பொன்னவிலும் மாகம் புணர்ந்திலளே பூம் கங்கை
முன்னம் புனல் பரக்கும் நன்னாடன் மின்னாடும் ——55
கொன்னவிலும் நீள் வேல் குருக்கள் குலமதலை
தன்னிகர் ஒன்றில்லாத வென்றித் தனஞ்சயனைப் —-56
பன்னாக ராயன் மடப்பாவை பாவை தன்
மன்னிய நாண் அச்சம் மடம் என்றிவை அகலத் ———57
தன்னுடைய கொங்கை முக நெரியத் தானவன் தன்
பொன்வரை யாகம் தழீ இக் கொண்டு போய்த் தனது ——58
நன்னகரம் புக்கு நயந்து இனிது வாழ்ந்ததுவும்
முன்னுரையில் கேட்டு அறிவது இல்லையே -சூழ் கடலுள் —-59
பொன்னகரம் செற்ற புரந்தரனோடு ஒக்கும்
மன்னவன் வாணன் அவுணர்க்கு வாள் வேந்தன் ——-60
தன்னுடைய பாவை யுலகத்துத் தன் ஒக்கும்
கன்னியரை இல்லாத காட்சியால் தன்னுடைய ——–61
இன்னுயிர்த் தோழியால் எம்பெருமான் ஈன் துழாய்
மன்னு மணி வரைத் தோள் மாயவன் பாவியேன் ——-62
என்னை யிது விளைத்த ஈரிரண்டு மால் வரைத் தோள்
மன்னவன் தன் காதலனை மாயத்தால் கொண்டு போய் ——63
கன்னி தன் பால் வைக்க மற்று அவனோடு எத்தனையோர்
மன்னிய பேரின்பம் எய்தினாள் -மற்றிவை தான் ———-64
என்னாலே கேட்டீரே ஏழைகாள் என்னுரைக்கேன்
மன்னு மலை யரையன் பொற்பாவை வாணிலா ———65
மின்னு மணி முறுவல் செவ்வாய் யுமை என்னும்
அன்ன நடைய வணங்கு நுடங்கிடை சேர் —————66
பொன்னுடம்பு வாடப் புலன் ஐந்தும் நொந்த அகலத்
தன்னுடைய கூழைச் சடாமாரம் தான் தரித்து ஆங்கு ——-67
அன்ன வரும் தவத்தினூடு போய் ஆயிரம் தோள்
மன்னு கர தலங்கள் மட்டிடித்து மாதிரங்கள் ———68
மின்னி யெரி வீச மேல் எடுத்த சூழ கழற்கால்
பொன்னுலகம் எழும் கடந்து உம்பர் மேல் சிலும்ப ——–69
மன்னு குலவரையும் மாருதமும் தாரகையும்
தன்னினுடனே சுழலச் சுழன்று ஆடும் ———–70
கொன்னவிலும் மூவிலைக் வேற்கூத்தன் பொடியாடி
அன்னவன் தன் பொன்னகலம் சென்று ஆங்கு அணைந்து இலளே —–71
பன்னி யுரைக்கும் கால் பாரதமாம் பாவியேற்கு
என்னுறு நோய் யானுரைப்பக் கேண்மின் -இரும் பொழில் சூழ் —72
மன்னு மறையோர் திரு நறையூர் மா மலை போல்
பொன்னியலும் மாடக் கவாடம் கடந்து புக்கு ——–73
என்னுடைய கண் களிப்ப நோக்கினேன் நோக்குதலும்
மன்னன் திரு மார்பும் வாயும் அடி இணையும் ————74
————————————————————————–
பூம் கங்கை முன்னம் புனல் பரக்கும் நன்னாடன் மின்னாடும் -கொன்னவிலும் நீள் வேல் குருக்கள் குலமதலை
ஒளியை உடைத்தாய்-பிரதி பஷங்கள் கண்ட போதே வயிறு அழுகும் நீள் வேல்
தன்னிகர் ஒன்றில்லாத வென்றித் –
வீரத்துக்கு எம்பெருமானும் எதிரன்று –
தனஞ்சயனைப் –
ஊர் வசியை தாய் என்ன வல்லவன் –
பன்னாக ராயன் மடப்பாவை பாவை –
நாக ராஜாவின் பெண் பிள்ளை
பாவை -அவன் மகள்-பாவை என்கிறது ஸ்த்ரீத்வத்துக்கு அவ்வருகு இல்லாமை –
தன் மன்னிய நாண் அச்சம் மடம் என்றிவை அகலத்-தன்னுடைய கொங்கை முக நெறியத் தானவன் தன்-பொன்வரை யாகம் தழீ இக் கொண்டு போய்த் தனது –
கடல் வற்றினால் போலே சஹஜமான குணங்கள் குட நீர்-வழிந்து போகை –
நன்னகரம் புக்கு-
உங்களைப் போல் அன்றியே மடல் எடுப்பாரைக் கொண்டாடும் ஊர் –
நயந்து இனிது வாழ்ந்ததுவும் –
கொண்டாடி-நித்ய சம்ச்லேஷம் பண்ணி-
முன்னுரையில் கேட்டு அறிவது இல்லையே -சூழ்-கடலுள்-பொன்னகரம் செற்ற புரந்தரனோடு ஒக்கும்-மன்னவன் வாணன் அவுணர்க்கு வாள் வேந்தன்-தன்னுடைய பாவை யுலகத்துத் தன் ஒக்கும்-கன்னியரை இல்லாத காட்சியால் தன்னுடைய-இன்னுயிர்த் தோழியால் எம்பெருமான் ஈன் துழாய்-மன்னு மணி வரைத் தோள் –
புண்யத்துக்காகிலும் மஹா பாரதம் கேட்டு அறிவது இல்லையோ –
மாயவன் –
பிரசங்காத் நினைக்க -தாம் ஈடுபட்ட படியாலே ஆச்சர்ய பூதன் என்கிறார் –
பாவியேன் –
தம்மை அணைத்த தோளை நினைத்துக் கிடையாமை –
வழி போவார் அடித்த படி -ஆழம் காலிலே ஈடுபட்டு –பாவியேன் -என்கிறாள் –
என்னை யிது விளைத்த –
இப்படி மடல் எடுக்கப் பண்ணின –
ஈரிரண்டு -மால் வரைத் தோள் –
இவள் இப்படி படப்பட அவனுக்குத் தோள் பணைத்த படி –
மன்னவன் தன் காதலனை –
எம்பெருமான் உடைய ச்நேஹத்தை ஒரு வடிவாக வகுத்தது -என்னும்படி இருக்கும்
பேரனான அநிருத்த ஆழ்வான்-
மாயத்தால் கொண்டு போய் –
பெண்கள் களவு காண்பார்கள் -என்று காவலோடு கண் வளர்ந்து அருளுகிறவனைப்
பீட்கன்று போலே படுக்கையோடு கொடு போந்த படி –
கன்னி தன் பால் வைக்க -மற்று அவனோடு-
உஷை ஸ்வனப்பித்திலே கண்டவனைச் சித்ரலேகை எழுதிக் காட்டி
இவள் பக்கல் அவனை அவன் தான் அறியாமே கொடு வந்து வைத்தபடி –
எத்தனையோர் மன்னிய பேரின்பம் எய்தினாள் -மற்றிவை தான் என்னாலே கேட்டீரே ஏழைகாள் –
விலங்கிட்டு வைத்ததும் கூட வாகையாலே-அளவில்லாத சஹஜமான பெரிய இன்பத்தை புஜித்தாள் –
என்னுரைக்கேன்-
இவ்வதாஹரணம் என்னால் சொல்ல முடியுமோ -என்னால் எவ்வளவு சொல்லலாவது-
ஆகிலும் தவிர ஒண்ணாதது என்று சொல்லக் கேளுங்கோள் என்கிறாள் –
மன்னு மலை யரையன் பொற்பாவை-வாணிலா மின்னு மணி முறுவல் செவ்வாய் யுமை என்னும்-அன்ன நடைய வணங்கு நுடங்கிடை சேர் பொன்னுடம்பு வாடப் புலன் ஐந்தும்-நாட்டுக்கு மச்சமாகப் பெண் பிள்ளை பெற்ற பாக்யவான் –
வாணிலா -மின்னு மணி முறுவல் செவ்வாய் யுமை என்னும்-அன்ன நடைய வணங்கு நுடங்கிடை சேர் —
ஒளியை உடைய நிலாப் போலே விலங்கா நின்றுள்ள ஸ்ப்ருஹணீயமான முறுவல் –
நொந்த அகல-
நாம் பட்டதோ -என்று அகல –
த்ன்னுடைய கூழைச் சடாமாரம் தான் தரித்து ஆங்கு அன்ன-
பெருமாள் திரு முடையைத்ப் புனைந்தால் போலே ஜடை –
வரும் தவத்தினூடு போய் –
தபஸ் ஸூ என்ன வாய் வேம்-
அப்படிப் பட்ட தபஸ் சை முடிய நடந்து –
ஆயிரம் தோள்-மன்னு கர தலங்கள்-
இத்தலை இப்பாடுபட அத்தலை வளர்ந்த படி –
நைவ தம்சாந் ந மசகான் ந கீடான் ந சரீஸ்ருபான் -சுத்தர -36-42-என்கிற க்லேசத்தின் படுமவன் அல்லன் என்கை –
மட்டிடித்து மாதிரங்கள் மின்னி யெரி வீச மேல் எடுத்த சூழ கழற்கால்-
திக்குகளிலே செல்ல
பொன்னுலகம் எழும் கடந்து உம்பர் மேல் –
திரு வுலகு அளந்து அருளின தேசம் எல்லாம் உபதஹதமான படி –
சிலும்ப மன்னு குலவரையும் மாருதமும் தாரகையும்-தன்னினுடனே சுழலச் சுழன்று ஆடும் –
கிடந்த விடத்தில் கிடவாது ஒழிகை-குலவரை யுள்ளிட்ட பதார்த்தங்கள் எல்லாம் புன்னைப் பூ போலே சுழன்று வர –
கொன்னவிலும் மூவிலைக் -வேற்கூத்தன்-
ஆசைப் பட்டாரும் வயிறு பிடிக்கும் படி இருக்கை-கண் மூன்றானால் போலே இருக்கிறது அன்றோ –
பொடியாடி அன்னவன் தன் –
போகத்துக்குச் சந்தனம் பூசின படி –
அன்னவன் -முகத்தைச் செல்ல வைத்துப் பேசுகிறார்
இன்னும் இப்புடையில் உள்ளன –
பொன்னகலம் –
அவள் பஷத்தாலே –
சென்று ஆங்கு அணைந்து இலளே –
இவ்வளவிலும் அவன் வந்திலன்
இவள் தானே சென்ற வத்தனை –
ஓர் அஞ்சலி பண்ண மேல் விழுந்தும் அன்று-என்கை –
பன்னி யுரைக்கும் கால் பாரதமாம் –
இப்பரப்பு என்னால் பேசி முடியாது
வியாச பரசாதிகள் பேசும் அத்தனை
பாவியேற்கு-
உங்களுக்குச் சொல்ல பிறந்தேனோ –
என்னுறு நோய் யானுரைப்பக் –
நம்பி அழகிலே அகப்பட
ஸ்ரீ பரத ஆழ்வான் நோவு போலே –
கேண்மின் –
இத்தனையும் செய்ய வேணும் –
சோக ஷோபேச ஹ்ருதயம் ப்ரலாபைரேவ தார்யதே -என்னும் படியாலே
தான் பிழைக்கைக்காக
வாய் விட்டு அழு
வதாலேயே நெஞ்சு தரிக்குமே –
இரும் பொழில் சூழ் —
பரப்பை உடைத்தான ஸ்லாக்யமான பொழி லாலே சூழப் பட்டு இருப்பதாய்
எங்கும் ஒக்க சோலையும் பணையுமாய் கிடக்கும் இத்தனை இ றே-
மன்னு மறையோர் திரு நறையூர் –
மறையோர் மன்னும் திரு நறையூர் –
மடல் எடுக்கை சாஸ்த்ரார்தம் என்று உபபாதிக்குமவர்கள் மன்னும் தேசம் –
அங்கன் உண்டோ என்னில் –
வ்யவசாயாத்ருதே ப்ரஹ்மன் நாசாத யதி தத்பரம் -என்று உண்டாகையாலே –
மா மலை போல்-
மலையைக் கொடு வந்து நெருங்க வைத்தால் போலே யாய்-
பொன்னியலும் மாடக் –
அதி ஸ்லாக்கியமாய் ஸ்ப்ருஹநீயமான மாடங்களில் உண்டான –
கவாடம் கடந்து புக்கு என்னுடைய கண்-
அவன் காண்கை-
அவ வாளம் காலை தப்பின படி
பல ஹானிக்கு முன்னே புகும் இத்தனை
என்னுடைய படபாக்னி குளிர –
களிப்ப –
கண்கள் ஆரவளவும் நின்று கண்ண மங்கையுள் கண்டு கொண்டேன் -பெரிய திரு மொழி -7-10-9-என்னுமா போலே –
நெடும் காலம் பட்டினி விட்ட கண்கள் வயிறு நிரம்பும் படி –
நணுகினம் நாமே -திருவாய் மொழி -1-1-3-
மன்யே ப்ராப்தா சம தம் தேசம் பரத்வாஜோ யமப்ரவீத் -அயோத்யா -69-9-
நோக்கினேன் நோக்குதலும் மன்னன் –
நான் கண்ட பொழுதே எழுதிக் கொண்டான் –
வாளும் பலகையும் பொகட்டு கண்ட போதே மடல் எடுக்கப் பண்ணினவன் –
கண்ட போதே தான் என்னலாம்படி இருக்கை-
ராஜாதி ராஜஸ் சர்வேஷாம் –
————————————————————————–
பூம் கங்கை-
இப்படி அப்ரசித்தனாய் இருப்பான் ஒருவனுக்கோ இவள் மடல் எடுத்தது –
இரண்டு அறுக்கும் பூத்த சோலையாய்
பூக்கள் உதிர்ந்து கிடைக்கையாலே வந்த அழகைச் சொல்லுதல் –
அன்றிக்கே
நலம் திகழ் சடையான் -திரு வாய் மொழி -4-7-2-யில் சொல்லுகிறபடியே
ருத்ரன் ஜடையில் உண்டான கொன்றை மலரும் சர்வேஸ்வரன் திருவடிகள் உண்டான திருத் துழாயும் கலந்து வருகிற ஜலத்தை உடைத்தாயாகையாலே வந்த பிரவாகத்தைச் சொல்லுதல்
சதுர்முகன் நினைவின்றிக்கே இருக்கச் செய்தே திருவடி சென்று கிட்டின வாறே பார்த்தான் –
தர்ம தத்வம் உருகி நீராய் இருந்தது
அத்தாலே திருவடிகளிலே பிறந்து
ருத்ரனுடைய ஜடையிலே தங்கி வந்தாயிற்று
கங்கை கங்கை -பெரியாழ்வார் திரு மொழி -4-7-1-என்று
கங்கா கண்கேதி என்கிற உக்தி மாத்ரத்தாலே
அவஸ்யம் அநு போக்தவ்யம் -என்கிறபடியே அநு பவ விநாச்யமான கர்மங்களை அடையப் போக்கா நின்றத்தால் வந்த அழகைச் சொல்லுதல் –
அற்புதமுடைய ஐராவத மதமும் அவரிளம்படியர் ஒண் சாந்தும் கற்பக மலரும் கலந்து உழி கங்கை -பெரியாழ்வார் திருமொழி -4-7-7-
கரை மரம் சாடி -பெரியாழ்வார் திருமொழி -4-7-9
வடதிசை மதுரை -பெரியாழ்வார் திருமொழி -4-7-9
சதுர்முகன் கையில் சதுப்புயன் தாளில் -பெரியாழ்வார் திருமொழி -4-7-10
கான்றடம் பொழில் சூழ் -பெரியாழ்வார் திருமொழி -4-7–13-
முன்னம் புனல் பரக்கும் –
சஹ்யத்திலே அல்ப ஜலம் உண்டானாலும் முந்துறப் பரம்புவது இங்கே யாயிற்று
நன்னாடன் –
நாட்டின் உடைய அழகு
அதாவது நீர் வாய்ப்பு யுண்டாய் அழகியதாய் இருக்கை –
இது நாடு இருந்த படி –
இனி அவன் தன படி சொல்லுகிறது –
மின்னாடும் –கொன்னவிலும் நீள் வேல் –
மின் போலே அசைந்து வாரா நிற்பதாய் கொலையை சொல்லா நிற்பதாய்
அவஷ்டப்ய மஹத் தநு -என்கிறபடியே அடக்கியாள வல்லார் அரிதாய் இருக்கிற வேலை யுடைய –
குருக்கள் குலமதலை-
இது எல்லாக் குருக்களுக்கும் உப லஷணம்-
லோகத்துக்காக இவர்கள் குருக்களாகத் திரிவார்கள்
அவர்களில் வைத்துக் கொண்டு இஷ்வாகு நாதன் -என்கிறபடியே-அவர்கள் குலத்துக்கு பிரதானனாய்த் திரியுமவன் –
தன்னிகர் ஒன்றில்லாத-
தனக்கு ஒப்பாரும் இல்லாத –
மனுஷ்யத்வே பரத்வம் கூடின போது ஒப்பாகில் ஒப்பாம் இத்தனை –
வென்றித் தனஞ்சயனைப் —–
கிருஷ்ணனும் வெற்றியில் தனக்கு ஒப்பில்லாத தனஞ்சயனை
பன்னாக ராயன் -மடப்பாவை பாவை தன்-
பன்னகராயன் -என்றத்தை நீட்டி பன்னாகராயன் -என்று கிடக்கிறது –
பன்னக ராஜன் உடைய பெண் பிள்ளை –
மன்னிய நாண் அச்சம் மடம் என்றிவை அகலத் –
பிறந்த பின்பு உண்டானது அன்றிக்கே
தரமி பிரயிக்தமாய் இருந்துள்ள லஜ்ஜை தொடக்க மான வற்றை சந்யசித்து போக –
தன்னுடைய கொங்கை முக நெரியத் –
தன்னுடைய முலை முகம் நெரியும் படி தான் ஒருதலைக் காமமாக
தானவன் தன் பொன்வரை யாகம் தழீ இக் கொண்டு போய்த் –
அவனுடைய பொன் போலே ஸ்லாக்கியமான மார்வைத் தான் தழுவிக் கொண்டு போய்
நாட்டார் ஊர்வசி சாலோக்யத்துக்கு சாதனா அனுஷ்டானம் பண்ணுவார்கள் ஆகில்
அவன் தான் வந்து உபஸ்தானம் -உப சர்ப்பணம் -பண்ணும் படியான மார்வ இ றே-இவனது –
தனது நன்னகரம் -புக்கு-
தன்னுடைய நல்ல நகரம்-இவ் ஊருக்கு ப்ரத்யா சத்தியை யுடைய ஊர் அது –
மடல் எடுப்பாரை விலக்குவாரும் இன்றிக்கே-மடல் எடுத்து தொடர்ந்து வருவார் திரள் கண்டு உகக்கும் ஊர் –
நயந்து இனிது வாழ்ந்ததுவும்-
நிரவதிக சம்ச்லேஷத்தைப் பண்ணி-பழி சொல்லுவார் புகழுவாராகச் சேர
தானும் அவனுமாய் அனுபவித்ததும்
முன்னுரையில் கேட்டு அறிவது இல்லையே –
ந காம தந்த்ரே தவ புத்தி ரஸ்தி -என்று காமதந்த்ரம், அறிந்திலிகோள் ஆகில் தவிருகிறிகோள் –
பாபம் போகைக்கு பாவனம் என்றாகிலும் மஹா பாரதம் கேட்டு அறியீர்களோ –
சூழ் கடலுள் பொன்னகரம் செற்ற புரந்தரனோடு ஒக்கும்-மன்னவன் வாணன் அவுணர்க்கு வாள் வேந்தன் தன்னுடைய –
கடலுக்கு உள்ளேயான ஹிரண்ய புர வாசிகளான ஆசூர வர்க்கங்களை அழியச் செய்த
இந்தரனோடு ஒப்பானாய்த் தான் ராஜாவான பேர் கிடக்க
அஞ்ச வேண்டும்படி இருப்பானாய்
அசூர வர்க்கத்துக்கு நிர்வாஹகனுமாய் –
பாவை யுலகத்துத் தன் ஒக்கும் கன்னியரை இல்லாத காட்சியால் –
லோகத்தில் தன் பருவத்தில் பெண்களில் தனக்கு ஒப்பார் இல்லாத தர்ச நீய விஷயம் –
தன்னுடைய இன்னுயிர்த் தோழியால் –
தன் கையாலே என்னுமா போலே தனக்கு நற் சீவனானவளாலே –
எம்பெருமான் ஈன் துழாய்-
நிர்குண வஸ்து என்றவர்களுக்கு சகுணம் என்று சொல்லி விடுகை அன்றிக்கே
குணங்களிலே கால் தாழ்க்கப் பார்க்கும் பாஷ்ய காரரைப் போலே
போனபடி சொல்ல என்று புக்குச்
சொல்லவும் விடவும் மாட்டாமையாலே அங்கே ஆழம் கால் படுகிறாள் –
எம்பெருமான் ஈன் துழாய்-மன்னு மணி வரைத் தோள் மாயவன் –
கையும் மடலுமாய்க் கொண்டு புறப்படும்படி-என்னை அனந்யார்ஹை யாக்கினவன் உடைய-நிரதிசய போக்யமான திருத் துழாய் பொருந்தி இருப்பதாய்
ரத்ன பர்வதம் போலே இருக்கிற தோள் அழகை யுடைய ஆச்சர்ய பூதன் –
பாவியேன் —–
அவளும் ஒரு தோழியைப் படைத்தாள்
நானும் ஒரு தோழியைப் படைத்து இருக்கிறேன் –
கொடு வந்து சேர்க்கும் தோழியாய் இருந்தாள் அவள் –
விலக்குமவர்களாய் இருந்தார்கள் இவர்கள் –
என்னை யிது விளைத்த –
இப்படி கையும் மடலுமாய்ப் புறப்படும்படி என்னைப் பண்ணின –
ஈரிரண்டு மால் வரைத் தோள்-
இத்தலை மடல் எடுக்கப் புக்க பின்பு அத்தலை பல்கின படி –
மன்னவன் தன் காதலனை –
புத்ரனைக் காட்டிலும் பௌத்ரன் பக்கலிலே ச்நேஹம் இரட்டித்து இருக்கும் இ றே –
மாயத்தால் கொண்டு போய் கன்னி தன் பால் வைக்க –
நாட்டில் ஒருவரை ஒழியாமே எழுதிக் காட்ட
இது வன்று இது வன்று என்று போந்து
கிருஷ்ணன் பக்கலிலே வந்தவாறே இவன் ஒரு பார்வையாய் இருந்தான் -என்று -பின்பு
அநிருத்தனைக் கண்ட வாறே இவன் இ றே என்ன
இவனாகில் அரியனோ- என்று
அப்போதே யோக பலத்தாலே போய்ப் படுக்கையோடு பீட்கன்றாக எடுத்துக் கொண்டு வந்து வைத்தாள் –
மற்று அவனோடு –
இவளுக்கு ஸ்வப்னத்தில் கண்டு பிறந்த ச்நேஹம் எல்லாம் அவனுக்கு இவளைக் கண்டவாறே பிறந்தது-
எத்தனையோர் மன்னிய பேரின்பம் எய்தினாள் –
இருவர் காலிலும் விலங்கிட்டு வைக்கவும் அனுபவிக்கப் பெற்று இலர்களோ –
மற்றிவை தான் என்னாலே கேட்டீரே –
மடலூர என்று ஒருப்பட்டு அது தானும் மாட்டாத படி துர்பலையாய் இருக்கிற என்னைக் கொண்டு-இவை கேட்க இருக்கிறிகோள் இ றே
ஏழைகாள் –
உங்கள் அறிவு கேடு இருந்தபடி ஏன் –
என்னுரைக்கேன்-
நான் வருந்தி பாசுரம் இட்டுச் சொல்ல ஒருப்பட்டேன் என்று பாசுரம் இட்டுச் சொல்லுகிறாள் –
மன்னு மலை யரையன் பொற்பாவை –
அவன் மகள் அன்றோ-வடிவு இல்லையோ -என்கிறாள்
லோகத்தில் மடலூர்ந்தார் ஆர் -என்றால்
அவர்கள் இன்னார் என்று நிர்தேசிக்கலாம் படி பிள்ளை பெற்றுத் தந்த ஸ்ரீ மான் கிடீர் –
அடியில்லாதால் ஒருத்தியோ மடலூர்ந்தாள்-
அவன் மகள் அன்றோ –
பெரியாள் ஒருத்தி அன்றோ –
ஒரு நிர்வாஹகன் பெண் பிள்ளை அன்றோ
அதி ஸ்லாக்கியையாய் நிருபாதிக ஸ்த்ரீத்வத்தை உடையவள் –
வாணிலா மின்னு மணி முறுவல் –
வெறும் பாவை பிறப்பேயாய்
வடிவு அழகு தான் இன்றிக்கே இருக்கிறதோ
ஒளியை உடைத்தான நிலாவைப் புறப்பட விடா நிற்பதாய்
அழகியதாய் இருந்துள்ள தந்த பங்க்தியை யுடையளாய்
நிலாப் போலேயும் மின் போலேயும் -என்னவுமாம் –
செவ்வாய் –
இவ் வெண்மைக்குப் பரபாகமான அதரத்தில் பழுப்பை யுடையளாய் இருக்கை-
யுமை என்னும்-
இப்படி ப்ரசித்தையாய் இருப்பாளாய்-
அன்ன நடைய –
முன்னே நாலடி நடந்து காட்டினால் காந்தனுடைய சகல தாபங்களும் அரும்படியாய் இருக்கை –
வணங்கு –
தேவதையாக ப்ரசித்தை-
நுடங்கிடை சேர் —
போக்தாவுக்கும் துணுக்கு துணுக்கு என்னும்படியான இடையையும்
அழகையும் உடையாளாய்-
பொன்னுடம்பு வாடப் –
அவனுக்கு ஸ்லாக்கியமான உடம்பானது ஆஸ்ரயத்தை இழந்த தளிர் போலே வாட –
வாடினேன் -என்று ஸ்வரூப அனுரூபமான வாட்டம் அன்றே
இரண்டும் விஷய லாபத்தாலே இ றே
ஓன்று ப்ராக்ருதம்
ஓன்று அப்ராக்ருதம் –
புலன் ஐந்தும் நொந்த அகலத்-
இந்த்ரியங்கள் ஐந்தும் நொந்து மீண்டு நாம் பட்டதோ என்று போக –
நாட்டில் தபஸ் பண்ணுவார் எல்லாம் சரீர தாரண அர்த்தமாக சருகு இலையை பஷித்து யாயிற்று-தபஸ் ஸூ பண்ணுவது -அது வேண்டா -இவள் அபர்ணை யாகையாலே –
இவள் அத்தையும் தவிருகையாலே இந்த்ரியங்கள் ஆனவை போற நொந்து கூப்பிட்டு
இனி இவ்விடம் நமக்கு ஆஸ்ரயம் அல்ல வென்று அகல –
தன்னுடைய கூழைச் சடாமாரம் தான் தரித்து –
போக்தாவானவன் உடைய முன்பே ஒரு கால் குழலை அலைத்தால்-அவனுடைய
சகல கிலேசங்களும் தீரும் படியாய் இருக்கிற மயிரை ஜடையாகத் தானே தரித்து –
தான் தரித்து-வேறு சிலர் அன்றிக்கே தானே தரித்து –
ஆங்கு —–
அவ்வஸ்தையில்
அன்ன –
அப்படிப்பட்ட
இவளுடைய தபஸ் ஸின் க்ரௌர்யத்தை அனுசந்தித்து
அப்படிப்பட்ட -என்கிறாள் -இவளும் –
வரும் தவத்தினூடு போய் –
அப்படிப் பட்ட தபஸ் என்னுமதுக்கு மேற்பட வேறு பாசுரம் இன்றிக்கே இருக்கப் பின்னையும்
அரும் தவம் -என்கிறாள் இ றே
ஊடு போய் –
அந்த தபஸ் ஸூ தன்னிலும் உபக்ரமித்ததாய் நின்ற மாத்ரமோ-
அதினுடைய முடிவளவும் போய் கையும் மடலுமாய்ப் போகா நின்றால்
அவன் எதிரே வந்தாலும் -நான் தொடங்கின இது தலைக் கட்டி அல்லது விடுவது இல்லை -என்று எல்லை யளவும் போய் –
சென்று ஆங்கு அணைந்து இலளே-என்று அந்வயம்-
இவள் இப்படி அபி நிவிஷ்டயாய் மடல் எடுத்துக் கொண்டு புறப்படா நின்றாள் ஆகில் காந்தன் ஆனவன்
நைவ தம்சான் ந் மசகான் -என்று இருந்தபடி எங்கனே –
ஆயிரம் தோள்-
மகிஷி இப்படி நோவு படா நின்றால் தானும் ஆசைப் படானாய் நோவு படுகை அன்றிக்கே
நம்மைச் சிலர் ஆசைப் படப் பெற்றோம் -என்று தோள்கள் பணையா நிற்கும் –
தான் ஆசைப் படா நின்றால் அவனும் ஆசைப் பட்டு மேல் விழ வேண்டாவோ
இப்படி நொந்தால் தான் அவன் உடம்பை அணையப் பெற்றதோ –
மன்னு கர தலங்கள் மட்டிடித்து –
இவன் ஆடுகிற போது தோள்கள் ஆயிரமும் திக்குகளிலே சென்று அறையும்
மாதிரங்கள் மின்னி யெரி வீச –
அப்போது அந்த திக்குகள் பொறியும் புகையும் எழுந்து நெருப்பைப் புறப்பட விடா நிற்கும் –
மேல் எடுத்த-
ஆடுகிற போது மேலே எடுத்த வீரக் கழலாலே சூழப் பட்ட கால் –
திக்குகள் எங்கும் வியாபாரியா நிற்கும்
மகிஷியானவள் தன்னை ஆசைப் பட்டு நோவு படா நிற்க
தானே காலே பிடீத்துத் தலை அளவும் செல்ல ஆபரணம் அணியும்
சூழ கழற்கால்-சுற்றின கால் என்னவுமாம் –
பொன்னுலகம் ஏழும் கடந்து –
ஸ்லாக்கியமான போக பூமிகள் ஏழையும் கடந்து
உம்பர் மேல் சிலும்ப —
மேல் உள்ள தேவ ஜாதி என்னை விளைகிறதோ -என்று அஞ்சும் படி –
மன்னு குலவரையும் –
பூமிக்கு ஆணி அடித்தால் போலே நிற்கிற குல பர்வதங்களும்
மாருதமும் –
பிரஜைகள் இருந்த விடத்தே தான் சென்று நோக்கும் பிதாவைப் போலே சர்வ பிராணி பிராணனே ஹேது பூதமான காலும் –
தாரகையும்–
மனுஷ்யர் உடைய நன்மை தீமைகளை அறிவியா நிற்பதான நஷத்ர தாரா கணங்களும்
தன்னினுடனே சுழலச் சுழன்று ஆடும் –
இவன் ஆடுகிற போதை வேகத்தாலே இவை யடையைப் பறந்தால் போலே சுழன்று வருமாயிற்று-புரிந்த விடத்திலே ஒக்கப் புரியும் ஆயிற்று –
கொன்னவிலும் மூவிலைக் வேற்-
அவன் தரிக்கும் ஆயுதம்
கருப்பூரம் நாறுமோ கமலப் பூ நாறுமோ -நாச் திரு -7-1-என்று கேட்கலாய் இருக்கிறதோ
அருளார் திருச் சக்கரம் -திரு விருத்தம் -33 என்றும்
அறமுயலாழி-திரு வாய் மொழி -2-10-5- என்றும்
எப்போதும் ஒக்க வ்ருத்த மந்த்ரிகளைப் போலே
அறத்திலே முயலச் சொல்லுகிற திருவாழி அன்றே –
சர்வ காலமும் கொலையிலே முயல வேணும் -என்று எப்போதும் சொல்லா நிற்பதாய்
அவனுக்கு ஸ்லாக்கியமான ஆயுதம் இ றே –
கூத்தன் –
தூய நடம் பயிலும் -பெரியாழ்வார் திரு மொழி -1-6-6-
என்று இனிதாய் இருக்கிறதோ –
பொடியாடி-
அவனுடைய அங்க ராகம் இருந்த படி –
அன்னவன் –
இப்புடைகளிலே -ஊமத்தை -எருக்கு -அஸ்தி -என்றால் போலே இவற்றால் அலங்க்ருதனாய் இருக்கிற-அனுசந்தித்து -அத்தைத் தன் வாயாலே சொல்ல மாட்டாமையாலே-அன்னவன் -என்கிறாள்
வெந்தார் என்பும் –பெரிய திருமொழி -1-5-8-என்றும் –
ஆறும் பிறையும் -பெரிய திருமொழி -6-7-9-என்றும் –
அக்கும் புலியன தளமும் -பெரிய திருமொழி -9-6-1-என்றும் –
பொடி சேர் அனல் கங்கை -முதல் திருவந்தாதி -97-என்றும் –
நீற்றான் -முதல் திருவந்தாதி -74-என்றும் –
அவன் படிகள் சொல்லிற்று இ றே –
தன் பொன்னகலம் சென்று ஆங்கு அணைந்து இலளே –
ஒருதலைக் காமமாய் தானே சென்று அத்தசையிலே சம்ச்லேஷித்து இலளோ-தான் இப்படி அவன் பக்கலிலே அபி நிவிஷ்டையாகை-அதுக்கு ஸ்த விரகாரி-அவனை ஒழியச் செய்தாள் என்று பேராக வேணும் என்று அன்றோ தானே சென்று அணைந்தது –
பன்னி யுரைக்கும் கால் பாரதமாம் பாவியேற்கு-
இவற்றைப் பரக்க விருந்து உபபாதிக்கப் புக்கால் ஓர் அளவில் தலைக் கட்டுவது ஓன்று அன்று -பரக்கச் சொல்லப் புக்கால் –
மஹா பாரதம் போலே சபாத லஷ கிரந்தத்ததுக்குப் போரும்
பாவியேன் -கேட்கிற இவர்களுக்கு பறக்கச் சொல்லலாம் படி இட்டுப் பிறந்திலேன்
பரக்கச் சொல்லுமது கேட்க வேண்டில் அவ்யாசாதிகள் பக்கலிலே சென்று கேட்டுக் கொள்வது –
நாட்டார் படி கொண்டு கார்யம் என் எனக்கு –
என்னுறு நோய் யானுரைப்பக் கேண்மின் –
நான் பட்ட பாடு சொல்ல வேணும் ஆகில் கேளுங்கோள்-என்கிறாள்-
என் அபிமத விஷயத்தை அனைத்து அல்லது தரிக்க மாட்டாத நான் கொண்ட நோவை
நீங்களும் கேளுங்கோள் –
என் உறு நோய்-
மறுபாடுருவக் கொண்ட நோய்
யான் உரைப்பக் கேண்மின்
நோய் கொண்ட நான் சொல்லக் கேளுங்கோள் –
வேறு ஒருவருக்கு நிலம் அல்ல என் நோய்
இதின் தலையைப் பற்றி அலையும் அதிலும் இந்நோய் தானே உத்தேச்யமாய் இருக்கை
யான் உரைப்ப
நோய் கொண்டார் இருக்க
வேறே சிலர் சொல்லப் புக்கால்
பட்டது எல்லாம் தெரியாமையாலே உள்ளத்து எல்லாம் சொல்லப் போகாது இ றே
இவள் நோய் என்றால் சாதுர்த்திகமாய் இராது இ றே –
ஸ்ரீ பரத ஆழ்வான் நோய் போலே –
கேண்மின் –
செவி படைத்த பிரயோஜனம் பெறக் கேளுங்கோள் –
பரத்வ ஜ்ஞானத்தாலே பகவத் தத்தவத்தை அறிந்தவர்கள் அன்றோ க்ரம ப்ராப்தி அறிந்து ஆறி இருப்பர்-உகந்து அருளின நிலங்களிலே புக்குக் கண்ணாரக் கண்டு அனுபவிக்கப் பெற்ற நான் ஆறி இருப்பேனோ-
இரும் பொழில் சூழ் –
பரப்பை உடைத்தான ஸ்லாக்யமான பொழிலாலே சூழப் பட்டு இருப்பதாய்
எங்கும் ஒக்கச் சோலையும் பணையுமாய்க் கிடக்கும் இத்தனை இ றே –
மன்னு மறையோர் திரு நறையூர் –
மறையோர் மன்னும் திரு நறையூர் –
வேத வாக்யங்கள் எல்லாம் உபாசனத்தையே விதிக்கிறது என்று அறுதி இட்டு இருக்கிறவர்கள்-வர்த்தியா நிற்கிற திரு நறையூர்
மடல் எடுக்கை நியத கர்த்தவ்யம் -என்று இருக்கிறவர்கள் நித்ய வாஸம் பண்ணுமூர்-
நிதித்யாசி தவ்ய -என்கிற வாக்யத்தையே பற்றி இருப்பார் வர்த்திக்கும் தேசம் –
மா மலை போல்-
மலையைக் கொடு வந்து நெருங்க வைததால் போலேயாய்-
பொன்னியலும் மாடக் –
அதி ஸ்லாக்கியமாய் ஸ்ப்ருஹணீயமான மாடங்களில் உண்டான –
கவாடம் கடந்து புக்கு என்னுடைய கண் களிப்ப நோக்கினேன் –
கண்கள் ஆரளவும் நின்று கண்ண மங்கையுள் கண்டு கொண்டேன் -பெரிய திருமொழி -7-10-9-என்னுமா போலே
படபாமு காக்னி தெகுட்டினால் போலே விடாய்த்த கண்கள் குளிரும்படி நோக்கினேன் –
அதொரு பிரதாபமும் –
நோக்குதலும் மன்னன் –
த்ருஷ்ட ஏவ ஹி ந சோக மப நேஷ்யதி ராகவ -என்னும்படியே நோக்கின அநந்தரம்
மமேதம் -என்கிற பிரதி பந்தகம் அடங்கப் போய்-அவ்விஷயத்தை அனுபவிக்கப் பெற்றிலேன்-மமேதம் அடங்கலும் போயிற்று-அனுபவம் மடலேயாய் விட்டது –
——————————————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .
Leave a Reply