அவதாரிகை –
இதில் ஸ்ரீ திருமலையில் ஏக தேசஸ்தரான ஸ்ரீ அழகர் உடைய அழகை முழுதும்
அனுபவித்த பாசுரத்தை அனுவதித்து அருளிச் செய்கிறார் – அது எங்கனே என்னில்-கீழ்
அயன் மலையோடு
புறமலையோடு
திருப்பதியோடு
உத்தேச்யமாக ஸ்ரீ திருமலை ஆழ்வாரை அனுபவித்துக் கொண்டு வருகிற
மருளில் வண் குருகூர் வண் சடகோபனான ஸ்ரீ ஆழ்வார் ஸ்ரீ வட மா மலை உச்சி -என்கிற படியே
அம் மலையிலே ஒரு கொடி முடி என்னலாம் படியையும்
அதுக்கு அவயவமாய் இருப்பதொரு கல்பக தரு பஹூ சாகமாகத் தழைத்து பூத்தாப் போலேயாயுமாய் இருக்கிற
மேலிரும் கற்பகமான ஸ்ரீ அழகர் உடைய திவ்ய அவயவங்களும்
திரு அணிகலன்களுக்கும் உண்டான ஸூகடிதத்வத்தையும்
வேத வைதிக புருஷர்களாலும் அளவிட ஒண்ணாத பெருமையையும்
அத்தையும் விளாக் கொலை கொள்ளும்படியான ஆஸ்ரித வாத்சல்யத்தையும் அனுபவித்து விஸ்மிதர் ஆகிற
முடிச் சோதியில் அர்த்தத்தை -முடியார் திருமலையில் -என்று துடங்கி அருளிச் செய்கிறார் –
————————————————-
முடியார் திருமலையில் மூண்டு நின்ற மாறன்
அடிவாரம் தன்னில் அழகர் -வடிவழகைப்
பற்றி முடியும் அடியும் படி கலனும்
முற்றும் அனுபவித்தான் முன்—-21-
—————————————————-
வியாக்யானம்–
முடியார் திருமலையில் மூண்டு நின்ற மாறன் –
விராஜதே வ்ருஷாத்ரேச்ச சிகரம் தசதா துபி பூஷிதோ பூ பதிரேவ க்ரீடே நார்க்க வர்ச்சசா -என்கிறபடியே
விண் முதல் நாயகன் நீண் முடியோடு ஒத்த -என்றும்
மதி தவழ் குடுமி தொடக்கமான கொடு முடிகளாலே மிக்கு இருப்பதாய்
ஆயிரம் பைந்தலை யநந்தன் -என்னும் படியான ஸ்ரீ திருமலை ஆழ்வாரிலே மண்டி அனுபவித்த ஸ்ரீ ஆழ்வார் –
அடிவாரம் தன்னில் அழகர் -வடிவழகைப் பற்றி –
ஸ்ரீ திருமலையில் திருத் தாழ் வரையிலே
ஸ்ரீ மாலிரும் சோலை என்னும் மலையை உடைய மலையான ஸ்ரீ அழகர் திவ்ய ஆத்ம ஸ்வரூபம்
திவ்ய குணம் முதலாய் உள்ளவை எல்லாம் குமர் இருக்கும் படி அவர் திவ்ய விக்ரஹ சௌந்தர்யத்தை
அனுபாவ்ய விஷயமாகப் பற்றி –
அத்தை அனுபவிக்கும் இடத்தில் –
முடியும் அடியும் படி கலனும் முற்றும் அனுபவித்தான் முன்-
முடிச் சோதியாய் யுனது முகச் சோதி மலர்ந்ததுவோ
அடிச் சோதி நீ நின்ற தாமரையாய் அலர்ந்ததுவோ
படிச் சோதி ஆடையோடும் பல்கலனாய் நின் பைம் பொன் கடிச் சோதி
கலந்ததுவோ திரு மாலே கட்டுரையே -என்று
அபரிச் சேத்யமாம் படி அருளிச் செய்ததை அடி ஒத்தின படி –
ரூபம் சம்ஹந நமலம் லஷ்மீம் தத்ரு ஸூர் விஸ்மிதாகாரா-என்னக் கடவது இறே
முடியும் அடியும் –
க்ரீடாதி நூபுராந்தமாக -அனுபவித்த படி –
படி கலனும்
நடுவு உள்ளவையாய்-படியிலே உள்ள திரு அணிகலன்கள் -என்னுதல்
படிந்து ஸூகம் வடிவதானவை என்னுதல்
முடி கொண்டான் வெள்ளக் கால்களாய்- பின்பு பெரு வெள்ளமாய்-நட்டாறாய்ச் சுளித்து
அரையாற்றுக்கு அடியானபடி –
பெரு வெள்ளம்–நடு ஆறு -அரை யாறு- சௌந்தர்ய சாகரம் – தரங்க -அலையில் தூக்கிப் போட்ட சித்தம்
இப்படி சௌந்தர்ய சாகர தடங்க தாடன தரள சித்த விருத்தியாய்
முற்றும் அனுபவித்தான் முன் –
முழுதும் அனுபவித்தார் முற்காலத்திலே -என்னுதல்
முற்றும் -என்கிறது முடிச் சோதி -என்கிற பாட்டில் உக்தமானது எல்லாம் -என்னுதல்
மற்றும் -கட்டுரைக்கில் –சுட்டுரைத்த நன்பொன் உன் திருமேனி ஒளி ஒவ்வாது –என்றும்
பரஞ்சோதி -என்றும்
நின் மாட்டாய மலர் புரையும் திரு வுருவம் -என்றும்
மலர் கதிரின் சுடர் உடம்பாய் -என்றும்
போது வாழ புனம் துழாய் முடியினாய் பூவின் மேல் மாது வாழ் மார்பினாய் -என்றும்
மாசூணாய்ச் சுடர் உடம்பாய் -என்றும்
உன் சுடர்ச் சோதி -என்றும்
முதல் பாட்டின் விவரணமாக அருளிச் செய்தவை ஆகவுமாம் –
—————————————————————————–
ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply