ஸ்ரீ தேவ ராஜ மங்களம்-ஸ்ரீ மணவாள மா முனிகள் அருளிச் செய்த ஸ்லோகங்கள் -ஸ்ரீ பேர் அருளாளன் கோயில் ஸேவா கிரம ஸ்லோகமும் ஸ்ரீ காஞ்சி திவ்ய தேச முக்த ஸ்லோகமும் –

ஸ்ரீ கோயில் திருமலை ஆழ்வார் -திருவாய் மொழிப்பிள்ளை -நாலூர் ஆச்சான் பிள்ளை
ஈடு சாதித்த விருத்தாந்தம் –
திருவாய் மொழிப்பிள்ளை திருவரங்கத்தில் இருந்து பெருமாள் கோயிலுக்கு எழுந்து அருளியதால்
இப்படி விளிச்சொல் அவருக்கு நன்றி காட்டி அருளவே இந்த மங்களாசாசனம் -12–ஸ்லோகங்கள்
ஸ்ரீ தேவ ராஜ பெருமாளுக்கு மங்களா சாசனத்துக்காகவே அருளிச் செய்த ஸ்லோகம் இது

ஆலம்பனம் -ச துலம் -துலா மாச மூலம் —
அனைத்துக்கும் மூலம் –
சடாரி முக -தொடக்கமான ஆச்சார்ய ஸ்ரீ ஸூக்திகள் அறியும் மூலம் –
பிறவி பயன் பெற மூலம்

—————————

அப்பிள்ளை அருளிச் செய்த தனியன் –

யச் சக்ரே தேவராஜஸ்ய மங்களா சாசனம் முதா
தம் வந்தே ரம்யா ஜாமாத்ரு முநிம் விசத வாக் வரம்-

முதா -ஆனந்தம் பொங்க அருளிச் செய்த
சக்ரே -அருளிச் செய்தவர் –
ஜாமாதா -மணவாளன் — ரம்ய -அழகிய –முனிம் -மனன சீல-முனி –

பதற்றத்துடன் என் வருமோ -அதி சங்கையால் பல்லாண்டு பெரியாழ்வார்
இவரோ ஆனந்தத்துடன் மங்களா சாசனம்
பண்ணி அருளிய உபகார சிந்தனையால் ஆனந்தம் –
கண்டவாற்றால் தானே என்று நின்று அருளும் இவரைப் பார்த்து அதி சங்கையும் பண்ணவும் வேண்டாமே –
இவருக்கு அதிக ஈடுபாடே பிள்ளை லோகாச்சார்யார் தானே -இவரே அவராக அன்றோ

————————————————————————–

பல்லாண்டு -தொடங்கிய பெரியாழ்வார் போல் மங்களம் பாதத்தால் இங்கும் தொடக்கம் –
எந்த பேர் அருளாளன் கிருபை லேசத்தால் -தயா நிதிம் -தயைக்கு இருப்பிடம் –
ஆளவந்தார் ஸ்லோகம் -செவிடன் கேட்க்கிறான் -நொண்டியும் ஓடுகிறான் -ஊமையும் பேசுகிறான் –
குருடன் பார்க்க -மலடி பிள்ளைப் பேறு

மங்களம் வேதஸோ வேதி மேதிநீ க்ருஹமேதிநே
வரதாய தயா தாம்நே தீரோ தாராய மங்களம்-1

——————————

மங்களம்-பல்லாண்டு

வேதஸோ
பிரமனுடைய –

வேதி மேதிநீ –
உத்தர வேதி ஸ்தலத்தை –
நான் முகன் செய்த அஸ்வமேத யாகத்திலே
உத்தர வேதியில் திருவவதரித்து அருளினார்
புராண பிரசித்தி

க்ருஹமேதிநே –
இருப்பிடமாகக் கொண்டவருமான –

க்ருஹமேதிநே —
பெரும்தேவி மணவாளன் -என்றுமாம்
கமலா க்ருஹமேதிநம் -என்றார் ஸ்ரீ தேசிகன்

வரதாய-தயா தாம்நே –
அருளுக்கு இருப்பிடமான -என்றபடி-
வரம் ததா தீய -வேண்டிய மங்களங்கள் எல்லாம் அருளும் பேர் அருளாளன் – இறே-

தீரோ தாராய –
தைரியமும்
ஔதார்யமும் யுடையவர் -என்கை –
திருமங்கை ஆழ்வாருக்கு -வேகவதி மண்ணை அளந்து தானம் கொடுத்து –தங்க நெல் மணியாக மாறினதே —

மங்களம்-
பல்லாண்டு –
விரையார் பொழில் வேங்கடவன் -அரங்கனைப் பாட வந்த பொழுது -எங்கு இருந்து வந்தான் என்பதை உள்ளி மங்களா சாசனம் –
வடக்கு வாசல் வழியாக வந்து கண் வளர்ந்து அருளுகிறார் அன்றோ –
அதே போலே இங்கும் ஆவிர்பாவம் சொல்லி –மங்களாசானம் பண்ணி அருளிச் செய்கிறார் –

———————————————————————————————————–

வாஜிமேத வபா ஹோமே தாதுருத்தர வேதித
உதிதாய ஹூதாதக்நேர் உதாராங்காய மங்களம்–2-

வாஜிமேத -அஸ்வமேத யாகம்
வபா ஹோமே-ஹவிர் பாகம்
தாதுருத்தர வேதித-யாக குண்டம் யாக வேதிகை -உத்தர வேதிகை
உதிதாய ஹூதாதக்நேர் உதாராங்காய மங்களம்—ஆவிர்பவித்து -உதாராங்காய மங்களம் அழகிய திரு மேனியுடன் –
கீழே வரத்தை சொல்லி இங்கு அழகிய திரு ரூபம் –
வள்ளல் தன்மை -உதாரன்-அழகை நேராக காட்டி -நாமும் இன்றும் சேவிக்கும் படி திரு முகத்தில் வடுக்கள் உடன்
அநந்தம் பிரதம ரூபம் –சாலைக் கிணறு –உயர்ந்த ரத்னம் அரங்கன் தன்னிடமே கொள்ளுவான் —
அரையர் தாளம் இசைத்து -அருளிச் செயல்களை -சாதித்து -கச்சிக்கு வாய்த்தான் மண்டபம் –
அத்தியூரான் புள்ளை யூர்வான் -நம் இராமானுஜனை தந்து அருள வேணும்
கெட்டேன்-ராமன் த்வரி ந பாஷதே -தந்தோம் -தியாகம் -இவருக்கே உரிய தனிச் சிறப்பு –

பிரமனுடைய அயமேத வேள்வியில் வபையை எடுத்து
ஹோமம் பண்ணின யுடனே
உத்தர வேதியில் நின்றும்
ஹோம குண்டலத்தில் இருந்து உதித்து அருளினவரும்
அழகிய திரு மேனியை யுடையவருமான
பேரருளாளப் பெருமாளுக்கு பல்லாண்டு-

—————————————————————

யஜமாநம் விதிம் வீஷ்ய ஸ்வயமான முகச்ரியே
தயமாந த்ருசே தஸ்மை தேவராஜாய மங்களம்-3-

விதிம்-ப்ரம்மா
ஸ்வயமான முகச்ரியே–சிரித்த முகத்துடன்
தயமாந த்ருசே தஸ்மை
தேவராஜாய மங்களம்-

தாதாம் ஆவீர் பூத் ஸவ்ரி ஸ்வயமான முகாம்புஜ பீதாம்பரத ஸ்ரக்வீ -சாஷாத் மன்மத மன்மத-

கோபிமார்கள் –ஆனந்தம் சாத்மிக்க-மறைய -துக்கம் -மிக்கு -அத்தை போக்க சங்கு சக்கர -பீதாம்பர காட்சி கொடுப்பதை –
தாதாம் ஆவீர் பூத் ஸவ்ரி–முதல் பாதம் -விவரணம் முன் பாசுரம் –
ஸ்வயமான–இரண்டாம் பாதம் -இப்பாசுரம்
பீதாம்பர -பட்டு பீதாம்பரம் -ஸ்ரக்வீ -வனமாலை -திருத் துழாய் மாலைகள் உடன்
சாஷாத் மன்மத மன்மத –ஆறாவது ஸ்லோகத்தில் காட்டுவார் –

தம்மை சாஷாத் கரிக்கும் பொருட்டு
வேள்வி செய்த பிரமனை நோக்கிப்
புன்முறுவல் செய்து கொண்டு
அருள் நோக்கம் தந்து அருளின
தேவப் பெருமாளுக்கு பல்லாண்டு

—————————————————

வாரித ஸ்யாம வபுஷே விராஜத் பீத வாஸஸே
வாரணா சல வாஸாய வாரி ஜாஷாய மங்களம்–4-

வாரித ஸ்யாம வபுஷே –
கரு முகில் போல்வதோர் திருமேனி யுடையவரும்

விராஜத் பீத வாஸஸே –
பீதக வாடை திகழும்
திருவரையை யுடையவரும்

வாரணா சல வாஸாய –
திரு வத்தி மா மலையைத்
தன்னிடமாகக் கொண்டவரும்

வாரி ஜாஷாய –
செந்தாமரைக் கண்ணருமான
தேவப் பெருமாளுக்கு
அக்ஷன் கண் -வாரி நீர் -வாரி ஜ நீரில் வந்த தாமரை

மங்களம் –
பல்லாண்டு-

வாரித ஸ்யாம வபுஷே -வாரி –மேகம் -ஸ்யாமளா-திருமேனி –கறுத்த-பத்து மஞ்சள் –
கருணை நிறம் கருப்பு -கோபம் சிகப்பு –செய்யாள் -திருக்கண் திருமேனி -மாறி –
விராஜத் பீத வாஸஸே-பீதாம்பரம் –
வாரணா சல வாஸாய -சலம் -வாரணம் -யானை மலை -ஹத்திகிரி வாசம் -ஐராவதம் கைங்கர்யம் —
வாழைத்தண்டு விளக்கு –அனைவருக்கும் அருள் புரிய
வாரிஜா ஷாய மங்களம்- வாரி – ஜலம் –தாமரை -அக்ஷன் கண் -தாமரைக் கண்ணன்

————————————————————

அத்யாபி சர்வ பூதாநாம் அபீஷ்ட பல தாயிநே
பிரணதார்த்தி ஹராயாஸ்து ப்ரபவே மம மங்களம்-5-

நான்முகனுக்கு அபேஷித சம்விதானம் செய்து அருளினது போலவே
இன்றைக்கும்
சகல பிராணி வர்க்கங்களுக்கும்
அபேஷிதங்களான பலன்களை அருளிச் செய்பவரும்
ஆஸ்ரிதர்கள் அநிஷ்ட நிவ்ருத்திகளையும் செய்து அருள்பவரும்
எனக்குத் தலைவருமான
தேவப் பெருமாளுக்கு
பல்லாண்டு-

அத்யாபி சர்வ பூதாநாம் -அனைவருக்கும் -இன்றும் கூட -நான் முகனுக்கு -திரு மங்கை ஆழ்வாருக்கு –
ராமானுஜரை ரஷித்து -தேசிகனுக்கு அருளி -நமக்கும் இன்றும் –
தமக்கும் திருவாயமொழிப்பிள்ளை மூலம் ஈடு கொடுத்து அருளினார்-
அபீஷ்ட பல தாயிநே-அனைத்தையும் அருளும்
பிரணதார்த்தி ஹராயாஸ்து- ப்ரபவே மம மங்களம்-5-
தேசிகன் -உஞ்ச வ்ருத்தி செய்து-கால ஷேபம்– ஸ்ரீ ஸ்துதி -தங்க மழை பொழிய -பிரம்மச்சாரி பிள்ளைக்கு கல்யாணத்துக்கு –

—————————————————————

திவ்ய அவயவ சௌந்தர்ய திவ்ய ஆபரண ஹேதயே
தந்தாவள கிரீசாய தேவராஜாய மங்களம்–6-

திவ்யமான அவயவ சௌந்தர்யத்தை யுடையவரும்
திவ்யமான ஆபரணங்களை யுடையவரும்
ஸ்ரீ ஹஸ்திகிரி நாதருமான
தேவப் பெருமாளுக்கு
பல்லாண்டு
தந்தா வளம் =என்று யானைக்கு பெயர்-

திவ்ய அவயவ சௌந்தர்ய –லாவண்யமும் சௌந்தர்யமம் உண்டே –
திவ்ய ஆபரண ஹேதயே-கிரீட மகுட –சங்கு சக்கர இத்யாதி -கழுத்தில் பெரும் தேவியார் கை வளையல் தழும்பு –
தந்தாவள கிரீசாய –யானை மலை தலைவன்
தேவராஜாய மங்களம்–
க்ளைவ்ஹாரம்–Robert Claiv -கருட சேவைக்கு -பெருமாள் எழுந்து அருள -திரு ஒத்து வாடை சமர்ப்பிக்க -வியர்க்குமா -கேட்டானாம் –
பிழிந்து காட்ட -சாஷாத் -என்று உணர்ந்தானாம் -அர்ச்சாவரதாரம் உயிர் உண்டு விஸ்வசிப்பவனே ஸ்ரீ வைஷ்ணவன் என்பாராம் நம்பிள்ளை
அவன் கொடுத்த ஹாரம் –கருட சேவை பொழுது இன்றும் சாத்துவார்கள் –

——————————————————————

புருஷாய புராணாய புண்ய கோடி நிவாஸிநே
புஷ்பிதோ தார கல்பத்ரு கமநீயாய மங்களம்—7

புருஷாய புராணாய-
அநாதி சித்த புருஷரும்

புண்ய கோடி நிவாஸிநே –
புண்ய கோடி விமானத்திலே எழுந்து அருளி இருப்பவரும்

புஷ்பிதோ தார கல்பத்ரு கமநீயாய –
பூத்து அழகிய கல்ப வருஷம் போல்
ஸ்ப்ருஹணீயமான
தேவப் பெருமாளுக்கு
கமநீய -விரும்பத் தக்கவர்

மங்களம் –
பல்லாண்டு-

புருஷாய புராணாய–உத்தம புருஷன் -புருஷோத்தமன் -மனசை வசிப்பதால் புருஷன் -புரி-சேதியதி புருஷ
நெஞ்சமே நீள் நகர் -இதுவே தலை நகர் அவனுக்கு –
மனத்துள்ளான் -மா கடல் நீர் உள்ளான் –பேயாழ்வார் முதலில் –
புரு பஹு சனோதியதி புருஷ -கொடுப்பவர் -என்றுமாம் -உயர்ந்த பரம புருஷார்த்தம் அருளுபவர் –
அதமன் -மத்யமன் -உத்தமன் -புருஷோத்தமன் –ராமானுஜரை அனைவரும் அனுபவிக்க கொடுத்து
புராணாயா -தொல்லை மால் –மற்றவை நவீனம் -சரபர் -கற்பனை -ப்ரத்யங்கிரா தேவி -ப்ரத்யங்கிங்கிரா மேலும் வரும் –
புரா அபி நவி புராணம் -அந்த அந்த சனத்துக்கு புதிதாக -அப்பொழுதைக்கு அப்பொழுது ஆராவமுதம் இவனே –
புண்ய கோடி நிவாஸிநே–விமானம் -சாயை நிழலில் செய்யும் புண்ய கார்யம் கோடி மடங்கு –
இதனால் தான் ப்ரம்மா இங்கே அஸ்வமேத யாகம்
ஆனந்த நிலையம் -திருமலை –எனக்கே தன்னைத் தந்த கற்பகம் –
கமநீயாய மங்களம்-பொன்னே போலே அனைவரு விரும்பி பொக்கிஷம் போலே கொள்ளும்
தாமரைக்காடு -பூத்தால் போலே அன்றோ -கண்ணனையும் தாமரை –அடியும் அஃதே –

—————————————————————–

காஞ்ச நாசல ச்ருங்காக்ர காளமேகா நுசாரிணே
ஸூபர்ண அம்ஸ அவதம்ஸாய ஸூர ராஜாய மங்களம்–8-

காஞ்ச நாசல ச்ருங்காக்ர காளமேகா நுசாரிணே –
பொன் மயமான தொரு மலையின் உச்சியிலே
காளமேகம் திகழ்வது போலே

ஸூ பர்ணாம் ஸாவதம் ஸாய ஸூ ரராஜாய மங்களம் –
பெரிய திருவடியின்
திருத் தோளுக்கு
அலங்காரமாகி நின்ற
தேவப் பெருமாளுக்குப்
பல்லாண்டு-

ஸூபர்ண -கருடன்

காய்ச்சின பறவை யூர்ந்து பொன்மலையின் மீ மிசைக் கார்முகில் போல் -திருவாய்மொழி
அத்தியூரான் புள்ளை யூர்வான் -பூதத் தாழ்வார்
வையத்தெவரும் வணங்கும் பெரிய திருவடி சேவை -பிரசித்தம் இறே-

காஞ்ச நாசல ச்ருங்காக்ர -ஸ்வர்ணமே மலையாக -உச்சி மேலே
காளமேகா நுசாரிணே–காள மேகம் –
ஸூபர்ண அம்ஸ அவதம்ஸாய -கருடன் ஸ்வர்ண மலை போலே -வைகாசி விசாகம் -கருட சேவை காண கண் கோடி வேணுமே
அடியார் தோள்களில் மிதந்து வரும் படி -தொட்டாச்சார்யார் சேவை பிரசித்தம் –தக்கான் குளம் –
ஸூ ரராஜாய மங்களம்–தேவ ராஜர் -அமரர்கள் அதிபதி -இமையோர் தலைவா –

————————————————————————–

போகா பவர்க்க யோரேகம் வாஞ்சத்ப்யோ தத்தே த்வயம்
ஸ்ரீ மத் வராத ராஜாய மஹோதாராய மங்களம்–9-

இருள் தரும் மா ஞாலம் ஆகிய இவ் வுலகத்தில் போகம் என்றும்
நலமந்த மில்லதோர் நாடாகிய நித்ய விபூதியில் போகம் என்றும்
போகம் -இருவகைப் படுமே
ஐஹிகத்தை விரும்புவார் சிலர்
ஆமுஷ்மிகத்தை விரும்புவார் சிலர்
இங்கனே ஓர் ஒன்றை விரும்பினாலும் கூட
தம்முடைய ஔதார்ய விசேஷத்தாலே-
இரண்டையும் அளித்து அருள்பவர்
பேரருளாள பெருமாள்
என்கிறார் –

அவன் நாடு நகரமும் நான்குடன் காண
நலனிடை யூர்தி பண்ணி
வீடும் பெறுத்தித்
தன் மூ வுலகுக்குத் தரும் ஒரு நாயகமே -போலே –

போகா பவர்க்க யோரேகம் வாஞ்சத்ப்யோ தத்தே த்வயம்
போகம்-ஐஸ்வர்யம் – -அபவர்க்கம் -முக்தி –
கூரேச விஜயம் -நாலூரானுக்கும் அருளி –
ஸ்ரீ மத் வராத ராஜாய மஹோதாராய மங்களம்–

———————————————————————————–

மதங்க ஜாத்ரி துங்காக் ரச் ருங்கச் ருங்கார வர்ஷ்மணே
மஹாக்ருபாய மத்ர ஷா தீஷி தாயாஸ்து மங்களம்–10-

ஸ்ரீ ஹஸ்த கிரியின் மிக வுயர்ந்த உச்சிக்கு
அலங்காரமான திரு மேனியை யுடையவரும்
என் போல்வாரைக் காத்து அருள்வதில் தீஷை கொண்டவருமான
பேரருளாள பெருமாளுக்கு
பல்லாண்டு
வர்ஷம் -திருமேனி

மதங்க ஜாத்ரி-யானை மலை
துங்காக் ரச் ருங்கச் ருங்கார வர்ஷ்மணே-அழகன் அழகிய திரு மேனி உடன் சிகரத்தில் சேவை சாதித்து
மஹாக்ருபாய மத்ரஷா தீஷி தாயாஸ்து மங்களம்–ரக்ஷண தீக்ஷை
மணல் பாக்கத்து நம்பி -ரகஸ்யார்த்தம் கேட்க -ஸ்வப்னத்திலே -அருளி —தூங்கிண்டே கால ஷேபம் கேட்ப்பாராம்
-மீதி இரண்டு ஆற்றங்கரை நடுவில் கேட்டு -உபய காவேரி வட தென் காவேரி நடுவில் காட்டு அழகிய சிங்கர் சந்நிதி –
கூற நாராயண ஜீயர் -யானைகள் தீங்கு வராமல் இருக்க சிங்க பெருமாள் பிரதிஷ்டை செய்து அருளினாராம் –
பிள்ளை லோகாச்சார்யார் -தொடர்ந்து அருள -அவரோ நீர் -என்றாராம் –
மா முனிகள் வியாக்யானம் பண்ணும் படி அருளிய தீக்ஷை -மஹா கிருபாய -மத் ரஷா தீக்ஷை

—————————————————————————–

ஸ்ரீ காஞ்சீ பூர்ண மிஸ்ரேண ப்ரீத்யா சர்வாபி ஷிணே
அதீதார்ச்சாவ்ய வஸ்தாய ஹஸ்த்யத்ரீசாய மங்களம்–11

அர்ச்சாவதார சமாதியைக் கடந்து
திருக் கச்சி நம்பிகளோடு
பரம ப்ரீதி யுடன் வார்த்தையாடி யருளின
தேவப் பெருமாளுக்கு பல்லாண்டு
நம்பிகள் -ஆறு வார்த்தை பிரசித்தம் இறே
அநவரதம்-வார்த்தை யாடினது -என்பதால் சர்வாபி பாஷிணே-என்கிறார்-

ஸ்ரீ காஞ்சீ பூர்ண மிஸ்ரேண -திருக் கச்சி நம்பி உடன்
ப்ரீத்யா சர்வாபி ஷிணே-அன்புடன் -பேசி –
பணிவிடை -ஆலவட்டம் –காவேரி அரங்கன் -குளிர் அருவி வேங்கடம் -இவன் தானே அக்னி குண்டத்தில் -இருந்து –
கூரத் ஆழ்வான் திரு மாளிகை கதவு மணி சப்தம் -ஆறு வார்த்தை அஹம் ஏவ பரத்வம்
பேதமே தர்சனம் -உபாயம் திருவடி பிரபத்தி -அந்திம ஸ்ம்ருதி வர்ஜனம்
தேகாவசேனா முத்தி –
பூர்ணாஸ்சார்யம் ஸமாஸ்ரய –
கேசவ சோமயாஜுலு கேட்க புத்ர காமாஷ்ட்டி யாகம் திரு வல்லிக் கேணியில் செய்ய சொல்லி அருளினார் –
வீசினேன் -பேசினேன் -மோக்ஷம் ஆச்சார்ய சம்பந்தம் அடியாக தானே -ஆறு மாச காலமாவது கைங்கர்யம் செய்தே-
பேசினவர்க்கு யார் கைங்கர்யம் கொடுப்பார் -அதனால் -இடையராக திருக் கோஷ்ட்டியூர் நம்பிக்கு கைங்கர்யம் செய்தாராம் –
அதீதார்ச்சாவ்ய வஸ்தாய- ஹஸ்த்யத்ரீசாய மங்களம்-அர்ச்சை நிலையை குலைத்து பேசினீரே பல்லாண்டு

———————————————————————-

அஸ்து ஸ்ரீஸ்தந கஸ்தூரீ வாஸநா வாஸி தோரஸே
ஸ்ரீ ஹஸ்தி கிரி நாதாய தேவ ராஜாய மங்களம்—12-

கொங்கை மேல் குங்குமத்தின் குழம்பு அழியப் புகுந்து
ஒரு நாள் தங்கு மேல் என்னாவி தங்கும் என்று உரையீரே -என்று
ஆண்டாளைப் போலே பாரிக்க வேண்டாமல்
பெரிய பிராட்டியார் அநவரதமும் திரு மார்போடே
அணைந்து இருக்கையாலே
அளளுடைய திருமுலைத் தடத்தில் சாத்தின கஸ்தூரிக்குப் பின்
நறுமணம் கமழா நின்ற
திரு மார்பை யுடையவரான
ஸ்ரீ ஹஸ்திகிரி நாதற்குப்
பல்லாண்டு-

ஸ்ரீ ஹஸ்தி கிரி நாதாய தேவ ராஜாய மங்களம்-திரு மார்பில் சந்தனம் அவள் இடம்
அவள் திரு மார்பில் கஸ்தூரி இவன் இடம்

———————————————————————————-

மங்களா சாசன பரை மாதாசார்ய புரோகமை
சர்வைஸ் ச பூர்வைரா சார்யை சத்க்ருதாயாஸ்து மங்களம் -13

பல்லாண்டு பாடுவதையே தொழிலாகக் கொண்ட
அஸ்மத் ஆச்சார்யர் முதலான
சகல பூர்வ ஆச்சார்யர்களாலும் போற்றப் பெற்ற பெருமானுக்கு
பல்லாண்டு –

முன்னோர்கள் உடைய முறைமையை பின் பற்றியே அடியேனும்
இந்த ஸ்துதியினால்
பல்லாண்டு பாடினேன் -என்று
அருளிச் செய்து தலைக் கட்டினார் ஆயிற்று-

—————————————————————-

மணவாள மா முனிகள் திவ்ய தேச யாத்ரை யடைவில்
முதல் பர்யாயமாக
பெருமாள் கோயிலுக்கு எழுந்து அருளின போது
அருளிச் செய்தவை –

ஸ்ரீ மத் த்வாரம் மஹத்தி பலி பீடாக்ர்யம் பணீந்த்ராஹ் ரதம்
கோபி நாம் ரமணம் வ்ராஹவபுஷம் ஸ்ரீ பட்ட நாதம் முநிம்
ஸ்ரீ மந்தம் சடவைரிணம் கலிரிபும் ஸ்ரீ பக்திசாரம் முநிம்
பூர்ணம் லஷ்மண யோகிநம் முநிவரான் ஆத்யான் அத த்வாரபௌ
ஸ்ரீ மன் மஜ்ஜ ந மண்டபம் சரசி ஜாம் ஹேதீச போகீஸ்வரரௌ
ராமம் நீல மணிம மஹா ந சவரம் தார்ஷ்யம் நருசிம்ஹாம் ச்ரியம்
ஸே நாநயம் கரி பூதரம் ததுபரி ஸ்ரீ புண்ய கோட்யாம் ஹரிம்
தன் மத்யே வரதம் ரமா சஹசரம் வந்தே ததீயைர் வ்ருதம்

1-திருக் கோயில் வாசல்
2-மஹா பலி பீடம்
3-திரு வநந்த புஷ்கரணி -அநந்த சரஸ
4-வேணு கோபாலன்
5- ஞானப் பிரான்
6- பட்டர் பிரான் -பெரியாழ்வார்
7-நம் ஆழ்வார்
8-கலியன்
9-திருமழிசைப் பிரான்
10-எம்பெருமானார்
11-முதல் ஆழ்வார்கள்
12-த்வார பாலகர்கள்
13- அபிஷேக -திருமஞ்சன -திரு மண்டபம்
14-பெரும் தேவித் தாயார்
15-திருவாழி ஆழ்வான்
16- திரு வநந்த வாழ்வான்
17-சக்கரவர்த்தி திருமகன்
18- கருய மாணிக்கப் பெருமாள்
19-திரு மடைப் பள்ளி
20-பெரிய திருவடி
21- அழகிய சிங்கர்
22-சூடிக் கொடுத்த நாச்சியார்
23- சேனாபதி ஆழ்வான்
24- திருவாத்தி மா மலை
25- அதன் உச்சியில் புண்ய கோடி விமானத்தில்
அடியார்கள் புடை சூழ காட்சி தரும்
பெரும் தேவி மணாளன் பேரருளாள்ன்
ஆக இவர்களை எல்லாம் தொழுது மங்களா சாசனம் செய்து அருளின படி சொல்லும் ஸ்லோஹம்-

———————————————————————–

ஸ்ரீ காஞ்சி புரியில் உள்ள அஷ்டாதச திவ்ய தேசங்கள் மங்களா சாசனம் செய்து அருளின ஸ்லோகம்

தேவாதீச நருசிம்ஹா பாண்டவ மகாதூத பிரவாலப்ரபான்
ஸ்ரீ வைகுண்டபதிம் த்ரிவிக்ரமஹரிம் நீரேசமேகேச்வரௌ
நீலவ்யோமவிபும் மகோரகஹரிம் ஜ்யோத்ஸ் நேந்து முகுந்தாஹ்வையம்
காமா வாசபதிம் நருகேசரிவரம் தீபப்ரகாசப்ரபும்
ஸ்ரீ யுக்தாஷ்ட புஜாச்பதேச மநகம் ஸ்ரீ மத்ய தோக்தக்ரியம்
இத்யஷ்டா தச திவ்ய மங்கள புர்தேவான் சரோயேகிநா
ஸாகம் நிஸ் துல காஞ்ச்ய பிக்ய நகரீ நாதான் நமா மஸ் சதா

1-தேவப்பெருமாள்
2-அழகிய சிங்கர்
3-பாண்டவ தூதர்
4-பவழ வண்ணர்
5-வைகுண்ட நாதன் -பரமேஸ்வர விண்ணகரம்
6-உலகளந்த பெருமாள்
7-நீராகத்தான்
8-காரகத்தான்
9-கார் வானத்துள்ளான்
10-ஊரகத்தான்
11-நிலாத் திங்கள் துண்டத்தான்
12-கள்வர்
13-உள்ளுவார் உள்ளத்தான்
14-முகுந்தப் பெருமாள்
15- வேளுக்கை -ஆள் அழகிய சிங்கர்
16-விளக்கொளி எம்பெருமான்
17-அட்ட புயகரத்தான்
18-சொன்ன வண்ணம் செய்த பெறுமா -திரு வேக்கா
ஆக 18 பெருமாள்களையும்
பொய்கை ஆழ்வாரையும்
எஞ்ஞான்றும் இறைஞ்சுகிறோம்
என்றது ஆயிற்று-

——————————————————–

முக்தகம் –

ஆளவந்தார் பெருமாள் கோயிலுக்கு எழுந்து அருளின காலத்தில்
யாதவ பிரகாசர் பக்கலிலே வேதாந்தம் அதிகரித்துக் கொண்டு இருந்த உடையவர்
விரைவில் சித்தாந்த ப்ரவர்த்தகராக ஆகவேணும் என்று
தேவப் பெருமாள் திருவடிகளிலே
இந்த ஸ்லோஹம் அனுசந்தான பூர்வகமாக
பிரபத்தி பண்ணினார் என்றும்
அப்போதாக அவதரித்த ஸ்லோஹம் –

யஸ்ய பிரசாத கல்யா பதிர ச்ருணோதி
பங்கு ப்ரதாவதி ஜாவேந ச வக்தி மூக
அந்த ப்ரபச்யதி ஸூ தம் லபதே ச வந்த்யா
தம் தேவ மேவ வரதம் சரணம் கதோஸ்மி-

பேரருளாள பெருமாள் உடைய அனுக்ரஹ லேசத்தினால்
செவிடனும் செவி பெறுவான்
முடவனும் விரைந்தோடுவான்
ஊமையும் பேச வல்லவனாவான்
குருடனும் காணப் பெறுவான்
மலடியும் மக்கள் பெறுவாள்
இப்படிப் பட்ட அனுக்ரஹம் செய்தருள வல்ல
பேரருளாளப் பெருமாளைத் தஞ்சமாகப் பற்றுகின்றேன்
என்றவாறே-

———————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆளவந்தார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரும் தேவித் தாயார் சமேத பேரருளாளப் பெருமாள் திரு வடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Advertisement

Tags:

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: