அழுக்கு என்று இவை அறிந்தேன் அம் பொன் அரங்கா
ஒழித்து அருளாய் உள்ளில் வினையை -பழிப்பிலா
என் ஆரியர்க்காக எம்பெருமானார்க்காக
உன் ஆர் அருட்காக வுற்று —-6-
—————————————————————————
அவதாரிகை –
இப்படி ஆத்மா நாசத்தை விளைக்கக் கடவ
இந் நாலுமே யாத்ரையாய் இருக்கிற
இஸ் சம்சாரிகள் நடுவே வர்த்திக்கிற
நீர்
இங்கன் உபதேசிக்கும்படி இவற்றில் அகப்படாதே தப்பி இருந்தீரே -என்று
பெரிய பெருமாள் உகந்து அருளக் கண்டு
இவை
நேரே அழுக்கு என்று அறிந்தேனே யாகிலும் இப்படி
இவ்வறிவை
அடி மண்டியோடேகழிக்க வற்றான என் ஆந்தர தோஷத்தை
எனக்கு அஜஞாதஜஞாபகரான பிள்ளை லோகாச்சார்யரையும்
தேவர்க்கு அபிமதரான எம்பெருமானாரையும்
தேவருடைய பரம கிருபையையும்
கடாஷித்துப்
போக்கி அருள வேணும் -என்று
விண்ணப்பம் செய்கிறார் –
———————————————————————————-
வியாக்யானம் –
அழுக்கு என்று இவை அறிந்தேன் –
இவை அழுக்கு என்று அறிந்தேன் –
கீழ்ச் சொன்னவை அடங்கலும்
தேஜோ த்ரவ்யமான ஆத்மவஸ்துவுக்கு நேரே அவத்யகரம்
என்னும் இடத்தை
நாராயண அபி விக்ருதீம் யாதி குரோ பிரச்யுதச்ய துர்ப்புத்தே -இத்யாதிகளாலும்
என்றும் அனைத்து உயிர்க்கும் ஈரம் செய் நாரணனும் அன்றும் தன் ஆரியன் பால் அன்பு ஒழியில்-
இத்யாதிகளான அருளால பெருமாள் எம்பெருமானார் ஸ்ரீ ஸூக்திகளாலும் –
தான் ஹித உபதேசம் பண்ணும் போது தன்னையும் சிஷ்யனையும் மாறாடி நினைக்கை
க்ரூர நிஷித்தம்
பாகவத அபசாரம் தான் அநேக விதம்
அதிலே ஓன்று அவர்கள் பக்கலில் ஜன்ம நிரூபணம் -இத்யாதியான
பிள்ளை லோகாச்சார்யார் உடைய ஸ்ரீ ஸூக்திகளாலும்
வைஷ்ணவ உத்பத்தி சிந்தனம் மாத்ரு யோநி பரீஷயாஸ் துல்யம் -இத்யாதி வசனங்களாலும்
சம்சய விவர்யயங்கள் அறும்படி
விசதமாகவும்
பர உபதேச ஷம மாகவும் -அறிந்தேன் –
இவற்றின் தோஷப் பரப்பை தனித் தனியே
எடுத்துச் சொல்லப் புக்கால் பணிப்படும் என்று
பிரயோஜனத்திலே இழிகிறார் –
அம் பொன் அரங்கா –
நான் இவ்வறிவைப் பெறும்படி
அழகியதாயும்
மனோஜஞமாயும்
பாவனமாயும்
இருந்துள்ள
திருவரங்கப் பெரு நகரிலே
ஸ்தாவர பிரதிஷ்டையாக இருந்து
கிருஷி பண்ணினவர் தேவர் அன்றோ –
அம்பொன் அரங்கா –
நான் இவ்வறிவைப் பெற்ற பின்பு இ றே
துயர் அறு சுடர் அடி -என்னும்படி
தேவர்க்கு
இவ்வழகும்
மனோஜ்ஞமும்
நிறம் பெற்றது
இவர் தாம் திரு வனந்த புரத்திலே எழுந்து அருளி இருந்து
இப்பிரபந்தத்தை இட்டு அருளினார் ஆகிலும்
உருவு வெளிப்பாட்டின் மிகுதியாலே
அம்பொன் அரங்கா -என்று சம்போதிக்கும்படி
பெரிய பெருமாள் இவருக்கு முன்னிலையாகத் தோற்றுகிறார் போலே காணும் –
அம்பொன் அரங்கா ஒழித்து அருளாய் உள்ளில் வினையை —
தேவரீர் உடைய பாவனத்வத்துக்கும்
தேவரீரைப் பற்றிய என்னுடைய அஸூக்திக்கும்
அக்னி சிஞ்சேத் போலே
என்ன சேர்த்தி உண்டு –
தம்மையே நாளும் வணங்கித் தொழுவார்க்கு தம்மையே ஒக்க அருள் செய்வார் -என்று
தத்வ தர்சிகள் சொன்ன பாசுரம் மத ஏக அவர்ஜமாய் இருப்பது ஒன்றோ –
செம்மை யுடைய திருவரங்கர் தாம் பனித்த மெய்ம்மை பெரு வார்த்தை -என்னும்படி
கையும் உழவுகோலும்
பிடித்த சிறுவாய்க் கயிருமான
சாரத்திய வேஷத்தோடு
திருத் தேர் தட்டிலே எழுந்து அருளி இருந்து
ஸ்வ ஆஸ்ரிதனான அர்ஜுனனை வ்யாஜி கரித்து
சர்வ பாபேப்யோ மோஷயிஷ்யாமி-என்று தேவர் சொன்ன வார்த்தை
அர்த்த ஸ்பர்சியாய் இருப்பது ஓன்று அன்றோ –
அந்ருதம் நோகத பூர்வம் மே-என்றும்
நமே மோகம் வாசோ பவேத் -என்றும்
தேவர் தாமே அருளிச் செய்கையாலே தேவரீருக்கு அந்ருதத்தில் வ்யுத்பத்தி இல்லை –
ஒழித்து அருளாய் —
இத்தலை அர்த்தியாது இருக்க பூர்வஜராய்க் கொண்டு
செய்யக் கடவ தேவர்க்கு
இத்தலை அர்த்தித்தால் ஆறி இருக்கப் போமோ –
அரங்கா ஒழித்து அருளாய் –
பயிர்த்தலையில் குடியிருப்பரோபாதி
இத்தலையை -காக்கும் இயல்வனராய் –
அவதாரம் போலே தீர்த்தம் பிரசாதிக்கை அன்றிக்கே
நித்ய சந்நிதி பண்ணிக் கொண்டு போருகிற
தேவரீருக்கு இது தகாதது ஒன்றோ –
அருளாய்
நிர்க்க்ருணர் செய்யுமது
அருளாளியான தேவர்க்கு போருமோ
உள்ளில் வினையை –
உண்பார் மிடற்றைப் பிடிக்குமவன் போலே
மனனகமலம் -என்னும்படி
ஞான ப்ரசரண த்வாரத்தைப் பற்றி இ றே
இவ்வினை தான் இருப்பது –
உள்ளில் வினையை –
உள்ளத்தே உறையும் மாலை -என்கிறபடியே
உள்ளே பதி கிடந்தது
சத்தியை நோக்குகிற தேவரீருக்கு
உள்ளில் உண்டான விரோதியைப் போக்குகை பெரும் பணியோ-
ஒழித்து அருளாய் உள்ளில்வினையை –
பாசியானது தெளிந்த ஜலத்திலே எங்கும் ஒக்க வ்யாபரித்தாப் போலே
இப்படிப்புக்குத் திரோதாயகமாய்க் கொண்டு உள்ளே பிணை யுண்டு இருக்கிற
பாபத்தை போக்கி அருளீர்-
நீர் ஒழித்து அருளாய் -என்று இங்கன் உறைப்புத் தோற்றச் சொல்லுகிறது என் கொண்டு என்ன
ப ழிப்பிலா என் ஆரியர்க்காக எம்பெருமானார்க்காக உன் ஆர் அருட்காக வுற்று –
தேவர்க்கு அபிமதராய் இருப்பாரையும்
தேவருடைய தகவையும்
அண்டை கொண்டு காணும்
நான் இவ்வார்த்தை சொல்லுகிறது
என்கிறார் –
பழிப்பிலா என் ஆரியர்க்காக-
கீழ்ச் சொன்ன குற்றங்கள் ஒன்றும் இன்றிக்கே இருந்து வைத்து
ஸ்வ உபதேச முகத்தாலே இவை அடங்கலும் ஆகாது என்னும் அறிவிலனான எனக்கு
அறிவித்த பிள்ளை லோகாச்சார்யருக்காகவும் –
இப் பழிப்பு தான் சில நாள் யுண்டாய் பின்பு கழிந்து இல்லாமையாலே
ததத்யந்தா பாவம் தோற்ற -பழிப்பிலா -என்கிறார்-
என் ஆரியர்க்காக-
குரும் வாயோபி மந்யதே -என்கிற ச்வீகாரம் போன்ற ச்வீகாரம் அன்று –
அவ்வளவேயோ
எம்பெருமானார்க்காக –
அதுக்கு மேல்
அவருக்கு பரம சேஷியாய்
தேவரீர்க்கு அத்யந்த அபிமதராய்
ஆச்சார்யா பதத்துக்கு எல்லை நிலமாய்
சரம அர்த்தத்தை அனைவருக்கும் தூளி தானம் பண்ணி அருளின
எம்பெருமானார்க்காகவும் –
அவ்வளவேயோ –
உன் ஆர் அருட்காக –
அதுக்கு மேலே
தேவரீர்க்கு அசாதாரணமான நிரூபகமாய்
மற்றை குணங்களுக்கு அதிசய ஆதாயகமான அளவிலே
அகஞ்சுரிப்பட்டு இராதே என் அளவிலேயாய்க் கொண்டு
கரை கட்டா காவேரி போலே கரை புரண்டு இருக்கிற
க்ருபா குணத்துக்காகவும் உன் தன் ரஷண சக்தியில் வந்தால்
தேவரையும் விஞ்சிக் காணும் தேவரீருடைய கிருபை இருப்பது –
விரோதியிலே பீதியாலும்
தன் நிவ்ருதியில் யுண்டான த்வரையாலும்
அந்தரங்கரை முன்னிடில் பலம் சடக்கென கை புகுரும்
என்கிற த்வரையாலும்
இங்கன் சொல்லுகிறார் –
வுற்று –
குருவரம் வரதம் விதன்மே -என்றும்
ராமானுஜாங்க்ரி சரணோஸ்மி-என்றும்
பிதாமஹம் நாதமுநிம் விலோக்ய -என்றும்
என் பிழைத்தாள் திருவடியின் தகவினுக்கு -என்றும்
சொல்லுகிறபடி
ஏவம் பூதரான இவர்களுக்காகவும் அடியேனை அங்கீ கரித்து அருளி
என்னுடைய உள்ளில் வினையை ஒழித்து அருள வேணும்
அல்லாவிடில்
தேவரீர்க்கு
ஆஸ்ரித பாரதந்த்ர்யமும்
க்ருபா பாரதந்தர்யமும்
குலையும் இ றே
என்னைப் பார்த்து செய்து அருளுவதாக நினைத்து இருந்த அன்று இ றே
தேவரீர்க்கு காலக் கழிவு செய்யல் ஆவது –
ஆக
இப்பாட்டால்
பகவன் நிர்ஹேதுக கிருபா பிரபாவ பிரகரணத்தில்
பேற்றுக்கு அடி கிருபை -இத்யாதியாலும்
கிருபை பெருகப் புக்கால் இவருடைய ஸ்வாதந்த்ர்யத்தாலும்
தகைய ஒண்ணாதபடி
இரு கரையும் அழியப் பெருகும் இத்யாதியாலும்
சொல்லுகிற அர்த்த விசேஷங்களை
அருளிச் செய்தார் ஆய்த்து-
————————————————————————–
விளாஞ்சோலை பிள்ளை திருவடிகளே சரணம் .
பிள்ளை லோகாச்சார்யர் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply