Archive for September, 2014

திரு நெடும் தாண்டகம்-பாசுரங்கள்-26-30- -திவ்யார்த்த தீபிகை —

September 30, 2014

தலைவியை ஒருமுகத்தாலே ஆர்றுவிக்க வேணுமென்று நினைத்த தோழி யானவள் சில கேள்விகள் கேட்க,
அவற்றுக்கு மறுமாற்ற முரைக்கும் வகையாக
மைவண்ண நறுங்குஞ்சி தொடங்கி ஐந்துபாசுரங்கள் சென்றன.
தோழி தான் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் விடைவந்துவிட்டபடியால் அவள் வாளா கிடந்தாள்;
தலைவிக்கோ ஆற்றாமை மீதூர்ந்தது. கண்ணிற் கண்டதொரு வண்டைத் தூதுவிடுகிறாள் இப்பாசுரத்தில்.
ஸ்ரீராமவதாரத்தில் திர்யக்குக்கள் தூதுசென்று காரியம் தலைக்கட்டிவைக்கக் காண்கையாலே
வண்டுவிடுதூதிலே முயல்கிறாள் இப்பரகாலநாயகி–

தேமருவு பொழிலிடத்து மலாந்த போதைத் தேனதனை வாய்மடுத்துன் பெடையும் நீயும்,
பூமருவி யினி தமர்ந்து பொறியி லார்ந்த அறுகால சிறுவண்டே. தொழுதேன் உன்னை,
ஆமருவி நிரைமேய்த்த அமரர் கோமான் அணியழுந்தூர் நின்றானுக் கின்றே சென்று,
நீமருவி யஞ்சாதே நின்றோர் மாது நின்நயந்தாள் என்றிறையே இயம்பிக் காணே.

பதவுரை

தேன் மருவு-தேன் வெள்ளம் நிறைந்திருக்கப் பெற்ற
பொழில் இடத்து-சோலைப் புறத்திலே
மலர்ந்த போது-மலர்ந்த புஷ்பங்களிலுண்டான
தேன் அதனை–தேனை
வாய் மடுத்து–பானம் பண்ணி
உன் பெடையும் நீயும்–உனது பேடையும் நீயும்
பூ மருவி–புஷ்பத்திலே பொருந்தி
இனிது அமர்ந்து–இனிமையாகப் புணர்ந்து
பொறியின் ஆர்ந்த–மேனியிற் புகர் அதிகரிக்கப் பெற்ற
அறுகால சிறு வண்டே–ஆறு கால்களை யுடைய சிறிய வண்டே!
உன்னை தொழுதேன்–உன்னை வணங்கி யாசிக்கின்றேன்;
ஆநிரை–பசுக் கூட்டங்களை
மருவி மேய்த்த–விரும்பி மேய்த்தவனும்
அமரர் கோமான்-நித்யஸூரிகளுக்குத் தலைவனும்
அணி அழுந்தூர் நின்றானுக்கு–அழகிய திருவழுந்தூரிலே நிற்பவனுமான எம்பெருமான் பக்கலிலே
இன்றே நீ சென்று-இப்போதே நீபோய்
அஞ்சாதே–பயப்படாமல்
மருவி நின்று–பொருந்தி நின்று
ஓர் மாது–ஒரு பெண்பிள்ளை
நின் நயத்தாள் என்று–உன்னை ஆசைப் பட்டிருக்கின்றாள்‘ என்று
இறையே–சிறியதொரு வார்த்தையை
இயம்பிக் காண்–சொல்லிப் பார்.

முன்னடிகளில் வண்டைவிளித்துத் தொழுது, பின்னடிகளில், அது செய்ய வேண்டிய காரியத்தை விதிக்கின்றாள்.
திருவழுந்தூர் ஆமருவியப்பன் திருவடிவாரத்திலே சென்று தனது நிலைமையைச் சொல்லுமாறு வேண்டுகின்றாள்;
அந்த வண்டு தன் பேடையோடே கலந்து மலரிலே மதுபானம் பண்ணிக் கொண்டிருந்தமையால்
‘நான் துணைவனைப் பிரிந்து உணவும் உறக்கமுமற்று வருந்திக்கிடக்கும்போது
நீ இப்படி உன்காரியமே கண்ணாக இருப்பது தகுதியோ? என்னுங்கருத்து முன்னடிகளில் வெளிவரும்.

நாம் வருந்தி யொடுங்கி -மென்மலர்ப்பள்ளி வெம்பள்ளியாலோ என்று கிடக்கும்போது
இந்த வண்டு மாத்திரம் மலர்களிலே ஏறிக்கிடப்பதற்கு யாதுகாரணமென்று பார்த்தாள்;
அது நம்மைப்போலே விரஹ வேதனைப்படாமல் துணை பிரியாதிருப்பதனால் மலரிலே கால் பாவவும்
மதுவைப் பருகவும்
மேனி நிறம் பெற்றிருக்கவும் பெறுகின்றதென்றுணர்ந்து அங்ஙனமே விளிக்கின்றாள்.
பூவைக் கண்டால் அருவருத்தும் போக்ய வஸ்துக்களில் வெறுப்புற்றும் மேனி நிறமழிந்தும் இரா நி்ன்ற என்னையும்
உன்னைப்போலே யாக்க வேண்டாவோ?
நானும் துணைவனோடு கலந்து வாழும்படி நீ காரியஞ் செய்யவேண்டாவோ? என்பது உள்ளூறை.

“உளங்கனிந்திருக்குமடியவர் தங்களுள்ளத்துளூறிய தேன்“ என்னப்பட்ட பகவத் விஷயமாகிற மதுவை விரும்பியும்,
“போந்தெ தென்னெஞ் சென்னும் பொன்வண்டு உனதடிப்போதிலொண்சீராந் தெளிதேனுண்டமர்ந்திடவேண்டி“ என்கிறபடியே
ஆசார்ய பாதாரவிந்த ஸேவையாகிற மதுவைப் பருகுதலையே விரதமாகவுடைத்தாகியும்,
உயர்கதிக்கு ஸாதனமாகிய இரண்டு சிறகுகள் போன்ற கர்ம ஜ்ஞானங்களையுடையராகியும் ஸாரக்ராஹிகளாயுமிருக்கின்ற
ஸ்ரீவைஷ்ணவர்களை வண்டாகச் சொல்லுவது வழக்கம்.
அப்படிப்பட்ட ஸ்ரீவைஷ்ணர்களை நோக்கி ‘நீர் எம்பெருமான் திருவடிகளிலே புருஷகாரஞ்செய்து
அடியேனையும் உம்மைப்போலே பகவதநுபவமே நித்தியமாய்ச் செல்லுமாறு ஆட்படுத்திக் கொள்ளவேணும்‘ என்று
பிரார்த்தித்தல் இதற்கு உள்ளூறை பொருள்.
வேதம் வல்லர்களைக்கொண்டு விண்ணோர் பெருமான் திருப்பாதம் பணிவது ஸம்ப்ரதாயமென்க.

போது + தேன், போதைத்தேன்; பூவிலுள்ள தேன் என்றபடி.

(அறுகால சிறுவண்டே தொழுதேனுன்னை.)
வண்டுக்கு ஆறு கால்கள் உள்ளமை இயல்வாதலால் இவ் விசேஷணம் இங்கு ஏதுக்கு? என்று கேட்கக்கூடும்;
இரண்டு காலாகவும் நான்கு காலாகவுமின்றியே விரைந்து செல்லுகைக் குறுப்பாக ஆறுகால்கள் இருக்கப்பெற்ற பாக்கியம் என்னே!
என்று வியந்து கூறுவதாகச் சில ஆசார்யர்கள் நிர்வஹித்தார்களாம்.
இந்த நிர்வாஹத்தில் ஸ்வாரஸ்யமில்லை;
வண்டு செல்லுதற்குச் சாதனம் சிறகே யன்றிக் கால்கள் அல்லவே;
ஆதலால் ‘அறுகால‘ என்னு மடைமொழிக்கு அங்ஙனே கருத்துரைத்தல் பொருந்தாதென்று, பட்டர் அருளிச் செய்ததாவது-
“தொழுதேனுன்னை“ என்று மேலே யிருக்கையாலே,
என்தலையிலே வைப்பதற்கு ஆறுகால்களுண்டாகப் பெற்றதே! என்று வியந்த சொல்லுகிறபடி என்பதாம்.

தூதுசென்று மீண்டுவந்தால் வண்டின் கால்களைத் தன்தலை நிறைய வைத்துக்கொண்டு கூத்தாடக் குதூஹலித்திருப்பதனால்
அதற்குச் சேர இங்ஙனே கருத்துரைத்தல் மிகப்பொருந்தும்.
“எங்கானலகங்கழிவாயிரை தேர்ந்து இங்கினி தமருஞ், செங்காலமட நாராய்! திருமூழிக்களத்துறையுங்,
கொங்கார் பூந்துழாய் முடியென்குடக்கூத்தற்கென் தூதாய் நுங்கால்களென் தலைமேல் கெழுமீரோ நுமரோடே“ (9-7-1)
என்ற திருவாய் மொழிப்பாசுரத்தின் ஈற்றடி இங்குக் குறிக் கொள்ளத்தக்கது.

சிறுவண்டே! =
ஏற்கனவே நீ சிறியையாயிருப்பதும் ஒரு பாக்கியம்;
அனுமான் இலங்கைக்குத் தூதுசென்ற போது சிலவிடங்களில் தன்வடிவைச் சிறுக்கடித்துக் கொள்ளவேண்டி யிருந்தது;
அங்ஙனே உனக்குத் தேவையில்லை; உருவமே சிறியையாயிரா நி்ன்றாய் காண் என்று விசேஷார்த்தங்காண்க.
ஹனுமானாகில் ‘இந்தக் குரங்கு இங்கே ஏதுக்கு வந்தது?, என்று ஆராய்ச்சிப்பட வேண்டியிருக்கும்;
நீ வண்டாகையாலே
தோளிணை மேலும் நன்மார்பின் மேலும் சுடர்முடிமேலும் தாளிணை மேலும் புனைந்த தண்ணந்துழாய் மாலையில்
இஷ்டமானதோரிடத்திலே யிருந்து கொண்டு வார்த்தை சொல்லலாம்படியான ஜன்மமன்றோ உன்னது என்பதும் விவக்ஷிதம்.

பரஸ்வரஸம்ச்லேஷ ஸுகத்தாலே மயங்கி மதிகெட்டுக் கிடக்கிற வண்டின் செவியிலே உறுத்தும்படி
‘பூமருவியினதமர்ந்து பொறியிலார்ந்த அறுகால சிறுவண்டே!‘ என்று உரக்கக் கூவினவாறே
வண்டு துணுக்கென்று எட்டிப்பார்க்க, தொழுதேனுன்னை என்கிறாள்.
தலைமகனுடைய திருவடிகள் எனக்கு ஏதுக்கு? உன்னைத் துதிப்பதும் உன்காலிலே விழுவதுமன்றோ எனக்குப்பணி என்றவாறு.
எம்பெருமானைக் காட்டிலும் புருஷகார பூதரான ஆசார்யர்கள் மிகவும் உத்தேச்யர் என்ற சாஸ்த்ரார்த்த முணர்க.

என்னைத் தொழுவதேன்? வேண்டின காரியத்தைச் சொல்லலாகாதோவென்று வண்டு கேட்க;
காரியத்தைக் கூறத் தொடங்குகிறாள் பின்னடிகளில்.
அமரர்கோமான் பக்கலிலே சென்று தூது சொல்லுங்கோள் என்றாள்;
அந்தோ! அயர்வறுமமரர்களதிபதியன்றோ? அந்த மேன்மையிலே எங்களால் கிட்டப்போமோ? என்ன;
ஆமருவிநிரைமேய்த்த அமரர் கோமான் என்றாள்;

பரத்வம் ஒருபுறத்தே கிடக்கச் செய்தேயும் பசுக்களோடே பொருந்தி அவற்றோடே போது போக்குமவன் காண்;
நித்ய ஸூரிகளுக்குத் தன்னை யொழியச் செல்லாதாப்போலே பசுக்களை யொழியத் தனக்குச் செல்லாதபடியான
குடிப் பிறப்புடையவன்காண்;
மேன்மையைக் கண்டு தியங்காதே செல்லலாமென்றாள்; ஆமாம்; அது ஒருகாலத்திலன்றோ?
க்ருஷ்ணாவதாரங் கடந்து நெடுநாளாயிற்றே! என்ன;
அணியழுந்தூர் நின்றனுக்கு என்கிறாள்.
அக்காலத்தில் பசுக்களை ரக்ஷித்தாற்போலே அக்காலத்திற்குப் பிற்பட்டவர்களாய்ப பசு ப்ராயராயிருப்பாரையும்
ரக்ஷிக்கைக்காகப் * பின்னானார் வணங்குஞ் சோதியாகத் திருவழுந்தூரிலே நிற்கிறான் காண்;
அங்கேபோய் அறிவிக்க வேணுமென்றாளாயிற்று.

எம்பெருமான் பிரிந்துபோகிறபோது
* சேலுகளுந் திருவரங்கம் நம்மூர் என்றும் *
புனலரங்கமூர் என்றும் சொல்லிச் சென்று திருவரங்கத்திலே போயிருக்க.
திருவழுந்தூரிலே தூதுவிடுகை பொருந்துமோ? என்னில்; கேண்மின்;
‘புனலரங்கமூரென்று போயினாரே‘ என்றது உண்மைதான்;
ஆயினும், பிரிந்து போனவர் முழுதும் போயிருக்க மாட்டார்; திருவழுந்தூரிலே பின் தங்கி நின்றிருக்கக் கூடும்;
அங்கே சென்று அறிவிக்கலாமென்கிறாள் போலும்
அன்றியே;
புனலாங்கமூரென்று போயினார்; திருவரங்கத்தே போய்ப் பார்த்தார்; நீர் வாய்ப்பு் நிழல் வாய்ப்பும் கண்டவாறே
தனிக்கிடை கிடப்பதற்குப் புறப்பட்டிருப்பர்; இப்போது திருவழுந்தூரளவிலே எழுந்தருளியிருக்கக்கூடும்;
அங்கே சென்று அறிவிக்கவமையும் என்கிறாள் என்றுங் கொள்ளலாம்.

அணியழுந்தூர் நின்றானுக்கு =
இத்தலத்தைக் கடந்து அப்பால் போகமாட்டாமை யாலே அங்கே ஸ்தாவர ப்ரதிஷ்டையாக நிற்கிளானென்கிறாள்.
திருவாலி திருநகரியிற் பரகாலநாயகி பக்கலில் நின்றும் ஆள்வருவது எப்போதோவென்று
எதிர்பார்த்தபடியே நிற்கிறானென்கிறாள் என்னவுமாம்.

இன்றே சென்று =
நாளைச் செய்கிறேனென்ன வொண்ணாது; நாளைக்கு நான் இருக்கப் போகிறேனோ?
நானில்லையானால் அவன்தான் இருக்கப்போகிறானோ?
இரண்டுதலையும் அழிந்த பின்பு நீ எங்குச் சென்று யார்பக்கலிலே என்ன சொல்லப் போகிறாய்?
இரண்டு தலையும் அழிந்ததென்றால் பி்ன்னை உலகந்தானுண்டோ? நீயும் அழிந்தாயாவாய்;
ஆக, நாங்களும், பிழைத்து நீயும் வாழ வேண்டியிருந்தாயாகில் இன்றே சென்று அறிவியாய் என்றாளாயிற்று.

நீ மருவி =
அவன் ஆமருவி நிரை மேய்த்தவனாகையாலே திர்யக் ஜாதியான உனக்கும் முகந்தரும்; நீ சென்று கிட்டலாம்.
அவனுடைய சீல குணத்தைக்கண்டு வைத்தும் “அவரை நாம் தேவரென்றஞ்சினோமே“ என்று மருண்டு
பின்வாங்கின என்னைப் போலல்லாமல் அருகே பொருந்தி நிற்கலாம் நீ.

(அஞசாதே நின்று.)
வார்த்தை சொல்லும் விஷயத்தில் சிறிதும் அஞ்சவேண்டா;
‘நம்முடைய அந்த புறத்தில் நின்றும் வந்தவர்கள்‘ என்று தோற்றும்படி செருக்கி வார்த்தை சொல்லவேணும்.

அவர்க்கு அறிவிக்கவேண்டும் வார்த்தை ஏதென்ன;
ஓர் மாதுநின் நயந்தாளென்று = என்பெயரைச் சொல்லவேண்டா;
ஒருத்தி‘ என்னும்போதே
அவர்தாமே தெரிந்துகொள்வர்;
‘ஒருகாட்டிலே ஒருமான் அம்புபட்டுக்கிடந்து துடிக்கின்றது‘ என்றால் உடனே எய்த வனககுத் தெரியுமன்றோ.

(நின்நயந்தாள்.)
ஓர்மாது‘ என்றாலே போதுமானது;
அதற்கு மேலும் ஒருவார்த்தை சொல்லவேணுமென்றிருந்தாயாகில் “நின்நயந்தாள்“ உன்னை ஆசைப்பட்டிருக்கின்றாள்) என்று சொல்லு.
படுகொலைப்பட்டாளென்று சொல்லு என்றபடி.
ஒரு க்ஷுத்ரபுருஷனை ஆசைப்பட்டாளல்லள், பரமபுருஷனை உன்னை ஆசைபட்டாளென்று சொல்லு.
பரத்வத்திலே ஆசைப்பட்டிலள், வியூகத்திலே ஆசைப்ட்டிலள், விபவாவதாரங்களிலே ஆசைப்ட்டிலள்,
அந்தர்யாமித்வத்திலே ஆசைப்பட்டிலள்; ஆசைப்படுதற்குரிய அர்ச்சவதாரத்திலே ஆசைப்பட்டாளென்று சொல்லு.

இறையே இயம்பிக் காண் =
முற்றமுடிய வார்த்தை சொல்ல வேண்டுமோநீ;
சிறிது வாயைத் திறக்கும் போதே உன்னை அவர் எங்ஙனம் கொண்டாடப்போகிறார் பார்;
“ஏஷ ஸர்வஸ்வபூதஸ்து பரிஷ்வங்கோ ஹூமத;“ என்கிறபடியே அனுமான் பெற்ற பரிசும் ஏகதேசமென்னும்படியன்றோ
நீ பஹுமாநம் பெறப்போகிறாய்; இது நான் சொல்ல வேணுமோ? அநுபவத்தில் பார்த்துக் கொள்ளாய் என்றாளாயிற்று.

தலைவி ஆற்றாமை மிக்கு கண்ணில் கண்ட ஒரு வண்டைத் தூது விடுகிறாள்
அது துணையுடன் மலரிலே கால் பாவி -மது பருகி -மேனி நிறம் பெற்று இருக்கக் கண்டு
என்னையும் உன்னைப் போல் ஆக்க வேண்டாவோ என்கிறாள்
உளம் கனிந்து இருக்கும் அடியவர் தங்கள் உள்ளத்துள் ஊறிய தேன்-விரும்பி
போந்தது என் நெஞ்சம் என்னும் பொன் வண்டு அடிப் போதில் ஒண் சீராம் தெளி தேன் உண்டு அமர்ந்திட வேண்டி -என்கிறபடி
ஆச்சார்யா பாதாரவிந்தம் சேவை ஆகிற மதுவை
ஞான அனுஷ்டானங்கள் சிறகு
வேதம் வல்லார்களைக் கொண்டு விண்ணோர் பெருமான் பாதம் பணிந்து
போது +தேன் = போதைத்தேன்-பூவில் உள்ள தேன் என்றபடி

அறுகால சிறு வண்டே தொழுதேன் உன்னை
விரைந்து போக ஆறு கால் சிலர் நிர்வாஹம்
பட்டர் தொழுதேன் உன்னை பின்பு இருப்பதால்
என் தலையில் வைப்பதற்கு ஆறு கால்கள் உண்டாகப் பெற்றனவே
எங்கானல் அகம் கழிவாய் இரை தேர்ந்து இங்கு இனிது அமரும்
செங்கால மடநாராய் திரு மூழிக் களத்துறையும் கொங்கார்
பூந்துழாய் முடி என் குடக் கூத்தற்கு என் தூதாய்
நுங்கால்கள் என் தலை மேல் கெழுமீரோ-திருவாய் மொழி -9-7-1-

சிறுவண்டே
திருவடி போலே சிறிய வடிவு எடுத்துக் கொள்ள வேண்டாமே
நீ வண்டாகையாலே-
தோளிணை மேலும் நன் மார்பின் மேலும் சுடர் முடி மேலும்
தாளிணை மேலும் புனைந்த தண் அம் துழாயில்
இஷ்டமானதோர் இடத்தில் இருந்து வார்த்தை சொல்லலாமே

பூமருவியினிது அமர்ந்து பொறியிலார்ந்த அறு கால சிறு வண்டே-என்று
உரக்க கூப்பிட்டதும்
எட்டிப் பார்க்க
தொழுதேன் உன்னை
என்கிறாள்
புருஷகார பூதரான ஆச்சார்யர்கள் உத்தேச்யம்

பராத்பரன் அன்றோ என்ன
ஆமருவி நிறை மேய்த்த அமரர்கோன்
நித்ய சூரிகளுக்கு தன்னை ஒழிய செல்லாதது போலே
இவனுக்கும் ஆ நிரைகள் விட்டு தரிக்க முடியாத படி குடிப்பிறப்பு உடையவன்-

அது என்றோ என்ன
அணி அழுந்தூர் நின்றானுக்கு
பிற்பட்டவர்களாய் பசு பிராயராய் உள்ளாரையும் ரஷித்து அருள பின்னானார் வணங்கும் சோதியாய்
பிரிந்து போகும் பொழுது புனல் அரங்கம் நம்மூர் என்று போயினாரே
திருவழுந்தூரில் தூது விடுகை எதுக்கு
முழுவதும் போய் இருக்க மாட்டார் -பின் தங்கி நின்று இருக்கக் கூடும் அங்கே சென்று அறிவிக்க அமையும்
அன்றியே
திருவரங்கம் போய் பார்த்தார்
நீர் வாய்ப்பும் நிழல் வாய்ப்பும் கண்டவாறே தனிக்கிடை கிடக்க பொருந்தி இராது
எதிர்கொண்டு வர புறப்பட்டு இருப்பார்
இப்போது திரு அழுந்தூரில் எழுந்து அருளி இருக்கக் கூடும்
அங்கே சென்று அறிவிக்க அமையும்

அணி அழுந்தூர் நின்றானுக்கு
அப்பால் போக மாட்டாமையால் ஸ்தாவர பிரதிஷ்டையாக நின்றான்
திருவாலி திருநகரியில் இருந்து பரகால நாயகி ஆள் வருவது எப்போது என்று எதிர் பார்த்து நிற்கிறான்

இன்றே சென்று
நாளை நான் இருப்பேனா
நான் இல்லை என்றாள் அவன் இருப்பானா
பின்பு உலகம் தான் உண்டா
ஆக
நாங்களும் பிழைத்து நீயும் வாழ இன்றே சென்று அறிவியாய்

நீ மருவி
அவன் ஆ மருவி அப்பன்
திர்யக் ஜாதி ஆகையால் உனக்கும் முகம் தருவான்
சீல குணத்தை கண்டும் தேவர் என்று அஞ்சி பின் வாங்கின என்னை போல் அன்றிக்கே
நீ அங்கே பொருந்தி நிற்கலாம்

அஞ்சாதே நின்று
நம்முடைய அந்தபுரத்தில் நின்றும் வந்தவர்கள் என்று தோற்றும்படி
செருக்கி வார்த்தை சொல்ல வேணும்

ஒரு மாது நின் நயந்தாள் என்று
என் பேரைச் சொல்ல வேண்டா
ஒருத்தி என்னும் போதே அவர் தெரிந்து கொள்வார்
ஒரு காட்டிலே ஒரு மான் அம்பு பட்டு துடிக்கின்றது என்றால் எய்த வேடன் அறிவான் இறே

ஒரு மாது என்றாலே போதும்
அதுக்கும் மேலே வார்த்தை சொல்ல வேண்டுமானால்
நின் நயந்தாள் –
உன்னை ஆசைப் பட்டு இருக்கிறாள்.
படு கொலைப் பட்டாள் என்று சொல்லு
ஒரு சூத்திர புருஷனை ஆசைப் பட்டாள் இல்லை
பரம புருஷனான உன்னை ஆசைப் பட்டாள்
பரத்வத்திலே ஆசைப் பட்டிலள்
வ்யூஹத்திலே ஆசைப் பட்டிலள்
விபவ அவதாரங்களில் ஆசைப் பட்டிலள்
அந்தர்யாமியிலே ஆசைப் பட்டிலள்
ஆசைப் படுவதற்கு உரிய அர்ச்சாவதாரத்தில் இறே ஆசை பட்டாள் என்று சொல்லு –

இறையே இயம்பிக் காண்
முற்ற முடிய வார்த்தை சொல்ல வேண்டுமா
சிறிது வாயைத் திறக்கும் போதே கொண்டாடுவார்
ஏஷ சர்வஸ்வபூதஸ்து பரிஷ்வங்கோ ஹனூமத -என்னும் படி
திருவடி பெற்ற பரிசும் ஏக தேசம் என்னும் படி அன்றோ நீ பஹூ மானம் பெறப் போகிறாய்
இது நான் சொல்ல வேணுமோ நீயே அனுபவத்தில் பார்த்து கொள்ளப் போகிறாய்-

—————————————————————–

கீழ்ப்பாட்டில் ஒரு வண்டைத் தூதுவிட்டாள்; அது போய்த் தூதரைத்துத் திரும்பி வருமளவும்
தரித்திருக்கமாட்டாமையாலே பின்னையும் ஒருநாரையைத் தூது விடுகிறாள்.

“திக்ஷு ஸர்வஸு மார்க்கந்தே“ என்கிறபடியே பிராட்டியைத் தேடுதற்கு எல்லாத் திசைகளிலும்
வாநர முதலிகளை ஏவினாப்போலே இவளும் கண்ணாற் கண்டவற்றை எல்லாம் ஏவுகிறாள்.
ராமாவதாரத்திலே வாநர ஜாதி வீறு பெற்றது போலே ஆழ்வார்களவதரித்துப் பக்ஷிஜாதி வீறு பெற்றது என்பர்.

செங்கால மடநாரா யின்றெ சென்று திருக்கண்ணபுரம்புக்கென்செங்கண்மாலுக்கு
என்காதலென்துணைவர்க்குரைத்தியாகில் இதுவொப்பதெமக்கின்பமில்லை*நாளும்
பைங்கானமீதெல்லாமுனதேயாகப் பழனமீன்கவர்ந்துண்ணத்தருவன்*தந்தால்
இங்கேவந்தினிதிருந்துன்பெடையும்நீயும் இருநிலத்திலினிதென்பமெய்தலாமே.

பதவுரை

செம் கால–சிவந்த கால்களையுடைய
மட நாராய்–அழகிய நாரைப்பறவையே!
இன்றே சென்று-இன்றைக்கே புறப்பட்டுப்போய்
திருக்கண்ணபுரம் புக்கு–திருக்கண்ணபுரத்தில் புகுந்து
என் செங்கண் மாலுக்கு-செந்தாமரைக் கண்ணராய் என்மீது வியாமோஹங் கொண்டவரும்
என் துணைவர்க்கு–எனக்குத் துணைவருமான சௌரிப் பெருமாள் பக்கலிலே
என் காதல்–எனது விருப்பத்தை
உரைத்தி ஆகில்–சொல்லுவாயாகில்
எமக்கு-(அவரைப் பிரிந்து வருந்திக் கிடக்கின்ற) நமக்கு
இது ஒப்பது இன்பம் இல்லை–இதுபோன்ற ஆனந்தம் வேறொன்றுமில்லை;
(இதற்காக உனக்கு நான் செய்யக்கூடிய உதவி யாதெனில்;)

செங்காலமடநாராய் =
பரகாலநாயகி தான் எம்பெருமானோடு ஸம்ச்லேஷித்திருந்த காலத்திலே அவன் தனது காலை நோக்கி
‘இதொரு காலும் சிவப்பும் இருந்தபடி என்!‘ என்று கொண்டாடக் கண்டவளாதலால்
நாரையின் மற்ற அவயங்களை விட்டுக் காலைக் கொண்டாடத் தொடங்குகிறாள்.

இனிதாகச் சூடவேண்டிய ஸுகுமாரமான கருமுகை மாலையைச் சும்மாடு கொள்வது போல,
கண்கொண்டு காணவேண்டிய உனதுகாலைக் கொண்டு தூதுபோக விடுகை மிகையாயிருக்கின்றதே! என்செய்வேன்?
உன்காலைப்பற்றியே என்காரியம் தலைக்கட்ட வேண்டியிருக்கின்றதே என்கிறாள்
‘நாராய்!‘ என்னும் விளி அம்மே! என்னுமாபோலேயிருக்கின்றது.
வழிபறியுண்கிற வளவிலே தாய் முகத்திலே விழித்தாற்போலே யாயிற்று தலைவனைப் பிரிந்து நோவுபடுகிறவளவிலே
இந்த நாரையின் காட்சியுண்டாயிற்று.
பிராட்டியைப் பிரிந்து நோவுபட்டுத் தடுமாறி நின்றவளவிலே பம்பைக்கலையில் அனுமான் வந்து தோன்றின போது
பெருமாளுக்குண்டான அத்தனை ஹர்ஷம் இப்போது பரகால நாயகிக்கு உண்டாயிற்றுப்போலும்.

“செங்காலமடநாராய்!“ என்று மிக்க இரக்கந்தோற்றக் கூவினவாறே நாரை
‘என்னை இவ்வளவு போற்றிப் புகழ்ந்து அழைக்க வேணுமோ?
திருவுள்ளம் பற்றின காரியத்தைச் சொல்லலாகாதோ?“ என்று கேட்கிறாப்போலே இசைவு தோற்ற அருகே வந்து நிற்க
இன்றேசென்று என்று தொடங்கிச் சொல்லுகிறாள்.
நாளை பார்த்துக் கொள்ளுவோ மென்று இருந்துவிடலாகாது; இப்போதே செய்ய வேண்டிய காரியங் காண்.
“ந ஜீவேயம் க்ஷணமபி விநா தாம் அஸிதேக்ஷணம்“
(அந்த ஸீதையைப் பிரிந்து ஒரு நொடிப் பொழுதும் நான் பிழைத்திருக்கமாட்டேன்) என்ற அவர் படியைப் பார்த்தாலும்
கால தாமதம் செய்யலாகாது;
“ந ச ஸீதா த்வயா ஹீநா ந சாஹமபி ராகவ – மஹூர்த்த மபி ஜீவாவோ ஜலாந்மத்ஸ்யாவிவோத்த்ருதௌ.“
என்னத்தக்க என் படியைப் பார்த்தாலும் கால தாமதம் செய்யலாகாது. இப்போதே புறப்படவேணும்.

எவ்விடத்திற்கு? என்ன ; திருக்கண்ணபுரம் புக்கு என்கிறாள்.

கீழ்ப்பாட்டில் “அணியழுந்தூர் நின்றனுக்கின்றே சென்று“ என்று திருவழுந்தூறே வண்டைத் தூது விட்ட இத்தலைமகள்
இப்பாட்டில் இத்திருப்பதியை விட்டுத் திருக்கண்ணபுரத்திலே தூது விடுவானேன்? என்னில்;
முற்பாட்டில் தூதுவிட்ட வண்டை அவன் திருவழுந்தூரிலே கண்டிருப்பன்;
அங்குத் தரித்திருக்க மாட்டாமல் அந்த வண்டோடு கூடவே அரைகுலையத் தலைகுலைய எதிரே வந்து
ஒருபயணம் புகுந்து திருக்கண்ணபுரத்தேற வந்திருக்கிற ஸமயமாயிருக்கும் இப்போது;
அங்குச் செல்லலாம் என்கிறாள் போலும்.
பொதுவாக எம்பெருமானை நோக்கித் தூது விடுகிறாளத்தனை யாதலால் எந்தத் திருப்பதியை நோக்கித்
தூதுவிடினுங் குறை யொன்றுமில்லை யென்க.

திருக்கண்ணபுரத்தில் அவரைக் கண்டுபிடிக்கும் வகை ஏதென்ன;
என்செங்கண் மாலுக்கு என்கிறாள்.
அவர் என்னிடத்தில் கொண்டிருக்கிற வியாமோஹமெல்லாம் திருக்கண்களிலே காணலாம்படியிருக்குங் காண்;
“கரியவாகிப் புடைபரந்து மிளிர்ந்து செவ்வரியோடி நீண்டவப் பெரியவாய கண்கள் என்னைப் பேதைமை செய்தனவே“
என்கிறபடியே என்னைப் பிச்சேற்றின கண்களே அவரைக் கோட் சொல்லித் தருமே
என்னைப் பிரிந்திருக்கையாலே அவர்க்கு உறக்கம் இராது; அதனாலும் கண்கள் குதறிச் சிவந்திருக்கும்;
அந்த அடையாளங்கொண்ட அவரைக் கண்டு பிடித்துக் கொள்ளலா மென்கிறாளாயிற்று.

(என் துணைவர்க்கு)
எந்த நிலைமையிலும் எனக்குத் துணையாயிருப்பவர் அவர்;
கலந்து பிரிந்த போதும் ஸத்தை குலையாதபடி குணாநுபத்தாலே தரிப்பிக்கவல்ல துணைவர் என்றபடி.
இப்போதுண்டான ஆற்றாமையைப் பரிஹரிப்பதற்க அவரே துணைவர்;
“எருத்துக் கொடியுடையானும் பிரமனுமிந்திரனும் மற்று, மொருத்தருமிப்பிறவியென்னும் நோய்க்கு மருந்தறிவாருமில்லை“.

அவரைக் கண்டு கூற வேண்டிய வார்த்தை என்னென்ன;
என் காதல் உரைத்தியாகில் என்கிறாள் நீ அவர்க்கு வேறொன்றுஞ் சொல்ல வேண்டா,
‘இங்ஙனே ஆசைப்பட்டுக் கிடக்கிறாளொருத்தி‘ என்று இவ்வளவு சொன்னால் போதும்.
மற்றையோருடைய காதலைக் காட்டிலும் தன்னுடைய காதல் பரம விலக்ஷணம் என்பது தோன்ற ‘என்காதல்‘ என்கிறாள்.
“சொல்லாதொழிய கில்லேன் அறிந்த சொல்லில், நும்மடியாரெல்லாரோடுமொக்க எண்ணியிருந்தீரடியேனை,
நல்லாரறிவீர் தீயாரறிவீர் நமக்கிவ்வுலகத்து எல்லாமறிவீர் ஈதேயறியீரிந்தளூரீரே. (4-9-6) என்ற பாசுரம்
இங்கு அநுஸந்திக்கத்தக்கது.

(என்காதல்)
என்னுடைய காதல்
மற்றுள்ள முமுக்ஷிக்களின் காதல் கோலுமன்று;
அயர்வறு மமரர்களின் காதல் போலன்று,
அயர்வறுமமரர்களதிபதியின் காதல் போலுமன்று; என்னுடைய காதல்‘ என்றே சொல்லுமித்தனை.
‘பாதாழ்வானுடையநோய்‘ என்றால் விலக்ஷணமென்று ப்ரஸித்தமன்றோ, அதுபோலே.

உரைத்தியாகில் =
அங்குச் சென்றவாறே அவருடைய வடிவழகிலே கால் தாழ்ந்து போன காரியத்தை மறக்கவுங்கூடுமே;
தன்னையும் மறக்கும்படியாயன்றோ அவ்விடத்து இனிமை தானிருப்பது.
அப்படிப்பட்டவதில் கால் தாழாமல் தரித்து நின்று என்காதலை அவர் பக்கலில் உரைக்க வல்லையாகில் என்கிறான்.
நீ வாய் படைத்ததற்கு இதுவன்றோ பிரயோஜனம்;
பல வார்த்தைகளையும் சொல்லிப் போருகிற உன்வாயிலே என்விஷயமாக இந்த ஒருவார்த்தை வந்தாலாகாதோ?

நான் சொன்ன மாத்திரத்தால் அவர் வந்திருவாரோவென்ன;
உரைத்தியாகில் இது வொப்பதேமக்கின்பமில்லை யென்கிறாள்.
அவர் வரட்டும், வராமற்போகட்டும்; நீ அவரிடம் சென்று என் காதலைச் சொல்லுமதுவே எனக்குப் பரமாநந்த மென்கிறாள்.
அவர் பரமசேத நரன்றோ; தூதுரை செவிப்பட்டால் வராதொழிவரோ? வந்தே தீருவர் என்றிருக்கிறான்.

எனக்காகச் சென்று தூதுரைத்தல் மாத்திரம் போதாது;
அவ்வுபகார ஸ்மிகுதியாலே நான் உனக்குப் பண்ணும் கிஞ்சித்காரத்தையும் அங்கீகரிக்கவேணுமென்கிறாள்.
(நாளும் பைங்கானமீதெல்லாமுனதேயாகப் பழனமீன் கவர்ந்துண்ணத் தருவன்)
பிரிந்தாரிரங்கு மிடம் நெய்தலாகையாலே கடற்கரையிலே தானிருக்கிறாளாய்,
‘பரப்புடைத்தான கடற்கரைச் சோலை யெல்லாம் எந்நாளும் உன் அதீனமாம்படி பண்ணி வைப்பேன்;
ஆனைக் கன்று போலே யிருக்கிற மீன்களை நீ மேல் விழுந்து புஜிக்கும்படியாக சேகரித்துத் தருவேன்‘ என்கிறாள்.
இத்தால் புருஷகார க்ருத்யம் பண்ணி பகவத் விஷயத்திலே சேர்ப்பிக்கும் ஆசார்யனுக்கு
“பொனனுலகாளீரோ“ என்னுமா போலே உபயவிபூதியுமளித்தாலும் தகும் என்றதாயிற்று.
ஆசார்யன் ஒருகால் உபகரித்துவிடுமித்தனை;
சிஷ்யன் வாழ்நாளுள்ள வளவும் அநுவர்த்திக்கக் கடவன் என்கிற சாஸ்த்ரார்த்தமும் இதில் விளங்கக் காண்க.
“பழனமீன் கவர்ந்து உண்ணத்தருவன்“ என்றதன் உள்ளூறை பொருளாவது –
நாரைக்கு மீன் எப்படி இனிதோ அப்படி ஆசார்யனுக்கு உகப்பான பொருளைத் தந்து கிஞ்சித்தகரிக்க வேணுமென்பதாம்.

தந்தால் இங்கே வந்து இனிதிருந்து உன் பெடையும் நீயும் இருநிலத்திலினிதின்பமெய்தலாம் =
நான் பண்ணின கிஞ்சித்காரத்தை ஸ்வீகரித்து நானிருந்தவிடத்தே வந்து புஜிக்க வேணும்;
ஏகாகியாய் வந்திருக்கவொண்ணாது.
அபிமத விஷயத்தோடேகூட வந்திருக்க வேணும்.
நான் தனியிருந்து படுகிற வருத்தந் தீர உன்னையாவது கூடியிருக்குமிருப்பிலே காணப்பெறவேணும்.
இங்ஙனே நானும் வாழ்ந்து நீயும் இனிது வாழ்ந்து நோக்கவேணுமென்றளாயிற்று.

வண்டு போய் தூது உரைத்து திரும்பி வரும் அளவும் தரித்து இருக்க மாட்டாமையால்
பின்னையும் ஒரு நாரையையும் தூது விடுகிறாள்
திஷூ சர்வாஸூ மார்க்கந்தே -எல்லா திக்குகளிலும் வானர ஜாதிகளை ஏவினால் போலே
ஆழ்வார்கள் திருவவதரித்து பஷி ஜாதி வீறு பெற்றதே

செங்கால மட நாராய்
சம்ச்லேஷம் போது இது ஒரு கால் இருந்த படியே என்று கொண்டாடக் கேட்டவள் ஆகையாலே
எல்லா அவயவங்களையும் விட்டு காலைக் கொண்டாடுகிறாள்
கருமுகை மாலையை சும்மாடு கொள்வாரைப் போலே
உன் காலைப் பற்றி என் கார்யம் கொள்ள வேண்டி இருக்கிறதே
நாராய்
அம்மே போன்ற விளி
பிராட்டி பிரிந்து பம்பை கரையிலே நோவு பட்ட பெருமாளுக்கு திருவடி தோன்றினால் போலே
அத்தனை ஹர்ஷம் இவளுக்கு நாரையைக் கண்டு உண்டாயிற்றே

அருகே வந்து நிற்க இன்றே சென்று —
ந ஜீவேயம் ஷணம் அபி விநா தாம் அஸி தேஷணாம்-அவர் படியைப் பார்த்தாலும் கால தாமதம் ஆகாது
ந ச சீதா த்வயா ஹீநா ந சாஹமபி ராகவ -முஹூர்த்தமபி ஜீவாவோ ஜலான் மத்ஸ்யா விவோத்த்ருதௌ-
என்னத் தக்க என் படியைப் பார்த்தாலும் கால தாமதம் கூடாது

எவ்விடத்துக்கு என்ன -திருக்கண்ணபுரம் புக்கு -என்கிறாள்
முன் தூது விட்ட வண்டை அவன் திரு அழுந்தூரிலே கண்டு இருப்பான்
தரித்து இருக்க மாட்டாமையாலே அரைகுலைய தலை குலைய வண்டுடன்
பயணம் புகுந்து திருக் கண்ணபுரம் ஏற வந்து இருக்கும் சமயம் ஆகி இருக்கும் இப்போது
எம்பெருமானை நோக்கி தூது விடுகிறவள் எந்த திருப்பதிக்கும் தூது விடலாம் இறே என்னவுமாம்

அவனை கண்டுபிடிக்கும் வகை என்ன என்ன –
என் செங்கண் மாலுக்கு
என்னிடம் அவன் கொண்டு இருக்கும் வ்யாமோஹம் எல்லாம் திருக் கண்களிலே தெரியுமே
கரியவாகிப் புடை பரந்து மிளிர்ந்து செவ்வரி யோடி நீண்ட அப்பெரியவாய கண்கள் என்னை பேதைமை செய்தனவே
உறக்கம் வராமல் குதறிச் சிவந்து இருக்கும்

என் துணைவர்க்கு
எந்த நிலையிலும் எனக்கு துணை
கலந்து பிரிந்தாலும் குணானுசந்தானத்தாலே தரித்து இருக்கப் பண்ணுபவன்
இப்போது ஆற்றாமைக்கு அவரே துணைவர்
எருத்துக் கொடியானும் பிரமனும் இந்த்ரனும் மற்றும் ஒருத்தரும்
இப்பிறவி என்னும் நோய்க்கு மருந்து அறிவாரும் இல்லை

கண்டு சொல்ல வேண்டிய வார்த்தை என் என்னில்
என் காதல் உரைத்தியாகில் –
என் காதல்-
அவர் காதலை விட தன்காதல் பரம விலஷணம் என்று என்காதல் – என்கிறாள்
சொல்லாது ஒழிய கில்லேன் -அறிந்தது சொல்லில் நும் அடியார் எல்லாரோடும் ஒக்க எண்ணி இருந்தீர் அடியேனை
நல்லார் அறிவீர் தீயார் அறிவீர் நமக்கு இவ்வுலகத்து எல்லாம் அறிவீர் ஈதே அறியீர் இந்தளூரிரே-4-9-6-

என் காதல்
முமுஷுக்கள் காதல் போல் அன்று
அயர்வறும் அமரர்கள் காதல் போல் அன்று
அயர்வறும் அமரர்கள் அதிபதியின் காதல் போலும் அன்று
என்னுடைய காதல் -என்று சொல்லும் அத்தனையே
பரதனுடைய நோய் என்னுமா போலே விலஷணம் அல்லவா

உரைத்தியாகில்
அவன் வடிவு அழகிலே கால் தாழ நேரிடும்
தரித்து நின்று உரைக்க வேண்டுமே
வாய் படைத்ததுக்கு இது வன்றோ பிரயோஜனம்
பல விஷயம் பேசும் உன் வாயால் என் விஷயமாக ஒரு வார்த்தை சொன்னால் ஆகாதோ

உரைத்தால்; அவர் வந்திடுவாரோ என்ன
உரைத்தியாகில் இது ஒப்பது எமக்கு இன்பம் இல்லை
அவர் வரட்டும் வராமல் போகட்டும்
நீ சொல்லுவதே பரமானந்தம்
அவர் பரம சேதனர் -தூது செவிப்பட்டதும் வந்தே தீருவர் என்று இருக்கிறாள்

நான் செய்யும் கிஞ்சித் காரத்தையும் அங்கீ கரித்து கொள்ள வேணும்
நாளும் பைம்கானம் எல்லாம் உனதேயாக பழன மீன் கவர்ந்து உண்ணத் தருவன்
பிரிந்தார் இரங்கும் இடம் நெய்தல்
கடல்கரையில் தான் இருக்கிறாளாய்-பரப்புடைத்தான கடல் கரை சோலை எல்லாம் எந்நாளும் உன் ஆதீனம்
ஆனைக் கன்று போல் இருக்கும் மீன்களை நீ மேல் விழுந்து புஜிக்கும் படி சேகரித்து தருவேன்
பொன்னுலகு ஆளீரோ போலே உபய விபூதியும் அளித்தாலும் தகுமே
ஆச்சார்யனுக்கு உகப்பான பொருளை தானே கிஞ்சித் கரிக்க வேணும்
தந்தால் இங்கே வந்து இனிதிருந்து உன் பெடையும் நீயும் இருநிலத்தில் இனிது இன்பம் எய்தலாம்
நான் இருந்த இடத்தே வந்து புஜிக்க வேணும்
ஏகாங்கியாய் இல்லாமல் அபிமத விஷயத்தோடு வர வேணும்
நான் தனியாய் இருக்கும் வருத்தம் தீர உன்னை யாகிலும் கூடி இருக்கும் இருப்பில் காண வேணும்
இங்கனே
நானும் வாழ்ந்து
நீயும் இனிது வாழ்ந்து
நோக்க வேணும் -என்கிறாள் ஆயிற்று-

—————————————————————————-

திருவாய்மொழியில் நம்மாழ்வார் * பூங்கழிவாயென்னுந் திருப்பதிகத்தில் எம்பெருமான் பக்கல் தூதுவிட்டு,
அநந்தரம் அவன் வந்து முகங்காட்டக் காணாமையாலே பிரணய ரோஷம் தலையெடுத்து ஊடல் செய்தாப்போலே
இப்பரகால நாயகியும் கீழே தூதுவி்ட்டவள் இதிலே ஊடுகின்றாள்.
‘இப்போது நம்முடைய ஆற்றாமை கனத் திருக்கையாலும்
தூது அனுப்பியிருக்கிறோமாகையாலும்
சில சுபநிமித்தங்கள் தோன்றி யிருக்கிறபடியாலும்
கடுவே அவன் வந்து நிற்கப்போகிறாள்; அப்படி அவன் வந்தால் முகங்கொடுத்து வார்த்தை சொல்லுவோமல்லோம்;
ஏனென்றால்,
அவனுடைய ஸம்ச்லேஷம் உடனே விச்லேஷத்தை விளைவித்தல்லது நிற்கமாட்டாமையாலே
இன்னமொரு விச்லே ஷத்துக்கு இலக்காயிருந்து மீண்டு மீண்டும் வருத்தப்படுவதிலுங்காட்டில்
அவனுக்கு முகங்கொடாதே அவன் கண்வட்டத்திலே முடிந்து பிழைப்பது நன்று‘ என்று நிச்சயித்துக் கொண்டாள்.

தம்மை முடித்துக்கொள்ள நினைப்பவர்கள் வெற்றிலை தின்னுதல் பூச்சூடுதல் சரந்தணிதல் சிரித்தல் முதலியன செய்யுமா போலே
இவளும் முடிவுக்குப் பூர்வாங்க மாகத் தெளிவு பெற்றிருந்தாள்.
உள்ளே யுருகி நையாநிற்கச் செய்தேயும் மேலுக்குத் தெளிந்திருந்தாள்; அதைக் கண்ட தோழியானவன்
‘இந்த நிலைமையிலே இவள் தெளிந்திருக்கைக்குக் காரணமில்லையே‘ எனச் சிந்தித்து
அவளையே வாய்விட்டுக் கேட்டுத் தெரிந்து கொள்வோம் என்றெண்ணி
‘நங்காய் இப்போது உன்னெஞ்சிலே கிடக்கிறதென்‘ என்று கேட்க;

‘அப்பெரியவர் வந்தால் பண்டு போலே முகங்கொடுக்கக் கடவேனல்லன்; அவர் கண்ணெதிரே உயிரை விட்டு
முடிந்துபோவதாகத் துணிந்திருக்கின்றேன்‘ என்று தலைவி சொல்ல;
அதுகேட்ட தோழியானவள் ‘கெடுவாய், மலையோடேமல் பொருத மல்லருண்டோ?
உபயவிபூதி நாதராய் ஸர்வசக்தராயிருக்கிறவரோடே அபலையான நீ எதிரிடுவதென்று ஒரு காரியமுண்டோ?
“நல்லவென்தோழி! நாகணைமிசை நம்பரர் செல்வர் பெரியர்சிறுமானி டவர் நாம் செய்வதென்?“ என்று
சொன்னவர்களைக் கேட்டதில்லையோ?
ப்ரணயிகளிடத்துச் செய்யத்தக்கதை ப்ரபுக்களிடத்துச் செய்யலாகுமோ?” என்று சொல்ல:

அவருடைய ப்ரபுத்வம் என்கையிலே படுகிறபடி பாராய்‘ என்று தலைவி சொல்ல;
‘இவளுடைய உறுதியைப் பார்த்தால் முடிந்தேதீருவள் போலேயிருக்கிறது;
ப்ரணய ரோஷத்தோடே நின்று, உயிர்துரக்குமளவு ஆகாதபடி இவளை நோக்கவேணும்‘ என்று பார்த்த தோழியானவள்.
‘நங்காய்! அவர்க்குள்ள ஆச்ரித பக்ஷபாதம் உனக்குத் தெரியாது போலும்; ஒரு பிராட்டிக் காகத் தென்னிலங்கை செற்றவர்காண்;
இந்திரனுக்காக மாவலியை வலிதொலைத்து மூவுலகளந்தவர்காண்;
பாண்டவர்கட்குப் பக்ஷபாதியாயிருந்து தேரை நடத்தினவர்காண்‘ என்று சில சேஷ்டிதங்களை யெடுத்துக் கூற,
‘ஆமாம் தோழீ!, எல்லாம் நானுமறிவேன்; அவை யெல்லாம் வஞ்சகச் செயலத்தனையே காண்;
நான் முடியாமலிருக்க மாட்டேன்‘ என்று தன் உறுதியை வெளியிடுகிறாளிதில். பரகாலநாயகி.

தென்னிலங்கை யரண் சிதறி அவுணன் மாளச் சென்றுலக மூன்றினையும் திரிந்தோர் தேரால்,
மன்னிலங்கு பாரதத்தை மாள வூர்ந்த வரையுருவின் மாகளிற்றைத் தோழீ, என்றன்
பொன்னிலங்கு முலைக்குவட்டில் பூட்டிக் கொண்டு போகாமை வல்லேனாய்ப் புலவி யெய்தி,
என்னிலங்க மெல்லாம்வந் தின்ப மெய்த எப்பொழுதும் நினைந்துருகி யிருப்பன் நானே.

பதவுரை

தோழீ–வாராய் தோழியே!,
தென் இலங்கை-தென்னிலங்கையிலுள்ள
அரண்–கோட்டைகள்
சிதறி–அழிந்து
அவுணன் மாள–இராவணனும் முடியும்படியாக
சென்று–(ஆங்கு) எழுந்தருளி (வெற்றி பெற்றவரும்)
உலகம் மூன்றி னையும் திரிந்து-(த்ரி விக்கிரமாவதார காலத்தில்) மூவுலகங்களையும் வியாபித்தவரும்
மன் இலங்கு–அரசர்கள் விளங்கா நின்ற
பாரதத்தை மாள–பாரத யுத்தம் முடியும்படியாக
ஓர் தேரால் ஊர்ந்த–ஒரு தேரைக் கொண்டு நடத்தின
வரை உருவின் மா களிற்றை–மலை போன்ற உருவங்கொண்ட பெரிய யானை போன்ற பெருமானை,
என் தன்–என்னுடைய
பொன் இலங்கு முலை குவட்டில்–பசலை நிறம் படர்ந்த முலைகளாகிற கம்பத்திலே
பூட்டிக்கொண்டு-அணைத்துக்கொண்டு
போகாமை வல் லேன் ஆய்-அப்பால் போகவொண்ணாதபடி தடுத்து வளைக்க வல்லவளாகி
புலலி எய்தி–அவரைப் பிரிந்துபட்ட கருத்தமெல்லாம் அவரெதிரே பட்டு
என்னில் அங்கம் எல்லாம் வந்து இன்பம் எய்த-என்னுடைய எல்லா அவயவங்களும் என்னிடத்தே வந்து சேர்ந்து ஆனந்த மடையும் படியாக
எப்பொழுதும்-எல்லாக் காலத்திலும்
நான்-நான்
நினைந்து-அவரையே சிந்தித்து
உருகி இருப்பேன்-முடிந்து பிழைப்பேன்.

தென்னிலங்கை யரண் சிதறி =
மேலே “வரையுருவின் மாகளிற்றை“ என்கையாலே மத யானையின் வியாபாரமாகச் சில சேஷ்டிதங்களைப் பேசுகிறாள்.
(தோழி சொன்ன சேஷ்டிதங்களை அநுபவித்துப் பேசுகிறபடி.)
ஒரு மதயானை வழிபோகா நின்றால் எதிரே கண்ட வற்றையெல்லாம் கையாலும் காலாலும் அழித்துக்கொண்டு போமோபோலே
கர தூஷ்ணாதி களைக் கொன்றும் வாலியை வதைத்தும் கடற்கரையிலே சென்று கடலை அணை செய்து
இலங்கையை அமைதிப்படுத்தின படியைக் கண்டபோதே இராவணன் செத்துப் போனவனாக ஆயினான்
என்பது தோன்றப் பாசுரம் தொடுத்திருக்குமழகு காண்மின்.

(தென்னி லங்கை யரண் சிதறி அவுணன் மாளச் சென்று)
பெருமாள் போன போக்கிலேயே இராவணன் முடிந்தானென்கை. ஒருபிராட்டிக்காக அவர் பண்ணின யானைத்தொழில்
இது வன்றோ என்று தோழிசொல்ல
‘ஆமாம், அவர் பரம ப்ரணயிதான்; அபலைகளாயிருப்பாரை அகப்படுத்திக் கொள்வதற்காகச் செய்த
செயலாகையாலே பகட்டுக் காண்‘ என்று கழித்துப் பேசுகிறபடி இது.

உலகமூன்றினையுந்திரிந்து =
உலகளந்தபடியை நினைக்கிறது இங்கு. ஒரு மதயானை யதேஷ்டமாகத் திரியுமாபோலே
எல்லார் தலைகளிலும் திருவடியை யிடடத் திரிந்தவாறு.
‘அந்ய சேஷத்வத்தாலும் ஸ்வாதந்த்ரிய ப்ரதிபத்தியாலும் விமுகராயிருப்பவர்களின் தலைகளிலும் திருவடியை வைத்து
உய்வு பெறுத்து மவர்காண்‘ என்று தோழிசொல்ல;
ஆமாம், அவர் விமுகர்தலைகளிலே திருவடியை வைப்பவரேயன்றி
“அடிச்சியோந் தலைமிசை நீயணி யாய் ஆழியங்கண்ணாவுன் கோலப்பாதம்“ என்று
பல் பன்னிரண்டும் காட்டி இரப்பவர் கட்கு முகங்கொடுக்கும் தயாளு அல்லர் காண் என்று சொல்லிக் காட்டுகிறபடி.

ஓர் தேரால் மன்னிலங்கு பாரதத்தை மாளவூர்ந்த =
எதிரிகளான் துரியோதனாதியர் கிருஷ்ணன் ஆயுதமெடுக்கவேண்டா‘ என்றார்களேயல்லது
‘ஸாரதியாய் நிற்கவேண்டா‘ என்றும் சொல்லவில்லையே;
ஆகையாலே ஸாரதியாய் நின்று ஒரு தேராலே ப்ரதிபக்ஷங் களை அழியச் செய்தானாயிற்று.
“பந்தார் விரலாள் பாஞ்சாலி கூந்தல் முடிக்கப் பாரதத்துக், கந்தார் களிற்றுக் கழன்மன்னர் கலங்கச்
சங்கம் வாய்வைத்தான்“ என்கிறபடியே த்ரௌபதியின் குழலை முடிப்பிக்கைக்காக அவர் பண்ணின வியாபாரமன்றோ வென்று தோழி சொல்ல;
ஒருத்திக்காக இப்படி காரியஞ் செய்கிறவனென்று நாட்டாரைப் பகட்டுகைக்காகச் செய்தாரித்தனை;
தம்மையே புகலாக நம்பியிருப்பாருடைய கூந்தலை விரிப்பிக்குமவர் காண் என்று சொல்லுதல் இங்கு உள்ளுறை.

ஆக இப்படிப்பட்ட வரையுருவின் மாகளிற்றை =
திண்மையில் மலைபோன்று செருக்கில் ஆனை போன்றிருக்கின்ற அவரை. (தோழீ!) அன்னவரை நான்
என்ன பாடுபடுத்தப் போகிறேன் காணாய் தோழீ! ; நீ விலக்காம லிருக்கவேணும்;
விலக்காதிருந்தாயாகில் அவர் படும் பாடுகளை யெல்லாம் காணலாமென்கை.

என்றன் பொன்னிலங்கு முலைக் குவட்டில் பூட்டிக்கொ்ணடு =
என்கையில் ப்ரஹ்மாஸ்த்ரமிருக்க எனக்கு வெல்ல வொண்ணாத நிலமுண்டோ?
எம்பெருமானாகிற அந்த மதயானை என்னுடைய முலையாகிற ஸ்தம்பத்தோடே சேர்த்துக் கொண்டு இறுக்கிக் கட்டிவிடுவேன்;
முகங்கொடுத்துப் பேசமாட்டேன், வெண்ணெய் திருடின கண்ண பிரானை யசோதை உரலிலே கட்டிப் போட்டு வைத்தாப் போலே,
என்னைப் படுகொலை யடித்த பெருமானை முலைக் குவட்டிலே கட்டிப் போடடு வைப்பேன்;
இதுவாயிற்று அவனுக்கு நான் செய்யும் பெரிய சிக்ஷ. என்னிடத்திலே முகம் பெறாமையாலே அவன் ஓடிப்போகத் தேடுவேன்;
(போகாமை முலைக்குவட்டில் பூட்டிக்கொண்டு)
“குற்றமற்ற முலைதன்னைக் குமரன் கோலப் பணைத் தோளோடு, அற்றகுற்ற மவைதீர அணைய வமுக்கிக் கட்டீரே“
என்கிறபடியே அவனாலும் நெகிழ வொண்ணாதபடி கட்டிப் போட்டு வைப்பேன்.

அவன் வந்து முகங்காடடினால் நெஞ்சு மேல்விழாதிருக்க வேணும்;
அவனை ஒரு சரக்காகவே நினையாமல் துரும்பாக நினைப்பேனாக வேணும்;
நீ அவனுக்குப் புருஷகாரமாக நிற்காம லிருக்கவேணும்; இவ்வளவும் பெற்றேனாகில் என் எண்ணம் ஈடேறும் என்ற கருத்துப்பட,
‘வல்லேனாய்‘ என்கிறாள்.

(புலவி யெய்தி)
அவனைப் பிரிந்து பட்ட வருத்தமெல்லாம் அவன் கண்முன்னே படக்கடவேனென்கிறாள்.
அன்றியே,
அவனைப் பிரி்ந்து நாம் பட்டபாடெல்லாம் அவன்றான் என்முன்னே படும்படி பண்ணக்கடவே னென்கிறாள் என்னவுமாம்.
இப்பொருளில், எய்தி என்றது‘ ‘எய்த‘ என்றபடி: எச்சத்திரிபு.

என்னில் அங்கமெல்லாம் வந்து இன்பமெய்த =
இப்போது ஸம்ச்லேஷிப்பதும் மறுபடியும் விச்லேஷிப்பதும் மீண்டும் ஸம்ச்லேஷிப்பதும் மீண்டும் விச்லேஷிப்துமாகி
மேன்மேலும் வருத்தங்கட்டு இலக்காயிராதபடி அவன் கண் வட்டத்திலே முடிந்து பிழைக்கடவேனென்கை.
கண் கை கால் முலை முதலிய ஸகல அவயவங்களும் முடியக் கடவன.
முடிந்து போவதே பேரின்ப மெய்துதலாம் இங்கு.
ஏழையாய்ப் பெரிய குடும்பியாயிருக்கு மவன் க்ஷாம காலத்தில் குடும்பத்தினுடைய பசியும் தன் பசியும் பொறுக்க மாட்டாமையாலே
குடும்பத்தோடு ஆற்றிலே விழுந்து முடிந்து மகிழக்கடவேனென்று நினைக்குமாபோலே இவளும் நினைக்கிறாளாயிற்று.
அவன் வந்தவாறே இந்த எண்ணத்தை மாற்றிக் கொண்டு ஸம்ச்லேஷிக்க வொருப்படுவேனென்று நினைக்க வேண்டா;
எப்போதைக்கும் இதுவே துணிவு. நினைத்த மாத்திரத்திலே உருகிப் போவதே என் பிரக்ருதி காண்மின் என்கிறாள்.

இப்பாட்டில் எல்லை கடந்த ப்ரணய ரோஷத்தை வெளியிடும் முகத்தால் தன்னுடைய ஆற்றாமையின் கனத்தை வெளியிட்டவாறு.
இனிப் பெற்றல்லது தரிக்க வொண்ணாத படியான ‘முடிந்தவவா‘ என்கிற பரமபக்தி முதிர்ந்தமை சொன்னபடி.

வைகல் பூம் கழிவாய் -என்னும் திருப்பதிகத்தில் தூது விட்டு முகம் காட்டாமையால்
பிரணய ரோஷம் தலை எடுத்து ஊடல் செய்தால் போலே
இதில் பரகால நாயகியும் ஊடுகின்றாள்
ஆற்றாமை கனத்து
தூது விட்டு
சுப நிமித்தங்கள் தோன்ற
கடுக வந்து நிற்கப் போகிறான்
முகம் காட்டாது -அவன் கண் வட்டத்திலே முடிந்து பிழைப்பது நன்று என்று நிச்சயித்து
முடிவுக்கு பூர்வாங்கமாக தெளிந்து
உள்ளே உருகி நைந்து இருந்தாலும் மேலுக்கு தெளிவு பெற்றால் போலே இருக்க
தோழியானவள் -மலையோடு பொருத மல்லர் உண்டோ
நல்ல வென் தோழி நாகணை மிசை நம்பரர் செல்வர் பெரியர் சிறு மானிடர் நாம் செய்வது என்
பிரணயிகள் இடம் செய்யத் தாக்கத்தை பிரபுக்கள் இடம் செய்யவோ என்று சொல்ல
அவன் உடைய பிரபுத்வம் படப் போகிற பாட்டை பார்க்கப் போகிறாய் என்ன
தோழி யானவள்
அவனுடைய ஆஸ்ரித பஷபாதம் அறியாயோ
பிராட்டிக்காக இலங்கை அழித்து
இந்த்ரனுக்காக உலகு அளந்து
பாண்டவர்களுக்காக பலவும் செய்து -சொல்ல
எல்லாம் வஞ்சக செயல் அத்தனை காண்
நான் முடியாமல் இருக்க மாட்டேன் -என்று தன் உறுதியை வெளியிடுகிறாள்
புலவி எய்தி -அவரை பிரிந்த வருத்தம் எல்லாம் அவர் எதிரே பட்டு
என்னில் அங்கம் எல்லாம் வந்து இன்பம் எய்த -என்னுடைய எல்லா அவயவங்களும்
என்னிடத்தே வந்து சேர்ந்து ஆனந்தம் அடையும்படி
எப்பொழுதும் நான் நினைந்து உருகி இருப்பன் -எல்லா காலத்திலும் நான் அவரையே சிந்தித்து முடிந்து பிழைப்பேன் என்கிறாள்-

தென்னிலங்கை அரண் சிதறி அவுணன் மாளச் சென்று
ஒரு மத்த கஜம் -மேலே வரை உருவின் மத களிற்றை -என்பர்
வியாபாரமாக சில சேஷ்டிதங்கள் பேசுகிறாள்
தோழியின் வார்த்தையை அனுவதித்து
மத கஜம் கண்டவற்றை அழித்து போவது போலே
கர தூஷணாதிகள் முடித்து
வாலியை வதைத்து
கடல் கரையிலே சென்று கடலை அடைத்து
இலங்கையை அடை மதில் படுத்தி
பெருமாள் போன போக்கிலே இராவணன் முடிந்தான்
பிராட்டிக்காக செய்த செயல் என்று தோழி சொல்ல
ஆமாம் அவன் பரம பிரணயி தான்
அபலைகளாய் இருப்பாரை அகப்படுத்திக் கொள்வதற்காக
செய்த செயலாகையாலே இது பகட்டு காண் -என்று கழித்து பேசுகிறபடி-

உலகு மூன்றினையும் திரிந்து
மத கஜம் எதேஷ்டமாக திரியுமா போலே
எல்லார் தலைகளிலும் திருவடி இட்டு திரிந்த படி
அந்ய சேஷத்வத்தாலும்
ஸ்வா தந்த்ரய பிரதிபத்தியாலும்
விமுகராய் இருப்பவர்களின் தலைகளிலும் திருவடியை வைத்து உய்வு பெறுத்துமவர் காண் என்ன
ஆமாம் விமுகர் தலைகளில் வைப்பவர்
அடிச்சியோம் தலை மிசை நீ அணியாய் ஆழி அம் கண்ணா வுன் கோலப் பாதம் -என்று
பல் பன்னிரண்டும் காட்டி இரப்பார்க்கு முகம் கொடுக்கும் தயாளு அல்லர் காண் -என்று சொல்லிக் காட்டுகிறபடி-

ஒரு தேரால் மன்னிலங்கு பாரதத்தை மாள ஊர்ந்த
பந்தார் விரலாள் பாஞ்சாலி கூந்தல் முடிக்க பாரதத்துக்கு
கந்தார் களிற்றுக் கழல் மன்னர் கலங்க சங்கம் வாய் வைத்தான் –
த்ரௌபதி குழல் முடிக்க செய்து அருளிய வியாபாரம் என்று தோழி சொல்ல
நாட்டாரை பகட்டுக்கைக்காக செய்தான்
தம்மையே புகலாக நினைந்து இருப்பார் உடைய குழலை விரிப்பவர் அல்லர் காண்

இப்படிப் பட்ட
வரை வுருவின் மா களிற்றை
செருக்கி ஆனை போன்று இருக்குமவரை என்ன பாடு படுத்தப் போகிறேன் பார்
தோழி நீ விலக்காமல் மட்டும் இருந்தால் போதும்

என் தன் பொன்னிலங்கு முலைக் குவட்டில் பூட்டிக் கொண்டு
என்னிடம் பிரஹ்மாஸ்திரம் உண்டே
அந்த மத யானையை முலை யாகிற ஸ்தம்பத்துடன் சேர்த்துக் கொண்டு இறுக்கிக் கட்டி விடுவேன்
முகம் கொடுத்து பேச மாட்டேன்
என்னிடத்தில் முகம் பெறாமையால் ஓடிப் போக தேடுவன்

போகாமை முலைக் குவட்டில் பூட்டிக் கொண்டு
குற்றமற்ற முலை தன்னை குமரன் கோலப் பணைத் தோளோடு
அற்ற குற்றமவை தீர அணைய வமுக்கிக் கட்டீரே -என்கிறபடியே
அவனாலும் அவிழ்க்க ஒண்ணாத படி கட்டிப் போட்டு விடுவேன்

வல்லேனாய்
அவன் வந்து முகம் காட்டினால் நெஞ்சு மேல் விழாது இருக்க வேணும்
அவனை சரக்காக நினையாமல் துரும்பாக நினைத்து இருக்க வேணும்
நீ அவனுக்கு புருஷாகாரமாக நிற்காமல் இருக்க வேணும்
இவ்வளவும் பெற்றேனாகில் என் எண்ணம் ஈடேறும்

புலவி எய்தி
அவனைப் பிரிந்து பட்ட வருத்தம் எல்லாம் அவன் கண் முன்னே படக் கடவன்
அன்றிக்கே
அவனைப் பிரிந்து நாம் பட்டது எல்லாம் அவன் தானே என் முன்னே படும்படி பண்ணக் கடவேன்
இப்பொருளில் எய்தி என்றது எய்த என்றபடி -எச்சத் திரிபு-

என்னில் அங்கம் எல்லாம் வந்து இன்பம் எய்த
இப்போது சம்ஸ்லேஷிப்பதும்
பின்பு விஸ்லேஷிப்பதும்
மீண்டும் சம்ஸ்லேஷிப்பதும்
விஸ்லேஷிப்பதும்
மேன்மேலும் வருத்தங்களுக்கு இலக்காகாமல்
அவன் கண் வட்டத்திலேயே முடிந்து பிழைக்கக் கடவேன் -என்கை
கண் கை கால் முலை -சகல அவயவங்களும் முடியக் கடவன
பெரிய குடும்பு ஏழையாய் அனைவரும் ஆற்றில் விழுந்து முடிய நினைக்குமா போலே
அவன் வந்தவாறே இந்த எண்ணம் மாற்றி சம்ஸ்லேஷிக்க ஒருப்பட வேண்டா
இந்த முடிவில் உறுதியாக -எப்போதும் இதே துணிவு
நினைத்த மாத்ரத்திலே உருகிப் போவது என் பிரகிருதி காண்

ஆற்றாமையின் கனத்தை அறிவித்தவாறு
பெற்று அல்லது தரிக்க ஒண்ணாத படியான
முடிந்த அவா என்கிற பரம பக்தி முதிர்ந்தமை சொன்ன படி-

————————————————————————

கீழ்ப்பாட்டில் ப்ரணயரோஷந் தலையெடுத்து ஒரு நிலை நின்றார்; அதாவது
‘எம்பெருமான் வந்தவாறே அவனுக்கு ஏதொவொரு சிஷை செய்து தாம் முடிந்து பிழைப்பதாகப் பேசினார்.
அவன் வந்தாலன்றோ அது செய்யலாவது; வரக் காணாமையாலே கதறிக் கூப்பிடுகிறார்.
விபவாவதாரங்களையும் அர்ச்சாவதாரங்களையும் பேசிக் கதறுகிறார்.
நம்மாழ்வார்க்கு * முனியேநான் முகனே யென்கிற திருவாய்மொழி போலே யிருக்கிறதாயிற்று இவர்க்கு இப்பாசுரம்.

அன்றாயர் குலமகளுக் கரையன் றன்னை அலைகடலைக் கடைந்தடைத்த அம்மான் றன்னை,
குன்றாத வலியரக்கர் கோனை மாளக் கொடுஞ்சிலைவாய்ச் சரந்துரந்து குலங்க ளைந்து
வென்றானை, குன்றெடுத்த தோளி னானை விரிதிரைநீர் விண்ணகரம் மருவி நாளும்
நின்றானை, தண்குடந்தைக் கிடந்த மாலை நெடியானை அடிநாயேன் நினைந்திட் டேனே.

பதவுரை

அன்று–முன் பொருகாலத்தில்
ஆயர் குலம் மகளுக்கு–இடைக் குலத்துச் சிறந்த மகளாக அவதரித்த நப்பினைப் பிராட்டிக்கு
அரையன் தன்னை–நாயகரானவரும்
அலை கடலை கடைந்து-அலையெறிகின்ற கடலைக் கடைந்தவரும்
அடைத்த அம்மான் தன்னை–(அதில்) அணை கட்டின ஸ்வாமி யானவரும்
குன்றாத வலி–குறைதலில்லாத மிடுக்கை யுடைய
அரக்கர் கோனை மாள–இராவணன் முடியும்படியாக
கொடும் சிலைவாய்–கொடிய வில்லிலே
சரம் துரந்து–அம்புகளைத் தொடுத்துப் பிரயோகித்து
குலம் களைந்து வென்றானை–அரக்கர் குலங்களை நிர்மூலமாக்கி வெற்றி பெற்றவரும்
குன்று எடுத்த–கோவர்த்தன மலையைக் குடையாக எடுத்த
தோளினானை–புஜத்தை யுடையவரும்
விரி திரை நீர் விண்ணகரம் மருவி–பரந்த அலைகளை யுடைய பொய்கைகள் நிரம்பிய திருவிண்ணகரிலே பொருந்தி
நாளும் நின்றானை–எப்போதும் ஸந்நிதி பண்ணி யிருப்பவரும்
தண் குடந்தை–குளிர்ந்த திருக்குடந்தை யிலே
கிடந்த மாலை–பள்ளிக் கொண்டிருக்கும் ஆச்ரித வத்ஸலரும்
நெடியானை–ஸர்வோத்தமருமான பெருமானை
நாய் அடியேன்–நாய் போல் நீசனான அடியேன்
நினைந்திட்டேன்–நினைத்தேன்.

அன்று ஆயர்குலமகளுக்கு அரையன்றன்னை =
தம்மோடொத்த திவ்ய மஹிஷிகளுக்கு உதவினபடியைப் பேசத் தொடங்கி முந்துறமுன்னம்
நப்பின்னைப் பிராட்டிக்கு உதவினபடியைப் பேசுகிறார். ‘அரையன்‘ என்பது ‘அரசன்‘ என்ற பதத்தின் போலி.
நப்பின்னையின் துயரத்தைத் தொலைத்த பிரபு என்றபடி.

அலைகடலைக் கடைந்தடைத்த அம்மான் கன்னை =
கடலைக் கடைந்ததும் கடலில் அணைகட்டினதும் பிராட்டிக்காக.
பிராட்டியைப் பெறுவதற்காகக் கடலைக் கடைந்தது; அவளுடைய தனிமையைத் தீர்க்கைக்காகக் கடலை யடைத்தது.
தேவர்கட்கு அமுதங்கொடுப்பதற்காகவன்றோ கடல் கடைந்த தென்னில்; அன்று;
பிராட்டியைப் பெறுதலே முக்கிய மான பலன்; மற்றது ஆநுஷங்கிகம் என்க.
“விண்ணவரமுதுண அமுதில்வரும் பெண்ணமுதுண்ட எம்பெருமானே!“ என்றாரே இவர் தாமே.

(குன்றாத வலியரக்கர் இத்யாதி)
வர பலத்தையும் புஜ பலத்தையும் பற்றாசாகக் கொண்டு பர ஹிம்ஸையே போது போக்காயிருக்கும்
ராக்ஷஸ ஜாதிக்கெல்லாம் தலைவனாயிருந்த இராவணன் தொலையும்படியாக ஸ்ரீசாரங்கவில்லிலே அம்புகளைத் தொடுத்து
நடத்தி வெற்றி பெற்ற வீறுயுடைமை சொல்லுகிறது.
ராக்ஷஸ குலத்தவரான விபீஷணாழ்வான் வாழ்ந்து போயிருக்க, ‘குலம் களைந்து‘ என்னலாமோ வென்னில்;
அவர், தம்முடைய நினைவாலும் இராவணனுடைய நினைவாலும் சக்ரவர்த்தித் திருமகனாருடைய நினைவாலும்
ராக்ஷஸ குலத்தில் நின்றும் பிறிகதிர்ப்பட்டு இக்ஷ்வாகு குலத்திற்புகுந்து விட்டாரென்பது
வான் மீகி முதலிய முன்னோர்களின் ஸித்தாந்தம். இது ஸ்ரீவசநபூஷணாதிகளில் விரியும்.

இராவணனொருவனே குற்றமியற்றினவனாயினும் அவனுடைய ஸம்ஸர்க்கமே ஹேதுவாகக் குலங்குலமாக நசித்தொழிந்தது.
“கேசவன் தமர் கீழ்மேலெமரேழெழுபிறப்பும், மாசதிரிது பெற்று நம்முடை வாழ்வு வாய்க்கின்றவா“ என்கிறபடியே
ஒருவன் அநுகூலனானால் அவனுடைய ஸம்பந்தி ஸம்பந்திகளும் உஜ்ஜீவிக்குமாபோலே
ஒருவன் பிரதிகூலனான இராவணனுடைய ஸம்ந்தத்தாலே ராக்ஷஸகுலமடங்கலும் பாழ்பட்டன;
அது கூலனான ஸுக்ரீவனுடைய ஸம்பந்தத்தாலே வாநரஜாதியடங்கலும் வாழ்ச்சி பெற்றன.

குன்றெடுத்த தோளினானை =
ஆயர்க்கு நேர்ந்த ஆபத்தைப் போக்கினது ஒரு பெருமையோ?
என்னுடைய ஆபத்தைப் போக்கவேண்டாவோ வென்பது இங்கு உள்ளுறை.

விரிதிரை நீர் விண்ணகரம் மருவி நாளும் நின்றானை =
கீழ்ச்சொன்ன விபவாதாரங்களுக்குப் பிற்பட்டவர்களையும் அநுக்ரஹிக்கைக்காகவன்றோ
திருவிண்ணகரிலே நித்ய வாஸம் பண்ணுகிறது.
திருவிண்ணகர் – ஒப்பிலியப்பன் ஸந்நிதி என்றும், உப்பிலியப்பன் ஸந்நிதி என்றும் வழங்கப்பெறும்.
சோழநாட்டுத் திருப்பதிகளுள் ஒன்று.

திருவிண்ணகரிலே நின்றான், திருக்குடந்தையிலே கிடந்தான்;
நின்றால் எங்கேனும் புறப்பட்டுப்போக நினைவுண்டு போலும் என்று நினைக்கும்படியாயிருக்கும்;
பள்ளிகொண்டிருந்தால் அங்ஙனே நினைப்பாரில்லையே:
‘ஸம்ஸாரம் கிழங்கெடுத்தாலல்லது போகோம்‘ என்றுகிடக்கிற கிடையாயிற்று.

(மாலை) “மாயாய்ப் பிறந்த நம்பியை மாலே செய்யும் மணாளனை“ என்கிறபடியே
தானும் வ்யாமோஹ சாலியாய் அடியார்களையும் வ்யாமோஹ சாலிகளாக ஆக்குமவன் என்க.

(நெடியானை)
இப்படிப்பட்டவன் இப்போது எனக்கு எட்டாதவனாயினானென்று காட்டுகிறபடி.

அடிநாயேன் நினைந்திட்டேனே =
அவனுடைய மேன்மைக்கு எல்லையில்லாதாப் போலே என்னுடைய தாழ்வுக்கும் எல்லையில்லை;
திறந்த வாசலெல்லாம் நுழைந்து திரியும் ஐந்து போலே மிகத் தண்ணியன்.
இப்படிப்பட்ட நான் அப்படிப்பட்ட பரம புருஷனை நினைந்திட்டேன் –
அம்மானாழிப் பிரானவன் எவ்விடத்தான் யானார், எம்மா பாவியர்க்கும் விதி வாய்க்கின்று வாய்க்குங்கண்டீர்‘
என்றாப் போலே, மிக நீசனான அடியேனுக்கும் விதி வசத்தாலே நேர்ந்த இக்கலவி
நித்யமாய்ச் செல்ல வேணுமென்று நினைந்திட்டே னென்றவாறு.

பிரணய ரோஷம் உடன் பேசினார் கீழ்
ஆகில் வந்தால் அன்றோ செய்யக் கடவது
வரக் காணாமையாலே கதறிக் கூப்பிடுகிறார்
விபவாதாரங்களையும் அர்ச்சாவதாரங்களையும் பேசிக் கதறுகிறார்
முனியே நான்முகனே -திருவாய் மொழி போலே யாயிற்று இப்பாசுரம்

அன்று ஆயர் குல மகளுக்கு அரையன் தன்னை –
நப்பின்னை பிராட்டிக்கு உதவினபடி
அரையன் -அரசன்
நப்பின்னை துயரம் தொலைத்த பிரபு

அலை கடல் கடைந்த அம்மான் தன்னை
கடலை கடைந்ததும் கடலில் அணை கட்டினதும் பிராட்டிக்காக
பிராட்டி பெற கடைந்து தனிமை தீர்க்க அணை கட்டி
மற்ற பலங்கள் ஆநு ஷங்கிகம்
விண்ணவர் அமுதுண்ண அமுதில் வரும் பெண்ணமுது உண்ட எம்பெருமானே -என்றார் இவர் தாமே

குன்றாத வலி அரக்கர் -இத்யாதி
இராவணன் தொலையும்படி ஸ்ரீ சாரங்க வில்லாலே அம்புகளை தொடுத்து வெற்றி பெற்ற வீறுடைமை
குலம் களைந்து என்றது ஸ்ரீ விபீஷண ஆழ்வான் இஷ்வாகு குலத்தில் புகுந்ததால்
கேசவன் தமர் கீழ் மேல் எமர் ஏழ் பிறப்பும் மா சதிரிது பெற்று நம்முடை வாழ்வு வாய்க்கின்றவா -என்கிறபடியே
அனுகூலர் ஆனால் சம்பந்தி சம்பந்திகளும் உஜ்ஜீவிக்குமா போலே
பிரதி கூல சம்பந்தத்தால் ராஷச குலம் அடங்கலும் பாழ்பட்டன
சுக்ரீவன் சம்பந்தத்தால் வானர ஜாதி அடங்கலும் வாழ்ச்சி பெற்றன

குன்று எடுத்த தோளினானை
ஆயருக்கு நேர்ந்த ஆபத்தை போக்கினது பெருமையோ
எனது ஆபத்தை போக்க வேண்டாவோ

விரி திரை நீர் விண்ணகரம் மருவி நாளும் நின்றானை -தண் குடந்தை கிடந்த மாலை –
பிற் பட்டார்களுக்கும் அனுக்ரஹிக்கைக்காக அன்றோ
திரு விண்ணகரில் நித்ய வாசம் பண்ணுகிறது
திரு விண்ணகரிலே நின்றான்
திருக் குடந்தையிலே கிடந்தான்
நின்றால் புறப்படுவான் என்று நினைக்க தோன்றும்
கிடந்தால் -சம்சாரம் கிழங்கு எடுத்தால் அல்லது போகோம்-என்று கிடக்கிற கிடையாகுமே

மாலை –
மாலாய் பிறந்த நம்பியை மாலே செய்யும் மணாளனை
தானும் வ்யாஹமோசாலியாய்
அடியார்களையும் வ்யாஹமோசாலியாய்-ஆக்குமவன்

நெடியாய் –
இப்படிப் பட்டவன் எனக்கு எட்டாமல் இருக்கிறானே என்று காட்டுகிறாள்

அடி நாயேன் நினைந்திட்டேனே –
அவனுடைய மேன்மைக்கு எல்லை இல்லை போலே
என்னுடைய தாழ்வுக்கு எல்லை இல்லை
திறந்த வாசல் எல்லாம் நுழைந்து திரியும் ஜந்து போலே மிகவும் தண்ணியன்
இப்படிப் பட்ட நான் அந்த நெடியானை நினைந்திட்டேனே
அம்மான் ஆழிப்பிரான் அவன் எவ்விடத்தான் யான் யார்
எம்மா பாவியர்க்கும் விதி வாய்க்கின்றது வாய்க்கும் கண்டீர்
என்றால் போலே முகவும் நீசனான அடியேனுக்கும்
விதி வசத்தாலே நேர்ந்த இக் கல்வி
நித்தியமாய் செல்ல வேணும் என்று நினைந்திட்டேன் -என்றவாறு –

————————————————————

இத்திவ்வியப் பிரபந்தம் கற்பார்க்குப் பயனுரைத்துத் தலைகட்டும் பாசுரம் இது.
“பன்னிய நூல் தமிழ் மாலைவல்லார் தொல்லைப் பழவினையை முதலரிய வல்லார் தாமே“ என்று
பயனுரைக்கும் முகத்தால்
அப்படிப்பட்ட பேற்றைத் தாம் பெற்று மகிழ்ந்தமை தொனிப்பிக்கப்பட்டதாகும்.

மின்னுமா மழைதவழும் மேக வண்ணா விண்ணவர்தம் பெருமானே அருளாய், என்று,
அன்னமாய் முனிவரோ டமர ரேத்த அருமறையை வெளிப்படுத்த அம்மான் றன்னை,
மன்னுமா மணிமாட வேந்தன் மானவேல் பரகாலன் கலியன் சொன்ன பன்னியநூல்
தமிழ்மாலை வல்லார் தொல்லைப் பழவி னையை முதலரிய வல்லர் தாமே.

பதவுரை

முனிவரோடு அமரர் ஏத்த-முனிவர்களும் தேவர்களும் ஸ்தோத்ரம் பண்ண அன்னம் ஆய் ஹம்ஸ ரூபியாய் அவதரித்து
அருமறையை-அருமையான வேதங்களை
வெளிப்படுத்த-பிரகாசிப்பித்த
அம்மான் தன்னை-ஸர்வேச்வரன் விஷயமாக,
மன்னு மாமாணி மாடம்மங்கை வேந்தன்-சாச்வதமான சிறந்த மணிமாடங்களை யுடைய திருமங்கை நாட்டுக்குத் தலைவரும்
மானம் வேல்-பெருமை தங்கிய வேற்படையை யுடைவரும்
கலியன்–திருமங்கையாழ்வார்
மின்னும் மா மழை தவழும் மேகம் வண்ணா-‘மின்னலோடுகூடியும் மிகவும் குளிர்ந்தும் தவழ்ந்து வருகின்ற மேகம் போன்ற வடிவையுடையவனே!
விண்ணவர் தம் பெருமானே–தேவாதி தேவனே!
அருளாய்-அருள்புரியவேணும்
என்று சொன்ன–என்று பிரார்த்தித்து அருளிச் செய்த
பன்னிய -மிகவும் பரம்பின
தமிழ் நூல்-தமிழ் சாஸ்த்ரமாயிராநின்ற
மாலை-இச் சொல் மாலையை
வல்லார் தாம்–ஓத வல்லவர்கள்
தொல்லை–அநாதியான
பழ வினையை–முன்னே வினைகளை
முதல்-வேரோடே
அரிய வல்லார்–களைந்தொழிக்க வல்லவராவர்.

மின்னுமா மழைதவழும் மேகவண்ணா =
மின்னி முழங்கி வில்லிட்டு அழகியதாய் வர்ஷிப்பதொரு காளமேகம் போன்ற வடிவுபடைத்த பெருமானே!
இங்கே வியாக்கியான வாக்கியம் காண்மின்; –
அடிநாயேன் நினைந்திட்டேனே என்ற இவருடைய ஆர்த்த நாதத்தைக் கேட்டு இவருடைய தாபமெல்லாம் நீங்கும்படியாகக்
குளிர நோக்கிக் கொண்டு காளமேக நிபச்யாமமான வடிவோடே வந்து முகங்காட்டின படியைச் சொல்லுகிறது.“

விண்ணவர்தம் பெருமானே! அருளாய் என்று =
கீழ்ச்சொன்ன மின்னுமா மழைதவழும் மேகவண்ண வடிவை ஓவாத ஊணாக உண்டு களிக்கப்பெற்ற
அயர்வறுமமரர்களுக்கு அதிபதியே!,
கடலிலே வர்ஷிப்பது போலவும் மீனுக்குத் தண்ணீர் வார்ப்பது போலவும் அவர்களுக்கு உன்னைக் கொடுப்பது ஓரேற்றமோ?

(அருளாய்)
அவர்கள் உன்னை நித்யாநுபவம் பண்ணுமா போலே
நானும் உன்னை நித்யாநுபவம் பண்ணும்படி கிருபை பண்ண வேணும்

(என்று மன்னுமானமணி மாடமங்கை வேந்தன் மானவேற் பரகாலன் கலியன் சொன்ன பன்னிய நூல் தமிழ மாலை)
மங்கை நாட்டுக்கு அரசராய், வேல் பிடித்துப் பகைவெல்லுந் தொழிலிலே. ஊன்றிக்கிடந்தவர்
“அரசமர்ந்தானடி சூடுமரசையல்லால் அரவாகவெண்ணேன் மற்றரசுதானே“ என்றாற்போன்ற
அத்யவஸாயத்தின் கனத்தாலே இங்ஙனே பேசினாராயிற்று

எம்பெருமானும் அவனடியார்களும் உவந்து முடிமேற் கொள்ளும் பிரபந்தமாதலால் மாலை எனப்பட்டது.

ஆக இப்படிப்பட்ட திவ்ய ப்ரபந்தத்தை ஓதவல்லவர்கள்
அநாதியான ஸம்ஸாரத்தை யடியறுத்து
நித்ய கைங்கரியம் பெற்று வாழப் பெறுவரென்று பயனுரைத்துத் தலைக்கட்டினாராயிற்று.

நிகமத்தில் –
இப்பிரபந்தம் கற்பார்க்கு பலன் சொல்லி தலைக் கட்டுகிறார்
பன்னிய நூல் தமிழ் மாலை வல்லார் தொல்லைப் பழ வினையை முதலரிய வல்லார் தாமே -என்று
பயன் உரைக்கும் முகத்தால்
அப்படிப் பெற்ற பேற்றை தாம் பெற்று மகிழ்ந்தமை தொனிக்கப் பட்டதாகும்

மின்னு மா மழை தவழும் மேக வண்ணா
அடி நாயேன் நினைந்திட்டேன் -என்ற
இவருடைய ஆர்த்த நாதத்தைக் கேட்டு
இவருடைய தாபம் எல்லாம் நீங்கும் படியாக
குளிர நோக்கிக் கொண்டு
காள மேக நிபாஸ்யமான வடிவோடு
வந்து முகம் காட்டின படியை சொல்கிறது
விண்ணவர் தம் பெருமானே அருளாய் என்று
கீழ்ச் சொன்ன மின்னு மா மழை தவழும் மேக வண்ண
வடிவை ஓவாத ஊணாக உண்டு கழிக்கப் பெற்ற
அயர்வறும் அமரர்களுக்கு அதிபதியே
கடலிலே வர்ஷிப்பது போலேயும்
மீனுக்கு தண்ணீர் வார்ப்பது போலேயும்
அவர்களுக்கு உன்னைக் கொடுப்பது ஓர் ஏற்றமோ

அருளாய் –
அவர்கள் உன்னை நித்ய அனுபவம் பண்ணுமா போலே
நானும் உன்னை நித்ய அனுபவம் பண்ணும் படி
கிருபை பண்ண வேணும்

என்று மன்னு மா மணி மாட மங்கை வேந்தன் மான வேல் பரகாலன்
கலியன் சொன்ன பன்னிய நூல் தமிழ் மாலை
மங்கை நாட்டுக்கு அரசராய்
வேல் பிடித்து பகை வெல்லும் தொழிலிலே ஊன்றிக் கிடந்தவர்
அரசமர்ந்தான் அடி சூடும் அரசை அல்லால் அரசாக எண்ணேன் மற்று அரசு தானே -என்றால் போன்ற
அத்யாவசாயத்தின் கனத்தாலே இங்கனே பேசிற்றார் ஆயிற்று –
எம்பெருமானும் அவன் அடியார்களும் உகந்து முடி மேல் கொள்ளும் பிரபந்தம் ஆகையால் மாலை -எனப்பட்டது –
ஆக
இப்படிப் பட்ட திவ்ய பிரபந்தத்தை ஓத வல்லவர்கள்
அநாதியான சம்சாரத்தை அடி அறுத்து
நித்ய கைங்கர்யம் பெற்று
வாழப் பெறுவார் என்று
பயன் உரைத்து தலைக் கட்டுகிறார்-

——————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ P.B.A,ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்-
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திரு நெடும் தாண்டகம்-பாசுரங்கள்-21-25- -திவ்யார்த்த தீபிகை —

September 30, 2014

இத்திருத்தாண்டகம் மூன்று பத்தாக வகுக்கப்பட்டுள்ளது.
முதற்பத்துப் பாசுரங்கள் ஆழ்வார் தாமான தன்மையிலே யிருந்து பேசினவை
அதற்குமேல் பத்துப் பாசுரங்களாகிய நடுவிற்பத்து, தாய்பாசுரமாகச் சென்றது.
இனி, இதுமுதலான பாசுரங்கள் தலைமகள் பாசுரமாகச் செல்கின்றன.

பகவத்கீதையில் (10-9) “மச்சித்தா மதகதப்பராணா; போதயந்த; ப்ரஸ்பரம், கதயந்தச் சமாம் நித்யம் துஷ்யந்தி ச ரமந்திச. “
(அதாவது, சித்தத்தை நமக்கென்றே பறிகொடுத்து அப்படியே நம்மைப்பிரிந்தால் தரிக்கமாட்டாமல் பிராணனையும்
நம்அதீனமாக்கி, தாம்தாம் அனுபவித்த நம்குணங்களை யெடுத்து ஒருவர்க்கொருவர் சொல்லிக்கொண்டு
அப்படியே நாம்செய்த திவ்யசேஷ்டிதங்களையும் எடுத்துப் பேசிக்கொண்டு ஆனந்திக்கிறார்கள்.)
என்றுள்ள ச்லோகத்தை இத்திருத்தாண்டகத்தின் மூன்றுபதிகங்கட்கும் வாக்கியார்த்தமாக நிர்வஹிப்பர் பட்டர்.
* மச்சித்தா; * என்றதற்குப் பொருந்தியிருக்கும் முதற்பதிகம்;
*மத்கதப்ராணா; * என்றதற்குப் பொருந்தியிருக்கும் நடுவிற்பதிகம்;
* போதயந்த; ப்ரஸ்பரம் * என்றதற்குப் பொருந்தியிருக்கும் கடைப்பதிகம்.
தம்முடைய ஞானத்திற்கு எம்பெருமானையே இலக்காக்கி ஜ்ஞாந ப்ரதாநரான வ்யாஸ பராசராதி மஹர்ஷிகளின்
ரீதியிலே பேசுகையாலே முதற்பத்து (மச்சித்தா;) என்றபடியாகிறது;
தன் மூச்சடங்கி வேற்று வாயாலே பேசினதாகையாலே நடுவிற் பத்து (மத்கதப்ராணா;) என்றபடியாகிறது.
தோழிமார்களுக்குச் செய்தியறிவித்தும் தோழிமார்களின் வார்த்தைகளைக் கேட்டும் தரித்துப் பேசின தாகையாலே
இப்பத்து (போதயந்த; பரஸ்பரம்) என்றபடியாகிறது.

“அதர்சநே தர்சநமாத்ரகாமா; த்ருஷ்ட்வா டரிஷ்வங்கரஸைகலோலா;,
ஆலிங்கிதாயாம் புநராயதாக்ஷயாம் ஆசாஸதே விக்ரஹயோரபேதம்“
(கண்ணாற் காணாதளவில் ஒருதடவை கண்ணாற் காணப்பெற்றால் அமையும் என்று காதலிப்பர்கள்;
அப்படியே காணப்பெற்றுவிட்டால் ஒருகால் அணைத்துக் கொள்ளவேணும் என்று காமுறுவர்;
அப்படியே அணைத்துக்கொள்ளவும் பெற்றால் ‘இரண்டு சரீரமாக இருப்பதேன்?
இரண்டுடலும் ஓருடலாக ஒற்றுமைப்பட்டாலாகாதோ? என்று அபேதத்தை விரும்பிப் போருவர்கள்.) என்றொரு ஸுபாஷிதமுண்டு.
இதுவும் அடைவே மூன்று பத்துக்கும் வாக்கியார்த்தமாக அமையும். எங்ஙனேயென்னில்,
முதற்பத்தில் “எங்குற்ற யெம்பெருமானுன்னை நாடி ஏழையேனிங்ஙனமே யுழிதருகேனே“ என்று
அவனைக் காணவேணுமென்னுமாசை கிளர்ந்திருக்கின்றமை தோற்றச் சொல்லுகையாலே
* அதர்சநே தர்சநமாத்ர காமா; * என்றபடியாகிறது.
இரண்டாம் பத்தில் “முற்றாராவனமுலையாள்பாவை, மாயன் மொய்யகலத் துள்ளிருப்பாளஃதுங்கண்டு மற்றாள்“ என்று
நாச்சியாரைப்போலே தானுந் திருமார்பிலே அணைய வாசைப்பட்டமை தோற்றச் சொல்லுகையாலே
* த்ருஷ்ட்வா பரிஷ்வங்கரஸைகலோலா; * என்றபடியாகிறது.
இனி‘ இப்பத்தில் “கள்ளூரும் பைந்துழாய்மாலையானைக் கனவிடத்தில் யான் காண்பன் கண்டபோது,
புள்ளூரும்கள்வா! நீ போகாமைவல்லேனாய்ப் புலவியெய்தி என்னில் அங்கமெல்லாம் வந்தின்பமெய்த
எப்பொழுதும் நினைந்துருகியிருப்பன்நானே“ என்றும் சொல்லுகையாலே * ஆசாஸதே விக்ரஹயோரபேதம் * என்றபடியாகிறது.

‘காந்தர்வவிவாஹ மென்னப்படுகிற இயற்கைப் புணர்ச்சி புணர்ந்தாள் பெண்பிள்ளை‘ என்று கேள்விப்பட்ட திருத்தாயார்
‘நங்காய்! நங்குடிக்கிதுவோ நன்மை‘ என்று சீற,
மகளானவள் ‘அன்னை என்னோக்குமென் றஞ்சுகின்றேன்‘ என்கிறபடியே பயப்பட்டுத் தலைமகன் பக்கலில் செல்லாதிருக்க,
அவனும் என்னோவென்று சங்கைகொண்டவனாய் இவள்பக்கலிலே நேரேவரக்கூசி
இவளது அபிப்பிராயமறியவேணுமென்று பார்த்து, பிறரைத் தூதுவிடுவதிற்காட்டில் தானே
ஒரு வியாஜமாகவந்து கருத்தறிதல் நன்றென்று நினைத்து,
‘தலைவியானவள் ஊரைச் சூழ்ந்ததொரு பூந்தோப்பிலே பூக் கொய்யப் புறப்பட்டுப் போகிறா ளென்று கேள்விப்பட்டு,
தான் வேட்டையாடிவருவானாக எடுத்துக்கட்டின குழற்கற்றையும் பிடரியிலே தழைந்தலைகிற மயிரும்
இறுக்கின சாணமும் கட்டின கச்சும் வலத்தோளிலிட்ட மெத்தையும் பெருவிரலிலே பூட்டின சரடும்
இடக்கையிலே நடுக்கோத்துப் பிடித்த வில்லும் வலக்கையிலே இறுக்கின அம்பும் முதுகிலேகட்டின அம்பறாத்தூணியுமாய்க்
கொண்டு அந்தப் பூந்தோப்பில்தானே சென்றுசேர,
தலைமகளுடன்கூட இருந்ததோழி தானும் ஒருவியாஜத்தாலே பேரநிற்க, தைவயோகத்தாலே
நாயக நாயகிகளுக்குக் கலவி கூடிற்றாய்,
நாயகனும் “புனலரங்க மூரென்று போயினாரே“ என்கிறபடியே வெளிப்பட்டுச் செல்ல
அவ்வளவிலே உயிர்த்தோழியானவள் வந்தணுகி ‘நங்காய்! தலைவன் வந்தபடியென்? செய்தபடியென்?“ என்று கேட்க,
தலைவி தோழிக்கு வ்ருத்தகீர்த்தநம்பண்ணுகிற பாசுரமாய்ச் செல்லுகிறது இப்பாட்டு.

கீழ்ப்பாட்டில், தாயானவள் தான்சொன்ன ஹிதத்தை மகள் கேளாதவளானபடி யாலே
இனி இவளை அடக்கியாளுகை முடியாத காரியமென்று நிச்சயித்துப்
‘பேராளன் பேரோதும் பெண்ணைமண்மேற் பெருந்தவத்தளென்றல்லாற் பேசலாமே“ என்று கொண்டாடி உதாஸீநையானாள்;
‘தலைவிக்கு இங்ஙனம் ஆற்றாமை மீதூர்ந்தது நம் க்ருஷி பலித்த படியன்றோ என்று நினைத்து மகிழ்ந்து
எம்பெருமானும் உதாஸீநனாய் நின்றான்;
இந்த நிலைமையிலே நாமும் உதாஸீநித்திருந்தால் இவளை இழந்தோமாகவேணு மத்தனையென்று எண்ணின உயிர்த்தோழி,
கீழ்நடந்த கலவியை நினைப்பூட்டினால் அது கண்டு இவள் ஒருவாறு தரித்திருக்கக் கூடுமென்று பார்த்து
‘அவன் வந்தபடி என்? உன்னோடு கலந்தபடி என்? பின்பு பிரிகிறபோது உனக்குத் தேறுதலாகச்
சொல்லிப் போன வார்த்தை ஏதேனுமுண்டோ? சொல்லிக்காணாய்‘ என்ன, அவற்றைத் தோழிக்குச் சொல்லுகிறாள்.

அவனுடைய அழகையும் சீலத்தையும் கண்டுவைத்து, கைப்பட்ட பொருளைக் கடலிலே வீசியெறிந்தாற்போலே,
ஏதோவேறாக நினைத்து அஞ்சி இழந்தோமோ தோழீ! என்கிறாள்.

“இப்பாட்டு, சக்ரவர்த்தி திருமகன் தலைமகனாய் ஸ்ரீஜநகராஜன் திருமகள் தலைமகளாக ப்ரவ்ருத்தமாகிறது“
என்ற வியாக்கியான ஸ்ரீஸூக்தி அறியத்தக்கது.
ஆழ்வார்தாம் ஸ்ரீஜநகராஜன் திருமகளான நிலைமையிலே நின்று பேசுகிறாரென்றவாறு.

மைவண்ண நறுங்குஞ்சி குழல்பின் தாழ மகரம்சேர் குழையிருபா டிலங்கி யாட,
எய்வண்ண வெஞ்சிலையே துணையா இங்கே இருவராய் வந்தாரென் முன்னே நின்றார்
கைவண்ணம் தாமரைவாய் கமலம் போலும் கண்ணிணையும் அரவிந்தம் அடியும் அஃதே,
அவ்வண்ணத் தவர்நிலைமை கண்டும் தோழீ அவரைநாம் தேவரென் றஞ்சி னோமே.

பதவுரை

மை வண்ணம் நறு குஞ்சி குழல் தாழ-கறுத்தநிறமுடைத்தாய் மணம் மிக்கதாய்
அலகல காயிருந்துள்ள திருக்குழற் கற்றையானது பின்னே அலையவும்
இரு பாடு-இருபுறத்திலும்
மகரம் சேர் குழை–மகரகுண்டலங்கள்
இலங்கி ஆட-அசைந்து விளங்கவும்
எய் வண்ணம் வெம்சிலையே துணை ஆ–ப்ரயோகித்தலை இயல்வாக வுடைய வெவ்வியவில்லையே துணையாகக் கொண்டு
இங்கே-இந்தத் திருமணங்கொல்லையிலே
இருவர் ஆய் வந்தார்-(தாமும் இளைய பெருமாளுமாக) இருவராய் வந்து என்னெதிரே நின்றார்;
(அவருடைய)
கை-திருக்கைகள்
தாமரை வண்ணம்-செந்தாமரைப் பூப்போலு மழகுடையன;
வாய்–திருப்பவளமும்
கமலம் போலும்–தாமரையொக்கும்;
கண் இணையும்–திருக்கண்களும்
அரவிந்தம்–அத்தாமரையே
அடியும்-திருவடிகளும்
அஃதே-அந்நத் தாமரையே;
அவ்வண்ணத்தவர்-அப்படிப்பட்ட அழகு வாய்ந்த அவருடைய
நிலைமை-நிலைமையை
கண்டும்-கண்டுவைத்தும்
தோழீ-தோழியே!
அவரை-அவரைக் குறித்து
தேவர் என்று அஞ்சினோம்- பரதேவதையென்கிற பிரதிபத்தியாலே பயப்பட்டோமே!

மைவண்ணநறுங்குஞ்சிக்குழல் பின்தாழ =
திருக்குழலுக்குக் கருநிறம் இயற்கையாயிருக்க மைவண்ணம் என்று எடுத்துச் சொல்லுவானேன்? என்னில்;
* கொள்கின்ற கோளிருளைச் சுகிர்ந்திட்ட கொழுஞ்சுருளின், உட்கொண்ட நீல நன்னூல் தழை கொல்; * என்று சங்கித்து
“அன்று மாயன்குழல்“ என்ன வேண்டும்படி
விலக்ஷணமான கருநிறங்கொண்டதாதல் பற்றி மைவண்ணமென்று சிறப்பித்துக் கூறப்பட்டது.
திருக்குழலைக் கண்ட கண்ணனுக்கு அவனுடைய திருமேனி நிறம் ஸ்படிக வர்ணம் என்னத் தக்கதாயிருக்கும் போலும்.

வண்ணத்தின் சிறப்புமாத்திரமேயோ? பரிமளமும் விலக்ஷணமாயிருக்கிறபடி காண்.
தாபத்ரயத்தினால் தபிக்கப்பட்டவரோடு விரஹ தாபத்தினால் தபிக்கப்பட்டவரோடு வாசியற
அனைவர்க்கும் சிரமம் தீர்க்கவல்லதான திருக்குழற் பரிமளத்தை என் சொல்லுவேன்!.

நிறமும் மணமுமேயோ ஆகர்ஷகமாயிருக்கிறன;
திரள்திரளாகக் குழன்றிருக்கை யன்றியே அலகலகாகப்பிரிந்து சுருண்டிருக்கும் பரிசுதான் சொல்லத் தரமோ?
ஆக இப்படிப்பட்ட திருக்குழற்கற்றை பின் பிடரியிலே அசைந்தலையவும்.

இவள் பின்புறத்தே காண் ப்ரஸக்தி என்னென்னில்;
பெருக்காறு பெரு வெள்ளமாக ப்ரவஹிக்கப் புக்கால் அதனை எதிர்நோக்க முடியாதாப்போலே
இவளுடைய ஸௌந்தர்ய ஸாகாதரங்களைக் கண்டு நேர் முகம் பார்க்கமாட்டாமையாலே முகத்தைத் திருப்பினார்,
அச்சமயத்தில் கண்டாளென்ப.

மகரஞ்சேர்குழை யிருபாடிலங்கியாட =
மைவண்ண நறுங்குஞ்சிக் குழற்கற்றையின் இருட்சியாலே கண்கள் இருண்டு திருமுகம் தோற்றாதிருக்க,
அவ் வளவிலே இரண்டு சந்திரர்கள் உதித்தாற்போலே காண் திருமகரக் குழைகளிருந்தபடி.
இலங்கையில் திருவடி பிராட்டியைத் தேடுகிற ஸமயத்திலே சந்திரோதயம் உதவினாப்போலே,
திருக்குழலாலே இருண்ட திருமுகத்திற்கு இம் மகரக்குழைகள் பிரகாசமாக வாய்த்தன வென்க.
‘திருமகரக்குழைகள் திருக்குழலுக்கு ஆபரணமாயிருக்கிறதோ,
திருக்குழல்தான் திருமகரக்குழைகட்கு ஆபரணமா யிருக்கிறதோ‘ வென்று விகல்பிக்கலாம்படியாக
விளங்குகை இலங்கி என்பதன் பொருள்.

‘ஆட‘ என்றதற்கு மூன்று வகையாக அருளிச்செய்வர்;
‘ஆட இருவராய் வந்தார்‘ என்று அந்வயித்தால்,
ஒரு கடல் அசைந்து வந்தாற்போலே காண் வருகிற போது இரண்டருகும் திருமகரக் குழைகள் அசைய வந்தபடி என்கிறாளென்க.
‘ஆட என் முன்னே நின்றார்‘ என்று அந்வயித்தால்
அபிமத விஷயத்தைக் கண்டால் முகத்திலே சில அசைவுகளுண்டாகுமே; அதைச் சொன்னபடி யென்க.
நஞ்சீயர் அருளிச்செய்வதாவது-‘முன்பைக் காட்டுவது பின்பைக் காட்டுவதாக எத்தனை ஆடல்கள் செய்தான்
இவளுடைய பெண்மையை அழிக்கைக்காக!‘ என்றாம்.

கூட வந்த பேர் ஆரேனுமுண்டோ?‘ என்ன.
எய்வண்ணவெஞ்சிலையே துணையா என்கிறாள்.
கையில் வில்லே துணையாக வந்தாரென்க.
வில்லிறுத்து மெல்லியள் தோள் தோய்ந்தவராகையாலே முன்பு நம்மைச் சேர விட்டது இந்த வில்லையன்றோ வென்று
நன்றி பாராட்டி அதனைத் துணை கொண்டு வந்தா ர்போலும்.
‘வெஞ்சிலையே துணையா‘ என்ற தனால் ஸம்ச்லேக்ஷிக்கைக்கு ஏகாந்தமாம் படி வந்தார் என்பது தோன்றும்.
யாரேனுங் கண்டு ‘இங்கு வந்ததென்?‘ என்றால் ‘வேட்டையாட வந்தோம்‘ என்று மறுமொழி சொல்லப் பாங்காக வில்லெடுத்துவந்தபடி.

‘இங்கே வந்தார்‘ என்று திருமணங்கொல்லையைக் காட்டுகிறாள்.
நான் நிதிகண்டெடுத்தவிடம் இது காண்! என்கிறாள்.
“கலந்து பிரிந்த பின்பும் மண்ணை மோந்து கொண்டு கிடக்கலாம்படிகாண் இலச்சினை பட நடந்த
அடிச்சுவடிருந்தபடி“ என்ற வியாக்கியான ஸ்ரீஸூக்தி காண்மின்.

“எய்வண்ண வெஞ்சிலையே துணையா“ என்று சொல்லிவைத்து
‘இருவராய் வந்தார்‘ என்கை அஸங்கதமன்றோ வென்னில்;
வில் போலவே இளைய பெருமாளும் விசேஷண பூதராகையாலே ஒருவரென்னவுங் குறையில்லை.
இதுவொரு விசிஷ்டாத்வைதம்.
இளைய பெருமாளைச் சொல்லுமிடத்து “ராமஸ்ய தக்ஷிணோ பாஹு:” (இராமபிரானது வலக்கை லக்ஷ்மணன்) என்றது காண்க.
கையும் வில்லுமாய் வந்தா ரென்றவாறு.

அப்படியாகில் இருவராய் வந்தார் என்னவேணுமோ? வேற்றுமை தோற்ற சொல்லுவானென்? என்னில்;
அணைக்குந்தோளோடே வந்தார்‘ என்று சொன்னால் வேற்றுமை தோற்றச் சொன்னதாக மாட்டாதாப் போலே இதனையுங்கொள்க.
ஸம்ச்லேஷிக்கை வருகிறவன் படுக்கையோடே வருகை மிகையன்றே.
(இளைய பெருமாள் படுக்கையோ வென்னில்; * சென்றாற்குடையா மெனப்பட்ட ஆதிசேஷனேயிறே லக்ஷ்மணனாக வந்து பிறந்தது.)

இனி, “இருவராய்வந்தார்“ என்பதற்கு
தெய்வத்தன்மையும் மானிடத் தன்மையும் கலசி வந்தார் என்றும் பொருளுரைப்பர்.
சேஷத்வமும் சேஷித்வமுமாகிற இரண்டு படியுங் கலசிவந்தார் என்று முரைப்பர்.-
“தம்முடைய காலை என்தலையிலே வைக்கக் கடவதாக வந்து என்காலைத் தம் தலையிலே வைத்துக் கொண்டாரென்கிறாள்.
பரணிக்ரஹணம் பண்ணும் போது சேஷியாயிருக்கையும்
படுக்கையிலே முறைகெடப் பரிமாறுகையுமாயிறே யிருப்பது.
வகுத்த ஸ்வாமியாகவும் வேணும்;
ந சாஸ்த்ரம் நைவ ச க்ரம: ஆகவும் வேணுமிறே“ என்ற வியாக்கியான ஸ்ரீஸூக்திகள் போக்யமாக அநுஸந்திக்கத் தக்கன.

இருவராய் வந்தார் =
இருவராம்படியாக வந்தார்; (தாமும் நாமுமேயாம்படியாக வந்தார் என்றவாறு.) என்றும் உரைத்தருளினர்.
ஆய் என்பதற்கு ‘ஆம்படி‘ என்று பொருள்படுவது சிரமமாயினும்,
அர்த்தத்தின் சீர்மையைப் பற்ற இங்ஙனே உரைக்கக் குறையில்லை யென்ப.

‘இருவராவந்தார்‘ எனப் பாடமிருந்தால்
முந்தின பொருள்களும் இப்பொருளும் செவ்வனே கொள்ளக் கிடக்குமென்று கூறுவாருமுளர்.
“சப்தத்தை நியமித்து“ என்று வியாக்கியான மிருக்கும்போது வேறுபாடங் கற்பிக்க அதிகாரமுடையோ மல்லோம்.

தாமிருக்குமிடத்திலே நாம் மடலெடுத்துச் சென்று கிட்ட வேண்டும் படியாயிருக்க,
நாமிருந்த விடத்தேற அவர் வந்தார் காண்! என்ற அற்புதந்தோன்ற, வந்தார் என்கிறாள்.
அவர் வரும்போது நடந்த நடையழகை நீ காணப் பெற்றிலையே தோழீ! என்பதும் இச்சொல்லில் உள்ளூறை.

வந்தார் என் முன்னே நின்றார் =
மிக்க பரபரப்போடே வந்தவர் கடல் கண்டு தியங்கினாற் போலே என்னைக் கண்டு
மேல் அடியிடமாட்டாதே தியங்கி முன்னே நின்றார். மேல் போக்கிட மில்லாமையாலே நின்றார்.
‘வந்தார்‘ என்றது முற்றெச்சம்; வந்து என்றபடி.

இனிமேல், அவருடைய ஸௌந்தர்ய ஸாகரத்தில்தான் அகப்பட்ட சுழிகளைச் சொல்லுகிறாள்
கைவண்ணந்தாமரை யென்று தொடங்கி
திருவடி தொடங்கித் திருமுடி யீறாகச் சொல்லுதல்,
திருமுடி தொடங்கித் திருவடியீறாகச் சொல்லுதலாகிற முறைமைகளை அடைவு இதுவாகையாலே.
முதலிலே, தன்னை மேல்விழுந்து பாணி க்ரஹணம் பண்ணின கையைச் சொல்லுகிறாள்;
கையைப் பிடித்த பின் ‘இதுவொரு வடிவழகிருந்தபடி என்!, இதுவொரு முலையழகிருந்தபடி என்!,
இதுவொரு கண்ணழகிருந்தபடி என்!‘ என்று இன் சொல்லுச் சொன்ன திருவாயை அதற்குப் பின்னே சொல்லுகிறாள்.
இன்சொல்லுச் சொல்லத் தொடங்கி முற்ற முடியச் சொல்லித் தலைக்கட்ட மாட்டாமல்
உள்ளெலாமுருகிக் குரல் தழுத்தொழிந்து வக்தவ்ய சேஷத்தைக் கண்ணாலே சொல்லித் தலைக் கட்டுகையாலே
அதற்குப் பின் கண்ணைச் சொல்லுகிறாள்.
அக் கண்ணழகுக்குத் தோற்றுத் தான் திருவடியிலே விழுந்தமை தோற்ற அதற்குப்பின்னே அடியைச் சொல்லுகிறாள்.

கீழ்ப் பதினெட்டாம்பாட்டில்
“கண்ணும் வாயுங் கைத்தலமு மடியிணையுங் கமலவண்ணம்“ என்று உபமேயமான அவயவங்களை யெல்லாம்
ஒரு சேரச் சொல்லி முடிவில் உபமாந வஸ்துவைச் சொன்னது போல இங்கும் சொல்லலாமா யிருக்க,
‘கைவண்ணம் தாமரை, வாய் கமலம் போலும், கண்ணினையும் அரவிந்தம்‘ என்றிப்படி
ஒரு உபமாநவஸ் துவையிட்டே பல வாக்கியங்களாகப் பேசுவானேன்? என்னில்;
இதில் ஒரு விலக்ஷணமான போக்யதையுண்டு என்று சொல்லலாமத்தனை.

கூரத்தாழ்வான் தாமும் வரதராஜஸ்தவத்தில் “அப்ஜபாணிபதம் அம்புஜநேத்ரம்“ என்றும்
ஸுந்தரபாஹுஸ்தவத்தில் “அப்ஜபாத மரவிந்தலோசநம் பத்மபாணிதலம்“ என்றும் இங்ஙனே பேசி யநுபவிக்கிறார்.
பட்டர் ஸ்ரீரங்கராஜஸ்தவத்தில் “கமலபதகராக்ஷம்“ என்று சேரப் பேசியநுபவித்ததுமுண்டு.
உபமாந வ்யக்தி ஒன்றேயா யிருக்கச்செய்தேயும் தத்பர்யாயமான பல சொற்களையிட்டு
(தாமரை, கமலம், அரவிந்தம் என்றாற்போல)ச் சொல்லுதல்
வாக்ய பேதம் பண்ணுதலும்
அநுஸந்தாக போக்யதா ப்ரகர்ஷ ஸூசகமத்தனை.

“அடியும் அஃதே“ என்றதில் உபேக்ஷ தோற்றும்;
‘எம்பெருமானது திவ்யாவயவங்களுக்கு இத்தாமரை ஏற்ற உவமையன்று;
ஆயினும் ஏதேனுமொரு உவமையை யிட்டுப் பேசி அநுபவிக்க வேண்டியிருப்பதால்
அதற்காகச் சொன்னபடி‘ என்பது இதில் தொனிக்கும்.

இங்ஙனே தலைமகள் சொல்லக் கேட்ட தோழியானவள்
‘நங்காய்! அவர் வந்த வரவை நீ சொல்ல நான் கேட்டாற்போ லிருக்கையன்றியே
நானே நேரில் ஸாக்ஷாத்கரிப்பது போலிராநின்றதே நீ பேசுகிற பேச்சின் வாய்ப்பு! என்று சொல்ல;
தோழீ! அவர் வந்த வரவின் வீறுபாட்டையும் அவரது அவயவங்கள் பொலிந்த பொலிவையும் நான் என்னென்று சொல்லுவேன்?
அவ்வண்ணத்தவர் என்று சொல்லலாமத்தனை யென்கிறாள்.
நீ கேட்கையாலே உனக்கொரு உவமையை யிட்டுச் சொல்லலாம்படி யன்று காண் அவர் வடிவருவிந்தபடி;
‘அப்படிப்பட்ட வடிவுடையவர்‘ என்று இரண்டுகையுந் தூக்கிச் சொல்ல வேணும் காண் என்கிறாள்.

அவ்வண்ணத்தவர்நிலைமை கண்டுந்தோழீ! அவரைநாம் தேவரென்று அஞ்சினோமே =
அவருடைய வடிவழகிருந்தபடியையும் அவருடைய சீலமிருந்தபடியையும் கண்டுவைத்தும்
“அம்மானாழிப்பிரா னவனெவ்விடத்தான் யானார்“ என்றாற்போலே மயங்கி அஞ்சி இழந்தேனே யென்கிறாள்.
அவருடைய ஸௌசீல்ய ஸௌலப்யங்களைக் கண்டு அஞ்சாதே கூசாதே கலந்து பரிமாறலாயிருக்க,
அந்தோ! * ஒன்றுந்தேவு முலகுமுயிரும் மற்றும் யாதுமில்லாவன்று நான்முகன் றன்னோடு
தேவருலகோ டுயிர்படைத்த பெருமானன்றோ இவர்!
நரநாரணனா யுலகத் தறநூல் சிங்காமை விரித்த பெருமானன்றோ இவர்! என்றாற்போலே பரத்வத்தையே நினைத்துப்
பாவியேன் இறாய்த்து இழந்தொழிந்தேனே என்கிறாள்.
ஸம்ச்லேஷம் ப்ரவ்ருத்தமாகிப் பின்பு விச்லேஷம் நிகழ்ந்தபடியைத் தெரிவிக்கிற புடை இது என்க.

“ஆத்மாநம் மாநுஷம் மந்யே என்னுமவர் நினைவைவிட்டு
பவாந் நாராயணேதேவ: என்னும் வழிப் போக்கர் வார்த்தையைப் பற்றிக் கெட்டாமே! என்கிறாள்.
தன்னோடு ஸுகதுக்கங்கள் ஒத்தவளான தோழியையுங் கூட்டி நாம் என்கிறாள்.“

இப்பாசுரத்தின் ஈற்றடியின் விசேஷார்த்தங்களைப் பன்னியுரைக்குங்காற் பாரதமாம்‘
பூருவர்களின் வியாக்கியானங்களிற் கண்டு அநுபவித்துக் களிக்க.

இது முதல் தலை மகள் பாசுரமாக செல்லுகிறது –
மத் சித்தா மத் கத பிராணா போதயந்த பரஸ்பரம் கதயந்தச் ச மாம் நித்யம் துஷ்யந்தி ச ரமந்திச-கீதை -10-9-
முதல் பத்து -மத் சித்தா -ஞானத்துக்கு எம்பெருமானை இலக்காக்கி
வியாச பரசராதி மக ருஷிகளின் ரீதியிலே பேசுவது
நடுவில் பத்து -மத் கத பிராணா -தம்மூச்சு அடங்கி வேற்று வாயாலே பேசினது ஆகையாலே
இந்த பத்து -போதயந்த பரஸ்பரம் -தோழி மார்களுக்கு அறிவித்தும் அவர்கள் வார்த்தைகளை கேட்டும்
தரித்து பேசும் பதிகம்

அதர்சனே தர்சன மாத்ர காமா
த்ருஷ்ட்வா பரிஷ்வங்க ரசைகலோலா
ஆலிங்கதாயாம் புநராய தாஷ்யாம் ஆசசாதே விக்ரஹ யோரபேதம் -ஸூ பாஷித ஸ்லோஹம்
கண்ணால் காணாத அளவில் -ஒரு தடவை காணப் பெற்றால் அமையும் என்பார்கள்
அப்படிக் காணப் பெற்றால் அணைத்துக் கொள்ள ஆசைப் படுவார்கள்
அணைத்துக் கொள்ளப் பெற்றதும் இரு உடல் ஒன்றாக கூடாதோ என்று காமுறுவர்

எங்குற்றாய் எம்பெருமான் உன்னை நாடி ஏழையேன் இங்கனமே யுழி தருகேனே -ஆசை கிளர்ந்து -முதல் பத்து

முற்றாரா வன முலையாள் பாவை மாயன் மொய் யகலத்துள் இருப்பாள் அஃதும் கண்டு அற்றாள்-என்று
பிராட்டி போலே தானும் அணைய ஆசைப்பட்டமை -இரண்டாம் பத்து

கள்ளூறும் பைந்துழாய் மாலையானை கனவிடத்தில் யான் காண்பன்
கண்ட போது புள்ளூரும் கள்வா நீ போகேல் என்பன் – என்றும்
என் தன் பொன்னிலங்கு முலைக்குவட்டில் பூட்டிக் கொண்டு போகாமை வல்லேனாய்
புலவி எய்தி என்னில் அங்கம் எல்லாம் வந்து இன்பம் எய்த
எப்பொழுதும் நினைந்து உருகி இருப்பன் நானே -மூன்றாம் பத்து

தலைவி பூ கொய்ய புறப்பட்டதை கேள்விப் பட்டு
வேட்டையாடும் வ்யாஜத்திலே அவனே
எடுத்துக் கட்டின குழல் கற்றையும்
பிடரியிலே தழைந்து அலைகிற மயிரும்
இருக்கின சாணமும்
கட்டின கச்சும்
வலத் தோளில் இட்ட மெத்தையும்
பெரு விரலிலே பூட்டின சரடும்
இடக்கையிலே நடுக்கோத்து பிடித்த வில்லும்
வலக்கையிலே இறுக்கின அம்பும்
முதுகிலே கட்டின அம்புறா துணியுமாய்
கொண்டு அந்த பூம் தோப்பிலே தானே சேர
தோழியும் ஒரு வ்யாஜத்தாலே பேர நிற்க
தெய்வ யோகத்தாலே கலவி கூடிற்றாய்
நாயகனும்
புனல் அரங்கம் என்று போயினாரே -என்கிற படி வெளிப்பட்டு செல்ல
அவ்வளவில் தோழி தலைவன் வந்த படி என்
செய்தபடி என்-என்று கேட்க
தலைவி தோழிக்கு வ்ருத்த கீர்த்தனம் பண்ணுகிற பாசுரமாய் செல்லுகிறது இப்பாசுரம்

அவனுடைய அழகையும் சீலத்தையும் கண்டு வைத்து
கைப்பட்ட பொருளை கடலிலே வீசி எறிந்தால் போலே
வேறாக நினைந்து அஞ்சி இழந்தோமே
இப்பாட்டு சக்கரவர்த்தி திருமகன் தலைமகனாய்
ஸ்ரீ ஜனகராஜன் திரு மகள் தலை மகளாய் பிரவ்ருத்தம் ஆகிறது

மைவண்ண நறும் குஞ்சி சுழல் பின் தாள
கொள்கின்ற கோளிருளை சுகிர்ந்திட்ட கொழும் சுருளின் உட்கொண்ட நீல நன்னூல் தழை கொள் -என்று சங்கித்து
அன்று மாயன் குழல் -என்ன வேண்டும்படி விலஷணமான
கரு நிறம் கொண்ட குழல்
பரிமளமும் விலஷணம்
கண்டவர் தாப த்ரயங்கள் ஆறும் படி
நிறமும் மணமுமேயோ
திரள் திரளாக குழன்று இருக்கை அன்றிக்கே அலகு அலகாக பிரிந்து சுருண்டு இருக்கும் பரிசு சொல்லத் தரமோ
பின் புடரியிலே அசைந்து அசைந்து அலைய கண்டாள்
இவளுடைய சௌந்தர்ய சாகர தரங்களை நேர்ந்கொண்டு நேர் பார்க்க மாட்டாமல் திரு முகத்தை திருப்ப
அப்பொழுது கண்டாள்

மகரம் சேர் குழை இருபாடு இலங்கி ஆட
சந்த்ரர்கள் உதித்தால் போலே
திருக் குழல் திரு மகர குழைகள் ஆபரணமா
அன்றி
திரு மகர குழைகள் திருக் குழலுக்கு ஆபரணமா -என்பதால் இலங்கி –
ஆட
மூன்றுவகை
ஆட இருவராய் வந்தார் -கடல் அசைந்து வந்தால் போல் இரண்டு அருகும் மகர குழைகள் அசைந்து
ஆட என் முன்னே வந்தார் -அபிமத விஷயம் கண்டால் முகத்திலே அசைவுகள் உண்டாகுமே -அதைச் சொன்னபடி
நஞ்சீயர் நிர்வாஹம் -முன்பைக் காட்டுவது பின்பை காட்டுவது-எத்தனை ஆடல்கள் செய்தான் இவளுடைய பெண்மையை அழிக்கைக்காக

எய் வண்ண வெஞ்சிலையே துணையா வந்தார்
வில்லிறுத்து மெல்லியல் தோள் தோய்ந்ததால் –
நம்மை முன்பு சேர விட்டது வில்லே அன்றோ -நன்றி பாராட்டி -கொண்டு வந்தார்
வெஞ்சிலையே துணையா -சம்ச்லேஷிக்கைக்கு ஏகாந்தமாக வந்தார்
வேட்டை யாட வந்தோம் என்று கண்டார் வினவ மறுமொழி சொல்ல பாங்காக வந்தார்

இங்கே வந்தார்
திரு மணம் கொல்லையை காட்டுகிறாள்
நான் நிதி கண்டு எடுத்த இடம் இது காண்
கலந்து பிரிந்த பின்பும் மண்ணை மோந்து கொண்டு கிடக்கலாம் படி காண் இலச்சினை பட நடந்த அடிச் சுவடு

இருவராய் வந்தார்
இளைய பெருமாளும் வில் போலவே விசேஷண பூதர்
இது ஒரு விசிஷ்டாத்வைதம்
ராமஸ்ய தஷிணோ பாஹூ
வேற்றுமை தோன்ற சொல்லுவான் என்னில் அணைக்கும் தோள் உடன் வந்தார்
சம்ச்லேஷம் பண்ண படுக்கை உடன் வந்தார்

இருவராய் வந்தார்
தெய்வத் தன்மையும் மானிடத் தன்மையும் கலசி வந்தார்

சேஷத்வமும் சேஷித்வமும்-இரண்டு படியும் கலசி வந்தார்
தம்முடைய காலை என் தலையிலே வைக்கக் கடவதாக வந்து என் காலை தம் தலையிலே வைத்து கொண்டார்
பாணி க்ரஹணம் பண்ணும் போது சேஷியாய் இருக்கையும்
படுக்கையிலே முறைகெட பரிமாறுகையும்
வகுத்த ஸ்வாமியாகவும் வேணும் -ந சாஸ்திரம் நைவ ச க்ரம

இருவராம் படியாக வந்தார்
தாமும் நாமுமே யாம்படி வந்தார் -ஆய் -ஆம்படி –

வந்தார்
நாம் மடல் எடுத்து சென்று கிட்ட வேண்டி இருக்க நாம் இருந்த இடத்தே அவர் வந்தார் காண்
வரும் போது நடை அழகை நீ காணப் பெற்றிலை காண்-

வந்தார் என் முன்னே நின்றார்
பர பரப்புடன் வந்தவர் கடல் கண்டு தயங்கினால் போலே என்னைக் கண்டு மேல் அடி இட மாட்டாதே தயங்கி முன்னே நின்றார்
வேறு போக்கிடம் இன்றி நின்றார் -வந்தார் முற்று எச்சம்

கை வண்ணம் தாமரை
அனுபவித்த அடைவிலே சொல்லுகிறாள்
முதலிலே தன்னை மேல் விழுந்து பாணிக் க்ரஹணம் பண்ணின கையைச் சொல்லுகிறாள்

இது ஒரு அழகு இருந்தபடி என் –முலை அழகு இருந்த படி என் –வாய் அழகு இருந்தபடி என்
இன் சொல்லு சொன்ன திரு வாயைச் சொல்லுகிறாள்

முற்ற முடிய சொல்லித் தலைக் கட்ட முடியாமல் உள் எலாம் உருகி -வக்தவ்ய சேஷத்தை –
கண்ணாலே தலைக் கட்டுவதால் கண்ணை சொல்கிறாள்

கண் அழகுக்கு தோற்று திருவடியில் விழுந்தமை தோற்ற அடியை சொல்லுகிறாள்

கீழ் 18 பாட்டில் கண்ணும் வாயும் கைத்தலமும் அடி இணையும் அம் கமல வண்ணம் போல்
உபமேய அவயவங்களை ஒரு சேரச் சொல்லி உபமான வஸ்துவை ஒரு தடவை சொல்வது போல் அன்றி
உபமான வஸ்துவை பல காலும் சொல்லுவது
விலஷணமான போக்யதை உண்டு என்று காட்ட
கூரத் ஆழ்வான்-ஸ்ரீ வரதராஜ ஸ்தவம் அப்ஜ பாணி பதம் அம்புஜ நேத்ரம்

அடியும் அக்தே-திவ்ய அவயவங்களுக்கு தாமரை ஏற்ற உவமை அன்று -உபேஷை தோற்ற அருளுகிறாள்-

அவ் வண்ணத்தவர்
வரவின் வீறுபாட்டையும் அவயவங்களின் பொலிவையும் அப்படிப் பட்ட என்று இரண்டு கையையும் தூக்கி
உனக்காக ஒரு திருஷ்டாந்தம் இட்டு சொன்னேன் -என்று சொல்ல

நிலைமை கண்டும் தோழி அவரை நாம் தேவர் என்று அஞ்சினோமே
அழகையும் சீலத்தையும் கண்டு வைத்தும்
அம்மான் ஆழிப் பிரான் அவன் எவ்விடத்தான் யான் யார்
சௌலப்யம் சௌசீல்யம் கண்டு அஞ்சாதே கூசாதே பரிமாறலாய் இருக்க அந்தோ
ஒன்றும் தேவும் உலகும் உயிரும் மற்றும் யாதும் இல்லா அன்று
நான்முகன் தன்னோடு தேவர் உலகோடு உயிர் படைத்த பெருமான் அன்றோ -என்றும்
நர நாரணனாய் உலகத்து அற நூல் சிங்காமை விரித்த பெருமான் அன்றோ
இறாய்த்து இழந்து ஒழிந்தேன்
சம்ச்லேஷம் பிரவ்ருத்தமாகி பின்பு விச்லேஷம் நிகழ்ந்த படி

ஆத்மானம் மானுஷம் மன்யே -என்னும் அவர் நினைவை விட்டு
பவான் நாராயணா தேவதா -என்ற வழிப் போக்கர் வார்த்தையை பற்றிக் கேட்டோமே

நாம் -தோழியையும் சேர்த்து -தன்னோடு சுக துக்கங்களில் ஒத்தவர் –

——————————————————————

கீழ்ப்பாட்டில் ‘அவரை நாம் தேரரென்றஞ்சினோமே‘ என்று ப்ரமத்தாலே தான் இறாய்த்தமை சொன்னாள்;
அதைக்கேட்ட தோழியானவள் ‘நங்காய்! நீ இறாய்த்து அகன்றாயாகில் அவர் உன்னோடு கலந்தபடி என்?‘ என்று கேட்க,
‘அவர் என்னை வசப்படுத்திக் கொண்டபடியும் என்னோடு கலந்தபடியும் இது காண்‘ என்கிறாள் இப்பாட்டில்.

அவர் தம்முடைய விலக்ஷணமான வடிவழகையும் சீலத்தையும் காட்டின விடத்திலும்,
அவரைத் தேவரென்றஞ்சி இறாய்த்தபடியாலே
‘இனி நாம் வந்தவழியே திரும்பிப் போகவேண்டு மத்தனையன்றோ‘ என்று நினைத்தார்; கால் பெயர மாட்டிற்றில்லை;
சேஷவஸ்து கைப்படுவது சேஷியானவனுக்குப் பரம லாப மேயன்றொ:
வடிவழகைக் காட்டுவதும் சீலத்தைக் காட்டுவதும் எதற்காக? கைப்படாத வஸ்துவைக் கைப்படுத்துகைக்காக வன்றோ?
தாம் உத்தேசித்து வந்த விஷயம் இங்குக் கைபுகுந்ததில்லை-எவ் வகையினாலேனும் வசீகரித்தாக வேணுமே,
அதற்கு வழி யென்ன? என்று பார்த்தார்;
முன்பு திருவாய்ப்பாடியிற் பெண்கள் தம்முடைய திருக்குழலோசையிலே வசப்படக் கண்ட வாஸநையாலே
இங்கு நம்முடைய மிடற்றோசையாலே வசீகரிக்கப்போமென்று பார்த்து ஒரு பண்ணை நுணுங்கத் தொடங்கினார்;
நாம் வேட்டையாடுகிற வியாஜமாக வந்தோமாகையாலே ‘பாடுகிறது ஏதுக்கு?‘ என்று கேட்பாரில்லை;
ஆகவே தாராளமாகப் பாடலாமென்று துணிந்து ஒரு பண்ணை நுணுங்கினார்;
அதிலே யீடுபட்டு மேல்விழுந்து கலந்தேன் என்று வரலாறு சொல்லுகிறாள் பரகாலநாயகி.

நைவளமொன் றாராயா நம்மை நோக்கா நாணினார் போலிறையே நயங்கள் பின்னும்,
செய்வளவி லென்மனமும் கண்ணு மோடி எம்பெருமான் திருவடிக்கீழ் அணைய, இப்பால்
கைவளையும் மேகலையும் காணேன் கண்டேன் கனமகரக் குழையிரண்டும் நான்கு தோளும்,
எவ்வளவுண் டெம்பெருமான் கோயில்? என்றேற்குஇதுவன்றோ எழிலாலி? என்றார் தாமே.

பதவுரை

ஒன்று–மிகச் சிறந்ததான
கைவளம்–கைவளமென்கிற பண்ணை
ஆராயா-ஆராய்நது பாடி
நம்மை நோக்கா–நம்மைப் பார்த்து
இறையே நாணினார் போல்–சிறிது வெட்கப்பட்டவர் போல நின்று
பின்னும்–அதற்குப் பிறகும்
நயங்கள் செய்வளவில்–நயமான வார்த்தைகளையிட்டுப் பண்ணிலே பாடினவளவில்
என் மனமும் கண்ணும்-எனது நெஞ்சம் கண்களும்
ஓடி-பதறிச் சென்று
எம்பெருமான் திருஅடிக்கீழ் அணைய-அப்பெருமானது திருவடிவாரத்திற் பதிய
இப்பால்–அதன்பின்
கைவளையும்–என் கையில் தரித்திருந்த வளைகளையும்
மேகலையும்-அரையில் மேவிய கலையையும்
காணேன்-காணமாட்டாமல் இழந்தேன்;
கனம் மகரத்குழை இரண்டும்-கனமான மகரகுண்டலங்களிரண்டையும்
நான்கு தோளும்-நான்கு திருத்தோள்களையும் காணப்பெற்றேன்;
(அதன்பிறகு)
எம் பெருமான் கோயில் எவ்வளவு உண்டு என்றேற்கு-“தேவரீருடைய இருப்பிடம் (இவ்விடத்திலிருந்து) எவ்வளவு தூரமுண்டு?‘ என்று கேட்ட எனக்கு
எழில் ஆலி இது அன்றோ என்றார்-அழகிய திருவாலிப்பதி இதோ காண்! என்று சுட்டிக் காட்டினார்.

நைவளம் ஒன்று ஆராயா =
‘நைவளம்‘ என்று ஒரு பண்ணுக்குப் பெயர்.
பாட்டுப் பாடுகிறவர்களையும் பாட்டு கேட்கிறவர்களையும் நைவிக்கும்படியான வளத்தையுடைய தாதல் பற்றி
நைவளமென்று பெயரிடப்பட்ட தென்று யோகார்த்தமும் அருளிச் செய்வர்.
மற்ற இசைகளிற்காட்டில் இந்த இசை பிறரை வசீகரி்க்கும் விஷயத்தில் இன்றியமையாததாதலாலும்
இதற்கு வசப்படாவிட்டால் வேறுகதி யில்லாமையாலும் ‘நைவளம் ஒன்று‘ எனப்பட்டது.

கபிலரின் குறிஞ்சிப் பாட்டில்,”நைவளம் பழநிய பாலை வல்லோன் கைவிர் நரம்பின் இம்மென இமிரும்…”(146-147)
நட்டராகம் என்னும் பண்ணின் இயல்பு அமைந்த பாலைப்பண்ணை வாசிக்க வல்லவன் தன் கையினால் இசைக்கும்
யாழ்நரம்பின் ஓசை போன்ற…. என்பதாம்.

மேலும், இடைகழிநாட்டு நல்லூர் நத்தத்தனார் நைவளம் பற்றிய குறிப்பைக் கீழ்க்காணும் வரிகளில் சிறப்பிக்கின்றார்.
“பொன்வார்ந் தன்ன புரிஅடங்கு நரம்பின் இன்குரல் சீறியாழ் இடவயின் தழீ இ
நைவளம் பழநிய நயம்தெரி பாலை கைவல் பாண்மகள் கடனறிந்து இயக்க”- சிறுபாணாற்றுப்படை (34-37)
பொற்கம்பியினையொத்த முறுக்கு அடங்கின நரம்பினது இனிய ஓசையையுடைய சிறிய யாழை இடப்பக்கத்தே தழுவி,
நட்டராகம் என்னும் பாலைப்பண்ணை வாசித்தலில் வல்ல பாணன் முறைமையறிந்து வாசிக்க…. என்பதாம்.
மேற்கண்ட வரிகளில் காணப்படும் நைவளம் என்னும் பண் பகல் பொழுதுகளில் வாசிக்கப்பெறும் இராகமாகும்.
பாலையாழில் வாசிக்கப்பெறும் நட்டராகம் இதுவேயாகும். நட்டபாடை என்று அழைக்கப்படும் இராகமும் இதுவே.
பண்டைய இசைத்தமிழ் வல்லோர்கள் இரவுப்பண்கள், பகற்பண்கள் எனவும், குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலைப்பண்கள்
எனவும் தாம் வாழ்ந்த நிலம் சார்ந்த இராகங்கள், அந்நிலம் சார்ந்த இசைக்கருவிகள் என இயற்கையோடும்,
இயற்கை சார்ந்த வாழ்வியலோடும் இசைபட வாழ்ந்தார்கள்.

கருமயோக ஜ்ஞாநயோகங்களால் அஸாத்யமானதை பக்தியோகத் தாலே ஸாதிக்கலாம்;
அதனாலும் அஸாத்யமானதை ப்ரபத்தியாலே ஸாதிக்கலாம்;
அதுவும் பலித்தலில்லை யென்றால் வேறு கதியில்லை என்றிருப்பதுபோல,
காதலன் தானும் இப் பரகால நாயகியைப் பெறுகைக்ககுச ஸரமோபாயமான பண்ணைக் கைகண்டபடி.

ஆராய்தல் – நன்றாக நுணுங்குதல்.
‘ஆராயா‘ என்றது செய்யா என்னும் வாய்பாட்டிறந்தகால வினையெச்சம்; ஆராய்ந்து என்றபடி.
மேலே ‘ நோக்கா“ என்றதையும் இங்ஙனமே கொள்க.

நைவளம் என்கிற பண்ணைத் தாம் நுணுங்கினவாறே தாம் உருகினார்;
‘முரட்டு ஆணாகிய நாமே உருகுகிற போது மெல்லியலான இவள் உருகக் கேட்க வேணுமோ?
வயிரத்தை யுருக்குமது அரக்கை யுருக்கச் சொல்லவேணுமோ? இது இவளையும் அழித்தே தீரும்‘ என்றறுதியிட்டு என்முகத்தைப் பார்த்தார்;
உண்மையில் அவ் விசையினால் நான் உள்ளெலா முருகிக் குழைந்திருக்கச் செய்தேயும்
அந்த உருக்கத்தையும் ஈடுபாட்டையும் எப்படியோ மறைத்து, சிறிதும் விகாரப்படாதவள் போல முகத்திற் காட்டிக் கொண்டேன்;
அப்படிப் பட்ட நிலைமையைக் கண்டு அவர்க்கு வெட்கமுண்டாயிற்று. ஏன்?
நம்முடைய எண்ணம் பழுதாயிற்றேயென்று லஜ்ஜித்தார்;
அவர் தம்முடைய காம்பீர்யத்தாலே நாணினமை தோற்றாதபடி யிருக்கப்பார்த்தும் நாணினார் போலவே காணப்பட்டார்;
‘நம்முடைய சரமோபாயமும் நிஷ்பலமாயிற்றே‘ என்று அவரால் வெட்கப்படாமலிருக்க எங்ஙனே முடியும்.
அந்த வெட்கத்தாலே நேர்முகம் பார்க்கமாட்டாதே சோலையைப் பார்ப்பதும் பக்கங்களைப் பார்ப்பதுமாக ஆனார்.

பின்னும் நயங்கள் செய்வளவில் = ‘பின்னும்‘ என்றது,
நைவளமென்கிற பண்ணைப் பாடினவளவோடு நில்லாமல் என்றபடி. அது பலிக்கவில்லையென்று வாளா கிடந்திலர்;
‘அடியேன், குடியேன்‘ என்றாற்போலே சில நைச்ய பாஷணங்களைப் பண்ணிலே ஏறிட்டுப் பாடத்தொடங்கினார்; அவ்வளவிலே.

என்மனமுங் கண்ணுமோடி எம்பெருமான்திருவடிக்கீழ் அணைய =
விகாரத்தை வெளிக் காட்டாதிருக்கவேணுமென்று நான் எவ்வளவோ முயற்சி செய்தும் பலிக்கப் பெற்றதில்லை;
அடக்கிக் கொண்டிருந்தும் என்னால் அடக்க முடியவில்லை; கடல் உடைந்தாற்போலே உடைந்தது.
நெஞ்சும் கண்ணும் ஆச்ரயத்தைவிட்டுப் பதறியோடிற்று;
தம் மிடற்றோசை யாலே என்னை யீடுபடுத்தினவருடைய திருவடிவாரத்தின்கீழே சென்றணைந்தன. –

வியாக்கியான வாக்கியங்காண்மின்; – “அவர் நினைத்தவளவன்று காண் நான் அழிந்தபடி யென்கிறாள்.
என்முலையைத் தம் மார்விலே நெருக்கித் தழுவிக் கொள்ளவாயிற்று அவர் நினைத்திருந்தது;
நான் அவர் காலைத் தலையிலே வைத்துக் கொண்டே னென்கிறாள்“.

இப்பால் கைவளையும் மேகலையுங் காணேன் =
இதனால் விரஹ வ்ருத்தாந்தம் சொல்லுகிறதன்று; உந்மஸ்தகமான ஸம்ச்லேஷ ரஸம் சொல்லுகிறது.
கைவளையையும் மேகலையையுங் காணாமை விச்லேஷத்திலன்றோ வென்னில், அங்ஙனே ஸம்ச்லேஷத்திலுமுண்டு.

ஸம்ச்லேஷரஸம் மீதூர்ந்து உண்டான தேஹப் பூரிப்பினால் வளைகள் வெடித் தொழிந்தமையாலுண்டான இழவைச் சொன்னபடி.
கலவியிலும் வளையிழப்பது பிரிவிலும் வளையிழப்பது என்றனால், பின்னை வளை தங்கியிருக்கும் நிலைமை எது வென்னில்;
ஸம்ச்லேஷரஸம் உந்மஸ்தகமாகாமல் ஸாத்மி்க்கு மளவாகும் தசையிலே வளை தங்கியிருக்கு மென்க.

(மேகலையுங்காணேன்)
மே – அரையில் மேவுகின்ற, கலை – வஸ்திரம் என்று கொள்க.
“பரியட்ட மாறாட்டத்தாலே என்பரியட்டப்பட்டுங் கண்டிலே னென்கை.
அவன் பரியட்டம் தன்னரையிலேயிருக்கக் கண்டாளித்தனையிறே“ என்ற வியாக்கியான வாக்கியமுங் காண்த்தக்கது.
இதுவும் ஸம்ச்லேஷரத்தின் உந்மஸ்தகத்வத்தை வெளியிடவற்று.

“கைவளையும் மேகலையுங் காணேன்“ என்றதற்கு ‘அஹங்காரமமகாரங்கள் ஒழிந்தன‘ என்று கூறுதல்
ஸ்வாபதேசப்பொருள் என்றருளிச்செய்வர்.
உபாயவிரோதி, ப்ராப்யவிரோதி, புருஷார்த்த விரோதி என் மூன்று வகையான இடையூறுகளும் தொலைந்து
“உன்றன்னோடுற்றோமே யாவோ முனக்கே நாமாட்செய்வோம், மற்றைநங்காமங்கள்மாற்று“ என்கிற
பிரார்த்தனை பலித்தமை சொன்னவாறு.
‘நான் போக்தாவன்று, எனக்குப்போகமன்று; போக்தாவும். அவனே, போகமும் அவனுடையதே‘ என்ற
ஸ்வரூப தத்துவத்தின் அநுஸந்தானம் முதிர்ந்தமை சொல்லிற்றாயிற்று.

கண்டேன் கனமகரக் குழையிரண்டும் நான்கு தோளும் =
அணைத்தபோது உறுத்தின திருமகரக் குழைகளையும், அணைத்த திருக்கைகளையும் கண்டேனென்கிறாள்.
கலந்தவள் சக்ரவர்த்தி திருமகனாயிருக்க, நான்கு தோள் என்கிறதென்னென்னில்;
தன்னைத் தழுவுகையாலே தோள்கள் பணைத்தபடி.
அன்றி,
உண்மையான சதுர்ப்புஜ ஸ்வரூபத்தை வெளியிட்ட படியாகவுமாம்.

எவ்வளவுண் டெம்பெருமான்கோயில்? என்றேற்கு =
வந்தவிடத்திலே கலந்து பிரிந்து போகையன்றியே அவருடைய இருப்பிடத்தே உடன் சென்று
நித்ய ஸம்ச்லேஷம் பண்ணிக் களிக்கவேணுமென்னும் விருப்பாலும்,
சிறிது தூரமாகிலும் கூடவே தோள்மேல் தோளிட்டுக்கொண்டு போகவேணு மென்னும் விருப்பாலும்,
தகுதியான பரிஜனங்களோடே அநுபவிக்கவேணு மென்னும் விருப்பாலும்
‘தேவரீருடைய வாழ்விடம் இங்குத் தைக்கு எத்தனை தூரமுண்டு?‘ என்று கேட்டேன்;
இதோ காண்கிற திருவாலித் திருநகரி காண் என்று சொல்லி அந்தர்த்தானமாய்விட்டார்.
அந்தோ! ‘எவ்வளவுண்டெம்பெருமான் கோயில்‘ என்று பாவியேன் நானே யன்றோ பிரிவை ப்ரஸ்தாவித்தேன்;
அது கேளாதிருந்தேனாகில் இன்னமும் சற்றுப்போது அநுபவிக்கலாமாயிருந்ததே!
நானே கெடுத்துக் கொண்டேனே யென்கிறாள் போலும்.

அவர் தன்னை வசப்படுத்திய படியையும் கலந்த படியையும் தோழிக்கு சொல்கிறாள்
தேவர் என்று அஞ்சியதும் பின் போக நினைத்தார்
கால் பெயர மாட்டிற்று இல்லை
சேஷ வஸ்து பெறுவது சேஷிக்கு பரம லாபம் அன்றோ
அழகையும் சீலத்தையும் காட்டி அருளி வீணாக போகவா
முன்பு ஆய்ப்பாடி பெண்கள் திருக் குழல் ஓசை ஈடு பட்டது போலே
மிடற்று ஓசையால் வசீகரிப்போம் என்று பண்ணை நுணுங்கத் தொடங்கினார்
அதிலே ஈடுபட்டு மேல் விழுந்து கலந்தேன் என்கிறாள்

நை வளம் ஓன்று ஆராயா
பாடுவாரையும் கேட்பாரையும் நைவிக்கும் பண் நைவளம்
ஆராய்தல் நுணுங்குதல்

நோக்கா
நாமே உருக இவளும் உருகுவாள் என்று நோக்கினான்
விகாரம் இல்லாதது போல் முகத்தை வைத்துக் கொண்டேன்

நம்முடைய சரம உபாயமும் நிஷ் பலமா என்று வெட்கினார்
கம்பீரத்தால் லஜ்ஜித்தது தோற்றாமல் இருக்க பார்த்தார்
நேர் முகம் பார்க்காமல் சோலை பக்கம் பார்ப்பதாக ஆனார்

பின்னும் நயங்கள் செய் வளவில்
-பின்னும் -நை வளம் பண்ணை பாடினதொடு நில்லாமல்
அடியேன் குடியேன் போன்ற நைச்ய பாஷாணங்கள்
பண்ணிலே ஏறிட்டு பாடத் தொடங்கினார்

என் மனமும் கண்ணும் ஓடி எம்பெருமான் திருவடிக் கீழ் அணைய
விகாரம் காட்டக் கூடாது என்று நான் இருந்தாலும்
கடல் உடைந்தால் போல்
நெஞ்சும் கண்ணும் ஆஸ்ரயத்தை விட்டு ஓடின
அவர் நினைத்த அளவன்று காண் நான் அழிந்த படி -என்கிறாள்
என் முலையை தம் மார்பிலே நெருக்கித் தழுவிக் கொள்ள வாயிற்று அவர் நினைத்து இருந்தது
நான் அவர் காலை தலையிலே வைத்துக் கொண்டேன் -என்கிறாள் –

இப்பால் கை வளையும் மேகலையும் காணேன்
விரஹ விருத்தாந்தம் சொல்ல வில்லை
உன்மத்தமான சம்ச்லேஷ ரசம்
தேக பூரிப்பினால் வளைகள் வெடித்து ஒழிந்தன
மே -அரையிலே மேவுகின்ற
கலை -வஸ்த்ரம்
பரியட்ட மாறாட்டத்தாலே என் பரியட்டப் பட்டும் கண்டிலேன் என்கை
அவன் பரியட்டம் தன் அரையிலே இருக்கக் கண்டாள் இத்தனை இறே

அஹங்காரம் மமகாரம் ஒழிந்தன -ஸ்வாபதேசம்

உபாய விரோதி பிராப்ய விரோதி புருஷார்த்த விரோதி இடையூறுகளும் தொலைந்து
உன் தன்னோடு உற்றோமே யாவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம் மற்றை நம் காமங்கள் மாற்று –
என்கிற பிரார்த்தனை பலித்தமை சொல்லிற்று
நான் போக்தா அன்று
எனக்கு போகம் அன்று
போக்தாவும் அவனே
போகமும் அவனுடையதே
ஸ்வரூப தத்தவத்தின் முற்றின அனுசந்தானம் சொல்லிற்று-

கண்டேன் கன மகரக் குழை இரண்டும் நான்கு தோளும்
அணைத்த போது உறுத்தின திரு மகரக் குழைகளையும்
அணைத்த திருக் கைகளையும் கண்டேன்
தன்னை அணைத்த படியால் தோள்கள் பணைத்த படி -நான்கு தோள்
சதுர புஜ ஸ்வரூபத்தை வெளியிட்டதாகவுமாம்

எவ்வளவுண்டு எம்பெருமான் கோயில் என்றேற்கு
அவன் இருப்பிடம் சென்று நித்ய சம்ச்லேஷம் பெறவும்
கூடவே தோள் மேல் தோள் போட்டு போக விரும்பியும்
பரிஜனங்கள் உடன் சேர்ந்து அனுபவிக்கவும்
தேவரீர் வாழ்விடம் இங்குத்தைக்கு எத்தனை தூரம் என்றேன்

இதோ காண்கிற திருவாலி திரு நகரி காண் என்று சொல்லி அந்தர்தானமாய் விட்டார்
பாவியேன் நான் அன்றோ பிரிவை பிரஸ்தாவித்தேன்
நானே கெடுத்துக் கொண்டேன் –

——————————————————————-

தன் பேறாகத் தானே வந்து கலந்தவன் பிரிகிறபோது ‘போக வேண்டா‘ என்று ஒருவார்த்தை சொல்ல மாட்டிற்றிலையோ?
என்று தோழி கேட்க, அது சொல்லாமலிருப்போனோ? அதுவுஞ் சொன்னேன், பலிக்கப் பெற்றதில்லை யென்கிறாள்.
கலவியிலே உன் கைக்கு அடங்கின சரக்காயிருந்தவர் உன் வார்த்தையை அலக்ஷியஞ் செய்து போவரோ?‘ என்ன,
‘நிலமல்லாத நிலத்திலே இப்படி நெடும் போது நிற்கலாகுமோ‘ என்று பெரிய திருவடி தூக்கிக் கொண்டு போகப் போயினாரென்கிறாள்.

உள்ளூரும் சிந்தைநோய் எனக்கே தந்தென் ஒளிவளையும் மாநிறமும் கொண்டா ரிங்கே,
தெள்ளூரு மிளந்தெங்கின் தேறல் மாந்திச் சேலுகளும் திருவரங்கம் நம்மூ ரென்னக்
கள்ளூரும் பைந்துழாய் மாலை யானைக் கனவிடத்தில் யான்காண்பன் கண்ட போது,
புள்ளூரும் கள்வாநீ போகேல், என்பன் என்றாலு மிதுநமக்கோர் புலவி தானே?

பதவுரை

உன் ஊரும்-உள்ளுக்குள்ளேயே படரும்படியான
சிந்தை நோய்-மனோவியாதியை
எனக்கேதந்து-என்னொருத்திக்கே உண்டாக்கி
என் ஒளி வளையும்-எனது அழகிய வளைகளையும்
மா நிறமும்-சிறந்த மேனிநிறத்தையும்
இங்கே-இந்தத் திருமணங் கொல்லையிலே
கொண்டார்-கொள்ளை கொண்டு போனார்; (அப்படி அவர் போகிய போது)
சேல்-மீன்களானவை
தெள் ஊரும் இளதெங்கின் தேறல் மாந்தி-தெளிவாகப் பெருகுகின்ற இளந்தென்னங் கள்ளைப் பானம் பண்ணி
உகளும்-களித்துத் தடித்துத் உலாவா நிற்கப்பெற்ற
திரு அரங்கம்-ஸ்ரீரங்கம்
நம் ஊர் என்ன-நமது இருப்பிடம் என்று சொல்லிப்போக,
கள் ஊரும் பைந்துழாய் மாலையானை-தேன் வெள்ளமிடாநின்ற பசுமைதங்கிய திருத்துழாய் மாலையையுடைய அப்பெருமானை
கனவு இடத்தில் யான் காண்பன்-கனவிலே நான் காணப்பெறுகிறேன்;
கண்ட போது-அப்படி காணும்போது
புள் ஊரும் கள்வா-கருடப்பறவையை ஏறிநடந்துகிற கள்வனே!
நீபோகேல் என்பன்-இனிநீ என்னைவிட்டுப்பிரி்ந்து போகலாகாது என்பேன்;
என்றாலும்-அங்ஙனஞ் சொன்னாலும்
நமக்கு-நமக்கு
இது-அப்பெருமானது கல்வியானது
ஓர் புலவிதானே-வருத்தமேயாய்த் தலைக்கட்டு மது.

உபயவிபூதி நாதராய்ப் பரம உதாரராயிருக்குமவர்க்கு நீ வாழ்க்கைப்பட்டிருந்தாயாகில் அவர் போம்போது
உனக்குத் தந்துபோன செல்வம் ஏதேனுமுண்டோவென்று கேட்க,
உள்ளுருஞ் சிந்தைநோய் எனக்கே தந்து என்கிறாள்.
தோழீ! இதுகாண் அவர் எனக்குத் தந்துபோனது என்கிறாள்,
கண்ணாலே பார்த்துச் சிகித்ஸை பண்ணத்தக்க நோயையன்று கொடுத்தது;
ஸர்ப்பம் ஊர்ந்தாற்போலே உள்ளுக்குள்ளே ஸஞ்சாரியாயிருக்கின்ற ப்ரேமவியாதியைத் தந்துபோனார்.
“தக்கார் பலர் தேவிமார் சாலவுடையீர்“ என்கிறபடியே அவர்க்குத் தேவிமார் மற்றும் பலருண்டாகிலும்
அவர்களை அவர் பொருள் படுத்தவேயில்லை; என்னொருத்திக்கே ஸர்வ ஸ்தானமாகக் கொடுத்தாராயிற்று.

அவர் கொடுத்ததற்கு நீ ஏதேனும் பிரதிஸம்பாவனை செய்ததுண்டோ? என்று தோழிகேட்க,
“என்னொளிவளையும் மாநிறமுங் கொண்டாரிங்கே“ என்கிறாள்.
நான் கொடுக்கவேண்டிற்றுண்டோ?
அவர்தாம் கொள்ளை கொள்ளிக்குறும்பராயிற்றே; தாமே கொள்ளைகொண்டுபோனார்.

கீழ்ப்பாட்டில் ‘கைவளையும் மேகலையுங் காணேன்“ என்ற விடத்திற்கொண்ட அர்த்தத்திற்கு
எதிரான அர்த்தம் இங்குக்கொள்ளவேண்டும்.
அங்கு ஸம்ச்லேஷத்தாலுண்டான பூரிப்பு; இங்கு விச்லேஷத்தாலுண்டான இளைப்பு.

ஏற்கனவே பூரிப்பினால் வளைகள் வெடித்துப் போயிருக்க, என்னொளி வளையைக் கொண்டார் என்று
இங்குச் சொல்வதற்கில்லையே; கையில் வளையிருந்தாலன்றோ கொண்டாரென்னலாம் என்று சிலர் சங்கிக்கக்கூடும்;
வளைகொண்டாரென்றதில் தாற்பரியமாகிய உடலிளைப்புமாத்திரமே இங்கு விலக்ஷிதமென்று கொள்க;
உடல் ஈர்க்குப்போல இளைக்கும்படி செய்துவிட்டாரென்றவாறு.

அஹங்காரமமகாரங்கள் நன்கு ஒழியப்பெற்றவர் தம்வாயாலே ‘என்னொளிவளை‘ என்னலாமோ? என்னில்;
ஸம்ச்லேஷகாலத்தில் இந்த வளையும் நிறமும் காதலனுடைய கொண்டாட்டத்திற்கு மிகவும் உறுப்பாயிருந்ததனால்
அவனுக்கு ஆதரணீயமானது என்னும் வழியாலே தமக்கு ஆதரணீயமாகக் குறையில்லை என்க.

கூடியிருக்குங்காலத்தில் நாயகன் ‘இதுவொரு வளையிருக்கு மழகு என்னே! ;
சேர்த்தியால் வந்த ஒளியிருக்குமம்படி என்னே; வடிவில் நிறமிருக்கும்படி என்னே!‘ என்று பலகாலும் வாய் வெருவுவது
வழக்க மாகையாலே அதனை அநுவாதம் செய்கிறவத்தனை.

இங்கே யென்று
தான் வழிபறியுண்ட விடத்தைக் காட்டுகிறாள்;
மைவண்ணநறுங்குஞ்சியில் ‘இங்கே‘ என்று தான் நிதியெடுத்த விடத்தைக் காட்டினள்;
இப்பாட்டில் ‘இங்கே‘ யென்று
நிதியிழந்தவிடத்தைக் காட்டுகிறாள். நான் வழிபறிக்க வந்து வழிபறியுண்டேனென்கிறாள்.

நங்காய்! உன் ஒளிவளையும் மாநிறமுங்கொண்டு அவர் போகிறபோது உம்முடைய ஊர் ஏதென்று கேளாவிட்டதென்?
என்று தோழிகேட்க; அது நான் கேட்கவேண்டிற் றில்லை;
பிரிவில் தரித்திருக்கைக்காகத் தாமே சொல்லிப் போனாரென்கிறாள் தெள்ளூருமித்யாதியால்.
தெளிந்து தெங்கினின்றும் பெருகிவாரா நின்றுள்ள தேனை நுகர்ந்து சேல்மீன்கள் உகளும்படியான
திருவரங்கம் நம்மூர் என்று சொல்லிப்போனார்.

‘என்ஊர்‘ என்றாவது, ‘உன் ஊர்‘ என்றாவது சொல்லாமல் ‘நம்மூர்‘ என்றதில் இவளுக்கு ஒரு ஆநந்தம்.
என்னூர் என்றால் அவனுடைய ஆச்ரித பாரதந்திரியம் குலையும்;
உன்னூர் என்றால் இவளுக்கு ஸ்வரூப ஹாநியாகும்.
இரண்டு தலைக்கும் பாங்காக நம்மூர் என்று சொல்லிப் போனார்.
“திருமந்த்ரம்போலே இருவர்க்கும் பொதுவானவூர்“ என்று வியாக்கியான ஸ்வாரஸ்யம் நோக்குக.

அப்படி அவர் கருணையற்றுப் பிரிந்துபோகச் செய்தேயும் அவருடைய வடிவின் போக்யதை
இவளைக் கனக்க ஈடுபடுத்தியிருக்கையாலே கள்ளூரும்பைந் துழாய் மாலையானை யென்று வாய்வெருவுகின்றாள்.
தோளிலிட்ட தனிமாலையுந் தாமுமாய் அவர் இருந்த இரும்பை நீ காணப்பெற்றிலையே தோழீ! என்கிறாள்.
அவ்வூர் படுமதெல்லாம் அவருடம்பும் படுகிறது காண்.
தெள்ளூருமிளந்தெங்கின் தேறல் அவ்வூர்த் திருவீதிகளிலே வெள்ளமிடுமாபோலவே
அவருடம்பும் பைந்துழாய்மாலையின் மதுவெள்ள மொழுகப்பெற்றிருந்தது.

கனவிடத்தில் யான் காண்பன் =
கனவு என்றது ஸ்வப்நத்தையாகவுமாம்; இவ்விபூதியின் வாழ்க்கையை ஸ்வப்நபர்யாயமாக ஞானிகள்
அத்யவஸிப்பராகையாலே கனவிட மென்று இவ்விபூதியைச் சொல்லிற்றாகவுமாம்.
அவர் கூடவே கலந்து வாழ்கிற பாவனையைக் காட்டிக் கொண்டிருக்குமளவிலே, மறைந்திருந்த பெரிய திருவடி வந்து
“வந்த காரியம் தலைக்கட்டிற்றே, இனி யெழுந்தருளலாகாதோ“ என்று நிற்க, அவன் மேலேறிப் போகப் புறப்பட்டார்;
இத்தனை காலமும் நம் கைச்சரக்காயிருந்தவர் நாம் ஒரு வார்த்தை சொன்னால் கேளாதொழிவரோ வென்று நினைத்து
“புள்ளூருங்கள்வா! நீபோகேல்“ என்று சொல்லியும் இங்ஙனே வருத்தப்பட வேண்டிய நிலைமைதானேயாயிற்று.
ஸம்ச்லேஷத்துக் கடுத்தபடி விச்லேஷம் விளைந்தாலல்லது ஸாத்மியாது என்பது அவருடைய கருத்துப்போலும்.
அதனை நினைந்து ஆறியிருக்கப்போமோ நமக்கு? துடிப்பதே தொழிலாயிற்று என்கிறாள்.

நிலமல்லா நிலத்திலே இப்படி நெடும் போது நிற்கலாமா என்று பெரிய திருவடி தூக்கிக் கொண்டு போக போயினான்
உபயவிபூதி நாதன் போகும் பொழுது எனக்கு தந்து போன செல்வம் என்ன -என்ன
உள்ளூரும் சிந்தை நோய் எனக்கே தந்து
தக்கார் பல தேவிமார் சால உடையவர் என் ஒருத்திக்குமே என்று இத்தை கொடுத்து போந்தான் -சர்வ ஸ்வதானமாக —

நீ ஏதேனும் பிரதி சம்பாவனை செய்தது உண்டோ -என்ன
என் ஒளி வளையும் மா நிறமும் கொண்டார் இங்கே
நான் கொடுக்க வேண்டாம்
அவனே கொள்ளை குறும்பன் அன்றோ
தாமே கொள்ளை கொண்டு போனார்
இங்கு விஸ்லேஷத்தால் உண்டான இளைப்பு
முன்பு சம்ஸ்லேஷத்தால் உண்டான பூரிப்பு

அஹங்காரம் மமகாரங்கள் ஒழிந்தவர்
என் ஒளி வளை-என்னலாமோ என்னில்
சம்ஸ்லேஷ தசையில் அவனுக்கு ஆதரணீயம் என்னுமத்தால் உத்தேச்யம்
இது ஒரு வளை இருக்கும் அழகு என்ன
இது ஒரு சேர்த்தி அழகு என்ன
இப்படி அவன் வாய் வெருவினதை அனுவாதம் செய்கிறாள்

இங்கே
வழி பரியுண்ட இடத்தை காட்டுகிறாள்
மை வண்ண நறும் குஞ்சி பாசுரத்தில்
இங்கே
நிதி எடுத்த இடத்தை காட்டினாள்
இதில் நிதி இழந்த இடத்தை காட்டுகிறாள்-

போகும் பொழுது அவரே-தெள்ளூரும் -இத்யாதி — நம்மூர்
என்னூர் என்றால் ஆஸ்ரித பாரதந்த்ர்யம் குலையும்
உன்னூர் என்றால் இவளுக்கு ஸ்வரூப ஹானியாகும்
திரு மந்த்ரம் போலே இருவருக்கும் பொதுவான ஊர்

பிரிந்து போகும் பொழுதும் வடிவு அழகின் போக்யதை கனக்க ஈடுபடுத்தியது
கள்ளூறும் பைந்துழாய் மாலையானை
தோளில் இட்ட தனி மாலையும் தாமுமாய் இருந்த சேர்த்தி அழகை நீ காணப் பெறவில்லையே
தெள்ளூரும் இளம் தெங்கின் தேறல் அவ்வூர்த் திரு வீதிகளிலே வெள்ளம் இடுமா போலே
அவர் உடம்பும் பைந்துழாய் மாலையின் மது வெள்ளம் ஒழுகப் பெற்று இருந்தது

கன விடத்தில் யான் காண்பன்
ஸ்வப்னம்
இந்த விபூதியை சொல்லிற்று ஆகவுமாம்

மறைந்து இருந்த பெரிய திருவடி வந்து
வந்த கார்யம் தலைக் கட்டிற்றே-இனி எழுந்து அருளலாகாதோ
போகப் புறப்பட்டார்

நம் கைச் சரக்கு-என்று நினைத்து
புள்ளூறும் கள்வா நீ போகேல்
சம்ஸ்லேஷம் விஸ்லேஷத்துடன் தலைக் கட்டும்
அதனை நினைத்து ஆறி இருக்கப் போமோ
துடிப்பதே தொழில் ஆயிற்று-

———————————————————————————

“புள்ளூருங்கள்வா! நீ போகேலென்பன் என்றாலுமிது நமக்கோர் புலவி தானே“ என்றாள் கீழ்ப்பாட்டில்;
அது கேட்ட தோழியானவள், ‘நங்காய்! பெரிய திருவடி வந்து தூக்கிக் கொண்டு போய்விட்டானென்கிறாயே;
அந்தப் பெரிய திருவடி தானும் உனக்கு அடங்கினவனல்லனோ?
“ஒருவன் அடிமை கொள்ளும் போது க்ருஹிணிக்கென்றன்றே ஆவணை யோலை எழுதுவது;
ஆகிலும் பணிசெய்வது க்ருஹிணிக்கிறே“ என்ற நியாத்தாலே கணவனுக்கு அடிமைப் பட்டாரெல்லாரும்
மனைவியர்க்கும் அடிமைப் பட்டிருத்தல் முறைமை யன்றோ;
பகவானுக்கு அடிமைப் பட்டபோதே உனக்கும் அடிமைப் பட்டவனாயன்றோ அக்கருடனிருப்பது;
அப்படி விதேயனான அவனை நீ போகேலென்று நியமிக்கக் கூடாதோ?‘ என்று கேட்க;
ஆமாம் தோழீ!, அவன் ஒருவனுமேயாகிலன்றோ நியமிக்கலாம்; நித்ய விபூதியிலுள்ளரடங்கலும் வந்து சூழ்ந்துகொண்டார்கள்;
அவர் தாமும் முன்புபோலின் றியே இப்போதுண்டான விலக்ஷணமான மேன்மையினாலே எதிர்த்துப் பேச
வொண்ணா தபடியாயிருந்தார்; அதனாலே சென்று கிட்டவும் வார்த்தை சொல்லவும் அருமையாயிருந்தது!,
என் செய்வேன் என்கிறாள்.

இருகையில்சங் கிவைநில்லா எல்லே பாவம் இலங்கொலிநீர் பெரும்பெளவம் மண்டி யுண்ட,
பெருவயிற்ற கருமுகிலே யொப்பர் வண்ணம் பெருந்தவத்தர் அருந்தவத்து முனிவர் சூழ
ஒருகையில்சங் கொருகைமற் றாழி யேந்தி உலகுண்ட பெருவாய ரிங்கே வந்து,என்
பொருகயல்கண் ணீரரும்பப் புலவி தந்து புனலரங்க மூரென்று போயி நாரே.

பதவுரை

உலகு உண்ட பெரு வாயர்–பிரளயகாலத்தில் உலகங்களை யெல்லாம் அமுதுசெய்த பெரிய திருவாயையுடைய வரும்,
இங்கே வந்து-இவ்விடத்தே வந்து
பொரு கயல்-ஒன்றோடொன்று போர்செய்கின்ற கயல் மீன்களைப் போன்ற
என் கண்-எனது கண்களிலிருந்து
நீர் அரும்ப–நீர்த் துளிகள் துளிக்கும்படி
புலவி தந்து–விரஹ வேதனையை யுண்டாக்கி,
இலங்கு ஒலி நீர் பெரு பௌவம் மண்டி உண்ட பெரு வயிற்ற கரு முகில் ஒப்பர்-விளங்குகின்ற ஓசையை யுடைய
நீர் நிறைந்த பெருங்கடலில் ஆழ்ந்து நீரைப் பருகின பெருவயிற்றை யுடைய காளமேகத்தின் நிறத்தை ஒத்தவருமான பெருமாள்
பெருந்தவத்தர் அருதவத்து முனிவர் சூழ-பரமபக்தி யுக்தரான ஸ்ரீவைஷ்ணவர்களும் மஹா தபஸ்லிகளான ரிஷிகளும் சூழ்ந்து நிற்க
ஒரு கையில்-ஒரு திருக்கையிலே
சங்கு-திருச்சங்கையும்
மற்றொரு கை–மற்றொரு திருக் கையிலே
ஆழி-திருவாழியையும்
ஏந்தி-தரித்துக் கொண்டு
புனல் அரங்கம் ஊர் என்று-நீர்வளம் பொருந்திய திருவரங்கம் தம்மூர் என்று சொல்லிவிட்டு
போயினார்-அகன்றுபோனார்;
(அதுவே காரணமாக)
இரு கையில்-(எனது) இரண்டு கைகளிலும்
சங்கு இவை நில்லா-இந்தச் சங்குவளைகள் கழன்றொழிந்தன
எல்லே பாவம்–என்ன மஹா பாபமோ!.

இருகையிற் சங்கு இவை நில்லா =
போகிறவர் தாம் மாத்தி்ரம் போகையன்றியே என்கையில் வளைகளையுங் கொண்டுபோனார்.
அவர் போய்விட்டாலும் அவர் உகந்த வளைகளாவது கையிலிருந்தால் அவற்றைப் பார்த்துக் கொண்டிருந்தாகிலும்
ஒருவாறு போதைப் போக்கலாமென்று நினைத்துக் கையில் வளையைப் பார்த்தாள்;
வளை அவர்க்கு முன்னே போய் நின்றது. இன்னொரு கையிலாவது வளை தங்கியிருக்கிறதோவென்று பார்த்தாள்;
அதுவும் அதுக்கு முன்னே போய் கிடந்தது; அந்தோ! என்செய்வேன்!, இருகையிற் சங்கிவை நில்லா வென்கிறாள்.

‘சங்கு நில்லா‘ என்னாமல் ‘சங்கு இவை நில்லா‘ என்றதற்குக் கருத்தென்னன்னில்;
அவர் நில்லாதொழிந்தால் இவையும் நில்லாதொழிய வேணுமோ?
அவர் சேஷியாகையாலே போகிறார்; எனக்கு சேஷமான இவையும் நில்லாதே போகவேணுமோ?
அவர் சேதநராகையாலே என்னிடத்தில் ஏதேனுங் குறைகண்டு போகலாம்; அசேதனமான இவையும் போகவேணுமோ?
வந்து கலந்தவராகையாலே போகிறார் அவர்; ஸஹஜமான இவையும் போகவேணுமோ?
நம் கைக்கு அடங்காதவராகையாலே அவர் போனார்; நம் கைக்ககு அடங்கின இவையும் போகவேணுமோ?
அவர் நிற்கிலும் இவை நிற்கின்றனவில்லையே யென்கிறாள்.
போகேலென்னச் செய்தேயும் அவர் போனாப்போலே இவையும் பலகால் எடுத்தெடுத்துக் கையிலேயிடச் செய்தேயும்
கழலுகின்றமை தோற்றும் நில்லா என்றதில்.

எல்லே பாவம்! =
ஈதென்ன கஷ்டகாலம்!? சேதனப்பொருளோடு அசேதனப் பொருளோடு வாசியற எல்லாம்
என்னைக் கைவிடும்படியாக என்ன பாபம் பண்ணினோனோ வென்கிறாள்.
கைப்பட்டதும் போகும்படியான பாபத்தை யன்றோ பண்ணினே னென்கிறாள்.

தன்னோடு கலந்து பிரிந்துபோகிறபோது அவருடைய வடிவிற்பிறந்த புதுக்கணிப்பைச் சொல்லுகிறாள்
இலங்கொலி நீர்ப் பெரும் பௌவம் மண்டியுண்ட பெருவயிற்ற கருமுகிலேயொப்பர் வண்ணம் என்று.
தன்னை வெறுந்தரையாக்கினபடிக்கு ஒரு க்ருஷ்டாந்த மிட்டுச் சொல்லுகிறாள் போலும்.
இயற்கையான வொளிமிக்க கம்பீரமான மஹாமுத்ரத்தை வெறுந்தரையாகப் பருகி நீர் கொண்டெழுந்த காளமேகம் போலே
காண் போகிற போது அவரது வடிவு இருந்தபடி.

கீழ்ப்பாட்டில் “என்னொளிவளையும் மாநிறமுங் கொண்டார்“ என்றாளே;
இங்கு நின்றுங் கொண்டதெல்லாம் அங்கே குடிகொண்டதாக வேணுமே, அது தோன்றச் சொல்லுகிறபடி.
பரகாலநாயகி, தன்னைப் பெருங்கடலாகவும் அவரைக் காளமேகமாகவுங் கருதி இது சொல்லுகிறாளென்க.
மேகமானது பெரிய அபிநிவேசத்தோடே வந்து கடலில் ஸாரத்தைக் கவர்ந்து செல்வதுபோல
அவரும் இத்தலையில் ளெஸந்தர்ய ஸாகரத்தைக் கவர்ந்து சென்றமை சொன்னபடி.
அதுதானும் அவரது வடிவிலே நன்கு தோன்றியிருக்கையாலே ஸ்பஷ்டமாயிற்று.

பெருவயிற்ற கருமுகிலே யொப்பர் வண்ண மென்று பெருமாளுடைய இயற்கையான அழகு சொல்லுகிறதன்று;
தற்காலத்திலுண்டான அழகைச் சொல்லுகிறாள்.
ஐயோ! மேகம் முகக்குமிடமாகப் பெற்றேனே. மேகம் முகந்து பெய்யுமிடமாகப் பெற்றிலேனே! என்கிற வருத்தம்
‘மண்டி யுண்ட‘ என்றதில் தொனிக்கும்.
அன்றியும்,
இத் தலையிலுள்ள தெல்லாவற்றையும் கொள்ளை கொண்டும் இன்னமும் அவருடைய வயிறு நிரம்பவில்லையே,
அவருக்கு த்ருப்தி பிறக்க வில்லையே! என்பது ‘பெருவயிற்ற‘ என்பதில் தொனிக்கும்.

அவர் பிரிந்து போகிறபோது வடிவில் புகர் இருந்தபடியும் சுற்றும் புடைசூழ நின்றார்
பெருவெள்ளமிருந்தபடியும் மேன்மை யிருந்தபடியும் தோழீ! நீ காணப் பெற்றிலையே!,
அவற்றை என் சொல்லவல்லேனென்வாய்கொண்டு?
(பெருந்தவத்த ரருந்தவத்து முனிவர் சூழ ஒரு கையிற் சங்கொருகை மற்றாழியேந்தி உலகுண்ட பெருவாயர் போயினார்.)
ஒருவ ரிருவராய் வந்து கிட்டினார்களோ?
கடலில் அமுதந் தோன்றினவன்று அதனை அமரர் சுற்றிலும் சூழ்ந்துகொண்டாப்போலே காண் என்னைப் பிரிந்து போகிறபோது
அவரைப் பரிகாரம் வந்து சூழ்ந்துகொண்டது.
வைகுண்ட து பரே லோகே ச்ரியா ஸார்த்தம் ஜகத்பதி;, ஆஸ்தே விஷ்ணுரசிந்த்யாத்மா பக்தைர் பாகவதைஸ் ஸஹ * என்று
சொல்லப்பட்ட பக்தர்களும் பாகவதர்களும் வந்து சுற்றிலும் சூழ்ந்து கொண்டார்கள்.
அந்தப்பெருங் கூட்டத்தை விலக்கிக் கொண்டு நான் கிட்டிச்சென்று அவரைப் போகேலென்று சொல்வது எங்ஙனே?

அந்தப் பெருவெள்ளத்தை ஒருபடி நீஞ்சிக்கொண்டு சென்றோமேயாகிலும்,
“குழுமித் தேவர்குழாங்கள் கைதொழச் சோதி வெள்ளத்தினுள்ளே எழுவதோருரு“ என்னப்பட்ட
அவருடைய திருவுரு கண்ணால் முகக்கலாயிருந்ததோ?
கையுந் திருவாழியுமாய்நின்ற மேன்மை கிட்டலாம்படியிருந்ததோ?

(ஒருகையிற் சங்கு ஒருகை மற்றாழியேந்தி)
அவர்தாம் வந்த போதிலே என்கையைப் பிடித்த கையும் என்காலைப் பிடித்த கையும் இப்போது சங்கும் சக்கரமும் பொலிய நின்றனவே!.
கலந்தபோது அவர்க்கு இருந்த நீர்மைக்கு எல்லையில்லாதாப்போலே காண்
போகிறபோதிருந்த மேன்மைக்கு எல்லை யில்லாதிருந்தபடியும்.
“வடிவார்சோதி வலத்துறையும் சுடராழியும் பல்லாண்டு, படை போர்புக்கு முழங்கும் அப்பாஞ்ச சன்னியமும் பல்லாண்டே“ என்று
நெடுந்தூரத்திலே நின்று அந்த மேன்மைக்குப் பல்லாண்டு பாடும்படியா யிருந்ததத்தனையன்றி
அணுகிச் சென்று வாய்திறக்க வழியுண்டாயிருந்ததோ வென்கிறாள்.

(உலகுண்ட பெருவாய ரிங்கேவந்து)
இத்தால் பிரளமாகிற பெரிய ஆபத்துக்கு உதவினவர் என்று சொல்லுகிறதன்று,
அவர் தன்னோடு கலக்க வருகிறபோது இருந்த ரீதியைப்பற்றிச் சொல்லுகிறாள்.
பிரளய காலத்திலே உலகங்கட்கெல்லாம் தம்மையொழியச் செல்லாமையிருந்தாப் போலே
என்னை யொழியச் செல்லாதவராயன்றோ அவர் ஸம்ச்லேஷிக்கவந்தபோதில் இருந்தபடி என்கை.

பொருகயற்கண் நீரரும்பப் புலவிதந்து =
அவர் வந்து கலந்ததனால் நான்பெற்ற பேறு இதுகாணென்கிறாள்.
“கண்ணீர் பெருக“ என்னாமல் ‘அரும்ப‘ என்றதனால் விரஹ சோகாக்நியாலே உள்ளூலர்ந்து கிடக்கின்றமை தோன்றும்.
உள்ளே உலர்ந்து கிடக்கும் போது கண்ணீர் பெருகுவதெங்ஙனே?

(புலவி தந்து)
தன்னைக் கிட்டினாரை “வீவிலின்பம் மிகவெல்லை நிகழ்ந்தனன்“ என்கிறபடியே
ஆனந்தத்தின் எல்லையிலே நிறுத்த வல்லவரான அவர் காண் எனக்கு இப்போது துயரத்தை விளைத்தது.

(தந்து)
உபயவிபூதிநாதரான அவர் தம் முடைய பணப்பையில் நின்றும் அவிழ்த்துத் தந்த செல்வம்
இதுகாணென்கிறாள் போலும்.

அவர் தமக்கு நெஞ்சில் இரக்கமில்லாமை வந்தேறியானாலும் இயற்கையிலே கருணை யுண்டாகையாலே
அதனால் தூண்டப் பெற்று ஒருவார்த்தை சொல்லிப்போனார் காண்;
பிரிவில் நான் தரித்திருக்க வேணுமென்று பார்த்து ‘நம்ஊர் திருவரங்கம் பெரியகோயில்‘ என்று
அழகும் போன போதை யழகும் தோழீ! நீ காணப் பெற்றிலையே! என்றாளாயிற்று.

அந்த பெரிய திருவடி உனக்கு அடங்கினவன் அல்லனோ
ஒருவன் அடிமை கொள்ளும் போது க்ருஹிணிக்கு என்று அன்றே ஆவணை ஓலை எழுவது
ஆகிலும் பணி செய்வது க்ருஹிணிக்கு இறே
அவன் ஒருவன் மட்டும் இல்லையே நியமிக்க
நித்ய ஸூரிகள் அனைவரும் வந்து சூழ்ந்து கொண்டார்களே
விலஷணமான மேன்மையினாலே எதிர்த்து பேச ஒண்ணாத படி இருந்தாரே

இரு கையில் சங்கு இவை இல்லா –
அவர் போனாலும் அவர் உகந்த வளையல்கள் இருந்தால் போதைப் பாக்கலாமே
ஒரு கை மட்டும் இல்லை
இரு கைகளிலும் இல்லை
இவர் இல்லாது ஒழிந்தாலும் இவையும் நில்லாமல் போகவோ சங்கு -இவை நில்லா
சேஷியான அவர் போகலாம்
சேஷமான இவையும் போகலாமோ
சேதனர் -குறை கண்டு போகலாம்
அசேதனங்கள் இவை போகலாமோ
வந்து கலந்தவர் போகலாம்
சகஜமான இவையும் போகலாமோ
கைக்கு அடங்காதவர் போகலாம்
கைக்கு அடங்கின இவையும் போகலாமோ
அவன் நிற்கிலும் இவை நிற்காமல் போக வேண்டுமோ
போகேல் என்ன அவர் போனது போல இவையும் பல கால் எடுத்து எடுத்து பூண்டாலும் கழன்று போகின்றனவே-

எல்லே பாவமே

இலங்கு ஒளி நீர்ப் பெரும் பௌவம் மண்டியுண்ட பெரு வயிற்ற
கரு முகிலே யொப்பர் வண்ணம்
பிரிந்து போகும் பொழுது வடிவில் பிறந்த புதுக் கணிப்பை திருஷ்டாந்தம் இட்டு சொல்கிறார்
ஒளி வளையும் மா நிறமும் கொண்டார் என்றாள் கீழ்
இங்கு நின்றும் கொண்டது எல்லாம் அங்கு குடி இருக்க வேணுமே
தன்னை பெரும்கடல் -அவர் காளமேகம் -மேகம் அபி நிவேசதுடன் கடல் சாரம் கவர்ந்து
போவது போலே இவள் உடைய -சௌந்தர்ய சாகரம் கொள்ளை கொண்டு
பெரு வயிற்ற கரு முகிலே ஒப்பர் -என்கிறாள்
ஐயோ மேகம் முகக்கும் இடமாகப் பெற்றேனே
மேகம் முகந்து பெய்யும் இடமாக பெற்றிலேனே
என்பதால் மண்டி யுண்ட என்கிறாள்
அன்றிக்கே
இவ் வளைவையும் கொள்ளை கொண்டும் வயிறு நிரம்ப வில்லையே -திருப்தி இல்லையே
பெரு வயிற்று-

அவர் பிரிந்து போகும் பொழுது வடிவில் பிறந்த புகர் வெள்ளம் இருந்த படியை நீ காணப் பெற வில்லையே
பெரும் தவத்தர் அரும் தவத்து முனிவர் சூழ ஒரு கையில் சங்கு ஒரு கை மற்று ஆழி ஏந்தி உலகுண்ட பெரு வாயர் போயினர்
ஓர் இருவராய் வந்து கிட்டினார்களோ
கடலில் அமுததுக்காக அன்று அமரர் சூழ்ந்தது போலே
வைகுண்ட து பரே லோகே ச்ரியா சார்த்தம் ஜகத்பதி
ஆஸ்தே விஷ்ணு ர சிந்த்யாத்மா பக்தைர் பாகவ தைஸ் சஹ
பக்தர்களும் பாகவதர்களும் சூழ
விலக்கி கிட்டே சென்று போகேல் சொல்ல முடியுமா

குழுமித் தேவர் குழாங்கள் கை தொழச் சோதி வெள்ளத்தின் உள்ளே எழுவதோர் உரு -கண்ணால் முகக்கலாய் இருந்ததோ
கையும் திரு ஆழியுமாய் இருந்த மேன்மை கிட்டலாம் படி இருந்ததோ
என் கையைப் பிடித்த கையும் காலைப் பிடித்த கையும் சங்கு சக்கரம் ஏந்தி இருக்கின்றனவே
கலந்த போது நீர்மைக்கு எல்லை இல்லாதவோ பாதி
இப்பொழுது மேன்மைக்கு எல்லை இன்றி இருந்ததே
வடிவார் சோதி -சுடர் ஆழியும் பல்லாண்டு –அப்பாஞ்ச ஜன்யமும் பல்லாண்டு -என்று
மேன்மைக்கு மங்களா சாசனம் பண்ணுமது ஒழிய அணுகி வாய் திறக்கவோ

உலகுண்ட பெருவாயர் இங்கே வந்து
பிரளய காலத்தில் தன்னை அன்றி செல்லாத இருந்த உலகமோபாதி
என்னை ஒழிய செல்லாதவராய் இங்கே சம்ஸ்லேஷிக்க வந்தார்

பொரு கயல் கண் நீர் அரும்ப புலவி தந்து
கலவியின் பேறு இது தான்
கண்ணீர் பெருக இல்லை அரும்ப
விரஹ சோக அக்னியால் உள்ளுலர்ந்து கிடக்கின்றாள்

புலவி தந்து
தன்னை கிட்டினாரை-வீவில் இன்பம் மிக வெள்ளை நிகழ்நதனன் -என்கிறபடி
ஆனந்தத்தின் எல்லையில் நிறுத்த வல்லவாரன அவர்
என்னை துயரத்தின் எல்லையில் நிறுத்தி

தந்து
உபய விபூதி நாதர் தனது பணப்பையில் நின்று அவிழ்த்து எனக்கு செல்வம் கொடுத்து அருளினார் இந்த செல்வம் பாராய்

பிரியில் தான் தரித்து இருக்க கருணை உடன்
நம்மூர் திருவரங்கம் பெரிய கோயில் -என்கிற
தர்ம வார்த்தை சொல்லிப் போந்தார்
சொல்லும் போது திரு அதர அழகையும்
போன போதை அழைகையும் தோழி நீ காணப் பெறவில்லையே-

————————————————————————–

தலைமகன் தன் பக்கலிலுள்ளவை அனைத்தையுங் காட்டி என் பக்கலிலுள்ளவை
யெல்லாவற்றையுங் கொள்ளை கொண்டு போயினானென்கிறாள்–

மின்னிலங்கு திருவுருவும் பெரிய தோளும் கரிமுனிந்த கைத்தலமும் கண்ணும் வாயும்,
தன்னலர்ந்த நறுந்துழாய் மலரின் கீழே தாழ்ந்திலங்கும் மகரம்சேர் குழையும் காட்டி
என்னலனும் என்னிறையும் எஞ்சிந் தையும் என்வளையும் கொண்டென்னை யாளுங் கொண்டு,
பொன்னலர்ந்த நறுஞ்செருந்திப் பொழிலி னூடே புனலரங்க மூரென்று போயி னாரே.

பதவுரை

மின் இலங்கு திரு உருவும்-மின்னல்போலப் பளபளவென்று விளங்குகின்ற திருமேனியும்
பெரிய தோளும்-பெரிய திருத்தோள்களும்
கரி முனிந்த கைத் தலமும்-குவலயாபீடமென்கிற யானையைச் சீறிப்புடைத்த திருக்கைகளும்
கண்ணும்–திருக் கண்களும்
வாயும்–திரு அதரமும்
தன் அலர்ந்த நறு துழாய் மலரின் கீழே–தன்னிலத் திற்காட்டில் செவ்வி பெற்றதாய்ப் பரிமளம் மிக்கதான திருத்துழாய் மாலையின் கீழே
தாழ்ந்து இலங்கு–தாழ்ந்து விளங்குகின்ற
மகரம் சேர் குழையும்–மகர குண்டலங்களுமாகிற இவற்றை
காட்டி–ஸேவை ஸாதிப்பித்து
என் நலனும்–என்னுடைய அழகையும்
என் நிறைவும்–என் அடக்கத்தையும்
என் சிந்தையும்–என் நெஞ்சையும்
என் வளையும்–என் கை வளைகளையும்
கொண்டு–அபஹரித்துக் கொண்டதுமன்றி
என்னை ஆளும் கொண்டு–என்னை அடிமை யாக்கிக் கொண்டு,
பொன் அலர்ந்த–பொன் போல் மலர்ந்த
நறு–பரிமளம் மிக்க
செருந்தி பொழிலின் ஊடே–ஸுரபுன்னைச் சோலையினிடத் தேயிருந்து
புனல் அரங்கம் ஊர் என்று போயினார்–நீர் வளம் மிக்க திருவரங்கம் தம் மூரென்று சொல்லிப் போய் விட்டார்!.

மின்னிலங்கு திருவரங்கம் =
மின் போலே விளங்கா நின்றுள்ள திருமேனியை முதலிலே காட்டினாரென்கிறாள்.
“கார்வண்ணந் திருமேனி“ என்றும்
“கருமுகிலேயொப்பர்வண்ணம்“ என்றும்
“முகிலுருவமெம்மடிகளுருவந்தானே“ என்றுங்கீழே சொல்லி யிருக்க,
இங்கே ‘மின்னலங்கு திருவுரு‘ என்றது என்னனெனில்;
ஔதார்யத்திற்கும் விடாய்தீர்க்குந் தன்மைக்கும் மேகத்தை ஒப்புச் சொல்லிற்றுக் கீழ்;
எதிர்விழி விழிக்க வொண்ணாதபடியான தன்மையை நோக்கி இங்கு ‘மின்னலங்கு திருவுரு‘ என்றது.

ஆனாலும் காளமேகத்தின் நிறமேயன்றோ வடிவின்நிறமென்னில்;
திருவாழியாழ்வானுடைய புகர் திருமேனியெங்கும் பரவியிருக்கையாலே இங்ஙனே சொல்லக் குறையில்லை யென்க.
அருண கிரணத்தாலே திருப் பல்லாண்டும் நோக்குக.
“ஒருகையிற்சங்கொருகை மற்றாழியேந்தி உலகுண்ட பெருவாயரிங்கேவந்து“ என்று கீழே சொல்லிற்றும் இங்கே நினைக்கத்தக்கது.
பெரிய மேன்மையைக் காட்டினமை சொல்லிற்றாயிற்று.

பெரியதோளும் =
காலமுள்ளதனையும் அனுபவித்தாலும் வேறொரு அவயவத்தில் போக வொட்டாதபடி துவக்க வல்ல
அளவிறந்த போக்யதை வாய்ந்த திருத்தோள்கள்.
“தோள் கண்டார் தோளே கண்டார்“ என்னும்படியானவை.
ஆகவே, பெரிய என்று போக்யதையிலுள்ள பெருமையைச் சொன்னபடி.

இனி, “பாஹுச்சாயாமவஷ்டப்தோ யஸ்ய லோகோ மஹாத்மந;“ என்கிறபடியே
தோள் நிழலிலே உலகமெல்லாம் ஒதுங்கினாலும் ஒதுங்கினவர்கள் சுருங்கி
நிழலே மிக்கிருக்கும்படியான பெருமையைச் சொல்லிற்றாகவுங் கொள்ளலாம்.

கரிமுனிந்த கைத்தலமும் =
கம்ஸனால் மதமூட்டி நிறுத்தப்பட்டிருந்த குவலயாபீட மென்கிற யானையைத் தொலைத்த மிடுக்க விளங்க நின்ற திருக்கைகள்.
ஒரு விசேஷணமிட வேண்டாதே இயற்கையாகவே பரமபேக்யமா யிருந்துள்ள கண்ணும் வாயும்.

(தன்னலர்ந்த நறுந்துழாய் இத்யாதி)
தன்னிலத்திற் காட்டிலும் செவ்வி பெற்று நறுமணம் மிக்க திருத் துழாய் வளையத்தினருகே
திருத்தோளளவுந் தாழ்ந்து விளங்குகின்ற மகர குண்டலங்களும்,
ஆக இவற்றையெல்லாம் ஸேவை ஸாதிப்பித்து.

(என்னலனு மென்னிறைவு மென்சிந்தையும் என்வளையுங் கொண்டு என்னையாளுங் கொண்டு)
ஸர்வஸ்வதானம் பண்ணுவாரைப்போலே வந்து ஸர்வஸ்வத்தையுங் கொள்ளை கொண்டார் என்கிறாள்.
நலன் – நலம்; மகரனகரப்போலி. குணம் என்றபடி.
நாண் மடம் அச்சம் பயிர்ப்பு என்கிற ஆத்ம குணங்களையும், அழகு மென்மை முதலிய தேஹ குணங்களையும் சொன்னபடி.

(நாணமாவது, தகாத காரியத்தில் மனமொடுங்கிநிற்பது.
மடமாவது, எல்லாமறிந்தும் அறியாதுபோலிருத்தல்.
அச்சமாவது, மிகச்சிறிய காரணத்திலும் மனம் நடுங்குதல்.
பயிர்ப்பாவது, பரபுருஷர்களின் ஆடை முதலியன தம்மேற்பட்டால் அருவருப்புக் கொள்வது.)

ஆக
இக்குணங்களையும் அழகு முதலியவற்றையுங் கொள்ளை கொண்டாரென்றது,
வைவர்ணியப்படுத்தி வாய் பிதற்றச் செய்தாரென்றபடி.

“என்னலனும் நிறைவும் சிந்தையும் வளையுங் கொண்டு“ என்று சொல்லாதே
‘என்‘ என்பதை ஒவ்வென்றிலுஞ் சேர்த்து ‘என்னிறைவும் என்சிந்தையும் என்வளையும்‘ என்று சொல்லுவானென்? என்னில்;
இதில் ஒரு ஸ்வாரஸ்யமுண்டு; அவருடைய ஆபரணங்களையுங் கொள்ளை கொள்ளப் பிறந்தவள் நானாயிருக்க,
என்னுடையவற்றை அவர் கொள்ளை கொண்டது என்ன அற்புதம்! காண்மின்!! என்று எடுத்தெடுத்துக் காட்டுகிறபடி.

என்னையாளுங்கொண்டு =
என் ஸர்வ ஸ்வத்தையும் அபஹரித்துக் கொண்டு போன மாத்திரமேயோ?
அவற்றைச் சுமந்துகொண்டு போவதற்கு. ஆளாகவும் என்னையே அமைத்துக் கொண்டபடி என்னே! என்கிறாள்.
ஒருவனுடைய வீட்டிலே கொள்ளை கொள்ளப் புகுந்து ஸர்வஸ்வத்தையும் பறித்து அவற்றை அந்த வீட்டுக்குடையவனது
தலையிலேயே வைத்துச் சுமக்கச் செய்து கொண்டு போமா போலே யிருந்ததீ! என்கிறாள்.
அன்றியே,
“கொம்மை முலைகளிடர்தீரக் கோவிந்தற்கோர் குற்றவேல்“ என்கிறபடியே
அவரோடு கலந்து பரிமாறின பரிமாற்றத்தையே அடிமையாக நினைத்திருக்கையாலே அதனைச் சொன்னபடியுமாம்.

இங்ஙனே மறுபடியும் ஒருகால் கொள்ளை கொள்வதற்கு ஆச்ரயம் இருக்கவேணுமே;
முதலே போய் விட்டால் பின்னையுங் கொள்ளை கொள்வதற்கு இடமில்லைபாகுமே.
‘உள்ளம். புகுந்தென்னை நைவித்து நாளுமுயிர்ப்பெய்து கூத்தாட்டுக் காணும்“ என்று –
போகிற உயிரையும் போகவொட்டாமல் நிறுத்தி வைப்பது மேன்மேலும் ஹிம்ஸைகளைச் செய்வதற்கு ஆச்ரயம் வேணுமென்றாயிற்று.
அப்படியே, பின்னையும் கொள்ளை கொள்வதற்கு ஆச்ரயம் நிறுத்த வேண்டி –
(நான் ஸத்தை பெற்றிருப்பதற்காக) ஊரைச் சொல்லிப் போனாரென்கிறாள்;
பொன்போலேயலர்ந்து பரிமளம் மிக்கிருந்துள்ள பூவையுடைய ஸுர புன்னபை் பொழிலினூடே
உபய காவேரீ மத்தியத்திலுள்ள திருவரங்கம் பெரிய கோயில் நம்மூர் என்று சொல்லிக் கொண்டே போயினார் என்கிறாள்.

இங்கே வியாக்கியான ஸ்ரீஸூக்தி காண்மின்;-
“திருநகரியில் நின்றும் கோயிலளவுஞ் செல்லப் பொழிலாய்க் கிடந்ததோ வென்னில்;
ஒரு காளமேகம் வர்ஷித்துக் கொண்டு போகா நின்றால் கண்ட விடமெங்கும் தளிரும் முறியுமாகாதோ? என்று பட்டாருளிச் செய்வர்“ என்று.

முற்காலத்தில், விக்ரமசோழதேவன் என்பானொரு அரசன் தமிழில் ரஸிகனாயிருந்தான்;
அவனது ஸபையில் வைஷ்ணவ பண்டிதர்களும் சைவ பண்டிதர்களும் அடிக்கடி செல்லுவதுண்டு;
ஒருகால் இரு சமயத்து வித்வான்களும் கூடியிருந்த போது அவ்வரசன்
“தலைமகன் பிரிந்தபோது தலைவி இன்னாப்போடே சொல்லும் பாசுரம் எங்ஙனே யிருக்கிறது? சொல்லுங்கள், கேட்போம்‘
என்று இரு வகுப்பினரையுங் கேட்க,
ஸ்ரீவைஷ்ணவ வித்வான்
“மின்னலங்கு திருவுருவம் பெரியதோளும்“ என்று தொடங்கி இப்பாசுரத்தை யெடுத்துச் சொன்னார்;
சைவ வித்வான்
“எலும்பஞ்சாம்பலு முடையவனிறைவன்“ என்று தொடங்கி ஒரு செய்யுளைச் சொன்னான்;
இரண்டையுங் கேட்டு அரசன்
‘நெஞ்சில் கிலாய்ப்போடே சொல்லச் செய்தேயும் மின்னிலங்கு திருவுருவும் என்று நெஞ்சு பிணிப்புண்ணுமாறு
சொன்னவளே உண்மையில் தலைமையுடையவள்;
மற்றொருத்தி பிணந்தின்னி‘ என்றானாம்.

தன் பக்கல் உள்ள அனைத்தையும் காட்டி
என் பக்கல் உள்ளவற்றையும் கொள்ளை கொண்டான்

மின்னிலங்கு திருவுருவம்
கீழே கார் வண்ணன் -கரு முகில் வண்ணம் -என்றவர் மின்னிலங்கு திருவுரு
எதிர் விழி விழிக்க ஒண்ணாத படியான தசை
வடிவார் சோதி வலத்துறையும் சுடர் ஆழியும் பல்லாண்டு -புகர் திரு மேனி எங்கும் பரவி
பெரிய மேன்மையை சொல்லிற்று ஆயிற்று

பெரிய தோளும்
கால தத்வம் உள்ளதனைத்தும் அனுபவித்தாலும் முடிக்க ஒண்ணாத அளவிறந்த போக்யதை
தோள் கண்டார் தோளே கண்டார்
பாஹூ ச்சாயா மவஷ்டப்தோ யஸ்ய லோகோ மகாத்மனா
ஒதுங்கினவர்கள் சுருங்கி நிழலே மிக்கு
பெருமையை சொல்லிற்று ஆகவுமாம்

கரி முனிந்த கைத்தலமும்
விசேஷணம் இடாத -இயற்கையாகவே பரம போக்யமாய் உள்ள திருக் கண்ணும் திரு வாயும்

தன்னலர்ந்த திருத் துழாய் இத்யாதி
தன்னிலத்தில் காட்டிலும் செவ்வி பெற்ற திருத் துழாய் வளையத்தின் அருளே
திருத் தோள்கள் அளவும் தாழ்ந்து விளங்குகின்ற திரு மகரக் குண்டலங்களும்

ஆகைய இவற்றை எல்லாம் சேவை சாதிப்பித்து

என்னலனும் -நலன் குணம் -நாணம் அச்சம் மடம் பயிர்ப்பு ஆத்ம குணங்களையும்
அழகு மென்மை தேக குணங்களையும் கொண்டான்
என் நிறைவும்
வைவர்ணியப் படுத்தி வாய் பிதற்ற செய்தான்
என் சிந்தனையும்
என் வளையும் கொண்டு
என்னை ஆளும் கொண்டு
சர்வ ஸ்வதானம் பண்ணுவாரைப் போலே வந்து
சர்வ ஸ்வத்தையும் கொள்ளை கொண்டான்
என் -ஒவ் ஒன்றிலும் சேர்த்து
அவருடைய
குணங்களையும்
பும்ஸ்வத்தையும்
நெஞ்சையும்
ஆபரணங்களையும்
கொள்ளை கொள்ள பிறந்தது இருக்க
என்னுடையவற்றை கொள்ளை கொண்ட அற்புதம் காணீர் இது இது என்று எடுத்து காட்டுகிறாள்

என்னை ஆளும் கொண்டு
கொள்ளை கொண்ட சர்வ ஸ்வத்தையும் சுமந்து போக ஆளாகவும் என்னை நியமித்து
கொம்மை முலைகள் இடர் தீரக் கோவிந்தற்கோர் குற்றேவல் -என்கிறபடியே
அவரோடு கலந்த பரிமாற்றமே அடிமை யாக நினைத்து சொல்கிறாள் என்னவுமாம்

மீண்டும் கொள்ளை கொள்ள ஆஸ்ரயம் வேணுமே
உள்ளம் புகுந்து என்னை நைவித்து நாளும் உயிர் பெய்து கூத்தாட்டுக் காணும்
நான் சத்தை பெற்று இருப்பதற்காக ஊர் பேரைச் சொல்லி போந்தான்
திரு நகரியில் நின்றும் கோயில் அளவும் செல்ல பொழிலாய் கிடந்ததோ என்னில்
ஒரு காள மேகம் வர்ஷித்துக் கொண்டு போகா நின்றால்
கண்டவிடம் எங்கும் தளிரும் முறியும் ஆகாதோ -பட்டர்

விக்கிரம சோழன் சபையில் தலைமகள் இன்னாப்புடன் சொல்லும் பாசுரம் -தலை மகன் பிரியும் பொழுது
சொல்லுங்கோள் கேட்போம் என்று ஸ்ரீ வைஷ்ணவ வித்வான்களையும் சைவ வித்வான்களையும் கேட்க
மின்னிலங்கு திரு வுருவும் பெரிய தோளும் -இப்பாசுரத்தை இவர்கள் சொல்ல
சைவ வித்வான் எலும்பும் சாம்பலும் உடையவன் என்று தொடக்கி ஒன்றை சொல்ல
இரண்டையும் கேட்ட அரசன்
நெஞ்சில் கிலாப்போடே சொல்லச் செய்தேயும் மின்னிலங்கு திரு வுருவம் என்று
நெஞ்சு பிணிப் புண்ணுமாறு சொன்னவளே உண்மையில் தலைமை உடையவள்
மற்றவள் பிணம் தின்னி -என்றானாம்-

————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ P.B.A,ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்-
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திரு நெடும் தாண்டகம்-பாசுரங்கள்-16-20- -திவ்யார்த்த தீபிகை —

September 30, 2014

“மென் கிளி போல் மிக மிழற்று மென் பேதையே“ என்றது கீழ்ப்பாட்டில்;
நாயகன் எதிரே நிற்கிறானாக நினைத்து மென் கிளி போல் வார்த்தை சொன்ன விடத்தில்
அவனும் அப்படியே மேலிட்டு வார்த்தை சொல்லக் கேட்டிலள்;
அதனால் நின்ற நிலை குலைந்து கூப்பாடு போடத் தொடங்கினாள் என் மகள் என்கிறாள் திருத்தாய்.
அவனுடைய ரக்ஷகத்வமும் லௌலப்ய ளெஸசீல்யாதிகளும் பாவியேனிடத்தில் பலிக்கப் பெற்றிலவே!
என்று கண்ணுங் கண்ணீருமாய்க் கதறுகிற படியைப் பேசுகிறாளாய்ச் செல்லுகிறது.

கன்றுமேய்த் தினிதுகந்த காளாய். என்றும், கடிபொழில்சூழ் கணபுரத்¦ தன் கனியே என்றும்,
மன்றமரக் கூத்தாடி மகிழ்ந்தாய் என்றும்,வடதிருவேங் கடம்மேய மைந்தா என்றும்,
வென்றசுரர் குலங்களைந்த வேந்தே என்றும், விரிபொழில்சூழ் திருநறையூர் நின்றாய்என்றும்,
துன்றுகுழல் கருநிறத்தென் துணையே என்றும் துணைமுலைமேல் துளிசோரச் சோர்க்கின் றாளே.

பதவுரை

கன்று மேய்த்து-கன்றுகளை ரக்ஷித்து
இனிது உகந்த-மிகவும் மகிழ்ச்சி கொண்ட
காளாய் என்றும்–இளையோனே! என்றும்,
கடி பொழில் சூழ்–வாஸனை மிக்க சோலைகளாலே சூழப்பட்ட
கண புரத்து–திருக் கண்ண புரத்திலே (பழுத்த)
என் கனியே என்றும்–என் பழமே! என்றும்
மன்று அமர கூத்து ஆடி–வீதி யாரக் குடக் கூத்தாடி
மகிழ்ந்தாய் என்றும்–மகிழ்ந்தவனே! என்றும்
வட திரு வேங்கடம்–வட திருவேங்கட மலையிலே
மேய மைந்தா என்றும்–பொருந்தி வாழ்கின்ற யுவாவே! என்றும்,
அசுரர் குலம்–அசுரக் கூட்டங்களை
வென்று–ஜயித்து
களைந்த–வேரோடொழித்த
வேந்தே என்றும்–வேந்தனே! என்றும்
விரி பொழில் சூழ்-விரிந்த சோலைகளாலே சூழப்பட்ட
திருநறையூர்–திருநறையூரிலே
நின்றாய் என்றும்–நின்றருளுமவனே! என்றும்
துன்று குழல் கரு நிறத்து என் துணையே என்றும்-அடர்ந்த திருக்குழற் கற்றையையும்
கறுத்த திருமேனியையு முடையனாய் எனக்குத் துணையானவனே என்றும் சொல்லி
துணை முலை மேல்–ஒன்றோடொன்றொத்த தனங்களிலே
துளி சோர–கண்ணீர்த் துளிகள் பெருகும் படியாக
சோர்கின்றாள்–தளர்கின்றாள்

கன்று மேய்த்து இனிது கந்தகாளாய் என்றும் =
ஸர்வ ரக்ஷகனான நீ ரக்ஷணத் தொழிலில் நின்றும் கை வாங்கினாயோ என்கிறாள்.
நித்ய ஸூரிகளை ரக்ஷிக்குமளவோடே நின்றால் ஆறியிருப்பேன்;
ராம கிருஷ்ணாதிரூபத்தாலே வந்தவதரித்து இடக்கையும் வலக்கையுமறியாத இடையரை ரக்ஷித்தவளவோடே நின்றாலும் ஆறியிருப்பேன்;
அறிவு கேட்டுக்கு மேலெல்லையான கன்றுகளையுமுட்பட மேய்த்த உன்னை விட்டு எங்ஙனே ஆறி யிருப்பேனென்கிறாள்.
அறிவில்லாமையில் கடைநின்ற கன்றுகளையும் ரக்ஷித்த நீ, உன் வாசியை யறிந்து உன்னை யொழியச்
செல்லாத வென்னை ரக்ஷியாதொழிவதே!, நானும் கன்றாகப் பிறக்கப் பெற்றிலேனே! என்கிறாள் போலும்.

கண்ணபிரானுக்குப் பசுக்களை மேய்ப்பதில் ஸாதாரணமான உவப்பும்
கன்றுகளை மேய்ப்பதில் இனிது உவப்பும் ஆம் என்பது சொற் போக்கில் தெரியக் கிடக்கிறது;
“திவத்திலும் பசுநிரைமேய்ப்பு உவத்தி“ என்றார் நம்மாழ்வார்;
“கன்றுமேய்த்து இனிது உகந்த“ என்கிறாரிவ்வாழ்வாழ்வார்.

காளாய்! = இளம் பருவத்தைச் சொன்னபடி;
“காளையே எருது பாலைக்கதிபன் நல்லிளையோன் பேராம்“ என்பது திவாகரம்.

கடி பொழில் சூழ் கணபுரத்தென் கனியே யென்றும் =
அவ் வக்காலங்களில் பிற்பட்டாரையும் ரக்ஷிக்கைக்காக வன்றோ திருக் கண்ணபுரத்திலே வந்து இனிய கனி போல் நின்றருளிற்று.

“கன்றுமேய்த்தினிதுகந்த காளாய்“ என்றவுடனே
“கடிபொழில் சூழ்கணபுரத்தென்கனியே“ என்று சொன்ன அமைதியை நோக்கி இவ்விடத்திற்கு
பட்டர் ரஸோக்தியாக அருளிச் செய்வதொன்றுண்டு;-
“கண்ண பிரான் பசுக்களை மேய்த்துக் கொண்டிருக்கும் போது அவை கை தவறிப் போகையாலே
அவற்றை மடக்கிப் பிடிக்கப் போன விடத்திலே விடாய் தீருவிருப்பதொரு சோலையைக் கண்டு
திருவாய்ப்பாடியாக நினைத்துப்புகுந்தான்;
அப் பொழில் -மயல் மிகு பொழிலாகையாலே கால் வாங்க மாட்டிற்றிலன்; அதுவாயிற்றுத் திருக் கண்ணபுரம்“ என்பராம்.

கடி பொழில் சூழ் கணபுரம் =
“ஸர்வகந்த;“ என்கிற சுருதியின் படியே பரிமள மயனாயிருக்கிற எம்பெருமானையும்
கால் தாழப் பண்ணுவித்துக் கொள்ள வல்ல பரிமளமுற்ற பொழில்களென்க.

(கணபுரத்தென் கனியே!)
அச் சோலை பழுத்த பழம் போலும் சௌரிராஜன்,
“என் கனியே“ என்கையாலே உபாயாந்தர நிஷ்டர்களுக்குக் காயாகவே யிருப்பனென்பது போதரும்.
அவர்களுக்கு ஸாதநாநுஷ்டானம் தலைக் கட்டின பின்பு அனுபவமாகையாலே அது வரையில் காயாயிருப்பன்;
ப்ரபந்நர்க்கு அத்யவஸாயமுண்டான ஸமயமே பிடித்துப் பரம போக்யனா யிருக்கையாலே பக்குவ பலமாயிருப்பன்.

அவல் பொதி அவிழ்ப்பாரைப் போலே ஸமுதாய ஸ்தலத்திலே ஸர்வ ஸ்வதானம் பண்ணினாயல்லையோ என்கிறாள்.
மன்று – நாற்சந்தி; அஃது அமரக் கூத்தாடுகையாவது
கூத்தாடி முடிந்த பின்பும் அவ்விடம் கூத்தாடுவது போலவே காணப் படுகையாம்.
“பெருமாள் எழுந்தருளிப் புக்க திரு வீதி போலே காண் திருவாய்ப்பாடியில் அம்பலமிருப்பது“ என்று பட்டர் பணிக்கும்படி.
மன்று என்று இடையரெல்லாரும் திரளுமிடத்திற்கும் பெயராதால், இச்சொல் ஆகு பெயரால்
இடையர்களை உணர்த்தி இடையரெல்லாரும் ஈடுபடும் படும்படியாகக் கூத்தாடினமை சொல்லுகிறதென்றும் உரைப்ப.

மகிழ்ந்தாய் என்றவிடத்திற்குப் பெரியாச்சான் பிள்ளை வியாக்கியானம் காண்மின் ;-
“கூத்துக் கண்டவர்கள் உகக்கை யன்றியே உகப்பானும், தானாயிருக்கை;
அவர்களைத் தன் கூத்தாலே எழுதிக் கொள்வானும் தானாய் உகப்பானும் தானாயிரக்கிறபடி.
ஸஜாதீயர்களை ஈடுபடுத்திக் கொள்ளப் பெற்றோம் என்று உகந்தானாயிற்று.
அந்தணர்க்குச் செல்வம் மிக்க பல யாகங்கள் நிகழ்த்துமா போலவும்
விஷய ப்ரவணர்க்கு ஐச்வரியம் விஞ்சினால் அடுத்தடுத்து விவாஹம் பண்ணிக் கொள்ளுமா போலவும்
இடையர்க்குச் செல்வம் மிகுந்தால் போக்கு வீடாக ஆடுவதொரு கூத்து குடக்கூத்து;
சாதி மெய்ப் பாட்டுக்காகக் கண்ணபிரான் குடக் கூத்தாடினபடி.
ஊர்ப் பொதுவான பண்டம் எனக்கு அரிதாயிற்றே! என்று பரிதாபந் தோற்றச் சொல்லும் வார்த்தை
மன்ற மரக்கூத்தாடி மகிழ்ந்தாய்! என்பது.

வட திவேங்கடம் மேய மைந்தா வென்று =
ஒரு ஊரிலே மன்றிலே நின்று கொள்ளை கொடுத்தது மாத்திரமன்றியே உபயவிபூதிக்கும் நடுவானதொரு
மன்றிலே நின்று தன்னைக் கொள்ளை கொடுத்த படியைச் சொல்லுகிறது;
“கண்ணாவானென்றும் மண்ணோர் விண்ணோர்க்குத், தண்ணார் வேங்கட விண்ணோர் வெற்பனே“ –
“வானவர் வானவர்கோனொடும் ஈமன்றெழுந் திருவேங்கடம் என்றும்
“கானமும் வானரமும் வேடுமுடை வேங்கடம்“ என்றுஞ் சொல்லுகிறபடியே
உயர்ந்தாரோடு தாழ்ந்தாரோடு வாசியற அனைவரும் கொள்ளை கொள்ளும் வடிவு எனக்கு அரிதாயிற்றே!
என்று பரிதபித்துச் சொல்லுகிறபடி.

வென்றசுரர்குலங்களைந்த வேந்தே யென்றும் =
அவன்றான் விரோதி நிவ்ருத்தியைச் செய்வதற்கு அசக்தனென்றும்
அது பிறரால் ஆக வேண்டிய தென்றும் இருந்தால் ஒருவாறு ஆறியிருக்கலாம்;
அசுர ராக்ஷஸர்களின் கூட்டங்களைக் கிழங்கெடுத்து வெற்றி பெற்ற பெரு வீரனாய்
அவன் விளங்கும் போதும் நான் இழக்கிறனே! என்று வருந்திச் சொல்லுகிறபடி.

விரி பொழில் சூழ் திருநறையூர் நின்றாயென்றும் =
வென்று அசுரர் குலங்களைந்த அவதாரத்திலும் இழந்தவர்களுக்கும் முகங் கொடுப்பதற்காகத்
திரு நறையூரிலே வந்து நின்றருளுமவனே! என்கிறாள்.
நறையூர் நம்பியும் நாச்சியாரும் கடாக்ஷிக்க
அக் கடாக்ஷமே விளை நீராக வளருகிற பொழிலாகையாலே விரி பொழிலாயிருக்கும்.
அசேதநங்களைக் கடாக்ஷித்து வளரச் செய்பவன் என்னைக் கடாக்ஷியாதொழிவதே! என்கிறாள்.
பிராட்டி பக்கலிலே பிச்சேறித் தன்னூரை அவள் பெயராலே ப்ரஸித்தப்படுத்தி
நாச்சியார் கோவிலாக்கி இப்படி ஒருத்திக்குக் கை வழி மண்ணாயிருப்பவன் என்னொருத்தியை
விஷமாக நினைப்பதே! என்பதும் உள்ளுறை.

துன்று குழல் கரு நிறத்து என் துணையே யென்று –
மிகவும் நெருங்கி இருண்டிருக்கின்ற திருக் குழற் கற்றையையும் காளமேகம் போன்ற வடிவையுமுடைய
உன் துணைவனே! என்கிறாள்.

ஆக இப்படியெல்லாம் சொல்லா நின்று கொண்டு தன் ஆற்றாமைக்கு ஒரு போக்கடி காணாமையாலே
கண்ணீர்கள் முலைக் குவட்டில் துளி சோரச் சோர்ந்தாளாயிற்று.

கன்று மேய்த்தினிதுகந்த காளாயென்று சொல்லித் துணை முலைமேல் துளிசோரச் சோர்கின்றாள்,
கடி பொழில் சூழ் கணபுரத்தென் கனியே யென்று சொல்லித் துணை முலை மேல்
துளி சோரச் சோர்கின்றாள் என்று தனித்தனியே கூட்டியுரைத்துக் கொள்க.

நிலை குலைந்து கூப்பாடு போடத் தொடங்கினாள் –
அவனுடைய ரஷகத்வமும் சௌலப்ய சுசீல்யாதிகளும் பாவியேன் விஷயத்தில் பலிக்கப் பெற வில்லையே

கன்று மேய்த்து இந்து உகந்த காளாய்
சர்வ ரஷகன் -நிதர ஸூரிகள் ரஷிக்கும் அளவில் இருந்தால் ஆறி இருப்பேன்
ராம கிருஷ்ணாதி ரூபத்திலே வந்து இடக்கை வலக்கை அறியாத இடையர்களை ரஷிக்கும்
அளவோடு இருந்து இருந்தால் ஆறி இருப்பேன்
அறிவு கேட்டுக்கு மேல் எல்லையான கன்றுகளையும் உட்பட
நானும் கன்றாக பிறக்க பெற்றிலேனே
திவத்திலும் பசு நிரை மேய்ப்பு உவத்தி -கன்று மேய்த்து இனிது உகந்த –

கடிபொழில் சூழ் கணபுரத்து என் கனியே என்னும்
கண்ணபிரான் பசுக்களை மேய்த்துக் கொண்டு இருக்கும் போது
அவை கை தவறிப் போகையாலே
அவற்றை மடக்கி பிடிக்கப் போன இடத்தில் விடாய் தீர இருப்பதொரு சோலையைக் கண்டு
திரு வாய்ப்பாடியாக நினைந்து புகுந்தான்
அப் பொழில் மயல் மிகு பொழில் ஆகையாலே கால் வாங்க மாட்டிற்று இலன்
அது வாயிற்று திருக் கண்ணபுரம் -என்பார் பட்டர்

சர்வகந்த வஸ்துவையும் கால் தாழப் பண்ணும் பரிமளம் உள்ள பொழில்கள்
கணபுரத்து என் கனி–அந்த சோலை பழுத்த பழம்போலும் ஸ்ரீ சௌரி ராஜன்
உபாயாந்தர நிஷ்டருக்கு காயாகவும் -சாதனானுஷ்டானம் தலைக் கட்டின பின்பு தானே அனுபவம்
பிரபன்னருக்கு அத்யாவசியம் உண்டான சமயமே பிடித்து பரம போக்யனாய் இருக்கையாலே பக்குவ பலமாய் இருப்பானே

மன்று அமரக் கூத்தாடி மகிழ்ந்தாய் என்றும்
மன்று- நால் சந்தி
பெருமாள் எழுந்து அருளிப் புக்க திரு வீதி போலே காண் திருவாய்ப்படியிலே அம்பலம் காண்

மகிழ்ந்தாய்
கூத்துக் கண்டவர்கள் உகக்கை அன்றிக்கே உகப்பானும் தானாய் இருக்கை
அவர்களை தனது கூத்தாலே எழுதிக் கொள்வானும் தானாய்
உகப்பானும் தானாய் இருக்கிறபடி
ஊர் பொதுவான பண்டம் எனக்கு அரிதாயிற்றே

வட திருவேங்கடம் மேய மைந்தா என்றும்
ஒரு ஊரிலே மன்றிலே நின்று கொள்ளை கொடுத்தது அன்றிக்கே
உபய விபூதிக்கும் நடுவான மன்றிலே நின்று தன்னை கொள்ளை கொடுத்த படி
அனைவரும் கொள்ளை கொள்ளும் வடிவு எனக்கு அரிதாயிற்றே

வென்று அசுரர் குலம் களைந்த வேந்தே என்றும்
வீரனாய் இருந்தும் இழக்கிறேனே

விரி பொழில் சூழ் திரு நறையூர் நின்றாய் என்றும்
நம்பியும் நாச்சியாரும் கடாஷிக்க அதுவே விளை நீராக
அசேதனங்களை கடாஷித்து அருளினவன் என்னை கடாஷியாது ஒழிவதே
பிராட்டி பக்கல் பிச்சேறி அவள் பெயராலே தன்னூரை நாச்சியார் கோயில் என்று பிரசித்தப் படுத்தினவன்
என் ஒருத்தியை விஷமாக நினைப்பதே

துன்று குழல் கரு நிறத்து என் துணையே என்றும்
ஆற்றாமைக்கு போக்கடி காணாமல் இப்படி எல்லாம் சொல்லிக் கொண்டு
கண்ணீர்கள் முலைக் குவட்டில் துளி சோர சோர்ந்தாள்
கன்று மேய்த்து இனிது உகந்த காளாய் என்று
கண்ணீர்கள் முலைக் குவட்டில் துளி சோர சோர்ந்தாள்
கடி பொழில் சூழ் கணபுரத்து என் கனியே என்று சொல்லி
கண்ணீர்கள் முலைக் குவட்டில் துளி சோர சோர்ந்தாள்
என்று தனித் தனியே கூட்டி கொள்க-

—————————————————————-

பொங்கார்மெல் லிளங்கொங்கை பொன்னே பூப்பப் பொருகயல்கண் ணீரரும்பப் போந்து நின்று
செங்கால மடப்புறவம் பெடைக்குப் பேசும் சிறுகுரலுக் குடலுருகிச் சிந்தித்து, ஆங்கே
தண்காலும் தண்குடந்தை நகரும் பாடித் தண்கோவ லூர்ப்பாடி யாடக் கேட்டு,
நங்காய் நங் குடிக்கிதுவோ நன்மை? என்ன நறையூரும் பாடுவாள் நவில்கின் றாளே.

பதவுரை

பொங்கு ஆர் மெல் இள கொங்கை-வளர்த்தி மிக்கதாய் மிருதுவாய் இளையதான தனம்
பொன்னே பூப்ப–வைவர்ணியமடையவும்
பொரு கயல் கண்–சண்டை யிடுமிரண்டு கெண்டைகள் போன்ற கண்கள்
நீர் அரும்ப–நீர்த் துளிகள் அரும்பவும்
போந்து நின்று–(வெளியே வந்து) நின்று
செம் கால மடம் புறவம்பெடைக்கு பேசும்சிறு குரலுக்கு–சிவந்த கால்களை யுடைய இளம் புறாக்கள் தம் பேடைகளோடு சிறு குரலாகப் பேசுகிற படிக்கு
உடல் உருகி–மெய் கரைந்து
சிந்தித்து–(அவன் முறைகெடப் பரிமாறும் படியை) நினைத்து,
ஆங்கே–அவ்வளவில்
தண் காலும்–திருத் தண் காலையும்
தண் குடந்தை நகரும்–திருக் குடந்தைப் பதியையும்
பாடி–(வாயாரப்) பாடி
தண் கோவலூர்-குளிர்ந்த திருக் கோவலூரையும்
பாடி-பாடி
ஆட-கூத்தாட
கேட்டு–அவ் வொலியை நான் கேட்டு,
நங்காய்-‘பெண்ணே!
நம் குடிக்கு–நமது குலத்திற்கு
இது நன்மையோ என்ன–வாய் விட்டுக் கூப்பிடுகிறவிது நலந்தானோ? என்று சொல்ல,
நறையூரும்–திரு நறையூரையும்
பாடுவாள் நவில் கின்றாள்–பாடுவாளாகப் பேசத் தொடங்கினாள்.

கீழ்ப் பாட்டில் “துணைமுலைமேல் துளிசோரச் சோர்கின்றாளே“ என்ற படியே
தன் பெண் பிள்ளை சோர்வுற்றபடியைக் கண்ட திருத்தாயார்
‘இவளுக்கு நாம் ஏதேனும் ஹிதமான வார்த்தை சொல்லிப் பார்ப்போம், அதனாலாகிலும் வழிப்படக் கூடுமோ‘
என்றெண்ணி ‘நங்காய்! நீ இங்ஙனே வாய்விட்டுக் கூப்பிடுகையும் மோஹிக்கையுமாகிற இவை
உன்னுடைய பெண்மைக்குத் தகாது, இக்குடிக்கும் இழுக்கு‘ என்று சொல்ல;
அப்படி அவள் ஹிதஞ் சொன்னதுவே ஹேதுவாக மேன்மேலும் அதி ப்ரவருத்தியிலே பணைத்த படியைச் சொல்லுகிற பாசுரம் இது.

பொங்கார் மெல்லிளங்கொங்கை பொன்னே பூப்ப –
விரஹ வேதனையால் உடலில் தோன்றும் நிற வேறுபாடு பொன் பூத்தலாகச் சொல்லப்படும்; பசலை நிறம் என்பதும் அதுவே.
இதைப் பற்றிக் குறுந்தொகையில் ஒரு செய்யுளுண்டு; அதாவது-
“ஊருண்கேணியுண்டுறைத் தொக்க பாசியற்றே பசலை, காதலர் தொடுவுழித் தொடுவுழி
நீங்கி விடுவுழி விடுவுழிப் பாத்தலானே“ (399) என்பதாம்.
ஊரிலுள்ள ஜனங்களாலே நீருண்ணப் பெறுகிற கேணியினுள்ளே படர்ந்து கிடக்கும் பாசி போன்றது பசலை நிறம்;
தண்ணீரில் நாம் கை வைத்தோமாகில் கைபட்ட விடங்களில் பாசி நீங்கும்;
கையை எடுத்து விட்டோமாகில் மறுபடி அவ்விடமெல்லாம் பாசி மூடிக் கொள்ளும்;
அது போல, கலவியில் கணவனுடைய கைபடுமிடங்களில் பசலை நிறம் நீங்கும்;
அணைத்த கை நெகிழ்த்த வாறே அப்பசலை நிறம் படரும்; ஆதலால் பாசி போன்றது பசலைநிறம் என்றபடி.
(தொடு வுழித் தொடு வுழி – தொட்ட விடங்கள் தோறும். விடு வுழி விடு வுழி- விட்ட விடங்கள் தோறும்.
பரத்தலான் – பரவுகிற படியினாலே.)

பொரு கயல் கண்ணீரரும்ப –
சண்டையிடுமிரண்டு கெண்டைகள் போன்றனவாகக் கண்கள் வருணிக்கப்படும்.
அப்படிப்பட்ட கண்கள் நீர் பெருக நின்றபடி. காதலிகளின் கண்களில் நீர் பெருகுதல் எப்போதுமுள்ள தொன்று;
கலவி நிகழுங்காலத்தில் ஆனந்தக் கண்ணீர் பெருகும்; பிரிந்து வருந்துங் காலங்களில் சோகக் கண்ணீர் பெருகும்.
அதுவாயிற்று இங்குச் சொல்லுகிறது. முலையிலே பசலை நிறம் குடியிருந்தாற்போலே
கண்ணிலே சோக பாஷ்பம் குடியிருந்தது.
கீழ்பாட்டில் “துணை முலை மேல் துளி சோரச் சோர்கின்றாள்“ என்றது;
இங்கு “கண்ணீர் அரும்ப“ என்கிறது;
விரஹத் தீயாலே உள்ளுலர்ந்து உழக்குப் பாலைக் காய்ச்சினால் வாயாலே பொங்கி வழியா நிற்கச் செய்தேயும்
கீழே நீர் அற்றிருக்குமாபோலே கொள்க.

போந்து நின்று –
‘நாயகன் தானே வந்து மேல் விழ வேண்டும் படியான முலையழகையும் கண்ணழகையுமுடைய நீ
மேல் விழுகை பெண்மைக்குப் போராது காண்‘ என்று தாய் சொன்ன ஹிதம் தனக்குச் செவி சுட விருக்கையாலே,
நெருப்புட்பட்ட வீட்டில் நின்றும் பதறிப் புறப்படுமா போலே அத் தாய் இருந்த அகத்தில் நின்றும் சடக்கெனப் புறப்பட்டாள்.
ஸ்ரீவிபீஷணாழ்வான் தன் உபதேசத்திற்குடன்படாத ராவணன் சொன்ன திரஸ்கார வார்த்தையைக் கேட்ட பின்
ஒரு கணப் பொழுதும் அங்குத் தங்கியிருக்க மாட்டாமல் விரைந்து புறப்பட்டாற்போல.

நின்று –
தரிப்புப் பெற்று நின்று என்றபடி. ஹிதஞ்சொன்ன தாயினிருப்பிடத்தை விட்டு
அப்புறப் பட்டவாறே கால் பாவி நின்றாளாயிற்று. நாயகன் பக்கலில் முகம் பெறாத வளவில் ஓரிடத்தில்
கால் பாவி நிற்கக் கூடுமோ வென்னில்; தன்னுடைய பதற்றத்திற்குத் தான் வந்ததே காரணமாகத் தரிப்புப் பெற்று நின்றாளென்க.

இலங்கையைவிட்டு ஆகாசத்திற் கிளம்பின விபீஷணாழ்வான் ஸ்ரீராம கோஷ்டியில் முகம் பெறாதிருக்கச் செய்தேயும்
ராவண பவனத்தை விட்டு நீங்கின வளவையே கொண்டு ஆகாசத்திலே கால் பாவி நின்றாற்போல.
“உத்தரம் தீரமாஸாத்ய கஸ்த ஏவ வ்யதிஷ்டத“ என்றார் வால்மீகி பகவான். (வ்யதிஷ்டத – நன்றாகத் தரித்து நின்றார் என்றபடி.)

செங்காலமடப்புறவம் பெடைக்குப் பேசுஞ் சிறுகுரலுக் குடலுருகிச் சிந்தித்தாங்கே –
பாம்புக்கு அஞ்சியோடினவன் புலியின் வாயிலே விழுந்தாற்போலேயாயிற்று.
தாயின் வாய்ச் சொல் பாதகமாயிருக்கிறதென்று வெளியிலே வந்தவளுக்கு அதனிலுங் கொடிய சொல் செவியிலே விழுந்தது;
அதாவது, புறா ஆணும் பெண்ணுங்கூடிக் கொஞ்சும் பேச்சுக்கள் செவிப்பட்டன! அந்தோ!
இவையுங்கூடத் தம் தம் அபிமதம் பெற்றுக் களித்து வாழா நி்ற்க நம் நிலைமை இங்ஙனேயாயிற்றே! என்று உடலுருகினாள்;
பண்டு அவனும் தானும் இங்ஙனே கலந்து பரிமாறின படிகளை நினைத்துக் கொண்டான்; பின்னையும் உடலுருகினாள்.

(செங்காலமடப்புறவம்)
ஆண் புறாவின் சிவந்த கால்கள் நாயகனுடைய செந்தாமரை யடிகளை நினைப்பூட்டி வருத்தின போலும்.
இது கண்ணுக்கு விஷமானபடி.

(பெடைக்குப் பேசும் சிறுகுரல்)
இது காதுக்கு விஷமானபடி. இங்ஙனே அவன் ரஹஸ்யமாக நம் காதிலே பேசும் பேச்சுக்கள்
கேட்கப் பெறுவது என்றோ வென்று உடலுருகினாளென்க.

(ஆங்கே தண்காலும் இத்யாதி)
இவற்றாலே ஆற்றாமை மீதூர்ந்தவாறே நாயகனோடு பரிமாறுதற்கான ஸங்கேத ஸ்தலங்களைப் பற்றி
வாய் விட்டுக் கூப்பிடத் தொடங்கினாள். திருத்தண்கால், திருக்குடந்தை, திருக்கோவலூர் முதலான
திருப்பதிகளைச் சொல்லிப் பாடத் தொடங்கினாள். தண்கால் – குளிர்ந்த காற்று என்றபடி.
அங்குள்ள எம்பெருமான் குளிர்ந்த தென்றல் போலவே ச்ரமஹமான வடிவை யுடையன யிருக்கையாலே
அத் தலத்திற்கே தண்காலென்று திருநாமமாயிற்றென்ப.
பண்டு அப்பெருமான் தன்னை அணைக்கிற போது சிரமமெல்லாந் தீர்ந்த மிக இனிமையாயிருக்கையாலே
மீண்டும் அங்ஙனேயாக வேணுமென்று தண்காலைப் பாடினாள்.

(தண் குடந்தை நகரும் பாடி)
எம்பெருமான் அமுது செய்த போனகம் சேஷ பூதர்க்கு ஸ்வீகரிக்க வுரியது‘ என்று முறையிருக்க,
திருக்குடந்தை யாராவமுதாழ்வார், தமக்கு ஆக்கின திருப்போனகத்தை முற்படத் திருமழிசைப்பிரானை
அமுது செய்யப் பண்ணுவித்துப் பி்ன்னைத் தாம் அமுது செய்தாரென்று ஒரு ப்ரஸித்துயுண்டு.
இப்படியாக அன்பரோடு புரையறக் கலந்து பரிமாறுகிறவனென்று ஸாபிப்ராயமாகத் திருக்குடந்தையைப் பாடினாள்.

(தண்கோவலூர்பாடி)
‘பாவருந்தழிழாற் பேர்பெறு பனுவற் பாவலர் பாதிநாளிரவின், மூவரு நெருக்கி மொழி விளக்கேற்றி
முகுந்தனைத் தொழுத நன்னாடு“ என்று புகழ்ந்து கூறும்படி முதலாழ்வார் (பொய்கையார் பூதத்தார் பேயார்)
மூவரும் பகவத் ஸ்வரூபத்தை நன்கறிந்து அநுபவித்து ஆனந்தப் பெருவெள்ளமெய்தின வரலாற்றை
நெஞ்சிற்கொண்டு திருக் கோவலுரைப் பாடினா ளென்க.
இவ்விடத்து வியாக்கியான வாக்கியங் காண்மின்;-
‘ஆஸ்ரிதர் வந்து கிட்டினால் பின்னை அவர்களோடு முறை யழியப் பரிமாறுகை யன்றியே தானே மேல் விழுந்து
ஸம்ச்லேஷித்த விடமாயிற்று, திருக்கோவலூராகிறது.
அவர்கள் மழை கண்டு ஒதுங்க அவர்களிருந்த விடத்திலே தானே சென்று தன்னை அவர்கள் நெருக்கத்
தான் அவர்களை நெருக்க இப்படி பரிமாறி, அவர்கள் போன விடத்திலும் அவ்விடத்திலே நிற்கிறானிறே
வாசல் கடைகழியாவுள் புகா என்று“.-

ஆட –
திருத்தண் காலையும் திருக் குடந்தையையும் திருக் கோவலூரையும் வாயாரப் பாடினவிடத்திலும்
த்ருப்தி பிறவமையாலே ஆடவும் தொடங்கினாள்;

இப்படி இவள் ஆடுகிறபடியைக் கண்டும் பாடுகிறபடியைக் கேட்டும் தாயானவள்
‘நங்காய்! நம் குடிக்கு இதுவோ நன்மை?“ என்றாள்;
(அதாவது சேதந லாபம் ஈச்வரனுக்குப் புருஷார்த்தமே யன்றி ஈச்வர லாபம் சேதநனுக்குப் புருஷார்த்தமன்றே;
அவன்றன்னுடைய பேற்றுக்கு அவன்றானேயன்றோ பதறவேணும்; நீ இங்ஙனே பதறக்கடவையோ? என்றாள்.
இவள் இது சொன்னதுவே ஹேதுவாகப் பரகால நாயகி நறையூரும் பாடுவாள் நவில்கின்றாள்.
பெடை யடர்த்த மடவன்னம் பிரியாது மலர்க்கமல மடலெடுத்து மதுநுகரும்
வயலுடுத்த திருநறை யூரிலே சென்று சேரப் பெறுவது எந்நாளோ! என்னா நின்றாளென்க.

‘பாடுவான்‘ என்ற பாடமுமுண்டு; வான் விகுதி பெற்ற வினையெச்சம்.

தாயார் ஹிதம் சொன்னதே ஹேதுவாக
மேன்மேலும் அதி பிரவ்ருத்தியில் பணைத்த படி

கொங்கை பொன்னே பூப்ப –கண்ணீர் அரும்ப
சம்ச்லேஷம் ஹர்ஷ கண்ணீர்
விச்லேஷம் -சோக கண்ணீர்
கீழே நீர் சோர இங்கே அரும்ப
விரஹ தீயால் உள்ளுலர்ந்து நீர்ப் பசை அற்று கிடைக்கையாலே அரும்ப -என்கிறாள்

போந்து நின்று
ஹிதம் சொல்ல சொல் இவளை விரட்ட
ராவணன் சொல் கேளாமல் விபீஷணன் போனால் போல்
உத்தரம் தீரமாசாத்ய கச்த ஏவ வ்யதிஷ்டத -நன்றாகத் தரித்து நின்றார் போலே

செங்கால மடப்புறவம் பெடைக்கு பேசும் சிறு குரலுக்கு உடல் உருகி சிந்தித்து ஆங்கே
பாம்புக்கு அஞ்சி ஓடி புலி வாயில் விழுந்தால் போல்
முன்பு அவனும் தானும் பரிமாறின படிகளை நினைவூட்ட
செந்தாமரை அடிகளை நினைவூட்டி
கண்ணுக்கு இது காதுக்கு குரல் விஷமான படி

திருத் தண்கால்
தென்றல் போலே ஸ்ரமஹரமான
பண்டு தன்னை அணைக்கும் பொழுது சிரமம் தீர்ந்து இனிமையாக இருக்கையாலே
மீண்டும் அங்கனேயாக வேணும் என்று பாட

தண் குடந்தை நகரும் பாடி
அன்பர் உடன் புரை அறக் கலந்து
திரு மழிசை பிரான் உண்ட சேஷம் அமுது செய்து

தண் கோவலூரும் பாடி
பா வரும் தமிழால் பேர் பெறு பனுவல் பாவலர் பாதி நாள் இரவின்
மூவரும் நெருக்கி மொழி விளக்கு ஏற்றி முகுந்தனை தொழுத நன்னாடு
ஆஸ்ரிதர் வந்து கிட்டினால் பின்னை அவர்களோடு முறை அழிய பரிமாறுகை அன்றிக்கே
தானே மேல் விழுந்து சம்ச்லேஷித்த இடமாயிற்று திருக் கோவலூர்
அவர்கள் மழை கண்டு ஒதுங்க அவர்கள் இருந்த இடத்திலே தானே சென்று
அவர்கள் நெருக்க தான் அவர்களை நெருக்க இப்படி பரிமாறி
அவர்கள் போன இடத்திலும் அவ்விடத்திலே நிற்கிறான் இறே
வாசல் கடை கழியா உள் புகா என்று

ஆக
திருத் தண கால்
திருக்குடந்தை
திருக் கோவலூர்
மூன்றையும் வாயாரப் பாட மட்டும் திருப்தி இல்லாமல் ஆடத் தொடங்கினாள்

நம் குடிக்கு இதுவோ நன்மை என்றாள் திருத்தாயார்
சேதன லாபம் ஈஸ்வரனுக்கே அவன் தானே பதற வேண்டும்

இந்த ஹிதமே ஹேதுவாக நறையூரும் பாடுவாள் நவில்கின்றாள்
பெடை யடர்த்த மடவன்னம் பிரியாது மலர்க்கமலம் மடல் எடுத்து மது நுகரும் வயலுடுத்த
திரு நறையூரிலே சென்று சேரப் பெறுவது எந்நாளோ
என்னா நின்றாள்
பாடுவான் -பாட பேதம் வான் விகுதி பெற்ற வினை எச்சம்

——————————————————————————————-

கார்வண்ணம் திருமேனி கண்ணும் வாயும் கைத்தலமும் அடியிணையும் கமல வண்ணம்,
பார்வண்ண மடமங்கை பித்தர் பித்தர் பனிமலர்மேல் பாவைக்குப் பாவம் செய்தேன்,
ஏர்வண்ண என்பேதை எஞ்சொல் கேளாள் எம்பெருமான் திருவரங்க மெங்கே? என்னும்,
நீர்வண்ணன் நீர்மலைக்கே போவேன் என்னும் இதுவன்றோ நிறையழிந்தார் நிற்கு மாறே?

பதவுரை

பாவம் செய்தேன் என்-பாவியான என்னுடைய
ஏர் வண்ணம் பேதை-அழகிய வடிவை யுடைய பெண்ணானவள்
என் சொல் கேளாள்–என் வார்த்தையைக் கேட்கிறாளில்லை;
திருமேனி கார் வண்ணம் என்னும்–(எம்பெருமானது) திருமேனி காளமேக நிறத்து என்கிறாள்;
கண்ணும்–(அவனது) திருக்கண்களும்
வாயும்–திரு வாயும்
கைத் தலமும்–திருக் கைகளும்
அடி இணையும்–திருவடியிரண்டும்
கமலம் வண்ணம் என்னும்–தாமரைப்பூப்போன்ற நிறமுடையன என்கின்றாள்;
பார் வண்ணம் மடமங்கை பத்தர் என்னும்–(அவர்) பூமிப்பிராட்டி இட்ட வழக்காயிருப்பர் என்கின்றாள்;
பனி மலர் மேல் பாவைக்கு பித்தர் என்னும்-குளிர்ந்த செந்தாமரைப் பூவிற் பிறந்த பெரிய பிராட்டியார்
விஷயத்தில் வியாமோஹங் கொண்டவர் என்கின்றாள்;
எம் பெருமான் திரு அரங்கம் எங்கே என்னும்-என்னை அடிமைப் படுத்திக் கொண்ட பெருமானுடைய திருவரங்கம் எங்குள்ளது? என்கின்றாள்;
நீர் வண்ணன் நீர் மலைக்கே போவேன் என்னும்–நீர் வண்ணப் பெருமாள் எழுந்தருளியிருக்கிற திருநீர் மலைக்கே போகக் கடவேன் என்கின்றாள்;
நிறைவு அழி்ந்தார் நிற்கும் ஆறு இது அன்றோ-அடக்கமழியப் பெற்றவர்களின் நிலைமை இங்ஙனே போலும்!

பெண் பிள்ளையின் வாய் வெருவுதல்களை வரிசையாகச் சொல்லுகிறாள் திருத்தாய்
கீழ்ப்பாட்டில் “நங்காய் நங்குடிக்கிதுவோ நன்மையென்ன நறையூரும் பாடுவாள் நவில்கின்றாளே“ என்று நின்றது.
‘நாம் சொன்ன ஹிதத்தை இவள் கடந்த படியாலே இனி படியாகவே தோற்ற விருந்து இவளுடைய பாசுரங்களைக் கேட்போம்‘
என்றெண்ணிய திருத்தாயார் ‘நங்காய்! உன் எண்ணங்களைச் சொல்லிக் காணாய்‘ என்று சொல்ல,
மகளும் எம்பெருமானுடைய திருமேனியழகை வருணிப்பது,
திருமடந்தை மண்மடந்தையர் பக்கலிலே அப்பெருமான் இருக்குமிருப்பைப் பேசுவது,
அவனூர் எங்கேயென்று வினவுவது,
நானிருங்கேயிருந்து கதறி என்ன பயன்? அவனூருக்கே போய்ச்சேருவேன் என்பது,
ஆக விப்படி நிகழும் மகளது பாசுரங்களைத் தன் உகப்புத் தோன்றத் தான் திருத்தாய்.
‘கார்வண்ணந் திருமேனி கண்ணும் வாயுங் கைத்தலமு மடியிணையுங் கமல வண்ணம்‘ என்பதும்,
‘பார்வண்ணமடமங்கை பத்தர்‘ என்பதும்
‘பனிமலர்மேல் பாவைக்குப் பித்தர்‘ என்பதும்
‘எம்பெருமான் திருவரங்கமெங்கே‘ என்பதும்
‘நீர்வண்ணன் நீர் மலைக்கே போவேன்‘ என்பதும் மகளுடைய வார்த்தைகளின் அநுவாதங்கள்; மற்றவை தாய்ச்சொல்.
‘என்னும்‘ என்கிற வினை முற்று மகளுடைய ஒவ்வொரு வார்த்தையோடும் அந்வயிக்கத்தக்கது.
‘என்மகள் இப்படி சொல்லுகிறாள், இப்படி சொல்கிறாள்‘ என்று ஒவ்வொரு வாக்கியமாக எடுத்துத் தாய் சொல்லுகிறாளாயிற்று.

முந்துற முன்னம் இவள் எம்பெருமானுடைய வடிவழகிலே வாய் வைக்கத் தொடங்கினாளே! என்கிறாள்.
‘திருமேனியானது காளமேக நிறத்தது, திருக் கண்களும் திருவாயும் திருக் கைத்தலமும் திருவடி யிணையும்
செந் தாமரை மலர் நிறத்தன‘ என்று திருமேனியையும் திவ்யாவயவங்களையும் பற்றிப் பேசுகின்றாளாம்.
அடியிலே எம்பெருமான் இவளுக்குத் தன் வடிவை முற்றூட்டாக அநுபவிக்கக் கொடுக்கையாலே
அதுவே வாய்வெருவுதலாயிருக்கின்றாள் காணுமிவள்.

எம்பெருமான் தானுகந்தார்க்கு ஸர்வ ஸ்வதானமாகக் கொடுத்தருள்வது தன் திருமேனியையே.
பரதாழ்வாள், சிறியதிருவடி, அக்ரூரர் முதலானாரிடத்தே இது காணலாம்.
“தம் ஸமுத்தாப்ய காகுத்ஸ்த; சிரஸ்யாக்ஷிபதம் கதம் – அங்கே பரதமாரோப்ய முதித; பரிஷஸ்வஜே“ என்று
பரதாழ்வான் விஷயத்திலே சொல்லப்பட்டது.
(நெடுநாள் கடந்தபின் கண்ணுக்கு இலக்காகித் திருவடிவாரத்தில் வீழ்ந்த பரதாழ்வானை வாரியெடுத்து
மடிமீதிருத்தி மகிழ்ந்து சேரத்தழுவினாள் ஸ்ரீராமபிரான் என்பது இதன் பொருள்)
“ஏஷ ஸர்வஸ்பூதஸ்து பரிஷ்வங்கோஹநூமத; மயா காலமிமம் ப்ராப்ய தத்தஸ் தஸ்ய மஹாத்மந;“ என்று
சிறிய திருவடி விஷயத்திலே சொல்லிற்று.
“ஸோப்யேநம் த்வஜ வஜ்ராப்ஜக்ருதசிஹ்நேந பரணிநா, ஸம்ஸப்ருச்யாக்ருஷ்ய ச ப்ரீத்யா ஸுகாடம் பரிஷஸ்வஜே“ என்று
அக்ரூரர் விஷயத்திலே சொல்லப்பட்டது.
மூவர்க்கும் தன் திருமேனியை அணைக்கக் கொடுப்பதே பெரும்பரிசு.

கார்வண்ணந் திருமேனி =
தாப த்ரயத்தினால் தகர்ப்புண்டிருப்பார்க்கு நினைத்த மாத்திரத்தில், அதனை ஆற்றக் கடவதும்
விரஹ தாபத்தாலே வருந்துவார்க்கு அதனைத் தணிக்க வல்லதுமான திருமேனியைப் பேசினபடி.

கண்ணும் வாயுங் கைத்தலமுமடியிணையுங் கமலவண்ணம் =
மேகத்திலே தாமரைக் காடு மலர்ந்தாற்போலே யாயிற்று அவயவங்களிருக்கிறபடி.

பார்வண்ணமடமங்கை பத்தர் =
இங்கும் ‘என்னும்‘ என்கிற வினைமுற்றைக் கூட்டிக் கொள்ளவேணும்;
மகள் பாசுரத்தைத் திருத்தாய் அநுவதிக்கிறபடி.
கடலிலே உழன்று காலங்கழிக்குமவர்கள் மூழ்கி மண்ணெடுக்குமாபோலே, கீழ்ச்சொன்ன ஸௌந்தர்ய ஸாகரத்திலே
அவ லீலையாக ஆழங்காற்பட்டிருப்பவள் பூமிப்பிராட்டி;
அவளிடத்தில் பக்தி யுக்தனாயிருப்பன் எம்பெருமான் என்கிறது.
பூமிப்பிராட்டியாலே எம்பெருமான்றான் ஸேவிக்கப் பட வேண்டியது போய் எம்பெருமான்றான் அவளை ஸேவித்திருக்கிறானாம்
ப்ரணய தாரையில் முதிர்ச்சியாலே. அவளுடைய போக்யத்தையிலே துவக்குண்டு அத்தலை இத்தலையானபடி.
இப்படி ஒருத்தி பக்கலிலே பக்தியைப் பண்ணி நிற்கும் பெருமான், நான் பக்தி பண்ணுகிறனென்றால்
எனது பக்தியைப் பெற்றுக்கொள்வதும் செய்கிறானில்லையே! என்ற வருத்தந் தோற்றப் பார்வண்ண மடமங்கை பத்தர் என்கிறாள் பரகாலநாயகி.

பித்தர் பனிமலர் மேல்பாவைக்கு =
இவ்வி்டத்திலும் ‘என்னும்‘ என்கிற வினைமுற்றைக் கூட்டிக்கொள்வது.
இதுவும் மகள் வார்த்தையைத் திருத்தாய் அநுவதிக்கிறபடி.
குளிர்ந்த தாமரைப்பூவின் பரிமளந்தானே ஒருவடிவு கொண்ட தென்னலாம்படியுள்ள பெரிய பிராட்டியார்
திறத்திலே பித்துக்கொண்டவன். என்கிறது.
“அல்லிமலர்மகள் போகமயக்குக் களாகியும் நிற்குமமம்மான்” என்கிறபடியே
அவளுடைய போகங்களிலேயே மயங்கி என்னை மறந்தான் திடீர் என்றாள் போலும்.

பாவஞ்செய்தேன் =
வினவ வந்தவர்கட்கு அழுது காட்டுகிறாள் திருத்தாய்.
இப் பெண்பிள்ளையைப் பெறும்படியான பாவஞ்செய்தேன் நான் என்று கண்ணீர் சொரிகின்றாளென்க.
இவள் ஈடுபட்ட விஷயத்தின் வைலக்ஷண்யத்தை நம்மால் மாற்றப் போகாது;
இவளுடைய ஆற்றாமையும் நம்மால் அடக்க வொண்ணாது; அவனே உபேக்ஷியா நின்றாள்; இவளோ பதற நின்றாள்;
இந் நிலைமையைக் கண்டு கொண்டிருக்க வேண்டுவது என் பாபமே யன்றோ என்கிறாள்.
பகவத் விஷயத்திலே தன் பெண்பி்ள்ளைக்குண்டான அவகாஹநம் தனக்கு மிகவும் மகிழ்ச்சிக் குடலாயிருக்கையாலே
‘புண்ணியஞ்செய்தேன்‘ என்ன வேண்டுமிடத்து நாட்டாருக்காக மறைத்து “பாவஞ்செய்தேன்“ என்கிறாள்.

காலிப்பின்னே வருகின்ற கடல்வண்ணன் வேடத்தை வந்து காணீர், ஞாலத்தப் புத்திரனைப் பெற்றார் நங்கைமீர்!
நானே மற்றாருமில்லை‘ என்ற யசோதைப் பிராட்டியைப்போலே
“ஞாலத்துப் புத்திரியைப் பெற்றாள் நங்கைமீர்! நானே மற்றாருமில்லை” என்று சொல்லிக் கொள்ளவே இத்திருத்தாய்க்கு விருப்பம்;
ஆயினும் கட்டுப்பாட்டுக்காக மறைக்கிறாளென்க.

ஏர்வண்ணவென்பேதை =
ஐயோ! இப்பெண்ணை தன்வடிவழகைத் தான் நன்கறிந்தாளாகில் ‘அவன்றானே நமக்காக மடலெத்துப் புறப்படட்டும்‘ என்று கிடக்கலாமே;
தன்படியைத் தான் அறியாமலன்றோ இவள் இப்படி படுகிறாள் என்கிறாள்.
அவனுடைய கார் வண்ணம் இவளுடைய ஏர்வண்ணத்துக்கு ஏற்குமோ?
ஒரு உவமையையிட்டுச் சொல்லும் படியா யிருக்கிறது அவன் வடிவு;
இவள்வடிவுக்கு உவமை இல்லையே; ‘அழகியவடிவு படைத்தவள்! என்று சொல்லலா மத்தனை யொழிய
த்ருஷ்டாந்தமிட்டுச் சொல்ல வழியில் லையே! என்கிறாள்.

என்சொல்கேளாள் =
நான் இவளை அடக்கி யாண்டுகொண்டிருந்த காலமுண்டு; அது கடந்துபோயி்ற்று;
“அவனுடைய திருவருள் தன்னடையே பரிபக்குவமாகும் போது கிடைக்குமே யல்லது நாம் பதறிப் பயனில்லை காண்“
என்று நான் சொல்லப் புறப்பட்டால் நான் வாய் திறப்பதைக் கண்டவுடனே இவள் காதை அழுந்த மூடிக்கொள்ளுகிறாளே!
என் செய்வெனென்கிறாள்.

(என்சொல் கேளாள்)
“மாமேகம் சரணம் வ்ரஜ“ என்றும்,
“அபயம் ஸர்வபூதேப்யோ ததாம்யேதத் வ்ரதம் மம“ என்றும் அவன் சொல்லி வைத்த
வார்த்தைகளைக் கேட்டிருக்குமவள் என்சொல்லைக் கேட்பளோ?

எம்பெருமான் திருவரங்கமெங்கே யென்னும் =
என்வார்த்தை கேளாத மாத்திரமேயோ? அவனிருக்கும் தேசத்திற்குச்செல்ல வழியும் தேடுகின்றாள்.
என்னைத் தனக்கே யாக்கிக் கொண்டவனுடைய கோயிலுக்கு எங்ஙனே வழியென்கிறாள்.

நீர்வண்ணன் நீர்மலைக்கே போவேனென்னும் =
எம்பெருமான் திருவரங்கமெங்கே யென்று கேட்டவளுக்கு வழி சொல்வாரார்? ஒருவரும் வாய்திறந்திலர்;
அதற்குமேல் தானே சொல்லுகின்றாள் – நீர்வண்ணன் நீர்மலைக்கேபோவேன் என்கிறாள்.
திருக்குறைய லூரில் நின்றும் புறப்பட்டுத் திருநீர்மலைக்குப் போய் அங்கு நின்றும்
திருவரங்கம் பெரிய கோயிலுக்குப் போகவேணும் என்று இங்ஙனே இவள் வழி கண்டிருக்கிறாள் போலும்.
கோவிலிலே கெட்டுப்போன பொருளைக் குளத்திலே தேடுமாபோலே யிருக்கிறது இவள்படி.
திருப்பதிகளிலே தங்கித் தங்கிப்போகப் பார்க்கிறாளாயிற்று.

இதுவன்றோ நிறைவழிந்தார் நிற்குமாறே =
தன் தலையில் ஸ்வரூபத்தைப் பாராதே எதிர்தலையின் வைலக்ஷண்யத்தையே பார்த்துப் பதருவாருடையபடி இதுவன்றோ.
இப்படியும் அடக்கங்கெட்டாளே என்மகள்! என்றாளாயிற்று.

திருத் தாயார் இவளுடைய கருத்துக்கு உடன்பட்டு இவள் பாசுரங்களை கேட்போம்
அவளும் அவன் திருமேனி அழகை வருணிப்பது
நாய்ச்சிமார் பக்கல் அவன் இருக்கும் இருப்பை பேசுவது
அவனூர் எங்கே என்று வினவுவது
நான் இங்கே கதறி என்ன பயன்
அவனூருக்கே போய்ச் சேருவேன்
போலவே கேட்டு
உகந்து
தானும் –
கார்வண்ணம் திரு மேனி கண்ணும் வாயும் கைத்தலமும் அடி இணையும் கமல வண்ணம் -என்பதும்
பார் வண்ண மட மங்கை பத்தர் -என்பதும்
பனிமலர்மேல் பாவைக்கு பித்தர் -என்பதும்
எம்பெருமான் திருவரங்கம் எங்கே என்பதும்
நீர் வண்ணன் நீர் மலைக்கே போவேன் -என்பதும்
மகள் வார்த்தையின் அனுவாதன்கள்
மற்றவை திருத் தாயார் வார்த்தை

அடியிலே தனதுவடிவை முற்றூட்டாக அனுபவிக்கக் கொடுக்கையாலே அதுவே வாய் வெருவுதல்
ஸ்ரீ பரத ஆழ்வான் /திருவடி /அக்ரூரர்
தம் சமுத்தாப்ய காகுஸ்த சிரச்ய அஷிபதம் கதம் -அங்கே பரதம் ஆரோப்ய முதித ப்ரிஷச்வஜே -ஸ்ரீ பரத ஆழ்வான் விஷயம்
ஏஷ சர்வஸ்வ பூதச்து பரிஷ்வங்கோ ஹநூமத மயா காலமிமம் ப்ராப்ய தததச் தஸ்ய மகாத்மான -திருவடி விஷயம்
சோப்யேனம் த்வஜ வஜ்ராப்ஜ க்ருத சிஹ்நேன பாணினா சம்ச்ப்ருச்யாக் ருஷ்ய ச ப்ரீத்யா ஸூ காடம் பரிஷச்வஜே -அக்ரூரர் விஷயம்
மூவருக்கும் திரு மேனி அணைக்கக் கொடுத்த பரிசு

சௌந்தர்ய சாகரத்தில் ஆழம் கால் பட்ட பிராட்டிமார் இடம்
அவள் போக்யதையில் ஈடுபட்டு இத்தலை அத்தலையான படி
அல்லி மலர்மகள் போக மயக்குக்கு ஆளாகியும் நிற்கும் அம்மான்
அப்படிப் பட்டவன் எனது பக்தியை பெற்றுக் கொள்ள வில்லையே வருத்தம் தோன்ற பார் வண்ண மட மங்கை பித்தர் –
அவர்கள் போகங்களில் ஈடுபட்டு என்னை மறந்தான்
இவ்வளவையும் திருத் தாயார் அனுவதித்து -சொல்லி

பாவம் செய்தேன்
வினவ வந்தவர்களுக்கு அழுது காட்டுகிறாள்
காலிப்பின்னே வருகின்ற கடல் வண்ணன் வேடத்தை வந்து காணீர்
ஞாலத்துப் புத்திரனைப் பெற்றார் நங்கைமீர் நானே மற்றாரும் இல்லை போலே
ஞாலத்து புத்ரியைப் பெற்றாள் நானே மற்றாரும் இல்லை சொல்லிக் கொள்ளவே விருப்பம்
கட்டுப்பாடுக்காக மறைக்கிறாள்

ஏர் வண்ண என் பேதை
இவள் அழகுக்கு அவன் அன்றோ மடல் எடுக்க வேணும்
இவள் வடிவுக்கு உவமை இல்லை சொல்ல

என் சொல் கேளாள்
மாம் ஏகம் சரணம் வ்ரஜ
அபயம் சர்வ பூதேப்யோ ததாம் ஏதத் வ்ரதம் மம
என்று அவன் சொல்லி இருக்கும் வார்த்தைகளைக் கேட்டு இருக்குமவள் என் சொல்லைக் கேட்பாளோ

எம்பெருமான் திருவரங்கம் எங்கே என்னும்
என் வார்த்தை கேளாத மாத்ரமேயோ
அவன் இருக்கும் தேசத்துக்கும் வழி தேடுகிறாள்
என்னை தனக்கே யாக்கிக் கொண்டவனுடைய கோயிலுக்கு எங்கே வழி

நீர் வண்ணன் நீர் மலைக்கே போவேன் என்னும்
திருக் குறையலூரில் நின்றும் புறப்பட்டு
திரு நீர் மலைக்கு போய்
அங்கு நின்றும் திருவரங்கம் பெரிய கோயிலுக்கு போக வேணும்
என்று வழி கண்டு இருக்கிறாள் போலும்
கோயிலிலே கெட்டுப் போன பொருளை குளத்திலே தேடுமா போலே இருக்கிறது இவள் படி
திருப் பதிகளில் தங்கி தங்கி போகப் பார்க்கிறாள் ஆயிற்று

இது அன்றோ நிறைவழிந்தார் நிற்குமாறு
தன் தலையிலே ஸ்வரூபத்தை பாராதே
எதிர் தலையில் வைலஷணயத்தையே பார்த்து
பதறுவார் உடைய படி இது அன்றோ
இப்படியும் அடக்கம் கெட்டாளே என் மகள் -என்கிறாள்-

—————————————————————

இதுவன்றோ நிறைவழிந்தார் நிற்குமாறோ“ என்றாள் கீழ்ப்பாட்டில். அதுகேட்ட பெண்டுகள்
‘இப்படியும் சொல்லிக் கைவிடலாமோநீ? ‘நீ விரும்புகிற புருஷன் வேற்றுப் பெண் பிள்ளைகள் பக்கலிலே
சாலவும் ஆழ்ந்து கிடப்பவனாகையாலே அவன் உனக்கு முகந்தரமாட்டான்;
வீணாக ஏன் அவனிடத்து நசை வைத்துக் கதறுகின்றாய்?‘ என்று சொல்லியாவது மகளை மீட்கப் பார்க்கலாகாதோ?‘ என்று சொல்ல;
‘அம்மனைமீர்! அதுவுஞ் சொன்னேன்; நான் சொல்வதில் ஒரு குறையுமில்லை;
என் உபதேசமெல்லாம் விபரீத பலமாய்விட்டது காணீர்‘ என்கிறாளிதில்.

முற்றாரா வனமுலையாள் பாவை மாயன் மொய்யகலத் துள்ளிருப்பாள் அஃதும் கண்டும்
அற்றாள்,தன் நிறையழிந்தாள் ஆவிக் கின்றாள் அணியரங்க மாடுதுமோ தோழீ என்னும்,
பெற்றேன்வாய்ச் சொல்லிறையும் பேசக் கேளாள் பேர்ப்பாடித் தண்குடந்தை நகரும் பாடி,
பொற்றாம ரைக்கயம்நீ ரா டப் போனாள் பொருவற்றா ளென்மகள்உம் பொன்னும் அஃதே.

பதவுரை

பொருவு அற்றாள் என்மகள்–ஒப்பில்லாதவளான என்பெண்ணானவள்,
முற்று ஆராவனம் முலையாள்–முழுமுற்றும் போந்திலாத அழகிய முலைகளை யுடையவளும்
பாவை-சித்திரப் பதுமை போன்றவளுமான ஸ்ரீ மஹாலக்ஷ்மி
மாயன்-அற்புதனான எம்பெருமானுடைய
பெற்றேன்-பெற்றெடுத்த தாயாகிய நான்,
வாய் சொல் பேச-(ஹிதமாகச் சில) வார்த்தைகள் சொல்ல,
இறையும்-சிறிதேனும்
கேளாள்-காது கொடுத்துங் கேட்பதில்லை;
பேர் பாடி-திருப்பேர் நகரைப் பாடியும்
தண் குடந்தை நகர் பாடியும்-குளிர்ந்த திருக்குடந்தை நகரைப் பாடியும்
மொய் அதலத்துள் இருப்பாள் அஃது கண்டும்-அழகிய திருமார்பினுள் அடங்கிவாழும்படியைக் கண்டு வைத்தும்
அற்றாள்-அவனுக்கே அற்றுத் தீ்ர்ந்தாள்;
தன் நிறைவு அழிந்தாள்-தன்னுடைய அடக்கமொழிந்தாள்;
ஆவிக்கின்றாள்-நெடு மூச்செறியா நின்றாள்;
தோழீ அணி அரங்கம் ஆடுதுமோ என்னும்-தோழீ! திருவரங்கநகர் படிந்தாடுவோமா?‘ என்கிறாள்;
பொன் தாமரை கயம்-திருப்பொற்றாமரைத் தடாகத்திலே
நீர் ஆட-குடைந்தாடுவதற்கு
போனாள்-எழுந்து சென்றாள்;
உம் பொன்னும் அஃதே-(தோழியர்காள்!) உங்கள் பெண்ணின்படியும் இவ்வண்ணமேயோ?

முற்றாராவன முளையாள்பாவை என்கிறது பெரியபிராட்டியாரை.
பிராட்டியின் பருவத்தைப் பற்றிச் சொல்லுமிடங்களில் “யுவதிச்ச குமாரிணீ“ என்று சொல்லப்பட்டது; அதாவது –
குமாரியாயிருக்கும் நிலைமையிலே நிற்பவளாய் அத்தோடு யௌவனமும் வந்து முகங்காட்டுமளவாயிருக்கும் இவள் பருவம் என்றபடி.
அதற்கு இணங்க ‘முற்றாராவன முளையாள்பாவை‘ என்கிறது.
முழுமுற்றும் போந்திலாத அழகிய முலையையுடையளான ஸ்ரீமஹாலெட்சுமி –
உபயவிபூதி நிர்வாஹகனாய் எல்லையில் ஞானத்தனாய் நிரூபாதிக ஸ்வதந்த்ரனாய் அவாப்த ஸமஸ்த காமனாயிருக்கு
மெம்பெருமானையும் தன்னுடைய ஒரு அவயவ விசேஷத்திலே அடக்கியாளப் பிறந்தவளென்கிறது.

மாயன்மொய்யகலத்துள்ளியிருப்பாள் அஃதுங்கண்டும் அற்றாள் =
எம்பெருமான் பிராட்டியின் திருமுலைத் தடத்தைவிட்டுப் பேராதாப் போலே அவள் இவனுடைய திருமார்பை விட்டுப் பேராதிருக்கிறபடி;
இவன் அவளுடைய திருமுலையைப் பற்றி ‘அகலகில்லேனிறையும்‘ என்பன்;
இவள் அவனுடைய திருமார்வைப்பற்றி ‘அகலகில்லேனிறையும்‘ என்பள்.
முலையை யணைந்து அவன் பித்தேறிக்கிடக்க, மார்வையணைந்து இவள் பித்தேறிக்கிடக்க,
இங்ஙனே ஒரு திவ்யதம்பதிகள் பைத்தியம் பிடித்துப் படுகிறபாடு என்! என்னலாம்படி யிருக்கும்.

(அஃதுங்கண்டும் அற்றாள்)
“திவளும் வெண்மதிபோல் திருமுகத்தரிவை செழுங்கடலமுதினிற் பிறந்தவளும்,
நின்ஆகத்திருப்பது மறிந்துமாகிலுமாசை விடாளால்“ என்றவாறு.
உலகத்தில் ஒரு புருஷன் ஒரு ஸ்திரீயினிடத்தில் அளவற்ற அன்பு வைத்திருப்பதாகக் கண்டால் அவனிடத்தில்
மற்றையோர் ஆசைவைப்பது கூடாது; ஏனெனில்;
அவனுடைய ஆசைப்பெருக்கம் முழுதும் ஒருவ்யக்தி வழியிற் பாய்ந்துவிட்டதனால் அது மற்றொரு வ்யக்தியிற் பாய மாட்டாது;
அலக்ஷயஞ்செய்யவே நேரிடும். ஆகவே, ஏற்கனவே ஒரு வ்யக்தியினிடத்தில் காதல் கொண்டிரா நின்ற புருஷனை
மற்றையோர் காதலிப்பது விவேகிக்ருத்யமன்று. இஃது உலகில் ஏற்பட்ட விஷயம்.
இந்த நியாயத்தைக் கொண்டு பார்க்குமளவில், என்மகள்
அல்லிமலர் மகள் போகமயக்குக்களாகியும் நிற்குமம்மா னிடத்தில் ஆசைவைப்பது கூடாது.
அழகிற்சிறந்த திருமகள் ஒரு நொடிப்பொழுதும் விடாது திருமார்பிலேயே அந்தரங்கமாக வாழ்வதைக் கண்டுவைத்தும்
இவள் அவ்விடத்திற்கே அற்றுத் தீர்ந்தாள் காண்மின் என்றாள் திருத்தாய்.

“நீரிலே நெருப்புக் கிளருமாபோலே குளிர்ந்த திருவுள்ளத்திலே அபராதத்தாலே சீற்றம் பிறந்தால் பொறுப்பது இவளுக்காக“
என்கிறபடியே குற்றங்களைப் பொறுப்பிக்கவல்ல பெரியபிராட்டியாரும்,
“தன்னடியார் திறத்தகத்துத் தாமரையாளாகிலுஞ் சிதகுரைக்குமேல், என்னடியாரது செய்யார் செய்தாரேல் நன்றுசெய்தாரென்பர்“
என்கிறபடியே * செய்தகுற்றம் நற்றமாகவே கொள்ளவல்ல என்பெருமானும் கூடியிருக்கிற இவ்விருப்புத்தானே
நமக்குப் பரமஉத்தேச்யமென்று கொண்டு அந்த மிதுனத்திலே ஈடுபடாநின்றாளாயிற்று.

தன்நிறைவழிந்தாள் =
அந்த மிதுனத்தில் ஈடுபட்டமாத்திரமேயோ? தன் பெண்மைக்குரிய அடக்கமும் அழியப்பெற்றாள்.
‘கடல்வற்றிற்று‘ என்பாரைப்போலே சொல்லுகிறபடி காண்மின்.
நிறைவழிந்தாளென்பதை நீ அறிந்தமை எங்ஙனே? என்று கேட்க ஆவிக்கின்றாள் என்கிறாள்.
கீழ் ‘எம்பெருமான் திருவரங்கமெங்கே?‘ என்று திருவரங்கம் பெரிய கோவிலுக்குப்போக வழி தேடினவள்
அதுதெரியப் பெறாமையாலே நெடுமூச்செறியா நின்றாள். இதுவே நிறைவழிந்தமைக்கு அடையாளம்.

அணியரங்கமாடுதுமோ தோழீயென்னும் =
பரகாலநாயகியின் நிலைமையைக் கண்டு ‘எம்பெருமானோ இவளுக்கு முகங்காட்டிற்றிலன்;
ஹித பரையான தாயார் சொல்லும் வார்த்தைகளில் ஒன்றும் இவளுக்கு ப்ரியமல்லாமையாலே தாயைக் கொண்டு
இவள் ஆச்வஸிக்கவழியில்லை; இத்தருணத்தில் இவளுக்கு நாம் அருகே நின்று முகங்காட்டுவோம்‘ என்று
நினைத்துத் தோழிவந்து பக்கத்தில் நின்றாள்;
நின்றவாறே ‘அணியரங்கமாடுதுமோ தோழீ!‘ எனத் தொடங்கினாள்.
ஸ்ரீரங்கநாதனாகிற பொய்கையிலே படிந்து குடைந்தாடி நம்முடைய விரஹதாபமெல்லாம் தணியப் பெறுவோமோ? என்றாளென்க.

பெற்றேன் வாய்ச்சொல் இறையும் பேசக்கேளாள் =
‘இனி நாம் இவள் வருந்தும் படியான ஹித வார்த்தைகளைச் சொல்லக் கடவோமல்லோம்;
இவளுக்கு ப்ரியமான வார்த்தை களையே சொல்லுவோம்‘ என்று நினைத்து இவளுடைய காரியங்களுக்கு
உடன்பாடான வார்த்தைகளைச் சொல்லுவதாக நான் வாய்திறந்தாலும்
‘என்வாயில் வருகிற வார்த்தை‘ என்பதுவே காரணமாக அந்த அநுகூல வார்த்தைகளையும் செவிதாழ்த்துக் கேட்கிறாளில்லை.
‘அணியரங்கமாடுவோம், நீர்வண்ணன் நீர்மலைக்கே போவோம்‘ என்று காதை மூடிக்கொள்ளுகிறளென்றபடி.
அவன் சொன்ன வார்த்தைகளைக் கேளாள். பிரதிகூலமே சொல்லிப் போருவார் வாயிலே அநுகூல வார்த்தைகள் வந்தாலுங் கேட்பாரில்லையிறே.

உன்வார்த்தை கேளாத அவளுடைய வார்த்தை இருந்தபடி என்? என்று கேட்க,
பேர்பாடித் தண்குடந்தை நகரும்பாடி என்கிறாள்.
கோவிலுக்குப் போம் வழியிலுள்ள பாதேயங்களைப் பேசா நின்றாளென்கிறாள்.
திருக்குறையலூரிலிருந்து திருவரங்கம் போக வேண்டுவார் முந்துறத் திருக்குடந்தையைப் பாடிப் பின்னைத்
தென்திருப்பேர்நகரைப் பாட வேண்டுவது ப்ராப்தமாயிருக்க க்ரம ப்ராப்தி பற்றுகிறதில்லை ஆற்றாமையின் கனம்.
(பாதேயம் = வழிப்போக்கில் உணவுச்சாதம்)

பொற்றாமரைக்கயம் நீராடப்போனாள் =
கீழே திருக்குடந்தை ப்ரஸ்துதமாகையாலே அத்தலத்தில் புண்ணியதீர்த்தமாக வழங்கி வருகின்ற பொற்றாமரை என்னும்
புஷ்கரிணியிலே நீராடப்போனாள் என்று பொருள்கொள்ளப் பொருந்துமாயினும்
எம்பெருமான் றன்னையே பொற்றாமரைக்கயமாகப் பேசுகிறாரென்றலும் பொருந்தும்.
தமிழர், ஸம்ச்லேஷத்தைச் சுனையாடலென்றும் நீராட்டமென்றும் சொல்லுவார்கள்.
எம்பெருமானோடு கலவி செய்ய விரும்புவதையே இங்குப் பொற்றாமரைக் கயம் நீராடப்போவதாகச் சொல்லிற்றென்க.

இவ்விடத்துப் பெரியவாச்சான்பிள்ளை வியாக்கியான ஸ்ரீஸூக்தி காண்மின்; –
‘மகள் ‘ அணியரங்காடுதுமோ‘ என்று ஊரைச் சொன்னாள்;
தான் * பொற்றாமரைக் கயமென்று பெரிய பெருமாளைச் சொல்லுகிறாள்:
‘தயரதன் பெற்ற மரதக மணித்தடம்‘ என்றும்
‘வாசத்தடம்போல் வருவானே!‘ என்றும் தடாகமாகச் சொல்லக்கடவதிறே“ என்பதாம்.

அவள் பொற்றாமரைக்கயம் நீராடப் புறப்பட்டால் நீ தடை செய்யலாகாதோ? என்ன,
பொருவற்றாள் என்மகள் என்கிறாள். பொருவு – பொருத்தம்; என்னோடு சேர்த்தியற்றாள் என்றபடி.
என் உறவை அறுத்துக் கொண்டவளை நான் எங்ஙனே நியமிப்பேன்? என்கிறாள்.
இனி, ‘பொருவற்றாள்‘ என்பதற்கு ‘ஒப்பில்லாதவள்‘ என்றும் பொருளாகும்.

உம்பொன்னுமஃதே =
இரண்டு வகையான பொருளைக் கருதி இச்சொல் சொல்லுகிறாள்;
உங்கள் வயிற்றிற் பிறந்த பெண்ணும் இவளைப்போலே அடங்காப் பிடாரிதானோ?
அன்றி விதேவையா யிருப்பவளோ? என்று கேட்பது வெளிப்படை. உங்கள் பெண்ணுக்கு இத்தனை வைலக்ஷண்யம் இல்லையே!,
நங்கைமீர்! நீரு மோர்பெண்பெற்று நல்கினீர், எங்ஙனே சொல்லுகேன் யான் பெற்ற வேழையை! என்றாற்போலே கொண்டாட்டம் உள்ளுறை.

“உம்பொன் என்கிறது அல்லாத ஆழ்வார்களை;
‘மத்துறு கடை வெண்ணெய் களவினிலூரவிடையாப்புண்டு, எத்திறம்! உரலினோடிணைந்திருந் தேங்கிய எளிவே!!‘
என்று அவதாரத்தை அநுஸந்தித்திறே அவர்கள் மோஹித்தது; அர்ச்சாவதாரத்திலேயிறே இவள் மோஹிப்பது“
என்ற வியாக்கியான ஸ்ரீஸூக்திகள் இங்கு அநுஸந்திக்கத்தக்கன.

மொய் அகலத்துள் இருப்பாள் அஃது கண்டும் அற்றாள்

முற்று ஆரா வன முலையாள் பாவை -என்கிறது பெரிய பிராட்டியாரை -யுவதிச்ச குமாரிணி
அவாப்த சமஸ்த காமனையும் ஒரு அவயவ விசேஷத்தில் அடக்கி ஆளப் பிறந்தவள்

மாயன் மொய் அகலத்துள் இருப்பாள் அஃது கண்டும் அற்றாள்
அகலகில்லேன் இறையும் என்று
முலையை அணைந்து அவன் பிதற்றிக் கிடக்க
மார்பை அணைந்து இவள் பிதற்றிக் கிடக்க
திவளும் வெண் மதி போல் திரு முகத்தரிவை செழும் கடல் அமுதினில் பிறந்தவளும்
நின்னாகத்து இருப்பதுவும் அறிந்தும் ஆகிலும் ஆசை விடாளால்
நீரிலே நெருப்பு கிளருமா போலே குளிர்ந்த திரு உள்ளத்திலே அபராதத்தால் சீற்றம் பிறந்தால்
பொறுப்பது இவளுக்காக
அவனும் தன அடியார் திறத்தகத்து தாமரையாள் ஆகிலும் சிதகுரைக்குமேல்
என் அடியார் அது செய்யார் செய்தாறேல் நன்றே செய்தார் என்று
குற்றமே நற்றமாக கொள்பவன்
இவ்விருப்பு தானே நமக்கு பரம உத்தேச்யம் என்று மிதுனத்தில் ஈடுபடா நின்றாள்

தன் நிறை வழிந்தாள்
நிறை அழிந்தமைக்கு அடையாளம் எம்பெருமான் திருவரங்கம் எங்கே -என்கிறாள்
தோழியிடம்
அணி அரங்கம் ஆடுதுமோ தோழி
ஸ்ரீ ரெங்கநாதன் ஆகிற பொய்கையிலே குடைந்தாடி விரஹ தாபம் தனியோ பெறுவோமா –

பெற்றேன் வாய்ச் சொல் இறையும் பேசக் கேளாள்
பெற்றதே குற்றமாக
அவன் சொல்லும் தோழி சொல்லும் கேட்பவள்
அனுகூல வார்த்தை எனது வாயிலே வந்தாலும் கேளாள்

பேர் பாடி தண் குடந்தை நகரும் பாடி
கோயிலுக்கு போம் வழியில் பாதேயங்களை பேசா நின்றாள்
திருக் குறையலூரில் இருந்து கோயிலுக்கு
முதலில் திருக் குடந்தை பாடுவது இருக்க
ஆற்றாமையின் கனத்தால் க்ரம ப்ராப்தி பற்றுகிறது இல்லை

பொற்றாமரைக் கயம் நீராடப் போனாள்
மகள் அணி அரங்கம் ஆடுதுமோ என்று ஊரைச் சொன்னாள்
தான் பொற்றாமரைக் கயம் என்று பெரிய பெருமாளைச் சொல்லுகிறாள்
தயரதன் பெற்ற மரகத மணித்தடம் -என்றும்
வாசத்தடம் போல் வருவானே -என்றும்
தடாகமாகச் சொல்லக் கடவது இறே
திருக்குடந்தை புஷ்கரணியை சொன்னாள் என்றுமாம்
ஆனால் வ்யாக்யானத்துக்கு சேர எம்பெருமானையே குறிக்கும்

உம் பொன்னும் அக்தே
உங்கள் வயற்றில் பிறந்த பெண்ணும் இப்படியா சொல் கேளாமல்
உங்கள் பெண்ணுக்கு இவ்வளவு வைலஷண்யம் இல்லையே
நங்கைமீர் நீரும் ஓர் பெண் பெற்று நல்கினீர் எங்கனே சொல்லுகேன் யான் பெற்ற ஏழையை
என்றால் போல கொண்டாட்டம் உள்ளுறை

உம் பொன் என்கிறது அல்லாத ஆழ்வார்களை
மத்துடை கடை வெண்ணெய் களவினில் உரவிடை ஆப்புண்டு எத்திறம்
உரலினோடு இணைந்து இருந்து ஏங்கிய எளிவே -என்று
அவதாரத்தை அனுசந்தித்தவாறே அவர்கள் மோஹித்தது
அர்ச்சாவதாரத்தில் இறே இவள் மோஹிப்பது –

பொன் என்ற சொல் உவமை ஆகு பெயரால் பெண்ணை குறிக்கும் –

————————————————————————–

பண்டு ஸ்ரீராமாவதாரத்தில் பிராட்டிக்கு உதவினபடியையும்,
ஸ்ரீகிருஷ்ணாவதாரத்தில் பேரனுக்கு உதவினபடியையும்,
வராஹாவதாரத்தில் பூமிப்பிராட்டிக்கு உதவினபடியையும்,
பிரளயகாலத்தில் உலகங்கட்கெல்லா முதவினபடியையும்,
த்ரிவிக்ரமாவதாரத்தில் ஸர்வஸ்வதானம் பண்ணினபடியையும் எடுத்தெடுத்துப் பரகாலநாயகி வாய்விட்டுக்
கதறுகின்றபடியைத் திருத்தாயார் சொல்லாநின்று கொண்டு, இப்படிப்பட்ட என் மகளை இந்நிலவுலகத்தில்
பெரும்பாக்கியம் படைத்தவளென்று சொல்லலாமத்தனையன்றி வேறெதுவும் சொல்லப்போகாதென்று தலைக்கட்டுகிற பாசுரம் இது.

தோராளும் வாளரக்கன் செல்வம் மாளத் தென்னிலங்கை முன்மலங்கச் செந்தீ ஒல்கி,
பேராள னாயிரம் வாணன் மாளப் பொருகடலை யரண்கடந்து புக்கு மிக்க
பாராளன், பாரிடந்து பாரை யுண்டு பாருமிழ்ந்து பாரளந்து பாரை யாண்ட
பேராளன், பேரோதும் பெண்ணை மண்மேல் பெருந்தவத்தள் என்றல்லால் பேச லாமே?

பதவுரை

முன்–முன்பொருகால்
தேர் ஆளும் வாள் அரக்கன்–தேர்வீரனும் வாட்படை வல்லவனுமான இராவணனுடைய
செல்வம் மாள-ஐச்வரியம் அழியவும்
தென் இலங்கை மலங்க-(அவனது) தென்னிலங்கா புரி கலங்கவும்
(அனுமானையிட்டு)
செம் தீ ஓங்கி–சிவந்த நெருப்பாலே கொளுத்தி,
(அதுவன்றியும்)
போர் ஆளன்-போர்புரியுந் தன்மையனாய்
ஆயிரம் தோள்-ஆயிரம்தோள்களை யுடையனான
வாணன் பாணாஸுரன்
மாள-பங்கமடையும்படி செய்தற்கு
பொருகடல் அரணை கடந்து-அலையெறிகின்ற கடலாகிற கோட்டையைக் கடந்து
புக்கு–பாணபுரத்திற்புகுந்து
மிக்க-வீரலக்ஷ்மி மிகப்பெற்றவனும்
பார் ஆளன்–பூமிக்குநிர்வாஹகனும்,
பார் இடந்து–(வராஹாவதாரத்தில்) பூமியைக் குத்தியெடுத்தும்
பாரை உண்டு–(பிரளயத்தில்) பூமியைத்திரு வயிற்றிலே வைத்தும்
பார் உமிழ்ந்து–அப்பூமியைப் பிறகு வெளிப்படுத்தியும்
பார் அளந்து–(த்ரிவிக்ரமாவதாரத்தில்) அப்பூமியை அளந்தும்
(ஆக இப்படியெல்லாம்)
பாரை ஆண்ட–இவ்வுலகத்தை ரக்ஷித்தருளின் வனான
பேர் ஆளன்–பெருமை பொருந்தின எம் பெருமானுடைய
பேர்–திருநாமங்களை
ஓதும்-இடைவிடாமற் சொல்லுகிற
பெண்ணை-இப் பெண் பிள்ளையை
மண் மேல்-இந்நிலவுலகத்தில்
பெருந்தவத்தன் என்று அல்லால் பேசலாமே–பெருமாபாக்கிய முடையவள் என்று சொல்லலாமத்தனை யொழிய வேறு சொல்லப்போமோ?

தேராளும் வாளரக்கன் செல்வம் மாள =
இத்தனை தேர்களை ஆண்டா னென்று ஒரு கணக்கிட்டுச் சொல்லாத பொதுவிலே ‘தேராளும்‘ என்றது,
தேரென்று பேர் பெற்றவை யெல்லாவற்றையும் ஆண்டவனென்றபடி.
இது சொன்னது ரத கஜ துரக பதாதிகள் என்கிற சதுரங்க பலத்தையும் ஆண்டமை சொன்னவாறு.
பெருவீரர்களைப் பேசும்போது ‘அதிரர்‘ ‘மஹாரதர்‘ என்று தேரையிட்டு நிரூபித்துப் பேசுவது மரபாதலால் இங்கும் தேராளும் என்றது.

(வாளாரக்கன்.)
கீழ்ச்சொன்ன சதுரங்கபலங்களையும் அழகுக்காகக் கட்டி வைத்தானத்தனையே யென்னவேண்டும்படியான தனிவீரன்.
ஆக இப்படிப்பட்ட அரக்கனுடைய

செல்வம்மாள =
ஒன்றுக்கும் விகாரப்படகில்லாத அனுமானும் கண்டு போர்ப்பொலியக் கொண்டாடின செல்வமன்றோ இராவணனது.
“யத்யதர்மோ ந பலவாந் ஸ்யாதயம் ராக்ஷஸே ச்வா; ஸ்தாயம் ஸுரலோகஸ்ய ஸசக்ரஸ்யாபி ரக்ஷிதா.“
(இவ்விராவணனிடத்தில் அதர்மம் ஒன்று மாத்திரம் இல்லாதிருந்தால் இவனே தேவாதி தேவனாக விளங்கவல்லவன்
(என்றாயிற்று அனுமான் பேசினது. அங்ஙனம் வியக்கத்தக்க ஐச்வரியமெல்லாம் தொலையும்படியாக.

தென்னிலங்கை முன்மலங்கச் செந்தீயொல்கி =
தென் என்று கட்டளைப்பட்டிருக்குமொழுங்கபாட்டைச் சொன்னபடி.
சுற்றுங்கடலாய் அப்புறம் நாடாய் அங்கே மலையாய் அதன்மேலே மதிளும்
அட்டாலையுமாயிருக்கிற கட்டழகையுடைய இலங்காபுரி என்றபடி.
அப்படிப்பட்ட நகரம் நிலை கலங்கும்படியாக நெருப்பையிட்டுக் கொளுத்திச் சுடுகாடாக்கினபடி.
இதற்கு முன்னே அக்னிபகவான் இராவணனிடம் அஞ்சி நடுங்கி அவனுக்குக் குற்றேவல் செய்து கொண்டு போதுமான
இரைபெறாத உடம்பு வெளுத்துக் கிடந்தான்;
அனுமான் இலங்கை புக்க பின்பு அவனுடைய வாலை அண்டை கொண்டு வயிறுநிரம்பப் பெற்றுத்
தன்னிறம் பெற்றுத் தேக்கமீட்டானென்க.

ஆக இவ்வளவும் பிராட்டிக்காகச் செய்த காரியத்தைச் சொன்னாளாயிற்று.

இனி இரண்டாமடியால் பேரனுக்குச் செய்த காரியஞ் சொல்லுகிறது.
வாணனை உயிரோடு விட்டிருக்கச் செய்தேயும் ‘வாணன் மாள‘ என்றது எங்ஙனே யென்னில்;
பின்பு அவன் உயிரோடிருந்த இருப்பு பிணமாயிருக்குந் தன்மையிற்காட்டில் வாசியற்ற தென்பது விளங்க மாள என்றது.

பொருகடலை அரண்கடந்துபுக்கு மிக்க பாராளன் =
எதிரிகட்கு அணுக வொண்ணாதபடி திரைக் கிளர்த்தியை யுடைத்தான கடலாகிற அரனைக் கடந்து
பரணபுரத்திலே சென்று புகுந்து வீரலக்ஷ்மியாலே மிக்கவனாய்,
பூமிக்குச் சுமையான வாணன் தோள்களை அறுத்தொழிக்கையாலே பூமிக்கு நிர்வாஹகனானவன்.

பாரிடந்து =
பிரளயத்தைச் சார்ந்திருந்த பூமியை மஹா வராஹரூபியாகச் சென்று உத்தரித்து வந்தபடி சொல்லுகிறது.
பாசி தூர்த்துக் கிடந்த பார்மகட்குப் பண்டொருநாள், மாசுடம்பில் நீர்வாரா மானமிலாப் பன்றியாந்
தேசுடைய தேவர் என்னை மாத்திரம் இப்படி உபேக்ஷித்திருப்பதே! என்பது கருத்து.

பாரையுண்டு =
பூமியை யடங்கலும் பிரளயப் பெருவேள்ளம் கொள்ளப் புகுகையில் எல்லாவற்றையும் வாரித்
திருவயிற்றிலே வைத்துக் காத்தபடி சொல்லுகிறது.
நானும் அக்காலத்தில் இருந்திருந்தேனாகில் திருமேனியோடே ஸம்பந்தம் பெற்றிருப்பேனே என்றவாறு.

பாருமிழந்து =
பிரளயகாலத்தில் திருவயிற்றினுள்ளே அடக்கின பூமியை மறுபடியும் வெளிப்படுத்திக்
கரண களேபரங்களைக் கொடுத்தருளி உருப்படுத்தினது இங்ஙனம் உபேக்ஷிக்கைக்காகவோ? என்றவாறு.

பாரளுந்து =
உலகளக்கிற வியாஜத்தாலே விரும்பாதார் தலையிலும் திருவடியை வைத்து ஸத்தை பெறுவித்தருளினவன்,
விரும்புகின்ற எனக்குத் திருமார்பைத் தாராவிடினும் ஊர்ப் பொதுவான திருவடியையும் தாரா தொழிவதே!
என்ற கருத்தப்படச் சொல்லுகிறபடி.

பாரையாண்ட =
ஆகக் கீழ்ச் சொன்னவற்றையெல்லாம் திரளப்பிடித்து நிகமனஞ் செய்கிறபடி.

தேராளும் வாளரக்கன் செல்வம்மாளத் தென்னிலங்கை முன்மலங்கச் செந்தீயொல்கிப் பாரையாண்ட பேராளன்;
பாரிடந்து பாரையாண்ட பேராளன்; பாரையுண்டு பாரையாண்ட பேராளன்; பாருமிழந்து பாரையாண்ட பேராளன்;
பாரளந்து பாரை யாண்ட பேராளன் – என்றிங்ஙனே அந்வயித்துக் கொள்ளலாம்.

இவை பரகாலநாயகி ஓதின திருநாமங்களாம்.
ஆக இப்படிப்பட்டவையும் இவை போல்வனவுமான திருநாமங்களை இடைவிடாமல் கால ஷேபார்த்தமாகப் பேசவல்ல விவளை,

மண்மேற்பெருத்தவத்த ளென்றல்லால் பேசலாமே? =
நித்யஸூரிகளின் திரளில் நின்று பிறிகதிர்ப்பட்டு வந்தவள் என்னலாமத்தனையொழிய வேறு பேசப்போமோ?
பூமியிலேயிருக்கச் செய்தே நித்யஸூரிகள் பரிமாற்றத்தை யுடையவளென்றே சொல்லி வேணும்.

ஆகத் திருத்தாயார் பாசுரமாகச் சென்ற இடைப்பத்து முற்றிற்று.

தேராளும் வாளரக்கன் செல்வம் மாள
ரத கஜ துரக பதாதிகள் சதுரங்க பலன்களையும் அழகுக்காக கொண்ட தனி வீரன்
வாள் படையும் கொண்டவன்
திருவடி மதித்த ஐஸ்வர்யம் மாள

தென்னிலங்கை முன் மலங்கச் செந்தீ ஒல்கி
திருவடி வாலை அண்டை கொண்டு
வயிறு நிரம்பப் பெற்று தன்னிறம் பெற்று
பிராட்டிக்காக செய்த கார்யம் சொல்லி

பொரு கடலை அரண் கடந்து புக்கு மிக்க பாராளன்
எதிரிகள் அணுக ஒண்ணாத படி திரைக் கிளர்த்தியை உடைய
கடலைக் கடந்து
பாணா புரத்திலே சென்று புகுந்து
வீர லஷ்மி யாலே மிக்கு
பூமிக்கு சுமையான வாணன் தோள்களை அறுத்து ஒழித்து
பூமிக்கு நிர்வாஹகன்
பேரனுக்காக செய்த கார்யம்

பாரிடந்து பாரை உண்டு பாரை உழிந்து
பாசி தூர்த்துக் கிடந்த பார்மகட்குப் பண்டு ஒரு நாள்
மாசுடம்பில் நீர் வாரா மானிமிலா பன்றியாய்
தேசுடைய தேவர் என்னை மாதரம் உபேஷிப்பதே
இது எல்லாம் செய்து அருளியது
இப்பொழுது என்னை உபேஷிக்கைக்காகவோ

பாரளந்த
உபேஷிக்காதார் தலையிலும் திருவடியை வைத்து அருளிய நீ
விரும்புகின்ற எனக்கு திரு மார்பைத் தரா விடினும்
ஊர்ப் பொதுவான திருவடியையும் தாராது ஒழிவதே

பாரை ஆண்ட
கீழ் சொன்னது எல்லாம் திரள பிடித்து நிகமனம் செய்கிறபடி
பாரை யாண்ட பேராளன் முன்பு சொன்ன
ஸ்ரீ ராமாவதார
ஸ்ரீ கிருஷ்ணாவதார
ஸ்ரீ வராஹாவதார
பாரை உண்டு பாரை ஆண்ட பேராளன்
பாரை உமிழ்ந்து பாரை ஆண்ட பேராளன்
பார் அளந்து பாரை ஆண்ட பேராளன்
இப்படி ஒவ் ஒன்றிலும் அன்வயித்து
இவை போன்ற திரு நாமங்களை இடை விடாமல்
கால ஷேப அர்த்தமாக பேச வல்ல இவளை

மண் மேல் பெரும் தவத்தள் என்று அல்லால் பேசலாமே
நித்ய ஸூரிகளின் திரளின் நின்று
பிறி கதிர் பட்டு வந்தவள் என்னலாம் அத்தனை ஒழிய
வேறு பேசப் போமோ
பூமியில் இருக்கச் செய்தே நித்ய ஸூரிகள் உடைய பரிமாற்றம்
உடையவள் என்றே சொல்ல வேண்டும்
என்று சொல்லி திருத் தாயார் பேச்சாக தலைக் கட்டுகிறார்-

—————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ P.B.A,ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்-
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திரு நெடும் தாண்டகம்-பாசுரங்கள்-11-15- -திவ்யார்த்த தீபிகை —

September 29, 2014

எம்பெருமானை யநுபவித்தல் பலவகைப் பட்டிருக்கும்;
அவனுடைய திருநாமங்களைச் சொல்லி யநுபவித்தல்,
திருக்கல்யாண குணங்களைச் சொல்லியநுபவித்தல்,
வடிவழகை வருணித்து அநுபவித்தல்,
அவனுகந்தருளின திவ்யதேசங்களின் வளங்களைப் பேசியநுபவித்தல்,
அங்கே அபிமாநமுள்ள ஸ்ரீவைஷ்ணவர்களின் பெருமையைப் பேசி யநுபவித்தல்-என்றிப்படி பலவகைப்பட்டிருக்கும் பகவதநுபவம்.

இவ்வகைகளில் பரம விலக்ஷணமான மற்றொரு வகையுமுண்டு; அதாவது-
ஆழ்வார் தரமான தன்மையை விட்டுப் பிராட்டிமாருடைய தன்மையை ஏறிட்டுக்கொண்டு
வேற்று வாயாலே பேசியநுபவித்தல்.
இப்படி யநுபவிக்குந் திறத்தில், தாய் பாசுரம் தோழி பாசுரம் தலை மகள் பாசுரம் என்று மூன்று வகுப்புகளுண்டு.
அப்போது ஆழ்வார்க்குப் பரகாலர் என்ற ஆண்மைப் பெயர் நீங்கி,
‘பரகாலநாயகி‘ என்று பெண்மைக்குப் பெயர் வழங்கப்பட்டுவரும்.
தாய் சொல்வது போலவும்
தோழி சொல்வது போலவும் தலைமகள் சொல்வது போலவும் பாசுரங்கள் வெளி வந்தாலும் பாசுரம் பேசுகிறவர் ஆழ்வாரேயாவர்.
ஒரு ஆறானது பல வாய்க்கால்களாகப் பெருகினாலும் அவற்றுக்குப் பிரதானமான பெயர் ஒன்றேயாயிருக்குமா போலே,
இம் மூன்று நிலைமைகளாகச் சொல் மாலை வழிந்து புறப்பட்டாலும்
“மன்னுமானமணி மாடமங்கைவேந்தன் மான வேற் பரகாலன் கலியன் சொன்ன“ என்று ஆழ்வார் பாசுரமாகவே தலைக்கட்டும்.

ஆழ்வார் தாமான தன்மையை விட்டிட்டு ஸ்த்ரீ பாவனையை ஏறிட்டுக் கொள்ளுதல் ஏதுக்காக வென்னில்;
ஆழ்வார் தாமாக ஏறிட்டுக் கொள்ளுகிறாரல்லர், அந்த அவஸ்தை தானே பரவசமாக வந்து சேருகின்றது.
புருஷோத்தமனாகிய எம்பெருமானது பேராண்மைக்கு முன் உலகமடங்கப் பெண் தன்மையதாய் இருக்கையாலும்,
ஜீவாத்மாவுக்கு ஸ்வாதந்திரிய நாற்றமே யி்ன்றிப் பாரதந்திரியமே வடிவாயிருக்கையாலும்
இவ் வகைகளுக்கேற்ப ஸ்த்ரீ பாவநை வந்தேறியன்று என்றே கொள்ளலாம்.

தண்டகாரண்ட வாஸிகளான முனிவர் இராமபிரானது ஸௌந்தரியத்தில் ஈடுபட்டுப் பெண்மை விரும்பி
மற்றொரு பிறப்பில் ஆயர் மங்கையராய்க் கண்ணனைக் கூடினர் என்ற ஐதீஹ்யமுண்டு.
ஆழ்வார் அப்படியன்றியே அப்போதே பெண்மையை யடைந்து புருஷோத்தமனை அநுபவிக்கக் காதலிக்கின்றனர்.

ஆண், பெண் என்ற வியவஹாரங்கள் சிற்றின்பநுகர்ச்சிக்கன்றோ ஏற்பட்டவை;
பேரின்பவநுபவத்திலே ஊன்றின ஆழ்வார்கள் பெண்மை யெய்துவதாகவும்
கொங்கை முதலிய சொற்களை யிட்டுப் பாசுரங்கள் கூறுவதாகவும் நிகழ்கிறவிது என்னோ? எனின்;
விஷயாந்தரகாமம் என்றும் பகவத் விஷயகாமம் என்றும் காமம் இருவகைப்படும்;
வேதாந்தங்களில் விதிக்கப்பட்ட பக்தியே ஆழ்வார்களுக்கு ச்ருங்கார முறைமையில் பரிணமித்து நிற்கும்.
சிற்றின்பவநுபவத்திற்குக் கொங்கை முதலியன ஸாதநமாயிருப்பது போல,
பகவத் விஷயாநுபவத்திற்குப் பரபக்தி பரஜ்ஞாந பரம பக்திகள் இன்றியமையாதனவா யிருப்பதால்
அவையே கொங்கை முதலிய சொற்களால் அருளிச் செயல்களிற் கூறப்படுகின்றன வென்றுகொள்க.

ச்ருங்கார ரஸத்தின் ஸம்பந்தம் சிறிதுமின்றியே கேவலம் சுத்த பக்தி ரஸமாகவே பாசுரங்கள் அருளிச் செய்யக் கூடுமாயினும்
ஆழ்வார்கள் ச்ருங்கார ரஸத்தையுங் கலந்து பாசுரங்கள் பேசுவதற்குக் காரணம் யாதெனில்;
ஆரோக்கியத்திற்குக் காரணமாகிய வேப்பிலை யுருண்டையை உட் கொள்ள இறாய்க்குமவர்களுக்கு
வெல்லத்தை வெளியிற் பூசிக் கொடுத்துத் திண்பிப்பது போலச் சிற்றின்பம் கூறும் வகையாற் பேரின்பத்தைக் காட்டி நாட்டுகின்றனரென்ப.

பகவத் விஷயத்தில் அபிநிவேசம் மீதூர்ந் காலத்தில் தன் நிலைமாறிப் பெண் நிலை பெற்றுப் பேசுமிடத்தில்,
தாய் பாசுரமென்றும் தலைவி பாசுரமென்றும் தோழி பாசுரமென்றும் இப்படி வகுத்துக் கூறுவதற்கும் உட்கருத்து உண்டு;-
தோழியாகப் பேசுவதற்குக் கருத்து: –
நாயகனையும் நாயகியையும் இணக்கிச் சேர்க்குமவள் தோழியாவள்.
திருமந்திரத்தில் பிரணவத்தினால் எம்பெருமானோடு இவ்வாத்மாவுக்குச் சொல்லப்பட்ட அநந்யார்ஹசேஷத்வம்
முதலிய ஸம்பந்தங்களை உணருகையே அப்பெருமானோடு இவ்வாத்மா சேருகைக்கு ஹேதுவாகையாலே
அந்த ஸம்பந்த ஞானமாகிற ப்ரஜ்ஞாவஸ்த்தையைத் தோழி யென்பதாகக் கொள்க.

பெற்று வளர்த்துப் பெண் பிள்ளை யௌவன பருவத்தில் நாயகனிடத்துள்ள அன்பு மிகுதியால்
அவனிருப்பிடத்துக்குச் செல்ல வேணுமென்று பதறுமளவில் படி கடந்து புறப்படுகை குல மரியாதைக்குப்
பொருந்தாதென்று தடுப்பவள் உலகில் தாய் எனப்படுவள்;
ஸித்தோபாயமான எம்பெருமானைப் பற்றினவர்கள் பேற்றை விளம்பித்துப் பெறுதலில் காரணமில்லாமையாலே
அதனை விரைவில் பெறவேணுமென்கிற ஆவல் அதிகரிக்கப்பெற்று அதனால் படிகடந்து நடக்கவேண்டி வந்தவளவில்
இது ப்ரபந்நர் குடிக் கட்டுப்பாட்டுக்குச் சேராததென்று விலக்கி
‘எம்பெருமான் தானே வந்து விஷயீகரிக்கக் கண்டிருக்க வேணும்‘ என்று சொல்லித் துடிப்பை அடக்கப் பார்க்கிற
நம: பதத்திற் கூறப்பட்ட உபாய அத்ய வஸாயமாகிற ப்ரஜ்ஞாவஸ்த்தையைத் தாய் என்பதாக் கொள்க.

உறவினர் கூட்டக் கூடுகையன்றியே தானாகவே புணர்ந்து நாயகனுடைய மேம்பாட்டிலே ஈடுபட்டுக் குடியின் கட்டுப்பாட்டையும் பாராமல்
‘அவனைக் கிட்டியல்லது நான் உயிர்வாழ்ந்திருக்கமாட்டேன்‘ என்னும் பதற்றத்தை உடையவளாயிருப்பவள் உலகில் மகள்;
பிரணவத்தினாலும் நமஸ்ஸாலும் சேஷியென்றும் சரண்யனென்றும் உணரப்பட்ட எம்பெருமானுக்கு
நாராயண பதத்தினாற் கூறப்பட்ட ஸ்வரூபம் ரூபம் குணம் விபூதி முதலியவற்றில் சேர்க்கையாலுள்ள பெருமையை அநுஸந்தித்து
அதனாலே அவனைத் தாமதித்து அநுபவிக்க நிற்க மாட்டாமல் ‘அவனே உபாயம்‘ என்ற கோட்பாட்டை அதிக்கிரமித்து,
கிட்டி யநுபவித்தாலொழியத் தரிப்புற்றிருக்க வொண்ணாதபடி நடக்கிற ப்ரஜ்ஞாவஸ்த்தையை மகள் என்பதாகக் கொள்க.

இம் மூன்று அவஸ்தைகளுள் முதல் அவஸ்தை நடக்கும்படியைத் தோழி பாசுரத்தாலும்,
இரண்டாவது அவஸ்தை நடக்கும்படியைத் தாய் பாசுரத்தாலும்,
மூன்றாவது அவஸ்தை நடக்கும்படியை மகள் பாசுரத்தாலும் வெளியிடுவரென்றதாயிற்று.

இப்பாசுரந் தொடங்கிப் பத்துப் பாசுரங்கள் தாய் வார்த்தையாகச் செல்லுகின்றன.
இவற்றில், ஆழ்வார்க்கு நாயகி யவஸ்தை ஒரு புறத்திலும்
தாயின் அவஸ்தை மற்றொரு புறத்திலும் நடக்கிறபடியாலே,
எம்பெருமானை அநுபவிப்பதில் ஆழ்வார்ககு விரைவு உண்மானமையும்
‘நாம் பதறக்கூடாது‘ என்கிற அத்யவஸாயமும் மற்றொரு புறத்தில் உண்டானமையும் விளங்கும்.
தன் ஸ்வரூபத்தை நோக்குமளவில் அத்யவஸாயம் உண்டாகும்;
அவனுடைய வைலக்ஷண்யத்தை நோக்குமளவில் பதற்றம் உண்டாகும்.

(பட்டுடுக்குமித்யாதி)
பரகால திருத் தாயார் தன் மகளின் நிலைமைகளைக் கண்டு கலங்கி
‘இவளுக்கு இப்படிப்பட்ட அவஸ்தை உண்டானமைக்கு என்ன காரணம்?‘ என்று குறி சொல்லுங் குறத்தியாகிய
கட்டுவிச்சி யொருத்தியை வினவ,
அவள் ‘எம்பெருமான் படுத்துகிறபாடு இது‘ என்று சொல்ல,
அதை வினவ வந்த உறவினர் பாடே சொல்லுகிறாளாய்ச் சொல்லுகிறது இப் பாட்டு–

பட்டுடுக்கும் அயர்ந்திரங்கும் பாவை பேணாள் பனி நெடுங்கண்ணீர் ததும்பப் பள்ளி கொள்ளாள்,
எட்டனைப்போ தெங்குடங்கால் இருக்க கில்லாள் எம்பெருமான் திருவரங்க மெங்கே? என்னும்
மட்டுவிக்கி மணிவண்டு முரலும் கூந்தல் மடமானை இது செய்தார் தம்மை, மெய்யே
கட்டுவிச்சி சொல், என்னச் சொன்னாள் நங்காய் கடல் வண்ணரிது செய்தார் காப்பா ராரே?

பதவுரை

பள்ளி கொள்ளான்–உறங்குகின்றிலன்;
என் துணை போது-ஒரு நொடிப்பொழுதும்
என் குடங்கால் இருக்க கில்லாள்-என்மடியிலே பொருந்த மாட்டுகின்றிலன்;
எம்பெருமான்-எம்பெருமானுடைய
திரு அரங்கம்-ஸ்ரீரங்கக்ஷத்ரம்
எங்கே என்னும்-எங்கிருக்கின்றது? என்கிறாள்;
மணி வண்டு-அழகிய வண்டுகள்
மட்டு விக்கி-(உட்கொண்ட) தேன்விக்கி ரீங்காரஞ் செய்யப் பெற்ற
கூந்தல்-கூந்தலை யுடையவளான
மட மானை-அழகிய மான்போன்ற இப் பெண் பிள்ளையை
இது செய்தார் தம்மை-இப்படிப்பட்ட நிலைமை யடைவித்தவர் இன்னாரென்பதை,
கட்டுவிச்சி-குறி சொல்லுகிறவளே!
மெய்யே சொல் என்ன-உண்மையாகச் சொல்லுவாயாக, என்று நான் கேட்க, (அவள்)
கடல் வண்ணர் இது செய்தார் (என்று) சொன்னாள்-‘கடல் போன்ற நிறத்தை யுடையரான பெருமாள் இந்த நிலைமையை உண்டு பண்ணினார்‘ என்று சொன்னாள்;
நங்காய்-நங்கைமீர்களே!,
ஸ(ரக்ஷகனான எம்பெருமானே இது செய்தானான பின்பு)
காப்பார் ஆரே-இவ் வாபத்தைப் பரிஹரிக்க வல்லார் வேறு யாருளர்?.

பட்டு உடுக்கும் –
இப் பெண்பிள்ளையானவள் புடைவையை உடுக்கத் தொடங்கினாள்; ஏதுக்காக வென்னில்,
நல்ல வுடையை உடுத்தோமாகில் இவ்வுடையழகை இழக்கலாகாதென்று நாயகன் பதறி ஓடிவருவானென்று கருதி உடுக்கத் தொடங்கினாள்;
உடை வாய்த்தவாறே அவன் வருவானென்று மகிழ்ந்திருந்தவள் அவ்வளவிலும் அவன் வரக் காணாமையாலே

(அயர்த்து இரங்கும்)
மோஹிக்கலானாள்.
அயர்த்தல்-மோஹித்தல்; இரங்குதல்-வாய் பிதற்றுதல்.
இரங்குதல் முன்னமும் அயர்த்தல் அதற்குப் பின்பும் நிகழ வேண்டியிருக்க முறைமாறும்படி யாயிற்று விஷய வைலக்ஷண்யம்.

“பட்டுடுக்குமயர்த்திரங்கும்“
என்பதற்கு வேறொரு வகையாகவும் பொருள்கூறுவர்; அதாவது,
பட்டு உடுக்கும்-இப்போது தான் அரையில் துணியுடுக்கும் பருவமாயிருக்கச் செய்தேயும்,
அயர்த்து இரங்கும்=நாயகனைப் பிரிந்த நிலைமையில் மூச்சு அடங்கும்படியாக வுள்ளதாயிற்று இவளுக்கு நிகழ்கிற அவஸ்தை.
மோஹித்திருக்கும் நிலைமையில் ஞானம் நடையாடாமையாலே வருத்தமில்லை;
அதில் ஞானம் குடிபுகுந்து அரற்றுதலாய் செல்லும் நிலைமையில் வருத்தம் மிகுகையாலே அயர்வுக்குப் பின்பு இரக்கம் கூறப்பட்டது.

வாய் பிதற்றி வருந்திக் கிடந்த பெண் பிள்ளையை ஏதேனும் ஒரு விதத்தாலே தரிப்பிக்க வேண்டித் திருத்தாயார்,
பண்டு ஊணுமுறக்கமின்றியே இவள் பார்வையோடே போது போக்கிக் கிடந்தாளாகையாலே
அதைக் கொணர்ந்து தந்தோமாகில் ஒருவாறு ஆறியிருப்பளோவென்று பார்த்துப்
பாவையை (மரப்பாச்சியை)க் கொண்டுவந்து காட்டினாள்;
அது கண்ணுக்கு விஷம் போலே தோற்றினபடியாலே சீறியுதைத்துத் தள்ளினாள்.
பாவையை யொழியப் போதுபோக்காதிருந்தவளன்றோ இப்போது பாவையை அநாதரிக்கிறாள்.
பகவத் விஷயத்திலுண்டான ஸங்கம் இதர விஷயங்களிற் பற்றறுத்தபடி.

பனி நெடுங்கண்ணீர் ததும்பப் பள்ளி கொள்ளாள்=
இவளுடைய கண்களின் பரப்பு உள்ளவளவும் நீர் வெள்ளங் கோத்ததாயிற்று.
குளிர்ந்த ஆனந்தக் கண்ணீர் பெருக வேண்டுங் கண்களிலே அந்தோ! சோகக் கண்ணீர் பெருகும்படியாயிற்றே!
‘நெடுங்கண்‘ என்றது
மஹானான எம்பெருமானையும் ஒரு மூலையிலே அடக்கவல்லதான கண் என்றவாறு.
ஸ்வாபதேசத்தில் கண் என்று ஞானத்தைச் சொன்னபடி.
எம்பெருமானைச் சேரப் பெறாத வருத்தத்தினால் ஞானக் கலக்கமுண்டானமை கூறியவாறு.

‘படுக்கையிலே சாய்ந்து உறங்கப் புகுந்தால் கண்ணீர்த் ததும்புதல் மாறும்‘ என்று சொன்னாலும் பள்ளி கொள்கின்றாளில்லை;
“தொல்லைமாலைக் கண்ணாரக் கண்டு கழிவதோர் காதலுற்றார்க்குமுண்டோ கண்கள்துஞ்சுதல்“ என்றபடியே
கண்ணுறங்க ப்ரஸக்தியுண்டோ?
கூடிக் களிக்குங்கால் ஆனந்தக் கண்ணீர் பெருகப் பெற்று உறங்கப் பெறாள்.
பிரிந்து படுங்கால் சோகக் கண்ணநீராலே உறங்கப்பெறாள்.
ஸம்ச்லேஷதசையில் அவன் உறங்கவொட்டான்;
விச்லேஷதசையில் விரஹவேதனை உறங்க வொட்டாது.

தன் வயிற்றிற் பிறந்தவளைப் பற்றிச் சொல்லுமிவ்விடத்து ‘உறங்காள்‘ என்று சொல்லலாமாயிருக்க,
“பள்ளி கொள்ளாள்“ என்று கௌரவச் சொல்லாலே சொன்னது,
வயிற்றிற் பிறந்தவரேயாகிலும் பகவத் ஸம்பந்தம் பெற்றவர்கள் உத்தேச்யதை தோற்றக் கௌரவித்துச்
சொல்லக் கடவர்களென்கிற சாஸ்த்ரார்த்தை வெளிப்படுத்தும்.
“கள்ளவிழ்சோலைக் கணபுரம் கை தொழுதும் பிள்ளையைப் பிள்ளை யென் றெண்ணப் பெறுவரே“
“விளக்கொளியை மரகதத்தைத் திருத்தண்காவில் வெஃகாவில் திருமாலைப் பாடக்கேட்டு,
வளர்த்ததனால் பயன்பெற்றேன் வருகவென்று மடக்கிளியைக் கைகூப்பி வணங்கினாளே.“ என்ற பாசுரங்களுள் குறிக்கொள்ளத் தக்கன.

எட்டுணைப் போது என் குடங்காலிருக்க கில்லாள்=
பெண் பிள்ளை உறங்கக் காணாமையாலே, முன்பு தன் குடங்காலிலே உறங்கிப் போகக் கண்ட அநுபவத்தாலே
இப்போதும் அதில் உறங்கக் கூடுமோ வென்று பார்த்துத் தன் குடங்காலிலே இருத்தப் பார்த்தாள்;
அது நெருப்போடே அணைந்தாற்போல இருக்கையாலே துணுக்கென்றெழுந்தாள்.

இடைவிடாமல் என்குடங்காலிலேயே யிருந்து உறங்கிப் போது போக்கிக் கொண்டிருந்த விவளுக்கு
இப்போது ஒரு நொடிப்பொழுதும் அதிற் பொருந்தாதபடியாவதே! என வருந்திக் கூறுகிறபடி.
‘எட்டுணை‘ ‘எட்டணை‘ என்பன பாடபேதங்கள். (எள்Xதுணை= எட்டுணை.) எள் X தணை, எட்டணை.)
எள் எவ்வளவு சிறிதோ அவ்வளவு சிறுபொழுதும் – க்ஷண காலமும் என்றபடி.

இனி இவள் வாய்வெருவும் பாசுரமேதென்னில்,
எம்பெருமான் திருவரங்க மெங்கே யென்னும் =
என்னை இப்பாடுபடுத்தினவன் என்னை இங்ஙனே துடிக்கவிட்டு ஒரு விசாரமின்றியே கண்ணுறங்குமிடம்
எங்கே எங்கே யென்று பிதற்றா நின்றாள்.
பாவையைப் பேண் வொண்ணாதபடியும்
தாய் மடியிலே பொருந்த வொண்ணாதபடியும்
என்னைத் தன் பக்கலிலே ஈடுபடுத்திக் கொண்டவனுயையுமிடம் எங்கே யென்கின்றாள்.

காதலனுடைய திரு நாமத்தைச் சொல்லாமல் ‘எம்பெருமான்‘ என்றது ஏனென்னில்;
உற்றாருறவினர் கூட்டக் கூடினதன்றியே இயற்கைப் புணர்ச்சி யாகையாலே
ஆண்மை பெண்மைகளே ஹேதுவாகக் கலந்த கலவியாமத்தனை;
கூட்டுவாருண்டாகிக் கூடிலன்றோ திருநாமமறியலாவது; ஆகையாலே எம்பெருமான் என்கிறாள்.

ஆனால், அவனூர் திருவரங்கமென்பது மாத்திரம் எங்ஙனே அறியப்பட்ட தென்னில்;
ஸம்ச்லேஷகாலத்தில் நாயகன் விச்லேஷத்தை நினைத்து ‘பிரியேன்‘ பிரியில் தரியேன்‘ என்று பிரிவை
ப்ரஸங்கிக்கிறவளவிலே இவள் நம் ஊரைச் சொல்லிக் கொண்டாவது தரித்திருக்கவேணு மென்று
‘நம்மூர் திருவரங்கம் பெரியகோயில்‘ என்று சொல்லுகையாலே ஊரின் பெயர் தெரியலாயிற்றென்ப.

தன் மகளுக்கு நேர்ந்த நிலைமை பகவத் விஷயத்தில் அவகாஹித்ததனாலுண்டாய தென்று தனக்குத் தெரிந்திருந்தாலும்
இதனை உற்றாருறவினர்க்குத் தானே வெளியிடுதலிற் காட்டிலும் கட்டுவிச்சி முகமாக வெளியிடுதல் நன்றென்று
கருதிய திருத்தாய் ஒரு கட்டுவிச்சியைத் தேடிநின்றாள்;அவ்வளவிலே,

“கொங்குங் குடந்தையுங் கோட்டியூறும் பேரும்
எங்குந் திரிந்து இன்றே மீள்வேனை யாரிங்கழைத்த்தூஉ,
கண்டியூராங்கம் மெய்யம் கச்சிபேர் மல்லையென்று
மண்டியே திருவேனை யாரிங்கழைத்த்தூஉ,
விண்ணகரம் வெஃகா விரிதிரைநீர் வேங்கடமும்
மண்ணகரம் மாமட வேளுக்கை தென்குடந்தை
எங்குந்திரிந்து இன்றே மீள்வேனை யாரிங்கழைத்துதூஉ,
நாகத்தணைக் குடந்தை வெஃகாத் திருவெவ்வுள்
நாகத்தணை யரங்கம் பேரன்பில் நாவாயும்
எங்குந்திரிந்து இன்றே மீள்வேனை யாரிங்கழைத்த்தூஉ,
வேங்கடமும் விண்ணவரும் வெஃகாவு மஃகாத
பூங்கிடங்கின் நீள்கோவல் பொன்னகரும் பூதூரும்
எங்குந் திரிந்து இன்றே மீள்வேனை யாரிங்கழைத்ததூஉ!!!“

என்று தெருவேறக் கூவிக்கொண்டு தானாகவேவந்து சேர்ந்தாள்,
அவளை நோக்கித் தாயானவள்
“மட்டுவிக்கி மணிவண்டு முரலுங்கூந்தல் மடமானை யிருசெய்தார்தம்மை மெய்யே கட்டுவிச்சி! சொல்“ என்றாள்.

குறிசொல்லுகிற குறத்திக்குக் கட்டுவிச்சி யென்று பெயர்
திருவாய்மொழியில் “இது காண்மினன்னைமீர் இக்கட்டுவிச்சி சொற் கொண்டு“ என்றும்,
சிறிய திருமடலில் “அது கேட்டுக் காரார் குழற்கொண்டைக் கட்டுவிச்சிகட்டேறி“ என்றும் வருவன காண்க.

ஐயங்கார் திருவரங்கக் கலம்பதத்தில் –
“காலமுணர்ந்த குறத்தி நான் கருதினை யொன்றது சொல்லுவேன்,
பாலகனுச்சியி லெண்ணெய்வார் பழகியதோர் கலை கொண்டுவா,
கோலமலர்க்குழன் மங்கை! நின்கொங்கை முகக்குறி நன்றுகாண
ஞாலமுவந்திட நாளையே நண்ணுவை நம் பெருமாளையே‘ என்று கட்டுவிச்சியின் பாசுரமாகப்
பாடியுள்ள செய்யுளும் குறிக்கொள்ளத்தகும்.

(மட்டுவிக்கி இத்யாதி)
மதுவைக் கழுத்தளவும் பருகி ரீங்காரஞ் செய்கின்ற வண்டு கள் படிந்த கூந்தலை யுடையவளான இப்பெண் பிள்ளையை,
இதுசெய்தார் தம்மை=குழலிலணிந்த பூவைச் சருகாக்கி வண்டுகளைப் பட்டினி யடிக்கையாகிற இத்தொழில் செய்த பெரியவரை,

கட்டுவிச்சி! மெய்யே சொல் என்ன=
‘வாராய் குறத்தியே! நெஞ்சில் தோன்றின தொன்றைச் சொல்லிவிடக் கூடாது;
உள்ளபடியே சொல்ல வேணும்‘ என்று நான் கேட்க,

(கடல் வண்ணர் இது செய்தார் என்று சொன்னாள்)
கடலின் நிறம் போன்ற நிறமுடையரான பெரிய பெருமாள் செய்த தெய்வ நன்னோய்காண் இது! என்றாள்,
கடல் கொண்டு போன வஸ்துவை நம்மால் மீட்கப் போமோ? என்றாள்.

காப்பார் ஆரே? =
வேலியே பயிரை யழித்தால் நோக்குவாருண்டோ?

ஆக இப்பாசுரத்தால்,
எம்பெருமானுடைய நிர்ஹேதுக விஷயீகாரம் ஆழ்வார்க்கு வாய்த்தபடியும்,
இது நித்ய கைங்கரியத்திற்கு உறுப்பாகமல்
ஆற்றங்கரை வாழ் மரம்போல் அஞ்சும்படியாக இவ்விபூதியிலே இருக்க வைக்கையாலே நோயாகச் சொல்லப்படுகிற தென்பதும்,
இது தான் ஆத்ம ஸ்வரூபாநு பந்தியாகையாலே ஆத்மா உள்ளவரைக்கும் நிலைத்திருக்கக் கூடிய தாய் அபரிஹார்யமான தென்றும்,
இவ்வுண்மையை ஜ்ஞாநாதிகரான பாகவதர்கள் அறிவார்களென்றும் சொல்லிற்றாயிற்று.

நங்காய்! =
தாய் தன்து தோழியை நோக்கிச் சொல்லுகிறபடி.

ஆறு பல வாய்க்கால் வழியாக பெருகி வெவ்வேறு பெயர்கள் உண்டானாலும்
தாய் தோழி தலைமகள் தானான தன்மை பாசுரங்கள் ஆனாலும்
மன்னு மா மணி மாட மங்கை வேந்தன் மான வேல் பரகாலன் கலியன் சொன்ன பாசுரமாகவே தலைக் காட்டி அருளும்
பெண்மையை அடைந்து புருஷோத்தமனை காதலிக்கிறார்
தண்ட காரண்ய ரிஷிகள் பெண்மை விரும்பு பெருமாளை அனுபவிக்க ஆசை கொண்டது போலே
வேப்பிலை உருண்டை வெல்லத்தில் சேர்த்து கொடுக்குமா போலே பகவத் காமம்-

தாய்- உபாய அத்யாவசியம் நம பதார்த்தம்
தோழி -சம்பந்தம் உணர்த்தும்
மகள் -நாராயண பதார்த்தம்- ஸ்வரூபம் ரூபம் குணங்கள் சேஷ்டிதங்கள்
கிட்டி அனுபவித்தால் அல்லது தரிக்க ஒண்ணாத பிரஞ்ஞா அவஸ்தை
தன் ஸ்வரூபத்தை நோக்கும் அளவில் அத்யாவசாயம் உண்டாகும்
அவனுடைய வைலஷண்யத்தை நோக்கும் அளவில் பதற்றம் உண்டாகும்

பட்டுடுக்கும்
தாயார் கட்டுவிச்சி
எம்பெருமான் படுத்தும் பாடி என்று சொன்னதை
அதை வினவ வந்த உறவினர் இடம் சொல்லுவதாக
நல்ல ஆடை உடுத்தி இதை காண நாயகன் வருவான்
என்று மகிழும்
வரக் காணாமையால்

அயர்த்து இரங்கும்
மோஹித்து வாய் பிதற்றும்
வாய் பிதற்றி மோஹிக்காமல் -முறை மாறும் படி விஷய வைலஷண்யம்
மோஹித்தாலும் ஞானம் புகுந்து அலற்ற வைக்கும்

பாவை பேணாள்
பகவத் விஷய சங்கம் இதர விஷய பற்று அறுத்த படி

பள்ளி கொள்ளாள்
கௌரவ வார்த்தை
கள்ளவிழ் சோலை கணபுரம் கை தொழும் பிள்ளையை பிள்ளை என்று எண்ணப் பெறுவரே
விளக்கொளியை மரகதத்தை திருத் தண் காவில் வெக்காவில் திரு மாலைப் பாடக் கேட்டு
வளர்த்ததனால் பயன் பெற்றேன் வருக என்று மடக் கிளியை கை கூப்பி வணங்கினாளே
தொல்லை மாலைக் கண்ணாரக் கண்டு கழிவதோர் காதல் உற்றார்க்கு உண்டோ கண்கள் துஞ்சுதல்
சம்ச்லேஷ தசையிலே அவன் உறங்க ஒட்டான்
விஸ்லேஷ தசையிலே விரஹம் உறங்க ஒட்டாது

எட்டுணைப் போதும் என் குடங்கா லில் இருக்க கில்லாள்
எள் துண–எட்டுணை
எள் தனை -எட்டணை

எம்பெருமான் திருவரங்கம் எங்கே எங்கே என்னும்
திரு நாமம் அறியாள்
பிரியேன் பிரியில் தரியேன் -நம்மூர் திருவரங்கம் பெரிய கோயில் -என்று தரிக்க சொல்லிப் போந்தான்

தாய் கட்டுவிச்சி தேடி நிற்க
கொங்கும் குடந்தையும் கோட்டியூரும் பேரும்
எங்கும் திரிந்து இன்றே மீள்வேனை யார் இங்கே அழைத்ததூஉ
கண்டியூர் அரங்கம் மெய்யம் கச்சி பேர் மல்லை என்று
மண்டியே திரிவேனை யார் இங்கே அழைத்ததூஉ
விண்ணகரம் வெக்கா விரி திரை நீர் வேங்கடமும்
மண்ணகரம் மா மாட வேளுக்கை தென்குடந்தை
எங்கும் திரிந்து இன்றே மீள்வேனை யார் இங்கே அழைத்ததூஉ
நாகத்தணை குடைந்தை வெக்கா திரு எவ்வுள்
நாகத்தணை யரங்கம் பேரன்பில் நாவாயும்
எங்கும் திரிந்து இன்றே மீள்வேனை யார் இங்கே அழைத்ததூஉ
வேங்கடமும் விண்ணகரும் வெக்காவும் அக்காத
பூங்கிடங்கின் நீள் கோவல் பொன்னகரும் பூதூரும்
எங்கும் திரிந்து இன்றே மீள்வேனை யார் இங்கே அழைத்ததூஉ
என்று தெரு தெருவே கூடிக் கொண்டு தானாகவே வந்து சேர்ந்தாள்
மட்டுவிக்கி மணி வண்டு முரலும் கூந்தல் மடமானை இது செய்தார் தம்மை மெய்யே கட்டுவிச்சி சொல் -என்றாள்

ஐயங்கார் திருவரங்க கலம்பகத்தில்
காலம் உணர்ந்த குறத்தி நான் கருதினை ஒன்றது சொல்லுவேன்
பாலகன் உச்சியில் எண்ணெய் வார் பலகியதோர் கலை கொண்டு வா
கோல மலர்க்குழல் உன் மங்கை நின் கொங்கை முகக்குறி நன்று காண்
ஞாலம் உவந்திட நாளையே நண்னுவை நம்பெருமாளையே

மதுவை கழுத்தளவும் பருகி ரீங்காரம் செய்கிற வண்டுகள்
படிந்த கூந்தலை உடைய இப் பெண் பிள்ளையை

கடல் வண்ணர் இது செய்தார்
கடலில் போன வஸ்துவை நம்மால் மீட்கப் போமோ
வேலியே பயிர் அழித்தால் நோக்குவார் உண்டோ

ஆக
நிர்ஹேதுக விஷயீகாரம் ஆழ்வாருக்கு வாய்த்த படியும்
அது நித்ய கைங்கர்யத்துக்கு உருப்பாகாமல் ஆற்றம் கரை வாழ் மரம் போல் அஞ்சி
இது தான் ஆத்ம ஸ்வரூப அனுபபந்தி ஆகையால்
ஆத்மா உள்ளவரை நிலைத்து இருக்கக் கூடியதாய்
அபரிஹார்யமானது என்றும்
இந்த உண்மையை ஞானாதிகாரரான பாகவதர்கள் அறிவார்கள் என்றும் சொல்லிற்று-

————————————————————–

கீழ்ப் பாட்டில் ‘கடல்வண்ணர்‘ என்று கட்டுவிச்சி சொன்ன திருநாமத்தைத் திருத் தாயர்
வினவ வந்தார்க்குச் சொல்லி அநுவதிக்கையாலும்,
எம்பெருமான் திருவரங்கமெங்கே‘ என்று தானும் வாய் வெருவுகையாலும்
முந்திய அவஸ்தையிற் காட்டிலும் சிறிது உணர்த்தி பிறந்தது;
அவ்வளவிலும் காதலன் வந்து முகங்காட்டப் பெறாமையாலே ஆற்றாமை மீதூர்ந்து இடைவிடாமல் கூப்பிடத் தொடங்கினாள்;
அதனை வினவ வந்தார்க்குச் சொல்லி க்லேசப்படுகிறாள் திருத்தாய்.
இப் பெண் பிள்ளை நின்ற நிலை இது; இவளுடைய ஸ்வரூப ஹாநி இது; எனக்கு இவள் அடங்காதபடியானது இது;
இத்தனைக்கும் நான் செய்த பாபமே காரணமாயிற்றென்று சொல்லி யிரங்குகிறாளாயிற்று.

கீழ்ப்பாட்டில் “அயர்த்து இரங்கும்“ என்று சொன்ன இரக்கத்தின் வகைகளை
“நெஞ்சுருகிக் கண் பனிப்ப நிற்கும் சோரும்“ இத்யாதியாலே விவரிக்கிறபடி.

நெஞ்சுருகிக் கண்பனிப்ப நிற்கும் சோரும் நெடிதுயிர்க்கும் உண்டறியாள் உறக்கம் பேணாள்,
நஞ்சரவில் துயிலமர்ந்த நம்பீ என்னும் வம்பார்பூம் வயலாலி மைந்தா என்னும்,
அஞ்சிறைய புட்கொடியே யாடும் பாடும் அணியரங்க மாடுதுமோ தோழீ என்னும்,
எஞ்சிற கின் கீழடங்காப் பெண்ணைப் பெற்றேன் இருநிலத்து ஓர்பழிபடைத் தேன்ஏ பாவமே.

பதவுரை
(இப் பெண்பிள்ளை)
நெஞ்சு-மனமானது
உருகி-நீர்ப்பண்டமா யுருகி
கண் பனிப்ப நிற்கும்-கண்ணீர் பெருக நிற்கின்றாள்;
சோரும்-மோஹிக்கின்றாள்;
நெடிது உயிர்க்கும்-பெரு மூச்சு விடுகின்றாள்;
உண்டு அறியாள்-போஜனம் செய்தறியாள்;
உறக்கம் பேணாள்-உறங்க விரும்புகின்றிலன்;
நஞ்சு அரவில் துயில் அமர்ந்த நம்பீ என்னும்-விஷத்தை உமிழ்கின்ற திருவனந்தாழ்வான் மீது யோக நித்திரை புரிகின்ற நம்பீ! என்கின்றாள்;
வம்பு ஆர் பூ வய்ல் ஆலி மைந்தா என்னும்-பரிமளம் மிக்க பூக்களை யுடைய கழனிகள் சூழ்ந்த திருவாலியிலுள்ள நித்ய யுவாவே! என்கிறாள்;
அம் சிறைய புள் கொடியே ஆடும்-அழகிய சிறகையுடைய கொடியாகிய பெரிய திருவடியை அநுகரித்து ஆடுகின்றாள்;
பாடும்-பாடுகின்றாள்;
தோழீ அணி அரங்கம் ஆடுதுமோ என்னும்-‘தோழீ! (நாம்) திருவரங்கத் துறையிலே படிந்தாடப் பெறுவோமோ?‘ என்கின்றாள்;
என் சிறகின் கீழ் அடங்கா–என் கைக்கடங்காத
பெண்ணை பெற்றேன்-பெண் மகளைப் பெற்ற நான்
இரு நிலத்து-விசாலமான இப் பூமண்டலத்திலே
ஓர் பழி படைத்தேன்-ஒப்பற்ற பழியை ஸாம்பாதித்துக் கொண்டேன்;
ஏபாவம்–அந்தோ!.

நெஞ்சு உருகி =
நெருப்பினருகே மெழுகு போலே விரஹாக்நியாலே நெஞ்சு பதஞ் செய்யா நின்றது.

கண் பனிப்ப =
உருகின வெள்ளம் உள்ளடங்காமையாலே, நீர் நிரம்பின ஏரிக்குக் கலங்கவெடுத்து
விடுங்கணக்கிலே கண் வழியே புற வெள்ளமிடுகிறபடி.

நிற்கும் =
க்ருத்யாக்ருத்ய விவேகம் பண்ணக் கடவதான நெஞ்சு அழிந்து போகையாலே
ஒரு வியாபாரமும் செய்ய மாட்டாதே நிற்கின்றாள்.

சோரும் =
துவட்சி யடைகின்றாள்;

நெடிது உயிர்க்கும் =
உள்ளுண்டான சோகாவேசத்தாலே நெடுமூச்செறியா நின்றாள்.

உண்டறியாள் =
உணவு இப்படியிருக்க மென்பதே இவளுக்குத் தெரியாது ;
கூடியிருக்குங் காலத்திலே “உண்ணுஞ்சோறு பருகுநீர்த் தின்னும் வெற்றிலையு மெல்லாங்கண்ணன்“
என்றிருக்கையாலே அப்போதும் ஊண் இல்லை;
விரஹ காலத்தில் உணவு விஷமாயிருக்கையாலே ஊண் இல்லை;
ஆக உணவில் வ்யுத்பத்தியே யில்லை யென்றதாயிற்று.

உறக்கம் பேணாள் =
‘நங்காய்! காதலனுக்கு உன் உடம்பன்றோ தாரகம்; உடம்பன்றோ தாரகம்;
உறங்கா விடில் தேஹம் கெட்டுப் போகுமே; காதலன் பிறகு வருந்துவானே;
அவனுடைய போகம் குன்றாமைக்காகவாவது சிறிது உறங்க வேணும்‘ என்று சொன்னாலும் உறங்கப் பார்க்கின்றிலள்:
இவை யெல்லாம் எங்ஙனே யாயினுமாயிடுக; ஸ்வரூப ஹாநியாம்படி வாய் விட்டுக் கதறுகின்றாளே!,
அவன் பெயரைச் சொல்லிக் கூப்பிடுகின்றாளே!,
இதனைப் பாருங்கோளென்கிறாள் நஞ்சரவில் என்று தொடங்கி.

நஞ்சரவில் துயிலமர்ந்த நம்பீயென்னும் =
திருவனந்தாழ்வானுடைய பரிவுக்கு உகந்து ‘நஞ்சரவு‘ என்கிறாள்.
“ஆங்காரவாரமது கேட்டு அழலுமிழும் பூங்காரரவு“ என்ற திருமழிசைப்பிரான் பாசுரத்தை இங்கு அநுஸந்திப்பது.
பரிவின் மிகுதியினால் அச்சத்திற்கு நிலமல்லாத ஸ்தாநத்திலும் அஞ்சிக் காப்பிடுகின்ற
திருவனந்தாழ்வானுடைய தன்மைக்குத் தான் உகந்தமை தோற்ற ‘நஞ்சரவு‘ என்றாளாயிற்று.
மென்மை, குளிர்த்தி, பரிமளம் என்று படுக்கைக்கு உரியனவாகச் சொல்லப்படுகிற லக்ஷணங்கள்
சாதியியல்வாகவே அமையப் பெற்ற ஆதிசேஷன் நம் தலைவனுக்குப் படுக்கையாகப் பெற்ற பாக்கியம் என்னே! என்று உகக்கிறாள் போலும்.
இப்படிப்பட்ட படுக்கையிலே படுத்து, வீசிவில்லிட் டெழுப்பினாலும் எழுந்திராதபடி கண் வளர்ந்தருளும் போது
தகட்டிலழுத்தின மாணிக்கம் போலே அழகால் குறையற்று விளங்குபவனே! என்று வாய்விட்டுக் கூப்பிடா நின்றாள்.

இப்படி உகந்து சொல்லுகிற ளென்கை யன்றியே ப்ரணய ரோஷந் தோற்றச் சொல்லுகிறாளென்றுங் கொள்ளலாம்;
எங்ஙனே யென்னில் ;
நஞ்சரவு பிரதிகூலர் கிட்டாமைக்கு நஞ்சை உமிழ்கிற னென்றிருந்தோம்;
அது ஒருவியாஜ மாத்திரமாய் என்னைப் போன்ற அநுகூலர்களும் கிட்ட வொண்ணாதபடி விஷத்தை உமிழ்கின்றானே!‘
இருவர் படுக்க வேண்டிய படுக்கையிலே ஒருவராய் எங்ஙனே துயிலமர்ந் திருக்கிறார்!
எனக்குத் தாயின் மடியும் பொருந்தாதிருக்க அவர்க்கு எங்ஙனே படுக்கை பொருந்திற்று என்றவாறு.

வம்பார் பூ வயலாலி மைந்தா வென்னும் =
தன்னைப் பாணி க்ரஹணம் பண்ணின விடத்தைச் சொல்லி வாய் வெருவுகின்றாள்.
எப்போதும் வஸந்த ருதுவே விளங்கும்படி யாகவுள்ள வயல்களாற் சூழப்பட்ட திருவாலியிலே தன்னுடைய
இளம் பருவத்தைக் காட்டி என்னைக் கொள்ளை கொண்டவனே! என்கின்றாள்.
நானிருக்குமிடம் நீரும் பூவும் பரிமளமுமின்றி வறண்டு கிடக்க, தானிருக்குமிடம் தளிரும் முறிவுமாய் விளங்குவதே!
என்று ஊடல் தோற்றத் சொல்லுகிற படியுமாம்.
தான் வாடிக் கிடக்கையாலே தானிருக்குமிடமும் வாடிக் கிடக்குமென்க.

“மைந்தா வென்னும்“ என்கிறவிடத்திலே வியாக்கியான வாக்கியம் காண்மின்
“என்னை பேக்ஷிக்கப் பார்த்தால் தன் பருவத்தைக் காட்டி என்னை அநந்யார்ஹ மாக்குவானேன்?
அடியிலே நான் விஷய ப்ரவணனாய்த் திரிய ‘வாடினேன்‘ என்று சொல்லும்படி உன் போக்யதையைக் காட்டிப்
புறம்புள்ள துவக்கை உன்னை யொழியச் செல்லாதபடி பண்ணிற்று இன்று என்னைக் கை விடுகைக்கோ?“

அஞ்சிறை புட் கொடியே ஆடும் பாடும்=
பிராட்டிக்குத் திருமணம் நடத்தி வைக்க வந்த விச்வாமித்திர முனிவனைப் போன்று
தனக்குப் பாணி க்ரஹணம் பண்ணி வைக்க கொண்டு வந்த பெரிய திருவடியே
நெஞ்சில் உறைத்திருக்கையாலே அவனை அநுகரிக்கின்றளாயிற்று.
பெரிய திருவடி நெடுந் தூரத்திலே தோற்றித் தேற்றுவிக்கும்படியை நினைத்துக் கொண்டு அவன் வரும் வழியை நோக்கிக் கிடந்தாள்;
அவன் வரக் காணாமையாலே அவனை அநுகரிக்கத் தொடங்கினாள் போலும்.
விடாய்த்தவர்கள் ஹஸ்த முத்ரையாலே தண்ணீர் வேண்டுமா போலே பெரிய திருவடியின் வரவில் தனக்குண்டான
விருப்பம் தோன்ற அவன் வருகிற ரீதியை அபிநயிக்கத் தொடங்கினாளென்க.
அநுகாரத்தாலே ஒரு தேறுமதல் பிறப்பதுண்டே;
அதனாலே வாய் திறக்க வல்லளாய் ஆர்த்தி தோற்றக் கூப்பிடும்படியைச் சொல்லுகிறது பாடும் என்று
கேட்டவர்கள் கண்ணுங் கண்ணீருமாய்க் கொண்டு கால் தாழ்ந்திருக்கும் படியான த்வனி விசேஷமே பாட்டாவது.

அவ்வளவிலே இவளைத் தேற்ற வேண்டித் தோழியானவள் காய்ந்த தலையும் மெலிந்த வடிவும்
உறாவின முகமுமாய்க் கொண்டு தன் ஆர்த்தி யெல்லாம் வடிவிலே தோற்றும்படி முன்னே வந்து நின்றாள்;
அவள் முகத்தைப் பார்த்து, ‘தோழீ! நாம் கோயிலே போய்ப் பெரிய பெருமானை அநுபவிக்கக் கூடுமோ?‘ என்கின்றாள்.
‘ஆடுதும்‘ என்றது
கலவி செய்ய விருப்பத்தைக் கூறியவாறு. தமிழர் கலவியைச் ‘சுனையாடல் ‘புனலாடல்‘ எனனுமாற்றாற் கூறுவர்!

“பொற்றாமரைக் கயம் நீராடப் போனாள் பொருவற்றளென்மகள்“ என்பர் மேலும்
“தயாதன் பெற்ற மரதக மணித் தடம்“ என்கிறபடியே எம்பெருமான் தடாகமாகச் சொல்லப் பட்டிருந்தலுங்காண்க.

இங்ஙனம் தன் மகளின் தன்மைகளை எடுத்துரையா நின்ற தாயை நோக்கி
“உன் வயிற்றிற் பிறந்தவள் ஸ்வரூப ஹாநியிலே இழியப் புகுந்தால் அடக்கிக் காக்க வேண்டாவோ?“ என்று
சில மூதறிவாட்டிகள் சொல்ல,
அந்தோ! நான் என் செய்வேன்? என் சிறகின் கீழடங்காப் பெண்ணை பெற்றேனே! என்கிறாள்.
‘ஆச்ரயண தசையில் அவன் தானே மேல் விழுந்து ஆச்ரயிப்பித்துக் கொள்ள ஆச்ரயித்தது போலவே
போக தசையிலும் அவன் செய்தபடி கண்டிருக்கை காண் ஸ்வரூபம்;
நீ மேல் விழுகை பெண்மைக்குப் போராது காண்‘ என்று எனக்குத் தெரிந்த மட்டில் நான் சொன்னாலும்
அதைச் செவியிலுங் கொள்ளாமல் உதறித் தள்ளா நின்றாள்.

‘என்சிறகு‘ என்றது ‘என் பக்ஷத்திலே‘ என்றபடி.
எம்பெருமானுடைய பக்ஷத்திலே ஒதுங்கினவள் என் பக்ஷத்திலே ஒதுங்கி என் வார்த்தையை எங்ஙனே கேட்பள்.
(அடங்காப் பெண்ணைப் பெற்றேன்)
‘என்ன நோன்பு நோற்றாள் கொலோ இவனைப் பெற்ற வயிறுடையாள்‘ என்றாற் போலே பிறர் சொல்லும் படியாகவும்
‘ஞாலத்துப் புத்திரனைப் பெற்றார் நங்கைமீர் நானே மற்றாருமில்லை‘ என்றாற் போலே தானே சொல்லிக் கொள்ளும்படியாகவும்
மகளிடத்தில் வைலக்ஷணயமிருப்பதை நோக்கி,
பெற்றேன் என்று உள்ளுற ஆனந்தம் பொலியச் சொல்லிக் கொள்ளுகிறாள்.
தன்னை, நொந்து பேசிக் கொள்வதாகப் புறம்புள்ளார்க்குத் தோற்றும்-
மகளுடைய குற்றமொன்றுமில்லை- தோன்றச் சொல்லுகிறபடி.

(இருநிலத்து ஓர் பழி படைத்தேன் ஏ பாவமே)
பரந்த இப்பூ மண்டலத்திலே என்னைப் போல் பெண் பெற்றவர்களும் இல்லை,
என்னைப் போல் பழி படைத்தவர்களுமில்லை யென்கிறாள்.
இப்பழி உத்தேச்யமென்பது விளங்க ஓர்பழி என்கிறாள்.
பகவத் விஷயத்தில் உண்டாகிற பதற்றமெல்லாம் ஞான விபாக கார்யமான ப்ரேமத்தின் பரீவாஹமென்று
உகப்பார்க்கு இதுவே புகழாமிறே.

கடல் வண்ணர் -எம்பெருமான் திருவரங்கம் எங்கே -கேட்டு முந்திய அவஸ்தையிலும் உணர்ச்சி கொஞ்சம் பிறந்து
இன்னும் முகம் காட்டாமையாலே ஆற்றாமை மிக்கு கூப்பிட தொடங்க -ஸ்வரூப ஹானி என்கிறாள்

அயர்த்து இரங்கும்
இரங்கும் வகைகள்- நெஞ்சு உருகி- கண் பனிப்ப- நிற்கும்- சோரும்

உண்டு அறியாள்
கூடி இருக்கும் காலம் உண்ணும் சோறு –எல்லாம் கண்ணன்
உணவு வ்யத்புத்தியே இல்லை

நஞ்சு அரவில் துயில் அமர்ந்த நம்பீ என்னும்
பரிவுக்கு உகந்து நஞ்சு அரவு என்கிறாள்
ஆங்கு ஆரவாரமது கேட்டு அழல் உமிழும் பூங்கார அரவு
பிரணய ரோஷத்தாலும்
அனுகூலருக்குமா நஞ்சு
இருவர் படுக்க வேண்டிய படுக்கையில் ஒருவராய் எங்கனே துயில் அமர்ந்து இருக்கிறார்
எனக்கு தாயின் மடியும் பொருந்தாமல் இருக்க

வம்பார் பூ வயலாலி மைந்தா என்னும்
தனக்கு பாணிக் க்ரஹணம் இடத்தை சொல்லி வாய் வெருவுகிறாள்
நான் இருக்கும் இடம் நீரும் பூவும் பரிமளமும் இன்றி வறண்டு இருக்க
தான் இருக்கும் இடம் தளிரும் முறியுமாய் விளங்குவதே
தான் வாடிக் கிடப்பதாலே தான் இருக்கும் இடமும் அப்படியே

மைந்தா என்னும்
என்னை உபேஷிக்கப் பார்த்தால் தன் பருவத்தைக் காட்டி
என்னை அனன்யார்ஹை ஆக்குவான் என்
அடியிலே நான் விஷய பிரவணனாய் திரிய வாடினேன் என்று சொல்லும் படி
உன்னுடைய போக்யதையை காட்டி புறம்புள்ள துவக்கி அறுத்து
உன்னை ஒழியச் செல்லாத படி பண்ணிற்று இன்று என்னை கை விடுகைக்காகவா

அஞ்சிறைய புட் கொடியே ஆடும் பாடும்
பிராட்டிக்கு திருமணம் நடத்தி வைக்க வந்த விஸ்வாமித்ரர் போன்று
அவன் வருகிற ரீதியை அபி நயிக்க தொடங்கி தேறி
ஆர்த்தி தோற்ற கூப்பிடும்படியை -பாடும் -என்கிறாள்

ஆடுதும்
சுனையாடல் புனல் ஆடல்
பொற்றாமரை கயம் நீராடப் போனாள் பொருவற்றாள் என் மகள்
தயரதன் பெற்ற மரகத மணித்தடம்

என் சிறகின் கீழே அடங்கா பெண்ணைப் பெற்றேனே
எம்பெருமான் பஷத்திலே ஒதுங்கினவள்
என் பஷத்தில் ஒதுங்கி என் வார்த்தையை கேட்பாளோ

அடங்கா பெண்ணைப் பெற்றேனே
என்ன நோன்பு நோற்றாள் கொலோ இவளைப் பெற்ற வயிறு உடையாள்
ஞாலத்து புத்ரனைப் பெற்றார் நங்கைமீர் நானே மற்று யாரும் இல்லை
உள்ளூற ஆனந்தம் பொலியப் -பெற்றேன் -சொல்லிக் கொள்கிறாள்

இரு நிலத்து ஓர் பழி படித்தேன் ஏ பாவமே
இப் பழி உத்தேச்யம் ஓர் பழி என்கிறாள்
பகவத் விஷயத்தில் உண்டாகிற பதற்றம் எல்லாம் ஞான விபாக கார்யமான
ப்ரேமத்தின் பரீவாஹம் என்று உகப்பாருக்கு இதுவே புகழாம் இறே

————————————————————————

உலகிற் பெண்மணிகளெல்லாம் ஒரு பைங்கிளியை வளர்த்துப் போது போக்குதல் இயல்பு.
அப்படியே இப் பரகால நாயகியும் ஒரு கிளியை வளர்த்திருந்தாள்;
அதற்கு எம்பெருமான் திருநாமங்களைக் கற்பித்திருந்தாள்.
இவள் உல்லாஸமாயிருக்குங் காலங்களிலே அக்கிளி அருகிருந்து இன் சொல் மிழற்றும்;
இப்போது இவள் தளர்ந்திருப்பது கண்டு கிளி தானும் தளர்ந்திருந்தமையால் ஒரு மூலையிலே பதுங்கிக் கிடந்தது.
தாயானவள் அக் கிளியை மகளின் முன்னே கொணர்ந்து விட்டு இவள் உகக்கும் படியான
சில திரு நாமங்களைச் சொல்லி மகிழ்விக்குமாறு ஏவினாள்;
ஏவினவிடத்தும் அது பரகால நாயகியின் முகத்தில் பயிர்ப்பைக் கண்டு ஒன்றும் வாய் திறக்க மாட்டிற்றில்லை;
அவள் தானே கிளியை நோக்கி ‘நான் கற்பித்த திருநாமங்களைச் சொல்லாய், சொல்லாய்‘ என்ற விடத்தும்
அது வாய்திறவாதிருக்க, முன்புதான் கற்பித்த திருநாமங்களின் தலைப்பை எடுத்தெடுத்துக் கொடுத்து
‘இதைச்சொல், இதைச்சொல்‘ என்ன அதுவும் அப்படியே சொல்ல-
அது சொன்ன திருநாமங்களைக் கேட்டுக் கண்ணுங் கண்ணீருமாய் நின்றபடியை எடுத்துறைக்கிறாள் திருத்தாய்–

கல்லெடுத்துக் கல்மாரி காத்தாய் என்றும் காமருபூங் கச்சியூ ரகத்தாய். என்றும்,
வில்லிறுத்து மெல்லியல் தோள் தோய்ந்தாய் என்றும் வெஃகாவில் துயிலம ர்ந்த வேந்தே. என்றும்,
அல்லடர்த்து மல்லரையன் றட் டாய் என்றும், மாகீண்ட கத்தலத்தென் மைந்தா என்றும்,
சொல்லெடுத்துத் தங்கிளியைச் சொல்லே என்று துணைமுலைமேல் துளிசோரச் சோர்கின்றாளே.

பதவுரை

(இப் பெண் பிள்ளை)
கல் மாரி–(இந்திரன் பெய்வித்த) கல் மழையை
கல் எடுத்து–ஒரு மலையை யெடுத்துப் பிடித்து
காத்தாய் என்றும்–தடுத்தவனே! என்றும்,
நாமரு பூகச்சி ஊரகத்தாய் என்றும்-விரும்பத் தக்கதாய் அழகிய தான காஞ்சீபுரத்தில் திருவூரகத்தில் நின்றருளினவனே! என்றும்,
அட்டாய் என்றும்–ஒழித்தவனே! என்றும்
மா கீண்ட–குதிரை வடிவங்கொண்டு வந்த கேசியை கீண்டொழித்த
கைத் தலத்து–திருக் கைகளை யுடைய
என் மைந்தா என்றும்–எனது மைந்தனே! என்றும்
தன் கிளியை–தன்னுடைய கிளியை நோக்கி
வில் இறுத்து மெல்லியல் தோள் தோய்ந்தாய் என்றும்-வில்லை முறித்துப் பிராட்டியைக் கைப் பிடித்தவனே! என்றும்,
வெஃகாவில் துயில் அமர்ந்த வேந்தே என்றும்–திரு வெஃகாவில் பள்ளி கொண்டருளும் பிரபுவே! என்றும்,
அன்று–முன்பொரு காலத்தில்
மல்லரை–மல்லர்களை
மல் அடர்த்து–வலிமை யடக்கி
சொல் எடுத்து–திருநாமத்தின் முதற் சொல்லை யெடுத்துக் கொடுத்து
சொல் என்று–(மேலுள்ளதை நீயே) சொல் என்று சொல்லி,
(அது சொல்லத் தொடங்கினவாறே)
துணை முலை மேல்–உபயஸ்தரங்களிலும்
துளி சோர–கண்ணீர் பெருகப் பெற்று
சோர்கின்றாளே.–துவளா நின்றாள்.

கண்ணபிரான் * சோலை சூழ்ந்த பெரிய குன்றை யெடுத்து ரக்ஷித்திருக்க
இவள் “கல் எடுத்து“ என்று ஒரு சிறிய கல்லை யெடுத்தானாகச் சொல்லுவது எங்ஙனேயெனின்;
அவ்வளவு அநாயஸமாக எடுத்தமை சொன்னபடி.
“கொடியேறு செந்தாமரைக் கைவிரல்கள் கோலமுழிந்தில வாடிற்றில,
வடிவேறு திருவுகிர் நொந்துமில மணிவண்ணன் மலையுமோர் சம்பிரதம்“ என்ற பெரியாழ்வார் திருமொழியுங் காண்க.
வீரபத்நியாகை யாலே “பொல்லா வரக்கனைக் கிள்ளிக் களைந்தானை“ என்றாற்போலே சொல்லுகிறாளென்க.

“கல்லெடுத்துக் கல் மாரி காத்தாய்“ என்ற சொல் நயத்தை நோக்கி பட்டர் அருளிச் செய்வாராம்-
‘கல் மழையாகையாலே கல்லை யெடுத்து ரக்ஷித்தான், நீர் மழையாகில் கடலை யெடுத்து ரக்ஷிக்குங்காணும்“ என்று.
இதனால், இன்னதைக் கொண்டு இன்ன காரியஞ் செய்வதென்கிற நியதி எம்பெருமானுக்கில்லை யென்பதும்
ஸர்வ சக்தனென்பதும் விளக்கப் பட்டதாம்.
“பிறரால் வந்த ஆபத்திலோ ரக்ஷிக்கலாவது? உன்னால் வந்த ஆபத்தில் ரக்ஷிக்க லாகாதோ?
கல் வர்ஷத்திலகப்பட்டாரையோ ரக்ஷிக்கலாவது? அவ்வூராகப் பட்ட நோவை ஒருத்தி பட்டால் ரக்ஷிக்கலாகாதோ?
என்னுடைய ரக்ஷணத்துக்கும் ஏதேனும் மலையை யெடுக்க வேணுமோ?
மலையை யெடுத்த தோளைக் காட்டவமையாதோ?“ என்ற பரம போக்யமான வியாக்கியான ஸ்ரீஸூக்திகள் இங்கு அநுஸந்திக்கத்தக்கன.

காமரு பூங்கச்சி யூரகத்தாயென்றும்=
கல்லெடுத்துக் கல்மாரி காத்த காலத்தை இழந்து பிற்பட்டவர்களுக்கும் ஸர்வ ஸ்வதானம்
பண்ணுகைக்காக வன்றோ திருவூரகத்திலே வந்து அந்த க்ருஷ்ணாவதாரத்திற்குத் தோள் தீண்டியான
த்ரிவிக்ரம் வேஷத்தோடே நி்ன்றருளிற்று; இதுவும் பாவியேனுக்குப் பயன்படாதொழிவதே! என வருத்தந் தோற்றக் கூறுகிறபடி.

இப்பாட்டில், விபவாவதார சேஷ்டிதங்களைக் கூறுவன சில அடிகளும்
அர்ச்சாவதார நிலையைக் கூறுவன சில அடிகளுமுள்ளன; இவை மாறி மாறிக் கோக்கப்பட்டிருக்கின்றன;
அவதாரங்களை ஒரு கோர்வையாகவும் திருப்பதிகளை ஒரு கோர்வையாகவும் அநுபவிக்கலாமே,
அப்படி அநுபவியாமல் கலசிக் கலசி அநுபவிக்கிறார்; ஏனென்னில் ;
பிடி தோறும் நெய் வார்த்து உண்பாரைப் போலே திருப்பதிகளை யொழியத் தமக்குச் செல்லாதபடியாலே திருப்பதிகளைப்பேசுகிறார்.
திருப்பதிகளின் அடிப்பாடு சொல்ல வேண்டுகையாலே அவதாரத்திலிழிகிறார்.
மற்றை யாழ்வார்களுக்கும் இவர்க்குமுண்டான வாசி இது காண்மின்;
அவர்கள், மேன்மையை அநுபவிக்க வேண்டில் அவதாரங்களைப் பேசுவர்கள்;
அந்த நீர்மையை ஸாக்ஷாத் கரிக்கைக்காகத் திருப்பதிகளிலே இழிவர்கள்.
இவ்வாழ்வார், மேன்மையை யநுபவிப்பதும் திருப்பதிகிறே -நீர்மையை திருப்பதிகளிலே,-அதை ஸாக்ஷாத்கரிப்பதும் திருப்பதிகளிலே.

வில்லிறுத்து மெல்லியல் தோள் தோய்ந்தாயென்றும்=
‘இவ்விலை முறித்தார்க்கு இவளை விவாஹம் பண்ணிக் கொடுக்கக் கடவேன்‘ என்று ஜநகன் சொல்லி வைத்திருக்கையாலே
இராம பிரான் வில்லை யெடுத்து நாணேற்றி வளைக்கப் புக்கவளவிலே வில் முறிந்தது;
அவ் வளவிலே நெடு நாளைய குறை தீரப் பெற்ற ஜநக மஹாராஜன் பொற் கிண்டியைக் கொணர்ந்து
தாரை வார்த்துத் தத்தம் பண்ணப் புக, அது கண்ட இராமபிரான்
‘நான் ஏதேனும் நெடு நாளைய ப்ரஹமசாரியாயிருந்து பெண் கொடுப்பாராருமில்லையே யென்று தடுமாறிப் பெண் தேடி வந்தேனோ;
ராஜ குமாரனாகையாலே வீர வாசி கொண்டாட வந்தேனத்தனை; உமக்குப் பெண் விவாஹஞ்செய்ய வேண்டியிருந்தால்
அது விஷயம் நமக்குத் தெரியாது; வஸிஷ்டாதிகளையும் நமது ஐயரையும் கேட்டுக்கொள்வது‘ என்று
கம்பீரமாகச் சீர்மையுங் கண்டு பிராட்டி நீராயுருகினாள்;
வில் முறித்த ஆயாஸந்தீர அவளது தோளிலே தோய்ந்தானிராமபிரான்; அதைப் பேசுகிறாள்
வில்லிறத்து மெல்லயல்தோள் தோய்ந்தாய்! என்று.

இவ்விடத்துப் பெரியவாச்சான்பிள்ளை வியாக்கியானத்தில்
“வில்லை முறித்த ஆண் பிள்ளைத் தனத்தையும் வார்த்தை சொன்ன சீர்மையையுங் கண்டு நீராடினாள் பிராட்டி“ எனத் திருக்திக் கொள்க.
தோய்தல் நீரிலே யாகையாலே இங்குத் ‘தோய்ந்தாய்‘ என்ற சொல் நயத்துக்கு ஏற்ப ‘நீரானாள்‘ என்றது.

வெஃகாவில் துயிலமர்ந்த வேந்தே! என்றும் =
பிராட்டியைப் பாணி க்ரஹணம் பண்ணி வந்து அந்த இளைப்புத் தீரவும் அந்த மணக் கோலம் விளங்கவும்
துயிலமர்ந்தவிடத் திருவெஃகா வென்கிறாள்.
ஒரு ராஜகுமாரன் வந்து கிடக்கிறான் என்னலாம்படி யிருக்கிறதாயிற்று.

(மல்லடர்த்து இத்யாதி.)
மஹா பாபிகளான மல்லர்கள் ஏதேனுமொரு வியாஜத்தாலே உன்னுடைய தோளோடே அணையப் பெற்றார்கள்,
அவ்வளவு பாக்கியமும் எனக்குக் கிடைக்க வில்லையே! என்கிற கிலாய்ப்புத் தோற்றச் சொல்லுகிறபடி.
நானும் இத் தன்மை நீங்கிப் பிரதி கூலர் வடிவெடுத்து வந்தேனாகில்
உன் தோளோடே அணையப் பெறலாம் போலும் என்கிறாளென்றுங் கொள்க.

மாகீண்ட கைத்தலத்து என்மைந்தா! என்றும் =
திருவாய்ப்பாடியில் ஆய்ச்சிகளுக்கு முற்றூட்டான திருமேனியைப் பாதுகாத்துக் கொண்டாய்;
அதை எனக்கு ஒருநாள் காட்டினால் போதுமே, இதுவும் அரிதாயிற்றே! என்று நொந்து பேசுகிறபடி.

சொல்லெடுத்து =
ஆக இப்படிப்பட்ட திருநாமங்களின் ஆதியை யெடுத்துக் கொடுத்துக் கிளியைச் சொல்லுவிக்க,
அவற்றின் பொருள் நெஞ்சில் உறைக்கவே இப்படி ஆபத்துக்களுக்கு உதவுமவனாகப் புகழ் பெற்றவன்
இன்று நம்மளவிலே உதவாதொழிவதே! என்று கண்ணுங் கண்ணீருமாயிருந்து கரைகிற படியைத் திருத் தாயார் கூறினாளாயிற்று.

இவள் வளர்த்த கிளியும் தளர்ந்து இருக்க முன்பு தான்
கற்பித்த திரு நாமங்களின் தலைப்பை எடுத்துக் கொடுத்து
இதைச் சொல் இதைச் சொல் என்ன
அது சொன்ன திரு நாமங்களைக் கேட்டு கண்ணும் கண்ண நீருமாய் இருக்கும் நிலைமையை
திருத் தாயார் எடுத்து உரைக்கிறாள்

கல் எடுத்து
அநாயாசேன செய்த செயல் என்பதால் கல் எடுத்து என்கிறாள்
கொடியேறு செந்தாமரைக் கை விரல்கள் கோலமும் அழிந்தில வாடிற்றில
வடிவேறு திரு உகிர் நொந்துமில மணி வண்ணன் மலையுமோர் சம்பிரதம் -பெரியாழ்வார்
பொல்லா அரக்கனைக் கிள்ளிக் களைந்தானை

கல் எடுத்து கல் மாரி காத்தான்
கல் மழை யாகையாலே கல்லை எடுத்து ரஷித்தான்
நீர் மழை யாகில் கடலை எடுத்து ரஷிக்கும் காணும் -பட்டர்
பிறரால் வந்த ஆபத்திலோ ரஷிக்கலாவது
உன்னால் வந்த ஆபத்தில் ரஷிக்கல் ஆகாதோ
கல் வர்ஷத்தில் வந்த ஆபத்திலோ ரஷிக்க லாவது
துக்க வர்ஷத்தால் வந்த ஆபத்தை ரஷிக்கல் ஆகாதோ
ஒரு ஊராக நோவு பட்டாலோ ரஷிக்கலாவது
அவ் ஊராக பட்ட நோவை ஒருத்தி பட்டால் ரஷிக்கலாகாதோ
என்னுடைய ரஷணத்துக்கு ஏதேனும் ஒரு மலையை எடுக்க வேணுமோ
மலையை எடுத்த தோளைக் காட்டல் ஆகாதோ

காமரு பூங்கச்சி ஊரகத்தாய் என்னும்
பிற்பாடர் இழவாமைக்கு
கிருஷ்ணாவதாரம் தோள் தீண்டியான உலகு அளந்த திருக்கோலம்
இதுவும் பாவியேனுக்கு பயன்படாது ஒழிவதே
பிடி தொறும் நெய் வார்த்து உண்பாரைப் போலே அடி தொறும் அர்ச்சையில் இழிகிறார்
அல்லாதார் மேன்மையை அனுபவிக்க பர வாசுதேவன் இடம் இழிந்து
நீர்மையை அனுபவிக்க அவதாரங்களில் இழிவார்கள்
அந்த நீர்மையை சாஷாத் கரிக்க திருப்பதிகளில் இழிவார்கள்
இவரோ
மேன்மையை அனுபவிப்பதும்
நீர்மையை அனுபவிப்பதும்
நீர்மையை சாஷாத் கரிப்பதும்
அர்ச்சையிலே தானே

வில்லிறுத்து மெல்லியல் தோள் தோய்ந்தாய் என்றும்
வில்லை முறித்த ஆண் பிள்ளை தனத்தையும்
நம் ஐயரை கேட்டே விவாகம் சீர்மையும் கேட்டு சீதா பிராட்டி உருக
வில் முறித்த ஆயாசம் தீர அவளது தோளிலே தோய்ந்தான்
நீராடினாள் இனியனாளால் -பிழை யான பாடம் நீரானாள் சரியான பாடம்

வெக்காவில் துயில் அமர்ந்த வேந்தே
திரு மணக் கோலத்துடன் ராஜ குமாரன் வந்து கிடக்கிறான் என்னலாம் படி

மல்லடர்த்து
மல்லர்கள் பெற்ற பாக்யமும் எனக்கு இல்லையே
பிரதி கூலர் வடிவு கொண்டு வந்து இருந்தேன் ஆகில்
உன்னை அணையைப் பெற்று இருப்பேனே

மா கீண்ட கைத்தலத்து மைந்தா
ஆய்சிகளுக்கு முற்றூட்டான திரு மேனியை பாதுகாத்து கொண்டாய்
அது எனக்கு ஒரு நாள் காட்டினால் போதுமே

சொல்லெடுத்து
ஆதியை எடுத்து கொடுக்க
கிளி சொல்ல சொல்ல
பொருள் நெஞ்சில் உறைக்கவே
ஆபத் சகன் நம்மளவிலே உதவாமல் ஒழிவதே -என்று
கண்ணும் கண்ணநீருமாய் இருந்தபடியை
திருத் தாயார் கூறினாள் ஆயிற்று-

—————————————————————-

“சொல்லெடுத்துத் தன் கிளியைச் சொல்லே யென்று துணை
முலைமேல் துளிசோரச் சோர்கின்றாளே“ என்றது கீழ்ப்பாட்டில்.
‘இவள் தானே சில திருநாமங்களை முதலெடுத்துக் கொடுத்துச் சொல்லச் சொல்லுகையாலே சொன்னோம்;
நாம் சொன்னதுவே இவளுக்கு மோஹ ஹேதுவாயிற்றே!‘ என்று கவலை கொண்ட கிளியானது,
முன்பு இவள் தெளிந்திருந்த காலங்களில் தனக்கு உஜ்ஜீவநமாகக் கொண்டிருந்த திருநாமங்களைச் சொல்லுவோம்
என்றெண்ணி அவற்றை அடையவே சொல்லக்கேட்டு உகந்த பரகாலநாயகி
“வளர்த்ததனால் பயன் பெற்றேன் வருக“ என்று சொல்லி அக்கிளியைக் கைக்கூப்பி
வணங்கினமையைத் திருத்தாயார் சொல்லுகிற பாசுரமா யிருக்கிறது.

முளைக்கதிர் என்றும் குறுங்குடியுள் முகில் என்றும்,
மூவாமூவுலகுங்கடந்தப்பால் முதலாய் நின்ற அளப்பரியவாரமுது என்றும்
அரங்கமேய வந்தணன் என்றும் அந்தணர் தம் சிந்தையான் என்றும் விளக்கொளி என்றும்
திருத்தண்காவில் மரகதமென்றும் வெஃகாவில் திருமாலென்றும்
இவையாயிற்று இவள் கற்பித்து வைத்த திருநாமங்கள். இவற்றை அடையவே சொல்லத் தொடங்கிற்று மடக்கிளி–

முளைக்கதிரைக் குறுங்குடியுள் முகிலை மூவா மூவுலகும் கடந்தப்பால் முதலாய் நின்ற,
அளப்பரிய ஆரமு தை அரங்கம் மேய அந்தணனை அந்தணர்தம் சிந்தை யானை,
விளக்கொளியை மரகதத்தைத் திருத்தண் காவில் வெஃகாவில் திருமாலைப் பாடக் கேட்டு
வளர்த்ததனால் பயன்பெற்றேன் வருக என்று மடக்கிளியைக் கைகூப்பி வங்கி னாளே.

பதவுரை

முளை கதிரை-இளங்கதிரவனைப் போன்றவனும்
குறுங்குடியுள் முகிலை–திருக்குறுங்குடியில் காளமேகம் போல் விளங்குபவனும்
மூவா மூ உலகும் கடந்து–நித்யமாய் மூவகைப் பட்டதான ஆத்ம வர்க்கத்துக்கும் அவ்வருகாய்
அப்பால்–பரம பத்திலே
முதல் ஆய் நின்ற–(உபயவிபூதிக்கும்) முதல்வனாய்க் கொண்டு எழுந்தருளி யிருப்பவனும்
அளப்பு அரிய–(ஸ்வரூப ரூப குணங்களில்) அளவிடக் கூடாதவனும்
ஆர் அமுதை-அருமையான அம்ருதம் போன்றவனும்
அரங்கம் மேய அந்தணனை–திருவரங்க மா நகரில் பொருந்திய பரம பரிசுத்தனும்
அந்தணர் தம் சிந்தையானை–வைதிகர்களின் உள்ளத்தை இருப்பிடமாக வுடையவனும்
திருத் தண் காவில் விளக்கு ஒளியை–திருத் தண் காவில் விளக்கொளி யெம்பெருமானாய் ஸேவை ஸாதிப்பலனும்
மரகத்தை–மரகதப் பச்சைப் போல் விரும்பத் தக்க வடிவு படைத்தவனும்
வெஃகாவில் திருமாலை–திரு வெஃகாவில் கண் வளர்ந்தருளுகிற திருமகள் கொழுநனுமான
பாட கேட்டு–ஸர்வேஸ்வரனைக் (கிளி) பாட (அப் பாசுரங்களை)க் கேட்டு
மடக் கிளியை–அழகிய அக் கிளியை நோக்கி
வளர்த்ததனால் பயன்பெற்றேன் வருக என்று–உன்னை வளர்த்ததனால் பிரயோஜனம் பெற்றேன்; இங்கே வா‘ என்றழைத்து
கை கூப்பி வணங்கினாள்–அதற்கு ஒரு அஞ்சலியும் செய்து நமஸ்கரித்தாள்.

முளைக் கதிர் =
சிற்றிஞ் சிறுகாலை உதிக்கின்ற ஸூரியனைப் போலே கண்ணாலே முகந்து அநுபவிக்கலாம்படி யிருக்கிற
திவ்யமங்கள விக்ரஹத்தை யுடையவன் என்றபடி.
“ப்ரஸந்நாதித்யவர்ச்சஸம்“ என்றதுங் காண்க.
தன்னை அடியிலே அவன் விஷயாந்தரங்களில் நின்று மீட்டதும்
தன் பக்கலில் ருசியைப் பிறப்பித்தது வடிவைப் காட்டியாதலால் அதனையே கிளிக்கு முந்துற உபதேசித்து வைத்தாள் போலும்.

‘முளைக்கதிர்‘ என்பதை வினைத் தொகையாகக் கொண்டால் ‘முளைக்கதிர்‘ என்று இயல்பாக வேண்டும்;
தகரவொற்று இருப்பதனால் ‘முளைத்தலை யுடைய கதிர்‘ என்று பொருள் கொள்ள வேணும்;
அப்போது, முளை – முகனிலைத் தொழிற்பெயர்.

குறுங்குடியுள் முகில் =
கீழ்ச் சொன்ன வடிவைப் பிரகாசித்தது சாஸ்திர முகத்தாலுமன்று, ஆசார்யோபதேசத்தாலுமன்று.
திருக்குறுங்குடியிலே யாயிற்றுப் பிரகாசிப்பித்தது.
இன்ன மலையிலே மேகம் படிந்ததென்றால் மழை தப்பாதென்றிருக்குமா போலே,
திருக்குறுங்குடியிலே நின்றானென்றால் உலகமெல்லாம் க்ருதார்த்தமாம்படி யிருக்குமென்க.
ஒருகால் தோன்றி வர்ஷித்து விட்டு ஒழிந்து போம் மேகம் போலன்றியே சாச்வதமாய் நிற்கும் மேகம்
என்பது தோன்ற ‘உள்முகில்‘ எனப்பட்டது.

திருக்குறுங்குடியில் வந்து நின்றருளின சீலாதிகனுடைய அடிப்பாடு சொல்லுகிறது
மூவா மூவுலகுமென்று தொடங்கி.
பரமபதத்தில் நின்றும் திருக்குறுங்குடியிலே போந்தருளினான் ஆயிற்று.
‘மூவா மூவுலகுங் கடந்து‘ என்றது –
பத்தாத்மாக்களென்றும் முக்தாத்மாக்களென்றும் நித்யாத்மாக்களென்றும் மூவகையாகச் சொல்லப் படுகின்ற
ஆத்ம வர்க்கங்களுக்கு எம்பெருமான் அவ்வருகு பட்டிருக்கின்றமையைச் சொன்னவாறு.
மூவா என்றது ஒரு காலும் அழிவில்லாமையைச் சொன்னபடி.

நித்ய முக்த்ர்களுக்குத் தான் அழிவு இல்லை;
பத்தர்களெனப்படுகிற ஸம்ஸாரிகளுக்கு அழிவு உண்டே யென்று சிலர் சங்கிப்பர்கள்;
ஆத்மாக்கள் கரும வசத்தால் பரிக்ரஹித்துக் கொள்ளுகிற சரீரங்களுக்கு அழிவுண்டேயன்றி
ஆத்மாக்களுக்கு ஒரு போழ்தும் அழிவில்லை யென்றுணர்க.

முதலாய் நின்ற என்றது –
உபய விபூதிக்கும் ஸத்தா ஹேதுவாய் நின்ற என்றபடி.
நித்ய ஸூரிகளுக்கு போக்யதையாலே ஸத்தா ஹேதுவாய்,
ஸம்ஸாரிகளுக்குக் கரண களேபர ப்ரதாநத்தாலே ஸத்தா ஹேதுவா யிருக்குமென்க.

அளப்பரிய ஆரமுது =
ஸ்வரூப ரூப குணங்களால் எல்லை காண வெண்ணாதவனாய் அமுதக் கடல்போலே இனியனா யிருக்குமவன்.

அரங்கம் மேய் அந்தணன் –
அந்த அமுதக் கடலில் நின்றும் ஒரு குமிழி புறப்பட்டு ஒரு தடாகத்திலே வந்து தேங்கினாற் போலே யாயிற்று
திருவரங்கம் பெரிய கோயிலிலே வந்து திருக்கண் வளர்ந்தருளுகிறபடி.

அந்தண னென்றது பரிசுத்தனென்றபடி;
தன் வடிவழகைக் காட்டி அஹங்காரமும் விஷயாந்தர ப்ராவணயமுமாகிற அசுத்தியைப் போக்க வல்ல சுத்தியை யுடையவனென்றவாறு.

அந்தணர்தம் சிந்தையான் –
“நின்ற தெந்தை யூரகத்து இருந்த தெந்தை பாடகத்து, அன்று வெஃகணைக் கிடந்தது என்னிலாத முன்னெலாம்,
என்று நான் பிறந்திலேன் பிறந்தபின் மறந்திலேன், நின்றது மிருந்ததும் கிடந்தது மென்னெஞ்சுகளே‘! என்கிறபடியே
பரி சுத்தருடைய ஹ்ருதயத்திலே நித்ய வாஸம் பண்ணுமவன்.

எம்பெருமானுக்கு, பரம பதத்திலும் திருப்பாற்கடலிலும் கோயில் திருமாலை பெருமாள் கோயில் முதலான
உகந்தருளின விடங்களிலும் இருப்பதிற் காட்டிலும் மெய்யடியாருடைய ஹ்ருதய கமலத்திலே வாழ்வதே பரமோத்தேச்யமென்றும்,
ஸமயம் பார்த்து அன்பருடைய நெஞசிலே வந்து சேர்வதற்கதாகவே மற்ற விடங்களில் எம்பெருமான் தங்குகிறனென்றும்,
ஆகவே பரமபதம் முதலியவற்றில் வாஸம் உபாயமாய்
பக்தருடைய ஹ்ருதயத்தில் வாஸமே புருஷார்த்தமாயிருக்குமென்றும், விடுமென்றும் உணர்க.

விளக்கொளியை –
விளக்கின ஒளியானது எப்படி வெளிச்சத்தை யுண்டாக்கிப் பதார்த்தங்களை விளங்கச் செய்யுமோ
அப்படி ஸ்வ ஸ்வரூபம் ஜீவாத்ம ஸ்வரூபம் உபாய ஸ்வரூபம் விரோதி ஸ்வரூபம் ஆகிற அர்த்த பஞ்சகத்தையும்
தனக்கு விளங்கச் செய்தருளினவன் என்றவாறு.

மேலே ‘திருத்தண்கா‘ என வருகையாலே
இங்கு விளக்கொளியென்றது அத்தலத்து எம்பெருமானாகிய தீப ப்ரகாசனை என்றுங் கொள்ளலாம்;
திருத்தண்கா ‘விளக்கொளி கோயில்‘ என்றே வழங்கப் பெறும்.
இத் தலத்துப் பெருமான் பண்டைக் காலத்தில் சயன திருக்கோலமாக எழுந்தருளி யிருந்ததாகப்
பெரியவாச்சான் பிள்ளை வியாக்கியானத்தினாலும் அரும்பதவுரையினாலும் மற்றும் சில சாதனங்களாலும் விளங்குகின்றது.

திருத் தண் காவில் மரகதத்தை –
இவ்விடத்துப் பெரியவாச்சான் பிள்ளை வியாக்கியான ஸ்ரீஸூக்திகள் காண்மின்:-
“அருமணவனானை என்னுமா போலே திருத்தண்காவில் மரதகம் என்கிறார்.
இன்ன தீவிலேபட்ட ஆனை யென்றால் விலக்ஷணமா யிருக்குமா போலே திருத்தண்காவில் கண் வளர்ந்தருளுகிறவனுடைய
வடிவென்றால் விலக்ஷணமாயிருக்கிறபடி.
பச்சைமா மலை போல் மேனி என்கிற வடிவையுடையவன்.
வடதேசத்தினின்றும் பெருமாளை யநுபவிக்க வருமவர்கள் இளைத்து விழுந்த விடத்திலே அவர்களை எதிர்கொண்டு அநுபவிப்பிக்கக் கிடக்கிற கிடை.“

வெஃகாவில் திருமாலை-
“வில்லறுத்து மெல்லியல்தோள் தோய்ந்தா யென்றும் வெஃகாவில் துயிலமர்ந்த வேந்தே யென்றும்“
என்று பிராட்டியைத் திருமணம் புணர்ந்த மணக் கோலத்தோடே கூட இருவரும் வந்து கிடக்கிற கிடையாகக் கீழே அருளிச் செய்தாரிறே;
திரு வெஃகாவிலே வந்து திருக் கண் வளர்ந்தருளின பின்பு ச்ரியபதித்வம் நிறம் பெற்றபடி.

ஆக இப்படிப்பட்ட திருநாமங்களை மடக்கிளி எடுத்துப் பாடினவளவிலே
ஆனந்தமாகக் கேட்கலுற்ற என் மகளானவள் ‘கிளிப் பிள்ளாய்! உன்னை வளர்த்த ப்ரயோஜனம் பெற்றேன்;
ஆபத்துக்கு உதவுபவனென்று பேர் பெற்ற அவன் ஆபத்தை விளைவித்துப் போனான்,
அந்த நிலைமையில் நீ உதவப்பெற்றாயே!, அருகே வந்திடாய்‘ என்று சொல்லி
உபகார ஸ்மிருதி தோற்றக் கையெடுத்துக் கும்பிட்டாளென்றதாயிற்று.

புத்திரனாகவுமாம், சிஷ்யனாகவுமாம், பகவத் விஷயத்திற்கு உசரத் துணையாகப் பெற்றால் கௌரவிக்க வேணும்
என்னுமிடம் ஈற்றடியால் அறிவிக்கப்பட்டதாயிற்று.
“கணபுரங்கை தொழும் பிள்ளையைப் பிள்ளை யென்றெண்ணப் பெறுவரே“ என்றதும் நோக்குக.

நாம் சொன்னதே இவள் மோஹிக்க ஹேதுவானதே
தெளிந்த காலத்தில் உஜ்ஜீவனமாக கொண்டு இருந்த திரு நாமங்களை சொல்லுவோம்
என்று அடைவே சொல்ல வளர்த்ததனால் பயம் பெற்றேன் என்கிறாள்

முளைக்கதிர்
குறுங்குடியுள் முகில்
மூவா மூவுலகும் கடந்து அப்பால் முதலாய் நின்ற அளப்பரிய அமுது
அரங்கமேய அந்தணன்
அந்தணர் தம் சிந்தையான்
விளக்கொளி
திருத் தண் காவில் மரகதமே
வெக்காவில் திருமால்
இவை யாயிற்று இவள் முன்பு கற்பித்த திருநாமங்கள்
இவற்றை அடைவே சொல்லிற்று மடக்கிளி
முளைக்கதிர்
பிரசன்ன ஆதித்ய வர்ச்சசம்
அடியிலே தன்னை விஷயாந்தரங்களில் நின்றும் மீட்டு ருசியை பிறப்பித்த வடிவு என்பதால்
அடியிலே இத்தை சொல்லி

குறுங்குடியுள் முகில்
வடிவை பிரகாசிப்பித்தது சாஸ்திர முகத்தால் அன்று
ஆச்சார்ய உபதேசத்தால் அன்று
திருக் குறும் குடியிலே யாயிற்று பிரகாசிப்பித்தது
பொலிந்து போகும் மேகம் போல இல்லாமல் சாஸ்வதம் -நிற்கும் -உள் முகில் –

மூவா மூவுலகும் கடந்து அப்பால் முதலாய் நின்ற அளப்பரிய அமுது
அவனது அடிப்பாடு சொல்கிறது இத்தால்
மூவா நித்யர்
நித்யர் முக்தர் பக்தர் –
முதலா நின்ற உபய விபூதிக்கும் சத்தா ஹேதுவாய்
அளப்பரிய அமுது எல்லை காண முடியாத ஸ்வரூப ரூப குணங்கள் -அமுதக்கடல்
அரங்கமேய அந்தணன்
அந்த அமுதக் கடலில் நின்றும் ஒரு குமிழி புறப்பட்டு தடாகம் தேங்கி
அந்தணன் பரிசுத்தன்
அந்தணர் தம் சிந்தையான்
நின்றது எந்தை –அன்று நான் பிறந்திலேன் –நின்றதும் இருந்ததும் கிடந்தததும் என் நெஞ்சுள்ளே
இதுவே புருஷார்த்தம் அவனுக்கு
சித்தித்து விட்டதும் அங்கு ஆதரம் மட்டமாகி விடுமே
விளக்கொளி
அர்த்த பஞ்சகம் காட்டி அருளி
அடுத்து திருத் தண் காவில் மரகதம் என்பதால் இங்கு தீப பிரகாசன்
முன்பு சயன திருக் கோலமாக இருந்ததாக பெரிய வாச்சான் பிள்ளை
திருத் தண்காவில் மரகதமே
அழகிய மணவானனை என்னுமா போலே திருத் தண்காவில் மரகதம் என்கிறார்
இன்ன தீவிலே பட்ட யானை என்றால் விலஷணமாய் இருக்குமா போலே
திருத் தண்காவிலே கண் வளர்ந்து அருளுகின்றவன் உடைய
வடிவு என்றால் விலஷணமாய் இருக்கிறபடி
பச்சை மா மலை போல் மேனி என்கிற வடிவை உடையவன்
வட தேசத்தின் நின்றும் பெருமாளை அனுபவிக்க வருமவர்கள் இளைத்து
விழுந்த இடத்திலே அவர்களை எதிர் கொண்டு அனுபவிப்பிக்க கிடக்கிற கிடை

வெக்காவில் திருமால்
திருமணம் புணர்ந்த கோலத்துடன் இங்கு வந்து கண் வளர்ந்த பின்பு
ஸ்ரீ யபதித்வம் நிறம் பெற்ற படி

உபகார ஸ்ம்ருதி தோற்ற கை எடுத்து கும்பிட்டாள்
புத்ரனுமாகவுமாம் சிஷ்யனும் ஆகவுமாம்
பகவத் விஷயத்துக்கு உசாத் துணையாகப் பெற்றால்
கௌரவிக்க வேணும்
கணபுரம் கை தொழும் பிள்ளையை பிள்ளை என்று எண்ணப் பெறுவரே

———————————————————————

கீழ்ப்பாட்டில், கிளிப்பிள்ளை திருநாமங்களைச் சொல்லக் கேட்டு ஆச்வாஸமடைந்து
அதனையும் கௌரவித்தபடியைச் சொல்லி நின்றது.
அந்த நிலைமை போய்த் தன் வாயாலே திரு நாமத்தைச் சொல்லி அது தன்னை வீணையிலே ஏறிட்டு ஆலாபித்தாள்;
அந்த வீணையானது ஸம்ச்லேஷ தசையிலே தன் படிகளையும் அவன் படிகளையும் இட்டு வாசிக்கப் பெறுவதாகையாலே
அந்த வீணை முகத்தாலே அவன் வடிவை ஸாக்ஷாத்கரித்து அந்த வீணையை அவனாகவே கொண்டு,
அவனோடு ஸம்ச்லேஷிக்குமிடத்திற் பண்ணும் வியாபார விசேஷங்களை இவ் வீணையிலே பண்ணா நின்றாள்;
இவள் உணர்ந்தாள் என்னவாய்த் தலைக் கட்டப் புகுகிறதோ வென்று திருத்தாய் இன்னாப்போடே பேசும் பாசுரம் இது.

கல்லுயர்ந்த நெடுமதிள்சூழ் கச்சி மேய களிறென்றும் கடல்கிடந்த கனியே என்றும்,
அல்லியம்பூ மலர்ப்பொய்கைப் பழன வேலி அணியழுந்தூர் நின்றுகந்த அம்மான் என்றும்,
சொல்லுயர்ந்த நெடுவீணை முலைமேல் தாங்கித் தூமுறுவல் நகையிறையே தோன்ற நக்கு,
மெல்விரல்கள் சிவப்பெய்தத் தடவி யாங்கே மென்கிளிபோல் மிகமிழற்றும் என்பே தையே.

பதவுரை

கல் உயர்ந்த நெடுமதி்ள் சூழ்-கல்லாலே செய்யப்பட்டு ஓங்கின பெரிய திருமதின்களாலே சூழப்பட்ட
கச்சி-காஞ்சீபுரத்திலே
கடல் கிடந்த கனியே என்றும்–திருப் பாற்கடலில் கண் வளர்ந்தருளுகிற கனி போன்றவனே! என்றும்.
அல்லி அம் பூ மலர் பொய்கை–தாதுகள் மிக்குப் பரிமளமுடையனவாய் அழகியவான புஷ்பங்களை யுடைய தடாகங்களையும்
பழனம்–நீர்நிலங்களையும்
வேலி-சுற்றும் வேலியாக வுடைய
அணி அழுந்தூர்–அழகிய திருவழுந்தூரிலே
நின்று-நின்றருளி
உகந்த- திருவுள்ளமுவந்திருக்கின்ற
அம்மான் என்றும்–ஸ்வாமியே! என்று (சொல்லி)
சொல் உயர்ந்த-நாதம் மிக்கிருப்பதாய்
நெடு-இசை நீண்டிருப்பதான
மேய-எழுந்தருளி யிருக்கிற
களிறு என்றும்-மத யானை போன்றவனே! என்றும்
வீணை-வீணையை
முலை மேல்-தனது ஸ்தனங்களின் மீது
தாங்கி–தாங்கிக் கொண்டு
தூ முறுவல்–பரிசுத்தமான மந்த ஹாஸத்தாலே
நகை–பல் வரிசை
இறையே தோன்ற–சிறிதே விளங்கும் படியாக
நக்கு–சிரித்து
மெல் விரல்கள்-(தனது) மெல்லிய விரல்கள்
சிவப்பு எய்த-சிவக்கும்படியாக
தடவி-(அந்த வீணையைத்) தடவி
ஆங்கே-அதற்கு மேலே
என் பேதை-என் பெண்ணானவள்
மென் கிளிபோல்–கிளிப் பிள்ளை போலே
மிக மிழற்றும்–பலபடியாகப் பாடா நின்றாள்

கல்லுயர்ந்த நெடு மதிள் சூழ் கச்சி மேய களிறென்றும் =
கல்லாலே செய்யப் பட்டுப் பிரதிகூலர்க்கு அணுக வொண்ணாதபடி ஓக்கத்தை யுடைத்தாய்,
உள்ளுக் கிடக்கிற யானைக்கு யதேச்ச விஹாரம் பண்ணுதற்குப் பாங்கான விஸ்தாரத்தை யுமுடைத்தான
திருமதிளாலே சூழப்பட்ட திருக்கச்சி மாநகரில் நித்ய வாஸஞ்செய்கின்ற மத்த கஜமே! என்றும்.

இங்குக் கச்சிமேய களிறு என்கிறது
திருப்பாடகத்து நாயனாரை என்பர் பெரியவாச்சான்பிள்ளை.
திருவத்தி மா மலையில் நின்றருளாநின்ற பேரருளாளப் பெருமாளை என்று அருளிச் செய்திருக்கலாம்;
அவருடைய திருவுள்ளமங்ஙனே நெகிழ்ந்தபடி. திருப்பாடகத்து நாயனாராக அருளிச் செய்தற்கு ஒருபொருத்தமுண்டு ;
“நின்ற தெந்தை யூரகத்து இருந்த தெந்தை பாடகத்து, அன்று வெஃகாணைக் கிடந்தது – என்று
திருமழிசைப் பிரான் அநுபவித்தபடியை இம் மூன்று ஸ்தலத்திலும் அநுபவிக்கிறாள் இவள்“ என்று
மேலே நிர்வஹித்தருளுகையாலே அதற்குப் பொருந்தும்,
திருவழுந்தூரில் நின்ற திருக்கோலமும் திருப்பாற்கடலில் பள்ளிகொண்ட திருக்கோலமுமாக
அநுபவிக்கிறாரென்று நிர்வஹிப்பதில் ஒரு சமத்கார அதிசயமுண்டு காணும்.

கடல் கிடந்த கனியே யென்றும் =
கச்சி மேய களிறு தோன்றின விடம் திருப்பாற்கடல் போலும்.
அதிலே பழுத்த பழம் போலே கண் வளர்ந்தருளுகிற பரம போக்யனே!
கனியானது கண்ட போதே நுகரத் தக்கதும் புஜிப்பாரைப் பெறாத போது அழிந்து போவதுமாயிருக்கும்;
அப்படியே தன்னை யநுபவிப்பார் தேட்டாமாய் அவர்களைப் பெறாத போது தான் அழியும்படியாயிருப்பன் எம்பெருமான்.
போக்தாக்களைக் குறித்து எதிர் பார்த்திருப்பவன் எனக்கு முகங்காட்டாதொழிவதே! என்றும்“,
போக்தர்களைப் பெறாத போது அழியும்படி யாயிருக்கிறவன் தன்னைப் பெறாத போது முடியும் படியாயிருக்கிற
எனக்கு முகங்காட்டாதொழிவதே! என்றும் வருந்துவது தோன்றச் சொல்லுகிறபடி.

அல்லியம்பூ மலர்ப்பொய்கைப் பழனவேலியணியழுந்தூர் நின்ற கந்த வம்மானென்னும் =
தாது மிக்கு நறுமணங் கமழ்ந்து அழகியவாயிருந்துள்ள புஷ்பங்களை யுடைத்தான
தடாகங்களையும் நீர்நிலங்களையும் வேலியாகவுடையதாய்,
பிரதிகூலர்க்கு அணுக வொண்ணாததாய் அநுகூலர்க்குத் தாப ஹரமாய்ப் பரம போக்யமாயிருந்துள்ள
திவ்ய தேசத்திலே ஸம்ஸாரிகள் ஆச்ரயிக்கலாம்படி நின்று,
அவர்கள் தன் நிலையழகையும் அதுக்கடியான திருக் குணங்களையு மநுஸந்தித்துத்
திருவடிகளைக் கிட்டினால் உகப்பானும் தானேயாயிருக்கும் பெருமானே! – என்றிங்ஙனே சில திருநாமங்களை யிட்டுப்பாடி.

சொல்லுயர்ந்த நெடுவீணைமுலைமேல்தாங்கி =
‘கல்லுயர்ந்த நெடு மதிள் சூழ் கச்சி மேய களிறு‘ இத்யாதிகளை வீணையிலேட்டுப் பாடினாள்;
வீணையை ஸ்பர்சித்தவாறே நாயகன் ஸம்ச்லேஷ தசையில் தன்னுடைய போக்யதையையும்
இவளுடைய யோக்யதையையும் வீணையிலேறிட்டு வாசிக்கும் படியை ஸாக்ஷாத் கரித்து,
அதைத் தடவும் திருக்கையை ஸாக்ஷாத்கரித்து,
அதுக்கு ஆச்ரயமான திருத்தோளை ஸாக்ஷாத்கரித்து,
அதுக்கு ஆச்ரயமான வடிவையும் ஸாக்ஷாத்கரித்து
அவனை ஸம்ச்லேஷ தசையிலே தன் மார்பில் ஏறிட்டுக் கொள்ளுமா போலே வீணையை மார்பிலே ஏறிட்டுக் கொண்டாள்;
“க்ருஹீத்வா ப்ரேக்ஷமாணா ஸா பார்த்து; கர விபூஷணம் – பர்த்தாரமிவ ஸம்ப்ராப்தா ஜாநகீ முதிதாபவத்“
(ஸ்ரீராமாயணம், ஸுந்தரகாண்டம் 3-4.) என்னும் கணக்கிலேயாருற்று இதுவும்.
திருவடி தந்த திருவாழி மோதிரத்தைக் கை நீட்டி வாங்கிக் கண்ட ஸ்ரீராமபிரானையே கண்டதாக மகிழ்ந்தது போல.

தூமுறுவல் நகை இறையே தோன்ற நக்கு =
வீணையை முலை மேல் தாங்கினவாறே அவனையே ஸ்பர்சித்ததாக நினைக்கையாலுண்டான மகிழ்ச்சியால்
பல் வரிசைகள் சிறிதே பிரகாசிக்கும்படி புன் முறுவல் செய்து, ஸுருமாரமாய் இயற்கையாகவே சிவந்துள்ள விரல்கள்
இன்னமும் சிவப்பு மல்கும்படி தந்திக் கம்பிகளை வெருடி அதுக்கு மேலே கிளி போலவும் மிக மிழற்றத் தொடங்கினாள் என்றாளாயிற்று.

என்பேதையே =
என் வயிற்றிற் பிறந்த சிறு பெண் இவையெல்லாம் எங்கே கற்றாள்! என்றவாறு.

தன் வாயாலே திரு நாமத்தை சொல்லி
அது தன்னை வீணையிலே ஏறிட்டு ஆலாபித்தாள்
வீணை முகத்தாலே அவனை சாஷாத் கரித்து
அவனாகவே கொண்டு
சம்ச்லேஷிக்கும் இடத்தில் பண்ணும் வியாபார விசேஷங்களை பண்ணா நிற்க
இவள் உணர்ந்தால் என்னவாய்த் தலைக் கட்டப் போகிறதோ
என்ற இன்னாப்புடன் திருத் தாயார் பேசும் பாசுரம்

கல்லுயர்ந்த நெடு மதிள் சூழ் கச்சி மேய களிறு என்னும்
பிரதிகூலர் அணுக ஒண்ணாதபடி
உள்ளுக் கிடக்கும் யானை யதேச்ச விஹாரம் பண்ண பாங்கான விஸ்தாரம்
நித்யவாசம் செய்யும் மத்த கஜம்
திருப் பாடகத்து நாயனாரை என்பர் பெரியவாச்சான் பிள்ளை
நின்றது எந்தை ஊரகத்து இருந்தது எந்தை பாடகத்து அன்று வெக்கணைக் கிடந்தது
என்று திரு மழிசைப் பிரான் அனுபவித்த படியை இம் மூன்று ஸ்தலத்திலும் அனுபவிக்கிறாள் இவள்
என்று
மேலே நிர்வஹித்து அருளுகையாலே அதற்குப் பொருந்தும்
திருவழுந்தூரில் நின்ற திருக் கோலமும்
திருப் பாடகத்தில் வீற்று இருந்த திருக் கோலமும்
திருப் பாற் கடலிலே பள்ளி கொண்ட திருக் கோலமும்
அனுபவிக்கிறார் என்று
நிர்வகிப்பதில் ஒரு சமத்கார அதிசயம் உண்டே
கடல் கிடந்த கனியே என்னும்
கச்சி மேய களிறு தோன்றின இடம் திருப்பாற் கடல் போலும்
அதிலே பழுத்த பழம்
கண்ட போதே நுகரத் தக்கதும்
புஜிப்பாரை பெறாத போது அழிந்து போவதும்
அப்படிப் பட்ட கனி
பெறாத போது முடியும்படியாய் இருக்கும் எனக்கு முகம் காட்டாது ஒழிவதே

அல்லியம்பூ மலர்ப்பொய்கை பழன வேலி அணி அழுந்தூர் நின்று உகந்த அம்மான் என்றும்
திருவடிகளை நாம் கிட்டினால் உகப்பானும் அவனே
இத்யாதிகளை சொல்லி
சொல்லுயர்ந்த நெடு வீணை முலை மேல் தாங்கி
தடவும் திருக்கையை சாஷாத் கரித்து
அதுக்கு ஆஸ்ரயமான திருத் தோள்களை சாஷாத் கரித்து
அதற்கு ஆஸ்ரயமான திவ்ய வடிவையும் சாஷாத் கரித்து
அவனை தனது மார்பிலே ஏறிட்டு கொள்ளுமா போலே
க்ருஹீத்வா ப்ரேஷமாணா ஸா பர்த்து கர விபூஷணம்
பர்த்தாரம் இவ சம்ப்ராப்தா ஜாநகீ முதிதாபவத் –

தூ முறுவல் நகை இறையே தோன்ற நக்கு
ஸ்பர்சம் அனுசந்தித்த ஹர்ஷத்தாலே பல் வரிசைகள் பிரகாசிக்கும்படி புன் முறுவல் செய்து
விரல்கள் மேலும் சிவக்கும் படி தந்திக் கம்பிகளை வெருடி
அதுக்கு மேலே கிளி போல மிகவும் மிழற்ற தொடங்கினாள்

என் பேதையே
இவை எங்கே கற்றாள்

————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ P.B.A,ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்-
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திரு நெடும் தாண்டகம்-பாசுரங்கள்-6-10- -திவ்யார்த்த தீபிகை —

September 29, 2014

அலம்புரிந்த நெடுந்தடக்கை அமரர் வேந்தன் அஞ்சிறைப்புள் தனிப்பாகன் அவுணர்க் கென்றும்,
சலம்புரிந்தங் கருளில்லாத் தன்மை யாளன் தானுகந்த வூரெல்லாம் தந்தாள் பாடி,
நிலம்பரந்து வரும்கலுழிப் பெண்ணை யீர்த்த நெடுவேய்கள் படுமுத்த முந்த வுந்தி,
புலம்பரந்த பொன்விளைக்கும் பொய்கை வேலிப் பூங்கோவ லூர்த்தொழுதும் போது நெஞ்சே.

பதவுரை

அலம் புரிந்த–போதும் போதும் என்று சொல்லும்படி கொடுக்க வல்ல
நெடு தட கை–நீண்ட பெரிய திருக் கைகளை யுடையனாய்
அமரர் வேந்தன்–நித்ய ஸூரிகளுக்குத் தலைவனாய்
அம் சிறை புள் தனி பாகன்–அழகிய சிறகை யுடைய பெரிய திருவடிக்குத் தனிப்பாகனாய்
அவுணர்க்கு–ஆஸுர ப்க்ருதிகளுக்கு
என்றும்–எக்காலத்தும்
சலம் புரிந்து–சீற்றங்கொண்டிருந்து
அங்கு–அவர்கள் விஷயத்திலே
அருள் இல்லா தன்மை ஆளன் தான்-இரக்க மற்றிருக்கை யாகிற தன்மையை யுடையனான் எம்பெருமான்
உகந்த–திருவுள்ளமுவந்து எழுந்தருளி யிருக்கிற
ஊர் எல்லாம்–திருப்பதிகளிலெல்லாம்
தன் தாள் பாடி–அவனுடைய திருவடிகளைப் பாடி,
நிலம் பரந்து வரும் கலுழி–பூமி முழுதும் வியாபித்து வருகின்ற பெரு வெள்ளத்தை யுடைய
பெண்ணை–பெண்ணை யாறானது
ஈர்த்த-(வெள்ளத்தில்) இழுத்துக் கொண்டுவருகிற
நெடு வேய்கள்-பெரிய மூங்கில்களினின்றும்
படு-உண்டாகிற
முத்தம்-முத்துக்களை
உந்த–வயல்களிலே கொண்டுதள்ள
உந்தி–(உழவர்களாலும் தங்கள் பயிர்க்குக் களையென்று) தள்ளப்பட்டு
புலம் பரந்து–கழனிகளெங்கும் பரவி
பொன் விளைக்கும்–பொன்னை விளைக்குமிடமாயும்
பொய்கை வேலி–நீர் நிலைகளைச் சுற்றிலும் உடையதாயுமுள்ள
பூ கோவலூர்–திருக்கோவலூரை
தொழுதும்–ஸேவிப்போம்;
நெஞ்சே போது–நெஞ்சே! வா.

கீழ்ப்பாட்டில் த்ரிவிக்ரமாவதார வரலாற்றைப் பேசியநுபவித்தார்; அது என்றைக்கோ கழிந்த அவதாரமிறே;
அதற்குத் தாம் பிற்படுகையாலே கண்ணாரக் கண்டு அநுபவிக்கப் பெற்றிலோமே! என்று வருந்தியிருக்க,
இவருடைய வருத்தத்தைக் கண்ட எம்பெருமான்
‘ஆழ்வீர்! அவதாரத்துக்குப் பிற்பட்டவர்களையும் அநுபவிக்கைக்காக வன்றோ நாம் அந்தச் செவ்வியொடே
திருக் கோவலூரில் ஸந்நிதி பண்ணி யிருப்பது; அங்கே வந்து குறையற அநுபவிக்கலாமே‘ என்று,
உலகளந்த திருக் கோலமாக ஸேவை ஸாதிக்கு மிடமான திருக் கோவலூரைக் காட்டிக் கொடுக்க,
‘நெஞ்சே! நமக்கு வாய்த்தது; அநுபவிக்கப் போகலாம், வா‘ என்றழைக்கிறார்.

வழி போவார்க்கு வாய்ப் பாடல் வேண்டுமாகையாலே எம்பெருமானுகந்தருளின நிலங்களாகிய
திருப்பதிகளை யெல்லாம் பாடிக் கொண்டே போக வேணுமென்கிறார் முன்னடிகளில்.

திவ்யதேசங்கள் எப்படிப்பட்டவை? எம்பெருமான் திருவுள்ளம் உவந்து எழுந்தருளியிருக்கப் பெற்றவை.
அவ் வெம்பெருமானுக்கு நான்கு விசேஷணங்கள் இடப்பட்டிருக்கின்றன.

(அலம்புரிந்த நெடுந்தடக்கை)
‘அலம்‘ என்பது வடசொல்; போதும் என்னும் பொருளதான இடைச்சொல்
யாசகர்கள் ‘போதும் போதும்‘ என்று சொல்லும் படியாக அவர்கட்கு அபாரமாகக் கொடுக்க வல்ல
பெரிய கையை யுடையவன் எம்பெருமான்.
தன்னிடத்தில் தானம் பெற்ற பின் வேறொரு வாசலிலே சென்று துவள வேண்டாதபடி பர்யாப்தமாகக் கொடுப்பவனென்க.
புரிதல்-கொடுத்தல்.

இனி, ‘புரிதல்‘ என்று மீளாகைக்கும் போதலால் அப்பொருளும் இங்குக் கொள்ளக்கூடியதே;
பெறுமவர்கள் ‘போதும்‘ என்றவாறு கொடுப்பதினின்று மீண்டாலும் நெடுந்தடக்கையாகவே யிருக்கும்;
உழக்கிலே பதக்கை யடக்க வொண்ணாமையாலே மீளுமித்தனை;
இவன் தன்னுடைய ஔதார்யத்தைப் பார்த்தால் யாசகர்களின் மனோ ரதம் சிறிதாய் இவனுடைய பாரிப்பே விஞ்சியிருக்குமென்பது கருத்து.

(நெடுந்தடக்கை) நெடு, தட என்ற இரண்டு விசேஷணங்களுக்குக் கருத்து என்னென்னில்;
யாசகர்களிருந்த விடத்தளவுஞ் செல்ல நீண்ட கை என்பது நெடு என்றதன் கருத்து;
திருக்கையின் நிழலிலே உலகமெல்லாம் ஒதுங்கினாலும் அவகாசங் கொள்ளும்படியான
பெருமை ‘தட‘ என்றதனாற் சொல்லிற்றாமென்க.

அலம் புரிந்த என்பதற்கு வேறொரு வகையாகவும் பொருள் கொள்ளலாம்;
ஹலம் என்ற வடசொல் கலப்பை யென்று பொருள்படும்; அஃது அலமெனத்திரியும்;
கலப்பையைத் தரித்த திருக் கையை யுடையவன் என்னலாம்.
இதனால் பலராமாவதாரத்தைப் பேசினபடி.
பலராமனுக்குக் கலப்பையும் உலக்கையும் முக்கிய ஆயுதங்கள்.
அதனால் அவ்விராமனுக்கு ‘ஹலாயுதன், ஹனீ, முஸலீ என்ற திருநாமங்கள் வழங்கும்.

அமரர் வேந்தன் =
கீழ் ‘அமரர் வேந்தன்‘ என்று நித்ய ஸூரிகளை இங்கு அமரர் என்கிறது.
நித்ய ஸூரிகளை அடிமை கொள்வதாக முடி கவித்திருப்பவன் என்றவாறு.

(அஞ்சிறைப்புள்தனிப்பாகன்)
கீழ் ‘அமரர் வேந்தன்‘ என்று நித்ய ஸூரிகளை அடிமை கொள்பவனென்று பொதுவாகச் சொல்லிற்று;
அவர்களை அடிமை கொள்ளும் படிக்கு திருஷ்டாந்தமாக ஒரு வ்யக்தியைச் சிறப்பாக எடுத்துப் பேசுகிறார்.
அழகிய சிறகை யுடையனான பெரிய திருவடிக்கு அத்விதீயனான பாகன், கருடவாஹன்ன் என்றபடி.
எம்பெருமான் தன்மீதேசறி உலாவும்போது உண்டாகும் ஆயாஸத்திற்குத் திருவாலவட்டம் பணிமாறினாப் போலே
இரண்டு சிறகாலும் ஆச்வாஸம் செய்கிறபடியைத் திருவுள்ளம் பற்றி ‘அஞ்சிறை‘ என்று புள்ளுக்கு அடைமொழி கொடுக்கப்பட்டது.
அடியார்கள் இருக்குமிடங்களிலே எம்பெருமானைக் கொண்டு சேர்ப்பதற்குச் சிறகுகளே கருவியாதலால் அவற்றைக் சிறப்பித்துக் கூறுகிறபடியுமாம்.

(அவுணர்க்கென்றும் சலம்புரிந்து அங்கருளில்லாத் தன்மையாளன்)
ஸ்ரீராம க்ருஷ்ணாதிரூபேண திருவவதரித்து விரோதிகளைக் களைந்தமை சொல்லுகிறது.
‘அவுணர்‘ என்றது அசுர்ர் என்றபடி. இது அஸுரஜாதியைச் சொல்லுகிறதன்று.
அஹங்கார மமகாரங்களோடு கூடினவர்களாய் பகவத் பக்தியிலே பகை யுள்ளவர்கள் ஆஸுரப்க்ருதிகளென்று
சொல்லப் படுவார்களாதலால் அவர்களையே இங்கு அவுணரென்கிறது.

ப்ரஹ்லாதாழ்வான் அஸுரயோனியிற் பிறந்தவனாயிருக்கச் செய்தேயும்
“உபமாநமசேஷாணாம் ஸாதூநாம்யஸ் ஸதாபவத்“ எனும்படி ஸாதுக்களுக்கு உபமாநமா யிருந்தான்.
விபீஷணாழ்வான் ராக்ஷஸ அஸுரயோநியிற் பிறந்திருக்கச் செய்தேயும் “விபணஷஸ் து தர்மாத்மா“ என்னும்படியாயிருந்தான்.

ஜயந்தன் (காகாஸுரன்) தேவயோநியாயிருக்கச் செய்தேயும் ப்ரஹ்மாஸ்த்ரத்துக்கு இலக்கானான்.
ஆன இப்படிகளை ஆராயுமிடத்து அஸுரத்வமும் தேவத்வமும் ஜாதிபரமன்று, ஸ்வபாவபரம். அதாவது.
“விஷ்ணு பக்திபரோ தேவோ விபரீதஸ் த்தாஸுர“ என்று ஸ்ரீவிஷ்ணு தர்மத்திலே சொல்லிற்று.
“த்வௌ பூதஸர்க்கௌ லோகேஸ்மிந் தைவ ஆஸுர ஏவ ச-தைவீ ஸம்பத் விமோக்ஷாய நிபந்தாயாஸுரீ மதா.“ என்று
பகவத்கீதை யிலே சொல்லிற்று.
எம்பெருமானுடைய ஸ்வரூப குணவிபூதிகளில் அன்புள்ளவர்கள் தேவரெனப்படுவர்கள்,
அவற்றில் பொறாமை யுள்ளவர்கள் அசுரனெப்படுவர்கள்.
“நண்ணவசுர்ர் நலிவெய்த நல்லவமர்ர் பொலிவெய்த“ (10-7-5) என்பன போன்ற விடங்களிலும்
இவ்வகைப் பொருள் அநுஸந்திக்கப்பட்டமை காண்க.
ஆக இப்படிப்பட்ட ஆஸுர ப்ரக்ருதிகள் விஷயத்தில் ஒருநாளும் அநுக்ரஹ மின்றி நிக்ரஹமே செய்து போருமியல்வின்ன் என்றதாயிற்று.

இப்படிப்பட்ட எம்பெருமான் திருவுள்ளமுவந்து எழுந்தருளியிருக்குந் திருப்பதிகளை யெல்லாம் பாடிக் கொண்டே
திருக்கோவலூர் தொழப் போவோமென்கிறார்.
மேல் ஒன்றரையடிகளால் திருக் கோவலூரை விசேஷிக்கிறார்.
(நிலம் பரந்து வருங்கலுழி இத்யாதி.)
பெண்ணையாகிற ஒரு பெண்மணி திருக் கோவலூராயனாராகிற புருஷோத்தமனை அநுபவிக்கப் போகிறாளாகையாலே
அளவற்ற ஆதரந்தோற்றப் பேராரவாரத்தோடே பெருகுகிறபடி.
ஜந்தோஷ மிகுதியாலே கரை மீதே வழிந்து குடியிருப்புக்களை யழித்த, கரையில் நிற்கிற வேய்களை
வேர்ப் பற்றிலே குத்தியெடுத்து இழுத்துக் கொண்டு வர, அந்த வேய்கள் உடைந்து முத்துக்களை ப்ரஸவிக்க,
அவற்றைப் பெண்ணையாறு வயல்களிலே கொண்டு தள்ள,
பயிரிடுமவர்கள் அவை தங்கள் பயிர்க்குக் களைகளென்று தள்ள,
அவர்களாலும் தடைசெய்ய வொண்ணாதபடி வயல்களிலெங்கும் பரந்தனவாம் முத்துக்கள்,
இப்படிப்பட்ட வயல்களிலே பொன் போன்ற நெற்கள் விளையப் பெற்ற பூங்கோவலூரைத் தொழுவோம்,
நெஞ்சே! புறப்படு என்றாராயிற்று.

பொய்கை வேலி என்பதில் தொனிக்கும் அர்த்த விசேஷமும் உணர்க.
பொய்கை யாழ்வார் முதலான முதலாழ்வார்களைக் காப்பாகவுடைய திருக்கோவலூர் என்க.

அவதாரத்துக்கு பிற்பட்டார் உஜ்ஜீவிக்க -திவ்ய தேசங்கள் இருக்க
அமரர் வேந்தன் -அலம் புரிந்த தடக்கைக்கு இலக்கான நித்ய ஸூரிகள் அமரர்
அவர்களை அடிமை கொள்ள முடி கவித்து இருப்பவன் அமரர் வேந்தன்

அஞ்சிறைப் புள் தனிப் பாகன் –
அமரர் அடிமை கொண்டதற்கு ஒரு எடுத்துக் காட்டு
பெறிய திருவடிக்கு அத்விதீயமான பாகன்
ஆயாசத்துக்கு திரு ஆல வட்டம் போலே சிறகுகள்
அடியார்கள் இருக்கும் இடம் அவனை கொண்டு வருவதால் அழகிய அடை மொழி

அவுணர்க்கு என்றும் சலம் புரிந்து அங்கு அருள் இல்லா தன்மையாளன்
அஹங்கார மமகாரங்கள் -பகவத் பக்தியிலே பகை உள்ளவர்கள்
ஸ்ரீ ப்ரஹ்லாத ஆழ்வான் ஆசூர ஜாதியில் இருந்தாலும்
உபமானம் அசேஷாணாம் சாதுநாம் யஸ் சதா பவேத்
ஸ்ரீ விபீஷண ஆழ்வான் விபீஷணஸ் து தர்மாத்மா
ஜெயந்தன் காகாசுரனாய் ப்ரஹ்மாஸ்த்ரத்துக்கு இலக்கானான்
அசூரத்வமும் தேவத்வமும் ஜாதி பரம் அன்று ஸ்வபாவ பரம்
விஷ்ணு பக்தி பரோ தேவோ விபரீதஸ் ததாசூர -ஸ்ரீ விஷ்ணு தர்மம்
த்வௌ பூத சர்க்கௌ லோகேச்மின் தைவ ஆசூர ஏவ ச
தைவீ சம்பத் விமோஷாய நிபந்தாயா சூரி மதா-ஸ்ரீ கீதை

மேலே திவ்ய தேசங்களை பாடிக் கொண்டு திருக் கோவலூர் தொழப் போவோம் என்கிறார்
பெண்ணை ஆறு திருக் கோவலூர் ஆயானாகிய புருஷோத்தமனை அனுபவிக்க
பெரிய ஆதாரத்துடன் பெறுகிற படி
கரை புரண்டு வேய்களை குத்தி எடுத்து
அந்த வேய்கள் உடைந்து முத்துக்கள் பிரவேசிக்க
அவற்றை பெண்ணை ஆறு வயல்களிலே கொண்டு தள்ள
பயிரிடுமவர்கள் அவற்றை களை என்று தள்ள
அவர்களாலும் தடை செய்ய ஒண்ணாதபடி வயல்கள் எங்கும் பரந்தனவாம் முத்துக்கள்
இப்படிப் பட்ட வயல்களிலே பொன் போன்ற நெற்கள் விளையப் பெற்ற
பூம் கோவலரைத் தொழுவோம் நெஞ்சே புறப்பட்டு -என்கிறார்-

————————————————————————–

வற்புடைய வரைநெடுந்தோள் மன்னர் மாள வடிவாய மழுவேந்தி யுலக மாண்டு,
வெற்புடைய நெடுங்கடலுள் தனிவே லுய்த்த வேள்முதலா வென்றானூர் விந்தம் மேய,
கற்புடைய மடக்கன்னி காவல் பூண்ட கடிபொழில்சூழ் நெடுமறுகில் கமல வேலி,
பொற்புடைய மலையரையன் பணிய நின்ற பூங்கோவ லூர்த்தொழுதும் போது நெஞ்சே.

பதவுரை

வற்பு உடைய–மிடுக்குடைய
வரை நெடு தோள்–மலை போன்று உயர்ந்த தோள்களை யுடையரான
மன்னர்–(கார்த்த வீரியார்ஜூனன் முதலான) அரசர்கள்
மாள–முடியும்படி
வடிவு ஆய–அழகியதான
மழு–கோடாலிப் படையை
ஏந்தி–தரித்து (பரசு ராமனாய்த் திருவதரித்தும்)
உலகம் ஆண்டு–(ஸ்ரீராமபிரனாய்) உலகங்களைத் திருக் குணங்களா லீடுபடுத்தியும்
வெற்பு உடைய–மலையை உள்ளே யுடைய
நெடு கடலுள் –பெரிய கடலினுள்ளே
தனி வேல்–ஒப்பற்ற வேற்படையை
உய்த்த–செலுத்தின
வேள் முதலா–ஸுப்ரஹமண்யன் முதலான தேவதைகளை
வென்றான்–(பாணாஸுர யுத்தத்தில்) தோல்வி யடையச் செய்தும் போந்த எம்பெருமான்
ஊர்–எழுந்தருளி யிருக்குமிடமாய்,
விந்தை மேய–(தவம் புரிவதற்காக) விந்தின மலையிலி் வாழ்ந்தவளாய்
கற்பு உடைய–அறிவில் சிறந்தவளாய்
மடம்–பற்றினது விடாமையாகிற குணமுடையனான
கன்னி–துர்க்கையானவள்
கடி பொழில் சூழ்–பரிமளத்தை யுடைய சோலைகளாலே சூழப்பட்டதாய்
நெடு மறுகில்–விசாலமான திருவீதிகளை யுடைத்தாய்
கமலம் வேலி–தாமரைத் தடாகங்களைச் சுற்றிலுமுடைத்தாய்
பொற்பு உடைய மலை அரையன்–பராக்ரம சாலிகளான மலயமாநவர்களாலே ஆச்ரயிக்கப் பட்டதான
பூங்கோவலூர்–திருக் கோவலூரை
நெஞ்சே தொழுதும்–மனமே! தொழுவோம்;
போது–வா

கீழ்ப்பாட்டில் “பூங்கோவலூர் தொழுதும் போது நெஞ்சே!” என்று
திருக் கோவலூரைத் தொழுகைக்காகத் திருவுள்ளத்தை யழைத்தார்;
அவ்விடத்து எம்பெருமான் வஸிஷ்ட சண்டான விபாகமின்றி எல்லார் தலைகளிலும் திருவடியை வைத்த
ஸர்வ ஸ்தானத்தோடே வந்து நிற்கையாலே அதை அநுஸந்தித்து அநுபவத்தை மறந்து அஞ்சத் தொடங்கினார்.
அஸ்தானத்திலும் பய சங்கை பண்ணுகை யன்றோ ஆழ்வார்களின் பணி.

எம்பெருமானுடைய ஸௌந்தர்ய ஸௌகுமார்யாதி குணங்களை அநுஸந்தித்தவாறே இவ் விலக்ஷண வஸ்துவுக்கு
என்ன அவத்யம் வருகிறதோவென்று வயிறு பிடிக்க வேண்டும்படியாயிற்று.
ஸ்ரீவிபீஷணாழ்வான் அநுகூலனாய் வந்து சரணம் புகா நிற்கச் செய்தேயும் ஸுக்ரீவ மஹாராஜர் தம்முடைய கனத்த
ப்ரேமத்தினால் கலங்கி அபாயசங்கை பண்ணினபோது பெருமாள் தம் தோள் வலியைக் காட்டி அச்சந் தவிர்த்தாப் போலே
பிரகிருதத்திலும் திருக் கோவலூராயனார் தம் மிடுக்கையும் காவலுறைப்பையும் தேசத்தினுடைய அரணுடைமையையும்
ஆழ்வார்க்குக் காட்டிக் கொடுக்க, அவற்றையெல்லாங்கண்டு தெளிந்த ஆழ்வார் அச்சங்கெட்டு
“பூங்கோவலூர் தொழுதும் போது நெஞ்சே!” என்று திருவுள்ளத்தைத் தட்டி யெழுப்புகிறார்.

“வற்புடையவரை நெடுந்தோள் மன்னர்மாள வடிவாய மழுவேந்தி” என்ற வளவும் பரசுராமாவதார பரம்.
“உலகமாண்டு” என்றது ஸ்ரீராமாவதாரபரம்.
“வெற்புடைய நெடுங்கடலுள் தனி வேலுய்த்த வேள் முதலா வென்றான்” என்றது ஸ்ரீ க்ருஷ்ண யவதாரத்தில்
பாணாஸுர விஜய பரம். இவை, ஆழ்வாருடைய அச்சங்கெடுக்கைக்கு எம்பெருமான் காட்டித் தந்த மிடுக்குக்களாம்.

வடிவாய மழு = ‘வடிவு ஆய மழு‘ என்று பிரித்தால் அழகியதான மழு என்று பொருள்படும்.
‘வடி வாய மழு‘ என்று பிரித்தால் கூர்மையான வாயையுடைய மழு என்று பொருள்படும்.

உலகமாண்டு =
ஸ்ரீராமபிரானாய்த் திருவவதரித்துத் திருக்குணங்களாலே உலக முழுவதையும் ஈடுபடுத்தி
ஆண்ட படியைச் சொல்லுகிறது இது.

வெற்புடைய நெடுங்கடலுள் தனி வேலுய்த்த வேள் முதலா வென்றானூர் =
முற் காலத்தில் மலைகளெல்லாம் இறகுகளுடன் கூடிப் பறந்து ஆங்காங்க வீழ்ந்து நகரங்களையும் கிராமங்களையும்
அழித்துக் கொண்டு திரியுங்கால் தேவேந்திரன் தனது வஜ்ராயுதத்தினால் அவற்றின் இறகுகளை அறுத்தொழிக்க,
மைநாக மலை அவனுக்குத் தப்பித் தெரியாதபடி கடலினுள்ளே கிடக்க,
தேவஸேநாபதியான ஸுப்ரஹ்மண்யன் அதனையறிந்து தனது வேற்படையைச் செலுத்தி
அம்மலையை நலிந்த வரலாறு இங்கு அறியத்தக்கது.
அப்படிப் பட்ட மஹாவீரனான ஸுப்ரஹ்மண்யன் முதலானாரைப் பாணாஸுர யுத்தத்தினன்று பங்கப்படுத்தினமை சொல்லிற்றாயிற்று.

‘வேள்‘ என்று காமனுக்குப் பேராயிருக்க, ஸுப்ரஹ்மண்யனை வேள் என்றது உவமையாகு பெயர்.
மன்மதனைப் போல் அழகிற் சிறந்தவனென்க.
நம்மாழ்வார் ‘ஆழியெழ‘ என்னுந் திருவாய்மொழியிலே பாணஸுர விஜய வ்ருத்தாந்தத்தைப் பேசும் போது
“நேர்சரிந்தான் கொடிக் கோழி கொண்டான்” என்று ஸுப்ரஹ்மண்யன் தோற்றுப் போனதை முந்துற
அருளிச்செய்கையாலே இவ்வாழ்வாரும் அதனைப் பின்பற்றி ”வேள்முதலா வென்றான்” என்றாரென்க.
”கார்த்திகையானுங் கரிமுகத்தானுங் கனலும் முக்கண் மூர்த்தியும் மோடியும் வெப்பும் முதுகிட்டு” என்ற இராமாநுச நூற்றந்தாதியுங் காண்க.

இனி, திருக்கோவலூர்த் திருப்பதியின் காவலுறைப்பை அருளிச் செய்கிறார் -விந்தைமேய வென்று தொடங்கி.
துர்க்கையானவள் இந்த க்ஷத்திரத்தைத் காவர் செய்து வர்த்திக்கிறாளென்பது இதிஹாஸம்.
பெரிய திருமொழியிலும் (2-10-6) இவ்வூர்த் திருப்பதிகத்தில்
”வியன்கலை யெண்டோளினாள் விளங்குசெல்வச் செறியார்ந்த மணிமாடந் திகழ்ந்து தோன்றுந்
திருக்கோவலூரதனுட் கண்டேனானே” என்றருளிச் செய்தது முணர்க.
இந்தத் துர்க்கையானவள் இவ்விடத்துக் காவல் பூணகைக் குறுப்பாக விந்த்யாடவியிலே யிருந்து தவம் புரிந்தாளென்பதுபற்றி
‘விந்தைமேய‘ எனப்பட்டது. ‘விந்தியம்‘ என்பது விந்தையென மருவிற்று.

கடிபொழில்சூழ் நெடுமறுகில் கமலவேலி =
எங்குப் பார்த்தாலும் நறு மணம் மிக்க சோலையாயிருக்கும்;
திருவீதிகளோ அகல நீளங்களிற் குறையற்றிருக்கும்; தாமரைத் தடங்களும் ஊர்க்கு வேலியாயிருக்கும்.

பொற்புடைய மலையரையன் பணிய நின்ற =
திருவல்லிக்கேணியில் தொண்டையர் கோன் போலவும்,
அட்டபுயகரத்தில் வயிரமேகன் போலவும்,
நந்திபுரவிண்ணகரத்தில் நந்திவருமன் போலவும்,
திருநறையூரில் செம்பியன் கோச் செய்கணான்போலவும்,
திருக்கோவலூரில் ‘மலயமாநவர்‘ என்னும் பிரபுக்கள் தொண்டு பூண்டு உய்ந்தனராக இதிஹாஸம் வழங்குமென்ப.

”மலையரையன்” என்றது ஜாத்யேகவசநமாய்ப் பரம்பரையான அரசர்களைச் சொல்லுகிறதென்பது பெரியவாச்சான் திருவுள்ளம்.
அவ்வரசர்களின் கைங்கரியங்களுக்கு இலக்காயிருக்கும் திருக்கோவலூர்.
ஆக இப்படிப்பட்ட திருப்பதியைச்சென்று தொழுவோம், புறப்படாய் நெஞ்சமே! என்றாராயிற்று.

திருவடியை வசிஷ்ட சண்டாள விபாகம் அற சர்வ ஸ்வதானம் பண்ண அதுக்கு அஞ்சி
அஸ்தான பய சங்கை ஆழ்வார்களின் பணி
சுக்ரீவன் ஸ்ரீ விபீஷண ஆழ்வான் பக்கல் பண்ணிய அதி சங்கைக்கு தனது தோள் வலியைக் காட்டி
அச்சம் தவிர்த்தால் போலே
இங்கு உள்ள காவல் உறைப்பையும் தேசத்தில் உள்ள அரண் உடைமையும் ஆழ்வாருக்கு காட்டிக் கொடுக்க
கண்டு தெளிந்து ஆழ்வார் அச்சம் கேட்டு பூம் கோவலூர் தொழுதும் போது நெஞ்சே -என்று
தமது திரு உள்ளத்தை தட்டி எழுப்புகிறார்

வற்புடைய வரை நெடும் தோள் மன்னர் மாள வடிவாய மழு ஏந்தி -ஸ்ரீ பராசுராம விஜய பரம்
உலகம் ஆண்டு -ஸ்ரீ ராம விஜய பரம்
வெற்புடைய நெடும் கடலுள் தனி வேல் உய்த்த வேள் முதலா வென்றான் -ஸ்ரீ கிருஷ்ண பாணாசூரா விஜய பரம்
ஆழ்வார் அச்சம் தீர அவன் காட்டித் தந்த மிடுக்குகள்

வடிவாய மழு-வடிவு ஆய மழு அழகிதான மழு
வடி வாய மழு -கூர்மையான வாயை உடைய மழு
மைந்நாக மலையை ஸூப்ரஹ்மன்யன் நலிந்த வரலாறு
மன்மதனை போலே அழகு என்பதால் -வேள் -என்கிறாள்
நேர் செறிந்தான் கொடிக் கோழி கொண்டான் -வேள் முதலா வென்றான்
கார்த்திகையானும் கரி முகத்தானும் கனலும் முக்கண் மூர்த்தியும் மோடியும் வெப்பும் முதுகிட்டு

விந்தை மேய –
துர்க்கை தேவதை ஷேத்திர காவல்
வியன்கலை ஒண் தோளினாள் விளங்கு செல்வச் செறி யார்ந்த மணி மாடம் திகழ்ந்து தோன்றும்
திருக்கோவலூர் அதனுள் கண்டேனே -பெரிய திருமொழி
விந்த்யாடவியிலே இருந்து தவம் புரிந்தாள் எனபது பற்றி விந்தை மேய -என்கிறார்
விந்த்யம் எனபது விந்தை என மருவி –

பொற்புடைய மலை யரையன் –
திருவல்லிக்கேணியில்- தொண்டையர் கோன் -போலவும்
திரு அட்ட புயகரத்தில் -வயிரமேகன்- போலவும்
திரு நந்திபுர விண்ணகரத்தில் -நந்தி வருமன் -போலவும்
திரு நறையூரில் -செம்பியன் கோச் செங்கணான் -போலவும்
திருக் கோவலூரில் -மலயமானவர் -பிரபுக்கள் தொண்டு பூண்டு உய்ந்தனர்
மலையரையன் ஜாதி ஏக வசனம்-பரம்பரையான அரசர்கள் – என்றுமாம்-

——————————————————————-

பல திருப்பதிகளையும் வாயாரச் சொல்லிக் கதறுகிறார்-

நீரகத்தாய் நெடுவரையி னுச்சி மேலாய் நிலாத்திங்கள் துண்டகத்தாய். நிறைந்த கச்சி
ஊரகத்தாய், ஒண்துரைநீர் வெஃகா வுள்ளாய் உள்ளுவா ருள்ளத்தாய், உலக மேத்தும்
காரகத்தாய் கார்வானத் துள்ளாய் கள்வா காமருபூங் காவிரியின் தென்பால் மன்னு
பேரகத்தாய், பேராதென் நெஞ்சி னுள்ளாய் பெருமான் உன் திருவடியே பேணி னேனே.

பதவுரை

நீரகத்தாய்-நீரகமென்னுந் திருப்பதியி லுள்ளவனே!
நெடு வரையின் உச்சி மேலாய்–திருவேங்கட மலையினுச் சியிலே நின்றருளினவனே!
நிலாத் திங்கள் துண்டத்தாய்–நிலாத் திங்கள் துண்ட மென்கிற திருப்பதியிலுள்ளவனே!
நிறைந்த கச்சி ஊரகத்தாய்–செழிப்பு நிறைந்த காஞ்சீபுரத்தில் திருவூரகமென்னுந் திருப்பதியிலுள்ளவனே!
ஒண் துறை நீர் வெஃகா உள்ளாய்–அழகிய நீர்த்துறையின் கரையிலே திருவெஃகா வில் திருக்கண் வளர்ந்தருளுமவனே!
உள்ளுவார் உள்ளத்தாய்–சிந்திப்பாருடைய நெஞ்சிலுறைபவனே!
உலகம் ஏத்தும் காரகத்தாய்–உலகமெல்லாம் துதிக்கும்படியான திருக்காரகத்திலுள்ளவனே;
கார் வானத்து உள்ளாய்–திருக்கார்வான மென்னுந் திருப்பதியிலுறைபவனே!
கள்வா-கள்வனே!
காமரு–விரும்பத்தக்கதாய்
பூ–அழகியதான
காவிரியின்–திருக்காவேரியினது
தென் பால்-தென் புறத்திலே
மன்னு-பொருந்தி யிருக்கிற
பேரகத்தாய்-திருப்பேர் நகரில் உறை பவனே!
என் நெஞ்சில் பேராது உள்ளாய்-எனது ஹ்ருதயத்திலே பேராமலிருப்பவனே!
பெருமான்-ஸர்வ ஸ்வாமியானவனே!
உன் திரு அடியே-உனது திருவடிகளையே
பேணினேன்-ஆசைப்படா நின்றேன்.

நீரகத்தாய் =
திருக்கச்சிமாநகரில் திருவூரகமென்று ப்ரஸித்தமான ஸ்ரீ உலகளந்த பெருமாள் ஸந்நிதியிலுள்ள
திருநீரமென்கிற திவ்யதேசம்; அவ்விடத் தெம்பெருமானை விளித்தபடி.
நீரின் ஸ்வபாவத்தை யுடையனான எம்பெருமான் எழுந்தருளியிருக்குந் தலமாதல் பற்றி இத்தலத்திற்கு
நீரக மென்று திருநாமமாயிற்றென்பர்.
நீர்க்கும் எம்பெருமானுக்கும் ஸ்வபாவ ஸாம்யம் பலபடிகளாலுண்டு. அது நமது ஸ்வாதேசார்த்த ஸாகரத்தில் காணத்தக்கது.

நெடு வரையின் உச்சி மேலாய்=
பூ மண்டலத்திலுள்ளார் அநுபவிப்பது மாத்திரமன்றியே மேலுலகங்களில் உள்ளாரும் வந்து அநுபவிக்கலாம்படி
ஓங்கியுள்ள திருமலையிலே நின்றருள்பவனே!
“வானவர் வானவர் கோனொடும் சிந்து பூமகிழந் திருவேங்கடம்“
“வானோர்க்கும் மண்ணோர்க்கும் வைப்பு“
“மந்திபாய் வடவேங்கடமாமலை வானவர்கள் சந்தி செய்ய நின்றான்” என்ற அருளிச் செயல்களறிக.

நிலாத்திங்கள் துண்டத்தாய் =
தொண்டை நாட்டுத் திருப்பதிகள் இருபத்திரண்டினுள் ‘நிலாத் திங்கள் துண்டம்‘ என்பது ஒரு திருப்பதி;
இது பெரிய காஞ்சீபுரத்தில் தேவதாந்தா ஆலயத்தினுள் உள்ளது.

நிறைந்தகச்சியூரகத்தாய்=
ஊரகமென்பது உலகளந்த பெருமாள் ஸந்நிதி.
எம்பெருமான் உரக ரூபியாக இத்தலத்தில் ஸேவை ஸாதிப்பதனால் ஊரகமென்று திருநாமமாயிற்றென்ப.
(உரகம்-ஆதிசேஷன்)
நிறைந்த கச்சி யென்றது
திவ்ய தேசங்களால் நிறைந்த காஞ்சீ ஷேத்ரமென்றபடி.
திருவூரகத் தெம்பெருமான் தன் திருமேனியொளியாலே திருக்கச்சி மாநகர் முழுவதையும்
நிரப்பி யிருக்கும்படியைச் சொல்லிற்றாகவுமாம்.

ஒண்துறை நீர் வெஃகாவுள்ளாய்=
இவ்விடத்திற்குப் பெரியவாச்சான்பிள்ளை வியாக்கியமான வாக்கியங்களின் பரம போக்யதை காண்மின் ;-
“திருவெஃகாவில் அழகிய துறையைப் பற்றிக் கண்வளர்ந்தருளினவனே!.
அல்லாத துறைகளைப் போலன்றியே ஆழ்வார் திருமழிசைப்பிரான் இழிந்து தீர்த்தமாடின துறையாகையாலே
அழகிய துறை யென்கிறது. தத்ஸம்பந்தத்தாலேயிறே அத்துறையைப்பற்றிக் கிடக்கிறது.
(கணிகண்ணன் போகின்றான் காமருபூங்கச்சி, மணிவண்ணா! நீ கிடக்க வேண்டா-
துணிவுடைய செந்நாப் புலவனும் போகின்றேன் நீயுமுன்றன், பைந்நாகப்பாய் சுருட்டிக்கொள்.”-
“கணிகண்ன் போக்கொழிந்தான் காமரூபூங் கச்சி, மணிவண்ணா! நீ கிடக்க வேண்டும் –
துணிவுடைய செந்நாப்புலவனும் போக்கொழிந்தேன் நீயுமுன்றன், பைந்நாகப் பாய்படுத்துக்கொள்.” )
என்ற விடுதிப் பாசுரங்களைத் திருமழிசைப்பிரான் வைபவத்திற்காண்க.
ஆச்ரிதன் போனபோது அவன் பின்னே போயும் அவன் வந்தவாறே வந்து கால்நடை தலைமாடாக் கிடந்தும்
இப்படியிறே அங்குத்தை ஆச்ரித பாரதந்திரிய மிருப்பது.
‘இந்த வூரிலிருக்கும் மானிடர் எத்தவங்கள் செய்தார் கொலோ‘ என்று வைஷ்ணவனிருந்த தேசம்
வைஷ்ணவனுக்கு உத்தேச்யமாயிருக்குமா போலே ஆச்ரித ஸ்பர்சமுள்ளதொருதுறையும் ஈச்வரனுக்கு உத்தேச்யமா யிருக்கிறபடி.

உள்ளுவார் உள்ளத்தாய்! –
காஞ்சீ ஷேத்ரதில் ‘உள்ளுருவாருள்ளம்‘ என்று ஒரு திவ்யதேசம் நிலாத்திங்கள் துண்டம் போலவே
தேவதாந்திர ஆலயத்தின் உள்ளிருப்பதாகவும், அத்தலத்து எம்பெருமானையே இங்கு
‘உள்ளுருவாருள்ளத்தாய்!‘ என விளித்திருப்பதாகவும் பலர் சொல்லிப் போருவதுண்டு ;
இஃது ஆதாரமற்ற வார்த்தையாகும்.
பெரிய வாச்சான்பிள்ளை வியாக்கியானம் இங்ஙனே காணவில்லை யென்பதுந்தவிர,
பிள்ளைப் பெருமாளையங்கார் இயற்றியருளின நூற்றெட்டுத் திருப்பதியந்தாதியில்
உள்ளுவாருள்ள மென் றொரு திருப்பதி பாடல் பெற்றிராமையும் நோக்கத்தக்கது.
தன்னைச் சிந்திப்பவர்களின் சிந்தையிலே கோயில் கொண்டிருக்குமவனே! என்றபடி.
எம்பெருமானுக்கு, பரம பதத்திலும் திருப்பாற்கடலிலும் கோயில் திருமலை பெருமாள் கோயில் முதலான
உகந்தருளின விடங்களிலும் இருப்பதிற் காட்டிலும் மெய்யடியாருடைய ஹ்ருதய கமலத்திலே வாழ்வதே பரமோத்தேச்ய மென்றும்,
ஸமயம் பார்த்து அன்பருடைய நெஞ்சிலே வந்து சேர்வதற்காகவே மற்ற விடங்களில் எம்பெருமான் தங்குகிறானென்றும்
நம் ஆசார்யர்கள் நிர்வஹித்தருள்வது இங்கு உணரத்தக்கது.

உலகமேத்துங் காரகத்தாய் =
காரகமென்கிற திவ்ய தேசமும் திருக்கச்சி மாநகரில் உலகளந்த பெருமாள் ஸந்நிதியினுள்ளடங்கியது.
மேகத்தின் ஸ்வபாவம் போன்ற ஸ்வபாவமுடைய எம்பெருமான் வாழுமிடமாதல் பற்றி இத்தலத்திற்குக்
காரக மென்று திருநாமமாயிற்றென்பர். எம்பெருமானுக்கு மேகத்தோடு ஸாம்யம் பலபடிகளால் உய்த்துணரத்தக்கது.
(இதுவும் நமது ஸ்வாபதேசார்த்த ஸாகரத்தில் விசதம்.)

கார்வானத்துள்ளாய்! =
கார்வானமென்பதும் தொண்டைநாட்டுத் திருப்பதிகளுள் ஒன்று;
இதுவும் உலகளந்த பெருமாள் ஸந்நிதியினுள்ளடங்கிய திவ்யதேசங்கள் நான்கிலொன்று.

கள்வா! =
‘திருக்கள்வனூர்‘ என்கிற திவ்ய தேசத்திலுறைபவனே :
பிறர் அறியாதபடி காரியஞ் செய்பவனைக் கள்வனென்பது;
எம்பெருமானும் ‘இராமடமூட்டு வாரைப்போலே உள்ள பதிகிடந்து ஸத்தையே பிடித்து
நோக்கிக் கொண்டு போருமவனாகையாலே கள்வனென்ப்படுகிறான்.

காமருபூங் காவிரியின் தென்பால் மன்னு பேரகத்தாய்! =
‘திருப்பேர் நகர்‘ என்கிற அப்பக்குடத்தான் ஸந்நிதியில் பள்ளிகொண்டருள்பவனை விளிக்கிறபடி.

பல திருப்பதிகளையும் வாயார சொல்லிக் கதறுகிறார் –
நீரகத்தாய்
திருக் கச்சியில் திரு ஊரகம் -உலகந்த பெருமாள் சந்நிதியில்
உள்ள திரு நீரகம் திவ்ய தேசம்
நீரின் ஸ்வ பாவங்கள் அவனுக்கும் உண்டே
1-பள்ளத்தில் பாயும் -மேட்டில் ஏறுவது அருமை
ஜாதி இத்யாதிகளால் குறைந்தோர் பக்கம்
பாண்டவதூதன் பீஷ்மர் துரோணர் துரியோதனன் விட்டு ஸ்ரீ விதுரர் திரு மாளிகை அமுது செய்து அருளினான்
பள்ளத்தே ஓடி பெரும் குழியே தங்கும் இயல்வு உண்டே
2-நீர் இல்லாமல் கார்யம் இல்லை
லோகோ பின்ன ருசி யாக இருந்தாலும் எல்லாரும் நீரை விரும்புவது போலே எம்பெருமானும்
3-நீருக்கு குளிர்ச்சி இயற்கை– சூடு வந்தேறி
இவனுக்கும் தண்ணளி இயற்கை -சீற்றம் வந்தேறி
நீரிலே நெருப்பு கிளருமா போலே குளிர்ந்த திரு உள்ளத்திலே அபராதத்தாலே சீற்றம் பிறந்தால் -முமுஷூப்படி திவ்ய ஸ்ரீ ஸூக்தி
4- நீர் சுட்டாலும் அதை ஆற்றுவதற்கு நீரே வேணும்
எம்பெருமான் சீறினாலும் அவன் தானே தெளிவு பெற வேணும்
தரு துயரம் தடாயேல் உன் சரண் அல்லால் சரண் இல்லை –
5-நீர் இஷ்டப்படி தேக்கி வைக்கவும் ஓட விடவும் உரியதாய் இருக்கும்
ஆண்டாள் சூடிக் களைந்த மாலையாலே விலங்கிட்டு வைத்து புஜிக்க- நின்றான்
பாண்டவர்களுக்காக கழுத்திலே ஓலை கட்டி தூது நடந்தான்
6-நீர் மற்ற பண்டங்கள் சமைக்க வேணும் –
தனிப்பட தானே குடிக்கவும் தக்கதாய் இருக்கும்
அவனுக்கும் உபாயத்வமும் உபேயத்வமும் இரண்டு ஆகாரங்களும் உண்டே
அவனும் ஸ்வயம் புருஷார்த்தம்
7-அன்னம் போன்றதுக்கு பிரதி நிதி உண்டு
நீருக்கு பிரதிநிதி இல்லையே
குண அனுசந்தானத்தாலும் போது போக்க அரிது
ஒரு நாள் காண வாராயே -அடியேன் தொழ வந்து அருளாயே -என்று பிரார்தித்து பெற்றே தீர வேணும்
8-சோறு உண்ணும் போது நீர் வேணும்
நீர் வேறு ஒன்றை அபேஷிக்காது
உபாயாந்தரங்களுக்கு எம்பெருமான் வேணும்
எம்பெருமான் இதர நிரபேஷன்
உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன்
9-கொள்ளும் பாத்ரங்கள் தார தம்யம் அன்றி நீர் தானே குறைய நில்லாது
எங்கும் நிரம்பவற்று
எம்பெருமானும் கொள்ளக் குறைவிலேன்
வேண்டிற்று எல்லாம் தரும் கோதில் வள்ளல்
கொள்ளக் குறையே அத்தனை
ஐஸ்வர்யம் போதுமே கைவல்யம் போதுமே
10- நீர் ஐந்து வகைப் பட்டு இருக்கும்
பூமிக்கு உள்ள பதுங்கிக் கிடக்கும் நீர் /ஆவரண ஜலம் /பாற் கடல் நீர் /பெருக் காற்று நீர் /தடாகங்களில் தேங்கும் நீர்
அவனும் பர வ்யூஹ விபவ அந்தர்யாமி அர்ச்சை
விடாய்த்தவனுக்கு வேறு இடம் தேடித் போக வேண்டாத படி நிற்கிற இடத்திலே உண்டாய் இருக்கச் செய்தேயும்
கொட்டும் குத்தாலியும் கொண்டு கல்லினால் அல்லது குடிக்கக் கிடையாத பூமிக்குள் பதிந்த நீர் போலே அந்தர்யாமித்வம்
கண்டு பற்ற வேணும் என்று ஆசைப் பட்டவனுக்கு ஹிருதயத்தில் இருக்கச் செய்தேயும்
கண்ணுக்கு விஷயம் அன்றிக்கே அஷ்டாங்க யோகம் யத்னத்தால் காண வேணுமே
விடாய்தவனுக்கு அண்டத்துக்கு வெளியே பெருகிக் கிடக்கிற ஆவரண ஜலம் போலே ஆயிற்று
கண்டு பற்ற வேண்டும் என்று இருக்குமவனுக்கு லீலா விபூதிக்கு அப்பால் உள்ள பரத்வம்
அப்படி அதி தூரஸ்தம் அன்றியே அண்டத்துக்கு உட்பட்டு இருக்கச் செய்தேயும்
விடாய்தவனுக்கு கிட்ட அரிதான பாற் கடல் போலே வ்யூஹம்
சமீஸ்தமாய் இருந்தும் தத் காலத்தில் இருந்தவர்களுக்கு மாத்ரம் உபயோகமாய் யோக்யமாய்
பிற்பட்டார்க்கு அரிதான பெருக்காறு போலே ஆயிற்று விபவம் -ராம கிருஷ்ணாதி அவதாரங்கள்
விடாய்தவனுக்கு விடாய் தீரலாம்படி பெருக்காரிலே தேங்கின மடுக்கல் போலே யாயிற்று
கோயில்களிலும் கிருஹங்களிலும் எங்கும் ஒக்க எல்லார் கண்ணுக்கும் இலக்காம்படி அர்ச்சாவதாரம்
11- நீரானது ஸ்வத பரிசுத்தமாயினும் ஆஸ்ரய வசத்தாலே த்யாஜ்யமும் உபாதேயமும் ஆகும்
அப்படியே தேவதாந்த்ரங்களில் அந்தர்யாமியான எம்பெருமான் த்யாஜ்யனாயும்
கூராழி வெண் சங்கு ஏந்தி உள்ள எம்பெருமான் உபாதேயம்
12-தோண்ட தோண்ட சுரக்கும் நீர்
கொள்ள மாளா இன்ப வெள்ளம் கோதில தந்திடும்
13-நீர் தனக்கு ஒரு பிரயோஜனமும் இன்றியே பரார்த்தமாகவே இருக்கும்
எம்பெருமானுடைய ஆத்மாத்மீயங்கள் எல்லாம் ஆஸ்ரிதர்க்காகவே இருக்கும்
14-நீர் தானே பெய்ய வேணும் அன்றி ஒருவரால் வடிம்பிட்டு பெய்விக்க முடியாது
எம்பெருமான் படியும் அப்படியே
கேவலம் ஸ்வேச்சயை வாஹம் ப்ரேஷை கஞ்சித் கதாசன
15 நீர் கடலில் இருந்து காள மேகம் வழியாக வந்தால் அன்று உபஜீவிக்க உரியது ஆகாது
எம்பெருமானும் சாஸ்த்ரங்களில் இருந்து ஆசார்யர் முகமாகவே வந்தே உபஜீவ்யன் ஆகிறான்
மேகம் பருகின சமுத்ராம்பு போலே நூல் கடல் சொல் இவர் வாயனவாயத் திருந்தினவாறே
சர்வதா சர்வ உபஜீவ்யம் ஆமே
16-வசிஷ்ட சண்டாள விபாகம் அற ஒரே துறையிலே படிந்து குடைந்தாடலாம் நீரில்
நிகரில் அமரர் முனிக் கணங்கள் விரும்பும் திரு வேங்கடத்தானே
கானமும் வானரமும் வேடுமுடை வேங்கடம்
பெரியார் சிறியார் வாசி அற ஆஸ்ரயிக்கலாம்
17-நீர் சிறிது த்வாரம் கிடைத்தாலும் உட் புகுந்து விடும்
எம்பெருமானுக்கு சிறிது வ்யாஜ்யமே போதும்
திருமால் இரும் சோலை மலை என்றேன் என்ன திருமால் வந்து என் நெஞ்சு நிறைய வந்து புகுந்தான்
18-தீர்த்த விசேஷங்களிலே நீருக்கு மகாத்மயம் அதிகம்
எம்பெருமானுக்கு கோயில் திருமலை பெருமாள் கோயில் முதலான திருப்பதிகள் விசேஷம்
19-தாபம் மிக்கவர்கள் நீரை முகத்தில் ஏறட்டு கொள்வது
முதுகில் கொட்டுவது உள்ளில் இழிச்சுவது குடைந்து நீராடுவது
வாக்கினால் கருமம் தன்னால் மனத்தினால் ஸ்ரத்தை தன்னால் வேட்கை மீதூர வாங்கி -எம்பெருமானை விழுங்குவார்கள்
20-நீர் வேண்டியவன் துளி நுனி நாக்கு நனைத்தால் போதும் என்பான்
கூராழி வெண் சங்கு ஏந்தி –ஒரு நாள் காண வாராயே
21-நீரில் சிறிய கல்லும் அமிழும் பெரிய தெப்ப மரமும் மிதக்கும்
ப்ரஹ்மாவாய் இழந்து போதல் இடைச்சியாய் பெற்று விடுதல் செய்யக் காண்போம்
நேரே கடிக் கமலத்துள் இருந்தும் காண்கிலான்
திருவிலேன் ஒன்றும் பெற்றிலேன் எல்லாம் தெய்வ நங்கை யசோதை பெற்றாளே
சிறு மா மனிசர் அமிழ்தலும்
ஊன் மல்கி மோடு பருப்பார் வாய்க்கரையில் நிற்றலும் காண்போம்
இங்கனே பலவும் உண்டே

நெடு வரையின் உச்சி மேலாய்
பூமியில் உள்ளார் மட்டும் அன்றி மேல் உலகத்தோரும் வந்து அனுபவிக்கலாம் படி
வானவர் வானவர் கோனுடன் சிந்து பூ மகிழும் திரு வேங்கடம்
வானோர்க்கும் மண்ணோர்க்கும் வைப்பு
மந்திபாய் வட வேங்கட மா மலை நின்றான் –

நிலா துங்கள் துண்டத்தாய்

நிறைந்த கச்சி ஊரகத்தாய்
திவ்ய தேசங்கள் நிறைந்த கச்சி
திரு ஊரகத்து எம்பெருமான் ஆதி சேஷன் தனது திரு மேனி ஒளியாலே திருக் கச்சி முழுவதும் நிறைத்த என்றுமாம்

ஒண் துறை நீர் வெக்கா வுள்ளாய்
திரு வெக்காவில் அழகிய துறையைப் பற்றி கண் வளர்ந்து அருளினவனே
அல்லாத துறைகளைப் போல் அன்றியே ஆழ்வார் திரு மழிசைப் பிரான் இழிந்து தீர்த்தம் ஆடின துறையாகையாலே அழகிய துறை ஆகிறது
தத் சம்பந்தத்தாலே இறே அத் துறையைப் பற்றிக் கிடக்கிறது
கனி கண்ணன் போகின்றான் –பைந்நாகப் பாயை சுருட்டிக் கொள்
கனி கண்ணன் போக்கு ஒழிந்தான் –பைந்நாகப் பாய் படுத்துக் கொள் –
ஆஸ்ரிதன் போன போது அவன் பின்னே போயும்
அவன் வந்தவாறே கால் கடை தலை மாடாக கிடந்தும்
இப்படி இறே அங்குத்தை ஆஸ்ரித பாரதந்த்ர்யம் இருப்பது
இருந்த ஊரில் இருக்கும் மானிடர் எத்தவங்கள் செய்தார் கொலோ என்று
ஸ்ரீ வைஷ்ணவர் இருந்த தேசம் ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு உத்தேச்யமாய் இருக்குமா போலே
ஆஸ்ரிதர் ஸ்பர்சம் உள்ள துறையும் ஈஸ்வரனுக்கு உத்தேச்யமாய் இருக்கும் படி
வேகவதி –வேகா சேது -வேகவணை –வேகணை -வேகனை-வெக்கணை -வெக்கா மருவி

உள்ளுவார் உள்ளத்துள்ளாய்
ஹிருதய கமலத்தில் வாழ தான் திவ்ய தேச வாஸம்
சிலர் உள்ளுவார் உள்ளம் தேவதாந்திர கோயில் என்றும் அங்குள்ள பெருமாள் என்றும் –
நிலாத் துங்கள் துண்டத்தாய் -என்றும் தப்பாக சொல்வார்கள்

உலகமேத்தும் காரகத்தாய்
மேகம் போன்ற ஸ்வ பாவம் உடையவனே
1-பெய்ய வேண்டிய இடம் அளவும் சென்று பெய்யும்
வந்து அருளி என்நெஞ்சு இடம் கொண்ட வானவர் கொழுந்தே
2- மின்னல் உள்ள காலம் நீர் நிரம்பி இருக்கும்
பிராட்டி உடன் இருந்தால் கிருபா ரசம் விஞ்சி இருக்கும்
இவள் சந்நிதியால் காகம் தலைப் பெற்றது அது இல்லாமையால் ராவணன் முடிந்தான்
3- மொண்ட இடத்திலும் பெய்யும் மேகம்
தனக்கு உபதேசித்தார்க்கும் உபதேசிப்பான்
சித்ர கூடத்தில் வசிஷ்டன் பெருமாள் இடத்திலே சில சூஷ்ம தர்மங்கள் கேட்கப் பெறலாயிற்று
4-பெய்யப் பெறாத காலத்திலே வரைக்கும் மேகம்
நெஞ்சு உலர்ந்து பேசினான் இறே திரௌபதிக்கு ஆபத்திலே நேரிலே வந்து உதவப் பெறாமையாலே
5-இன்ன காலத்தில் மேகம் பெய்யும் என்று அறுதியிட வல்லார் யாரும் இல்லை
வந்தாய் போலே வாராதே வாராதே போலே வருவானே
திரௌபதிக்கு ஆபத்திலே முகம் காட்டாது ஒழிந்தான்
அபேஷியாது இருக்கவே தாவி அன்று உலகம் எல்லாம் தலை விளாக் கொண்டான்
6- வனத்திடை ஏரியாக வெட்டி யாயிற்று நீ மழை பெய்தாக வேணும் என்று வளைப்பிட ஒண்ணாது
பெண்ணுலாம் சடையினானும் பிரமனும் உன்னைக் காண்பான்
எண்ணிலா ஊழி ஊழி தவம் செய்தார் வெள்கி நிற்ப
விண்ணுளார் வியப்ப வந்து ஆனைக்கு அன்று அருளை ஈந்தனன்
7- ஜல ஸ்தல விபாகம் இன்றியே பெய்யும் மழை
வேடன் வேடுவிச்சி பஷி குரங்கு சராசரம்
இடையர் தயிர் தாழி கூனி மாலா காரர் பிண விருந்து
வேண்டி அடிசில் இட்டவர்
அவன் மகன் அவன் தம்பி அரவம் மறையாளன் பெற்ற மைந்தன் -பகவத் விஷயீ காரம் பெற்றவர்கள்
8-மேகம் சரத் காலத்திலே கர்ஜித்து போய் விடும் மழை பெய்யாது பெய்யும் காலத்தில் ஆடம்பரம் அறப் பெய்யும்
எம்பெருமான் குசேலருக்கு அருள் செய்தபடி
9- விராட பர்வ கால ஷேபத்துக்கு வரும் மேகம்
பகவத் விஷய கால ஷேபத்துக்கு வந்து நிற்கும் எம்பெருமான்
ஸ்ரீ சைல தயா பாத்ரம் என்று வந்தான் இறே ஸ்ரீ ரெங்க நாதன் பெரிய ஜீயர் கோஷ்டியிலே
10- சுக்திகளில் பெய்து முத்தாக்கும் மேகம்
அடியாருக்கு இன்ப மாரியாகிய எம்பெருமான் கடாஷ தாரையும்
ஆழ்வார் ஆச்சார்யர்கள் இடத்தே பிரவஹித்து மிக்க பயன் தரும்
11-விண்ணீல மேலாப்பு விரித்தால் போல் மேகங்காள் -இத்யாதிப் படியே தூது விடப்படும் மேகம்
இவனும் இன்னார் தூதன் என நின்றான்
கோதை வேலை ஐவர்க்காய் மண்ணகலம் கூறிடுவான் தூதனாய் மன்னவனால் சொல்லுண்டான் இறே
12-மழை பெய்ய எல்லா மரங்களும் தளிர்க்கும்
எருக்கலை போல்வன வீழ்ந்து ஒழியும்
கஞ்சன் நாள் கவர் கரு முகில் எந்தாய்
தாயார் மகிழ ஒன்னார் தளர
13- எத்தனையும் வான் மறந்த காலத்தும் பைங்கூழ்கள் பைத்து எழுந்த மா முகிலே பார்த்து இருக்கும் -வேறு புகல் அற்று
களைவாய் துன்பம் களையாது ஒழிவாய் களை கண் மற்று இலேன் -அநந்ய கதிகளால்
14-துப்பார்க்கு துப்பாய துப்பாக்கித் துப்பார்க்கு துப்பாய தூவும் மழை -என்கிறபடி
அன்னத்தின் அபிவிருத்திக்கு ஹேது வாகையாலே போக ஸ்தானமாயும்
விடாய் தீர பருகுகையாலே ஸ்வயம் போக்யமாயும் இருக்கும்
பிராப்யனும் பிரபகனுமாய் இறே இவனும் இருப்பது
15-எத்தனை கண்ணீர் விட்டாலும் விருப்பம் இல்லாத அன்று வாளா இருக்கும் மேகம்
பரதாழ்வான் பலருடன் சித்ர கூட பரிசரத்திலே போந்து கண்ணநீரை விழ விட்டு வேண்டினவிடத்தும்
ஸ காம மன வாப்யைவ -என்று மநோ ரதம் பெறாமல் வீண்டான் இறே

கார் வானத்துள்ளாய்
மேகத்தின் ஸ்வபாவ விசேஷங்கள் இத்தலத்து எம்பெருமான் இடமும் உள்ளன

கள்வா
பண்டே யுன் தொண்டாம் பழ உயிரை என்னது என்று
கொண்டேனைக் கள்வன் என்று கூறாதே
மண்டத்தோர் புள் வாய் பிளந்த புயலே உனைக் கச்சிக் கள்வா
என்று ஓதுவது என் கண்டு

காமரு காவிரியின் தென்பால் மன்னு பேரகத்தாய்
திருப் பேர் நகர்
சிலர் காவிரியின் தென் பால் விசேஷணம் பார்க்காமல் பேரகம்-உலகளந்த பெருமாள் என்பர்

——————————————————————-

எம்பெருமானே! நீ திருப்பதிகளில் கோயில் கொண்டிருக்குமழகையும்
அஹங்காரிகளுக்கும் திருமேனியிலே இடங்கொடுத்திருக்கும் சீலத்தையும்
வாய் வெருவிக் கொண்டு திரிவேன் நான் என்கிறார்–

வங்கத்தால் மாமணிவந் துந்து முந்நீர் மல்லையாய் மதிள்கச்சி யூராய். பேராய்,
கொங்கத்தார் வளங்கொன்றை யலங்கல் மார்வன் குலவரையன் மடப்பாவை யிடப்பால் கொண்டான்,
பங்கத்தாய் பாற்கடலாய் பாரின் மேலாய் பனிவரையி னுச்சியாய் பவள வண்ணா,
எங்குற்றாய் எம்பெருமான் உன்னை நாடி ஏழையேன் இங்கனமே ஊழி தரு கேனே.

பதவுரை

வங்கத்தால்–கப்பல்களினால்
மா மணி–சிறந்த ரத்னங்களை
வந்து–கொண்டு வந்து
உந்து-தள்ளுமிடமான
முந்நீர்-கடற்கரையிலுள்ள
மல்லையாய்–திருக்கடன் மல்லையில் வாழ்பவனே!
மதிள் கச்சி ஊராய்–மதிள்களை யுடைய திருக்கச்சிப்பதியில் (திருவெஃகாவில்) உறைபவனே!
பேராய்-திருப்பேர் நதராளனே!
கொங்குஆர்–தேன் நிறைந்ததும்
வளம்–செவ்வி பெற்றதுமான
கொன்றை அலங்கல்- கொன்றை மாலையை
மார்வன்-மார்விலே யுடையனும்
குலம் வரையின் மடப்பாவை இடப்பால் கொண்டான்-பர்வதராஜ புத்ரியான பார்வதியை இடது பக்கமாகக் கொண்டவனுமான சிவபிரானை
பங்கத்தாய்-(வலது) பக்கத்திலுடையவனே!
பால் கடலாய்-திருப்பாற்கடலில் கண்வளர்ந்தருள்பவனே!
பாரின் மேலாய்-ராமக்ருஷ்ணாதிருபேண அவதரித்து) பூமியில் ஸஞ்சரித்தவனே!
பனி வரையின் உச்சியாய்-குளிர்ச்சியே வடிவான திருமலையினுச்சியில் நிற்பவனே
எங்கு உற்றாய்-எங்கிருக்கிறாய்?
பவளவண்ணா-திருப்பவள வண்ணனே!
எம்பெருமான்-எம்பிரானே!
ஏழையேன்-மிகவும் சபலனாகிய அடியேன்
உன்னை நாடி –உன்னைத் தேடிக்கொண்டு–
இங்ஙனமே -இவ்வண்ணமாகவே–
உழிதருகேன்–அலைச்சல் படாநின்றேன்.

(வங்கத்தால் மாமணி வந்துந்து முந்நீர் மல்லையாய் மதிட்கச்சியூராய்)
பரவாஸுதேவனாகிய ஒரு சிறந்த விலையுயர்ந்த ரத்னத்தை அவனது வாத்ஸல்யமென்கிற ஒரு கப்பலானது
(த்வீபாந்தரத்தில் நின்றும் த்வீபாந்தரத்திற்குச் சரக்குகளைக் கொண்டு தள்ளுவது போல)
திருக்கடல் மல்லை யென்கிற ஒரு தீவிலே கொணர்ந்து தள்ளிற்றாம்;

“கானத்தின் கடல் மல்லை“ என்றபடி காட்டு நிலமாகிய அவ்விடத்திலே அந்த ரத்னத்தைப் பேணுவார் இல்லாமையாலும்
ரத்னம் விலை போவது மஹா நகரங்களிலாகையாலும் அந்தக் கப்பலானது அந்த ரத்னத்தை அங்கிருந்து கொணர்ந்து
காஞ்சீபுரத்திலே திருவெஃகாத்துறையிலே தள்ளிற்றாம்- என்றிப்படி சமத்காரமாகச் சொல்லும் விசேஷார்த்தம் உணரத்தக்கது.
ஆழ்வார் தாமும் இவ்வர்த்தத்தைத் திருவுள்ளம் பற்றியே பெரியதிருமொழியில்
திருக்கடல்மல்லைப் பதிகத்திலும் ”கச்சிக்கிடந்தவனூர் கடன்மல்லைத் தலசயனம்” என்றருளிச் செய்தது.

புண்டரீகர் என்கிற ஒரு பரம பக்தர், கடலின் இக்கரையிலே ஒரு பெரியதோட்டம் ஏற்படுத்தி
அதில் சிறந்த புஷ்பங்களை யுண்டாக்கி அவற்றைத் தொடுத்தெடுத்துக் கொண்டு போய் எம்பெருமானுக்கு
ஸமர்க்கிக்க வேணுமென்று பாரித்தார்; கடலைக்கடந்து செல்ல வேண்டியிருந்தமையால் இக்கடலைக் கையாலிறைத்துவிட்டு
வெறுந்தரையாக்கி நடந்தே செல்லுவோமென்று துணிந்து கடலை இறைக்கத் தொடங்கவே,
எம்பெருமான் அவருடைய ஆதராதிசயத்தைக் கண்டு வியந்து உவந்து, தானே கடற்கரையிலே ஓடி வந்து
அவரது தோப்பிலே தலைக்கிடை கிடந்து அவருடைய வழிபாடுகளை ஸ்வீகரித்தருளினன் என்பது
திருக்கடல்மல்லைத் தலசாயிப் பெருமாளைப் பற்றின புராண வரலாறு.

பேராய்!=
பேரில் உள்ளவன் பேரான்; பேராய் என்பது விளி; திருப்பேர் நகரிலுள்ளவனே! என்றபடி.

(கொங்கத்தார் இத்யாதி)
கொன்றை மாலையை யணிந்த மார்வை யுடையவனும் பார்வதியைத் தனக்கு மனைவியாகக் கொண்டவனுமான
ருத்ரனைத் தனது திருமேனியின் ஒரு புறத்திலே இடங்கொடுத்து இருத்தியிருக்குமவனே! என்றபடி.

“கொங்கத்தார்“ என்ற பாடத்தில்
‘கொங்கு அத்து ஆர்‘ என்று பிரித்து ‘அத்து‘ என்பதைச் சாரியையாகக் கொள்ள வேணும்.
‘கொங்குத்தார்‘ என்ற பாடத்தில்,
கொங்கு- தேனையும், தார்-பூக்களையும், வளம்-அழகையுமுடைத்தான, கொன்றை யலங்கல்- என்றுரைத்துக்கொள்க.
பங்கத்தாய்=‘பங்கு‘ என்று பார்ச்வத்திற்குப் பெயர்; திருமேனியின் கூறு. பங்கில் உடையவன்-பங்கத்தான்; அதன் விளி்.

பாற்கடலாய்=
அஹங்காரியான ருத்ரனுக்குத் திருமேனியில் இடங்கொடுத்தவளவேயோ?
பிரமன் முதலானோர்க்கு ஓர் ஆபத்து வந்தபோது ரக்ஷகரான நாம் நெடுந்தூரத்திலிருக்க வொண்ணாதென்று
பரமபதத்தில் நின்றும் திருப்பாற்கடலிலே வந்து திருக்கண் வளர்ந்தருளுகிறவனே!.

பாரின்மேலாய்=
அஸுரர்களாலும் ராக்ஷஸர்களாலும் குடியிருப்பிழந்து ஸகல தேவதைகளும் வந்து சரணம் புக,
ராமக்ருஷ்ணாதி ரூபத்தாலே தன்னை அழியமாறி வந்தவதரித்து இப்பூமண்டலத்தின்கண் உலாவினவனே! என்கை.

பனிவரையினுச்சியாய்!=
ஸம்ஸாரதாபத்தை ஆற்றும்படியான குளிர்ச்சி பொருந்திய திருவேங்கட மலையினுச்சியிலே வாழ்பவனே!.

பவளவண்ணா!=
பவளம் போல் விரும்பத் தகுந்த்தான வடிவுபடைத்தவனே! என்பது மாத்திரம் இதற்குப் பொருளன்று;
கச்சிமாநகரில் ‘திருப்பவள வண்ணம்‘ என்னுந் திருப்பதியிலுறைபவனே! என்கிறைவரையில் பொருளாகக் கொள்ளத்தக்கது.
இது பெரிய வாச்சான்பிள்ளை வியாக்கியானத்தில் விளங்கக் கிடக்கின்ற தில்லையே யென்று சிலர் நினைக்கக் கூடுமேலும்
இங்ஙனே பொருள் கொள்ள வேண்டிய அவசியத்தை விளக்குவோம்;-
பிள்ளைப் பெருமாளையங்கார் இயற்றியருளிய நூற்றெட்டுத் திருப்பதியந்தாதியில் (86)
“கண்டறிந்துங் கேட்டறிந்துந் தொட்டறிந்துங் காதலால், உண்டறிந்து மோந்தறிந்து முய்யனே-
பண்டைத் தவளவண்ணா கார்வண்ணா சாம வண்ணா! கச்சிப், பவள வண்ணா! நின்பொற்பதம்‘ என்ற செய்யுளினால்
கச்சிமாநகரிலுள்ள திருப்பதிகளுள் திருப்பவள வண்ணம் ஒன்றாகப் பாடப்பட்டுள்ளது;
பெரியவாச்சான் பிள்ளைக்கு முற்பட்டவரும் பட்டர் திருவடிகளிற் பணிந்துய்ந்தவரும் ஆப்த தமருமான
அத்திவ்யகவியின் திருவுள்ளத்தைத் தழுவிச்செல்ல வேண்டுவத நமக்கு இன்றியமையாததாம்.
திருமங்கையாழ்வாருடைய இப்பாசுரத்திலுள்ள ‘பவளவண்ணா!‘ என்கிற விளியைக் கொண்டே
ஐயங்கார் அச்செய்யுள் இயற்றியருளின ரென்பது மறுக்கத்தக்கது.

(எங்குற்றாய் இத்யாதி.)
அடியார்களுக்காகவே திருப்பதிகளில் ஸந்நிதி பண்ணியிருந்தும் பாவியேனுக்குத் தோற்றா தொழிவது என்னோ;
“வருந்தி நான் வாசக மாலை கொண்டு, உன்னையே யிருந்திரந்து எத்தனை காலம் புலம்புவனே” என்றாற்போலே
உன்னைக் கூவிக் கூவிக் கதறுவதே எனக்குப் பணியாயிற்றே!, என்படியைக் கண்டாயோ;
இன்னமும் இரங்கியருளத் திருவுள்ளமில்லையோ? என்றாராயிற்று.

நீ திருப்பதிகளில் கோயில் கொண்டு இருக்கும் அழகையும்
அஹங்காரிகளுக்கும் உனது திருமேனியில் இடம் கொடுத்து கொண்டு இருக்கும் சீலத்தையும்
வாய் வெருவிக் கொண்டு திரிவேன்

வங்கத்தால் மா மணி வந்துந்து முந்நீர் மல்லையாய் மதிட்கச்சி ஊராய்
சிறந்த ரத்னத்தை வாத்சல்யம் என்கிற கப்பல் -கானத்தின் கடல் மல்லை-கடல் மலை தீவிலே தள்ள
விலை போவது மகா நகரங்களில் -என்பதால் அந்த கப்பல் திரு வெக்கா துறையிலே தள்ளிற்றாம்
கச்சிக் கிடந்தவனூர் கடன்மல்லைத் தல சயனம் -பெரிய திருமொழி

பேராய்
திருப் பேர் நகரில் உள்ளவனே

கொங்கத் தார் இத்யாதி
வலத்தனன் திரிபுரம் எரித்தனன்
பச்யை காதச மே ருத்ரான் தஷிணாம் பார்ச்வம் ஆச்ரிதான் -மோஷ தர்மம்
தபஸா தோஷிதஸ் தேன விஷ்ணு நா ப்ரப விஷ்ணு நா ஸ்வ பார்ச்வே தஷினே சம்போர் நிவாஸ பரிகல்பித
ஏறாளும் இறையோனும் திசை முகனும் திரு மகளும் கூறாளும் தனி உடம்பன்
பிறை தங்கு சடையானை வலத்தே வைத்து
சர்வ காலமும் இவர்கள் எம்பெருமானுடைய திருமேனியிலே இருப்பார்களோ என்னில்
ஆபத்துகளிலே திரு மேனியிலே இடம் கொடுத்து கொண்டு அருளும்
அது மகா குணம் ஆகையாலே ஆழ்வார்கள் எப்போதும் ஒக்க அருளிச் செய்து கொண்டு போருவர்கள்
சாமாந்தர்க்கு புறம்பே நாடுகள் கனக்க உண்டாகிலும்
மாளிகைக்கு உள்ளே செம்பாலே நாழி அரிசியை
தங்களுக்கு வரிசையாக நினைத்து இருப்பார்கள் இறே
அப்படியே இவர்களும் திரு மேனியில் பண்ணி வைத்து இருக்கும் பிராப்தி விடார்கள் இறே
ஒரோ கலஹங்களிலே அடைய வளைந்தனுக்கு உள்ளே குடி வாங்கி இருந்து
கலஹம் தீர்ந்தவாறே புறம்பே புறப்பட்டாலும்
இவ்விடம் இன்னார் பற்று என்று பின்னும் பிராப்தி சொல்லி வைக்குமா போலே

பவள வண்ணா
விரும்பத் தக்க வடிவு திருப் பவள வண்ணன்
பிள்ளை பெருமாள் ஐயங்கார்
கண்டறிந்தும் கேட்டறிந்தும் தொட்டறிந்தும் காதலால்
உண்டறிந்து மோந்தறிந்தும் உய்யேனே பண்டைத்
தவள வண்ணா கார்வண்ணா சாம வண்ணா கச்சிப் பவள வண்ணா நின் பொற்பாதம்

எங்குற்றாய்
வருந்தி நான் வாசக மாலை கொண்டு உன்னையே இருந்து இருந்து எத்தனை காலம் புலம்புவனே
இரங்கி அருள திரு உள்ளம் இல்லையா

——————————————————————-

எம்பெருமானே! பலபடிகளாலும் உன்னைச் சொல்லிக் கதறுவதொழியப் பிறிதொன்றுமறியேன் என்கிறார்-

பொன்னானாய். பொழிலேழும் காவல் பூண்ட புகழானாய் இகழ்வாய தொண்ட னேன்நான்,
என்னானாய்? என்னானாய்? என்னல் அல்லால் என்னறிவ னேழையேன், உலக மேத்தும்
தென்னானாய் வடவானாய் குடபா லானாய் குணபால தாயினாய் இமையோர்க் கென்றும்
முன்னானாய் பின்னானார் வணங்கும் சோதி திருமூழிக் களத்தானாய் முதலா னாயே.

பதவுரை

உலகம் ஏத்தும்-உலகமடங்கலும் துதிக்கத் தக்க தென் திருமாலிருஞ்சோலை மலையில் நின்ற யானை போன்றவனே!
வட ஆனாய்-வட திருவேங்கடத்தில் நின்ற யானை போன்றவனே!
குட பால் ஆனாய்–மேற்றிசையில் (கோயிலில் திருக் கண் வளர்ந்தருளுகிற) யானை போன்றவனே!
குண பால மதம் யானாய்–கீழ்த் திசையில் (திருக் கண்ணபுரத்தில்) மத யானை போன்றவனே!
என்றும்–எக் காலத்திலும்
இமை யோர்க்கு முன்னானாய்-நித்ய ஸூரிகளுக்குக் கண்ணாற் கண்டு அநுபவிக்கலாம்படி முன்னிறபவனே!
பின்னானார் வணங்கும் சோதி–அவதாரத்திற்குப் பிற்பட்டவர்கள் ஆச்ரயிக்கத் தக்க சோதியாக
திருமூழிக் களத்து ஆனாய்–திருமூழிக் களம் முதலிய திருப்பதிகளிலுறைபவனே!
முதல் ஆனாய்–முழுமுதற் கடவுளே!
பொன் ஆனாய்–பொன் போன்றவனே!
பொழில் ஏழும் காவர் பூண்ட புகழ் ஆனாய்–ஸப்த லோகங்களையுங் காத்தருள்வதால் வந்த புகழுடையவனே!
இகழ்வு ஆய தொண்டனேன் ஏழையேன் நான்–இகழ்வையே வடிவாகவுடைய தொண்டனாய் அறிவிலியான நான்
என் ஆனாய் என் ஆனாய் என்னால் அல்லால்–என்னுடைய யானையே! என்னுடைய யானையே!, என்று சொல்லுமித்தனையல்லது
என் அறிவன்-வேறு என்ன வென்று சொல்ல அறிவேன்?

பொன்னானாய்! =
பொன் போன்றவனே! எம்பெருமானைப் பொன்னாகக் கூறுவதற்குப் பல பொருத்தஞ் சொல்லலாம்;
அதாவது-
பொன்னானது தன்னைப் பெற்றவர்களையும் பெற விருப்பமுடையாரையும் இரவும் பகலும் கண்ணுறங்க வொட்டாது;
எம்பெருமான் படியும் அப்படியே;
“கண்ணாரக்கண்டு கழிவதோர் காதலுற்றார்க்கு முண்டோ கண்கள் துஞ்சுதலே” என்கிறபடியே
காண்பதற்கு முன்பு முமுக்ஷுக்களை உறங்கவெட்டான்;
கண்ட பின்பும் * ஸதாபச்யந்தி யாகையாலே நித்ய முக்தர்களை உறங்கவொட்டான்.
பொன்னானது தன்னையிழந்தவனைக் கதறிக் கதறி யழப் பண்ணும்;
எம்பெருமானுமப்படியே: ஸ்ரீராமபிரானை யிழந்த பரதாழ்வான் ஸபையிற் புரண்டு கதறிழுதமை ஸ்ரீராமாயணாதிப்ரஸித்தம்.
“பழுதே பலபகலும் போயின” வென்று கதறியழுவர் விவேகமுடையார்.
“இன்பத்தை யிழந்த பாவியேனெனதாவி நில்லாதே”
“எழில்கொள் நின் திருக்கண்ணினை நோக்கந் தன்னையுமிழந்தேனிழந்தேனே”
“உன்னைக் காண்பான் நானலப்பாய் ஆகாசத்தை நோக்கியழுவன் தொழுவனே” என்றிப்படியெல்லாங் கதறுவர்கள்.
பொன்னானது தன்னையுடையவனை மார்பு நெறிக்கப் பண்ணும்; தன்னை யுடையவனை மார்பு நெறிக்கப் பண்ணும்;
எம்பெருமானுமப்படியே; “எனக்காரும் நிகரில்லையே”
“மாறுளதோவிம்மண்ணின் மிசையே”
“எனக்கென்னினி வேண்டுவதே”
“இல்லையெனக் கெதிரில்லையெனக் கெதிரில்லையெனக் கெதிரே” என்று செருக்கிப் பேசுவார்களிறே எம்பெருமானையுடையார் –
இங்ஙனே மற்றும் பல உவமைப் பொருத்தங்கள் கண்டுகொள்க.

பொழிலேழுங் காவல்பூண்ட புகழானாய் =
ஏழுலகங்களையும் ஆளிட்டு ரக்ஷிக்கை யன்றியே தானே முன்னின்று ரக்ஷிப்பதனால் வந்த புகழ் படைத்தவனே!.
‘காவல் பூண்ட‘ என்றதனால் காத்தல் தொழிலைத் தனக்கு ஒரு அணிகலனாகப் பூண்டிருப்பனென்கிறது.
ஸ்ரீவிபீஷணாழ்வான் கடற்கரையிலே வந்து சரணம் புகுந்த போது ஸுக்ரீவ மஹாராஜர் முதலானார் இவனை
ரக்ஷித்தருளலாகாதென்று தடை செய்த விடத்தும் ஒரு தலை நின்று ரக்ஷித்தே தீரும்படியான விரதம் பூண்டவனிறே எம்பெருமான்.

(இகழ்வாய தொண்டனேன் நான் என்னானாப் என்னானாப் என்னலல்லால் என்னறிவனேடையேன்?)
‘இகழ்வாய்‘ என்பதை, ‘இகழ்வு ஆய‘ என்றும் ‘இகழ் வாய‘ என்றும் பிரிக்கலாம்;
அடைவே, நீசனாகிய என்றும்,
இகழத் தக்க வாய் மொழியை யுடையேனான என்றும் பொருள் காண்க.
தண்ணீர்க்குடமெடுக்கும் தாஸியொருத்தி ஸார்வ பௌமனை ஆசைப் படுதல் போலவும்
பிச்சை யாண்டி பட்டாபிஷேகத்தை விரும்புதல் போலவுமன்றோ நித்ய ஸம்ஸாரியான நான் உன்னை ஆசைப்படுகிறது என்கிறார்.

(என் ஆனாய்! என் ஆனாய்!)
ஆனை என்பது ஈறு திரிந்த விளியாய் ‘ஆனாய்‘ என்றாயி்ற்று;
‘என்னுடைய மத்த கஜமே! என்னுடைய மத்த கஜமே!‘ என்று ஏதோ வாய் வெருவுகின்றேனத்தனை யொழிய
ஸாதநாநுஷ்டானமாகச் சொல்லும் முறைமை யொன்றுமறியே னென்றவாறு.

யானைக்கும் எம்பெருமானுக்கும் பலபடிகளாலே ஸாம்யமுண்டு;- அது நமது ஸ்வாபதேசார்த்த ஸாகரத்தில் விரியும்.

(உலகமேத்தும் தென்னானாய் இத்யாதி.)
“திருமங்கை மன்னன் கட்டின திக்கஜங்களிருக்கிறபடி“ என்ற வியாக்கியான ஸ்ரீஸூக்தியின் போக்யதை காண்க.
தென் திசைக்காகத் திருமாலிருஞ்சோலை மலையிலும், வட திசைக்காகத் திருவேங்கடமலையிலும்,
மேற்றிசைக்காகத் திருவரங்கம் பெரிய கோயிலிலும், கீழ்த் திசைக்காகத் திருக்கண்ணபுரத்திலும்
மத யானைபோலே விளங்குகிறபடியை அநுஸந்தித்தாராயிற்று.
தென்னானை, வடவானை, குடபாலானை, குணபால மதயானை என்ற பதங்கள் விளியுருபு ஏற்றுக் கிடக்கின்றன.

“குணபால மதயானாய்” என்கிற விடத்திற்கு
காட்டு மன்னார் ஸந்நிதியிலுள்ள மன்னனார் பரமான வியாக்கியானமுமுண்டு.

‘உலகமேத்தும்‘ என்கிற அடைமொழி நான்கு யானைகளுக்கும் அநவயிக்கும்.

(இமையோர்க்கு என்றும் முன்னானாய்)
நித்ய ஸூரிகளுக்கு எஞ்ஞான்றும் கண்முன்னே தோற்றி அவர்களுக்கு நித்ய தர்சந விஷய பூதனானவனே!

பின்னானார் வணங்குஞ்சோதி திருமூழிக்களத்தானாய்! =
திருமூழிக்களமென்றது உபலக்ஷணமாய் அர்ச்சாவதார ஸாமாந்ய வாசகமாய் நிற்கும்.
பரத்வத்திலும் வ்யூகத்திலும் விபவங்களிலும் அந்தர்யாமித்வத்திலும் அந்வயிக்கப் பெறாதவர்கள்
இங்குப் பின்னானார் எனப்படுகின்றனர்;
அன்னவர்கட்காகத் திருமூழிக்களம் முதலான அர்ச்சாவதார நிலங்களிலே திருக்கோயில் கொண்டெழுந்தருளி யிருக்குமவனே!.
திருமூழிக்களமென்பது மலைநாட்டுத் திருப்பதிகள் பதின்மூன்றில் ஒன்று.
இத்திருப்பதியைப் பாடினோர் இவ்வாழ்வாரும் நம்மாழ்வாருமே.
இருவரும் இப்பதியைப் பற்றிப் பேசுமிடங்களில்
‘திருமூழிக் களத்துறையு மொண் சுடர்‘ என்றும்
‘முனியே திருமூழிக்களத்து விளக்கே” என்றும்
“மூழிக்களத்து விளக்கினை” என்றும் சுடர்ப் பொருளாக அருளிச் செய்தல் குறிக் கொள்ளத் தக்கது:
அவ்வாறே இங்கும் “பின்னானார் வணங்குஞ் சோதி திருமூழிக்களம்” எனப்பட்டது.

எம்பெருமானுடைய திருக்கல்யாண குணங்களுள் ஸௌலப்யம் சிறந்தது;
அத் திருக்குணம் இருட்டறையில் விளக்குப் போலே பிரகாசிப்பது அர்ச்சாவதாரத்திலே;
அது தன்னிலும், கேவலம் அறிவிலிகளானவர்கட்கே காட்சி தருமிடமாகிய திருமூழிக்களத்தில்
அக்குணம் மிகமிக வொளிப்பெற்று விளங்குதலால்
‘ஒண்சுடர்‘ என்றும்
‘விளக்கு‘ என்றும்
‘சோதி‘ என்றும் இத் திருப்பதிக்குச் சிறப்பாகச் சொல்லுதல் ஏற்குமென்ப.
ஸகல ஜாதிகளிலும் பிற்பட்டவர்களைப் பின்னானார் என்கிற சொல்லாற் கொள்ளவுமாம்.
அர்ச்சாவதாரங்களில் புறப்பாடு வியாஜத்தினால் மிகத் தண்ணியர்களுக்கும் காட்சி தருவதுண்டே.

பல படிகளாலும் உன்னை பாடி கதறுவது ஒழிய பிரித்து ஒன்றும் இல்லையே -என்கிறார்

பொன்னானாய்
தீயில் சுட்டு –உளியை இட்டு வெட்டி -உரை கல்லிலே உரைத்தாலும்
பரம போக்யமாக ஒளி விஞ்சி காட்டும்
குந்து மணி உடன் ஒக்க நிறுத்து பார்ப்பதே வருந்துமாம்
இன்னார் தூதன் என நின்றாலும்
வெண்ணெய்க்கு அன்று ஆய்ச்சி வன் தாம்புகளால் புடைக்க அலர்ந்தானை

பொழில் ஏழும் காவல் பூண்ட புகழானாய்
ரஷகம் ஆபரணம்
மம வ்ரதம் என்றானே கடல்கரையிலே

இகழ்வாய தொண்டனேன்
இகழ்வு ஆய -நீசனாகிய
இகழ் வாய -இகழத் தக்க வாய் மொழியை உடையவன்
நித்ய சம்சாரி உன்னை ஆசைப்படுவதே

என் ஆனாய் என்னுடைய மத்த கஜம் என்றே வாய் வெருவி
திருமங்கை கட்டின திக் கஜங்கள் இருக்கிறபடி
குணபால மத யானாய் -திருக் கண்ணபுரம் /காட்டு மன்னார் மன்னாதன்
உலகம் ஏத்தும் அடை மொழி நான்கு திவ்ய தேசங்களுக்கும்

இமையோர்க்கு என்றும் முன்னானாய்
நித்யருக்கு நித்ய தர்சன விஷய பூதன் ஆனவனே

பின்னானார் வணங்கும் சோதி திரு மூழிக் களத்தானாய்
திரு மூழிக் களத்துறையும் ஒண் சுடர்
முனியே திரு மூழிக் களத்து விளக்கே
மூழிக் களத்து விளக்கினை
இங்கும்
பின்னானார் வணங்கும் சோதி திரு மூழிக் களத்தானாய்
சீல-சௌசீல்ய குணம் இங்கே பிரகாசிப்பதால்
சீலத்திலும் -ஜாதி ஞானாம் வ்ருத்தம் – பின்னானார்
புறப்பாடு வ்யாஜத்தினாலே தண்ணியர்களுக்கும் சேவை உண்டே

———————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ P.B.A,ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்-
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திரு நெடும் தாண்டகம்-பாசுரங்கள்-1-5- -திவ்யார்த்த தீபிகை —

September 28, 2014

ஸ்ரீ யபதி இனி மேலும் இவருக்கு முகம் காட்டாது ஒழியில்
ஜகத் ஈஸ்வரன் அற்றதாய் விடும் என்று நிச்சயித்து
ஸ்ரீ ப்ரஹ்லாத ஆழ்வானாதிகளுக்கு முகம் காட்டினாப் போலே
இவருக்கு முகம் காட்டி
தானும்
இவரும்
ஜகத்தும்
உண்டாம்படி பண்ணி அருள
அந்த ஹர்ஷ பிரகர்ஷத்தை தம் வாயாலே பேசுகிறார் இந்த சரம திவ்ய பிரபந்தத்தில்-

முதல் பத்து -தாமான தண்மை
இரண்டாம் பத்து -திருத் தாயார் வார்த்தை
மூன்றாம் பத்து -தோழியுடன் வ்ருத்த கீர்த்தனம் பண்ணும் தலைமகள் வார்த்தை
பட்டர் -திரு நெடும் தாண்டகம் வல்லவர் -அத்தை கொண்டே நஞ்சீயரை சம்ப்ரதாயக்கு ஆக்கி அருளினார்

————————————————————–

தேஹாத்மாபிமானத்தைப் போக்கினது முதலாகத் திருவடிகளோடு ஸம்பந்தந்தை யளித்தளவாக வுள்ள
உபகார பரம்பரைகளைப் பேசி மகிழ்கிறார் இப்பாட்டில்.

மின்னுருவாய் முன்னுருவில் வேதம் நான்காய் விளக்கொளியாய் முளைத்தெழுந்த திங்கள் தானாய்,
பின்னுருவாய் முன்னுருவில் பிணி மூப் பில்லாப் பிறப்பிலியாய் இறப்பதற்கே எண்ணாது, எண்ணும்
பொன்னுருவாய் மணியுருவில் பூதம் ஐந்தாய்ப் புனலுருவாய் அனலுருவில் திகழுஞ் சோதி,
தன்னுருவாய் என்னுருவில் நின்ற எந்தை தளிர்ப்புரையும் திருவடி யென்தலை மேலவே.

பதவுரை

முன் உருவில்–முன்னே யுள்ள (கண்ணாற் காணத் தக்க) பிராகிருத பதார்த்தங்களில்
மின் உரு ஆய்–மின்னின் தன்மையைக் காட்டிக் கொடுத்தவனாய்
வேதம் நான்கு ஆய்–நால் வேதங்களையும் உபகரித்தவனாய்
விளக்கு ஒளி ஆய்–இருளை அகற்றும் விளக்கொளி போலே அஜ்ஞான அந்தகாரத்தைப் போக்கித் தன் ஸ்வரூபத்தை ப்ரகாசிப்பித்தவனாய்
முளைத்து எழுந்த திங்கள் தான் ஆய்–(மலையில்) தோன்றி (ஆகாசத்திலே) கிளம்பின சந்திரனைப் போலே
ஆஹ்லாதகரமான ஞானத்தை எனக்குக் கொடுத்தவனாய்,
பின் உரு ஆய்–இருபத்தினான்கு தத்துவங்களுக்குப் பிற்பட்ட தத்துவமாகி
முன் உருவின் பிணி மூப்பு இல்லா பிறப்பு இலி ஆய்–முன்னே தோன்றுகிற பிராகிருத வஸ்துக்களுக்குப் போலே
வியாதியும் கிழத்தனமுமின்றியே பிறப்பு மில்லாதவனான ஜீவாத்மாவுக்கு நிர்வாஹகனாய்
இறப்பதற்கே எண்ணாது–கைவல்ய மோக்ஷத்தை ஆச்ரிதர்கட்குக் கொடுக்க நினையா தவனாய்
எண்ணும் பொன் உரு ஆய்–எண்ணத் தக்க பொன் போன்ற ஸ்வரூபத்தை யுடையவனாய்
மணி உருவின் பூதம் ஐந்து ஆய் புனல் உரு ஆய்–திவ்ய மங்கள விக்ரஹத்திலே பஞ்சோநிஜந்மயனாய்
புனல் உரு ஆய்-தண்ணீர் போலு ஸர்வ ஸுலபனாய்
அனல் உருவின் திகழும்–அக்னி போலே ஒருவர்க்குங் கிட்ட வொண்ணாத வடிவை யுடையனாய்
சோதி தன் உரு ஆய்–ஸ்வயம் ஜ்யோதிஸ் ஸ்வரூபனாய்
என் உருவில் நின்ற–என் சரீரத்திலே நின்றவனாய்
எந்தை-எனக்குத் தந்தையான ஸர்வேச்வரனுடைய
தளிர்புரையும் திரு அடி–தளிர் போன்ற திருவடிகள்
என் தலை மேல–எனது தலையிலே இரா நின்றன;
ஏ-ஆச்சரியம்!

முன்னுருவில் மின்னுருவாய் =
கண் முன்னே பரத்யக்ஷமாகக் காணப்படுகின்ற பொருள்களெல்லாம் முன்னுரு எனப்படுகின்றன.
‘அப் பொருள்கள் மின்னின் தன்மை போன்ற தன்மை யுடையன‘ என்னும் உணர்வைப் பிறப்பித்தவன் என்கிறார்.
“மின்னின்னிலையில மன்னுயிராக்கைகள்“ என்கிறபடியே ப்ராக்ருதப் பொருள்களெல்லாம்
நிலை நிற்க மாட்டாதவை யென்று அறிவித்தானென்றவாறு.

ஜீவாத்மாவுக்கு தேஹ ஸம்பந்தம் இரண்டு வகையான காரணங்களினால் உண்டாகின்றது;
புண்ய பாப ரூப கருமங்கள் காரணமாகவும் எம்பெருமானது அருள் அடியாகவும்.
கருமமடியாக ப்ரக்ருதி பந்தமுண்டாமளவில், ஜீவாத்ம பரமாத்மாக்களுடைய ஸ்வரூபத்தைத் தெரிந்து கொள்ள
வொண்ணாமற் செய்கையும் தன் பக்கலில் அஸ்தைர்யத்தையும் அபோக்யதையையும் மறைத்து
ஸ்தைர்ய புத்தியையும் போக்யதா புத்தியையும் ப்ரக்ருதியானது பிறப்பிக்கும்;
இனி எம்பெருமானருளடியாக ஸம்ஸார பந்தமுண்டாமளவில், ஸ்வ விஷயத்திலும் ஸ்வகீய விஷயத்திலும் கிடக்கிற
அஸ்தைர்யத்தையும் அபோக்யதையையும் பிரகாசிப்பிக்கக் கடவதுமாய்
ஆத்ம பரமாத்ம ஸ்வரூபத்தை ப்ரகாசிப்பிக்கக் கடவதுமாயிருக்கும்.
ஆழ்வார் இவ்விபூதியிலே பிறந்தது கருமமடியாகவல்லாமல் எம்பெருமானருளடி யாகவாதலால்
ப்ராக்ருதங்களில் அஸ்தைர்யம் பிரகாசித்து த்யாஜ்யதா புத்தி யுண்டாயிற் றென்க.

வேதம் நான்காய் =
தேஹமே ஆத்மாவென்றும், இந்த்ரியமே ஆத்மாவென்றும் மாஸ்ஸே ஆத்மாவென்றும், ப்ராணனே ஆத்மாவென்றும்,
புத்தியே ஆத்மாவென்றும் கொள்வாருடைய கொள்கைகளைத் தள்ளி
‘அஹம்‘ (நான்) என்று வியவஹரி்ப்பதற்கு இலக்கான வஸ்துவே ஆத்மாவென்றும்
அவன் நித்யனென்றும் தெரிந்து கொள்வதற்கு சாஸ்த்ரம் அபேக்ஷிதமாகையாலே,
சாஸ்த்ரங்களில் தலையான வேதங்களை அருளினபடி சொல்லுகிறது.
இங்கு ‘வேத நான்காய்‘ என்றது, நால் வேதங்களாலும் பிரதிபாதிக்கப்படுபவன் என்ற கருத்தினாலன்று;
நான்கு வேதங்களையும் உபகரித்தருளினவன் என்ற கருத்தினாலென்க.

ஆக, “மின்னுருவாய் முன்னுருவில் வேத நான்காய்“ என்றவளவுக்குத் தேறின கருத்தாவது, –
ஆத்மாவிற்காட்டிலும் வேறுபட்ட அசேதனப் பொருள்களில் க்ஷணிகத்வ புத்தியைப் பிறப்பித்தவனும்,
அங்ஙனல்லாத ஆத்ம வஸ்துவின் உண்மை நிலையைத் தெரிந்துகொள்வதற் குறுப்பாக
சாஸ்த்ரங்களைத் தந்தருளினவனும் எம்பெருமான் என்றதாயிற்று.

விளக்கொளியாய் =
சாஸ்திரங்களைக் கொடுத்தருளின மாத்திரத்தால் என்னாகும்;
அவற்றால் மருள் நீங்கித் தெருள் பிறந்தாலன்றோ பயனுண்டாவது;
அங்ஙனம் அஜ்ஞானத்தை யகற்றி நல்ல ஞானத்தை யுண்டாக்கி
ஸ்வரூபத்தைப் பிரகாசிக்கச் செய்தருளினவன் என்கிறது –

விளக்கொளியாய் என்று. விளக்கொளியின் ஸ்வரூம் போன்ற ஸ்வபாவத்தை யுடைத்தாகையாலே
சாஸ்த்ர ஞானத்தை விளக்கொளி யென்கிறது.
விளக்கானது இருளைப் போக்கிப் பொருள்களை விளங்கச் செய்யுமா போலே அக விருளைப் போக்கி
ஸ்வரூபத்தைப் பிரகாசிக்கக் கடவதா யிருக்குமன்றோ சாஸ்த்ர ஞானம்.
இப்படிப்பட்ட சாஸ்த்ர ஞானத்தை யுண்டாக்கி யருளினவன் எம்பெருமான் என்க.
எம்பெருமானருள் இல்லாவிடில் உண்மையான சாஸ்த்ரார்த்த ஜ்ஞானம் உண்டாகமாட்டாதென்று உணர்க.

முளைத்தெழுந்த திங்கள்தானாய் =
மலை நுனியில் தோன்றி ஆகாசத்திலே கிளம்பின சந்திரனைப் போலே ஸந்தோஷ கரமான
ஞானத்தைக் கொடுத்தருளினவன் என்றபடி.

கீழ் ‘விளக்கொளியாய்‘ என்றவிடத்திலும் இவ் வர்த்தந்தானே சொல்லிற்று;
மீண்டும் இங்குச் சொல்லுகிறது என்னென்னில்; கேண்மின்;
எம்பெருமானைப் பற்றின ஞானங்கள் பல வகைப்படும்;
எம்பெருமானைக் காதால் கேட்டுணர்வது, நெஞ்சில் ஊன்ற மநநஞ்செய்துணர்வது, உபாஸநம் செய்துணர்வது
கண்ணாரக் கண்டுணர்வது என்றிப்படிப்பட்ட ஞானங்களுள்
ஸ்ரவண ஜ்ஞானம் (காதால் கேட்டுணர்தல்) பெற்றமை மாத்திரம் ‘விளக்கொளியாய்‘ என்றதனால் சொல்லிற்று;
மநந – நிதித்யாஸந-தர்சந ஜ்ஞானங்களைப் பிறப்பித்தமை இங்குச் சொல்லப்படுகிறது என வாசி காண்க.

விளக்கினாலுண்டாகிற ஆநந்த ரூபமாக இருப்பது போல, ஸ்ரவண ஜ்ஞானத்திற்காட்டிலும்
மநந நிதித்யாஸந தர்ச நங்களாலுண்டாகும் ஞானம் மிக்க ஆஹ்லாத ரூபமாக இருக்குமாதலால்,
விளக்கொளியா யென்றதனால் மற்ற ஞானங்களைச் சொல்லிற்றென்றும்
முளைத்தெழுந்த திங்கள் தானாய் என்றதனால் மற்ற ஞானங்களைச் சொல்லிற்றென்றும் பகுத்துரைத்தல் மிகப் பொருந்தும்.
இது தன்னிலும் முளைத்து என்றதனால் மநந தசையும்,
எழுந்த என்றதனால் நிதித்யாஸந தசையையும்,
திங்கள் தானாய் என்றதனால் ஸாக்ஷாத்கார தசையும் சொல்லப்பட்டன வென்றுணர்க.

பின்னருவாய் முன்னுருவிற்பிணி மூப்பில்லாப் பிறப்பிலியாய் =
இவ்வளவும் ஜீவாத்மாவைச் சொல்லுகிறதாய் (ஸாமாநாதி கரண்யத்தாலே)
இப்படிப்பட்ட நியாமகன் எம்பெருமான் என்றதாகிறது.

“பொங்கைம்புலனும் பொறியைந்துங் கருமேந்திரிய மைம்பூதம்,
இங்கிவ்வுயிரேய் பிரகிருதிமானாங்கார மனங்களே“ என்கிறபடியே
இருபத்தினான்காகிய தத்துவங்களுக்குப் பிற்பட்டவனாய் இருபத்தைந்தாம் தத்துவமாகச் சொல்லுப்பட்டவனான
ஜீவாத்மாவைப் பின்னுருவாய் என்றதனாற் சொல்லுகிறது;

முன்னுருவிற் பிணி மூப்பில்லாப் பிறப்பலி யென்பது அந்த ஜீவாத்மாவையே;
ப்ரத்யக்ஷத்திற் காணப் படுகின்ற ப்ராக்ருத பதார்த்தங்களை முன்னுரு வென்கிறது.
அந்தப் பொருள்களுக்கு ஸம்பானுவிற் பிணி மூப்பில்லாப் பிறப்பிலி“ யென்று ஜீவாத்மாவைச் சொல்லிற்றாயிற்று.

ஆக பின்னுருவாயும் முன்னுருவிற்பிணிமூப்பி்ல்லாப் பிறப்பிலியாயு மிராநின்ற ஜீவாத்மாவைச் சொல்லி,
ஆய் என்ற ஸாமாநாதி கரண்யத்தாலே அப்படிப்பட்ட ஜீவாத்மாவை நிர்வஹிப்பவன் எம்பெருமான் என்றதாயிற்று.

இறப்பதற்கே யெண்ணாது =
இறப்பாவது மரணம்; ஆத்ம ஸ்வரூபாநுபந்தியான மரணம் இங்கு விவக்ஷிதம்;
அதாவது கைவல்யமோக்ஷம்.
தேஹாநுபந்தியான மரணம் ஆத்மாவுக்கு இல்லையாயினும் ஸ்வரூபாநுபந்தியான மரணம் உண்டாதலால்,
அப்படிப்பட்ட மரணமாகிய கைவல்ய மோக்ஷத்தை அந்தரங்கமான அடியார்க்குக் கொடுக்க
நெஞ்சிலும் நினையாதவனெம்பெருமான் என்றவாறு.

ஸ்வத : ஸுகியான ஆத்மாவினுடைய அநுபவ் ஸ்வரூபமாய்த் தனியே ஒரு புருஷார்த்மாய்
மீட்சியில்லாததான கைவல்யத்தை இறப்பு என்ன லாமொவென்னில்;
சரீரமானது ஆத்மாவின் வியோகத்தை யடைந்தால் அது மரணமாக ப்ரத் யக்ஷத்தில் வியவஹரிக்கப்படுகிறது;
இதுவும் அப்படியே ஸாக்ஷாத் ஆத்மாவாகிய பரமாத்மாவின் வியோகத்தாலே மரணமாகக் குறையில்லை.
ப்ரத்யக்ஷத்தில் மரணமடைந்த சரீரம் நஷ்டமாகிறாப்போலே ஆத்மா நசிப்பதில்லையே;
அப்படி இருக்க மரணமென்னலாமோ வென்னில்,
ஸ்வரூபாநுரூபமான போகமில்லாமையாலே ஆத்மாவை நஷ்டனாகவே கொண்டு மரணமென்னலாம்.
“ம்ருதோ தரித்ர: புருஷ:“ (ஏழையான மனிதன் செத்தவனே) என்கிறாப் போலே இதனைக் கொள்க.
இடைவிடாது ஸ்வதநுபவஞ் செய்பவர்களின் ஹ்ருதயத்தாலே இது மரணமேயாகும்.
இதனைத் திருவாய் மொழியில் ‘இறுகலிறப்பு என்றது முணர்க.

ஆக இறப்பதற்தேயெருண்ணா என்றதனால் சொல்லிற்றாவது –
வைவல்ய மோக்ஷத்தைப் புருஷார்த்தமாக அபேக்ஷிப்பவர்களுக்குக் கொடுக்க வல்லவனான எம்பெருமான்
இப்போது என்னை இப் படுகுழியிலே வீழ்த்த நினையானென்பதாம்.

இப்படிப்பட்ட உபகாரத்திற்கு மேலே தன்னுடைய ஸ்வரூப ரூப குணங்களை ப்ரகாசிப் பித்தருளினா னென்கிறார்
எண்ணும் பொன்னுருவாய் என்று.
போக்யதையின் மிகுதியாலே ஒரு நொடிப் பொழுதும் விடமுடியாமல் எப்போதும் சிந்திக்க வுரியதும்
பொன் போல் விரும்பத்தக்கதுமான திவ்ய ஸ்வரூபத்தை யுடையவன் என்றபடி.

மணியுருவிற் பூதமைந்தாய் =
இங்குப் ‘பூதமைந்து‘ என்கிறது பஞ்சோப நிஷத்துக்களை;
பரமேஷ்டீ புமாந் விச்வோ நிவ்ருத்தஸ் ஸர்வ ஏவ ஹி“ என்கிறபடியே
பஞ்சோப நிஷத்தை வடிவாயுடைத்தாயிருக்கும் எம்பெருமானுடைய திவ்யமங்கள விக்ரஹம்.
அஸ்ம தாதிகளின் தேஹங்களுக்குப் பஞ்சபூதங்கள் உபாதாநமாயிருக்குமாபோலே
எம்பெருமானுடைய திருமேனிக்குப் பஞ்சோபநிஷத்துக்கள் உபாதாநமாயிருக்குமென்று பாஞ்சராத்ர சாஸ்த்ரம் கூறும்.

இனி, ‘மணியுருவிற் பூதமைந்தாய்‘ என்பதற்கு மற்றொரு வகையாகவும் பொருள் கூறுவர்;
தனக்கு அஸாதரணமான மணியுருவிலும் எழுந்தருளி யிருப்பவனாய்,
ப்ராக்ருதமான பஞ்சபூதங்களிலும் எழுந்தருளியுள்ளவன் என்று.

இப்படிப்பட்ட எம்பெருமானுடைய ஸௌலப்யத்தைச் சொல்லுகிறது புனலுருவாய் என்று.
வஸிஷ்டனென்றும் சண்டாளளென்றும் வாசியில்லாமல் ஒரு துறையிலே படித்தாடுதற்குரிய தண்ணீர்ப் போலே
அனைவர்க்கும் ஒருதன்மைப்பட எளியனாயிருக்குமவன் என்றவாறு.
இப்படி அனைவர்க்கும் எளியனானால் எந்த சத்ருவினால் எந்த வேளையில் என்ன கேடு விளைகிறதோவென்று
அஞ்சியிருக்க வேண்டாதபடி பிரதிகூலர்க்கு நெருப்புப் போலே கிட்ட வொண்ணாதிருக்குமவன் என்கிறார்
அனலுருவின்திகழும் என்று.
அநுகூலர்க்குப் புனலுருவினன்; பிரதிகூலர்க்கு அனலுருவினன் என்க.

சோதிதன்னுருவாய் =
நாட்டில் சோதிப்பொருள்களென்று விளங்குகின்ற அக்நி சந்திரன் ஸூரியன் முதலியவர்கட்கும்
தன்னுடைய ஸம்பந்தத்தாலே ஜ்யோதிஸ்ஸு உண்டாம்படி பரஞ்சோதியாயிருப்பவனென்கை.
“தஸ்ய பாஸா ஸர்வமிதம் விபாதி“ என்று உபநிஷத்தும் ஓதிற்று.

என்னுருவில் நின்ற =
மிகவும் ஹேயமான என்னுடைய சரீரத்திலே வந்து நின்றானென்கிறார்.

கீழே இவ்வாழ்வார் மடலெடுக்கையாலே எம்பெருமான் தன்னுடைய ஸத்தைக்கு ஹாநி விளைந்திடு மென்றஞ்சி
ஓடி வந்து இவருடைய சரீரத்திலே பொருந்தித் தரிப்புப் பெற்றான் போலும்.

ஆக இப்படிப்பட்ட எம்பெருமானுடைய தளிர் போன்ற திருவடிகள் என் தலைக்கு
அலங்காரமாய்க் கிடக்கிறபடிபாரீர் என்றாராயிற்று.

தேகாத்ம அபிமானத்தை போக்கினது முதலாக
திருவடிகளோடு சம்பந்தத்தை அளித்தது ஈறாக
எம்பெருமான் பண்ணி அருளிய உபகார பரம்பரைகளை பேசி மகிழ்கிறார்

முன்னுருவில் மின்னுருவாய் –
பிரத்யஷமாக காண்பவை மின்னல் போல் அஸ்திரம் என்று காட்டி அருளி
மின்னின் நிலையின மன்னுயிர் ஆக்கைகள்
கர்மம் அடியாக பிறந்து – பக்கல் அஸ்த்ரத்தையும் அபோக்யதையும் மறைக்குமே –

வேதம் நான்காய்
ஆத்ம வஸ்துவின் உண்மையை புரிந்து கொள்ள வேத சாஸ்த்ரங்களை தந்து அருளி

விளக்கு ஒளியாய்
சாஸ்திர ஞானத்தையும் அருளி -ஸ்ரவண ஞானம்

முளைத்து எழுந்த திங்கள் தானாய்
ஸ்ரவணத்துக்கு மேலே -மனனம் -நிதித்யாசனம் -த்யானம்- சாஷாத்காரம்
முளைத்து -மனனம்
எழுந்த -நிதித்யாசன
திங்கள் தானாய் -சாஷாத்காரம்

பின்னுருவாய் -ஜீவாத்மாவுக்கு நியாமகன்
இதையே
முன்னுருவில் பிணி மூப்பு இல்லா பிறப்பிலி -பிரகிருதி பதார்ந்தகளின் தோஷங்களான
பிணி மூப்பு பிறப்பு இல்லையே

இறப்பதற்கே என்னாது கைவல்ய மோஷம் என்னாமல்
அன்னவான் அந்நாதோ பவதி என்பர் எண்ணத்தால் இதுவும் இறப்பே
இருகலிறப்பு-என்பர் இத்தையே நம்மாழ்வார்

இதுக்கு மேலே தன்னுடைய ஸ்வரூப ரூப குணங்களை பிரகாசிப்பித்தது அருளினான்

பொன்னுருவாய் -திவ்ய ஸ்வரூபம்

மனிவுருவில் பூதம் ஐந்தாய் -பஞ்ச உபநிஷத் மயம்
பரமேஷ்டி புமான் விச்வோ நிவ்ருத்த்தஸ் சர்வ ஏவ ஹி –
அன்றிக்கே
தனக்கு அசாதாரணமான மணி யுருவிலும்
பிராக்ருதமான பஞ்ச பூதங்களிலும் எழுந்து அருளி இருப்பவன்

புனலுருவாய்
சௌலப்யம்
வசிஷ்ட சண்டாள வாசி இல்லாமல் படிந்தாடும் துறை போலே

அனலுருவில் திகழும்
ஆஸ்ரித விரோதிகளுக்கு

சோதி தன்னுருவாய்
அக்னி சந்த சூர்யர் போன்றோருக்கு தன்னுடைய சம்பந்தத்தாலே ஜோதிஸ் அருளி -பரஞ்சோதி

என்னுருவில் நின்ற
நீசன் என்னுடைய ஹேயமான சரீரத்தில் புக்கு
மடல் எடுத்த காரணத்தால் -தனது சத்தைக்கு கேடு என்று அஞ்சி ஓடி வந்து
சரீரத்தில் பொருந்தி தரிப்பு பெற்றான்-

அவனது தளிர் போன்ற திருவடிகள் எனது தலைக்கு அலங்காரம் ஆயிற்று
என்னுருவில் நின்ற எந்தை
தளிர் புரையும் திருவடி
என் தலை மேலே-

———————————————————————–

பாருருவில் நீரெரிகால் விசும்பு மாகிப் பல்வேறு சமயமுமாய்ப் பரந்து நின்ற,
ஏருருவில் மூவருமே யென்ன நின்ற, இமையவர்தந் திருவுருவே றெண்ணும் போது,
ஓருருவம் பொன்னுருவம் ஒன்று செந்தீ ஒன்றுமா கடலுருவம் ஒத்து நின்ற,
மூவுருவும் கண்டபோ தொன்றாம் சோதி முகிலுருவம் எம்மடிகள் உருவந் தானே.

பதவுரை

ஏர் உருவில் அழகிற ஜகத்தில்–
மூவருமே என்ன நின்ற–மூன்று தெய்வங்களே முக்கியம்‘ என்று சொல்லலாம்படி யமைந்த
இமையவர் தம்-தேவதைகளினுடைய
திரு உரு-ரூபங்களை
வேறு எண்ணும் போது–தனித்தனியாகப் பிரித்து ஆராயுமிடத்தில்
ஓர் உருவம்-(நான்முகக் கடவுளாகிற) ஒரு மூர்த்தியானது
பொன் உருவம்–பொன்னின் வடிவாகவுள்ளது;
ஒன்று–(பரம சிவனாகிற) ஒருமூர்த்தி யானது
செம் தீ–சிவந்த நெருப்பின் வடிவாக வுள்ளது;
ஒன்று–(ஸ்ரீமந் நாராயணனாகிற) ஒரு மூர்த்தியானது
மா கடல் உருவம்–கருங்கடல் போன்ற வடிவமாக வுள்ளது;
ஒத்து நின்ற–சேர்ந்திருக்கின்ற
மூ உருவும்–(மேற்சொன்ன) மூன்று மூர்த்திகளையும்
கண்ட போது-(பிரமாணங்கொண்டு) பரிசீலனை செய்யுமிடத்து,
பார் உருவி–கடினமான பூமியென்ன
நீர்-ஜலமென்ன
எரி-அக்நியென்ன
கால்-வாயுவென்ன
விசும்பும் ஆகி–ஆகாசமென்ன ஆகிய பஞ்ச பூதங்களையும் படைத்தும்
பல்வேறு சமயமும் ஆய்-பலவாய் வேறுபட்ட சமயங்களை யுடைத்தாயிருக்கும் ஜகத்தை ஸ்ருஷ்டித்தும்
பரந்து நின்ற-இப்படி ஸ்ருஷ்டிக்கப்பட்ட ஜகத்திலே அந்தர்யாமியாய் வியாபித்து நிற்குமதாய்
ஆம் சோதி-பரஞ்சோதியென்று போற்றப் படுமதாய்
ஒன்று-அத்விதீயமா யிருக்கின்ற
முகில் உருவம்-காளமேக வுருவமானது
எம் அடிகள் உருவம்–எம்பெருமானுடைய வடிவமாம்.

அரி அயன் அரன் என்கிற மும்மூர்த்திகளிடத்தும் ஸாம்யபுத்தி நடப்பதாகிற ஒரு அநர்த்தமுண்டே,
அந்த அநர்த்தத்தையும் எம்பெருமான் தமக்குப் போக்கியருளின படியைப் பேசுகிறார் இப்பாட்டில்.
இருவர் சேஷபூதராய் ஒருவன் சேஷியாய், இருவர் ஸ்ருஷ்டிக்கப் படுகிறவர்களாய் ஒருவன் ஸ்ருஷ்டி செய்பவனாய்,
இருவர் சரீர பூதராய் ஒருவன் சரீரியாய் இருக்கிறபடியை எனக்குக் காட்டித்தருளினா னென்கிறார்.

இந்திரன் சந்திரன் வருணன் குபேரன் என்று பலப் பல தெய்வங்கள் இருந்தாலும்
விஷ்ணு, பிரமன், சிவன் என்கிற மூன்று மூர்த்திகளே முக்கியமாக வழங்கப் பெறும்;
அம் மூன்று மூர்த்திகளின் உருவங்களை ஆராயுமிடத்தில், ஒருவனுடைய (நான்முகனுடைய) வடிவம் பொன்னின் வடிவாகவுள்ளது;
மற்றொருவனுடைய (பரம சிவனுடைய) வடிவம் சிவந்த நெருப்பின் வடிவாகவுள்ளது;
இன்னுமொருவனுடைய (ஸ்ரீமந் நாராயணனுடைய) வடிவம் கருங்கடல் போன்றுள்ளது.

மேற்சொன்ன மும் மூர்த்திகளையும் பிரமாணங்கொண்டு பரிசீலனை செய்யுமிடத்து,
பஞ்ச பூதங்களை யுண்டாக்கியும் பலவகைப்பட்ட சமயங்களை யுயை ஜகத்தை ஸ்ருஷ்டித்தும்
ஸ்ருஷ்டிக்கப்பட்ட ஜகத்திலே அந்தர்யாமியாய் வியாபித்தும் நிற்கிற பரஞ்சோதியான எம்பெருமானுடைய வுருவம்
காளமேக வுருவமாயிருக்கும் என்று சொல்லுகிறவிதனால் முகிலுருவமுடையவனே எம்பெருமான் என்றாராயிற்று.

“ஏருருவில் மூவருமே யென்ன நின்ற இமையவர் தம் திருவுரு வேறெண்ணும் போது
ஒருருவம் பொன்னுருவம், ஒன்று செந்தீ, ஒன்று மாகடலுருவம், ஒத்து நின்ற
மூவுருவுங் கண்ட போது பாருருவி நீரெரிகால் விசும்புமாகிப் பல்வேறு சமயமுமாய்ப் பரந்து நின்ற
ஒன்றாஞ்சோதி முகிலுருவம் எம்மடிகளுருவந்தானே“ என்று அந்வயிப்பது.

பாருருவி – ‘உர்வீ‘ என்னும் வடசொல் உருவி யெனத் திரிந்தது, பூமி யென்று பொருள்.
பார் என்றது பூமிக்கு விசேஷணமாய் நிற்கிறது இங்கு. பருமை பொருந்திய பூமி யென்றபடி.
அண்ட காரணமான பஞ்ச பூதங்களை ஸ்ருஷ்டி யெனப்படும், அஃது உள்ள ஸ்ருஷ்டி யெனப்படும்.
“பாருருவி நீரெரிகா்ல் விசும்புமாகி“ என்றது ஸமஷ்டி ஸ்ருஷ்டியைச் சொன்னபடி,
“பல் வேறு சமயமுமாய்“ என்று வ்யஷ்டி ஸ்ருஷ்டியைச் சொல்லுகிறது.
தேவ மநுஷ்யாதி பேதத்தாலே பலவகைப் பட்ட பாகுபாடுகளை யுடைய ஜகத்தை யுண்டாக்கினவனாய் என்றபடி.

சமயம் என்றது வடசொல் திரிவு ஏற்பாடு என்று பொருள்.
உலகத்துப் பொருள்களுக்கெல்லாம் ஒவ்வொரு ஏற்பாடு உண்டு,
தேவதைகள் – ஆராதிக்க வுரியராயும் அமுத முண்பவராயு மிருத்தல் அவர்களுக்கான ஏற்பாடு,
மனிதர் ஆராதனை செய்பவர்களாயும் அன்னமுண்பவர்களாயு மிருத்தல் அவர்களுக்கான ஏற்பாடு,
திர்யக்குக்களும் ஸ்தாவரங்ளும் ஆராதனைக்குக் கருவியாயிருத்தல் அவற்றுக்கான ஏற்பாடு,
இங்ஙனே கண்டு கொள்க.

பரந்துநின்ற –
பரக்கையாவது – ஸ்ருஷ்டிக்கப்பட்ட ஸகல பதார்த்தங்களிலும் அநு ப்ரவேசத்தாலே ஆத்மாவாய் வியாபித்து நிற்கையாம்.
ஸூக்ஷ்ம சேதநா சேதநவிசிஷ்டனாகிற படியைச் சொன்னவாறு. இதற்கு ஈற்றடியில் அந்வயம்.

(ஏருருவில்)
ஜகத்திலே என்றபடி. ஜகத்து முழுவதும் எம்பெருமானுடைய உரு (சரீரம்) ஆகையாலே அந்தச் சொல்லியிட்டுச் சொல்லிற்று.
இருள் தரு மா ஞாலம் என்று வெறுக்கத் தக்க இதனை ஏருரு என்பானென்? என்னில்,
இந்த –ஜகத்தானது முமுக்ஷுக்களுக்கு ஒரு படியாலே ஹேயமாயும் ஒரு படியாலே உத்தேச்யமாயுமிருக்கும்,
ஸம்ஸார ஸ்தானம் என்று வெறுக்கத் தக்கதாயிருக்கும்,
எம்பெருமானுடைய விபூதியென்கிற காரணத்தாலே உத்தேச்யமாயிருக்கும்.
இங்கு உத்தேச்யத்வம் தோன்ற ஏருரு என்றதாகக் கொள்க.

மூவருமே யென்ன நின்ற இமையவர் –
ஸ்ருஷ்டி, ரக்ஷணம், ஸம்ஹாரம் என்பன மூன்று தொழில்கள்.
இவை மூன்றையும் ஸ்ரீமந் நாராயணனொருவனே நிர்வஹித்தாலும்
அவன் தான் ப்ரமனை அநு ப்ரவேசித்து ஸ்ருஷ்டிமையும்,
ருத்ரனை அநுப்ரவேசித்து ஸம்ஹாரத்தையும்,
தானான தன்மையிலே ரக்ஷணத்தையும் நடத்திப் போருகையாலே மூன்றுக்கும் ஒருவனே கடவன் என்று
தெளிய கில்லாத ஸாமாந்ய ஞானிகள் ஒவ்வொரு தொழிலுக்கு ஒவ்வொரு தெய்வத்தை ஸ்வதந்த்ர நிர்வாஹகமாகக் கொண்டு
மூன்று மூர்த்திகள் ஆச்ரயணீர் என்று.
“ஸஆத்மா, அங்காந்யந்யா தேவதா“ என்று சுருதியின்படி ப்ரஹ்ம ருத்ர்ர்களும் எம்பெருமானுடைய திருமேனியே யென்று
தெளியக் கண்டவராகையாலே அவர்களையும் திருவுரு என்ற கௌரவச் சொல்லுகிறார் என்ப.

வேறெண்ணும்போது –
“நன்றெழில் நாரணன் நான்முகனரனென்னுமிவரை, ஒன்ற நும் மனத்து வைத்து உள்ளி
நும் மிரு பசை யறுத்து, நன்றென நலஞ்செய்வது அவனிடை நம்முடை நானே“ என்ற திருவாய்மொழிப்படியே
ஏக த்த்துவமாக மனத்து வைக்கிற பட்சத்தில் முகிலுருவமொன்றே தோன்றும்,
அங்ஙன்ன்றியே
பிரித்து ப்ரதிபத்தி பண்ணுகிற பட்சத்தில் முகிலுருவமொன்றே தோன்றும்,
அங்ஙன்ன்றியே
பிரித்து ப்ரதிபத்த பண்ணுகிற பட்சத்தில் ப்ரமஙேதுவான அஸாதாரண வடிவங்களைச் சொல்லுகிறது
ஒருருவம் பொன்னுருவ மென்று தொடங்கி.

பிரமனது உருவம் பொன்னுருவாயிருக்கும்,
பொன்னானது எல்லா ஆபரங்களும் பண்ணுகைக்கு உரித்தாயிருப்பது போல பதினான்கு லோகங்களையும்
ஸ்ருஷ்டிப்பதற்கு உரியவுருவமென்று தோற்றியிருக்குமென்க.

(ஒன்று செந்தீ) ருத்ரனது உருவம் செந்தீயுருவாயிருக்கும்,
அக்நிக்கு ஸ்வபாவம் அனைத்தையும் கொளுத்துகையாகையாலே, ருத்ரனுடைய ஸ்வபாவத்தைப் பார்த்தால்
ஜகத்தையெல்லாம் உபஸம்ஹரிப்பதற்கு உரித்தாயிருக்குமென்று தோற்றவிருக்கும்

(ஒன்று மா கடலுருவம்)
கண்டார்க்கு முதலியவற்றொடு வாசியற ஸகல பதார்த்தங்களையும் தன்னுள்ளே யிட்டு வைத்து ரக்ஷிக்கையும் பார்த்தால்,
ஆச்ரிதர்களுக்குத் தாபத்ரய ஹரமாயும், ஆச்ரயித்தாரைத் தன்னபிமானத்திலே யிட்டு வைத்து
ரக்ஷிக்குமதாயுமிருக்கை தோற்ற விருக்கும்.

ஒத்துநின்ற மூவுருவுங்கண்டபோது மூவுருவம் ஒத்திருக்கையாவதென்? என்னில்
அவரவர்களுடைய தொழிலுக்கு அவரவருடைய உருவம் பொருத்தமா யிருக்கும்படியைச் சொன்னவாறு.
ஸ்ருஷ்டிக்குப் பொருத்தமாயிருக்கும் பொன்னுருவம்,
ஸம்ஹாரத்துக்குச் சேர்ந்திருக்கும் செந்தீயுருவம்,
ரக்ஷணத்திற்குத் தகுந்திருக்கும் மாகடலுருவம் என்று காண்க.

ஆக இப்படிப்பட்ட மூவுருவையும் பிரமாணகதி கொண்டு ஆராயுமிடத்தில்,
பாருருவி நீரெரிகால் விசும்புமாகிப் பல்வேறு சமயமுமாய்ப் பரந்து நின்ற ஒன்றே ஆம் சோதியாகும்.
*ஏகோஹவை நாராயண ஆஸீத்* என்றிவை முதலான வேத ப்ரமாணங்களின் படியே
ஸ்ரீமந் நாராயணானொருவனே முழு முதற் கடவுளாயிருப்ப னென்றாராயிற்று.

எம்மடிகளுருவம் முகிலுருவம் =
கீழ், ‘மாகடலுருவம்‘ என்றதையே இங்கு முகிலுருவமென்று அநுபாஷிக்கிறார்.
முகிலுருவ முடையவரே எம்மடிகள் என்றாரென்க.

பாருருவி -பசுமை பொருந்திய பூமி
பஞ்ச பூதங்களையும் சிருஷ்டித்து அருளினவன்
அண்டத்துக்குள் பிறந்த பிரமன் ருத்ரன் முதலானார் உடன் சாம்யம் சங்கிக்கவும் இடமில்லை
அரி அரன் அயன் மும் மூர்த்தி சாம்ய பிரமையையும் ஒழித்து அருளினான்
நான்முகன் பொன்னின் வடிவு -பொன் கொண்டு ஆபரணம் பண்ணுமா போலே
ருத்ரன் நெருப்பின் வடிவு -ஜகம் உப சம்ஹரிக்கைக்கு உறுப்பாக
ஸ்ரீ மன் நாராயணன் -கரும் கடல் -கண்டாருக்கு விடாய் தீர்க்கும்
கடல் போன்று தன்னுள்ளே இட்டு ரஷிக்கையும்
மூன்று உருவமும் ஒத்து இருக்கை
தொழிலுக்கு பொருத்தமாய் இருக்கை
பிரமாண கதி கொண்டு ஆராயும் இடத்தில்
பாருருவி நீர் எரி கால் விசும்புமாகி
பல் வேறு சமயுமாகி
பரந்து நின்ற ஒன்றே ஆம் சோதியாகும்
சிருஷ்டித்து அந்தர்யாமியாயும் வியாபித்து பரஞ்சோதி ரூபம்
ஒன்றாம் ஜோதி முகில் உருவம் எம் அடிகள் உருவம் தானே
தேவ மனுஷ்யாதி சமயமுமாகி
பரந்து நின்ற அந்தர்யாமி
ஏருருவில் -ஜகம் முழுவதும் அவன் உருவம் -எம்பெருமான் விபூதி என்பதால் உத்தேச்யம்
சம்சாரம் என்பதால் த்யாஜ்யம்
ச ஆத்மானி அங்காநி அந்யா தேவதா -தேவர்களும் எம்பெருமான் திருமேனி –
அதனால் அவர்களையும் திரு உரு கௌரவ சொல்
நன்று எழில் நாரணன் நான்முகன் அரன் என்னும் இவரை
ஒன்ற நும் மனத்து வைத்து உள்ளி நம் இரு பசை அறுத்து
நன்றென நலம் செய்வது அவனிடை நம்முடை நாளே -திருவாய் மொழி
எம்மடிகள் உருவம் முகில் உருவம்
கீழே கடலுருவம் என்றத்தை அனுபாஷிக்கிறார்-

————————————————————————

திருவடிவில் கருநெடுமால் சேயன் என்றும திரேதைக் கண் வளையுருவாய்த் திகழ்ந்தா னென்றும்,
பொருவடிவில் கடலமுதம் கொண்ட காலம் பெருமானைக் கருநீல வண்ணன் றன்னை,
ஒருவடிவத் தோருருவென் றுணர லாகா ஊழிதோ றூழிநின் றேத்தல் அல்லால்,
கருவடிவில் செங்கண்ண வண்ணன் றன்னைக் கட்டுரையே யாரொருவ ர் காண்கிற் பாரே?

பதவுரை

திரு வடிவில்–விலக்ஷணமான வடிவுகளில்,
கருநெடுமால்–காளமேக ச்யாமமான வடிவை
பெரு வடிவின்–பெரிய கூர்ம ரூபத்தோடே
கடல்–கடலினின்றும்
அமுதம் கொண்ட காலம்–(தேவர்களுக்கு) அமுதமெடுத்துக் கொடுத்த காலமாகிய கிருத யுகத்திலே
வளை உரு ஆய் திகழ்ந்தான் என்றும்–சங்கு போலே வெளுத்த நிறத்தை யுடையவனாக விளங்கினானென்றும்
திரேதைக் கண்–த்ரேதா யுகத்திலே
சேயன் என்றும்–சிவந்த நிறத்தை யுடையவனாக விளங்கினானென்றும்
(கலியுகத்தில்)
கரு நீலம் வண்ணன் என்றும்–இயற்கையான) நீல நிறத்தை யுடையவனாய் விளங்குகிறானென்றும்
ஊழி தோறு ஊழி நின்று ஏத்தல் அல்லால்–எப்போதும் நின்று துதிப்பதல்லாமல்
ஒரு வடிவம் என்று ஓர் உரு என்று உணரல் ஆகா-வடிவும் நிறமும் இன்ன தென்றும் இவ்வள வென்றும் அறியப் போகாமலிருக்கிற
கரு வடிவின் செம்வண்ணம் கண்ணன் தன்னை பெருமானை–கறுத்த திருமேனியையும் செந்நிறமான திருக் கண்களை யுமுடையனான எம்பெருமானை
யார் ஒருவர்–ஆரேனுமொருவர்
காண் நிற்பாரே–(ஸ்வப்ரயத்நத்தால்) காணக் கூடியவரோ?
கட்டுரை–(நெஞ்சே!) சொல்லு.

திரிமூர்த்தி ஸாம்ய ப்ரமத்தை எம்பெருமான் தமக்குப் போக்கித் தந்தருளின படியை அருளிச்செய்தார் கீழ்ப்பாட்டில்.
எம்பெருமான் தனது நிர்ஹேதுக க்ருபையினால் தமக்குக் காட்டித் தந்தருளின திருமேனியின் வைலக்ஷண்யத்தை
அநுபவித்துப் பேசுகிறார் இப்பாட்டில்.
எம்பெருமான் ஒவ்வொரு யுகத்திலும் ஒவ்வொரு நிறத்தைக் கொள்வன்;
க்ருத யுகத்திலுள்ளவர்கள் ஸத்வ குணம் நிறைந்தவர்களாய் சுத்தமான நிறத்தை உகக்குமவர்களாகையாலே
அவர்கட்காகக் கிருத யுகத்தில் பால் போல் வெளுத்த நிறத்தைக் கொள்வன்;
த்ரேதா யுகத்திலே சிவந்த நிறத்தைக் கொள்வன்;
த்வாபர யுகத்தில் பசுமை நிறத்தைக் கொள்வன்;
கலி யுகத்தில் இயற்கையான நீல நிறத்தைக் கொள்வன்-என்பது நூற்கொள்கை.

ஸ்ரீபாகவதத்தில் பதினோராவது ஸ்கந்தத்தில் ஐந்தாவது அத்யாயத்தில் இருபதாவது ச்லோகம் முதலாக
இவ் விஷயம் விரியக் காணத் தக்கது.
இப்பாட்டில் த்வாபர யுகத்திற் கொள்ளும் பசுமை நிறம் சொல்லப்படா தொழியினும் அதுவும் இங்கு அநுஸந்திக்கத்தக்கது.
பொருட்சேர்த்திருக்குத் தகுதியாக
“பெருவடிவிற் கடலமுதங்கொண்ட காலம் வளையுருவாய்த் திகழ்ந்தான்“ என்பது முந்துற அந்வயித்துக் கொள்ள வுரியது.

“திரேதைக்கண்“ சேயனென்றும் =
இவ் வாக்கியம் முன்னே யிருந்தாலும் அர்த்தச் சேர்த்திக்குத் தகுதியாகப் பின்னே அந்வயிக்க வுரியது.
க்ருத யுகத்திற்குப் பிறகு தானே திரேதா யுகம். ஆழ்வாரும் யுக க்ரமமாகவே அருளிச் செய்யாலாமே;
மாறுபட அருளிச் செய்வானென்? என்னில்;
ஸத்வாஜஸ்தமோமயமான ப்ரக்ருதிக்கு நிறங்கள் சொல்லப் புகுந்த வேத வாக்கியத்தில்
* அஜாமேகாம் லோஹித சுக்ல க்ருஷ்ணாம் * என்று சிவப்பு வெளுப்பு கறுப்பு என்கிற அடைவிலே
ஓதி யிருக்கையாலே அந்தச் சாயையாலே அருளிச் செய்கிறபடி எனலாம்.

“கருநீலவண்ணன்“ என்றது கலியுகத்தின் நிறத்தைச் சொன்னபடி.

(ஒருவடி வத்தோருருவென்றுணரலாகா)
“மீனாயாமையுமாய் நரசிங்கமுமாய்க் குறளாய்க் காணோரேனமுமாய்க் கற்கியாம்“ இத்யாதிப்படியே
தேவ மநுஷ்ய திர்யக் ஸ்தாவர யோநிகளிலே பலவகைப் பட்ட வடிவுகளையும்
சிவப்பு வெளுப்பு கறுப்பு என்றாற்போலே வகைப்பட்ட நிறங்களையும் எம்பெருமான் என்று கொண்டாலும்
இவை யெல்லாம் இச்சையினால் பரிக்ரஹிக்கப் பட்டவையத்தனையே யாதலால்,
அப்படி ஸங்கல்பத்தினாற் கொள்ளும் வடிவுகளும் நிறங்களும்
ஒருவராலும் எல்லை காண வொண்ணாதபடி யிருக்கிறானாயிற்று எம்பெருமான்.
பல வடிவுகளையும் சில நிறங்களையும் ஒருவாறு அவரவர்கள் பாசுரமிட்டுப் பேசித் துதிக்கலாமத்தனை யல்லது
உள்ளபடி அறியக் கூடாதவனான எம்பெருமானை யார் தாம் அறிய வல்லார்? –
நிர்ஹேதுக பகவத் ப்ரஸாதத்தாலே நான் கண்டு பேசினாப் போலே எவர் தாம் கண்டு பேச வல்லார்?
நான் கண்டாப் போலே காண வல்லாருண்டோ? நான் பேசினாப் போலே பேச வல்லாருண்டோ? என்றாராயிற்று.

கட்டுரை –
ஏவலொருமை வினை முற்று; தம்முடைய திருவுள்ளத்தை விளிக்கின்றமை கொள்க.
இனி, ‘கட்டுரை‘ என்பதை வினை முற்றாகக் கொள்ளாமல் பெயர்ச் சொல்லாகக் கொண்டு உரைப்பினுமாம்;
அவரவர்கள் ஏதோ பேசுவது வெறுங்கட்டுரையே யன்றி உள்ளபடி கண்டு பேசினதன்று என்க.

நிர்ஹேதுக கிருபையால் தன்னுடைய திரு மேனி வைலஷண்யம் காட்டி அருளினத்தை பேசி மகிழ்கிறார்
த்ரேதைக் கண்-என்னாமல் பெரு வடுவில் கடல் அமுதம் கொண்ட காலம் -வளை உருவாய்த் திகழ்ந்தான்
பிரயோஜனாந்த பரர்களுக்காக்ள அமுதம் கொண்ட சேஷ்டிதம் கொண்டே அருளுகிறார் –
பெரிய திரு நாளிலே ஆதரம் உடையார்
பங்குனி மாசத்துக்கு பின்பு கார்யம் செய்கிறோம் என்ன பிராப்தமாய் இருக்க
பெரிய நாளுக்கு பின்பு கார்யம் செய்கிறோம் -என்னுமா போலே
பெரு வடிவில் என்றது பதினாலு நூறாயிரம் காதம் அளவு பரப்பை உடைத்தான
திருப் பாற் கடலில் அப்பரப்பு முழுவதும் விம்மும்படி
தன் தாளும் தொழும் முடிகளும் சமனிலாத பல பரப்பி
திருக் கண் வளர்ந்த வடிவுடன் கடல் கடைந்ததும்
பல வடிவுகள் கொண்டும்
மந்திர மலை அழுந்தாமைக்கு ஆமை வடிவு கொண்டும்
கொந்ழியாமைக்கு ப்ருஹத் ரூபியாயும்
தேவதைகளோடு நின்று கார்யம் செய்யும் வடிவு கொண்டும்
வாசூகி நாகத்துக்கு வலிமையாய் புகுந்து நின்றும் -இப்படி பல பல வடிவுகள் கொண்டானே
கடல் அமுதம் கொண்ட காலம்
அமுதம் அமரர்கட்கு ஈந்த -உப்புச் சாறு
விண்ணவர் அமுதுண்ண அமுதில் வரும் பெண்ணமுது உண்ட எம்பெருமான் –
செந்தாமரைக் கண் செங்கனி வாய் நால் தோள் அமுதே எனது உயிரே-திருவாய்மொழி
கையும் திருவாழியும் கொண்டு கடல் கடைந்த ஆழ்வார் உடைய அமுதம்
தோளும் தோள் மாலையுமாக கடல் கடைந்த அமுதினை ஆழ்வார்கள் நேரில் கண்டது போல்
பரம போக்யமாக களித்து அனுபவிப்பார்கள்
த்ரேதைக் கண் சேயன் என்றும்
முதலில் இத்தை அருளி
அஜாமேகரம் லோஹித சுக்ல க்ருஷ்ணம் -ஸ்ருதியும்
சிவப்பு வெளுப்பு கருப்பு அடைவிலே சொல்லியது போலே
கரு நீல வண்ணன் -கலி யுகத்தின் வர்ணம்

ஒரு வடிவத் தோர் உரு என்று உணரலாகாது –
மீனாய் இத்யாதி தேவ மனுஷ்ய திர்யக் ஸ்தாவர யோநிகளையும்
சிவப்பு வெளுப்பு கறுப்பு என்றால் போலே
இச்சையால் பரிக்ரஹிக்கப் பட்டவை
சிலவற்றை பாசுரம் இட்டு சொல்லலாம்
உள்ளபடி அறிய முடித்த அவனை
அவனது நிர்ஹேதுக கிருபையால் -பகவத் பிரசாதத்தால் கண்டு
நான் பேசினால் போல் பேச வல்லார் யார்
கட்டுரையே-
தமது திரு உள்ளத்தை விளிக்கிறார்
அன்றிக்கே
அவர்கள் ஏதோ ஏதோ பேசினும் வெறும் கட்டுரையே அன்றி உள்ளபடி கண்டு பேசினது அன்று என்றுமாம்-

————————————————————————

இந்திரற்கும் பிரமற்கும் முதல்வன் றன்னை இருநிலம்கால் தீநீர்விண் பூதம் ஐந்தாய்,
செந்திறத்த தமிழோசை வடசொல் லாகித் திசைநான்கு மாய்த்திங் கள் ஞாயி றாகி,
அந்தரத்தில் தேவர்க்கும் அறிய லாகா அந்தணனை அந்தணர்மாட் டந்தி வைத்த
மந்திரத்தை, மந்திரத் தால் மறவா தென்றும் வாழுதியேல் வாழலாம் மடநெஞ் சம்மே.

பதவுரை

இந்திரற்கும்–இந்திரனுக்கும்
பிரமற்கும்–ப்ரஹ்மாவுக்கும்
முதல்வன் தன்னை–காரண பூதனாய்
இருநிலம் கால் தீ நீர் விண் பூதம்–பெரிதானபூமி, காற்று, அக்நி, ஜலம், ஆகாசம் ஆகிய பஞ்ச பூதங்களுக்கும் நியாமகனாய்
செம்திறத்த தமிழ் ஓசை ஆகி–செவ்விய தமிழ்ப் பிரபந்தங்களைப் பிரகாசிக்கப் பித்தவனாய்
வடசொல் ஆகி–ஸம்ஸ்க்ருத வேதத்தையும் பிரகாசிக்கப் பித்தவனாய்
திசை நான்கும் ஆய்–நான்கு திசைகளிலுமுள்ள எல்லாப் பொருள்களுக்கும் அந்தராத்மாவாய்
திங்கள் ஞாயிறு ஆகி–சந்திர ஸூரியர்கட்கும் நியாமகனாய்
அந்தரத்தில்–இப்படி ஸகல பதார்த்தங்களிலும் வியாபித்து நிற்குமிடத்தில்
தேவர்க்கும் அறியல் ஆகா அந்தணனை–தேவர்களுக்கும் அறியக் கூடாத சுத்த ஸ்வபாவனாய்
அந்தணர் மாடு–பிரமாணர்கட்குச் செல்வமான வேதத்தினுடைய
அந்தி–முடிவிலே
வைத்த–விளங்குகிற
மந்திரத்தை–பரம மந்த்ரமான ஸர்வேச்வரனை
மந்திரத்தால்–திரு மந்த்ரத்தாலே
மறவாது வாழுதி ஏல்–இடைவிடாது அநுபவிப்பாயாகில்
மட நெஞ்சமே–விதேயமான நெஞ்சே!
என்றும்–இவ்வாத்மா உள்ளவளவும்
வாழலாம்–உஜ்ஜீவிக்கப்பெறலாம்.

எம்பெருமானைத் தாம் ஒருவராக அநுபவிப்பதில் த்ருப்தி பிறவாமையாலே உசாத் துணை கூட்டிக் கொள்ள
விருப்பமுண்டாயிற்று ஆழ்வார்க்கு;
முக்தர்களும் நித்யர்களும் இந்நிலத்தவ ரல்லாமையாலே அவர்கள் துணையாகப் பெற்றதில்லை;
இந் நிலத்தவரான ஸம்ஸாரிகள் உண்டியே உடையே உகந்தோடும் அவர்களாகையாலும் துணையாக மாட்டார்கள்;
இனி ஒரு போதும் தம்மை விட்டுப் பிரியாதிருக்கிற தமது திருவுள்ள மொன்றே தமக்குத் துணையாகவற்றாதலால்
‘நெஞ்சே! இவ் விஷயத்தை நாம் அநுபவிக்கும் படி பாராய்‘ என்கிறார்.

இந்திரற்கும் பிரமற்கும் முதல்வன் தன்னை=
உலகத்தில், நான்முகக் கடவுளாகிய பிரமனுக்குப் பரத்வம் சங்கிப்பவர்கள் உளரே யன்றி
இந்திரனுக்குப் பரத்வம் சங்கிப்பார் ஆருமில்லை;
அப்படியிருக்க ‘இந்திரற்கும் முதல்வன்‘ என்று இங்குச் சொல்லுவானேன்?
அப்படிச் சொன்னாலும் பிரமனை முந்துறச் சொல்லிப் பின்னை இந்திரனைச் சொல்லியிருக்கலாமே;
முற்படச் சொல்லுவானென்? என்னில்;

ஸாதாரண ஜீவ ராசிகளில் பரிகணிதனான இந்திரனுக்கு எப்படி எம்பெருமான் காரணபூதனோ,
அப்படியே நான்முகனுக்கும் காரணபூதன் என்று தெளிவித்தவாறு.
இந்திரன் எப்படி கார்ய பூதனோ அப்படியே பிரமனும் கார்ய பூதன் என்று தெளிவித்தவாறு.
இந்திரன் எப்படி கார்ய பூதனோ அப்படியே பிரமனும் கார்ய பூதன் என்று காட்டுதற்கே இந்திரனை முற்படச் சொல்லிற் றென்க.

ருத்திரனுக்குத் தந்தையான பிரமனை யெடுத்துச் சொன்ன போதே ருத்ரனுக்கும் எம்பெருமானே முதல்வனென்பது வெளிப்படையேயாம்.
தாழ்ந்தவர்களில் கடையான இந்திரனையும் உயர்ந்தவர்களில் முதல்வனான பிரமனையும் எடுத்துரைத்த போதே
ப்ரத்யாஹாரந்யா (ப்ரத்யாஹாரந்யாயமாவது முதலையும் முடிவையுஞ் சொன்ன முகத்தால்
இடையிலுள்ள வற்றையும் க்ரஹிப்பித்தல்.) யத்தாலே நடுவுள்ள தேவர்களும் சொல்லப்பட்டனராகக் குறையில்லை யென்க.

இருநிலங்கால் தீநீர்விண் பூதமைந்தாய் =
எம்பெருமான் பஞ்ச பூதங்களாகவே யிருக்கிறானென்றது பஞ்ச பூதங்களையும் படைத்தவனென்றபடி.

செந்திறத்த தமிழோசை வடசொல்லாகி=
தமிழ் வேதத்தையும் ஸம்ஸ்க்ருத வேதத்தையும் வெளிப்படுத்தினவன் என்றாவது,
தமிழ் வேதத்தாலும் ஸம்ஸ்க்ருத வேதத்தாலும் பிரதிபாதிக்கப்படுகிறவன் என்றாவது பொருள் கொள்க.
ஆர்ய பாஷையாகிய ஸம்ஸ்க்ருத பாஷையை முன்னே சொல்லி ஆரியச் சிதைவான தமிழ்ப் பாஷையைப்
பின்னே சொல்ல ப்ராப்தாயிருக்க, முன்னே சொல்லிற்று என்னென்னில்;

தமிழ் வேதமானது வடமொழி வேதம் போலல்லாமல் ஸர்வாதிகாரமாயிருத்தாலலும்,
”செய்ய தமிழ் மாலைகள் நாம் தெளிய வோதித் தெளியாத மறை நிலங்கள் தெளிகின்றோமே” என்ற
வேதாந்த தேசிகன் பாசுரப்படியே தெளிவாகப் பொருள்களை விளக்குதலாலும்,
ஸ்வரூபத்திற்குச் சேர்ந்தவையும் சேராதவையுமாகிய கண்ட பொருள்களையும் பேசுகிற வடமொழி வேதம்
போலல்லாமல் ஸ்வரூபத்திற்குச் சேர்ந்தவற்றையே பேசுதலாலும்
இன்னமும் இப்படிப்பட்ட பலவகையான வைலக்ஷண்யத்தை உட்கொண்டு
ஸம்ஸ்க்ருத வேதத்திலும் தமிழ்வேதம் மிகச் சிறந்ததென்பது விளங்க முந்துறச் சொல்லிற்றென்க.

வடமொழியானது ‘முரட்டு ஸ்ம்ஸ்க்ருதம்‘ என்று பேர் பெற்றிருக்கும்;
இஃது அங்ஙனல்லாமல் ‘ஈரத்தமிழ்‘ என்றும் செவிக்கினிய செஞ்சொல்‘ என்றும்
சிறப்புறுதல் பற்றிச் ‘செந்திறத்த‘ என விசேஷிக்கப்பட்டது.

திசைநான்குமாய்=
நான்கு திசைகளிலுமுண்டான ஸகல பதார்த்தங்களையும் படைத்தவனாய் என்றபடி.
திங்கள் நாயிறாகி யென்று சந்திர ஸூரியர்களுக்கு அந்தராத்மாவா யிருக்கும்படியைச் சொல்லுகிறது.

(அந்தரத்தில் தேவர்க்கும் அறியலாகா வந்தணனை)
‘அந்தரம்‘ என்று மேலுலகத்திற்கும் பெயருண்டாகையாலே
‘மேலுகத்திலுள்ள தேவர்க்கும் அறியலாகா‘ என்று பொருளுரைக்கலாம் ஆயினும் அப் பொருள் இங்கு விவக்ஷிதமன்று;
ப்ருஹதாரண்யக உபநிஷத்தில் * ய: ப்ருதிவ்யாம் திஷ்டந் ப்ருதிவ்யா: அந்தர: * என்று தொடங்கிப்
பல பர்யாயங்களில் பிரயோகிக்கப்ட்டுள்ள அந்தர சப்தம் வியாபகன் என்னும் பொருளதாகையாலே
இவ்விடத்திற்கும் அப்பொருள் ஏற்கும்;

அந்தரத்தில் – அந்தரனாமிடத்தில் (அதாவது) ஸ்ருஷ்டிக்கப்பட்ட் ஸகல பதார்த்தங்களிலும் வியாபனாய்
உறைந்து நிற்குமிடத்தில் என்றவாறு.
ஞான சக்திகளால் நிரம்பின தேவர்களுங்கூட எம்பெருமானுடைய ஸர்வ வ்யாப்தியை அறிய மாட்டார்களென்றதாயிற்று.
எம்பெருமானுடைய நிர்ஹேதுக கடாக்ஷ விஷய பூதனான ப்ரஹலாதாழ்வான் போல்வார் அறியலாமத்தனை யன்றி
மற்றையோர் அறியகில்லார் என்க.

(அந்தணனை)
அந்தணனென்பது பிராமணனுக்குப் பெயர்;
அதைக் கொண்டு ‘பரிசுத்தன்‘ என்கிற பொருளை ஆசாரியர்கள் விவக்ஷிப்பர்கள்.
திருவாய்மொழியில் ”அறவணை ஆழிப்படை யந்தணனை” என்றவிடத்தும் இப்படியே.
ப்ரக்ருதத்தில் விவக்ஷிதமான பரிசுத்தியாவது, எம்பெருமான் ஸகல பதார்த்தங்களிலும் வியாபித்திருக்கிறானென்றால்
அவற்றிலுள்ள தோஷங்களாலே ஸ்பர்சிக்கப்பட்டு அபரிசுத்தனாக ஆகிறானோ என்று
ஒரு சங்கை தோன்றக்கூடுமாதலால் அதற்கு இடமறச் சொல்லுகிறபடி.

(அந்தணர் மாட்டாந்திவைத்த மந்திரத்தை)
”மாடு பொன் பக்கஞ் செல்வம்” என்ற நிகண்டின்படி மாடு-செல்வம்;
பிரமாணர்கட்குச் செல்வம் வேதமென்று நூல்கள் கூறும்.
”தநம் மதீயம் தவ பாதபங்கஜம்” என்கிறபடியே ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு எம்பெருமானுடைய திருவடிகளே
தனமாயிருப்பது போல, ப்ராஹ்மணர்கட்டு வேதமே தனமாயிருக்கும்.
ஆகவே ‘அந்தணர்மாடு‘ என்று வேதத்தைச் சொல்லிற்றாயிற்று. அதனுடைய அந்தியாவது வேதாந்தம்;
வேதாந்தத்திலே புதைத்து வைக்கப்பட்ட மந்திரமாயிருப்பன் எம்பெருமான்.

ஸஹஸ்ரநாமத்தில் எம்பெருமானுக்கு ‘மந்த்ர:‘ என்றாரு திருநாமமுண்டு;
மந்த்ர:=வேதமந்திர ரூபமாயிருப்பவர்;
மந்திரங்களினால் தெரிவிக்கப்படுகிறவர் என்றுரைத்தார் சங்கராச்சாரியர்;
தியானம் செய்கிறவர்களைக் காப்பாற்றுகிறவர் என்றுரைத்தருளினர் பட்டர்.

இங்குப் பெரியவாச்சான்பிள்ளை வியாக்கியமான வாக்கியம்;-
”மந்த்ரம் என்றும் ஸர்வ ஸ்மாத் பரனென்றும் பர்யாயம் போலே காணும்.
ஈச்வரனை ரஹஸ்யமென்கிறது- தலைக் கடையையும் புழைக் கடையையு மடைத்துக் கிழிச் சீரையை
அவிழ்த்துப் பார்ப்பாரைப் போலே அஷ்ட கர்ணமாக உபதேசிக்கவும் அநுஸந்திக்கவும் வேண்டி.
இப்படி சீரிய சரக்காயிருக்கையாலே.” என்பதாம்.

ஆக இப்படிப்பட்ட எம்பெருமானை (மடநெஞ்சமே! மந்த்ரத்தால் வாழுதியேல்)
பகவத் விஷயத்தை அநுபவிக்குமிடத்தில் வேதாந்த முகத்தாலே யாவது இதிஹாஸ புராணமுகத்தாலே யாவது
அநுபவிக்கப் பாராமல் திருவஷ்டாக்ஷாமாகிற பெரிய திருமந்திரத்தினால் அநுபவிக்கப் பார்த்தாயாகில் என்றபடி.

இடையிடையே விஷயாந்த்ரங்களிலும் நெஞ்சுசெல்லக்கூடா தென்பதற்காக
”மறவாது வாழுதியேல்” என்கிறார் என்று சிலர் சொல்லுவர்;
இங்கு அந்த நிஷேதத்திற்கு ப்ரஸக்தியில்லை. கேவலம் உபேயாகவே நினைக்க வேண்டிய எம்பெருமானை
உபாயமாகவும் நினைத்தல் அவனை மறந்ததாகவே கருதக் கூடியதாதலால் அந்த நினைவு வேண்டாவென்கிற தென்க.
‘சிந்தித்தியேல் என்றோ ‘நினைத்தியேல்‘ என்றோ சொல்ல வேண்டுமிடத்தில் ‘வாழுதியேல் என்றது,
அதுதானே வாழ்ச்சியாயிருக்கவேணு மென்கைக்காக.
எம்பெருமானுடைய பரத்வத்திலும் உபாயத்வத்திலும் இழியாதே போக்யதையில் இழிந்து
அநுபவித்தால் அதுதானே வாழ்ச்சியாயிருக்குமிறே.

(என்றும் வாழலாம்)
ஆத்மா உள்ளவரையிலும் நித்யஸூரிகள் நடுவேயிருந்து வாழலாமென்றதாயிற்று.

உசாத்துணை தேட்டம் அவனை அனுபவிக்க
நெஞ்சே கூட சேர்ந்து அனுபவிக்கப் பாராய் என்கிறார்
இந்த்ரனை முதலில் சொல்லி காரண பூதர்கள் இவர்கள்
நடுவு உள்ள தேவர்களும் சொல்லப் பட்டனர்
இந்த்ரனுக்கு பிரமனுக்கு ரேபாந்தமாகச் சொல்லிற்று பூஜ்யா புத்தியால் அன்று — ஷேபிக்கிறார்
இந்த்ரனுக்கு -இந்தரற்கு
கண்டும் தெளிந்தும் கற்றார் கண்னற்கு ஆளன்றி ஆவரோ
இங்கும் கண்ணனுக்கு

இரு நிலம் கால் தீ நீர் விண் பூதம் ஐந்தாய்
பஞ்ச பூதங்களாகவே இருக்கிறான் என்றது அவற்றை படைத்தான் என்றபடி

செந்திறத்த தமிழோசை வட சொல்லாகி
சர்வாதிகாரம் ஆதாலால் தமிழ் முதலில் சொல்லி
செய்ய தமிழ் மாலைகள் நாம் தெளிய ஓதித்
தெளியாத மறை நிலங்கள் தெளிகின்றோமே
ஈரத் தமிழ்
செவிக்கு இனிய செஞ்சொல் -அதனால் செந்திறத்த என்கிறார்
முரட்டு சமஸ்க்ருதம்
வந்தருளி என்நெஞ்சு இடம் கொண்ட வானவர் கொழுந்தே -ஈட்டில்
பட்டர் ஸ்ரீ புஷ்ப யாகம் அணித்தவாறே நஞ்சீயரை பல காலும் இயல் கேட்டு அருளுவர்
ஒரு கோடையிலே திரு வீதியிலே நீரை விட்டு எழுந்து அருளி இருந்து இப்பாட்டை இயல் சொல்லும் என்று
ஜீயரை அருளிச் செய்து
தாம் இத்தை அனுசந்தித்து இருந்து
அனந்தரத்தே தாமும் இப்பாட்டை இயல் சொல்லி
யம நியமாதி க்ரமத்தாலே த்யேய வஸ்துவை மனனம் பண்ணி
புறம்புள்ள பராக்கை அறுத்து அனுசந்திக்கப் புக்காலும்
சுக்கான் பரல் போல் இருக்கக் கடவ நெஞ்சுகள் பதம் செய்யும் படி தார்மிகராய் இருப்பார்
இவை சில ஈரச் சொல்களை பொகட்டு போவதே -என்று அருளிச் செய்தார்
இன்னும் தங்கள் அன்பார தமது சொல் வலத்தால் -9-2-8-
வங்கி புரத்து நம்பி பெருமாளை சேவிக்க எழுந்து அருளின அளவிலே
இடைச்சிகள் அண்டையில் சேவித்தாராய் அதை ஆண்டான் கண்டருளி
பிராப்யமான ஸ்ரீ வைஷ்ணவர்கள் சமுதாயம் இருக்க அவர்கள் அண்டைக்கு எழுந்து அருளுவான் என் என்ன
நாம் சற்று விரகராய் இருப்போம்
இவர்கள் ஒன்றும் அறியாத கொச்சைகள் ஆகையாலே எம்பெருமான் உடைய கடாஷம்
இவர்கள் இடத்திலே பள்ள மடையாய் இருக்கும் என்று அங்கே இருந்தேன் என்ன
அவர்கள் சொன்னது ஏது தேவரீர் அருளிச் செய்தது ஏது என்று ஆண்டான் கேட்க
பொன்னாலே பூணூல் இடுவீர்
நூறு பிராயம் புகுவீர்
அழுத்த விரட்டை உடுப்பீர்
என்கிற இவை அவர்கள் சொன்ன வார்த்தை
விஜயஸ்வ விஜயீ பவ -என்று நான் சொன்ன வார்த்தை என்று வங்கி புரத்து நம்பி அருளிச் செய்ய
அங்குப் போயும் முரட்டு சம்ஸ்க்ருதம் விட்டீர் இல்லையே
எங்கே இருந்தாலும் நாம் நாம் காணும்
இங்கே எழுந்து அருளீர் -என்று ஆண்டான் அருளிச் செய்த வார்த்தை

அந்தரத்தில் தேவர்க்கும் அறியலாகா அந்தணனை
இங்கு மேல் உலகம் பொருள் இல்லை
அந்தர சப்தம் வியாபகன் என்னும் பொருளில் அந்தரனாகும் இடத்தில்
ஸ்ரீ ப்ரஹ்லாத ஆழ்வான் போல்வார் அறியலாகுமே ஒழிய பிரயோஜனாந்த பரர்கள் அறியார்
அந்தணன்
பரிசுத்தன்
அறனை ஆழிப்படை அந்தணனை
வ்யாபித்தாலும் எந்த தோஷங்களும் தட்டாதவன்

அந்தணர் மாடு அந்தி வைத்த மந்த்ரத்தை
மாடு பொன் பக்கல் செல்வம்
இங்கு செல்வம்
தனம் மதியம் தவ பாத பங்கஜம்
பிராமணர்களுக்கு வேதமே தனம்
வேதாந்தத்தில் புதைத்து வைக்கப் படும் மந்த்ரம்
மந்திர -சஹஸ்ரநாமம் -பட்டர் த்யானம் செய்பவரை காத்து அருளுபவன்
சங்கரர் வேத மந்திர ரூபம் -மந்த்ரங்களினால் தெரிவிக்கப் படுகிறவர்
மந்த்ரம் என்றும் சர்வ ஸ்மாத் பரன் என்றும் பர்யாயம் போலே காணும்
ஈஸ்வரனை ரஹச்யம் என்கிறது தலைக் கடையையும் புழைக் கடையையும் அடைத்து
கிழிச் சீரையும் அவிழ்த்து பார்ப்பாரைப் போலே அஷட் கரணமாக உத்தேசிக்கவும்
அனுசந்திகவும் வேண்டி
இப்படி சீரிய சரக்காய் இருக்கையாலே

மந்திரத்தால் வாழுதியேல்-
வேதாந்த முகத்தாலோ
இதிஹாச புராண முகத்தாலோ ஆராதிக்கப் பார்க்காமல்
திரு மந்தரத்தால் அனுபவிக்கப் பார்
மறவாது வாழுதியேல் என்பர் சிலர் -விஷயாந்தரங்களில் நெஞ்சு செல்லக் கூடாது என்பதற்காக
அந்த நிஷேததுக்கு பிரசக்தி இல்லை
உபேயமாக மட்டுமே நினைக்க வேண்டியவனை உபாயமாக நினைப்பதும் மறப்பது போலே தானே
அந்த நினைவு வேண்டா என்கிறது இதில்

சிந்தித்தியேல் நினைத்தியேல் சொல்லாமல் வாழுதியேல் என்றது அது தானே வாழ்ச்சி

பரத்வத்திலும் உபாயத்திலும் இழியாதே
போக்யதையில் இழிந்து அனுபவித்தால்
அது தானே வாழ்ச்சி

என்றும் வாழலாம்
ஆத்மா உள்ளவரை நித்ய சூரிகள் நடுவே இருந்து வாழலாம் என்றதாயிற்று

—————————————————————-

ஒண்மிதியில் புனலுருவி ஒருகால் நிற்ப ஒருகாலுங் காமருசீர் அவுணன் உள்ளத்து,
எண்மதியுங் கடந்தண்ட மீது போகி இருவிசும்பி னூடுபோ யெழுந்து மேலைத்
தண்மதியும் கதிரவனும் தவிர ஓடித் தாரகையின் புறந்தடவி அப்பால் மிக்கு,
மண்முழுதும் அகப்படுத்து நின்ற எந்தை மலர்புரையும் திருவடியே வணங்கி னேனே.

பதவுரை

ஒரு கால்–ஒரு திருவடியானது
ஒண் மிதியில்–அழகாக ஓரடியிட்ட மாத்திரத்தில்
புனல் உருவி நிற்ப–ஆவரண ஜலத்தளவும் ஊடுருவிச் சென்று
(அப்புறம் போக இடம்பெறாமையாலே) நிற்க,
ஒரு காலும்–மற்றொரு திருவடி
காமரு சீர் அவுணன்–நல்ல பாக்யசாலியான மஹாபலி யானவன்
உள்ளத்து எண்மதியும் கடந்து–தன்னெஞ்சிலே நினைத்திருந்த நினைவைக் கடந்து
அண்டம் மீது போகி எழுந்து–அண்ட பித்திக்கு மப்பால் செல்லக் கிளம்பி
இரு விசும்பின் ஊடு போய்–பெரிய ஆகாசத்தையும் ஊடுருவிச் சென்று
கதிரவனும் –ஸூரிய மண்டலத்தையும்–
மேலே தண் மதியும்–அதற்கும் மேற்பட்ட குளிர்ந்த சந்திர மண்டலத்தையும்
தவிர ஓடி–கடந்து சென்று
தாரகையின் புறம் தடவி–(அதற்கும் மேற்பட்ட) நக்ஷத்ர மண்டலத்தையும் கடந்து
அப்பால் மிக்கு–அவ்வருகே பிரம லோகத் தளவும் வியாபித்து நிற்க
மண் முழுதும்–பூலோகம் முதலான பதினான்கு லோகங்களையும்
அகப்படுத்து நின்ற எந்தை-ஸ்வாதீனப்படுத்திக் கொண்ட
எந்தை–எம்பெருமானுடைய
மலர் புரையும் திரு அடியே–தாமரை மலரையொத்த திருவடிகளையே
வணங்கினேன்–வணங்கப் பெற்றேன்.

கீழ்ப்பாட்டில் “மந்திரத்தால் வாழுதியேல்” என்று திருவஷ்டாக்ஷர மஹாமந்திரத்தை ஸ்மரித்தார்;
அதில் நாராயண நாமத்தின் பொருளான வ்யாபகத்வத்தை த்ரிவிக்ரமாவதாரத்திலே யிட்டு அநுபவிக்கிற பாசுரம் இது.

(ஒருகால் ஒண்மிதியில் புனலுருவி நிற்ப.)
ஒரு திருவடியானது பூமியளவாதல் ஸப்த ஸாகரங்கள்ளவாதல் ஸப்த த்வீபங்களளவாதல்
சக்கரவாள கிரியளவாதல் மஹா ஜலத்தள வாதல் அண்ட கடாஹத்தளவாதல் செல்லுகையன்றியே
ஆவரண ஜலத்தளவுஞ் சென்று நின்றதாம்.

ரக்ஷ்ய வர்க்கமெல்லாம அண்ட கடாஹத்தினுள்ளே யன்றோ வுள்ளது,
அதற்கு மப்பால் செல்லவேண்டுவானென் என்னில்;
ரக்ஷகனுடைய ரக்ஷணப் பாரிப்பு ரக்ஷய வஸ்துவலினளவன்று, அதனிலும் விஞ்சியது என்று காட்டுகிறபடி.

”சூழ்ந்தகன்றாழ்ந்துயர்ந்த முடிவிற் பெரும் பாழேயோ“ என்று தொடங்கித்
தத்வ த்யத்தையுஞ் சொல்லி ”சூழ்ந்ததனிற் பெரிய என்னவா” என்று அதனிலும் விஞ்சினதாக வன்றோ
ஆழ்வாருடைய ஆசையளவு சொல்லப்பட்டது; எம்பெருமானுடைய வாத்ஸல்யம் இதனிலுங் குறைந்து விடுமோ?
உலகமுள்ள வளவையும் மீறிச் செல்லுகி்ன்றது ரக்ஷகனான எம்பெருமானுடைய பாரிப்பு.
ஆகவே அண்ட கடாஹத்துக்குமப்பால் ஆவரண ஜலத்தளவும் ஒரு திருவடி ஊடுருவிச் சென்றதென்க.

ஆக, பூமியையளந்த திருவடியை அநுபவித்துப் பேசினாராய்,
இனி மேலுலகங்களை யளந்த மற்றொரு திருவடியின் செயலைப் பேசுகிறார் ஒருகாலும் என்று தொடங்கி.
‘திருவடி‘ என்று கௌரவித்துச் சொல்ல வேண்டியிருக்க ‘கால்‘ என்கிறாரே, இதுவென்? என்னில்;

முதற்பாட்டில் ”தளிர்புரையுந் திருவடி என்தலை மேலவே” என்றும்,
இப்பாட்டிலும் ”மலர்புரையுந் திருவடியே வணங்கினேனே” என்றும் அருளிச் செய்கிற ஆழ்வார்
இங்குக் கால் என்றது வெறுமனன்று; ஒரு கருத்துத் தோன்றவே இப்படியருளிச் செய்தது;
அதாவது, ஸம்ஸாரிகளின் அபிப்பிராயத்தாலே சொல்லுகிறபடி;

உலகளந்த காலத்தில் திருவடி எல்லார் தலையிலும் பட்டபோது ஸம்ஸாரிகள்
‘ஒருவருடைய கால் நம் தலையிலே பட்டதே“ என்று வெறுத்திருந்ததத்தனை யொழிய
”கோல மாமென் சென்னிக்கு உன் கமலமன்ன குலை கழலே” என்றாற் போலே உகந்து கொண்டார்களில்லையே;
அன்னவரது கருத்தாலே கால் என்றது.

(காமருசீரவுணனுள்ளத் தெண்மதியுறங் கடந்து)
வாமனன் ‘மூவடி நிலம் தா‘ என்று கேட்டவாறே
‘மூவடி நிலந்தானே இவன் கேட்பது, அதைக் கொடுப்போம்; அதுதவிர மற்ற நிலமெல்லாம் நம்மது தானே‘ என்றிருந்தான் மாவலி;
மூவடி மண் இரந்துபெற்ற வாமனன் பூமியை யடங்கலும் அளந்தவாறே ‘பூமிபோனாலும் மேலுலகமெல்லாம் நம்மது தானே‘ என்றிருந்தான்;
மேலுலகத்தையு மளந்தவாறே, எண்டிசையுங் கீழும் மேலும் முற்றவுமிழந்தோமே! என்று வருந்தினானாயிற்று.
இதுவே ‘அவுணனுள்ளத் தெண்மதியுங்கடந்து‘ என்றதன் கருத்து.

மஹாபலியை ஜ்ஞாதாக்க ளெல்லாரும் அஹங்காரி யென்றும் பகவத் விபூதியைக் கொள்ளை கொண்டவனென்றும் நிந்தியா நிற்க,
இவர் ”காமசீரவுணன்” என்று புகழ்ந்து பேசுவானென்னென்னில்;
அவ் வவதாரத்திற்குப் பிற்பட்டுப் போன நம்மைப் போலன்றியே ஸ்ரீவாமநனுடைய வடிவழகையும் சீலத்தையும்
கண்ணாலே காணப்பெற்றவனன்றோ மாவலி; இவனைப்போலே பாக்யசாலியுண்டோ?
என்னுங்கருத்தாலே அருளிச்செய்கிறபடி.

இங்கே வியாக்கியான வாக்கியங்காண்மின்;-
“நானும் அடியேனென் றிருக்கிறதை விட்டு பகவத் விபூதியை அபஹரித்து ஔதார்யத்தை யேறிட்டுக்கொண்டு
யஜ்ஞத்திலே இழியப்பெற்றிலேனே! என்கிறார்“ என்பதாம்.
“ஐயோ! நான் காளிய நாகமாகப் பிறவாதொழிந்தேனே; பிறந்திருந்தேனாகில் கண்ணபிரானுடைய
திருவடியைச் சென்னி மேற் கொண்டிருப்பேனே“ என்று ஸுந்தரபாஹுஸ்தவத்தில் ஆழ்வான் அருளிச் செய்ததை நினைப்பது.

(அண்டமீதுபோகி இருவிசும்பினூடுபோயெழுந்து)
‘போகி‘ என்றதை ‘போக‘ என்னும் எச்சத் திரிபாகக் கொண்டு ‘எழுந்து‘ என்றதை அதனோடு அந்வயித்துக் கொள்ள வேணும்.
அண்டத்திற்கு அப்பால் போவதாகக் கிளம்பி ஆகாசத்தின் மேலே போய்‘ என்றவாறு.
இவ்விடத்தில் ”இரு விசும்பினூடு போய்“ என்றவளவு போதுமே “அண்டமீதுபோகி யெழுந்து” என்பது வேணுமோ?
என்னில்;
“ஸ்ரீவாமனனுடைய விஜயத்தில் தமக்குண்டான ஆதராதிசயத்தாலே அளக்கும் ப்ரதேசத்ததுக்
கொண்டைக் கோல் நாட்டுகிறார்“ என்பர் பெரியவாச்சான் பிள்ளை.

மேலே அதிக்ரமித்துச் சென்ற விடங்களைச் சொல்லுகிறது
மேலைத் தண் மதியும் என்று தொடங்கி.
அந்தரிக்ஷத்துக்கு மேலெல்லையாய் ஸ்வர்க்கத்துக்குக் கீழெல்லையாயிருக்கும் ஆதித்ய பதம்;
அதற்கு மேலே நூறாயிரக்காத வழியுண்டு சந்திர பதம்;
அதுக்கு மேலே நூறாயிரக் காத வழியுண்டு நக்ஷத்ர பதம். அதற்கு மேலும் ஓங்கிச் சென்றதாயிற்று திருவடி.

ஸூர்யமண்டலங் கடந்த பின் சந்திர மண்டலமாயிருக்க,
இங்குத் ”தண்மதியுங் கதிரவனும்” என்று சந்திர மண்டலத்தை முந்துறச் சொல்லுவானென்? எனில்;
அஹங்காரிகளாய் மிகவும் விமுகராயிருக்கும் ஸம்ஸாரிகளின் தலையிலே ஸூகுமாரமான திருவடியை வைக்கையாலே
அத் திருவடிக்குண்டான வெப்பந்தீர சைத்யோபசாரம் பண்ண வேணுமென்று திருவுள்ளம் பற்றி
முந்துறச் சந்திர மண்டலத்தைப் பேசுகிறாரென்று ரஸோக்தியாக அருளிச் செய்வர் பெரியவாச்சான்பிள்ளை.

மந்திரத்தால் வாழுதியேல் -திரு அஷ்டாஷர மகா மந்த்ரத்தை ஸ்மரித்தார்
அதில் நாராயண நாம பொருளான வியாபகத்தை திரி விக்கிரம வியாபாரத்திலே இட்டு அனுபவிக்கிற பாசுரம் இது

ரஷகனுடைய ரஷணப் பாரிப்பு ரஷ்ய வஸ்துவின் அளவன்றே விஞ்சியது –
தளிர் புரையும் திருவடி என்றவர்
இங்கே கால் என்கிறது சம்சாரிகள் அபிப்ராயத்தாலே
கோலமாம் என் சென்னிக்கு உன் கமலம் அன்ன குரை கழலே -உகந்து கொள்ளாமல்
ஒருவனுடைய கால் நமது தலையிலே பட்டதே -என்பார்கள் இறே

காமரு சீர் அவுணன் உள்ளத்து எண் மதியும் கடந்து
அவன் எண்ண எண்ண அத்தையும் கடந்து
எண் திசையும் கீழும் மேலும் முற்றும் இழந்தோமே
அவனுக்கும் சீர்மை
வாமனன் வடிவு அழகையும் சீலத்தையும் கண்ணாலே காணப் பெற்ற சீர்மை
நானும் அடியேன் என்று இருக்கிற இத்தை விட்டு
பகவத் விபூதியை அபஹரித்து
ஔதார்யத்தை ஏறிட்டுக் கொண்டு
யஞ்ஞத்திலே இழியப் பெற்றிலேனே
ஐயோ நான் காளியனாக பிறவாது ஒழிந்தேனே ஸ்ரீ சுந்தர பாஹூ ஸ்தவம்

அண்டமீது போகி இரு விசும்பினூடு போய் எழுந்து
போகி என்றது போக என்றபடி
போவதாக கிளம்பி மேலே போய்
இரு விசும்பினூடு போய் எழுந்து -என்று மட்டும் சொல்லாமல்
அண்டமீது போகி இரு விசும்பினூடு போய் எழுந்து-என்றது
ஸ்ரீ வாமனன் உடைய விஜயத்திலே தமக்கு உண்டான ஆதாராதிசயத்தாலே
அளக்கும் பிரதேசத்துக்கு கொண்டைக் கால் நாட்டுகிறார்

மேலைத் தண் மதியும் இத்யாதி
அந்தரிஷத்துக்கு மேல் எல்லையாய்
ஸ்வர்க்கத்துக்கு கீழ் எல்லையாய் இருக்கும் ஆதித்ய பதம்
அதுக்கு மேலே நூறாயிரக் காத வழி உண்டு சந்திர பதம்
அதுக்கு மேலே நூறாயிரக் காத வழி உண்டு நஷத்ர பதம்
அதுக்கும் மேலே ஓங்கிச் சென்றதாயிற்று திருவடி
ஸூர்ய மண்டலம் கடந்த பின் சந்திர மண்டலமாய் இருக்க
இங்கு முந்துற சந்திர மண்டலம் சொன்னது
திருவடிகளில் வெப்பம் தீர சைத்யபோசாரம் பண்ண திரு உள்ளம் பற்றி முந்துற பேசுகிறார்-

—————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ P.B.A,ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்-
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ திருக் குறும் தாண்டகம் -ஸ்ரீ திவ்யார்த்த தீபிகை சாரம் —

September 28, 2014

நிதியினைப் பவளத் தூணை நெறிமையால் நினைய வல்லார்
கதியினைக் கஞ்சன் மாளக் கண்டு முன் அண்டம் ஆளும்
மதியினை மாலை வாழ்த்தி வணங்கி என் மனத்து வந்த
விதியினைக் கண்டு கொண்ட தொண்டனேன் விடுகிலேனே–1-

யோ வேத நிஹிதம் குஹாயாம்
வைத்தமா நிதியம் மதுசூதனன் -நம்மாழ்வார்
நெஞ்சிலே புதைத்து ஆளத் தக்க நிதி

கண்ணாரக் கண்டு கழிவதோர் காதல் உற்றார்க்கும் உண்டோ கண்கள் துஞ்சுதலே
சதா பஸ்யந்தி ஸூரய
எனக்காரும் நிகரில்லையே
மாறுளதோ இம்மண்ணின் மிசையே
எனக்கு இனி என் வேண்டுவதே
இல்லை எனக்கு எதிர் இல்லை எனக்கு எதிர் இல்லை எனக்கு எதிர்

பழுதே பல பகலும் போயின என்று அஞ்சி அழ வைக்கும் இழந்தால்
இன்பத்தை இழந்த பாவியேன் எனதாவி நில்லாதே
எழில் கொள் நின் திருக் கண்ணின் நோக்கம் தன்னையும் இழந்தேன் இழந்தேனே
உன்னைக் காண்பான் அலப்பாய் நான் ஆகாசத்தை நோக்கி அழுவன் தொழுவனே

கஞ்சன் மாளக் கண்டு முன் அண்டமாளும்
நாட்டை ஈரக்கையால் தடவி கம்சனால் பட்ட நோவு தீர ரஷித்தது

மதியினை
லஷணையால் புத்தி
அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன்
ஆமிடத்தே உன்னை சொல்லி வைத்தேன்

மால்
ஆசாலேசம் உள்ளார் இடம் வ்யா முக்தனாய் இருப்பவன்

வாழ்த்தி வணங்கி என் மனத்து வந்த விதியினை
விதி -பாக்யம்
என் மனத்து வந்த விதியினை வாழ்த்தி வணங்கி விடுகிலேன்-

——————————————————————

காற்றினைப் புனலைத் தீயைக் கடி மதிள் இலங்கை செற்ற
ஏற்றினை யிமயமேய எழில் மணித் திரளை யின்ப
ஆற்றினை யமுதம் தன்னை யவுணன் ஆர் உயிரை உண்ட
கூற்றினைக் குணம் கொண்டு உள்ளம் கூறு நீ கூறுமாறே -2–

பிராக்ருதமான சரீரம் இலங்கை
சம்சாரம் பெரும் கடலால் சூழப் பட்டு
பத்து இந்த்ரியங்கள் -மனஸ் பிரபு-ஜீவாத்மா சிறை -ஆச்சார்யர் உணர்த்த
எம்பெருமான் பிராக்ருத சம்பந்தம் அகற்றி தன்னிடம் கைங்கர்யம் கொள்வித்து உகப்பான்

இமயம் மேய
பொன் போலே புகருடையவன்
எணகையான் இமயத்துள்ளான்
நல்லிமயத்துள் பிரிதி சென்று அடை நெஞ்சே
உள்ளம் குணம் கொடு நீ கூறு -உள்ளமே அண்மை விளி

——————————————————————-

பாயிரும் பரவை தன்னுள் பருவரை திரித்து வானோர்க்
காயிருந் தமுதம் கொண்ட வப்பனை யெம்பிரானை
வேயிருஞ்சோலை சூழ்ந்து விரி கதிரிரிய நின்ற
மாயிருஞ்சோலை மேய மைந்தனை வணங்கினேனே –3-

அவாப்த சமஸ்த காமன்
செய்து அருளினவை எல்லாம் பிறருக்காக
சந்தனம் நிலா தென்றல் -பிறர்க்காய் இருந்து
பிரயோஜனாந்த பரர்களுக்காக உப்புச் சாறு கடைந்த அப்பன் எம்பிரான்
அமுதம் தந்த இல்லை
அமுதம் கொண்ட -தன் பேறாகக் கொண்டான்
அமுதினில் வரும் பெண்ணமுதம் கொண்டான்
பிறபட்டாருக்காக திருமாலிரும் சோலை மலையிலே மேய மைந்தன்
விரி கதிர் இரிய நின்ற
சூர்ய கிரணங்கள் உள்ளே புக ஒண்ணாத படி நிழல் செய்து இருக்கும் படி

—————————————————————————–

கேட்க யான் உற்றது உண்டு கேழலாய் யுலகம் கொண்ட
பூக்கெழு வண்ணனாரைப் போதரக் கனவில் கண்டு
வாக்கினால் கருமம் தன்னால் மனத்தினால் சிரத்தை தன்னால்
வேட்கை மீதூர வாங்கி விழுங்கினேற்கு இனியவாறே-4-

சமத்காரமாக அவனையே கேட்கிறார்
அன்பே பெருகும் மிக இதுவென் பேசீர்
யான் பெரியன் நீ பெரியை என்பதனை யார் அறிவர் ஊன் பருகு நேமியாய் உள்ளு
அன்று என்னை புறம் போகப் புணர்த்தது என் செய்வான்
திருப்பேரான் ஓன்று எனக்கு அருள் செய்ய உணர்த்தலுற்றேனே
அண்ணிக்கும் அமுதூரும் என்நாவுக்கே-போலே ஆனந்தம் வெளியிட்டு அருளும் கேள்விகள்
பூக்கெழு வண்ணனாரை–வேட்கை மீதூர விழுங்கினேற்கு இனியவாறே –
இதுஎன் என்று -கேட்கயான் உற்றது உண்டு -என்று அந்வயம்

———————————————————————————–

இரும்பு அனன்று உண்ட நீர் போல் எம்பெருமானுக்கு
அரும் பெறல் அன்பு புக்கு இட்டு அடிமை பூண்டு உய்ந்து போனேன்
வரும் புயல் வண்ணனாரை மருவி என் மனத்து வைத்துக்
கரும்பினின் சாறு போலேப் பருகினேற்கு இனியவாறே –5-

கேட்க யானுற்றது இதிலும் அந்வயம்
தீர இரும்புண்ட நீரது போலே என்னாருயிரை ஆரப்பருக எனக்கு ஆராவமுதானாயே-திருவாய் மொழி
அடி ஒற்றி இப்பாசுரம்
அரும்பெறல் அன்பு -பகவத் விஷயத்தில் அன்பு மேட்டு மடையாய் இருக்குமே
அஹங்கார பெறு நெருப்பிலே அன்பு மலர்வது நெருப்பிலே தாமரை பூப்பது போல்
அந்த அன்பு பூஷணம் ஆத்மாவுக்கு-என்பதால் அடிமை பூண்டு -என்கிறார்
வரும் புயல் வண்ணனார் -ஆங்கு ஆங்கு சென்று இன்பம் பயக்கும் மேகம்
அடியார் இடம் சென்று ஈரக்கையால் தடவி விடாய் தீர்க்குமவன்
அன்னவனை கருப்பஞ்சாறு போலே பருகினேன்
வாயால் சொல்ல ஒண்ணாத படி இனிமையாய் இருக்கிறதே
இதற்க்கு என்ன காரணம் தெரிய வேணும் என்கிறார்-

—————————————————————————–

மூவரின் முதல்வனாய யொருவனை உலகம் கொண்ட
கோவினைக் குடந்தை மேய குரு மணித் திரளை இன்பப்
பாவினைப் பச்சைத் தேனைப் பைம்பொன்னை யமரர்சென்னிப்
பூவினைப் புகழும் தொண்டர் என் சொல்லிப் புகழ்வர் தாமே –6-

பகவத் விஷய சாகரத்தில் அழுந்திக் கிடக்கலாமே ஒழிய பாசுரம் இட்டுச் சொல்லப் போமோ
ஏகமேவ அத்வதீயம் ப்ரஹ்ம
இன்பப்பாவினை
அம் தமிழ் இன்பப் பாவினை- குலசேகர பெருமாள்
அருளிச் செயல் போல் தித்திப்பவன்
அமரர் சென்னி பூ -நின் செம்மா பாத பற்புத் தலை சேர்த்து –அம்மா அடியேன் வேண்டுவது ஈதே –
பாசுரங்கள் பெருமையின் எல்லை கண்டு அன்று
நம் பொழுது போவதற்காகவே

——————————————————————————-

இம்மையை மறுமை தன்னை எமக்கு வீடாகி நின்ற
மெய்மையை விரிந்த சோலை வியன் திருவரங்கம் மேய
செம்மையைக் கருமை தன்னைத் திருமலை யொருமையானைத்
தன்மையை நினைவார் என் தன் தலைமிசை மன்னுவாரே–7-

அமரர் சென்னிப் பூவினை வேண்டின ஆழ்வார் தலையிலே திருவடிகளை வைக்க வர
தலைக்கு நீ வேண்டா உன் அடியார்களே -தன்மையை நினைவார் என் தலை மிசை மன்னுவார் என்கிறார்
சீலத்தை சிந்தனை செய்யும் தொண்டர்களே -வேணும்
வியன் திருவரங்கம்மேய -சுலபனான இடம்
செம்மையை கருமை தன்னை
பாலின்நீர்மை செம்பொன்நீர்மை-திருச்சந்த விருத்தம்
நிகழ்ந்தாய் பால் பொன் பசுப்பு கார் வண்ணம் நான்கும் -நான்முகன் திருவந்தாதி
திருமலை ஒருமையானை
ஒருமைப்பட்டு பொதுவாய் நிற்பவன்
தானோங்கி நிற்கின்றான் தண்ணருவி வேங்கடமே வானோர்க்கும் மண்ணோர்க்கும் வைப்பு –
கண்ணாவான் என்றும் மண்ணோர் விண்ணோர்க்கு தண்ணார் வேங்கட விண்ணோர் வெற்பனே
தன்மையை நினைவார்
சீலத்தை -அவன் அடியவர் இட்ட வழக்காய் இருக்கும் தன்மையை
அனுசந்தித்து ஈடுபடுமவர்கள் என் தலை மேலார் –

—————————————————————————-

வானிடைப் புயலை மாலை வரையிடைப் பிரசமீன்ற
தேனிடைக் கரும்பின் சாற்றைத் திருவினை மருவி வாழார்
மானிடைப் பிறவி யந்தோ மதிக்கிலர் கொள்க தந்தம்
ஊனிடைக் குரம்பை வாழ்க்கைக்கு உறுதியே வேண்டினாரே–8-

ஆலம்பனம் இல்லாத ஆகாசத்தை மேகம் பற்றினால் போல்
தம்மையும் விஷயீ கரித்தானே
இதற்க்கு அடி
மாலை -வ்யாமோஹமே வடிவு எடுத்தவன்
அபூத உவமை வரையிடைப் பிரசம் ஈன்ற தேனிடைக் கரும்பு
தேனே விளைநீராக விளைந்த கரும்பு சாறு போன்றவன்

திருவினை
திருவுக்கும் திருவாகிய செல்வன் என்பதால் அவனையே திரு என்கிறார்
துர்லபோ மானுஷோ தேக -அரிது அரிது
இப்படி இருந்தும் உண்டியே உடையே உகந்து அந்த கரும்பு சாற்றை இழக்கிறார்களே

அன்றிக்கே
தீண்டா வழும்பும் செந்நீரும் சீய நரம்பும் செறி தசையும் வேண்டா நாற்றமும் மிகு உடலாய
மனுஷ்ய சரீரத்தை பெற்று வைத்தும் மார்பு தெறித்து இருக்கின்றார்களே
குரம்பை -குடிசை தேகம் ஆத்மா வசிக்கும் குடிசை
ஆத்ம வஸ்து உஜ்ஜீவிக்கும் வழியை சிந்தியாமல் வீணாக போகிறார்களே

——————————————————-

நாட்டார் எக் கேடு கெட்டாலும் கெட்டுப் போகட்டும்; நானும் அவர்களிலொருவனாய்க் கெட்டுப் போகாதே
மருவி வாழப் பெற்றனே யென்று மகிழ்ந்து
எம்பெருமானையே துணையாகக் கொண்டிருக்கும் தமது அநந்ய கதித்வத்தை வெளியிடுகிறார்.
என் உள்ளமானது ஜனன மரணங்களை நினைத்து உருகா நின்றது;
இதற்கு நான் செய்து கொள்ளக் கூடிய பரிஹார மொன்றுமில்லை;
நீயே துணை நிற்க வேணும் என்று எம்பெருமானை நோக்கி விண்ணப்பஞ் செய்கிறார்–

உள்ளமோ ஒன்றில் நில்லாது ஓசையில் எரி நின்று உண்ணும்
கொள்ளி மேல் எறும்பு போலக் குழையுமால் என்தன் உள்ளம்
தெள்ளியீர் தேவர்க்கு எல்லாம் தேவராய் உலகம் கொண்ட
ஒள்ளயீர் உம்மை யல்லால் எழுமையும் துணை யிலோமே—9–

நாட்டார் போகட்டும்
தாம் தப்பினோம்
தம்முடைய அநந்ய கதித்வம் வெளியிடுகிறார்
சஞ்சலம் ஹி மன கிருஷ்ண -என்றானே குடா கேசனான அர்ஜுனன்
உருவார் பிறவிக்குள் இன்னம் புகப் பெய்து திரிவாய் என்று
சிந்தித்து என்று அதற்கு அஞ்சி
இருபாடு எரி கொள்ளியினுள்ளே எறும்பே போலே
உருகா நிற்கும் என்னுள்ளம் ஊழி முதல்வா

தெள்ளியீர்
கலக்கம் எனக்கு ஸ்வா பாவிகம்- தெளிவு உனக்கு ஸ்வா பாவிகம்
தேவர்க்கு எல்லாம் தேவராய் உலகம் கொண்ட ஒள்ளியீர்
தேவாதி தேவன்
யாசகனாய் சென்று
தேஜஸ் மேன் மேலும் பொலியப் பெற்று
ஆஸ்ரித பஷபாதம் கண்டவர்கள்
எழுமையும் உம்மை அல்லால் துணை இலோம் என்பரே-

————————————————————————————–

ஸம்ஸாரத்தின் கொடுமைக்கு அஞ்சி தேவரிருடைய திருவடிகளைப் பற்றின வளவேயோ?
தாங்க வொண்ணாத பரமபக்தியும் உண்டாயிற்றே! என்கிறார்.

சித்தமும் செவ்வை நில்லாது என் செய்கேன் தீ வினையேன்
பக்திமைக்கு அன்புடையேன் ஆவதே பணியாய் எந்தாய்
முத்தொளி மரகதமே முழங்கொளி முகில் வண்ணா என்
அத்த நின் அடிமை அல்லால் யாதும் ஒன்றும் அறிகிலேனே–10-

சம்சாரத்து அஞ்சி மட்டும் ஒதுங்க வில்லை
பரமபக்தியும் உண்டாயிற்றே
கடலிலே நீந்தப் புகுந்து தெப்பத்தையே இழக்குமா போலே
உருகுமால் நெஞ்சம் உயிரின் பரமன்றி
பெருகுமால் வேட்கையும் என் செய்கேன் தொண்டனேன்
என்தன் அளவன்றால் யானுடைய அன்பு –
பத்திமை கொஞ்சம் குறைத்து வெறும் அன்பையே வைத்து அருள் என்கிறார்

கணபுரத்து பொன்மலை போல் நின்றவன்தான் பொன்னகலம் தோயாவேல்
என்னிவைதான் வாளா வெனக்கே பொறையாகி
முன்னிருந்து மூக்கின்று மூவாமைக் காப்பதோர்
மன்னு மருந்து அறிவீர் இல்லையே -பெரிய திருமடல்

தமக்கு அளவு கடந்த பக்தி விளைந்த காரணம் –
முத்தொளி மரகதமே முழங்கு ஒளி முகில் வண்ணா –
தோள் கண்டார் தோளே கண்டார் தொடு கழல் கமலமன்ன
தாள் கண்டார் தாளே கண்டார் தடக்கை கண்டாரும் அக்தே
நெஞ்சு உருகி
தரித்து நின்று கைங்கர்யம் பண்ண ஒட்டாமல்
பத்திமைக்கு அன்புடையேன் ஆவதே பணியாய் எந்தாய் –

————————————————————

என்னுடைய மனத் துயரங்களை நானே தீர்த்துக் கொள்ளப் போமோ?
நீயே அருள் புரிய வேணுமென்று எம்பெருமானை நோக்கிப் பிரார்த்திக்கிறார்–

தொண்டெல்லாம் பரவி நின்னைத் தொழுது அடி பணியுமாறு
கண்டு நான் கவலை தீர்ப்பான் ஆவதே பணியாய் எந்தாய்
அண்டமா எண் திசைக்கும் ஆதியாய் நீதியான
பண்டமாம் பரமசோதி நின்னையே பரவுவேனே –11-

கவலை தீர்க்க உன்னாலே முடியும்
தொண்டு செய்யவும் நின் அடி தொழவும்
உனது திவ்ய சங்கல்பத்தினாலே நடக்க வேண்டும்

பரந்த சிந்தை ஒன்றி நின்று நின்ன பாத பங்கயம்
நிரந்தரம் நினைப்பதாக நீ நினைக்க வேண்டுமே -திரு மழிசை பிரான்

நீதியான பண்டம் -முறைமைப்படி பிராப்தமான தனம்
சேலேய் கண்ணியரும் பெரும் செல்வமும் நன் மக்களும்
மேலாத் தாய் தந்தையுமவரே யினி யாவராவரே–
பிராப்தமான செல்வம் அவரே என்றபடி
நீயே தீர்த்து அருள வேணும் என்று நின்னையே பரவுவேன்

——————————————————————————

ஆவியை அரங்கமாலை அழுக்கு உடம்பு எச்சில் வாயால்
தூய்மையில் தொண்டனேன் சொல்லினேன் தொல்லை நாமம்
பாவியேன் பிழைத்த வாறு என் என்று அஞ்சினேற்கு அஞ்சல் என்று
காவி போல் வண்ணர் வந்து என் கண்ணுள்ளே தோற்றினாரே –12–

அழுக்கு உடம்பு எச்சில் வாயால் தொல்லை நாமம் -ஆவி -அரங்க மாலை -சொல்லி
பாவியேன் பிழைத்த ஆறு என்று அஞ்சினேன்
அஞ்சல் என்று
காவி போல் வண்ணர் வந்து என் கண் உள்ளே தோன்றினாரே
தப்பாக சொன்னோமே தப்பச் செய்தோம் என்கிற அனுதாபமும் இல்லாமல்
தூய்மை அற்ற தொண்டனேன்
தொல்லை நாமம்
நித்ய சூரிகள் உடைய ஜீவனம்
அதிலே போய் வாய் வைத்தேனே
நான் சொன்னது மட்டுமா
நானும் சொன்னேன் நமரும் உரைமின் -ஆ ஆ என்ன அபராரம்
என்று அஞ்சி இருந்தேன்
அஞ்ச வேண்டாம் என்று வடிவு அழகை காட்டி மருந்தை இட்டு பொருந்த விட்டானே-

————————————————————————————

பரம புருஷனான எம் பெருமானை மிகவும் அபரிசுத்தனான நான் எனது எச்சில் வாயால் ஸங்கீர்த்தனம் பண்ணி
‘ஐயோ! இப்படி அபசாரப் பட்டோமே!‘ என்று அஞ்சின என்னுடைய அச்சம் தீர
அப் பெருமான் வந்து என் கண்ணுள்ளே தோன்றி அபயமளித்தானென்கிறார்.

இரும்பு அனன்று உண்ட நீரும் போதரும் கொள்க என் தன்
அரும் பிணி பாவம் எல்லாம் அகன்றன என்னை விட்டுச்
சுரும்பமர் சோலை சூழ்ந்த அரங்க மா கோயில் கொண்ட
கரும்பினைக் கண்டு கொண்டு என் கண்ணினை களிக்குமாறே–13-

இரும்பு போன்று என்னிடம் மங்கிக் கிடந்த பாபங்கள் அகன்று போன ஆச்சர்யம்
பாபங்கள் போகவே
கண்டதை கண்டு களித்த கண்கள்
கரும்பு அமர் சோலை சூழ்ந்த
மா நகரம் கோயில் கொண்ட
கரும்பினை
களிக்கும் ஆறே
ஸ்வரூப அனுரூபமான விஷயத்தை கண்டு
களிக்கப் பெற்றமை என்ன பாக்யம்-

———————————————————————

கீழ்ப் பாட்டில் “கரும்பினைக் கண்டுகொண்டு என் கண்ணினை களிக்கு மாறே“ என்று
ஆனந்த பரவசராய்ப் பேசினவர்,
ஐயோ! பழுதே பல பகலும் போயினவே யென்று கழிவிரக்கங்கொண்டு,
கீழ் நாள்களெல்லாம் வாளாவிருந்தொழிந்து பாவியானேனெயென்று முடி மேல் மோதிக் கொள்ளுகிறார்.

காவியை வென்ற கண்ணார் கலவியே கருதி நாளும்
பாவியேனாக எண்ணி அதனுள்ளே பழுத்து ஒழிந்தேன்
தூவி சேர் அன்னம் மன்னும் சூழ் புனல் குடந்தையானை
பாவியேன் பாவியாது பாவியேன் ஆயினேனே –14-

இன்று கரும்பினை கண்டேன் களித்தேன்
பண்டு பழுதே பல காலும் போயினவே
பாவியேனாக எண்ணி பழுத்து ஒழிந்தேன்
படுகுழியிலே பரி பக்குவனாய் விட்டேன்

கரியவாகிப் புடை பரந்து மிளிர்ந்து செவ்வரியோடி நீண்ட அப்
பெரியவாய கண்கள் என்னை பேதைமை செய்தனவே
என்று ஈடுபட வேண்டிய கண்கள்
உனது பாலே போல் சீரில் பழுத்து ஒழிந்தேன் -போலே அன்றி
படு பாவி ஆனேன்

தூவி சேர் அன்னம் மன்னும் குடந்தை
ஞானம் அனுஷ்டானம் இரண்டையும் உடைய பரம ஹம்சர் வாழும் திருக்குடந்தை
அவனை சிந்தியாமல் பாழாய் ஒழிந்தேனே

——————————————————————————

எம்பெருமானை நீராட்டுதல் பூச்சூட்டுதல் முதலிய வழிபாடுகளால் நேராக
உகப்பித்து உய்ந்தாள் யசோதைப் பிராட்டி;
அவள் செய்த படிகளை அநுகரித்துப் பேசி உய்ந்தார் பெரியாழ்வார்;
இவ் வாழ்வார் தாமும் அங்ஙனே சில வழிபாடுகள் செய்யப் பெறவேணுமென்று பாரித்து
மாநஸிகமாகவே நீராட்டுதலும் பூச்சூட்டுதலுஞ் செய்து மகிழ்கிறார் இப் பாட்டிலும் மேற் பாட்டிலும்.

முன்பொலா ராவணன் தன் முது மதிள் லங்கை வேவித்து
அன்பினால் அனுமன் வந்து ஆங்கு அடியிணை பணிய நின்றார்க்கு
என்பொலாம் உருகி யுக்கிட்டு என்னுடை நெஞ்சம் என்னும்
அன்பினால் ஞான நீர் கொண்டு ஆட்டுவன் அடியனேனே –15-

நீராட்டுதல் பூச்சூடுதல்
யசோதை உகப்பித்து உய்ந்தாள்
பெரியாழ்வார் அனுகரித்து பேசி உய்ந்தார்
இவரும் மானசீகமாக நீராட்டி பூச்சூட்டி மகிழ்கிறார்

தீர்த்தத்துக்கு பரிமள த்ரவ்யம் சம்ஸ்காரம் ஆவது போலே
ஞான நீருக்கு அன்பு சம்ஸ்காரம்

கண்டேன் சீதையை -திருவடி விண்ணப்பம் செய்த சமயத்தில்
ஆனந்த கடலில் அழுந்தி இருந்த பெருமாள் மேல் ஈடு பட்ட
நெஞ்சம் என்னும் அன்பினால் ஞானம் ஆகிற திருமஞ்சனத்தால் நீராட்டுவேன் –
ஞான நீருக்கு அன்பு சம்ஸ்காரம்

சுரி குழல் கனிவாய் திருவினை பிரித்த கொடுமையில் கடுமிசை அரக்கன்
பொல்லாதவன் என்று பொதுவிலே சொல்லலாம் அத்தனை ஒழிய
பிரித்து பாசுரம் இடப் போகாதே

———————————————————————-

மாயமான் மாயச் செற்று மருது இற நடந்து வையம்
தாய மா பரவை பொங்கத் தடவரை திரித்து வானோர்க்கு
ஈயுமால் எம்பிரானார்க்கு என்னுடைச் சொற்கள் என்னும்
தூய மா மாலை கொண்டு சூட்டுவன் தொண்டனேனே -16-

முன் பாட்டிலே நீராட்டினார் ஸ்ரீ ராமவதாரத்தில்

இதிலே பூ மாலை சூடுகிறார்
நான்கு அவதாரங்களில்
மாயமான் மாயச் செற்று -ஸ்ரீ ராமாவதாரம்
மருதிற நடந்து -ஸ்ரீ கிருஷ்ணாவதாரம்
வையம் தாய -ஸ்ரீ திரிவிக்ரமவதாரம்
அம்மா பரவை பொங்கத் தடவரை திரித்து வானோர்க்கு ஈயும் -ஸ்ரீ கூர்மாவதாரம் /அம்ருதமதனம்

பொய்ம் மாய மருதான அசுரரை -பெரியாழ்வார்
வையம் தாய் -தாவி என்றபடி
பாயோரடி வைத்து அதன் கீழ்ப் பரவை நிலம் எல்லாம் தாய் -திருவாய் மொழி போலே

——————————————————–

எம்பெருமானுடைய பெருமையைப் பேசுகின்ற பக்தர்களும் நல் வீடு பெறுகிறார்கள்;
அப்பெருமானை ஏசுகின்ற சிசுபாலாதிகளும் நல் வீடு பெறுகிறார்களென்று சாஸ்திரங்களினால் தெரிகின்றது;
இவ்விரு வகுப்பிலும் எனக்கு அந்வயமில்லை;
எம்பெருமானுடைய பெருமையை அறிவிலியான நான் என்ன பேசப் போகிறேன்; என்னால் பேச முடியுமோ?
முடியாததால் * பேருளான் பெருமை பேசிப் பிறவி நீத்தாருடைய கோஷ்டியிலே அந்வியக்கப் பெற்றிலேன் நான்.

இனி, சிசுபாலாதிகளைப்போலே ஏசி உய்ந்து போகலாமோ வென்னில்,
ஏசிப் பெறும் மோக்ஷம் எனக்கு வேண்டா; மோக்ஷம் போகாமல் நரகம் போனாலும் போகிறேன்,
எம்பெருமானை ஏசாதிருந்தேனாகில் போதும்;
சிசுபாலாதிகளின் செயலும் எனக்கு வேண்டா; அவர்கள் பெற்ற பேறும் எனக்கு வேண்டா;

ஆக இரண்டு வகையாலும் மோக்ஷம் பெறுவதற்கு ப்ராப்தியில்லை யாயிற்று;
ஆயினும், மோக்ஷம் பெற வேணுமென்கிற ஆசையோ அபாரமாகவுள்ளது;
அவனுடைய வடிவழகு என்னைத் துவக்குகின்றது, என் செய்வே னென்கிறார்–

பேசினார் பிறவி நீத்தார் பேருளான் பெருமை பேசி
ஏசினர் உய்ந்து போனார் என்பது இவ் உலகின் வண்ணம்
பேசினேன் ஏச மாட்டேன் பேதையேன் பிறவி நீத்தேற்கு
ஆசையோ பெரிது கொள்க அலைகடல் வண்ணர் பாலே–17-

பேச முடியதலால் பேரருளாளன் பெருமை பேசி பிறவி நீத்தார் கோஷ்டியிலும் அல்லேன்
ஏசி சிசுபாலாதிகள் மோஷம் பெரும் அதுவும் வேண்டேன்
கேட்பார் செவி சுடு கீழ்மை வசவுகளே வையும்
சேட்பால் பழம் பகைவன் சிசுபாலன் திருவடி தாட்பால் அடைந்த
மோஷம் போகாமல் நரகம் போனாலும் ஏச மாட்டேன்

ஆகிலும் மோஷம் பெற ஆசை மட்டுமுண்டே

திருப்பேர் நகர் எம்பெருமானை சொன்னது அனைத்து திவ்ய தேசங்களுக்கும் உப லஷணம்
என்பது இவ்வுலகின் வண்ணம்

உலகு சாஸ்திரம் என்றவாறு
எல்லீரும் வீடு பெற்றால் உலகு இல்லை என்றே -திருவாய்மொழி
இங்கும் லோகம் சாச்தம்
ந நிந்திதம் கர்ம ததஸ்தி லோகே ஆளவந்தார்
சாஸ்திரம் அறிந்த உலகத்தவர்கள் என்றுமாம்

பேசினேன் -பேச அதிகாரியோ நான் என்றவாறு
உண்ணப் புக்கு மயிர்ப்பட்டு அழகிதாக உண்டேன் என்னுமா போலே
ஏசமாட்டேன் -ஏசிப் பெரும் மோஷம் வேண்டாம்
ஆனாலும்
பிறவி நீத்தற்கு
அலைகடல் வண்ணர் பால் ஆசையோ பெரிது
கொள்க -எனக்கோ பேசத் தெரியவில்லை
ஏசவோ இஷ்டம் இல்லை
அந்தோ இழந்தே போம் இத்தனையோ
மோஷம் பெற வேணும் ஆசையோ அளவு கடந்து இருக்கிறது
நான் செய்வது என் -என்றதாயிற்று-

——————————————————-

எம்பெருமானை ஸ்வ ப்ரயுத்நத்தால் காண விரும்பும் அவர்களின் விருப்பம்
ஒரு நாளும் கை கூடா தென்கிறார்.

இளைப்பினை இயக்கம் நீக்கி இருந்து முன் இமையைக் கூட்டி
அளப்பில் ஐம்புலன் அடக்கி அன்பு அவர் கண்ணே வைத்து
துளக்கமில் சிந்தை செய்து தோன்றலும் சுடர் விட்டு ஆங்கே
விளக்கினை விதியில் காண்பர் மெய்ம்மையே காண்கிற் பாரே–18-

ஸுய பிரயத்தனத்தால் காண முடியாதே
இளைப்பினை இயக்கம் நீக்கி
இளைப்பாவது கிலேசம்
அவித்யா -அஞ்ஞானம்
அஸ்மிதா -அஹங்காரம்
ராகம் -இச்சா விசேஷம்
த்வேஷம் -பகை
அபி நிவேசம் -மரண பயம்
ஆகிய கிலேசங்கள் -சஞ்சாரம் தவிர்த்து

இருந்து
அரும் தொழில் ஆகிய ஓர் இடத்திலே இருந்து

முன்னிமையைக் கூட்டி
ஒரு திக்கும் பார்க்காமல் மேலிமையை கீழ் இமையுடன் கூட்டி தனது மூக்கின் நுனியை பார்த்து

அளப்பில் ஐம் புலன் அடக்கி -அன்பு அவர் கண் வைத்து துளக்கமில் சிந்தை செய்து
தைலதாரா அவிச்சின்ன ஸ்ம்ருதி சந்தான ரூபமான பக்தியை
பகவத் விஷயமாக பண்ணி

ஆங்கே சுடர் விட்டுத் தோன்றலும் –இத்யாதி
ஊன் வாட உண்ணாது உயிர் காவலிட்டு உடலில் பிரியா புலன் ஐந்தும் நொந்து தாம் வாட வாட
தவம் செய்கை யாகிற ஸுவ பிரயத்னங்களால் சாஷாத் கரிக்கை எளியதோ

பெண்ணுலாம் சடையினானும் பிரமனும் உன்னைக் காண்பான்
எண்ணிலா ஊழி ஊழி தவம் செய்தார் வெள்கி நிற்ப
விண்ணுளார் வியப்ப வந்து ஆனைக்கு அன்று அருளை ஈந்த

அதவா
இப்படி யோக சாஸ்த்ரத்தில் சொல்லுகிறபடியே உபாசித்தித்து காண்பார்க்கு காணலாம் -என்றுமாம்
முந்திய அர்த்தமே மிகப் பொருந்தும்

————————————————————————-

பிண்டியார் மண்டை ஏந்திப் பிறர் மனை திரி தந்து உண்ணும்
முண்டியான் சாபம் தீர்த்த ஒருவனூர் உலகம் ஏத்தும்
கண்டியூர் அரங்கம் மெய்யம் கச்சி பேர் மல்லை என்று
மண்டினார் உய்யல் அல்லால் மற்றை யார்க்கு உய்யலாமே –19-

பிண்டு ஆர் மண்டை ஏந்தி –
உளுத்த பொடிகள் உதிருகிற
தலையோட்டைக் கையிலே ஏந்தி

பதியே பரவித் தொழும் தொண்டீர்
உலகம் ஏத்தும் கண்டியூர் அரங்கம் மெய்யம் கச்சி பேர் மல்லை என்று
கச்சி திரு வெக்காவில் நோக்கு பள்ளி கொண்ட பெருமாளை முன்னும் பின்னும் பேசி இருக்கையாலே

உண்ணும் உண்டியான் உண்ணும் முன்டியான் -பாட பேதங்கள்

தாபச வேஷத்தை உடைய ருத்ரன் முன்டியான் பாடமே பொருந்தும் -மொட்டை ஆண்டியான ருத்ரன்
மோனை இன்பத்துக்கு உண்டியான்
பிச்சை எடுத்து உண்ணப் பட்ட உணவை உடையவன் என்றபடி

இளைப்பினை இயக்கம் நீக்கி கீழ்ப் பாட்டில் வீணாக கிலேசப்படாதே
காம்பறத் தலை சிறைத்து உன் கடைத்தலை இருந்து வாழும் சோம்பரை உகத்தி போலும்
சூழ் புனல் அரங்கத்தானே -என்று
திவ்ய தேச அனுபவமே யாத்ரையாக போது போக்காக
இருப்பவர்கட்கே
எம்பெருமான் உடைய அனுக்ரஹம் அளவற்று இருக்கும்

————————————————————————–

வானவர் தங்கள் கோனும் மலர் மிசை அயனும் நாளும்
தே மலர் தூவி ஏத்தும் சேவடிச் செங்கண் மாலை
மான வேல் கலியன் சொன்ன வண் தமிழ் மாலை நாலைந்தும்
ஊன மதி இன்றி வல்லார் ஒளி விசும்பு ஆள்வர் தாமே-20-

ஊனம் அது இன்றி -குறை ஒன்றும் இல்லாமல்
பிரயோஜனாந்த பரர்கள் போல் அன்றியே
அநந்ய பிரயோஜனராய்
கற்று வல்லவர்கள்
திரு நாட்டை ஆளப் பெறுவார்கள்
என்று பலன் சொல்லி தலைக் கட்டுகிறார்-

———————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P.B.A,ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

திருப்பாவை -பாசுரங்கள் – 26-30-திவ்யார்த்த தீபிகை சாரம்–

September 28, 2014

26-மாலே மணி வண்ணா
தங்கள் வ்யாமோஹம்-மிக சிறிது அத்வேஷம் என்னலாம் படி
அவன் வ்யாமோஹம் கடல் போலே
வடிவில் இருந்த பொலிவு கண்டு மாலே நீர்மையே பிரகிருதி
பெருமாளுக்கு பிரதான குணத்தை சரணாகத வத்சலர்-என்று ஸ்ரீ ராமாயணத்துக்கு
உள்ளீடாக வெளியிட்டு அருளினால் சீதா பிராட்டி
அப்படியே ஸ்ரீ கிருஷ்ணனுக்கு பிரதான குணமாய்
மகா பாரதத்துக்கு உள்ளீடான
ஆஸ்ரித வ்யாமோஹத்தை மாலே என்கிற சம்புத்தியாலே
வெளியிடுகிறார்கள் இடைப்பென்கள்
மாலாய்ப் பிறந்த நம்பியை மாலே செய்யும் மணாளனை
யாதொன்றை யாதொன்றை ஸ்ரேஷ்டர்கள் ஆசரித்தார்கள்
யாதொரு அளவு செய்தார்கள் அவ்வளவு லோகம், அனுவர்த்திக்கும் என்று
சிஷ்டாசாரமே ஸ்திர பிரமாணம் என்று தேர் தட்டிலே நின்று சொன்ன நீ எங்களைக் கண்டவாறே மறந்தாயோ
சாஸ்திரம் விதித்ததே யாகிலும் சிஷ்டானுஷ்டானம் இல்லா இடத்தில்
தவிரக் கண்டறியாயோ
கேட்டியேல்
அவன் பஞ்ச லஷம் குடிப் பெண்கள்
கண்ணிலும்
முலையிலும்
வடிவிலும்
இடையிலும்
துவக்குண்டு அந்ய பரனாய் இருந்தமையாலே தட்டி உணர்த்துகிறபடி
போய்ப்பாடுடையன சங்கங்களுக்கு அடை மொழியாக்கி
சங்கரையா உன் செல்வம் சால அழகியதே
உபகரணங்கள் கேட்டு
ஆலின் இலையாய்
சக்தி இராமை இல்லை
வேண்டி இராது ஒழியில் செய்யலாவது இல்லை
தரில் அரியது இல்லை
தராது ஒழியில் வளைப்பிட ஒண்ணாது

—————————————————————————————-

27-கூடாரை
சங்கங்கள் கேட்டர்கள்
பாஞ்ச ஜன்யம்
புள்ளரையன் கோயில் வெள்ளை விளி சங்கு
ஆநிரையினம் மீளக் குறித்த சங்கு
பறை ஜாம்பவான் நம் ஜெயம் சாற்றின பறை
பெரும் பறை இலங்கை பாழாளாக நம் ஜெயம் சாற்றின பறை
சாலப் பெரும் பறை
நாம் பாரோர்கள் எல்லாம் மகிழ பறை கறங்க குடம் ஆடின போது அரையிலே கட்டின பறை உண்டு
பல்லாண்டு பாட பெரியாழ்வாரையும் பொலிக பொலிக நம் ஆழ்வாரையும் தருகிறேன்
கோல விளக்கு நப்பின்னை பிராட்டி
கொடி கருளக் கொடி ஓன்று உடையீர்
மதுரையில் இருந்து இச் சேரி வரும் பொழுது அனந்தன் தொடுத்த மேல்விதானம்
நோன்பு தலைக் கட்டின பின்பு வேண்டிய பஹூமானங்கள்
மழலை சொல்லுக்கு தோற்று கொடுத்தால்–வெல்லும் சீர்
எல்லாரையும் வெல்லுவது குணத்தாலே
கூடுவாரை சீலத்தாலே வெல்லும்
கூடாதாவரை சௌர்யத்தாலே வெல்லும்
சௌர்யம் அம்புக்கு இலக்காகும்
சீலம் அழகுக்கு இலக்காகும்
அம்புக்கு இலக்கானார்க்கு மருந்திட்டு ஆற்றலாம்
சீலமும் அழகும் நின்று ஈரா நிற்கும்
ஈர்க்கும் குணங்கள் தாமரைக் கண்கள் கொண்டு ஈர்தியாலோ
அம்பு தோல் புரையே போம்
அழகு உயிர் கொலையாக்கும்
கோவிந்தா
கூட மாட்டோம் என்னும் அபிசந்தி இல்லாத அளவே அன்றிக்கே –
கூடுவோம் என்னவும் அறியாத அசேதனங்களையும் காத்து அருள்பவனே
உண்ணாமல் நோன்பு நூற்றதால் கண்ணபிரானும் உண்ணாமையால் ஊரில் நெய் பால் அளவற்று கிடந்து
பால் சோறு மூட நெய் பெய்து முழங்கை வழியார
கூடியிருந்து குளிர்ந்து
பசி தீர உண்ணுவது அன்றிக்கே பிரிந்து பட்ட விசனம் எல்லாம் தீர கூடி களித்து இருக்கை உத்தேச்யம்
கூடி இருந்து குளிர்ந்து –பல்கலனும் அணிவோம் ஆடை உடுப்போம்-

————————————————————————————————

28-கறவைகள்
போற்றியாம் வந்தோம் –எம்மேல் விழியாவோ –உன்னை அருத்தித்து வந்தோம் இத்யாதியால்
பிராப்ய ருசியை வெளியிட்டு அருளி
அத்தை பெருகைக்கு உடலாக தங்களுடைய ஆகிஞ்சன்யத்தையும் அவனுடைய உபாயத்வத்தையும் வெளியிடுகின்றனர்
இரங்கு அருள் என்று அபேஷித்த அருளுக்கு பிரதிபந்தகமாக எங்கள் திறத்தில் சாதனாம்சம் ஒன்றும் இல்லை சர்வஞ்ஞன் அறிய அறிவிக்கிறார்கள்
சித்த உபாய அதிகாரிக்கு
1-நல்ல கர்மம் இல்லை என்கை -கன்றுகளின் பின் கானகம் சென்று உண்போம்
2-யோக்யதை ஒன்றும் இல்லை -அறிவு ஒன்றும் இல்லா ஆய்க்குலம்
3-ஈஸ்வரன் உடைய குண பூர்த்தியை அனுசந்திக்கை -குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா
4-சம்பந்தம் உணருதல் -உறவேல் நமக்கு இங்கே ஒழிக்க ஒழியாது
5-பூர்வ அபராதங்களுக்கு ஷாபணம் -சீறி அருளாதே
6-உபேயத்தை அபேஷிக்கையும்-இறைவா நீ தாராய் –
இவை ஆறும் அதிகாரி அங்கங்கள்
சாங்கமாக
வேதங்களை ஓதி
வேதப் பொருளை உணர்ந்து
விஹித கர்மங்களை அனுஷ்டித்து
பிராப்ய விரோதியான பாப ராசியை பறக்கடித்து
அந்தரங்க சுத்தி பெற்று
இந்த்ரியங்களை வென்று
விஷயாந்தரங்களில் நின்றும் மீட்கப் பட்ட நெஞ்சை ஆத்மா பிரவணம் ஆக்கி
ஆத்மயோக சித்தி பெற்று
அந்தர்யாமி அளவும் சென்று
அவனுடைய ஸ்வரூபாதிகளை-ஸ்ரவண மனனம் பண்ணி
அர்ச்சனா பிரணாமாதி ரூபகமான
நிரந்தர த்யானத்தை பண்ணி
இப்படி திரண்ட ஸூ க்ருதத்தாலே ஈஸ்வரனை பெறுவதாக வேதங்கள் சொல்லுமே
கறவைகள் பின்னே குருகுல வாஸம்
கானம் சேர்வோம் ஷேத்திர வாசமும் இல்லை
தண்டகாரண்யம் நைமிசாரண்யம் இல்லை
எவ்வுஞ்சிலை வேடர் -நெரிஞ்சிக் காடு
வர்ண தர்மம் பசு மேய்த்தல் -கர்ம அனுஷ்டானமோ என்ன உண்போம்
சேர்ந்து உண்போம் -காட்டில் புழுதியும் வேர்வையும் போக குளித்து உண்போம் இல்லை
அருகில் இருந்தார்க்கு கையிலே பிடி இட்டும் அறியோம்
நானும் காலிப்பின்னே போனேனே
காடு வாழ் சாதியையும் ஆகப் பெற்றேனே
நாங்கள் அறிவு ஒன்றும் இல்லாத ஆய்க்குலம் என்கிறார்கள்
ஆனால் சாஷாத் புண்ணியத்தை பாலும் சோறும் இட்டு வளர்த்தோமே
உந்தன்னை பிறவி பெறுந்தனை புண்ணியம் உடையோம் -பெறுகைக்குதக்க பாக்யம்
குறை ஒன்றும் இலாத கோவிந்தா
நித்ய சூரிகள் ஓலக்கத்தில் அவாப்த சமஸ்த காமனாய் இருப்பைத் தவிர்ந்து
இடைச் சேரியில் பசு மேய்க்கப் பிறந்தது குறைவாளரான எங்களை வாழ்விக்கத் தானே
ஸ்வா தந்த்ர்யம் உள்ளவன் அன்றோ என்ன
உறவினர் பக்கல் ஸ்வா தந்த்ர்யம் காட்டுவார் உண்டோ
ஒரு நீர்க்குடம் உடைத்தால் கழிய வல்ல உறவோ
குணியை விட்டு குணம் பிரியாதது போலே
நான் உன்னை அன்றி இலேன் நீ என்னை அன்றி இலேன்
ஒழிக்க ஒழியாது
உன்னால் ஒழிக்க ஒண்ணாது
எங்களால் ஒழிக்க ஒண்ணாது
உன்னுடைய பந்துக்களால் ஒழிக்க ஒண்ணாது
எங்கள் பந்துக்களால் ஒழிக்க ஒண்ணாது
ஊராக சங்கே தித்தாலும் ஒழிக்க ஒண்ணாது
இப்போது தானே கோவிந்தா முன்பு நாராயணா என்றீர்களே
சுலபனாய் சுசீலனாய் வத்சலனாய் எம்மோடு சஜாதீயனாய் -உன்னை பிரேமத்தால் நாராயணா என்றோம்
கோபாலன் கோவிந்தன் பெயர்கள் இருக்க சிறு பேரால் அழைத்த குற்றம் பொறுக்க வேணும்
அறியாத பிள்ளைகளோம் -அறிவின்மை பிள்ளைமை அன்புடைமை மூன்றும்
பித்தர் சொல்லிற்றும் பேதையர் சொல்லிற்றும் பத்தர் சொல்லிற்றும் பன்னப் பெறுபவோ
இந்த்ரன் கோவிந்தாபிஷேகம் செய்த பின்னும் நாராயணன் என்னுதல் குற்றம் தானே
ஒருவன் முடி சூடப் பெற்ற பின் முன்னை பெயர் இட்டு அழைக்கை குற்றம் தானே
அசாதாரணனாய் இருக்கிறவனை சாதாரணன் என்கை குற்றம் இ றே
ஊடினால் சொல்லுமத்தை படுக்கைத் தலத்தில் சொல்லலாமோ
அந்தப்புர வாசலில் படுகாடு கிடப்பாரை நாட்டுக்கு கடவன் என்கிறது பிரணயி இல்லை என்கை இ றே
இவன் உபய விபூதிக்கும் முடி கவித்து ஸ்ரீ வைகுண்டத்தில் இருக்குமவன் என்று சிறிது ஞானம் உண்டாய்
இருக்கச் செய்தே இ றே இந்த்ரன் வந்து -பசு மேய்ப்பான்-என்று முடி சூட்டிற்று
உபய விபூதிக்கும் முடி சூடினதுக்கு அவ்வருகே ஒரு ஐஸ்வர்யம் இ றே
சிறு பேர் அழைத்தன
நாராயணன் என்று ஒரு கால் சொல்லி நிற்காமல்
நாராயணனே நமக்கே பறை தருவான்
நாற்றத் துழாய் முடி நாராயணன்
நாராயணன் மூர்த்தி –
இப்படி பலகால் சொன்னமையால் பன்மையாக கூறப்பட்டது
உன்தன்னை அழைத்தனவும்
உம்மை தொகை -நாங்கள் எங்களுக்கு உள்ளே சிநேக பாரவச்யத்தாலே
பேய்ப்பெண்ணே -ஊமையோ-செவிடோ -நாணாதாய் -பண்டே உன் வாய் அறிதும் –
பலவாறாக சொல்லிக் கொண்டதையும் பொறுத்துக் கொள்ள வேணும்
நாட்டாருக்கு சொல்லிக் கொள்ள ஏதாவது ஆலம்பனம் வேண்டுமே என்ன
இறைவா -என்கிறார்கள்
எதிர்தலையில் ஒன்றையும் எதிர்பாராமல் கார்யம் செய்தால் உன்னை விலக்குகைக்கு உறியார் உண்டோ –

—————————————————————————————————-

29-சிற்றம்
பறை என்றது வியாஜ்யம் உனது திருவடிகளில் நித்ய கைங்கர்யம் ஒன்றே வேண்டுவது
எம்மா வீட்டுத் திறமும் செப்பம் –
வழு விலா அடிமை செய்ய வேண்டும் போலே
காலை வந்து
சிறுகாலை வந்து
சிற்றம் சிறு காலை வந்து
பருவம் ஆராய்ந்து ஆற்றாமை கனத்தை உணர்வாய்
கைங்கர்யம் கொள்ளாமல் இருந்தால் உன் பிறவி பயன் அற்றதாகுமே
பெற்றம் மேய்த்து உண்ணும்
நீ பிறப்பிலியாய் பிறவாதார் நடுவே இருந்து பிறவி அற்றார்க்கு முகம் கொடுக்கிற நிலத்திலே வந்தோமா
பரமபதத்திலே வந்தோமோ என்றபடி
பிறவிக்கு போர பயப்பட்டு உன்னையே கால் கட்டுவார் உள்ள இடத்தே -பாற் கடல் -வந்தோமோ
பிறவா நிற்கச் செய்தே ஆசார பிரதானர் புகுந்து நியமிக்கும் ராஜகுலத்தில் -இஷ்வாகு குலம் பிறவியில் -வந்தோமோ
வாலால் உழக்குக்கு பசு மேய்த்து வந்து வயிறு வளர்க்கும் எங்கள் குலத்திலே
நீ என் செய்யப் பிறந்தாய் என்று விசாரிக்கலாகாதோ
மேய்த்த பசுக்களை நிறுத்தி வாலுக்கு உழக்கு நெல் என்கை
கணக்கிட்டு சொல்ல வல்லார்கள் இல்லையே
அறியாதார்க்காக ஆனாயனாகிப் போய் -பெரிய திருமொழி
மனுஷ்யத்வே பரத்வம் என்று அறியாதவர்
அறிவு கேட்டுக்கு நிலமாய் இருப்பதொரு குடியிலே பிறக்க வேணும் என்று சங்கல்பித்துக் கொண்டவன்
அதற்கு எல்லை நிலமான இடைக் குலத்திலே பிறக்க வேணுமோ தான்
கள்ளர் பள்ளர் என்னும் குலங்களில் பிறந்தால் ஆகாதோ -பட்டர் நிர்வாஹம்
அறியாதாரிலும் கேடுகெட்ட இடையனாய் -என்றபடி
குற்றேவல் எங்களை கொள்ளாமல் போகாது
கொம்மை முலைகள் இடர் தீர கோவிந்தர்க்கோர் குற்றேவல்
இம்மைப் பிறவி செய்யாதே இனிப் போய்ச் செய்யும் தவம் தான் என் –
இற்றைப்பறை கொள்வான் அன்று
நீ இப்போது எடுத்துக் கொடுக்கும் பறை வேண்டாம்
எங்களை நீ கொள்ளும் அத்தனை ஒழிய
நாங்கள் உன் பக்கலிலே உன்னை ஒழியவும் கொள்வது ஓன்று உண்டு என்று இருந்தாயோ
கோவிந்தா
பசுக்களின் பின்னே திரிவார்க்கு பெண்களின் வார்த்தை யின் கறுத்து தெரியாது இ றே
பசுக்களின் பின்னே திரிவார்க்கு அவற்றுக்கு உள்ள ஞானமே இ றே உள்ளது
நாலு நாள் எங்களை விட்டு கெட்ட கேடு -என்றான்
எம்பருமான் உடன் ஒக்க பிறக்கும் பிராட்டி போலே தாங்களும் ஒக்கப் பிறந்து ஆட்செய்ய -எற்றைக்கும் ஏழ் ஏழ் பிறவிக்கும் என்கிறார்கள்
மற்றை நம் காமங்கள் மாற்று
கைங்கர்யத்தில் ஸ்வ பிரயோஜன புத்தி தவிருகை
பிராப்ய விரோதி கழிகை யாவது -மற்றை நம் காமங்கள் மாற்று என்று இருக்கை முமுஷுப்படி

———————————————————————————————————-

30– வங்க கடல்
சமகாலத்திலே அனுஷ்டித்தாரோபாதியும்
அனந்தர காலத்திலே அனுகரித்தாளோபாதியும்
பிற்பட்ட காலத்திலே கற்றார்க்கு பலிக்கும் என்கை
கன்று இழந்த தலை நாகு
தோல் கன்றை மடுக்க அதுக்கு இரங்குமா போலே
ச்நேஹிகள் சொன்ன இப்பாசுரம் கொண்டு புகவே
அது இல்லாத நமக்கும் பலிக்கும் -என்று பட்டர்
பிரயோஜனாந்தபரர்களுக்கு செய்து அருளியவன்
பிராட்டி பெற கார்யம் செய்து அருளியவன் நம்மை ரஷியாது ஒழியான்
அலை சுழன்று மரக்கலங்கள் போலே தோற்றம் வங்கக் கடல் கடைந்த
திங்கள் திருமுகம் சகலகலா பூர்த்தி
சேயிழையார் ஞான விரக்தி பூஷணம்
சூடகமே பாடகமே என்று தாங்கள் பிரார்த்தித்தபடி
கிருஷ்ணனும் நப்பின்னை பிராட்டியும் கூட இருந்து பூட்டின ஆபரணங்களை உடையவர்கள்
அங்கு
திருவாய்ப்பாடியிலே
ஸ்ரீ நந்தகோபர் கோயிலிலே
நப்பின்னை பிராட்டி கட்டிலிலே
திவ்ய ஸ்தானத்திலே
திவ்ய சிம்ஹாசனத்திலே
இருந்த இருப்பிலே
ஆண்டாள் பெரியாழ்வார் வடபெரும் கோயிலுடையான் உள்ளதால் அணி புதுவை
பொன்னும் முத்தும் மாணிக்கமும் இட்டுச் செய்த ஆபரணம் போலே

பட்டர் பிரான்
அந்தணர்க்கு உபகாரகன் -பரதவ நிர்ணயம் செய்து அருளி –
அன்றியே
மறை நான்கு முன்பு ஓதிய பட்டன் -திருமங்கை
கோதா தேவி கொடுத்து அவனுக்கு உபகாரகன் என்றுமாம்
விடிந்தவாறே எழுந்து இருந்து முப்பது பாட்டையும் அனுசந்தித்தல்
மாட்டிற்றிலன் ஆகில் -சிற்றம் சிறுகாலை -பாசுரத்தை அனுசந்தித்தல்
அதுவும் மாட்டிற்றிலன் ஆகில்நாம் இருந்த இருப்பை -நம் பூர்வர்கள் அனுசந்தித்து இருந்த இருப்பை -நினைப்பது -என்று பட்டர்

—————————————————————————————————————-

ஸ்ரீ P.B.A,ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருப்பாவை -பாசுரங்கள் – 21-25-திவ்யார்த்த தீபிகை சாரம்–

September 28, 2014

21-ஏற்ற கலங்கள்
நப்பின்னை உட்பட சேர்ந்து கண்ணபிரான் வீரம் சொல்லி உணர்த்தும் பாசுரம்
17/18 நந்தகோபன் அற நெறியும் தோள் வலியும் பேசி
இதில் கறவை செல்வ சிறப்பு
பலகாலும் நந்தகோபன் மகனே -பரமபதத்தில் இருந்து இங்கே வந்தது உறங்கவோ
இட்ட கலங்கள் நிரம்பின இனி கலம் இடுவார் இல்லை
முலைக்கடுப்பினால் மேன்மேலும் பீச்சும்
மகனே அறிவுரை -செல்வா செருக்காலே உறங்கலாம்
மகனாய் ஆவிர்பவித்து இங்கு வந்து இருப்பதை நினைந்தால் கடுக அறிவுற பிராப்தமாகும்
அறிவுறாய்
சர்வஞ்ஞனையும் உணர்த்த வேண்டும் படி இ றே உள்ளுச் செல்லுகிறபடி
கைப்பட்ட பெண்களை சரக்கிலே வாங்கி
கைபடாதவர்களை கை படுத்துவதற்காக வுண்டான உபாய அந்ய பரதையாலே எழுப்புகிறார்கள்
ஊற்றமுடையாய்
திண்மை
திண்மையான வேத பிரதிபாத்யனே
அடியார்களை ரஷிப்பதில் தீஷை கொண்டு இருப்பவனே என்றுமாம்
பெரியாய்
ஒலைப்புறத்தில் கேட்டுப் போகாமல் இருக்க
உலகில் தோற்றமாக நின்ற சுடரே
பிறந்து பிறந்து ஒளி கூடின சுடரே
இன்னார் தூதன் என நின்றான் -ஆஸ்ரித பாரதந்த்ர்ய ஒளி உடையவனே
சத்ருக்களை திருஷ்டாந்தமாக சொல்லுகிறது என் என்னில்
சர்வஞ்ஞனாலும் நோக்க ஒண்ணாத படி அநாதி காலம்
கை கழிந்த படி சொல்கிறது
அம்புக்கு தோற்று அவை பிடரியை தள்ள தள்ள வந்தால் போலே
உன்னுடைய சௌந்தர்ய சௌசீல்யாதி குணங்கள் பிடித்து இழுக்க வந்தோம்
யாம் வந்தோம்
நீ வந்து -ரஷிக்க வேண்டி இருக்க ஆற்றாமை இருந்த இடத்தில் இருக்க ஒட்டாமல்
பரகத ச்வீகாரம்- ஸ்வகத ச்வீகாரம் –
போற்றி– புகழ்ந்து –வந்தோம்
பெரியாழ்வாரை போலே யும் வந்தோம்
அல்லாதாரைப் போலேயும்-சத்ருக்களைப் போலேயும் – வந்தோம்
நாங்கள் செய்வது எல்லாம் செய்தோம்
நீ பெறினும் பேறு இழக்கிலும் இழ -என்றபடி-

—————————————————————————————————-

22-அங்கண் மா ஞாலத்து அரசர்
ஸ்த்ரீத்வ அபிமானம் தவிர்த்து வந்தோம்
அனன்யார்ஹை தாங்கள் என்கிறார்கள்
பள்ளிக்கட்டில் கீழ் –

மீண்டும் ராஜ்ஜியம் போனால் யாராவது கிரீடம் தலையில் வைத்து மீண்டும் அஹங்காரம் கொள்ளுவோம் என்று

ஸ்ரீ பரத ஆழ்வானுக்கு வந்த நிலைமை வரக் கூடாதே
இளைய பெருமாள் போல் பிரியாமல் நிழலும் அடி தாறுமாக
சிறுச் சிறிதே கிண் கிணி
குற்றம் குறைகள் நினைத்து பாதி மூடியும்
கூக்குரலை கேட்டு பாதி திறந்தும் –
பூர்ண கடாஷம் தாங்கப் போகாதே என்றுமாம்
கோடையோடின பயிரிலே ஒரு பாட்டம் மழை வர்ஷியாதோ
கிரீஷ்ம ருதுவில் தபித்த
சாபம் அனுபவித்தே தீர வேண்டிய துக்கம் படி-

————————————————————————————————–

23-மாரி மலை
எங்கள் மநோ ரதம் ஓலக்கத்தில் பெரிய கோஷ்டியாக
எழுந்து அருளி கேட்க வேண்டியது ஒழிய
ரஹச்யமாக
பிரார்த்திக்கக் கூடியது இல்லை -என்கிறார்கள்
சிங்கம் மலை முழைஞ்சில் கிடந்து உறங்குவது போலே
இந்த யசோதை இளம் சிங்கம்
நப்பின்னை கொங்கை மேல் வைத்துக் கிடந்த மலர்மார்பா என்கிறபடி
சீரிய சிங்கம் பிறக்கும் பொழுதே சிங்கம் பெயர் பெற்ற சீர்மை
சிற்றாயர் சிங்கம் யசோதை இளம் சிங்கம்
வேரி மயிர் ஜாதிக்கு ஏற்ற பரிமளம்
கோப்புடைய
உபய விபூதியிலும் உண்டான சராசர பதார்த்தங்களை அடங்கலும் தொழிலாக வகுப்புண்டு இருக்கை
தர்ம ஜ்ஞானாதிகளாலும் அதர்ம அஜ்ஞ்ஞானாதிகளாலும்
கோப்புடைய சிம்ஹாசனம் என்றுமாம்
தர்மம் அதர்மம் ஞானம் அஞ்ஞானம் வைராக்கியம் அவைராக்யம் ஐஸ்வர்யம் அனைச்வர்யம் எட்டுக்கால்கள்
யாம் வந்த கார்யம் சொல்லாமல் -சிற்றம் சிறுகாலையில் சொல்லுவதாக விட்டார்கள்
ஆராய்ந்து அருள்
பெண்காள் ஒருவரை ஒருவர் எழுப்பி
எல்லாரும் திரண்டு
நம் வாசல் காப்பானையும் எழுப்பி
ஐயரை எழுப்பி
ஆய்ச்சியை எழுப்பி
நம்மை எழுப்பி
அண்ணரை எழுப்பி
மீளவும் நம்மை எழுப்பி
போர வ்யசனப் பட்டி கோளே-என்று திரு உள்ளம் பற்றி
கிருபை பண்ணி அருள வேணும் -என்பதாம்

———————————————————————————————–

24-அன்று இவ்வுலகம்
தங்கள் மநோ ரதங்களை மறந்து
தண்ட காரண்ய வாசிகள் போலே
அயோத்யாவாசிகள் தேவதைகள் உட்பட பிராத்தித்தால் போலேயும்
சக்கரவர்த்தி பரசுராமன் இடம் பிரார்த்தித்தால் போலேயும்
ஸ்ரீ கௌ சல்யையார் மங்களா சாசனம் செய்தால் போலேயும்
வசுதேவர் தேவகி கண்ணன் சங்கு சக்கரங்களை மறைக்க வேண்டினால் போலேயும்
வஸ்துவில் உள்ள ஆதாராதிசயம் தூண்ட
மங்களா சாசனத்தின் மற்று உள்ள ஆழ்வார்கள்
தங்கள் ஆர்வத்து அளவு தானன்றி பொங்கும்
பரிவாலே வில்லி புத்தூர் பட்டர் பிரான் பெற்றான்
பெரியாழ்வார் என்னும் பெயர்
பிராட்டிமாரும் பிடிக்க கூசும்படி புஷ்பஹாசமான சுகுமாரமான திருவடிகள்
உடையும் கடியன ஊன்று வெம் பரல்கள் உடை கடிய வெம் கான் இடங்கள் எங்கே
தாளால் உலகம் அளந்த அசைவு தீர பல்லாண்டு
முள்ளைக் கொண்டு முள்ளை களைவது போலே
விளைவை இலக்காக குறித்து
கன்றை எறி கருவியாகக் கொண்டு
எறிவதாக இச்சித்து நடந்த போது
குஞ்சித்த திருவடிகளில் வீரக் கழலையும்
அகவாயில் சிகப்பையும் கண்டு காபபிடுகிறார்கள்
அடி போற்றி கழல் போற்றி
நீட்டின திருவடிகளுக்கும் குஞ்சித்த திருவடிகளுக்கும்
சூழ்ந்து இருந்து பரிவாரைப் போலே பரிகிறார்கள்
இந்த்ரன் உணவை கொள்ள கொண்ட நாம் அவன் உயிரை கொள்ள கொள்ளக் கூடாது என்ற குணத்துக்கும் பல்லாண்டு
வென்று பகை கெடுக்கும் வேல்
தசரத சக்ரவர்த்தி பெருமாள் இருவரும் வில் பிடித்தது போல்
கூர் வேல் கொடும் தொழிலன் நந்த கோபரும் கிருஷ்ணனும் வேல் பிடிக்க
வேலைப் பிடித்து என் அன்னைமார்கள் -இடையர் வேல் பிடிப்பார்கள் இ றே
அடி போற்றி
திறல் போற்றி
புகழ் போற்றி
கழல் போற்றி
குணம் போற்றி
வேல் போற்றி
இவர்கள் நாக்குக்கு இடும் ஷட்ரசம் இருக்கிறபடி
பறை கொள்வான் இன்று யாம் வந்தோம் -என்றது
எற்றைக்கும் ஏழ் ஏழ் பிறவிக்கும் உன்தன்னோடு உற்றோமே யாய் உனக்கே நாம் ஆட்செய்ய வந்தோம் -என்றபடி
யாம் வந்தோம் இரங்கு
பரகத ச்வீகாரமே ஸ்வரூபம்
ஸ்வகத ச்வீகாரம் ஸ்வரூப விருத்தம்
என்று துணிந்து இருக்கும் நாங்கள்
ஆற்றாமை மிக்கு வந்தோம்
பொறுத்து அருள்

———————————————————————————————————-

25-ஒருத்தி மகனாய்
பறை வியாஜ்யம் -உன்னையே பெற வந்தோம்
கண்ணனை பெற்ற பாக்யவது தேவகி
கண்ணனை வளர்த்த பாக்யவதி யசோதை
பிறந்த இடத்தில் ஓர் இரவும் வசிக்கப் பெற்றது இல்லை இ றே சம்சாரிகள் கீழே
நாய்க்குடலுக்கு நறு நெய் தொங்கா தாப் போலே
சம்சாரிகள் தண்மை கர்ப்ப க்ரஹத்தில் ஓர் இரா தங்க ஒட்டிற்று இல்லை
அழுது முலைப்பால் குடித்த இடமே பிறந்த இடம்
திருப் பிரதிஷ்டை பண்ணினவர்களில் காட்டிலும்
ஜீரணோத்தாரணம் பண்ணினவர்களே முக்கியர்
ஒளித்து வளர -வானிடைத் தெய்வங்கள் காண அந்தியம் போது அங்கு நில்லேல் -என்றும்
அசுரர்கள் தலைப்பெய்யில் யவம்கொலாம் என்று ஆழும் என்னாருயிர் ஆனபின் போகல் -என்றும்
கண்ணா நீ நாளைத் தொட்டு கன்றின் பின் போகல் கோலம் செய்து இங்கே இரு -என்றும்
தீங்கு நினைந்த
சகடம்
கொக்கு
கன்று
கழுதை
குதிரை
விளா மரம்
குருந்த மரம்
அசுரர்களை ஆவேசிப்பித்தும்
பூதனையை அனுப்பியும்
வில் விழவு வ்யாஜ்யத்தில் குவலயா பீடம் நிறுத்தியும்
மல்லர்களை நிறுத்தியும்
நினைத்த தீங்குகள் பல பல
அவன் நினைவை அவனோடு போக்கி
பிழைப்பித்தல் பிழையை உடையதாக்கி -பாழாக்கி
நெருப்பன்ன நின்ற நெடுமால்
கண்ணன் சேஷ்டிதங்களை நினைந்து வயிறு எரிந்து ஆய்ப்பெண்கள்-அந்த நெருப்பை வைத்தான்
உன்னை அருத்தித்து வந்தோம்
என்னை ஆக்கிக் கொண்டு எனக்கே தன்னைத் தந்த கற்பகம்
எங்களுக்கு நீ பிறந்து காட்ட வேண்டாம்
வளர்ந்து காட்டவும் வேண்டா
கொன்று காட்டவும் வேண்டா
உன்னைக் காட்டினால் போதும்
பறை தருதியாகில்
சேதனன் க்ருத்யம் ஒன்றும் பல சாதக்னம் ஆக மாட்டாது
அவன் நினைவே பல சாதனம்
இவன் எல்லாம் செய்தாலும்
அவன் அல்லேன் என்ற வன்று ஸ்வ தந்த்ரனை வளைப்பிட ஒண்ணாதே
ஆகையால் தருதியாகில் -என்கிறார்கள்
எத்தனையேனும் மேலானவர்களை எத்தனையேனும் தாழ்ந்தவர்கள்
திரு உள்ளம் ஆகில் செய்து அருள வேணும் -என்று இ றே சொல்வது
சேவகமும் யாம்பாடி
வருத்தமும் தீர்ந்து
மகிழ்ந்து
உன்னை அருத்தித்து வந்தோம் -என்று அந்வயம் மகிழ்ந்திடுவோம் என்றது ஆயிற்று-

———————————————————————————————–

ஸ்ரீ P.B.A,ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருப்பாவை -பாசுரங்கள் – 16-20-திவ்யார்த்த தீபிகை சாரம்–

September 27, 2014

16-நாயகனாய் நின்ற
சாஸ்திர விதிகளும் பாகவத அனுஷ்டானத்தை பின் செல்லும்
செய்யாதன செய்யோம் கோல் விழுக்காட்டாலே இவர்கள் அனுஷ்டானம் ஆகிறது
அவனைப் பெறுமிடத்தில் ததீயர் முன்னாக பெற வேணும் என்கிறது இப்பாட்டாலே
நாயகன் நந்தகோபருக்கும் கோயில் காப்பானுக்கும்
கடகர் இ றே நாயகர்
ஆளவந்தார் நாத முனிகள் ஆச்சார்யர்களை துதித்து இழிந்தால் போலே
சீற ஒண்ணாதபடி புருஷாகாரமாக
நாயகன் முழு ஏழ் உலகுக்கும் -என்றும்
தொல்லை வானவர் தம் நாயகன் -என்றும்
நம்முடை நாயகனே -என்றும்
இருந்தாலும்
உந்தம் அடிகள் முனிவர் -அந்த கண்ணபிரானுக்கும் நாயகர் நந்தகோபர் என்றது இ றே
கண்ணபிரான் கோயில் காப்பானே என்னாமல் நந்தகோபர் கோயில் காப்பானே
பரமபதத்தில் ஸ்வ தந்த்ரனாய் பட்ட பாடு தீர
நந்த கோபர்க்கு பிள்ளையாய் பிறந்து பாரதந்த்ரம் பேணினான்
ஒரு தலையில் குலம் தரு மாசில் குடிப் பழி என்று பதியாக
கோயிலில் வாழும் என்பார்கள்
இரண்டும் ஒருவரையே சொல்லிற்றாம்
கோயில் காப்பானே என்று ஷேத்ராபதியைச் சொல்லி
வாசல் காப்பானே என்று திரு வாசல் காக்கும் முதலியை சொல்லிற்றாகவுமாம்
ஆராலே விக்நம் வருகிறதோ என்று பயப்பட்டு எல்லார் காலிலும் விழுகிறார்கள்
தேவதாந்த்ரங்கள் காலில் விழுமவர்கள் பரிவர் காலில் விழச் சொல்ல வேணுமோ
கொடித் தோன்றும்
நந்த கோபர் திரு மாளிகை எடுத்துக் காட்ட
பெருமாளைக் காணப் பெறாதே ஆர்தனான ஸ்ரீ பரத ஆழ்வான்
ராமாச்ரம சூசகம் கண்டு தரித்தால் போலே
கொடியையும் தோரணத்தையும் கண்டு இவர்கள் தரிக்கைக்கு யாயிற்று கட்டி வைத்தது
யுகம் த்ரேதா யுகமாய் காலம் நல்லடிக் காலமாய்
தமப்பனார் சம்பராந்தகனாய் பிள்ளைகளும் தாங்களும் ஆண் புலிகளாய்
அவர்கள் தாம் வழியே போய் வழியே வருமவர்களாய்
ஊரும் திரு அயோத்யையுமாய்
இருக்கையாலே ராமாவதாரத்தில் அச்சம் இல்லாமல் இருந்தது
இப்போது அங்கன் அஞ்ச வேண்டாதே பாலிலே உண்டு பனியிலே கிடக்கிறதோ
காலம் கலிக்கு தோள் தீண்டியாய் த்வாபர அந்தமாய்
தமப்பனார் பசும் புல்சாவ மிதியாத பரம சாதுவான நந்த கோபராய்
பிள்ளைகள் சிறுவராய் பின்னையும் தீம்பரிலே தலைவராய்
இருப்பிடம் இடைச் சேரியாய் அது தான் கம்சனுடைய ராஜ்யத்துக்கு மிகவும் அணித்தாய்
அவனுக்கு இறை இறுக்குமூராய்
அவன் தான் பரம சத்ருவாய்
எழும் பூண்டு எல்லாம் அசூர மயமாய் இருக்க
அச்சம் கெட்டு இருக்க இடம் இது ஆவது எங்கனே -என்ன
நாங்கள் பெண் பிள்ளைகள்
சூர்பணகை
இடைப் பெண்கள்
பூதனை
ஆயர் சிறுமியரோம்

மாயன்
பெண்கள் கோஷ்டியில் தாழ நின்று கையை காலை பிடித்து பரிமாறின படி
மணி வண்ணன்
தாழ நில்லாதே காதுகனானாலும் விட ஒண்ணாத வடிவழகை உடையவன்
இவர்களை கிடந்த இடத்தே கிடக்க ஒட்டாதே இப்படிப் படுத்துகிற வடிவழகு
தூயோமாய் வந்தோம்
பல்லாண்டு பாடுகையே பரம பிரயோஜனம் -புருஷார்த்தம்
தமது ரஷணத்துக்கு அவனே கடவன் என்கிற அத்யாவசாயம் கொண்டவர்கள்
பிரயோஜனாந்த பரர் இ றே ஓலக்கத்தில் புகுவார்
அநந்ய பிரயோஜனர் இ றே கண் வளரும் இடத்திலே புகுரப் பெறுவார் –
ஒரு வாய்ச் சொல்லாலே தண்ணீர் பந்தல் வைக்கலாய் இருக்க ஏதுக்காக இழக்கிறாய்
நேச நிலைக்கதவம்
கம்சன் பரிகரம் அடைய பிரதிகூலமாய் இருக்கிறாப் போலே
திரு ஆய்ப்பாடியிலே சேதன அசேதன விபாகம் இன்றியே
எல்லாம் அனுகூலமாய்த்து இருப்பது
படியாய் கிடந்து உன் பவள வாய் காண்பேனே போலே நிலையம் கதவுமாய் நின்று உன்னைக் காண்பேனே –
அணைய ஊர புனைய
அடியும் பொடியும் பட
பர்வத பவனங்களில் எதேனுமாக ஜனிக்கப் பெறுகிற
திர்யக் ஸ்தாவர ஜன்மங்களை
பெருமக்களும் பெரியோரும் பரிக்ரஹித்து பிரார்த்திப்பார்கள்
நேசமுடைய நிலையையும் கதவையும்
நிலை நேசம் கதவம் -நிலையோடு பொருத்தம் உடைய கதவம்-

————————————————————————————————–

17-அம்பரமே
பர்த்தாவினுடைய படுக்கையையும் பிரஜையினுடைய தொட்டிலையும் விடாத மாதாவை போலே
ஸ்ரீ நந்த கோபரையும் கிருஷ்ணனையும் விடாத யசோதை பிராட்டி போலே
கண்ணனை ஆய்ச்சியர் களவு காண்பர் கோல் என்னும் அச்சத்தினால் முதலில் ஸ்ரீ நந்தகோபர் கட்டில்
உள்ளுக் கிடக்கிறது வைத்த மா நிதியுமாய்
தாம் எடுத்த பேராளனுமானால் நோக்காது இரார் இ றே
அறம் செய்யும் -புகழை பயனாக கருதாமல் -கொடுத்து அல்லது தரிக்க மாட்டாதராய்
அம்பரமே இத்யாதி அவதாரணத்தாலே ஓர் ஒன்றையோ இவர் கொடுக்கக் கற்றது என்னும்படி இருக்கையும்
அது தானே புஷ்கலமாய் கொடுக்கையும் தோன்றும்
எம்பெருமான் -உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலை -அவனை தந்து எங்கள் சத்தியை நோக்கும்
கண்ணால் காண்பதற்கு மேற்பட ஒன்றும் அறியாத இடைப் பெண்கள் என்பதால் யசோதை பிராட்டியை
முதலில் பள்ளி உணர்த்த வில்லை
யசோதை அறியவே அமையும் பின்பு தங்களுக்கு ஒரு குறை இல்லை -என்று இருக்கிறார்கள்
உகவாதார் தலையிலும் திருவடி வைத்த நீபிரார்த்திக்கும் எங்களை கடாஷிக வேண்டாமா
கிருஷ்ணன் பின்னே பிறக்க முன்னே பொற்கால் பொலிய விட்டு பிறந்த சீமானே
அவனுக்கு படுக்கையான நீயும் எங்களுக்கு படுக்கையான அவனும் உறங்காது உணர வேணும்
அனந்தன் மேல் கிடந்த எம் புண்ணியனுக்கு படுக்கை
கண்ணபிரான் பிரணயத்தாலே இவர்களுக்கு படுக்கை
அம்பரம் -ஆடை ஆகாசம்

——————————————————————————————————

18-உந்து
பிராட்டிக்கு வேற புருஷகாரம் வேண்டாமே
அவளுடைய கருணையே
வெந்நீரை ஆற்ற தானே தண்ணீர் வேணும்
பரதசையில் நாய்ச்சியார் மூவரையும்
வ்யூஹ தசையில் இருவரையும்
ஸ்ரீ ராமாவதாரத்தில் பெரிய பிராட்டியார் ஒருவரையும்
ஸ்ரீ வரஹாவதாரத்தில் ஸ்ரீ பூமி பிராட்டி ஒருவரையும்
ஸ்ரீ கிருஷ்ணாவதாரத்தில் நப்பின்னை பிராட்டியையும்
,முன்னிடிவது சம்ப்ரதாயம்
நந்தகோபன் குமரன் போல் இவளுக்கும் அவனை இட்டே
உந்து மத களிற்றன் தன்னால்வென்று தள்ளப் படுகிற
மதம் உந்து களிற்றன் — களிறு போன்றவன் களிறுகளை உடையவன் என்றுமாம்
ஸ்ரீ வசூதேவரும் இவரும் ஒரு மிடறு
அங்கு இருக்கும் களிறுகள் இங்கே இருக்க தட்டில்லை
வாரணம் ஆயிரம் சூழ வலம் செய்து
ஓடாத -அஞ்சி ஓடாத -நடையாடாத -கம்சன் நேராக வர முடியாத தோள் வலிமை
கண்ணன் தீம்புகளை நினைத்து அஞ்சும் ஆய்சிகள் இவன் தோள் வலிமை கண்டு அச்சம் தீருவர்
திருவாய்ப்பாடியில் கிருஷ்ணன் பிறந்த பின் கம்பும் காற்றையும் ஒழிந்தார்இந்த பிராப்தி
நந்த கோபன் மருமகள் -இல்லாதார் உண்டோ -பஞ்ச லஷம் குடிப் பெண்களுக்கும் சாதாரணம் அன்றோ
நமக்கு விசேஷம் என் என்று பேசாதே கிடந்தால்
நப்பின்னாய் -என்கிறார்கள்
கம்பு -கொம்பு வளைந்து நிற்க ஒண்ணாத தடி
கற்றை -கதிர் மயிர் தொகுதி வளைந்து நிற்கக் கூடிய பொருள்கள்
இவற்றால் முரட்டு ஆண்களும் கில நாரிகளும் சூசிக்கப் படுகிறார்கள்
குழலின் கந்தம் கடுக வந்து மறு மொழி தர -கந்தம் கமழும் குழலீ-என்கிறார்கள்
நாங்களும் கண்ணன் என்னும் சென்னிப் பூவை சூடுமாறு கதவை திற என்கிறார்கள்
கோழி கூவு என்னுமால் என்று உனக்கு வயிறு எரிகைக்கு உடல் அல்லாமையாலே தெரியாதே -என்கிறார்கள்
கோழி கூவும் என்னுமால் தோழி மார் யான் என் செய்கேன்
ஆழி வண்ணர் வரும் பொழுதாயிற்று கோழி கூவும் என்னுமால்
மாதவிப் பந்தல் மேல் பல் கால் குயிலினங்கள் கூவின காண்
கொத்தலர் கோவின் மணித்தடம் கண்படை கொள்ளும் இளம் குயிலே
என் தத்துவனை வரக் கூகிற்றியாகில் தலை யல்லால் கைம்மாறு இலேனே
இன்று நாராயணனை வரக் கூவாயேல் இங்குத்து நின்றும் துரப்பன் –
பந்தார்விரலி -நாங்களும் அசேதன வஸ்துவாக இருந்தோம் ஆகில் உன் திருக்கையில் இருந்து இருப்போமே
மைத்துனன் பேர் பாட இன்னாளின் அடியான் போல்வன
சீரார் வளை
சீர்மை கையிலே கழலாமல் இருக்கை
தாம் உகக்கும் தம் கையில் சங்கமே போலாவோ
யாமுகக்கும் எம் கையில் சங்கம் எனது இழையீர்-என்றும்
என்னுடைய கழல் வளையை தாமும் கழல் வளையே ஆக்கினரே -என்றும்
வந்து திறவாய் மகிழ்ந்து
பெரிய நம்பி திரு கிரஹம் -எம்பெருமானார் உகந்த திருப்பாவை

—————————————————————————————————-

19-குத்து விளக்கு
இத்தால் ஆஸ்ரிதர்க்கு மாறி மாறி ஒருவருக்கு ஒருவர் பரிந்து நோக்குகையாலே
நமக்கு தஞ்சமாய் இருப்பதொரு மிதுனம் உண்டு என்கிறது –
தனித் தனியே பற்றுமவர்கள் தங்கையும் தமையனும் பட்ட பாடு படுவார்கள்
மெத்தென்ன பஞ்ச சயனம் -அழகு குளிர்ந்தி மென்மை பரிமளம் வெண்மை
மென்மை விசேஷித்து
துளிர் மலர் பஞ்சு மெல்லிய கம்பளம் பட்டு -இவற்றால் என்றுமாம்
பஞ்சால் ஆன என்றுமாம்
கொங்கை மேல் வைத்து கிடந்த -அவளை இழுத்து தன மேல் கொண்ட அவதாரிகை படி
மலர் மார்பா -மாசூணாச் சுடர் உடம்பாய் மலராது குவியாது -இது ஸ்வரூபம் பற்றி –
அபிமத ஜன லாபத்தாலே அவிகாராயா இருப்பவனும் விகாரம்
யசோதை பிராட்டி கட்டுக்கு அலருகிற மார்பு இவளுடைய ஸ்தன பந்தத்துக்கு அலரச் சொல்ல வேணுமோ
அடைக்கலத்து ஓங்கும் –புடைகலர்ந்தானை –திருவிருத்தம்
-புடைக்க அலர்ந்தானை -அலந்தானை இல்லை –
எழுந்து வாராய் சொல்லாமல் வாய் திறவாய் என்கிறார்கள்
பிரிக்க ஒண்ணாது இ றே -மிடற்று ஓசையே வாழ்விக்குமே
உன்னால் அல்லாது செல்லாது இருக்க எங்களுக்கு
ஒரு வார்த்தையும் அரிதாம் படி பேசாதே கிடக்கிறது என்
திறக்கிறவர்களையும் திறக்க ஒட்டாதே
நீயும் முலைக்கு கீழே அமுக்குண்டால்
கிடந்த இடத்தே கிடந்து- மாசுசா என்னவும் அரிதோ
உன் மார்பை நப்பின்னைக்கு தந்தாய் ஆகிலும் வாயையாகிலும் எங்களுக்கு தரலாகாதோ
நாங்களும் உன்னைப் போலே மைத் தடம் கண்ணிகளாக வேண்டாவோ
உன் மணாளனை
பொதுவாக உண்பதனை நீ உண்டக்கால் சிதையாரோ உன்னோடு செல்வப் பெரும் சங்கே
எத்தனை போதும் துயில் எழ ஒட்டாய் காண்
சம்போக வ்ய்சதமாக கட்டின கை நெகிழ்கிலும் உடம்பு வெளுப்புதீ
கலவிக்கு உடலான வியாபாரத்தையும் பிரிவுக்கு உடல் என்று பிழைக்க மாட்டாய்
புணர்ச்சிக்காக பிரியிலும் தடுப்பது வளைப்பது ஆவுதி
தத்துவம் அன்று தகவு
தத்துவம் -நாங்கள் சொன்னது ஆற்றாமையால் கண்ணாம் சுழலை இட்டு சொன்னது அன்று உண்மையே சொன்னோம் இத்தனை காண்
அன்று தகவு -எங்கள் பக்கலிலும் நீ இங்கன் உபேஷை தோற்ற இருப்பது தருமம் அன்று
அன்றிக்கே
தத்துவம் அன்று தகவு -உனக்கு நீர்மை உண்டு எனபது உண்மை அன்று
அன்றிக்கே
தத்துவம் அன்றி தகவும் அன்று கட்டின பட்டத்துக்கு சேரும் இத்தனை-

————————————————————————————————-

20-முப்பத்து மூவர்
பிரயோஜனாந்த பரர்களுக்கு கார்யம் செய்து
அநந்ய பிரயோஜனரான எங்களை உபேஷித்து
முன் சென்று கோஷ்டியில் முன் இல்லை துன்பம் வரும் முன் காலத்திலே
கம்பம் கப்பம் நடுக்கம் தவிர்த்து
இறை ராவணாதிகளுக்கு பணிப்பூ விட்டு திரியாமல்
தவிர்க்க வல்ல கலி வலிமை உடையாய்
கலி என்று மிகுதியாய் சகல தேவதைகளையும் ரஷிக்கையாலே சர்வாதிகநானவனே -என்றுமாம்
செப்பம் உடையார்
ஆஸ்ரித விரோதிகளை நிரசிக்கும் பொழுது தனக்கு ஒன்றும் நேராமல்
ஆர்ஜவம் -நினைவு சொல் செயல் ஒருபடிப்பட்டு
மணாளனை நீராட்டு
மணளனோடு -மணாளனையும் எம்மையும் சம்ச்லேஷிக்கச் செய்
எம்மை விரஹம் தின்ற உடம்பை காட்டி –

—————————————————————————————————

ஸ்ரீ P.B.A,ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.