திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -9-3-2-ஸ்ரீ M.A V .சுவாமிகள்–

மேலே சொல்லப் பட்ட நாராயணன்
என்னும் திருப் பெயரின்
பொருளை -அருளிச் செய்கிறார்-

———————————————————————————————————————–

அவனே யகல் ஞாலம் படைத்திடந்தான்
அவனே அஃதுண்டு மிழ்ந்தான் அளந்தான்
அவனே யவனும் அவனுமவனும்
அவனே மற்று எல்லாமும் அறிந்தனமே

——————————————————————————————————————-

அவனே யகல் ஞாலம் படைத்திடந்தான் அவனே –
அகன்ற பூமியை உண்டாக்கி
பிரளயம் கொண்ட பூமியை மகா வராகமாய் எடுதானும் அவனே
அவனே -என்ற ஏ காரத்தால்
படைத்தல் முதலான கார்யங்களில் வேறு
துணைக் காரணம் இல்லாமையைச் சொல்லுகிறது –

அஃதுண்டு மிழ்ந்தான் அளந்தான் அவனே –
பிரளயம் கொள்ளாதபடி பூமியை எடுத்து வயிற்றிலே வைத்து
வெளிநாடு காண உமிழ்ந்து
மகாபலியாலே கவர்ந்து கொள்ளப்பட
எல்லை நடந்து மீட்டுக் கொண்டான் -அவனே
அவனே -என்ற ஏ காரத்தால் ஆபத்துக்கு துணையாதல் முதலான
காப்பாற்றுதல் தொழிலும் வேறு துணை இன்மையை
தெரிவித்தவாறு –

யவனும் அவனுமவனும் அவனே –
பிரமனும் சிவனும் இந்த்ரனும் ஆகிய இவர்கள் உடைய
ஸ்வரூபம் ரஷணம் ஸ்திதி நிற்றல் இருத்தல் பிரவ்ருத்தி நிவ்ருத்தி –
முதலான செயல்கள் அவன் இட்ட வழக்கு
ஸ ப்ரஹ்மா ஸ சிவ ஸ இந்த்ரா -என்கிற பிரசித்தியைப் பற்றிச் சொல்லுகிறார் -என்றது
அவன் அவன் அவன் என்றே போருகிறார்-என்றபடி –

அவனே மற்று எல்லாமும்-
ஸ அஷர பரம ஸ்வராட் –
அவனே உயர்ந்தவனும்
விகாரம் இல்லாதவனும்
கர்மங்கட்கு வசப் படாதவனான முக்தன் -என்றபடியே
பிரதானரோடு
பிரதானம் இல்லாதாரோடு
வேற்றுமை இல்லாதபடி
சேதன அசேதன பொருள்கள் எல்லாம் அவன் வசப் பட்டவை யாம் –

அறிந்தனமே –
பிரமன் முதலாயினோர்- ஈச்வரோஹம் -என்று இருக்கையும்
அவர்களைப் பற்று கின்றவர்களுமாக சொல்லா நிற்க
நீர் -அவனே -என்றது என் கொண்டு -என்னில் –
மயர்வற மதி நலம் அருளப் பெற்ற காரணத்தால் நாம் அறிந்தவர் ஆனோம்
அதனாலே சொல்லுகிறோம் -என்கிறார் –
ஆக
இரண்டு பாசுரங்களாலும்
திரு மந்தரத்தையும்
அதன் பொருளையும்
அருளிச் செய்தாராய்  நின்றார் –

அவனே -நாராயண சப்தம் சொல்லி
மந்த்ரத்தை மந்தரத்தால்
வியாபகம் ஒண் மிதியில்
எண் பெருக்கு அன்னலத்து
நாரணன் தின் கழல் சேர
எல்லாம் அவன் அறிந்தோம் என்கிறார்
அவனே ப்ரஹ்மா ருத்ரன் இந்த்ரன்
அகல் ஞாலம் படைத்து
இடந்து மகா வராகமாய்
அவனே -ஸ்ருஷ்டியாதிகளால் நைரபேஷ்யம்
முக் காரணங்களும் அவனே
உண்டு உமிழ்ந்து
அளந்து -எல்லை நடந்து மீட்டுக் கொண்டு அவனே
ரஷகத்வத்திலும் நிரபேஷமாக சக காரி இல்லாமல் செய்து அருளுவான் –
ஆபத் சகன் -இத்தனை கார்யம் யாரும் இல்லாமல்
அவனே அவனும் அவனும் அவனும்
ப்ரஹ்ம ருத்ர இந்த்ரன் ஸ்வரூப ஸ்திதி பிரவ்ருத்தி நிவ்ருத்தி இவன் இட்ட வழக்கு
சகா ப்ரஹ்ம சக சிவா சவ இந்தரன்
சக -அவனும்
ஆதி சப்தம்
அத்வைதி -மாம்பலம் சதச் -சாந்தச் சேர வராதே
ஸ்மார்த்த பாடம் இடைச் செருகு-காஞ்சி ஸ்வாமி காட்டி அருளி –
அவனே மற்று எல்லாம் -பரம ஸ்வராட் வேதம் -சப்தம்
சகல சேதன அசேதனம் அவன் ஆதீனம் –
அறிந்தனமே ஆழ்வார் நன்றாக அறிந்தேன்
அருளினபடியால்
ஈச்வரோஹம் -இருப்பார் அறியார்
மற்றவர் ப்ரஹ்மா ஆசரிக்க
சு பிரதான ஞானம் இல்லை
ஈஸ்வர அனுக்ரஹீத ஞானம் அறிந்தனமே
திருமந்தரம் அர்த்தம் இரண்டு பாட்டாலும் காட்டி அருளி –

 

——————————————————————————————————————————————

நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: