என்னுடைய கண் களிப்ப நோக்கினேன் நோக்குதலும்
மன்னன் திரு மார்பும் வாயும் அடியிணையும்—–74
பன்னு கரதலமும் கண்களும் பங்கயத்தின்
பொன்னியல் காடார் மணி வரை மேல் பூத்தது போல் —-75
மின்னி யொளி படைப்ப வீணாணும் தோள் வளையும்
மன்னிய குண்டலமும் ஆரமும் நீண் முடியும் ——-76
துன்னு வெயில் விரித்த சூளா மணி யிமைப்ப
மன்னு மரகதக் குன்றின் மருங்கே யோர் ————77
இன்னிள வஞ்சிக் கொடி யொன்று நின்றது தான்
அன்னமாய் மானாய் அணி மயிலாய் ஆங்கிடையே ——–78
மின்னாய் இளவேய் இரண்டாய் இணைச் செப்பாய்
முன்னாய தொண்டையாய்க் கெண்டைக் குலம் இரண்டாய் ——79
அன்ன திருவுருவம் நின்றது அறியாதே
என்னுடைய நெஞ்சும் அறிவும் இன வளையும் ———–80
பொன்னியலும் மேகலையும் ஆங்கு ஒழியப் போந்தேற்கு
மன்னு மறி கடலும் ஆர்க்கும் மதி யுகுத்த ———–81
இந்நிலாவின் கதிரும் என்தனக்கே வெய்தாகும்
தன்னுடைய தன்மை தவிரத் தான் என்கொலோ ——–82
தென்னன் பொதியில் செழும் சந்தின் தாது அலைந்து
மன்னி இவ் யுலகை மனம் களிப்ப வந்து இயங்கும் ——-83
இந்நிலம் பூம் தென்றலும் வீசும் எரி எனக்கே
முன்னிய பெண்ணை மேல் முள் முளரிக் கூட்டகத்துப் ———84
பின்னும் அவ்வன்றில் பெடைவாய்ச் சிறு குரலும்
என்னுடைய நெஞ்சுக்கோர் ஈர் வாளாம் என் செய்கேன் ——–85
கன்னவில் தோள் காமன் கறுப்புச் சிலை வளையக்
கொன்னவிலும் பூம் கணைகள் கோத்துப் பொத வணைந்து ——86
தன்னுடைய தோள் கழிய வாங்கித் தமியேன் மேல்
என்னுடைய நெஞ்சே இலக்காக வெய்கின்றான் ———–87
பின்னிதனைக் காப்பீர் தான் இல்லையே பேதையேன்
கன்னவிலும் காட்டகத்தோர் வல்லிக் கடி மலரின் ———-88
நன்னறு வாஸம் மற்று ஆரானும் எய்தாமே
மன்னும் வறு நிலத்து வாளாங்கு உகுத்தது போல் ———-89
என்னுடைய பெண்மையும் என் நலனும் என் முலையும்
மன்னு மலர் மங்கை மைந்தன் கணபுரத்துப் ————90
பொன்மலை போல் நின்றவன் தன் பொன்னகலம் தோயாவேல்
என்னிவைதான் வாளா வெனக்கே பொறையாகி———–91
முன்னிருந்து மூக்கின்று மூவாமைக் காப்பதோர்
மன்னு மருந்து அறிவீர் இல்லையே -மால் விடையின் ———92
துன்னு பிடர் எருத்துத் தூக்குண்டு வன்தொடரால்
கன்னியர் கண் மிளிரக் கட்டுண்டு மாலை வாய்த் ————93
தன்னுடைய நா வொழியாதுஆடும் தனி மணியின்
இன்னிசை ஓசையும் வந்து என் செவி தனக்கே ———–94
கொன்னவிலும் எக்கில் கொடிதே நெடிதாகும்
என்னிதனைக் காக்குமா சொல்லீர் இது விளைத்த ——–95
————————————————————————–
மன்னன் திரு மார்பும் -வாயும் அடியிணையும்—பன்னு கரதலமும் கண்களும்-
ராஜாதி ராஹஸ் சர்வேஷாம்
திரு மார்பு -தமக்கு பற்றாசு –
விரஹ ஸ்ரமஹரமான மார்பு தன்னைக் கணிசிக்கை
வ்ரீளை யாலே -வெட்கத்தாலே -முகம் பாராதே மார்வைப் பார்த்தாள் -என்னவுமாம் –
திரு மார்வு என்னா -வாயும் -என்பான் என் என்னில்
பிராட்டி பக்கல் பிரேமத்தாலே -அவளைப் பார்த்து முறுவல் பண்ணி இருக்கும் –
அவ்வழியாலே முறுவலைக் கண்டபடி –
அம்முறுவலுக்கு தோற்று விழும் திருவடிகள் –
திருவடிகளிலே விழுந்தாரைத் திருக் கையாலே ச்பர்சித்தால் -ஒரு கையே -என்று வாய் புலர்த்தும் கை-நோக்கும் கண்கள்-நின்ற விடத்தே நின்று ஸ்பர்சிக்கும் கண்
ஒரு கால் நோக்கினால் ஆலம் கட்டி விட்டெறிந்தால் போலே இருக்கை –
பங்கயத்தின்-பொன்னியல் காடார் மணி வரை மேல் பூத்தது போல் –
பொற்றாமரைக் காடு நீல கிரியிலே பரப்பு மாறாப் பூத்தால் போலே திரு மேனியில் உண்டான திருக்கண்கள் திரு வாய் திருக்கை திருவடிகள்-இருக்கும் படி என்று கீழோடு அந்வயம் –
மின்னி யொளி படைப்ப —
பளபளத்த ஒளியை உண்டாக்க –
வீணாணும் –
விடு நாணும்-சௌந்தர்யம் நிறைந்தால் போல் இருக்கை –
தோள் வளையும்–
திருவடிகளுக்கு வீரக் கழல் போலே –
மன்னிய குண்டலமும் –
காதிலே பூத்தால் போலே இருக்கை –
ஆரமும் –
மார்விலே சினைத்தால் போலே இருக்கை –
நீண் முடியும் —
திரு நறையூருக்குச் சூட்டின முடி –
சர்வேஸ்வரன் ஆகச் சூட்டின முடி –
துன்னு வெயில் விரித்த சூளா மணி யிமைப்ப-
சூடா மணியின் ஒளி எல்லா ஒளியையும் விஞ்ச
துன்னுகை -மிகுகை –
அழகு மிக்கால் கண் எச்சிலாம் என்று மறைப்பாரைப் போலே
சூடா மணியில் தேஜஸ் ஸூஎல்லாத் தேஜஸ் ஸிலும் மிக்க போது
இள வெயில் போன்றதொரு பிடம் விழ விட்டால் போலே இருக்கும் –
மன்னு மரகதக் குன்றின்-
தன்னைப் பற்றி லோகம் வாழ்வது ஒரு நீலகிரி –
மருங்கே யோர் —
ஆழம் கால் –
உள் இழிய ஒண்ணாமை
இருவரும் நேர் பார்க்க மாட்டாமை -யாதல்
பெரு வெள்ளம் கண்டு நோக்குவாரைப் போலே –
ஓர் -இன்னிள வஞ்சிக் கொடி யொன்று நின்றது தான்-
விலஷணமாய் -போக்யமாய் -இளையதாய் இருப்பதொரு வஞ்சிக் கொடி-
கொடி என்றது அல்லாத பெண்களை -பும்ஸ்தவ கந்தி-என்னும்படியான ஸ்த்ரீத்வம்-
சாஷான் மன்மத மன்மத -என்னுமா போலே ஓன்று –
இவளைப் போக்கி வேறு ஒருவர் இல்லாமை ரூபகம் முற்றின படி
த்ருஷ்டாந்தமே பேசும்படி யாயிற்று –
(பிராட்டி திவ்ய மங்கள விக்ரஹம் உள்ளோர் பகுதி அருளிச் செயல்களில் இது -வஞ்சுள வல்லித்தாயார் அன்றோ )
அன்னமாய் மானாய் அணி மயிலாய் ஆங்கிடையே மின்னாய் –
அன்னம் -நடை
மான் -நோக்கு
அணி மயில் -அளக பாரம்
இடையே மின்னாய்-நடுவே மின்னாய் –
இளவேய் இரண்டாய்
இரண்டு இள மூங்கில் போலே பசுமையும் சுற்று உடைமையும் உடைய திருத் தோள்கள் –
இணைச் செப்பாய்-
ஒன்றுக்கு ஓன்று ஒப்பு
ஈஸ்வரனை இட்டு வைக்கும் செப்பு
மலராள் தனத்துள்ளான் –
முன்னாய தொண்டையாய்க் –
எல்லாவற்றிலும் முற்படுகிறது திரு வதரத்தின் அழகு
கெண்டைக் குலம் இரண்டாய் –—
மௌக்த்யத்தாலும் மதமதப்பாலும் இரண்டு கெண்டை போலே யாயிற்று திருக் கண்கள்
அன்ன -திருவுருவம் நின்றது –
அப்படிப் பட்டது என்னுமத்தை யன்றி இவ் வழகுக்கு தக்க வாசகம் இல்லை –
அறியாதே-
அறிவு கெட்டு-
அறியாமையனபடி எங்கனே என்னில்
பருப்பருத்தன சில பேசி முடியப் பேச மாட்டாமையாலே
பிரித்துப் பேசும் போது பேசலாம்
இருவரும் கூடி நின்றால் பேச முடியாது
கண்ணுக்கும் மனசுக்கும் அளக்க ஒண்ணாத விஷயம் ஆகையாலும்
கண்டாரைக் குமிழ் நீரூட்டும் விஷயம் ஆகையாலும் அறியாதே -என்றுமாம் –
என்னுடைய நெஞ்சும் அறிவும் இன வளையும் பொன்னியலும் மேகலையும்-
நெஞ்சாவது அறிவு இட்டு வைக்கும் கலம்-
ஆங்கு ஒழியப் போந்தேற்கு-
வெறும் தரையாகப் போந்தேன்
வாழச் சென்று உள்ளது எல்லாம் கொடுப்பாரைப் போலே சர்வத்தையும் இழந்து
கடலிலே துரும்பு போலே சௌந்த்ர்ங்கள் வீச
மடலோ -என்று புறப்பட்ட படி-
மன்னு மறி கடலும் ஆர்க்கும் மதி யுகுத்த இந்நிலாவின் கதிரும் –
சலியாத கடல்-ராஜத்ரோஹிகளைக் கண்டால் போலே கூப்பிடத் தொடங்கிற்று –
என்தனக்கே வெய்தாகும்-
நாட்டை வாழ்வித்து என்னை நலியா நின்றது-
தன்னுடைய தன்மை தவிரத் தான் என்கொலோ –—
சீதோ பவ ஹனூமத -என்ன நெருப்பு குளிருமா போலே
நிலாச் சுடுக -என்று நினைப்பிட்டதோ
இதுக்கு காரணம் என் -என்கிறாள் –
தென்னன் பொதியில் செழும் சந்தின் தாது அலைந்து-
மலைய பர்வதம் –
மன்னி இவ் யுலகை மனம் களிப்ப வந்து இயங்கும் இந்நிலம் பூம் தென்றலும் –
லோகத்தை வாழ்விக்கை நித்யமானால் போலே
எனக்கு ஒருத்திக்குச் சுடுகை நித்யம் ஆயிற்று –
வீசும் எரி எனக்கே-
விரஹாக்னி தன் மேல் தட்டாமே –
முன்னிய பெண்ணை மேல் முள் முளரிக் கூட்டகத்துப்-பின்னும் அவ்வன்றில் பெடைவாய்ச் சிறு குரலும்-
முன்பே நின்ற பனை -முள்ளைஉடைத்தான தாமரைத் தண்டாலே செய்த கூடு –
என்னுடைய நெஞ்சுக்கோர் ஈர் வாளாம் என் செய்கேன் –
நெஞ்சுக்கு புறம்பு நலிகை தவிர்ந்து
நெஞ்சை ஈரா நின்றது
பிழைக்க விரகு இல்லை –
கன்னவில் தோள் காமன் கறுப்புச் சிலை வளையக்-
பெண்களை நலிய நக்கிப் பூண் கட்டும் தோள்-
கொன்னவிலும் பூம் கணைகள் கோத்துப் பொத வணைந்து –
இலக்குத் தப்பாமல் நின்று –
தன்னுடைய தோள் கழிய வாங்கித் தமியேன் மேல் என்னுடைய நெஞ்சே இலக்காக வெய்கின்றான் –
பெருமாளில் இவனுக்கு விசேஷம்
அமூர்த்தமான நெஞ்சை இலக்காக எய்கிறான் –
மாருகிறிலன் –
சரவர்ஷம் வவர்ஷ ஹ -யுத்தம் -94-18-
இம்மூல பலத்தை பெற்ற போதே –
என்னுடைய நெஞ்சு என்கிறது
அவனுடைய நெஞ்சிலும் ஓர் அம்பு பட்டாலோ -என்கிறது –
பின்னிதனைக் காப்பீர் தான் இல்லையே-
லஷ்மணச்ய ச தீ மத –சுத்தர -16-4-என்னும்படியே
பெருமாள் கையில் வில்லை வாங்கினால் போலே
காமன் கையில் வில்லை வாங்குவான் ஒரு தம்பி இல்லையே –
கட்டுக்குக் காப்பார் இல்லையே -என்று –
இவ்வாபத்துக்கு இட்டுப் பிறந்தாள் ஒருத்தி –
கன்னவிலும் காட்டகத்தோர் வல்லிக் –
விலஷணமான வல்லி-
கடி மலரின் –
மதுவை உடைய மலர்
நன்னறு வாஸம் –
நல்ல பரிமளம் –
மற்று ஆரானும் எய்தாமே மன்னும் –
ஓர் ஒருத்தர்க்கு –
வறு நிலத்து வாளாங்கு உகுத்தது போல் என்னுடைய பெண்மையும் என் நலனும் என் முலையும்-
வெறும் தரை –
மன்னு மலர் மங்கை மைந்தன் கணபுரத்துப் பொன் மலை போல் நின்றவன்தான்-
மலர் மங்கை மண்ணும் மைந்தன் –
பொன்னகலம் –
கூட இருந்தே அவளும் தண்ணீர் தண்ணீர் என்னும் மார்வு
தோயாவேல் –
அப்படி ஸ்ப்ருஹணீயமான மார்விலே தோயப் பெறாத இன்னாப்பு –
விடாய்த்தார் நினைத்த மடுவில் முழுக்கப் பெறாதாப் போலே –
மெல்லியல் தோள் தோய்ந்தாய் -என்னுமா போலே -அவனும் இத்தலையில் படி –
என்னிவைதான் வாளா-
பஸ்ய லஷ்மண புஷ்பாணி நிஷ்பலானி-கிஷ்கிந்தா -1-44-
நிஷப் பலமானவை எனக்கு என் செய்ய –
வெனக்கே பொறையாகி–
இருவர் சுமக்கக் கடவ முலையை ஒருவர் சுமக்கப் போமோ -என்கை-
என் கண்கள் காண மூக்க வேணுமோ –
என்னை விட்டுக் கடக்க நின்று மூக்கல் ஆகாதோ –
வயோச்யா ஹயாதி வர்த்ததே -யுத்த -5-5-என்றமூவாமைக் காப்பதோர் –
அவனைக் கொடு வந்து தருவார் இல்லையே –
மன்னு மருந்து அறிவீர் இல்லையே –
சமுத்ரம் ராகவோ ராஜா சரணம் கந்துமர்ஹதி -யுத்தம் -19-31-என்று
கடலைச் சரணம் புக என்றால் போலே –
மடலைச் சரணம் புகு -என்பாரில்லையே
இங்கு ஓர் அந்தராளிகர்-கடகர் – இல்லையோ -என்று கேட்கிறாள் -என்று பட்டர் –
-மால் விடையின் —
நாகின் மேலே பித்தேறின விடையின் –
துன்னு பிடர் எருத்துத் தூக்குண்டு –
கடியுடைத்தான பிடரியிலே ககுத்திலே தூக்குண்டு –
வன்தொடரால்-
தார்மிகர்களுக்கு அவிழ்த்து விட ஒண்ணாத படி பிணைக்கை –
கன்னியர் கண் மிளிரக் கட்டுண்டு-
பிரணயத்தில் புதியது உண்டு அறியாதாரும் வெருவி விழிக்கை-
மாலை வாய்த் தன்னுடைய நா வொழியாதுஆடும் –
இட்டால் தீரும் காலம் –
தனி மணியின்-
வ்யசநிக்கைக்கு தானே தனி என்னும் அத்தனை –
இன்னிசை ஓசையும் வந்து என் செவி தனக்கே –
இனிய பாட்டுக் கேட்டால் படுமோபாதி படுத்த வற்றாய் இருக்கை-
ஹ்ருதயத்திலே வருவதற்கு முன்னே செவியிலே சுட்டுக் கொடு வரும் –
கொன்னவிலும் எக்கில் கொடிதே நெடிதாகும்-
ஒரீட்டிலே முடித்து விடாதே சித்ரா வதம் பண்ணும் –
என்னிதனைக் காக்குமா சொல்லீர் –
எவ்வழியாலே ஸ்த்ரீத்வத்தைக் காப்பேன் -சொல்லீர் -என்கிறாள் –
இது விளைத்த –தென்றல் அன்றில் குழல் விடை -உள்ளிட்டன-இருந்ததே குடியாக என்மேல் படை ஏறும்படி விளைத்த -கையும் மடலும் ஆக்கின படி என்றுமாம் –
இப்படியாகைக்கு அபி நிவேசத்தை விளைப்பிக்கை –
————————————————————————–
நோக்குதலும் மன்னன் –
த்ருஷ்ட ஏவ ஹி ந சோகமாப நேஷ்யதி ராகவ -என்னும்படியே நோக்கின அநந்தரம்
மமேதம் என்கிற பிரதிபன்தகம் அடங்கப் போய்
அவ்விஷயத்தை அனுபவிக்கப் பெற்றிலேன்
மமேதம் அடங்கலும் போயிற்று
அனுபவம் மடலேயாய் விட்டது –
மன்னன் திரு மார்பும் –
பற்றாசான பிராட்டிக்கு இருப்பிடமான- திரு மார்வும்-அவள் சம்பந்தம் கொண்டு இ றே ராஜாவாவது-திருக்கண்டேன் -என்று இ றே கண்டவர்கள் சொல்லுவதும் –
மாத்ரு தேவோ பவ -முற்படக் கண்டது திரு மார்வாயிற்று –
வாயும் –
அவள் முன்னாகப் பற்றினாரை -மாஸூச-என்னும் திரு ஆஸ்யமும்-
அடியிணையும்—
அம்மார்வுக்கும் ஸ்மித்துக்கும் தோற்றார் விழுவனவான திருவடிகளும்
பன்னு கரதலமும் –
திருவடிகளிலே விழுந்தாரை எடுத்து அணைத்தால் இது ஒரு ஸ்பர்ச சௌக்யமே-என்று
இடைவிடாதே கூப்பிடப் பண்ணும் படியாய் இருக்கிற திருக் கைகளும்
பன்னுதல்-இவனை எடுத்து அனைக்கையாலே
தோள்கள் ஆயிரத்தாய்-திருவாய் மொழி -8-1-10-என்கிறபடியே
பணைத்த என்றுமாம் –
சோப்யே நம் த்வஜ வஜ்ராப்ச கருத சிஹ்நென பாணினா
சம்ச்ப்ருச்யாக்ருஷ்ய ச ப்ரீத்க்யா ஸூ காடம் பரிஷச்வஜே-
கண்களும் –
ஸ்பர்சத்துக்குத் தோற்றாரை குளிர நோக்குகிற திருக் கண்களும்
உயிர்க்கு எல்லாம் தாயாய் அளிக்கின்ற தண் தாமரைக் கண்கள் இ றே –
பங்கயத்தின்பொன்னியல் காடார் மணி வரை மேல் பூத்தது போல் —–
ஒரு பொற்றாமரைக் காடு நீல கிரியிலே பரப்பு மாறப் பூத்தால் போலே யாயிற்று
திவ்ய ஆபரண சோபையும் திருமேனியும் பொருந்தி இருக்கும் படி –
கீழில் திவ்ய அவயவங்களுக்கு த்ர்ஷ்டாந்தம் ஆகவுமாம் –
மின்னி யொளி படைப்ப –
மின் செய் பூண் மார்வினன்-என்கிறபடியே மின்னினொளி
திரு வாபரணம் ஆயிற்றோ யென்னும்படியாய் இருக்கிற –
வீணாணும் தோள் வளையும்-
பெரிய பிராட்டியாருக்கு ஹிரண்ய ப்ராகாரமாகத் தாழ்ந்து இருக்கிற விடு நாணும்-
தோளை முட்டாக்கிட்டால் போல் இருக்கிற தோள் வளையும் –
மன்னிய குண்டலமும் –
ஒரு நாள் வரையிலே சாதிற்றாய் இருக்கை அன்றிக்கே சஹஜமாய்
திருக் காதுகள் பூத்தால் போலே இருக்கிற
மின்னு மணி மகர குண்டலங்களும் –
ஆரமும்-
பெரிய வரை மார்வில் பேராரம் பூண்டு -மூன்றாம் திருவந்தாதி -55-என்கிறபடியே
திரு மார்விலே இருமடி இட்டுச் சாத்த வேண்டும்படி இருக்கிற திருவாரமும் –
நீண் முடியும் –—
இவற்றை எல்லாம் தன் அழகாலே முட்டாக்கிடா நிற்பதாய்
விண் முதல் நாயகன் நீண் முடி -திரு விருத்தம் -50-என்று
ஆதி ராஜ்ய ஸூ சகமாய் இருக்கிற திரு அபிஷேகமும் –
துன்னு வெயில் விரித்த சூளா மணி யிமைப்ப-
நெருங்கின கிரணங்களைப் புறப்பட விடா நின்றுள்ள சூடா ரத்னமானது தன் புகராலே
எல்லாவற்றையும் முட்டாக்கிகிட வற்றாய் –
மன்னு மரகதக் குன்றின் மருங்கே –
நித்தியமாய் இருப்பதொரு மரகத கிரியின் அருகே –
சேர நிற்கில் ஆழம் காலாம் -என்று அருகே
கிண்ணகப் பெருக்கை எதிர் செறிக்க ஒண்ணாதாப் போலே
எதிர் நிற்க ஒண்ணா மே கரை யருகைப் பற்றியாய் யாயிற்று இருப்பது –
யோர் இன்னிள வஞ்சிக் கொடி யொன்று நின்றது தான்-
அத்விதீயமாய் கண்டார் கண்ணுக்கு இனிதாய்
இளையதாய் இருப்பதொரு வஞ்சிக் கொடி நின்றது –
கொம்பு -என்று சொல்லிற்றில்லை
அண்ணாறும் என்னுமத்தைப் பற்ற –
தான் -அது இருந்தபடி தான்
அன்னமாய் –
நடை அழகுக்கு
மானாய் –
நோக்கில் உண்டான மௌக்த்யத்துக்கு-
அணி மயிலாய் –
அளகபாரத்துக்கு-அணி -சாயை-
ஆங்கிடையே மின்னாய் –
இவள் நாலடி நடக்கும் போதாக நாயகனுக்கு துணுக்குத் துணுக்கு -என்னும்படி இருக்கை –
இளவேய் இரண்டாய் –
சுற்றுடைமைக்கும் -பசுமைக்கும் -செவ்வைக்கும் -ஒழுகு நீட்ச்சிக்கும்
மூங்கில் திருஷ்டாந்தமாக சொல்லக் கடவது இ றே -இள வேய் -தோளுக்கு –
இணைச் செப்பாய்-
நம்பியை சேமித்து வைக்கைக்கு-
இணைச் செப்பாய் –
திரு முலைகளுக்கு –
முன்னாய தொண்டையாய்க்-
திவ்ய அவயவங்களின் அழகுகளில் மிகையாய் வந்து பற்றா நிற்க
முன்னோடி வருகிறது திரு வதரத்தின் புகராயிற்று
வாலியதோர் கனி கொல்-திருவாய்மொழி-7-7-3- -இத்யாதி-
கெண்டைக் குலம் இரண்டாய் –—
கண்ணில் ஒழுகு நீட்ச்சிக்கும் அழகுக்கும் –
அன்ன திருவுருவம் நின்றது அறியாதே-
சில சொன்னோமாம் இத்தனை யல்லது என்னால் முடியப் பேசித் தலைக் கட்டப் போகாதே –
அப்படிப் பட்ட திருவுருவை –அன்ன திருவுருவம் -என்னலாம் இத்தனை இ றே சொல்லலாவது-
அன்ன திருவுருவம் –
மருங்கே நின்றது அறியாதே
அறிந்தேன் ஆகில் கால் வாங்கிப் பிழைக்கலாம் கிடீர்
அறியாமையாலே இழிந்து கிடீர் நான் இப்படி பட்டது-
என்னுடைய நெஞ்சும் அறிவும் –
ஒன்றுக்கும் அழியாதே இருக்கக் கடவ என்னுடைய நெஞ்சு கிடீர்
அறிவை இட்டு வைக்கைக்கு கலமான என் நெஞ்சும் –
இன வளையும் —-
ஆபரணமான வளையும் –
பொன்னியலும் மேகலையும் –
ஸ்லாக்கியமான பரிவட்டமும் –
ஆங்கு ஒழியப் போந்தேற்கு மன்னு மறி கடலும் ஆர்க்கும் –
நொந்தாரைக் கண்டால் ஐயோ என்ன பிராப்தமாய் இருக்க-அங்கனே செய்யாதே
சர்வேஸ்வரன் இஜ் ஜகத்துக்கு ரஷகமாக கல்பித்து வைத்த கடலும் சப்தியா நின்றது –
மதி யுகுத்த இந்நிலாவின் கதிரும் என்தனக்கே வெய்தாகும்-
என்னளவிலே வந்தவாறே களளரைக் காட்டிக் கொடுப்பாரைப் போலே
சந்தரன் தன் ஆஸ்ரயம் கொண்டு பொறுக்க மாட்டாமையாலே பொகட்ட
இனிய நிலாவினுடைய கிரணம் எனக்கே சூடா நின்றது –
நாட்டார் வைத்த கண் வாங்காதே கண்டு கொண்டு இருக்கிற சந்திரனும் எனக்கே பாதகனாகா நின்றான்
நிலா -என்னா நிற்க –கதிர் -என்கிறது ஏத்திப் பற்ற -என்னில்
த்ரவ்யமாய் இருக்கும் இ றே -அதின் குணத்தைப் பற்ற –
ஆகையாலே கதிர் என்கிறது –
தன்னுடைய தன்மை தவிரத் –
பதார்த்த ஸ்வ பாவங்கள் அடங்கலும் வேறுபடா நின்றது
சைத்யம் இ றே இவற்றுக்கு ஸ்வ பாவம்
தான் என்கொலோ –—
பதார்த்த ஸ்வ பாவங்கள் அந்யமாக-அபி பதித்தவாறே அதி சங்கை பண்ண வேண்டி இருக்கும் இ றே
இத்தை சீதோ பவ -என்றால் போலே
உஷ்ணோ பவ -என்றார் உண்டோ -இந்த நிலா -என்று பிரத்யஷம் ஆகவுமாம் –
தென்னன் பொதியில் செழும் சந்தின் தாது அலைந்து மன்னி இவ் யுலகை மனம் களிப்ப வந்து இயங்கும் இந்நிலம் பூம் தென்றலும் வீசும் எரி எனக்கே-
தென்னதான பொதிய மலையிலேயாய்-அழகியதாய் இருக்கிற
சந்தனத்தை கந்தல் கழித்து -தான் அதில் தாதை யளைந்து
ப்ரவாஹ ரூபேண நித்யமான இந்த லோகமானது
த்ருப்தமாம் படி புண்யம் பண்ணினார் இருந்த விடத்திலே எங்கும் ஒக்க சஞ்சரியா நிற்கிற-இனியதாய் இளையதாய் பரிமள பிரசுரமான தென்றலானது –
என்னுடைய விரஹ அக்னி தன் மேலே படாத படி கடக்க நின்று நெருப்பை ஏறட்ட நின்றது –
முன்னிய பெண்ணை மேல் –
முன்னே நிற்கிற பெண்ணையின் மேல் உண்டான
முள் முளரிக் கூட்டகத்துப் —
தாமரை வளையத்தில் உண்டான கூட்டிலே-முள் முளரி என்று-பாதகத் வத்தில் உறைப்பைப் பற்றி சொல்லுதல் –
அன்றிக்கே
முள்ளு உண்டாய் இருக்கும் இ றே -அத்தைப் பற்றிச் சொல்லுதல் –
பின்னும் அவ்வன்றில்-
அதுக்கு மேலே என்னுதல்-
நெருங்கத் தொடுத்த வாய் அலகை யுடைத்தான அன்றில் -என்னுதல் –
பெடைவாய்ச் சிறு குரலும்-
கோத்த வாயலகை யுடைத்தான அன்றிலுடைய பேடை வாய்ச் சிறு குரல் உண்டு –
ஒரு கால் சொல்லப் புக்கால் பதின்கால் பட்டைப் பொதி சோறு அவிழ்க்க வேண்டும்படி யான த்வனி -அது
என்னுடைய –
முன்பே அழிந்து இருக்கிற என்னுடைய –
நெஞ்சுக்கோர் ஈர் வாளாம் –
பேச்சுக்கு முன்னே என்னுடைய நெஞ்சுக்கு ஓர் ஈர் வாளாகா நின்றது –
என் செய்கேன் —–
ஓர் அபலை இதுக்குப் பரிஹாரம் பண்ணிக் கொள்ளவோ –
கன்னவில் தோள் காமன் –
கல் என்று சொல்லப்பட்ட தோளை யுடைய காமனுடைய –
கறுப்புச் சிலை வளையக்-
கண்ணுக்கு ஆசர்யமாய் இருந்தும் பாதகத்வம் உறைத்து இருக்கிறபடி –
கொன்னவிலும் பூம் கணைகள் கோத்துப் –
இதுக்கு இலக்கானவர்கள் முடிந்தார்கள் என்று சொல்லுகிற புஷ்ப பாணங்களைத் தொடுத்து –
பொத வணைந்து –—-
தொற்றர அணைந்து -என்னுதல் -மறுபாடுருவும்படி அணைந்து நின்று -என்னுதல் –
தன்னுடைய தோள் கழிய வாங்கித் –
மார்வை நிரம்ப வலித்து-
தமியேன் மேல்-
தனியேனாய் இருக்கிற என மேலே –
என்னுடைய நெஞ்சே இலக்காக வெய்கின்றான்—-
வர்த்தமானத்தாலே ஒரு காலும் எய்து கை வாங்குகிறிலன் –
பின்னிதனைக் காப்பீர் தான் இல்லையே-
ரஷகன் ஆனவன் ஜகத் சசைலம் பரிவர்த்தயாம் யஹம் -ஆரண்ய -64-78–என்ன
நாட்டுக்குத் தண்ணளி பண்ணி நோக்க வல்லவோ உங்கள் தமப்பனார் உம்மைப் பெற்றது -நீர் நாட்டை அழிக்கக் கடவீரோ -என்று இளைய பெருமாள் காலைக் கட்டினால் போலே-இவளும் -இக்காமனைக் காலைக் கட்டி நோக்க வல்லார் இல்லையோ -என்கிறாள் –
பேதையேன்-
பிரிந்து ஆற்ற மாட்டாத சமயத்தில் முடிந்து பிழைக்கை தேட்டமாய் இருக்க -இன்னம் ஒரு கால் காணலாம் படி இருக்குமாகில்
ஜீவித்துக் கிடந்தால் ஆகாதோ -என்று இருக்கும் படி அதி சபலையான நான் –
கன்னவிலும் காட்டகத்து –
கல்லு நெருக்கின பெரும் காட்டுக்கு உள்ளே
பெரும் தூறாய் என்கிறபடியே சம்சாரம் ஆகிற பெரும் தூறு இ றே ஒரு காடாவது –
தோர் வல்லிக் கடி மலரின் —
அதுக்கு உள்ளே ஒரு கொடியாவது-அது தான் முட்டப் பூத்ததாவது
அது தான் கடிமலரை யுடைத்தாய் இருப்பதொரு வல்லியாவது
சம்சார விபூதியில் இங்கன் ஒத்த ஆற்றாமை யுள்ளது இவர் ஒருவருக்குமே இ றே –
ஓர் வல்லிக் கடிமலரின் உடைய –
நன்னறு வாஸம் –
நல நறு வாசம் உண்டு –அத்யந்த விலஷணமாய் செவ்வி அழியாத பரிமளம் –
மற்று ஆரானும் எய்தாமே-மன்னும்-
தனக்காகக் கண்டது அன்றிக்கே பிறர்க்காக கண்ட வஸ்து பிறர்க்கு ஆகப் பெறாதே தானே நின்று –
வறு நிலத்து வாளாங்கு உகுத்தது போல் —
வெறு நிலத்திலே நிஷ் பிரயோஜனமாகப் பொகடுமா போலே விழுந்த தரை தன்னிலே –
விநியோகம் கொள்ளுகைக்கு யோக்யமாய் இருப்பதொரு வஸ்துவும் இன்றிக்கே
பாழே பொகட்டால் போலே நல் நறு வாசம் தான் இருக்கிறபடி –
என்னுடைய பெண்மையும் என் நலனும் என் முலையும்-
என்னுடைய ஸ்த்ரீத்வமும்
என்னுடைய நன்மையையும்
என்னுடைய அவயவங்களும் –
பெண்மை -பாரதந்த்ர்யம்
நலன் -ஆத்மகுணம்
முலை -பக்தி
மன்னு மலர் மங்கை மைந்தன் –
மலராள் தனத்துள்ளான் ஆனவனுடைய மார்வோடே அணையா வாகில்
பெரிய பிராட்டியார் நித்ய வாஸம் பண்ணுகையாலே யுவாச குமார -என்று
நித்தியமான யௌவனத்தை யுடையவன் –
கணபுரத்துப் பொன்மலை போல் நின்றவன் –
திருக் கண்ண புரத்திலே ஸ்லாக்யமான வடிவோடு கால் வாங்காதே நிற்கிறவனுடைய-
மதுரையில் புறச் சோலையிலே எடுத்து விட்டு இருந்தால் போலே யாயிற்று திருக் கண்ண புரத்திலே வந்து நின்ற நிலை –
மகா மேரு போலே அநுப யுக்தம் அன்றிக்கே சர்வ உப ஜீவ்யமாயிருப்பதொரு மலை –
தன் பொன்னகலம் தோயாவேல்-
அவனுடைய அழகிய திரு மார்விலே அணைத்து விடாய் ஆறாவாகில்
தோய்கை -மறு நனைகை-
மெல்லியல் தோள் தோய்ந்தாய் -என்று அவன் இவள் தோளிலே தோயும்
இவள் அவன் மார்விலே தோயும்
பொன் அகலம் ஆகையாலே இவள் விரஹ அக்னி பட்டு நீராய் யுருகும்
அப்போது தோயலாம் என்று இருக்கிறாள்
இவளும் ஹிரண்ய வர்ணை இ றே-
என்னிவைதான் வாளா –
வகுத்த விஷயத்தோடு அணையப் பெறாதாகில்
வ்யர்த்தமே இராது அன்றே –
வெனக்கே பொறையாகி-—
போக உபகரணம் ஆனால் இருவரும் கூடச் சுமக்கை அன்றிக்கே
எனக்கே தலைச் சுமை யாகில் எங்கனே தரிக்கும் படி –
முன்னிருந்து மூக்கின்று மூவாமைக் காப்பதோர்-
இவை யுன்டாகை தவிராவாகில் முதுகிலே யானால் ஆகாதோ
முன்னே இருந்து காணக் காணச் செவ்வி யழிய வேணுமோ
வயோ அச்யா ஹயாதி வர்த்ததே -யுத்த -5-5–என்னுமா போலே –
மன்னு மருந்து –
தப்பாத மருந்து –
அறிவீர் இல்லையே –
அறிவார் இல்லையோ-இது பட்டர் அருளிச் செய்ய நான் கேட்டேன் -என்று நம் பிள்ளை அருளிச் செய்வர் -ஜகத்திலே ஓர்-ஆந்தராளிகனைக்-கடகரைக் – கிடையாதோ -என்று
இவ்வருக்கு உண்டான பேறுகள் அல்பமாய் அஸ்த்ரமாய் இருக்கையாலே
பரிஹாரங்களும் அவ்வளவேயாய் இருக்கும் இ றே
இது அங்கன் இன்றிக்கே யாவதாத்மபாவியான பேறாகையாலே பரிகாரமும் நிலை நின்ற பரிஹாரமாய் இருக்கும் இ றே –
மருந்து அறிவீர் இல்லையே என்ற வாயோடு -உண்டு உண்டு -என்றால் போலே இருக்க
சேய்க்களின் கழுத்திலே மணி யோசையானது செவிப்பட்டது –
மால் விடையின் -துன்னு பிடர் எருத்துத் தூக்குண்டு வன்தொடரால்கன்னியர் கண் மிளிரக் கட்டுண்டு –
நாகின் மேலே பிச்சேறி வருகிற வ்ருஷபத்தின் உடைய நெருங்கின ககுத்தோடே சேர்ந்த
கழுத்திலே தூக்கப் பட்டு
வழிய சங்கிலியால் நாற்றப் பட்டு –
மாலை வாய்த் —-
யா நிசா சர்வபூதா நாம் தசாம் சாகரத்தி சமயமே -ஸ்ரீ பகவத் கீதை -2-69-என்கிறபடியே
கண் உறக்கம் தேட்டமான ராத்ரியிலே
தன்னுடைய நா வொழியாதுஆடும் தனி மணியின் இன்னிசை ஓசையும் –
நாகானது வெருவி இருக்க அது தன்னையும்
தன நசையாலே விட மாட்டாதே தொடருகையாலே
மாறாதே த்வநிக்கிற தனி மணியினுடைய இனிய இசையை யுடைத்தான த்வனியும் –
வந்து என் செவி தனக்கே –
நாட்டார்க்கு இதினுடைய த்வனி செவிப் படா நிற்கச் செய்தேயும் ஜீவியா நிற்பார்கள் இ றே
இவ் விரஹம் வேறு ஒருவர்க்கு இல்லையே –
ஆகையாலே பாதகத்வம் இவளுக்கே இ றே யுள்ளது –
கொன்னவிலும் எக்கில் கொடிதாய் –
அங்கன் அன்றிக்கே எனக்கு ஒருத்திக்குமே கொலையைச் சொல்லா நின்று உள்ள வேலிலும் காட்டிலும் துஸ் சஹமாய் –
நெடிதாகும்-
வேலிலும் காட்டில் மிகவும் கொடிதாகா நின்றது
அது போலே கடுக முடித்து விடுகை அன்றிக்கே
இது உருவ நலியா நின்றது –
என்னிதனைக் காக்குமா சொல்லீர் –
ஓர் அபலையாலே இத்தைப் பரிஹரித்துக் கொள்ளலாமோ
இத் த்வனி செவிப்படச் செய்தேயும் தரித்து இருக்க வல்ல
உங்களுக்கு பரிஹாரம் தெரியாமை இல்லை இ றே
இத்தைப் பரிஹரிக்கும் படி சொல்ல வல்லீர்களோ
இதுக்கு ஒரு பரிஹாரம் இல்லை என்னா நான் மீளுவேனோ –
மடல் எடுத்து அவனைப் பழிக்கிலும் பெறத் தவிரேன் -என்கிறது மேல் –
இது விளைத்த மன்னன் -நான் இப்படி கையும் மடலுமாம் படி பண்ணின வீரன்
கண்டவர்களை மடல் எடுப்பிக்கை-
—————————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .
Leave a Reply