இது விளைத்த
மன்னன் நறுந்துழாய் வாழ் மார்பன் மா மதி கோள்
முன்னம் விடுத்த முகில் வண்ணன் காயாவின் ——–96
சின்ன நறும் பூந்திகழ் வண்ணன் வண்ணம் போல்
அன்ன கடலை மலையிட்டணை கட்டி ——-97
மன்னன் இராவணனை மா மண்டு வெஞ்சமத்துப்
பொன் முடிகள் பத்தும் புரளச் சரந்துரந்து——-98
தென்னுலக மேற்றுவித்த சேவகனை ஆயிரக்கண்
மன்னவன் வானமும் வானவர் தம் பொன்னுலகும் ——99
தன்னுடைய தோள் வலியால் கைக்கொண்ட தானவனைப்
பின்னோர் அரியுருவமாகி யெரி விழித்துக் ——100
கொன்னவிலும் வெஞ்சமத்துக் கொல்லாதே வல்லாளன்
மன்னு மணிக்குஞ்சி பற்றி வர வீரத்துத் ——-101
தன்னுடைய தாள் மேல் கிடாத்தி அவனுடைய
பொன்னகலம் வள்ளுகிரால் போழ்ந்து புகழ் படைத்த —–102
மின்னிலங்கு மாழிப் படைத் தடக்கை வீரனை
மன்னிவ் வகலிடத்தை மாமுது நீர் தான் விழுங்கப் ——-103
பின்னுமோர் ஏனமாய்ப் புக்கு வளை மருப்பின்
கொன்னவிலும் கூர் நுதி மேல் வைத்தெடுத்த கூத்தனை ——-104
மன்னும் வடமலையை மத்தாக மாசுணத்தால்
மின்னு மிருசுடரும் விண்ணும் பிறங்கொளியும் ——-105
தன்னினுடனே சுழல மலைத் திரிந்தாங்கு
இன்னமுதம் வானவரை யூட்டி அவருடைய ———106
மன்னும் துயர் கடிந்த வள்ளலை மற்றன்றியும்
தன்னுருவ மாரும் அறியாமல் தான் அங்கோர் ——–107
மன்னும் குறளுருவின் மாணியாய் மாவலி தன்
பொன்னியலும் வேள்விக் கண் புக்கிருந்து போர் வேந்தர் —–108
மன்னை மனம் கொள்ள வஞ்சித்து நெஞ்சுருக்கி
என்னுடைய பாதத்தால் யான் அளப்ப மூவடி மண் ——–109
மன்னா தருக என்று வாய் திறப்ப மற்றவனும்
என்னால் தரப்பட்ட தென்றலுமே அத்துணைக் கண் ——–110
மின்னார் மணி முடி போய் விண் தடவ மேலேடுத்த
பொன்னார் கனை கழற்கால் ஏழ் உலகும் போய்க் கடந்தங்கு —–111
ஒன்னா வசுரர் துளங்கச் செல நீட்டி
மன்னிவ் வகலிடத்தை மாவலியை வஞ்சித்துத் ———112
தன்னுலக மாக்குவித்த தாளானை -தாமரை மேல்
மின்னிடையாள் நாயகனை விண்ணகருள் பொன் மலையைப் ——-113
————————————————————————–
இது விளைத்த
மன்னன் –
இத்தலை அப்படியாக தான் உஜ்ஜ்வலனான படி –
நறுந்துழாய்-
இப்படிப் படுத்துகைக்கு பிரஹ்மாஸ்திரம்
வாழ் மார்பன் –
தானும் திருத் துழாயோ பாதி வாழ நினைக்கிறாள் –
மா மதி கோள்-
எங்கள் பகையை விளைக்கிறான் -என்கை –
நீ அவன் கோள் விடா விட்டாலும் அவன் தானே எங்களை பாதிக்க வல்லன் –
முன்னம் விடுத்த முகில் வண்ணன் காயாவின் –
ஜல ஸ்தல விபாகம் இல்லாதவன்
மதியை ரஷித்த உத்தமன் –
சின்ன நறும் பூந்திகழ் வண்ணன் –
சின்ன நறும் பூங்கடல்-என்னுதல்
மேகம் -என்னுதல்
சிறுத்த காயாம்பூ என்கிறது அணுகலாய் இருக்கை-
வண்ணம் போல் அன்ன கடலை –
சத்ருக்கள் அன்றிக்கே சஜாதீயமான கடல் என்ன குற்றம் செய்தது –
மலையிட்டணை கட்டி மன்னன் இராவணனை மா மண்டு வெஞ்சமத்துப்-
சதுரங்க பலத்துக்கும் உப லஷணம்-அவற்றை உடைய யுத்தம் –
திறந்து கிடந்த வாசலிலே நாய் புகுருமா போலே புக்குப் போம் அத்தனை யன்றிக்கே
யுத்தத்திலே நேர் நின்று –
பொன் முடிகள் பத்தும் –
மனிச்சன் இவன் என்று எதிரியையும் மதியாதே-ஒப்பித்து வந்த படி –
புரளச் சரந்துரந்து-—
தலையோடே உயிரையும் துண்டித்தான் -அதாகிறது -உயிரும் தப்ப விரகில்லாத படி அம்பு நுழைந்த சடக்கு -வர பலத்தாலே அறுத்த தலை முளைக்க-அவற்றுக்குத் தக்கபடி விட்ட அம்பின் பெருமை –
தென்னுலக மேற்றுவித்த சேவகனை –
யமலோகம் பாழ் படும்படி முன்பு இங்கே வந்து இவனுக்குப் பணி செய்த பேர் –
இப்போது அவனுக்குப் பணி செய்ய அவ் ஊர் பாழ் தீரும்படி குடியேறிற்று-ஆயிரக்கண் மன்னவன் வானமும் வானவர் தம் பொன்னுலகும் தன்னுடைய
தன் விபூதி ரஷிக்க வேண்டும் கண் -தோள் வலியால் கைக்கொண்ட தானவனைப்-வர பலத்தால் அன்று -என்னது என்று வரையிட்டுப் போம் அத்தனை –
பின்னோர் அரியுருவமாகி யெரி விழித்துக் –
பின் -சில காலம் சென்ற பின்பு –
ஓரரி -தன்னாலும் இவ்வடிவு கொள்ள ஒண்ணாது –
ஆகி -வர பலத்தாலே மிகைத்த ஹிரண்யனை அழிக்கைக்காக சேராத
நரத்வ சிம்ஹத்வங்களைச் சேர்ந்த படி –
எரி விழித்து -குளிர்த்தியை உடைத்தான கண்கள் –
ஆஸ்ரித விரோதி என்றவாறே நெருப்பை உமிழ வற்றான –
கொன்னவிலும் வெஞ்சமத்துக் கொல்லாதே-
ஓர் அம்பை இட்டுத் தலையை உருட்டிற்றாகில் முடி சூட்டினதோடே ஒக்கும் –
வல்லாளன்-
நர சிம்ஹமும் பிற்காலிக்க வேண்டும்படி –
ஹிரண்யாய நம -என்று சொல்லும் படி செலுத்தின காலம்
மன்னு மணிக்குஞ்சி பற்றி வர வீரத்துத் -தன்னுடைய தாள் மேல் கிடாத்தி –
முடியைப் பற்றின போதே பிராணன் போயிற்று-பின்னை பிணத்தை இழுக்குமோபாதி தன்னுடைய பிராட்டி சாயக் கடவ மடியிலே-என்னைப் போல் அன்றிக்கே-முருட்டுப் பையலையோ மடியில் ஏற்றுவது -என்கிறாள் –
அவனுடைய பொன்னகலம் –
திரு வுகிருக்கு இறை போற வளர்த்த மார்வு-
வள்ளுகிரால் போழ்ந்து புகழ் படைத்த —-
தமப்பன் பகையாகச் சிறுக்கனுக்கு உதவினான் என்னும் புகழ் படைத்த –
மின்னிலங்கு மாழிப் படைத் தடக்கை –
திரு வுகிருக்கு இரை போந்தது இத்தனை-
திருவாழி தனக்கிரை போராமையாலே சீறி நாக்கு நீட்டுகிற படி –
வீரனை-
திரு மந்த்ரத்தின் படியே அனுசந்திக்கிறது –
மன்னிவ் வகலிடத்தை –
எல்லாரும் பொருந்தும் பூமி –
மாமுது நீர் தான் விழுங்கப் ––
அத்ப்ய ப்ருதிவீ -என்று உண்டாக்கின தானே விழுங்க –
பின்னுமோர் ஏனமாய்ப் புக்கு வளை மருப்பின்-
பின்னும் -ரஷணத்திலே
ஓர் ஏனம் -அழிவுக்கு இட்ட உடம்புக்கு ஆலத்தி வழிக்க வேண்டும்படி இருக்கை –
கொன்னவிலும் கூர் நுதி மேல் வைத்தெடுத்த கூத்தனை –
கூரியதான அக்ரம்-
மன்னும் வடமலையை மத்தாக –
நற்றரிக்க வைத்த படி
கடையப் பிதிராத மலை –
மாசுணத்தால்மின்னு மிருசுடரும் விண்ணும்பிறந்கொளியும் –—
தேஜோ பதார்த்தங்கள் எல்லாம்
தன்னினுடனே சுழல மலைத் திரிந்தாங்கு இன்னமுதம் வானவரை யூட்டி அவருடைய –
மன்னும் துயர் கடிந்த வள்ளலை –
யாவதாத்மபாவியான தாரித்ர்யம்-பிரயோஜனாந்தர பரர்க்கும் அகப்பட –
மற்றன்றியும்-
பிரதாபத்துக்கு எதிர்த்தட்டான தாழ்வுகள் பேசுகிறது –
தன்னுருவ மாரும் அறியாமல் தான் அங்கோர் –
பெரிய பிராட்டியாரும் நித்ய சூரிகளும் –
மன்னும் குறளுருவின் மாணியாய் மாவலி தன்-
வைத்த கண் வாங்க ஒண்ணாத அழகு –
பொன்னியலும் வேள்விக் கண் புக்கிருந்து –
மகா பலியைப் போலே நானும் யாகம் பண்ணினேன் ஆகில் தானே வரும் இ றே-என்று கருத்து –
போர் வேந்தர் —மன்னை-
மகா ராஜனை-
மனம் கொள்ள வஞ்சித்து நெஞ்சுருக்கி என்னுடைய பாதத்தால் யான் அளப்ப மூவடி மண் மன்னா தருக என்று வாய் திறப்ப மற்றவனும்-
ஸூ க்ர பகவான் உள்ளிட்டார் –
நெஞ்சுருக்கி -புலன் கொள் மாணாய் -திருவாய் மொழி -1-8-6-
ராஜாவே -என்ன
திரியப் பார்க்க
மூவடி -என்ன
என்னன்புது -என்ன
மண் -என்ன
ஆர் காலாலே -என்ன
என் காலாலே -என்ன
பெரியதொரு காலாலே கொண்டாலோ -என்ன
என் அபேஷை அன்றோ நீ செய்யக் கடவது -என்ன
பேசாது இருந்தான்
இவன் பேச்சை கேட்க்கைக்காக
இவனும் ஈண்டென தாராய் -என்று வாய் விட
அவ்வாய் விட்டத்தைக் கண்ட மகா பலியும் இட்டு மாறினால் போலே
வேறு ஒருவன் ஆனபடியாலே -மற்றவனும் -என்கிறது –
என்னால் தரப்பட்ட தென்றலுமே –
தத்த மச்யாபயம் மா -யுத்த -18-34-என்ற பெருமாளைப் போலே –
அத்துணைக் கண் —
அந்த ஷணத்திலே –
மின்னார் மணி முடி போய் விண் தடவ மேலேடுத்தபொன்னார் கனை கழற்கால் ஏழ் உலகும் போய்க் கடந்தங்கு –
ஸ்ப்ருஹா விஷயமாய் –
ஆஸ்ரித ரஷணத்துக்குப் பின்னை ஒன்றை வேண்டாதபடி
சப்தியா நின்றுள்ள வீரக் கழலை யுடைய திருவடிகள் –
ஒன்னா வசுரர் துளங்கச் செல நீட்டி-
உகவாத நமுசி பிரப்ருதிகள் –
மன்னிவ் வகலிடத்தை மாவலியை வஞ்சித்துத் –
அவனுக்கு அடி பட்டிருக்கை –
தன்னுலக மாக்குவித்த –
ஆஸ்ரிதரோடு தன்னோடு வாசி இல்லாமையாலே
இந்தரனுக்கு என்னாது ஒழிகிறது-
தாளானை –
தாள் என்று திருவடிகள் –
தான் குணவானாக பாவித்து நின்ற விடங்களிலே
இவன் குணவான் என்று அறியாதே கொள்ளுங்கோள்-என்று சாற்றுகிறேன் –
தாமரை மேல் மின்னிடையாள் நாயகனை விண்ணகருள் பொன் மலையைப் –
இதுக்கு எல்லாம் அடியான பிராட்டியோடு-திரு விண்ணகரிலே அவளோட்டை சம்ச்லேஷம் திரு மேனியிலே நிழலிட நிற்கிறவனை
————————————————————————–
இது விளைத்த
மன்னன் நறுந்துழாய் வாழ் மார்பன் –
நான் இப்படி கையும் மடலுமாம் படி பண்ணின வீரன் –
கண்டவர்களை மடல் எடுப்பிக்கைக்கு முடி சூடினவன் –
திருத் துழாய் மாலை சாத்தினால்-தன்னோட்டை ஸ்பர்சத்தாலே செவ்வி பெற்று வாரா நின்றுள்ள திரு மார்வை
யுடையவன் –
தோளும் தோள் மாலையையும் கண்டால் மடல் எடாது ஒழியும்படி எங்கனே
இத்தலை மடல் எடுத்த பின்பு வெற்றி தோற்ற மாலை இட்டவன் -என்றுமாம் –
இவளுக்கு கையும் மடலும் போலே அவனுக்கு முடியும் மாலையும் –
மா மதி கோள் முன்னம் விடுத்த –
இப்போது கிடீர் அவன் ஆசன்னரானாரை நோக்கத் தவிர்ந்தது –
மா மதி -அபலைகள் நலியும் இடத்தில் சம்ஹாரகனை வேண்டாத படி யிருக்கிறவன் –
மா மதி கோள் முன்னம் விடுத்த -முகில் வண்ணன் –
சந்த்ரனுக்கு ராஹூவால் வந்த இடரை ஒக்கவே போக்கின பரமோதாரன்-
முன்னம் -முன்பு ஒரு காலத்திலேயே -என்றுமாம் –
காயாவின் சின்ன நறும் பூந்திகழ் வண்ணன் –
காயாவினுடை-பூப் போலே திகழா நின்றுள்ள திரு நிறத்தை யுடையவன் –
சின்ன நறும் பூ -சிறுத்து நறு நாற்றத்தை யுடைய பூ-என்றுமாம் –
பூவளவல்லவே மணம்-
சின்னம்-சிறுமை
குணமும் குணியும் போலே இவன் அபிமானத்திலே இது விளங்குவது –
வண்ணன் -ஊராகப் பகையானாலும் விட ஒண்ணாத வடிவு –
வண்ணம் போல்-
ஜ்ஞான ஆனந்தங்களோடே ஒக்கும் இ றே சாம்யா பத்தியிலே –
உள்ள உலகளவும் -பெரிய திருவந்தாதி -76-இத்யாதி-
ஸ்வா தீன பராதீனமே இ றே யுள்ளது –
எடுக்கத் தன்னோடு சமமாய் யுள்ளதொரு வஸ்துவைச் சொல்லக் கடவதுஇ றே –
அன்ன கடலை –
காம்பீர்யத்தாலும் சகல பதார்த்தங்களையும் தன்னுள்ளே இட்டுக் கொண்டு இருக்கையாலும்-பெருமையாலும் நிறத்தாலும் தன்னோடு போலியாய் இருப்பது ஒன்றைப் பெறாமையாலே –
மலையிட்டணை கட்டி –—
கண்ட மலைகளை எல்லாம் பிடுங்கிக் கொண்டு வந்து-கடலிலே நடு நெஞ்சிலே இட்டு
கான எண்கும் குரங்கும் வழி போம்படி -பெரிய திருமொழி -6-10-6–பண்ணினான் ஆயிற்று –
என்னையும் அப்படியே காம்பீர்யத்தையும் அழித்து மடல் எடுக்கும் படி பண்ணினான் -என்கிறாள் –
மன்னன் இராவணனை மா மண்டு வெஞ்சமத்துப்–
நான் ராசாச ராஜன் -என்று அபிமானித்து இருக்கிற ராவணனையும்-அவனுடைய ரத கஜ துரக பதாதிகளான சதுரங்க பலத்தையும் உடையதாய்-மிகைத்து வருகிற யுத்தத்திலே –
பொன் முடிகள் பத்தும் புரளச் சரந்துரந்து தென்னுலக மேற்றுவித்த சேவகனை –
வர பல புஜ பலத்தாலே பூண் கட்டின முடிகள் பத்தும் பூமியிலே புரளும்படியாக அம்பையோட்டி-தனக்குத் திரையிட்டு இருந்தவனுக்குத் தான் அடிமை செய்யும்படி பண்ணின-ஆண் பிள்ளைத் தனத்தை உடையவனை –
அந்த ஆண் பிள்ளைத் தனம் எல்லாம் உடையவன் என் கையிலே படப் புகுகிறபடி எல்லாரும் காண-வி றே புகுகிறது-
ஆயிரக்கண்-
தன்னுடைய அலாபத்தில் விளம்பம் பொறுத்து இருந்தால் போல் அன்றிக்கே
ஆஸ்ரிதனுக்குப் ப்ரதிபந்தகம் வருகிற சமயத்திலே உதவா நின்றால் வருவதோர் ஏற்றம் உண்டுஇ றே-அந்த ஏற்றம் அழிய -அறிய -இ றே -புகுகிறது-
ஆயிரக்கண்-மன்னவன் வானமும் –
ஆயிரம் கண்ணை யுடைய இந்த்ரனும் அந்த கண்கள் ஆயிரத்தாலும் உணர்ந்து நோக்குகிற லோகங்கள் மூன்றும் –
வானவர் தம் பொன்னுலகும் –—
எற்றமுண்டான ஆதித்யர்கள் சஞ்சரியா நின்றுள்ள ஸ்லாக்கியமான லோகங்களும் –
தன்னுடைய தோள் வலியால் கைக்கொண்ட –
அவன் தரக் கொள்ளுதல் –
அன்றியிலே
ஒரு தேவதை கொடுக்கக் கொள்ளுதல்
அன்றியிலே
தன் தபசால் கொள்ளுதல் செய்கை அன்றிக்கே
தன் தோள் மிடுக்காலே கைக் கொண்ட அத்தனை மிடுக்கனான வான் கைக் கொண்ட பின்பு-நமக்குக் குடியிருப்பு அரிதென்று தம்தாமே விட்டுப் போம்படியாக
தானவனைப்-
ஆசூர பிரக்ருதியாய் உள்ளவனை-
பின்னோர் அரியுருவமாகி –
ஆன்ரு சம்சயத்தாலே அவனுக்காக நெடுநாள் பொறுத்துப் போந்தான் –
பின்பு சிறுக்கன்-இனி தோற்றி யருள வேணும் -என்று அபேஷித்த நர சிம்ஹஹமாய்
நரஸ் யார்த்த தநும் க்ருத்வா சிம்ஹஸ் யார்த்தாதநும் ததா -என்று
அரியுருவும் ஆளுருவுமாய் -முதல் திருவந்தாதி -31-
அவ்வரத்தின் உள் வரியில் அகப்பட்ட தொரு வடிவைக் கொண்டு –
யெரி விழித்துக் ——-
உயிர்க்கு எல்லாம் தாயாய் அளிக்கின்ற தண் தாமரைக் கண்களாலே அழல விழித்து -பெரிய திருமொழி -7-1-9-
கொன்னவிலும் வெஞ்சமத்துக் கொல்லாதே –
முடித்தே விடக் கடவதான யுத்தத்திலே இவனைக் கொல்லுகையாவது
தலையிலே முடியை வைத்த வாசி இ றே –
வல்லாளன்-
வயிற்றில் பிறந்தவனுடைய உத்கர்ஷமும் கூடப் பொறாத துஷ் ப்ரக்ருதியாய் பெரு மிடுக்கை யுடையவன் –
மன்னு மணிக்குஞ்சி பற்றி வர வீரத்துத் ––
நெடு நாள் ராஜ்ஜியம் பண்ணுவதாக முடி கவித்து இருக்கிற குஞ்சியைப் பற்றி அருகே வர இழுத்து-வரவீர்த்து -இற்றைக்கு முன்பு பரிபவப் பட்டு அறியாதவன் ஆகையாலே பிடித்த பிடியிலே பிணம் ஆனான் -பின்பு வர இழுத்துக் கொண்ட வித்தனை –
தன்னுடைய தாள் மேல் கிடாத்தி –
இது பட்டர் அருளிச் செய்ய நான் கேட்டேன் -என்று பிள்ளை அருளிச் செய்தார் – என் போல்வாரை இ றே மடியிலே எடுத்துக் கொள்ள வடுப்பது –
ஆஸ்ரிதருக்குப் பரம ப்ராப்யமான திருவடிகளிலே ஆசூர பிரகிருதி யானவனை ஏறிட்டுக் கொள்ளுவதே -என்கிறாள் –என்று –
அவனுடைய பொன்னகலம் –
ஹிரண்யன் இ றே
அவனுடைய மார்பத்தை
அசஹ்ய அபசாரத்துக்குக் கொள்கலமான மார்பு இ றே
அத்தை இ றே குட்டமிட்டு எடுத்தது –
வள்ளுகிரால் போழ்ந்து –
அழகிய உகிராலே உருகிப் பதம் செய்தது –
பின்னை அநாயாசேன கிழித்துப் பொகட்டான் –
புகழ் படைத்த —
ஆஸ்ரிதர்க்காக தன்னை அழிய மாறி உதவினான் என்று வந்த-அப் புகழை உடைய புண்ணியனை-ஹிரண்யன் உடைய உடல் திரு வுகிருக்கு அரை வயிறு ஆம்படி யும் போந்தது இல்லை இ றே –
மின்னிலங்கு மாழிப் படைத் தடக்கை –
பின்னையும் பெரிய சன்னாஹங்களும் வீரப் பாடுகளுமாய் நாக்கை நீட்டா நின்றன –
விஷயம் பெறாமையாலே –
வீரனை-
வீரம் என்கிற மந்திர லிங்கம் தொடரச் சொல்லுகிறார் -போரார் நெடு வேலோன்
கிளரொளியால் குறைவில்லா –வளரொளிய கனலாழி-
மன்னிவ் வகலிடத்தை மாமுது நீர் தான் விழுங்கப் —
ஜ்ஞான அத்யவசாயங்கள் உள்ள விடத்தே உதவின அளவன்றிக்கே பட்ட பரிபவமும் அறிவிக்கையும் இன்றிக்கே-யோக்யதையும் இன்றிக்கே இருக்கிற இவற்றை -தன்னது -என்கிற பிராப்தியைக் கொண்டு-தன்னுருக்கெடுத்து வேற்றுருக் கொண்டதொரு நீர்மை உண்டு இ றே-அதுவும் அழிய இ றே புகுகிறது –
மன்னிவ் வகலிடத்தை –
நெடுநாள் சர்வேஸ்வரனதாய் அடிபட்டுப் போருகிற இந்த பூமிப் பரப்பை
மாமுது நீர் தான் விழுங்கப் –
பாடி காப்பாரே களவு காணுமா போலே பூமிக்கு ரஷகமான கடல் தானே கொள்ளை கொள்ள –
பின்னுமோர் ஏனமாய்ப் புக்கு வளை மருப்பின்-கொன்னவிலும் கூர் நுதி மேல் வைத்தெடுத்த கூத்தனை –
இது உரு மாய்ந்து போமாகில் நாம் வ்யாபரித்து போருமது தான் எது -என்று மீண்டு
கை வாங்காதே -நீருக்கும் சேற்றுக்கும் இறாயாதே இருப்பதொரு மகா வராஹமாய்
ஜலத்திலே புக்கு உடைந்து எடுத்து கொண்டு அண்டத்தை கொம்பிலே
ஒரு நீல மணி அழுத்தினால் போலே யாயிற்று எடுத்து வைத்துக் கொண்டபடி –
கொன்னவிலும் கூர் நுதி மேல் –
இவன் ரஷகன் என்று அனுகூலித்தால் பிழைத்துப் போம் இத்தனை போக்கி
அவனோடு எதிரிட்டால் முடிந்து போம் இத்தனை –
கூத்தனை –
என்றும் ஒக்க பூமியை கீழ் மண் கொண்டு பிரளயம் கொண்டு போனால் ஆகாதோ
இம் மநோ ஹாரி சேஷ்டிதத்தை காணப் பெறில் –
மன்னும் வடமலையை –
அப்ரதி ஷேதம் உள்ள விடத்தே உதவினவளவு அன்றிக்கே
ஈச்வரோஹம் -என்று இருக்குமவர்கள் அளவில்
ஆயாசித்து கார்யம் செய்த ஓன்று உண்டு இ றே-
அதுவும் அழிய இ றே புகுகிறது –
பூமிக்கு ஆணி அடித்தால் போலே இருக்கிற மந்தர பர்வதத்தை –
மத்தாக மாசுணத்தால் –
மத்தாக கொண்டு
வாசூகியைக் கயிறாக கொண்டு –
மின்னு மிருசுடரும் விண்ணும் –
தர்ச நீய வேஷராய் ஜகத்துக்கு த்ருஷ்டி பூதராய் இருந்துள்ளவர்களுக்கு
ஆவாஸ ஸ்தனமாய் இருந்துள்ள லோகங்களும்
பிறந்கொளியும் —–
மற்றும் பிரகாசிக்கிற தேஜோ பதார்த்தங்களாய் உள்ள நஷாத்ர தாரா கணங்களும்
தன்னினுடனே சுழல –
கடைகிற போது இவை யடைய பூ போலே பறந்து மலையோடு ஒக்கச் சுழன்று வரும்படிக்கு ஈடாக கடைந்து
நெடும் போது தாங்கள் கடைந்து இளைத்துக் கை வாங்கின சமயத்திலே –
மலைத் திரிந்தாங்கு இன்னமுதம் வானவரை யூட்டி அவருடைய -மன்னும் துயர் கடிந்த வள்ளலை –
ஆயிரம் தோளாலே சவ்யசாசியாய்க் கொண்டு தானே கடைந்த அம்ருதத்தை
அவர்களுக்கு சத்ருக்களான அசூரர்களை அழியச் செய்து தேவர்களை புஜிப்பித்து
அவர்கள் உடைய நிலை நின்ற புறங்கால் வீக்கத்தை தவிர்த்து ரஷித்த பரமோதாரனை-
வெள்ளை வேலை வெற்பு நாட்டி -திருச் சந்த விருத்தம் -88
எம் வள்ளலார் –மற்றன்றியும் தன்னுருவ-
ஈஸ்வர அபிமானிகளுக்கு கார்யம் செய்தானே யாகிலும்
தன்னுடைய ஐஸ்வர்யமான மேன்மையில்
ஒன்றும் குறையாமல் செய்தது இ றே அது –
இது அங்கன் இன்றிக்கே -தன்னுடைய ஸ்வ பாவத்தை தவிர்ந்து கார்யம் செய்த நீர்மை இ றே-அந்நீர்மையும் அழிய வி றே புகுகிறது
மற்றன்றியும் –
அதுக்கு மேலே -கண்டவர்கள் இவன் முன்பு உள்ள ஜன்மங்களிலும் இப்படி உளனாய்ப் போந்தவன் ஒருவன் என்னும்படியாக
கோசஹச்ர ப்ரதாதாரம் -என்னும் நிலை ஒருவர்க்கும் தெரியாத படி –
மாரும் அறியாமல் தான் –
பிராட்டிமார்க்கும் அகப்பட இவன் இப்படி இரப்பாளனாய்ப் போந்தான் அத்தனையோ -என்னுபடியாக-சர்வராலும் அபிகம்யனான தான் போய்ப் புக்கு
அங்கு
மகாபலி யஞ்ஞ வாடத்திலே –
ஓர் மன்னும் குறளுருவின் –
கண்ட கண்கள் வேறு ஒன்றைக் காணப் போகாதே தன பக்கலிலே துவக்குண்ணும் படி அத்விதீயமான வேஷத்தை உடைய
மாணியாய் மாவலி தன்-
உண்டு என்று இட்ட போதொடு
இல்லை என்று தள்ளின போதொடு வாசி அற முகம் மலர்ந்து போக வல்லனாம் படி இரப்பிலே தகண் ஏறின வடிவை யுடையனாய் –
பொன்னியலும் வேள்விக் கண் –
மடல் எடுத்துப் பெற விருக்கிற இது போல் அன்றிக்கே பலத்தோடு வ்யாப்தமான யாகத்திலே
அன்றிக்கே
அபேஷித்தார் உடைய அபேஷிதங்கள் எல்லாம் கொடுத்துப் போருகையாலே ச்லாக்கியமான யாகம் -என்னவுமாம் –
புக்கு –
இப்பதத்தாலே இட்ட அடிகள் தோறும் பூமி நெரியும்படி போய்ப் புக்கு –
இருந்து –
மலையாள வளைப்பு போலே -கொள்வன் நான் மாவலி மூவடி தா -திருவாய் மொழி -3-8-9-என்று
சொல்லுகிறபடியே கொண்டு அல்லது போகேன் -என்று இருந்து –
போர் வேந்தர் மன்னை –
மதிப்புடைய ராஜாக்களுக்குஎல்லாம் பிரதானனாய் இருக்கிறவனை-இவன் தேவ கார்யம் செய்ய வந்தான் அல்லன் -அர்த்தியாய் வந்தான் -என்று அவன் நெஞ்சிலே படும்படியாக
வஞ்சித்து நெஞ்சுருக்கி-
அவனுக்கு தந்து அல்லது நிற்க ஒண்ணாத படி அவனுடைய நெஞ்சை
புலன் கொள் மாணாய் -திருவாய் மொழி-1-8-6-என்கிறபடியே
அவனுடைய இந்த்ரியங்களை தானிட்ட வழக்காக்கி
சூக்ராதிகள் வந்து விலக்கினாலும்-அது கேளாதபடி கரைத்து
முன்பு அவன் பண்ணின அபிசந்தியைக் குலைக்கைக்கு ஒன்றும்
பின்பு தான் சொல்லுவது ஒன்றுமாய் இருக்கையைச் சொன்ன படி –
என்னுடைய பாதத்தால் –
மகா பலீ -என் காலாலே மூன்றடி மண் தா -என்ன
உன்னுடைய சிறு காலாலே மூன்றடி மண் போருமோ –
யான் அளப்ப மூவடி மண் —–
அர்த்தித்தார் அர்த்தித்த படியே கொடுக்கும் அத்தனை அன்றோ –
மன்னா தருக என்று வாய் திறப்ப –
ராஜாவே மூன்றடி மண் தர வேணும் என்று சொல்ல –
மற்றவனும்என்னால் தரப்பட்ட தென்றலுமே –
தத்த மஸ்ய -யுத்த 18-34-என்கிறபடியே
முன்பே என்னாலே தரப் பட்டது அன்றோ -என்றான் –
அத்துணைக் கண் ——
ஆசூர பிரக்ருதியான அவன் மறு மனஸ் ஸூ பட்டு இரண்டாம் வார்த்தை சொல்லுவதற்கு முன்பே அப்போதே
மின்னார் மணி முடி போய் விண் தடவ –
இவன் வாமனனாய் நின்றான்-திரு அபிஷேகமானது வளர்ந்து உபரிதன லோகங்கள் எங்கும்சென்று புக்கு வ்யாபரித்தது –
மேலேடுத்த-
எடுத்த திருவடிகள்
திரு அபிஷேகத்தொடே இசலி வளர்ந்த படி
முடி பாதம் எழ -திருவாய் மொழி -7-4-1-என்றும்
அத்ய திஷ்டத்த சாங்குலம்-என்றும் சொல்லக் கடவது இ றே –
பொன்னார் கனை கழற்கால் ஏழ் உலகும் போய்க் கடந்தங்கு –—
த்வனியை உடைய வீரக் கழலை யுடைத்தாய் சலாக்கியமான திருவடிகள்
மேல் உண்டான லோகங்கள் எல்லாம் கழியப் போய்-
ஒன்னா வசுரர் துளங்கச் செல நீட்டி-
அவ்வளவிலே எதிரிட்டு வந்த நமுசிப் ப்ரப்ருதிகளை-ஒருவர் கூறை எழுவர் உடுக்கும்படி பண்ணி-அவனை ஆகாசத்திலே சுழற்றி எரிந்து அவ்வளவும் செல்லப் பரப்பி-
மன்னிவ் வகலிடத்தை மாவலியை வஞ்சித்துத் —
பழையதாய் மகாபலி தான் அடி இட்டுப் போந்த ராஜ்யத்தை-சிறு காலைக் காட்டி மூவடி மண் தர வேணும் என்று இரந்து-கையிலே நீர் விழுந்த அனந்தரத்திலே
பெரிய அடியாலே அளந்த வஞ்சனையைச் சொல்லுகிறது –
மகா பலி பக்கல் நின்றும் வாங்கிக் கொடுத்தது இந்த்ரனுக்காய் இருக்கச் செய்தே
தன்னுலகம் -என்கிறது அவிவாதத்தைப் பற்ற
தாளானை –
இதெல்லாம் இங்கனே செய்தான் அவன் அல்லன் -திருவடிகள் ஆயிற்று –
தாமரை மேல்மின்னிடையாள் நாயகனை விண்ணகருள் பொன் மலையைப் –—–
ஆஸ்ரித விஷயத்தில் இப்படிபண்ணின அவ்வபதானத்துக்கு நிதானம் பிராட்டியோட்டைமுகம் பெற்று மதிப்பானவனை-
பிராட்டியோட்டை சம்ச்லேஷத்தால் வந்த புகர் அடங்கலும் வடிவிலே தோற்றும்படி -திரு விண்ணகரிலே வந்து உஜ்ஜ்வலனாய் நிற்கிறவனை –
——————————————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .
Leave a Reply