுப்பாய்
திரு நாட்டில் சீரிய சிங்காசனத்தில் எழுந்து அருளி நித்ய முக்தர்களை அனுபவிப்பிப்பாய்
எம்போல்வாரை வாழ்விக்க காளமேக திருவுருவைக் காட்டி அருள்வாய்
முதலிலே பிடித்து கைம்முதல் இல்லாமல் கார்யம் செய்து அருளும் உனக்கு இப்போது எதிர்பார்ப்பது தகுதியோ

—————————————————————————————————————————————————————————————————————-

மாறு சேர் படை நூற்றுவர் மங்க ஓர் ஐவர் க்காய்அன்று மாயப்போர் பண்ணி
நீறு செய்த வெந்தாய் நிலம் கீண்ட வம்மானே
தேறு ஞானத்தர் வேத வேள்வி அறாச் சிரீ வர மங்கல நகர்
ஏறி வீற்று இருந்தாய் உன்னை எங்கு எய்தக் கூவுவனே –5-7-4-

உன்னை நான் நிர்பந்திப்பது என்று ஒரு பொருள் உண்டோ –
சமோஹம் சர்வ பூதேஷு ந மே த்வேஷ்யோச்தி ந ப்ரிய-
மாறு சேர் நூற்றுவர் –
த்விஷதன்னம் ந போக்தவ்யம் த்விஷந்தம் நைவ போஜ்யத்
பாண்டவான் த்விஷசே ராஜன் மம ப்ராணா ஹி பாண்டவ –

மாயப்போர் –
ஆச்சர்யமான யுத்தம் -என்னுதல்
வஞ்சகமான யுத்தம் -என்னுதல்
அதாவது -பகலை இரவாக்கியும்
ஆயுதம் எடேன் என்று ஆயுதம் எடுத்தும்
சத்ருக்களுக்கு உயிர் நிலையைக் காட்டிக் கொடுத்தும்
செய்தவை -ஈடு –

நிலம் அபேஷிக்காமல் இருக்க நம் சரக்கை நாம் தான் கொள்ள வேணும் என்று கீடி அருளினாயே
என்னையும் அப்படியே நீக்க வேண்டாவோ –
நீயே விஷயீ கரிக்கும் அத்தனை அல்லது நான் உன்னைப் பெறுகுகைக்கு ஈடான முயற்சி என்னும் பொருள் உண்டோ
நீ கூவுதல்
வருதல்
செய்வது அன்றோ தகுந்தது

——————————————————————————————————————————————————————————————————–

எய்தக் கூவுதலாவதே எனக்கு எவ்வ தெவ்வவத் துளாயுமாய் நின்று
கைதவங்கள் செய்யும் கருமேனி யம்மானே
செய்த வேள்வியர் வையத்தேவர் அறாச் சிரீ வர மங்கல நகர்
கை தொழ விருந்தாய் அது நானும் கண்டேனே –5-7-5–

சேதன லாபம் எம்பெருமானுக்கா
எம்பெருமான் உடைய லாபம் சேதனனுக்கா
சொத்து -ஸ்வாமி-சம்பந்தம் உண்டே –
எவ்வ தெவ்வவத் துளாயுமாய் நின்று கைதவங்கள் செய்யும் கருமேனி யம்மானே
தெவ்வம் -சத்ரு சமூஹம்
தெவ்வர் அஞ்ச நெடும் புரிசை யுயர்ந்த பாங்கர் -ஸ்ரீ குலசேகர பெருமாள்
எவ்வ -எப்படிப்பட்ட –

புத்த முனியாய்
அவர்கள் நடுவே புக்கு நின்று
அவர்களுக்கு உண்டான விதிக்க ஸ்ரத்தையை போக்கின்படி -கைதவங்கள் செய்யும் கருமேனி யம்மானே -வசனங்களாலும்
யுக்திகளாலும் க்ருத்ரிமத்தைப் பண்ணி
விதிக்க ஸ்ரத்தையைப் போக்கி
அவ்வளவிலும் கேளாதார்க்கு
வடிவைக் காட்டி வாய் மாளப் பண்ணின படி
தன்னுடைய வார்த்தைகளாலே அவர்களை
சவ ப்ராயராக்கி
ஒரு வனம் புக்கிலக்காம் படி பண்ணி வைத்தான் -ஈடு

செய்த வேள்வியர் –
எம்பெருமான் உடைய ஸ்வரூப ஸ்வ பாவங்களை உள்ளபடி அறிந்தவர்கள்
விது க்ருஷ்ணம் பிராமணாஸ் தத் வதோ யே தேஷாம் ராஜன் சர்வ யஜ்ஞ்ஞாஸ் சமாப்த

அது நானும் கண்டேனே –
தேவர் செய்து அருளின அம்சம் இவ்வளவு உண்டு
அதில் குறை இல்லை
எனக்கு அவ்வளவால் போராது
திருவடிகளில் கைங்கர்யமே யாத்ரையாகப் பெற வேணும்
என்று வாக்ய சேஷமாகக் கிடக்கிறது -ஈடு

————————————————————————————————————————————————————————————————————-

ஏனமாய் நிலம் கீண்ட வென்னப்பனே கண்ணா என்றும் என்னை யாளுடை
வான நாயகனே மணி மாணிக்கச் சுடரே
தேன மாம் பொழில் தண் சிரீ வர மங்கல த்தவர் கை தொழ வுறை
வானமா மலையே அடியேன் தொழ வந்து அருளே –5-7-6-

சம்சார வெள்ளத்துக்கு உள்ளே
ஆவாரார் துணை என்று அலை நீர் கடலுள் அழுந்தும் நாவாய் போல்
பிறவிக் கடலுள் நின்று நான் துளங்க -என்னையும் எடுத்து அருள வேணும் -ஏனமாய் நிலம் கீண்ட வென்னப்பனே-என்கிறார்
கண்ணா –
வம்ச பூமிகளை உத்தரிக்கக் கீழ்க்குலம் புக்க வராஹ கோபாலரைப் போலே
என்னையும் உயரத் தூக்கி அருள வேண்டாவோ
நீ பரமபதத்தில் இருந்தும் -என்றும் என்னை யாளுடை
வான நாயகனே-
என்னை ஆட்கொள்ளும் படியை அன்றோ ஆராய்ந்து பொருவது
வானமா மலையே -லஷணையால் மலை போன்ற எம்பெருமானையே குறிக்கும்-

——————————————————————————————————————————————————————————————————

வந்தருளி என் நெஞ்சிடம் கொண்ட வானவர் கொழுந்தே
உலகுக்கு ஓர் முந்தைத் தாய் தந்தையே முழு வேழ் உலகுண்டாய்
செந்தொழிலவர் வேத வேள்வி அறாச் சிரீ வர மங்கல நகர்
அந்தமில் புகழாய் அடியேனை அகற்றேலே -5-7-7-

அடியேன் தொழ வந்தருளே -என்றார்
அர்ச்சா சமாதியைக் குலைத்து திருப் புழி ஆழ்வார் அடியில் வர பிரார்த்தித்தார்
அங்கனம் வரக் காணாமையாலே -பிரானே என்னை உபெஷியாது ஒழிய வேணும் -என்கிறார் இதில்
வந்தருளி என் நெஞ்சிடம் கொண்ட-வடதடமும் வைகுந்தமும் மதிள் துவாராபதியும்
இடவகைகள் இகழ்ந்திட்டு என் பால் இடவகை கொண்டனையே –
பட்டர் ஸ்ரீ புஷ்ப யாகம் அணித்தவாறே
நஞ்சீயரை பல காலும் இயல் கேட்டு அருளுவர்
ஒரு கோடையிலே திரு வீதியிலே நீரை விட்டு எழுந்து அருளி இருந்து
இப்பாட்டை இயல் சொல்லும் என்று ஜீயரை அருளிச் செய்து
தாம் இத்தை அனுசந்தித்து இருந்து
அனந்தரத்தே தாமும் இப்பாட்டை இயல் சொல்லி
யம நியமாதி க்ரமத்தாலே காரண வஸ்துவை மனனம் பண்ணி
புறம்புள்ள பராக்கை அறுத்து அனுசந்திக்கப் புக்காலும்
சுக்கான் பரல் போலே இருக்கக் கடவ நெஞ்சுகள் பதம் செய்யும்படி
தார்மிகராய் இருப்பார் இவை சில ஈரச் சொல்களை பொகட்டுப் போவதே என்று அருளிச் செய்தார்
நஞ்சீயர் இவ்வார்த்தையை உருத்தோறும் அருளிச் செய்வர் என்று அருளிச் செய்வர் -ஈடு

வானவர் கொழுந்தே -என்று விளித்து
வந்தருளி என் நெஞ்சு இடம் கொண்ட -என்கையாலே
படாத பாடு படுவதே என் நெஞ்சில் இடம் கொள்ள
விஷயங்களை உகந்து போந்த என் நெஞ்சு ஸ்ரீ வைகுண்ட நாதனுக்கு இடமாகப் போவதே என்று தலை சீய்க்கிறார்
பெருமாள் ஸ்ரீ சரபங்க மக ரிஷ்யின் ஆஸ்ரமத்தில்
ஆவாசம் த்வஹம் இச்சாமி பிரதிஷ்டம் இஹ காநனே-என்றால் போலே
ஒரு நாளும் அழியாத மாதா பிதா தனது பேறாகவே ரஷித்து அருளுவான்
செந்தொலழிலவர்-அநந்ய பிரயோஜனர்

———————————————————————————————————————————————————————————————————–

அகற்ற நீ வைத்த மாய வல்லைம் புலன்களாமாவை நன்கு அறிந்தனன்
அகற்றி என்னையும் நீ அரும் சேற்றில் வீழ்த்தி கண்டாய்
பகற்கதிர் மணி மாட நீடு சிரீ வர மங்கை வாணனே என்றும்
புகற்கரிய வெந்தாய் புள்ளின் வாய் பிளந்தானே –5-7-8-

வாணனே -வாழ் நனே வாழுமவனே
அடிமைக்கு விரோதியான சம்சாரத்தில் என்னை வைத்து இருப்பது அகற்றின படி அன்றோ
மமமாயா துரத்யயா-உன்னை உகவாதார் அகன்று போம்படிக்கு ஈடாக நீ வைத்தவை இவை
என்று நீ மயர்வற மதிநலம் அருளின படியால் அழகிதாக அறிந்தேன் –
உன்னால் அல்லது செல்லாதபடியாய் இருக்கும் என்னையும்
உன்பக்கலில் நின்றும் பிரித்து
கால் வாங்க ஒண்ணாத படியான சப்தாதி விஷயங்களில் தள்ளி வைத்து இருக்கின்றாயே
பகர்க்கதிர்-மிக்க ஒளி
பகற்கதிர் -சூர்ய மண்டலத்தளவும் செல்ல உயர்ந்து ஒளியை உடைய மாடங்கள்-

—————————————————————————————————————————————————————————————————

புள்ளின் வாய் பிளந்தாய் மருதிடை போயினாய் எருது ஏழு அடர்த்த என்
கள்ள மாயவனே கரு மாணிக்கச் சுடரே
தெள்ளியார் திரு நான்மறைகள் வல்லார் மலி தண் சிரீ வர மங்கை
உள்ளிருந்த வெந்தாய் அருளாய் வுய்யுமாறு எனக்கே –5-7-9-

பிரபல விரோதிகள் காரணமாக நீர் அரும் சேற்றில் விழுந்து கிடக்க – அகற்றினீர் என்னலாமோ என்ன
அநாயாசேன விரோதி வர்க்கங்களை அழித்த உனக்கு இது ஒரு வார்த்தையோ
என்ன கள்ளத்தனமான பேச்சு –
திருமேனியை ஆயாசப் படுத்தி செய்த செல்கள் பல பலவே
புள்ளின் வாய் பிளந்து
மருதிடை சென்று
எருது ஏழும் அடர்த்து -போன்ற பலவே
என் வினைகளைப் போக்க ஆயாசப் பட வேண்டாவே -கரு மாணிக்கச் சுடரே –
தெள்ளியார் -அவன் கை பார்த்து மார்பிலே கை வைத்து வாழ்பவர்
உனது திருவடிகளில் கைங்கர்யம் கிட்டும் வகை பண்ணி அருள வேண்டும் –

——————————————————————————————————————————————————————————————————

ஆறேனக்கு நின் பாதமே சரணாக தந்து ஒழிந்தாய் உனக்கோர் கைம்
மாறு நான் ஒன்றிலேன் எனதாவியும் உனதே
சேறு கொள் கரும்பும் பெரும் செந்நெலும் மலி தண் சிரீ வர மங்கை
நாறு பூந் தண் துழாய் முடியாய் தெய்வ நாயகனே –5-7-10-

தமக்குப் பிறந்த அத்யாவசயாத்துக்கு கிருதஜ்ஞதா நுசந்தானம் பண்ணுகிறார்
ஆறு –வழி -உபாயம்
சரணாக -சரண்-உபயம்
எனக்கு நின் பாதமே ஆறு சரணாக தந்து ஒழிந்தாய் என்று அந்வயித்து
பிராப்ய பிராபகங்கள் இரண்டும் உன் திருவடி மலர்களே என்று இருக்கும் இந்த அத்யாவசாயத்தை
எனக்கு ஸ்வ பாவமாம் படி தந்து அருளினாய் -பிள்ளான் அருளிச் செய்வர்
பட்டர் -ஆறு -சரண் -இரண்டுமே உபாயம் என்று கொண்டு
அடியேனுக்கு உபாயமோ என்றால் உனது பாதமே உபாயமாக தந்து அருளினாய்
நோற்ற நோன்பிலேன் என்று தொடங்கி
உபாயாந்தர சூன்யதையை முன்னிட்டுக் கொண்டு
உபாய நிஷ்கர்ஷம் பண்ணுகிற திருவாய் மொழி யாகையாலே
அத்தையே நிகமிக்கிறது
அவதாரணத்தாலே ஏக பதத்தையே நினைக்கிறது
ஈஸ்வரனைப் பற்றின ஊற்றத்தினாலே உபாயாந்தரங்களை நெகிழுகை ஒழிய
நாஸ்திக்யத்தாலே விடுமன்று அது விஷயாந்தர ப்ராவண்ய ஹேதுவாகும்
ஔஷத சேவை பண்ணினான் ஒருவன் சர்ப்பத்திஞ் வாயிலே கை கொடுத்தால் அது நிர்ப்பாதம்
ஔஷத ஸ்பர்சம் இல்லாதவன் அத்தைச் செய்தால் அது மரண ஹேதுவாகும் -ஈடு

சாஸ்த்ரிகள் தெப்பக் கரையாரைப் போலே இரண்டையும் இடுக்கி பிறவிக் கடலை நீந்த
சாரஜ்ஞ்ஞர் விட்டத்தில் இருப்பாரைப் போலே இரு கையையும் விட்டு கரை குறுகும் காலம் எண்ணுவார்கள் –

உனக்கோர் கைம்மாறு நான் ஒன்றிலேன் எனதாவியும் உனதே –
எத்தனையேனும் அளவுடையார்க்கும்
நிர்வாஹகனாய் இரா நின்றாய்
ஆனபின்பு உனக்கு நான் என்ன பிரத்யுபகாரம் பண்ணுவது
நீயோ கனக்க உபகரித்துக் கொண்டு நின்றாய்
நான் அஜ்ஞ்ஞனாகப் பெற்றிலேன்
இங்கனே யானாலும் நான் சில செய்து தலைக் கட்டினேன் ஆக ஒண்ணாதபடி நீ பரிபூர்ணன் ஆனாய்
உபகாரம் கொள்ளாதார் உண்டு உடுத்து திரியா நின்றார்கள்
அறிவு கேடர் ஆனவர்கள் சில பிரத்யுபகாரம் பண்ணினோம் என்று இரா நின்றார்கள்
நீ அபூர்ணன் ஆகில் இவை எல்லாம் சில செய்ததாக நினைத்து இருக்கல் ஆயிற்றே -நீயோ பூர்ணனாய் இருந்தாய்
ஆனபின்பு ஓன்று செய்து தலைக் கட்டப் போமோ -ஈடு

தெய்வ நாயகனே -இது வானமா மலை எம்பெருமான் உடைய திரு நாமம் —

—————————————————————————————————————————————————————————————————-

தெய்வ நாயகன் நாரணன் திரிவிக்கிரமன் அடியிணை மிசை
கொய்கொள் பூம் பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன்
செய்த வாயிரத்துள் இவை தண் சிரீ வர மங்கை மேய பத்துடன்
வைகல் பாட வல்லார் வானோர்க்கு ஆராவமுதே –5-7-11-

நித்ய சூரிகளுக்கு பரம போக்யராவார் -காலதத்வம் உள்ளதனையும் –

——————————————————————————————————————————————————————————————–

த்ரமிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி –

5-7-1-சர்ப்பாதீ சேசயத்வாத் -அரவின் அணை அம்மானே
5-7-2-அரி தர பரணாத்-சங்கு சக்கரத்தாய் -அரி -சக்கரம் -தரம் -சங்கு
5-7-3–ஸாநுகம்பத்வ யோகாத் -அருள் செய்து அங்கு இருந்தாய்
5-7-4-சத் சாஹாய்யாத் -ஐவர் க்காய் அன்று மாயப் போர் பண்ணி
5-7-5-அசேஷாந்தர நிலயதயா-எவ்வ தெவ்வ துளாயுமாய் நின்ற –
5-7-6-பூசமுத் த்ருயுதந்தை -ஏனமாய் நிலம் கீண்ட என்னப்பனே -கண்ணா
5-7-7-சர்வேஷாம் தாத பாவாத் -உலக்குக்கோர் முந்தைத் தாய் தந்தையே-
5-7-8/9/10–இதர ஜன துரா தர்ஷ தாதே – என்றும் புகற்கரிய எந்தாய் -புள்ளின் வாய்பிளந்தானே -ஆதி சப்தம் மற்றை சேஷ்டிதங்கள்

தேவதா சார்வ பௌமம்-தெய்வ நாயகம் –

—————————————————————————————————————————————————————————————————–

நோற்ற நோன்பாதியிலேன் உன்தன்னை விட்டாற்றகில்லேன்
பேற்றுக்கு உபாயம் உன்தன் பேரருளே -சாற்றுகின்றேன்
இங்கு என்னிலை என்னும் எழில் மாறன் சொல் வல்லார்
அங்கு அமரர்க்கு ஆராவமுது –47

———————————————————————————————————————————————————————————————

ஸ்ரீ P.B.A,ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருவாய் மொழி – திவ்யார்த்த தீபிகை–கடல் ஞாலம் செய்தேனும்—5-6-

October 29, 2014

ஸ்ரீ யபதியை பிரிந்து தரிக்க அனுகரித்து அருளுகிறார்
திரு கோபிமார்கள் திருக்குரவை கோத்த அன்று அனுகரித்தது ஸ்ரீ விஷ்ணு புராண சித்தம் -5-13-23-
ஆண்டாளும் நோன்பு நோற்பதாக அனுகரித்து அருளிச் செய்கிறார்
அநுகார பிரகாரங்கள் உபநிஷத்திலும் காணலாம்
பராங்குச நாயகி ஞான முத்ரையும் தானுமாய்
கடல் ஞாலம் செய்தேனும் யானே -என்றும்
கடல் ஞாலம் ஆவேனும் யானே -என்றும்
மலை எடுத்தேனும் யானே -என்றும்
இனத் தேவர் தலைவனும் யானே -என்றும்
சொல்லக் கேட்ட திருத் தாயார் அநு கரித்து தரிக்கிறாள் என்று அறியாமல் கலங்கி கிடக்க
வந்த பந்துக்கள் இது என்ன என்று வினவ
சர்வேஸ்வரன் இவள் பக்கல் ஆவேசித்தான் போல் இருக்கிறது
என்று விடை கூரும்படியாய் செல்கிறது இத்திருவாய்மொழி –

——————————————————————————————————————————————————————————

கடல் ஞாலம் செய்தேனும் யானே என்னும்
கடல் ஞாலம் ஆவேனும் யானே என்னும்
கடல் ஞாலம் கொண்டேனும் யானே என்னும்
கடல் ஞாலம் கீண்டேனும் யானே என்னும்
கடல் ஞாலம் உண்டேனும் யானே என்னும்
கடல் ஞாலத்தீசன் வந்தேறக் கொலோ
கடல் ஞாலத்தீர்க்கிவை என் சொல்லுகேன்
கடல் ஞாலத்து என் மகள் கற்கின்றனவே–5-6-1-

யானே -ஏவகாரத்தால் மூன்றுவகை காரணமும் யானே
அநு பிரவேசமும் செய்து அருளுவதால் ஆவேனும் யானே
சம்சாரத்திலே வைத்து
நித்ய சூரிகள் யாத்ரையாய் செல்லுகிற என் மகள் படியை
நித்ய சம்சாரிகளாய்
பகவத் விஷயம் கனவிலும் கண்டு அறியாத உங்களுக்கு என் சொல்வேன்

———————————————————————————————————————————————————————–

கற்கும் கல்விக்கு எல்லையிலேனே என்னும்
கற்கும் கல்வி ஆவேனும் யானே என்னும்
கற்கும் கல்வி செய்வேனும் யானே என்னும்
கற்கும் கல்வி தீர்ப்பேனும் யானே என்னும்
கற்கும் கல்வி சாரமும் யானே என்னும்
கற்கும் கல்வி நாதன் வந்தேறக் கொலோ
கற்கும் கல்வியீர்க்கு இவை என் சொல்லுகேன்
கற்கும் கல்வி என் மகள் காண்கின்றவே –5-6-2-

எலை இல்லா நூல்களையும் சாந்தீபன் இடம் 64 நாள்களில் கற்றான்
வேதங்களுக்கு எல்லை இல்லை என்றுமாம்
சகல வேத ஸ்வரூபி
தீர்க்கி தீர்மாநிக்கை அர்த்த நிர்ணயம் அருளிச் செய்யும் ஆச்சார்யர்களும் அவனே
சம்ஹார காலத்தில் திரு உள்ளத்தில் கொண்டதாகவும் கொள்ளலாம்
சாரம் -திருமந்தரம் போல்வன
மந்திர ஸ்வரூபி

—————————————————————————————————————————————————————-

காண்கின்ற நிலம் எல்லாம் யானே என்னும்
காண்கின்ற விசும்பு எல்லாம் யானே என்னும்
காண்கின்ற வெந்தீ எல்லாம் யானே என்னும்
காண்கின்ற கடல் எல்லாம் யானே என்னும்
காண்கின்ற கடல் வண்ணன் வந்தேறக் கொலோ
காண்கின்ற வுலகத்தீர்க்கு என் சொல்லுகேன்
காண்கின்ற என் காரிகை செய்கின்றவே –5-6-3-

பகவத் விஷயத்தை உள்ளபடி காணும் என் காரிகை –
பிறரால் காண முடியாதவற்றையும் காண்கிறாள்
எண்ணா தன்கள் என்னும் நன் முனிவர் இன்பம் தலை சிறப்ப -என்றபடி
நீங்களும் என்னோடு ஒக்க காணா நின்றி கோளில்
உங்களுக்கு நான் என்ன பாசுரம் இட்டு சொல்வது
உங்களோடு என்னோடு வாசி உண்டோ சொல்ல ஒன்ன்பாமைக்கு -ஈடு
லோகம் ஒழிய அறியாத உங்களுக்கு என் என்பதாக சொல்லுவேன் -பன்னீராயிரப்படி

———————————————————————————————————————————————————————

செய்கின்ற கிதிஎல்லாம் யானே என்னும்
செய்வாநின்றனகளும் யானே என்னும்
செய்து முன்னிறந்தவும் யானே என்னும்
செய்கைப் பயன் உண்பேனும் யானே என்னும்
செய்வார்களைச் செய்வேனும் யானே என்னும்
செய்ய கமலக் கண்ணன் ஏறக் கொலோ
செய்ய வுலகத்தீர்க்கு இவை என் சொல்லுகேன்
செய்ய கனிவாய் இளமான் திறத்தே -5-6-4-

முக்காலத்தில் நடப்பன அவன் இட்ட வழக்கே
அஹம் ஹி சர்வ யஞ்ஞானாம் போக்தா
செய்கைப்பயன் -செய்கைகளின் பயன்
செய்கையும் பயனும் என்றுமாம் -செய்கையாகிற கிரியையும் அவற்றின் பலனும் நான் இட்ட வழக்கு
செய்ய -கபடம் அறியாமல் ருஜூ வான

——————————————————————————————————————————————————————————

திறம்பாமல் மண் காக்கின்றேன் யானே என்னும்
திறம்பாமல் மலை எடுத்தேனே என்னும்
திறம்பாமல் அசுரரைக் கொன்றேனே என்னும்
திறம் காட்டி யன்று ஐவரைக் காத்தேனே எண்ணு
திறம்பாத கடல் வண்ணன் ஏறக் கொலோ
திறம்பாத வுலகத்தீர்க்கு என் சொல்லுகேன்
திறம்பாது என் திருமகள் எய்தினவே –5-6-5-

நீதி தவறாமல் காக்கின்றேன்
சலியாதபடி கோவர்த்தன மலையை எடுத்தேன்
கொடியேறு செந்தாமரைக் கைவிரல்கள் கோலமும் அழிந்தில வாடிற்றில -வடிவேறு திருவுகிர் நொந்துமில –
தப்பாதபடி அசுரர்களை கொன்றேன்
க்ருஷ்ணாஸ்ரய க்ருஷ்ணபலா கிருஷ்ண நாதஸ் ச பாண்டவ
அபாயம் ஒன்றும் இல்லாமல் கடல் கடைந்தேன்
மந்தரம் நாட்டி அன்று மதுரக் கொழும் சாறு கொண்ட சுந்தரத் தோளுடையான் எம்பெருமான் –
அடியார்களை நோக்குவதில் சலியாத கடல் வண்ணன்
அவசியம் அறிந்து கொள்ள ஸ்திரமாக உள்ள உலகத்தீர்க்கு
ஹிதம் சொல்லி மீட்க ஒண்ணாத என் திருமகள்

ஆழம் காலிலே இழிந்தார் படியை
கரையிலே நின்றாராலே சொல்லப் போமோ -ஈடு

————————————————————————————————————————————————————————————-

இனவேய் மலை ஏந்தினேன் யானே என்னும்
இனவேறுகள் செற்றேனும் யானே என்னும்
இனவான் கன்று மேய்த்தேனும் யானே என்னும்
இனவா நிரை காத்தேனும் யானே என்னும்
இனவாயர் தலைவனும் யானே என்னும்
இனத்தேவர் தலைவன் வந்து ஏறக் கொலோ
இன வேற் கண் நல்லீர்க்கு இவை என் சொல்லுகேன்
இன வேற் கண்ணி என் மகள் உற்றனவே –5-6-6-

அத்யந்த பக்தி யுக்தாநாம் ந சாஸ்திரம் நைவ ச க்ரம-மீண்டும் மீண்டும் கோவர்த்தன உத்தரண லீலை
கன்று மேய்த்து விளையாட வல்லான் -பெரிய திருமொழி 2-5-3-
விளையாட வேண்டிய வல்லமை என்ன
வரை மீ கானில் தடம் பருகு கரு முகிலை –
முதுகிலே கையைக் கட்டி கவிழ்ந்து நின்று தண்ணீர் அமுது செய்து காட்டும் வல்லமைஇவனுக்கு உண்டே -பட்டர்
இனவாயர் தலைவன் -தன்னேராயிரம் பிள்ளைகளும் தானுமாய் தீமை செய்தாலும் தீம்பிலே தலைவன்

———————————————————————————————————————————————————————————————

உற்றார்கள் எனக்கு இல்லை யாரும் என்னும்
உற்றார்கள் எனக்கு இங்கு எல்லாரும் என்னும்
உற்றார்களைச் செய்வேனும் யானே என்னும்
உற்றார்களை யழிப்பேனும் யானே என்னும்
உற்றார்களுக்கு உற்றேனும் யானே என்னும்
உற்றாரிலி மாயன் வந்து ஏறக் கொலோ
உற்றீர்கட்கு என் சொல்லிச் சொல்லுகேன் யான்
உற்றென்னுடைப் பேதை வுரைக்கின்றவே –5-6-7-

உற்றார்கள் எனக்கு இல்லை யாரும்
சமோஹம் சர்வ பூதேஷு ந மே த்வேஷ்யோஸ்தி ந ப்ரிய-சர்வ சாதாரணன்
சம்பந்தம் அறிந்து நேசிப்பார் இல்லை -அத்யந்த யுகத ஞானி துர்லபம் –
உற்றார்கள் எனக்கு இங்கு எல்லாரும் என்னும்
கீழே இல்லை என்றது அவர்கள் கருத்தாலே இங்கு எம்பெருமான் கருத்தாலே
இராமடம் ஊட்டுவாரைப் போலே உள்ளே பத்தி கிடந்தது
சத்தையைப் பிடித்து நோக்கிக் கொண்டு போரும் -என்றும்
கண் காண நிற்கில் ஆணை இட்டு விலக்குவார்கள் என்று
கண்ணுக்கு தோற்றாதபடி நின்று
சத்தையை நோக்கி உடன்கேடாய் -போருமே
உற்றார்களை யழிப்பேனும் யானே -அல்ப பலன் கேட்பாருக்கு கொடுத்து அகற்றுவதும் நானே
முதலி ஆண்டான் -பணிக்கும்
சௌந்தர்யத்தில் ஈடுபடுத்து -நினைத்து நைந்து கரைந்து உருகி அழிக்கும்
உற்றார்களுக்கு உற்றேனும் யானே என்னும் -அநந்ய பிரயோஜனர்களுக்கு எல்லா உறவும் நானே
உற்றார்களைச் செய்வேனும் யானே-மடி மாங்காய் இட்டு அபிமுகர்கலாம்படி பண்ணி
உற்றார்களுக்கு உற்றேனும் யானே-எல்லாருமாக பற்றுவாரை நானும் எல்லாருமாக பற்றுவேன்

—————————————————————————————————————————————————————————————————————

உரைக்கின்ற முக்கட்பிரான் யானே என்னும்
உரைக்கின்ற திசைமுகன் யானே என்னும்
உரைக்கின்ற வமரரும் யானே என்னும்
உரைக்கின்ற வமரர் கோன் யானே என்னும்
உரைக்கின்ற முனிவரும் யானே என்னும்
உரைக்கின்ற முகில் வண்ணன் ஏறக் கொலோ
உரைக்கின்ற வுலகத்தீர்க்கு என் சொல்லுகேன்
உரைக்கின்ற வென் கோமள வொண் கொடிக்கே –5-6-8

அத்வைத வாதம் பண்ண வில்லை
அனைவரையும் நிர்வஹிப்பவன் யானே என்கிறாள்
உரைக்கின்ற முகில் வண்ணன்–வார்த்தை சொல்லுவதொரு மேகம் போன்றவன்
உரைக்கின்ற மேகத்துக்கும் விசேஷணம் ஆக்கலாம்

—————————————————————————————————————————————————————————————————————

கொடியவினை யாதுமிலனே என்னும்
கொடிய வினை யாவேனும் யானே என்னும்
கொடிய வினை செய்வேனும் யானே என்னும்
கொடிய வினை தீர்ப்பேனும் யானே என்னும்
கொடியான் இலங்கை செற்றேனே என்னும்
கொடிய புள்ளுடையவன் ஏறக் கொலோ
கொடிய வுலகத்தீர்க்கு இவை என் சொல்லுகேன்
கொடியேன் கொடி என் மகள் கோலங்களே –5-6-9-

தோஷம் தட்டாதவன்
ஆவி சேர் உயிரின் உள்ளால் ஆதுமோர் பற்றிலாத பாவனை அதனில் கூடல் அவனையும் கூடலாமே
ஜீவாத்மாவுக்கு சரீர விபாகங்கள் வந்தது இல்லை யாகிலும்
சரீர சம்பந்த நிபந்தனமாக துக்க அஜஞாநாதிகள் வருகிறவோபாதி
சரீர பூதமான இவற்றோடு சம்பந்தத்தாலே இவனுக்கும் இங்கனே தோஷங்கள் வாராதோ என்னில் வாராது
அதுக்கடி பிரவேச ஹேது விஷயம்
இவனைப் போலே கர்மம் அடியாக அன்றிக்கே
அனுக்ரஹம் அடியாக இ றே
அவனுக்கு இவற்றில் பிரவேசம் இருப்பது -மணவாள மா முனிகள் தத்வ த்ரய வியாக்யானம்
கர்மங்கள் யாவும் அவன் இட்ட வழக்கு -கொடிய வினை ஆவேனும் யானே
ஆஸ்ரிதர்களுக்கு கொடிய வினை தீர்த்தல் விரோதிகளுக்கு கொடிய வினை செய்தல்
இலங்கை செற்றேனே -தலைமகள் சொல்லையும்
கொடியோன் -சேர்த்து திருத் தாயார் வார்த்தை என்பர் நஞ்சீயர்
எம்பெருமான் வார்த்தை -அல்பனான இராவணனை கொடியோன் என்ன மாட்டான் இ றே
கோலம் -அழகிய தன்மை
கோலுதல் முயற்சி

——————————————————————————————————————————————————————————————————————–

கோலங்கொள் சுவர்க்கமும் யானே என்னும்
கோலமில் நரகமும் யானே என்னும்
கோலம் திகழ் மோக்கமும் யானே என்னும்
கோலங்கொள் உயிர்களும் யானே என்னும்
கோலங்கொள் தனி முதல் யானே என்னும்
கோலங்கொள் முகில் வண்ணன் ஏறக் கொலோ
கோலங்கொள் உலகத்தீர்க்கு என் சொல்லுகேன்
கோலம் திகழ் கோதை என் கூந்தலுக்கே -5-6-10-

உலகத்தார் உடைய கருத்தால் கோலங்கொள் சுவர்க்கம் என்கிறாள்
அறத்தின் வழி முயன்ற அன்னவர் தம் கண்டீர்கள் ஆயிரக் கண் வானவர் கோன் -பெரிய திருமொழி
அனைத்தும் எம்பெருமான் இட்ட வழக்கு
கோலங்கொள் தனி முதல் -மூலப் பிரகிருதி /சங்கல்ப ரூபஞானம் -என்னவுமாம்

—————————————————————————————————————————————————————————-

கூந்தல் மலர் மங்கைக்கும் மண் மடந்தைக்கும்
குலவாயர் கொழுந்துக்கும் கேள்வன் தன்னை
வாய்ந்த வழுதி வள நாடன் மன்னு குருகூர்ச்
சடபோபன் குற்றேவல் செய்து
ஆய்ந்த தமிழ் மாலை ஆயிரத்துள்
இவையுமோர் பத்தும் வல்லார் உலகில்
ஏந்து பெரும் செல்வத்தராய்த்
திருமால் அடியார்களைப் பூசிக்க நோற்றார்களே –5-6-11-

ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு அடிமை செய்யப் பெறுவார்கள்
ஜன்மாந்தர சஹச்ர ஸூ க்ருதம் பயனாக பெற வேண்டியதை இத் திருவாய் மொழி வல்லார் பெறுவார்
பிராட்டி உபதேசத்தால் எம்பெருமானையும் செதனர்களையும் திருத்தப் பார்ப்பாள்
உபதேசத்தால் முடியாத போலே அவனை அழகாலே திருத்தும்
இவர்களை அருளாலே திருத்தும்
அழகாலே ஈஸ்வரனைத் திருத்தும் போதைக்கு முதல் சாமக்ரி கூந்தல்
நப்பின்னைபிராட்டி -குலவாயர் கொழுந்து

———————————————————————————————————————————————————————————–

த்ரமிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி –

அஹம் புத்தி போத்ய அன்வபாவி -யானே யானே என்ற அநு கார முகத்தாலே
5-6-1-ஜகத்யா ஸ்ரஷ்டருத்வாத்யை -கடல் ஞாலம் செய்தேனும்
5-6-2-சகல வித கலா வர்த்தகத்வேன-கற்கும் கல்விக்கு
5-6-3-பூத அந்தர்யாமித்வேன–காண்கின்ற நிலம் எல்லாம்
5-6-4-க்ருத் யுத்தரண பரதயா-செய்கின்ற கிதி
5-6-5-பூ பார பாக்ரு தேச்ச – திறம்பாமல் மண் காக்கின்றேன் –
5-6-6-சைலேந்தர உத்தாரணாத்யை-இன வேய் மலை ஏந்தினேன்
5-6-7-ஸ்வ ஜன ஹித தயா -உற்றார்கள் எனக்கு
5-6-8-பிரம்மா ருத்ர இந்திர பாலாத் -உரைக்கின்ற முக்கட்பிரான்
5-6-9/10/11–துஷ்கர்ம உன்மூல நாத்யை-கொடிய வினை-கொடிய வினைகளை களைதல் -ஆத்ய சப்தத்தால் –கோலங்கொள் -இத்யாதி

———————————————————————————————————————————————————————————————

கடல் ஞாலத்து ஈசனை முன் காணாமல் நொந்தே
உடனா வனுகரிக்க லுற்றுத் திடமாக
வாய்ந்தவனாய்த் தான் பேசும் மாறனுரை யதனை
ஆய்ந்துரைப்பார் ஆட்செய நோற்றார் –46

ஆட்செய்ய பாடத்தில் தளை பிறழும் ஆட்செய சரியான பாடம்

———————————————————————————————————————————————————————————————–

ஸ்ரீ P.B.A,ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருவாய் மொழி – திவ்யார்த்த தீபிகை-எங்கனேயோ வன்னைமீர்காள்–5-5-

October 29, 2014

கீழ் திருவாய் மொழியில் ஆழ்வார் இருளுக்கும் பனிக்கும் வருந்தின படி சொல்லிற்று
இருள் தரும் மா ஞாலத்தில் தமோ குணம் மேலிட்டதை சொன்னதாகும் ஸ்வாபதேசத்தில்
தமோ குணம் கழிந்து சத்வ குணம் தலை எடுப்பு காணத் தொடங்கிற்று -பகல் காண்கிறது போலே
அத்தால் நெஞ்சு தரிப்புற்று
திருக்குறுங்குடி எம்பெருமான் உடைய
வடிவு அழகையும்
திவ்யாயூத
திவ்ய ஆபரண
சேர்த்தி அழகையும்
வாய் வெருவும்படி யாயிற்று
உரு வெளிப்பாடு -மானஸ சாஷாத்காரம்
பிராட்டி நிலையில் -திருக்குறுங்குடி நம்பியின் வடிவு அழகில் நெஞ்சு பறியுண்டு கிடக்கும் என்னை
அடக்கப் பார்ப்பது முறை அல்ல -என்கிறாள் –

————————————————————————————————————————————————————————————

எங்கனேயோ வன்னைமீர்காள் என்னை முனிவது நீர்
நாங்கள் கோலத் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்டபின்
சங்கினோடும் நேமியோடும் தாமரைக் கண்களோடும்
செங்கனி வாய் ஒன்றினோடும் செல்கின்றது என்னெஞ்சமே –5-5-1-

வைஷ்ணவ வாமனத்தில்
நிறைந்த நீல மேனியின்
ருசி ஜனக விபவ லாவண்யம் பூர்ணம் -நாயனார்
வாமன அவதாரத்தில் தன்னுடைமை பெறுவதற்கு அர்த்தியானால் போலே
அர்த்தியாய் நின்று பாஷ்யகாரர் பக்கலிலே
வேதாந்தார்தம் கேட்டு சிஷ்யனாய்
நாமும் நம் ராமானுசனை யுடையோம் என்கையாலே
ஸ்ரீ வைஷ்ணவ நம்பி என்ற திருநாமமாய் வாமனாவாதார அம்சமாக புராண சித்தராய் இருக்கும் நம்பி உடைய திருப்பது
அன்றிக்கே
அறியக் கற்று வல்லார் வைட்டணவர்-என்கிறபடியே வைஷ்ணவர்கள் உடைய வாமன ஷேத்ரமாய்
]இருக்கிற தேசத்தில் என்னவுமாம் – -மணவாள மா முனிகள்
நம் ஆழ்வார் உடைய திருவவதாரத்துக்கு காரணமாய் இருந்தவரும் இந்த நம்பியே
நேமி –திருச் சக்கரத்தின் உறுப்பு -லஷணையால் திருச் சக்கரத் ஆழ்வானுக்கு வாசகம்

—————————————————————————————————————————————————————————————

என் நெஞ்சினால் நோக்கிக் காணீர் என்னை முனியாதே
தென்னன் சோலைத் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்ட பின்
மின்னு நூலும் குண்டலமும் மார்வில் திரு மறுவும்
மன்னு பூணும் நான்கு தோளும் வந்து எங்கும் நின்றிடுமே -5-5-2-

என் நெஞ்சை இரவலாகக் கொண்டு சேவித்தீர்கள் ஆகில் என்னை முனிய மாட்டீர்கள்
மேகத்தில் மின்னினால் போல யஞ்ஞோபவீதமும்
பரந்த மின் ஓர் இடத்தில் சுழித்தால் போலே இருக்கிற மகர குண்டலமும்
வெறும் புறத்தில் ஆலத்தி வழிக்க வேண்டும்படி இருக்கிற திரு மார்பிலே கிடக்கிற ஸ்ரீ வத்சமும்
திரு ஆபரணங்களும்
திருத் தோள்களும் என்னை வந்து நெருக்கா நின்றன
தென்னன் சோலை
தென் நன் சோலை தெற்குத் திக்கில் நல்ல சோலை
தென்னன் பாண்டியன் பெயர் என்னவுமாம் –

—————————————————————————————————————————————————————————————

நின்றிடும் திசைக்கும் நையும் என்று அன்னையரும் முனிதிர்
குன்ற மாடத் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்ட பின்
வென்றி வில்லும் தண்டும் வாளும் சக்கரமும் சங்கமும்
நின்று தோன்றிக் கண்ணுள் நீங்கா நெஞ்சுள்ளும் நீங்காவே –5-5-3-

வ்ருஷே வ்ருஷே ச பச்யாமி சீரக்ருஷ்ணா ஜி நாம்பரம் -மாரீசன் நிலை போலே
எம்பெருமான் உடைய பஞ்சாயுதன்கள் சூழ்ந்து
ஸ்தம்பித்து அறிவு இழந்து நைந்து உள்ளேன்

—————————————————————————————————————————————————————————————-

நீங்க நில்லா கண்ணநீர்கள் என்று அன்னையரும் முனிதிர்
தேன் கொள் சோலைத் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்ட பின்
பூந்தண் மாலைத் தண் துழாயும் பொன் முடியும் வடிவும்
பாங்கு தோன்றும் பட்டும் நாணும் பாவியேன் பக்கத்தவே –5-5-4-

ஆஹ்லாத சீத நேத்ராம்பு பூலகீக்ருக காத்ரவான் சதா பரகுணவிஷ்ட த்ரஷ்டவ்யஸ் சர்வதே ஹிபி
சோலைகளில் தேன் வெள்ளம் மாறினாலும் கண்ணநீர் வெள்ளம் மாறாதே
உபயவிபூதி நாதத்வம் தோன்ற செவ்வித் திருத் துழாய் மாலை -திரு அபிஷேகம்
ஏற்ற திவ்ய மங்கள விக்ரஹம்
திருவரை பூத்தால் போலே பாங்கான திருப் பீதாம்பரம்
அதன் மேல் ஆபரணம் விடு நாணும்
என்னருகே நின்று பிரகாசியா நின்றன
உருவெளிப்பாட்டால் ஆனந்தகண்ணீர்
அனுபவிக்கக் கிடையாமல் சோகக் கண்ணீர் -பாவியேன் -என்கிறார்

—————————————————————————————————————————————————————————————–

பக்கம் நோக்கி நிற்கும் நையும் என்று அன்னையரும் முனிதர்
தக்க கீர்த்தித் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்ட பின்
தொக்க சோதித் தொண்டை வாயும் நீண்ட புருவங்களும்
தக்க தாமரைக் கண்ணும் பாவியேன் ஆவியின் மேலனவே -5-5-5-

அவன் எழுந்து அருள சம்பாவனை உள்ள பங்கங்கள் எல்லாம் நோக்கும்
வரக் காணாமையாலே நையும்
சொன்ன சொன்னது எல்லாம் தரும்டியான கீர்த்தி உடைய நம்பி
அழகே திரண்டு வடிவு கொண்டால் போலே திரு அதரம்
தன கை சார்ங்கம் அதுவே போலே அழகிய நீண்ட திருப்புருவங்கள்
தகுதியாய் திகழும் திருக் கண்களும்
தோல் புரையே போகை அன்றிக்கே உயிர் நிலையிலே நின்று நலியா நின்றன
தாய்மார் கிருஷி பலித்ததே என்று உகக்க வேண்டி இருக்க முனிவதா

——————————————————————————————————————————————————————————–

மேலும் வன்பழி நம் குடிக்கு இவள் என்று அன்னை காண கொடாள்
சோலை சூழ் தண் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்ட பின்
கோல நீள் கொடி மூக்கும் தாமரைக் கண்ணும் கனிவாயும்
நீல மேனியும் நான்கு தோளும் என் நெஞ்சம் நிறைந்தனவே –5-5-6-

மேலும் வன்பழி -காலம் உள்ளதனையும் பெருத்த பழியாய் இருப்பவள்
திருக்குறுங்குடி நம்பியை காண ஒட்டாமல் இருப்பதே கருமம் என்று இருக்க
தண்ணீர் பெருகிச் சென்றபின் அணை கட்டுவார் போலே

————————————————————————————————————————————————————————————

நிறைந்த வன்பழி நம் குடிக்கு இவள் என்று அன்னை காணக் கொடாள்
சிறந்த கீர்த்தித் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்ட பின்
நிறைந்த சோதி வெள்ளம் சூழ்ந்த நீண்ட பொன் மேனியோடும்
நிறைந்து என்னுள்ளே நின்று ஒழிந்தான் நேமி யங்கை யுளதே –5-5-7-

மனக்குற்ற மாந்தர் பழிக்கில் புகழ் -பழியையே பரம போக்யமாக கொண்டாள்
பழியே விளை நீராக –ஊரவர் கவ்வை எரு இட்டு அன்னை சொல் நீர் படுத்து –பேரமர் காதல் –

சூழ்ச்சி அகற்றினீர் என்னும் பழி
இணக்கி எங்கனே என்னும் மேல் எழுத்து
முன்னின்றாயிவளை
நீரென்னும் இருபடை மெய்க்காட்டு
நீர் என்னே என்னும் உடன்பாடு
இடையில்லை என்னும் முதறுதல்
இருந்து இருந்து நடந்தாள் என்னும் கொண்டாட்டம்
அவஸ்தா த்ரய வ்ருத்தி–நாயனார்

உபாய அத்யாவசயா தசையில் -அதிபிரவ்ருத்திகள் பழியாய் தோற்றும்
பிராப்ய ருசி தசையில் அதிபிரவ்ருத்திகள் அவர்ஜநீயம் ஆகையாலே உத்தேச்யமாய் இருக்கும் –

————————————————————————————————————————————————————————————-

கையுள் நன்முகம் வைக்கும் நையும் என்று அன்னையரும் முனிதிர்
மைகொள் மாடத் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்ட பின்
செய்ய தாமரைக் கண்ணும் அல்குலும் சிற்றிடையும் வடிவும்
மொய்ய நீள் குழல் தாழ்ந்த தோள்களும் பாவியேன் முன் நிற்குமே -5-5-8-

செந்தாமரைக் கண்ணும்
அன்நோக்குக்கு தோற்றவர்கள் இளைப்பாறும் அல்குலும்
கீழும் மேலும் கண்டு அனுமானானத்தால் அறிய வேண்டும்படியான இடையையும்
இவற்றுக்கு ஆச்ரயமான வடிவும்
களி வண்டு எங்கும் கலந்தால் போலே
கமழ் பூங்குழல்கள் தடம் தோள் மேல் மிளிர நின்ற -என்றபடியே திருக் குழல்கள் அலைய நின்ற திருத் தோள்களும்
முன்னே தோன்றா நின்றனவே
அணைக்குமாறு கைக்கு எட்டாமையாலே
முகத்தை கையிலே வைத்துக் கொண்டு சிந்தை கலங்கி நைந்து இருக்க
மைகொள் மாடம்
உள்ளே உள்ள எம்பெருமான் நிழலீட்டாலே கருமை பூண்ட மாடங்கள் உள்ள திவ்ய தேசம் –

——————————————————————————————————————————————————————————————–

முன் நின்றாய் என்று தோழிமார்களும் அன்னையரும் முனிதிர்
மன்னி மாடத் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்டபின்
சென்னி நீண் முடி யாதியாய உலப்பில் அணி கலத்தன்
கன்னல் பாலமுதாகி வந்து என் நெஞ்சம் கழியானே -5-5-9-

நாணம் இல்லாமல் பலரும் காண முன் நின்றாய்
செங்கமலக் கழலில் சிற்றிதழ் போல் விரலில் சேர் திகழா ஆழிகளும் கிண்கிணியும்
அரையில் தங்கிய பொன்வடமும் தாள நன் மாதுளையின் பூவோடு பொன்மணியும்
மோதிரமும் கிறியும் மங்கல வைம்படையும் தோள் வளையும் குழையும்
மகரமும் வாளிகளும் சுட்டியும் -எண்ணும்படியான திவ்ய ஆபரணங்கள்
நெஞ்சை ஆக்கிரமித்து இருக்க வெட்கம் நாணம் காத்து இருக்க ஒண்ணாதே

—————————————————————————————————————————————————————————————————

கழிய மிக்கதோர் காதல் இவள் என்று அன்னை காண கொடாள்
வழுவில் கீர்த்தித் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்ட பின்
குழுமித் தேவர் குழாங்கள் கை தொழச் சோதி வெள்ளத்தின் உள்ளே
எழுவதோர் உரு என்நெஞ்சுள் எழும் ஆர்க்கும் அறிவரிதே –5-5-10-

நாள் செல்ல செல்ல ச்நேஹம் உலகில் அபிமத விஷயத்தில் குறைய காண்கிறோம்
இவளுக்கோ மென்மேலும் காதல் பிரிந்த விஷயத்தில் பெருகி மையல் ஏறுகின்றாள்
குறைவற்ற கீர்த்தி உடைய நம்பி இடம் ஈடுபட்டு
நித்ய இந்த்ரிய அபதாதிகம் மகோ யோகிநாம் அபி ஸூ துரகம் திய
அபய நுச்ரவ சிரஸ் ஸூ துர்க்ரஹம் -என்னுமா போலே
யாருக்கும் நிலம் அல்லாத
தேஜோராசிமயமான தோர் திருவுரு என் நெஞ்சுள்ளே திகழா நின்றதே

————————————————————————————————————————————————————————————–

அறிவரிய பிரானை ஆழியங்கையனை யேயலற்றி
நறிய நன்மலர் நாடி நன் குருகூர்ச் சடகோபன் சொன்ன
குறிகொள் யாயிரத்துள் இவைபத்தும் திருக்குறுங்குடி யதன்மேல்
அறியக் கற்று வல்லார் வைட்டணவர் ஆழ் கடல் ஞாலத்துள்ளே –5-5-11-

குறிகொள் -இவை பத்தும்
எம்பெருமான் உடைய திவ்ய அவயவ -திவ்ய ஆயுத -திவ்ய ஆபரண -லாஞ்சனங்களை உடைய இத் திருவாய்மொழியை –
ஸ்ரீ வைஷ்ணவ சார்வ பௌமர்களாய் வீறு பெற்று விளங்குவர் –

நறிய நன்மலர் நாடி-
க்யாதி லாபா பூஜை அற
மலர் நாடி ஆட்செய்ய உய்யக் கொண்டு
ஆரைக் கொண்டு வாளும் வில்லும் கொண்டும்
என்கிற இழவுகள் தீரப் பெற்றது -நாயனார்

நறிய நன்மலர் நாடி என்கிறபடியே
சேஷத்வ பரிமள யுக்தமாய்
ஸ்லாக்யமான ஆத்மபுஷ்பங்களைத் தேடி -என்றும்
சர்வ வ்யாக்யானங்களிலும் பரிமளத்தை உடைத்தாய்
ஸ்லாக்யமான புஷ்பங்களைப் போலே
ஆராய்ந்து சொன்ன ஆயிரம் என்று
பிரபந்த விசேஷணமாய் சொல்லி இருக்கையாலே
இவர்க்கு நினைவு ஆத்மபுஷ்பங்களை தேடி என்கிற
இது என்று கொள்ள வேணும் -மணவாள மா முனிகள்

அறியக்கற்று வல்லார்
ஏடு பார்த்து கற்கை அன்றிக்கே ஆச்சார்யா உச்சாரண அநு உச்சாரண முகேனஅத்யயனம் பண்ணி
உபதேச முகத்தால் அர்த்த ஞானம் பிறந்து
அதற்கு ஏற்றவாறு அனுஷ்டிக்க வல்லார் ஆனால் ஸ்ரீ வைஷ்ணவ சித்தி உண்டாகும்
அதிசய உக்தி -திருவாய் மொழி ஆயிரமும் கற்க வேணும்
சந்தங்கள் ஆயிரமும் அறியக் கற்று வல்லார் ஆனால் வைஷ்ணவத்வ சித்தி -நாயனார்

ஆழ் கடல் ஞாலத்துள்ளே வைட்டணவர்
மரு பூமியான சம்சாரத்தில் இருக்கச் செய்தே
நித்ய சூரிகளோடே ஒக்க சொல்லலாம்படி ஆவார்கள்
உகந்து அருளின நிலங்களில் வாசி அறியுமவர்கள் -ஈடு –

—————————————————————————————————————————————————————————————————-

த்ரமிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி –

5-5-1-சங்கா த்யை-சங்கினோடும் நேமியோடும்
5-5-2-யஜ்ஞ ஸூ த்ராதி பிரபிச -மின்னு நூலும் குண்டலமும்
5-5-3-சாரங்க முக்யை-வென்றி வில்லும் தண்டும் வாளும்
5-5-4-துலச்யா -பூந்தண் மாலைத் தண் துழாயும்
5-5-5-பிம்போஷ்டாத்யை–தொக்க சோதிதி தொண்டை வாயும்
5-5-6-ஸூ நாஸா வ்ரததி-கோல நீள் கொடி மூக்கும்
5-5-7-நிரவதி ஜ்யோதி ரூர்ஜச்வி மூர்த்யா -நிறைந்த சோதி வெள்ளம் சூழ்ந்த நீண்ட பொன் மேனியோடும்
5-5-8-நேத்ராப் ஜாத்யை-செய்ய தாமரைக் கண்ணும் அல்குலும்
5-5-9-அசேஷ ஆபரண ஸூ ஷமயா-சென்னி நீண் முடி யாதியாய உலப்பில் அணி கலத்தனன்
5-5-10-ச்வை பக்தை மனோஜ்ஞ-குழுமித் தேவர் குழாங்கள் கை தொழ
தேவ -திருக்குறுங்குடி நம்பி
ஸ்வா நாம் -தம் அடியார்களுக்கு
அஜஸ்ரம்- இடைவிடாமல்
ஸ்ம்ருதி விஷயதயா பாதி -மறக்க ஒண்ணாமல் உரு வெளிப்பாட்டால் திகழ்கிறார்
இதி அப்யதாயி -என்று அருளிச் செய்யப்பட்டது –

——————————————————————————————————————————————————————————————————-

எங்கனே நீர் முனிவது என்னையினி நம்பி யழகு
இங்கனே தோன்றுகின்றது என் முன்னே -அங்கன்
உரு வெளிப்பாடா வுரைத்த தமிழ் மாறன்
கருதுமவர்க்கு இன்பக் கடல் –45

இத் திருவாய் மொழியால் ஆழ்வாருக்கு இன்பமும் துன்பமும் கலந்து உண்டாயிற்று
ஆழ்வாரை சிந்திப்பார்களுக்கோ என்னில்
ஒருநாளும் துன்பம் உண்டாகப் பிரசக்தி இல்லை
பேரின்பக் கடலில் அழுந்துவார்கள் –

—————————————————————————————————————————————————————————————————–

ஸ்ரீ P.B.A,ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருவாய் மொழி – திவ்யார்த்த தீபிகை–ஊரெல்லாம் துஞ்சி-5-4-

October 29, 2014

கீழ்த் திருவாய் மொழியில் மடலூர ஒருப்பட்டாள்
அவகாசம் இல்லாதபடிகங்குல் இருள் வந்து புகுந்தது
ஆழியால் அன்று அங்கு ஆழியை மறைத்தான் -ஆழி கொண்டு இரவி மறைப்ப -என்றும் இங்கும் செய்தான் போலும்
அது தான் அந்தியம்போது இல்லாமல் சராசரங்களும் நடுங்கும்படி நடு நிசியாய் இருந்தது
பழி சொல்லுவார்
ஹிதம் சொல்லுவார்
வாசி அற எல்லாரும் உறங்கி உசாத் துணை அற்று இருந்தது
இவ்வளவிலே எம்பெருமான் உடைய திருக் கல்யாண குணங்களை அனுசந்தித்தார்
இவ்வனுசந்தானம் விஸ்லேஷ தசையில்லாதலால் ஆற்றாமைக்கு உறுப்பாயிற்று
அந்த அவசாதம் எல்லாம் நாயகி சமாதியால் கீழ்த் திருவாய் மொழி போலே அருளிச் செய்கிறார்

———————————————————————————————————————————————————————————————-

ஊரெல்லாம் துஞ்சி உலகெல்லாம் நள்ளிருளாய்
நீரெல்லாம் தேறி ஓர் நீளிரவாய் நீண்டதால்
பாரெல்லாம் உண்ட நம் பாம்பணையான் வாரானால்
ஆரெல்லே வல்வினையேன் ஆவி காப்பாரினியே –5-4-1-

நீரெல்லாம் தேறி-அலை யடங்க தெளிந்து
எருஇட அவகாசம் இல்லாமல் ஊரெல்லாம் துஞ்ச
திருவடி புகும் பொழுது ராஷசிகள் துஞ்சினால் போலே
இவள் பிறந்தவூர் ஆகையால் இவள் ஆற்றாமை கண்டு கோரை சாய்ந்தால் போலே துஞ்சிற்று
நாகபாசம் பொழுது ஜாம்பவான் திருவடி சிலர் உணர்ந்து இருந்தால் போலே இங்கே யாரும் இலையே
உலகமும் அப்படியே ஆயிற்றே
காள ராத்ரியாய் -தேவர்கள் இரவையும் விஞ்சி நீண்டு இரா நின்றதே
பிரளய ஆபத்தில் வந்து ரஷித்தவனும் வர வில்லையே
தரிக்கும் வகை என்னோ –

————————————————————————————————————————————————————————————-

ஆவிகாப்பார் இனியார் ஆழ் கடல் மண் விண் மூடி
மா விகாரமாய் ஓர் வல்லிரவாய் நீண்டதால்
காவி சேர் வண்ணன் என் கண்ணனும் வாரானால்
பாவியேன் நெஞ்சமே நீயும் பாங்கல்லையே –5-4-2-

குரவை கோத்த பொழுது சாதிமிக்கைக்காக மறைந்து பின்பு
தாஸாம் ஆவிரபூத் சௌரி ஸ்மயமா நமுகாம்புஜே
பீதாம்பரதர ஸ்ரக்வீ சாஷான் மன்மத மன்மத -முகம் காட்டுவான் என்று இருந்தாள் -வரவில்லையே
ஆவிகாப்பார் இனியார் –
குளிர் அருவி வேங்கடத்து என் கோவிந்தன் குணம் பாடி
அளியத்த மேகங்காள் ஆவி காத்து இருப்பேனே -உசாத் துணை இல்லையே -அதுக்கும் வழி இல்லை
காக்கும் இயல்வினன் கண்ணபிரான் -அவனும் உபேஷிக்க-இனி ஆவி காப்பது எங்கனே –

மா விகாரமாய்-பின்னையும் அவ்வளவில் பர்யவசிப்பதாய் இருக்கிறது இல்லை
மகா விகாரத்தை உடையதாய்
நித்ய விபூதியையும் கணிசிக்கிறாப் போலே இரா நின்றது
விஸ்வ ரூபம் காட்டின சர்வ சக்தி செய்தது எல்லாம்
செய்யா நின்றதே -ஈடு

ஓர் வல்லிரவாய் நீண்டதால்-இருளுக்கும் இரவுக்கும் வாசி இல்லாமல் -பர்யாயம் போலும் இரண்டும்
காவி சேர் வண்ணன் என் கண்ணனும் வாரானால் -வடிவு அழகைக் காட்டினால் போதுமே
வடமதுரையில் வந்து தோன்றி மறைந்தால் போல் மறைந்தாலும் ஆகிலுமாம்
என் நெஞ்சினாரும் அங்கு ஒழிந்தார்-அத்தலையைப் பற்றி இத்தலையை வெறுத்து ஒழித்ததே –

——————————————————————————————————————————————————————————————-

நீயும் பாங்கல்லை காண் நெஞ்சமே நீளிரவும்
ஓயும் பொழுதின்றி ஊழி யாய் நீண்டதால்
காயும் கடுஞ்சிலை என் காகுத்தன் வாரானால்
மாயும் வகை யறியேன் – –5-4-3-

மாயா சிரஸ் காட்டிய பொழுது சாரங்க நாண் ஒலி கேட்டு தரித்தாள்
சாரங்க வில் நாண் ஒலியும் தலைப்பெய்வது எஞ்ஞான்று கொலோ –
விஷச்ய தாதா ந ஹி மேஸ்தி கச்சித் ஷத்ரச்ய வா வேச்ம நி ராஷச்ய -என்றால் போலே மாயும் வகை அறியேன் என்கிறாள்

வல்வினையேன் பெண் பிறந்தே-
பிறர்க்காக ஜீவிக்க வேண்டும்
பரதந்திர ஜன்மத்தில் பிறக்கைக்கு ஈடான
மகா பாபத்தை பண்ணினேன் -ஈடு

————————————————————————————————————————————————————————————————-

பெண் பிறந்தார் எய்தும் பெரும் துயர் காண்கிலேன் என்று
ஒண் சுடரோன் வாராது ஒளித்தான் இம்
மண்ணளந்த கண் பெரிய செவ்வாய் எம் காரேறு வாரானால்
எண் பெரிய சிந்தை நோய் தீர்ப்பாரார் என்னையே –5-4-4-

எண் பெரிய -நினைக்கவும் முடியாத
தன் தோற்றரவிலே சகல கிலேசமும் போம்படியான
பிரகாசத்தை உடையவனும் வாராதே மறைந்தான்
வந்திலன்-என்னாதே – ஒளித்தான் என்கிறது
பகவத் ஆஞ்ஞையாலே முப்பது வட்டம் வர வேணுமே
இங்கனே இருக்கிறவன் -ஈஸ்வர ஆஞ்ஞை மறுத்தால் வேணுமாகில்
தலையை அறுத்து வைக்கும் இத்தனை அன்றோ
இக்கொடுமை எண் கண்ணால் காணப் போகாது -என்று
ஈச்வரபடர் தேடி வந்தாலும் காணாதபடி ஒளித்தான் -ஈடு

இனி என் சிந்தை நோய் அனுபவித்தே கழிக்கும் அத்தனை

——————————————————————————————————————————————————————————————————

ஆரென்னை யாராய்வார் அன்னையரும் தோழியரும்
நீரேன்னே யென்னாதே நீளிரவும் துஞ்சுவரால்
காரன்ன மேனி நம் கண்ணனும் வாரானால்
பேரேன்னை மாயாதால் வல்வினையேன் பின் நின்றே –5-4-5-

நீரேன்னே யென்னாதே-இப்படியும் ஒரு நீர்மை உண்டாவதே என்று என் திறத்தில் இரங்காமல்
உதவக் கடவனான கண்ணனும் வாரானால்
என்பெயரே மிக்கு இருக்கிறது
உலகை எல்லாம் ஆராயப் பிறந்த ஆழ்வார் -ஆரென்னை யாராய்வார் -என்று
சொல்லிக் கொள்ளும்படியான வி லஷணமான நோய்

நீர் துஞ்சுவர் படர்க்கை துஞ்சுதிர் முன்னிலை பொருளில்
துஞ்சுவர் என்னுமிது துஞ்சுதிரால் என்னும் அர்த்தம்
பெற்றுக் கிடக்கிறது என்று சொல்வாரும் உண்டு -ஈடு
அங்கனம் அன்றிக்கே
துஞ்சுவர் படர்க்கை பொருளில் கொண்டு
நீர் -நீர்மை -இது என்ன ஸ்வ பாவம் என்று ஈடுபட்டு பேசாமல் என்றபடி
நீர் -ஸ்வ பாவம் பொருளில் திருக்குறள்
நிறை நீர நீரவர் கேண்மை பிறை மதிப் பின்னீர பேதையார் நட்பு –
நீரவர் -நல்ல ஸ்வ பாவம் உடையவர்களினது
கேண்மை -நட்பானது
பிறை -சுக்ல பஷத்து சந்திர கலை போலே
நிறை நீர -நாள் தோறும் நிறைந்து வளர்ந்து செல்லும் தன்மைத்து
பேதையர் நட்பு -மூடர்களின் சினேகமானது
மதி -கிருஷ்ண பஷத்து சந்த்ரகளை போலே
பின்னீர -நாள் தோறும் குறையும் தன்மைத்து –

பேரேன்னை மாயாதால் வல்வினையேன் பின் நின்றே-
ஆழ்வார் உடைய திரு நாமம்
ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு சத்தா ஹேதுவானால் போலே
இவர் தமக்கும் சத்தா ஹேதுவானபடி
அடியுடைய பேராகையாலே
சர்வர்க்கும் தாரகமாய் இருக்கும் இ றே
இதனுடைய அடி யுடைமை இ றே
எல்லாரும் சிரஸா வஹிக்கிறது -ஈடு-

வல்வினையேன் பின் நின்று -என்பதை ஆர் என்னை ஆராய்வார் என்பதுடன் கூட்டி
எனக்குத் துணை நின்று ஆராய்வார் ஆர் -என்பர் பன்னீராயிரப்படி-

————————————————————————————————————————————————————————————————————–

பின்நின்ற காதல் நோய் நெஞ்சம் பெரிதடுமால்
முன் நின்று இரா ஊழிக் கண் புதைய மூடிற்றால்
மன் நின்ற சக்கரத்து எம் மாயவனும் வாரானால்
இந்நின்ற நீளாவி காப்பாரார் இவ்விடத்தே -5-4-6-

முடிந்த பின்னும் செல்லுகிற விஸ்லேஷ வ்யசனம் ஒன்றும் போருக்கலாய் இருக்கிறது இல்லை -ஆராயிரப்படி
பின்நின்றகாதல் -மரணம் அடைந்த பின்பும் நிற்கின்ற காதல் நோய்
மண்டிணி ஞாலமும் ஏழ் கடலும் நீள் விசும்பும் கழியப் பெரிதால்
அதனில் பெரிய அவா
இங்கு எங்கு போனாலும் புக்க இடம் புக்கு பின்னே திரிந்து நலிகின்ற பிரேம வியாதி
நெஞ்சு பெரிதும் அடும் -கட்டமே காதல் என்று மூர்ச்சிக்கும்
காதலும் இரவும் கூட்டு சேர்ந்து நலிகின்றன –

கண் புதைய மூடிற்றால் –
உட்கண்ணை காதல் மறையா நின்றது
கட்கண்ணை ராத்ரி மறைத்தது -ஈடு
அவனே எதிரே நின்று சேவை சாதித்தாலும் பார்க்க முடியாதபடி இருள் வந்து நலிகின்றபடி –
மன்னின்ற சக்கரத்து -நிலைத்து நின்ற
கை கழலா நேமியான் நம் மேல் வினை கடிவான்
பாது ப்ரணத ரஷாயாம் -விளம்பம் அசஹ்ஹன்னிவ சதா பஞ்சாயுதீம் பிப்ரத் ச ந ஸ்ரீ ரெங்க நாயக –
இவ் உயிரை முடித்து ரஷிப்பார் யார்
இவ்விடத்தே -சர்வ ரஷகனும் உதவாத இந்நிலைமையிலே

—————————————————————————————————————————————————————————————————

காப்பாரார் இவ்விடத்துக் கங்கிருளின் நுண் துளியாய்
சேட்பால தூழியாய்ச் செல்கின்ற கங்குல் வாய்
தூப்பால வெண் சங்கு சக்கரத்தன் தோன்றானால்
தீப்பால வல்வினையேன் தெய்வங்காள் என்செய்கேனோ –5-4-7-

சேட்பாலது -மிக நீண்டு இருப்பதான
தூ பால -அழுக்கு அற்ற ஸ்வ பாவத்தை உடைத்தாய்
உறங்காத தெய்வங்களை குறித்து முறையிடுகிறாள்
தானும் உறங்காதவள்
இந்த சாம்யத்தால் –
துயர் உற்ற காலத்தில் அம்மே என்பாரைப் போலே
தெய்வங்காள் என்றதும் ஒரு வார்த்தைப் பாடு –
கங்கிருளின் நுண் துளியாய்-தடித்த இருளும் நுட்பமான பனித்துளியுமாய்
கங்கு எல்லை நிலம் -செறிந்த இருள்

—————————————————————————————————————————————————————————————-

தெய்வங்காள் என்செய்கேன் ஓர் இரவேழ் ஊழி யாய்
மெய் வந்து நின்று எனதாவி மெலிவிக்கும்
கை வந்த சக்கரத்து என் கண்ணனும் வாரானால்
தை வந்த தண் தென்றல் வெஞ்சுடரில் தானடுமே–5-4-8-

தை வந்த-தடவுகிறாப் போலே இருக்கின்ற
ஓர் இரவு ஏழு ஊழி யாய் -சௌபரி போகத்துக்கு பல வடிவு கொண்டால் போலே நலிய இது கொண்டபடி
மெய் வந்து நின்று எனதாவி மெலிவிக்கும்-இராவணன் இடம் பார்த்து வந்து நலிந்தால் போலே
இதுவும் விரஹ தசை அறிந்து நலிகிறபடி
மோர்க் குழம்பு கொடுத்து தேற்றி
விடுநகம் கட்டி-கிட்டிக் கோல் கட்டி – நலிவாரைப் போலே –
கைவந்த -விதேயமான

——————————————————————————————————————————————————————————————–

வெஞ்சுடரில் தானடுமால் வீங்கிருளின் நுண் துளியாய்
அஞ்சுடர வெய்யோன் அணி நெடும் தேர் தோன்றாதால்
செஞ்சுடர்த் தாமரைக் கண் செல்வனும் வாரானால்
நெஞ்சிடர் தீர்ப்பார் இனி யார் நின்று உருகுகின்றேனே –5-4-9-

இராவணன் மாரீசன் துணை கொண்டு வந்தால் போலே
இராப் பொழுது நுண்ணிய பனித் துளியை துணை கொண்டு
வெவ்விய நெருப்பைக் காட்டிலும் அதிகமாகவே நலியா நின்றது –
நான் நீர்ப்பண்டமாய் உருகி ஒழியா நின்றேன்

————————————————————————————————————————————————————————————–

நின்று உருகுகின்றேனே போலே நெடு வானம்
சென்று உருகி நுண் துளியாய்ச் செல்கின்ற கங்குல்வாய்
அன்றொரு கால் வையம் அளந்த பிரான் வாரான் என்று
ஓன்று ஒரு கால் சொல்லாது உலகோ உறங்குமே –5-4-10-

தேறுதல் கூற யாருமே இல்லை
எல்லாரும் உறங்க
ஆகாசம் பனித் துளி -திருஷ்டாந்தம் ஆக்குகிறாள்
கீழே வாயும் திரை உகளில் -தோழியரும் யாமும் போல் நீராய் நெகிழ்கின்ற வானமே –
உலகளந்த வ்ருத்தாந்தம் சொல்லி தரிக்க உசாத் துணையும் இல்லை
அந்த வஞ்சகன் நமக்கும் வஞ்சகனே யாவான் -ஏதேனும் ஒன்றைச் சொல்லலாமே
உலகம் ஒன்றும் சொல்லாமல் உறங்குகிறதே –

——————————————————————————————————————————————————————————————

உறங்குவான் போல் யோகு செய்த பெருமானை
சிறந்த பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன் சொல்
நிறம் கிளர்ந்த வந்தாதி ஆயிரத்திப் பத்தால்
இறந்து போய் வைகுந்தம் சேராவாறு எங்கனயோ–5-4-11-

நிறம் கிளர்ந்த -பண் விஞ்சின
உலகோ வுறங்குமோ -எம்பெருமான் நான் உறங்குகிறேன் அல்லேன் -ரஷணம் சிந்தையில் யோகு செய்வான் போலே –
இத்தை அறியப் பெற்று ஆழ்வார் தரிக்க
அத்தாலே ஊரும் தரிக்க -சிறந்த பொழில் சூழ் குருகூர்
இப்பத்தால் வைகுந்தம் சேராவாறு-பரமபத ப்ராப்தி தவிராது என்றவாறு –

——————————————————————————————————————————————————————————————

த்ரமிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி –

5-4-1-ஆபத் பந்துத்வ கீர்த்யா -பாரெல்லாம் வுண்ட நம் பாம்பணையான்
5-4-2-யதுகுல ஜன நாத் -காவிசேர் வண்ணன் என் கண்ணனும்
5-4-3-தீர வீரத்வ கீர்த்யா -காயும் கடுஞ்சிலை நம் காகுத்தன்
5-4-4-லோகாநாம் விக்ரமாச்ச -இம் மண்ணளந்த கண் பெரிய செவ்வாய்
5-4-5-ஆஸ்ரித துரித ஹ்ருதே -காரன்ன மேனி நம் கண்ணன்
5-4-6-அத்புதைச் சேஷ்டிதைச் ச – எம் மாயவனும் வாரானால்
5-4-7-/5-4-8–சக்ராத்யஸ் த்ரான் விதத்வாத் -தூப்பால வெண் சங்கு சக்கரத்தன் -கை வந்த சக்கரத்தன்
5-4-9-கமல நயநதா சம்பதா -செஞ்சுடர் தாமரை கட்செல்வன்
5-4-10-வாம நத்வாத் -அன்று ஒரு கால் வையம் அளந்த பிரான்
5-4-11-ஷீராப்தௌ சேஷசாயீ -உறங்குவான் போல் யோகு செய்த பெருமான் –

————————————————————————————————————————————————————————————–

ஊர நினைந்த மடல் ஊரவும் ஒண்ணாத படி
கூரிருள் சேர் கங்கு லுடன் கூடி நின்று பேராமல்
தீது செய்ய மாறன் திரு உள்ளத்துச் சென்ற துயர்
ஓதுவது இங்கு எங்கனேயோ –44

——————————————————————————————————————————————————————————–

ஸ்ரீ P.B.A,ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.