ஸ்ரீ பொய்கை ஆழ்வார்
துவாபர யுகம் –சித்தார்த்தி வருஷம் –ஐப்பசி மாசம் –சுக்ல பஷ அஷ்டமி -செவ்வாய் கிழமை
திருவோணம் நஷத்ரம்
ஸ்ரீ பாஞ்ச ஜன்யம் அம்சம்
ஸ்ரீ காஞ்சி பொய்கையில் திருவவதாரம்
ஸ்ரீ பூதத்தார்
அடுத்த நாள் -ஸ்ரீ திருக்கடல் மல்லையில் -அவிட்டம் நஷத்ரம் -நீலோற்பல மலரில்
கதையின் அம்சமாக
திருவவதாரம்
ஸ்ரீ பேயாழ்வார்
அடுத்த நாள் சதயம் நஷத்ரம் -நந்தகம் அம்சம்
ஸ்ரீ திரு மயிலையில் கிணற்றில்-நெய்தல் மலரான -செவ்வல்லிப் பூவில் திருவவதாரம்
————————————————————–
ஸ்ரீ திரு மழிசை பிரான் –
பார்க்கவா முனிவர் -கனகாங்கி தேவமாது -கரு ஆண் குழவி யாக மாற
திருவாளன் -பிரம்பு அறுக்கும் வேளாளன் –
சேஷமான பாலை உட் கொண்ட மனைவி பெற்ற கனி கண்ணன் –
லோகாயுதம் பௌத்தம் சமணம் –சிவ வாக்கியர் பெயர்
ஸ்ரீ பேயாழ்வார் நல்வழிப் படுத்த -ஸ்ரீ பக்தி சாரர்
கணிகண்ணன் பாடிய பாடல்
ஆடவர்கள் எங்கன் அன்று ஒழிவார் வெக்காவும் பாடகமும் ஊரகமும் பஞ்சரமா
நீடியமால் நின்றான் இருந்தான் கிடந்தான் இது வன்றோ
மன்றார் பொழில் கச்சி மாண்பு –
சொன்ன வண்ணம் செய்த பெருமாள்
ஸ்ரீ ஓரிரவிருக்கை
ஸ்ரீ கிருஷ்ணா நாம் வர்ஹீனாம் நக நிர்ப்பின்னம் -விட்ட இடம் ஸ்ரீ பெரும் புலியூரில் காட்டி அருளி
அக்கரங்கள் அக்கரங்கள் என்றும் ஆவது என்கொலோ
இக்குறும்பை நீக்கி என்னை ஈசனாக்க வல்லையேல்
சக்கரம் கொள் கையனே சடங்கர் வாய் அடங்க உட்கிடந்த வண்ணமே
புறம் பொசிந்து காட்டிடே –
சாக்கியம் கற்றோம் சமணம் கற்றோம் சங்கரனார் ஆக்கிய ஆகம நூல் ஆராய்ந்தோம்
பாக்கியத்தால் செங்கண் கரியானை சேர்ந்தோம் யாம் தீதிலமே எங்கட்கு அரியது ஓன்று இல்
உறையிலிடாதவர்
—————————————————-
ஸ்ரீ மதுர கவி ஆழ்வார்
துவாபர யுகத்தில் -8,63,779-
ஈஸ்வர வருஷம்
சித்திரை சித்திரை
குமுதர் கருடர் அம்சம்
சேமம் குருகையோ செய்ய திருப் பாற்கடலோ
நாமம் பராங்குசமோ நாரணமோ -தாமம்
துளவமோ வகுளமோ தோள் இரண்டோ நான்கும்
உளவோ பெருமான் உனக்கு
ஈயாடுவதோ கருடற்கு எதிரே யிரவிக்கெதிர் மின் மினி யாடுவதோ
நாயாடுவதோ வுறுமிப் புலி முன் நரி கேசரி முன் நடையாடுவதோ
பேயாடுவதோ வழகூர்வசி முன் பெருமான் வகுளா பரண் நன் அருள் கூர்ந்து
ஓவாது உரை யாயிரமா மறையின் ஒரு சொல் போருமோ வுலகில் கவியே
—————————————————————-
ஸ்ரீ நம் ஆழ்வார் –
காரியார் -உடைய நங்கையார் -ஸ்ரீ திரு வண் பரிசாரம்
கலி -43 நாள்
பிரமாதி வருஷம் வைகாசி மாதம் -பௌர்னமி வெளிக் கிழமை -விசாகம் -ஸ்ரீ திருக் குருகூர்
ஸ்ரீ திருக் குறுங்குடி நம்பியே –திருமால் அம்சம் கௌஸ்துபம் அம்சம் -ஸ்ரீ விஷ்வக் சேனர் அம்சம்
ஸ்ரீ திரு வநந்த ஆழ்வான் -திருப் புளிய மரம்
ஸ்ரீ சடகோபர் -ஸ்ரீ வகுளா பரணர் -ஸ்ரீ பொலிந்து நின்ற பிரான் பரிசாக மகிழ மாலை அருள –
ஸ்ரீ பராங்குசன்
ஸ்ரீ நம் சடகோபனைப் பாடினையோ -நம் ஆழ்வார்
——————————————————————
ஸ்ரீ குலசேகர ஆழ்வார் –
கலி –28 வருஷம் -பராபவ வருஷம் -மாசி மாதம் –சுக்ல பஷம் –துவாதசி -வியாழக் கிழமை –புனர்வசு நஷத்ரம்
ஸ்ரீ திருவஞ்சிக் களத்தில் –
கோழிக் கூட்டரசன் திருடவிரதன் –கௌஸ்துபம் அம்சம் –
மகன் -திருடவிரதன்
மகள் இளைய குலசேகர வல்லி-ஸ்ரீ நம் பெருமாளுக்கு திரு மணம்-
———————————————————————
ஸ்ரீ பெரியாழ்வார் –
கலி-47-வருஷம் -குரோதன வருஷம் –ஆனி மாதம் –சுக்ல பஷம் –ஏகாதசி –ஞாயிற்றுக் கிழமை -சுவாதி நஷத்ரம் —
ஸ்ரீ கருட அம்சம்-வேயர் குலம் –ஸ்ரீ புதுமையாருக்கும் ஸ்ரீ முகுந்தாசார்யருக்கும் -ஸ்ரீ வில்லிபுத்தூரில்
புத்ரராய் திருவவதரித்தார் –
————————————————————-
ஸ்ரீ ஆண்டாள் –
கலி -98 வருஷம் -நள வருஷம் -ஆடி மாதம் –சுக்கில பஷம் –சதுர்த்தசி –செவ்வாய் கிழமை –பூர நஷத்ரம் –
ஸ்ரீ பூமிப் பிராட்டி அம்சமாய் -ஸ்ரீ வில்லி புத்தூரில்
திருவவதாரம்
———————————————————————————
ஸ்ரீ தொண்டர் அடிப் பொடி ஆழ்வார்
ஸ்ரீ திரு மண்டங்குடி
மார்கழி கேட்டை
ஸ்ரீ வைஜயந்தி வனமாலை அம்சம்
முன்குடுமி சோழிய பிராமணர்
விப்ர நாராயணர் -தேவதேவி
———————————————————————————–
ஸ்ரீ திருப்பாண் ஆழ்வார் –
ஸ்ரீ உறையூர்
கார்த்திகை ரோகினி
திரு மறு ஸ்ரீ வத்சம் அம்சம்
அந்தணன் காலனியில் நெல் கதிரில்
பாணர் எடுத்து வளர்க்க
—————————————————————————
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார்
ஸ்ரீ திருவாலி -ஸ்ரீ திருநகரி -ஸ்ரீ திருக் குறையலூர்
கள்ளர் குடி -கலி -398- நள வருஷம்
பூர்ணிமை வியாழக் கிழமை கிருத்திகை நஷத்ரம்
நீலன் –
ஆலிநாடன் அருள்மாரி அரட்ட முக்கி அடையார் சீயம்
கொங்கு மலர்க் குழலியர் வேள்
மங்கை வேந்தன்
கொற்ற வேல் பரகாலன்
கலியன்
ஈயத்தால் ஆகாதோ விரும்பினால் ஆகாதோ பூயத்தான் மிக்க தொரு பூதத்தால் ஆகாதோ
தேயத்தே பித்தளை நல செம்புகளால் ஆகாதோ
மாயப் பொன் வேண்டுமோ மதித்து என்னப் பண்ணுகைக்கே
——————————————————————-
ஸ்ரீ மணவாள மா முனி அருளியது –
அணைத்த வேலும் தொழுத கையும் அழுந்திய திரு நாமமும்
ஓம் என்ற வாயும் உயர்ந்த மூக்கும் குளிர்ந்த முகமும்
பரந்த விழியும் பதிந்த நெற்றியும் நெறித்த புருவமும்
கருண்ட குழலும் வடிந்த காதும் அசைந்த காது காப்பும்
தாழ்ந்த செவியும் சரிந்த கழுத்தும் அகன்ற மார்பும்
திரண்ட தோளும் நெளிந்த முதுகும் குவிந்த இடையும்
அல்லிக் கயிறும் அழுந்திய சீராவும் தூக்கிய கருங்கோவையும்
தொங்கலும் தனி மாலையும் தளிரும் மிளிருமாய் நிற்கிற நிலையம்
சாற்றிய திருத் தந்தையும் சதிரான வீரக் கழலும்
தஞ்சமான தாளிணையும் குந்தியிட்ட கணைக்காலும்
குளிர வைத்த திருவடி மலரும் வாய்த்த மணங்கொல்லையும்
வயலாலி மணவாளனும் வாடினேன் வாடி என்று
வாழ்வித்து அருளிய நீலக் கலிகன்றி மருவலர் தம் உடல் துணிய
வாள் வீசும் பரகாலன் மங்கை மன்னனான வடிவே
உறை கழித்த வாளை ஒத்த விழி மடந்தை மாதர் மேல்
உருக வைத்த மனம் ஒழித்து இவ்வுலகளந்த நம்பி மேல்
குறைய வைத்து மடலெடுத்த குறையலாளி திருமணம்
கொல்லை தன்னில் வலி பறித்த குற்றமற்ற செங்கையான்
மறை யுரைத்த மந்திரத்தை மாலுரைக்க அவன் முனே
மடியொடுக்கி மனமடக்கி வாஉபுதைத்து ஒன்றலார்
கரை குளித்த வேல் அனைத்து நின்ற விந்த நிலைமை என்
கண்ணை விட்டகன்றிடாது கலியன் ஆணை ஆணையே
காதும் சொரி மூக்கும் கையும் கதிர் வேலும்
தாது புனை தாளிணையும் தனிச் சிலம்பும்
நீதி புனை தென்னாலி நாடன் திருவழகைப் போலே
என் ஆணை ஒப்பார் இல்லையே
வேல் அணைத்த மார்பும் விளங்கு திரு வெட்டு எழுத்தை
மாலுரைக்கத் தாழ்த்த வலச் செவியும்
தாளிணைத் தண்டையும் தார்க்கலியன் நன்முகமும்
கண்டு களிக்கும் என் கண்
இதுவோ திருவரசு இதுவோ திருமணம் கொல்லை
இதுவோ எழிலாலி என்னுமூர்
இதுவோ தான் வெட்டும் கலியன் வெருட்டி நெடுமாலை
எட்டெழுத்தும் பறித்த விடம்
———————————————————————
ஆழ்வார்கள் வாழி அருளிச் செயல்கள் வாழி
தாழ்வாதுமில் குரவர் வாழி -ஏழ்பாரும்
உய்ய அவர்கள் உரைத்தவைகள் தாம் வாழி
செய்ய மறை தன்னுடனே சேர்ந்து
அடியார்கள் வாழ அரங்க நகர் வாழ
சடகோபன் தண் தமிழ் நூல் வாழ
கடல் சூழ்ந்த மன்னுலகம் வாழ
மணவாள மா முனியே இன்னும் ஒரு நூற்றாண்டு இரும்
நித்ய ஸ்ரீ நித்ய மங்களம்
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply