அவதாரிகை –
இதில் – ஸ்ரீ பரம பத்தியாலே-பர ப்ராப்தியான படியை பேசின பாசுரத்தை அனுவதித்து அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில்
கீழ் சூழ் விசும்பு அணி முகிலிலே ஸ்ரீ பரம பதத்திலே புக்கு நிரதிசய ஆனந்த உக்தராய்
நித்ய சூரிகள் திரளிலே இருக்கிறாராக-தம்மை அனுசந்தித்த இது
ஜ்ஞான அனுசந்தானம் மாத்ரமாய் பாஹ்ய சம்ச்லேஷ யோக்கியம் அல்லாமையாலே
மேரு சிகரத்திலே ஸூ கோத்ரமாக இருந்தவன்
பேர் ஆழமான பள்ளத்திலே தலை கீழாக தள்ளுண்டு-விழுந்து நோவு படுமா போலே
அனந்த கிலேச பாஜனமான சம்சாரத்தில்-தாம் இருக்கிற படியைக் கண்டு
ஸ்ரீ ஈஸ்வரனுக்கு
பண்டு போலே ஒரு குணாவிஷ்காராதிகளால் பரிஹரிக்க ஒண்ணாத படி ஆற்றாமை தலை எடுத்து
ஒரு தூத ப்ரேஷாணாதிகளால் இட்டு நீட்டுகையும் இன்றிக்கே
தாமே அவன் முகத்தைப் பார்த்து
தம்மால் இது பரிஹரித்துக் கொள்ளப் போகாது இருக்கிறபடியும்
சாதநாந்தரங்களை அனுஷ்டித்தாலும் அவன் கை பார்த்து இருக்க வேண்டி இருக்கும் படியையும் சொல்லிக் கொண்டு
ஸ்ரீ பெரிய பிராட்டியார் ஆணை இட்டு-தடுத்தும்-வளைத்தும் அவனைப் பெற வேண்டும்படியான பரம பக்தி தலை எடுத்து
நிர்க்குணர் உடைய ஹிருதயங்களும் கூட இரங்கும் படியாகவும்
அவனுக்கும் தம் கார்யம் செய்து அல்லது ஸ்ரீ திரு நாட்டிலே குடி இருப்பு அரிதாம்படியாகவும்
பெரும் மிடறு செய்து கூப்பிட்டு பெரிய ஆர்த்தியோடே திருவடிகளிலே சரணம் புக
ஸ்ரீ பெரிய திருவடி திருத் தோளிலே ஸ்ரீ பெரிய பிராட்டியாரோடு கூட இவர் அபேஷித்த படியே ஸ்ரீ சர்வேஸ்வரன் வந்து தோற்றி
கால் கட்டான பிரகிருதி சம்பந்தத்தையும் அறுத்து
ஸ்ரீ பரம பதத்திலே கொடு போய் நித்ய சூரிகளோடே ஒரு கோவை யாக்கி-நித்ய கைங்கர்யம் கொண்டருள-
அத்தாலே-தாம் நிரஸ்த பிரதிபந்தகராய் பிராப்த சமஸ்த மநோ ரதரான படியை-சொல்லித் தலைக் கட்டுகிற
முனிய நான் முகனே யில் அர்த்தத்தை
முனி மாறன் இத்யாதியாலே அருளிச் செய்து தலைக் கட்டுகிறார் -என்கை –
————————————————-
முனி மாறன் முன்புரை செய் முற்றின்பம் நீங்கி
தனியாகி நின்று தளர்ந்து -நனியாம்
பரம பத்தியால் நைந்து பங்கயத்தாள் கோனை
ஒருமை யுற்றுச் சேர்ந்தான் உயர்ந்து –100-
————————————————-
வியாக்யானம்–
முனி மாறன்
ஸ்ரீ சர்வேஸ்வரன் -முனியே -என்னும்படி சதவஸ்தமான சம்ஹ்ருதி சமயத்தில் சர்வ சேதன ரஷணத்திலே
த்யாநாந்தஸ்தனாய் இருக்குமா போலே
இவரும்
நித்ய சம்சாரிகளாய் சம்சாரித்து
அசித் ப்ராயரான ஆத்மாக்கள் விஷயத்திலும் ரஷண சிந்தை பண்ணிப் போருகையாலே முனி -என்கிறது –
அன்றிக்கே –
பகவத் விஷயத்தில்-எண்ணா தனகள் எண்ணும் நல் முனிவர்-என்னுதல் –
அன்றிக்கே
பிரக்ருததுக்குச் சேர-ஸ்ரீ சர்வேஸ்வரன் விஷயத்தில்-பரம பக்தி பர்யந்தமாக
நிரந்த சிந்தா உக்தராய் இருக்குமவர் -என்னுதல் –
இப்படி மனன சீலராய் இருக்கிற ஸ்ரீ ஆழ்வார் —
முன்புரை செய் முற்றின்பம் நீங்கி –
அதாவது
களிதாகி சிந்தையனாய் களிக்கின்றேன் -என்றும்
விருப்பே பெற்று அமுதம் உண்டு களித்தேனே -என்றும்
உண்டு களித்தேற்கு உம்பர் என் குறை-மேலைத் தொண்டு களித்து அந்தி தொழும் சொல்லும் பெற்றேன் -என்றும்
கண்ணுள் நின்று அகலான் -என்றும்
உற்றேன் உகந்து பணி செய்து உன பாதம் பெற்றேன் -என்றும்
வந்தவர் எதிர் கொள்ள மா மணி மண்டபத்து அந்தமில்-பேரின்பத்து அடியரோடு இருந்தமை -என்றும்
இப்படி
முன்பு பேற்றை பெற்றதாக அருளிச் செய்த சமஸ்த ஆனந்தமும் நிரஸ்தமாய்ப் போய்
அது எல்லாம் மானச அனுபவ மாத்ரமாய்-பிரத்யஷ சாஷாத் காரத்திலே அபேஷை யுடையவராய்
அத்தை அப்போதே பெறாமல்
மீளவும் அஜஞாநாவஹமான சம்சாரத்த்லே இருக்கக் கண்டு
பூர்வத்தில் ஆனந்தமும் அபூர்வமாம்படி கழிந்தது -என்கை –
தனியாகி நின்று தளர்ந்து –
அந்தமில் பேர் இன்பத்து அடியாரான-ஸூரி சங்கங்கள் உடனே இருந்தும்
ஸ்வப்ன கல்பமாய் பழைய சம்சாரத்தில் தனிமையே சேஷித்து
ஸ்ரீ பிராட்டி ஸ்ரீ திரு அயோத்யையிலே ராவாணந்தகரான ஸ்ரீ பெருமாளை
பரமனும் தம்பி சத்ருக்னனும் இலக்குமனோடு மைதிலியும் -என்னும்படி சேர்த்தியாய் இருந்து அனுபவித்து
பின்பு பிரிந்து
காந்தார மத்யே விஜகே விஸ்ருஷ்டா பாலேவ கன்யா விலலாப சீதா -என்னும்படி
தனியே நின்று கூப்பிட்டாப் போலே
தனியேன் ஆர் உயிரே -என்று
தனியாகா நின்று தளர்ந்து மிகவும் அவசாதத்தை உடையவராய் தரைப்பட்டு-
அதாவது –
கனிவாய்த் தாமரை கட்கரு மாணிக்கமே –மாயம் செய்யேல் என்னை -என்றும்
மாயம் செய்யேல் என்று தொடக்கி –திரு வாணை நின் ஆணை-கண்டாய் –கூ விக் கொள்ளை வந்து அந்தோ -என்றும்
ஆவிக்கு ஓர் பற்றுக் கொம்பு நின் அல்லால் அறிகின்றிலேன் நான் -என்றும்
உம்பர் பரம் தண் பாழேயோ–என்னைப் போற விட்டிட்டாயே -என்றும்
எனக்கு ஆரா வமுதானாயே -என்றும்
எனக்கு ஆரா அமுதாய் எனது ஆவியை இன்னுயிரை மனக்காராமை மன்னி யுன்டிட்டாய் இனி யுண்டு ஒழியாய் -என்றும்
கோல மலர்ப் பாவைக்கு அன்பாகிய என் அன்பேயோ-உன்னைப் பெற்று இனி போக்குவேனோ -என்றும்
முதல் தனி உன்னை எனை நாள் வந்து கூடுவன் நான் -என்றும்
இப்படி ஆற்றாமையாலே-அவசன்னராய்க் கூப்பிட்டு -என்கை –
நனியாம் பரம பக்தியால் நைந்து —
அதனில் பெரிய அவா -என்னும்படி
தத்வ த்ரயங்களிலும் பெரியதாய்-முடிந்த அவாவான பரம பக்தியாலே-பரிபக்வராய் –
நனி -பெருமை
அன்றிக்கே
பரம பக்தியால் அலைந்து -என்ற பாடமான போது
அவா வாகிற அமுத வெள்ளமான-ஆனந்த சாகரத்திலே மக்னராய் -அலைந்து -என்றுமாம் –
பங்கயத்தாள் கோனை –
அந்த பரம பக்திக்கு விஷயமான-ஸ்ரீயபதியை –
கோல மலர்ப் பாவைக்கு அன்பாகிய என் அன்பேயோ –
உன்னைப் பற்றி இனி போக்குவேனோ -என்று அருளிச் செய்தவனை
உத்தர வாக்யத்தில் கைங்கர்ய பிரதி சம்பந்தியான ஸ்ரீயபதியை –
ஒருமையுற்று
வீடு திருத்தி -என்றும்
விண்ணுலகம் தருவானே விரைகின்றான் -என்றும்
வானே தருவான் எனக்காய் என்னுள்ளே ஒட்டி -என்றும்
த்வரிக்கிற ஸ்ரீ சர்வேஸ்வரன் திரு உள்ளத்தோடு சேரும்படி
இவர் திரு உள்ளமும் த்வரித்து -ஒரு தளைத்து -என்னுதல்-
அன்றிக்கே
பர பக்தி
பர ஞான
பரம பக்தி
உக்தராய்-பேற்றுக்குத் த்வரித்து
அவாவாலே கூப்பிட்டுப் போந்த இவர் திரு உள்ளமும் –
முதித பரிஷச்வஜே -என்னும்படி
என் அவா அறச் சூழ்ந்தாயே -என்று
இவர் அபி நிவேசம் தீரும்படி சம்ஸ்லேஷிக்கையாலே
அவா அற்று வீடு பெற்ற பிரகாரத்தை-ஆகவுமாம்-
பங்கயத்தாள் கோனை –ஒருமை யுற்று –உயர்ந்து -சேர்ந்தான் –
அதாவது
கோலத் திரு மா மகளோடு உன்னைக் கூடாதே சாலப் பல நாள் அடியேன் இன்னம் தளர்வேனோ -என்கிற-இழவு தீர
ஸ்ரீ யபதியான ஸ்ரீ சர்வேஸ்வரனை-ஒரு தலைத்த பரமபக்தி உக்தராய்
அத்தால்
நித்ய சூரிகள் ஆச்சார்யத்தை-இங்கே யுடையராய்
பிரத்யஷ சாஷாத்காரமாம் படி கிட்டி-இருவருமான சேர்த்தியிலே
அடிமை செய்வார் திரு மாலுக்கே -என்னும்படி –
அடிமை செய்யப் பெற்றார் –
அங்கே
பரதமாரோப்ய முதித பரிஷச்வஜே -என்று-இவரைப் பெற்று ஹ்ருஷ்டனாக
இவரும்
அத்தலையில்-முகோல்லாசத்தைப் பெற்று -அனுபவித்து-ஹ்ருஷ்டரானார் –
அத்தை யாயிற்று-ஒருமை யுற்றுச் சேர்ந்தான் -என்கிறது –
இத்தால்
அவா அற்று
வீடு பெற்ற
குருகூர் சடகபன் –
என்றத்தை நினைக்கிறது-
சாஷாத் கரித்த பரம பிராப்திக்கு தலை மிசையாய் வந்து-தாள்களைப் பூண்டு-போகாமல் தடுத்து
திரு வாணை இட்டு-கூசம் செய்யாதே-செய்திப் பிழை யற்று
கொம்பற்ற கதி கேடு போர விட்ட பெரும் பழி-புறம்பு போனால் வரும் இழவு உண்டிட்ட முற்றீம்பு
அன்பு வளர்ந்த அடி யுரம்-உயிர் உறவு முதல் அளவு துரக் கைகளாலே
பெறா வாணை அல்லவாக்கின-பேரவா-குளப்படியாம்படி-கடல் போன்ற ஆதாரத்தோடு சூழ்ந்து
தாபங்களை ஹரித்தமையை-வெளியிடுகிறார் பத்தாம் பத்தில் -என்று -ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயத்தில்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் அருளிச் செய்தார் –
கண்டு களிப்பளவும் -பரஞ்ஞான கர்ப்ப பரபக்தி
இருந்தமை -என்றது பூர்ண பரஞ்ஞானம்
முடிந்த அவா என்றது பரமபக்தி
இவை
ஞான
தர்சன
பிராப்தி
அவஸ்தைகள் -என்று
இந்த பரபக்தியாதி பேதத்தையும் அருளிச் செய்தார் —
ஏவம்விதமான
பரமபக்தியாலே-பரிபக்வராய்-பலத்தோடு சேர்ந்தார் -என்கிற
ஸ்ரீ திருவாய்மொழியில் அர்த்தத்தை-இப்பிரபந்தத்தில்-இப்பாட்டாலே சேகரித்து அருளினார் ஆயிற்று —
————————————————————————————
உயர்வே பரன்படியை யுள்ளதேல்லாம் தான் கண்டு
உயர் வேத நேர் கொண்டு உரைத்து -மயர்வேதும்
வாராமல் மானிடரை வாழ்விக்கும் மாறன் சொல்
வேராகவே விளையும் வீடு
—————————————————————————–
மாறன் -1/2/3/4/5/6/7/8/9/10/11/12/13/14/
சடகோபன் –15
மாறன் –16/17/18/19/20/21/
குருகையர் கோன் -22
மாறன் –23/24/25/26/27/28
குருகூர் மன்-29
மாறன் -30/31-
குருகூரில் வந்து உதித்த கோ -32
மாறன் -33/34/35/36
குருகூர் ஏறு -37
மாறன் -38/39
மொய்ம் மகிழோன் -40
மாறன் -41/42/43/44/45/46/47/48/49/50
காரிமாறன் -51
குருகையர் கோன் -52
மாறன் -53
பராங்குசன் -54
மாறன் -55/56/57/58
காரிமாறன்-59
மாறன் -60/61/62
சடகோபர் -63
மாறன் -64/65
அண்ணல் -66
மாறன் -67/68/69/70/71/72/73/74
சடகோபன் -75
மாறன் -76
சடகோபர் -77
காரிமாறன் -78
மாறன் -79/80/81/82/83/84/85/
மாறன் -86/87/88/89/90/91/92/93/94/95/96/97/98
ஞான முனி -99
முநி மாறன் -100-
மாறன் -1/2/3/4/5/6/7/8/9/10/11/12/13/14/-16/17/18/19/20/21/—-23/24/25/26/27/28–30/31—33/34/35/36–
-38/39—41/42/43/44/45/46/47/48/49/50–53–55/56/57/58—60/61/62–64/65–67/68/69/70/71/72/73/74–76-
–79/80/81/82/83/84/85/ -86/87/88/89/90/91/92/93/94/95/96/97/98
சடகோபன் –15–75
குருகையர் கோன் -22–52
குருகூர் மன்-29
குருகூரில் வந்து உதித்த கோ -32
குருகூர் ஏறு -37
மொய்ம் மகிழோன் -40
காரிமாறன் -51–59-78
பராங்குசன் -54
சடகோபர் -63–77
அண்ணல் -66
ஞான முனி -99
முநி மாறன் -100
—————————————————————————————
ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply