மூ வேழ் உலகும்
உலகினுள் மன்பதையும் ஆகிய
எல்லாவற்றையும் காக்கின்ற இறைவன்
வசிக்கின்ற திரு மோகூரை
நமர்காள் ஆதரித்து ஏத்துங்கோல்ள்
என்கிறார்
——————————————————————————————————————
நாமடைந்த நல்லரண் நமக்கென்று நல்லமரர்
தீமை செய்யும் வல்லசுரரை அஞ்சிச் சென்றடைந்தால்
காம ரூபம் கொண்டு எழுந்து அளிப்பான் திருமோகூர்
நாமமே நவின்று எண்ணுமின் ஏத்துமின் நமர்காள்
—————————————————————————————————————–
நாமடைந்த நல்லரண் நமக்கென்று –
நம்மை பாதுகாக்கும் பொருளாக
நாம் கிட்டின நல் அரண் என்று
அந்த தேவர்கள் பாசுரம் இருக்கிறபடி –
நல்லமரர் –
தங்கள் ஆபத்துக்கு இவனே உபாயம் என்று அறிகையாலே
நல் அமரர் -என்கிறார் –
அசுரர்களைக் காட்டிலும் வேறுபாடு இத்துனையே யாம் –
தீமை செய்யும் வல்லசுரரை அஞ்சிச் சென்றடைந்தால் –
பிறரை துன்புறுத்துதலையே தங்களுக்கு
தொழிலாகக் கொண்ட அசுரர்களுக்கு அஞ்சி
வந்து சரணம் புக்கால் –
காம ரூபம் கொண்டு எழுந்து அளிப்பான் திருமோகூர் –
காதலுக்கு தகுதியான வடிவம் கொண்டு
புறப்பட்டுக் காப்பாற்றுகிறவன்
வசிக்கிற திரு மோகூர் –
நாமமே நவின்று எண்ணுமின் ஏத்துமின் நமர்காள் –
நம்முடையவர்களே
ஊரின் பெயரை வாயாலே சொல்லி
நினைத்து
உவகையின் மிகுதியால்
ஏத்துங்கோள்
பந்துக்கள் ஆனால்
சர்வாதிகன் வர்த்திக்கும் தேசம்
ஆத்மா பந்துக்கள் ஆழ்வாருக்கு நாம் எல்லாம்
கிட்டி ஸ்துதிக்க
அசுரர் அஞ்சி
காம ரூபம் கொண்டு -இஷ்ட பட்ட திரு மேனி நம் இச்சை அவன் இச்சை
நாமம் ஏத்தி
நாம் அடைந்த நல் அரண் -தேவர்கள் பாசுரம் இருக்கும் படி
ஆபத்துக்கு இவனே உபாயம் அறிந்த காரணம் நல்ல அமரர்
அசுரர் காட்டில் வ்யாவிருத்தி இத்தனை இ றே
பிரயொஜனாந்த பரர்
நமக்கு என்று -என்றும் நல்ல அரண் பாட பாதம்
வியாக்யானம் -என்று கொண்டு -அர்த்தம்
24000 படிமட்டும் தனி என்று வியாக்யானம் இல்லை
அசுரர்களுக்கு அஞ்சி வார்த்தை சொல்லி சரணம் புக்கு
காம ரூபம் ரஷனத்துக்கு அனுரூபமான வடிவு
பிரளயம் -வராக நீருக்கும் செற்றும் இராயாத
ஹிரண்யன் நரன் சிங்கம்
வாமனன் -ஹிரண்யன் போலே பொல்லாதவன் இல்லை மனம் கவர்ந்து கொள்ள
ரஷனத்துக்கு அநு ரூபமான வடிவு
அடியார் இச்சை கொண்ட வடிவு
நாமமே நவின்று திவ்ய தேசம்
நமர்காள் நம்முடையவர்
ஸ்தோத்ரம் பண்ண வேண்டும் –
———————————————————————————————————————–
Leave a Reply