Archive for March, 2014

இராமானுஜ நூற்றந்தாதி வியாக்யானம்-ஸ்ரீ M.A V .சுவாமிகள்–

March 26, 2014

ஸ்ரீ ய பதியால் மதி நலம் அருளப் பெற்ற நம் ஆழ்வார்
அவாவில் அந்தாதி -திருவாய்மொழி
அவா தூண்ட
ஆசார்யர் பாவம் ஆழ்வார் அவா
உபாத்யாயர் போலே
மைத்ரேயர் போலே

ஈன்ற முதல் தாய் சடகோபன்
வளர்த்த இதத் தாயா இராமானுசன்
பூதம் -எம்பெருமானாரையும் சேர்த்து அனுபவம்
திருவாய்மொழி வளர்த்த -வியாக்யானம் அருளச் செய்து
பிள்ளான்
வசந்த உத்சவம் திருவாய்மொழி சேவித்து பின்பு ராமானுச நூற்றந்தாதி
இளைய பெருமாள்
இளைய ஆழ்வார்
பராங்குச பாத பத்மம்
கண்ணி நுண் சிறுத் தாம்பு உத்சவம்
இராமானுச நூற்றந்தாதி தனியாக உத்சவம் திருமலையிலே
மூலம் பூராடம் ஆரம்பித்து குரு பரம்பரை -பஞ்ச சம்ஸ்காரம் சேனை முதலியார்

அகாரம் ஆழ்வார்
உகாரம் ராமானுஜர்
மகாரம் மணவாள மா முனிகள்
திருமந்தரம் தாத்பர்யம் இராமனுச நூற்றந்தாதி
ஆழ்வார் திவ்ய பிரபந்த சாராம்சம்
உபதேச பரம்பரை
பரம ரகசியம்
சரம பர்வ நிஷ்டை
எம்பெருமானார் கிருபையாலே அமுதனார் ஆழ்வான் திருவடிகளில் ஆச்ரயித்து
தர்சனம் எதா தர்சனம் பண்ணி
பிள்ளை அமுதனார்
தாம் அனுபவித்த அளவு அன்றிக்கே
பரம கிருபையால் நம் போல்வாருக்கும் அருளி
ஆழ்வார் திருவடிகளில் மதுரகவி
தாம் அனுசந்தானம்
பர உபதேசம் போலே
தம்முடைய நிஷ்டையும் அருளி
பத்து பாட்டு அன்றிக்கே

108 பாசுரங்களால்
சாவித்திரி போலே
பாட்டு தோறும் திருநாமம் வைத்து அருளி
ராமானுஜ திவாகரர்
வகுள பூஷன பாஸ்கரர் போலே
பிரபன்ன சாவித்திரி முதலிகள்
தம் திரு உள்ளத்தை குறித்து சொல்லுவோம் அவன் நாமங்களே
தாமரைப் பூவை இருப்பிடம் மாது
மாது பொருந்திய மார்பன்
சக்கரவர்த்தி திருமகனை பெற்றதும் திரு மிதிலை நினையாதாப் போலே
இறையும் அகலகில்லேன் நித்ய வாசம்
அவர் திருவடிகளிலே -மாறன் அடி பணிந்த -ராமானுசன் திரு நாமங்களை சொல்ல வேண்டும்
பல்கலையோர் தாம் மன்ன -எல்லா கலைகளையும் கற்றவர்கள்

கூரத் ஆழ்வான் தொடங்கி பலரும்
யாதாம்ய வேதனத்தாலே
திருவடி சேர்ந்த பின்பு அறிந்து கொண்டார்கள்
நாம் மன்னி வாழ
நெஞ்சே திரு நாமங்களை பேசுவோம்
அமுத கவி
மதுர கவி
ஆழ்வாரை பாடுவோர் அமுதம் மதுரம்
எல்லாம் அமிர்தம்-
பெரிய பிராட்டியார்
எம்பெருமான்
திருவாய்மொழி
நம் ஆழ்வார்
எம்பெருமானார்
பஞ்சாம்ருதம்
விண்ணோர் அமுது உண்ண அமுதினில் வரும் பெண் அமுது பிராட்டி
எப்பொழுதும் –அப்பொழுதைக்கு அப்பொழுது என் ஆரா அமுது அமுதை எடுத்தவன் அமுதம்
பா -தொண்டர்க்கு அமுது உண்ண சொல்மாலைகள் சொன்னேன்
ஆழ்வார் -மாறன் -அண்ணிக்கும் அமுதூரும்
மாறன் அடி பணிந்து உய்யும்
எனக்கு ஆரமுதே
இப்படி எல்லாரும் அமுதம்
பஞ்சாம்ருதம் அருளிய அமுதனார்

தேன் அமரும் பூ மேல் திரு நமக்கு சார்வு
ஸ்பஷ்டமாக அருளி பேய் ஆழ்வார் தமிழ் தலைவன்
பங்கய மா மலர் பாவையைப் போற்றுதும்

எம்பெருமானார் திருவடி பற்ற வழி
பங்கய மா மலர் பாவையைப் பற்றுதும்
சார்வு இது தானே
பிராப்யம் யாவதாத்மபாவி கை புகுர
பிராப்ய ருசி அபேஷிதம்
பெரிய பிராட்டியாரை ஆஸ்ரயிக்கிறார் அமுதனார்
இராமானுசன் அடிப் பூ மன்னவே பாவையைப் போற்றுதும்
பக்தி தழைக்க
மயிர் கழுவி பூ சூடுவாரை போலே
தலை மிசை மன்ன
தர்சநீயமான கோயில் அம் கயல் வாழ்
திருமகள் சேர் மார்பன்
பூ மன்னு மாது பொருந்திய
நெஞ்சே உபக்ரமித்து தலைக் கட்டுகிறார்
ஸ்வரூப அனுரூபமான சம்பத்
பாகவத சேஷத்வம்
எல்லாவற்றுக்கும் அடி பெரிய பிராட்டியார்
பிராப்யம் ஆச்சார்யர் சரணாரவிந்தம்

முனி வேழம்
இது கொண்டு சூத்திர வாக்கியம் பொருந்த விடுவர்
வேதம் தமிழ் செய்த மாறன்
ப்ரஹ்ம சூத்திர வியாக்யானம் ஸ்ரீ பாஷ்யம்
தண்டம் திருவாய்மொழி
வளர்த்த இதத் தாய்
இயலாக சாதித்து
வியாக்யானங்கள் வளர்த்து
இதுவே கால ஷேபம்

—————————————————————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேங்கட கிருஷ்ணன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத்து அமுதனார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -10-10-11-ஸ்ரீ M.A V .சுவாமிகள்–

March 26, 2014

நிகமத்தில்
அகில ஹேய பிரத்யநீகனாய்
கல்யாண குண ஏக நாதனாய்
ஞான ஆனந்தங களே வடிவு உடையவனாய்
உயர்வற உயர்நலம் உடையவனாய்
வனப்பு முதலாயின வற்றுடன் திவ்ய மங்கள விக்ரகத்தை உடையவனாய்
அளவிறந்த திவ்ய ஆபரணங்களை உடையவனாய்
திருமகள் மணமகள் ஆய்மகள் மூவருக்கும் நாயகனாய்
அஸ்தானே பயசங்கை செய்யும் நித்யசூரிகள் -திரு வநந்த ஆழ்வான் -பெரிய திருவடி
எப்பொழுதும் அடிமை செய்யும் திருவடித் தாமரைகளை உடையவனாய்
ஸ்ரீ வைகுண்டத்தில் எழுந்து அருளி இருப்பவனாய்
சர்வேஸ்வரனாய்
தன்னாலே ஏவப்படும் பரமன் முதலாயினவர்கட்கும் அந்தராத்மாவாய்
தன்னைக் காண வேண்டும் என்று விடாய் கொண்டு அடைகின்ற அடியவர்கள் விடாய்
தீரக் கலக்கும் தன்மையான எம்பெருமானைக் காண வேண்டும் என்று கூப்பிட்டு
அவனைப் பெற்று துக்கம் அற்றவராய்
எல்லா தடைகளும் நீங்கினவராய்
ஆழ்வாரின் பக்தியின் தூண்டுதலால் பிறந்த
ஆயிரம் திருவாய் மொழியும்
அவற்றில் வைத்துக் கொண்டு
மேலே கூறிய படி அன்றிக்கே பெற்று அல்லது தரிக்க ஒண்ணாத படி
பரமபக்தியால் பிறந்த அந்தாதியான
இத் திருவாய்மொழி வல்லார்
சம்சாரத்தில் பிறந்து வைத்தே
அயர்வறும் அமரர்களோடு ஒப்பர்
என்கிறார்-

——————————————————————————————————————————————————

அவா அறச் சூழ் அரியை அயனை அரனை அலற்றி
அவா அற்று வீடு பெற்ற குருகூர்ச் சடகோபன் சொல்
அவா இல் அந்தாதிகளால் இவை ஆயிரமும் முடிந்த
அவா இல் அந்தாதி இப்பத்து அறிந்தார் பிறந்தார் உயர்ந்தே

—————————————————————————————————————

அவா அறச் சூழ் அரியை –
விரும்பியவற்றை எல்லாம் அருளும் சர்வேஸ்வரனை –
தம்முடைய காதல் கெட வந்து கலந்த படியாலே
ஒரு அடைவு கொடாதே அது தன்னையே சொல்கிறார் –
அவா அறச் சூழுகையாவது
தன்னைக் காண வேண்டும் என்னும் விடாய் உள்ள
அடியவர்களின் விடாயை தீர கலக்கை –

அயனை அரனை அலற்றி-

தன்னுடைய ஏவல் ஆள்களான பிரமன் சிவனுக்கும் அந்தராத்மாவானவனை
அயனை அரனை -என்கிற சாமாநாதி கரண்யத்தால்
பிரமன் சிவன் போல்வார் ஈஸ்வரர் ஆவார்களோ என்னும் மக்கள் கொள்ளும் ஐயத்தை அறுக்கிறார்
அவர்களுடைய ஸ்வரூபம் ஸ்திதி பிரவ்ருத்தி நிவ்ருத்தி எல்லாம் சர்வேஸ்வரன் அதீனமாய்
இருப்பதாலே அவர்களுக்குபாரதந்த்ர்யமே ஸ்வரூபம் –
தலைவர்களாய் இருக்கும் தன்மை அவர்கள் செயல்கள் காரணமாக வந்த இத்தனை –
இச் சாமாநாதி கரண்யத்தை அறியும் தன்மை இன்றியே எளியராய் இருப்பார்
அறியத் தகும் முறையிலே கூறப்படும் வகைகளும் உண்டு
அவை
அயனை அரனை அவா அற்று
அரியை அலற்றி
வீடு பெற்ற குருகூர்ச் சடகோபன் -ஒரு வகை –
அயனை அரனை அவா அறச்
சூழ் அரியை அலற்றி
வீடு பெற்ற குருகூர்ச் சடகோபன் –
மற்று ஒரு வகை

அலற்றி அவா அற்று வீடு பெற்று –
கூப்பிட்டு அவனைப் பெற்று எல்லா தடைகளும் நீங்கியவர்
ஆகையாலே துக்கம் இல்லாத ஆழ்வார் அருளிச் செய்த

அவா இல் அந்தாதிகளால் இவை ஆயிரம் –
பக்தியின் தூண்டுதலாலே பிறந்த ஆயிரம்
இவருடைய அவா -மைத்ரேய பகவான் ஸ்தானத்திலே நிற்கிறது ஆயிற்று –
ஸ்ரீ பராசர பகவான் ஸ்ரீ விஷ்ணு புராணம் அருளியது மைத்ரேய பகவான் தூண்டுதல் போலே –
அன்றிக்கே
அவா உபாத்தியாராக நடத்த -நடந்த ஆயிரம் -என்னுதல்
ஆழ்வாருக்கு பிறகு நூறாயிரம் கவிகள் பெரும் உண்டானார்கள்
அவர்கள் கவிகளோடு கடல் ஓசையோடு வாசி அற்று
அவற்றை விட்டு இவற்றைப் பற்றுகைக்கு அடி
இவருடைய காதல் பெருக்கு வழிந்து புறப்பட்ட சொல் ஆகை அன்றோ –

நாவலம் தீவில் கவிகள் எல்லாம் சில நாள் கழியப்

பூவலம் தீவது போலவ வல்லார் குருகூர்ப் புலவன்
கேவலம் தீம் கரும்பாம் கவி போல் எங்கும்
கூவலம் தீம் புனலும் கொள்ளுமே வெள்ளம் கோள் இழைத்தே-சடகோபர் அந்தாதி -58
உரிக்கின்ற கோடலின் உந்து கந்தம் என ஒன்றும் இன்றி
விரிக்கும் தொறும் வெறும் பாழாய் விடும் பிறர் புன் கவி மெய்
தெரிக்கின்ற கோச் சடகோபன் தன் தெய்வக் கவி புவியில்
சுரிக்கின்ற நுண்மணல் ஊற்று ஒக்கும் தொண்டர் சுரத்தலினே -சடகோபர் அந்தாதி -68

முடிந்த அவாவில் அந்தாதி இப்பத்து
தரிக்க ஒண்ணாத படியான
பரம பக்தியால் பிறந்த தாயிற்று
இத் திருவாய்மொழி
இந்த அவாவிற்கு உதவிற்றிலன் ஆகில்
ஈஸ்வரனுக்கு சைதன்யம் இன்றிக்கே ஒழியும் –
சூழ் விசும்பு அணி முகில் -என்ற திருவாய் மொழிக்கு முன்பு
பர பக்தியாலே சென்றது –
சூழ் விசும்பு அணி முகில் -என்ற திருவாய் மொழி -பர ஞானத்தால் சென்றது
இத் திருவாய்மொழி -பரம பக்தியாலே –
பகவானுடைய திருவருள் பாதியும்
தாங்கள் பாதியுமாக சொல்லுமவர்களுக்கு
சரீரத்தின் முடிவிலே இப் பரபத்தி முதலானவைகள் உண்டாகும்
இவர் அடியிலே மயர்வற மதி நலம் அருளப் பெறுகையாலே
எழுந்து அருளி இருக்கும் போதே உண்டாயின –

கர்மத்தாலும் ஞானத்தாலும் உண்டாகின்ற பக்தியினுடைய இடத்திலே
சர்வேஸ்வரனுடைய திருவருள் நிற்க அது அடியாக பிறந்த
பரபக்தி பர ஞான பரம பக்திகள் அன்றோ இவரது –

அறிந்தார் பிறந்தார் உயர்ந்தே –
இதனை அறிந்தவர்கள்
இவ் உலகத்தில் பிறந்து வைத்தே
நித்ய சூரிகளோடு ஒப்பர் –
பிறந்தே உயர்ந்தார் –
சர்வேஸ்வரனுடைய அவதாரம் போன்றதாம்
இவர்களுடைய பிறப்பும் –

நிகமத்தில்
அகில ஹேய பிரத்யநீக கல்யாணைகக
ஞானனந்த ச்வரூபனாய்
லஷ்மி சமேதனாய்
சர்வேச்வரனாய்
அந்தராத்மாவாய்
தம்மை காண விடாய்த்து
இப்படிப் பட்டவன்
அவா அற்று வீடு பெற்ற குருகூர் சடகோபன்
அவாவில் அந்தாதி
பக்தியால் தூண்டப் பட்டு பிறந்த திருவாய்மொழி
பெற்று அல்லது தரிக்க முடியாத பரம பக்தி
நித்யர்
நம்புவார் பதி வைகுந்தம் கண்ணி நுண் சிறு தாம்பு
வல்லார் சம்சாரத்தில் பிறந்து வைத்து நித்யர் உடன் ஒப்பர்

அரி அயன் அரன்
மூவரையும் சொல்லி
முதல் கிழங்கே
முனியே நான் முகனே முக்கண் அப்பா
சாமானாதி கரண்யம்
அவா அறச் சூழ் அரியை
ஆசை அறும் படி அங்கீ கரித்த
அரதி அரி
பாபம் துக்கம் அபஹரித்து போக்கி
சர்வ அபேஷிதம் அருளி
கலந்தபடி
அவா அறச் சூழ் விசேஷணம்-முக்கிய உபகாரம்
ப்ரஹ்ம ருத்ராதிகளுக்கு அந்தராத்மா
சரீரம் -ஆத்மா -பரமாத்மா வரை செல்லும் சப்தம்
ஆஸ்ரிதர் விடாய் தீரும்படி தன்னைக் கொடுப்பவன்
பேச நின்ற சிவனுக்கும்
பேச நின்ற
பேசுவதால் நிற்பவன்
எடுத்தால் விழுவான்
இவன் அந்தராத்மாவாக இருப்பதால் ஈஸ்வரன் என்று சொல்லும்படி
சத்தா ஹேது இவன் ஆதீனம்
அயனை அரனை அவா அற்று என்ற
அரியை அலற்றி வீடு பெற்ற
அயனை அரனை அவா அற்று வீடு பெற்ற
தைத்ர்யா பீடா அவர்கள் ஆபத்தையும் போக்கி
மூன்று அர்த்தம் காட்டி அருளி

அவாவில் அந்தாதி
பக்தி பலாத்காரம்
இவர் உடைய மைத்ரேயா பகவான் இவர் அவா
பராசரர் சொல்லி மைத்ரேயர் கேட்க போலே
ஆச்சார்யர் தூண்ட சிஷ்யர் திருப்பி சொல்வது போலே
உபாத்யாயர் ஸ்தானம் அவா
பக்தி சொல்லச் சொல்ல
மற்றவர் கவிகள் கடல் ஓசை போலே
பக்தியால் பிறந்த சொல்லுக்கு ஏற்றம் உண்டே
பரி பாடல் போன்றவை இதன் வைபவம் இல்லையே
அவாவில் அந்தாதி
பரம பக்தியால் -பிரிந்து தரிக்க ஒண்ணாத
ஈஸ்வரனுக்கே அவ்த்யம் அனுக்ரகிக்க விட்டால்
கர்ம ஞான யோகம் இல்லாமல்
பகவத் பிரசாதம் பாதி தாங்கள் யத்னம் பாதி உபாசகர்
சாஸ்த்ரிகள் தெப்பக் கையர் போலே
இவர் அடியிலே -ஆரம்பத்தில் திருவடியிலே
துயர் அறு சுடர் அடி தொழுது எழு மன்னே
கர்ம ஞான பக்தி ஸ்தானம் அவன் அனுக்ரகம் சாத்திய பக்தி இல்லை
சாதனா பக்தி இல்லை
உயர்ந்தே பிறந்தார்
பிறந்தார் உயர்ந்தே
பெரும் தேவர் கைகர்யா பரர்கள்
சம்சாரத்தில் இருந்தும் நித்யர் உடன் ஒப்பர்
விண்ணுளாரிலும் சீரியர்
கற்றவர்களும் பெறுவார்
தோல் கன்றுக்கும் இரங்கும்
அப்யசித்தால் பெறுவோம்
அனுபவித்த கோபிகள்
அனுகரித்த ஆண்டாள்
அனுசந்தித்த நாமும் பெறுவோம்
கீதை வேதம் போலே இல்லாமல்
திருவாய்மொழி எம்பெருமானே எதிர் கொண்டு அழைத்து
ஸ்ரீ பாத தீர்த்தம் சேர்த்து கோஷ்டி பிரசாதம்

———————————————————————————————————————————————————-

முனி மாறன் முன்புரை செய் முற்றின்பம் நீங்கித்
தனியாகி நின்று தளர்ந்து –நனியாம்
பரம பக்தியால் நைந்து பங்கயத்தாள் கோனை
ஒருமை உற்றுச் சேர்ந்தான் உயர்ந்து

சாரம்
மா முனிகள்
முனி மாறன்
தனியாகி நின்று தளர்ந்து
தமியேன்
சம்சாரி கூட்டு இல்லை
நித்யர் கூட்டு இல்லை
பரம பக்தியால் நைந்து
பங்கயத்தாள் கோன் திருவடி சேர்ந்து
உயர்ந்து சேர்ந்தான்

————————————————————————————————————————————————–

மன்றே புகழும் திருவழுந்தூர் வள்ளல் மாறனை முன்
சென்றே மதுரகவி பெருமாள் தென் தமிழ் தொடையில்
ஒன்றே பதிகம் உரைத்தவன் பொன்னடி உற்று நின்றான்
என்ற பதிகம் பதிகமதாக இசைத்தனனே -சடகோபர் அந்தாதி

——————————————————————————————————————————————-

நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -10-10-10-ஸ்ரீ M.A V .சுவாமிகள்–

March 26, 2014

எம்பெருமானுக்கு இவர் விரும்பிய கார்யத்தை செய்து அல்லது நிற்க ஒண்ணாத படி

பெரிய பிராட்டியார் ஆணை இட்டுத் தடுத்து
மிகப் பெரிய துன்பத்தோடு கூப்பிட்டு
இவர் வேண்டிக் கொண்ட படியே
எல்லா வற்றாலும் நிறைந்தவனாய் கொண்டு வந்து கலந்து அருளக் கண்டு
அளவிட முடியாததான மூலப் பகுதி தத்வத்தாலும்
ஆத்மா தத்வத்தாலும்
உன்னுடைய நினைவின் உருவமான ஞானத்திலும்
பெரியதான என் விடாய் எல்லாம் தீர
வந்து -என்னோடு -கலந்தாய்
என்னுடைய விருப்பமும் ஒருபடி முடியப் பெற்றது
என்கிறார் –

இனி இல்லை -என்னும்படி என்னை விடாய்ப்பித்து
அதற்கு அவ்வருகான விடாயை உடையனாய்க் கொண்டு
என்னோடு வந்து கலந்து
உன்னுடைய விடாயும் ஒரு படி நீங்கியதே -என்கிறார்
என்னவுமாம் –
அங்கே பாரதம் ஆரோப்ய முனின பரிஷச்வஜே -யுத்தம் -180-39
பரதனை மடியிலே வைத்து சந்தோஷத்துடன் தழுவினார் -என்னும்படியே

—————————————————————————————————————————————————-

சூழ்ந்து அகன்று ஆழ்ந்து உயர்ந்த முடிவு இல் பெரும் பாழேயோ
சூழ்ந்து அதனில் பெரிய பர நன் மலர்ச் சோதீயோ
சூழ்ந்து அதனில் பெரிய சுடர் ஞான இன்பமேயோ
சூழ்ந்து அதனில் பெரிய என் அவா அறச் சூழ்ந்தாயே

————————————————————————————————————————————————————–

சூழ்ந்து அகன்று ஆழ்ந்து உயர்ந்த முடிவு இல் பெரும் பாழேயோ-
தன்னிடத்தில் உண்டான மகத்து முதலான தத்துவங்களை
பத்து திக்கிலும் புக்கு
எங்கும் ஒக்கப் பரந்து
என்றும் உள்ளதாய் -அளவிட முடியாததாய்
மக்களுக்கு புருஷார்த்தத்தை விளைத்துக் கொள்ளலாம் நிலமான
மூலப் பகுதிக்கு ஆத்மா ஆனவனே –

சூழ்ந்து அதனில் பெரிய பர நன் மலர்ச் சோதீயோ-
அதற்குள்ளும் பரந்து
அதனைக் காட்டிலும் பெரியதாய்
அதனை ஏவுகின்றது ஆகையாலே மேலாய்
விகாரம் முதலானவைகள் இல்லாமையாலே சிறந்ததாய்
மலர்ந்த ஒளி உருவமான ஆத்மா வஸ்துவுக்கும்
ஆத்மா ஆனவனே –
பேறு பெறுகிற இப்பொழுது
மூலப் பிரக்ருதியையும் ஆத்மாவையும் சொல்லுகிறது
தம்முடைய காதல் பெரியவற்றிலும் பெரியது என்கைக்காக –
அவற்றுக்கும் ஈஸ்வரனை ஒழிய
தோன்றுதல் நிலைத்தல் இல்லாமையாலே அவ்வளவும் சொல்லுகிறது –

சூழ்ந்து அதனில் பெரிய சுடர் ஞான இன்பமேயோ –
சுடர் இன்ப ஞானமேயோ -ஞானத்துக்கு இருப்பிடம் ஆனவனே
சுடர் -சங்கல்ப ரூபமான -தடை இல்லாததால் சுடர் என்கிறார்
அவை இரண்டினையும் தன்னுள் அடக்கிக் கொண்டு
அவற்றுக்கு நிர்வாஹகனான
நினைவின் உருவகமாய்
சுகத்தின் உருவமான ஞானத்தை உடையவனே என்று
நினைவின் உருவமான ஞானத்தினைச் சொல்லுதல்
அன்றிக்கே
சுடர் ஞான இன்பமேயோ என்று
ஒளி உருவனும் -இன்பத்தின் உருவனும் ஆனவனே -என்று எம்பெருமானைச் சொல்லுதல் –

சூழ்ந்து –
மேலே கூறிய மூன்று தத்துவங்களையும்
விளாக்குலை கொண்டு –

அதனில் பெரிய –
அவை குளப்படியாம் படி பெரிதான –

என் அவா –
என்னுடைய காதலை

அறச் சூழ்ந்தாயே-
அதனிலும் பெரிய உன் காதலைக் காட்டி வந்து கலந்தாயே –
என்னுடைய கூப்பீடும் ஒருபடி ஒவும்படி பண்ணிற்றே
பரதனை மடியில் ஏற்றுக் கொண்டு மகிச்சி உற்றவராய் தழுவினார் -என்கிறபடியே
மீண்டு புகுந்து
ஸ்ரீ பரத ஆழ்வானை மடியிலே வைத்து
உச்சி யை மோந்து உகந்து
அணைத்தால் போலே -ஆயிற்று
இவருடைய விடாய் கெடும்படி கலந்தது –

அபேஷிதத்தை செய்து அல்லாமல் நிற்க முடியாமல்
திருவடியில் சேர்த்து கொண்டான்
பரத ஆழ்வானை மடியில் வைத்து கொண்டது போலே
சம்சாரத்தில் ஆழ்வார்
அங்கே பெருமாள் காட்டில்

நலம் மதி பரம பக்தி
மதி நலம் ஞானம் பக்தி
பர பக்தி -அடைய துடிப்பு பாரிப்பு
பர ஞானம் அடைந்து விட்டால் போல பாவம் -மானஸ அனுபவம்
உடனே அடைந்து
ஷணம் கூட பிரிந்து இருக்க முடியாமல் பரம பக்தி
பொய் நின்ற ஞானம் தொடங்கி திருமால் இரும் சோலை -பர பக்தி
நாரணன் தாமரை கண்டு உகந்து அன்யாபதேசம் பர ஞானம்
ஸ்ரீ வைஷ்ணவர் பெற்ற பேறு தாமும் பெற்றால் போலே சூழ் விசும்பு
பரம பக்தி -முனியே நான்முகனே பதிகம்
பெரும் கூச்சல் இட்டு கதற

பெரிய ஆர்த்தி உடன் கூப்பிட்டு
திரு ஆணை நின் ஆணை கண்டாய்
பிரார்த்திக்க
பரி பூர்ணனாய் சம்ச்லேஷித்து
விடாய் தீரும்படி கலந்து
பிரகிருதி தத்வம் விட -ஜீவாத்மா -பரமாத்மா தத்வம் –
பெரியது -அணு -ஞானம்
ஆசை இவற்றை விட பெரியதாக
அத்தை காட்டிலும் அவன் விடாய் –
அவா அறச் சூழ்ந்தாயே
உன்னுடைய விடாயும் தீர்ந்து
என்னில் முன்னம் பாரித்து
அருள் பெறுவார் -அவன் இவரை தொடர்ந்து துடித்த துடிப்பு

பரத ஆழ்வான் மடியில் வைத்து உச்சி முகந்து
இருவர் விடாயும் தீர கலந்தது போலே
பெருமாள் வனத்தில்
ஜீவாத்மா சம்சாரத்தில்

சூழ்ந்து
ஆழ்ந்து
அகன்று
உயர்ந்த
முடிவில்
பெரும்
பாழ்
எதுவும் விதிக்கலாம்
சம்சாரம் விடுபடவும் ஆழ்ந்து போகவும் போக மோஷங்கள்
பாழ் -ஆறு விசெஷணங்கள்
அபிநிவேசம் மிகுந்து
பெரியவற்றிலும் பெரியது
நித்தியமாய் அபரிச்செத்யமாய்
பிரகிருதி மகான் அகங்காரம் தன்மாத்ரை
சேதனருக்கு புருஷார்த்தம் விளைவித்து கொள்ள

பிரகிருதி தத்வதுக்கு ஆத்மாவாக -நிர்வாஹகனே
பர நல மலர் சோதி -ஆத்மதத்வம்
ஞானம் வ்யாப்தி
ரூபத்தால் பெரியது எனபது இல்லை
தர்ம பூத ஞானம்
அது ஜடம்
அதுக்கும் நியந்தா
விகாரங்கள் இல்லாமல் -நிரந்தரம்
தேஜோ ரூபம் சோதி
சுயம் பிரகாசம் ஆத்மா வஸ்துவுக்கும் ஆத்மா நிர்வாஹகன்
சுடர் ஞான இன்பம்
சங்கல்ப ரூப ஞானம் சுக ரூபம் எம்பெருமான் ஞானம்
அவன் தன்னையே சொல்லுவதாக்கவுமாம்
சுடர் ஞான இன்பம் உடையவன்
தத்வ த்ரயங்களையும் இப்படி சொல்லி
அதனில் பெரிய அவா –
விளாக்குலை கொண்டு -பூரணமாக வியாபித்து
குளப்படி ஆகும் படி ஆழ்வார் அபிநிவேசம்
கடலில் மிக பெரிய அவா
அறச் சூழ்ந்தாயே
என்னுடைய அவா குளப்படி ஆகும் படி

குகப் பெருமாள்
பரத ஆழ்வான் இடம்
இளைய பெருமாள் பெருமையை சொல்லி
கடலை கையால் இரைக்குமா போலே
உவர் கழி போலே பரத ஆழ்வான் பெருமை
ஸ்லோகம் காட்டி அருளி
பரதாயா அப்ரமேயா
ஆயிரம் ராமன் நின்னை ஒப்பரோ கம்பர்
கழி பெருமையை கடலுக்கு சொல்வது போலே

அவா அறுந்து விட்டது
வேண்டிய பலன் பெற்றேன்
பரத ஆழ்வானை மடியில் வைத்து உச்சி முகர்ந்து
தீரும் படி -அல்பம் ஆகும் படி இரண்டு அர்த்தங்கள்
இடுப்பு இல்லாத சொல்வது போலே

————————————————————————————————————————————————————-

நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -10-10-9-ஸ்ரீ M.A V .சுவாமிகள்–

March 25, 2014

தானி சர்வாணி தத் வபு -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-22-86-
அவை யாவும் அவனுடைய சரீரம் என்றும்
யஸ்ய ஆத்மா சரீரம் யஸ்ய ப்ரதிவி சரீரம் -அந்தர்யாமி ப்ரஹ்மணம்
எவனுக்கு ஆத்மாக்கள் சரீரமோ எவனுக்கு மண் சரீரமோ -என்றும்
தத் சர்வம் வை ஹரே தாணு -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-22-38-
அது முழுதும் அவனுடைய சரீரம்-என்றும்
சொல்லுகிறபடியே எங்கும் வந்து முகம் காட்டலாம்படி
உலகத்தை உருவமாகக் கொண்டு இருக்கும்
இருப்பைக் காட்டித் தந்தோம் அன்றோ -என்ன
அது உகந்தார்க்கும் உகவாதார்க்கும் பொதுவாய் இருந்தது
வேறு உருவம் இல்லையாகில் அன்றோ
அதுவே அமையும்-என்று ஆறி இருக்கலாவது
பரம பதத்தில் வேறுபாட்டோடு கூடியதாய்
எல்லாம் நிறைந்ததாய் இருக்கும் இருப்பை
காண வேண்டும் –
என்கிறார் –

—————————————————————————————————————————————

முதல் தனி வித்தேயோ முழு மூ உலகு ஆதிக்கெல்லாம்
முதல் தனி யுன்னை யுன்னை எனை நாள் வந்து கூடுவன் நான்
முதல் தனி எங்கும் இங்கும் முழு முற்று உறு வாழ் பாழாய்
முதல் தனி சூழ்ந்து அகன்று ஆழ்ந்து உயர்ந்த முடுவிலீயோ

—————————————————————————————————————————————-

முழு மூ உலகு ஆதிக்கு எல்லாம் முதல் தனி வித்தேயோ –
மூன்று உலகங்கள் தொடக்கமான
எல்லாவற்றுக்கும்
மூன்று விதக் காரணங்களும் ஆனவனே
இதனால் -காப்பாற்ற என்று புக்கால்
காப்பாட்ட படுகின்ற பொருள்களின்
துணை வேண்டாதவனே -என்பதனைத் தெரிவித்த படி –
முதல் -நிமித்த காரணம்
தனி -துணைக் காரணம்
வித்து -முதல் காரணம்

முதல் தனி உன்னை –
முதன்மை பெற்றவனாய்
ஒப்பற்றவனாய்
குணம் விபூதி முதலியவற்றால் நிறைந்து இருக்கின்ற நீயான உன்னை

எனை நாள் வந்து கூடுவன் நான் –
என்று வந்து கூடுவேன்
அவன் கொடுத்த ஞானத்தாலே ஸ்வரூபத்தை
உணர்ந்தாருக்கு
தன்னை பிராட்டிமாரோடே சேர்ந்து பேசலாம் படியாய் இருக்கையால் -வந்து கூடுவேன் – -என்கிறார்
நான் -பரம பதத்தில் சுவடு அறிந்த நான் -என்றது
உனக்கு உரியதான விக்ரகத்தை காண ஆசைப் பட்ட நான் -என்றபடி

முதல் தனி அங்கும் இங்கும் முழு முற்று உரு வாழ் பாழ் ஆய் –
முதன்மை பெற்றதாய்
உபமானம் இல்லாததாய்
அங்கும் இங்குமான மகத்து முதலான தத்வங்கள்
முழுவதிலும் எங்கும் ஒக்கப் பரந்து
ஆத்மாக்களுக்கு போகங்களையும் மோஷத்தையும்
விளைக்கும் விலை நிலமாக
இருக்கிற மூலப் பகுத்க்கு ஆத்மா ஆனவனே

நடுவில் ஒரு ஸ்ரீ வைஷ்ணவர் எழுந்து அருள
மீண்டும் அவதாரிகையும்
வியாக்யானமும் அருளுகிறார் –
முதல் தனி வித்தேயோ –
முதல் -நிமித்த காரணம்
தனி -துணைக் காரணம்
வித்து -முதல் காரணம்
முழு மூ உலகு ஆதிக்கு எல்லாம் –
மூ உலகு என்கையாலே
கிருதகம்- அக்ருதகம்-கிருதகாகிருதகம் – என்று
மூன்று வகைப்பட்ட அண்டத்தைச் சொல்லுகிறது
கல்பாந்தக காலத்தில் அழிவதும் அழியாததும் -அழிந்தும் அழியாமலும் இருப்பதும் –
அண்டாநாம் து சஹாஸ்ரானாம் சஹாஸ்ராணி அயுதாநிச
ஈத்ருசாநாம் ததா தத்ர கோடி கோடி சதானி ச -ஸ்ரீ விஷ்ணு புராணம் -2-7-27
அந்த மூலப் பகுதியில் ஆயிரம் அண்டங்கள் உடைய ஆயிரமும்
பதினாயிரமும்
இப்படிப் பட்ட அண்டங்கள் பல கொடிகள் இருக்கின்றன -என்று சொல்லப் பட்ட
எல்லை இல்லாத அண்டங்களைச் சொல்லுகிறது -ஆதி -என்கையாலே
இவ் வண்டங்கட்கு காரணமான ஆவரணங்களை-மதிள்களைச் சொல்லுகிறது
ஆக மூன்று உலகங்கள் தொடக்கமான ஓன்று ஒழியாமல் எல்லாவற்றுக்கும்
மூன்று வித காரணங்களும் -ஆனவனே என்றபடி
முதல் தனி உன்னை –
மேலே நீயான உன்னை -உலக உருவான உன்னை
-இனி உன்னை உன்னை -பரம பதத்தில் உள்ள
முதல்வனாய்
ஒப்பு இன்றிக்கே
குணம் விபூதி முதலியவற்றால் நிறைந்த வனாய்
உலகத்தை உருவகமாக கொண்டு இருக்கிற உன்னை
ஆகா இத்துணையும் லீலா விபூதியோடு கூடி இருக்கிற இருப்பை சொல்லிற்று –
நித்ய சூரிகளுக்கு இனியனாய் இருக்கும் வடிவு அழகினை
கண்டு அனுபவிக்க வேண்டும் என்கிறார் மேல்
உன்னை
பரமபதத்தில் எழுந்து அருளி இருக்கும் நிலையைச் சொல்லுகிறது
உன்னை என்ற அளவில் பரமபதத்தில் எழுந்து அருளி இருக்கும் நிலையைக் காட்டுமோ என்னில் –
காட்டும்
ஒண் தொடியாள் திரு மகளும் நீயுமே நிலா நிற்க கண்ட சதிர் -4-9-10-என்கிறபடியே
அவனையும் அவளையும் சொல்லவே பரமபதமும் அடங்கிற்றே அன்றோ
உன்னை
முடிச் சோதியாய் உனது முகச் சோதி மலர்ந்ததுவோ –8-1-1-என்று ஐயுறும்படி இருக்கும் திரு முடியும்
மாயன் குழல் –7-7-9-என்னும்படியான திருக் குழலும்
கோளிளைத் தாமரையும் கொடியும் பவளமும் வில்லும்
கோளிளைத் தண் முத்தமும் தளிரும் குளிர் வான் பிறையும்
கோளிளை யாவுடைய கொழும் சோதி வட்டம் கொல் -7-7-8-என்னும்படியான
அழகிய திருமுகமும்
நாய்ச்சிமார் உடைய திருக் கரங்களின் ஆபரணங்களால் அடையாளம் செய்யப் பட்டதாய்
கமுகினுடைய இளம் கழுத்தையும் சங்கையும் ஒத்ததாய் இருந்துள்ள திருக் கழுத்தும்
கற்பகம் கா அன்ன நற் பல தோள்களும் -6-5-8-
பெரிய பிராட்டியாருக்கு கோயில் கட்டணமாக -என்றும் அனுபவித்துக் கொண்டு
இருக்கச் செய்தேயும் அகலகில்லேன் -என்று அவள் பிச்செற்றும் படி
குரு மா மணிப் பூண் குலாவித் திகழும் திரு மார்பும் -1-8-10-
உள்ளத்துள் நின்று நிலாவுகின்றதே -அமலனாதி பிரான் -4–என்கிறபடியே
நித்யர் முக்தர் இவர்கள் உடைய உள்ளங்களிலே அழகு செண்டு ஏறுகிற திரு உதர பந்தமும்
வனப்பாகிற வாரிதி இத்தலப் பட்டு சுளித்தால் போல் இருக்கிற திரு உந்தியும்
ஒரு அடை மொழி இட வேண்டாதே -அல்குலும் -5-5-8- என்னும்படி இருக்கிற அல்குலும் -சிற்றிடையும்
மாலைக் காலத்தில் தோன்றுகிற செந் நிறத்தாலே அழகு பெற்ற ஆகாசம் போலே இருக்க
திரு அரை பூத்தால் போல் இருக்கிற -அந்தி போல் நிறத்தாடையும் –
வாழை மரம் முதலானவற்றைப் போன்ற கம்பீரமான திருத் தொடைகளும்
தாமரை நாளம் போலே -பிராட்டி மார் தீண்டுவதால் மயிர் செறித்து-முட்களோடு கூடிய திருக் கணைக் கால்களும்
சங்கு

சக்கரம் கற்பகம் கொடிதாமரை அங்குஜம் வஜ்ரம் ஆகிய
அடையாளம் பண்ணப் பட்டதாய் –
நாய்ச்சிமாரும் கூட கூசித் தொட வேண்டும்படி மேள்ளடியாக
தேனே மலரும் -என்கிறபடி எல்லை இல்லாத இனியவான திருவடிகளை யும் உடையையாய்
ஏழ் உலகும் தனிக்கோல் செல்ல வீற்று இருந்து அருளுகிற உன்னை –

எனை நாள் வந்து கூடுவன்
என்று வந்து கிட்டக் கடவேன்
மயர்வற மதி நலம் அருளப் பெற்றவர் ஆகையாலே பிராட்டிமாரைப் போன்று பேசலாய் இருக்கிறபடி

நான்
அவ் வடிவு அழகினைக் காண ஆசைப் பட்ட நான்

முதல் தனி அங்கும் இங்கும் முழு முற்று உறு வாழ பாழ் ஆய் –
முதன்மை பெற்றதாய்
உபமானம் இல்லாததாய்
அங்கும் இன்குமான மகத் தத்துவங்கள் முழுவதிலும் பரந்து
மக்களுக்கு போகங்களையும் மோஷத்தையும் விளைத்துக் கொள்ளுகைக்கு ஈடான
கருநிலமாய் உள்ள மூலப் பகுதிக்கு ஆத்மாவாய்

முதல்
மூலப் பகுதியை நோக்க -தான் முதன்மை பெற்றதாய்
நியமிக்க கூடியதாய்

தனி
உபமானம் இல்லாததாய்

சூழ்ந்து
மூலப் பகுதியிலும் மூலப் பகுதியால் ஆன பொருள்களிலும் பரந்து –

அகன்று ஆழ்ந்து உயர்ந்த –
பரந்து இருக்கும் இடத்தில்
ஞானத்தாலே பத்து திக்குகளிலும் பரந்த

முடுவிலீயோ –
அளவிட்டு அறிய முடியாததான
ஆத்மா தத்வத்துக்கு நிர்வாஹகன் ஆனவனே
முடிவு -எனபது அழிவினைக் குறிப்பதாகக் கொண்டு
சரீரத்தை போன்று அழிந்து போவது அன்றிக்கே
என்றும் உள்ளதான ஆத்ம தத்துவம் -என்னவுமாம் –

முதல் தனி அங்கும் இங்கும் முழு முற்று உறு வாழ் பாழாய்
முழு உலகு ஆதிக்கு எல்லாம் முதல் தனி வித்தாய்
முதல் தனிச் சூழ்ந்து அகன்று ஆழ்ந்து உயர்ந்த முடிவிலியாய்
இருக்கிற முதல் தனி உன்னைக் கண்டேன்
பரம பதத்தில் நித்ய சூரிகளுக்கு இனியனாய் இருக்கிற
உன்னை எனை நாள் வந்து கூடுவேன் நான்

காரண கார்யங்கள் ஆன இரண்டு நிலைகளை உடைய
சித்துக்கும் அசித்துக்கும் நிர்வாஹகனாய்
இருக்கிற இருப்பைக் காட்டி அனுபவிப்பித்த இவ்வளவும் போராது
உனக்கே உரிய விக்ரகத்தை உடையவனாய்
பரம பதத்தில் இருக்கும் இருப்பைக் கண்டு
அனுபவிக்க வேண்டும் -என்றதாயிற்று-

யஸ்ய ஆத்மா சரீரம் யஸ்ய பிரத்வி சரீரம்
எல்லாம் அவனுக்கு சரீரம்
ஜகத் சரீரமாக இருக்கும் இருப்பை காட்டி கொடுக்க
அது உகந்தாருக்கும் உகவாதாருக்கும் பொதுவாக
உனக்கு வேறு ஆகாரமும் உண்டே
தனிப் பட்ட திவ்ய மங்கள விக்ரகம் உண்டே
அத்தை சேவிக்க வேண்டும்
திரு நாட்டில்
ஒண் டொடியாள் திரு மகளும் நீயுமாய் நிலா நிற்ப நித்ய சூரிகள் புடை சூழ
அந்த ஆகாரம் சேவிக்க வேணும்
திரு இந்தளூர் திரு மங்கை ஆழ்வார்
தீ எம்பெருமான் -அடியோமுக்கே எம்பெருமான் அல்லீரோ திரு இந்தளூரிலே

முதல் தனி வித்தேயோ
உன்னை என்று வந்து கூடுவேன்
ஜகத் காரணம்
முதல் -நிமித்த காரணம்
தனி சககாரி காரணம்
வித்து -உபாதான காரணம்
மூன்று லோகம் கிருத அகிருத கிருதகிருத்ய
அண்டானாம் கோடி கோடி சகஸ்ராணி
முழு உலகுக்கு ஆதி
எல்லா வற்றுக்கும் முதல் தனி வித்து
ஒப்பு இல்லாமல் பரி பூரணன்
ஜகத் சரீரியான உன்னை
லீலா விபூதி விசிஷ்டன் -உலகு சப்தம் சொல்லி
நித்ய விபூதி விசிஷ்டன் -உன்னை சப்தம்
ஒண் டொடியாள் திரு மகளும் நீயுமே நிலா நிற்ப
பரமபத திவ்ய மங்கள விக்ரகம் காண ஆசை
அர்ச்சிராதி
திருமுடி தொடங்கி முடிச் சோதி
ஆயன் குழல்
வில்லும் தளிரும் அழகிய திரு முகமும்
நாய்சிமார்
கற்பக காவலா தோள்கள்
கோயில் கட்டணம்
அகலகில்லேன் பிச்சேரும்படி
நித்ய முதிர் அழகு செண்டேறி
திரு உந்தியும்
சிற்றிடையும்
அந்தி போல் நிறத்தாடையும்
திருத் தோள்களும்
கணை கால்களும்
கூசித் தொழும் மெல்லடி
நிரதிசய போக்கியம்
எழு உலகும் தனிக் கோல் செல்ல வீற்று இருக்கும் உன்னை
என்றைக்கு வந்து கிட்டக் கடவேன்
பிராட்டிமார் போலே கூடுவேன் மயர்வற மதி நலம் அருளப் பெற்றவர்
என்பதால் கூடுவேன் என்கிறார்
கடி மா மலர்ப் பாவை ஷட்கம்
என்றைக்கு சேரப் போகிறேன் சொல்லாமல்
கூடப் போகிறேன் கேட்கும் பிராப்தி உண்டே
வடிவைக் காண ஆசைப் பட்ட
முதல் பிரதானம்
தனி அத்விதீயம்
முற்றும் வியாபித்து
மூல பிரகிருதி பாழாய் நிர்வாககன்
சேதனனுக்கு போக மோஷங்கள்விளைத்துக் கொள்ள -அடைய
பயிர் போடாமல் நிலம் வைத்து
பாழாய் போட்டு என்ன வேண்டும் ஆனாலும் போடலாம்
இனி மேல் தான் விதைக்கப் போகிறான்
போகம் நரகம் மோஷம் விளைவித்துக் கொள்ள ஈடாக
வெறும் கலம் பிரகிருதி ஆத்மா
ஜீவாத்மா சப்தம் -சித் சேதனன் முதல் தனி சூழ்ந்து அத்தையும் வியாபித்து
அபரிச்சின்ன மான ஆத்மா தத்வம் நிர்வாககன்
முடிவிலி நிர்வாககன்
சூழ்ந்து அகன்று ஆழ்ந்து உயர்ந்த ஞானத்தால் வியாபித்த ஆத்மா தத்வம்
தர்ம பூத ஞானம் மலர்ந்து
கர்மத்தில் இருந்து விடு பெற்ற

நித்ய தத்வம்
முதல் தனி வித்தாய்
நான் உன்னை கண்டு கொண்டேன் ஞானத்தால்
இனி என்று வந்து கூடுவேன்
அசாதாரணமான திவ்ய மங்கள விக்ரகத்தை
முடிச் சோதியாய் உனது முகச் சோதி மலர்ந்ததுவோ
காரண கார்ய
சூஷ்ம நிலை காரண அவஸ்தை
ஸ்தூல நிலை கார்ய அவஸ்தை
இருப்பை காட்டி
இது போராது
தேச விசேஷத்தில் கண்டு அனுபவிக்க வேண்டும்

———————————————————————————————————————————————————–

நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -10-10-8-ஸ்ரீ M.A V .சுவாமிகள்–

March 25, 2014

சிறிதும் அறிய முடியாதவனான உன்னை
பெற்று வைத்து
இனி விட உபாயம் -இல்லை
என்கிறார்-

————————————————————————————————————————————————-

பெற்று இனிப் போக்குவேனோ உன்னை என் தனிப் பேர் உயிரை
உற்ற இரு வினையாய் உயிராயப் பயன் ஆயவையாய்
முற்ற இம் மூ உலகும் பெரும் தூறாய் தூற்றில் புக்கு
முற்றக் கரந்து ஒளித்தாய் என் முதல் தனி வித்தேயோ

———————————————————————————————————————————————-

பெற்று இனிப் போக்குவேனோ உன்னை –
ஓர் அச்சு இல்லாக் காசாய் போகிற்றாகில் போகிறது
என்று இருக்கிறேனோ
அன்றிக்கே
உன்னை நீ அறியாயோ -என்னுதல்
மிக மிகத் தாழ்ந்தவனாய் இருந்த எனக்கு
மிகவும் தாரகனான உன்னைப் பெற்று வைத்து
இனி நான் உன்னை விடுவேனோ –

என் தனிப் பேர் உயிரை –
வரில் போகடேன் -கெடில் தேடேன் -என்று
இருக்கிற ஆத்மாவின் அளவேயோ
உன்னை -என்றதனை விவரிக்கிறார் -மேல்
உலகங்கட்க்கு எல்லாம் ஓர் உயிரேயோ -8-1-5-என்கிறபடியே
எல்லா ஆத்மாக்களுக்கும் ஆத்மாவான உன்னை –
பெற்று இனிப் போக்குவேனோ -என்றது -மற்றைய இலாபங்களில் வேறு பாடு
என் தனிப் பேர் உயிரை -என்றது தம்மில் வேறுபாடு –

உற்ற இரு வினையாய்-
ஆத்மாவைப் பற்றிக் கிடக்கிற நல்வினை தீவினை கட்கு நிர்வாஹகன் ஆனவனே
உன்னை ஒழிய வேறு சில கர்மங்களை
தனித்து இயலும் தன்மையை உடையவனாய்
நினைத்து இருந்தேன் ஆகில் அன்றோ உன்னை விடல் ஆவது –

உயிராயப்-
நல்வினை தீ வினைகளைச் செய்கிற ஆத்மாவுக்கு
நிர்வாஹகனாய்
அந்த இரு வினைகளைச் செய்கிறவன் தான் உனக்கு உரியவன் அன்றாகில் அன்றோ உன்னை விடலாவது –

பயன் ஆயவையாய் –
அக் கர்மங்களின் உடைய பலத்துக்கு நிர்வாஹகனாய்
நல்வினை தீ வினைகளின் பலன் உன்னை ஒழிய
வேறு சிலரால் கிடைக்கின்றது என்று
இருந்தேன் ஆகில் அன்றோ விடலாவது

உன்னை பெற்ற பின்பு
கிடைத்தற்கு அரிய
இனி போக விடுவேனோ
முதல் தனி வித்தேயோ
இரு வினை -நிர்வாகன்
எல்லாம் அவனே
முற்றும் வயிற்றில் வைத்து ரஷித்து
முத்திரை
போனால் போகும் விட மாட்டேன்
antique value
பெற்றே தீர வேண்டும்படி
தாரகன் உன்னை
விபசாரியாக போந்த
என் தனி பேர் உயிரே
தாழ்ந்த எனக்கு
உன்னை நீ அறியாயோ
என்னை நீ அறியாயோ
ஒரு நொடி பொழுதும் பிரிந்து தரிக்க முடியாத என்னை
உபமான ரஹீதனாய் -தனி
பேர் -ஆத்மா சிறிய உயிர்
பரமாத்மா விபு என்பதால் பேர் உயிர்
உயிர் தாரகன்
தரித்து இருக்க
ஆத்மாவின் அளவேயோ வரில் போகேடன் போகல் தேடேன்
ஈடு பாடு இல்லை
உன்னை
தனி பேர் உயிரே
முற்ற இரு வினையாய்
உன்னால் அல்லல் யாவராலும் குறை வேண்டேன்
யாரைக் கொண்டு
சாதனம் வேறு இல்லையே
உன்னை ஒழிய வேறு சில கர்மங்கள் ஸ்வ தந்த்ரம் இல்லையே
அவை சாதனம் இல்லையே

எம்பெருமான் ஆனந்தம் அடைந்து அருளுவதால்
கர்மம் ஸ்வ தந்த்ரம் என்று இருந்தால் ஆறி இருப்பேன்
உற்ற இரு வினை புண்ய பாப ரூபம் பெரிய வினை
வினையாய் நிர்வாகனாய் இருந்து
த்வமேவ உபாயம் சரணம் பவ
உயிராய் -கர்மம் பண்ணுபவனும் நீயே
கர்த்தாவும் நீயே
உன் ஆதீனம் இல்லாமல் இருந்தால் ஆறி இருப்பேன்
அனுஷ்டாதாவுக்கும் நிர்வாகன்
கர்ம பலனும் உன்னாலே
தரை லோக்யம்
சம்சாரமும் நீ இட்ட வழக்கு
பெரும் தூறு புக்க இடம் அறிய முடியாத
உடன் மிசை உயிர் என கரந்து எங்கும் பரந்துளன்
ஒளிந்தாய் -யத் ஆத்மா ந வேத -கண்ணுக்கு விஷயம் இல்லாமல்
என் முதல் தனி வித்தேயோ
எல்லாரும் துடிக்க வில்லை
லேகியம் கொடுத்து
மயர்வற மதி நலம் அருளி
உடனே உன்னை அடைய துடிக்கிறேன்
எல்லா பிரத்யனமும் நீ ஆனபின்பு ஆறி இருப்பேனோ
கிருபையும் ஏறிப் பாயாமல் இருக்க
எல்லாம் நீயாய் இருக்க
நானும் ஓர் அடி எடுத்து இருந்தால் ஆறி இருக்கலாம்

————————————————————————————————————————————————————————

நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -10-10-7-ஸ்ரீ M.A V .சுவாமிகள்–

March 25, 2014

நான் பெரிய பிராட்டியாரை சார்ந்தவன் ஆகையால்
பிரளயத்தில் மூழ்கின ஸ்ரீ பூமிப் பிராட்டியாரை எடுத்து
அவளோடு கலந்தால் போலேயும்
கடலைக் கடைந்து பெரிய பிராட்டியாரோடு கலந்தால் போலேயும்
பிறவிக் கடலில் மூழ்கின என்னை எடுத்து
என்னோடு கலந்தருளி
என் பக்கல் மிக்க காதலைச் செய்த
உன்னைப் பெற்று வைத்து இனி தப்ப விடுவேனோ
என்கிறார்-

——————————————————————————————————————————-

கோல மலர்ப் பாவைக்கு அன்பு ஆகிய என் அன்பேயோ
நீல வரை இரண்டு பிறை கவ்வி நிமிர்ந்தது ஒப்பக்
கோல வராகம் ஒன்றாய் நிலம் கோட்டிடைக் கொண்ட எந்தாய்
நீலக் கடல் கடைந்தாய் உன்னைப் பெற்று இனி போக்குவனோ –

———————————————————————————————————————————

கோல மலர்ப் பாவைக்கு அன்பு ஆகிய என் அன்பேயோ –
பிராட்டி பக்கல் உள்ள அன்பின் மிகுதியாலே
அந்த அன்பே காரணமாக அவளால் அங்கீ கரிக்கப் பட்ட
என் பக்கலிலே மிக்க அன்புள்ளவன் ஆனவனே
பட்டர் தம்முடைய அந்திம தசையில் அருளிச் செய்த வார்த்தை
பெரிய பிராட்டியார்க்கு அன்பன் ஆகையாலே
அவளால் அங்கீ கரிக்கப் பட்ட நமக்கும் அன்பனாம் என்று
இப்பாட்டினை
நம்முடையார் த்வயத்தின் அர்த்தத்தோடு அனுசந்திப்பார்கள் -எனபது
திரு மால் என்னை ஆளும் மால் -10-7-5-என்னும்படியே
தம்முடைய அன்புக்கு அடி சொல்லுகிறார் –
அந்தப்புரத்தைச் சார்ந்தவன் அன்றோ –
என் அன்புக்கு அடி இல்லையோ –

நீல வரை இரண்டு பிறை கவ்வி நிமிர்ந்தது ஒப்பக் –
ஒரு நீல மலை
இரண்டு பிறையைக் கவ்வி
நிமிர்ந்தால் போலே
பிறையில் மறுவைப் போன்றதாயிற்று -திரு எயிற்றில் கிடந்த பூமி –

கோல வராகம் –
மாசு உடம்பில் நீர் வாரா நின்ற நிலை அன்றோ
இவருக்கு ஆலத்தி வழிக்க விஷயம் ஆயிற்று
அன்றிக்கே
பாசி தூரத்து கிடந்த பார் மகள் -என்கிறபடியே
காதலி அழுக்கோடு இருக்க
தாமான படியே வருவார் ஆகில்
காதலுக்கு குறைவாம் இத்தனை அன்றோ –என்னுதல்
அவன் அழிவுக்கு இட்ட வடிவிற்கே அன்றோ இவர் ஆலத்தி வழிக்கிறது

ஒன்றாய் –
வராகத்த்தின் இனத்தோடு சேர்ந்ததாய் -என்னுதல்
மூன்று உலகங்களையும் கண் செறி இட்டால் போலே -மறைத்தால் போலே
விம்ம வளர்ந்த படியாலே ஒப்பு அற்றதாய் -என்னுதல்
நிலம் கோட்டிடைக் கொண்ட எந்தாய் –
பிரளயம் கொண்ட பூமியை அண்டத்தின் உடைய சுவரிலே புக்கு
திரு எயிற்றிலே கொண்டு எடுத்தால் போலே
பிறவிக் கடலிலே மூழ்கின என்னை எடுத்தவனே –

நீலக் கடல் கடைந்தாய் –
பிராட்டியைப் பெறுகைக்காக
கடலைக் கடைந்தவனே
கடைகிறவனுடைய நிழலீட்டாலே-நீலக் கடல் -என்கிறார் –
அன்றிக்கே –
எல்லா மருந்துகளையும் போகடுகையாலே வந்த
நிற வேறுபாட்டாலே சொல்லுகிறார் -என்னவுமாம்
அன்றிக்கே
நீளம் -எனபது நீல இரத்தினத்தைச் சொல்லிற்றாய்
அவை மிக்கு இருந்த காரணத்தால்
இரத்தினாகரம் -என்ற பெயரை நோக்கி கூறுகின்றார் என்னவுமாம் –

உன்னைப் பெற்று இனி போக்குவனோ –
ஸ்ரீ பூமிப் பிராட்டியை பெறுகைக்கு செய்த செயலையும்
பிராட்டியை பெறுகைக்கு செய்த செயலையும்
என்னை பெறுகைக்கு செய்து
என்னைக் கிட்டப் பெற்ற பின்பு
உன்னைப் போக விடுவேனோ
நீ செய்த செயலின் பலத்தால் சேர்ந்த நான்
கைப்பட்ட செல்வத்தை விடத் தக்கவனோ-

அவா தூண்ட வெளிப்பட்ட ஆயிரம்
அவா உபாத்யாயாராக
ஆசார்யர் உரு சொல்லி மீண்டு நாம் சொல்வது போலே
ஈன்ற முதல் தாய் சடகோபன் வளர்த்த இதத்தாய் எம்பெருமானார்
த்வரையால் தூண்டப்பட்டு அருளிய திருவாய் மொழி
காதல் கடல் புரைய விளைத்து -தத்வ த்ரயங்களையும் தாண்டி
பர பக்தி பர ஞானம் பரம பக்தி தலை எடுத்து -அவாவில் அந்தாதி
பெரும் தேவி கேட்டு அருளி -பெருமைக்கு தக்க தேவி ராமாவதாரம் ஒரே தேவி
உனக்கு ஏற்ற கோல மலர்ப் பாவைக்கு அன்பாகிய
நம்பிள்ளை திரு முன்பே அனுபவிக்க பெற்றோம்
பெரும் தேவி தாயார் -தேவப் பெருமாள் பெருமைக்கு தக்க
இரட்டை புறப்பாடு
மகா நவமி சேர்த்தி உத்சவம்
உத்தரம் சேர்த்தி
அயர்வறும் அமரர்கள் அதிபதி
இமையோர் தலைவா தொடங்கி

சேர்த்தி புறப்பாடு சேவிக்க பெரும் கூட்டம்
த்வயார்த்தம் சொல்லும் பாசுரம்
த்வயம் பிரதிபாதிகன் தேவ பெருமாள்
பெரிய பிராட்டியார் பரிக்ரகம்
அன்பா என் அன்பே
என்னிடம் அன்பு வைத்ததால்
வைதேகி ஆலிங்கனம் செய்து கராதிகள் வதம் ஆனபின்பு
பூமிப் பிராட்டி போல என்னை அனுக்ரகித்து
பெரிய பிராட்டி கடல் கடைந்து
சம்சார ஆர்ணவம் என்னை எடுத்து
அதி வியாமோகம் செய்த பின்பு
உன்னை இனி தப்ப விடுவேனோ
அன்பாகிய என் அன்பா
பிராட்டி பக்கல் சிநேகமே ஹெதுவாகி
அவளுக்கு அன்பாகிய என்னிடம் அன்பாகி
சரம தசையில் பட்டர் வார்த்தை
அனுசந்தானம் செய்து கொண்டு
த்வயம் அர்த்தானுசந்தானம்
எப்பொழுதும் துடிக்கும் அதரம்
இந்த பாசுரம் அனுசந்தித்த பின்பு
கோல மலர்ப் பாவைக்கு ஸ்ரீ மத் சப்தம்
நஞ்சீயர் அருளிச் செய்ததாக நம்பிள்ளை அருளிச் செய்வர்

அகலகில்லேன் இறையும்– ஒழிவில் காலம் இரண்டையும் சேர்த்து இந்த பாசுரம்
காஞ்சிபுரத்தில் சொல்வது பொருத்தம்
துயர் அறு சுடர் அடி தேவ பெருமான் திருவடி
பொது நின்ற பொன் அம் கழல் திருவரங்கம் திருவடி
பூவார் கழல் திருவேங்கடம் திருவடி
திரு நாரணன் தாள்கள் திரு நாராயணபுரம்
சதுஸ் ஸ்லோகி
ஸ்தோத்ர ரத்னம் இரண்டும் காஞ்சி த்வய விவரணம்
தம்முடைய அன்புக்கு அடி கோல மலர்ப்பாவை அன்பாகியதால் எனக்கு அன்பன்
நேரடி தொடர்பு இல்லை
சம்பந்தம் பிராட்டி மூலமே தான்

கோல வராகம் கோட்டிடை கொண்ட எந்தாய்
பெரிய அவதாரம்
மேரு பரல் போலே
பிறை இரண்டு கவ்வி
திரு விக்ரமன் விட பெரியதாய் –
பூமி பிறையில் உள்ள மறு போலே

ஒரு திருவடிக்கு போருமானது மண்
வராக அவதாரம்
அஞ்சன கிரி போலே
இரண்டு பிறை -இரண்டு கோரைப் பல்கள்
நிலம் கோட்டிடை கொண்ட எந்தாய்
பூமிக்கு திருஷ்டாந்தம்
மறு போலே சின்னதாக இருக்க
இரண்டு பிறை கவ்வி சொல்லி
மாசுடம்பில் நீர் வாரா மானமில்லா பன்றி
நீற்றுக்கும் சேற்றுக்கும் இறாயாத வராக
திருஷ்டி கழிக்கிறார்
பசி தூர்த்து கிடந்த பார் மகள் பிரணயதுக்கு சேர வந்து
சுத்த சத்வ மாயம்
உபமானம் அபிமானம் இல்லா பன்றியாய்
அவன் அழிவுக்கு இட்ட வடிவு ஆலத்தி திருஷ்டி கழிக்கிறார்
மேன்மை அழியும் படி தாலா நின்று
ஸ்வா பாவிக திரு மேனி
மகா நவமி அலங்காரம் போலே
ஒன்றாய்
ஒப்பற்றதாய் வராகம் சஜாதீயம் வராகத்தில் ஒன்றாய்
மாய மான் போலே இல்லை ராஷச வாடை வீச மற்ற மான்கள் கிட்டே வர வில்லை

உடம்புடன் உராசும் படி அவதாரத்தில் மெய்ப்பாடு
கோரக் கிழங்கும் உண்டு நஞ்சீயர் ஈடுபட்டு அனுபவம்
ஒன்றாய்
விம்ம வளர்ந்த அத்விதீயம்
ஒட்டு விடுவித்து எடுத்த
சம்சார பிரளயம்
கடல் கடைந்தாய் பெரிய பிராட்டிக்காக வியாபாரம்
நீலக் கடல்
நீல மேக சியாமளன் நிழலீட்டால்
மூலிகைகள் போட்டு நீலம்
நிறத்தால் நீல ரத்னம் சொல்லி ரத்னாகாரம் -நீலக் கடல்
இப்படி மூன்று அர்த்தங்கள்
உன்னை பெற்று இனி போக்குவேனோ
எனக்காக இப்படி பண்ணி அருளி
ஆழ்வாரை பெற பண்ணி
பெற்று இனி போக்குவேனோ
பெற்ற பின்பு
கையிலே கிடைத்த மாணிக்கத்தை கடலில் பொகட்டுவார் உண்டோ
உன்னை போக விட மாட்டேன்
கிருஷி பண்ணி
ஆழ்வாரை பெற எம்பெருமான் கிருஷி பலம்
விட சக்தன் அல்லன்

—————————————————————————————————————————————–

நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -10-10-6-ஸ்ரீ M.A V .சுவாமிகள்–

March 24, 2014

பெரிய பிராட்டியார் பக்கல் போலே
என் பக்கல் மிக்க காதலை உடையவனாய்
என் சரீரத்திலும் ஆத்மாவிலும் மிக்க விருப்பத்தைச் செய்து
அனுபவித்த நீ
என்னைக் கைவிடாமல் ஈண்டென
அங்கீ கரித்து அருளாய் –
என்கிறார்-

———————————————————————————————————————————–

எனக்கு ஆரா அமுதமாய் எனது ஆவியை இன்னுயிரை
மனக்கு ஆராமை மன்னி உண்டிட்டாய் இனி உண்டு ஒழியாய்
புனக்காயா நிறத்த புண்டரீகக் கண் செங்கனி வாய்
உனக்கு ஏற்கும் கோல மலர்ப் பாவைக்கு அன்பா என் அன்பேயோ

————————————————————————————————————————————–

எனக்கு ஆரா அமுதமாய் –
தேவசாதியினுடைய உப்புச் சாறு போலே அன்றியே
எபோழுதும் அனுபவிக்கத் தகுந்ததாய்
நித்ய சூரிகள் கூட அனுபவிக்கும் உன்னை
பிறவியிலே உழந்து திறக்கிற எனக்கு தந்தாய் –

எனது ஆவியை –
என்னுடையது என்னுமஅதுவே காரணமாக
காதலியின் அழுக்கு உகக்கும் காமுகனைப் போலே
என் உடம்பை விரும்பினாய் –

இன்னுயிரை –
பகவான் உடைய அபிப்ராயத்தாலே
தவதவ நாறுகிற படி –
தவ -பாரதந்த்ர்யம்
மற்றொரு தவ -உரிச் சொல்
அன்றிக்கே
செவ்வாய் கிழமை மங்கள வாரம் என்னுமா பூஎ
சரீரத்தோடு சேர்ந்து இருக்கையாலே தண்ணிது -என்று சொல்கிறார் -என்னவுமாம்

மனக்கு ஆராமை மன்னி உண்டிட்டாய் –
மனத்துக்கு அமையாமையாலே
எக்காலத்தும் அனுபவித்தாய் –

இனி உண்டு ஒழியாய்-
நீ தொடங்கின கார்யத்தையும்
நடுவே குறை கிடக்க விடாதே
அங்கீ கரித்து அருளாய் -என்றது
நீ இவ்வளவு புகுர நிறுத்துகைக்கு நான் துணை செய்தது உண்டோ –
உன் கார்யத்துக்கு உன்னை வேண்டிக் கொள்ள வேண்டுமோ
இவருடைய அமுதத்துக்கு அனுபவிக்கும் தன்மை உண்டு காணும் –

இவ்வாத்மாவையும்
இதனுடைய சரீரத்தையும் விரும்புகை உனக்குச் சேருமோ
நீ உகந்தாருக்குச் சேருமோ –
புனக்காயா நிறத்த-
தன்னிலத்தில் அலர்ந்த
காயம் பூ போலே ஆயிற்று -வடிவு இருப்பது –

புண்டரீகக் கண் –
வாத்சல்யம் ஆகிற அமுத மழையைப் பொழியும்படி
ஆயிற்று கண்கள் இருப்பன –

செங்கனி வாய் –
சிவந்து கனிந்து ஆயிற்று
முறுவல் இருப்பது
பிராட்டி விரும்பும் துறைகள் அல்லவோ இவை
அக்காயா தாமரை பூத்துக் கனியப் பழுத்தால் போலே ஆயிற்று
திரு மேனியும் திருக் கண்களும் திருப் பவளமும் -இருப்பது

உனக்கு ஏற்கும் கோலம் –
இவனைப் போன்று வார்த்தையால்
கசக்குதற்கும் பொறாத மிருதுத் தன்மை உடையவள்
இப்படிப் பட்ட உனக்கு ஒத்த அழகினை உடையளாய்

மலர்ப் பாவைக்கு அன்பா –
மலரில் மணத்தைவடித்து வகுத்தால் போலே -வடிவை ஆக்கினால் போலே –
இருக்கிற பிராட்டிக்கு அன்பனே
உனக்கு ஏற்கும் கோலம் -என்று
அவ் அழகினை இங்கே ஏறிடுகிறார் -நியாயாதிதேசம் –
அத்தேசம் = ஏறிடுதல்
ஸ்வரூப அத்தேசம் இல்லை இங்கு -முற்றுவமை இல்லை
நியாய அத்தேசம் -அது போன்று இது -சிறப்புடைத்து –

கோலம் மலர்ப் பாவைக்கு அன்பா -என் அன்பேயோ
அவள் பக்கல் அன்புடையவன் -என்று தோற்றி இரா நின்றது
தம் பக்கல் -அன்பு என்றும் -அது உடையவன் என்றும்
தெரிக்க போகிறது இல்லை –
ஞானத்தை உடையவனை ஞானம் என்ற சொல்லால் கூறுவது போன்று
தத் குண சாரத்வாத் து தத் வ்யபதேச ப்ராஜ்ஞவத் -சாரீரக மீமாம்சை-2-2-20-
ஞானத்தை முக்கிய குணத்தை உடையவன் ஆகையாலே
ஜீவன் ஞானம் என்று இறைவனைப் போன்று கூறப்படுகிறான் –

பெரிய பிராட்டியார் பக்கல் போலே
புஜித்த நீ
பிரகிருதி ஆத்மா இரண்டிலும்
சடக்கு என அனுக்ரகம் செய்து அருள வேண்டும்
கோல மலர்ப் பாவைக்கு அன்பாகிய என் அன்பேயோ
எனக்கு ஆரா அமுதாய்
உப்பு ச்சாறு போலே இல்லாமல்
நித்யர்கள் அனுபவிக்கும்
என் கடல் படா அமுதம்
அது கடல் பட்ட அமுதம் -உப்புச் சாறு
ஆரா அமுதம்
சதா செவ்யமாய்
சக்றுத் செவ்வியம் உப்பு சாறு
நித்யர்கள் எல்லாரும் அனுபவிக்கும்
சம்சாரி எனக்கு
மனக்கு மனத்துக்கு
என்னுடைய ஆத்மாவை ஆரா அமுதாய்
என்னுடைய  என்பதால் ஈடுபாடு
அபிமத விஷயத்தில் அழுக்கு உகக்கும் காமுகன் போலே

இன்னுயிர்
பகவத் அபிப்ராயத்தால்
தவ தவ
அவன் வார்த்தை
மம போய் தவ
உன்னுடைய வஸ்துவை கேட்டார்
திரும்பி சொல்லி
செவ்வாய் கிழைமை மங்கள வாரம் சொல்வதுபோலே
இடக்கு அடக்கி
நாசமாக போகும் ஆத்மா சொல்லாமல் இன்னுயிர்
பிரகிருதி சம்பந்தம் கொண்டதை தண்ணிது
மனக்கு மனத்துக்கு
மன்னி உண்டிட்டாய் பொருந்தி உண்டிட்டாய்
கிண்டி கிளிறி வேகமாக உண்பர் இந்தியர்
வெளி நாடு உண்பது நிதானம் செய்யும் பொழுது வேகமாக
நிரந்தரமாக புசித்தாய்
இனி உண்டு ஒழியாய்
பாதியில் விடாமல்
மனசுக்கு ஆராமை
இருவரும் இருவருக்கும்
குறை கிடக்க விடாமல்
நீ ஆரம்பிக்கும் கார்யம் முழுக்க தலைக் கட்டி
இவ்வள்ளவு புகுர நிறுத்த நான் சக கரிக்க வேண்டுமோ
உன் கார்யம் செய்ய
போக்யத்வம் மட்டும் இல்லை
போக்த்ருத்வமும் உண்டு இந்த அமுதத்துக்கு
நான் நன்றாக சாப்பிட
நீ நன்றாக சாப்பிடு
புனக்காயா நிறம்
புண்டரீக கண்
இந்த அல்ப ஆத்மாவிலும் சரீரத்திலும் த்யாஜ்யமான தேகத்தில் வயாமோகம்
உனக்கு சேருமோ
உன்னை உகந்தாருக்கு சேருமோ

வாயால் சொன்னாலே கன்னி போகும்
எம்பெருமானை வாசா சொல்லவும்  போறதா படி மென்மை
கோல மலர்ப் பாவை நேராக சொல்லி
புஷ்பம் பரிமளம் எடுத்து வடிவாக்கி
மலர்ப்பாவை
உனக்கு சத்ருசமாக

——————————————————————————————————————————–

நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -10-10-5-ஸ்ரீ M.A V .சுவாமிகள்–

March 24, 2014

எல்லா பொருள்களையும் பாது காக்கின்ற நீ கை விட்டால்
என் கார்யம் -நான் செய்யவோ
பிறர் செய்யவோ
முடிந்தேனே அன்றோ –
என்கிறார்

———————————————————————————————————————-

போர விட்டிட்டு என்னை நீ புறம் போக்கல் உற்றால் பின்னை யான்
ஆரைக் கொண்டு எத்தை அந்தோ எனது என்பன் என் யான் எனபது என்
தீர இரும்பு உண்ட நீரது போலே என் ஆர் உயிரை
ஆரப் பருக எனக்கு ஆரா அமுது ஆனாயே –

——————————————————————————————————————————

போர விட்டிட்டு –
உன் பக்கலில் நின்றும் பிரித்து
உபேஷித்து-

என்னை –
வேறு கதி இல்லாத என்னை –
அன்றிக்கே –
அறிவின்மை -ஆற்றல் இன்மைகளுக்கு எல்லாம்
எல்லையான -என்னை -என்னுதல்

நீ –
படைப்பே தொடங்கி
இவ்வளவும் வரப் புகுர நிறுத்தின நீ -என்றது
ஞானத்தாலும் ஆற்றலாலும் நிறைவுற்று இருக்கிற நீ -என்னுதல் என்றது
ஆள் பார்த்து உழி தரும் நீ -நான்முகன் அந்தாதி -60-
எதிர் சூழல் புக்கு திரியும் நீ -2-7-6-என்றபடி
அக்கறை ஏறமாட்டாதான் ஒருவனை அமுக்கினால் போலே இருக்கிறது காணும்

என்னை நீ –
கண்ணும் காலும் இன்றிக்கே இருப்பான் ஒருவன்
கண்ணும் காலும் உடையனாய் இருப்பான் ஒருவன்
யாருக்கு யார் வழி காட்டுவார் -என்கிறது –
நைவ கிஞ்சித் பரோஷம்தே பிரத்யஷோசி ன் கச்யசித் -ஜிதந்தே
உன்னால் அறியப் படாத பொருள் ஒன்றும் இல்லை
நீ ஒருவருக்கும் அறிய ஒண்ணாதவனாய் இருக்கிறாய் -என்றபடி –

புறம் போக்கல் உற்றால் –
புறம்பே போக்குகையிலே நினைத்தால் -என்றது
என் கார்யம் நான் செய்வேனாகப் பார்த்து
என்னைக் கை விட்டால் -என்றபடி –

பின்னை யான் ஆரைக் கொண்டு எத்தை –
அளவில்லா ஆற்றல் உடைய நீ கை விட்ட பின்பு
ஆற்றல் இல்லாதவனான நான்
என்ன உபாயத்தைக் கொண்டு
என்ன புருஷார்த்தை முடிப்பது –
பேற்றினைப் பெறுவது இறைவனாலே
அறிவு இல்லாத கர்மங்களின் கூட்டத்தால் அன்று –
என்னும் இடம் தோற்றுகைக்காக –எத்தைக் கொண்டு எண்ணாதே -ஆரைக் கொண்டு -என்கிறார் –

அந்தோ –
மாம் ஏகம் சரணம் விரஜ -என்ற
உனக்கு நான் உபதேசிக்க வேண்டுவதே –

எனது என்பன் என் யான் எனபது என் –
முடிந்தேன் -அன்றோ என்கிறார் –

தீர இரும்பு உண்ட நீரது போலே என் ஆர் உயிரைஆரப் பருக எனக்கு ஆரா அமுது ஆனாயே –
நெருப்பினால் நன்கு காய்ச்சப் பட்ட இரும்பு
காய்ச்சல் தீர நீரை முற்றும் உண்ணுமாறு போலே
என் ஆத்மாவை முற்றும் உண்ணுவதற்காக
எனக்கு உன்னுடைய எல்லை இல்லாத இனிமையைக் காட்டி
என்னை அடிமைப் படுத்தினாய் –
என் விடாய் தீரக் கலந்தாய் -என்று இருந்தேன்
உன் விடாய் தாராவே இருந்ததே அன்றோ -என்றது
உனக்காக அன்றோ உன்னைக் காட்டிற்று -என்றபடி
அன்றிக்கே
உயிரை என்ற இரண்டாம் வேற்றுமையை முதல் வேற்றுமையாகக் கொண்டு
என் ஆர் உயிர் ஆனது உன்னை ஆரப் பருக -என்னவுமாம்
அப்போது காய்ந்த இரும்பு அக் காய்ச்சல் தீரும்படி
நீரைப் பருகுமாறு போலே
என் ஆர் உயிர் ஆனது என் தாபம் எல்லாம் தீரும்படி
உன்னை அனுபவிக்க எனக்கு பண்டு எல்லை இல்லாத
இனியன் ஆனவனே -என்றுமாம் –
இரும்புண்ட நீர் மீள்கினும் யென்னுழையில்
கரும்புண்ட சொல் மீள்கிலன் காணுதியால்-கம்பர் ஜடாயு உயிர் நீத்த படலம் -104

பேறு உம்மதானால் -அதற்கு செய்ய வேண்டிய உபாயமும் –
உம்முடைய தலையில் ஆக வேண்டாவோ -என்ன
எனக்கு உபாயமாய் இருப்பது ஓன்று உண்டு என்பதோர் பொருள் உண்டோ
பிரிந்து நிற்பதற்கு தகுதியாய் இருப்பது ஒரு நான் உண்டோ
சரீரியை ஒழிய சரீரத்தை பாது காப்பதற்கு வேறு சிலர் உளரோ –
என்கிறார்

சர்வ ரஷகன் நீ என்னை உபேஷித்தால்
நான் ரஷிக்கவோ  யார்தான் ரஷிக்க
முடிந்தேன்
யாரை கொண்டு
ஆரா அமுதனாய் ஆனாய்
உன் பக்கல் நின்றும் பிரித்து
என்னை உபேஷித்து
அநந்ய கதியான என்ன
சிருஷ்டி தொடங்கி இது வரை அருளின நீ
ஞான சக்திகளால் பூரணன்
அக்கரை ஏற முடியாதவனை அமுக்கினது போலே
என்னை நீ
கண்ணும் காலும் இல்லாதவனுக்கு உள்ளவன் உதவ வேண்டாவோ
ஞானம் கண்
சக்தி கால்
இரண்டும் இல்லாத என்னை இரண்டாலும் பூரணன் ஆன நீ
ஆள் பார்த்து ஊழி தரும் நீ
எதிர் சூழ் புக்கு திரியும் நீ
வளைப்பு இட்டு கேட்கிறார்
உன்னை விட்டு ஒரு ஷணம் கூட  தரிக்க முடியாத என்னை
புறம்போக்கு புறம்பே போக்க விட்டு வீணாக உபயோகம் இல்லாத படி
என் கார்யம் நான் செய்வேனாக
யாரைக் கொண்டு
எத்தை கொண்டு
எந்த உபாயம்
எந்த புருஷார்த்தம்
அந்தோ
வினைச் சொல் இல்லாமல்
புருஷார்த்தம் சேதனன் மூலம் என்பதால் யாரைக் கொண்டு என்கிறார்
அசேதன கிரியா களபரங்கள் அனுஷ்டானம்
தெற்கு ஆழ்வான் கோளரி ஆழ்வான்-சக்கரக்கையன்  போக்கினால் தான் போகும்
குளியல் வெறும் சரீரம் புறம்பே  மட்டும் சுத்தி பண்ணும்
ஆரைக் கொண்டு புருஷார்த்தம் -எந்த கார்யம் செய்து என்னாமல்-
அந்தோ -மாம் ஏகம் சரணம் விரஜ உபதேசித்த உனக்கு
அத்தை அனுஷ்டானம் செய்து உள்ள நான் சொல்ல வேண்டி இருக்கிறதே
தலை எழுத்து அந்தோ
நீ சொன்னதை
எனது எனபது என்
யான் எனபது என்
முடிந்தேன்
கரணங்கள்
தீர இரும்பு உண்ட நீர் போலே
உறிஞ்சிக் கொள்ளும்
ஆத்மாவை பருகிக் கொண்டாய்
காய்ச்சல் தீர நீரை நிச்ஷேமாக புஜிக்குமா போலே
நிரதிசய போக்யதை போலே
இரும்பு அனன்று கொண்ட நீர் போலே திரு மங்கை ஆழ்வார்
உன் விடாய் தீர
என் ஆர் உயிர் ஆனது உன்னை ஆரப் பருக என்னவுமாம்
உண்டிட்டாய் இனி உண்டு ஒழியாய்
விபக்தி வேற்றுமை உறுப்பு மாறாடி இரண்டு நிர்வாகம்
சந்தாபம் தீரும் படி உன்னை புஜிக்க
பேறும் உம்மதானால்
சாதனமும் உம்மால் ஆக வேண்டாவோ என்ன  என்றானாம்
ஆழ்வார் சாதனம் அனுஷ்டானம் நீ
காரணம் கார்யம் நீ தானே
எனது எனபது என்ன
யான் எனபது என்ன
சரீர ரஷணம் சரீரி ஒழிய செய்வார் உண்டோ
நீ தான் சரீரி
நீ செய்து அருள வேண்டும் என்கிறார்

————————————————————————————————————————————————

நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -10-10-4-ஸ்ரீ M.A V .சுவாமிகள்–

March 24, 2014

எல்லாப் பொருள்களுக்கும் நிர்வாஹகனான நீ
என் கார்யத்தை நானே செய்து கொள்வேனாய் பார்த்தாய் ஆகில்
என்னைக் கை விட்டாய் அல்லையோ
என்கிறார்

—————————————————————————————————————————–

உம்பர் அம் தண் பாழேயோ அதனுள் மிசை நீயேயோ
அம்பரம் நற் சோதி அதனுள் பிரமன் அரன் நீ
உம்பரும் யாதவரும் படைத்த முனிவன் அவன் நீ
எம்பரம் சாதிக்கல் உற்று என்னைப் போர விட்டிட்டாயே

—————————————————————————————————————————

உம்பர் அம் தண பாழேயோ –
மஹான் முதலிய காரணங்களுக்கு எல்லாம் காரியம் ஆகையாலே மேலாய் –
தன்னுடைய ஒரு கூற்றாலே கார்ய வர்க்கத்தை பிறப்பிக்க வற்றான ஆற்றலை உடைத்தாய்
வியக்கத் தக்க பரிணாமத்தை உடையதாய்
ஆத்மாக்களுக்கு போகத்தையும் மோஷத்தையும் விளைத்துக் கொள்ளலாம்
நிலமாய் இருந்துள்ள மொள்ள பிரக்ருதிக்கு நிர்வாஹகன் ஆனவனே
உம்பர் -மேல்
அம் தண-அழகிய குளிர்ந்த
பாழ் -மூல பிரகிருதி -படைத்ததற்கு தகுதியாய் இருக்கை
காரண நிலையில் கார்யத்துக்குதகுதியாய் நின்று
தன் கார்யத்தாலே
ஆத்மாக்களுக்கு போகத்தையும் மோஷத்தையும் விளைக்கவற்று -என்னும் இடத்தை சொல்லுகிறது –
வெண்மை என்று கொண்டு பிரித்துக் காட்டும் சொல்லாலே
தர்மத்தை பிரிய சொல்லுமாறு போலே
பிரியச் சொல்லப் போகாது இறைவனுக்கு சரீரம் ஆனவற்றை
ஆதலின் பாழேயோ -என்கிறார்
உம்பர் அம் த ண பாழ் -என்கிற இதனால்
ஆத்மாக்களுக்கு சரீரமாய் -அவ்வழியாலே ஈஸ்வரனுக்கு சரீரம் ஆகை
அன்றிக்கே
யஸ்ய ஆத்மா சரீரம் யஸ்ய பிர்த்வி சரீரம் –
ஆத்மாக்களுக்கு வேறு பட்டதான அசேதனப் பொருள்களுக்கும்
அவனை ஒழிய நிர்வாஹகர் இல்லை என்பதனை தெரிவித்த படி
பாழேயோ -என்கிற இதனால்
சுத்த பேதம் கொள்ளுகிற மீமாம்சகரையும்
ஸ்வரூபத்தால் தாதாத்மியம் கொள்ளுகிற மாயாவாதிகளையும் அழிக்கிறது –

அந்த மூலப் பிரக்ருதிலே மறைந்து நிற்கிற சிறப்புடைத்தான
ஆத்மாவுக்கு நிர்வாஹகன் ஆனவனே
நுட்பமான சித் அசித்துக்களை சரீரமாக உடையவன் காரணம் ஆகையாலே
காரணனாய் உள்ள நிலை சொல்லிற்று
இதனால் விசெஷணத்துக்கு முதன்மை சொல்லும் நியாய வைசேடிக மதங்களும்
விசெஷணதுக்கு பொய்மை கூறும் மாயாவாதி மதங்களும்
ஆழ்வாருக்கு உடன்பாடு அன்று -என்றதாயிற்று
நீயேயோ -என்கிற இதனால்
ஆத்மாவை ஒழிய சரீரத்துக்கு நிலை இல்லாதது போலே
ஈஸ்வரனை ஒழிய ஆத்மாவுக்கு நிலை இல்லை என்றது ஆயிற்று –

அம்பரம் நற் சோதி –
ஆகாசமும் சிறப்புடைத்தான ஒளியும்
இவை இரண்டும் மற்றைய பூதங்களுக்கும் உப லஷணம்
யத் அம்பு வைஷ்ணவ காயா தத விபர வசூந்தரா
பத்மாகாரா சமுத்பூதா பர்வதாப்த்யாதி சம்யுதா -ஸ்ரீ விஷ்ணு புராணம் -2-12-
விஷ்ணு உடைய சரீரம் யாதொரு காரணத்தால் தண்ணீர் ஆயிற்றோ -இதில்
தண்ணீரை சொல்லி மற்றைய பூதங்கட்கு உப லஷணம் ஆனா போலே –

அதனுள் பிரமன் அரன் நீ –
பஞ்சீக்ருதமான ஐம் பெரும் பூதங்களால் உண்டான
அண்டங்களிலே வசிக்கிற பிரமன் சிவன் முதலாயினார்களும்
நீ இட்ட வழக்கு -என்கிறது –

உம்பரும் யாதவரும் படைத்த முனிவன் அவன் நீ –
தேவர்களையும் மற்றும் உள்ளாரையும் படைத்த முனியாய்
பிரசித்தமாய் இருப்பவனும் நீ
பிரமன் அரன் நீ -என்ற ஒற்றுமை தன்மை
கார்ய காரண தன்மை அடியாய் வந்தது
பரம் பொருளின் இடத்தும் உண்டானவை
அவனால் அழிக்கப் படுகின்றவை -காக்கப் படுகின்றன
ஆதலால் காணப் படுகின்றன இவை எல்லாம் ப்ரஹ்மம் அல்லவா -என்னுமாறு போலே
எல்லா பொருள்களையும் கர்மங்கட்கு தகுதியாக படைப்பதற்கு
அவர்கள் செய்த முன் கர்மங்களை நினைக்கும் அவன் -முனி ஆகிறான்
நாம ரூப வேறுபாடு அற்ற சூஷ்ம செதனங்கள் அசேதனங்கள் உடன் கூடிய அந்த பரம் பொருளே
நாம ரூப வேறுபாட்டுக்கு உரிய ஸ்தூல சேதன அசேதன பொருள்களாக கடவேன் -என்று எண்ணியது
இதனால் ஸ்தூலமான சித்தியும் அசித்தையும் சரீரமாக உடையவன் என்பதனாலே
காரியமாம் தன்மை சொல்லிற்று ஆயிற்று –

எம்பரம் சாதிக்கல் உற்று என்னைப் போர விட்டிட்டாயே –
என் கார்யத்தை நீயே செய்வதாக ஏறிட்டுக் கொண்டு
அதனை விட்டு
அசேதனப் பொருளை பொகடுமாறு போலே பொகட்டாய்-என்னுதல்
அன்றிக்கே –
எல்லாவற்றையும் நிர்வஹிக்கிற நீ
என் ஒருவனையும் என் கார்யம் செய்வேனாகப் பார்த்து
உன் பக்கல் நின்றும் போர விட்டு விரும்பாமல் இருந்தாய் -என்னுதல்
என்னை
உன்னால் அல்லது செல்லாத என்னை
போர விட்டாய்
அவன் பக்கலில் நின்றும் பிறி கதிர் பட்டு போந்தாராய் இருக்கிறபடி
குணம் நடையாடாத தேசத்திலே தள்ளினாய் -என்கிறார்
தெளிந்த ஞானத்தினை உண்டாக்கி
பேற்றின் அளவும் செல்லாமல் இருக்கிற இது
நலன் தமயந்தி வழி காட்டி விட்டால் போலே இருக்கிறது காணும்-

சர்வ நிர்வாஹன்
என் கார்யம்  நானே செய்ய பார்த்தாய் ஆகில்
என்னைக் கை விட்டாய் என்பதே அர்த்தம்

நெறி  காட்டி நீக்குதியோ
நான் ஒன்றும் செய்யப் போவது இல்லை நீ பிரயத்தனம் செய்து கொள்
என்னை போர விட்டிட்டாய்
எம் பரம் சாதிக்க  உற்று
பாழ் போட்ட வயல் -ஒன்றும் விதைக்க வில்லை
மூல பிரகிருதி மோஷம் பந்தம்
உம்பர் அம் தண்  உயர்ந்த குளிர்ந்த அழகியதாய்
மேலாக -மூல பிரகிருதி மகதாதி பதார்த்தங்களுக்கு காரணம்
தன்னுடைய ஏக தேசத்தாலே

நிர்வாககன்
ஜீவாத்மா வழியாக அச்சிதுக்கு நிர்வாககன் இல்லை
ஜீவத் தவாறாக மட்டும் இல்லை
நேராக நிர்வாககன் மூல பிரக்ருதியே என்கிற இத்தால்
ஜீவத்வாரா மட்டும் இல்லை
அசித்துக்கும் எம்பெருமான் அனு பிரவேசம் உண்டே
ரூபம் தான் மாறும்
அவஸ்தா பேதம் உண்டாகும் அடியோடு அழியாது
அனைத்துக்கும்
யஸ்ய ஆத்மா சரீரம் யஸ்ய பிரத்வி சரீரம்
நிஷ்கிருஷ்ட பிரத்வியும் சரீரம்
இது வழியே சரீரம் இல்லை
இரண்டுக்கும் நிர்வாககன்
பாழேயோ-பிரகிருதி வேற பரமாத்மா வேற மீமாம்சகரை  அழித்து
ஸ்வரூபென தாதாம்யம் அஞ்ஞானத்தால்  மாயா வாதி அத்வைதி  சுத்த பேதம் இல்லை
பேதமும் உண்டு அபத்தமும் உண்டு
பேத அபேத சம்ப்ரதாயம்
பெதொவா அபெதொவா பேத அபெதவோ மூன்றும் உண்டு
சாஸ்திரம் மூண்டும்
அந்தர்யாமி என்பதால் அபேதம்
தான்குகிரவன் விசெஷனம் பேத அபேதம்
பரமாத்மா தன்மை ஜீவாத்மா தன்மை அசேதன தன்மை அபேதமும் உண்டு

அதனுள் மிசை ஆத்மா தத்வம் நிர்வாககன்
காரண அவஸ்தை சொல்லி
சூஷ்ம நிலையில்
சூஷ்ம சித் அசித் ப்ரஹ்ம காரணம் காரண அவஸ்தை
நியாய வைசேஷிக மாயாவாதி பஸ்மம் இல்லை
விசேஷ பிரதான்யம் சொல்வான்
விசேஷணம் விசேஷ்யம் கொள்ளாமல் அபரமாத்ம்யம் மித்யா என்பார் தள்ளி
நீ யேயோ
தனியாக சொல்லி
பாழ் மட்டும் சொல்லாமல்
ஈஸ்வரன் இல்லாமல் ஸ்திதி இல்லை
சேதனன் இல்லாமல் சரீரம் இல்லையே
ஆவி பிரிந்தது உயிர் பிரிந்தது ஆத்மா சாந்தி அடையட்டும் சொல்லி ஸ்வரூபென ஐக்கியம் இல்லையே

ஓட்டுனர் இல்லை
பரமாத்மா பிரிந்து  போவது இல்லை
அனைத்துக்கும் உப லஷணம்
அம்பரம் நல் ஜோதி
அதனுள் பிரம்மன் ப்ரஹ்ம ருத்ராதிகளும் நீ இட்ட வழக்கு
பஞ்சீ கரணம்
அண்டம் அப்புறம்
ப்ரஹ்மாதிகள் சிருஷ்டித்து
உம்பர் தேவர்
யாதவர் யாது அவர் மற்று உள்ளவர்கள் படைத்த முனி
சாமானாதி கரண்யம்
காரிய காரணம்
சர்வம் கல்விதம் ப்ரஹ்மா
பூர்வ கர்மங்கள் அனுசந்தானம் செய்து சிருஷ்டித்து நினைப்பதால் முனி
ததாஸ் தேவ குரு தஸ்யாமி
சூஷ்ம காரண அவஸ்தா ப்ரஹ்மம்
முனிவரும் கார்ய அவஸ்தா ப்ரஹ்மம்
நீயே காரணம்
நீயே காரியம்
என் கார்யம் நீ செய்வதாக ஏறிட்டு கொண்டு
அத்தை உபெஷித்து
அசேதனம் பொகட்டுமா போலே
என்னை
உன்னால் அல்லது செல்லாமை உணர்ந்த என்னை
பிறி கதிர்  என்பதே இல்லை
சகலத்தையும் நிர்வஹ்கிக்கிற நீ
குணம் நடமாடாத தேசத்தில் தள்ளி

ஞானம் பெருக்கி
பிராப்தி அளவும் கொண்டு போகாமல்
நளன் தமயந்திக்கு வழி காட்டியது போலே
சூதில் இழந்த நளன்
அப்பா வீட்டுக்கு போகும் வழியையும் தம் வீட்டுக்கு போகும் வழியையும் காட்டி
துணி வெட்டி பிரிந்தான்
தன்னுடன் கஷ்டப் படக் கூடாது என்று
தகப்பனார் வீட்டுக்கு போனாள்
நெறி காட்டி நீக்குதியோ

—————————————————————————————————————————————————————

நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -10-10-3-ஸ்ரீ M.A V .சுவாமிகள்–

March 19, 2014

பெரு மிடுக்கரான பிரமன் முதலாயினோர்கள்
உடைய ஸ்வரூபம் ஸ்திதி பேறு-முதலாயின வற்றுக்கு எல்லாம்
நிர்வாஹகனான நீ
உன்னால் அல்லது ஜீவிக்க விரகு இன்றிக்கே இருக்கிற என்னை
ஐயோ -வந்து அங்கீ கருத்து அருள வேண்டும்
என்கிறார் –

————————————————————————————————————————————-

கூவிக் கொள்ளாய் வந்து அந்தோ என் பொல்லாக் கருமாணிக்கமே
ஆவிக்கு ஓர் பற்றுக் கொம்பு நின்னலால் அறிகின்றிலேன் யான்
மேவித் தொழும் பிரமன் சிவன் இந்த்ரன் ஆதிக்கெல்லாம்
நாவிக் கமல முதல் கிழங்கே உம்பர் அந்த அதுவே

————————————————————————————————————————————————–

கூவிக் கொள்ளாய் –
மேலே கூவிக் கொள்ளாய் -என்றவர்
இங்கேயும் -கூவிக் கொள்ளாய் -என்கிறார் காணும் –
விடாய் கொண்டவன் -தண்ணீர் தண்ணீர் -என்னுமாறு போலே
ஆற்றாமை மிக்கு செல்லா நின்றாலும் பாசுரம் இது அன்று இன்றிக்கே இருக்கிறபடி –

கூவிக் கொள்ளும் அளவும் போராது
வந்து கூவிக் கொள்ள வேண்டும் -என்பார் –
வந்து -என்கிறார் –
ஆற்றாமை மிக்காலும் நான் வந்து கிட்டுகி முறைமை அன்று
உனக்கு தாழ்ச்சியுமாம் -என்கிறார் –
எழுதும் என்னும் இது மிகை -9-8-9- என்பவனுக்கு
நாம் செலுத்தல் என்னும் அது பொறுக்க முடியாதது -என்னும் இடம் சொல்ல வேண்டாவே அன்றோ –
வருகை -அவனுக்கே உரியதாய் இருக்கிறபடி
சரைஸ்து சங்குலாம் க்ருத்வா லன்காம் பிரபலார்த்தன
மாம் நயெத் யதி காகுத்ச தஸ் தஸ்ய சத்ருசம் பவேத் -சுந்தர 9-9-
பகைவர்கள் வலியை அழிப்பவரான ஸ்ரீ ராம பிரான் இலங்கையை அம்புகளாலே
நெருக்கினதாக செய்து என்னை அழைத்துக் கொண்டு செல்வராகில்
அந்த செயலே அவருக்குத் தக்கதாக இருக்கும் -என்றாளே பிராட்டியும்

அந்தோ –
உனக்கு நிறம் அன்று என்று நான் சொல்ல வேண்டுவதே –

என் பொல்லாக் கருமாணிக்கமே-
தொளையாத மாணிக்கம் –
அனுபவிக்கப் படாத ரத்னம் -என்றபடி –
அன்றிக்கே
உலகத்துக்கு ஒப்பான அழகு அன்றிக்கே வேறு பட்டு இருக்கையாலே
பொல்லா -என்கிறார் -என்னுதல்
அன்றிக்கே
கண் எச்சில் வாராமைக்காக -பொல்லா -என்கிறார் -என்னுதல்
நீ அழைத்த போது கண்டு இருக்கல் ஆயிற்றே நீ நீ அன்றிக்கே இருந்தாய் ஆகில் –
என்பார் -பொல்லாக் கரு மாணிக்கமே -என்கிறார் –
க்ரமத்தில் அழைக்க நினைத்தாய் ஆகில் -அழகைக் காட்டி -உனக்கே உரியவன் ஆகும்படி செய்தது என் –
என்பார் -என் பொல்லாக் கரு மாணிக்கமே -என்கிறார்

நன்று -உலகங்கட்கு எல்லாம் வேறு பட்டவனாய் இருப்பினும்
ஸ்வரூபத்தை பார்த்து ஆரி இருக்க வேண்டாமோ -என்னில்
அது செய்யும் இடத்தில் நான் உன்னை ஒழிய உளனாக வேண்டுமே -என்கிறார் -மேல்
ஆவிக்கு ஓர் பற்றுக் கொம்பு நின்னலால் அறிகின்றிலேன் யான் –
பற்றுக் கொம்பு வரையறை செய்யப் பட்டதாய் இருக்கிறபடி
கொடி -கொள் கொம்பை ஒழிய நிற்க வற்றோ
வேரை அறுத்து படர் என்றால் படருமோ என்றபடி –
என் உயிர் பிழைப்பதற்கு காரணமாய் இருப்பது ஓன்று உன்னை ஒழிய வேறு ஓன்று காண்கின்றிலேன் –
நச சீதா த்வயா ஹீனா நசாஹமபி ராகவ
முஹூர்த்தமபி ஜீவாவ ஜலான் மத்ச்யாயிவ உத்ருதௌ -அயோத்யா -53-31
நீருள எனின் உள மீனும் நிலமும்
பாருள எனின் உள யாவும் பார்ப்பு தன்
தாருள தது உளாய் நானும் சீதையும்
ஆர் உளர் எனின் உளேம் அழகு வாய் என்றான் -என்கிறபடியே-

ஆயின் பேற்றுக்கு உடலாக நீரும் சில செய்தாலோ என்ன
மேவித் தொழும் பிரமன் சிவன் இந்த்ரன் ஆதிக்கெல்லாம்நாவிக் கமல முதல் கிழங்கே-
செருக்கு அற்றவர்கள் ஆகித் தொழும் பிரமன் சிவன் முதலாயினோர்கட்கு எல்லாம்
காரணமான திரு நாபிக் கமலத்துக்கும் கிழங்கு ஆனவனே –
கார்யம் இல்லாத போது ஒருவருக்கு ஒருவர் மாறு பட்டவர்களாய்
இருப்பார்கள் ஆதலாலும் -தங்களுக்கு ஒரு கார்யம் வந்த வாறே எல்லாரும் கூடி தொழுவார்கள் ஆதலானும்
மேவித் தொழும் -என்கிறார்
அன்றிக்கே
யான் எனது -என்ற செருக்கு அற்றவர்களாய் தொல்கிரார்கள் என்பார் -மேவித் தொழும் -என்கிறார் என்னுதல் –
இதனால் மற்றை பிரமன் முதலாயினோர் தங்கள் கார்யம் தாங்களே செய்து கொள்கின்றார்கள் இலர் என்பதனையும்
ஆவிக்கு ஓர் பற்றுக் கொம்பு -என்று சொல்லாதவர்களுக்கும்
உதவுமவன் அன்றோ நீ –
என்பதனையும் தெரிவித்த படி –
ஆவிக்கு ஓர் பற்றுக் கொம்பு -என்று சொல்ல அறியாமையாலே
பிரமன் முதலாயினோர்கள் சொல்லார்கள் –

நித்ய சூரிகள் யான் எனது என்ற பற்று இல்லாதவர்கள் ஆகையாலும்
புதிதாக சொல்ல வேண்டாமையாலும் சொல்லார்கள்
-உம்பர் அந்த அதுவே –
அவர்களுக்கும் மேலான நித்ய சூரிகட்கும்
அப்படிப் பட்ட-உபய லிங்க விசிஷ்டனாய் -எளிதில் அடையத் தக்க பொருளாக இருப்பவனே
சதா பஸ்யந்தி சூரய -பிரமாண பிரசித்தியைச் சொல்லுகிறார்
அது -என்று
நித்ய சூரிகளோடு
பிரமன் முதலாயினர்களோடு
வேறுபாடு அற நிர்வாஹகனாய் இருக்கிற
நீ வந்து என்னைக் கூவிக் கொள்ளாய் –
இப்பாட்டால் முன்னும் பின்னும் சொல்லுகிற
சாமாநாதி கரண்யத்துக்கு காரணம்
கார்ய காரண பாவம் என்னும் அத்தை அருளிச் செய்தார் ஆயிற்று
சர்வம் கலு இதம் ப்ரஹ்மம் -சுருதி -இவை எல்லாம் ப்ரஹ்மம் அல்லவா-

நிர்வாஹன் நீ
ஐயோ
மேவித் தொழும் முதல் கிழங்கு
அனைவருக்கும் சத்தை உன்னால்
கூவிக் கொள்ளாய் வந்து அந்தோ
ஆற்றாமை மிக்கு சென்றாலும் பாசுரம் இதுவே
தண்ணீர் தண்ணீர் என்னுமா போலே
கூவிக் கொள்ளாய்
அது மட்டும் போதாது
வந்து
ஸ்வரூபம் பரகத ச்வீகாரம்
சுவகத ச்வீகாரம் கூடாதே
மிதிலை -நப்பின்னை -ருக்மிணி தேரில் ஏற்றி வந்து கொண்டான்
உனக்கு அவத்யம் காண்
தத் சத்ருசம் பவேத்
பெருமை -அவத்யம்
தொழுது எழு என்னும் இதுவும் மிகை நினைப்பவன்
வருகை அசக்யம் பொறுக்க ஒண்ணாது
வருகை அவனுக்கு விவஸ்யம்
அந்தோ
இத்தை நான் உனக்கு சோழ வேணுமோ
என் பொல்லாக்  கரு மாணிக்கமே
வடிவு அழகைக் காட்டி
நீ நீ அன்றிக்கே இருந்தாய் ஆகில் கிரமத்தில்
அழகை காட்டி அனன்யார்கை ஆக்கி
துளையாத மாணிக்கம் பொல்லாக் கரு மாணிக்கம்
பொல்லா -உலகில் இல்லா  மாணிக்கம்
ஸ்வரூபம் பார்த்து ஆரி  இருக்க வேன்ன்டாவோ என்னில்
உன்னை ஒழியவும் நன் உளனாக வேணுமே
இருக்க வஸ்து இல்லையே

நின் அல்லால்  இல்லை
கொடி கொள் கொம்பை ஒழிய
வேரை அறுத்து படர சொன்னால் படருமோ
ஜலான் மச்யம்
பேற்றுக்கு நீரும் உடலாக செய்ய வேண்டாவோ
ப்ரஹ்மா ருத்ரன் எல்லாருக்கும் ஆதி காரணம் நீ முதல் கிழங்கு
அவர்களே தங்கள் கார்யம் தாங்களே செய்து கொள்ளகிறார்கள்
ஆவிக்கு ஒரு பற்று கொம்பு சொல்லக்  கூடத் தெரியாத
அறியாமை காரணம் ப்ரஹ்மாதிகளுக்கு-அஹங்காரம்
நித்யர் அபிமானம் இல்லை சொல்ல வேண்டியது இல்லை
நாம் சொல்லித் தான்
மேவி -ஓன்று கூடி தொழும்
அல்லாத பொது சண்டை
தங்களுக்கு கார்யம் செய்ய கூடிக் கொள்வார்கள்
அபிமான ரஹீதராய் தொழும்
முதல் கிழங்கு
காரணம் திரு நாபிக்கும் முதல்
உம்பர் -அவர்களுக்கும் மேம்பட்ட  நித்யர்
அந்த அது அவர்களுக்கும் மேம் பட்ட பிராப்ய வஸ்து
அது பிரமான பிரசித்தி சகா
அப்படிப் பட்ட நீ வந்து என்னை கூவிக் கொள்ள
கீழும்  மேலும் சொல்லிய சாமானாதி காரண்யத்துக்கு நிபந்தனம் காரணம் கார்ய காரண பாவம்
தரமி ஐக்கியம் இல்லை
ஸ்வரூப ஐக்கியம் இல்லை
அந்தர்யாமி
சர்வம் கலு இதம் ப்ரஹ்ம-ப்ரஹ்மத்தை காரணமான  கொண்டது
ஸ்பஷ்டமாக அருளிச் செய்கிறார்

—————————————————————————————————————————————————————-

நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-