Archive for June, 2014

ஸ்ரீ முதல் திருவந்தாதி-பாசுரம் -71 -ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

June 30, 2014

அவதாரிகை –

நாட்டார் செய்த படி செய்கிறார்கள்
நெஞ்சே
நீ இவ் விஷயத்தை விடாதே கிடாய்
என்கிறார்

வியன் மூ வுலகு பெறினும் போய்த் தானே தானே யானாலும்
புயல் மேகம் போல் திரு மேனி யம்மான் புனை பூம் கழல் அடிக் கீழ்
சயமே யடிமை தலை நின்றார் திருத் தாள் வணங்கி இம்மையே
பயனே இன்பம் யான் பெற்றது உறுமோ பாவியேனுக்கே ? –திருவாய் மொழி -8-10-2-இத்யாதிப் படியே

ஐஸ்வர்ய கைவல்யங்களில்  புகாதே
அவன் தன்னையே பற்று
என்கிறார் –

————————————————————–

நன்று பிணி மூப்புக் கையகற்றி நான் கூழி
நின்று நிலமுழுது மாண்டாலும் -என்றும்
விடலாழி நெஞ்சமே வேண்டினேன் கண்டாய்
அடலாழி கொண்டான் மாட்டன்பு —–71–

பதவுரை

ஆழி நெஞ்சமே–(எம்பெருமானிடத்தில்) ஆழ்ந்திருக்கிற நெஞ்சே!
பிணி–வியாதியையும்
மூப்பு–கிழத் தனத்தையும்
நன்று கை அகற்றி–நன்றாக [ அடியோடு தொலைந்தொழியும்படி] விட்டும் [கைவல்ய மோஷத்தைப் பெற்றாலும்]
நான்கு ஊழி–நான்கு யுகங்களிலும் [காலமுள்ள வரையுலும்]
நின்று–ஸ்திரமாக இருந்து
நிலம் முழுதும் ஆண்டாலும்–பூமி தொடங்கிப் பிரமலோகம் வரையுள்ள இந்த அண்டைஸ்வரியங்கள்
முழுவதையும் ஸ்வாதீனமாய் நிவகிக்கப் பெற்றாலும்
அடல் ஆழி கொண்டான் மாட்டு அன்பு–தீக்ஷ்ணமான திருவாழியைக் கையிலேந்திய பெருமானிடத்தில் ப்ரீதீயை
விடல்–விடாமலிரு;
வேண்டினேன்–உன்னைப் பிரார்த்திக்கின்றேன் காண்.

—————————————————————–

நன்று பிணி மூப்புக் கையகற்றி
இத்தால் கைவல்யத்தைச் சொன்னபடி –
அழகிதாக வியாதி தொடக்கமான வற்றை எல்லாம்
கை கழல விடுவது –

நான்கு ஊழி நின்று நிலமுழுது மாண்டாலும் –
கால தத்வம் உள்ளதனையும் நின்று
பூமிப் பரப்பை ஆளப் பெறுவது

இத்தால்
ப்ரஹ்மாதி களுடைய ஐஸ்வர்யத்தைச் சொன்ன படி
கீழ்ச் சொன்ன கைவல்யத்தோடே
இவ் வைஸ்வர்யத்தைப் பெற்றாலும் –

என்றும் விடல் –
ஒரு நாளும் விடாதே கொள்-

ஐஸ்வர்யம் நிலை நில்லாதது
கைவல்யம் பகவத் கைங்கர்யத்தைப் பார்க்க அல்பம்

ஆகையாலே
இரண்டையும் சேர்த்துச் சொல்லுகிறது

இவை நன்றான வன்றும்
விடுகைக்கு -அவன் அல்லாமையும்
பற்றுகைக்கு அவனாகையும் அமையும் –

ஆழி நெஞ்சமே வேண்டினேன் கண்டாய் –
பால் குடிக்க இரக்கிறேன் இறே

நீ முற்பட்டு இருக்க
உன்னை இரக்கிறேன் இறே –

அடலாழி கொண்டான் மாட்டன்பு விடல் –
கைக் கூலி கொடுத்துப் பற்ற வேண்டும் விஷயம்
பிரதி பஷத்தின் மேலே சினந்து வாரா நின்றுள்ள
திரு வாழியைக் கையிலே யுடையவன் பக்கல் உண்டான
ஸ்நேஹத்தை விடாதே ஒழிய வேணும்

எனக்கும் உபதேசிக்க வல்ல
அளவுடைய நெஞ்சே   –

—————————————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ முதல் திருவந்தாதி-பாசுரம் -70 -ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

June 30, 2014

அவதாரிகை –

இருந்தபடி இது வாகையால்
ஒரு சக்தனைப் பற்ற வேண்டி இருந்தது இறே
ஆன பின்பு
ஜகத்தில் உள்ளார் அடங்கலும் அநந்ய பரராய்க் கொண்டு இவனை ஆஸ்ரயிங்கோள்   –
என்கிறார் –

————————————

சொல்லும் தனையும் தொழுமின் விழுமுடம்பு
செல்லும் தனையும் திருமாலை -நல்லிதழ்த்
தாமத்தால் வேள்வியால் தந்திரத்தால் மந்திரத்தால்
நாமத்தால்  ஏத்துதிரேல் நன்று –70-

பதவுரை

திருமாலை–பிராட்டியோடு கூடின பெருமானை
நல் இதழ் தாமத்தால்–அழகிய மலர்களைக் கொண்டு தொடுத்த மாலைகளாலும்
வேள்வியால்–யாகம் முதலிய ஸத் கரு மங்களாலும்
தந்திரத்தால்–(மந்த்ரமில்லாத) வெறும் க்ரியைகளாலும்
மந்திரத்தால்–(க்ரியா கலாபமில்லாத) வெறும் மந்திரங்களாலும்
விழும் உடம்பு செல்லும் தனையும்–அஸ்திரமான இந்த சரீரம் உள்ள வரையில்
தொழுமின்–தொழுங்கள்;
(இவற்றை செய்ய சக்தி யில்லா விட்டால்)
சொல்லும் தனையும்–(உங்களுக்குச்) சொல்லக் கூடிய சக்தியுள்ள வரையிலும்
நாமத்தால்–திரு நாமங்களைக் கொண்டு
ஏத்துதிர் ஏல்–புகழ்ந்தீர்களாகில்
நன்று–அது மிகவும் நல்லது.

——————————————————

வியாக்யானம் –

விழும் உடம்பு செல்லும் தனையும்
நல்லிதழ்த்   தாமதத்தால் வேள்வியால் தந்திரத்தால் திரு மாலைத் தொழுமின்
மந்திரத்தால் நாமத்தால் ஏத்துதிரேல் நன்று –

சொல்லும் தனையும் –
வாக் இந்த்ரியமானது விதயேமாம் அளவும் –

தொழுமின் –

விழுமுடம்பு செல்லும் தனையும் –
அஸ்திரமான சரீரமானது விழும் அளவும்

நல்லிதழ்த் தாமத்தால்-
நல்ல செவ்விப் பூவை உடைத்தான மாலையாலே

வேள்வியால் –
செவ்விப் பூ கிடையாதாகில்
கர்த்தவ்யமான
யாகாதி கர்மங்களாலே

தந்திரத்தால் –
மந்திர தந்த்ரம் அடையச் செய்யப் போகாதாகில்
தந்திர ரூபமான க்ரியாதிகளாலே-
க்ரியா ரூபமான தந்த்ரம் செய்யப் போகாதாகில்
மந்திரத்தால் –
மந்தரத்தால்

நாமத்தால் –
மந்த்ரத்துக்கு தேச கால நியதியும்
அதிகார நியதியும் வேணும் என்று
இருந்தி கோளாகில்
நாமத்தால் ஏத்துவது –

ஆரை என்னில் –
திருமாலை –
வகுத்த விஷயத்தை –
மாதா பிதாக்கள் பேர் சொல்லச் சடங்கு வேணுமோ

இம் மாத்ரத்தைக் குவாலாக்குகைக்கு
அவள் கூடி இருந்தாள்-

ஏத்துதிரேல் நன்று

——————————————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ முதல் திருவந்தாதி-பாசுரம் -69 -ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

June 30, 2014

அவதாரிகை –

உணர்வார் ஆர் என்று
பிறர் விஷயமாகச் சொல்லிற்று
அது கிடக்க
உன்னாலே தான் உன்னை அறியப் போமோ
என்கிறார் –

—————————-

பாலன்  றனதுருவாய்  யேழுலகுண்டு ஆலிலையின்
மேலன்று நீ வளர்ந்த மெய்யன்பர் ஆலன்று
வேலைநீ ருள்ளதோ விண்ணதோ மண்ணதோ
சோலை சூழ் குன்றெடுத்தாய் சொல்லு —–69-

பதவுரை

சோலை சூழ் குன்று எடுத்தாய்–சோலைகளால் சூழப்பட்ட கோவர்த்தன மலையைக் குடையாக வெடுத்துப் பிடித்தவனே!
நீ பாலன் தனது உரு ஆய்–நீ சிறு குழந்தை வடிவு கொண்டு
ஏழ் உலகு–எல்லா வுலகங்களையும்
உண்டு–திரு வயிற்றிலே வைத்து
ஆல் இலையின் மேல்–ஓர் ஆலந்தளிரின் மேல்
அன்று–பிரளய காலத்தில்
வளர்ந்த–கண் வளர்ந்த செயலை
மெய் என்பர்–(வைதிகர்கள் யாவரும்) ஸத்யமென்கிறார்கள்.
அன்று-(எல்லாம் அழிந்து கிடந்த) அக் காலத்தில்
ஆல்–அந்த ஆலானது
வேலை நீர் உள்ளதோ–வெள்ளங் கோத்துக் கிடக்கிற பிரளய ஸமுத்திரத்தின் ஜலத்திலுள்ளதோ?
(அல்லது)
விண்ணதோ–(நிராலம்பமான) ஆகாசதிலுள்ளதோ?
மண்ணதோ–(பிரளய ஜலத்திலே கரைந்து போன) பூமியிலுள்ளதோ?
சொல்லு–இவ் வாச்சரியத்தை நீயே சொல்ல வேணும்.

————————————————————————

வியாக்யானம் –

பாலன்  றனதுருவாய்-இத்யாதி
அக் குறட்டிலே தெறித்தால் இக் குறட்டிலே பால் பெருகும் படியான
பருவத்தை யுடையனாய்
ஏழு   உலகங்களையும் வயிற்றிலே வைத்து
ஒரு பாவனான ஆலந் தளிரிலே நீ பண்டு கண் வளர்ந்து அருளின இதுவே
ஐந்தர ஜாலிகர் உடைய வ்யாபாரமாய்ப் போகை யன்றிக்கே
ப்ரமாணிகர் இத்தை சத்யம் என்னா நின்றார்கள் –

பாலன்  றனதுருவாய்-
தனக்கு ரஷகர் வேண்டும் தசையிலே தான் ரஷகனாய்
அப்ராக்ருதமான திரு மேனியைச் சிறுக்கி
சஜாதீயம் ஆக்குகை-

யேழுலகுண்டு -ஆலிலையின் மேலே
அனுகூல பிரதிகூல விபாகம் இன்றிக்கே ஸ்வ வ்திரிக்த சகல பதார்த்தத்தையும் ரஷித்த படி –
சிறு வடிவுக்கும் கூடக் கண் வளரப் போகாத ஆலிலையின் மேலே –

அன்று நீ வளர்ந்த மெய் என்பர் –
லோகம் எல்லாம் அழிந்த அன்று
நீ கண் வளர்ந்ததை மெய் என்பர்
ஆப்த தமரான ரிஷிகள்

மெய் என்பர் -ஆலன்று வேலைநீ ருள்ளதோ விண்ணதோ மண்ணதோ
பிரமாணிகருக்கு மெய் என்னலாய்
அல்லாதர்க்குப் பொய் என்னலாய் இருக்கும்

அந்த ஆலானது
தான் கண்ணுக்கிட ஒரு துரும்பும் கூட இல்லாத வன்று
கண்ட இடம் எங்கும் வெள்ளம் கோ த்துக் கிடக்கிற சமுத்ரத்தில் உள்ளதோ

அன்றிக்கே
நிராலம்பமான ஆகாசத்திலே உள்ளதோ

இல்லை யாகில்
பிரளயத்தில் கரைந்து போன பூமியில் உள்ளதோ

பின்னை இது தான் செய்தது என் என்னில் –
அவனும் இவரைக் கொண்டு நிச்சயிக்க நினைத்து இருந்தான்-

சோலை சூழ் குன்றெடுத்தாய் சொல்லு –
நீ ஏழு பிராயத்திலே மலையை எடுத்து நீயே சர்வத்துக்கு
ஆதாரனுமாய் நின்ற ஆச்சரியமும் சொல்ல வேணும்

இத்தால் சொல்லிற்று ஆய்த்து-
உன்னுடைய அகடிதகட நா சாமர்த்தியம் கண்ணால் கண்டு போம் இத்தனை போக்கி
ஓரடி ஆராயப் போமோ
இவ்வாதார ஆதேய பாவம் புறம்பு கண்டிலோம் -என்கிறார்

இத்தால்
அவன் தன்னாலும் அவன் படி சொல்லப் போகாது -என்றபடி

இந்த ஆலுக்கு ஆதார பூமி தான்
நீருக்கு உள்ளே கரையாதே கிடந்தது
ஆரைப் பற்றி  –

—————————————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ முதல் திருவந்தாதி-பாசுரம்-67 /பாசுரம் -68 -ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

June 30, 2014

பாசுரம்–67-

அவதாரிகை
மோக்ஷ இச்சை யுடையவர்களும்
அறிவு தலை நின்றவர்களும்
அவனுடைய திருவடிகளை ஏத்துவது
திரு நாமங்களை ஓதுவது -என்று சொல்லிற்று கீழே

இந்த நிர்பந்தம் வேண்டுவான்
என் என்னில்
நாம் தான் அறிவு யுடையாரை இறே சொல்லிற்று
அந்த அறிவுக்குக் கந்தவ்ய பூமி
ஸ்ரீ யபதி அல்லது இல்லாமையாலே என்கிறார் –

பெயரும் கருங்கடல் நோக்கும் ஆறு ஒண் பூ
உயரும் கதிரவன் நோக்கும் -உயிரும்
தருமனையே நோக்கும் ஒண் தாமரையாள் கேள்வன்
ஒருவனையே நோக்கும் உணர்வு –67-

பதவுரை

ஆறு–ஆறுகளானவை
பெயரும் கரு கடலே நோக்கும்–பொங்கி கிளர்கின்ற மஹா ஸமுத்ரத்தையே நோக்கிச் செல்லும்;
ஒண் பூ–அழகிய தாமரைப் பூவானது
உயரும்–உயர்ந்த ஸ்தாநத்திலே [ஆகாசத்திலே] இருக்கிற
கதிரவனே–ஸூர்யனையே
நோக்கும்–கண்டு மலரும்;
உயிரும்–பிராணனும்
தருமனையே நோக்கும்–யம தர்ம ராஜனையே சென்று சேரும்;
[இவை போலவே]
உணர்வு–ஞானமானது
ஒண் தாமரையாள்–அழகிய தாமரைப் பூவிற்
கேள்வன்–பிறந்த பிராட்டிக்கு
ஒருவனையே–வல்லபனான பெருமானொருவனையே
நோக்கும்–சென்று பற்றும்

பெயரும் கருங்கடல் நோக்கும் ஆறு
ஆறாகில் பூர்ணமாய் ஸஞ்சரியா நின்றுள்ள கடலையே நோக்கக் கடவதாய் இருக்கும்

கடலை நிறைக்கப் புகுகிறது அல்லவே
புக்கு அல்லது தான் தரிக்க மாட்டாமையாலேயே

ஒண் பூ உயரும் கதிரவன் நோக்கும் –
அழகிய பூவானது ஆதித்யன் எத்தனையேனும் தூரஸ்தனாகிலும் –
அவனையே பார்த்து
அவனுக்கு அல்லது அலராது

கிட்டின நெருப்புக்கு அலர ஒண்ணாதே

உயிரும் தருமனையே நோக்கும்
சேதன வர்க்கம் அடங்க ப்ராயேண யம வஸ்யராயே இருக்கக் கடவது

அவனே அவ்விடம் நமக்கு நிலம் அன்று என்று கை வாங்கிப் போம் இடத்தை ஒழிந்த
இடம் எங்கும் இங்கனே இருக்கக் கடவது –

ஒண் தாமரையாள் கேள்வன் ஒருவனையே நோக்கும் உணர்வு
அப்படியே அறிவாகில் ஸ்ரீ யபதியைப் பற்றி யல்லது இராது

ஸம் ஜ்ஞாயதே யேந ததஸ் தோஷம் ஸூத்தம் பரம் நிர்மல மேக ரூபம் ஸந்த்ருச்யதே வா
அப் யதி கம்யதே வா தத் ஞானம் அஞ்ஞானம் அதோ அந்ய துக்தம் –ஸ்ரீ விஷ்ணு புராணம் –6-5-87-

எந்த அறிவினால் தோஷம் ஏற்றதும் சுத்தமானதும் மலம் ஏற்றதும் ஒப்புயர்வற்றதுமான
அந்தப் பர வஸ்து அறியப் படுகின்றதோ அதுவே ஞானம்
மற்றவை அனைத்தும் அஞ்ஞானம் எனப்படும்

இவ் வாத்மா வாகிற தாமரைக்கு ஞானமாகிய விகாஸம் பிறக்கைக்கு
பாஸ்கரனும்
பிரபையும் இறே
ஒண் தாமரையாளும் கேள்வனும்

ஒருவனையே என்கிற அவதாரணைக்கு
வ்யாவ்ருத்தம் தான்
அத்தலையாலே தோற்றும் தான் ஒழிய தனித் தோற்றம் தான் இன்றிக்கே இருக்கை

திருவடிகளில் ரேகையும் சாயையும் போலே
நிழலும் அடி தாறும் ஆனோம் —

——————-

பாசுரம் –68-

அவதாரிகை –

அறிவுக்கு பர்யவசாந பூமி அவன் அல்லது இல்லை –
இங்கனே இருக்கச் செய்தே அவன் தன்னை அறிவார் தான் இல்லை
என்கிறார் –

—————————

உணர்வாரார் உன் பெருமை ஊழி தோறு ஊழி
உணர்வாரார் உன் உருவம் தன்னை உணர்வாரார்
விண்ணகத்தாய் மண்ணகத்தாய் வேங்கடத்தாய் நால்  வேதப்
பண்ணகத்தாய் நீ கிடந்த பால் –68-

பதவுரை

விண்ணகத்தாய்–பரமபதத்திலெழுந்தருளி யிருப்பவனே!
மண்ணகத்தாய்–இந்த மண்ணுலகில் திருவவதரிப்பவனே!
வேங்கடத்தாய்–திருமலையில் நின்றருள் பவனே!
பண் நால் வேதம் அகத்தாய்–ஸ்வர ப்ரதானமான நான்கு வேதங்களாலும் அறியப் படுபவனே!
உன் பெருமை–(இப்படிப்பட்ட) உன்னுடைய பெருமையை
ஊழி தோறு ஊழி–காலமுள்ளதனையும்
(இருந்து ஆராய்ந்தாலும்)
உணர்வார் ஆர்–அறியக் கூடியவர் யாவர்?
உன் உருவம் தன்னை–உனது திவ்யாத்ம ஸ்வரூபத்தைத் தான்
உணர்வார் ஆர்–அறியக் கூடியவர் யாவர்?
நீ கிடந்த பால்–(ஆர்த்த ரக்ஷணத்துக்காக ) நீ பள்ளி கொண்டிருக்கப் பெற்ற திருப் பாற்கடலைத் தான்
உணர்வார் ஆர்–அறிய வல்லாரார்? [எவருமில்லை.]

————————————————-

வியாக்யானம் –

உணர்வாரார் உன் பெருமை ஊழி தோறு ஊழி –
வர்ஷாயுதைர் -இத்யாதிப் படியே
கால த்ரயத்தையும் ஒரு போகி யாக்கி நின்று அறியப் புக்காலும்
உன்னுடைய குணாதிக்யத்தால் வந்த பெருமை சிலரால் அறியப் போமோ –

உணர்வாரார் உன் உருவம் தன்னை –
உன்னுடைய ஸ்வரூப குணங்களைத் தான் அறியப் போமோ –

உணர்வாரார் விண்ணகத்தாய் மண்ணகத்தாய் வேங்கடத்தாய் -நால்  வேதப் பண்ணகத்தாய் நீ கிடந்த பால்
ஸ்ரீ வைகுண்டத்தைக் கலவிருக்கையாக உடையயையுமாய்
சம்சாரத்திலே வந்து அவதரிக்கும் ஸ்வ பாவனுமாய்
இரண்டு இடத்துக்கும் சாதாரணமாகத்
திருமலையில் நின்று அருளுவானுமாய் –
நல்ல ஸ்வரத்தை யுதைத்தான வேதைக சமதி கம்யமாய் உள்ள நீ

கிடந்த பால் உணர்வார் யார்
நீ கிடந்த இடம் -என்னுதல்
நீ கிடந்த திருப் பாற் கடலை  -என்னுதல்

கடல் கிட்டிற்று என்றால் பரிச்சேதிக்கப் போகாது இறே

தஸ்ய யோநிம்
அவனுடைய பிறப்பு
உயர்வற உயர்நலம் உடையவன் பிறப்பு

தீரா
தீமதாம் அக்ரேசரா-
மயர்வற மதி நலம் அருளப் பெற்றார்

பரிஜா நந்தி
ஷணம் தோறும் எத்திறம் -என்பர் –

நால் வேதப் பண்ணகம் –
வேதம் காட்டுகிற அர்த்த சக்தி உன்னாலே

அர்த்தோ விஷ்ணுரியம் வாணீ நீதிரேஷா   நயோஹரி போதோ விஷ்ணுரியம் புத்திர் தரமோ சௌ
சத்க்ரியாத்வியம் -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-8-18-

———————————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

முதல் திருவந்தாதி-பாசுரம் -67 -ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

June 30, 2014

அவதாரிகை –

மோஷ இச்சை யுடையவர்களும்
அறிவு தலை நின்றவர்களும்
அவனுடைய திருவடிகளையே ஏத்துவது
திரு நாமங்களை ஓதுவது
என்று சொல்லிற்று -கீழே –
இந்த நிர்பந்தம் வேண்டுவான் என் என்னில்
நாம் தான் அறிவுடையாரை இ றே சொல்லிற்று
அந்த அறிவுக்கு கந்தவ்ய பூமி ஸ்ரீயபதி யல்லது இல்லாமையாலே
என்கிறார் –

———————————————————————————————————————————————-

பெயரும் கருங்கடலே நோக்குமாறு ஒண் பூ
உயரும் கதிரவனே நோக்கும் உயிரும்
தருமனையே நோக்கும் ஒண் தாமரையாள் கேள்வன்
ஒருவனையே நோக்கும் உணர்வு ———————————-67-

————————————————————————————————————————————————–

வியாக்யானம் –

பெயரும் கருங்கடலே நோக்குமாறு –
ஆறாகில் பூரணமாய் சஞ்சரியா நின்றுள்ள கடலையே
நோக்கக் கடவதாய் இருக்கும்   –
கடலை நிறைக்கப் புகுகிறது இல்லை
புக்கு அல்லது தரிக்க மாட்டாமை –

ஒண் பூ உயரும் கதிரவனே நோக்கும் –
அழகிய பூவானது ஆதித்யன் எத்தனைஎனும்
தூரஸ்தான் ஆகிலும்
அவனையே பார்த்து அவனுக்கு அல்லது அலராது-
கிட்டின நெருப்புக்கு அலர ஒண்ணாது –

உயிரும் தருமனையே நோக்கும் –
சேதன வர்க்கம் அடங்க ப்ராயேண யம வச்யராயே இருக்கக் கடவது
அவனே அவ்விடம் நமக்கு நிலம் அன்று என்று கை வாங்கிப்
போம் இடத்தை ஒழிந்த இடம் எங்கும்
இங்கனே இருக்கக் கடவது  –

ஒண் தாமரையாள் கேள்வன் ஒருவனையே நோக்கும் உணர்வு –
அப்படியே -அறிவாகில்-ஸ்ரீ யபதியைப் பற்றி யல்லது இராது –
தத் ஜ்ஞானம் அஜ்ஞானம் அதோன்யதுக்தம்-ஸ்ரீ விஷ்ணு புராணம் -6-5-87-
இவ்வாத்மா வாகிற தாமரைக்கு ஜ்ஞானம் ஆகிற விகாசம் பிறக்கைக்கு பாஸ்கரனும்
பிரபையும் இ றே ஒண் தாமரையாளும் கேள்வனும்
ஒருவனையே என்கிற அவதாரணைக்கு வ்யாவ்ருத்தம் தான் அத்தலையாலே தோற்றும்  தான் ஒழிய
தனித் தோற்றம் தான் இன்றிக்கே இருக்கை-
திருவடிகளில் ரேகையும் சாயையும் போலே
நிழலும் அடி தாறும் ஆனோம்  –

——————————————————————————————————————————————————–

பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ முதல் திருவந்தாதி-பாசுரம் -66 -ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

June 30, 2014

அவதாரிகை –

அறிவுடையராய் இருப்பார்கள் ஆகில்
பஜநீயன் அவனே கிடீர்
என்கிறார் –

———————————-

காலை எழுந்து உலகம் கற்பனவும் கற்று உணர்ந்த
மேலைத் தலை மறையோர் வேட்பனவும் வேலைக் கண்
ஓராழி யானடியே யோதுவது மோர்ப்பனவும்
பேராழி கொண்டான் பெயர் ——66-

பதவுரை

உலகம்–உயர்ந்தவர்களான முமுக்ஷுக்கள்
காலை எழுந்து–(ஸத்வ குணம் வளரக் கூடிய ) விடியற் காலையில் துயில் விட்டெழிந்து
கற்பனவும்–அப்யஸிப்பனவும்,
கற்று உணர்ந்த மேலை தலை மறையோர்–படித்து அறிவு நிரம்பிய வைதிக உத்தமர்கள்
வேட்பனவும்–ஸாக்ஷாத்கரிக்க ஆசைப்படுவனவும்.
(எவை யென்றால்)
வேலைக் கண் ஓர் ஆழியான்–திருப்பாற்கடலில் ஒப்பற்ற திருவாழியை யுடையனாய்ப்
பள்ளி கொண்டிருக்கும் பெருமானுடைய
அடியே–திருவடிகளேயாம்;
ஓதுவதும்–மஹான்களால் ஸ்ரவணம் பண்ணப் பெறுவனவும்
ஓர்ப்பனவும்–மநநம் பண்ணப் பெறுவனவும்
(எவையென்றால்)
பேர் ஆழி கொண்டான்–பெரிய கடல் போன்ற திருமேனியைக் கொண்ட அப்பெருமானுடைய
பெயர்–திருநாமங்களேயாம்.

————————————————————————–

வியாக்யானம் –

காலை எழுந்து உலகம் கற்பனவும்-
பஜன உபக்கிரம சமயத்திலே எழுந்து இருந்து
லோகம் அடங்க அதிகரிக்கும் இடமும்
சத்வ உத்தர காலத்தில் செய்ய அடுப்பது இதுவே இறே

கிளிரொளி யிளமை -திருவாய்மொழி -2-10-1-

காலை நன்ஞானத் துறை படிந்தாடி -திரு விருத்தம் -93-

ஸ்திதே மனஸி-

கற்று உணர்ந்த மேலைத் தலை மறையோர் வேட்பனவும்-
அறிவு தலை நின்றேறி அறிந்தவர்கள் பாவனா பிரகர்ஷத்தாலே
சாஷாத் கரிக்க ஆசைப் படுமதுவும் –

வேலைக் கண் ஓராழி யானடியே –
கரையை யுடைத்தாய்
இடமுடைத்தான கடலிலே திருக் கண் வளர்ந்து
அருளுகிறவனுடைய திருவடிகளை -என்னுதல் –

அன்றிக்கே
வேலை என்று கடல் தனக்கே பேராக்கி
ரஷணத்துக்கு  பரிகரமான திரு வாழியை உடையவன் என்னவுமாம் –

யோதுவது மோர்ப்பனவும் பேராழி கொண்டான் பெயர் –
ஓதுவதும் ஒர்ப்பனவும்
ஸ்ரவண மனனம் பண்ணுவதும்
ஸ்ரமஹரமான வடிவை உடையவனுடைய திரு நாமத்தை
கீழ்ச் சொன்ன இவ்வர்த்தத்துக்கு சாதன ரூபமாகச் செய்யுமவை இறே –

—————————————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ முதல் திருவந்தாதி-பாசுரம் -65 -ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

June 30, 2014

அவதாரிகை –

இது எனக்கு ஒருவனுக்குமே யன்று –
அவனை ஆஸ்ரயித்தார் எல்லார்க்கும் கிடீர்
என்கிறார்  –

—————————————————-

வினையால் அடர்ப்படார் வெந்நரகில் சேரார்
தினையேனும் தீக்கதிக் கண் செல்லார் நினைதற்
கரியானைச் சேயானை ஆயிரம் பேர்ச் செங்கட்
கரியானைக் கை தொழுதக்கால்   –65–

பதவுரை

நினைதற்கு அரியானை–(ஸ்வ ப்ரயத்நத்தாலே) நினைப்பதற்குக் கூடாதவனும்
சேயானை–(நெஞ்சுக்கு விஷயமாகாதபடி) மிக்க தூரத்திலிருப்பவனும்
ஆயிரம் பேர்–ஆயிரம் திருநாமங்களை யுடையவனும்
செம் கண் கரியானை–சிவந்த திருக் கண்களையும் கறுத்த வடிவை யுமுடையனுமான பெருமானைக் குறித்து
கை தொழுதக்கால்–அஞ்சலி பண்ணினால்
(அப்படி அஞ்சலி பண்ணினவர்கள்)
வினையால்–நல் வினை தீ வினைகளால்
அடர்ப் படார்–நெருக்கு பட மாட்டார்கள்;
வெம் நரகில்–கொடிய சம்ஸாரமாகிற நரகத்தில்
சேரார்–(மீண்டும்) சென்று கிட்ட மாட்டார்கள்;
தினையேனும்–சிறிதளவும்
தீ கதிக்கண்–கெட்ட வழிகளில்
செல்லார்–போக மாட்டார்கள்.

——————————————————————————

வியாக்யானம் –

வினையால் அடர்ப்படார் –
புண்ய பாப ரூப கர்மங்களால் நெருக்குப் படார்

வெந்நரகில் சேரார் –
செய்தற்ற பாபங்களுக்குப் பல ரூபமான
சம்சாரத்தில் வந்து கிட்டார்

அன்றிக்கே
வினையால் அடர்ப்படார் -என்றது
இங்கு அனுபவிக்குமது
வெந்நரகு  போய் அனுபவிக்கும் அது –

தினையேனும் தீக்கதிக் கண் செல்லார் –
தர்ம புத்ரனுக்கு அர்த்த ஸ்வ பாவத்தாலே குறைவற்று இருக்க
பிரதிபத்தி விசேஷத்தாலே வந்த தொரு தடவற்   பொய்க்கு
நரக தர்சனம் பண்ண வேண்டிற்று இறே
அம்மாத்ரமும் வேண்டா இவர்களுக்கு -என்கிறார் –

இது எல்லாம் என் செய்தால் தான் என்னில்
நினைதற் கரியானைச் –
ஸ்வ யத்னத்தால் அறிவார்க்கு நினைக்கப் போகாதபடி
அபரிச்சேத்யனாய் இருக்கும்

சேயானை –
என் தான் இப்படி அருமைப் பட வேண்டுவான் -என் என்னில்
தூரஸ்தன் ஆகையாலே –

ஆனால் பின்னை  அணுக ஒண்ணாத படி இருக்குமோ -என்னில் –
ஆயிரம் பேர்ச் செங்கட் கரியானைக் கை தொழுதக்கால்   –
தான் கொடுத்த அறிவு கொண்டு தன்னை அனுபவிப்பார்க்கு இழிந்த விடம் எங்கும் துறையாம்படி
குண சேஷ்டிதாதி களுக்கு வாசகமான
ஆயிரம் திரு நாமங்களை உடையானாய்
வாத்சல்யத்தாலே சிவந்த கண்களை உடையனாய்
ஸ்ரமஹரமான வடிவை உடையனானவனை
ஆஸ்ரயித்தால்

வினையால் அடர்ப்படார் –
வெந்நரகில்  சேரார்  –
தினையேனும் தீக்கதிக் கண் செல்லார் –

பால் குடிக்க நோய் தீருமா போலே
அஞ்சலி மாத்ரத்தாலே போம் –

—————————————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ முதல் திருவந்தாதி-பாசுரம் -64 -ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

June 30, 2014

அவதாரிகை –

நயவேன் நள்ளேன் என்று இங்கனே துணியலாமோ
எல்லாம் செய்தாலும் அவை வந்து மேலிடில் செய்வது என் என்னில்
நான் நின்ற நிலை இதுவான பின்பு
எங்கனே அவை வந்து என்னை மேலிடும்படி
என்கிறார் –

1-ஈஸ்வர சேஷமான ஆத்ம வஸ்துவை என்னது என்று இருக்கையும்
2-அபாகவத ஜனங்களோட்டை சஹ வாசம் பண்ணுகையும்
3-பாகவதர்களோடு சஹ வாசம் அற்று இருக்கையும்
4-ஈஸ்வரன் பக்கல் பிரதிபத்தியில் குறைந்து இருக்கையும்
5-புருஷகாரத்தில் அத்யவசாயக்  குறை யுண்டாகையும்
இவை இறே தான் வினை வருகைக்கு அடி

அவை பின்னை எனக்கு உண்டோ –
என்கிறார்  –

——————————————-

நயவேன் பிறர் பொருளை நள்ளேன் கீழரோடு
உய்வேன் உயர்ந்தவரோடு  அல்லால் வியவேன்
திரு மாலை யல்லது தெய்வம் என்று ஏத்தேன்
வருமாறு என் என் மேல் வினை  —–64–

பதவுரை

பிறர் பொருளை–பரம புருஷனுடைய பொருளான ஆத்ம வஸ்துவை
நயவேன்–(என்னுடையதென்று) விரும்ப மாட்டேன்;
கீழாரோடு–ஸம்ஸாரிகளோடு
நள்ளேன்–ஸ்நேஹம் கொள்ள மாட்டேன்;
உயர்ந்தவரோடு அல்லால்–சிறந்த ஸ்ரீவைஷ்ணவர்களோடு தவிர (மற்றவர்களோடு)
உய்வேன்–கால க்ஷேபம் பண்ண மாட்டேன்.
திருமாலை அல்லது–எம்பெருமானை யன்றி (தேவதாந்தரங்களை)
தெய்வம் என்று ஏத்தேன்–தெய்வமாகக் கொண்டு துதிக்க மாட்டேன்;
வியவேன்-(இப்படியிருப்பதற்கு ஹேதுவான ஸத்வ குணம் எனக்குத் தானுள்ளதென்று
அஹங்கரித்து என்னைப் பற்றி நானே) ஆச்சரியப்படவும் மாட்டேன்;
(இப்படியான பின்பு)
என் மேல்–எம்பெருமானுடைய அநுக்ரஹத்திற்கு இலக்கான என் மேலே
வினை–அவனது நிக்ரஹ ரூபமான பாபம்
வரும் ஆறு என்–வரும் விதம் ஏது? [வர மாட்டாது]

———————————————————-

வியாக்யானம் –

நயவேன் பிறர் பொருளை –
சோரேண ஆத்ம அபஹாரிணா  -என்னக் கடவது இறே

த்ரவ்யமும் நன்றாய்
உடையவனும் ப்ராஹ்மணன் ஆனால்
அவ்வளவிலேயாய் இருக்கும் இறே பாபமும் –

வஸ்து தான் ஆத்மாவுமாய்
உடையவனும் ஈஸ்வரனுமானால்
இனி அவ்வளவிலே யாம் இத்தனை இறே பாபமும் –

பகவத் அதீய வஸ்துவை ஸ்வகீய புத்தி பண்ணேன் –

நள்ளேன் கீழரோடு –
பிறர் உடையதான பொருளை
என்னது என்று இருப்பாரோடு செறியேன் –

உய்வேன் உயர்ந்தவரோடு  அல்லால் –
உத்க்ருஷ்ட வஸ்து உத்க்ருஷ்டம் என்று இருப்பாரோடு அல்லது
போத யந்த பரஸ்பரம் பண்ணேன் –

இவர்கள் பேர் சொல்லும் போது உயர்ந்தவர் என்று சொல்லுவர்கள்
இவர்களை உயர்ந்தவர்கள் என்றது -அவர்களைக் கீழோர் என்றது இதுவே யாகாதே
ஏற்றத் தாழ்வுகளுக்கு பிரயோஜனம்
உயவேன் -என்றது
உசாவேன் -என்றபடி –

வியவேன் திரு மாலை யல்லது –
அவனை யல்லது தைவம் என்று ஏத்தேன்

ஸ்ரீ யபதியினுடைய ஐஸ்வர்யம் ஒழிய வேறு சிலரது கண்டால் விஸ்மயப் படேன்-

இனி அவனை யொழிய வேறே சிலரை ஆஸ்ரயணீயர்  என்று கொண்டு
அவர்களை ஸ்தோத்ரம் பண்ணேன் –

இங்கனே இருக்கிற என் மேல் வினை வருமாறு என் –
அனுபவ சேஷமாம் படிக்கு ஈடாகச் செய்தற்று நிற்கிற பாபங்கள் தாமே நம் பக்கலிலே வந்து கிட்ட வற்றோ
அவஸ்யம் அநு போக்தவ்யம் -என்கிற விதுக்கும் பிரயோஜனம் அனுபவிக்கை இறே

அதாகிறது
இவன் பண்ணிற்று  ஓர் அசத் க்ரியை அவன் திரு வுள்ளத்திலே கிடந்தது
நிக்ரஹ ரூபத்தாலே இறே பல பிரதமாவது
இதுக்குத் தனித்து ஓர்  அழற்றி இல்லை
இனி அவன் ஏதேனும் ஒரு வழியாலே பிரசன்னனாம் அன்று பின்னை இவற்றுக்கு இடம் இல்லை
ஹேத்வந்த ராபாவத்தாலே இவற்றுக்கும் வந்து கிட்டப் போகாது இறே –

வருமாறு என் என் மேல் வினை  –
ஔஷத சேவை பண்ணினவன் கூசாதே பாம்பின் வாயிலே கையிடா நின்றான் இறே
அம் மாத்ரம் போராமை இல்லை இறே இந்த ஜ்ஞானம் உடையவர் இவற்றுக்கு அஞ்சாதே இருக்கைக்கு –

என் மேல் வினை –
ஒரு சர்வ சக்தியைப் பற்றி இருக்கிற என் மேலேயோ ஓர் அசேதன க்ரியை வந்து கிட்டப் புகுகிறது

பிறர்க்கும் தன்னோடு ப்ராப்தி யுள்ள வன்று தனக்கும் தன்னோடு ப்ராப்தி யுள்ளது
ஆகை யன்றோ அந்ய சேஷத்வத்தோடு ஒக்க
ஸ்வ ஸ்வா தந்த்ர்யத்தையும் விலக்குகிறது

எம்பெருமான் மறக்க பூர்வாகங்கள் நசிக்கும்
அவன் அவிஜ்ஞாதாவாய் இருக்க
உத்தராகம் ஸ்லேஷியாது
இது திருவாய்க் குலத் தாழ்வானுக்கு  ஜீயர் அருளிச் செய்த வார்த்தை-

———————————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ முதல் திருவந்தாதி-பாசுரம் -63 -ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

June 30, 2014

அவதாரிகை –

இப்படி இருக்கிற சௌகுமார்யம் பாராதே
ஆஸ்ரித விஷயத்திலே தன்னை அழிய மாறியும்
கார்யம் செய்யும்படியான அவன் பக்கலிலே என்னுடைய
சகல இந்த்ரியங்களும் பிரவணம் ஆய்த்தின
நானும் பிரவணன் ஆனேன்
என்கிறார்-

——————————————————–

தோளவனை யல்லால் தொழா என் செவி யிரண்டும்
கேள்வன தின் மொழியே கேட்டிருக்கும் -நா நாளும்
கோணா கணையான் குரை கழலே கூறுவதே
நாணாமை நள்ளேன் நயம்  ——-63-

பதவுரை

தோள்–(எனது) கைகளானவை
அவனை அல்லால் தொழா–(வேறு சிலரைத் தொழு என்று நான் சொன்னாலும்)
அப் பெருமானை யல்லது வேறு எவரையும் வணங்க மாட்டா;
என் செவி இரண்டும்–எனது காதுகளிரண்டும்
கேள் அவனது–ஸகல வித பந்துவுமாகிய அப் பெருமான் விஷயமான
இன்மொழியே–இனிய பேச்சுக்களையே
கேட்டு இருக்கும்–கேட்டுக் கொண்டு (அதனாலே) ஸத்தை பெற்றிருக்கும்;
என் நா–என்னுடைய நாவானது
நாளும்–நாள் தோறும்
கோள் நாக அணையான்–மிடுக்கை யுடையனான திருவனந்தாழ்வானைப் படுக்கையாக வுடைய அப்பெருமானது
குரை கழலே–ஒலிக்கின்ற வீரக் கழலை யணிந்த திருவடிகளையே
கூறுவது–சொல்லா நிற்கிறது
(இப்படியான பின்பு)
நயம்–சப்தாதி விஷயங்களை
நாணாமை நள்ளேன்–வெட்கப்படாமல் விரும்புவாரைப் போலே நான் விரும்ப மாட்டேன்.

——————————————————————————-

வியாக்யானம் –

தோளவனை யல்லால் தொழா –
நான் வேறு ஒன்றைத் தொழச் சொன்னாலும்
என் தோளானது அவனை யல்லது
தொழுகிறது இல்லை
அவன் ரஷகன் ஆகவுமாம் -தவிரவுமாம்  -அவனை யல்லது தொழாது –

என் செவி யிரண்டும் கேள்வன தின் மொழியே கேட்டிருக்கும் –
என்னுடைய செவிகள் இரண்டும்
கேள்வன ஆனவனுடைய இனிய மொழியே கேட்டு இருக்கும்

நிருபாதிக பந்துவானவன் உடைய
இனிய பேச்சைக் கேட்டு
அத்தாலே தரித்து இருக்கும் –

நா நாளும் –
நா வானது எப்போதும் –
கோணா கணையான் குரை கழலே கூறுவதே  –

கோள் நாகணையான் –
மிடுக்கை யுடையவன் -என்னுதல்
ஒளியை யுடையவன் -என்னுதல்
பிராட்டியும் அவனுமான போதைக்கு
தாரண சாமர்த்தியத்தை யுடையவன் -என்னுதல் –
ப்ரக்ருஷ்ட விஜ்ஞானபலை கதாமதி -ஸ்தோத்ர ரத்னம் -39-
அவனோட்டை சம்ச்லேஷத்தால் வந்த புகரை உடையவன் -என்னுதல்
அப்படிப்பட்ட திரு வநந்த வாழ்வானைப் படுக்கையாக யுடைய சர்வேஸ்வரன் உடைய திருவடிகளையே கூறுவதும்

நாணாமை நள்ளேன் நயம்  –
நாட்டார் சப்தாதி விஷயங்களை விரும்பிவது நிர் லஜ்ஜராய் கொண்டாய்த்து
அப்படியே நானும் நிர் லஜ்ஜனாய்க் கொண்டு அவற்றைச் செறியேன்

ஜ்ஞானம் பிறந்த பின்பு லஜ்ஜித்து மீள வேண்டும்படியால் இறே –
விஷய ப்ராவண்யம் தான் இருப்பது
குருட்டு நிலாவிலே ஆண் பிள்ளைச் செற்றாழ்வியை -அலியை -ஸ்திரீ என்று தொடர்ந்து
திரிந்த மாத்ரமாய் இருக்கும் இறே –

——————————————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ முதல் திருவந்தாதி-பாசுரம் -62 -ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

June 30, 2014

அவதாரிகை –

இவற்றை உண்டாக்கி
மேல் உள்ள கார்யங்கள் தாங்களே செய்து கொள்ளுகிறார்கள் என்று
இருக்கை  அன்றிக்கே
இவற்றுக்கு விரோதி யுண்டாமன்று
களை பிடுங்குவானும் அவனே
என்கிறார் –

———————————————

புணர் மருதின் ஊடு போய்ப் பூங்குருந்தம் சாய்த்து
மண மருவ மால் விடை யேழ்   செற்று கணம் வெருவ
ஏழுலகத்    தாயினவு மெண்டிசையும் போயினவும்
சூழரவப் பொங்கு அணையான் தோள் ——-62-

பதவுரை

புணர் மருதின் ஊடு போய்–ஒன்றோடொன்று இணைந்திருந்த (இரட்டை) மருதமரத்தின் நடுவே தவழ்ந்து சென்று
[பின் பொருகாலத்தில்]
பூங்குருந்தம் சாய்த்து–(இலையும் கொம்புந் தெரியாதபடி) பூக்கள் நிரம்பியிருந்த குருந்த மரத்தை தள்ளிப் போட்டு
(மற்றுமொரு காலத்தில்)
மணம் மருவ–(நப்பின்னைப் பிராட்டியோடு) விவாஹம் நிறைவேறுதற்காக
மால் விடை ஏழ் செற்று–பெரிய வடிவையுடைய ஏழு ரிஷபங்களையும் முடித்து
(இன்னமொரு காலத்தில்)
கணம் வெருவ–எல்லாப் பிராணிகளும் நடுங்கும்படி
ஏழ் உலகும் தாயினவும்–மேலேழுலகங்களில் தாவிச் சென்றவையும்
எண் திசையும் போயினவும்–எட்டுத் திக்குக்களிலும் போய்ப் பரவியவையும்.
[எவையென்றால்]
சூழ் அரவம் பொங்கு அணையான் தோள்–(பரிமளம் குளிர்த்தி மென்மை என்னும் குணங்கள்) நிரம்பிய திருவனந்தாழ்வானை
சிறந்த படுக்கையாக வுடையனான ஸர்வேச்வரனது திருத் தோள்களேயாம்.

————————————————————

வியாக்யானம் –

புணர் மருதின் ஊடு போய்ப்-
ஓன்று என்னலாம் படி நிர் விவரமான மருதின் நடுவே
இடம் கண்டு போய் –

பூங் குருந்தம் சாய்த்து –
அடியே பிடித்துத் தலை யளவும் செல்லப் பூத்து
தர்ச நீயமாய் நின்ற குருந்தத்தைச் சாய்த்து –
பூவைக் காட்டி அந்ய  பரதை பண்ணி வஞ்சிக்க  நினைக்கை –

மண மருவ மால் விடை யேழ்   செற்று
நப்பின்னை பிராட்டி யோட்டைப்
பணி க்ரஹண மங்களமானது தலைக் கட்டுகைக்காக
கொடியவான வ்ருஷபங்கள் ஏழையும் முடித்து

கணம் வெருவ ஏழுலகத் தாயினவும் –
சங்கைஸ் ஸூராணாம்-என்கிறபடியே
அநு கூலரான தேவ ஜாதி விளைவது அறியாதே அஞ்சும்படிக்கு ஈடாக
ஏழு லோகங்களையும் வளர்ந்து அநாயாசேன அளந்து கொண்டனவும் –

கீழ் 
தானாகக் வந்த ஆபத்து போக்கின படியும்
நப்பின்னை பிராட்டிக்கு வந்த ஆபத்து போக்கின படியும் சொல்லிற்று

இங்குப்
பிராட்டிக்குச் செய்யும் செயலை
இந்த்ரனுக்குச் செய்த படி சொல்லுகிறது-

மெண்டிசையும் போயினவும் –
எட்டு  திக்குகளிலும் போய் வ்யாபித்தனவும் –

சூழரவப் பொங்கு அணையான் தோள் –
உரப்பை யுடைத்தாய்
நாற்றம் குளிர்த்தி மென்மைகளால் குறைவற்று உயர்ந்து இருந்துள்ள
திரு வநந்த வாழ்வான் மேலே திருக் கண் வளர்ந்து அருளக் கடவ சர்வேஸ்வரன் உடைய
திருத் தோள் கிடீர்

அவன் மேலே சாய்ந்தாலும் பொறாத படியான  ஸூகுமார்யத்தை யுடையவன் கிடீர்
இச் செயல்களைச் செய்தான்
படுக்கையில் கண் வளரப் பெறாதே அலமந்து திரிவதே

பாண்டு ரஸ்ய ஆதபத்ரஸ்ய சாயாயாம் ஜரிதம் மயா-அயோத்யா -2-15-
சிம்ஹாசனத்தில் இருக்க அவசரமே பெற்றிலன் -என்கிறார்

இக் காலத்தில் இறே நிழலிலே முத்துக் குடை இடுவது –

———————————————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –